ஐந்திரம் உள்பட எட்டு இலக்கணங்கள் ! (Post No.11,113)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,113

Date uploaded in London – –    17 JULY 2022       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஐந்திரம் என்னும் இலக்கணம் பற்றி நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப்  படித்துவிட்டேன். அதைப்  பற்றிக்  கதைப்பவர்களுக்கு தமிழில் ஐந்திரம் என்னும் சொல் இருப்பதும், தொல்காப்பியர் அதில் பெரிய அறிஞர் என்பதும் தெரியவே இல்லை. தமிழ் பற்றியோ, தொல்காப்பியர் பற்றியோ  பேச்சு மூச்சு இல்லை !

தொல்காப்பியத்துக்குப்  பனம்பாரனார்  எழுதிய பாயிரம் இதோ:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

இதில் கூறப்படும் செய்தி : நிலம்தரு திருவில் பாண்டியன் அவையில் தொல்காப்பியம் அரங்கேறியது. நான்கு வேதங்களைக் கற்ற, சத்தியம் மட்டும் வாயில் தவழும் அதங்கோட்டு ஆசார்யார் , ஐந்திரம் அறிந்த தொல்காப்பியன் எழுதிய நூலுக்கு நற்சான்றிதழ் கொடுத்தார். அவர் குத்திய ‘அக்மார்க் முத்திரை’யால் திருப்பதிக்கும் கன்னியாகுமரிக்கும்  இடையேயுள்ள தமிழ் கூறு நல்லுலகம் அதை ஏற்றுக்கொண்டது.

இதில் ஐந்திரம் என்பதற்கு இரண்டு பொருள் உள்ளது. ஓவிய நூல், இலக்கண நூல் (காண்க 1935ம் ஆண்டு ஆனந்த விகடன் தமிழ் அகராதி மற்றும் சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதான சிந்தாமணி).

இந்திரன் எழுதியது என்பது வடமொழி இலக்கணப்படி ஐந்திரம் என்ற சொல்லாக உருப்பெறும்.

இந்த ஐந்திரம் பற்றி சம்ஸ்க்ருதத்தில் என்ன உள்ளது என்பதைக் காண்போம்.

உலகப் புகழ் பெற்ற பாரதியாரால் புகழப்பட்ட பாணினி, இதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பாணினி வேறு ஆறு இலக்கண கர்த்தாக்களினின் பெயர்களை மட்டும் சொல்கிறார். அவருக்கு முன்னர் 64 இலக்கண வித்தகர் இருந்தனர் என்று சொல்லி அவர்களின் பெயர்களையும் சொல்கிறது வடமொழி இலக்கிய வரலாறு  (அதில் இந்திரன் பெயர் இருக்கும் என்று நான் நம்புகிறேன்)

ஹர்ஷரின் நைஷத சரிதத்துக்கு வித்யாதரர் என்பவர் எழுதிய உரையில் , ஹர்ஷர் எல்லா துறைகளிலும் வல்லவர் என்று புகழ்கையில் அவர் எட்டு வகை இலக்கணங்களில் வல்லவர் என்பதையும் குறிப்பிடுகிறார்.

பாணினியின் இலக்கணத்துக்கு விரிவுரை கண்ட நூல்கள் குறைந்தது பத்து ஆகும். அவையாவன –

பாணினி எழுதிய வியாகரண நூல், அதாவது இலக்கண நூல், அஷ்டாத்யாயீ / எட்டு அத்தியாயங்கள் எனப்படும் . அதை நூல் எழுதிய ஆசிரியரின் பெயரில் பாணினீயம் என்றும் பகர்வர்

அதன் மீது எழுந்த உரை நூல்கள்

1.காத்யாயன வரருசியின் வார்த்திகம்

2.பதஞ்சலியின் மஹாபாஷ்யம்

3.பர்த்ருஹரியின் வாக்கபடீயம்

4.ஜயாதித்யர், வாமனர் ஆகிய இருவர் எழுதிய காசிகா வ்ருத்தி

5.ஜினேந்திர புத்தி எழுதிய ந்யாஸ

6.சரண தேவ எழுதிய துர்கத வ்ருத்தி

7.ராமசந்திர எழுதிய ப்ரக்ரிய கெளமுதி

8.பட்டோஜி தீக்ஷிதர் எழுதிய சித்தாந்த கெளமுதி

9.நாகேச எழுதிய பரி பாஷேந்து சேகர

10.நாகேச எழுதிய வல்யாகரான சித்தாந்த மஞ்சூஸா

இவைகளில் முதல் எட்டு நூல் களைத்தான்  வித்யாதரர்  ஹர்ஷர் படித்ததாகச் சொல்கிறாரோ என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில் வித்யாதரர் உரை 13ம் நூற்றா ண்டைச் சேர்ந்தது; ராமசந்திர உரை 14ம் நூற்றா ண்டைச் சேர்ந்தது. ஆக மேற்கூறிய பட்டியலில் ஆறு உரைகள்தான் தேறு கின்றன.

வித்யாதரர் பயன்படுத்திய சொல் அஷ்டெள  வியாகரணானி . ஆகையால் பாணிணிக்குப் பின்வந்த உரைகாரர் என்று பொருள்கொள்ளாமல் அக்காலத்தில் நிலவிய வெவ்வேறு எட்டு வகை வியாகரணம் என்று பொருள் கொண்டால் அவை என்ன என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்.

 வித்யாதரர் உரையில் அவரே பல இடங்களில் காதந்தர வியாகரணம் பற்றியும் குறிப்பிடுகிறார்.

வோபதேவ என்பவர் கவி கல்பத்ரும நூலில் ஒரு ஸ்லோகத்தில் எட்டு வகை இலக்கணம் கிடைக்கிறது . அவையாவன

இந்த்ரஸ் சந்த்ரஹ காஸக்ருத்ஸ்னாபிசாலி சாகடாய

பாணீனியமரஜைநேந்த்ரா ஜயந்த்யாதிஷ்ட திஸாப்திகஹ

முதலில் வருவது இந்திரன் பெயர். அவர்தான் நாம் இப்போது சொல்லும் ஐந்த்ர இலக்கணத்தின் கர்த்தா என்று ஊகிக்கலாம் . ஆனால் அப்படி ஒரு இலக்கண நூலும் கிடைக்கவில்லை. யஜுர் வேதத்தின் தைத்ரீய சம்ஹிதைதான், ‘இந்திரனை இலக்கணம் எழுதியவர்’ என்று குறிப்பிடும் பழைய நூல்’ ஆகும்.

காசிநாதர் எழுதிய ஸாரஸ்வத வ்யாகரண பாஷ்யமும் ‘இந்திரனை இலக்கணம் படைத்தவர் என்று சொல்லும்

மேற்கூறிய ஸ்லோகம் குறிப்பிடும் இரண்டாவது இலக்கண கர்த்தா  சந்திர என்பதாகும் .அவருடைய முழுப்பெயர் சந்திர கோஸ்வாமின். . அவர்படைத்த இலக்கணம் காஸ்மீர், திபெத், நேபாளம், இலங்கையில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிரதி ஒன்று திபெத்தில் கிடைத்தது. அதை 1902ல் ஜெர்மனி வெளியிட்டது .

மூன்றாவது பெயர் காச கிருத்ஸ்ணா ; அவர் பாணினிக்கும் முந்தியவர். காசிகா உரையில் அவர் குறிப்பிடப்படுகிறார்.; அவர் 3 அத்தியாயங்கள் கொண்ட நூலை எழுதினார்

நாலாவது பெயர் ஆபிஸாலி. அவருடைய இலக்கண விதிகளை பாணினியே குறிப்பிடுவதால், சம காலத்தவராகவோ முந்தியவராகவோ இருக்கலாம்.

அடுத்தவர் சாகடாயனர் . பாணினி, பதஞ்சலி , நிருக்தம் எழுதிய யாஸ்கர்

ஆகியோர் இவர் பெயரைக் குறிப்பிடுகின்றன.அவர் ஊனாதி சூத்திரங்களை எழுதி இருக்கலாம் .

(மற்றோர் சாகடாயனர் உண்டு 3200 சூத்திரங்கள் உடைய அந்த நூல் கி.பி.1025ல் எழுதப்பட்டது)

இவர்களுக்கு அடுத்தபடியாக பாணினியின் பெயர் வருகிறது ; உலகமே போற்றும் இலக்கண  கர்த்தாவுக்கு  அறிமுகம் தேவை இல்லை

அவருக்கு அடுத்தபடியாக வருவது அமர என்னும் பெயர் . அமரகோசம் என்னும் அகராதியை உலகம் அறியும். ஆனால் அது இலக்கண நூலன்று. அவரே ஒரு இலக்கண நூல் எழுதி அழிந்துபோனதா அல்லது வேறு ஒருவரா என்பது தெரியவில்லை  ஒருசாரார் , அமரகோஷம் என்னும் அகராதியை வேத பாடசாலைகளில் , வியாகரணம் என்ற வுகுப்பில் சொல்லித் தருவதால் அதுவும்  இலக்கண நூல் என்பர்.. அமரகோச நூலின் உண்மைப் பெயர் நாமலிங்கானுசாசனம் நாம NOUN , லிங்க GENDER ஆகிய இரண்டும் இலக்கணத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் ஆகும்.. பதஞ்சலி கூட சப்தானுசாசனம் பற்றிப் பேசுகிறார்.

கடைசி பெயர்  ஜைநேந்த்ர என்பதாகும் . ஒரு சமண முனிவர் இதை சமணர்களுக்காக எழுதி இருக்கலாம்; வோபதேவ என்பவர் ஜினேந்திர என்ற பெயரில் ஒரு இலக்கண கர்த்தா இருந்ததாகவே எண்ணுகிறார். திகம்பர வகுப்பு ஜைனர்கள் மஹாவீரர் இலக்கணம் எழுதி இந்திரனுக்கு சொல்லிக்கொடுத்ததாகவும் கதைப்பார்கள்.

பூஜ்யபாத தேவநந்தி என்பவர் எழுதிய ஒரு இலக்கண நூலை காசியிலுள்ள பாரதீய ஞான பீடம் 1956-ல் வெளியிட்டுள்ளது

xxx

பவிஷ்ய புராணத்திலும் எட்டு வகையான இலக்கணங்கள் பற்றிய ஸ்லோகங்கள் உள்ளன . ஆனால் அவர்கள் எல்லோரும் கடவுளர்கள் – பிரம்மா, இந்திரன், யமன், ருத்ரன், வாயு, வருணன், சவிதா, விஷ்ணு என்னும் எட்டுப் பேர் ஆவர் .

காதந்த்ர இலக்கணத்துக்கு கெளமார இலக்கணம், கலாப  இலக்கணம் என்ற பெயர் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

1568 வரை இலக்கண நூல்கள் எழுந்தன. ஸ்ரீ மல்லதேவ என்ற அஸ்ஸாம்/ காமரூப மன்னரின் ஆதரவில் புருஷோத்தம பட்டாச்சார்ய வித்யா வாகீச எழுதிய ‘பிரயோக ரத்னமாலா வியாகரண’ நூல் குறிப்பிடத்தக்கது .

நூற்றுக் கணக்கான இலக்கண நூல்கள்  தோன்றியமையும், 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாணினிக்கு முன்னர் 64 பேர் இருந்ததும், பாணினியே ஆறு பேரைக் குறிப்பிடுவதாலும், சம்ஸ்க்ருத மொழி பல்லாயிரம் ஆண்டு பழமையுடையதென்பதும் சொல்லாமேயே விளங்கும். உலகில் சீன, தமிழ், கிரேக்க, பாரசீக , அவஸ்தன், எபிரேய/ஹீப்ரு , லத்தீன் மொழிகளுக்கு இப்படிப்பட்ட இலக்கண வரலாறு இல்லை என்பதும் குறிப்பிட்டது தக்கது.

–சுபம் —

tags-  ஐந்திரம் , எட்டு இலக்கணங்கள்

FUNNY LEAVE APPLICATIONS (Post No.11,112)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,112

Date uploaded in London – 17 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

“War is a place where young people who don’t know each other, and don’t hate each other, kill each other, by the decision of old people who know each other, and hate each other, but don’t kill each other”*

– Erich Hartmann

Xxxxxx

Leave applications.

(murdering English language)

Infosys, Bangalore:

“Since I have to go to my village to sell my land along with my wife ,

please sanction me one-week leave.”

________________________________

Oracle, Bangalore:

From an employee who was performing the “mundan” ceremony of his 10 year old son:

“As I want to shave my son’s head , please leave me for two days..”

________________________________

Leave-letter from a CDAC employee who was

performing his daughter’s wedding:

“As I am marrying my daughter, please grant a week’s leave..”

________________________________

From H.A.L. Administration Dept:

“As my mother-in-law has expired and I am only one responsible for it please grant me 10 days leave.”

