ஹிந்தி படப் பாடல்கள் – 9 – ஆஹா, வந்தது முதல் தேதி! (Post No.7839)

WRITTEN BY R.NANJAPPA                         

Post No.7839

Date uploaded in London – – 17 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 9 – ஆஹா, வந்தது முதல் தேதி!

R.Nanjappa

இது 2020 ஆகிய நல்லாண்டு. ஒரு 70 வருஷம் பின்னோக்கிப் போவோமா? அப்போது முக்காலும் நடுத்தர வர்க்கத்தினர்தான்- மாத வருமானம் அதிகமில்லை. சொத்து சுகம் பலருக்கும் இல்லை. வங்கிகள் அதிகம் இல்லை, பலருக்கும் அதில் கணக்கில்லை. ஏடிஎம் இல்லை, கிரெடிட் கார்டு இல்லை! மாத வருமானத்தை நம்பியே  வண்டி ஓடவேண்டும். இது பெரும்பாலும் பெண்களின் பொறுப்பு- அல்லது  சுமை! அல்லது சமர்த்து!  இந்த நிலையில் மாதம் முதல் தேதி  வந்தால் கொண்டாட்டம்தான்!  எல்லோரும் ஒரு நாள் சுல்தான் தான்! விவசாயிக்கு பருவ மழைபோல , முதல் தேதிக்கு அவ்வளவு  முக்கியத்துவம். எத்தனை தான் சாதாரண வேலையாக இருக்கட்டுமே, குறைந்த வருமானமாக இருக்கட்டுமே, இன்று வீடு முழுதும் மகிழ்ச்சி வெள்ளம்தான். அப்படிப்பட்ட ஒரு நடுத்தரக் குடும்பத்தில் என்ன நடக்கும்?  கவிஞர் பார்க்கிறார்-பாடுகிறார்.   ஆஹா, வந்தது முதல் தேதி!  

Din hai suhana aaj pehli tarikh hai Din hai suhana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai



இன்று இனிய நாள்- இன்று முதல் தேதி உலகமே மகிழ்ச்சியில் திளைக்கிறது-இன்று முதல் தேதி முதல் தேதி-ஆம், இன்று முதல் தேதி !  

Biwi boli ghar zara jaldi se aana Jaldi se aana Sham ko piya ji hume cinema dikhana Hume cinema dikhana Karo na bahana ha bahana bahana Karo na bahana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai  

மனைவி சொல்லிவிட்டாள்- ‘என்ன, இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்- என்ன, தெரிகிறதா, சீக்கிரம் வந்துவிடவேண்டும்! மாலையில் சினிமாவுக்குக் கூட்டிப் போகவேண்டும்- சினிமா பார்க்கவேண்டும் ! சால்ஜாப்பு- கீல்ஜாப்பெல்லாம் எதுவும் செல்லாது- இன்று முதல் தேதி- சால்ஜாப்பு நடக்காது இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது !  

Kisne pukara ruk gaya babu Lalaji ki jaan aaj aaya hai kabu Aaya hai kabu Ho paisa zara lana Ho paisa zara lana lana lana Ho paisa zara lana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai   


அதோ, யார் கூப்பிட்டது? ஏன் பாபு நின்று விட்டார்? ஓ, கடைக்காரர்- அவர் குரல்தான் ஆணையிட்டது ! அவரிடமிருந்து ஆணை வந்துவிட்டது ! ஓ, பைசா கொண்டு வா, கொண்டு வா! பைசா  கொண்டு வா ! உலகம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது இன்று முதல் தேதி !   [அப்பொழுதெல்லாம் மளிகைக் கடையில் மாசக் கணக்கு வைத்திருப்பார்கள்.]  

Bada bekar hai kismat ki maar hai Sab din ek hai roz aitbaar hai Mujhe na sunana ha sunana sunana Mujhe na sunana aaj pahli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai



இது என்ன பெரிய கஷ்டம்! விதி ஒரு போடு போட்டுவிட்டதே! இன்று முதல் தேதி போல் இல்லையே- எல்லா நாளும் ஒன்று தானோ? தினமும் நம்பிக்கையில் தான் ஓடவேண்டுமா? இன்று முதல் தேதி- என்னிடம் ஒன்றும் சொல்லாதே! இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ச்சியாக இருக்கிறது !  

Daftar ke samne aae mehman hai Bade hi sharif hai purane meharaban hai Bade hi sharif hai purane meharban hai Are jeb ko bachana bachana bachana Jeb ko bachana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai

ஆஃபீஸ் வாசலில் இது என்ன- விருந்தாளிகள் வந்துவிட்டார்களே!
நல்லவர்கள், பெரிய மனதுள்ளவர்கள் ! ஓ, அப்பனே, உன் பாக்கெட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள் இன்று முதல் தேதி- உன் பாக்கெட்டை பத்திரமாகப் பார்த்துக்கொள்!

