New Book on Temples launched in London (Post No.12,123)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,123

Date uploaded in London – –  12 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

London Swaminathan speaking

New English book on Hindu temples was launched in London Murugan Temple in London yesterday (11-6-2023). The book written by Dr Siva loka nathan, a Forensic specialist, was praised by all the speakers. They all highlighted the unique contribution of the author to the migrant children who could follow only English in Britain.

The event got added significance because of the presence of Sri Pitchai Sivachariar, Chief Priest of Pillayaarpatti in India.He is the founder of Anmeeka, Kalachara Kendra. He pointed out that all the proceeds through the sale of the book go to London Murugan Temple. Sri Naganatha Sivam, Chief Priest of London Sri Murugan temple pointed out that the book has come out after doctor’s deep research who got inspired by his grandmother from his childhood days. Barrister Vickneswaran, who spoke in English, explained the structure of the book and its logical division into many parts.

Mr Sampathkumar, trustee of the temple, presided over the meeting and said that it is the first time that London Murugan temple bringing out a book and the reason for it is the family’s close association with the temple and his deep devotion. Dr Sivaloknathan explained the reason for writing the book and thanked all the people who helped at the end.

Trustees Dakshinamoorthy, President Ramadas, Mr Anbananthar organised the event in a perfect way. Traditional welcome was given to the doctor couple in the beginning with all the drums and pipes. Mrs Padma Sekar, secretary of the temple board of trutees,  proposed a vote of thanks. Trustee Mrs Lakshmi Rajagopal received the book along with many others. About 70 people attended the event and queued up to get the signed copy from the author.

The function finished with sumptuous Prasad (food).

London Swaminathan, one of the speakers explained the salient features of the book. Here is the gist:

Gods, Temples and Myths, written by Dr Sivaloka nathan is unique in many ways. I would like to call it in Tamil ‘From Kedarnath to Kadirgamam’ because it gives details about the temples he visited covering a vast geographical area. It is a hard bound volume and has A 4 format. The uniqueness can be seen in the 178 stories he related with almost 700 pictures. it shows that his deep study and involvement in writing the book. If we go to specific Hindu scriptures, we get only a few stories. But he has collected 178 stories from Abhirami Bhattar to Umapathi Sivachariar. He has dealt with Sthala Puranas as well. We in London tried to digitize some old sthala puranas (local stories of temples) but dropped it when we came to know that there are at least 900 sthala puranas. Now that Dr Sivalokanathan is dealing with it, we can use them as a seed to the new project. No one has collected all the sthala puranas until today.

Dr Sivalokanathan, who got the Hindu stories, from his grandma when he was a child, went to India at least 20 times and prepared the materials during the past thirty years. He has taken all the 700 pictures and went through existing books and websites to study Hindu myths. Over 60 temples were visited by him in India and Sri Lanka.

He himself stressed the need for such a book in English, for the third generation migrant children in the introduction of his book .

Mr Sampathkumar, temple trustee, also raised the issue of future of such big temples in a personal conversation with me. Recent news items such as a semi nude girl in a North Indian Hindu temple, obscene dance in a Tamil Nadu temple show the ignorance of the next generation of Hindus. Books like this in English will help all our youths.

A lot of books on temples are available in Tamil. But very few are published in English about Tamil temples. But this book has got stories in addition to basic details. So it is worth buying it and keeping it in libraries as well.

I have been toying with an idea of temporary libraries in Temples. During the closed afternoon hours, temporary library service can be rendered inside the temple hall;  a day can be allocated for male readers and another day for female readers and maintained by respective genders. Books like Dr Sivaloknathan’s can be displayed there.

Before I conclude my speech, I would like to give you some idea to read the book. First go to the contents and have a glance; then go to index and see the famous personalities names; look at the 20++++ maps; at the end go through the 700+++ pictures with captions. That will show the trouble the author went through to prepare the book. Then you can leisurely read the whole book.

(Earlier a honorary title Deiveeka Seva Ratnam was given to Dr Sivalokanathan by the Murugan temple and the Anmeeka, Kalachara centre at Pillaiyarpatti. Sri Ganesh Sivam read it and then the trustees of the temple and Sri Pitchai Sivachariar presented it.)

Thank you.

— Subham—Tags. Book luanch, Murugan temple, London swaminthan, Dr Sivalokanathan

லண்டனில் புதிய ஆங்கில நூல் வெளியீட்டு விழா- 1 (Post No.12,122)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,122

Date uploaded in London – –  12 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

லண்டனில் ஈஸ்ட் ஹாம் (London Murugan Temple, Eastham, London) பகுதியில் பிரபல முருகன் கோவில் உள்ளது அங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (11-6-2023) பிற்பகலில் கோவில்கள் பற்றிய ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. .நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய அறங்காவலர் திரு சம்பத் குமார் முதலில்  பேச்சாளர் சுவாமிநாதனை அறிமுகப்படுத்தி வைத்தார். திரு சுவாமிநாதன் 16 ஆண்டுக்காலம் தினமணி பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பி பி சி தமிழோசை ஒளிபரப்பாளராக 5 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் 20 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். ஒய்வு பெற்ற பின்னர் 102 தமிழ், ஆங்கில நூல்களை எழுதி சாதனை செய்துள்ளார் என்றார்  இந்த அறிமுகத்துக்குப் பின்னர் கூட்டத்தில்   லண்டன் சுவாமிநாதன் ஆற்றிய உரை கீழே தரப்பட்டுள்ளது. 

அன்புடையீர்

அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்; நமஸ்காரங்கள் . என்னை இங்கு பேச அழைத்தமைக்காக கோவில் நிர்வாகிகளுக்கும், குறிப்பாக தொலைபேசியில் அழைப்பு விடுத்த கணேஷ் சிவம் அவர்களுக்கும் முதற்கண் நன்றி தெரிவிக்கிறேன்.

