Pictures are takn from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Lord Ganesh with Erukkam flowers
Research article by London swaminathan
Tami name of Lord Ganesh is PILLAIYAAR.
We have very clear proof for Ganesh worship in 2000-year-old Sangam Tamil literature. One must understand that there are two stages in the worship of Hindu Gods. In the first stage, they are not part of popular worship and so the evidence is hidden in literature. When they become popular, we see them clearly in literature, statues and paintings. Ganesh is found around the world in statues. Sri Lanka Buddhist Viharas have Ganesh. Tallest Ganesh statue is in Thailand. Largest Muslim country in the world Indonesia has Ganesh image in their currencies. Roman God Janus is none other than Ganesh. Japanese also worship Ganesh.
Let us look at some examples. In the works of Kalidasa and Sangam Tamil literature we come across Lord Siva in the first verse, that is the Invocation or in praise of God. Four out of seven works of Kalidasa have Lord Shiva in the invocation. In Tamil at least five works have Lord Shiva in the invocation. After ninth century we have Ganesh instead of Shiva.
In the Vedic rituals , they do Ganesh puja first with image made with turmeric powder or clay idol. Tamils just wrote the letter u உ (Tamilஉ Vowel) to symbolise Ganesh. From fifth century onwards we see big Ganesh statues in South India. Now in Tamil Nadu Ganesh Festival has become more popular like Maharashtra. Even in Maharashtra B G Tilak only made it a grand festival to arouse Nationalism.
Now let us look at some examples:
Because of actors Mookambika, Santoshi Mata, Ayyappa, Ragavendra- all became popular. But the worship of those have been in vogue for centuries. Now Brahmins only worship Vedic Gods thrice a day at home. Others go to Shiva and Vishnu temples also Skanda/Muruga and Ganesh.
Another example of how Gods become popular come from the life of Chaitanya. He popularised the worship of Krishna with street dance and music. Bhakti Vedanta Parabhuapada took it to western countries and now devotees of Hare Krishna movement are doing the same street dance and music around the world. But Krishna worship has been there for more than 2000 years. Ancient Tamils worshipped Balarama along with his younger brother Krishna. But now several ancient Tamil temples have some empty space next to Krishna. Balarama has disappeared. He has lost popularity.
1
Ganesh in Sangam Literature
There is one clear reference to Ganesh in Tiru Murugaatrup Padai , but not in the main verse. So scholars consider it as an appendix. But they forgot to see other references. Face with one hand is found in this book.
2
Kabilar, a Brahmin poet, has contributed the highest number of verses in Sangam Literature. His name itself is the name of Ganesh. Priests in India do Ganesh puja with 16 names of Ganapathy and one of them is Kabila. That poet sys in Purananuru verse 106, “God wont reject a devotee’s offering even if it just grass or Erukkam flower. Here we see more evidence. A poet who entered Hindu Book of Records by listing 99 flowers at one go, refers just erukkam flower. That is Calotropis gigantea or Arka in Sanskrit. Nowadays this flower is associated with Lord Ganesh only. There is a very big demand for this flower in Tamil Nadu during Ganesh Chaturthy or Vinayaka Chaturthy. Kabila not only used this but also used Pul for grass. Arukam Pul is the only grass used to worship Ganesh on all days like Tulsi for Vishnu and Vilva for Lord Shiva.
And Kabila’s Puram verse 106 is nothing but an echo of Bhagavad Gita
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन: ||9- 26||
If one offers to Me with devotion a leaf, a flower, a fruit, or even water, I delightfully partake of that item offered with love by My devotee in pure consciousness.
patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhati
tadahaṁ bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ
So, we know Hindu worship with flowers, leaves (Tulsi, Bilva, Dharba, Dhurva/ Arka grass) and water has been there from Mahabharata days, i.e.. for at least 5000 years.
Hindus showering God with water. Hindus invented this shower.
3
Modakam in Sangam Literature
The longest of the 18 Sangam books is Maduraik Kaanchi by a poet named Maangudi Maruthanaar. He mentioned MODAKAM by using the same Sanskrit word. Modakam is associated with Hindu Gad- Ganesh only.
(Modakam or Modak refers to the Sanskrit word for “a small portion of bliss” or “sweetmeat,” and it also refers to a type of sweet rice dumpling, which is a favourite food of the Hindu deity Lord Ganesha. The term also appears in a devotional hymn by Adi Shankaracharya, where the first line, “Muda Karaatta Modakam,” describes Lord Ganesha joyously holding this sweet.)
4
Adi Sankara divided Hindu worship into six main sects and one of them is Gaanaapatyam, i.e. Ganesh worship. If we go by the date of Sankara given by Kanchi Paramacharya (1894-1994), then Ganaapatyam came into vogue in the first century BCE or earlier.
Modakam with Coconut jaggery inside. Adi Shankara mentioned it in his Ganesa Pancharatanam.
5
The reference to Modaka, sold in Madurai shops along with Appam , (Maduraik Kanchi lines 625-629) another sweet dish, show that there existed Ganesh worship in Tamil Nadu. Because Appam (Fried sweet pan cake) is also associated Lord Ganesh. About 500 years ago , famous Tamil devotional poet Arunagiri Natharbegan his book Tiruppugaz with an invocation to Lord Ganesh, he mentioned Appam as a favourite dish of Lord Vinayaka.
Siruthondar, commander in Chief of the Pallava army, defeated the Chaukya king and brought the famous Ganesh statue from Baadaami (correct name Vaataapi). Then Ganesh became popular in Tamil Nadu.
Conclusion
Evidence from Nakkirar’s T M Padai, Kabila’s Puram verse, and Maduraik Kaanchi’s Modakam reference may be taken as a very clear evidence for Ganesh worship during Sanam Age. His worship became popular from fifth century CE.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாணிக்க வாசகர் , காளிதாசர் ஆகியோர் எல்லாம் காலத்தால் முந்தியவர்கள் என்பதால் கணபதியை, பிள்ளையாரைப் பாடவில்லை. அவர்களுக்குப்பின்னர் வந்த சம்பந்தர், அப்பர் போன்றோர் எல்லாம் பிள்ளையாரை வெளிப்படையாகப் பாடினார்கள் . சங்க இலக்கியத்திலும் திரு முருகாற்றுப் படை யின் தனி வெண்பாவில்தான் ஒருகை முகன் என்ற குறிப்பு வருகிறது . இதுபோன்ற வெண்பாக்கள் எல்லாம் பிற்காலத்தவர் சேர்த்தது என்பது ஒரு கருத்து; ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டிலிருந்து கணபதி வழிபாடு பிரசித்தம் அடைந்துள்ளது.
