மேலை நாடுகளில் சோதிடம் வளர்கிறது (Post No.12,322)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,322

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனிலிருந்து வெளியாகும் EVENING STANDARD  ஈவினிங் ஸ்டாண்டர்ட்  என்ற மாலைப் பத்திரிகை வெள்ளிக்கிழமை தோறும் வெளியிடும் இலவச இணைப்பில் ஜோதிடம் பற்றி சில வியப்பான தகவல்கள்  அச்சிடப்பட்டுள்ளன  .

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ஜோதிட மோகம் அதிகரித்து வருகிறது .

இரண்டாவதாக, முன்னால் எல்லோரும் ரகசியமாக ஜோதிடம், ஆரூடம் கேட்பார்கள். இப்போதெல்லாம் ஓப்பன் OPEN ஆக பகிரங்கமாக ஜோதிடர், குறிசொல்லுவோர், ஆரூடம் சொல்லுவோரிடம் போனதை V. I .P.s / பெரும்புள்ளிகள் பத்திரிகைகளில் எழுதுகின்றனர்.

இங்கிலாந்து மஹாராணி எலிசபெத் அம்மையார் இறந்தவுடன் பிரின்ஸ்/ இளவரசர் PRINCE HARRY ஹாரி பற்றி அதிகம் செய்திகள் வந்தன. அவர் வருவாரா, அவர் வந்தால் அவருக்கு எந்த இடம் ஒதுக்கப்படும், அவர் திருமணம் செய்துகொண்ட கறுப்பினப் பெண்மணி ( Meghan Markle )(யை  ஒதுக்கி வைப்பார்களா என்று. இதற்கெல்லாம் காரணம் அவர் எழுதி வெளியிட்ட புஸ்தகமே.. தனது நினைவலைகளை ஸ்பேர்  (memoir SPARE) என்ற தலைப்பில் வெளியிட்டு , அவர் அரச குடும்பப தகராறு அனைத்தையும் அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். அந்த புஸ்தகத்தில் அவர் குறி சொல்லும் ஒரு பெண்மணியைச்(Psychic) சந்தித்து,  இறந்துபோன இளவரசி டயனவுனாவின் (Princess Diana)  ஆவியுடன் பேசிய விஷயத்தையும் ஹாரி எழுதியுள்ளார். இதனால் குறிசொல்லுவோருக்கும்  , இறந்துபோனோரின் ஆவிகளுடன் பேசுவோருக்கும் டிமாண்ட் / கிராக்கி அதிகரித்துவிட்டது.

Prince Harry claims he spoke to Diana through a psychic and a leopard in Botswana was ‘a signal sent by her’

  • Prince Harry contacted a psychic in a bid to reach his late mother Diana 
  • His memoirs, Spare, reveal how he received a message from the late Princess 
  • The Duke also briefly believed that his mother may have faked her own death.

·         என்ற தலைப்பில் பத்திரிகைகள் கொட்டை எழுத்துக்களில் செய்திகளை வெளியிட்டன. சொல்லப்போனால் உலகிலுள்ள புகழ்பெற்ற அத்தனை ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் இந்தச் செய்தி வெளியானது

இளவரசர் ஹாரி ஆரூடம் சொல்லும் ஒரு பெண்மணியைச் சந்த்தித்து,  அவர் மூலமாக ஆவியுடன் பேசி,  இறந்துபோன தனது அன்னை டயானா என்ன சொன்னார் என்று ஸ்பேர் நூலில் எழுதியுள்ளார்.

xxx

61 பில்லியன் ஹிட்ஸ் (Tarot has 6-1 billion views on Tik Tok)

டாரட் என்பது கார்ட் Card Reading ஜோதிடம்; அட்டை ஜோதிடம்; நம்ம ஊரில் கிளிகள் அட்டையைக் கொத்தி வரும். உடனே சாலை ஓர கிளி ஜோதிடர் அதைப் படித்து நமக்கு குறிசொல்லுவார். இது போல நாம் எடுக்கும் டாரட் என்னும் பட க்கார்டுகளைப் பார்த்து நமக்கு குறிசொல்லுவோர் இங்கு லண்டனிலும்  பல நகரங்களிலும் உண்டு. இவைகளைப் பார்க்க Tik Tok டிக் டாக்கில்  61 பில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர் (ஒரு பில்லியன் என்றால் 100 கோடி )

xxx

மேலை  நாடுகளில் ஹோட்டல்களில் ரிசப்ஷன் அருகில் ஒருவர் மேஜைபோட்டு (Concierge) அமர்ந்து இருப்பார் . அவரிடம் சொன்னால் நம க்கு  அந்த ஊரிலும் அருகாமை ஊர்களிலும் சுற்றிப்பார்க்க டிக்கெட் கொடுப்பார் அல்லது டூரிஸ்ட் டாக்சி, கோச் ஏற்பாடு செய்து தருவார். இப்பொழுது அவரிடம் சொன்னால் ஜோதிடர் சர்வீசும் கிடைக்கும்

xxx

மதுரை அனுபவம் – தினமணி ரெங்கநாத ஜோதிடர்

இப்பொழுது எனக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. நான் வேலை பார்த்த தினமணிப் பத்திரிகையில் ஜோதிடப் பகுதி எழுதி பிரபலம் ஆனவர் ரெங்கநாத ஜோதிடர். அவர் மதுரையில் புகழ்பெற்ற காலேஜ் ஹவுஸ் COLLEGE HOUSE HOTEL,MADURAI ஹோட்டலில் ஒரு நிரந்தர அறை எடுத்து பெரிய போர்டும் போட்டிருப்பார். நாங்கள் காப்பி சாப்பிடப் போகும்போது அவர் அறையில் வாடிக்கையாளர் இல்லாவிடில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம். எப்படி அதிக வாடகை உடைய ஹோட்டல் அறையில் இப்படி நிரந்தர அறை போட்டிருக்கிறீர்கள் என்று வியப்போம். அவர் பதில் சொல்லாமல் மழுப்பி சிரித்து விடுவார். ஆனால் போகும் வருமம் அரசியல்வாதிகளும்  மலேசியா, சிங்கப்பூர் , இலங்கை ஆட்களும் அங்கே வாடிக்கை என்பது எங்களுக்குத் தெரியும். மதுரை ஹோட்டலில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் ‘கதி’ என்றால், இன்று லண்டன் முதலிய நகரங்களில் ஜோதிடர் இருப்பது வியப்பில்லை

Xxxx

கிறிஸ்டல்ஸ் – யானை விலை, குதிரை விலை

CRYSTALS IN NET-A-PORTER

ஸ்படிக மாலையின் அபூர்வ சக்திகளைக் கண்டுபிடித்தது இந்துக்கள்; இதனால்தான் நமது சாது சந்யாசிகள் ஸ்படிக / கிறிஸ்டல் மாலைகளை அணிகிறார்கள். வெளிநாட்டில் இந்த மோகம் அதிகரித்ததிலிருந்து அவைகளை பிரபல நிறுவனங்களும் ஆன் லைனில் விற்கின்றன. நெட் எ போர்ட்டர் NET-A-PORTER  சைட்டுக்குப் போய் கிரிஸ்டல்CRYSTALS  என்று போட்டுப் பாருங்கள் விலையைப் பார்த்தால்  மயக்கம் போட்டுவிடுவீர்கள்.

