Hinduism through 500 Pictures in Tamil and English 40; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-40 (Post.15,505)

Nageswar Temple , Kumbakonam; London swaminathan picture

Written by London Swaminathan

Post No. 15,505

Date uploaded in London – 17 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முந்தைய பதிவு Previous PostHinduism through 500 Pictures in Tamil and English 39; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-39 (Post.15,405)

Post No. 15,405

Date uploaded in Sydney, Australia –  8 February 2026

சப்தமாதர்

சிந்து சமவெளியில் சப்த மாதர் முத்திரை

சப்த மாதாவுக்கு உயிர்ப் பலி தரும் சிந்து முத்திரை!

 எண்களில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவது ஏழு என்ற எண்ணாகும். சிந்து சமவெளி நாகரீகத்தில் எண் (7) ஏழும் எண் (3) மூன்றும் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு எழுத்துக்களும் இந்து மதத்தில் ஆன்மீக விஷயங்களில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து சமவெளியில் ஏழு பெண்கள் நிற்கும் ஒரு முத்திரை ‘’சப்தமாதா’’ முத்திரை என்று அழைக்கப்படும். தமிழ்நாட்டில் பல கோவில்களிலும் சப்தமாதா சிலைகளை வரிசையாக வைத்திருப்பர். அது போலவே இந்த முத்திரையில் ஏழு மாதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றனர்.இதே போல பாபிலோனியாவில் ஏழு அரக்கர்கள் வரிசையாக நிற்கின்றனர்.

சப்த மாதவைத் தவிரவுள்ள ஒரு முக்கிய தேவதைக்கு ஒருவன் மனிதனின் தலையைக் கொண்டுவந்து  வைத்து நரபலி கொடுக்கும் காட்சி சிந்து சமவெளி முத்திரைகளில் உள்ளது.

பிரம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய ஏழு தேவதைகள் அந்தகாசுரனை வதம் செய்ய சிவனால் உருவாக்கப்பட்ட சப்தமாதர்கள் ஆவர். சோழர் காலக் கோவில்கள், குறிப்பாக தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் காணப்படும் இவர்களின் நுணுக்கமான சிற்பக்கலை சக்தி வழிபாட்டின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

சப்த  மாதா வாகனங்கள்

சப்த மாதாக்களின் வாகனங்கள் பின்வருமாறு:

பிராம்மி (Brahmi): அன்னம்

மகேஸ்வரி (Maheshwari): ரிஷபம் (காளை)

கௌமாரி (Kaumari): மயில்

வைஷ்ணவி (Vaishnavi): கருடன்

வாராஹி (Varahi): சிம்மம் (சிங்கம்) அல்லது கருடன் (சில வழிபாடுகளில்)

இந்திராணி (Indrani): ஐராவதம் (வெள்ளை யானை)

சாமுண்டேஸ்வரி (Chamundeshwari): பிரேதம் (உடல்) அல்லது சிம்மம்

குறிப்பு: இந்த தேவியர் அம்பிகையின் சக்திகளாக போற்றப்படுகின்றனர்.

ஏழு கன்னிமார் கோவில்

ஏழு கன்னிமார் கோயில் (சப்த கன்னியர்) என்பது பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு தெய்வங்களை வழிபடும் வழிபாட்டுத் தலங்களாகும். இக்கோயில்கள் தமிழகம் முழுவதும், குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில், ஊரைக் காக்கும் காவல் தெய்வங்களாக பெரும்பாலும் ஆலமரத்தடி அல்லது ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. ஊரைக்காக்கும் காவல் தெய்வங்கள்; மாசி மகம் திருவிழா பிரபலம்.

வழிபாடு: ஏழு கன்னிமார்கள் சிவபெருமானை வழிபட்டதாக தஞ்சை பகுதியில் 7 இடங்கள் கூறப்படுகின்றன.

சிலை வடிவம்: இந்தச் சிலைகள் பொதுவாக 7 கன்னியர்களை வரிசையாகவோ அல்லது வட்ட வடிவிலோஇருப்பார்கள்.

பிரபல ஏழு கன்னிமார் கோயில்கள்:

தஞ்சை மண்டலம்: சக்கர மங்கை, அரியமங்கை, சூலமங்கை உள்ளிட்ட 7 சிவ ஆலயங்களில் கன்னிமார் வழிபாடு.

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே எழுவரை முக்கியில் உள்ள சப்த கன்னியர் கோயில்.

கரூரில்: திருமாநிலையூர் ஸ்ரீ திருமாலீஸ்வரர் கோவிலில் சப்தகன்னிமார்.

மேல்ஒலக்கூர்: பாறை மீது அமைந்துள்ள கன்னிமார் கோவில்.

இந்த ஆலயங்களில் பெரும்பாலும் சிவபெருமான் அல்லது மாரியம்மன் ஆலயங்களின் உட்பகுதியிலோ அல்லது அருகிலோ கன்னிமார் சன்னதிகள் இருக்கும்.

தை மாதம் மூன்றாம் நாள் கன்னிப் பொங்கல் அன்று ஏழு பெண்கள் அருள் கொண்டு கும்மியடித்து ஆடிப்பாடி ஊர்வலம் வருவர். மாசி மாதம் பௌர்ணமி அன்று கன்னிக் கோவில் அலங்காரம் செய்யப்படும். கன்னிப் பெண்கள் பொங்கலிட்டு வழிபடுவர்.

சப்தமாதர் பட்டியல்:

பிராம்மி (Brahmi): படைப்புத் தொழிலுக்குத் துணையாக, பிரம்மனின் அம்சமாகத் திகழ்கிறாள்.

மகேசுவரி (Maheshwari): சிவனின் அம்சமானவள்.

கௌமாரி (Kaumari): முருகனின் அம்சமாக, வீரத்தின் வடிவமாகத் திகழ்பவள்.

வைஷ்ணவி (Vaishnavi): விஷ்ணுவின் அம்சமானவள்.

வராகி (Varahi): வராக மூர்த்தியின் அம்சம்; எதிர்ப்புகளை முறியடிப்பவள்.

இந்திராணி (Indrani): இந்திரனின் அம்சமானவள்.

சாமுண்டி / நரசிம்ஹி (Chamundi/Narasimhi): தீயவற்றை அழிக்கும் சக்தியாக, சண்டி அல்லது நரசிம்மரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

சிலப்பதிகாரம் முதல் தமிழ் இலக்கியங்களிலும், பல்லவர், சோழர் காலக் கோயில்களின் கோஷ்டங்களிலும் சப்தமாதர் சிற்பங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

கிராம தேவதைகளாகவும், அதீத சக்தி வாய்ந்தவர்களாகவும், குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் இவர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கன்னியாக வழிபடும்போது சப்தகன்னியர் என்றும், பேரிளம் பெண்ணாக (தாய்) வழிபடும்போது சப்தமாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அம்பிகையின் அம்சமான இவர்கள், பக்தர்களின் சங்கடங்களைப் போக்கி, சகல நன்மைகளையும் அருளும் வல்லமை படைத்தவர்களாக நம்பப்படுகிறார்கள்.

