அமெரிக்கக் கவிஞர் லாங் ஃபெலோ (Post No.9771)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9771

Date uploaded in London – –24 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அமெரிக்க இலக்கியத்தில் மறக்க முடியாத கவிதை வரிகளை எழுதியவர் கவிஞர் லாங் ஃபெலோ ஆவார். லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் கவிஞர் மூலையில் (POET’S CORNER IN WESTMINSTER ABBEY, LONDN) சிலை பெற்ற முதல் அமெரிக்கப் புலவரும் ஆவார்.

ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங் ஃபெலோ (HENRY WADSWORTH LONGFELLOW) எழுதிய பால் ரெவியர்ஸ் ரைட் (PAU REVERE’S RIDE)   கவிதை பலர் உள்ளங்களில் அழியா இடம்பெற்றது. அதேபோல அவர் எழுதிய வாழ்விசைப்பாவில் (PSALMS OF LIFE) வரும் காலம் எனும் மணற் கரையில் படிந்த அடிச் சுவடுகள் என்ற (IN THE FOOTPRINTS OF SANDS OF TIME ) வரிகளும் புகழ் பெற்றவை, இதை 100 ஆண்டுக்கு முன்னரே மதுரை ஆசிரியர் கோபாலகிருஷ்ண ஐயர் மொழிபெயர்த்து வெளியிட்டார்.(இணைப்பில் காண்க)

லாங் ஃபெலோ , அமெரிக்காவில் போர்ட்லண்டில் (PORTLAND, MAINE) பிறந்தார். ‘சர்ச் ஆப் இங்கிலாந்து’க்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று பிளிமவுத் காலனி அமைத்தனர். தன்னுடைய பெற்றோர்கள் அந்த அணியைச் சேர்ந்தவர்கள் என்றார் லாங்பெலோ .

1825ல் பட்டம் பெற்றார். மற்றோர்  புகழ்மிகு எழுத்தாளர் நதானியல் ஹாதோர்ன் NATHAIEL HAWTHORNE இவரது வகுப்பில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவர் துவக்க காலத்தில் ஹார்வர்ட் முதலிய கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பித்தார். இதனால் பிறமொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் கொண்டுவரும் முயற்சிக்கு உத்வேகம் கொடுத்தார். பின்னர் கவிதைகளை எழுதிக் குவிப்பதில் முழு மூச்சில் ஈடுபட்டார். கவிதை எழுதுவதன் மூலமே சம்பாதித்து வாழ்க்கை நடத்த முடியும் என்று காட்டிய புலவர் இவர். ஆயினும் சுய வாழ்வில் சில துயர சம்பவங்கள் நிகழ்ந்தன. முதல் மனைவி திருமணமான சில காலத்துக்குள் இறந்தார். இரண்டாவது மனைவி தீ விபத்தில் உயிர் இழந்தார். இந்தத் துயரம் அவரது கவிதையில் எதிரொலிப்பதையும் காணலாம் .

32 வயதில் ‘வாய்சஸ் ஆப் தி நைட்’ (VOICES OF THE NIGHT )என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டவுடன் இவர் புகழ் பரவியது . இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பல்லட்ஸ் (BALLADS) என்ற தொகுப்பு வெளியானது. அதிலுள்ள கிராமப்புறத்துக் கருங்  கொல்லன் (VILLAGE BLACKSMITH) கவிதை எல்லோராலும் விரும்பப்பட்டது . லாங்பெலோவுக்கு கதை சொல்லும் ஆற்றல் இருந்ததால் அதைக் கவிதைகளில் பயன்படுத்தினார் . அமெரிக்க வரலாறு, அமெரிக்காவின் பங்குடி மக்களின் புராணம் ஆகியவற்றைக் கவிதையில் வடித்துக்கொடுத்தார் .

