சரஸ்வதி அருள் பெற்ற கவிஞர் கண்ணதாசன்!

Written by London swaminathan

Post no.1879, Date: 21 May 2015.

இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 2

By ச.நாகராஜன்

சரஸ்வதி அருள் பெற்ற கவிஞர்!

மடை திறந்த வெள்ளம் போல வாயைத் திறந்தவுடன் கவிதை வெள்ளமாகப் பொழிய வேண்டுமெனில் அதற்கு முதல் காரணம் இறைவனின் திருவருள் தான் என்பதைக் கண்ணதாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார்.

 

அவரிடம் நெருங்கிப் பழகி அவரது உதவியாளராக இருந்த இராம.முத்தையா கண்ணதாசனைப் பற்றிக் கூறுவது இது:-

அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது; “எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியால் தான், நான் எதையும் சிந்திக்க, எழுதவும் முடிகிறது!” என்றுஒரு வேளை நான் மகாகவி பாரதியின் மறு பிறப்பாக இருப்பேனோ, என்று கூட அவர் சிந்தித்துப் பார்ப்பார்.’ஆகவே நானும் சிறு வயதிலேயே இறந்து விடுவேனோ என்றும் பயப்படுவார்.”

 

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை.

எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வந்து விழுகின்ற போது அதை அவர்களாலேயே நம்ப முடியவில்லைஇதை நாமா எழுதினோம் என்று! அருளாளர்களும் இதே போலவே உணர்கின்றனர்.

ஓரிரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்ப்போம். வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் துள்ளி வர அற்புத கவிதைகளை மழையெனக் கொட்டிய மஹாகவி பாரதியார், “ மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்  மனோன்மணி யென் மாசக்தி வையத்தேவிஎன்று கூறி இறைவி தன்னுள் இருப்பதை உணர்ந்து பேசுகிறார்.(பாரதி அறுபத்தாறுமுதல் கடவுள் வாழ்த்துப் பாடல்)

 

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்என்று வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் மகான் அருணகிரிநாதர் முருகனே தனக்குத் தானே தன் மூலம் அனைத்தையும் படைத்துக் கொண்டதாகச் சொல்கிறார். (கந்தர் அனுபூதிபாடல் 17)

 

திருமூலரோ, ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்கிறார். (திருமந்திரம் பாடல் 81)

இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

 

இளையராஜா பெற்ற வாழ்த்து

இசைஞானி இளையராஜா அற்புதமாக இந்தக் கருத்தை இப்படிப் பதிவு செய்கிறார்:-

இசையமைப்பாளனாக அறிமுகமான பின், அதேஅருண் பிரசாத் மூவிஸில்எனது இரண்டாவது படமானபாலூட்டி வளர்த்த கிளிக்குப் பணியாற்ற நேர்ந்த போது, கவிஞர் என்னைப் பார்த்ததும், “நீதானா அந்த இளையராஜா! நான் அப்பவே நெனச்சேன், நீயாகத் தான் இருக்குமென்று!” என்று தன் உள்ளம் திறந்த வாழ்த்தையும் கூறி, என்னை வரவேற்கும் விதத்தில், ‘கண்ணோட கண்ணுஎன்ற பாடலில்,

வா, ராஜா, வா!”

என்ற தனது வாழ்த்து முத்திரையையும் பதித்தார்.

 

கவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை! அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர்.ராமசாமி அந்தப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.”

 

இளையராஜாவின் ஏற்றத்திற்கு ஒரு காரணம் கவிஞரிடம் அவர் வாங்கிய ஆசிகள் என்பதையும் அவர் வாக்கில் சரஸ்வதி குடி கொண்டிருந்தாள் என்பதையும் அவரே இப்படி, “கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்!” என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

 

 

நீண்ட நாள் வாழ வேண்டும்

தனது இலக்கியப் பணிக்கு நீண்ட வாழ்நாளை அவர் எதிர்பார்த்து இறைவனிடம் யாசித்தார். அவன் தருவானோ இல்லையோ, என்ன நினைக்கின்றானோ என்று ஒரு பதிவையும் அவரே செய்து விட்டார்.

கவிஞரின் ஐம்பதாவது பிறந்த தினம் வந்த போது பிறந்த நாள் காண்பதில் பிழை இலை என்கிறார்:-

இறந்த நாள் அனைத்தும் எண்ணி இனி வரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம் பிழை இலை; ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத் தேர்ந்துகொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனி வராது பாக்கி நாள் நன்னாளாக!”

என்கிறார்.

 

 

கண்ணதாசனைப் பற்றிக் கண்ணதாசன்!

தனது வாழ்க்கையை சிறந்த நாள் கணக்குப் பார்த்துஅவரே ஒரு மதிப்பீடும் செய்து கொள்கிறார் இப்படி:-

ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”

இதை விட, கண்ணதாசனை இன்னொருவரால் மதிப்பிட்டு விட முடியுமா என்ன. அழகான மதிப்பீடு! அளவான மதிப்பீடு! அறத்தின் அளவிலான மதிப்பீடு!

ஐம்புலனையும் ரசிக்க வைத்து, பாவ புண்ணியத்தைக் கலந்து, ஐம்பொறிகளையும் துடிக்க வைத்து, ஆயிரக் கணக்கான நூல்களைப் படித்து, அதைத் தமிழில் முடிந்த வரை வடித்து பைம்புகழ் கண்ட கவிஞர் இன்னும் நெடுங்காலம் வாழ இறைவனை இப்படி வேண்டுகிறார்:-

 

ஆண்டுகள் ஐம்பதாகும் ஆரம்பம் திருநாளாகும்

ஆண்டுகள் அறுபதானால் அந்தியில் நன்னாளாகும்

ஈண்டு யான் ஐம்பதாண்டை இனிதுற வரவேற்கின்றேன்

நீண்ட நாள்  வாழ ஆசை நிமலன் என் நினைக்கின்றானோ!”

நீண்ட நாள் வாழ ஆசைப்பட்ட கவிஞர் அறுப

தைக் கூடப் பார்க்கவில்லை; நிமலனின் நினைப்பு அப்படி இருந்தது!

சரி, நீண்ட நாள் வாழ வரம் கேட்ட கவிஞர் மரணம் கண்டு அஞ்சினாரா! இதையும் வாத, பிரதிவாதம் செய்ய அவர் இடம் கொடுக்கவில்லை, பதிலை அவரே கூறி விட்டார்!

அது அடுத்த அத்தியாயத்தில் ..

                             –தொடரும்

 

இலக்கியப் பணியில் கண்ணதாசன்!-1

Art-350

Written by ச.நாகராஜன்

Research Article No.1874; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-19

ச.நாகராஜன்

கண்ணதாசனின் பல் பரிமாணங்கள்!

தமிழ் இலக்கியம் அகன்றது, விரிந்தது, ஆழமானது, அதிசயமானது! காலத்திற்கேற்றவாறு கவிஞர்கள் தோன்றி தமிழுக்கு அளித்த காணிக்கைகளைப் பார்த்தால் அவை பல்வேறு சுவையைக் கொண்டிருப்பதோடு சம காலத்தில் வாழ்ந்த மனிதர்களை உத்வேகப்படுத்தியதோடு அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் அவை ஏற்றவையாகவும் ஏற்றம் பெற்றவையாகவும் இருப்பதைக் காணலாம்.

 

கண்ணதாசன் என்ற கவிஞனும் இதற்கு விதி விலக்கல்ல!

கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த ஆண்டுகள் 54 ஆண்டுகள் தான். என்றாலும் கூட அவர் பல பரிமாணங்கள் கொண்டு ஒளிர்ந்தார். அவர் ஒரு கவிஞர். கட்டுரையாளர். நாவல் ஆசிரியர். பத்திரிக்கை ஆசிரியர். திரைப்படப் பாடலாசிரியர். திரைக்கதை வசனகர்த்தா. மொழிபெயர்ப்பாளர். இப்படிப் பல பரிமாணங்கள்.

 

4000க்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் 5000 திரைப்படப் பாடல்கள், சுவையான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் என அவரின் படைப்புப் பட்டியல் நீளும்.

வாழ்ந்த ஆண்டுகளையும் படைத்த படைப்பின் எண்ணிக்கைகளையும் வைத்து பொதுவாக ஒருவன் வாழ்த்தப்படுவதில்லை; மதிக்கப்படுவதில்லை.

இருந்த காலத்தில் இருளை அகற்றி ஒளியையும், சோகத்தை அகற்றிச் சுகத்தையும்காலம் விதிக்கும் தடைகளுக்கு விடைகளையும் தந்தானா என்பதை வைத்தே காலம் ஒருவனை எடை போடுகிறது.

 

 

26 வயதே வாழ்ந்த ராஜம் ஐயர் (1872-1898) கமலாம்பாள் சரித்திரம் உள்ளிட்ட பேர் சொல்லும் படைப்புகளைப் படைத்தவர். 39 வயதே வாழ்ந்து மறைந்த உலக மஹாகவி பாரதியார் (1882-1921) தமிழில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டியவர். காலத்தை வென்ற கவிதைச் சித்திரங்களைத் தீட்டியவர். 29 வயதே ஆன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படப் பாடல்கள் மூலமாக ஒரு தனி தாக்கத்தை ஏற்படுத்தியவர். இப்படிப் பலரையும் சுட்டிக் காட்டலாம்.

 images

 

அனைவருக்கும் ஒரு பாட்டு!

கர்ப்பத்தில் இருந்து ஆரம்பித்து காடு சென்று முடிபவர் வரை அனைவருக்கும் அனைத்து சமயங்களுக்கும் ஏற்ற பாடல்களை வெகுஜன ஊடகம் மூலமாகத் தந்தவர்; சமகால அரசியலைகுறிப்பாக அதிலிருக்கும் சாக்கடை நாற்றத்தை அம்பலப்படுத்தியவர்; கவிதைகளில் தமிழை விளையாட விட்டு அனைவரையும் ரசிக்க வைத்தவர். ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு இந்து மதத்திற்கு ஒரு சுகமான அர்த்தத்தைத் தந்தவர். அனைவரும் திடுக்கிடும்படியான சுய விமரிசனத்தை உண்மை வழுவாது தந்து அனைவரையும் அதிசயக்க வைத்தவர். பல பலஹீனங்களுக்குமது, மாதுஉட்பட்டிருந்தாலும் கூட, அவற்றிலிருந்து விடுபட முயன்று, தமிழ் இலக்கிய பலத்தால் தன் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் காண முற்பட்டவர் . சுருக்கமாக இது தான் கண்ணதாசன்.

