“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843)

Written by London Swaminathan

Post No. 15,843

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் கொடுத்த தலைப்பு பொய்யான தலைப்பு.

ஏனெனில் சங்க இலக்கியத்திலோ  பிறகால தமிழ் இலக்கியத்திலோ பாரதி பாடல்களிலோ தேவாரம் திருவாசகத்திலோ திராவிட என்ற  சொல் கிடையாது . ஆயினும் சங்க இலக்கியம் முதல் பாரதி பாடல் வரை ஆரிய ARYA என்ற சொல் உண்டு. தேவார,  திருவாசககங்களில் ஆரியன் என்றால் சிவ பெருமான்!  சங்க இலக்கியத்திலும் ஆரிய என்றல் வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் அல்லது பண்பாடுமிக்க மனிதர்கள்; ஆங்கிலத்தில் CULTURED, EDUCATED என்று சொல்வதற்கு சமம் ; இதனால் அந்த திசையிலிருந்து வந்த கூத்தாடிக்கும், பயில்வான்களுக்கும் ஆரிய மல்லன், ஆரிய கூத்தாடி என்று சொல்லத் துவங்கினர்; ஆனால்  திராவிட என்ற சொல்லை எங்குமே தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காண முடியாது; இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை ; இப்படிச் சொன்னால் தென்னாட்டில் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று கனக்குப் போட்டனர்; அது ஓரளவுக்குப் பலித்தது. மீனவர்களையும் பனை ஏறிகளையும் மலையாள ஈழவாக்களையும் மாற்றினார்கள்

பிற்காலத்தில் தென் பகுதியையும் அங்கு பேசப்பட்ட மொழிகளையும் குமாரில பட்டர் (EIGTH CENTURY CE ) போன்றோர் திராவிட பாஷை என்று அழைத்தனர்; அதற்கு முன்னர் சமணர்கள் ஸ்தாபித்த சங்கத்தை திராவிட சங்கம் (FIFTH EIGTH CENTURY CE) என்றனர் ; இரண்டும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்; அதற்கும் முன்னதாக ஒரிஸ்ஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் த்ரமிள என்ற சொல்லை பயன்படுத்தினான்; சிலர் தமிழ் – த்ரமிள- திராவிட என்று விளக்கினர் இன்னும் சிலர் இல்லை திராவிட- த்ரமிள- என்பது தமிழ் ஆயிற்று என்று REVERSE GEAR  ரிவர்ஸ் கியரில் பயணம் செய்தனர் . 56 தேச வரைபடங்களிலும் விளக்கங்களிலும் திராவிடம் என்பதைத் தமிழ் நாட்டுக்கு மேலே ஆந்திரப் பகுதியைக் காட்டியுள்ளார்கள்;  ஆக இது தமிழ் நாடோ சேர, சோழ, பாண்டிய நாடோ இல்லை!

****

கணவன்மாரும் மனைவியரும்

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்!

ரிக்வேத ரிஷி தீர்க்கதமஸ் – தாசர் குலப் பெண் மமதா ;

கவச ஐலுசர் – தாசர் குலப் பெண்;

உபநிஷத பெண்மணி ஜாபாலா- பணிப்பெண் ; மகன் சத்யகாம ஜாபாலன்  ;

பிராமண ராவணன் – அசுரர் மகள் மண்டோதரி ;

பீமன் – அரக்கி ஹிடிம்பா; பீமன் மற்றும் அரக்கி இடும்பி ஆகியோரின் மகன் கடோத்கஜன்.

அர்ஜுனன் – நாக கன்னிகை உலூபி , மணலூர் சித்ராங்கதா ; அல்லி ராணி ; அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தவன் அரவான்.

முருகபப்பெருமான் – வேடுவச்சி வள்ளி ;

யயாதி – பிராமண தேவயானி

உதயணன் – நடன மாது வாசவத்தா

சந்தனு – மீனவப் பெண் மத்ஸ்யகந்தி; அவள் மகள் வேத வியாசர்

கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் – அசுரர் இளவரசி பிரபாவதி

ராமனின் மகன் குசன் – நாக இளவரசி- குமுதவதி; அவர்கள் மகன் அதிதி

ராமன் மகன் லவன் – நாக இளவரசி கஞ்சசனா

நரகாசுரன் -மனைவி மாயா ; விதர்ப்ப நாட்டு இளவரசி; மகன் பகதத்தன்

முறைப்பெண்ணை மணப்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஒரிஸ்ஸா, குஜராத், மகாராஷ்டிரத்தில் உண்டு ; அவர்களுக்கு முன்னால் அர்ஜுனன்  முறைப்பெண் சுபத்ராவையும் , கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் முறைப்பெண், ருக்மவதியையும் மணந்தனர்.

