கூப்பிடு தூரத்தில் இறைவன்!

disrobing-of-Draupadi-

Written by London swaminathan

Article No 1731; Date 19th March 2015

Uploaded at 9-48 am London Time (GMT)

கதை சொன்னவர் சுப்ரமண்ய சிவா; புத்தகத்தின் பெயர்: மோக்ஷ சாதன ரஹஸ்யம்; வெளியிட்ட ஆண்டு 1925

(சொற்கள் என்னுடையவை)

தஞ்சாவூரில் பெரியதாசர் என்று ஒரு சிறந்த பக்தர் இருந்தார். அவர் சதா சர்வ காலமும் இறை வழிபாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்தார். அவருடைய பெருமை அரசன் காதுகளையும் எட்டின. ஒரு நாள் அரசனே நேரே வந்தான். கொஞ்சம் பேச்சுக் கொடுத்துவிட்டு, கடவுள் எங்கே இருக்கிறார்? என்றார்.

உடனே பெரியதாசர் கொஞ்சமும் தயங்காமல் கடவுள் “கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்” என்றார். பெரிய தத்துவார்த்த பதிலை எதிர்பார்த்த அரசனுக்கு இப்படி அவர் பதில் கூறியது என்னவோ போல இருந்தது. தன்னை பெரியதாசர் கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றியது.

அப்படியா? இதோ என் சேவகர்களை அனுப்பி கூப்பிடு தூரத்தில் தேடிப் பார்க்கிறேன் என்றார்.

(ஒருவர் கூப்பிடும் குரல் எவ்வளவு தூரம் வரை கேட்கிறதோ அதைக் கூப்பிடு தூரம் என்று தமிழில் செப்புவர். ஆங்கிலத்தில் இதை Hailing Distance ஹெய்லிங் டிஸ்டன்ஸ் என்பர்)

சப்தம் போட்டுக் கூப்பிட்டுவிட்டு அவ்வளவு தூரம் வரை சேவகர்களை அனுப்பிப் பார்த்ததில் கடவுளின் சுவடே தெரிய இல்லை.

PONRHanumanSacredHeart400

பெரியதாசரிடம் அரசன் சொன்னார்: “அரசனிடம் பொய் சொல்லுவது பெரிய குற்றம். அது உங்களுக்குத் தெரியும். உண்மையைச் சொல்லுங்கள் கடவுள் எங்கே இருக்கிறார்?”

நான்  தான் முன்னமே சொன்னேனே! கடவுள் கூப்பிடு தூரத்தில் இருக்கிறார் என்று.

நான் தேடிப் பார்த்தேன் கடவுள் கூப்பிடு தூரத்தில் இல்லையே- என்றான் அரசன்.

பெரியதாசர் சொன்னார்: மன்னவனே; திரவுபதி கதை உனக்குத் தெரியாதா? அவளைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வந்து அவளது புடவையை உருவினான். ஒரு பெண்ணுக்கு உலகில் இதைவிடப் பெரிய கொடுமை ஏதும் இல்லை. உயிரே போனாலும் பரவாயில்லை; மானம் போகக் கூடாது என்று பெண்கள் நினைப்பர். அவள் தனது இரு கைகளாலும் புடவையைப் பிடித்துக் கொண்டு, “அடே கண்ணா, துவாரகாபுரீவாசா, என்னைக் காப்பாற்று” – என்று கதறினாள்.

துவாரகாபுரீவாசன், நாமோ ரொம்ப தூரத்தில் உள்ளோம். அவளோ தன் புடவையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறாள் என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டார்.

நேரம் ஆக, ஆக திரவுபதிக்குத் தெரிந்துவிட்டது. இனி மனித முயற்சியில் ஒன்றும் நடவாது என்று உணர்ந்து, இரு கைகளையும் உயரே உயர்த்தி, “அடே ஹ்ருதய கமலவாசா! உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்”– என்று கதறினாள். அடுத்த நொடியில் உலக மஹா அற்புதம் நிகழ்ந்தது. துச்சாதனன் உருவிட, உருவிட புடவை வளர்ந்தது. அவன் மயக்கம்போட்டு வீழ்ந்தான். எப்படி?

துவாரகாபுரீ வாசா என்று அவனைத் தொலைவில் வைத்து, தன்னுடைய  இரு கைகள் மீது நம்பிக்கை வைத்த வரை கிருஷ்ணன் தனது ஆசனத்தை விட்டு அகலவில்லை.

இருதய கமல (இதய தாமரை) வாசா என்று “கூப்பிடு தூரத்துக்குள்” வைத்து அழைத்தவுடன், வெளியே குதித்த கண்ணன், அவளைக் காப்பாற்றினான். கூப்பிடு தூரம் என்பது அவரவர்கள் இறைவனைப் பக்கத்தில் வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பதைக் காட்டும் சொல் என்றார்.

ramais in heart

அரசனுக்கு இந்தப் பதில் நல்ல திருப்தியைத் தந்தது. பெரியதாசரின் பெருமையை உணர்ந்து அவரது காலடியில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றான்!

அன்பர்களே, இந்தக் கதை புகட்டும் நீதி என்ன?

உள்ளத்தில் கடவுளை வையுங்கள்; அவன் மீது முழுநம்பிக்கை வையுங்கள். முழு நம்பிக்கையோடு கூப்பிட்டால் உடனே வருவான், அருள்வான்.

இருதய கமல வாசன் வாழ்க! இருதயங்கள் வெல்க!!

மன்னர் – முனிவர் இடையே சுவையான உரையாடல்!

guru_disciple-336x352

Article No 1729; Date 18th March 2015

Written by London swaminathan

லண்டன் நேரம் காலை 8-15

வைசம்பாயனர் – ஜனமேஜயன் உரையாடல்

ஆதாரம் – சுதந்திராநந்தர் சுப்ரமண்ய சிவா எழுதிய மோக்ஷ சாதன ரஹஸ்யம் – ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னர் மன்னவா! உனக்கு மஹாபாரதம் என்னும் மகத்தான இதிஹாசத்தை அறிமுகப்படுத்த ஆவல். தங்கள் சௌகரியம் எப்படியோ?

மன்னன் ஜனமேஜயன்:

முற்றும் துறந்த முனிவரே! உம்மைப் போன்ற அவகாசம் எமக்கில்லையே. இறைவன் இன்னும் இரண்டு கைகள் கொடுத்து, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்றால் கூட எனக்கு நேரம் போராதே! எனக்கு தலைக்கு மேலே பல வேலைகள் உள்ளன.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னா! கவலை வேண்டாம். மஹா பாரதத்தில் உள்ள 18 பர்வங்களையும் சொல்லாமல் ஒரே ஒரு பர்வம் மட்டும் சொல்கிறேன்.

மன்னன் ஜனமேஜயன்:

வேண்டவே வேண்டாம்; ஒரு நிமிட அவகாசம் கூட எனக்கில்லை.

