முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

camel thorn

Compiled by Santanam Nagarajan

Article no. 1701; dated 9 March 2015

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

21. முள்ளைத் தின்று மகிழும் ஒட்டகம்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

उष्ट्रकण्टकभक्षणन्यायः

ustrakantakabhaksana nyayah

உஷ்ட்ரகண்டகபக்ஷண நியாயம்

உஷ்ட்ரம்ஒட்டகம்; கண்டகம்முள்; பக்ஷணம்உணவு

ஒட்டகமும் முள்ளும் பற்றிய நியாயம் இது.

தாவரங்களுள் முள் என்றால் ஒட்டகத்திற்கு அதிகம் பிடிக்கும். ஆனால் அதைச் சாப்பிடும்போதோ அதன் வாயிலிருந்து ரத்தம் ஒழுகும். அதன் வாயில் முள் குத்தலினால் ஏற்படும் வலி தாங்க முடியாத ஒன்று! என்றாலும் கூட அது முள் சாப்பிடுவதை விடுவதில்லை!

என்ன கஷ்டம் வந்தாலும் சரி தான், தான் செய்வதை ஒருவன் விடுவதில்லை என்னும் சமயத்தில் இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். நியாயமாகப் பார்த்தால் அவன் செய்வது சரியில்லை என்றாலும் கூட தனக்குப் பிடித்ததை ஒருவன் செய்யும் போது அது ஒட்டகம் சாப்பிடும் முள் போல என்று சொல்லப்படும்.

Camels_Eating_Thorns

एकसम्बन्धिदर्शने अन्यसम्बन्धिस्मरणम्

ekasambandhidarsane anyasambandhismaranam

ஏகசம்பந்திதர்ஷனே அன்யசம்பந்தி ஸ்மரணம்

ஒன்றை இன்னொன்று தொடர்பு படுத்துவது பற்றிய நியாயம் இது!

ஒரு சம்பந்தியைப் பார்க்க்கும் போது இன்னொரு சம்பந்தியின் ஞாபகம் ஏற்படுகிறது.

ஒன்றை இன்னொன்று ஞாபகப்படுத்தும் போது அல்லது அதே போல இருக்கும் இன்னொன்றைச் சுட்டிக் காட்டும் போது தொடர்பைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் சொல்லப்படும்.

titanic-1

काशकुशावलम्बनन्यायः

kasakusavalambana nyayah

காஷகுஷாவலம்பன நியாயம்

துரும்பைப் பிடிப்பது அல்லது புல்லைப் பிடிப்பது பற்றிய நியாயம் இது.

கப்பல் ஒன்று நீரில் மூழ்குகிறது. பயணிகள் நீரில் மூழ்குகின்றனர். அப்போது எப்படியேனும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் கையில் கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்ப அனைவருமே நினைப்பர்கரை ஓரமாக வளர்ந்திருக்கும் நாணலாகவோ அல்லது தர்ப்பைப் புல்லாகவோ இருந்தாலும் சரி, அதைப் பிடித்து நதியின் வெள்ளத்திலிருந்து தப்ப நினைப்பதே மனித இயல்பு.

இந்த நியாயம் பட்டிமன்றம் அல்லது விவாத மேடையில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு விவாதத்தில் நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையில் சிறிய முக்கியமற்ற ஒரு விஷயம் கைக்குக் கிடைத்தால் அதைப் பிடித்துக் கொண்டு (தொங்குவது போல) விவாதத்தைத் தொடர முயலும் ஒருவரின் நிலையை இந்த நியாயம் சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது! ஆனால் இப்படி (விதண்டா) வாதம் புரிவோர் அனைவரின் ஏளனத்திற்கும் இலக்காவர்.

donkeys

Birmingham Donkey Sanctuary, UK

गर्दभरोमगणनन्यायः

gardabharomaganana nyayah

கர்தப ரோம கணன நியாயம்

கர்தபம்கழுதை; ரோமம்மயிர் அல்லது ரோமம்

கழுதையின் ரோமம் பற்றிய நியாயம் இது.

கழுதையே பொதுவாக அசுத்தம் என்று அனைவரும் நினைக்கும் ஒரு பிராணி.

அதனுடைய ரோமமும் கூட யாருக்கும் பிடிக்காது. ஆக அதை வெட்ட நினைக்கும் ஒருவனை என்ன சொல்வது? அந்த ரோமத்தால் அவனுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை!

பயனற்ற ஒரு செயலை ஒருவன் செய்ய முற்படும் போது இந்த நியாயம் சுட்டிக்காட்டப்படும்.

spinning wheel

चक्रभ्रमणन्यायः

cakrabhramana nyayah

சக்ர ப்ரமண நியாயம்

சுழற்றி விடப்படும் சக்கரம் பற்றிய நியாயம் இது.

ஒரு சக்கரத்தைச் சுழற்ற அதை இயக்கும் விசை வேண்டும். விசை இருக்கும் வரை அது ஓடிக் கொண்டிருக்கும். அந்த விசை நிறுத்தப்பட்டு விட்டால் அது அந்த விசையின் விளைவு இருக்கும் வரை ஓடும். பின்னர் நின்று விடும்.

ஒரு இயக்கமானது அதை ஆரம்பித்து அதை இயக்குபவர் இயக்கும் வரை நன்கு இயங்கும். அது நிறுத்தப்பட்டு விட்டால் இயக்கும் தளர்வடைந்து விடும்.

சமூக இயக்கமாக இருந்தாலும் சரி, ஒரு மத ரீதியிலான இயக்கமாக இருந்தாலும் சரி அதை ஊக்கப்படுத்தி செயல்படுத்துபவர் இருக்கும் வரை உற்சாகமாக இயங்கும். ஆனால் அந்த ஊக்கம் அதை இயக்குபவர் இல்லாத போதோ அல்லது அவர் செயல்படாத போதோ தானே நின்று விடும்.

இதைக் குறிக்கும் நியாயம் இது.இடைவிடாத ஊக்கமூட்டும் ஆற்றல் இருந்தால் மட்டுமே எந்த ஒரு விஷயமும் வெற்றியைக் கொண்டிருக்கும்!

*******************

தமிழில் ‘ஜ’ ‘ய’ மர்மம்!

JJJJJ

Written by London swaminathan

Article No 1698; Dated 7th march 2015

London Time 22-11

பழனி அருகில் உள்ள பொருந்தலில் ஆறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கல்வெட்டு கிடைத்தது. அது பிராமி (ஸரஸ்வதி என்று பொருள்) லிபியில் எழுதப்பட்டுள்ளது—ஆனால் மொழி சம்ஸ்கிருதம்! இது 2500 ஆண்டுப் பழமை உடையது. இந்த தேதி சரியென்றால் இதுதான் இந்தியாவில் கிடைத்த மிகப் பழமையான கல்வெட்டு! வஜ்ர என்ற வடசொல் வைரத்தையும் வஜ்ரம் போன்ற கடினமான வஜ்ராயுதத்தையும் குறிக்கும். இது புறநானூறு உள்பட பல சங்க இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட சம்ஸ்கிருத சொல்.

வஜ்ரம் என்பது தமிழ் விதிகளின் படி வயிரம் ஆனது. அதாவது ஜ (J) என்னும் ஒலி ய (Y) என்னும் ஒலியாகத் திரிந்தது. ஏன்? இது உலகம் முழுதும் நடந்த ஒரு அதிசயம். “மர்மம்” என்றாலும் தவறில்லை.

ஜ (Ja) அல்லது ஆங்கில எழுத்தில் “ஜே” (J) என்ற எழுத்தின் வரலாற்றை கலைக் களஞ்சியங்களில் படித்தால் அவர்கள் பயன்படுத்தும் மொழியியல் கலைச் சொற்களைக் கேட்டு மயக்கம் போட்டு விடுவீர்கள். அவர்களும் குழம்பிப்போய், உங்களையும் குழப்பி விடுவார்கள். பல மொழிகளின் பெயர்களை சம்பந்தா சம்பந்தமில்லாமல் சேர்த்துக்கட்டியவர்கள் தமிழையோ சம்ஸ்கிருதத்தையோ எங்குமே குறிப்பிட இல்லை. உண்மையில் இவ்விரு மொழிகளில் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இது காணப்படுகிறது. இவ்விரு மொழிகளையும் பயிலாதோர் இந்திய கலாசாரம் பற்றியோ வரலாறு பற்றியோ எழுதினால் அது தவறாகப் போய்விடும்.

YYY!

யாமம் =ஜாமம்

யேசு = ஜீஸஸ்

யூத மதம் = ஜூடாயிசம்

யாத்திரை = ஜாத்ரா

யவை = ஜாவா (தீவு)= சாவகம்

யாஸ்மின் = ஜாஸ்மின்

யூசுப் = ஜோசப்

அயன் = அஜன் (தானுமாலயன்)

வயிரம் = வஜ்ரம்

இப்படி எவ்வளவோ சொற்கள் உள்ளன. ஜ-வையும், ய-வையும் மாற்றிப் புழங்குகின்றனர். இதில் எது சரி?

‘ஜே’ (J) என்ற எழுத்தும் ‘வி’ (V) என்ற எழுத்தும் சாமுவேல் ஜான்ஸன் தயாரித்த புகழ் பெற்ற ஆங்கில அகராதியில் கிடையாது! அவர் 1755ல் வெளியிட்ட அகராதியில் ஆங்கில நெடுங்கணக்கில் 24 எழுத்துக்கள்தான்!! 26 இல்லை!! ஆனால் சொற்களின் ஸ்பெல்லிங்குகளில் (Spellings)  அவர் இதைப் பயன்படுத்தினார். ஜே என்பது ஒய் Y (ய) என்ற ஒலியிலும் வி V என்பது யு U என்ற ஒலியிலும் பயன்படுத்தப்பட்டன. இதுபோல பழங்கால லத்தீன் எழுத்திலும் இவ்வொலிகள் கிடையா!

