Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் மாதம் 21 -ம் தேதி 2025-ம் ஆண்டு
****
சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயம்; தலைமை செயலருக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தவறினால் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்’ என, எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, 41க்கும் அதிகமான கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுதாரர் ராஜேந்திரன் முன் வைத்த வாதங்கள்:
சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் அவை திருடப்பட்டுள்ளன.
38 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டு இருப்பது சாதாரண விஷயம் அல்ல.
இதில் போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏனென்றால். ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களின் பொறுப்பு அதிகாரிகள் மீது இதுவரை எந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
மேலும் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகள் குறித்த விபரங்களும் கிடைக்கப் பெறாமலேயே உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் தொடர்பான விஷயங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் எப்படி தொலைந்தன; அதற்கான காரணம் என்ன? 375க்கும் அதிகமான சிலைகள் திருடப்பட்டு இருப்பதாக ஆவணங்கள் கூறுகின்றன. அவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள காப்பங்களில் வைக்கப்பட்டு இருக்கிறதா? அதை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? பதிவு செய்யப்பட்டிருந்தால், வழக்கு எந்த நிலையில் உள்ளது? இதற்கான விளக்கங்களை தமிழக அரசு தெரிவிக்கவில்லை என்றால், தலைமைச் செயலர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நேரிடும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை நவ., 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
*****
திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை: சுப்ரீம் கோர்ட்
‘திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்தவில்லை’ என, தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் ‘குட்டு’ வைத்திருக்கிறது. மேலும், ‘கோவில் நிதியை, அரசுக்கு வரும் நிதியாக கருதக் கூடாது’ என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையும் உறுதி செய்துள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பேசிய ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ‘கோவில் நிதியில் இருந்து 80 கோடி ரூபாய் செலவில், 27 கோவில்களில் திருமண மண்டபங்கள் கட்டப்படும்’ என, அறிவித்தார். இதைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அரசாணை ரத்து கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவது என்பது, ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டத்திற்கு விரோதமானது எனக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கோவில் நிதியை கொண்டு திருமண மண்டபங்கள் கட்டுவதற்கான அதிகாரம் அரசுக்கு இல்லை. கோவில் நிதியை மத ரீதியான விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
‘கோவில் நிதி என்பது வர்த்தக நடவடிக்கைகளுக்காக அல்ல. அதில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டிருந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘கோவில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்கிறோம்’ எனக் கூறி, கடந்த ஆக., 19ம் தேதி உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
திருமண மண்டபங்களை கட்ட வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தவில்லை.
விசாரணை தேவை
கோவில் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக அவர்கள் காணிக்கை செலுத்தி இருக்கலாம். கோவிலில் திருமண மண்டபங்கள் கட்டி, திருமணங்கள் நடந்தால், அனைத்து விதமான மோசமான பாடல்களும் அங்கே ஒலிக்கும். இதற்காக தான் கோவில் நிலங்கள் இருக்கிறதா?திருமண மண்டபங்கள் கட்டுவதற்கு பதிலாக, அந்த நிதியை கல்வி மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான நற்காரியங்களுக்காக செலவிடலாம்.
இந்த விவகாரத்தில் அரசு எடுத்த முடிவு சரியா? தவறா? என்ற விவாதத்திற்கு வரவில்லை. இவ்வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி இருக்கிறது. எனவே, மனு தாரர்களுக்கு ஆதரவாக எந்தவொரு இடைக்கால உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் நவ., 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .
*****
சபரிமலையில் 4 கிலோ தங்கம் மாயம்: விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலையில் துவார பாலகர்கள் சிலையில் வேயப்பட்ட தங்க கவசங்களின் எடை 4 கிலோ வரை குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைகேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து அய்யப்பனை தரிசிக்கின்றனர்.
கோவில் திருமுற்றத்தில், அய்யப்பன் சன்னிதிக்கு முன்பாக இருக்கும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு, 1999ம் ஆண்டில் தங்க கவசம் சார்த்தப்பட்டது.க்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவை, 40 ஆண்டுகள் வரை பழுது இல்லாமல் இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், ஆறே ஆண்டு களுக்குள் கவசத்தில் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து, பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த, 1999ல் தங்க கவசத்தின் எடை 42.8 கிலோவாக இருந்த நிலையில், 2019ல் பழுது பார்ப்பதற்காக அகற்றி, சென்னைக்கு கொண்டு செல்லும் போது நான்கு கிலோ குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
துவாரபாலகர் சிலையில் இருந்த தங்க கவசங்கள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் அகற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியதால், சென்னையில் இருந்து அதை மீண்டும் கொண்டு வருமாறு சமீபத்தில் கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது நடத்தப்பட்ட சோதனையில்தான், தங்க கவசத்தின் எடை குறைந்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, முழுமையாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறியுமாறு தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு அதிகாரி களுக்கு கேரள உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
****
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சால் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதங்கம் !
மத்திய பிரதேசத்தின் கஜூராஹோ கோவில் வளாகத்தில் உள்ள விஷ்ணு சிலையை புனரமைப்பது குறித்த வழக்கு விசாரணையின் போது, ‘சிலையிடமே கேட்க வேண்டியது தானே’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதையடுத்து, ‘அவர் ஹிந்து மத நம்பிக்கையை கேலி செய்கிறார்’ என, ஹிந்து அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் கருத்து தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ கோவில் சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை.
இந்த கஜூராஹோ கோவிலின், ஒரு பகுதியான ஜாவரி கோவிலில், ஏழு அடி உயர விஷ்ணு சிலை சேதமடைந்த நிலையில், அதை புனரமைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு கடந்த 16ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது நலத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்படவில்லை.
விளம்பர நோக்கம் பொது விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது எனக் கூறி, தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, இவ்வழக்கு குறித்து தலைமை நீதிபதி பி .ஆர்.கவாய் கூறியதாவது:
விளம்பர நோக்கத்திற்காகவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிலையை புனரமைப்பது குறித்து கடவுளிடமே சென்று கேளுங்கள். மகா விஷ்ணுவின் தீவிர பக்தர் என நீங்கள் கூறுவதால், அவரிடமே சென்று பிரார்த்தனை செய்யுங்கள். எதற்காக நீதிமன்றத்தை நாடி வந்தீர்கள். சிலையை புனரமைப்பது நீதிமன்றத்தின் வேலை அல்ல. அது தொல்லியல் துறையின் வேலை.
சிலையை புனரமைக்கும் அதிகாரம் தொல்லியல் துறையிடம் தான் இருக்கிறது. இதை விட, உச்ச நீதிமன்றத்திற்கு பல முக்கியமான வேலைகள் இருக்கின்றன.கஜூராஹோ கோவில் வளாகத்திற்குள்ளேயே மிகப் பெரிய சிவலிங்கம் இருக்கிறது. சைவ சமயத்தின் மீது உங்களுக்கு வெறுப்பு இல்லை என்றால், அந்த கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துங்கள். இவ்வாறு தலைமை நீதிபதி கவாய் கூறினார்.
நம்பிக்கை அவரது இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதப் பொருளாக மாறிய நிலையில், ஹிந்து மதத்தின் நம்பிக்கைகளை தலைமை நீதிபதி கேலி செய்துவிட்டார் என, விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளதாவது:
நீதியின் கோவில் நீதிமன்றம். நீதிமன்றங்கள் மீது இந்திய சமூகம் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த நம்பிக்கை வெறும் பெயரளவுக்கு மட்டும் இல்லாமல், வலுவாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
குறிப்பாக நீதிமன்றத்திற்குள் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். அதற்கான கடமை மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கும் இருக்கிறது. ஆனால், அந்த கடமையை தலைமை நீதிபதி மறந்து விட்டாரோ என தோன்றுகிறது.