 

 

காப்பியம் செய்ய, தமிழ் மட்டும் போதாதே!

கவிஞர் நாஞ்சில் ஷா, சென்னை – 48 அவரை இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்:-

மலை போன்ற தத்துவத்தை                                                                     

மலை வாழைப் பழமே யாக்கி                                                        

நிலையான தமிழ்த்தேன் பாகில்                                                    

நியமமுடன் சேர்த்து நல்கும்                                                           

கலைஞானக் கவிதை வேந்தே!                                                   

காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்                                                           

தலைமேலே அமரப் போகும்                                                          

சாதனை தான் எப்போ தென்பீர்?

காப்பியங்கள் பல செய்து புவித் தலமை கொள்ளப் போவது எப்போது என்பதற்கு அவரது பதில் இது:-

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்                                

நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்                                     

ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்                                       

அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்                                       

சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்                                               

தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?                                         

வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்                                        

வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

ஜனவரி 1978, கண்ணதாசன் இதழில் வெளி வந்தஐயம் அகற்று’ (கேள்விபதில்) பகுதியில் கேள்வி ஒன்றும் அதற்கான பதிலும் தான் இது!

இவற்றில் பல இல்லாத போதும் கூட அவர் கவிதை யாத்தார்; காப்பியங்கள் செய்தார்.

 

 Kannadasan birth chart south indian type

தனக்கு ஆகாத தொடர்பெல்லாம் அறுதலை அவர் விரும்பினாலும், அந்தத் தொடர்புகள் இவரைச் சுற்றி வந்து கும்மாளம் போட்டன! நோயுள்ள உடல், நொந்த மனம், கலி காலம், வெறுப்பான சூழல் இவையெல்லாம் அவரைப் பரந்த அளவில் இலக்கியப் பணி செய்யவிடாமல் எதிரில் வந்து குறுக்கிட்ட தடைகளாய் அமைந்தன.

விதி சதி செய்தாலும் சாதித்தது ஏராளம்! 

 

காலத்தை வீணாக்கி விட்டேன்!

பேராம்பட்டு கே.சந்திரசேகரன் கேட்கிறார் (இதே கண்ணதாசன் ஜனவரி 1978 இதழில்) இப்படி:-

தாங்கள் இப்பொழுது துவங்கியிருக்கும் எழுத்துப் பணியை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியிருந்தால், இன்னும் நிறைய சேவை செய்திருக்கலாமே!”

அதற்கு கண்ணதாசனின் பதில் இது:-

கடவுள் இந்த புத்தியை அப்போது எனக்குக் கொடுக்கவில்லையே! இதை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்கள்; நானோ எண்ணி எண்ணி அழுகிறேன். காலங்களை வீணாக்கி விட்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னே இந்தப் பணியை நான் துவக்கியிருந்தால், என் பிள்ளைகளுக்கு  வேறு சொத்து எதற்கு?”

காலம் கடந்த புத்தி! கடவுள் செய்த ஜாலம்! இதில் வரும்என் பிள்ளைகள்என்பதை அவரது சொந்தக் குழந்தைகள் என்று எடுத்துக் கொள்ளாமல் தமிழ்ப் பிள்ளைகள் என்று அகண்ட அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்!

தமிழுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பெரிய சொத்து, சுருங்கிய சொத்தாகவே வந்தது!

  • தொடரும்

 

 

நூறு ஆண்டுகள் வாழ 100 ஆண்டுகள் வாழ்ந்தோர் கூறும் ஆலோசனை!

Compiled by S NAGARAJAN

Article No.1872; Dated 18 May 2015.

Uploaded in London at 9-15

 

By .நாகராஜன்

 

  ” கிழக்கில் பரிசுத்தமாக உதிக்கும் சூரியனை நூறாண்டு கண்டு வணங்குவோம். நூறாண்டு வாழ்வோம். நூறாண்டு உறவினருடன் கூடிக் குலவுவோம். நூறாண்டு மகிழ்வோம். நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம். நூறாண்டு இனியனவற்றையே கேட்போம். நாறாண்டு இனியனவற்றையே பேசுவோம். நூறாண்டு தீமைகளால் ஜெயிக்கப்படாதவர்களாக வாழ்வோம்

                                                – வேத பிரார்த்தனை

நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக செயலூக்கத்துடன் வாழ ஆசைப்படாதவர் யாருமே இருக்க முடியாது. இன்றைய நவீன காலத்தில் முப்பது வயதிலேயே மாரடைப்பு, கான்ஸர், எய்ட்ஸ் போன்ற வியாதிகளால் அவஸ்தைப் படுவோர் பெருகி வரும் வேளையில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட புதுப் புது வியாதிகள் வேறு வந்து பயமுறுத்துகின்றன.

டீயன்னா கெர்லி என்ற எழுத்தாளர் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்ட நூறு வயது அல்லது நூறு வயதை நெருங்கும் பெரியோர்கள் தரும் ‘செல்லமான’ அறிவுரைகளைத் தொகுத்துள்ளார். அவற்றில் சில:

ருத் என்ற பெண்மணி நூறு ஆண்டை எட்டிப் பிடிப்பவர். அவரது நீடித்த வாழ்நாள் இரகசியத்தை அறிய, ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டது.

அவர் தந்த டிப்ஸ்:-

1) காலண்டரை தினமும் பார்க்காதீர்கள்! ஒவ்வொரு நாளையும் நன்கு கொண்டாடி மகிழுங்கள்

2) எனது வீட்டைச் சுற்றியாவது தினசரி நடக்கிறேன். இயக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நடந்து கொண்டே இருங்கள். இயங்கிக் கொண்டே இருங்கள்!

3)தரமான எதிலும் முதலீடு செய்யுங்கள். அவற்றை எந்த புது ஸ்டைல் வந்தாலும் வெல்ல முடியாது.

என்பிசி தொலைக்காட்சி நூறு வயது ஆன டாக்டர் ஒருவரைப் பேட்டி கண்டது. அவர் தினசரி தனது க்ளினிக்கிற்கு வந்து நோயாளிகளை நன்கு பரிசோதித்து பிரிஸ்கிரிப்ஷன் தருகிறார். அவர் கூறும் அறிவுரை இதோ:-

1)வைட்டமின் மாத்திரைகளா? அவை வேண்டவே வேண்டாம். நிறைய டாக்டர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களா? அதையும் வேண்டாம் என்கிறேன் நான்!

2) திருமணம் செய்து கொள்ளுங்கள். செக்ஸ் உறவு இன்றியமையாதது. நலமுடன் ஜோடியாக வாழுங்கள்!

3) யாரையாவது வெறுத்தீர்கள் என்றாலும் கூட, அதை மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் மனம் புண்படும்படி வெளிப்படையாகப் பேசி விடாதீர்கள். அன்பு பாராட்டுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.

4) யாரையும் உங்களை கண்ட்ரோல் செய்வதை அனுமதிக்காதீர்கள்,

5) கொஞ்சம் அழுது மன ஆறுதல் பெறவும் நேரத்தை ஒதுக்குங்கள்.

6) இளமையாக இருக்கும் போதே நிறைய பயணம் செய்யுங்கள். பணம் செலவாகுமே என்று தயங்காதீர்கள். சமாளித்து பல இடங்களுக்குச் செல்லுங்கள். இதில் கிடைக்கும் அனுபவத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது.

7) யாருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். இப்படி ஒப்பிட்டால் உங்களால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

8) ஒரு சமயத்தில் ஒரு வேலை என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்.

9) உங்களுக்குப் பிடித்தது எதுவோ அந்த வேலையைச் செய்யுங்கள்.

10) காலம் தனக்குத் தானே அனைத்தையும் சரி செய்து விடும். எதைப் பற்றியும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதீர்கள்.

11) உங்கள் மதம் எதுவானாலும் சரி, ஒன்றை மட்டும் சொல்வேன். நீங்கள் நம்புவதை மட்டும் விட்டு விடாதீர்கள்.

12) சூழ்நிலைக்குத் தக நெகிழ்வுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன்னிக்கப் பழகுங்கள்.

13) ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டதா, இழந்ததற்கு துக்கப்படுங்கள். துக்கத்திற்கும் கூட நேரம் ஒதுக்குங்கள்.

அட்ரின் லீ என்ற நூறு ஆண்டு வயது நிரம்பிய பெரியவர் கூறும் ஆலோசனை இது:-

  • படிப்படியாக முன்னேறுவதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.
  • தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
  • சுத்தமான நீரை அருந்துங்கள்.
  • இறக்க வேண்டும் என்பதற்காக இறந்து விடாதீர்கள். வாழப் பழகுங்கள்,

வாழ்க்கை ஒரு வேடிக்கை தான். எப்படி வாழ்வது என்பது மனிதரைப் பொறுத்த ஒரு விஷயம். திருப்தியுடன் இருங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முடியாத காரியம் என்றாலும் கூட திருப்தியுடன் இருப்பது முடியக்கூடிய ஒன்றே!

  • எந்த ஒருவரிடமும் ஏதாவது ஒன்று நமக்குப் பிடிக்கத்தானே செய்யும்! நாம் எல்லாம் மனிதர்கள் தானே! ஆகவே அன்பு செலுத்துங்கள்.

