கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்! (Post No. 2402)

rama_guha

Written by S NAGARAJAN

Date: 18 December 2015

 

Post No. 2402

 

Time uploaded in London :– காலை 8-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!

 

ச.நாகராஜன்

 RAMAYAN STATUES2,FB

கவிஞர்களின் பார்வையில் பட்ட எதுவுமே கவிதையாகும்! அதுவும் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாஸங்களிலும் புராணங்களிலும் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் மீது அவர்கள் பார்வை பட்டதென்றால் நமக்கு சுவையான கவிதைகள் தானே, கிடைக்கும்! கவிதைகள், தானே கிடைக்கும்!

 

1872ஆம் ஆண்டு பம்பாயில் வெளியிடப்பட்ட சுபாஷித ரத்னாகர(ம்) என்ற நூலில் இடம் பெறும் சம்ஸ்கிருதப் பாடல் இது.

 

சீதை ராமர் ஆக, ராமர் சீதை ஆவார்

 

கீடோயம் ப்ரமரி பவேத்விரதத்யானாத்தயா சேதஹம்                

ராம: ஸ்யாம் த்ரிஜடே ஹதாஸ்மி புரதோ தாம்பத்ய சௌக்யச்யுதா  I                   

 

 

ஏவம் சேத் க்ருதக்ருத்யதைவ பவிதா ராமஸ்தவ தியானம்                          

சீதா த்வம் ச நிஹத்ய ராவணரிபும் கந்தாஸி ராமாந்திகம் II

 

கீடம் – புழு ; ப்ரமர் – வண்டு ; ரிபு — எதிரி

 

 

சுவாரசியமான கருத்தைத் தெரிவிக்கிறார் கவிஞர் இதில். இதன் பொருளைப் பார்ப்போம்.

 

சீதையும், விபீஷணனின் பெண்ணான த்ரிஜடையும் அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதை த்ரிஜடையை நோக்கி, “ ஓ, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள்

 

 

இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்!

RAMA,SITTINNG,FB

 

நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)

எப்படிப்பட்ட அபாரமான கற்பனை!

 

 

இது அமைந்துள்ள விருத்தம் சார்த்தூலவிக்ரிதிதம் என்ற சந்தத்தில் அமைந்துள்ள அருமையான செய்யுள்!

 

 

 

ராகவேந்திரரும் வானரேந்திரரும்

 

ராகவேந்திரருக்கும் (ராமர்) வானரேந்திரருக்கும் (சுக்ரீவர்) ஒரே பிரச்சினை தான்! அதனால் என்ன நடந்தது? இருவரும் நண்பராக ஆகி விட்டார்கள். கவிஞ÷ ´ÕÅரின் கவிதையைப் பார்ப்போம்:

 

 

ச ராகவேந்த்ரோ ஹ்ருதராஜதார: ச வானரேந்த்ரோ ஹ்ருதராஜதார: I          

ஏவம் தயோரத்வனி தைவயோகாத் சமானஷ்கிலவ்யசேஷு சக்யம் II

 

ரகுவம்சத் தலைவனான ராமன் தன் மனைவியை அபகரித்த நிலையில் இருந்தான். வானரத் தலைவனான சுக்ரீவனும் அதே போல தன் மனைவி அபகரிக்கப்பட்டவனாக இருந்தான்! விதியின் விளைவாக இருவரும் சந்தித்தனர். இருவருக்கும் ஒரே பிரச்சினை இருந்ததால் நண்பர்களாக ஆகி விட்டனர்!

தாரம் இழந்த ராகவேந்திரன், தாரம் இழந்த வானரேந்திரனைச் சந்திக்கவே சக்யம் (நட்பு) ஏற்பட்டது – இருவருக்கும் பிரச்சினை ஒன்றே என்பதால்!

 

 

நல்ல கற்பனையில் நமக்குக் கிடைத்தது அற்புதமான ஒரு செய்யுள்!

 

 

இது போன்ற தனிப்பாடல்கள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. தமிழிலும் உள்ளன.

சுவைக்க நேரமும், மனமும் வேண்டும்!

 

சம்ஸ்கிருதம், தமிழில் உள்ளவற்றை மனமூன்றிப் படிப்போம்; உயர்வோம்!!

***********