சிலை புனரமைப்பு வழக்கில் அவர் கூறிய கருத்து, ஹிந்து மத நம்பிக்கைகளை கேலி செய்வது போல இருக்கிறது. இப்படியான கருத்துகளை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பின்னர் நீதிபதி மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது
****
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ் வரா சுப்ரமணியம் அறிக்கை
வட மதுரையில் பழமைவாய்ந்த விருந்தீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பேனரில், கோவில் உட்பிரகார மண்டபத்தில் கொம்பு முரசு, உறுமி, சங்கு, பறை, ஜமாப், சிவ வாத்தியம் போன்றவை இசைக்க அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.
ஹிந்துக்களின் பக்தி என்பது இசையோடு பின்னி பிணைந்தது. இசையால் இறைவனை எழுந்தருள செய்வது, உறங்க செய்வது போன்ற மரபுகள் இன்றளவும் தொடர்கின்றன. இவற்றை போற்றி வளர்க்க வேண்டிய அறநிலையத்துறை, அழித்து வருவது வேதனைக்குரியது.
ஹிந்து கோவில்களின் பாரம்பரியங்களை ஒவ்வொன்றாக அழிக்க நினைக்கும் தமிழக அரசு, தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும், ஏற்கனவே உள்ள நடைமுறை பழக்கங்களை மாற்றக்கூடாது; இசை வாத்தியங்கள் முழங்க தடை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
****
திருவண்ணாமலையில் வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாடு!
உலக ஒற்றுமை ஆன்மிக கலாசார தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் சென்ற சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆன்மிக கலாசார ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
1,008, சிவாச்சாரியார்கள், அண்ணா மலையார் மலையை நோக்கி அமர்ந்து, சிவ பூஜை செய்தனர்.
இதை காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வேத மந்திரங்கள் முழங்கி துவக்கி வைத்தார்.
முன்னதாக மாநாட்டு வளாகத்தில் கோ பூஜை நடந்தது. இதில், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர்.
****
கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் சட்டப்பூர்வ கடமை; உயர்நீதிமன்றம் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் சொத்துக்களை பாதுகாக்க தாக்கலான வழக்கில்,’ஏற்கனவே அரசு நடவடிக்கையை துவங்கியுள்ளது. அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை,’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஆழ்வார்திருநகரி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடித்திருவிழா நடைபெறும். கோயிலை நிர்வாகம் முறையாக நிர்வகிக்கவில்லை. கோயில் நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது. கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கோயில் வளாகம், கழிப்பறைகளை துாய்மையாக பராமரிக்கவில்லை. வணிக வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுப்பாதை, கோயிலைச் சுற்றிலும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, கோயில் சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை அறநிலையத்துறை இணை கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அறநிலையத்துறை சட்டப்படி கோயில் சொத்துக்களை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை. ஏற்கனவே நடவடிக்கை துவங்கியுள்ளதால் இம்மனுவை மேலும் பரிசீலிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.
****
பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து
எழுபத்தைந்து வயதான பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுதுமுள்ள இந்து மதத் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்; செப்டம்பர் பதினேழாம் தேதி அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
!பிரதமர் நரேந்திர மோடிக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, தருமபுரம் ஆதின மடாதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
பாரத மாதாவுக்கு நீங்கள் செய்யும் அயராத சேவையும், சனாதனத் தர்மத்தை நிலைநிறுத்துவதற்கான உங்கள் பக்தியும் பாராட்டத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
காசி-தமிழ் சங்கமம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் 1000வது ஆண்டு புனிதப் பிரதிஷ்டை போன்ற உங்கள் வரலாற்று முயற்சிகளை நாங்கள் நன்றியுடன் நினைவு கூர்கிறோம் என அவர் கூறியுள்ளார்.
ஞானம், தைரியம் மற்றும் இரக்கத்துடன் தேசத்திற்குத் தொடர்ந்து சேவைச் செய்ய பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு செப்டம்பர் மாதம் 28–ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .
வணக்கம்.
—SUBHAM—-
Tags – World Hindu News, 21 -9-2025, Gnanamayam, Broadcast, Vaishnavi, Latha
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது 1மஹராஷ்டிர மாநிலத்தில் பஞ்சகங்கா நதி தீரத்தில் அமைந்துள்ள கோலாப்பூர் என்ற திருத்தலமாகும்.
இது மும்பை நகரத்திற்கு தெற்கே 237 கிலோமீட்டர் தூரத்திலும் புனே நகருக்குத் தெற்கே 656 கிலோமீட்ட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
மஹாலெக்ஷ்மிக்கு என அமைந்துள்ள இந்தத் திருக்கோவில் சக்தி பீடங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
கோலாசுரன் என்ற அசுரன் தனது புத்திரர்கள் தேவர்களால் கொல்லப்படவே மஹாலக்ஷ்மியிடம் வந்து இந்த இடத்தைத் தனக்கு நூறு ஆண்டுகள் தருமாறு வேண்ட தேவியும் அப்படியே அருள்கிறாள். நூறு ஆண்டுகள் இங்கு இருந்த கோலாசுரன் அனைவருக்கும் கொடுமைகள் பல செய்து வந்தான். நூறு ஆண்டுகள் முடிந்தவுடன் லக்ஷ்மி இங்கு வந்து கோலாசுரனை வதம் செய்தாள். இறக்கும் போது கோலாசுரன் இந்த இடத்திற்குத் தன் பெயரை இட வேண்டுமென்று வேண்ட அதன் படியே தேவி அருள் புரிந்தாள். இந்த இடம் கோல்ஹாபூர் என்று பெயரிடப்பட்டது.
கருங்கல்லில் அமைந்த அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் மகுடம் தரித்து தேவி காட்சி தருகிறாள். அலை பாயும் கூந்தலுடன் தங்க நிற மேனியுடன் தேவியின் திருவுருவம் திகழ்கிறது.கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலிப் பழமும், வலது மேல் கரத்தில் தலைகீழாகத் தரையைத் தொட்டபடி உள்ள கௌமோதகி என்ற தண்டாயுதமும் இடது மேல்கரத்தில் கேடகம் என்ற கவசமும் கீழ் இடது கரத்தில் பானபத்திரம் என்ற கிண்ணமும் காணப்படுகின்றன. தேவி மேற்கு நோக்கிக் காட்சி தருகிறாள்.
இந்த விக்ரஹம் மணிக்கற்களால் அமைக்கப்பட்ட ஒன்றாகும். சுமார் 40 கிலோகிராம் கொண்ட இந்த விக்ரஹம் மூன்று அடி உயரம் உள்ளது.
கோவிலில் உள்ள ஒரு சுவரில் ஶ்ரீ யந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.
செல்வத்தை அள்ளித் தரும் அழகிய விக்ரஹத்தின் காட்சியில் ஈடுபட்டு பக்தர்கள் மனமுருகி வழிபடுகின்றனர். தினமும் இங்கு மாலையில் லக்ஷிமி புராண வரலாறிலிருந்து ஒரு திவ்ய சரித்திரம் சொல்லப்படுகிறது.
.கோவிலின் மேற்குத் திசை சுவரில் ஒரு திறந்த ஜன்னல் உள்ளது.
இதன் வழியாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 9, நவம்பர் 10, , 11, ஆகிய தேதிகளில் சூரியன் தன் ஒளிக்கதிர்களை விக்ரஹத்தின் பாதங்களில் தொடும்படியாகச் செய்து சூரியன்
சூரிய பூஜை செய்கிறான்.
