மரண தண்டனை மன்னன் ஹமுராபி (Post No.5956)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:19 JANUARY 2019


GMT Time uploaded in London – 10-52 am
Post No. 5956
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

–subham-

அக்பரின் சாப்பாட்டில் 40 வகை உணவுகள் (Post No.5931)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date:13 JANUARY 2019
GMT Time uploaded in London –19-42
Post No. 5931
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

tags அக்பர், உணவு, புறா, குரங்குக் கோவில்

ஆரிய- திராவிட சர்ச்சை பற்றி ராஜாஜி (Post No.5913)

Compiled by London swaminathan

swami_48@yahoo.com


Date: 10 JANUARY 2019
GMT Time uploaded in London – 19-49
Post No. 5913
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial 

1930ஆம் ஆண்டில் சிறைச் சாலையில் தம்முடன் இருந்தவர்களுடன் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி பேசிய விஷயங்களை அவரே ஒரு கட்டுரைத் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அந்தப் புஸ்தகத்தை  1944ம் ஆண்டில் காரைக்குடி புதுமைப் பதிப்பகம் அச்சிட்டுள்ளது. இதோ அந்த  இணைப்பு:

–subham–

மாபாதகன் ஸ்டாலின்! – 2

Written by S Nagarajan


Date: 5 JANUARY 2019


GMT Time uploaded in London – 7-35 am


Post No. 5884

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

picture of prison

tags– மாபாதகன் ஸ்டாலின்! – 2

–subham–

மாபாதகன் ஸ்டாலின்! – 1 (Post No.5879)

Written by S Nagarajan


Date: 4 JANUARY 2019


GMT Time uploaded in London – 5-46 am


Post No. 5879

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Hitler stamps from Germany

tags–

tags– ஸ்டாலின்

–subham–

மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்? (Post No.5831)

Hamurabi and Sun God Shamash

Research Article written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 25 December 2018
GMT Time uploaded in London – 16-00
Post No. 5831


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

பழங்கால இந்தியாவில் நிறைய தர்ம சாஸ்திரங்கள் (சட்ட நூல்கள்) இருந்தன. அவைகளில் சிறந்தது மநுதர்ம சாஸ்திரம் என்பதால் எல்லோரும் தங்களை மநுநீதி மன்னன் என்று புகழ்ந்து கொண்டனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனுநீதிச் சோழனும் அவர்களில் ஒருவன். பாண்டியர் செப்பேடுகளும் மநு நீதி வழுவாது ஆண்ட மன்னர்கள் என்று பாண்டியர்களைப்  புகழ்கின்றன. மநு என்பவர் ரிக் வேத காலத்தில் வாழ்ந்தவர். 4000 முதல் 10,000 ஆண்டுகள் வரை பழமையுடைத்து என்று அறிஞர்களால் போற்றப்படும் ரிக்வேதத்தில் மநுவின் பெயர் உளது. கிருஷ்ணனும் பகவத் கீதையின் நாலாவது அத்தியாயத்தின் முதல் ஸ்லோகத்தில் தான் முன்னொரு காலத்தில் விவஸ்வானுக்கு உபதேசித்ததை அவருடைய மகனான வைவஸ்வத மநுவுக்கு உபதேசித்ததாகவும் அவர் சூரிய குல முதல் மன்னனான இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்ததாகவும் அர்ஜுனனிடம்

சொல்கிறார். ஆக மஹாபாரதத்துக்கும் முந்தையவர் மநு. அதாவது கி.மு 3102க்கும் முன்னர்!

ஆக மநுவின் காலம் மிகப்பழமையா னது. ஆனல் இப்போதுள்ள மநு நீதி நூல் சூத்திரர்களுக்கு எதிராக 40, 50 ஸ்லோகங்கள் சேர்க்கப்பட்ட UPDATED EDITION அப்டேடட் எடிஸன். அதாவது புதிய பதிப்பு.

மநுவும் ரிக் வேதமும் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பற்றிக் கதைப்பதில்லை. மநுவும் ரிக்வேதமும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் ஸரஸ்வதி நதி பற்றிப் பேசுகின்றன. ஆகவே மநு என்பவர்—அதாவது ஒரிஜினல் மானவ தர்ம சாஸ்திரத்தை எழுதிய வைவஸ்வத மநு — மிகப்பழையவர். ஆயினும் பாலைவனத்தில் கெட்டுப் போகாமல் இருக்கும் ஹமுராபியின் களிமண் பலகைகளைக் கண்டு மகிழ்ந்த மேலை நாட்டினர் ஹமுராபியின் சட்ட புஸ்தகததை விதந்து ஓதுவர். இது மநு பற்றி அறியாததால் வந்த தோஷம்!

ஹமுராபி யார்?

ஹமுராபி என்னும் மன்னன் பாபிலோனிய அரசன். அவன் கி.மு.1792-ல் அரசாட்சி செய்யத் துவங்கினான். அவனுக்கு முன்னரே பாபிலோனியா, சுமேரியா முதலிய அரசுகளின் கீழ் சட்டங்கள் இருந்தபோதும் ஹமுராபி அதை ஒரு முறைப்படுத்தி கல்வெட்டிலும், களிமண் பலகைகளிலும் எழுதிவைத்தான். அதில் சூசா (SUSA IN IRAN) என்னும்  இடத்தில் அவன் எழுப்பிய பெரிய கல்தூணில் செதுக்கி வைத்தது முக்கியமானதாகும். ஏனெனில் அது நிறுவப்பட்ட இடத்திலிருந்து அகற்றப்பட்டு வேறிடத்தில் இருந்ததை பிரெஞ்சு அதிகாரிகள் பாரீஸிலுள்ள லூவர் மியூஸியத்தில் கொண்டு வைத்தனர்.இதனால் ஹமுராபியின் புகழ்  பரவியது.

‘பல்லுக்குப் பல்,கண்ணுக்குக் கண்’ என்று

தண்டனை கொடுப்பது அவன் வழக்கம்..

முதலில் மநுவின் சட்ட நூலுக்கும் ஹமுராபி சட்டத்துக்கும் உள்ள மேம்போக்கான ஒற்றுமைகளைக் காண்போம்:

மநு என்பவன் விவஸ்வானின் மகன்; விவஸ்வான் என்பவன் சூரிய பகவான். விவஸ்வானின் புதல்வன் எ ன்பதால்தான் வைவஸ்வத மநு என்று பெயர் பெறுகிறான். அவனுக்கு முன்னரும் பல மநுக்கள் இருந்தனர். மநுவிடமிருந்து சூரியகுல முதல் மன்னனான இக்ஷ்வாகுவுக்கு, தான்

யோக விஷயங்களைச் சொல்லிக் கொடுத்ததாக கிருஷ்ணன் கூறுகிறார் (கீதை 4-1). இங்கு சூரியன் – மநு – சட்டம் பற்றிய தொடர்பு தெரிகிறது.

.

முதல் ஒற்றுமை

இது போலவே பாபிலோனியாவிலும் ஹமுராபி நிறுவிய கல்தூணில் ஷாமாஷ் என்னும் சூரியதேவனே ஹமுராபிக்கு உபதேசிக்கிறார்

ஹமுராபி என்பதை சமர+ரவி (போர் சூரியன்) என்பதன் திரிபு என்றே நான் கருதுகிறேன்.

இரண்டாம் ஒற்றுமை

மநுவின் புஸ்தகத்தைப் பார்த்து, ஹமுராபியும் தனது புஸ்தகத்தை 12 பிரிவாகப் பிரித்தார். மநு தர்ம நூலிலும் 12 அத்தியாயங்கள்தான்.

மூன்றாம் ஒற்றுமை

சங்கராச்சார்யார் முதலிய மதிக்கத்தக்க பெரியோர்களிடம் பக்தர்கள் பேசுகையில் தம்முடைய எச்சில் அவர்கள் மீது தெறிக்காமல் இருக்க பயபக்தியாக வாய் புதைத்து– வாயில் கை வைத்துக் கொண்டு பேசுவர்- இது போல ஷாமாஷ் என்னும் சூரிய/ நீதி தேவதையிடம் சட்டங்களைப்பெறும் ஹமுராபி பவ்யமாக நிற்பது சிலைகளில் காண்பிக்கப்பட்டுள்ளது.