இந்த வகையில் மூன்று கவிதைகளைச் சொல்லலாம்

1.ஹயாவதாவின் பாட்டு THE SONG OF HIAWATHA- அமெரிக்க பழங்குடியினரின் கதை ;

2.எவாஞ்சலின் EVANGELINE – அமெரிக்காவில் குடிபுகுந்த பிரெஞ்சு மக்களின் கதை;

3.தி கோர்ட்ஷிப் ஆப் மைல்ஸ் ஸ்டாண்டிஷ் THE COURTSHIP OF MILES STANDISH– இங்கிலாந்திலிருந்து குடிபுகுந்தவர்கள் இடையே மலர்ந்த காதல் கதை.

லாங் ஃபெலோ பிறந்த தேதி — பிப்ரவரி 27, 1807

இறந்த தேதி —  மார்ச் 24, 1882

வாழ்ந்த காலம் – 75 ஆண்டுகள்

படைப்புகள்

1839- VOICES OF THE NIGHT

1841 – BALLADS

1847- EVANGELINE

1849 – THE SEASIDE AND THE FIRESIDE

1855- THE SONG OF HIAWATHA

1858- THE COURTSHIP OF MILES STANDISH

1863- TALES OF WAYSIDE (Including Paul Revere’s side)

1880 – ULTIMA THULE

XXX

OLD ARTICLES IN MY BLOG ON LONGFELLOW:-

லாங்பெலோ | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ல…

  1.  

1 Oct 2015 — … நூலகம் முதலியவற்றில் கண்டாலோ, தயவுசெய்து எழுதுங்கள். ஆங்கிலக் கவிஞன் ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்பெலோ எழுதிய புகழ் …

longfellow | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › longfellow

  1.  

WRITTEN BY R. NANJAPPA. Post No. 8471. Date uploaded in London – – – 8 August 2020. Contact – swami_48@yahoo.com. Pictures are taken from various​ …


H W Longfellow | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › h-…

  1.  

7 Oct 2018 — Henry Wadsworth Longfellow wrote some of the most well-known poems in American literature, including ‘Paul Revere’s Ride’. He was the first …

Swami’s Indology Blog: BHARTRUHARI NOTES- 1 (Post No …

http://swamiindology.blogspot.com › 2019/11 › bhartr…

  1.  

30 Nov 2019 — … educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. … Compare Longfellow’s English poem.

–SUBHAM–

tags – அமெரிக்கக் கவிஞர், லாங் ஃபெலோ

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் (Post N.9737)

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன்  (Post N.9737)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9737

Date uploaded in London – –18 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் (Walt Whitman) ஆவார் . அவர் எழுதிய லீவ்ஸ் ஆப் கிராஸ் (Leaves of Grass) என்னும் கவிதைத் தொகுப்பு உலக இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.

பிறந்த தேதி – 31-5-1819

இறந்த தேதி – 26-3-1892

வாழ்ந்த ஆண்டுகள் 72

Publications:–
1855 Leaves of Grass
1865 Drum Taps
1865-86 Sequel to Drum Taps
1871 Democratic Vistas
1875 Memoranda during the War
1882 Specimen Days and Collect

அமெரிக்காவில் லாங் ஐலண்டில் பிறந்தார். ப்ரூக்ளினில் வாழ்ந்தார்.அவருடைய தந்தை ஒரு மரத் தச்சர். விட்மன், கிராமப்புற பள்ளிகளில் பயின்றார். ஒரு அச்சக  ஊழியர் ஆக வாழ்க்கையைத் துவங்கினார். பெரும்பாலும் லாங் ஐலண்டில் இளமைப் பருவத்தைக் கழித்ததால் அந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டு மயங்கினார் இதனால் இவரது படைப்புகளில் இயற்கை கொஞ்சி விளையாடுவதைக் காணலாம்.

ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளராக மாறி நியூயார்க்கில் பனி புரிந்தார். ஒரு முறை நியூ ஆர்லியன்ஸ் செல்ல நேரிட்டது. அப்போது தான் வெளி உலகத்தை அறிந்தார். அடக் கடவுளே! இந்த உலகம் இவ்வளவு பெரியதா, இவ்வளவு வித விதமான மனிதர்கள் இருக்கிறார்களா என்று ஒரே வியப்பு! வயதும் இளம் வயது . பின்னர் நியூயார்க் நகருக்குத் திரும்பி வந்தார். அந்த நகரத்திலும் புதியோர் வருகையால் பெரிய மாறுதல்கள்  ஏற்பட்டுக்கொண்டிருந்தன, புதியோரின் வருகையும், பல தேச மக்களின் வருகையும் அமெரிக்க மக்களின் சுதந்திர தாகமும் இவரைப் புதுக்கவிதைகள் எழுத ஊக்குவித்தன.

