வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! (Post No.7090)

Research Article written by London swaminathan
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-36 am
Post No. 7090

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தொண்டைமான் வரலாறு! (Post No.7049)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 3 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 12-50

Post No. 7049

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கொங்குமண்டல சதகம்

தொண்டைமான் வரலாறு!

ச.நாகராஜன்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தென்கரை நாட்டில் மூவனூர் என்று ஒரு ஊர் உள்ளது.அங்கு தொண்டைமான் என்ற விருது பெற்ற கீர்த்திமான் ஒருவர் வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது.

அவரை ‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான்’ என்று கூறிப் புகழ்ந்தும் தெரிய வருகிறது!

ஒரு சமயம் சங்ககிரி துர்க்கத்தில் நவாபைப் பார்க்கப் பலரும் காத்திருந்தனர்.

பல நாட்கள் கழிந்தன. நவாபைக் காணும் வழியே இல்லை.

அங்கு அரசகுமாரன் வளர்த்து வந்த அருமையான செம்மறிக் கடா ஒன்று இருந்தது.

அதைப் பிடித்து அதன் இரு காதுகளையும் அறுத்து விட்டான் காத்திருந்த ஒருவன்.

அவனைப் பிடித்து நவாபின் முன் நிறுத்தினர்.

நவாபிடம் அவன், “ஐயா! தங்களைப் பார்க்க பல நாட்கள் காத்திருந்தேன். ஆனால் காண முடியவில்லை. இப்படிச் செய்தாலாவது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்; குறைகளைச் சொல்லலாம் என்று இப்படிப்பட்ட செயலைச் செய்து விட்டேன்” என்றான்.

நவாப் அவனது தைரியமான யோசனையையும் செய்கையையும் கண்டு வியந்தார்.

‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான்’ என்று அவனைக் கூப்பிட்டார்.

அன்று முதல் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் அவனது இயற்பெயர் யாருக்கும் தெரியவில்லை. அவனது சந்ததியார் மூலனூர் வட்டத்தில் இன்னும் இருக்கிறார்கள்.

இதே போல கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கீழ்ப்பூந்துறை நாட்டில் இருந்த உபநாடுகளில் ஒன்றான பருத்தியபள்ளி நாட்டில் ஒரு வாலிபன் தொண்டைமான் என்னும் அரசன் சேனையில் சேர்ந்தான். பகைவன் மேல் போரெடுத்துச் சென்றான். வெற்றியும் பெற்றான்.

அந்தத் தொண்டைமான் அரசன் அவனுக்குத் தன் பெயரையும் மாலையையும் விருதாக அளித்தான்.

அதனால் அன்று  முதல் அவன் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டான்.

மல்லசமுத்திரத்தில் ஸ்ரீ சோழீசர் ஆலயத்துக்கு உரியவர்களாக அவனது சந்ததியார் இருந்து வருகின்றனர். அவர்கள் நவாபிடம் பெரும் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தனர்.

அவர்களுக்குரிய இடங்களுக்குப் போகும்போது ஒரு வெண்கலத் துடும்பு (ஒரு வகையான பறை) ஒருவன் இவர்கள் முன்னே அடித்துச் செல்வான். அது நவாப் கொடுத்தது என்று சொல்லப்படுகிறது.

தொண்டைமான் என்ற பெயரையும் அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கலியுகம் 4735 ஸ்ரீ முக வருடத்தில் வீழிய குலத்தவரான இவர்களின் மரபினர், மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை என்னும் பிரபந்தம் கேட்டுள்ளனர்.

இந்த வரலாற்றை கொங்குமண்டல சதகம் தனது 71ஆம் பாடலில் விரித்துரைக்கிறது.

பாடல் :

பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்

திண்டிநல் நாட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்

தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருஞ் சிறப்புமிக

வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : முன் நாளில் பகைவர்களைப் பஞ்சாகப் பறக்கும் படி வென்ற வீரனை நோக்கித் தனது மாலையையும் தொண்டைமான் என்னும் தனது பெயரையும் விருதாக செம்பியனால் கொடுக்கப் பெற்றவன் வாழ்கின்றதும் கொங்கு மண்டலம் என்பதாம்.

