TALLEST GANESH IN THE WORLD IS IN THAILAND- 39 METRES HIGH. JANAM TV NEWS.
தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!
உலகிலேயே மிக உயரமான விநாயர்ச் சிலை இந்தியாவில் அல்லாமல் தாய்லாந்தில் இருப்பது ஆச்சரியமான உண்மை. தாய்லாந்தின் செழிப்பை உணர்த்தும் விதமாகச் சாச்சோங்சாவ் மாகாணம் க்லோங் குவான் மாவட்டத்தில் உள்ள கணேஷ் சர்வதேச பூங்காவில் கம்பீரமாக நிறுவப்பட்டுள்ளது விநாயகர்ச் சிலை…. 39 மீட்டர் உயரம், கிட்டத்தட்ட 12 மாடி அளவுக்கு உயரமான இந்தச் சிலை, 40 ஆயிரம் சதுர மீட்டர்ப் பூங்காவில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறது.
2009-2012ம் ஆண்டில் தாய்லாந்தின் சிற்ப கலைஞர்ப் பிடக் சலூம் லாவ் என்பவர், ஆனைமுகனை வடிவமைத்திருக்கிறார்… 100 டன் எடையில், 854 வெண்கல அடுக்குகளைக் கொண்டுள்ள கணபதி சிலை 4 கைகள் உடன் காட்சி தருகிறது. ப்ரப் பிகனேட், ப்ரப் பிகனேஷுயன் எனத் தாய் மொழியில் அழைக்கப்படும் நம் விநாயகனை முன்னேற்றத்தின் குறியீடாகப் பார்க்கிறது தாய்லாந்து.அதனால்தான் அவரது கைகளில் ஆயுதங்களைத் தவிர்த்து, செழிப்பின் அடையாளமாகப் பலாப்பழத்தையும், இனிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகக் கரும்பையும், வாழ்வாதாரம் மற்றும் ஊட்டசத்தின் அடையாளமாக வாழைப்பழத்தையும், தெய்வீகம் மற்றும் ஞானத்தை உணர்த்தும் விதமாக மாம்பழத்தையும் தாய்லாந்து விநாயகர்க் கையில் தாங்கி நிற்கும்படி வடிவமைத்திருக்கிறது.இதுதவிர ஞானத்தைப் பிரதிபலிக்கும் தாமரைக் கிரீடம், தேசத்தையும், உலகையும் பாதுகாக்க வல்லவர் என்பதைக் குறிக்கும் வகையில் ஓம் சின்னமும் கிரீடத்தில் உள்ளது.
***
GANESH SYMBOLISM FROM FACEBOOK
****
HINDUS INVENTED BATHROOM SHOWER THOSANDS OF YEARS BEFORE THE WEST. THIS IS FOLLOWED IN MANY TEMPLES FOR AGES.
—SUBHAM–
TAGS- TALLEST, GANESH, THAILAND, SHOWER, HINDU INVENTION, SYMBOLISM.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kalidasa is the greatest poet of India. He lived 2100 years ago in North India. His seven great works survived until this day. No poet in the world excelled him until this day. He used over 1500 imageries, similes, metaphors and allegories in his books. Not even Shakespeare in his 37 plays and over 154 sonnets used such imageries. In fact, Shakespeare even copied him and created Miranda (The Tempest) in the model of Shakuntala. He copied the Vidushakas of Kalidasa and created Caliban (The Tempest).
Like all great Hindu poets Kalidasa left no personal details. Of all the historical Hindu dynasties, he used only Magadha dynasty’s name. it proved that he lived during or immediately after the Magadha rule. In his Raghuvamsa we see Raghu conquering all countries up to Iran. We know that Vikramaditya was the one who ruled such a vast empire. Kalidasa is associated with the great ruler Vikramaditya and even Chandragupta II took that title later.
Kalidasa’s work Kumara sambhava made a big impact on the Vaishnavite Gupta empire and they suddenly switched over to Saivite names such as Kumara Gupta and Skanda Gupta. Three Gupta Kings named themselves as Kumaragupta.
First Mystery
He lived in the first century BCE. Bhasa, another great playwright credited with 13 plays, lived before him. He used stories from Ramayana and Mahabharata for his dramas. Kalidasa took Lord Skanda (also known as Kumaara) for his work. This shows he lived before the Parama Bhagavathas, i.e. The Gupta kings. Gupta kings used title Parama Bhagavathas in their coins and inscriptions to say that they are followers of Vishnu.
But why did Kalidasa choose Lord Skanda/ Kartikeya/Kumara rejecting Vishnu and Siva? It is a mystery. The legend is that he was blessed by Kali. His very name suggested that he was blessed by Kali. But he never did any work on Kali. But in all his seven works he praised Brahma, Vishnu and Siva and said all are one and the same. In most of his works he used Siva in the initial Prayer song. All these show that he lived before Vaishnavite/ Parama Bhagvathas Gupta kings.
The reason for him choosing Lord Skanda may be the Yaudheya Kings who produced coins with the image of Lord Skanda.
Second Mystery
Why didn’t he finish Kumarasambhava, the birth of Lord Kumara/Skanda? What happened to him? Where did he go? Did he die suddenly? No clue is available in any Hindu literature. But Gupta inscriptions and sculptures show his great influence. Most famous art historian Sivaramamurti rightly pointed out that Kalidasa must have lived long before the Gupta rule, because sculptures and paintings follow what is written in literature not vice versa. This has been proved around the world.
Third Mystery
In Kumarasambhava Kavya, we see the role of Sapta Rishis- Seven Great Seers. Even today Brahmins worship Sapta Rishis three times a day in their Sandhyavandana, in the order Atri, Brhu, Kutsa, Vasishta, Gautama, Kashyapa and Angirasa. The surprising thing is that Panini used them in the same order 2700 years ago. But Kalidasa gave importance to the junior most Angiras in the list. He is the one who requests Himavan to give his daughter Uma to Lord Siva in marriage. Traditions of the Seven Rsis by John E. Mitchiner says saint Valmiki refers only to six seers and Mahabharata has two different lists. He added that Kalidasa and Varahamihira used the new list and so this new list must be in use between 300 BCE and 300 CE. But why did Kalidasa choose junior most or the last one (Angiras) to head the representation to Himavan? It remains as an unsolved mystery.