XXXX

பம்பிள் BUMBLE என்னும் கம்பெனி ஒரு நிரந்தர ஜோதிடரையே வேலைக்கு நியமித்து இருக்கிறது ; கொய்பேர்ட் KOIBIRD என்னும்  பெண்கள் துணிக்கடை ஐந்தாவது ஆண்டு விழாவுக்கு வருவோருக்கு டாரட் TAROT CARD READING கார்ட் ஜோதிட சேவை, ஆரா போட்டோ / AURA PHOTOGRAPHY (ஒவ்வொருவரையும் சுற்றியுள்ள ஒளி வட்டத்தைப் புகைப்படம் எடுத்தல்) சேவை ஆகியவற்றை அளித்தது.

கூப்GOOP  என்னும் கம்பெனி இது போன்ற சில சேவைகளை அளிக்கிறது. புதன் கிரகம் வக்ரகதி MERCURY RETROGRADE பற்றிப் பலரும் கவலைப்படுகிறார்கள்.

முன்னரெல்லாம் உளவியல் PSYCHOLOGIST நிபுணர் ஒருவரை சந்திப்பது மேலை நாட்டுக்காரர்களுக்கு வாடிக்கை. இப்பொழுது குறிசொல்லுவோரை PSYCHIC சந்திப்பது வாடிக்கை ஆகிவிட்டது!

—SUBHAM—-

TAGS- ஜோதிடர் , குறிசொல்லுவோர், ஆரூடம், டாரட் கார்ட், புதன் வக்ரகதி , ஜோதிடம் வளர்கிறது

QUIZ  நவக்கிரக பத்து QUIZ (Post No.12,321)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,321

Date uploaded in London – –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Series No.50

1.இந்துக்களின் நவக்கிரக வரலாற்றுப்படி சனிக் கிரகம் யாருடைய புத்திரன் ?

XXXX

2.நவக்கிரக துதிகள் படி செவ்வாய் யார்?

xxxxx

3.சந்திரன் தோன்றியது எப்படி?

xxxx

4.கீழ்கண்ட கிரகங்களுக்கு தமிழில் என்ன பெயர் ?

4.சோமன் -; பெளமன் -; செளம்யன்-;

அசுரர் குரு -; தேவ குரு –

xxxxxx

5.எந்த எந்த கிரகத்துக்கு காகம் வாகனம்? குதிரை வாகனம் ?

xxx

6.நவக்கிரகங்களில் ராகுவை எப்படி அடையாளம் காணலாம் ?

xxxxx

7.நவக்கிரகங்களில் நொண்டி, மெதுவாக செல்லுபவன் என்று பெயர் எடுத்தவன் யார் ?

xxxxxxx

8.சனி பகவானை வணங்க திருநள்ளாறுக்குப் போகிறோம். கீழ்கண்ட தலங்களுக்கு எந்த கிரகத்தை வணங்க நாம் செல்கிறோம்?

சூரியனார் கோவில், திருப்பதி, புள்ளிருக்கு வேளூர் , திருவெண்காடு , திருச்செந்தூர் ஸ்ரீரங்கம், காளஹஸ்தி

XXXXX

9.சிவனடியார்களுக்கு  நவ கிரகங்களும் ஒரு தீங்கும் செய்யாமலிருக்க, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் திருஞான சம்பந்தர் அளித்த பதிகம் எது ?

Xxxxx

10.ஸம்ஸ்க்ருத மொழியில் எல்லோரும் சொல்லும் நவக்கிரக துதி எது ?

xxxxx

விடைகள்

1.சூரியனுடைய புத்திரன்

xxxx

2.பூமியிலிருந்து உதித்தவன்

xxxx

3.பாற்கடலிலிருந்து உதித்தான்.

xxxx

4.சோமன் – நிலவு; பெளமன் – செவ்வாய்; செளம்யன்- புதன்;

அசுரர் குரு – வெள்ளி; தேவ குரு – வியாழன்

Xxx

5.சனிக்கு காகம்; சூரியனுக்கு குதிரை

xxxxx

6.பெரிய நகங்கள் இருக்கும் ; பாம்பு போல வால் இருக்கும்

Xxxx

7.சனை + சரன் = ஸம்ஸ்க்ருத்த்தில் அர்த்தம் மெதுவாக நடப்பவன் ; சூரியனைச் சுற்றிவருவதற்கு 30  ஆண்டுகள் ஆகும் .

xxxxxx

8.சூரியனார் கோவில்– சூரியன் , திருப்பதி– சந்திரன் , புள்ளிருக்கு வேளூர்– செவ்வாய்  , திருவெண்காடு– புதன்  , திருச்செந்தூர்– வியாழன் , ஸ்ரீரங்கம்– வெள்ளி , காளஹஸ்தி — ராஹு , கேது

xxxx

9.வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் கோளறு திருப்பதிகம்

கோளறு பதிகம் 

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தே னுளமே புகுந்தவதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே ஆசறு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

இரண்டாம் பாடல்

 எண்பொடு கொம்பொடாமை யிவை மார்பி லங்க எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தே னுளமே புகுந்த வதனால் ஒன்பதொ டொன்றோ டேழுபதி னெட்டோடாறு முடனா யநாள்க ளவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

மூன்றாம் பாடல்

உருவளர் பவளதெடின யளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அறநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

 நான்காம் பாடல்

மதிநுதல் மங்கையோடு வடபாலிருந்து மறையோ துமெங்கள் பரமன் நதியோடு கொன்றை மாலைமுடி மேலணிந்தே னுளமே புகுந்த வதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய் களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

ஐந்தாவது பாடல்

 நஞ்சணி கண்டெனந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெஞ்சின வவுணரோடு முருமிடியுமின்னு மிகையான பூத மவையும் அஞ்சிடு (ம்) நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

ஆறாம் பாடல்

வாள்வரி யதள தாடைவரி கோவணத்தர் மடவா டனோடு முடனாய் நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் கோளரியுழு வையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே

XXXXX

ஏழாம் பாடல்

செப்பிள முலைநன் மங்கை யருபாகமாக விடையேறு செல்வனடைவார் ஒப்பிள மதியு மப்பு முடிமேலணிந்தே னுளமே புகுந்த வதனால் வெப்போடு குளிரும் வாதம் மிகையானபித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

எட்டாம் பாடல்

வேள்படி விழிசெய் தன்று விடைமெலிருந்து மடவாள் தனோடு முடனாய் வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடிவந்தெ னுளமே புகுந்த வதனால் ஏழ்கடல் சூழிலங்கை யரையன் றனோடு மிடரான வந்து நலியா ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

ஒன்பதாம் பாடல்

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறு மெங்கள் பரமன் சலமகளோ டெருக்கு முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் மலர் மிசையோனுமாலு மறையோடு தேவர் வரு காலமான பலவும் அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல் அடியாரவர்க்கு மிகவே.

பத்தாம் பாடல்

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியுநாக முடிமேலணிந்தெ னுளமே புகுந்த வதனால் புத்தரோ டமணைவா திலழிவிக்கு மண்ணல் திருநீரு செம்மை திடமே அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.

பதினோறாம் பாடல்

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ நான்முக னாதியாய பிரமாபுரத்து மறை ஞான ஞான முனிவன் தானறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய் ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள் வராணை நமதே.