அப்படியானால் கணபதி வழிபாடு தமிழ்நாட்டில் பிற்காலத்தில் வந்ததா? சிறுத்தொண்டர் என்னும் ARMY COMMANDER IN CHIEF ஆர்மி கமாண்டர்– நா யன்மார்களில் ஒருவர்– பாதாமி என்று பெயர் மருவிய வாதாபியிலிருந்து கொண்டுவந்த பின்னரே கணபதி என்னும் பிள்ளையார் பாப்புலர் ஆனாரா? என்ற கேள்வியெழுகிறது.
சம்ஸ்க்ருத மொழியிலும் இந்தப் பிரச்சினை உள்ளது . குமார சம்பவம் என்ற முருகன் அவதார நூலை எழுதிய காளிதாசன் முருகன் அண்ணனான பிள்ளையாரைக் கும்பிடவில்லை.
அப்படியானால் உண்மை என்ன?
பிராமணர்கள் எந்தப் பூஜை துவங்குவதானாலும் கணபதி ஹோமம் செய்துதான் துவங்குகிறார்கள் அதில் வேதத்தில் வரும் கணானாம்த்வா என்ற மந்திரத்தையும் சொல்லுவார்கள்; அதே போல விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் சுக்லாம்பரதரம் என்பதையும் கணபதியுடன் தொடர்புபடுத்துவர் ; ஆதி சங்கரரோ ஆறுமதம் வகுத்தபோது காணாபத்யம் என்னும் கணபதி வழிபாட்டினை முதலில் வைத்தார்.
****
சங்க காலத்தில் பிள்ளையார் வழிபாடு இருந்ததை சங்க இலக்கியத்தில் உள்ள சான்றுகள் காட்டுகின்றன
GANESH WITH ERUKKAM FLOWERS
ஒவ்வொரு காலத்திலும் ஒரு கடவுள் பிரபலமாகின்றனர்; அதற்கு முன்னரே அவர் இருந்தபோதும் யாரோ ஒரு ரிஷி அல்லது பெரியவர் அதை பிரபலப் படுத்துகின்றனர் சமீப காலத்தை எடுத்துக்கொண்டாலும் ஷீரடி பாபா வழிபாடு, அய்யப்பன் வழிபாடு, மூகாம்பிகை வழிபாடு, ராகவேந்திரர் வழிபாடு எல்லாம் ஒரு சில நடிகர்களால் பிரபலமானதை பார்க்கிறோம். 500 ஆண்டுகளுக்கு முன்னர் சைதன்யர் ஆடல்-பாடலுடன் துவங்கிய கிருஷ்ண வாழிபாடு, ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் மூலம் இப்போது பிரபலமாகிவிட்டது !
இதைப்பார்க்கையில் கடவுள் பற்றிய துதிகள் இருந்த காலம் வேறு , அவர் பிரபலமான காலம் வேறு என்ற இரண்டு கட்டங்களை பார்க்கலாம் .
*****
1
பிள்ளையார் பற்றிய முதல் குறிப்பு புறநானூற்றில் வருகிறது பாடிய புலவரின் பெயர் கபிலர் .
நல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே.
HINDUS INVENTED BATH SHOWER THOUSANDS OF YEARS BEFORE THE WESTERN COUNTRIES. ALL TEMPLES BATHE THE GODS WITH SSHOWER ONLY.
பொருளுரை:
நல்லது தீயது என்ற இருவகையிலும் சேராத,
சிறிய இலையையுடைய எருக்கம் செடியில் உள்ள மலராத பூங்கொத்தாயினும் அதுதான் தன்னிடம் உள்ளது என்று அதை ஒருவன் கடவுளுக்கு அளிப்பானானால்,
கடவுள் அதை விரும்ப மாட்டேன் என்று கூறுவதில்லை.
அது போல், அறிவில்லாதவரோ அல்லது அற்ப குணமுடையவரோ
பாரியிடம் சென்றாலும் அவர்களுக்கு கொடை வழங்குவதைத்
தன் கடமையாகக் கருதுபவன் பாரி.
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்று பகவத் கீதையில் 9-26 கிருஷ்ணன் சொன்னதால் மஹாபாரத காலத்திலிருந்தே இலை, நீர், பழம், பூ ஆகியன கொண்டு பூஜிக்கும் வழக்கம் இருந்தது தெளிவாகிறது
கபிலர் பாட்டில் நிறைய ரகசியங்கள் உள்ளன
பாடியவர் பெயர் பிள்ளையாரின் பெயர்; புரோகிதர்கள் கணபதி பூஜையைத் துவங்கும்போது சுமுகன் என்று தொடங்கி பதினாறு பெயர்களை சொல்லி பூக்களைப் போடுவார்கள் ; அதில் ஒன்று- கபிலர். மஞ்சளினால் அல்லது மண்ணினால் பிள்ளையாரை செய்துகொள்ளுவார்கள் இப்படிச் செய்ததால் பிள்ளையார் சிலை, கல்லில் உருவாக மேலும்300ஆண்டுகள் ஆகின. கபிலர் என்பது பிள்ளையார் பெயர் மட்டுமில்லாது அவர் பூஜை பற்றியும் பேசுகிறார் அதில் புல் அதாவது அருகம் புல் ,எருக்கம் பூ ஆகிய இரண்டையும் குறிப்பிடுகிறார் இது இரண்டும் இன்றுவரை பிள்ளையாருக்கு மட்டுமே பயன்படுகின்றன.
2
SPICY KOLUKKATTAI
சங்க இலக்கியத்தில் பிள்ளையார்
ஒரு கை முகன்
நக்கீரப் பெருமான் அருளிய சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் உள்ள தனி வெண்பாக்களில் 7 வது வெண்பா,
“முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே – ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்” என்கிறது.
இதில் ‘ஒரு கை முகன்’ என்று விநாயகரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் விநாயகர் வழிபாடு சங்க காலம் தொட்டே தமிழகத்தில் இருந்து வருகிறது என்பது உறுதியாகிறது.
