Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நேபாளநாட்டில் அற்புத ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு ஒன்று இருக்கிறது அதை சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு என்று அழைப்பர். 1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழியில் கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது இதே காலத்தில் இந்தோனேஷியாவின் போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் பூர்ண வர்மனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் மத்திய ஆசியாவில் பல கல்வெட்டுகளும் வியட்நாமில் இதற்கு முன்னரே ஸ்ரீமாறன் என்ற பாண்டியனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டும் இருக்கின்றன. 1600 ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருத மொழிக் கல்வெட்டு உலகின் பெரும்பகுதியில் இருப்பதால் பல லட்சம் சதுரமைல் பரப்பில் சம்ஸ்க்ருத மொழி அறிவு இருந்தது தெளிவாகிறது; சுமார் இருபது நாடுகளில் அப்போது சம்ஸ்க்ருத மொழி பேசப்பட்டிருக்கிறது அலெக்ஸ்சாண்டர் ஆக்கிரமித்த கிரேக்கப் யிரதேசங்களில் கூட இவ்வளவு கிரேக்கக் கல்வெட்டுகள் கிடையாது!
தென் கிழக்காசியாவில் ஏழு நாடுகளில் மட்டும் 800 கல்வெட்டுகள் கிடைத்து நூலாகவும் வெளிவந்துள்ளதால் கல்வெட்டு இலக்கியத்தில் ஸம்ஸ்க்ருதத்தை மிஞ்சும் மொழி உலகில் இல்லை. தமிழ் மொழியில் 60,000+++ கல்வெட்டுகள் இருப்பது உண்மைதான்; ஆனால் அவை காலத்தால் பிந்தியவை; பெரும்பாலும் கோவிலில் உள்ள இந்து சமயக் கல்வெட்டுகள்தான். ஒரு வரி இரண்டு வரிகளில் உள்ள 30, 40 பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் சுத்தத் தமிழில் இல்லாமல் பிராகிருதம் கலந்த கொச்சை மொழிக் கல்வெட்டுகளாகவே உள்ளன
இதோ சங்கு நாராயண கல்வெட்டில் மஹாராணிக்கும் இளவரசனுக்கும் இடையே நடந்த உரையாடல்:
“அவரது மனைவியோ மாண்புமிகு மஹாராணி ராஜ்யவதீ,
உயரகுலப் பெண்மணி , லெட்சுமி போன்ற அவரது குணநலங்கள் விஷ்ணுவுக்கு (அரசனுக்கு) வாய்த்தது. அவரோ உயிரினும் மேலாக அவளை நேசித்தான்.
அவர் தனது புகழ ஒளியை பூமி முழுதும் பரப்பினார் , பின்னர் இறைவன் உலகத்துக்குச் சென்றுவிட்டார் – அமைதியான பயணம் அது- தேவலோக நந்தவனத்துக்குச் செல்வது போல — ஆயினும் மனைவியோ மூர்ச்சித்து விழுந்து விட்டாள்.
துயரம் எனும் நோய் அவளைப் பீடித்தது – செயலிழந்து போனாள்
கணவனைப் பிரிவதற்கு முன்னர் செயல் வீரர் அவள் ; அல்லும் பகலும் இறைவனுக்குரிய சடங்குகளில் நேரம் செலவிட்ட பெருமகள்!
இப்போது மஹாராணி என்ற இந்த ராஜ்யவதீ,
அவர் விட்டுச் சென்ற ராஜ்யத்துக்கு அதிபதி ,
அவரைப் பின்தொடர்ந்து செல்ல மேலுகத்தின் மீது
சிந்தனையைத் திருப்பினாள்.
மகன் மானதேவனிடம் வந்தாள்; அவன் மாசுமருவற்ற தூய ஒழுக்க சீலன்; சரத் சந்திரகால நிலவு போன்ற முகமுடையோன்; நிலவு போலவே காண்போருக்கு மகிழ்ச்சியும் தந்தோன் .
வார்த்தைகள் தொண்டையை அடைத்தன;பெருமூச்சு எழுந்தது,
கண்ணீர் ததும்பிய முகத்துடன் செப்பினாள்:
“என்னருமை மகனே ! இனி நான் வாழ்வதற்கு இயலாது ;
உனது தந்தை மேலுலகம் சென்றுவிட்டார் ,
என் இனிய மகனே; நாட்டை ஆள்வாயாகுக; நானும் அவர் சென்ற பாதையில் செல்வேன். பொழுது விடிவதற்குள் புறப்படப் போகிறேன் .கணவன் இல்லாதபோது காரிகை வாழ்வது முடியாது . நீண்ட காலம் இணைந்து நடாத்திய இன்பமயமான இல்லற வாழ்வு கானல் நீராகி விட்டது;கனவாகப் போய்விட்டது ;
இதோ போகிறேன் — உறுதியான சொற்களை உதிர்த்தாள்.
மனமுடைந்து போன மகன் பயபக்தியுடன் அவனது தலையைத் தாழ்த்தி அவளது பாத கமலங்களைத் தொட்டான்.
அம்மா உன்னைப் பிரிந்து நான் என்ன சுகம் காணப்போகிறேன் ; பிரிந்த பின்னர் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது ? முதலில் நான் உயிர் துறக்கிறேன் ,அதற்குப் பின்னர்தான் நீ சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்று அவன் புலம்பவும் அவனது தாமரைக் கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் உதிர்ந்தன ;அவையே பறவைகளை பிடிக்க உதவும் வலையாக மாறி அந்தப் பெண்மணியையும் சிக்க வைத்தது; அவள் (பூவுலகில்) தங்கிவிட்டாள்.
(ஷெல்டன் பொல்லாக் என்ற சர்ச்சைக்குரிய அமெரிக்க சம்ஸ்க்ருத அறிஞர் இந்தக் கவிதைக் கல்வெட்டினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்._
இந்தக் கல்வெட்டு நேபாள நாட்டு ராஜ வம்சத்தினரின் ஸம்ஸ்க்ருதப் புலமையைத் தெரிவிப்பதோடு குடும்ப உறவுகளையும் காட்டுகிறது ;பூதப் பாண்டியன் தேவி என்ற மஹாராணி, கணவன் இறந்தபோது தீப்பாய முனைந்தாள்; அறவோர் பலர் தடுத்துப்பார்த்தனர் ; அவள் கேட்கவில்லை அந்தப் பாண்டிய மஹாராணி தீப்பாய்ந்து உயிர்நீத்த செய்தியைப் புறநானூற்றுக்குப் பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன . இப்போது எனக்கு ஒரு கருத்து தோன்றுகிறது; தசரதன் இறந்தபோது அவனது மனைவிகள் உயிர் துறக்கவில்லை; மஹாபாரதத்தில் குந்தி தேவியும் சதி முறையில் தீப்பாய்ந்து இறக்கவில்லை; ஆகையால் மகன்கள் இருந்தால் அவர்களுக்காகத் தாய்மார்கள் உயிர் வாழ்ந்தது தெரிகிறது பூதப் பாண்டியனைத் தீப்பாயாதே என்று சொன்னவர்கள் பட்டியலில் மகன் பற்றிய குறிப்பு இல்லை.