XXXXX

10.ஜபாகுஸும ஸங்காசம் காச்யபேயம் மஹாத்யுதிம் |
தமோரிம் ஸர்வபாபபக்நம் ப்ரணதோऽஸ்மி திவாகரம் ||

ததிசங்கதுஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம் |
நமாமி சசிநம் ஸோமம் சம்போர்முகுட பூஷணம் ||

தரணீகர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரமம் |
குமாரம் சக்திஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்||

ப்ரியங்கு கலிகாச்யாமம் ரூபேணऽப்ரதிமம் புதம் |
ஸௌம்யம் ஸௌம்யகுணோபேதம்-
-தம்புதம் ப்ரணமாம்யஹம் ||

தேவாநாம் ச ரிஷீணாம் ச குரும் காஞ்சநஸந்நிபம் |
புத்திபூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் ||

ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யாநாம் பரமம் குரும் |
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்கவம் ப்ரணமாம்யஹம்||

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |
சாயாமார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம் ||

அர்த்த காயம் மஹாவீர்யம் சந்த்ராதித்ய விமர்த்தநம் |
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம் தம்-
– ராஹும்ப்ரணமாம்யஹம் ||

பலாசபுஷ்ப ஸங்காசம் தாரகாக்ரஹ மஸ்தகம் |
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம் தம்-
– கேதும் ப்ரணமாம்யஹம் ||

जपाकुसुमसंकाशं काश्यपेयं महद्युतिम् ।
तमोरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् || 1 ||

दधिशङ्खतुषाराभं क्षीरोदार्णवसम्भवम् ।
नमामि शशिनं सोमं शम्भोर्मुकुटभूषणम् || 2 ||

धरणीगर्भसंभूतं विद्युत्कान्तिसमप्रभम् ।
कुमारं शक्तिहस्तं तं मङ्गलं प्रणमाम्यहम् || 3 ||

प्रियङ्‍कु कलिकाश्यामं रूपेणऽप्रतिमं बुधम् ।
सौम्यं सौम्यगुणोपेतं तं बुधं प्रणमाम्यहम् || 4 ||

देवानां च ऋषीणां च गुरुं काञ्चनसन्निभम् ।
बुद्धिभूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिम् || 5 ||

हिमकुन्दमृणालाभं दैत्यानां परमं गुरुम् ।
सर्वशस्त्रप्रवक्तारं भार्गवं प्रणमाम्यहम् || 6 ||

नीलाञ्जनसमाभासं रविपुत्रं यमाग्रजम् ।
छायामार्तण्डसंभूतं तं नमामि शनैश्चरम् || 7 ||

अर्धकायं महावीर्यं चन्द्रादित्यविमर्दनम् ।
सिंहिकागर्भसंभूतं तं राहुं प्रणमाम्यहम् || 8 ||

फलाशपुष्पसंकाशं तारकाग्रहमस्तकम् ।
रौद्रं रौद्रात्मकं घोरं तं केतुं प्रणमाम्यहम् || 9 ||

Xxxxx

—SUBHAM—

TAGS– நவக்கிரகம் , QUIZ , கேள்வி பதில், கோளறு திருப்பதிகம் , வேயுறு தோளி  பங்கன், ஜபாகுஸும , நவக்ரஹ துதி

வியாஸ சுபாஷித சங்க்ரஹா (Post No.12,320)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,320

Date uploaded in London –  25 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

வியாஸ சுபாஷித சங்க்ரஹா

சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 4

ச.நாகராஜன்

வியாஸ சுபாஷித சங்க்ரஹா என்ற இந்த சம்ஸ்கிருத சுபாஷிதத் தொகுப்பு நூல் ஒரு அரிய நூல். இது வியாஸ சதகம் என்றும் கூறப்படுகிறது.

இதை இயற்றியவர் சூரிய கலிங்கராஜா என்று சில அறிஞர்கள் கூற, சிலர் அதை மறுக்கின்றனர்.

இப்போதுள்ள ஓலைச் சுவடி வடிவில் இது பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்படுகிறது. 

இந்தச் சுவடி 99 செய்யுள்களைக் கொண்டுள்ளது. ஶ்ரீ வியாஸ சதகம் ஶ்ரீ துர்காயை நமஹ என்று நூல் ஆரம்பிக்கிறது. சதகம் என்றால் நூறு என்று பொருள். கீழ்க்குறிப்புகளில் உள்ள ஸ்லோகங்களையும் சேர்த்துப் பார்த்தால் இதில் 110 செய்யுள்கள் உள்ளன.

வியாஸர் கூறுவதாக அமைந்துள்ள இந்த ஸ்லோகங்கள் மஹாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளவை என்று சம்ஸ்கிருத அறிஞர் V.ராகவன் கூறுகிறார்.

வாழ்வின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இதில் வியாஸர் கூறுகிறார். 

எல்லா ஸ்லோகங்களும் அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்துள்ளவை. 

ஏராளமான சம்ஸ்கிருத இலக்கியங்களில் இந்த ஸ்லோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

 பாரதம் முழுவதும் உள்ள அறிஞர்கள் மட்டுமின்றி இது ஶ்ரீலங்காவில் பிரசித்தி பெற்ற நூலாக இது இருந்துள்ளது. அத்தோடு திபத், மங்கோலியா, பர்மா, சயாம், லாவோஸ், சம்பா, ஜியங்மை, பழைய ஜாவா ஆகிய நாடுகளிலும் இது பிரபலமாக இருந்திருக்கிறது.

இந்த நூலில் உள்ள சில சுபாஷிதங்களை இப்போது பார்ப்போம்:

நூலின் ஆரம்ப ஸ்லோகம் இது:

அஞானதிமிராந்தானாம் விப்ராந்தானாம் குத்யஷ்டபி |

ஞானாஞ்சனஷலாகாபிர்  வ்யாஸேனோந்மிலிதம் ஜகத் ||

ஞானக்கண்ணைத் திறக்கும் குருவிற்கு நமஸ்காரம் என்பது

இதன் திரண்ட பொருள்.

கேதகீகுஸுமம் ப்ருங்க: கர்ஜமபி ச சேவதே |

தோஷா: கிம் நாம குர்வந்தி குணாபஹ்ருதசேதஸ: ||

பொருள் : கேதகி மலரை நோக்கி  வண்டானது அதன் முட்கள் அதைக் குத்தி வருத்தினாலும் கூட உல்லாசமாக  அதனிடம் செல்கிறது.

நல்ல குணங்களை நாடும் ஒரு மனதிற்கு தோஷங்கள் என்ன தான் செய்ய முடியும்?

குஸுமஸ்தபகஸ்யேவ த்வயி வ்ருத்திர்மனஸ்வின: |

மூர்தின வா சர்வலோகஸ்ய ஷீர்யதே வன ஏவ வா ||

பொருள் : சுயமரியாதை உள்ள ஒருவனுக்கு வாழ்க்கையில் மலரைப் போல இரண்டே இரண்டு வழிகள் தாம் உள்ளன. ஒன்று மனிதர்களின் தலையில் இருப்பது அல்லது இரண்டாவது வழி – காட்டில் வாடி வதங்குவது!

இது போன்ற வியாஸர் கூறும் நீதிகளைத் தருவது இந்த நூல்.

