கன்பூசியஸ் சொன்னதை வள்ளுவரும் செப்பினார் !- Part 1 (Post No.12,437)
கன்பூசியஸ் Confucius) , ஒரு சீன தத்துவ வித்தகர்; ஏறத்தாழ புத்தர் காலத்தைச் சேர்ந்தவர்; அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வந்தவர் திருவள்ளுவர் (Tiru Valluvar). ஆயினும் பெரியோர்கள் ஒரே மாதிரி சிந்திப்பர் GREAT MEN THINK ALIKE என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இணங்க இரு பெரியாரிடையே பல ஒற்றுமைகளைக் காண முடிகிறது .
XXXX
Appearance தோற்றம்
தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.– கன்பூசியஸ்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது தமிழ்ப்பழமொழி. ஆனால் வஞ்சகர்கள் பசுத்தோல் போர்த்திய புலி ஆக இருப்பார்கள் ; அது கூடாது என்பது இரு ஞானிகளின் கருத்து
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. – 273
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
இன்னொரு குறளில்
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது என்கிறார் வள்ளுவர்
உள்ளத்தில் அன்பில்லாமல் வெளியே அழகாக இருந்து என்ன பயன்?
Xxxxx
Do what you want others to do to you !
உங்களுக்கு எதை மற்றவர் செய்தால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்களோ அதை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.– கன்பூசியஸ்
எல்லோரையும் நேசியுங்கள்; கொஞ்சம் பேரை நம்புங்கள்; எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள் – என்பது ஷேக்ஸ்பியர் வாக்கு -All’s Well that Ends Well
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்–குறள் 318
அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்?.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு-குறள் 190
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்டோ?
xxxxxx
Anger சினம்/கோபம்
“When anger rises, think of the consequences.” என்கிறார் கன்பூசியஸ் .
கோபம் வருகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று (முதலில்) சிந்தியுங்கள் — கன்பூசியஸ்
வள்ளுவனும் இதையே சொல்கிறான்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.- 305
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்–குறள் 306
சம்ஸ்க்ருதத்தில் கோபத்துக்கு சேர்ந்தாரைக்கொல்லி என்று பெயர். ஏனெனில் அரணிக்கட்டையில் பிறக்கும் தீயைக் கட்டுப்படுத்தாமல் இருந்தால் அது அந்தக் கட்டையை எரித்த்துவிடும் ; காடுகளில் இரண்டு மரங்கள் ஒன்றை ஒன்று கொஞ்சி, குலவி, உரசி மகிழ்கையில், தீப்பொறி உண்டாகும். அது காட்டையே அழித்துவிடும். இதனால் ஆஸ்ரயாஸஹ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்வர் .
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும் (காட்டையே அழிக்கும் காட்டு தீ போல)
Xxxx
நடையை மாத்து
“When it is obvious that the goals cannot be reached, don’t adjust the goals; adjust the action steps.”
லட்சியத்தை அடைய முடியாதென்பதற்காக லட்சியங்களை / குறிக்கோளை மாற்றாதே ; உன்னுடைய செயல் திட்டங்களை (குறிக்கோளை நோக்கி) மாற்றிக்கொள் – கன்பூசியஸ்
இதை வினை செயல்வகை, வினைத்திடப்பம் என்ற அதிகாரங்களில் வள்ளுவரும் காட்டுகிறார்
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.-675
பொருள்
இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும்
இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும்.
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.–குறள் 675
பொருள்
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
Xxxxx
“It does not matter how slowly you go so long as you do not stop.”
எவ்வளவு மெதுவாக குறிக்கோளை நோக்கிச் செல்கிறாய் என்பது பற்றிக் கவலை வேண்டாம் . நில்லாமல் செல் – என்கிறார் கன்பூசியஸ்
இதையே சுவாமி விவேகானந்தரும்
உத்திஷ்ட, ஜாக்ரத , ப்ராப்யவரான் நிபோதத
எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நிற்காதே என்று கூறுவார் (Arise, Awake, Stop not till the goal is reached)
To be continued…………………………….
