Three Birds with One Stone in Puducherry: My Visit to Ashram, Museum and Ganesh Temple (Post.15,509)

Written by London Swaminathan

Post No. 15,509

Date uploaded in London – 18 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Puducherry, also called Pondicherry, was ruled by French until 1954. The French de facto left Pondicherry on November 1, 1954, transferring control to India, with the formal de jure transfer occurring on August 16, 1962. The colony officially merged with India on July 1, 1963, ending nearly 300 years of French presence. Still we can see street names in French. Many of the residents have voting rights in France. Puducherry people cast votes in French elections.

There are many attractions in Puducherry: a few museums, Bharatiyar park, Manakkulam Vinayakar Temple Aravinda/ Aurobindo Ashram

Though I have visited the famous Ganesh temple a few times, this time, during my visit to the city on 13-3-2026, I have included all the three places. From Kumbakonam we rushed to Aravinda Ashram, knowing it would close at 11-30 am for lunch break. I entered the Ashram at 11-15 and went round the  Samadhis of Sri Aravindar and Annai/Mother. One could feel the holy vibrations in the serene atmosphere. A lot of living flowering plants and a lot of flower garlands in the Samadhis are visible. But no one could stand there. Volunteers ask everyone to move forward. But you could do many rounds if here is not a long queue. Visitors touch the samadhis with both hands or their forehead to show their reverence. I spent 15 minutes there. No photography is allowed. The sentry at the entrance asks everyone to switch of their  mobile phones et.  Again, it opened at 2 pm and meditation is allowed.

The Ashram is located in the eastern part of Pondicherry, along the coast of the Bay of Bengal. It is 160 kilometres (100 miles) south of Chennai. The main Ashram building, where the Samadhi of Sri Aurobindo and the Mother is located, is open to all during visiting hours: 8.00 a.m. to 11:30 a.m. and 2.00 to 6.00 p.m. At other times, you need to have a pass in order to enter. The Sri Aurobindo Ashram Publication Department publishes the works of Sri Aurobindo and the Mother and works by disciples on their life and teachings, in over 15 languages.

The Publication Department’s distribution unit is SABDA. It has two retail outlets, Service branch inside the Sri Aurobindo Ashram main building, and Kripa branch diagonally opposite it. The head office of the Publication Department and SABDA is at 17, Rue de la Marine (next to our Kripa branch).

I did not buy any book, because my father has left us his important works.

Aurobindo (Aravinda) was a poet, freedom fighter and a philosopher. He interpreted the Vedas in a different way, instead of translating them verbatim. His Vedic glossary give new meanings to important words.

Who is Aravindar?

Sri Aurobindo (Aurobindo Ghose, 1872–1950)

Early Life & Education: Born in Calcutta, Aurobindo Ghose was educated in England (Manchester and Cambridge) from age seven, becoming proficient in Western classics and languages before returning to India in 1893.

Nationalist Fighter (1893–1910): He was a key figure in the early Indian independence movement, advocating for complete independence (Purna Swaraj) rather than colonial self-government. He was jailed in 1908 in connection with the Alipore Bomb Case.

Spiritual Transformation & Ashram (1910–1950): Following intense spiritual experiences in Alipore jail, he withdrew from politics and moved to Pondicherry to focus on spiritual practice.

Integral Yoga & Philosophy: He taught that life is a divine manifestation and that humanity can evolve beyond the mind into a “Supermind,” uniting spiritual life with worldly activity.

Works: He was a prolific writer, with major works including The Life Divine (philosophy), The Synthesis of Yoga, and the epic poem Savitri.

The Mother: He was assisted in his spiritual work by Mirra Alfassa, known as “The Mother,” who took over the management of the Ashram after his passing in 1950.

Auroville: He is the inspiration behind the experimental township of Auroville, intended to be a city of human unity.

***

MANAKKULAM VINAYAKAR TEMPLE

It is a vibrant temple with lot of devotees visiting it every minute. Big temple with lot of Ganesh shrines inside. Walls are decorated with different forms of Ganapati/Vinayakar detailing the puranic stories. Entry is free and Thayir Sadham (Curd bath) Prasad is distributed. One can finish Darshan (Viewing ) in half hour or so. It is just opposite Aurobindo Ashram. Both the places are dotted with lot of street vendors selling different things for tourists.

Bharatiyar worshipped in the temple during his stay in Puducherry. His poem on this Ganesh made him popular in Tamil Nadu. I visited the temple on 13-3-2026, for the third time.

Sri Manakula Vinayagar Temple was in existence before the French came and settled in Pondicherry i.e. before 1666. In Tamil ‘Manal’ means sand and ‘Kulam’ means pond near the sea, So the people called the god as Manal Kulathu Vinayagar means God near the pond of sand]. .The Jesuits and missionaries tried to demolish Manakula Vinayagar, but they could not demolish the temple. During 1700 French prohibited performing poojas and festivals particularly on Fridays in the temple. All the Hindus who were worshipping Lord Vinayaga objected and migrated to English Territory. Everything changed in course of time.

***

Disappointing Museum

After visiting Ashram and Temple, I visited Puducherry museum and bought Rs 10 ticket, probably the cheapest museum ticket in the whole wide world. All worn out statues are placed outside, but photography was not allowed inside.

Three things I would like to point out:

1.     The Museum has beautiful bronze, numbering over 80. But you cant take pictures and no book is available with the pictures. No picture post cards are sold. Very disappointing. All over the world museums do roaring business by selling books and picture cards and mementos. I bought picture cards even in Colombo Museum. When I asked at the reception, they told me no book was published about the artifacts in the museum.

2.     They must learn from other parts of the world. Ten rupees entry fee is dead cheap, ridiculously cheap; they must raise the fee and allow photography.

3.     One can finish the viewing in 30 minutes. It must be placed in a larger building with more information.

Following is the summary from museum website

The Puducherry Museum presents glimpses of geological, archaeological and historical periods and seeks to highlight the many facets of its arts and crafts which have now become part of Puducherry’s rich heritage.

The following galleries/sections are set up in the museum.

The French India Gallery (One)

 An issue of ‘Vijaya’ the first daily edited by Poet Subramania Bharathi is also on display there.

The Archaeology Section

The Bronze Gallery

This is the most attractive gallery.

Exquisite pieces of divine images, mostly found as treasure troves adorn the bronze gallery. The panchaloga images of the Dancing Siva (Nataraja) umamaheswara, thiripurantaka/thiripurasundari in the graceful tribhanga posture from Sorakkudi. There are specimens of bronzes of the Vijayanagar and Nayaka periods.

Display of Vehiccles (Southern Courtyard)

Sculptures (Courtyard- North and South)

A few specimen of Pallava and Chola sculptures were displayed in and around the ‘Place de Government’ since the French days.

French India Gallery (Two) Comprising

a) The Drawing Chamber/Salon (Central Hall)

b) The Dinning Chamber/Salle d’ Manger

c) The Bed Chamber/ Chambre a coucher

The Arms Gallery

Gallery of Art and Crafts (Western Wing)

Displayed in two adjacent halls respectively are a variety of hand made items and artifacts crafted by artisans in France and Puducherry.

The Geological Section (Southern Colonnade)

Puducherry Museum Visiting Hours

Opened For Public From Tuesday To Sunday

Timing: 10.00 AM To 5.00 PM(Without Lunch Break)

Monday is Weekly Holiday

Following sites show the pictures of some specimens. But the pictures are not of good quality.

·         Puducherry Museum Bronze statue collectionPDF icon(3.78MB)

·         Puducherry Museum Furniture inventoryPDF icon(9.55MB)

·         Puducherry Museum Stone Sculpture CollectionPDF icon(6.90MB)

·         Puducherry Museum PaintingPDF icon(12.03MB)

·         Puducherry Museum Photo and Map CollectionPDF icon(358.54KB)

·         Puducherry Museum Textile inventoryPDF icon(312.63KB)

That is why I ask them to allow the visitors to take pictures. They must raise the entry fee for public; concessions may be given to students. The museum needs a large venue for a better display.

–subham-

Tags: My visit, Puducherry, Museum, Manakulathu Vinayakar temple, Aurobindo Ashram, three birds, one stone

Hinduism through 500 Pictures in Tamil and English 41; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-41 (Post.15,508)

Written by London Swaminathan

Post No. 15,508

Date uploaded in London – 18 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

KAMADHENU

Kāmadhenu (कामधेनु) refers to “a cow who can fulfil all desires”.

She is the first mother of cattle. She is a goddess with marvellous powers and attainments who gives milk whenever needed by gods and sages. The Purāṇas declare that all the cattle in the world today are descended from Kāmadhenu.

