Tamils use many verbs often which end with the sound or suffix PADU and they are all conjugated in the same way. It is classified as Fourth Class verb in the Seven Verb classification of Tamil Language.
கவலைப்படு = Kavalai= worry (noun)
Kavalaip padu (verb)= worrying
வெட்கப்படு = Vetkam = shyness, shame (noun)
Vetkap padu (verb) = feel ashamed, feeling shy
சந்தோஷப்படு = Santhosham= Happiness (noun)
It is a Sanskrit word, commonly used by the Tamils
Once you one conjugation of the above you can use a lot other similar verbs in the same way. We have already seen Saappidu (eat). These PADU verbs are in the same class. Look at the charts below:
Download them and print them in larger font or save them on Desktop and enlarge them
Also look at Studytamil.wordpress.com for my old lessons posted ten years ago.
இதாலியில் அதிசய கண்டுபிடிப்பு– வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்
அதிசயங்களுக்குக் குறைவே இல்லை; விஞ்ஞானிகள் மட்டும்தான் வாரம்தோறும் அதிசயக் கண்டுபிடிப்புகளை சொல்லுவார்கள் என்று நாம் நினைக்கலாம். வரலாற்று அறிஞர்களும் வாரம்தோறும் புதிய செய்திகளை அளித்த வண்ணம் இருக்கின்றனர். மேலை நாடுகளில் இதற்காக பல மாதப்பத்திரிக்கைகள் விற்பனை ஆகின்றன. அதில் யார் எங்கே என்ன புதையலைக் கண்டுபிடித்தார்கள், எந்த வரலாற்று ஆவணத்தை, கலைப் பொருளை என்ன விலைக்கு ஏல நிறுவனங்கள் விற்றன என்ற புதிய செய்திகள் நூற்றுக் கணக்கில் வெளியாகின்றன. ஆனால் 8-11-2022 அன்று எல்லா முக்கிய நாளேடுகளும் வெளியிட்ட செய்தி இத்தாலியின் வரலாற்றையே மாற்றி எழுதும் அளவுக்கு முக்கியமானவை என்று பத்திரிக்கைகள் கொட்டை எழுத்தில் செய்திகளை வெளியிட்டன.. அப்படி என்ன அதிசயம் ?
முதலில் எட்ருஸ்கன் நாகரீகத்துக்கும் , இந்துக்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்தால் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகம் ஆகும்
இந்துக்களைப் போல அவர்களும் ‘சுவஸ்திகா’ சின்னத்தை அதிக அளவு பயன்படுத்தினர்.
அவர்களும் பறவை சகுனத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர் ;
அவர்கள் பாபிலோனியர் போல கல்லீரல் ஜோதிடம், ஆரூடத்தில் நம்பிக்கை உடையவர்கள் ;
இந்துக்களைப் போலவே தாயத்துக்கள் , காணிக்கைகள் செய்தனர்; குழந்தையின் ஆரோக்கியத்துக்காக குழந்தை உருவம் செய்து காணிக்கையாகக் கொடுத்தல் முதலியன குறிப்பிட்டத் தக்கவை.
28 Jul 2012 — Etruria is the modern day Tuscany and part of Umbrian Italy. They ruled Rome from 616-509 BC. Roman civilization was greatly influenced by …
இதாலி நாட்டில் இருந்த எட்ருஸ்கன் நாகரீகம் இந்துக்கள் போலவே பறவைகள் சகுனத்தில் ..
எனக்கு இந்த ஆராய்ச்சியில் மிகவும் ஈடுபாடு இருப்பதால் இத்தாலிக்கு இரு முறை சென்றபோது ரோம் நகரின் ஒதுக்குப் புறத்திலுள்ள எட்ருஸ்கன் மியூசியத்துக்குச் (ETRUSCAN MUSEUMIN ROME) சென்று வரலாற்று கலைப் பொருட்கள் சின்னங்களை நேரில் கண்டேன்.
இதாலியில் ஒரு ஊற்றுக்கு அடியில் 24 சிலைகளைக் கண்டுபிடித்துள்ளனர். அவைகளில் எட்ரூஸ்கன் மற்றும் லத்தீன் மொழியில் பெயர்களும் வேறு சில குறிப்புகளும் காணப்படுகின்றன . இவைகளை கிறிஸ்தவர்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்னாள் கற்களைப் போட்டு அடைத்துவைத்தனர். அதற்கு முன்னர் அகஸ்டஸ் ஸீஸர் முதலிய புகழ்பெற்ற மன்னர்கள் அங்கே வந்து பழைய தெய்வங்களை வழிபட்டனர் . பழைய தெய்வங்களை வழிபடக்கூடாதென்பதற்காக பெரிய கற்களைப் போட்டு அந்த இடங்களை கிறிஸ்தவ வெறியர்கள் மூடிவைத்தனர். இப்பொழுது பெரிய கற்களை அகற்றியபோது 24 உலோக விக்ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது இயற்கையான வெந்நீர் ஊற்று. மக்கள் அங்கே வந்து குளித்துவிட்டு கிறிஸ்துவுக்கு முந்தைய ரோமானிய தெய்வங்களை வழிபட்டனர். அப்படிச் செய்கையில் நல்ல அதிர்ஷ்டம் அடிப்பதற்காக காசுகளை ஊற்றில் எறிவார்கள். குழந்தைகளுக்காக வேண்டிக்கொண்டு உருவங்களையும் தண்ணீரில் எறிவார்கள் ; அப்படிப்பட்ட 5000 நாணயங்களும் கலைப்பொருட்களும் 2019 முதல் கிடைத்துவந்தன. இப்பொழுது கிறிஸ்தவர்கள் அடைத்துவைத்த கற்களை அகற்றியபோது பெரிய அதிசயம் காத்திருந்தது 24 உலோக விக்ரகங்கள் கிடைத்தன. அவற்றில் ஐந்து, ஆள் உயரம் உடையவை. எட்ருஸ்கன்கள் வழிபட்ட தெய்வங்கள் அவை.
டஸ்கனி பிரதேசத்தில் சியெனா பகுதியில் சான் காசியானோ என்ற சிறிய ஊர் உள்ளது அங்குள்ள இயற்கையான வெந்நீர் ஊற்று 2500 ஆண்டுகளாக பயன்படுகிறது அதிலுள்ள உப்புகள் , உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பதால் அகஸ்டஸ் சீசர் என்ற புகழ்பெற்ற மன்னர் முதல் பாமரர் வரை அங்கே வந்து குளித்தனர்.(a thermal bath in San Casciano, a small town in the province of Siena, Tuscany.). கிறிஸ்தவ மதம் பரவியவுடன் பழைய தெய்வங்கள் இருந்த பகுதிகளை கிறிஸ்தவ வெறியர்கள் அடைத்துவிட்டு புதிய ஊற்றுப் பகுதியை உண்டாக்கினர் ; காலப்போக்கில் அது சகதி நிறைந்த பகுதியாகி கேட்பாறற்றுக் கிடந்தது. 2019 முதல் அங்குள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் தலைமையில் ஆராய்ச்சி துவங்கியது . நவம்பர் எட்டாம் தேதி (2022) முக்கிய அறிவிப்பு வெளியிட்டு என்ன என்ன கிடைத்தன, அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தொல்பொருட் துறையினர் அறிவித்தனர்.
பல காலத்துக்கு கிறிஸ்தவர்களும் எட்ருஸ்கன்க்ளும் இங்கே கூட்டாக வந்து வழிபட்டது தெரிகிறது ஆனால் வெளியே அவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் குடுமி பிடிச்சண்டைகள் நடந்தன. பிறமத வழிபாட் டை அழிக்க முடியாததால் பெரும் கற்களால் அப்பகுதியை கிறிஸ்தவர்கள் மூடினர்.
இப்போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் விவரம் வருமாறு:-
இவை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் படைக்கப்பட்டவை .
Hindu Swastika in Etruscan
ரோமானியர்களும் கிரேக்கர்களும் ஆரோக்கிய தேவதையாக வழிபட்ட தேவியின் பெயர் ஹைஜியா ; அவள் கையில் ஒரு பாம்பு சுற்றியிருக்கும். அவனுடைய சிலை அருகில் படுத்திருக்கும் இளைஞனுடன் கிடைத்திருக்கிறது sleeping ephebe lying next to Hygeia, the goddess of health, with a snake wrapped around her arm.
அப்பாலோ (APOLLO) சிலை மற்றும் குழந்தைகள் விக்ரகங்கள், மன்னர்கள் என்று கருதப்படும் விக்ரகங்களும் கிடைத்துள்ளன. 1972-ம் ஆண்டில் தாடியுடன் கூடிய இரண்டு கிரேக்க உருவங்கள் கிடைத்தன. அதற்குப்பின்னர் கிடைத்த பொக்கிஷம் இவை என்று இதாலிய மியூசிய டைரக்டர் மாஸிமோ ஓசன்னா கூறினார்.
தொல் பொருட் துறை அறிஞரும் அங்குள்ள பல்கலைக்கழகப் பேராசிரியுமான ஜாகோபோ தபோல்லி இந்த ஆராய்ச்சிகளை 4 ஆண்டுகளாக நடத்திவருகிறார்.. எட்ரூஸ்கன்கள் கி.மு 900 முதல் டஸ்கனி அம்ப்ரியா பகுதியில் வாழ்ந்தனர். முதல் நூற்றாண்டில் ரோமானிய பேரரசு ஸ்தாபிக்கப்படும் வரையில் அவர்கள் கொடிகட்டிப் பறந்தனர். பின்னர் அது கிறிஸ்தவ மதத்தில் கரைந்துபோய்விட்டது.
காணிக்கையாக செலுத்தப்பட்ட ரோமானிய தெய்வங்களின் சிலைகளும் இளையோர் முதியோர் உருவங்களும் பெயர்களுடன் காணப்படுகின்றன. அவை லத்தீன் மற்றும் எட்ருஸ்கன் பெயர்களாக இருப்பதால் இரு பிரிவினரும் முதல் 500 ஆண்டுகளுக்கு கூட்டாக வழிபாடுசெய்ததும் தெரிகிறது.
–SUBHAM—
Tags- எட்ருஸ்கன் , இதாலி , புதிய விக்ரககங்கள், சிலைகள், வெந்நீர் ஊற்று
1500 YEARS AGO, CHRISTIANS TRIED TO COVER UP ANCIENT PAGAN GODS OF ETRUSCANS. BUT NOW THE PAGAN GODS ARE DISCOVERED AGAIN. ITALIAN HISTORY WILL BE REWRITEN.
A discovery that will rewrite history’: 24 exceptionally well preserved bronzes unearthed by archaeologists in Tuscany
The artefacts, found at ancient Roman baths, are among the most “significant bronzes ever produced in the history of the ancient Mediterranean”
Italian archaeologists announced today (8-11-2022) the discovery of 24 ancient Roman bronze statues in a thermal bath in San Casciano, a small town in the province of Siena, Tuscany.
