மயூரநாதர் கோவிலில் நல்ல தரிசனம் (Post No.15,478)

Written by London Swaminathan

Post No. 15,478

Date uploaded in Kumbakonam, India –  9 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மயூரநாதர்  மஹிமை 

காவிரி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இந்தத் தலத்தின் இறைவனை சம்பந்தரும் அப்பரும் பாடியுள்ளனர். இதனால் இது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சிறப்பை அடைந்துவிட்டது தெளிவாகிறது அதற்குப் பின்னர் அருணகிரிநாதரும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

பார்வதி தேவி மயில் வடிவில் (மயூரம்) சிவனை வழிபட்டு சாபம் நீங்கிய தலம். 165 அடி உயர   ஒன்பது நிலை ராஜகோபுரத்துடன், சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பழமையான கோயில், திருவாடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது

கோவிலில்  உள்ள விநாயகருக்கு அகஸ்திய விநாயகர் என்று பெயர் .

கோவிலின் விமானம் த்ரிதள விமானம் ஆகும். இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியுள்ளார் .

சுவாமி பெயர்- மயூர நாதர்

அம்மன் பெயர் – அபயாம்பிகை

முக்கிய சந்நிதியில் உள்ள மூர்த்தி தானாகாத் தோன்றிய  சுயம்பு லிங்கம் ஆகும் . அம்மையானவர் மயில் உருவத்தில் இறைவனை வணங்கிய இடம்

தல விருட்சம் – மாமரம்

கோவிலில் ஆதி மயூரநாதர் சந்நிதியும் உள்ளது . அங்கு மயில் வடிவத்தில் அம்மனைக் காணலாம்

இங்குள்ள நடராஜருக்கு பெருமை உண்டு. அவர் ஆடும் நடனம் கெளரி தாண்டவம் என்றும் மயூர தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது . தனி சந்நிதியில் அவரைத் தரிசிக்கலாம் .

தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்றதால் பார்வதியை மெய்யில் கப் போகுமாறு சபித்ததாகவும் அவர் மயில் வடிவத்தில் கணவனைத் தொழுது கரை ஏறினார் என்பதும் புராணக் கதை

கோவிலின் உள்ளே செல்லும் போது குளம் இடது புறத்தில் அமைந்துள்ளது.

·         இங்குள்ள இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்றும், நடனத்தில் தேர்ச்சி பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.

·         புராண பெயர்: சக்ராபுரி, பிரம்மவனம், சக்ராண்டபுரம், சத்யாபுரம் (மயிலாடுதுறை).

·         விழாக்கள்: ஐப்பசி மாத காவேரி துலா முழுகு (முழுக்கு) விழா இங்கு மிகவும் பிரபலமானது.

வரலாறு மற்றும் கட்டிடக்கலை:

  • இக்கோயில் இடைக்கால சோழர்களால் கட்டப்பட்டது, பின்னர் விஜயநகர மன்னர்களால் விரிவாக்கப்பட்டது.
  • இக்கோயிலில் 16 க்கும் மேற்பட்ட சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன.

பிரகாரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாதர், சேக்கிழார், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், விநாயகர், சப்தமாதர், 63 நாயன்மார்களின் செப்புத்திருமேனிகள், 63 நாயன்மார்கள், சகஸ்ரலிங்கம், நாயகர், இந்திரலிங்கம், அக்கினிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், விஷ்ணுலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், பிரம்மலிங்கம், மகாலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

கோவிலில் உள்ள நவக்கிரக சந்நிதியில் காகத்துடன் கூடிய சனி பகவானைத் தவிர தலையில் தீச் சுவாலையுடன் டிய தேஜஸ் சனி பகவானும் இருக்கிறார் துர்க்கை தேவியும் காலடியில் அரக்கர்களுடன் காட்சி தருகிறார் . ஒவ்வொரு சந்நிதியிலும் ஏதேனும் ஒரு புதுமை உள்ளது .

அபயாம்பிகை சந்நிதி தனியே உள்ளது

நிலைமை சொல்லு நெஞ்சே! தவம் என் செய்தாய்?

கலைகள் ஆய வல்லான், கயிலாய நல்

மலையன், மா மயிலாடுதுறையன், நம்

தலையின் மேலும், மனத்துளும் தங்கவே

                                                                                      – திருநாவுக்கரசர் தேவாரம்

மயிலாடுதுறை துலா ஸ்நானம் மிகவும் பிரசித்தமானது ஐப்பசி மாதம் முழுதும் காலையில் பக்தர்கள் நீராடி, கார்த்திகைமாத முதல் நாளில் அதைப்பூர்த்தி செய்வார்கள் .

***

மயிலாடுதுறை தேவாரம் :சம்பந்தர் பாடியது

கரவின் றிநன்மா மலர்கொண்டு1    

இரவும் பகலுந் தொழுவார்கள்    

சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்    

வரமா மயிலா டுதுறையே.    1.38.1

***

எனது விஜயம்

Lo ndo Swamiathan in front of Mayuram Temple

நீண்டகாலத்துக்குப் பின்னர் மாயவரம் மயூரநாதர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யும்( 5-3-2026 )பாக்கியம் கிடைத்தது . சுமார் 60 வருடங்களுக்கு முன்னால், குல தெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க மதுரையிலிருந்து வந்து மாயவரம் மஹாதானத் தெருவிலுள்ள சித்தப்பா வீட்டில் ஒரிரு நாள் தங்குவோம் . வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பஸ்ஸில் சென்று தரிசனம் முடித்துவிட்டு மயிலாடுதுறைக்குத் (மாயவரத்துக்கு) திரும்புவோம். மாலை நேரத்தில் சித்தப்பா மகன்களுடன் சென்று மயூர நாதரைத் தரிசித்துவிட்டுக் கோவில் பிரகாரத்தில் உட்கார்ந்து அரட்டை அடிப்போம் . இப்போதெல்லாம் நேரடியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போவதால் மயிலாடுதுறையில் தங்குவதில்லை . இந்த முறை கும்பகோணம் ஸ்ரீவத்சம் டிவைன் இன் ஹோட்டலில் தங்கியதால் மாயூரத்துக்குச் சென்று சிவபுரம் வேத பாடசாலையில் பெரியவர் ஏ வி சுவாமிநாத சிவாச்சார்யாவைபச்  சந்தித்துவிட்டு அவர் அனுப்பிய வேத பாடசாலை மாணவருடன் கோவிலுக்குச் சென்றோம். தரிசனத்தோடு மாலை போட்டு கெளரவிக்கும் பாக்கியமும் பெற்றேன்.

ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது என்ற வழக்கு மொழி ஒன்றே மாயவரத் தலம் பற்றிய சிறப்பை நன்கு விளக்கும்.