________________________________

Another employee applied for half-day leave as follows:

“Since I’ve to go to the cremation ground at 10 o’clock and I may not return, please grant me half day casual leave”

________________________________

A leave letter:

“I am suffering from fever, please declare one-day holiday.”

________________________________

A leave letter to a headmaster:

“As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today”

________________________________

Another letter written to a headmaster:

“As my headache is paining , please grant me leave for the day.”

________________________________

Covering note:

“I am enclosed herewith…”

________________________________

Another one:

“Dear Sir: with reference to the above , please refer to my bottom…”

________________________________

Actual application for leave:

“My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave”.

________________________________

Letter writing:

“I am well here and hope you are also in the same well.

xxxx

Laugh and pass…

Those who can’t understand, please forgive me. Sophie asks a taxi driver:

“How much does it cost to take me to the airport?”

– 250 bucks

“What if we take my husband too?”

– Same 250 bucks.

Sophie turns to John:

-Haven’t I told you, you are actually worthless.

Xxx

*India has 2 popular types of Agarbatti*🥢

1. For the Gods

2. For the mosquitoes

However, God doesn’t appear and mosquitoes don’t disappear !!

Xxx

tags- ஞானமொழிகள்- 96, funny, leave application,

—subham—

புத்த பூமி ஹாங்காங்! (Post No.11,111)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,111

Date uploaded in London – –    17 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

புத்த பூமி ஹாங்காங்!

ச.நாகராஜன்

12-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலகின் அழகிய நகரம்

தென் கிழக்கு ஆசியாவில் சீனாவின் விசேஷ நிர்வாகப் பகுதியாக இப்போது விளங்கும் நகரம் ஹாங்காங்.

1841 வாக்கில் பிரிட்டிஷார் வசமான ஹாங்காங் ஒருவழியாக அவர்கள் பிடியிலிருந்து 1997இல் மீண்டது. இடையில் 1941 முதல் 1945 வரை ஜப்பான் வசம் இருந்தது.

420 சதுரமைல் பரப்பளவைக் கொண்ட ஹாங்காங்கில் 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். சுமார் 200 தீவுகளைக் கொண்டுள்ளது இது.

இங்கு வாழும் பண்பாடுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயரியது; சராசரி ஆயுள் 81 வயது. வெப்ப நிலை குறைந்த பட்சம் 14 டிகிரி செல்ஸியஸ். அதிக பட்சம் 31 டிகிரி செல்ஸியஸ்.

ஸ்கைஸ்க்ரேபர்ஸ் எனப்படும் வானளாவிய  கட்டிடங்கள் உலகிலேயே அதிகமாக உள்ள இடம் ஹாங்காங் தான்!  7687 அடுக்கு மாடி கட்டிடங்களும் 303 ஸ்கைஸ்க்ரேபர்களும் இங்கு உள்ளன. இவற்றின் உச்சியிலிருந்து ஹாங்காங்கை எந்தப் பக்கம் பார்த்தாலும் அழகு தான்! பன்னாட்டு வணிக வளாகம் 1607 அடி உயரம் உள்ளது. இது தான் இங்கு உயரமான கட்டிடம்.

பொதுவாகவே உலகின் அழகிய நகரங்களுள் சிறந்தது ஹாங்காங் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு உண்மை. ஒரு புறம் காடுகள் அடர்ந்த மலை, இன்னொரு பக்கம் வானளாவிய கட்டிடங்கள், இன்னொரு புறம் நீலத் திரைகடல் ஓரம் அமைந்துள்ள விக்டோரியா துறைமுகம் என இப்படி பல்முக பரிமாண அழகு கொண்டது இந்த நகரம்.  

ஃப்ராக்ரண்ட் ஹார்பர்

ஹாங்காங் துறைமுகத்தை மணம் வீசும் துறைமுகம் (Fragrant Harbour) என்ற செல்லப் பெயரால் உலக மக்கள் அழைக்கின்றனர்.

ஏனெனில் சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு ஹாங்காங் நகரின் சுற்றுப்புறம் எங்கும் மணம் வீசும் ஈகிள்வுட் அல்லது அகர்வுட் எனப்படும் அகுயிலரியா வகை மரங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தன. இவற்றின் பிசினால் மணம் வீசும் பத்திகள் தயாரிக்கப்பட்டன. ஒரு கிலோ பிசின் சுமார் ஆறு லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பித்து அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது. சீன காண்டோனீஸ் மொழியில் ஹாங் மற்றும் காங் என்பது மணம் வீசும் வாசனை ஹார்பர் என்பதற்கான சொற்கள். இதுவே ஹாங்காங் என்ற பெயர் வரக் காரணம் ஆனது.

இப்போது இந்த வகை மரங்களை வெட்டக்  கூடாது என்று அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் இப்போது ஹாங்காங்கில் சுமார் 300 மரங்களே எஞ்சி உள்ளன!

ஹாங்காங்கைப் பார்ப்பதற்கு பல்வேறு பயணத் திட்டங்கள் உள்ளன.

ஓரியண்டேஷன் டூர் என்று போனால் நகரை ஒரு நாளிலோ இரு நாளிலோ சுற்றிப் பார்த்து விடலாம். குங் பூ ரசிகர் என்றால் குங் பூ டூரை மேற்கொள்ளலாம். புத்தரின் எல்லையற்ற கருணையைப் பெற வேண்டுமெனில் புத்தா டூரை மேற்கொள்ளலாம்.

புதன்கிழமை மியூஸியங்கள்

முதலில் இங்குள்ள பல மியூஸியங்களைப் பார்த்து விட வேண்டும். புதன்கிழமையன்று மட்டும் அனுமதி இலவசம். ஆகவே கூட்டமும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் அனுமதிக் கட்டணமும் குறைவு தான். 10 ஹாங்காங் டாலர் தான்! (ஒரு ஹாங்காங் டாலரின் இந்திய மதிப்பு பத்து ரூபாய் எட்டு பைசா!) ஹாங்காங் ஹெரிடேஜ் அருங்காட்சியகம், கலைக் காட்சியகம், டாக்டர் சன் யாட் சென் அருங்காட்சியகம், கடற்கரை பாதுகாப்பு அருங்காட்சியகம், வரலாற்று அருங்காட்சியகம், அறிவியல் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம் என ஏராளமானவை பார்க்க உள்ளன.

க்ரூஸ் சொகுசு கப்பல் பயணம்

இங்கு ‘ஏழு நாட்கள் சொகுசுக் கப்பல் பயணம் என்ற திட்டத்தில் அழகிய கப்பல் பயணத்தை மேற்கொண்டு இயற்கையை ரசிக்கலாம். கட்டணம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு சுமார் நூறு ஹாங்காங் டாலர் ஆகும்.

புத்தா டூர்

ஹாங்காங் புத்த பூமி என்றே சொல்லலாம். பிரம்மாண்டமான எட்டு புத்த ஆலயங்கள் இங்கு உள்ளன.

மான் மோ ஆலயம் இங்குள்ள மிகப் பழம் பெரும் ஆலயம்.

வாங் தாய் சின் ஆலயம் பிரமிக்க வைக்கும் வரலாற்றைக் கொண்டது. வாங் தாய் சின் என்பவர் அபூர்வ தெய்வீக சக்தி கொண்ட புத்த துறவி.  அவர் பெயரால் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் யார் என்ன வேண்டிக் கொண்டாலும் அது நடக்கும் என்பது வழி வழியாகச் சொல்லப்பட்டு வரும் மரபு வாக்கியமாகும்.

சீ குங் ஆலயம் என்பது சாங் வமிசத்தில் ராணுவ தளகர்த்தராக இருந்த சீ குங் என்பவரின் பெயரை கௌரவப்படுத்தும் ஒரு ஆலயம். அவர் காலரா உள்ளிட்ட வித விதமான வியாதிகளை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தினார் என்பது வரலாறு, பல போர்களில் வென்றவர் அவர். அவர் மறைந்த போது அவரை கௌரவிக்கும் வண்ணம் இந்த ஆலயம் நிறுவப்பட்டது.

அருகில் உள்ள லண்டாவ் தீவில் டியான் டான் ஆலயம் உள்ளது. இங்கு அமர்ந்த நிலையில் புத்தர் காட்சி தருகிறார். துன்பத்தைப் போக்கும் வண்ணம் அவரது வலது கை இருக்க சந்தோஷத்தைக் குறிக்கும் வண்ணம் அவரது இடது கை உள்ளது. 34 மீட்டர் உயரத்தில் உள்ள  250 டன் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட  இந்த சிலை அமைக்க

பத்து ஆண்டுகள் ஆனது; 1993ஆம் ஆண்டு இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டது.

லண்டாவ் தீவிற்கு கேபிள் கார் சவாரி மூலமாகவோ அல்லது கார், பஸ் மூலமாகவோ போகலாம். ஹாங்காங்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இதை அரை மணி நேரத்தில் சென்று அடைய முடியும்.

பத்தாயிரம் புத்தர் ஆலயம்

அடுத்து வியக்க வைக்கும் பத்தாயிரம் புத்தர் ஆலயம் நம்மை பிரமிக்க வைக்கும். ஆம், பத்தாயிரம் புத்தர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ள ஆலயம் இது. ஹாங்காங் நகரிலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் பாய் தா கிராமத்தில் ஷா டின் என்ற இடத்தில் உள்ளது இது. மடாலயம் என்று இது அழைக்கப்பட்டாலும் கூட, இங்கு துறவிகள் யாரும் வசிப்பதில்லை. சுமார் 430 படிகள் வழியே உச்சியை அடையும் போது ஆங்காங்கே மலை மற்றும் மலை சார்ந்த இயற்கைக் காட்சிகளைப் பார்த்து மகிழ்வதோடு போட்டோவும் எடுத்துக் கொள்ளலாம். பத்தாயிரம் புத்தர்கள் நிஜமாக இருக்கிறார்களா என்று எண்ணிப் பார்க்கத் தேவையில்லை. ஏனெனில் எண்ணிப் பார்த்தவர்கள் பதிமூன்றாயிரத்திற்கும் அதிகமான புத்தர் சிலைகள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வெவ்வேறு வடிவங்களில் இருப்பதை உறுதிப் படுத்தி இருக்கின்றனர். 1951இல் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டு ஆறு வருடங்களில் முடிக்கப்பட்டது. தங்கத்தினால் ஆன புத்தர் சிலைகளும் இங்கு உண்டு.

இந்த புத்த மடாலயம் ஹாங்காங் நூறு டாலர் நோட்டின் பின்புறம் இருப்பதால் உலகின் எந்த இடத்தில் நீங்கள் இருந்தாலும் உங்கள் கையில் அந்த பழைய நோட்டு (1985-2002 காலத்தியது) இருந்தால் பார்க்க முடியும்.

குங் பூ டூர்

ஹாங்காங் என்றவுடனேயே அனைவரின் நினைவுக்கும் வருவது ப்ருஸ் லீயின் பெயரும் எண்டர் தி ட்ராகன் திரைப்படமும் தான்.

குட்டி டிராகன் என்று அழைக்கப்பட்ட ப்ரூஸ் லீ மின்னல் வேக அதிரடி மன்னன். சீன ஜோதிடத்தின் படி ட்ராகன் ஆண்டில் ட்ராகனைக் குறிக்கும் மணி நேரத்தில் பிறந்தவர்.

அவரது சிலை ஹாங்காங்கில் நிறுவப்பட்டிருக்கிறது. அவர் எண்டர் தி ட்ராகனை எடுத்த விக்டோரியா ஹார்பர் உள்ளிட்ட பல இடங்களும் இந்த குங் பூ டூரில் இடம் பெறும்.

உலகின் அதிவேக மின்னல்தாக்கு வீரனான ப்ரூஸ் லீ (பிறப்பு 27-11-1940 மறைவு 20-7-1973) பற்றிய ஏராளமான அறிவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு விட்டன. அனைத்து ஆய்வுகளும் வியப்பது அவரது ஒன் இன்ச் பஞ்ச் என்பது பற்றித் தான். ஒரு அங்குல தூரத்தில் இருந்து அவர் எதிராளியின் மீது விடும் ஒரு குத்து இடியெனப் பாய்ந்து அவரை வீழ்த்தும். இந்த ஒரு அங்குல இடைவெளியிலிருந்து பாயும் மின்னல் குத்துக்கு காரணம் அவரது மூளையில் விசேஷமான அமைந்திருந்த வெண் பொருள் (White matter) என்ற முடிவிற்கு மூளை இயல் நிபுணர்கள் இப்போது வந்திருக்கின்றனர்.

தன் வாழ்நாளில் ப்ரூஸ் லீ யாரிடமும் தோற்றதில்லை. தனக்கென சில விசேஷமான கொள்கைகளை அவர் வகுத்திருந்தார்; அதைக் கடைசி வரைக் கடைப்பிடித்தார். அதைக் கடைப்பிடிப்போருக்கு வெற்றி என்பதையும் உறுதிப் படுத்திச் சொல்லி வந்தார்.

