அதிதி தேவோ பவ; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! (POST NO.3796)

Written by London swaminathan

 

Date: 7 APRIL 2017

 

Time uploaded in London:- 14-55

 

Post No. 3796

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

விருந்தோம்பல் என்னும் பண்பை தமிழ், சம்ஸ்கிருத இலக்கியம் வலியுறுத்துவது போல உலகில் வேறு எங்கும் காணமுடியாது.

காளிதாசனும், சங்க இலக்கியப் புலவர்களும் இந்தப் பண்பை எப்படி வலியுறுத்துகின்றனர் என்று ஒரு சில எடுத்துக்காட்டுகளின் மூலம் காண்போம்.

 

ஆரிய-திரவிடப் பிரிவினைகள் பொய்மையானவை என்பதும்  இந்திய கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒரே கலாசாரம்தான் என்பதும் இந்த ஒரு பண்பில் — விருந்தோம்பல் — என்னும் பண்பில் தெரிந்துவிட்டது. விருந்தினர்களைக் கவனிக்க முடியாத நிலை வந்துவிட்டதே என்று சீதையும் கண்ணகியும் வருத்தப்பட்டதை நமது இலக்கியங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதிலிருந்தே நமது பண்பாடு ஒன்று என்பது விளங்கும். அதுமட்டுமல்ல தைத்ரீய உபநிஷத் (1-20) காலத்திலிருந்து இதற்காக பல மந்திரங்களும் பாடல்களும் இருப்பது போல உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் காணமுடியாது. வள்ளுவர் எழுதிய திருக்குறள் போன்ற நீதி நூல்களில் இதற்கென்று ஒரு அத்தியாயத்தையே ஒதுக்கியதிலிருந்தும் இது விளங்கும்.

 

அதிதி தேவோ பவ விருந்தினரைக் கடவுளாகக் கருதுக – தைத்ரீய உபநிஷத் (1-20)

காளிதாசரின் ரகுவம்சத்தில்

 

“காட்டில் விளையும், ஆரோக்கியத்தைத் தரும் ‘செந்தினை’ எனும் தானியத்தில் ஒரு பகுதி விருந்தினர்களுக்காக ஒதுக்கப்படுகிறதா? அவைகளை மாடுகள் முதலியன மேய்ந்து சேதமாக்காமல் இருக்கின்றனவா? “(ரகுவம்சம் 5-9)

 

“கருணையுள்ள உமது குரு, உங்களை இல்லற வாழ்வுக்குச் செல்ல அனுமதித்தாரா? ஏனெனில் எல்லா ஆசிரமத்திலுள்ளவர்களுக்கும் உதவுவது இல்லற தர்மம்தான்” (ரகு.5-10)

 

नीवारपाकादि कडंगरीयैरामृश्यते जानपदैर्न कच्चित्|
कालोपपन्नातिथिकल्प्यभागं वन्यं शरीरस्थितिसाधनं वः॥ ५-९

nīvārapākādi kaḍaṁgarīyairāmṛśyate jānapadairna kaccit
kālopapannātithikalpyabhāgaṁ vanyaṁ śarīrasthitisādhanaṁ vaḥ || 5-9

 

 

अपि प्रसन्नेन महर्षिणा त्वं सम्यग्विनीयानुमतो गृहाय|
कालो ह्ययं संक्रमितुं द्वितीयं सर्वोपकारक्षममाश्रमं ते॥ ५-१०

api prasannena maharṣiṇā tvaṁ samyagvinīyānumato gṛhāya
kālo hyayaṁ saṁkramituṁ dvitīyaṁ sarvopakārakṣamamāśramaṁ te || 5-10

 

இதே கருத்து திருக்குறளிலும் உள்ளது:—

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

பொருள்: இல்லறம் நடத்துபவன் மற்ற மூவர்க்கும் ( பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், சந்யாசி) ஒரு துணையாவான்.

