கவிதைச் சித்தன் கும்மாளம்! (Post No.2743)

IMG_3286

Compiled  BY S NAGARAJAN

Date: 21 April 2016

 

Post No. 2743

 

 

Time uploaded in London :–  9-15  AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் என்னும் விந்தை

கவிதைச் சித்தன் கும்மாளம்!

புலவர் குடந்தை வேலன்

.நாகராஜன் (எனது நோட்புக்கிலிருந்து)

 

கவிஞன் ஒருவனின் கும்மாளத்தைச் சித்தரிக்கும் கவிதை ஒன்று இது.
இது போன்றதொரு கவிதையை யாரும் பார்த்திருக்க முடியாது; படித்திருக்க முடியாது.

 

‘கவிஞராக’ என்ற புத்தகத்தில் அ.கி,பரந்தாமனார் எடுத்துக்காட்டாகத் தந்த இந்த ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற கவிதை எனது நோட்டுப் புத்தகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னால் குறித்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது செல்லரித்துப் போன நிலையில் எனது சகோதரர் திரு சீனிவாசன் திடீரென்று அது கிடைத்து விட்டதாககக் கூறி தனது குறிப்பேட்டிலிருந்து அதை போட்டோ பிடித்து அனுப்பி இருந்தார்.

 

இதை எழுதியவர் குடந்தை வேலன். இவரைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் அற்புதமான கவிஞர் இவர் என்பதில் ஐயமே இல்லை. கவிதையைப் படித்தோர் கும்மாளம் போட்டுச் சொல்லும் உண்மை இது.

நல்ல கவிதை கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் அதை இங்கு பகிர்கிறேன்.

 

கவிதைச் சித்தன் கும்மாளம்!

எழுதியவர் குடந்தை வேலன்

 

கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்

கற்றறி மூடர்களே – ஒரு

சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு

சூளை கிளப்பிடுவோம்

 

ஆனையைப் பானையில் மூடி வைப்போமந்த

அண்டப் பெருவெளியும் – மிகக்

கூனிக் குறுகியெம் சொல்லெனும் மாயக்

குடுக்கையில் நின்றாடும்

 

வெண்ணெயை வைத்திட்டு நெய்க்கு அலைந்திடு

வீணர்களே வாரும் – இந்த

மண்ணில் இருக்குது விண்ணுலகம் எங்கள்

மந்திரத்தில் பாரும்

 

சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம்

சட்டென ஓங்குது பார் – எழில்

சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச்

சிலிர்ப்பு கிளம்புது பார்

 

ஐந்தலைப் பாம்பையும் ஆட்டிப் பிடித்தே

அடக்கி மடக்கிடுவோம் –கர்ம

சிந்தையில் சீறிடும் அஞ்சு புலன்களைச்

சிந்தில் ஒடுக்கிடுவோம்

 

வானத்தில் வில்லை வளைத்திடுவோம் அந்த

மண்ணைச் சுருட்டிடுவோம் பர

மோனத்தை ஞானத்தளையில் பிடித்தே

மூப்பில் ஆழ்த்திடுவோம்

IMG_4972

நச்சினைத் தேனென்று மாந்திடுவோம் இசை

ஞான நடம் புரி கொள்வோம் –அந்த

அச்சிவ சங்கரன் நச்சை அயின்றதும்

அற்புதம் அற்புதமோ

 

வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்

வீழ்ந்தே  உடைந்ததடா –யாம்

நாதக்குழம்பில் புனைந்திட்ட சொற்கடம்

ஞானம் முழங்குதடா

(சொற்கடம் என்பதை சொற்கள் தம் எனப் பிரிக்க வேண்டும்)

 

என்ன ஒரு அருமையான கவிதை! இது போலொரு கவிதையை நான் கவிக் கூற்றாக எந்த ஒரு மொழியிலும் படித்ததில்லை.

 

இதை இயற்றியவரைப் பற்றிய குறிப்புகள் இல்லையே என மனம் ஏங்குகிறது.

 

அவரது இதர கவிதைகள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதையும் மனம் சிந்தித்து உவகை கொள்கிறது!

*****

 

 

‘கேக்’கில் சின்ன ‘s’ ஸும், பெரிய ‘S’ ஸும்! கஸ்டமர் கலாட்டா! (Post No.2739)

s cake

Compiled by London swaminathan

Date: 19 April 2016

 

Post No. 2739

 

Time uploaded in London :– 14-40

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Eccentricity Anecdotes

 

கிறுக்குத்தனம், பைத்தியக்காரத்தனம் பற்றிய நிகழ்ச்சிகள்

 

தீ! தீ! — ஆங்கிலப் புலவர் வீட்டில் கூச்சல்

gray

தாமஸ் கிரே என்பவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவர். அவருக்கு தீ என்றால் பயம்—அதாவது பைரோ போபியா! யாராவது அந்த தீ, நெருப்பு என்ற வார்த்தைகளைச் சொன்னால் அந்த சொல்லே அவரைச் சுட்டது போல எண்ணுவார். இந்த புது வகை பயத்தினால் அந்த “முன் ஜாக்கிரதை முத்தண்ணா” தனது வீட்டில் தக்க ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார்.

 

அவரது வீட்டு ஜன்னலில் இருந்து ஒரு ஏணி தொங்கும். அது  கயிற்றினாலான ஏணி. அதன் ஒரு முனை ஜன்னலில் துவங்கி மறு முனை ஒரு தண்ணீர்த் தொட்டியில் முடியும். ஒரு வேளை தனது துணிகளும் தீப்பற்றி, ஏணியும் தீப்பற்றினாலும் தண்ணீர்த் தொட்டிக்குள்தானே விழுவார்! அவ்வளவு கன கச்சிதமான ஏற்பாடு.