இன்று வெளியிடப்படும் டாக்டர் சிவலோகநாதன் எழுதிய GODS, TEMPLES AND MYTHS என்ற புஸ்தகம் பற்றிய AMAZING STAISTICS இதோ :-

A 4 SIZE ; HARD BOUND BOOK ; ஆறு பகுதிகள் ; இருபதுக்கும் அதிகமான MAPS ; 500 முதல் 700 படங்கள்! .பார்த்தவுடன் படிக்கத் தோன்றும் கவர்ச்சியான அட்டைப்படம் ;350 பக்கங்களுக்கு மேல் INDEX உடன் உள்ளது. இதை மனத் தளவில் மொழிபெயர்த்தேன் . ஆண்டவர்கள்ஆலயங்கள், அற்புதக்கதைகள் என்று. பின்னர் யோசித்தேன்; கேதார்நாத் முதல் கதிர்காமம் வரை என்று முடிவு செய்தேன் ; ஏனெனில் அது இந்த நூலில் உள்ள ஆலயங்கள் எவ்வளவு பரந்த பூகோள பரப்பை GEOGRAPHICAL AREA வை கவர் செய்கிறது என்பதைக் காட்டுகிறது . நான் மாணவனாக இருந்த காலத்தில் தொ.மு. பாஸ்கரத் தொன்டைமான் எழுதிய வேங்கடம் முதல் குமரிவரை என்ற நூல்தான் மிகவும் பிரபலம். பின்னர் பரணீதரன் போன்றோர் எழுதிய பல தமிழ் நூல்கள் வெளியாகின. ஆனால் ஆங்கிலத்தில் கோவில்கள் பற்றிய நூல்கள் குறைவு. அவ்வகையில் இப்பொழுது டாக்டர் சிவலோகநாதன் எழுதிய இந்த நூல் சிறப்பு வாய்ந்தது. இதன் விலை 25 பவுன் என்று அறிந்தேன். ஆனால் 250 அல்லது 2500 ப வு ன் நன்கொடையும் கொடுக்கலாம். அததனையும் லண்டன் முருகன் கோவிலுக்கே செல்கிறது .

இப்பொழுது இந்த நூலின் இன்னொரு சிறப்பினையும் சொல்கிறேன்.  பல ஆங்கில நூல்கள் இருந்தாலும் இந்த நூலுக்கு ஒரு சிறப்பு உண்டு. அதற்கு முன்னர் ஓரிரண்டு செய்திகளை சொல்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் தலைவர் சம்பத் குமாருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு கேள்வி கேட்டார் .

சுவாமிநாதன், இவ்வளவு பெரிய கட்டிடங்களை கஷ்டப்பட்டு எழுப்பிவிட்டோமே; நமக்குப்  பிறகு என்ன ஆகும்? என்று கவலையுடன் கேட்டார். நான் சொன்னேன்; அருமையான கேள்வி; நல்ல சிந்தனை உங்கள் மனத்தில் உதித்து இருக்கிறது. நாம் அ டுத்த தலைமுறைக்கு இதன் அருமை பெருமைகளைச்  சொல்ல வேண்டும்; பயிற்சி வகுப்பு நட த்தி  இந்து மதம் பற்றிக் கற்பிக்க வேண்டும் என்றேன்.

LONDON SWAMINATHAN SPEAKING

இந்த நூல் அத்தைகைய பயிற்சிக்கு பெரும் அளவு உதவும். இதில் 178 கதைகள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ளதால் அவைகளை நமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எளிதில் படிக்க முடியும்.

இன்னும் இரண்டு பத்திரிக்கைச் செய்திகளையும் பார்ப்போம் .

கடந்த சில நாட்களில் வந்த செய்திகள். ஒரு வட இந்தியக் கோவிலில் ஒரு பெண் அரை நிர்வாண உடையில் சென்றது வீடியோ மூலம் வைரலாக பரவியது. தமிழ்நாட்டில் ஒரு கோவில் விழாவில் ஆபாச நடனம் நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. உடனே CHAR DHAM ‘சார் தாம்’ என்னும் கோவில்களின் நிர்வாகிகள், இனிமேல் ஆண்களும் பெண்களும் என்ன உடை அணிந்தால் கோவிலுக்குள் வரலாம் எனற  கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். அதே போல தமிழ் நாட்டு போலீசாரும் கோவிலுக்குள் என்ன கூட்டம் நடத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது இவற்றுக்கெல்லாம் காரணம், இந்து மதம், ஆலயம் பற்றிய அறியாமையே; இந்த சூழ்நிலையில் இது போன்ற ஆங்கில நூல்கள் பேருதவி செய்யும் .

பல ஆங்கில நூல்கள் இருந்தாலும், இதை ஏன் வாங்க வேண்டும் என்று சொல்கிறேன். இதில் 178 கதைகளை சுருக்கமாக நல்ல ஆங்கிலத்தில் கொடுத்துள்ளார். நாம் தேவாரப் புத்தகங்களைப் பார்த்தால் அவர்கள் செய்த 50, 60 அற்புதங்கள் பற்றிய கதைகள்  மட்டுமே கிடைக்கும்; பெரிய புராணத்தைப் படித்தால் 63 நாயன்மார் கதைகள்  மட்டுமே கிடைக்கும். இந்த நூலைப் படித்தா லோ அவைகளுடன் அபிராமி பட்டர் முதல் உமாபதி சிவாச் சாரியார் வரையான எல்லா கதைகளும்  கிடைக்கும்.. உமாபதி சிவாச்சாரியார் எப்படி மறைஞான சம்பந்தரிடம் சென்றார் என்ற கதையையும் அறியலாம்; அப்பூதி அடிகள், அபிராமிபட்டர் முதல் அத்தனை அடியார்கள் கதை பற்றியும் அறியலாம். பல தல புராணக்கதைகளும் உள்ளன.

நாங்களும் பிரிட்டிஷ்  லைப்ரரியில் உள்ள தல புராணங்களை டிஜிடைஸ் DIGITIZE செய்ய விரும்பினம் னோம் அங்கு பல பழைய தல புராணங்கள் உள்ளன. ஆனால் 900க்கும் மேலாக தல புராணங்கள் தமிழ் நாட்டில்  இருப்பதால் அது சாத்தியமாகவில்லை ; இதுவரை தல புராணத் தொகுப்பு என்று எந்த நூலும் வரவில்லை.. அதற்கெல்லாம் வித்தாக , ஒரு துவக்கமாக இந்த நூல் அமைந்துள்ளது.