ஜே என்ற ஆங்கில எழுத்தை 500 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்க முடியாது– உண்மையில் Ja ஜ-வும் Ya ய-வும் இடம் மாறி ஒலிப்பதுண்டு. ஆகையால் இதை அராபிய மொழியிலும், ஹீப்ரூ மொழியிலும் கூட சொற்களில் காணலாம். ஆனால் படிப்பது ‘ய’ என்றே படிப்பர். (யேசு YESU என்பது சரி; ஜீஸஸ் JESUS என்பது பிழை).

வெளிநாடுகளில் மொழியியல் படித்தவர்கள் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் பயிலாததால் பக்கம் பக்கமாகத் தப்பான விஷயங்களை எழுதி வைத்துள்ளனர்.

JJ2

அவர்கள் சொல்லுவது என்ன?

‘ஜ’ J என்ற எழுத்து இல்லை என்றும் ஐ I (அய்) அல்லது ஒய் Y (ய) என்பதைப் பயன்படுத்த இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தியதாகவும் காலப்போக்கில் உச்சரிப்பு மாற்றத்தில் அது ஜ J–ஆக மாறிவிட்டதாவும் எழுதி வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறு.

இந்திய மொழிகளில் ஜ- வும் ய-வும் இடம் மாறும். யவை (Yava in Rig Veda) தானியம் = ஜாவா (Java Islands of Indonesia) , யாமம்= ஜாமம், அஜன் = அயன்/பிரம்மா, யாத்திரை = ஜாத்ரா எனப் பல சொற்கள் உண்டு.

வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் இந்த எழுத்தின் 500 ஆண்டு வரலாறு பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஆனால் பொருந்தலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் ‘வயிர’ என்று வஜ்ரம் (டயமண்ட்) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது அதனுடன் இருந்த நெல்லை அமெரிக்க சோதனைச் சாலைகளில் ஆராய்ந்ததில் தெரியவந்தது. துல்லியமாகச் சொன்னால்  கி.மு 499 என்ற தேதி கிடைத்திருக்கிறது. ஆகவே 2500 ஆண்டுகளுக்கு முன்னரே ஜ – ய – ஆக மாறுவதைக் காண முடிகிறது (வஜ்ர= வயிர). இவ்விரு மொழிகளும் தெரியாத “அறிஞர்கள்” பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிவிட்டனர்.

பொருந்தல் கல்வெட்டு கிடைக்காவிட்டாலும் கூட சங்க இலக்கியத்தில் வயிர, யாமம் என்ற சொற்கள் உள்ளன. இவை சம்ஸ்கிருதச் சொற்கள். லத்தீன், தமிழ் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சமகாலத்தியவை. இரண்டிலும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னரே இலக்கியம். ஆனால் லத்தீன் மட்டுமின்றி, ஹீப்ரூ (எபிரேயம்), அராபிய மொழிகளிலும் ஜ = ய மாற்றம் இருக்கிறது. ஜீஸஸ் என்பது தவறு. அவருடைய அப்பா, அம்மா வைத்த பெயர் ஏசு. ஜூடாயிஸம் என்பது தவறு யூத (யெஹுதி) என்பதே சரி.

language problem

தொல்காப்பியத்திலேயே வடசொற்களைக் கடன்வாங்குகையில் தமிழ் ஒலிக்கு மாற்ற வேண்டும் என்று சொல்லி இருப்பதால் வஜ்ர – வயிர ஆனது.

புற நானூறு பாடல் 365 ஐ எழுதியவர் பெயர் மார்க்கண்டேயன். தூய சம்ஸ்கிருதம்! அவர் பாடலில் வயிரக் குறடு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அந்தப் பாடல் முழுதும் வட மொழிக் கருத்துகளே. ரிக்வேதத்தின் புருஷசூக்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம் முதலியவற்றில் வரும் விராட புருஷன் அதில் வருணிக்கப்படுகிறது. சூரியனும் சந்திரனும் கண்கள். மற்றும் பூமாதேவியை என்றும் கன்னிப் பெண்ணாக இரு என்று பார்வதி சபித்த கதை வருகிறது. பூமாதேவி அழுகிறாள். என்னை மணந்து கொண்ட ஒவ்வொரு அரசனும் போன பின்னரும் நான் மட்டும் என்றும் இங்கே கஷ்டப் படுகிறேனே என்று. பூமி என்பது அரசனின் மனைவி என்பதும் காளிதாசன் பாடலில் வரும் வடமொழிக் கருத்தே. இப்படியெல்லாம் மார்க்கண்டேயனார் சொல்லுவதற்கிடையில் வயிர என்ற சொல்லும் வருகிறது. விஞ்ஞான உண்மைப்படி உலகிலேயே மிகக் கடினமான பொருள் வயிரம் என்பதால், இந்திரனின் ஆயுதத்துக்கு வஜ்ராயுதம் என்று வேதங்கள் கூறும். ஆக ஜ = ய இடமாற்றம் இந்தியாவில் இருந்து உலகிற்குச் சென்றதே அல்லாமல் வெளி நாட்டு அறிஞர்கள் கூறுவது போல “உச்சரிப்பு மாற்றம்” (Pronunciation Shift), ஸ்பெல்லிங் மாற்றம் (Spelling Change) , ஸ்பெல்லிங் குழப்பம் என்பதெல்லாம் பொருந்தா வாதம். மேலும் ஹீப்ரூ, அராபிய, லத்தீன் மொழிகள் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவை. லத்தீன் சம்ஸ்கிருதத் தொடர்புடைய மொழி! அவர்கள் இப்படி எல்லா மொழிகளையும் முடிச்சுப்போடுவது குழப்பத்தின் உச்சகட்டம்!

accent

உலகில் உள்ள எல்லா மொழிகளையும் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மூலத்தில் கொண்டு சேர்த்து விடலாம் என்ற என் வாதம் இந்த ஜ=ய (J = Y ) மாற்றத்தால் வலுப்பெறுகிறது. பல மொழிக் குடும்பங்களில் இந்த மாற்றம் இருப்பதும் பொருந்தல் கல்வெட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இது துவங்கியதும் உலக மொழிகள் அனைத்தும் தமிழ் – வடமொழியில் இருந்து சென்றவை என்பதும் தெளிவாகிறது.

முன்னரே சொன்னேன் :– ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உள்ளன. இவைகளைப் பட்டியலிட்ட சாத்தூர் சேகரனை 1987-ல் இலண்டன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டிகண்டு ஒலிபரப்பினேன்.

ஒரே ஒரு எடுத்துக் காட்டு:–ஒன்று, எட்டு என்பதை ஆங்கில எண்களில் உள்ள ONE ஒன்,  EIGHT எய்ட் என்பதில் காணலாம். ஏனைய எண்கள் எல்லாம் சம்ஸ்கிருத அடிபடையிலானவை: த்வ, த்ரீ (டூ TWO , த்ரீ THREE ). இதே போல ஆங்கிலத்தில் முதலில் சம்ஸ்கிருதப் போக்கில் எண்கள் வரும்: த்ரீ+ டென்=தர்டீன் Thirteen, போர்+டென்= fஓர்டீன் Fourteen, பைவ்+டென்=Fப்டீன் Fifteen. இருபதுக்கு மேல் தமிழ்ப்போக்கில் எண்கள் வரும்; ட்வெண்டி+ஒன்= ட்வெண்டி ஒன் Twenty One, ட்வெண்டி டூ Twenty Two என்று—  சம்கிருதத்தில் இப்படி இரா.

சுருக்கமாகச் சொன்னால் ஆங்கிலத்தில் எண்களில்கூட பாதி தமிழ் வழியிலும் பாதி சம்ஸ்கிருத வழியிலும் இருக்கும். இப்படி எல்லாப் பழைய மொழிகளிலும் தமிழ்–வடமொழித் தாக்கம் இருப்பதால் இந்தியர்களே உலகம் முழுதும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டியது விளங்கும்.

YY22

புணர்ச்சி/ சந்தி விதிகள் உலகில் உள்ள இரண்டே மொழிகள்:- தமிழும் சம்ஸ்கிருதமும்தான். இது பாரதீய சிந்தனையில் பிறந்த விதிகள். இன்று வரை சந்தி விதிகளுக்கு இலக்கணம் அமைத்து அவைகளைப் பின்பற்றுவது இவ்விரு மொழிகளே என்பதால் இவை இரண்டுக்கும் உள்ள தொடர்பு வேறு எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையில் உள்ள தொடர்புகளைவிட அதிகம்! தமிழுக்கு மிக நெருக்கமான ஒரே மொழி சம்ஸ்கிருதம் மட்டுமே.

இரண்டு சொற்கள் இணையும் போது மட்டும் மாறுவதோடு (மா+கோடு= மான்கோடு அல்லது மாங்கோடு) நில்லாமல் சொற்களுக்குள்ளும் மாறும் (பல்+கள்=பற்கள்; ஆள்+கள்= ஆட்கள், கண்+செவி=கட்செவி; மல்லிப் புத்தூர்= வில்லிப் புத்தூர், முழி-விழி). இந்தப் புணர்ச்சிவிதிகளை ஐரோப்பாவில் சம்ஸ்கிருதம் தொடர்பான மொழிகளில் இப்போது கொஞ்சம் காணலாம். தமிழிலும் வடமொழியிலும் முழுவீச்சில் பயிலப்படுவதால் இவ்விரு மொழிகளும் ஒரே சிந்தனையில் ஒரே மூலத்தில் பிறந்தவை! காலப்போக்கில் அதனதன் பாதையில் கிளைவிட்டுப் பிரிந்து சுதந்திரமான மொழிகளாகத் திகழ்ந்தன!

swami_48@yahoo.com

மாந்தோப்பு மரங்கள்!