முனிவர் வைசம்பாயனர்:

(பொறுமைக்கு இலக்கணமானவர் வைசம்பாயனர்; ஆகையால் விடவில்லை) – அதனால் என்ன மன்னா? ஒரு அத்தியாயம் மட்டும் சொல்கிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

முனிவரே, உமக்கு அரசாட்சி என்றால் என்ன என்றே புரியவில்லை, பாரும்! இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும்? எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை. இல்லவே இல்லை!

guru-shishya (1)

முனிவர் வைசம்பாயனர்:

புரிகிறது, புரிகிறது, நன்றாகவே புரிகிறது. மாபாரதத்தில் மொத்தம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு ஸ்லோகம் மட்டும் சொல்லுகிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

சரி, சரி! ஒன்றே ஒன்று. நேரத்தை வீணடிக்காமல் சட்டென்று சொல்லும்.

முனிவர் வைசம்பாயனர்:

துரியோதனன் போய் பசுக்களை அபகரித்து வந்தான் (ஆநிரை மீட்டல்). பெரிய யுத்தம் நேரிட்டது. துரியோதணன் செத்தான். போய்ட்டு வரட்டுமா?

இவ்வாறு சொல்லிக் கொண்டே எழுந்தார்.

மன்னன் ஜனமேஜயன்:

சுவாமிகளே! நில்லுங்கள். துரியோதணன் மாபெரும் மன்னன். அவன் போய், பசுக்களை எதற்காகத் திருட வேண்டும்? புரியவில்லையே. கதையில் ஏதோ தப்பு இருக்கிறது.

முனிவர் வைசம்பாயனர்:

ஓ, அதுவா? அவன் ஏன் பசுக்களைக் கவர்ந்தான் என்றால் …………………………………

இப்படியாக விளக்கம் சொல்லவும், ஜனமேஜயன் மேலும் ஆர்வம்கொண்டு பல துணைக் கேள்விகளைக் கேட்டான். ஒவ்வொன்றுக்காக அவர் பதில் சொல்லச் சொல்ல முழு மஹாபாரதத் தையும் சொல்ல வேண்டிவந்தது.

ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட—இரண்டு லட்சம் வரிகளைக் கொண்ட – பத்து லட்சம் சொற்களைக் கொண்ட — ஏராளமான உபகதைகளைக் கொண்ட – மஹாபாரதம் – காலத்தை வென்ற ஒரு காவியம். கேட்கக் கேட்க தெவிட்டாத இலக்கியம். உலகிலுள்ள எல்லாம் அதில் உள. அதில் உள்ள எல்லாவற்றையும் உலகில் ஒரே இடத்தில் காண்பது அரிது.

வாழ்க மஹா பாரதம்! வளர்க சொற்பொழிவாளர்கள்!!

அர்ஜுனனுக்குப் பரிசு- தங்கம்: கிருஷ்ணனுக்கு கடும் கோபம்!

சாப்பாடு

Written by London swaminathan

Article no. 1719; dated 15  March 2015

Up loaded at 10-26 London time

 

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா, மத்வர், ராமானுஜர் போன்ற பெரியோர்களைப் பற்றியும் இந்து தர்மத்தின் உயர் நோக்கங்கள் குறித்தும் அருமையான புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை அத்தனையும் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவருடைய மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்ற புத்தகத்தில் தானத்தின் சிறப்பை விளக்க ஐந்தாறு கதைகளை எளிய தமிழில் சொல்லுகிறார். சில கதைகளை கடந்த இரண்டு தினங்களில் கொடுத்தேன். இதோ இன்னும் ( படித்துவிட்டு என் சொற்களில் தருவதால் பிழைகள் இருந்தால் அவை என்னுடையன; மன்னிக்க) ஒரு கதை:

அர்ஜுனனும் கிருஷ்ணனும் நாட்டை வளப்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு செம்படவன் அங்கே வந்தான். அர்ஜுனன் காலடியில் தங்கக் கட்டிகளைச் சமர்ப்பித்தான். அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. வழக்கம் போலக் கள்ளக் கிருஷ்ணன் திருவிளையாடல் போலும் என்று எண்ணி கண்ணனைப் பார்த்தான். கிருஷ்ணனோ வெனில் அட நமது பால்ய நண்பன் நமக்குத் தெரியாமல் வேறு ஒரு ‘பிஸினஸ்’ செய்கிறான் போலும் என்று சந்தேகக் கண்ணோடு அர்ஜுனனைப் பார்த்தார்.

ஒரு நொடியில் இருவர் மவுனமும் கலைந்தது. என்னப்பா, இதெல்லாம்? என்று இருவரும் செம்படவனைக் கேட்டார்கள்.

அர்ஜுனன் ஐயா! என்னை மறந்து விட்டீர்களா? ஒரு நாள் பண உதவி கேட்டு உங்களிடம் வந்தேன். நீங்கள் ஒரு பைசா கொடுத்தீர்கள். அதை வைத்து மீன் வலை வாங்கி மீன் பிடித்தேன். ஐயா கை, ரொம்ப ராஸியான கை. நிறைய மீன் கிடைத்தது. மேலும் மேலும் வலைகள் வாங்கி மீன் பிடித்து இப்பொழுது ‘மில்லியனர்’ (கோடீஸ்வரன்) ஆகிவிட்டேன்.

‘என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; செய் நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை’ என்பதை நீங்கள் அறிவீர்களே. என் நன்றிக் காணிக்கை இது; கையூட்டு அல்ல! என்றான்.

 பரிமாறு

இருவரும் ஒரு வழியாக அவனுக்கு ‘குட் பை’ சொல்லி வழி அனுப்பிவைத்தனர். கிருஷ்ணனுக்கு கோபம் பொங்கி எழுந்தது. பெரிய தப்புச் செய்துவிட்டாயே, அர்ஜுனா! இப்பொழுது இவன் கொன்ற பல்லாயிரக் கணக்கான மீன்களால் அவனுக்கு பாபம் சேர்ந்திரு க்கிறது. அதில்  ஒரு பகுதி உன்னைச் சாரும் என்றார் கிருஷ்ணன்.

இந்தக் கதையைச் சொன்ன சிவா, தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லிவிட்டுக் கீழ்கண்ட காரணங்களைக் கொடுக்கிறார்:

1.அன்னதானத்தில் மேற்சொன்ன கதை போல உயிர்க் கொலைகள் நடக்க வாய்ப்பில்லை (அன்ன தானத்தில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும். சீக்கிய குருத்வாராக்களில் கூட சைவ உணவு மட்டுமே தரப்படுகிறது)

2.அன்னதானம் ஒன்றில் மட்டுமே ‘போதும்’ என்ற எண்ணம் மனதில் வரும். மண், பெண், பொன் ஆகியன எவ்வளவு கிடைத்தாலும் ஆசை அடங்காது. இலையில் அமிர்தமே பரிமாறினாலும் வயிறு நிரம்பிவிட்டால் போதும் போதும் என்று சொல்லி பரிமறுவதைத் தடுப்பார்கள். “வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்” — என்பது பழமொழி.

3.அன்னதானம் போட்டால் ஊரில் தண்டச் சோறும், வேலையசெய்யாத சோம்பேறிகளும் பெருகுவர் என்று பலர் நினைப்பர். ஆயிரம் உதாவக்கரைகள் சாப்பிட் டாலும் அதிலொரு நல்லவர் இருந்து வாழ்த்தினால் அன்னதானம் செய்த குடும்பம் மட்டுமின்றி ஊரே வாழும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” — என்பது தமிழர் கண்ட உண்மை.

neelavannan

  1. இதனால்தான் அக்காலத்தில் சாலை வழித் தடங்களில் அன்னதான சத்திரங்களைக் கட்டிவைத்தனர்.

“இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தார்” — என்று பாடியும் வைத்தனர்.

வாழ்க அன்னதானம்! வளர்க கொடையாளிகள்!!

பந்தி போஜனம்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

ram hanuman

Hanuman in Indonesian Ramayana Ballet

Written by ச.நாகராஜன்

Article no. 1718; dated 15 March 2015

Up loaded at 9-57  London time

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 12

ச.நாகராஜன்

ஶ்ரீராமனின் ஶ்ரீதேவியே அனுமான் உன்னைக் காக்க..!

அஞ்சிலே ஒன்று பெற்றான்

ராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்

மஹாத்மா அனுமான்

IMG_0276

இப்படிப்பட்ட மாபெரும் வீரனை மஹாத்மன: என ராமரே போற்றிப் புகழ்கிறார். அவதார புருஷன் வாயிலாகவே மஹாத்மா பட்டத்தைப் பெற்றவர் அனுமன்! ராமரின் அணுக்கத் தொண்டனான இந்த அனுமனின்  செயலைக் குறிப்பிடாமல் தமிழ் திரையுலகம் இருக்க முடியுமா, என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் பிரபல கதாநாயகி ஶ்ரீதேவி நடித்த வெற்றிப் படமான ப்ரியா படம் 1978ஆம் ஆண்டில் வெளியான படம்.

இது நாவலாசிரியர் சுஜாதாவின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவரது கணேஷ் லண்டனில் சென்று ஆற்றும் சாகஸங்களைக் கதை சித்தரிக்கும். ஆனால் திரைப்படத்திற்காக நிகழ்வுகளின் களம் சிங்கப்பூராக மாற்றப்பட்டது.

நடிகை ஶ்ரீதேவி ஒரு சேரில் கைகால்கள் கட்டப்பட வாயில் பிளாஸ்திரி போட்டு பேச முடியாமல் தவிக்க எதிரிகளால் அடைக்கப்படுகிறார். படத்திலும் அவர் ஒரு நடிகை தான். காப்பாற்றும் கதாநாயகன் சூப்பர் ஸ்டார் தான் என்பது சொல்லித் தெரியவேண்டாம்.

அவர் ஶ்ரீதேவி இருக்கும் இடத்தைத் தேடிச் செல்லுகையில் ஒரு பாடல். வழக்கமாக காலம் காலமாக திரைப்பட ஃபார்முலா படி எதிரிகளின் கோட்டையில் உள்ளே மாறுவேடத்தில் நுழையும் ஒரு கதாநாயகன் ஒரு ஆடல் பாடலைச் செய்வது போலத் தான் இதுவும்!

Indonesia-2012-593_web-lrg

ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே

இளையராஜா இசை அமைக்க, பாடலைப் பஞ்சு அருணாசலம் எழுதியுள்ளார். கே.ஜே. ஜேசுதாஸ் பாடிய பாடல் இது.

ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே

ஹனுமான் உன்னைக் காக்க

சிறையில் உன்னை மீட்க

கடல் தாண்டி வந்தானம்மா

எதிர்ப்போரை வெல்வானம்மா

ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா

பாடி பாடி அழைக்கின்றேன்

ஜாடையாக சேதி சொல்வாய்

பாதை ஒன்று கண்டுகொள்ள நீயும் பாடுவாய்

தயக்கம் என்ன, கலக்கம் என்ன

தேவி நீ குரல் கொடு

ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா

நேரம் பார்த்து நெருங்குவேன்

காவல் தாண்டி காக்க வந்தேன்

போட்டி என்று வந்த பின்னே நேரில் மோதுவேன்

கவலை இல்லை மயக்கம் இல்லை

தேவி நீ குரல் கொடு

ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே

ஹனுமான் உன்னைக் காக்க

சிறையில் உன்னை மீட்க

கடல் தாண்டி வந்தானம்மா

எதிர்ப்போரை வெல்வானம்மா

ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா.. ஓ..ப்ரியா

பாகப்பிரிவினை சிவாஜி ஸ்டைலில் கையை மடித்துக் கொண்டு இன்னொரு கையில் ஒரு தடியுடன் நடந்து செல்லும் ரஜினி பாடுவதாக காட்சி அமைப்பு உள்ளது. வில்லனின் ஆட்கள் அவரை நெருங்கிக் கண்ணாடியை அகற்றி செக் செய்வதும் பாடலில் அனுமானைப் போல வருவேன் என்று அட்டகாசமாக அவர் தடியுடன் நெஞ்சை நிமிர்த்திக் காட்டுவதும் ரஜினி ரசிகர்களை நிச்சயம் குளிர்விக்கும். நவீன கடத்தல் கதையில் கூட ஶ்ரீராமனின் கதை ஞாபகப் படுத்தப்படுகிறது. ராமாயணத்தின் மொத்த வலுவும் இந்தப் பாட்டில் ஏற்றப்பட அதன் மூலம் கதை அமைப்பு சுட்டிக் காட்டப் படுகிறது.

IMG_0273

Ramayana Sculptures

பஞ்சு அருணாசலம்

கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்து பின்னர் திரைத்துறையின் பல்வேறு அம்சங்களிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் பஞ்சு அருணாசலம். தயாரிப்பாளராக இருந்து அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை அறிமுகப்படுத்திய பெரிய பெருமை இவருக்கு நிரந்தரமாக உண்டு. ரஜினி, கமலஹாசன் ஆகியோரின் நடிப்பில் பெரும் ஹிட் படங்களை அளித்தவர் இவர். கதைக்கு ஏற்ப பாட்டு எழுதுவதில் வல்லவர் என்பதை இந்த ‘ஶ்ரீராமனின் ஶ்ரீ தேவியே ஹனுமான் உன்னைக் காக்க’ பாடல் ஒன்றே சிறந்த சான்றாகும்!

குறிப்பு :- (அனுமனைப் பற்றி ராமர் போற்றிய மஹாத்மா என்ற தலைப்பில் ‘ராமாயண வழிகாட்டி’ என்ற கட்டுரைத் தொடரில் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ள ஆறாம் கட்டுரையை மேலும் அதிக விவரங்களுக்காகப் படித்து மகிழலாம்)

*****************

கங்கையில் புனித நீராடுவோர் பற்றி பார்வதி கேள்வி!

கும்ப

கும்பமேளா, பிரயாகை படம்

Written by London swaminathan

Article no. 1715; dated 14 March 2015

Up loaded at 12-10 London time

மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் புத்தகத்தில் அன்னதானத்தின் பெருமையை ஒரு அழகான கதை மூலம் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா விளக்கியதை முன்னர் கண்டோம். இதோ அவர் சொல்லும் இன்னும் ஒரு சுவையான கதை (சொற்கள் என்னுடையவை. ஆகவே பிழை இருப்பின் மன்னிக்க):

பார்வதியும் பரமசிவனும் உலகைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர். கங்கை நதிக் கரையில் ஒரே கூட்டம். கோடிக் கணக்கான மக்கள் கும்பமேளா விழாவை ஒட்டி கங்கையில் குளித்துக் கொண்டிருந்தனர். பார்வதிக்கு ஒரே வியப்பு. ஆனால் திடீரென ஒரு சந்தேகம் எழுந்தது. அருகிலேயே பிறவா யாக்கைப் பெரியோன், நீல மணி மிடற்று முக்கண்ணன் இருந்ததால் தொடுத்தாள் கேள்விக் கணைகளை,

“நாதா! கங்கையில் குளித்தால் பாபங்கள் எல்லாம் அடியோடு போய்விடும் என்பது உண்மையா?அப்படி உண்மையானால் கோடிக் கணக்கான மக்கள் இப்படிக் குளித்து பாபங்களைப் போக்கிவிட்டால் எல்லோரும் சொர்க்கத்துக்ப் போய்விடுவார்களே! நரகம் காலியாகி விடாதா?”