மூன்று நாட்கள் விழும் சூரிய கிரணங்கள் முதல் நாளில் தேவியின் பாதத்திலும் அடுத்த நாள் தேவியின் இடை பாகத்திலும் மூன்றாம் நாள் தேவியின் திருமுகத்திலும் விழுவது காணக் கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
இது கிரண் உற்சவம் என்ற பெயரில் பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஏராளமான மக்கள் இந்த தினங்களில் இங்கு கூடுகின்றனர்
கடந்த பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோவில் செம்மைப்படுத்தப்பட்டதோடு விரிவு படுத்தப்பட்டும் உள்ளது. இது பற்றிய சுவையான வரலாற்றுச் செய்திகளை வரலாற்று ஏடுகளிலிருந்து அறியலாம்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ மஹாலெக்ஷ்மி அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
21-9-25 தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை!
பூமியைக் காக்கும் புதிய பாக்டீரியா – சாங்கஸ் (CHONKUS) – கண்டுபிடிப்பு!
ச, நாகராஜன்
இன்று பூமியை பயமுறுத்தும் முதல் அச்சுறுத்தல் தட்பவெப்ப நிலை மாற்றமும் புவி வெப்பமயமாதலும் தான்!
இதனால் பல உயிரினங்கள் அழிந்துபடும், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை ஓரமுள்ள எண்ணற்ற நகரங்கள் அழியும்; லட்சக்கணக்கில் மக்கள் வேற்றிடம் தேடி ஓட வேண்டும். அல்லது அழிய வேண்டும்.
இந்த நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதற்கான காரணம் க்ரீன்ஹவுஸ் வாயுக்கள் எனப்படும் கார்பன் டை ஆக்ஸைடு, மெதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை மிக அதிக அளவில் உற்பத்தியாகி வளி மண்டலத்தில் கலப்பதால் தான். இதனால் புவியின் வெப்பம் மிக மிக அதிகமாகிறது. லட்சக்கணக்கான வாகனங்கள் உலகெங்கும் இயக்கப்படுவதால் அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுப்புகையே இதற்குக் காரணம்.
இதை எப்படித் தடுப்பது என்று விஞ்ஞானிகள் திகைத்து வாகனப் பயன்பாட்டைக் குறையுங்கள்; படிம எரிபொருளான டீஸல்,
பெட்ரோலை மிக மிக குறைவாக பயன்படுத்துங்கள் என்று ஓங்கிய குரலில் உலகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கிறது.
அமெரிக்காவிலிருந்தும் இத்தாலியிலிருந்தும் சில விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக்காக இத்தாலியில் உள்ள எரிமலைத் தீவிற்குச் சென்றனர். அங்கு எரிமலை வெடிப்பானது நீருக்கு அடியில் ஏராளமாக கார்பன் டை ஆக்ஸைடை கரைத்திருக்கும் என்பதாலும் இந்த நிலை சயானோபாக்டீரியா (Cyanobacteria –நீலப்பசும் நுண்ணுயிரி) என்ற பாக்டீரியாவை வளர்க்க உதவும் என்றும் அவர்கள் திட்டமிட்டனர்.
அங்கு அவர்கள் இரண்டு புதிய பாக்டீரியாக்களைக் கண்டனர்.
ஒன்று UTEX 3154 இன்னொன்று UTEX3222. இதில் UTEX3222 மிகப் பெரியதாக இருந்தது. கொழுத்து இருந்த இதற்கு செல்லப்பெயராக ‘சாங்கஸ்’ (CHONKUS – கொழுத்தது) என்ற பெயரை அவர்கள் இட்டனர். இதனால் தட்பவெப்ப மாறுதலைத் தடுக்க முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர். இது ஒருவகை பாசி ஆகும் (ஆல்கா).
இது கார்பன் டை ஆக்ஸைடை தாவரங்களை விட மிக அதிக அளவில் உறிஞ்சி விடும்.
தாவரங்களை விட இது இரு மடங்கு அதிக அளவில் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுவதைக் கண்ட விஞ்ஞானிகளுக்கு ஒரே சந்தோஷம். பெரிய அளவில் இதை உருவாக்கி க்ரீன் கேஸ் வாயுக்கள் எனப்படும் பசுமை வாயுக்களின் நச்சுத் தன்மையை ஒழிக்கலாம் என்று அவர்கள் திட்டமிடுகின்றனர்/
சாங்கஸ் ஒரு சயானோபாக்டீரியா என்பதால் இது வெகு வேகமாக வளரும். அதிக அடர்த்தி கொண்டதாகவும் இது இருக்கிறது. சயானோ பாக்டீரியா வளி மண்டலத்தில் உள்ள நைட்ரஜனை அம்மோனியாவாக மாற்றும் வல்லமை படைத்தது. புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் சக்தியைக் கொண்டது.
ஆகவே, “சாங்கஸ் நமக்கு நம்பிக்கை தரும் ஒரு நல்ல பாக்டீரியாவாக இருக்கும்; இதை வைத்து புவி வெப்பமயமாதலைத் தடுத்து விடலாம்” என்கிறார் ஆய்வின் தலைவரான மாக்ஸ் ஷூபெர்ட் (Max Schubert) என்ற விஞ்ஞானி.
எது எப்படி இருந்தாலும், உலகில் வாழும் அனைத்து மக்களும் புவி வெப்பமயமாதலைத் தங்கள் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு வாகனப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தொழிலகம் வெளிவிடும் நச்சுப்புகையைத் தடுக்க வேண்டும்.
இப்படிச் செய்தால் ‘சாங்கஸ்’ பாக்டீரியாவும் கூடவே சேர்ந்து புவி வெப்பமயமாதலைத் தடுக்க உதவும்.
உலக மக்களுக்கு ஒரு ஆறுதலாகவும் நிம்மதிப் பெருமூச்சு விடவும் உதவும் சாங்கஸுக்கு ஒரு சபாஷ் போட்டு வரவேற்போம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vedic Hindus had amazing medical knowledge which is reflected in the hymns of Rig Veda and Atharv(na) Veda. If we go by the date of Rig Veda as told by Prof. Wilson it is at least 4000 years old. If we take into consideration the date proposed by Herman Jacobi and Bala Gangadhara Tilak it is at least 6000 to 8000 years old. But we know neither in Greek nor in Hebrew nor in Chinese nor in Persian we have any book at that time. Tamil is very junior to these languages. We have Tamil books from First century BCE only.
Here is what we know about the knowledge of Vedic Anatomy:
Many hymns of the Rig Veda speak about the various parts of human body. They mention about the lungs, heart, intestines, kidneys and the stomach. We must remember that Vedas are not medical books. Yet they mention all these parts.
Atharva Veda gives more information in 2-33 and 10-1, 8, 9.
Atharva Veda 2-33. For expulsion of yákṣma from all parts of the body.
1. Forth from thy (two) eyes, (two) nostrils, (two) ears, chin, brain, tongue, I eject (vi-vṛh) for thee the yákṣma of the head.
2. From thy neck (grīvás), nape (uṣṇíhās), vertebræ (kī́kasā), backbone, (two) shoulders, (two) fore-arms, I eject for thee the yákṣma of the arms.
3. Forth from thy heart, lung (klomán), hálīkṣṇa, (two) sides, (two) mátasnas, spleen, liver, we eject for thee the yákṣma.
Weber conjectures “gall” for hálīkṣṇa (Ppp. hálīkṣma), and “kidney” for matasna.
4. Forth from thine entrails, guts, rectum, belly, (two) paunches, plāçí, navel, I eject for thee the yákṣma.
5. From thy (two) thighs, knees, heels, front feet, hips, fundament (? bháṅsas), I eject for thee the yákṣma of the rump.
6. From thy bones, marrows, sinews, vessels, (two) hands, fingers, nails, I eject for thee the yákṣma.
7. What [yákṣma is] in thine every limb, every hair, every joint—the yákṣma of thy skin do we, with Kaçyapa’s ejector (vībarhá) eject away (víṣvañc).