 

சில குறும்புக்கார இளைஞர்களுக்கு கிரே அவர்களின் பயம் குறித்து தெரியும். ஒரு நாள் இரவில் அவர் வீட்டு வாசலில் நின்று தீ! தீ! என்று கூச்சலிடவே, கவிஞர் கிரே, படுக்கையிலிருந்து தாவிக்குதித்து, கயிற்றேணியைப் பிடித்து, தர தரவென்று கீழே இறங்கி தண்ணீர்த் தொட்டியில் தொப்பென்று விழுந்தார்.

 

வீட்டுக் காவற்காரனும் கூச்சல் கேட்டெழுந்து யாரோ தண்ணீர்த் தொட்டியில் விழுந்த சப்தம் கேட்டதே என்று ஓடோடி வந்தார். நமது புலவர் பெருமகனார் கிரே, தொட்டிக்குள் மிதந்தவாறே, குளிரில் நடுநடுங்க தீ, தீ என்று கதறினார்.

 

காவற்காரருக்கு நிலைமை புரிந்தது. அவரை சமாதானப் படுத்தி, தீ விபத்து எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி, பத்திரமாக மாடிக்கு அழைத்துச் சென்று படுக்கை அறையில் கொண்டுவிட்டார்.

xxx

s

‘கேக்’கில் சின்ன ‘எஸ்’ஸும், பெரிய ‘எஸ்’ஸும்! கஸ்டமர் அலப்பறை!

 

பிறந்த நாள் ‘கேக்’ செய்துதரும் கடைக்குள் ஒருநாள், ஒரு வாடிக்கையாளர் நுழைந்தார். டிப், டாப்பாக உடைகள் அணிந்திருந்தார்.

 

“ஐயா ஒரு கேக் செய்ய வேண்டும் அதில் சின்னதாக ‘எஸ்’ என்று ஆங்கிலத்தில் பொறிக்க வேண்டும். இன்னின்ன அலங்கார பூ வேலைப்பாடுகள் செய்யவேண்டும்; நாளை மறுதினம் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.

கடை முதலாளி, “ஓ.கே. நாளை மறுதினம் வாருங்கள். எல்லாம் பிரமாதமாக செய்து வைத்திருக்கிறேன்” என்றார்.

ஆனால் ஒரு நாள் முன்னதாகவே, அந்த கஸ்டமர், மீண்டும் கேக் கடைக்குச் சென்று, நாளை வந்துவிடுகிறேன்; மறக்கமாட்டீர்களே? என்றார். உடனே கடைக்கார பையன், ஸார், உங்களுடைய ‘கேக்’கில் முக்கால் வாசி வேலை முடிந்துவிட்டது; இதோ பாருங்கள்” என்று கேக்கை எடுத்துக் காட்டினான்.

அந்த ஆள் கேக்கைப் பார்த்ததுதான் தாமதம்; உடனே கோபத்தில் சீறிப் பாய்ந்தார். ஆங்கிலத்தில் பெரிய ‘எஸ்’ பொறித்து விட்டீர்கள். நான் சின்ன ‘எஸ்’ அல்லவா பொறிக்கச் சொன்னேன்; காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே! ஐயகோ!” என்று அலறினார். கடை முதலாளி ஓடிவந்தார்.

 

 

“ஐயா! மன்னித்துக்கொள்ளுங்கள். சின்னப் பிழை நடந்துவிட்டது. உங்களுக்கு டெலிவரி நாளைதானே வேண்டும்; கவலையே படாதீர்கள்; எல்லாம் கச்சிதமாக நீங்கள் சொன்னபடியே செய்துவைக்கிறேன்; நாளைக்கு வாருங்கள்” என்றார். அவ்வளவு ‘கஸ்டமர்’களுக்கும் முன்னால், இப்படிக் கத்திவிட்டுப் போனதால். முதலாளியே பக்கத்திலிருந்து ‘கேக்’கை அழகாக செய்து முடித்து அதன் மீது சின்ன ‘எஸ்’ பொறித்தார்.

 

 

மறு நாள், சொன்ன நேரத்தில் கஸ்டமர் (வாடிக்கையாளர்) வந்தார்; ‘கேக்’கைப் பார்த்தார். பிரமாதம் என்று சொல்லிவிட்டு பர்ஸிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

முதலாளி கேட்டார்: இதை எங்கே டெலிவரி செய்ய வேண்டும்; முகவரியைக் கொடுங்கள் உடனே டெலிவரி செய்கிறேன்; அல்லது நீங்களே எடுத்துச் செல்வதானால், நல்ல பெட்டியில் வைத்து ‘பேக்’ செய்து தருகிறேன்” என்றார்.

அதற்கு அந்த கஸ்டமர் சொன்னார்;

“நோ! நோ! நான் இங்கேயே சாப்பிடத்தான், இந்த ஆர்டரைக் கொடுத்தேன்” என்று சொல்லிவிட்டு அங்குள்ள காப்பி டேபிளில் அமர்ந்து, கேக்கைச் சாப்பிடத் துவங்கினார்.

 

அடப் பாவிமகனே! இப்படி சாப்பிடுவதற்குத்தான் நேற்று சின்ன எஸ், பெரிய எஸ் என்று அலப்பறை செய்தாயா? என்று முதலாளியும் கடைப்பையன்களும் நினைத்தார்கள்; ஆனால் வெளியே சொல்லமுடியுமா?

Customer is always right — ‘கஸ்டமர் இஸ் ஆல்வேய்ஸ் ரைட்’ = வாடிக்கையாளரின் வாதம் எப்பொழுதும் பொருளுடைத்தே – என்பது மேல்நாட்டுக் கருத்து!

