பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2 (Post No. 3474)

Written by S NAGARAJAN

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 5-18 am

 

Post No.3474

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 16

 

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் இரண்டாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 2

 

                        ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

பரிபாடலின் இரண்டாம் பாடல் 76 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கீரந்தையார். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் நன்னாகனார். பாடல்  முழுவதும் திருமாலின் பெருமையைக் காணலாம்.

 

திருமாலின் பெருமையில் ஊழிகளின் தோற்றம், வராக கற்பம், திருமாலின் நிலைகள், திருமாலின் சிறப்பு, படைச் சிறப்பு, திருமாலின் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புகள், பல் புகழும் பரவலும் என பல அரிய செய்திகளைக் கண்டு பிரமிக்கிறோம்.

 

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த                    கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் (வரிகள் 24, 25)

 

வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் என்று மாசில்லாத உயர்ந்த கொள்கையை உடைய முனிவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்கள் ஆய்ந்தது கெடு இல் கேள்வி. கெடு இல் கேள்வி என்பதால் ஒரு பிழையும் தவறும் இல்லாதது உயர்ந்த வேதம் என்பது பெறப்படுகிறது. நடு ஆகுதலும் என்பதால் அந்த அற்புதமான வேதத்தின் நடுவாக உட்பொருளாக அமைபவன் திருமால் என்பது பெறப்படுகிறது.

 
சாயல் நினது, வான் நிறை-என்னும் 
நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே: 
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும் 
எவ் வயினோயும் நீயே.  (வரிகள் 56 முதல் 60 முடிய)

 

 

சாயல் நினது, வான் நிறை  என்பதால் வானம் பொழிவது போன்று உனது அருள் ஒவ்வொருவரின் மீதும் பொழிகிறது என்கிறார் புலவர். நாவன்மை பொருந்திய அந்தணர் ஓதும் அருமறையின் – வேதத்தின் – பொருளே என்ற பொருளில் நாவல் அந்தணர் அருமறைப் பொருளே என திருமாலை இங்கு விளிக்கிறார் புலவர் பெருமான்.

அதுவும் அதற்கு மேலாகவும் இருப்பவன் நீ என்பதை அவ்வும் பிறவும் ஒத்தனை என்பதால் குறிப்பிடும் புலவர் உவ்வும் எவ்வயினோயும் நீயே என்பதால் நீயே இதர அனைத்துப் பொருள்களிலும் இருப்பவன் என்று முத்தாய்ப்பாகக் கூறி விடுகிறார்.

 
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் 
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்
நின் உருபுடன் உண்டி;
பிறர் உடம்படுவாரா 
நின்னொடு புரைய 
அந்தணர் காணும் வரவு.  (வரிகள் 61 முதல் 68 முடிய)

 

 

இந்த வரிகளின் பொருள் :- நீயே வேதத்தின் சாரம். அந்தணர்களுக்கு, பசுக்கள் பிடிக்கப்பட்டு, ஜ்வாலை உள்ள அக்னியுடன் உள்ள ஹோமத்தில் உணவுகள் படைக்கப்பட்டு வேதங்கள் ஓதப்பட்டு செய்யப்படும் சடங்குகள் உள்ள வேதங்களில் காணப்படும் பல்வேறு வடிவங்களாய் இருப்பவன் நீயே. நம்பாதவர்கள் கூட நம்பி ஒப்புக் கொள்ளும்படி உடன்பட வைப்பவன் நீ.

 

அனைத்தும் அறிந்த புலவர் பிரான் திருமாலின் பெருமையை அருமையாகத் தக்க விதத்தில் இப்படிப் புகழ்ந்துரைக்கிறார்.

ஆகவே உன்னை தலை உற வனங்கினேம், உன்னை ஏத்தினேம், வாழ்த்தினேம் என்று பாடலை முடிக்கிறார்.

என்ன அற்புதமான் பாடல். ஆழ்ந்த பொருளைக் கொண்ட அற்புதமான சொற்கள்.

பல முறை படித்து மகிழ வேண்டிய அழகிய பரிபாடல் பாடல் இது!

*******

பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)

Written by London swaminathan

 

Date: 17 December 2016

 

Time uploaded in London:- 7-21 AM

 

Post No.3457

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை உள்பட 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 656 பாடல்கள்; அதவது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகள் இருக்கின்றன.

51 பாடல் பகுதிகளில் இருபதுக்கும் மேலான பகுதிகளுக்கு “பத்து” அல்லது “பதிகம்” என்றே தலைப்பிட்டுள்ளார். இதி லிருந்து இவருக்கு மிகவும் பிடித்த எண் பத்து என்பது தெளிவு; இதோ சில பகுதிகளின் பெயர்கள்:-

அச்சப் பத்து, அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அருட்பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து, கண்டபத்து, குயில் பத்து, குலாப்பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப்பத்து, யாத்திரைப் பத்து, வாழாப்பத்து. இது தவிர பல பாடல்கள் பதிகம் என முடிவுறும்.

 

பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்

 

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்

அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்

 

பத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்

புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ

எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியாமோ

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை

இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

 

-திருவெம்பாவை 3 (திருவாசகம்)

 

 

பொருள்:-

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்ணே! முன்பெல்லாம் எனக்கு முன்னே எழுந்து, எதிரே வந்து, என் தந்தை; இன்ப வடிவினன்; அமுதம் போல இனியன் என்று வாயூறித் தித்திக்கப் பேசுவாய்; எழுந்து வந்து வாயிற் கதவைத் திற!

 

அள்ளூறல்= நாவில் எச்சில் ஊறுதல்

 

இதில் பத்துடையீர் என்ற சொல்லுக்கு இருவிதமாகப் பொருள் கூறுவர் சான்றோர்; பத்து என்பது பற்று என்பதன் மரூஉ; அதாவது மருவிய வடிவம்

 

மற்றொரு பொருள் பத்து குணங்களுடையவர். இது எப்படிப் பொருந்தும்? என்று கேட்கலாம். அப்பர் பெருமானும் “பத்துகொலாம் அடியார் செய்கைதானே” — என்கிறார்.

அப்படியானால் அந்த 10 குணங்கள் என்ன,என்ன என்ற கேள்வி எழும்

அவை:

1.விபூதி, உருத்திராக்கம் அணிதல்

2.குரு வழிபாடு

3.அன்புடன் சிவனைத் துதி பாடல்

4.மந்திர ஜெபம்

5.இறை வழிபாடு செய்தல்

6.யாத்திரை செய்து சிவத் தலங்களைத் தரிசித்தல்

7.சிவபுராணம் கேட்டல்

8.சிவன் கோவில்களை சுத்தமாக வைத்துப் பரிபாலித்தல்

9.சிவன் அடியாரிடத்து உண்டல் (கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருத்தல்)

  1. தொண்டர்க்குத் தொண்டு செய்தல்

என்று சான்றோர் உரை எழுதியுள்ளனர்.

 

இவைகளில் 3, 4, 5 ஆகிய மூன்றும் ஒன்று போலத் தோன்றும் ஆயினும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் வேறு வேறு என்பது விளங்கும்.

திருச்சத்தகம் என்னும் பகுதியில் “எட்டினோடு இரண்டும் அறியேனையே” (பட்டிமண்டபம் ஏற்றினை) என்று கூறுவதும், திருமூலரும் “எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்” என்று பாடி இருப்பதும் ஒப்பு நோக்கற்பாலது. எட்டும் இரண்டும் என்பதற்கு வேறு பல விளக்கங்களும் உண்டு.

 

–Subham–

 

 

 

பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை! (Post No.3455)

Compiled by London swaminathan

 

Date: 16 December 2016

 

Time uploaded in London:- 19-57

 

Post No.3455

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா! — என்றெல்லாம் ஒலி பெருக்கி அலறும்.

 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே

–என்று பாரதியார் பாடுவார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் — என்று அப்பர் பெருமான் பாடுவார்; ஆடுவார்.

 

ஆனால் மாணிக்க வாசகரும் வள்ளுவரும் மட்டும் “பயப்படுங்கள்” என்று அறிவுரை வழங்குவர்!

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் (குறள் 428)

 

பயப்படவேண்டியதைக் கண்டு பயப்படாமல் இருபது முட்டாள்தனம். பயப்பட வேண்டிய பழி,பாவங்களுக்கெல்லாம் அஞ்சுவது புத்திசாலிகளின் செயல் என்கிறார் வள்ளுவர்.