The artefacts, dating from between the second century BC and the first century AD, are among the most “significant bronzes ever produced in the history of the ancient Mediterranean,” said Massimo Osanna, the director-general of Italy’s museums, which is part of the Ministry of Goods and Cultural Activities
Collection of bronzes dating back 2,300 years sheds light on transition between Etruscans and Romans
Among the well-preserved statues were five almost a metre in height.
Tue 8 Nov 2022
The 24 partly submerged statues, which date back 2,300 years and have been hailed as the most significant find of their kind in 50 years, include a sleeping ephebe lying next to Hygeia, the goddess of health, with a snake wrapped around her arm.
Archaeologists came across the statues during excavations at the ancient spa in San Casciano dei Bagni, near Siena. The modern-day spa, which contains 42 hot springs, is close to the ancient site and is one of Italy’s most popular spa destinations.
The ancient Etruscan spa was developed by the Romans and visited by emperors including Augustus.
( Photograph: Jacopo Tabolli/Universita per Stranieri di Siena/EPA)
Close to the ephebe (an adolescent male, typically 17-18 years old) and Hygeia was a statue of Apollo and a host of others representing matrons, children and emperors.
Believed to have been built by the Etruscans in the third century BC, the baths, which include fountains and altars, were made more opulent during the Roman period, with emperors including Augustus frequenting the springs for their health and therapeutic benefits.
Alongside the 24 bronze statues, five of which are almost a metre tall, archaeologists found thousands of coins as well as Etruscan and Latin inscriptions. Visitors are said to have thrown coins into the baths as a gesture for good luck for their health.
Massimo Osanna, the director general of museums at the Italian culture ministry, said the relics were the most significant discovery of their kind since two full-size Greek bronzes of naked bearded warriors were found off the Calabrian coast near Riace in 1972. “It is certainly one of the most significant discoveries of bronzes in the history of the ancient Mediterranean,” Osanna told the Italian news agency Ansa.
The ancient spa was active until the fifth century, when the pools were sealed with heavy stone pillars, which the archaeologists removed.
The excavation project at San Casciano dei Bagni has been led by the archaeologist Jacopo Tabolli since 2019. In August, several artefacts, including fertility statues that were thought to have been used as dedications to the gods, were found at the site. Tabolli, a professor at the University for Foreigners of Siena, described the latest discovery as “absolutely unique”.
The Etruscan civilisation thrived in Italy, mostly in the central regions of Tuscany and Umbria, for 500 years before the arrival of the Roman Republic. The Etruscans had a strong influence on Roman cultural and artistic traditions.
Initial analysis of the 24 statues, believed to have been made by local craftsmen between the second and first centuries BC, as well as countless votive offerings discovered at the site, indicates that the relics perhaps originally belonged to elite Etruscan and Roman families, landowners, local lords and Roman emperors.
The discovery of the well-preserved statues has been hailed as the most significant of its kind in 50 years.
Tabolli told Ansa that the hot springs, rich in minerals including calcium and magnesium, remained active until the fifth century, before being closed down, but not destroyed, during Christian times. The pools were sealed with heavy stone pillars while the divine statues were left in the sacred water.
The treasure trove was found after archaeologists removed the covering. “It is the greatest store of statues from ancient Italy and is the only one whose context we can wholly reconstruct,” said Tabolli.
The recently appointed Italian culture minister, Gennaro Sangiuliano, said the “exceptional discovery” confirms once again that “Italy is a country full of huge and unique treasures”.
The relics represent an important testament to the transition between the Etruscan and Roman periods, with the baths being considered a haven of peace.
“Even in historical epochs in which the most awful conflicts were raging outside, inside these pools and on these altars the two worlds, the Etruscan and Roman ones, appear to have coexisted without problems,” said Tabolli.
Excavations at the site will resume next spring, while the winter period will be used to restore and conduct further studies on the relics.
The artefacts will be housed in a 16th-century building recently bought by the culture ministry in the town of San Casciano. The site of the ancient baths will also be developed into an archaeological park.
“All of this will be enhanced and harmonised, and could represent a further opportunity for the spiritual growth of our culture, and also of the cultural industry of our country,” said Sangiuliano.
Xxxx
Intricate and rich in detail, the bronzes include votive statues of pagan gods as well as depictions of young men, elderly matrons and emperors. Some are preserved fully intact while others are dismembered. Archaeologists speculate that the works, five of which are around a metre tall, were cast by local craftsmen. A number are so well preserved that they still carry inscriptions of the names of eminent local Etruscans, a pre-Roman people that lived in the region.
Excavations began in 2019 in a Roman-Etruscan sanctuary close to the springs that fuelled the Bagno Grande, or Great Bath, of San Casciano. The statues served a religious purpose peculiar to the bathhouse, and many of them—alongside a smattering of religious objects, cast in silver and gold—represent figures connected to healing.
Archaeologists speculate that the sanctuary was later sealed with heavy stone columns by Christians in the fifth century. This protected the statues from the mud and boiling streams ejected by the bathhouse, which dates to the third century BC.
Votive offerings and around 5,000 gold, silver and bronze coins were also found during three years of excavations at the site, which has drawn visitors to its natural thermal waters for more than two millennia.
Jacopo Tabolli, the Etruscan specialist who led the project, called it an “unparallelled” discovery that promised to shed new light on the period when the bronzes were created, from around the 2nd century BC to the first century AD.
It was during this time that the ancient civilisation of the Etruscans, conquered by Rome, was gradually absorbed into the Roman Empire.
picture shows Hindu Swastika (this is from old file)
28 Jul 2012 — Etruria is the modern day Tuscany and part of Umbrian Italy. They ruled Rome from 616-509 BC. Roman civilization was greatly influenced by …
முந்தைய கட்டுரையில் (9-11-22) மருத்துவத்தில், குறிப்பாக வயாக்ரா VIAGRA என்னும் வீரிய மாத்திரையில் நைட்ரஜன் (NITROGEN) உப்புகள் எப்படி பயன்படுகின்ற்ன என்று கண்டோம்.
இதோ போர்க்கள, பொருளாதார பயன்கள்:
நோபல் பரிசின் கதை NOBEL PRIZE
பொட்டாசியம் நைட்ரேட் (Potassium Nitrate) என்னும் நைட்ரஜன் உப்புதான் முதல் முதலில் வெடி மருந்துகளில் பயன்பட்டது. அந்தக் காலத்தில் இதை டாய்லெட்- கழிப்பறைகளிலிருந்து சுரண்டி எடுத்தார்கள் கழிவுப்பொருட்களில் உள்ள நைட்ரஜன் அங்குள்ள பாக்டீரியாவின் தாக்குதலால் பொட்டாசியம் நைட்ரேட் படிகங்களை லெட்ரின், சாக்கடைச் சுவர்களில் படியச் செய்யும். அத்தோடு கரி மற்றும் கந்தகத்தைக் கலந்தால் வெடி மருந்து (Gun Powder) கிடைக்கும் .
இதற்குப் பின்னர் 1846-ம் ஆண்டில் நைட்ரோ கிளிசரின் என்ற அதிக சக்தியுள்ள வெடிப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. நைட்ரிக் அமிலம் அல்லது கந்தக அமிலத்துடன் கிளிசரின் (GLYCOL க்ளைகால்) என்ற பொருளைக் கலந்தால் நைட்ரோகிளிசரின் கிடைக்கும். இது சுரங்கம் தோண்டும் தொழிலிலும் கல் உடைக்கும் மலைப் பாறைகளிலும் பயன்பட்டது. ஆயினும் இது எப்போது வெடிக்கும் என்பது தெரியாததால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டன. சுவீடிஷ் விஞ்ஞானியான ஆல்ப்ரெட் நோபல் (1833-1896) ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிசரினை களிமண் கட்டியில் உறியவைத்துவிட்டால் நாம் வேண்டும் போது அதை வெடிக்கச் செய்யலாம்; இதற்கு மற்றோர் வெடித்திரி இருந்தால் போதும்; அதைக்கொளுத்தும்போது அது வெடிக்கும்; பாறைகளை , பாதுகாப்போடு தகர்க்கலாம் என்று அறிவித்தார். இந்தக் கண்டுபிடிப்பு அவருக்கு ஏராளமான செலவத்தை ஈட்டித் தந்தது. இதுதான் டைனமைட் (Nitro-glycerine and Dynamite). தனக்குக் கிடைத்த செல்வத்தில் ஒருபகுதியை ஒதுக்கி 1901-ம் ஆண்டில் நோபல் சமாதானப் பரிசை நிறுவினார்.
இதற்குப் பின்னர் 1863-ம் ஆண்டில் TNT என்னும் மேலும் சக்திவாய்ந்த வெடிப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் நைட்ரஜன் கொடுத்த ரசாயனப் பொருளே. இது ட்ரை நைட்ரோ டாலுயீன் (TRI NITRO TOLUENE) என்பதன் சுருக்கம். பின்னர் அம்மோனியம் நைட்ரேட்டையும் கூட வெடிமருந்தாக்கலாம் என்று அறிந்தனர். இவை அனைத்தும் போர்க்களத்திலும் பயன்பட்டன. ஆனால் தற்காலத்தில் இவை எல்லாம் பழங்கதைகள் ஆகிவிட்டன. இப் போது RDX மற்றும் HMX என்ற மிகவும் சக்திவாய்ந்த வெடி மருந்துகள் வந்துவிட்டன. இவைகளையே ராணுவம் பயன்படுத்துகிறது.
இது எல்லாவற்றிலும் என்ன நடக்கிறது என்றால், அந்த ரசாயனப்பொருளில் இருக்கும் நைட்ரஜன் மீண்டும் வாயுவாக மாற ஆசைப்பட்டு விரிவடைகிறது. அப்போது பிரம்மாண்ட வெப்பமும் வீச்சும் ஏற்படுகிறது .
மிகப்பெரிய விபத்துகள்
கனடாவில் நோவா ஸ்காட்டியா பகுதியில் (HALIFAX) ஹாலிபாக்ஸ் என்னும் நகரம் உள்ளது. 1917ம் ஆண்டில் 2750 டன் வெடிப்பொருளுடன் வந்த கப்பல் மற்றொரு கப்பலின் மீது மோதியதில் அந்த நகரின் பெரும்பகுதி வெடித்துச் சிதறியது. அதில் 1600 பேர் கொல்ல ப்பட்டனர் ; 9000 பேர் காயம் அடைந்தனர்
அமெரிக்காவில் டெக்சாஸில்(TEXAS) அம்மோனியம் நைட்ரேட் ஏற்றி வந்த கப்பலில் மிகப்பெரிய தீ விபத்து நடந்தது . அங்கு சேமித்து வைக்கப்பட்ட 5000 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 552 பேர் இறந்தனர் 3000 பேர் காயம் அடைந்தனர். . கப்பலுக்கு ஒரு மைல் வட்டாரத்தில் இருந்த அத்தனை கட்டிடங்களும் தூள் தூளாயின. மக்கட் தொகையைக் குறைப்பதில் நைட்ரஜன் ஆற்றும் கைங்கர்யம் கொஞ்சந ஞ்சமல்ல!!