வாழ்க்கையில் வெற்றி பெற அந்த மின்னல் மன்னன் தந்த கொள்கைகளின் சுருக்கம் இதோ:

 “பத்தாயிரம் முறை உதையைப் பயிற்சி செய்த ஒருவரைக் கண்டு ஒருபொதும் நான் பயந்ததில்லை; ஆனால் ஒரே உதையை பத்தாயிரம் முறை பயிற்சி செய்பவரைப் பார்த்துத் தான் நான் பயப்படுகிறேன்” என்றார் அவர்.

ஒரு குத்து அல்லது ஒரு உதை, அதை எடுத்துக் கொள்; அதைப் பயிற்சி செய்; அதில் கவனம் செலுத்து; அது உன் திறமையை அதிகரிக்கும். உனது திறனைக் கூட்டுவிக்கும் என்றார் அவர்.

தற்காப்புக் கலைக்கு மட்டுமல்ல; வாழ்க்கையில் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உதவும் அறிவுரை இது.

“ஒரே வடிவில் இருக்க வேண்டாம்; அதை ஆரம்பமாகக் கொண்டு முன்னேறுங்கள். உங்களுக்கு உரியதைக் கட்டமையுங்கள். அது வளரட்டும்; தண்ணீர் போல  இருங்கள்” என்று வெற்றிக்கான வழியைக் கூறிய அவர், ‘சூழ்நிலைகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும்; நான் வாய்ப்புகளை உருவாக்குவேன்’ என்றார்.

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிரடி படங்களைத் தயாரித்தவர் சர் ரன் ரன் ஷா. 107 வயது வாழ்ந்து 2014இல் மறைந்த இவரது தயாரிப்பில் உருவான படங்கள் அனைவராலும் பேசப்படும் படங்கள்! அவரால் ஆதரிக்கப்பட்ட அதிரடி மன்னன் ஜாக்கிசானின் ஊரும் ஹாங்காங் தான்!

ப்ரூஸ் லீ மற்றும் குங் பூ படங்கள், பயிற்சி மையங்கள் பற்றிய அனைத்தையும் குங் பூ டூரில் அறியலாம்.

கடை வீதிகள்

ஹாங்காங்கில் ஏராளமான கடைவீதிகள் உண்டு. பிரசித்தி பெற்ற இரவு நேரக் கடை வீதியில் இரவில்  சென்று வாங்க முடியும். அங்கு அவர்கள் கேட்ட விலையையும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. நன்கு பேரம் செய்து வாங்கலாம்.

ஹாங்காங் சென்றவர்கள் பல்வேறு உணவு வகைகளை ருசித்துப் பார்க்கலாம். உலகில் உணவு விடுதிகளுக்குப் பெயர் பெற்ற இடம் ஹாங்காங் தான்! விதவிதமான தயாரிப்புகள், சுவையோ சுவை!

பன்னாட்டு விமான நிலையம்

ஹாங்காங் விமான நிலையத்தைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நினைக்க வேண்டாம். 24 மணி நேரமும் இயங்கும் உலகின் மிக சுறுசுறுப்பான இந்த நிலையத்தைப் பற்றி வர்ணிக்கப் போதுமான வார்த்தைகளே கிடைக்காது. 180 நகரங்களை 100 ஏர்லைன்ஸ் கம்பெனிகளின் மூலம் இணைக்கும் இந்த விமான நிலையத்திற்கு வருடத்திற்கு சுமார் 7 கோடி பயணிகள் வருகின்றனர்.

இங்கு நான் காலடி வைத்த ஐந்து நிமிடங்களுக்குள் எனக்கு விமான நிலையத்திலிருந்து இணையதள இணைப்பு சேவை (இலவசம் தான்) கிடைத்தது. அனைவருடனும் தொடர்பு கொள்ள முடிந்தது. சுமார் நான்கு மணி நேரம் சுற்றிப் பார்த்தேன். அவ்வளவு பிரம்மாண்டமான அழகான நிலையம். தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஒரு வரியில் ஹாங்காங்

ஹாங்காங் பற்றி ஒரு வரி சொல்லுங்களேன் என்றால் புகழ் பெற்ற ஒரு வாக்கியத்தைத் தான் அனைவரும் சொல்வர்- அது இது தான் ;

ஹாங்காங்கை விட்டு நீங்கள் பிரிந்தாலும் அது உங்கள் நினைவை விட்டு ஒருபோதும் பிரியாது!

***

tags- ஹாங்காங்

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-66 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,110)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,110

Date uploaded in London – –    16 JULY 2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-66 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

சுபான் 18-71 புண்ணிய , சுப

சுபாசுப பரித்யாகி  12-17 சுபம், அசுபம் ஆகிய இரண்டையும் துறந்த

சுபாசுப பலைஹி  9-28 சுபம், அசுபம் ஆகிய பலன்களைத் தரும்

சுபாசுபம் – 2-57 நல்லது, கெட்டது , சுபம், அசுபம்

சூத்ரஸ்ய  18-44 சூத்திரனுடைய

சூத்ராணாம்  18-41 சூத்திரருக்கு

சூத்ராஹா  9-32 சூத்திரர்களும்

சூராஹா  1-4 வீரர்கள்

ச்ருணு  2-39 கேள் , கவனி

ச்ருணுயாத்  18-71 கேட்டல், கேட்கிறானோ

ச்ருணோதி  2-29 கேட்கிறான்

ச்ருண்வதஹ  10-18 செவியாற் பருகும் , கேட்கும்

ச்ருண்வன் 5-8 கேட்டு

சைப்யஹ 1-5  சிபி வம்சத்து அரசன்

சோக சம்விக்ன மானஸஹ  1-47 துக்கம்/ வருத்தம்  நிரம்பிய மனத்துடன்

சோகம் 2-88  துக்கம், வருத்தம்

சோசதி  12-17 வருந்துகிறான்

சோசிதும்  2-26 தூக்கிப்பதற்கு, வருந்துவதற்கு

சோசயதி  2-23 உலர்ந்துபோகிறது, வறண்டு

செள சம்  13-7 சுத்தம், தூய்மை

செளர்யம்  18-43  வீரம், சூரத்தனம்

ச்யாலாஹா  1-34 மைத்துனர்கள் , சகலை

ஸ்ரத்த தானாஹா  ? நம்பிக்கையுடன், சிரத்தையுடன்

ச்ரத்தயா  6-37  நம்பிக்கையுடன், ஈடுபாட்டுடன்

ச்ரத்தா 17-2  சிரத்தை

ச்ரத்தா மயஹ 17-3  சிரத்தையே வடிவாய் உடையவன்

ச்ரத்தா வந்தஹ 3-31 சிரத்தையுள்ள , சிரத்தையுடன்

ச்ரத்தா வான் 4-39 நம்பிக்கையும் அதில் ஈடுபாடும் உடையவன்

ச்ரத்தா விரஹிதம்  17-13 சிரத்தையற்ற ,நம்பிக்கையற்ற

ச்ரத்தா ம்  7-21 நம்பிக்கையுடன் கூடிய ஈடுபாடு

ச் ரிதா ஹா 9-12 அனுசரிப்பார்கள்

ச்ரீமதாம்  6-41 செல்வந்தர்கள்

ஸ்ரீ மத்  10-41 லெட்சுமி கடாக்ஷம் பொருந்திய

ச்ரீ / ஸ்ரீஹி  10-34   லெட்சுமி

ச்ரு தவான்  18-75 கேட்கப்பெற்றவன்

ச்ரு தஸ்ய 2-52  கேட்டதிலும்

ச்ருதம் 18-72 கேட்கப்பட்டது

ச்ருதி பராயணாஹா  13-25  உபதேசத்தையே உயர்கதியாய் கொண்டவர்

ச்ருதி விப்ரதிபன்னா  2-53 பல பொருளுங்கேட்டு  பலவாகக் கலங்கும்

ச்ருதெள  11-2  கேட்கப்பட்டது

ச்ருத்வா  2-29 கேட்டு

ச்ரேயஹ  1-31 நன்மை ,சிறந்தது

ச்ரேயான்  3-35 சிறந்ததாம்

ச்ரேஷ்டஹ  3-21 பெரியோன் ,சிறந்தவன்

ச்ரோதவ்யஸ்ய   2-52 கேட்கப்பட்ட வேண்டியது

ச்ரோத்ரம் – 15-9 காது

ச்ரோத்ராதீனி  4-26 காது முதலிய

ச்ரோஷ்யஸி  18-58 கேட்பாய்

ஸ்வபாக  5-18 புலையன்

ஸ்வசுரா ன் 1-26 மாமனார்கள்

ஸ்வசுரான் 1-34 மாமனார்கள்

ச்வஸன்  5-8  மூச்சு விடும் , சுவாசிக்கிற

ச்வேதை ஹி  1-14 வெள்ளை

ஷண் மாஸாஹா  8-24  ஆறு மாதங்கள்

53  WORDS ARE ADDED FROM PART 66 OF GITA WORD INDEX

TAGS- GITA, WORD INDEX 66, TAMIL WORDS,

Theory of Relatives-ity (Post No.11,109)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

 Post No. 11,109

Date uploaded in London – 16 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 ஞான (ஜோக்ஸ்) மொழிகள்-95

 *Have a Nice Laugh*

1. Advertisement In A Long Island Shop:

Guitar, for sale …….. Cheap ……. . ……. no strings attached.

2. Ad In Hospital Waiting Room:

Smoking Helps You Lose Weight … One Lung at A Time!

3. On a bulletin board:

Success Is Relative. The more The Success, The more The Relatives

4. When I Read About The Evils Of Drinking …

I Gave Up Reading

5. My Grandfather Is Eighty And Still Doesn’t Need Glasses ….

He Drinks Straight Out Of The Bottle.

6. You Know Your kids Have Grown Up When:

Your Daughter Begins to Put On Lipstick …

Or when your Son starts to wipe It Off ந்ந ந்

7. Sign In A Bar:

‘Those Of You Who Are Drinking To Forget, Please do Pay In Advance.’

8. Sign In Driving School:

If Your Wife Wants To Learn To Drive, Don’t Stand In Her Way ….

9. Behind Every Great Man,

There Is A Surprised Woman.

10. The Reason Men Lie Is Because

Women Ask too Many Questions …

11. Laugh And The World Laughs With You,

Snore And You sleep Alone

12. The Surest Sign That Intelligent Life Exists Elsewhere In The Universe is

The Fact That It Has Never Tried To Contact Us.

13. Sign At A Barber’s Saloon :

We Need Your Heads To Run Our Business …

14. Sign In A Restaurant:

All Drinking Water In This Establishment Has Been Personally Passed By The Manager.

Laughter makes you happy, it works faster than alcohol.

It’s nice to know Maths…

. . .

An IT guy from Hyderabad went to the US, and like most of his friends, he wanted to enjoy *Pizza* at a nice restaurant . . .

He ordered a *9-inch Pizza* 🍕.

After a while, the Waiter brought *two 5-inch pizzas*

And said the 9-inch pizza was *_not_* available and He was giving him *two 5-inches Pizzas* instead,

and that he was getting 1 inch more for free . . .

The Hyderabadi, politely requested the Waiter to speak to the Restaurant Owner.

The Hyderabadi gave him the mathematical formula to calculate the area of a circle –

Circle Area = *π r²*

where *π = 3.1415926*,

*r* is the *radius* of the circle . . .

So, a *9-inch circle area* = *63.62 square inches*,

while

a *5-inch circle area* is *19.63 square inches*

The *two 5-inch circle areas* add up to *39.26 square inches*.

The Hyderabadi said that even if he gave me three pizzas and he’d still lose-out.

“How can you say you are giving me an extra inch for free . . .?”

The Restaurant Owner was speechless. . .

He finally gave the Hyderabadi *4 pizzas*👌🏾

This is the most literate Joke I have seen on WhatsApp.

Pl advise your children / grandchildren to take their Maths seriously 😀

[ In memory of INTERNATIONAL DAY OF MATHEMATICS (14 March ’22) ]

***************

ஞான (ஜோக்ஸ்) மொழிகள்-95

மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு (Post No.11,108)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,108

Date uploaded in London – –    16 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

5-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு!

ச.நாகராஜன்

எனக்கு பிரான்ஸ் தேவையாய் இருப்பதை விட பிரான்ஸுக்கு நான் அதிக தேவையாக இருக்கிறேன் – நெப்போலியன்

உனது எதிரி தவறுகளைச் செய்யும் போது குறுக்கிடாதே,

முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் மட்டுமே உள்ளது – இப்படி ஏராளமான முத்துப் போன்ற பொன்மொழிகளை உதிர்த்த மாவீரன் நெப்போலியன் நேசித்த பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைவோம்!

