GOLDEN GANESH IN BRITISH PRIME MINISTER’S HOUSE (Post.12,426)
British Prime Minister Sunak Rishi attended the Raam Kathaa talks by Sri Morari Bapu on 15th August 2023 at Cambridge. Sunak Rishi, while speaking, has told the audience that he is an ardent Hindu at heart who believes in Rama and Hanuman. He also tod the devotees there that he keeps a Golden Ganesh Idol on his desk at 10 Downing Street to solve all the problems.
I have collected some pictures and Facebook pictures about the event.
xxxx
‘I’m here as Hindu’: UK PM Rishi Sunak attends Ram Katha at Cambridge
The Indian-origin British Prime Minister said that for him, faith was very personal, and it guides him in every aspect of his life. In a video of the event, Sunak is also seen making salutations of ‘Jai Siya Ram’.
SUMMARY
Rishi Sunak attended a ‘Ram Katha’ by spiritual preacher Morari Bapu
Sunak said he was there not as a prime minister but as a Hindu
In a video, Sunak is seen making salutations of ‘Jai Siya Ram’
British Prime Minister Rishi Sunak on Tuesday attended a ‘Ram Katha’ by spiritual preacher Morari Bapu organised at the Cambridge University campus. Sunak turned up as Murari Bapu’s katha was concluding. He said he was there not as a prime minister but as a Hindu.
“It is truly an honour and pleasure to be here today at Morari Bapu’s Ram Katha at the University of Cambridge on Indian Independence Day,” he said. “Bapu, I am here today not as a prime minister but as a Hindu!”
The Indian-origin British Prime Minister said that for him, faith was very personal, and it guides him in every aspect of his life. In a video of the event, Sunak is also seen making salutations of ‘Jai Siya Ram’.
The UK PM referred to a portrait of Lord Hanuman that featured in the background on the stage and said: “Just like Bapu has a Golden Hanuman in his background, I am proud that a Golden Ganesha sits gleefully on my desk at 10 Downing Street.”
Sunak said that he was proud to be British and Hindu before calling his childhood in South Hampton where he visited his neighbourhood temple with his siblings.
In his concluding remark, Sunak said Lord Ram would always be an inspirational figure for him. “I leave here today remembering the Ramayana that Bapu speaks on, but also the Bhagavad Gita and the Hanuman Chalisa. And for me, Lord Ram will always be an inspirational figure to face life’s challenges with courage, to govern with humility, and to work selflessly.”
In the end, Sunak participated in an aarti on stage. Morari Bapu presented him with a consecrated Shivlinga from the Somnath temple as a sacred offering from the Jyotirlinga Ram Katha Yatra.
(With inputs from Gopi Maniar Ghanghar)
Xxxx
Beginning his address with the chant “Jai Siya Ram,” PM Sunak expressed his honor to be present at Morari Bapu’s Ram Katha on Indian Independence Day.
Moreover, while speaking of the challenges of his role as Prime Minister, Sunak noted, “There are difficult decisions to make. Hard choices to confront. And our faith gives me courage, strength and resilience to do the best I can for our country,” Sunak said. “Bapu with your blessings, I aspire to lead in equivalence with how our scriptures have taught leaders to lead,” Sunak said.
He also sought blessings from Morari Bapu, stating, “Bapu with your blessings, I aspire to lead in equivalence with how our scriptures have taught leaders to lead.”
Drawing parallels with Morari Bapu’s events, Sunak spoke of the presence of a golden statue of Lord Hanuman in the background and revealed that he has a golden statue of Lord Ganesh on his desk at 10 Downing Street.
He noted that Lord Ganesh’s presence serves as a constant reminder for him to listen, reflect, and act thoughtfully.
“It (Lord Ganesh’s golden statue) is a constant reminder to me of the importance of listening and reflecting on issues before acting. I am proud to be British. Proud to be Hindu,” Rishi Sunak said.
Reflecting on his upbringing, Sunak shared his fond memories of attending local religious ceremonies with his family. UK PM also disclosed that he not only follows the Ramayana but also engages with other spiritual texts such as the Bhagavad Gita and the Hanuman Chalisa. He left the event with a sense of connection to these texts.
Sunak, lastly, thanked his parents and grandparents for their efforts, acknowledging that his generation’s accomplishments are built upon their contributions.
—subham—
British Prime Minister, Sunka Rishi, Gold Ganesh, 10 Downing street, Morari Bapu, Cambridge
10. தமிழில் வில்லி பாரத நூல் பற்றி எழுதியவர் யார்?
xxx
விடைகள்
1.வில்லிபாரதம். அதை எழுதியவர் வில்லிபுத்தூரார். இவர் ஒரு அந்தணர்; தந்தை பெயர் வீரராகவன் ; ஆண்டாளும், பெரியாழ்வாரும் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெயரையோ பெரியாழ்வார் பெயரையோ இவருக்கு பெற்றோர்கள் சூட்டினர் போலும்!
xxx
2.வில்லிபுத்தூரார் எழுதிய மஹாபாரத நூலுக்கும் முன்னதாக பாரதம் பாடிய பெருந்தேவனார், அதாவது மஹாதேவன், எழுதிய நூல் ஒன்று இருந்தது. அது நமக்கு கிடைக்கவில்லை. ஆயினும் இதிலிருந்து மேற்கோள் காட்டப்படும் செய்யுட்கள் கிடைத்துள்ளன.
ஸம்ஸ்க்ருத்த்தில் மஹாதேவன் = தமிழில் பெருந்தேவனார்.