 

இதே கருத்தை புத்தரும் தம்மபதத்தில் (317) சொல்கிறார். சங்க இலக்கியத்தில் கலித்தொகையிலும் புற நானூற்றிலும் புலவர்கள் பாடுகின்றனர்:-

 

அஞ்சுவதஞ்சா அறனிலி ( கலித்தொகை 42-26)

 

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் — புறம் 182

 

 

வள்ளுவர், கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி (புறம் 182) ஆகியோர் பொதுப்படையாக பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.

 

ஆனால் பயப்பட வேண்டிய விஷயங்கள் என்ன என்று சொல்லி பட்டியல் ஏதும் தரவில்லை. மாணிக்கவாசகர் மட்டும் ஒரு பட்டியல் தருகிறார்.

 

நமக்குத் தெரியும்: எதை நாம் நாலு பேருக்கு முன்னால்,குறிப்பாக, தாய் தந்தையருக்கு முன்னால் செய்ய அஞ்சுவோமோ அவை எல்லாம் பயப்பட வேண்டிய விஷயங்கள். ஆயினும் மாணிக்கவாசகர் பட்டியல் கொஞ்சம் விளக்கமாகவே அமைந்துள்ளது.

 

மாணிக்கவாசகர் இதற்காக தனியாக பத்துப் பாடல்களே பாடிவிட்டார். அவை திருவாசகத்தில் அச்சப்பத்து என்ற பகுதியில் உள்ளன.

 

“பாம்புக்குப் பயப்ப்ட மாட்டேன்; சிவன் திருவடிகளை அடைந்தும் வேறு ஒரு தெய்வம் உண்டு என்று கருதி சிவன் புகழைப் பாடாமல் இருக்கிறார்களே அவர்களைக் கண்டு அஞ்சுவேன்; அதாவது மதம் மாறிய சைவர்கள் அச்சத்திற்குரியோர்.

 

ஆசை எழுந்தாலும் வினைக்கடலில் அழுந்தினாலும் பயப்பட மாட்டேன்; ஆனால் சிவனைத் தவிர மற்ற தேவர்களைக் கொண்டாடுவோரைக் கண்டால் அஞ்சுவேன்

 

வேலாயுதத்துக்கு பயப்பட மாட்டேன். வேல் விழியாளுக்கும் பயப்படமாட்டேன். ஆனால் சிவனை வெறுப்போரைக் கண்டால் பயப்படுவேன்

மாதர்களை கண்டு அஞ்சேன். சிவனைத் தொழாதவரைக் காணின் அஞ்சுவேன்

 

நோய்களுக்கு அஞ்சேன்; பிறப்பு-இறப்புச் சுழலுக்கு அஞ்சேன்; சிவனடியார்களில் திருநீறு அணியாதோரைக் கண்டால் அஞ்சுவேன்

 

நெருப்புக்கு அஞ்சேன்; பெரிய மலைகளே பெயர்ந்தாலும் அஞ்சேன்;

திருநீறு அணியாதவர்கலைளைக் கண்டால் பயம் வந்துவிடும்.

 

பழிகள், மரணம் இவைகளுக்கெல்லாம் பயமில்லை. சிவனடிகளைப் பெரிய தாமரைப்பூக்களைக் கொண்டு அர்ச்சிக்காதோரைக்கண்டு அஞ்சுவேன். தில்லைக் கூத்தனின் நடனத்தைப் பார்காதவரைக் கண்டால் அஞ்சுவேன்

 

யமனுக்கோ கூரான ஆயுதங்களுக்கோ அஞ்சமாட்டேன். ஆனால் சிவ பெருமானைத் தியானித்து நெஞ்சம் உருகாதோரைக் கண்டு அஞ்சுவேன் என்று கூறி அச்சப்பத்து பாடல்களை முடிக்கிறார்.

 

–சுபம்–

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1 (Post No.3450)

Written by S NAGARAJAN

 

Date: 15 December 2016

 

Time uploaded in London:- 5-56 am

 

Post No.3450

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 15

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் முதல் பாடலில் வேதம் பற்றியும் நாவல் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

 

                             ச.நாகராஜன்

 

 

பரிபாடல்

 

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பரிபாடல். அதில் 70 பாடல்கள் இருந்தன. நமக்குக் கிடைத்திருப்பது இருபத்துநான்கு பாடல்களே. மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களின் பெருமுயற்சி காரணமாக இந்த பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதைப் பதிப்பித்து தமிழுக்குத் தந்தவர் அவரே.

பரிபாடலின் பாடல்களில் திருமாலுக்கு உரியவையாக எட்டும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், கொற்றவைக்கு ஒன்றும் வைகை நதிக்கு இருபத்தாறும் மதுரைக்கு நான்கு பாடல்களும் உள்ளன. ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ திருமாலுக்கு ஏழு, முருகனுக்கு எட்டு, வைகைக்கு ஒன்பது

25 அடி முதல் 400 அடிகள் வரை பரிபாடல் கொண்டிருக்கும் என்கிறது இலக்கணம். பரிபாடல அரிய இசையைக் கொண்டிருக்கும் ஒன்று. ப்ரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலையும் எழுதியவர் யார், அதற்கு இசை அமைத்தவர் யார் என்ற குறிப்பும் பாடலின் அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிபாடலின் காலத்தை நிர்ணயிக்க விழையும் அறிஞர்கள் அது சங்க காலத்தின் இறுதியில் தோன்றியிருக்கலாம் என்று  கருதுகின்றனர்.

இதில் தொட்ட இடங்களிலெல்லாம் இறை  ம்ணம் கமழும்.

அற்புதமான பக்தி வரிகள் மின்னும். ஹிந்து தத்துவங்கள் தவழும்.

பாடலை நாமே ரசித்துப் படிக்க வேண்டும், அப்போது தான் அதன் பெருமையை உணர முடியும்.

 

வேதத்தின் பல பெயர்கள்

வேதத்தை நான்மறை, மறை, வேதம், சுருதி,கேள்வி, வாய்மொழி, முதுமொழி, புலம் என்றெல்லாம் பரிபாடல் கூறி அதன் பெருமையை எடுத்துரைக்கிறது.பரிபாடலின் முதல் பாடல் திருமாலின் பெருமையை விளக்குகிறது.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை என ஆதிசேஷனைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கும் பாடலில் இறுதி மூன்று வரிகள் வேதத்தையும் அந்தணரையும் பற்றிக் கூறுகிறது.

 

“சேவல் அம் கொடியோய் நின் வல் வயின் நிறுத்தும்            மேவலுள் பணிந்தமை கூறும்

நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே” (வரிகள் 11 12 13)

 

சேவல் அம் கொடியோய் – கருடனைக் கொடியில் கொண்டவனே!

மேவலுள் – உன் கருணையுடன்

நின் வல் வயின் நிறுத்தும் – உன் வலது பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்கள்

பணிந்தமை கூறும் –  உன்னை வழிபடும் தன்மை அறிந்து வழிபடுவோர்.

நாவல் அந்தணர் –  நாவில் மிகத் திறமை கொண்ட அந்தணர்கள் ஒதுகின்ற

அருமறைப் பொருளே – அரிய வேதத்தின் அர்த்தமாக விளங்குகின்றவனே!

அந்தணர்கள் வேதத்தை ஓதுகின்ற நல்ல திறன் உடையவர்கள் என்பதை  மிக மிக அழகாக நாவல் அந்தணர் என்ற சொற்றொடர் விளக்குகிறது

திருமால் அரிய வேதத்தின் உட்பொருளாய் விளங்குகிறான் என்பதையும் அருமறைப் பொருள் என்ற அழகிய சொற்றொடர் விளக்குகிறது.

இப்படி முதல் பாடலிலேயே அந்தணரின் புகழையும் அவர் நாவில் தவழும் வேதத்தின் பெருமையையும் பரிபாடல் விளக்குகிறது.

 

இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயரும் இதற்கு இசை அமைத்தவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லை.

 

–Subham–

மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை (Post No.3447)

26628-field2band2bcloud

Written by London swaminathan

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 9-20 am

 

Post No.3447

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

This story is posted  already in English

தமிழில் பல பழமொழிகள், ஒரு சம்பவத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் அனுபவத்தையோ வைத்துத் தோன்றியவை.