The cow which grants desires is called Kamadhenu. It was with the sage Vasistha. She was produced at the churning of the milky ocean. it came out of the ocean along with 14 things. Among the examples of her supernatural powers was the creation of a host of warriors who aided Vasistha against Vishwamitra. She is called Kama duh, Savala and Surabhi ; her daughter is Nandhini according to Kalidasa .

Kamadhenu is a divine bovine-goddess described in Hindu mythology as the mother of all cows. All cows are venerated in Hinduism as the earthly embodiment of the Kamadhenu. As such, Kamadhenu is not worshipped independently as a goddess, rather, she is honoured by the veneration of cows in general .

 Hindu scriptures provide diverse accounts of the birth of Kamadhenu. While some narrate that she emerged from the churning of the cosmic ocean, others describe her as the daughter of the creator god Daksha, and as the wife of the sage Kashyapa. Still other scriptures narrate that Kamadhenu was in the possession of either Jamadagni or Vasistha (both ancient sages), and that kings who tried to steal her from the sage ultimately faced dire consequences for their actions.

***

Kamadhenu (Sanskrit: कामधेनु [kaːməˈd̪ʱeːnʊ] Kāmadhenu), also known as Surabhi (सुरभि Surabhī).

Kamadhenu is often addressed by the proper name Surabhi, which is also used as a synonym for an ordinary cow.

The epithets “Kamadhenu”, “Kamaduh” (कामदुह्) and “Kamaduha” (कामदुहा) literally mean the cow “from whom all that is desired is drawn”—”the cow of plenty”

According to the Monier Williams Sanskrit–English Dictionary (1899), Surabhi means fragrant, charming, pleasing, as well as cow and earth.

Deities Associated with Parts of Kamadhenu

Scriptures describe specific deities residing in different parts of her body:

Horns: The Trimurti — Brahma (tip), Vishnu (middle), and Shiva (base).

Eyes: The Sun (Surya) and Moon (Chandra) gods.

Shoulders: Agni (fire god) and Vayu (wind god).

Legs: The Himalayas.

Teats: The four Purusharthas (Dharma, Artha, Kama, Moksha).

Body: Represents Mother Earth (Prithvi).

***

King Vishwamitra and Sage Vashista clashed several times on various issues. Once the fight was over the divine cow Kamadhenu. It would give anything one wants. When Vasistha fed the entire army of the king with this magical wish fulfilling cow, Vishwamitra was wonder struck. He asked for the cow which provided them a divine dinner. When Vasistha refused to give him the divine cow, he forcefully took it from him. The cow produced an army of soldiers who decimated Vishvamitra’s army completely.

There is one more story in Raghuvamsa Kavya of the greatest poet Kalidasa. When the King Dilipa approached his Kula Guru Vasishta for getting a child, the sage advised him to worship Nandhini, daughter of Divine Cow Surabhi alias Kamadhenu. Dilipa accompanied by his wife Queen Sudhakshina, worshipped the cow Nandhini and got a child. Earlier Vasishta told them once Dilipa insulted Kamadhenu and it cursed him to go issueless. Thus, Raghuvamsa glorified Kamadhenu/Surabhi and its daughter Nandhini.

Vahanas-

During festival time, gods and goddesses are taken in processions in the mornings and in the evenings. Different vehicles/ vaahanaas are used both common and special. Kalpa vriksha/wish giving celestial tree and Kamadhenu/wish giving celestial cow or the mythical Gandabherunda bird are special ones.

***

Knowledge is Kamadhenu: Chanakya Niti

Knowledge has in it the quality of the desire-yielding cow. It yields fruit even when there is no season for it. In foreign sojourn it acts like other. Knowledge is accepted as a secret treasure.4-5

Hindus not only domesticated the cows and oxen, they worshipped them as gods and goddesses. Kamadhenu is the wish fulfilling cow. The picture and statues of Kamadhenu are in Hindu houses and temples.

****

காமதேனு

காமதேனு என்பது இந்து சமயத்தில் ‘அனைத்துப் பசுக்களுக்கும் தாய்’ என்று போற்றப்படும் தேவலோகத் தெய்வீகப் பசுவாகும். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய இது, நினைத்ததை உடனே கொடுக்கும் அபூர்வ சக்தி படைத்தது. செல்வச் செழிப்பு, நேர்மறை ஆற்றல் மற்றும் வளம் தரும் அடையாளமாக வீடுகளில் இதைப் பூஜிப்பது, வாஸ்து தோஷங்களை நீக்க வல்லது.

காமதேனு, படைப்புக் கடவுளான பிரம்மாவின் மகனாகக் கருதப்படும் முனிவர் காஷ்யபரின் மனைவி என்று சொல்லப்படுகிறது.

தோற்றம்: இது பெண்களின் தலை மற்றும் மார்பு, பறவையின் இறக்கைகள் மற்றும் மயிலின் வால் ஆகியவற்றைக் கொண்ட வெண்மையான பசுவாகச் சித்தரிக்கப்படுகிறது.

வசிஷ்ட முனிவர் ஆசிரத்தில்  இருந்து, அவர்களுக்குத் தேவையான பால் பொருட்களை வழங்கி, அவர்களைப் பாதுகாத்தது. விச்வாமித்த்ரருக்கு எதிராகப் பெரும்படைகளையும் உருவாக்கியது.

காமதேனுவின் சிலையை வீட்டில் வைப்பது, செளபாக்கியத்தையும், நல்ல ஐஸ்வர்யத்தையும், செல்வத்தையும் கொண்டுவரும் .

இது அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் சக்தி கொண்டதால், ‘கற்பகவிருட்சம்’ போன்று அள்ள அள்ளக் குறையாத வளத்தைத் தருகிறது.

இதன் இன்னுமொரு பெயர் –சுரபி . அதன் மகளின் பெயர் நந்தினி என்று காளிதாசர் ரகுவம்சத்தில் கூறுகிறார் .

திலீபன் என்ற மன்னனுக்குப் புத்திரப்பேறு இல்லாதது பெரும் குறையாக இருந்தது. அவன் குல குருவான வசிஷ்ட ரிஷியைச்  சந்தித்தபோது காமதேனுவை அவமதித்ததால் அதன் சாபம் உள்ளதாகக்  கூறி,  அதன் மகளான நந்தினியை உபசரிக்கும் படி கட்டளையிட்டார்; அவனும் மனைவி சுதட்சிணாவுடன் அந்தப் பசுவை உபசரித்தவுடன் குழந்தை பிறந்தது என்று ரகு வம்ச காவியம் விரிவாகக் கூறுகிறது .

இறைவனுடைய வாஹனங்களில் காமதேனு வாகனமும் கற்பக மர வாகனமும் உண்டு; பல கோவில் வீதி உலாக்களில் இவைகளைக் காணலாம்.

உருவத்தில் காமதேனு பொதுவாக ஒரு பெண் தலை மற்றும் முலைகள், ஒரு பறவையின் இறக்கைகள், ஒரு மயிலின் வால் கொண்ட மற்றும் உடலில் பல்வேறு தெய்வங்களைக் உள்ளடக்கிய வெள்ளை பசுவாக சித்தரிக்கப்படுகிறது.

அனைத்து கடவுள்களும் காமதேனுவின் உடலில் வசிக்கின்றனர் . கொம்புகள் -திரிமூர்த்தி  — பிரம்மா  (tip), விஷ்ணு  (middle), சிவபெருமான்  (base).

கண்கள்  சூரியன் (சூர்யா, சந்திரன்  (Chandra) .

தோள்கள் : அக்கினி  (fire god) வாயு  (wind god).

கால்கள் : இமயமலை

பசுவின் காம்புகள் : மனிதனின் நான்கு  லட்சியங்கள்- (தர்மம் , அர்த்த , காம , மோக்ஷ ).

உடல் : பூமாதேவி  (Prithvi).

வஷிஷ்டர், விஸ்வாமித்திரர் மோதல்!

வேத காலத்தில் வாழ்ந்த இரண்டு பெரிய ரிஷிக்கள் வஷிஷ்டரும் விஸ்வாமித்திரரும் ஆவர். இருவருக்கும் எப்போது பார்த்தாலும் மோதல். எதிரும் புதிருமாக நிற்பார்கள். கீரியும் பாம்பும் போல சண்டையிடுவர்! காரணம்: விஸ்வாமித்ரர் ஒரு மன்னர். இதனால் ஆட்சியாளருக்கே உரிய தீய குணங்கள் அவரிடம் இருந்தன:-

அஹங்காரம் :–(தன்னை வஷிஷ்டர் வாயினால் பிரம்மரிஷி என்று அழைக்க வேண்டும்.