இதுதவிர இதே பெயர்கொண்ட இன்னும் ஒரு பெருந்தேவனார் ஒரு பாரதம் பாடினார். ஆயினும் இந்த பெருந்தேவனார் பாரத்திலிருந்து 800 செய்யுட்களே கிடைக்கின்றன.
புறத் திரட்டு என்ற நூலில் பழைய பாரதப் பாட்டுக்கள் கிடைக்கின்றன
அரங்கநாத கவிராயர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் , வில்லியார் பாடாத பருவங்களை செய்யட்களாகப் பாடியுள்ளார்.
நல்லாப்பிள்ளை பாரதம்
வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக் கூறும் 300, 400 பாடல்கள் தவிர, மற்றைய நாலாயிரஞ் செய்யுட்களை எடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை என்பவர், புதிதாகத் தாம் 11 ஆயிரம் பாடல்கள் பாடி, இடையிடையிற்கோத்தும் இறுதியில் சேர்த்தும் பாரதம் 18 பருவங்களையும் பூர்த்தி செய்தார்; அது நல்லாப்பிள்ளை பாரதம் என வழங்கப்படுகிறது.
இவை தவிர சென்னை கையெழுத்து புத்தக சாலையில் மாவிந்தம் என்னும் பாரதப் பாடல்கள் உள்ளன.
பாரதியின் பாஞ்சாலி சபதம் உள்பட பலரும் சிற்சில பகுதிகளை மட்டும் பாடல்களாகப் பாடியுள்ளனர்
xxx
3.திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்தார். அவரது காலம் 16ஆம் நூற்றாண்டு; அருணகிரிநாதருக்கு சம காலத்திய புலவர் . திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகையென்னும் பகுதியை ஆண்ட வரபதியாட் கொண்டான் என்ற சிற்றரசன் வில்லிப்புத்தூராரை ஆதரித்து மஹாபாரதத்ததைத் தமிழ் மொழியில் பாடுமாறு வேண்டிக்கொண்டான்
Xxx
4.வில்லிபாரதம், வியாசர் எழுதிய மகாபாரத நூலைத் தழுவியது. எனினும்,பாரதத்தின் முற்பகுதியை மட்டுமே வில்லிபுத்தூரார் பாடினார் . 18 பருவங்கள் கொண்ட மகாபாரதத்தைச் சுருக்கிப் பத்து பருவங்களில் 4351 பாடல்களில் தந்துள்ளார். குறிப்பாக பகவத்கீதை வில்லிபாரதத்தில் இல்லை.
xxx
5.சூரியனுடைய தேரை இழுக்கும் ஏழு குதிரைகளும் பச்சை வர்ணத்தில் இருப்பதாகச் சொல்கிறார். தமிழ் மன்னர்கள் மற்றும் வீரர்கள் சூடிக்கொள்ளும் வெட்சி, வஞ்சி, தும்பை முதலிய பூக்களை மஹாபாரத கதாபாத்திரங்கள் மீது ஏற்றியுள்ளார் . பகாசுரனுடன் மோதிய பீமன் விஸ்வரூபம் எடுத்ததாகச் சொல்கிறார்.
அனுமனுடைய காதிலுள்ள குண்டலங்கள் விஷ்ணுவுக்கு மட்டுமே தெரியும் என்கிறார். சிவன் காதில் ப்ளூடூத் BLUETOOTH என்னும் கருவி கள் இருந்தன . இதை ஹாஹா,ஹூஹூ என்ற இரு கந்தர்வர் பாடுவதாகவும், நாரதர், தும்புரு பாடுவதாகவும் சைவ நூல்கள் (கல்லாடம்) பேசும்; ஆனால் வில்லி.யார் நாரதர் பாடுவதாக சொல்கிறார் இவை தவிர நிறைய இலக்கண விநோதங்களையும் வில்லியார் புகுத்தியுள்ளார்.
சம்ஸ்க்ருத நூல்களில் மட்டுமே காணப்படும் வினா- விடைபாணியை இவர் அதிகம் பின்பற்றுகிறார்.
சில எடுத்துக்காட்டுகள்
நமர்களோ முடியுமோ, முடியாது
முனிவர் சொற் பொய்க்குமோ, பொய்யாது;
என் செய்தான் முடிவிலோ டினான்
கலக்குமோ கலங்காதே
xxx
6.தற் சிறப்புப் பாயிரத்தில் வண் தமிழ் ஓங்குக என்கிறார்.