Mango_

Written by S Nagarajan

Article No 1696; Dated 7th march 2015

London Time 6-35 am

 

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

20. மாந்தோப்பில் உள்ள மரங்கள்!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

आचरार्यत्वन्यायः

acararyatva nyayah

ஆசாரார்யத்வ நியாயம்

ஆர்யன் என்ற சொல்லுக்கு பண்புடையவன் என்று அர்த்தம். ஆரிய இனம் எங்கிருந்தோ வந்தது, பாரதத்தில் புகுந்து தலைமை இடத்தைப் பிடுங்கிக் கொண்டது என்பதெல்லாம் வெள்ளைக்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி, வேற்றுமைகளைத் தொடர்ந்து உருவாக்கும் உத்தி ஆகியவற்றின் அடிப்படையில் பரப்பப்பட்ட கருத்துக்கள். இதை முதலில் மனதில் கொண்டு இந்த நியாயத்தின் பொருளைப் புரிந்து கொள்ளும் அணுகுமுறை இருத்தல் வேண்டும்.

human-migration-map

வர்ணாச்ரம தர்மம் சமூகத்தின் நான்கு முக்கிய பிரிவுகளைச் சுட்டிக் காட்டும் ஒன்று. இதில் ஏற்றத் தாழ்வு எதுவும் இல்லை. இதே போல வாழ்க்கையின் முக்கிய பிரிவுகளாக க்ரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நியாயம் ஆசாரம் மற்றும் ஆர்யத்வம் பற்றிச் சொல்லும் நியாயம்ஆசாரங்கள் எனப்படும் நல் நடத்தைகளும் பண்பாடுள்ள வாழ்வும் ஆர்யர்களின் வம்சத்தை, அதாவது பண்பாடுள்ளவர்களின் வம்சத்தை வளர்க்க இன்றியமையாதவை என்று சொல்கிறது இந்த நியாயம்.

ஒன்று இன்னொன்றைச் சார்ந்திருக்கிறது என்கிறது இந்த நியாயம். ஆசாரம் இருந்தால் மட்டுமே ஆர்யத்வம் எனப்படும் பண்பாட்டுத் தன்மை இருக்கும். ஆர்யன் எனப்படுபவன் ஆசாரமுள்ளவன் அல்லது நல்நடத்தைகளின் தொகுதியால் பின்னப்பட்ட வாழ்க்கையை உடையவன் என்பதையே இந்த ஆசாரமும் ஆர்யத்வமும் என்னும் நியாயம் சொல்கிறது.

Mango Grove (1)

आम्रवनन्यायः

amravana nyayah

ஆம்ரவன நியாயம்

ஆம்மா; வனதோப்பு; ஆம்ரவனம்மாந்தோப்பு

மாந்தோப்பின் அடிப்படையில் எழும் நியாயம் இது.

மாமரங்கள் அதிகம் அடங்கிய ஒரு தோப்பு இருக்கிறது. அந்தத் தோப்பில் வேறு வகை மரங்களும் கூட சில இருக்கக்கூடும். என்றாலும் கூட எண்ணிக்கை மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அது மாந்தோப்பு என்றே அழைக்கப்படும். வழக்கத்தின் அடிப்படையில் ஏற்படும் சொல்வழக்கத்தை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு சகவாசத்தால் ஏற்படும் விளைவையும்நல்லவர், தீயவர் சேர்க்கையால் ஏற்படும் விளைவையும்இது சுட்டிக் காட்டும்.

 blaring

करिबृंहितन्यायः

karivrnhita nyayah

கரிப்ரிங்ஹித நியாயம்

கரியானை; ப்ருங்ஹிதம்யானை

கரி என்ற சொல் யானையைக் குறிக்கும். ப்ரிங்ஹிதம் என்றாலும் யானையையே குறிக்கும்.

யானை பிளிறுவதைச் சொல்கிறது இந்த நியாயம்.

ப்ருங்ஹிதம் என்றாலேயே யானை பிளிறல் என்று தான் பொருள். கரி என்ற சொல் இங்கு அதிகப்படியாக இருக்கிறது. இது ஒரு சிறப்பான அழுத்தத்தைத் தரப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணமாக மாலை என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். மாலை என்றாலேயே பொதுவாக பூக்களால் தொடுக்கப்பட்ட ஒன்று என்று தான் அர்த்தம். என்றாலும் கூட பூமாலை அல்லது புஷ்பமாலா என்றே சொல்கிறோம். இங்கு மாலையில் பூக்களின் மேன்மையை எடுத்துக் காட்டவே பூமாலை என்ற சொல்லை வழக்கத்தில் பயன்படுத்துகிறோம். அது போலவே ப்ரிங்ஹிதம் என்னும் பிளிறலை கரிப்ரிங்ஹிதம் என்று யானையின் பிளிறல் என்று கூறி யானையைச் சிறப்பிக்கிறோம். இது போல ஒரு விஷயத்தின் சிறப்பைக் குறிக்க அதே பொருளைக் கொண்ட சிறப்புச் சொல்லைப் பயன்படுத்திக் கூறுவதை இந்த நியாயம் நியாயப்படுத்துகிறது. கூறியது கூறல் என்ற குற்றம் இங்கு எழாது.

crow

काकदधिघातकन्यायः

kakadadhighataka nyayah

காகததிகாதக நியாயம்

காகம்காக்காய்; ததிதயிர்

காகமும் தயிர்ப்பானையும் பற்றிய நியாயம் இது.

இதன் அடிப்படையிலான சம்பவம் இது தான்: ஒருவர் தயிரை வைத்திருக்கும் தயிர்பானையை பத்திரமாக காக்கையிடமிருந்து பாதுகாக்குமாறு இன்னொருவரிடம் கூறினார். காக்கையிடமிருந்து தானே பாதுகாக்கச் சொன்னார் என்று அதை மட்டும் விரட்டி விட்டு மற்ற மிருகம், பறவைகள் அந்த தயிர்பானையில் உள்ள தயிரை எடுக்க அவர் விடலாமா? கூடாது.

crow2

காகத்திடமிருந்து காக்க வேண்டும் என்று சொல்லும் போதே இதர அனைத்து பறவைகள், மிருகங்கள் முதலியவற்றிடமிருந்து தயிரைப் பாதுகாக்க வேண்டும் என்பது சொல்லாமலேயே அதில் அடங்குகிறது, இல்லையா! அதே போல முக்கிய விஷயத்தை ஒரு சொல்லால் கூறி அனைத்தையும் உள்ளடக்குவதற்கு இந்த நியாயம் பயன்படுத்தப்படுகிறது.

***********

சென்னையைச் சுற்றி அபூர்வ நவக்கிரக தலங்கள்

SSL27632

எழுதியவர் –சந்தானம் சீனிவாசன்

புகைப் படங்கள் ச.சீனிவாசன்

கட்டுரை எண்: 1693 தேதி 5 மார்ச் 2015

தஞ்சை மாவட்டத்தில் மாயவரம், கும்பகோணம் முதலிய ஊர்களைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் சென்னையைச் சுற்றிலும் நவக் கிரக ஸ்தலங்கள் இருப்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. அனத தலங்களும் பழம்பெரும் கோவில்களை உடையவை. மேலும் ஒரு கார் இருந்தால் காலை முதல் இரவுக்குள் நவக் கிரகத் தலங்கலையும் தரிசித்து அருள் பெறலாம். நான் எடுத்த புகைப் படங்களில் அவைகளின் இருப்பிடம், தலப் பெருமை முதலிய விவரங்கள் உள்ளன.

குறிப்பிட்ட கிரகங்களுக்குப் பரிகாரம் செய்ய விரும்புவோருக்கு எளிதாக இருக்கும் வகையில் கீழ் கண்ட விவரங்களைத் தருகிறேன்:

SSL27610

1.கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர்—சூரியன்

2.சோமங்கலம் சோமநாதேஸ்வரர் – சந்திரன்

3.போரூர் ராமநாதேஸ்வரர் – குரு

4.குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரர் – ராகு

5.கோவூர் திருமெய்யினீஸ்வரர்- புதன்

6.மாங்காடு வெள்ளீஸ்வரர் – சுக்கிரன்

7.கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் – கேது

8.பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் – சனி

9.பூந்தமல்லி வைதீஸ்வரர் – செவ்வாய்

SSL27597

சென்னை சுற்றுலாத்துறையும் இந்தத் தலங்களைப் பிரபலப்படுத்த வரைபடம் முதலியன வெளியிட்டு உதவுகின்றனர். நானும் என் மனைவியும் ஒரு நண்பரின் உதவியுடன் அத்தனை தலங்களையும் சூறாவளிச் சுற்றுப் பயணம் சென்று தரிசித்தது மறக்கமுடியாத அனுபவம் ஆகும். நீங்களும் 9 தலங்களையும் தரிசித்து நவக்கிரஹங்களின் அருள் பெறலாம். குறிப்பாக கும்பகோணம், நாகபட்டிணம், மாயூரம் என்று போக முடியாத சென்னை வாசிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதம் ஆகும். கையில் வெண்ணெய் இருக்கும் போது நெய்யுக்கு கவலைப்படுவார் யாராவது உண்டா?

SSL27598

SSL27599

மாங்காடு – வெள்ளீஸ்வரர்- சுக்கிரன்

SSL27602

SSL27614

கோவூர் – புதன்

SSL27617

குன்றத்தூர் -ராகு

SSL27625

SSL27636

SSL27642

SSL27657

SSL27662

SSL27669

SSL27670

போரூர் – குரு பகவான்

SSL27593

SSL27596

பூவிருந்தவல்லி – செவ்வாய்

–சுபம்–

சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்த ராஜாஜி

sampoorna-ramayanam-400x400-imadat38gaatymk5

Compiled by S Nagarajan

Article No. 1687; Dated– 3 March 2015.

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 7

by ச.நாகராஜன்

 

ஶ்ரீ ராமராஜ்யம்!