[ விருந்தாளிகள் பிக்பாக்கெட்டுகள்]
  Dil bekarar hai soye nahi raat se Sethaji ko gham hai ki paiso chalo hath se Are lutega khazana khazana khazana Lutega khazana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai  Pehli tarikh aji pehli tarikh hai  

சேத்ஜீக்கு வருத்தம்- மனது கெட்டுவிட்டது இரவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை இன்று பணப்பெட்டி காலியாகிவிடுமே, காலியாகுமே ! இன்று முதல் தேதி – பணம் பட்டுவாடா ஆகுமே இன்று முதல் தேதி- உலகமே மகிழ்ந்திருக்கிறது!  


Aye cinema walo aao aao khel mazedar hai Ho khel mazedar hai ji khel mazedar hai Aagha hai bhagwan hai kishore kumar hai Nimmi geeta bali hai ashok kumar hai Naragis raaj kapur hai dilip kumar hai Gito ka toofan hai nach ki bahar hai Nach ki bahar hai Panch aane ka das aana Are wapas nahi jana jana jana Wapas nahi jana aaj pehli tarikh hai Khush hai zamana aaj pehli tarikh hai Pehli tarikh aji pehli tarikh hai


ஆ, சினிமாவுக்கு வந்தீர்களா, வாரும் வாரும் நல்ல மனதுக்கினிய படம் ஓடுகிறது! ஓ, இனிய படம் இனிய படம் ஆகா உண்டு, பக்வான் உண்டு, கிஷோர் குமாரும் உண்டு  நிம்மி, கீதா பாலி, அஷோக்குமார்-எல்லோரும் உண்டு நர்கீஸ் ராஜ்கபூருடன் திலீப் குமாரும் உண்டு பாட்டுக்களின் புயல், நாட்டியத்தின் வசந்தம்! நாட்டியங்களின் வசந்தம்! ஐந்தணா டிக்கட் சும்மா பத்தணாதான்! அரே, திரும்பிப் போகாதீர்கள்- வெறும் பத்தணா தான்! இன்று முதல் தேதி- திரும்பிப் போகாதீர்கள் உலகமே மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது!!

Mil jul ke bachcho ne bapu ko     Ghera bapu ko ghera Kehte hai sare ki bapu hai Mera baapu hai mera Khilone zara lana Khilone zara lana aaj pehli tarikh hai Khush hai zamana pehli tarikh

குழந்தைகள் அப்பாவைச் சூழ்ந்து கட்டிக்கொண்டு விட்டன ! எல்லோரும் கூடிச் சொல்கிறார்கள்; ‘அப்பா, உன்னைப்போல் உண்டா !’ அப்பா, மாலையில் விளையாட்டு பொம்மை வாங்கிவா ! இன்று முதல் தேதி, விளையாட்டு சாமான் வாங்கிவா ! உலகமே மகிழ்ச்சியாக இருக்கிறது! இன்று முதல் தேதி !

Song: Din hai suhana Film: Pehli Tarikh 1954 Lyricist: Qamar Jalalabadi Music: Sudhir Phadke Singer: Kishore Kumar.

எத்தனை இயற்கையான நிலையை விவரிக்கிறது இப்பாடல்! இது போலெல்லாம் நாம் சிறுவயதில் பார்த்து, அனுபவித்தது தானே! இத்தகைய குடும்பங்களும் மகிழ்ச்சிச் சூழல்களும் இருக்கத்தானே செய்கின்றன! முள்ளுடன் ரோஜாவும் தானே இருக்கிறது!   

Despite the Muslim sounding Urdu name. Qamar Jalalabadi was a Punjabi HIndu. LIke most Punjabis of pre-partition days, he learnt Urdu. His name was Om Prakash Bhandari. Qamar means moon, and Jalalabad was his hometown.

ICONIC என்ற சொல்லை இன்று தாராளமாக பயன்படுத்துகிறார்கள். இந்தப் பாடல் உண்மையிலேயே ICONIC. இந்தப் படம் வந்தது முதல் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று காலை 7.30 மணிக்கு ரேடியோ சிலோனில் இது ஒலிபரப்பாகும். நீண்ட பாட்டானதால் ஓரிரு பத்திகளே ஒலிபரப்பாகும். ஜனவரி முதல்தேதியன்று முழுப்பாடலும் ஒலிபரப்பாகும். எங்கள் கல்லூரி நாட்களில் முதல்தேதியன்று இதைக் கேட்பது எங்களுக்கு ஒரு சாங்கியம், ஒரு ரக்ஷை மாதிரி! ! எல்லா வேலையும் விட்டு ரேடியோ பெட்டி அருகில் உடகார்ந்துவிடுவோம். கரன்ட் இருக்க வேண்டுமே என்று வேண்டாத தெய்வமில்லை ! இன்றுவரை இப்பாடல் முதல் தேதியன்று ரேடியோ சிலோனில் ஒலிபரப்பாகிறது!!

