உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே

tom tom

தொகுத்து வழங்குபவர்:லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்: 1967

தேதி: 2 ஜூலை, 2015; லண்டன் நேரம்: காலை 8-40

மேலும் சில சம்ஸ்கிருத பழமொழிகள்:–

 

1.ஆத்மசித்ரம் ந ப்ரகாஸயேத்

தன்னுடைய குறைகளை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது.

உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே/ வெளிச்சம் போடாதே

2.பலாயமானஸ்ய சௌரஸ்ய கந்தைவ லாப:

ஓடும் திருடனுக்கு கோமணமும் லாபம்தான்

(எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்)

3.அபேயேஷு தடாகேஷு பஹுதரமுதகம் பவதி

குடிப்பதற்கு ஏற்றதல்லாத குளங்களில் தண்ணீர் நிரம்ப இருக்கிறது

(கருமியிடம் உள்ள பணம் போல)

4.இதமரண்யே ருதிதமிவ

இது காட்டில் அழுதது போல

5.அர்த்தி தோஷம் ந பஸ்யதி – சாணக்ய நீதி தர்பண:

உனக்கு கார்யம் நடக்க வேண்டுமானால் குற்றம் குறைகளைப் பார்க்காதே

6.அவ்ருத்திகம் த்யஜேத் தேசம்

வருமானம் இல்லாத தேசத்தை விட்டுவிடு (ஓரிடத்தில் வெற்றி கிட்டாவிடில் அதே இடத்தில் வசிக்காதே)

damara madu

7.அசக்தாஸ்தத்பதம் கந்தும் ததோ நிந்த்யம் ப்ரவர்ததே

ஒரு நிலையை எட்ட முடியாதவர்கள் அதை நிந்திப்பர்

(சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் கதை)

(கிட்டினால் ராமா, கோவிந்தா, கிட்டாவிட்டால் ஒன்றுமில்லை)

8.அஸ்வா யஸ்ய ஜயஸ்தஸ்ய – சாணக்ய நீதி தர்பண

குதிரை உடையவனுக்கு வெற்றி

9.ஆத்மார்தே கோ ப்ருத்வீம் த்யஜேத் – மஹாபரதம்/பஞ்சதந்திரம்/சாணக்கியய நீதி தர்பணம்

ஆத்மஞானத்துக்காக உலகையே தியாகம் செய்வர்

தன்னுயிரைப் பாதுகாக்க தேசத்தையே விட்டும் செல்லலாம்

10.உத்தீர்ணே ச பரே பாரே நௌகாயா: கிம் ப்ரயோஜனம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கரை கடந்த பின்னால் படகினால் என்ன பயன்?

(ஏறிய ஏணியை எத்தி உதைப்பர்)

11.உப்யதே யத் யத் பீஜம் தத்ததேவ ப்ரோஹதி

எதை விதைக்கிறாயோ அதுதான் கிடைக்கும்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

12.க: ஸரீர நிர்வாபயித்ரீம் சாரதீம் ஜ்யோஸ்தனாம் படாந்தேன வாரயிதி – சாகுந்தலம்

சூட்டைத் தணிக்கும் சரத் சந்திர ஒளியை, யார் துணியில் கட்டி எடுக்க முடியும்?

மர்ம எண் 8-ம், உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும்!

saraswati

Written  by London Swaminathan

Research Article No. 1965

Dated 1 July 2015.

Uploaded at London time : 5-45 am

ரிக் வேதம் உலகிலேயே பழைய நூல் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இரா. மாக்ஸ்முல்லர் இதை யாரும் கி.மு.1200-க்குக் கீழே கொண்டு வரமுடியாது. உலகில் எந்த சக்தியும் இதன் காலத்தைக் கணிப்பது அரிது என்று கடைசியாகச் சொல்லிவிட்டு இறந்து போனார். ஏ.சி.தாஸ் என்பவர் வேத காலம் கி.மு.25,000 என்றும் எஸ்.வி.வெங்கடேஸ்வரா கி.மு.11,000 என்றும் பாலகங்காதர திலகர், ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஹெர்மன் ஜாகோபி ஆகியோர் கி.மு 4500-க்கும் முன் என்றும், வீபர் கி.மு 2780 என்றும், ஹாக் கி.மு.2400 என்றும், விண்டர்நீட்ஸ் கி.மு.2000 என்றும், பர்ஜிட்டர் கி.மு.2050 என்றும்,மக்டொனெல், கீத் கி.மு.1400 என்றும், மைகேல் விட்சல் கி.மு.1700 என்றும், ஸ்ரீகாந்த் தலகரி கி.மு.2000க்கு முன் என்றும் செப்புவர்.

ரிக் வேதத்தில் மிகப் பழைய விஷயங்கள் ரகசிய சங்கேத மொழிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு சிறிய ரகசிய விஷயத்தைப் பார்ப்போம். ஆப்ரி சூக்தம் என்று ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு துதி உண்டு. இது அக்னி தேவனை நோக்கிப் பாடப்பட்டாலும்  பல தெய்வங்களின் பெயர்களும் அடிபடுகின்றன. யாக, யக்ஞத்தில் பயன்படுத்தும் புனிதப் பொருட்களைப் போற்றும் துதியெனவும் அறிஞர் பெருமக்கள் மொழிவர். இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தத் துதியில் சரியாக எட்டாவது பத்தியில் மூன்று பெண் தெய்வங்களின் பெயர்கள் வருகின்றன. ஏன் எட்டாவது பத்தியில் இப்படிப் பாடுகிறார்கள்? எட்டு எண்ணுக்கும் இந்தப் பெண் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கும் நியுமெராலஜி NEUMEROLOGY (எண் ஜோதிடம்) தெரியுமா? அல்லது பாணினிக்கும் முன்னால் சம்ஸ்கிருத இலக்கணம் எழுதியோர் ஏதேனும் விதி இயற்றி இப்படிப் பாடச் சொன்னாரா? என்பதெல்லாம் மர்மமாக உள்ளது.

சம்பந்தர் பாடிய தேவார பதிகத்தில் ராவணன் கர்வத்தை ஒடுக்கியது ஒவ்வொரு பதிகத்திலும் ஒரு குறிப்பிட்ட எண் பத்தியில் வரும், பதிகத்தின் பலன் கடைசியாக வரும் என்று நமக்குத் தெரியும். ஆனால் ரிக் வேதம் என்பது 450-க்கும் மேலான கவிஞர்கள் வாய்மொழியாக வந்தது. அவ்வளவு பேரும் ஒரே காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் அல்ல. 500 ஆண்டுக் கால எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். அவ்வளவு நீண்ட காலத்தில் பாடிய ஒவ்வொரு குடும்பத் தலைமை ரிஷியும் (புலவர்) எப்படி எட்டாவது பத்தியில் இதைச் சொன்னார்கள்? ஏன்? என்ற மர்மம் நீடிக்கிறது. இப்படி ஒரு பாணி (ஸ்டைல்) வகுக்கப் படவேண்டுமானால் அதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னேயே பாடத் துவங்கினாலன்றோ இப்படி ஒரு நெறிமுறை உருவாகும்!

“இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை” என்பது—ஆன்றோர் வாக்கு ஆயிற்றே!! ஆகையால் வேதங்களுக்குப் பின்னால்தான் இலக்கணம் வரமுடியும்.

(ரிக் வேதம் என்பது பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்துக்கும் மேலான துதிகள் உள்ளன. 10 மண்டலங் களில் ஆறு மண்டலங்கள் ஒரே ரிஷியின் வம்சத்தில் வந்தோர் பாடிய பாடல்களாக வியாசர் தொகுத்து தந்திருக்கிறார். இவற்றை குடும்ப (மண்டலம் 2–7) மண்டலங்கள் எனலாம்.

sarasvati-map-crop

இன்னும் ஒரு அதிசயம்!

யார் அந்த மூன்று பெண் தெய்வங்கள்?

சரஸ்வதி, பாரதி, ஈலா; ஒரே ஒரு இடத்தில் பாரதிக்குப் பதிலாக மாஹி (SARASVATI, BHARATI, ILA).

இதில் என்ன அதிசயங்கள் இருக்கின்றன என்று கண்போம். நமது வேதங்களைப் படித்த வெளிநாட்டுகாரகள் உள் நோகத்துடன் எழுதியதால் பல விஷயங்கள் அவர்களுக்குப் புரியவில்லை. வேத கால மக்கள், ஆண் தெய்வங்களை வணங்கினர், நாகரீகமற்ற பழங்குடி மக்கள் பெண் தெய்வங்களை வணங்கினர் என்று உளறிவிட்டுப் போய்விட்டனர். அவர்கள் உளரியதெல்லாம் ஆங்கிலத்தில் இருந்தவுடன் நம்மவர்கள் அதைப் பார்த்து, அட! அம்மாடியோவ்! இது ஆங்கில மொழியாயிற்றே, ஆகவே அவன் அறிஞன்தான் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டனர். உண்மையில் இன்று வரை தொடர்ந்து பெண் தெய்வங்களை வணங்குவது உலகில் இந்துக்கள் மட்டுமே. அருள் சுரக்கும் பூமி, நதிகள் ஆகிய அத்தனைக்கும் பெண்கள் பெயரையே சூட்டினர். எல்லா நல்ல குணங்களையும் சம்ஸ்கிருத மொழியில் பெண்மை வடிவத்தில் கண்டனர் (கருணா, பிரேமா, சத்யா, சுகுணா, சுகந்தா).

சரஸ்வதி என்னும் நதி வேத காலத்தில் ஓடிய பிரம்மாண்டமான நதி. அது வறட்சியினாலோ, நில அதிர்ச்சியினாலோ மண்ணில் புதைந்து மறைந்த பின்னரே கங்கை, சிந்து ஆகியன பிரபலமாயின. சரஸ்வதி நதியின் நீர் உயிர் கொடுப்பது போல, சரஸ்வதி என்னும் தெய்வம் உள்ளத்துக்கு உரமூட்டியது. தெய்வமாகவும், தாயாகவும், மொழியாகவும் வணங்கப்பட்டவள் சரஸ்வதி. உலகிலுள்ள பழைய நாகரீக பெண் தெய்வங்கள் எல்லாம் மியூசியங்களில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைபட்டுப் போயின. சரஸ்வதியோ இந்து கலாசாரம் பரவிய நாடுகளில் எல்லாம் மக்களின் உள்ளத்தில் உறைகிறாள் இன்றும்!