சம்பூர்ண ராமாயணம் படம் பார்த்த ராஜாஜி

 

பொதுவாக திரைப்படங்களைப் பார்க்க விரும்பாத மூதறிஞர் ராஜாஜி திரைப்படங்களைப் பார்க்கத் தமக்கு நேரமில்லை என்று சொல்லி ஒதுங்கி விடுவது வழக்கம். ஆனால் சம்பூர்ண ராமாயணம் படம் பார்க்க அவரை அழைத்த போது படம் பார்க்க வந்ததோடு பரதனாக நடித்த சிவாஜிகணேசனின் நடிப்பு சிறப்பாக அமைந்திருப்பதாகவும் பாராட்டினார்.பொதுவாக ராமாயணம் பற்றிய இதே ஈடுபாடு இந்த தேசத்தில் பிறந்த சிறு குழந்தை முதல் மூதறிஞர் வரை இருப்பதில் வியப்பே இல்லை. ராமாயண மஹாபாரத இதிஹாஸம் என்றால் மக்களுக்குத் தனி ஒரு ஈடுபாடு என்றும் உண்டு.தொலைக்காட்சியில் ராமாயணம் தூர்தர்ஷன் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட போதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட அந்த ஒளிபரப்பு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு குடும்பத்துடன் அடைக்கலமாயினர்.

ramayan1

ஶ்ரீராமராஜ்யம்

இந்த வகையில் ராமாயணம் மீண்டும் தெலுங்குப் படவுலகில் 2011இல் வெற்றிகரமாகப் படமாக்கப்பட்டது.ஶ்ரீராமராஜ்யம் என்ற படம் ராமர் அயோதியில் பட்டம் சூட்டப்பட்ட பின்னர் நடந்த நிகழ்வுகளைக் கொண்ட அருமையான படம்.

பிரபல டைரக்டரான பாபு இதை இயக்க படங்களில் நிரந்தர ராமராக வலம் வந்த என்.டி.ராமாராவின் புதல்வர் சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்த ஶ்ரீராமராஜ்யம் படம் 2011ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இது 2012ஆம் ஆண்டு டப்பிங் செய்யப்பட்டு தமிழிலும் மலையாளத்திலும் வெளி வந்தது. 1943ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் தலைப்பே தனக்கு உத்வேகமூட்டியது என்றார் பாபு.

இசை அமைத்தவர் இளையராஜா. ஆத்மார்த்தமாக இசை அமைத்த அவரது பாடல்கள் 170 நிமிட நேர படத்தில் 50 நிமிடம் 25 விநாடிகள் எடுத்துக் கொண்டதென்றால் பாடலின் முக்கியத்துவம் பற்றிக் கேட்க வேண்டுமா என்ன? 15 பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பல பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பாடினர்.ஜொன்னவிதூல ராமலிங்கேஸ்வர ராவ் பாடல்களை இயற்றினார். அருமையான பாடல்கள் அனைத்தையும் வரவேற்ற ரசிகர்கள், இன்றும் தவறாமல் அவற்றை யூடியூப் உள்ளிட்ட பல்வேறு இணையதள பாடல்தளங்களில் கேட்டு ரசிக்கின்றனர்.

sankarabharanam-400x400-imad2r8gnyjansmh

சங்கராபரணம்

இதே போல தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்ட 1979ஆம் ஆண்டு திரைப்படமான சங்கராபரணம் குறிப்பிடத் தகுந்த ஒரு படம். இதில் ராமரைப் பற்றிய பத்ராசல ராமதாஸரின் பாடல் ஒன்று இடம் பெற்று அனைவரையும் உருக்கியது. வாணி ஜெயராம் பாடிய பாடலை யாருமே மறக்க முடியாது.

ஏ தீருக நனு தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா

நா தரமா   பவசாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா

ஶ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா

காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா

க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலெஞ்சகு ராமா

தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா

எப்படி கருணை புரிவாய். எப்படி சாகரம் கடப்பேன், வம்சோத்தம ராமா, ரகு நந்தனனே, சீதையின் ரமணனே, அடியாரைக் காப்பவனே, காருண்யமயமானவனே, பக்தர் தம் வரதனே, க்ரூரமான கர்மங்கள் செய்தாலும் அவற்றை நீக்கி, தரித்திரம் போக்கி அருள்வாய் தெய்வ சிகாமணியே, ராமா!’ என்ற பொருளை உடைய இதை வாணி ஜெயராம் தன் பக்திக் குரலில் பாடியது அனைவரையும் மகிழ்வித்தது!

tel_shankarabharanam

சங்கராபரணம் படத்தை இயக்கியவர் பிரபல டைரக்டரான கே.விஸ்வநாத். இந்தப் படம் வெளின முதல் நாளில் கூட்டமே இல்லை. ஆனால் படத்தைப் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் கூறிய அபாரமான புகழ்மொழிகளால் அடுத்த நாளிலிலிருந்து கூட்டம் அலை மோத ஆரம்பித்தது. ஹைதராபாத் ராயல் தியேட்டரில் 216 நாட்கள் ஓட, நாட்டின் இதர பகுதிகளில் உள்ள பல திரையரங்கங்களில் சுலபமாக நூறு நாட்களைத் தாண்டியது!

Sankarabharanam-Movie-Stills (3)

ப்ரோசேவாரெவரு ரா

சங்கர சாஸ்திரியாக நடித்த ஜே.வி.சோமயாஜுலு அந்தப் பாத்திரமாகவே மாறி விட்டார். இதில் ராமரைப் பற்றிய புகழ் பெற்ற இன்னொரு பாடலும் உண்டு.மைசூர் வாசுதேவாசார் இயற்றிய ப்ரோசே வாரெவரு ரா என்ற பாடலை யாருமே மறக்க முடியாது. இதை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் வாணி ஜெயராமும் தங்கள் அற்புதக் குரல் வளத்தால் மெருகேற்றினர்.

மைசூர் வாசுதேவாசார் (தோற்றம் 28-5-1865 மறைவு 17-5-1961) பெரிய ராமபக்தர்.தியாகராஜ ஸ்வாமிகளின் சீடர் பரம்பரையில் வந்தவர். 95 வயது வரை வாழ்ந்த இவர் சுமார் 200 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை சம்ஸ்கிருதம் மற்றும்ம் தெலுங்கில் உள்ளவை.

நினு விநா ப்ரோசேவாரெவரு ரா – உன்னையல்லால் என்னைக் காப்பவர் யார்?

ரகுவரா – ஓ ரகு குல திலகமே

 நானு நீ சரணாம்புஜமுலு – நான் உன் சரணாரவிந்தங்களை

நே விடஜால கருணாலயால – விட முடியாது, கருணைமயமானவனே!

கமாஸ் ராகத்தில் அமைந்த இந்தப் பாடலைக் கேட்டு உருகாதவர் யாரும் இருக்க முடியாது! படக்காட்சியும் அபிநயங்களோடு அமைந்திருந்தது!

Sankarabaranam Movie in Tamil Photos (6)

இதிஹாஸம் ஏற்படுத்தும் தெலுங்கு, தமிழ் ஒற்றுமை

தெலுங்கு திரைப்பட உலகமும் தமிழ்த் திரைப்பட உலகமும் மிக அன்யோன்யமாகவே ஆரம்ப காலம் முதல் இருந்து வந்துள்ளது. இதற்கான காரணம் பண்பாட்டின் அடிப்படையில் மனதால் அனைவரும் ஒன்று பட்டிருந்த காரணத்தினால் தான்! அரசியல் அந்தக் காலத்தில் திரையுலகில் புகவில்லை! சென்னையில் இருந்த ஸ்டுடியோக்களைத் தாராளமாகப் பயன்படுத்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இரு மொழிகளில் ஒரே சமயத்தில் படம் எடுப்பது சுலபமாக இருந்தது.

ஆடல் பாடல், கிளுகிளுப்புப் படங்களையே தெலுங்கு உலகம் விரும்பியது என்று சிலர் கூறுவது சரியில்லை. மிக அழகான கலைப் படங்களையும் இதிஹாச புராணப் படங்களையும் தெலுங்கு உலகம் தந்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும். சம்பூர்ண ராமாயணம், லவகுசா, ஶ்ரீ ராமராஜ்யம், சங்கராபரணம் போன்ற படங்கள் போதாதா, இதை நிரூபிக்க!

இந்த அற்புதமான தெலுங்கு தமிழ் ஒற்றுமை காலத்தை வென்று நிலை நிற்க ராமரின் அருளை வேண்டுவோம்!

*************

தமிழன் கண்ட செயல்முறை அறிவியல்! தண்ணீர்! தண்ணீர்!!

Waterpurify

Written by London swaminathan

Research Article No. 1685; Dated– 2 March 2015.

தண்ணீர் என்பது ஒரு அரிய பொருள். அது கிடைத்துக் கொண்டே இருந்தால் அதன் அருமை பெருமை தெரியாது. காசைத் ‘தண்ணீர் போல செலவழிக்கிறான்’ என்று ஊதாரி மகனைத் திட்டுவர் பெரியோர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘பாலும் தேனும் தண்ணீர் போல ஓடும்’ என்பர் அரசியல் கட்சியினர். ஆனால் உண்மையில் தண்ணீர் கிடைக்காததால் எவ்வளவோ நாகரீகங்கள் தலை நகர்களையே கூட மாற்றி இருக்கின்றன!

ரிக்வேதம் முதல் திருவிளையாடல் புராணம் வரை வரும் வறட்சி பற்றிய குறிப்புளை எல்லாம் எழுதிப் பார்த்தால் நூற்றுக் கணக்கில் இருக்கும். இதனால்தான் தமிழில் “நீரையும் சீராடு” – என்று ஒரு பழமொழி யையும் சொல்லிவைத்தார்கள்.

“ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வைகை” என்று எங்கள் மதுரையில் ஓடும் வைகை நதியின் சிறப்பைப் போற்றுவர். ஆனால் அப்படிக் கிடைக்கும் ஊற்று நீர், களிமண் பூமியாக இருந்தால் கலங்கிப் போய் இருக்கும். அப்படியே குடிக்க முடியாது. இதற்காக தமிழன் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, — கலங்கிய நீரைத் தெளிவிப்பது எப்படி? என்று கண்டுபிடித்து வைத்தான். அது மட்டுமல்ல! கிணற்றுக்கடியில் இருக்கும் கலங்கல் நீரைக்க்கூட சுத்தப்படுத்தி வாளியில் ஏற்ற வழி கண்டுபிடித்தான்.

