ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை—2 (Post No.11,074)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 11,074

Date uploaded in London – 2 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உதாரணத்துக்கு கொட்டாம்பட்டி கருப்பையப் பாவலரின் (19-ம் நூற்றாண்டு) தனிப்பாடல் ஒன்றைப் பார்ப்போம். அவர் இயற்றியப் பாடலின் மூலம் இதோ… (பார்க்க, சித்திரக்கவிக் களஞ்சியம், வ.ஜெயதேவன், சென்னைப் பல்கலைக் கழகம்)

திருமயிலை வான்மியூர் முகிலையென சாயற்

       றிகழ்கோதைத் திருவல்லிக் கேணிலமை யுற்ற

  வொருமுல்லை வாயினகை யாலங்காட் டுவிழி

       யொற்றியூர் வதவசமோ வெனநொந்துன் மயலால்

  வருமணிமே கலைகாஞ்சித் துகில்வளைகள் நழுவ

       மலைத்தண்ணா மலைமுலையின் வார்கிழிய வந்தாள்

  தருமதுரை யேசெந்தில் வேலரசே யன்னா

       டனைப்புலியூ ருக்கனுப்பிற் சார்பாக்க முனதே

மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பல ஊர்ப்பெயர்கள் இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் இதிலுள்ளச் சொற்களை வேறுபடுத்திப் பார்த்தோமானால் கிடைப்பதோ வேறு பொருள்.

அதைக் காண்போம்

   திரு மயிலை வான் மி ஊர் முகிலை அன சாயல்

      திகழ் கோதை திருவல் இக்கு ஏணில் ஐமை உற்ற

  ஒரு முல்லை வாயின்நகை ஆலம் காட்டும் விழி

      ஒற்றி ஊர்வது அவசமோ என நொந்து உன் மயலால்

  வரு மணி மேகலை காஞ்சித் துகில் வளைகள் நழுவ

      மலைத்து அண்ணா மலை முலையின் வார் கிழிய வந்தாள்

  தரும துரையே! செந்தில் வேல் அரசே! அன்னாள்

      தனைப்புலி ஊருக்கு அனுப்பில் சார்பு ஆக்கம் உனதே

பத உரை : தரும துரையே= தர்ம வழியில் செல்லும் தலைவனே, செந்தில் வேல் அரசே=திருச்செந்தூரில் அமர்ந்திருக்கும் வேலாயுதக் கடவுளே,

திரு மயிலை அன சாயல்=பார்ப்பவர் மனதைக் கவரும் மயிலின் மென்மைத் தோற்றத்தையும், மி வான்= மேலே ஆகாயத்தில், ஊர்முகில்=தவழ்கின்ற மேகத்தின்

ஐ=எழில், அழகு, திகழ்=பெற்று விளங்கும், கோதை=கூந்தலையும், முல்லைவாயின் நகை=முல்லை அரும்புகளின் வரிசையைப் போன்ற புன்முறுவலையும், ஆலம் காட்டும் விழி=விஷத்தையொத்த கருமை நிறத்தாலும், எதிராளியைக் கவர்ந்துத் துன்புறுத்தும் திறமையுடைய, கண்களைக் கொண்டவளும்,ஒரு திரு=லட்சுமி தேவி போன்ற ஓர் அழகி, உன் மயலால்=உன் மீது கொண்ட காதலால், வல் இக்கு= வலிமையானக் கரும்பு, ஏணில்=வில்லிலிருந்து மன்மதன் அம்பு எய்வதால், ஐமை=தளர்ச்சி, உற்று=அடைந்து, வரும் மணிமேகலை காஞ்சி துகில் வளைகள் நழுவ=இரத்தினங்களாலான மேகலை,காஞ்சி ஆகிய இடையணிகளும்,சேலையும், கைவளையல்களும் நழுவி விழ, ஒற்றி ஊர்வது அவசமோ என நொந்து=உன்னை நெருங்கித் தழுவுவது தன் திறமைக்கு அப்பாற்பட்டச் செயலோ என்று எண்ணி வருந்தி, அண்ணா=மேற்புறம் கட்டப்பட்டுள்ள, மல்=மெல்லிய இழைகளால் நெய்த , ஐ=அழகிய, முலையின்= ஒன்றோடொன்று நெருங்கி மோதுகின்ற மார்பகங்களின்,

வார் கிழிய= (ஏக்கப் பெருமூச்சால்) மார் கச்சு கிழிந்துவிடவும், மலைத்து வந்தாள்= என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் உன்னிடம் வந்துள்ளாள்,

அன்னாள்=அத்தகைய மங்கையை, தனைப்புலி= அரவணைத்து உன்னுடையவள் ஆக்கிக் கொண்டு, ஊருக்கு அனுப்பில்=அவளது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பா யெனில், உனது சார்பு=அவள் உனக்குப் பொருத்தமான, ஏ =அரியப் பொக்கிஷமாக, ஆக்கம்= விளங்குவாள்.

காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் மேனி அழகை வர்ணிக்கும் பாவலர், அவள் இருக்கும் அவல நிலையைச் சொல்கிறார்.

அணிந்திருக்கும் புடவை, வளையல், இடையணிகள் நழுவி விழ, ஏக்கப் பெருமூச் சால் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் நகில் (முலை) களின் மேலுள்ள மெல் லிய நூலிழைகளால் நெய்த மார்புக்கச்சு கிழிந்து விட, அந்நிலையில் தலைவனை தழுவி அணைப்பது ஏற்புடையது ஆகுமா எனத் திகைக்கிறாளாம். அந்த மங்கையை மனதார தாரமாக ஏற்றுக் கொண்டு அவளைத் தலைவன் அவள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தால் அவனுக்குப் பொருத்தப் பெருஞ்செல்வமாக விளங்குவாள்….. என்பது இதன் பொருள்.

இச்செய்யுளில் திருமயிலை, (திரு)வான்மியூர், திருவல்லிக்கேணி, (திரு) முல்லை வாயில், (திரு) ஆலங்காடு, (திரு)ஓற்றியூர், காஞ்சி, (திரு)ஆண்ணாமலை, மதுரை, புலியூர்(தில்லை), ஆகியத் தலப் பெயர்கள், வெளிப்படையாகத் தன் பொருளில் அல்லாமல் மறைமுகமாக வேறு பொருளில் கையாளப் பட்டுள்ளதால் நாமாந்திரப் பிரகேளிகை ஆயிற்று! பாவலரின் சொல்வன்மையை என்னவென்று சொல்வது!

இதோ இன்னுமொன்று……..

மல்லை எனும் மன்னாகம் புலவர் நமச்சிவாய பிள்ளை அவர்கள் இயற்றிய ஒரு பாடல்…

    முன்னீ வினைப்பருத் தித் துறை மேவிய மூளையர்தா

    மன்னாரில் வாழ்விற் றனங் கிளப் பார்புல வஞ்சரைமெய்

    துன்னாலை யிட்டு வறுத்தலை மேவிச் சுழிபுரம் போய்

    பன்னா லையணி யத்வாம் புலத்திற் பழகுவரே.

முற்பிறவியில் செய்த புண்ணிய மேலீட்டை உடைய புத்திமான்கள் இப்பிறவியிலே இல்லற வாழ்வில் நாட்டமில்லாதவர்களாய்ப் புலன்களை அடக்கி, உடம்பை நீங்கிச் சிவத்துடன் ஐக்கியமாவார்கள் என்பதே இப்பாடலின் பொருள். இதில் சுட்டப்பட்டுள்ள ஊர்களின் மூலம் எடுத்துக் காட்டப்பெறும் தத்துவப் பேருண்மையைக் காண்போம்…

பத உரை: முன்னீவினை பருத்து=முற்பிறவியில் செய்த நல்வினை அதிகரித்து, இத்துறை மேவிய மூளையர்= இப்பூமியில் பிறந்துள்ளப் புத்திசாலி மகான்கள், மன்னார் இல்வாழ்வில்= இல்லற வாழ்க்கையில் ஈடுபட மாட்டார்கள், தனங்கிளப்பார்= பொருளீட்ட மாட்டார்கள், புலவஞ்சரை=நம்மை ஆட்டுவிக்கும் ஐம்புலன்களாகியப் பாவிகளை, மெய்துன் ஆலையிட்டு= ஞானமெனும்

இயந்திரத்தில், வறுத்தலை மேவி= போட்டு வறுத்தெடுத்து, சுழிபுரம் போய்= தீயகுணங்களுக்கு இடமான இவ்வுடம்பு நீங்கப் பெற்று, பன் ஆலயம் நண்ணி= அவர்களுடைய ஆன்மா சிவத்தில் ஒன்றிணைந்து, அத்வாம்புலத்திற் பழகுவர்= இரண்டறக் கலப்பதாகிய அத்துவைத வெளியை அடைவர்.