இதைவிட உலக அதிசயம்! இமயம் முதல், இலங்கையின் தென் கோடி கண்டி/கதிர்காமம் வரை இன்றும் சரஸ்வதி பாரதி, ஈலா பெயர்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஈலா என்பது, குஜராத்தி இந்துக்கள் அதிகம் வைக்கும் பெயர். நாம் சரஸ்வதி என்போம். சிருங்கேரி சங்கராச்சார்யார் பெயர்கள் எல்லாம் பாரதி என்றும் காஞ்சி சங்கராசார்யார்கள் பெயர்கள் எல்லாம் சரஸ்வதி என்றும் முடியும்.

gold-number-8

இதைவிட பெரிய அதிசயம்!

யதுகுல (யாதவர்) மக்கள் ஆடுமாடு மேய்த்துக் கொண்டு மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்று யூதர் ஆயினர். யது = யூத (Yadu = Yuda= Juda). நாம் ‘ய’ (Y) என்றால் மற்றவர்கள் மொழியில் ‘ஜ’ (J) ஆகும். அவர்கள் யேசு என்றால், உலகம் அதை ஜீஸஸ் என்று சொல்லும். ஆகையால் ஜூடாயிஸம் (யூத மதம்) என்றனர். அவர்களில் மூத்தவர் ஆப்ரஹ்ம (ஆபிரகாம்) அவருடைய மனைவி பெயர் சரஸ்வதி (சாரா). ஆக அவர்களும் கூட, பிரம்மாவின் பெயரையும் அவர் மனைவி சரஸ்வதி பெயரையும் வைத்துக் கொண்டனர். நாம் சரஸ்வதியை செல்லமாக சச்சு அல்லது சரசு என்போம். அவர்கள் ஸாரா என்பர்.

(ஜ, ய என்னும் எழுத்துக்கள், ர, ல என்னும் எழுத்துக்கள் உரு மாறுவது பற்றி காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் ஆற்றிய சொற்பொழிவையும் படித்துப் பயன் பெறுக. அவர் மிகப்பெரிய மொழியியல் அறிஞர். அவர் மட்டும் சங்கராசார்யார் ஆகாமல் மொழியியல் அறிஞர் ஆகியிருந்தால் மேல்நாட்டு மொழியியல் கொள்கைகள் எல்லாம் இவ்வளவு நேரம் குப்பைத் தொட்டிக்குள் போயிருக்கும். யூத மதத்தில் வேத மந்திரம் இருப்பதை எடுத்துக் காட்டி “ரப்பைகளையே” வியக்கவைத்தவர். ரப்பை= யூத மத சாஸ்திரிகள்).

இன்னும் ஒரு எடுத்துக்காட்டு: ரிக் வேத துதிகளில் எட்டாம் பத்தியில் வரும் ஈலா என்பது மத்தியக் கிழக்கில் ILA இலா, IDA இடா என்ற தெய்வங்களின் பெயராக உரு மாறியது.

ஆப்ரி APRI SUKTA சூக்தம் வரும் இடங்கள்:

ரிக் வேதம்: RV 3-4-8; 7-2-8; 2-3-8, 1-13-8/9; 1-188-8; 5-5-8; 9-5-8; 10-70-8;10-110-8. (எட்டு என்பதைக் கவனிக்க)

மூன்று தேவியர் வரும் யஜூர் வேதப் பாடல்கள்:

Yajur Veda 28-18; 27-17; 20-43 and several other places.

R veda

ஆப்ரி சூக்தம் பற்றி ஒரு சர்ச்சை!

இலக்கிய விஷயங்களில் எல்லாவற்றிலும் முதன்மை வகிப்பது சம்ஸ்கிருதமே! உலகின் முதல் GRAMMAR இலக்கண நூல், முதல் காம EROTICS சாஸ்திரம், முதல் DICTIONARY அகராதி, நிகண்டு, மொழியியல் LINGUISTICS  ஆராய்ச்சி, மொழியியல் ஆய்வு, சொற்பிறப்பியல் ETYMOLOGY ஆய்வு, நூல் யாத்தல், பெண் கவிஞர்களின் பங்கு பணி, பெண்களுக்கான முதல் SYLLABUS சிலபஸ் (64 கலைகள்), முதல் நாட்டிய சாத்திர நூல், சங்கீத சாத்திர நூல், முதல் THESARUS நிகண்டு — முதலிய எல்லாவற்றிலும் சம்ஸ்கிருதமே உலகில் முதன்மை வகிக்கிறது. இதே போல புத்தகங்களுக்கு இண்டெக்ஸ் INDEX போடுவதிலும் சம்ஸ்கிருதமே FIRST! அதாவது முதல்! அணுக்ரமணி என்ற வேத இண்டெக்ஸில் எல்லா புலவர் பெயர்களும் உள்ளன.

இந்த இண்டெக்ஸில் ஆப்ரி சூக்தங்களை இயற்றிய வெவ்வேறு பெயர்களைப் பார்த்த ப்ளூம்ஸ்பீல்டு என்பார், “ பாருங்கள் இரண்டு மண்டலங்களில் ஒரே மாதிரி ஆப்ரி சூக்தங்கள் உள்ளன. ஆனால் வசிட்டர், விஸ்வாமித்திரர் என்று இரண்டு பெயர்களை அணுக்ரமணி கூறுகிறது. ஆகாயால் அணுக்ரமணி பிழையுடைத்து என்று நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினார். ஆனல் பிற்காலத்தில் வந்தவர்கள் அது ஒரு அரைவேக்காட்டுத் HALF BAKED தனமான வாதம் என்பதை ஆதாரங்களுடன் காட்டினர்.

கிரேக்க கவிதைகளில் ஒரே வரி பல முறை வருகிறது. பாதி வரி பல முறை வருகிறது. ஒரே உவமை பலமுறை வருகிறது; சில சொற்றொடர்களை எல்லோரும் அடிக்கடி பயன்படுத்துகின்றனர் என்று கிலபர்ட் மர்ரே GILBERT MURRAY  என்பவர் எடுத்துக் காட்டினார். இதை தனது புத்தகத்தில் மேற்கோள் காட்டிய இந்திய வேத அறிஞர் ஸ்ரீகாந்த் தலகரி SHRIKANT G.TALAGERI  என்பார், இந்த் ஆப்ரி சூக்தங்களைப் பயன்படுத்தி ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களைக் கால வரிசைப் படுத்தியிருக்கிறார்.

book05

தமிழில் மீண்டும் மீண்டும் வரும் வரிகள்

இந்திய வரலாற்றை அல்லது பண்பாட்டை எழுதப் புகுவோருக்கு பாரத மாதாவின் இரு கண்காளான தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியாவிடில் தப்பும் தவறுமாக பிதற்றத் துவங்கி விடுவார்கள். தமிழில் ஏராளமான வரிகள் திரும்பத் திரும்ப வரும்

ஐங்குறு நூறு என்னும் 500 பாடல் தொகுப்பில் நூற்றுக்கும் மேலான வரிகளை எல்லா புலவர்களும் பயன்படுத்துவர்.

புற நானூற்றில் பல் சான்றீரே! என்ற வரிகள் இரண்டு பாடல்களில் வரும். சேண் விளங்கு முதலிய சொற்றொடர்களைப் பலரும் பயன்படுத்துவர். இது வாய்மொழி இலக்கியம் துவங்கிய காலத்தில் எல்லா மொழிகளிலும் உண்டு.

ஆனால் தொல்காப்பியர் போல எவரும் இலக்கண நூலில் இப்ப்டிச் செய்ததில்லை. தொல்காப்பியத்தில் ஒரே பத்தியில் தேவையில்லாமல் ஒரு வரியை ஆறு முறை (பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே) கூறியிருக்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியர்.ஏதோ நர்சரி ரைம் Nursery Rhyme போலப் பாடிவிட்டார். “என்ப”, “மொழிப” போன்ற சொற்களை 287 முறை சொல்கிறார். ஒரே சூத்திரத்தில் (சூத்திரம் 1568) ‘என்றலும்’ என்பதை ஆறு முறை சொல்லுவார்’ இன்னும் ஒரு இடத்தில் ஒரே சூத்திரத்தில் ‘அறிவதுவே’ என்பதை ஏழு முறை சொல்லுவார் (சூத்திரம் 1526). அதாவது சொற்செட்டு என்பது அவருக்கில்லை. பாணினிக்கும் இவருக்கும் இடைவெளி 1000 மைல் என்றால் மிகையில்லை!!

31 சம்ஸ்கிருத பொன் மொழிகள்!

IMG_3405

Compiled by London Swaminathan

Article No. 1961

Dated 29 ஜூன் 2015.

Uploaded at London time : 7-54

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்-ஆடி (ஜூலை 2015). இந்த மாதம் மேலும் 31 சம்ஸ்கிருத பொன்மொழிகளைப் படித்து மகிழுங்கள்.

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:–

ஜூலை 18: புரி ரத யாத்ரா; ரம்ஜான் ; 31- வியாச பூர்ணிமா/ குரு பூர்ணிமா. ஏகாதசி  : 12 & 27; அமாவாசை- 15;  பவுர்ணமி- 1 மற்றும் 31; முகூர்த்த நாட்கள்:– 6, 8

 

ஜூலை 1 புதன்கிழமை

அவசரோபசர்பணீயா ராஜான: — சாகுந்தலம்

ராஜா தரும் வாய்ப்பை நழுவவிடக்கூடாது:

ராஜ தர்சனம் தவிர்க்கப்படக்கூடாதது

(காற்றுள்ள போதே தூற்றிக்கொள்)

Make hay while sun shines

 

ஜூலை 2 வியாழக்கிழமை

 

அரண்ய ருதிதோபமம் (பஞ்ச தந்திரம்)

காட்டில் அழுதது போல (கடலில் கரைத்த பெருங்காயம் போல பலன் தராத செயல்)

ஜூலை 3 வெள்ளிக் கிழமை

அர்கே சேன்மது விந்தேத கிமர்த்தம் பர்வதம் வ்ரஜேத் – சாங்க்யகாரிகா

மந்தார மரத்தில் தேன் கிடைக்குமானால் மலைக்கு ஏன் போக வேண்டும்?

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவானேண்?

 honey3

ஜூலை 4 சனிக்கிழமை

அமோகோ தேவதானாம் ச ப்ரமாத: கின்ன சாதயேத் – கதா சரித் சாகரம்

தேவர்களுடைய அருள் அதிகம் இருந்தால் எதைத்தான் சாதிக்க முடியாது?

(கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்)

ஜூலை 5 ஞாயிற்றுக்கிழமை

அலப்யம் ஹீனமுச்யதே

கிடைக்காவிட்டால் அது மட்டமானது (என்பர்)

(சீ! சீ! இந்தப் பழம் புளிக்கும் கதை)

ஜூலை 6 திங்கட் கிழமை

அபாவாதல்பதா வரம்

ஒன்றுமில்லாததைவிட கொஞ்சமாவது கிடைப்பது சிறந்ததே

Something is better than nothing

 

ஜூலை 7 செவ்வாய்க்கிழமை

அஸ்தி யத்யபி சர்வத்ர நீரம் நீரஜ மண்டிதம்

ரமதே ந மராலஸ்ய மானசம் மானசம் வினா – சுபாஷிதாவளி

எல்லா இடங்களிலும் தாமரை மலர்கள் மலர்ந்திருந்தாலும்

ஹம்ச பட்சியின் மனமானது மானஸரோவர் இல்லாத இடத்தில் ஈடுபடாது

(உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்– குறள்)

lotus thamarai

ஜூலை 8 புதன்கிழமை

ஆதுரோ விநயே நாஸ்தி

கஷ்டப்படுவோருக்கு விதிகள் கிடையாது.

(பசி வந்திடப் பத்தும் பறந்து போம்)

ஜூலை 9 வியாழக்கிழமை

உச்சேதும் ப்ரபவதி யன்ன சபத சப்திஸ்தன்னைசம் திமிரமபாகரோதி சந்த்ர: — சாகுந்தலம்

சூரியன் போக்கமுடியாத இருட்டை சந்திரன் போக்க முடியுமா?

((இந்தி பழமொழி:- ஜஹாம்  கம் ஆவே சுயீ, கஹா கரே தல்வார்

ஊசி வேலை செய்ய முடியும் போது அரிவாள் எதற்கு?))

ஜூலை 10 வெள்ளிக் கிழமை

ஏகஸ்ய ஹி விவாதோத்ர த்ருஸ்யதே ந து ப்ராணின:

ஒரே ஒரு ஆள் இருக்குமிடத்தில் பிரச்சனை இல்லை

(இரண்டு கையும் சேர்ந்தால்தானே சப்தம் வரும்)

  

ஜூலை 11 சனிக்கிழமை

குலீனை: சஹ சம்யர்கம் பண்டிதை: சஹ மித்ரதாம்

ஜாதிபிஸ்க சமம் சக்யம் குர்பாணோ நாவசீததி – சாணக்யநீதி தர்பணம்

நல்ல குலத்தில் உதித்தவர்கள் தொடர்பு, அறிஞர்களுடன் நட்பு, சொந்தக்காரர்களுடன் நேசம் வைத்திருப்பவன் துன்பமடைய மாட்டான்.

 

ஜூலை 12 ஞாயிற்றுக் கிழமை

க உடுபேன தரதி சாகரம்

யார் சிறு படகு மூலம் கடலைக் கடக்க முடியும்?

ஜூலை 13 திங்கட் கிழமை

கீத்ருசஸ்த்ருணானாம் அக்னினா சஹ விரோத: – முத்ரா ராக்ஷசம்

புல்லுக்குத் தீ எதிரியாகும்

millet

ஜூலை 14 செவ்வாய்க்கிழமை

குதேசேஸ்வபி ஜாயந்தே க்வசித்கேசின்மஹாயசா:-கதாசரித் சாகர்

கெட்ட இடங்களில் கூட நல்லவர்கள் உதிக்கலாம்

(சேற்றில் செந்தாமரையும் சிப்பியில் முத்தும் விளையும்)

 

ஜூலை 15 புதன்கிழமை

ஓதகாந்தம் ஸ்நிக்தோ ஜனோ அனுகந்தவ்ய: – சாகுந்தலம்

கடல் வரைக்கும் பிரியமுள்ளவர்கள் தொடர வேண்டும் 

 

ஜூலை 16 வியாழக்கிழமை

க்வாபி ந கச்சேதனாஹூத:

எங்கேயும் அழையாமல் போகாதே

ஜூலை 17 வெள்ளிக் கிழமை

க்ஷீரேண தக்தஜிஹ்வஸ்தக்ரம் பூத்க்ருத்ய பாலக: பிபதி – ஹிதோபதேசம்

பாலினால் ஒரு  முறை நாக்கு சுட்டவன், மோரைக் கண்டாலும் ஊதி ஊதிக் குடிப்பான்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

சூடு கண்ட பூனை (தெனாலி ராமன் பூனை வளர்த்த கதை)

 

ஜூலை 18 சனிக்கிழமை

க்த்யோதோ த்யோததே தாவத் யாவன்னோதயதே சஸீ

உதிதே து சஹஸ்ராம்சௌ  ந க்த்யோதோ ந சந்த்ரமா:  — சார்ங்கதர பத்ததி

சந்திரன் இல்லாதபோதுதான் மின்மினிப் பூச்சி பிரகாசிக்கும்

சூரியன் உதித்துவிட்டாலோ மின்மினி எங்கே, சந்திரன் எங்கே!

(ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை)

moon over rock

ஜூலை 19 ஞாயிற்றுக் கிழமை

கஜானாம் பங்கமக்னானாம் கஜா ஏவ துரந்தரா:

— ஹிதோபதேசம்

சேற்றில் சிக்கிய யானைக்கு யானைகள்தான் உதவ முடியும்

((முள்ளை முள்ளால்தான் எடுக்கலாம்

வைரத்தை வைரத்தால்தான் அறுக்கலாம்

யானையால் யானை யாத்தற்று- TIRUKKURAL))

ஜூலை 20 திங்கட் கிழமை

கதே ஜலே ஸ்யாத்கிமு சேது பந்த:

ஜலம் வற்றிய பின்னர் பாலம் கட்டி/இருந்து என்ன பயன்?

(கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

 

ஜூலை 21 செவ்வாய்க்கிழமை

சந்தனப்ரபவோ ந தஹதி கிமனல: — காதம்பரி

சந்தன மரத்தால் உண்டான தீ சுடாதா?

(தங்க ஊசி என்றால் கண் குத்தாதா?)

 

ஜூலை 22 புதன்கிழமை

சின்னே மூலே நைவ சாகா ந பத்ரம் – சாணக்ய நீதி தர்பணம்

வேரே போன பின்னர் கிளை என்ன? இலை என்ன?

(தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன? முழம் என்ன?)

 

ஜூலை 23 வியாழக்கிழமை

ஜனானனே க:கரமர்பயிஷ்யதி –  நைஷத காவ்யம்

ஊர் வாயை மூட முடியுமா? (யாரால் மூட முடியும்?

ஜூலை 24 வெள்ளிக் கிழமை

ஜலம் ஜலேன சம்ப்ருக்தம் மஹாஜலாய பவதி

சிறு துளி பெரு வெள்ளம்

ஜூலை 25 சனிக்கிழமை

தினமணிமபித: குதோ அந்தகார:

சூரியன் இருக்குமிடத்தில் இருட்டா?

((ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்

லெட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதி இராள்))

sunlight meenakshi

ஜூலை 26 ஞாயிற்றுக் கிழமை

த்யஜேதேகம் குலஸ்யார்த்தே க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத் — சாணக்ய நீதி தர்பணம், மஹா பாரதம், பஞ்ச தந்திரம்

குலத்தின் நலனைக் காக்க உயிரே விடலாம்

கிராமத்தின் நலனைக் காக்க குலத்தையே விடலாம்

 

ஜூலை 27 திங்கட் கிழமை

தூரஸ்தா: பர்வதா ரம்யா: சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

இக்கரைக்கு அக்கரை பச்சை

Distance lends enchantment to the view – English proverb

ஜூலை 28 செவ்வாய்க்கிழமை

ந கூப கனனம் யுக்தம் ப்ரதீப்தே வன்னினா க்ருஹே – ஹிதோபதேசம்

வீடு பற்றி எரியும் போது கிணறு தோண்டத் துவங்குவது சரியல்ல

(கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?)

 WELL

ஜூலை 29 புதன்கிழமை

த்ருஷ்டிபூதம் ந்யசேத் பாதம் – மனு

பாதத்தை நன்றாகப் பார்த்து வை

(ஆழம் தெரியாமல் காலை விடாதே)

 

ஜூலை 30 வியாழக்கிழமை

ந விடாலோ பவேத் யத்ர தத்ர க்ரீடந்தி மூஷகா:

பூனை இல்லாத இடத்தில் எலிகள் விளையாடும்

(தலை இல்லாவிடில் வால் ஆடும்)

ஜூலை 31 வெள்ளிக் கிழமை

நஷ்டே மூலே நைவ பலம் ந யுஷ்மம்

வேர் வீணாகிவிட்டால் பழம் கிடைக்காது

((முதல் கோணல் முற்றும் கோணல்

முதலுக்கே மோசம்))

 

ரிக் வேதத்தில் லஞ்ச ஊழல்!!

bribery_2

Research paper No 1955

Written by London swaminathan

Date: 26 June 2015

Uploaded in London at  காலை 8-47

“வேதோகில தர்ம மூலம்” – வேதங்களே தருமத்தின் ஆணிவேர்—மனு ஸ்மிருதி 2-6

ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல். இதன் எதிரிகளும் இப்போது இதன் காலத்தை கி.மு 1700 என்று ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இது ஒரு சமய நூல். ஆயினும் சமயம் சாராத பல்வேறு தகவல்கள் ஆங்காங்கே பொதிந்து கிடக்கின்றன. ஸ்ரீகாந்த் தலகரி போன்ற அறிஞர்கள் காய்தல் உவத்தல் இன்றி இதை ஆராய்ந்ததில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.

ஊழல் எதிர்ப்புப் போராட்டம், ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. பாணீக்கள் என்போர் லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது இந்திரனின் தூதராகச் சென்ற நாய் சரமா அதை ஏற்க மறுத்துவிட்டது. பாணீக்கள் என்போர் பீனீஷியர் என்னும் இனத்தினருடன் தொடர்புடையோர் என்றும் உலகில் அவர்கள்தான் அகர வரிசை எழுத்தையும், காசு/பணம் என்னும் கரன்ஸி விஷயத்தையும் உலகிற்குக் கற்பித்தவர்கள் என்றும் முன்னொரு கட்டுரையில் கண்டோம்.

பாணீ என்னும் சொல்லில் இருந்து வணிக சமபந்தமான சொற்கள் அனைத்தும் வந்தன:

பாணீ = வணிக= பணம்= ஆபணம்/மார்க்கெட்= பனியா=வணிகர்.