 

இன்னொரு இடத்தில், “ரகுவம்சத்தில் பிறந்தவர்கள் உயிரையே கேட்டாலும் கொடுப்பார்கள். ஆகவே விஸ்வாமித்ரர் கேட்டபடி ராமரையும் லெட்சுமணரையும் அவருடன் அனுப்பிவைத் தார் தசரதர்”(11-2) காளிதாசன் சொல்கிறான்.

 

இந்தக் கருத்து புறநானூற்றிலும் வருவது குறிப்பிடத்தக்கது:-

 

……… இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்; பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்

–புறம் 182, க.மா.இளம்பெருவழுதி

 

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல் பற்றி வரும் இடங்கள் கணக்கிலடங்கா; இதோ ஒரு சில எடுத்துக் காட்டுகள்;-

புறம்.173-ல் சிறுகுடி கிழான் பண்ணனை ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாராட்டுகிறான்.

புறம்.18-ல் பாண்டியன் நெடுஞ்செழியனை குடபுலவியனார் பாரரட்டுகையில் உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே; என்ற வரியைப் பாடுகிறார்; இதே வரி பின்னர் மணிமேகலையிலும் வருகிறது.

கோவூர்க்கிழார் பாடிய பாடலில் (புறம்.46), விருந் தின் சிறப்பு தி காட்டப்படுகிறது. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்- தமிழரின் பண்பாடு என்பது கோவூர்க் கிழார் கருத்து; இது குறளிலும் வரும் (322).

 

புறம்.141 (பரணர்), புறம்134 (முடமோசி)-ல் மறுமைப் பயனை மனதிற் கொள்ளாமல்,மக்களின் வறுமையைத் தீர்க்கவே ஈத்துவப்பர் என்று கூறப்படுகிறது.

 

அகம்.203, புறம்.177 முதலிய பாடல்களில் வந்த விருந்தினரை உபசரித்துவிட்டு, அடுத்தவர்க்காக காத்திருக்கும் செய்தி வருகிறது!

மணிமேகலையில் சீழ்தலைச் சாத்த்னார் சொல்லுவது:

 

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்

 

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

 

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை

 

மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

 

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

 

xxxx

FROM MY OLD POST:–

 

கிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்:–

 

நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி

 

வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ

 

மாஸோபாவாசீச பதிவ்ரதா ச

 

ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே

 

பொருள்: இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: தினமும் அன்னதானம் செய்வோர், தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர், வேதம் அறிந்தவர்கள், சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து—சதாபிஷேகம் செய்துகொண்டோர் – மாதா மாதம் உபவாசம் இருப்போர், பதிவ்ரதையான பெண்கள்.

 

–subham–

அர்ஜுனனுக்குப் பரிசு- தங்கம்: கிருஷ்ணனுக்கு கடும் கோபம்!

சாப்பாடு

Written by London swaminathan

Article no. 1719; dated 15  March 2015

Up loaded at 10-26 London time

 

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா, மத்வர், ராமானுஜர் போன்ற பெரியோர்களைப் பற்றியும் இந்து தர்மத்தின் உயர் நோக்கங்கள் குறித்தும் அருமையான புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை அத்தனையும் லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவருடைய மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்ற புத்தகத்தில் தானத்தின் சிறப்பை விளக்க ஐந்தாறு கதைகளை எளிய தமிழில் சொல்லுகிறார். சில கதைகளை கடந்த இரண்டு தினங்களில் கொடுத்தேன். இதோ இன்னும் ( படித்துவிட்டு என் சொற்களில் தருவதால் பிழைகள் இருந்தால் அவை என்னுடையன; மன்னிக்க) ஒரு கதை:

அர்ஜுனனும் கிருஷ்ணனும் நாட்டை வளப்படுத்த ஐந்தாண்டுத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு செம்படவன் அங்கே வந்தான். அர்ஜுனன் காலடியில் தங்கக் கட்டிகளைச் சமர்ப்பித்தான். அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. வழக்கம் போலக் கள்ளக் கிருஷ்ணன் திருவிளையாடல் போலும் என்று எண்ணி கண்ணனைப் பார்த்தான். கிருஷ்ணனோ வெனில் அட நமது பால்ய நண்பன் நமக்குத் தெரியாமல் வேறு ஒரு ‘பிஸினஸ்’ செய்கிறான் போலும் என்று சந்தேகக் கண்ணோடு அர்ஜுனனைப் பார்த்தார்.