மேற்கண்டப் பாடலில், ஈவினை, பருத்தித்துறை, மூளாய், மன்னார், தனங்கிளப்பு, துன்னாலை, வறுத்தலை, சுழிபுரம், பன்னாலை, அத்துவாம்புலம் ஆகிய ஊர்ப்பெயர் களும், இடப்பெயர்களும் கொடுக்கப் பட்டுள்ளன.  முன்+ஈவினை= முன்னீவினை ஆகியது. பருத்தித்துறை=பருத்து+இத்துறை எனப் பிரிந்துள்ளது. மூளாய்= மூளை எனத் திரிபுற்றுள்ளது.

இப்படிப் பல செய்யுட்களைப் பாவலர் பெருமக்கள் நாமாந்திர பிரகேளிகைஅணியில் யாத்திருக்கிறார்கள். அவை எல்லாமே படித்து ரசிக்கத் தக்கவை. தமிழகக் கவிஞர் களைப் பாராட்டும் இவ்வேளையில் அண்டை நாடான ஈழத்துவாழ் யாழ்ப்பாணத்துக் கவிஞர்களின் கை-சொற் வண்ணத்தை இப் பிரகேளிகை அணியலங்காரத்தில் இயற் றப் பெற்றுள்ளப் பிரசித்தியானச் சில பாடல் விளக்கங்களுடன் இப்பகுதியைஅடுத்தப் பதிவில் நிறைவு செய்வோம்.

 (தொடரும்)

tags–  Tags – நாமாந்திர , பிரகேளிகை, கொட்டாம்பட்டி,  கருப்பையப் பாவல

எண்ணெய் வளம் கொண்ட துபாய் (Post.11,073)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,073

Date uploaded in London – –    2 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

22-6-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

உலக இயக்கத்திற்கு உதவும் நாடு!

ச. நாகராஜன்

எண்ணெய் வளம் கொண்ட துபாய்

இன்று உலகில் எத்தனை வாகனங்கள் உள்ளன தெரியுமா?

132 கோடி கார்கள், லாரிகள், பஸ்கள் உள்ளன.

விமானப் பயணம் என்று எடுத்துக் கொண்டாலோ உலகில் ஒரு நாளைக்கு 60 லட்சம் பேர் விமானம் மூலம் பயணிக்கின்றனர். புகைவண்டியில் மட்டும் உலகெங்கும் ஒரு நாளைக்குப் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சம்!

பெட்ரோல், டீஸல், ஒய்ட் பெட்ரொல் இல்லையெனில் என்ன ஆகும்? ஒரே ஒரு கணம் யோசித்துப் பார்ப்போம்! கார், லாரி, பஸ், ரயில், விமானம் எதுவும் இயங்காது. அலுவலகம் செல்ல முடியாது, நினைத்த ஊருக்குப் போக முடியாது, நாடு விட்டு நாடு போக முடியாது. உலகம் ஸ்தம்பித்து விடும்!

இது தான் இன்றைய நிலைமை. ஆக உலக இயக்கத்திற்குத் தேவை இந்த படிம எரிபொருள்களே! இவற்றைக் கொடுத்து உலக இயக்கத்திற்கு உதவும் நாடு தான் துபாய்!

எண்ணெய் வளம் மிகுந்த துபாய் உலகின் மூன்றாவது பெரும் பணக்கார நாடு! இன்னும் சுமார் 299 ஆண்டுகளுக்கு இது எண்ணெய் வளத்தைக் கொண்டிருக்கும். அதாவது 30 மில்லியன் பேரல் எண்ணெயை இது உலகிற்குத் தர வல்லது!

இன்று 12 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களே உள்ளன. ஆக வரும் காலத்திலும் படிம எரிபொருள் உலகிற்கு போக்குவரத்திற்கு உதவும் இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

வானளாவிய கட்டிடங்கள்

எமிரேட் ஆஃப் துபாயின் தலைநகரமாகத் திகழும் துபாய் மத்திய கிழக்கில் உள்ளது.13.5 சதுர மைல் பரப்பைக் கொண்ட இதன் ஜனத்தொகை 34.9 லட்சம். 1971ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி அபுதாபி மற்றும் இதர ஐந்து எமிரேட்ஸுடன் இணைந்து துபாய் யுனைடெட் அராப் எமிரேட்ஸை உருவாக்கியது. 1973இல் பொது நாணயமாக யுனைடெட் அராப் எமிரேட்ஸ் திரம் திகழ ஆரம்பித்தது. ஒரு திரத்தின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ 21.24.

வெறும் பாலைவனமாகத் திகழ்ந்த பூமியில் கறுப்புத் தங்கம் எனப்படும் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் துபாயின் செல்வ வளமே நம்ப முடியாத அளவு சிகரத்தைத் தொட்டது. இப்போதோ

ஹாங்காங், சிங்கப்பூரை ஒப்பிட்டுப் பார்க்கும் அளவு இருப்பதோடு, துபாய் நாளுக்கு நாள் வளர்ந்து  கொண்டே போகிறது.

வானளாவிய கட்டிடங்கள் எழுந்து கொண்டே இருக்க கட்டிடப் பணிகளுக்காக உலகில் உள்ள கிரேன்களில் 25 சதவிகிதம் துபாயில் இருக்க ஆரம்பித்தன. இன்று சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய உலக நகரமாக துபாய் அமைந்து விட்டது.

சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலிருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் துபாயை விமானம் மூலம் அடைந்து விடலாம்.

துபாயின் சராசரி உஷ்ணநிலை 33 டிகிரி செல்ஸியஸ். 

துபாய் வரலாறு

துபாயின் பதிவு செய்யப்பட்ட முதல் ஆவணம் 1095ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அராபிய பூகோள நிபுணர் அப் அப்துல்லா அல் பக்ரி, துபாயைத் தனது பூகோள நூலில் குறிப்பிட்டுள்ளார். வெனிஷிய முத்து வியாபாரியான காஸ்பரோ பல்பி துபாய்க்கு 1580ஆம் ஆண்டு வந்து இங்குள்ள முத்து தொழிலைப் பார்த்துத் தனது குறிப்பேட்டில் குறித்துள்ளார். என்றாலும் கூட துபாய் நகர் பற்றிய அதிகாரபூர்வமான ஆவணம் 1799லிருந்தே தொடங்குகிறது.

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் துபாயில் பார்த்து மகிழப் பல்வேறு இடங்கள் உள்ளன.

பர்ஜ் கலிஃபா

கலிபா கோபுரம் என்னும் பொருள் தரும் பர்ஜ் கலிஃபா உலகின் மிக உயரமான கட்டிடம் ஆகும். 163 மாடிகளைக் கொண்டுள்ள இதன் உயரம் 2716 அடியாகும். கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்று விட்ட இந்த மாபெரும் கட்டிடம் அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் பில்டிங் போல இரு மடங்கு உயரமும் ஈபில் டவர் போல் மூன்று மடங்கு உயரமும் கொண்டது. 26000 கண்ணாடிகள் வெளிப்புறத்தை அழகு படுத்த, 12000க்கும் மேற்பட்டோர் உலகெங்கிலுமிருந்து வந்து இதை அழகுறக் கட்டி முடித்தனர். இதைப் பார்வையிட கட்டணமும் குறிப்பிட்ட நேரமும் உண்டு. 125 மாடிகள் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். அதிவேகமாக உயர எழும்பும் லிப்டும் இங்கு அதிசயமான ஒன்று.

ஒட்டக சவாரி

வேறு எங்கும் அனுபவிக்க முடியாத பாலைவன ஒட்டக சவாரி துபாயில் பிரசித்தி பெற்ற ஒன்று. காலையில் கிளம்பி மணல் குன்றுகளிடையே பயணம் செய்யலாம். பின்னர் பாலைவனத்தில் பழைய  காலத்தில் பயணம் செய்தபடி ஒட்டகத்தில் சவாரி செய்து மகிழலாம்.  மணலில் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது ஒரு கண் கொள்ளாக் காட்சி!