வேறு சில பெரியோர்கள் கூறும் அறிவுரை:-

  • நல்ல பெரிய படிப்பைப் படித்து விடுங்கள். அந்தக் கல்விச் செல்வத்தை உங்களிடமிருந்து யாரும் பிடுங்கி விட முடியாது. அதில் இழப்பே இல்லை.
  • பாஸிடிவாக எண்ணப் பழகுங்கள். பாஸிடிவாக எதையும் நினைக்கும் போதே அனைத்துமே வெற்றிதான். நெகடிவாக எண்ண ஆரம்பிக்கும் போது உடலில் நச்சு கலக்கிறது. ஆகவே புன்னகை செய்யுங்கள். சிரித்துப் பழகுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து.
  • வேளாவேளைக்கு உணவு உட்கொள்ளுங்கள். நல்ல காற்று, நல்ல சூரிய ஒளி இரண்டுமே நீண்ட நாள் வாழ அவசியம்.

எப்படி நூறு ஆண்டுகளை எட்டிப் பிடித்தோரின் அன்புரை! அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்! சதம் போட்டவர்கள் ஆயிற்றே!!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1965ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற ரிச்சர்ட் ஃபெய்ன்மென் (1918-1988) உலகின் பிரசித்தி பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் வாழ்க்கையில் நடந்த சுவையான பல சம்பவங்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒன்று.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள கெண்டுகி பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி படிக்கச் சென்றவர் பரத் ஶ்ரீனிவாசன் என்ற மாணவர். ஒரு நாள் இயற்பியலில் ஒரு பாடத்தைப் பற்றி சக மாணவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இதைப் பற்றி நன்கு விளக்கமாகச் சரியாகச் சொல்லக் கூடியவர் ரிச்சர் ஃபெய்ன்மேன் தான் என்றார். அத்தோடு சற்றும் தயங்காமல் ரிச்சர்டை தொலைபேசியில் அழைத்தார். அதிர்ஷ்டவசமாக போனை ரிச்சர்டே எடுத்தார், “சார், போனை வைத்து விடாதீர்கள். ஒரு சந்தேகம். இதை உங்களைத் தவிர யாராலும் நீக்க முடியாது. நான் பரத் சீனிவாசன் கெண்டுகி பல்கலைக் கழகத்திலிருந்து பேசுகிறென்” மூச்சு விடாமல் பேசிய பரத்துக்கு ஆதரவாக மறு முனையிலிருந்து பதில் வந்தது, “உன் சந்தேகத்தைக் கேள். நீ என்ன இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாயா?”

ஆச்சரியப்பட்ட பரத்,” ஆம்” என்று சொல்லி விட்டு தன் சந்தேகத்தையும் கேட்டார். சுமார் இரண்டு மணி நேரம் போனிலேயே விரிவாக பதிலைக் கூறினார் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன். பிரமித்துப் போன பரத், நன்றி நன்றி என்று பலமுறை கூறி ஆவலுடன், “நான் இன்னொரு முறை உங்களுடன் பேச முடியுமா?” என்றார். “முடியாது” என்று போனை கட் செய்தார் நோபல் மேதை! இந்தச் சம்பவம் பல்கலைக்கழகம் முழுவதும் பரவி அனைவரையும் பரவசப்படுத்தியது. பரத் ஶ்ரீனிவாசனோ நோபல் மேதையுடன் பேசியதால் பேசிய ஹீரோவாக ஆகி விட்டார்!

******************

கண்ணதாசனைப் புரிந்து கொள்வது எப்படி?

Written by S NAGARAJAN

Research Article No.1868; Dated 16 May 2015.

Uploaded in London at 6-35 am

By ச.நாகராஜன்

கவியுளம் காண்க!

அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்                            ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்

 

என மஹாகவி பாரதியார் பாடியிருப்பது எத்துணை ஆழ்ந்த பொருள் படைத்தது!

ஆயிரம் காவியம் கற்பார்கள்; ஆனால் கவிஞன் என்ன சொல்ல வந்தான், எப்படிச் சொல்லி உள்ளான் என்பதைப் புரிந்து  கொள்ளாமல் தன் மனதில் தோன்றியதைக் கவிஞன் கூறியதாக நினைத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களின் ‘மனத்தடைகள்’ பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.

இந்த ‘மனத்தடைக்காரர்கள்’ கவியரசு கண்ணதாசனைக் கொண்டாட நினைக்கும் போது சங்கடம் தான் ஏற்படுகிறது; ஏற்படும்.

தனக்குப் “பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களைக்’ கவியரசு கண்ணதாசன் கூறும் போது ஒன்று, அதை மறைத்து விடுகிறார்கள், இல்லை, மாற்றி விடுகிறார்கள்! இரண்டுமே தவறு!

காலத்தை வென்ற ஒரு கவிஞனாக ஒருவன் எப்படி மிளிர முடியும்? சமகாலத்தவரான இந்தத் தலைமுறையினர் தன்னை என்ன சொல்வார்கள், அடுத்த தலைமுறையினர் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் நினைத்து பயந்தா கவிஞன், கவிதை எழுதுகிறான்!

எல்லா குறுகிய எல்லைகளையும் மீறி அவன் படிப்படியாக வளர்கிறான்; பல்வேறு பரிமாணங்களைக் கொள்கிறான்.

பக்குவம் வாய்ந்த இறுதி வடிவமே அவனது முகிழ்ச்சி.

 

தன்னைப் பற்றிக் கண்ணதாசன்

உண்மையைச் சொல்ல மிகுந்த நெஞ்சுரம் வேண்டும்! அதுவும் தன்னைப் பற்றி விமரிசித்து உண்மையைச் சொல்வதென்றால் இன்னும் அதிக தைரியம் வேண்டும்!

காந்திஜியின் சோதனை, அதனால் தான், ‘சத்திய சோதனை’ ஆனது.

கவியரசு கண்ணதாசனும் இந்த சத்தியத் தீயில் தன்னைப் புடம் போடவே நினைத்தார். அதன் வெளிப்பாடாகவே அவர் தன்னைப் பற்றி இப்படிக் கூறியுள்ளார்:-

“கவிஞன் ஒருவன் அரசியல்வாதியாகவும் இருந்தால் கவிதைக் கருத்துக்கள் எவ்வளவு முரண்படும் என்பதற்கு இந்தத் தொகுப்புகளே சான்று.

யார் யாரைப் போற்றியிருக்கிறேனோ அவர்களைக் கேலி செய்தும் இருக்கிறேன்.

யார் யாரைக் கேலி செய்திருக்கிறேனோ அவர்களைப் போற்றியும் இருக்கிறேன்…

கருத்து எதுவாயினும் கவிதை என்னுடையது .. ..

கருத்து உங்களைக் குழப்பும்; கவிதை உங்களை மயக்கும். .. ..

என்னை மையமாக வைத்தே எல்லோரும் சண்டை போட்டுக் கொள்ளலாம்.

எந்தத் தலைவரையும் பழிப்பதிலும் புகழ்வதிலும், என் தமிழ் எப்படி விளையாடி இருக்கிறதென்பதை இப்போது படியுங்கள். விமர்சனங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிடுங்கள்.”

கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள் நூலுக்கு  25-9-1968 இல் அவர் தந்த ‘என்னுரை’யில் உள்ள சில பகுதிகளே மேலே தந்திருப்பவை.

ஒரு தலைமுறையை சுமார் 30 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால் இந்த முன்னுரையை எழுதியே ஒன்றரை தலைமுறைகள் கடந்தாகி விட்டது. (கவிதைகள் இன்னும் முன்னாலேயே படைக்கப்பட்டிருக்க வேண்டும்)

ஆனால் இன்றைய விமர்சனத்தில் காழ்ப்புணர்ச்சி எதுவுமற்ற தேசிய தமிழ் கவிஞராக அவர் ஒளிர்கிறார்.

தனது கவிதைகளை அப்படியே மாற்றாமல் அவரே வெளியிட்டு அதனை விமரிசிப்போர் விமரிசிக்கட்டும் என்று அவரே கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். ஆக நமக்குப் ‘பிடித்தவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களை” – புராணங்கள், ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்கள், சம்ஸ்கிருதம், அதில் தோன்றிய நூல்கள், தொன்மங்கள், நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றை அவரே கூறியிருக்கும்போது அதை மறைக்கக் கூடாது; மாற்றக் கூடாது.

கவிஞனின் வழியில் சென்று அவன் கூறும் சாசுவத உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!

செம்மொழி என்ற சிறப்பு அடைமொழிக்கும் மேலான தெய்வ மொழியாம் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ள சங்க இலக்கியம் மற்றும் அதற்குப் பின்னால் தோன்றிய பக்தி இலக்கியம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.

அதில் தோய்ந்திருக்கும் மனம் கண்ணதாசனை அணுகும் போது ஆனந்தப்படும்; மகிழ்ச்சிக் கூத்தாடும்.

அங்கே ராமனும், கண்ணனும்,தமிழும், சம்ஸ்கிருதமும், சத்தியக் கொள்கைகளும், நித்திய உண்மைகளும் அற்புதமாக நடனமாடும்.

காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.

பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!

மஞ்சள் கண்ணாடி போட்டுப் பார்த்தால், “மஞ்சள் பத்திரிக்கையே” கண்ணுக்குப் புலப்படும்!

கண்ணதாசனோ திறந்த வெள்ளைக் காவியம்! அவரை அணுக வெள்ளை மனம் – பிள்ளை மனம் – வேண்டுமல்லவா!

01kannadasan

கண்ணதாசனை –

அனைத்துக் குறுகிய எல்லைகளையும் மீறி, தடை கடந்த நிலையில் திறந்த மனதுடன் அணுகுவோம்; புரிந்துகொள்வோம்; ஆனந்திப்போம்!

***********

இரண்டு எதுகை அகராதிகள் !!

