Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
One Thousand Proverbs on Woman, Wife, Daughter– Part 3
41.A petted woman does not spin.
42.A house without a woman is a well without a pail.
43.A woman keeps secret only her age and what she does not know.
44.Woman opens up a home but does not close it down.
45.Beat the woman to drive Seven Devils out of her.
King James Version Mark 16:9 “…he appeared first to Mary Magdalene, out of whom he had cast seven devils.” In J.B. Phillips the interpretation of the seven devils are seven evil spirits.
(In Luke 8:2, the Bible mentions Mary Magdalene being delivered from “seven devils”. This has been interpreted in various ways, including: literal demon possession, severe mental or physical illnesses, or a symbolic representation of multiple vices or sins. Some interpretations link it to the seven deadly sins or the seven adversaries of the soul).
46.The pretty woman wants three husbands: one rich to support her; one handsome, to love her; one brigand to beat her.
47.A woman without a husband is a horse without a bit.
48.Do not trust the winter sun or a woman’s heart.
49.If women did not sin, there would be no priests to confess them
50.Water and women go as you direct them.
—Bulgarian proverbs
51.When girls whistle the devil laughs outright.
52.A good housewife’s skirt is longer than her petticoat.
–Jesey proverbs
53.Heaven has scattered on earth twelve ounces of honesty and woman has picked up eleven
–Corsican proverb
54.Confide in an aunt and the whole world will know.
(My comments: I worked with a woman in the BBC Bush House in London; My boss used to tell me, Swaminatha! tell this lady anything; you don’t need a mukkkat thuddu / 5 paisa letter. The whole bush house will know it. Now I laugh remembering it)
55.Comb your daughter’s hair until she is twelve; safeguard her until she is sixteen; after sixteen, say ‘thank you’ to whomsoever will wed her (take her off your hands)
56.Praise the horse after a month and a woman after a year.
57.Do not choose your wife at a dance, but on the field amongst harvesters.
58.Take a wife from near, but steal from afar.
59.Young wife, old husband – children a certainty; old wife, young husband- beating a certainty.
60. Smoke, a leaking roof, and a nagging wife—these three drive the farmer away from his home
To be continued………………..
–subham—
Tags- 1000 proverbs on woman, wife, daughter, aunt, part 3, beating,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விஷ்ணு – பொருள் – எங்கும் நிறைந்தவன்
மேக 15,59;
குமா.6-67; 7-44;
ரகு..13-5, 14-59.
கீழே பாடல்களின் பொருள் உள்ளன
***
இந்தப் பெயரை விண்ணந்தாயன் என்ற சங்கப்புலவர் பெயரில் காண்கிறோம்
விண்ணந்தாயன்= விஷ்ணு + தாசன்
ஆகாச என்பது தமிழில் ஆகாயம் என்று மாறுவது போல (ய=ச) தாசன் , தாயனானாக மாறுகிறது
சங்க காலத்திலியேயே லேடி மஹாபாரதத்தைத் தமிழாக்கிய செய்தி பாரதம் பாடிய மாதேவனார் (மஹாதேவன்) என்ற புலவர் மூலம் கிடைக்கிறது
கண்ணன் என்பதும் , கன்னையா என்பதும் ஆழ்வார் பாடல்கள், பாரதி பாடல்கள் மூலம் நாம் அறிந்ததே .
இந்த கண்ணன் பெயர் முது கண்ணன் , பாண்டரங் கண்ணன் தாயங்கண்ணன் (தாச +கண்ணா ) முதலிய பெயர்களில் வருகிறது ; தாமோதரனார், கேசவனார், வால்மீகி என்ற சங்கத் தமிழ் புலவர்களை நான் விளக்கத் தேவையே இல்லை.
***
ரகுவம்சம் 13-5 பாடலில் கடலுடன் விஷ்ணு ஒப்பிடப்பட்டதை முந்தைய கட்டுரையில் கண்டோம் . கடல் வண்ணன் என்றால் உடனே விஷ்ணு என்பது புரியக்கூடியதுதான் மாயோன் என்ற சொல்லால் தொல்காப்பியரும் சங்கப்புலவர்களும் இதைக் குறிப்பிடுகின்றனர் ; கருப்பு, நீலம் ஆகிய இரண்டு நிறங்களையும் இந்துக்கள் ஒரே பொருளில் பயன்படுத்துவர் ; கண்ணன் நிறமும் விஷ்ணு நிறமும் கருப்பு என்பது கிருஷ்ணா= கருப்பன் என்ற பெயரிலேயே உள்ளது.
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
—புறநானூறு -56
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
—புறநானூறு -58
நீல நிற வண்ணன் (கலி .104-38),நெடியோன் (மது .வரி 763, பெரும் .வரி 402, பதிற்றுப் -15-39,
தேயா விழுப்புகழ்த் தெய்வம்;–கலி .103-75
தொல் கதிர்த் திகிரியான்;–கலி .104-78; 105-72
ஆடுகொள் நேமியான்;
(சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்தியவன் -நேமி , திகிரி)
தெய்வ மால்;–கலி .103 to 108 (Mal= Black; Melanesian Islands in the Pacific Ocen meant Black People)
வெள்ளைக்காரக் கொள்ளைக் காரர்கள், நாடு பிடிக்க உலகம் முழுதும் சென்றபோது கறுப்புத் தோல் உடையவர்களைக் கண்டவுடன் அந்த பசிபிக் மகா சமுத்திரத் தீவுகளுக்கு மேலனெசியா என்று பெயர் சூட்டினார்கள்.