–subham—
Tags- நேபாள கல்வெட்டு, சங்கு நாராயணன் தூண் கல்வெட்டு, சம்ஸ்க்ருத மொழி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
MaduraiV.Santanam, Freedom Fighter and News Editor Dinamani News paper, passed away on the Independence Day 15-8-1998, after the Flag Hoisting ceremony opposite his house in Madurai. A series of articles will appear here in his memory.
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –12
ச. நாகராஜன்
ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்!
V Santanam and Sri Gopalakrishna Bhagavathar
14
சைவ சமயத்தை வளர்க்கும் எல்லா ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் எனது தந்தையாரிடம் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தார்கள். முக்கியமாக திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது வழக்கம்.
இவற்றில் திருமந்திர மாநாடு நடக்கும் போது அதைத் துவக்கி வைத்தும் சொற்பொழிவு ஆற்றியும் வருவது எனது தந்தையாரின் வழக்கம்.
அவரது உரைகள் திருமந்திர மாநாட்டு மலரில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நானும் எனது தந்தையுடன் கூடவே செல்வேன். அந்தக் காலத்தில் ரயில் பயணம் மிக மெதுவாக இருக்கும். ஒரு பை, ஒரு கூஜாவில் தண்ணீர், ஒரு பெட்ஷீட், தலையணை ஆகியவற்றுடன் பயணம் சொகுசாக இருக்கும்.
ஆதீனங்களில் மிக நல்ல வரவேற்பு கிடைக்கும்.
நிறைய புத்தகங்களை எனது தந்தையார் வாங்குவது வழக்கம்.
அது இன்றளவும் எங்கள் வீட்டின் புத்தக அலமாரியில் சிறந்த பொக்கிஷங்களாக உள்ளன.
15
மதுரை ஆதீன கர்த்தர் ஶ்ரீ சோமசுந்தர தேசிகர் சைவ சித்தாந்த விளக்கத்தில் தேர்ந்தவர். மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் கூட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அவர் எனது தந்தையாருக்குச் சிறந்த பட்டம் அளித்து கௌரவித்தார்.
அவருடனான எனது தொடர்பு வெகுவாக வலுப்பட்டது.
யாரையும் உணவருந்தும் போது அவர் அனுமதிப்பதில்லை. ஆனால் அவர் என்னை வரச்சொல்லி நீ எல்லாம் வரலாம் என்றார். அப்படி ஒரு கருணை. அவரை சேலத்தில் நடந்த ஹிந்து ஆலயப் பாதுகாப்பு மாநாடு விஷயமாக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அந்த மாபெரும் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
என்னை கவலூரிலிருந்த நாடி ஜோசியருக்கு அவர் மடத்திற்கு வந்த போது அறிமுகப்படுத்தி என்னை அவரைப் பார்க்குமாறும் அறிவுறுத்தினார்.
விருதுநகர் அருகே உள்ள கவலூருக்குச் சென்றேன். ஒரே கூட்டம்.
ஆனால் நாடி ஜோதிடர் என்னைக் கண்டவுடன் அருகில் அழைத்து எனது முன் ஜென்மம் உள்ளிட்ட பல அரிய விஷயங்களைக் கூறி கடுக்காய் மையில் எழுதியும் தந்தார்.
‘அன்னை அணிவிரல் மோதிரம் மால் உறங்கும் பஞ்சணை அரசன் என்னும் திருநாமம் – நாகராஜன் – ‘என்று என் பெயரைக் கூறிய அவர் தீர்க்கமாக நான் பிறந்த வருடம் மற்றும் முன் ஜென்மம் பற்றி விரிவாகக் கூறினார். இது அதிசயமாக இருந்தது.
மதுரை ஆதீனகர்த்தரிடம் சென்று என் நன்றியைத் தெரிவித்தேன்.
அவர் இறந்தவர்களுடன் பேசும் பிளாஞ்செட் பேப்பரையும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எங்களுக்கும் அதில் ஆர்வம் பிறக்கவே மிகத் தீவிரமாக அதில் ஈடுபடலானோம்.
தினமும் இறந்த ஒருவரிடம் பேசலானோம். நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு.
இரண்டை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
ஒரு முறை என் தாயாரின் தந்தையாரை – எனது தாத்தாவை அழைத்தோம். ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொன்ன போது அவர், “அசட்டு பிசட்டுன்னு பேசாதே” என்றார்
இதைக் கேட்ட எனது தாயார் இது என் அப்பா வழக்கமாகச் சொல்லும் வார்த்தை” என்று குறிப்பிட்டார். எங்கள் அனைவருக்கும் இந்த வார்த்தையே தெரியாது. ஆக வந்தவர் எனது தாத்தாவே என்பது தெரிந்தது.
இன்னொரு சம்பவம்.
எனது தந்தையாரின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். தீவிர கம்யூனிஸ்ட். பல நூல்களை எழுதி இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அவர் வீட்டில் விளையாடப் போவோம் அடிக்கடி.
ஒரு நாள் அவர் வீட்டு வாசலில் நின்று எங்களை அழைத்திருக்கிறார்.
நாங்கள் உள்ளே வாசலே தெரியாத ஒரு இடத்தில் இருந்து பிளாஞ்செட்டில் பேசிக் கொண்டிருந்தோம்.
திடீரென ஒரு செய்தி வந்தது பிளாஞ்செட்டில்.
“வாசலில் எஸ்.ஆர். கே நிற்கிறார் பார். அவரை உள்ளே வரச் சொல்” எஸ். ஆர். கே என்பது எஸ்.ராமகிருஷ்ணனை சுருக்கமாக உலகம் அழைக்கும் விதம்.
ஆச்சரியப்பட்ட நாங்கள் வாசலுக்கு விரைந்தோம். அவர் நின்று கொண்டிருந்தார்.
:என்னடா செய்றீங்க” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தார்.
நாங்கள், “இதோ பாருங்கள் பிளாஞ்செட். நீங்கள் வருவதைக் கூட இப்போது இதில் தான் செய்தி வந்தது” என்று வியப்புடன் கூவினோம்.
“இதெல்லாம் வைக்கக் கூடாதுடா” என்று அவர் எங்களிடம் கூற பிளாஞ்செட்டில் செய்தி வந்தது.
“முதலில் அவரை வணக்கம் சொல்லச் சொல்”
இதைப் பார்த்த அவர் வெளியே சென்று விட்டார். அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை.
இப்படி ஏராளமான அனுபவங்கள்.
மதுரை ஆதீனம் சிறந்த பேச்சாளர். நுணுக்கமான தெய்வீக தத்துவங்களை காலத்திற்கேற்றபடி விளக்குபவர். அவரது பேச்சுக்கள் தினமணியில் வெளியாகும். தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவரது மடத்திற்கு அடிக்கடி போவது வழக்கமானது.
