
Compiled by london swaminathan
Date: 9 April, 2016
Post No. 2708
Time uploaded in London :– 10-19 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
Modesty Anecdotes (Translated by London swaminathan)
அடக்கம், பணிவு பற்றி மேலும் சில துணுக்குகளைப் பார்ப்போம்:-

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!
பிரான்சு நாட்டில் லியோனில் ஒரு வழக்கு நடந்தது. அதைப் பார்க்க நீதி மன்றத்துக்கு வழக்கத்திற்கு மாறாக, நிறைய பெண்கள் வந்திருந்தனர். அந்த வழக்கு விசாரணையில் வரும் வாதங்கள் பெண்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பது நீதிபதிக்குத் தெரியும். ஆகவே அவர் சொன்னார்: “இன்றைய வழக்கின் போக்கு, தன்மை தெரியாமல் இன்று அதிகமான பெண்கள் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே கண்ணியமிக்கப் பெண்கள் அனைவரும் கோர்ட்டின் அறையிலிருந்து வெளியேறுமாரு கேட்டுக் கொள்கிறேன்”.
இப்படிச் சொன்ன பிறகும் ஒரு பெண் கூட வெளியேறவில்லை. நீதிபதிக்கு ஒரே கோபம். மீண்டும் சொன்னார்:
“காவலரே! இங்கு வருக! கண்ணியமான பெண்கள் எல்லோரும் வெளியேறிவிட்டார்கள். இதோ இங்கே இருக்கிறதே, இதுகளை வெளியே தள்ளுக” என்றார்.
அந்தப் பெண்கள் அனைவருக்கும் ‘கல்தா’ கிடைத்தது!
‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’, ‘அடியாத மாடு படியாது’ என்பன தமிழ்ப் பழமொழிகள். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.
Xxx
முதல் வரிசையில் எந்த ‘சீட்’?
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹ்யூஜஸ் என்பவரை நியூயார்க் நகர பத்திரிகையாளர்கள் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அதே விருந்துக்கு பல வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் அழைக்கப்பட்டி ருந்தனர். மந்திரியை எந்த இடத்தில் உட்கார வைப்பது என்பது அறியாது அவர்கள் திகைத்தனர். இதற்கு நல்ல தீர்வு, அவரிடமே கேட்பதுதான் என்று எண்ணி, தயங்கித் தயங்கி, அவரிடமே போய்க் கேட்டும் விட்டனர். இதற்குக் காரணம் அப்போதுதான் பத்திரிக்கைகளில், இடம் பற்றிய சர்ச்சை, வரிசை அறிந்து ஒழுகாமை என்பதெல்லாம் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.
சங்க காலப் புலவர்களில் பலர், மன்னர்கள் தங்களுக்கு முதல் மரியாதை செய்ய வில்லை என்று கோபித்துக்கொண்டு பாடிய பாடல்கள் புற நானூற்றில் உள்ளன. வரிசை அறிந்து ஒழுகல் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.
“மாண்புமிகு அமைச்சரே! உங்களுக்கு முதல் வரிசையில் இடம் போடுகிறோம். எந்த இடத்தில், யாருக்கு அருகில் உங்களுக்கு இடம்போடுவதை நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று பத்திரிக்கையாளர்கள், மரியாதை கலந்த தொனியில், கேட்டனர்.
அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்:
“நான் முதலில் இருக்க விரும்புவது ஒரே இடத்தில்தான்; தீவிபத்து ஏற்பாட்டால், முதலில் நிற்க (வெளியே ஓடுவதற்காக) விரும்புவது நான்தான். மற்ற இடங்களில் எங்கே இடமிருந்தாலும் பரவாயில்லை.” ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்.
–சுபம்–
You must be logged in to post a comment.