Tags- கன்பூசியஸ் , வள்ளுவர், குறள் , சினம், தோற்றம்
There are some important Ayurveda (Hindu Medical System) sayings in Sanskrit slokas that everyone should know.
On immunity
Immunity in the body functions in two ways;
Vyaadhik samatvam or vyaadhyapadapratibandhakatvam
Cakrapaanidatta in his commentary on Caraka Samhita says Vyaadhik samatvam vyaadhibala virodhitvam
Vyaadhyutpada prati bandhakatvam Ca.Sa.26-27
Meaning
Gives immunity by providing forthwith the resistance to a disease it may be produced
Or
It may provide the type of resistance by minimising its power so that the disease may not be harmful even if it has started.
Xxxx
Simile in Caraka Samhita
Just as seed remains dormant in the soil and grows after sometime , so also the provoked dosa (eliological factors like bacteria) remains dormant in the body tissues and when it becomes powerful it produces disease.
Adhisite yathaa bhuumimdijam kala ca rohati
Adhisite tathaa dhaatum dosah kole ca kupyati
3-68
Meaning
It explains that the bacteria, however harmful they may be, cannot do any harm until they get proper soil and nutrition in due time.
Xxxx
On diet/ pathya control
There is one couplet in Saarakaumudi 2-1
Disease sometimes, without any specific drug can be checked through proper diets only, but they can never be cured by the application of hundreds of medicines if there is no proper diet.
வியாசரின் கட்டளையின் பேரில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அஸ்வமேத யாகத்தைச் செய்ய உறுதி கொண்டார் தர்மர்.
அதையொட்டி யாகத்திற்கான குதிரையைக் காக்க வேண்டிய பொறுப்பை அர்ஜுனனிடம் ஒப்புவித்தார் தர்மர்.
யாக குதிரை அதிவேகமாக எல்லா திசைகளையும் நோக்கிச் செல்ல ஆரம்பித்தது.
அதை எதிர்த்த அரசர்களை எதிர்கொண்டு அர்ஜுனன் அவர்களை வென்றான்.
யாக குதிரை காந்தாரியின் காந்தார தேசத்தை நோக்கிப் பறந்தது.
அதை எதிர் கொண்டான் சகுனியின் புத்திரன்.
அர்ஜுனன் அவனை நோக்கி, “வீணாக எதிர்க்க வேண்டாம். அரசர்களைக் கொல்ல வேண்டாம் என்பது தர்மரின் உத்தரவு. ஆகவே அடி பணிந்து போ” என்று கூறினான்.
ஆனால் சகுனியின் மகன் அதைக் கேட்கவில்லை.
தனது படையுடன் வந்த சகுனி புத்திரன் குதிரையைச் சூழ்ந்து கொண்டான்.
இதனால் கோபம் கொண்ட அர்ஜுனன் தனது காண்டீவத்தால் அந்த வீரர்களின் சிரங்களை அறுத்தான்.
உடனே சகுனி புத்திரன் அர்ஜுனனை நோக்கிப் பாணங்களை இறைத்தான்.
அர்ஜுனன் உடனே அர்த்த சந்திர பாணத்தை சகுனி புத்திரன் மேல் ஏவ அது அவனது தலைப்பாகையை அறுத்தது.
அனைவரும் அந்த அதிசயத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்ததோடு பயந்து ஓட ஆரம்பித்தனர்.
சகுனி புத்திரனும் ஓடினான். அர்ஜுனன் அவர்கள் அனைவரது முடியையும் கவர்ந்தான்.
சிலர் கைகளை உயரத் தூக்கிவாறு ஓடினர். அவர்கள் கைகள் மட்டும் பாணத்தால் அறுக்கப்பட்டன. அது கூடத் தெரியாமல் அவர்கள் ஓடிக் கொண்டிருந்தனர்.
நிலைமை விபரீதமாவதைக் கண்ட காந்தார ராஜனின் தாய் மந்திரிகளையும் வயது முதிர்ந்தோரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டாள்.
சிறந்த பூஜா திரவியங்களை எடுத்துக் கொண்டு வந்தாள். அர்ஜுனனை வரவேற்றாள்.
தனது மகனைத் தடுத்தாள்.