((சிந்து சமவெளியில் இருக்கும் எழுத்துக்கள் அகர வரிசை எழுத்துக்கள் அல்ல. ஆனால் பிராமி என்னும் லிபி பிற்காலத்தில் அகர வரிசை எழுத்துக்களாக உருவானது. அதிலிருந்து தமிழ் எழுத்துக்களும் தென் கிழக்காசிய நாடுகளில் உள்ள எழுத்துக்களும் உருவாயின. பிராமி லிபி, பீனிஷிய எழுத்திலிருந்து உருவானதாக அறிஞர்கள் பகர்வர்)) நிற்க.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் (10-108) ஒரு பாடலில் சரமா கதை வருகிறது. சரமா என்பது உண்மையில் நாயா அல்லது இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இதை உருவகப்படுத்தி னார்களா என்று பல விளக்கங்கள் உண்டு. எது எப்படியாகிலும் ஒரு விஷயத்தை உவமையாகவோ, உருவமாகவோ பயன்படுத்தவும் அப்படி ஒன்று (நாய்) இருந்தால்தான் முடியும்.

இந்த சம்பவத்தில் வரும் பசுக்கள் சூரிய ஒளியைக் குறிக்கும் என்றும், பாணிக்கள் அதைத் திருடியது சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கும் என்றும், சரமா என்னும் நாய், சூரிய உதயத்தைக் குறிக்கும் என்றும் ஒரு விளக்கம் உண்டு.

நேற்றைய கட்டுரையில் சரமா, சரமேயஸ் பற்றிச் சொல்லிவிட்டதால் நேரடியாக லஞ்ச ஊழலைப் பார்ப்போம்:

Bribery01

சரமாவின் கூற்று:

ஓ, பாணீக்களே! இந்திரனின் தூதனாக இங்கு வந்தேன்; உங்களிடம் உள்ள பெரும் செல்வத்தைக் கேட்கவந்தேன்

ஓடும் ரசா நதியையும் கடக்கத் தயங்கவில்லை

பாணீக்களின் கூற்று:

அது யார் இந்திரன்? அவன் தூது அனுப்பியது என்னே! இவ்வளவு தூரம் கடந்து வந்தனையே! உங்கள் இந்திரனே வரட்டும். அவனை மாடு மேய்க்கும் வேலையில் அமர்த்துவோம்.

ஆயினும் சரமா நல்ல நேரத்தில் வந்திருக்கிறாய். நாங்கள் உனக்கு பசு மாடுகள் தருகிறோம்; திரும்பிச் செல்லாதே. எங்களுடைய சகோதரியாக்கிக் கொள்கிறோம்.

சரமாவின் கூற்று:

உங்களை எச்சரிக்கிறேன்; ரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் இது எல்லாம் தெரியும். நான் போகிறேன்

இந்தத் துதி நீண்ட ஒரு துதி. சம்பாஷணை/ வாக்குவாதம் அடிப்படையில் அமைந்தது.

மேற்கூறிய துதியிலிருந்து நாம் அறிவதென்ன?

நீ கட்சி மாறினால் உனக்கு பதவியும் (சகோதரி), கையூட்டும் (பசு மாடுகள்) கொடுப்போம் என்று பாணீக்கள் கூறினர்.

இந்திரனின் தூதனான சரமா கையூட்டை ஏற்க மறுத்து இந்திரனிடம் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டது.

bribe3

இதே கதை, பிற்கால இலக்கியங்களான ஜைமினீய பிராமணம், பிருஹத் தேவதா ஆகியவற்றிலும் சிற்சில மாற்றங்களுடன் காணப்படுகிறது:

பாணீக்கள் திருடிய பசுக்கள் , ஒரு குகையில் ஒளித்து வைக்கப்பட்டதென்றும் அவைகளை இந்திரன் மீட்டான் என்றும் அறிகிறோம்.

மஹாபாரதத்திலும், சங்க இலக்கியப் பாடல்களிலும் வரும் ஆநிரை கவர்தல்/ மீட்டலின் “மூலம்”, ரிக்வேதத்தில் உள்ளது. தமிழர்கள் இதை அப்படியே 2000 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றியதை சங்க இலக்கியப் பாடல்களில் காண்கிறோம். ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையினருக்குச் செமை அடி கொடுக்கிறது இது.

இரண்டாவதாக, துப்பறியும் நாயை வைத்து குகையில் ஒளித்துவைத்திருந்த பொருள்களைக் கண்டுபிடிக்கும் வழக்கத்தையும் இந்துக்களே உலகிற்குக் கற்பித்தனர். எல்லா போலீஸ், ராணுவப் பிரிவுகளும் ரிக் வேத ரிஷிகளுக்குக் கடன்பட்டவர்கள்.

மூன்றவதாக, நாய் நன்றியுள்ள பிராணி. அதை மனிதன் வளர்க்கத் துவங்கியது ரிக்வேத அரசர் (இந்திரன்) காலத்திலேயே துவங்கிவிட்டது. இதை மஹாபாரதத்தில் தருமன் – நாய் கதையிலும் (ஸ்வர்க ஆரோஹன பர்வம்) காண்கிறோம்.

நாலாவதாக, பாணீக்கள் என்னும் தீயோர்தான் லஞ்ச ஊழலைப் பரப்பினர். அதை சரமா நிராகரித்து ஊழல் ஒழிப்பு போராட்டத்தை 3700 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவிட்டது.

bribe 2

ஐந்தாவதாக, ஒரு அரசன் தூதரை நியமித்து முதலில் சமாதானம் பேச வேண்டும் என்னும் நாகரீக நடைமுறையை உலகிற்குக் கற்பித்ததும் இந்துக்களே. இதை ராமாயண அனுமன் தூதிலும் மஹாபாரத கிருஷ்ணன் தூதிலும் காண்கிறோம். இதை ரிக் வேதம் சொல்கிறதென்றால் வேத கால நாகரீகம் எவ்வளவு பண்பட்ட, முன்னேறிய நாகரீகம் என்பதை அறிய முடிகிறது. வேத காலத்தில் சபா (அவை), சமிதி (கமிட்டி) என்னும் ஜனநாயக அமைப்புகள் இருந்ததையும் மன்னருக்கு அவை அறிவுரை சொன்னதையும் முன்னொரு கட்டுரையில் தந்தேன். உலகிற்கு வரம்புக்குட்பட்ட முடியாட்சி, பார்லிமெண்டரி ஜனநாயகம் என்பதைக் கற்பித்ததும் ரிக் வேதமே. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சமுதாயம் பாரத மண்ணில் வசித்தால்தான் இது சாத்தியமாகும். ஏனெனில் உலகில் வேறு எங்கும் இவ்வளவு முதிர்ச்சியைக் காண இயலவில்லை.

ஆறாவதாக,

பிராணிகளையும், பறவைகளையும் தூது அனுப்பும் பாடல்கள் சங்க இலக்கியத்திலும் பிற்கால தமிழ் இலக்கியத்திலும் உண்டு. வேதத்தில் ஆரம்பித்த நாய் விடு தூது, நள தமயந்தி காலத்தில் அன்னம் விடு தூதாக வளர்ந்து, காளிதாசன் காலத்தில் மேகம் விடு தூதாக (மேகதூதம்) மலர்ந்து, தமிழில் கிளி விடுதூது, குயில் வீடு தூது என்பன போலப் பல்கிப் பெருகின.

நாய்கள் நன்றியுள்ள பிராணிகள். மனிதனைவிட 3000 மடங்கு மோப்ப சக்தியுடையவை. இதை ரிக்வேத ரிஷிகள் அறிந்து அதன் பெயரில் ஒரு பாடல், துதி “இயற்றியிருப்பது” உலகில் வேறெங்கும் இல்லாத புதுமை!

வேதங்களை 450–க்கும் மேலான ரிஷிகள் “யாத்ததாக” வெளிநாட்டினர் செப்புவர். ஆனால் நம்மவர், அவை வானில் ஒலி ரூபத்தில் எப்போதும் உள்ளவை என்றும் 450+ ரிஷிகள் அதை ரேடியோ போலக் கேட்டு நமக்குச் சொன்னார்கள் என்றும் நம்புவர். ஆகவே அவை மனிதனால் இயற்றப்பட்டவை அல்ல.

ப்ருஹத் தேவதா, ஜைமினீய பிராமணம்

ஜைமினீய பிராமணத்தில் முதலில் சுபர்ணன் என்னும் கருடன் தூது போனதாகவும் அது லஞ்சம் வாங்கியதாகவும் அதற்குப் பின்னரே சரமா அனுப்பப்பட்டதாகவும் இருக்கிறது. லஞ்சம் வாங்கிய சுபர்ணனை இந்திரன் கண்டிக்கிறான்.சரமா, நன்றியோடு பணி புரிகிறது

பிருஹத் தேவதாவில் சரமா, லஞ்சம் வாங்கியதாக கதையில் ஒரு ‘ட்விஸ்ட்’ ( திடீர் மாற்றம்) இருக்கிறது. இந்திரன் அதைக் கண்டித்து ஒரு அடி கொடுத்தவுடன் “பாலை” அப்படியே கக்கி விடுகிறது. பின்னர் சரமா, பாணீக்களிடம் போகிறது.

வேதகால ரிஷிக்கள் சங்கேத மொழியிலேயே பாடுவர். ஆகையால் “பால்” என்பர்.

சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் வரும் ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது:

தண்ணீரில் வாழும் மீன்கள் எப்படி நீரைக் குடிப்பது உண்மையோ, அப்படி அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் உண்மை.

prison-cell-phone-bribery2

தமிழில் ஒரு பழமொழி உண்டு:

தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?

ஆனால் ரிக்வேதம் முதல் சாணக்கியன் வரை எல்லோரும் லஞ்சத்தைக் கண்டித்துள்ளனர்.

ஹிட்லரும் சோதிடரும், புத்திசாலி சோதிடர்

4x4hitlerstamps

Post No 1943

Date: 20 June 2015

Compiled by London swaminathan

Uploaded from London at 13-51

ஹிட்லர் ஒரு சோதிடப் பைத்தியம்; நிறைய ஆரூடம் சொல்லுவோர், குறி சொல்லுவோர், எதிர்காலம் உரைப்போர், ஜாதகம் பார்ப்போர் என்று பலரையும் அணுகி சோதிடம் கேட்பது வழக்கம். அதை வைத்து எழுந்த ஒரு ஜோக்:

ஒரு சோதிடர் ஹிட்லரைச் சந்தித்தார். நான் எப்போது சாவேன்? என்று கேட்டார்.