சிவ பெருமான் கோவில்களிலோ அல்லது தனியாகவோ சப்தமாதர் சிலைகள் இருக்கும். இவர்களுடைய உருவங்கள் வாகனங்கள், நிறங்கள், கைகளின் எண்ணிக்கை, ஆயுதங்கள் கொடிகள் , புனித மரங்கள் ஆகியவற்றை சம்ஸ்க்ருதத்தில் உள்ள சில்ப சாஸ்திர நூல்கள் விரிவாகப்பேசுகின்றன

Human sacrifice in Indus Valley seal

Sapta Mata Seal

The Saptamata seal from the Indus valley is interpreted in various ways. Some people see Seven Matas (seven mothers) as in Hindu scriptures and others see Seven Demons as described in Babylonian clay tablets. A man is offering a head, probably human sacrifice, in the Indus seal.

Sapta Mata in Hindu temples are: Vaishnavi, Kaumari, Maheswari, Brahmani, Chamunda, Varahi, Aindri (Indrani).

We find Sapta Matas/ seven Goddesses in many Saivite temples

Description of saptamaatrikaas in silpasastra books

Picture by A Nrayanan

Brahmi

Has four faces and six arms and the swan/hamsa vahana. Her colour is yellow.

Maaheswari or Bhairavi

Rides on a bull, has five faces, three eyes and ten arms; decorated with the crescent.

Kaumari

She has six faces and twelve arms, rides on a peacock

Vaishnavi

She is of blue colour and rides on Garuda/eagle, has six arms and a garland of flowers called vanamaalaa.

Vaaraahi has the face of a sow, is black in colour, has a big protruding belly and rides on a a buffalo

Maahendri or indraani has a 1000 eyes, is of pleasing appearance and of golden hue, rides on an elephant.

She has six arms and displays symbols of Varada, noose, and thunderbolt in her right arms and the Abhaya, vessel and lotus in her left.

Chaamundaa is black and fearful with protruding teeth, long tongue, erect hair, emaciated body, sunken eyes and a withered belly. She can change her appearance at will. She rides on a corpse, wears a garland of skull and has jewels of serpents. in her ten arms she holds the shield, noose, bow, spear and staff on her left side and the pestle, disc, fly whisks, goad and the sword on the right.

The Mayamata adds she wears a tiger’s skin, red hair glowing like fire and the banner of a kite. She may have 4 , 8 or 10 hands.

These seven mothers are to be flanked by Virabhadra and Vinayaka on either side. In front of the saptamatrikas,  god Siva may be seated on a lotus flower under a banyan tree.

Seven mothers have sacred trees as well;

Kaumari – fig tree/udumbara

Vaishnavi- the pipal

Varahi- karanja

Indrani- kalpadruma

Chamunda – banyan

These goddesses are found in a separate temple or siva temples.

The Selliamman temple in Alambakkam possesses an important temple . the order in which the seven mothers’ images are cut on stone differs according to the circumstances. For the destruction of enemies and safety to villages Brahmi must be made to occupy the centre. If Chamunda is placed in the centre, the village will grow in population.

At the entrance to the shrines of Saptamata two guardian deities are found. Daily worship and periodical festivals are done like in big temples.

***

Seven Sisters in Australia- Pleiades- Kartika Nakshatras

Australia

Depending on the language group or clan, there are several Aboriginal stories regarding the origins of the Pleiades. Some Indigenous Australian peoples believed the Pleiades was a woman who had been nearly raped by Kidili, the man in the moon.

In a legend told by the Wurundjeri people of south-eastern Australia, the Pleiades were represented by the seven Karatgurk sisters. These women were the first to possess the secret of fire and each one carried live coals on the end of her digging stick. Although they refused to share these coals with anybody, they were ultimately tricked into giving up their secret by Crow, who subsequently brought fire to mankind. After this, the Karatgurk sisters were swept into the night sky. Their glowing fire sticks became the bright stars of the Pleiades cluster.

Another version, often painted by Gabriella Possum Nungurayyi as this is her dreaming (or creation story), daughter of the late Clifford Possum Tjapaltjarri from the Central desert art movement of Papunya, depicts the story of seven Napaltjarri sisters being chased by a man named Jilbi Tjakamarra. He tried to practice love magic to one of the sisters but the sister did not want to be with him, and ran away from him together with her sisters. They sat down at Uluru to search for honey ants but when they saw Jilbi, they went to Kurlunyalimpa and with the spirits of Uluru, transformed into stars. Jilbi transforms himself into what is commonly known as the Morning Star in Orion’s belt, thus continuing to chase the seven sisters across the sky.

–Subham—

Tags- Sapta mata, Sapta matrikas, Seven Mothers, Indus Valley, Village Goddesses, Saivite temples, Vahanas, description, Varahi, Brahmi, Chamunda, Australia, Seven Sisters

கண்ணகி எரித்த மதுரையும், அனுமன் எரித்த இலங்கையும்! முருங்கைக்காயும் முருகனும்- 47 (Post.15,504)

Written by London Swaminathan

Post No. 15,504

Date uploaded in London – 17 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 47

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 47

***

அகர உகர மகர — விளக்கம்

அகர உகரதி மகரதி சிகரதி … அகரம் போன்ற முதற்பொருளே, உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத்

தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே,

 (இதற்கு ஓம்காரப் பொருளே என்றும் அர்த்தம் சொல்லலாம்; பிராணவமாகிய ஓம்- அ உ ம என்ற எழுத்துக்களால் ஆனது)

யகர அருளதி தெருளதி … யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே,

வலவல அரண முரணுறும் … மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட

அசுரர்கள் கெடஅயில் விடுவோனே … அசுரர்கள் அழியும்படிவேலைச் செலுத்தியவனே,

அழகும் இலகிய புலமையு மகிமையும் … அழகும், விளங்கும் கல்விஞானமும், பெருமையும்,

வளமும் உறைதிரு மயிலையில் அநுதினம் … செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும்

அமரும் அரகர சிவசுத அடியவர் பெருமாளே. … வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே, அடியவர்கள்தம் பெருமாளே.

***

திருமால் முழவு வாசிக்கபிரமன் தாளம் போடசிவன் நடனம் ஆடினார்

அரி மத்தளம் மீது ஆர் தேம் முழ திடு என … திருமால் மத்தளம்

வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று வாசிக்க,

மிக்கு இயல் வேதாவே தொழு திரு நடம் இட்டவர் காதே

மூடிய குரு போதம் உரை செய்யும் உத்தம வீரா … மிகுந்த தகுதி

வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச் செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே,

நாரணி உமையவள் உத்தர பூர்வ ஆகார அணி உறு ஜக

ரக்ஷணி நீர ஆவாரணி தரு சேயே … நாராயணி, உமையவள்,

வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற குழந்தையே,

உயர் வரம் உற்றிய கோவே ஆரண மறை முடி வித்தக தேவே

காரண … உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத

உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே,

ஒரு மயிலைப் பதி வாழ்வே தேவர்கள் பெருமாளே. … ஒப்பற்ற

மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே.

