பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! (Post No.7769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7769

Date uploaded in London – 1 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?- part 2

நேற்றைய கட்டுரையில் திருக்குறளில் வந்த பார்ப்பான், அந்தணர் குறள்களைக் கண்டோம். இன்று ஒரு அழகான பார்ப்பன மகனைக் காண்போம்.

சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உள . அதற்குப் பின்னர் நாலாம் நூற்றாண்டு முதல் திருக்குறள்  உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் உருவாயின. கீழ்கண்ட குறுந்தொகைப் பாடல் சங்க கால நூல்களில் ஒன்றான குறுந்தொகையில்  உளது.

பார்ப்பன  மகனே  பார்ப்பன  மகனே

செம்பூ  முருக்கி  னன்னார்  களைந்து

தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்துப்

படிவ வுண்டிப் பார்ப்பன  மகனே

எழுதாக் கற்பினின் சொலுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்து முண்டோ  மயலோ விதுவே

-குறுந்தொகை பாடல் எண் 156

– பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன் பாடியது

பாட்டின் பொருள்-

(தலைவியிடத்தில் ஆசைகொண்ட தலைவனை பாங்கன் இடித்துரைத்த போது , தலைவன் பாங்கனை நோக்கி நீ திட்டுவதால் பயன் ஒன்றுமில்லை என்றது )

பார்ப்பன  மகனே ! சிவப்பு நிறப் பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கிவிட்டு , அதன் தண்டோடு , கமண்டலத்தைக் கீழே வைத்துக் கொண்டு, விரத உணவு மட்டும் சாப்பிடும் பார்ப்பன மகனே ! என்றும் எழுதப்படாத வேதத்தைக் கற்று வந்தாயே , உன்னுடைய அருமையான  அறிவுரைக்குள்  பிரிந்து போன கணவன் மனைவியைச்  சேர்த்து வைக்கும் மருந்து இருக்கிறதா ? நீ என்னைத் திட்டுவது அறியாமையால் வந்ததே” .

கருத்து – நீ என்னை இடித்துரைப்பதால் பயன் யாதும் இல்லை.

இந்த காட்சியைக் கொஞ்சம் கற்பனை செய்வோம். காதலனுக்கும் காதலிக்கும் இடையே பிணக்கு; பிரிந்து போய்விட்டார்கள். பாங்கன் என்பது பார்ப்பன தூதன். அவன் வந்து காதலனை அல்லது கணவனைக் கடிந்து கொள்கிறான். அவன் உருவத்தை வருணித்து விட்டு, நீ என்னைத் திட்டுவதை நிறுத்து. நீ

கற்ற வேதத்துக்குள் இருவரையும் சேர்த்துவைக்கும் வசிய மந்திரம் ஏதேனும் இருக்கிறதா? வெறுமனே என்னைத் திட்டுவதால் பயன் ஒன்றுமில்லை.

பாடலில் வரும் ‘மருந்து’ என்பதை உ.வே.சாமிநாதையர் ‘பரிகாரம்’ என்று எழுதி அதற்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகளைத் தருகிறார் .

ஆனால் பாடலில் நான் சொல்ல வந்த விஷயம் வேறு-

பார்ப்பனர் மட்டுமே தூதர் வேலை செய்ய முடியும் என்று தொல்காப்பியமும் சொல்லும்; புறநானுறும் காட்டும். ஏனெனில் அவர்கள் லஞ்சம் வாங்க மாட்டார்கள்;  பொய் சொல்ல மாட்டார்கள். சிலப்பதிகாரத்திலும் மாதவியிடமிருந்து கோவலனுக்கு மன்னிப்புக் கடிதம் கொண்டு வந்தது பார்ப்பனர் என்றும்  படிக்கிறோம்.