Maal = Mala= Mela
****
रत्नच्छाया-व्यतिकर इव प्रेक्ष्यमेतत् पुरस्ताद्
वल्मीकाग्रात् प्रभवति धनुःखण्डमाखण्डलस्य ।
येन श्यामं वपुरतितरां कान्तिमापत्स्यते ते
बर्हेणेव स्फुरितरुचिना गोपवेषस्य विष्णोः ॥ 15
Kalidasa wrote first Travelogue in the world. He wrote the first Meteorological book showing the course of Southwest Monsoon, the most important weather factor in India.
மேகதூத காவியத்தில் உலகத்தின் முதல் பயண நூலைக் காளிதாசன் எழுதினான்; அது மட்டுமல்ல உலகின் முதல் வானிலையியல் நூலையும் எழுதி தென் மேற்குப் பருவக்காற்றின் போக்கினை வர்ணிக்கிறான்.
15–ஆவது பாடலில் “ஏ மேகமே கிழக்கே பார்! மலை முகட்டினின்று இந்திர தனுஷ் என்னும் வான வில்லினைக் காண். ரத்தினங்கள் அத்தனையின் ஒளியையும் ஒருங்கே உமிழ்வதைப் பார். உன்னுடைய கரு நிற உடலின் மீது அது பிரகாசிப்பது விஷ்ணுவானவர் இடையன் கோலத்தில் வந்த (கிருஷ்ணனின்) வனின் மயில் பீலி மீது பிரகாசிப்பது போல இருக்கிறது” என்கிறான் காளிதாசன்
இந்தப்பாடலில் மேகமும் கருப்பு; விஷ்ணுவும் கருப்பு; கிருஷ்ணனும் கருப்பு; விஷ்ணுதான் கிருஷ்ணாவதார ம் எடுத்தான் அவன் தலையிலுள்ள மயில் பீலி, வானவில் பொழப்பு பிரகாசிக்கிறது என்ற எல்லா செய்திகளும் உள.
****
प्रालेयाद्रेरुपतटमतिक्रम्य तांस्तान् विशेषान्
हंसद्वारं भृगुपति-यशोवर्त्म यत् क्रौञ्चरन्ध्रम् ।
तेनोदीचीं दिशमनुसरेस्तिर्यगायाम-शोभी
श्यामः पादो बलि-नियमनाभ्युद्यतस्येव विष्णोः ॥ 59॥
பாடல் 59 -ல் மூன்று சுவையான செய்திகளைத் தெரிவிக்கிறான் .
முருகனுக்கு கிரவுஞ்ச்சபேதனார் என்ற பெயர் உண்டு இந்த கிரவுஞ்ச்ச இடைவெளி- இமயமலைக் கணவாய் –இன்றும் நிதி கணவாய் என்ற பெயரில் உள்ளது;; அதன் வழியாகத்தான் ரஷ்யாவிலிருந்து பறவைகள் தமிழ்நாட்டிலுள்ள வேடந்தாங்கல் வரை இன்றும் வந்து கொண்டிருக்கின்றன; அதைக் குறிப்பிட்ட பின்னர் பலியின் கர்வத்தை அடக்குவதற்கு ஓங்கி உலகளந்த உத்தமன் என்று வாமன- த்ரிவிக்ரமாவதாரத்தையும் குறிப்பிடுகிறான்
திருவள்ளுவரும் அடி அளந்தான் என்று குறளில் புகழ்கிறார் விஷ்ணுவை ; 1.ஆக பறவைகள் குடியேற்றம் என்ற ஆர்னிதாலஜி ORNITHOLOGY FACT விஷயம், 2.கிரவுஞ்சபேதம் என்னும் முருகன் விஷயம், 3. விஷ்ணுவின் வாமன அவதாரம் ஆகிய அத்தனையும் கொட்டிவிட்டான் .
பாடலின் பொருள் இதோ:–
ஏ மேகமே, இமயமலையின் சரிவிலுள்ள பல அற்புதங்களைப் பார்த்துக்கொண்டே போ ; குறுகிய கிரவுஞ்ச கணவாய் வழியாகச் செல்வாயாக! அதன் வழியாகத்தான் குள்ள வாத்துக்கள் வருகின்றன பிருகு வம்சத் தலைவனின் பெருமையைப் பாடும் இடம் அது . குறுக்கு நெடுக்காக விரிந்த அந்த மலைப்பகுதி விஷ்ணு தனது கருமை நிறப்பாதங்களால் மகாபலியை அடக்குவது போல இருக்கும்—59
Krauñca (क्रौञ्च)—Sanskrit word for a bird “crane”, “demoiselle crane” (Anthropoides virgo). This animal is from the group called Plava (‘those which float’ or ‘those move about in large flocks’). Plava itself is a sub-group of the group of animals known as Ānupa (those that frequent marshy places).
Krauñca [Kraunch] is the name of a mythical mountain said to be the grandson of Himālaya who was pierced by Kārtikeya and Paraśurāma.
முருகன் அல்லது பரசுராமன் பிளந்த மலை என்ற கதையும் உண்டு அதனால்தான் காளிதாசன் பிருகு தலைவன் என்று சொல்கிறான்.
கிரவுஞ்ச என்பது நாரை, குள்ள வாத்து வகைப் பறவைகள்.