OLYMPUS DIGITAL CAMERA

படம்: கங்கைக் கரையில் சிவன்

சிவன் சிரித்துக் கொண்டே சொன்னார்,

“அன்பே! என் ஆருயிரே! அப்படியெல்லாம் கவலை கொள்ளாதே. சுவர்க்க லோகம் என்றும் நிறைந்ததாக—நிரம்பியதாக—(கின்னஸ்) சாதனைப் புத்தகத்தில் கூட படிக்க முடியாது. இதை நிரூபிக்க வேண்டுமா?” என்றார்.

ஆமாம், சுவாமி! எனக்கு ப்ரூப் (ஆதாரம்) வேண்டும் என்றாள் உலகாளும் அம்மை.

உடனே சிவன் சொன்னார்,” நான் என்னதான் சொன்னாலும் உனக்கு நம்பிக்கை வராது. சந்தேகம் தெளியாது. ஆகையால் ஒன்று செய். நீ போய் பூலோகத்தில் இரு. நான் ஒரு பயங்கர குஷ்ட ரோகி போல வருவேன். நீ என்னை கணவன் போல பின் தொடர்ந்து வா. நான் கீழே விழுந்து உயிர் விடுகிறேன். நீ கதறி அழுது உதவி கோரு. யார் உதவி செய்ய வந்தாலும் — பாவம் கொஞ்சம்கூட இல்லாத ஆட்களே சடலத்தைத் தொடலாம் — என்று கூறு.

அவர்கள் திட்டப்படியே சிவன் குஷ்ட ரோகியா கவும்,பார்வதி பேரழகியாகவும் சென்றனர். எல்லோரும் பார்க்கையில் அவர்கள் முன்னிலையில் சிவன் திடீரென்று கீழே விழுந்தார்; மூர்ச்சையானார். பார்வதி அழுது புரண்டாள். எல்லோரும் உதவிக்கு வந்தனர். ஆனால் பார்வதியோ பாவமே இல்லாதவர் மட்டும் சடலத்தைத் தொடலாம், மற்றவர்கள் தொடாமல் விலகிப் போங்கள் என்றார். கூட்டம் மெதுவாக நழுவிட்டது.

mahakumbh-13_021013051606

மஹா கும்ப மேளா படங்கள்

அப்போது ஒருவன் மட்டும் வேகமாக முன்னால் வந்தான். அம்மையே நான் இந்த சடலத்தை கங்கையில் எறிந்து அடக்கம் செய்கிறேன் என்றான். அவனைப் பார்த்தாலே படிப்பறிவும் நாகரீகமும் இல்லாதவன் என்று தெரிந்தது. பார்வதியோ எல்லோருக்கும் இட்ட நிபந்தனையையே அவனுக்கும் இட்டாள். அதைக் கேட்ட அவன் அது எனக்கு நன்றாகத் தெரியும் என்று சொல்லிக் கொண்டே கங்கையில் பாய்ந்தான், குளித்தான், வெளியே வந்தான். அம்மையே நான் சிறிதும் பாபமற்றவன் என்று சொல்லி சடலத்தின் அருகில் வந்தான். சிவனும் பார்வதியும் மறைந்தனர்!!

பல கோடிப் பேர்களில் ஒருவனுக்குத் தான் “கங்கா ஸ்நானம் பாபத்தைப் போக்கும் ” என்ற நம்பிக்கை இருந்தது. மற்றவர்கள் கங்கையில் குளிப்பதை ஒரு சடங்கு போலச் செய்தனர். அவர்களிடம் முழு நம்பிகை இல்லை. இப்பொழுது புரிந்தது பார்வதிக்கு! சொர்க்கம் என்றும் நிரம்பாது; நரகம் என்றும் குறைவு படாது!!

வளர்க சுவர்கம்!! தேய்க நரகம்!!

kumbh-6-photo

கோடிப் பேர் புனித நீராடும் கங்கை நதி

சுவையான கதை: கர்ணன் கேட்ட கேள்வியும் கண்ணன் சொன்ன பதிலும்

கர்ண

கட்டுரை எண் 1713; தேதி 13 மார்ச் 2015

எழுதியவர் – லண்டன் சுவாமிநாதன்

லண்டன் நேரம்—காலை 5—53

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்ற ஒரு அரிய நூலை எழுதியுள்ளார். பெரிய புத்தகம்—அரிய புத்தகம் – 830 பக்கங்கள் – வெளியாயான ஆண்டு 1925. தமிழ்நாட்டில் கிடைப்பது அரிது என்றவுடன் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று அதைப் படித்தேன். அவர் சொன்ன சுவையான கதை. ஆனால் அவர் சொற்களில் சொல்லாமல் சுருக்கமாக என் சொற்களில் சொல்லிவிடுகிறேன். அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை இது:–

போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கொடை வள்ளல் கர்ண மாமன்னன். தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள் என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஒரே புன் சிரிப்பு! கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா! என்று கெஞ்சுகிறான்.

கண்ணன் உடனே, இதோ தண்ணீர் என்று ஊற்றுகிறார். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. கண்ணா, இது என்ன வேலை? சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது என்று கதறுகிறான்.

கண்ண

கிருஷ்ணருக்குமே புரியவில்லை. ஒரு நொடியில் ஞான த்ருஷ்டியில் பார்த்துவிட்டு மீண்டும் புன்சிரிப்பை நெளியவிடுகிறார். கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய். அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்ன தானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பு என்றார்.

இதைக் கேட்ட கர்ணன் நாணிக்கோணி தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. கன்னனுக்கும் கண்ணனுக்கும் – இருவருக்கும் — ஆனந்தம். அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி. சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!!

கன்னன் = கர்ணன்

karnanan-1-e13315594338311

கஞ்சன் பட்டபாடு! இன்னும் ஒரு கதை!!

இந்தக் கதையை ஒரு மஹா லோபி (வடித்தெடுத்த கஞ்சன்) கேட்டு விட்டான். எச்சில் கையாலும் காக்கா ஓட்டாதவன் அவன்! அடடா! ஒரு விரலால் அன்ன சத்திரத்தைக் காட்டினால் இவ்வளவு புண்ணியமா. என்னிடம் யாரவது வரட்டும் என்ன செய்கிறேன் என்று பார் என்று எண்ணிக் கொண்டே போனான்.அந்த நேரத்தில் ஒருவன் வந்து சேர்ந்தான்; ஐயா! பசிக்கிறது; சோறு இருந்தால் போடுங்கள் என்றான்.