இரண்டாவது முக்கிய விஷயம்– முருக்கு ; அதாவது பலாச மரம் எனப்படும் புரச மரத்தால் ஆன கம்பை , தடியை பார்ப்பனர்கள் / பிம்மச்சாரிகள், சந்யாசிகள் வைத்திருப்பர்; கமண்டலமு ம் ஒரு உறியில் தொங்கும்; இதைப் பழந்தமிழ் நூலான தொகாப்பியமும் செப்பும்-தொல் .மரபு. 70 ; பேராசிரியர் உரை

மூன்றாவது முக்கிய விஷயம் – படிவ உண்டிப் பார்ப்பனன்- இது முல்லைப் பாட்டிலும் (வரி 37); அதாவது கண்ட நேரத்தில், கண்ட உணவைச் சாப்பிட மாட்டார்கள்.

அந்தணர் என்போர் அறவோர் , துறவியர் என்பதை  வள்ளுவத்தில் கண்டோம். அதை உறுதிப் படுத்துகிறது இப்பாட்டு .

எழுதாக் கற்பு

வேதத்தை மிக அழகாக வருணிக்கிறார் பாண்டியன்  நெடுங்கண்ணன் ; வேதத்தை எழுதவே கூடாது ; கேள்வியால் — காதில் கேட்பதால் மட்டுமே – ‘சுருதி’ – கற்க வேண்டும் என்பதை 2000 ஆண்டுக்கு முன்னரே மக்கள் பெருமை படக் கூறினர் .

கற்பு’ என்பதை கற்ற விஷயம் என்று பழைய உரை கூறுகிறது ஆனால் எனக்கு வேறு ஒரு கருத்தும் புல ப்படுகிறது . பெண்ணின் ‘கற்பு’ பற்றி தமிழும் சம்ஸ்கிருதமும் விதந்து ஓதுகின்றன. ‘எழுதாக் கற்பு’ என்பதை எழுதினால் அதன் கற்பு , அதாவது புனிதத் தன்மை , போய்விடும் என்று கருதித்தான் பாண்டியன் நெடுங்கண்ணன் அந்தச் சொல்லை இங்கு போட்டாரோ !

மற்ற இடங்களில் எல்லாம் சங்கத் தமிழ் புலவர்கள் வேதம் என்பதைக் குறிக்க ‘நான் மறை’, ‘அரு மறை’, ‘வேதம்’  என்ற சொற்களையே பயன்படுத்துகின்றனர் .

Xxx

திருவள்ளுவர் ஆண்டு கி.மு.31 உருவான கதை !

திருக்குறளில் வரும் மொழி மாற்றத்தைக் காட்டி மொழியியல் ரீதியில் அது பிற்கால  நூல்  என்று பேராசிரியர் வையாபுரிப பிள்ளை நிரூபித்தார். ஆயினும் திருக்குறள் பற்றிய மகாநாட்டில் காரசார விவாதம், வெளிநடப்பு நடந்தவுடன் கி.மு. 31

தான் அவரது ஆண்டு என்று ‘கட்டைப் பஞ்சாயத்து’ செய்தனர். இதற்குக்  காரணம் இல்லாமல் இல்லை.