3
கபிலர் என்ற பெயர் விநாயகரையே குறிக்கும் என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் உண்டு பன்னிரு திருமுறையில் ஒன்றான கபிலதேவ நாயனார் பாடிய திருவிரட்டைமணி மாலை ஆகும் அங்கும் கணபதி வழிபாடு கடவுள் வாழ்த்தில் வருகிறது.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை
காதலால் கூப்புவார்தம் கை.
என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.
நல்லார் பழிப்பில் எழில்செம் பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத்தெங்கள் போதக மே[2]புரம் மூன்றெரித்த
வில்லான் அளித்த விநாயக னே[3]என்று மெய்ம்மகிழ
வல்லார் மனத்தன்றி மாட்டான் இருக்க மலர்த்திருவே.
என்பது இந்நூலின் கடைசியிலுள்ள கட்டளைக் கலித்துறைப் பாடல்.
நக்கீரர் பாடல்தான் வெண்பாவிலும் உள்ளது என்று கருதினால் பிள்ளையார் பற்றி தெளிவான குறிப்பு என்றே கொள்ளலாம்
4
மோதகம்-
MODAKAM, KOZUKKATTAI WITH COCONUT PUURNAM INSIDE.
கொழுக்கட்டை
பிள்ளையாரின் கையில் இருப்பது மோதகம் என்னும் கொழுக்கட்டை! மோதகத்தை வேறு எந்தக் கடவுளுடனும் தொடர்பு படுத்துவதில்லை . இந்த மோதகம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல் அப்படியே மதுரைக் காஞ்சி என்னும் சங்க நூலில் வருகிறது
……வாடமை விசயங்
கவவோடுபிடித்த வகையமை மோதகந்
தீஞ் சேற்றுக் கூவியர் தூங்குவனருறங்க
விழாவிநாடும் வயிரியர் மடிய
–மதுரைக் காஞ்சி 625-628
இதற்கான உரையில் மோதகம் என்பது பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடுகளோடு கண்ட சருக்கரை கூட்டிப்பிடித்த அப்பங்களையும் என்று விழாக்காட்சியில் அப்பம் மோதகம் விற்கப்படும் குறிப்பு வருகிறது
இதில் நமக்குக் கிடைக்கும் செய்தி கொழுக்கட்டை செய்த முறை மற்றும் அப்பம் விற்ற கதை ஆகும்
இன்றும் இலங்கைத் தமிழர் செய்யும் கொழுக்கட்டைகளில் பருப்பும் தேங்காயும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் செய்யும் மோதகத்தில் வெல்லம் கலந்த தேங்காய்ப் பூரணமும் இருப்பதைக் காணலாம் ;இதை அடுப்பில் வேக வைத்து எடுப்பார்கள்; இந்த அத்தனை விஷயங்களும் அயிர், விசயம், கவவு என்ற சொற்களில் கிடைத்துவிடுகிறது
ஆக மோதகக்கையானுக்கு முதல் வணக்கம் செய்ததை உய்த்து உணரலாம் விநாயகருக்கு மோதகம் மட்டுமின்றி அப்பமும் அவலும் பொரியும் பிடிக்கும் என்பதை அருணகிரிநாதரும் திருப்புகழில் முதல் பாட்டிலே பாடிவிட்டார்.
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக …… னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே
மோதகம், எருக்கம் பூ , அருகம்புல், கபிலர், ஒரு கைமுகன் போன்ற பிள்ளையார் விஷயங்களை பிற்காலத்தில் கபிலதேவநாயனார் மூத்த இரட்டைமணி மாலை, அவ்வையார் பாடல்கள் மற்றும் பிள்ளையார்பட்டி, திருச்செங்காட்டங்குடி , திருப்பரங்குன்ற பிள்ளையார் சிலைகள் உறுதிப்படுத்துகின்றன.
முடிவுரை
சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது; அதை முதலில் வைத்துப் பிரபலப்படுத்தியது ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே என்று துணியலாம்
–subham—
Tags சங்க இலக்கியம் பிள்ளையார், கொழுக்கட்டை, மோதகம் , ஒருகை முகன், சங்ககாலம் , வழிபாடு, கபிலர் , எருக்கம் பூ, அருகம் புல், கீதையில் பூஜை
கிஷ்கிந்தா காண்டத்தில் ஐம்பத்திரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘‘குகையினுள் வந்த காரணத்தைச் சொல்வது’ என்ற ஸர்க்கமாகும்.
ஸ்வயம்பிரபை ஹனுமானிடம், “நீங்கள் வந்த காரியம் என்ன?” என்று கேட்கவே ஹனுமான் தாங்கள் சீதாதேவியைத் தேடி வந்தது பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறார். அத்துடன் தன்னுடன் வந்த அனைவருக்கும் உணவு அளித்தமைக்கு நன்றி கூறி பதில் உதவியாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் ஸ்வயம்பிரபையோ தனக்கு எதுவும் தேவை இல்லை என்கிறார்.
அதை இங்கு பார்க்கலாம்.
அதித்யதர்ம தத்தானி மூலானி ச பலானி ச |
அஸ்மாபிருபயுக்தானி புபுக்ஷாபரிபீடிதே ||
அதித்யதர்ம தத்தானி – அதிதி பூஜையின் தர்மத்தால் கொடுக்கப்பட்ட
உயிர் போகும் தருணத்தில் இருந்த வானரர்களுக்கு உணவு கொடுத்து உதவியமைக்கு என்ன பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்று ஹனுமார் கேட்க ஸ்வயம்பிரபை எனக்கு ஒருவராலும் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை என்று பதில் உரைக்கிறார்.
ஸர்வேஷாம் பரிதுஷ்டாஸ்மி வானரானாம் தரஸ்வினாம் |
சரந்த்யா மம தர்மேண ந கார்யமிஹ கேனசித் ||
தரஸ்வினாம் – மிக்க பராக்ரமுடைய
வானரானாம் – வானரர்கள்
ஸர்வேஷாம் – எல்லோரிடத்திலும்
பரிதுஷ்டா அஸ்மி – சந்தோஷமடைந்தேன்
தர்மேண – தெய்வ பக்தியுடன்
சரந்த்யா – காலம் கழிக்கின்ற
மம – எனக்கு
இஹ – இங்கு
கேனசித் – ஒருவராலும்
கார்ய – ஆக வேண்டிய காரியம்
ந – ஒன்றும் இல்லை
கிஷ்கிந்தா காண்டம், 52வது ஸர்க்கம் ஸ்லோகம் 19
இவ்வாறு தனக்கு பதில் உதவியாக எதுவும் தேவை இல்லை என்று ஸ்வயம்பிரபை கூறுகிறார்.
