சுவாமி ஓம்காரானந்தாவுக்கு அஞ்சலி(Post.9609)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9609

Date uploaded in London – –15 May   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Pranams to Swami Omkarananda Ji

சுவாமிஜியின் அன்பர்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பல அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் ZOOM, FACEBOOK.COM வழியாககலந்து கொண்டு சுவாமிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

 லண்டனிலிருந்து சனிக்கிழமை மே 15-ம் தேதி ஒளி பரப்பான ஸ்ரீ ஓம்காராநந்தா அஞ்சலி நிகழ்ச்சியில் எனது  இரண்டு பழைய கட்டுரைகளை வாசித்தேன் (இணைப்பில் காண்க)

லண்டனில் நான் கற்ற பாடம் – என்ற தலைப்பில் 2017-ம் ஆண்டில் இந்த பிளாக்கில் எழுதிய விஷயத்தையும் ZOOM (Z சூம்) ஒளிபரப்பில் சொன்னேன் .

லண்டனில் நான் கற்ற பாடம்………..

பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் தேனியில் இருந்து சுவாமி ஓம்காரானந்தா வந்தார். அவர் இரு முறை லண்டனுக்கு வந்த போதும் நான் சார்ந்திருந்த அமைப்புகள் மூலம் பல இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்தேன் அவர் பெரிய தத்துவ வித்தகர். உண்மைச் சாமியார்நான் கூட்டம் ஏற்பாடு செய்த கோவில்களில் ஒன்று லூயிஷாம் என்னும் இடத்திலுள்ள சிவன் கோவில்இலங்கைத் தமிழர்களால் சிறப்பாக நடத்தப்படும் கோவில்.

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அதற்கு முதல் நாள் அவர்களுக்கு நினைவுபடுத்தி “எப்போது அழைத்து வரலாம்எவ்வளவு நேரம் பேச வேண்டும்என்ன வயதுக்கார ர்கள்எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்என்றெல்லாம் விசாரித்து பேச்சாளர்களுக்கு சொல்லுவது என் வழக்கம். அதன்படி சிவன் கோவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை டெலிபோனில் அழைத்து விசாரித்தேன்.

தம்பி நாளை காலை பத்து மணிக்கு சுவாமிகள் பேசலாம். பின்னர் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லட்டும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந்தால் போதும்அப்புறம் கோவில் நிர்வாகிகளும் குருக்கள்களும் மரியாதை செய்வார்கள் என்றார். யார் வருகிறார்கள் என்று கேட்டேன்.

அதுவாநம்ம தமிழ் ஸ்கூல் பிள்ளைகள்தான். ஆரம்ப வகுப்பு முதல் பள்ளி இறுதிப் படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர். ஆனால் பெருமளவு சின்னக் குழந்தைகள்தான்” என்றார்.

எனக்கு தூக்கிவாரி போட்டது. டெலிபோனில் அதைக் காட்டவா முடியும்பெரிய பதட்டத்துடன் “அடக் கடவுளேஅவர் பெரிய அறிஞர். வேதங்கள்உபநிஷத்துகள்கீதை பற்றி பெரியோர்களுக்காக பேசக்கூடியவர். அரிய வாய்ப்பை நழுவவிடுகிறீர்களே” — என்றேன்.

அவரோ நிதானமாக ,

தம்பிநீங்கள் அவர் ஒரு நல்ல உண்மையான சந்யாசி என்று சொன்னதால்தான் இப்படி செய்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் பார்ப்பது எல்லாம் சினிமாவில்—தெய்வீகத்  திரைப்படங்களில் வரும் நடிப்பு சந்யாசிகளைத் தான் பார்த்திருக்கிறார்கள்நிஜ வாழ்விலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் சொல்லினால் விளக்கி புரியவும் வைக்க முடியாது. ஆகையால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள் அவரைப் பார்த்தால் போதும். அவர் எதுவும் பேசலாம்ஆசியைகளுக்கும் கோவிலுக்கு வரும் மற்ற பெரியோர்களுக்கும் அறிவித்திருக்கிறோம் அவர்களும் வருவார்கள்” என்றார்.

என் கண்களில் நீர் வராத குறைதான். அவருடைடய அணுகுமுறை என் உள்ளத்தை உருக்கிவிட்டது. நானும் ஒரு பாடம் கற் றேன். ஒரு தனி மனிதன் நல்லவனாக இருந்தால்ஆன்மீக வாதியாக இருந்தால் அவருடைய தோற்றம் எத்தனை இளம் உள்ளங்களின் அடி மனதில் — பிஞ்சுப் பருவத்தில் – பதியும் என்று அந்த கோவில் நிர்வாகிக்கு இருந்த அனுபவ அறிவு எனக்கு இல்லாததை உண ர்ந்தேன்.

சுவாமிகளும் எல்லா வயதினரையும் வசப்படுத்தும் — பரவசப்படுத்தும் — அருளுரை வழங்கினார்.