எல்லிஸ் துரை , ஜி  யூ போப் போன்ற கிறிஸ்தவர்கள் செயின்ட் தாமஸ்  சென்னை விஜயம் பற்றிய கட்டுக் கதைகளைப் பரப்பிவிட்டு திருவள்ளுவருக்கு ஏசு கிறிஸ்துவை நன்றாகவே தெரியும் என்று பரப்பிவிடனர் . அவர்கள் மண்டையில் ஆணி அறைந்து சவப்பெட்டிக்குள் அடக்கி வைக்க தமிழர்கள் போட்டார்கள் ஒரு போடு! “ஏசுவுக்கு 31 ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்டா ! எங்கள் வள்ளுவன் என்று அடித்துப் பேசினர்” . கிறிஸ்தவர் கூட்டமும் அடங்கியது. வள்ளுவரும் உயிர்தப்பினார். அந்தக்கால மகாநாட்டு பத்திரிக்கைச் செய்திகளைப் படித்தோருக்கு விவரம் தெரியும். ஆனால் அவர்கள் அவ்வளவு கஷ்டமே பட்டிருக்க வேண்டாம். திருக்குறளின் கடவுள் வாழ்த்திலேயே 7 குறள்களில் உருவ வழிபாட்டுடன்தான் கடவுள் வாழ்த்தைத் துவக்கினார். பின்னர் துறவறவியலில் 140 குறள்களில் பகவத் கீதையின் 700  ஸ்லோகங்களை ஜூஸ் பிழிந்து ஒரே கிளாஸ்ஸில் தமிழனுக்குக்  கொடுத்து விடுகிறார் .முதல் குறளையும் கடைசி குறளையும் ஸம்ஸ்கிருதச் சொல்லில் அமைத்து சம்ஸ்கிருதம் அழியக்கூடாதென்று சபதம் செய்கிறார். ஒவொன்றுக்கும் அதிகாரம் என்று சம்ஸ்கிருதப் பெயர் சூட்டுகிறார் .  நூ ற்றுக் கணக்கான குறள்களில் சம்ஸ்கிருதச் சொற்களை பயன்படுத்திவிட்டு “டேய் தமிழா ! கவலைப் படாதே ! திருக்குறள் உள்ளவரை இந்து மதமும் அழியாது; சம்ஸ்கிருதமும் அழியாது” என்று மனதில் நினைத்துக் கொண்டு சமாதி ஆனார்.

–subham–

tags — திருவள்ளுவர் ஆண்டு,  பார்ப்பன மகனே, குறுந்தொகை, அந்தணர் என்போர் யார்?- part 2

குறுந்தொகை அதிசயங்கள்

kannaki cooking

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1449; தேதி 1 டிசம்பர், 2014.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் உண்டு எனவும் அதில் பத்துப் (10) பாட்டு+ எட்டு (8)த்தொகை அடக்கம் எனவும் கண்டோம். சங்க காலத்துக்குப் பின்னர் திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றியதையும் அறிவோம். எட்டுத்தொகை நூலில் ஒன்றான பதிற்றுப்பத்து அதிசயங்களைக் கண்டோம். பின்னர் புறநானூற்று அதிசயங்களைக் கண்டோம். இன்று எட்டுத் தொகை நூலில் மேலும் ஒரு நூலான குறுந்தொகை என்னும் நூலின் அதிசயங்களைக் காண்போம்.
குறுந்தொகையில் குடும்ப உறவு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் இருக்கின்றன. இவை குறுகிய அடிகளைக் கொண்ட சின்னச் சின்ன பாடல்கள்.

தமிழர்கள் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் என்றால் நீண்ட பட்டியலையே தரலாம். பெரும்பாணாற்றுபடையில் எந்தெந்த ஜாதியினர் வீட்டுக்குப் போனால் என்னென்ன உணவு கிடைக்கும் என்று அழகாகப் பாடி வைத்துள்ளனர். ஆயினும் குறுந்தொகை உணவு பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

வற்றல் குழம்பும் தயிர் சாதமும்

ஒரு தோழி அவள் நண்பி நடத்தும் திருமண வாழ்வை அறிய அவள் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாள்– பின்னர் திரும்பி வந்து அப்பெண்ணின் தாயிடம் சொன்னாள்,
“அடியே! உன் மகள் வீட்டுக்குச் சாப்பிடப் போனேன். நல்ல அருமையான தயிர் சாதமும் வற்றல் குழம்பும் சமைத்து வைத்திருந்தாள். நல்ல வாசனை! தாளித்துக் கொட்டியிருந்தாள். அடுப்பின் புகை தாளாமல் எல்லாவற்றையும் புடவையிலேயே துடைத்துக்கொண்டாள்; கணவனோ அதை ரசித்து, ருசித்து சுவைத்து சாப்பிட்டான். அவள் முகம் மலர்ந்தது:–
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
……………………………….
தான் துழந்து இட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின் – (கூடலூர்க் கிழார், 167)