***

மயிலாடுதுறை தேவாரம் :சம்பந்தர் பாடியது

கரவின் றிநன்மா மலர்கொண்டு1    

    இரவும் பகலுந் தொழுவார்கள்    

    சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்    

    வரமா மயிலா டுதுறையே.    1.38.1

    உரவெங் கரியின் னுரிபோர்த்த    

    பரமன் னுறையும் பதியென்பர்    

    குரவஞ் சுரபுன் னையும்வன்னி    

    மருவும் மயிலா டுதுறையே.    1.38.2

    ஊனத் திருள்நீங் கிடவேண்டில்    

    ஞானப் பொருள்கொண் டடிபேணுந்    

    தேனொத் தினியா னமருஞ்சேர்    

    வானம் மயிலா டுதுறையே.    1.38.3

    அஞ்சொண் புலனும் மவைசெற்ற    

    மஞ்சன் மயிலா டுதுறையை    

    நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்    

    துஞ்சும் பிணியா யினதானே.    1.38.4

    தணியார் மதிசெஞ் சடையான்றன்    

    அணியார்ந் தவருக் கருளென்றும்    

    பிணியா யினதீர்த் தருள்செய்யும்    

    மணியான் மயிலா டுதுறையே.    1.38.5

    தொண்ட ரிசைபா டியுங்கூடிக்    

    கண்டு துதிசெய் பவனூராம்    

    பண்டும் பலவே தியரோத    

    வண்டார் மயிலா டுதுறையே.    1.38.6

    அணங்கோ டொருபா கம்அமர்ந்து    

    இணங்கி யருள்செய் தவனூராம்    

    நுணங்கும் புரிநூ லர்கள்கூடி    

    வணங்கும் மயிலா டுதுறையே.    1.38.7

    சிரங்கை யினிலேந் தியிரந்த    

    பரங்கொள் பரமேட் டிவரையால்    

    அரங்கவ் வரக்கன் வலிசெற்ற    

    வரங்கொள் மயிலா டுதுறையே.    1.38.8

    ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்    

    கோலத் தயனும் மறியாத    

    சீலத் தவனூர் சிலர்கூடி    

    மாலைத் தீர்மயிலா டுதுறையே.    1.38.9

    நின்றுண் சமணும் நெடுந்தேரர்    

    ஒன்றும் மறியா மையுயர்ந்த    

    வென்றி யருளா னவனூராம்    

    மன்றன் மயிலா டுதுறையே.    1.38.10

    நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்    

    மயல்தீர் மயிலா டுதுறைமேல்    

    செயலா லுரைசெய் தனபத்தும்    

    உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.    1.38.11        

–subham-

Tags – மாயவரம் , மயிலாடுதுறை , மயில், மயூரநாதர் , எனது விஜயம், தேவாரம்

சிவன் பெயரில் ரி ரி ரி ரி! அருணகிரிநாதர் சொற்சிலம்பம்! -Part 39 (Post 15,477)

Painting by Usha Venkatramani.Thanks

Written by London Swaminathan

Post No. 15,477

Date uploaded in Sydney, Australia –  9 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 39

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 39

சிவன் பெயரில் ரி ரி ரி ரி

கரி புராரி … யானையின் உடலை அழித்து தோலை உடுத்தியவரும்,

காமாரி … மன்மதனை எரித்தவரும்,

திரிபுராரி … திரிபுரத்தை அழித்தவரும்,

தீயாடி … சுடலை (மயான) நெருப்பில் மூழ்கி ஆடுபவரும்,

கயிலை யாளி … கயிலைமலைக்கு இறைவரும்,

காபாலி … மண்டையோட்டை (கபாலம்) கையில் ஏந்தியவரும்,

கழையோனி … மூங்கிலின் கீழே தோன்றியவரும்*,

கர உதாசன ஆசாரி … கையில் நெருப்பை ஏந்திய ஆசார்ய

குருநாதரும்,

பரசு பாணி … மழு (கோடரி) ஆயுதத்தைக் கையில் கொண்டவரும்,

பானாளி … நள்ளிரவில் ஆடுதற்கு விரும்புபவரும்,

கணமொ டாடி … பூத கணங்களுடன் ஆடுபவரும்,

காயோகி சிவயோகி … உலகங்களைக் காக்கும் யோகியும், சிவ

யோகியும்,

பரம யோகி மாயோகி … பரம யோகியும், மகா கனம் பொருந்திய

யோகியும்,

பரி அரா ஜடாசூடி … பெரிய பாம்பை ஜடாமுடியில் சூடியவரும்,

பகரொணாத மாஞானி … சொல்லுதற்கு அரிய மகா ஞானியும்,

பசுவேறி … பசுவை வாகனமாகக் கொண்டவரும்,

பரதம் ஆடி கானாடி … பரத நாட்டியம் ஆடுபவரும், காட்டிலே நடனம் செய்பவரும்,

பர வயோதிக அதீத … மேலானவரும், மூப்பைக் கடந்தவரும் ஆகிய

பரம ஞான வூர் … பரம சிவனாரின் பெரிய ஞான ஊருக்குள்

(சிவஞானபீடத்தில்)

பூத அருளாயோ … யான் புகுவதற்கு நீ அருளமாட்டாயோ?

……………………………..

பார திருவி ராலியூர்மேவு பெருமாளே. … பெருமை மிக்க

அழகிய விராலிமலையில்** அமர்ந்த பெருமாளே.

சிவபிரான் மூங்கிலின் அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர் எனப் பெயர் கொண்டார் – திருநெல்வேலி தலபுராணம்.

இப்பாடலில் சிவனை  வருணிப்பது சிறப்பானது.

***

சீமான்களே சீமாட்டிகளே Ladies and Gentlemen

பழைய தமிழ்த் திரைப்படங்களில் நடிகர்கள் சொற்பொழிவு ஆற்றும் காட்சிகளில் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் என்பதை இப்படி சொல்லுவார்கள் . இது ஸ்ரீமதி ஸ்ரீமான் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்களின் தமிழ் வடிவம். இதை முதலில் பயன்படுத்தியவர் அருணகிரிதான் போலும் !

சீமாட்டியும் ஆய திரி புரை காலாக்கினி கோப பயிரவி …

பெருமாட்டியாகிய திரிபுரை, யுகாந்த கால வடவாமுகாக்னி போன்ற கோபம் கொள்ளும் பைரவி,

சீல உத்தமி நீலி சுர திரி புவன ஈசை … நல்லொழுக்கம் உள்ள

உத்தமி, நீல நிறம் உடையவள், விண் முதலிய மூவுலகங்களுக்கும் ஈசுவரியாகிய பார்வதி தேவியும்,

சீ(ர்) கார்த்திகையாய அறு வகை மாதாக்கள் குமாரன் என

வெகு சீராட்டொடு பேண … ஸ்ரீ கார்த்திகையாகிய அறுவகை

மாதர்களும் குமாரனே என்று மிக்க செல்லப் பாராட்டுகளுடன்

உன்னைப் போற்ற,

வட திசை கயிலாச கோமாற்கு உபதேசம் உபநிட வேத

அர்த்த மெய்ஞ் ஞான நெறி அருள் … வட திசையில் உள்ள

கயிலாயத்தில் வீற்றிருக்கும் தலைவாராகிய சிவபெருமானுக்கு

உபதேசமாக உபநிடதம், வேதம் இவைகளுக்குப் பொருளான

மெய்ஞ்ஞான மார்க்கத்தை அருள் செய்து,

கோது ஆட்டிய ஸ்வாமி என வரும் இளையோனே … அறியாமை

என்னும் குற்றத்தை நீக்கிய குரு மூர்த்தி என்னும் பெயர் விளங்க

வாய்ந்த இளையவனே,

***

ஆறு ஆதாரங்கள்

நடாதசுழி மூல விந்து … நட்டுவைக்கப் படாத சுழிமுனை,

மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்கள், விந்து இவற்றின்

நள் ஆவி விளை ஞான நம்ப … நடுவிலே இருக்கும் உயிர் விளங்கும் ஞான மூர்த்தியே*,

நபோமணி சமான துங்க வடிவேலா … சூரியனுக்குச் சமானமான

ஒளியும் பரிசுத்தமும் உடைய கூரிய வேலனே,

படாதகுளிர் சோலை … வெயில் படாத குளிர்ந்த சோலைகள்

அண்டம் அளாவி உயர்வாய் வளர்ந்து … ஆகாயம் வரை ஓங்கி

வளர்ந்து

பசேலெனவ மே தழைந்து தினமேதான் … பச்சைப் பசேல் என்ற

நிறத்துடன் தழைந்து நாள்தோறும்

விடாதுமழை மாரி சிந்த … விடாமல் மழை பொழிவதால்

அநேகமலர் வாவி பொங்கு … பல மலர்கள் நிறைந்த தடாகங்கள்

சூழ்ந்துள்ள

விராலிமலை மீது உகந்த பெருமாளே. … விராலிமலை** மீது

விரும்பி வாழும் பெருமாளே.

ஒருவராலும் நட்டுவைக்கப்படாமல் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சுழிமுனை, விந்து, இவற்றுடன் மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை ஆகிய ஆறு ஆதாரங்களாகிய குண்டலினி சக்கரங்களின் நடுவில் ஞானப் பிழம்பாக உயிரோடு கலந்து முருகன் இருக்கிறான்.