பெண்வயப்படுதல்:– மேனகாவிடம் வசப்படல்.

வேண்டியவருக்குச் சலுகை:– திரிசங்கு என்பவரை உடலோடு சொர்க்கத்து அனுப்புகிறேன் பார்! என்று சவால் விடுதல்.

பிறர் பொருளுக்கு ஆசைப்படுதல்: வஷிஷ்ட முனிவரின் காமதேனு முதலிய அரும்பெரும் விஷயங்களை தனதாக்கிக்கொள்ள விரும்பல். வசிஷ்டரிடம் இருந்த காமதேனுவை வலுக் கட்டாட்டயமாக விசுவாமித்திரர் கைப்பற்றியபோது, வசிட்டரின் உத்தரவில் பெரும்  படை கிளம்பி விச்வாமித்திரரைத் தோற்கடித்தது.

இறுதியில் இத்தனை மோக வலைகளையும் தாண்டி வஷிஷ்டர் வாயினால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். அதற்கு முன்னால் நடந்த ஒரு மோதல் இதோ:–

எது பெரிது தவமா? நல்லோருடன் இருக்கும் சத்சங்கமா? என்பதே கேள்வி. ஒருவன் நியம நிஷ்டைகளுடன் வாழ்ந்து தவம் இயற்றுவதே சக்தி வாய்ந்தது என்றார் தபோநிதி விசுவாமித்திரர்.

இல்லை அவ்வளவு எல்லாம் கஷ்டப்படவேண்டாம். நல்லவருடன் இருந்து, அவர்களுடைய காற்றோ, நிழலோ மேலே விழுந்தால் அதைவிட சக்தி வாய்ந்தது எதுவுமில்லை என்றார் வஷிஷ்டர்.

இருவர் வாக்குவாதமும் முடிவில்லாமல் போய் உச்ச ஸ்தாயியை அடைந்தது. இனியும் பேசினால் தொண்டை வறண்டுவிடுமென்று எண்ணி, இருவரும் மஹாவிஷ்ணுவிடம் சென்று முடிவு காண்போம் என்றனர்.

மஹாவிஷ்ணு இருவரையும் பார்த்து விட்டு, இப்பொழுது கொஞ்சம் முக்கியமான அலுவலில் இருக்கிறேன்; கொஞ்சம் ‘பிஸி’. ஆகையால் ஆதிசேஷனிடம் போய்க்கேளுங்கள் அவன்தான் என்னைத் தாங்குகிறான். இந்த பூபாரம் முழுதும் அவன் தலையில்தானே சுழல்கிறது – என்றார்.

இருவரும் மஹாசேஷன் — – ஆதிசேஷன் – என்னும் பாம்பிடம் சென்றனர். அவர் தலையில்தான் பூமி நிற்கிறது என்பது இந்துமத புரானங்கள் சொல்லும் விஷயமாகும். மஹாசேஷன் சொன்னார்: உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுகிறேன். என் தலைவர் விஷ்ணு அனுப்பிவிட்டால் நான் மறுக்க முடியுமா? ஒரு சின்ன உதவி தேவை. இதோ என் தலையில் இருக்கும் பூபாரத்தை இறக்கிவையுங்கள்; உங்கள் கேள்வியைப் பரிசீலிக்கிறேன் என்றார். உடனே விசுவாமித்திர வழக்கம்போல, ‘முந்திரிக் கொட்டை போல முந்திக் கொண்டு’ சென்று, இதோ பார்! என் தவ வலிமை, நியம, நிஷ்டைகள் அத்தனையையும் பயன்படுத்தி பூமியைத் தூக்குகிறேன் என்று பூமியைத் தூக்க முயன்றார். அதுவோ ஒரு அங்குலம் கூட அசையவில்லை.

இப்பொழுது வசிட்டர், சரி, விடுங்கள்! இப்போது என்னுடைய முறை; நான் முயற்சிக்கிறேன் என்று சொல்லி “நான் நல்லோரிடம் வாழ்ந்த ஒரு நிமிடப் பலனில் இந்த பூமி என் கைக்கு வரட்டும்” என்றார். அவர் கையில் பூமி நின்றது.

மஹாசேஷன் சொன்னார்: “குட் பை! உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. பை! பை! என்று சொல்லிவிட்டார். இருவரும் நிம்மதியாகத் திரும்பினர்.

–subham—

Tags- Kamadhenu, Surabhi, Divine Cow, Nandhini, Vahana, Wish fulfilling ,Vasistha, காம தேனு, சுரபி, நந்தினி, தெய்வீகப்பசு, வசிஷ்டர், விசுவாமித்திரர், பாற்கடல்

வெளி உலகவாசிகள் ET, ALIEN CIVILIZATION, பிராமணர் எண்ணிக்கை  CENSUS பற்றி அருணகிரிநாதர்! -48 (Post.15,507)

Written by London Swaminathan

Post No. 15,507

Date uploaded in London – 18 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

48திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 48

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 48

அகச் சமயம் ஆறுபுறச் சமயம் ஆறு

அகச் சமயம் ஆறு: வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.

புறச் சமயம் ஆறு: சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம்.

** திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.

இப்பாடல் முழுவதும் துதியாகவே அமைந்து, வேண்டுதல் ஏதும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

***

வெளி உலகவாசிகள் பற்றி அருணகிரிநாதர்!

சுருதி மறைகள் … வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள்,

இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள் … எட்டுத் திக்குப்

பாலகர்கள்*1, முநிவர்கள்

துகளில் இருடி யெழுபேர்கள் சுடர்மூவர் … குற்றமில்லாத ரிஷிகள்

ஏழு பேர்*2, சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள்,

சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் …

சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள்*3,

தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் … வெகு

தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள்,

அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி …

அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக்

கோடிக்கணக்கான அடியார்கள்,

அரியும் அயனும் ஒருகோடி யிவர்கூடி … திருமால், பிரமன், ஒரு

கோடி பேர் – இவர்களெல்லாம் கூடி,

அறிய அறிய அறியாத அடிகள் அறிய … அறிந்து கொள்ள,

அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது

திருவடிகளை,

அடியேனும் அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே …

அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக.

(*1) அஷ்டதிக்குப் பாலகர்கள் (எண்திசையைக் காப்பவர்கள்) பின்வருமாறு: இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

(*2) சப்தரிஷிகள் பின்வருமாறு: அகஸ்தியர், புலஸ்தியர், ஆங்கீரசர், கெளதமர், வசிஷ்டர், காச்யபர், மார்க்கண்டர்.

(*3) நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:

சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர். இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.

***

ஐந்து எண்ணின் சிறப்புகள்

அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே … அம்பிகை,

கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை

உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே,

மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து … ஐந்து

மாயை*1, ஐந்து வேகம்*2, ஐந்து பூதம்*3, ஐந்து நாதம்*4

வாழ்பெருஞ் சராசரங்கள் உறைவோனே … இவை வாழ்கின்ற

அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே,

வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு … வேண்டிய

சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு

வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே … வேடர்குலப்

பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே,

வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற … வீர

லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற

மேரு மங்கை யாள வந்த பெருமாளே. … உத்தர மேரூரில்*5

ஆட்சிபுரியும் பெருமாளே.

(*1) மாயை ஐந்து:

தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்.

(*2) வேகம் ஐந்து பலவகைப்படும்

வாயுவேகம், மனோவேகம், ஒளிவேகம், ஒலிவேகம், அசுவவேகம்.

வேகம் சக்தியென கொண்டால் – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, சிற்சக்தி, பராசக்தி.

வேகம் புலனாகக் கொண்டால் – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

(*3) ஐந்து பூதம்:

நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.

(*4) ஐந்து நாதம்:

தோல் கருவி – மத்தளம், உடுக்கை,

துளைக் கருவி – குழல், நாதஸ்வரம்,

நரம்புக் கருவி – யாழ், வீணை,

கஞ்சக் கருவி – ஜாலரா, ஜலதரங்கம்,

மிடற்றுக் கருவி – வாய்ப்பாட்டு, கொன்னக்கோல்.

(*5) உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.

***

பிராமணர் எண்ணிக்கை CENSUS !