**

இதைக் கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கோபால கிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகள்தான் :

நடனம் ஆடினார்…    

ராகம்: வசந்தா

தாளம்: அட

பல்லவி

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார்…

அநுபல்லவி

வடகயிலையில் முன்னால் மாமுனிக்கருள் செய்தபடி தவறாமல்

தில்லைப்பதியில் வந்து தை மாதத்தில் குரு பூசத்தில் பகல் நேரத்தில்                     நடனம் ஆடினார்…              

 சொல்கட்டு ச்வரம்

தாம் தகிட தகஜம் தகணம் தரிகும் தரிதீம் திமித தகஜம் தகிணம் தத னீ ச ரி ச ரி சா சா

ரி ச தா ச னி த த ரி ச சா த னி சா ச ச ச ரீ ச ரீ ரி ரீ ரி ரீ ச னி த ச ச ச ரி ச

ச ரி ச ச ச னி ச ரி ச ரி ச ச சா ச ரி ச னி தா தா த னி த த மா த ம க ரி ச

சரணம்

அஷ்டதிசையில் கிடுகிடென்று சேஷன்தலை நடுங்கஅண்டம் அதிர கங்கை துளி சிதற பொன்னாடவன் கொண்டாட நடனம் ஆடினார்…

இஷ்டமுடனே கோபாலக்ருஷ்ணன் பாட சடையாட அரவு படமாட அதிலே நடமாட தொம்தோமென்று பதவிகள்

                                                                                      தந்தோமென்று               நடனம் ஆடினார்!                                 

***

முருங்கைக்காயும்  முருகனும்

கோயம்பேடு முருகன் !

முருங்கைக்காய் /காய்கறி மார்கெட்டுக்குப் பெயர் போன கோயம்பேட்டில் முருகனும் உண்டு

 சீத மதி ஆடு அரவு ஏர் அறுகு மா இறகு சீத சலம் மா சடில

பரமேசர் சீர்மை பெறவே உதவு கூர்மை தரு வேல சிவ சீறி

வரு மா அசுரர் குலகாலா … குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு,

அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர்

(இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான்

உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே,

கோதை குறமாது குண தேவ மட மாதும் இரு பாலும் உற

வீறி வரு குமரேசா … நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம்

உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும்

பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே,

கோசை நகர் வாழ வரும் ஈச அடியர் நேச சருவேச முருகா

அமரர் பெருமாளே. … கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில்

வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே,

முருகனே, தேவர்களின் பெருமாளே.

கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.

***

கண்ணகி எரித்த மதுரையும் அனுமன் எரித்த இலங்கையும்!

இருவர் இட்ட தீயும் தீயோரை மட்டுமே பொசுக்கியது.

இலங்கையில் இலங்கிய இ(ல்)லங்களுள் இலங்கு அருள் இல்

எங்கணும் இலங்கு என முறை ஓதி … இலங்கையில் திகழ்ந்திருந்த

வீடுகளுள் முழுமையான அன்பு இல்லாத எல்லா இடத்திலும்,

அக்கினியே, பற்றி எரிவாயாக என்று நீதியை எடுத்துரைத்து,

இடும் கனல் குரங்கொடு நெடும் கடல் நடுங்கிட எழுந்தருள்

முகுந்தன் நன் மருகோனே … நெருப்பை வைத்த குரங்காகிய

அனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளுமாறு கோபத்துடன் எழுந்தருளிய ராமனாகிய திருமாலின் மருகனே,

பெலம் கொ(ண்)டு விலங்கலும் நலங்க அயில் கொண்டு எறி

ப்ரசண்டகர தண் தமிழ் வயலூரா … பலத்துடன், கிரெளஞ்ச

மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம்

கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே.

பெரும் பொழில் கரும்புகள் அரம்பைகள் நிரம்பிய பெருங்குடி

மருங்கு உறை பெருமாளே. … பெரிய சோலைகளும் கரும்பும்

வாழையும் நிறைந்த பெருங்குடிக்கு* அருகில் வீற்றிருக்கும் பெருமாளே.

* பெருங்குடி சென்னைக்கு அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி எரித்த மதுரை

பிராமணர்களையும் பெண்களையும் பொசுக்காதே என்று பிராமண வடிவில் வந்த அக்கினி பகவானுக்குக் கட்டளை பிறப்பித்தாள் கண்ணகி என்கிறார் பிராமண காவியம் இயற்றிய இளங்கோ அடிகள் !

பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்

மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டுத்

தீத்திறத்தார் பக்கமே சேர்க — வஞ்சின மாலை, சிலப்பதிகாரம்

—subham—

Tags- பிராமணர்,  பெண்கள்,  பொசுக்காதே பிராமண காவியம்  இளங்கோ அடிகள் , பகுதி 47, அனுமன் , இலங்கை, முருங்கைக்காய்,  முருகன் , கோபாலகிருஷ்ண பாரதியார் , ஆடினார் நடனம் ஆடினார்

யாசிப்பதை விட உழுதுண்டு வாழ்வதே சிறந்தது! புலவரின் முடிவு!! (Post No.15,503)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,503

Date uploaded in London – 17 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தனிப்பாடல் தமிழ் இன்பம்!

யாசிப்பதை விட உழுதுண்டு வாழ்வதே சிறந்தது! புலவரின் முடிவு!!

ச. நாகராஜன் 

ஒரு புலவர். மிகவும் வறுமையில் வாடினார். யாசித்துப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை.

சரி, சிவபிரானிடமே சென்று முறையிடுவோம் என்று நேராக கோவிலுக்குச் சென்று முறையிட்டார்.

நடந்தது என்ன? அவரே ஒரு பாடலாகப் பாடி சொல்லி விட்டார்! 

வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்

     வாசர்தொறு முட்டுண்ட தலையிற் புண்ணும்

செஞ்சொல்லை நினைந்துருகு நெஞ்சிற் புண்ணும்

     தீருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தே னப்பா

கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்

     கொடுங்காலா லுதைத்த புண்ணுங் கோப மாகப்

பஞ்சவரி லொருவன் வில்லா லடித்த புண்ணும்

     பாரென்றே காட்டி நின்றான் பரமன் றானே

இதன் பொருள்;

வஞ்சகர் பால் – வஞ்சகரிடத்தில்

நடந்து அலைந்த – நடந்து நடந்து அலைந்துஅதனால் உண்டான

காலில் புண்ணும் – என் காலில் உள்ள புண்ணையும்

வாசல் தோறும் – வீட்டு வாசல்படிகள் தோறும்

முட்டுண்ட – முட்டுண்டதனால் உண்டான

தலையில் புண்ணும் – தலையில் ஏற்பட்ட புண்ணையும்

செஞ்சொல்லை – கவி பாடுவதற்கு செம்மையாகிய சொற்களை

நினைந்து உருகும் – ஆலோசித்து உருகுதலால் உண்டான

நெஞ்சில் புண்ணும் – மனதில் ஏற்பட்ட புண்ணையும்

தீரும் என்று – நீக்கி அருளுவீர் என்று

சங்கரன் பால் – சிவபிரானிடத்து

சேர்ந்தேன் – சென்று சேர்ந்தேன். (வேண்டினேன்)