***

தந்தையும் நீயே தாயும் நீயே த்வமேவ மாதாச பிதா த்வமேவ

மாலாசை கோபம் … மயக்கம், ஆசை, கோபம் இவையெல்லாம்

ஓயாதெ நாளும் … ஒய்ச்சல் இல்லாமல் நாள்தோறும்

மாயா விகார வழியேசெல் … பிரபஞ்ச மாயாவிகார வழியிலே

போகின்ற

மாபாவி காளி தானேனு … மகாபாவி, துர்க்குணம் உள்ளவன்தான்

நானெனிலும்,

நாத மாதா பிதாவு மினிநீயே … நாதனே, தாயும், தந்தையும் இனி

நீதான் எனக்கு

நாலான வேத நூல் … நான்கு வேத நூல்களையும்,

ஆக மாதி … ஆகமங்கள் ஆகிய பிற நூல்களையும்,

நானோதி னேனு மிலை … நான் படித்ததும் இல்லை.

வீணே நாள்போய் விடாமல் … வீணாக வாழ்நாள் போய் விடாமல்

ஆறாறு மீதில் … முப்பத்தாறு தத்துவங்களுக்கு* அப்பாற்பட்ட

ஞானோபதேசம்அருள்வாயே … நிலைத்த ஞானோபதேசத்தை

அருள்வாயே,

ஒப்பிடுக மாணிக்கவாசகரின்

அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!

அன்பினில் விளைந்த ஆரமுதே!

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

புழுத்தலைப் புலையனேன் தனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

செல்வமே! சிவபெருமானே!

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்தருளுவதினியே!

–Subham—

Tags- திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 39,

சிவன் பெயரில் ரி ரி ரி ரி, தந்தையும் நீயே தாயும் நீயே ,

Golden Sayings culled out from ancient texts (Post.15,476)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,476

Date uploaded in London – 9 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Golden Sayings culled out from ancient texts

S. Nagarajan

There are thousands of scriptures and books based on these scriptures.

We may get valuable information to lead our life successfully. For example some of the sayings are given here to contemplate and act accordingly.

One

A man should do one thing always

1)     Always think about the Supreme (GOD)

Two

Two things are superior to heaven.

1)     Mother

2)     Mother land.

 One should respect these two always.

Three

A man should disregard three things.

1)     Wicked person. He should never have a friendship with a wicked person.

2)     He should not have his eyes on another man’s wife.

3)     He should never think about other man’s wealth. He must earn the wealth on his own accord.

Four

Gold is the most valuable material. It is judged by four tests.

1)     Rubbing

2)     Cutting

3)     Heating

4)     Beating.

   Similarly man is also judged by four tests.

1)     By his manners

2)     By his qualities

3)     By his actions

4)     By his munificence

Five

One should respect five persons as his father. They are

1)     Own Father

2)     One who initiates

3)     Teacher

4)     One who gives food

5)     One who protects from fear

Eight

Good Qualities of Intellect

There are eight qualities of Intellect. What are these qualities?

1)     The desire to learn. One must learn till the end of his life.

2)     The desire to listen. One must listen with attention from the knowledgeable people.

3)     He must be able to grasp what he heard.

4)     Retaining everything what one learns

5)     To reason everything by inference and make appropriate deductions

6)     To reason against what has been internalized. Reasoning backward : critical thinking eliminating the errors

7)     Understanding the deeper meaning and purpose behind 1the knowledge

8)     Comprehending the essence, truth of the knowledge that has been inferred

In the modern world intelligence is defined in many ways. There are three mechanisms underlie intelligence. They are 1) Natural intelligence 2) Experimental intelligence and 3) Reflective intelligence.

Now the general question is: can people learn more intelligence? The answer is: Yes. One can acquire intelligence.

*

This article was published in writing.com on 1-3-26

My Visit to Bhuvanagiri and Mantralaya of Sri Raghavendra Swami (Post No.15,475)

Temple at Bhuvanagiri

Written by London Swaminathan

Post No. 15,475

Date uploaded in Sydney, Australia –  8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Pujyaya Raghavendraya Sathya Dharma Rathayacha
Bajatham Kalpa Vrukshaya Namatham Kamadehnave

Picture of London Swaminathan on the banks of River Tungabhadra in Mantralaya.

Shri  Raghavendra Swami (1595–1671) 

Bhuvanagiri is the birthplace of the saint of South India, Raghavendra Swami.  The town is also close to the famous Siva / Nataraja temple at Chidambaram. it is just 12 kilometres from the holy city.

I visited Bhuvanagiri on 4th March 2026. The temple of Sri Raghavendra Swami in Bhuvanagiri  is a small and beautiful temple. One needs just 10 minutes to go round the temple. But one can spend more time praying to the great saint. Behind the figure of Swamiji is the divine wish fulfilling cow Kamadhenu symbolizing his grace. One’s prayers are answered and receive whatever one prayed for.

About 30 years ago, I was lucky to visit Mantralaya, where Swami’s Samadhi is located. Mantralayam (or Mantralaya) is a well-known pilgrimage town located on the banks of the Tungabhadra River in the Kurnool district of Andhra Pradesh,  near the Karnataka border. It is famous for the Jeeva Samadhi (holy tomb) of the saint Sri Raghavendra Swami.

( Situated on the border of Andhra Pradesh and Karnataka, roughly 74 km from Kurnool and 43 km from Raichur).

Every time I passed Chidambaram in the past, I thought of visiting Bhuvanagiri, but missed the golden opportunities. So, this time I planned to go to Bhuvanagiri only and reached it in five and half hours from Chennai. I spent half hour praying and talking to the priest. There were not many devotees. The priest gives mantra Akshata (red coloured rice) which one puts on head. And Teertham (holy water) to drink.

It is a wonder that a person born in a small village became famous and worshipful and travelled all the way to a remote place in Andhra via Karnataka. He followed and preached Dvaita philosophy of Madhva. Born as Venkatanathan 400 years ago to Thimmanna and Gopikambal, he studied Shastras in Madurai and Kumbakonam.  He taught them to the students in Kumbakonam.

He married a woman by name Sarasvathi and had a son named Letchuminarayanan. He advocated Vaishnavism and Shri Madhvacharya’s Dvaita philosophy. He ascended Brindavana at Mantralayam in present day Andhra Pradesh in 1671.

Venkatanathan took Sanyasa from Sumatheendra Tirtha and received the name Sri Raghavendra.

He wrote many books in Kannada , on Rig Veda, Brahmasutra, Bhagavad Gita and Upanishads. He interpreted them based on Dvaita of Madhvacharya.

Swamiji performed several miracles during his lifetime and even after his death/Samadhi.

Known as an avatar of Prahlada, he spent 50 years leading Mathas and performing miracles, famously entering jeeva samadhi (living entombment) at Mantralayam on the Tungabhadra river. 

He was a staunch follower and propagator of Sri Madhvacharya’s Dvaita (dualism) philosophy. He was highly proficient in Logic, Mimamsa, Music, Yoga, and Shastras, and mastered many arts. He was also a prolific author who simplified complex philosophies.

Miracles

Once Thanjavur area was under a great drought. Raghavendra Swami made the ruler perform appropriate rituals and fire ceremonies. Soon afterwards, rain fell upon the lands. The king, to show his gratitude offered Raghavendra Swami a priceless necklace, which Raghavendra Swami in turn put into the Yajna fire as an offering to Lord Vishnu. The king grew angry at what he thought was an insult. Raghavendra Swami immediately brought back the necklace intact from the fire.

Raghavendra Swami visited Bijapur, where the scorching heat was unbearable. One Brahmin was overcome by the heat and fell down, unable to get up. Raghavendra Swami recited a mantra, and water sprung up from the scorching sands, which saved the Brahmin’s life. In another instance, a child was traveling with an entourage, through a desert. The heat was so unbearable that the child started to cry. Raghavendra Swami threw his upper cloth towards the child. Flying over his head, it gave shade to the child for the rest of the journey.