****
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்; பரிபாடல் 4-6/7
****
Five in One
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
பரிபாடல் 13-42/43
****
மலையொடு மார்பு அமைந்த செல்வன்; Chest as wide as mountain or as strong as hill- – கலி.108-55
உன்னை விஷ்ணு என்று எல்லோரும் அழைப்பது பொருத்தமே ; அசையாமல் நீ இருக்கிறாய்! உன்னுடைய நடுப்பகுதியோ அசையும் அசையாப்பொருட்கள் அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளது – குமார சம்பவம், 6-67
பர்வத ராஜ குமாரி= பார்வதி
****
காளிதாசன் மாபெரும் சிவ பக்தன் .ரகு வம்ச முதல் ஸ்லோகத்தில் இந்த ஜகத்துக்கு பார்வதி பரமேஸ்வரன் பெற்றோர்கள் என்கிறான் குமார சம்பவ 8-27 பாடலில் சிவ பெருமானை ஜகத் குரு என்கிறான் . ஆயினும் அத்வைதத்தின் உச்சநிலையை அடைந்த அவனுக்கு மூவரும் ஒருவரே என்றும் தெரியும் ; இதோ குமார சம்பவப் பாடல் :
ஒரே கடவுள் மூன்றாகப்பிரிந்து அருள்புரிகிறார் ; அவர்களில் யார் பெரியவர் யார் சிறியவர் என்பது மாறி மாறி வரும்; சில நேரங்களில் சிவனைவிடப்பெரியவர் விஷ்ணு என்றும் , மேலும் சில இடங்களில் விஷ்ணு வை விடப்பெரியவர் சிவன் என்றும் அல்லது இவ்விருவரை விடப்பெரியவர் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்கள்- 7-44
பரிபாடலில் விஷ்ணுவைப் புகழும் பாடல்களில் எல்லாம் அவனே என்ற கருத்து வருகிறது ; பகவத் கீதையில் விபூதி யோகத்த்தில் கிருஷ்ண எதில் எதில் சிறந்ததோ, அது தனது உருவமே என்பது போன்றது இது; காளிதாசன் அதைக் குமார சம்பவத்தில் ஒரே ஸ்லோகத்தில் சுருக்கமாகச் சொல்லவிட்டான் ; இதோ பரிபாடல்
பரிபாடல்-4
உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35
****
பகையும் நட்பும் இன்மை
கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்’ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60
அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65
பல்வேறு திருப்பெயர் கொண்ட ஒரு பொருள்
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70
தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73
****
பரிபாடல் 3-48/58
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
‘தி ஸ்பேஸ் கேர்ள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் எமிலி காலண்ட்ரெல்லி (Emily Calandrelli) இருபது வருடங்களுக்கு முன்னால் விண்வெளியில் பறக்க ஆசைப்பட்டார்.
சென்ற ஆண்டு அந்தக் கனவு நிறைவேறியது. தனது இந்தப் பயணத்தால் அனைத்துப் பெண்மணிகளுக்கும் உத்வேகம் ஊட்ட வேண்டும் என்பது அவரது ஆசை.
“விண்வெளியில் பறக்க வேண்டும்; பறந்து விடுவேன் என்ற நம்பிக்கை என்று நான் ஏரோ எஞ்ஜினியரிங் படிக்க ஆரம்பித்தேனோ அன்றே ஏற்பட்ட ஒன்று.
ப்ளு ஆரிஜினின் NS-28 கலமானது பூமியின் துணை சுற்றுப்பாதையில் 2024 நவம்பர் 22ம் தேதி அன்று பறக்க ஆரம்பித்தபோது அது நிறைவேறியது.
உடனடியாக பத்தாயிரம் பேர் தாங்களும் அவர் போலப் பறக்க ஆசைப்படுவதைத் தெரிவித்தனர்.
ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு சிறிய தொகையை நன்கொடையாகப் பெற்ற அவர் மேற்கு வர்ஜீனியாவின் மகவுக்கொடை பராமரிப்பு அமைப்பிற்கு 30000 டாலரை அளித்தார்.
விண்வெளிக்குச் செல்வது என்பது பிரமிக்க வைக்கும் ஒரு பெரிய வாய்ப்பு என்பதை உணர்ந்த அவர் இதுவரை 700 பேர்களே உலகில் இந்த வாய்ப்பைப் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
“இந்த வாய்ப்பு மட்டும் எனக்குக் கிடைத்தது என்றால் மற்ற எல்லோரையும் உயரத்தில் ஊக்கி விட இதைப் பயன்படுத்துவேன். மேற்கு வர்ஜீனியாவில் சிறுகுழந்தைகள் மற்ற எல்லா மாநிலங்களையும் விட நான்கு மடங்கு மகவுக்கொடை பராமரிப்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். இதற்காக எப்படி நன்கொடையைப் பெறுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார் அவர்..
ஸ்பேஸ் கேர்ள் என்ற செல்லப்பெயரால் அறியப்பட்ட அவர் தன் பெயருக்குத் தக்கபடி நூறாவது பெண்மணியாக விண்ணிற்கு ஏகியதோடு தான் நினைத்தபடியே குழந்தைகளுக்கு உதவி தன் பெயரைக் காப்பாற்றிக் கொண்டார்.