–சுபம்–

 

வீண் பகட்டும், டம்பமும், ஆடம்பரமும் பெண்களுக்கே அதிகம்? (Post No.2733)

girl in lotus pond

Translated by london swaminathan

Date: 17 April, 2016

 

Post No. 2733

 

Time uploaded in London :–14-36

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

நியூயார்க் நகர முனிசிபல் பெண்கள் லீக் தலைவி மிஸ் பிரான்ஸிஸ் கெல்லர், ஒரு விருந்துக்குச் சென்றிருந்தார். இவர், பெண்ணுரிமை இயக்கத்தவர் என்று தெரிந்து ஒருவர் ஒரு ‘காமெண்ட்’ அடித்தார். பெண்கள் வீண்பகட்டு, ஆடம்பரம், டம்பம் உடையவர்கள் என்று.

உடனே அவர் சொன்னார்: உண்மைதான் மறுப்பதற்கில்லை. பெண்கள் ஆடம்பரப் பிரியர்கள்தான். இதற்கு ஆயிரம் சாட்சியங்கள் உண்டு. அது சரி! இந்த அறையிலேயே மிகவும் அழகான ஒரு ஆண்மகன், ஏன் தனது ‘டை’ யை தப்பாக –முன் பின்னாக –அணிந்திருக்கிறார்? என்று ஒரு குண்டு போட்டார். அந்த அறையில் ஆறு ஆண்கள் இருந்தனர். அத்தனை பேரும் யாரும் பார்க்காதபடி, மெதுவாக, லாவகமாக, தன் கையை சட்டையின் காலருக்குப் பின்னால் நகர்த்தி தடவிப் பார்த்துக் கொண்டனர்.

 

அந்தப்பெண், ஒரு புன்னகையை நெளியவிட்டாள். (அத்தனை ஆண்களையும் ஒரு நிமிடத்தில் முட்டாளாக்கிவிட்டாள். யாரும் ‘டை’யை தப்பாக அணியவில்லை!)

Xxx

 

IMG_4507

டார்லிங்; அது பாவம் இல்லை; மிஸ்டேக்!

 

அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் பாதிரியார் Fபாதர் ஹீலியிடம் ஒரு அழகான இளம் பெண் வந்தாள். பாவ மன்னிப்புக் கூண்டில் நின்றாள். அந்தப் பக்கம் பாதிரியார் அந்தப் பெண் செய்த பாவம் என்ன என்று அறிய காதை நீட்டினார்

“Fபாதர்! நான் பெரிய தப்பு செய்கிறேன். தினமும் கண்ணாடி முன் நின்று, நான்தான் மிக அழகான பெண் என்று நினைத்து கர்வமடைகிறேன். இந்தப் பாவத்தை மன்னியுங்கள்”.

பாதிரியார் சொன்னார்: இது பாவமில்லை. ஒரு தப்புக் கணக்கே!

(அந்தப் பெண்ணுக்கு ஏன்தான் கேட்டோம் என்று போய்விட்டது. அது வரை அழகி என்று எண்ணியிருந்தாள். பாதிரியாரோ பாவமில்லை.தப்பான அபிப்ராயமே/மிஸ்டேக் என்றார்)

Xxx

நான்தான் உலக மகா எழுத்தாளன்!

உலகப் புகழ் பெற்ற இதாலிய எழுத்தாளர் டி’அனன்சியோவுக்கு பிரான்ஸில் வசித்தபோது ஒரு கடிதம் வந்தது. “இதாலியின் புகழ்மிகு எழுத்தாளர்” என்று எழுதி அவர் பெயரை எழுதியிருந்தார் கடிதம் அனுப்பியவர்.

 

தபால்காரர், பெருமையாக, “பாருங்கள் உங்கள் விலாசத்தைக் கூட முழுக்க எழுதவில்லை. நீங்கள் அவ்வளவு புகழ் மிக்கவர். உங்களுக்கு கடித்தத்தைக் கொண்டுவந்துவிட்டேன்” என்றார்.

“அவர் நான் இதை வாங்க மாட்டேன். இது எனக்கல்ல” என்றார்.

தபால்காரருக்குப் புரியவில்லை.

“நான் உலக மகா எழுத்தாளன். இதில் இதாலியின் மிகப் புகழ்பெற்ற” — என்று மட்டுமே எழுதியிருக்கிறான். எடுத்துக் கொண்டு போ” – என்றார்.

(அத்தனை அகந்தை)

Xxx

 

rail station

நகர வாழ்வு!

அமெரிக்காவில் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஒரு ஏழை நன்கு படித்து நகரத்துக்குச் சென்று வங்கியில் சேர்ந்து மிகப் பெரிய பதவி பெற்று செய்திப் பத்திரிகையில் எல்லாம் படங்கள் வந்திருந்தன. சரி! நம் புகழ் திக்கெட்டும் பரவிவிட்டது நம் சொந்த கிராமத்துக்குச் சென்று எல்லோருக்கும் ‘ஹலோ’ சொல்லிவிட்டு வருவோம் என்று புறப்பட்டார். அவர் கிராமத்துக்கு ரயில் வசதி மட்டுமே உண்டு. விமானம் கிடையாது.

