COTTON PLACES RIG VEDA BEFORE HARAPPAN CIVILIZATION (Post No.10,773)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,773

Date uploaded in London – –    23 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The word for cotton in Sanskrit is KARPAASA. It is found in Greek, Hebrew and Latin. The botanical term Gossypium is also derived from the Sanskrit word. There are two more ancient words for cotton – katn in Arabic and a few other old languages. Tamil which is spoken for at least 2000 years, has PANJI and PARUTHTHI.

We don’t find Tamil word anywhere else in the ancient world; but Sanskrit Karpasa is in many parts of the world.

In Egypt cotton has been used for at least for 2000 years. Warwick university analysed 1600 year old cotton seeds in Sudan and found out they are different from Indian variety. Now Egyptian cotton is known for its strength and length. In south America another variety was used by ancient people.

But India has the oldest cotton material in the world. It is found in Harappan sites. The Sanskrit word Karpasa travelled round the world than other words. Moreover Indian climate, like Egypt, suits better than sub-tropical or temporal countries.

Greek cannot be the origin of the word or the plant. They wrote funny stories about cotton ‘TREES’. Even Virgil thought it was a ‘tree’. They thought sheep giving it to some plants.

Greeks borrowed the Sanskrit word Karpaasa .

xxx

One must look at Tamil or Sanskrit sources for literary evidence. Here is what Satya Swarup Misra says in his book, ‘The Aryan Problem, A Linguistic Approach’ says,

“Evidence of cotton cloth is found in several sites of the Indus Valley civilization,viz. Mohenjo daro , Lothal etc, Wheeler considered this to be the earliest evidence for cotton. K D Sethna shown that the word ‘karpaasas’ does not occur in the main Vedic literature and is first of all found in Gautama Dharma sutra. Therefore, the Vedic literature must antiquate the Indus civilization. Since Indus civilization starts from 2500 BCE, Sethna proposes the date of Rig Veda to be at least 3500 BCE, allowing 1000 years for the development of Vedic literature in several stages (Samhita, Brahmana, Aranyaka, Upanishads).

The date of Rigveda proposed as 5000 BCE on linguistic evidence is not contradicted by this. Now excavations on the Bolan river in Central Baluchistan  have uncovered a series of agricultural settlements more than 3000 years older than Harappan sites, where cotton seeds are found.

xxx

Parsi Evidence

One must take into account the cotton sacred thread worn by millions of Brahmins (Punul in Tamil; janenu; yajnopaveetha) until this day. Like Brahmins, Parsis (Zoroastrians) also wear pure white Kushti and Sudre made up of cotton. I will consider this as more ancient evidence than the literary evidence. Brahmins make this sacred thread only from cotton. So do Parsis.

xxx

Tamil Evidence

The words for cotton in Tamil Panju/ Panchi and Paruththi (பருத்தி, பஞ்சு ) also provide evidence for at least 2000 years.

Like Rigveda , we see women spinning  thread in Tamil homes.

Tamils wore cotton dress because of hot weather. More than 15 references are available in ancient Tamil literature. But it is not in the oldest book Tolkappiam.one must remember both are not botany books.

–subham—

Tags- cotton, Karpasa, Paruthi, Tamil, Sanskrit, Parsi, evidence, Punul, Kushti, Sudre

பகவத் கீதை சொற்கள் இன்டெக்ஸ் -48; கீதை மூலம் சம்ஸ்க்ருதம் (Post.10,772)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,772

Date uploaded in London – –    23 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ப்ராக்ருதஹ 18-28 நல்லொழுக்கம் இல்லாதவன்

ப்ராக்  5-23 முன்னர்

ப்ராஞ்ஜலயஹா 11-21 கை  கூப்பிய வண்ணம்

ப்ராண கர்மாணி  4-27 பிராணனின் தொழில்களையும்

ப்ராணம்  4-29 வெளிக்காற்று

ப்ராணான்  1-33 உயிரையும்

ப்ராணாபானகதி 4-29 மூச்சுக் காற்றின் உட்போக்கையும், வெளிப்போக்கையும்

ப்ராணாபான சமாயுக்தஹ 15-14 பிராணன், அபானனுடன் கூடி

ப்ராணாபாநவ் 5-27 பிராண, அபான வாயுக்களை

ப்ராணாயாம பராயணாஹா  4-29 பிராணனைக் கட்டி நிறுத்துவதையே மேலாக எண்ணுவோர்

ப்ராணினாம்  15-14 பிராணிகளின்

ப்ராணே  4-29 வெளிக் காற்றில்

ப்ராணேஷு 4-30 பிராண வாயுக்களில்

ப்ராதான்யதஹ  10-19 முக்கியமானவற்றை

ப்ராப்தஹ  18-50 அடைந்தவன்

ப்ராப்னுயாத்  18-71 அடைவான்

ப்ராப்னுவந்தி  12-4 அடைகிறார்கள்

ப்ராப்ய 2-57 அடைந்து

ப்ராப்யதே 5-5 அடையப்படுகிறதோ

ப்ராப்யஸி  2-37 அடைவாய்     20 WORDS

ப்ராப்ஸ்யே 16-13 அடையப்போகிறேன்

ப்ரா ரபதே  18-15 செய்தாலும்

ப்ரார்தயந்தே 9-20 வேண்டுகிறார்கள்

ப்ராஹ 4-1 உரைத்தார்

ப்ராஹுஹு  6-2 கூறினார்களோ

ப்ரிய சிகீர்ஷவஹ  1-23 பிரியத்தைச் செய்ய விரும்பி

ப்ரிய க்ருத்தமஹ 18-69 பிரியமான செயல்களை செய்வன்

ப்ரிய தரஹ 18-69 அதிகப் பிரியமான

ப்ரிய ஹிதம் 17-15 பிரியமானதும், நன்மையைக் கருதுவதும்

ப்ரியம் 5-20 பிரியமானதை

ப்ரியஹ  7-17 பிரியமானவன்

ப்ரியாயாஹா 11-44 காதலியின்

ப்ரீத மனாஹா  11-49 சந்தோஷமுள்ள மனத்துடன்

ப்ரீதி பூர்வகம்  10-10 அன்புடன்

ப்ரீதிஹி 1-36 சந்தோஷம்

ப்ரீய மாணாய 10-1 உள்ளம் மகிழும்

ப்ரேதான் 17-4 பிரேதங்களையும்

ப்ரேத்ய  17-28 வேறு உலகிற்குச் சென்ற பின்னும்

ப்ரோக்தவான்  4-1 உபதேசித்தேன்

ப்ரோக்தம் 8-1 சொல்லப்படுவது             40 WORDS

ப்ரோக்தஹ  4-3 கூறப்பட்டது

ப்ரோக்தா 3-3 கூறப்பட்டது

ப்ரோக்தானி  18-13 கூறப்பட்டுள்ள

ப்ரோச்யதே 18-19 சொல்லப்படுகிறது

ப்ரோச்ய மானம்  18-29 கூறப்படுவதை

ப்ரோதம் 7-7 கோர்க்கப்பட்டுள்ளது     46 WORDS

Tags- Gita index 48

கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் (Post No.10,771)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,771

Date uploaded in London – –     23 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்

கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் ஆறு தடைகள் யாவை?

ச.நாகராஜன்

அருமையான சில சுபாஷிதங்கள் இதோ:

பிபீலிகார்ஜிதம் தான்யம் மக்ஷிகாஸஞ்சிதம் மது |

லுப்தேன சஞ்சிதம் த்ரவ்யம் சமூலம் ஹி வினஷ்யதி ||

எறும்பினால் சேகரிக்கப்படும் தானியம், தேனீக்களினால் சேகரிக்கப்படும் தேன், பேராசை பிடித்தவனால் சேகரிக்கப்படும் பணம் ஆகியவை அனைத்தும் முற்றிலுமாக அழிந்துபடும்.

Grains collected by ants, honey stored by bees and wealth stored by a greedy person get totally destroyed.

*

யத்க்ரீடை: பாம்சுபி: ஸ்வலக்ஷணைர்வல்மீக: க்ரியதே மஹான்|

ந தத்ர பலசாமர்த்யமுத்யோகஸ்தத்ர காரணம் ||

சிறிய தூசித் துகள்களினால் பெரிய புற்றை உருவாக்கும் பூச்சிகள், அவற்றின் பலத்தினால் அவற்றை உருவாக்கவில்லை, அவற்றின் உழைப்பினாலேயே அவற்றை உருவாக்குகின்றன.

The fact that a big antihill is created by insects by means of fine particles of dust is due not to (their) power but to (their) industriousness.

*

ஸ்வச்சந்தத்வம் தனார்தித்வம் ப்ரேமபாவோர்த போகிதா|

ஆவினீதத்வமாலஸ்யம் வித்யா வக்னகராணி ஷட் ||

இன்பச் செய்கைகளில் ஈடுபடல், பணத்தில் ஆசை, ப்ரேம பாவனை, இன்பம் அனுபவித்தல், ஆணவம், சோம்பேறித்தனம் ஆகிய ஆறும் வித்யை (கல்வி அறிவு) அடைவதைத் தடுக்கும் தடைகளாகும்.

Acting at pleasure, desire for money, attachment, enjoyment, arrogance and laziness are the six thins which create obstacles in the way of knowledge.

*

சம்ப்ரம: ஸ்நேஹமாக்யாதி வபுராக்யாதி போஜனம் |

வினயோ வம்சமாக்யாதி தேஷமாக்யாதி பாஷிதம் ||

குழப்பம் நட்பைக் காட்டுகிறது. உண்ட உணவைச் சொல்கிறத் உடல். நல்ல குடும்பத்தைக் காட்டுகிறது வினயமாகப் பேசுதல். எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்பதை மொழி காட்டுகிறது.