***
Compared with Rig Veda 10-163 (from my old article)
WONDER IN RIG VEDA 27 BODY PARTS IN ONE HYMN 10-163 (Post No.10,273)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,273
Date uploaded in London – 29 OCTOBER 2021
In this short hymn with 12 lines one comes across 27 ++ body parts; if you delete the repeated last line in every mantra it is only a SIX line mantra!
1.Nostrils
2.Eyes
3.Ears
4.Chin
5.Head
6.Brain
7.Tongue
8.Neck tendons
8.a.Neck
9.Breast bones
10.Spine
11.Shoulders
12.Arms
13.Viscera
14.Rectum
15.Heart
16.Kidneys
17.Liver
18.Spleen
19.Thighs
20.Knee caps
21.Heels
22.Feet
23.Stomach
24.Groin
25.Hair
26.Nails
27.Top to Toe
xxxx
Following is Griffith’s translation
1. FROM both thy nostrils, from thine eyes, from both thine ears and from thy chin,
Forth from thy head and brain and tongue I drive thy malady away.
2. From the neck-tendons and the neck, from the breast-bones and from the spine,
From shoulders, upper, lower arms, I drive thy malady away.
3. From viscera and all within, forth from the rectum, from the heart,
From kidneys, liver, and from spleen, I drive thy malady away.
4. From thighs, from knee-caps, and from heels, and from the forepart of the feet,
From hips from stomach, and from groin I drive thy malady away.
5. From what is voided from within, and from thy hair, and from they nails,
From all thyself from top to toe, I drive thy malady away.
6. From every member, every hair, disease that comes in every joint,
From all thyself, from top to toe, I drive thy malady away.
Rig Veda Mandala 10 Hymn 163
अक्षीभ्यां ते नासिकाभ्यां कर्णाभ्यां छुबुकादधि | यक्ष्मं शीर्षण्यं मस्तिष्काज्जिह्वाया वि वर्हामि ते ||
आन्त्रेभ्यस्ते गुदाभ्यो वनिष्ठोर्ह्र्दयादधि | यक्ष्मम्मतस्नाभ्यां यक्नः पलाशिभ्यो वि वर्हामि ते || ऊरुभ्यां ते अष्ठीवद्भ्यां पार्ष्णिभ्यां परपदाभ्याम | यक्ष्मं शरोणिभ्यां भासदाद भंससो वि वर्हामि ते ||
मेहनाद वनंकरणाल लोमभ्यस्ते नखेभ्यः | यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||
अङगाद-अङगाल लोम्नो-लोम्नो जातं पर्वणि-पर्वणि | यक्ष्मंसर्वस्मादात्मनस्तमिदं वि वर्हामि ते ||
akṣībhyāṃ te nāsikābhyāṃ karṇābhyāṃ chubukādadhi | yakṣmaṃ śīrṣaṇyaṃ mastiṣkājjihvāyā vi vṛhāmi te ||
ghrīvābhyasta uṣṇihābhyaḥ kīkasābhyo anūkyāt | yakṣmaṃ doṣaṇyamaṃsābhyāṃ bāhubhyāṃ vi vṛhāmi te ||
āntrebhyaste ghudābhyo vaniṣṭhorhṛdayādadhi | yakṣmammatasnābhyāṃ yaknaḥ plāśibhyo vi vṛhāmi te ||
ūrubhyāṃ te aṣṭhīvadbhyāṃ pārṣṇibhyāṃ prapadābhyām | yakṣmaṃ śroṇibhyāṃ bhāsadād bhaṃsaso vi vṛhāmi te ||
mehanād vanaṃkaraṇāl lomabhyaste nakhebhyaḥ | yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||
aṅghād-aṅghāl lomno-lomno jātaṃ parigvedaaṇi-parigvedaaṇi | yakṣmaṃsarigvedaasmādātmanastamidaṃ vi vṛhāmi te ||
***
In book 10-2 there is a hymn entitled “The wonderful structure of man” in which several parts of the skeleton are carefully and systematically enumerated.
Book 10, HYMN II Atharva Veda
Purusha, Primeval Man or humanity personified
1Who framed the heels of Pūrusha? Who fashioned the flesh of him? Who formed and fixed his ankles? Who made the openings and well-moulded fingers? Who gave him foot-soles and a central station? 2Whence did they make the ankles that are under, and the knee- bones of Pūrusha above them? What led them onward to the legs’ construction? Who planned and formed the knees’ articulations? 3A fourfold frame is fixt with ends connected, and up above the knees a yielding belly. The hips and thighs, who was their generator, those props where- by the trunk grew firmly stablished? 43Who and how many were those Gods who fastened the chest of Pūrusha and neck together? How many fixed his breasts? Who formed his elbows? How many joined together ribs and shoulders? 5Who put together both his arms and said, Let him show manly strength? Who and what God was he who set the shoulderblades upon the trunk? 6Who pierced the seven openings in the head? Who made these ears, these nostrils, eyes, and mouth, Through whose surpassing might in all directions bipeds and quadrupeds have power of motion? 7He set within the jaws the tongue that reaches far, and thereon placed Speech the mighty Goddess. He wanders to and fro mid living creatures, robed in the waters. Who hath understood it? 8Who was he, first, of all the Gods who fashioned his skull and brain and occiput and forehead, The pile that Pūrusha’s two jaws supported? Who was that God who mounted up to heaven? 9Whence bringeth mighty Pūrusha both pleasant and unpleasant things, Of varied sort, sleep, and alarm, fatigue, enjoyments and de- lights? 10Whence is there found in Pūrusha want, evil, suffering, dis- tress? p. 6 Whence come success, prosperity opulence, thought, and utte- rance? 11Who stored in him floods turned in all directions, moving diverse and formed to flow in rivers, Hasty, red, copper-hued, and purple, running all ways in Purusha, upward and downward? 12Who gave him visible form and shape? Who gave him magni- tude and name? Who gave him motion, consciousness? Who furnished Pūrusha with feet? 13Who wove the vital air in him, who filled him with the down- ward breath? What God bestowed on Pūrusha the general pervading air? 14What God, what only Deity placed sacrifice in Pūrusha? Who gave him truth and falsehood? Whence came Death and immortality? 15Who wrapped a garment round him? Who arranged the life he hath to live? Who granted him the boon of speech? Who gave this fleetness to his feet? 16Through whom did he spread waters out, through whom did he make Day to shine? Through whom did he enkindle Dawn and give the gift of even- tide? 17Who set the seed in him and said, Still be the thread of life spun out? Who gave him intellect besides? Who gave him voice and gestic power? 18Through whom did he bedeck the earth, through whom did he encompass heaven? Whose might made Pūrusha surpass the mountains and created things? 19Through whom seeks he Parjanya out, and Soma of the piercing sight? Through whom belief and sacrifice? Through whom was spirit laid in him? 20What leads him to the learned priest? What leads him to this Lord Supreme? How doth he gain this Agni? By whom hath he measured out the year? p. 7 21He, Brahma gains the learned priest, he Brahma, gains this Lord Supreme. As Brahma, Man wins Agni here Brahma hath measured out the year. 22Through whom doth he abide with Gods? Through whom with the Celestial Tribes? Why is this other called a star? Why is this called the Real Power? 23Brahma inhabits with the Gods, Brahma among the Heavenly Tribes. Brahma this other star is called. Brahma is called the Real Power. 24By whom was this our earth disposed? By whom was heaven placed over it? By whom was this expanse of air raised up on high and stre- tched across? 25By Brahma was this earth disposed: Brahma is sky arranged above. Brahma is this expanse of air lifted on high and stretched across. 26Together, with his needle hath Atharvan sewn his head and heart. And Pavamāna hovered from his head on high above his brain. 27That is indeed Atharvan’s head, the well-closed casket of the Gods. Spirit and Food and Vital Air protect that head from injury. 28Stationed on high, Purusha hath pervaded all regions spread aloft and stretched transversely. He who knows Brahma’s cattle, yea, the fort whence Purusha is named, 29Yea, knows that fort of Brahma girt about with immortality, Brahma and Brāhmas have bestowed sight, progeny, and life on him. 30Sight leaves him not, breath quits not him before life’s natural decay, Who knows the fort of Brahma, yea, the fort whence Purusha is named. 31The fort of Gods, impregnable, with circles eight and portals nine, p. 8 Contains a golden treasure-chest, celestial, begirt with light. 32Men deep in lore of Brahma know that Animated Being which Dwells in the golden treasure-chest that hath three spokes and three supports. 33Brahma hath passed within the fort, the golden castle; ne’er subdued, Bright with excessive brilliancy, compassed with glory round about.