உலகில் வேறு எங்காவது இப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுதானே உண்மையில் ICONIC!     சுமார் 35 வருஷங்களுக்குமுன் ஒரு முதல் தேதியன்று இப்பாடலில் முதல் இரண்டு-மூன்று வரியுடன் ஒலிபரப்பு நின்றுவிட்டது.. எங்களுக்கெல்லாம் பகீர் !. பின் , இந்த ரெகார்டு பழுதடைந்ததாகவும், மேற்கொண்டு ஒலிபரப்பமுடியவில்லை என்றும் அனௌன்ஸர் வருத்தத்தோடு சொன்னார். மேலும் நேயர்கள் யாரிடமாவது இந்த ரெகார்டு இருந்தால் அவர்களுக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்! இப்படியெல்லாம் இருந்ததால் தானே ரேடியோ சிலோனுக்கு அவ்வளவு ஆதரவு கிடைத்தது! இதை எழுதிய கமர், இசை அமைத்த ஸுதிர் ஃபட்கே., பாடிய கிஷோர், இதில் பெயர் வரும் நடிக நடிகையர்கள்- என எல்லோருமே அமரத்வம் வெற்று விட்டார்கள்!   சிலர் ஒரே ஒரு விஷயத்திற்காக புகழ் பெறுகிறார்கள்.



அமெரிக்காவில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் எழுத்தாளர்கள் குழுமியிருந்தனர். பலர் பல புத்தகம் எழுதியவர்கள். ஒரு பெண்மணி அமைதியாக அமர்ந்திருந்தார். பக்கத்திலிருந்தவர் பேச்சுக்கொடுத்தார்.எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டார். அம்மையார், ‘ஒன்றுதான்” என்று சொன்னார். கேட்டவர் முகத்தில் ஏளனப் புன்னகை மலர்ந்தது. ‘புத்தகம் பெயர் என்னவோ’ எனக் கேட்க “GONE WITH THE WIND’ எனப் பதில் வந்தது, கேட்டவருக்கு வாயடைத்தது. இந்த ஒரு புத்தகத்தால் உலகப் புகழ் பெற்றவர் அந்த அம்மையார் Margaret Mitchell. அதே போல To Kill A Mocking Bird (1960) என்ற ஒரு புத்தகத்திற்காகப் புகழ் பெற்றவர் Harper Lee. இது படமாக வந்த போது 1962அதில் நடித்து அகாடமி அவார்டு வாங்கினார் Gregory Peck. சுதீர் ஃபட்கேவுக்கும் கமர் ஜலாலாபாதிக்கும் இந்த ஒரு பாடல் போதும்! முதல் தேதி என்று தமிழிலும் ஒரு படம் வந்தது. 1955. அதில் ‘முதல் தேதி-இன்று முதல் தேதி’ என ஒரு பாட்டு இருந்ததாக நினைவு. விவரம் தெரியவில்லை. தமிழ்ப்படம் ‘இரும்புத்திரையில்’ காசு பற்றாக்குறை பற்றி ஒரு பாட்டு வரும். “கையிலே வாங்கினேன் பையிலே போடலே   காசு போன இடம் தெரியலே” என்று நினைவு. எஸ்.சி. க்ருஷ்ணன் தங்கவேலுவுக்காகப் பாடியது. இது அன்றைய கீழ் நடுத்தரக் குடும்பத்திற்கு வருமானம் போதவில்லை என்பதைச் சொல்ல வந்தது. இந்தப் பாட்டிற்கு நடிக்க தங்கவேலுவுக்கு இஷ்டமில்லை. இந்தப் பாட்டில் “அறம் விழுந்தது”, இதைச் சேர்க்கவேண்டாம் என்று தங்கவேலு சொல்லிப் பார்த்தார். தயாரிப்பாளர்கள் – ஜெமினி ஸ்டுடியோ கேட்கவில்லை. பின்னர் படிப்படியாக ஜெமினி வீழ்ச்சி யடைந்தது என்று தங்கவேலுவுக்கு வேண்டியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.



கிராம இந்தியா-காந்தீய இந்தியா
இந்தியா 7 லட்சம் கிராமங்கள் கொண்ட நாடு என்பதில் காந்திஜிக்குப் பெருமை அதிகம்.
எளிமை, கள்ளம்-கபடமில்லாத தன்மை கொண்ட மக்கள், யார் வந்தாலும் உபசரிக்கும் பண்பு, ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் நிலை, வறுமையிலும் ஒரு நிறைவு, தன்னம்பிக்கை. கம்பீரம்-இத்தகைய பண்புகளை நாம் கிராமப்புறங்களில் பார்த்திருக்கிறோம். இதையெல்லாம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஒரு கவிஞர்.
தேவதைகளின் இடம்
ஒரு நகர்ப்புற இளைஞன் கிராமத்திற்கு வருகிறான். அங்கு காணும் காட்சிகளை விவரிக்கிறான்.  

फरिश्तों की नगरी में मैं आ गया हूँ, मैं
आ गया हूँ
फरिश्तों की नगरी में
ये रानाइयाँ देख चकरा गया हूँ मैं
आ गया हूँ मैं
आ गया हूँ…



ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ மே மை ஆ கயா ஹூ (ன்) மை
ஆகயா ஹூ(ன்) ஃபரிஷ்தோ(ன்) கி நகரீ மே  …ஆ கயா ஹூ((ன்) யே ரானாயியா(ன்) தேக் சக்ரா கயா ஹூ(ன்) மை ஆ கயா ஹூ(ன்) மை …ஆகயா ஹூ(ன்)     நான் இங்கே தேவதைகளின்   இடத்திற்கு வந்துவிட்டேன் ஆம், தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன் ! இந்த அழகைக் கண்டு மதி மயங்கி விட்டேன் இங்கே வந்துவிட்டேன்

