தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை (Post No 2507)

IMG_9777

Written by london swaminathan

Date: 4 February 2016

 

Post No. 2507

 

Time uploaded in London :–  8-23 (காலை)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

நூறு ஆண்டு பழமையான ஜோக்குகள்; சென்னை சீனிவாசன் , அனுப்பிய விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டவை.

 

RES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

மடயசாம்பிராணி

ஒரு நாட்டுப்புரத்து பிரமணன் திருவையாற்றிற்குப் போகப்புறப்பட்டுத் தஞ்சாவூரிலிறங்கி அங்கே வழியில் போய்க்கொண்டிருக்கும் பட்டணத்தானொரு வனைப் பார்த்து ஐயா! திருவையாற்றிற்குப் போவதற்கு வழி எது என்றான்.

 

அதற்கவன், ஸ்வாமி! இப்படி நெடுக வடக்கே பூனீங்கன்னா சந்துபூவுது, அதிலே விழுந்து கிழக்கே பூனா ஒரு டிரையின்சு இருக்குது. அதிலே விழுந்து பூனா ஒரு ஆலமரம் நிக்குது, அதிலே ஏறிப்பூனா ஒரு கூரை வீடு இருக்குது. அதுமேலே ஏறி மேற்கே பூவது வழி என்றான்.

 

இந்தப் பிராமணன் பிரமித்து ஒகோ ஒருக்கால் அப்படித்தான் போகவெண்டுமோ என்று நினைத்துப் பட்டணத்தான் பகர்ந்ததையே நோக்கி சந்திலே விழுந்து, டிரைன்சிலேயும் விழுந்து,  ஆலமரத்து மேலேறி, மறுபடியும் கூரைமீதேறிப்போகும் போது அவ்வீட்டுக்காரன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவர் மனைவி நெய் பரிமாறும்போது நாட்டுப்புரத்து பிராமணன் கூரை மீதேறிய அதிர்ச்சியால், கீழே சாப்பிட்டுக் கொண்டிருந்த வீட்டுக்காரன் இலையில் இரண்டு மூன்று செத்தை விழுந்தது.  உடனே வீட்டுக்காரன் யார் உயர இருக்கிறது என்றான்.

 

அதற்கு உயர நடந்து கொண்டிருக்கும்  பிராமணன், “ஏண்டா! நான் திருவையாற்றிற்குப் போகிறேன். உனக்கென்ன! நீயேன் கேட்கிறாய்? என்றான். அதற்கு வீட்டுக்காரன், புத்திசாலி மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, “ஏண்டி! லவண்டி! திருவையாற்றுக்குப் போகிற வழியில் ஏன் சாதம் போட்டாய்” என்று பலவிதமாய் வைது அடித்தான். இதில் யார் புத்திசாலி என்பதை இதை வாசிப்போர்கள் அறிந்து கொள்ளுங்கள்.

Xxx

IMG_9769

தமிழ்ப் பாஷையறியாத தர்மராஜ பிள்ளை

இவர் சிறுவயதிலேயே சீமைக்குப் போய் ஆங்கில பாஷையில் தேர்ச்சியுற்று பெரிய பரீக்ஷைகள் எழுதி, நமது ஜில்லாவுக்கு டெபுடி கலெக்டர் உத்தியோகம் பெற்றுவந்திருந்தார். அக்காலத்தில் ஹெட்கிளார்க் கிருஷ்ணாராவ் என்பவர்.

 

புரட்டாசி சனிக்கிழமையன்று விடுமுறை கேட்கவேண்டுமென்று கேட்க, சென்ற வருஷத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறதாவென்று எஜமான் கேட்க, , ஹெட்கிளர்க் அதிக வணக்கத்துடன், “ஸார்! சென்ற வருஷத்தில், புரட்டாசி சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையன்று வந்ததினால் விடுமுறை கொடுக்கப்படவில்லை” யென்று தமிழில் பதில் சொன்னார்.

 

உடனே எஜமான், “ஆல்ரைட்” என்று தலையசைத்துக் கொண்டு விடுமுறை யளித்தார்

–சுபம்–