Incident in Mantralaya

When Sir Thomas Munroe was the Collector of Bellary in 1800, the Madras Government ordered him to procure the entire income from the Math and Manthralaya village. When the Revenue officials were unable to comply with this order, Sir Thomas Munroe visited the Math for investigation. Someone appeared before him near the Samadhi and spoke to him in English explaining the stand of the Mutt in this issue. Later Munroe cancelled the order and Mantralaya remained exempt from any tax collections.

This notification was published in the Madras Government Gazette in Chapter XI and page 213, with the caption “Manchali Adoni Taluka. This order is still preserved in Fort St. George and Manthralayam.

Once while he was touring Kumbakonam along with his wife, Shri Venkatanatha and his family were invited to attend a function. Unfortunately, the hosts did not treat him well .He was asked  to make some sandalwood paste for all the invitees. When the guests applied this paste, it gave a burning sensation all over their bodies. When the hosts asked the reason for it, he replied that the burning sensation was due to the Agni Suktam hymn for the worship of Agni, God of Fire that he was chanting while preparing it. Upon realizing his power, the host apologized profusely to Shri Venkatanatha.

On a hot summer day, Shri Raghavendra Swami was on his way home from a pilgrimage. And he saw the Nawab (Muslim king) walking towards him, with a sad face. He stated that his young son had died from a poisonous snakebite and been buried in a tomb close by. He asked the king to take the body out of the tomb. When the puzzled Nawab did as he was asked, Swami sprinkled holy water from his kamandala and the young boy woke up as though he was getting up from sleep.

Shri Raghavendra Swami got an opportunity to meet the Nawab of Adoni face-to-face. Nawab decided to test his spiritual skills and placed before the Swamiji, a plate of non-vegetarian delicacies completely covered with a piece of cloth.

Swamiji took some water from his Kamandala, meditated and sprinkled it on the covered plate, as part of his regular practice of purifying any food before consumption. He then opened the plate. It contained fresh fruits. The Nawab immediately became remorseful and then became an ardent devotee of  Swamiji. When he was ready to offer any gift, Swamiji asked that the land where Mantralayam is located now.

Raghavendra openly announced on such and such day he is going to enter Jeeva Samadhi. A lot of crowd came there to watch it. On Dwitiya Day of Sravana Krishna Paksha in 1671, Raghavendra Swami gave a soul-stirring speech to hundreds of devotees who had gathered to watch the event. Some quotes from that speech are as follows –

1. Without right living, right thinking will never come.

2. Social work done for the good of worthy people should also be considered as the Lord’s worship.

3. Always keep away from people who merely perform miracles.

4. Right knowledge is greater than any miracle.

5. Have devotion to the Lord. This devotion should never be blind faith.

Shri Raghavendra Swami attained Jeeva samadhi after delivering his final sermon.. Mantralaya housing his Samadhi  is visited by thousands of devotees every month.

—Subham—

Tags– Raghavendra Swami, Mantralaya, Bhuvanagiri, Miracles, Samadhi, birth place, Sir Thomas Munroe, last speech, pictures

புவனகிரி ராகவேந்திரர் கோவிலுக்கு விஜயம் (Post.15,474)

Written by London Swaminathan

Post No. 15,474

Date uploaded in Sydney, Australia –  8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் துங்கபத்ரா நதிக்கரை மீதுள்ள மந்த்ராலயத்துக்குச் சென்று ராகவேந்திர சுவாமிகளின் சமாதியைத் தரிசித்த்தேன் . அப்போது, அங்கு தையல் இலையில் உணவு சாப்பிட்டதும் நினைவில் இருக்கிறது. நுழைவாயிலில் பெரிய எழுத்துக்களில் பொறித்த மந்திரத்தையும் மனப்பாடம் செய்து இன்றுவரை சொல்லி வருகிறேன் .

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய  ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே

— என்பது நான் தினமும் சொல்லும் மந்திரம் .

அப்போதுமுதல் ராகவேந்திரர் பிறந்த ஊரான புவனகிரிக்குச் சென்று கோவிலில் அவரது உருவத்தைத் தரிசிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன் . ஒவ்வொரு முறை சென்னையிலிருந்து எங்கள் குலதெய்வமான வைத்தீஸ்வரனைத் தரிசிக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் செல்லும்போதும், சிதம்பரம் வரும்போது புவனகிரிக்குச் செல்லும் வழி  என்ற ‘போர்டி’னைக் காண்பேன். ஆயினும் இறங்க நேரம் இல்லாததால் அதைக் கடந்து போய் விடுவேன் . சிதம்பரத்திலிருந்து புவனகிரி, சுமார் பத்து கிலோமீட்டர்தான். சிதம்பரத்துக்கு நடராஜரைத் தரிசிக்க வந்தபோதும்கூட வாய்ப்பினை நழுவவிட்டேன் . இந்த முறை புவனகிரி யாத்திரையை மனத்தில் வைத்துக்கொண்டு வாடகைக் காரில் புவனகிரிக்கு சுமார் ஐந்தரை மணி நேரத்தில் போய்ச் சேர்ந்தேன் . நல்ல தரிசனம் கிடைத்தது .

ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் மிகவும் சிறிய கோவில். ஒரு அழகான மண்டபம் என்றும் கூடச் சொல்லிவிடலாம். நான் சென்ற மாலை நேரத்தில் கூட்டம் இல்லை. அங்குள்ள அர்ச்சகரிடம் தீர்த்தமும் மந்திர அட்சதையும் வாங்கிக்கொண்டு அட்சதையைத் தலையில் போட்டுக்கொண்டேன். கோவிலுக்கு வெளியே சென்று புகைப்படங்களை எடுத்தேன். மறுநாள் சிதம்பரத்திலிருந்து கோவிந்தராஜப்பெருமாள் அங்கே எழுந்தருளப் போகிறார் என்ற செய்தியைச் சொல்லி என்னையும் வருமாறு கேட்டுக்கொண்டார் பட்டர். 

சிறிய கோவிலாக இருந்தாலும் வண்ணமிகு கோவில். அவரது சந்நிதியைச் சுற்றி வருவதற்குப் பிரகாரமும் உள்ளது உண்டியலில் காணிக்கையை செலுத்திவிட்டு கும்பகோணம் நோக்கி விரைந்தேன்

***

ஸ்ரீ ராகவேந்திரரின்  (1595–1671) அற்புதம் நிறைந்த வாழ்க்கை

தமிழ்நாட்டின் ஏதோ ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து கர்நாடகம் ஆந்திரம் வழியாகப் பயணம் செய்து இறுதியில் துங்கபத்ரா நதிக்கரையில் ஆந்திரத்தில் அவர் சமாதி அடைந்தது ஏன் என்று எண்ணி எண்ணி நாம் வியப்போம். மஹான்கள் பிறக்கும் இடமும் சமாதி அடையும் இடமும் நம்மால் விளங்கிக்கொள்ள  முடியாத விஷயம் . பல மஹான்களின், சாது சந்யாசிகளின் வாழ்க்கையில் இதைக் காணலாம் .

பொதுவாக மத்வ சப்ரதாயத்தினர் மட்டும் வணங்கிவந்த ஸ்ரீ ராகவேந்திரர், நடிகர் ரஜினி காந்த் மற்றும் திரைப்படம் மூலம் எல்லோருடைய வழிபாட்டுக்கும் உரியவர் ஆனார். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் அவதரித்தார் . மத்வரின் த்வைத சமய போதனைகளைப் பின்பற்றும் சுதீந்திர தீர்த்தர் என்பவரைக் குருவாக ஏற்றார். இவர் ஜீவ சமாதி அடைந்தபோதும் இன்றும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பதால் இவருக்குப் பின்னால் எப்போதும் காமதேனு உருவம் இருக்கும் . இவரைப் பிரஹலாதரின் அவதாரமாகவே பக்தர்கள் வழிபடுகின்றனர் .

பூர்வஜன்மத்தில் இவரது பெயர் வியாஸராயர்; இந்த ஜென்மத்தில் பெற்றோர்கள் சூட்டிய பெயர் வேங்கடநாதன் . மதுரை, கும்பகோணம் முதலிய இடங்களில் சாஸ்திரங்களைக் கற்ற பின்னர், அதை ஏனையோருக்கும் போதித்தார். சரஸ்வதி என்ற பெண்ணை கல்யாணம் செய்துகொண்டார். அவர்களுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் லெட்சுமிநாராயணன் . ராகவேந்திரரின் தாய் தந்தையின் பெயர் கோபிகாம்பாள், திம்மண்ணா பட்டர் .