Strychnos_potatorum_5

நான் 1993 முதல் லண்டனில் இருந்து வெளியான “மேகம்” மாத இதழில் “தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்” என்று கட்டுரை எழுதி வந்தேன். அது 2009-ல் புத்தக வடிவில் வெளியானது (நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை). அதற்கு முன்பாகவே நிலாசாரல்.காம் அதை “ஈ புக்”—ஆக வெளியிட்டது. அதில் (பக்கம் 17), கலித்தொகையில் வரும் தண்ணீர் சுத்தப்படுத்தும் முறை பற்றிய குறிப்பை சுருக்கமாக எழுதி இருந்தேன். அதை சற்று விரிவாகக் காண்போம்.

கலித்தொகை என்பது சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் ஐந்து பகுதிகள் உண்டு. அதில் நல்லந்துவனார் பாடிய நெய்தல் கலி கடைசி பகுதியாக வருகிறது. அதில் வரும் ஒரு குறிப்பு:–

நல்கிய கேள்வன் இவன் – மன்ற, மெல்ல

மணியுள் பரந்த நீர்போலத் துணிவாம்

கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்

கலங்கிய நீர்போலத் தெளிந்து, நலம் பெற்றாள்!

நல் எழில் மார்பனைச் சார்ந்து………..”

இதன் பொருள்: – மணியும் அதனுள் பரந்து விளங்கும் நீரும்போல, இவ்விருவரும் ஒருமித்த மனமுடையவர் என்று அனைவரும் துணிந்தனர்- திருமணமும் நடந்தது. அதன் பின்னர் அவளைக் கண்டவர் சொன்னார்கள்:

இல்லத்திலுள்ள நீர் கலங்கி இருந்தால், அது இருக்கும் பாத்திரத்துள் சிறிது தேற்றாவின் விதையைத் தேய்த்ததும், அந்நீர் தெளிந்து விடுவது போல, அந்த நல்ல அழகுடைய மார்பனைச் சேர்ந்ததும் இவளும் தெளிவுற்று நலம் பெற்றாளே!

water puried

தேற்றாங் கொட்டை என்பதைப் பொடி செய்து கலங்கிய நீரில் போட்டால் அது தெளிந்துவிடும் என்பது சங்க காலம் முதல் இன்றுவரை பின்பற்றப் படுகிறது. பாட்டிலில் தண்ணீர் விற்பனைக்கு வரும் காலத்துக்கு முன்னரே சுத்தமான நீரைப் பெற இதைப் பயன்படுத்தினர். (இதற்கு கதகப் பொடி என்ற பொடியை வடமொழி நூல்கள் குறிப்பிடும்)

ஆப்பிரிக்க நாடுகளில் முருங்கைக் காய்க்குள் இருக்கும் விதைகளைப் பயன்படுத்தி இதைச் செய்தனர்.

கதகப் பொடி வடமொழியில் உள்ள நியாயங்களில் ஒன்றாக வருவதும் அதை சத்திய சாய்பாபா உவமையாகப் பயன்படுத்துவதும் எஸ்.நாகராஜன் எழுதிய கட்டுரையில் இதே பிளாக் –கில் நேற்று வெளியாகியுள்ளது. (கட்டுரைத் தலைப்பு நீரில் அமிழ்ந்த சுரைக்காய், மார்ச் 1 வெளியீடு)

தமிழர்கள் அந்தக் காலம் முதல் இன்று வரை கோடைகாலத்தில் வீட்டின் ஒரு ஓரத்தில் மண்ணை நிரப்பி, அதன் மீது பானையை வைத்து, அந்த நீரில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியவற்றைப் போட்டு தண்ணீர் குடிப்பது நாம் அறிந்ததே. வெட்டி வேர் எஸ்ஸன்ஸ் என்பது இப்போதெலாம் மிகவும் அதிக விலைக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது அவர்கள் இதை பெர்Fயூம் செய்யப் பயன்படுத்துகின்றனர்!

best water

பாதிரிப் பூவின் மகிமை

ஆனால் மற்றொரு தமிழ் இலக்கியப் பாடல் பாதிரிப் பூவின் மகிமையைப் பாடுகிறது

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் – தொல் சிறப்பின்

ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந்தாங்கு – நாலடியார்

பொருள்:–பழமையான சிறப்பையும், ஒளி பொருந்திய நிறத்தையும் உடைய பாதிரிப்பூவைச் சேர்தலினால், புதுப் பானையானது தன்னிடமுள்ள தண்ணீர்க்குத் தன் மணத்தைக் கொடுத்தது போல, கல்லாதவர்களே ஆயினும் கற்றறிந்த அறிஞர்களுடன் சேர்ந்தால் அவர் சேர்க்கையால் நல்லறிவு நாளுக்கு நாள் பெருகும்

அருமையான உவமை. பானைத் தண்ணீருக்குப் பாதிரிப் பூ வாசனை தரும். கல்வி அறிவு மிக்கவர்கள், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் அறிவொளி பரப்புவர்.

வராஹமிகிரரும், பிருஹத் சம்ஹிதா நூலில் தண்ணீர் சுத்திகரிப்பு பற்றிப் பேசுகிறார். கடுக்காய், நெல்லிக்காய்,பத்ரமுஷ்டா புல் ஆகியவற்றை கிணற்று நீரில் போடும்படியும் அப்போது அது தெளிந்து விடும் என்றும் சொல்லுகிறார்

தமிழில் இதே கருத்தை வலியுறுத்தும் பழமொழிகளும் உண்டு. நூலோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்றும் வசனங்கள் உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது பாதிரிப் பூவின் பயன்பாடுதான்.

Fragrant_root_vetti-ver

வெட்டி வேர், விளாமிச்சை வேர், பாதிரிப் பூ, தேற்றாவின் கொட்டை முதலியன பயன் தரும் தாவரங்கள். ஆப்பிரிக்கர் சொல்லுவது போல முருங்கை விதைகளப் பயன்படுத்தியும் நன்மை அடையலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளுக்கு கடவுள் கொடுத்த வரப் பிரசாதங்கள் இவை.

swami_48@yahoo.com

நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

OP-Bottle-Gourd-PSPL

Written by S Nagarajan

Article No. 1683; Dated 1st March 2015.

ம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

18. நீரில் அமிழ்ந்த சுரைக்காய்!

 

by ச.நாகராஜன்

 

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

जलतुंबिकान्यायः

jalatumbika nyayah

ஜல தும்பிகா நியாயம்

ஜலத்தில் இருக்கும் சுரைக்காய் பற்றிய நியாயம் இது.

bottlegourd

சுரைக்காய் ஒன்று நீரில் விழுந்து விட்ட போது அதைச் சுற்றி சேறும் சகதியும் படிந்தமையால் தனது மிதக்கும் தன்மையை இழந்து அது நீரினுள் அமிழ்ந்து விடுகிறது. ஆனால் மெதுவாக சேறும் சகதியும் அகலும் போது அது பழையபடி தனது இயல்பான தன்மையை அடைந்து மிதக்க ஆரம்பிக்கிறது.

திகம்பர ஜைனர்கள் இதை ஆன்மா உடல் தளையிலிருந்து விடுபடுவதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர்.

இது இன்னொரு விஷயத்தை எடுத்துக் காட்டவும் பயன்படும். பாண்டித்தியம் இல்லாத சாமானியன் ஒருவனை ஆழமான விஷயத்தில் ஈடுபடுத்த முடியாது என்பதற்கும் எடுத்துக் காட்டாக இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.


water puried

जलकतकरेणुन्यायः

jalakatarenu nyayah

ஜலகதகரேணு நியாயம்

 

சகதி நிறைந்த ஜலம் பற்றிய நியாயம் இது

கதக பொடி என்பது அருமையான ஒரு விதையின் பொடி ஆகும். அழுக்கு அல்லது சகதி நிறைந்த நீரை நாம் பருகவோ அல்லது சமைப்பதற்கு உபயோகிக்கவோ முடியாது. ஆனால் கதகப் பொடியை தண்ணீரில் கலந்து விட்டால் சகதியும் அழுக்கும் கீழே படிந்து விடும். தெளிந்த நீர் மேலே இருக்கும். மேலே இருக்கும் நீரை மட்டும் எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.சாதாரணமாக கதக விதைகளை கிணறில் போடுவது நமது பழக்கம். அழுக்குகள் கீழே படிந்து விட, தெளிந்த நீரை வாளியிலோ அல்லது குடத்திலோ எடுத்துப் பயன்படுத்தலாம். இதே போன்ற விதை பற்றிய நியாயங்களைப் பல காலமாக பல நல்ல விஷயங்களுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டி வருகிறோம்.

Strychnos_potatorum_5

தண்ணீரைச் சுத்தப் படுத்தும் தேற்றாங்கொட்டையின் படம்

ஶ்ரீ சத்ய சாயி பாபா சேவைக்கான உதாரணமாக இதை அருமையாக எடுத்துக் காட்டியுள்ளார். எப்படி இந்த விதை அழுக்குகளை அடியில் தங்க வைத்து நல்லதை மட்டும் வெளிக் கொணருகிறதோ அதே போல சேவை புரிய விழையும் ஒருவர் சமுதாயத்தில் கலந்து அழுக்குகளை அப்புறப்படுத்தி நல்லனவற்றை மேலே கொண்டு வரச் செய்ய வேண்டும் என்பார். இத்துடன் இன்னும் ஒரு விஷயத்தையும் அவர் அற்புதமாகத் தெளிவு படுத்தியுள்ளார். இந்த விதையானது நீரில் கலந்த பின்னர் முற்றிலுமாக மறைந்து விடும். அது தான் இந்தச் செயலைச் செய்தது என்பது யாருக்கும் தெரியாது. அதே போல சேவை செய்தவர் விளம்பரம் எதையும் விரும்பாமல் தான் தான் அந்த அரிய காரியத்தைச் செய்துள்ளோம் என்பதைத் தெரிவிக்காது ஒதுங்கி விட வேண்டும் என்று அவர் அருளுரை பகர்ந்துள்ளார்.

 

யாருடன் நாம் சேர்கிறோம் என்பதைப் பொறுத்து விளைவுகள் அமையும் என்பதை எடுத்துச் சொல்லும் அருமையான நியாயம் இது.

சகவாசத்தைப் பொறுத்து நல்லது அமையும்!

