தமிழ் இலக்கியத்தில், அதர்வண வேதத்தில் புலிப்பல் தாலி (Post No.10455)

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,455
Date uploaded in London – – 17 DECEMBER 2021

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் இலக்கியத்தில், அதர்வண வேதத்தில் புலிப்பல் தாலி

TIGER CLAW NECLACES IN MUSEUMS AROUND THE WORLD


புலியை வீரத்தின் சின்னமாக இந்துக்கள் போற்றி வருகின்றனர். நாடு முழுதும் புலித் தோல், புலி நகம், புலிப் பல் பாரிய கதைகள் உள்ளன. மன்னர்களின் சீற்றத்தை புலியின் சீற்றத்துக்கு தமிழ்ப் புலவர்கள் ஒப்பிடுகின்றனர். அதர்வண வேதத்தில் ‘வையாக்ரோ மணி’ என்ற பெயரில் புலிப் பல் அல்லது புலி நகத் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதை சிலப்பதிகார, பெரிய புராணக் குறிப்புகளுடன் ஒப்பிடுவோம் .

பல லட்சம் மக்கள் வழிபடும் ஐயப்பன் புலிப் பால் (Tiger Milk) கொண்டு வந்தார்.
துர்க்கைகைக்கும் காளிக்கும் புலி வாகனம் ஆகும்.
ராமாயணத்தில் இராமபிரானை (நர சார்தூல’) மனிதர்களில் புலி’ என்று போற்றும் வால்மீகி மகரிஷியின் வரிகளை நாம் தினமும் வேங்கடேஸ்வ்ர சுப்ரபாதத்தில் பாடி வருகிறோம் (உத்திஷ்ட நர சார்தூல).
பதஞ்சலி , வியாக்ரபாதர் பெயரில் புலி நகம் வருவதை நாம் அறிவோம்.
அப்சல்கானை வீர சிவாஜி புலி நகத்தால் கீறிக் கொன்றதை நாம் அறிவோம் .

சிலப்பதிகாரத்திலும், அதர்வண வேதத்திலும் பெரிய புராணத்திலும் புலிப் பல் செய்தி உளது பலருக்கும் தெரியாது !!
தமிழில் பழமையான ‘புலிப்பல் தாலி’ குறிப்பு சிலப்பதிகாரத்தில் உளது. கண்ணகி- கோவலன் கதை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் .நடந்ததை ‘கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ குறிப்பாலும் ஏனைய குறிப்புகளாலும் நாம் அறிகிறோம் . அதற்கு ஆயிரத்து இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதர்வண வேதம் ‘வையாக்ர மணி’ பற்றிப் பேசுகிறது!

தள்ளிப்போன, கொள்ளைக்கார வெள்ளைக்காரனும் கூட அதர்வண வேதத்துக்கு கி.மு 1000 என்று முத்திரை குத்தியுள்ளான். மேலும் அதர்வண வேதத்தில் உள்ள பெரும்பாலான மந்திரங்களில் ரிக் வேதத்தின் தாக்கத்தைக் காண்கிறோம்.

டைகர் TIGER என்ற ஆங்கிலச் சொல் வையாக்ர் VAIYAGR என்ற சொல்லில் இருந்து பிறந்ததும் மொழி இயல் வல்லுனர்களுக்குத் தெரிந்ததே .

(எனது தந்தை வெ .சந்தானம் V .SANTANAM, NEWS EDITOR, DINAMANI, MADURAI) ஒரு மான் தோலும். ஒரு புலித் தோலும் TIGER SKIN/HIDE ஜபம் , தியானம் செய்யப் பயன்படுத்தி வந்தார். கோபம் வந்தால் புலி போலச் சீறுவார் . பின்னர், சிலர் புலித் தோலைப் பயன்படுத்தக் கூடாது; அது சன்யாசிகள் போன்றோர் உக்கிரமான தவம் செய்வதற்கானது என்று சொன்னதன் பேரில் மான் தோலை மட்டும் பயன்படுத்தினார்.).

புலி பற்றிய வேதக் குறிப்பைக் காண்போம் .
அதர்வண வேதத்தில் இருபதுக்கும் மேலான அதிசய தாயத்துக்கள் உள்ளன . அதன் பட்டியல் ஆங்கிலக் (Please see my old English article) கட்டுரையில் உள்ளது . தாயத்துக்களை ‘மணி’ என்று வேத கால முனிவர்கள் அழைத்தனர்.

அதர்வண வேதம் , காண்டம் 8, துதி 7 (சூக்தம் 440)- தலைப்பு – ஒளஷதங்கள்

மந்திரம் 14
‘ஒளஷதங்களின் புலி மணியானது பாதுகாக்கட்டும் ; அதை அணிவோனை சாபத்திலிருந்து விடுவிக்கட்டும்; நீசர்களையும் நோய்களையும் வெகு தூரத்துக்கு துரத்தட்டும்’

இந்த மந்திரம் வையாக்ர மணியின் சக்தியைக் காட்டுகிறது
xxx


தமிழ் இலக்கியத்தில் புலிப்பல் தாலி

சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், வேட்டுவ வரி, 27-28
“மறம் கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி”

பொருள்
வீரம் உடைய புலியின் வாயைப்பிளந்து பிடுங்கிய வெள்ளிய பற்களை மாலையாகக் கோர்த்து கழுத்தில் தாலியாக அணிவித்தனர் .

பாட்டின் பிற்பகுதியில் குமரியாக வேடம் சூட்டி கொற்றவையாக வணங்கிய குமரிப் பெண்ணுக்கு புலித் தோலை மேகலையாக அறிவித்த செய்தியும் வருகிறது !

கொற்றவைக்கு புலி வாகனம் என்பதை இன்றும் நாம் படங்களில் காண்கிறோம் !
xxx
பெரிய புராணத்தில்
பெரிய புராணத்தில் கண்ணப்ப நாயனார் சரிதத்தில் கானக மக்கள் செய்த சடங்குகளின் விவரம் உள்ளது; வேட்டுவர் குல மக்கள் ஒரு குழந்தைக்கு என்ன என்ன செய்தனர் என்ற அரிய செய்திகளை சேக்கிழார் பெருமான் நமக்கு தொகுத்து அளிக்கிறார் :-
ஆண்டெதிர் அணைந்து செல்லவிடும் அடித்தளர்வு நீங்கிப்
பூண்டிதழ் சிறு புன்குஞ்சிப் புலியுதிர்ச் சுட்டி சாத்தி
மூண்டெழு சினத்துச் செங்கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண்டரும் எயிற்றுத் தாலி நலங்கினர் மார்பில் தூங்க
–பெரிய 10-20

பன்றியின் முள், புலியின் பல் ஆகியவற்றை கோத்து செய்த மாலையை கண்ணப்பன் சிறு குழந்தையாக இருந்த பொழுது மார்பில் தொங்க விட்டனர் என்று சேக்கிழார் பெருமான் செப்புகிறார்

குழந்தைகள் மட்டுமின்றி பெரியோர்களும் புலிப் பல் தாலி அணிந்ததையும் பெரிய புராணம் பேசுகிறது —

அரும்பெறல் மறவர் தாயத்தான்ற தொல்குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்றுத் தாலி இடையிடை மனைவி கோத்து
பெரும்புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழை யும் தட்டச்
சுரும் புறு புடலை மூச்சுக்குர் அரிப் பிளவு போல்வாள் –
— பெரிய 10-9

கண்ணப்பனின் தாய் பெயர் தத்தை ; அவள் புலிப் பல்லுடன் , சங்கு மணி கோத்து செய்யப்பட்ட மாலையை அணிந்திருந்தாள் என்பது சேக்கிழார் காட்டும் சித்திரம் ஆகும்.
xxx