பாடல் 277ல் ஓரில் பிச்சையார் வேறு ஒரு உணவு பற்றிப் பாடுகிறார். அதோ ! நாய்கள் நுழைய முடியாத (அந்தணர்) தெருவில் நெய் கலந்து வெண்சோறு போடுவர். உன் செம்பில் வெந்நீரும் தருவர். அதைப் பெறும் துறவியாரே என் கணவர் எப்போது வருவார்? வாடைக் காலம் வந்துவிட்டதா? என்று ஒரு த்ரிகால ஞானியிடம் ஒரு பெண் வினவுகிறாள். துறவிகள் முக்காலம் உணரும் த்ரிகால ஞானிகள் என்று தொல்காப்பியம் செப்பும் (தொல்.புறத்.20). ஐயர்கள் வசிக்கும் தெருவில் நாய்களோ கோழிகளோ போகக் கூடாது என்று பெரும்பாணாற்றுப்படையும் செப்பும் (வரிகள் 298-301).

குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திகள் என்ற கட்டுரையில் ஒரு குரங்கு, கணவன் உயிர் இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை எழுதி இருந்தேன். அதுவும் பொறுப்புடன் தன் குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்புவித்துவிட்டு மலை முகட்டில் இருந்து விழ்ந்து இறந்தது. இது கணவனுடன் உடன் கட்டை ஏறும் ‘’சதி’’ போன்றது (பாடல் 69)

கார்க்கியர் என்று உபநிஷதத்தில் ஒருரிஷியின் பெயர் உண்டு. எப்படி புறநானூற்றில் வால்மீகி, மார்க்கண்டேயன் போன்ற பெயர்கள் உளதோ அதே போல குறுந்தொகையில் கார்ர்கியர் என்ற ரிஷி பெயரில் ஒரு புலவர் இருக்கிறார். சாண்டில்யன் , மஹாபாரத சல்லியன் பெயரிலும் புலவர்கள் இருக்கின்றனர். தமிழைக் கிண்டல் செய்து பின்னர் கபிலரிடம் தமிழ் கற்று ஒரு தமிழ்ப் பாட்டும் பாடிய வட நாட்டு ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன் என்பவனும் குறுந்தொகைப் புலவனே!!
dhenupureeswar, chennai
Dhenupureeswar Temple, Chennai

சம்ஸ்கிருதச் சொற்கள்
குறுந்தொகையில் பல புலவர்கள் தயக்கமின்றி பல சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாளுவர். அவையாவன:–

அகில், அச்சிரம், அமயம், அமிழ்தம், அரசன், அவை, இமயம், ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கமண்டலம், கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், நேமி, பக்கம், பணிலம், பருவம், பலி, பவழம், பிச்சை, மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம், வாசம் (உ.வே.சாமிநாத அய்யர் தந்த பட்டியல்)

தமிழ்ப் பெண்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையவர்கள். அடுத்த பிறப்பிலும் நீயே கணவனாக வரவேண்டும் என்று விரும்பினர் என்று அம்மூவனார் பாடுகிறார் (பாடல் 49)
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை

பழந்தமிழ் வழக்கங்கள்

பறையும் சங்கும் ஊதி திருமணம் செய்தல் (ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரத்திலும் உண்டு), திருமணம் செய்த பின்னர் பெண்ணின் சிலம்பைக் கழித்தல், சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுதல், முதியோர் சென்று திருமணம் பேசுதல், பிறையைத் தொழுதல் ஆகியவற்றைக் குறுந்தொகை நமக்கு அளிக்கிறது.

dance,odisi

குறுந்தொகை அளிக்கும் தமிழ் பொன்மொழிகள்

பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே (பாடல் 115)
பெரிய நன்மையைச் செய்தால் போற்றாதோர் உண்டோ

நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற் குரியதன்று (143)
புகழையே விரும்பும் நல்ல மனிதனிடம் உள்ள பொருள் அவனிடம் தங்காது எல்லோருக்கும் பயன்படுவது போல

திறவோர் செய்வினை அறவது ஆகும் (247)
திறமையுள்ளோர் செய்யும் காரியம் அறத்துடன் பொருந்தியது — (தர்மம் உடையது)

சன்றோர் புகழும் முன்னர் நாணுப;
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே (252)
பெரியார், தம்மைப் புகழ்வதற்கு முன்னரே வெட்கப்படுவர். அப்படிப்பட்டவர்கள் பழிச் சொல்லைக் கூறினால் பொறுத்துக் கொள்வரோ?