நாலாம் ஒற்றுமை

பிற்காலத்தில் அசோக சக்ரவர்த்தியும் ஹமுராபி போல பொது இடங்களில் தர்ம விதிக்ளை மக்கள் பேசும் பாலி மொழியில் எழுதி வைத்தார். ஹமுராபியும் களிமண் பலகை தவிர பெரிய கல்வெட்டுகளில், மக்கள் பேசும் அன்றாட அக்கடியன் மொழியில் எழுதி வைத்தார்.

அசோகன் இப்படி செய்தது ஹமுராபியைப்  பார்த்து என்று சொல்லுவதைவிட இப்படி ஒரு வழக்கம் இந்தியாவிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அசோகன் நிறுவிய பல்லாயிரம் கல்வெட்டுகளில் இன்று 30+ மட்டுமே உள்ளன. இது போல, பழங்கால இந்திய கல்வெட்டுகள் பருவக் கோளாற்றினாலும் வெளிநாட்டுக் காட்டுமிராண்டிப் படை எடுப்புகளினாலும் அழிந்தன என்று கருதலாம்.

ஐந்தாம் ஒற்றுமை

ஹமுராபி கல்வெட்டில் 282 சட்டங்கள் மட்டுமே உள. இவை எல்லாம் மநுவும் பிரஸ்தாபித்த விஷயங்களே.ஆனால் மநுவோ பாரதப்  பண்புகளைக் காட்டி ஒவ்வொன்றையும் விவரிக்கிறான். ஹமுராபி அப்படி எதுவும் சொல்லாமல் சட்டங்களை மட்டும் சொல்கிறான்.

ஆறாம் ஒற்றுமை

ஷமாஷ் என்னும் நீதி தேவதை,சூரிய தேவன்; ‘உடு’ என்றும் சுமேரியாவில் அழைக்கப்பட்டான். ‘உடு’ என்பது நட்சத்திரம், விண்மீன் என்றும் தமிழ் .ஸம்ஸ்க்ருத்தில் புழக்கத்தில் உள்ளது

ஏழாம் ஒற்றுமை

ஹமுராபி அம்மோரைட் என்னும் இனத்தை சேர்ந்தவன்.அமர என்பது மலை நாடு, பர்வதப் பிரதேசம் என்று புராணங்கள் சொல்லும்

வேற்றுமை

ஹமுராபி ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’லென்னும் பழிவாங்கும் சட்டத்தைச் சொல்கிறான். மநுவோ ஆளுக்குத் தக,நேரத்துக்குத் தக, சூழ்நிலைக்குத் தக தண்டனை கொடு என்று ஏழாம் அத்தியாயத்தில்  சொல்கிறான். பசுவின் கன்று இறந்ததால் அதுபட்ட துயரத்தைக் கண்டு தன் மகனையே பலி கொடுத்த மநு நீதிச் சோழன் கதை ஹமுராபி சட்டம் போலக் காணப்பட்டாலும் அனைவரும் தடுத்தும் மன்னன் செய்த செயல் அது. இறுதியில் அனைவரும் உயிர் பெற்று எழுந்த அற்புதமும் நிகழ்ந்தது.

TAGS–  ஹமுராபி, மநு, சட்டப்புத்தகம், ஒற்றுமை, சூரிய தேவன்

–subham–

தமிழ் படித்த ரஷ்யர்; ரஷ்யாவில் இந்திய வணிகர்கள்! (Post No.5824)

coin with Nikitin image

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 24 December 2018
GMT Time uploaded in London – 9-16 am
Post No. 5824


Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 statue of Nikitin

இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதன் மெகஸ்தனீஸ், சீன யாத்ரீகர்கள் யுவான் சுவாங் பற்றியெல்லாம் நாம் அதிகம் படித்திருக்கிறோம். ஆனால் ரஷ்ய-இந்திய உறவுகள் பற்றி அதிகம் அறிந்ததில்லை; இதோ சில சுவையான தகவல்கள்:-

ரஷ்ய மொழியில் நிறைய ஸம்ஸ்க்ருத மொழியின் செல்வாக்கைக் காணலாம். முன்காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் தாவர வகைகள்,பிரணிவகைகளின் குறிப்புகள் நிறைய உள்ளன.

இதன் பிறகு பர்லாம்- ஜோஸப் கதைகளில் புத்தரின் வாழ்க்கை பயன் பத்தப்பட்டுள்ளது.

முதலில் ரஷ்யர்களுக்கு இந்தியாவுடன் நேரடி தொடர்பு இல்லை. எல்லாம் பாரஸீகம் (ரான்) மூலமாகவே ஏற்பட்டது.

இந்ந்தியாவின் ஜாதி முறைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன ரஷ்ய நாட்டுப்புற கதைகளில் தாக்கத்தை உண்டு பண்ணின. ஈரானிய ,பல்கேரிய படைப்புகள் இதில் பெரும் பங்காற்றின.

மஹா அலெக்ஸாண்டரின் (The Romance of Alexander by Pseudo Callisthenes)  காதல் லீலைகள் என்ற புத்தகத்தில் 11, 12 ஆவது நூற்றாண்டு தொடர்புகள் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து போலந்து, ஹாலந்து நாட்டினர் எழுதிய பழைய பூகோளப் புஸ்த்கங்களிலும்  பல விஷயங்கள் உள்ளன.

தொல்பொருட் துறை சான்றுகள்

ரஷ்யாவின் கீவ் (Kiev இப்போது உக்ரைன் நாட்டின் தலைநகர்) கிடைத்த நாணயங்களும், பிற பொருட்களும் இந்திய- ரஷ்யத் தொடர்பை உறுதிப்படுத்தின. அவை எட்டு ஒன்பது நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை.

வால்கா (River Volga) நதியின் முகத்வாரத்திலுள்ள இடில்-கஜரான் (Itil-Kazaran) துறைமுகம் வழியாக நடந்த வணிகத்தை அராபிய வட்டாரங்கள் உறுதிப்  படுத்துகின்றன.

14- ஆவது நூற்றாண்டில் இந்திய சுல்தான்கள், ரஷ்யாவுடன் வணிகத்தொடர்பு வைத்தனர். கியாசுதீன் துக்ளக் (1320-25)ஆட்சியில் , அவருடைய ராணுவத்தில், ரஷ்யர்கள் இருந்ததை ‘துக்ளக்நாமா’ என்னும் நூல் குறிப்பிடுகிறது.

ரஷ்ய அரசர் வாஸிலி இவனோவிச்சின் (Vasily Ivanovich) அரசவைக்கு, மொகலாய மன்னர் பாபரின் தூதர் க்வாஜா ஹுஸைன் 1532-ல் வந்ததை நிகனோவ்ஸ்காயா க்ரானிக்கிள் என்னும் நூல் காட்டுகிறது.

இவான் தி டெர்ரிபிள் (Ivan The Terrible, 1533-84) என்ற ரஷ்ய மன்னர் ஆட்சிக் காலத்தில், இந்தியாவுடனான வணிகத் தொடர்பு வளர்ந்தது. மாஸ்கோவில் இந்தியப் பொருட்கள் குவிந்தன.

ஓர்ஸ்க்(Orsk)  என்னும் இடத்தில்கிடைத்த வெண்கலப் பாத்திரத்தில் 16ம் நூற்றாண்டு குருமுகி லிபி எழுத்துக்கள் காணப்படுகின்றன.

1615-16-ல் இந்திய வணிகர்கள் ஆஸ் ட் ரா கான் (Astrakhan) என்னும் இடத்தில் ரத்தினக் கற்கள், வாசனைத் திரவியங்கள் முதலியவற்றில் வியாபாரம் செய்ததோடு லேவாதேவி (வட்டிக்கு கடன் கொடுக்கும் வியாபாரம்) செய்ததும் தெரிகிறது.

பீட்டர் தி க்ரேட் (Peter The Great, 1689-1725) காலத்திலும் வணிகம் வளர்ந்த செய்திகள் நிறைய  உள்ளன.