****,

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள் – பகுதி 3 (Post No.7044)

Agastya in Indonesia

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 2 OCTOBER 2019

British Summer Time uploaded in London – 7-49 am

Post No. 7044

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

Agastya in Kallanai, Tamil Nadu
Agastya in London V and A Museum

உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்! (Post No.7001)

WRITTEN BY S Nagarajan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-35

Post No. 7001


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ச.நாகராஜன்

கொங்குமண்டல சதகம் 91ஆம் பாடலில் ஒரு அரிய செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

அலைகடல் சூழு மவனியிற் செந்தமி ழாய்பவர்கள்

நலனுறத் தக்க வகையாக வுள்ள நனிமகிழ்ந்தே

இலகு முரிச்சொ னிகண்டுவெண் பாவி நிசைத்தகலை

வலவெழிற் காங்கேயன் வாழுமோ ரூர்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தமிழிலக்கியம் கற்பவர்கள் எளிதில் பாடம் செய்யவும், தெரிந்து கொள்ளவும் உதவியாகும் படி உரிச்சொல் நிகண்டு என வெண்பாவினால் ஆன நூலைச் செய்து உதவிய காங்கேயன் என்பவன் வாழும் மோரூருங் கொங்கு மண்டலம் என்பதாகும்.

பலதலைதேர் காங்கேயன் பட்ட முடையான்

உலகறியச் சொன்ன வுரிச்சொல் – (உரிச்சொல் நிகண்டு)

என்றும்

முந்து காங்கேய னுரிச்சொல் – (ஆசிரிய நிகண்டு)

என்றும்

பெருத்த நூல்பலவுஞ் சுருக்கித் தமிழில்

உரிச்சொல் நிகண்டென உரைத்த காங்கேயன் –     

                (பாம்பணகவுண்டன் குறவஞ்சி)

என்றும் இப்படிப் பலபட நூல்கள் காங்கேயன் இயற்றிய உரிச்சொல் நிகண்டு பற்றிக் குறிப்பிடுகின்றன.

ஆனால் காங்கேயன் என்ற பட்டப்பெயரை உடைய இவர் யார் என்பது தெரியவில்லை.

கங்கைக் குலத்தவரான வேளாண்டலைவைருக்குக் காங்கேயன் என்ற பட்டப் பெயரிட்டு அரசர் அழைத்திருக்கின்றனர் போலும்.

புதுவைக் காங்கேயன், ஆட்கொண்ட காங்கேயன் என்னும் பெயர் கள் வழங்கி வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வேறொருவர் தான் இந்த உரிச்சொல் நிகண்டை இயற்றினார் எனக் கூறுவதுமுண்டு.

கொங்குமண்டல சதகத்துள்  54 மற்றும் 94 ஆகிய பாடல்கள் இம்மோரூர்க் காங்கேயர்களையே குறிப்பிடுகின்றன.

இவர்களுக்கு இம்முடி என்ற பட்டப்பெயர் இருக்கிறது.

காங்கேயர்களைப் பற்றிய சிறப்புக்களை கொங்குமண்டல சதகத்துள் கண்டு மகிழலாம்.