 

தன்னை வரவேற்க ஏராளமானோர் மாலை மரியாதைகளுடன் காத்திருப்பார்கள் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார். ஊரும் வந்தது; ரயிலும் நின்றது. ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ஈ, காகா இல்லை. அவருக்கு ஒரே ஆச்சரியம். சரி, ரயில் நேரத்தைத் தப்பாக நினைத்திருப்பாகள். கொஞ்சம் காத்திருப்போம் என்று காத்திருந்தார். பாவம்! யாரும் வரவில்லை. அந்த ரயில்வேஸ்டேஷன் போர்ட்டர் அவரிடம் வந்தான். உடனே அவன் ஏதேனும் வரவேற்பு பற்றி நல்ல செய்தி கொண்டுவந்திருப்பான் என்று ஆர்வத்துடன் அவனருகே போனார். அவன் கேட்டான்:

“என்ன ஸார், வெளியூருக்குக் கிளம்பிட்டீங்களா? எந்த ஊருக்குப் போறீங்க?”

 

–சுபம்–

 

பெண்களின் மனதும், ஆண்களின் அதிர்ஷ்டமும் கடவுளுக்கே தெரியாது! (Post No 2720)

viry 25

Translated by london swaminathan

Date: 13 April, 2016

 

Post No. 2720

 

Time uploaded in London :– 9-27 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய 150 சம்ஸ்கிருதப் பழமொழிகள்- பகுதி 4

viry 31

51.விஷம: ஸ்த்ரீணாம் ஈர்ஷ்யா விஷக்ருத: ஜ்வர: ——ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்களுக்குப் பொறாமையால் ஏற்படும் விஷ ஜுரம் அவர்களை கொடுமைப்படுத்தும்.

xxx

52.வ்ருத்தா நாரீ பதிவ்ரதா

–சாணக்யநீதி 7-17

வயதான பெண் பதிவிரதையே!

xxx

53.சைசவே பிது: ஆயத்தா: பரதந்த்ரய: சதா ஸ்த்ரிய:

–பாரத மஞ்சரி

குழந்தைப் பருவத்தில் தந்தை காப்பார்; பெண்கள் எப்போதும் பிறரால் காக்கப்படுவர்.

xxx

54.சகீஜன சித்த அனுவர்த்தி அபலா ஜன: பவதி –ம்ருச்சகடிகம்

தோழிகளின் மனதை ஒட்டியே பெண்கள் மந்து செல்லும்.

xxx

  1. ச அபராத் அபி ந இஹ ஸ்த்ரீ ஹந்தவ்யா சுத்த புத்திபி:

———ப்ருஹத் கதா கோச

ஒரு பெண் பயங்கரத் தவறு செய்திருந்தாலும், பெண்களைக் கொல்லவே கூடாது

xxxx

 

Viry Sy 6

56.ஸ்த்ரிய சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஸ்யா:

–சுபாஷித ரத்ன பாண்டாகார

பெண்களின் மனதையும், ஆண்களின் அதிர்ஷ்டத்தையும் கடவுளும்கூட அறிய முடியாது; மனிதர்கள் எம்மாத்திரம்?

xxx

57.ஸ்த்ரியோ ஹி ஸ்த்ரீஷு த்ருஸ்யந்தே சதா சம்பரிமார்கனே

–வால்மீகி ராமாயணம்

பெண்களையா தேடுகிறீர்கள்? கட்டாயம் ஒரு பெண்கள் கூட்டத்தில்தான் இருப்பாள் (அரட்டைக் கச்சேரி)

xxx

58.ஸ்த்ரீணாம் ந ச க்ஷண: யத்ர ந கதா  ஸ்வபராஸ்ரயா

–கதாசரித்சாகரம்

பெண்கள் தங்களைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ பேசாத நிமிடமே இல்லை.

xxx

59.ஸ்த்ரீணாம் பதி: ப்ராணா ந பாந்தவா:

–கதாசரித்சாகரம்

கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல

Xxx

 

  1. ஸ்த்ரீணாம் ப்ரியாலோகபலோ ஹி வேஷ: – குமாரசம்பவம்

தனது காதலனை மகிழ்விக்கவே ஒரு பெண், தன்னை அலங்கரித்துக் கொள்வாள்.

xxx

 

Viry Sy 21

  1. ஸ்த்ரீணாம் பர்த்தா ஹி தேவதா

–வால்மீகி ராமாயணம்

பெண்களுக்கு கணவனே கண்கண்ட தெய்வம்.

xxx

  1. ஸ்த்ரீணாம் யௌவனம் அத்ருவம்

–வால்மீகி ராமாயணம்

பெண்களின் இளமை (வனப்பு) அதிக காலம் நீடிக்காது.

xxx

63.ஸ்த்ரீணாம் ஹி சாஹசர்யாத் பவந்தி சேதாம்சி பர்த்ரு சத்ருசானி—வேணி சம்ஹார

கணவர் கூடவே இருப்பதால், பெண்களும் அவர்களைப் போலவே சிந்திப்பர்.

Xx

64.ஸ்த்ரீணாம் அலீகமுக்தம் ஹி வச: கோ மன்யதே ம்ருஷா – கதா சரித் சாகர

மயங்கவைக்கும் பேச்சுவன்மை உடைய பெண்களின் பேச்சை யார் சந்தேகிப்பர்?

Xxx

65.ஸ்த்ரீணாம் அசிக்ஷிதம் படுத்வம் அமானுசீஷு சத்ருஷ்யந்தே.

–சாகுந்தலம்

பெண்களின் திறமையை மற்ற பெண்ணின பிராணிகளிடத்தில் கூடக் காணலாம்.

Xxx

66.ஸ்த்ரீபி: கோ ந விடம்பித:

யார்தான் பெண்களால் முட்டாள்கள் ஆக்கப்படவில்லை?

 

Viry Sy 19

—தொடரும்…………………………………..

–சுபம்–

 

 

‘எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்வார்கள்’ (Post No 2717)

IMG_3209

Written by london swaminathan

Date: 12 April, 2016

 

Post No. 2715

 

Time uploaded in London :– 14-48

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

பெண்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள்–பகுதி 3

 

((முதல் இரண்டு பகுதிகள் மார்ச் 26, மார்ச் 28 தேதிகளில் வெளியிடப்பட்டன.))

