மதசார்பற்ற (செகுலரிஸம்) கொள்கை சரியா? (Post No 3006)

razan karunanidhi

 

Article Written S NAGARAJAN
Date: 26 July 2016
Post No. 3006
Time uploaded in London :– 7-59 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

செகுலரிஸம் சரியா?
ச.நாகராஜன்
இன்று கடைப்பிடிக்கும் வோட் பேங்க் அர்த்தத்தில் செகுலரிஸம் சரியா?
சற்று அலசிப் பார்ப்போம்.
செகுலரிஸம் என்றால் ஹிந்து மதத்தின் எந்த அம்சமும் ஒதுக்கப்பட வேண்டும், மற்ற மதங்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு தன்னுடைய தலையை வணங்கி விட்டுக் கொடுக்க வேண்டும், குனிந்து குனிந்து குட்டு வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அரசியல் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது – சிவ சேனா, ஹிந்து முன்னணி, பாரதீய ஜனதா பார்ட்டி போன்ற சில கட்சிகளைத் தவிர.
இது ஏன்?
கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர் ஓட்டுக்களைப் பெற்று விடலாம் என்ற தீய ஆசை தான்!
நமது அரசியல் சட்டம் (Constitution) இப்படிச் சொல்கிறது:
‘We the people of India have resolved to constitute India into …. …a Secular Republic “
ஆச்சரியமாக இருக்கிறது. இந்திய மக்கள் இப்படியா சொன்னார்கள். ஒரு சில தலைவர்களே அரசியல் லாபத்திற்காக இப்படி அரசியல் சட்டத்தில் சொன்னார்கள்!
இன்று 120 கோடி மக்களிடம் இந்த வரியை ஓட்டிற்கு விட்டால் அந்த வாசகங்கள் உருப்படுமா? தேறுமா?
தேறாது.
அரசியல் சட்டத்தில் மைனாரிடிகளைப் பாதுகாக்க 29 மட்டும் 30 ஆகிய பிரிவுகள் இணைக்கப்பட்டன.
இவற்றை 25.2b யுடன் இணைத்துப் பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சும்?
ஏன், எப்படி?
இவற்றில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்தமதத்தினர் சொல்லப்பட்டனர்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் விடப்பட்டனர்.
ஏன்?
அவர்கள் தாம் மைனாரிட்டியாம்!
பாவம், பார்ஸிகளைக் காணவே காணோம்.
கப்பலில் வந்த பார்ஸி இனத்தினர் ஒரு தூதுவரை ஹிந்து அரசனிடம் அனுப்பினர். இங்கு வந்து தங்க அனுமதிக்க வேண்டும் என்ற தூதுவரின் கோரிக்கையைக் கேட்ட ஹிந்து அரசன் ஒரு கிண்ணத்தில் பாலை முழுவதுமாக தளும்பத் தளும்ப நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து கப்பலில் உள்ள உங்கள் தலைவனிடம் நான் கொடுத்ததாகக் கொடுங்கள் என்றான்.
ஒன்றும் புரியாத தூதுவர் அந்தக் கிண்ணத்தை அப்படியே தலைவனிடம் சேர்ப்பித்து நடந்ததைச் சொன்னார்.
தலைவரோ அந்தக் கிண்ணத்தில் இருந்த பாலில் ஒரு பிடி சர்க்கரையைப் போட்டு அதை மீண்டும் சென்று மன்னனிடம் கொடுக்கச் சொன்னார்.
தூதுவர் நடந்ததை மன்னனிடம் சொல்ல சிரித்தவாறே அவன் அனைவரும் உள்ளே வாருங்கள் என்று அனுமதி கொடுத்தான்.
இதில் என்ன அர்த்தம் பொதிந்து இருக்கிறது என்பதை அறிய அவையில் அனைவரும் ஆர்வம் கொண்டனர்.
மன்னன் விளக்கினான்.
“எனது நாட்டில் கிண்ணத்தில் முழுவதுமாக உள்ள பால் போல மக்கள் நிரம்பியுள்ளார்கள், உங்களுக்கு இங்கு இடமில்லையே’ என்று சொல்லி அனுப்பினேன். இடமில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னதை பார்ஸி தலைவர் புரிந்து கொண்டு சர்க்கரையை அதில் அள்ளிப் போட்டார்.
உங்கள் மக்களுடன் மக்களாக பாலில் சர்க்கரை போலக் கலந்து விடுகிறோம் என்றார் அவர்.
எப்படிப்பட்ட பதில்!
அருமையான உணர்வுகளைக் கொண்ட பார்ஸிகளை அனுமதித்து உள்ளே வரச் சொன்னேன் என்றான் ஹிந்து அரசன்.
அன்று பார்ஸிகள் கொடுத்த வாக்கை இன்று வரை அவர்கள் காப்பாற்றி வருகின்றனர்.
ஒரு கலவரம், ஒரு மத மாற்றம், ஒரு கிளர்ச்சி – ஊஹூம், பார்ஸிகளிடமிருந்து இன்று வரை இந்தியாவில் ஒன்று கூட எழவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள இனம் பார்ஸி இனம்.
கொடுத்த வாக்கை தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றும் மக்கள் என்றால் அவர்கள் பார்ஸிகளே!
இந்தப் பார்ஸிகளை எந்த பட்டியலிலும் சேர்க்கவில்லை நமது அரசியல் சட்டம்.
புத்த மதத்தினர்
ஜைன மதத்தினர்
சீக்கியர் – இவர்கள் மைனாரிடி இல்லையாம்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் மைனாரிடியாம்?
எந்த அடிப்படையில்?

secular-4
எண்ணிக்கையிலா? அப்படியானால் மேலே சொன்னவர்கள்: எண்ணிக்கையும் குறைவு பட்டது தானே!
ஆக அரசியல் சுய லாபத்திற்காக ஒரு விஷ வித்து விதைக்கப்பட்டது.
அதன் பலனை இன்று சுதந்திர பாரதம் அனுபவித்து வருகிறது.
சமத்துவம் – Equality – என்பது போய் செகுலரிஸம் சமத்துவமற்ற ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று ஒரு பிளவை ஏற்படுத்தி விட்டது.
இதனால் மதமாற்றம், தீவிரவாதிகளின் மிரட்டல்கள், குண்டுவெடித் தாக்குதல் என்று தேவையற்ற அனைத்து தீமைகளும் அணிவகுத்து பாரதத்திற்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன!
ஒரு பொது சிவில் சட்டம் அல்லவா இங்கு தேவை!
இந்திய அரசியல் சட்டம் ஹிந்துக்கள் மீது – அவர்கள் வாழ்க்கை முறை மீது, அவர்களின் மணச் சடங்கு, சுவீகாரம் உள்ளிட்டவற்றின் மீது – மட்டும் பாயும்.
ஆனால் இஸ்லாம், கிறிஸ்தவம் என்றால் ஓடும்!
இது என்ன செகுலரிஸம்?
அதிசய செகுலரிஸம்?!
சற்று இன்னும் யோசித்துப் பார்ப்போம்!

-தொடரும்