V Santanam Speaking; P T Rajan is also in the picture.
16
ஆவியுடன் பேசிய அனுபவத்தைக் கூறும் போது இன்னொரு சம்பவத்தின் நினைவும் வருகிறது.
மதுரையில் தெற்கு ஆடி வீதியில் முதலில் உள்ள சபை திருப்புகழ் சபை, இதைத் திறம்பட நிர்வகித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தியவர் திருப்புகழ் தியாகராஜன். இவர் தந்தையாரின் மிக் மிக நெருங்கிய நண்பர்.
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவை இவரே ஏற்பாடு செய்வார். பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரள் திருப்புகழ் சபை மண்டபத்தில் ஆடி வீதியில் கூடும். பல நிகழ்ச்சிகளுக்கு என் தந்தையார் தலைமை வகித்திருக்கிறார்.
வாரியார் சுவாமிகள் தந்தைக்கு நெருக்கமானவர். அவரது நீண்ட சொற்பொழிவுகளும் தினமணியில் தவறாது இடம் பெறும்.
வாரந்தோறும் தவறாமல் வெள்ளிக்கிழமை அன்று திருப்புகழ் சபையில் திருப்புகழ் பஜனை மிக மிக அருமையாக நடைபெறும் இதில் தவறாது எனது தந்தை, தாய், சகோதரர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
நிறக, ஒரு சோகமான சம்பவம் நடந்தது. திருப்புகழ் தியாகராஜனின் மூத்த குமாரர் – வயதில் இளைஞர் திடீரென மரணமடைந்தார்.
இதை அவரால் தாஙகவே முடியவில்லை.
அவரது துக்கத்தைத் தணிக்க யாராலும் முடியவில்லை.
இரவு சுமார் ஒன்பது மணிக்கு கோபாலகொத்தன் தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு அடிக்கடி செல்வது என் தந்தையாரின் வழக்கம். அவருக்கு ஆறுதல் கூறச் சென்ற போது இந்த பிளாஞ்செட் அனுபவம் அவருக்குத் தெரிய வரவே தனது மகனுடன் அவர் பேசலானார். இதனால் அவருக்குப் பெரிய் ஆறுதல் கிடைத்தது.
எனது தந்தையுடன் நானும் சென்றதனால் இதைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
நீண்ட காலம் திருப்புகழ் பாடுவதிலும் அதைப் பரப்புவதிலும் ஈடுபட்ட நல்லவர் திருப்புகழ் தியாகராஜன்.
பின்காலத்தில் ஆவிகளுடன் அதிகத் தொடர்பு கூடாது என்று பல பெரியோர்களும் கூறவே நாங்கள் பேசுவதை விட்டு விட்டோம்.
அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடரின் ஒரு பாகத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்றே எண்ணுகிறேன்.
ஓரிரு கட்டுரை எழுதப் போய் இப்போது 12 கட்டுரைகள் ஆகி விட்டன.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Before going into my Tamil translation let us look at the English translation of Sheldon Pollock ; He is a controversial American Sanskrit scholar born in 1948; his outbursts against the ruling BJP and Hindutva politics during his tenure with Colombia university landed him in a big controversy; Other scholars like Rajiv Malhotra rebutted his accusations.
Poetry from Inscriptions (from A Treasury of Sanskrit Poetry by A N D Haksar)
The Mandasor Epigraph (436 CE) in Sanskrit
The Weavers of Lata
…in the Land of Laata, the tress bend
Under the weight of heir flowers
There are beautiful temples, royal halls, holy monasteries;
But the world-famous craftsmen of Laata
Left the land of theirs and its wooded mountains.
Attracted by the good king of this region.
Despite the hardships of the journey,
They came with great hopes to Dasapura—at first
Ony in their daydreams, and then with children and kin.
They formed close associations
With their neighbours; day by day friendship grew.
The kings treated them as their own sons
And they lived happily in Dasapura.
A girl can be young and pretty
Gold at neck, flowers in her hair and
Etel in her mouth-yet the real beauty only comes
When she puts on her pair of silks.
And makes the silk that adorns
The land far and wide-soft silk,
With a riot of colours, a true delight to see?
These craftsmen from Laata.
Yet knowing that the life of man and wealth
However vast, are far more fragile,
Than a petal blown from the ear of forest spirit
They made a firm and good decision.
While King Kumara Gupta was ruling the Earth
And Bandhuvarman was the Lord
Protecting the rich town of Dasapura.
With the wealth acquired from their craft
The guild of slik weavers would have a temple built
A noble temple like no other, in honour of the blazing Sun
In the year four hundred ninety three
From the founding of the Malawa tribe
During the time of the year
When clouds begin to rumble
In the month of Sahasya, in the white fortnight
The lucky thirtent day, this place was opened, with hymns of praise.
As long as Lord Siva bears his high pile
Of matted yellow hair and pure crescent moon within;
As long as the bright lotus garland hangs
At Vishnu’s shoulder, this noble house will last.
By order of the guild and with true devotion
Thie House of the Sun (temple) was built;
And with great care the above was composed
By Vatsabhatti.
–translated from Sanskrit by Sheldon Pollock
*****
Mandsaur Inscription of Kumaragupta (in Madya Pradesh)
It was written by Vatsabhatta during the period of Kumaragupta (5th century).
The starting of the inscription praises the sun god and asks for his blessings.
The Mandsaur inscription refers to Kumara Gupta ‘reginging over the whole earth’ (kumaragupte prithvim prasasti).
It mentions about many silk weavers migrating from Lata (Gujarat) to Dasapura.
Some took up other occupations, while those who kept to their original craft formed a guild.
Tantuvaya was the name given to the guild mentioned in Kumargupta’s Mandsore inscription.
During his reign, the guild of silk-weavers built a temple dedicated to Surya in Dashapura in the Malava Samvat (436 CE). The same guild repaired this temple in 473 CE.
மாண்டசூர் என்னும் ஊர் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது . அங்கு குமார குப்தனின் (436 CE) கல்வெட்டு இருக்கிறது அவர் 1600 ஆண்டுகளுக்கு முன்னர். ஆட்சி செய்த மாபெரும் மன்னர். அவரது ஆட்சிக் காலத்தில் வத்ஸப்பட்டி என்பவர் சம்ஸ்க்ருத மொழியில் கவிதை நடையில் எழுதிய அழகான கல்வெட்டுப் பாடல் இரண்டு முக்கிய செய்திகளைத் தெரிவிக்கிறது
1.சூரியன் கோவில் கட்டப்பட்ட செய்தி.
2.நெசவாளர்களின் சங்கம்.