கம்மவார் நாயுடு என்பது நல்ல பணவசதியும் நில புலன்களும் சொத்து சுகங்களும் நிறைந்த ஒரு சமூகம் இருக்கிறது. அவர்கள் நல்ல உழைப்பாளிகள்; விடாமுயற்சியுடையவர்கள்— சில கிராமங்கள் முழுவதும் இச் சமூகம் நிறைந்திருக்கும். இந்த சமூகத்தில் மாப்பிள்ளைமார்கள் ராஜா போல நடத்தப்படுவர்.

ஒரு பணக்கார குடும்பத்தில் பெண் எடுத்த மாப்பிள்ளை அந்தக் கிராமத்திற்குச் சென்று மாமனார் வீட்டில் விருந்தாளியாக அமர்ந்தார். ராஜ போகம்தான். மாப்பிள்ளைக்கு தின்னு தின்னு தினவெடுத்துப் போயிற்று. மாமனாருக்கு 400 ஏக்கர் நிலம். அவர் தனது நிலத்திலுள்ள பயிர்களை அறுவடை செய்யும் காலம் வந்தது. அது பற்றி வேலையாட்களுடன் விவாதிக்கையில் @நுணலும் தன் வாயால் கெடும்@ என்பது போல மாப்பிள்ளையும் வாய் திறந்தார்.

 

“மாமா, நான் சும்மாத்தானே இருக்கேன். நானும் கொஞ்சம் அறுவடை செய்யறேன். உங்களுக்கும் கூலி மிச்சமாகும். நானும் உதவி செய்ததுபோல இருக்கும்”.

 

மாமனார் சொன்னார்: “அதற்கென்ன? நீங்களும் என் கூட வரலாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் நிலத்துக்குத்தான் போறேன். வேலை என்ன என்று காட்டிக் கொடுக்கிறேன்”.

 

மாமனாரும் மாப்பிள்ளையும் காலை எட்டு மணிக்கு வயலுக்குச் சென்றார்கள். மாமனார் மேடான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று தனது நிலத்தின் நான்கு எல்லைகளையும் சுட்டிக்காட்டினார்.

மாப்பிள்ளை

“பூ, இவ்வளவுதானா! இதில் கால் பகுதியை எனக்கு ஒதுக்கிவிடுங்கள்; மிச்சம் முக்கால் பகுதியை கூலியாட்கள் செய்யட்டும்” – என்றார்.

மாமனாருக்கு ரொம்ப சந்தோஷம்.

அப்போது கடும் கோடை காலம்; சித்திரை மாத வெய்யில் உடலைத் தகித்தது. மாப்பிள்ளைக்கு பத்து கஜ தூரம் கூட அறுவடை செய்ய முடியவில்லை. பயிர்களை அறுக்க முடியவில்லை. மெதுவாக வீட்டுக்கு நடையைக் கட்டினார்.

 

காலலை 11 மணி இருக்கும்; மாப்பிள்ளை வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அப்பொழுதுதான், மாப்பிள்ளையின் பெருமையையும் அவர் தானாக முன்வந்து அறுவடைப் பணியில் உதவி செய்ய முன்வந்ததையும் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டிருந்தார் மாமனார்.

 

மாப்பிள்ளையைக் கண்டு திடுக்கிட்ட அவர், எப்படி இருந்தது வேலை? எவ்வளவு முடித்தீர்கள்? என்று கேட்டார்.

மாப்பிள்ளை சொன்னார்:

எனக்கு நில வேலை செய்து ரொம்ப நாளாய் விட்டதால் வேகமாகச் செய்யமுடியவில்லை. ஆகையால் நூறு ஏக்கர் வேண்டம் ; 50 ஏக்கரில் பயிர்களை வெட்டி விடுகிறேன்.

 

மாமனாரும் அதற்கு ஒப்புக் கொண்டார். மறு நாளும் இதே கதைதான். வயிறு புடைக்கச் சாப்பிடும் பழக்கமுள்ள மாப்பிள்ளைக்கு உடம்பு வணங்கவில்லை; மூச்சு முட்டியது; வியர்வை வியர்த்தது. காலை எட்டு மணிக்கு நிலத்துக்குப் போனவர் 11 மணிக்கு வீடு திரும்பிவிட்டார்.

f108f-er2buzavan2bfield252c2bclose

மாமனாரும் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.

மாப்பிள்ளை சொன்னார்:

உடம்பு முன்னைப்போல இல்லை. ஆகையால் 50 ஏக்கரில் வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. 25 ஏக்கரை மட்டும் எனக்கு ஒதுக்குங்கள் மற்றதை கூலியாட்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

 

மாமனாரும், அதற்கென்ன? ஒரு கவலையும் வேண்டாம். நீங்கள் முடிந்த தைச் செய்யுங்கள் என்றார்.

நாட்கள் ஓடின. மாப்பிள்ளையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மறு நாள் மாமனாருடன் நிலத்துக்குச் சென்றா. இருவரும் அறுவடை நடக்கும் நிலத்தின் நடுவே நின்றனர்.

 

மாமா, ஒன்று செய்கிறேன். உங்கள் கழுத்தைத் திருப்பிப் பாருங்கள். இந்த கழுத்துக்குக் கீழே எவ்வளவு பயிர் உள்ளதோ அதை அட்டும் நான் அறுப்பேன், மிச்ச எல்லாவற்றையும் கூலியாட்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல மாப்பிள்ளை வேலை செய்ய வேண்டிய இடமும் சுருங்கிப் போனது. இதுதான் மாப்பிள்ளை நாயக்கர் தட்டை (ப்பயிர்) அறுத்தது போல என்ற பழமொழியின் வித்து ஆகும்.

 

–சுபம்–

தமிழுக்காகத் தாலியைத் ஈந்த தமிழன்! (Post No.3446)

Written by S NAGARAJAN

 

Date: 14 December 2016

 

Time uploaded in London:- 5-44 am

 

Post No.3446

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

கொங்கு மண்டலச் சிறப்பு

தமிழுக்காகத் தாலியைத் ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!

 

by ச.நாகராஜன்

 

கொங்கு நாட்டுத் தமிழர், தமிழ் வளர்ச்சிக்காக எத்தனையோ அரிய செயல்களைச் செய்துள்ளனர். அவற்றில் ஒரு உண்மையான சம்பவம் இது!

 

மதுரையை திருமலை நாயக்க மன்னன் (கி.பி 1623 முதல் 1699 முடிய) அரசாண்ட காலம் அது.

 

அவரது அரசில் தளவாயாக இருந்தவர் ராமசுப்பய்யர் என்பவர். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். மிகுந்த பலசாலி. புத்தி கூரமையுள்ளவர்.

 

அரசாங்கத்துக்கு வரியைச் செலுத்தத் தவறிய பாளையகாரர்களின் காணியாளர்களை அவர் சிறைப் பிடித்து சங்ககிரி துர்க்கக் கோட்டையில் அடைத்தார்.

 

ஆணூருக்குச் சென்ற தமிழ்ப் புலவர் ஒருவர் சம்பந்தச் சர்க்கரை மன்றாடியைப் பார்க்க விழைந்தார். ஆனால் அவர் சங்ககிரி துர்க்கத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பதைக் கேட்டு அங்கு சென்றார்.

 

 

வாயில் காவலரிடம் நயமாகப் பேசித் தான் புலவர் என்பதைத் தெரிவித்து சிறைக்குள் சென்றார். அங்கோ உயர்ந்த பதவியில் இருந்த பலரும் இருந்தனர்.

கவிபாடி வந்த புலவரைப் பார்த்த சம்பந்த சர்க்கரை மன்றாடியார் புன்முறுவலுடன் அவரை வரவேற்றார்.

“ஐயா, புலவரே! பாடல் பாடிப் பரிசு பெறுகின்ற இடமா, இது:” என்று கூறிச் சிரித்தார்.

உடனே புலவர்,

 

எவரை என்று நாம் அறிவோம்; இரப்பவனோ இடம் அறியான்   

        இரவில் வானம்

 

கவரு மதி ஒருபுறத்தே நிலவெரிக்கும் பான்மைதனைக் 

        கண்டிலீரோ

 

அவரை பதமாகு முனம் கடுகு பொடியாகி விடும் அதனை ஓர்ந்து

 

 துவரை  முதற் கரதலனாஞ் சம்பந்தச் சர்க்கரையார் சொல்லுவீரே!”