ஆழியில் துயில்வோனும் மா மலரப் பிரமாவும் …

திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில்

வீற்றிருக்கும் பிரமனும்,

ஆகமப் பொருளோரும் அனைவோரும் … சிவாகமத்துக்கு உரிய

மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும்,

ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் …

ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து

உலவும் ஞானிகளும்,

ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர்

மேவி … ஆயிரத்து இரு நூறு* மறையவர்களும் வாழ்கின்ற

உத்தரமேரூரில்** வீற்றிருந்து,

அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி … அற்புதமாக,

அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி,

மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல … பகைவன்

எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே,

மான் மகட்கு உளனான பெருமாளே. … மான் பெற்ற மகளான

வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே.

இவ்வாறே மற்ற ஊர்களிலும் வாழும் மறையவர் எண்ணிக்கை வருமாறு:

      திருப்பெருந்துறை = 300, தில்லை = 3,000, திரு ஆக்கூர் = 1,000,

      திருவீழிமிழலை = 500, சீகாழி = 400, மதுரை = 48,000.

***

பெருச்சாளி வாகனம்!

தாபர(ம்) சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் தகு

தாம்பிர சேவித ரஞ்சித உம்பர் வாழ்வே … அசையாப் பொருள்,

அசையும் பொருள் என்றவாறு அனைத்தையும் பாது காத்தல் செய்யப் படைத்தவனே, புதுமை நிறைந்த, தக்கதான, தாம்பிரசூடம்** எனப்படும் சேவலால் வணங்கப் படுபவனே, இன்பம் தருகின்ற தேவர்கள் செல்வமே,

முன வா(வு)ம் பத மூடிக வந்தன(ம்) முயல்வான் பிடி மாடு

இமை ஐங்கரர் முகதா ஆம் பி(ன்)ன … (முருக வேள் நினைக்கும்)

முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை உடையவரும்,

பெருச்சாளி*** வணக்கம் செய்யும்படி முயற்சி எடுத்துக் கொண்டவரும், பெண் யானை போன்ற வள்ளியின் பக்கத்தில் இமைப்பொழுதில் (காட்டானையாக) ஒளி விட்டு விளங்கியவருமான, ஐங்கரருமான  விநாயக மூர்த்தியின் எதிரில் தோன்றிய தம்பியே,

மேவுறு சம்ப்ரம சம் கண ஆறு முக காம்பிரமோடு அமர்

சம்ப(ன்)ன … பொருந்தியுள்ள களிப்பு நிறைந்த அழகு செய்கின்ற

கூட்டமாகிய ஆறு திரு முகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற

பாக்கியவானே,

மதுராந்தக மா நகரம் திகழ் முருகா அம் திரமோடு அமர்

உம்பர்கள் தம்பிரானே. … மதுராந்தகமாகிய**** சிறந்த நகரில்

விளங்கும் முருகனே, நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தம்பிரானே.

முருக வேளின் விசுவ ரூப நிலை தேவர் கூட்டத்துக்கு சானுவில் (முழந்தாளில்) காணப்பட்டது.

** தாம்பிர சூடம்:

இது சிவந்த கொண்டையை உடைய சேவலைக் குறிக்கும். சூரனின் ஒரு பகுதி சேவலாக மாறி, முருகனது கொடியில் அமர்ந்து சேவை செய்தது.

*** கஜாமுகாசுரன் பெருச்சாளி வடிவத்துடன் விநாயகரை எதிர்க்க வந்தான். அப்போது அதன் மீதேறி அவனை வீழ்த்தி வாகனமாக ஆக்கிக் கொண்டார்.

—Subham—

Tags- வெளி உலகவாசிகள் ET, ALIEN CIVILIZATION, பிராமணர் எண்ணிக்கை CENSUS பற்றி அருணகிரிநாதர்! -48, திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 48, அகச் சமயம் ஆறு, புறச் சமயம் ஆறு, தாம்பிரசூடம்

ராமாயணத்தில் வரங்கள் (44) இந்திரன் ஜாம்பவானுக்கு வரம் அளித்தது! (Post.15,506)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,506

Date uploaded in London – 18 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (44)    

ராமாயணத்தில் வரங்கள் (44) இந்திரன் ஜாம்பவானுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன் 

யுத்தகாண்டத்தில் ‘அணை கட்டுவதும் ஸமுத்திரத்தைத் தாண்டுவதும்’

என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் மூன்று வரங்கள் பற்றிப் பார்த்தோம். அடுத்து ‘வானரர்களது பராக்கிரமம் முதலியவற்றைச் சொல்வது’ என்ற இருபத்தியேழாவது அத்தியாயத்தில் இந்திரன் ஜாம்பவானுக்கு அளித்த வரம் பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.

இராமர் கடலைக் கடந்து இலங்கையை அடைந்ததைக் கேட்ட இராவணன் தன் ஒற்றர்களான சுகன், சாரணன் ஆகிய இருவரை அழைத்து வானர சேனையின் வலிமையை அறிந்து வருமாறு ஆணையிடுகிறான்.

அதன்படியே எண்ணற்ற வானரர்கள் கொண்ட சேனையை அந்த இரு ஒற்றர்களும் ஒளிந்திருந்து பார்வையிடுகின்றனர்.  இதைக் கண்ட விபீஷணன் அந்த இருவரையும் பிடித்து ராமர் முன்னே நிறுத்தி, “இவர்கள் இராவணனின் ஒற்றர்கள்” என்று கூறுகிறான்.

ராமர் புன்னகை புரிந்தவாறு அவர்களை விட்டுவிடச் சொல்கிறார்.

அவர்களை நோக்கி, “சேனையின் வலிமையை உள்ளது உள்ளபடி இராவணனிடம் சொல்வீராக” என்கிறார்.

அவர்களும் இராவணனிடம் வந்து வானர சேனையின் வலிமையைப் புகழ்ந்து கூறி யுத்தம் வேண்டாம் என்கின்றனர்.

அவர்கள் ஜாம்பவானைப் பற்றிக் கூறும் போது, இந்திரனிடமிருந்து ஜாம்பவான் பல வரங்களைப் பெற்றவன் என்று குறிப்பிடுகின்றனர் இப்படி:-

ஏதேன சாஹ்யம் சுமஹத்க்ருதம் ஷக்ரஸ்ய தீமதா |

தைவாஸுரே ஜாம்பவதா லப்தாஸ்ச பஹவோ வரா: ||

தீமதா – புத்திமானான

ஏதேன – இந்த

ஜாம்பவதா – ஜாம்பவானால்

தைவாஸுரே – தேவாசுர யுத்தத்தில்

ஷக்ரஸ்ய – இந்திரனுக்கு

சுமஹத் சாஹ்யம் – பேருதவி

க்ருதம் – புரியப்பட்டது

ச – அந்தக் காரணத்தினால்

பஹவ வரா: – பல வரங்களும் அவனால் அடையப்பட்டன.    

யுத்த காண்டம் 27ம் அத்தியாயம் ஸ்லோக எண் 12

இப்படி ஜாம்பவானின் பெருமை கூறப்படுகிறது. இந்திரனால் அவன் பல வரங்கள் அடையப்பட்டான் என்பது கூறப்படுகிறது.

ஆனால் வரங்களைப் பற்றிய வேறு குறிப்புகள் இல்லை. எங்கு, எப்போது, எத்தனை வரங்கள் எதற்காக ஜாம்பவானுக்கு அளிக்கப்பட்டன என்ற விவரங்கள் இல்லை.

*

Hinduism through 500 Pictures in Tamil and English 40; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-40 (Post.15,505)

Nageswar Temple , Kumbakonam; London swaminathan picture

Written by London Swaminathan

Post No. 15,505

Date uploaded in London – 17 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முந்தைய பதிவு Previous PostHinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 (Post.15,405)

Post No. 15,405

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

சப்தமாதர்

சிந்து சமவெளியில் சப்த மாதர் முத்திரை

சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை!

 எண்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது ஏழு என்ற எண்ணாகும். சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ‘’சப்தமாதா’’ முத்திரை என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் பல கோவில்களிலும் சப்தமாதா சிலைகளை வரிசையாக வைத்திருப்பர். அது போலவே இந்த முத்திரையில் ஏழு மாதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர்.இதே போல பாபிலோனியாவில் ஏழு அரக்கர்கள் வரிசையாக நிற்கின்றனர்.

சப்த மாதவைத் தவிரவுள்ள ஒரு முக்கிய தேவதைக்கு ஒருவன் மனிதனின் தலையைக் கொண்டுவந்து  வைத்து நரபலி கொடுக்கும் காட்சி சிந்து சமவெளி முத்திரைகளில் உள்ளது.