மிகவும் இக்கட்டான கேள்வி; சோதிடர் மிகவும் புத்திசாலி. மிகவும் யோசித்து விட்டு, பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு சொன்னார்:

நீங்கள் ஒரு யூதமத விடுமுறை நாளன்று இறப்பீர்கள் என்று.

ஹிட்லருக்கு மஹா கோபம்; அது சரி யூதர்களுக்குப் பல விடுமுறை நாட்கள் உண்டு; நான் எந்த நாளில் சாவேன்? நீங்கள் மறைக்கப் பார்க்கிறீர்கள்; உண்மையைச் சொல்லுங்கள் – என்று உரத்த குரலில் சொன்னார்.

சோதிடர் பதில்:

அன்பரே! நீங்கள் சாகும் நாள்தான் யூதர்களின் பெரிய விடுமுறை நாள்!!

(இந்த ஜோக்கைப் புரிந்து கொள்ள ஹிட்லர் – யூதர் மோதல் பற்றி அறிந்திருக்க வேண்டும்)

இதோ ஒரு உண்மைச் சம்பவம்:—–

kili-7

புத்திசாலி சோதிடர்

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, பதினோராம் லூயி என்பவர் பிரான்ஸ் நாட்டை ஆண்டார். அவர் ஒரு சோதிடப் பிரியர். அவருடைய மனைவி மீது அலாதிப் பிரியம் அவருக்கு. ஒரு முறை மனைவியின் எதிர்காலம் பற்றிக் கேட்ட போது, ஒரு ஜோதிடர் அவர் சாகப் போகும் நாளைத் துல்லியமாகச் சொல்லிவிட்டார். அந்த நாளில் ராணி இறந்தும் போனார்.

ராஜா லூயிக்குச் சந்தேகம். ஒருவேளை, இந்த ஜோதிடன் வாய் வைத்த முகூர்த்தம்தான் என் மனைவியைக் கொன்றுவிட்டதோ; இந்தப் பயலுக்கு கரு நாக்கு போலும்; அவனை நன்றாகத் தண்டிப்போம் என்று கருதி ஜோதிடரை அரண்மனைக்கு அழைத்தார். ஆளை ஜன்னல் வழியாகத் தள்ளிவிட வேண்டும்; ஜோதிடர் செத்துத் தொலையட்டும் என்று திட்டம் போட்டிருந்தார்.

மஹாராணி இறந்தவுடன் திருப்பி ஒரு முறை மன்னன் அழைப்பதில் ஏதோ சூது இருக்கவேண்டுமென்று ஜோதிடரின் உள்ளுணர்வு உணர்த்தியது.

முக்காலமும், எக்காலமும் அறியும் ஜோதிடன் அவன். ஆகையால் ஜாக்கிரதையாக இருப்போம் என்ற எண்ணத்துடன் அரண்மனையில் நுழைந்தார்.

ராஜாவுக்கு அதற்குள் ஒரு நப்பாசை. நாம் இறக்கும் நாளையும் தெரிந்து கொள்வோம் என்று எண்ணி, “ ஜோதிடரே! நான் என்று சாவேன்? என்று கேட்டார்.

மன்னனுக்கு ஜோதிடத்தில் உள்ள ஆர்வம் குறையவில்லை என்பதை அறிந்த ஜோதிடர், மன்னர் மன்னவா! இதோ கணக்குப் போட்டுச் சொல்கிறேன் என்று அரை மணி நேரம் கணக்கெல்லாம் போட்டுவிட்டு,

“நான் செத்த மூன்றாவது நாள் தான் நீங்கள் சாவீர்கள்”— என்று மன்னரிடம் சொன்னார்.

அரசனுக்கு பயம் வந்துவிட்டது. ஜோதிடரைச் சாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணி அவருக்கு அபரிதமான செல்வத்தையும் வசதிகளையும் வாரி வழங்கி அவரை தினமும் பாதுகாப்பாக வைத்தார்!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் – என்பது பழமொழி!!

அன்றும் இன்றும் – கொள்ளையோ கொள்ளை!

kamaraj 2

Compiled by S NAGARAJAN

Article No.1926

Date :12th June 2015

Time uploaded in London: 8-22 am

By ச.நாகராஜன்

‘பறந்து போன பக்கங்கள்’ என்ற நூலை கோமல் சுவாமிநாதன் என்ற நாடகாசிரியர் (தோற்றம் 27-1-1935 மறைவு 1995) எழுதியுள்ளார்.1997இல் நூலாக அவரது கட்டுரைகள் வந்த போது அவர் அமரராகி விட்டார்.

தனது வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை அருமையான நடையில் எழுதியுள்ளார். தமிழக நாடகக் கலையின் வரலாறை இதன் மூலம் அறிய முடியும்.

காங்கிரஸ் பேச்சாளராக அவர் இருந்த இளம் வயதில் காமராஜரைப் பற்றி அறியும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது.

விருதுநகரில் ஒரு உபதேர்தல். பொதுப்பணித்துறை பங்களாவில் தங்கியிருந்தார். அப்போது கோமல் சுவாமிநாதன் உள்ளிட்ட சிலர் காமராஜரின் தாயாரைப் பார்க்கச் சென்றனர். “என் வீடு இருக்கும் போது அங்ஙனே போய் ஏன் தங்குறான்?” என்று அந்த மூதாட்டி கேட்டபோது தான் காமராஜர் அவரைப் பார்க்க வரவே இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவனை ஒரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொல்லுங்கப்பா” – தாய்க்கே உரித்தான ஆதங்கத்துடன் அவர் இருபது வயது கூட நிரம்பாத ஒரு ‘பையனிடம்’ சொல்ல, அந்தப் பையனான கோமல் சுவாமிநாதன் அதை காமராஜரிடம் சொன்ன போது,”கிறுக்கச்சி! அது ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் காமராஜர்.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் ஜி.உமாபதி கூறிய ஒரு விஷயம் இது. அவர் காமராஜருக்கு வரும் கடிதங்களுக்கு பதில் எழுதி அனுப்பும் பொறுப்பில் இருந்த போது நிகழ்ந்தது இது.

காமராஜரின் தாயாரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அதில்,”நீ மாசம் அனுப்பற ஐம்பது ரூபாய் பத்தலை. விலைவாசி ஏறிக் கிடக்கு. கூட பத்து ரூபா அனுப்பு” என்று அவர் எழுதியிருந்தார்.

அதற்கு காமராஜரின் பதில் ;”உனக்கு பத்து ரூபாய் அதிகம் அனுப்ப வேண்டுமென்றால் பாலமந்திர் ஏழைக் குழந்தைகளுக்கு நான் அனுப்பும் பணத்திலிருந்து பத்து ரூபாய் குறைத்து அதை உனக்கு அனுப்ப வேண்டும். அந்த பிள்ளைகளுக்கு குறைத்து அனுப்பக் கூடாது. அதனால் இந்தப் பணத்திலேயே சமாளித்துக் கொள்”

எப்படிப்பட்ட தலைவர்கள் சமீப காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்! அவரைப் பற்றி அந்தக் காலத்தில், தீய சக்திகள் அடுக்கு மொழியில், கொள்ளை அடித்து சுவிட்சர்லாந்தில் கோடி கோடியாக பணம் சேர்த்து வைத்திருக்கிறார் அவர் என்று மேடை தோறும் முழங்கும். அதை நம்பி ஏமாந்த அப்பாவிகள் ஏராளம்.

இன்று எத்தனை சைபர்கள் அந்த எண்ணுக்கு என்றே தெரியாதபடி கோடி கோடியாக கொள்ளை. கொள்ளை அடித்தவர் பெரிய ஹீரோவாக மொபைல் போனுடன் காரில் வலம் வருவதை வேறு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். அவ்வளவு தைரியம்!

இடம் ரேஷம் கார்டு விநியோகிக்கும் மையம். இட மாற்றத்திற்கான விண்ணப்பத்தை நீட்ட, அதை வாங்கிய இளம் பெண்மணி முன்னும் பின்னுமாக ஐந்து நிமிடம் திருப்புகிறார். கொடுத்தவருக்கு தன் ‘இங்கிலீஷில்’ சந்தேகம் வந்து விட்டது. “ஏதேனும் தப்பா இருக்கா!”

“பேப்பர் சரியில்லை. கீழே போய் எழுதி வாங்கிட்டு வாங்க!”

kamarajar_stamp.

அரை மணி நேரம் மண்டையைப் பிய்த்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைகிறார் அவர். கீழே இருந்த ஒருவர் மாடியிலிருந்து வரும் அவரைக் கூப்பிட்டு விஷயத்தை விசாரிக்கிறார்.

தன்னிடமுள்ள பேப்பரை எடுத்து பழைய கால ரெஜிஸ்ட்ரார் அலுவலக தமிழில் தமிழ் கூட்டெழுத்தில் மனு ஒன்றை எழுதி, ஒரு பேப்பரைக் கொடுத்து, “இதை கொடுங்க” என்கிறார்.

ஐந்து ரூபாய் கட்டணம்.

மேலே போய் பேப்பரைக் கொடுத்தவுடன் அந்த எழுத்தைப் பார்த்தவுடன் இளம் பெண்மணி புன்முறுவல் பூக்க இடமாற்றத்துடன் ரேஷன் கார்டை அடுத்த வாரம் வாங்கிக்கலாம் என்று பச்சைக் கொடி காட்டுகிறார்.

சிறுதொகையில் கூட கேவலமான லஞ்சப் பங்கு. இதே நிலை தான் – (பழைய கால பிறப்பிதழில் பெயர் இருக்காது. அதை எழுத) கார்பரேஷனிலும் லஞ்சத் தொகை.

ஆர்டிஓ ஆபீஸிலும் இதே நிலை தான். சார்பதிவாளர் அலுவலகத்திலோ கேட்கவே வேண்டாம்.

எங்கும் லஞ்சம்; எதிலும் லஞ்சம். ஸயின்டிபிக்காக ஊழல் முறைப்படுத்தப் பட்டுள்ளது.

ஆங்காங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏஜெண்டுகள். அவரை மீறிச் சென்றால் ஆயிரம் நொள்ளைகள் சொல்லி திருப்பி அனுப்பி விடுவார்கள்.

காமராஜர் போல ஊழலின்றி தியாகம் செய்த தலைவர் எங்கே! ஊழலை முறைப்படுத்தி ஒன்றரைத் தலைமுறையை அழித்து விட்டவர்கள் எங்கே!

தமிழகம் இறைவனின் சாபத்தை வாங்கி விட்டதோ!

அவன் அருளின்றி சாப விமோசனம் கிடைக்காது.

சாப விமோசனத்திற்கு பிரார்த்திப்பது ஒன்றே நமது வழி.

