
Nataraja Picture posted by Veda
முக்கியப் பண்டிகைகள்: ஜனவரி 1- புத்தாண்டு தினம், 2-ஆருத்ரா தரிஸனம், 13- போகிப் பண்டிகை, 14- மகர ஸங்கராந்தி, பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், 24-ரத ஸப்தமி 26- குடியரசு தினம், 30- காந்திஜி நினைவு நாள், 31-தைப்பூஸம்
அமாவாசை- 16
பௌர்ணமி- 2, 31 சந்திர கிரஹணம்,
ஏகாதஸி உண்ணாவிரத நாட்கள்- 12, 27/28
Compiled by London Swaminathan
Date: 25 DECEMBER 2017
Time uploaded in London- 9-04 am
Post No. 4544
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks
2018 ஜனவரி நற்சிந்தனைக் (ஹே விளம்பி மார்கழி/தை) காலண்டர்

ஜனவரி 1 திங்கட் கிழமை
திவம் எனப்படும் ஆகாயத்திலே நுழையும் பொழுது
சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கே தேவர்களெனப் பெயர் 11-1-6-7
ஜனவரி 2 செவ்வாய்க் கிழமை
சுவாசத்தை மித்திரன் என்பார்கள்; ஏனெனில் அவன் எல்லாருடைய நண்பனாகும் (நண்பன்= மித்திரன்)- சதபத பிராமணம் -4
ஜனவரி 3 புதன் கிழமை
வருஷத்திற்கு துரிதம் என்று பெயர்; ஏனெனனில் அவனே அனைத்தையும் துரிதமாக்குவான் 8-4-1-4 துரிதம்= சீக்கிரம்
ஜனவரி 4 வியாழக் கிழமை
தேவர்கள் சிருஷ்டிக் காலத்தில் பகல் ஒளி போல் மின்னியபடியால் அவ்வொளிக்கே தேவர்கள் எனப் பெயர்- 10-1-1-67
ஜனவரி 5 வெள்ளிக் கிழமை
சந்திரனிடமிருந்து அவன் ஒளியை எடுத்துக்கொண்டபடியால் (ஆ-தா) சூரியனுக்கு ஆதித்யன் என்று பெயர் (திதிகள் ஏற்படுவதைக் குறிக்கிறது)

ஜனவரி 6 சனிக் கிழமை
எது உலகத்தை எல்லாம் சுற்றி வளைத்திருக்கிறதோ (ஆப்த) அதற்கு ஆபம் அல்லது ஜலம் எனப் பெயர் 2-1-1-4
ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை
சிக்கிமுக்கி அடிக்கட்டை மேல் கட்டைக்கே ஊர்வசி- புரூருவன் எனப்பெயர். நெய்ப் பாண்டமே ஆயு என்னும் அவர்கள் பிள்ளையாகும்-3-4-1-22
ஜனவரி 8 திங்கட் கிழமை
புவியிலுள்ள எல்லா பொருள்களிலும் வீசி அவைகளை எல்லாம் எதையும் செய்யச் செய்வதால் வாயுவிற்கு விசுவ கர்மன் எனப் பெயர் -8-1-17
ஜனவரி 9 செவ்வாய்க் கிழமை
செவி எல்லாப் புறமும் செவியுறுவதால் அதற்கு எல்லாத் திசையின் சிநேகிதன் (மித்திரன்) எனப் பெயர்; இதனால் செவியை விசுவாமித்ரன் என்பர் 8-1-2-6
ஜனவரி 10 புதன் கிழமை
தேவர்களுக்கு மர்மமாய் மொழிவதிலேயே பிரியமுண்டு -6