IMG_3210

38.முக்தா: ஸ்வபாவாத் ப்ராயேன யோஷிதாஸ்தரல ஆசயா:

-ராமாயண மஞ்சரி

பெண்கள் இயற்கையிலேயே, இளகிய மனம் படைத்தவர்கள்

xxx

 

39.ய: ஸ்த்ரீணாம் குஹ்யம் ஆக்யாதி தத் அந்தம் தஸ்ய ஜீவிதம்

–ப்ருஹத் கதா கோச

பெண்களின் ரஹசியத்தை வெளியிடுபவன் கதி, சகதி!

(பெண்களின் ரகசியத்தை வெளியிடுபவர் வாழ்க்கையின் முடிவைக் காண்பர்)

xxx

40.யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:

–மனு ஸ்மிருதி 3-56

எங்கே பெண்களை கொண்டாடுகிறார்களோ, அங்கே தெய்வங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

xxx

 

 

IMG_3212

41.யோஷிதம் யத்யபி க்ருத்தா ந நிக்னந்தி இஹ வைரிண:

—-ப்ருஹத் கதா கோச

அதிபயங்கர கோபத்திலும் கூட, எவரும் பெண் கொலை புரியமாட்டார்கள் (பெண்களைக் கொல்லக் கூடாது)

xxx

42.யோஷிதாஞ்ச நதீனாம் ச புனராகமனம் குத:

—–ப்ருஹத் கதா மஞ்சரி

ஓடிப்போன நதியும், ஓடிப்போன பெண்ணும் திரும்புவது நடக்குமா? (சாத்தியமா?)

xxx

  1. ரஹஸ்யம் ச ந வக்தவ்யம் வந்னிதாசு

–கதாசரித் சாகரம்

பெண்களிடம் ரகசியத்தைச் சொல்லாதே

xxx

44.ரூப லுப்தா ஹி யோஷித:

——-ப்ருஹத் கதா மஞ்சரி

பெண்கள் மேக்-அப் போடுவதில்தான் அதிக உற்சாகம் காட்டுவர் ( பெண்கள்,தங்கள் தோற்றத்திலதிக கவனம் செலுத்துவர்)

xxxx

45.வஜ்ரலேபாத் அபித்ருடோ மானினீனாம் ஹி நிஸ்சய:

——-ப்ருஹத் கதா மஞ்சரி

பிடிவாதம்பிடித்த பெண்ணின் முடிவுகள், கான்க்ரீட்டைவிடக் கடினமானவை

(வஜ்ரலேபம் என்பது, கான்க்ரீட் போல கடினமானது)

xxx

 

 

IMG_3179

46.வாமசீலா ஹி நார்ய:

–தூர்த்தநர்த்தக

பெண்கள், இயற்கையிலேயே, குறுக்குபுத்தி உடையவர்கள்.

xxx

47.விதக்தா அபி வஞ்சயந்தே விடவர்ணனயா ஸ்த்ரிய: —-கதாசரித் சாகரம்

பெண்கள் புத்தி கூர்மையானதுதான்; ஆனால் ஆண்களின் புகழ்ச்சியில் அது மழுங்கிவிடுகிறது(அதாவது கள்ளக் காதலனின் புகழ்ச்சியில் ஏமாந்து போவார்கள்)

xxx

48.வித்யதே ஸ்த்ரீசு சாபல்யம் வித்யதே ஞாதிதோ பயம் –வால்மீகி ராமாயணம்

பெண்களின் சபல புத்தியால், சொந்தக்காரர்களிடத்தில் பயம்!

xxx

49.வித்யுதம் க:ஸ்திரீகுர்யாத்கோ ரக்ஷேச்சபலாம் ஸ்த்ரியம் —கதாசரித் சாகரம்

மின்னலை யாராவது அசையாமல் நிறுத்த முடியுமா? பெண்களின் யாராவது மனதை சலனமில்லாமல் செய்ய முடியுமா?

xxx

50.விபரீத அர்த்தவிதோ ஹி யோஷித:

பெண்கள் எளிதில் தப்பான, அர்த்தம் செய்துவிடுவார்கள்.

xxx

 

IMG_3184

to be continued………………………….

பிரார்த்தனையால் பலன் உண்டா? (Post No 2714)

beemasingan5

Written by london swaminathan

Date: 11 April, 2016

 

Post No. 2714

 

Time uploaded in London :–  9-22 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மொகலாய சக்ரவர்த்தி பாபரின் மகன் ஹுமாயுன் நோய்வாய்பட்டார்; படுத்தபடுக்கையாய்க் கிடந்தார். அரண்மனை வைத்தியர்கள் வந்து சிகிச்சை செய்தும் உடல் நலம் தேறவில்லை. அரசவை முதியோர்களைக் கலந்தாலோசித்தார். அவர்களில் சிலர், உங்களிடமிருக்கும் மிக உயர்ந்த பொருளை இறைவனுக்குக் காணிக்கையாக்கினால், உங்கள் மகன் உயிர் பிழைப்பார் என்றனர்.

 

உடனே பாபர் தனது கஜானாவிலுள்ள மிக உயர்ந்த பொருளை எடுத்து வா என்று நிதியமைச்சருக்கு உத்தரவிட்டார். அவர் ஒரு பெரிய பை நிறைய வைரக் கற்களைக் கொண்டுவந்து, அதில் மிகப்பெரிய , நன்கு பட்டைதீட்டப்பட்ட, ஜொலிக்கும் வைரத்தைக் காட்டி, இதுதான் மிக விலை உயர்ந்த பொருள் என்றார். (படத்தில் அதிகாரிகள் விலையுயர்ந்த பொருட்களைக் காட்டுவதைப் பார்க்கலாம்). அந்த வைரத்தை விட, தன்னுடைய உயிர் மதிப்புமிக்கதா? என்று கேட்டார். எல்லா அமைச்சர்களும், மன்னர் மன்னவா! அதில் சந்தேகம் என்ன? என்று பதிலிறுத்தார்கள்.