यहाँ बसने वाले, बड़े ही निराले
बड़े सीधे सादे, बड़े भोले भाले
पति-पत्नी मेहनत से करते है खेती
तो दादा को पोती, सहारा है देती
यहाँ शीरी फरहाद कंधा मिलाकर
है ले आते झीलों से नदिया बहाकर
ये चांदी की नदिया, बहे जा रही है
कुछ अपनी जुबां में, कहे जा रही है
फरिश्तों की नगरी में… 



    யஹா(ன்) பஸ்னே வாலே, படே ஹீ  நிராலே படே ஸீதே ஸாதே,  படே போலே பாலே   பதீ-பத்னீ மேஹனத் ஸே கர்தே ஹை கேதீ தோ தாதா கோ போதீ ஸஹாரா ஹை தேதீ யஹா(ன்) ஷீரி ஃபர்ஹாத் கன்தா மிலாகர் ஹை லே ஆதே ஜீலோ(ன்) ஸே நதியா பஹாகர் யே சாந்தீ கீ நதியா, பஹே ஜா ரஹீ ஹை குச் அப்னீ ஜுபா(ன்) ஸே , கஹ ஜா ரஹீ ஹை ஃபரிஷ்தோ (ன்) கீ நகரீ……     இங்கே வசிப்பவர்கள்  தனித்தன்மை கொண்டவர்கள் கள்ளம்-கபடம் இல்லாதவர்கள், எளியவர்கள் (பார்) புருஷன்-பெண்ஜாதி சேர்ந்து வயலில் உழைக்கிறார்கள் (கூடவே)  தாத்தாவுக்குப் பேத்தி உதவி செய்கிறாள் ! இங்கே ஷிரின்-ஃபர் ஹாத் சேர்ந்து  மலைக்கு அப்பாலிருந்து நதியை இங்கே  அழைத்துவந்து பெருகச் செய்கிறார்கள் தெள்ளிய வெள்ளிபோல்  நீருடன் இங்கே நதி பாய்கிறது! தன்னுடைய மொழியில் அது ஏதோ சொல்லிச் செல்கிறது! நான் தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன்!

  कन्हैया चला, ढोर बन में चराने
तो राधा चली, साथ बसी बजाने
बजी बांसुरी, नीर आँखों से छलका
मुझे हो गया है, नशा हल्का हल्का
परिंदे मेरे साथ गाने लगे हैं
इशारों से बादल बुलाने लगे हैं
हँसी देख कर मुस्कुराने लगे हैं
कदम अब मेरे डगमगाने लगे हैं
फरिश्तों की नगरी में…
 


கன்ஹையா  சலா, தோர் பன் மே சரானே தோ ராதா சலீ, ஸாத்பன்ஸீ பஜானே பஜீ பான்ஸுரி நீர் , ஆங்கோ ஸே சல்கா முஜே ஹோ கயா ஹை நஷா ஹல்கா ஹல்கா பரிந்தே மேரே ஸாத்  கானே லகே ஹை இஷாரோ ஸே பாதல் புலானே லகே ஹை ஹ(ன்) ஸீ தேக் கர் முஸ்குரானே லகே ஹை கதம் அப் மேரே ஜக்மகானே லகே ஹை ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ…..   பார், மாடுகள் மேய்க்க கண்ணன் வனம் செல்கிறான் ராதா சும்மா இருப்பாளா, அவளும் செல்கிறாள் குழல் ஊத! அந்த குழலின் வாசிப்பில், கண்ணில் நீர் பெருகுகிறது!  எனக்குச் சிறிது சிறிதாக போதை ஏறுகிறது ! பறவைகள் என்னுடன் சேர்ந்து பாடத்தொடங்கிவிட்டன! மேகமும் சமிக்ஞை செய்து என்னை அழைக்கிறது! என் சிரிப்பைக் கண்டு புன்முறுவல் பூக்கிறது! என்னுடைய நடை இப்பொழுது தடுமாறத் தொடங்கிவிட்டது! ஆம், நான் தேவதைகளின் இடத்திற்கு வந்திருக்கிறேன் !
अरे वाह लगा है, यहाँ कोई मेला
तो फिर इस तरह मैं, फिरूँ क्यों अकेला
मैं झूले पे बैठूँगा, चूसूँगा गन्ना
किसी का तो हूँ मैं भी हरियाला बन्ना
ओ भैया जी लो ये, दुअन्नी संभालो
चलो मामा उतरो, मुझे बैठने दो
फरिश्तों की नगरी में…
 