ஜனவரி 11 வியாழக் கிழமை
ஒருவன் விரதமுடன், பட்டினி கிடந்தால அ க்கினி முதலிய தேவர்கள் அவன் மனத்தால் அனைத்தையும் பார்த்து அங்கு வசிப்பதால் அப்படி இருப்பதற்கு உப வாசம் எனப் பெயர் 1- 1- 1 -7
ஜனவரி 12 வெள்ளிக் கிழமை
அசுரர்கள் ரோஹிணி என்னும் நெருப்பால் சுவர்க்கம் செல்லலாம் என நினைத்தார்கள். இந்த ரோஹிணி நெருப்பிற்கே ரோஹிணி நட்சத்திரம் என ஜனங்கள் சொல்லுவார்கள். அற்புதமாயுள்ள நெருப்பிற்கே கிருத்திகை எனப் பெயர் 2-1-2-16
ஜனவரி 13 சனிக் கிழமை
சிரஸ் என்பது சிறந்ததைக் காண்பிப்பதாகும். தலையே சிறந்தது. ஆதலால் அதையும் குறிக்கும். இதனாலேயே சமூகத்தில் சிறந்தவனாய் உள்ளவனையும் சிரேஷ்டன் என அழைப்பது 1-4-5-5
ஜனவரி 14 ஞாயிற்றுக் கிழமை
விருத்திரன் கொல்லப்பட்டவுடன் துர்க்கந்தம் வீசி சலத்தில் நுழைந்தான். சலத்திற்கு இது பிடிக்கவில்லை; அதனால் விருத்திரன் எழுச்சியாகி புதரானபடியால் இதுவே தர்ப்பை என்னும் புல்லாயிற்று 7-2-3-2
ஜனவரி 15 திங்கட் கிழமை
நேர்வழியை சுவர்கம் என்று சொல்லுவார்கள் 13-12-15

ஜனவரி 16 செவ்வாய்க் கிழமை
பக்தி என்றால் தியாகத்திற்குப் பெயர் 7-2-2-4
ஜனவரி 17 புதன் கிழமை
புளித்த தயிரும் தேனும் சிறந்த உணவாகும் 5
ஜனவரி 18 வியாழக் கிழமை
சத்தியக்ஞர் சொல்லுவதாவது இப்புவி முழுவதும் எந்த இடமும் தெய்வீகமாகும் 3-1-1-4
ஜனவரி 19 வெள்ளிக் கிழமை
சுவர்க்கம் என்பது பூமியின் பொய் வடிவமாகும்

ஜனவரி 20 சனிக் கிழமை
தேசத்திலே தலைமைப் பதவி ஒருவனுக்கே அளிக்க வேண்டும் 8-3-2-7
ஜனவரி 21 ஞாயிற்றுக் கிழமை
சோமபான ரசம் பிழிவதென்பது அசுரர்களை அறைத்துக் கொல்லுவதாகும் 3-9-4-2
ஜனவரி 22 திங்கட் கிழமை
தாமரை இலை ஜலத்தில் மிதப்பது போல பூமி ஜலத்திலே மிதக்கின்றது
ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை
தேகத்திற்கு அவசியமான உணவு திருப்தியை அளிக்கும்; அதிகமான உணவு தீமையை அளிக்கும் 10-4-1-4
ஜனவரி 24 புதன் கிழமை
வெண்மை ஆகாச வடிவம்; கருப்பு பூமி வடிவம்; சிவப்பு வான வடிவம் 3-2-1-3
ஜனவரி 25 வியாழக் கிழமை
ஆதியிலே எத்தனை தேவர்கள் உண்டோ அத்தனை தேவர்கள் இப்பொழுதும் உண்டு 8-7-1-9

ஜனவரி 26 வெள்ளிக் கிழமை
தேகத்திலுள்ள அழுக்கே பொய் எனப்படும் 3-1-2-10
ஜனவரி 27 சனிக் கிழமை
அக்கினி பிராமணன் ஆகையால் அவனுக்கு பிராமணன் என்று பெயர்.அவன் பிராணன் ஆகிப் பிரஜகளைப் பாது காப்பதால் அவனுக்கு பரதன் எனப் பெயர். அவனுக்கே ஆதி புரோஹிதன் ஹோத்திரம் எனப் பெயர். அவன் ரதத்தைப்போல் எதையும் எடுத்துச் செல்வதால் அவனூக்கு ரதி என்றும் பெயர் 1-4-2
ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை
ஆட்சி புரிவது புகழாகும்- 6-7-3-7
ஜனவரி 29 திங்கட் கிழமை
சூரியன் என்னும் கொக்கியில் ஜகமெல்லாம் தொங்கும்
ஜனவரி 30 செவ்வாய்க் கிழமை
நிலத்தில் உழத் தெரிந்தவனே அறிஞனாகும் 7-2-2-9

ஜனவரி 31 புதன் கிழமை
ஸ்திரீ ஒருவருக்கும் தீங்குமை புரிவதில்லை 6-1-3-2
xxxxxx
உதவிய நூல்: யஜூர் வேதக் கதைகள், எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004

–subham–