Written by London swaminathan

Article No.1845; Date: 4 May 2015

Uploaded at London time: 15-54

ஊத்தங்கரை பி.ஆர்.அப்பாய்  செட்டியார் தொகுத்த எதுகைத் தமிழ் அகராதியையும் இசைப் பேரறிஞர் பாபநாசம் சிவன் தொகுத்த வடநூல் சொற்கடல் என்ற சம்ஸ்கிருத எதுகை (யதி) அகராதியையும் இரண்டு கட்டுரைகளில் கண்டோம். இந்த மூன்றாவது கட்டுரையில் இரண்டு அகராதிகளிலிருந்தும் சில எதுகைகளைக் காண்போம்:–

முதலில் தமிழ் எதுகை

அசைஇ=வருந்தி, இளைப்பாறி, இருந்து,இளைத்து

அளைஇ=கலந்து

இரீஇ=இருந்து, இருத்தி

கடைஇ=முடுகி, செலுத்தி

குரீஇ=பறவை,குருவி, புள்

குலைஇ=குலவி

குவைஇ=பரவி,குவித்து

குழீஇ=திரண்டு

கொளீஇ=கொளுத்தி

சினைஇ=சினந்து

செரீஇ=செருகி

தடைஇ=தடவிப்பார்த்து,சரிந்து

தரீஇ=தந்து

தலைஇ=சொரிந்து

தழீஇ=தழுவி, உள்ளடக்கி, அணத்து

துழைஇ=துழாவி

தொலைஇ=அழித்து

நிலைஇ=நிலைபெற்று

நிறீஇ=நிறுத்தி

நினைஇ=நினைந்து

சம்ஸ்கிருதத்தில் சில எதுகைகள்:-

ராஜிகா=கருங்கடுகு

தாடகா=தாடகை(அரக்கி)

ஏடகா=பெண் செம்மறியாடு

ரேணுகா=பரசுராமன் தாய், அரேணுகம் என்னும் தக்கோலம்

ஸூதிகா=பிள்ளை பெற்றவள்

யூதிகா=முல்லை, மாது

வேதிகா=யாக குண்டம்

பாதுகா=பாதரட்சை, காலணீ

கோதிகா=நீருடும்பு

ராதிகா= ராதை

மேனகா=அப்சரஸ், பார்வதியின் தாய், இமவான் மனைவி

தேனுகா=பெண்யானை, ப்சௌ

கோபிகா=இடைச்சி

பூமிகா= காவிய முன்னுரை, நாடக அலங்காரசாலை

மாமிகா=என்னுடையவள்

காமுகா=காமப் பேய் பிடித்தவன்

தாரகா=நட்சத்திரம்,கண்ணுட் கருவிழி, காப்பவள்

காரிகா=இலக்கணவுறுப்பு, செயல், தாத்பர்யம்

கைரிகா= மலை விளை தாதுப் பொருள்

சீரிகா= சேலை

சைரிகா=திருட்டு

சாரிகா=கிளி

சீருகா=சுவற்றுக்கோழி

காலிகா=சண்டி, தேள், காக்கை, ரோமாவளி, கறுப்பு, மேகக்கூட்டம்

கேலிகா=விளையாட்டு

சூலிகா=சுருண்ட மயிர், பார்வதி

தூலிகா=தராசுக்கோல், சித்திரம் எழுதும் கோல்,தூரிகை

நாலிகா=தண்டு, காம்பு, நரம்பு

நீலிகா=கருநொச்சி, அவுரி, ஏவல்

பாலிகா=விவாஹம்,உபநயனாதிகளில் வைக்கும் பஞ்ச பாலிகை, கொட்டைக் கொல்லைப்பொம்மை

மாலிகா=மலர் மாலை, ஒரு ஆறு, மணி மாலை

வாலுகா=வால்மிளகு, ஏலச் செடி, வாலுரிவை

ஜீவிகா=பிழைப்பு, ஜீவனோபாயம்

தேவிகா=விளையாட்டு

நாவிகா=ஓடம்

வாசகா, வாசிகா =ஆடாதோடை

காசிகா=ஒரு நூல்

ஏஷிகா=எழுதுகோல்

தூஷிகா=கண்மலம்

மூஷிகா=பெண் எலி

நாஸிகா=மூக்கு

லாசிகா=நாட்டியக்காரி

இவ்வாறு ஒரு மொழியைப் படிக்கையில், படிக்கும் ஆர்வமும் ஏற்படும்; படிப்பதும் எளிதாகும். இதை வைத்து விளையாட்டும் விளையாடலாம்.

நான் என் மகன்களுடன் ரயிலில் பயணம் செய்கையில் ஆங்கிலத்தில் சொல் விளையாட்டு விளையாடுவோம். “ஷன்” என்று முடியும் சொற்கள் (Words ending TION) என்று தீர்மானிப்போம்: ஒருவர் எஜுகேஷன் education என்பார், அடுத்தவர், அட்ராக்சன் attraction என்பார், அடுத்தவர் கான்ஸ்டர்னேஷன் consternation என்பார். இப்படி நிறைய ரவுண்டுகள் ஆன பின் திடீரென ஒருவர் திணறுவார். உடனே அவர் ‘அவுட்’ (out).

கடைசி ஆள் இருக்கையில் அவர் எல்லோரையும் மீண்டும் சேர்த்துக்கொண்டு புதிய விகுதி (முடியும் ஒலி) ஒன்றைச் சொல்லுவார். எடுத்துக்காட்டாக அவர் மெடெர்னிடி maternity என்று சொல்லி “டி”—யில் முடியும் சொற்கள் என்பார். உடனே அடுத்தவர் பி(ட்)டிpity என, அதற்கடுத்தவர் ஷ்யூரிட்டி surity அதற்கடுத்தவர் கன்Fஎட்டி confetti  என்று — இப்படிப் போய்க்கொண்டே இருக்கும் (‘போர்’  boredom அடித்து நிறுத்தும் வரை அல்லது இறங்க வேண்டிய ரயில்வே ஸ்டேஷன் வரும் வரை). இதனால் சொல் வளம் மிகும். சில புதிய சொற்களைக் கற்கும் வாய்ப்பு ஏற்படும். தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் இவ்விளையாட்டை விளையாட வேண்டுமானால் இப்படிப்பட்ட எதுகை அகராதிகள் உதவும்.

வாழ்க அகராதி தொகுத்தோர்; வளர்க அவர்தம் புகழ்!!

அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி

Compiled by London swaminathan

Article No.1840 Date: 1 May  2015

Uploaded at London time: 18-26

தமிழில் மேலும் ஒரு அதிசயம்

எதுகைத் தமிழ் அகராதி

தமிழ் இலக்கியத்தில் எவ்வளவோ அதிசயங்கள் உள்ளன. இது வரை எனது ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்து வந்துள்ளேன். லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒவ்வொரு தமிழ் புத்தகமாகப் புரட்டிப் பார்த்து வருகையில் ஊத்தங்கரை பி ஆர் அப்பாய் செட்டியார் 1938 ஆம் ஆண்டில் வெளியிட்ட எதுகை அகராதியைக் கண்டேன். அது ஒரு அற்புதமான நூலாகும். தர்மபுரி ஸ்ரீ ராமலிங்கா பிரிண்டிங் ஒர்க்ஸில் அது அச்சிடப்பது. (தற்பொழுது சில பதிப்பகங்கள் இதை மறுபதிப்பு செய்துள்ளன).

“பல அகராதிகள் ஏற்கனவே இருந்தபோதிலும் தமிழ்க் கலைக்கு என்னாலியன்ற தொண்டாற்ற வெண்ணங்கொண்டு நூதன முறையில் அகர முதலாகவும் கடையெழுத்தொன்றியும் வார்த்தை களைத் தொகுத்து எதுகை அகராதி என்ற பெயரால்  இதனை வெளியிடலாயினேன்” – என்று செட்டியார் முன்னுரையில் எழுதியுள்ளார்.

தமிழில் ஓரெழுத்துக்கு உள்ள அர்த்தங்களைப் படிக்கையில் வியப்பு மேலிடும். ஆனால் முன் காலத்தவர் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு விழிகள் போல எண்ணியதால், செட்டியார் தமிழ் சொற்கள் போலவே சம்ஸ்கிருதச் சொற்களையும் அகராதியில் சேர்த்துக் கொடுத்துள்ளார். 70 க்கும் மேல் ஓரெழுத்துக்கள் அகராதியில் உள்ளன.

எல்லாப் பொருட்களையும் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் சில பொருளைத் தருகிறேன்.

தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்து, சிவன், விஷ்ணு, பிரமன், பெயர், வினை முற்று விகுதி, சுட்டிடைச் சொல், அன்மை, இன்மை, மறுதலை, குறைவு, சம்மதி, சுட்டு, தடை, பிறிது, வியப்பு,  ஆறாம் வேற்றுமை யுருப்பிடைச் சொல், சாரியை இடைச் சொல், சுக்கு, திப்பிலி, எட்டு

ஆகாயம், பிரமன், தலை, ஓரெழுத்து, அரசன், ஆன்மா, உடல், கந்தருவ சாதி, காமன், காற்று, சூரியன், செல்வன், திருமால், தீ, தொனி, நமன் மயில், மணம், விநாயகன், ஒன்று எண்ணும் எண், சரீரம், சுகம், நீர், நனைத்தல், பொருத்து, மேகம், விட்டுணு, மயிர், வியாதி, வாயு, பட்சி

குருணிக்குறி

கூடிய (உதாரணம்- சோமாக்கந்தர், சோமன்)

பிரான்ஸ் வெளியிட்ட பிரம்மா  தபால் தலை

குபேரன், பிரமன்

இன்மை, அன்மை, எதிர்மறை (உதாரணம்- அரூபம், அத்துவிதம், அதன்மம்)

இருபதிலோர் பாகத்தைக் காட்டும் ஓர் கீழ்வாய் இலக்கக் குறி, ஆற்று, சாபம், காவல் செய்தல், குடித்தல்

இயமன் இறந்தகால இடை நிலை (உ.ம்.-என்மர், ஒரு மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், பிரமன், விட்டுணு

இறந்தகால இடை நிலை (உ.ம்.போயது)

இறந்தகால இடை நிலை

ஆச்சாமரம், இசை, இரக்கம், பெண் பசு, வினா விடைச் சொல், அந்தம், ஆக என்பதன் குறுக்கம்,இச்சை, ஆத்மா,வியப்பு, விலங்கின் பெண் பொது, ஆவது, பெண் எருமை