Voyages Beyond Three Seas by A Nikitin

இந்தியாவுக்கு விஜயம் செய்தது பற்றி (1471-1474)

மூன்று கடல் கடந்த யாத்திரை என்ற நூலில் அபனாஸி நிகிடின் என்பவர் எழுதினார். இதுதான் ரஷ்யாவில் வெளியான இந்தியா பற்றிய முதல் விரிவான நூல். அவர் வால்கா நதிக் கரையிலுள்ள் ட்வேர் (Tver- Kalinin காலினின்) என்ற ஊரைச் சேர்ந்த வணிகர். இந்த நூல் புகழ்பெற்றதால் இதை சோபிஸ்காயா க்ரானிக்கிள் என்ற தொகுப்பில் சேர்த்துவிட்டு அந்த படைப்புகளை, நிகிடின் இறந்த பின்னர் மாஸ்கோவுக்குக் கொண்டு சென்றனர். அந்த அளவுக்கு  அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அவர் எல்லா வார்த்தகர்களும் செல்லும் வழியில், முதலில் இரானுக்குச் சென்றார். அங்கிருந்து இந்தியாவுக்குப் பயணமானார். வர் எதையும் உன்னிப்பாக கவனிப்பவர். ஆகையால் எந்தெந்தப் பொருட்கள் எங்கு விளைகின்றன, அவற்றின் விலை என்ன, வாசனைத் திரவியங்கள், மிளகு ஆகியன எங்கு அதிகம் கிடைக்கும், குதிரைகளின் விலை என்ன– என்றெல்லாம் எழுதிவைத்தார். அவர் வெறும் வியாபாரி அல்ல. அறிவு வேட்கை உடையவர். ஆகையால் அனைத்துத் தகல்களையும் சேகரித்துப் பதிவு செய்தார்.

கான்ஸ்டாண்டிநோபிளில் உள்ள ஜஸ்டீனியச் சக்ரவர்த்தி சிலையை இந்திய சிலைகளோடு ஒப்பிடுவார். இந்தியப் பண்பாடு, விஜயநகர சாம்ராஜ்யம், பாமினி சுல்தான் ஆட்சி ஆகியன பற்றி அவர் குறிப்பிட்டவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாகும்.

பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்

ரஷ்ய அதிபர் நிகிடா குருஸ்ஷேவ் 1955ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அப்போது பிரதமர் நேருவிடம் நிகிடின் (Nikitin)  காலம் முதலே நம் இரு நாடுகளும் தொடர்பு கொண்டிருந்தன என்று பெருமை பேசினார்.

அட அப்படியா! அவருக்கு ரஷ்யாவில் உரிய கௌரவம் அளிக்கப்பட்டதா? என்று நேருஜி கேட்டார்.

அட, அதை ஏன் கேட்கிறீர்கள்? அவர் பிறந்த ட்வேர் (Tver) என்னும் ஊரில் அவருக்கு சிலையே வைத்திருக்கிறோம் என்றார் குருஷேவ்.

உண்மையில் சிலை எதுவும் இல்லை!

பின்னர் குருஷேவ் ஒரு போன் அடித்து உடனே நிகிடினுக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யுங்கள்; நேருஜி ரஷ்யா வருவதற்குள் சிலை இருக்க வேண்டும் என்று கட்டளை போட்டார். பின்னர் என்ன?

கம்யூனிஸ்ட் தலைவர் சொல்லுவது போல சிலை வைக்காவிடில் அதிகாரிகளின் தலை அல்லவா போகும்.

இதுதான் நிகிடின் சிலை உருவான வரலாறு

Stamps with Nikitin’simage

சென்னைக்கு வந்த லெபிடேவ்

கல்வித்துறையில் உருவான இந்திய- ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் படைப்புகள் மிகப்பல.

முக்கியமான ஒரு விஷயம் ஜெராஸிம் லெபிடேவ் (Gerasim Lebedev) 1749-1817) வின் ஈடுபாடு ஆகும். இவர் முதலில் வந்தது சென்னை மாநகருக்கு. அங்கு இரண்டு ஆண்டுகள் தங்கியதால் கொஞ்சம் தமிழ் கற்றார். ஆனால் பின்னர் கல்கத்தாவுக்குச் சென்று வங்காளி மொழியில் மூழ்கிவிட்டார். ஏற்கனவே பிரெஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் தெரிந்த அவருக்கு மொழி  ஆராய்ச்சியில் ஈடுபாடு ஏற்பட்டதில் வியப்பு இல்லை.

லெபெடேவ் பிறந்த ஊரிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சென்றவுடன் இசைத்துறையில் ஆர்வம் கொண்டார். தானாகவே வயலின் கற்றுக் கொண்டார். ஒரு இசைக் குழுவில் சேர்ந்து வியன்னா வரை சென்றார். பின்னர் அவர் ஆங்கில ‘பாண்டி’ல் (English Band) சேர்ந்தவுடன் 1785ம் ஆண்டில் சென்னைக்கு வந்தார். அந்தக் குழுவுக்கு அப்போதைய சென்னை மேயர் ஒரு வரவேற்பும் கொடுத்தார்.

ஈராண்டுக் காலம் சென்னையில் தங்கிய அவர் கொஞ்சம் தமிழ் கற்ற பின்னர், கல்கத்தாவுக்குச் சென்று வங்காளி மொழியையும், ஸம்ஸ்க்ருதத்தையும் பயின்றார்.

அவர் பிராமணர்கள் பற்றியும் இந்திய கலாசாரம், மதம் பற்றியும் விரிவாக எழுதினார். அவருடைய நூல்கள்:

A GRAMMAR OF THE PURE AND MIXED EAST INDIAN DIALECTS (1801,LONDON)

AN IMPARTIAL CONTEMPLATION OF THE EAST INDIAN SYSTEMS OF BRAHMINS (1805, ST.PETERSBURG)

A COLLECTION OF HINDUSTANI AND BENGALI ARRIAS

BENGALI DICTIONARY

கலகத்தாவில் கோரக்நாத் தாஸ் என்பவரிடம் வங்காளி மொழியைக் கற்றுக்கொண்டு அவருக்கு வயலினும் ஐரோப்பிய இசையும் கற்பித்தார். முதல் முதலில் இந்திய ராகங்களை மேலை இசைக் கருவிகளில் புகுத்தியவர் லெபிடேவ். ஐரோப்பிய பாணியில் நாடக அரங்கை உருவாக்கி வங்காளி நடிகர்களை நடிக்க வைத்தார். வங்க மொழிப் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்து வங்காளி-ரஷ்யன் அகராதியையும் வெளியிட்டார். ரஷ்யாவுக்குத் திரும்பிச் செல்லும் வழியில் லண்டனில் தங்கி இந்திய மொழிகள் பற்றி நூல் வெளியிட்டார்.

ரஷ்யா சென்ற பின்னர், செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கில் தேவ நாகரி, வங்காளி லிபிக் அச்சுக்கள் கொண்ட அச்சகம் வைத்து நூல்களைலை எவெளியிட்டார். வங்காளி மொழிக்கு இவர் செய்த சேவையை நினைவு கூறும் முகத்தான் கல்கத்தாவில் இவரது நினைவுப் பலகைகளும் எழுப்பப்பட்டுள்ளன.

1795-ல் ஹிந்து தியேட்டரை (நாடக அமைப்பு) உருவாக்கினார்.

நிகிடின், லெபிடேவ் ஆகியோர் இந்திய பண்பாட்டுக்கு ஆற்றிய சேவை சிறப்பானவை.

ஏசு கிறிஸ்து இந்தியா வருகை

ஏசு கிறிஸ்து இந்திய முனிவர்களிடம் பாடம் கற்றதை தற்கால பைபிளில் வெட்டிவீட்டனர்.அவருடைய 20 ஆண்டு இளமைப் பருவத்தைச் சொல்லாமல் ஏசு, மீண்டும் வந்தார் என்று பைபிள் சொல்கிறது அவர் 12 ஆண்டுகளுக்கு இமய மலையில், முனிவர்களிடம் பாடம் கேட்டதாக நிகலஸ் நோட்டோவிச என்ற ரஷ்ய பயணி எழுதிவைத்துள்ளார். அவர் திபெத்திய நூல்களை இதற்கு ஆதாரமாகக்  கொண்டுள்ளார்.

tags– தமிழ் படித்த ரஷ்யர், நிகிடின்,லெபிடேவ்

–சுபம்—

இன்றைய உலகின் மெமரி மன்னன் யார்? (Post No.5637)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 8 November 2018

Time uploaded in London – 7-26 AM (GMT)

Post No. 5637

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 9-11-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஆறாம்) கட்டுரை  

அறிவியல் துளிகள் ! அத்தியாயம் 400

ன்றைய உலகின் மெமரி மன்னன் யார்?