ஆனால் அப்போதும் தீய சக்திகளின் ஒலி

“சீரங்கநாதரையும் தில்லை நடராஜரையும்;…..”

என்று ஓங்கி ஒலிக்கத் தான் செய்யும்.

ஒரு மனதாக அனைவரின் நலத்திற்காகவும் செய்யப்படும் பிரார்த்தனையில் தீயினில் தூசாகும் மாசுகள்; லஞ்சம் ஒழியும்.தர்மம் வெல்லும்.

*******

காற்றைப் போற்றி ஒரு கவிதை

in praise of aair

சென்னை வானொலி நிலயம் A (அலைவரிசை 720 Hz))யில் 21-5-2015 முதல் 30-5-2015 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு காலைமலர் நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள். உரைகளில் ஒன்று

Compiled by S NAGARAJAN

Article No.1914; Dated 6 June 2015.

Uploaded at London time: 5-16 am

 காற்றைப் போற்றி ஒரு கவிதை

SCRIPT BY: ச.நாகராஜன்

உலகப் புகழ் பெற்ற கவிஞரான சைமன் ஆர்மிடேஜ்  (Simon Armitage) காற்றைப் போற்றி ஒரு கவிதை எழுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தக் கவிதை சாதாரணமான பொருள் சார்ந்த சொல்லடுக்கு கவிதை மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும் அறிவியல் உத்தியுடன் கூடிய கவிதையாகவும் அமைகிறது என்பதே இதன் சிறப்பு.

 

 

 இந்தக் கவிதை 10 மீட்டர் நீளம் 20 மீட்டர் உயரமுள்ள ஒரு விசேஷப் பொருளில் சித்தரிக்கப்பட்டு நுண்ணிய மாசு நீக்கும் துகள்களினால் ஆன டைட்டானியம் ஆக்ஸைடால் பூசப்பட்டுள்ளது. டைட்டானியம் ஆக்ஸைடால் ஆன இந்த நுண்ணிய துகள்கள் சூரிய ஒளியையும் ஆக்ஸிஜனையும் பயன்படுத்தி நைட்ரஜன் ஆக்ஸைடு மாசுகளுக்கு எதிராகச் செயல்பட்டு காற்றைச் சுத்தப்படுத்துகிறது. இந்த விசேஷமான அமைப்பை ஷெபீல்டு பல்கலைக்கழகம் (SHEFFIELD UNIVERSITY) அமைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் 20 கார்களிலிருந்து வெளியாகும் மாசை இது நீக்க வல்லது.

 

 praise-of-air-copy

2014ஆம் ஆண்டு மே மாதம் பல்கலைக் கழகத்திற்கு அருகே  இந்தக் கவிதை காட்சிப்படுத்தப்பட்டது. இதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து இதன் அடுத்த பதிப்பு 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

நான் காற்றின் புகழைப் போற்றி எழுதுகிறேன்என ஆரம்பிக்கும் இந்தக் கவிதை, ‘காற்று ஒரு பெரும் கடவுள் ஆகட்டும்என்று கூறுவதோடு, ‘எனது முதல் வார்த்தையும் ஒவ்வொருவருடைய முதல் வார்த்தையும் காற்று தான்என்று   காற்றைப் போற்றி முடிகிறது.

 

இந்த அறிவியல் ரீதியிலான அமைப்பை விஞ்ஞானிகள் பலரும் இணைந்து செய்து முடித்தனர். உலகம் முழுவதற்கும் அற்புதமான செய்தியைத் தரும் இந்தக் கவிதையை படிக்கும் யாருக்கும் சுற்றுப் புறச் சூழல் கேட்டைப் பற்றியும் அதை நீக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஆழ்ந்த சிந்தனை எழும்அதையே தான் இதை எழுதிய கவிஞரும் விரும்புகிறார்.

 

மாசான நைட்ரஜன் ஆக்ஸைடை நீக்கும் இந்தக் கவிதை அமைப்பைப் பற்றி ஷெபீல்டு பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் டோனி ரையான் கூறுகையில், “அறிவியலும் கலையும் இணைந்த வேடிக்கையான இணைப்பு இது. நமது நகர்களின் சூழ்நிலையில் இருக்கும் மிக மோசமான காற்றின் தரத்தை உலகிற்கு   இது எடுத்துக் காட்டும்என்று கூறியுள்ளார்.

 simon-armitage-   simon poems

கவிஞரோடு சேர்ந்து நம்மில் ஒவ்வொருவரும் தூய்மையான காற்றின் புகழைப் பாடுவோம்! காற்றின் மாசை நீக்குவோம்!

*****************

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு, நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு

Kanna_01

Compiled by S NAGARAJAN

Article No.1900; Dated 31 May 2015.

Uploaded at London time: 6-52 am 

                                                  

இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 3

By ச.நாகராஜன்

சாவுக்குப் பயப்படவில்லைகவிஞர்!

பொன்னுடன் பிறந்தேன்பகுதியில், ‘சாவை மகிழ்ச்சியோடு வரவேற்கும் என்னை விட்டு, சாகவே விரும்பாத அவரைக் கொண்டு போய் விட்டார்எனக் கூறும் தாங்கள், ‘ஶ்ரீ கிருஷ்ணகாந்தன் பாமாலைப்பகுதியில்,

கனிவுடைய வயதிலொரு எழுபது கொடுத்தென்னைக் காத்தருள் கிருஷ்ண காந்தாஎன்றும்,

பதி நினது கதை புகல உடல் நிலையை நீ கொஞ்சம் பார்த்தருள் கிருஷ்ண காந்தாஎன்றும்,

 

விவரமறியாத எனை பல வயது வாழ விடு விமலனே கிருஷ்ணகாந்தா

என்றும், முரண்பாடாகக் கூறி இருப்பது ஏன்?

இப்படி உரிமையோடு கேள்வியைக் கேட்ட அன்பரின் பெயர் இர.இலாபம் சிவசாமி.

புங்கம்பட்டியைச் சேர்ந்தவர்.

 

அதற்கு கண்ணதாசன் ஜனவரி 1978 இதழில் கவிஞர் இப்படி பதில் அளிக்கிறார்:-

 

நான் வயது கேட்கிறேன். ஆரோக்கியத்தைக் கேட்கிறேன். ஆனால் மரணம் வந்து விடுமோ என்று அஞ்சுவதில்லை. நான் இறந்துவிட நேர்ந்து விடும் என்று தோன்றும் போது, மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயாராகி விடுவேன். சுருங்கச் சொன்னால் ஆரோக்கியமாக நடமாட விரும்புகிறேன்; சாவுக்குப் பயப்படவில்லை.

 

நான் நிரந்தரமானவன். எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!

தனது வாக்குமூலமாக அவர் படைத்த ஒரு பாடலில்

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                            

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                      

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு   

                                                                   

காவியத் தாயின் இளைய மகன்                                                          

காதல் பெண்களின் பெருந்தலைவன்நான்

காவியத் தாயின் இளைய மகன்                                                          

காதல் பெண்களின் பெருந்தலைவன்

பாமர ஜாதியில் தனி மனிதன்நான்                                             

படைப்பதனால் என் பேர் இறைவன்

 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                            

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                       

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்அவர்                                   

மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்நான்

 

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்அவர்                                   

மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்நான்                                  

நிரந்தரமானவன் அழிவதில்லைஎந்த                                              

நிலையிலும் எனக்கு மரணமில்லை

 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                       

ஒரு கோலமயில் என் துணையிருப்பு                                             

இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு                                                      

நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு                                                   

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு                                                                        

 

நான் நிரந்தரமானவன் அழிவதில்லைஎந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎன்று முத்தாய்ப்பாகக் கூறிய கவியரசர் இசைப்பாடலில் தன் உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்து விட்டார்.

 

ஆக கண்ணதாசனின் பாடல்கள் இருக்கும் வரை, எங்கேனும் ஓரிடத்தில் ஒலிக்கும் வரை அந்த உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தான் அர்த்தம். அந்தப் பாடல் ஒலிக்கும் வரையில் அவர் நிரந்தரமானவர்.

அந்த நிலையினில்அவருக்கு மரணமில்லை! ரத்த திலகத்தில் திலகமான பாடலைத் தானே பாடினார் கவியரசர்.

 

 அவரே பாடியுள்ள அந்தக் காட்சியில்எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎன்ற வரியைப் பாடும் போது மட்டும் அவர் இமைகளை மூடிக் கொண்டு கைகளை ஆட்டுவதைப் பார்க்கலாம்!

கண்களை மூடினாலும்காலமெல்லாம் ஜீவித்திருப்பதைசிம்பாலிக்காகஉணர்த்தி விட்டாரோ, என்னவோ!

 kanna4

கண்ணனருள் கை கூட கண்ணதாசனின் பாடல்கள்!

நீண்ட ஆயுளைக் கேட்டவர்; அதில் ஆரோக்கியமான வாழ்வைக் கேட்டவர்; அதில் பரமனின் புகழையும் தெள்ளு தமிழ்க் காவியங்களையும் பாட ஆசைப்பட்டவர். இதற்குஆகாத தொடர்பையெல்லாம் அறுக்கஇறைவனை வேண்டியவர் என்ற அளவில் பலப்பல பாடல்களைப் பாடியவர் கண்ணனின் லீலைகளைத் தான் பாடியதைக் கற்றோர்க்கு கண்ணன் அருள் கை கூடும் என்கிறார்:-

 

வடமொழியின் கீதத்தைத் தமிழினிலே வரைகின்றேன்                                   

கீத கோவிந்தமிதைக் கிருஷ்ணனது லீலைகளை                                      

நாதமொழி விளையாடும் நல்ல மணிப் பாடல்களை                             

சொல்லோடு பொருளழகு தோய்ந்து வரும் கவிதைகளை                            

கற்றோர்க்கும் மற்றோர்க்கும் கண்ணனருள் கைகூடும்!”