***

கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 1 (Post No.7000)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 22 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-17 am

Post No. 7000


Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

உலகில் ஸம்ஸ்க்ருத மொழி பரவிய அளவுக்கு வேறு எந்த மொழியும் பரவியதில்லை என்பதற்கு கல்வெட்டுகளே சான்று பகர்கின்றன. அலெக்ஸாண்டர் படையெடுப்பால் பரவிய கிரேக்க மொழியையும் விட சம்ஸ்க்ருத மொழியின் தாக்கம் அதிகம். ஏனெனில் துருக்கியில் உள்ள பொகைஸ்கான் களிமண் படிவக் கல்வெட்டுகள் முதல் வியட்நாம் கம்போடியா, இந்தோநேஷியா வரை சம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் உள்ளன. துருக்கி கல்வெட்டு முழுதும் சம்ஸ்க்ருதம் இல்லாவிடினும் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் வேத கால தெய்வங்களின் பெயரில் கைச்சாத்திட்ட களிமண் கல்வெட்டு உளது. கிக்குலி எழுதிய குதிரை சாஸ்திரம் ஸம்ஸ்க்ருத எண்களுடன் உள்ளது. ஆகையால் காலத்தால் முந்தியவை. அளவிலும் ஸம்ஸ்க்ருத்தைத் தோற்கடிக்க எந்தக் கல்வெட்டும் இல்லை. சம்பா எனப்படும் வியட்நாம், காம்போஜம் எனப்படும் கம்போடியா, சாவகம் எனப்படும் இந்தோநேஷியாவில் சுமார் 1000 ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன. உப்பு, புளி, எண்ணைக் கணக்கு எழுதிய சுமேரிய கல்வெட்டுகள் எண்ணிக்கையில் அதிகம் எனினும் அவை ஒரே இடத்தில் குவிந்துள்ளன. மேலும் இலக்கிய நயமற்றவை.

கல்வெட்டுகளில் உள்ள 800 ஸம்ஸ்க்ருத புலவர்களின் பெயர்கள் அடங்கிய புஸ்தகம் பற்றி சென்ற மாதம் எழுதினேன். இப்போது கம்போடியக் கல்வெட்டுகளில் இருந்து வடித்தெடுத்த அழகிய கவிதைகளைக் காண்போம். இவை சென்னை பல்கலைக்கழக ஸம்ஸ்க்ருதத் துறை ரீடர் சி.எஸ். சுந்தரம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம்.

இவை வழக்கமாகக் கல்வெட்டுகள் தரும் தகவலுடன் வேறு பல புராண இதிஹாசக் கதைகளையும் உவமைகளையும் தருகின்றன. மேலும் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கம்போடியாவில் ஸம்ஸ்க்ருதம் புழங்கியதையும் புலமை பரவியதையும் காட்டும். காம்போஜ கல்வெட்டுகள் என்ற பெயரில் ஆர்.சி.மஜூம்தார் எழுதிய நூலிலிருந்து  சுந்தரம் எடுத்தாண்டுள்ளார். ஆகையால் பக்க எண்கள் அந்தப் புஸ்தத்தைக் குறிக்கும். செம்மையான ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த அற்புதக் கவிதைகள் அவை-

1.கம்போடிய மன்னர்களின் மேதாவிலாசம்

மன்னரின் மனதில் ஒரு பெட்டிக்குள் பொக்கிஷம் போல அறிவு பாதுகாக்கப்பட்டதாம். அதைக் காப்பாற்றும் பொருட்டு ஸரஸ்வதி தேவி வாயிலில் ( அம்மன்னரின் வாயில்) காத்து நிற்கிறாளாம். அதாவது மன்னர் கற்ற விஷயம் எல்லாம் தொலைந்து போகாமல் இருக்க சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறாள்.

இதோ கவிதை:-

நயஸ்தம் ஞானதனம் யஸ்ய மனஹ கோசே ஸரஸ்வதீ

நித்யம் ரக்ஷிதுகாமேவ முகத்வாரே ஸ்திதா பவத் (P.63, v,23)

மன்னருக்குப் புகழ்மாலை

ஆதிபகவான் போல சாஸ்திரங்களிலும், சில்ப சாஸ்திரத்திலும், மொழி, லிபி, நாட்டியம், சங்கீதம், விஞ்ஞானம் ஆகியவற்றிலும் மன்னர் வல்லவராம்.