பிரான்ஸ்

ஆறு கோடியே ஐம்பத்தைந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள பிரான்ஸ் நாட்டின் பரப்பளவு 211413 சதுர மைல்களாகும்.

பிரான்ஸ் என்ற வார்த்தை ஜெர்மானிய பழங்குடி மக்கள் கூறிய ப்ராங்க் (frank) என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கு அவர்கள் மொழியில் பொருள் சுதந்திரம் (free) என்பதாகும்.

மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடகிழக்கில் பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க், கிழக்கில் ஜெர்மனி ஸ்விஸ் மற்றும் இத்தாலி, தெற்கில் மத்தியதரைக் கடல், ஸ்பெயின் மற்றும் அண்டோரா, மேற்கில் பிஸ்கே வளைகுடா வடமேற்கே இங்லீஷ் சானல் ஆகியவற்றைக் கொண்டு அறுகோண வடிவில் இருப்பதால்  ஹெக்ஸகன் என்று அழைக்கப்படுகிறது.

இதன் தலைநகர் உலக பிரசித்தி பெற்ற பாரிஸ் நகரம்! 17ஆம் நூற்றாண்டிலிருந்தே நிதி, வர்த்தகம், ராஜதந்திரம், ஃபேஷன், அறிவியல் உள்ளிட்ட பலவற்றின் தலைமையகமாகத் திகழும் இதை, ஒரு காலத்தில் உலகின் தலை நகரம் என்றே சொல்லி வந்தார்கள்.

ஒரு கோடியே முப்பது லட்சம் பேர் பாரிஸ் நகரத்திலும் அதைச் சுற்றிலும் வசித்து வருகின்றனர். இவர்களில் 52 லட்சம் பேர்கள் அன்றாடம் பாரிஸ் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர்!

இங்கு வாழ்க்கைச் செலவு உலகின் அதிகபட்ச செலவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

பிரெஞ்சு புரட்சி

உலகிற்கே மூன்று தாரக மந்திரங்களை வழங்கியது பிரெஞ்சு புரட்சி. லிபர்டி, ஈக்வாலிடி, ப்ரேடர்னிடி எனப்படும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று மந்திரங்களை வழங்கிய பிரெஞ்சு புரட்சி 1789இல் நடைபெற்ற ஒன்று. பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்ட இந்த மூன்று மந்திரங்கள் 1958இல் பிரெஞ்சு அரசியல் சட்டத்திலேயே இடம் பெற்று விட்டன.

பதினாறாம் லூயி காலத்தில் மக்கள் வறுமையில் மிதமிஞ்சி வாடி வதங்கவே மக்கள் எழுச்சி உருவாகி புரட்சி வெடித்தது. மக்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளை வைத்து வெற்றி பெற்று உலகெங்கும் முடியாட்சியை அகற்றி குடியரசை நிறுவ வழி வகுத்தனர்.

ஈஃபில் டவர்

பாரிஸ் என்றவுடனேயே நினைவுக்கு வரும் ஒரு இடம் ஈஃபில் டவர் தான்!

1889ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி கஸ்டாவ் ஈஃபில் என்ற வடிவமைப்பாளர் தந்த வடிவமைப்பை ஏற்றது பிரெஞ்சு அரசாங்கம். அது தான் ஈஃபில் டவர்! சேனி நதியில் தெற்குப் பக்கம் உள்ள இந்த டவர் உலகின் அதிக மக்களால் விரும்பி பயணிக்கப்படும் ஒன்று!

2018ஆம் ஆண்டில் மட்டும் (கோவிட் தொற்றுகுக்கு முன்பாக) சுமார் ஒன்பது கோடி சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர்.

பதினேழு அடி உயரமுள்ள அடித்தளத்தின் மேல் கம்பீரமாக நிற்கும் இதன் உயரம் 984 அடி. வலுவான இரும்பினால் கட்டப்பட்டது இது. கோபுரத்தின் மேல் ஒரு டெலிவிஷன் ஆண்டெனாவும் உள்ளது. ஆக இதன் மொத்த உயரம் 1063 அடி!

சுற்றுலாப் பயணிகளுக்காக இது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  முதல் இரு பகுதிகளில் உணவு விடுதிகள் உள்ளன. மூன்றாம் மட்டத்தில் அதாவது தரை மட்டத்திலிருந்து 906 அடி உயரத்தில் உள்ள ஒரு மேடையிலிருந்து பாரிஸைப் பார்க்க முடியும். டிக்கட் உண்டு.

லிப்ட் மூலம் இங்கு செல்லலாம்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் ஈஃபில் டவரைப் பார்க்க ஆசையோடு வந்தான். ஆனால் அவனைப் பார்க்க விடாமல் செய்ய டவரில் உள்ள லிப்டின் கேபிள் கம்பிகள் அறுத்து விடப்பட்டன. ஆகவே டவரின் உச்சிக்குச் செல்ல அவன் படி வழியே ஏறிச் செல்ல நேர்ந்தது!

சேனி நதியில் சொகுசுக் கப்பல் பயணம்

ஈஃபில் டவர் பார்த்து முடித்தவுடன் சேனி நதியில் சொகுசுக் கப்பலில் (Cruise) பயணம் செய்து மகிழலாம். பாரிஸ் நகரப் பாலங்களின் அடி வழியாகச் சென்று நகர் முழுவதையும் பார்ப்பது ஒரு பெரிய சுகமான அனுபவமாகும்.  ரிகார்டு செய்யப்பட்ட விரிவுரை ஒலிபரப்பப்பட ஒரு மணி நேரப் பயணத்தை  அனைவரும் விரும்பி மேற்கொள்கின்றனர்.

இரவு நேரத்திலோ ஒளிரும் மின் விளக்குகளால் தேவ லோகம் போல அமையும் இந்தப் பகுதி!

இரவு நேர உணவுடன் ஒரு பயணம், பாரிஸ் பகுதிகளைப் பார்க்கும் பயணம் என பல்வேறு பயணங்கள் நடந்து கொண்டே இருப்பதால் நமது நேரத்திற்கும் விருப்பத்திற்கும் தக ஏதேனும் ஒன்றை மேற்கொள்ளலாம்! ஆயிரம் ரூபாய் முதல் இருபதினாயிரம் ரூபாய் வரை டிக்கட் உண்டு. பட்ஜெட்டுக்குத் தக நமது பயணம் அமையும்!

லூவர் அருங்காட்சியகம்

லூவர்  மியூஸியம் உலகின் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களுள் ஒன்று. 35000 கலைப் பொருள்கள் 73000 சதுர மீட்டர் பரப்பில் இங்கு உள்ளன. மூன்று பகுதிகள் கொண்ட இதில் ஒவ்வொரு பகுதியிலும் எழுபதுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. அரும் வண்ண ஓவியங்கள், சிற்ப வேலைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து கலைப் பொருள்களும் இங்கு அற்புதமாகக் காட்சிப் படுத்தப்படுள்ளன.

மாடி பஸ் டூர்

டபிள் டெக்கர் பஸ்ஸில் அமர்ந்து 24 மணி நேரம் அல்லது 48 மணி நேரம் டூரை மேற்கொள்ளலாம். பாரிஸில் பார்க்க வேண்டிய அனைத்து இடங்களையும் இந்த டூரில் (கப்பல் பயணம் உட்பட இதில் உண்டு) கண்டு மகிழலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்காக வகுக்கப்பட்ட திட்டம் இது.

ஏராளமான வாகனப் போக்குவரத்து இங்கு உண்டென்றாலும் ஸ்டாப், டூ நாட் எண்டர் போன்ற போக்குவரத்து அறிவிப்புப் பலகைகளே இங்கு கிடையாது. அவ்வளவு கட்டுப்பாட்டை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கின்றனர்!

வேர்செல்ஸ் அரண்மனை

பாரிஸில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களுள் ஒன்று வேர்செல்ஸ் பாலஸ்! பதிமூன்றாம் லூயி மன்னனால் 1623ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இது. பாரிஸுக்கு தென்மேற்கே பத்து மைல் தொலைவில் இது உள்ளது. மன்னர்களால் பெரிதும் விரும்பப்பட்ட அரண்மனை இது. தலைநகரின் அருகில் இருந்த போதிலும் சந்தடி இல்லாத தனிப்பட்ட ஒரு அமைதியைத் தந்ததால் 1789 பிரெஞ்சு புரட்சி ஏற்படும் வரை இது மன்னர்கள் விரும்பித் தங்கும் அரண்மனையாகத் திகழ்ந்தது.

பதிமூன்றாம் லூயிக்கு வேட்டையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வேட்டையாடுவதற்காக தனது தந்தையுடன்  சிறு பையனாக இந்தப் பகுதிக்கு வந்த லூயி இதன் அழகில் மயங்கினார். இங்கே தங்கி வேட்டையாடினால் சிறப்பாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. 1610இல் தந்தை இறக்கவே  லூயி முடி சூடினார். 1623இல் இதை வேட்டையாடும் ‘ஹண்டிங் லாட்ஜாக’ முதலில் கட்ட ஆரம்பித்தார். இவரை அடுத்து வந்த இவரது மகனான பதிநான்காம் லூயி இதை பிரம்மாண்டமாக அழகுற மேம்படுத்தினார்.

பின்னால் வந்த பதினாறாம் லூயி மற்றும் அவரது மனைவியான மேரி அண்டாய்னெட்டைப் பற்றிய வரலாறு மிகப் பெரியது. இவர்களது கொடுங்கோன்மை முடியாட்சியை வெறுத்த மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர்; 1789இல் ஏற்பட்ட பிரெஞ்சு புரட்சியில் அரச குடும்பத்தினர் அரண்மனையிலிருந்து விரட்டப்பட்டனர்.

புரட்சிவீரர்களில் சிலர் இதை அழிக்க நினைத்தாலும், ஒரு வழியாக அழிவிலிருந்து இது தப்பிப் பிழைத்தது. 1793இல் மேரி அண்டாய்னெட்டின் தலை கில்லடீனில் துண்டிக்கப்பட்டது. அரண்மனையோ பின்னால் ஒரு ஆயுதக் கிடங்கானது.

இப்போது சுற்றுலாப் பயணிகளுக்குத் தன் வரலாறைச் சொல்லிக் கொண்டிருக்கிறது இது! உலகின் பாரம்பரிய இடங்களுள் ஒன்றாக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிசய இடங்கள்!

‘க்ளியோபாட்ரா நீடில்’ எனப்படும் சதுரக் கூம்பகத் தூண் பாரிஸில் பார்க்க வேண்டிய ஒன்று. நாட்டர்டாம் கதீட்ரல், கர்னாவலெட் மியூஸியம், ரோடின்ஸ் கார்டன் உள்ளிட்ட ஏராளமான இடங்கள் இங்கு பார்ப்பதற்கு உள்ளன.

இதையடுத்து இன்னொரு அதிசய வடிவமைப்பு நான்கு பரிமாண க்யூப் ஆகும். பிரெஞ்சு புரட்சியின் 200 ஆண்டு நிறைவை ஒட்டி டேனிஷ் கட்டிட விற்பன்னரான ஜோஹன் ஆட்டோ வான் ஸ்ப்ரெக்கெல்ஸன் இதை வடிவமைத்தார். நாம் வாழும் மூன்று பரிமாண உலகில் நான்கு பரிமாணத்தைக் காட்டும் ஒரு அதிசய முயற்சி இது!

பாரிஸில் நைட் க்ளப்

பாரிஸ் என்றவுடனேயே நினைவுக்கு வருவது ஒய்னும் இரவு க்ளப்புகளும் அங்கு நடக்கும் கேளிக்கை பார்ட்டிகளும் தான்.

21 வகையான ஒய்ன் வகைகள் பாரிஸில் மட்டுமே கிடைக்கும்.

மலைக்க வைக்கும் 112 கோடி க்ளாஸ் மது பானம் ஆண்டிற்கு இங்கு மக்களால் அருந்தப்படுகிறது. பிரான்ஸ் நாட்டின் ஷாம்பெய்ன் பகுதியிலிருந்து வரும் ஒரிஜினல் ஷாம்பெய்ன் இங்கு மட்டுமே கிடைக்கும் என்பது கூடுதல் செய்தி!

அத்துடன் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஏராளமான நைட் கிளப்புகள் அந்தி வேளையில் விளக்குகள் ஒளிர ஆரம்பித்தவுடன் சுறு சுறுப்பாக இயங்க ஆரம்பிக்கும். விதவிதமாக நடக்கும் பார்ட்டிகள், இப்படிப்பட்ட பார்ட்டிகளை விரும்புவோருக்கு உற்சாகம் தரும் இடமாக அமையும்.

ஒவ்வொரு உணவு வேளையிலும் முன்னாலோ அல்லது பின்னாலோ அருந்தாமல் உணவுடன் இணைந்து ஒய்னை அருந்துவது பிரான்ஸ் தேசப் பழக்கம்!

