அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்!

tamil kurathi

Compiled by London Swaminathan
Post No.1088; Dated 6th June 2014.

TAMIL TREASURE TROVE: 54 GOLDEN SAYINGS FROM PURANANURU
1.வீரம்
மரப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90)

2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே
எலிமுயன்றனையராகி உள்ளதம்
வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190)

3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா?

நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின்
மன்னுயிர் நிழற்றும் இலை;
வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51)

4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196

5.சான்றோர் சன்றோருடன் சேருவர்
என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218)

6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!!
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே! –(மனைவி போயும் இன்னும் உயிர் இருக்கிறதே! சேரமான் மாக்கோதை, புறம் 245)

7.கணவனுடன் இறப்பதே மேல்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! – ( கணவன் சிதைத்தீயில் குதிப்பது குளத்தில் குளிப்பது போல; பெருங்கோப்பெண்டு, புறம் 245)

tamil kottil

8.சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)

9.நீ இருக்கும் வரை இனி நான் கூலிக்கு மாரடிக்கத் தேவை இல்லை
பீடில் மன்னர்ப் புகழ்ழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே! – (வாரி வழங்குகிறாய் மற்றவர்களைப் பொய்யாகப் புகழத்தேவையே இல்லை; வன் பரணர், புறம் 148)

10. பார்! மற்றவன் கொடுத்த யானை!
இரவலர் புரவலர் நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையுமல்லர்
இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு
ஈவோருண்மையும் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே- – (உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 162)

11.காசுக்காகப் பாடும் பரதேசி நான் அல்ல!
காணாது ஈத்தவிப் பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத்தாயினும் இனிதவர்
துணை யளவறிந்து நல்கினர் விடினே – (காசுக்காகப் பாடும் ஆள் அல்ல; பெருஞ்சித்திரனார், புறம் 208

12..உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே –
( உன்னை விடக் கொடுப்போர் உண்டு; அவ்வையார், புறம் 206)

13.பிச்சை எடுப்பது இழிந்ததுதான்
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயெனென்றல் அதனினுமிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று – ( தா என்பது இழிந்தது; வன்பரணர், புறம் 204)

tamil curiosity

14.நல்லவரை மட்டுமே பாடுவேன்
பெரியவோதினும் சிறியவுணராப்
பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே – (தகுதியற்றவரைப் பாடமாட்டோம்; மோசிகீரனார், புறம் 375)

15.புலவரைப் போய் உளவாளி என்று மடக்கிவிட்டாயே!
பெற்றது கொண்டு சுற்றமருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே – ( புலவர் வாழ்க்கை;கோவூர்க் கிழார் புறம் 47)

16.வரி விதிக்கும் போது அளவாக வரி விதி
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும் – (வரி விதிப்பு; பிசிராந்தையார், புறம் 184)

17.கோள் சொல்பவரை நம்பாதே
வழிபடுவோரை வல்லறிதி நீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய்கண்ட குற்றம் காணின்
ஒப்ப நாடி அத்தகவொறுத்தி – (கோள் சொல்பவரை ஒதுக்கி, குற்றவாளிகளை தண்டிப்பாய்; ஊன்பொதி பசுங்குடையார், புறம் 10

18.உழவர்களைப் போற்று
நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரமோம்பிக்
குடிபுறந் தருவை யாயினின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோரே – (உழவரை ஆதரி; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

19.பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் (தீயோரைப் பொசுக்கு)
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா மரபின் மடிவிலையாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென்பார்க்கு இனனாகிலியர்—( கொடியோரை அழி; நாத்திகரை நம்பாதே; முதுகண்ணன் சாத்தனார், புறம் 29)

20.இன்று போல் என்றும் ஒன்றுபட்டு வாழ்க
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடநிலை திரியீராயின் இமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யாகாதே – (ஒற்றுமை வாழ்க; காரிக்கண்ணனார், புறம் 58)

21.நினைத்தேன், வந்தாய்! என்ன அதிசயம்!
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே – பொத்தியார், புறம் 217