***
In book 2-33 (AV) almost all-important organs are precisely described. They include the stomach, liver, bronchitis, gall bladder, kidney, intestines, colon, urinary bladder and rectum.
The Atharva Veda mentions about the heart in the hymn 10-8-43 which is described as lotus with nine gates. It also refers to blood veins dhamanis, siras et.
Evidence from these two Vedas indicate they the Vedic healer had studied body parts well.
Later in the Satapata brahmanas we find reference to bones, ribs, brain, spine etc. the famous hymn 12-3-2-3/4 mentions the number of bones and ribs in the human body to be 360- including teeth and nails—and 26 respectively. Their exact locations are also mentioned.
If we take the Upanishads , heart is described elaborately in the Brihad Aranyaka Upanishad . the details of its composition, the number of arteries, their functions are given. We find the description of heart in four more Upanishads.
In the medical works of Sushruta and Charaka we have more information which shows that they have counted every bone and every muscle in the human body.
Suhsruta mentioned 300 bones; Charaka noted that human body has 500 muscles.
Charaka counted 200 dhamanis/arteries and 700 siras/minute veins, capillaries.
***
Comparison with modern science
It is an amazing accurate description of the heart as we know it today. We do know that the heart looks like a lotus but if it held with its apex upwards, and there are nine openings in all: three in the right atrium, for in left atrium and each one in the left and right ventricles.
According to the present-day study of anatomy, there are more than 600 skeletal muscles in the human body. There are 206 bones in human body.
All these numbers tally with the numbers of bones and muscles in the Sushruta, Charaka Samhitas.
Let us look at the dictionary of Body Parts in the Vedas
Sources:
Ancient sciences and Archaeology, Bharatiya kala Prakashan, Delhi ; 2007
The Vedic Harappans Bhagwan Singh, Aditya Prakashan, New Delhi; 1995
To be continued……………………
Tags- Body parts, Vedas, Atharvana veda, Rig Veda, Part 1 , Hindu anatomy
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழனுக்கு தாலி உண்டு! தமிழர்கள் தீ வலம் வந்து திருமணம்!!
அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்
சங்கத் தமிழரின் வழிபாடுகளும் சடங்குகளும்
தமிழ்ப் பல்கலைக்கழகம் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1996
இந்தியப் பண்பாடும் தமிழரும், எஸ் இராம கிருஷ்ணன் , மீனாட்சி புஸ்தக நிலையம், மதுரை, 1971
தமிழர்கள் பற்றி கால்டுவெல் கும்பல்களும் திராவிடக் கும்பல்களும் டே ஒன் DAY ONE முதல் பொய்ப் பிரசாரத்தைப் பரப்பி வருகின்றன. முட்டாள் தமிழர்களை BRAIN WASH மூளைச் சலவை செய்துவருகின்றன; இந்தக் கும்பல்களுக்கு தமிழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மு சண்முகம் பிள்ளையும் வலது / சோவியத் கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ் அறிஞர் எஸ் ஆர் கே யும் செமை அடி கொடுக்கின்றனர். எஸ் ஆர் கே எனப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் மதுரைப் பலக்லைக்கழகத்தில் கம்பனும் மில்டனும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக டாக்டர் பட்டம் பெற்றவர் ; மதுரை வடக்கு மாசி வீதியில் எங்கள் வீட்டுக்கு ஐந்து வீடுகள் தள்ளி வசித்ததால் அடிக்கடி அவருடன் காரசாரமாக விவாதம் செய்வோம். வலது கம்யூனிஸ்ட் கட்சிப் பிரசாரத்தினால் ஆங்கிலப் பேராசிரியர் பதவியை இழந்தவர்; அவரிடம் நான் எம் ஏ படித்தேன்.
ஒல்காப்புகழ் தொல்காப்பியனைப் புகழ்ந்த உச்சிமேற்புலவன் நச்சினார்க்கினியன் , அவர் ஒரு பிராமணன் என்றும் அவரது பெயர் த் ருண தூமாக்கினி என்றும் எழுதிவைத்தார்; அந்தப் பிராமண தொல்காப்பியனோ சதுர்வேதி- நான்மறைமுற்றிய –அதங்கோட்டு ஆச்சார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கி தொல்காப்பியதத்தை தமிழ் கூறு நல்லுலகத்துக்கு ஈந்தார் .அவரோ மனு நீதி சொல்லும் எட்டுவகைத் திருமணம் பானிணீயம் சொல்லும் உவமை இயல் ஆகியவற்றை அப்படியே கொடுத்தார்; கூசாமல் நூல் முழுதும் அறம்,பொருள் இன்பம் என்ற தர்மார்த்த காமத்தையும் சொல்லி ஸம்ஸ்க்ருதச் சொற்களை அள்ளித் தெளித்தார் ; இதை எல்லாம் மறைக்க திராவிடர்கள் அவருக்கு மீசை வைத்து மேல் துண்டு போட்டுப் படமும் வெளியிட்டனர்; திருவள்ளுவரின் பூணூலை மறைத்து விபூதியை அழித்தது போல இதைச் செய்தவர்கள் இப்போது வள்ளலாளரின் விபூதியை அழித்து வடலூர் ஆஸ்ரமத்தை கபளீகரம் செய்துவருகின்றனர் . நிற்க ;தாலி பற்றிக் காண்போம்.
ஐம்படைத் தாலியையும் புலிப்பல் தாலியையும் குழந்தைகட்குக் காப்பணியாக அணிவிக்கும் வழக்கத்தை ஏற்கும் திராவிடங்கள் இந்தத் தாலியை மட்டும் ஏற்கவில்லை; நல்ல வேளையாக அதுகள் சொன்னது போல தாலியை அறுக்காமல் தமிழ்ப்பெண்கள் வாழ்வது பெருமைக்குரியது.
இதில் ஆய் அண்டிரன், மகளிரின் தாலியைத் தவிர ஏனைய அனைத்தையும் தானம் செய்துவிட்டார் என்பதை ஈகை அரிய இழையணி என்ற சொல் தொடரின் மூலம் அறிகிறோம்
முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதில் திராவிடங்களை மிஞ்ச எவராலும் முடியாது ; சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், கண்ணகி -கோவலன் எல்லாம் இரண்டாம் நூற்றாண்டு — அதாவது சங்ககாலம் — என்று ஒரு பக்கம் தம்பட்டம் அடிக்கும் திராவிடங்கள் சிலப்பதிகாரத்தில் பார்ப்பனன் செய்து வைத்த அக்கினி சாட்சி கல்யாணத்தை மறைத்தும் பசப்பியும் வருகின்றன ; இதன் பெயர் திராவிடியன் மாடல் DRAVIDIAN MODEL!
கோவலன் கண்ணகியை மணந்தபோது ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டி’யதாகவும் மணமக்கள் தீ வலம் செய்ததாகவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். இதைச் சொல்லும்போது மட்டும் சிலப்பதிகாரம் ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்று சொல்லி மழுப்பி விடுகின்றனர்.