உங்களுக்கு இந்தப் புஸ்தகத்தைப் படிக்க ஒரு சுருக்கமான வழியினைச்  சொல்கிறேன். முதலில் பொருளடக்கத்தைப் படியுங்கள்  69 கோவில்களின் பெயர்கள் கிடைக்கும் ; பின்னர் இண்டெக்ஸ் (பொருட் பெயர் குறிப்பு அகராதி) பக்கம் போங்கள்; அபிராமி பட்டர் முதல் உமாபதி சிவாசாரியார் வரையான பெயர்கள் கிடைக்கும். பின்னர் 20-க்கும் மேலான மேப் MAPS புகளைப் பாருங்கள் . பின்னர் சுமார் 700 படங்களின் கீழ் உள்ள தலைப்புகளை மட்டும் பாருங்கள். இந்த ஆசிரியர் டாக்டர் சிவலோக நாதன் எவ்வளவு காலம் இதற்குச் செலவிட்டிருப்பார் என்பது விளங்கும். பின்னர் நீங்கள் நூலைப்படித்த்தால் இதன் ஆழமும் பெருமையும் விளங்கும்

இன்னும் ஒரு விஷயம் ………………………………….

தொடரும் ……………………………………..

Tags-  நூல் வெளியீட்டு விழா , லண்டன் , டாக்டர் சிலலோக நாதன் , கோவில்

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 3 (Post No.12,121)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,121

Date uploaded in London –  12 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

8-6-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

மூன்று பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 3 

ச.நாகராஜன்

ஆற்றல் தரும் ஆரத்தி! 

பாரத விஞ்ஞானிகளுள் மிகவும் பெருமை வாய்ந்த விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ்.

1894ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று பிறந்த சத்யேந்திரநாத்

1974ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி மறைந்தார்.

பெரும் கணித மேதையாகவும் இயற்பியலில் பெரும் விஞ்ஞானியாகவும் விளங்கிய  அவருக்கு 1954ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதை இந்திய அரசு அளித்து கௌரவித்தது.

பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு தனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்த கொள்கையை இவர் அனுப்ப, ஐன்ஸ்டீன் வியந்து போனார். அவரது இந்தக் கொள்கை முடிவை அணுக்களின் மீது ஐன்ஸ்டீன் பிரயோகம் செய்து பார்த்தார். அது ஒரு புதியகண்டன்ஸேட்டை –  ‘Condensate’ஐக் கண்டு பிடிக்க வழி வகுத்தது.

இதுவே இப்போது போஸ் ஐன்ஸ்டீன் கண்டன்சேட்’ என்று அழைக்கப்படுகிறது.

காட் பார்டிகிள் எனப்படும் கடவுள் துகள் பற்றிய ஆராய்ச்சிக்கு இவரது கண்டுபிடிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

இப்படிப்பட்ட பெரும் விஞ்ஞானியான இவருக்கு ஒரு நாள் மிக நெருங்கிய உறவினர் ஒருவரிடமிருந்து அவர் இல்லத்தில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது.

அவரும் திருமணத்திற்குச் சென்றார். வைதீக முறைப்படியான அந்த திருமணத்தை  குருமோகன் பட்டாசார்யா என்பவர் நடத்தி வைத்தார்.

அவர் திருமணத்தை நடத்தி வைத்த முறையால் கவரப்பட்ட சத்யேந்திரநாத் நெடுந்தொலைவில் உள்ள அவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் செல்ல வேண்டாமெனக் கூறி, அவரை அன்றிரவு தன்னுடன் தங்க அழைப்பு விடுத்தார். அவரும் விஞ்ஞானியின் வீட்டிற்குச் சென்று அவருடன் அளவளாவி அன்றைய இரவை அவரது இல்லத்தில் கழித்தார்.

காலையில் அவர் எழுந்த போது ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

சத்யேந்திரநாத் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துளசி மாடம் அருகே நின்று கொண்டிருந்ததையும் அவர் துளசிக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்தார்.

அவரது பிரமிப்பைக் கண்ட சத்யேந்திரநாத், புன்சிரிப்புடன், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

குருமோகன் வியப்புடன் கூவினார்: “நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி! நீங்கள் ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதை என் கண்ணால் காண்கிறேன்!” என்றார்.

சத்யேந்திரநாத் நிதானமாகக் கூறினார் :’ ஆம், ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது பெரும் சக்தியின் ஆதாரம்!” என்றார்.

துளசிக்கு ஆரத்தி எடுக்கும் போது, அப்படி எடுப்பது சக்தியின் ஆதாரத்திற்கானது என்ற அவரது கூற்று கோடிக்கணக்கான ஹிந்துக்கள் காலம் காலமாக ஆரத்தி எடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதற்கான பெரும் பயனை எடுத்துரைத்தது.

ஒரு விஞ்ஞானியின் கூற்று என்பதால் அதை அவர் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து அதன் பயனைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை உணர்ந்த குருமோகன் அவரை வணங்கிப் போற்றினார்.

தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் அனைவருடனும் பின்னால் பகிர்ந்து கொண்டார்.

 xxxxxxxxxxx

ஜே.பி.எஸ். ஹால்டேன் காயத்ரி மந்திரம் பற்றிக் கூறியது!

பிரபல விஞ்ஞானியான ஜே.பி.எஸ்.ஹால்டேன் (பிறப்பு : 5-11-1892 மறைவு 1-12-1964) இந்தியாவின் மீது அளவற்ற மதிப்பு கொண்டவர். தன் வாழ்நாள் இருப்பிடமாக அவர் இந்தியாவையே தேர்ந்தெடுத்தார். 1956இல் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த அவர் கல்கத்தாவிலும் புவனேஸ்வரிலும் பணியாற்றினார். புவனேஸ்வரிலேயே மறைந்தார்.

அவர் காயத்ரி மந்திரத்தின் பால் பெரும் ஈடுபாடு கொண்டவர். அதன் அபூர்வ சக்தியை உணர்ந்தவர்.

 “காயத்ரி மந்திரம் உலகில் உள்ள ஒவ்வொரு சோதனைச்சாலையிலும் பொறிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். (The Gayatri Mantra should be carved on the doors of every laboratory of the world – J B S Haldane).

காயத்ரி மந்திரத்தின் பொருளை மஹாகவி பாரதியார் அழகுற, “செங்கதிர் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று தமிழில் தந்துள்ளார்.