Xxx
ரசாயன/ வேதியியல் குறிப்புகள்
குறியீடு – N
அணு எண் – 7
உருகு நிலை – மைனஸ் 210 டிகிரி C
கொதி நிலை – மைனஸ் 196 டிகிரி C
இயற்கையில் உள்ள ஐசடோப்புகள் – நைட்ரஜன் 14, நைட்ரஜன் 15
பொதுவாக இது மணம் , நிறம் அற்றது;
வாயு ரூபத்தில் காற்றில் இருக்கிறது.
நம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கிறது . இதற்கு அதிகமானால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஆயினும் உயிரினங்கள் நைட்ரஜன் இல்லாமல் வாழமுடியாது ஏனெனில் மரபணுவில் DNA யில் இது இருக்கிறது உடலில் சுரக்கும் நொதி என்னும் என்சைம் களிலும் அமினோ அமிலங்களிலும் , ரத்தத்திலுள்ள சிவப்பு அணுவான ஹீமோகுளோபினிலும் ஒரு நரம்பிலிருந்து மற்றோர் நரம்புக்கு செய்தி அனுப்பும் நரம்பு நுனியிலும் நைட்ரஜன் ரசாயனம் இருக்கிறது.
Xxx
பொருளாதார உபயோகங்கள்
பூமியின் காற்று மண்டலத்தில் 3 மில்லியன் பில்லியன் டன் நைட்ரஜன் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர். காற்றிலுள்ள நைட்ரஜன் வாயுவில் 45 மில்லியன் டன் வாயுவை தொழிசாலைகள் உபயோகிக்கின்றன . அதாவது ரசாயனப் பொருட்களாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. நைட்ரஜன் வாயுவை திரவ நிலைக்கு குளிரச் செய்து திசுக்கள், ரத்தம், விந்து/ கரு ஆகியவற்றை பாதுகாக்கின்றனர் . வாயுவை எண்ணெய்க் கிணறுகளில் செலுத்தி மேலும் எண்ணை எடுக்கின்றனர்.
வெடி மருந்து முதல் அம்மோனியா வாயு வரை, நூற்றுக்கணக்கான நைட்ரஜன் ரசாயனப் பொருட்கள் பயன்படுகின்றன. நைட்ரிக் அமிலம்தான் , அமில வகைகளில் அதிக சக்தி உடையது. இதுவும் அம்மோனியா வாயுவும் உருவாக்கும் பொருட்கள், பிளாஸ்டிக், நைலான் முதலிய துணி வகைகள், பாலிதீன், புகைப்படத் தொழில் ரசாயனங்கள் , ராக்கெட் எரிபொருள், சாயத் தொழில் ஆகியவற்றில் பெரும் அளவு பயன்படுத்தப்படுகிறது.
எரிமலை கக்கும் நைட்ரஜன் , மின்னல் உண்டாக்கும் நைட்ரஜன் ,அவரை முதலிய பயறு வகை தானியங்களில் காணப்படும் நைட்ரஜன் சுழற்சி, ஆகியவற்றை அடுத்த பகுதியில் காண்போம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் போற்றும் ‘ வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாள்’!
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் முருகனிடம் மிக உயரிய கிடைத்தற்கரிய பொருளை விரும்பி வேண்டுவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.
1) திருவருணை திருத்தலம்
ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே!
(பாடல் எண் 1328)
அடியார்களால் பெரிதும் விரும்பிப் பாடப்படும் புகழ் பெற்ற திருப்புகழ் பாடலான இதன் பொருள் :
ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களை செய்தது ஒரு முகம். சிவபெருமானுக்கு ஞன உபதேசம் செய்தது ஒரு முகம். உன் திருப்புகழைப் பாடி ஓதும் அடியார்களின் இருவினைகளையும் தீர்ப்பது ஒரு முகம். கிரௌஞ்ச மலையை உருவும்படியாக உனது வேலை ஏவியதும் பின்பு அமைதி காத்ததும் ஒரு முகம். உனக்கு எதிரியாக இருந்த அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் முகம். வள்ளியைத் திருமணம் செய்து கொள்ள விழைந்து ஆசையுடன் வந்தது உன் முகம்.
இப்படி ஆறுமுகமாக நீ காட்சி அளிப்பதன் பொருளை எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மையாக இருக்கும் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!
ஆறுமுகத்தின் பொருளை விளக்க வேண்டும் என்று இப்படி வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
இந்தப் பாடலின் உள்ளார்ந்த தெய்வீக அர்த்தம் பரந்து விரிந்த ஒன்று.
2) அடுத்து திருமாந்துறை திருத்தலத்தில் அவர் கூறுவது இது:
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள் – புரிவோனே
(பாடல் எண் 899 – ஆங்குடல் வளைந்து எனத் தொடங்கும் பாடல்)
பாடலின் பொருள் : வேண்டிக் கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க அவர்கள் விரும்பிய திருவடிகளைத் தந்து அருள் புரிபவனே!
3) அடுத்து கழுகுமலை திருத்தலத்தில் அவர் அருளுவது இது:
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
வேண்டு மளவி லுதவும் – பெருமாளே
(பாடல் எண் 634 – கோங்கமுகை மெலிய எனத் தொடங்கும் பாடல்)
பொருள் : வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை அவர்களுக்கு வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே.
வேண்டுவதை வேண்டும் அடியார்களுக்கு வேண்டும் அளவு தரும் பெருமாளை, ஆறுமுகம் ஆன பொருள் நீ அருள வேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டுவது எவ்வளவு ஆழ்ந்த பொருள் படைத்த ஒன்று!
அருணகிரிநாதர் வழி செல்வோம்; அவர் அருளிய திருப்புகழை ஓதுவோம். வேண்டுவதை வேண்டுமளவு தரும் வேலனின் அருளைப் பெறுவோம்!
***
புத்தக அறிமுகம் – 109
நவகிரகங்கள்
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. நவக்கிரகங்கள்
2. நவக்கிரக பட்டியல்
3. நவக்கிரக கோவில்கள்
4. நவக்கிரகங்களுக்கு உரிய ரத்தினக் கற்கள்
5. நவக்கிரக மண்டலம்
6. நவக்கிரகங்களுக்கு உரிய எண்கள்
7. நவக்கிரக யந்திரங்கள்
8. நவக்கிரக ஸ்தோத்ரம்
9. நவக்கிரக அஷ்டோத்தர சத நாமாவளி
10. சூரிய அஷ்டோத்தர சத நாமாவளி
11. சந்திர அஷ்டோத்தர சத நாமாவளி
12. செவ்வாய் அஷ்டோத்தர சத நாமாவளி
13. புதன் அஷ்டோத்தர சத நாமாவளி
14. குரு அஷ்டோத்தர சத நாமாவளி
15. சுக்ர அஷ்டோத்தர சத நாமாவளி
16. சனி அஷ்டோத்தர சத நாமாவளி
17. ராகு அஷ்டோத்தர சத நாமாவளி
18. கேது அஷ்டோத்தர சத நாமாவளி
19. ஆதித்ய ஹ்ருதயம்
20. சூர்ய நமஸ்காரம்
21. கோளறு திருப்பதிகம்
22. திருநள்ளாற்றுத் தேவாரம்
23. தசரதர் இயற்றிய ஸ்தோத்ரம்
24. நவ கிரக ஸ்தோத்ர கிருதிகள்
25. ராமாயண பாராயணமும் கிரக தோஷ நிவர்த்தியும்
26. நவக்ரஹங்களுக்கு உரிய காலஹோரை விவரம்
27. கிரகங்கள் – அறிவியல் உண்மைகள்
*
நூலில் இடம் பெறும் முன்னுரை இது:
நம்மை ஆளுகின்ற நாயகர்கள் நவ கிரகங்கள்!
வினைப்பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற இயற்கை நியதி ஒரு பக்கம் இருக்க அவற்றில் கடும் விளைவுகளை ஏற்படுத்துவற்றில் மாற்றக் கூடியதை மாற்றவும், தீய பலன்களின் கடுமையைக் குறைக்கவும், நல்ல பலன்களின் சக்தியை அதிகரிக்கவும் நவ கிரக வழிபாடு உற்ற துணையாக அமையும்.
இப்படி ஒரு நூலை வெளியிட வேண்டும் என்றவுடன் ஆக்கமும் ஊக்கமும் தந்த என் சகோதரர் திரு வி.எஸ். மீனாட்சிசுந்தர் அவர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
நூலை உருவாக்க ஆக்கமும் ஊக்கமும் தந்த என் அன்னை, சகோதரர்கள், என் மனைவி மற்றும் மகன்களுக்கு எனது நன்றி.
நவகிரகங்களை உரிய முறையில் வழிபடுவதன் மூலம் ஆசி பெற்று மென்மேலும் உயரவிருக்கும் வாசகர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிக்கிறேன்.
சென்னை ச.நாகராஜன்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
This book is an encyclopedia of nine planets. This book consists of 27 chapte encompassing the description of the temples, gems and numbers of the nine planets.gSome of them are the yanthras, sthothras, ashtothras, ADHITYA HRUDAYAM, KOLARU THIRUPPADHIKAM, Dasaratha’s SANEESWARA STHOTHRAM.Also the chanting of Ramayana and the method of chanting for the parihara of the planetary positions are included. Besides this all the scientific truths behind the planets are also well explained. This book can help us to get over the evil effects of the planetary positions by chanting of the shlokas.
நவக்கிரகங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்! நவக்கிரகக் கோவில்கள், அவற்றிற்குரிய ரத்தினக் கற்கள், எண்கள், யந்திரங்கள், ஸ்தோத்திரங்கள், அஷ்டோத்திரங்கள், ஆதித்ய ஹிருதயம், கோளறு திருப்பதிகம், தசரதர் இயற்றிய சனீஸ்வர ஸ்தோத்திரம், கிரக தோஷ நிவர்த்திக்குச் செய்ய வேண்டிய ராமாயண பாராயண முறை ஆகியவற்றை மட்டுமின்றி நவக்கிரகங்கள் குறித்த அறிவியல் உண்மைகளையும் தரும் நூல்.
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ நவ கிரகங்கள் ’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Amazing information about the Yagas and Yagnas performed by ancient Tamil Kings is available from the Sangam Tamil Literature, coins, inscriptions and Kalidasa’s Raghuvamsa.
Kalidasa of the first century BCE is the first poet in India to connect Pandya Kings with Agastya and the Yagas. We know that Kalidasa was well versed with history from South India to Persians in Iran. We also know that Kalidasa was the first poet to describe the geography of a vast area in Asia. His depiction and description were confirmed by the Yupa Stamba coins, Asvamedha coins of Pandyas and the Mula varman’s Sanskrit inscription in the deepest forests of Borneo in Indonesia.