தென் சொலாலுரை செய்தலின்
செழுஞ் சுவையில் லாப்
புன் சொலலாயினும் பொறுத்தருள்
புரிவரே புலவர்
(தமிழ் மொழியில் தவறாகச் சொன்னாலும் , புலவர்கள் பொறுத்தருள்வார்கள் )
தக்கோர் ஆய்ந்த தங்கள் தமிழ்க் குழலிசையைத் தன செவிக்கு விதமென்னும்
(தமிழ் இனிமை = குழல் ஓசை இனிமை)
தங்கள் மூவகைத் தமிழும் போல சீலிமுகம் மூன்றும் விட்டான்
அசுவத்தாமன் மார்பில் பாய்ந்த 3 அம்புகள் , முத்தமிழும் ஒருவர் நெஞ் சில் எப்படி எளிதாக ஆழப்பதியுமோ அப்படி 3 அம்புகள் பதிந்தன . இவை தவிர சங்கப் புலவர்களையும் அகத்தியனையும் குறைந்தது 5 இடங்களில் புகழ்கிறார்
xxx
7.அரங்கநாத கவிராயர் , வில்லியருக்குக் கொடுத்த பெயர் வில்லிப்பு த்தூராழ்வார் ; அதை மெய்ப்பிக்கும் வண்ணம் வில்லி பாரதத்தில் திருமாலைப் போற்றும் வரிகள் உள்ளன:
தொழுவார் கருவிலே திருவுடையார்
நாமங்களில் ஒன்றை ஒருகால் கூறில் நரகிற் புகார்
எழுபிறவித் துவக்கற் றாரே
பிறவாழி க் கரை கண்டாரே
போற் றுவார் ஏழுபிறப்பு மாற்றுவாரே
மறவாதார் பிறவாதார்
இறக்கும்பொழுதும் மறவேன்
நயனம் விட்டகலாவே
மனத்தை விட்டகலாவே
மலரடி மறவேன்
இரவும் நண் பகலும் பணிந்து பாடுவது மவன் புகழே
இவை அனைத்தும் திருமாலின் பெருமை பேசுவன ; சிவ பெருமானையும் புகழந்து பல இடங்களில் பாடியுள்ளார்.
குறைந்தது 15 பழமொழி களையும் பாடல்களுக்கிடையே வைத்துள்ளார்
xxx
8.துரியோதனன், அவன் தம்பி துச்சாதனன் ,சகுனி, தீயோருக்கு உதவிய கன்னன் (கர்ணன் ) ஆகிய நால்வரை துஷ்ட சதுஷ்டயம் என்பர் (தீயோர் நால்வர்); இவர்களைப் பல இடங்களில் வில்லிபாரதம் ஏசுகிறது. அவர்களை பாம்பு என்று வருணிக்கிறது .
xxx
9.வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருஷ்ணன் தூது, சஞ்சயன் தூது எனும் மூன்று தூதுச் சருக்கங்கள் உள்ளன
Xxx
10.ச.கு.கணபதி ஐயரவர்கள் , ஆண்டு 1940; நூலின் பெயர் வில்லி பாரதத் திறவுகோல் . அனைவரும் படிக்க வேண்டிய நூல். 112 பக்கங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
நீதி சதகம்
சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 9
ச.நாகராஜன்
ஸுபாஷித த்ரிசதி
யோகீஸ்வரர் என்றும் மஹாகவி என்றும் பிரசித்தமான சம்ஸ்கிருத கவிஞர் பர்த்ருஹரியின் ஸுபாஷித த்ரிசதி என்ற நூல் முந்நூறு சுபாஷித ஸ்லோகங்களைக் கொண்டது.
த்ரி சதி என்பதற்கு 300 ஸ்லோகங்கள் என்று பொருள்.
நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் என மூன்று சதகங்களை அவர் இயற்றியுள்ளார். மூன்றும் இணைக்கப்பட்டால் த்ரீ சதி ஆகிறது.
இதில் முதல் நூறாக அமையும் நீதி சதகம் பற்றி இங்கு பார்ப்போம்.
காலம் காலமாக அறிஞர்களாலும், கவிஞர்களாலும், மேடைப் பேச்சாளர்களாலும், உபந்யாசகர்களாலும் பர்த்ருஹரியின் நீதி சதக ஸ்லோகங்கள் கையாளப்பட்டு வருகின்றன.
இவர் இதில் தொடாத முக்கிய பொருளே இல்லை. அழகிய உவமைகள், சொற் ஜாலங்கள், ஆழ்ந்த கருத்துக்கள் கொண்டதால் இந்த நூல் பிரபலமான ஒன்றாக ஆகி விட்டது.
வித்வான் யார்? மூர்க்கன் யார்? மற்றவருக்கு உதவி, வைராக்கியத்தின் மஹிமை, கர்மத்தின் பெருமை, விதி-மதி என இப்படி பலவற்றையும் பற்றி ஆணித்தரமாக நீதி மொழிகளைக் கூறுகிறார் பர்த்ருஹரி..
இவர் ஒரு சிறிந்த சிவ பக்தர்.
பர்த்ருஹரியைப் பற்றிய ஏராளமான கதைகள் உள்ளன. இவர் காசிக்கருகே உள்ள ஒரு குகையில் இன்றும் தவம் புரிந்து வருவதாகவும் ஒரு செய்தி உண்டு.
நீதி சதகத்தின் அருமையைத் தெரிந்து கொள்ள சில செய்யுள்கள் இதோ:
வித்யை என்பது மறைவாகவும் நன்கு காக்கப்பட்டதுமான பணமாகும்.
வித்யை ஐஸ்வர்யத்தைக் கொடுக்கிறது.
கீர்த்தியையும் சுகத்தையும் நல்குகிறது.
அது குருவிற்கெல்லாம் குரு.
வெளியூர் பயணத்தில் சுற்றமும் உறவுமாக அமைகிறது.
வித்யையே உயர்ந்த தேவதை.
வித்யையே அரசர்களிடம் கொண்டாடப்படும் ஒன்று, பணம் அல்ல.
ஆகவே வித்யை இல்லாதவன் மிருகமே.
இது நீதி சதகத்தில் 16வது செய்யுள்.
தெய்வ நம்பிக்கை உடையவன் தாழ்வடைவதில்லை!
யதா கந்துக பாதேந உத்பதத்யார்ய: பதந்நபி |
ததா த்வநார்ய: பததி ம்ருத்பிண்ட பதநம் யதா||
தெய்வ நம்பிக்கை உடையவன் தாழ்ந்த நிலையில் வீழ்ந்தாலும் கூட, மீண்டும் உயர்ந்த நிலைக்கு வருவான்.