யஸ் ஸர்வசாஸ்த்ரேஷு சில்ப பாஷா லிபிஸ்வபி

ந்ருத்த கீதாதி விஞ்ஞானேஷ்வாதிகர்தேவ பண்டிதஹ (P.83, v.51)

XXX

மற்றொரு கவிதை சைவ சமயத்தில் மன்னருக்குள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. இதை வருணிக்கும் அழகே தனி.

தேன் போல சைவ சாஸ்திரத்தைப் பருகுவார். அதை புத்தி என்னும் மத்தைக் கொண்டு கடைவார். அதுமட்டுமல்லாமல் அதை எல்லோருக்கும் பகிந்தளிப்பார்

சிவசாஸ்த்ராம்ருதம் பீத்வா புத்திமந்தரேண விமத்ய யஹ

ஸ்வயம் ஞானாம்ருதம் பீத்வா தமயா அன்யானபாயயத் (P.153, v.20)

–SUBHAM — லோகா சமஸ்தா சுகினோ பவந்து

மேவார் வீரன் ராணா சங்ராம் சிங் – || : சுவையான சம்பவங்கள் (Post No.6995)

WRITTEN BY S NAGARAJAN

swami_48@yahoo.com


 Date: 21 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 10-59 am

Post No. 6995

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ச.நாகராஜன்

ராஜஸ்தானத்தின்  வரலாறு, வீரம் மிக்க சுவையான வரலாறுகளுள் ஒன்று.

 உயிரைத் துச்சமாக மதித்து முகலாயர்களுடனும் பிரிட்டிஷாருடனும் போரிட்ட ரஜபுத்திரர்களின் வீர வரலாறு இன்றைய கால கட்டத்தில் சரியானபடி தொகுக்கப்படவில்லை என்பது வருத்தமூட்டும் ஒரு விஷயம்.

மேவாரை ஆண்ட மன்னர்களுள் குறிப்பிடத்தகுந்த பெரும் வீரர் ராணா சங்ராம் சிங் -|| (24-3-1690 – 11-1-1734)

அமர் சிங்கைத் தொடர்ந்து ஆட்சி பீடம் ஏறிய சங்ராம் 1710 முதல் 1734 முடிய மேவாரை ஆண்டார். மேவார் தான் இழந்த பல பகுதிகளை இவர் ஆட்சிக் காலத்தில் தான் மீட்டது.

ராணா சங்ராம் சிறந்த வீரர். மேதை. பட்சபாதமின்றி நீதி வழங்கியவர். ஒழுக்கம் விதிகள் என்பதில் மிகவும் கண்டிப்பானவர்.

இவரது வாழ்க்கையில் ஏராளமான சுவையான நிகழ்ச்சிகள் உண்டு.

கொடாரியோவைச் சேர்ந்த அவரது சிறந்த தளகர்த்தர்களுள் ஒருவரான சோஹன் என்பவர் ஒருமுறை ராணாவை அணுகினார்.

அரசவைக்கு வரும் போது  அணிந்து வரும் உடையில் சில மடிப்புகளைச் சேர்க்க வேண்டும் என்று அவர் ராணாவிடம் விண்ணப்பித்தார்.

இதை மறுக்க முடியாத ராணா அதற்கு அங்கீகாரம் அளித்தார்.

மன்னரிடம் தனக்கு இருந்த செல்வாக்கை எண்ணி மனம் மிக மகிழ்ந்த சோஹன் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினார்.

அவர் சென்ற பிறகு ராணா தன் அமைச்சரிடம் சோஹனின் கட்டுப்பாட்டில் இருந்த இரு கிராமங்களின் சேமிப்பைத் தனிக் கணக்காக வைக்கச் சொன்னார்.

இதை அறிந்த சோஹன் திகைத்தார். நேரடியாக ராணாவை அணுகினார். ‘எதற்காக தனது இரு கிராமங்களின் சேமிப்பைத் தனியாக வைக்க வேண்டும், நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா’ என்று அவர் நேரடியாகவே கேட்டார்.