அங்கு சேர்ந்தவுடன்

பரமன் – சிவபெருமான் என்னை நோக்கி

அப்பா – அப்பா

கொஞ்சம் அல்ல – உன் போல சிறிது அல்ல

பிரம்படியின் புண்ணும் – பாண்டியனது பிரம்பினால் அடித்து உண்டாகிய புண்ணையும்

வேடன் – வேடனாகிய கண்ணப்பன்

கொடு காலால் – வலிமை மிகுந்த காலினால்

உதைத்த புண்ணும் – உதைத்தனால் ஏற்பட்ட புண்ணையும்

பஞ்சவரில் ஒருவன் – பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன்

கோபம் ஆக – தனக்கு ஏற்பட்ட கோபத்தினால்

வில்லால் அடித்த புண்ணும் – பாசுபத அஸ்திரம் பெற வந்த போது வில்லினால் அடித்ததனால் உண்டான புண்ணையும்

பார் என – இதோ பார் என்று

காட்டி நின்றான் – எனக்குக் காட்டி நின்றான்.

இதைப் பாடியவர் இராமசந்திர கவிராயர். அற்புதமான ஏராளமான பாடல்களை வித்தியாசமாகப் புனைந்து அனைவரையும் மகிழ்விப்பவர் இவர்.

அடுத்து இன்னொரு பாடல்:

இதைப் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள்.

அச்சுதனலிப்பினில் முமது நேயன் வித்தையருளுவன் பலபத்திர்ன்

    அலமுதவுவன் சமன் பகடீவனந்தமக் காளதோ ரெருதுமுண்டே

முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவே மொம்புடனிழுத்திருக்க

முந்தியவடகயிற் றுடன்மற்று நமன்தமர் முன்போ யிரந்து                                                          கொள்வோம்

இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தனி னிமையொடு மாடு   ̀̀̀ 

மேய்ப்பான்

      இனியுழுதுபயிரிடுதநன்றுநன்றிதை விட்டிரந்துண்ப தீனமெனவோ

கச்சுமுலை மாதுமையுரைத் திடும் புத்தியைக் கைக்கொண்  

                                                     டுளத்திலிதுநற்,

    காரியமெனக் கருதி மெத்தக் களித்திடுங் கண்ணுதலுமைக் காக்கவே

இந்தப் பாடலின் பொருள்;

அச்சுதன் – திருமால்

நிலம் அளிப்பன் – (நாம் வேண்டுகின்ற) பூமியைக் கொடுத்து அருள்வான்

உமது நேயன் – உமது தோழனாகிய குபேரன்

வித்தை அருளுவன் – வித்தையைக் கொடுப்பான்

பலபத்திரன் அலம் உதவுவான் – பலராமன் கலப்பையைக் கொடுத்து உதவி செய்வான்

சமன் பகடு ஈவன் – யமன் எருமைக் கடாவைக் கொடுப்பான்

நந்தமக்கு ஆனது ஓர் எருதும் உண்டே – நமக்கு ஆளாய் இருப்பதாகிய ஒரு எருதும் உண்டே

முச்சிர அயில் படையினை – முத்தலைச் சூலத்தைக்

கொழு ஆக்குவோம் – கொழு ஆக்கிக் கொள்வோம்

மொம்புடன் இழுத்து இறுக்க – வலிமையோடு இழுத்து இறுக்குதற்கு

முந்திய வடக் கயிற்றுடன் – முதன்மையாகிய வடக் கயிற்றோடு

மற்றும் – மற்று வேண்டுவன யாவும்

நமது தமர் முன் போய் இரந்து கொள்வோம்- நமது அன்பர்களிடத்தில் யாசித்துப் பெற்றுக் கொள்வோம்

இச்சை உடை – விருப்பத்தை உடைய

நமது இளைய தனயன் ஆகிய கந்தன் – நமது இளைய குமாரனாகிய முருகன்

இனிமையொடு மாடு  மேய்ப்பான் – இனிதாக மாடு மேய்ப்பான்

இனி உழுது பயிரிடுதல் நன்று – இனி உழுது பயிரிடுதலே சிறந்தது

இதை விட்டு – இதை விட்டுவிட்டு

இரந்துண்பது – யாசித்து உண்பது

ஈனம் என – இழிவானது என்று

கச்சுமுலைமாது உமை உரைத்திடும்  புத்தியை – கச்சணிந்த மார்பகங்களை உடைய உமாதேவி சொல்லும் புத்திமதியை

கைக்கொண்டு – ஏற்றுக் கொண்டு

உளத்தில் – மனதில்

இது நற்காரியம் எனக் கருதி – இது நல்ல காரியம் என்று எண்ணி

மெத்தக் களித்திடும் – மிகவும் மகிழ்கின்ற

கண்ணுதல் – நெற்றிக்கண்ணை உடைய பரமசிவன்

உமை காக்க – உம்மைக் காப்பாற்றுவானாக!

யாசித்து உண்பதை விட உழுது பயிரிட்டு வாழ்தலே நன்று என்று சிவபிரானே முடிவு செய்வதாக ஒரு கற்பனை! சிவப்பிரகாச சுவாமிகள் இதை அருளிச் செய்திருக்கிறார்.

சிவன் வழியைப் புலவர் பின்பற்ற நினைக்கிறார்!

**

ஆழ்வார்களின் மாற்றுப் பெயர்கள் என்ன ? (Post No.15,502)

 Written by London Swaminathan

Post No. 15,502

Date uploaded in London – 16 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆண்டாள் படம் , உப்பிலியப்பன் கோயில் 

திருமங்கை   ஆழ்வார்  படம் 

திருப்பாண்  ஆழ்வார்  படம் 

தொண்டரடிப்பொடி ஆழ்வார்  படம் 

பெரியாழ்வார் படம் 

நம்மாழ்வார் படம் 

உப்பிலியப்பன் கோவிலில் லண்டன் சுவாமிநாதன் மார்ச் ஆம் தேதி எடுத்த படங்கள். 

முதல் மூவர் – பேய், பூதம், பொய் = பேயாழ்வார் பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார் 

ஆண்டாள் – கோதை , நாச்சியார் திருப்பாவை முப்பதும் செப்பினாள், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, 

நம்மாழ்வார் – காரிமாறன், மாறன், சடகோபன், திருக்குருகூர் நம்பி, பராங்குசன்

பெரியாழ்வார்- பட்டர்பிரான், புதுவைக்கோன், கிழியறுத்தான் , வில்லிப்புத்தூர்கோன்

திருமங்கை ஆழ்வார் – பரகாலன்,  நீலநிறத்தர்

திருப்பாணாழ்வார் – பாணர் , திருப்பாணர்

தொண்டரடிப்பொடி ஆழ்வார் – விப்பிரநாராயணர்

குலசேகர ஆழ்வார் – பெருமாள், சேரமன்னன், கொல்லி காவலன்

மதுரகவி ஆழ்வார் – திருக்கோளூர்ப் பிரான்

திருமழிசை ஆழ்வார் – பக்திசாரர், குடமூக்கிற் பகவர்

பூதத்தாழ்வார்  படம் , உப்பிலியப்பன் கோயில் 

ஆண்டாள் படம் , உப்பிலியப்பன் கோயில் 

–SUBHAM—

TAGS- ஆழ்வார்கள்,  வேறு  பெயர்கள் , பன்னிரு ஆழ்வார் படங்கள், உப்பிலியப்பன் கோயில்,லண்டன் சுவாமிநாதன்

ஆறு பெரியோர்கள் புகழ்ந்த கரு நெல்லிக் காயின் மஹிமை- பகுதி-46 (Post.15,501)

Written by London Swaminathan

Post No. 15,501

Date uploaded in London – 16 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அவ்வையார், அதியமான், அருணகிரிநாதர், ஆல்பிருனி, பாரதியார், சுவாமி சிவானந்தா – ஆகிய ஆறு பெரியோர்களும் நெல்லிக்கனியின் பெருமையை விதந்தோதியுள்ளார்கள்.

46திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 46

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 46

***

மேரு மலை வில் = பார்வதி கை

அணிசெவ்வியார் திரை சூழ்புவி … அழகு நிறைந்த மாதர் (பெண்),

கடல் சூழ்ந்த பூமி (மண்),

தன நிவ்வியே கரை யேறிட … செல்வம் (பொன்) என்ற

மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான

அறிவில்லியாம் அடியேன் இடரதுதீர … அறிவற்றவனாகிய

அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய

அருள்வல்லையோ … திருவருளை வலிய அருள்வாயோ?

நெடு நாளினம் இருளில்லிலேயிடுமோ … அல்லது நீண்ட

காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான

பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ?

உனதருளில்லையோ … உனது திருவருள் என்மீது சிறிதும்

இல்லையோ?

இனமானவை யறியேனே … உன்அடியார் கூட்டத்தை நான்

அறியவில்லையே.

குணவில்லதா மக மேரினை … சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய*

அணிசெல்வியாய் அருணாசல குரு … அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே,


சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.

***

கரு நெல்லிக்காய் மஹிமை= விஷ்ணு

கருநெல்லி மேனி அரி மருகோனே … கருநெல்லிக்காய் போல

பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே,

கனவள்ளியார்கணவ முருகேசா … பெருமை வாய்ந்த வள்ளி

தேவியின் கணவனே, முருகேசா,

திருவல்லிதாயம் அதில் உறைவோனே … திருவலிதாயம்* என்ற

தலத்தில் வீற்றிருப்பவனே,

திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. … விளங்குகின்ற

பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.

திருவலிதாயம் இப்போது ‘பாடி’ எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.

யாரும் கிருஷ்ணனையோ விஷ்ணுவையோ கரு நெல்லிக் காய்க்கு ஒப்பிட்டத்தில்லை . வேறு என்னென்னவோ சொல்லி கருப்பு என்று பகர்ந்தார்கள்; காக்கை போல கருப்பு என்று கூடப் புகழந்துள்ளார்கள் ;கரு நெல்லிக்காய் என்பது அபூர்வ நெல்லிக்காய் அல்லது காய்ந்து உலர்ந்த நெல்லிக்காய் வற்றல் என்று சொல்லலாம். நெல்லிக்காய்க்குப் பொதுவாகவே அவ்வளவு மதிப்பு ! ஸ்யவனப் பிரகாஷ் என்ற நெல்லிக்காய் லேகியம் செய்து அதன் புகழைப் பரப்பினார் ரிஷிகேஷில் தெய்வ நெறிக் கழகம் ஸ்தாபித்த சுவாமி சிவானந்தா – பத்தமடையில் பிறந்து மலேஷியாவில் டாக்டர் தொழில் செய்தவர் !

அவ்வையாரும் ஆல்பெரூனியும் கரு நெல்லிக்காயின் மஹிமையை நமக்கு முன்னரே செப்பியுள்ளனர்; பாரதியாரையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்!

அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.

நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.

வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும்  சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.

இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.

ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.

நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட

சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)

பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.

இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி

ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.

நெல்லிக்காய் நிற விஷ்ணு

அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!!

நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும்  சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.

பாரதியாரும் நெல்லிக்காயும்

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில்  மொத்தமுள்ள 110 பொன்மொழிகளில் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். இங்கு அவர் நமக்கு ஒரு புதிர் போடுகிறார்.

ரேகையில் கனி கொள் (94ஆவது அறிவுரை )

நெல்லிக்காயில் ரேகைகள் இருப்பதை நாம் அறிவோம்.. பாரதியார் நெல்லிக்காயை சொல்கிறாரா அல்லது வேறு ஏதாவது சொல்கிறாரா என்பது விளங்கவில்லை ; ஆகையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி ,என் ராமச்சந்திரன் கூட இரு பொருள் தருகிறார்.

ரேகையில் கனி கொள் 94

CONSUME STREAKED BERRY/AMLA/NELLIKKAAY/GOOSEBERRY

OR

SEEK OUT VEINS OF LOVE

அன்பினை நாடு/ தேடு என்பது இரண்டாவது பொருள்.

பாரதியார் இறந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; அவர் உயிரோடு இருந்தால் ஐயா, கொஞ்சம் விளக்குங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.

—SUBHAM—

TAGS- திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 46, கரு நெல்லிக்காய் மஹிமை, ஆல்பிரூனி, அருணகிரிநாதர், பாரதியார், அதியமான் அஞ்சி, அவ்வையார், திரிபலா சூர்ணம், ஆறு பெரியோர்கள் ,பகுதி-46, மேரு மலை, பார்வதி கை

ஒரு புதிர் ஸ்லோகம்! (Post No.15,500)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,500

Date uploaded in London – 16 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒரு புதிர் ஸ்லோகம்!

ச. நாகராஜன் 

தமிழிலும் வடமொழியிலும் ஏராளமான புதிர் ஸ்லோகங்கள் உள்ளன.

அவற்றைப் படிப்பதே மகிழ்ச்சியைத் தரும். 

ஒரு வார்த்தையில் பல கேள்விகளுக்குப் பதில்!

ஒரு புதிர் ஸ்லோகம் இதோ: 

கோ நிர்தக்த்யஸ்த்ரீபுகா கஸ்ச கர்ணஸ்ய ஹந்தா

   நத்யா கூலம் விகடயதி க: க: பரஸ்த்ரீரதஸ்ச |

க: சம்நத்தோ பவதி சமரே பூஷணம் கிம் குசானாம்

   கிம் துக்க சங்காத் பவதி மஹதாம் மானபூஜாபஹார: ||

இது ஒரு அற்புதமான ஸ்லோகம். இது ஒரு விடுகதைக் கவிதை!

பல கேள்விகள். ஆனால் இறுதியில் ஒரே வார்த்தையில் பதில்!