வால்மீகி முனிவர் இங்கு வரம் பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால்
ப்ரத்யுபகாரார்தம் என்ற சொல்லால் வரம் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஸ்வயம்பிரபையால் ஏற்கப்படவில்லை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One Thousand Proverbs on Women, Wives and Daughters- part 27
Part 27
647. You buy a wife, and you buy oxen.
648. Where a woman is not honoured, vain is sacrificial rite.
649. A thousand men may live in harmony; two women cannot, even though they be sisters.
—Indian
650. Tuskers, poisonous snakes, old servants, beloved wife, do not trust too much.—Siamese
651. A woman is well either in the house or in the grave (meaning Purdah is good for Muslim women).
652. A woman without a veil is like food without salt. (unattractive)
653. A woman’s wisdom is under her heel, and she is well in the house or in the grave.
654. A hen’s crow and a woman’s word no one trusts.
655. Men are mountains and women are levers which move them.
656. Ill-starred women have two babies a year.
–Pashto
657. She is the true wife who is a good house wife.
658. She is a true wife whose heart is devoted to her husband. She is a true wife who is faithful to her husband.
659. A man’s half is his wife.
660.The wife is her husband’s best of friends…. The wife is the source of salvation.
661.Those who have wives can perform religious acts. Those that have wives lead domestic lives.
662.Those that have wives can be happy; and those that have wives can achieve good fortune.
663.The sweet –speech wives are their husband’s friends on the occasion of joy; they are as fathers on occasions of religious acts;they are as mothers in the hours of illness and woe.
664.Even in the deep forest, the wife is the refreshment and solace of her roaming husband. He who has a wife, is trusted by all. The wife, therefore, is man’s great means of salvation.
–Mahabharata
665.“Let this heart of yours be mine, and let this heart of mine be yours”- Mahabharata (1.3.9)
666. The production of children, the nurture of those born, and the daily life of men (of these matters) woman is visibly the cause.
667.Offspring, (the due performance of) religious rites, faithful service, highest conjugal happiness, and heavenly bliss for the ancestors and oneself, depend on one’s wife alone.
668. “ Yatra naryast pujyante ramante tatra devatah
Yatraitastu na pujyante sarvastatraphalah kriyah”
Manu smriti 3-56, Mahabharata 13-45-5
‘Where women are worshipped, there the gods are delighted; but where they are not worshipped, all religious ceremonies become futile’—Manu Smriti.
669.“Her father protects her in childhood, her husband protects her in youth, and her sons protect her in old age; a woman is never independent”. Manu IX-9 (The meaning is that she is always protected and not left alone without support)– Manu on Wife
670. In Saptashati, Durga says, “He who conquers me in battle, he who humbles my pride, he who is my equal in this world, he shall be my husband”.
671.The wife is one half of man Ardham bhaarayaa manusyasya
672.A virtuous wife is a blessing and good children are its adornment -Tirukkural 60
673. It is impossible to stop a woman on her way to meet her beloved Mrchakatika 5- 31 Na sakyaa hi striyó róddhum prasthitaa dyitam prati
674. Of what avail is watch and ward? A woman’s will is the best safeguard-Tirukkural 57
675. Wives of the gallant do not lament — Valmiki Ramayana 4-24-43 Na suurapatnyah paridévayanti
676. Wife is dearer than life — Kata sarit sagara
Bharyaa praanébhyó pyadhikapriyaa
677. Just as you protect your wife, the wives of others are too deserve protection Valmiki Ramayana 5-21-8 Yathaa tava tathaanyésaam daaraa rakshyaa
678. The minds of noble women are as soft as flowers — Uttara Rama Carita 4s2 Purandhriinaam cittam kusuma sukumaaram hi bhavati
679. A wife of excellent virtues who is capable of managing the household within the means of her husband is a real household help in home life -Tirukkural 51
680. Other’s wives are not to be minutely observed – Kalidasa in Shakuntala, Act 5 Anirvarnaniiyam parakalatram
681. If a wife does not possess the virtues for household life, that home will have no happiness, however splendid it may be in other respects -Tirukkural 52
682. Talking about another’s wife is un gentlemanly – Kalidasa in Shakuntala, Act 7 Anaaryah Pradhara vyavahaarah
683. She who gains the affection of her husband by her faithful devotion to him is honoured among the Gods-Tirukkural 58
684. The householder’s home is bare without his wife – Katha sarit sagara Abhaarya hi suunyam grhapatérgrham
685. He who does not possess an ideal wife, who values the reputation of chastity, cannot hold his head up among his friends-Tirukkural 59
686. What greater treasure can there be than a woman, who has the abiding strength of chastity? -Tirukkural 54
687. Good wives are at the root of all righteous deeds — Kumara sambhavam of Kalidasa 6-13 Kriyaanaam khalu dharmyaanaam satpatnyó muulakaaranam
688. A wife who may not worship god but wakes up with worshipful devotion to her husband has to make the rain fall at her bidding -Tirukkural 55
689. A disobedient wife is an enemy – Canakyaniti 9-12 Aviniitaa ripurbhaaryaa
690. The wife is a fetter not made of metal – Canakyanitisastra Alóhamayam nigadam kalatram
691. She, who guards her virtue, tenderly cares for her husband and maintains the reputation of both, is a good wife-Tirukkural 56
692. Women spurn her relatives due to the love of their husbands – Bharatamanjari 1- 17- 774 Trnam bhaandhavapakso hi bhartrusnéhéna yósitaam
693. A house is not said to be a home, it is the housewife that makes that makes it one. Pachatantra 6-85 Na grham grham iti ityaahuh grhinii grham ucyaté
694. A human woman cannot be a demon’s wife – Valmiki Ramayana 5-24-28 Na maanusii raaksasasya bhaaryaa bhavitumarhati
695. It is un ethical to ogle at another’s wife — Mrchakatika 1-158 Na yuktam paralkalatra darsanam
696. It is very hard for a wife to live without her husband Valmiki Ramayana 2-29-7 Patihiinaa tu yaa naarii na saa saksyati jiivitum
697. Who will forsake his wife even in utter failure – Bharatamanjari 2-11-396 Paraabhavépi daaraanaamupéksam ksamaté ne kah
698. For a woman the death of her husband is but the first catastrophe Valmiki Ramayana 6-32-9 Prathamam maranam naaryaa bharturvaigunyamucyaté
699. Householders look through the eyes of their wives in matters relating to their daughters –Kumara sambhavam of Kalidasa 6-85 Praayéna grhinii nétraah kanyaarthésu kutumbinah
700. A husband blinded by love sees not the wickedness of his wife – Kata sarit sagara Praayéna bhaaryaadausilyam snéhaandhó néksaté janah
Bonus quote A beautiful wife is a foe — Canakyaniti 9-12 Bharyaa ruupavatii satruh
—-Sanskrit Quotes
To be continued………………………
Tags-One Thousand Proverbs, on Women, Wives , Daughters,part 27
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
TRI PURA ASURA DAHANAM WITH LASER ARROW.