அரே வாஹ் லகா ஹை, யஹா(ன்) கோயீ மேலா தோ ஃபிர் இஸ் தரஃப் மை, ஃபிரூ(ன்) க்யோ(ன்) அகேலா மை ஜூலே பே பைடூங்கா, சூஸூங்கா கன்னா கிஸீ கா தோ ஹூ(ன்)  மை பீ ஹரியாலா பன்னா ஓ பையா ஜீ லோ யே, துவன்னீ ஸ்ம்பாலோ, சலோ மாமா உத்ரோ, முஜே பைட்னே தோ  ஃபரிஷ்தோ(ன்) கீ நகரீ…..     அடடே, இங்கே ஏதோ திருவிழா போல் தெரிகிறதே ! பின் நான் ஏன் இப்படி  தனியாகச் சுற்றவேண்டும்? நான் ராட்டினத்தில் உட்காருவேன், கரும்பு கடித்துத் தின்பேன்! எனக்கும் யாரோ இருக்கிறார்கள், நான் ஏன் ஆதரவற்றவன் போல் இருக்கவேண்டும்? அண்ணா, இந்தா, இந்த இரண்டணாவைப் பிடி! மாமா, இடத்தைக் காலி செய், நான் உட்காரவேண்டும்! ஆம், நான் தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன்!   { இங்கே நம் ஆள் ராட்டினத்தில் உட்காருகிறான்]   

यहाँ बसने वाले, बड़े ही निराले
बड़े प्यारे-प्यारे, बड़े भोले भाले
मुझे डर है हो जाए दिल की न छुट्टी
लो मैं इनको भूला, चलो इनसे कुट्टी
ये ठण्डे पसीने जो आने लगे हैं
कदम इस तरह डगमगाने लगे हैं

फरिश्तों की नगरी में.  


யஹா(ன்) பஸ்னே வாலே, படே ஹீ நிராலே படே ப்யாரே ப்யாரே,, படே போலே பாலே முஜே டர் ஹை ஹோ ஜாயே தில் கீ ந சுட்டீ யே டண்டே பஸீனே ஜோ ஆனே லகே ஹை கதம் இஸ்  தரஹ் ஜகமகானே லகே ஹை ஃபரிஷ்தோ கீ நகரீ……     இங்கே வசிப்பவர்கள் தனியானவர்கள் தான்! பிரியமானவர்கள்,  கள்ளம் கபடில்லாதவர்கள் மனதை இங்கேயே இழந்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது! குளிர்ந்த வியர்வை வரத்தொடங்கிவிட்டது ! கால்கள் இப்படி தடுமாறத்   தொடங்கிவிட்டன! நான் தேவதைகள் வசிக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்!   

Song: Farishton ki nagari  Film: Hamari Yaad Aayegi 1961 Lyrics: Kidar Sharma Music; Snehal Bhatkar  Singer: Mukesh ( one version; Mubarak Begum) Beautiful song, excellent rendering by Mukesh. Kidar Sharma was a producer, director, lyricist- a doyen of the industry. Snehal Bhatkar was a sensitive composer, but did not promote or market himself into prominence.  This song was picturised on a novice, so did not get the prominence it deserved.  

மறையும் கிராமங்கள்   எத்தனை அருமையான பாடல்! கிராமப்புறக் காட்சிகளை அப்படியே விவரிக்கிறது. 70/75 வயதான நம்மில் பலர் இத்தகைய இடங்களிலிருந்து வந்தவர்கள் தாமே! இத்தகைய காட்சிகளை தினமும் கண்டவர்கள் தாமே! ஷிரீன் -ஃபர் ஹாத் என்பவர்கள் லைலா-மஜ்னு போன்ற காதல் ஜோடி-வட இந்தியாவில்  பிரபலமாக இருப்பது. இங்கு நம் ஹீ ரோவுக்கு ஒவ்வொரு கிரமப்புற ஜோடியும் ஷ்ரீன்-ஃபர் ஹாத் ஆகத் தெரிகிறது. அதேபோல் இங்கிருக்கும் மாடுமேய்க்கும் இளைஞர்கள்  க்ருஷ்ணன்-ராதா போல் தெரிகின்றனர்.   நம் கிராமப்புறங்களில் இத்தகைய காதல் ஜோடிகள் இல்லாமல் இல்லை. இதெல்லாம் மிகைப்படுத்திச் சொல்லப்பட்டதோ? இத்தகைய இடங்களிலிருந்து வந்தவர்கள் (அடியேன் உட்பட) அப்படி நினைக்கவில்லை. இதெல்லாம்  நாம் கண்ட காட்சிகள்.     இன்று  இத்தகைய கிராமங்கள் இல்லை, ஒவ்வொரு நகரமும் விரிந்து, பல கிராமங்களை விழுங்கி வருகின்றன. பெங்களூரில் சில பகுதிகள் கிராமப்புறங்களாக இருந்து  Bangalore Rural  என்று ஒரு ஜில்லாவே இருந்தது. இன்று இங்கு கிராமமே இல்லை என்று அரசு சொல்கிறது! இந்தியா முழுவதும் இதே நிலைதான். டிவி, செல்ஃபோன் வந்தபிறகு  நகரத்திற்கும்-கிராமத்திற்கும் இடையேயான வித்தியாசம் அளவிலேயே தவிர வகையில் இல்லை. Difference of degree, not of kind!  இருந்தாலும் நல்லவர்கள் எங்கும் இருக்கிறார்கள். நாடு முழுவதும் கெட்டுப்போகவில்லை. சென்ற கட்டுரையில் கண்டபடி எல்லாம்

