பஞ்சாங்க ரகசியங்கள் – 4, விஷூ புண்ய காலம் (Post No.8541)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8541

Date uploaded in London – 20 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பஞ்சாங்க ரகசியங்கள் – 4

kattukutty


ஷடசீதி

ஷடசீதி, விஷ்ணு பதி , விஷு- என்றால் என்ன ??


நாம் பார்க்கும் பஞ்சாங்கத்தில், உதாரணமாக ஆனி மாதத்தை
எடுத்துக் கொள்வோமே….ஆனி 1 ம் தேதி ஷட சீதி எனப் போட்டிருக்கும் 

(பார்க்க சார்வரி வருட பாம்பு பஞ்சாங்கம் ஆனி மாதம் (15-07-2020) ஒன்றாம் தேதி)

அப்படி என்றால் என்ன ???
சிவனுக்கு “ஷடாங்கன்”என்று பெயர். ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதியில் சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.
பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதம் முதல் தேதிகளிலும் ஷட சீதி புண்ய காலம் என்று போட்டிருக்கும்.

அதாவது அன்று சிவனையும் பாரவதியையும் வணங்கினால் சகல புண்ணியமும் கிடைக்கும்


விக்ஷ்ணு பதி


ஒவ்வொரு வருஷம் வரும் வைகாசி, கார்த்திகை, மாசி மாத முதல் தேதியில் விஷ்ணு பதி புண்ய காலம் என்று போட்டிருக்கும்.
அன்று விஷ்ணுவையும் லக்ஷ்மியையும் சேர்த்து வணங்கி வேண்டினால், மிக மிக புண்ணியமாம். ஏகாதசி விரதம் இருந்த புண்ணியமாம். கோ பூஜை செய்த விசேஷம்


விஷூ புண்ய காலம்


ஓவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதம் முதல் தேதி விஷு புண்ணிய காலம் என போட்டிருக்கும்.

மிக விசேஷமாக கொண்டாடுவது சித்திரை அதி காலை மூடிய கண்ணுடன் வந்து “கண்ணாடி மூலமாக” தெய்வத்தையும், பணம், வெள்ளரி பழம், ஆரஞ்சு, வாழை, பறங்கிக்காய் மற்றும் தேங்காய் காய்கறிகள் எல்லாவற்றையும் பார்ப்பார்கள். பார்த்து பெரியோர்களை வணங்கி பணம் பெறுவது வழக்கம்.
இதற்கு “விஷூக்கனி நோட்டம்”என்பார்கள். மற்ற ஆடி ஐப்பசி, மாதம் தெய்வதரிசனம் செய்வார்கள்.



தை மாதம் முதல்நாள் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசிப்பார்கள்;


இந்த மூன்று புண்ணிய காலங்களும் ஒவ்வொரு மாதமும் காலை 1.30 முதல் 10 மணி வரை மட்டுமே.



ரஜஸ் வலை நாள்

பெண்களுக்குப் போல நதிகளுக்கும் “வருடத்திற்கு மூன்று” நாட்கள் விலக்கு உண்டாம்.

அது ஒவ்வொரு வருடமும் ஆடி முதல் மூன்று நாட்களாம். அந்த மூன்று நாட்களில் யாரும் நதிகளில் குளிப்பதில்லை ,

பூஜை, திதி செய்வதற்கும் நீர் எடுப்பதில்லை.
எல்லா நதிகளுக்கும் இந்த தீட்டு உண்டு,

ஆனால் பிரும்மபுத்ரா நதிக்கும் கங்கைக்கும் மட்டும் தீட்டு கிடையாது.
உதாரணம்- பாம்பு பஞ்சாங்கம் சார்வரி வருடம் ஆடி மாதம்
வியாழக்கிழமை 1 ம்தேதி, (16-07-2020)பார்க்கவும்,
ரஜஸ் வலை நாள் என்று போட்டிருக்கும்


கர்ண வேதை


சனி, செவ்வாய் கிரகங்கள் நின்ற நட்சத்திரங்களுக்கு 2, 15, 16, உள்ள நட்சத்திரங்கள் கர்ண வேதை எனப்படும்.
இந்த நாட்களில் காது குத்தக் கூடாது. அந்தக் காலத்தில் காது குத்தும் பழக்கம் இருந்தது.

சிறந்த முறையில் கல்வி பயில காது குத்துதல் மிக மிக அவசியம். உதாரணம் தற்சமயம் வரும் 10 ம், 12ம், வகுப்புப் பெண்களே முதலிடம் வருகிறார்கள்.
இப்போதாவது புரிகிறதா இரகசியம், நீங்கள் சொல்லலாம் அவர்கள்
அழகுக்காக தோடு போட்டுக் கொள்வதாக.

கேரளாவில் தான் இந்தியாவிலேயே அதிகம் படித்தவர்கள். அங்கே ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, பிறந்த 28 ம் நாள் காதை குத்தி விடுவார்கள்


அமிர்த கடிகை (உத்திர காலாம்ருதம்)

ஒவ்வொரு நாளும் ஒரு நட்சத்திரம் வருகிறது. வியாதி வந்தவர்கள் மருந்து சாப்பிடவென்றே சில நேரம் உண்டு. அந்த நேரம் பார்த்து மருந்து உண்டு பூரண குணமடைந்து நீண்ட நாள் வாழ்ந்தார்கள்
அந்த நல்ல நேரம் தான் இது. எல்லாம் நாழிகையில் இருக்கும்.
இதை சூரியோதயத்திலிருந்து கணக்கிட வேண்டும்.
(ஒரு நாழிகை எனபது 24 நிமிடம் )

இஷ்டி(குமார சாமியம்)


இஷ்டி என்றால் யாகம் எனப் பொருள்.
இது அமாவாசை அல்லது பவர்ணமி கழிந்த இறுதிப் பகுதி
அதாவது 4 வது பாகம் ஆகும். இது பிரதமை முதல் மூன்று பாகத்தைச் சேர்த்து ஹோமம் செய்யச் சிறந்த நேரம். சிறந்த பலனும் கிடைக்கும்!

****

                                            ரகசியங்கள் மேலும் தொடரும்

tags –பஞ்சாங்க ரகசியங்கள் – 4, விஷூ