–SUBHAM–

tags-  Sri Omkarananda, in London, ஓம்காராநந்தா ,அஞ்சலி,

காலம் சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.க்கு ‘ஞானமயம்’ அஞ்சலி(8776)

MRS HARINI RAGHU ON ZOOM BROADCAST

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8776

Date uploaded in London – –5 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

5-10-2020அன்று ஞான மயம் ஒளி /ஒலி பரப்பில் லண்டன் திருமதி ஹரிணி ரகு , பெங்களூர் திருமதி சத்திய நாராயணன் ஆகிய இருவரும் பாட கர் எஸ் .பி.பாலசுப்ரமண்யத்துக்கு அஞ்சலி செலுத்தினர். ஹரிணி உரை எழுத்து வடிவில் ல்லை. ஆனால் FACEBOOK.COM/GNANAMAYAM ல் கேட்கலாம். பிரஹந்நாயகி உரை இதோ எழுத்து வடிவில் :–

உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்! (Post No.8776)

5-10-2020 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அஞ்சலி உரை
உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்!
பிரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் சார்பில் உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறுவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN


காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில்
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம் அன்றோ!
ஆம் மஹாகவி பாரதியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான்.
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு எதுவும் ஈடாகுமா?
லட்சோபலட்சம் மக்கள் பல்லாண்டுகளாகக் கேட்டு மெய்மறந்து இருந்த இசை அதிசயத்தைத் தந்தவர் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி என்ற இந்த மூன்றெழுத்து, இசை உலகில் விளைவித்த அற்புதங்கள், ஏராளம், ஏராளம்.
பதினாறு மொழிகளுக்கும் மேலான மொழிகளில், ஆயிரம் ஆயிரம் பாடல்களை தன் அமுத கானக் குரலால் அள்ளி வழங்கியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும் போது உள்ளமெலாம் கனக்கிறது.


அவர் பாடிய பாடல்களில் இழைந்தோடிய ராகங்கள் ஏராளம்; அவை தந்த உணர்ச்சிகளோ நவ ரஸ உணர்ச்சிகள்.
இருப்பினும் ஆன்மீகத்தில் மனதை மேம்படுத்தி அனைவரையும் உயர ஏற்றிய அவரது பக்திப் பாடல்களை யாராலும் மறக்கவே முடியாது.


மனதை இதமாக வருடும் இனிய குரல், எஸ்.பி.பி.யின் குரல்!
அது ஆன்மாவின் குரலாக அவரது பக்திப் பாடல்களில் கோடானு கோடி இல்லங்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது; ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ப்ரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் என்று லிங்காஷ்டகத்தை இனிய குரலில் பக்தியைக் குழைத்து, சொல்லுக்குச் சொல் இடம் விட்டு, பொருள் புரியும் படி, இசையாக அவர் வழங்கிய விதம் உவமை இலா ஒன்றாகும்.
கோடி கன்யா தானத்தை விட ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பது மேலாகும் என்ற அவரது வில்வாஷ்டக பாடலைக் கேட்போருக்கு மெய் சிலிர்க்கும். என்ன ஒரு அபூர்வமான Presntation!
சங்கரா நாத சரீராபரா என்று மத்யமாவதி ராகத்தில் அவர் வழங்கிய பாடல் அவருக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித் தரவில்லை, பக்தர்களின் ஆழ்மனது அன்பையும் வாங்கித் தந்தது. சங்கராபரணம் பாடல்களைப் பாட முதலில் தயங்கியவர், பின்னர் மிகுந்த உழைப்புடன் கடின பயிற்சி எடுத்துப் பாடினார். வெற்றியும் பெற்றார்.


‘சிவன் எனும் ஒசை அல்லது அறையோ, உலகில் திரு நின்ற செம்மை உளதே’ என்று அப்பர் பெருமான் சிறப்பித்துக் கூறும் அந்த சிவ நாமம் அவரை உயரத்தில் ஏற்றியது!
வரணும் அம்மா வரணும் அம்மா, மூகாம்பிகை தாயே சரணம் அம்மா’ என்ற அவரது தேவியின் பாடல்கள் தாயின் அருளை யாருக்குத் தான் பெற்றுத் தரவில்லை.
நாராயணா என்று பக்தி இழையோடும் அவரது பாடல்கள், ‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்ற ஆழ்வாரின் ரகசியத்தை அல்லவா நமக்குக் கற்றுத் தந்தது!
ஸ்ரீ கணேச பக்தி புஷ்பாஞ்சலியை நாற்பது லட்சம் பேர் இதுவரை கேட்டிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
காவடி பற்றிய அவரது பாட்டு முருக பக்தர்களைக் கவர்ந்ததில் தான் வியப்பேது?

S P B


உள்ளம் உருக்கும் குரலில் அவர் பாடிய ஐயப்ப பக்திப் பாடல் ஒன்றை லட்சோப லட்சம் மக்கள் கேட்டதில், இன்றும் கேட்டு வருவதில் என்ன அதிசயம் இருக்கிறது?
ஐயப்பனைப் பற்றிய அந்தப் பாடலைக் கேட்காதவர், பாடாதவர் யார் உள்ளார்?


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரி விமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா என்ற பாடலுக்கு இணை உண்டா என்ன? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பூவுலகில் இருந்து இசை சேவை செய்து ஓயாமல் உழைத்தது போதும், இவரை நம்மருகில் வைத்துக் கொண்டு இனிய இசையை எந்நாளும் கேட்போம் என்று அனைத்து தெய்வங்களும் எண்ணி அவரைத் தம் அருகில் அழைத்துக் கொண்டனவோ!


உவமை இல்லா ஓசை தரும் இன்பத்தை என்றும் நீ வழங்குவாய், எஸ்.பி.பி உன் புகழ் ஓங்குக என்று கூறி, என் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்தி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி , வணக்கம்!

TAGS – எஸ்.பி.பி , S P B, ஞானமயம், அஞ்சலி ,