ச.நாகராஜன்

டாக்டர் அகிரா ஹராகுச்சி (Dr Akira Harguhi) என்ற ஜப்பானியர் தான் இன்றைய உலகின் நினைவாற்றல் மன்னன். அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும் கூட தனது சாதனையை பொது இடத்தில் நிகழ்த்தி இவர் மனித குலத்தில் இன்று நினைவாற்றலில் முதலிடம் பெற்றுத் திகழ்கிறார்.

‘பை என்ற கணிதக் குறியீடு கணிதக் கலையின் அபூர்வமான விசித்திரம். (இந்தத் தொடரில் முன்பே இது பற்றி விளக்கப்பட்டுள்ளது)

 3.142 என்ற எண்ணால் ‘பை-யை சாதாரணமாகக் குறிப்பிட்டாலும் இது முடிவே இல்லாத தொடர் எண். 22ஐ ஏழால் வகுத்துப் பார்த்தால் வருகிறது இந்தத் தொடர் எண்.

இந்தத் தொடர் எண்ணில் ஒரு லட்சம் இலக்கங்களை எதையும் பார்க்காமல் தன் நினைவிலிருந்தே சொல்கிறார் டாக்டர் அகுரா.

2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி காலை 9 மணிக்குத் தனது நினைவாற்றல் திறனை உலகிற்குக் காட்டுவதற்காக பை தொடர் எண்ணைச் சொல்ல ஆரம்பித்த இவர் அன்று நள்ளிரவில் 83,431 இலக்கங்களைச் சொல்லி முடித்தார். ஒரு லட்சமாவது இலக்கத்தை இரவு 1.28க்கு அடைந்த அவர் (அதாவது அக்டோபர் நான்காம் தேதி அதிகாலை) குழுமியிருந்தோரை வியக்க வைத்தார்.

நிகழ்வு முழுவதும் படம் பிடிக்கப்பட்டது. டோக்கியோவில் கிஸாரஜு (Kisarazu) என்ற பொது அரங்கில் மக்கள் முன் நடைபெற்றது.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு அவர் ஐந்து நிமிடம் இடைவெளி ஓய்வு எடுத்துக் கொண்டார்.

அந்த இடைவெளியில் ஓனிகிரி என்று ஜப்பானிய மொழியில் அழைக்கப்படும் புழுங்கலரிசியால் செய்யப்பட்ட அரிசி உருண்டைகளை தனது உடல் சக்திக்காகச் சாப்பிட்டார்.

இயற்கை உபாதை கழிக்க அவர் டாய்லெட்டுக்குச் சென்றாலும் கூட அதுவும் கூடப் படம் பிடிக்கப்பட்டது. ஏனெனில் இந்த நிகழ்வில் எந்த வித ஏமாற்று வேலையையும் அவர் செய்யவில்லை என்பதை நிரூபிக்கத் தான் இப்படிப்பட்ட கடுமையான விதிகள் அனுசரிக்கப்பட்டன.

டாக்டர் அகிரா தனது உலக ரிகார்டைத் தானே இந்த நிகழ்வில் முறியடித்துப் புதிய சாதனையைப் படைத்தார். 2005ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி அவர் நடத்திய நிகழ்வில் அவர் 83431 இலக்கங்களை நினைவிலிருந்து சொன்னார்.

ஒவ்வொரு வருடமும் மார்ச் 14ஆம் தேதி ‘பை தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு பை தினத்தில் 1,11,701 இலக்கங்களைத் தன்னால் நினைவாற்றல் திறன் மூலமாகச் சொல்ல முடியும் என்றார்.

கின்னஸ் ரிகார்டின் விதி முறைகள் சற்றுக் கடுமையானவை. கின்னஸ் ரிகார்டில் இவர் இவ்வளவு எண்ணிக்கையில் இலக்கங்கள் சொன்னது பதிவு செய்யப்படவில்லை. என்றாலும் இன்று இவரே உலகின் மெமரி மன்னர்!

இப்படி நினைவாற்றல் திறனைக் கூட்ட வல்ல நிமோனிக் சிஸ்டத்தை அவரே அமைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறியீடு அவர் மனதில் பளிச்சிடும்.

அவ்வளவு தான், எண்களைக் கூறிக் கொண்டே போவார்.

ஒரு நாளைக்கு 15000 எண்களை நினைவிலிருந்து கூறிப் பயிற்சி செய்யும் டாக்டர் அகிரா, புத்த மத மந்திரத்தை உச்சரிப்பது போல பயபக்தியுடன் இதைச் சொல்லி வருவதாகக் குறிப்பிடுகிறார். இதற்கு தினமும் ஒரு மணி நேரம் ஆகிறது.

ஒரு நாளைக்கு 25000 எண்களைச் சொல்லத் தான் முயல்வதாக அவர் தனது குறிக்கோள் பற்றிச் சொல்கிறார். இதற்கு மூன்று மணி நேரம் ஆகும்.

புத்த மதத்தின் ஜென் பிரிவின் படி உலகில் படைக்கப்பட்டு இருக்கும் மலைகள், ஆறுகள், உயிர் வாழ் இனங்கள் ஆகிய அனைத்துமே புத்தரை உள்ளடக்கியுள்ளன என்பதாகும்.

ஒரு வட்டத்தின் சுற்றளவைக் கணிக்கவோ அல்லது அதன் பரப்பைக் கணிக்கவோ ‘பை இன்றியமையாதது.

உலகத்தைச் சுற்றி வரும் அனைத்திலும் கூட புத்தர் இருக்கிறார் என்பதும் அதில் ‘பை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதும் அகிராவின் கொள்கை.

நினைவாற்றல் திறனை எப்படிக் கூட்டுவது என்பது பற்றி உலகெங்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வரும் அகிராவுக்கு கின்னஸ் இன்னும் அங்கீகாரம் தரவில்லை. அது பற்றி அவர் கவலைப்படவும் இல்லை. கின்னஸுக்கென ஒரு கொள்கையும் நடைமுறையும் இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்வ்து என்கிறார் அவர்.

ஒவ்வொரு இலக்கத்திற்கும் அகிரா ஒரு ஒலியை நினைவு வைத்துக் கொள்கிறார். இந்த ஒலி மொழியினால் அவர் பல கதைகளை உருவாக்கி இருக்கிறார். கதையை நினைவு படுத்திக் கொண்டால் இலக்கங்கள் தானாக மடமடவென்று வந்து விழும். 

இப்படி 800 கதைகளை அவர் உருவாக்கி இருக்கிறார். கதைகளின் கதாநாயகர்கள் மிருகங்களும் தாவரங்களும் தான்!

‘பையின் முதல் நூறு இலக்கங்களுக்கு மட்டும் உள்ள கதையில் மனிதருக்கு இடமுண்டு!

பைக்கான அவரின் முதல் ஐம்பது இலக்கங்களுக்கான கதை இது தான்:

 “Well, I, that fragile being who left my hometown to find a peace of mind, is going to die in the dark corners; it’s easy to die, but I stay positive.”

அவரது மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் அவரது இந்த ஹாபியை வெகுவாக ரசிக்கின்றனர்.

 கின்னஸ் ரிகார்டின் படி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘பைக்கான மெமரி மன்னன் சீனாவைச் சேர்ந்த லு சாவோ என்பவர். 2005ஆம் ஆண்டு

 நவம்பர் 19ஆம் தேதி 24 மணி நான்கு நிமிடத்தில் 67890 இலக்கங்களை கின்னஸ் விதிமுறைகளுக்கிணங்க சரியாகச் சொல்லி கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்றார்.