மோசமாகிவிடவில்லை. நல்ல இடங்கள், நிகழ்ச்சிகள் இருக்கின்றன, நல்லவர்கள் இருக்கிறார்கள். கவிஞர்களின் பார்வை வெவ்வேறாக இருப்பதால்  காட்சியும் மாறுபடுகிறது.    ஆங்கிலக் கவிஞர் தாமஸ் க்ரே  இத்தகைய ஒரு கிராமத்தை விவரிக்கிறார்:  



Elegy Written in a Country Churchyard BY THOMAS GRAY 1751   The curfew tolls the knell of parting day,          
The lowing herd wind slowly o’er the lea,
The plowman homeward plods his weary way,    
      And leaves the world to darkness and to me.
  Now fades the glimm’ring landscape on the sight,         
 And all the air a solemn stillness holds, Save where the beetle wheels his droning flight,        
  And drowsy tinklings lull the distant folds;  
Beneath those rugged elms, that yew-tree’s shade,          
Where heaves the turf in many a mould’ring heap, Each in his narrow cell for ever laid,          
The rude forefathers of the hamlet sleep.  
The breezy call of incense-breathing Morn,        
  The swallow twitt’ring from the straw-built shed,
The cock’s shrill clarion, or the echoing horn,        
  No more shall rouse them from their lowly bed.  
Full many a gem of purest ray serene,        
  The dark unfathom’d caves of ocean bear:

Full many a flow’r is born to blush unseen,         
 And waste its sweetness on the desert air.

  ஆம், நம்மில் பலர் இத்தகைய இடங்களிலிருந்து தான் வருகிறோம் . நம் குலத்துப் பெரியவர்கள் அங்குதான் வளர்ந்து, வாழ்ந்து இன்னமும் ஆத்ம சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  

  Yes, that is where “forefathers of the hamlet sleep”.  That India is also true, not only the one described by Sahir Ludhianvi. Some poets do not want to see the real India, its ticking soul!  



                                       

 
—xxxxx—

ஹிந்தி படப் பாடல்கள் – 7 – உணவுக் கனவு! (Post No.7830)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7830

Date uploaded in London – – 15 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 7 – உணவுக் கனவு!

R.Nanjappa

உணவுக் கனவு!

வீட்டுப் பிரச்சினையை எவ்வளவு எளிதாகத் தீர்த்துவிட்டார் கவிஞர்! நிஜ உலகில் வீடு இல்லையென்றால்  என்ன? கனவுலகில் பெறலாமே!

சரி, வீடு வந்தாயிற்று, உணவு?

இதையும் தருகிறார் கவிஞர் ஷைலேந்த்ராஆம், கனவில்!

ஒர் இளைஞன்ஏழை, வேலை கிடைக்கவில்லை, சாப்பாட்டுக்கு வழியில்லை. என்ன செய்வது?

கற்பனைக் குதிரையில் ஏறுகிறான். சேரிக் குழந்தைகளைக் கூட்டிக்கொள்கிறான், பாடுகிறான்!

Suraj zara aa paas aa, 

Aaj sapno(n) ki roti pakayenge hum

Ae aasmaan tu bada meherbaan, 

Aaj tujh ko bhi dawat khilayenge hum.

Chulha hai thanda pada, aur pet me aag hai

Garma garam rotiya(n) kitna hasi(n) kwaab hai!

Aaloo tamatar ke saath, imli ki chutney bane,

Roti karari si ke, ghee uspe asli lagey!

Baite kahin chaaon mein Aa aaj picnic sahi

Aise hi din ki sada, humko tamanna rahi

அப்பா சூர்யனே! சற்று அருகில் வா!

இன்று கனவில் ரொட்டி சுடுவோம்!

வானமேநீ கருணை நிறைந்தவனில்லையா!

இன்று உனக்கும் விருந்து தருகிறோம்!

அடுப்பில் நெருப்பில்லை  குளிந்திருக்கிறது (அதனால் என்ன)

வயிற்றில் தான் அக்னி  எரிகிறதே!

சுடச் சுட ரொட்டி தயார் என்ன அழகான கனவு!

உருளைக்கிழங்கும் தக்காளியும் கலந்துசப்ஜி“!

அதனுடன்  புளியம்பிஞ்சு சட்னியும் தயார்!

அடுப்பிலிருந்து  சுடச்சுட ரொட்டி– 

அதன்மேல் அசல் நெய் தடவுவோம்!

அடே அப்பா, என்ன மணம்!

இப்படி எங்கோ நிழலில் அமர்ந்து

பிக்னிக் போக வேண்டும்!

அப்படிப்பட்ட நாட்களும் வருமா

அதுவே எங்கள் ஆசையாக இருக்கிறது!

Song: Suraj zara  Film: Ujala 1959 Lyricist: Shailendra

Music: Shankar Jaikishan  Singer: Manna Dey

கனவு என்றால் கூட ,கற்பனையே என்றாலும் எத்தனை யதார்த்தம் பாருங்கள்! 

ஏதோகல்யாண சமையல் சாதம்‘  என்று  பாடவில்லை. நாம் சாதாரணமாக உண்பதையே கேட்கிறார்!

“Seeking the food he eats” என்று ஷேக்ஸ்பியர் பாடவில்லையா!

சமையல் என்னும் சடங்கு!

சாதாரண ரொட்டி என்றாலும் அதை யாரோ சமைத்துத் தானே ஆகவேண்டும்

அம்மா தானே உணவு சமைப்பவள்!