Confusions speaks of affection. The body tells about the diet. Politeness commuuncates good family. Languge indicated the country.

*

கரபதரஸத்ருஷமகிலம் புவனதலம் யத்ப்ரஸாதத; கவய: |

பஷ்யந்தி சூக்ஷ்மமதய: ஸா ஜயதி சரஸ்வதி தேவீ ||

கையில் இருக்கும் இலந்தைப் பழத்தைப் பார்ப்பது போல உலகு அனைத்தையும் புத்தி கூர்மையுள்ள கவிஞர்களைத் தன் அருளினால் பார்க்க வைக்கும்  சரஸ்வதி தேவிக்கு ஜயம் உண்டாகட்டும்!

May the Goddess Sarasvathi by victorious, by whose grace poets with sharp intellect see the whole world as if a jujube on the palm of the hand.

**

                     (English Translation  by Saroja Bhate)

 tags— கல்வியறிவு , ஆறு தடைகள்

தமிழ்- அவஸ்தன் மொழி (கி.மு.1000) தொடர்பு TAMIL-AVESTAN LINK (Post No.10,770)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,770

Date uploaded in London – –    22 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அவஸ்தன் (Avestan) மொழி என்பது ஒரு காலத்தில் ஈரான் (பாரசீக Persia) நாட்டில் பேசப்பட்டது. இப்பொழுது அழிந்துவிட்டது. பல புதிய மொழிகளாக உருவெடுத்து ஈரானிலும் ஆப்கானிஸ்தானிலும் வழங்கி வருகின்றன. அவஸ்தன் மொழியில் உள்ள ஒரே இலக்கியம் ஜராதுஷ்டிரரின் (ஜொராஸ்டர்) பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா (Zend Avesta) ஆகும். இதில் பிற்கால துதிகளும் சேர்ந்துள்ளன . காதா (Gatha) எனப்படும் பழைய பகுதிக்கு, கி.மு 600 முதல் 1000 வரை தேதி குறிப்பிடப்படுகிறது.

தமிழ் மொழியில் காணப்படும் பல சொல் இலக்கணம் இதிலும் காணப்படுவதால், பழைய மொழிக்கொள்கைகள் தவிடுபொடி ஆகின்றன. ஸம்ஸ்க்ருதத்தையும் அவஸ்தன் மொழியையும் ஆராய்ந்த பலருக்கு தமிழ் மொழி பற்றிய ஞானமே இல்லாததால் புளுகு மூட்டைகளை அவி ழ்த்துவிட்டனர் ; கால்டுவெல்  கும்பல், திராவிடர்கள் வந்தேறு குடி ; அது மத்திய தரைக் கடல் பகுதியிலிருந்து வந்தது என்றது; மாக்ஸ்முல்லர் கும்பல் ஆரியர்கள், காஸ்பியன் கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றது. இரண்டு கும்பல்களும் இந்தியாவையும் இந்து மதத்தையும் துண்டாட வந்ததால் பல உண்மைகளைக் காணாதது போல நடித்தன.

தமிழில் மிகப்பழைய நூல் தொல்காப்பியம் என்று பெரும்பாலோர் நம்புகின்றனர் . சங்க இலக்கியங்களில் உள்ள 18 மேல் கணக்கு நூல்களில் இகவும் பழமையானது புறநானூறு. இந்த இரண்டிலும் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் ஈரான் என்னும் பாரசீக நாட்டில் தமிழுக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்திய அவஸ்தன் மொழியில் எப்படி மாறியதோ அப்படியே தமிழிலும் மாறி இருக்கின்றன. இந்தத்துறையில் எவரும் இதுவரை ஆராய்சசி செய்யவில்லை. இவை அனைத்துக்கும் மூலம் அவஸ்தன் மொழிக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய ரிக் வேத சம்ஸ்க்ருதத்தில் உள்ளன.

ஒரு மிகப்பெரிய அதிசயம் என்ன வென்றால்  யார் அவஸ்தன் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் செய்தார் ? எப்படி அவை ஒரே இலக்கணத்தைப் பின்பற்றுகின்றன? என்பதே. ஒரு சில எடுத்துக்கட்டுகளால் இவற்றை விளக்குகிறேன்.

xxxx

சில விஷயங்களை மட்டும் இங்கே காண்போம்

சங்க காலத்தில் ‘வண்டி’ என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. ‘பண்டி’ , ‘பாண்டில்’ என்று சொன்னால்தான் தெரியும். ‘பாண்டில்’ என்பது பண் டம் ஏற்றிவரும் வாஹனம். பண்டம் என்பதும் சம்ஸ்க்ருதம். சீவக சிந்தாமணியில் ‘பண்டி’ என்ற சொல்லைக் காண்கிறோம் இப்போது ப= வ ஆக மாறிவிட்டது.

இதே போல ரிக் வேதம், காளிதாசன் நூல்களில் உபமா  என்ற சொல்லைக் காண்கிறோம். இதை தொல்காப்பியரும் புறநானூற்றுப் புலவர்களும் உ/வ/மை ஆக்கிவிட்டனர். அதாவது ‘ப= வ’ ஆகிவிட்டது.

இதே ‘ப= வ’ மாற்றம் அவஸ்தன் மொழியிலும் உள்ளது. ரிக் வேதம் ‘அஸ்/வ’ என்று குதிரைக்குச் சொன்னால் அவர்கள் ‘அஸ்/ப’ என்றனர். அதாவது  ‘வ= ப’ ஆகிவிட்டது.

ப=வ ஆனாலும் வ= ப ஆனாலும் சரி; யார் இவர்களுக்கு இப்படி ஒரே இலக்கணத்தைச் சொல்லிக்கொடுத்தனர் ; தமிழை விட 1000 ஆண்டு பழமையானது அவஸ்தன். தமிழை விட 2000, 3000 ஆண்டு பழமை உடையது ஸம்ஸ்க்ருதம் . ஆனால் ஈரான் வரை கன்யாகுமரி வரை ஒரே மாற்றம்!! இன்றும் பங்களா தேஷ் என்பதை வங்க தேசம் என்கிறோம்.

இந்த மாற்றத்துக்கு காரணம் நாம் அறியாத ஒரு இலக்கணம் (அகத்தியம், ஐந்திரம்) இருந்ததைக் காட்டுகிறது .

இது  ஒன்றை  வைத்து மட்டும் நான்  சொல்லவில்லை. பரி / குதிரை வரை  பல பாரசீக சொற்கள் சங்கத் தமிழ் நூல்களிலேயே உள்ளன.

xxxx

வஜ்ராயுதம்  என்பது இந்திரனின் ஆயுதம்  என்பதை எல்லோரும் அறிவோம்.

உலகில்’ ஜ’ J என்னும் எழுத்து சம்ஸ்க்ருதம் தவிர வேறு எந்த மொழியிலும் கிடையாது ; அவஸ்தன் மொழியிலும் கிடையாது. ஆக இந்த ஜ J – எழுத்து செல்லும் பாதையை ஆராய்ந்தால் இந்துக்கள் உலகம் முழுதும் குடியேறிய காலமும் பாதையும் தெரிந்து விடும். இன்று ஜ வர்க்க எழுத்துக்கள் காணப்படும் எல்லா சொற்களையும் அவர்கள் ‘ய’ என்றே உச்சரிக்கின்றனர்

ஜோசப் = யூசூப் ; ஜு= யூத, ஜீசஸ் = ஏசு

வஜ்ர என்ற எழுத்தை பழைய அவஸ்தன் பாரசீக மொழிகளில் ‘வஸ் ஸ ர’ (Wassara)   என்றே உச்சரிப்பர்; ஜ  -வர்க இல்லாத குறை ; தமிழிலும் அவஸ்தன் போல ‘ ஜ ‘ கிடையாது. ஆகையால் புறநானூற்றுப் புலவர் வச் சிர தடக்கையோன் என்றே பாடுகிறார் ; அவஸ்தன், சங்கத் தமிழ் இரண்டிலும் ஒரே அணுகுமுறை.

ஆர்ய என்பது ப்ராக்ருதத்தில் அஜ்ஜ ஆனது; தமிழில் அது ‘ஐயர்’ ஆனது

ர்ய =ஜ்ஜ= ய்ய  (ஜ=ய )

யார் இப்படி தமிழுக்கும் அவஸ்தனுக்கும் ப்ராக்ருதத்துக்கும் இலக்கணம் செய்தனர்?

எனது பதில் – ஸம்ஸ்க்ருதம் மூல மொழி; அது பேச்சு வழக்கில் எப்படி ப்ராக்ருதத்தில் மாறுகிறதோ அப்படியே அவஸ்தனிலும் மாறுகிறது . இவை எல்லாம் காலத்தால் பிந்தியவை.

xxx

அஹம் (நான்) என்ற சொல் அஸம் (Aham- Azam) என்று அவஸ்தனில் மாறுகிறது . இது அஹம் /நான் என்ற சொல்லிலும் பிரதிபலிக்கிறது

அஹம் என்பது நம்மைப் பற்றியது Personal; குடும்ப விஷயம் ; தமிழில் அக த் துறைப் பாடல்களே அதிகம். புறம் என்பது வெளி உலக (external)  விஷயம்.

xxxx

தழிழ் மொழியில் ர அல்லது ல எழுத்துக்களில் சொற்கள் துவங்காது. உடனே ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்து ,

அ +ரங்கம், உ+லோகம் , இ + லண்டன், இ+ ராமாயணம் என்கிறோம். இதே போல அவஸ்தன் மொழியிலும் அ – என்ற எழுத்தைச் சேர்க்கின்றனர்.

xxxxx

ஆயிரம் இல்லை!!