இதோ கல்வெட்டின் சாரம் :
குஜராத்தில் உள்ள லாட தேசத்திலிருந்து மத்தியப்பிரதேசத்தில் வந்து குடியமர்ந்த நெசவாளர்கள் சொல்கிறார்கள் ,
எங்கள் லாட தேசத்தில் பூக்களின் சுமை தாங்காமல் மரங்கள்
தலை வணங்கி நிற்கின்றன
அழகான கோவில்களும் அரண்மனை மண்டபங்களும் புனிதமான மடங்களும் அங்கே உண்டு.
ஆயினும் உலகப்புகழ்பெற்ற லாட நாட்டுப் பட்டுத்துணி நெசவாளர்கள் (நாங்கள்)
காடுகள் சூழ்ந்த மலைகளையும் , சொந்த நாட்டையும் விட்டு இங்கே வந்தோம் .
இந்த நாட்டு நல்ல அரசன் எங்களை ஈர்த்தான் ; எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து தாசபுரத்துக்கு
பெரும் நம்பிக்கையுடன் வந்தோம்.
முதலில் கனவாக இருந்த விஷயம் பின்னால் பிள்ளைக்குட்டிகளுடன் புறப்படும் விஷயம் ஆனது.
அங்குள்ள மக்களுடன் நெசவாளர்கள் நெருங்கிய தொடர்பு வைத்ததால் நாளுக்கு நாள் நட்புறவு ஓங்கியது ;
மன்னர்களோ தங்களுடைய சொந்தக் குழந்தையைப்போல
மக்களை நடத்தினார்கள்; எல்லோருக்கும் இடையறாது இன்பமே கிட்டியது.
ஒரு பெண் அழகாகப் பிறக்கலாம் ,
தலையில் பூச்சுடலாம்,கழுத்தில் தங்க நகை அணியலாம் ;
வாயில் வெற்றிலை மணக்கலாம் — ஆயினும் எப்போது உண்மை அழகு வருகிறது என்றால் ….
அவள் உடல் மீது இரண்டு பட்டுத்துணிகளைப் போர்த்தும் போதுதான் !
நீண்ட நெடு நிலப்பரப்பு கொண்ட நாடு முழுவதற்கும் அழகூட்டும் பட்டுத்துணிகளை யார் நெய்கிறார்கள் ?
மனிதனின் வாழக்கையும் செல்வமும் எவ்வளவு அதிகம் இருந்தாலும், அவை எல்லாம் கானக தேவதையின் காதிலிருந்து பறந்து வந்த ஒரு மலரின் இதழ் போல
அழியக்கூடியதே என்பதை அறிந்தும் அவர்கள் ஒரு நல்ல முடிவு எடுத்தனர்.
குமாரகுப்தன் ஆளும் நாட்டில் , தாசபுரம் என்னும் செல்வமிகு நகரினை பந்துவர்மன் ஆளும் நாளில்
வெசவாளர் வணிகக்குழுவினரின் தொழில் மூலம் கிடைத்த
பணத்தைக்கொண்டு வேறெங்க்கும் இல்லாத அளவுக்கு ஒரு ஒப்பற்ற கோவிலை — ஒளிதரும் சூரிய தேவனுக்கு – எழுப்ப வேண்டும் என்று!
மாளவவம்சம் தோன்றியது முதல் நாநூற்று தொன்நூற்று மூன்று அந்த ஆண்டு
அப்போது சஹஸ்ய மாதத்தில் மேகங்கள் முழங்கத்துவங்கின ; அது சுக்கில பக்ஷத் திரயோதசி நாள்
அதாவது அதிர்ஷ்டமிக்க பதின்மூன்றாவது நாள் ;
துதிகள் முழங்க இந்தக் கோவில் திறக்கப்பட்டது .
சிவ பெருமானின் செஞ்சடை மேல் பிறைச் சந்திரன் ஒளிரும்வரை ,
விஷ்ணு மூர்த்தியின் தோள்களில் தாமரை மலர்மாலை அலங்கரிக்கும் வரை
இந்தப் புனித இடம்/ கோவில் வாழும்
நெசவாளர்களின் வணிகச் சங்கம் எடுத்த முடிவின்பேரில் பக்தியுடன் எழுப்பப்பட்டது சூரியனார் கோவில் ;
இதை மிகக்கவனத்துடன் பாடலாக வடிக்கிறேன் அடியேன் வத்ஸபட்டி
–வத்ஸப்பட்டி
எவ்வளவு அருமையான பாடல் ! கவிதையின் ஒவ்வொரு வரியும் ஒரு தகவலைத் தருகிறது; கவி காளிதாசனின் செல்வாக்கினைப் பாடலில் காணலாம்.
ஆதி சங்கரர் ஆறு சமயத்தை வகுத்துக்கொடுத்து அசிங்கமான இந்து சமயப்பிரிவுகளுக்குச் சாவுமணி அடித்தார் ; அவர் வகுத்த காணாபத்யம் என்னும் பிள்ளையார் வழிபாடு , கெளமாரம் என்னும் முருகன்வழிபாடு, சாக்தம் என்னும் சக்தி வழிபாடு, சைவம் என்னும் சிவன் வழிபாடு, வைணவம் என்னும் விஷ்ணு வழிபாடு, செளரம் எனப்படும் சூரியன் வழிபாடு ஆகிய ஆறு பிரிவுகளில் கடைசி மூன்றும் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. நெசவாளர் ஜாதியினரும் இந்து க்கடவுளரைப் போற்றி வணங்கியதையும் வத்ஸபட்டி கூறுகிறார். தலையில் பூச் சூடும் வழக்கம் வெற்றிலைப் பாக்கு என்னும் தாம்பூல வழக்கம் ஆகியவற்றோடும் பெண்கள் பட்டுத்துணிகள் இரண்டு அணியும் வழக்கம் , நெசவாளர்கள் சங்கம் அமைத்த செய்தி, குஜராத் மாநிலத்திலிருந்து மத்தியப்பிரதேசத்துக்கு குடியேறிய செய்தி, கோவில்கள் என்று ஏராளமான தகவலைத் தருகிறது வத்ஸபட்டியின் கவிதைக் கல்வெட்டு .
ஆங்கில மொழியில் இந்தக் கல்வெட்டினை சர்ச்சைக்குரிய , அமெரிக்க சம்ஸ்க்ருத அறிஞர் ஷெல்டன் போலாக், அருமையாக மொழிபெயர்த்துள்ளார் ; அவர் இந்துத்துவாவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு பாரதீய ஜனதாக்கட்சியைச் சாடியதால் சர்ச்சைக்குள்ளானார் அவருக்கு ராஜீவ் மல்ஹோத்ரா போன்றோர் பதிலடி கொடுத்தனர்.
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .
****
Prayer -Mrs. Jayanthi Sundar Team – MS NISHKATA SATTANATHAN, ANTVERP, BELGIUM.
***
NEWS BULETIN
Vaishnavi Anand and Latha Yogesh from London presented World Hindu News in Tamil
****
Mrs. Chitra Nagarajan spoke on – DHARMAPURAM Temple
****
PROFESSOR S SURYANARAYANAN SPOKE ON THE MISUNDERSTOOD TAMIL PROVERBS.