“இந்த நூறாவது பெண்மணி என்பதில் உள்ள நூறு என்ற நம்பர் எனக்கு விசேஷமான ஒன்றாகும். ஏனெனில் முதல் நூறு பேருக்குள் நான் இடம் பெற வேண்டும் என்று துடித்தேன். அதற்காகக் கடுமையாக உழைத்தேன். வெற்றி பெற்றேன். குறிப்பாக விண்வெளிக்குச் சென்ற பெண்கள் பிரபலமாகவும் ஆகவில்லை; சமூகத்தால் அங்கீகரிக்கப்படவும் இல்லை. அந்த நிலையில் நான் நூறாவது பெண்மணியாக ஆனேன்.” என்றார் அவர்.
37 வயதான எமிலி கல்லூரியில் படிக்கும் போதே நாஸாவில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். பல விண்வெளித்திட்டங்களை அறிந்து கொண்டார். கூகிள், பிக்ஸர் உள்ளிட்டவற்றில் அனைத்தையும் பற்றி விவரிக்கும் அவர் அனைவராலும் ஸ்பேஸ் கேர்ள் என்று அழைக்கப்படலானார். அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளைமாளிகைக்கும் கூட அவர் அழைக்கப்பட்டார்.
பல்வேறு துறைகளிலும் நிபுணரான அவர் ஒரு அறிவியல் பேச்சாளர், பொறியியல் வல்லுநர், எழுத்தாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காளிதாசன் காவியங்களில் மஹா விஷ்ணு; சங்க இலக்கியத்துடன் ஒப்பீடு- PART 2
முந்தைய கட்டுரையில் விஷ்ணுவைக் கடல் என்று வருணித்த காளிதாசன் ராமனையும் ராவணனையும் கடலுடன் ஒப்பிடுகிறான் .
விஷ்ணுவுடன் ஒப்பிட்ட போது கடலின் ஆழம், வர்ணம், பரப்பு ஆகியவற்றை ஒப்பிட்டு பெருமைப்படுத்தினான்
ரகுவம்சத்தில் எல்லை மீறும் சுனாமி பேரலை போன்றவன் ராவணன் என்றும் ரத்தினங்கள் நிறைந்த கடல்போன்றவர் விஷ்ணு என்றும் வருணிக்கிறான் ; அப்போதுதான் ராமாவதாரம் எடுக்கப்போகும் செய்தியை விஷ்ணு அறிவிக்கிறார்.
stutibhyo vyatiricyante dūrāṇi caritāni te || 10-30
கடலிலுள்ள ரத்தினங்களைக் கணக்கிடமுடியாது ; சூரியனின் ஒளிக்கதிர்களை அளவிட முடியாது . அதைப்போல மனதிற்கும் வாக்கிறகும் எட்டாத உமது செயல்கள் தோத்திரங்களுக்குள் அடங்காது..
xxx
अनवाप्तमवाप्तव्यम् न ते किञ्चन विद्यते।
लोकानुग्रह एवैको हेतुस्ते जन्मकर्मणोः॥ १०-३१
anavāptamavāptavyam na te kiñcana vidyate।
lokānugraha evaiko hetuste janmakarmaṇoḥ || 10-31
விஷ்ணு ஏன் அவதாரம் எடுக்கிறார் ?
“இதுவரை உமக்கு அடையப்படாதது எதுவுமில்லை ; அடைய வேண்டியதும் எதுவுமில்லை உலகிற்கு நலம் செய்தல் ஒன்றே உமது பிறப்பிற்கும் செயலுக்கும் காரணம்” என்று சொல்லி விஷ்ணுவைத் தேவர்கள் துதித்தார்கள்
மும்மூர்த்திகளில் காக்கும் தொழில் விஷ்ணுவுடையது ஆகையால்தான் அவருக்கு மட்டும் அவதாரம் செய்யும் கட்டாயம் உள்ளது என்பதை கவிஞன் அழகாக எடுத்துரைக்கிறான்.
xxxx
துதிகள் தோத்திரங்கள் ஏன் ஒரு அளவோடு நின்றுவிடுகின்றன என்பதற்கு அடுத்த ஸ்லோகத்தில் காரணமும் சொல்கிறான் காளிதாசன் .உமது பெருமைகள் அனைத்தையும் யாராலும் முழுதும் சொல்லமுடியாது அதனால் மனிதர்கள் களைப்படைந்து உன்னைப்பு கழ்வதை நிறுத்திக்கொள்கிறார்கள்!
महिमानम् यदुत्कीर्त्य तव सम्ह्रियते वचः।
श्रमेण तदशक्त्या वा न गुणानामियत्तया॥ १०-३२
mahimānam yadutkīrtya tava samhriyate vacaḥ।
śrameṇa tadaśaktyā vā na guṇānāmiyattayā || 10-32
xxxx
தேவர்களின் புகழுரையைக்கேட்ட விஷ்ணு நீங்கள் எல்லோரும் செளக்கியமாக இருக்கிறீர்களா? என்று வினவினார் . இதைக்கேட்ட தேவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆஹா நமது கோரிக்கை நிறைவேறப்போகிறது என்று எண்ணி சொன்னார்கள் ,
“பிரளய காலம் வரும் முன்னரே (சுனாமி போல) கரை தாண்டி ஊருக்குள் நுழையும் ராக்ஷச கடல் ஒன்றுதான் அச்சம் தருகிறது என்று சொன்னார்கள்.