அவஸ்தன் மொழியில் சம்ஸ்க்ருத எண்களை அப்படியே காணலாம். ஆயிரம் என்பது இல்லை; பத்து நூறு என்று சொல்லுவார்கள். தமிழில் ஆயிரம் என்பது, சஹஸ்ரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவஸ்தன் மொழி போல ‘பத்து நூறு’ உண்டு

xxxx

வாய்மை , மெய்மை, உண்மை

உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை

சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை

உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!

தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?

காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!

இதை பார்சி மதத்தினர், பின்வருமாறு சொன்னார்கள்

சு மத = நல்ல மனம்/புத்தி

சு உக்த = நல்ல சொல்/ சூக்தம்

சு வ்ரஷ்ட = சு வரிஷ்ட/ நல்ல செயல்

பாரசீக மொழியில் தமிழ் போலவே துவக்கத்தில் ‘ச ‘ இல்லை. அது  ‘ஹ’ ஆகிவிடும். அதனால்தான் ‘சிந்து’ வெளி மக்களை ‘ஹிந்து’க்கள் என்று அழைத்தனர்.

HUMATA= SU MATHI IN SANSKRIT (H=S)

HUKHTA= SU UKTA IN SANSKRIT

HVRASHTA = SU VARISHTA IN SANSKRIT

VOHU MANO or  BAHMAN = GOOD MIND

இது பகவத் கீதையின் 17 ஆவது அத்தியாயத்தில் 4 ஸ்லோகங்களில் உள்ளது (14-17)

ஆக இரண்டு ஒற்றுமைகள்- 1. தமிழ் போலவே ‘ச’ எழுத்து இல்லை. தொல்காப்பியருக்கு ‘ச’- எழுத்தைக் கண்டால் பிடிக்காது. அதனால் தடை போட்டார். அதையும் மீறி தமிழர்கள் தமிழ் “சங்கம்” வைத்தனர். இது பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்திய சொல். அதை தமிழர்கள் ‘காப்பி’ அடித்தனர். புத்தர்களும் ஜைனர்களும் பாணினி இறந்து 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் இதைப் பயன்படுத்தினர். ஆண்டாளும் (திருப்பாவை) அப்பரும் (தேவாரம் கி.பி.600) சங்கம் பற்றிப் பாடியுள்ளனர்; அப்பர், தருமி என்ற பிராமணப் புலவன் , நக்கீரனுடன் போட்ட சண்டை பற்றிப் படியிருப்பதால் சமணர்களுக்கும் முன்னதாகவே தமிழ்ச் சங்கம் இருந்தது தெரிகிறது. இது தெரியாத அரை வேக்காடுகள் வஜ்ர நந்தியின் கி.பி.470 சமண சங்கத்தை மட்டும் குறிப்பிடுவர்.

Xxx

குதிரை, பரி , புரவி என்பன தமிழ்ச் சொற்கள் இல்லை. பாரசீக, ஸம்ஸ்க்ருதச் சொற்களைத் தழுவியவை. அதை வேறு ஒரு கட்டுரையில் காண்போம்.

–subham–

Tags- தமிழ்- அவஸ்தன் , மொழி  தொடர்பு ,TAMIL-AVESTAN LINK,

PEACOCK MYSTERY HINDU BIRD IN TURKEY SYRIA-PART 2 (Post No.10,769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,769

Date uploaded in London – –    22 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Part 1 was posted yesterday

The second form of peacock veneration by the Mitannians had a long story , too. One line is traceable to Palestine, perhaps in connection with the Aryans in  Palestine; a griffin ivory from the 13th century BCE found at  Meggido. The second and more important line leads from the Mitannians, the over lord of the  Assyrians, to the then independent Assyria. We find in the middle and late Assyrian art the tree of life between two bird headed demons, the followers of peacock dancers…..The importance of this group in Assyrian art, representing the long living tradition of a  ‘mixed’ animal as the symbol of battle (with lion and peacock in Iranian tradition) poses the question: where , when and  from whom the Iranians could have borrowed this motif; could it have been from the Indo-Aryans or another people venerating peacock before 1600 BCE. That could mean that the Aryans should have been in contact with India even earlier. Yet the development of Andronovo culture did not start before  1650-1600 BCE. So we are forced to accept Indo-Aryans in what is now Iran , especially Eastern Iran before 1600  BCE were under the Indian influence for  such a long period that they could have taken over the peacock veneration. In that case they could not have been part of Andronovo culture, but should have come to Iran centuries before at the time when the Hittites came to Anatolia.(Read my article how priceless, gem studded Peacock Throne disappeared from India).

Thus, Brentjes has supplied us with a very important archaeological evidence and he has shown with cogent arguments that Indo-Aryans were in India much before the second half of the third millennium BCE and they moved to Iran and Iraq from India and influenced them culturally.

xxx

Additional evidence from Kassites 

Kassites dynasty of Babylon (1750-1170) BCE has linguistic evidence to support Hindu presence in Babylon. They show a few names of Rig Vedic gods

Suurias – Sooryah in Sanskrit

Maruttas – war god Maruttah in Sanskrit

Abirattas – Abhirathah , a king name in Sanskrit

These names are clearly Indo-Aryan and not Iranian because ‘s’ is found  as ‘h’ is Iranian.  Their language has no aspirate sound to represent bh and th.

The Kassite evidence also is helpful to put Rig Veda beyond 2000  BCE

xxx

More about PEACOCK

From the book “Dictionary of Symbolism” by Hans Biedermann

Pavus is the Latin word for peacock. The cock comes from Kukkuta in Sanskrit.

This splendid bird comes from India, where its lavish spread of feathers in male bird made the bird a symbol for the SUN.

The peacock journeyed by way of Babylonia , Persia and Asia minor to Samos , where he became the sacred bird at the shrine to Hera . in the fifth century BCE, Athenians paid to see peacocks displayed as sideshow curiosities; in the second century BCE, the Romans considered them sacred to the goddess Juno . In India many gods are portrayed riding on peacocks.

In the Western World, they were considered mysterious because they were able to kill poisonous snakes and eat them. Poison turns into food. In the Middle East, the Kurdish  Jezidis (Muslims called them devil worshippers ) venerated peacock as Melek Taus (King peacock) . They see it as messenger of God.

In Muslim symbolism, it is Cosmos or Sun or Moon. In early Christianity it symbolised resurrection.

The Christians preserved an ancient superstition that peacock blood dispelled evil spirits. The bird is shown in Christ’s Nativity scenes.

Two peacocks drinking from a chalice symbolize spiritual rebirth and Cherubim often have four wings consisting of peacock feathers. Their eyes were symbols of divine omniscience. The flesh of the bird was long thought of as an ideal restorative meal for the sick.

Charaka Samhita prescribed flesh of peacock for certain diseases. Emperor Asoka instructed to cut down the number of  peacocks to be cooked everyday in his palace kitchen.

Under the influence of Hindus , where goddess Sarasvati and Subrahmanya ride on peacocks, the bird was viewed favourably in China .

The peacock- kung- chiao-  was the embodiment of beauty and dignity, able to dispel evil spirits, and dancing when its gaze fell upon a beautiful woman.

Peacock feathers were symbols of rank for the Manchu emperors and were displayed in vases.   Peacocks were kept in the traditional Chinese garden.

In alchemy it was used in turning base metals into gold.

In Heraldry also it is used as symbol of glory. Manu smrti and other Hindu law books prescribed peacock flesh for the departed souls in the Sradhdha ceremonies.

Throughout Sanskrit and Tamil literature, the hair of the women and her beauty are compared with peacock. Tamil poems describe how they dance just before the rains

Tamils used the words Mayil, Manjnai and Tokai for peacock.

Lord Krishna is always shown with peacock feathers on his crown. The peacock dynasty scared Alexander and he turned back towards Greece from Punjab. A brahmin by name Chanakya/Kautilya who was offended by Shudra Nanda kings sponsored a person from Mura community and established the most powerful Mauryan/Peacock  Dynasty in India 2400 years ago. They were even mentioned by Sangam Tamil poets (See Mamulanar Poem).

Xxx subham xxx

tags- Peacock, mystery, Kassites, Hittites, Mitannian, Senmurv, Mauryan, Mor

கரந்துறைப் பாட்டு – 2 (Post No.10,768)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,768
Date uploaded in London – – 22 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!

கரந்துறைப் பாட்டு – 2

ச.நாகராஜன்

கரந்துறைப் பாட்டு என்பது ஒரு செய்யுளுக்குள் இன்னொரு செய்யுளானது கரந்து உறைவது அதாவது மறைந்து இருப்பது என்று சொல்லப்பட்டதைப் பார்த்தோம்.

இன்னொரு வகையான விளக்கத்தை வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் தனது சித்திர கவி விளக்கத்தில் தருகிறார்.

“ஒவ்வோர் எழுத்து இடைவிட்டுப் படிக்கும் போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துக்கள் அமைய, செய்யுள் செய்வது கரந்துறைப் பாட்டு – கரந்துறைவதை உடைய பாட்டு.”

இப்படிக் கூறும் அவர் இதற்கான மாறனலங்காரப் பாடலை எடுத்துக் காட்டுகிறார்.

“முதலொரு செய்யுண் முடித்தத னீற்றின்
பதமத னிறிதியிற் பயிலெழுத் துத்தொடுத்
திடையிடை யிட்டதி ரேறாய் முதலய
லடைதரப் பிறிதொரு செய்யுள் கரந்தங்
குறைவது கரந்துறைச் செய்யு ளாகும்.”

