தேர்தலும், ஊழலும், அரசியல்வாதியும்!!! (Post No.8900)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8900

Date uploaded in London – – 7 NOVEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தேர்தலும், ஊழலும், அரசியல்வாதியும்!!!

Compiled by Kattukutty

தேர்தல்

யாரோ வீடு கட்ட நாம் எடுத்து வைக்கும் செங்கல் !!!              ஆர்.பாலு ,புதுவை-3

XXX

அடுத்த சுரண்டலுக்கு விடப்படும் டெண்டர்!!!                          டி. தேசிகன்,திருச்சி-6

XXX

ஆளும் கட்சி மருமகளும்எதிர்கட்சி மாமியாரும் சேர்ந்து

ஜன நாயக கணவன் கழுத்தை நெரிப்பது!!!         புளியரை கணேசன்,சென்னை – 30

XXX

நரிகளுக்கு ஆடுகளே நாட்டாமை வழங்கும் நிகழ்ச்சி     

                                                                          செல்வ. தியாகராஜன்,  திருக்கடையூர்

XXX

அகவை அறுபதுக்கு மேலாகியும் மூளை வளர்ச்சியடையாத

புத்திரன் .                                                                          வி.ஆர்.சந்திரன், சென்னை – 23

XXX

அரசியல்வாதிகளுக்கு “சீசன் டிக்கட்”, பொது மக்களுக்கு

லாட்டரி டிக்கட் “!!!                                                               பி.எஸ் வசந்தா,சென்னை -4

XXX

ஒரு நாள் தவறுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை தரும்

நீதி மன்றம் !!!                                                                      ஆர்.திலகவதி,சென்னை – 38.

XXX

இந்திய வாக்காளர்கள் விடை தேடிக் கொண்டிருக்கும் புதிர்!!!

                                        எஸ். ரேணுகா தேவி, சென்னை -28

XXX

வோட்டுக்களை வாங்குவதற்கு நோட்டுக்களை நீட்டிஜனநாயகத்திற்கு வேட்டுக்களை வீசும் விசித்திர விழா !!!

                                                ஜெ. பாலா, இடைப்பாடி

XXX

குடிசைப் பகுதியில் கார் மட்டுமல்லகாசும் புரளும் திருநாள்!!!

                                         மணி வண்ணன், சென்னை-43

XXX

ஐந்து ஆண்டுகளுக்கு அப்பாவி(க்ளுக்கு நடத்தும்

காது “குத்தும்” திருவிழா!!!                      ரா. கோவிந்த ராஜு, கோனேரிராஜபுரம்

XXX

மக்களின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் பிரும்ம நேரம்!!!

                                            கேசாந்தி, சோழன் மாளிகை

XXXX

ஓட்டுப் போட்டவன் தார் ரோட்டில்ஓட்டால்ஜெயித்தவன்

கார் சீட்டில்!!!                              போந்தூர் வே.ல.ஏழுமலை, மேல் மருவத்தூர்

XXXX

ஆண்டுக்கு ஒரு முறை வருவது ஏப்ரல் தினம்

ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வருவது ஏமாளிகள் தினம் !!!

                                               ஏ.உமா, சென்னை – 112

XXXX

இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று எழும் தினம்!!!      சரவணன், புவனகிரி

பிராந்தி கடையில் காந்தி ரூபாய் நோட்டாகதேர்தல் தினத்தன்று

                                             அர்ஜுன் பாபு, சென்னை – 73

XXX

அரசியல்வாதி

மக்களுக்கு தெரிந்த கொள்ளைக்காரர்கள்!!!                       ம.சாந்தி, மீன் சுருட்டி

அன்று நாட்டிற்காக உழைத்தார்கள்இன்றுநோட்டுக்காக

உழைக்கிறார்கள்!!!                                                  விருதை ஜெயராஜ், விருது நகர்

XXX

தாத்தாவின் தேசமல்ல பாப்பா

தாதாவின் தேசமடி பாப்பா                                          ஜி.பழனி, ஊத்துக் கோட்டை

XXX

நாடு என்னும் நீரைசேறாக்கும் எருமை.                     இ.கரிகாலன்,சென்னை- 23

XXXXX

ஊழல்

ஊழல் என்பது, முகவரி தொலைத்தவர்களைக் கூட சரித்திர

நாயகர்களாக்கும் அட்சய பாத்திரம்!!!                                 இ.நாச்சி முத்து ஈரோடு-9

XXX

அரசியல்வாதியின் ஆனந்த பானமாய் மாறும் அறியா மக்களின்

வியர்வைத்துளிகள்                                   தஞ்சை கலைவாணர்தாசன், கோட்டையூர்

XXXX

தனக்குத்தானே கட்டிக கொள்ளும்சமாதி                              விமலா சுகுமார் திருச்சி.

XXX

உண்மை உழைப்புக்கு சமாதி எழுப்பத் துடி துடிக்கும் குட்டிச்

சாத்தான் !!!                                                                எல்.சண்முக சுந்தர், இராமநாதபுரம்-

XXXX1

ஐந்து வருட ஆட்சியில் முன்னேற்றம் காணும் ஒரே துறை!!!