இதை (Vyasa Subhasita Samgraha – Kashi Sanskrit Series 193)

1969ஆம் ஆண்டு சௌகாம்பா சான்ஸ்கிரிட் சீரீஸ் ஆபீஸ், வாரணாசி – 1 (CHOWKHAMBA SANSKRIT SERIES OFFICE, VARANASI – 1) பதிப்பித்து வெளியிட்டிருக்கிறது. அப்போதைய விலை ரூ 10/ தான்!

இதை நன்கு ஆய்வு செய்து தந்தவர் லுட்விக் ஸ்டெர்ன்பாக்! (Ludwik Sternbach)

இவரைப் பற்றிய எனது கட்டுரையை முன்னர் வெளியிட்டுள்ளேன்.

இவர் சுபாஷித தொகுப்பிற்காகவும் இதர சம்ஸ்கிருத நூல்களின் வெளியீட்டிற்காகவும் தன் வாழ்க்கையையும் சொத்தையும் அர்ப்பணித்தவர்!

***

Vishnu and Surya in Burma/Myanmar (Post No.12,319)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,319

Date uploaded in London – –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Pictures are taken for SOAS, London magazine contributed by  CONAN CHEONG, Singapore (Full details are availaable in the magazine)

There are more Vishnu idols in Burma (Myanmar) than the idols of other Hindu Gods.

Vishnu is mentioned in Burmese inscriptions. Village names have his name:

Bhan Phra Naarai= village of Vishnu (Naaraayanan)

Khas Naarai = mountain of Vishnu

Xxx

Hmawza or old Prome was founded by a Rishi with the help of six gods; of them Garuda , Vishnu’s vahana is also included.

The great inscription of Shwezigon pagoda has a story.

The story in the inscription is as follows,

Lord Buddha smiled and his disciple Ananda asked the cause of his smile . Buddha told him a sage named b

Bisnu, great in supernatural power, great in glory, possessing the five transcendental faculties, together with my son Gavampati and King Indra and BIssukarmadevapat and Katakarma naagaraaja, shall build a city called Sisit= Sri Kshetra .

After Bisnu’s departure, in the city of Animaddanapura = Pagan , he shall become king Sri Tribhuvanaaditya .

Here Bisnu is shown as a Rishi.

About this Tribhuvanaaditya , three inscriptions in Myakan and other places talk about his birth. He is shown as a king in the family of Rama of Ayodhya .

The inscription found near the Tharabha gate in Pagan give details about Brahmanas’ preparation in connection with king Kyansziththa’s (GNANA SIDDHA) royal anointment. Brahmins brought holy water in gold, silver and bronze vessels and the king came after worshipping  Narayana.

Naat -hlaung – Kyaung  temple had ten avatars of Vishnu.

Several Vishnu images were unearthed at Hmawza , known as old Prome. Three of them have three different forms of Vishnu and they are displayed in phongyi kyaung museum in hmwaza. Garuda, Lakshmi, Sanga, Chakra and Sesha are seen in those images.

Two similar sculptures are  known from Thaton. There are two other figures of Vishnu in Rangoon Museum.

XXXX

Tamil devotee

Mon. Duroiselle has pointed out, an inscription was discovered recording the erection of a Vishnu temple  at  Pagan

Following names are in the inscription ,

Vaishnava saint Irayiran Siriyan, resident of Magodayar pattanam in Mali Mandalam and a disciple of Kulasekhara , made a “Mandpa, give a door” in the temple of Naanaadesi Vinnagara Alvar at Pukam,

Alias Arivattanapuram.

Scholars identified them as follows

Magodayaarpattanam in Mali Mandalam = Cranganore in Malabar,

Pukaam = Pugama of Kalyani inscriptions

Arivattanapuram = Arimaddana puram = Pagan

Nanadesi Vinnagaram = Vishnu temple of those coming from many countries.

Now Naat Hlaung Kyaung is the only Vaishnava temple still extant at Pagaan .

Mon Duroisell identified this with the Tamil Nanadesi Vinnagaram . This may belong to 11th or 13th century. Brahmins’ prominent role is detailed in one of the inscriptions. In the ten niches of the temple, Garuda Varaha Avatara, Narasimha Avatara, Rama, Parasurama are identified. Two defaced images may be of Vamana and Kalki. Three niches are empty.

Besides the Vishnu images of the Naat-Hlaung Kyaung temple, a bronze Vishnu image , one foot high, was discovered at Pagaan and is housed in Pagan museum. It looks similar to Bhogasthanaka Murti of Vishnu, exactly similar to, a bronze image in Madras Museum.

Xxxx

Surya- Sun God in Burma/Myanmar

One Surya image was discovered on a hill known as Shin- nge-det-taung in Arkan area. And in Naat- hlaung- Kyaung temple, one image in one of the niches is also identified as Surya. This one is of South Indian type.

In these images 7 horses, two goddesses Usha and Pratusha are also seen. Scholars believe that the other one is of North Indian type.

–subham—

Tags- Vishnu, Surya, images, in Burma, Myanmar

Hinduism Crossword 24 7 2023 (Post No.12,318)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,318

Date uploaded in London – –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find out 20 words. Colours and clues will help you to identify the words.

1 23 4     5
            
 67         8 
9      10    
11           
       12    
13  14        
      15 16   
17           
            
18         19  

ACROSS (saffron/grey colour)                          

1.Orissa saint/poet Jayadeva made Buddha the tenth Avatar of Vishnu in this poem.         

6.it means cock or elephant in Sanskrit

8.climber or creeper; popular girls’ name  

9.  Peaceably, without war in Sanskrit  (see 9 as well)         

12. a Hindu festival celebrating the bond between siblings and families, often called Brother and Sister Day. Translated from the original Sanskrit, “Raksha Bandhan” meaning translates to “bond of protection.”                               

11.Hindu Rajput King of Mewar who fought with Akbar               

13. This king was a Pushyabhuti emperor who ruled northern India from 606 to 647 CE. He was the son of Prabhakaravardhana who had defeated the Alchon Hun invaders, and the younger brother of Rajyavardhana,                             

15.Greek or Roman who served in Indian army or Palaces as guard      

14.God; all temples will have this word

17.Krisha killed this demon and Hindus celebrate Deepavali on that day.                    

18.Hill                                               

19.Friend and part of Kalidasa’s play 

DOWN (green colour)

1.Krishna lifted this hill

2.  Indian gateway, usually of stone, marking the entrance to a Buddhist shrine or stupa or to a Hindu temple. typically consist of two pillars carrying two or three transverse beams that extend beyond the pillars on either side.