 

சேருமிடம் அறிந்து சேர் என்பது பழமொழி. சாதுக்களுடனும், அருளாளர்களுடனும், மகான்களுடனும், ஞானிகளுடனும் இணக்கம் கொண்டால் நமது பாவங்கள் பொசுங்கி நல்லன நம் மனதில் ஊறி சிறப்பான வாழ்க்கையை வாழ ஆரம்பிப்போம்.இப்படி ஒரு மாற்றத்தை நமக்கு ஏற்படுத்தி உள்ளோம் என்பதையும் அவர்கள் விளம்பரப்படுத்த மாட்டார்கள்.

 

சிறிய நியாயம் தான்; ஆனால் அறிவுறுத்தும் விஷயமோ மிகவும் பெரிது!

**************

கைக்கு அழகு புத்தகம்! புஸ்தகம் ஹஸ்த லட்சணம் !!

books

Written by London swaminathan

Research Article No. 1681; Dated 28 February 2015.

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற

நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” – ஔவை

சம்ஸ்கிருதத்தில் அழகான ஒரு பொன் மொழி—“கைக்கு அழகு புத்தகம்!”– ஒருவன் படிக்கும் புத்தகத்தைக் கொண்டு அவன் யார் என்பதைக் கணித்து விடலாம். யாரையாவது ஒருவரின் ‘பெர்சனாலிட்டி’ என்ன என்று தெரிய வேண்டுமா? நீங்கள் நேரடியாக அவரைக் கேட்டால் அது இங்கிதமாக இருக்காது. பேச்சு வாக்கில் நீங்கள் படித்த ஏதாவது சில புத்தகங்களின் பெயரைச் சொல்லிவிட்டு, “உங்களுக்கு இது பிடிக்குமா? நீங்கள் கடைசியாக என்ன படித்தீர்கள்?”– என்று கேளுங்கள். அவருடைய குணநலன்களைக் கண்டுபிடித்து விடலாம்.

அவ்வையார் சொல்கிறார்:

நீரளவே யாகுமாம் நீராம்பல் தன் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு (வாக்குண்டாம்)

ஆம்பல் மலரின் உயரத்தைத் தீர்மானிப்பது குளத்தில் உள்ள நீர் மட்டம்; மனிதனின் விவேகத்தைத் தீர்மானிப்பது அவன் கற்ற நூல்கள்.

ஆயினும் வள்ளுவர் விட்ட எச்சரிக்கையையும் மனதிற் கொள்ளவேண்டும்: கற்றவர் எல்லோரும் நல்லவர் அல்ல. கற்கக் கசடற; கற்ற பின் நிற்க தற்குத் தக!

பெரிய பெரிய பேச்சாளர்களும், சாமியார்களும், அரசியல்வாதிகளும் நெய் ஒழுக , தேன் ஒழுக பேசுகிறார்கள். சுய வாழ்விலோ பெரிய பூஜ்யம்! ஊருக்குத் தாண்டி உபதேசம்; அது நமக்கல்ல – என்ற கதையாக இருக்கிறது!

girl-carrying-books-236x300

நூல் பற்றி மனு செப்பிய பொன்மொழி!

2000 ஆண்டுகளுக்கு முன் மனு ஸ்மிருதியில் ஒரு அழகான ஸ்லோகம் வருகிறது. மனுவின் பெயர் உலகின் மிகப் பழைய நூலான ரிக்வேதத்திலேயே வருவதால் அவர் மிகவும் பழைய அறிஞர். ஆனால் இன்று நமக்குக் கிடைக்கும் வடிவில் மனு ஸ்மிருதி 2300 ஆண்டு பழமை வாய்ந்தது. அவர் சொல்வதாவது:

புத்தகம் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களைவிட, அதைப் படிப்பவர்கள் மேல்;

படித்த விஷயங்களை நினைவிற் கொள்பவர்கள், புத்தத்தைப் படிப்பவர்களை விட மேலானவர்கள்;

நினைவு வைத்துக் கொள்பவர்களை விட, அதைப் புரிந்து கொண்டவர்கள் மேலானவர்கள்;

புரிந்து கொண்டவர்களை விட அதை வாழக்கையில் செயல்படுத்துவோர் மேலானவர்கள்!

என்ன அற்புதமான வரிகள்! கற்றால் மட்டும் போதுமா? அதைப் புரிந்து வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டுமல்லவா?

புராதன உலகில் அதிகமான புத்தகங்கள் உடைய நாடு இந்தியா? காகிதத்தின் நடுவில் கி.மு 1000 என்று எழுதி ஒரு கோடு போடுங்கள்! அதற்கு மேலாக எழுத வேண்டுமானால் வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் மட்டுமே இருக்கும். இப்போது நாம் பயன்படுத்தும் எந்த மொழி நூலும் அங்கே காணமாட்டாது! பைபிளின் பழைய ஏற்பாடு, மோசஸின் பத்து கட்டளைகள் முதலியன எழுத்து வடிவு பெற்றது கி.மு 945! கிரேக்க மொழியில் ஹோமர் ‘ஆடிஸி’, ‘இலியட்’ காவியங்களை எழுதியது கி.மு 800 ல்!. தமிழ் என்னும் குழந்தை, லத்தீன் என்னும் குழந்தை அப்போது பிறக்கக்கூட இல்லை!

ஜில்காமேஷ் போன்ற சுமேரியப் பிதற்றல்கள்—இப்போது பயன்பாட்டில் இல்லை; அவை ‘புத்தகம்’ என்னும் இலக்கண வரையரைக்குள் வாரா!

the_adi_granth_

வழிபடும் நூல் ஆதிக் கிரந்தம்

உலகில் புத்தகததை வழிபடும் ஒரே நாடு இந்தியாதான்! சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் போனால் அங்கே அவர்களுடைய புனித நூலான ஆதிக்கிரந்தம் வழிபடுவதைப் பார்ப்பீர்கள்! தென்னக கோவில்களில் உற்சவ மூர்த்திக்கு என்ன மரியாதை உண்டோ அததனையும் கொடுத்து குரு-வாக வழிபடுகின்றனர். பத்து சீக்கிய குருமார்களுக்கு மேல் இனி இந்தப் புத்தகமே குரு என்று அறிவித்துவிட்டார் கடைசி குருவான குரு கோவிந்த சிங் (1666—1708)!

வட இந்தியாவுக்குப் போனால் பலருடைய பூஜை அறைகளில் வால்மீகி ராமாயணமும், துளசி ராமாயணமும், பகவத் கீதையும் பூஜை அறையில் வழிபடும் இடத்தில் இருக்கும். தென் இந்தியாவில் தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தத்தைக் காலையில் குளித்து விட்டு ‘மடி’யாகப் படித்துப் பாராயணம் செய்வோரைக் காணலாம்.

Bhagavad_gita_As_It_Is_Books

நூலுக்குப் பிறந்த நாள் விழா

உலகில் ஒரு புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா கொண்டாடும் நாடும் இந்தியதான்! பகவத் கீதை என்னும் அற்புதமான நூலில் இந்து மதக் கருத்துகள் அனைத்தும் 700 ஸ்லோகங்களில் அடக்கப்பட்டு விட்டன. இது தோன்றிய மார்கழி மாத சுக்ல பக்ஷ ஏகாதஸி ஆண்டுதோறும் பகவத் கீதையின் பிறந்த நாளாகக் (கீதா ஜயந்தி) கொண்டாடப்படுகிறது.

இப்படிப் பல்லாயிரம் புதுமைகள் இருப்பதால்தான் இன்றும் கூட இந்தியாவைப் பார்க்கும் வெளி நாட்டினர் வியக்கின்றனர்!

family-motorcycle-india

சூத்ரா = சுரா = தோரா

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றே என்றும் — இவ்விரு மொழிகளும் பாரதீய சிந்தனையில்- இந்திய மண்ணில்- மலர்ந்த மலர்கள் என்றும் சில ஆய்வுக் கட்டுரைகள் எழுதினேன். நூல் தொடர்பான இன்னும் ஒரு விஷயத்தை இப்போது காண்போம்:

தமிழில்

நூல் = துணி நெய்யும் நூல்

நூல் = புத்தகம்

வடமொழியிலும்

சூத்ர = நூல் (தாலி=மங்கள சூத்ர)

சூத்ர = புத்தகம் ( பிரம்மசூத்திரம், பாணீனீய சூத்திரம், பதஞ்சலி யோக சூத்திரம், நாரத பக்தி சூத்திரம், தொல்காப்பிய சூத்திரம்)

இந்த சூத்ர என்னும் சொல் எகிப்திய பிரமிடு கட்டுமானப் பணியில் பயன்படுத்தப் பட்டதால் எகிப்திய பிரமிடுகளைக் கட்டியோர் இந்தியர்களே என்று இதே பிளாக்–கில் நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டேன். அதாவது இந்து சமய பொறியியல் அறிஞர்கள், ஒரு கட்டிடம் நேராக செங்குத்தாக இருக்கிறதா என்பதைக் காண கையில் நூல் (சூத்ர) பிடித்துக் காண்பர். நிற்க!

இந்த சூத்ர என்னும் வடமொழிச் சொல் அராபிய மொழியில் ‘சுரா’ என்றும் ஹீப்ரூவில் (எபிரேயம்) ‘தோரா’ என்றும் மருவின. எப்படி நாம் பிரம்மசூத்திரத்திலும், பதஞ்சலி எழுதிய யோக சூத்திரத்திலும் பயன் படுத்துகிறோமோ அப்படி குரானில் ‘சுரா’ என்பதை அத்தியாயம் என்னும் பொருளில் பயன் படுத்துவர். பைபிளின் பழைய ஏற்பாடு பகுதியை யூதமத அறிஞர்களின் வியாக்கியானங்களோடு பயன்படுத்தும் பகுதி –‘தோரா’.