விஞ்ஞானிகள் பிரமிக்கும் தியான பலன்கள்!

இந்திய தியான முறை மற்றும் யோகா பற்றி உலகின் தலையாய விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆராய்ச்சிகள் ஏராளம். அவை விரிப்பின் ஆயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும்.

தலாய்லாமா ஊக்குவித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல நியூரோ சயிண்டிஸ்ட் ரிச்சர்ட் டேவிட்ஸன் ஆறுவிதமான தியான வகைகளை ஒரு யோகி செய்து காண்பிக்க அவரது மூளையில் ஏற்படும் மாற்றங்களை அதி நவீன கருவி வைத்து ஆராய்ந்தார்.

இதே போல இன்னொரு குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி ஷன்னஹாப்-கால்ஸா நடத்தியதாகும்.  இவரால் 1200 ஆய்வுகள் நடத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன..

மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் உலகெங்கும் பிரபலமான ஒன்று. இதைப் பற்றிய அவரது விஞ்ஞான விளக்கப்படங்கள் பிரமிக்க வைப்பவை.

ராப் நாரின் என்ற அறிஞர் ஒருமுனைப்படுத்தப்பட்ட தியானத்தால் வெளியில் என்ன நடந்தாலும் ‘உள்ளே’ அமைதியைப் பெறலாம் என்கிறார்.

பிரபல மருத்துவரான ரோஜர் தாம்ஸன்.” தியானத்தின் முடிவில் உங்களுக்கு நன்மை தெரிந்ததெனில் அது நல்ல தியானம் தான்” என்று சுருக்கமாகச் சொல்கிறார்.

இந்த அனைத்து முடிவுகளையும் ஒரே வரியில் சொல்வதானால் தியானமானது நீண்டநாள் வாழ்வை ஆரோக்கியத்துடனும் மன நலத்துடனும் தந்து வாழ்க்கையை உற்சாகம், மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குகிறது என்பதே ஆகும்.

விஞ்ஞானிகளின் தொடர்பு

மேலே கண்ட விளக்கங்களைத் தந்தவர்களுள் மூவருடன் நான் தொடர்பு கொண்டேன். ஹான்ஸ் ஜென்னி தனது விளக்கத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் அளித்தார். டேவிட் கால்ஸா மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது நூல்களை எனக்கு அனுப்பி வைத்தார். அனில் குர்ஜர் அவர்களோ என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கங்களை உற்சாகத்துடன் அளித்ததோடு தனது ஆய்வு பற்றிய குறிப்புகளை அனுப்பி வைத்தார்.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம் கண்டு நாம் வியக்க வேண்டிய காலமாக இது இருக்கிறது

ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞானம் நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களை அறிவியல் ரீதியாக ஆராய்ந்து வருகிறது.

இதைப் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் கூறுகையில் விஞ்ஞானம்  ஆன்மீகத்தை ஆய்வு செய்வதை வரவேற்பதாகக் கூறியதோடு, முத்தாய்ப்பாக இப்படிக் கூறினார்:

“நமது மகரிஷிகள் காலத்தால் முற்பட்டவர்கள். அவர்களின் கூற்றை உண்மை என்பதை உலகம் அறிய நெடுங்காலம் ஆகும்”.

***,

கட்டுரையாசிரியர் 132 நூல்களை எழுதியுள்ளார். 

இந்தக் கட்டுரை மூன்றாம் பகுதியுடன் முடிகிறது.

QUIZ தேவாரப் பத்து QUIZ (Post No.12,120)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,120

Date uploaded in London – –  11 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

தேவாரம் பற்றிய கீழ்க் கண்ட பத்து கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கொடுத்தால் உங்களுக்கு சைவ மணி என்ற பட்டத்தை வழங்குகிறோம் .

1.தேவாரம் பாடிய மூவர் யார் ?

2.அப்பர் பாடிய திருமுறைகளின் எண்கள் என்ன ?

3. சம்பந்தர் பாடியது முதல் மூன்று திருமுறைகள். அவர்  பாடிய முதல் பாடல் என்ன?

4.தேவாரத்தின் பொருள் என்ன ?

5.சம்பந்தர் பாடிய பாடலில் ஒவ்வொன்றிலும் ராவணன் பற்றி எங்கு குறிப்பிடுகிறார் ?

6.அப்பர் பாடிய முதல் பாட்டு என்ன?

7.பித்தா என்று இறைவனை அழைத்தவர் யார்?

8.கோடிட்ட இடங்களை நிரப்புங்கள் :-

சம்பந்தர் —- பாடினார் ; அப்பர் —- பாடினார்; சுந்தரர்  ………. பாடினார்.

9.திருவிழாக்களை மாதம் தோறும் வைத்து வரிசைப் படுத்திப் பாடியவர் யார்?

10.பழமொழிகளை வைத்து வரிசைப் படுத்திப் பாடியவர் யார்?

xxxx

answers

1.சம்பந்தர் , அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர் .

2.நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகள்

3.தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த

பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)

4. தேவ +வாரம் = கடவுளுக்கு அன்பு செலுத்தும் பாடல்

தேவ + ஆரம் = கடவுளுக்கு  மாலை ( பா மாலை )

5.ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம் பாடலில் ராவணன், ஒன்பதாம் பாடலில் அடிமுதல் தேடிய கதை, பத்தாம் பாடலில் சமணர், பவுத்தர் கொடுமைகள் 11-ம் பாடலில் கடைக்காப்பு , பலன் இருக்கும்

6. கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல

செய்தன நான் அறியேன்

       ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது

வணங்குவன் எப்பொழுதும்

       தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு

துடக்கி முடக்கியிட 

       ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில

வீரட்டானத்துறை அம்மானே.

7. சுந்தரர்.

பித்தாபிறை சூடீபெருமானேயரு ளாளா

எத்தான்மற வாதேநினைக்கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்நல்லூரருட் டுறையுள்

அத்தாஉனக் காளாய்இனிஅல்லேனென லாமே.

8.சம்பந்தர் தன்னைப்  பாடினார் ; அப்பர் என்னைப் பாடினார்; சுந்தரர்  பெண்ணைப் பாடினார்.