Following the oldest Pandya king Mudu Kudumi Peru Vazuthi , Mula varman (muula) also installed a Yupa pillar in the virgin forests of Indonesia in Fourth Century CE. He also did the 16 Dhanas mentioned in Hindu scriptures. No wonder Hindu Yagas spread up to Indonesia in 4th century CE itself. Varman suffix is found even Mahabharata and later Pallavas
The Pandya King Mudu Kudumi had the epithet “Pal Yaaga Saalai”, meaning King who performed simultaneously Many Yagas. One of the Sangam poets wonder how come he was able to erect so many Yupa pillars throughout Pandya country. Two more poets also praised him for the Yagas. Coins with his name Peru Vazuthi has Yupa post and Horse which confirmed he did Asvamedha Yaga. This is confirmed by the greatest poet of India Kalidasa of first century BCE (please see Penguin Book by Chandra Rajan and great Sanskrit scholars to confirm his First century date).
During Indumati Swayamvara all the kings of Akhanda Bharat/ Greater India were introduced to Princess Miss Indumati by her girl friend. Coming to Pandya King she said,
6-61. vindhyasya mahA adreH= of Mt. vindhya, great, mountain; sa.mstambhayitA= one who stalled [its upward growth]; niHsheSha= completely; pIta= drunk; ujjhita= spoted; sindhu rAjaH= rivers, lord of – ocean – one who drank ocean and spouted it out; agastyaH= sage agastya; ashva medha= hose, ritual; avabhR^itha= a sacrted bathg on completing that ritual; Ardra mUrteH= wet, with body – when his body is still wet after the sacred bath; yasya= in whom; prItyA= friendlily, not by pity; sausnAtikaH= sukhena snAtaH iti pR^icChantaH – or – sushobhanam snAtam susnAtam pR^icChati; pR^icChatau susnAtAdibhyaH – those about whom enquiries are made if they have had a bath in due form after Vedic ritual
“Sage who stopped the upward growth of the great Vindhya mountain, who quaffed off and spouted out entire ocean, that sage Agastya will be the catechiser of this king when this Pandya king’s body is still wet after the concluding sacred bath of Ashvamedha ritual enquiring, ‘…have you performed the ceremony of ablution after Vedic-ritual ashvamedha properly….’ [6-61]
Greatest proof for Agastyaa- Pandyaa friendship and the clearest proof for Mudukudumi Peru Vazuthi’s Asvamedha yaaga comes from Kalidasa’ss Raghu vamsa. Sangam poets never praised any other Pandya in 3 or 4 places all mentioning his Yagas or Yupa posts.
Agastya belittling Vindyas= First man to cross Vindhyas through road route via the hills. Others used coastal routes to South India
Agastya drinking ocean= First man to cross Bay of Bengal/ Indian ocean with a huge Pandya army to establish Hindu Empire in 7 South East Asian countries which survived for 1500 years till Muslim invaders destroyed it.
One Pandya king has the epithet “who died in ocea”n and he was the one who sang about Indra’s Amrita in Tamil. And the oldest Sanskrit inscription found in Vietnam is from a Pandya King called Sri Maaran. No other king in India has Maaran suffix. Mula varman also confirmed it from Indonesia.
xxx
Now let us look at the details in Sangam Poems:
Purananuru verse 224 : Yaga by Karikal Choza
Poet Karungkuzal Aathanaar sings this after the death of Karikalan, the Greatest of the Choza kings. He says his wives were deprived of auspicious jewellery 9hinduwomen wont wear jewellery after husband’s death). Poet also mentioned among other the things the Yaga performed by Karikaalan.
The Yaga altar was inside the circular brick area. There was also an eagle shaped altar with a tall Yupa post.
The remarkable thing in the poem is Eagle Shaped Fire Altar and Tall Yupa post.
Those who watched Californian Sanskrit scholar Johan Frederik “Frits” Staal (3 November 1930 – 19 February 2012) organising 12 day Agnicayana ritual in Panjal village of Kerala would know how this eagle shape altar was constructed.
Purananuru – Part 224
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம்;
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி,
இரு பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்;
அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து,
முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த5
தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு,
பருதி உருவின் பல் படைப் புரிசை,
எருவை நுகர்ச்சி, யூப நெடுந் தூண்,
வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம்;
அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்: 10
இறந்தோன் தானே; அளித்து இவ் உலகம்!
அருவி மாறி, அஞ்சு வரக் கருகி,
பெரு வறங் கூர்ந்த வேனில் காலை,
பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார்,
பூ வாள் கோவலர் பூவுடன் உதிரக் 15
கொய்து கட்டு அழித்த வேங்கையின்,
மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
He won his victories in war, never sparing strong fortresses! Together with his friends, he threw down whole pots of liquor! He offered his shelter to the large families of bards!
Surrounded by his faultless women extolled for their purity, for their immaculate nature, he performed the Vedic sacrifices in the court of Righteousness where justice is well practiced after those conversant with proper custom stand up and show their knowledge, within the circling many-layered wall where the towering post of sacrifice rises next to the kite/eagle to be fed!
He who had all that knowledge, how wise a man he was who has died now and how this world is to be pitied! Like venkai trees that cowherds strip of their branches, cutting them with sharp swords to feed their precious herds who are hungry in the fearful drought of summer when the waterfalls dry up and as the branches of flowers fall, the vigor of the trees is shattered, so the sweet and tender women shed their ornaments!
Xxx
In Puram. Verse 15 , we come across Rig Vedic Sanskrit word Yupa and Tamilizad word of Sanskrit Havis (aavuthi in Tamil) ; it is cooked rice offered into fire with ghee
Ancient poet Nettimaiyaar sings in praise of Pandya king Mudu Kudumi Peru Vazuthi
பிரபஞ்சத்திலுள்ள 118 மூலகங்களில் மிகவும் முக்கியமான மூலகம்/தனிமம் நைட்ரஜன் (NITROGEN) .முதலில் சில சுவையான விஷயங்களைக் காண்போம் . ஐரோப்பிய மொழிகளில் இதற்கு வெவ்வேறு பெயர்கள்!
கிரேக்க மொழியிலிருந்து நைட்ரஜன் என்ற சொல் தோன்றியது. நைட்ர்+ ஜென் (NITRE+GENES) , அதாவது நைட்ர் என்னும் உப்பை உண்டாக்கும் பொருள்.பொட்டாசியம் நைட்ரேட் என்ற உப்பை அதிகம் பயன்படுத்திய காலத்தில் அதை நைட்ர் (Nitre ) என்றும் சால்ட் பீட்டர் (saltpetre )என்றும் அழைத்ததால் இப்படி ஒரு பெயர்.
ஆனால் பிரெஞ்சுக் காரர்களும் ஜெர்மானியர்களும் இதை வேறு சொற்கள் கொண்டு அழைப்பர். ஜெர்மானியர்கள் இதை ஸ்டிக் ஸ்டோப் (STICKSTOFF) என்பர் ; இதன் பொருள் மூச்சைத் திணறடிக்கும் பொருள் . பிரெஞ்சுக்காரர்கள் இதை அஸோட் (AZOTE) என்று குறிப்பிட்டனர். அதன் பொருள்- உயிரற்ற பொருள். நைட்ரஜன் கலந்த வாயுவான அம்மோனியா (AMMONIA) இப்படி மூச்சுத் திணறடிக்கும் (PUNGENT) பொருள் ஆகும் . அம்மோன் என்னும் எகிப்திய கடவுளின் பெயர் சூட்டப்பட்டிருந்தது . காரணம் என்னவெனில் அந்தக் காலத்தில் எகிப்து நாட்டில் அம்மோன் (AMMON) கோவிலுக்கு அருகில் அம்மோனியம் க்ளோரைட் (AMMONIUM CHLORIDE) தோண்டி எடுக்கப்பட்டது . இவை அனைத்தும் நைட்ரஜன் தொடர்புள்ளவை நைட்ரஜனும் ஹைட்ரஜனும் கலந்தது அம்மோனியா வாயு.
இரத்தத்தை உறையச் செய்து பாதுகாக்க, திரவ நிலையிலுள்ள நைட்ரஜனைப் (LIQUID NITROGEN) பயன்படுத்துகிறார்கள் . இதே போல ஆண்களின் விந்து , பெண்களின் கரு/ முட்டை ஆகியவற்றைப் பாதுகாக்கவும் திரவ நைட்ரஜன் பயன்படுகிறது . உடலில் தேவையில்லாத திசுக்களை அகற்ற அந்த இடத்தை மிக, மிகத் தாழ்வான வெப்ப, அதாவது மிகவும் குளிர் நிலைக்குக் கொண்டுவந்தால் அவை இறந்துவிடும். அதற்கும் இதை உபயோகிப்பர். அதை க்ரியோ ஜெனிக் சர்ஜரி (CRYOGENIC SURGERY) என்பர்.
வயாக்ரா மர்மம்
நமது மூளையில் நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் (NITRIC OXIDE SYNTHASE) என்ற என்ஸைம் (ENZYME நொதி) அதிகளவில் உள்ளது. இதுதான் சதைகளைத் தளர்த்த உதவுகிறது. ஆண்களின் வீரிய சக்தியை அதிகரிக்க வயாக்ரா (VIAGRA ) பயன்படுகிறது. அதுவும் நைட்ரிக் ஆக்சைட் நொதிப் பொருளை உண்டாக்கும் .சுவீடனில் உள்ள லண்ட் யுனிவர்சிட்டி ஆஸ்பித்திரி டாக்டர் ஆண்டர்சன்(LUND UNIVERSITY HOSPITAL) நைட்ரிக் ஆக்ஸைடின் அற்புத குணத்தை 1991-ல் நிரூபித்துக் காட்டினார். இது ஆண்களின் வீரியத்தை எப்படி உசுப்பி விடுகிறது என்பதைக் காட்டினார். அதற்கு முன்னர் 1987ல் சால்வடார் மொன்கடா இந்த நைட்ரிக் ஆக்சைட் (NITRIC OXIDE) நம் உடலில் முக்கியப் பொருளாக (Messenger) இருந்து சதைகளை தளர்த்த (relaxing muscles) உதவுகிறது என்பதை முதல் முதலில் அறிவித்தார். இன்று இந்தக் கண்டுபிடிப்பு பல்வேறு வகைகளில் உதவுகிறது.
இது நீண்ட நேரம் செயல்படாது ; ஆனால் சவ்வுகள் வழியாக வேகமாகப் பரவும்.
