
Compiled by London swaminathan
Date: 17 December 2015
Post No. 2399
Time uploaded in London :– 8-20 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
பழைய கால நகைச் சுவை நூலான — பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.
நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை
நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

விகடன்:மை டியர் சூத்ரதாரர்! தாசிகளால் சுகமில்லை என்ற தங்கள் கருத்தை நான் ஏற்கமுடியாது. ஏனெனில் உலகத்தில் தாய்மானவர், தந்தையுமானவர், தம்பியுமானவர் முதலிய மகான்களெல்லாம், தெரியாமல், அறியாமல், வெறும் பாடல்களை எழுதி நம்மை ஏமாற்றியிருகிறார்கள் என்பது என் சித்தாந்தம். உண்மையில் எட்டாத கொம்பிலுள்ள தேனுக்குக் கொட்டாவி விடுவதுபோல அவர்களுக்குக் கிடைக்காத தோஷம் அப்படி பாடியிருப்பதாகத் தெரிகிறது. ஒருவருக்கு ஆயிரம் தாரமிருப்பினும் ஒரு தாசிக்கு நிகராகார்கள். இதற்காகவே முன்னோர்கள், “லேடியில்லாதவன் பேடி” என்றும், “கிளிபோற் பெண்சாதி யிருந்தாலும் குரங்குபோலொரு கூத்தியாள் வேண்டும்” என்றுங் கூறியிருக்கிறார்கள். தவிரவும்,
நான் என் வாலிபத்தில், “மனோ உல்லாச, மரகத விசுவாச, பிரகாச, அதிநேச, கோலாகல, குஞ்சித ரஞ்சித பாலாமிர்த, நீலாமரகத பூஷணி!” என்ற தாசியை வைத்திருந்தேன்.ஒரு போலீஸ் உத்தியோகஸ்தருக்கு அவள்மீது திருஷ்டி ஏற்பட்டது.மெள்ள மெள்ள வருத்துப் போக்காயிருந்தார் அதனால் எங்களிருவருக்கும் லடாய் உண்டாயிற்று. இப்படியிருக்க ஓர் நாள் போலீஸ்லயன் வழியே போய்க்கொண்டிருந்த நான் கீழே விழுந்துகிடந்த ஒரு பொன்னாபரணத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க, என் பின்னாலென்னை யறியாமல் ஒளிந்து வந்த போலீஸ் ஜெவான் திருட்டுச் சொத்தை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி க் கன்னத்தில் தவடை சுத்திசெய்து ஸ்டேஷனுக்கு இட்டுப் போய் என் விரோதியான போலீஸ் ஜவானிடம் நிறுத்தினான். அவன் என்னயேறவிறங்கப் பார்த்து, பின்பு, ‘பூஜை இன்னும் நடக்கட்டும்’ என்றான்.
வண்ணான் கூட அப்படி வெளுக்கமாட்டான். தகுந்தபடி எனக்குச் சாத்துபடி செய்தான். இது சங்கதி என் தாயார் கேள்விப்பட்டு ஸ்டேஷனுக்கு ஓடிவந்து மாரடித்துக்கொண்டாள். என் மனைவி ஓர் மூலையிலிருந்து “காள் காள்” என்று சத்தம் போட்டுக்கொண்டி ருந்தாள். என் தகப்பனோ நாலுகை போட்ட பாரிஸ்டரைத் தருவித்துப் போடுகிறேன், என்ன கேள்விமுறையில்லையா என்று தடபுடல் பண்ணினார்.

இங்கனமிது நிற்க இச்செய்தியறிந்த என்
மனோன்மணி
மல்லிகையரும்பு
மதுரைக்கரும்பு
கற்பகத்தரு
களங்கமில்லாத கிளி
கோதிலாவொளி
அன்பின் குன்று
இன்பக்கடலாகிய என்னருமை வைப்பாட்டி! கேள்விப்பட்டு ஓடிவந்து போலீஸ் ஜவானை கண்வலையில் மாட்டி மயக்கம்பூட்டி என்னை விட்டு விடும்படி ஜாடை காட்டினாள்.
ஆகா இதல்லவோ ஆச்சரியம்! உடனே விடுதலையாகி வந்து விட்டேன்
தாயாரழுது பயனென்ன? மனைவியழுது மலையாய்க் குவித்தென்ன? தகப்பன் பாரிஸ்டரைக் கொண்டு வருகிறேனென்றதினாலானதென்ன? ஆகையால் தாசிகளால் சுகமில்லை என்று தாம் சொல்வது ஒப்போதப்போ? தாங்களே அறிய வேண்டியது
சூத்ரதாரர்:- மித்ரா! உன் அனுபவம் விசித்திரமாகத்தானிருக்கிறது. இன்னும் மற்றுமுள்ள கதைகளைக் கூறுவாயாக.
விகடன்: – இதோ கூறுகின்றேன்.
To be continued…………………………………………………………….
You must be logged in to post a comment.