உடனே அவன் ஒரு விரலால் சுட்டிக்காட்டவில்லை! உடம்பு முழுதையும் வளைத்து நெளித்து சுழித்து அன்ன சத்திரம் இருக்கும் திசையைக் காட்டி அங்கே போ, சோறு கிடைக்கும் என்று விரட்டினான். இப்படி உடம்பு முழுதையும் நெளித்து விரட்டி அடித்ததால் அடுத்த ஜென்மத்தில் நெளிந்து நெளிந்து செல்லும் புழுவாகப் பூமியில் பிறப்பெடுத்தான்!

Karnan29211

இதுவும் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா சொன்ன கதைதாந் — மோக்ஷ சாதன ரஹஸ்யம் — என்னும் அவரது புத்தகம் கிடைத்தால் படிக்காமல் விடாதீர்கள். அவர் சொன்ன மற்றொரு கதை:

சுவையான கதை: “பார்வதி கேட்ட கேள்வியும் சிவன் சொன்ன பதிலும்” — அதை நாளைக்குச் சொல்கிறேன்.

குடை பிடித்திருப்போர் நியாயம் !

umbrella

Written by எஸ்.நாகராஜன்

Research Article no. 1710; dated 12 March 2015

Up loaded at 9–28 London time

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

22. வரியை ஏய்க்க நினைத்தவன் கதை!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

घट्टकुटीप्रभातन्यायः

ghattakutiprabhata nyayah

கட்டகுடிப்ரபாத நியாயம்

காலை நேரத்தில் வரி வசூலிப்பவனின் குடிசை முன்னால் வருவது பற்றிய நியாயம் இது.

இந்த நியாயத்திற்கு அடிப்படையான கதை இது தான்:

ஒரு நாள் இரவு வீட்டை விட்டுக் கிளம்பிய ஒருவன் வரியைக் கொடுக்காமல் ஏய்ப்பதற்காக வரி வசூலிப்பவன் இருக்கும் குடிசை இருக்கும் வழியே செல்லாமல் சாமர்த்தியமாக மாற்று வழி ஒன்றில் செல்ல ஆரம்பித்தான். இரவெல்லாம் வழி நடந்த அவன், காலை நேரத்தில் தன் எதிரே இருக்கும் ஒரு குடிசைக்கு வந்து சேர்ந்தான். அது தான் வரி வசூலிப்பவனின் குடிசை.

property-tax-bill

எதைத் தவிர்க்க எண்ணி அவன் வேறு ஒரு வழியில் சென்றானோ அது பலிக்காமல் அதே இடத்திற்கு அவன் வந்து சேர்ந்தான்.

வரி கொடுக்காமல் ஏய்க்க முடியுமா, என்ன?

இன்றோ, நாளையோ ஏதோ ஒரு நாள் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

வரியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது!

er uzavan

चित्रपटन्यायः

citrapata nyayah

சித்ரபட நியாயம்

சித்ரபடம்ஓவியம்

ஓவியம் பற்றிய நியாயம் இது. ஒரு ஓவியத்தின் மதிப்பு அது பார்ப்பவரின் கண்களுக்கு குளுமையை ஊட்டுவதில் தான் இருக்கிறது.

ஒரு நல்ல அழகிய தோற்றம் உடையவன் வேறு குணநலன்கள் இல்லாமல் இருந்தால் அப்போது இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.

அவன் பார்க்கத் தான் நல்ல அழகு; வேறு எந்த வித குணங்களும் அவனிடம் இல்லை’, என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் இது பயன்படுகிறது.

umbrella2

छत्रीन्यायः

chatri nyayah

சத்ரி நியாயம்

குடை பிடித்திருப்போர் பற்றிய நியாயம் இது.

ஒரு கூட்டத்தில் பலர் குடைகளைப் பிடித்து நின்று கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அனைவருமே குடை பிடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.

ஒருவனுக்கு இருக்கும் சில குணநலன்கள் அவனுடன் சேர்ந்து இருக்கும் மற்றவருக்கும் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுவது வழக்கம். சேர்க்கையினால் ஏற்படும் நன்மையைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படும்.

பப்பட்

जामात्रर्थंश्रपितस्य सूपादेरतिथ्युपकारकत्वम्

jamatrartham shrapitaasya supaderatithyupakarakatvam

ஜாமாத்ரர்தம் ஷ்ரபிதஸ்ய சூபாதேரதித்யுபகாரகத்வ நியாயம்

மாப்பிள்ளைக்காகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பற்றிச் சொல்லும் நியாயம் இது.

மாப்பிள்ளை வருகிறார் என்பதற்காக வீட்டில் பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை மாப்பிள்ளைக்கு மட்டுமா பரிமாறப்படுகின்றன? சாப்பிட உட்காரும் அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன.

ஒரு விஷயம் சிறப்பாக ஒருவரை உத்தேசித்துச் செய்யப்பட்டாலும் கூட, அது மற்ற அனைவரையும் சேரும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

bird-nest-in-ash-tree-branch

तिर्यगधिकरणन्यायः

tiryagadhikarana nyayah

திர்யகதிகரண நியாயம்

பறவைகளின் கூடு பற்றிய நியாயம் இது.

பறவைகள் தங்கி வாழும் கூடுகள் பறவைகள் வசிக்க மட்டும் உதவுமேயன்றி மனிதர்கள் வசிக்கப் பயன்படாது.

ஒரு விஷயம் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென்றால் அது அப்படிப் பயன்படக்கூடிய சூழ்நிலையைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நினைத்த பயனை அது அனைவருக்கும் கொடுக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பறவைக் கூடுகளின் நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

*****************

இந்துக்களின் அதி நவீன, அதி பயங்கர ஆயுதங்கள்!

D-128

Written by London swaminathan

Research Article no. 1705; dated 10 March 2015

uploaded at  காலை 11-10  London time லண்டன் நேரம்

கர தூஷணர்கள் என்னும் ஏழு கோடி அவுணர்களை ஸ்ரீ ராமர் அம்புகளின் மூலம் எளிதில் கொன்றார். ஆனால் ஏன் ராவணனை அப்படிக் கொல்ல முடியவில்லை?

 

அர்ஜுனன், துரியோதனன் போன்றோருக்கு ரஹசிய ஆயுதக் கலையைச் சொல்லிக் கொடுத்த துரோணர், அதை ஏன் ஏகலைவனுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்தார்?

 

பிரம்மாஸ்திரம் போன்ற அஸ்திரங்களை ஏன் “ஒரே ஒரு முறை” மட்டும் பிரயோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது?

இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடைதான்.

பழங்கால இந்துக்களிடம் ஒலி (சப்த) ஆயுதங்கள் இருந்தன. அவை அதிர்வு அலைகளைப் பரப்பி, பிரம்மாண்டமான அழிவுகளை உண்டாக்கும். இதை இன்னும் மேலை நாடுகள் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக் கூடும். நம்  நாட்டில் அந்தக் கலை அறவே மறைந்துவிட்டது. இவைகளை மிக, மிக அரிதாகவே பயன்படுத்துவர்.

தர்ப்பைப் புல், தண்ணீர், மந்திர சக்தி மூன்றையும் இணத்து அவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்தனர். வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களைப் பிரயோகித்தனர்.