நேரடியாக நைட்ரிக் ஆக்ஸைடை உடலில் பயன்படுத்த இயலாது. ஆகையால் இதை மெதுவாகத் தோற்றுவிக்கும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவர்.1867ம் ஆண்டிலேயே இதை அறிந்து ‘அமைல் நைட்ரைட்’ (Amyl Nitrite Vapour )ஆவியைப் பயன்படுத்தி ரத்த அழுத்தத்தைக் குறைத்தனர் .அஞ்ஜைனா (Angina ) என்னும் மார்புவலி நோயைக் குணப்படுத்த இந்த ஆவியைப் பயன்படுத்தினர். முதலாம் உலக யுத்த காலத்தில் நைட்ரோ கிளிசரின் என்ற வெடிமருந்து அதிகம் பயன்படுத்தப்பட்டது.. அந்த வெடிமருத்துத் தொழிலாளாளிகளின் இரத்த அழுத்தம் வழக்கத்துக்கு மாறாக இருப்பதை டாக்டர்கள் அறிந்தனர். அப்போதுதான் அவர்களுக்கு இதை இரத்த அழுத்தத்தைக் குறைக்க நோயாளிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது தெரிந்தது. அதன் விளைவாக இரத்தக் குழாய்களை விரிவாக்கும் வாஸோ டைலேட்டர் (Vasodilator) மருந்துகள் உருவாகின.
நைட்ரிக் ஆக்சைட் உயிர் காக்கும் பொருள் மட்டும் அல்ல; உயிர் போக்கும் பொருளும் ஆகும். ஒரு நோயாளி உயிருக்குப் போராடும்போது , அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராட அதிக அளவில் நைட்ரிக் ஆக்சைட் சுரந்துவிடும். அப்போது இரத்த அழுத்தம் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அளவுக்குத் தாழ்ந்துவிடும். ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் திடீரென இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.அந்த நேரத்தில் டாக்டர்கள் வந்து நைட்ரிக் ஆக்சைட் சிந்தேஸ் என்ற என்சைம் சுரப்பதைத் தடுக்க (inhibitors )மருந்துகளைக் கொடுப்பார்கள்.
PET Scanning (Positron Emission Tomography)
இயற்கையில் நைட்ரஜன் 14, நைட்ரஜன்- 15 என்ற இரண்டு ஐசடோப்புகள் (தனிமத்தின் பிற அவதாரங்கள்) கிடைக்கின்றன. அவைகளுக்குக் கதிரியக்கம் இல்லை ; ஆயினும் நாம் உண்டாக்கும் நைட்ரஜன்-13 ஐசடோப்புக்கு கதிரியக்கம் உண்டு அதன் அரை வாழ்வு (Hale life) பத்தே நிமிடங்கள் தான். அதை மனித உடலில் செலுத்தும்போது அது அழியத்தொடங்கும்; அப்போது பாஸிட்ரான்களை (Positrons ) வெளியிடும் ; அவற்றை எலெக்ட்ரான்கள் தாக்கி அழிக்கும். அப்போது வெளியாகும் கதிரியக்கம் எக்ஸ் ரே கிரணங்களைப் போன்றவை ; அதைப் படம்பிடிக்கும்போது முப்பரிமாண படங்கள் நமக்கு கிடைக்கின்றன. இதனால் நோயாளியின் உடல் பகுதியின் பாதிப்பினை நன்றாக அறியலாம். இதை பாசிட்ரான் எமிஸ்ஸன் டோமோகிராபி (Positron Emission Tomography) அல்லது PET Scanning/ பெட் ஸ்கானிங் என்று சொல்லுவார்கள்.
அடுத்த கட்டுரையில் போர்க்கள நைட்ரஜன் , பொருளாதார நைட்ரஜன் பயன்களைக் காண்போம்
To be continued……………………………………tags-வயாக்ரா ,மர்மம், PET Scanning/, பெட் ஸ்கானிங், நைட்ரஜன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எது வேண்டும்? கட்டுரை எண் 6136 வெளியான தேதி
1-3-2019 – இந்தக் கட்டுரையில் வள்ளலார் உள்ளிட்ட பெரியோர் வேண்டும் என்று வேண்டுகின்ற பட்டியலைக் காணலாம். தொடர்ந்து இதோ … அருணகிரிநாதர்…..
அருணகிரிநாதருக்கு என்ன ‘வேணும்’? – 2
ச.நாகராஜன்
அடியார்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்பதில் அருணகிரிநாதருக்கு ஈடு இணை இல்லை.
அவர்களுக்கு வேண்டுவதைத் தனக்கு வேண்டும் என்று தன்னை முன்னிலைப் படுத்திக் கேட்கிறார்.
தனக்கு என்னென்ன வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியலையே அவர் முருகனிடம் தருகிறார்; தனது பக்தர்களுக்கு முருகன் அவர்கள் கேட்டதையும், கேட்காமல் விட்ட அரிய பல செல்வத்தையும் அளிப்பான் என்பது அவருக்குத் தெரியும்.
அவர் ‘வேணும்’ என்று மென்மையாக கேட்பதை இங்கு பார்ப்போம்.
6) சிதம்பரம்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
அசைந்துற்ற மதுமாலை – தரவேணும்
பாடல் எண் 488 – சுரும்புற்ற எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (மனம்) அழிந்துள்ள இளமானாகிய இப்பெண்ணின் விரக வேதனையை அறிந்து சமயம் பார்த்து விரும்பி உன் மார்பில் அசைந்தாடும் தேன் நிறைந்த மலர் மாலையைத் தந்தருள வேண்டும்.
குறிப்பு: இந்தப் பாடல் அகத்துறையில் நா’யக நாயகி’ பாவத்தில் அமைந்துள்ள ஒரு பாடல். இதில் விரக வேதனையை அதிகமாக்கும் குயில், வாடைக்காற்று, மன்மதன், மலர் அம்புகள், மாதர் வசைச் சொல், மலர் மஞ்சம், மாடுகளின் மணி முதலியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
7) கோடைநகர்
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று – பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு தருவாயே
பாடல் எண் 703 – ஆதிமுதனாளிலென்றன் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து, பெண்களுடன் மருவிக் கலந்து பூமியில் அவசியத்தினால் பொருள்களைத் தேடி, சுக போகங்கள் ஈடுபட்டுத் திரிந்து, பாழான நரகத்தை நான் அடையாமல் உனது மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக!
8) திருவம்பர்
கழி கோல(ம்) மண்டி நின்றாடி யின்ப வகை
வேணுமென்றுகண் சோர ஐம்புலனொ – டுங்குபோதில்
பாடல் எண் 805 – சோதி மந்திரம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மிக்க அலங்காரங்கள் நிறையும்படி நின்று அனுபவித்து இன்ப வகையே வேண்டும் என்று இருந்தும், கண் பார்வை தளர்ந்து ஐந்து புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில் …..
9) மதுரை
தெளியு ஞான மோதிக் கரைந்து
சிவபு ராண நூலிற் பயின்று
செறியு மாறு தாளைப் பரிந்து – தரவேணும்
பாடல் எண் 962 – முகமெலா நெய் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தெளிவைத் தரும் ஞான நூல்களை ஓதி ஒலித்தும் சிவபுராண நூல்களில் பயிறும், மனம் நெருங்கிப் பொருந்துமாறு உன் திருவடிகளை அன்பு கூர்ந்து தந்தருள வேண்டும்.
10) பொதுப் பாடல்
மாய
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீமீ – ளெனவேணும்
பாடல் எண் 1061 – முதலியாக்கையுமிளமை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வாராது, வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும்.
11) பொதுப் பாடல்
வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
வேகமொ டப்பும லைக்கு லத்தைந -ளன் கைமேலே
பாடல் எண் 1147 – ஓலைதரித்த குழை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கடலினை அணையிட்டு குரங்குக் கூட்டத்துடன் அடைக்க வேண்டும் என்று சொல்லி அதைக் கேட்ட அந்த நொடியிலேயே, மிக விரைவாக அந்தக் கடல் நீரில் மலைக் குவியல்களை நளன் என்னும் வானரத் தச்சன்….
12) பொதுப் பாடல்
அலங்கார நன்றி – தென மூழ்கி
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
அலந்தேனை யஞ்ச லெனவேணும்
பாடல் எண் 1265 – பெருங்காரியம் போல் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பிணத்திற்கு அலங்காரம் நன்றாய் அமைந்தது என்றும் சிலர் கூறி, பிணம் எரிந்ததும் நீரில் மூழ்கி, இருந்த ஆசையையும் பாசத்தையும் மறந்து செல்ல, விழுந்து பாழாகும் இந்த உடம்பைக் காரணமாக வைத்து மனம் கலங்கி எங்கு அலைந்து திரிந்த என்னை அஞ்சாதே என்று கூறி நீ வர வேண்டும்.
***
அருணகிரிநாதர்‘வேணும்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய அனைத்துத் திருப்புகழ் பாடல்களையும் பார்த்து விட்டோம்.
சில பாடல்களில் வேணும் என்ற சொல் அவர் வேண்டுனவற்றைக் குறிப்பிடாது பாடலில் உள்ள பொருளுக்குத் தக அமைந்ததையும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
இந்தத் தொடர் நிறைவடைந்தது!
புத்தக அறிமுகம் – 108
திறன் கூட்டும் தியானம்
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. விதியை வெல்லலாம்
2. கடவுளைக் காணலாம்
3. அறிவியல் வியக்கும் அதிர்ஷ்ட சக்கரம்!
4. ஏற்றம் தரும் எண்ண சக்தி
5. எண் 108க்கு முக்கியத்துவம் ஏன்?
6. திறன் கூட்டும் தியானம்
7. ஒரு கை ஓசை
8. ஜென் காட்டும் புது வாழ்வு
9. மந்திர மொழி தமிழ்!
10. நாம ஜபம் நல்கும் நன்மைகள்
11. ராம நாம மகிமை
12. சொல்லின் செல்வன் அனுமன்
13. மடிதடவாத சோறும், சுறு நாறாத பூவும்
14. முழுதும் அழகிய குமரன்!
15. தெய்வீகக் காதல்
16. நவரத்னங்கள் போக்கும் நவகிரக தீமைகள்
17. வேத கணிதம்
18. விஞ்ஞானிகள் வியக்கும் பண்டைய பாரத விமான இயல்!
19. உடலுடன் மறைந்த ஞானிகள்
20. விஞ்ஞானிகள் வியக்கும் அதீத புலனாற்றல்!
21. வித்தக சித்தர் கணம்!
22. சூரிய ஒளியில் உயிர் வாழும் யோகி!
23. உலகில் பெரும் ஆத்திகர் சந்தித்த நாத்திகர்
24. ரமண மகரிஷி வாழ்விலே…
25. கருவிலே உருவும், திருவும்!
26. ‘தர்ம’ சங்கடம்
27. கண்ணனை விஞ்சிய கதாபாத்திரங்கள்
*
நூலிற்கு கோகுலம் கதிர் ஆசிரியர் டாக்டர் கமலி ஶ்ரீபால் அவர்கள் வழங்கிய அணிந்துரை இது:
நல்ல கல்வி எது என்பதனை நம்முடைய முன்னோர்கள் விளக்கி இருக்கின்றனர். ஒரு பொருளின் தன்மையை அறிய அந்தப் பொருள் நம் மீது ஏற்படுத்தும் விளைவுகளை உணர்ந்து அனுபவித்துச் சொல்லி விடலாம். அது போல நல்ல கல்வி என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதைப் பார்த்தால் நமக்கு நல்ல கல்வி எது என்பது புலப்படும்.