****
SPECIAL EVENT-
Talk by Mr N .GANESH RAAJA PRESENTED HIS
HISTORICAL RESEARCH.
Ganesh Raaja. N hails from Tamil Nadu. He completed his engineering in 2003 and has more than twenty years of experience in the software industry.
He was attracted towards ‘History of India’ after noticing a defaming article in an Indian magazine. He has spent more than eight years researching on this subject. He has read vast number of books related to ancient Sanskrit literature, ancient Tamil literature, scientific evolution etc. written by eminent Indian and foreign scholars.
Each book he referred to catered to a specific aspect of Indian life. After understanding them, a natural interest arose in him to reconcile and chronologically arrange them in a ‘holistic’ and ‘interesting’ way. This is a first attempt at narrating India’s story ‘as-it-happened’.
The result is the book, titled, “The Jambū Island”. This book chronologically organizes the Rishis, kings, literaryevolution, people’slives, and scientificprogress based on Sanskrit and Tamil literature. It aims to eliminatemyths, interpolations, and exaggerations. It strives to present the story in a logical and captivatingnarrative, with many pictures.
This book covers the period from roughly 6000 BCE to 3138 BCE, narrating significant events including the rendering of the Vedicmantras by the Rishis, the Aryan clan split towards Iran resulting in the formation of the Zōrōastrians, the atrocities and defeat of the Haihaya clan, fusion of Nāgās and other native tribes into the Vedic religion, Āryancolonization of SouthIndia, and the Bharata battle at Kurukshetra.
Post launching his book, Ganesh has started an Youtube channel in Tamil to share his learnings. The goal of this channel to spread awareness about the greatness of our country and Hindu religion, to create a counter-narrative to the popular Dravidian ideology of Tamil Nadu.
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 17-8-2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
***
இறைவணக்கம் – திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர் NISHKALA SATTANATHAN, BELGIUM
****
உலக இந்துமத செய்தி மடல்-
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.
***
ஆலயம் அறிவோம் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் —
சொற்பொழிவு– தலைப்பு- தர்மபுரம் கோவில்
****
பேராசிரியர் எஸ். சூர்யாநாராயணன், சொற்பொழிவு–
(முன்னாள் கல்லூரி பிரின்சிபால்)
தலைப்பு : உருமாறிய பழமொழிகளின் உண்மைப் பொருள்
****
இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:
சொற்பொழிவு –கணேஷ் ராஜா அவர்களின் வரலாற்று ஆராய்ச்சி உரை.
என்.கணேஷ் ராஜா , பொறியியல் பட்டதாரி , வரலாற்றில் ஆராய்ச்சி செய்து ஜம்புத்வீப உண்மை வரலாற்றினை கால வரிசைப்படி நூலாக எழுதியவர்; திலகர் முதலானோர் பற்றி யூ டியூப் வீடியோ தயாரித்தவர் . அவரது வரலாற்று ஆராய்ச்சியை இன்றைய சொற்பொழிவில் விளக்குவார் .
****
Anchored by London Swaminathan from London and Kalyanji from India.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் (17 -8-2025) உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 17-ம் தேதி 2025-ம் ஆண்டு .
****
முதலில் தேசியச் செய்திகள்
ஃபாஸ்டேக் FAST TAG இல்லாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் வாகனங்களுக்கு 15-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் (FASTTag) கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தெரிவித்துள்ளது.
ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்கள் திருமலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்டேக் இல்லையென்றால், அலிகிரி சோதனைச் சாவடியில் உள்ள வசதியைப் பயன்படுத்தி அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் அனுமதிக்க திட்டம்
வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, எதிர்காலத்தில் திருமலைக்குள் எலக்ட்ரிக் வாகனங்களை (EV) மட்டுமே அனுமதிக்கவும் தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
****
சபரிமலை பக்தர்கள் யாத்திரை: இலங்கை அரசு புதிய முடிவு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, தங்கள் நாட்டு பக்தர்கள் செல்வதை புனித யாத்திரையாக அங்கீகரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை விழா நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும். அதன் பிறகு, ஜனவரியில் முடிவடையும் மகரவிளக்கு யாத்திரைக்காக கோவில் திறக்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.
இதை சிறப்பிக்கும் வகையில், இலங்கையின் அதிபராகியுள்ள அனுரா திசநாயகேவின் அமைச்சரவை, ஒரு முக்கிய முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.:
நீண்ட காலமாக, கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள், சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்த அடிப்படையில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் யாத்திரையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால கலாசார மற்றும் மத பிணைப்பை அங்கீகரிக்கிறது. இனி சபரிமலை யாத்திரை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விழாவாக கருதப்படும்..இவ்வாறு இலங்கை அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
****
அடுத்ததாகத் தமிழ்நாட்டுச் செய்திகள்
‘முருகன் வரலாறு’ என்ற பெயரில் ஸ்டாலின் புகழ்பாடும் நுால் விற்பனை
முருகன் வரலாறு’ என்ற பெயரில், முதல்வர் ஸ்டாலின் புகழ்பாடும் நுால், பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், கடந்த 2024 ஆகஸ்ட் 24, 25ம் தேதிகளில், ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ நடந்தது.
இந்த மாநாட்டில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆற்றிய உரைகள், ஆதீனங்களின் ஆசியுரைகள், வெளிநாட்டினரின் கட்டுரைகள், விருது பெற்றவர்களின் சிறப்புகள், ஆய்வரங்கில் வாசித்ததில் சிறந்த கட்டுரைகள், பேச்சாளர்களின் வாழ்த்துரைகள் போன்றவை அடங்கிய சிறப்பு மலரை, அறநிலையத் துறை தயாரித்துள்ளது.
இதை கடந்த ஜனவரி 4ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். 288 பக்கங்கள் கொண்ட இந்நுாலின் விலை, 2,750 ரூபாய்.
பா.ம.க., தலைவர் அன்பு மணி: பழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்தச் செல்லும் பக்தர்களிடம், ‘முருக பெருமான் வரலாறு’ என்று கூறி, 2,700 ரூபாய் விலை கொண்ட முருகன் மாநாட்டு மலர் கட்டாயமாக விற்பனை செய்யப் படுவதாக, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன என்று கூறியுள்ளார்
ரசீது தரவில்லை
ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார்: ஓசூர் பா.ஜ., நிர்வாகி நாகராஜ், பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய, கடந்த 8ம் தேதி சென்றுள்ளார்.
கோவில் அலுவலகத்தில் சிறப்பு தரிசன டிக்கெட் கேட்ட அவரிடம், 2,750 ரூபாய் கொடுத்து, முருகன் மாநாடு சிறப்பு மலர் வாங்கினால், ஐந்து பேர் சிறப்பு தரிசனம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர் .