 

உடனே பாபர், ஒரு கம்பளத்தை விரித்தார்; முழந்தாளிட்டார். இறைவா! என்னுடைய இன்னுயிரை எடுத்துக் கொண்டு, என் மகனை உயிர் பிழைக்க வை என்று வேண்டினார். ஹுமாயூன் படுத்திருந்த படுக்கையை மூன்று முறை வலம் வந்தார். அவருடைய நோய் தனக்கு வந்துவிட்டது என்று பகிரங்கமாக அறிவித்தார்.

 

அவர் சொன்னபடியே பாபருக்கும் நோயும் வந்தது. அவர் சில நாட்களில் இறந்தும் போனார். அவருடைய மகன் ஹுமாயூன் உயிர்பிழைத்துக் கொண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

 

எல்லா மதங்களிலும் பிரார்த்தனைக்கு மதிப்பு உண்டு. அதனால்தான் பிரார்த்தனைக்காகக் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் என்று கட்டி வைத்திருக்கின்றனர்.

 

“நம்பினார் கெடுவதில்லை; இது நான்குமறைத் தீர்ப்பு” – என்று மஹா கவி பாரதி பாடியதும் இதை உறுதி செய்யும்.

-சுபம்-

 

 

கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711)

modi humility

Compiled by london swaminathan

Date: 10 April, 2016

 

Post No. 2711

 

Time uploaded in London :–  8-47

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

‘அறிஞர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்’- வெற்றிவேற்கை

dinamalar humility

ஸ்கட்லாந்தில் எடின்பர்க் நகரத்தில் கல்லூரி முதல்வர் ஜான் கேர்ன்ஸ் பற்றி அறியாதோர் எவருமிலர். ஒருமுறை ஒரு பெரிய பொதுக்கூட்டத்துக்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் அடக்கத்தின் சின்னம்; பணிவின் இலக்கணம்; எளிமைக்கு எடுத்துக்காட்டு.

 

அவர் கூட்டத்தில் நுழைந்தவுடன் ஒரே கரகோஷம்! அவர், இது தனக்காக இல்லை, வேறு யாரோ ஒருவருக்கு என்று நினைத்து பின்னால் திரும்பிப் பார்த்தார். ஊர் பேர் தெரியாத ஒரு குள்ளமான ஆசாமி அவர் பின்னால் வந்தார். பிரின்ஸிபால் கேர்ன்ஸ், தலையை பவ்யமாகக் குனிந்து, சிரம் தாழ்த்தி, கரம் குவித்து, அவரை முன்னே போகவிட்டார். அவர்தான் அன்றைய கூட்டத்தின் கதாநாயகர் என்று கேர்ன்ஸ் நினைத்தார். இப்படி அவர் பணிவுடன் நடந்ததைப் பார்த்த மக்கள் கூட்டம் விண்ணதிர கைதட்டி ஆரவாரம் செய்தது. அந்த மண்டபமே இடிந்து விழும் அளவுக்கு கரகோஷம்; பின்னர்தான் தெரிந்தது தனக்குத் தான் அந்த வரவேற்பு என்பது! கூட்டத்தை ஏற்பாடு செய்தோர், கேர்ன்ஸை மரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் – வள்ளுவன் குறள் 125.

 

Xxxx

 

Park Ave Lady_profile

முற்றும் உணர்ந்தவரில்லை முழுவதூஉங்

கற்றனம் என்று களியற்க – சிற்றுளியாற்

கல்லும் தகரும், தகரா கனங்குழாய்!

கொல்லுலைக் கூடத்தினால் (நீதிநெறி விளக்கம்)

 

அடக்கமில்லாப் பெண்!

ஆங்கிலப் பேரகராதியை முறையாகத் தயாரித்து பெரும்புகழ் பெற்றவர் சாமுவேல் ஜான்சன். அவருடைய அறையில் சுவையான பல விஷயங்கள் விவாதிக்கப்படும். ஒரு முறை, அந்த விவாதம் ‘பலான’ விஷயங்களை நோக்கித் திசை திரும்பியது. உடனே ஒரு பெண்மணி, மிகவும் நல்ல பத்தினி போல, முகத்தைச் சுழித்துக்கொண்டு, வெளியேறினார்.

உடனே ஜான்சன் சொன்னார்:

“இப்போது போனாளே, ஒரு பதிவிரதை, அவள்தான், இந்த அறையிலேயே அடக்கமில்லாத பெண்”.

 

–சுபம்–

 

“உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடவா?” (Post No 2708)

fire

Compiled by london swaminathan

Date: 9 April, 2016

 

Post No. 2708

 

Time uploaded in London :–  10-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Modesty Anecdotes (Translated by London swaminathan)

 

அடக்கம், பணிவு பற்றி மேலும் சில துணுக்குகளைப் பார்ப்போம்:-

court

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

பிரான்சு நாட்டில் லியோனில் ஒரு வழக்கு நடந்தது. அதைப் பார்க்க நீதி மன்றத்துக்கு வழக்கத்திற்கு மாறாக, நிறைய பெண்கள் வந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையில் வரும் வாதங்கள் பெண்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது நீதிபதிக்குத் தெரியும். ஆகவே அவர் சொன்னார்: “இன்றைய வழக்கின் போக்கு, தன்மை தெரியாமல் இன்று அதிகமான பெண்கள் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கண்ணியமிக்கப் பெண்கள் அனைவரும் கோர்ட்டின் அறையிலிருந்து வெளியேறுமாரு கேட்டுக் கொள்கிறேன்”.

