
Date: 20 FEBRUARY 2018
Time uploaded in London- 11-16 am
COMPILED by S NAGARAJAN
Post No. 4766
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
நான் ஜோதிடத்தைத் தவறாகப் பயன்படுத்திய மூன்று முறைகள்! – 2 (Post No.4766)
ச.நாகராஜன்
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும்.
அலுவலகத்தில் எல்லோருக்கும் சிக்கல். எனக்குக் கூடுதல் சிக்கல். ஒரு தனிப் பிரிவின் அனைத்தும் நானே!
எல்லோரும் உடனடியாகக் கிளம்புங்கள். ஆர்டர், அட்வான்ஸுடன் வாருங்கள்.
ஓவர்ஹெட், வேஜஸ் இவற்றுக்குப் பணம் தேவை. இல்லையேல் பின்னால் வருத்தப்படுவீ ர்கள்!
மற்றவர்களுக்கு சேல்ஸ், புரடக் ஷன்,சப்ளை எனப் பெரிய படை உண்டு.
நான் தனி மரம்.
அன்று மாலையே கொல்லம் பஸ்ஸில் ஏறினேன்.
காலையில் குளித்து விட்டு ஒரு சின்னப் பாக்கெட் முந்திரிப்பருப்பு வாங்கினேன். விலை குறைவு. சுவையாக் இருக்கும்.
பஸ் ஒரு பெரிய பாலத்தின் அருகே வந்த போது நிறுத்தச் சொன்னேன்,
“சார், நீங்க போக வேண்டிய கம்பெனிக்கு எதிரிலேயே வண்டி நிற்கும்” என்றார் கண்டக்டர்.
‘பரவாயில்லை” என்றேன்,
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தவர் வண்டியை நிறுத்தினார்.
ஆஹா! என்ன அருமையான காட்சி.
பெரிய பாலம்.அகலமானது. நடைபாதைகள் வேறு. லஞ்சம் வாங்காமல் கட்டப்பட்டது.
கீழே பளிங்கு போன்ற நீர். துள்ளிக் குதிக்கும் மீன்கள். அலையுடன் ஆட்டம் போட்டு ஓடும் மீன் குட்டிகள்.
இது போலொரு காட்சி கிடைக்குமா?
வானத்தைப் பார்த்தேன், பிரமித்தேன்.
என்ன அதிசயம்.
கருட பட்சிகள்.
அலை அலையாக.
சிறகை விரித்து அவை பறந்த அழகு!
ஓம் கருடாய நமஹ.
கும்பிட்டேன்.

பல மாதமாகப் படை எடுத்தாயிற்று. ஒரு நிமிடத்தில் அந்த செக்ரட்டரி பெண்மணி என்னை பைசல் பண்ணப் போகிறாள், கருடனையாவது நின்று நிதானித்துத் தரிசிப்போம்.
கம்பெனி வந்தது.
உள்ளே சென்றேன். அதே மலையாளப் பெண்மணி. இப்போது நான் ‘பழக்கமாகி விட்ட ஆள்’.
நான் எதுவும் பேசுவதற்கும் முன்னர் அவரே, “சார். எம்.டி. பிஸி.பார்க்க முடியாது” என்றார்.
நான், “உங்களிடம் எதையாவது கேட்டேனா?” அவர் சற்றுத் திகைத்தார்.
உள்ளே போய் கார்டைக் கொடுத்து நான் வந்ததையாவது சொல்லுங்கள். அவர் சொல்லட்டும்.
என்ன, இங்கே, இவர் யார்? பின்னால் நின்று கொண்டிருந்த எம்.டி. முதல் முதலாக என்னைப் பார்த்தார்.
சார், ஜஸ்ட் ஒன் மினிட். அவ்வளவு தான்.
சரி, வாருங்கள்
அவர் காபின் பிரம்மாண்டமானது. இரு புறமும் செல்லும் படி கதவுகள். ஒரு புறம் நீரோடையை நோக்கி. இன்னொரு புறம் அலுவலகம் நோக்கி.உள்ளே நுழைந்தவர் மேஜையைப் பிடித்துக் கொண்டார். எனக்கு நிற்கக் கூட இடம் இல்லை.
என்ன?
உங்களுக்கு ஒரு குட் நியூஸ் என்னால் சொல்ல முடியும்?
எனக்கு! குட் நியூஸ்! என்ன?
“உங்களது பல பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு வெளிவரப் போகிறீர்கள். நல்ல செய்திகள் வர ஆரம்பிக்கின்றன.
கடுமையா இருந்த அவர் இப்போது மலர்ந்து போனார், பிரமித்தார், அதிசயித்தார்,
முதலில் உட்காருங்கள். தானும் உட்கார்ந்தார்.
செக்ரட்டரியை அழைத்தார். சாருக்கு சாய், ஸ்நாக்ஸ் கொண்டு வா, இரண்டு பக்க டோர் வழியாகவும் யாரையும் விடாதே. போனை உள்ளே கொடுக்காதே.