இது நல்ல ஒப்பீடு! விஷ்ணுவை வருணித்தபோது எல்லை தாண்டாத ரத்தினங்கள் நிறைந்த கடல் என்று புகழந்தார்கள் இப்போது எல்லை தாண்டி (சுனாமி) பேரழிவை உண்டாக்கும் ராக்ஷஸன் என்று திட்டுகிறார்கள்
விஷ்ணு அமைதியான கடல் என்றால் இராவணன் கொந்தளித்து எல்லை மீறும் சுனாமி அலைகள் போன்றவன் என்று காளிதாசன் வருணிப்பது மிகவும் பொருத்த்தமே
To him whose kindly feelings towards gods were manifested by his enquiry about gods’ welfare did the gods narrate the danger from the ocean called demon Ravana that had overflowed its shore at a time other than that of final destruction. [10-34]
தேவர்களின் கோரிக்கையைக் கேட்ட விஷ்ணு உரத்த குரலில் கடற்கரையிலுள்ள குகைகள் அனைத்தும் எதிரொலிக்கப் பேசத் தொடங்கினார்
இந்தப்பேச்சு முழுவதிலும் உவமைகளும் உருவகங்களும் வருவதைப் படித்து ரசிக்கலாம்
இங்கு விஷ்ணுவுக்குப் பகவான் என்ற பெயர் வருகிறது ; இது பகவத் கீதையின் தாக்கத்தைக் காட்டுகிறது பகவான் என்றால் நிறைந்த பெருமை, வீர்யம், யசஸ்/புகழ், செல்வம், அறிவு , வைராக்யம்/ திட உறுதி என்ற ஆறு பண்புகளைக் கொண்டவர் என்று பொருள்
பிறகு பகவான் கூறினார் -அவருடைய குரல் சமுத்ரக்கரையிலுள்ள மலைகளின் குகைகளில் எதிரொலி செய்து , கடலின் பேரொலியையும் வென்றது – ரகு வம்சம் 10-35
அடுத்த ஸ்லோகம்
பகவானால் பேசப்பட்டதால் வாக்கும் பயன் அடைந்தது ; ஏனெனில் அவர் எழுத்துக்களின் ஸ்தானங்களிலிருந்து உச்சரித்தார்
உரைகாரர் விளக்கம் – மார்பு, நெஞ்சு, தலை, நாவின் அடிப்பாகம், பல், மூக்கு, உதடு, அன்னம் என்ற எழுத்து பிறக்கும் 8 இடங்களை பயன்படுத்தி எழுத்துக்களை உச்சரித்தார்
இந்த 10-36 ஸ்லோகம் முக்கியமானது ஏனெனில் விஷ்ணுவை புராண கவி என்கிறார் ;அதாவது வேதங்கள் இறைவனிடமிருந்து தோன்றின.
மேலும் மொழிக்குப் பாரதி என்ற சொல்லப் பயன்படுத்திவிட்டு புராண கவி என்றார் .செம்மையான தூய்மையான மொழி என்பதை க்ருத ஸம்ஸ்காரா என்கிறார் ; இதிலிருந்து சம்ஸ்க்ருதம் என்பது உருவானது என்று கருதலாம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
27-5-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை
MOTIVATION
கதாசரித் சாகரத்தில் உள்ள மோடிவேஷன் கருத்துக்கள்!
ச. நாகராஜன்
உலகையே வியக்க வைக்கும் கதைகள் ஒரு வித குறிக்கோளுடன் இந்தியாவில் சொல்லப்பட்டது போல உலகெங்கும் எந்த இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை.
பைசாச மொழியில் எழுதப்பட்ட ப்ருஹத் கதா துரதிர்ஷ்டவசமாகத் தொலைந்து விட்டது. இதைப் படைத்தவர் குணாத்யர். பல லட்சம் ஸ்லோகங்களில் ஏராளமான கதைகளைக் கொண்ட இந்த நூல் தொலைந்து விட்டாலும் அதன் அடிப்படையில் ஐந்து கதாசரிதங்கள் படைக்கப்பட்டன.
சோமதேவரின் கதாசரித் சாகரம், க்ஷேமேந்திரர் படைத்த ப்ருஹத் கதா மஞ்சரி, நேபாளைச் சேர்ந்த பூதஸ்வாமியின் படைப்பான ப்ருஹத் கதா ஸ்லோக சங்க்ரஹா, ஜைனரான வாசுதேவரின் படைப்பு மற்றும் தமிழில் கொங்குவேளிர் படைத்த பெருங்கதை ஆகிய ஐந்து நூல்களே
ப்ருஹத் கதாவை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டவை.
இதில் சோமதேவரின் ப்ருஹத் கதாவில் ஏராளமான மோடிவேஷன் கருத்துக்கள் பளிச் பளிச்சென கதையை ஒட்டி பாத்திரங்களின் வாயிலாகக் கூறப்படுவதைக் கண்டு வியக்கலாம்.
இந்த நூல்களைப் பற்றிய அற்புதமான வரலாறுகள் ஒரு புறம் இருக்க, இங்கு சில மோடிவேஷன் உண்மைகளை மட்டும் எடுத்துக்காட்டாகக் காணலாம்.
ஒரு செயல் எப்படி இருக்க வேண்டும்?
மிகுந்த தைரியத்துடன் செய்யப்படும் செயல்கள் உண்மையிலேயே பலனைத் தரும்; ஏனெனில் வளமான வாழ்க்கை என்பது தைரியத்தைப் பின் தொடர்ந்து வருவதேயாகும்.
நல்லவர்களின் தொடர்பு!