நான்கு சக்கரங்கள் பொருத்தப்பட்ட க்வாட் பைக் எனப்படும் பைக் சவாரியும் இங்கு உண்டு.

துபாய் மால்

பர்ஜ் கலிஃபாவிற்கு அடுத்தாற் போல உள்ள துபாய் மால் உலகின் மிகப் பெரிய மால் ஆகும். பத்து லட்சம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இதில் 1200க்கும் மேற்பட்ட கடைகளும் நூற்றுக்கணக்கான உணவு விடுதிகளும் இரு பெரிய ஷாப்பிங் செண்டர்களும் உள்ளன. துபாயில் தங்கம் வாங்குவது ஒரு சுகமான அனுபவம். சொக்கத் தங்கத்தை இந்த மாலில் கோல்ட் சோக்கில் (தங்கச் சந்தை என்று பொருள்)வாங்க முடியும். அத்துடன் நீருக்கடியில் உள்ள அண்டர்வாட்டர் ஜு, அக்வேரியம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். இங்குள்ள ஐஸ் ரிங், ஸ்கேட்டிங் செய்பவர்களுக்கு உரிய இடம் ஆகும். சினிமா காம்ப்ளக்ஸில் திரைப்படங்களையும் பார்க்க முடியும்.

பாம் ஜுமேரா

பனை மர வடிவத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட தீவு பாம் ஜுமேரா. சுமார் 326 கோடி கன அடி மணல் பெர்ஸியன் வளைகுடா பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டு இங்கு பரப்பப்பட்டது. சுமார் 50 மைல் நீள கடற்கரை பகுதி உருவானது. பனை மரத்தைப் போலவே அச்சு அசலாக இந்தத் தீவு இருக்க வேண்டும் என்பதால் ஜிபிஎஸ் சாடலைட்டுகளின் உதவி நாடப்பட்டு மணலைத் தூவும் பணி மேற்கொள்ளப்பட்டது. 12000 பனை மரங்களும் இங்கு நடப்பட்டன. இங்கு தீவுக்கு வர மானோரயில் வசதியும் உண்டு. விண்வெளியிலிருந்து பாம் ஜுமேராவைப் பார்க்க முடியும். விண்வெளி வீரரான கமாண்டர் லெராய் சியாவோ பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து 2005ஆம் ஆண்டு இந்தத் தீவை படம் பிடித்துக் காண்பித்தார்.

50 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் இங்கு வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதை விட மூன்று மடங்கு அதிகப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இது நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள கடற்கரைகள் மிக ரம்யமானவை. பாதுகாப்பானவை. சுறாமீன்கள் இங்கு உண்டு என்றாலும் மனிதர்களைத் தாக்கும் ராக்ஷஸ சுறாமீன்களாக இவை இல்லை. ஆகவே பயப்படாமல் பார்க்கலாம். நீச்சலுக்கான வசதிகளும் இந்தத் தீவில் உண்டு. இங்குள்ள கடல் நீர் சுத்தமானது என்ற பெயரைப் பெற்றுள்ளது.

லெகோலேண்ட்

அறுபதுக்கும் மேற்பட்ட ரைடுகளும் நீர்வீழ்ச்சிகளும் கொண்ட லெகோ லேண்ட் 30 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். இது 3 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கவரும் இடம்; ஆகவே மழலைப் பட்டாளமும் சிறுவர், சிறுமியரும் குழுமும் இடமாக கலகலப்பாக எப்போதுமே திகழ்கிறது லெகோலேண்ட்.

நடன நீரூற்று

துபாயில் பார்க்க வேண்டிய தனித்துவம் மிக்க ஒரு காட்சி நடன நீரூற்றுக் காட்சி. செயற்கையாக அமைக்கப்பட்ட இந்த நீரூற்றில் உயரமாகவும் தாழ்ந்தும் வளைந்தும் நெளிந்தும் எழும்பும் நீரானது நடனமாடும். இந்த நடனக் காட்சி பார்ப்போரை மலைக்க வைக்கும். துபாய் மாலை ஒட்டி அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா லேக் என்னுமிடத்தில் இந்த நீரூற்று அமைந்துள்ளது. சுமார் 500 அடி உயரம் வரை நீரூற்று எழும்பி நடனமாடும். 6000க்கும் மேற்பட்ட ஒளிவிளக்குகள் இந்தப் பகுதியை அலங்கரிக்கின்றன. இசைப் பாடல்கள் ஒலிக்க அதற்கேற்ப குதூகலத்துடன் ஆடும் நீர் நடனம் அதிசயங்களுள் ஒன்று.

துபாய் க்ரீக்

துபாயின் பாரம்பரியம் மிக்க இடம் க்ரீக். வெவ்வேறு வடிவமைப்பில் காட்சி தரும் சுமார் இருபது அடி நீளமுள்ள படகுகளில் க்ரீக் நீர்நிலையில் சென்று க்ரீக்கை பார்வையிடலாம்.

இங்கு துபாய் அருங்காட்சியகம் உள்ளது. ஏராளமான கடைகளும் இந்தப் பகுதியில் உள்ளது.

துபாய் மெட்ரோ

துபாய்க்கு வருகை புரிபவர்களும் துபாயிலேயே வசிப்பவர்களும் பெரிதும் புகழும் ஒன்று துபாய் மெட்ரோ.

தானியங்கி சாதனங்களுடன் மிகத் திறம்பட இயங்கும் மெட்ரோ போக்குவரத்து 2009இல் துவங்கப்பட்டது. ரெட் மற்றும் க்ரீன் ஆகிய இரு லைன்களில் 49 ஸ்டேஷன்களைக் கொண்டுள்ள மெட்ரோ போக்குவரத்து ஒரு நாளக்கு மூன்றரை லட்சம் பயணிகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தன் சேவையை வழங்குகிறது. இதில் பயணம் செய்வதால் ஒரு இடத்திற்கு மிக சீக்கிரத்தில் செல்ல முடிகிறது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

ஏராளமான கடைப் பகுதிகள், பூங்காங்கள், செயற்கை நீரூற்றுகள், பாரம்பரியமான பழைய காலக் கட்டிடங்கள் ஆகியவை ஆங்காங்கே உள்ளதால் நாம் துபாயில் தங்க இருக்கும் காலத்திற்குத் தக்கபடி, அந்தந்தப் பகுதியில் கால்நடையாகச் சென்று பார்க்கலாம்.

தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்

துபாயில் சட்ட ஒழுங்கு மிகச் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதால் துபாய் செல்வதற்கு முன்னர் அங்குள்ள அடிப்படை விதிமுறைகளை சுற்றுலா செல்வோர் தெரிந்து கொள்ளல் அவசியம். பெண்களும் ஆண்களும் உடை அணிவதில் கவனம் செலுத்தி மற்றவர்கள் மதிக்கத்தக்க விதத்தில் கண்ணியமாக உடை அணிதல் வேண்டும். பொது இடங்களில் மது அருந்துதல் புகை பிடித்தல் கூடாது. மேலை நாடுகளில் இருப்பது போல பொது இடங்களில் முத்தமிடுதல் கண்டிப்பாகக் கூடாது. மற்றவர்களின் அனுமதியின்றி யாரையும் போட்டோ எடுத்தல் கூடாது. இன்ன பிற விதிமுறைகளை அறிந்து அதற்குத் தக நடந்து கொள்ள வேண்டும்.

துபாயில் பயணிகள் பயமின்றி நடமாடலாம். குற்றங்கள் மிகக் குறைவாக இருக்கும் நாடு இது.

துபாயைப் பற்றிச் சொல்லுங்கள் என்றால் அங்கு பயணம் செய்தவர்கள் கூறுவது Dubai! UNIQUE, AMAZING! – துபாயா,  தனித்தன்மை வாய்ந்தது, பிரமிக்க வைப்பது!

***

Tag-  துபாய்

IS WHITE COLOUR GOOD OR BAD? (Post No.11,072)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,072

Date uploaded in London – –    1 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Is white  colourless?

No. it consists of seven colours which you see in Rainbows. If you send a white ray through a prism, you can see all the seven colours.

So one can say white means colourless or a combination of seven colours.

In the same way, white is used for good and bad things. It has two different faces!

WHITE COLOUR has both good and bad connotation in many cultures.