இதன் பொருள் :
ஒரு செய்யுளில் கடைசி அடியில் கடைசி வார்த்தையை விட்டு விட்டு அதற்கு முன்னால் உள்ள வார்த்தையில் ஒரு எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததை விட்டு விட வேண்டும்.
இப்படித் தொடர்ந்து செய்தால் வருவது இன்னொரு பாடலாக இருக்கும்.

எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்.

“தாயே யெனையவி யவாவீ ருதிமன்ன
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கல நீ யே.”

இப்பாடலின் பொருள் :

தாயே – தாய் போன்றவனே!
எனை அவி – என்னை வருத்துகின்ற
அவா ஈருதி – ஆசையை ஒழிப்பாயாக
மன்ன – நாங்கள் நிலை பேறு அடையும் படி
பின்னை வெருவா வருவது ஓர் – பின்பு நீ வரும் ஆற்றிடையுள்ள
ஏதத்திற்கு அஞ்சாது வருவதனை ஆலோசித்துப் பார்
அ பய – அந்த அபாய நிலை கெடுவதற்காக
எம் புகல் வேறு இருத்தி – எமக்குப் பற்றுக்கோடாக உள்ள வேறு ஓர் இடத்தில் எம்மைச் சேர்த்து வைப்பாயாக
இச்சை கவர் – எமது வேண்டுகோளை ஏற்று அங்கீகரித்துப் பூர்த்தி செய்வாயாக
தாவா அருங்கலம் நீயே – எமக்குக் கெடாத கிட்டுதற்கு அரிய ஆபரணம் போன்றவன் நீயே ஆவாய்!

இது பாங்கி தலைவனுக்கு ஆற்றிடை வரும் ஏதம் கூறி வரைவு கடாயது.

இனி இதற்குள் எந்தச் செய்யுள் மறைந்திருக்கிறது என்று பார்ப்போம்.

கடைசி அடியில் கடைசி சொல்லாக அமைவது ‘யே’.
அதற்கு முன் இருக்கும் சொல் – வருங்கல நீ
இதில் கடைசி எழுத்தை விட்டு அதற்கு முன் உள்ள எழுத்து ல.
ஆனால் ல என்ற எழுத்து மொழிக்கு முதலாக வராது என்பதால் அதை விடுத்து அதற்கு முன் உள்ள எழுத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த எழுத்து ‘க.’

க என்பது கரந்து இருக்கின்ற செய்யுளின் முதல் வார்த்தையில் முதல் எழுத்து.
இதிலிருந்து ஒரு எழுத்து விட்டு அடுத்த எழுத்தை எடுத்து இணைத்துக் கொண்டே போனால் வருவது இந்தப் பாடல்:

கருவார் கச்சித்
திருவே கம்பத்
தொருவா வென்ன
மருவா வினையே

“தாயே யெனையவி யவாவீ ருதிமன்ன
பின்னை வெருவா வருவதொ ரத்தப
வெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்
தாவா வருங்கல நீ யே.”

தடித்த எழுத்தில் சிவப்பு வண்ணத்தில் உள்ள எழுத்துக்களைக் கண்டால் பாடல் அமைந்திருப்பது தெரியும்.

இது தேவாரச் செய்யுள் ஆகும்.

திருக்கச்சிஏகம்பத்தில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் இது.
திரு இருக்குக்குறள் என்று பெருமையோடு அழைக்கப்படும் இது 3ஆம் திருமுறையில் வரும் திருப்பாடல் ஆகும்.
பண் : கொல்லி


tags- கரந்துறைப் பாட்டு – 2

PEACOCK MYSTERY: HINDU BIRD IN TURKEY/SYRIA AROUND 1400 BCE- Part 1 (Post No.10,767)

PICTURE OF PEACOCK POTTERY IN HARAPPA

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,767

Date uploaded in London – –    21 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Hindu’s sacred bird peacock is found in Mitannian (1400 BCE) and the mysterious Yazidi  culture of Iraq’s marsh lands. In India it is the vehicle of Goddess Sarasvati and Subrahmnya. Mahabharata character Sikhandi’s meaning is peacock.

Peacock is associated with Gods and Goddesses around the world. Even Khonds and Bhils , aborigenes and tribes venerated the bird. In Greek it is called  TAOS and in Latin it is called PAVUS. Taos is the one linked to India. In Sanskrit  it is called SIKHI by Kalidas and others.

Latin word Pavus or Pava cannot be easily traced to Tamil or Sanskrit.

Sikhi becomes Tuki or Taos or Tahos in Greek

Many people don’t know the Sanskrit word Sikhi and Sikhandi for peacock and linked it with TOKAI in Tamil.

T becomes S in many Tamil and English words.

Tion= Sion

Thaanai in Tamil Sena in Sanskrit.

In colloquial Tamil also it is Th= Ch

Padiththaan = Padichchaan (read)  in spoken Tamil

Kadiththaan = Kadichchan  (bitten) in spoken Tamil

Sikhi is found in Meghaduta of Kalidasa of First century BCE. Great Sanskrit scholars place Kalidasa in the first or second century BCE. 200 of his 1500 similes are used by Tamil Sangam poets.

xxxx

A Kalyanaraman in his book Aryatarangini says about Indus valley pottery:-

“The discovery of the lotus and the peacock design on the pottery , strengthens the case for considering the Indus Valley culture to be Aryan.  Indian archaeologists now believe that the bird motifs on the burial urns corresponds to Vedic theories of the journey of the human soul towards the heaven.(See Kural 338) .  Bhagavad Gita says soul leaving body  is like a person discarding the worn out clothes (BG 2-22).

Tokai for Peacock is used less in Tamil than other two words Mayil and Manjnai. Peacock is associated with Lord Skanda /Murugan in North Indian coins before Sangam Tamil literature. We see Six Faces in Yadheya coins. Later we find it in Sangam Tamil literature. Tamil Murugan is not different from Northern Skanda/ Kartikeya. All the features are same except Valli, a Tamil woman in addition to Deva sena. It is a localised tradition like Andal and Rajamannar/Vishnu. Tuki or Taos in Greek is not Tokai, but Sikhi which  is found earlier than Tamil. More oover most of the words found in Greek are derived from Sanskrit.

xxxx

Peacock in Turkey/ Syria

Satya Swarup Mishra in his book ‘The Aryan Problem – A Linguistic Approach’ says,

“Linguistic evidence in Anatolian is shown above clearly stamps the borrowed element to be of Indo- Aryan origin. In addition to it there is clearly archaeological evidence to show the influence of Indo Aryan on the Mitannians . This evidence is that of peacock.

PEACOCK is an Indian bird. Peacock evidence is a clear proof for movement of Hindus from India into that area, where they have influenced. Burrow’s theory of a third group beside Indo- Aryans and Iranians based on his guess work is fully outweighed by his archaeological evidence.

(Murv = Mayura= Mor in Hindi)

Credit of this evidence of peacock goes to B.Brentjes, who in his paper has discussed the details in great length. Some salient portions may be quoted here.

PICTURE OF PEACOCK HAMMER

“But there is one element novel to Iraq in Mitannian culture and art, which is later on observed in Iranian culture until Islamization of Iran: the peacock, one of the two elements of the ‘Sen-murv’, the lion peacock of the Sassanian art. The first clear pictures showing peacocks in religious context in Mesopotamia are the Nuzi cylinder seals of Mitannian times….

There are two types of peacocks: the griffin with a peacock head and the peacock-dancer, masked and standing beside the holy tree of life. The veneration of the peacock could not have been brought by Mitannians from Central Asia or South Eastern Europe, they must have taken it from the East, as peacocks are the types of bird of India and the peacock dancers are still to be seen all over India. The earliest examples are known from the Harappan culture, from Mohanjo-daro and Harappa: two birds sitting on either side of the  first tree of life  are painted on ceramics. In Iraq the bird was demonised at least since the Mittannians.

The religious role of peacock in India and the Indian influenced Buddhist art in China and Japan need not be questioned…..

It is even possible to trace the peacock as the animal of the battle in Elam till the late third millennium BCE- if it is possible to identify two figured poles  from Susa with peacock symbols (see the picture)  one is a little hammer with two bird heads and a tail with peacock eyes; the other is the oldest proto-Senmurv, a pale stave with a lion head and a peacock tail. The date of the first one is given by a Sulgi inscription on it. So we shall not err if we identify the griffin of the Mitannian seals as fore runner of the Senmurv (lion- peacock.

The second form of peacock veneration by the Mitannians had a long history too.

To be continued …………………………………………..

 TAGS- Peacock, mystery, Harappan pottery, mitannian, Senmurv, Lion peacock, peacock dancers, Susa, Hammer,

400 ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல்– 8 (Last Part) Post.10,766

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,766

Date uploaded in London – –    21 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

400 ரிக்வேத புலவர்கள், ரிஷிகள் பட்டியல்– 8 (Last Part) Post.10,766

இந்தப் பட்டியலுடன் நிறைவு அடைகிறது

 342.ஸ்ருதவித்  ஆத்ரேய 5-62

ஸ்ருஷ்டிகு காண்வ 8-51

சம்வனன ஆங்கிரஸ  10-191

சம்வர ன ப்ராஜாபத்ய 5-33/34

சம்வர்த ஆங்கிரஸ   10-172

சங்குசுக யாமயான  10-18

சத்யத்ரி வாருணி  10-185

ஸத்யஸ்ரவ  ஆத்ரேய 5-79/80

ஸதா ப்ரண   ஆத்ரேய 5-44

சத்வம்ச காண்வ 8-8

சத்ரி வைரூப  10-114

ஸப்தகு   ஆங்கிரஸ 10-47

சப்தவத்ரி  8-73

சப்தவத்ரி ஆத்ரேய  5-78

சப்திவஜம்ப ர 10-79/80

சப்ர த  பாரத்வா ஜ 10-181

சரமா 10-108

இது முக்கியமான பெயர் . இந்த நாயின் கதை கிரேக்க நாடு வரை சென்று உருமாறிவிட்டது. அந்த மொழியில் ‘ச’ இல்லாததால் பெயரை ஹெர்மஸ் HERMES என்று மாற்றிவிட்டனர்.