நினைவாற்றல் திறனை பயிற்சி மூலம் ஒருவர் கூட்டிக் கொள்ளலாம் என்பது அறிவியல் தரும் செய்தி.

நேரமும் மனமும் திறனும் இருந்தால் இந்த ரிகார்டையும் ஒருவர் வெல்வார்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஆர்தர் இவான்ஸ் (Sir Arthur Evans – பிறப்பு 8-7-1851 மறைவு 11-7-1941) பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெரிய புதைபொருள் ஆராய்ச்சியாளர். க்ரீட் தீவில் இருந்த க்னாஸாஸ் (Palace of Knossos in the island of Crete) என்ற அரண்மனையை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்து அவர் பெரும்புகழ் பெற்றார். தனது தொண்ணூறாவது பிறந்த நாளன்று அதை நண்பர்களுடன் வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது வந்திருந்த விருந்தினர்களுள் ஒருவர் ஜெர்மானியர்கள் க்னாஸாஸ் அரண்மனையை அழித்து விட்டதாகக் கூறினார். இந்த செய்தியைக் கேட்டு மிகவும் மனம் வருந்திய இவான்ஸ் மனச்சோர்வுக்கு ஆளாகி மூன்றே மூன்று நாட்கள் தான் உயிர் வாழ்ந்தார். ஆனால் உண்மை என்னவெனில் அந்த விருந்தாளிக்குக் கிடைத்த செய்தி தவறான செய்தி. க்னாஸாஸ் அரண்மனை உண்மையில் அழிக்கப்படவே இல்லை. ஜெர்மானியர்கள் அந்த புராதனமான அரண்மனை அழிக்கப்படக்கூடாது என்பதற்காக ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். அரண்மனை பத்திரமாக பாதுகாக்கப்பட்டது. தவறான செய்தியால் மனம் வருந்தி ஒரு அறிஞரின் உயிர் போனது தான் மிச்சம்!

 

TAGS- சர் ஆர்தர் இவான்ஸ்,நினைவாற்றல், மெமரி மன்னன்

***

அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை? (Post No.5614)

 

WRITTEN BY S NAGARAJAN

Date: 2 November 2018

Time uploaded in London – 6-58 AM (GMT)

Post No. 5614

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 2-11-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு முப்பத்தி ஐந்தாம்) கட்டுரை  

அமெரிக்காவிற்கு கொலம்பஸின் பெயர் ஏன் சூட்டப்படவில்லை?

ச.நாகராஜன்

1492ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்தார். ஆனால் புதிதாக அவர் கண்டுபிடித்த அமெரிக்காவிற்கு அவர் பெயர் சூட்டப்படவில்லை, ஏன்?

ஒஹையோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாட் க்ராஃபோர்ட் இது பற்றிய புதிய ஆய்வு ஒன்றை நடத்தி தனது கருத்துக்களை இப்போது முன் வைத்துள்ளார்.

ஐரோப்பியர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளுக்குப் பெயர் சூட்டியபோது அவர்கள் கொலம்பஸை மதிக்காததும் அதே சமயம் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி செய்த பிரச்சாரமுமே தான் அவர் பெயர் அமெரிக்காவிற்குச் சூட்டப்படாததற்குக் காரணம் என்று மாட் கூறுகிறார்.

அது மட்டுமல்ல, கொலம்பஸ் தான் கண்டுபிடித்த நாடு ஆசியாவைச் சேர்ந்தது என்று தான் இறக்கும் நாள் வரை உறுதியாக இருந்ததோடு அப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் அமெரிகோ வெஸ்புகியோ அது ஆசியாவைச் சேர்ந்த நாடு அல்ல என்று திடமாகத் தெரிவித்தார்.

1451ஆம் ஆண்டு இத்தாலியில் ஜெனிவாவில் பிறந்த கொலம்பஸ் 1476ஆம் ஆண்டு தனது 25ஆம் வயதில் போர்ச்சுகலுக்குச் சென்றார். அந்தக் காலகட்டம் புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கும் காலமாகத் திகழ்ந்தது. அதற்காக பல்வேறு வரைபடங்களைத் தயாரிக்கும் வணிகத்தில் கொலம்பஸ் ஈடுபட்டார்.

போர்ச்சுகலைச் சேர்ந்த கடல் பயணிகள் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த மடெய்ரா தீவுகள் மற்றும் அஜோரஸ் ஆகிய புது இடங்களைக் கண்டுபிடித்தனர்.

 

அந்தச் சமயம் ஐரோப்பாவிற்கு இந்தியாவை அடைய ஒரு புதிய கடல் வழியைக் கண்டுபிடிக்கும் தேவை அதிகரித்திருந்தது.  ஏனெனில் ஆடோமேன் சாம்ராஜ்யம் ஐரோப்பிய மாலுமிகள் கான்ஸ்டாண்டிநோபிள் வழியாகச் செல்லும் வழியை அடைத்ததோடு வட ஆப்பிரிக்காவில் செங்கடல் வழியே செல்வதையும் வெற்றிகரமாகத் தடுத்தது.

 

இந்தச் சமயத்தில் தான் கொலம்பஸ் மேற்கு நோக்கிப் பயணம் செய்தால் இந்தியாவை அடையலாம் என்று ஒரு புது உத்தியைத் தெரிவித்தார். அப்போது உலகம் உருண்டை என்ற கொள்கை உண்மை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தது.

உலகம் தட்டையானது என்ற கொள்கையை முன் வைத்து அதைத் தன் பிரபலமான எழுத்துக்களால் வலியுறுத்தி வந்த வாஷிங்டன் இர்விங்கின் கருத்து தவறானது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து கொண்ட உலக மக்கள் புதிய கடல் வழிகளைக் காண மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் கொலம்பஸின் மேற்கு நோக்கிய பயணத் திட்டத்தை போர்ச்சுக்கல் அரசு நிராகரித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது, கொலம்பஸ் இதற்குத் தகுதியானவர் இல்லை என போர்ச்சுக்கல் கருதியது. இரண்டாவதாக ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கு இடையில் உள்ள தூரத்தை அவர் மிகக் குறைவாகத் தப்பாகக் கணித்திருக்கிறார் என போர்ச்சுக்கல் நம்பியது.

ஆகவே நிராசையடைந்த கொலம்பஸ் தன் திட்டத்தை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்று அங்கு முன் வைத்தார். ஸ்பெயின் அரசு இதனால் ஏற்படும் வர்த்தக லாபத்தைக் கருத்தில் கொண்டு அப்படி ஒரு வழியைக் கொலம்பஸ் கண்டுபிடித்தால் இந்தியாவின் வைசிராயாக அவர் நியமிக்கப்படுவார் என்ற உறுதி மொழியைத் தந்தது.

இதனால் மகிழ்ந்த கொலம்பஸ் பஹாமா தீவு  வழியே பயணிக்க ஆர்ம்பித்தார். கியூபாவில் முதலில் கால் பதித்தார். பின்னர் தென் அமெரிக்காவை அடைந்தார்.

ஆனால் தான் அடைந்தது ஆசியாவைத் தான் என்று உறுதிபட அவர் நம்பினார். இதன் மூலம் ஸ்பெயின் அரசு, தான் அளித்த உறுதிமொழிக்கிணங்க தனக்குப் பெரும் பதவியையும் செல்வத்தையும் அளிக்கும் என அவர் நம்பிக் கொண்டிருந்தார்.

 

ஆனால் இதே சமயம் போர்ச்சுக்கலைச் சேர்ந்த வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனை வழியே சென்று இந்தியாவை அடைந்ததோடு வெற்றிகரமாகத் திரும்பியும் வந்து விட்டார். 1497 முதல் 1499 முடிய நடந்த இந்தப் பயணத்தால் ஸ்பெயினை போர்ச்சுகல் தோற்கடித்து கடல்வழிப் பயணங்களில் புதிய சாதனை படைத்துத் தலைமை இடத்தை அடைந்தது.

இதனால் எரிச்சல் அடைந்த ஸ்பெயின் அரசு கொலம்பஸின் தோல்விக்காக அவரைக் கைது செய்து ஸ்பெயினுக்குத் திருப்பி அழைத்து வரத் தன் வீரர்களுக்குக் கட்டளையிட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவ விருதுகள் அனைத்தையும் உடனடியாக ஸ்பெயின் அரசாங்கம் ரத்து செய்தது.