9.திருஞான சம்பந்தர்

10. அப்பர் ( திருநாவுக்கரசர்).

—subham—

tags-  தேவாரம், அப்பர், சுந்தரர், சம்பந்தர் 

Is Saturday a good day? -part 2 (Post No.12,119)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,119

Date uploaded in London – –  11 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

First part was posted yesterday. This is the second part.

Monday is called Somvaar or Somavaara by Hindus. It is a sacred day to Lord Shiva who has a crescent moon in his forehead. Moon is Soma in Sanskrit.

Some people observe full day fast or up to 4 pm. Hindu fasts begin from sunrise. Shiva temples are crowded on Mondays (Moon Days).

Mondays of the month Shraavan (July- August) are considered especially sacred and generally observed as fasts. Even non-vegetarian Shiva worshippers don’t eat meat or fish on Mondays.

There are lot of stories about Monday fast and benefits of fasting. And there is a strange belief as well. If you kill a centipede on Mondays it is considered offering three Tolass of gold to Shiva.

(Tola is a measure)

Solah Somvar fast is very popular in North India. It is a fast observed for 16 consecutive Mondays starting from Shravan month (Shravan= Sawan in colloquial speech; sola = 16१६. सोलह (solaa), 16 )

As usual, all the benefits are listed, one can get by observing this fast.

Somavati is the name of a Monday if it happens on Amavasya day.

Phaski

A palmful of grain presented by women to Shiva on every Monday throughout a year or throughout the month of Shraavan (July- August) or offering of grain as much in quantity as could be taken on the palms of both hands joined together to form a receptacle is called Phaski .

xxxx

Importance of Tuesdays- Mangalvaar

Mangal Gauri Vratas or Mangal Chandi vratas are observed on Tuesdays. Many stories are there about getting children by observing such fasts.

Sankashth Mangalvaar

A fast is observed in Bengal by people who have lost their relations or in distress. So it is called distress/ sankasth removing Tuesdays .

Durga and Skandha (Murugan in Tamil) are worshipped by Tamils on Tuesdays. All the shrines of those two gods are crowded on Tuesdays. But in North India, Hanuman is worshipped on Tuesdays.

xxxx

Significance of Wednesday – Budhvar

Mercury is Budha in Sanskrit. Jupiter is Guru in Sanskrit.

Both are worshipped on all Wednesdays and Thursdays in the month of Shraavana. They are worshipped with garlands in the morning. If good harvest is desired, figures of these planets are drawn on the corn bin; if wealth is desired on the store chest.

Budha is associated with lord Krishna as well. Maharashtrians observe fast to worship Vitoba of Pandharpur.

xxxx

Significance of Thursday – Guruvar

Many people associate this day with their actual Guru/Teacher instead of planet Guru. For instance Sathya Sai Baba advised everyone to do Bhajan on Thursdays.

Generally there is a pattern followed by Hindus

Monday -Siva worship

Tuesday – Gauri , Durga , Skandha worship

Wednesday – Budha worship

Thursday – Jupiter , Acharya worship

Fridays – Lakshmi worship, all goddesses

Saturn –Sani , Hanuman

xxxx

Friday Worship

Lot of women observe Friday fast or Puja. Lalitha Sahasranama is recited in groups; Vedic pundits do Sri Suktam recitation for gaining wealth and prosperity. All Devi temples get a huge crowd on Fridays. Though Venus/Sukra is male in Hindu astrology, more importance is given to Goddess on Fridays.

Tamil women do take full bathing (head to foot) with oil on Fridays.

Jivantika , Goddess of Longevity, is worshipped by observing fast, during Shraavan(Aavani in Tamil) month.

Sankata vrata is observed on Fridays to eliminate all difficulties.

xxxx

Saturday worship

Saturday is dedicated to the worship of Hanuman and Sani Bhagavan (Sanaih Charan = slow moving planet).

Kshetra means field. Kshetra devi is the Goddess of Fields. Bengalis worship her on Satudays in the month of Agrahaayan (November- December) and it is called Kshetra Vrata.

Sampat Shanivar

Every Saturday in the month of Shraavan is called Sampat Shanivar or wealth giving Saturday .

In South India , all Hanuman temples are visited by the devotees and special Vadai Maalai (spicy Doghnuts garlands) is offered to Anjaneya.

Wherever there is a Navagraha shrine, devotees offer Sesame seed or oil lamps to Lord Sani (planet Saturn). Almost all Tamil temples have Navagrahas (Nine Planet) shrine.

In places like Shani Shingnapur in Maharashtra, Shani is worshipped separately.

In Tamil Nadu men take oil bath on Saturdays.

xxxx

Sunday Worship

Surya is the planet for health. So Sunday is dedicated to Surya/Sun. the word Solar is derived from Sanskrit Surya. Devotees recite Aditya Hrudaya hymn , do Suryanamaskar ritually and increase the number of recitation of powerful Gayatri mantra on Sunday.

In general, if a planet is weak in one’s horoscope, astrologers ask the person to worship that planet on that day. If Budha is weak then one is asked to go to temples on Wednesdays.

There are Navagraha Gayatris, Navagraha hymns and the person is advised to recite that particular Graha mantra. For example, if one has Jupiter in a weak position in horoscope, one is asked to recite Guru hymn from the Navagraha hymn.

Each family observes certain fast for some specific reason as well. The reasons for Fasting are endless.

So ,all days are important to Hindus, and particularly, all days in the month of Shraavan (Aaavani in Tamil) are important for the Hindus.

–subham—

 Tags- Days of week, Shani, Guru, Budha

‘அ’ என்றால் அர்ஜுனன் ‘ஆ’ என்றால் ஆதித்த கரிகாலன் (Post No.12,118)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,118

Date uploaded in London – –  11 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அ , ஆ , இ , ஈ – எழுத்துக்களில் துவங்கும் 12 சொற்களைக் (4 X 3= 12) கண்டுபிடியுங்கள். உங்களுக்குத் தமிழ் தெரியுமா என்பதை நீங்களே அறிவீர்கள்.

அ  1⇢ ⇣ 1 a      2 aஆ 2 ⇣⇠
 1 b 1 c       2 b2.c.
          
          
          
          
          
          
          
          
4 a4 b       3.b 3.a
  4   4 c      3.c     3

1

1.a.இந்த தமிழ்க் கிழவியைத் தெரியாதவங்க யாருமே இல்லை.