 

 

என்று பாடினார்.

இதைக் கேட்டு  மகிழ்ந்த சர்க்கரை மன்றாடியார் புலவரை இறுகத் தழுவினார்.

 

“இந்தச் சிறைக்கூடத்தில் என்னைச் சந்திக்க மிகவும் சிரமப்பட்டிருப்பீர்களே” என்று கூறிக் கண்ணீர் விடுத்தார்.

சிறைச்சாலையில் கவிஞருக்குப் பரிசாகக் கொடுக்கக் கையில் பணமில்லையே என்று வருந்தினார்.

 

பின்னர் கோட்டைக்கு வெளியே வந்து காவலாளி ஒருவனைத் தன மனைவியிடம் அனுப்பி புலவர் வந்திருக்கும் விவரத்தைச் சொல்லச் சொன்னார்.

விவரமறிந்த சிறந்த மதியூகியான அவரது மனைவி தம்மிடம் வேறு பொருளில்லாததை நினைத்துத் தன் திருமங்கலியத்தைக் கழட்டிக் கொடுத்தனுப்பினார்.

 

 

மனைவியார் அனுப்பிய தாலியைக் கண்ணீருட்ன கண்ணில் ஒற்றிக் கொண்ட சர்க்கரை மன்றாடியார் அதை மகிழ்ச்சியுடன் புலவரிட்ம் கொடுத்து, “என்னால் இப்போது கொடுக்க முடிவது இவ்வளவு தான். இதைப் பெரிய பரிசாக நினைத்துக் கொள்க” என்று உருக்கமாகக் கூறினார்.

 

 

அதை  மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட கவிஞர் அதை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு நேராக ராமசுப்பய்யரிடம் சென்று அதைக் காண்பித்தவாறே நடந்ததைக் கூறினார்.

அதைக் கேட்டு வியந்த ராமசுப்பையர் உடனே சர்க்கரை மன்றாடியாரைத் தம்மிடம் அழைத்து வருமாறு ஆணையிட்டார்.

அவரும் வந்தார்.

 

 

அவரைத் தழுவிக் கொண்ட ராமசுப்பய்யர், தமிழ் மீதுள்ள உமது தணியாக் காதலையும் உமது கொடைத் திறமையையும் கண்டு வியக்கிறேன். நல்ல சுபிட்ச காலம் வந்தவுடன் கொடுக்க வேண்டிய வரியைக் கொடுத்தால் போதும்; இப்போது நீங்கள் செல்லலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

 

உடனே சர்க்கரையார், “என்னைப் போலவே சிறையிலிருக்கும் மற்றவரை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி வெளியே போக முடியும்” என்று கூறினார்.

 

உடனே தள்வாய், “அனைவரையும் விடுவிக்கிறேன்” என்று கூறி அப்படியே அதற்கான ஆணையை இட்டார்.

அனைவரும் விடுதலையாகி மகிழ்ச்சியுடன் தம் இருப்பிடம் மீண்டனர்.

 

உடனே இன்னொரு பாடல் பிறந்தது.

 

 

“வாணன் உரைத்திட மால் ராமப்பையன் மனம்  மகிழ்ந்து

வேணது கேள் எனச் சம்பந்தச் சர்க்கரை வேளினுமிவ்

வீணரைக் காவல் விடீரென்று கூறிட விட்டிடலுந்

தாணுவென்று இம்முடிக் காணிக்கை சாசனம் தந்தனரே”

 

 

தமிழுக்காக தாலியைப் பரிசாக அளித்த சம்பந்த சர்க்கரை மன்றாடியாரின் புகழும் அந்தச் செயலை உவந்து போற்றிய ராமப்பையரின் புகழும் கொங்கு நாடு முழுவதும் பரவலாயிற்று,

இந்த அரிய சம்பவத்தை கொங்கு மண்டல சதகத்தில் 46ஆம் பாடலாக அமைத்தார் சதகத்தைப் பாடிய பாவலர் ஜினேந்திரன் என்ற கவிஞர். தொட்ர்ந்து பாமழை பொழிந்ததனால் இவரை கார்மேகக் கவிஞர் என்றே உலகம் அறியும். இவர் ஜைன பிராமணரான பத்மநாப ஐயரின் புதல்வர். இவர் படிக்காசுத் தம்பிரான், தள்வாய் ராமப்பய்யர் காலமான 1699ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என்று  கொள்ளலாம்.

 

 

கொங்கு மண்டலத்தின் சிறப்புக்குரிய சுவையான நூறு நிகழ்ச்சிகளை இவரது சதகம் அற்புதமாக விவரிக்கிறது.

அதில் தமிழுக்காகத் தாலி ஈந்த தமிழன் சர்க்கரை மன்றாடியாரின் கொடையும் ஒன்றாக அமைகிறது!

 

*****

 

 

 

‘பாரதியும் திலகரும்’ (Post No.3428)

Written by S NAGARAJAN

 

Date: 8 December 2016

 

Time uploaded in London: 4-36 AM

 

Post No.3428

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 13

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி

‘பாரதியும் திலகரும்

 

ச.நாகராஜன்

 

 

இதுவரை வந்த கட்டுரைகள் பற்றி

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் என்று இது வரை 12 நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவை பற்றிய சுருக்கமான விவரங்களை இந்தத் தொடரில் பார்த்தோம்.

புதிதாக இந்தக் கட்டுரையைப் படிப்போருக்கும் இதைத் தொடர்ந்து படிப்போருக்கும் முந்தைய கட்டுரைகளில் சொல்லப்பட்ட நூல்/கட்டுரை/வானொலி உரை தலைப்பை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.

 

 

  • என் தந்தை – பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதியுள்ள நூல்
  • பாரதி நினைவுகள் – திருமதி யதுகிரி அம்மாள் அவ்ர்களின் புதுவை வாச நினைவுக் கோவை
  • என் கணவர் – மஹாகவி பாரதியாரின் மனைவியார் செல்லமா பாரதி அவர்கள் 1951இல் திருச்சி வானொலியில் ஆற்றிய உரை
  • நான் கண்ட நால்வர் – வெ.சாமிநாத சர்மா அவர்களின் நூல்
  • பாரதி புதையல் மூன்றாம் தொகுதி – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
  • பாரதியார் பிறந்த நாள் – அரவிந்த ஆஸ்ரமவாசியான அமுதன் புதுவை வானொலியில் ஆற்றிய உரை
  • மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்
  • Subrahmaniya Bharati – Partiot and Poet – Prof P.Mahadevan
  • பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்
  • கண்ணன் என் கவி – கு.ப.ரா. சிட்டி ஆகியோர் எழுதிய நூல்
  • பாரதி நான் கண்டதும், கேட்டதும் – பி.ஸ்ரீ எழுதிய நூல்
  • பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்

 

இது தவிர ‘மஹாகவி பாரதியாருக்குச் செய்யும் மஹத்தான துரோகம்’ என்ற எனது கட்டுரையில் பாரதியின் கட்டுரைகள், கவிதைகளை  மனம் போல மாற்றி வெளியிடும் போக்கு பற்றி எழுதப்பட்டிருந்தது.

 

 

அடுத்து ‘பாரதியார் கவசம் அணியுங்கள்’ என்ற கட்டுரையில்  இன்றைய ஊழல் நிறைந்த வாழ்க்கை முறையில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் பாரதியாரின் பாடல்களைக் குறிப்பிட்டு இந்த பாரதி கவசத்தை அணியலாம் என்ற ஆலோசனை தரப்பட்டிருந்தது.

 

இவற்றைப் படித்தால் மஹாகவி பாரதியார் என்ற பிரம்மாண்டமான கடல் எவ்வளவு பெரியது என்ற உணமை தெரியும்.

 

 

இப்போது மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் தொடரில் மேலும் சில நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

 

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி – பாரதியும் திலகரும்

தினமணி சுடரில் 1980,1981,1982 ஆம் ஆண்டுகளில் பாரதியை ஒட்டிய நினைவுகள் என்ற தொடரில் பல்வேறு தலைப்புகளில் பாரதியைப் பற்றி பிரபல எழுத்தாளர் பெ.நா.அப்புஸ்வாமி எழுதி வந்தார்.