Another interesting point is 2000 year old Sangam Tamil literature mentioned Sapta Rishis in two poems saying Tamils worshipped them (Natrinai 231 and Pari.5-43)
***
UMA Mystery in Tamil Literature
One more mystery is there, but it is from Tamil literature.
Sangam Tamil literature, mostly secular, but refers to all Hindu Gods, both Vedic and post Vedic gods. Among the goddesses Lakshmi , Durga , and Kali are mentioned but with Tamil names only. Uma is the only Goddess name used with Sanskrit name UMA (in Tamilized form UMAI). It shows that Kalidasa’s Kumarasambhava has made a big impact on Tamils and so they copied Uma from his book.
And this is not the only place. Even the description of Muruga/Skanda has many similarities ( I have written about it in articles on Skanda/Muruga)
–subham—
Tags- three mysteries, Kalidasa plays, Uma mystery, in Sangam Literature
ஐந்து திருமுகங்களைக் கொண்டவர். சிம்மத்தை வாகனமாகக் கொண்டவர்.
லக்ஷ்மி கணபதி
இரு தேவியருடன் இருப்பவர். பொன்னிறத் திருமேனி கொண்டவர்.
மஹா கணபதி
யானை முகம் கொண்டவர். பிறைச் சந்திரனைத் தரித்தவர். சிவந்த மேனி கொண்டவர்.
விக்ன ராஜ (விஜய) கணபதி
செவ்வண்ண மேனி கொண்டவர். இடர்களைக் களைபவர்.
மூஷிக வாகனம் கொண்டவர்.
நிருத்த கணபதி
கற்பக மரத்தடியில் நடமிடத் தூக்கிய திருப்பாதத்துடன் காட்சி தருபவர். பொன்னிறத் திருமேனி கொண்டவர்.
ஊர்த்வ கணபதி
செங்கழுநீர் புஷ்பம், நெற்கதிர்க் கொத்து, தாமரை மலர், கரும்பு வில், அம்பு, தந்தத்தில் தாங்கிய கதி கொண்டவர். பொன் போல மின்னும் திருமேனி கொண்டவர்.
ஏகாக்ஷரகணபதி
செந்நிறத் திருமேனி கொண்டவர். பத்மாசனத்தில் அமர்ந்தவர். சிவந்த பட்டாடையை அணிந்திருப்பவர்.
வர கணபதி
செந்நிறத் திருமேனி கொண்டவர்.மூன்று கண்கள் உடைஅவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில் ஏந்தியவர்
Pilaiyarpatti Ganesh Temple
த்ரிமுக கணபதி
மூன்று வலக்கரங்களில் அங்குசம், அக்கமாலை, வரத முத்திரை கொண்டவர். பாசம், அமுத கலசம். அபயம் இடக்கரங்களில் கொண்டவர். தாமரைப் பீடம் கொண்டவர். மூன்று முகம் கொண்டவர்.
க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
ஆறு திருக்கரங்கள் கொண்டவர். சிவந்த மேனியர்.
ஹரித்ரா கணபதி
மஞ்சள் நிறத் திருமுகம் கொண்டவர். ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியாக விளங்குபவர். பக்தருக்கு அடைக்கலம் தந்து தடைகளை நீக்குபவர்.
ஏகதந்த கணபதி
பெருவயிறுடன் கூடியவர் நீல நிறம் உடையவர்.
சிருஷ்டி கணபதி
மூஷிக வாகனம் கொண்டவர். தடைகளை நீக்குபவர். பாசம். அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைக் கொண்டவர்.
உத்தண்ட கணபதி
நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைப் பத்துக் கரங்களில் தரித்தவர். மங்களம் அருள்பவர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Why do I publish 1000 proverbs on women collected from different cultures? This is to teach a lesson to the Anti Manu Smrti idiots in the universities. Millions of women were burnt alive during the witch hunting by Christians. But the world knows only one Joan of Arc. In the whole wide world, greatest Tamil poet Bharati is the only one who never criticised women but praised them sky-high. Next comes Manu Smriti.
Hence men who seek (their own) welfare, should always honour women on holidays and festivals with (gifts of) ornaments, clothes, and (dainty) food.—(59)
(Manu also said women’s all body parts are always pure)
****
One Thousand Proverbs on Women, Wives and Daughters- part 24
482. Alas for the man whose affliction is his wife.
483. Who can act so as to please a woman?
484. What manner of man who he is less than a woman?
485.When a woman goes on a journey it is because a man opens the door for her.
486. If a woman has sworn your undoing , pass the night awake. If a man has sworn your undoing, pass the night sleeping.
487. The disgrace of a woman is abiding.
488. The scald headed woman prides herself on the hair of her maternal aunt’s daughter.
489. It is better for a woman to marry the man who loves her than to mate with the man she loves.
490. Drink from the hand of woman you love, but do not let her drink from your hand.
491. He who wishes to excel in wisdom, should not allow himself to be ruled by women.
492. Where women are honoured there the gods are pleased.
(It is in the Manu Smriti of Hindus)
493. Women are part cut out of men .
(It is the Hindu concept of Ardha Nareeswara)
494. Women are the snares of Satan
495. When you get near women you get near trouble.
—Arabic proverbs.
