பைபிள் தோன்றியது எப்போது?

பழைய பைபிள்- கோடெக்ஸ் சைனடிகஸ்

தொகுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1863; தேதி 13 மே 2015

லண்டன் நேரம்: 19-55 

இப்பொழுது கிறிஸ்தவ மதத்தினர் போற்றிவரும் பைபிள் எனும் கிறிஸ்தவ வேதப் புத்தகம் இன்றைய நிலையில் உருவாக்கப்பெற்றது கிறிஸ்து இறந்து 633 ஆண்டுகளுக்குப் பின்னர்தான்! டோலிடோ என்னும் இடத்தில் கி.பி.633-ல் நடந்த கூட்டத்தில் இது இறுதி வடிவம் பெற்றது. அதற்கு முன் பலவிதமான கதைகளும், ஏசுவின் வாழ்வு பற்றி பல வாக்குவாதங்களும் நடந்திருக்கின்றன.

பழைய ஏற்பாட்டைக் குறித்து 2048 பாதிரிமார்களும், புதிய ஏற்பாட்டைக் குறித்து 50 சுவிசேஷங்களும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத முறையில் தர்க்கமிட்டுக் கொண்டிருந்ததை அறிந்து கான்ஸ்டன்டைன் மன்னர் கி.பி.335-ஆம் ஆண்டில் நைஸ் என்னும் இடத்தில் ஒரு மாபெரும் மகாநாட்டினைக் கூட்டி அதில் 1730 பாதிரிமார்களின் கூற்றுகளையும், 46 பாதிரிமார்கள் வைத்திருந்த சுவிசேஷங்களையும் நெருப்பிலிடும்படி ஆணையிட்டார். பாக்கியிருந்தவற்றில் அந்த மன்னர் ஒப்புகொள்ளும் விஷயங்களை மட்டும் அங்கீகாரம் செய்து அதைக் கடவுளின் வாக்கியம் என்றும் அனைவரும் பின்பற்றவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இது கிறிஸ்தவ வேதப் புத்தகம் பற்றிய சரித்திரச் சான்றுகள் அடிப்படையில் எழுதப்பட்ட உண்மையாகும். இதன் முழு விவரத்தை ஹெரால்டு ஷெர்மன் எழுதிய நீ இறந்த பின் வாழ்கிறாய் (You Live After Death) என்ற புத்தகத்தில் 104ஆம் பக்கம் முதல் 115ஆம் பக்கம் வரை காண்க—திருஞான சம்பந்தர் மடத்தின் ஆதீன கர்த்தர் வெளியிட்ட பிரசுரம், 1-9-1966