நல்லவர்களுடனான தொடர்பு நல்ல பழக்கவழக்கங்களையே ஏற்படுத்தும்.
தீர்மானமே தேவை!
எந்த ஒரு செயலுமே தீர்மானத்தினால் அடையப்படுகிறது.
நல்ல தீர்மானத்துடன் இருக்கும் ஒருவனின் உறுதியானது மலைகளின் வலிமையை விட அதிக வலிமை வாய்ந்தது; அது கல்பம் முடிவுக்கு வந்தாலும் கூட அசையாது.
விவேகம் தேவை!
எதானாலும் சரி, அது விவேகத்தால் அடையப்படலாம்!
முடியாத ஒன்றைக் கூட விவேகம் சாதித்து விடும்.
பெரிய இடர் வந்த போதும் எவன் ஒருவனின் கூரிய ஆய்ந்து அறியும் அறிவு தோற்கவில்லையோ அவனால் எதையும் சாதிக்க முடியும்!
உறுதியான தீர்மானத்துடன் இருக்கும் ஒருவன், தான் விரும்பியதை சாதித்து அடைந்தே தீருவான் – அவன் உயிருடன் இருக்கும் வரை!
புத்திசாலி
கொள்கையின் அடிப்படையில் ஒரு புத்திசாலி அனைத்தையும் அறிவான். அவனைக் கலந்தாலோசிப்பது நல்ல விளைவைத் தரும்.
சூரியன் இல்லாமல் வானம் இருந்தென்ன? நீரில்லாமல் குளம் இருந்து என்ன பிரயோஜனம்? அறிவுரை இல்லாமல் ஒரு நிலப்பகுதி தான் ஏது? உண்மையில்லாமல் ஒரு பேச்சு தான் என்ன பிரயோஜனம்?
நட்பும் பகையும்!
ரகசியமாக முணுமுணுப்பது நட்பைக் கொல்லும்.
அறிவுரையானது வாயாடித்தனத்தால் அழியும்.
நீரானது ஒரு பாலத்தையே உடைக்கும்.
கோழைகள் ஒரு சின்ன சப்தத்தினாலேயே படுதோல்வி அடைவர்.
கோபத்தை வெல்!
எவன் ஒருவன் கோபத்தை வெல்கிறானோ அவன் இந்த உலகத்தையே வென்று விடுவான்!
வதந்தியைக் கிளப்பாதே!
சகதியைத் தன் தலைக்கு மேலே வானத்தை நோக்கி எறிபவனின் தலை மேலேயே சகதி விழும்.
விக்கிப்பீடியா மற்றும் விக்கி பவுண்டேஷன் நடத்தும் தளங்களில் இந்து விரோதிகளும் திராவிடங்களும் விஷம் கலந்து வருகின்றன .
இதே போல இந்து விரோதிகள், வள்ளலார் தலையில் மிளகாய் அரைத்து, அவரது விபூதியை அழித்து, அக்கிரமங்களும் அதிக்ரமங்களும் செய்து வருகின்றனர் .
ஆகையால் எந்த தமிழ் நூல் ஒரிஜினலுக்கும் நூறு ஆண்டுக்கு முந்தைய ஒரிஜினலை நாடுங்கள்; உரைகளைப் பாருங்கள் என்பதே என் வேண்டுகோள்.
கி.வா. ஜகந்நாதன் பதிப்பாசிரியாகவுள்ள ராமகிருஷ்ண வித்யாலயப் பதிப்பு ஆயிரம் பக்கங்களையுடைய அருமையான திருக்குறள் பதிப்பு ; திருக்குறள் முனுசாமி வெளியிட்ட பதிப்பு நல்ல பதிப்பு; ஆகையால் வள்ளலார் பாடல் , திருக்குறள் பதிப்புகளை வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்.
முதல் குறளிலேயே விஷமம் செய்பவன் எத்தனை குறள்களில் விஷமம் செய்கிறானோ அத்தனைக்கு தமிழ் மொழிக்கு ஆபத்து , இவர்களது குடும்பங்களைத் தமிழ்த்தாய் வேரோடு அழிப்பாள் என்பது நிச்சயம்.
திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் இந்து விரோதிகள் செய்த விஷமங்களைக் காண்போம் :
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
· அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
விளக்கம்:
· அகர முதல எழுத்தெல்லாம் – அகரம் முதலாகிய எழுத்துக்கள் எல்லாமே
· ஆதிபகவன் முதற்றே உலகு – ஆதிபகவானே முதலானவன்
தனது திருக்குறளின் முதல் அதிகாரத்தை கடவுள் வாழ்த்தாக ஆரம்பிக்கிறார் வள்ளுவர், அதில் கடவுளின் நிலையை அடைந்த ஆதிபகவானை முதலாக வைத்து தனது குறளை எழுத ஆரம்பிக்கிறார். தனது நூலில் சொல்லப் போகும் அகரம் முதலான எழுத்துக்கள் அனைத்திற்கும் ஆதிபகவானே முதன்மையாக இருகிறான் என்று கூறுகிறார்.
***
ஆதி பகவான் என்பதை விளக்கிய பரிமேல் அழகர் இப்பாட்டால் முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது என்கிறார். ஆதி பகவன் என்பது விஷ்ணுவைக்குறிக்கும் என்பது ஆழ்வார்கள் கருத்து.