1.b.அந்தாதி என்றால் உடனே  இந்த அம்மன் பெயர்தான் நினைவுக்கு வரும்

1.c பல கோவில்களில் தேவி, அம்மன் பெயர்கள் இந்தச் சொல்லொடுதான் முடியும்

Xxxx

2

2. a.ஆன்மா கடவுளுடன் லயிக்கும் இடம்

2.b.மொத்தம் 12 பேர். ஒரே ஒரு பெண் ஆண்டாள்

2.c.தட்சிணாமூர்த்திஅமர்ந்து கொண்டிருக்கும் மரம்

Xxxxx

3. a.பதரி என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லும் பழம்

3.b.எப்படித்தான் 24 மணி நேரமும் இந்த பம்ப் செட்டு வேலைசெய்து நம்மை சாகும்வரை காக்கிறதோ!!

3.c.தலையணைக்குள் இதன் பஞ்சு இருந்தால் சுகம்தான்

xxxxx 

4.

4.a.நம்மைப் பெற்றெடுத்த தாயின் இன்னும் ஒரு பெயர்

4.b.விறகில் இது இருக்கும் வரை அது எரியாது

4.c.இலங்கை நாட்டை இப்படியும் அழைப்பர்

answer 

Answers

அ  1⇢ ⇣வ் 1 aவையா   ர் ம்ல2 aஆ 2 ⇣⇠
பி 1 bம் 1 c      ழ் 2 bல2.c.
ரா பி    வா 
மி  கை  ர்  
         ம்
          
          
ள்   சைம்    
      தை
 ப்     ந்
ன்4 aர4 b      ரு 3.bல 3.a
  4   ழ4 cநாடு  ம்ல3.c     3

–subham—

Tags- ‘அ’ என்றால், அர்ஜுனன், ‘ஆ’ என்றால், ஆதித்த கரிகாலன்

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 2 (Post No.12,117)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,117

Date uploaded in London –  11 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

8-6-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

மூன்று பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞானம்! – 2 

ச.நாகராஜன்  

 ஓம் உச்சரிப்பில் வரும் ஶ்ரீ யந்திரம் 

ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹான்ஸ் ஜென்னி என்பவர்.

இவர் மந்திரத்திற்கு மகிமை உண்டா என்று ஆராய ஆரம்பித்தார். ஒவ்வொரு ஒலி அலையாக இவர் சோதிக்க ஆரம்பித்தார்.

க்ளிசெரின், பாதரஸம், ஜெல் பவுடர், இரும்பு போன்ற பொருள்களின் மீது ஒலி அலைகள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன என்பதை இவர் உன்னிப்பாக ஆராய்ந்தார். ‘லோ ப்ரீகெவென்ஸி சவுண்ட் வேவ்ஸ்’ எனப்படும் குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவது அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்டபோது இந்த சாதாரணப் படங்கள் சிக்கலான படங்களாக மாற ஆரம்பித்தன.

ஓம் என்ற உச்சரிப்பில் ‘ஓ’ என்பது ஒலிக்கப்பட்டவுடன் அந்த ஒலி அலை ஒரு வட்டத்தை உருவாக்கியது. ஓம் என்று முடிந்த போது அது ஒரு ஶ்ரீ சக்கரத்தை வட்டத்தினுள்ளே உருவாக்கியது.

நமது நாட்டில் ஆயிரம் ஆண்டுகளாக ஶ்ரீ சக்கரம் வழிபடப்படுகிறது. ஓம் உச்சரிக்கப்படுகிறது.

ஜென்னி தனது ஆய்வுகளின் மூலமாக மனித உடலில் திசுக்கள், உயிரணுக்கள், உறுப்புகள் தம் தமக்கு உரியதான ஒரு ஒலியைக் கொண்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தார்.

நமது அறநூல்கள் ஒலி அடிப்படையிலான நாமங்களை 108, 1008 என்று கொண்டிருப்பதை நாம் நினைவு கூரலாம்!

யூ டியூபில் cymatics மற்றும் chladni patterns என்று பதிவிட்டால் ஒலி அலைகள் ஏற்படுத்தும் சித்திரங்களைக் காட்டும் பல காணொளிக் காட்சிகளைக் காணலாம்.

ஶ்ரீ சக்கரத்தை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானி!

ஶ்ரீ சக்கரத்தை ஆராய வேண்டும் என்று மாஸ்கோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலைச்சேவ் என்பவருக்கும் ரஷிய விஞ்ஞானக் கழகத்தின் தலைவரான இன்னொரு விஞ்ஞானி ஐவான் கோவலான் சென்கோ என்பவருக்கும் ஏற்பட்டது. 

ஶ்ரீ சக்கரத்தில் உள்ள கோடுகள், முக்கோணங்கள் மற்றும் வடிவியல் அமைப்பைக் கண்டு பிரமித்த இவர்கள் கணினி மூலமாக அதைத் தீவிரமாக ஆராய ஆரம்பித்தனர்.

இந்தச் சக்கரத்தில் நடுவில் பிந்துவும் (புள்ளி)  சுற்றி ஒன்பது முக்கோணங்களும் உள்ளன. மேல் நோக்கி உள்ள நான்கு முக்கோணங்கள் சிவனையும் கீழ் நோக்கிய் ஐந்து முக்கோணங்கள் சக்தியையும் குறிக்கின்றன. எல்லையற்ற சக்தி, ஆரோக்கியம், செல்வம், ஞானம், முக்தி ஆகியவற்றைப் பெற காலம் காலமாக இதை அனைவரும் வழிபடுவது கண்கூடு. இந்தியாவெங்கும் ஏராளமான ஆலயங்களில் ஶ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இதை ஆராய்ந்த ரஷிய விஞ்ஞானிகள் பிரமிப்பின் எல்லைக்கே சென்றனர். நவீன கணினி கூட இதை முழுதுமாக ஆய்வு செய்யப் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்ட இவர்கள்