22.குழல் இனிது, யாழ் இனிது என்பர், குழந்தை இல்லார்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறுமக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே! – (குழந்தைகள் இல்லாத வாழ்வு இன்பம் தராது; அறிவுடைநம்பி, புறம் 188).

tamil lovers

23.ஈமக்கடன் நிகழ்த்த புதல்வன் பெற்ற பின் என்னிடம் வா!
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவணொழித்த அன்பிலாள
எண்ணாதிருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே பொத்தியார், புறம் 222

24.தைரியம் இருந்தால் போர் செய் அல்லது கோட்டையைத் திற
அறவையாயின் நினதெனத் திறத்தல்
மறவையாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகி
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதில் ஒருசிறை யொடுங்குதல்
நாணுத் தகவுடைத்துக் காணுங்காலே – புறம் 44, கோவூர்க் கிழார்

kannaki cooking

Following Thirty Golden sayings were already posted under June Calendar in Tamil

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (உன்னை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)

bow 3
Chera Emblem

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

fish 1
Pandya Emblem

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)
tiger drawing 1
Choza Emblem

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
(- எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192)

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

bow and arrow

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

thathrupam pen

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

Contact swami_48@yahoo.com

மஹாத்மா : நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியம்!

My Life

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜயந்தி. அண்ணலை நினைவு கொண்டு உத்வேகம் பெறுவோம்

ச.நாகராஜன்

ஒரு கால் உள்ளே ஒரு கால் வெளியே!

மஹாத்மா காந்திஜியின் வாழ்க்கையை உற்றுக் கவனிப்போர் ஏராளமான அதிசயங்க:ளைக் காணலாம். சத்தியத்தின் அடிப்படையில் “சொல்வதைச் செய்; செய்வதைச் சொல்” என்பதை மெய்யாக்கியவர் மஹாத்மா.

அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் பொருள் பொதிந்த கணமாக இருப்பது மனித குலத்திற்கான சிறந்த படிப்பினையாக அமைகிறது.

பாரபட்சமற்ற நடுவு நிலைமைக்கு அந்த வாழ்க்கையில் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் காட்டலாம்.உதாரணத்திற்கு இரண்டு:

உப்பு சத்யாக்ரஹம் ஆரம்பிக்க இருந்த தருணத்தில் ஒரு நாள். நேரப்படி நடக்கும் சபர்மதி ஆசிரமத்தில் அனைத்துக் காரியங்களும் செவ்வனே நடந்து கொண்டிருந்தன. கட்டுப்பாட்டிற்குப் பெயர் பெற்ற ஆசிரமத்தில் பிரார்த்தனைக்கான மணி அடிக்கப்பட்டால் கதவுகள் மூடப்படும். ஒரு விநாடி தாமதமாக வந்தால் கூட உள்ளே செல்ல முடியாது. தனது வருகையை ஆசிரமத்தில் இருந்தோர் பதிவு செய்ய முடியாது. ஒரு நாள் பிரார்த்தனைக்கான மணி ஒலித்தது. மஹாத்மா கதவருகே விரைந்தார். ஒரு கால் உள்ளேயும் ஒரு கால் வெளியேயும் இருந்தது.கதவை மூடிக் கொண்டிருந்தவர் காந்திஜியை உள்ளே வர அனுமதித்தார்.

அன்று பிரார்த்தனை முடிந்தவுடன்,” இன்று நான் விதியை மீறி விட்டேன்.உடலின் பெரும் பகுதி உள்ளே இருந்தாலும் கூட எனது ஒரு கால் கதவுக்கு வெளியே இருந்தது .கதவருகே இருந்த காப்பாளர் என்னை உள்ளே அனுமதித்து சலுகை காட்டி இருக்கக் கூடாது. நானும் கூட வெளியே தான் இருந்திருக்க வேண்டும். என்றாலும் கூட எனக்காக நீங்கள் காத்துக் கொண்டிருப்பீர்கள் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்து விட்டேன். ஆனால் இப்படிப்பட்ட சலுகை ஒரு நோயாளி அல்லது அவரைக் கவனித்துக் கொண்டிருப்பவர் தவிர வேறு யாருக்கும் அளிக்கப்படக்கூடாது” என்றார்.