1493ஆம் ஆண்டு கொலம்பஸ் தனது ஆதரவாளரான லூயிஸ் டி சண்டாஞ்ஜெலுக்கு தான் கண்டுபிடித்த புது நாடு பற்றி ஒரு  கடிதம் எழுதினார்.

ஆனால் இத்தாலியைச் சேர்ந்த அமெரிகோ வெஸ்புகி (1459-1512) போர்ச்சுகல் கொடியைப் பறக்கவிட்டுத்  தன் கப்பலைச் செலுத்தி 1499ஆம் ஆண்டு புதிய உலகைக் கண்டுபிடித்தார். அதைத் தன் கடிதம் மூலம் அவரை ஆதரித்த பிரபுவான லோரென்ஸோ டி மெடிசி என்பவருக்குத் தெரிவித்தார். அங்குள்ள பூர்வகுடி மக்களின் பாலியல் பழக்கங்கள், இதர வாழ்க்கை முறைகளையும அவர் சுவைபடத் தெரிவித்தார்.

இந்தத் தகவல்களையெல்லாம் கேட்டு ஜெர்மனியைச் சேர்ந்த நிலப்படத் தயாரிப்பாளரான மார்டின் வால்ட்சீமுல்லர் என்பவர் பெரிதும் ஆர்வமுற்று அமெரிக்காவின் முதல் வரைபடத்தைத் தயாரித்தார். அவர் தான் முதன் முதலில் அமெரிக்கா என்ற பெயரைச் சூட்டினார்.

அமெரிகோவின் பெயரை கௌரவிக்கும் வண்ணம் இந்த நிலப்பரப்பிற்கு அமெரிக்கா என்ற பெயரை மார்டின் சூட்டினார். இதனைக் கண்டுபிடித்த பெரும் திறமைசாலியான அமெரிகோவின் நினைவாக இந்தப் பெயரால் இந்த நிலப்பரப்பு சுட்டிக்காட்டப்படுகிறது என்றார் அவர்.

இதைத்  தொடர்ந்து ஆயிரத்து ஐநூறுகளில் அமெரிக்கா என்ற பெயர் அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. கொலம்பஸின் பெயர் சூட்டப்படாமல் அமெரிக்காவிற்கு அமெரிகோ வெஸ்புகியின் பெயர் சூட்டப்பட்ட கதை இது தான்!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சார்லஸ் குட்இயர் (பிறப்பு 29-12-1800 மறைவு: 1-7-1860) வல்கனைஸிங் உத்தியைக் கண்டுபிடித்த பெரும் கண்டுபிடிப்பாளர். ரப்பரைப் பற்றி அவர் அறியாத விஷயம் இல்லை. என்றாலும் அவர் வாழ்க்கையில் பெரும்பாலும் தோல்வியையே பலமுறை கண்டார். இறுதியில் வென்றார்.

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் பலமுறை அவர் கைது செய்யப்பட்டார். ஒரு முறை நியூயார்க் அருகிலிருந்த க்ரீன்விச்சில் அவர் வாழ்ந்தபோது அவரது மைத்துனரைச் சந்தித்தார். “எனக்கு பத்து டாலர் கொடுங்கள். என்னிடம் இருந்த கடைசி சென்டையும் செலவழித்து விட்டேன். வீட்டிற்குத் திரும்பப் பணம் வேண்டும்” என்றார் அவர்.

“இப்படியெல்லாம் வாழக்கூடாது. இப்படி இருந்தால் வாழவே முடியாது” என்றார் மைத்துனர். “நிச்சயமாக ஒரு நாள் பெரிய ஆளாக ஆவேன்” என்று பதிலளித்தார் குட் இயர்!

தனது இளங் குழந்தையான மகனின் இறுதிச் சடங்கு செய்யக் கூட அவரிடம் பணம் இல்லை. வல்கனைஸிங்கை அவர் கண்டுபிடித்தாலும் கூட அதன் பேடண்ட் உரிமையைப் பெற அவர் போராட வேண்டியதாயிற்று. சிறைவாசமும் அனுபவிக்க நேரிட்டது. நோய்வாய்ப்பட்ட தனது மகளைக் காண நியூயார்க் சென்ற போது வழியிலேயே தனது மகள் இறந்து விட்டாள் என்ற செய்தியை அவர் கேட்க நேரிட்டது.

ஆனால் இவ்வளவு சோகத்திலும் அவர் மனம் கலங்கவில்லை.

தனது வாழ்நாளில் தன் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய அவர் அதற்காக உழைத்தார்; போராடினார். இறுதியில் வென்றார். வாழ்நாளின் இறுதிக்காலத்தில் அவர் பெரிய செல்வந்தராக ஆனார்.

“டாலர் சென்ட் என்ற கணக்கில் வாழ்க்கையை மதிப்பிடக்கூடாது. நான் விதைத்து மற்றவர்கள் பழங்களை அனுபவித்தனர் என்று நான் புகார் கூறவில்லை. ஒரு மனிதன் விதைத்து பழங்களை யாரும் அனுபவிக்கவில்லை என்கின்ற போது தான் அவன் வருத்தப்பட வேண்டும்” என்று எழுதினார் அவர். எத்துணை பரந்த மனப்பான்மை அவருக்கு இருந்தது என்பதை இதிலிருந்தே அறியலாம்.

***

ரிக் வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்? (Post No.5531)

Research Article Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 12 October 2018

 

Time uploaded in London –9-59 am (British Summer Time)

 

Post No. 5531

 

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ரிக் வேத அசுரர்கள் வெளிநாடு சென்றது ஏன்? (Post No.5531)

 

அஸீரியா என்னும் பழைய நாட்டின் பெயர் அசுரர் தேசம் என்பதாகும். அசுரர் (Ashur) என்றால் கடவுள் என்று சுமேரியன் அகராதி சொல்லும். அஸீரியா(Assyria) என்பது தற்போதைய இராக் நாட்டில் டைக்ரீஸ் (Tigris) நதி பாயும் பிரதேஸம். அங்கே கி.மு.2000 முதல் கி.மு 1000 வரை 20 மன்னர்களுக்கு மேல் அசுரர் என்ற பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே கி.மு.2000 வாக்கில் ரிக்வேத அசுரர்கள் கருத்து வேற்பாடு காரணமாக இராக், ஈரான் பகுதிகளுக்குச் சென்றது உறுதியாகிறது.

 

இதற்கு ரிக் வேதத்திலும் வரலாற்றிலும் அசைக்க முடியாத ஆதாரங்கள் உள.

 

சான்று 1

கி.மு 800 முதல் கி.மு 1000 வரை தேதி முத்திரை குத்தப்பட்ட பார்ஸீ மத ஸ்தாபகர் ஜொராஸ்டர் (Zoroaster), சௌராஷ்டிர என்ற குஜராத் பகுதியிலிருந்து ஈரான் சென்று பாரஸீக மதத்தைப் பிரபலப் படுத்தினார். ஈரான் என்ற பெயரே ஆர்யன் என்ற சொல்லிலிருந்து வந்ததும், ஈரானிய ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) வேதப் புத்தகத்துக்கும், ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையும் உலகறிந்த விஷயம். எல்லா என்ஸைக்ளோபீடியாக்களிலும் உள.

 

சௌராஷ்டிரர் என்பது ஜொராஸ்டர் என்று மாறியதை காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முன்னரே மைலாப்பூர் சொற்பொழிவுகளில் செப்பியுள்ளார். ஈரானை முஸ்லீம்கள்  எட்டாம் நூற்றாண்டில் கபளீகரம் செய்தவுடன் பார்சீக்கள், தனது தாயகமான குஜராத்துக்கு ஓடி வந்து அடைக்கலம் புகுந்ததை முன்னம் ஒரு கட்டுரையில் மொழிந்து விட்டேன்.