என்ன வாங்கலாம்? எங்கே வாங்கலாம்?!

பாரிஸ் செல்பவர்களுக்கு வாங்குவதற்கான சிறப்பு நினைவுப் பரிசுப் பொருள்கள் பல உண்டு. ஈஃபில் டவரின் மாதிரி அமைப்புகள், தலையில் அணிவதற்கான விதவிதமான தொப்பிகள், வாசனை திரவியங்கள் மற்றும் செண்ட் பாட்டில்கள் (100 நாடுகளுக்கு இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன), சீஸ் (இங்கு 450 சீஸ் வகைகள் உள்ளன), பாதாம் பருப்புகள், ஒய்ன், ஸ்கார்ஃப் போன்றவை பயணிகள் விரும்பி வாங்குபவை. பெண்களுக்கோ என்றால் விதவிதமான நகைகளும். மேக்-அப் சாதனங்களும் மேக்-அப் பொருள்களும் கிடைக்கும்; குறிப்பாக பெண்மணிகள் இங்கு ஹாண்ட் பேக்  வாங்காமல் திரும்புவதில்லை.

அனைவரும் விரும்பிச் செல்லும் 15 பெரிய மால்கள் பாரிஸ் நகரிலேயே உள்ளன.

பிரான்ஸ் நாட்டின் சிறப்புகள்

டின் கேன், ஹேர் ட்ரையர், ஹாட் ஏர் பலூன் போன்ற பல விசித்திரமான கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்ததே பிரான்ஸ் தான்

இன்னொரு விசித்திரம், இந்த நாட்டில் பிரான்ஸ் நாட்டின் சட்டத்தால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் அதிர்ச்சி தரக் கூடியதுமான ஒரு விதி என்னவெனில், விரும்பினால், இறந்த ஒருவரை அதிகாரபூர்வமாக மணம் செய்து கொள்ளலாம். உயிரோடிருந்த போது அவர் மணம் செய்து கொள்ள விரும்பினார் என்று காரணத்தையும் காட்ட வேண்டும்! காதலுக்கு முதல் இடம் தருவது பிரான்ஸ் என்பதை அனைவரும் அறிவர்!

கார்களுக்கு நம்பர் பிளேட் போட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உலகில் முதன் முதலாக 1893இல் கொண்டு வந்ததும் பிரான்ஸ் தான்!

விற்காத உணவுப் பொருள்களையும் மளிகைப் பொருள்களையும்

சூப்பர் மார்கெட்டுகள் அழிக்கவோ அல்லது குப்பையில் போடவோ கூடாது, அவற்றை தர்ம ஸ்தாபனங்களுக்கோ, உணவு வங்கிகளுக்கோ தர வேண்டும் என்று பிரான்ஸ் அரசு 2016இல் கூறி உலக நாடுகளுக்கு ஒரு புது வழியைக் காட்டி இருக்கிறது.

உலகில் பொது இடத்தில் அனைவருக்கும் சினிமாவை முதலில் காட்டிய நாடும் பிரான்ஸ் தான்! 1895, டிசம்பர் 28ஆம் தேதி லூயி நிக்கலஸ் மற்றும் அவர் சகோதரர் லூயி ஜேன் ஆகியோர் பாரிஸில் முதன்முதலாகத் திரைப்படத்தை அனைவருக்கும் திரையிட்டுக் காட்டினர்!

கான் (Cannes) திரைப்பட விழா ஆண்டு தோறும் இங்கு கான் நகரில் 1946லிருந்து நடந்து வருவதை அனைவரும் அறிவர். உலகின் மதிப்பு மிக்கத் திரைப்படத் திருவிழாவான இந்த நிகழ்வில் உலகின் சிறந்த ஆவணப்படங்கள் உள்ளிட்ட அனைத்தும் திரையிடப்படுகின்றன. சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டுக் கவிஞரும் பிரெஞ்சு தேசீய கீதமும்

பிரான்ஸ் நாட்டிற்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு முக்கியமான தொடர்பு உண்டு.

மஹாகவி பாரதியார் பிரெஞ்சு மொழியை நன்கு அறிந்தவர். புதுவையில் அவர் தங்கி இருந்த போது பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதமான ‘லா மார்செலேஸ்’ என்ற கீதத்தை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ‘அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம்

மன்னு புகழ் நாளிதுவே” என்று ஆரம்பிக்கும் அந்த கீதம்,

“போர்க்கோலம் பூணுவீர்! வகுப்பீர் அணிகளை!

செல்வோம் செல்வோம்!

நாம் போம் பாதையில்

பாய்ச்சுவோம் அவரிரத்தத்தை”

என்ற வீர வரிகளுடன் முடிகிறது.

ஆன்மீகப் புதுவையும் பிரான்ஸும்

பாரிஸ் நகரில் பிறந்த மிரா அல்பாசா (தோற்றம் 21-2-1878 சமாதி 17-11-1973) புதுவையில் ஆன்மீகத்தில் ஈடுபட்ட மஹரிஷி அரவிந்தரால் ஈர்க்கப்பட்டு அவரிடம் தன்னை ஒப்படைத்து ஆசிரமப் பணியை மேற்கொண்டார். அன்னை என்றும் மதர் என்றும் பல்லாயிரக்கணக்கானோரால் அழைக்கப்பட்டு அவர்களுக்கு ஆன்மீக நெறியை போதித்தார். ஆக பிரான்ஸ் நாடு புதுவைக்கு ஒரு ஆன்மீகச் செல்வத்தை அளித்ததும் குறிப்பிடத்தகுந்த ஒரு சுவையான செய்தி!

ஒரு வரியில் பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டைப் பற்றி ஒரு வரியில் சொல்லுங்களேன் என்றால் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் தாய்நாடு எதிர் கொண்ட சவால்களையும் அதை அது சமாளித்து முன்னேறும் நிலையையும் நினைத்துக் கூறுவது இது தான் : ”அலைகளால் அவள் அடித்துச் செல்லப்பட்டாலும் ஒரு நாளும் அவள் மூழ்கி விட மாட்டாள்.” (Tossed but not sunk)!

**

tags-பிரான்ஸ்

சமண மதக் கதை: பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் (Post.11,107)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,107

Date uploaded in London – –    15 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனிதர்களை நான்கு  வர்ணத்தாராகப் பிரிக்கிறது  பகவத் கீதை. இது தோலின் வர்ணம் அல்ல. குணத்தின் வர்ணம். ‘பிறப்பொக்கும் எல்லா உயிரும்’ என்பதை ஏற்கும் இந்துமதம், அவரவர் குணத்தினால் வேறுபட்டவர் என்கிறது ; ஆயினும் அது காலப்போக்கில் பிறப்பினை அடிப்படையாக வைத்துப் பின்பற்றப்பட்டதும் அந்த நால் வர்ணம் 40,000 வர்ணங்களாக உடைந்து ஒவ்வொருவரும் “நான்தான் கீழ் ஜாதி; என்னைப்  பிற்பட்ட வகுப்பில் சேர்த்து வேலை கொடு , கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையோடு இடம் கொடு ; ஆனால் எங்கப்பன் Bank Balance பாங்க் பாலன்ஸ் – ஐப் பார்க்காதே; அது பல கோடி” என்று கூத்தடிப்பதும் உலக அதிசயம். நாலு வர்ணம் 40,000 வர்ணங்களாக- ஜாதிகளாக — உடைந்தது எப்படி என்பது எவருக்குமே தெரியவும் இல்லை; புரியவும் இல்லை.; உலகில் வேறு எங்கும் இல்லாத புதுமை.. நிற்க; சுவையான கதையைக் கேளுங்கள் .

சமண மதம், புத்தருக்கு மிகவும் முந்தியது. அவர்களுடைய கடைசி தீர்த்தங்கரரான மஹாவீரர் புத்தரின் சீனியர். அவருக்கு முன்னர் 23 பேர் இருந்ததால் அந்த மதம் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது. அந்த சமய நூலில் உள்ள ஒரு விஷயம்தான் மனிதர்களில் ‘ஆறு வகை நிறம் உடைய மனிதர்கள்’ இருக்கிறார்கள் என்பதாகும்.

இதை ஒரு கதை மூலம் வருணிப்பார்கள் :

ஒரு சமயம், ஆறு பயணிகள் யாத்திரை செய்தார்கள். வழியில் ஒரு பழ மரத்தைக் கண்டார்கள். ஒரே ஆனந்தம். அவர்களுக்கோ நீண்ட தூரம் வந்த களைப்பு; தாகம்; பசி வேறு.

ஆறு பேரில் ஒருவன் சொன்னான்; உடனே இந்த பழ மரத்தை வெட்டிச் சாய்ப்போம். நாம் பழ ங்களைச் சுவைத்து உண்ணுவோம் — என்றான்

இரண்டாவது பயணி சொன்னான் — வேண்டாம், வேண்டாம் ; ஒரு பெரிய மரக்கிளையை வெட்டிச் சாய்ப்போம்; அது நமக்குப் போதும்.

மூன்றாவது யாத்ரீகன் சொன்னான் – பெரிய மரக்கிளை எதற்கு; ஒரு கொம்பிலுள்ள பழங்கள் போதுமே.

நான்காமவன் சொன்னான் – அட, எதற்கு இவ்வளவு கஷ்டம்! நாம் மரத்தின் மீது ஏறி  பழங்களை எடுத்து உண்டு பசியாறுவோம்.

ஐந்தாவது பயணி சொன்னான் – அடே , பசங்களா ; ஏன் பழங்களை வீணடிக்கிறீர்கள். அது மரத்திலேயே இருக்கட்டும். ஒவ்வொரு பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, மரத்தை வாழ விடுவோம் என்றான்.

மிகவும் புத்திசாலியான ஆறாவது யாத்ரீகன் சொன்னான் – வேண்டவே வேண்டாம் . கீழே எவ்வளவு  பழங்கள் விழுந்திருக்கின்றன. அவற்றைத் தின்று மகிழ்வோம். மரத்தைத் தொடவே தேவை இல்லை .- என்றான்.

இந்த ஆறு வகை குணங்களை Colour ‘வர்ணம்’ மூலம் விளக்குகிறது சமண மதம் . இதற்கு அந்த சமய நூல்களில் காணப்படும் சொல் ‘லேஷ்யம்’ LESHYA  என்பதாகும் .

கருப்பு, நீலம் , சாம்பல் , சிவப்பு, மஞ்சள் (தாமரை மொட்டின் நிறம்), வெள்ளை என்ற ஆறு வர்ண மனிதர்கள் உள்ளனர்.

கருப்பு, நீலம் , சாம்பல்  என்ற வர்ணங்கள் கொண்ட முதல் மூன்று வகை மனிதர்களும் மோசமானவர்கள்..

சிவப்பு, மஞ்சள் (தாமரை மொட்டின் நிறம்), வெள்ளை  என்ற வர்ணங்கள் கொண்ட கடைசி மூன்று வகை மனிதர்களும் உயர்ந்தவர்கள்.

முதல் மூன்று வகை மனிதர்களின் ஆன்மா தீய பிறப்புகளை அடையும். கடைசி மூன்று வகை மனிதர்களின் ஆன்மா உயர் பிறப்பு அடையும். ஆன்மீக ஒளி உடைய ஆன்மாக்கள் அவை .

அதாவது கருப்பு நிற குணம் உடையவன் மிகவும் மோசம் ஆனவன். வெள்ளை நிற குணம் உடையவன் உயர்ந்தவன் .

பழ மரத்தை அடியோடு சாய்ப்போம் (கருப்பு), பெரிய கிளையை வெட்டி முறிப்போம் (நீலம்), ஒரு கொம்பை மட்டும் உடைப்போம் (சாம்பல் )- என்று செப்பியோர் நல்ல ஆன்மாக்கள் இல்லை.

பழ மரத்தில் ஏறி வேண்டியதைப் பறித்துண்போம் (சிவப்பு), கைக்கு எட்டியத்தைப் பறிப்போம் (மஞ்சள் ), கீழே உதிர்ந்து கிடைக்கும் பழங்களை உண்போமே (வெள்ளை) — என்று நுவன்றோர் நல்ல ஆன்மாக்கள் .

xxx

எனது கருத்து

முதலில் வர்ணம் என்ற சொல் குணத்தைக் குறிக்குமேயன்றி , பிறப்பைக் குறிக்காது என்பதுதான் 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்து மதக் கொள்கை ;

இரண்டாவது இயற்கைப் பாதுகாப்பு, மரங்களின் பாதுகாப்பு, புறச் சூழல் பாதுகாப்பு முதலிய கருத்துக்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்துள்ளது. தேவைக்கு அதிகமாக வேண்டுபவன் கருப்பு குணம் உடையவன். இயற்கையை அதன் போக்கில் விட்டு ரசிப்பவன் தூய வெள்ளை நிறம் உடையவன்.