XXXX

ஸர்வ ஹரி ஐந்த்ர  10-96

ஸவ்ய ஆங்கிரஸ 1-51/57

சச ஆத்ரேய 5-21

சச என்பதற்கு ஒரு பொருள் முயல்; முன்னர் முயல் காது என்று ஒரு பெயரைக் கண்டோம்.

ஸஹதேவ வார்சகிர  1-100

ஸஹதேவ என்ற பெயர் துருக்கி வரை சென்றுவிட்டது. இந்த மஹா பாரத பெயர் சாதேவனார் என்று தமிழ்ப் புலவர் பட்டியலிலும் வந்து விட்டது.

XXXX

சாதன பெளவன  10-157

சாரிஸ்ர்க்க  சார்ங்க  10-142

ஸர்ப்ப ராக்ஞி  10-189

இந்தப் பெண் கவிஞரின் பெயர் பாம்பு ராணி. சித்து-சரஸ்வதி நதி தீர நாகரீகத்திலும், கிரேக்க நாட்டிலும் இரு கைகளில் 2 பாம்புகளைப் பிடித்துக்கொண்டு நிற்கும் உருவங்களைக் காண்கிறோம். ரிக்வேதத்தில் பாம்புராணி என்று முன்னரே கட்டுரை எழுதியுள்ளேன்.

XXX

சிகதா நிவாவரி  10-86; பெண் கவிஞர்

சிந்துக்க்ஷித்  ப்ரையமேதா 10-75

சிந்துத் த்வீப அம்பரீஷ  10-9

இந்த இரண்டு பெயர்களும் முக்கியமான பெயர்கள். சிந்து-ஸரஸ்வதி நதி தீர INDUS VALLEY, SARASVATI RIVER BNK CIVILIZATION மன்னர்கள்; மகாபாரதத்திலும் சிந்து சமவெளி மன்னர்களைக் காண்கிறோம்.

வேத காலத்திலேயே காசி முதல் ஈரான் வரை புலவர்கள் பெயர்களும் மன்னர் பெயர்களும் இருப்பதாலும் ராமாயண காலத்திலேயே இந்துக்கள் இலங்கை வரை சென்றதாலும் உலகின் மிகப்பெரிய நாகரீகம் இந்து நாகரீகம் என்பது இலக்கியத்தில் நிரூ பிக்கப்படுகிறது

XXXX

ஸுகக்ஷ ஆங்கிரஸ  8-92/93

இவர் பெயர் நல்ல கண். தமிழிலும் நல்ல கண்ணு என்ற பெயர் உண்டு

சுகீர்த்தி காக்ஷி வத  10-131

நல்ல புகழ் என்று பொருள். பொதுவாக கீர்த்தி என்பது பெண்கள் பெயர்களில் அதிகம்

சுதம்பர ஆத்ரேய 5-11/14

இதுவரை வந்த பெயர்களில் குறைந்தது 4 பெயர்களிலாவது எண் 7 (ஸப்த ) இருக்கிறது. உலகில் இப்படி 100, 1000, 3, 7 எண்களுடன் உள்ள பெயர்களை இன்றும் இந்துக்களிடம் மட்டுமே காண்கிறோம். சிந்து வெளியிலும் எண் மூன்றும் ஏழும்தான் அதிகம். அது வேத கால நாகரீகம் என்பதற்கு எண்களையும் ஒரு ஆதாரமாகக் கொள்ளலாம்.

XXXX

371. சுதாஸ் பைஜாவன 10-133

இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெயர். கால்டு வெல் கும்பலுக்கும் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் வேட்டுவைக்கும் மன்னன் பெயர். ரிக் வேதம் முழுதும் பல இடங்களில் இந்த தாஸருக்கு வசிஷ்டர், விசுவாமித்திரர்  ஆதரவு- அநாதரவு பற்றி பேசப்படுகிறது. சுதாஸ் சம்பந்தப்பட்ட வரலாற்றை வைத்து ஒரு கோடு போட்டு அவருக்கு முந்தையவர் யார் யார், பிந்தியவர் யார் யார் என்று கண்டுபிடிக்கலாம். ரிக் வேதத்தில் 500 ஆண்டு கால வரலாறு உள்ளதாக ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பிற்காலத்தில் காளிதாஸ், சூர்தாஸ், துளசிதாஸ்,, புரந்தரதாஸ் , கனக தாஸ் என்று பல பெயர்கள் தோன்ற மூல கரணம் இவர்.

சுகர்ணோ = நல்ல கர்ணன் என்பது போல நல்ல தாசன் = சுதாஸ் என்று பெயர்.

XXXX

ஸு தீதி  ஆங்கிரஸ  8-71

சுபர்ண காண்வ 8-59

சுபர்ண தார்க்ஷ்ய  10-144

சுபந்து கெளபாயன 5-24; 10-57/60

சுமித்ர வாத்ர்யஸ்வ  10-69/70

சுமித்ர கெளத்ஸ 10-105

சுராதா  அல்லது சுமேத  வார்சகிர  1-100

சுவேதா சைரிஷி  10-147

சுஹஸ்த்ய  கெளசே ய  10-41

சுஹோத்ர பாரத்வாஜ  6-31/32

“சு” என்றால் நல்ல என்று பொருள்; தமிழிலும் நிறைய பெண்களும் ஆண்களும் தங்கள் பெயர்களை “நல்”  என்று துவக்கினர் ; அவர்கள் அப்படியே வேத கால மரபைப்  பின்பற்றினர். தமிழில் முன்னொட்டு PREFIX கிடையாது , பின்னொட்டுகள் SUFFIX மட்டுமே உண்டு என்று சொன்ன சிந்துவெளி ஆராய்ச்சி அரை வேக்காடுகளுக்கு செமை அடி கொடுக்கும் பெயர்கள் இவை.

XXX

சூர்யா சாவித்ரி 10-85

உலகம் வியக்கும் கல்யாண மந்திரத்தைப் பாடிய பெண் புலவர்களில் இவரும் ஒருவர்.

XXX

சு வேதா , சு ராதா என்பன பெண் பால் பெயர்களாக இருக்கலாம்.

கஸ்தூரி, மாணிக்கம் போன்ற பெயர்களை பெண்களும் ஆண்களும் வைத்துக் கொள்ளுவதால் கவனத்துடன் செய்ய வேண்டிய ஆராய்ச்சி இது .

XXX

சோபரி  காண்வ  8-19/22

சோமாகுதி  பார்கவ  2-4/7

ஸ்தம்ப மித்ர சாரக  10-142

ஸ்வஸ் யாத் ரேயஹ 5-50/51

ஹரிமந்த ஆங்கிரஸ 9-72

ஹர்யத ப்ராகாத 8-72

ஹவிர்த்தான ஆங்கி 10-11/12

XXXX

ஹிரண்ய கர்ப ப்ராஜா பத்ய 10-121

392.ஹிரண்ய ஸ்தூப ஆங்கிரஸ 1-31/35; 9-4; 9-69

இது வரை 392 புலவர்கள் பெயர்களைக் கண்டோம். இது தவிர யஜுர், சாம, அதர்வண வேதங்களில் மேலும் பல புலவர்கள் பெயர்கள் உள்ளன. செய்யுள் நடையில் உள்ள உபநிஷத்துக்களையும் சேர்த்தால் பட்டியல் இன்னும் நீளும். வெளிநாட்டினர் கணக்குப்படி, அவர்கள் பிற்காலத்தியவர் என்பதால்  நான் இதில் சேர்க்கவில்லை.

XXXX

வேத அநுக்ரமணியைத் (INDEX OF VEDIC POETS AND POEMS)  தொகுத்தவர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இதைப் பார்த்த ஹாலன் என்ற மன்னன் 700 ப்ராக்ருத மொழி காதல் பாடல்களைத் தொகுத்தான். அதைப் பார்த்த தமிழர்கள் கி.பி. நாலாம் நூற்றாண்டில் சங்கப் பாடல்களைத் தொகுத்தனர்.

இந்தத் துறையில் — பெயர்கள் பற்றிய விஷயத்தில் — நீண்ட ஆராய்ச்சி தேவை.  YANA “யான” என்று முடியும் பெயர்களை நாம் இப்போது காண முடிவதில்லை. காஸ்யப, அத்ரி முதலிய ரிஷிகள் பெயர்களை இன்றும் கடல்களில் CASPIAN SEA, ADRIATIC SEA  காண்கிறோம்.

ஹிரண்ய என்றால் பொன் / தங்கம் GOLD  ; இது  BIG BANG பிக் பேங் எனப்படும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்புடன் தொடர்புடைய பெயர்!!!

ஆத்ரேய, ஆங்கிரஸ  ரிஷிகள் வம்சம் அதிகம் காணப்படுகின்றன.

21/27 என்று நான் எழுதி இருந்தால் 21 முதல் 27 வரை அதே புலவர் யாத்தவை என்று பொருள்.

சில எண்கள் இரண்டு புலவர்களுக்கு ஒரே எண்ணாக இருக்கும். அப்படி இருந்தால் இருவரும் சில சில மந்திரங்களைக் கண்டு பிடித்தார்கள் என்று பொருள்.

இந்தப் பட்டியல் ஆங்கில நூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஒரே துதியில் சிற்சில மந்திரங்களை மட்டும் சில ரிஷிக்கள் பாடியிருப்பார்கள் ; அப்படிப்பட்ட சின்ன குறிப்புகளை நான் COPY ‘காப்பி’ செய்யவில்லை.