காளிதாசன் எழுதிய மேக தூதம் என்னும் அற்புதமான காவியம் உலகின் முதல் பயண நூல் world’s oldest travelogue ஆகும்; அதுமட்டுமல்ல உலகின் முதல் பருவக்காற்று oldest monsoon reference நூலாகும் . அந்த நூலே யக்ஷன் ஒருவனை வைத்து எழுதப்பட்டுள்ளது . தமிழில் “ய” எழுத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் இதை இயக்கர் என்று எழுதினார்கள்.
இயக்கர் முதல் ராக்ஷசர் வரை காளிதாசன் குறிப்பிடும் எல்லாம் தமிழில் இரண்டே பாடல்களில் வந்து விடுகின்றன. அதைத் தவிர மேலும் பல பாடல்களில் அவுணர்/அரக்கர் அர மகளிர்/அப்சரஸ் முதலியன வருகின்றன
புறநானூற்று முதல் பாடல்
பதினெண் கணம்
பாடியவர்: பெருந்தேவனார் (மிஸ்டர் மஹாதேவன்)
பாடப்பெற்றோர்- சிவபெருமான்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறைநுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.
— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்
வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.
முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!
பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.
இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?
தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.
நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.
இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என – புறம் 174/1 சூரிய கிரகணம் பற்றிய குறிப்பு ; ஜெயத்ரதனை வீழ்த்த சூரிய கிரகணத்தை கிருஷ்ணன் பயன்படுத்திய சம்பவம் )
அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ – பரி 3/56 (முருகன்)
Destruction of flying space shuttles (from Alien Civilization?)
THREE SPACE SHUTTLES DESTROYED BY SHIVA WITH LASER ARROW.
இடம் விட்டு இடம் செல்லும் மூன்று ஸ்பேஸ் ஷட்டில்களை — தற்காலிக விண்வெளி நிலையங்களை– அயல் கிரக வாசிகள் அமைத்து தொல்லை கொடுத்தனர்; அவர்களை சிவன் ஒரே LASER லேசர் ஏவுகணையால் வீழ்த்தினார் ; இந்த விண்கல சம்பவம் வேதம் முதல் தேவாரம் வரை பாடப்படுகிறது.
தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்-கலித்தொகை 2
இயங்கு எயில்flying space shuttles – கலி.150-1
****
புறநானூறு – 55. பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்.
ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
***
ஆதி அந்தணன் (Brahma) அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய, 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் (Shiva)– பரிபாடல் 5
****
இவையெல்லாம் அரக்கர்களை சிவன் அழித்த செய்தியாகும்.
காளிதாசன் தரும் சில செய்திகளைக் காண்போம்:
குமார சம்பவ முதல் காண்டத்தில் இமய மலை வருணனையில் காதல் கடிதங்கள் எழுதும் வித்தியாதரப் பெண்கள் பற்றி ஒரு குறிப்பு வருகிறது.1-7
இன்னுமொரு பாடலில் குதிரை முகம் கொண்ட கின்னரப் பெண்களைக் குறிப்பிடுகிறார்.1-11, 1-54
கின்னரர் பாடல்களை எட்டாம் பாடலும் குறிக்கிறது.
ரகு வம்சத்தில் ராமாயணம் வரும் மூன்று காண்டங்களில் ராக்ஷஸன் பற்றிக் காளிதாசர் பாடுகிறார் .
தொடரும்…………………….
TAGS-காளிதாசன் நூல், சங்க இலக்கியம் அசுரர்கள், ராக்ஷஸர்கள் PART —2, TRIPURA ASURA DAHANAM
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-6-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை!
அழகிய அண்டார்டிகா மர்மம்!
ச. நாகராஜன்
வானிலிருந்து பார்த்தால் அகண்ட பனி படர்ந்த பிரதேசம் போலத் தோன்றும். ஆனால் அண்டார்டிகாவின் கீழே புதைந்து கிடக்கும் மர்மம் அதிசயமானது!
அண்டார்டிகாவின் கீழ் பல் உயிர்த்தொகுதியும், ஆறுகளும், ஏரிகளும், மலைகளும், பள்ளத்தாக்குகளும்,தொன்றுதொட்டு இருக்கும் பாக்டீரியாக்களும், முன்னொரு காலத்தில் இருந்த சுற்றுப்புறச் சூழலின் தாக்கத்தினால் ஏற்பட்ட அமைப்புளும் உள்ளன; அவற்றைக் கண்டு பிரமிக்கலாம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அண்டார்டிகாவின் 90 சதவிகிதப் பரப்பு நல்ல கனமான ஐஸினால் (பனிக்கட்டியினால்) உருவானது. அதாவது 1.3 மைல் ஆழமான ஐஸைக் கொண்டது!
இப்படி ஆழ்ந்த ஐஸானது 340 லட்சம் வருடங்கள் இருந்து கொண்டிருக்கிறது!
இருந்தாலும் விஞ்ஞானிகள் இந்தப் பரப்பின் மேலே கொஞ்சம் தான் சுரண்டிப் பார்த்துள்ளனர்!