இந்த ஆறு குணங்களை வருணிக்கும் நீண்ட ஸ்லோகங்கள் சமண மத நூல்களில் உள்ளன. அவை அர்த்தமாகதி  என்னும் ஒரு வகை பிராகிருத மொழியில் உள்ள ஸ்லோகங்கள்; ஸம்ஸ்க்ருதம் அறிந்தோர் எளிதில் புரிந்து கொள்ளுவர்..

ஒரே ஒரு எடுத்துக்காட்டு

கின்ஹா நீலா ய காவு ய தேவு பம்ஹா தஹேவ ய

ஸுக்லேசா  ய  சட்டா  ய  நாமாயிம் து  ஜஹக்கமம்

இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ண /கருப்பு, நீல/நீலம் , காபோடா / சாம்பல் , தேஜஸ் /சிவப்பு, பத்ம /தாமரை மொட்டின் மஞ்சள் , சுக்ல/ வெள்ளை  என்ற பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

லேஷ்ய  என்பது ஆன்மாவை ஒட்டிக்கொள்ளும் வர்ணம்- இது சமண மதத்துக்கே உரிய கொள்கை. இந்தச் சொல்லின் பிறப்பியலும் புரிபடவில்லை

எப்படி ஒரு படிகக் கல்லை (Crystal)  மற்றோர் நிறக் கல்லின் அருகே வைக்கையில், அந்தப் படிகம்தான் சேர்ந்த கல்லின் நிறத்தைப் பிரதிபலிக்குமோ அதே  போன்றது லேஷ்யம்

கறுப்பு வர்ண குணம் — கொடூரம், வன்செயல், பஞ்ச மா பாதகம் செய்வோன்; பாவத்துக்கு அஞ்சாதவன் .

நீல வர்ண குணம் – கோபம், பேராசை, புலன் அடக்கம் அற்றவன் ; மோசடி செய்வோன்

சாம்பல் வர்ண குணம் – நேர்மையற்றவன், பிறரை ஏமாற்றிப்  பிழைப்பவன் திருடன், தீங்கிழைப்போன், பொறாமைக்காரன்

சிவப்பு வர்ண குணம் – எளிமை, பணிவு, படிப்பாளி, சுய கட்டுப்பாடு உடையவன் , நல்லது செய்வோன்

தாமரை மொட்டின் மஞ்சள் வர்ண குணம்- காம, க்ரோத, மோகம் இல்லாதவன், மன அமைதி உடையவன் , குறைவாகப் பேசுவோன் , நிறைய கற்பவன்

வெள்ளை வர்ண குணம்- நல்லனவற்றை மட்டும் தியானிப்போன் , மன அமைதி கொண்டவன், தீயனவற்றை விலக்கியவன்

xxx

என் கருத்து

மனிதர்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் (AURA)  உண்டு என்பதும் அதை ஞானிகள் மட்டுமே காண முடியும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. அதைத்தான் மேற்கூறிய  நிறங்கள் குறிப்பிடுகின்றன என்பது என் கருத்து.

நாம் ஒரு சந்நியாசி முன்னர் போய் நின்றவுடன் , நம் உடலைச் சுற்றி பல அடுக்குகளில் (auras in several layers)  ஒளிக்கற்றை  இருக்கும். அதில் பூர்வ ஜன்ம ஒளிக்கற்றை , தற்போதைய பிறப்பு ஒளிக்கற்றை , தற்போது  வந்த காரியத்தின் எண்ண ஒளிக்கற்றை ஆகிய எல்லாவற்றையும் ஞானிகள் பார்க்க முடியும். அதற்கேற்ப அவர்கள் நமக்கு உதவுவர்..

சட்டம் என்ன சொன்னாலும், அதை நீதிபதி பார்க்கும் விதம், வியாக்கியானம் செய்யும் விதம் வேறுபடுகிறது. அதிலும் கூட உயர்ந்த பட்ச தண்டனை, குறைந்த பட்ச  தண்டனை என்று வரையரை செய்யப்பட்டுள்ளது. அப்போது நீதிபதி சொல்லப்போகும் விஷயம் இரு தரப்பு வாதி, பிரதிவாதிகளுக்கும் தெரியாது. இதைப் போலவே நாம் சென்று பார்க்கும் சன்யாசியும் நமக்கு அருள் ஆசி வழங்குவதும்.

நம்முடைய ஒளி (Aura)  எப்படியாகிலும் , நீதிபதி போல, ஞானிகளும் நமக்கு குறைந்தோ கூட்டியோ விடுதலையோ , தண்டனையோ  தருவார்கள். அதை நிர்ணயிக்க அவர்களுக்கு உதவுவது நம்மைச் சுற்றியுள்ள ஒளி (Aura) வட்டமே. அது நமது குணத்தை, சிந்தனையைப் பொறுத்து கருப்பு அடையலாம் (may be blackened) ; ஒளிப்பிழம்பாக (may be brightened) சிவப்பும் அடையலாம்.

பிராமணச் சிறுவர்கள் தினமும் காலையில் சமிதாதானம் செய்கையில் தேஜஸ் மிக்க தேவியே எனக்கு தேஜஸ் (தேஜோ மய ஒளி) கொடு என்று வேண்டுவர். காயத்ரீ ஜபம் செய்வோரும் இந்த தேஜஸ் ஒளியைப் பெறுவார்கள்.

(இது எனது அனுபவத்தில் கண்ட உண்மை. சில ஜாதகங்களை என் அண்ணனிடம் காட்டியவுடன் தொடவே மறுத்து விடுகிறார். தேர்தலில் தோற்றுப்போகும் ஒரு நபரை என் தந்தை, சுவாமிஜி கிருஷ்ணாவிடம் அறிமுகப்படுத்த முயன்றபோது , அவர் இரண்டுமுறை முகத்தைத் திருப்பிக்கொண்டு வந்த நபரை அவமதித்தார். என் தந்தைக்குப் புரிந்துவிட்டது  . அச்சன்கோவில் அய்யப்பன் சந்நிதியில் இருந்து புறப்படும் முன், மூன்றாவது தடவை அறிமுகப்படுத்தியபோது , சரி போ!!  பிரார்த்தி க்கிறேன் என்றார் . பின்னர் அவரே ஒருமுறை  இதுபற்றி விளக்குகையில் ரகசியத்தை அம்பலப்படுத்தினார். உன் தந்தை தோற்றுப்போகும் ஒரு ஆளை கூட்டிவந்துவிட்டார். மஹா கணபதியிடம் சந்தானத்துக்காக ( என் தந்தையின் பெயர்) சண்டை போட்டு வெற்றியை வாங்கித் தந்தேன் என்றார் . அந்த உதவாக்கரை நபர் மதுரையில் 65 வோட்டில் வெற்றி பெற்றார். தேர்தலில் தோற்கப்போகும் ராகுல் காந்தியை சிருங்கேரி சங்கராச்சாரியார் பார்க்க மறுத்தது, ஜெயலலிதாவின் பரிதாபச்  சாவு காஞ்சி சங்கராச்சாரியாருக்குத் தெரிந்தது, பிரேமதாசா , மைக்கேல் ஜாக்சனை சத்யா சாயிபாபா பார்க்க மறுத்தது, வாஜ்பாயியை எமர்ஜென்சி காலத்திலேயே வாருங்கள் பிரதம மந்திரியே  என்று பாபா அழைத்தது போன்ற அதிசயங்களை முன் ஒரு கட்டுரையில் கொடுத்து விட்டேன். நம்மைப் பற்றி அவர்கள் நினைத்தாலே நமக்கு நடக்கப் போவதை அறிவர். ஆனால் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே அவர்கள் இப்படிச் செய்வார்கள்; அதுதான் நம்மைச் சுற்றயுள்ள ஒளி வட்டம் செய்யும் வேலை )

-subham-

Tags- சமண மதம், கதை, ஆறு வர்ணம், மனிதர்களின் நிறங்கள், ஒளி வட்டம் , பழ மரம்

TRANSLATION JOKES -இங்கே சிறுநீர் கழிக்காதீர்= Don’t subtract small water here (Post.11,106).

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,106

Date uploaded in London – 15 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞானமொழிகள்– 94

அமைதி? அமைதி ?*

1. வார்த்தைகள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *மந்திரம்*.

2.செயல்கள் அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *தந்திரம்*.

3.ஓசை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *இசை*.

4.பார்வை அமைதியை உண்டாக்கினால் அதன் பெயர் – *கடாக்ஷம்*.

5.அமரும் நிலை அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – *யோகா*.

6.மனம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர்- *தியானம்.*

7.சுவாசம் அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – *பிராணாயாமம்*.

8.சக்தி அமைதியை உருவாக்கினால் அதன் பெயர் – *குண்டலினி*.

9.இடம் அமைதியை தருமானால் அதன் பெயர் *கோவில்*.

10.உறவுகள் அமைதியைத் தரும் ஆனால் அதன் பெயர் – *குடும்பம்*.

11.தன்னுணர்வை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – *அன்பு*.

12. இறையன்பில் தன்னை இழப்பது அமைதியைத் தருமானால் அதன் பெயர் – *பக்தி*.

XXX

💋மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால், அது “யோகா”.🙊

💋மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா விட்டால், அது “தியானம்”. 🙊

💋யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மக்களே…!🙊

XXX

💋தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !

இனி இவனை அடிக்க முடியாதுன்னு” பெத்தவங்க, மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது தான் திருமணம்!🙊

XXX

💋மாப்பிள்ளை வீட்டில், “மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.🙊

💋ஆனால்

பெண் வீட்டில் “பெண்ணுக்கு, ஒரு தங்கை உண்டு” என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!

ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க.🙊

XXXX

💋அடிக்கடி டீயோ, காபியோ கேட்கிறார் என்றால்

உங்கள் நிறுத்தாத பேச்சை புத்துணர்ச்சியுடன் கேட்க விருப்புகிறார் என்று அர்த்தம்.🙊

XXX

.

💋மற்ற அழகான பெண்களை பார்க்கிறாரா?

என் பொண்டாட்டிய விட அவ என்ன அழகான்னு செக் பண்றார்னு அர்த்தம்.🙊

.

💋உங்கள் சமையலை குறை கூறிக்கொண்டே இருக்கிறாரா?

அவரது சுவையறியும் திறன் கூடிக்கொண்டே போகிறது என்று அர்த்தம்.🙊

.

💋இரவில் குறைட்டை விட்டு உங்கள் தூக்கத்தை கெடுக்குறாரா?🙊

.

💋உங்களை மணந்தபின் தான் நிம்மதியாக உறங்குகிறார் என்று அர்த்தம்.🙊

.

💋உங்கள் பிறந்தநாளுக்கு பரிசு வாங்கி தரவில்லையா?

.

உங்கள் எதிர்காலத்துக்கு பணம் சேமித்து வைக்கிறார் என்று அர்த்தம்.🙊

.

நேசித்தே ஆகவேண்டும் உங்களுக்கு வேற வழியும் இல்லை.

💋மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!!

👉. நிறைய “அதிகாரம்” இருப்பதால்.

👉2. நிறைய இடங்களில் “புரிந்தும், புரியாமலும்” இருப்பதால்

👉3. இரண்டு “அடி”யில், எல்லாவற்றையும் உணர வைப்பதால்…..வாழ்க வளமுடன்!

🤠 சும்மா நகைச்சுவைக்காக போடப்பட்டது இந்த பதிவு! 🤠

*சிரிங்க பாஸ்*

XXX

TRANSLATION JOKES

மாணவனின் தந்தை ஆசிரியரிடம் : என்னய்யா பேப்பர் திருத்துறீங்க? என் பையன் எல்லாக் கேள்விக்கும் சரியா பதில் எழுதியிருக்கான். எல்லாத்தையும் தப்பு போட்டு முட்டை மார்க் போட்டிருக்கீங்க.

இதோ அந்த பரீட்சை பேப்பர் .

ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்க.

இங்கே சிறுநீர் கழிக்காதீர்

Don’t subtract small water here.

ஆறுமுகம் வீட்டைப் பெருக்கினான்

Six face multiplied the house

பாரத நாடு பழம்பெறும் நாடு

Bharath country fruit getting country

நாளை இங்கு கபடிப் போட்டி நடக்கும்

Tomorrow Kabaddi game will walk here

தமிழில் மொழி மாற்றம் செய்க.

Please bear with me

தயவு செய்து கரடி என்னிடம் உள்ளது.

Watchman Checked my bag

கடிகார மனிதன் என் பையை சோதனை செய்தார்.

எதிர்மறை வாக்கியமாக மாற்றுக.

குட்டையில் நீர் நிரம்பி உள்ளது.

Ans: நெட்டையில் நீர் நிரம்பி உள்ளது

ஏரிப் பாசனம் நன்று

Ans: இறங்கிப் பாசனம் நன்று…!!!