என்று அவரது கூற்று உண்மையே என்பதைகோபியர் கொஞ்சும் ரமணன்’ (ஜெயதேவரின் ரஸலீலா) என்ற அவரது காப்பியம் படிப்போர்க்குப் புலனாகும்.

 saraswathy ramanathan

டாக்டர் சரஸ்வதி ராமநாதன், கவிஞர் கண்ணதாசன் படல்கள் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.(நாங்களாண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மதுரை தினமணி அலுவலகத்தில் நடத்திய மாபெரும் பட்டி மன்றங்களில் கலந்துகொண்டு எங்களை மகிழ்வித்தவர்)

இலக்கியப் பணிஒரு கண்ணோட்டம்

கண்ணதாசனின் இலக்கியப் பணியை

  • அரசியல் சார்ந்த பாடல்கள், கட்டுரைகள், கவிதைகள் (இதில் பெரும்பாலானவை அபத்தமானவை என்று அவரே பின்னால் கூறி விட்டார்)
  • திரை இசைப் பாடல்கள்
  • கதைகள் மற்றும் நாவல்கள்பொது
  • கட்டுரைகள்பொது
  • ஆன்மீக இலக்கியம் (அர்த்தமுள்ள இந்து மதம் உள்ளிட்டவை)
  • காப்பியங்கள்
  • சுய சரித்திரம் (இது மிக முக்கியமானதுஏனெனில் இதில் சமகால அரசியல் அடங்கி இருக்கிறது)
  • திரைக் கதை வசனம்
  • மேடைப் பேச்சுக்கள் மற்றும் கேள்விபதில்கள்
  • பொதுவான கவிதைகள்
  • பத்திரிகை மற்றும் அரசியல் அறிவிப்புகள் உள்ளிட்ட இதர எழுத்துக்களும் மொழி பெயர்ப்புகளும்

என்ற பல பெரும் பிரிவுகளில் பிரிக்கலாம்.

எப்படிப் பிரித்தாலும். இவற்றில் எதைப் படித்தாலும் அன்றாட நிர்வாக ரீதியில் அவர் எழுதியவை மற்றும் அரசியல் சார்ந்த தவறான கொள்கையின் அடிப்படையில் அமைந்த கட்டுரைகள் ஆகியவற்றைத் தவிர இதர இலக்கியப் பணியில் அவரது பணி மகத்தானது என்பதை உரத்த குரலில் ஓங்கிக் கூறலாம்.

Kannadasan_stamp

தனித் தனியே ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்தால் இந்த உண்மை தெரியவரும்.

ஈர்ப்புள்ள அன்பர்கள் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் போகலாம்; இறுதியில் கண்ணனைச் சேரலாம்!

  • தொடரின் இப்பகுதி முற்றும்

பழங்கால இலக்கியங்களில் பாராசூட், மலை ஏறும் கருவிகள்

para7

Compiled by London Swaminathan

Article No.1898; Dated 30 May 2015.

Uploaded at London time 7-16 am

 

ஆல்பர்ட் ரைட், வில்பர் ரைட் ஆகிய இருவரும் அமெரிக்காவில் விமானத்தைப் பறக்க விடுவதற்கு முன்னால் நம்மவர் பம்பாயிலிருந்து விமானங்களைப் பறக்கவிட்டது பற்றி இந்த பிளாக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ச.நாகராஜன் எழுதிய கட்டுரை வெளியானது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் விஞ்ஞான மாநாட்டு துவக்க உரையில் அதைக் குறிப்பிட்டவுடன் எல்லாப் பத்திரிக்கைகளிலும் அது ஏதோ புதிய செய்தி போல வெளியானது.

இது போல ராமன் விமானம் அயோத்திக்குப் பறந்தது எப்படி? என்பதை நான் லண்டன் விஞ்ஞான சஞ்சிகைக் கட்டுரை அடிப்படையில் எழுதினேன். இதுவும் ஒரு காலத்தில் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வரலாம். பிரம்மாஸ்திரம் என்பது அணு ஆயுதம் என்று 2005 ஆம் ஆண்டில் லண்டன் சவுத் இந்தியன் சொசைட்டி (south Indian Society)  மலரில் எழுதி, பின்னர் இந்த பிளாக்கில் 2011ல் வெளியான கட்டுரையையும் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மிக்க மகிழ்ச்சி.

இங்கே, ஆரிய தரங்கிணி (Arya Tarangini by A Kalyanaraman) என்ற ஆராய்ச்சி நூலை எழுதிய ஏ.கல்யாணராமன் கண்டுபிடித்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. இப்பொழுது மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்ட பாராசூட், மலையேறும் கருவிகள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதை சம்ஸ்கிருத ,பாலி மொழி நுல்களில் காண முடியும்.

அந்தக் காலத்தில் கதைகள் எழுதுவதிலும் நம்மவரே முதலில் நின்றனர். இப்பொழுது சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹாரி பாட்டர், (Superman, Spiderman, Harry potter) இதற்கும் முந்தைய அராபிய இரவுக் கதைகள், கல்லிவரின் லில்லிபுட் பயணம், பேய்க்கதைகள், ஈசாப் கதைகள், ஏசு சொன்ன உபமானக் கதைகள் ஆகியன எல்லாம் நம்மவர் எழுதிய நூல்களில் இருந்து சென்றவையே என்றும் முன்னரே காட்டியுள்ளேன்.

பாணினி என்பவர் உலகின் முதலாவது இலக்கணப் புத்தகத்தை 2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார். அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த காத்தியாயனர் என்பவர் வார்த்திகா என்ற விளக்க உரை எழுதினார். அதில் பலவகையான பாதைகள் குறிப்பிடப்படுகின்றன:-

elephant ride

வாரிபத= கடல் வழி (கப்பல் போக்குவரத்து)

கரிபத= யானைப் பாதை

அஜபத=ஆட்டுப் பாதை (ஆடு செல்லும் ஒற்றையடி பாதை)

சங்குபத=மலை ஏறுதல் (மலை ஏறும் கருவிகளைப் பயன்படுத்தி)

ஹம்சபத= வான் வழி (உ.ம். ராமர், குபேரர், ராவணன், உபரிசாரன்)

தேவபத= விண்வெளிப் பயணம் (உ.ம்.நாரதர், மாதலி).

சம்ஸ்கிருதச் சொல்லான ‘பத’ என்பதில் இருந்தே ஆங்கிலச் சொல்லான Path பாத், தமிழ்ச் சொல்லான பாதை என்பன வந்தன.

பழங்காலத்தில் நம்மவர்கள் போக்குவரத்தில் மிகவும் முன்னேறி இருந்ததை பல நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. கிருஷ்ணனும் பலராமனும் அடிக்கடி உத்தரப் பிரதேச மதுரா நகரிலிருந்து குஜராத் கடற்கரை ஓரமுள்ள துவாரகாவுக்கு வந்து சென்றார்கள். பரதன் கேகய (Afghan) நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்து போனான். ராவணனும் அவனது உறவினர்களும் கோதாவரி பிராந்தியத்தில் வந்து விளையாடிச் சென்றார்கள், இமயமலை வரை சென்று அவன் கயிலாயத்தையே ஆட்டப் பார்த்தான்.

பருவக் காற்று ரகசியங்கள் இந்துக்களுக்குத் தெரியுமாதலால் ஒரே வாரத்தில் இலங்கையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து கங்கை நதி வழியாக இமய மலை வரை சென்றனர். இதை ருசுப்பிக்கும் செய்திகள் மஹாவம்சத்தில் உள்ளன. மேலும் கரிகால் சோழனின் முன்னோர்கள் பருவக் காற்றைப் பயன்படுத்தியதைப் புறநனூறு குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்தப் பின்னணியில் பார்த்தால் எந்தச் செய்தியும் வியப்பை ஏற்படுத்தாது.

பாலி மொழி “நித்தேச”, சம்ஸ்கிருத பிருஹத் கதா, புத்த ஜாதகக் கதைகள் முதலியன பல வீர தீரக் கதைகளைச் சொல்லுகின்றன. சௌதாச என்பவன் அசேர என்னும் மன்னனுடன் கடல் வழிப் பயணம் மேற்கொள்கிறான். சுவர்ணபூமிக்குச் சென்று தங்கம் கொண்டுவர அவர்கள் புறப்பட்டனர். அவர்கள் போன பாதைகள் பின்வருமாறு:–

chola-flag-2

வாரி பத; கடல் பயணம்

வேத்ர பத: டார்ஜான் படத்தில் பார்ப்பது போல மரத்தில் இருந்து தொங்கும் ராட்சதக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பாறைக்குப் பாறை அல்லது மரத்துக்கு மரம் தாவிச்சென்றனர்.

வம்ச பத: காட்டுவழியில் மூங்கில் கழிகளைப் பயன் படுத்திச் செல்லுதல்

சங்கு பத: மலை ஏறுதல். ஒரு தோலில் ஆன கயிற்றில் கொக்கியை மாட்டி மலை மேல் வீசுதல். அது மாட்டிக் கொண்டவுடன் அதைப் பிடித்து மலை ஏறுதல். அங்கு வைர ஊசியால் துளை செய்து ஒரு ஈட்டியை நட்டு மீண்டும் தோல் கயிற்றை மேலே எறிந்து மேலும் மேலும் சென்றனர்.

பாராசூட் (சாத்ர பத)

அஜ பத:- மலையில் கிராதர்கள் எனப்படும் வேட்டுவ இன மக்களிடம் ஆடுகலை விலைக்கு வாங்கி அதன் மீது மலைகளில் ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்தனர்.

பின்னர் பள்ளத்தாக்குகளைக் கடப்பதற்காக அந்த ஆடுகளைக் கொன்று ரத்தம் படிந்த தோலை மேலே போர்த்திக் கொண்டனர்.

சகுனபத (பறவைப் பாத): உடனே ராட்சதக் கழுகுகள், ஆட்டுத்தோல் போர்த்திய மனிதர்களை மாமிச பிண்டம் என்று கருதி கொத்திச் செல்லும். அது மாமிசம் அல்ல , மனிதன் என்று தெரிந்தவுடன் பள்ளத்தாக்கில் போட்டுவிடும். அவர்கள் அங்கேயுள்ள தங்கத்தை எடுத்துக் கொண்டு வேறு வழிகளில் திரும்புவர்.

இந்த பாத, பத என்ற சொற்கள் ரிக் வேதத்திலேயே உள்ளன. மேலும் கழுகு மூலம் சோமலதா என்படும் கொடியைக் கொண்டு வருதல் முதலியன ரிக் வேதத்திலும், மரகதக் கற்களை எடுப்பது சம்ஸ்கிருத நூல்களிலும் உள்ளன.

இதற்குப் பின்னர் ஊர்ந்து செல்லும் ஜானு பத, மலையில் குகை ஏற்படுத்தி, சுரங்கம் தோண்டி வெளியே வரும் தாரிபத, மூஷிகபத (எலி வழி) முதலியனவும் உள்ளன.