பந்து கிழே விழுந்தாலும் மீண்டும் உயர்வை அடைவது போல
தெய்வ நம்பிக்கை உடையவன் உயர்வை அடைவான்.
தெய்வ நம்பிக்கையற்றவன் மண்ணுருண்டை கீழே விழுவது போல விழுந்து மீண்டும் கிளம்ப முடியாத நிலையை அடைவான்.
இது 83வது செய்யுள்.
இப்படி நீதி சதகம் 100 அற்புதமான நீதிகளைக் கூறும் செய்யுள்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல் இது.
இது ஆர்யதர்மம் என்ற பழைய பத்திரிகையில் தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளியிடப்பட்டு பின்னர் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த திரு எஸ்.கல்யாணசுந்தரம் அவர்களால் புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது. (அப்போதைய விலை ரூ ஒன்று)
நீதி சதகத்தை திரு சோஹன்லால் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலை புது டெல்லி கீதா எண்டர்பிரைஸஸ் வெளியிட்டுள்ளது. (Gita Classic Series-2, Translated by (Late) Sohan Lal)
1.ஒவ்வொரு புலவரும் தன்னை ஆதரித்த வள்ளலுக்கு நன்றி கூறிப் பாடியுள்ளனர் ?கம்பன் யாருக்கு நன்றி தெரிவித்தார்?
XXXX
2.பிரபுட மா தேவராயன் யார்?
Xxxx
3.வில்லிப்புத்தூராரை ஆதரித்த வள்ளல் யார் ?
xxxx
4.புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார் ?
Xxxx
5.மண்டல புருடரை ஆதரித்த வள்ளல் யார் ?
Xxxxx
6.தான் தொகுத்த நிகண்டிலேயே தன்னை ஆதரித்த வள்ளல் பெயரைச் சேர்த்தவர் யார் ?
xxxxx
7.புறநானூற்றில் செய்நன்றி பற்றி ஆலத்தூர் கிழார் பாடியது என்ன ?
xxxx
8.இதே கருத்தினை ஆலத்த்தூர் கிழார்க்கும் முன்னதாக யார் சொன்னார்?
xxxx
9.இளங்கோ என்ன சொன்னார் ?
XXXX
10.நன்றி காட்டுதல் பற்றி வள்ளுவன் பாடிய 10 குறட்பாக்களின் தலைப்பு என்ன? அது திருக்குறளில் எங்கே வைக்கப்பட்டுள்ளது ?
Xxxxx
விடைகள்
1.சடையப்ப வள்ளல் கம்பரின் புரவலர். கம்பன் காவியம் டையப்ப வள்ளல் ஆதரவுடன்தான் பாடப்பட்டது. அவரைப் புகழ்ந்து 1000 பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் கம்பர் தன் கம்பராமாயணத்தில் பாடல் எழுதினார்.
இதோ முத்தாய்ப்பான ஒரு பாடல்
அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!
பொருள்
அரியணையை அனுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்; பரதன் வெண்கொற்றக்குடை கவிழ்த்தான்; இலக்குவனும் சத்துருக்கன இளைஞனும் கவரி வீசினர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர் எடுத்துக் கொடுக்க, வாங்கி, வசிட்டரே இராமனுக்கு முடி சூட்டினார்.
Xxxx
2.இவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரை ஆதரித்த வள்ளல். இவரை அருணகிரிநாதர் பல திருப்புகழ் பாடல்களில் பாடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட …… அவளோடன்
………………
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.
பிரபுட மா தேவராயன், திருவண்ணாமலைப் பகுதியை ஆண்ட சிற்றரரசன்
xxx
3.வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். இவனின் வேண்டுகோளுக்கு இணங்கவே வில்லிபாரதம் பாடப்பட்டதாகத் தெரிகிறது.
5.மண்டல புருடர் சூடாமணி நிகண்டின் ஆசிரியர்; அவரை கிருஷ்ணதேவராயர் ஆதரித்தார்
xxxx
6.திவாகர நிகண்டு என்னும் நிகண்டு நூல் , திவாகர முனிவர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்டது. அக்காலத்தில் இருந்த சேந்தன் என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் சேந்தன் திவாகரம் என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.
xxxx
7.ஆன்முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என
நிலம் புடை பெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே — ஆயிழை கணவ!
—புறநானூறு 34, ஆலத்துர்ர் கிழார் பாடியது
பொருள்
பசுவில் பாலைப் பெறாதபடி அதைக் கொன்று தின்பது பாவம்;
பெண்கணிளின் கருவை அழித்தல் பாவம்;
அந்தணர்களுக்குத் தீங்கு செய்வது பாவம்;
இதற்கெல்லாம் கூட பரிகாரம் உண்டு; நீ தப்பிக்கலாம்;
ஆனால் பெரிய பூகம்பமே ஏற்பட்டு உன் சோழ நாடே அழிந்தாலும்
ஒருவன் செய்த உதவியை மறந்து அவனுக்குத் தீங்கு செய்தால் அதற்குப் பரிகாரமே இல்லை; கட்டாயம் நரகத்தில் விழுவாய் என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன (புறம்.34)
go ghne ca eva suraape ca caure bhagna vrate tathaa | niShkR^itir vihitaa sadbhiH kR^itaghne na asti niShkR^itiH || 4-34-12
12. go ghne = in respect of – cow, slayers; suraape ca eva = liquor-drinkers, also, thus; caure = for thieves; tathaa = likewise; bhagna vrate = infringers, of solemnity; sadbhiH niSkR^itiH vihitaa = by savants, atonement, ordained; kR^ita ghne niSkR^itiH na asti = for treacherous one, atonement, not, available.