XXXX

கணவன் தன் மனைவியிடம் ஒருமுறை ரூ. 250 கடன் வாங்கினான்.

😀😀சில நாட்கள் கழித்து மறுபடியும் இன்னுமொரு ரூ250மனைவியிடமிருந்து வாங்கிக்கொண்டான். 😀

😀சிலநாட்கள் பின் மனைவி சொன்னாள் ரூபாய் 4100 தரவேண்டும் என்று ! குழம்பி போன கணவன் பல முறை மன்றாடி கேட்ட பிறகு,

மனைவி கொடுத்த கணக்கு வழிமுறை இதோ 👇🏽

.

1). *Rs. 2 5 0*

2). *Rs. 2 5 0*

——————

*Rs. 4 10 0*

——————

ஆக மொத்தம் ரூபாய் 4100.00

தொடர்ச்சி: 

கணவன் முதலில் 100ரூ திருப்பித் தந்தான்.

4100

– 100

———-

4

———-

மறுநாள் 4 ரூ கொடுத்து மேற்சொன்ன கணக்குப்படி கடனை அடைத்து விட்டான்.

கொய்யால யார்கிட்ட!….

XXXX

—Subham—

Tags-  ஞானமொழிகள்– 94

உலகின் முக்கிய அதிசயத்தைக் கொண்ட நாடு! (Post No.11,105)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,105

Date uploaded in London – –    15 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

29-2-22 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலக வலத்தில் இன்று நாம் செல்லவிருக்கும் நாடு எகிப்து!

உலகின் முக்கிய அதிசயத்தைக் கொண்ட நாடு!

ச.நாகராஜன்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றைக்கொண்டு அனைவரையும் ஈர்க்கும் நாடு எகிபது.. ஆம், இங்கு தான் க்ரேட் பிரமிட் உள்ளது.

நெப்போலியனின் அனுபவம்!

மாபெரும் வீரனான நெப்போலியன் பிரமிடின் மஹிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான். ஆவல் உந்த அவன் க்ரேட் ப்ரமிட் எனப்படும் பெரிய பிரமிடை அடைந்தான். அதன் முக்கிய உள்ளறையில் (Main Chamber) பல வருடங்கள் பயிற்சி பெற்ற சீடர்களே அனுமதிக்கப்படுவர் என்றும் தியானம் மற்றும் ரகசிய சித்திகளில் பயிற்சி பெறுபவர் அந்த உள்ளறையில் ஒரு இரவு முழுவதும் தங்கி இருந்து உள்ளொளி பெறுவர் என்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான்.

அற்புதமான நுணுக்கமான கணிதம் மூலம், இடம், திசை, ஒழுங்கு, நேர்த்தி ஆகியவற்றைப் பரிசீலித்து அமைப்பட்டிருக்கும் அந்த அறை பிரமாதமான ‘சக்தி கேந்திரம்’ என்று அறிந்திருந்த அவன் அந்த அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கினான்.

மறு நாள் காலை அதிசயம் மற்றும் ஆச்சரியத்தைக் காட்டும் முகத்துடன் வெளியே வந்த அவனை நோக்கி, “என்ன நடந்தது” என்று அனைவரும் கேட்டனர். தனது சக்தி மயமான அனுபவங்களை வெளியே சொல்லத் தயங்கிய அவன், நான் நடந்ததைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்’ – (You won’t believe me, if I tell you) என்றான்.ஆம், நம்ப முடியாத அதிசயங்களைத் தருவது பிரமிட்!

நெப்போலியன் மட்டுமல்ல, அவனுக்கு முன்னாலும் பின்னாலும் இன்று வரையில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிரமிட் தரும் பிரமிப்பூட்டும் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.

எகிப்து நாடு

பத்து கோடியே எழுபத்தாறு லட்சம் ஜனத்தொகையைக் கொண்ட எகிப்து நாட்டின் பரப்பளவு 3,90 121 சதுர மைல்களாகும்.

வடகிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தென்மேற்கு ஆசியா வரை பரந்துள்ள நாடு இது.

உலகின் பழைய நாகரீகங்களுள் ஒன்றான நைல் நதி நாகரிகத்தைக் கொண்ட எகிப்து மிக மிகப் பழமையான வரலாறைக் கொண்ட நாடாகும்.

பிரிட்டிஷின் ஆதிக்கத்திலிருந்து 1922ஆம் ஆண்டில் விடுபட்ட எகிப்து நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறத் தொடங்கியது.

எண்ணெய் வளமும் இயற்கை வாயுவையும் கொண்டுள்ள எகிப்து ஆப்பிரிக்காவிலேயே அதிக

 அளவு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்ட நாடாகும்.

ஆண்டுக்கு சுமார் ஒரு கோடியே 28 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நாடு இது என்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. ஏனெனில் பழைய உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றான பிரமிடைக் கொண்டிருக்கும் நாடு அல்லவா இது!

பெரிய பிரமிட் மர்மம்!

     ‘பைரா’ என்றால் நெருப்பு என்று பொருள். ‘மிட்’ என்றால் நடுவே என்று பொருள். சாதாரணமாக கூறப்படும் இந்த அர்த்தத்தை விட உண்மையான அர்த்தத்தை ஜெரால்ட் மாசே (Gerald Massey) தனது ஏன்ஷியண்ட் ஈஜிப்ட்; தி லைட் ஆஃப் தி வோர்ல்ட் (Ancient Egypt: The light of the world’) என்ற புத்தகத்தில் கூறுகிறார். ‘பைர்’ என்றால் அக்னி என்றும் ‘மெட்’ என்று உச்சரிக்கப்பட வேண்டிய அடுத்த வார்த்தை பத்து மடங்கு என்ற பொருளைத் தரும் என்றும்  அவர் கூறுவதோடு, பிரமிடானது அக்னியின் பத்து வித அபூர்வ சக்திகளைத் தருகிறது என்கிறார். பிரமிட், ‘புனிதமான சக்திகளைத் தன்னுள்ளே தக்க வைக்கும் ஊற்று’ என்கிறார் அவர்.

   ‘க்ரேட் பிரமிட்’ என்று அழைக்கப்படும் பெரிய  பிரமிட் 13 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பரப்பின் மேல் மட்டம் அதிசயப்படும் அளவு சமதளமாக இருக்கிறது.

23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது பிரமிட்! அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன்  முதல் 50 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இடம் மயிரிழை அளவு கூட இடைவெளி இன்றி செய்யப்பட்டுள்ளது! இந்த பிரமிடில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள கற்களைக் கொண்டு அமெரிக்காவின் வானளாவிய கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல 30 கட்டிடங்களைக் கட்டலாம்!

இது மட்டுமல்ல, பிரபஞ்சத்திற்கும் பிரமிடுக்கும் பெரிய அளவில் தொடர்பு உள்ளது.

   பிரமிட், பூமியின் ஸ்கேல் மாடலாக இருப்பது ஒரு வியப்பூட்டும் விஷயம்! அதனுடைய லாடிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் ஆகிய இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு! இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமான பூமிப் பரப்பின் வழியே செல்கிறது என்பது ஒரு அதிசயமான விஷயம்!

   பிரமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்திமூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 – Ten to the power of 15  என்ற எண்ணால் பெருக்கினால் வெவ்வேறு அளவுகளின் விகிதாசாரங்கள், ‘ பை’ எனப்படும் 3.142 என்ற அளவையும் ‘தங்க விகிதம்’ எனப்படும் 1.618 என்ற அளவையும் ஆங்காங்கே காண்பிக்கிறது.

   பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே ஜீடா ஒரியன் நட்சத்திரத்தையும் ஆல்ஃபா ட்ராகோனிஸ் நட்சத்திரத்தியும் காண்பிக்கின்றன. க்வீன் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு  முனைகள் சிரியஸ் நட்சத்திரத்தையும் ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன. நமது புராணங்கள் பெரிதும் போற்றும் விஸ்வாமித்திர நட்சத்திரமே சிரியஸ்! இது பெரும் மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது.

 பிரமிடின் சரியான அளவுகளே அதற்குச் சக்தியைத் தருவதாக விஞ்ஞானிகள் தங்கள் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

போவிஸ் (BOVIS) என்ற பிரெஞ்சுக்காரர் பிரமிடைப் பார்க்கச் சென்ற போது பூனைகளும் மற்ற சிறு மிருகங்களும் வழி தவறி ஆங்காங்கே செத்துக் கிடப்பதைப் பார்த்தார். மீண்டும் பல மணி நேரம் கழித்து தான் வந்த வழியில் திரும்புகையில் அவை அழுகி நாற்றம் எடுக்காமல் இருந்ததைப் பார்த்து வியந்தார். உடனே பிரமிடின் ஸ்கேல் மாடலைத் தயார் செய்து அதில் பல்வேறு பதார்த்தங்களை வைத்துச் சோதனை செய்தார். அவை கெடவே இல்லை.

  தொடர்ந்து செக்கோஸ்லேவிகியாவைச் சேர்ந்த காரெல் ட்ரபெல் (Karel Drabal) என்ற ரேடியோ எஞ்ஜினியர்   பிரமிடின் சிறிய ஸ்கேல் மாடலில் ஒரு பிளேடைத்    தெற்கு வடக்காக                                                                                                                            காம்பஸின் உதவி கொண்டு வைத்தார். பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருந்தன. இதை பிரமிடின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் இருக்குமாறு வைத்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு பிளேடின் மழுங்கிய முனைகள் கூர்மையுடையதாக ஆகியிருந்தன.

அமெரிக்க டாலர் மர்மம்!

  இது ஒருபுறமிருக்க, உலகையே தங்கத்திற்கு நிகராக ஆட்டிப் படைக்கும் அமெரிக்க டாலர் மறைமுக ஆற்றலைக் (அக்கல்ட் பவரை) கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்குக் காரணம் அதில் உள்ள பிரமிடே! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் எப்போதும் அமெரிக்கா வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது. பிரமிடின் மேலே உள்ள எதையும் ஊடுருவும் கண் அமெரிக்காவிற்கு தெய்வீக வழிகாட்டுதல் கிடைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

பிரமிடைத் தன் டாலரில் கொண்டுள்ள அமெரிக்கா பொருளாதாரத்தில் தலை சிறந்து விளங்கும். என்றும் செல்வச் செழிப்பில் திகழும்!

.பிரமிட் டூர்

பிரமிட் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய உதவுவது பிரமிட் டூர். குறைந்த பட்சம் நான்கு மணி நேரம் என்பதில் ஆரம்பித்து சில நாட்கள் வரை இருந்து பார்த்து அறிய வேண்டிய அதிசயம் பிரமிட் என்பதால் தகுந்த ஒரு திட்டத்துடன் எகிப்து பயணத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.

கிஜா மற்றும் குஃபு பிரமிடின் உள்ளேயே செல்லலாம். ஒட்டகம் அல்லது குதிரை சவாரி இதற்கென உண்டு. நடந்து சென்றும் பார்க்கலாம்.

அடுத்து எகிப்து மியூஸியம்,மெம்பிஸ், சகாரா என்ற பல இடங்களையும் பார்க்கும் போது மேலே கூறிய விவரங்கள் அனைத்தையும் பெறலாம்.

வெற்றி நகர் கெய்ரோ!

எகிப்தின் தலை நகரமான கெய்ரோ ஆப்பிரிக்காவிலேயே பெரிய நகரம். கெய்ரோ என்றால் வெற்றி நகர் என்று பொருள். நைல் நதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள இந்த நகரம் 5000 வருட பழமை வாய்ந்த ஒன்று. பல நூறு புகழ் பெற்ற அரசர்களைப் பார்த்த நகர் இது. ஒரு கோடி பேர் இங்கு வாழ்கின்றனர்.

கோடைகாலத்தில் சுட்டெரிக்கும் 40 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணநிலையும் குளிர்காலத்தில் 14 டிகிரி செல்யஸ் குறைந்த பட்ச உஷ்ணநிலையும் இங்கு நிலவும். பயணிகள் பயப்படாமல் நடமாட, பாதுகாப்பான நகரம். செலவு குறைந்த நகரம்.

மால் ஆஃப் அரேபியா கெய்ரோவில் உள்ள பெரிய மால். இன்னும் ஆடை அணிகளை வாங்க பட்ஜெட்டுக்குத் தக  ஃப்ரண்ட்லி மால்களும் பத்துக்கு மேல் உண்டு.

சொகுசுக் கப்பல் பயணம்

உலகின் பழம் பெரு நதியான நைல் நதியில் படகில் சொகுசு கப்பலில் (Cruise) பயணம் செய்து மகிழ முடியும். ஒரு நாள் முதல் ஆறு நாட்கள் வரை இந்தப் பயணங்கள் பயணிகளின் விருப்பத்திற்குத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் செங்கடலை ஒட்டி உள்ள கடற்கரைகளிலும் பயணிகள் திரளாகக் குழுமுகின்றனர். பவழப் பாறைகள் உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம். நீச்சல் தெரிந்தவர்கள் நீச்சல் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.