3.way part of Rama’s story; Sun’s southward, northward journey

4.Kerala Hindus great festival celebratinf Mahabali’s return

5.Kalidasa’s great play and the last part is in number 19

7.depth, abyss (same word is in number 9 with short sound

16.Vow; fasting in Sankrit

10.another form of Nava

Answers

G1IT2A3GO4VINDAM5
O OY N V   A
V 6A7RANA AHTAL8 
A9RANAM N10   A
R11ANAPRATAP V
DNA    R12AKHI
H13ARS14HA     K
AM W  Y15AV16ANA
N17ARAKASURA G
A  M    A  N
G18IRI MARTIM19 I

ACROSS (saffron/grey colour)                           DOWN (green colour)

1.GITA GOVINDAM            1.GOVARDHANA

8.LATHA              

9.ARANAM                           4.ONAM

6.VARANA                             7.ARANAM

12.RAKHI                                          3.AYANA

11.RANAPRATAP                2.TORANA

13.HARSHA                                      5.MALAVIKAGNI

15.YAVANA                                       14.SWAMI

17.NARAKASURA               16.VRAT

18.GIRI                                                          10.NAVI

19.MITRAM 

—subham—-

கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 11 (Post No.12,317)


Male Madheswara Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,317

Date uploaded in London – –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART ELEVEN

55..Male Mahadeshwara Betta (Kannada: ಮಲೆ ಮಹದೇಶ್ವರ (also ಮಾದೇಶ್ವರ)) (Tamil: மாதேசுவரன் மலை )

புலி மீது வந்த சித்தர் கோவில்

சுமார் 3200 அடி உயரம் உடைய மாதேஸ்வரன் மலைக்கு லட்சக்கணக்கான பகதர்கள் வருகின்றனர் மைசூரு நகரிலிருந்து 150 கி.மீ . தொலைவில் உள்ளது . மாதேஸ்வரர் என்ற சித்தர் 600 ஆண்டுகளுக்கு முன்னர்  சித்த மருத்துவத்தைப் பிரபலப்படுத்தினார் ; அவருக்கும் இங்குள்ள கோவிலுக்கும் தமிழ் நாடு உள்பட 3 மாநிலங்களில் பக்கதர்களும் சொத்துக்களும் இருக்கின்றன .மாதேஸ்வரன் , சிவபெருமானின் அவதாரம் என்று பக்தர்கள் கருதுகின்றனர் லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமான் ஆக அவர் இன்னும் தவம் செய்வதாகவும் நம்புகின்றனர். அவர் புலியின் மீது சவாரி செய்து மக்கள் துயர் தீர்த்த அற்புதங்கள் பற்றி நிறைய சம்பவங்கள் உள்ளன. அடர்ந்த காடுகள் சுற்றிலும் உள்ளன. இயற்கை அன்பர்களும் , மலை  ஏறும் குழுக்களும் இங்கே படை எடுப்பது வாடிக்கை.

XXXX

கடவுளின் காலணிகள் உள்ள கோவில்

56.Biligiri Ranganath swamy Temple பிலி கிரி ரங்கநாத சுவாமி கோவில்

சுமார் 5000 அடி உயர குன்றின் மீது அமைந்த பாலாஜி கோவில் இது . சரஸ்வதி, கிருஷ்ணர், ஆஞ்சனேயர் சிலைகளும் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளன. மிகப் பழைய சம்பக மரங்களும் இருக்கின்றன ரங்க நாதர் , ரங்க நாயகி மூர்த்திகள் வழிபடப்படுகின்றன. பெரிய காலணிகள்/ பாத குறடுகள் உள்ளன. அவைகளை அணிந்து ரங்க நாதர் காடுக ளில் உலா வருவார் என்பதால் அவற்றை புதிதாக செய்து தரும் சம்பிரதாயமும் இங்கே இருக்கிறது . இது ஒரு புதுமை ஆகும் ராம, லட்சுமணர் வழிபட்ட இடம் என்பது ஐதீகம்.

இங்கு கங்காதரேச்வரருக்கு தனி சந்நிதி இருக்கிறது

மைசூரிலிருந்து 100 கி.மீ தொலைவு

xxxxx

மைசூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் கோமடகிரி இருக்கிறது ; குன்றின் மீது சமண மத பக்தர்கள் கோமடேஸ்வர சிலையை நிறுவி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மஹா மஸ்தகாபிஷேகம் நட த்துகின்றனர் . இது சிரவண பெலகோலா மாதிரியில் இருக்கும்.

xxxxxx

57.மடிக்கரே ஓம்காரேஸ்வர் கோவில், அவனி ராம லிங்கேஸ்வர் கோவில் Avani Ramalingeshwara temple

சிவபெருமானுக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த தற்காலக் கோவில் மடிக்கரே ஓம்காரேஸ்வர் கோவில். குடகு பகுதியில் காவிரி நதியை ஒட்டி பல கோவில்கள் இருக்கின்றன . அவைகளில் மடிக்கரே யிலிருந்து 15 கி.மீ . தொலைவில் இருக்கும் அவனி ராம லிங்கேஸ்வர் கோவில் சிவன் கோவில் ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது கோலார் தங்கச் சுரங்கத்திலிருந்து 32 கிமீ.

ராமர் வழிபட்ட இடம் என்பது நம்பிக்கை. இங்குள்ள கோவில்களில் ராம, லட்சுமண, பரத , சத்ருக்குனருக்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன . அத்தோடு சீதை, வாலி, சிவன் ஆகிய மூர்த்திகளும் உண்டு .

லட்சமண லிங்கேஸ்வரர் கோவிலில் பெரிய லிங்கம் உள்ளது

நுளம்ப , சோழ வம்ச மன்னர்களின் கைவண்ணத்தைக் காணலாம். நிறைய பார்க்கவேண்டிய சிற்பங்கள் இருக்கின்றன . அருகிலேயே லவ குச மலைகளும் இருக்கின்றன . சீதாதேவியைக் காண 600 படிகள் ஏறி குன்றின் உச்சிக்குப் போகவேண்டும் . ராமாயணமே இங்குதான் நடந்தது என்ற அளவுக்கு கதைகள் பின்னப்பட்டுள்ளன!!!

Xxxx

திப்பு சுல்தான் எரித்த சிவன் கோவில்

58.பாக மண்டலம் சிவன் கோவில் Bhagamandala, Coorg/Kodagu (Kudaku in Tamil)

திப்பு சுல்தான் எரித்து முஸ்லீம் பெயர் சூட்டிய இந்துக்களின் புனிதத்தலம்

திரிவேணி சங்கம் என்றால் மூன்று நதிகள் கலக்கும் புனித கூடல் ஆகும். உத்தர பிரதேசத்தில் பிரயாகையில் உள்ள திரிவேணி சங்கமம்  உலகப் பிரசித்தி பெற்ற இடம். கும்பமேளா என்னும் உலகின் மி கப்பெரிய ண்டிகையைப் பேசாத என்சைக்ளோபீடியா கிடையா து. அது போல கனிகா , ஸுஜோதி என்னும் இரண்டு நதிகளும் காவிரியில் வந்து சேரும் இடம் பாக மண்டலம். காவிரியின் தோற்றுவாய்க்கு அருகில் உள்ளது  , மைசூரு அல்லது மங்களூரிலிருந்து பல மணி நேரம் காரில் அல்லது பஸ்ஸில் பயணம் செய்யவேண்டும்.. மடிக்கரே யிலிருந்து 33 கிமீ..

பிரயாகையில் எப்படி சரஸ்வதி நதியைக் காணமுடியதோ, அதேபோல இங்கும் மூன்றாவது நதியான சுஜோதியைக் கண்ணால் காண முடியாது; பூமிக்கு அடியில் ஓடிவந்து கலப்பதாக ஐதிகம்

சிவபெருமான், சுப்ரமண்யர், கணபதி மூர்த்திகள் உள்ள கோவில் இருக்கிறது. முக்கூடலில் குளித்து முன்னோர்களுக்கு கிரியைகள் செய்து அதற்கும் மேலேயுள்ள தலைக் காவிரிக்குச் செல்லுவது சம்பிரதாயம். .