 

இரண்டாவது சான்று

அசுரர்களுக்கு சுக்ராச்சார்யார் குரு; தேவர்களுக்கு பிருஹஸ்பதி குரு. கீதையில் கண்ணன் வாயால் புகழப்பட்ட சுக்ர கவியின் வம்ஸம் திடீரென்று ரிக் வேதத்தில் மறைந்து போகிறது. ஏனைய ரிஷிகளின் வம்ஸங்கள் தொடர்கதையாக உள்ள போழ்தில் உசனஸ் கவி என்ற உலக மஹா கவி, — கண்னன் தன்னை கவிஞர்களுள் நான் உசனஸ் என்னும் போற்றும் கவி– காணாமற் போய் விடுகிறார்.அவரும் அவர்தம் சீடர்களும் அஸீரியா. ஈராக் ஃநாட்டிற்குக் குடியேறி விட்டனர் போலும்.

 

மூன்றாவது சான்று

ரிக் வேதத்தின் பழைய பகுதிகளில் இந்திரன், வருணன், மித்திரன் ஆகியோர் ‘அசுர’ என்ற அடை மொழியுடன் போற்றப் படுகின்றனர். சுமேரியாவில் இப்பொழுதும் ‘அசுர்’ (ASHUR) என்பது கடவுள் என்றே மொழி பெயர்க்கப்படுகிறது.

நாலாவது சான்று

ஜொராஸ்டர் தன்னை ‘ஸ்பிடம’ (spitama=white) ஜௌராஷ்ட்ர என்று அழைத்துக் கொள்கிறார். அதாவது வெள்ளை (சுக்ர, சுக்ல=வெள்ளை) என்று பெருமை பேசுகிறார். சுக்ராச்சார்யார் வ ழியில் வந்தவன் நான் என்று தம்பட்டம் அடிப்பதே இதன் தாத்பர்யம்.

 

ஐந்தாவது சான்று

 

ரிக்வேதத்தைப் போற்றும் மற்றொரு கோஷ்டி, துருக்கி பகுதியைச் சென்று ஆண்டதை உலகம் முழுதுமுள்ள வரலாற்றுப் புத்தககங்கள் மூலம் அறியலாம். காஞ்சி பரமசார்ய ஸ்வாமிகள் 75 ஆண்டுகளுக்கு முந்தைய மைலாப்பூர் பிரசங்கங்களில் மொழிந்தும் உள்ளார். மிட்டனி (Mitanni Civilization) என்னும் நாகரீகத்தில் தசரதன் பிரதர்தனன், சத்யவசன் முதலிய மன்னர்கள் பெயர் கி.மு 1400 முதல் உள்ளதை விக்கிபீடியா முதல் என்ஸைக்ளோபீடியா பிரிட்டானியா வரை எல்லா கலைக்களஞ்சியங்களிலும் காணலாம். அது மட்டுமின்றி ரிக்வேத தெய்வங்களின் பெயர்களில் ஸத்தியம் செய்து அவர்கள் உடன்படிக்கை கையெ ழுத்திட்டதும், தஸ்ரதமன்னன் எகிப்திய மன்னனுக்கு எழுதிய கடிதங்களும் அப்படியே களிமண் பலகைகளில் க்யூனிபார்ம் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

சுமேயாவில் ராம சந்திரன்

ஆறாவது சான்று

தஸரதன் பெயர் மட்டுமின்றி ராமன் பெயரும் சுமேரியாவில் கி.மு.2000 வாக்கில் பல மன்னர் பெயர்களில் கணப்படுகிறது.

ரிமூஷ், ரிம் சைன் (Rimush, Rim Sin) என்ற பெயர்களில் குறைந்தது மூன்று மன்னர்கள் உளர்.

 

சுமேரிய அகராதியில் சைன் (sin) அல்லது சின் என்றால் சந்திரன் / நிலவு என்று பொருள்.

 

ரிம் சைன் என்பது ராம சந்திரன் என்பதன் திரிபாகும்.

 

சைன்/சந்திரன் என்பதை நாம் எப்படி பெயரில் விகுதியாகவும் பகுதியாகவும் பயன் படுத்துகிறோமா அப்படியே சுமேரிய மன்னர்களும் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்துவது ஸம்ஸ்க்ருத மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

நாம்,

சந்திர மூர்த்தி, சந்திர ஹாஸன், சந்திரமதி, சந்திர ஸேகரனென்றும்

 

மற்றொரு புறம் ராம சந்திரன், பூர்ண சந்திரன், விபின சந்திரன் என்றும் பயபடுத்துவது போல அவர்களும் சின், சைன் என்பதை பெயர்களில் முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் பயன் படுத்துகின்றனர்.

 

சுமேரிய, அஸீரிய, பாபிலோனிய  மன்னர்களின் பட்டியலை அப்படியே எனது ஆங்கிலக் கட்டுரையில் இருந்து கொடுக்கிறேன். இவை என்ன காட்டுகின்றன என்பதை முதலில் மொழிவேன்:

 

1.’அசுர’   ன்ற சொல்லின் ‘மூலம்’  (root) தெரியாமல் சுமேரிய ஆராய்ச்சியளர் முழிக்கின்றனர். ‘அசுர்’ Ashur என்பது ஒரு பிரதேசத்தின் பெயரிலிருந்தோ அல்லது கடவுள் என்ற அர்த்தத்தில் இருந்தோ வந்திருக்கலாம் என்பது சுமேரிய ஆராய்ச்சியளர் துணிபு. இரண்டும் இந்துக்கள் செப்பியதே. மத்ஸ்ய தேசம், நாக நாடு என்று நமது புராணங்கள் சொல்கையில் அங்கு மீன்களோ நாகப் பாம்புகளோ அதிகம் இருப்பதால் அல்ல மத்ஸ்யர்கள், நாகர்கள் என்ற இனத்தினர் நாடு என்ப தை நாம் அற்கிறோம். அது போல, கி.மு.2000 ஆண்டில் தேவர்களுடன் கருத்து மோதல் காரணமாக புதுக் கட்சி துவங்கிய அசுரர்கள் குடியேறிய தேசம் -அசுர தேசம் =அஸீரியா

என்று அழைக்கப்பட்டது. அந்த ‘அஸூர்’  Ashur என்பது கடவுளைக் குறிக்கும் என்பது ரிக் வேதத்தாலும் ஜெண்ட் அவஸ்தாவாலும் மெய்ப்பிக்கப்ப ட் டது. பாரஸீக நாட்டின் (ஈரான்) பாரஸீக மதத்தின் தலையாய கடவுள் அசுர மஸ்டா (Azura Mazda). அவர்கள் எதிர்க்கட்சி துவங்கியதால் பழைய தலைவரான இந்திரனை ஒழித்துவிட்டு வருணனை கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்டு வருணனை மஹா அசுரான் (பெரிய கடவுள்) என்று விதந்து ஓதுகின்றனர்.

 

(காம்போஜர் என்ற இனம் இருக்கும் இடமெல்லாம் காம்போஜம் என்பது இந்தியாவிலுள்ள காம்போஜத்தாலும் கம்போடியாவிலுள்ள காம்போஜத்தாலும் அறியப்படும்.)

 

இது தெரியாமல் புராணத்தை விமரிசித்த, துவக்க கால இந்திய வரலாற்றை எழுதிய, வெளிநாட்டினர் திணறிப்[போயினர். சோழர்கள் உள்ள பகுதி சோழ தேசம். அவர்கள் பாண்டிய நாட்டைப் பிடித்துவிட்டால் ‘சோழ தேசத்துக்குள் உள்ள’ என்று கல்வெட்டுகள் துவங்கும். இது போல, மத்ஸ்யர்கள் உள்ள இடம் மத்ஸ்ய தேசம்; அவர்கள் எல்லையை விஸ்தரித்தால் அந்த இடமெல்லாம் மத்ஸ்யர் தேசம்; இது தெரியாத அரை வேக்காடுகள் இந்தியாவின் வடமேற்கில் எல்லையை விஸ்தரித்த யவனர் பற்றி தத்துப் பித்து என்று உளறிக்கொட்டி கிளறி மூடி இருக்கின்றனர். அலெக்ஸாண்டர் படையெடுப்புக்கு முன்னர் இந்தியருக்கு யவனர் தெரியாது என்று எண்ணி மஹாபாரத யவனர், சங்க இலக்கிய யவனர் பற்றி எல்லாம் உளறி விட்டனர்.