கா

அசைச் சொல், காத்தல் , காவடி, சோலை, துலை, பூந்தோட்டம், வருத்தம், வலி, பாதுகாப்பு, நிறை, சரசுவதி, கள், காலடித் தண்டு

சா

சாதல், சாவெனல், பேய், மரணம், தேயிலைச் செடி, இற, காய்ந்து போ

ஞா

கட்டு, பொருந்து

தா

கேடு, தாண்டுதல், கொடு, பகை, வருத்தம், வலி, அழிவு, கொடியன், பாய்தல், பிரமன், தாண்டு, படை

நா

நடு, நாக்கு, அயலார், சுவாலை, திறப்பு, மணி முதலியவற்றின் நா, அயலார், சுவாலை, பொலிவு, பூட்டின் தாள், வார்த்தை, தாரை, நாதசுரத்தின் ஊதுவாய்

பா

வெண்பா முதலிய பாட்டு, பஞ்சு நூல், பிரபை, நெசவு பா, அழகு, கடிகார ஊசி, கிழங்குப்பா, நிழல், பரப்பு, பஞ்சி நூல், பருகுதல், பாம்பு, தமிழ், தூக்கு, யாப்பு, காத்தல், சுத்தம், கப்பு, கை மரம்

மா

ஆண் குதிரை, அழகு, ஆண் பன்றி ஆண் யானை, இலக்குமி, கறுப்பு, சீலை, செல்வம், பெருமை, மாமரம், வண்டு, வயல், அறிவு, ஆணி, மாவு, நிறம், பரி, பிரபை, கட்டு, பெருமை, சரசுவதி, வலி, விலங்கின் பொது, வெறுப்பு, அருப்பம், மிகுதி, பிட்டம், பிண்டி, நுவனை

யா

ஒரு வகை மரம், வினாச்சொல், சந்தேகம், இல்லை

ரா

இராப் பொழுது, இரவு

வா

வருக எனல்

ஆண்பால், பெண்பால் பெயர் விகுதி (உ.ம்.பிறைசூடி, கண்ணி), முன்னிலை ஒருமை வினைமுற்று, அன்பு, ஆச்சரியம், இகழ்ச்சி, அரை என்னும் எண்ணின் குறி

நி

அதிகம், இன்மை, உறுதி, எதிர்மறை, ஐயம், அமீபம், நிச்சயம், நிலை, பேறு, பூரணம், மிகுதி, வன்மை, விருப்பம்

பி

அழகு, பிரிவினை விகுதி

ஈ, கள், இலக்குமி, தேனீ, குகை, தாமரை இதழ், பாம்பு, அம்பு, அரை நாண், பார்வதி, தேனீ, சிறகு

கீ

கிளிக்குரல்

சீ

இகழ்ச்சிக் குறிப்பு, அடக்கம், பெண்,இலக்குமி, வியப்பு,சரஸ்வதி, பார்வதி, நித்திரை, பிரகாசம், விடம், விந்து, சளி, ஒளி, சிரீ, சிகரம், சீகம், தமரத்தை, புனல், திரை, கவிரி, சீதல், காந்தி, சம்பத்து

நீ

நீ என்னும் முன்னிலைப் பெயர், நீங்குதல், விடு, உலகத்தை மறு, தள்ளு

தீ

நெருப்பு, தீமை,அறிவு, நரகம், இனிமை, கோபம், விடம், ஞானம், விளக்கு, அங்காரகன், ஆரல், ஒளி, முளரி, வசு, வடவை, சிகி

பீ

அச்சம், மலம், தொண்டி, பெருமாரம்பவ்வி

மீ

ஆகாயம், உயர்வு, மேல், மகிமை, மேற்புரம்

வீ

விருப்பம், கர்ப்பந்தரித்தல், பறவை, பூ, சிவன், நீக்கம், கேடு, ஒழிவு

அகச் சுட்டு, புறச்சுட்டு, ஆச்சரியம், உருக்கம், கட்டளை, கோபம், சின, பிரமன், சிவ சக்தி பிள்ளையார் சுழி, எண் 2

கு

பூமி,குற்றம், சாரியை, சிறுமை, தடை, தொனி, நான்காம் உருபு, நிந்தை, பாவம், இனமை, நீக்க, நிறம்

சு

நன்மை (சுபுத்தி), சொந்தம் (சுதேசம்), அதட்டும் ஓசை, சுவ, சுய, வியப்புக் குறிப்பு

து

துவ்வென்னேவல், அசைத்தல், அனுபவம்,எரித்தல், கெடுத்தல், கசத்தல், பிரிவு, சுத்தம்

நு

தியானம், தோணி, நிந்தை, நேரம், புகழ்

ஊன், உணவு,சந்திர, சதை, தசை, சிவன், சமாக்கிய கலை, இறைச்சி

கூ

பூமி, கூக்குரல், மலங்கழித்தல், கூவுதல், கூச்சல்

சூ

விலங்குகளையோட்டும் குறிப்பு, சுளுந்து, வியப்புச் சொல்

தூ

சுத்தம், தூவென்னேவல், பகை,பற்றுக்கோடு, புள்ளிறகு, வெண்மை, தசை, மாமிசம், வலிமை, தூவு, இகழ்ச்சிக் குறிப்பு

நூ

ஆபரணம்,எள், யானை

பூ

மலர், அழகு, இடம், இந்துப்பு, இருக்குத்ல், இலை, ஓமாக்கினி, கண்ணோய், நரகம், தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, நீலநிறம், மென்மை, தேங்காய்த் துருவல், நுண்பொடி, அரைக்கால், மகளிர் சூதகம், நிரம், பூப்பு, மூப்பு, அலரி, இணர், குசுமம், தாமம், போது, வீ

எழு, வினாவெழுத்து

சிவன், விஷ்ணு, செலுத்துதல், அடே, அம்பு, எண்ணின் குறிப்பு, அடுக்கு, பாணம், இகழ்ச்சிக் குறிப்பு, பெருக்கம், இறுமாப்பு, உயர்ச்சி, வலியுறுத்தல் (உ.ம்.அவனே வந்தான், நானே செய்தேன்)

சே

அழிஞ்சில் மரம், இடப ராசி, சிவப்பு, சேரான் மரம், காளை, வெருட்டுங் குறி, வெறுப்புக் குறி, புல்வாய், குதிரை, சேரான்

தே

கடவுள், கிருபை, கொள்ளுகை,நாயகன், மாடு துரத்தும் குறிப்பு

நே

அன்பு, ஈரம், நேசம்,உழை, நெகு

பே

நுரை, மேகம், பேகடம்- ஒருவகை மீன், இல்லை, பேகம்-தவளை, முகில்

மே

அன்பு

வே

வேவு

குலோத்துங்க சோழன்

அரசன், அழகு, ஆசான், இரண்டாம் வேற்றுமை உருபு, கடவுள், கோழை, சாரியை, சுவாமி, நுண்மை, யானையைப் பாகன் ஓட்டும் ஓசை, கடுகு, கடவுள், குரு, வியப்பு, வீரம், கணவன், சுவாமி, பிதா, யசமானன்

சை

சீ, கைப்பொருள்

நை

நொந்து போ, இகழ்ழ்சிக் உறிப்பு, நையென்னேவல்

அழைத்தல், வியப்பு, அனந்தம், கடித்தல், பூமி

கௌ

கொள்ளு, தீங்கு, மனஸ்தாபம், கிருத்தியம், கௌவென்னேவல்

கை

ஒப்பனை, ஒழுக்கம், கை, சிறுமை, வகுப்பு, இடம், உடனே, கட்சி, கைமரம், சேனை, ஆள், காந்தப்பூ, தங்கை, ஊட்டு, அலங்கரி, தோள், பாணி, சயம், விற்பிடி, முகுளம், சதுரம், இலதை, மான் தலை, சங்கு, வண்டு, அஞ்சலி, கற்கடகம், மகரம், கபோதம், விற்பிடி

தை

மாதம், பூச நாள்

பை

அழகு, பச்சை நிறம், பாம்பின் படம்

மை

அஞ்சனம், கருப்பு, பூமி, திசை, மலை, வச்சிராயுதம்

வை

கூர்மை, வைக்கோல், கீழெ வை என்னேவல்

ஒற்றுமையுடன் இரு, ஒன்றுபடு, ஒழிதல், ஒவ்வுதல்

இழிவு சிறப்பு, அடிசயவிரக்கச் சொல், எதிர்மறை, ஒழிபிசை, , வினா, நீக்க, மதகு நீர் தாங்கும் பலகை, மகிழ்ச்சிக் குறிப்பு, இரக்கக் குறிப்பு,  மடையடைக்கும் கதவு

நொ

துன்பப்படு, நோய், வருத்தம், நொய்ம்மை

அதிசய விரக்கச் சொல், இரக்கம், வினா விடைச் சொல் (உ.ம்.சாத்தனோ)

கொ

ஒலிக்குறிப்பு

கோ

அம்பு, அரசன், ஆண்மகன், எருது, ஆகாயம், கண், கிரணம், சந்திரன், சூரியன், பசு, மலை, மாதா, மேன்மை, வாணி, குசவன், சுவர்க்கம், வெந்நீர், தொடு, தறி, தடு, பொறி, தேவலோகம், கோமேத யாகம்,வச்சிராயுதம்

சோ

அரண், வியப்புச் சொல், வாணாசுரன் நகர்,உமை

நோதல், துக்கம், துன்பம், பலஹீனம், வியாதி

தோ

தோ- நாயைக் கூப்பிடும் ஒலி

நோ

இன்னம், சிதைவு, துக்கம், துன்பம், பலவீனம், வியாதி, வலி, வேதனைப் படு, நொந்து பேசு, துக்கப்படு, இன்மை

போ

அசைநிலை, போவென்னுதல்

சௌ

சௌபாக்கியவதி என்பதன் சுருக்கம், சிறுமி, சுமங்கலி

நௌ

மரக்கலம்

ஸ்ரீ

லெட்சுமி, பாக்கியம்

அப்பாய் செட்டியார் நிறைய சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்திருக்கிறார். அதை நினைவிற் கொள்ளல் வேண்டும். அவர் மட்டுமின்றி அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் வெளியாகும் எல்லா அகராதிகளிலும், நிகண்டுகளிலும் சம்ஸ்கிருதச் சொற்களையும் சேர்த்து தமிழாகக் கொடுத்திருப்பதிலிருந்து இரு மொழிகளையும் அவர்கள் இரு கண்கள் போல பாவித்ததும், இரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்று அவர்கள் நம்பினர் என்பதும் வெள்ளிடை மலை. சுருங்கச் சொல்லின் வெள்ளைக்காரன் புகுத்திய ஆரிய-திராவிட இனவெறி வாதம் என்னும் விஷம் கலக்கும் வரை, தொல்காப்பியன் முதல் பாரதியார் வரை எல்லாக் கவிஞர்களும் அச்சமின்றி, கூச்சமின்றி சம்ஸ்கிருதத்தைக் கலந்தே எழுதினர். திரைப்படப் பாடல்களில் பிற மொழிக் கலப்பில்லாத படல்களைக் காண்பதும் அரிதே.