ஏற்கனவே பெண் புலவர்கள் பெயர்களையும், மன்னர்கள் பட்டியலையும் தனியாக வெளியிட்டிருக்கிறேன்.

சங்க இலக்கியம் போலவே மன்னர்களும் பெண்களும் கவி புனைந் திருப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் எழுதும் வரலாற்றுப்  புஸ்தகங்களில் இந்தப் பெயர்களைச் சேர்க்க வேண்டும்.

சுபர்ண ,ஸ்யேன  என்பது கருடன், கழுகு , பருந்து EAGLE, FALCON  போன்ற பறவைகளைக் குறிக்கும். இன்று அமெரிக்கா போன்ற நாடுகளின் தேசீய சின்னத்தில் உள்ள கருடன், வேத காலத்தில் சிறப்புமிக்க பறவையாகத் திகழ்ந்தது. கழுகும் , பருந்தும் சோம லதா என்னும் செடியைக் கொண்டு தந்ததாக நிறைய பாடல்கள் உள்ளன. அதற்கெல்லாம் மாக்ஸ்முல்லர், கிரிப்பித் GRIFFITH கும்பல்களால் விளக்கம் சொல்ல முடியவில்லை .

–SUBHAM—

TAGS- 400, ரிக்வேத புலவர்கள்,  ரிஷிகள் , பட்டியல்– 8, 

மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்! (Post No.10,765)

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

WRITTEN BY B. KANNAN, DELHI
Post No. 10,765
Date uploaded in London – – 21 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வஸந்த விழா
மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்!
Written By B.Kannan, Delhi

உலகளாவியத் தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.
இப் பதிவில் கவிகளும், புலவர்களும் பெண்கள், மரங்கள், பூங்கொடிகளுக்கு இடையே நிலவும் நெருங்கிய நட்ப்பைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்….

வஸந்த விழா ஆரம்பித்து விட்டாலே மானுடர்கள் மட்டுமின்றி மரம், செடிகொடி களுக்கும் ஒருவிதக் கிளுகிளுப்பு உண்டாகிவிடுகிறதாம். நிழல் விழும் தங்கள் மரத்தடியில் இளம் பெண்டிர் அம்மானை ஆடுவதையும், கிளைகளிலிருந்துத் தொங்கும் ஊஞ்சலில் வேகவேகமாக முன்னும், பின்னும் உந்தித் தள்ளியவாறு மேலும் கீழும் பரவசமுடன் செல்வதையும், பனம்பழத்தை ஒத்த ஸ்தனங்களால் தங்களை அணைத்துக் கொண்டு, கோவைப் பழம் (பிம்பா) போன்ற சிவந்த உதடு களால் முத்தமாரிப் பொழிவதையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்குமாம். பேறுகாலப் பெண்கள் அநுபவிக்கும் ‘மசக்கை’ (தோஹத) சிரமங்கள் இவைகளுக்கும் உண்டாம். அவற்றைப் போக்கக் கூடிய வழிகளை உபயோகித்தால் அவை மன மகிழ்ந்து மலருமாம். .தார் தள்ளாத வாழை, காய்க்காத முருங்கை முதலியவற்றை, முக்கியமாக சூரியகிரகணத்தின் போது உலக்கை கொண்டுச் செல்லமாகத் திட்டி அடித்தால் பலனளிக்கும் என்பதைப் பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம், அல்லவா?
இதை ருசிகரமாக, சிருங்கார ரசனையுடன் வர்ணிப்பதில் தான் மொழி பேதமின்றி அனைத்துக் கவிஞர்களிடையேப் போட்டா போட்டியே நிலவுகிறது

முதலில் குரு சங்கரரின் சொல்லாடலிலிருந்துப் பயணிப்போம்…
ஆதிசங்கரர் தான் அருளிய சௌந்தர்யலஹரிப் பாடலில் ஒரு ருசிகரமானச் சம்ப வத்தை விவரிக்கிறார். அந்தப் பாடல், இதோ…
नमोवाकं ब्रूमो नयनरमणीयाय पदयो-
स्तवास्मै द्वन्द्वाय स्फुटरुचिरसालक्तकवते ।
असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते
पशूनामीशानः प्रमदवनकङ्केलितरवे ॥ 85॥
நமோ வாகம் ப்ரூமோ= உன்னைப் போற்றி வணங்குகிறோம், நயந ரமனீயாய= கண்களுக்கு ரம்மியமான, பதயோ:=பாதகமலங்களுக்கு, தவ அஸ்மை த்வந்வாய=உனது இரு பாதங்களும்,
ஸ்புட ருசி ரஸலக்த கவதே=ஒளிவீசும் ஈர மருதோன்றி (செம்பஞ்சு) குழம்புடன் கூடிய, அசூயத் யத்யந்தம்= ரொம்பப் பொறாமையுடன், யத் அபி ஹனனாய= (அக்கால்களால்) உதைபட்டுப் (பூ பூக்க) ஸ்ப்ருஹயதே=விரும்புகிற, பசுனாம் ஈசான:= பசுபதியான சிவன், பிரமத வன=உல்லாச நந்தவனத்தில் இருக்கும், கங்கேலித ரவே= அசோகமரத்தைப் பார்த்து…மேலும்,
சேது நாட்டைச் சேர்ந்த வீரசோழன் (வீரை) கன்னலஞ்சிலை வேள் என்றழைக் கப்படும் கவிராஜப் பண்டிதர், சௌந்தர்யலஹரியைத் தமிழில் வெண்பாவாக இயற்றியுள்ளார். அதிலுள்ள இதற்குரியப் பாடல்:

அரியமென் காவினீபுக் கசோகினிற் பாதமேற்ற
உரியநம் பதத்தை யீதோ வுறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கு மியல்பினைக் கேட்டு யானும்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினி தினிது மாதே.
‘அன்னை பார்வதி தேவி பரமேஸ்வரனுடன் ஒருசமயம் நந்தவனத்துக்குச் சென்றி ருந்தார்..குளிர்ச்சியும் வெப்பமும் மணமுங் கொண்டு அங்குள்ளப் பூஞ்சோலை கூத்தொடு (கூத்து- செடி கொடி மரங்களின் அசைவு) எதிர்கொண்டு உபசரிக்க, அங்கு தென்றல் உலவியது. அங்கிருந்த. அசோகமரத்து மலர்களை விரும்பியஅன்னையார் அதன்மீது தம்முடைய திருப்பாதத்தால் உதைத்தார். உடனே பூமாரிப்பொழிந்தது. அதைக் கண்ணுற்ற பரமசிவானார், தமக்கே உரிய அன்னையின் திருவடி ஸ்பரிசம் இந்த மரமோ அடைவது என்று பொறாமையுடன் அசோகத்தை நோக்கினார். அதனைக் கேட்டு எனக்கும் அம்மையின் திருப்பாதத்தைப் போற்றும் வளம் மேன் மேலும் பெருகட்டும்’ என்பது இவ்விருப் பாடல்களின் பொருளாகும்.

அசோகமரம் மகளிர் பாதம் பட்டால் மலர்வளம் மிக்கதாகும் என்பது வடமொழி இலக்கியங்களில் காணும் கவி மரபு. இதை நாம் காளிதாசனின் “மாளவிகாக்நி மித்ரா” வில் நாயகி மாளவிகாவின் செயலாலும், ஶ்ரீ ஹர்ஷதேவரின் “ரத்னா வளி”யில் இரு நாயகிகளான ராணி வாஸவதத்தை, சாகரிகா வின் செயல்களாலும் அறிகிறோம். இம்மரபு சங்ககாலத்திலேயே தமிழ்மரபுடன் கலந்து விட்டது என்பது அகநானூற்றுப் பாடலொன்றிலிருந்துப் புலனாகிறது.

அகப்பொருள் இலக்கிய மரபில் ‘அறத்தொடு நிற்றல்’ என்றொரு துறை உண்டு. அது, தலைவியின் காதல் களவொழுக்கத்தை அறிந்து வைத்துள்ள தோழி உரிய காலத் தில் அதனைச் செவிலிக்கு உணர்த்துவதாகும்.

அறத்தொடு நிற்றல் என்பது தலைவியின் காதலை வெளிப்படுத்துவது. இந்தத் துறையில் அமைந்த சங்கப் பாடல் பல. அதில் வடமொழி இலக்கிய மரபை ஒட்டி அமைந்துள்ளது 48-வது குறிஞ்சித் திணைப் பாடல்..அது செவிலி கூற்றினைத் தோழி வாங்கிக் கொண்டு மறு மொழியாகக் கூறியது. தங்கால் முடக் கொற்றனார் பாடியது

‘அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
‘பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்’ என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
‘புலி புலி!’ என்னும் பூசல் தோன்ற……..