 

 

இந்தத் தொடரில் 22-6-1982, 29-6-1982, 4-7-1982 ஆகிய தேதியிட்ட இதழ்களில் ‘பாரதியும் திலகரும்’ என்று பெ.நா.அப்புஸ்வாமி எழுதிய கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

 

பச்சையப்பன் கல்லூரிக்கு விடுமுறை விட்ட ஆங்கிலேயர்

இதில் சென்னையில் நட்ந்த ஒரு சம்பவத்தை பெ.நா.அப்புஸ்வாமி நினைவு கூர்கிறார்.

 

அவரது சொற்களில் அப்போதிருந்த நாட்டு நிலைமை இது தான்:

 

“பாரதியின் மனம் பொதுவாக வன்மை முறைகளை ஆதரிக்காத மனமாக இருந்த போதிலும், ஓரளவு திலகருடைய வன்மைமுறைச் சார்பான கட்சியை ஆதரித்தது என்றே கருத வேண்டும். பாரதி கோகலேயையும் (கோகலே சாமியார்  பாடல்), திலகரையும் (வாழ்க திலகர் நாமம்) பற்றிப் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட பின்னணி நாட்டில் நிலவிய பொழுது திலகர் காலமானார். அப்பொழுது, பாரதி அரங்கசாமி ஐயங்காரின் பாராட்டைப் பெற்று, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில், செய்தித் துறை முதலியவற்றைக் கவனித்து வரும் குழுவில் ஒருவராக இருந்து வந்தார்.”

பெ.நா.அப்புஸ்வாமி, திலகர் இறந்த நாளில் நடந்த சம்பவம் ஒன்றை அவரது நண்பர் எஸ்.ஆர்.வெங்கடராமன் சுட்டிக் காட்ட, அதை விளக்குகிறார்.

 

பால கங்காதர திலகர் இந்திய நாட்டின் மாபெரும் தலைவர். 1958ஆம் ஆண்டு ஜூலை  மாதம் 23ஆம் தேதி பிறந்த திலகர் 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று காலமானார்.

எஸ் ஆர்.  வெங்கடராமன் பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக இருந்தார். அந்தக் காலத்தில் பச்சையப்பன் கல்லூரி சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதியில் இருந்தது.

அந்தக் கல்லூரிக்கு ரென் என்னும் ஆங்கிலேயர் தலைமை ஆசிரியராக இருந்தார்.இளைய வயதின்ரான அவர் பெரும்பானிமையான ஆங்கில மக்களைப் போன்று இந்திய சுதந்திரத்தில் விருப்பம் உடையவராக இருந்தார்.

 

திலகர் காலமான செய்தியைக் கேட்ட பின்னர் அவர் தம்முடைய கல்லூரி மாணவர்களை கல்லூரியின் உட்புறத்தில் உள்ள திற்ந்த கூடத்தில் கூடச் செய்தார். திலகருடைய நற்பண்புகளைப்ப் பற்றி ஐந்து நிமிஷம்  போல் பாராட்டிப் பேசினார். பேசிய பின், “இது உங்களுக்கு ஒரு துக்ககரமான நாள். ஆதலால் இன்று நம்முடைய கல்லூரிக்கு விடுமுறை நாளாக் அதை மதிப்பது நமது கடமை” என்று சொல்லி கல்லூரியை மூடி விட்டார்.

அந்தச் செய்தியைப் பத்திரிகைக்கு அறிவிக்கும் செய்தி எஸ்.ஆர்.வெங்கடராமனிடம் ஒப்புவிக்கப்பட்டது.

 

 

பாரதியாரின் கூற்று

 

அவர் சுதேசமித்திரன் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அரங்கஸ்வாமி ஐயங்காரைக் கண்டார்.

 

‘செய்திப் பொறுப்பு பாரதியைச் சேர்ந்தது, அவரிடம் போ’ என்று அவர் சொல்ல வெங்கடராமன் பாரதியிடம் சென்றார்.

வெங்கடராமன் தெரிவித்த செய்தியை நம்ப முடியாமல் “யார்? ஒரு வெள்ளைக்காரனா திலகரைப் புகழ்ந்து பேசினான்? அவனா உங்களுக்கு விடுமுறை விட்டான்? என்றெல்லாம் கேட்டு விட்டு பாரதியார், ‘இந்த நாட்டில் அவன் அந்தப் பத்வியில் அதிக நாள் இருக்க மாட்டான்’ என்றார்.

 

 

விடுமுறை அளிக்கப்பட்ட செய்தி சுதேசமித்திரனில் வந்தது.

நிர்வாகத்திற்கு ரென்னுக்கும் இதனால் பிரச்சினை ஏற்பட,

ரென் கல்லூரியை விட்டு விலக நேர்ந்தது.

புலமை மிக்க அவர் இலக்கண நூல்கள், கட்டுரை எழுதுவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுத ஆரம்பித்தார்.

 

இப்படி ஒரு அரிய செய்தியை பெ.நா.அப்புஸ்வாமி பாரதியும் திலகரும்’ கட்டுரையில் (மூன்று பகுதிகள்) தெரிவிக்கிறார்.

 

பாரதியின் கணிப்பு சரியாகப் போனது. ஒரு ஆங்கிலேயர் இந்திய சுதந்திரத்தில் அக்கறை கொண்டு தேசீய்த் தலைவர் மறைந்ததற்கு இரங்கல் தெரிவித்து கல்லூரிக்கு விடுமுறை விட்டது போன்றவற்றை சுவாரசிய்மாக விளக்கியுள்ளார் பெ.நா.அப்புஸ்வாமி.

 

பாரதி அன்பர்கள் படிக்க வேண்டிய ஒரு கட்டுரைத் தொடர் இது.

****

 

மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’ (Post No.3423)

Pictures are at London Sraddhanjali to Balamurali Krishna on 3-12-2016

Written by London swaminathan

 

Date: 6 December 2016

 

Time uploaded in London: 6-24 am

 

Post No.3423

 

 

Pictures are taken by ADITYA KAZA

 

contact; swami_48@yahoo.com

 

 

 

லண்டனில் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் வெளியான சுவையான தகவல்களின் முதல் பகுதியை “கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்” — என்ற தலைப்பில் நேற்று வெளியிட்டேன். இதோ இரண்டாவது பகுதி:–

 

எனது (London Swaminathan) சொற்பொழிவின் தொடர்ச்சி:

 

“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று (236)

 

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப்படும் (114)

 

குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்

மழலைச் சொல் கேளாதவர் (66)

 

முதல் குறளின்படி பார்த்தால் அவர்தம் வாழ்க்கை புகழ்மிக்க வாழ்க்கை என்பது புலப்படும். பால முரளி கிருஷ்ணா 86 ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்தார். ஆறு வயதில் இசை கற்றார்; ஒன்பது வயதில் முதல் கச்சேரி செய்தார். ஏறத்தாழ 80 ஆண்டுக்காலம் இசைத்துறைக்கே தன் வாழ்வை அர்ப்பணித்தார். இதுபோல வேறு ஒருவரைக் காணமுடியாது. ஈடு இணையற்ற சாதனை இது.

 

இரண்டாவது குறளின்படி பார்த்தால் ஒருவர் பெரியவரா இல்லையா என்பது அவர் விட்டுச் சென்றதை (எச்சம்) வைத்தே ஒருவரை எடைபோட வேண்டும்.. பால முரளி கிருஷ்ணா பன்மொழி  வித்தகர். 400 கிருதிகளை இயற்றியுள்ளார். 25,000 கச்சேரிகளைச் செய்துள்ளார். அவை அனைத்தும் யூ ட்யூப், டேப்புகள், சி.டி.க்களில் கிடைக்கின்றன. இது பெரிய பொக்கிஷம். ஆக அவர் ஒரு பெரியவர் என்பதும் வெள்ளிடை மலை.

 

மூன்றாவது குறளை நான் சிறிது மாற்றிப் பாடுகிறேன்.

 

குழல் இனிது யாழ் இனிது என்பர் பாலமுரளி பாடல்களைக் கேளாதவர் — என்று. நான் இதைச் சொல்லவில்லை. ஒரு நாள் போதுமா பாடலில் கண்ணதாசனே பாலமுரளி பாடுவதற்கு எழுதிக் கொடுத்த வரிகள் இவை!!