MY OLD ARTICLES ON THE SAME THEME

தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து …https://tamilandvedas.com › தமிழ…· Translate this page18 Jun 2014 — கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்/–1114; தேதி— 18 June 2014. சங்கத் தமிழ் …You visited this page on 17/12/21.வேங்கை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page7 May 2017 — சங்க இலக்கியத்தில் வேங்கை மரம் … கவிஞன் காளிதாசனும் புலி என்றும் மரம் …Talismans in Atharva Veda & Ancient Tamil Literaturehttps://tamilandvedas.com › 2014/06/17 › talismans-in-…17 Jun 2014 — Ancient Tamils used talismans from young age. Tamil children were given talismans made up of tiger nails or tiger tooth. That gave them courage …You visited this page on 17/12/21.
Talisman | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › talisman
Though the Vedas speak about different herbs indifferent places, the most famous hymn is the ‘THE HEALING PLANTS’ hymn in Rig Veda (10-97). Western World is …
Amulets | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › am…
· Translate this page3 Aug 2019 — 17 Jun 2014 – Talismans in Atharva Veda & Ancient Tamil Literature. AV1 … Havis Parnamani (K 19-22): Used for subduing enemies (Amulet of Palasa) …Tiger | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › tiger6 May 2017 — Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. The word ‘Venkai; means a Venaki tree and a tiger in Tamil. The …


தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து …https://tamilandvedas.com › தமிழ…· Translate this page
18 Jun 2014 — குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் …

வேங்கை | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › வ…· Translate this page
7 May 2017 — சங்க இலக்கியத்தில் வேங்கை மரம் … கவிஞன் காளிதாசனும் புலி என்றும் மரம் …
Tiger | Tamil and Vedashttps://tamilandvedas.com › tag › tiger
6 May 2017 — The word ‘Venkai; means a Venaki tree and a tiger in Tamil. … We have got lot of this images in Sangam Literature.

Talismans in Atharva Veda & Ancient Tamil Literaturehttps://tamilandvedas.com › 2014/06/17 › talismans-in-…
17 Jun 2014 — Ancient Tamils used talismans from young age. Tamil children were given talismans made up of tiger nails or tiger tooth.
–subham–
tags– வையாக்ரோ மணி, புலிப் பல், புலி நகத் தாலி,
சிலப்பதிகாரம், பெரிய புராணம் ,அதர்வண வேதம்

குரங்கு ஆக மாறிய தமிழ்ப் பெண் – சிலப்பதிகாரத்தில் 7 அதிசயங்கள் (Post No.7345)

WRITTEN By London Swaminathan

swami_48@yahoo.com

Date: 15 DECEMBER 2019

Time in London – 9-47am

Post No. 7345

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Kannaki and Kovalan

படிப்பது போல நிறுத்தாமல் படித்து முடிப்பர். அவ்வளவு சுவைமிக்கது.

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Cheran Senguttuvan With Kannaki Statue

–subham–

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

((தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

சிலப்பதிகாரம் பிராமண காவியமா? இளங்கோ பிராமணரைப் புகழ்வது ஏன்? (Post No.4616)

Research Paper Written by London Swaminathan 

 

Date: 14 JANUARY 2018

 

Time uploaded in London  11-28 am

 

 

 

Post No. 4616

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

சென்னையில் 2107 டிசம்பரில் நடந்த சுதேசி மஹாநாட்டுக்கு அனுப்பிய நீண்ட ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையின் சுருக்கம் இது.  தமிழில் சிலப்பதிகாரம் எளிதில் கிடைப்பதால் பொருத்தமான விஷயங்கள் வரும் காதைகளின் பெயர்களை மட்டும் அளிக்கிறேன். முடிவுரையில் எனது துணிபு என்ன என்பதை உரைக்கிறேன்

 

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியால் புகழப்பட்ட சிலப்பதிகாரம், தமிழ் மொழியில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. அவர் சமணர் என்று ஒரு கொள்கை உண்டு. ஆனால் சிலப்பதிகாரத்தில் இந்துமதமே மிகவும் புகழ்ப்படுகிறது. பலருக்கும் தெரியாத ஒரு அதிசய விஷயம் என்றால், இதில் பிராமணரை இளங்கோ புகழ்ந்து தள்ளுவதாகும். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வரிகளின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட காப்பியத்தின் நாலில் அல்லது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

 

மேலும் காப்பியத்தின் கதைப் போக்கில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதும் பிராமண கதா பாத்திரம் மூலமே.

காப்பியத்தின் முதல் பகுதியில் கண்ணகி-கோவலன் திருமணத்தை அக்கினி சாட்சியாக பார்ப்பன புரோகிதர்கள் நடத்திய செய்தியில் இருந்து கடைசியில் மாடல மறையோன் என்னும் பார்ப்பனர் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை சொல்லுவது வரை ஏராளமான பிராமணர்களைச் சந்திக்கிறோம்.

 

மாடல மறையோன் என்ற பிராமணரும், பராசரன் என்ற பிராமணரும் முக்கிய பிராமண கதாபாத்திரங்கள் ஆவர். இவர்களில் மிகச் செல்வாக்குடைவர் பிராமண கதாபாத்திரம் மாடல மறையோன். அவர் மூலம் மாதவி, மணிமேகலை, மாதரி, கோவலன்- கண்ணகி யின் பெற்றோர்கள் ஆகியோருக்கு என்ன நடந்தது என்றும் இளங்கோ கூறுகிறார்.

 

பிராமண புரோகிதர்களுடன் தீ வலம் வந்து நடந்த கல்யாணத்தை முதல் முதலில் சொன்னவர் இளங்கோ.

 

ஆலமர் செல்வன் என்ற சிறுவன் பராசரன் என்ற முதிய பிராமணருடன் போட்டி போட்டுக் கொண்டு வேதம் சொன்னவுடன் தனது தங்க நகை மூட்டையை அந்தச் சிறுவனிடம் கொடுத்த காட்சியையும் இளங்கோ வருணித்து பிராமணர்களின் தன்னலமற்ற போ க்கையும் காட்டுகிறார்.

 

மாடல மறையோனும் பராசரனும் சதுர்வேதிகள்; நான்கு வேதங்களின் கரை கண்டவர்கள். இதில் மாடல மறையோன்  4 காதைகளில் வந்து பெரும்பணி ஆற்றுகிறார். பாண்டிய  நாட்டில் 1000 பொற்கொல்லர்கள் பலி கொடுக்கப்பட்டது, சோழ நாட்டின் அக்கால அரசியல் நிலை ஆகியவற்றையும் சொல்கிறார்.

பிராமண தூதர், பிராமண நடிகர் ஆகியோரையும் நமக்கு இளங்கோ அடிகள் அறிமுகப்படுத்துகிறார்.

 

மேலும் (ஆராய்ச்சி) “மணி நா ஓசை கேட்காத பாண்டிய நாட்டில் மறை (வேத) ஒலி” கேட்டே பாண்டிய மன்னர் துயில் எழுவான் என்கிறார் இளங்கோ

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பான ஒரு செய்தியைக் கூறி பிராமணரின் செல்வாக்கைக் காட்டுகிறார் இளங்கோ.