அந்தமில் ஆதியம்பகவன் — என்கிறது திருவாய்மொழி
• உண்மைப்பொருள்
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. (1) —மு. வரதராசன்
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
• தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.(Miscreants deleted GOD)
****
• உண்மைப்பொருள்
• தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? (2)—மு. வரதராசன்
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
• மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும். .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் (3)—மு. வரதராசன்
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
• விறுப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை. .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை (4)—மு. வரதராசன்
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
• இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள். .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை (5)
—மு. வரதராசன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
• மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியை பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
****
உண்மைப்பொருள்
• ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர் (6)- —மு. வரதராசன்
• தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது (7)—மு. வரதராசன்
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
• அந்தணர் என்பதற்குப் பொருள் ‘சான்றோர்’ என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல. .(Miscreants deleted GOD)
****
உண்மைப்பொருள்
• அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது (8)—மு. வரதராசன்
9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
• உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலிலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும். .(Miscreants deleted GOD)
***
உண்மைப்பொருள்
• கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம் (9)
—மு. வரதராசன்
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
• வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். .(Miscreants deleted GOD)
****
உண்மைப்பொருள்
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது (10)—மு. வரதராசன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vanakam Sir 🙏🏼🙏🏼
My humble thanks to your blog about YUBA STAMBAM.
BHRAMMA PURANAM
BHRAMANDHA PURANAM
( Published with Tamil translation by Sri Raghavendra group… COIMBATORE).
Says
In Aswametha Yagna done by Lord Bhrammadheva 21 horses were killed.
The fat ( வபை) 21 குதிரைகளிடம் இருந்து எடுக்கப்பட்டு ஸ்ரீவரதராஜன் ….. உற்சவர் தேவப்பெருமாளுக்கு பிரம்ம தேவர் தந்தார்.
ஸ்ரீதேவாதிராஜன் தமது கைகளால் எடுத்து அந்த கொழுப்பு …. வபையை நிவேதனமாக ஸ்வீகரித்துக் கொண்டார் என்று உள்ளது.
நீங்கள் சில ப்ரமாண தகவல்களுடன் ( ஸாயனர்) வேத உரையின்படி விலங்குகள் பலியிடப்படுவது வேத நெறிப்படி இல்லை என்று நிரூபணம் செய்து உள்ளீர்கள்.
இதற்கு இன்னும் சிறந்த ஆதாரங்களை blog ல் பதிவு செய்தீர்கள் என்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.
தங்களது யூப ஸ்தம்ப விளக்கத்தால் சற்றே மனம் சமாதானம் பெற்றது. இருப்பினும் தெளிவான வேத காலத்தில் நிஜமாக நிலவிய தகவல்களை அறிய ஆவலாய் உள்ளேன்.
மிகவும் நன்றி🙏🏼🙏🏼🤗🤗🥰
மிகவும் நன்றி🙏🏼🙏🏼🤗🤗
S. R.
K.PURAM.
****
MY REPLY
அன்புடையீர்
கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி..
விரிவான பதில்களையும் பின்னர் தருகிறேன்.
சுருக்கமான பதில் :
ஒரு காலத்தில் உயிர்ப்பலி நடந்தது உண்மையே ; காலப்போக்கில் அதைக் கைவிட்டு அடையாளபூர்வமாகச் செய்தார்கள் என்பதே நான் நம்பும் கருத்து .
சரி, இப்படி உயிர்ப்பலி செய்யலாமா / என்ற கேள்வி எழும்போது என் மனதிற்குள் வரும் எண்ணம் – ஒவ்வொரு நிமிடமும் உலகெங்கிலும் பல கோடி உயிரினங்களை மனிதர்கள் சாப்பிடுவதற்காக கொன்று குவிக்கிறர்கள்; தென் கொரியா நாட்டில் ஆண்டுதோறும் பத்து லட்சம் நாய்களை அடித்துச் சாப்பிடுகிறார்கள் என்ற செய்தி சமீப காலமாகப் பத்திரிகைகளில் அடிபடுகிறது முஸ்லீம்கள் மொகரம் பண்டிகையில் பல்லாயிரம் ஆடு மாடுகளை ஓட்டகங்களைக் கொன்று சாப்பிடுகிறார்கள்.
எங்கள் பிரிட்டனில் ஒரு கோழிப்பண்ணையிலோ மாட்டுப்பண்ணையிலோ தொற்று நோய் வந்துவிட்டால் உடனே பல்லாயிரம் பிராணிகள் உடைய பண்ணைகளை அடியோடு எரித்துவிட்டு அரசாங்கம் கொடுக்கும் நஷ்ட ஈட்டுத் தொகையை ஏற்கிறார்கள். அமெரிக்காவில் ஒரே நாளில் பல லட்சம் பசுக்களை எரித்த செய்தியும் பத்திரிகைகளில் வந்தது.
சங்க இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் மாமிசம் சாப்பிட்ட குறிப்புதான் கிடைக்கிறது ; பிராமணர் வீட்டில் மட்டும் சாதமும் மாதுளங்காய்ப் பொரியலும் கிடைத்த செய்தி கிடைக்கிறது. .பொதுவாக சாது சந்யாசிகள் பிராமணர்கள், வெஜிட்டேரியங்கள்; சைவ உணவுக்காரர்கள் ஆனால் தீட்சிதர்கள் மாட்டின் வபையை டேஸ்ட் செய்து தீட்சிதர் பதவி பெற்றதையும் அஸ்வ மேத யாகத்தில் குதிரை பலியிடப்பட்டதும் உண்மை என்றே நான் நம்புகிறேன் ; காலப்போக்கில் இதைக் கைவிட்டார்கள் . இலங்கை புத்த மத குருமார்கள் பிறர் கொண்டுவரும் மாமிசத்தை இன்றும் சாப்பிடுகிறார்கள்; வள்ளுவன் இதை ஒரு குறளில் கிண்டல் செய்கிறான்.