ஆனால் திராவிடர்களுக்கு செமை அடி கொடுக்கும் வாதத்தை பேராசிரியர் சண்முகம் பிள்ளை நமக்கு அளிக்கிறார்
குறுந்தொகை 106
106. குறிஞ்சி
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று வாழி, தோழி! நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
”தான் மணந்தனையம்” என விடுகம் தூதே.
இதில் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
”தான் மணந்தனையம்’
என்று அக்கினி சாட்சியாக கல்யாணம் செய்துகொண்டதை சொல்கிறாள் ; எல்லாவற்றுக்கும் மேலாக நெய் பெய் தீ என்னும் உவமை சம்ஸ்க்ருத நூல் முழுதும், உபநிஷத் தோறும் வழங்கி வருகிறது; அதுமட்டுமல்ல இது யாக யக்ஞங்களைத் தமிழர்கள் செய்ததால் பரவிய உவமை என்பதையும் அறிய முடிகிறது.
தமிழர்கள் பங்குனி மாதம், ரோகிணி , கார்த்திகை, ஓணம், ஆருத்ரா என்னும் ஆதிரை நட்சத்திரம் ஆகியவற்றை அப்படியே ஸம்ஸ்க்ருதப் பதம் மூலம் சொல்வதையும் கவனிக்க வேண்டும் இதில் ரோகிணிக்கு சம்ஸ்க்ருதத்தில் உள்ள வண்டி என்ற SYMBOL சிம்பலையும் சகடம் என்ற சொல்லால் வடித்துள்ளனர்.
இதை இந்தியப்பண்பாடும் தமிழரும் என்ற நூலில் எஸ் ராமகிருஷ்ணன் 1971- ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் காட்டி,
போதாயன கிருஹ்ய சூத்திரமும், மானவ கிருஹ்ய சூத்திரமும் கூறியிருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார் ; அவைதான் கல்யாணத்துக்கு உகந்த நட்சத்திரம் ரோகிணி என்று முன்காலத்திலேயே சொல்லிவிட்டன.
அதுமட்டுமல்லாமல்
பாணிக்கிரகணம் என்னும் கைத்தலம் பற்றுதல், ஓமம் வளர்த்தல் தீ வலம் செய்தலை கலித்தொகையிலும் 69-3/5 காண்கிறோம் என்கிறார் SRK எஸ் ஆர் கே.
காம உணர்வு கொண்டு திருமணம் செய்துகொண்டு மனைவியாக ஏற்றுக்கொள்ளப்பட்டவள் காமக்கிழத்தி. இவள் தெரிவிக்கும் செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.
போது அவிழ் பனிப் பொய்கை, புதுவது தளைவிட்ட
தாது சூழ் தாமரைத் தனி மலர்ப் புறம் சேர்பு
காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணையாக,
ஓதுடை அந்தணன் எரி வலம் செய்வான் போல், 5
ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு
மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர!
திருமணம் செய்துகொள்ளும் அந்தணன் தீயை வலம் வருவான். அதுபோல அன்னம் தன் பெடையுடன் தாமரையைச் நுற்றிவரும் புனல் மிக்க ஊரை உடையவனே!
தாமரைப் போது மலரும் பொய்கை. புதிய போது கட்டவிழும் தாமரை, தாது சூழ்ந்திருக்கும் தாமரை. தன்னந்தனியே பூத்திருக்கும் தாமரை. அதனை அழகிய தூவியை உடைய அன்னம் தன் அழகு-நடை போடும் பெண்-அன்னத்தோடு திரிந்தது. காதல் கொள்ளும் திருமணச் சடங்கு நாளில், தன் புத்தாடையுள் ஒடுங்கிக்கொண்டு ஆசை மிக்கு, மான் போல மருண்டு பார்த்துக்கொண்டு வரும் தன் மணப்பெண்ணோடு வேதம் ஓதும் அந்தணன் வலம் வருவது போல அன்னம் தாமரையைச் சிற்றிவரும்.
புதுமணப் பெண்ணும் மாப்பிள்ளையும் – காதல் அன்னங்கள்
வலம் வரும் தீ – தனியே பூத்திருக்கும் தாமரை.– கலித்தொகை 69 Kalitogai 69
கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்:-1055; தேதி:– மே 21, 2014.
தமிழர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் திருமணம் செய்ததாக அகநானூற்றில் இரண்டு பாடல்களும் கண்ணகி- கோவலன் திருமணம் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்ததாக சிலப்பதிகாரமும் கூறும். ரோகிணி நட்சத்திரத்தில் திருமணம் ஏன்?
தமிழர்களுக்கு சோதிடத்திலும் பல்லி சொல்லும் பலனிலும், புள் (பட்சி) நிமித்தத்திலும், தும்மல்,கண் துடிப்பு விஷயத்திலும், அபார நம்பிக்கை இருந்ததை சங்க இலக்கியத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்த ரோகிணி நட்சத்திர நம்பிக்கை வட இந்தியாவிலும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் இது இடம்பெறும் 500, 600 ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கிறது.
இந்துக்கள் வட இமயம் முதல் தென் குமரி வரை (‘ஆ சேது ஹிமாசலம்’) — ஒரே நம்பிக்கை வைத்திருந்ததை இது காட்டுகிறது. அது மட்டுமல்ல, ஆரிய – திராவிட இனவாதம் பேசி நாட்டைப் பிரிக்க, இந்து மதத்தை ஒழிக்க முற்பட்டோரின் பொய்மை வாதத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
போதாயன கிருஹ்ய சூத்திரம், மனுதர்ம சாஸ்திரம், வால்மீகி ராமாயணம், காளிதாசனின் படைப்புகள் முதலியன நிலவு- ரோகிணி நெருக்கத்தைப் புகழ்ந்து உரைக்கின்றன. கணவன் – மனைவி, காதலன் – காதலி அன்புக்கு உவமையாகப் பயன்படுவது ‘’நிலவு – ரோகிணி’’ நெருக்கம்தான். சங்க இலக்கியத்திலும் இந்த நெருக்கம் பல இடங்களில் உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது. அகநானூற்றில் இரண்டு கல்யாணப் பாடல்கள் இருக்கின்றன. இரண்டும் தமிழர் திருமண முறையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இதை விட்டால் அடுத்தபடியாக சிலப்பதிகாரத்தில்தான் கல்யாணக் காட்சி. அதையும் விட்டால் ஆண்டாளின் வாரணம் ஆயிரத்தில்தான் அடுத்த கல்யாணக் காட்சி வருகிறது.
ஆல்டிபாரன் என்பது ரோகிணியின் அராபிய பெயர்
அகநானூறு 86 (நல்லாவூர்க் கிழார்) பாடிய பாடலில்
“கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடுஇல் விழுப்புகழ் நாள் தலைவந்தென……….” பொருள்:- வெண்மையான சந்திரனை குற்றமில்லாத சிறந்த புகழினை உடைய உரோகிணி என்ற நாள் (நட்சத்திரம்) அடைந்தது…………………………
அகநானூறு 136 (விற்றூற்று மூதெயினனார் பாடிய பாடல்) “மைப்பு அறப்புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப்பேணி புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து………………” (திங்கள்=சந்திரன், சகடம்=ரோகிணி நட்சத்திரம்)
இந்த இரண்டு பாடல்களும் தரும் பொருளின் சுருக்கம்: கல்யாணம் என்பது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தை அடைந்த நாளில் நடைபெறும். அந்த வீட்டில் ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாடு (வெண்சோறு+ நெய் அல்லது உளுந்து கலந்த பொங்கல்) கிடைக்கும். சுமங்கலிகள் கூடி நின்று மங்கள முழக்கம் செய்வர். வீடு பந்தல் போட்டு, மணல் தூவி அலங்கரிக்கப்பட்டிருக்கும். சுவற்றில் தெய்வ ஓவியங்கள் இருக்கும்.புத்தாடைகள் உடுத்தி இருப்பர் முதலிய பல விஷயங்களை நீண்ட பாடலில் காணலாம்.