“ஒரு தவறும் நீங்கள் இழைக்கவில்லை” என்று உடனே ராணா பதிலிறுத்தார்.

“ஆனால்” என்று தொடர்ந்த அவர், “அந்த இரு கிராமங்களின் வரும்படி அதிக மடிப்பை ஆடைகளுக்கு வைக்கும் செலவிற்குச் சரியாக ஈடு கட்டும். எனக்கு வரும் வரும்படியில் ஒவ்வொரு சிறு காசும் முறைப்படி செலவழிக்கப்படுவதால் அதில் மிச்சம் இல்லை. ஆகவே தான் தங்களின் விருப்பப்படி செய்யப்படும் கூடுதல் மடிப்புகளுக்கு உங்கள் பணத்தைப் பயன்படுத்தும் படி ஆணையிட்டேன்” என்றார்.

உடனே சோஹன் தனது வேண்டுகோளைத் திரும்பப் பெற்றார். பழையபடி இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ராணாவும் அதற்கு இணங்கினார்.

யார் மனதும் புண்படாதபடி சாதுர்யமாக நடப்பவர் ராணா என்பதை இது உறுதிப்படுத்தியது.

ஒரு முறை ஒரு முக்கிய காரணத்திற்காகவோ அல்லது நினைவு தவறியோ தனது விதி ஒன்றை அவர் மீறி கிராமம் ஒன்றைத் தனது ஆளுகையிலிருந்து விடுவித்து விட்டார்.

அரண்மனையில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் உரித்தான நிதி அதற்கு என ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.

சமையல் அறை, உடைகள், அந்தப்புரம் என பகுதி பகுதியாக செலவினம் முறையாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

வழக்கப்படி உணவருந்த வந்த மன்னருக்கு அனைத்து உணவு வகைகளும் வைக்கப்பட்டது. ஆனால் சுவையான சர்க்கரை கலந்த தயிரை மட்டும் காணோம்.

உடனடியாக சமையலறை மேற்பார்வையாளரை அழைத்தார் ராணா.

“என்ன ஆயிற்று, சர்க்கரைக்கு?” என்று கேட்டார்.

“மன்னரே,  சர்க்கரைக்கான கிராமத்தை நீங்கள் விடுவித்து விட்டதாக அமைச்சர் தெரிவித்தார். சர்க்கரை இல்லை” என்றார் அவர்.

ராணா எதுவும் பேசவில்லை. அந்த சர்க்கரை வகை உணவு இல்லாமலேயே தன் உணவை முடித்துக் கொண்டார்.

தனது ஆணையைத் தானே மதிக்காமல் இருக்க முடியுமா, என்ன!

இப்படி இன்னும் பல சுவையான சம்பவங்கள் இவரைப் பற்றி வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

***

ஆதாரம் : Tod’s Annal of Mewar – The Annals of Rajasthan

James Tod (1782-1835) was a Political Agent to the Western Rajpoot states.

இவர் தொகுத்த தொகுப்பு நூல் C.H.Payne என்பவரால் சு ருக்கப்பட்டு 2008இல் வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியிட்ட நிறுவனம் Beyond Books, Jodhpur.

நன்றி : C.H.Payne & Beyond Books, Jodhpur

நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது? புதிய விளக்கம் (Post No.6992)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 20 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 15-35

Post No. 6992

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

subham

சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்! (Post No.6988)