” ‘The savants have ordained atonement for slayers of cows, for drinkers of liquors, thus for thieves and infringers of solemnity, but no atonement is available to a treacherous person. [4-34-12]
xxxx
9.ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
–சிலப்பதிகாரம், வரந்தரு காதை
xxxx
10.செய்ந்நன்றி அறிதல் என்பது அதிகாரம் 11-ன் தலைப்பு; இது அறத்துப் பாலில் இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ளது .
1.This town in Maharashtra is is considered as a pilgrimage spot owing to its revered temples and religious institutions; The best places to visit include Mallinath Digambar Temple, Aundha Nagnath, Tulajadevi Sansthan, Sant Namdev Sansthan.
2. Important Jain pilgrimage centre in Bihar; Known for its agro-based industries; it is renowned for its litchi and banana production. An iconic attraction is the Mahatma Gandhi Setu, a bridge built over the river Ganga.
3. This Dam is built across the Mahanadi River, about 15 kilometres (9 mi) from Sambalpur in the state of Odisha in India. It is the longest earthen dam .
4. It is an ancient city and important Hindu pilgrimage site in Uttarakhand state, where the River Ganges exits the Himalayan foothills. Famous for its Ganga Arti.
5. The city is noted for its monuments which includes the masterpiece of Charminar and the fort of Golconda. There are a multitude of masjids, temples, churches and bazaars in the city.
6. This city in Madhya Pradesh where the Narmada River flows and consists nabhi kund(centre of river Narmada ). There are also many temples dedicated to lord Shiva, out of which the famous temple built by Pandavas is also situated here. According to beliefs it was built during the Mahabharat era in a single night .
7. It is an ancient village in Karnataka. It’s dotted with numerous ruined temple complexes from the Vijayanagara Empire. On the south bank of the River Tungabhadra is the 7th-century Hindu Virupaksha Temple. A carved stone chariot stands in front of the huge Vittala Temple site.
8. This town in Uttar Pradesh is known for its many temples and religious spaces. It is believed that Naimisharayan here is where the puranas were written. Sarvan Devi temple is located here.
கிருஷ்ணர் கையும் கிறிஸ்து கையும் குணப்படுத்தியது எப்படி?- Part 2
முதல் பகுதி நேற்று பிரசுரமாகியது
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு என்னும் நாட்டின் ஆயுர்வேத நிபுணர் ரூபன் டெவோடோ பேரால்டா (RUBEN DEVOTO PERA.TA பல்வேறு கிகிச்சை முறைகளை விளக்குகிறார் .
ஆன்மீக சிகிச்சை SPIRITUAL HEALING
இது மந்திரத்தாலும் ஹோமம் முதலியவற்றாலும் கிடைக்கிறது ; கடவுளுடன் தொடர்புகொள்ளும் போது நமது உடலும் மனமும் சம நிலையை அடைகிறது. இதை பிரார்த்தனை மூலமும் அடையலாம்.
மன நல சிகிச்சை MENTAL AND EMOTIONAL HEALING
நம்முடைய உண்மை நிலையை உணரும்போது கிடைக்கிறது. வாழ்க்கை என்பது என்ன, எது நடக்கவிருக்கிறது அதுதான் நடக்கிறது என்ற உணர்வு அதன் பின்னுள்ள தத்துவங்களைப் புரிந்து கொள்கையில் முதலில் சஞ்சலங்கள் நிறைந்த மனது சம நிலையை / அமைதியை அடைகிறது; அதன் பயனாக உடலும் அமைதி அடைகிறது .
உடல் சக்தி BODY ENERGY HEALING
வாத , பித்த, கப தோஷங்கள் சமநிலை தவறி நம் உடல் நலத்தைக் கெடுப்பதற்கு முன்னதாகவே, வாசனைப் பொருட்கள், இசை, மந்திர முழக்கம், தியானம், ஹிப்னாஸிஸ் HYPNOSIS என்னும் மனோதத்துவம் மூலம் குணப்படுத்துவது உடல் சக்தி குணப்படுத்தும் சிகிச்சை BODY ENERGY HEALING எனப்படும்.
BODY MATERIAL HEALING
மூலிகைகள், காந்த சக்தி, பத்தியம், ரத்தினக் கற்கள், நீர் சிகிச்சை , HYDROTHERAPY, மருந்துகள் முதலியவற்றை உபயோகித்து குணப்படுத்தல் பாடி மெடீரியல் ஹீலிங்BODY MATERIAL HEALING எனப்படும்.
DIVINE THERAPY
தெய்வீக சிகிச்சை என்பதில் மந்திரம், பிரார்த்தனை, ஹோமம் ஆகியவற்றைச் செய்து நோயைக் குணப்படுத்தலாம்.
வானுலக சிகிச்சை CELESTIAL THERAPY
வானுலக சிகிச்சை என்பது மகான்களும் அவதார புருஷர்களும் கொடுக்கும் சிகிச்சை . இதற்கு, சிகிச்சையைப் பெறுவோருக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும்.