ஜெர்மனியில் உள்ள ஆல்ஃப்ரட் வெகெனர் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஜோஹன் க்ளாகஸ் (JOHAN KLAGES – SEDIMENTOLOGIST) என்னும் படிம இயல் நிபுணர் அண்டார்டிகாவின் சுற்றுப்புறச் சூழலைப் பற்றி ஆய்வு நடத்துபவராவார்.
தனது ஆய்வில் முதன்முதலாக அவர் அம்பர் படிமத்தை அண்டார்டிகா பகுதியில் கண்டுபிடித்துள்ளார். இது 900 லட்சம் வருடங்களுக்கு முன்னர் மழைக்காடுகளினால் உருவான ஒன்றாகும்.
சுமார் 400 கடலடி ஏரிகளுக்கு அண்டார்டிகா தாயகம் ஆகும் என்பது இவரது கணிப்பு. மிகப் பெரும் ஏரியான வோஸ்டாக் ஏரி ரஷியாவின் வோஸ்டாக் பகுதியில் இரண்டரை மைல் ஆழத்திற்கு அடியில் உள்ளது!
“அங்கு என்ன இருக்கிறது?” என்ற கேள்வியைக் கேட்டால், ‘ஐஸின் மிக மிக அதிகமான அழுத்தம் காரணமாக உலகில் வேறெங்கும் காண முடியாத மைக்ரோப்ஸ் இருக்கலாம்’ என்கிறார் அவர்.
“சிக்கலான அமைப்பு உடைய நதிகள் அந்த ஏரியில் நீரைக் கொண்டு வந்து கொட்டுகின்றன” என்று கனடாவில் உள்ள வாடர்லூ பல்கலைக் கழக ஐஸ் இயல் நிபுணரான கிறிஸ்டைன் டோ (CHRISTINE DOW) கூறுகிறார்.
“இதில் அதிசயம் என்னவென்றால் அங்கு புவி ஈர்ப்பு விசையெல்லாம் கிடையாது. ஆகவே நதி நீரானது கீழிருந்து மேலே பாய்வதைக் காணலாம். இதற்கு மேலாக இரண்டரை மைல் உயரத்திற்கு ஐஸ் தான்” என்கிறார் அவர்.
“ஆனால் அங்கு பெரும்பகுதியானது வெறும் பாறைகள் தான். கிறிஸ்டலைன் அடிப்பகுதி மற்றும், கிறிஸ்டலைன் ராக் தான்” என்கிறார் ஜோஹன் க்ளாகஸ்
இந்த ஆராய்ச்சி எதற்காக என்று கேட்டால் அதற்கும் அந்த நிபுணர்கள் பதிலைத் தருகின்றனர். இவ்வளவு பனிக்கட்டிகளும் உருகி விட்டால் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க இந்த ஆய்வு உதவும் என்கின்றனர் அவர்கள்.
“இந்தப் பகுதி முழுவதும் ஐஸ் கட்டியினால் நிரம்பிவிட்டால் இந்தப் பகுதியே தனது நிலையான தன்மையை இழக்கும்; பனிப்பாறைகள் உடைய ஆரம்பிக்கும். அப்போது கடல் மட்டம் வெகுவாக உயரும்.”
என்பது நிபுணர்களின் கணிப்பு!
கடல் மட்டம் உயரும் போது தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கும் என்பதால் அப்பகுதியில் உள்ளவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அல்லவா?
“அண்டார்டிகா ஒரு நிலையற்ற பகுதி. மிக அழகிய பகுதி. பெரிய பரப்புள்ள பகுதி. மிக மிக மர்மமானது – அபாயகரமானதும் கூட” – இதுவே அண்டார்டிகா ஆராய்ச்சியின் முடிவு!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவ பாதிரிகளும் , இந்தியாவிலுள்ள மார்க்சீய , திராவிட அரை வேக்காடுகளும் திராவிடர்களை ராக்ஷசன்/ அரக்கன் என்று முத்திரை குத்தினர் ;இதே போல தஸ் யூக்களையும் இந்த நாட்டு பூர்வகுடிகள் எண்டு முத்திரை குத்தினர். ஆனால் சங்கத் தமிழ் நூல்களும் சம்ஸ்க்ருத நூல்களும் அரக்கர்கள்- அவுணர்கள் நர மாமிசம் புசிப்பவர்கள் என்றும் வலியச் சென்று நல்லோர்களை இம்சிப்பவர்கள் என்றும் பாடுகிறது . தஸ்யூக்களை காளிதாசனும் மனு நீதி நூலும் திருடர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளனர். அதாவது திருடர் என்பதற்கான சொல் அது .
ராவணனை காளிதாசன் பத்து தலை உடையவன் என்றும் அரக்கன் என்றும் ரகு வம்சத்தில் பாடியுள்ளார். புறநானுறு பாடிய சங்க புலவரும் ராவணனை அரக்கன் என்றே பாடியுள்ளார். பத்து தலை என்பது பத்து தீய குணங்களைக் குறிக்கும் இதே போல தசர தன் என்றால் பத்து என்று பொருள். அவன் பத்து தேர் அல்ல; ஆயிரம் தேர் உடையவன்; உண்மைப்பொருள்- அவன் ஒரே நேரத்தில் பத்து தேர்களை ஓட்ட வல்லவன் என்பதாகும் தமிழ் நாட்டில் ஒரே நேரத்தில் பத்து செயல்களை செய்ய வல்லவரை / தசாவதானி என்பர் ; இதிலும் ‘தச’ என்ற சொல் வருவதைக் காணலாம்.
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் 20
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. –புறம் 378
கடுமையான போர்த்திறம் கொண்ட இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை அரக்கன் இராவணன் தன் வலிமை மிக்க கைகளால் தூக்கிக்கொண்டு சென்றபோது, சீதை தன் கணவன் அடையாளம் கண்டுகொள்ளத்தக்க வகையில் ஆங்காங்கே எறிந்துகொண்டு சென்ற அணிகலன்களைக் கண்ட செம்முகக் குரங்குகள் அணியுமிடம் தெரியாமல் அணிந்து அழகுபார்த்துக் கொண்டது போல் எனக்கு நகைப்பு விளைவிப்பதாக இருந்தது.
****
तत्रेश्वरेण जगताम्प्रलयादिवोर्वीं
वर्षात्ययेन रुचमभ्रघनादिवेन्दोः।
रामेण मैथिलसुताम्दशकण्ठकृच्छ्रा
त्प्रत्युद्धृताम्धृतिमतीम्भरतो ववन्दे॥ १३-७७.