பாபநாசம் சிவன் எதுகை அகராதி

பாபநாசம் சிவன் சம்ஸ்கிருத எதுகை அகராதி ஒன்று தயாரித்து வெளியிட்டுள்ளார் அதைப்பற்றி தனி கட்டுரையில் தருகிறேன். அதைத் தயாரிக்க அவருக்கு ஆகிய காலம் எட்டு ஆண்டுகள். இதே போல அப்பாய் செட்டியார், அபிதான சிந்தாமணி வெளியிட்ட சிங்காரவேலு முதலியார் ஆகியோரும் பல்லாண்டுக் காலம் உழைத்ததன் பேரிலேயே நமக்கு அற்புத அகராதிகள், கலைக் களஞ்சியங்கள் கிடைத்தன.

–சுபம்–

1. மான் விழியாளுக்கு எது ஆபரணம் ?

Compiled by S NAGARAJAN

Date: 22 April 2015; Post No: 1820

Uploaded in London 9–35 am

 

சம்ஸ்கிருதச் செல்வம் பாகம் 3

1. மான் விழியாளுக்கு எது ஆபரணம் ?

.நாகராஜன்

சம்ஸ்கிருதம் என்னும் பெருங்கடலில் கவிதைப் புதிர்கள் சுவாரசியமான ஒரு பகுதி.

ஆயிரக்கணக்கான புதிர்களை நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இயற்றியுள்ளனர்.

இந்தப் புதிர்களில் பல வகை உண்டு.

சமஸ்யா என்னும் விடுகதைப் புதிர்களில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டு அதில் உள்ள புதிரை விடுவிக்க அறைகூவல் விடப்படும். சாமர்த்தியசாலிகள் அந்தப் புதிரை அவிழ்த்து அனைவரின் பாராட்டையும் பெறுவர்.

இன்னொரு விதம், ஒரு கவிதையில் புதிர் போடப்பட்டிருக்கும்; விடையும் அதே கவிதையில் இருக்கும். இதை “அந்தர் ஆலாப” வகை என்று கூறுவர்.

இன்னொரு விதக் கவிதையில் புதிர் போடப்பட்டிருக்கும்; ஆனால் விடை அந்தக் கவிதையில் இருக்காது; நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். இந்த வகையை “பஹிர்-ஆலாப” வகை என்று கூறுவர்.

முதலில் அந்தர் ஆலாப வகை புதிர் கவிதை ஒன்றைப் பார்ப்போம்:-

கிம் பூஷணம் வா ம்ருகலோசனாயா:     

கா சுந்தரி யௌவனதுக்கபாரா I                                                   

தாதா லிபி வா விததாதி குத்ர                                          

சிந்தூரபிந்துவிதவாலலாடே II

 

ம்ருகலோசனிமான்விழியாள்

இந்த்ரவ்ரஜா என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்தக் கவிதைப் புதிரின் பொருள் இது தான்:-

மான் விழியாளுக்கு எது ஆபரணம்? – சிந்தூரபிந்து (அதாவது நெற்றியில் இடும் சிந்தூரப் பொட்டு)                                                                     

எந்த அழகிய பெண்ணுக்கு அவள் இளமையில் துக்கம் ஏற்பட்டு விட்டது? – விதவா (அழகிய இளம் பெண்ணுக்கு)

விதி தலை எழுத்தை எங்கே எழுதியுள்ளது? – லலாடே (நெற்றியில்

 

இந்த மூன்று கேள்விகளுக்கும் கடைசி வரி விடையைத் தருகிறது.

சிந்தூர பிந்து விதவா லலாடே! ஆனால் இந்த வரியின் அர்த்தமோ அபத்தம்!

விதவையின் நெற்றியில் இடப்பட்டுள்ள சிந்தூர பிந்து என்பது இதன் பொருள்!

மிதிலையைச் சேர்ந்த வித்யாகர மிஸ்ரா என்பவர் தொகுத்துள்ள வித்யாகர சஹஸ்ரகா என்ற நூலில் இடம் பெற்றுள்ள புதிர் கவிதை இது.

 

இதையே சற்று மாற்றி இன்னொரு கவிதையும் காணக் கிடைக்கிறது.

கிம் பூஷணம் சுந்தர சுந்தரீணாம்                                                        

கிம் தூஷணம் பாந்தஜனஸ்ய நித்யம் I                                                      

கஸ்மின் விதாவா லிகிதம் ஜனானாம்                              

 சிந்தூரபிந்துவிதவாலலாடே II

 

இதன் பொருள் : மிக அழகிய பெண்களுக்கு (சுந்தர சுந்தரி) எது ஆபரணம்சிந்தூர பிந்து (நெற்றியில் இடப்படும் சிந்தூரப் பொட்டு)

வெளியில் கிளம்பும் ஒருவருக்கு சகுனத் தடை எது? – விதவாஒரு விதவையைப் பார்ப்பது!

ப்ரம்மா விதியின் தலையெழுத்தை எங்கே எழுதியுள்ளார்லலாடேநெற்றியில்!

கடைசிவரியில் விடை உள்ளது. ஆனால் அது தரும் அர்த்தமோ அனர்த்தம்! – (விதவையின் நெற்றியில் இடப்பட்டுள்ள சிந்தூர பிந்து!)

 

 

இனி பஹிர்ஆலாப வகை புதிர் கவிதை ஒன்றைப் பார்ப்போம்.

 

கிம் ஸ்யாத் வர்ணசதுஷ்டயேன வனஜம் வர்ணேஸ்த்ரிமிர் பூஷணம்

ஸ்யாதாத்தேன மஹி த்ரயேன து பலம் மத்யம் த்வயம் ப்ராணதம்  I    

வ்யஸ்தே கோத்ரதுரங்ககாஸகுஸுமான்யந்தே சம்ப்ரேஷணம்                

யே ஜானந்தி விசக்ஷணா:க்ஷிதிதலே தேஷாமஹம் சேவக:   II

கஷ்டமான இந்த கவிதைப் புதிர் ஒரு வார்த்தை விளையாட்டு!

 

தாமரை என்ற பொருளைத் தரும் நான்கு எழுத்து வார்த்தை எது?

விடை : குவலய(ம்)

அதன் எந்த மூன்று எழுத்துக்கள் ஆபரணத்தைக் குறிக்கும்?

விடை: வலய(ம்) ( a bracelet)

அதன் முதல் எழுத்து பூமியைக் குறிக்கும்! விடை : கு (பூமி)

முதல் மூன்று எழுத்துக்கள் பழத்தைக் குறிக்கும். விடை : குவல

இரண்டு எழுத்துக்கள் சேர்ந்தால் வலிமை என்ற பொருள். (பலம்)

 

தனித் தனியே பார்த்தால் குடும்பம், குதிரையின் உணவு, பூ, கடைசியில் பார்த்தால் அனுப்புதல் என்ற பொருளைத் தரும்.

இந்தப் புதிருக்கான விடையை அறிந்திருக்கும் சாமர்த்தியசாலிகளுக்கு நான் சேவகன்! – என்று இப்படி கவிஞர் முடிக்கிறார்

சார்த்தூல விக்ரிதம் என்ற சந்தத்தில் அமைந்துள்ள பாடல் இது.

 

குவலய என்ற ஒரு வார்த்தையை வைத்து கவிஞர் இப்படி ஒரு வார்த்தை சித்து விளையாட்டை விளையாடி விட்டார்!

சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் உண்டு என்பதையும் சில எழுத்துக்களின் சேர்க்கை பல பொருள்களைத் தரும் என்பதையும் இதை வைத்துக் கவிஞர்கள் புதிர் போடுவர் என்பதையும் அறிய இது ஒரு அழகிய உதாரணம்.

****************

இளங்கோ, பீஷ்மர், தேவாபி செய்த மாபெரும் தியாகம்!

எழுதியவர்-லண்டன் சுவாமிநாதன்

ஆய்வுக் கட்டுரை எண் 1814;

தேதி: 20 ஏப்ரல் 2015

இலண்டனில் பதிவு எற்றிய நேரம் – காலை 9–31

This is already published in English by me.

பீஷ்மர் செய்த தியாகம் எல்லோரும் அறிந்ததே. மகத்தான தியாகம். எப்போதும் குடும்ப சுகம் அனுபவிக்க இளைஞர்களுக்கு பெரியோர்கள் எப்படியாவது உதவுவர். யாருக்காவது திருமணம் ஆகாமல் இருந்தலோ , குழந்தைகள் பிறக்காமல் இருந்தாலோ அந்த இளம் உள்ளங்களுக்காக மனதார கோவில் தோறும் சென்று பிரார்த்திப்பர். ஆனால் இதற்கு நேர் மாறாக நடந்தது மஹாபாரதத்தில்! சத்யவதி மீது சந்தனு என்ற மன்னனுக்கு ஏற்பட்ட திடீர் காதலாலும் அவளுடைய தந்தை போட்ட நிபந்தனையாலும் தேவ விரதன் என்ற பீஷ்மர் தனது வாழ்நாள் முழுதும் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க சபதம் செய்தார்.