                                                   எஸ்.சுகந்தி, சென்னை -33

XXX

அடுத்தவர் புரிவது !!!                                              ஆர்.ஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம்

image of Kattukuty

tags — ஊழல், அரசியல்வாதி, தேர்தல்

அதிசயம் நிறைந்த ‘தேர்தல் புகழ்’ உத்தரமேரூர் (Post No.6239)

SUNDARAVARADARAJA TEMPLE, UTTARAMERUR

Written by London swaminathan


swami_48@yahoo.com


Date: 8 April 2019


British Summer Time uploaded in London – 8519 AM

Post No. 6239

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

உத்தரமேரூர் கோவிலுக்குச் சென்று திரும்பிய பின்னர் அது பற்றிய அருமையான புத்தகம் கிடைத்தது. அடக் கடவுளே! இந்தப் புத்தகம் முன்னரே கிடைத்திருந்தால் ஒரு நாள் முழுதும் உத்தரமேரூருக்கு ஒதுக்கியிருக்கலாமே என்று வருத்தப் பட்டேன்.

உத்தரமேரூர் , செங்கல்பட்டுக்கு அருகில் இருக்கிறது. சென்னையிலிருந்து இரண்டரை மணி நேர்த்தில் செல்லலாம்.

சென்னையிலிருந்து லண்டனுக்குப் புறப்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற தொல்பொருட்துறை நிபுணர் டக்டர் இரா. நாகசாமியைச் சந்தித்து (2-4-2019) ஆசிபெற்றேன். அவர் எழுதிய உத்தரமேரூர் என்ற புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அளித்தார். அத்துடன் மேலும் பல புத்தககங்களையும் அன்புடன் வாரி வழங்கினார். 2 கிலோ 3 கிலோ எடையுள்ள புஸ்தகங்களை அடுத்த முறை எடுத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு ஐந்தாறு புஸ்தகங்களுடன் விமானம் ஏறினேன்.

அவர் புஸ்தகத்தில் எழுதிய விஷயங்களைவிட வேறு எவரும் எழுத முடியாது. ஆகையால் அந்தப் புத்தகத்தின் தலைப்புகளை மட்டும் தருகிறேன். அடுத்த முறை உத்தரமேரூருக்குச் செல்லுகையில் அதைப் படித்துவிட்டுச் செல்ல வேண்டும்.

உலகிலேயே ஜன நாயகம் பற்றிய முதல் குறிப்பு ரிக்வேதத்தில் சபை பற்றிய குறிப்பில் வருகிறது. இன்றுவரை அந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லை தமிழிலிலும் (அவை) இந்தியிலும் (லோக் சபா, ராஜ்ய சபா) பயன்படுத்தி வருகிறோம்.

இதற்கு அடுத்தபடியாக தேர்தல் பற்றிய தெளிவான, விரிவான ஜனநாயக முறை– குடவோலை முறை– சோழர் காலத்தியது. ஆயிரம் ஆண்டுப் பழமையான அக் கல்வெட்டு உத்தர மேரூர் கோவிலில் உளது. அதனால் அது நாடு முழுதும் புகழ் பெறுவிட்டது. யார் தேர்தலில் நிற்கலாம், நிற்கக்கூடாது என்ற முழுத் தகவலையும் டாக்டர் நாகசாமி விரிவாக எழுதியுள்ளார்.

ஊர்ச்சபா மண்டபத்தில் தேர்தல் கல்வெட்டு இருக்கிறது இப்பொழுது அது வைகுண்டப்பெருமாள் கோவிலுடன் சேர்ந்துவிட்டது

நந்தி வர்மன் (கி.பி 750) காலம் முதல் தற்காலம் வரை 100 கல்வெட்டுகளுக்கு மேல் கிடைக்கின்றன.

ஆண்டுதோறும் இங்கே மஹபாரதம் நிகழ்த்திக் காட்டப்படுகிறது

உத்தரமேர்ரூரில் உள்ள முக்கியக் கோவில்கள்

சுந்தரவரதர் கோவில்

வைகுண்டப் பெருமாள் கோவில்

கைலாசநாதர் கோவில்

கேதாரீஸ்வரர் கோவில்

பாலசுப்ரமண்யர் கோவில்

எல்லாக் கோவில்களிலும் கல்வெட்டுகள் உள்ளன.

1300 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்ட கிராமம் இது. ஆயினும் அதற்கு முன்னரே கிராமம் மக்கள் வாழும் இடமாக இருந்தது.

டாக்டர் நாகசாமி புத்தகத்தில் உள்ள விவரங்களின் தலைப்புகள்:-

பத்துக்கும் மேலான கோவில் விவரங்கள்

தேர்தல் பற்றிய முழு கல்வெட்டு

பாபுக்கடி மருந்து கல்வெட்டு

ஆகம சாத்திர கல்வெட்டு

பேராசிரியர் நியமன கல்வெட்டுக

இலக்கணப் பள்ளிகள்

வேதப் பள்ளிகள்

வைரமேக தடாகம்

திருப்புலிவனம்

நிறைய படங்கள்

சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் அடித்தளத்தில் உள.

பாலசுப்ரமண்யர் கோவில்- எட்டாம் நூற்றாண்டு – அருணகிரிநதரால் பாடப்பெற்றது.

கைலாசநாதர் கோவில், சப்தமாதர் கோவில், கேதாரேச்வரர் கோவில்களிலும் கல்வெட்டுகள் உள.

அருமையான அப்சரஸ் ஓவியத்தின் வண்ணப்படமும் புத்தகத்தில் உள்ளது.

VAIKUNDA PERUMAL TEMPLE WITH IMPORTANT INSCRIPTION, UTTARAMERUR
KAILASANATHAR TEMPLE

–SUBHAM–