காந்திஜி தனக்கு ஒரு நீதி மற்றவருக்கு ஒரு நீதி என்று எப்போதுமே கடைப்பிடித்ததில்லை. அன்றிலிருந்து பிரார்த்தனை திறந்த வெளி மைதானத்தில் நடக்க ஆரம்பித்தது.

greed

தர்மர் அளித்த நீதி

இந்த விஷயத்தை மஹாபாரத சம்பவம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். பீமனுக்கும் புருஷாமிருகத்திற்கும் நடந்த ஓட்டப்பந்தயத்தில் புருஷாமிருகம் தன்னை ஓட்டத்தில் வென்று விட்டால் பீமனை விட்டு விடுவதாகக் கூறவே பீமன் பந்தயத்திற்கு இணங்கினான். பந்தயத்தில் பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியேயும் ஒரு கால் எல்லைக்கு உள்ளேயும் இருக்கவே புருஷாமிருகம் பீமனைத் தோற்றதாகக் கூறியது.பீமனோ வெளியே இருந்த ஒரு காலைக் காட்டித் தான் வென்றதாகக் கூறினான். இதற்கு நடுவராக இருந்த தர்மபுத்திரர் தீர்ப்பு சொல்ல வேண்டி இருந்தது. அவர் தீர்க்கமாக புருஷாமிருகமே வென்றதாக அறிவித்தார். தம்பிக்காக சலுகை காட்டவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்தது. நடுவுநிலைமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை கூற விழைந்த குருபாததாசர் தனது குமரேச சதகத்தில் 61ஆம் பாடலில் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறுகிறார்.

வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்
வருமென்றும் நேசரென்றும்
வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன
வானென்றும் ஏழையென்றும்

இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்
எள்ளள வுரைத்திடாமல்
எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
ஏற்கச்ச பாசமதமாம்

முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்
மொழிந்திடின் தர்மமதுகாண்
முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன்தருமர் சொன்னதலவோ?

மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட
வளர்ந்தருள் குழந்தைவடிவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.

இப்படி வியந்து “முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன் தருமர் சொன்னதலவோ?” என்று தர்மபுத்திரரின் நீதியை வியந்து குருபாததாசர் கூறுகிறார். இதே ‘ஒரு கால்வெளியே ஒரு கால் உள்ளே’ சம்பவத்தில் தன்னையே விதியை மீறியதாக அறிவித்துக் கொண்டார் மஹாத்மா!

நமது காலத்திலேயே வாழ்ந்த மஹாத்மா ஒவ்வொரு செயலிலும் பெரிய அறப்பண்புகளை “வாழ்ந்து” காட்டினார். எதிலும் நடுவு நிலைமை;எப்போதும் நடுவு நிலைமை தான் அவருக்கு!
eye for eye

படேலின் புகாரும் மஹாத்மாவின் தீர்ப்பும்

இன்னொரு சம்பவம்:
பெண்களுக்கான ஒரு கல்வி நிலையத்தில் மேலாளராக இருந்தவரைப் பற்றி அங்குள்ள மாணவிகளிடம் அவர் தவறாக நடப்பதாகப் புகார் மஹாத்மாவிடம் வந்தது. புகார் செய்தவர் வேறு யாருமில்லை, சர்தார் வல்லபாய் படேல் தான்.புகாருக்கு ஆளானவரோ பெரிய சேவை மனப்பான்மை கொண்டவர். எப்போதுமே இரு பக்க நியாயத்தையும் கேட்டுத் தான் தனது இறுதித் தீர்ப்பை வழங்குவார் மஹாத்மா.

மேலாளரோ தன் மேல் வேண்டுமென்றே புகார் கூறப்பட்டிருக்கிறது என்றும் சர்தார் அனைவரும் எப்போதும் தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பதையே விரும்புபவர் என்றும் தனது ஆக்கபூர்வமான சுதந்திரமான செயல்பாட்டை அவரால் பொறுக்க முடியவில்லை என்றும் கூறினார்.