496. The wife makes her known at the cradle
—Armenian
497. Better a woman blind than too beautiful.
498. Women’s appetite is twice that of man, their intelligence four times and their eight times.
(It is in Hindu Sanskrit sloka)
—Burmese
499. A girl is worth one tenth of a boy.
500. A young girl must be kept like a tiger in the house.
501. What is worn is clothing, what dies is a wife.
(or worn out it is clothing, when old it is a wife
502. A whole house full of sons and daughters, is not after all equal to a second wife.
503. An ugly wife and lean piece of ground protect the house.
504. You may beat your wife as much as you like provided the stick is no bigger than your thumb.
505.A man can have a wife for five dollars, for a donkey he must give fifteen.
506. Husband and wife have no enmities that can survive a night.
507. A wife is like a wall of mud bricks, take off one row and there is another below it
(wife no sooner dead than the husband plans to secure another.)
508. If a man is unfaithful to his wife, it is like spitting from a house into the street, but if a woman is unfaithful to her husband, it is like spitting from the street into the house.
509. Teach your son in the hall and your wife on the pillow.
510. The wife should sing, and the husband accompany.
511. Wife, wealth, children, pay are all predestined.
512. A wife’s long tongue is the flight of steps by which misfortunes come.
513. Do not burn down your house in order to inconvenience even your chief wife‘s mother.
514. Ugly wives and stupid maids are priceless treasures.
515. Other people’s wives are the best; one’s own children are the best; vegetables in one’s own garden are not relished, those from other gardens are the best.
516. Men love their own compositions and other men’s wives.
517. It is impossible to be more malevolent than a woman.
518. Rogue is bestowed upon the beautiful woman.
519. It is easier for one dishonest a woman clad in furs get admittance to the temple than ten honest females rags into a good man’s house.
520. Though a woman has given you ten sons, do not trust her.
521. A secret revealed to a woman is a bubble that is blown.
522. A man thinks he knows, but a woman knows better.
523. Such is the stupidity of woman that it is incumbent on her, in every particular, to distrust herself and obey her husband.
524. A hundred men can make an encampment, but it takes a woman to make a home.
525. When a man is mad on a woman- wait- only she herself can cure him.
—Chinese proverbs
To be continued……………………
Tags. One Thousand Proverbs, on Women, Wives and Daughters-, part 24
சங்க காலத்துக்குப் பின்னர் வந்த உரைகளில் நிறைய சங்கீதச் செய்திகள் இருந்த போதிலும் இந்தக் கட்டுரையில் சங்க காலம் பற்றி மட்டுமே எழுதுகிறேன்
பாணர்கள் பாடிக்கொண்டே மன்னர்களிடம் பரிசுகள் பெறச் சென்ற பாடல்கள் நிறைய உள்ளன. மன்னரை எழுப்புவதற்கு அரண்மனை முன்னர் அதிகாலையில் மன்னர் குலத்தின் பெருமைகளை பாடியதையும் அறிகிறோம். கூத்து என்னும் நாடகத்துடன் இசையும் கலந்து வந்தது
ஆகுளி என்ற கருவியை முழவொடு சேர்த்து பயன்படுத்தினர் . இதன் குரல் ஆந்தையின் குரல் போல இருக்கும்- மலைபடு-140/1
தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டுவதற்குப் பயன்படுத்திய தட்டை என்னும் கருவியின் ஓலி, தேரையின் ஒலி போல இருக்கும் .குறுந்.193;
எல்லரி என்ற பாறைக்கு சல்லி என்ற இன்னும் ஒரு பெயரை நச்சினார்க்கினியர் தருகிறார் பாணர்கள் பயன்படுத்திய தடாரி என்னும் தோற்கருவிக்கு ஆமை வடிவு இருந்ததாகப் புலவர்கள் பாடுகின்றனர்
பகுவாய்த் தேரை தட்டைப்பறையிற்
கறங்கும் நாடன் – குறுந்.193;
அரிக்குரல் தடாரியின் ஆமை மிளிர – புறம் 249
அந்த தடாரி சந்திரன் போல வட்டமாக இருந்ததாம்.
மதியத்தன்ன வென் அரிக்குரல் தடாரி – புறம் 398
காளிதாசனும் சங்கப்புலவர்களும் எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் பறவைகள் அல்லது பிராணியின் சப்தம் போல இருந்ததாகக் கூறுவது அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை நடத்தியத்தைக் காட்டுகிறது .
புல்லாங்குழல் செய்யும் முறையைப் பெரும்பாணாற்றுப்படை கூறும் – 177-180
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழி செம் தீ தோட்ட கரும் துளை குழலின் இன் தீம் பாலை முனையின் குமிழின் . . . .[180]
புழல் கோட்டு தொடுத்த மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி
இடையன் தானே குழல் செய்துகொண்டு இசைப்பான். அது சலித்துவிட்டால் பொந்துள்ள குமிழ மரத்தில் யாழ் செய்துகொண்டு இசைப்பான். தனக்கு வேண்டிய புல்லாங்குழலைத் தானே செய்து கொள்வான். ஞெலிகோலின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு தீயில் காய்ந்து கனப்புடன் இருக்கும் ஞெகிழியால் மிகுந்த வலிமையோடு மூங்கிலில் அழுத்தித் துளை போடுவதற்காக அவன் கையால் முயன்று அழுத்தும் போது அவிர்புகை கமழும். புல்லாங்குழலில் அவன் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவான். அதில் சலிப்பு தோன்றினால் [முனையின்] யாழிசை மீட்டுவான். யாழும் அவனே செய்து கொண்டதுதான். குமிழ மரத்தின் கொம்பை வளைத்து மரல் என்று சொல்லப்படும் பெருங்குரும்பையின் நாரை முறுக்கி நரம்பாக்கிக் கட்டி வில்யாழ் செய்துகொள்வான். அதில் விரல்களால் தெறித்துக் குறிஞ்சிப்பண் பாடுவான். அதன் ஓசை பல்கால் பறவை என்று சொல்லப்படும் வண்டின் குரல் போல இனிமையாக இருக்கும்.