யார் சிவபிரானால் எரிக்கப்பட்டவர்?  பதில்: மாரா – மன்மதன்

யார் கர்ணனைக் கொன்றது? பதில்: நரா – அர்ஜுனன்

யார் நதிக்கரையை உடைத்தது? பதில் பரா – வெள்ளப்போக்கு

யார் அடுத்தவர் மனைவியின் மீது அன்புடன் இணைவது? – பதில் ஜாரா – கள்ளக் காதலன்

யார் போரில் சண்டையிடத் தயாராக இருப்பது? – பதில் பரா – எதிரி

மார்பகங்களில் அணியும் ஆபரணம் எது? – பதில் ஹாரா – முத்து நெக்லஸ்

(பெரியோர்களுக்கு) கெட்டவர் இணக்கத்தால் ஏற்படுவது என்ன? பதில் – மானபூஜாபஹார: – மரியாதையும் கௌரவமும் கெடுவது தான்! 

கடைசி விடை என்ன? மானபூஜாபஹார:

இதில் எல்லா கேள்விகளுக்குமான விடை உள்ளது. எப்படி?

இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் கடைசி எழுத்துடன் சேர்த்துப் பார்ப்போம்.

மாரா- மன்மதன்

நரா – அர்ஜுனன்

புரா – வெள்ளம்

ஜாரா – கள்ளக் காதலன்

பரா – எதிரி

ஹாரம் – முத்துமாலை

மந்தக்ராந்தா சந்தத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.

இது பல சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பில் காணப்படுகிறது.

இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.

*

யார் குருடன்யார் செவிடன்யார் ஊமை?

கேள்வி- பதில் ஸ்லோகங்கள் இன்னொரு விதம்!

கோ அந்தோ யோகார்யரத:

   கோ பகிரோ ய: ஸ்ருணோதி ந ஹிதானி |

கோ மூகோ ய: காலே

   ப்ரியாணி வக்தும் ந ஜானாதி ||

யார் குருடன்?  எவன் ஒருவன் செய்யக் கூடாத காரியத்தைச் விரும்பிச் செய்கிறானோ அவன் தான் குருடன்!

யார் செவிடன்?  எவன் ஒருவன் நல்லதைக் கொடுக்கும் சொற்களைக் கேட்காமல் இருக்கிறானோ அவனே செவிடன்.

யார் ஊமை? சரியான சமயத்தில் இனிமையான சொற்களை எவன் ஒருவனுக்குப் பேசத் தெரியவில்லையோ அவனே ஊமை!

அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டியவை! 

கோ தேஷ: கானி மித்ராணி க: கால: கோ வ்யயாகமௌ |

கஸ்சாஹம் கா ச மே சக்திர் இதி சிந்த்வம் முஹுர்முஹுர்: ||

எது தேசம்? யார் நண்பர்கள்? நேரம் என்ன? எவ்வளவு வரவு வந்திருக்கிறது, எவ்வளவு செலவாகியுள்ளது? நான் யார்? எனது அதிகாரம் என்ன? இவையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்கப்படவேண்டியவையாகும்.

**

அந்தகாசுரன் கதை; ஆண் பனை மரங்கள் காய்த்த கதை – Part 45 (Post.15,499)

Written by London Swaminathan

Post No. 15,499

Date uploaded in London – 15 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 45

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 45

நடராஜர் ஆடிய பஞ்ச சபை

முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே … முதன்மையான

நடனம்** ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே,

முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி …

நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர

யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து

முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய் … முன்பு,

வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே,

இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி … இடியைப்

போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக்

கையில் எடுத்து,

எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி … எதிர்த்து வந்த சூரன்

சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று

இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று

ஆக்கி … விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி,

அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி,

இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே. … தேவர்களுடைய

துன்பத்தை நீக்கிய பெருமாளே.

திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று – ரத்னசபை.

** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.

நடராஜர் தன் பிரபஞ்ச நடனமான தாண்டவத்தை ஆடிய ஐந்து முக்கியத் திருத்தலங்கள் பஞ்ச சபைகள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. சிதம்பரம் கனக சபை  (பொன்னம்பலம் ), மதுரை ரஜத சபை (வெள்ளி அம்பலம் ), திருவாலங்காடு (ரத்தின சபை), திருநெல்வேலி (தாமிர சபை), மற்றும் குற்றாலம் (சித்திர சபை) ஆகியவை அந்த ஐம்பெரும் சபைகளாகும்.

***

ஆண் பனை மரங்கள் காய்த்த கதை

பவமாய்த்து ஆணது வாகும் பனைகாய்த்தே … பிறப்பை ஒழித்து,

ஆணாக இருந்த பனைமரம் காய்த்து

மண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும்படி … நறுமணம் வீசும்

பழங்களாக பூமியின் மீது விழும்படியாக,*1

வேதம் படியாப் பாதகர் … வேதத்தைப் படிக்காத பாதகர்கள் *2

பாயன்றி யுடாப் பேதைகள் … பாயைத் தவிர வேறு எந்த ஆடையும்

உடுக்காத பேதைகள் *3

கேசம் பறி கோப் பாளிகள் … தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும்

கூத்தாடிச் சமர்த்தர்கள் *4 ஆகிய சமணர்

யாருங் கழுவேற … எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக,

சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக்கால் … சிவமயமானதும்,

தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது

(திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும்,

ஒளி சேர்வெண் டிருநீற் றால் … பெருமை வாய்ந்த வெள்ளைத்

திருநீற்றாலும்,

அமராடுஞ் சிறியோனே … வாதுப் போர் புரிந்த இளையோனே,

செழுநீர்ச் சேய்நதி … செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு

ஆரங் கொழியாக் கோமளம் வீசும் … முத்துக்களைக் கரையிலே

கொட்டும் அழகு நிறைந்த

திருவோத்தூர்தனில் மேவும் பெருமாளே. … திருவோத்தூர்*5

என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

திருவோத்தூரில் பனைமரங்கள் ஆண்பனையாக இருந்தமை கண்டு சமணர்கள் பரிகசிக்க, அவ்வூரில் சிவனைத் தரிசித்த ஞானசம்பந்தர் (குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என்ற) தேவாரத்தைப் பாட, ஆண்பனைகள் யாவும் குலைதள்ளி பனம் பழங்களைக் கொட்டின. பனைகளின் பிறப்பும் ஒழிந்தன.

(1)   (2) (3) இவையாவும் சமண குருமாரைக் குறிப்பன:

***

அந்தகாசுரன் அழிந்த கதை

பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா

திருமாலின் மருகோனே … பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை

வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை*

வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின்

மருகனே,

வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு

அங்கே இரு பாலும் உற வீறு … வேல் போலவும் அம்பு போலவும்

(உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள்

வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு

புறமும் பொருந்த விளங்க

வேத அந்தா அபிராம நாத அந்தா … வேதத்தின் முடிவில்

இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே,

அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே. …

திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே,பெருமாளே.

அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி.இவன் தேவர்களை வ ருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார்.அவர் சூலத்தினால் அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.

** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.

–Subham—

Tags – ஆண் பனை மரங்கள் காய்த்த கதை , அந்தகாசுரன் அழிந்த கதை , பஞ்ச சபை, Part 45

புகையிலைப் பாட்டு! (Post No.15,498)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,498

Date uploaded in London – 15 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx 

புகையிலைப் பாட்டு!