The word white came from Sanskrit and Tamil. This confirms my hypothesis that all ancient languages in the world originate from India. Hindus spread the culture in the world.

Swheta in Sanskrit becomes (s)white in English and other languages.

Vellai in Tamil becomes Byely in Russian and other languages.

All of us know that B=V; oldest Tamil book Tolkappiam changed Sanskrit uPama into uVama in Tamil.

Bandi in Sangam literature becomes Vandi in modern Tamil

(Upama= simile, Bandi=cart)

One can trace back any ancient word to Sanskrit or Tamil. That confirms Lord Shiva gave both the languages to the humanity.

Xxx

Tamil Poet Valluvar condemns White!

Tamil poet Tiru valluvar used the colour word VENMAI/white for absolute foolishness; folly of all follies. See Tiruk Kural 844.

The folly of all follies is the arrogant presumption,

Of the fool, that he is wise- Kural 844

(The very word folly is nothing but Tamil word vellai/white; FOLLY= VELLAI

Linguists know v/w= p/f/b)

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.-844

வெண்மை/White= Folly of all follies

XXX

But the same Valluvar used the white colour in a different way in Kural 714.

It is proper to be radiant  before the brilliant, but before simple WHITEfolk,

One will do well to assume colour of slaked lime – Kural 714

What he says is ‘display your intelligence in front of an assembly of learned men.

But when you speak to innocent, ordinary people, you become the ‘colour of white lime’

Vaan suthai vannam = colour of slaked lime.

‘Be mortar white become illiterate’

(Slaked lime is a mixture of sand and lime= mortar).

Vannam is Sanskrit word varnam.

According to  Valluvar here, colour white stands for simple and direct speech.

In Tiru Valluvar’s days (Jain period in Tamil Nadu; around 4th or 5th centuries CE), Jains had two sects: Whiteclad sect (Svetambarar) and Skyclad sect (Dikambarar).

Probably Valluvar supported Dik (Direction, Sky) Ambarar ( clothes, dress) .

Digambarar did not wear anything; they were naked saints. For them sky is the dress/cloth.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.-714

வான்சுதை வண்ணம்/colour of mortar or slaked lime.

Xxx

In Tamil white also means innocence; ‘as white as milk’ is a saying in Tamil.

He is so innocent that he thinks ‘all that is white is milk’.

Famous Tamil poetess Avvaiyar said

White folks have no bad thoughts (Whites are of guileless nature)

Here she did not mean white skinned Europeans.

White is one who is of guileless nature; without deception.

வெள்ளைக்கில்லை  கள்ளச்சிந்தை – கொன்றைவேந்தன்

வெள்ளை/white folk

Xxx

White in Sanskrit

White stands for Fame, Purity and Victorious in Hindu culture.

Vedic Brahmins wear only white clothes.

All the priests in temples wear only pure white clothes.

Parsee and Christian priests followed Brahmins.

Pythagoras , Greek philosopher of Sixth century BCE , who mastered Hinduism, spread all the Hindu thoughts to the West.

Pythagoras recommended that singers of sacred hymns should wear white. He might have seen Vedic Pundits. Till this day, those who practise and preach Vedas wear pure white cloth.

Popes also followed Hindu priests.

Ven Kotrak Kudai, the white umbrella, signified a Great Emperor. It is in all the ancient Sanskrit and Tamil literature. Apart from kings, only Vedic Brahmins, who did Soma Yaga were given White Umbrellas (See Kanchi Shankaracharya’s Vijaya Yatra book)

Tamil kings followed all the customs of their North Indian counterparts including Rajasuya, Asvamedha Yagas, erecting Yupa pillars and constructing Eagle shaped Yajna Kundas/Fire altars ( see my earlier articles for the details)

Xxxx

WHITE in Russian

In Russian, the adjective white is frequently used to denote excellence.

The Russian for white ‘byely’ (derived from Tamil Vellay) is also found in words and phrases for delirium tremens, a hut with a chimney, a cataract in the eye, foam and a dandy .

xxx

Melville’s English novel, Moby Dick entitled ‘The Whiteness of Whale’ described white colour differently.

In its third paragraph, which must be one of the longest sentences in literature, Melville lists examples from a variety of cultures of whiteness as emblematic of virtue, innocence, beauty, goodness, honour and the division of the human race itself, giving the Whiteman  ideal master ship over every dusky tribe.

But the paragraph, or sentence ends, ‘yet for all those accumulated associations, with whatever is sweet, and honourable and sublime, there yet looks elusive something in the innermost idea of this hue, which strikes more of panic to the soul than the redness which affrights in blood’

And the chapter closes with the reflection that the ‘palsied universe lies before a leper’, and the image of the infidel (or the man who has ceased to believe in God), who ‘gazes blind at the monumental white shroud that wraps al the prospect around him.’

Xxx

The Holy Spirit is portrayed as a White Dove. At the same time, Ghosts are also portrayed wearing White Clothes.

White has this negative symbolic meaning, primarily because of its association with the ‘pallor of death’. In dreams ‘ a white horse is often linked to the notion or experience of death. The rider on a pale horse  appears in regions where death can intervene (Aeppli).

White flag stands for Peace.

In Chinese symbolic tradition, white is the colour of age, autumn, the West and misfortune, but also of virginity and purity. White is generally considered the Chinese colour of mourning.

In alchemy brightening or whitening is a sign of black matter transformed into the philosopher’s stone.

Please note Pale, Pallor are also derived from Vellai in Tamil (V=P)

Source Books:-

Tirukkural by Tiruvalluvar

Kondraiventhan by Avvaiyar

Tamil Proverbs Book

Th Book of Babel- Words and the Way we see it, Nigel Lewis, Viking, 1994

Dictionary of Symbolism, Hans Biedermann, Translated by James Hulbert, Facts on File, 1992

Xxx subham xxx

Tags – white, vellai, Moby Dick, Sveta, Avvaiyar,Tiruvalluvar, Tirukkural

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 61 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,071)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,071

Date uploaded in London – –    1 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 61 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

வர்ததே 5-26  கிட்டுகின்றது

வர்தந்தே 3-28 இயங்குகின்றன

வர்தமானானி 7-26  நிகழ்வன

வர்தே 3-22 முயன்று கொண்டே

வர்தேத 6-6   உள்ளவன் ஆவான்

வர்தேயம் 3-23 முயலுதல்

வர்த்ம 3-23 நெறியை

வர்ஷம் 9-19  மழையை

வசம் 3-34 வசமாக

வசாத் 9-8 வசப்பட்டதால்

வசீ 5-13  இந்திரியங்களை வசப்படுத்திய

வசே 2-61 தன் வசப்பட்டனவோ

வஸ்யாத்மனா 6-36  உள்ளம் வசப்பட்டு

வஸவஹ 11-22  வசுக்கள்

வஸூனாம்  10-23  வசுக்களில்

வஹாமி  9-22 தாங்குகின்றேன்

வஹ்னிஹி 3-38 தீயானது

வஹ  3-10 உங்களுக்கு

வாக் 10-34 வாக் தேவதையான ஸரஸ்வதியும்

வாக்யம் 1-20 வார்த்தையை

வாக்யேன  3-2  வாக்கினால்

வாங்மயம் 17-15 வாக்காற் செய்யும் (தபம்)