இப்படிச் சொன்ன பிறகும் ஒரு பெண் கூட வெளியேறவில்லை. நீதிபதிக்கு ஒரே கோபம். மீண்டும் சொன்னார்:

“காவலரே! இங்கு வருக! கண்ணியமான பெண்கள் எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். இதோ இங்கே இருக்கிறதே, இதுகளை வெளியே தள்ளுக” என்றார்.

அந்தப் பெண்கள் அனைவருக்கும் ‘கல்தா’ கிடைத்தது!

‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’, ‘அடியாத மாடு படியாது’ என்பன தமிழ்ப் பழமொழிகள். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

Xxx

 

முதல் வரிசையில் எந்த ‘சீட்’?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ்யூஜஸ் என்பவரை நியூயார்க் நகர பத்திரிகையாளர்கள் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அதே விருந்துக்கு பல வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் அழைக்கப்பட்டி ருந்தனர். மந்திரியை எந்த இடத்தில் உட்கார வைப்பது என்பது அறியாது அவர்கள் திகைத்தனர். இதற்கு நல்ல தீர்வு, அவரிடமே கேட்பதுதான் என்று எண்ணி, தயங்கித் தயங்கி, அவரிடமே போய்க் கேட்டும் விட்டனர். இதற்குக் காரணம் அப்போதுதான் பத்திரிக்கைகளில், இடம் பற்றிய சர்ச்சை, வரிசை அறிந்து ஒழுகாமை என்பதெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.

 

சங்க காலப் புலவர்களில் பலர், மன்னர்கள் தங்களுக்கு முதல் மரியாதை செய்ய வில்லை என்று கோபித்துக்கொண்டு பாடிய பாடல்கள் புற நானூற்றில் உள்ளன. வரிசை அறிந்து ஒழுகல் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.

 

“மாண்புமிகு அமைச்சரே! உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடுகிறோம். எந்த இடத்தில், யாருக்கு அருகில் உங்களுக்கு இடம்போடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள், மரியாதை கலந்த தொனியில், கேட்டனர்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:

“நான் முதலில் இருக்க விரும்புவது ஒரே இடத்தில்தான்; தீவிபத்து ஏற்பாட்டால், முதலில் நிற்க (வெளியே ஓடுவதற்காக) விரும்புவது நான்தான். மற்ற இடங்களில் எங்கே இடமிருந்தாலும் பரவாயில்லை.” ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

“எனக்கு ஏன் சிலை வைக்கவில்லை?” (Post No.2705)

walker art gallery

Picture: Walker Art Gallery, Liverpool

Compiled by london swaminathan

Date: 8 April, 2016

Post No. 2705

Time uploaded in London :–  10-05 AM

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Modesty Anecdotes (Translated by London swaminathan)

 

0_photographers_alinari_rome

Rome Art Gallery

பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் சில சம்பவங்கள்:–

 

காடோ என்பவர் புகழ்பெற்ற ரோமானிய ராஜ தந்திரி. 2000 ஆண்டுகளுக்கு முன், இதாலியில், ரோம் நகரில் இருந்த அரசியல்வாதி.அவர் சிலை வைப்பது பற்றிச் சொன்னது மிகவும் பிரபலமான பொன்மொழியாகும்:-

 

“எனக்கு சிலை வைப்பதை நான் விரும்பவில்லை. எவன், எதற்காக, இந்த ஆளுக்குச் சிலை வைத்தான்? என்று கேட்பதைவிட, இப்பேற்பட்ட பெரியவருக்கு இன்னும் சிலை வைக்கவில்லையா? ஏன்? என்று மக்கள் கேட்பதையே நான் விரும்புகிறேன்”.

Xxx

da vinci

குறைகுடம் கூத்தாடும்; நிறைகுடம் தழும்பாது

 

லியார்னோடோ டா வின்சி என்பவர் பல கண்டுபிடிப்புகளின் தந்தை, பல ஓவியங்களை வரைந்தவர். அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட இதாலிய அரசர் அவரைப் பார்க்க வந்தார். உடனே லியார்னாடோ மிகவும் கஷ்டப்பட்டு எழுந்திருக்க முயன்றார். தலையை எவ்வளவு தூரம் தூக்க முடியுமோ அத்தனை உயரம் தூக்கி, “நான் கலைத் துறையில் இன்னும் எவ்வளவோ செய்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் மனிதனையும் கடவுளையும் அவமதித்துவிட்டேன்” என்று பணிவுடன் கூறிவிட்டுத் தலையைச் சாய்த்தார்.

லியார்னாடோ செய்ததோ மகத்தான சாதனைகள். ஆனால் அவருடைய பணிவோ அதையும்விட மகத்தானது.

Xxx

பீதோவன் மியூசியத்தில் பியானோ கருவி

paderewsi_readmore

Picture of Padrewski

 

மேலை உலகத்தின் மாபெரும் இசை மேதை பீதோவன். அவர் பயன்படுத்திய இசைக் கருவிகள் ஜெர்மனியில் பான் நகரத்தில், அவரது சொந்த வீட்டில் உள்ள, ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு அமெரிக்க மாணவர் குழு அதை சுற்றிப் பார்க்கவந்தது. அதில் ஒரு பெண்மணி, அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரிடம் போய்,  தனது கவர்ச்சி சக்திகளையெல்லாம் பயன்படுத்தி மிகவும் கொஞ்சலாக, ‘நான் இந்தக் கருவியைக் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாமா?’ என்று கேட்டார். பாதுகாப்பாளரும் (மியூசியம் க்யூரேட்டர்), ‘அதற்கென்ன ,வாசியுங்களேன்’ என்றார். அந்தப் பெண்ணும் பீதோவன் இயற்றிய புகழ்பெற்ற, ‘மூன்லைட் சொனாட்டா’வை இசைத்து முடித்துவிட்டு, பெருமிதத்துடன், “உலகப் புகழ்பெற்ற இசை மேதைகள், என்னைப் போல இந்த பியானோவை வாசித்திருப்பார்களே” என்றார்.