அதன்படி புத்தகத்தை வாங்கிய அவருக்கு ரசீது தரவில்லை.
விற்பனையாகாத முருகன் மாநாட்டு புத்தகத்தை கட்டாயப்படுத்தி விற்பது கண்டனத்திற்குரியது. இந்த மலரில் முருகன் புகழ் பாடியதை விட, முதல்வர் ஸ்டாலினைதான் அமைச்சர் சேகர்பாபு அதிகம் புகழ்ந்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
****
அர்ச்சகர்களின் வாரிசுகள் மேற்படிப்புக்கு தலா ரூ.10,000 வழங்கினார் முதல்வர்
:சென்னை: அர்ச்சகர்களின் வாரிசுகள் 600 பேருக்கு, தலா 10,000 ரூபாய் உதவித்தொகையை, முதல்வர் வழங்கினார்.* ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களின் வாரிசுகளுக்கு, மேற்படிப்பு கல்வி உதவித் தொகையாக, 600 பேருக்கு தலா, 10,000 ரூபாய் வீதம், 60 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
****
பழநி கோயிலில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்திய ஜப்பானியர்கள்!
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் ஜப்பானியர்கள், தமிழர் பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்தினர்.
உலக நலன் வேண்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று ஜப்பானியர்கள் வழிபாடு மேற்கொள்ள உள்ளனர். அதன்படி ஜப்பானிலிருந்து வந்த முருக பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழநி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பால்குடம் எடுத்து கிரிவல பாதையில் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பின்னர், திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.
****
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடால் பக்தர்கள் பெரிதளவு பாதிக்கப்படுகின்றனர் என்றும் இதனை வேடிக்கை பார்க்கிறது இந்து சமய அறநிலையத் துறை என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்று வரை இக்கோவிலின் வேலைகள் முழுமை பெறாமல் தற்போதும் நடைபெற்று வருகிறது. தங்களது சுய விளம்பரத்திற்காக எவ்வித வேலைகளையும் முழுமையாக முடிக்காமல் அவசர கதியில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் போல அவசரகதியில் கும்பாபிஷேகத்தை நடத்தியதை சென்னை உயர்நீதிமன்றமும் கடிந்து கருத்து தெரிவித்தை சுட்டிக் காட்டுகிறோம்.
பொது தரிசன வரிசையில் வரும் பக்தர்களையும் மூத்த குடிமக்கள் வரிசையில் வரும் பக்தர்களையும் கோவில் உள்ளே நுழைந்த உடன் ஒரே வரிசையாக இணைத்து அனுப்புகின்றனர். இதனால் கடும் நெரிசல் சிக்கி பக்தர்கள் பலர் மூச்சு திணறலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, கேரள மாநிலத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த பக்தர்களிடம் ஒரு நபர் தரிசனம் செய்வதற்கு 11 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் நான்கு நபர்களுக்கு சுமார் 44 ஆயிரம் ரூபாய் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட காணொளிகளும் அனைத்து செய்தி ஊடகங்களில் வந்து பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது; இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல, அதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே உடந்தையாக இருந்து, முறைகேடாக கட்டணம் வாங்கிக் கொண்டு தரிசனத்துக்கு வரும் பக்தர்களை குறுக்கு வழியில் அனுப்புகின்றனர். இதற்காக தனியாக சில வாட்சப் குரூப் இயங்குவதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது போன்ற முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்தணியிலும் இதுபோல் சம்பவம் நடந்து , பல ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது.
கோவிலில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படாமல் அங்கு வரும் பக்தர்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, பாதுகாப்பு ஏற்பாடுகளை ,உடனடியாக செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசினை இந்து முன்னணி வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
***
கமல் மீது நடவடிக்கை ஏன் இல்லை? ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி
”சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்திய கமல் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைக் கண்டித்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க முனைவதா?” என்று ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.அகரம் அறக்கட்டளை’ விழாவில் பேசிய எம்.பி., கமல், திட்டமிட்ட ரீதியில் சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுவோர் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கமல் மீது பல முறை ஹிந்து முன்னணி புகார் அளித்துள்ளது. கடவுள் ராமரை வைரமுத்து இழிவுபடுத்தியுள்ளார். வரலட்சுமி நோன்பு குறித்து சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன் இழிவாகப் பேசியுள்ளார்.
கடவுள் அய்யப்பன் பற்றி இழிவாகப் பாடிய இசைவாணி, ஹிந்து மத அடையாளங்களை கொச்சைப்படுத்திய பொன்முடி என பட்டியல் நீளுகிறது.
ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், கமலை கண்டித்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை என்ற ஹிந்து விரோத மனப்பான்மையை தி.மு.க., அரசு கைவிட வேண்டும். ரவிச்சந்திரனுக்கு ஹிந்து முன்னணி துணை நிற்கும்.
இவ்வாறு ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
****
ஹிந்து கோவிலில் நாச வேலை; அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்
அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவிலில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த நாச வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் கவுண்டியில் உள்ள ஒரு நகரமான இன்டியானாவின் கிரீன்வுட்டில், ஹிந்து பக்தர்கள் அதிகம் வழிபடும் கோவில்கள் உள்ளன. இப்பகுதியில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள், ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர். ஒரு வருடத்திற்குள் நான்காவது முறையாக, இந்த கோவிலில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு ஆகஸ்ட் மாதம் 24- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
தீர்த்தம் : விஷ்ணு தீர்த்தம், பிரம தீர்த்தம். தர்ம தீர்த்தம். இவை கோவிலின் வடபுறமும் முன்புறமும் உள்ளன;
தல விருட்சம் : வாழை
மார்க்கண்டேயரின் உயிரைப் பறித்த பிழை நீங்குவதற்காக இங்கு யமன் வந்து வழிபட்டான். அதனால் இத்தலம் தருமபுரம் என்ற பெயரைப் பெற்றது.
பஞ்ச பாண்டவர்களின் தருமபுத்திரர் வழிபட்ட தலமாதலால் இது தர்மபுரம் என்ற பெயரைப் பெற்றது என்றும் கூறுவர்.
இத்தலத்தைப் பற்றிய சரித்திர வரலாறு ஒன்று உண்டு.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் இந்தத் தலத்தில் தான் அவதரித்தார். இங்கு ஒரு முறை திருஞானசம்பந்தர் வந்தார். அவருடன் அவரது பதிகங்களை யாழில் பாடி வரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரும் வந்தார். இந்தத் தலம் திருநீலகண்டரின் தாயார் பிறந்த இடமும் ஆகும், திருஞானசம்பந்தர் வந்த போது திருநீலகண்டரின் உறவினர்கள் அனைவரும் அவர் யாழ் வாசிப்பதனால் தான் சம்பந்தரது பாடல்கள் சிறந்து விளங்குகின்றன என்றனர். இதைக் கேட்டு வருத்தமுற்ற திருநீலகண்டர் சம்பந்தரிடம் முறையிட்டார். உடனே சம்பந்தர்,
“மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது ஓர்
நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர்
என்று தொடங்கும் பதிகத்தைப் பாடலானார். இது திருநீலகண்டரின் யாழிசையில் அடங்காமல் போகவே பாணர் யாழையும் உடைக்கச் சென்றார். ஆனால் சம்பந்தர் அவரைத் தடுத்து இயன்ற வரையில் வாசிக்குமாறு கூறினார். இறைவனும் யாழ்மூரிநாதர் என்ற பெயரைப் பெற்றார்.