பிரம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய ஏழு தேவதைகள் அந்தகாசுரனை வதம் செய்ய சிவனால் உருவாக்கப்பட்ட சப்தமாதர்கள் ஆவர். சோழர் காலக் கோவில்கள், குறிப்பாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் காணப்படும் இவர்களின் நுணுக்கமான சிற்பக்கலை சக்தி வழிபாட்டின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

சப்த  மாதா வாகனங்கள்

சப்த மாதாக்களின் வாகனங்கள் பின்வருமாறு:

பிராம்மி (Brahmi): அன்னம்

மகேஸ்வரி (Maheshwari): ரிஷபம் (காளை)

கௌமாரி (Kaumari): மயில்

வைஷ்ணவி (Vaishnavi): கருடன்

வாராஹி (Varahi): சிம்மம் (சிங்கம்) அல்லது கருடன் (சில வழிபாடுகளில்)

இந்திராணி (Indrani): ஐராவதம் (வெள்ளை யானை)

சாமுண்டேஸ்வரி (Chamundeshwari): பிரேதம் (உடல்) அல்லது சிம்மம்

குறிப்பு: இந்த தேவியர் அம்பிகையின் சக்திகளாக போற்றப்படுகின்றனர்.

ஏழு கன்னிமார் கோவில்

ஏழு கன்னிமார் கோயில் (சப்த கன்னியர்) என்பது பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு தெய்வங்களை வழிபடும் வழிபாட்டுத் தலங்களாகும். இக்கோயில்கள் தமிழகம் முழுவதும், குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில், ஊரைக் காக்கும் காவல் தெய்வங்களாக பெரும்பாலும் ஆலமரத்தடி அல்லது ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. ஊரைக்காக்கும் காவல் தெய்வங்கள்; மாசி மகம் திருவிழா பிரபலம்.

வழிபாடு: ஏழு கன்னிமார்கள் சிவபெருமானை வழிபட்டதாக தஞ்சை பகுதியில் 7 இடங்கள் கூறப்படுகின்றன.

சிலை வடிவம்: இந்தச் சிலைகள் பொதுவாக 7 கன்னியர்களை வரிசையாகவோ அல்லது வட்ட வடிவிலோஇருப்பார்கள்.

பிரபல ஏழு கன்னிமார் கோயில்கள்:

தஞ்சை மண்டலம்: சக்கர மங்கை, அரியமங்கை, சூலமங்கை உள்ளிட்ட 7 சிவ ஆலயங்களில் கன்னிமார் வழிபாடு.

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே எழுவரை முக்கியில் உள்ள சப்த கன்னியர் கோயில்.

கரூரில்: திருமாநிலையூர் ஸ்ரீ திருமாலீஸ்வரர் கோவிலில் சப்தகன்னிமார்.

மேல்ஒலக்கூர்: பாறை மீது அமைந்துள்ள கன்னிமார் கோவில்.

இந்த ஆலயங்களில் பெரும்பாலும் சிவபெருமான் அல்லது மாரியம்மன் ஆலயங்களின் உட்பகுதியிலோ அல்லது அருகிலோ கன்னிமார் சன்னதிகள் இருக்கும்.

தை மாதம் மூன்றாம் நாள் கன்னிப் பொங்கல் அன்று ஏழு பெண்கள் அருள் கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடி ஊர்வலம் வருவர். மாசி மாதம் பௌர்ணமி அன்று கன்னிக் கோவில் அலங்காரம் செய்யப்படும். கன்னிப் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவர்.

சப்தமாதர் பட்டியல்:

பிராம்மி (Brahmi): படைப்புத் தொழிலுக்குத் துணையாக, பிரம்மனின் அம்சமாகத் திகழ்கிறாள்.

மகேசுவரி (Maheshwari): சிவனின் அம்சமானவள்.

கௌமாரி (Kaumari): முருகனின் அம்சமாக, வீரத்தின் வடிவமாகத் திகழ்பவள்.

வைஷ்ணவி (Vaishnavi): விஷ்ணுவின் அம்சமானவள்.

வராகி (Varahi): வராக மூர்த்தியின் அம்சம்; எதிர்ப்புகளை முறியடிப்பவள்.

இந்திராணி (Indrani): இந்திரனின் அம்சமானவள்.

சாமுண்டி / நரசிம்ஹி (Chamundi/Narasimhi): தீயவற்றை அழிக்கும் சக்தியாக, சண்டி அல்லது நரசிம்மரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

சிலப்பதிகாரம் முதல் தமிழ் இலக்கியங்களிலும், பல்லவர், சோழர் காலக் கோயில்களின் கோஷ்டங்களிலும் சப்தமாதர் சிற்பங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

கிராம தேவதைகளாகவும், அதீத சக்தி வாய்ந்தவர்களாகவும், குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இவர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கன்னியாக வழிபடும்போது சப்தகன்னியர் என்றும், பேரிளம் பெண்ணாக (தாய்) வழிபடும்போது சப்தமாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அம்பிகையின் அம்சமான இவர்கள், பக்தர்களின் சங்கடங்களைப் போக்கி, சகல நன்மைகளையும் அருளும் வல்லமை படைத்தவர்களாக நம்பப்படுகிறார்கள்.

சிவ பெருமான் கோவில்களிலோ அல்லது தனியாகவோ சப்தமாதர் சிலைகள் இருக்கும். இவர்களுடைய உருவங்கள் வாகனங்கள், நிறங்கள், கைகளின் எண்ணிக்கை, ஆயுதங்கள் கொடிகள் , புனித மரங்கள் ஆகியவற்றை சம்ஸ்க்ருதத்தில் உள்ள சில்ப சாஸ்திர நூல்கள் விரிவாகப்பேசுகின்றன

Human sacrifice in Indus Valley seal

Sapta Mata Seal

The Saptamata seal from the Indus valley is interpreted in various ways. Some people see Seven Matas (seven mothers) as in Hindu scriptures and others see Seven Demons as described in Babylonian clay tablets. A man is offering a head, probably human sacrifice, in the Indus seal.

Sapta Mata in Hindu temples are: Vaishnavi, Kaumari, Maheswari, Brahmani, Chamunda, Varahi, Aindri (Indrani).

We find Sapta Matas/ seven Goddesses in many Saivite temples

Description of saptamaatrikaas in silpasastra books

Picture by A Nrayanan

Brahmi

Has four faces and six arms and the swan/hamsa vahana. Her colour is yellow.

Maaheswari or Bhairavi

Rides on a bull, has five faces, three eyes and ten arms; decorated with the crescent.

Kaumari

She has six faces and twelve arms, rides on a peacock

Vaishnavi

She is of blue colour and rides on Garuda/eagle, has six arms and a garland of flowers called vanamaalaa.

Vaaraahi has the face of a sow, is black in colour, has a big protruding belly and rides on a a buffalo

Maahendri or indraani has a 1000 eyes, is of pleasing appearance and of golden hue, rides on an elephant.

She has six arms and displays symbols of Varada, noose, and thunderbolt in her right arms and the Abhaya, vessel and lotus in her left.

Chaamundaa is black and fearful with protruding teeth, long tongue, erect hair, emaciated body, sunken eyes and a withered belly. She can change her appearance at will. She rides on a corpse, wears a garland of skull and has jewels of serpents. in her ten arms she holds the shield, noose, bow, spear and staff on her left side and the pestle, disc, fly whisks, goad and the sword on the right.

The Mayamata adds she wears a tiger’s skin, red hair glowing like fire and the banner of a kite. She may have 4 , 8 or 10 hands.

These seven mothers are to be flanked by Virabhadra and Vinayaka on either side. In front of the saptamatrikas,  god Siva may be seated on a lotus flower under a banyan tree.

Seven mothers have sacred trees as well;

Kaumari – fig tree/udumbara

Vaishnavi- the pipal

Varahi- karanja

Indrani- kalpadruma

Chamunda – banyan

These goddesses are found in a separate temple or siva temples.

The Selliamman temple in Alambakkam possesses an important temple . the order in which the seven mothers’ images are cut on stone differs according to the circumstances. For the destruction of enemies and safety to villages Brahmi must be made to occupy the centre. If Chamunda is placed in the centre, the village will grow in population.

At the entrance to the shrines of Saptamata two guardian deities are found. Daily worship and periodical festivals are done like in big temples.

***

Seven Sisters in Australia- Pleiades- Kartika Nakshatras

Australia

Depending on the language group or clan, there are several Aboriginal stories regarding the origins of the Pleiades. Some Indigenous Australian peoples believed the Pleiades was a woman who had been nearly raped by Kidili, the man in the moon.