புலவர்களின் விநோதப் பெயர்கள்
சில புலவர்களின் பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சிறப்பு சொற்றொடர் காரணமாகவோ அதையே அவர்களுக்குப் பெயராக வைத்துள்ளனர். இது போல ரிக்வேத முனிவர்கள் பெயரிலும் பல பெயர்கள் இருக்கின்றனர்!!

செம்புலப்பெயல் நீரார், கயமனார், அணிலாடு முன்றிலார், நெடு வெண் நிலவினார், மீன் எறி தூண்டிலார், விட்ட குதிரையார், ஓரேர் உழவனார், கூவன் மைந்தன், காலெறி கடிகையார், ஓரில் பிச்சையார், கல் பொரு சிறு நுரையார், கள்ளில் ஆத்திரையனார், குப்பைக் கோழியார், பதடி வைகலார், கவை மகன், கங்குல் வெள்ளத்தார், குறியிரையார். — இவர்களில் 13 பேரின் பெயர்கள் அவர்கள் பாடிய பாடல்களில் வரும் சொற்கள்!!

_HY29BONALU-2__1533282g
Bonalu festival

இன்னும் சில சுவையான செய்திகள் இதோ:–

பாடல் 61: சிறுவர் இழுத்துச் செல்லும் குதிரை வண்டி பொம்மை
பாடல் 156: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! என்று துவங்கும் பாடலில் வேதத்தை எழுதாக் கற்பு என்ற மிக அழகிய சொல்லால் வருணித்துவிட்டு கணவன் மனைவியைச் சேர்த்துவைக்கும் மந்திரம் ஏதேனும் வேதத்தில் உண்டா என்று கேட்கிறார் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.

பாடல் 300: கடல் சூழ் மண்டிலம் என்ற சொற்கள் இந்தப் பூமி உருண்டையானது என்பது தமிழர்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டும். கோப்பர்நிகசுக்கு முன்னரே இந்தியருக்குத் தெரிந்த சாதாரண விஷயம் இது.

பாடல் 135: வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் = “தோழி! வேலைதான் ஆடவர்க்கு உயிர், மனைவியர்க்கு கணவன் தான் உயிர்!”
பாடல் 1: பெண்களுக்கு பூ கொடுக்கும் வழக்கம்

குறுந்தொகையில் வரும் கடவுளர்

பாடல் 1:முருகன்
பாடல் 362: முருகனுக்கு ஆட்டுக் குட்டி பலி
பாடல் 218: சூலி என்னும் துர்க்கையை வணங்குதல், தமிழ் பெண்கள் காப்பு நூல் அணியும் வழக்கம், சோதிடம் கேட்கும் வழக்கம்
பாடல் 267:யமன்
பாடல் 87:மரா மரக் கடவுள்
பாடல் 89, 100: கொல்லி மலைப் பாவை
பாடல் 372: சுனாமி, நில அதிர்ச்சி, கடல் எல்லை மாறுதல் (இவை பற்றி நற்றிணை, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுபத்திலும் உண்டு)
பாடல் 361: காதலன் வாழும் மலைப் பகுதியில் வெள்ளத்தில் அடித்து வந்த காந்தள் கிழங்கைக் கொஞ்சி அதை நட்டு வைத்துக் கணவன் போல எண்ணி மகிழ்தல்
பாடல் 151: இப்பாடலில் வரும் வங்கா என்ற பறவை மடகாஸ்கர் தீவிலும் உண்டு.
பாடல் 119: யானையைப் படாத படுத்தும் வெள்ளைப் பாம்பு (இது என்ன பாம்பு என்பது ஆய்வுக்குரியது)

400 பாடல்களிலும் நனி சுவை சொட்டும்; படித்து இன்புறுக!
–சுபம்–