சுவாமி சந்நிதி முகப்பு வாயிலின். மேலே நடுவில் ரிஷபாரூடர் இருக்க, சம்பந்தர் பாட, நீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் வாசிக்க அவர் மனைவி அருகில் இருக்க, இதைச் சித்தரிக்கும் அருமையான சுதை வேலைப்பாடு உள்ளது.
இன்னொரு புறம் சம்பந்தர், யாழுடன் பாணர், அருகில் அவர் மனைவி இருப்பது போலவும் சுதை வேலைப்பாடு உள்ளது.
இந்தக் கோவில் தருமையாதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் உண்டு. அடுத்து உள்ள் மூன்று நிலை கோபுரத்திற்கு முன் நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன. இதையடுத்து உள்ளே சென்றால் வெளி பிரகாரத்தில் மதுரமின்னம்மை அம்பாள் சந்நிதி உள்ளது. வெளிபிரகார மேற்குச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதியின் முன் மண்டபத் தூணில் துவார விநாயகரும் சுப்ரமண்யரும் காட்சி அளிக்கின்றனர். வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவகிரக சந்நிதி உள்ளது. இரண்டாம் கோபுர வாயிலுக்கு நேரே பதினாறு கால் மண்டபத்தைக் காணலாம். இதை அடுத்து உள்ள கர்பக்ருஹத்தில் யாழ்மூரிநாதர் சிறிய பாணத்துடன் நாகாபரணம் சார்த்தப்பட்டு கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன கணபதி, தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதியை அடுத்து, தக்ஷிணாமூர்த்தி அருகே இரு புறமும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்க முயலகன் மீது காலை ஊன்றியபடி லிங்கோத்பவர் காட்சி தருகிறார். இவருக்கு இருபுறமும் மஹாவிஷ்ணுவும் பிரம்மாவும் உள்ளனர்.
தெற்குப் பிரகாரத்தில் ஶ்ரீ மேதா தட்சிணாமுர்த்தி காட்சி அளிக்கிறார். உற்சவ மூர்த்தியாக ஶ்ரீ யாழ்மூரிநாதரின் திருவுருவம் உள்ளது.
இங்கு கர்பக்ருஹத்தில் சுவாமி எப்போதும் வெள்ளிக் கவசத்துடன் காட்சி அளிக்கிறார்.
இத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் அருளிய ஒரு பதிகம் உள்ளது. வைகாசி மாதத்தில் மூல நட்சத்திர தினத்தன்று சம்பந்தருக்கு இங்கு குருபூஜை நடக்கிறது. அன்று சிவபிரான் வீதி உலா வந்து சம்பந்தருக்குக் காட்சி அளிக்கிறார்.
இங்குள்ள தருமபுர ஆதீனம் சைவ சமயத்தை வளர்க்கும் மடங்களுள் சிறப்பான ஒன்று. இது குரு ஞானசம்பந்தரால் துவங்கப்பட்டது. தர்மபுர ஆதீன பரம்பரையை திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் என்று அழைப்பர். தருமை ஆதீனம் என்று அழைக்கப்படும் இதன் கட்டுப்பாட்டில் 27 கோவில்கள் திறம்பட நிர்வகிக்கப்படுகின்றன.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் யாழ்மூரிநாதரும், தேனமிர்தவல்லி தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புதிய தொடர்!
அதிசய புருஷர் திரு வெ.சந்தானம்! –11
ச. நாகராஜன்
ஶ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாணம்!
12
மதுரையில் எனது தந்தையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர்களுள் ஒருவர் ஶ்ரீ லக்ஷ்மண ஐயர். இவர் ஒரு பெரிய வக்கீல். தந்தையின் நண்பர்; தூரத்து உறவினரும் கூட!
இவரால் எங்கள் குடும்பத்தினருக்கு இரண்டு சிறந்த அறிமுகம் ஏற்பட்டது.
ஒன்று ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் தொடர்பு. இன்னொன்று ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தொடர்பு.
ஒரு நாள் இவர் எங்கள் இல்லத்திற்கு வந்து ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதரின் ராதா கல்யாண நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
இவர் மதுரையில் மிகவும் பிரசித்தமான செல்லத்தம்மன் கோவிலுக்கு எதிரில் இருந்த தெருவில் முதல் இல்லத்தில் குடியிருந்தார்.
அவர் எங்கள் வீட்டில் உள்ள கடம்ப மர பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு அதிசய சங்கத்தைப் பற்றி விளக்கினார்.
தேசபக்தி சங்கமான அதில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். அவர்கள் கூடும் போது கூடுவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னால் மைதானம் காலியாக இருக்கும். சரியாக குறிப்பிட்ட நிமிடத்தில், மணியில் கூடுவார்கள். நிகழ்ச்சி முடிந்தவுடன் அடுத்த நிமிடம் மைதானம் காலியாக இருக்கும். அவர்கள் உணவு அருந்தினால் கூட அங்கு அப்படி அருந்திய சுவடே தெரியாது. அவ்வளவு சுத்தமாக இருக்கும்-
இப்படி ஒரு ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட தேசபக்தர்கள் கொண்ட அதிசய சங்கத்தின் கிளை மதுரையில் இருக்கிறதா என்று கேட்டோம். அவர் பக்கத்தில் இருந்த மாபெரும் வக்கீலான தக்ஷிணாமூர்த்தி அவர்களைப் பார்க்கச் சொன்னார்.
அண்ணாஜி என்று அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட அவரைப் பார்த்த போது மிகவும் சந்தோஷப்பட்டார். ஆர் எஸ் எஸ் சிம்மக்கல் கிளை பற்றிச் சொன்னார். எனது குடும்பமே ஆர் எஸ் எஸ் பணியில் ஈடுபட்டது. அவரும் என் தந்தையாரைச் சந்தித்தார். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக பல பெரிய ஸ்வயம்சேவகர்களுடன் பழகும் நல் வாய்ப்பும் கிடைத்தது.
நிற்க, ஶ்ரீ கோபால கிருஷ்ண பாகவதருக்கு வருவோம். அவரது ராதா கல்யாண வைபவம் அற்புதமான ஒரு நிகழ்ச்சி.