தற்போது இந்தியா உள்பட உலகில் ஏழு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அவைகளை எல்லா யுத்தங்களிலும் பிரயோகிப்பதில்லை. இதுவரை அமெரிக்கா மட்டும் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றது. இந்தியப் பிரதமர், அமெரிக்க- ரஷிய ஜனாதிபதிகள் ஆகியோரிடம் அணுகுண்டு உபயோகிக்கும் ரகசிய சங்கேதச் சொல் – கோட் – உள்ளது. இது போல துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்த ‘பாஸ்வோர்ட்’ – அர்ஜுனன், கர்ணன் போன்றோருக்கு மட்டுமே தெரியும். எப்படி இந்திய—அமெரிக்க—ரஷிய அதிபர்கள் இதை அரிதாகவே பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் அக்காலத்திலும் அஸ்திரங்களை அரிதாகப் பயன்படுத்தினர்.

தற்காலத்தில் புற்றுநோயைக் கொல்லும் அரிய அணுசக்தி ஐசடோப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உடலுக்குள் செலுத்தப்பட்டவுடன், புற்று நோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும். நல்ல செல்களை விட்டுவிடும். இதே போல இந்துக்களின் ஒலி ஆயுதங்கள், யார் மீது எய்யப்படுகிறதோ அவர்களை மட்டும் கொல்லும். ஆயினும் இவைகள் பேரழிவையும், பக்க விளைவு களையும் ஏற்படுத்தும் என்பதால் முதலிலேயே சத்தியம் வாங்கி விடுவார்கள்  — “ஒரே முறைதான் பிரயோகிப்பேன்” என்று.

அணுசக்திக்கு நல்ல, கெட்ட உபயோகம் இருப்பதைப் போலவே இவைகளுக்கும் நல்ல, கெட்ட பயன்பாடுகள் உண்டு. ஆகையால்தான் இவ்வளவு முன் எச்சரிக்கை.

pavithram

மரப்பாச்சி பொம்மை மர்மம்

பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? – என்ற ஆங்கிலக் கட்டுரையை லண்டனில் அச்சிட்ட சவுத் இந்தியன் சொசைட்டியின் 2005-ஆம் ஆண்டு மலரில் எழுதி இருந்தேன். அதே கட்டுரையை இந்த பிளாக்-கில் 2011ல் போட்டேன். இதுவரை தினமும் புதுப் புது நேயர்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உத்திரையின் கருவைக் கூட பிரம்மாஸ்திரம் பாதிக்கும் என்பதை அறிந்து கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றிய விதத்தையும் எழுதி இருக்கிறேன். இக்காலத்திலும் அணுக்கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்க ஈயமும், செஞ்சந்தன மரங்களும் பயன்படுவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு செஞ் சந்தன மரக் கட்டைகள் ஏராளமாக ஏற்றூமதியாகின்றன. இதனால்தான் அக்காலத்தில் மரப்பாச்சி என்னும் பொம்மைகளை செஞ் சந்தன மரக் கட்டைகளில் செய்து கொடுத்தார்கள்

அதர்வ வேதத்தில் நிறைய ரஹசியங்கள் இருக்கின்றன. அதில் தர்ப்பை பற்றிய மந்திரங்கள் அவற்றின் சக்தியை விளக்குகின்றன. ஆனால் தர்ப்பை என்பது “டெலிவரி வெஹிக்கிள்” போன்றவை —அதாவது ஆணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வாஹனங்கள் – உண்மையான அணுகுண்டு என்பவை  துரோணர், கிருபர் போன்றோர் மட்டும் அறிந்த அரிய மந்திரங்களாகும். எப்படி இன்று அணு ஆயுத ரஹசியங்களையும், அவற்றுக்கான சங்கேதக் குறியீடுகளையும் ஆட்சியில் உள்ள ஒரு சிலர் மட்டும் ரஹசியமாகப் பாதுகாக்கிறார்களோ அப்படி அக்காலத்தில் ராஜசபையில் உள்ள பெரியோர்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். வள்ளுவருக்கும் கூட இவ்விஷயம் தெரியும்:

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல் – (குறள் 894)

பெரியவர்களுக்கு தீமை செய்வது, எமனை தானே கைதட்டி வா என்று கூப்பிடுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதற்குக் கீழே இன்னும் ஒரு குறளில் ஆட்சியைக் கூடக் கவிழ்க்கும் வல்லமை பெரியோருக்கு உண்டு என்கிறார். ஆனால் பெரியோர்கள் எல்லோரையும் ஆசீர்வாதிபார்களேயன்றி அழிக்க மாட்டார்கள்.

நாட்டில் தர்மம் முற்றிலும் அழியும் ஆபத்து வரும்போது மட்டும், வித்தியாரண்யர், சமர்த்த ராமதாசர் போன்றோர் மந்திர சக்தியுள்ள வாட்களை (பவானி வாள்) கம்பண்ண உடையார், வீர சிவாஜி போன்றோர் கையில் கொடுத்து காரியத்தை நிறைவேற்றுவர். அடுத்த கல்கி அவதாரத்தில் உலகம் வியக்கும் இந்து ஆயுதங்களைக் காணலாம்.

ராமன் கூட இதை ராவணன் விஷயத்தில் பயன்படுத்தவில்லை. ராவணன் வேதம் அறிந்தவன் – முறையான யுத்தம் செய்ய வல்லவன். ஆகையால் ராமனும் கூட அவன் போர்க்களத்தில் நிராயுத பாணியாக ராவணன் நின்றபோது, “இன்று போய் நாளை வா” என்று அனுப்பினன். கரதூஷணர்கள் தர்மயுத்தம் செய்பவர்கள் அல்ல.

ஏகலைவன் ஒரு சாமான்யன். அவனிடம் அணு ஆயுத ரஹசியங்களைச் சொல்ல முடியாது. ரஹசியமாக அறிந்த விஷயங்களையும் கூட அவன் பயன்படுத்த இயலாதவாறு அவனுடைய கட்டைவிரல் வெட்டப்பட்டது. அக்கால மக்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்!

pavitra

அதர்வண  வேத தர்ப்பை மந்திரங்கள்

யத்தே தர்பே ஜரா ம்ருத்யு சதம் வர்ஷசு வர்ம தே

தேனேமம் வர்மிணம் க்ருத்வா சபத்னாஞ்ஜஹி வீர்யை :

 

சதம் தே தர்ப வர்,மணி சஹஸ்ரம் வீர்யா மணிதே

தமஸ்மை விஸ்வே த்வாம் தேவா ஜரஸே பர்தவா அது:

—-அதர்வ.19-30

ஏ தர்ப்பையே! மரணத்தை நீக்கி நீண்ட ஆயுளைத் தருபவன் நீ. எல்லா கவசங்களையும் விட நீ உயர்ந்தவன். உலகில் உள்ள எல்லா ஆயுதங்கலையும் விடச் சிறந்தவன் நீ. அரசனைக் காத்து, அவனது எதிரிகளை வீழ்த்துவாயாக.

ஓ தர்ப்பையே! நீ நூற்றுக் கணக்கான கேடயங்களை உடையாய். ஆயிரக் கணக்கான வழிகளில் சக்த்தியை வெளியிடுக்றாய். நீண்ட காலத்துக்கு அரசனுக்கு ஆயுள் தர பெரியோர்கள் உன்னை அவனிடம் தந்துள்ளனர்.–அதர்வம், 19-31

சதகாண்டோ த்ஸ்ச்யவன: சஹஸ்ரபர்ண உத்திர:

தர்போ ய உக்ர ஔஷதிஸ்தம் தே பந்தாம்யாயுஷே –19-31

ஓ, மனிதனே! நான் (மருத்துவன்) உன் கையில் குஷ புல்லைக் கட்டுகிறேன். இது சக்தி வாய்ந்தது நூற்றுக் கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய  மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது. உன்னுடை வாழ் நாள் அதிகரிக்கும்.