துலா மாத ஸ்னானம் செய்வது மிகப்புனிதமாகக் கருதப்படுகிறது..

1785-1790 ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தை திப்பு சுல்தான் ஆக்ரமித்தான். கோவிலை எரித்து அழித்தான் .

அப் ஸாலா பாத் Afzalabad என்று பெயரையும் மாற்றினான் . தொ ட்ட வீர ராஜேந்திர என்ற இந்து வீரன் இந்த இடத்தை மீட்டு பாக மண்டலம் ஆக்கினான் ; குடகு ராஜ்யத்துடன் இணைத்தான்.

பாடி , ஐயங்கேரி என்னும் அருகாமை இடங்களில் கிராம மக்கள் வழிபடும் தெய்வங்களும் இருக்கின்றன.

Xxxxx

To be continued…………………………………………………

Tags- புலி, சித்தர் , பாகமண்டலம், திப்புசுல்தான், ராமலிங்கேஸ்வரர் கோவில், காலணிகள்,

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!-2 (Post No.12,316)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,316

Date uploaded in London –  24 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஜுலை 20ஆம் நாள் உலக சந்திர தினம்! இதையொட்டி 20-3-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை (இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது)

நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்!

(இரண்டாம் பகுதி)

ச.நாகராஜன்

சந்திர வளம்!

சந்திரனில் குடியிருப்பு அமைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்கு பிரம்மாண்டமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

முதலில் விண்வெளியில் பறப்பதற்கே பெரும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஜீரோ கிராவிடி எனப்படும் எடையற்ற நிலையில் வாழ்வது என்பதே ஒரு அரிய காரியம். சாப்பிடுவது, உறங்குவது, ஆண்-பெண் ஒருவரை ஒருவர் தொடுவது என்பது கூட எளிதில் முடியாத காரியம். மனித குல சந்ததி பெருக்கத்தை எப்படிச் செய்ய முடியும்? விண்ணில் கர்ப்பமுற்று குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பது சாத்தியமா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை விஞ்ஞானிகள் காண முயன்று வருகின்றனர்.

சந்திரனின் மீது சீனா காட்டும் தீவிர அக்கறையைப் பற்றி ஆராயப் புகுந்த உலக விஞ்ஞானிகள் அதற்கான காரணத்தைக் கண்டு பிரமித்தனர்.

பூரண எரிபொருள் – பெர்ஃபெக்ட் ஃப்யூயல் – எனப்படும் ஹீலியம்- 3 சந்திரனில் அபரிமிதமாகக் கிடைக்கிறது.

எதிர்காலத்தில் எந்த நாடுகளிடம் ஹீலியம் – 3 இருக்கிறதோ அவையே வல்லரசு நாடுகள். ஆகவே தான் சீனா சந்திரனைக் ‘கைப்பற்ற’ தீவிரம் காட்டுகிறது.

இந்த ஹீலியத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்தவர் விஞ்ஞானி ஜெரால்ட் குல்கின்ஸ்கி. இவரை அமெரிக்கா அழைத்தது. நாஸா தனது ஆலோசனைக் குழுவில் இவரைச் சேர்த்துக் கொண்டது.

ஹீலியம் – 3 சந்திரனில் ஒரு  மீட்டர் ஆழத்தில் கிடைக்கிறது என்பதைச் சொன்னவர் குல்கின்ஸ்கி தான்.

பூமியில் கிடைக்காத இந்த அரிய எரிபொருளை யார் முதலில் சந்திரனிலிருந்து கொண்டு வருகிறார்களோ அவர்களே உலகை ஆளப்போகும் மன்னர்கள்!

ஒரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு சொல்லலாம். வெறும் நாற்பதே நாற்பது மெட்ரிக் டன் ஹீலியம் – 3இன் ஆற்றல் மூலமாக அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படும் மின்சக்தியைப் பெறலாம்!

சந்திரப்பரப்பை 700 டிகிரி சென்டிகிரேட் அளவு உஷ்ணப்படுத்தினால் போதும், ஹீலியம் வாயு தானாகப் பிரியும். அதைப் பிடித்துக் குளிர வைக்க வேண்டியது தான்.

இது மட்டுமல்ல. மலைக்க வைக்கும் இதர தாது வளங்களில் முக்கியமான பிளாட்டினமும் சந்திரனில் அபரிமிதமாக உள்ளது.  லட்சக்கணக்கான விண்கற்கள் சந்திரனின் மீது வெகு காலம் மோதியதால் ஏற்பட்ட பிளாட்டின பரப்பு, சந்திரனை தங்க முலாம் பூசிய சந்திரப் பரப்பு என்று கவிஞர்கள் சொல்லி வரும்  வர்ணனையை மாற்றி, பிளாட்டின முலாம் பூசப்பட்ட சந்திரன் என்று சொல்லுமளவு மாற்றி இருக்கிறது.

இந்த பிளாட்டினத்தைச் சந்திரனிலிருந்து கொண்டு வந்தால் ‘ரேர் எர்த் மார்க்கெட்’ எனப்படும்  அரியவகைச் சந்தைப் பொருள்களில் ஒன்றாக இது இருக்கும்.

குறைந்தபட்ச மதிப்பீடாக ஆண்டிற்கு சுமார் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டினத்தை உலகில் விற்க முடியும். உலக பொருளாதாரமே மாறி விடும். பிளாட்டினம் வைத்திருக்கும் நாடே உலகின் தலைமைப் பீடத்தைப் பிடிக்கும்!

சந்திரன் உலகினர் அனைவருக்கும் பொது!

இப்படி அரிய வளத்தைக் கொண்டிருக்கும் சந்திரன் அனைவருக்கும் பொது  என்ற கருத்தைப் பெரும்பாலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு விட்டன!

ஆனால் விசித்திரத்தில் விசித்திரம் என்னவெனில் இப்போதே ல்யூனார் எம்பஸி என்ற நிறுவனம் சந்திரனில் பிளாட் போட்டு பூமியில் விற்கிறது. இந்த ரியல் எஸ்டேட் விற்பனையை ‘அன் – ரியல் எஸ்டேட்’ (Unreal Estate) என்று பலரும் கிண்டல் செய்தாலும் வாங்குபவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் – தங்கள் சந்ததியினருக்காக!

இந்த நிறுவனத்துடன் சண்டை போட்டு ஒரு விவசாயி, சந்திரன் தன்னுடையதே என்று போட்டிக்கு வந்தார்.

அவர் கூறிய காரணம் அனைவரையும் அசத்தி விட்டது.

250 ஆண்டுகளுக்கு முன்னர் பிரஷியா நாட்டை பிரடெரிக் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அப்போது அங்கு வாழ்ந்த ஒரு விவசாயிக்கு மற்றவரின் நோய்களைத் தீர்க்க வல்ல அபூர்வ ஆற்றல் இருந்தது.  அவர் தனது அபூர்வ ஆற்றலால் மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தார். இதனால் மனம் மிக மகிழ்ந்த பிரடெரிக் மன்னர் அந்த விவசாயிக்கு சந்திரனையே தானம் செய்து சாசனம் ஒன்றையும் வழங்கினார்.