நல்ல கல்வியின் விளைவுகள் யாவை?
1. உடல் வலிமை பெற்றுப் பொலிவாக விளங்க நல்ல கல்வி கற்றுத் தர வேண்டும்.
2. நல்ல கருத்துக்கள் என்ற வெள்ளத்தை நல்ல கல்வி நம் உள்ளத்தில் நிரப்ப வேண்டும்.
3. உணர்ச்சிகளால் உந்துபடாமல், அலைக்கழிக்கப்படாமல் அந்த உணர்ச்சிகளையே ஆன்ம தியானத்தால் செழுமைப்படுத்த நல்ல கல்வியை கற்றுத் தர வேண்டும்.
4. ஒவ்வொரு உயிரினுள்ளும் இறைவனுடைய ஒரு பொறி இருக்கிறது. இந்தப் பொறி பெரிதாக வியாபித்து மனிதனைச் சிறந்தவனாக்க நல்ல கல்வி வழி முறைகளைச் சொல்லித் தர வேண்டும்.
மேற்கூறிய கருத்துக்களில் இருந்து நமக்குத் தெளிவாக தெரிபவை இரண்டு நிலைகள் :
1. ஒரு மனிதனுக்குத் தன் முனைப்பு, தன்னுடைய உழைப்பு முக்கியம்.
2. தன் முனைப்பும், தன்னுடைய உழைப்பும் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்று சொல்லித் தர ஒரு நல்ல சற்குரு வேண்டும்.
இந்த இரண்டு நிலைகளையும் ‘திறன் கூட்டும் தியானம்’ என்று ஆசிரியர் ச.நாகராஜன் அவர்கள் எழுதியிருக்கும் நூல் உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்து விளக்குகிறது.
எப்படி விளக்க முடியும்?
இந்நாட்டில் தோன்றிய தொன்மையான நூல்கள், இந்த நாட்டில் தோன்றி வாழ்ந்த இதிகாச புருஷர்களின் வாழ்க்கைச் சரித்திரங்கள், முன்னோர்கள் நம்பிய நம்பிக்கைகள், பழங்காலத்தில் இருந்த பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், இந்தியாவிற்குத் தன்னிடம் இருக்கும் தங்கம் தெரியவில்லையே என்று இன்றைய மேல் நாட்டு விஞ்ஞானிகள் படும் வேதனை, மனமும், மனதில் தோன்றும் எண்ணங்களும் மகத்தான சக்தி படைத்தவை என்பதை விளக்கும் நிகழ்ச்சிகள், திறன் கூட்டும் தியானத்தால் ஆன்ம பலம் அதிகரிக்கும் போது சாதிக்க முடியாதது என்பது இல்லை என்பதைக் காட்டும் சம்பவங்கள் – என இவை அனைத்தையும் எளிய இனிய தமிழில் எழுதி இருக்கும் அன்பர் திரு ச.நாகராஜனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த நூலை அழகாக வெளியிட்டவர்களுக்குப் பாராட்டு. இந்த அரிய நூல் வெளிவர உழைத்த நல் உள்ளங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்தப் பிறப்பில் நாம் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த பிறப்பில் நாம் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். ஆரம்பப் பள்ளிக்குச் செல்வதைப் போல கீழே விழுந்து விடக் கூடாது. அப்படி விழாமல் இருக்க ஆன்மாவில் படிந்து இருக்கும் அழுக்குகள், பாவங்கள் நீக்கப்பட வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது 27 கட்டுரைகளில் இந்திய மெய்ஞ்ஞானப் பாரம்பரியம், இன்றைய மேலை நாட்டு விஞ்ஞான நியதிகள் இரண்டையும் இணைத்து ஆசிரியர் சுவையாக விளக்குகிறார். படிக்கத் தொடங்கினால் படித்து முடிக்க வேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டும் நூல். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நூல்.
இறைவன் அருளால் திரு ச. நாகராஜன் அவர்களின் இலக்கியப் பணி மேன்மேலும் வளர மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
கமலி ஶ்ரீபால்
*
நூலில் இடம் பெறும் முன்னுரை இது:
“தினமும் காலையில் அற்புதமான பிரபஞ்சமளாவிய தத்துவத்தைக் கொண்ட பகவத் கீதையில் என் அறிவைக் குளிப்பாட்டுகிறேன்” என்று ஹென்றி டேவிட் தோரோ குறிப்பிடுகிறார். காஞ்சி பரமாச்சார்யரை காளஹஸ்தியில் சந்தித்த கிரீஸ் தேசத்து ராணி ஃப்ரெடெரிகா இந்து தத்துவத்தில் அதிக ஈடுபாடு உடையவர். இயற்பியலில் தான் செய்த மிகவும் முன்னேறிய ஆராய்ச்சிகள் தன்னை ஆன்மீகத் தேடுதலில் ஈடுபடுத்தியதாகவும் அது தன்னை முடிவில் ஆதி சங்கரரின் அத்வைதக் கொள்கையை ஏற்க வைத்ததாகவும் தான் எழுதிய நூலில் குறிப்பிடுகிறார்.
ரஷிய விஞ்ஞானிகள் ஶ்ரீ சக்கர மகிமையை உணர்ந்து வியக்கின்றனர்! அமெரிக்க விஞ்ஞானிகள் தியானத்தின் ஆற்றலை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதிசயிக்கின்றனர்.
உலகப் பேரறிஞர் ஆர்னால்ட் டாய்ன்பி சகிப்புத் தன்மையுள்ள ஹிந்து மதத்தை வாயாரப் புகழ்ந்து அனைவரும் திரும்ப வேண்டிய ஒரே தத்துவம் இதுவே என்று குறிப்பிடுகிறார்.
மாக்ஸ்முல்லர் சிறப்பான எதைப் பற்றிக் கேட்டாலும் தன் விரல்கள் இந்தியாவையே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது என்கிறார்! பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் ஒரு வேளை அழிந்தாலும் பகவத் கீதை அழியாது என்று வியந்து கூவுகிறார் வாரன் ஹேஸ்டிங்க்ஸ்.
இப்படி நூற்றுக் கணக்கான வெளிநாட்டுச் சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் போற்றிப் புகழும் தத்துவங்கள், கொள்கைகள், நூல்கள், இதிஹாஸங்கள் பாரதத்தில் பொக்கிஷம் போல நிறைந்துள்ளன.
அறிவியல் பூர்வமாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்த தத்துவங்களின் ரகசியங்களை எடுத்துரைக்கின்றனர். அதன் சொந்தக்காரக் குழந்தைகளான நாம் பிரமிக்கிறோம்!
நம் தத்துவங்களை நாம் போற்றி ஆராதித்து அறிவியல் வழியிலும் ஆன்மீக ரீதியிலும் இந்த ரகசியங்களை ஆராய்ந்து உணர்ந்து நம் சந்ததியினருக்கு இவற்றை அப்படியே நாம் தர முனைய வேண்டும்; இது நம் கடமை! இந்த வகையில் ஒரு சிறிய முயற்சியே எனது கட்டுரைகள்.
அவ்வப்பொழுது இவற்றை வெளியிட்ட கோகுலம் கதிர், மஞ்சரி, கலைமகள், தின பூமி, ஞான ஆலயம், சினேகிதி, மங்கையர் மலர், இணைய தள இதழான நிலாச்சாரல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு என் மனமுவந்த நன்றி உரித்தாகுக.
இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரை நல்கிய டாக்டர் கமலி ஶ்ரீபால் அவர்களுக்கு என் மனமுவந்த நன்றி.
கட்டுரைகளை எழுத பல வகைகளிலும் உதவி செய்யும் என் மனைவி மற்றும் மகன்களுக்கு எனது நன்றி.
பாரதத்தின் ஞானிகள், யோகிகள், முனிவர்கள் அனைவருக்கும் இந்த நூலை அர்ப்பணிக்கிறேன். நன்றி.
ச.நாகராஜன்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Foreign thinkers, scholars, philosophers, scientists have always appreciated the philosophies, doctrines, books, and epics which are immortal treasures of ancient India.. The scientists have taken up the task of digging into the hidden secrets and succeeded in disclosing some of the astonishing facts. The book consist of 27 chapters wherein Dr KAMALI SRIPAL explores the realized souls from generations mingled with the modern day western doctrines in a blissfully interesting manner.
வெளிநாட்டுச் சிந்தனையாளர்களும், தத்துவ ஞானிகளும், விஞ்ஞானிகளும், அறிஞர்களும் போற்றும் தத்துவங்கள், நூல்கள், இதிஹாஸங்கள் பாரதத்தில் பொக்கிஷம் போல நிறைந்துள்ளன. விஞ்ஞானிகள் இவற்றை ஆராய்ந்து இவற்றிலுள்ள ரகசியங்களை அறிவியல்பூர்வமாக வெளிக்கொணரும்போது பிரமிப்பாக இருக்கிறது! அப்படி ஏராளமான ரகசியங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இதற்கு அணிந்துரை வழங்கியுள்ள டாக்டர்.கமலி ஸ்ரீபால் அவர்கள், “இந்திய மெய்ஞானப் பாரம்பரியம், இன்றைய மேலை நாட்டு நியதிகள் இரண்டையும் இணைத்து ஆசிரியர் சுவையாக விளக்குகிறார்” என்று பாராட்டுகிறார்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ திறன் கூட்டும் தியானம் ’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
நம்முடைய முன்னோர்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகளை பொன்மொழிகளாக , பாடல்களாக எழுதிவைத்துள்ளனர்.அவைகளைப் படிப்பதும், பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு அளிப்பதும் நம் கடமை. அதைவிடப் பெரியது , அவைகளைக் கூடிய மட்டிலும் பின்பற்றுவதாகும் ; நோய்கள் வந்தவுடன் வருந்துவதை விட வருமுன் காப்பது மேலன்றோ!
வெறும் வயிற்றில் நெல்லிக்காயும் , சாப்பாட்டிற்குப் பிறகு இலந்தைப் பழமும் , எப்பொழுதும் விளாம்பழமும் புசித்தால் உடலுக்கு ஆரோக்கியம் உண்டாகும். வாழைப்பழம் ஒருபோதும் பத்திய உணவு ஆகாது. நோய் நீங்கி உடல் தேற உதவாது
(என் கருத்து- பொதுவான விஷயங்களையே சுபாஷிதங்கள் சொல்லுகின்றன. ஆனால் உலகில் 2000 வகை அலர்ஜிக்கள் ( உணவு ஒவ்வாத தன்மை ) உள்ளன. யாருக்கு எது பொருந்தும் என்பதை அனுபவத்தாலோ, டாக்டர் மூலமோ அறிதல் நன்மை பயக்கும். இந்த குறிப்பிட்ட ஸ்லோகம் பத்யம் பற்றிப் பேசுகிறது ; நோயே இல்லாதவர்களுக்கு வாழைப்பழமும் நல்லதே )
XXX
தாயில்லாத குழந்தையின் வாழ்க்கையும், கணவன் இல்லாதவளின் யெளவனமும் (பருவச் செழிப்பு, இளமை அழகு), பொறுமை இல்லாத தவமும், புளியம் பழத்தின் புளிப்புச் சுவை இல்லாத உணவும் வீணானதாகும், பயனற்றதேயாகும் .