WRITTEN BY London swaminathan

swami_48@yahoo.com


 Date: 19 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London – 16-25

Post No. 6988

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

பாகிஸ்தானில் பிறந்தவர் பாணினி

உலகமே வியக்கும் வண்ணம் உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர் பகவான் பாணினி. இவர் எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலைக் கண்டு உலகமே வியக்கிறது. காரணம் என்னவெனில் ரத்தினச் சுருக்கமான சூத்திரங்கள்! ஒரு எழுத்து கூட வீணாகப் பயன்படுத்தாத நூல். இதை எழுதிய பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் பிறந்தார். அவர் பிறந்த சாலாதுரா இப்போது பாகிஸ்தானில் ராவல்பிண்டிக்கு அருகில் இருக்கிறது 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அது இந்து பூமியாக இருந்தது. அவர் எழுதிய நூலின் பெயர் அஷ்டாத்யாயி (எட்டு அத்தியாயம்). அவருக்கு 300 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய காத்யாயனர் , பாணினி இலக்கண நூலுக்கு  ஒரு உரைநூல் எழுதினார். அதுவும் ரத்தினச் சுருக்கமான நூல்! அதை வ்யாகரண வார்த்திகா என்று அழைப்பர்.

அந்த உரைகாரர் தென்னாட்டைச் சேர்ந்தவர்.ஏதோ வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப் படுத்தினான் என்று உளறுவோருக்கு இது செமை அடி கொடுக்கும். பாகிஸ்தான் பகுதியில் நூல் எழூதியவருக்கு தென்னாட்டுக் காரர் உரை. அதுவும் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்!.

இதைவிட அதிசயம்- இந்த இரு நூல்களுக்கும் மாபெரும் உரை கண்டார் பதஞ்சலி. அந்த நூலுக்குப் பெயர் மஹா பாஷ்யம். உலகிலேயே மிகப்பெரிய உரைநூல்! அவர் பிறந்தது பாட்னா (பீஹார்) என்றும் தென்னாடு என்றும் கருத்து உளது. அவர் வாழ்ந்ததோ 2200 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆக எங்கோ ஒருவர் எழுதிய இலக்கண நூலுக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்தவர்கள் 2200 ஆண்டுகளுக்கு முன்னரே உரை கண்டனர் என்றால் ‘ஏக பாரதம்’ என்னும் கொள்கைக்கு மேலும் ஒரு சான்று தேவையா?

2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழி பாகிஸ்தான் உள்ள வடமேற்கு இந்தியா முதல் தென் குமரி வரை பரவி இருந்தது (கோவலன் ஸம்ஸ்க்ருதச் சுவடியைப் படித்து ஒரு பார்ப்பனிக்கு உதவிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.)

பேரழகி தமயந்தியை மணக்கப் போட்டா போட்டி!

இன்னும் ஒரு அதிசயச் செய்தி இதோ! நள தமயந்தி கதையைக் கூறும் நூல் நைஷதீய சரித்ரம். அதை 1100 ஆண்டுகளுக்கு முன்னர் புலவர் ஸ்ரீஹர்ஷ எழுதினார். அதில் பத்தாவது காண்டத்தில் ஒரு அழகான பாடல் வருகிறது. தமயந்தியின் ஸ்வயம்வரத்தை அவரது தந்தை பீமன், தலைநகரான குண்டினபுரத்தில் ஏற்பாடு செய்து 56 தேச ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பி இருந்தார். மன்னர்கள் மட்டுமின்றி தேவலோக நாயகர்களான இந்திரன் மித்திரன் வருணன், வாயு, அக்னி, யமன் ஆகிய அனைவரும் பேரழகி தமயந்தியை மணக்க ஆசைப்பட்டு மாற்றுருவில் வந்தனர். அவர்களுக்கு மன்னர் பீமன் மாபெரும் வரவேற்பு அளித்தார்.

அப்போது எல்லா மன்னர்களும் ஒருமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். நாம் எல்லோரும் ஸம்ஸ்க்ருதத்தில்தான் பேச வேண்டும்; நம்முடைய வட்டார மொழியில் பேசினால், தமயந்தி நாம்  யார், எந்த தேசம் என்று கண்டு பிடித்துவிடுவாள். அவள் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்ற பெரிய அறிவாளி. ஆகையால் நாம் ஸம்க்ருதத்தில் பேசுவோம்.”