அலெக்ஸாண்டர் நிர்மாணித்த அலெக்ஸாண்ட்ரியா

சினால் மற்றும் செங்கடல் கடற்கரையில் சூரிய உதயம், அஸ்தமனத்தைப் பார்த்து இயற்கை ஆர்வலர்கள் மகிழும் போது பழைய பண்பாடு, நினைவுச் சின்னங்களில் ஆர்வமுள்ளோர் லக்ஸார், அஸ்வான், அலெக்ஸாண்ட்ரியா ஆகிய இடங்களுக்குச் சென்று மகிழலாம்.

கெய்ரோவிலிருந்து லக்ஸார் 660 கிலோமீட்டர் தொலைவிலும் அலெஸ்டாண்ட்ரியா 218 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மா பெரும் மன்னனான அலெக்ஸாண்டரால் நிறுவப்பட்ட அலெக்ஸாண்ட்ரியா, பழங்கால வடிவமைப்பிலான கட்டிடங்களைக் கொண்டுள்ளது. தோட்டங்களும், அழகிய நீர்நிலைகளும், இங்குள்ள ஸ்டான்லி பாலமும், பழைய கால கோட்டையும், அரசியர் அணிந்த நகைகளைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியங்கங்களும் மக்களை இங்கு ஈர்க்கின்றன.

எகிப்துக்கு வருக, மகிழ்ச்சியை ஏந்திச் செல்க!

நைல் நதியின் நன்கொடை என்று புகழப்படும் எகிப்து கனவுகள், மர்மங்கள், மலரும் நினைவுகளைத் தரும் நாடு என புகழப்படுகிறது.

இங்கு வாழ்பவர்கள் கூறுவது : இங்கு வாருங்கள், உங்கள் கால் தடங்களைப் பதியுங்கள். மலரும் நினைவுகளை அள்ளிச் செல்லுங்கள் என்பது தான்!

பிரமிடின் அபூர்வ ஆற்றல்

பிரமிடின் அபூர்வ ஆற்றல்கள்

பிரமிட் பல அபூர்வ ஆற்றல்களைக் கொண்டுள்ளது.

இதன் உள்ளே வைக்கப்பட்ட பால் மற்றும் தண்ணீர், சிறிது நேரத்திலேயே சக்தி ஊட்டப்பட்டதாக ஆகிறது.

பெரிய அளவில் கார்ட்போர்டில் கூட செய்து உருவாக்கப்பட்ட பிரமிடில்  அமர்ந்து படிக்கும் மாணவ மாணவியரின் அறிவுத் திறன் கூடுகிறது. ஞாபக சக்தி கூடுகிறது.

பிரமிடில் தியானம் செய்தால் சாந்தி ஏற்படுகிறது. இப்படிப் பல்வேறு பயன்களைத் தருவதாக பல நூறு புத்தகங்கள் விளக்குகின்றன.

பிரமிடாலஜி என்ற பிரமிட் பற்றி ஒரு தனி இயல் உருவாகி இருப்பதோடு பிரமிட் என்சைக்ளோபீடியாவும் புத்தக சந்தைக்கு இப்போது வந்து விட்டது.

   மாக்ஸ் டாத் மற்றும் க்ரெக் நியல்ஸன் (Max Toth &  Greg Nielson) இணைந்து எழுதிய பிரமிட் பவர் என்ற புத்தகம் பிரமிடின் உள்ளே வைக்கப்படும் விதைகள் வீரிய விதைகளாக மாறுவதாகக் குறிப்பிடுகிறது.

உலகையே பரபரப்புக்குள்ளாக்கிய புத்தகமான சைகிக் டிஸ்கவரீஸ் பிஹைண்ட் தி அயர்ன் கர்டன் (psychic discoveriesh behind the iron curtain) என்ற புத்தகத்தை எழுதியுள்ள ஷீலா ஆஸ்ட்ராண்டர் பிரமிடின் உள்ளே காய்கறிகள், முட்டை வைத்தால் அவை கெட்டுப் போகாது என்பதைக் குறிப்பிடுகிறார்.

தலைவலி உள்ளவர்கள் பிரமிட் தொப்பியை மாட்டிக் கொண்டால் தலைவலி தீர்கிறது. இதை அணிந்து உலகில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.

சரியான பிரமிடின் அளவுகள்

கடைகளிலும் பிளாட்பார ஓரங்களிலும் விற்கும் பிரமிடுகளை வைத்து பிரமிட் சக்தியைப் பற்றிச் சந்தேகப்படுவோர் சரியான அளவுடன் பிரமிட் இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்க வேண்டும். இந்த அளவுகளைக் கண்டுபிடிக்க ஒரு சிறிய ஃபார்முலா இருக்கிறது. பிரமிடின் ஒவ்வொரு அலகு அதாவது UNIT உயரத்திற்கும் அதன் அடிப்பக்கம் 1.5708 மடங்காக இருக்க வேண்டும். அதன் பக்க அளவு 1.4945 மடங்காக இருக்க வேண்டும். உதாரணமாக ஐந்து அங்குலம் உயரம் உள்ள பிரமிடின் அடிப்பக்கம் 7.85 அங்குலமாகவும் பக்கம் 7.47 அங்குலமாகவும் இருக்க வேண்டும்.

பிரமிடை சோதனை செய்து பார்ப்பது எப்படி?

   பிரமிட் சக்தியை நீங்களே சோதனை செய்து பார்க்கலாம். நான்கு முக்கோணங்களை கார்ட்போர்டில் வெட்டிக் கொள்ளுங்கள். இதன் அடிப்பக்க அளவு 9 3/8 அங்குலமாகவும் இரு பக்கங்களின் அளவு 8 7/8 அங்குலமாகவும் இருக்க வேண்டும். நான்கு முக்கோணங்களை டேப் வைத்து ஒட்டிவிட்டால் பிரமிடின் உயரம் சரியாக ஆறு அங்குலம் இருக்கும். இதில் வடக்கு தெற்கு திசைகளை காம்பஸ் உதவியுடன் நிர்ணயித்து இரண்டு அங்குல உயரத்தில் ஒரு  கட்டையின் மீது பிளேடின் நுனிகளை தெற்கு வடக்காக வைக்க வேண்டும். இப்போது பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருக்கும். ஆறு முதல் பத்து நாட்கள் கழித்து பிளேடை எடுத்துப் பார்த்தால் மழுங்கிய முனைகள் கூர்மையாகி இருக்கும். குறைந்த பட்சம் 50 முறைகள் இதைக் கூர்மையாக்கி உபயோகிக்கலாம்.

பிரபலமான பிரமிட் கட்டிடங்கள்  

மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவில் பிரமிட் அமைப்பில் உள்ளது.

பங்களூரு அருகில் உள்ள பிரம்மாண்டமான பிரமிட் தியான மண்டபம் 28 ஏக்கர் பரப்பளவில் குன்றுகளுக்கும் பசுமை வயல்களுக்கும் நடுவில் அமைக்கப்பட்ட ஒன்று. 100 அடி உயரமுள்ள பிரமிடில் பல்வேறு தியான நிகழ்ச்சிகள் அவ்வப்பொழுது நடைபெறுகின்றன.

கோவையில் உள்ள பிரமிட் செண்டர், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில்  வடக்கு தெற்கு அச்சில் 9206 சதுர அடி பரப்பில் 89 அடியை அடிப்பக்கத்திலும் 63 அடியை உயத்திலும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பிரமிட் சர்ச் உள்ளிட்ட ஏராளமான பிரமிட் கட்டிடங்கள் உலகெங்கும் உருவாக்கப்பட்டு மக்களுக்குப் பலன் அளித்து வருகின்றன.

ஆர்வமுள்ளோருக்கு ஆற்றல் தருவது பிரமிட்!

**

tags-  பிரமிட், எகிப்து

JAINS AND COLOURS- A STORY (Post No.11,104)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,104

Date uploaded in London – –    14 JULY 2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Jains have attributed different colours to people with different mental status. There is a popular story to explain this. Once a group of travellers came across a fruit tree. They were hungry and thirsty. So, all of them agreed that they must stop there and enjoy the fruits.

One of the travellers said let us cut the whole tree for plucking the fruits. Another said, there is no need to cut the tree; let us cut just one branch of the tree. Third one said that one small piece is enough. Fourth traveller said, let us climb the tree and pluck some fruits. Fifth person said, don’t take many fruits; just take whatever you could eat. Sixth traveller said, please don’t damage or destroy the tree. A lot of fruits are already on the ground. Let us consume them.

These six people are represented by six different colours what the Jains call LESHYA; that is the propensity of mind, an inclination or a natural tendency to behave in a particular way.

The person who wanted to cut down the whole tree is represented by black. The sixth person who suggested to use the fruits on the ground represents white colour- pure state of mind. In between comes blue, brown, red and yellow.

Jain scholars say that the first three leshyas lead the soul to ruin and the last three leshyas lead the soul to spiritual prosperity.

Xxx

The Jain scriptures name the colours as-

Krsna – black

Nila – blue (Niila)

Kapota – grey (Kaapotaa)

Tejas – red

Padma – yellow

Sukla – white.

The doctrine of LESHYAS- colours or tinges of the soul is peculiar to Jainism. The etymology of the word is obscure. It is a subtle substance accompanying the soul.

A man who commits five-fold sins develops the BLACK leshya.

A man possessing bad qualities such as envy, anger, ignorance, deceit, lack of self -control, greed, cunningness – develops the BLUE leshya.

A man who is crooked in words and deeds, a thief, unrighteous person develops the GREY leshya.

A man who is humble, steadfast, free from deceit, well disciplined, restrained, who is afraid of sin, strives after the good, develops the RED  leshya.

A man who has little anger, pride, deceit and greed, whose mind is calm and tranquil, who is well controlled, who is attentive and careful, who is absorbed in good activities develops the YELLOW pistil / Padma leshya.

A man who avoids two types of evil meditation, but engages himself in auspicious thoughts , Dharma and Sukla dhyana/meditation, who controls his senses develops the WHITE leshya.

The blue, black, grey leshyas are sinful types and the soul of such people are born in miserable and low types of existence.

The red, yellow and white leshyas are good and auspicious types and persons with such colour leshyas attain a good form of existence.

Xxx

Ten years ago, I wrote about the similarities between Mayan and Hindu cultures. And one of them is about their approach to colours:

“Hindus, Jains, Buddhists attribute four different colours to East, South, West and North. Mayas follow it.Maya colours :East-red, South- yellow, West- black, North- white. It is slightly different from Buddhists and Hindus. Shiva’s five faces are attributed with colours. Buddhists colours for directions was even mentioned by a Muslim traveller like Albiruni. Mahabharata attributes four colours for four Yugas (white,yellow,red and black)”.

So ,we know that Hindus, Buddhists, South and Central Americans Mayans took colours seriously and attributed them to directions or faces of Lord Shiva or Yugas (eras)

Linguists say that ancient people don’t have many words for colours. In some cultures they could say white and black only. In some other cultures they use the word of a fruit or flower to denote colour e.g. Rose, Orange

In short more the colours, more advanced is that people or community. Hindus have been using many colours from the days of Rig Veda. Sanskrit and Tamil literature have lot of references to colours. ( I submitted two research articles in World Tamil Conference held in Thanjavur in 1995; Colours in Sangam Tamil literature and Numbers in Sangam Tamil Literature)

 It is interesting to know that Hindus are the one who call their gods with colourful names Lord Krishna (Mr Black), Goddess Swehta/ Sarasvati (Miss White). Also, Peetambaradhari (Mr Yellow Shirt= Lord Krishna), Neelambharadhari (Mr Blue shirt= Lord Balarama; he is also called Mr White)

Hindus were the one who allocated colour coded seats in Theatres 2000 years ago (Read my articles on Bharatanatya Sastra).

Xxx

MY THOUGHTS ON JAIN COLOURS

Jains divided people on Mental colours; but Lord Krishna divided people on Satva, Rajas, Tamas types in Bhagavad Gita. Hindu ascetics believe in auras around men. Auras are the light or quality or atmosphere produced by a person; it is seen by Hindu ascetics, but invisible to normal men. When an ascetic is approached by a person, the ascetic sees it and blesses him or her accordingly. The sum total of one’s positive or negative energy is seen by them in colourful auras; probably that is the reason Jains have a chapter on Lehyas in their scripture.

Source :- The Teachings of Lord Mahavira , Pandit Dhirajlal Shah, Translated by N V Vaidya, 1967 (with my inputs)

–subham—

Tags- Jains, Colours, Aura, Leshya, story of six travellers, fruit tree