(எனது கருத்து – சிலருக்குப் புளிப்புச் சுவை தேவை; சிலருக்கு உவர்ப்புச் சுவை தேவை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது தமிழ்ப் பழமொழி.ஆனால் நாம் தினமும் சாப்பிடும் ரசம், மோர் அல்லது தயிரில் கூட அளவோடு புளிப்புச் சுவை தேவைப்படுகிறது. இந்த சுவையை புளி அல்லது எலுமிச்சம் பழம் மூலம் நாம் பெறலாம்.
எனக்கு லண்டனில் ஒரு இலங்கைத் தமிழர் மிகவும் நெருங்கிய நண்பர். ஒரு நாள் உணவு பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் இடைமறித்து ஒரு விஷயத்தைச் சொன்னார். சுவாமிநாதன் ஸார் , புளியே வாங்காதீர்கள்; எனக்கு ஆர்த்ரைடீஸ் Arthritis இருந்தது; புளியை நிறுத்தி, எலுமிச்சை சாறு பயன்படுத்தியதிலிருந்து அது அறவே குணமாகிவிட்டது என்றார் ; உடனே சம்பாஷணையில்/ கலந்துரையாடலில் கலந்து கொண்ட வேறு ஒரு நண்பர் இடை மறித்து , “நீங்கள் ஒன்று! போங்க ஸார் ; எங்க தாத்தா சாப்பிட உட்காரும் போது கைப்பிடி உப்பை இலையில் வைத்துக்கொண்டுதான் சாப்பிட்டார். அவர் கடைசிவரை நோய் எதுவும் இல்லாமல்தான் இறந்தார்” என்றார் . பின்னர் எங்கள் உரையாடல் வேறு விஷயங்களுக்குத் திரும்பியது. அப்படியானால் முடிவுதான் என்ன? ஒவ்வொருவரின் உடலும் சிறு வயதில் பின்பற்றிய பழக்க வழக்கங்களால் அதற்கு ஈடு கொடுக்கும்படி மாறிக்கொள்ளுகிறது ஆயினும் எதற்கும் ஒரு அளவு உண்டு. ஆகையால் எல்லாவற்றிலும் மிதமான அளவைப் பின்பற்றுவது நோயற்ற வாழ்வினை நல்கும் )
xxx
நோயாளிகளுக்கும் , சிறுவர்க்கும், கிழவர்க்கும் , எப்பொழுதும் நல்லொழுக்க ஆசாரத்தில் இருப்பவருக்கும் விரத நியமங்கள் வேண்டியதில்லை.இதுவே பழமையான சாஸ்திர அறநெறியாம்
ஆதுரே நியமோ நாஸ்தி பாலே வ்ருத்தே ததைவ ச
ஸதாசார ரதே சைவ ஹ்யேஷ தர்மஸ் ஸனாதநஹ
(எனது கருத்து – ஏகாதசி விரதம், ரம்ஜான் விரதம் போன்றன மேற் கூறிவர்களுக்குக் கிடையாது .நான் லண்டனில் நியூஹாம் யுனிவர்சிட்டி ஆஸ்பத்திரியில் 13 ஆண்டுகளுக்கு பகுதி நேர ஹெல்த் அட்வகேட்டாகப் (Health Advocate in Newham University Hospital in East London) பணியாற்றினேன் . நான் தமிழர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்வேன். என்னுடன்
வேலை பார்த்த உருது, வங்காளி மொழி ஊழியர்கள் முஸ்லீம்களுக்கு மொழிபெயர்ப்பு உதவி செய்தனர். ரம்ஜான் காலத்தில் சர்க்கரை நோயுள்ள – டயாபடீஸ் — ஆண்களும் பெண்களும் விரதம் இருக்கத் தேவை இல்லை என்று அவர்கள் சொல்லியும் பல முஸ்லீம்கள் தயங்கினர். பின்னர் ஆஸ்பத்திரி இமாமே (Imam) துண்டுப் பிரசுரங்களை அவரவர் மொழியில் வெளியிட்டும் தனி பயிற்சி வகுப்புகள் நடத்தியும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார் . சர்க்கரை நோயுள்ளவர்கள் மாத்திரை எடுப்பதோ இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளுவதோ சாப்பிடுவதோ எல்லாவற்றையும் உரிய நேரத்தில் செய்யவேண்டும். அப்படிச் செய்யாவிடில் வாழ்நாள் முழுதும் டயாலிசிஸ் எந்திரத்துடன் நம்மைக் கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள். பின்னர் என்ன? அந்த மிஷினுடன் கணவன் மனைவி போல வாழலாம். நோயாளிகளுக்கு சமயம் (Religion) தொடர்பான விதிகளில் தளர்வு உண்டு என்பதை எல்லா மதத்தினரும் ஏற்கின்றனர். இதையும் மீறி சிலர் செயல்பட்டால் அவர்களை இறைவனே காப்பாற்றவேண்டும்; டாக்டர்கள் அல்ல.)
Xxxx
மன நலம் காக்க ; கவலையைத் தவிர்க்க !
சிதையில் உள்ள பிணத்தைக் காட்டிலும் , சிந்தையானது / மனக் கவலையானது பெரியது /கொடியது எப்படியெனில் சிதைத் தீ பிராணன் போன பின்னர் வெறும் உடலையே எரிக்கிறது சிந்தையோ பிராணனுடன் கூடிய சரீரத்தையே தஹிக்கிறது / கொளுத்துகிறது இதனால் மனவருத்தம் (சிந்தை ) கூடாது என்பது அறியத்தக்கது
சிதா சிந்தா அநயோர் மத்யே சிந்தா நாம கரீயஸி
சிதா தஹதி நிர்ஜீவம் சிந்தா ப்ராணாயுதம் வபுஹு
(எனது கருத்து – இது முற்றிலும் உண்மை; மனக் கவலையால் நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். அதைத் தவிர்க்க, கோவில், குளங்களுக்குச் செல்லுவது மூலமோ கலைகளின் பக்கம் மனத்தைச் செலுத்துவதன் மூலமோ மாற்றலாம். மன நலம் குன்றிய பல இலங்கைத் தமிழருக்கு நான் மொழி பெயர்ப்பு உதவி செய்தேன் ; அதில் ஒருவருக்கு படம் வரைவதிலும் வண்ணம் தீட்டுவதிலும் அபார திறமை இருந்தது. அவரை ஆர்ட் தெரபி ART THERAPY பிரிவுக்கு அனுப்பினர் . அங்குள்ள மன நல மருத்துவர், வாரம் தோறும் அவருடன் ஒருமணி நேரம் செலவழித்தார்; நோயாளி வந்தவுடன் முதல் பதினைந்து நிமிடம் வழக்கமான கேள்விகள்; பின்னர் படம் வரைதல் ; அந்த 3 மணி நேரம் அவருடைய எண்ணம் கவலை இல்லாமல் இருக்கும்; (தெரபி வகுப்புக்குப் போக ஒரு மணி ; வீட்டிற்குப் போக ஒரு மணி; டாக்டருடன் ஒரு மணி) சில காலத்துக்குப் பின்னர் அவருக்கு பிரிட்டனில் தங்க விசா கிடைத்தது. உடனே அவர் மன நோயும் அகன்றது )
Xxx
போகாத இடந்தனிலே போக வேண்டாம் !
கிராமத்திற்காவது, வீட்டுக்காவது திரும்பிச் செல்லுகையில் தவறான பாதையில் செல்லக் கூடாது ; இரவு நேரத்தில் மரத்தின் கீழே செல்லக் கூடாது ; இவைகளைத் தொலைவிலேயே தவிர்க்க வேண்டும்
அத் வாரேண ச நாத்மீயம் கிராமம் வா வேச்சம வா விசேத்
ராத்ரெள ச விருக்ஷ மூலானி தூரதஹ பரிவர்ஜயேத்
(எனது கருத்து : இப்பொழுது பள்ளிக்கூட படிப்பிலேயே இதைச் சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள் . பகல் நேரத்தில் மரம் செடி கொடிகள் கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை(Carbon di Oxide) எடுத்துக்கொண்டு நல்ல ஆக்சிஜனை (Oxygen) நமக்கு அளிக்கிறது. இரவு நேரத்தில் இது நடைபெறாது. மேலும் பூச்சிகளும் மிருகங்களும் இரவு நேரத்தில் அதிகம் செயல்படும் போகாத இடந்தனிலே போக வேண்டாம்- என்று சிறுவயதிலேயே உலக நீதிப்பாடலில் கற்றுக்கொண்டுள்ளோம்; ஆகவே தெரிந்த பாதையில் செல்லுவது நலம் பயக்கும் ; அண்மையில் இந்தியாவுக்குச் சென்றபோது அபிராமி அன்னையை தரிச்சிக்கவும் உறவினரின் சஷ்டி அப்தப் பூர்த்தியில் கலந்து கொள்ளவும் திருக்கடையூர் சென்றிருந்தோம் ; மறு நாள் காலையில் வைதீஸ்வரன் கோவில் செல்ல திட்டம். இரவு நேரத்தில் எங்கள் டாக்சி ட்ரைவர் வேறு ஒரு டிரைவருடன் பேச்சு கொடுத்ததில் அவர் ஒரு சுருக்கு வழியைச் (Shorter Route) சொல்லிக்கொடுத்தார். அந்தச் சுருக்கப்பாதை , (under Road repair) சாலை செப்பனிடும் பெரும் பாதை. ஒவ்வொரு பர்லாங் சென்ற பின்னரும் கற்கள் நிறைந்த – தார் போடாத — அரைகுறை ரோடு . அதில் கார் செல்லும்போது பஞ்சர் (Puncture) ஆகாமல் இருக்க வேண்டும் என்று உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வேண்டிக்கொண்டோம். ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்றபோதும் இறைவன் தரிசனம் கிட்டியது; டிரைவரும் வழக்கமாகச் செல்லும் தெரிந்தவழியில் செல்லாதது தவறு என்று சொல்லி எங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் . தெரிந்த வழியே சிறந்தது!)