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் – என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்

 

இனி டாக்டர் நந்தகுமாரா சொன்ன இன்னொரு சம்பவத்தையும் கேளுங்கள் (நேற்று மீன் போட்ட தயிரினால் எழுந்த கவிதை பற்றி அவர் கூறியதைக் கேட்டோம்); பாரதீய வித்யா பவன் நந்த குமாரா மேலும்  கூறியதாவது:

 

“டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, லண்டனில் பாரதீயா வித்யா பவனில் கச்சேரிக்காகவும் சங்கீத ஒர்க்ஷாப் WORKSHOP புக்காகவும் பல நாட்கள் தங்கியதுண்டு. அப்பொழுது தினமும் சாப்பிட அழைப்பேன். நான் வேக மாகச் சாப்பிடும் பழக்கம் உடையவன். ஆகையால் வேகமாகச் சாப்பிட்டுவிட்டு அடுத்த கட்டிடத்திலுள்ள பவனின் அலுவலத்துக்குச் சென்று விடுவேன். பால முரளியோ கொஞ்சம்தான் சாப்பிடுவார். ஆனால் மிகவும் ருசித்து ரசித்து மெதுவாகச் சாப்பிடுவார். ஒரு நாள் என் மனைவியைப் பார்த்து பாலமுரளி சொன்னார்:

 

“ஜானகி, ஏன் இந்த நந்தா அவசரம் அவசராமாகச் சாப்பிட்டுவிட்டு ஓடுகிறான்? நாளைக்கு வரட்டும்; அவனை நான் சாப்பிட்டு முடியும் வரை உட்கார வைக்கிறேன்”.

மறு நாளும் வந்தது. “இன்று நான் சாப்பிட்டு முடியும் வரை நீ எழுந்துபோகக் கூடாது” என்று சொல்லிவிட்டார். நானும் பொறுமையாக உட்கார்ந்தேன். அப்பொழுது பாலமுரளி ஸார் சொன்னார்.

“இதோ பார் சாப்பாட்டை நன்கு ருசித்துச் சாப்பிட வேண்டும் அவசரம் அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டு ஓடக்கூடாது” என்றார்.

Violinist Mr Nagaraju is in the picture

 

(எனது கருத்து:- உண்மைதானே? அவரும் ராக ஆலாபனை எதுவும் இல்லாமல் அவசரம் அவசரமாகப் பாடிவிட்டு ஓடினால் நமக்கு எப்படி இருக்கும்? பால் மக்கன்னா Paul McKenna என்பவர் பெரிய ஹிப்னாடிஸ்ட். மனோவசிய நிபுணர். அவரது டெலிவிஷன் காட்சிகள் லண்டன் மக்களுக்கு நன்கு தெரிந்தவை. உடற்பருமனைக் குறைப்பதற்கு அவரும் இதே வழியைத்தான் சொன்னார். ஒரு கிரிஸ்ப் (உருளைக் கிழங்கு சிப்ஸ்) பாக்கெட்டை எடுத்தால் ஒவ்வொரு துண்டாக எடுத்து மெதுவாகச் சாப்பிட்டீர்களானால் அதுவே வயிறு நிறைந்தது போலக் காட்டும். திருப்தி ஏற்படும். அதில்லாமல் டெலிவிஷன் பார்த்துக்கொண்டே பொட்டலம்,பொட்டலமாக உள்ளே தள்ளினீர்கள் என்றால் கலோரிகள் கூடி உடல் பருக்கும் என்றார்.

 

இந்துக்கள் மிகவும் புத்திசாலிகள்.அந்தக் காலத்திலேயே இலையில் உட்கார்ந்தவுடன் அன்னத்தைப் போற்றித் துதிக்கும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்ற வழக்கத்தை ஏற்படுத்தினர். அது மட்டுமல்ல. வேதத்திலேயே உணவைக் கடவுள் என்று போற்றும் மந்திரங்களும் உள.

சாப்பிட்டு முடித்த பின்னரும் “அன்ன தாதா சுகீ பவ” ( உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; அவர்கள் சுகமாக வாழட்டும்! என்று வாழ்த்திவிட்டு இலையிலிருந்து எழுந்திருப்பர். அந்த உணவை அமிர்தத்துக்கு நிகரானது என்பர்.. இவை யெல்லாம் உணவின் மீது நமக்கு மதிப்பை ஏற்படுத்தும். உணவு பரிமாறும் மனைவி அல்லது அம்மாவைத் திட்டாமல் பாராட்டச் செய்யும்).

சுபம்–

கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம் (Post No.3419)

Picture of Sri Balamurali Krishna

 

Written by London swaminathan

 

Date: 5 December 2016

 

Time uploaded in London: 9-24 AM

 

Post No.3419

 

Pictures are taken by ADITYA KAZA; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவை ஒட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்த லண்டனில் 3-12- 2016ல் ஒரு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. அதில் சிறப்புரை ஆற்ற என்னையும் அழைத்திருந்தனர். முதலில் அதில் கேட்ட, பிறர் சொன்ன சுவையான விஷயங்களைச் சொல்லுகிறேன்.

 

பாரதியார் மற்றும் சங்கீத மும்மூர்த்திகளின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் அவர்கள் கஷ்டப்பட்டபோதெல்லாம் இறைவனை நினைத்து கவிகளையும், கீர்த்தனைகளையும், கிருதிகளையும் இயற்றியதைப் படிக்கிறோம்.

 

 

 

லண்டன் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பாரதீய வித்யா பவன் டைரக்டர்  டாக்டர் நந்த குமாரா சொன்னதாவது:

“ஒரு முறை சங்கீத மாமேதை பாலமுரளி கிருஷ்ணா, ரஷ்யாவில் சுற்றுப் பயணம் செய்தார். ஹோட்டலில் நான்கு நாட்கள் தனியாகத் தங்கி இருந்தார். அங்கு மரக்கறி (சைவ) உணவு கிடைப்பது அபூர்வமாக இருந்தது. ஒரு புறம் தனிமை; மறுபுறம் வயிற்றைக்கிள்ளும் பசி; ஹோட்டல்காரர் களிடம், ‘ அப்பா! கொஞ்சம் தயிராவது கொடேன் என்று பாலமுரளி சொன்னார். உணவு விடுதிக்காரரும் மறுநாள் நல்ல கெட்டித் தயிர் கொண்டுவந்தார்.

“ஒரே ஆச்சரியம். அட இந்த உறைபனி வெப்ப நிலையிலும் இப்படி வெண்ணை போலத் தயிர் கொண்டு வந்துவிட்டீர்களே! என்றார் பாலமுரளி

Dr Nandakumara, Director, B V Bhavan, London Kendra

அந்த உணவுவிடுதிக்காரர் சொன்னார், “அது ரொம்ப எளிது, ஸார். நாங்கள் விரைவில் தயிர் ஆக அதில் ஒரு மீனைப் போட்டுவிடுவோம் என்றார். இதைக் கேட்ட பாலமுரளி கிருஷ்ணா, நொந்து போய், மனம் வெந்து போய் அதை நைஸாக ஒரு ஓரத்தில் ஒதுக்கிவைத்து விட்டு ஜன்னல் வழியாக வெட்ட வெளியைப் பார்த்தார். நள்ளிரவு. ஆனாலும் சூரியன் தெரிந்தது (துருவத்தை ஒட்டி, வட அட்ச ரேகைகளில் இருக்கும் நாடுகளில் நள்ளிரவிலும் சூரியனைப் பார்க்கலாம்.) உடனே அவருக்கு ஒரு கவிதை (க்ருதி) பிறந்தது. இறைவா! சூரியனே நீதான் எங்கு போனாலும் எனக்குத் துணை” என்று.

 

(என் கருத்து: நமக்குக் கஷ்டங்கள் வந்தால் கோபப் படுவோம். இறைவன் மீது கூட அந்த சினம் பாயும் . ஆனால் பெரியோர்களுக்குக் கஷ்டம் வந்தாலோ அது பாட்டாக மலரும்)

 

அடுத்ததாக லண்டனிலுள்ள சீனியர் மிருதங்க வித்துவான் திரு கிருஷ்ண மூர்த்தி பேசினார்; அவர் சொன்னதாவது:

 

ஒரு முறை என் குருநாதருக்கு உடம்பு சரியில்லை. ஆகையால் அவருக்கு வந்த எல்லா மிருதங்கக் கச்சேரிப் பணிகளையும் ரத்து செய்துவிட்டார். ஆனால் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு வாசிக்க ஒப்புக்கொண்டது மறந்து போயிற்று. எதேச்சையாக சபா காரியதரிசி என் குரு நாதரைப் பார்த்து “நாளை கச்சேரி; அதான் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம்” என்று வந்தேன் என்று சொல்ல, என் குருநாதர் “முடியவே முடியாது என் உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டார்.