அந்த விவசாயின் பரம்பரையில் தான் வந்ததால் தனக்கே சந்திரன் சொந்தம் என்று சந்திர சாஸனத்தைக் காட்டினார் அந்த விவசாயி.

பெண்மணிகள் விரும்பும் சந்திரன்!

வீராங்கனை கல்பனா சாவ்லாவை அறியாதவர் இருக்க முடியாது. அடுத்து இந்திய வமிசாவளியினரான சுனிதா வில்லியம்ஸும் விண்வெளி வீராங்கனை தான். இன்னும் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஏராளமான வீராங்கனைகள் உண்டு.

நமது பெண்மணிகளுக்குச் சந்திரன் என்றால் தனி ஒரு ஈர்ப்பு உண்டு. நிலவில் தேன் நிலவு கொண்டாட வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

முதன் முதலில் விண்வெளியில் சுற்றுலா சென்ற முதல் பெண்மணியாகத் திகழ்கிறார் அனூஷே அன்சாரி. இவரே இப்படிப் பயணம் மேற்கொண்ட முதல் இஸ்லாமியப் பெண்மணி ஆவார். முதலாவது ஈரானியப் பெண்மணியும் இவரே.

விண்வெளி சென்ற வீராங்கனைகளில் பலர் விண்வெளியில் கலத்தை விட்டு வெளியே வந்து நடந்தும் காட்டி விட்டனர்.

நவகிரகங்களில் சந்திரன்

இந்திய நாகரிகத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பவை நவ கிரகங்களும் 27 நட்சத்திரங்களுமே.

சந்திரன் மனதிற்கு அதிபதி என்று கூறுகின்றன நமது அறநூல்கள்.

இந்த மனதிற்கு அதிபதியை இந்தியா வெற்றி கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைக்கும் போது நாம் பெருமை கொள்வது தவறா, என்ன!

***

Tamil Chettiars in Burma (Post No.12,315)

Children of Chettair families, born and brought up abroad, who visited Cholapuram near Sivagangai to learn the history, culture and heritage of their community at Nagarathar Training Programme orgainsed by Dubai-based Nagarathar Business Initiative Group (NBIG). Deccan Chronicle, Year 2016

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,315

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

“South Indian caste from Chettinad whose main occupation is commerce and moneylending. The Chettiyars migrated in large numbers to colonial Myanmar after 1880, playing a major role in transforming the peasant subsistence economy and connecting it with the export producing sector.  By providing mortgage loans to Myanmar peasants, at 12 p2cent a month interest, they came to possess, through foreclosures, about 25 percent of the agricultural land in 13 main  rice growing of southern Myanmar by 1936. The Chettiyar was seen by the Myanmar farmer as his main enemy. Indebtedness due to Chettiyar moneylenders was one of the causes of peasant unrest and of the Saya San Rebellion in 1930. The Chettiyars were also engaged in extending credits to traders and urban land owners. Shortly before the Japanese occupation of Myanmar (1942-1945), total Chettiyar investment in Myanmar was estimated as 56 million pounds sterling, the largest foreign investment in the country. From 1942 to 1945 most Chettiyar residents in Myanmar left for India. After the war they attempted aa comeback, but without much success”.

Xxxx

Indians in Burma

“The Indians along with the Chinese  are the largest non indigenous ethnic group in Myanmar, though now Chinese are probably more numerous than Indian residents whose numbers have been reduced to  some 100,000 in recent decades. The Indian population of Myanmar consists largely descendants of the migrants who came to  the country especially from southern India and Bengal. , during the British colonial era in the early 20th century. While not all  of the Indian immigrants chose to live in the country for good, by the 1930s about one million Indians resided in Myanmar, forming about half of the population of Yangon. Educated and rice Indians occupied the middle levels of business and administration with the Chettiyars playing a prominent role as money lenders and absentee land lords. Poor Indians came and worked as  seasonal agricultural workers and contract labourers. The Indian community was distinct from the Bamar majority and was not easily integrated into Myanmar society.  There was resentment against Chettiyars and also against the largely unrestricted influx of Indian labour, which combined with a different culture and religion, aroused feelings which were manifested I two anti Indian riots in 1930  and 1938. On the other hand Myanmar nationalists drew inspiration from the Indian National Congress.

In 1942, at the beginning of Japanese occupation, half of the Indian population left the country for India. And several hundred thousands died on the trek.

After 1945, many Indians came back to Myanmar, but since Myanmar’s independence in 1948, there have been rigid restrictions on the number permitted to enter Myanmar. The Indians were gradually excluded from public services, dispossessed of their lands and discriminated against in commerce and trade.

Indian interests were particularly affected by  the nationalization of Myanmar economy during the Burma Socialist programme Party era in the 1960s.

The present Indian community is made up of poorer classes who earn their living in menial jobs. A majority of the Indians born in Burma are Muslims and the minority are Hindus “.

(This matter is taken from Historical Dictionary of Myanmar by Jan Becka, 1995)

xxxx

1643 KM border

The India–Myanmar border is the international border between India and Myanmar (formerly Burma). The border is 1,643 kilometres (1,021 mi) in length and runs from the tripoint with China in the north to the tripoint with Bangladesh in the south. (from Wikipedia).

Picture Credit , Deccan Chronicle, Year 2016

Children of Chettair families, born and brought up abroad, who visited Cholapuram near Sivagangai to learn the history, culture and heritage of their community at Nagarathar Training Programme orgainsed by Dubai-based Nagarathar Business Initiative Group (NBIG).

–Subham —

tags- Tamils, Chettiyars, Burma, Myanmar, Anti Indian riots, High interest rates 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி (Post No.12,314)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,314

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

எங்கெங்கு நூல்களின் பெயர்களில் எண்கள் (40, 50, 400, 150, 70 என்று வருகின்றனவோ அங்கே எண்களைக் கொடுத்துள்ளேன். அவற்றை நூல்களின் பெயர்களோடு இணைத்து முழுப் பெயரையும் சொல்லுவது உங்கள் சாமர்த்தியம்/ திறமை.

நாடியார்மொழி400
ன்னிவைகோக்சா
ன்50காலாதிரி
ணிந்லைனார்காஞ்ருசிடு
க்திமா15040க்சிக்று
ணைதிமொழிதுமுகும்
டி5070404040ஞ்
கைந்நிலை ள்மூ

ANSWERS

1.         நாலடியார்      –சமண முனிவர்கள்

2.         நான்மணிக்கடிகை– விளம்பி நாகனார்

3.         இன்னா நாற்பது      -கபிலர்

4.         இனியவை நாற்பது–பூதஞ்சேந்தனார்

5.         திருக்குறள்     –திருவள்ளுவர்

6.         திரிகடுகம் –நல்லாதனார்

7.         ஏலாதி–கணிமேதாவியார்

8.         பழமொழி நானூறு–முன்றுரை அரையனார்

9.         ஆசாரக்கோவை      –பெருவாயின் முள்ளியார்

10.       சிறுபஞ்சமூலம் –காரியாசான்

11        முதுமொழிக்காஞ்சி–கூடலூர்க்கிழார்

12.       ஐந்திணை ஐம்பது   –பொறையனார்

13.       ஐந்திணை எழுபது–மூவாதியார்

14.       திணைமொழி ஐம்பது     —கண்ணன் சேந்தனார்

15.       திணைமாலை நூற்றைம்பது   –கணிமேதையார்

16.       கைந்நிலை– புல்லங்காடனார்

17.       கார்நாற்பது     –கண்ணங் கூத்தனார்

18.       களவழி நாற்பது     –பொய்கையார்

நா1டியார்ப 8மொழி400
ன்இ 3,4னிவைகோக்சாஆ9
ஐ12,13ன்50காஏ7லாதி 6,5ரி
ணிந்லைனார்கா17ஞ்ருசி10டு
க்திமா15040க்சிக்று
ணைதி14,15மொழிதுமு11கும்
டி5070404040ஞ்
கை16ந்நிலைக 18XXXXXள்மூ