 

அந்தப் பகுதியின் பாதுகாப்பாளரோ மிகவும் அமைதியாகச் சொன்னார்: “மேடம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெடெரொவ்ஸ்கி இங்கே வந்திருந்தார். இதன் பக்கத்தில் வந்து, பயபக்தியுடன் இதைப் பார்த்தார். கடவுளே! இதைத் தொடும் தகுதி எனக்கு இல்லை” என்று சொல்லிவிட்டுப் போனார்.

பெடெரவ்ஸ்கி, போலந்து நாட்டைச் சேர்ந்த இசை மேதை. உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர். அவருடய பணிவையும் அடக்கத்தையும் பாருங்கள். பீதோவனின் பியானோவைத் தொடக் கூட அஞ்சினார். (நான் இதை ஏற்கனவே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன்- லண்டன் சுவாமிநாதன்).

beethoven piano

–சுபம்–

 

 

 

 

“மந்திரி பதவி விலகினால் விலகட்டுமே! ரொம்ப நல்லது” (Post No.2702)

lincoln speeches

Compiled by london swaminathan

Date: 7 April, 2016

 

Post No. 2702

 

Time uploaded in London :–  10-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அடக்கம் அமரருள் உய்க்கும் – குறள் 121

அடக்கத்தின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்

ஆப்ரஹாம் லிங்கன் என்பவர் அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிகவும் புகழ்பெற்றவர்; நேர்மையானவர். சமத்துவத்துக்குப் போராடியவர். கறுப்பின மக்களையும் மதித்தவர். அவர் வாழ்நாள் முழுதும் பல சுவை மிகு சம்பவங்கள் நடந்தன. அவருடைய ஒவ்வொரு பேச்சும் மேற்கோள் காட்டக்கூடிய பொன் மொழிகள்!

லிங்கனின் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சர் பதவியை சால்மன் சேஸ் என்பவர் வகித்து வந்தார். ஒரு முக்கிய விஷயத்தில் எல்லா அமைச்சர்களுடனும் இவர் கருத்து வேறுபட்டார். உடனே பதவியை ராஜினாமாச் செய்தார்.

லிங்கனின் ஆலோசகர்கள், “ஐயன்மீர்! சேஸ் அவர்களின் பதவி விலகல் கடிதத்தை ஏற்காதீர்கள். சேஸின் சேவை நாட்டுக்குத் தேவை” – என்று அறிவுரை வழங்கினர்.

உடனே ஆப்ரஹாம் லிங்கன் சொன்னார்:

“அடடா! என்ன தப்புக் கணக்கு இது! ஆனால் உங்களைச் சொல்லிக் குற்றமில்லை; நானும் ஒரு காலத்தில் இப்படித்தான் எண்ணியிருந்தேன்; இது சுத்த அபத்தம்.”

 

“நாம் எல்லோரும் நாளைய தினம் பதவியை விட்டு விலகினோம் என்று வைத்துக் கொள்வோம்; ஒரு வாரத்துக்குப் பின்னர் திரும்பி வருவோம்; நம்முடைய இடத்தில் புதியவர்கள் இருப்பார்கள்; நாம் என்ன செய்தோமோ அதையே அவர்களும் திறம்பட செய்வார்கள்; பல பதவிகளில், இப்போதைய மந்திரியைவிட, மேலும் திறமையானவர்கள் கூட இருப்பார்கள்”

“இதைச் சொல்லும்போது எனக்கு ஐரிஷ்காரர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவருடைய முடிபு இதுதான்: ‘இந்த நாட்டில் ஒருவனைப் போலவே மற்றவனும் சிறந்தவன்தான். இன்னும் சொல்லப் போனால் ஒருவன் மற்றொருவனை விஞ்சுமளவுக்குத் திறமைசாலியும் கூட. இந்த அரசாங்கம், எந்த ஒரு தனி மனிதனையும் சார்ந்து நிற்கவில்லை”. ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

 

Xxx

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் குறள் 121

ஒரு பிரமுகர் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்தார். அப்போது அமெரிக்க ஜானாதிபதி ஆப்ரஹாம் லிங்கன், தனது பூட்சுக்கு கறுப்பு வண்ணம் ஏற்றி பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

“அடக் கடவுளே! இது என்ன கஷ்டகாலம்; ஜனாதிபதியான நீங்கள் கையெல்லாம் கறுப்புச் சாயம் ஏற, உங்களுடைய பூட்சுகளுக்குப் பாலீஷ் போடுகிறீர்கள்!” – என்று எள்ளி நகையாடினார்.

லிங்கன் அவருக்கே உரித்தான அங்கத பதில்களை அள்ளி வீசினார். “பின்ன என்ன? நான், வேறு யார் பூட்சுகளுக்குப் பாலீஸ் போட வேண்டும் என்கிறீர்கள்?”

வந்தவர் வாயடைத்துப் போனார்.

அடக்கத்தின் சின்னம் ஆப்ரகாம் லிங்கன்.

பணிவின் இலக்கணம் ஆப்ரகாம் லிங்கன். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.

–சுபம்–

xxx