மூன்று அற்புதங்கள்

  கும்பகோணத்தில் இவரது மஹிமை தெரியாதோர் இவரை சந்தனம் அரைக்கும் பணியில் ஈடுபடுத்தினர். அந்த சந்தனத்தை உடலில் பூசிக்கொண்டிருந்தோருக்கு குளுமைக்குப் பதிலாக மிளகாயைப் பூசிக்கொண்டது போல எரிச்சல் ஏற்பட்டது . இதற்கு காரணம் அவர் அக்னி சூக்த மந்திரத்தை ஜபித்துக்கொண்டே சந்தனம் அரைத்ததே . பின்னர் அவரை மரியாதையுடன் நடத்தி மன்னிப்புக் கேட்கவே, அவர் வருண மந்திரத்தை ஜபித்து எரிச்ச லை அகற்றினார் இப்படி நிறைய அற்புதங்கள் நிறைந்தது இவரது வாழ்க்கை .

ஒரு முறை இவர் கானகம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது , அவருடைய சீடர்களில் ஒருவனை பாம்பு கடிக்கவே  அந்த இடத்திலேயே அவன் மாண்டான். உடனே ராகவேந்திரர் கருட மந்திரத்தை ஜபித்து விஷத்தை அகற்றவே சீடன் உயிர் பிழைத்தான்.

இன்னொரு முறை இவருக்கு விருந்து கொடுக்கவிருந்தவரின் மகன் இறக்கவே அவனை ராம மந்திரம் ஜபித்து உயிர்ப்பித்தார் . இப்படி பல அற்புதங்களைச் செய்தார் . வாதங்கள் செய்து மாற்று சமயத்தினரையும் துவைதத்தைப் பின்பற்றவைத்தார் .

வேங்கடநாதர், தஞ்சாவூரில் 1621 ஆம் ஆண்டு துறவறம் ஏற்று ஸுதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக பொறுப்பேற்றார்.

இறந்த பின்னரும் இவர் அற்புதங்களைச் செய்தார்; மடத்திற்குத் தானமாக வழங்கப்பட நிலத்தை பிரிட்டீஷார் புதிய சட்டத்தை க் காட்டிக் கையகப்படுத்தினர்; பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பெல்லாரி மாவட்ட கலெக்டர் தாமஸ் மன்றோ நேரில் விசாரணை செய்ய வந்தார்; மரியாதைடன் ராகவேந்திரர் சமா தியில் நுழையும்போது அவருக்கு முன்னர் ஒரு உருவம் தோன்றி ஆங்கிலத்தில் உரையாடி வெற்றி கண்டது. அந்த உருவம் யார் என்பது எவருக்கும் தெரியாது; இதை அவரே மெட்ராஸ் கெஜெட்டில் ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கிறார் .

ராகவேந்திரர் நிறைய நூல்களையும் கன்னட மொழியில்  எழுதியுள்ளார் . அவை பிரம்மசூத்ரம், பகவத் கீதை, உபநிஷதங்கள் பற்றியவை. த்வைத  சமய அணுகுமுறையில் சாஸ்திரங்களை விளக்கும் நூல்கள் அவை .

எப்போதும் கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் அருள் சுரக்கும் அவரது புனிதத்தலங்களான புவனகிரி கோவிலுக்கும் மந்த்ராலயம் ஜீவ சமாதி உள்ள பிருந்தாவனத்துக்கும் எல்லோரும் சென்று தரிசிக்க வேண்டும்; இயலாதவர்கள் மேலே கண்ட பூஜ்யாய ……… மந்திரத்தை தினமும் சொல்லிவரலாம்; அவரது அருள் கிட்டும் என்பதில் ஐயமில்லை

சிதம்பரத்துப் போவோர் அரைமணி நேரத்தில் புவனகிரியை அடையலாம் .மந்திராலயம் ஆந்திரத்தின் கடைக்கோடியில் நல்ல போக்குவரத்து இணைப்புகளுடன் உள்ளது . ரெய்ச்சூர் அல்லது கர்நூலிலிருந்து செல்வது எளிது.

Mantralayam (or Mantralaya) is a well-known pilgrimage town located on the banks of the Tungabhadra River in the Kurnool district of Andhra Pradesh, India, near the Karnataka border. It is famous for the Jeeva Samadhi (holy tomb) of the 17th-century saint Sri Raghavendra Swami.

Location: Situated on the border of Andhra Pradesh and Karnataka, roughly 74 km from Kurnool and 43 km from Raichur.

–subham—

Tags- புவனகிரி, ராகவேந்திரர்,  மந்த்ராலயம், சமாதி,

பூஜ்யாய ராகவேந்த்ராய , பிறந்த ஊர், அற்புதங்கள்

எவையெல்லாம் நற்குணங்கள் ? பர்த்ருஹரியின் பட்டியல் இதோ! (Post.15,472)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,472

Date uploaded in London – 8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

எவையெல்லாம் நற்குணங்கள்? பர்த்ருஹரியின் பட்டியல் இதோ! 

ச. நாகராஜன்

 நல்லவர்களுடன் பழகினால் நாளும் நலமும் வளமும் பெருகும்.

ஆனால் அவர்களிடம் உள்ள குணங்கள் யாவை?

அதை எப்படி அறிவது/

 கவலையே வேண்டாம், கவிஞர் பர்த்ருஹரி ஒரு பட்டியலையே தருகிறார்- தனது சுபாஷித த்ரிசதியில்!

அதைப் பார்த்தால் போதும், நல்லவர்கள் யார் என்று இனம் கண்டு விடலாம்.

வாஞ்சா ஸஜ்ஜன சங்கதௌ

    பரகுணே ப்ரீதி குரௌ நம்ரதா

வித்யாயாம் வ்யஸனம் ஸ்வயோஷிதி

     ரதி: லோகாபவாதாத் பயம் |

பக்தி: சூலிநி சக்தி ராத்ம தமநே

     ஸம்ஸர்க முக்தி: கலை:

ஏதே யேஷு வஸந்தி நிர்மல குணா:

     தேப்யோ மஹத்ம்யோ நம: |\

    சுபாஷித த்ரிசதி – நீதி சதகம் – 51ம் ஸ்லோகம்

இதன் பொருளை விரிவாகப் பார்ப்போமா? 

ஸஜ்ஜன சங்கதௌ – நல்லவர்களுடன் சேர்க்கையில்

வாஞ்சா – ஆசையும்

பரகுணே – பிறர் குணத்தில்

ப்ரீதி – நட்பும்

குரௌ – குருவிடத்தில்

நம்ரதா – வணக்கமும்

வித்யாயாம் – கல்வியில்

வ்யஸநம் – ஆஸக்தியும்

ஸ்வயோஷிதி – தான் உரிமை கொண்ட பெண்ணிடத்தில் (மட்டும்)

ரதி – காமமும்

லோகாபவாதாத் – உலகின் அபவாதத்தில்

பயம் – பயமும்

சூலினி – ஈஸ்வரனிடத்தில்

பக்தி: – பக்தியும்

ஆத்ம தமனே – தன்னை அடக்கிக் கொள்வதில்

சக்தி: – சாமர்த்தியமும்

கலை: – துஷ்டர்களுடன்

ஸம்ஸர்க்க முக்தி: – பழகுவதை விடுவதும்

நிர்மல குணா: – ஆகிய இந்த அழுக்கற்ற குணங்களானவை

யேஷு – எவர்களிடம் இருக்கின்றனவோ

தேப்ய: மஹத்ப்ய: – அந்தப் பெரியோர்களின் பொருட்டு

நம: – நமஸ்காரம்.