அர்ஜுனனும் கோபம் தணிந்தான். அவளை வணங்கிப் பூஜித்தான்.
பிறகு சகுனி மகனைத் தேற்றி, அஸ்வமேத யாகத்திற்கு வருமாறு அழைத்தான்.
“எனக்கு நீ சகோதரனே. காந்தாரியை நினைத்தும் திருதராஷ்டிரனை நினைத்தும் உன்னை நான் கொல்லவில்லை. நீ உயிரோடு இருக்கிறாய். உனது படை வீரர்கள் கொல்லப்பட்டனர். விரோதத்தை விடு. சித்ரா பௌர்ணமி அன்று நடக்க இருக்கு அஸ்வமேத யாகத்திற்கு வா.” என்றான்.
பிறகு இஷ்டப்படி சஞ்சரிக்கும் யாக குதிரையைப் பின் தொடர்ந்து செல்லலானான்.
ஆச்வமேதிக பர்வத்தில் எண்பத்தைந்தாவது அத்தியாயமாக அமைகிறது இந்த அர்ஜுனனின் சகுனி மகனுடனான யுத்தம்.
பகைவருக்கும் அருள் புரியும் மனம் கொண்டவன் அர்ஜுனன் என்பதை இது விளக்குகிறது.
தங்களை சூதாட்டத்தினால் நயவஞ்சகமாக வென்று நாட்டை விட்டு வெளியேற்றி பல தீய யோசனைகளை துரியோதனனுக்குச் சொல்லித் தந்த சகுனியின் மகனைக் கூட அவன் மன்னித்தான். அப்படிப்பட்ட நல்ல உள்ளத்தைக் கொண்டவன் அர்ஜுனன் என்பதை இந்தப் போர் சுட்டிக் காட்டுகிறது.
யாகக் குதிரை அஸ்தினாபுரம் நோக்கித் திரும்ப தர்மர் யாக குதிரை வெற்றியுடன் வருவதை அறிந்து மனக் களிப்புற்றார். பீமனை நோக்கி யாகசாலையை அமைக்கச் சொன்னார்.
1.This Gujarat city has a rock in Girnar with Asokan, Rudradaman and Skandagupta inscriptions.
2.This Punjab city is famous for sports good and sports men. During Vedic period it was called Prasthala, capital of Trigarta kingdom.
3.The Fort in this Rajasthan city is known as Sonar Qila (Golden Fort). Unlike most other forts in India, this Fort houses shops, hotels and ancient havelis (homes) where generations continue to live.
4. This city is the capital of Rajasthan and is known for its various attractions like Amer Fort, Hawa Mahal, Jala Mahal, Jantar Mantar, etc. Called Pink City.
5.This Madhya Pradesh city has River Narmada, Marble rocks, Huge Shiva statue, good temple Famous for toys and terracotta items. Jute crafts, Silver, Chanderi and Maheshwari sarees, Zardosi embroidery and Brassware items.
6.This city is winter capital of Kashmir; it is famous for its temples and palaces. Vaishno Devi temple is in this region.
7. This Uttarakhand city at a height of 6,150 feet is the gateway to several Himalayan mountain climbing expeditions, trekking trails and pilgrim centres like Badrinath.
8.This city is known as Blue city; second largest city in Rajasthan with temples and palaces; Famous for marble goods, glass bangles, cutlery etc
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 23
தண்டேலி –24 kilometers from Dandeli –என்னுமிடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் கவல (Kavala Caves) குகைகள் இருக்கின்றன. அங்கு ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஹலியல்(Halial) என்னும் ஊரில் 1996ல் கட்டப்பட்ட துல்ஜா பவானி கோவில், கோவா , கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநில பக்தர்களை ஈர்க்கிறது .
107.சிர்ஸி மாரிகாம்பா கோவில் Sirsi Marikamba Temple
இங்கு துர்கா தேவி மாரிகாம்பா என்னும் பெயரில் வழிபடப்படுகிறாள்.1688 ஆம் ஆண்டு இந்தக் கோவில் உருவானது .எண்தோள் துர்க்கை புலி மீது சவாரி செய்கிறாள். ஒரு அசுரனைக் கொல்லும் உக்ர வடிவில் சிலை செதுக்கப்பட்டுள்ளது . அருகிலுள்ள ஏரியில் இந்தச் சிலை கிடைத்ததாம்.