சேரன் செங்குட்டுவன் என்பவன் சக்தி வாய்ந்த சேர மன்னன். இமயம் வரை இரு முறை சென்று வெற்றிக்கொடி நாட்டியவன். கடல் சூழ் இலங்கை கஜபாகுவையும் தென்னாட்டின் சக்தி வாய்ந்த பேரரசர்களான சாதகர்ணிகளையும் நண்பகளாகக் கொண்டவன். அப்பேற்பட்ட சக்திவாய்ந்த செங்குட்டுவனை “நீ மறக்கள வேள்வி (போர்கள்) செய்தது போதும் அறக்கள வேள்வி (யாக யக்ஞங்களை) நடத்துவாயாக” – என்று பகிரங்கமாக புத்திமதி சொல்கிறான் மாடல மறையோன் அதை உடனே செவி மடுத்து வேள்வி செய்ய உத்தரவிடும் காட்சியையும் இளங்கோ நம் முன் படைக்கிறார்.

 

அந்த பிராமணனுக்கு எடைக்கு எடை (துலாபாரம்) தங்கக் கட்டிகளை பரிசளித்த கௌரவச் செய்தியையும் இளங்கோ காட்டுகிறார்.

 

சிலப்பதிகார சம்பவங்கள் நடந்த கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வேதக் கல்வி தழைத்தோங்கியதையும், பிராமணர்கள் காலில் மன்னர்களும் வணிகர்களும் விழுந்து வணங்கியதையும் சொல்லத் தவறவில்லை இளங்கோ. பார்ப்பனர்களை  ஏன் இப்படிப் புகழ்கிறார் இளங்கோ? கட்டுரையின் முடிவுரையில் காண்க.

தமிழ் திருடர்களின் குலம் வேருடன் அழியாமல் இருக்க அன்பான வேண்டுகோள்!! உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக.))

1.பார்ப்பன புரோகிதர் முன்னிலையில் கண்ணகி-கோவலன் அக்னி சாட்சியாகக் கல்யாணம்– மங்கல வாழ்த்துப் பாடல்

 

2.மாடல மறையோன் அறிமுகம்- அடைக்கலக் காதை

 

3.கோவலன் ஒரு பிராஹ்மணனைக் காப்பாற்றியதை மாடல மறையோன்  உரைத்தல்

 

4.கோவலன் ஒரு பிராஹ்மணப் பெண்மணிக்கு உதவிய சம்பவம்

 

5.பூதம் விழுங்கிய மனிதன் கதை– மறையோன் வாய் வழியாக

 

6.பராசரன் தட்சிணாமூர்த்தி சம்பவம்- கட்டுரைக் காதை

7.வேதம் நிறைந்த தமிழ் நாடு

 

8.கார்த்திகை- வார்த்திகன் (ப்ராஹ்மண தம்பதி) அற்புத நிகழ்ச்சி; பிராமணர் காலில் விழுந்து மன்னன் மன்னிப்பு கேட்டல்

 

9.பிராஹ்மணர்கள் வண்டமிழ் மறையோர்– கட்டுரைக் காதை

 

10.மீண்டும் மாடல மறையோன் மூன்று காதைகளில் தோன்றல்–

நீர்ப்படைக் காதை

நடுகற் காதை

வரந்தரு காதை

 

Kannaki Temple

11.நாட்டின் அரசியல் நிலவரம் பற்றி மாடலன் உரைத்தல்- நீர்ப்படைக் காதை

 

12.மாதரி தற்கொலைச் செய்தி

 

  1. கவுந்தி அடிகள் பட்டினி கிடந்து மரணம்

 

14.கோவலன் அம்மா மன நோய் கண்டு மரணம்

 

  1. மாதவி- மணிமேகலை நிலைமை

16.பிராஹ்மணர்களுக்கு சாப்பாடு போடமுடியவில்லையே- கண்ணகி வருத்தம்– கொலைக்கள காதை

 

  1. ஆயிரம் பொற்கொல்லர்கள் பலி

 

  1. பிராஹ்மணனுக்கு 50 கிலோ தங்கம்!

 

19.செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்டளை- நடுகற் காதை

 

  1. மாடலன் செல்லுதல்– பிராமண அற்புதம்- சாமி ஆடுதல்; பிராஹ்மணன் புத்திமதி

 

21.பிராஹ்மண தூதர் (புறன்சேரி இறுத்த காதை)

22.பிராஹ்மண நடிகர் – சாக்கையர் கூத்து

 

 

Kannaki Anklet

23.கீரந்தை என்ற பார்ப்பானைக் காக்க பாண்டியன் கையை வெட்டிக்கொண்டு பொற்கை பாண்டியன் ஆன கதை

 

24.பாலைக் கௌதமனார் என்ற சங்க காலப் புலவர், சேர மன்னன் செய்த யாகத்தின் பின்னர் பார்ப்பனியுடன் உயிருடன் சுவர்க்கம் புகும் கதை– நடுகற் காதை

 

25.மதுரை நகரம் முழுதும் பார்ப்பனர்களின் வேள்விப்புகை– நாடு காண் காதை

 

ஐயர், அந்தணன், பார்ப்பனன், மறையோன்

முழுக்க, முழுக்க, முழுக்க பிராஹ்மணர் புகழ்!!!

 

சிலப்பதிகாரத்தில் முக்கியச் செய்திகள் எல்லாம் ஐயர் வாயிலாக வருகிறது.

ஐயர் காலில் மன்னன் விழுகிறான்.

 

பேரரசன் செங்குட்டுவனுக்கு பார்ப்பனன் கட்ட ளை இடுகிறான்; அவனும் உடனே அதைக் கேட்கிறான்.

 

ஏன்? ஏன்? ஏன்?

 

முடிவுரை:

இளங்கோவின் பெயரில் யாரோ ஒரு பார்ப்பான் இந்த நூலை எழுதிவிட்டானோ? அல்லது இவை எல்லாம் இடைச் செருகலோ? அல்லது மிகைப் படுத்தப்பட்ட கூற்றோ? அல்லது ஆரியர்களின் சதியோ? மந்திரம் போட்டு மன்னர்களை பார்ப்பனர்கள், ஏமாற்றி விட்டனரோ?

 

இல்லவே இல்லை.

 

இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் எப்படி இருந்ததோ அப்படியே இளங்கோ நமக்குப் படம் பிடித்து காட்டி விட்டார். பராசரன் போன்ற பண ஆசையற்ற வேத விற்பன்னன், தன்னலமற்ற தூய ஒழுக்கம் உடைய மாடல மறையோன் ஆகியோர் வாழ்ந்த நேரம் அது. மணி ஓசைக்குப் பதிலாக மறை ஓசை — வேத ஒலியும் – வேள்விப்புகையும்– எழுந்த காலம் அது. ஆகவே இளங்கோ சொன்ன யாவையும் உண்மையே; மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

 

பிராமணர் புகழ் பாடும் சிலப்பதிகாரத்தை ப்ராஹ்மண காவியம் என்றால் மிகை ஆகாது.