வாசம் 2-42 வார்த்தைகள்

வாச்யம் 18-67  வாக்கு

வாதஹ 10-32 வாதமும்

வாதினஹ 2-42 வாதம் செய்பவராய்

வாயுஹு 2-67 காற்றானது

வாயோஹோ 6-34   காற்றை அடக்குதல்

வார்ஷ்னேய 1-41 வ்ருஷ்ணி குலத்தில் உதித்த கிருஷ்ணா

வாஸவஹ 10-22 இந்திரன்       30 words

வாஸஹ 1-44  வாசம், வாழ்வு

வாஸாம்ஸி 2-22 துணிகளை

வாஸுகி  10-28 வாசுகி என்னும் பாம்பு

வாஸுதேவஸ்ய  18-74  வாசுதேவனுக்கும்

வாஸுதேவஹ 7-19 வாசுதேவன்/ கிருஷ்ணன்

விகம்பிதும் 2-31 பின்னிடுவதற்கு , பின்வாங்குவதற்கு

விகர்ணஹ 1-8 விகர்ணன் , துரியோதனன் தம்பி

விகர்மணஹ 4-17  விலக்கப்பட்ட கர்மம்

விகாரான் 13-19 வெவ்வேறான தோற்றங்களும்

விக்ராந்தஹ 1-6 பலவான், வெற்றிவீரன்

விகதகல்மஷஹ  6-28 பாவம் தேய்ந்த , குற்றமற்ற

விகதபீஹி 6-14    அச்சம் ஒழிந்தவனாய்

விகதஜ்வரஹ 3-30 மனக்கொதிப்பு நீங்கியவனாய்

விகதஸ்ப்ருஹஹ 2-56 ஆசை எழாதவனாய்

விகதஹ 11-1 ஒழிந்துபோயிற்று

விகத  இச்சா பய க்ரோதஹ 5-28 ஆசை, பயம், கோபம் அற்றவனாய்

விகுணஹ 18-47, 3-35 குணமற்ற

விசக்ஷணாஹா 18-2 ஆழ்ந்த விவேகிகள்

விசாலயேத்  3-29 நிலைகுலையச் செய்தல்

விசாலயதே 6-22   மனம் சலித்தல்   50 words

விசேதஸஹ  9-12 சிதறிப்போன அறிவுடையவர்கள்

விஜயம் 1-32 வெற்றியை

விஜயஹ 18-78  வெற்றி

விஜானதஹ 2-46 கற்றுணர்ந்த

விஜானீ தஹ 2-19 உண்மையை உணர்ந்தவர்

விஜானீயாம்  4-4  எப்படி அறிவது ? ஏற்கமுடியும் ?

விஜிதாத்மா 5-7  உடலை ஜயித்தவனும்

விஜிதேந்த்ரியஹ 6-8  இந்திரியங்களை முற்றும் ஜயித்தவனாய்

விக்ஞாதும்  11-31 அறிவதற்கு

விக்ஞான ஸஹிதம்  9-1 விக்ஞானத்துடன் கூடிய

விக்ஞானம் 18-42  அனுபவம், சுவாநுபவ ஞானம்

விக்ஞாய 13-18  நன்குணர்ந்து

விததாஹா 4-32  விரிந்துள்ளன

வித்தேசஹ 10-23 குபேரன்       64 words

64 words added from part 61 of Gita Index

Tags- Gita Index 61,

 ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை—1 (Post No.11,070)

WRITTEN BY B. Kannan, Delhi

Post No. 11,070

Date uploaded in London – –    1 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை—1

      Written By B.KANNAN, NEW DELHI

அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இந்தப் பகுதியில் ஊர்ப்பெயர், இடப்பெயர் ஆகியவற்றைக் கொண்டு எப்படிப் பாவலர்கள் அரிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக நாமாந்திரிதை அணி மூலமாக எடுத்திக் காட்டியுள்ளார்கள் என்பதைப் பார்க்கப்  போகிறோம்.

இதற்கு முன்பு சொல்லியதைச் சற்று கவனத்தில் கொள்வதற்காக மீண்டும் கூற நினைக்கிறேன். ஓர் இலக்கிய ஆக்கத்தில் அமைக்கப்படும் சொற்கள் வெளிப் படையாக ஒரு பொருளைக் குறித்து நிற்க, அகத்தே வேறு பொருளைச் சுட்டி நிற்கும் பண்பு புலவர்கள் கையாளும் இலக்கிய உத்தியாகும். இதுவே பிரேளிகை அணியின் ஓர் அங்கமான நாமாந்திரிதை எனப்படும். நாம் முன்பே இதன் கீழ் பலசரக்கு,மற்றும் தின்பண்டங்கள் பற்றிய விவரங்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவ்வரிசையில் இப்போது ஊர்ப்பெயர்களின் பின்னணியில் புலவர்கள் எடுத் துரைக்கும் சமய-வேதாந்தக் கருத்துகளை அலசுவோம்.

அதற்கு முன் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் சில பிரேளிகைகளைக் காண்போமே…. 

தமிழில்:

நால் எழுத்துப் பூடு= (செடி) நடுவே நரம்பு இருக்கும். தலையும்,காலும், கடைச் சாதி.-மேலாக ஒட்டு முதல் எழுத்தும், ஓதும் மூன்றாம் எழுத்தும் விட்டால் பரமனுக்கு வீடு. அது எது?

விடை: புகையிலை. இலை காரம், கசக்கும். அதன் நடுவில் தடித்த நரம்பு உண்டு.

தலையும், காலும் = பு+லை= புலையன் சாதி. மேலும், முதல், மூன்றாம் எழுத்து களை நீக்கினால் வருவது ஈசனின் இருப்பிடமான கைலை மலை.

இந்தி மொழியில்:

साढ़े तीन अक्षर नाम में आये। यह एक बहुत अच्छा वृक्ष कहलाये।।

दवाइयों के यह काम आता फिर भी यह जंगल कहा जाता।।

சாடேதீன் அக்ஷர் நாம் மே ஆயே| யெஹ்(யெ) ஏக் பஹூத் அச்சா வ்ருக்ஷ் கஹ்லாயே| தவாய்யோங் கே யெ காம் ஆதா| ஃபிர் பீ யெ ஜங்கல் கஹா ஜாதா||

மூன்றரை எழுத்துகள் கொண்ட சொல். இது ஒரு மிகச் சிறந்த மரம் என்று புகழப் படுகிறது. நாட்டு வைத்தியத்தில் பயன்படும் பத்து மூலிகைகளில் ஒன்று. இருந்தாலும் இதைக் காட்டுமரம் (வனஸ்பதி) என்றே அழைக்கிறார்கள். அப்படியானால்  அது யார், சொல்லுங்களேன்!

விடை: गंभारी-(கம்பாரீ)– உமி தேக்கு, குமடி

சம்ஸ்கிருதம்:

ஓரே வகையான எழுத்துகள் பலவிதச் சொற்களுக்குப் பொருள் காட்டும் அணியை (அனுபிராஸ்) இங்குக் காணப் போகிறோம். தமிழில் இதை மோனை என்போம். பறவையினத்தின் சிறப்பைக் கவிஞர் தனக்கே உரிய கவிதை ஆற்றலுடன் எப்படி இச்சுலோகத்தில் அமைத்திருக்கிறார், பாருங்கள்.

तार तार तरेरेतैरुत्तरोत्तरतोरुतैः

रतार्ता तित्तिरी रौति तेएरे तेएरे तरौ तरौ

இங்கு கவிஞர் குறிப்பிடுவது ஆற்று உள்ளான் (SANDPIPER)பெண் பறவை. ஈர, மணற் பாங்கான ஆற்றங்கரை/ கடற்கரை அருகில் வசிக்கும். அலகின் விசேஷ உணர்திற னால் மணல், சேற்றில் தோண்டி புழு, பூச்சிகளைத் திண்ணும். இதனால்தான் இதற்கு SANDPIPER எனப் பெயர்.  துணைக்காக ஏங்கும் வேளையில், கரையிலும், மரங்களிலும் பறந்து சென்று அழைப்பு விடுக்கும். நீரில் முங்கி எழுந்து, படகு போல் வழுக்கிச் சென்று, ஈரமான நனைந்த வண்ணமய உடலுடன் (இனப்பெருக்கக் காலத்தில் நிறங்கள் மாறும்) பறந்து திரியும்.  அப்போது அது படிப்படியான ஏற்ற, இறக்கமுடன் கூடிய “கிறீச்” என்ற அழும் குரலில் ஒலியை எழப்பும். இதைத்தான்

மோனை அணியில் அழகாக விவரிக்கிறார் புலவர்.

तार तार =நீர்நிலைக் கரை / கிறீச் ஒலி, तेएरे= சுற்றிப் பறந்து, तरौ तरौ = தடாகக் கரை / மரங்கள், रतार्ता = முயற்சியில் முழு ஈடுபாடு, तित्तिरी = உள்ளான் பறவை, रौति = அழுகை முதல் வரியிலுள்ள மூன்றாவது சொல்லை இப்படிப் பிரிக்க வேண்டும்– தரை:, ஏதை:, உத்தரிட்டார்த்த:, உதை: இதன் பொருள் மேலே இரண்டாம் வரியில் உள்ளது.