தர்ப்பைப் புல்லுக்கு ‘குசம்’ என்ற பெயரும் உண்டு. உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் முதல் நான்கு வேதங்களிலும் தர்ப்பை வருகிறது. இதை சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தியதைப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. விழுப் புண் இல்லாமல் மன்னர்கள் இறந்தால் அவர்களை தர்ப்பைப் புல்லின் மீது கிடத்தி வாளால் வெட்டி பின்னர் புதைப்பர்.

தர்ப்பைப் புல் ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது அபூர்வ சக்திகள் பெற உதவும் . அக்காலத்தில் இந்து மத யோகிகள் மான் தோல், புலித்தோல், தர்ப்பைப் புல் ஆசனங்களைப் பயன்படுத்தினர். இவைகளில் தர்ப்பாசனங்கள்- புறச் சூழலுக்கு தீங்கு பயக்காதவை.

darbha02

பிராமணர்களின் ஆயுதம் !

(இங்கே குறிப்பிடப்படும் பிராமணர்கள் பிறப்பினால் அந்தஸ்து பெற்ற பிராமணர்கள் அல்ல. ஒழுக்கத்தாலும், தபோ சக்தியினாலும் பிராமணத்துவம் எய்தியவர்களே இங்கே பிராMஅனர்கள் எனப்படுவர்)

பிராமண புரோகிதர்கள் கையில் தர்ப்பைக் கட்டுடன் தான் வீட்டை விட்டுப் புறப்படுவர். அஃதன்றி அவர்கள் தொழில் செய்ய முடியாது.

இதோ பிராமணர்களின் சக்தி பற்றி:–

வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச

சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:

இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு

பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே  ப்ரம்மராக்ஷசா:

விப்ராங்குலிகுசான் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:

பிராமணன் விரலில் உள்ள (விப்ர+அங்குலி+குசான்) தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராக்கதர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு (அதோ முகா:) ஓடிப் போய்விடுவார்கள்!

 

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹந்தி பாபானி தூல ராசிமிவாநல:

 

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹம்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் ( சூரியனைக் கண்ட பனி போல பாவங்கள் மறையும்)

அபவித்ரகர: கஸ்சித் ப்ராம்மணே ய உபஸ்ப்ருசேத்

அபூதந்தஸ்ய தத்சர்வம் பவத்யாசமனம் ததா

சுத்தம் இல்லாத கையை உடையவன் பவித்ரம் அணிந்து தொட்ட மாத்திரத்தில் எல்லாம் புனிதம் ஆகிவிடுகின்றன.

அங்குஷ்டானாமனாமிகாப்யாம் து சின்னம் பைதாமஹம் சிர:

ருத்ரேன து த: காலாத் சமாரப்ய கரோ அசுசி:

 

கட்டை விரலையும் மோதிரவிரலையும் சேர்த்து பிரம்மனின் தலையைக் கொய்த அசுத்தமடைந்த சிவனின் கையும் கையில் தர்ப்பை அணிந்தவுடன் சுத்தமானது.

A23_M51_Pontoon_r13d

பாவனார்த்தம் ததோ ஹஸ்தேகச காஞ்சன தாரணம்

புஞ்சானஸ்து விஷேசேன நான்யதோதேன லிப்யதே

கையில் தங்கத்தையும் தர்ப்பையையும் அணிந்து ஒருவன் எதைச் சாப்பிட்டாலும் அவனை எந்த தோஷமும் பீடிக்காது.

குசானோ உபவிஷ்டஸ்ய சித்யதே யோக உத்தம:

தர்ப்பைபுல் ஆசனத்தில் அமர்ந்தவனுக்கு உத்தமமான யோகங்கள் கிடைக்கின்றன.

ஆதாரம்–தர்ப்பைகளின் பிரசம்ஸை – கோபிலர்

(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

fasilitasramayana7

Ramayana ballet is staged in largest Muslim country Indonesia everyday!

Compiled by Santanam Nagarajan

Article no. 1704; dated 10 March 2015

uploaded at 10-50 am london time

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 10

ச.நாகராஜன்

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

 

ராமாயணம் பாராயணம்

ஆ ஸேது ஹிமாசலம் – அதாவது பாரதத்தின் தென் கோடியான சேதுவிலிருந்து (ராமேஸ்வரத்திலிருந்து), வட கோடியான ஹிமாசல மலை வரை உள்ள பிரதேசத்தில் வாழ்வோர் ராமாயணத்தைப் பாராயணம் செய்வதை வாழ்க்கைத் தவமாகவே செய்து வந்துள்ளனர்; செய்து கொண்டிருக்கின்றனர்; இனியும் செய்து வருவர். இந்தப் பாராயணம் தர்ம அர்த்த காம மோக்ஷம் – அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்களைத் தரும் என்பது மஹரிஷிகளின் வாக்கு. அந்த வாக்கை நம்பிச் செயல்படும் மக்களின் நம்பிக்கையை இந்த நித்ய பாராயணம் காட்டுகிறது.

ராம ராம ராம ராம ராம நாம தாரகம்

ராமசந்த்ர வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

ஜானகி மனோஹரம் சர்வலோக நாயகம்

சங்கராதி சேவ்யமான புண்ய நாம கீர்த்தனம்

என அனைவரும் தாரக மந்திரமான ராம நாமத்தைப் போற்றித்  துதிக்கின்றனர்.

இதில் முக்கியமான விஷயமாக உள்ள, ஜானகியின் மனதைக் கவர்வது ராம நாமம் என்பதையும் அது புண்யநாம கீர்த்தனம் என்பதையும் திரைப்படப் பாடல் ஒன்றில் தர விரும்பினார் கவிஞர் கண்ணதாசன்.

அத்தோடு காலம் காலமாக நாம் செய்து வரும் ராமாயண பாராயணம் மங்களகரமானது என்பதோடு அது காதல் மங்களம் – மனம் ஒன்றிய இருவரைச் சேர்த்து வைக்கும் மந்திரமும் கூட என்பதையும் வலியுறுத்த விரும்பினார்.

அதைத் தன் முத்திரைப் பாடலாக இயற்றினார்.
படம்:- நெற்றிக் கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், மேனகாவும் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1981. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது. தந்தையாக வரும் ரஜினிகாந்த் மோசமானவராக இருக்க மகனாக வரும் ரஜினிகாந்தோ நல்லவர்.

படத்திற்கு மிக அருமையாக இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர்களோ கே.ஜே. ஜேசுதாஸும் எஸ். ஜானகியும் ஆவர்.