 

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

Kannaki Cooking, World Tamil Conference Souvenir

References:

The Cilappatikaram,Prof. V R Ramachandra Dikshitar,The South India Saiavasiddhanta Works Publishing Society, Tinnelvelly Limited, Madras,600 001, 1978

Akananuru, Varthamanan Pathippakam, A Manikkanar,Chennai- 600 017,1999

Srimad Bhagavad Gita, Anna, Sri Ramakrishna Mutt, Chennai-600 004,1965

 

 

–Subahm–

சிலப்பதிகாரத்தில் கொற்றவை வழிபாடு (Post No.3964)

 

Research ArticleWritten by London Swaminathan

 

Date: 2 June 2017

 

Time uploaded in London- 8-40 am

 

Post No. 3964

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

(I wrote this for ‘Soundaryam’ published by Hindu Tamil Cultural Association, Enfield,London)

 

“ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்துக்

கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்—

வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,

ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

(வேட்டுவ வரி, சிலப்பதிகாரம்)

 

செந்தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” — என்று பாரதியாரால் போற்றப்பட்ட அற்புத காவியம். பழந்தமிழ் நாட்டில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நாநிலப் பிரிவுகளுக்கு முறையே விஷ்ணு,முருகன், இந்திரன், வருணன் தெய்வங்களாக இருந்ததை “ஒல்காப்புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பிய சூத்திரம் மூலம் அறிகிறோம்:

மாயோன் மேய காடுறை யுலகமுஞ்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும்

வருணன் மேய பெருமணலுலகமும்

முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே

(தொல். பொருள். 1-5)

 

இந்த நாநிலம் அதன் நிலை திரிந்து வறண்டு போனால் அது பாலை நிலம் எனப்படும். அதற்கான தெய்வம் கொற்றவை என்னும் ‘தேவி’யாகும். சம்ஸ்கிருதத்தில் கொற்றவையை ‘துர்கா’ என்று அழைப்போம். கொற்றவை வழிபாடு குறித்து பல சுவையான தகவல்களை, நமக்கு, இளங்கோ அடிகள் யாத்த, சிலப்பதிகாரம் தருகிறது. அவை இன்று வழக்கற்றுப் போனது மேலும் வியப்பை ஏற்படுத்தும்.

 

தற்போதுள்ள உலக மதங்களில் இந்து மதம் ஒன்றில் மட்டுமே கடவுளைப் பெண் வடிவத்திலும் வணங்குகிறோம். அந்த அளவுக்குப் பெண்களுக்கு உயர்நிலை கொடுக்கப்பட்டது. சங்க காலம் முதல் இந்தக் கொற்றவை எனும் பெண் தெய்வம் (முருகு.368, பெரும்.583, நெடு.192) வழிபாடு இருப்பதற்குப் பல சான்றுகள் உள. இக்கட்டுரையில் சிலப்பதிகாரக் குறிப்புகளை மட்டும் காண்போம்:

மான் வாகனம்

துர்கைக்கு/ கொற்றவைக்கு மான் வாகனம் என்ற குறிப்பு சிலம்பில் வருகிறது. பிற்காலத்தில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரும் மான் வாகன தேவி பற்றி (கலையதூர்தி) என்று பாடுகிறார். ஆனால் சிங்கத்தின் மீதும், புலியின் மீதும் காட்சி தரும் தற்கால துர்கை, மான் வாகனத்தில் அமர்ந்த கட்சி எங்கேயும் காணக் கிடைக்கவில்லை; அதாவது சிலையிலோ, படத்திலோ இல்லை! இது ஒரு வியப்பான செய்தி. இளங்கோ பாடிய சிலம்பிலிருந்து, சம்பந்தர் பாடிய தேவாரம் வரை காணப்படும் கொற்றவையின் மான்  வாகன ‘’போஸ்’’ நமக்குக் கிடைத்தில.

 

பாலைவனத்தில் வாழ்வோர் மறவர்கள் ஆவர். அவர்கள் கொலைக்கும் அஞ்சாத வீரர்கள். பாலைவனம் வழியாகக் கடந்து செல்லும் வணிகர், தூதர் முதலியோரைத் தாக்கி, அவர்களைக் கொன்று, பொருள்களை வவ்வுவதே பாலை நில மக்களின் தொழில். தாங்கள் கொன்ற மிருகங்களை கொற்றவைக்குப் படைப்பதும் இவர்கள் வழக்கமாகும்.

சிலப்பதிகாரத்தில் ஐயை, கார்த்திகை என்ற பெயர்களுடைய பெண்களும் காட்சி தருகின்றனர். அவை துர்க்கையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது

மதுரை நகருக்கு கவுந்தியடிகளுடன் நடந்து வந்த கண்ணகியும் கோவலனும் முதலில் ஒரு கொற்றவை கோவிலில்தான் தங்குகின்றனர்:

“விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை,

மையறு சிறப்பின் வான நாடி

ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு – என்”

(காடுகாண் காதை, சிலம்பு)

 

இதைத் தொடர்ந்துவரும் வேட்டுவ வரிப் பாடல் முழுதும் கொற்றவை வருணனை வருகிறது.

கொற்றவை கோவிலில் சாலினி வெறியாடியதை (சாமி ஆடல்)  எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். கலையமர் செல்விக்கு பலிதந்தால்தான் நன்மைகள் விளையும் என்று அவள் சாமி ஆடுகையில் முழங்குகிறாள். இதோ இளங்கோவின் வரிகள்:

 

“கலையமர் செல்வி கடன் உணின் அல்லது

சிலையமர் வென்றி கொடுப்போள் அல்லள்;

மட்டு உண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின்

கட்டு உண் மாக்கள்! கடம் தரும் என் ஆங்கு”

(கலை= மான்)

பெண்ணுக்கு கொற்றவை வேஷம்

இன்னொரு விநோத வழக்கத்தையும் சிலம்பு பாடுகிறது. அதாவது ஒரு சிறு பெண்ணை கொற்றவை போல அலங்கரித்து மான் வாஹனத்தில் ஏற்றி ஊர்வலம் விட்டு வணங்கியதையும் இளங்கோ சொல்லுகிறார். சங்க காலத்தில் நடந்த இக்கொற்றவை வழிபாடு இன்று எங்கும் காணக் கிடக்கில. நேபாள  நாட்டில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து “குமாரி” என்று தெய்வமாக வழிபடுவதை இன்றும் காணலாம்.

 

“பழங்குடிக் குமரியின் முடியை உயர்த்திப் பொன்கயிற்றினால் கட்டினர். காட்டுப் பன்றியின் கொம்பை பிறைச் சந்திரன் போல அவளுக்கு அணிவித்தனர். புலிப்பல் தாலியை அணிவித்து புலித்தோலை ஆடையாகப் போர்த்தி, அவளை மான் மீது ஏற்றி ஊர்வலம் விட்டனர். அவள் கையில் கிளி, கோழி முதலியவற்றைக் கொடுத்து வழிபட்டனர். அவளைத் தொடர்ந்து பெண்கள் பலர், சோறு, எள்ளுருண்டை, நிணச் சோறு, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றைச் சுமந்து வந்தனர். பெரிய வாத்தியங்கள் முழங்கின. இது இளங்கோ அடிகள் நமக்கு அளிக்கும் செய்தி.

 

இதற்குப் பிறகு இளங்கோ அடிகள், துர்கையை மஹிஷாசுரமர்த்தனியாக வருணிக்கிறார். இன்றும் மாமல்லபுரத்தில் “எருமை அசுரனை” (மஹிச அசுரன்) தேவி, வதம் செய்த காட்சி, அருமையானச் சிலை வடிவில் காட்சிதருகிறது;

பல்லவர்கள் சிலை செய்வதற்கு முன்னரே இளங்கோ அடிகள் செய்யுள் வடிவில் ஓவியம் தீட்டிவிட்டார்:

 

“மதியின் வெண்தோடு சூடும் சென்னி

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்

பவள வாய்ச்சி, தவளவாள் நகைச்சி,

நஞ்சு உண்டு கறுத்த கண்டி, வெஞ்சினத்து

அரவு நாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்

துளை எயிற்று உரகக் கச்சுடை முலைச்சி,

வளியுடைக் கையில் சூலம் ஏந்தி

கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய

அரியின் உரிவை மேகலை ஆட்டி

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,

வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை!