கொங்கணி பிரதேசத்தில் பரவிய காவி பாணி கலை வடிவ ஓவியங்களை இங்கே காணலாம்.
காந்திஜி நுழைய மறுத்த கோவில்
உத்தர கன்னட மாவட்டத்தில் ஹுப்ளி யிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது
இந்தக்கோவிலின் பூஜாரி விஸ்வ கர்ம குலத்தைச் சேர்ந்தவர். இங்கு எருமை பலி கொடுக்கப்பட்டுவந்தது 1934-ம் ஆண்டில் மஹாத்மா காந்தி இந்த ஊருக்கு வந்தார்; கோவிலில் மிருக பலி கொடுக்கப்பட்டதைக் கேட்டவுடன் கோவிலுக்கு வர மறுத்துவிட்டார். பின்னர் கோவில் ட்ரஸ்டிகளில் ஒருவரே மிருக பலியை நிறுத்த இயக்கம் மேற்கொண்டு வெற்றிகண்டார் .
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ரத யாத்திரைக்கு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்; மஹாபாரத விராட பர்வத்தில் யுதிஷ்டிரர் வழிபட்டதாகக் கூறப்படும் துர்கா தேவி இவளே என்ற நம் பிக்கையும் மக்களிடம் உள்ளது.
108.வனவாசி மதுகேஸ்வர கோவில் Banavasi Madhukeshwara Temple
பனவாசி / வன வாசி என்னும் இடம் சிர்ஸி யிலிருந்து 24 கி.மீ .
கடம்ப வம்ச தலை நகர் .
இங்குள்ள மதுகேஸ்வர்- மதுமதி சிவன் கோவில் புகழ்பெற்றதும் பழமையானதும் ஆகும்.
கல்லிலான கட்டில் , உயரமான நந்தி, மியூஸியம் , கடம்ப வம்சத்தினர் சிற்பங்கள். இங்குள்ள சிறப்பு அம்சங்கள் :
இது கடம்ப வம்ச மன்னர்காளால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது; கன்னட மொழி பொறிக்கப்பட்ட பழைய நாணயமும் இங்கே கண்டெடுக்கப்பட்து பொ .ஆண்டு 345 CE முதல் 200 ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்த கடம்பர்கள் இங்குள்ள பழைய சின்னங்களை உருவாக்கினார்கள்; கர்நாடகத்தின் முதல் மன்னர்கள் கடம்ப வம்சத்தினர்தான் . ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் கடம்போத்சவம் நடக்கிறது. யக்ஷ கான கேந்திரம் இது. கன்னட மொழியின் ஆதிகவி பம்பா , இங்குதான் தந்து படைப்புகளை எழுதினார்.
குறிப்பு
108 கோவில்கள் என்று தலைப்பிட்டு எழுதத் துவங்கிய பின்னர்தான் இது 1008 கோவில்களுக்கும் மேலாக உள்ள மாநிலம் என்பது புரிந்தது. ஆகையால் முக்கியமான கோவில்களைத் தொடர்ந்து காண்போம்..
109. சஹஸ்ர லிங்க கோவில் Sahasralinga Temple
சிர்ஸி யிலிருந்து 17 கி.மீ தூரம்.
சுவாதி வட்டார மன்னர் தனக்கு மகப்பேறு கிடைப்பதற்காக ஆயிரம் லிங்கங்களை இங்கு அமைத்தார்.
12 ஆண்டுகளுக்கு முன்னர் கம்போடியாவிலும் இதே போல சஹஸ்ரலிங்கம் இருப்பது பற்றி ஆராய்ச்சிக்கட்டுரை எழுதியுள்ளேன் .
இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்துக்கும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டுக்கும் அதிசியமான தொடர்பு நிலவுகிறது. உலகப் புகழ்பெற்ற அங்கோர்வட் கோவில் கம்போடியாவில் இருப்பதைப் பலரும் அறிவார்கள். வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தோநேசியா, கம்போடியா முதலிய நாடுகளில் இந்துக்கள் 1500 ஆண்டுகளுக்கு ஆட்சி செலுத்தியதையும் அகத்தியர், கவுண்டின்யர் என்ற இரண்டு பிராமணர்கள் இந்த ஆட்சியை நிறுவியதையும் பலரும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்திருப்பர். ஆனால் வியட்நாமில் ஸ்ரீமாறன் என்ற பாண்டியன் ஆட்சியை நிறுவியதும் கம்போடியாவில் சஹஸ்ரலிங்கம் இருப்பதும் பலருக்கும் தெரியாது.
கர்நாடகத்திலும் கம்போடியாவிலும் மட்டும் ஓடும் நதிக்கிடையில் இப்படி ஆயிரம் லிங்கங்களை யார் செதுக்கினார்கள், எப்போது செதுக்கினார்கள், ஏன் செதுக்கினார்கள் என்பது மர்மமாகவே இருக்கிறது. இதற்கான சாட்சியங்கள் பழைய நூல்களில் இல்லை. பெரும்பாலும் செவி வழிச் செய்தியில்தான் கிடைக்கிறது. ஆயினும் பல நூற்றாண்டுகளாக, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை இரண்டும் இருக்கக் கூடும்.
கர்நாடக மநிலத்தின் வடக்கு கன்னட பகுதியில் சால்மலா ஆற்றில் இந்த ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. சீர்சி என்னும் ஊரிலிருந்து 17 கிலோமீட்டர் பயணம் செய்தால் இதை அடையலாம். ஆற்று நீரோட்டத்தில் நூற்றுக் கணக்கான லிங்கங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இயற்கை அழகு கொஞ்சும் இடம்– மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென் மேற்குப் பருவமழை கொட்டும் காலங்களில் ஆறு கரை புரண்டு ஓடும் காட்சி கண்கொள்ளாக் கட்சியாகும். லிங்கங்கள் அதன் அடிப்பாகமான யோனியுடன் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஷால்மலா ஆற்றின் நீரால் இவைகளுக்கு எப்போதும் அபிஷேகம்தான். கோவில்களைப்போல யாரும் போய் அபிஷேகம் செய்யவேண்டியதில்லை.ஆண்டுதோறும் சிவராத்திரியின்போது ஏராளமான மக்கள் வந்து வணங்குகின்றனர்.
மஹாபாரதக் கதைகளைத் தொடர்புபடுத்திப் பேசும் கதைகளும் உலவுகின்றன
109.கோடி லிங்கேஸ்வர கோவில் , கோலார் தங்கச்சுரங்கம் Kotilingeshvara Temple KGF
இந்த தலத்தின் சிறப்புகள் :
108 அடி உயர சிவலிங்கம் கோவிலைச் சுற்றி லட்சக்கணக்கில் குட்டி சிவலிங்கங்கள் !!
நந்தியின் உயரம் 35 அடி.!
கோலார் தங்கச் சுரங்கம் அருகில், 6 கி.மீ . தொலைவில் நாஸ்தீகராக இருந்து ஆஸ்தீகராக மாறியவர் அண்மைக்காலத்தில்
சமைத்த கோவில்.
வரும் போகும் பக்தர்கள் ஆளுக்கு ஒரு லிங்கம் வீதம் வைத்து 70 லட்சம் குட்டி லிங்கம் வந்து விட்டதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது
பல்வேறு சந்நிதிகளும் புதிதாகத் தோன்றியுள்ளன.
சிவராத்திரி காலத்தில் ஹெலிகாப்டர் மூலம் அபிஷேகம் நட த்ததப்பட்டது
கூடிய விரைவில் ட்ரோன் Drone Abishekam அபிஷேகம் நடக்கலாம் !!
