பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401)

written by  London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 7 September 2018

 

Time uploaded in London – 6-47 am (British Summer Time)

 

Post No. 5401

 

 

பிரியாடிக் டேபிள் (periodic table) எனப்படும் மூலக     அட்டவணையில் 80-ஆவது இடத்தைப் பிடித்த மூலகம் பாதரஸம். இது ஒரு விநோதமான மூலகம். திரவ ரூபத்தில் இருக்கும். கண்ணாடி முதலியவற்றில் ஒட்டாது. சிறிய வெப்பம் இருந்தாலும் விரிவடையும். இதனால் உடலில் உள்ள சூட்டை அளக்க இதை தெர்மாமீட்டரில் பயன்படுத்தினர். இதன் விநோதத் தன்மையால் இதைக் கொண்டு ஈயத்தையும் இரும்பையும் தங்கம் ஆக்கலாம் (alchemy) என்று உலகம் முழுதும் நம்பிக்கை இருந்தது. ஒருவர் தலை முடியில் பாதரஸம் இருக்கும் அளவைக் கொண்டு அவர் இவ்வித (alchemy or transmutation of metals) ஆராய்ச்சியில் ஈடுபட்டாரா அல்லது காம சம்பந்தமான (syphilis) நோய்களுக்கு மருந்து சாப்பிட்டாரா என்று இறந்த பின்னரும் தலை முடி காட்டிவிடும். இது அந்தக்காலம். இப்பொழுது மெர்க்யுரி எனப்படும் பாதரஸம் (Mercury) விஷம் என அறிந்ததால் அதை உள்ளுக்கு சாப்பிடும் மருத்துகளில் கலப்பது இல்லை.

 

 

நமது ரிஷி முனிவர்கள் ஈயம், இரும்பு தாமிரம் ஆகியவற்றிலிருந்து தங்கத்தை உண்டாக்கியது உண் மையாக இருக்கலாம். ஆனால் மேலை நாட்டில் எந்த ஒரு ரஸவாத ஆராய்ச்சியும் இதை நிரூபிக்கவில்லை. விஞ்ஞானம் இன்று வரை நம்பாத அஷ்டமா சித்திகள் , இந்துமத முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் உண்டு. ஆகையால் அவர்கள் இப்படி ஒரு சித்தியைப் பெற்றதில் வியப்பில்லை.

 

பாதரஸம் எப்பொழுதுமே திரவ நிலையில் (liquid state) இருக்கும் ஒரு உலோகம் என்ற நம்பிக்கை தகர்ந்து போன ஒரு சம்பவம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1759-ஆம் ஆண்டில் இரண்டு ரஷ்ய விஞ்ஞானிகள் சைபீரியாவில் வேறு ஒரு சோதனைக்காக சென்றனர். ஏ. பிரவுனும் எம்.வி. லோமோனோசோவும் உப்பையும் பனிக்கட்டியையும் கலந்து வெப்பத்தைத் தாழ்த்தும் சோதனை செய்தனர். அமிலத்தையும் பனிக்கட்டியையும் கொண்டு மேலும் வெப்பநிலையைக் குறைக்கலாமா என்றும் ஆரய்ந்தனர். வெப்பத்தை அளக்க முயன்றபோது தெர்மாமீட்டரில் (வெப்பமானி) பாதரஸம் நகரவில்லை! கண்ணாடிக்குள் அது கட்டியாக நின்றவுடன் அதை உடைத்து வெளியே எடுத்தால் கம்பி போல வந்தது. மற்ற உலோகக் கம்பிகளை வளைப்பது போல வளைக்கவும் முடிந்தது. அப்பொழுது முதல் பாதரஸ  மும் ஒரு சாதாரண மூலகமே என்று உலகம் உணர்ந்தது.

கலோமல் (calomel) எனப்பட்டும் மெ ர்க்யுரிக் குளோரைடு (Mercuric chloride) பேதி மருத்தாகவும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் மருந்தாகவும் இந்தியா உள்பட பல நாடுகளில் உபயோகத்தில் இருந்தது. சீன மருந்துகளில் இப்பொழுதும் பாதரஸ கூட்டுப்பொருட்கள் கலக்கப்படுகின்றன. மேலை நாடுகளில்  தோல் நோய்களுக்கு வெளியே (Skin Ointments) பூசும் களிம்புகளில் மட்டும் இருக்கும். இது விரைவில் ஆவியாகக் கூடியதால் சோதனைச் சாலைகளில் சுவாசிப்பதன் மூலம் நுரையீரலில் புகுந்து பலவிதக் கேடுகளைத் தந்தது.