ச. நாகராஜன் 

1201 பாடல்கள் அடங்கிய தனிப்பாடற்றிரட்டு என்ற நூல் மக்கிப் பொடிப்பொடியாகப் போகும் நிலையில் என்னிடம் உள்ளது.

அட்டையும் இல்லை. முதல் பக்கங்கள் சிலவும் இல்லை. 

அதில் பல அழகிய பாடல்கள் உள்ளன.

பொது – பல வித்துவான்கள் பாடல் என்ற தலைப்பில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. 

அதில் உள்ள இந்த புகையிலைப் பாடலைக் கீழே தருகிறேன். 

புகையிலைப் பாட்டு 

நாலெழுத் துப்பூ டுநடுவேநரம் பிருக்கும்

காலுந்தலையுங்கடைச்சாதி – மேலாக

ஒட்டிமுதலெழுத்துமோ துமூன்றாம்மெழுத்தும்

விட்டாபரமனுக்கு வீடு 

புகையிலை – புலை- கைலை 

நாலெழுத்து கொண்ட சொல்.

காலும் தலையும் கடை சாதி – புலை(யர்)

முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் ஆக இவை இரண்டும் விட்டு விட்டால் வருவது கைலை. அது பரமனுக்கு வீடு.

சிவபிரான் உறையும் கைலாய மலை.

புகையிலைக்குள் இவ்வளவு அடங்கி இருக்கிறது என்கிறார் புலவர்.

இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.

இன்னொரு பாடல்:

காதலன் காதலிக்கு அடையாளச் செய்தி சொல்வது!

ஓதுமைந்திலொன்றிலைந்திலொன்று மன்னவன் பிதா

   ஊர்திதொட்டவேருன் மீதிலுற்ற சாபநிருபனார்

தாதுகொண்டகாளி மாலை சூடி தப்பி தம்பி சேய்

     தன் குடைப்பினைவன்மற்றலைசுகிரீடதுவாசனார்

காதனன்பன்றந்தைபாகன் பின்வன்பகைச்சுமைக்

      கலையெடுத்தகையரையர்கதிபெறத் தவஞ் செய்தோன்

தீதிறாதைகொண்டுவந்தசிலைவதிந்துபதியினான்

      சிரமரிந்தவன்கொள்பாரிசேரிலாலுறைந்ததே

பாடலைப் படித்தால் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் பிரித்துச் சிந்தித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்.

ஓதும் ஐந்தில் ஒன்று

ஓதும் – ஐந்து பஞ்ச பூதம்

ஐந்தில் ஒன்று – நிலம் (நிலம்,நீர், வான், காற்று, தீ ஆகிய பஞ்சபூதங்களுள் ஒன்று நிலம்)

ஐந்தில் ஒன்றில் ஐந்தில் ஒன்று

நிலத்தில் ஐந்து திணைகள் உண்டு.

அந்த ஐந்தில் ஒன்று குறிஞ்சி

அதற்கு மன்னவன் யார்? முருகன்! குறிஞ்சித் தெய்வம் முருகன் அல்லவா?

அவன் பிதா – யார்? சிவபிரான்!

அவன் ஊர்தி – சிவனின் வாகனம் எது? ரிஷபம்!

அதற்கு ஏழில் உள்ளது யார்?

ரிஷப ராசிக்கும் ஏழாம் ராசி விருச்சிகம்.

அதன் மீதில் உற்ற சாபம் தனுசு.

அதைக் கொண்ட நிருபன் (அரசன்) யார்? வில்லைக் கொண்டவன் இராமன்.

அவன் தம்பி பனை மாலை சூடிய  பலராமன்.

அவன் தம்பி கிருஷ்ணன்.

அவன் சேய்  மன்மதன்

அவன் குடை திங்கள்.

அதற்குப் பின் ஐவன் – சனி (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி)

அவன் கிரீடம் கொடியாய் உடையோன்  – துரியோதனன்

அவன் நண்பன் – கர்ணன்

அவன் தந்தை – கர்ணனின் தந்தை சூரியன்

அவன் பாகன் – அருணன்

அவன் பின்னானவன் – கருடன்

அவன் பகை – கருடனுக்குப் பகை யார்? ஆதிசேஷன்

அவன் சுமை பூமி – ஆதிசேஷன் சுமக்கும் பூமியில் உள்ளது கடல்

கலை எடுத்தல் – அந்தக் கடலை எடுத்தவர் யார்? அகத்தியர்

அவரையர் – அவரையர் யார்? பிரமதேவன்

அவர் கதிப் பெறத் தவம் செய்தோன் – தவம் செய்தவன் அனுமன்

அவன் தாதை – அவன் தந்தை வாயு பகவான்

அவன் கொண்டு வந்த சிலை வதிந்த பதியினான் – அவன் கொண்டு வந்த மேரு சிகரங்களைப் பதியாக – இருப்பிடமாகக் – கொண்டவன் இராவணன்

அவன் சிரம் அரிந்தவன் – அந்த இராவணனின் தலையை அறுத்தவன் யார்?

திருமால்!

அவன் கொள பாரி – திருமாலின் மனைவி இலட்சுமி

அவள் சேர்யில் – தாமரைப் பூ’(தாமரைப் பூவில் உறைந்திருப்பவள் லட்சுமி)

ஆல் உறைந்ததே – ஆலமரத்தின் கீழ் இருந்தது!

இந்தப் பாடல் பொருளைச் சம்பாதிப்பதற்காகக் காதலியை விட்டுப் பிரிந்த தலைவன் ஒருவன் ஆலமரத்தின் கீழ் வைத்த அலர்க்குறி – அடையாளக் குறி தாமரை! அதை அவனது காதலியின் தோழி பார்த்து தலைவிக்கு விஷயத்தை உணர்த்தினாள்.

போதும்டா சாமீ என்கிறீர்களா?

எழுதிய புலவர் யார் என்று தெரியவில்லை!

இது போல ஆயிரக் கணக்கில் உள்ள பாடல்கள் இனி அர்த்தத்துடன் கிடைக்குமா?

**

My Visit to Famous Darasuram Temple with 40,000 Sculptures (Post No.15,497)

Written by London Swaminathan

Post No. 15,497

Date uploaded in Kumbakonam, India –  14 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

The temple of Airavatesvara in Darasuram (Tamil Nadu), dating from the second half of the twelfth century, is one of the four biggest temples erected by the Choza Dynasty.

I have already visited Thanjavur Big Temple and Gangaikonda Chozapuram many times. On Tenth March 2026, I visited the Darasuram temple for the first time. I took an auto from Kumbhakonam and reached the temple within half hour. I spent an hour taking pictures. The entry is free. But compared with other two temples it is less shiny. Many of the sculptures are worn out. 800 years ago, it was the capital of Choza empire with the name Rajarajeswaram. Later it became popular with the name Airavateswar Temple.