மொழியியல் விதிகளின் படி ‘த’—வும் ‘ஸ’—வும் இடம் மாறும்! வித்தை என்பதை தமிழ் பாடல்களில் விச்சை என்பர். ஆங்கிலத்தில் டி. ஐ. ஓ. என். என்ற நான்கு எழுத்தில் முடியும் சொற்களை ‘ஷன்’ என்றே உச்சரிப்பர் (எ.கா. –எஜுகேஷன்)

ச/ஷ/ஸ = த/ ட

ramayan

ஆக செந்தமிழும், செம்மொழியும் (ஸம்ஸ்கிருதம் என்றால் செம்மை செய்யப்பட்ட மொழி = செம்மொழி= ஸம்ஸ்கிருதம்) ஒரே தாய்க்குப் பிறந்த இரு குழந்தைகள். ஸம்ஸ்கிருதம்- பெரிய அண்ணன், தமிழ்- சின்னத் தம்பி!

இதற்கு இன்னும் நூற்றுகணக்கான எடுத்துக் காட்டுகள் உள்ளன. தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும், புறநானூற்றிலும் பல இடங்களில் வரும் “அறம், பொருள், இன்பம்” என்பது பாரதீய சிந்தனையில் மலர்ந்த அரிய பூக்கள். இது இரு மொழியிலும் அப்படியே இருப்பது ஒரே தாய்க்குப் பிறந்த இரு மொழிகள் என்பதைத் தெள்ளிதின் விளக்கும்:

தர்ம அர்த்த காம மோக்ஷம்=

அறம் (தர்ம), பொருள் (அர்த்த), இன்பம் (காம), வீடு (விடுதல்) மோக்ஷம்.

தர்ம என்பது இந்தி மொழியில் ‘தரம்’ என மருவியது போல தமிழில் ‘அறம்’ என மருவியது!

பொருள் (அர்த்த) என்பது சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் இரு பொருளில் ( பணம், அர்த்தம்) என்றே பயன்படுத்தப் படுகின்றன.

காம என்ற சொல் சங்க இலக்கியம் முதல் இன்று வரை அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. சில இடங்களில் இன்பம் என்ற மொழிபெயர்ப்பும் உண்டு.

தொல்காப்பியம், திருக்குறள், புறநானூற்றில் காணப்படும் “தர்மார்த்காமமோக்ஷ” சம்ஸ்கிருத இலக்கியத்தில் பல்லாயிரம் இடங்களில் வருகிறது. ஆக, 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனை – சொல் ஆக்கத்தில் கூட – ஒரே சிந்தனை இருக்குமானால் இவர்கள் யார் என்பதை சொல்லித் தெரிய வேண்டுமா?

வாழ்க தமிழ்! வளர்க ஸம்ஸ்கிருதம்!!

நூல் பல கல்: அவ்வையின் ஆத்திச் சூடி!

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

காகம்3

Written by London swaminathan

Research Article No. 1679; Dated 27 February 2015.

காகம் என்னும் பறவை குறித்து இதற்கு முன் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடிய கா….கா…. பாடல் முதல் சங்க இலக்கியத்தில் காகத்துக்கு ஏழு பிண்டம் வைத்தல் வரை, வள்ளுவன் குறள் முதல் பாரதி பாடிய காக்கை, குருவி எங்கள் ஜாதி…………… பாடல் வரை பலவற்றையும் நாலு ஐந்து கட்டுரைகளில் எழுதிவிட்டேன். இருந்த போதிலும் வராஹமிகிரரின் அற்புதமான சம்ஸ்கிருத கலைக் களஞ்சி யத்தில் (பிருஹத் சம்ஹிதா) காகமும் சகுனமும் என்ற அத்தியாயத்தைப் படித்தபோது மேலும் ஒரு அதிசய விஷயம் கிடைத்தது! “தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு” என்று எங்கள் ஐயன் திருவள்ளுவன் சும்மாவா சொன்னான்? படிக்கப் படிக்கப் புது விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

காக்கைக்கும் ஆட்சி மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு — என்று வராஹமிகிரரும் இரண்டாவது சார்லஸ் மன்னரும் நம்பினர்!

லண்டனில் டவர் மியூசியம் என்று ஒரு பெரிய கோட்டை – 980 ஆண்டுகள் பழமையான கோட்டை-  இருப்பதும் அதில் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த (தப்புத் தப்பு…. கொள்ளை அடித்த) கோஹினூர் வைரம் உள்பட மஹாராணியாரின் விலைமதிக்கவொண்ணாத நகைகள், மணிமுடிகள் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்த விஷயமே!

லண்டனில் அந்தக் கோட்டையில் ஆறு அண்டங்காக்கைப் பறவைகள் இருப்பதும் அவைகளைப் பாதுகாக்க ரேவன்ஸ் மாஸ்டர் (ஆங்கிலத்தில் அண்டங்காக்கைக்குக் ரேவன் என்று பெயர்) என்று ஒருவர் அதிக சம்பளத்தில் ஊழியத்தில் இருப்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த ஆறு காக்கைகளும் அந்தக் கோட்டையில் இருந்து போய்விட்டால் பிரிட்டிஷ் முடியாட்சி முடிந்துவிடும் என்றும் அத்தோடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமித்துவிடும் என்றும் பலத்த நம்பிக்கை இருக்கிறது.

raven 1

லண்டன்     டவர்   மியூசிய   அண்டங்காக்கை

இதற்காக ஒவ்வொரு நாளும் அதை இரவில் ஒரு இடத்தில் ஜாக்கிரதையாகத் தூங்க வைப்பது ரேவன்ஸ் மாஸ்டரின் பொறுப்பு அவர் ஒவ்வொரு பறவைக்கும் 170 கிராம் மாமிசமும் ‘ரத்தம் தோய்ந்த பறவைகள் பிஸ்கட்’டும் கொடுத்து அதைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இது இரண்டாவது சார்ல்ஸ் மன்னர் காலத்தில் துவங்கியது. இரண்டாவது உலக மஹா யுத்தத்தின்போது ஹிட்லரின் அதி பயங்கர குண்டுவீச்சில் லண்டன் என்ற ஒரு நகரமே இல்லை என்று ஆகிவிடுமோ என்று அஞ்சிய அப்போதைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் மேலும் பல அண்டங் காக்கைகளைக் கொண்டுவர உத்தரவிட்டார். ஏனெனில் ஒரு குண்டு,  கோட்டையில் விழுந்தாலும் ஆறு காக்கைகளும் அவுட். ஆனால் பிக் பென் கடிகார கோபுரம் பிழைத்தது போல அப்போதைய குண்டு வீச்சில் ஆறு காக்கைகளுல் தப்பின.

இப்படி இருக்கையில் 2013 அக்டோபரில் எல்லா பிரிட்டிஷ் பத்திரிக்கைகளும் ஒரு பரபரப்பான செய்தியை புகைப்படங்களுடன் வெளியிட்டன. அதாவது இரண்டு அண்டங் காக்கைப் பறவைகளை அதிகாலையில் வந்த ஒரு நரி கொன்றுபோட்டு விட்டது. உடனே பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அழிந்து விடுமோ என்றும் மஹாராணிக்கு ஊறு நேருமோ என்றும் வதந்திகள் பறந்தன. ஆனால் புத்திசாலி ரேவ்ன்ஸ் மாஸ்டர் கவலைப் படாதீர்கள், நான் இரண்டு ‘ஸ்பேர்’  (உதிரி) காக்கைக் குஞ்சுகளையும் வளர்த்து வருகிறேன் என்று காட்டினார். பிரிட்டானிய பெருமக்களும் பத்திரிக்கைகளும் ‘அப்பாடா’ என்று பெருமூச்சுவிட்டன!! இப்போது எட்டு அண்டங்காக்கைகள் அங்கே இருக்கின்றன. இதில் ஆறு எப்போதும் இருக்கவேண்டும். இல்லாவிடில் பிரிட்டிஷ் முடியாட்சி கவிழும் என்பது மக்களின் மகத்தான நம்பிக்கை.

raven 2

ரேவன்ஸ் மாஸ்டர் –  டெய்லி மெயில்  புகைப் படங்கள்

நம்பிக்கை – மூட நம்பிக்கை – என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இது பெரிய டூரிஸ்ட் அட்ராக்சன்- சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் அம்சம். ரஷிய அதிபர் புடின் முதற்கொண்டு இதைப் பாதுக்காக்கும் பக்குவம் பற்றிப் பாராட்டிப் பேசிவிட்டுப் போய்விட்டார்!!.

ஆட்சி மாற்றம்: வராஹமிகிரர் ஏது செப்பினார்?

பிருஹத் சம்ஹிதாவில்— 1500 ஆண்டுகளுக்கு முன் — காக்கைகள் பற்றி நூற்றுக் கணக்கில் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எழுதி வைத்திருக்கிறார்— அத்தியாயம் 95 — அவர் பகர்வதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.

2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.

காகம்

(வராஹமிகிரர் இன்னும் ஒரு அத்தியாயத்தில் இந்தியாவின் ‘ஜியாக்ரபி’யை – புவியியலை – அக்குவேறு ஆணிவேராக அலசி இருக்கிறார்)

3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:

மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.

மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை

தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை

மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)

தென்கிழக்கு = அவ்வப்போது மழை

தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்

ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்

தூய்மையான-நட்பு

பஞ்ச தந்திரக் கதையில் காகம்

கோவில்கள், வீடுகள், முட்புதர்கள் முதலிய இடங்களில் கூடு கட்டினால் = பசி, பட்டினி, பஞ்சம்

என் கருத்து: வராஹமிகிரர் சொல்லுவது சரியா தவறா என்று ஆராயக்கூட நமக்கு பல ஆண்டுகள் பிடிக்கும். அந்தக் காலத்தில் சி.சி.டி.வி. காமெரா, பைனாகுலர், வீடியோ காமெராக்கள் எதுவுமின்றி ஒரு சில ‘ஆர்னிதாலஜிஸ்ட்’கள் (பறவை இயல் வல்லுனர்) இயற்கையை  நூற்றாண்டுக கணக்கில் உன்னிப்பாகக் கவனித்து, எழுதிவைத்து, ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே சகுன சாத்திரம் உருவாயிருக்கும். சகுனம் என்றால் பறவை எனப் பொருள்.

