

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 23 NOVEMBER 2019
Time in London – 8-20 AM
Post No. 7251
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000


ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைப் (நீயே கடவுள்/ தத் த்வம் அஸி) பின்பற்றும் சந்யாசிக்கள் பத்து சிறப்புப் பெயர்களைக் கொண்டிருப்பர். சிருங்கேரி மடத்திலுள்ள சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘பாரதி’ என்றும் காஞ்சி மடத்தின் சங்கராச்சார்யார்களின் பெயர்கள் ‘சரஸ்வதி’ என்றும் இருக்கும். இதுபோல மொத்தம் பத்து சிறப்பு அடைமொழிகள் உண்டு. அவையாவன
பாரதி, சரஸ்வதி, புரி, தீர்த்தர், ஆஸ்ரம, வன, ஆரண்ய, கிரி, பர்வத, சாகர என்ற பின்னொட்டுகள் (suffix) மடாதிபதிகளின் பெயருடன் சேர்க்கப்படும். எடுத்துக் காட்டாக காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர இந்திர சரஸ்வதி என்றும், அவருக்கு அடுத்தவர் ஜய இந்திர சரஸ்வதி என்றும் , அடுத்து வந்தவர் விஜய இந்திர சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஏனைய மடங்களின் சிறப்பு பின்னொட்டுகள் (SUFFIX OR EPITHETS):-
துவாரகா பீடாதிபதிகள் – ஆஸ்ரம அல்லது தீர்த்த
கோவர்தன மடாதிபதிகள் – வன அல்லது ஆரண்ய
பத்ரிநாத் ஜோதிர் மடாதிபதிகள் – கிரி, பர்வத, சாகர
பல பெயர்களிலும் இயற்கை அம்சங்கள் (காடு, மலை, நீர்நிலை, ஊர், காட்டிலுள்ள குடிசை) ஒட்டிக்கொண்டு இருப்பதை நோக்கவும். அல்லது சரஸ்வதி (பாரதி) பெயர் இருக்கும்.
xxx
சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்:–
குருநானக், அங்கத, அமர்தாஸ், ராம்தாஸ், குரு அர்ஜுன் தேவ், ஹரிகோவிந்த, ஹரி ராய், ஹரி கிருஷ்ண, குரு தேஜ்பகாதூர், குரு கோவிந்த சிம்மன் (பாரதியாரால் பாடப்பட்டவர்)

xxxx
உபசாரங்கள் பத்து
இறைவனைப் பூஜிக்கையில் 32 வகை உபசாரங்கள் செய்ய வேண்டும்; அதில் பாதி 16 (ஷோடஸ); அதுவும் முடியாவிடில் குறைந்தது 10 உபசாரம் செய்வர்; அவையாவன-
அர்க்யம், பாத்யம், ஆசமனம், ஸ்நானம், வஸ்த்ரம், கந்தம், புஷ்பம், தீபம், தூபம் நைவேத்யம்.
இதுவும் முடியாதவர்கள் தினமும் பூப்போட்டு ஏதேனும் பழத்தைப் படைக்கலாம் (நைவேத்யம் செய்யலாம்).
Xxxx
தச இந்திரியம்
ஆக்கிராணம், உபத்தம், சட்சு, சிங்குளம், சுரோத்திரம், தொக்கு, பாணி, பாதம், பாயுரு, வாக்கு.
xxx
காவிய குணங்கள் பத்து–
செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி
Xxx
ரிக் வேதத்தில் பத்து ராஜாக்கள்
தச ராக்ஞ யுத்தம் எனப்படும் பத்து அரசர் போர் ரிக் வேதத்தில் பல கவிஞர்களாலும் பாடப்பட்ட போர்- இது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்ச்சி. அந்த பத்து ராஜாக்கள் யாவர்:–
அனு, த்ருஹ்யு, புரு, துர்வாசு, யது, பக்த, பலானஸ், அலின, விசானின், சிவ (சிம்யூ, வைகானஸ் என்ற பெயர்கள் அவர்களில் சிலருடைய மாற்றுப் பெயர்கள்). இவர்கள் அனைவரும் வசிஷ்டரைக் குருவாகக் கொண்ட சுதாஸைத் தாக்கினர். சுதாஸ் வெற்றி வாகை சூடினார்.
xxx
பிரம்மாவின் பத்து புத்திரர்கள்
மரீசி, அத்ரி, ப்ருகு, ஆங்கிரஸ, நாரத, புலஸ்த்ய, புலஹ, க்ரது, ப்ரசேதஸ், வசிஷ்ட
பிரம்மாவுக்கு பத்து சரீர புத்ரர்களும் பத்து மானஸ புத்ரர்களும் இருப்பதாகப் புராணங்கள் பகரும்.
—subham–