கடல் மீன்களைச் சாப்பிடுவோர் (tuna, Sword fish) இந்தக் கேடுகளுக்கு அதிகம் ஆட்படுவர். நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்களில் இது இருந்தாலும் மிக மிகக்குறைவே. அதனால் ஆபத்து ஏற்படாது. கர்ப்பிணிப் பெண்களை மேலை நாடுகளில் சில வகை மீன்களைச் சாப்பிட வேண்டாம் என்று எச்சரிப்பர்.

 

பாதரஸத்தை இப்பொழுதும் மின்சாரக் கருவிகளில் பயன்படுத்துவர். ஆனால் புறச் சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டவுடன் பாட்டரிகளில் அதைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது.

 

எகிப்தியர், கிரேக்கர், இந்தியர் ஆகியோருக்கு ஆதிகாலம் முதல் தெரிந்த ஒரு உலோகம் இது. எகிப்திய கல்லறையில் தேங்காய் வடிவ குடுவை கிடைத்தது. இது கி.மு 1600 ஆண்டில் செய்யப்பட்டது.

 

ஸ்பெயின் நாட்டில் பழங்கால குகை ஓவியங்களில் சின்னபார் (cinnabar) எனப்படும் மெக்யுரி சல்பைடை (Mercuric sulfide) பயன்படுத்தினர். இது 30,000 ஆண்டு பழமையுடைத்து.

தென் அமெரிக்க இன்கா நாகரீக மக்களும் இதை அறிந்து இருந்தனர். ஆகவே தங்கம் தாமிரம் இரும்பு போல பழங்கால மக்கள் அறிந்த உலோகம் பாதரஸம். ஆனால் இதை வைத்து தங்கம் உண்டாக்கும் முயற்சிகள் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போயினவே!

 

-சுபம்-

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

Written by London Swaminathan

 

swami_48@yahoo.com

Date: 5 September 2018

 

Time uploaded in London – 10-15 am (British Summer Time)

 

Post No. 5396

 

நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396)

 

பாதரஸம் (Mercury) போல மனிதர்களைப் பைத்தியமாக்கிய ஒரு மூலகம் உலகில் இல்லை. ரஸவாத (alchemy) வித்தையில் மிகவும் பயன்பட்ட மூலகம். இரும்பையும் ஈயத்தையும் தங்கமாக்காலாம் என்று உலகம் முழுதும் ஆராயப்பட்ட மூலகம்.

 

இந்தப் பாதரஸம், மனிதன் இறந்த பின்னரும் முடியில், மயிரில் அப்படியே இருக்கும். அதன் மூலம் நாம் என்ன கண்டுபிடிக்கலாம்?

 

அவருக்கு காம சம்பந்தமான நோய்கள் இருந்து சிகிச்சை பெற்றது தெரியும்.

அல்லது

அல்லது அவர்கள் ஏதோ ரஸவாத (alchemy) ஆராய்ச்சியில் ஈடுபட்டனர் என்பது தெரியும்.

 

இதோ சுவையான ஆராய்ச்சியில் கிடைக்கும் சோகமான தகவல்கள்:-

 

மனிதனின் தலை முடியில் கந்தகம் இருக்கும் அமீனோ அமிலங்கள் உள. அவை மெர்குரி எனப்படும் பாதரஸத்தை ஈர்த்துக் கொள்ளும். இதனால் ஒருவர் எந்த அளவுக்கு மெர்க்யுரி (பாதரஸ) விஷத்தால் பாதிக்கப்பட்டார் என்று நிரந்தர ரிகார்ட் (பதிவுப் புஸ்தகம்) உண்டாகிவிடும்!

 

முன் காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களுடைய மயிர்க் கற்றையை எடுத்து பாதுகாத்து வைப்பர்.

 

(காஷ்மீரில் உள்ள பிரபல மசூதியில் முகமது நபியின் மயிர், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதையும் அதைத் தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் வருவதையும் முன்னரே ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறேன்)

 

தற்காலக் கருவிகளைக் கொண்டு பிரபல தலைவர்கள், விஞ்ஞானிகளின் முடியை ஆராய்ந்ததில் பல முக்கிய விஷயங்கள் கிடைக்கின்றன. இதை மயிர் ‘விஷயம்’ என்று ஒதுக்கிவிடாமல் மயிர் ‘விஷம்’ என்று அதிசயிக்க வேண்டியுள்ளது.