****
வயிர் என்னும் கருவி போர்க்களத்தில் முழங்கிய கொம்பு வாத்தியங்களில் ஒன்றாகும் அதன் ஒலி அன்றில் பறவையின் ஒலியைப் போன்றது ,
ஏங்குவயிர் இசையை கொடுவாய் அன்றில் – குறிஞ்சி.219
மயில், நாரை ஆகியவற்றின் குரலையும் இதற்கு ஒப்பிட்டுள்ளனர் அகம்.40, 177;
முழவு என்னும் கருவியை ஆடவரின் தோளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர் -மலை2,3; .
காளை மாட்டின் தோலால் செய்யப்பட பல வகை முரசுகள் இருந்தன .மதுரை.732/3; புறம்.63
ஒருபுறம் மட்டும் ஒலிக்கும் கருவி- பதலை புறம்.152 மலை.11
பதலை என்ற கருவி மாத்திரையின் அளவினை வரையறுக்கப் பயன்பட்டது.
****
இசைக்கருவிகளின் ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் பயன்படுத்திய பாடல்களைக் கணக்கிட்டால் அவை பல நூறு அல்லது ஆயிரத்தைத் தாண்டிவிடும்! 450 புலவர்கள் பாடிய 2500 பாடல்களில் இப்படி இருப்பதில் வியப்பில்லை! ஆனால் காளிதாசன் ஏழே நூல்களில் இசையைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
காளிதாசனின் மூன்று நாடகங்களும் இசை முழக்கத்துடன் துவங்குகின்றன . மாளவிகாக்நிமித்ரம் நாடகத்தில் மாளவிகா, நடனப் பயிற்சியுடன் நாடகம் துவங்குகிறது .
முதல் காட்சியில் முரசொலிக்கு மயில்கள் ஆடுவது குறிப்பிடப்படுகிறது இரண்டாவது காட்சியில் சர்மிஷ்டா இயற்றிய பாடல் வருகிறது இதனால் பெண்கள் ஆடலிலும் பாடலிலும் புலமை பெற்றதும் முறையாக ஆசிரியர்களிடம் பயின்றதும் காணக்கிடக்கிறது. சங்கீதம் முதலிய கலைகளில் அரசன் அதிக நேரம் செலவிடுவதை ராணி குறைகூறுகிறாள்.
****
WHO IS A GOOD WIFE?
ரகுவம்சத்தில் 8-67 மனைவி என்பவர் யார்? என்ற வருணனை வருகிறது
गृहिणी सचिवः सखी मिथः प्रियशिष्या ललिते कलाविधौ|
करुणाविमुखेन मृत्युना हरता त्वाम् वद किम् न मे हृतम्॥ ८-६७
You were my wife, my counsellor, my beloved companion in private, my favourite pupil in the practice of the fine arts: now tell me what has not been snatched away from me by ruthless death while taking you away from me. [8-67]
நீ எனக்கு குடும்பத்தை நடத்திச் செல்லும் மனைவியாகவும், ஆலோசனை கூறும் மந்திரியாகவும் தனிமையில் தோழியாகவும் லலிதமான கலைகளை பயின்று என்னை மகிழ்விக்கும் மாணவியாகவும் இருந்தாய் ; இப்போது உன்னை எமன் கவர்ந்து சென்றதால் எனக்கு இனி மந்திரி இல்லை, துணைவி இல்லை, மாணவி இல்லை , மனைவி இல்லை.
( முன்னால் வந்த ஸ்லோகத்தில் இந்துமதி இசை பயின்ற செய்தியும் உளது.)
மேகமே சூரிய அஸ்தமனத்துக்கு முன்னால், மஹாகாலத்துதுக்கு / உஜ்ஜைனி சிவன் கோவிலுக்குப் / போய்விட்டால் சூரியன் மறையும் வரை தங்கி இரு.; அப்போது உனது மேக கர்ஜனை சிவ பூஜைக்கான படக / மிருதங்க ஒலியாக இருக்கட்டும்.
மூங்கில் ஓட்டை வழியாக வரும் காற்று இனிமையாக சுருதி போல ஒலிக்கும் ; சிவ பெருமானின் முப்புர வெற்றியை கின்னரப் பெண்கள் பாடுவார்கள் ;உன்னுடைய கர்ஜனை குகைகளுக்குள் நுழைந்து எதிரொலயாக வருவது மிருதங்க ஓசை போல இருக்கும் . அப்போது, சுருதி, பாட்டு, தாளம் மூன்றும் சிவன் பூஜைக்கு கிடைத்து விடும்!
காடுகளில் கீசக/ மூங்கில் ஓட்டைகளில் புகும் காற்று குழல் ஓசையாக வருவதை கபிலரும் பாடியுள்ளார்.
மேகத்தை முத்தமிடும் உயரமான கட்டிடங்கள் உன்னைப்போல உயரத்தில் இருக்கும். அங்குள்ள ரத்தினம் பதிக்கப்பட்ட அரண்மனை தரையானது மழைத்துளி பிரகாசிப்பது போல இருக்கும். சுவர் ஓவியங்களின் வண்ணங்கள் உனது வானவில்லுடன் போட்டிபோடும் மின்னலின் வர்ண ஜாலங்களுக்கிணையாக கன்னியர் நடனம் ஆடுவார்கள்; ஆட்டத்துக்கேற்ற தாளத்துடன் மிருதங்கம் முழங்கும்; அது உனது மேக கர்ஜனைக்கு ஒப்பாகும் .
இதில் சங்க இலக்கியம் போல இயற்கை ஆர்க்கெஸ்ட்ரா– வை காளிதாசன் பாடுகிறான்.