விமானத்தில் இருந்த மிதிலா நகர ராஜாவின் மகளான சீதா தேவியை பரதன் வணங்கினான்; பிரளய காலத்தில் நீரில் மூ ழ்கிக்கிடந்த பூமியை எப்படி வராஹ அவதாரம் எடுத்து விஷ்ணு காப்பாற்றினாரா, மழைக்காலம் முடிந்த பின்னர் சந்திரன் எப்படி பிரகாசிக்குமோ அது போல பத்து தலையனிடமிருந்து சீதையை ராமன் காப்பாற்றினார். tatreśvareṇa jagatāmpralayādivorvīṁ
போதுமான உணவு எனக்கு இன்று கிடைக்கவில்லை. பிரம்மா எனக்குப் பயந்துகொண்டு உன்னை அனுப்பி இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே சத்ருக்கனனைத் தாக்கிக் கொல்ல வருகிறான் லவணன் என்ற அரக்கன்.
***
विधेरधिकसंभारस्ततः प्रववृते मखः।
आसन्यत्र क्रियाविघ्ना राक्षसा एव रक्षिणः॥ १५-६२
vidheradhikasaṁbhārastataḥ pravavṛte makhaḥ |
āsanyatra kriyāvighnā rākṣasā eva rakṣiṇaḥ|| 15-62
ராமர் பட்டாபிஷேகத்தின் போது செய்த யாகத்துக்கு வழக்கமாக இடையூறு செய்யும் ராக்ஷஸர்கள், ரக்ஷகர்களாகள் ஆனார்கள்.
****
கயிலை மலையை ராவணன் தூக்க முயன்றதும் பின்னர் கை நசுங்கிக் கதறிப்போய் சிவனை மகிழ்விக்க சாம கானயிசையை வீணையில் வாசித்ததும் தேவாரம் முழுதும் வருகிறது; இது காளிதாஸனிலும் கலித்தொகையில் முன்னரே வந்துள்ளது விட்டது.
இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல 5
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
கலித்தொகை 38
இமய மலையை வில்லாக்கி வளைத்தவன் சிவபெருமான், அவன் கங்கை ஆறு பாயும் ஈரச் சடையை உடையவன். அவன் தன் மனைவி உமையாளோடு சேர்ந்து இமயமலை மேல் அமர்ந்திருந்தான். 10 தலை கொண்டவனான அரக்கர் தலைவன் இராவணன் தன் கையை இமய மலைக்கு அடியில் புகுத்தி அந்த மலையை எடுக்க முயன்றான். எடுக்க முடியாமல் துன்புற்றான். அதுபோல வேங்கை மரம் பூத்திருந்தது. அது புலி போல் தோன்றியது. அதன் மீது சினம் கொண்டு மதம் கொண்ட யானை வேங்கை அடிமரத்தில் குத்தியது. குத்திய கொம்பை அதனால் பிடுங்க முடியவில்லை.
kIrtistambhadvayamiva girau dakShiNe cottare ca || 15-103
விஸ்வசேனர் என்னும் விஷ்ணுவானவர் தேவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்ற ராவணனின் பத்து தலைகளையும் வெட்டிய பின்னர் /கொன்றபின்னர் வடக்கிலும் தெற்கிலும் இரண்டு வெற்றித் தூண்களாக விபீஷண னையும் அனுமனையும் நிறுத்திவிட்டு தன் சுய ரூபத்தை எடுத்தார் (அதாவது ராமாவதாரம் முடிந்து விஷ்ணுவாக மாறிவிட்டார்)
பத்து தலை அரக்கன் என்பது இரு மொழி இலக்கியத்திலும் உள்ளது .
தொடரும்……………………….
Tags–காளிதாஸன் ,சங்க இலக்கியம், அவுணர்கள், அரக்கர்கள், ராவணன், கயிலை மலை -Part 1
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non-commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-8-25 அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
போகர்!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, , திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் பதினெண் சித்தர்கள் வரிசையில் அகத்தியருக்கு அடுத்தாற் போலச் சொல்லப்படும் போகர் பற்றிச் சிறிது பார்ப்போம்.
பொதுவாக சித்தர்கள் யார் என்ற கேள்விக்குப் பதிலாக சித்திகளை அடைந்தவர்கள் சித்தர்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். இவர்கள் பல கலைகளில் சித்தி பெற்றவ்ர்கள். மருத்துவம், யோகா, ஜோதிடம், மந்திரம், யந்திரம், இரஸவாதம் போன்றவற்றில் தேர்ந்தவர்கள்.
இவர்களின் எண்ணிக்கை யாராலும் சொல்ல முடியாத அளவு பெரியதாகும்.
என்றாலும் கூட நாம் நவ சித்தர்கள் என்றும் பதினெண் சித்தர்கள் என்றும் அரிய பல சித்திகளைச் செய்து மனித குலத்திற்கு வழிகாட்டியவர்களைச் சிறப்பித்துக் கூறுகிறோம்.
இவர்களில் போகர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியவர் ஆவார்.
இவர் பழனி மலையில் பிறந்தார் என்றும் அங்கேயே பல காலம் வசித்தார் என்பதையும் அங்கேயே சமாதி எய்தினார் என்றும் நமது வரலாறு கூறுகிறது.
அதிசயம் அநேகமுற்ற பழனி மலை என்று அருணகிரிநாதர் பழனி மலையின் அதிசயங்களை வியந்து போற்றுகிறார்.
அந்த அதிசயப் பழனி மலையில் இவர் வாழ்ந்தார் என்பதை கொங்கு மண்டல சதகம் தனது 36ம் பாடலில் கூறுகிறது.
யோக வயித்தியஞ் சொல்ரச வாத மெலாக் கலையுந்
தேக நிலைபெறுங் காயகற் பங்களெண் சித்தியுஞ்சொல்
போக ருடன்புலிப் பாணி முதலிய புண்ணியரெலா
மாக முறவமர் வைகா நகர்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :- யோகம் வைத்தியம், ரசவாதம், நீண்ட ஆயுளைப் பெற வைக்கும் காயகல்பம், அட்டமாசித்தி ஆகியவற்றைக் கூறிய போகநாதர், புலிப்பாணி ஆகிய புண்ணியர்கள் வசித்துள்ள வைகாவூர் (பழனி) கொங்கு மண்டலத்தில் உள்ளதே.