பல மணி நேரம் நீடிக்கும் அந்த நிகழ்ச்சியில் ராதையின் பிரேமை பற்றி நன்கு விளங்கிக்கொள்ளலாம். இதில் இடம் பெறும் அஷ்டபதி கீதங்கள் மிக மிக அருமையானவை. இதில் ஆண்கள் மற்றும் பெண்களின் நடனமும் உண்டு. குத்துவிளக்கைச் சுற்றிச் சுற்றி அனைவரும் நடனமாடுவது பார்க்கவே அழகாக இருக்கும்; பக்தியை வளர்க்கும். கிருஷ்ண பக்தி அதிகரிக்கும்.
இதை எங்கள் வீட்டிலும் நடத்த ஆர்வம் கொண்டார் என் தந்தை.
ராதா கல்யாணம் நடந்தது; ஆனால் ஒரு நிகழ்ச்சியோடு இது முடியவில்லை.
இந்தியன்பேங்க் ஏஜண்டாக இருந்த சங்கர ஐயர் வீட்டில் ஒரு வாரமும் அடுத்த வாரம் எங்கள் வீட்டிலும் இப்படி மாறி மாறி பல வருடங்கள் இதை நடத்தி வந்தோம்.
இரவில் நிகழ்ச்சி முடிந்தவுடன் தானப்ப முதலித் தெருவில் இருந்த சங்கர ஐயர் குடும்பத்தை வழி நடத்தி அவர்கள் வீட்டிற்குக் கொண்டு விடுவோம். அவர்கள் வீட்டில் நடக்கும் போது அவர்கள் எங்களை எங்கள் வீடு வரை வந்து கொண்டு விடுவார்கள் சில சமயம், கூட ஒரு தடவை இந்த நடைப் பயணம் தொடரும். இப்படி மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தால் பொழுது விடிந்து விடும் என்று நாங்கள் கிண்டலும் செய்வோம். சங்கர ஐயர், அவர் மனைவி பிடில் வாசிப்பதில் வல்ல சரஸ்வதி சங்கரன், அவர்களது மகன் எம்.எஸ், வெங்கட்ராமன், அவர் மனைவி மாதங்கி உள்ளிட்டோர் இதில் ஆர்வத்துடன் பக்தி சிரத்தையுடனும் பங்கேற்பர்.
மறக்க முடியாதா நாட்களாக அவை அமைந்தன.
Gopalakrishna Bhagavathar with Sankara Iyer in Madurai.
கூத்தனூர் ஶ்ரீ சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஒரு வேத விற்பன்னர். ரிக்வேதம் முழுவதையும் ஓதி காஞ்சி பெரியவாளிடம் பரிசைப் பெற்றவர். 7000 ரூபாய் பரிசு என்பது அந்தக் காலத்தில் மகத்தான பரிசாகும். அதைப் பெற்றவர். காஞ்சி பெரியவரின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர்.
என் தந்தை மீது மாறாத அன்பும் மிக்க மரியாதையும் கொண்ட, அவர் மதுரைக்கு வர ஆரம்பித்தார். ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் உள்ளிட்ட மாபெரும் இதிஹாஸ புராணங்களில் வல்லவரான அவர் சூட்சுமமான ரகசிய அர்த்தங்களை விளக்கிக் கூறுவார்.
பெரும்பாலும் கிருஷ்ணாராயர் தெப்பக்குளத் தெருவில் உள்ள ஹனுமார் கோவிலில் அவர் உபந்யாசங்கள் இடம் பெறுவது வழக்கம்.
தங்குவது எங்கள் இல்லத்தில் தான். ஏராளமான நல்ல பக்தர்கள் காலை நேரத்தில் இவரை எங்கள் இல்லத்தில் சந்திப்பது வழக்கம். அவரைப் பலரும் தங்கள் இல்லங்களுக்கு வருமாறு அழைப்பது வழக்கம்.
இவரது உபந்யாச உரைகள் மறுநாள் தினமணியில் தவறாது வெளியாகும்.திருச்சியில் பல காலம் அவர் வாழ்ந்து வந்தார். அவருடன் காலை வேளைகளில் பேசிக் கொண்டிருப்பது வழக்கமானது. காலையில் பூஜை பெரிதாக நடக்கும். பேசும் போது பல ரகசியார்த்தங்களையும் சுவையான சம்பவங்களையும் அவர் கூறுவார்.
எடுத்துக்காட்டிற்காக ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
காஞ்சி பெரியவரின் அன்புக்குப் பாத்திரமான அவர் மடியில் காஞ்சி பெரியவர் தலையை வைத்துப் படுப்பது வழக்கம்.
ஒரு நாள் சாஸ்திரிகளிடம் அருகில் இருந்த அக்ஷதைக் கிண்ணத்திலிருந்து அரிசி மணிகளைக் “கொஞ்சம்” எடுத்துத் தருமாறு கூறினார். சாஸ்திரிகளும் சில அக்ஷதை மணிகளை எடுத்து அவரிடம் தந்தார். அதை ஜாக்கிரதையாக வாங்கிய பெரியவாள் அதில் எத்தனை இருக்கிறது என்று எண்ணச் சொன்னார்.
விநோதமான இந்த ஆணையால் சாஸ்திரிகளும் கையில் தரப்பட்ட அரிசி மணிகளை எண்ணி அந்த எண்ணிக்கையைப் பெரியவாளிடம் சொன்னார். “ஆஹா, நூறு வருகிறது” என்றாராம் பெரியவர்.
சாஸ்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன அர்த்தமோ இதற்கு? என்று அவர் பெரியவாளைக் கேட்க அவர்,”இப்பொது எனக்கு ஆகும் வயதுடன் இந்த மணிகளைக் கூட்டினால் நூறு வருகிறது. நான் நூறு வயது இருப்பேன் போலும்” என்று பதில் அளித்தார்.
இதைச் சொல்லிய சாஸ்திரிகள், “எனக்கு ஒரே ஆனந்தம். பெரியவாளுக்கு ஆயுஸ் நூறு” என்றார்.
இதைக் கேட்டு நாங்கள் சாஸ்திரிகளிடம் கோபப்பட்டோம். இன்னும் கொஞ்சம் கூட அரிசி மணிகளைப் போட்டிருக்கக் கூடாதா நீங்கள்?’ என்று கோபத்துடன் நாங்கள் சொல்ல அவர் ஹோவென்று பெரிதாகச் சிரித்து, “எனக்கு எப்படித் தெரியும் அவரது சங்கல்பம்? தெரிந்திருந்தால் நான் நிறையப் போட்டிருக்க மாட்டேனா என்ன?” என்றார்.
பெரியவாள் நூறு வயது வரை வாழ்ந்தது உண்மை!
இப்படிப் பற்பல சம்பவங்களை அவர் கூறுவார்.
இந்த உபந்யாசத் தொடர்பு நெடுங்காலம் நீடித்தது.
அடுத்து மதுரையில் இருந்த பல சத்சங்கங்களையும் அவற்றை என் தந்தையார் ஆதரித்ததையும் பார்க்கலாமா?