ஒரு இளைஞன், தனது குடும்ப சுகத்தையே, தனது தந்தையின் குடும்ப (செக்ஸ்) சுகத்துக்காக தியாகம் செய்தது உலக இலக்கியத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத தியாகம். மஹத்தான தியாகம்! இதைக் கண்ட தேவர்கள் வியந்து பீஷ்ம, பீஷ்ம என்று கூச்சல் இட்டனர். “அதி பயங்கரமான சபதம்” என்று இதற்குப் பொருள். அதாவது நம்ப முடியாத அதிசய சபதம். இதனால்தான் ஆண்டுதோறும் பீஷ்மாஷ்டமி அன்று உலக இந்துக்கள் அனைவரும் அவருக்கும் அவரைப் போன்று இறந்த புண்ய பிரம்மசாரிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இனி வருங் காலத்திலும் கூட இப்படி ஒரு அதிசயம் நிகழாது.

இதற்கு இணையான தியாகம் தமிழ் கூறு நல்லுலகத்தில் நடந்தது. சேர மாமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசவையில் வீற்றிருந்த காலத்தில் ஒரு சோதிடன் வந்து சேர்ந்தான். மன்னர் குடும்ப ஜாதகத்துப் படி அவர் மூத்த மகன் செங்குட்டுவன் மன்னன் ஆக முடியாது என்றும் “இளையவர்தான்” —இளங்கோ தான் — மன்னர் ஆவார் என்றும் சொல்லிவிட்டார். இளங்கோவின் உண்மைப் பெயர் கூட நமக்கு இன்று வரை தெரியாது. இளங்கோ என்றால் இளவரசர் என்று பொருள் (இதே போல மாணிக்கவாசகர் பெயரும் நமக்குத் தெரியாது. அவர் மாணிக்கம் போன்ற ரத்தினச் சொற்களை உதிர்த்ததால் வந்த காரணப் பெயரை மட்டுமே நாம் அறிவோம்).

உடனே இளவரசர் துறவறம் பூண்டார். இந்துக்கள் கணக்குப்படி ஒருவர் துறவறம் பூண்டால் அது மறு ஜன்மம் போல. துறவி என்பதால் அவர் அரசராக முடியாது என்பது மட்டுமல்ல;பின்னர் செங்குட்டுவன் மன்னரானார். ஆதி சங்கரரின் கால்களை முதலை பிடித்தபோது இந்த ஜன்மம் தனக்கு முடிந்துவிட்டதால் சந்யாசம் வாங்க சம்மதித்தால் முதலை காலை விட்டுவிடும் என்றார். அதாவது விதியை வெல்ல – சோதிட விதிகளை மீற – இப்படிச் சில சுருக்கு வழிகள் (ஷார்ட் கட்) உண்டு. இதே போல வித்யாரண்யர் அதிக செல்வம் வேண்டி தவம் இருந்தார். லெட்சுமிதேவி அவர் முன் தோன்றி, ‘டன்’ கனக்கில் தங்கம் தர முடியும் என்றும் ஆனால் இந்த ஜன்மத்தில் அதற்கான யோக ஜாதகம் அவரிடம் இல்லாததால் அடுத்த ஜன்மத்தில் தருவதாகவும் லெட்சுமிதேவி சொன்னார்.

வித்யரண்யரும் ஏமாந்து போய் ‘சரி’ என்று சொல்லிவிட்டார். பின்னர் ஆலோசித்துவிட்டு, இந்த ஜன்மத்திலேயே செல்வம் கிடைப்பதற்காக துறவறம் பூண்டார். லெட்சுமியும் தங்கம் கொடுத்தாள். ஆனால் மலை போலக் குவிந்த தங்கத்தை அவரால் தொடக்கூட முடியவில்லை. ஏனெனில் சந்யாசிகள் தங்கத்தைத் தொடக்கூடாது. அடடா, இவ்வளவு தங்கத்தையும் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தத்தளித்த போது, படை யெடுத்து வந்த வெளித்தேச முஸ்லீம்களின் ஆட்சியை அடியோடு ஒழித்து விஜய நகர சாம்ராஜயம் எழுவதற்கு அந்தப் பணத்தைக் கொடுத்தார். இதுபோலவே இளங்கோவும் சந்யாசியானவுடன் அவர் அண்ணன் செங்குட்டுவனுக்கு அரசு கட்டில் கிடைத்தது. இளங்கோ சந்யாசம் வாங்கியதால் செங்குட்டுவனுக்கு ஒரு தம்பி இருந்ததாகவே பொருள் இல்லை. அப்போது ஒரே மகன் என்ற பெயரில் செங்குட்டுவனுக்கு பதவி கிடைத்துவிடும்.

இளங்கோ அடிகள் படம்

தேவாபி செய்த தியாகம்

சந்தனுவின் அண்ணன் உலக வாழ்வைத் துறந்து கானகம் சென்றார். இதனால் சந்தனுவுக்கு ஹஸ்தினாபுர அரச பதவி கிடைத்தது என்ற செய்தி மஹாபாரத ஆதி பர்வத்தில் உள்ளது. ரிக்வேதத்திலும் (10-98). அந்த நாட்டில் நீண்ட காலத்துக்கு வறட்சி நிலவியபோது, தேவாபி ஒரு புரோகிதர் போல செயல்பட்டு யாக யக்ஞங்களை ஏற்பாடு செய்து மழை பெய்ய வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. யாஸ்கர் எழுதிய நிருக்தத்திலும் (2-10) தேவாபி கதை உள்ளது. தேவாபிக்கு தோல் நோய் இருந்ததால் அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்று ‘’பிருஹத்தேவதா’’ கூறுகிறது.ஆனால் பல சந்தனுக்கள், பல தேவாபிகள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆகவே தீர ஆராய்ந்து எந்த தேவாபி என்று கண்டுபிடிக்க வேண்டும்.

இதுதவிர முறை தவறிய ஆட்சி காரணமாக துஸ்தாரிது பௌம்சாயன என்ற மன்னன் ஆட்சி துறந்ததாக சதபத பிராமணம் என்னும் நூல் சொல்லுகிறது (12-9-3-1).

கலிங்க- வங்க நாடுகளை ஆண்டு வந்த விஜயன், முறை தவறிய ஆட்சி செய்த்ததால், நாடு கடத்தப் பட்டதும் அவன் இலங்கையில் போய் இறங்கி புதிய ஆட்சியைத் துவக்கியதையும் நாம் அறிவோம். இது போல நஹுஷன், வேனன், நந்த வம்சத்து அரசர்கள் ஆகியோரும் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர். அவை தியாகம் என்னும் வரம்பிற்குள் வாரா.

ஆதி சங்கரர்

வித்யாரண்யருக்கு தங்க மழை

யுதிஷ்டிரர் பதில் ஏற்படுத்திய பரபரப்பு!

Written by London swaminathan

Post  No.1801; Dated 15th April 2015

Uploaded at London Time:19-08

மஹாபாரதக் கதை

ஒரு நாள் ஒரு வறியவன் வந்து பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரிடம் ஒரு உதவி கேட்டான். அப்பொழுது அவர் அரசாங்க அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்ததால் நாளைக்கு வாருங்களேன் என்றார். யுதிஷ்டிரரின் மறு பெயர் தர்மர். அவர் சொன்ன சொல் தவறாதவர். ஆகையால் இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய தம்பி பீமசேனனுனுக்கு ஒரே ஆச்சர்யம். ஓடிப்போய் அரண்மனை வாயிலில் கட்டியிருந்த ஆராய்ச்சி மணியை அடிக்க ஆரம்பித்தான்.

பாரதம் முழுதும் – இமயம் முதல் குமரி வரை– ஒரே கலாசாரம் என்பதால் தமிழர்களின் அரண்மனை வாயிலில் (மனு நீதிச்சோழன் கதை) இருந்தது போலவே ஹஸ்தினாபுரத்திலும் இந்திரப் பிரஸ்தத்திலும் இப்படி மணிகள் இருந்தன.

பெரிய அவசரம், அநீதி அல்லது பெரிய வெற்றிச் செய்தி இருந்தால் மட்டுமே இப்படி மணி அடிக்கப்படும். ஆகையால் மணி ஓசை கேட்டவுடன் ஒரே பரபரப்பு. இதன் காரணம் அறியாத யுதிஷ்டிரரும் பதட்டம் அடைந்தார். எனது ஆட்சியில் என்ன நேர்ந்து விட்டது அறிந்து வாருங்கள் என்று மந்திரியை அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து உங்கள் தம்பியின் வேலை இது என்று சொன்னார்கள்.

உடனே தர்மர் (யுதிஷ்டிரர்) புடை சூழ எல்லோரும் சென்று பீமனிடம் காரணம் கேட்டனர். எனது அண்ணன் பொய்யே பேசாதவர். ஒருவர் உதவி கேட்டவுடன் நாளைக்கு வா என்றார். அவர் இன்னும் 24 மணி நேரம் உயிரோடு இருப்பதை அறிந்திருப்பது உலக அதிசயம் அல்லவா? இதை யார் இவ்வளவு உறுதிபடச் சொல்ல முடியும்? என்றார்.

Big_Bell_Bhaktapur_GP4

உடனே தர்மருக்கு விஷயம் புரிந்தது. அவர் யாரை மறு நாள் வரச் சொன்னாரோ அவரைக் கூப்பிட்டழைத்து உடனே உதவி செய்தார். அதனால் தான் பெரியார்கள் “ஒன்றே செய்க, அதுவும் நன்றே செய்க, அதுவும் இன்றே செய்க” என்று நமக்குச் சொல்லுகிறார்கள்..