சிகிச்சை தரும் டாக்டர் தன்னைச் சுற்றி மங்களமான பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு புத்தமத்தினர் வைத்துக்கொள்ளும் பொருட்களை சொல்லலாம். எண்வகை மங்கள பொருட்கள் அஷ்ட மங்கலம் எனப்படும்; அவை சங்கு விசிறி, தண்ணீருள்ள கும்பம், தீ, நெய் , யானை உருவம், சுவஸ்திகா , தெய்வ அல்லது தேவர் உருவங்கள் . இது சில கலாசாரங்களில் கொஞ்சம் வேறுபடும்.
மகான்கள் , சாது சந்யாசிகள் பல அற்புதங்களைச் செய்து நோயை விரட்டுவது இவ்வகை.
(அனந்தராம தீட்சிதர் முதலியோர் பிரார்த்தனை மூலம் நோய்களைக் குணப்படுத்தியதை அறிவுவோம்.
அப்யங்க சிகிச்சை ABHYANGA THERAPY
எண்ணெய் ஸ்னானம் செய்வதும் பசு நெய்யை உட்கொள்வதும் இந்த அப்யங்க சிகிச்சையில் வருகிறது.
எந்த வகை எண்ணையும் தோலின் வறட்சியை அகற்றும்.உடலில் வெப்பத்தைக் கொடுக்கும்.இன்று உலகம் முழுதும் ஸ்பா SPA என்னும் நீராவிக் குளியல் அறைகளுக்கும், மசாஜ் செய்யும் இடங்களுக்கும் பல லட்சம் பேர் செல்வதைக் காண்கிறோம் . நம்முடைய சம்பிரதாய எண்ணெய் ஸ்நானம் புதிய வடிவம் எடுத்துவிட்டது
நெய் என்பதை உடலிலும் பூசிக் கொள்ளலாம். இது, புத்தி கூர்மை, ஞாபக சக்தி, , விவேகத்தை அளிக்கும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன..
–SUBHAM—
TAGS- அப்யங்க , ஆன்மீக, சிகிச்சை, கிருஷ்ணர் கை, ,கிறிஸ்து கை, பெரு , ஆயுர்வேத நிபுணர், ரூபன் டெவோடோ பேரால்டா
கர்நாடக மாநிலத்தில் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 22
103.கோகர்ணம் மஹாபலேஷ்வர் கோவில் ; ஓம் பீச் Om Beach, Gokarna Mahabaleshvar Temple
மஹாபலேஷ்வர் என்ற பெயரில் பல இடங்களில் சிவன் கோவில்கள் இருந்தாலும் உத்தர கன்னட மாவட்டத்தில் கோகர்ணம் இருக்கும் மஹாபலேஷ்வர் கோவில் தான் மிகவும் பிரசித்தமானது. இங்குள்ள மற்றும் ஒரு சிறப்பு கடற்கரையே பிரணவ மந்திரமான ஓம் என்னும் எழுத்து வடிவில் அமைந்து இருப்பதாகும். ஒரு காலத்தில் தூய கடற்கரையாக இருந்த இடம் இப்போது பக்தர்களைவிடப் பொழுதுபோக்கவரும் கும்பல்களால் அசுத்தமடைந்து வருகிறது ; கோ கர்ணம் என்றால் பசுவின் காது என்று தமிழில் பொருள். பூமியையே பசு என்று கொண்டு அதன் ஆழத்திலிருந்து ஆத்மலிங்கம் வந்ததால் கோகர்ணம் என்று இந்த ஊர் பெயர் பெற்றது இங்கு கங்காவதி , அகநாசினி என்ற இரண்டு நதிகள் சங்கமம் ஆகின்றன . இது இராவணன் பெற்ற ஆத்மலிங்கம் என்றும் கதைகள் உள்ளன. பாகவத புராணத்தில் கோகர்ண க்ஷேத்ரம் குறிப்பிடப்படுகிறது
மங்களூரிலிருந்து 238 km கிமீ. ;கார்வாரிலிருந்து 59 km கி.மீ .
xxxx
104 உலாவி சென்ன பசவேஸ்வர கோவில் Ulavi Channabasavanna, Temple , Samadhi
கார்வாரிலிருந்து 75 கி.மீ (from Karwar) தொலைவில் காடுகளும் குகைகளும் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உலாவி கிராமம் உள்ளது . இது லிங்காயத் பிரிவு சைவர்களின் புனிதத் தலம் . 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சன்ன பசவன்னா என்ற மகானின் சமாதி இங்கு இருப்பது சிறப்பு. சாளுக்கிய வம்ச அரசர்களின் கோவிலுக்கு புது வண்ணம் தீட்டப்பட்டுள்ளது அருகில் நாகலாம்பிகே குகை இருக்கிறது. அவர் சன்ன பசவன்னாவின் தாய்; பசவண்ணாவின் சகோதரி . அல்லம பிரபு, பசவ , அக்கமாதேவி மற்றும் சென்ன பசவேஸ்வரர் இந்த மாநிலத்தில் லிங்காயத் வழிபாட்டு சம்பிரதாயத்தைப் பரப்பினர்
105.இடகுஞ்சி கணபதி கோவில் Shri Idagunji Maha Ganapati Temple
ஆண்டுதோறும் பத்து லட்சம் பக்தர்கள் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வருகிறார்கள் என்ற புள்ளி விவரத்தைப் பார்த்தாலே இவரது பெருமை விளங்கும். புகழ்பெற்ற முருதீஸ் வர் சிவன் கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் இவர் காட்சி தருகிறார் .
இந்த வட்டார கடற்கரையில் ஆறு கணபதி கோவில்கள் இருப்பதால் கடற்கரையின் பெயரே கணபதி கடற்கரை என்று ஆகிவிட்டது .