வால்மீகி ராமயணத்தில் பல இடங்களில் சந்திரனைச் சேர்ந்த ரோகிணி போல என்ற உவமை வருகிறது. காளிதாசனும் விக்ரம ஊர்வசீயம், சாகுந்தலம் நாடகங்களிலும், ரகுவம்ச காவியத்திலும் இந்த உவமைகலைப் பயன்படுத்துகிறான். ஆனால் இவைகளுக்கெல்லாம் முன்னர் படைக்கப்பட்ட போதாயன க்ருஹ்ய சூத்திரத்திலும், மனு தர்ம சாஸ்திரத்திலும் ரோகிணி நட்சத்திர நாள் திருமணத்துக்கு உரிய நாள் என்று தெளிவாகவே எழுதப்பட்டுள்ளது. அதை இளங்கோவும் நல்லாவூர்க் கிழாரும் விற்றூற்று மூதெயினனாரும் பின்னொட்டிச் செல்வது பாரதீய கலாசாரத்தின் செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
தமிழ் இலக்கியத்தில் மணநாள் குறிப்பு தவிர, பொதுவாக ரோகிணி-நிலவு உறவு பற்றிக் கூறும் செய்யுள்கள்: திருமுருகாற்றுப்படை வரி 87/ 88, நெடுநல்வாடை-163, புறம் 60, 160 பாடல்கள்.
தக்ஷன் என்ற ரிஷியுனுடைய 27 பெண்களை சந்திரன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அதிகம் அன்பு செலுத்தவே பற்ற மனைவியர் தந்தையிடம் முறையிட்டனர். அவர் சந்திரன் தேய்ந்து அழியட்டும் என்று சாபமிட்டார். எல்லா மனைவியரும் அவ்வளவு கடுமையான சாபம் வேண்டாம் என்று மன்றாடினர்.
இந்துமதத்தில் கடவுளேயானாலும் ஒரு வரமோ சாபமோ கொடுத்துவிட்டால் அதைத் திரும்பி எடுக்கவே முடியாது ஏனெனில் இது சத்தியத்தின் அடிப்படையில் அமைந்த மதம். ஆனால் குறைக்கவோ, கூட்டவோ முடியும். உடனே நிலவு என்பது 15 நாள் தேய்ந்து (கிருஷ்ண பட்சம்) அடுத்த 15 நாள் வளரட்டும் என்றார் தக்ஷன்.
உண்மையில் இது வான சாஸ்திர உண்மை. அந்தக் காலத்தில் விஞ்ஞானப் பாடங்களை இப்படிக் கதையாகச் சொல்வது மரபு. ஆக நிலவின் சுக்ல பட்சம், கிருஷ்ண பட்சம் பற்றி விளக்க இப்படிக் கற்பனைக் கதை உற்பத்தி செய்தனர்.
ஆயினும் ரோகிணிக்கு அதிக அன்பு காட்டியது என்ன விஞ்ஞான நிகழ்ச்சி என்று இப்போது சொல்ல முடியவில்லை. ஒருவேளை முன்னொரு காலத்தில் நிலவு ரோகிணிக்கு மிக அருகில் வந்திருக்கலாம். அல்லது அந்த இடத்தைக் கடக்க கூடுதல் நாட்கள் எடுத்திருக்கலாம். இப்போது நிலவு 29 நாட்களுக்கு ஒருமுறை பூமியைச் சுற்றுகிறது.
இதே போல பூமியே நடுங்கும்படியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் புதன் பிறந்ததாகவும் இன்னொரு புராணக் கதை கூறுகிறது. இதில் பிருஹஸ்பதியும் சம்பந்தப்படுவதால் இதுவும் ஒரு விண்வெளி விஞ்ஞானக் கதையே. பூமி, நிலவு மோதலால் அல்லது குரு (வியாழன் கிரக ஈர்ப்பால்) ஈர்ப்பால் புதன் உருவாகி இருக்கலாம். எதிர்காலத்தில் புதன் கிரகம் பற்றி புதிய தகவல் வரும்போது நம் புராணக் கதைகள் விஞ்ஞானக் கதைகளாகக் கருதப்படும்.
கிரகணம் பற்றி நாம் நன்கு அறிந்து, அதைக் கணக்கிட்டு பஞ்சாங்கத்தில் குறித்தபோதும் பாமர மக்களுக்கு இதெல்லாம் விளங்காது என்பதால் சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்று கதை சொல்லுவது போலத்தான் நிலவு- ரோகிணி கதையும்.
நிலவு பூமியை ஒரு முறை வலம் வர 27 நாட்கள் ஆகும். பூமியும் சூரியனைச் சுற்றுவதால் 27 நாட்களுக்குள் பூமி இரண்டரை நாள் தூரம் முன்னேறி இருக்கும். இதனால் நிலவு ஒரு முறை பூமியை வலம் வர ஆகும் நாட்கள் 29-5 (இருபத்தொன்பதரை) நாட்கள். இதை ஒரு சாந்திர மாதம் என்பர். நிலவு போகும் பாதையில் தெரியும் 27 நட்சத்திரங்களை அவனது மனைவியர் என்று பாமர மக்களுக்காக கதை சொன்னார்கள்.
நிலவுக்கு ‘’அருகில்’’ ரோகிணி நட்சத்திரம் வருகிறது என்பதெலாம் மாயத்தோற்றமே. ஏனெனில் நட்சத்திரங்கள் கோடி கோடி மைல்கள் அப்பால் இருக்கின்றன. நிலவு அவைகளைக் கடந்து போவது போலத் தோன்றினாலும் நிலவுக்கும் அவைகளுக்கும் இடையில் கோடானு கோடி மைல்கள் இருக்கின்றன.
பாலகங்காதர திலகர் என்ற சுதந்திரப் போராட்ட வீரர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளை வைத்து அதன் காலம் கி.மு.6000 என்று கணித்தார். இவர் ஆராய்வது தெரியாமல், தனியாக ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர் ஜாகோபியும் வான சாஸ்திரத்தை வைத்து ரிக் வேதம் கி.மு.4500 என்று கூறினார்.
பகவத் கீதையில் கண்ணன்– ‘’மாதங்களில் நான் மார்கழி’’– என்று கூறுவது போல கி.மு.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினியும் மார்கழியே வருடத்தின் முதல் மாதம் என்கிறார். அப்போதைய கோள் நிலை கொண்டு கணிக்கப்பட்ட கணக்கில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பது தெரிகிறது. எதிர்காலத்தில் தமிழர்களும் வடவர்களும் ஏன் ரோகிணியில் கல்யாணம் செய்தார்கள் என்பது தெரியவரலாம்.
contact swami _48@yahoo.com
–SUBHAM—
TAGS- தமிழனுக்கு, தாலி உண்டு, தமிழர்கள், தீ வலம் வந்து திருமணம், திராவிடர்களுக்கு செமை அடி, சண்முகம் பிள்ளை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆதிசைவர்கள் நலவாழ்வு மையம் வெளியீடு!!
ச.நாகராஜன்
கள்ளக்குறிச்சி ஆதிசைவர்கள் நலவாழ்வு மையத்தின் நிறுவனரான தில்லை சிவஸ்ரீகார்த்திகேய சிவம் சிறப்பு மிக்க பழைய நூல்களை வெளியிட்டு சிவப்பணியைச் செய்து வரும் சிவத் தொண்டர். நூற்றாண்டுகளுகு முன்பே ஆதிசைவர்களின் பெருமையை உரைக்கும் நூலாக இருக்கும் ஆதிசைவப் பிரபாவம் என்ற நூலானது காலவெள்ளத்தில் அழிந்துவிடாமல் உயிர் பெற வேண்டுமென்ற நல் நோக்கத்தில் இந்த நூலை அவர் 2017 டிசம்பரில் பதிப்பிட்டுள்ளார்.