ஒன்பது முக்கோணங்கள் ஒன்றை ஒன்று வெட்டினால் ஏற்படும் சந்திப்புப் புள்ளிகள் எவ்வாறு பல்வேறு புள்ளிகளுடன் ஒன்றோடு ஒன்று இணையும் என்ற கண்டுபிடிப்பும் இன்னும் விளங்கிக் கொள்ள முடியாத அநேக அறிவியல் வினாக்களும் இந்த யந்திரத்தில் பொதிந்துள்ளன என்றனர் அவர்கள். (How did people come to know that nine triangles arranged in such a way intersect each other, their numerous crossing points coinciding)

இதை  மனநலம் பாதிக்கப்பட்டு தன் நிலையை இழந்தவரிடையே பயன்படுத்திய அவர்கள் பாதிக்கப்பட்டோர் நலமடைவதைக் கண்டு பிரமித்தனர். குறிப்பிட்ட முறைப்படி இந்த ஶ்ரீ சக்கர யந்திரம் அமைக்கப்பட வேண்டும். இதே போல உள்ள ஆனால் குறிப்பிட்ட முறைப்படி அமைக்கப்படாத யந்திரத்தை அவர்கள் பயன்படுத்திய போது சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதையும் அவர்கள் கண்டனர். இந்த ஆய்வை, ஆய்வின் மேலாளரும் உறுதிப்படுத்திய பின்னர் உலகினருக்கு ஆய்வு பற்றி அவர்கள் தெரிவித்தனர்.

விரிவான ஆய்வை இணையதளத்தில் படிக்கலாம்; தரவிறக்கம் – டவுன்லோட் – செய்து கொள்ளலாம்

உளவியல் நோய்களைக் குணப்படுத்தும் குண்டலினி

உலகின் பிரபலமான யோகா ஆய்வாளரும் விஞ்ஞானியும் குண்டலினி யோகா சிகிச்சை நிபுணருமான டேவிட் ஷானஹாஃப் கால்ஸா ‘இண்டர் நெட் யோகி” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர். தூக்கமின்மை, உளவியல் ரீதியாகப் பாதிப்பு, அஜீர்ணத்தால் பாதிப்பு, கார்டியோ வெ/ஸ்குலர் எனப்படும் இதயக் குழலிய வியாதியால் பாதிப்பு ஆகியவை கொண்ட ஏராளமானோருக்குத் தனது விசேஷ தியான முறைகளை இவர் கற்றுக் கொடுக்கிறார். தனது ‘செர்பெண்ட் பவர்’ என்ற நூலில் 29ஆம் அத்தியாயத்தில் குண்டலினி யோகம் பற்றி இவர் விளக்கிக் கூறுகிறார். இவரால் பயன்பெற்று வருவோர் ஏராளம்!

இவரது நூல்கள் பிரபலமானவை.

மூளை ஆற்றலைக் கூட்டும் தோப்புக்கரணம்!

லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த டாக்டர் எரிக் ராபின்ஸ் மூளை ஆற்றலை ஊக்குவிக்க ஒரு பயிற்சியை அனைவருக்கும் சொல்லித் தருகிறார்.

ஒரு மாணவன் பள்ளியில் பாடங்களைச் சரியாகவே கற்க முடியவில்லை. அவர் கூறிய பயிற்சியைச் செய்ய ஆரம்பித்தவுடன் அவன் ‘ஏ’ கிரேடுடன் முதல் மாணவனாக ஆனான்.

பயிற்சி என்ன?  பாதங்களை நேராக இருக்கும்படி வைத்து கால்களை தோள்களின் அகலத்திற்கு விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வல்து காதை இடது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். இதே போல இடது காதை வலது கை கட்டை விரல் மற்றும் சுட்டு விரலால் பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் குந்தி அமர்ந்து மூச்சை உள்ளிழுக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும் போது மூச்சை வெளியிட வேண்டும். ஆக இப்படி உட்கார்ந்து எழுந்தால் போதும். இந்தப் பயிற்சியை மூன்று நிமிடம் செய்தாலேயே மூளை ஆற்றல் கூடும். இது நிரூபிக்கப்பட்ட பயிற்சி ஆனது

யேல் நரம்பு-உயிரியல் நிபுணரான டாக்டர் யூஜீனியஸ் ஆங், காது மடல்களைப் பிடிக்கும் போது மூளையின் நரம்புப் பாதைகளை தூண்டி விடும் அக்குபங்சர் புள்ளிகளை அழுத்துகிறோம் என்கிறார். மூளையின் இரு பாதிகளும் காது மடல்களின் எதிர்புறங்களில் உள்ளன. எதிரெதிர் கைகளைப் பயன்படுத்தி காது மடல்களைப் பிடிப்பதால் நுண்ணிய ஆற்றலைத் தூண்டும் மனித உடலின் ஒரு சிறப்பான அமைப்பைப் பயன்படுத்தியவர்களாக ஆகிறோம்.

அட, பிள்ளையார் முன்னால் போடும் தோப்புக்கரணத்திற்கு – உக்கிக்கு – இவ்வளவு சக்தியா என்று வியக்க வேண்டியது தான்; பிரமிக்க வேண்டியது தான். அறிவியல் பிள்ளையார் உக்கியை ஆமோதிக்கிறது. பகுத்தறிவாளர்களுக்கு வேறு என்ன வேண்டும்?

தொடரும்

QUIZ அருவிப்பத்து QUIZ (Post No.12,116)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,116

Date uploaded in London – –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கீழ்க்கண்ட பத்து நீர்வீழ்ச்சிக் கேள்விகளுக்குப் பதில் சொன்னால் உங்களுக்கு அருவி மன்னன் என்ற பட்டத்தை வழங்குகிறோம்

1.இந்தியாவிலேயே உயரமான நீர்வீழ்ச்சி எது? எந்த நதியில் அது உள்ளது?

2.குற்றால நீர்வீழ்ச்சி எந்த நதியில் இருக்கிறது?

3.காவிரி நதியில் உள்ள இரண்டு நீர்வீழ்ச்சிகளின் பெயர்கள் என்ன?

4.தாமிரபரணி நதியிலுள்ள நீர்வீழ்ச்சி எது ?

5.சில்வர் காஸ்கேட் Silver Cascade அருவி எங்கே இருக்கிறது?

6.அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி எங்கே எந்த நதியில் இருக்கிறது?

7. ஜோக் பால்ஸ் Jog Falls எங்கே இருக்கிறது? எந்த நதியில் ?