மெளரிய குல மன்னர்களின் முக்கிய சாப்பாடு மயில். அவர்களின் வம்சத்தின் பெயரே மயில் என்ற சொல்லில் இருந்து வந்தது; அந்த வம்சத்தில் வந்த அசோகன் உலகம் முழுதும் புத்த தர்மத்தைப் பரப்பிய போதும் அரண்மனையில் கொல்ல வேண்டிய மிருகங்களின் எண்ணிக்கையைக் குறைத்தான் என்று மட்டுமே உள்ளது தவிர்த்தான் என்று கல்வெட்டு கூறவில்லை ; பலகோடி ஆடுமாடுகள் தினமும் கொல்லப்படும்போது ஒரு மன்னன் அஸ்வமேதம் செய்ததில் நான் ஒன்றும் குறை காணவில்லை . திருஷ்டிப் பரிகாரத்துக்கு பூசணிக்காயை அல்லது தேங்காயை உடைப்பது போல வெற்றியின் அடையாளமாக அவர்கள் ஒரே ஒருகுதிரையைக் கொன்றிருக்கலாம் அல்லது பல குதிரைகளைக் கொன்று இருக்கலாம் காலப்போக்கில் இதைக் கைவிட்டு தானியத்தைப் பயன்படுத்தினார்கள் என்றே நான் நம்புகிறேன் மிருக பலி என்ற நோக்கில் — மனித பலி என்ற நோக்கில் ஆராய்ச்சி செய்தால் சிறுத்தொண்டர் போல பிள்ளையை கறி சமைத்த செய்தி பைபிளிலும் கிடைக்கிறது பஹ்ரைன் தீவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் எலும்புக்கூடுகளுடன் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவைகளையும் முன்னரே கட்டுரையில் கொடுத்தேன் சிந்து சமவெளி முத்திரையில் மனித பலி முத்திரை உள்ளது ; பலிகள் நடந்தது உண்மையே!
முடிவுரை
மனிதர்கள் சாப்பிடும் கோழி, மீன், நண்டு, ஆடு, மாடு ,ஒட்டகம், நாய், பல்லி , பாம்புகளை ஒப்பிடுகையில் யாகப்பலி என்பது இமயமலைக்கு முன்னால் நமது கிராமத்திலுள்ள பாறைகளின் அளவே என்பதையும் எவரும் மறுக்க முடியாது. யாராவது இது போன்ற கேள்விகளை எழுப்பினால் நான் கேட்கும் கேள்வி :நீ வெஜிட்டேரியானா? சைவ உணவுக் காரனா?
உன் நண்பர்கள சைவ உணவுக்காரர்கள் இல்லையென்றால் என்றாவது அவர்களிடம் இதை விவாதித்துக் கைவிட சொல்லி இருக்கிறாயா?
செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை ? சொல்
உலகம் முழுதும் ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் சாப்பிடும் மிருகங்களின் எண்ணிக்கைப் பற்றி உனக்கு என்ன தெரியும் சொல்; அதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? சரியா தப்பா?
மதத்தின்பெயரால் உலகம் முழுதும் மனிதர்களைக் கொல்கிறார்களே அது சரியா தப்பா ? இப்போது இஸ்ரேலிய யூதர்கள் 4000 முஸ்லீம் குழந்தைகளையும் 6000 கர்ப்பிணிப்பு பெண்களையும் 50,000 ஆண்களையும் கொன்றார்களே உலக நாடுகளும் முஸ்லீம்களும் ஏன் இதைத் தடுக்கவில்லை?
மனிதக் கொலையைப் பற்றியே கவலைப்படாத நீ ஒரு குதிரைப்பலி பற்றி விதண்டாவாதம் செய்கிறாய்! உன் நெஞ்சசைத் தொட்டு சொல் ; இன்யை படுகொலைகள் பற்றிப் பேசத் திராணி இல்லாத நீ , உலகம் முழுதும் மாமிச உணவைத்த தடை செய்யக் கூச்சல் போடாத நீ இது பற்றிப்பேசுவது, நியாயமா ? இது பற்றிப் பேசவோ விவாதிக்கவோ யாருக்கு உரிமை இருக்கிறது என்பதை மேலே விளக்கிவிட்டேன்
இன்றைய தினம் சிக்கன் சாப்பிடும் நிறைய பிராமணர்களை நான் லண்டனிலும் சென்னையிலும் சந்தித்துவிட்டேன் ஆனால் மாமிசம் சாப்பிடும் ஒரு சமண மதக்காரரையும் பார்த்ததில்லை . அவர்கள் வேண்டுமானால் இதை விவாதிக்கலாம் ;மஹாவீரர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னதை இன்றும் பின்பற்றும் ஒரே சமயம் ஜைன மதம்தான் .
அன்புடன்
லண்டன் சாமிநாதன் 1-8-2025.
—subham—-
tags-மிருக பலி, நியாயமா?, கேள்வி பதில், Human sacrifice, Indus Valley, Horse sacrifice.