நல்லவர்களின் சேர்க்கையில் ஈடுபாடு,

பிறருடைய குணங்களை மதிக்கும் குணம்,

குருவிடத்தில் விநயம்,

தன் மனைவியிடத்தில் காமம், (செக்ஸ் உறவு)

லோக அபவாதத்தில் பயம்,

ஈஸ்வரனிடத்தில் பக்தி,

தன்னை அடக்கிக் காத்துக் கொள்ளும் சக்தி,

கெட்டவர்களுடனான பழக்கத்தை விடுதல்,

ஆகிய இந்த குணங்கள் அனைத்தும் எவரிடம் இருக்கின்றனவோ அந்த மஹான்களுக்கு (நமது) நமஸ்காரம்!

வாழ்க்கையில் யாருடன் பழக வேண்டும், யாருடன் பழகக் கூடாது, இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும், கடவுளிடம் பக்தி, குருவிடம் மரியாதை என்று இன்ன பிற நல்ல குணங்கள் அனைத்தையும் சுட்டிக் காட்டி விடுகிறா கவிஞர் பர்த்ருஹரி!

அவருக்கு முதலில் நமது நமஸ்காரம் உரித்தாகுக!

**

திருப்புகழில் ராகங்கள்! ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை- Part 38 (Post.15,473)

Written by London Swaminathan

Post No. 15,473

Date uploaded in Sydney, Australia –  8 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 38

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 38

மதுரையில் நடராஜர் கால் மாறி ஆடிய கதை 

ஏர் ஆரும் மாட கூட மதுரையில் மீது ஏறி மாறி ஆடும்

இறையவர் … அழகு நிறைந்த மாட கூடங்கள் உள்ள மதுரையில்,

வெள்ளி அம்பலத்தில் நடன மேடையில் கால் மாறி* ஆடிய இறைவராகிய சிவ பெருமான் (இயற்றிய ‘இறையனார் அகப் பொருள்’ என்ற நூலுக்கு),

ஏழேழு பேர்கள் கூற வரு பொருள் அதிகாரம் …

நாற்பத்தொன்பது சங்கப் புலவர்கள் பொருள் கூறிய பொருள்

அதிகாரத்தின் உண்மைப் பொருள் இதுதான் என்று கூறுவதற்காக,

ஈடாய ஊமர் போல வணிகரில் ஊடாடி … தகுதி உள்ள ஊமைப்

பிள்ளை** போல செட்டி குலத்தில் தோன்றி விளையாடி,

ஆலவாயில் விதி செய்த லீலா விசார தீர வரதர குருநாதா …

ஆலவாய் என்னும் மதுரையில் உண்மைப் பொருளை நிலை நிறுத்திக் காட்டிய திருவிளையாடலைப் புரிந்த தீரனே, வரங்களைக்

கொடுப்பவனே, குரு நாதனே,

முன் வீய நினைபவன் ஈடேறுமாறு கூர் ஆழியால் பாநு

மறைவு செய் … முன்பு (பாரதப் போர் நடந்தபோது) இறந்து போவதற்கு

எண்ணித் துணிந்த அர்ச்சுனன் உய்யுமாறு கூர்மையான சக்கரத்தால்

சூரியனை மறைத்து வைத்த

கோபாலராய நேயம் உள திரு மருகோனே … கோபாலர்களுக்கு

அரசனாகிய கிருஷ்ணன் அன்பு வைத்த அழகிய மருகனே,

கோடாமல் ஆரவார அலை எறி காவேரி ஆறு பாயும்

வயலியில் … தவறுதல் இன்றி பேரொலியுடன் அலைகளை வீசி வரும் காவேரி ஆறு பாய்கின்ற வயலூரிலும்,

கோனாடு சூழ் விராலி மலை உறை பெருமாளே. …

கோனாடு*** என்னும் நாட்டுப் பகுதியில் உள்ள விராலி மலையிலும்

வீற்றிருக்கும் பெருமாளே.

ஒருமுறை பாண்டியன் ராஜசேகரன் நடராஜப் பெருமான் எப்போதும் இடது திருவடியைத் தூக்கி நடனமாடுவது அவருக்கு எவ்வளவு அயர்ச்சி தரும் என்று எண்ணி வருந்தி, இறைவனை கால் மாறி வலது பாதத்தைத் தூக்கி ஆடும்படி வேண்டினான். அதற்கு இணங்கி மதுரையில் சிவபிரான் கால் மாறி ஆடினார்–

– திருவிளையாடல் புராணம்.

** மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக்

கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.— திருவிளையாடல் புராணம்.

*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது..

***

திருப்புகழில் ராகங்கள்

மறை வேள்வி சோமாசிமார் சிவாய நம என மா மாய வீர

கோரமுடன் இகல் சூர் மாள வேலை ஏவும் வயலியில்

இளையோனே … வேத வேள்விகள், சோம யாகம் செய்யும் பெரியோர்கள் பஞ்சாக்ஷரத்தை ஓதித் துதித்து நிற்கவும், பெரிய மாயங்களும் வீரமும் கோரமும் பொருந்தி போர் செய்த சூரன் இறக்கும்படி வேலாயுதத்தைச் செலுத்திய, வயலூரில் வீற்றிருக்கும் இளையோனே,

கூதாள நீப நாக மலர் மிசை சாதாரி தேசி நாமக்ரியை முதல்

கோலால நாத கீத மதுகரம் அடர் சோலை … கூதாளப் பூ,

கடப்ப மலர், சுரபுன்னை மலர் இவைகளின் மீது சாதாரி (பந்துவராளி), தேசி (தேஷ்), நாமக்ரியை (நாதநாமக்கிரியை) முதலான ஆடம்பரமான ராக இசைகளைப் பாடும் வண்டுகள் நிறைந்த சோலைகளும்,

கூர் ஆரல் தேரு(ம்) நாரை மருவிய கான் ஆறு பாயும் ஏரி

வயல் பயில் கோனாடு சூழ் விராலி மலை உறை

பெருமாளே. … நிரம்ப ஆரல் மீன்களைக் கொத்தும் நாரைகள்

பொருந்திய காட்டாறுகள் பாய்கின்றனவும், ஏரிகளும் வயல்களும்

நெருங்கியுள்ள கோனாடு* என்னும் நாட்டில் உள்ள விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை

நிலாவிரி நிலாமதி நிலாத அநில அசன … சந்திரிகை விரிந்து

ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி

நியாயப ரிபாலஅர … தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்*

நதிசூடி … கங்கைநதியையும் சூடியவரும்,

நிசாசர குலாதிபதி ராவண புயாரிட … அரக்கர் குலத்துக்கு

அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு*3 செய்தவரும்,

நிராமய சரோருக அரன் அருள்பாலா … நோயற்றவரும்,

தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே,

வில் ஆசுகம் வலாரெனும் உலாச இத ஆகவ … வில்லையும்

அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும்

வியாதர்கள் விநோதமகள் மணவாளா … வேடர்களின் அற்புதப்

புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே,

விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை … மேன்மைமிகு

வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும்

விராலிமலைமீதிலுறை பெருமாளே. … விராலிமலையிலும்*4

வாழ்கின்ற பெருமாளே.

 ஆதிசேஷன் சிவபிரானின் ஜடாமுடியில் ஆபரணமாக உள்ளார். அவர் சர்ப்பங்களின் அரசன். நீதியைப் பரிபாலிப்பவர். தனது நீதிவழுவாமை குறித்து  கர்வம் ஏற்பட்டதால் சிவபிரான் ஆதிசேஷனை ஜடையிலிருந்து உருவி தரையில் அடிக்க பாம்பின் தலை ஆயிரம் துண்டங்களாக உடைந்தது. தன் தவறுக்கு வருந்தி சிவனைத் தொழ, ஆதிசேஷன் ஆயிரம் தலைகளுடன்

தோன்றினார் – சிவபுராணம்.