காம சம்பந்தமான நோய்கள் ஜனன உறுப்புகளைத் தாக்கும் . அப்படித் தாக்கினால் கலோமெல் (calomel) என்ற  மருந்தைக் கொடுத்தனர் அந்தக் காலத்தில். இந்தப் பொடியில் மெர்குரி க்ளோரைட் முதலியன இருக்கும் . இது பூஞ்சக் காளான் முதலியவற்றை ஒழிக்கும்; நல்ல பேதி மருந்து.

 

மயிரிலுள்ள மெக்யுரி எனப்படும் பாதரஸம் இதன் காரணமாகவோ, அல்லது ஆராய்ச்சிசாலையில் பாத ரஸப் புகையை சுவாசித்ததாலோ வந்திருக்க வேண்டும்.

 

ஐஸக் நியூட்டன் (1642-1727) என்ற பிரபல பௌதீக (இயற்பியல்) விஞ்ஞானியின் முடியை ஆராய்ந்தனர். அவர் ஒரு பிரம்மாச்சாரி. ஆகவே அவர் செய்த ஆராய்ச்சியின் போது பாதரஸ ஆவி அவர் தலை முடிக்கு ஏறியிருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த கருத்து.

 

ராபர்ட் பர்ன்ஸ் (Robert Burns 1759- 1796) என்ற ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) புலவரின் முடியிலும் இப்படி பாதரஸம் இருந்தது. அவரது வாழ்வை ஆராய்ந்தோர், அவர் சிபிலிஸ் (syphilis) போன்ற காம நோக்கு சிகிச்சை பெற்றதால் மெர்க்யுரி தலைக்கு ஏறி விட்டது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

 

 

நெப்போலியனை பிரிட்டிஷ்கார ர் கள் செயின்ட் ஹெலினா தீவில் சிறை வைத்த போது அவருக்கும் கலோமல் கொடுத்தது அவர் முடியிலிருந்து தெரிந்தது. ஆனால் அவர் இறந்ததற்குக் காரணம் ஆர்செனிக் (arsenic) விஷமாகும். பிரிட்டிஷார் அவரை விஷம் வைத்துக் கொன்றனர். அது தனிக் கதை.

 

அந்தக் காலத்தில் வேறு சில நோய்களுக்கும் பாதரஸ உப்புக்கள் கலந்த மருந்துகளைக் கொடுத்தனர். இதனால் நல்லோரும் கூட உயிர் இழந்தனர். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகழ் மிகு வானவியல் நிபுணர் டைகோ ப்ராஹியின் ((Tycho Brahe 1546-1601) கதை சோகக் கதை. அவருக்கு மூத்திரக் காயில் நோய். இதற்காக மருந்து கொடுத்து இருந்தனர். அவர் மறுநாளன்று பிராக் நகரில் ஒரு பெரிய விருந்து ஒன்றில் கலந்து கொள்ள வந்தார். அபோது சிறிநீர் கழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மன்னர் கொடுக்கும் விருந்திலிருந்து பாதியில் வெளியேறுவது முறையல்ல என்று கருதி மூத்திரத்தை அடக்கினார். இதனால் அவரது சிறுநீர்ப்பை பிய்ந்து போய் சில நாட்களில் உயிரிழந்தார். அவரது முடியை ஆராய்ந்தபோது அவருடைய உயிரைக் காப்பாற்ற அவருக்கு மெர்குரி கலந்த மருந்தது கொடுக்கப்பட்டது தெரிந்தது. ஆகவே முடியில் மெர்க்யுரி இருந்த எல்லோரும் காம நோயாளிகள் என்றும் கணக்குப் போட்டுவிடக்கூடாது.

 

இங்கிலாந்தின் மன்னர்களில் அபகீர்த்தி வாய்ந்தர் எட்டாம் ஹென்றி (1491-1547) மன்னர் ஆவார். அவருக்கு நிறைய மனைவிகள்; பிடிக்காத மனைவியருக்கு எல்லாம் மரண தண்டனை விதித்தவர். அவர் முடியிலும், ரஷ்யாவின் ஐவான் தி டெர்ரிபில் (Ivan the Terrible) முடியிலும் பாதரஸ அளவு அதிகம் இருப்பது அவர்களைக் காம நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கத் தூ ண்டுகிறது. இரண்டாவது சார்ல்ஸ் மெர்க்யுரி விஷத்தால் இறந்தது உறுதி செய்யப்பட்ட செய்தி! அவர் காமக் களியாட்டங்களிலும் ரஸவாத வித்தை ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டவர். இந்த இரண்டில் ஏதோ ஒன்று அவர் முடியில் பாதரஸத்தை ஏற்றி இருக்கலாம் என்பது அறிஞர் பெருமக்களின் துணிபு.

-சுபம்–