1880ஆம் ஆண்டு இந்த நூல் முதன் முதலாகப் பதிக்கப்பட்டது.
இந்த நூலை எழுதியவர் ஸ்ரீசோமசுந்தர நாயகர் ஆவார். இவரது காலம் 1846 முதல் 1901 முடிய ஆகும். இவர் சுமார் 126 நூல்களை எழுதியதாகத் தெரிகிறது. தனது உத்யோகத்தை விட்டு விட்டு இவர் சைவப் பணி ஆற்ற களத்தில் இறங்கினார். இவரது சிறப்பான சைவ சமயப் பணிகளைக் கண்டு வியந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள், இவருக்கு “வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம்” என்ற பட்டத்தைச் சூட்டினார்.
பாஸ்கர சேதுபதி மன்னர் விவேகானந்தர் அமெரிக்காவில் வெற்றிக் கொடி நாட்டி விட்டு தாயகம் திரும்பும்போது அவரைப் பெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர். அவர், விவேகானந்தரை தமது அரசவையில் சோமசுந்தர நாயகரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது நாயகர் விவேகானந்தரிடம் வேதாந்தம் போன்று ஆகமங்களின் சாரமாக விளங்கும் சைவசித்தாந்த தத்துவத்தை எடுத்துக் கூறினார். விவேகானந்தர் அது கேட்டு வியப்புற்றார் என்பது தெரிய வருகிறது.
பரசமயங்களின் தத்துவங்களை அக்கு வேறு ஆணிவேறாக ஆராய்ந்து அவற்றைத் தவிடு பொடியாக்கும் சூரர் என்பதால் இவருக்கு திருவாவடுதுறை ஆதீனம் “பரசமயக் கோளரி”என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
நூல் முழுவதும் ஆதி சைவர்களின் சிறப்பைக் காணலாம். அத்துடன் மட்டுமல்லாமல் “சைவ வேடம் பூண்டு திரியும் வஞ்சகப் பேய்களை”இவர் சாடுவதையும் காணலாம்.
ஆசாரியர் என்பவர் யார்? நாலு வேதம் ஆறு அங்கங்களை அறிந்தவரகவும், ஞான பாதங்களை நன்கு போதிப்பவராகவும், கிரியா பாதத்தில் சமர்த்தராகவும், யோக பாதத்தில் அப்பியாசம் உள்ளவராகவும், சரியா பாதப் பிரகாரம் நடத்தை உள்ளவராயும், சிவபூஜை, சிவாகினி இவைகளைத் தப்பாமல் நடத்துகின்றவராயும் உள்ளவரே ஆசாரியர் ஆவார்.
சகலபிராணிகளுக்கும் ஹிதத்தைச் செய்பவனே ஆசாரியன் ஆவான்.
ஆசாரிய நிதிகளாகிய சிவ வேதியரே சரவ அநுக்ரஹத்வாதிபரம தர்மங்களை உடையவராய் விளங்குவர்.
இப்படி இந்த நூல் ஆதி சைவரின் பெருமையை தகுந்த பிரமாணங்களுடன் சித்தரிக்கிறது. பர சமயங்களை நிராகரிக்கிறது.
சோமசுந்தர நாயகர் இயற்றியுள்ள 47 நூல்களின் பட்டியலை நூலின் இறுதியில் காணலாம்.
48பக்கங்கள் உள்ள இந்த நூல் அழகிய தாளில் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது.ஸ்ரீசோமசுந்தர நாயகர் வரலாற்றைச் சுருக்கமாக தில்லை சிவஸ்ரீகார்த்திகேய சிவம் தந்துள்ளார்.
சைவத்தில் பற்றுள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. ஆதிசைவர்கள் நிச்சயம் இதைத் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் மட்டுமல்லாமல் ஏன் சைவம் அல்லாத பர சமயங்கள் நிராகரிக்கப்படுகிறது என்பதற்கு அடிப்படையான வாதங்களையும் இந்த நூல் தருகிறது.
பதிப்பாசிரியர் தில்லை சிவஸ்ரீகார்த்திகேய சிவம் நமது பாராட்டுக்குரியவர்.
40ரூபாய் விலையுள்ள 48பக்கங்கள் கொண்ட இந்த நூலை அன்பர்கள், ஆதி சைவர்கள் நலவாழ்வு மையம், குளத்து மேட்டுத் தெரு, கள்ளகுறிச்சி, 606 202 (போன் 97518 47933) என்ற முகவரியிலிருந்து பெறலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
The iron is struck only while it is hot.
A man who sees that he is being robbed does not try to catch the robber, but when he meets him takes him to the sheikh. The robber denies the charge, no witness can be produced, and the sheikh dismisses the case with this saying.
***
The jackal said ‘Eat and Measure’
From the story of a hedgehog and jackal who went into a garden through a whole in the fence. After eating a large quantity of grapes, the hedgehog went back to the opening to try if he still could get through, saying to the jackal, ‘Eat and Measure’, this the jackal failed to do, and was caught by the owner of the garden.
–Moorish proverb
***
Too much confidence lost the frog his tail
The origin of this proverb is a tale. The grand mothe of all frogs was giving out tails and one youngster said to himself, “it will be alright, grannie is sure to keep me one, I will go in the morning.” When he went the tails were all gone; whence comes the race of tailless frogs we see today.
–Uganda proverb
***
Half naked, but carrying the scales
Miserable but still laying claim to the habits of the wealthy merchants, who carry a small balance in their wide sleeves to weigh the sequins and gold coins which they receive in payment.
***
Three things will make a man feel subdued
A woman if she were balm;
A debt of even a drachm;
A question, even if it be only to know the road.
–Arabic proverbs
***
The starlings have hidden the pigeons
Starlings are allowed by the natives to stay in the crops as they eat worms and insects only, whereas the pigeons are chased away, as hey destroy crops. Sometimes you think only starlings are in the field and you do not chase the birds, whereas you have left the pigeons in the field. The meaning of this proverb is that pretexts hide the true facts ad it is used when a man in a court conceals the truth and leads the judges on the wrong track
–Somali proverb
***
Don’t you see the dead?
They lie together in their separate clothes; they cover their heads to go nowhere.
They get not up in the morning.
They warm not themselves in the evening; red earth is over their breasts and stone work at their sides.
Malagasy proverbs
***
The blacksmith’s sheep dies by suffocation
By Mohammedan custom every animal slaughtered for food must have its throat cut; blacksmiths in Sudan are the manufacturers of slaughtering knives – the blacksmith is too busy making these knives to slaughter his own sheep, so leaves it to die a natural death.
–Sudanese proverb
In the wedding of the sickle, the song of the hoe
Refers to a time when it was the custom to hold marriages of agricultural implements; this custom of wedding inanimate objects is still extant in regard to groves, wells, tanks etc which are formally married on being opened
–Bihari proverb
***
By black and by red it is finished
When commoner and chief work together the task is done. In olden days chiefs used to anoint their faces with shark oil and red ochre.
–Maori proverb, New Zealand
***
The bird that imagines itself on a level with the turkey buzzard will soon find itself on the grille.
The turkey buzzard is the scavenger of all food offered as sacrifice. Nobody is allowed to kill or molest it, and the general immunity renders it quite indifferent to the nearness of approach of human beings. For another bird to do this would be nothing short of suicide.
–Yoruba proverb
In Tamil also we have a similar proverb- Kaana Mayil Aadak kandu Vaan kozi polalach sirakinai viriththaar pola. கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே கல்லாதான் கற்ற கவி” The verse composed by an illiterate is similar to the turkey that spreads its wings thinking that it is a peacock in the forest.