புலவரின் இந்த அற்புத சொல்லாடலுடன் மேலே செல்வோம்………

தமிழ் மொழியின் சிறப்புகள் எனக் குறிப்பிடுவதில் அதன் இடப்பெயர்களும் அடங்கும். மொழி ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவது போல், எங்கே வரலாறு மௌனமாகி விடுகிறதோ அங்கே இடப் பெயர்களும், ஊர்ப்பெயர்களும் தம் வாய்த்திறந்துப் பேசத் தொடங்கி விடும்! ஆம், சங்ககாலத் தமிழக வரலாறு இவ்விஷயத்தில் மௌனம் சாதிப்பதைச் சங்கப் பாடல்கள் எடுத்துக் காட்டும் இடம்-ஊர்ப்பெயர்கள் தம் வாய் திறந்து பேசுகின்றன. புலவர்கள் அப்படிப் பாடும் போது அவற்றின் பொருளை நேர் முகமாகவும்,மறைமுகமாகவும் கொடுத்துள்ளனர். ஊர் அமைப்போடும், தொழிலோ டும் மக்கள் வாழ்க்கை முறையோடும் ஊர்ப்பெயர்கள் ஒன்றிணைந்துக் காணப்படு வதைச் சங்கநூல்களிலிருந்தே அறிய முடிகிறது. (பார்க்க, இலக்கியத்தில் ஊர்ப் பெயர்கள், ஆர். ஆளவந்தார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி சென்னை-600113)

உரையாசிரியர் நச்சினார்க்கினியர், ஊர்ப்பெயர்களின் விகுதியாக (SUFFIX) அமைந்த சொற்கள் குறிப்பிட்ட நிலத்திற்குரியவை என்றும், அந்நிலங்களின் பெயர்களிலேயே சில ஊர்ப்பெயர்கள் அமைந்திருப்பதையும், அவற்றின் பெருமை, செழுமைகளைப் பின்புலனாகக் கொண்டு தலைவன், தலைவியோரின் குணாதிசயங்களைப் புலவர்கள் மறைமுகமாகப் பாடியுள்ளனர் என்கிறார்.

அதாவது, முல்லைக் குரியது- பாடி,சேரி, பள்ளி. ஊர்-முல்லை மங்கலம், ஏணிச்சேரி, இலந்திகைப் பள்ளி

குறிஞ்சிக்குரியது– சிறுகுடி, குறிச்சி, குறிஞ்சிப் பாறை, ஆலங்குடி

மருதம்–ஊர். மருதத்தூர், முனையூர், விரியூர்

நெய்தல்–பட்டினம், பாக்கம். நெய்தல் வாயில், மருவூர்ப் பாக்கம்

பாலை–பறந்தலை. வெண்ணிப் பறந்தலை, சிறுபாலையூர், என்பனவாம்.

அகப்பொருள் பற்றிக் கூறும் இலக்கியப் பாடல்களில்,தலைவியின் நலம் பாராட்டப் பெறும் இடங்களில் ஊர்ப்பெயர்கள் பல இடம் பெற்றிருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. அகநானூற்றுப் பாடல் 326-ல் (புலவர் பரணர்,மருதம் திணை)அட்டவாயில் எனும் ஊர்ப்பெயர் இடம் பெற்றுள்ளது.

   ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்

   பேர் அமர் மழைக்கண் பெருந்தோள்  

  ……………………

   நெடுங்கொடி நுடங்கும் அட்டவாயில்

   இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன

   நலம்பாராட்டி, நடை எழில் பொலிந்து

   விழவில் செலீ இயர் வேண்டும்……..(அகம் 326:)

நீண்ட நெடுங்கொடி அசைந்து பறக்கும் ஊர் என்றும், அங்குள்ள கழனிகள் அழகியப் பசுங்கதிர்களைத் தாங்கி வளமுடன் நிற்பவை என்றும், அப்படிப்பட்ட அழகானவள் தலைவி என்றும் கூறி அவளின் நலம் பாராட்டப் பெற்றுள்ளது. இதன் வாயிலாக அந் நகரின் வளமும் தெரிய வருகிறது.

 நுடங்கும்=அசைந்து பறக்கும், பெருங்கவின்= அழகான / வளமான, செலீ இயர்= செலீ இ= செல்வது கட்டாயம்=சொல்லிசை அளபெடை= (அழகானத் தலைவியுடன்)பாட்டுடைத் தலைவன் விழாவுக்குச் செல்ல வேண்டும்.

சங்கப் பாடல் இப்படியென்றால் தற்காலக் கவிஞர்கள் சமய, வேதாந்தக் கருத்துகளை ஊர் மற்றும் இடப் பெயர்களில் புகுத்தி வார்த்தை ஜாலம் காட்டுவது வேறு விதம்.

To be continued……..

(தொடரும்)

Tags- நச்சினார்க்கினியர், ஊர்-இடப்பெயர், நாமாந்திரிதை ,பிரேளிகை,

JUNE 2022 LONDON SWAMINATHAN ARTICLES (INDEX No.115) Post No.11,069

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,069

Date uploaded in London – –    1 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

JUNE 2022 LONDON SWAMINATHAN ARTICLES (INDEX No.115)

((UP TO 12TH JUNE NO ARTICLE WAS POSTED))

VISITED 30 PLUS TEMPLES IN  22 TOWNS IN TAMIL NADU (Post No.11,011); 13/6

Rameswaram Wonders and Dhanushkoti Wonders in Bullet Points (Post No.11,014); 14/6

THIRU UTTARA KOSA MANGAI IN BULLET POINTS (Post No.11020)16/6

ROMAN WRITER APULEIUS ON HINDU SAINTS (Post No.11,030); 19/6

A MUSICAL RAGA IN THE NAME OF TWO FAMOUS GIRLS (Post No.11,044); 20/6

MY VISIT TO TIRUKKURUNKUDI & NANGUNERI (Post No.11038) 21/6

PATANJALI AND HIS COMMENTATORS (Post No.11,042);22/6

NAGAS AND DRAVIDIAN KINGS DEFEATED BY SAMUDRA GUPTA (Post No.11,047) 24/6

NAGAS AND DRAVIDIAN KINGS DEFEATED BY SAMUDRA GUPTA -2 (Post No.11,049);25/6

MY VISIT TO NELLAI SHIVA TEMPLE (Post No.11,055) 27/6

PEARL IN FOREIGN LANGUAGES (Post No.11,059) ; 28/6

MY TRIP TO THIRU VEN KAADU- BUDHA KSHETRA (Post No.11,062); 29/6

31 QUOTATIONS ON LOVE; July 2022 Calendar (Post No.11064); 30/6

MAY 2022 LONDON SWAMINATHAN ARTICLES (INDEX No.114) Post No.11,065; 30/6

XXX

TAMIL ARTICLES:

((UP TO 12TH JUNE NO ARTICLE WAS POSTED))

அற்புதக் காட்சி அளிக்கும் அரிச்சல் முனை, தனுஷ்கோடி, ராமேஸ்வரம் (Post No.11,013)14/6

இந்து சமய சந்யாசிகள் பற்றி  ரோமானிய அறிஞர் விமர்சனம் (Post.11,031)19/6

இலக்கியத்தில் அதிசய மான்கள்! (Post No.11,016) 15/6

உப்பு வேண்டுமா? வேண்டாமா? (Post No.11,050)- Part 1 (25/6)

தீபாவளி பற்றி நாம் அறியாத விஷயங்கள் (Post No.11018)16/6

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 1 (Post No.11,023) 17/6

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 2 (Post No.11,027) 18/6

கல்ஹணர் சொன்ன அதிசயச் செய்திகள் – Part 3 (Post No.11,045) 23/6

உப்பு வேண்டுமா , வேண்டாமா?- Part 2 (Post No.11,052) 26/6

சத்சங்கம்-நல்லோர் சேர்க்கை- பற்றிய 31 பொன்மொழிகள்  (Post No.11,061) 29/6

தீக்குளித்த 2 பெண்களின் பெயரில் புதிய ராகம் (Post No.11,035) 20/6

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 57 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.11,024)17/6

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ் 58 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,041)22/6

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ் 59 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,053)26/6

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 60 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,056)27/6

பறங்கித் தலையன் (Pumpkin headed Englishman) வெள்ளைக்காரன்! (Post.11,058)

28/6

—SUBHAM–

 Tags- Index 115, London Swaminathan

‘தேர்தல்’ என்பது, யாரோ வீடுகட்ட, நாம் எடுத்து வைக்கும் செங்கல்! (Post 11,068)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,068

Date uploaded in London – 1 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான தகவல் மொழிகள்-90

யௌவன ஸ்திரீகள் காலால் உதைப்பதால் அசோக மரமும்,

அவர்கள் முகத்தில் பட்ட காற்றினால் மகிழ மரமும்,

அவர்கள் இருக தழுவிக் கொள்வதினால் மருதாணி மரமும்,

அவர்கள் பார்வை பட்ட மாத்திரத்தால் திலக வ்ருக்ஷமும்,

அவர்கள கை ஸ்பரிசத்தினால் மா மரமும்,

அவர்கள் முக காந்தியினால் செண்பக மரமும்,

அவர்கள் சந்தோஷக் குரலினால் கோங்கிலவு மரமும்,

அவர்கள் வாயினால் ஊதுவதினால் வார வ்ருக்ஷமும்,

அவர்கள் பாடுவதினால் அழிஞ்சில் மரமும்,

அவர்கள் சிரிப்பதினால் அத்தி மரமும்,

வ்ருத்தியாகி,நல்ல பலன்களைத்தரும் என்பது முனிவர் வாக்கு!

