
Written by S.NAGARAJAN
Date: 17 NOVEMBER 2017
Time uploaded in London- 7-00 am
Post No. 4403
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
ஞான ஆலயம் குழுமத்திலிருந்து மாதந்தோறும் வெளியாகும் ஸ்ரீ ஜோஸியம் பத்திரிகையில் நவம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை
காரிய வெற்றிக்கு எந்தக் கிழமைகளில் எதை ஆரம்பிக்கலாம்?
ச.நாகராஜன்

நமது முன்னோர்கள் இயற்கையை உன்னிப்பாகக் கவனித்த்வர்கள். தேவதைகளின் அனுக்ரஹத்திற்கு உரிய வழிகளைக் கண்டவர்கள். மஹாசக்தியின் அருள் வேண்டி உள்ளுணர்வால் தாம் கண்டவற்றை மனித குலத்திற்கு சாஸ்திரமாகத் தந்தவர்கள்.
எடுத்த காரியம் வெற்றியைப் பெறவும் அநுகூலமாக முடியவும் அவர்கள் பல எளிய வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த வகையில் வார நாட்கள் ஏழிலும் எதை எதை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அருளுரை பகர்ந்திருக்கின்றனர். எந்த நாளில் எந்தத் திசையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அருளி இருக்கின்றனர்.
அதன் தொகுப்பு இதோ:-

எந்த திசையில் எந்த நாளில் செல்ல் வேண்டும் ?
அங்காரபூர்வே கமனே ச லாப:
சோமே சனௌ தக்ஷிணம்ர்த்த லாபம் I
புதே குரௌ பச்சிமகார்யசித்தி
ரவி ப்ருகௌ சோத்தரமர்த்த லாப: II
உபஜாதி என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்த ஸ்லோகத்தின் பொருள் : :-
செவ்வாய்க்கிழமைகளில் கிழக்குத் திசையில் சென்றால் ஒருவன் லாபத்தை அடைவான்.
திங்கட்கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் தெற்குத் திசையில் சென்றால் லாபம் உண்டாகும்.
புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் மேற்குத் திசையில் சென்றால் எடுத்த காரியம் வெற்றியை அடையும்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் வடக்குத் திசையில் சென்றால் செல்வம் பெருகும்.
அடுத்து எந்த நாளில் எதை எதைச் செய்யலாம் என்பதற்கான அறிவுரைகளைப் பார்ப்போம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

ந்ருபாபிஷேக மாங்கல்ய யானாஸ்த்ர கர்ம ச I
ஔஷதா ஹவ தான்யாதி விதேயம் பானுவாஸரே II
1 மன்னர்களுக்கு மகுடாபிஷேகம் செய்தல் 2. மங்களகரமான காரியங்களைச் செய்தல் 3) உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளுதல் 4) பணிபுரியத் தொடங்குதல் 5) பிரபு தர்சனம் (உயர் அதிகாரிகள் சந்திப்பு) செய்தல் 6) மருந்து தயாரித்தல் (மூலிகை சேர்ப்பதிலிருந்து உட்கொள்ளுதல் முடிய) 7) வாகனம் செய்தல், வாகனத்தில் ஏறி அமர்தல் 8) போர் செய்யத் தொடங்குதல், அதற்கான் ஆயுதங்களைத் தயாரித்தல் 9) தான்யம் முதலியனவற்றைச் சேகரித்து அவற்றை பத்திரப்படுத்தி வைத்தல் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும்.

திங்கட்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?
சங்கமுக்த அம்பு ரஜத வ்ருக்ஷ இக்ஷு ஸ்தீரி விபூஷணம் I
புண்யகீத க்ரதுக்ஷீ ர க்ருஷிகர்ம இந்துவாஸரே II
- சங்கு, முத்து சேகரிப்பு வேலைகள் 2) நீர் சம்பந்தமான பணிகள் 3) வெள்ளி சம்பந்தமான பணிகள் 4) மரவேலைகள், கரும்பு ஆலையாட்டல் 5) பெண்களின் நலத்திற்கான அனைத்துப் பணிகள் 6) ம்லர்த் தோட்டம் அமைத்தல் 7) நல்ல சங்கீதப் பயிற்சி 8) யாகம் செய்தல் 9) பால் சம்பந்தமான பணிகள் 10) விவசாயம் செய்தல் ஆகியவற்றை திங்கட்கிழமைகளில் செய்ய வேண்டும்.
செவ்வாய்க்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