ஒரு நொடியில் இருவர் மவுனமும் கலைந்தது. என்னப்பா, இதெல்லாம்? என்று இருவரும் செம்படவனைக் கேட்டார்கள்.

அர்ஜுனன் ஐயா! என்னை மறந்து விட்டீர்களா? ஒரு நாள் பண உதவி கேட்டு உங்களிடம் வந்தேன். நீங்கள் ஒரு பைசா கொடுத்தீர்கள். அதை வைத்து மீன் வலை வாங்கி மீன் பிடித்தேன். ஐயா கை, ரொம்ப ராஸியான கை. நிறைய மீன் கிடைத்தது. மேலும் மேலும் வலைகள் வாங்கி மீன் பிடித்து இப்பொழுது ‘மில்லியனர்’ (கோடீஸ்வரன்) ஆகிவிட்டேன்.

‘என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; செய் நன்றி கொன்ற மகற்கு உய்வில்லை’ என்பதை நீங்கள் அறிவீர்களே. என் நன்றிக் காணிக்கை இது; கையூட்டு அல்ல! என்றான்.

 பரிமாறு

இருவரும் ஒரு வழியாக அவனுக்கு ‘குட் பை’ சொல்லி வழி அனுப்பிவைத்தனர். கிருஷ்ணனுக்கு கோபம் பொங்கி எழுந்தது. பெரிய தப்புச் செய்துவிட்டாயே, அர்ஜுனா! இப்பொழுது இவன் கொன்ற பல்லாயிரக் கணக்கான மீன்களால் அவனுக்கு பாபம் சேர்ந்திரு க்கிறது. அதில்  ஒரு பகுதி உன்னைச் சாரும் என்றார் கிருஷ்ணன்.

இந்தக் கதையைச் சொன்ன சிவா, தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லிவிட்டுக் கீழ்கண்ட காரணங்களைக் கொடுக்கிறார்:

1.அன்னதானத்தில் மேற்சொன்ன கதை போல உயிர்க் கொலைகள் நடக்க வாய்ப்பில்லை (அன்ன தானத்தில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும். சீக்கிய குருத்வாராக்களில் கூட சைவ உணவு மட்டுமே தரப்படுகிறது)

2.அன்னதானம் ஒன்றில் மட்டுமே ‘போதும்’ என்ற எண்ணம் மனதில் வரும். மண், பெண், பொன் ஆகியன எவ்வளவு கிடைத்தாலும் ஆசை அடங்காது. இலையில் அமிர்தமே பரிமாறினாலும் வயிறு நிரம்பிவிட்டால் போதும் போதும் என்று சொல்லி பரிமறுவதைத் தடுப்பார்கள். “வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்” — என்பது பழமொழி.

3.அன்னதானம் போட்டால் ஊரில் தண்டச் சோறும், வேலையசெய்யாத சோம்பேறிகளும் பெருகுவர் என்று பலர் நினைப்பர். ஆயிரம் உதாவக்கரைகள் சாப்பிட் டாலும் அதிலொரு நல்லவர் இருந்து வாழ்த்தினால் அன்னதானம் செய்த குடும்பம் மட்டுமின்றி ஊரே வாழும். “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” — என்பது தமிழர் கண்ட உண்மை.

neelavannan

  1. இதனால்தான் அக்காலத்தில் சாலை வழித் தடங்களில் அன்னதான சத்திரங்களைக் கட்டிவைத்தனர்.

“இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தார்” — என்று பாடியும் வைத்தனர்.

வாழ்க அன்னதானம்! வளர்க கொடையாளிகள்!!

பந்தி போஜனம்