அக்காலத்தில் நாடு முழுதும் ஸம்ஸ்க்ருதம்தான் பொது மொழி என்பதை இது காட்டுகிறது. வட இமயம் முதல் தென் குமரி வரை ஸம்ஸ்க்ருதம் பரவி இருந்தது. மன்னர்கள் அதைப் பேசினர். ஸம்ஸ்க்ருதம் பேச்சு மொழி இல்லை என்று உளறிக்கொட்டிக் கிளறி மூடும் அறிவிலிகளுக்கு நெத்தியடி, சுத்தியடி, செமை அடி கொடுக்கிறார் புலவர் ஹர்ஷ. இதோ பத்தாம் காண்டம் 34ம் ஸ்லோகம்–

அந்யோன்ய பாஷாணாவபோத பிதே ஸம்ஸ்க்ருத்ரிமாபிர் வ்யவஹாரவஸ்து

திக்ப்யஹ சமதேஷு ந்ருபேஷு வாக்பிஹி சௌவர்க வர்கோ ந ஜனைர் அசிஹ்னி.

இந்த ஸ்லோகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்கூட 56 தேச மன்னர்களும் ஸம்ஸ்க்ருதத்தில் பேசியதைக் காட்டுகிறது.

இந்த இரண்டு அற்புதச் செய்திகளை நான் அடையாறு நூலக டைரக்டர் டாக்டர் ஆர். சங்கர நாராயணன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் படித்தேன்.

–subham–

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்! (Post No.6975)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com


 Date: 4 SEPTEMBER 2019

British Summer Time uploaded in London –7-11

Post No. 6975

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்திற்கு ச.நாகராஜன் அளித்த பேட்டி

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

ச.நாகராஜன்

ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சுதந்திர தினத்தையொட்டி 14-8-2019 அன்று காலை 10 மணிக்கு ஒரு விசேஷ நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.

இந்தியா குறித்து பெருமிதம் கொள்ளக்கூடிய விஷயங்கள் யாவை என்று பேட்டி எடுத்தவர் கேட்க அதற்கு ச.நாகராஜன் அளித்த பதில் ஒலிபரப்பப்பட்டது.

அன்பர்களுடன் அந்த உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். 81.5 கோடி மக்கள் வாக்காளர்களாக இங்கு உள்ளனர்.

உலகின் அதி இளமையான நாடு இந்தியா தான். சுமார் 130 கோடி என்று உள்ள இன்றைய ஜனத்தொகையில் சுமார் 60 கோடி பேர்கள் 25 வயது முதல் 29 வயது வரை ஆன இளைஞர்களே. ஆக இளைஞர்கள் அதிகம் கொண்ட ஒரே நாடாக இந்தியா இலங்குகிறது.

இந்த இளமைத் துடிப்புடன் அறிவியலில் அது பாய்ச்சல் போட்டு முன்னேறுகிறது.

செவ்வாய் நோக்கிய பயணத்தில் தனது முதல் முயற்சியிலேயே அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒரு பெருமையான விஷயம்.

மங்கள்யான் -1 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ஆசியாவில் முதலாவதாக செவ்வாய்க்குக் கலம் அனுப்பிய நாடு; உலகில் நான்காவதாக அனுப்பிய நாடு என்ற பெருமை நம்மைச் சேர்கிறது.

5-11-2013 அன்று  செவ்வாயை நோக்கி நமது கலம் கிளம்பியது. சோவியத், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகளுடன் சேர்ந்து விட்டது இந்தியா இந்த செவ்வாய் பயணத்தின் மூலமாக.

அடுத்து சந்திரயான் – 1 22, அக்டோபர் 2008இல் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. முதன் முதலாக சந்திரனில் நீர் இருக்கிறது என்ற செய்தியை இந்தக் கலத்தின் மூலமா 2009ஆம் ஆண்டு கண்ட நமது விஞ்ஞானிகள் அதை உலகிற்கு அறிவித்தனர்.

இதைச் சரிபார்க்கத் தனது கலத்தை ஏவிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அது உண்மையே எனக் கண்டு வியந்து அதை உலகிற்கு அறிவித்தது.