In a legend told by the Wurundjeri people of south-eastern Australia, the Pleiades were represented by the seven Karatgurk sisters. These women were the first to possess the secret of fire and each one carried live coals on the end of her digging stick. Although they refused to share these coals with anybody, they were ultimately tricked into giving up their secret by Crow, who subsequently brought fire to mankind. After this, the Karatgurk sisters were swept into the night sky. Their glowing fire sticks became the bright stars of the Pleiades cluster.

Another version, often painted by Gabriella Possum Nungurayyi as this is her dreaming (or creation story), daughter of the late Clifford Possum Tjapaltjarri from the Central desert art movement of Papunya, depicts the story of seven Napaltjarri sisters being chased by a man named Jilbi Tjakamarra. He tried to practice love magic to one of the sisters but the sister did not want to be with him, and ran away from him together with her sisters. They sat down at Uluru to search for honey ants but when they saw Jilbi, they went to Kurlunyalimpa and with the spirits of Uluru, transformed into stars. Jilbi transforms himself into what is commonly known as the Morning Star in Orion’s belt, thus continuing to chase the seven sisters across the sky.

–Subham—

Tags- Sapta mata, Sapta matrikas, Seven Mothers, Indus Valley, Village Goddesses, Saivite temples, Vahanas, description, Varahi, Brahmi, Chamunda, Australia, Seven Sisters

கண்ணகி எரித்த மதுரையும், அனுமன் எரித்த இலங்கையும்! முருங்கைக்காயும் முருகனும்- 47 (Post.15,504)

Written by London Swaminathan

Post No. 15,504

Date uploaded in London – 17 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 47

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 47

***

அகர உகர மகர — விளக்கம்

அகர உகரதி மகரதி சிகரதி … அகரம் போன்ற முதற்பொருளே, உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத்

தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,

 (இதற்கு ஓம்காரப் பொருளே என்றும் அர்த்தம் சொல்லலாம்; பிராணவமாகிய ஓம்- அ உ ம என்ற எழுத்துக்களால் ஆனது)

யகர அருளதி தெருளதி … யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே,

வலவல அரண முரணுறும் … மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட

அசுரர்கள் கெடஅயில் விடுவோனே … அசுரர்கள் அழியும்படிவேலைச் செலுத்தியவனே,

அழகும் இலகிய புலமையு மகிமையும் … அழகும், விளங்கும் கல்விஞானமும், பெருமையும்,

வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம் … செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும்

அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே. … வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே, அடியவர்கள்தம் பெருமாளே.

***

திருமால் முழவு வாசிக்கபிரமன் தாளம் போடசிவன் நடனம் ஆடினார்

அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என … திருமால் மத்தளம்

வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று வாசிக்க,

மிக்கு இயல் வேதாவே தொழு திரு நடம் இட்டவர் காதே

மூடிய குரு போதம் உரை செய்யும் உத்தம வீரா … மிகுந்த தகுதி

வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச் செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே,

நாரணி உமையவள் உத்தர பூர்வ ஆகார அணி உறு ஜக

ரக்ஷணி நீர ஆவாரணி தரு சேயே … நாராயணி, உமையவள்,

வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற குழந்தையே,

உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே

காரண … உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத

உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே,

ஒரு மயிலைப் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே. … ஒப்பற்ற

மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.

**

இதைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கோபால கிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகள்தான் :

நடனம் ஆடினார்…    

ராகம்: வசந்தா

தாளம்: அட

பல்லவி

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்…

அநுபல்லவி

வடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்

தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில்                     நடனம் ஆடினார்…              

 சொல்கட்டு ச்வரம்

தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா

ரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச ச ச ரீ ச ரீ ரி ரீ ரி ரீ ச னி த ச ச ச ரி ச

ச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி தா தா த னி த த மா த ம க ரி ச

சரணம்

அஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்கஅண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட நடனம் ஆடினார்…

இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள்

                                                                                      தந்தோமென்று               நடனம் ஆடினார்!                                 

***

முருங்கைக்காயும்  முருகனும்

கோயம்பேடு முருகன் !

முருங்கைக்காய் /காய்கறி மார்கெட்டுக்குப் பெயர் போன கோயம்பேட்டில் முருகனும் உண்டு

 சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில

பரமேசர் சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி

வரு மா அசுரர் குலகாலா … குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு,

அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர்

(இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான்

உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே,

கோதை குறமாது குண தேவ மட மாதும் இரு பாலும் உற

வீறி வரு குமரேசா … நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம்

உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும்

பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே,

கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா

அமரர் பெருமாளே. … கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில்

வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே,

முருகனே, தேவர்களின் பெருமாளே.

கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.

***

கண்ணகி எரித்த மதுரையும் அனுமன் எரித்த இலங்கையும்!

இருவர் இட்ட தீயும் தீயோரை மட்டுமே பொசுக்கியது.

இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அருள் இல்

எங்கணும் இலங்கு என முறை ஓதி … இலங்கையில் திகழ்ந்திருந்த

வீடுகளுள் முழுமையான அன்பு இல்லாத எல்லா இடத்திலும்,

அக்கினியே, பற்றி எரிவாயாக என்று நீதியை எடுத்துரைத்து,

இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள்

முகுந்தன் நன் மருகோனே … நெருப்பை வைத்த குரங்காகிய

அனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளுமாறு கோபத்துடன் எழுந்தருளிய ராமனாகிய திருமாலின் மருகனே,

பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி

ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா … பலத்துடன், கிரெளஞ்ச

மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம்

கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே.

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி

மருங்கு உறை பெருமாளே. … பெரிய சோலைகளும் கரும்பும்

வாழையும் நிறைந்த பெருங்குடிக்கு* அருகில் வீற்றிருக்கும் பெருமாளே.

* பெருங்குடி சென்னைக்கு அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி எரித்த மதுரை

பிராமணர்களையும் பெண்களையும் பொசுக்காதே என்று பிராமண வடிவில் வந்த அக்கினி பகவானுக்குக் கட்டளை பிறப்பித்தாள் கண்ணகி என்கிறார் பிராமண காவியம் இயற்றிய இளங்கோ அடிகள் !

பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்

மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை, சிலப்பதிகாரம்

—subham—

Tags- பிராமணர்,  பெண்கள்,  பொசுக்காதே பிராமண காவியம்  இளங்கோ அடிகள் , பகுதி 47, அனுமன் , இலங்கை, முருங்கைக்காய்,  முருகன் , கோபாலகிருஷ்ண பாரதியார் , ஆடினார் நடனம் ஆடினார்

யாசிப்பதை விட உழுதுண்டு வாழ்வதே சிறந்தது! புலவரின் முடிவு!! (Post No.15,503)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,503

Date uploaded in London – 17 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தனிப்பாடல் தமிழ் இன்பம்!

யாசிப்பதை விட உழுதுண்டு வாழ்வதே சிறந்தது! புலவரின் முடிவு!!

ச. நாகராஜன் 

ஒரு புலவர். மிகவும் வறுமையில் வாடினார். யாசித்துப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை.

சரி, சிவபிரானிடமே சென்று முறையிடுவோம் என்று நேராக கோவிலுக்குச் சென்று முறையிட்டார்.

நடந்தது என்ன? அவரே ஒரு பாடலாகப் பாடி சொல்லி விட்டார்! 

வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்

     வாசர்தொறு முட்டுண்ட தலையிற் புண்ணும்

செஞ்சொல்லை நினைந்துருகு நெஞ்சிற் புண்ணும்

     தீருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தே னப்பா

கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்

     கொடுங்காலா லுதைத்த புண்ணுங் கோப மாகப்

பஞ்சவரி லொருவன் வில்லா லடித்த புண்ணும்

     பாரென்றே காட்டி நின்றான் பரமன் றானே

இதன் பொருள்;

வஞ்சகர் பால் – வஞ்சகரிடத்தில்

நடந்து அலைந்த – நடந்து நடந்து அலைந்துஅதனால் உண்டான

காலில் புண்ணும் – என் காலில் உள்ள புண்ணையும்

வாசல் தோறும் – வீட்டு வாசல்படிகள் தோறும்

முட்டுண்ட – முட்டுண்டதனால் உண்டான

தலையில் புண்ணும் – தலையில் ஏற்பட்ட புண்ணையும்

செஞ்சொல்லை – கவி பாடுவதற்கு செம்மையாகிய சொற்களை

நினைந்து உருகும் – ஆலோசித்து உருகுதலால் உண்டான

நெஞ்சில் புண்ணும் – மனதில் ஏற்பட்ட புண்ணையும்

தீரும் என்று – நீக்கி அருளுவீர் என்று

சங்கரன் பால் – சிவபிரானிடத்து

சேர்ந்தேன் – சென்று சேர்ந்தேன். (வேண்டினேன்)

அங்கு சேர்ந்தவுடன்

பரமன் – சிவபெருமான் என்னை நோக்கி

அப்பா – அப்பா

கொஞ்சம் அல்ல – உன் போல சிறிது அல்ல

பிரம்படியின் புண்ணும் – பாண்டியனது பிரம்பினால் அடித்து உண்டாகிய புண்ணையும்

வேடன் – வேடனாகிய கண்ணப்பன்

கொடு காலால் – வலிமை மிகுந்த காலினால்

உதைத்த புண்ணும் – உதைத்தனால் ஏற்பட்ட புண்ணையும்

பஞ்சவரில் ஒருவன் – பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன்

கோபம் ஆக – தனக்கு ஏற்பட்ட கோபத்தினால்

வில்லால் அடித்த புண்ணும் – பாசுபத அஸ்திரம் பெற வந்த போது வில்லினால் அடித்ததனால் உண்டான புண்ணையும்

பார் என – இதோ பார் என்று

காட்டி நின்றான் – எனக்குக் காட்டி நின்றான்.

இதைப் பாடியவர் இராமசந்திர கவிராயர். அற்புதமான ஏராளமான பாடல்களை வித்தியாசமாகப் புனைந்து அனைவரையும் மகிழ்விப்பவர் இவர்.

அடுத்து இன்னொரு பாடல்:

இதைப் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள்.

அச்சுதனலிப்பினில் முமது நேயன் வித்தையருளுவன் பலபத்திர்ன்

    அலமுதவுவன் சமன் பகடீவனந்தமக் காளதோ ரெருதுமுண்டே

முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவே மொம்புடனிழுத்திருக்க

முந்தியவடகயிற் றுடன்மற்று நமன்தமர் முன்போ யிரந்து                                                          கொள்வோம்

இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தனி னிமையொடு மாடு   ̀̀̀ 

மேய்ப்பான்

      இனியுழுதுபயிரிடுதநன்றுநன்றிதை விட்டிரந்துண்ப தீனமெனவோ

கச்சுமுலை மாதுமையுரைத் திடும் புத்தியைக் கைக்கொண்  

                                                     டுளத்திலிதுநற்,

    காரியமெனக் கருதி மெத்தக் களித்திடுங் கண்ணுதலுமைக் காக்கவே

இந்தப் பாடலின் பொருள்;

அச்சுதன் – திருமால்

நிலம் அளிப்பன் – (நாம் வேண்டுகின்ற) பூமியைக் கொடுத்து அருள்வான்

உமது நேயன் – உமது தோழனாகிய குபேரன்

வித்தை அருளுவன் – வித்தையைக் கொடுப்பான்

பலபத்திரன் அலம் உதவுவான் – பலராமன் கலப்பையைக் கொடுத்து உதவி செய்வான்

சமன் பகடு ஈவன் – யமன் எருமைக் கடாவைக் கொடுப்பான்

நந்தமக்கு ஆனது ஓர் எருதும் உண்டே – நமக்கு ஆளாய் இருப்பதாகிய ஒரு எருதும் உண்டே

முச்சிர அயில் படையினை – முத்தலைச் சூலத்தைக்

கொழு ஆக்குவோம் – கொழு ஆக்கிக் கொள்வோம்

மொம்புடன் இழுத்து இறுக்க – வலிமையோடு இழுத்து இறுக்குதற்கு

முந்திய வடக் கயிற்றுடன் – முதன்மையாகிய வடக் கயிற்றோடு

மற்றும் – மற்று வேண்டுவன யாவும்

நமது தமர் முன் போய் இரந்து கொள்வோம்- நமது அன்பர்களிடத்தில் யாசித்துப் பெற்றுக் கொள்வோம்

இச்சை உடை – விருப்பத்தை உடைய

நமது இளைய தனயன் ஆகிய கந்தன் – நமது இளைய குமாரனாகிய முருகன்

இனிமையொடு மாடு  மேய்ப்பான் – இனிதாக மாடு மேய்ப்பான்

இனி உழுது பயிரிடுதல் நன்று – இனி உழுது பயிரிடுதலே சிறந்தது

இதை விட்டு – இதை விட்டுவிட்டு

இரந்துண்பது – யாசித்து உண்பது

ஈனம் என – இழிவானது என்று

கச்சுமுலைமாது உமை உரைத்திடும்  புத்தியை – கச்சணிந்த மார்பகங்களை உடைய உமாதேவி சொல்லும் புத்திமதியை

கைக்கொண்டு – ஏற்றுக் கொண்டு

உளத்தில் – மனதில்

இது நற்காரியம் எனக் கருதி – இது நல்ல காரியம் என்று எண்ணி

மெத்தக் களித்திடும் – மிகவும் மகிழ்கின்ற

கண்ணுதல் – நெற்றிக்கண்ணை உடைய பரமசிவன்

உமை காக்க – உம்மைக் காப்பாற்றுவானாக!

யாசித்து உண்பதை விட உழுது பயிரிட்டு வாழ்தலே நன்று என்று சிவபிரானே முடிவு செய்வதாக ஒரு கற்பனை! சிவப்பிரகாச சுவாமிகள் இதை அருளிச் செய்திருக்கிறார்.

சிவன் வழியைப் புலவர் பின்பற்ற நினைக்கிறார்!

**

ஆழ்வார்களின் மாற்றுப் பெயர்கள் என்ன ? (Post No.15,502)

 Written by London Swaminathan

Post No. 15,502

Date uploaded in London – 16 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்டாள் படம் , உப்பிலியப்பன் கோயில் 

திருமங்கை   ஆழ்வார்  படம் 

திருப்பாண்  ஆழ்வார்  படம் 

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  படம் 

பெரியாழ்வார் படம் 

நம்மாழ்வார் படம் 

உப்பிலியப்பன் கோவிலில் லண்டன் சுவாமிநாதன் மார்ச் ஆம் தேதி எடுத்த படங்கள். 

முதல் மூவர் – பேய், பூதம், பொய் = பேயாழ்வார் பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் 

ஆண்டாள் – கோதை , நாச்சியார் திருப்பாவை முப்பதும் செப்பினாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, 

நம்மாழ்வார் – காரிமாறன், மாறன், சடகோபன், திருக்குருகூர் நம்பி, பராங்குசன்

பெரியாழ்வார்- பட்டர்பிரான், புதுவைக்கோன், கிழியறுத்தான் , வில்லிப்புத்தூர்கோன்

திருமங்கை ஆழ்வார் – பரகாலன்,  நீலநிறத்தர்

திருப்பாணாழ்வார் – பாணர் , திருப்பாணர்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – விப்பிரநாராயணர்

குலசேகர ஆழ்வார் – பெருமாள், சேரமன்னன், கொல்லி காவலன்

மதுரகவி ஆழ்வார் – திருக்கோளூர்ப் பிரான்

திருமழிசை ஆழ்வார் – பக்திசாரர், குடமூக்கிற் பகவர்

பூதத்தாழ்வார்  படம் , உப்பிலியப்பன் கோயில் 

ஆண்டாள் படம் , உப்பிலியப்பன் கோயில் 

–SUBHAM—

TAGS- ஆழ்வார்கள்,  வேறு  பெயர்கள் , பன்னிரு ஆழ்வார் படங்கள், உப்பிலியப்பன் கோயில்,லண்டன் சுவாமிநாதன்

ஆறு பெரியோர்கள் புகழ்ந்த கரு நெல்லிக் காயின் மஹிமை- பகுதி-46 (Post.15,501)

Written by London Swaminathan

Post No. 15,501

Date uploaded in London – 16 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அவ்வையார், அதியமான், அருணகிரிநாதர், ஆல்பிருனி, பாரதியார், சுவாமி சிவானந்தா – ஆகிய ஆறு பெரியோர்களும் நெல்லிக்கனியின் பெருமையை விதந்தோதியுள்ளார்கள்.

46திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 46

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 46

***

மேரு மலை வில் = பார்வதி கை

அணிசெவ்வியார் திரை சூழ்புவி … அழகு நிறைந்த மாதர் (பெண்),

கடல் சூழ்ந்த பூமி (மண்),

தன நிவ்வியே கரை யேறிட … செல்வம் (பொன்) என்ற

மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான

அறிவில்லியாம் அடியேன் இடரதுதீர … அறிவற்றவனாகிய

அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய

அருள்வல்லையோ … திருவருளை வலிய அருள்வாயோ?