தினமும் அடுப்படியில் புகையுடனும் நெருப்புடனும்  ரொட்டி சுடக் கஷ்டப்படுகிறாள்.

ஒரு சிறு பையன், இதைக் கவனிக்கிறான். அவனுக்கு சட்டென்று ஒரு ஐடியா

அம்மாவிடம் ஓடுகிறான்சொல்கிறான்:

मुन्ना बड़ा प्यारा, अम्मी का दुलारा

कोई कहे चाँद, कोई आँख का तारा

इक दिन वो माँ से बोला क्यूँ फूँकती है चूल्हा

क्यूँ ना रोटियों का पेड़ हम लगालें

आम तोड़ें रोटी तोड़ें रोटीआम खालें

काहे करे रोज़रोज़ तू ये झमेला

अम्मी को आई हंसी, हँसके वो कहने लगी

लाल मेहनत के बिना रोटी किस घर में पकी

जियो मेरे लाल, जियो मेरे लाल

जियो जियो जियो जियो जियो मेरे लाल

முன்னா படா ப்யாரா, அம்மி கா துலாரா

கோயி கஹே சாந்த் , கோயீ ஆங்க் கா தாரா

இக் தின் வோ மாஸே போலாக்யூ(ன்) ஃபூங்க்தீ ஹை சூல்ஹா

க்யூ ரோடியோ(ன்) கா பேட் ஹம் லகாலே(ன்)

ஆம் தோடே ரோடீ தோடே ரோடீஆம் காலே(ன்)

காஹே கரே ரோஜ் ரோஜ் தூ யே ஜமேலா!

அம்மீ கோ ஆயி (ன்)ஸீ, ஹன்ஸ்கே யே கஹனே லகீ

லால் மேஹனத் கே பினா ரோடீ கிஸ் கர் மே பகீ

ஜியோ மேரே  லால், ஜியோ மேரே லால்– 

துஜ்  கோ லகே மெரீ உம்ரு ஜியோ மெரே லால்

அம்மாவின் செல்லக் குழந்தை! அம்மாவுக்கு மிகவும் பிரியம்!

சிலர் சந்திரன் என்பர், சிலர் கண்ணின் மணி என்பர்!

ஒரு நாள் அம்மாவிடம் சொன்னான்:

அம்மா, நீ ஏன் இப்படி தினம் தினம் அடுப்பை ஊதிக்கொண்டிருக்கிறாய்.?

நாம் ரொட்டி மரத்தை வைத்துவிட்டால் என்ன!

கொஞ்சம் மாம்பழம், கொஞ்சம் ரொட்டி

இப்படிக் கலந்து சாப்பிடலாமே!

நீ ஏன் இப்படி  தினமும் அடுப்பைக் கட்டிக்கொண்டு அவதிப் படுகிறாய்?”

இதைக்கேட்டு அம்மாவுக்கு சிரிப்புத்தான் வந்தது!

சிரித்துக்கொண்டே அவள் சொன்னாள்:

என் செல்லமேஉழைக்காமல் யார் வீட்டிலப்பா சோறு வரும்?

நீ  நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக

என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்!

Song: Munna bada pyara  Film: Musafir 1957 Lyricist: Shailendra

Music: Salil Chaudhury Singer: Kishore Kumar.

இது டைரக்டர் ரிஷிகேஷ் முகர்ஜியின் முதல் படம். லட்சியக் கலைஞர். Decent and sensitiveசாதாரண மக்களைப் பற்றியே கதை. ஆபாசம் இருக்காதுகுடும்பத்துடன் பார்க்கலாம். ]

என் ஆயுளும் சேர்ந்து உனக்காகட்டும்துஜ் கோ லகே மெரீ உம்ருஇது வட இந்தியாவில் பெரியவர்கள் குழந்தைக்குச் சொல்லும் ஆசி வசனம்

என்ன கற்பனைகருத்து பாருங்கள்!

தாய் படும் கஷ்டத்தைச் சகிக்காத சிறு பையன்!

இதெல்லாம் நாம் சிறுவயதில் பார்த்தது தானேவிறகு அடுப்பு, கரிக் கும்மட்டி, ஊதி ஊதி யாக வேண்டும், புகையுடன் இருந்தே பழகவேண்டும்அன்று மின்சார அடுப்பா, கேஸ் அடுப்பா?

ஆனாலும் அவனுக்கு உழைப்பின் உயர்வைச் சொல்லித் தரும் தாய்!

ஷைலேந்த்ரா  சோஷலிசக் கவிஞர் என்றாலும்நீ சும்மயிரு, உனக்குச் சோறு போடவேண்டியது அரசின் கடமைஎன்று உபதேசம் செய்யவில்லை!

இன்று பாருங்கள்நமது அரசியல் கட்சிகளெல்லாம் எல்லோரையும்  எதற்கும் சர்க்காரையே நம்பி வாழும் பிச்சைக்காரர்களாக்கி விட்டன! மழையோ, புயலோஅரிசி, பருப்பெல்லாம் வீட்டிற்குப் பையில் வந்து சேர வேண்டும்!

கனவு தீர்த்த பிரச்சினைகள் !