“ஸ்த்ரீ க்ருத தோகதம்” – வ்ருட்சாதி லட்சண ஸாஸ்திரம்

புத்தகத்திலிருந்து………….

அழகின் லட்சணம்

வெள்ளையாக இருக்கவேண்டியவை பற்கள், கைகள்

கருப்பாக இருக்க வேண்டியவை கண்கள், கண் இமைகள், புருவங்கள்,

கூந்தல்

சிவப்பாக இருக்க வேண்டியவை உதடுகள்,கன்னங்கள், நகங்கள்

குட்டையாக இருக்க வேண்டியவை காதுகள், பற்கள்,கால்கள்.

பெரியதாக இருக்க வேண்டியவை மார்பகம், நெற்றி,புருவங்களுக்கு

இடையில் உள்ள பாகம்.

உருண்டையாக இருக்க வேண்டியவை உதடுகள், புஜங்கள்,காலின்

பின் புறம் உள்ள தசைகள்

சிறியதாக இருக்க வேண்டியவை இடை,கைகள்,பாதங்கள்.

வெண்மையாக இருக்க வேண்டியவை விரல்கள்.

இத்துடன் அடக்கமும் கற்பும் இருந்து விட்டால் அந்தப் பெண்

தெயவமாகி விடுவாள்!

அழகு என்பது

……….

அழகு என்பது பார்த்தவுடனே அகமும் முகமும் மலரவைக்க வைக்கும்

வசந்தம்!

கண்ணும் மனமும் கலந்து வழங்கும் தீர்ப்பு!

இதயத்தின் முகவரி,உணர்வுகளின் வாசல்!

கண்களால் பார்க்கப்பட்டு, மூளையால் உணர்த்தப்பட்டு ஆன்மாவினால்

அனுபவிக்கப்படுவது!

ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தல்!

ஒர் அமைதியான சாந்தமான பாவனை!

நம்மிடம் இருப்பது ஆனால் நமக்கு மட்டும் புரியாதது!

ஆணவம்,அகம்பாவம்,ஆபத்து, அகால அழிவு, என்னும் அருமைக்

குழந்தைகளின் தாய்!

ஆடவரை அலைக்கழிக்க ஆண்டவன் பெண்தளுக்கு அளித்த

வரப்பிரசாதம்!

சட்டம் என்பது

……….

அரசியல்வாதிகளுக்கு துரும்பு, பணக்கார ர்களுக்கு ஆயுதம்,ஏழைக்கு

எட்டாக் கனவு,வக்கீலுக்கு விளையாட்டு பொம்மை, நீதிபதிக்கு

செப்பிடு வித்தை!

திமிங்கலத்தை பிடிக்க விரிக்கப் படும் சிலந்திவலை!

சமுதாயத்தின் பாதுகாப்பு வளையம்,நிரபராதிகளின் நம்பிக்கை

நடசத்திரம்,குற்றவாளிகளின் லைசன்ஸ்!

கைப்பிடியை உள்ளே கொண்ட கோப்பையையும்,

மண்ணையும்பரிமாறும் அநியாயத்தின் பக்கம்

துரத்த முயற்சி செய்கிறார்கள்

சாட்சிகளை சார்ந்த சந்தர்ப்பவாதி!

ஆட்டோ ரிக்‌ஷா சவாரி மாதிரி, இலக்கை அடைவோம்,அதிக பணம் விரையம் செய்து, எங்கெங்கோஅலைந்த பிறகு!

ஊழல் என்பது

……….

முகவரி தொலைத்தவர்களைக்கூட சரித்திர நாயகர்கள் ஆக்கும்

அட்சய பாத்திரம்!

அரசியல்வாதிகளின் ஆனந்த பானமாய் மாறும் அறியா மக்களின்

வியர்வைத்துளிகள்!

தனக்குத்தானே கட்டிக்கொள்ளும் சமாதி!

கையில் கறைபடிந்தாலும் மெய்யில் மெருகேற்றிக்கொள்வது!

உணமை உழைப்புக்கு சமாதி எழுப்பத்துடிக்கும் குட்டிச்சாத்தான்!

ஐந்து வருட ஆட்சியில் முன்னேற்றம் காணும் ஒரே துறை!

அடுத்தவர் பரிவது!

தேர்தல் என்பது

……..

யாரோ வீடுகட்ட நாம் எடுத்து வைக்கும் செங்கல்!

அடுத்த சுரண்டலுக்கு விடப்படும் டெண்டர்!

ஆளுங்கட்சி மருமகளும், எதிர்கட்சி மாமியாரும் சேர்ந்து ஐன நாயக

கணவன் கழுத்தை நெரிப்பது!

நரிகளுக்கு ஆடுகளே நாட்டாண்மை வழங்கும் நிகழ்ச்சி!

64 வயதாகியும் மூளை வளரச்சியடையாத ஜன நாயக புத்திரன்!

அரசியல்வாதிகளுக்கு “சீசன் டிக்கெட்”,

பொதுமக்களுக்கு “லாட்டரி டிக்கெட்”!

ஒரு நாள் தவறுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை தரும் நீதி மன்றம்!

இந்திய வாக்காளர்கள் விடை தேடிக்கொண்டிருக்கும் புதிர்!

வோட்டுக்களை வாங்குவதற்கு, நோட்டுக்களை நீட்டி ஜனநாயகத்திற்கு

வேட்டுக்களை வீசும் விசித்திர விழா!

THE END

Tags – ஞான மொழிகள்-90

S.Nagarajan’s (SNR) Article Index : June 2022 (Post No.11,067)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,067

Date uploaded in London – –    1 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

S.Nagarajan’s (SNR) Article Index : June 2022

JUNE  2022

13-6-2022 11010   SNR Article Index May 2022

14-6-2022   11012  உலகின் உயரமான நாடு நேபாளம் (24-5-22 மாலைமலர்

              கட்டுரை)

15-6-2022 11015  சில மனிதர்களின் அதிசய சக்திகள்!

16-6-2022 11019  அலோஹா, ஹவாய், அலோஹா!

17-6-2022 11021  மனித வாழ்வில் பிரச்சினைகள் தீர ருத்ராட்சம் அணிக!

                                   (மாலைமலர் 6-6-22 கட்டுரை)   

18-6-2022 11025 உலகின் சிந்தனைப் போக்கை மாற்றிய 1001 அபூர்வ

             கருத்துக்கள்!

19-6-2022 11028 முடா! முரா! முரி!  

20-6-2022 11032 உலகையே அதிர வைத்த ஒரு விவசாயி!  

21-6-2022 11036 சுவரின் மறுபக்கம்! 

22-6-2022   11039 நடந்தவை தான் நம்புங்கள் – 20

23-6-2022  11043 போதிதர்மரின் கேள்வியும் சீடர்களின் பதில்களும்!

24-6-2022 11046 செப்பு மொழி இருபது!

25-6-2022 11048  செப்பு மொழி இருபத்தொன்று

26-6-2022 11051 செயற்கை அறிவின் சிறப்பு நகரம் சியோல் ( 7-6-22

              மாலைமலர்  கட்டுரை)

27-6-2022  11054 பகவான் ரமணர் அருளிய நடராஜ தரிசனம்!

28-6-2022  11057   நடந்தவை தான் நம்புங்கள் – 21

29-6-2022 11060 உலகை நடுங்க வைத்த நாடு (மாலைமலர் 14-6-22

              கட்டுரை)   

30-6-2022 11063 தொண்டைமண்டல வள்ளல் காளத்தி முதலியார்!