Airavatam is the white elephant and the vehicle/ Vahana of Indra. Once it came under the curse of Durvasa Muni and lost its lustre. It came and worshiped Lord Shiva here and got out of the curse. Now we can have good darshan of Lord Airavateswara in Siva Linga form and Goddess Deivanayaki. The temple com[plex maintained by the archaeological department is huge and has 40,000 sculptures. All the Vedic Gods and later gods are sculpted and occupy the niches. Beautiful decorative stone windows are in between the Gods.

Here are salient features:

The temple is constructed like a stone chariot pulled by the horses.

The entire temple complex is filled with rich carvings and inscriptions that narrate stories from ancient Indian Puranas. It  has musical steps. These 7 singing steps that lead to the altar are intricately carved and represent seven musical notes.

The reliefs all along the base of the main temple narrate the stories of the sixty three Shaiva Bhakti saints called Nayanars. These stories are found in the Periya Purana by Sekkilar.

On the outer walls of the main sanctum are sculpture niches; They show various Hindu deities, with the middle one of each side showing Shiva in different aspects.

There are variousNorthern face: Adi Chandesvara, Gangadevi, Tumburu Nardar, Vaisravana, Chandra, Maha Sata, Nagaraja, Vayu

West: Devi, Rudrani, Vaishnavi, Brahmi, Varunani, Nandidevar, Periyadevar, Santyatita Sakti, Santa devi, Vidya Sakti, Pratishta Sakti, Nivarti Sakti

Southern face: Daksha Prajapati, Yamuna devi, Rati, Kamadeva

East: Agni deva, Agastya, Sri devi, Durga devi, Devendran, Padma Nidhi, Surya, Subrahmanya, Kshetrapala, Sarasvati, Visvakarma, Isana inscriptions in the temple.

Airavatesvara Temple was added to UNESCO’s World Heritage Site list of Great Living Chola Temples in the year 2004. The American astronomer Carl Sagan visited the Airavatesvara Temple for his 1980 television documentary series, Cosmos: A Personal Voyage.

Please see the pictures taken by me to appreciate the efforts of great and dedicated sculptors.pictures speak more than words

–Subham—

Tags- Darasuram, Airavateswarar temple, My visit, Choza monument, 40000 sculptures.

தாராசுரத்துக்கு எனது பயணம் (Post No.15,496)

Written by London Swaminathan

Post No. 15,496

Date uploaded in Kumbakonam, India –  14 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Pictures are taken by London swaminathan

தஞ்சைப் பெரியகோவிலுக்கும் கஙகை கொண்ட சோழபுரத்துக்கும் பல முறை சென்று வந்த நான், இதுவரை தாராசுரத்துக்குச் செல்லாமல் இருந்தேன் இந்த முறை இந்திய விஜயத்தின்போது 2026 மார்ச் பத்தாம் தேதி காலையில் சென்றேன் ; தொல்பொருட்த் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த யுனெசுகோ அங்கீகார பாரம்பர்ய சின்னத்துக்கு  அனுமதிக் கட்டணம் எதுவும் இல்லை.

தாராசுரம் எங்கே இருக்கிறது  ?

தாராசுரம் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து மேற்கே சுமார் 4 கி.மீ இருக்கிறது. இது யுனெஸ்கோ உலக மரபுச் சின்னம்;  வரலாற்றுச் சிறப்புமிக்க ஐராவதேசுவரர் கோயிலை  இரண்டாம் ராஜராஜ சோழன்ய்ங்கே கட்டியதால்  புகழ்பெற்றது. அவன் 12-ஆம் நூற்றாண்டில்  ஆண்ட சோழ மன்னன்.

நான் கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் சென்றுவந்தேன் .

தஞ்சசை, கங்கை  கொண்ட சோழபுரம் ஆகிய இரண்டுக்கும் அடுத்த படியாகத்தான் இதை வைக்கவேண்டும் ; அதற்க்கு காரணம் காலம் செய்த கோளாறுதான்! சிலைகள்  மிகவும் பொலிவில்லாமல் இருக்கின்றன சிற்பிகள் தனது செயலைச் செவ்வனே செய்தும் பராமரிப்பு இல்லாததால் அழகு குன்றிவிட்டன.

ஐராவதேஸ்வர் கோவிலில் கொஞசம் டுரிஸ்ட் கூட்டம் சேர்ந்தது. சந்நிதியில் சிவலிங்க  தரிசனம் தீபாராதனையையுடன் கிடைத்தது  .ஐராவதம் என்பது இந்திரனின் யானையின் பெயர் அது  வழிபட்ட இடம் எனலாம்; துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர்  என்றும் தல புராணம் கூறுகிறது.

இங்குள்ள சிறப்புகள்

தேர் போன்ற அமைப்பில் உள்ள கோயில்

கட்டிடம் முழுதும் கெல்மட்டப் பகுதியில் நூறுக்கு கணக்கான குட்டிக் குட்டி சிலைகள்

கமகிகை கொண்ட சோழபுரம் போலவே கோபுரம்

ஒருகாலத்தில் இது சோழனின் தலை நகரம்  அவனுடைய கல்வெட்டுகளும் உள்ளன .கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர்.நிறைய மண்டபங்கள்;

இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை.

மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கருங்கல்  சாளரங்கள் .

முக்கிய சந்நிதியின் வெளிப்புறச்ச சுவர்களில் தெய்வங்களின் உருவங்கள்.

பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள்  சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி .

கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு.

பல கோவில்களில் காணப்படும் யானை மாடு இணைந்த உருவம். இதைக் கைகளைக்கொண்டு ஒருபுறம் மறைத்தால் யானையாகவோ மாடாகவோ தெரியும்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

இசை எழுப்பும் படிக்கட்டு :பலிபீடத்திற்கு இட்டுச்செல்லும் இந்த 7 பாடும் படிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏழு இசைக் குறிப்புகளைக் குறிக்கின்றன.

மூலவர் பெயர்: ஐராவதேஸ்வரர்

தாயார் / அம்மன் பெயர்:வேதநாயகி

தலமரம்:வில்வமரம்

முதலில் இருந்த பெயர் – இராஜராஜேச்சுரம்

இன்றைய பெயர்- தாராசுரம்

இக்கோயில் விமானம் 85 அடி உயரம் கொண்டது.  இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  விதவிதமான அளவில் விசித்திரமான சிற்பங்கள் நிறைந்த சிற்பச் சரணாலயமாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். மூவருலாவில் இக்கோயிலைக் கட்டிய இரண்டாம் இராஜராஜன் சிறப்பிக்கப்படுகிறான். ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த இலக்கியமாகும். தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வேதகால அக்கினி, இந்திரன் முதலிய தெய்வங்களும் தற்காலத்தில் வழி படப்படும் துர்க்கை முதலிய தெய்வங்களும் மாடம்  தோறும் செதுக்கப்பட்டுள்ளன . கட்டணமின்றி பார்க்கக்கூடிய இந்தச் சிற்பக் கலைக்கூடத்துக்கு அனைவரும் சென்று மகிழ வேண்டும். 

–Subham_

Tags-தாராசுரம், எனது பயணம், தேர் போன்ற கோயில், ஐராவதேஸ்வரர், 40,000 சிற்பங்கள்