பிரிட்டிஷ் பிரதமர் வீட்டில் தங்கப் பிள்ளையார் ! (Post No.12,431)
சிறுவயதிலிருந்தே தனக்கு தெய்வ பக்தி ஊட்டிய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்து பிரிட்டிஷ் பிரதமர் சுனக் ரிஷி பேசினார். தனக்கு ஹனுமான் சாலீஸா ( துளசிதாசர் எழுதியது ), பகவத் கீதை ( மஹாபாரதத்தில் உள்ளது ) ஆகியவை சிறு வயது முதலே தெரியும் என்றார் . பிரிட்டிஷ் பிரதமர் வசிக்கும் லண்டன் வீட்டை 10, டவுனிங் ஸ்ட்ரீட் என்பார்கள். அங்கு தனது மேஜை மீது தங்க கணபதியை வைத்து இருப்பதாகவும் கஷ்டமான முடிவுகளை எடுக்க ராமரும், பிள்ளையாரும் தனக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டார். தனது சொற்பொழிவினை ஜெய் சீதா ராம் என்று சொல்லி துவக்கினார் (Jai Siya Ram)
லண்டனிலிருந்து 60 மைல் தொலைவில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் நகரம் இருக்கிறது. அங்கு பிரபல இந்துமத உபன்யாசகர் ஸ்ரீ மொராரி பாபு ராமாயண சொற்பொழிவு நடத்தி வருகிறார். இந்திய சுதந்திர தினத்தன்று (15-8-2023) சுனக் ரிஷியை சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தனர் . அப்போது அவர் மனம் திறந்து பேசினார்
இந்த நிகழ்வில் திரளான இந்துக்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நான் பங்கேற்றது எனக்கு கிடைத்த கௌரவம் எனவும் ரிஷி சுனக் கூறினார்.. ஒரு பிரிட்டிஷ் இந்துவாக இருப்பதில் பெருமை அடைகிறேன் என்றார். மொராரி பாபுவின் ‘ராம் கதா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் ரிஷி சுனக், தான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன் என்று கூறினார். அவர் ஆற்றிய உரையில், இந்திய சுதந்திர தினத்தன்று ராம கதை நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை மிகவும் தனிப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அது என்னை வழி நடத்துகிறது என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பிரதமராக இருப்பது மிகப்பெரிய கவுரவம் என்றாலும், இந்த பதவியை வகித்து கடமைகளை நிறைவேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். எனது இந்த இந்துமத நம்பிக்கை தான் நாட்டிற்காக நான் உழைப்பதற்கான தைரியத்தையும், வலிமையையும், போராடும் குணத்தையும் அளிக்கிறது என ரிஷி சுனக் தெரிவித்தார். இதனையடுத்து, இங்கிலாந்து நாட்டின் சவுத் ஹாம்ப்டனில் வசித்த போது தனது குழந்தைப் பருவத்தில் தனது உடன்பிறப்புகளுடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வந்ததை நினைவு கூர்ந்த அவர், தான் ஒரு இந்து என்பதில் பெருமைப்படுகிறேன். இந்த மேடையின் பின்னணியில் தங்க நிறத்தில் ஹனுமனின் உருவப்படத்தை வைத்துள்ளீர்கள். இதே போன்று, 10 டவுனிங் தெருவில் உள்ள என் மேஜையில் ஒரு தங்க விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.
ராமாயணத்தையும், பகவத் கீதையையும், ஹனுமான் சாலிசாவையும் நினைவுகூர்ந்து இன்று இங்கிருந்து புறப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் எப்போதும் ஸ்ரீ ராம பிரான் உத்வேகம் ஊட்டும் ஒருவராக இருப்பார் என்று பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
முன்னதாக மேடையில் நடந்த ஆரத்தியில் கலந்து கொண்ட பிரதமர் ரிஷி சுனக்கிற்கு, ஜோதிர்லிங்க ராம் கதா யாத்திரையின் புனிதப் பிரசாதமாக சோம்நாத் கோயிலில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மொராரி பாபு அவருக்கு வழங்க, பிரதமர் ரிஷி சுனக் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூறி, அதனை பெற்றுக்கொண்டார் .
—SUBHAM—
Tags- சுனக் ரிஷி, மொராரி பாபு, கேம்பிரிட்ஜ் , தங்க பிள்ளையார், 10 டவுனிங் ஸ்ட்ரீட், பிரிட்டிஷ் பிரதமர் , ராமர் ,வழிகாட்டி