***

21-5-2022 முதல் 12-6-2022 முடிய tamilandvedas.comஇல் பதிவுகள் ஒன்றும்                இடப்படவில்லை

xxxx

Tags- SNR index

ஞான கவிதை மொழிகள் – 89 (Post No.11066)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,066

Date uploaded in London – –    30 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இறைவனைக் காண ஆசை.

உறங்கிய பிறகும்

தேடிக் கொண்டிருக்கிறேன்.

விழித்திருக்கிறது

ஏழையின் சிரிப்பை……..! இரவு!

இன்னாசெய்தாருக்கு நன்னயம்.

மழை நீரில் நனைந்திருந்த

காதலியின் திருமணத்தில் செய்தித்தாளில் இருந்தன

மொய்……..! சுடச்சுட செய்திகள்!

நீரை “காய்ச்சி” எத்தனையோ கண்கள் பட்டன

பருகியதால் மரணம். சுத்திப் போட்டதில்லை

சாராயம்……! சலூன் கண்ணாடி!

சிலேடை மணம். மரங்களைக் காணோம்

தேடிவிட்டு கரைந்தது

இரு கவிஞரில். காகம்!

ஒருவரிடம்

எந்த மணம் பிடிக்கும் கொத்தித்தின்ன பறவைக்கு

என்றேன். தோள் கொடுக்கிறது

“முல்லை மணம்” என. சோளக்காட்டு பொம்மை!

மொழிந்தார்!

அடுத்தவரை கேட்டவுடன். கதிர் முற்றிய வயல்

“அம் மணமே” என. கேள்விக்குறியாய்

வழிந்தார்! அரிவாள்!

வாங்குபவர் செழிக்கிறார் லஞ்சத்தில். வானத்தில் நடசத்திரம்

வேறுவழியின்றி கொடுப்பவர். எங்கும் நிறைந்து கிடக்கிறது

வாடுகின்றார் என்றும் நெஞ்சத்தில்! பூமியில் இருள்!

குரைக்கும் நாய். ஆகாயத் தாமரைகள்

துரத்தும்போது கடிக்கிறது. சூரியனைத் தேடுகிறது

புதுச் செருப்பு! அடியில் சிக்கிய குளம்!

விழும் நாணயம். ஓடும் பேருந்து

பளபளப்பாக இருக்கிறது. பெரிதாக இருக்கிறது

யாசகன் முகம்! பயணிக்கும் சாலை!

விதம் விதமான உணவுப்படையல். வற்றிய ஆறு

வருத்த த்தை ஏற்படுத்துகிறது. விரைவாக நிரம்புகிறது

அப்பாவின் சாவு. மணல் வியாபாரியின் பணப்பை!

தூண்டில் முள். போர்மேகம் சூழ்ந்த

அசைந்தபடி இருக்கிறது. நாட்டில் பொழிகிறது

கொக்கின் பார்வை! குண்டும ழை!

காற்றில் விலகும் திரை சீலை. ஊமைத்தாய்க்கு பிறந்த

அறைக்குள் எட்டிபார்க்கின்றன. குழந்தைகளுக்கும் உண்டு

சூரியக் கதிர்கள்! தாய்மொழி!

அரிசி மூட்டை சுடிதார் எடுத்த அம்மா

காலியாய் இருக்கிறது. தனக்காக வாங்குகிறாள்

சும ப்பவன் வயிறு! தையல் ஊசி!

நெடுநாள் பகை. வரதட்சிணை இல்லாமல் திருமணம்

தீர்த்து வைக்கிறது. தாலிகட்டி வெட்டி விட்டான்

மரணம்! வாழை மரத்தை!

இன்று மறைகிறது. சூரியன்

முழு வட்டம் அடிப்பதற்குள். உதிக்கவில்லை

வானவில்! சோம்பேறியின் காலைப் பொழுதில்!

மறைந்த பிறகே. வசதி படைத்தவன் வீடு

வாழ்க்கை தொடங்குகிறது. அரிசியை தேடும்

மகிழ்ச்சியின் விதை! சிட்டுக்குருவி! 48

மறைத்து வாழப் பழகு. அடுக்கு மாடியில்

மனிதனுக்கு போதிக்கின்றது. அறை ஒதுக்கியிருக்கிறார்கள்

முக கவசம்! தோட்டக்கலை துறைக்கு!

மாடி வீட்டு நாத்திகர். வேலி தாண்டும் ஆடுகள்

தினசரி ஏறி இறங்குகிறார். நன்றாக வளர்ந்திருக்கின்றன

பதினெட்டு படிகளில்! சோளத்தட்டுகள்!

THE ENDtags- ஞான கவிதை மொழிகள் – 89 

MAY 2022 LONDON SWAMINATHAN ARTICLES (INDEX No.114) Post No.11,065

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,065

Date uploaded in London – –    30 JUNE 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

APRIL 2022 LONDON SWAMINATHAN’S ARTICLES ( INDEX No.113) Post No.10,918 (1/5/22)

SEA IN BRAHMINS’ DAILY PRAYER! (Post No.10,926)2/5

TAMILS FOLLOWED VEDIC AND KALIDASA’S IMAGERY (Post No.10,931)3/5

OLDEST MESSENGER POEM IN THE WORLD (Post No.10,936); 4/5

OLDEST ROBOT IN THE WORLD WAS A HINDU ROBOT ! (Post No.10,941); 5/5

AVESTAN LANGUAGE IS JUNIOR TO SANSKRIT; IT IS LIKE PRAKRIT (Post No.10,949)7/5

TAMILS’ GREAT DISCOVERY ABOUT SEA AND OCEAN (Post.10955); 8/5

HOW TAMIL LANGAUGE CHANGED WITHOUT ANY EXTERNAL INFLUENCE (Post No.10,960) 9/5

HIPPOS IN GREEK IS SANSKRIT ‘ASVA’ (Post No.10,965); 10/5

HIMALAYAS IN RIGVEDA AND TAMIL LITERATURE- 2 (Post No.10,979)13/5

HIMALAYAS IN RIGVEDA AND TAMIL LITERATURE- 1 (Post No.10,974) 12/5

HIMALAYAS IN RIGVEDA AND TAMIL LITERATURE- 3 (Post.10,984) 14/5

30 Golden Sayings from Kautilya’s Artha Shastra (Post.10,985) 15/5

WOLF IS A TAMIL WORD !! (Post No.10,998)17/5

RUDRA DAMAN- THE GREATEST ENGINEER OF INDIA (Post No.11,004); 19/5

XXX

TAMIL ARTICLES

ரிக் வேதத்தில் யமா – யமி SEXY செக்சி உரையாடல் -1 (Post No.10,917) 1/5/2022

யமா-யமி SEXY செக்சி உரையாடல் பகுதி -2 (Post  No.10,925)2/5

தமிழ் சினிமா பாடலில் ரிக் வேதம், காளிதாசன் தாக்கம்  (Post No.10,930)3/5

நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை (Post No.10,935)4/5

உலகின் முதல் ரோபாட்– இந்துக்கள் கண்டுபிடிப்பு ! (Post No.10,940)5/5

கடல் (முந்நீர்) பற்றி தமிழனின் மாபெரும் கண்டுபிடிப்பு (Post No.10,954)8/5

தமிழில் ‘யான்’ எப்படி ‘நான்’ ஆக மாறியது ? (Post No.10,959)9/5

தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது ?? (Post.10,964) 10/5

தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? பகுதி 2 (Post No.10,969) 11/5

கெளடில்யரின் அர்த்த சாஸ்திர பொன்மொழிகள் (Post No.10,990)15/5

பல் கட்ட உதவும் ப(ல்)லேடியம் (Post No.10,944)6/5

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ்-53; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,950)7/5

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 54 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.10,994)15/5

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 55 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.11,001) 18/5

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் 56 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் கற்போம் (Post.11,008)21/5

இந்துக்களின் ஆசை- உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்புவோம் (Post.10,980) 13/5

மூன்று வகையான வெற்றிகள் (Post No.11,006)20/5

யாரும் காணாத ஒரு அதிசய மூலகம் (Post No.11,009) 21/5

FROM 21 MAY UNTIL 13 JUNE ,  I WENT ON HOLIDAY

—SUBHAM—

Tags- Index 114, London Swaminathan, Articles