விஷாக்னிபந்தன்ஸ்தேய சந்திவிக்ரஹகர்ஷணம் I
தாத்வாகர ப்ரவுளாதி கர்மபூமிஜாவஸரே II
- விஷப் பொருள்களைச் சுத்தம் செய்தல் 2) காளவாய் அடுப்புப் போடுதல் 3) அணை கட்டல் 4) திருட்டுக் காரியங்களைச் செய்தல் 5) கலகம் செய்தல் 6) பகைவரைச் சந்தித்தல் 7) போர் 8) சுரங்க வேலை 9) பவளம் எடுத்தல்; பவள நகை செய்தல் 10) அம்பு (போர்க்கருவி) தயாரித்தல் ஆகியவற்றைச் செவ்வாய்க் கிழமைகளில் செய்ய வேண்டும்.
புதன்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

ந்ருத்யஷில்பகலாகீதிலிபி பூரசஸங்க்ரஹம் I
விவாததாது சங்க்ராம கர்ம குர்யாதித்தோஹனி II
- நடனம் பயிலுதல் 2) சிற்பக் கலை கற்றல் 3) பாட்டுப் பயில ஆரம்பித்தல் 4) எழுத்து வேலை 5) புஸ்தகம் எழுதல், அச்சிடல் 6) கலகம் புரிதல் 7) விவகாரம் – விவாதம் செய்தல் 8) தாதுப் பொருள் சேகரித்தல், விற்றல் 9) கலை பயிலல் ஆகியவற்றைப் புதன்கிழமைகளில் செய்ய வேண்டும்.
வியாழக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?
யக்ஞபௌஷ்டிக மாங்கல்ய ஸ்வர்ணவஸ்த்ராதி பூஷணம் I
வ்ருக்ஷ குல்மலதாயான் கர்மதேவேத்வாஸரே II
- யாகம் செய்தல் 2) புஷ்டியளிப்பன 3) மங்களகரமானவை 4) பொன்வேலை 5) ஆடை முதலியன செய்தல்,வாங்குதல் 6) நகை செய்தல் 7) மரம், செடி, கொடி நடுதல் (படரவிடல்) 8) வாகனத்தில் ஏறுதல் 9) தெய்வீகமான செயல்களைச் செய்தல் ஆகியவற்றை வியாழக்கிழ,மைகளில் செய்ய வேண்டும்.

வெள்ளிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?
ந்ருத்யகீதாதி வாதித்ர ஸ்வர்ண்ஸ்த்ரீ ரத்னபூஷணம் I
பூபண்யோத்ஸவ கோதான்யவாஜிகர்ம ப்ருகோர்தினே II
- பாட்டு, நடனம் கற்றல் 2) வாத்தியம் கற்க ஆரம்பித்தல் 3) தங்க வேலை தொடங்குதல் 4) புத்தாடையுடுத்தல் 5) ஆபரணம் அணிதல் 6) புண்ணிய காரியம் செய்தல் 7) உற்சவம் முதலியன இயற்றல் 8) பசு வளர்த்தல் 9) தானியங்களைச் சேகரித்தல் 10) குதிரை வாகனம் வாங்குதல் 11) திருவிழா நடத்தல் 12) பூமி சேகரித்தல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.
சனிக்கிழமைகளில் எதை எதைச் செய்யலாம்?

த்ரபு சீஸ ஆயஸ அஷ்மாதி விஷ பாப ஆஸவா ந்ருதம் I
ஸ்திரக்ர்மாகிலம் வாஸ்து சங்க்ரஹ: சௌரிவாஸரே II
- துத்தநாகம், ஈயம் போன்ற தாது சம்பந்தமான வேலைகள் 2) விஷ சாயம் 3) அம்பு- யுத்த வேலை 4) கல் பணி 5) பாவ காரியங்கள் 6) கள் (ஆஸவம்) தயாரித்தல் 7) பொய் கூறுதல் 8) வீடு, மனை சேகரித்தல் ஆகியவற்றை சனிக்கிழமைகளில் செய்ய வேண்டும்.
இப்படி அந்தந்தக் கிழமைகளில் பலிக்கக்கூடிய காரியங்களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப உசிதமான நமது பணிகளைத் தொடங்கிச் செய்தால் வாழ்வு சிறக்கும்; வெற்றி கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் அறிவுரை.
கடைப்பிடிப்போம்; வெற்றி பெறுவோம்
***