****
अथ रोधसि दक्षिणोदधेः श्रितगोकर्णनिकेतमीश्वरम्|
उपवीणयितुम् ययौ रवेरुदयावृत्तिपथेन नारदः॥ ८-३३
தென் கடலின் கரையில் கோகர்ண க்ஷேத்ரம் உளது ; அங்கே கோயில் கொண்டுள்ள சிவபெருமானைத் துதி பாடி நாரதர் வீணையை இசைத்தவாறு வடக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார்
சிலப்பதிகார காவியத்தில்தான் தமிழில் முதல் தடவையாக நாரதர் வீணை என்ற சொற்கள் வருகின்றன. அதே போல காளிதாசன் சொல்லும் உஜ்ஜைனி ஜோதிர்லிங்க தலமும் சிலப்பதிகாரத்தில்தான் வருகிறது; காளிதாசனின் தாக்கத்தைச் சிலம்பில் மேலும் பல இடங்களில் காணலாம்.
****
இசையின் தாக்கம் பற்றி ருது சம்ஹாரத்திலும் 1-8 பாடுகிறார்; இசை காம உணர்வினையும் தூண்ட வல்லது என்கிறார். சிலப்பதிகாரத்தில் மாதவியின் இசைக்கு கோவலன் மயங்கியதைக் காணலாம்.
இங்கே காளிதாசன் சொல்கிறான் ,
சந்தன நீர் தெளித்த விசிறியின் காற்றும், முத்துமாலை அணிந்த பெண்களின் மார்பகங்களும் பெண்கள் வாசிக்கும் வல்லகி என்னும் யாழ் இசையும் ஆண்களிடத்தில் தூங்கிக்கிடக்கும் காம உணர்வுகளைத் தட்டி எழுப்பும் .
ஆக இசை என்பது இறைவனிடத்தில் இட்டுச் செல்லும்; இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் உதவும் என்பது காளிதாசனின் கருத்து.
—SUBHAM—
TAGS- இசை, காளிதாசன், கருத்து, சங்கத் தமிழ் நூல்கள் , சங்கீதம், பகுதி –3
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
collected from popular dailies and edited for broadcast.
ஞானமயம் வழங்கும் (24 -8-2025) உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷு வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு .
****
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்; மும்பையில் ரூ. 474 கோடிக்கு இன்சூரன்ஸ்
மஹாராஷ்டிராவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரூ.474 கோடியில் மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு இன்சூரன்ஸ் செய்துள்ளது.இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் இந்தப் பண்டிகை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, மும்பையைச் சேர்ந்த கணேஷ் மண்டல் என்ற அமைப்பு, இந்த ஆண்டு பண்டிகைக்காக ரூ.474 கோடியில் இன்சூரன்ஸ் செய்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.400 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்த நிலையில், இந்த ஆண்டு தொகை சற்று அதிகரித்துள்ளது.
விநாயகர் சிலைகளைஅலங்கரிக்கும் தங்க மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு உயர்வும் , அதிக தன்னார்வலர்கள்,பூசாரிகள், சமையல்காரர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இந்த காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதும் இவ்வளவு பெரிய தொகைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ள இந்த ‘ஆல்-ரிஸ்க்‘ இன்சூரன்ஸ் திட்டமானது, தங்கம், வெள்ளி மற்றும் விலைமதிப்புள்ள கற்கள், தனிப்பட்ட விபத்துக் காப்பீடு, தீ மற்றும் பூகம்பப் பேரிடர் காப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஜிஎஸ்பி சேவா மண்டலத்தின் தலைவர் அமித் பாய் கூறுகையில், ‘தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு உயர்வே இதற்கு முக்கிய காரணம். தன்னார்வலர்கள் மற்றும் பூசாரிகளும் காப்பீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர்‘ என்றார்.
****
கோயில் நிதியில் திருமண மண்டபம் அமைக்கும் அரசாணை ரத்து; உயர் நீதி மன்றம் உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
கோயில் நிதி மூலம் திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்தது
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான வாகீஸ்வரர் கோயில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ.22 கோடியே 20 லட்சத்தில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023 மார்ச் 3 ல் அரசாணை வெளியிட்டது. இப்பணியை அந்தந்த கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு மாநகராட்சியிடம் கட்டட அனுமதி பெறவில்லை.
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயில். வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.6 கோடியே 30 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி அறநிலையத்துறை மே 16 ல் அரசாணை வெளியிட்டது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபரி நிதியிலிருந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கம்பராயப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.3 கோடியே 75 லட்சத்தில் திருமண மண்டம் அமைக்கப்படும். உத்தமபாளையம் திருக்காளத்தீஸ்வரர் மற்றும் நரசிங்கப்பெருமாள் கோயில் நிலத்தில் ரூ.4 கோடியே 54 லட்சத்தில் திருமண மண்டபம் அமைக்க 2024 டிசம்பரில் அறநிலையத்துறை முதன்மை செயலர் அரசாணை வெளியிட்டார்.
இவை அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கோயில் நிதியை ஹிந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், ஹிந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோயில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரி நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல், பக்தர்களின் நலனிற்காக மருத்துவமனைகள், மருந்தகங்களை அமைக்க பயன்படுத்த வேண்டும். திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்தார்
ஹிந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் கோயில்களில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் திருமண மண்டபங்கள் அமைக்கப்படுகின்றன. அதற்கு மிகக்குறைந்த தொகை வாடகையாக வசூலிக்கப்படுகிறது. அத்தொகை கோயில் பராமரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் வணிகநோக்கம், விதிமீறல் இல்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோயில் நிதி என்பது அரசின் பொது நிதி அல்ல. பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி வழங்குகின்றனர். அதை அன்னதானம், பிரசாதம் வழங்குதல், கோயில் மேம்பாடு உள்ளிட்ட மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். இதில் அனைத்து மதங்களும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன.
மதச்சார்பற்ற அரசு கோயில் நிதியிலிருந்து வணிக நோக்கில் திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் அமைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாடகைக்கு விடும் வகையில் கோயில் நிதியில் திருமணம் மண்டபங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. மதச்சார்பற்ற அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்ளக்கூடாது.
