கீதை, வேதம் பற்றிய பழமொழிகள்

சாந்தம்

Compiled by London swaminathan

Article No.1927

Date :12th June 2015

Time uploaded in London: 9-25 am

கீதா கங்கோதகம் பீத்வா புனர்ஜன்ம ந வித்யதே

பகவத் கீதையையும், கங்கை நீரையும் அருந்தியவருக்கு மறு பிறப்பு என்பதே இல்லை

கீதா சுகீதா கர்தவ்யா கிமந்யை: சாஸ்த்ர விஸ்தரை:

கீதையை நன்றாகப் படிக்க வேண்டும். மற்ற சாஸ்திரங்களால் என்ன பயன்? – மஹாபாரதம்

ஒப்பிடுக:

பகவத் கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜல லவ கணிகா பீதா

சத்க்ருதபி யேன முராரி சமர்ச்சா

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா – பஜகோவிந்தம்,20

பொருள்:கீதையைக் கொஞ்சமேனும் படித்தவர்களுக்கு, கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பருகியவருக்கு முரஹரியை (கண்ணன்) ஒரு முறையாவது வனங்கியவருக்கு யமனுடன் சண்டை போட வேண்டியது வராது (பீஷ்மர் போல நீங்கள் நினைத்த நேரத்தில் அமைதியாக, ஆனந்தமாக, சுற்றம் புடைசூழ நிற்க, உயிர் துறக்கலாம்)

இதிஹாச புராணாப்யாம் வேதம் சம உப ப்ரும்மயேத் – மஹாபாரதம்

வேத மந்திரங்களை இதிஹாச புராணங்கள் வாயிலாக விளங்கிக் கொள்ள வேண்டும்

ருஷயோ மந்த்ர த்ருஷ்டார:

ரிஷிகள் மந்திரத்தைக் கண்டவர்கள் (இயற்றியவர்கள் அல்ல; ஐன்ஸ்டைன், நியூட்டன் சொன்ன விதிகள் போல அவை முன்னமே உள்ளன; என்றும் இருப்பன)

சின்ன பையன்கள்

வேதோகில தர்மமூலம் (மனு 2-6)

எல்லா  தர்மங்களுக்கும் வேதங்களே வேர் போன்றவை

பாரதே பாது பாரதி

பாரத தேசத்தில் பாரதி (சம்ஸ்கிருதம்) பிரகாசிக்கட்டும் (வாழ்க சம்ஸ்கிருதம் என்று பொருள்)

வேதானாம் சாமவேதோஸ்மி – பகவத் கீதை

வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்

ஸ்ரவணசுகசீமா ஹரிகதா – ப்ரசங்காபரணம்

கேட்பதில் கிடைக்கும் சுகங்களில் உயர்ந்தது ஹரிகதை கேட்கும் சுகமாகும்.

ஸ்ருதிர்விபன்னா ச்ம்ருதயஸ்ச பின்னா: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வேதங்கள் வேறு; ஸ்மிருதிகள் வேறு (வேதங்கள் சொல்வதை திருத்தவே முடியாது. ஸ்மிருதிகளை பெரியோர்கள் ஒவ்வொரு காலத்திலும் திருத்துவர் அல்லது புதிதாக எழுதுவர்)

ஸம்ஸ்க்ருதி: ஸம்ஸ்க்ருதாஸ்ரிதா

பண்பாடு, சம்ஸ்கிருதத்தை அண்டி வாழ்கிறது.

சர்வஞானமயோ ஹி ச:

வேத இலக்கியமே அனைத்து அறிவும் அடங்கிய களஞ்சியம்.

சர்வம் வேதாத் ப்ரசித்யதி

வேதத்திலிருந்தே எல்லாம் கிடைக்கிறது

சர்வத சம்ஸ்க்ருதீ பூய சுகின: சர்வ சந்து சர்வதச

எல்லாவிதத்திலும் பண்பட்டு எப்போதும் சௌக்கியமாக வாழுங்கள்!

ஸ்துதா மயா வரதா வேத மாதா – அதர்வ வேதம்

வரங்களை அளிக்கும்  வேத மாதா என்னால் தொழப்பட்டாள்.

Pictures are from Face book friends; probably from Art of Living Centre.

–SUBHAM-