 

மற்றொரு முக்கியமான விஷயம் ஒரே மன்னர் பெயர்கள் பல இடங்களில் தோன்றுவதாகும்.

 

புராணங்களை மிகவும் ஆராய்ந்து தேதி குத்திய பர்ஜிட்டர் Pargitter முதலிய வெளி நாட்டுக்காரர்கள், சில புராணங்களுக்கு முட்டாள் பட்டம் கட்டி அவை எல்லாம் பெயர்களை இருமுறை எழுதி குழப்பி விட்டதாக எழுதி நம்மைக் குழப்பினர். எகிப்திய வரலாற்றில் ராமர் பெயரில் ராமேஸ்ஸஸ் என்ற பெயரில் 14 மன்னர்கள் உள்ளனர்.

 

சுமேரியா, அஸ்ஸீரியாவில் பல சற்குணர்கள்/ சத்ருக்னன் உளர் (ஸர்கோன் என்று அவர்கள் அழைப்பர்). அஸீரியாவில் ஒரே மன்னர் பெயர் ஆறு ஏழு முறை வருகின்றன. ஆக அடுத்தடுத்து இரண்டு மன்னர்கள் ஒரே பெயரில் வர முடியும் என்பதை எகிப்திய சுமேரிய, அஸீரிய மன்னர் பட்டியல் காட்டுகின்றன. இது தெரியாமல் புராணங்கள் புளுகிவிட்டன என்று பகர்ந்தோர் பலர்.

 

சின்/ சைன் என்று முடியும் பெயரகள் சந்திரன் என்று மேலே குறிப்பிட்டு இருந்தேன். இவை சேன என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லாகவும் இருக்க முடியும் மஹாபாரதத்தில் மட்டும் 24 மன்னர்களின் பெயர்கள் ‘சேன’ என்று முடிவது எனது ஆராய்ச்சியில் தெரியவந்தது.

 

காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் (1894-1994) தனது உபந்யாஸங்களில் எகிப்திய ராமஸெஸ் , ராமபிரானின் பெயர் என்று குறிப்பிட்டார். இது ரமேஷ், ரமேசன் என்ற சிவ பிரான் பெயராகவும் இருக்க லாம். எகிப்திய மன்னர் அனைவரும் சிவ பிரான் போல நாகப் பாம்புகளை முடியில் சூடியது பற்றி எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்.

 

மற்ற ஒரு அதிசய விஷயம் கடவுள் நம்பிக்கை பற்றியது.

சுமார் 40 மத்தியக் கிழக்கு நாட்டு மன்னர்கள் கடவுளின் பெயருடன் துவங்குகின்றன. ‘மர்துக்’, ‘அதாத்’, ‘அசுர’ என்பதெல்லாம் கடவுளின் பெயர்கள். இவ்வாறு குறைந்தது 40 மன்னர்களின் பெயர்கள் உள.

 

முடிவுரை

ஒரு மன்னர் பெயர் பல முறை வந்ததால் குழம்ப்பிப் போய் வரலாற்றைத் திரிக்கக் கூடாது. அசோகனின் பெயரன் தஸரதன். துருக்கியை கிமு.138-0ல் ஆண்டவன் தஸரதன். ராமாயண தஸரதனுக்கு முன்னால் உள்ள தஸரதன் பெயரும் மன்னர் பட்டியலில் உள.

 

இரண்டாவதாக,

பெயர்கள் எப்படி திரிபடையும், மாறுபடும் என்றும் அறிவதற்கு சுமேரியா, அஸீரிய, பாபிலோனிய, எகிப்திய மன்னர் பட்டியல் முன் உதாரணமாகத் திகழ்கின்றன. தற்காலத்திலும் மொரீஷியஸ், மலேஷியா, இலங்கையில் வாழும் தமிழர்கள் ஸஸ்க்ருதப் பெயர்களைக் குதறி, தவறான பெயர்களாக, எழுதுவது போல எகிப்திலும் மத்தியக் கிழக்கிலும் எழுதினர். க்யூனி பார்ம் கல்வெட்டில் ‘துஷ்ட்ரத’ என்று தஸரதன் பெயர் உளது. இதே போல பிரதர்தனன், சத்யவாசன் பெயர்களும் குதறப் ப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தமிழர் பெயர்களின் ஆங்கில ஸ்பெல்லிங் spellings பார்ப்போருக்கு நாம் சொல்லுவது தெள்ளிதின் விளங்கும்.

 

மூன்றாவதாக,

நாம் நமது குழந்தைகளுக்குக் கொஞ்சம் எகிப்திய, சுமேரிய வரலாற்றையும் சேர்த்து ஒப்பிட்டுக் காட்ட வேண்டும்

 

நாலாவதாக,

வெளிநாட்டினர் செய்த அயோக்கியத் தனத்தை உடனே அகற்ற வேண்டும். கி.மு ஆறாம் நூற்றாண்டு புத்தர் கால அஜாத சத்ரு, உதயணன் போன்றோர் முதல் வரலாறு துவங்குவதாக மார்கஸீயவாதிகளும் வெள்ளைக்காரகளும் எழுதி வைத்துள்ளனர் ஆனால் அதற்கு முந்தைய 140 தலை முறை மன்னர் பட்டியல் நமது புராணங்களில் உள. அவற்றை சேர்த்து மாணவர்களின் ஆராய்ச்சிக்கு அவைகளை (Home Work/ assignment) ஹோம் ஒர்க் ஆகக் கொடுக்க வேண்டும்.

 

இறுதியாக உடனே வரலாற்றை திருத்தி எழுதி துருக்கி நாட்டு மிட்டன்னி கல்வெட்டு, எகிப்திலுள்ள தஸரதன் கடிதங்கள் (அமர்ணா லெட்டர்ஸ்), முன்று தமிழ் சங்கங்களில் உள்ள மன்னர்களின் பெயர்கள், உலகம் முழுதும், மத்திய ஆஸியப் பாலைவனம் முதல் தென்கிழக்காஸிய நாடுகள் வரை,கண்டு பிடிக்கப்பட்ட தமிழ், ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகளின் உலக வரைபடம்/மேப் ஆகியவற்றை சிலபஸில் சேர்க்க வேண்டும்.

வரலாற்றை திருத்தி எழுதுவது மிகமிக அவஸியம்.

 

நேரம் போதாமையால் மன்னர் பட்டியலை ஆங்கிலக் கட்டுரையிலிருந்து இணைத்துள்ளேன் கீழே காண்க.

Puzur Ashur I 2000 BCE

Naram Sin (Nara simha or Nara Chandra or Nara Sena)

Sena titles are very common in Mahabharata; at least 24 kings with Sena names in Mahabharata.

Ashur Rabi – around 1500 BCE (Rabi- Ravi/Surya/Sun)

Ashur nadin ahhe

Ashur Nirari 1426 BCE (N and M are interchangeable; it may be Murari)

Ashur bel nishesu 1410 BCE

Ashur nadin ahhe II 1402 BCE

Ashur Ubalit I 1365 BCE

 

Then there are seven kings with ASHUR title  until 1000 BCE.

Some kings names were used up to four times with I, II, III, IV numbers.

 

We come across at least Four Dasarathas until Asoka’s grand son’s time in Indian History.

 

Ram’s Name

 

Rim Sin (Rama Chandra or Rama Sena) – 1822 BCE (ruled from Larsa)

Rim sin II – 1741 BCE

Sin in Sumerian is Moon God; Sin= Chandra

 

There is another proof for using only Gods names in Sumeria:

ADAD and MARDUK- gods’ names were used by at least 20 kings.

 

Sin Iddinam 1849 BCE

Sin Eribam 1842 BCE

Sin Iquisham 1840 BCE

 

xxx

 

Rimush ruled Akkad in 2284 BCE

Naram Sin in 2260  BCE ( other areas also had this name)

Amar sin (Amara Sena or Amara Chandra)- 2046 BCE from Ur

Shu Sin 2037 BCE (ruled from Ur) Susena or Suchandra

Ibbi sin – 2026 BCE

 

 

-சுபம்–