இரு தரப்பினருமே மஹாத்மாவையே விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இருக்கின்ற அரசியல் நிலைமையில் சேவாகிராமத்திலிருந்து இந்த விஷயத்திற்காக குஜராத் செல்லவும் மஹாத்மாவால் முடியவில்லை. அந்தக் கல்வி நிலைய மாணவிகளைத் தன் இருப்பிடத்திற்கு வரச் சொல்லி விசாரிக்கலாம் என்றாலோ அதற்காக ஆகும் பணச்செலவு ஏராளம் என்பதால் அதுவும் சரியல்ல. மஹாத்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக ஒருவரை குற்றம் சாட்டப்பட்டவர் பரிந்துரைத்தார். இறுதித் தீர்ப்பைத் தான் வழங்குவதாக மஹாத்மா தெரிவித்தார். ஆனால் விசாரணையைச் செய்ய இருப்பவர் ஹிந்து மஹாசபையின் உறுப்பினர் என்றும் அவர் காங்கிரசுக்கு எதிரானவர் என்றும் ஆட்சேபணை கூறப்பட்டது.

ஆனால், “மஹாத்மாவோ அவர் எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரானாலும் சரி அப்பழுக்கற்ற ஒழுக்கம் உடையவர். சர்தார் படேல் துணிச்சல்காரர். அவரை விசாரணை அதிகாரியாக நியமிப்பதை ஏற்றுக்கொள்வார்” என்றார்.

சர்தாருக்குத் தந்தி அடிக்கப்பட்டது. அவர் விசாரணை செய்பவரின் பெயரை ஏற்றுக் கொண்டார். விசாரணை முடிந்தது. அனைத்துத் தகவல்களையும் அலசி ஆராய்ந்த மஹாத்மா தன் தீர்ப்பைக் கூறினார்.

அதில்,” மாணவிகள் மேலாளருக்கு எதிராகப் புகார் கூறினாலும் அவர்கள் அதை நேரில் தெரிவிக்க முடியாதென்றும் குறுக்கு விசாரணைக்கு உட்பட முடியாதென்றும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டிருப்பவரோ கத்தியவாடிலும் குஜராத்திலும் ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை மாற்று மதத்திற்கு மாற்றும் முயற்சியை எதிர்த்துப் போராடி தனது சேவை மூலம் அவர்களைக் காப்பாற்றியவர். அவரைச் சரிபார்க்க முடியாத புகார்களின் அடிப்படையில் குற்றமிழைத்தவராக அறிவிக்க முடியாது என்று விசாரணைக் குழு கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தன் நிலையை விளக்க ஒரு சந்தர்ப்பம் அளித்தால் தான் நீதியை அளிக்க முடியும். ஆகவே இந்த கேஸை நான் தள்ளுபடி செய்கிறேன். என்றாலும் கூட மேலாளர் தன்னை ஆத்மசோதனை செய்து கொண்டு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதைச் சரி செய்வார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.

சர்தார் வல்லபபாய் படேல் தனக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் அவருக்கு ஆதரவாக தீர்ப்பைக் காந்திஜி கூறவில்லை என்பது அவரது நேர்மை தவறாத நடுவு நிலையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.

இப்படி மஹாத்மாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஏராளமான சம்பவங்கள் அவர் ஏன் மஹாத்மா என்று போற்றப்பட்டார் என்பதைப் பறை சாற்றுகின்றன.

7 sins

நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியம்

நடமாடும் நற்பண்புகளின் களஞ்சியமாகத் திகழ்ந்தவர் மஹாத்மா காந்திஜி.
அவரைப் போற்ற வேண்டுமெனில் அந்த அறப்பண்புகளை வாழ்ந்து காட்டும் முயற்சியை ஒவ்வொருவரும் எடுப்பதே சரியாக அவரைப் போற்றும் முறையாக அமையும்.

