காற்றில் அசுத்தம்: 5-ஆவது ஆட்கொல்லி! (Post No. 2392)

The India Gate monument in New Delhi, India, enveloped by a blanket of smog

Radio Talk written by S NAGARAJAN

Date: 15 December 2015

 

Post No. 2392

 

Time uploaded in London :– 6-15 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 air pollution 4

  1. காற்று மாசு இந்தியாவில் ஐந்தாவது பெரும் ஆட்கொல்லி!

 

     சுற்றுப்புறச் சூழ்நிலை மாசினால் வெளிப்புறக் காற்றும் மாசு அடைந்து மனிதனின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லி ஆகிறது.

 

 

    உயர் இரத்த அழுத்தம், வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மாசடைந்த காற்று, புகை பிடித்தல், ஊட்டச் சத்தில்லா உணவு ஆகிய நான்கு காரணங்களினால் இந்தியாவில் ஏராளமானோர் இறக்கின்றனர். இதை அடுத்து ஐந்தாவது காரணமாக வெளிப்புறத்தில் ஏற்படும் காற்று மாசினால் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரைப் பறி கொடுக்கின்றனர். க்ளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global burden of Disease) தனது அறிக்கையில் இவ்வாறு அறிவித்துள்ளது.

 

 

 

     ஆறுலட்சத்து இருபதினாயிரம் பேர் இப்படி காற்று மாசினால் தங்கள் ஆயுளைக் குறுக்கிக் கொண்டு இறக்கின்றனர் என்று தெரிவிக்கும் இந்த அறிக்கை இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இந்தியாவில் இறப்பவரின் எண்ணிக்கை உலகில் இது போல காற்று மாசினால் இறப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினராக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையையும் அறிவிக்கிறது.

 

 

    காற்றிலே உள்ள மாசானது சுவாசக் கோளாறுகளையும் இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்குகிறது. இதனால் குறுகிய ஆயுளுடன் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் காற்று மாசின் மோசமான விளைவுகளை அதிகமாகக் காண்கிறோம்.

 

 

   உலகளாவிய அளவில் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் பேர் காற்றில் உள்ள மாசினால் ஏற்படும் வியாதிகளால் இறக்கின்றனர். இரண்டாயிரமாவது ஆண்டில் 8 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்து இப்போது 32 லட்சமாக ஆகி இருப்பது பெரும் கவலை அளிக்கும் விஷயம் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் பொருள் என்னவெனில் நாம் மிகவும் அரிதான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 740 லட்சம் மனித ஆண்டுகளை இழக்கிறோம் என்பது தான் என்கின்றனர்.

 

 air pollution

    ஆகவே காற்று மாசு பற்றிய விழிப்புணர்ச்சியை ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் ஏற்படுத்துவது நமது தலையாய கடமை ஆகிறது!

*************