“அன்னையே! உன் மகள் பாலுங் கூட உண்ணாதவளாய்ப் பெரிய துன்பங்கொண்டு உடல் வெளிறி இளைத்து வருகின்றாள், அது ஏனென என்னை வினவுகின்றாய். அதற்கு என்ன காரணம் எனத் தெளிவாக எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று தோன்றுகிறது.சில நாட்களுக்கு முன்னம் நானும் அவளும் மற்ற தோழிமாருடன் பூக்கள் மலிந்து மலர்ந்துள்ள மலைச் சாரலுக்கு விளையாடச் சென்றிருந்தோம். பூக்கொய்து விளையாடுகையில் அங்கொரு வேங்கை மரம், கிளை கொம்பெல்லாம் பூத்து மணம் பரப்பி நின்றிருந்ததைக் கண்டோம். ஒரு சிக்கல். அந்தக் கிளைகளெல் லாம் கைக்கெட்டா உயரத்தில் இருந்தன. அந்தக் கிளைகளைத் தாழச் செய்யப் புலி புலி என்று கூக்குரல் எழுப்பினோம்.தன்னைத் தான் கூவி அழைக்கிறோம் என்று எண்ணிய வேங்கை மரம் (வேங்கை=புலி என்றும் பொருள்) மலராத மொட்டுகளை யும் மலரச் செய்து, கிளையைச் சாய்த்து எங்களை உற்று நோக்கியது. கையெட்டும் அளவில் இருக்கும் பூக்களைக் கை நிறையப் பறித்து மகிழ்ச்சியுடன் சூடிக் கொண் டோம்… என்று வர்ணனைப் போகிறது. புலி புலி என மகளிர் கூவினால் வேங்கை மரக் கிளைகள் மலர் கொய்ய ஏதுவாகத் தாழும் என்பது ஒரு பண்டைய நம்பிக்கை. இது புலவர்கள் படைத்துக் கொண்ட இலக்கிய வழக்காகும். இதுவும் தோஹதக் கிரியையின் ஓர் அங்கமாகும்.

இச்சமயம் உவமான சங்கிரஹம்- (இரத்தினச் சுருக்கம் பகுதி) நூலைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அணியிலக்கண வளர்ச்சி வரலாற்றில் உவமைப் பொருட்களைத் தொகுத்துப் பார்க்கும் முயற்சியைக் கையாண்டுள்ளது.இதை எழுதியவர் யாரென்றுத் தெரியவில்லை. 1915-16-ம் ஆண்டுகளில் செந்தமிழ் மாத இதழில் தொடராக வெளி வந்துள்ளது. உவமான சங்கிரகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒத்த உவமைக் கருத்துக் களையே இதுவும் தருவதால் அதன் ஓர் அங்கமாகவே இதுவும் கருதப்படுகிறது. பிரிவாற்றாமைக்கு உரிய அறிகுறிகள் என்ற தலைப்பில், “மகளிரான் மலர் மரம்” எனும் பகுதியில் கலித்துறையில் அமைந்துள்ள 41வது பாடல், மகளிருக்கும்
மரங்களுக்கும் இடையே நிலவும் உறவை நேர்த்தியாக விவரிக்கிறது.

எண்மா தவிசண் பகம்பாலை புன்னை யெழிற்படவி உட்
கொண்மா மகிழ மராவொ டசோகு குராமுல்லையின்
பண்பாட னீழற் படனட்ட லாடற் பழித்தலுண்ணல்
கண்ணோக்கு தையனைணத் தல்சிரித் தற்கலர்க் காடுருமே
எண் -மதிக்கத் தக்க, மாதவி- குருக்கத்தி சண்பகம் ஏழிலைப் பாலை -, புன்னை–சண்பகம், பாலை, புன்னை, எழில் படலி- அழகிய பாடலி (பாதிரி) கொள்மா – கொள் ளுதர்க்குரிய மா மரம் மகிழ் – மகிழ, அம் மராவுடனே- அழகிய மரா உடனே அசோகு – அசோகம் குரா- குரா முல்லை-முல்லை, மின்- (ஆகிய இவைகள் முறையே இப்படிச் செய்தால்)

மாதவி-பண்பாடல் னீழல்படல்- சண்பக மரம் -நிழல் படுவது, ஏழிலைப் பாலை மரம்- நட்டல் (நட்பு கொள்ளுதல்), புன்னை- (ஆடல்), பாதிரி, பாடலி- (பழித்தல்), மா மரம்- கவரும் பார்வை, மகிழ மரம்- உண்ணல் (நுகருதல், பற்களால் கவ்வுதல்), மரா- கண்ணோக்கு (அருளுடன் பார்ப்பது), அசோகு- காலால் உதைப்பது, குரா-அணைத்தல், முல்லைக்கொடி- சிரித்தல், அலர்க் காடுருமே – மலர்கள் பூத்துக் குலுங்கும்.

விளக்கம்:
மரா= மரா/மராஅம்/மரவம் என இலக்கியங்களில் சொல்லப்படுபவை மூன்று பெரு மரங்கள்–(1) சுருளி/சுள்ளி (சூர்ணீ = வடமொழிப்பெயர்). இதன் பாலிலிருந்துச் சாம்பி ராணி தயாரிக்கப் படுகிறது. மடையன் சாம்பிராணி மரம் என்ற பெயருமுண்டு. (2) கொற்றவை (பாலை) நிலத்தின் யா என்னும் ஆச்சா மரவகைகள்.Shoreatrees,காராச்சா, வெண்மையானப் பூக்களைக் கொண்டது..(3) கடம்பு :செங்கடம்பு (முருகன் அணிவது),
வெண்கடம்பு, பந்துக்கடம்பு (காதம்பரி என்னும் கள் தயாரிப்பது. அம்பாளின் மலர்), …
மரா/ மரா அம் என்ற பெயர் தமிழில் உள்ள அரிதான ஓரு பெயர்ச்சொல் (TAUTONYM) ஆகும். மரம் என்ற தாதுமூலத்தாலேயே அழைக்கும் மரங்கள் இவைதாம்.

மாதவச் சிவஞான முனிவரின் மாணாக்கராகிய கவிராட்சச கச்சியப்ப முனிவர் தம் நூல்களில் வடமொழி இலக்கிய, வைதிக மரபுகளையும் பதிவு செய்துள்ளார்.காஞ்சிப் புராணம் இரண்டாம் காண்டம் கச்சியப்ப முனிவர் அருளியது. இயற்கை வருண னையே காப்பியமாக அமைந்தது. இதில் இளவேனிற்காலத்தில் இளமகளிர் புறத்தே சென்று மலர் கொய்து விளையாடும்போது செய்யும் இத் தோஹதகக் கிரியைகளை யும் அவற்றுக்கு உடம்படும் மரங்களையும் பற்றிக் கீழ்கண்டவாறு விரிவாகப் பாடுகிறார்.

மகளிர் நகைக்க முல்லை மலரும் என்பது கவிமரபு. அல்லிமலரை யணிந்த குழலியராகிய மகளிர், நகை முகத்துடன் முல்லைமலர் கொய்தனர். அது,’முல்லை! உன்னுடைய அரும்புகள் என் மூரலுக்கு நிகராகா’ (மூரல்= புன்சிரிப்பு)என நகையாட,, அம் முல்லையும் பதிலுக்கு, ‘ உன் மூரல் எமதரும்புக்கு நிகராகாமையினால் அல் லவா பல்லும் இதழும் காவலாக உள்ள உம் வாயினுள் போய் ஒளிந்து கொண்டது’ என எதிர்த்துப் பழித்ததுபோல முல்லைக் கொடி மெல்லிய அரும்பு ஈன்றது. அது கண்டு அபராதம் விதிப்பது போன்று மகளிர் அவ்வரும்பினை விரைந்து பறித்தனர். தம்மை இகழ்ந்து பழித்தவரது பல்லைப் பிடுங்குவது போல அச்செயல் இருந்தது. முல்லை அரும்புகள் மகளிரது பற்களுக்கு உவமை. அது பல்தெரியச் சிரிக்கும் புன் முறுவலைக் குறித்தது.

ஏழிலைம்பாலை (ஓரு காம்பில் 7 இலைகள் இருப்பதால் இப்பெயர்) என்னும் மலர் மகளிர் நட்புச் செய்வதால் மலர்வது. சோலையில் ஒரு பெண் ஏழிலைம்பாலை மரத்தைக் கண்டாள். முன்பொரு முறை தன் கணவருடன் நீண்ட கானகத்தில் தனிமையில் சுற்றித் திரிந்தபோது, ஏழிலைம்பாலை மரம் செஞ்ஞாயிறு வெளி யேற்றும் வெம்மை தணிய நறுநிழல் நிறைத்து தளர்ச்சியினை அகற்றியது. அது செய்த நன்றியை நினைந்து அப்பழைய நட்பினை நினைவு கூர்ந்தாரென்னும்படியாக, அவ்வேழிலைம்பாலையில் மணமிக்க மலர்கள் கொய்தாள். மலர் கொய்ததால் வறு மையடைந்த ஏழிலைம்பாலை மரமும் அவள் நட்புக் கொண்டாள் என நினைத்துக் கொத்து விரிந்தது புது மலர் முகிழ்ப்ப மங்கை அதனை நெருங்கிக் கொய்தாள்.

பாதிரிப் பூக்கள் கொய்யவியலா உயரத்தில் இருப்பதைக் கண்டு, மலர் கொய்யும் மகளிர்,அம்மரத்தை இகழ்ந்தனர். ‘பாடகமே! நீ தோடணிந்து நனி பூத்து எங்களை ஒப்ப இருந்தும் எங்களுக்கு இதழ் விரியும் மணமுள்ள போதினை நல்காதது என்னே’ என இகழ்ந்தனர். தோடு சிலேடையாக, மகளிரின் காதணியையும் மலரிதழையும் குறிக்கும். நனி பூத்து, என்பது சிலேடையாக மலர்கள் நிறையப் பூத்திருத்தலையும்
மகளிர்கள் இன்பத்துய்த்தற்குரிய பருவம் எய்தியிருத்தலையும் குறிக்கும். இவ்வாறு இகழ்ந்து கூறப் பெருமை நீங்கும் பழிப்புக்கு அஞ்சி எம்மை இகழாதீர் எனப் பணிந்த தைப் போலக் கைக்கு எட்டாது ஓங்கும் கிளையில் மீண்டும் செறிந்து மலர்ந்து தம் எதிரில் வளையும் அக்கொம்பிலிருந்து பாதிரிமலர்களைக் கொய்தனர். பாதிரி மகளிர் இகழ மலரும் தன்மையது. இது கவி மரபு.