வியாசரும் யக்ஷப் பிரச்னம் ( பேயின் கேள்விகள்) என்ற பகுதியில் உலக மஹா அதிசயம் என்ன என்று கேட்கும் பேயின் (யக்ஷனின்) கேள்விக்கு தர்மர் வாயிலாக விடை பகர்வார்:

தினமும் எவ்வளவோ பேர் இறப்பதைப் பார்த்தும் மனிதர்கள், நாளைக்கு, தான் சாஸ்வதமாக இருக்கப்போவதாக நினைத்து எல்லா செயல்களையும் செய்கிறார்களே இதுதான் அதிசயம் என்கிறார். திருவள்ளுவரும் அதை அப்படியே சொல்லி வைத்தார்:

நெருநல் உளனொருவன் இன்று இல்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு  — குறள் 336

நிலயாமை என்னும் பொருள் பற்றிப் பேசாத இந்திய ஞானி எவரும் இல்லை. இதற்கு நேர்மாறாக இக்கருத்தை மேலை உலகில் காண்பது அரிது. இது பாரதீய சிந்தனையின் ஒரு முகப் பார்வைக்கு மேலும் ஒரு சான்று.

வாழ்க ஏக பாரதம்!

impermanence

அபூர்வ ராமாயண படங்கள்: பாலகாண்டம்

தொகுத்தவர்:லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:1795; தேதி 13 ஏப்ரல் 2015

லண்டனில் பதிவு செய்த நேரம்: காலை 8-25

படம்1.ஒரு வேடன் , ஆணும் பெண்ணுமாகக் கூடியிருந்த இரு பறவைகளில் ஒன்றை அம்பு எய்து கொன்றான். அதைப் பார்த்த வால்மீகி அவனைச்  சபித்தார். அந்த சாபம், அவர்   அறியாமலே கவிதையாக மலர்ந்தது. உடனே பிரம்மா   தோன்றி,  நீ  ராமன்    என்னும், உத்தம   அரசனின்  கதையை எழுதலாமே  என்றார். அப்பொழுதுதான்  உலகம் வியக்கும் வால்மீகி ராமாயணம் தோன்றியது. 24,000 செய்யுட்களாக வடிவெடுத்தது. (பறவைகளைக் கொல்வது வேடர்களினன்  தொழில். ஆயினும் ஆணும் பெண்ணுமாகக் கூடியிருக்கையில்,  எந்த மிருகத்தையும் கொல்லக்  கூடாதென்று,   இந்துமத நூல்கள் தடை விதிக்கின்றன).

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவார்க்கே. –(பால. காப்பு 12)

e0aeb0e0aebfe0aeb7e0af8de0aeafe0aeb8e0af8de0aeb0e0af80e0aea9e0ae95.jpg (960×960)

படம்2.உலகம்  வியக்கும் வண்ணம், ஆட்சி புரிந்த கோசல மன்னன்   தசரதனுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை. ரிஷ்ய சிருங்கரென்ற முனிவர் நாட்டுக்குள் நுழைந்தால் நல்லது என்றும்  அவர் புத்ர காமேஷ்டி யாகம் செய்தால் குழந்தைப் பேறு உண்டாகுமென்றும் பெரியோர்கள் சொன்னார்கள். பெண்ணென்றால்  என்ன என்றே தெரியாமல் காட்டுக்குள் வசித்து வந்த முனிவரை அழகிகள் மயக்கி அழைத்து வருகின்றனர்.

img_2767.jpg (2448×2448)

படம்3.புத்ர+ காம + இஷ்டி யாகம் செய்த உடனே ஒரு அற்புதம் நிகழ்கிறது. யாகத் தீயிலிருந்து ஒரு தேவன் வெளியே வந்து அற்புத  இனிப்புப் பாயசக் குடத்தைத் தருகிறான். அதை தசரதன், தனது மூன்று மனைவிகளுக்கும் பிரித்துத் தருகிறான். இதற்குப் பின்னர், கௌசல்யா என்பவள், இராம பிரானையும், கைகேயி என்பவள் பரதனையும், சுமித்திரை என்பவள் லெட்சுமணன், சத்ருக்னனனாகிய இரட்டைப் பிள்ளைகளயும் பெறுவதற்கு இந்தப் பாயசம்    உதவுகிறது.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். –(பால. காப்பு 13)

img_2768.jpg (2448×2448)

படம்4.விசுவாமித்திரனென்ற முனிவன் ((விசுவ+மித்திரன் = உலக நண்பன்)) வந்து, உனது மகன் ராமனை என்னுடன் பாதுகாப்புக்காக   அனுப்பு என்கிறார். தசரதனுக்கு பயம்,  நானே வருகிறேனே, சின்னப் பையன்கள்  எதற்கு? என்கிறார். ஆயினும் வசிஷ்டர் சொன்னவுடன்  ராம லெட்சுமணர்களை அனுப்பி வைக்கிறார். முக்காலமும் தெரிந்த முனிவன்  வசிட்டனுக்கு  இதிலும் நண்மை  உண்டு  என்று தெரிகிறது.

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகிலா விளையாட்டுடையார் அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே–(பாலகாண்டம் பாயிரம் 1)

img_2769.jpg (2448×2448)

படம்5.காட்டில் நுழைந்தவுடன் தாடகை என்னும்  அரக்கி வருகிறாள். “பெண்  என்பதால் நான் கொல்ல மாட்டேன்” – என்கிறார். அவளொரு பெண்ணே இல்லை , இராட்சஸி என்று  விசுவாமித்திரன் சொன்னவுடன் ராமன்  அவளை ஒரே அம்பில் கொல்கிறார்.

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

உய் வண்ணம் அன்றி மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன்

img_2770.jpg (2448×2448)

படம்6.காட்டில் சுபாஹு, மாரீசனென்ற  இரண்டு அரக்கர்கள் யாகசாலை மீது தாக்குகின்றனர். உடனே ராமன், சுபாஹுவைக் கொல்கிறான். மாரீசனைக் கடலில் தொலைவில் தூக்கி எறிகிறான்.

படம்7.கௌதம  முனிவர் தனது மனைவி அகலிகையுடன் காட்டில் வசித்து வந்தார். அவர் வெளியே சென்ற பொழுது இந்திரன் , முனிவர் வேடத்தில் வந்து அகலிகையை மான பங்கப்  படுத்துகிறான். இதனால் கோபமமடைந்த கௌதமர் தனது மனைவி கல்லைப் போல சித்தப் பிரமை பிடித்தவளாக  இருக்குமாறு சபிக்கிறார். தான் தவறு செய்யவில்லை என்று மன்றாடுகிறாள். இந்துமதம் சத்தியத்தின்   அஸ்திவாரத்தின் மீது  அமைந்ததால் கடவுளே ஆனாலும்  ஒரு சொல் சொன்னால், அதைத் திருப்பிப் பெற முடியாது;மாற்ற முடியாது. ஆனால் மாற்று வழி கண்டு பிடித்து அதன் மூலம் வெளியேற  உதவலாம். ராமன் காலடி பட்டவுடனே, உனக்கு சாப விமோசனம் கிடைக்குமமென்று கௌதமர் கூறுகிறார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சம்பவத்தை விளக்குமமோவியம் மதுரை- திருப்பறங்குன்றக் கோவிலில்   இருந்ததாகச் சங்க இலக்கியம் செப்புகிறது.

img_26691.jpg (2448×2448)

படம்8.ராமனின் கை வண்ணத்தை தாடகை வதத்திலும், கால் வண்ணத்தை அகலிகை சாப விமோசனத்திலும் கண்டதைக் கம்பன் அழகாகப் பாடுகிறான். ராமன், பின்னொரு காலத்தில், தனது ஆஸ்ரமத்துக்கு வருவார், என்பதை முக்காலம் உணர்ந்த கௌதமர் முன்னரே  அறிந்தது இந்த சம்பவத்தால் தெரிகிறது. நாம் ஒரு மலையின் மீது நின்று நதி ஓடுவதைப் பார்த்தால் நம்மைக் கடந்து சென்ற நதி, கடக்கும் நதியின் நீர், இனி நம்மை நோக்கி எதிர் வரப் போகின்ற நீர் ஆகியவற்ரைப் பார்ப்பது போல முனிவர்கள் காலத்துக்கு வெளியே சென்று “சென்ற காலம், நிகழ் காலம், வரும் காலம், ஆகியவற்றைப் பார்க்க முடியும். இது காலம் பற்றிய சார்பியல் கோட்பாட்டைக் கொடுத்த, ஐன்ஸ்டைனுக்கும் தெரியாத விஷயம்!!

img_2794.jpg (2448×3264)

படம்9.இராம லெட்சுமணர்களை ஜனகன் என்னும் விதேக நாட்டு மன்னனிடம் விசுவாமித்திரர் கூட்டிக் கொண்டு செல்கிறார். இந்த  இளைஞன் என்னிடமுள்ள சிவ தனுஷை முறித்தால்  அமிழ்தினும் இனிய எனது மகள்  சீதையை மணம் முடிப்பேன் — என்கிறான்  ஜனகன். ராமன் வில்லை எடுத்தவுடனே  அதில் நாணேற்றி வெற்றி பெறுகிறார்.வில் முறிந்தும் போகிறது. “எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்” — என்று கம்பன் பாடுகிறார். அதாவது வில்லை எடுத்ததைத் தான் மக்கள் பார்த்தனர். அடுத்த நிமிடம், அது முறிந்த சப்தம்தான் மக்களுக்குக் கேட்டது. அவ்வளவு வேகத்தில் ராமன் செயலைச் செய்து  முடித்தார்.

img_2576.jpg (2448×2448)

படம்10.பரசுராமன், ஒரு பிராமணர். அவரது தந்தைக்கு, க்ஷத்ரியர்கள் தீங்கு இழைத்ததால், அவர் 21 முறை  தாக்கி, அரசர்கள்  எல்லோரையும்   அழிக்கிறார். ராமரும் க்ஷத்ரியரென்பதால் கோபக் கனல் பொங்க, அவரை எதிர்க்கிறார். எல்லோரும் விட்டுவிடுங்கள்” – என்று கெஞ்சுகின்றனர். சிவ தனுஷென்னும் வில்லை முறித்த ராமன், என்னிடமுள்ள விஷ்ணு தனுஷென்னும் வில்லை முறித்தால் போய் விடுகிறேன் என்கிறார். இராமன் அதை நொடிப் பொழுதில் முடிக்கவே, அவர் வந்த வழியே போய் விடுகிறார்.

IMG_2575

swami_48@yahoo.com