நெடு நாளினம் இருளில்லிலேயிடுமோ … அல்லது நீண்ட

காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான

பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ?

உனதருளில்லையோ … உனது திருவருள் என்மீது சிறிதும்

இல்லையோ?

இனமானவை யறியேனே … உன்அடியார் கூட்டத்தை நான்

அறியவில்லையே.

குணவில்லதா மக மேரினை … சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய*

அணிசெல்வியாய் அருணாசல குரு … அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே,


சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.

***

கரு நெல்லிக்காய் மஹிமை= விஷ்ணு

கருநெல்லி மேனி அரி மருகோனே … கருநெல்லிக்காய் போல

பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே,

கனவள்ளியார்கணவ முருகேசா … பெருமை வாய்ந்த வள்ளி

தேவியின் கணவனே, முருகேசா,

திருவல்லிதாயம் அதில் உறைவோனே … திருவலிதாயம்* என்ற

தலத்தில் வீற்றிருப்பவனே,

திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. … விளங்குகின்ற

பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.

திருவலிதாயம் இப்போது ‘பாடி’ எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.

யாரும் கிருஷ்ணனையோ விஷ்ணுவையோ கரு நெல்லிக் காய்க்கு ஒப்பிட்டத்தில்லை . வேறு என்னென்னவோ சொல்லி கருப்பு என்று பகர்ந்தார்கள்; காக்கை போல கருப்பு என்று கூடப் புகழந்துள்ளார்கள் ;கரு நெல்லிக்காய் என்பது அபூர்வ நெல்லிக்காய் அல்லது காய்ந்து உலர்ந்த நெல்லிக்காய் வற்றல் என்று சொல்லலாம். நெல்லிக்காய்க்குப் பொதுவாகவே அவ்வளவு மதிப்பு ! ஸ்யவனப் பிரகாஷ் என்ற நெல்லிக்காய் லேகியம் செய்து அதன் புகழைப் பரப்பினார் ரிஷிகேஷில் தெய்வ நெறிக் கழகம் ஸ்தாபித்த சுவாமி சிவானந்தா – பத்தமடையில் பிறந்து மலேஷியாவில் டாக்டர் தொழில் செய்தவர் !

அவ்வையாரும் ஆல்பெரூனியும் கரு நெல்லிக்காயின் மஹிமையை நமக்கு முன்னரே செப்பியுள்ளனர்; பாரதியாரையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்!

அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.

நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.

வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும்  சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.

இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.

ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.

நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட

சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)

பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.

இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி

ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.

நெல்லிக்காய் நிற விஷ்ணு

அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!!

நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும்  சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.

பாரதியாரும் நெல்லிக்காயும்

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில்  மொத்தமுள்ள 110 பொன்மொழிகளில் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். இங்கு அவர் நமக்கு ஒரு புதிர் போடுகிறார்.

ரேகையில் கனி கொள் (94ஆவது அறிவுரை )

நெல்லிக்காயில் ரேகைகள் இருப்பதை நாம் அறிவோம்.. பாரதியார் நெல்லிக்காயை சொல்கிறாரா அல்லது வேறு ஏதாவது சொல்கிறாரா என்பது விளங்கவில்லை ; ஆகையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி ,என் ராமச்சந்திரன் கூட இரு பொருள் தருகிறார்.

ரேகையில் கனி கொள் 94

CONSUME STREAKED BERRY/AMLA/NELLIKKAAY/GOOSEBERRY

OR

SEEK OUT VEINS OF LOVE

அன்பினை நாடு/ தேடு என்பது இரண்டாவது பொருள்.

பாரதியார் இறந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; அவர் உயிரோடு இருந்தால் ஐயா, கொஞ்சம் விளக்குங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.

—SUBHAM—

TAGS- திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 46, கரு நெல்லிக்காய் மஹிமை, ஆல்பிரூனி, அருணகிரிநாதர், பாரதியார், அதியமான் அஞ்சி, அவ்வையார், திரிபலா சூர்ணம், ஆறு பெரியோர்கள் ,பகுதி-46, மேரு மலை, பார்வதி கை

ஒரு புதிர் ஸ்லோகம்! (Post No.15,500)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,500

Date uploaded in London – 16 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒரு புதிர் ஸ்லோகம்!

ச. நாகராஜன் 

தமிழிலும் வடமொழியிலும் ஏராளமான புதிர் ஸ்லோகங்கள் உள்ளன.

அவற்றைப் படிப்பதே மகிழ்ச்சியைத் தரும். 

ஒரு வார்த்தையில் பல கேள்விகளுக்குப் பதில்!

ஒரு புதிர் ஸ்லோகம் இதோ: 

கோ நிர்தக்த்யஸ்த்ரீபுகா கஸ்ச கர்ணஸ்ய ஹந்தா

   நத்யா கூலம் விகடயதி க: க: பரஸ்த்ரீரதஸ்ச |

க: சம்நத்தோ பவதி சமரே பூஷணம் கிம் குசானாம்

   கிம் துக்க சங்காத் பவதி மஹதாம் மானபூஜாபஹார: ||

இது ஒரு அற்புதமான ஸ்லோகம். இது ஒரு விடுகதைக் கவிதை!

பல கேள்விகள். ஆனால் இறுதியில் ஒரே வார்த்தையில் பதில்!

யார் சிவபிரானால் எரிக்கப்பட்டவர்?  பதில்: மாரா – மன்மதன்

யார் கர்ணனைக் கொன்றது? பதில்: நரா – அர்ஜுனன்

யார் நதிக்கரையை உடைத்தது? பதில் பரா – வெள்ளப்போக்கு

யார் அடுத்தவர் மனைவியின் மீது அன்புடன் இணைவது? – பதில் ஜாரா – கள்ளக் காதலன்

யார் போரில் சண்டையிடத் தயாராக இருப்பது? – பதில் பரா – எதிரி

மார்பகங்களில் அணியும் ஆபரணம் எது? – பதில் ஹாரா – முத்து நெக்லஸ்

(பெரியோர்களுக்கு) கெட்டவர் இணக்கத்தால் ஏற்படுவது என்ன? பதில் – மானபூஜாபஹார: – மரியாதையும் கௌரவமும் கெடுவது தான்! 

கடைசி விடை என்ன? மானபூஜாபஹார:

இதில் எல்லா கேள்விகளுக்குமான விடை உள்ளது. எப்படி?

இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் கடைசி எழுத்துடன் சேர்த்துப் பார்ப்போம்.

மாரா- மன்மதன்

நரா – அர்ஜுனன்

புரா – வெள்ளம்

ஜாரா – கள்ளக் காதலன்

பரா – எதிரி

ஹாரம் – முத்துமாலை

மந்தக்ராந்தா சந்தத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.

இது பல சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பில் காணப்படுகிறது.

இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.

*

யார் குருடன்யார் செவிடன்யார் ஊமை?

கேள்வி- பதில் ஸ்லோகங்கள் இன்னொரு விதம்!

கோ அந்தோ யோகார்யரத:

   கோ பகிரோ ய: ஸ்ருணோதி ந ஹிதானி |

கோ மூகோ ய: காலே

   ப்ரியாணி வக்தும் ந ஜானாதி ||

யார் குருடன்?  எவன் ஒருவன் செய்யக் கூடாத காரியத்தைச் விரும்பிச் செய்கிறானோ அவன் தான் குருடன்!

யார் செவிடன்?  எவன் ஒருவன் நல்லதைக் கொடுக்கும் சொற்களைக் கேட்காமல் இருக்கிறானோ அவனே செவிடன்.

யார் ஊமை? சரியான சமயத்தில் இனிமையான சொற்களை எவன் ஒருவனுக்குப் பேசத் தெரியவில்லையோ அவனே ஊமை!

அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டியவை! 

கோ தேஷ: கானி மித்ராணி க: கால: கோ வ்யயாகமௌ |

கஸ்சாஹம் கா ச மே சக்திர் இதி சிந்த்வம் முஹுர்முஹுர்: ||

எது தேசம்? யார் நண்பர்கள்? நேரம் என்ன? எவ்வளவு வரவு வந்திருக்கிறது, எவ்வளவு செலவாகியுள்ளது? நான் யார்? எனது அதிகாரம் என்ன? இவையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்கப்படவேண்டியவையாகும்.

**