***

திருமால்  சக்ராயுதம்  பெற்ற கதை

 இராகவ இராமன் முன் … ரகுவின் மரபிலே வந்த இராம பிரான் முன்னொருநாளில்

இராவண இராவண இராவண இராஜன் … அழுகுரலுற்றவனும், இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன்

உட்குடன்மாய் வென்ற … அச்சப்பட்டு மாயும்படியாக வெற்றி கொண்ட இராகன்மலர் ஆள் … அன்பு நிறைந்தவனாகிய திருமாலின் கண்ணையே மலராகக் கொண்டருளிய

நிஜ புராணர் குமரா … உண்மை வரலாற்றை* உடைய

சிவபெருமானின் திருக்குமரா,

இராவண இராவண இராவண இராஜன் … அழுகுரல் உடையவனும் , இரவின் வண்ணமாகிய கரிய நிறம் படைத்தவனும் ஆகிய இராவணன் என்ற அரசன்

திருவீழிமிழலையில் திருமால் சிவனை நாள்தோறும் 1000 தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார். திருமாலின் அன்பைச் சோதிக்க, சிவன் ஒருநாள் ஒரு மலரை ஒளித்து மறைக்க, திருமால் குறைந்த மலருக்கு பதிலாக, தாமரை போன்ற தம் கண்ணையே மலராக அர்ச்சித்தபோது, சிவன் திருமாலின் அன்பை மெச்சி சக்ராயுதத்தைப் பரிசாக வழங்கினார் என்பது வரலாறு.

ராவண என்றால் அழும் குரலை உடையவன் என்று பொருள்.

*** 

பத்து வகை தோல் வாத்தியங்கள் !

விராலிமலைக்கு அருணகிரியை முருகனே அழைத்த கதை !

தபலை குட முழுவு திமிலை படகம் அது அபுத ச(ல்)லிகை

தவில் முரசு கரடிகை மத்தளி தவண்டை அறவைத் தகுணி

துந்துமிகள் மொகுமொகு மொகு என அலற … தபேலா என்ற

ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்தியவகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப,

………………………………………

திருவயலியில் அடிமைய குடிமை இ(ன்)னல் அற மயலொடு

மலம் அற அரிய பெரிய திருப்புகழ் விளம்பு என் முன்

அற்புதம் எழுந்தருள் குக … திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே*,

விராலி மலை உறை குரவ நல் இறைவ வரு கலை பல தெரி

விதரண முருக சரவண உற்பவ க்ரவுஞ்ச கிரி நிக்ரக அகண்ட

மய நிருப விமல சுக சொருப பரசிவ குருபர …

…………………..

* ‘ விகட பரிமள ‘ எனத் துவங்கும் ( 917 ) திருப்புகழ் பாடலை அருணகிரியார் வயலூரில் பாட, இறைவன் உவந்து அவர் முன் அற்புதக் கோலத்தோடு எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து விராலி மலைக்கு வா என்று அழைத்தார். இதை, ‘விராலி மாலையில் நிற்பம், நீ கருதி உற்று வா, என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞானமுதளித்த வாரம் இனி நித்தம் மறவேனே’ என்று வரும் ‘ தாமரையின் மட்டு ‘ ( 911 ) திருப்புகழ் பாடலில் காணலாம்.

விராலிமலை, திருச்சியில் இருந்து  20 மைலில் உள்ளது.

***

திருப்புகழில் விதுரன்

விதுரன் நெடும் த்ரோணம் ஏற்று எதிர் பொரும் அம்பு ஆதி

ஏற்றி விரகின் எழுந்து ஓய நூற்றுவரு(ம்) மாள விரவு ஜெயன்

காளி காட்டில் வரு தருமன் தூதன் நீற்ற விஜயன் நெடும்

பாக தீர்த்தன் மருகோனே … விதுரன் பெரிய வில்லை எடுத்து,

எதிரியுடன் போர் செய்ய அம்பு முதலிய பாணங்களை அதில் ஏற்றி சாமர்த்தியத்துடன் எழுந்து போர் புரிதல் ஓயுமாறு, துரியோதனன் ஆகிய நூறு பேரும் இறக்க உபாயம் செய்த வெற்றி வீரன், துர்க்கை வாழும் இடும்பை வனத்தில் வாசம் செய்த தருமருடைய தூதுவன், திருநீறு இட்டுத் தவம் செய்த அருச்சுனனுடைய பெரிய தேரின் பாகனாகிய பரிசுத்த மூர்த்தி திருமாலின் மருகனே,

***

51 எழுத்துக்களும் (சம்ஸ்க்ருதம்), 18 புராணங்களும்,  அஜபா மந்திரமும்

ஐந்து பூதமும் … மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும்,

ஆறு சமயமு … சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம்,செளரம் என்ற ஆறு சமயங்களும்,

மந்த்ர வேத புராண கலைகளும் … மந்திரங்களும், வேதங்களும்,

புராணங்களும்*, கலைகளும்,

ஐம்பதோர்விதமான லிபிகளும் … ஐம்பத்தொரு விதமான

எழுத்துக்களும்,

வெகுரூப அண்டர் ஆதி சராசரமும் … அனேக உருவங்களுடன்

கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும்,

உயர் புண்டரீகனு மேக நிறவனும் … உயர்ந்த பிரமனும், கார்மேக

நிறத்துத் திருமாலும்,

அந்தி போலுருவானு … அந்தி வானம் போன்ற செம்மேனியை

உடைய ருத்திரனும்,

நிலவொடு வெயில்காலும் … நிலவோடு வெயிலை வீசுகின்ற

சந்த்ர சூரியர் தாமும் … சந்திரனும், சூரியனும்,

அசபையும் … அம்ச மந்திரமும்**

விந்து நாதமும் … சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும்,

ஏக வடிவம் … இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும்.

அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம் … வேறு வேறாகப்

பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும்

சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும்.

…………………………………

விராலி மலையுறை பெருமாளே. … விராலி மலையில்

வீற்றிருக்கும் பெருமாளே.

புராணங்கள் 18 – சைவம், பெளஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம்,வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரம்மாண்டம், கருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பத்மம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம்.

** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம்,, அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா – ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.

51 எழுத்துக்கள் சம்ஸ்க்ருத   மொழியில் உள்ளன.

சமஸ்கிருத மொழியில் 51 அட்சரங்கள் (வர்ணங்கள்) , அவை அ முதல் க்ஷ வரை அமைந்துள்ளன. இந்த 51 எழுத்துக்களும் 51 சக்தி பீடங்களை மையமாகக் கொண்ட அட்சர சக்திகளாகவும்,  

இவை மாத்ருகா அட்சரம் (தாயைப் போன்ற எழுத்துக்கள்) என்றும் அழைக்கப்படுகின்றன.

16 உயிரெழுத்துக்கள், 25+5+5 மெய்யெழுத்துக்கள் மற்றும் அஹ், அம் போன்ற இதர எழுத்துக்களை உள்ளடக்கியது.

இந்த எழுத்துக்கள் மந்திர சக்தியைக் கொண்டவை ; உடலின் பல்வேறு சக்தி சக்கரங்களுடன் தொடர்புடையவை .

5 short vowels (hrasva), 9 long vowels (dIrgha) and 2 support vowels (pluta) making it total of 16 vowels (3).

5 semi-vowels/antastha (Sometimes ळ is not included and hence 4

25 consonants and 5 sibilants called vyaJjanam.

—SUBHAM—

TAGS-– சக்ராயுதம் 51 எழுத்து (சம்ஸ்க்ருதம்), 18 புராணம்,  அஜபா மந்திரம், விதுரன்,  ராகங்கள் , கால் மாறி ஆடிய கதை ,  அருணகிரிநாதர் அரிய செய்திகள்Part 38, ஆதிசேஷன்

London Swaminathan declares Holiday!

Saptamatas, Pictures by A Narayanan, Sydney, Australia.

London Swaminathan declares Holiday!

Tamil and English articles won’t be posted by me in my blogs

For a week or so.

Let us travel Far and Wide.

Posted  on March 2, 2026

***

Ulysses Poem by Alfred Tennyson

‘T is not too late to seek a newer world.

Push off, and sitting well in order smite

The sounding furrows; for my purpose holds

To sail beyond the sunset, and the baths

Of all the western stars, until I die.

It may be that the gulfs will wash us down:

It may be we shall touch the Happy Isles,

And see the great Achilles, whom we knew.