Xxxx
உடலூனம் உள்ளவரை இகழாதீர்
உடலுறுப்புக் குறை உள்ளவனையும் (அங்கஹீன), உடலுறுப்பை அதிகமாகக் கொண்டவனையும், அதிக குட்டை, அதிக உயர, நீள அவயமுள்ளவனையும் படிப்பில்லாதவனையும், வயதில் மூத்தோரையும் , அழகு, செல்வம், ஜாதி இவைகளால் குறைந்தவர்களையும் நிந்திக்கக்கூடாது
(எனது கருத்து – வீட்டிலுள்ள முதிய வயதுள்ளவர்களை கிழடு , கிழவி என்று திட்டுவதையும் உறுப்பு குறைந்தவர்களை குருடன், நொண்டி, முடவன் செவிடன் என்று திட்டுவதையும் காண்கிறோம். மேலை நாடுகளில் இப்போது புதிய அகராதியை உருவாக்கியுள்ளனர் பொது இடங்களிலும் பத்திரிக்கைகளிலும் புதிய சொற்களைத்தான் பயன்படுத்தலாம். கருப்பர்களை நீக்ரோ/ Negro என்றோ கருப்பன் (Black) என்றோ சொல்லக் கூடாது. இதை நம்மவர்கள் அந்தக் காலத்திலேயே எழுதியாவது வைத்தார்கள் !!!)
Black people are referred to as ‘Afro- Caribbean person ‘
xxx
பிரிட்டிஷ் அரசாங்க அறிவிப்பு:–
Words to use and avoid
Avoid passive, victim words. Use language that respects disabled people as active individuals with control over their own lives.
ஒரு கைகண்ட மருந்து பற்றி என் அனுபவத்தைச் சொல்லுகிறேன். 1962-ம் ஆண்டில் இந்தியா மீது சீனா படை எடுத்தது . 1965ம் ஆண்டில் பாகிஸ்தான் நம்மைத் தாக்கியது. 1971ம் ஆண்டில் பங்களாதேஷ் (வங்க தேச) யுத்தம் நடந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நான் மதுரைக் கல்லூரியில் பி.எஸ்ஸி (B.Sc. in Madura College, Madurai) படித்தேன். யுத்த கால சூழ்நிலை இருந்ததால் கல்லூரியில் என் சி சி (NCC= National Cadet Corps) பயிற்சி கட்டாயமாக்கப்பட்டது. அப்போது நமக்குத் தேவையான சீருடை, பூட்ஸ் , சாக்ஸ் (Socks) எல்லாம் கடனாகத் தருவார்கள். ஒவ்வொரு வாரமும் பயிற்சி முடிந்தவுடன் பூரி உருளைக்கிழங்கும் டீயும் இலவசமாகத் தருவார்கள். காலையில் அது முடிந்தவுடன் வீட்டிற்கு ஓடிப் போய் குளித்துவிட்டு முறையான வகுப்புகளுக்குத் திரும்பிவரவேண்டும். வேண்டா வெறுப்பாகச் செய்தோம் . அப்போது அவர்கள் கொடுத்த பழைய சாக்ஸ் அல்லது பூட்ஸ் மூலம் எனக்கு காலில் எக்சிமா Eczema (சொறி சிரங்கு) பரவியது. பல ஆண்டுகளுக்கு பெட்னோவேட் என் Betnovate N — என்ற மருந்தைப் பயன்படுத்திவந்தேன். அரிப்பு ஏற்படுவது (due to allergy) அலர்ஜியால்; ஆனால் நாம் சொறிந்து சொறிந்து ஏற்படும் புண்களில் பாக்டீரியா புகுந்து ரணத்தை அதிகரிக்கிறது.
ஒருநாள் இதுபற்றி எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி (தென்காசி) சுவாமிஜி கிருஷ்ணாவிடம் முறையிட்டேன் .
அவர், அவருக்கே உரித்தான ஸ்டைலில் தியானம் செய்துவிட்டு வாளாவி ருந்தார் ; சரி இது கருமவினை போலும் என்று அமைதி காத்தேன். இதெல்லாம் மதுரையில் நடந்தது
ஆனால் எங்கள் குடும்ப புரோகிதர் கோபால கிருஷ்ண சாஸ்திரிகளை அழைத்து இந்தப் பையனுக்கு வெற்றிலையில் அல்லது வாழை இலையில் பசு வெண்ணெயை வைத்து தன்வந்திரி மந்திரத்தை 11 முறை மந்திரித்துக் கொடு என்றார் .எத்தனை நாட்கள், வாரங்கள் என்பது எனக்கு இப்போது நினைவு இல்லை. அப்போது அவர் மந்திரம் சொல்லக் சொல்ல நான் முணங்குவேன் . அவ்வளவுதான். பசு மாட்டு வெண்ணெயை சுண்டைக்காயளவு சாப்பிடுவதில் என்ன கஷ்டம் ?
எக்சிமா(Eczema) நோய் அறவே போகவில்லை ஆனால் காலோடு நின்றது பரவவும் இல்லை. பிறகு தினமணி பத்திரிக்கையில் சீனியர் உதவி ஆசிரியராகப் பணியாற்றியபோது பிரிட்டனில் பிபிஸி தமிழோசையில் ப்ரொட்யூசராக (Producer in BBC World Service, London) பணியாற்ற அழைப்பு வந்தது . ஒரு பக்கம் சந்தோஷம் ; மற்றோர் பாக்கம் பயம். லண்டனுக்குப் போனால் குளிர் நாடாயிற்றே ; எப்போதும் சாக்ஸ் / காலுறை , பூட்ஸ் போடவேண்டுமே ; எக்சிமா பெரிதாக அல்லவா ஆகிவிடும் என்று கருதி ஆறு மாத காலத்துக்கு வேண்டிய களிம்பை (Betnovate Cream) வாங்கிவைத்துக்கொண்டு லண்டன் வந்தேன். என்ன அதிசயம் . இன்றுவரை அந்த நோய் என்னை எட்டிப்பார்க்கவில்லை. லண்டன் வந்தவுடன் அடியோடு ஒழிந்தது
கொஞ்சம் (மனது அளவில்) ஆராய்ச்சி செய்துபார்த்தேன். சிலவகை பாக்டீரியாக்கள் சில பருவ நிலையில்தான் வளரும்; அதிகரிக்கும். என்னுடைய எக்சிமா-வுக்கு குளிர் என்றால் பயம்போலும்!! (பாக்டீரியாக்கள் இந்தநோயை உருவாக்குவதில்லை அலர்ஜியினால் அரிப்பு ஏற்பட்டு சொரிந்து உண்டாகும் புண்களில் பாக்டீரியாக்கள் குடி புகும்)
xxx
(From Wikipedia நுண்ணுயிர் எதிர்ப்புப் பொருள்கள்]
சாதரணமான சருமப் பாதுகாப்பு தடையானது பாதிக்கப்படும் போது (வறண்டு போதல், வெடிப்பு விடுதல்), அதனால் பேக்டீரியா உள் நுழைவது எளிதாகிவிடுகிறது. நோயாளி சொறிவதன் காரணமாக நோய்த்தாக்கம் ஏற்படுவதோடல்லாமல் அது பல இடங்களுக்கும் பரவவும் செய்கிறது. இதற்கு மேலும் ஏற்படும் தோல் நோய்த்தாக்கத்தினால் தோலில் எரிச்சல் ஏற்பட்டு தோல் பலவீனமடையக்கூடும். இதற்கு சரியான நுண்ணுயிர் எதிர்ப்புப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
xxxx
யாராவது எனக்கு சாமி படங்கள் கொடுத்தால் தூக்கி எறிய மாட்டேன் . அவை சின்னதாக இருந்தால் புத்தகத்தில் டேக் (Tag) ஆகப் பயன்படுத்துவேன் (படித்த பக்கத்தை அறிய வைக்கும் காகிதம் அல்லது நூல் போன்றது) . அப்படி வைத்த ஒரு படத்தை அண்மையில் பார்த்தபோது தூக்கிவாறிப்போட்டது . எனக்கு கல்லூரி நாட்களில் கோபால கிருஷ்ண சாஸ்திரிகள் பசு மாட்டு வெண்ணையை மந்திரித்துக் கொடுத்த தன்வந்திரி மந்திரம் அது . இப்போது தினமும் படித்து வருகிறேன் . நீங்களும் படிக்கலாம்.
xxxx
ஐந்தே வரிகள்தான்
தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!
தன்வந்தரயே!அம்ருத கலச ஹஸ்தாய !
ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நமஹ
மிகவும் எளிதான மந்திரம் ; தன்வந்திரி என்பவர் மருத்துவ நூலின் தந்தை (Father of Medicine) ஆயுர்வேதத்தை உலகிற்கு நல்கியவர். மகா விஷ்ணுவின் ஒரு அவதாரம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தபொழு து கைகளில் அமிர்த கலசத்தோடு பாற்கடலில் இருந்து எழுந்து வந்தவர்.
ஆகையால் இந்த மந்திரம் அவரை வாசுதேவன் என்று அழைத்து மஹாவிஷ்ணு என்று முடிகிறது
ஹஸ்தம் என்றால் கை ; கையில் அமிர்த கலசத்தோடு இருப்பவர் என்று தியானிக்கிறோம். த்ரை லோக்ய நாதாய – மூன்று உலகங்களுக்கும் தலைவன்
முக்கியமான வரி ஸர்வ = எல்லா , ஆமய = நோய்களும் , விநாசாய = அழிப்பவனுக்கு
மஹா விஷ்ணவே நமஹ = மஹா விஷ்ணு ரூபத்தில் உள்ளவருக்கு நமஸ்காரம் !
அவரை எங்கே காணலாம் ?
எங்கள் குடும்பத்திற்கு அவர் மிகவும் நெருங்கியவர். மாயவரம் பக்கத்திலுள்ள வைத்தீஸ்வரன் எங்கள் குல தெய்வம். நாங்கள் எப்போது இந்தியாவுக்குப் போனாலும் அந்தக் கோவிலில் 5 அர்ச்சனைகள் செய்வோம். அவர்களில் ஒருவர் தன்வந்திரி. இந்த சந்நிதி , பிரகாரத்தில் உள்ளது . மீதி 4 அர்ச்சனைகள் – ஸ்ரீ வைத்யநாத சுவாமி, பாலாம்பிகா , அங்காரகன் (செவ்வாய் சந்நிதி); செல்வ முத்து குமார சுவாமி(முருகன்) .
நீங்களும் உங்கள் ஊர்க் கோவிலில் உள்ள தன்வந்திரியை பூஜித்து வழிபடுங்கள் ; எப்போதும் ஆரோக்கியம் நீடிக்கும் !
என்னுடைய எக்சிமா (ECZEMA )நோய் போனதற்கு அந்த தன்வந்திரி மந்திரமே காரணம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை!
Xxx subham xxxx
Additional Information
HOW BETNOVATE-N CREAM WORKS?
Betnovate-N Cream is a combination of two medicines: Betamethasone and Neomycin. Betamethasone is a steroid which blocks the production of certain chemical messengers (prostaglandins) that make the skin red, swollen and itchy. Neomycin is an antibiotic. It stops bacterial growth on the skin by preventing the synthesis of essential proteins required by bacteria to carry out vital functions (Always consult your family doctor before using any medicine.)