சபா காரியதரிசியோ, இவ்வளவு கடைசி நேரத்தில் நான் போய் யாரைக் கேட்டாலும் வர மாட்டார்கள்; உங்கள் சிஷ்யன் கிருஷ்ணமூர்த்தியை (என்னை) வாசிக்கச் சொல்லுங்களேன் என்றார். அதற்கு என் குருநாதர் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை, பாலமுரளி ஸார் ஒத்துக்கொள்ள வேண்டுமே என்றார்.

Senior Mridangist Mr Krishnamurthy (first in the row)

சபா காரியதரிசி பாலமுரளி கிருஷ்ணாவைக் கேட்டவுடன் அவர் இசைவு தெரிவித்தார். மறு நாள், நான் பயந்துகொண்டே போய் வாசித்தேன். அவர் எனக்கு மிகவும் ஆதரவு கொடுத்துப் பாடினார் — என்றார் திரு கிருஷ்ணமூர்த்தி

 

இதற்குப் பின், நான் பேசினேன்.

என் சிற்றுரை:

கூட்டத்தில் நான் (லண்டன் சுவாமிநாதன்) பேசியதாவது.

 

என்னைப் பேச அழைத்த வயலின் வித்வான் திரு நாகராஜு அவர்களுக்கு நன்றி.

டாக்டர் நந்தகுமாரா பேசி முடித்தவுடன் இதையெல்லாம் புத்தகமாக எழுதுங்கள் உங்கள் அனுபவம் எல்லாம், எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும் என்றேன். அது போல கிருஷ்ணமூர்த்தி ஸாரும் அவரது அனுபவங்களை எழுத வேண்டும். அவர் நீண்ட காலத்துக்கு முன்னர் எதிர்பாராத விதமாக பாலமுரளிக்கு வாசித்தபோது அவர் எவ்வளவு ஆதரவு கொடுத்தாரோ அதை பாலமுரளி கிருஷ்ணா கடைசி வரை செய்து வந்ததை நான் FACE BOOK பேஸ் புக் மூலம் அறிவேன். தினமும் யாராவது ஒரு இளம் கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் ஆசி பெறுவது போல படஙகள் வரும். நமக்குத் தெரியும்; பிரபல பாடகி சுதா ரகுநாதன் முதல் புதிய கலைஞர்கள் வரை அனைவரும் அவரது ஆசியையும் ஆதரவையும் பெற்றவர்கள் என்பது.

 

நான் ஒரு திரைப்படப் பாடல், இரண்டு சம்பவங்கள் , மூன்று திருக்குறள்கள் சொல்லி அதில் அவரது வாழ்வு எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது என்று காட்ட விழைகிறேன்.

 

திருவிளையாடல் என்ற திரைப்படத்தில் ஒரு நாள் போதுமா என்ற அருமையான பாட்டு பாலமுரளி குரலில் ஒலித்தது. அதை எழுதியவர் கவிஞர் கண்ண்ணதாசன். கவிஞர்களின் வரிகள் எப்போதுமே தீர்க்கதரிசனம் உடைய வரிகள். அவர் பாலமுரளியின் வாய் மூலம் வரவழைத்த ஒவ்வொரு வரியும் எப்படி அவருக்குப் பொருந்துகிறது என்று பாருங்கள் (நான் ஆங்கிலத்தில் பேசியதால் ஒவ்வொரு வரியையும் தமிழில் சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்).

Mr Prabhakar Kaza, London swaminathan and Dr Nandakumara with his wife.

பாடல்: ஒருநாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?
திரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: M. பாலமுரளிகிருஷ்ணா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்

ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா?
நான் பாட இன்றொரு நாள் போதுமா?

………………………………….

………………………….
ராகமா சுகராகமா கானமா தேவகானமா? – என்
கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? – என்
………………………………………
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார் – என்
குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ..
அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் –

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ?

……………………………….
கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நானடா

 

 

கண்ணதாசன் வரிகளில் வந்தது போல பால முரளியின் கானம் தேவ கானம், அவருடைய பாட்டுக்கு இந்த நாடே இணையாகாது, அவரது பாட்டைக் கேட்க எல்லோரும் எழுந்தோடி வந்தனர்; அவர் சொன்னது போலவே அவர் இசைத் தெய்வம். எனக்கு முன்னே பேசியோரும் பாலமுரளியை சங்கீத சார்வபௌமன் என்றும் அவதாரம் என்றும் போற்றினர். எவ்வளவு உண்மை! எவ்வளவு உண்மை!

நான் சொல்ல விரும்பும் இரண்டு சம்பவங்களும் விக்கிபீடியாவில் உள்ள விஷயங்கள்தான். தந்தை விரும்பாதபோதும் எப்படி அவர் தானே ஒரு வயலின் செய்து வாசித்து தந்தையையும் இணங்க வைத்தார் என்பதும், அபூர்வ ராகங்கள் என்ற படத்திற்கு அவர் எப்படி மஹதி ராகத்தில் அதிசய ராகம் பாடல் எழுதினார் என்பதும் இரண்டு சம்பவங்கள் (விக்கி பீடியாவில் காண்க)

 

 

அடுத்ததாக மூன்று திருக்குறள்கள்; அவை எப்படி அவருக்குப் பொருந்துகிறது என்பதைச் சொல்கிறேன்.

Mr Nagaraju playing on violin

-தொடரும்…………………….

 

 

 

அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்! (Post No.3418)

Article Written by S NAGARAJAN

 

Date: 5 December 2016

 

Time uploaded in London: 5-59 AM

 

Post No.3418

 

Pictures are taken from various sources; thanks. They are representational.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

 

 

சென்ற வார பாக்யா இதழில் வெளிவந்த கட்டுரை

மகாகவி பாரதியார் பிறந்த தேதி டிசம்பர் 11. மஹரிஷி அரவிந்தர் மறைந்த தேதி டிசம்பர் 5. இருவரின் அழியா நட்பும் ஆன்மீக ரீதியிலானது. இந்த இருவரையும் பற்றிய சிறப்புக் கட்டுரை.

 

அரவிந்தரின் கண்களில் அரும்பிய நீர்!

 

ச.நாகராஜன்

 

விடுதலைப் போரில் ஈடுபட்டு அலிபூர் சிறையில் உயரிய ஆன்மீக அனுபவம் பெற்ற பின்னர் மஹரிஷி அரவிந்தரின் மனம் ஆன்மீக சிந்தனையில் ஊறித் திளைத்தது. ஒரு புதிய அரும் பெரும் சக்தியை பூவுலகில் இறக்குவதற்கான யோகத்தில் அவர் மனம் விழைந்தது.

இதையொட்டி அவர் உள் மனதில் ஒரு குரல் ஒலித்தது: ‘பாண்டிச்சேரிக்குப் போ’ என்று.!

அந்தக் குரலின் கட்டளையை ஏற்று அரவிந்தர் புதுவைக்கு ஒரு படகில் விரைந்தார்.

அப்போது புதுவையில் இருந்த சுதேசிகளான மகாகவி பாரதியார், ஸ்ரீநிவாசாச்சாரி, கிருஷ்ணமாச்சாரி ஆகியோருக்கு அரவிந்தர் வருகை இரகசியமாக ஒருவர் மூலமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அந்த தூதர் கொண்டு வந்த செய்தியை நம்பவில்லை.

ஆங்கிலேய் அரசின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒரு திட்டமே என நம்பினர்.

இருந்தாலும் கூட அவர் ஒருவேளை வந்து விட்டால் அவர் தங்குவதற்கென சர்க்கரை செட்டியார் என்ற அன்பரின் வீடு ஏற்பாடு செய்யப்பட்டது.

அரவிந்தர் 1910ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி புதுவை வந்து சேர்ந்தார். பாரதியார் அவரை வரவேற்றார்.