இரண்டு வேறு உருவின் திரண்டதோள் அவுணன்

தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்

அமரி, குமரி, கவுரி, சமரி,

சூலி, நீலி, மால் அவற்கு இளங்கிளை

ஐயை, செய்யவள், வெய்யவாள் தடக்கைப்

பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை;

ஆய்கலைப் பாவை, அருங்கலப் பாவை

தமர் தொழ வந்த குமரிக் கோலத்து

அமர் இளங்குமரியும் அருளினள்

வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே”

 

பொருள்: சந்திரப் பிறை சூடிய தலை; நெற்றிக் கண்; பவள வாய், முத்துச் சிரிப்பு, நஞ்சுண்ட கறுத்த கழுத்து, பாம்பையே கயிறாகக் கொண்டு மேரு மலையை வில்லாக  வளைத்த வில்லி; துளை அமைந்த பல்லுடைய விஷப் பாம்பையே கச்சு ஆக அணிந்த முலையுடையாள்; வளைகள் அணிந்த கையில் சூலம், யானைத்தோல் போர்வை, புலித்தோல் மேகலை, இடப்புற காலில் சிலம்பு, வலப்புறக் காலில் கழல், வெற்றி கொடுக்கும் வாள் ஏந்திய கை, மகிஷாசுரன் தலையில் நிற்பவள்; எல்லோரும் தொழும்குமரி, கறுப்பி, போரின் அதிதேவதை, சூலம் ஏந்திய பெண்; நீல நிறத்தவள்; எம் தலைவி, செய்யவள், தடக் கையில் கொடிய வாளேந்திய நங்கை; பாயும் மான் மீது ஏறி வருபவள்; மலைமகள், கலைமகள், திருமகளின் உருவம்; இளங்குமரி; அவள் அருள் நமக்குக் கிடைத்துவிட்டது.

 

வழக்குரை காதையிலும் கண்ணகியின் தலைவிரி கோலத்தைக் கண்டவுடன், வாயிற்காப்போன், பாண்டிய மன்னனிடத்தில் சொல்லுகையில் வாசலில் வந்து நிற்கும் பெண் கொற்றவை அல்லள், காளி அல்லள், பிடாரி அல்லள் என்று பல பெண் தெய்வங்களின் பெயர்களை எல்லாம் சொல்லுகிறான். சங்க காலத்தில் பெண் தெய்வ வழிபாடு, குறிப்பாக கொற்றவை வழிபாடு, எந்த அளவுக்குப் பரவியிருந்தது என்பதைக் காண முடிகிறது. புராணத்தில் வரும் மஹிஷாசுர மர்தனி, அர்த்தநாரி முதலிய கருத்துகளும் துர்கை என்பவள் சிவன், நாராயணன் எனும் வடிவத்தின் பெண் உரு என்ற கருத்தும் மூன்று தேவியரின் மாற்று உரு என்றும் கருத்து தொனிக்கும் அற்புத வரிகள் இவை. சங்க காலத்தில் ஒரே தெய்வம் என்ற கொள்கையை மக்கள் உணர்ந்த போதிலும் அவளைப் பல்வேறு வடிவங்களில் வழிபட முழ்டியும் என்பதை இளங்கோ சொல்லும் போது நாம் துர்கா அஷ்டோத்திரம் படிக்கும் உணர்வு ஏற்படும்!

 

மேலும், வேட்டுவ வரி முழுதும் கொற்றவை வழிபாடுதான்; படிக்கப்படிக்கக் கழிபேருவகை தரும்!

 

கண்ணகி, தனது கணவன் கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டவுடன், அவள் வளையல்களை உடைத்தெரிகிறாள். இதுவும் கொற்றவை கோவிலில் நடந்த நிகழ்ச்சி.

 

சிலப்பதிகாரம் தவிர தமிழில் பல்வேறு கால கட்டங்களில் எழுந்த இலக்கியங்களில் கொற்றவைக்குப் பல பெயர்கள் காணப்படுகின்றன:

அமரி, எண்டோளி, வெற்றி, அந்தரி, அம்பணத்தி, சமரி, ஆளியூர்தி, பாலைக் கிழத்தி, வீரச் செல்வி, மகிடற்செற்றாள், குமரி, கலையதூர்தி, கொற்றவை, சக்கிரபாணி, விமலை, கலையானத்தி, விசயை, அரியூர்தி, நாரணி, விந்தை, நீலி, காத்தியாயனி, சுந்தரி, யாமலை, சயமகள், மேதிச் சென்னி, மிதித்த மெல்லியல், கௌரி, ஐயை, பகவதி, கொற்றி, சக்கராயுதத்தி, மாலுக்கிளையநங்கை, சூலி, வீரி, சண்டிகை, கன்னி, கார்த்திகை, நாராயணி, தாருக விநாசினி

 

வாழ்க கொற்றவை / துர்க்கை புகழ்!

பெருகுக! தேவியின் அருள்!

எங்கும் மங்களம் பொங்குக!!!

 

-Subham-

சிலப்பதிகாரப் பொன் மொழிகள் – Part 2

16DFR_KANNAKI3_1894936g

தொகுத்தவர் – லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்—1197; தேதி ஜூலை 27, 2014

ஆகஸ்ட் மாத (சிந்தனைச் சிற்பிகள்) காலண்டரில் —முக்கிய “சிலப்பதிகாரப் பபாடல்கள் 31” — என்று முதல் பகுதி ஜூலை 26ம் தேதி வெளி வந்துள்ளது. இது இரண்டாவது பகுதி. சில பாடல்கள் இதில் மீண்டும் முழு வடிவத்தில் இருக்கும்.

32.சிலப்பதிகாரத்தின் 3 முக்கிய கருத்துக்கள்:–
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதூஉம் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்’ என
–சிலப்பதிகாரப் பதிகம்

33.இளங்கோ அடிகளின் அறிவுரை:–
“பரிவும் இடுக்கணும், பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்மின்; தவம்பல தாங்குமின்
செய்நன்றி கொல்லன்மின், தீ நட்பு இகழ்மின்
பொய்க்கரி போகன்மின், பொருள்மொழி நீங்கன்மின்
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்
பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பெயர்மின்
பிறமனை அஞ்சுமின், பிழையுயிர் ஓம்புமின்
அறமனை காமின், அல்லவை கடிமின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்
மல்லன் மாஞாலத்து வாழ்வீர் ஈங்கென்”
(வரந்தரு காதை)

34.கண்ணகி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த மன்னர்கள்:–
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட்டு ஆங்கண் இமைய வரம்பனின்
நன்னாள் செய்த நாளனி வேள்வியில் –(வரந்தரு காதை)

35.நல்லது செய்தால் சுவர்க்கம்:–
நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்
அறப்பயன் விளைதலும் மறப்பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்
புதுவதன்றே ————(வரந்தரு காதை)

36.தமிழர் போற்றும் இமயமும் கங்கையும்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வடபேர் இமய மலையிற் பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த —- (வாழ்த்துக் காதை)

37.நல்லாட்சி இருந்தால் கற்பு நிலைக்கும்:–
அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது,
பெரும்பெயர்ப் பெண்டிற்குக் கற்புச் சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை —- (நடுநற் காதை)

tm_hindu-indian-jain-sculpture

38.ஒன்றே செய்க, நன்றே செய்க, இன்றே செய்க:–
“நாளைச் செய்குவம் அறம் எனின், இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” — (நடுநற் காதை)

39.யவனர் நாடு வரை சேரன் ஆட்சி
வன்சொல் யவனர் வளநாடு ஆண்டு
பொன்படு நெடுவரை புகுந்தோ ஆயினும் — (நடுநற் காதை)

40.மறுபிறப்பில் விலங்காகவும் வாய்ப்பு!!!
விண்ணோர் உருவின் எய்திய நல்லுயிர்
மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்;
மக்கள் யாக்கை பூண்ட மன்னுயிர்
மிக்கோய்; விலங்கின் எய்தினும் எய்தும்— (நடுநற் காதை)