மன்னர்களின் ஆட்சியில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. அவை மதிப்பு மிக்கவை. நம் கலாசாரம், கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்கின்றன. அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோயில்களை மேற்பார்வையிட்டு முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத நடைமுறைகள், பழக்கவழக்கங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. கோயில் நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என அந்தந்த கோயில் நிர்வாகங்கள்தான் முடிவெடுக்க இயலும்.
சட்டசபையில் அரசு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் கோயில் நிதியில் திருமண மண்டபங்கள் அமைக்க அறநிலையத்துறை அரசாணைகள் வெளியிட்டது ஏற்புடையதல்ல. அவை ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனம், திருமண மண்டபங்கள் அமைக்கும் அரசாணைக்கு எதிராக நிலுவையிலுள்ள பிற வழக்குகளில், மனுதாரர்கள் தரப்பிற்கு அரசாணையின் நகல் வழங்க அரசு தரப்பிற்கு அறிவுறுத்தி விசாரணையை ஆக.25 க்கு ஒத்திவைத்தனர்.
*****
ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது; நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பு வாதம்
திருப்பரங்குன்றத்தில், ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையின் எல்லையை அளவீடு செய்வதற்கு, தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை’ என, மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையை, ‘சிக்கந்தர் மலை’யாக மாற்ற முயற்சிப்பதாக, ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், ‘மலை மீதுள்ள சிக்கந்தர் தர்கா, அதன் முன்புறமுள்ள கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்கா செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை. ஆங்கிலேயர் ஆட்சியின்போதே, இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எனவே, ஆடு, கோழி பலியிட்டு, சிக்கந்தர் மலையாக மாற்றும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.
இதுபோல, கட்சியின் மாநில அமைப்பு செயலர் ராமலிங்கம், ‘பக்ரீத் பண்டிகையையொட்டி, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து, நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என, மனு தாக்கல் செய்தார். இதுபோல, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு, கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகளில், நீதிபதி நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்; நீதிபதி ஸ்ரீமதி, மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தார். இதனால், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மனுக்கள் மாற்றப்பட்டன. அதன் மீதான விசாரணை, நேற்று நடந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், ‘ஒட்டுமொத்த மலையும் மத்திய தொல்லியல் துறைக்கு சொந்தமானது. மலையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால்தான் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மலையை, ‘ட்ரோன்’ மூலம் அளவீடு செய்ய, விமான நிலைய ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அளவீடு செய்தால் தான் எல்லையை நிர்ணயிக்க முடியும். ஆனால், தமிழக அரசு ஒத்துழைப்பு தரவில்லை’ என வாதிட்டார்.
தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை ஹிந்து அமைப்புகள் தடுக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலையை, ‘ஸ்கந்தர் மலை, சிக்கந்தர் மலை’ என வருவாய்த்துறை ஆவணங்களில் இருப்பது குறித்து, கடந்த 1923ல் மதுரை சார்பு நீதிமன்றம், கடந்த 1931ல் லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள வெயிலுக்குகந்த அம்மன் கோவிலில், ஆடு, கோழி பலியிடும் வழக்கம் உள்ளது. மேலும், தர்கா பகுதி, முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அங்கு வழிபாட்டு உரிமையை தர்கா நிர்வாகம் தான் முடிவு செய்யும். வெளியிலிருந்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது’ என வாதிட்டார்.
இந்த விவாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையை ஆக., 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
****
ஒரு வேளை உணவுக்கு கூட போதாத 33 ரூபாய் சம்பளம்; கோயில் பூஜாரிகள் வேதனை
தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 19,000 கோயில்கள் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ளன.
இவற்றில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பூஜாரிகளுக்கு மாத சம்பளமாக 1000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. அதாவது தினசரி 33 ரூபாய்; இன்றைய விலைவாசியில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட இந்த தொகை போதாது.
துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலுக்குட்பட்ட கோயில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ஓய்வுக்குப்பின் துறை சார்ந்த ஓய்வூதியம், பொங்கல் கருணைக்கொடை, பி.எப்., உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் உள்ளன.
ஆனால் ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் வேலை பார்ப்பவர்கள், ‘மாற்றாந்தாய் பிள்ளைகள்’ போல் கருதப்படுகின்றனர்.
பணி நிரந்தரமும் செய்யப்படாமல் பணிக்காலத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தேவையான ஊதியமும் கிடைக்காமல் அர்ச்சகர்கள், பூஜாரிகள் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன.
இவர்களது மாத சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணி நிரந்தரம் செய்வதுடன் ஓய்வூதியம், பி.எப்., மற்றும் குடும்ப நல நிதி ஆகிய பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
*****
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆகம விதிகள் மீறப்படுகிறதா ?
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் ஆகமவிதிகளுக்கு முரணாக தரிசன நேரம் நீட்டிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இக்கோயிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. திருவிழா காலங்கள், சபரிமலை சீசன், தொடர் விடுமுறை போன்ற சமயங்களில் பல மணி நேரம் காத்திருந்து தரிசிக்கும் வகையில் கூட்டம் இருக்கும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ‘நடை அடைக்கப்பட்டு விட்டது’ என்றுக்கூறி தரிசன டிக்கெட் தராமல் ஆகமவிதிகளை காத்து இருந்தனர்.
ஆனால் சமீபகாலமாக கூட்டத்தை சமாளிக்கவும், பக்தர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் ஆகமவிதிகளை மீறி நடைசாத்தப்படாமல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பட்டர்கள் சிலர் கூறியதாவது: ஆகமவிதிப்படி உச்சிக்கால பூஜை முடிந்து மதியம் 12:30 மணிக்கு நடைசாத்த வேண்டும். மீண்டும் மாலை 4:00 மணியளவில் சாயரட்சை பூஜையின்போது நடைதிறக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசன டிக்கெட் அதிகமாக வழங்குவதால் சில சமயம் மதியம் உச்சிக்கால பூஜை முடிந்து 3:00 மணி அல்லது 3:30 மணி வரை நடை திறந்து வைக்கப்படுகிறது.