அன்றிலிருந்து ஒரு அற்புதமான நட்பின் அபூர்வ விளைவுகளாக வேத ஆராய்ச்சி, அரவிந்தர் தமிழ்க் கவிதைகளை இரசித்து, ஆண்டாள், பாசுரத்தை (To the Cuckoo, I dreamed a dream) ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது, பாரதியார் அவரை  தினமும் சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிததது என்று ஏராளமான நற் பணிகள் நடைபெற ஆரம்பித்தன.

அரவிந்தர் மேல் பேரன்பு கொண்டிருந்த மகாகவி, அவரைப் புகழ்ந்து,

“ஆதிசிவன் மேலிருக்கும் நாகப் பாம்பே  – எங்கள்

அரவிந்தப் பேர் புனைந்த அன்புப் பாம்பே!

சோதிப்படத் தூக்கி நட மாடி வருவாய்! – அந்தச்

சோலை நிழலால் எமது துன்பம் ஒழிவோம்!”

என்று பாடினார்.

 

 

ஒரு நாள் மண்டயம் ஸ்ரீநிவாஸாசசாரியார் வீட்டிற்கு வந்த பாரதியார் சரஸ்வதி ஸ்தோத்திரமான எங்ஙனம் சென்றிருந்தீர் என்று தான் புனைந்த பாடலை பாடிக் காட்டினார். அப்போது அங்கு வ.வே.சு ஐயரும் வந்தார்.

அப்போது நடந்த உரையாடலை ஸ்ரீநிவாஸாசசாரியாரின் புதல்வியான யதுகிரி அம்மாள் ‘பாரதி நினைவுகள்’ என்ற தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

ஸ்ரீநிவாஸாசசாரியார் : ஒரு பதத்தில் நூறு பொருள்களை அடக்கும் சக்தி பாரதி தவிர வேறு யாருக்கும் வராது.

பாரதி: நம் நால்வருக்குள் நம் குண விசேஷங்கள் அடங்கி விட்டன. நான் நன்றாகப் பாடுகிறேன் என்கிறீர் நீர். உம்மைப் போன்ற எழுத்தாளர் இல்லை என்கிறேன் நான். ஐயரைப் போன்று மொழிபெயர்ப்பு நிபுணர் கிடையாது என்று நாம் சொல்கிறோம். பாபுவைப் போல் (அரவிந்தரைப் போல்) பழைய வேதங்களை இங்கிலீஷில் மொழிபெயர்த்து அடுக்குபவர் கிடையாது என்கிறோம். நாலு பேர் நாலு பக்கத்திற்கு.

ஸ்ரீநிவாஸாசசாரியார் : காலம் வரும். அவசரப்பட வேண்டாம். இது சோதனைக் காலம்.

ஐயரும் ஆறுதல் கூறினார் பாரதியாருக்கு. மஹாகவியாக இருந்தும் வறுமையில் ஆழ்ந்திருந்தது, உலகினர் தன்னை அறியாதிருந்தது அவரை வேதனைப் படுத்தியது.

புதுவையில் அடிக்கடி ஆங்கிலேயரின்  சூழ்ச்சித் திட்டங்கள் அரங்கேறும்.

இந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியாக புதுவையை ஆங்கிலேயருக்கு பிரெஞ்சுக்காரர்கள் விற்று விடுவதாகப் பேச்சு நடந்தது. அதைப் பற்றி பாரதியாரின் புதல்வியான சகுந்தலா பாரதி, ‘என் தந்தை’ என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார் இப்படி:

“ ஒரு சமயம் புதுவை நகரை பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு விற்றுவிடுவதாகப் பேச்சு நடந்தது. அப்பொழுது அங்கிருந்த ‘ஸ்வதேசிகளை’ ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடாமல், பிரெஞ்சுக்காரருக்குச் சொந்தமான அல்ஜேரியாவுக்கு அனுப்புவதாக பிரெஞ்சு கவர்னர் ஒப்புக்கொண்டார். அவ்வாறே போவதற்கு ஸ்ரீ வ.வே.சு. ஐயர், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ ஸ்ரீநிவாஸாசசாரியார்  எல்லோரும் சம்மதித்து விட்டார்கள். என் தந்தை மட்டும், தன் மனைவி மக்களையும் தன்னுடன் வர அனுமதித்தால் தான் போக முடியும். இல்லாது போனால் விதிப்படி நடக்கட்டுமென்று ‘நான் புதுவையிலேயே தங்கியிருப்பேன்’ என்று கூறினார். அவ்வாறே அனுப்பவும் பிரெஞ்சுக்காரர்கள் சம்மதித்து விட்டார்கள். கடவுளின் அருளால் புதுவையை விற்கவுமில்லை. நாங்கள் பாலைவனத்திற்குப் போக வேண்டிய அவசியமும் நேரவில்லை”

 

இந்தக் கால கட்டத்தில் தினமும் பாரதியார் சகுந்தலாவிற்கு பாலைவனக் கதைகள் சொல்வாராம்

ஆனால் நல்ல வேளையாக அல்ஜீரியா பாலைவனத்திற்கு அரவிந்தர், பாரதியார் உட்பட்ட யாரும் போகவில்லை.

புதுவை வாழ்க்கை சகிக்க முடியாத ஒரு நிலை ஏற்படவே பாரதியார் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தார்.

கடைசியாக அரவிந்தரிடமிருந்து விடை பெறும் நாளும் வந்தது.

அந்த நாளைப் பற்றி சகுந்தலா பாரதி தனது நூலில் இப்படி விவரிக்கிறார்:

“ஸ்ரீ அரவிந்தரிடம் என் தந்தை விடை பெறுவதற்காகச் சென்றார். நாங்களும் போயிருந்தோம். அந்தாளில் ஸ்ரீ அரவிந்தரின் ஆஸ்ரமத்திற்கு இப்போதுள்ளது போன்ற கட்டுக் காவல் கிடையாது. எங்களுக்கு விருப்பமானபோதெல்லாம்,ஸ்ரீ அரவிந்தரின் மாளிகைக்குச் செல்வதுண்டு. அங்கு ஸ்ரீ அரவிந்தரும், என் தந்தையாரும், ஸ்ரீ வ.வெ.சு ஐயரும் பல விஷயங்களைச் சம்பாஷிப்பார்கள். குழந்தைகளாகிய நாங்கள் சிறிது நேரம் கேட்டிருப்போம். பின்பு அவரது மாளிகையைச் சூழ்ந்த விசாலமான தோட்டத்தில் விளையாடியும், ஸ்ரீ அரவிந்தருடன் வசித்து வந்த அவரது சிஷ்யர்களுடன் பேசியும் சில நேரம் கழிப்போம்……

கடைசிமுறையாக் என் தந்தை அரவிந்தரிடம் விடை பெறப் போனபோது அவர்கள் தனியறையில் சம்பாஷணை நடத்தியதால் அதன் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் விடைபெற்றுத் திரும்புகையில் ஸ்ரீ அரவிந்தரின் சாந்தி நிறைந்த ஞானவொளி வீசும் கண்கள் கண்ணீரால் மங்கியிருந்தன. என் தந்தையின் வீர விழிகளில் கண்ணீர் ததும்பி நின்றது. அது மட்டும் தான் நான் கண்டேன்.

ஸ்ரீ அரவிந்தரது ஆசீர்வாதத்தைப் பெற்று வீடு திரும்பினோம். அவரது சீடர்கள் எங்களுடன் வீடு மட்டும் வந்தார்கள்.நண்பர்கள் யாவரையும் பிரிய மனமில்லாமல் பிரிந்து புதுவையிலிருந்து புறப்பட்டோம்.”

சகுந்தலா பாரதியின் புதுவை வாசம் இப்படி உருக்கமுடன் கண்ணீருடன் முடிகிறது.

 

ஆங்கில சாம்ராஜ்யத்தையே ஆட்டுவித்த மகாவீரர், ஆன்மீக சிகரத்தில் ஏறி புதிய யோக சக்தியைப் பூவுலகில் இறக்கியவர் அரவிந்தர்.

தன் பாட்டுத்திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திட வந்தவர் தமிழ்க் கவிஞர் பாரதியார். வாராது வந்த மாமணி. வீயாச் சிறப்புடையவர்.

இவர்களின் கண்களில் பிரிவினால் அரும்பியது நீர் என்றால் அது புனித நீர் அல்லவா!

கொடுத்த வைத்த புதுவை பூமி சரித்திரத்தில் புனித பூமியாக நிரந்தர இடம் பெற்று விட்டது!

******