1500 ஆண்டுகளுக்கு முன்னர் வரஹமிகிரர் இவ்வளவு எழுத வேண்டுமானால் அதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பாவது யாரோ ஒருவர் இதை டாகுமெண்டு செய்து எதிர்கால சந்ததியினருக்கு அளித்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் சொல்லுவதை நாமும் ஆராய வேண்டும். சில விடயங்கள் காலப் போக்கில் மாறத்தான் செய்யும். கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுவது நம் கடமை.

  1. ஒரு காக்கை 3 அல்லது 4 குஞ்சு பொறித்தால் அமோக உணவு விளைச்சல். ஐந்து குஞ்சுகள் பொறித்தால் ஆட்சி மாற்றம்!!! (எதிர்க் கட்சிகள் கவனத்தில் கொள்க!!!). முட்டைகளை உதைத்து தள்ளினாலோ, ஒரே முட்டை இட்டாலோ, முட்டையே இடாமல் இருந்தாலோ நல்லதல்ல—அமங்களம்.

kakaka

5.ஒரு கிராமத்தின் நடுவில் காரணம் இன்றி காக்கைகள் மகாநாடு (கூடிக்  கரைந்தால்) நடத்தினால் பஞ்சம் வரும். ஊரைச் சுற்றிச்சுற்றி வந்தால் எதிரிகள் முற்றுகை இடுவர். பல குழுக்களாகப் பிரிந்து கரைந்தால் அழிவு!

(என் கருத்து: சுனாமி, பூகம்பம், திடீர் வெள்ளம் ஆகியவற்றுக்கு முன், பறவைகள் என்ன செய்தன என்பதை ஆராய வேண்டும்)

6.காகங்கள் துணிச்சலாக மக்களைத் தாக்கினால் எதிரிகள் பெருகுவர். இரவில் வலம் வந்தால் ஊருக்கு அழிவு!

7.ஒரு தனி மனிதனை காகம் வலம் வந்தால் அவனுக்கு சொந்தக்காரர்கள் இடமிருந்து தொல்லை; அப்பிரதக்ஷிணம் செய்தால் (கடிகார திசைக்கு எதிராக – இடம் வந்தால்) எதிரிகள் இடமிருந்து தொல்லை. தாறு மாறாகப் பறந்தால் சூறாவளி வீசும்.

8.காகங்கள் மண்ணையோ, தானியங்களையோ, பூக்களையோ கொத்தி வந்தால் தன லாபம்; கலயங்கள், விலையுயர்ந்த பொருட்களைத் தூக்கிச் சென்றால் பொருள் இழப்பு.

9.காகங்கள் ஒருவருடைய குடைகள், செருப்புகள், வண்டிகள், கருவிகளைத் தாக்கினால் அந்த ஆளுக்கு ஆபத்து. மாறாக ஒருவரை ‘பூஜித்தால்’ (சம்ஸ்கிருத ஸ்லோகத்திலும் பூஜயந்தி என்றே உளது!) அவருக்கு பட்டம் பதவிகள் கிடைக்கும். மேற்கூறிய பொருட்கள் மீது மலஜலம் கழித்தால் உணவு கிடைக்கும்!

Craw Story_n

காலம் மாறும் — பறவைகளும் மாறும்

  1. காகம் சில பொருட்களை எடுத்துச் சென்றால் அதை ஒருவர் இழப்பார். கொண்டுவந்தால் அதை ஒருவர் பெறுவர். எடுத்து காட்டாக மஞ்சள் நிற பொருட்களை உங்களிடம் இருந்து பறித்துச் சென்றால் நீங்கள் தங்க நகைகளை இழப்பீர்கள். அது மஞ்சள் நிறத்தைக் கொண்டுவந்தால் உங்களுக்கு தங்கம் கிடைக்கும் (பெண்கள் கவனத்தில் கொள்க!!)

துணிமணி = உங்களுக்கு புத்தாடை யோகம்

வெள்ளி நிற வஸ்துக்கள் = வெள்ளி கிடைக்கும்.

இப்படி வராஹமிகிரர் அடுக்கிக் கொண்டே போகிறார். அடுத்த கட்டுரையில் சில சுவையான விஷயங்களை மட்டும் சொல்லுகிறேன்.

யாராவது தமிழ், வடமொழி இலக்கியங்களில் வரும் குறிப்புகளை ஆராய்ந்து, ஆர்னிதாலஜிஸ்ட்கள் (பறவை இயல் நிபுணர்கள்) எழுதிய உயிர் இயல் செய்திகளோடு ஒப்பிட்டு டாக்டர் பட்டம் வாங்கலாம். அணி மற்றும் காகம் எவ்வள்வு புத்த்சாலி என்பதை காட்ட நிறைய யூ ட்யூப் வீடியோகள் உள்ளன. நாமோ சின்ன வயதிலேயே புத்தி சாலிக் காகம் எப்படி பானையின் கீழிருந்த தண்ணீரை மேலே கொண்டு வந்தது என்று படித்திருக்கிறோம்.

காகம்2

வாழ்க காகங்கள்! வளர்க காக்காய் பிடிக்கும் கலை!!

காக்காய் பிடித்தல்= கால்+கை+பிடித்தல்!

நியாயங்கள் பகுதி-15: பட்ட காலிலே படும்!

Written by S Nagarajan

Article No.1674 Dated 25th February 2015.

சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்

shake quote

15. பட்ட காலிலே படும்!

ச.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

एकदेशविकृतमनन्यवत् न्यायः

Ekadesavikrtamananyavat nyayah

ஏகதேசவிக்ருதமனந்யவத் நியாயம்

 

ஒரு விஷயத்தில் வடிவம் அப்படியே இருந்து ஒரு பகுதி மட்டும் சிதைந்து போயிருக்கும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். உதாரணமாக ஒரு குதிரையை எடுத்துக் கொண்டால் அதன் உருவம் கழுதை போல ஆகி விடாமல் அப்படியே இருக்க, அதன் வால் மட்டும் கொஞ்சம் நறுக்கப்பட்டு விட்டால் அப்போது இந்த நியாயம் பொருந்தும். ஒரு மனிதன் மிருகமாகாமல் மனிதனாகவே இருக்க அவன் விரல்கள் மட்டும் துண்டிக்கப்படுவதாக வைத்துக்  கொள்வோம். அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.அதாவது வெளியில் ஏற்படும் சிதைவுகள் ஒரு விஷயத்தின் உண்மையான இயற்கையை மாற்றி விடாது என்பதை எடுத்துக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.


horse without tail

एकाकिनी प्रतिज्ञा हि प्रतिज्ञानं न साधयित न्यायः

ekakinapratijnahi pratijnanam na sadhayati nyayah

ஏகாகினி ப்ரதிக்ஞா ஹி ப்ரதிக்ஞானம் ந சாதயதி நியாயம்

 

வாக்குறுதி மட்டும் அளிப்பது என்னும் நியாயம் இது.

Quality Rounding

வெறும் வாக்குறுதி மட்டும் வெற்றியை அளிக்காது. சொன்ன வாக்குறுதியைச் செயலிலும் செய்து காட்ட வேண்டும். வெறும் வெட்டிப் பேச்சு பேசுவோர் செயல் வீரராக இருக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. சொன்ன வாக்குறுதியை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவரே வெற்றியாளராகத் திகழும் மேன் மக்கள் ஆவர்.

shake 2

एकामसिद्धिं परिहरतो द्वीतीयापद्यते न्यायः

ekamasiddhim pariharato dviteyapadyate nyayah

ஏகாமசித்திம் பரிஹரதோ த்வீதியாபத்யதே நியாயம்

ஒரு தோல்வி இன்னும் பல தோல்விகளைத் தொடர்ச்சியாக கொண்டு வருவதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.

பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பது பழமொழி.

ஒரு தோல்வியை சரி செய்யப் போய் அடுத்த விஷயத்தை கவனிக்காமல் விட, அதுவும் பிரச்சினையாகி தோல்வியைத் தருகிறது.

வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் வேதனையான அனுபவம் தான் இது. அதைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நியாயம்.

1359897742_Yogurt_milk

क्षीरं विहाय अरोचकग्रस्तस्य सौवीररुचिमनुभवित

kshiram vihayarocakagrastasya sauvirarucimanubhavatati

க்ஷீரம் விஹாய அரோசகக்ரஸ்தஸ்ய

சௌவீர்ருசிமனுபவதி நியாயம்

 

க்ஷீரம் – பால்;

 

பாலை விரும்பால்  புளித்திருக்கும் வேறொன்றை ஒருவர் பெற விரும்பும் நியாயம் இது.

 

நோயாளிகளில் சிலருக்கு பால் பிடிக்காது. ஆனால் அவர்கள் தயிரை விரும்புவர். அல்லது அது போன்ற வேறொன்றை விரும்புவர்.

இந்த நியாயமானது கெட்ட வழியில் போய் விசித்திரமான சுவையை விரும்புவது போல கெட்ட வழிகளை விரும்பும் தீயோரை எடுத்துக் காட்டப் பயன்படுகிறது/


sour-milk

कौण्डिन्य न्यायः

kaundinya nyayah

 

கௌண்டின்ய நியாயம்

 

இதற்கு பழைய கதை ஒன்று உண்டு.கௌண்டின்யர் என்ற பெயரில் அந்தணர் ஒருவர் இருந்தார். விருந்து ஒன்று நடந்த போது அவரும் அதில் கலந்து கொண்டார். ஆனால் எல்லோருக்கும் சுண்டக் காய்ச்சிய பால் வழங்கப்பட்ட போது அவருக்கு மட்டும் புளித்த பால் தரப்பட்டது! ஒரே பந்தியில் இப்படி ஒரு வித்தியாசம்.

இப்படி விதியை மீறிச் செயல்படும் exception-ஏ விதியாவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. இது கௌண்டின்யருக்கு செய்தது போல என்று சுட்டிக் காட்டப்பட்டு வழங்கப்படுகிறது.

sour milk 2

படங்கள் – எங்களுடையன  –  அல்ல; பல வெப்சைட்டுகளிலிருந்து  எடுக்கப்பட்டவை – நன்றி: சுவாமி

***************