மேலைக் கடற்கரையில் காசர்கோடு, மங்களூர், ஆனகுட்டே , குந்தபுர , இடகுஞ்சி, கோகர்ண கணபதி ஆகிய ஆறு பேரும் கடற்கரை அருகில் கோவில் கொண்டிருப்பது தனி விசேஷம் இந்தக் கோவில் 1500 ஆண்டு பழமையானது கோகர்ண கணபதி கோவில் போலவே த்வி புஜ கணபதி உருவம் இது; வலது கையில் தாமரை மொட்டு; இடது கையில் மோதகம் எனும் கொழுக்கட்டை . கணபதியின் பூணூல் மாலை வடிவத்தில் இருக்கிறது
வெட்டிவேர் என்னும் வாசனை மிக்க வேரால் செய்யப்பட கவசங்கள் இங்கே விற்கப்படுகின்றன
106. இந்திராகாந்தி விஜயம் செய்த காரி கண்ணம்மா கோவில் Shri Karikaana Parameshwari Tempe
ஹொன்னவர் Honnavar என்னும் இடத்திலிருந்து 12 கி.மீ தூரம்;
மலை மீது தற்காலத்தில் கட்டப்பட்ட தேவி கோவில் இருக்கிறது ; பிரதம மந்திரியாக இருந்தபோது இந்திராகாந்தி விஜயம் செய்ததால் மலை உச்சிவரை நல்ல சாலை அமைக்கப்பட்டது. கோவில் மேலும் பிரசித்தம் அடைந்தது
பரமேஸ்வரி , பார்வதி, துர்கா, சரஸ்வதி என்ற பல பெயர்களில் இந்த சக்தி வணங்கப்படுகிறாள் . மலை மெது ஏறி நின்றால் அரபிக்கடலில் அற்புதக் காட்சியும், ஏழுமலைச் சிகரங்களின் அற்புதக் காட்சியும் நம்மை சொர்கலோகத்துக்கு அழைத்துச் சென்றுவிடும்
மராட்டியர்களும் கன்னடியர்களும் போற்றும் ஸ்ரீதர சுவாமி இக்கோவிலை உருவாக்கினார். கர்ப்பக்கிரகம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது காடுகள் சூழ்ந்த இடம் ஆதலால் இருட்டுவதற்குள் மலையிலிருந்து இறங்கிவிட வேண்டும்
—subham—-
To be continued………………………………………………………
Tags- ஓம் வடிவ கடற்கரை, கர்நாடக மாநிலம், 108 புகழ்பெற்ற, கோவில்கள், ,– Part 22, கோகர்ணம்
அத்துடன் அந்த சுதந்திரத்தைப் பெற்றுத் தர அயராது உழைத்ததோடு பல்வேறு தியாகங்களைச் செய்த உத்தமர் மறைந்த நாளும் கூட அது தான். இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவரும் மாபெரும் புகழைக் கொண்டவருமான திரு வெ.சந்தானம் அவர்கள் மறைந்த நாளில் அவர் பற்றி நினைவு கூர்கிறோம்.
சுதந்திரப் போரில் சிறைவாசம் கண்டது ஒரு பக்கம்;
இதழியலில் நுழைந்து புதுமைகள் புகுத்தியது ஒரு பக்கம்.
ஆன்மீகவாதியாகத் திகழ்ந்து சாதனைகள் புரிந்தது ஒரு பக்கம்.
நல்ல மனிதராக இருந்து பலரை உயர ஏற்றியது ஒரு பக்கம்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பன்முக பரிமாணங்களைக் கொண்ட திரு வெ.சந்தானம் அவர்களைப் பற்றி.
ஹிந்து சிந்தனையோடு வேத உபநிடத புராண இதிஹாஸ சாஸ்திரங்கள் அனைத்தும் இரத்தமாக உடலில் ஓடும் பாங்கினால் அபூர்வமான ஒரு ஆளுமையை அவர் கொண்டிருந்தார்.
காஞ்சி பெரியவாள்!
காஞ்சி காமகோடி பெரியவாளின் பரம பக்தர் அவர்.
இளையாத்தங்குடி நிகழ்ச்சிகளையும் இன்னும் அவர் செல்லுமிடமெல்லாம் ஆற்றுகின்ற அற்புத உரைகளையும் கருத்துப் பிறழாமல் பெரிய பெரிய தலைப்புகள் கொடுத்து முழுதுமாக தினமணியில் பிரசுரித்து ஆன்மீக மறுமலர்ச்சியை அவர் ஏற்படுத்தினார் – அதுவும் நாத்திகர்கள் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து தடைகள் பல செய்து வந்த காலத்தில்!
திருப்பாவை-திருவெம்பாவை மாநாடுகளின் எழுச்சிக்கு அவரது தினமணி இதழியல் பணி பெரிதும் கைகொடுத்ததை ஆன்மீகவாதிகள் அனைவரும் அறிவர்.
சிருங்கேரி ஆசார்யாள்!
சிருங்கேரி ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்தரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவர் அவர். ஸ்வாமிகள் திரு வெ.சந்தானம் இல்லத்திற்கே எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதித்தார்.
அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணா
அச்சன்கோவிலை ஸ்தாபித்து அங்கு பரசுராமர் நிறுவிய ஐயப்பனின்
விக்ரஹத்தை மீண்டும் நிறுவிய அச்சன்கோவில் ஸ்வாமிஜி ஆயக்குடி ஶ்ரீ கிருஷ்ணாஜியே திரு சந்தானம் அவர்களின் குரு.