சந்திரனுக்குக் கலம் அனுப்பியதன் மூலமாக அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா சேர்ந்து விட்டது.

இப்போது சந்திரயான் – 2 விண்ணில் 22 ஜூலை 2019 அன்று ஏவப்பட்டுள்ளது. இதில் உள்ள விக்ரம் என்ற லேண்டர் (Lander)  செப்டம்பர் முதல் வாரத்தையொட்டி தரை இறங்கி அனைத்தையும் சரிபார்த்த பின்னர் ப்ரக்யான் என்ற நமது ரோவர் சந்திரப் பரப்பில் ஊர்ந்து செல்லும்; ஆய்வுகளை நடத்தும். இது பெருமைக்குரிய ஒரு பெரிய விஷயம்.

விண்ணில் பறக்கும் ஒரு விண்கலத்தை மீண்டும் தேவையெனில் தரையிறக்கும் ஸ்பேஸ் காப்ஸ்யூல் ரிகவரி எக்ஸ்பெரிமெண்டையும் (Space Capsule Recovery Experiment) இந்தியா செய்து வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரே ராக்கெட்டில் 104 சாடலைட்டுகளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. பல நாடுகளும் தங்கள் சாடலைட்டுகளை விண்ணில் ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.

அடுத்து உலகின் பொறியியல் வல்லுநர்களில் அதிகமான பேரை உருவாக்குவது இந்தியாவே என்பது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.

அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் இவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.

இதற்குச் சான்றாக மல்டி நேஷனல் கம்பெனிகளையும் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் தலை சிறந்த கம்பெனிகளையும் வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.

Microsoft, Google,Pepsico,AdobeSystem, Mastercard உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்க்ள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.

இந்தியா உலகின் மூன்றாவது பலம் பொருந்திய இராணுவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் எந்த ஒரு நாட்டையும் அது தோன்றிய காலத்திலிருந்து தாக்கியதில்லை, ஆக்கிரமித்ததில்லை என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம்.

தற்காப்புக்கென இருக்கும் நமது ராணுவத்தை ஐ.நாவின் அமைதி காக்கும் படையிலும் நமது நாடு ஈடுபடுத்தியுள்ளது.

அதிக துருப்புகளை ஐ.நாவின் பணிக்கென அனுப்பிய இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இலங்குகிறது.

தகவல் தொடர்பில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதை நிரூபிப்பது நமது இன்ஸாட் அமைப்பு. (Insat System).

உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றனர்.

சர் சி.வி.இராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், சீனிவாச இராமானுஜன், எஸ்.சந்திரசேகர், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.

இந்தியாவின் கும்பமேளா திருவிழா உலகின் ஒரு அதிசயம்.  குறிப்பிட்ட நாட்களில் தாமாகவே ஒருங்கு சேர்ந்து வழிபட்டு அமைதியாகத் தாமாகவே கலைந்து செல்லும் பெரும் மக்கள் திரளை இது போல உலகில் வேறெங்கும் காண முடியாது.

இது மட்டுமல்ல, பொழுது போக்குத் துறையில் உலகில் மிக அதிகமாக திரைப்படங்களைத் தயாரித்து வழங்குவது இந்தியாவே.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட நாடு வெகு விரைவில் வல்லரசாகத் திகழப்பொவது மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் நல்லரசாகவும் திகழப்போகிறது.

இதில் வாழ்வது பெருமைக்குரிய ஒரு விஷயம். வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!!

நன்றி, வணக்கம்.

***

–subham–

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் (Post No.6958)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

 Date: 31 AUGUST 2019


British Summer Time uploaded in London – 13-53

Post No. 6958

Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் தற்காலம் வரை நடந்த போர்களை 1968ஆம் ஆண்டு உலகத் தமிழ் மாநாட்டு கையேடு பட்டியலிட்டுள்ளது.இதோ விவரங்கள்:–