செண்பகம் மகளிரின் நிழல்பட மலர்வது. முழுமதியைப் புறங்கண்டு இறுமாப்புக் கொண்ட அழகிய முகமுடைய மகளிர் சிலர் தங்கள் நிழல்பட்டதனால் முழுதும் அறவே பறிக்குந்தோறும் மீண்டும் மீண்டும் நிரம்பப் பூத்துத் தழைக்கும் காரணத்தை அறியாமல் வண்டு மொய்க்காத சண்பகமரமோ அல்லது உலவாப் பொற்கிழியோ என வியந்து நின்றனர்

மா மகளிரின் பார்வை படத் தழைப்பது. மாந்தளிரின் நிறம் மாமை எனப்படும். மாமை இளமகளிரின் நிறமுமாகும். மகளிர் மாவிளந்தளிரைத் தம்முடைய நிறமொப்பத் தளிர்த்தது என அழுக்காறுற்று பருத்த அடியை உடைய மாவின் செம்மைநிறத் தளிர் அனைத்தையும் கொய்யுந்தோறும், அவர்களுடைய விழிப் பார்வை வீரியத்தினால், அந்தமரமும் எதிர்ப்பது போலத் தளிர்களை மிகுதியாக ஈன்றன., அதற்கு நாணி, அம்மகளிர் தாம் தோற்று விட்டதை ஒத்துக்கொண்டது போலக் கொய்தலை நிறுத்திக் கைசோர்ந்து இளைத்தனர்.

மகிழமரக் கொம்பை மகளிர் பல்லினாற் கவ்வ மலரும். இந்தக் கிளையில் உள்ள மலர்களை நான்தான் முதலில் பறிப்பேன் நான் பறிப்பேன் எனப் போட்டியிட்டுக் கொண்டு பறித்தனர். ஒருசிலர் ஒருகரத்தால் கிளையைப் பற்றிக் கொண்டு மறு கரத்தால் பரித்தனர். அருகில் சிலர், ஒருகையினால் மரக்கொம்பினைப் பற்றி மலர் பறித்துபின், வெற்றி பெற வேண்டும் என எண்ணி மலர்க்கிளையை வாயினால் பற்றிக் கொண்டு இருகைகளினாலும் பறித்தனர். அவ்வாறு பறித்தும் மலர்கள் குறை யாமையைக் கண்ட பிறர் மகிழமரம் நடுநிலைமைக் காக்கவில்லை என்று சினந்து பறித்தலைக் கைவிட்டனர்.

மாதவி- குருக்கத்தி .( வசந்த மல்லி) இது மகளிர் பாட மலர்வது, மெல்லிய பஞ்சு பட்டாலே மிக நடுங்கும் மகளிர் சிலர் தங்கள் தாமரை மலரிதழ் போன்ற வாய் திறந்து தம்மியல்புக்கு ஏற்ப பாடவே, தேன் ஒழுக மாதவிமலர் மிகுதியாகப் பூத்துக் குலுங்கியது. அதனை வேறு சிலரும் வந்து பார்த்துத் தம் கைம்மலரால் அம்மலரை முகத்தில் வியர்வை அரும்பக் கொய்தனர்.

மகளிர் உதைக்க மலர்வது அசோகு. யாழினிசை போல இனிமையாகப் பேசும் மகளிர் சிலர் உயர்ந்த கமுக மரத்தில் கட்டப் பெற்ற ஊஞசலேறி எதிரே இருந்த அசோக மரத்தை, ‘ஒளியுடைய எம் நிறத்தைக் கவர்ந்தீர்’ எனக் கோபித்து உதைத் தலைப் போலத் தம் மெல்லடியால் உதைந்து ஆடினர். அவ்வாறு உதைக்குந்தோறும் மிகுதியாகப் பூத்துத் தரையில் கொட்டும் அசோகமலரினை முயற்சியின்றிக் கிடைத் தமையால் மகிழ்ச்சியுடன் வேறு சிலர் அவற்றை அள்ளிக் கொண்டுச் சென்றார்கள்.

புன்னை மகளிர் ஆடலுக்குப் பூப்பது. ஒலிக்கும் மணிமேகலையும் தவளைபோல ஒலிக்கும் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப, நகைகள் சார்ந்த பொன்னிற முலைகளை உடைய இளமங்கையர் ஆடுதலும் நாட்டியத்தின் சிறப்பாக அமைந்திருத்தலைக் கண்டு பொற்பரிசில்களை எதிர் வீசுவார்போல இளம் புன்னை நறிய மலர்களைப் புதிதாகப் பூத்து உகுப்ப அதிசயத்துடன் விரும்பி சிலர் பறித்துச் சென்றனர்.

மகளிர் தழுவ மலர்வது குரவம்.(மலை வேம்பு, நீண்ட நீல கண்ணாடிக் குப்பி போன்றது) குரவினது மலர் பாவையைப் போல இருப்பதால் பாவை எனப்படும். அம்மானை விளையாட்டில் மணியால் செய்த அம்மானைக் காயைக் குரவம் பாவைக்கு அளிப்பவர் போல மேலே வீச, அது மராமரக் கிளையில் சிக்கித் தங்கியது. அந்த அம்மானைக் காயை எடுப்பதற்குக் குரவ மரத்தின் மேல் ஏற விரும்பி அம்மரத்தை மகளிர் தழுவினர். தாம் அம்மானைக்காயைக் கவர்ந்து கொண்டதாக நினைத்து இவர்கள் தாக்குவர் என அஞ்சிய குரவம் அடிதாழ்ந்து வணங்குவது போலத் தாழவே, கவர்ந்து கொண்ட பொருளோடு அபராதத் தொகை யும் கொடுப்பது போல, அம்மானைக் காயுடன் எமக்குப் பூக்களையுந் தந்ததெனப் புகழ்ந்து குரவ மலர்களைக் கொய்தனர்… என்று வர்ணிக்கிறார் புலவர்.

இதுவரை தமிழ் இலக்கிய மரபைப் பார்த்தோம். அடுத்து சம்ஸ்க்ருதக் கவிகள் இதை எப்படிக் கையாண்டுள்ளார்கள் என்பதைக் காணலாம்.

           -------------------------------------------------------------------------------

tags- வஸந்த விழா, மங்கையர், மரங்கள், பூங்கொடிகள்,

கரந்துறைப் பாட்டு – 1 (Post No.10,764)

PICTURE OF PAMBAN SWAMIKAL CHITRA KAVI FROM ANOTHER BLOG

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,764
Date uploaded in London – – 21 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை!
கரந்துறைப் பாட்டு – 1

ச.நாகராஜன்

கரந்துறைப் பாட்டு என்பது சித்திர கவியில் ஒரு வகையாகும்.

ஒரு செய்யுளுக்குள் இன்னொரு செய்யுள் மறைந்திருக்கும் படி
ஒரு பாடலை அமைப்பது கரந்துறைப் பாட்டு ஆகும்.

குறிப்பிட்ட செய்யுளில் இன்னொரு செய்யுளைத் தேடிக் கண்டு பிடிப்பது என்பது ஒரு கடினமான காரியம்.

என்றாலும் இயற்றியவர் அதைச் சொல்லி விட்டாலோ, அல்லது நன்கு கற்றறிந்த ஒரு தமிழ்ப் புலவர் கரந்து உறையும் பாடல் எது என்று சொல்லி விட்டாலோ நமக்கு மகிழ்ச்சி தான்.

உதாரணத்திற்கு தண்டியலங்காரம் தரும் கரந்துறைப் பாடல் இது:

நேரிசை வெண்பா
அகலல்குற் றேரே யதர மமுதம்
பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதிய
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத் தடங்கண் வெவ்வேறு வாள்

பாடல் ஒரு பேரழகியைப் பற்றியது.

அவளது அல்குல் (ஜனன உறுப்பு) தேர் போன்றது.
அதரம் அதாவது வாய் இதழ் அமுதம் போன்றது.
சொல்லவே முடியாத அரிய இடையை உடையவள் அவள்.
பார்த்தால் முகம் சந்திரனைப் போல இருக்கும்.
அவள் (முறுவல்) பற்களோ முத்துப் போல இருக்கும்.
மை தடவிய அவளது கரிய கண்கள் நீலோற்பல மலரை ஒக்கும்.
அக்கண்களோ வெவ்வேறு வாள் போலக் கூர்மையாகத் திகழும்.

சரி, இந்த அழகியைப் பற்றிய பாடலில் கரந்து உள்ள அதாவது ஒளிந்து இருக்கும் பாடல் என்ன?

அது தான் வள்ளுவரின் திருக்குறளில் வரும் முதல் குறளாகும்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு

இதைக் கண்டுபிடிப்பது எளிது.
என்றாலும் மேலே உள்ள செய்யுளில் கரந்து உறையும் திருக்குறளைக் காண குறள் எழுத்துக்கள் மட்டும் சற்று தடித்த எழுத்துக்களில், சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டிருக்கிறது, கீழே :

அகலல்குற் றேரே யதர மமுதம்
பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதிய
முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல
மைத் தடங்கண் வெவ்வேறு வாள்

குறளில் உள்ள எழுத்துக்கள் 25.
அந்த 25 எழுத்துக்களையும் மேலே உள்ள பாடலில் தடித்த எழுத்துக்களாக சிவப்பு வண்ணத்தில் காணலாம்.

இது இப்படி இருக்க இதைப் பற்றிய இன்னொரு விளக்கமும் உண்டு.
அதை அடுத்துப் பார்ப்போம்.


tags– கரந்துறைப் பாட்டு – 1