41.ஆயிரம் பொற்கொல்லர் பலி !! கண்ணகிக்கு காணிக்கை!!!
கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன்
பொன் தொழில் கொல்லர் ஈர் ஐஞ் ஞூற்றுவர்
ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு
ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி
உரை செல வெறுத்த மதுரை மூதூர் – நீர்ப்படைக் காதை

42.சூரியனின் ஒரு சக்கரத்தேர்
ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக்
காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என
மாலைத் திங்கள் வழியோன் ஏறினன் – நீர்ப்படைக் காதை

silambu_for_dance

43.தமிழைத் திட்டிய கனக விசயன் கைது!!
வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த
காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத்திருவர் கடுந்தேராளரொடு
செங்குட்டுவன் தன் சினவலைப் படுதலும் – கால்கோட்காதை

44.தமிழர்களை எதிர்த்த சில்லறைப் பயல்கள்
உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன்
சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தென் தமிழ் ஆற்றல் காண்குதும் யாமென– கால்கோட்காதை

45.தமிழ் வீரம் அறியாமல் உளறிய கனக விசயர்கள்
காவா நாவிற் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி
அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என – கால்கோட்காதை

46.ஜம்பூத்வீபத்தில் எங்கும் ஒற்றர் படை !!
நாவலம் தண் பொழில் நண்ணார் ஒற்று நம்
காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா; — காட்சிக் காதை

47.சேரன் ஆட்சியில் நாடே அடக்கம்
கொங்கணர், கலிங்கர், கொடுங் கருநாடர்,
பங்களர், கங்கர், பல்வேற்கட்டியர்,
வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து, உன்
கடமலை வேடம் என் கட்புலம் பிரியாது — காட்சிக் காதை

48.நீ நினைத்தால் உன்னை எதிர்ப்பவர் யார்?
இமிழ் கடல் வேலியைத் தமிழ் நாடாக்கிய
இது நீ கருதினை ஆயின், ஏற்பவர்
முது நீர் உலகின் முழுதும் இல்லை;
இமயமால்வரைக்கு எம்கோன் செல்வது
கடவுள் எழுதவோர் கற்கே; — காட்சிக் காதை

49.சேரன் மனைவியுடன் இயற்கைச் சுற்றுலா (பிக்னிக்)
துஞ்சா முழவின், அருவி ஒலிக்கும்
மஞ்சு சூழ் மலை காண்குவம் என
பைந்தொடி ஆயமொடு பரந்தொருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கிச் செல்வோன் — காட்சிக் காதை

anklets

50.மதுரைக்கு தீ வைத்த கண்னகியைப் பாடுவோம்:–
பாடுகம் வா, வாழி, தோழி! யாம் பாடுகம்
கோமுறை நீங்கக் கொடி மாடக் கூடலைத்
தீமுறை செய்தாளை ஏத்தியாம் பாடுகம் – குன்றக் குறவை
51.அறுபடை வீடு கொண்ட திரு முருகா!!
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேலன்றே —- குன்றக் குறவை

52.கண்ணகிக்கும், கோவலனுக்கும் ஸ்பெஷல் பிளேன்
நின்ற எல்லையுள், வானவரும்
நெடுமாரி மலர் பொழிந்து,
குன்றவரும் கண்டு நிற்பக்
கொழுநனொடு கொண்டு போயினார் ——- குன்றக் குறவை

53.விதி பலமானால் பழைய புண்யமும் உதவாது
உம்மை வினை வந்து உருத்த காலைச்
செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது — கட்டுரைக் காதை

54.மதுரை தீக்கிரையாகும் என்பது முன்னரே கூறப்பட்ட ஆருடம்
ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும் — கட்டுரைக் காதை

55.சிபியும், மனு நீதிச் சோழனும் என் முன்னோர்
புறவு நிறை புக்கோன், கறவை முறை செய்தோன்
பூம்புனல் பழனப் புகார் நகர் வேந்தன் — கட்டுரைக் காதை

56.பாண்டிய நாட்டில் வேதம் மட்டுமே ஒலிக்கும்
மறை நா ஓசை அல்லது; யாவதும்
மணி நா ஓசை கேட்டதும் இலனே— கட்டுரைக் காதை

57.அலைமகள்,மலைமகள்,கலைமகள்= மதுராபதி தெய்வம்
மா மகளும் நா மகளும் மா மயிலுடன் செற்றுகந்த
கோ மகளும் தான் படைத்த கொற்றத்தாள் நாம
முதிரா முலை குறைத்தாள்; முன்னரே வந்தாள்
மதுரா பதி என்னும் மாது —– அழற்படு காதை

58) 64 கலை தெரிந்தோர் வீதியும் எரிந்தது!
எண் நான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண் இயல் மடந்தையர் பயங் கெழு வீதி—– அழற்படு காதை

59.ஒரு முலையால் மதுரை எரிந்தது!
இடமுலை கையால் திருகி, மதுரை
வலமுறை மும்முறை வாரா, அலமந்து,
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்– வஞ்சின மாலை

29frSilappadikaram__736602g

60.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூ உம் பெற்றிய – காண்– வஞ்சின மாலை

61.பெண்கள் பேதைகள்: கண்ணகி
விழுமிய
பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த
நுண்ணறிவினோர் நோக்கம்; நொக்காதே எண்ணிலேன்– வஞ்சின மாலை

62.நான் தப்பு செய்துவிட்டேன்
பொன்செய் கொல்லன் தன் சொல் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்— வழக்குரை காதை

63.பாண்டிமாதேவி வருத்தம்!
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்று
இணையடி தொழுது வீழ்ந்தனளே, மடமொழி— வழக்குரை காதை

64.மதுரையில் தெய்வம் இருக்கிறதா? கண்ணகி கேள்வி
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?
வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்? — ஊர் சூழ் வரி

65.இது என்ன? புது தெய்வம்?
செம்பொற் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது! இதுவென் கொல்? – ஊர் சூழ் வரி

66.யாதவ மகளிர் பாடிய கண்னன் பாட்டு
கொல்லையெம் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லையன் தீங்குழல் கேளாமோ, தோழீ
தொழுநைத் துறைவனோடு ஆடிய பின்னை –
அணி நிரம் பாடுகேம் யாம் — ஆய்ச்சியர் குரவை

Puhar-ILango
Image of Ilango

67.திருடர்களுக்கு தெரிந்த எட்டு விஷயங்கள்
மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம்,
தந்திரம், இடனே, காலம், கருவி, என்று
எட்டுடன் அன்றே – இழுக்கு உடை மரபின்
கட்டுண் மாக்கள் துணை எனத் திரிவது? (கொலைக்களக் காதை)

68.கற்றறிந்தோர் வினைப்பயன் பற்றி கவலைப்படார்
ஒய்யா வினைப் பயன் உண்ணுங் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் – ஊர்காண் காதை
69.மாதவியின் மன்னிப்புக் கடிதம்
அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனங் கொளல் வேண்டும்
குரவர் பணி அன்றியும், குலப் பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி — புறஞ்சேரி இறுத்த காதை

70.கோவலன் போன புகார் = ராமன் வெளியேரிய அயோத்தி
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல
பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும் — புறஞ்சேரி இறுத்த காதை

71.மறவரின் துர்க்கை வழிபாடு
வம்பலர் பல்கி, வழியும் வளம்பட;
அம்புடை வல்வில் எயின் கடன் உண்குவாய் –
சங்கரி, அந்தரி, நீலி, சடைமுடிச்
எங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்! – வேட்டுவ வரி

72.சூரியனுடன் சுற்றும் குள்ள வாலகீய முனிவர்
சுடர்தரு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்’
அடல்வலி எயினர் நினடிதொடு
மிடறுகு குருதி; கொள்விறல்தரு விலையே — வேட்டுவ வரி

73.வேடர்களின் மஹிஷாசுரமர்த்தனி வழிபாடு
ஆனித்தோல் போர்த்துப் புலியின் உரிஉடுத்துத்
கானத்து எருமைக் கருந்தலை மேல் நின்றாயால் –
வானோர் வணங்க, மறைமேல் மறையாகி,
ஞானக் கொழுந்தாய், நடுக்கு இன்றியே நிற்பாய்!