8.குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி எதனால் புகழ்பெற்றது எங்கே இருக்கிறது?

9. இந்தியாவின் நயாகரா பால்ஸ் Niagara Falls of India (அமெரிக்கா –கனடா எல்லையில் Niagara Falls உள்ளது) என்று அழைக்கப்படும் அருவி எது?

10. தூத்சாகர் நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்ன?

Answers

1.மேகாலயா மாநிலத்தில் சிரபுஞ்சி அருகில் நோ காளிகை (நவ காளி ) அருவி இருக்கிறது. இந்தியாவிலேயே உயரமான இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 1115 அடி. மலையில் சேரும் நீர் இப்படி விழுகிறது

2.சித்ரா நதி

3.சிவசமுத்திரம்; ஹொகனேக்கல்

4..பாபநாசம் அகஸ்தியர் அருவி

5.மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் .

6.கேரளத்தில் திருச்சூர் ஜில்லாவில் சாலக்குடி ஆற்றில் விழும் நீர் இது.

7. கர்நாடகத்தில் ஷிமோகா மாவட்டம்.ஜெரசப்பா நீர்வீழ்ச்சி; பழைய பெயர் ஜோக் பால்ஸ் ; உயரம் 830 அடி; நதி –ஷராவதி

8.ஷிமோகா ஜில்லாவில் (கர்னாடக மாநிலம்) வராஹி நதியில் அமைந்துள்ள இந்த அருவி கட்டம் கட்டமாக விழுகிறது. Kunchikal குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி மொத்த உயரம் 1493 அடி.

9. சட்டிஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் ஜில்லாவில் இந்திராவதி நதி இருக்கிறது. அதிலிருந்து விழும் அருவி நீர் வட அமெரிக்காவிலுள்ள நயாகரா அருவி போல பரந்து அகலமாக விழுவதால் அது  இந்தியாவின் நயாகரா பால்ஸ் Niagara Falls of India என்று அழைக்கப்படுகிறது இதை சித்ர கூட Chitrakote Falls அருவி என்பர்.

10.,தூத்சாகர் நீர்வீழ்ச்சியின் சிறப்பு என்னவன்றால் கோவா மாநிலத்தில் ரயில்பாதையில் அமைந்துள்ளது ; நதியின் பெயர் மாண்டோவி (Mandovi River)

—subham–. Tags- நீர்வீழ்ச்சி,அருவி 

A for Arjuna B for Bhisma crossword(Post No.12,115)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,115

Date uploaded in London – –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Find words beginning with A,B,C,D. All the 4X3=12 words are popular Sanskrit words known to all Indians, particularly Hindus.

1.A

Name of Sun. Used in Surya Namaskar Mantras

Vegetarian Jelly

Shiva’s Star

2.D

Messenger, ambassador, Hanuman is one of them.

Flag in Sanskrit; all the Hindu temples in Tamil Nadu has this post

Untraslatable Sanskrit word. So many meanings including Charity

3.B

We have five elements:Pancha……. Also means Ghost

The mighty Pandava in Mahabharata

Another name of Sun.

 Used in Surya Namaskar Mantras

4.C

Wife of Sun; also means shadow

English word Charming is derived from it. Manu names has this as prefix ……Latha;………Mati;……… Hasan

Means powder of herbs or minerals in Ayurveda.

A1        D2
          
          
          
          
          
          
          
          
          
          
C4            B3    

Answers

A1DITYAATUD2
RG      WH
U A    A A
D  R  J  R
R    A   M
A        A
A         
N   UA   A
R  R  M  T
U A    I U
HH      HH
C4    HAYAUNAHB3    

—subham—

Tags- Crossword, A for Arjuna

QUIZ அருணகிரிப் பத்து QUIZ (Post No.12,114)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,114

Date uploaded in London – –  10 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 1.அருணகிரி நாதர் பாடிய நூல்கள் யாவை ?

2. அருணகிரி நாதர் உயிர்விட எண்ணிய கோபுரம் எந்த ஊரில் உளது ?

3.அவர் பாடிய முதல் பாடல் எது?

4.தன்னை ஆதரித்த வள்ளலை அருணகிரி நாதர் என்ன பெயரில் பாடல்களில் குறிப்பிடுகிறார் ?

5.அருணகிரி நாதரைப் போட்டிக்கு அழைத்து தோற்றுப்போன புலவர் யார்?

6.அருணகிரி நாதரிடம் பாரிஜாத மலர் கேட்கும்படி செய்த பொறாமைக்காரன் யார்?

7.அருணகிரி நாதர் உடல் எரிக்கப்பட்டவுடன் அவர் எந்த உருவில் மீண்டும் வந்தார் ?

8.திருப்புகழ் நூலில் முதல் பாடல் என்ன?

9.அருணகிரி நாதர் பாடிய பாடல்கள் எத்தனை ?

அ )300க்கு மேல் , ஆ) 700க்கு மேல் ,  இ) 1800க்கு மேல் ,  ஈ) 3100 க்கு மேல்

10.அருணகிரி நாதர் காலம் பற்றி அறிஞர்கள் செப்புவது என்ன ?

Xxxx

விடைகள்

1.திருப்புகழ், திருவகுப்பு, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் வேல் விருத்தம், மயில் விருத்தம்

2.திருவண்ணாமலை

3.முத்தைத்தரு பத்தித் திருநகை

     அத்திக்கிறை சத்திச் சரவண

          முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்…..

4.உதய தாம மார்பான பிரபுட தேவ மாராஜன் // உளமுமாட வாழ் தேவர் பெருமாளே” ( அதல சேடனாராட ) என்கிறார்.

5. வில்லிப்புத்தூரார்

6.சம்பந்தாண்டான்

7. கிளி உருவில்

8.கைத்தல நிறைகனி — என்று துவங்கும் பிள்ளையார் பாடல்

9. 1,311 திருப்புகழ் என்று சொல்லுவார்கள். ஆகவே ஈ )1300 க்கு மேல்  என்பதே சரி.

10.அவருடைய காலம் 15-ஆம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது..

–subham—

Tags- வில்லிப்புத்தூரார், சம்பந்தாண்டான், திருப்புகழ், பிரபுடதேவ மாராஜன்