——–SUBHAM—–

Tags- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், crossword

QUIZ உபநிஷத் பத்து QUIZ (Post No.12,313)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,313

Date uploaded in London – –  23 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Quiz Number 49

1.மொத்தமுள்ள உபநிஷத்துக்கள் எத்தனை ?

xxxxxx

2.உபநிஷத் என்றால் என்ன?

xxxx

3.நசிகேதன் என்ற சின்னப்ப பையன் எமதருமனை சந்த்தித்து கேள்விகள் கேட்டான். இது எந்த உபநிஷத்தில் வருகிறது ?

4. உபநிஷத்துக்களில் மிகப் பழைய நூல் எது ?

XXX

5.ஐ.நா. சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுவதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் அளித்த, மாதிரீம் பஜதா பாடலில் உள்ள த, த, த – கதை எந்த உபநிஷத்தில் வருகிறது?

Xxxx

6.பழைய பத்து உபநிஷத்துக்களுக்கு மட்டுமே ஆதிசங்கரர் பாஷ்யம் (உரை) செய்தார். அவையாவன ?

Xxxx

7. T.S.Eliot  டி.எஸ். எலியட் என்ற அமெரிக்க எழுத்தாளரைப் போல  அய்ரலாந்தில் ஒரு எழுத்தாளர், நமது உபநிஷத்தில் ஆர்வம் காட்டினார். யார் அவர்?

Xxxxx

8.சத்யமேவ ஜயதே / வாய்மையே வெல்லும் எந்த உபநிஷத்தில் வருகிறது ?

xxxx

9.மஹாத்மா காந்திக்குப் பிடித்த உபநிஷத் எது?

Xxxxx

10.உபநிஷத்துக்களை சம்ஸ்க்ருத மொழியிலிருந்து பாரசீக மொழிக்கு மாற்றிய முஸ்லீம் மன்னர் யார்?

–subham—

விடைகள்

1.பொதுவாக 108 உபநிஷத்துக்கள் என்று சொல்லுவார்கள் .( இதே பிளாக்கில் பட்டியல்  உள்ளது). சிலர் 120 என்று சொல்லி தற்கால விஷயங்களையும் சேர் ப்பார்கள்

XXXXXX

2.‘உப-நி-ஸத’ என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என்று அர்த்தம். சிஷ்யனை இப்படி உட்கார்த்திவைத்துக் கொண்டு குருவானவர் செய்த உபதேசம்தான் உபநிஷத்துக்கள். ‘பிரம்மத்துக்குப் பக்கத்திலேயே போய்ச் சேரும்படியாகச் செய்வது’ என்றும் அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் (காஞ்சி பரமாச்சாரியார் 1894-1994 சொன்னது)

Xxxxxx

3.கடோபநிஷத்;இதில் தான் நசிகேதன் என்ற சின்னப் பையன் கதை வருகிறது.

Xxxx

4.பிருஹத் ஆரண்யக உபநிஷத்

மிகவும் பழைய உபநிடதம் இதுதான். கி.மு 800 என்பது வெளி நாட்டினர் கணிப்பு. மிகவும் பெரியதும் இதுதான். இதில் 400 பாடல்கள் உள்ளன. பிற்கால உபநிஷதத்தில் காணப்படும் எல்லா கருத்துகளும் இதில் விதை ரூபத்தில் இருப்பதை உணரலாம்..

xxxx

5.த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.தாம்யத! தத்த! தயத்வம்

(த…..த…..த….. உபநிஷத் கதை இதே பிளாக்கில் உள்ளது)

xxxxx

6.“தசோபநிஷத்” என்று பத்தைப் பொறுக்கி ஸ்ரீ சங்கரர் அத்வைத பரமாக பாஷ்யம் பண்ணினார். பின்னால் வந்த விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலியவற்றை சேர்ந்த பெரியவர்களும் இதே பத்துக்குத் தங்கள் தங்கள் ஸித்தாந்தப் பிரகாரம் பாஷ்யம் செய்தார்கள். இந்த பத்தையும் சுலபமாக ஞாபகத்தில வைத்துக் கொள்வதற்காகப் பெயர்களை ஒரு ச்லோக ரூபத்தில் கோத்துச் செல்வதுண்டு.

ஈச-கேன-கட-ப்ரச்ன-முண்ட-மாண்டூக்ய-தித்திரி|

ஐதரேயம் ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் தச||

ச்லோகத்தில் சொல்லியிருக்கிற order (வரிசைக் கிரமப்) படித்தான் ஆசார்யர்கள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார்கள். (காஞ்சி பரமாச்சாரியார் 1894-1994 சொன்னது)

சம்ஸ்க்ருத சந்தி விதிகளின் படி அ + உ = ஓ

ஈச + உபநிஷத் = ஈச + உபநிஷத் – ஈசோபனிஷத் ; ஈசாவாஸ் யோபநிஷத்

கேன+ உபநிஷத் = கேனோபநிஷத்

கட+ உபநிஷத் =கடோபநிஷத்

ப்ரச்ன+ உபநிஷத் =ப்ரச்னோ பநிஷத்

முண்டக + உபநிஷத் =முண்டகோ பநிஷத்

மாண்டூக்ய+ உபநிஷத் =மாண்டூக்யோ பநிஷத்

தைத்திரி|ய + உபநிஷத்= தைத்திரீ யோ பநிஷத்

ஐதரேய+ உபநிஷத் = ஐதரேயோ நிஷத்

சாந்தோக்ய+ உபநிஷத் = சாந்தோக்யோ பநிஷத்

ப்ருஹதாரண்யக+ உபநிஷத் = ப்ருஹதாரண்யகோபநிஷத்

Xxxxxx

7.அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS  ஆவார்.

புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டார்.

xxxxxxxx

8.முண்டகோபநிஷத்தில் வருகிறது.

xxxxxx

9.ஈசோபநிஷத்  அல்லது ஈசாவாஸ் யோபநிஷத் ; இது பற்றி அவர் 2, 3 பிரசாங்கங்களில் நீண்ட உரையாற்றியுள்ளார்.

xxxxxx

10.தாரா ஷிகோஷ் ; அவர் ஷாஜஹானின் மூத்த மகன்; அவுரங்கசீப்பின் சகோதரன் ; அவரை அவங்க சீப் கொன்றுவிட்டான் Dara Shikoh, was the eldest son ஒப்பி fifth Mughal emperor Shah Jahan and the brother of Aurangzeb.

——— subhan———

Tags- உபநிஷத், கேள்வி பதில், என்றால் என்ன, பாரசீக மொழி பெயர்ப்பு , தச , 108, சங்கரர் பாஷ்யம்