அந்தப் பெண் ஒன் மினட் ஆசாமி எப்படி இப்படி ஒரு வி ஐ பி ஆனார் என்று வியந்து போனார்.
எனக்கு ஜோஸியத்தில் நம்பிக்கை கொஞ்சம் உண்டு. ஆனால் என்னைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் எப்படி இதைச் சொல்கிறீர்கள்.
விவரித்தேன்.
சார், நீங்கள் இருக்கும் இடம் அற்புதமான கருடபட்சிகள் வாழும் ஸ்தலம்.அவைகள் உங்களை வளமாக வாழ வைக்கின்றன. இந்த இடத்தில் உங்கள் அலுவலகம் செட் அப் ஆனதிலிருந்து க்ரோத் தான்.

உண்மை தான் என்று தலையை ஆட்டினார்,
ஆனால் எக்ஸ்பான்ஷனுக்கான பெரிய லோன் சாங்க்ஷன் ஆகவில்லை. பல மாத ப்ரிபேரஷன் ஓவர். ஸ்டார்ட் தான் ஆகணும்.
சார், இன்றிலிருந்தே நல்ல காலம் ஆரம்பம். இன்னும் மாக்ஸிமம் ஒரு வாரம் தான். 48 ஹவர்ஸ், மே பி 24 ஹவர்ஸ்.
யூ கெட் மோர் தேன் யூ எக்ஸ்பெக்ட்.
“சரி இதெல்லாம் எப்படி சொல்கிறீர்கள்?”
“இந்தக் கருடப் பட்சிகள் உங்களுடன் பேசுகின்றன. அலை அலையாய் வட்டமடிக்கும் அவை உங்களுக்குச் செய்திகள் சொல்கின்றன.
கருட பட்சிகள் பேசுகின்றனவா, அவர் பால்கனி கதவைத் திறந்து பார்த்தார். ஏராளமான பட்சிகள். ஆரவாரம். கும்பிட்டார்.
இவைகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?
ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு நல்ல அருமையான உணவு வகைகளைத் தாருங்கள்.
செக்ரட்டரி உள்ளே வந்து பேங்கிலிருந்து போன் என்றார்.
போன் பேச ஆரம்பித்தார். ஓ என்றார். தேங்க்ஸ் என்றார்.
பத்து நிமிட போன்.
அவர் முகம் பிரகாசம்.
அலுவலகம் பிரசாகம்.
ஒரே ஆனந்தம்.
மறுநாள் பேங்க் ஆபீஸர்கள் டாகுமெண்ட் வெரிஃபை செய்து லோன் ஆர்டர் இஷ்யூ செய்யப் போகிறார்கள்.
ஒரே கோலாகலம், அவர்களுக்கு ஏகப்பட்ட வேலை.
மெல்ல தேங்க்ஸ் சொல்லி விட்டு நகர்ந்தேன்.
ஒரு நிமிடம். உட்காருங்கள்.
உட்கார்ந்தேன்.
அக்கவுண்ட்ஸ் மானேஜரை வரச் சொன்னார்.
இவரது பைலைக் கொண்டு வாருங்கள்.
பைல் வந்தது.
இவருக்கு ஆர்டரை டைப் அடித்துத் தாருங்கள். அட்வான்ஸ் எவ்வளவு?
50%
அதையும் ஒரு செக்காகப் போடுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்.
ஆர்டர் அமவுண்ட்
அவர் கொடேஷனில் கொடுத்தது தான்.
நம்பமுடியாமல் தலையை ஆட்டி விட்டுப் போன அவர் அரை மணி நேரத்தில் வந்தார்.
ஆர்டர், செக் – எம் டி கையெழுத்திட்டார்.
என் கையில் தர தேங்க்ஸ் சொல்லி வாங்கிக் கொண்டேன்.
இந்த சேஸிஸ் ஆறும் பல மாதமாக இங்கே தான் இருக்கின்றன.
நாளை அதை மதுரைக்கு அனுப்பி விடுகிறேன்.
ஆல் தி பெஸ்ட்!
கிளம்பினேன், கருடனுக்கு நமஸ்காரம்!
காலையில் வீ டு வந்து குளித்து விட்டு ஆபீஸுக்கு வந்து சேர்ந்த என்னை பரிதாபமாக ஒரு கூட்டம் பார்த்தது.
பெரிய சேல்ஸ் ஃபோர்ஸே ஒண்ணும் செய்ய முடியலை.
இவர் பாவம் என்ன செய்வாரு?
நிர்வாகத்திற்குச் செய்தி போனது.
பதினெட்டு லட்சம் சிங்கிள் ஆர்டர், ஒன்பது லட்சம் செக் அட்வான்ஸ்.
என்ன பரபரப்பு என்றெல்லாம் சொல்லத் தேவையில்லை,
சொந்த சர்வைவலுக்காக அலுவலக ஆர்டரை ஜோதிடத்தை வைத்துப் “பிடித்தது” தவறு.
தப்பு தப்பு தான்!
***