பழனி கொங்கு மண்டலத்தில் உள்ள சிறந்த ஊர்.
இங்கு திருமாளிகைத் தேவர், கருவூர்ச் சித்தர், புலிப்பாணி போன்ற
புண்ணியர்களை மாணாக்கர்களாகக் கொண்ட பெரும் சித்தர் போகர்.
திருமாளிகைத் தேவர் சரிதத்தால் சைவ சமயப் பற்றுள்ளவராகவும் கருவூர்த் தேவரை நோக்கும் போது வாமாசாரமுடையவராகவும் இவர் கருதப்படுகிறார்.
தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் (பெரிய கோயில்) அட்டபந்தன காலத்தில் இவர் அங்கு எழுந்தருளியிருந்தார். இதை
கொங்கு மண்டல சதகம் 34ஆம் பாடல் கூறுகிறது.
புலிப்பாணி பல திரட்டில் கீழ்க்கண்ட பாடல் வருகிறது:
ஆக பிரமன், இந்திரன், போகர் ஆகிய மூவர் தண்டாயுதபாணியைப் பழ மலையில் தவமியற்றி பூஜித்தவர்கள் என்பது தெளிவாகிறது.
இவர் பல அரிய செயல்களைச் செய்து உலகை பிரமிக்க வைத்தார். அவற்றில் அனைவரும் போற்றி வியப்பது இவர் நவபாஷாணங்களைக் கட்டி அதனால் முருகனுக்கு ஒரு சிலை அமைத்தார் என்பதையே!
கௌரி பாஷாணம், கந்தக பாஷாணம், சீலைப் பாஷாணம், வீர பாஷாணம், கச்சால பாஷாணம், வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், சூதப் பாஷாணம், சங்குப் பாஷாணம் ஆகிய ஒன்பது பாஷாணங்களைச் சுத்திகரித்து இவர் முருகன் விக்ரஹத்தை வடிவமைத்திருக்கிறார்.
இந்த விக்ரஹத்திலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர் வீச்சுக்கள் விக்ரஹத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே நலத்தை விளைவிக்கும்.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியை வடிவமைத்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை இவர் உருவாக்கினார் என்றும் கூறப்படுகிறது.
இவர் காலாங்கி நாதர் என்ற சித்தரைத் தன் குருவாக வரித்தார். அவரிடமிருந்து பல சித்திகளைப் பெற்றார். காயகல்பம் செய்து தன் உடம்பை அழியாத உடலாகச் செய்தார்.
தான் அறிந்த ரகசியங்களை மனித சமுதாயம் மேம்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அவற்றை நூல்களாகப் படைத்தார்.
ஏராளமான அந்த நூல்களில் இன்று நம்மிடம் 64 நூல்கள் உள்ளன. அதில் 23 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றில் மட்டும் சுமார் 11000 பாடல்கள் உள்ளன.
இவற்றை சித்த நூல்களில் தேர்ந்தவர்களே படித்து அர்த்தம் காண முடியும். ரகசிய சங்கேத வார்த்தைகளால் சொல்லப்படும் கருத்துக்கள் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக ‘இரு குரங்கின் கை’ என்று சொல்லப்படும் போது அதன் உண்மையான அர்த்தம் முசுமுசுக்கை என்ற தாவரம் என்று அறியப்பட வேண்டும்.
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவனி மந்திரம், என்றும் உயிரோடு வாழவைக்கும் காயகல்பம் ஆகியவற்றோடு எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் ரஸவாத வித்தையும் போகர் அறிந்தவர்.
பொதிகைமலைச் சாரலில் இவர் நீண்டகாலம் தவம் புரிந்தவர். தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலய லிங்க பிரதிஷ்டையில் இவர் முக்கிய பங்கு ஆற்றியவர்.
இப்படி ஏராளமான வரலாறுகள் இவரைப் பற்றிக் கூறப்படுகின்றன.
சீனாவுக்கும் போகருக்கும் உள்ள தொடர்பு மிகச் சிறப்பாகப் பேசப்படுகிறது. போயாங் வேய் என்ற பெயரில் இவர் சீனாவில் இருந்திருக்கிறார். பல நூல்களைச் சீன மொழியிலும் எழுதி இருக்கிறார். இவர் கிழக்கு ஹான் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.மு. 167ம் ஆண்டு வாக்கில் வாழ்ந்ததாக சீனக் குறிப்புகள் கூறுகின்றன. சீனாவில் இவர் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதை சீன நூல்கள் குறிப்பிடுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் முள்ளிப்பாடி கிராமத்தில் திரு ஈங்கோய்மலை அடிவாரத்தில் போகருக்கு ஒரு தனிக் கோவில் உள்ளது. இங்கு அவர் நவபாஷாண முருகன் சிலையைச் செய்து அதை நன்கு சோதித்த பின்னரே பழநிக்குச் சென்று அதை பிரதிஷ்டை செய்தார் என்று மக்கள் நம்புகின்றனர்.
பழநியில் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதி அடைந்தார். அவரது சமாதி பழநி ஆண்டவர் கோவிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
பழனி ஆண்டவர் சந்நிதி முன்பு போகர் ஒடுக்க மடம் என்றும் மலையடிவாரத்தில் புலிப்பாணி மடம் என்றும் இருக்கின்றன.
போகர் பூஜை செய்து வந்த புவனேஸ்வரி அம்மனின் விக்ரஹமும் பழநியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. புவனேஸ்வரி அம்மன் சந்நிதிக்கும் போகரின் சமாதிக்கு ஒரு சுரங்கப் பாதை உண்டு என்பதும் தெரிய வருகிறது.
போகர் பற்றிய பல வரலாற்றுச் செய்திகளை சதுரகிரி தல புராணத்தில் காணலாம்.
என்றும் வாழ்கின்ற சித்தர்களைப் போற்றி வணங்குவதுடன் அவர்கள் கூறி இருக்கும் இரகசியங்களைத் தக்கோர் வாயிலாக அறிந்தால் நம் வாழ்வு நலம் பெறும் என்பது திண்ணம்.
அனைத்து சித்தர்களையும் வணங்குவோம் நலமுற வாழ்வோம் என்று கூறி விடை பெறுகிறேன்.