74.சமணப் பெண்மணியுடன் துர்க்கை கோவிலில் அடைக்கலம்
கழிபோர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும்
விழிநுதற் குமரி, விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – காடுகாண் காதை

75.கணிகையர் என்றால் எல்லோருக்கும் வெறுப்பா?
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும்
பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணி எனக் கொண்டு, பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடையே போனும் என– காடுகாண் காதை

pumpukar

76.எட்டெழுத்து, ஐந்தெழுத்து மந்திரம்
அருமறை மருங்கின், ஐந்தினும் எட்டினும்
வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும்
ஒருமுறையாக உளம் கொண்டு ஓதி — காடுகாண் காதை

77.தெய்வக் காவிரி
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்,
பொய்யா வானம்புதுப்புனல் பொழிதலும் — நாடுகாண் காதை

78.சமண நாமாவளி
தரும முதல்வன், தலைவன், தருமன்
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்— நாடுகாண் காதை

79.சமணர் பிரார்த்தனை
மொழிப் பொருள் தெய்வம் வழித்துணை ஆக எனப்
பழிப்புஅரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர் — நாடுகாண் காதை

80.மதுரைக்கு போக ஆசை: கோவலன்
தென் தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவால் யானும்;போதுமின்— நாடுகாண் காதை

81.திருவரங்கநாதன் வலம் வந்து
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயக் கழிந்து –— நாடுகாண் காதை

82.தீய கனவு: கண்ணகிக்கு அருகம் புல் பரிகாரம்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
பெறுக கணவனோடு என்றாள் – கனாத்திறம் உரைத்த காதை

Riverkaveri

83.கங்கைக்கும் மேலான காவிரி
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் — அது ஒச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி – கானல் வரி

84.நாரதன் வீணை, இந்திரன், ஊர்வசி சாபம்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை– கடல் ஆடு காதை

85.பாவம் செய்வோர் பட்டியல்; பூதம் நையப் புடைக்கும்
தவம் மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்
அவம் மறைந்து ஒழுகும் அலவற் பெண்டிர்
அறைபோகு அமைச்சர், பிறர்மனை நயப்போர்
பொய்க்கரியாளர், புறங்கூற்றாளர், என்
கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்– இந்திர விழவு ஊரெடுத்த காதை

86) 1008 பவுன் தங்க மாலை வாங்கினால் மாதவி பரிசு!!
நூறு பத்து அடுக்கி எட்டுக் கடை நிறுத்த
வீறு உயர் பசும்பொன் பெறுவது இம்மாலை
மாலி வங்குநர் சாலும் நம் கொடிக்கு என – அரங்கேற்றுக் காதை

silambu tamil book

87.தமிழகம்
இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத்
தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்து இயல், பொது இயல் , என்று இரு திறத்தின்
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து–அரங்கேற்றுக் காதை

88.அகத்தியன் சாபம்
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தனத்து, சாபம் நீங்கிய
மலைப்பு – அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் — அரங்கேற்றுக் காதை

89.கண்ணகிக்கு கோவலன் புகழ்மாலை
மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே ! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையல்! நின்னை! – மனையறம்படுத்தகாதை

90.பூம்புகார் மக்கள்= உத்தரகுரு புண்யவாசிகள்
அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர்
உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய
கயமலர்க் கண்ணியும் காதற் கொழுநனும்
மயன் விதித்தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடிநிலத்து, இருந்துழி –மனையறம்படுத்தகாதை

91.திருமண வயது: கண்ணகி 12, கோவலன் 16 !!!
ஈறு ஆறு ஆண்டு அகைவையாள் (கண்ணகி)
ஈர் எட்டு ஆண்டு அகவையான் (கோவலன்) –மங்கல வாழ்த்துப் பாடல்

silambu book1

92.சந்திரன், சூரியன், வருணன் வாழ்க!!!
திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி வெண்குடை போன்று இவ்
அம் கண் உலகு அளித்தலான்

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு
மேரு வலந்திரிதலான்

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும் !
நாம நீர் வேலி உலகிற்கு, அவன் அளி போல்
மேல் நின்று தான் சுரத்தலான் –மங்கல வாழ்த்துப் பாடல்

93.கண்ணாடியில் மலையையே காட்டலாம், சிலம்பில் எல்லாம் தெரியும்
ஆடிநல் நிழலின் நீடு இருங்குன்றம்
காட்டுவாற் போல் கருத்து வெளிப்படுத்து (நூற் கட்டுரை)

வாழ்க இளங்கோ !! வளர்க சிலம்பின் புகழ் !!!

–சுபம்–

இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

(This article is available in English as well in my blogs: INDRA FESTIVAL IN THE VEDAS AND TAMIL EPICS: swami.)

தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண, மஹா பாரத இதிஹசங்களிலும் உள்ளது. இன்றும் நேபாள நாட்டில் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

தமிழ் உலகம் செய்த தவப் பயனால் கிடைக்கப்பெற்ற பழந்தமிழ் நூல் “ஒல்காப் புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பனுவல் ஆகும். அதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. அதை எழுதியவர் த்ருணதூமாகினி என்னும் தொல்காப்பியன் ஆவார். இது “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” தரும் தகவல். அதை ஒப்புக் கொள்ளாதோரும் “நான்மறை முற்றிய” அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பனம்பாரனார் கூறியதை மறுக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டில் வேதங்களில் கரைகண்ட ஒரு பார்ப்பனன் இருந்தார், அவர்தான் தொல்காப்பியத்துக்கு நற்சான்றிதழ் வழங்கினார் என்பதை “தமிழ் கூறு நல்லுலகம்” ஒப்புக் கொள்கிறது.

வேதத்தில் இந்திர விழா

டாங்கே, மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும், அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திர த்வஜம் (இந்திரன் கொடி) பற்றி அதர்வ வேதம் பேசுகிறது. ரிக் வேதத்தில் மறை மொழியில் இதே விஷயம் உள்ளது. “மருத்துக்கு முன் இந்திரன் நடுங்கியதாக” ஒரு இடத்தில் வருகிறது. இதன் பொருள்—காற்றில் இந்திரன் கொடி படபடத்தது என்பதாகும். மருத் என்பது காற்றுக் கடவுள். அதிலிருந்தே அனுமனைக் குறிக்கும் மாருதி என்ற சொல் வந்தது. ரிக் வேதத்தில் இன்னும் ஒரு இடத்தில் , “ஏ இந்திரனே உன்னை புரோகிதர்கள் உயரே ஏற்றிவிட்டார்கள்” என்ற வரிகள் வருகின்றன. இது இந்திரன் கொடி ஏற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இந்திர விழா தோற்றம்

இந்திரன் விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும். ஆனால் உபரிசார வசு துவக்கியதாக மகா பாரதம் கூறும். செம்பியன் என்ற சொல்லே சிபிச் சக்ரவர்த்தியின் பெயரிலிருந்து வந்ததுதான். சிபியின் கதை சங்க இலக்கியத்தில், சிலப்பதிகாரத்தில் மற்றும் பல வட மொழி நூல்களில் இடம் பெற்றுள்ளது சோழ்ர்கள் கல்வெட்டுகளில் தங்கள் முன்னோர்கள் வடமேற்கு இந்தியாவை ஆண்டதாகக் கூறுவர். (சிபி= சைப்ய=செம்பிய)

உபரிசார வசு இந்திரனிடம் வாடாத் தாமரை மாலையும் ஒரு விமானத்தையும் பெற்ற பேரரசன். இந்தியாவின் பழங்கால எஞஜினீயர்களில் சிறப்பானவன். ஒரு மலையை உடைத்து புதிய நதியை உருவாக்கியவன். (வேத காலத்தின் முதல் எஞ்ஜினீயர் இந்திரன். அவன் மலையை உடைத்து விருத்திரனை, நமுசியை விழுத்தாட்டிய செய்திகளை வேதங்கள் பாடுகின்றன. இவைகள் மாபெரும் பொறி இயல் செய்திகள். என்னுடைய GREAT ENGINEERS OF ANCIENT INDIA ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க).