வாழ்க அவர் புகழ் என்று வாழ்த்துவதோடு நில்லாமல் வாழ்ந்து காட்ட முயல்வோமாக!

((குறிப்பு: இந்த இரு சம்பவங்களையும் ராமநாராயண் சௌதரி தனது Bapu as I saw Him என்ற ஆங்கில நூலில் விளக்கமாக எழுதியுள்ளார்.)
********************

ராமாயண வழிகாட்டி -1

ராமாயண வழிகாட்டி

அத்தியாயம் – 1

ச.நாகராஜன்

 

வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட ராமாயணத்தில் இல்லாத நன்னெறிகளே இல்லை. வேதத்திற்குச் சமானம் என்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்ட இந்த நூலை தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை!

 

சூக்தி சதகம் என்னும் சுபாஷித தொகுப்பு நூலில் வரும் ஒரு அற்புதமான கவிதை வால்மீகியை ராம ராம என்று கூவும் குயில் என்று வர்ணிக்கிறது. ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் முதலில் சொல்லும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

 

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

ஆருஹ்ய கவிதா ஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

 

ஆருஹ்ய கவிதா ஷாகாம் – கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

கூஜந்தம் ராம ராமேதி மதுரம் மதுராக்ஷரம் – ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

வந்தே வால்மீகி கோகிலம் – அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

 

முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார்.

 

24000 ஸ்லோகங்களில் ஏகைகமக்ஷரம் ப்ரோக்தம் மஹாபாதக நாசனம் என்று ஒரு அக்ஷரத்தைச் சொன்னாலே மஹா பாதகங்களும் நாசமடையும் என்று உறுதி சொல்லப்பட்டிருப்பதால் முடிந்த அளவு அதை நாம் கற்று பாராயணம் செய்வது நலம் பயக்கும்.

ராமாயணத்தில் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில நல்ல ஸ்லோகங்களை இனம் காட்டும் முயற்சியே ராமாயண வழிகாட்டி.

இதன் மூலம் மூல ராமாயணத்தின் அனைத்து ஸ்லோகங்களையும் படிக்கும் ஆசை எழுந்தால் அதுவே இந்த முயற்சிக்கான வெற்றி.

 

மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் யார்?

 

தன்யா: கலு மஹாத்மானோ முனயஸ்த்யக்த கில்பிஷா

ஜிதாத்மானோ மஹாபாகா யேஷாம் நஸ்த: ப்ரியா ப்ரியே

 

எவர்களுக்கு சுகதுக்கம் இரண்டும் இல்லாமல் இருக்கின்றதோ   அவர்கள் தான் மஹாத்மாக்கள். ஜிதேந்திரியர்கள். மஹாபாக்கியசாலிகள்.முனிவர்கள்.தன்யர்கள். மனப்பூர்வமாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 49ஆம் ஸ்லோகம்)

 

மஹான்களுக்கு சீதையின் நமஸ்காரம்

 

ப்ரியாந்ந ஸம்பவேத் து:க்க

       மப்ரியா ததிகம் பயம்

தாப்யாம் ஹி யே வியுஜ்யந்தே

       நமஸ்தேஷாம் மஹாத்மனாம்

 

சுகமெனக் கொண்டதால் மன அஸந்துஷ்டி இல்லாதிருக்கிறது. துக்கமெனக் கொண்டதால் அனாவஸ்யமான மன ஏக்கம் உண்டாகிறது. எவர்கள் அவ்விரண்டுகளாலும் விடுபட்டிருக்கிறார்களோ அந்த மஹாத்மாக்களுக்கு நமஸ்காரம்

(கொடிய ராக்ஷஸிகள் சீதையை மிரட்ட வருந்தி சீதை புலம்பும் போது கூறியது – வால்மீகி ராமாயணம்; சுந்தர காண்டம் இருபத்தாறாவது ஸர்க்கம் 50ஆம் ஸ்லோகம்)

 

மஹாத்மாக்களை நமஸ்கரிப்பதால் ஆபத்து, மா சம்பத்து ஆகி விடுகிறது! By S Nagarajan

****************