இதை ‘பூத காலம்’ என்பர். இந்நேரத்தில் பூஜையும், பக்தர்கள் தரிசனமும் செய்யக்கூடாது. செய்தால் அதற்குரிய பலன் கிடைக்காது. ஆனால் இரவு நடைசாத்த 11:30 மணியாகி விடுகிறது. என்று பட்டர்கள் கூறினார்கள்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து லதா யோகேஷ வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 31- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-8-25அன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை
பிள்ளையார்பட்டி
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
அடி அமர்ந்து கொள்வாய் நெஞ்சமே!, அப்பம் இடி அவலொடு எள்ளுண்டை கன்னல் – வடிசுவையில்
தாழ்வானை, ஆழ்வானைத், தன்னடியார் உள்ளத்தே
வாழ்வானை, வாழ்த்தியே வாழ்!
கபிலதேவ நாயனார் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி திருத்தலமாகும்.
இந்தத் தலம் காரைக்குடி நகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குன்றக்குடி முருகன் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மூலவர் : கற்பக விநாயகர்
தல விருட்சம் : மருத மரம்
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் கோவில் இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடையப் பெற்று அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் அமைப்பு பல்லவர் கால குடைவரைக் கோவிலை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பிள்ளையார் பட்டி விநாயகர் சிற்பம் தான் தமிழ்நாட்டின் முதல் பிள்ளையார் என்று கூறுகின்றனர்.
இக்கோவிலில் பத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ஒரு கல்வெட்டுத் தகவலின் படி ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்ற சிற்பியால் பிள்ளையார் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிகிறது.
கல்வெட்டுக்களீல் தேசி விநாயகர் என்று இந்த விநாயகரின் திருநாமம் குறிக்கப்பட்டுள்ளது. ஒளிமிக்க விநாயகர் என்பது இதன் பொருள்.
இது இரு பகுதிகளாக அமைந்திருக்கிறாது, ஒரு பகுதி குடைவரைக் கோவிலாகவும் இன்னொரு பகுதி கற்றளி எனவும் அமைந்துள்ளது.
இத்தலத்திற்கு எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, கணேசபுரம் உள்ளிட்ட பல பெயர்கள் வழங்கி வந்துள்ளன.
ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகர் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருப்பதால், பிரகார வலம் இங்கு கிடையாது.
பிள்ளையார் வடக்கு நோக்கி காட்சி தருகிறார். அவரது தும்பிக்கை வலது புறமாகச் சுழித்து வலம்புரி விநாயகராக உள்ளார். அதிலும் வடக்கு நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் ஒருவரே என்பது தனிச்சிறப்பாகும்.
ஒன்பது நவக்கிரகங்களும் கற்பக விநாயகரைச் சுற்றி ஒன்பது
தூண்டா மணிவிளக்குகளாக அமைந்திருந்து சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கின்றன.
இங்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ள மகாலிங்கம் திருவீசர் எனப்படுகிறார். இவருக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு.வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.
இங்கிருந்து சற்று தூரத்தில் மருதீசர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
கர்பக்ருஹத்தில் வட்ட வடிவமாக உள்ள ஆவுடையாரின் மீது லிங்க வடிவில் மருதீசர் காட்சி அளிக்கிறார்.
கோவிலின் மேல் சுற்றுப் பிரகாரத்தில் வடகிழக்குப் பகுதியில் தெற்கு நோக்கி வாடாமலர் மங்கை காட்சி தருகிறார். பத்ம பீடத்தில் இரு கைகளுடன் நின்ற கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.
வடக்கு கோபுர வாயிலில் சிவகாமி அம்மன் சந்நிதியும் மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராஜர் சபையும் உள்ளது.
பிள்ளையார் பட்டி கோவிலின் கோபுரத்திற்கு எதிரே விசாலமாக திருக்குளம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு சதுர்த்தியின் போது விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வருகிறார்.
இந்தக் கோவில் நகரத்தார்களால், மிகச் சிறப்பாக, ஆகம முறை தவறாது, நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோவிலின் சுத்தம் அனைவராலும் பாராட்டப்படும் ஒன்று.
கோவிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் அமைந்துள்லது. கற்கப விநாயகர் சந்நிதியின் முன்பாக உள்ள கோபுரம் மூன்று நிலைகளுடன் அமைந்துள்ளது.
கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா பத்து நாட்களுக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பத்தாம் நாள் தீர்த்தவாரி உற்சவம் நிகழ்கிறது.
விநாயக சதுர்த்தியன்று 18 படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்படுகிறது.
கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரைத் திருநாளன்று சிவகாம சுந்தரி சமேதராக நடராஜப் பெருமான் திருவீதி வலம் வருதலும் மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன.
இங்குள்ள ஒரு விநாயகரின் ஓவியம் நாம் எங்கு நின்றாலும் நம்மையே நோக்குவது போல உள்ள விழிகளோடு அமைந்திருக்கிறது.
தென்னகத்தில் உள்ள நான்கு அர்ஜுன வனத் தலங்களில் இதுவும் ஒன்று. ஏனைய தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவுடை மருதூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஶ்ரீ சைலம் ஆகிய தலங்களாகும்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கல்வி சிறக்கவும் வாழ்வு வளம் பெறவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இங்குள்ள மலைப்பாறையில் அரசமரமும் வேப்பமரமும் இணைந்து ஒன்றாக வளர்ந்துள்ளன. அரசமரத்தில் மஞ்சள் கயிறு, தொட்டில் ஆகியவற்றைக் கட்டி வைத்து வழிபாடு செய்து பிள்ளைப்பேறு அடைகின்றனர் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள்.
மண்ணுலகத்தினில் பிறவி மாசற
எண்ணிய பொருள் எலாம் எளிதின் முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்!
காலம் காலமாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் கற்பக விநாயகர் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். நன்றி. வணக்கம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
மாற்று மருத்துவம்!