தினமும் அவரால் உபதேசிக்கப்பட்ட கணபதிஹோமத்தை காலையில் செய்வது அவர் வழக்கம்.
ஸ்வாமிஜி கிருஷ்ணா அவரது இல்லத்தில் கணபதி ஹோமம் நடத்தினார்; அவர் உணவை விரும்பி ஏற்கும் வீடுகளில் மதுரையில் முக்கியமானது திரு வெ.சந்தானம் அவர்களின் வீடு தான்.
ஸ்வாமி சாந்தானந்தா!
புதுக்கோட்டை ஸ்வாமிஜி ஶ்ரீ சாந்தானந்தா அவர்கள் இயற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு – குறிப்பாக சஹஸ்ரசண்டி யாகத்திற்கு அவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது.
ஶ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகள் அவரது இல்லத்தில் பிக்ஷை ஏற்பது உண்டு. மூன்று கவளங்கள்- அனைத்தும் கலந்த கலவையாக அவர் திருமதி ராஜலக்ஷ்மி சந்தானத்திடமிருந்து பெறுவது பிரமிப்பையும் பக்தியையும் ஊட்டும்.
ஶ்ரீ சத்ய சாயிபாபா!
ஶ்ரீ சத்ய சாயிபாபா புட்டபர்த்தியில் நடந்த முதல் சந்திப்பிலேயே திரு சந்தானத்தைத் தன்னவராகக் கண்டு கொண்டது ஒரு அபூர்வ நிகழ்ச்சி.
சென்னையில் ஆபட்ஸ்பரியில் நடந்த பெரும் மாநாட்டில் உரையாற்ற வருமாறு பாபா அவரை அழைத்தார். அவரும் சென்று உரையாற்றினார்.
மதுரையில் அவர் வரும்போதெல்லாம் அவரது ‘பங்காருவாக’ அமைந்தார் திரு சந்தானம்.
ஸாயி கீதங்கள்!
ஶ்ரீ சத்ய சாயி பற்றித் திடீர் திடீரென அல்லும் பகலும் அவர் மனதில் தாமாகவே உதித்த கீதங்கள் பல.
அவற்றை மேடைகளில் பிரபல வித்வான்களும் உரிய ராக தாளத்தில் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.
அவற்றில் 108 கீதங்கள் 1966ஆம் ஆண்டு ஸாயி கீதங்கள் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. (விலை 60 பைசா!)
பாதகத் துயர் போக்கி சாதக வாழ்வருள் மகா கணபதே என்று முதல் கீதம் தொடங்குகிறது – ஹம்ஸத்வனி ராகத்தில் ஆதி தாளத்தில்!
சாயி கொடி!
அடுத்து வித்யா வர ஸரஸ்வதி தேவியிடம் ‘வரம் தா வீணாபாணி நான்முகன் மனோரமணி’ என்று வரம் கேட்கும் அவர்
சாயி கொடியை ஏற்றுகிறார்.
சாயி அருள்கொடி பறக்குது பாரீர்
சாந்தக் கொடியது தர்ம பிரேமக் கொடி
நீதி ஞான அன்புப் படையது சங்கநாதமது
சாந்தி சாம்ராஜ்யம் நிலைக்கப் பறக்குது
என்று சாயி கொடி பற்றி அவர் விவரிக்கிறார்.
சாயி அமரும் இடம்!
எங்கே சாயி வந்து அமருவார்?
இந்தக் கேள்விக்கு அவரது கீதம் பதில் தருகிறது:
தெய்வ நாமம் பாடுமிடம்
சாயி வந்து அமரும் இடம்
சந்தேகம் தரும் நாசமே
சாயி கீதை இதுவே
நமனுக்கு நமன்!
கலியுக வரதனாக சாயியை தரிசிக்கும் போது அவர் இசைக்கிறார்:
ஆறுமலையழகன் நேயர் மனஜோதி
ஆறுதலை கூறும் அருள் நேமி சிவஜோதி
நலந்தரும் தொண்டன் நாமமோதுவோர்க்கு
நால்வேத சரணன் நமனுக்கு நமன் வேலன்!
எத்துணை அற்புதமான சொற்கள்!
சாயி கிருபை!
என்றைக்கும் சாயி கிருபை எவருக்கும் உண்டு
அடையாதிருந்தால் அது கேளாத குற்றமே
என்ற வரிகளில் மாபெரும் இறை தத்துவத்தை அவர் குறிப்பிடுகிறார்.
ஓயாத கருணை மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கிறது.
அதை ஏந்தும் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்தால் பயன் இருக்காதே!
பாத்திரத்தை நிமிர்த்தி வைத்து கருணை மழை கொட்டும் போது வேண்டும் வரைக்கும் வேண்டும் நேரமளவு பிடித்துக் கொள்!
பாத்திரத்தின் அளவும் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டதே!
நல்ல பெரிய பாத்திரமாகக் கொண்டு வந்து கிருபையை கேட்டுப் பெற்றுக் கொள் என்பதே அதிசயத் தத்துவம்!
சாயி யார்?
ஞான கடைக்காரர் ஆத்ம ஞான பணக்காரர்
சாயி மொழி அமுதம் நிதமும் கேளும் ஆத்ம ஹிதம்
என்பது அவர் சாயியைப் பற்றி விவரிக்கும் ஒரு கீதம்.
இப்படி 108 கீதங்கள் அமுத மழையாகப் பொழியப்பட்டுள்ளது அவரால்!
இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர நன்னாளில் அன்னரை நினைந்து சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்!