சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீகுருகைக் காவலப்பன் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது பெருமையை மணக்கால் நம்பியிடமிருந்து அறிந்த ஆளவந்தார், அவரைக் காணச் சென்றார்.
ஆளவந்தார் என்பவர் ஸ்ரீ நாதமுனிகளின் பேரன். அவர் சென்ற நிமிடம் குருகைக் காவலப்பன் தியானத்தில் இருந்தார். ஆளவந்தாருக்கும் அவருக்கும் இடையே ஒரு பெரிய தட்டி இருந்தது. அதற்குப் பின்னால் நின்று அவர் நீண்ட நேரம் காத்திருந்தார்.
திடீரென்று ஒரு சத்தம் வந்தது, “ அங்கே யாராவது சொட்டை வந்திருக்கானா? என்று.
சொட்டை என்பது நாதமுனிகள் வம்சத்தினரின் குடும்பப்பெயர். ஆளவந்தாருக்கு மிகவும் ஆச்சரியம். குருகைக்காவலரைத் தரிசித்துவிட்டு, நான் மறைவான தட்டிக்கு அந்தப் பகத்தில் நின்றேனே, நான் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார்.
ஸ்ரீமன் நாராயணன் லெட்சுமி தேவி வந்தால் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டாதவர். அவர் என் தோள் பட்டையை அமுக்கிக்கொண்டு இரண்டு மூன்று தடவை நீ இருக்கும் திசையை எட்டிப் பார்த்தார். இப்படிப்பட்ட பாக்கியம் சொட்டை குடும்பத்துக்கு உண்டு என்று எனக்குத் தெரியும். ஆகையால்தான் அவரது குடும்பத்தினர் வந்திருக்கிறார்களோ என்று வினவினேன் என்றார்.
சொட்டை நம்பி ஆளவந்தார்
பேரழகி லெட்சுமி; பெரும் செல்வத்துக்கு அதிதேவதை; அவளுடைய வலையில் கூட எளிதில் சிக்காத பகவான், பக்தர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவான்! அவன் கருணைப் பெருங்கடல்!
ஆதாரம்: மோக்ஷ சாதன ரஹஸ்யம் (சுப்பிரமணிய சிவா எழுதியது)


You must be logged in to post a comment.