உபரிசார வசுவின் மனைவி பெயர் கிரிகா. அவளுடன் படுத்து சுகம் அனுபவிப்பதற்குள் அவனை அவசரமாகக் காட்டில் வேட்டை ஆட அனுப்பினர். அங்கே மனைவியை நினைக்கவே விந்து வெளியாகி, அதை  ஒரு மீன் உண்ண, மத்ச்யா (சத்யவதி) பிறந்தாள். அவனுடைய குழந்தைகள் மூலம் இந்தியாவின் பழைய வம்சாவளிகள் தோன்றின என்பது மகாபாரதம் கூறும் செய்தி. (மீன்,  மனித விந்துவை சாப்பிட மனிதர்கள் பிறக்கும் என்பது எல்லாம் மறை மொழிகள். இதனுடைய சரியான பொருளை வேறு ஒரு கட்டுரையில் தருவேன்). இந்த உபரிசார வசுதான் இந்திர விழாவைத் துவக்கினார்.

சோழன் துவக்கியதும், உபரிசார வசு துவக்கியதும் சரியான தகவல்தான். ஒருவர் வட இந்தியாவிலும் ஒருவர் தென் இந்தியாவிலும் துவக்கினர் என்பது சாலப்பொருத்தமே.

ராமாயணத்தில் வால்மீகி முனிவர் நேரடியாக எந்தத் தகவலையும் தராமல் “அவன் இந்திரன் கொடிக் கம்பம் போல வீழ்ந்தான், சாய்ந்தான்” என்ற உவமையைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

Picture: Indra in Nepal

தமிழனும் இந்திரனும்

தமிழில் மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை. அதில் தொல்காப்பியர், வேதங்கள் கூறும் கடவுள்களே தமிழர் கடவுள் என்று உறுதிபடக் கூறுகிறார். இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் (முருகன்) ஆகிய நால்வரே தமிழ்க் கடவுள்கள். சிவன் அந்தப் பட்டியலில் இல்லை. உண்மையில் சிவன் என்ற சொல்லை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் நாயன்மார்கள தான். ஆனால் சிவ பெருமானைக் குறிக்கும் ஏனைய சொற்கள் சங்கத் தமிழில் உண்டு.

இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.

மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

 

நேபாளத்தில் இந்திர விழா

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.

பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.

Elephant Dance in Indra Viza in Nepal

கண்ணன்—- இந்திரன் “மோதல்”

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில “அதிமேதாவிகள்” உண்டு. இந்திய மக்களையும் நாட்டையும் பிளவுபடுத்த ஏதேனும் ஆரிய மாயை ,திராவிட மாயை கிடைக்காதா என்று கண்ணில் விளக்கெண்ணயை ஊற்றிக் கொண்டு தேடுவார்கள். வெறும் வாயை மெல்லும் இந்த பரிதாப கேசுகளுக்கு அவல் கிடைதது போல பாகவதத்தில் ஒரு செய்தி வருகிறது. இந்திரன் விழாவை கண்ணன் நிறுத்தி தனக்கும் பாதி பங்கு கேட்டான் என்று. இதனால் இந்திரன் கோபம் கொண்டு பேய் மழை பெய்யச் செய்யவே கண்ணன் கோவர்த்தன மலையைத்தூக்கி தனது மக்களைக் காப்பாற்றினான் என்று. பாகவதத்தையே நம்பாதப் பரிதாபக் கேசுகள், கண்ணனின் பகவத் கீதையையே நம்பாதப் பரிதாபக் கேசுகள் இதை மட்டும் பிடித்துக் கொண்டு புது தியரிகள் எழுதி பி எச். டி வாங்கவும் முயலுவர்.

உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டைப் போலவே கிருஷ்ண பூமியிலும் இந்திர விழா நடைபெற்றது. சோழ மன்னன் அதை நிறுத்தியதால் காவிரிப் பூம்பட்டிணத்தைக் கடல் கொண்டது என்று மணிமேகலை கூறுகிறது. ஆக இந்திர விழாவை நிறுத்தினால் இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்பதை வட ,தென் இந்தியர்கள் ஒப்புக்கொண்டனர் என்பதே உண்மை.

தொல்காப்பியர் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை,, வேதங்கள் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை இன்றுவரை தமிழ் பிராமணர்கள் மற்றும் தமிழ் நாட்டுக் கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் பின்பற்றிவருவது 3500 ஆண்டுக்கும் மேற்பட்ட பாரம்பர்யத்தின் தொடர்ச்சி என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

 

நிவேதிதாவும் இந்திரன் கொடியும்

 

இன்னொரு வெப்சைட்டில் படித்த ஒரு வியப்பான விஷயம் விவேகானந்தரரின் சிஷ்யைகளில் ஒருவர் உருவாக்கிய இந்திரன் கொடியாகும். அவர் பெயர் மர்கரெட் நோபிள். ஐரிஷ்காரியான அப்பெண் நிவேதிதா என்று பெயர்தாங்கி புகழ்பெற்றார். இந்துக்களுக்கான ஒரு கொடியை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டபோது அவர் இந்திரனின் வஜ்ராயுதத்தைப் பொறித்து வங்காளி மொழியில் வந்தே மாதரம் (தாயை வணங்குவோம்) என்று எழுதிய கொடியை உருவாக்கினார். தமிழர்கள், நேபாளியர்கள் போல வங்காளிகளும் இந்திர விழா கொண்டாடுவர். இன்றும் கூட தென் கிழக்காசிய நாடுகளில் இந்திரனின் ஐராவதம் ( 3 அல்லது 4 தலை யானை ) கொடியிலோ, அரசாங்க சின்னங்களிலோ இடம்பெற்றிருக்கிறது. இந்திரனின் சிலைகள் இல்லாத மியூசியமே இல்லை என்றும் சொல்லலாம்.

வாழ்க இந்திரன் புகழ். வளர்க இந்து மதம்.

குறிப்புகள் வேண்டுவோருக்கு:

Silappadikaram  (5: 141-4) and Manimekalai (1:27-72, 2:1-3, 1:1-9, 24: 62-69, 25: 175-200). (Pura Nanuru 182 and 241, Ainkuru. 62, Tirumurugu. 155-59 ) and Amruta (ambrosia of Indraloka) in a lot of places.

In the Rig Veda it is said that Indra shook in the company of his followers. His companions Maruts were the wind god. Vedas also say, “ priests have raised you up on the high, O, Satakratu like a pole” (RV 1.X.1). Vedic poets used symbolic language to convey the message that the Indra flag was hoisted and it was fluttering in the wind. Meyer gives more evidence from Atharva Veda

*******