அவருடைய புதுக்கவிதைகளை வெளியிட எல்லோரும் மறுத்துவிட்டனர். பாலியல் விஷயங்களை அவர் பட்டவர்த்தனமாக எழுதியதும் எதுகை மோனை இல்லாமல் வசன கவிதை (Blank Verse) எழுதியதும் பதிப்பாளர்களைக் கவரவில்லை.

அவரே சொந்த செலவில் 36 வயதானபோது ‘லீவ்ஸ் ஆப் கிராஸ்’ கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதில் இயற்கை, மனித சுதந்திரம், மனிதர்களின் சகோதரத்துவம் ஆகியவற்றைப் பிரதிபலித்தார்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது அவர் நர்சாக (Nurse)  பணியாற்றினார்.போர்க் கால அனுபவங்களை கவிதைகளாக எழுதி ட்ரம் டேப்ஸ் (Drum Taps) என்ற பெயரில் வெளியிட்டார்.

ஆப்ரஹாம் லிங்கன் இறந்தவுடன்  வால்ட் விட்மன் எழுதிய கவிதை ‘O Captain ! My Captain!’ ஓ கேப்டன் மை கேப்டன் என்பது மிகவும் பிரபலம்  அடைந்தது. இதன் மூலமும் இவர் புகழ் அதிகரித்தது.

O Captain! My Captain!

BY WALT WHITMAN

O Captain! my Captain! our fearful trip is done,

The ship has weather’d every rack, the prize we sought is won,

The port is near, the bells I hear, the people all exulting,

While follow eyes the steady keel, the vessel grim and daring;

                         But O heart! heart! heart!

                            O the bleeding drops of red,

                               Where on the deck my Captain lies,

                                  Fallen cold and dead.

O Captain! my Captain! rise up and hear the bells;

Rise up—for you the flag is flung—for you the bugle trills,

For you bouquets and ribbon’d wreaths—for you the shores a-crowding,

For you they call, the swaying mass, their eager faces turning;

                         Here Captain! dear father!

                            This arm beneath your head!

                               It is some dream that on the deck,

                                 You’ve fallen cold and dead.

My Captain does not answer, his lips are pale and still,

My father does not feel my arm, he has no pulse nor will,

The ship is anchor’d safe and sound, its voyage closed and done,

From fearful trip the victor ship comes in with object won;

                         Exult O shores, and ring O bells!

                            But I with mournful tread,

                               Walk the deck my Captain lies,

                                  Fallen cold and dead.

xxxx

விட்மன் பற்றிய முந்தைய கட்டுரைகள் :–

அமெரிக்காவைக் கலக்கிய …

https://tamilandvedas.com › அமெ…

19 Nov 2017 — வால்ட் விட்மன் (Walt Whitman) என்ற புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர், … வால்ட் விட்மன் இறந்தபோது இங்கர்சால் ஆற்றிய இரங்கல் உரை​ …

அமெரிக்கா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › அ…

2 Jul 2019 — ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com)) … உலகப் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞரான வால்ட் விட்மன் “அமெரிக்கா பாடுவதை நான் …

Walt Whitman | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › walt-whitman

18 Nov 2017 — Compiled by London Swaminathan. Date: 18 NOVEMBER 2017. Time uploaded in London- 20-35. Post No. 4409. Pictures shown here are …

AMERICA’S GREAT POET WALT WHITMAN (Post No.5512 …

https://tamilandvedas.com › 2018/10/06 › americas-gre…

1.     

6 Oct 2018 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. AMERICA’S GREAT POET WALT WHITMAN (Post No …

tags-  அமெரிக்கக் கவிஞர், வால்ட் விட்மன், Walt Whitman