100_0429

ராமனின் மோகனம்

ராமனின் மோகனம்

ஜானகி மந்திரம்

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகவே உறவு

இடமும் வலமும் இரண்டு

உடலும் மனமும்

இணைந்தோங்கி நிற்கும்போது

இதையன்றி எண்ணம் ஏது

இளவேனிற்காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்

ஒரு வானில் தவழும் மேகம்

பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

இடையும் கொடியும் குலுங்கும்

நடையும் மொழியும்

எடை போட கம்பன் இல்லை

எனக்கந்த திறனும் இல்லை

இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு

மழை காலம் வெயில் கண்டு

சிலையாக நான் நிற்பதே அற்புதம்

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

ramayana-ballet

மலர்களினூடே மோகனமும் மந்திரமும்

பூங்காவில் மலர்கள் சூழ ரஜினியும் மேனகாவும் பாடுவதாக அமைகிறது காட்சி. மரங்களினூடே காதலர் பவனியும், சிலையாக நான் நிற்பதே அற்புதம் என சிலை போல மேனகா அபிநயம் பிடிப்பதும் ஒரு  புறம் மனதைக் கவர்கிறது எனில் பாடல் வரிகள் சிந்தனையைக் காதல் ரஸத்திலிருந்து தெய்வீக நிலைக்கு உயர்த்தி விடுகிறது – காரணம் பாடல் வரிகள்.

ராமனைப் போற்றிப் பாடும் கம்பனும் பாடலில் இடம் பெற்று விடுகிறான்! கதாநாயகியை வர்ணிக்கத் தனக்கு கவித்துவம் இல்லை என்று கூறியபடியே அழகுற கதாநாயகன் வர்ணிப்பதும் ஒரு தனிச் சுவை தான்!

home3

காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!

ராமனின் மோகனமே ஜானகியின் மந்திரமா, அல்லது ஜானகியின் மந்திரமே ராமனின் மோகனமா? மந்திரம் மோகனத்தால் உருவானதா அல்லது மோகனத்தால் மந்திரம் சக்தி பெற்றதா? இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடக்கம்; பிரிக்க முடியாதவை என்பதே பதில். இதை அழகுறச் சித்தரிக்கும் இந்தப் பாடல் காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!

இளையஜாவின் இசையானது பாடலைத் தூக்கித் தர கண்ணதாசனின் கவிதை வரிகளோ இன்னும் உயரத்தில் ஏற்ற ராமரும் ஜானகியும் ஒரு தெய்வீகத்தைச் சேர்த்து விடுகின்றனர்.

காதல் பாடலில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் பாடல் இது என்று சொல்லி முடிக்கலாம்!

*****************

(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)

ஐந்து தந்தை, ஐந்து தாய், ஐந்து குரு யார்?

Five-Men-with-Cap-Oil-Painting

Compiled by London swaminathan

Article no. 1702; dated 9 March 2015

லண்டன் மாநகர நேரம்  காலை 9-25

நம் ஒவ்வொருவருக்கும் 5 தந்தைகள், 5 தாய்மார்கள், 5 குருக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அந்தக் காலத்தில் இந்த மாதிரி செய்யுட்களை சிறு வயது முதலே போதித்து வந்தனர். சில செய்யுட்கள் பஞ்ச தந்திர, ஹிதோபதேசக் கதைகளுக்கு நடுவில் கொடுக்கப்பட்டன. இதனால் அவை சிறுவர் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்துவிடும். அது மட்டுமல்ல. ஏதேனும் வழக்கு வாய்தாவில் தீர்ப்புச் சொல்லவும் இவை பயன்பட்டன. இதோ பழங்காலப் பொக்கிஷம்:

தந்தைக்குச் சமமாகக் கருதப்பட வேண்டியவர்கள்:

  • பிறப்பினால் நமக்குத் தந்தையாக இருப்பவர், (2) நமக்கு மந்திர உபதேசம் செய்தவர் அல்லது குருவை அறிமுகப்படுத்தியவர், (3) நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர், (4 )நமக்கு உணவு கொடுத்து உதவியவர் (5) ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றியவர்.

ஜனிதா ச உபநீதா ச யஸ்து வித்யாம் ப்ரயச்சதி

அன்னதாதா, பயத்ராதா பஞ்சைதே பிதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 165/ 542, பஞ்சதந்திரக் கதைகள், சாணக்ய நீதி

5-el-teachers-for-suai-2009

ஐந்து தாய்

ராஜாவின் மனைவி (மஹாராணி), குருவின் மனைவி, அண்ணனின் மனைவி, தன்னுடைய சொந்தத் தாய் மற்றும் மாமியார் ஆகிய அனைவரும் தாய்க்குச் சமமானவர்கள்:–

ராஜ பத்னீ குரோஹோ பத்னீ ப்ராத்ரு பத்னீ ததைவ ச

பத்னீ மாதா ஸ்வமாதா ச பஞ்சைதா மாதர ஸ்ம்ருதாஹா

–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 160/ 326, — சாணக்ய நீதி

இன்னொரு ஸ்லோகம் பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது: எந்த வீட்டில் தாய் இல்லையோ, மனைவி இனிமையாகப் பேசுவதில்லையோ அவன் காட்டிற்கு ஏகுவதே மேல்; ஏனெனில் அவனுக்குக் காடுதான் வீடு!

மாதா யஸ்ய க்ருஹே நாஸ்தி பார்யா ச ப்ரியவாதினீ

அரண்யம் தேன கந்தவ்யம் யதாரண்யம் ததா க்ருஹம்

–பஞ்சதந்திரக் கதைகள்

Five-teachers-who-are-changing-lives

ஐந்து குரு

குரு யார் என்பதில் இரண்டு விதக் கருத்துகள் இரண்டு ஸ்லோகங்களில் உள்ளன:

மஹாபாரத வனபர்வம் கூறுகிறது:

அம்மா, அப்பா, அக்னி, ஆத்மா (தனக்குத் தானே குரு), ஆசிரியர் ஆகிய ஐவரும் குரு – ஆவர்.

பஞ்சைவ குரவோ ப்ரம்மன் புருஷஸ்ய புபூஷதஹ

பிதா மாதா அக்னிர் ஆத்மா ச குருஸ்ச த்விஜசத்தமஹ

—மஹா பாரத – வன பர்வ – 204-27

யோக வாசிஷ்டம் சொல்லுகிறது:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்மாமன், மாமனார் ஆகியோர் குரு ஸ்தானத்தில் இருப்பவர் ஆவர்.

குரவஹ பஞ்ச சர்வேஷாம் சதுர்னாம் ஸ்ருதிசோதிதாஹா

மாதா பிதா ததாசார்யோ மாதுல ச்வசுரஸ்ததா

–யோக வாசிஷ்டம் 1-60

5 women

உண்மை அன்பு

அம்மா, அப்பா, நண்பர்கள் ஆகியோருடைய உள்ளத்தில் உண்மையிலேயே கருணை இருக்கும். ஆனால் மற்றவர்களோ வெனில் காரியம் நடக்க வேண்டுமானால் (பொய்) அன்பை வெளிப்படுத்துவர்.

மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவத் ஹ்ருதயம் ஹிதம்

கார்ய காரணத்தஸ்சான்யே பவந்தி ஹித புத்தயஹ

 

இவை எல்லாம் காரண காரியங்களுடன் சொல்லப்பட்ட பொன்மொழிகள். சில இக்காலத்துக்குப் பொருந்தாவிடினும் அக்காலச் சிந்தைப் போக்கையும் சமுதாய நடைமுறைகளையும் அறிய உதவும்.

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க பொது அறிவு!

men-in-black-clip-art

-சுபம்-