Tho’ much is taken, much abides; and tho’

We are not now that strength which in old days

Moved earth and heaven, that which we are, we are;

One equal temper of heroic hearts,

Made weak by time and fate, but strong in will

To strive, to seek, to find, and not to yield.

 Ashtadikpalas

Sivaganas.

—subham—

Tags- Holiday, March 2, 2026

முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 (Post.15,471)

Written by London Swaminathan

Post No. 15,471

Date uploaded in Sydney, Australia –  2 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 36

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 36

முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு!

Picture by A Narayanan, Sydney, Australia.

கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட

புலவோனே … (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான்* என்னும்படி விளங்கிய புலவனே,

கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற

ஒன்றை அருள்வோனே … தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில்

சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம்

இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,

வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில்

வீரா … வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த

தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே.

வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த

பெருமாளே. … வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப்**

போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே.

பெரியோருக்குச் செய்யும் முதல் மரியாதை (வித்வத் தாம்பூலம்) யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஔவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்ததும், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறினாள் – கந்த புராணம்.

** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

***

சிவபெருமானைத் தொழும் கழுகுகளின் பெயர்கள்

கழுகுதொழு … கழுகுகள்* தொழுகின்ற

வேதகிரி சிகரி வீறு … வேதமலையின் உச்சியில் விளங்கும்,

கதிருலவு வாசல் நிறைவானோர் … ஒளிவீசும் வாசலில் நிறைந்த

தேவர்கள்

கடலொலிய தான … கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று

மறைதமிழ்க ளோது … வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும்

ஓதுகின்ற,

கதலிவனம் மேவு பெருமாளே. … கதலிவனம்** (என்ற

திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே.

எல்லா யுகங்களிலும் கீழ்க்கண்ட இரண்டு கழுகுகள் இந்த வேதமலையை பூஜித்தன:

கிருத யுகம் – சண்டன், பிரசண்டன்,

திரேதா யுகம் – ஜம்பாதி, ஜடாயு,

துவாபர யுகம் – சம்புகுத்தன், மாகுத்தன்,

கலி யுகம் – சம்பு, ஆதி.

** திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு ‘கதலிவனம்’ என்றும் பெயர்.

***

சிவன்ஊர்த்வதாண்டவம் ஆடியது என் ?

Lord Siva pacifying angry Parvati;  pictures by A Narayanan, Sydney, Australia.

காதும் உக்ர வீர பத்ர காளி … வெகுண்டு வந்த வீரபத்திரரின்

துணைவியான காளி

வெட்க மகுடத்தை ஆகாச முட்ட வீசி விட்ட காலர் … நாணம்

அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,*

பத்தி இமையோரை … பக்தியுள்ள தேவர்களுக்கு

ஓது வித்த நாதர் கற்க … கற்பித்த நாதராகிய சிவபெருமான்,

உன்னிடம் பாடம் கேட்கவும்,

ஓது வித்த முநிநாண … சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன்

வெட்கமடையவும்,

ஓரெழுத்தில் ஆறெழுத்தை … ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார

ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ

மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி

ஓது வித்த பெருமாளே. … அந்தச் சிவனுக்கே உபதேசித்த

பெருமாளே.

* திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.

** தக்ஷ யாகத்தை அழிக்க சிவனும் உமையும் வீரபத்திரராகவும் காளியாகவும் வந்தனர். காளி நாணும்படி சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியது இங்கு குறிப்பிடப்படுகிறது.

****

போட்டியில் அருணகிரி வெற்றி

சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை

ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா … கிரெளஞ்ச

மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே**,

திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள்

தெருவில் விளங்குச் சிராப் ப(ள்)ளி மலைமீதே தெரிய

இருந்த பராக்ரம … மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ

அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே

தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த vவீரனே,

உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி

தோற்றிய பெருமாளே. … அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று

உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே.

** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் ‘அதல சேடனார் ஆட’ என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.

—- subham—

Tags– முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 ,சிவபெருமானைத் தொழும், கழுகுகளின் பெயர்கள்

London Swaminathan’s Article Index for February 2026; Index No.159 (Post No.15,470)

Written by London Swaminathan

Post No. 15,470

Date uploaded in Sydney, Australia –  2 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil and English Articles

அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 7 (Post.15,382)1/2/2026

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11 (Post.15,396)

அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)

கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள்-13 (Post.15,401)

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)

திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்;  காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)

திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)

முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)

அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)

திருப்புகழில் புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்! எட்டு அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி!—Part 19 (Post.15,419)

பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)

சரஸ்வதியின் சகோதரன் முருகன்!  திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21(Post No.15,425)

திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)

முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)

அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)

முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)

திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை- Part 26(Post.15,438)

20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)

திருப்புகழில் ஐம்படைத் தாலி, பாற்கடலைக் கடைந்த காட்சி, ஏழுவகை நரகம்- Part 28 (Post.15,445) 22/2/26

திருப்புகழில் சிவாய நம மந்திர விளக்கம்;

சரப பட்சி கதை;அணு விஞ்ஞானம் – 29 (Post.15,448) 23/2/26

நான் ஒரு முட்டாளுங்க! அருணகிரிநாதரின் அவலக்குரல்- PART 30 (Post No.15,451)24/2/26

ஆறுமுறை ‘எட்டு இரண்டு’- அருணகிரியின் சொற்சிலம்பம்! 4 வகை ஜீவன் முக்தர்கள்- Part 31 (Post.15,454) 25/2/26

வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு! ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும்! தில்லை மூவாயிரர் புகழ் – Part 32, 26-2-2026

பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் ! ஞான சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 (Post.15,459) 27/2

திருப்புகழில் ஐந்து கலைகள், ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463) 28/2/26

கிரீன்லாந்து உருகுகிறது! உலகத்துக்கு ஆபத்து ! (Post No.15,408) 9/2/2026

சிட்னி நகரில் வள்ளுவர் சிலை, இளங்கோ சிலைகளுடன் தமிழ்க்கோவில்! (Post No.15,383) 1-2-2026

மார்ச் 2026 காலண்டர்- குமரேச சதகம் பொன்மொழிகள் (Post No.15,464)28/2/26

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-31; இந்துமத கலைச்சொல் அகராதி-31 (Post.15,391) 4/2/2026

Parts 32,33,34,35,36, 37, 38, 39

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40 (Post No.15,460) 27/2

Hinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 23/2/26 Post No. 15,405, 8 February 2026

***

English Articles

Purananuru Wonders 8- Ancient Tamil Encyclopaedia Part 48  (Post No.15,395) 5/2/26

Sanskrit Bhubuk (earth eater) and Sakunam  in Tamil Purananuru!-49 (Post no.15,402)

Purananuru Wonders 10; Ancient Tamil Encyclopaedia – Part 50  (Post No.15,411)

Purananuru Wonders 11; Ancient Tamil Encyclopaedia  Part- 51  (Post No.15,422)

Dharma Artha Kama Moksha in Sangam Literature and Tolkappiam- Part 52

Tamil Barter Trade, Puppets, Similes; Purananuru Wonders 13; Ancient Tamil Encyclopaedia – Part 53  (Post No.15,439) 20/2/26

London Swaminathan’s Article Index for January 2026; Index No.158 (Post No.15,389)

Two more Beautiful Temples in Sydney that I Visited (Post No.15,386) 2/2/26

Why did Christians burn Women alive in Europe?  (Post.15,399) 6/2/26

Valmiki Ramayana sloka in Sangam Literature; Purananuru Wonders 14- Part 54 (15,452) 24/2

March 2026 Calendar with Golden Sayings from Kumaresa Satakam (Post.15,465) 28/2/26

***

Lifted Items

HISTORY FLASH — NEW TAMIL INSCRIPTION DISCOVERED IN ENGYPT 13/2/26

–Subham—

Tags- London Swaminathan, Tamil, English Articles, Index for February 2026, Index No. 159