ஆனந்தாஸ்ரமம் சுவாமி ராம்தாஸ் சொன்ன கதைகளை
தமிழில் தருபவர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 961 தேதி:- 7th April 2014
ராம-ராவண யுத்தம் உக்ரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் ராக்ஷசர்களின் தாக்குதல் அதிகமாகவே ராமர் தரப்பில் போராடிய வானரப் படைகள் களைப்பும் சோர்வும் அடைந்தன. உடனே இராம பிரான் ஒரு தந்திரம் செய்தார். தனது தெய்வீக சக்தியால் வானரங்கள் அனைத்தையும் இராமன் போலவே தோன்றும்படி செய்தார். அதே போல ராக்ஷசர் அனைவரையும் இராமன் போலவே தோன்றும் படி செய்தார் அதாவது ஒரு வானரம் இன்னொரு வானரத்தைப் பார்க்கையில் அதற்கு இராமபிரான் போலவே தோன்றும். இதனால் ஒன்றை ஒன்று அன்போடு கட்டித் தழுவி உற்சாகம் பெற்றன. களைப்பும் சோர்வும் நீங்கியது.
இதற்கு நேர் மாறாக ராக்ஷசர் படையில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு உயிர்விட்டனர். ஏனெனில் எதிர்த்தாற்போல இருப்பவன் நிஜ ராமனே என்று அவை ஒவ்வொன்றும் மற்றொன்றை அடிக்கத் துவங்கின.
இதைக் கூறிய சுவாமி ராம்தாஸ், நாமும் எல்லா இடங்களிலும் வானரப் படை கண்டதைப் போல ராமனைக் காண வேண்டும். அப்படி எல்லா இடங்களிலும் இறைவனை காணும் பக்குவம் வந்துவிட்டால் அப்பொழுது அன்பு வெள்ளம் பாயத்துவங்கும் என்கிறார்.
இனி ஆனந்தாஸ்ரமம் சுவாமி சொன்ன இன்னொரு கதையைக் காண்போம்:
ஒரு மஹாராணியின் வருத்தம்
ஒரு ஊரில் ஒரு ராஜாவும் ராணியும் இருந்தனர். மஹாராணி மிகப்பெரிய பக்தை. தினமும் இறைவனை வழிபடுவதே அவர் செய்யும் முக்கிய வேலை. ராஜா மிகவும் நல்லவர். ராணிக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களையும் கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு குறை. என்னவென்றால் அரசனுக்கு கடவுள் பக்தி கிடையாது. ராணிக்கு இது பெரிய மனக்குறை.
ஒரு நாள் இரவில் ராஜா திடீரென்று கனவில் பேசத் துவங்கினார். “ராம, ராம, ராம” என்று முனகத் துவங்கினார். எதேச்சையாக எழுந்த ராணி இதைக் கேட்டு அதிசயித்துப் போனாள். கனவனுக்கு இறைவன் மீது பக்தி வந்துவிட்டது என்று ஆனந்தித்தாள். மறு நாள் பெரிய விழாவுக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்தாள். அரசனுக்கு இந்த தடபுடல்களைப் பார்த்து ஒன்றுமே புரியவில்லை. ராணியிடம் போய் என்ன இது கூத்து? ஏதோ விருந்துக்கு ஏற்பாடு செய்கிறாயாமே! என்ன இது? என்றார்.
ராணி சொன்னாள், “நேற்று தூக்கத்தில் நீங்கள் இறைவனைப் பார்த்து விட்டீர்கள். ராம ராம ராம் அஎன்று கனவில் முனங்கினீர்” என்றாள். ராஜா உடனே தன் குட்டு வெளிப்பட்டு விட்டதே என்று வருத்தப்பட்டார். அதாவது, அவர் இத்தனை காலமும் ரகசியமாக சாமி கும்பிட்டு வந்தார். அது கனவில்
வெளியாகிவிட்டது!
இந்த கதையை ஆனதாஸ்ரமம் சுவாமி ராம்தாஸ் கூறினார்.
கதையின் நீதி என்ன? சிலர் படாடோபமாக வெளியே தெரியும்படி சுவாமி கும்பிடுகின்றனர். சிலர் ஆத்மார்த்தமாக கடவுளை வழிபடுகின்றனர். வெளித் தோர்றத்தை வைத்து ஏமாறக் கூடாது. இரண்டாவது நீதி என்ன? காதல் வயப்பட்ட ஒரு பெண்ணோ ஆணோ கனவிலாவது காதலன், காதலி பெயரை சொல்லி விடுவார்கள்; மறக்கமுடியாது—மறைக்கவும் முடியாது. அதே போல கடவுள் மீது காதல் கொண்டோரையும் அவர்களின் நடை, உடை, பாவனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.
Contact swami_48@yahoo.com
Please read the articles posted already
ராமாயண வழிகாட்டி 20 பகுதிகள்
ராமனும் தவளையும்
பழமொழிகளில் இந்துமதம்
பூதம் கொடுத்த தொல்லை
Lord Sri Rama- The World’s Best P R Man
Rama Vs Kama
Aladdin’s Magic in Valmiki Ramayana
Who can read all 300 Ramayanas?
Maruti Miracle: 660 kilometres per hour!
How did Rama fly his Pushpaka Vimana?
Indus Valley Cities in Ramayana
How many miles did Rama Walk?
Where is Ramasetu (Rama’s Bridge)?
Rama – Embodiment of Dharma
Rama’s Trick! Three Stories!!
“Rama” and Sanskrit G”ramma”r
contact swami_48@yahoo.com


You must be logged in to post a comment.