ரெய்கி : உலகளாவிய ஆற்றல் மூலம் தரப்படும் சிகிச்சை முறை!
ச. நாகராஜன்
ரெய்கி என்பது ஒரு ஜப்பானிய வார்த்தை.
இதற்கு உள்ளார்ந்த அர்த்தங்கள் நிறைய உண்டு.
ரெய் என்றால் ஆன்மா என்பதில் ஆரம்பித்துப் பல அர்த்தங்கள் உண்டு. கி என்றால் வலிமையான ஆற்றல் என்ற பொருளில் ஆரம்பித்துப் பல அர்த்தங்கள் உண்டு. ரெய்கி என்றால் மர்மச் சூழல் என்றும் அற்புத அடையாளம் என்றும் கூறுவர். சுருக்கமாகச் சொல்லப் போனால் உலகளாவிய ஆற்றல் வாய்ந்த ஒரு சக்தியைப் பயன்படுத்தி அனைத்து விதமான நோய்களையும் குணமாக்கும் ஒரு சிகிச்சை முறை என்று ரெய்கிக்கான திரண்ட அர்த்தமாகக் கொள்ளலாம்.
இந்த ரெய்கியைக் கண்டுபிடித்தவர் மிக்காவோ உசுய் என்பவர். (பிறப்பு 1865, ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மறைவு: 1926, மார்ச் மாதம் 9ம் தேதி)
மவுண்ட் குராமா என்ற மலை உச்சியில் தியானத்தில் ஆழ்ந்திருந்த மிக்காவோவுக்கு இருபத்தியோராம் நாள் ஒரு அசாதாரணமான ஆற்றல் தலைக்கு மேல் வந்தது. இதை அவர் உணர்ந்து தனது ரெய்கி முறையைக் கண்டுபிடித்தார்.
உடல், உள்ளம் மற்றும் உணர்ச்சி சார்ந்த நோய்களுக்கு ரெய்கி சிகிச்சை முறை நல்ல பலனைத் தருகிறது. மிக்காவோ தனது வாழ்நாளில் இதை இரண்டாயிரம் பேருக்குக் கற்பித்தார். இவர்களில் பதினாறு பேர்கள் மாஸ்டர் என்ற உயரிய நிலையை அடைந்தனர்.
இந்த ரெய்கி சிகிச்சை முறையில் நிபுணரான மாஸ்டர் இரு விதமாக தனது சிகிச்சை முறையைச் செய்வார். ஒன்று எவர் இந்த சிகிச்சைக்கு உட்படுகிறாரோ அவரை படுத்துக் கொள்ளச் சொல்வார். அவரது உடலைத் தேவையான் அங்கங்களில் தன் உள்ளங்கையை வைத்துத் தடவி தன் ஆற்றலைப் பயன்படுத்துவார்.
அல்லது சிகிச்சைக்கு உட்படுபவரைத் தொடாமலேயே உடலுக்கு மேலே இருந்து உள்ளங்கை மூலமாகத் தன் ஆற்றலைப் பிரயோகிப்பார்.
இந்த சிகிச்சை முறையால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது இந்த சிகிச்சை முறையை அனைவரும் நாடுவதற்கான ஒரு நல்ல காரணமாகும்.
அறிவியல் ரீதியாக இந்த சிகிச்சை முறையை ஆராய்ந்து பார்த்ததில் இதன் பயனை அறிவியல் சோதனைகள் நிரூபிக்க முடியவில்லை.
ஆனாலும் உலகெங்கும் 800 பிரபலமான மருத்துவமனைகளில் இந்த முறை கையாளப்படுகிறது! அமெரிக்காவில் மட்டும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரெய்கியை மேற்கொள்கிறார்கள் என்பது வியப்பூட்டும் ஒரு உண்மை.
தூக்கமில்லாமல் இரவில் தவித்தல், தலைவலி, வயிற்றுவலி, சுளுக்கு, விளையாட்டுகளில் ஏற்படும் காயங்கள், மனச்சோர்வு உள்ளிட்டவை இந்த ரெய்கி சிகிச்சையை மேற்கொண்டவுடன் போய் விடுகிறது.
இன்னும் நாட்பட்ட டயபடீஸ் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளையும் ரெய்கி தீர்க்கிறது.
ரெய்கியின் பயன்கள் என்ன?
உடல் ரீதியாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடல் வலிமை கூடுகிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சீக்கிரமே தமது பழைய வலுவைப் பெறுகின்றனர். வலியை உடனடியாகத் தீர்க்கிறது. வயது ஆவதால் வரும் ஆற்றல் குறைவைப் போக்குகிறது.
உளவியல் ரீதியாக மனச்சோர்வை நீக்குகிறது. விடாப்பிடியாக நீடிக்கும் தவறான பழக்கங்களைப் போக்குகிறது. கூரிய புத்தியையும் தெளிவான மனத்தையும் உறுதிப்படுத்துகிறது. ஆழ்மன சக்தியை ஊக்குவித்து வெளிப்படுத்துகிறது.
உணர்வு ரீதியாக மனதையும் மனம் சார்ந்த உணர்ச்சிகளையும் சமனப்படுத்துகிறது. மன அமைதி ஏற்படுகிறது. மனநிலை மாறுபாடுகள் ஏற்படாமல் கவலை, ஏமாற்றம் உள்ளிட்டவை போய் அனைவரும் விரும்பும் ஒரு ஆளுமையைத் தருகிறது.
கர்ம வினைகளைப் போக்கி ஆன்மீகத்தில் உயர்நிலையை ஏற்படுத்துகிறது.
ஒரே ஒரு எச்சரிக்கை: இதை நல்ல ஒரு தேர்ந்த மாஸ்டரிடம் (நிபுணரிடம்) சென்று சிகிச்சையை எடுக்க வேண்டும். அவரிடமே இதைக் கற்கவும் செய்யலாம்.