சாத்ர பத என்பது குடை போன்ற ஒரு கருவியில் மெல்லிய தோலைப் போர்த்தி அதைப் பிடித்துக் கொண்டு மலை உச்சியிலிருந்து இறங்குதல். இதை இன்று பாரச்சுட் என்று அழைக்கிறோம். இதை விமானத்தில் இருந்து அவசரமாக இறங்க அல்லது குதிக்க இன்று பயன்படுத்துகிறோம்.

Paracommander2

வணிக பத, வாரி பத

எப்படி பத (பாதை) என்பதை எல்லா இந்திய மொழிகளும் பயன்படுத்துகின்றனவோ, அதே போல ரிக் வேதச் சொல்லான வணிக (வியாபாரம்) என்பதையும் எல்லோரும் பயன்படுத்து கிறோம்.வேதத்தில் வாரி பத, வணிக பத என்ற வழிகள் பாடப்படுகின்றன. பல்வேறு வழிகளை தோண்டிக் கொடுத்ததற்காக, பாதைகளை வகுத்துக் கொடுத்ததற்காக இந்திரனைப் பாராட்டும் துதிகளும் உண்டு. பூஜ்யு (Bhujyu) என்பவரை நடுக்கடலில் இருந்து அஸ்வினி தேவர்கள் காப்பாற்றிய பாடல்களும் உண்டு.

முப்பது நதிகளைப் பற்றிய ஏராளமான துதிகளும் அவர்களுக்கு நீர்ப் போக்குவரத்தின் (Water Transport) மீதான ஆர்வத்தைக் காட்டும். உலகில் வேறு எந்த நாட்டுப் பழங்கால இலக்கியத்திலும் ஒரே புத்தகத்தில் இவ்வளவு பாடல்களைக் காண முடியாது.

நீர் என்ற சொல் ரிக் வேதத்தில் வருகிறது. இதைத் தமிழ்ச் சொல் என்று பலரும் எண்ணினர். ஆனால் இதுவும் வடமொழிச் சொல்லே. ஏனெனில் நீர்த் தேவதைகளான நீரெய்ட்ஸ் (Nereids) பற்றி கிரேக்க மொழியிலும் மிகப் பழங்காலத்தில் வழங்கி வருவதால் இது தமிழ்ச் சொல் இல்லை என்பது தெரிகிறது. நாராயண என்பவருக்கு நீரின் மேல் மிதப்பதால் அப்பெயர் வந்ததையும் புராணங்கள் எடுத்துக் காட்டும்.

para2

எல்லாவற்றிற்கும் மேலாக மனுவின் (Floods) பிரளயம்- கப்பல் கதை உலகில் எல்லா பழைய இலக்கியங்களிலும் பேசப்படுகின்றன. பைபிளில் இக்கதையில் வரும் நோவா (Nova) என்பதும் சம்ஸ்கிருதச் சொல்லாக இருப்பதால் இந்தக் கதை இந்தியாவில் சென்றது கண்கூடு. நோவா என்றால் கப்பல் (நாவ்). நவ என்றால் புதிய — இந்த இரண்டு அர்த்தங்களுமே அந்தக் கதையில் பொருந்தும். கப்பல் சம்பந்தமான நேவி ( Navy கடற்படை) முதலிய சொற்கள் இன்று ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் புழங்குகின்றன.

கண்ணதாசனும் தி.ஜ.ர.வும்

kannadasan

Written by S NAGARAJAN

Research Article No.1896; Dated 29 May 2015.

Uploaded at London time 5-56 am

By ச.நாகராஜன்

தமிழின் நடை வளம்!

தமிழின் சிறப்புகள் ஏராளம்; அவற்றில் ஒன்று எந்த நடைக்கும் ஏற்றபடி நெகிழ்ந்து கொடுக்கும் அதன் தன்மை.

தமிழ் தனது – ஒரு நடையில் உருக்கும்; ஒரு நடையில் மயக்கும்; ஒரு நடையில் குதூகலப்படுத்தும்; ஒரு நடையில் ஆட வைக்கும்.. இப்படி பல வடிவங்களை எடுக்க வல்ல தெய்வ மொழி தமிழ்.

நடைகளின் வடிவங்களுக்கு உதாரணங்களாக ஆயிரம் நடைகளைச் சொல்லலாம். இடம் கருதி சமீப கால ‘நடை மன்னர்கள்’ சிலர் பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுவோம்.

உ.வே.சாமிநாதையர். தமிழ் தாத்தா. அழகிய ஆற்றொழுக்கு போன்ற நடை. பேசுவது போல இருக்கும். உம் உம் என்று உம் கொட்டி, சிறு குழந்தைகள் அடுத்து என்ன என்று கேட்பது போல ஆர்வமூட்டுவதாக இவர் நடை இருக்கும்.

மஹாகவி பாரதியார் நடை. சின்னச் சின்ன வாக்கியங்கள். வலிமையும் ஆழமும் நிறைந்திருக்கும். வேத சப்தங்கள் போல! நிறுத்தி, நிதானித்துப் பல முறை படித்து உத்வேகம் பெற முடியும். அதில் எழும் உணர்ச்சி பல காலம் நம்மை விட்டுப் போகாது.

கல்கி கிருஷ்ணமூர்த்தி நடை. ஜில்லென்ற தென்றல் காற்று போல மேலே வந்து குளிர்விக்கும் நடை. எந்த இடத்தில் தொட்டாலும் ஒரு ஜில்லிப்பு. எடுத்த புத்தகத்தைக் கீழே வைக்க மனமே வராது. பொன்னியின் செல்வனைத் தொட்டவர்கள் தொட்டவர்களே. அதன் நடையழகிலும் கதையழகிலும் ஈடுபட்டவர்கள் பட்டவர்களே!

தி... நடை

இதையெல்லாம் தாண்டி இன்னொரு நடை. திஜர நடை. மஞ்சரி ஆசிரியராகப் பல காலம் பணி புரிந்த தி.ஜ.ரங்கநாதன் சிறு சிறு வாக்கியங்களாக அழகாக எழுதுவார். படிப்போரின் மனதில் எளிதாக அவர் சொல்வது ஆழப் பதியும்.

எடுத்துக்காட்டாக அவர் தன் கதைகளைப் பற்றிச் சொல்லும் சில வாக்கியங்களை இங்கே பார்ப்போம்:-

கதைகளை எல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்; ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம். மற்றது அமானுஷ்ய கற்பனை. மேதைகள் தாம் சுவைக்குறைவு இல்லாத அமானுஷ்ய கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றவர்களுக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்களைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்தப் போட்டோவுக்கு மெருகு கொடுக்கும்.

 

 thi.ja.ra-1

கண்ணதாசனும் தி...வும்

தி..ரவுடன் நெடுங்காலம் நெருங்கிப் பழகிய ஒருவர் ராஜரங்கன் (எம்.ஆர். ரங்கராஜன் என்ற 17 வயது பையன் திஜரவுடன் பழக ஆரம்பித்த போது அவருக்கு வயது 55. அவருக்கு ராஜரங்கன் என்ற பெயரைத் தந்தவரே திஜரதான்!)

அவர், “தி...- மறவாக் கணங்கள்என்று ஒரு நூற்றாண்டு அஞ்சலிக் கட்டுரையை மஞ்சரி டிசம்பர் 2001 இதழில் எழுதியுள்ளார்அவர் விவரிக்கும் ஒரு சுவையான சம்பவத்தை அவர் எழுத்துக்களிலேயே பார்ப்போம்:-

 

குழந்தை போல மகிழ்ச்சிப் புன்முறுவலோடு ஒரு நாள் தி... என்னை மவுண்ட்ரோடுக்கு அழைத்துப் போனார். ஆயிரம் விளக்கு மசூதிக்கு எதிர்ப்புறத்தில் ஒரு கட்டிடத்தின் மாடியில், கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்த தென்றல் பத்திரிகைக் காரியாலயம் இருந்தது.

வா, கண்ணதாசன் இருக்காரோ பார்ப்பாம்என்று விடுவிடுவென்று ஏறினார்.

கவிஞர் ஊரில் இல்லை. அவர் உதவியாளரிடம், “கல்கி நினைவாக சமீபத்தில் கண்ணதாசன் ஒரு தலையங்கம் எழுதினாராமே. அது இருக்கோ?” என்று கேட்டார்.

 

அதை வாங்கி,”இதைப் பார்என்று காண்பித்தார். கண்ணதாசனுக்கு தி...வின் எளிமையான தமிழ்நடையின் மேல் பெரு மதிப்பு. சிறு சிறு வாக்கியங்களாக அவர் எழுதத் தொடங்கியதே கூட அந்த பாதிப்பு தான் என்று கூறலாம். கல்கியைப் பற்றி எழுத வந்த அந்தத் தலையங்கத்தில் அவர் தி..ரவைப் பாராட்டி, அவர் தமிழ் நடையை மனமாரப் புகழ்ந்திருப்பதை, “பார்த்தாயா? எவ்வளவு பிரியமாய் சொல்லியிருக்கார்என்று ஒரு குழந்தையின் குதூகலத்துடன் சொன்னார். காழ்ப்பு நிறைந்த உலகத்தில் கள்ளமில்லாத பாராட்டை ரசிக்கும் வெள்ளை மனத்தின் வெளிப்பாடு இது.”

 

 

தி.ஜர.வைத் தன் எழுத்து நடைக்கு குருவாக கண்ணதாசன் கொண்டிருந்தார். கள்ளமில்லாமல் வெளிப்படையாக தி...வை அவர் பாராட்டி தன் நன்றியை வெளிப்படுத்தி இருக்கிறார் அந்தக் கட்டுரையில்.

 

சிறு சிறு வாக்கியங்கள்சிறப்பான கருத்துக்கள்!

கவிஞர் கண்ணதாசனின் நடை பளீர் பளீரென இருக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு செப்பு மொழி பதினெட்டு. சின்னச் சின்ன வாக்கியங்கள். நகைச்சுவையுடன் கூடிய ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் வைர வரிகள்.

 

நகைச்சுவைக்கு ஒரு எடுத்துக்காட்டு:-

காற்றடிக்கும் போது தென்னை மரம் கூட ஏன் ஆடுகிறது என்று வெகு நாட்கள் யோசித்துப் பார்த்தேன். பிறகு தான் விபரம் புரிந்ததுதென்னையில் இருந்து தானே கள் வருகிறது!” (கண்ணதாசன் ஜூன் 1976 இதழில் செப்பு மொழிகள் பகுதியில்)

இரண்டிரண்டு வார்த்தைகளில் பெரும் கருத்துக்களையும் சந்தோஷத்தையும் அடக்கியிருக்கும் இவரது திறமைக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை எடுத்துக் காட்டாகத் தரலாம். அதற்கு தனி கட்டுரை!

**********