எல்லாம் சரிதான்கனவு  பிரச்சினையைத் தீர்த்துவிடுமா

தீர்த்திருக்கிறது என்று சாஸ்திரத்தில் படிக்கிறோம். மனதால் கோயில் கட்டிய பூசலாரையும் அங்கு வந்த சிவபெருமானையும் பற்றி பெரிய புராணத்தில் படிக்கிறோம்!

ஐயா, இதெல்லாம் கட்டுக்கதை என்கிறீர்களா?

இன்று விஞ்ஞானமும் இதையே சொல்கிறதுஆம் கனவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்!

கனவில் தீர்வுகண்ட பத்து விஷயங்கள் பார்க்கலாமா?

1. மேரி ஷெல்லி   Mary Shelley என்ற கவிஞருக்கு ஃப்ராங்கின்ஸ்டீன்  Frankensteinஎன்ற கதை கனவில் வந்தது!

2. ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன்  Robert Louis Stevenson என்ற நாவலசிரியருக்கு டாகடர் ஜெகில் மிஸ்டர் ஹைடு  Dr.Jekyll & Mr.Hyde என்ற கதை கனவில் வந்தது!

3. பால் மக்கார்ட்னீ   Paul McCartney என்ற பீடில்ஸ்  Beatles பாடகருக்குயெஸ்டர்டே”  Yesterday என்ற  ஹிட் பாட்டு கனவில் வந்தது.

இவர்கள் எல்லாம் கற்பனை உலகில் சஞ்சரிப்பவர் தானே, இதில் என்ன அதிசயம் என்பீர்களா?

கனவில் பிரச்சினைக்கு விடை கண்ட விஞ்ஞானிகளின் வரிசை இதோ-

4. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்Albert Einstein  ஓளியின் வேகத்தை Speed of Light கனவிலேயே கன்டறிந்தார்

 Imagination is everything.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.
It is the preview of life’s coming attractions.
Imagination is more important than knowledge.
Never give up on what you really want to do.
The person with big dreams is more powerful than one with all the facts.

–Albert Einstein

5. நீல்ஸ் போர்Niels  Bohr அணுவின் இயல்பை கனவிலேயே கண்டார்

6. எலியாஸ் ஹோவ் : Elias Howe தையல் மிஷினில் ஊசியின் கண் எங்கு இருக்கவேண்டும் என்பதை கனவில்  கண்டார்!

7. நமது கணித மேதை ராமானுஜம்: பல சூத்திரப் புதிர்களுக்கு விடை கனவிலேயே கண்டார்.

Srinivasa Ramanujam:

“While asleep I had an unusual experience. There was  red screen formed by flowing blood as it were.I was observing it. Suddenly a hand began to write on the screen. I became all attention. That hand wrote a number of results in elliptic integrals. They stuck to my mind. As soon as I woke up, I committed them to writing.”

8ஓட்டொ  லோவிOtto  Loewi நரம்புகளின் இயக்கத்தை  Nerve Impulse கனவில் கண்டறிந்தார்

9.ஆகஸ்ட் கெகூலேAugust Kekule பென்ஃஜீன் மாலிக்யூலின் அமைப்பை  structure of Benzene molecule கனவில் கண்டறிந்தார்.

10. ஃப்ரெடெரிக் பான்டிங்க்Frederic Banting இன்சுலினை Insulin கனவில்தான் கண்டுபிடித்தார்.

இப்படி இன்னும் எவ்வளவோ  சொல்லலாம்

அதனால் தான் நமது வேதாந்தத்தில் கனவைத் துச்சமாக நினைத்து ஒதுக்குவதில்லை. விழிப்பு நிலை, தூக்கம்அது கடந்த நிலை போன்று கனவு நிலைக்கும் அங்கீகாரம் தந்திருக்கிறார்கள்.

ஆனால் பகற் கனவு அல்ல! இவர்கள் அனைவருமே கடின உழைப்பாளிகள்.

கனவு காணவேணும்ஆனால் அது நமக்கு எஜமானனாகி விடக்கூடாது!

கனவுவெற்று மனக்கோட்டையல்ல!

“If you can dream – and not make dreams your master;
If you can think – and not make thoughts your aim;
If you can meet with Triumph and Disaster
And treat those two impostors just the same;”

Yours is the Earth and everything that’s in it,   

 And—which is more—you’ll be a Man, my son!

என்று எழுதினார் ருட்யார்ட் கிப்லிங்க். Rudyard Kipling

 Take time to Work – It is the price of success. 

 Take time to Dream – It hitches the soul to the stars.

 கனவு வெற்றுக் கனவாக இருக்கக்கூடாது. இதை ஷேக்ஸ்பியர் அழகாகச் சொல்கிறார்:

O, who can hold a fire in his hand

by thinking of the frosty Caucasus?

Or cloy the hungry edge of appetite

by bare imagination of a feast?

Or wallow naked in December snow

by thinking of fantastic summer heat?

O,no, the apprehension of the good

gives but the greater feeling to the worse.

[Shakespeare: Richard II]

உழைப்பும் வேண்டும். அத்துடன் கற்பனை வளமும் லட்சிய நோக்கும்  Imagination வேண்டும்!

****