***

வெள்ளைக்காரன் வந்து ஆரிய திராவிட என்று பிரிப்பதற்கு முன்னர் நச்சினார்க்கினியர் முதலியோர் 18 குடிகள் அல்லது 18 பிரிவுகள் பற்றிப் பேசினார்கள். அதிலும் ஆரியர் திராவிடர் கிடையாது இவைகளுக்கு எல்லாம் இனவாதப் பொருளை கற்பித்தோர் பட்டியலில்  முதலிடம் பிடிப்பவர்கள் மாக்ஸ் முல்லர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் , ஜான் மக்கே ஆவர். இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது ; நாலு பேரைக் குறிப்பிட்டதற்கு காரணம் இவர்கள் எல்லோரும் சிந்து வெளி எழுத்துக்களை படிக்க முடியாமல் திசை திருப்பியதோடு வேதத்தையும் நேற்று வந்தது, அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு, யூத மதம் ஆகியவற்றுக்குப் பிற்பாடு வந்தது என்று பொய்யுரை பரப்பினர்நான் சொல்வதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) மிக அழகாக, பாலீஷாக, திட்டாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்  (காண்க தெய்வத்தின் குரல்).

இந்தக் கொள்ளைக்காரர்கள் ஸாரி, ஸாரி SORRY,  SORRY  வெள்ளைக்காரர்கள் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதினாலும் அது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க முயன்றனர்.  

ஆயினும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஆர் கே ( எங்கள் வீட்டுக்கு நாலு வீடுக்கு தள்ளி மதுரையில் வசித்த பேராசிரியர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரையாளர் எஸ் ராம கிருஷ்ணன் ) போன்றோர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். (காண்க – இந்திய பண்பாடும் தமிழரும் , எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை , 1971).அவைகளைக் காண்போம் .

எந்தெந்த ஜாதிக்காரரை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு என்ன பெயர் என்பதை மனு ஸ்ம்ருதியும் கூறுவதால் அப்படி நிகழ்ந்தது தெரிகிறது ஆனால் உதாரணங்களைக் காண்போம். 

மஹாபாரதம் சொல்லும் கதையில் சந்தனு மகாராஜன் மீனவப் பெண்ணான மத்ஸ்ய கந்தியை மணந்தது வருகிறது; மத்திய கந்தி என்றால் மீன் நாற்றம் என்று பொருள் ;அவர்களுக்குப் பிறந்தவர்தான் வியாசர்- வேத வியாசர் இல்லாவிடில் மஹாபாரதமும் கிடையாது, புராணங்களும் கிடையாது, நான்கு வேதங்களும் கிடையாது; ஆகையால் இன்றுவரை குருபூர்ணிமா தினத்தன்று அவரைக் குருவாக எல்லா இந்துக்களும் வணங்குகின்றனர் அவர் நிறமோ கருப்பு ; காக்காக் கருப்பு! UTTER BLACK!

இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்; திராவிடர்கள் கோழி முட்டைக் கண்களும், போண்டா மூக்கும், சுருட்டை முடியும், குட்டையான தோற்றமும் உடையவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்தார்கள். ஆரியர்கள் இதற்கு நேர் மாறாக கூரிய மூக்கும், நல்ல உயரமும், வெள்ளைத் தோலும்  தாமரைக் கண்களும் உடையவர்கள் என்றும் வருணித்தார்கள் !

ஆனால் வியாசர் கருப்பு! திரவுபதி கருப்பு! கிருஷ்ணன் கருப்பு! ரிக் வேத அகஸ்தியர் குட்டை !

இதிலும் வெள்ளைக்காரன் புளுகு அம்பலமாகிறது (ஹரப்பாவில் குட்டையான திராவிடர் எலும்புக்கூடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை !!!) ராமன் வேடர் குலத் தலைவன் குகனைத் தழுவிக்கொண்டு யூ ஆர் மை பிரதர் YOU ARE MY BROTHER TOO   என்று சொன்னதெல்லாம் நமக்குத் தெரியும்.

திருவிளையாடல் புராணக் கதைப்படி மதுரை மீனாட்சி கூட வடக்கத்திப் பெண்தான் ! சூரசேன மஹாராஜாவின்  பெண்ணான  காஞ்சன மாலாவுக்குப் பிறந்தவள் மீனாட்சி . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மெகஸ்த்னீஸ் கூட அவளைக் குறிப்பிட்டான் .ஆனால் அவளை திருஞான சம்பந்தர் அழகான தமிழ்ப்பெயர் சொல்லி — அங்கயற்கண்ணி என்று சொல்லித் –தேவாரம் பாடினார்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் !

அசுரர்கள் என்றால் திராவிடர்கள், தேவர்கள் என்றால் ஆரியர்கள் என்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் கதை கட்டி விட்டான் ; விருத்திராசுரன் என்ற பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதை ரிக் வேதம் முதல்  நம்ம ஊர் தல புராணங்கள் வரை ஆயிரம் முறையாவது சொல்லி இருக்கும்;

ராவணன் என்ற 50% பிராமணனைக் கொன்றதற்காக ராம பிரானையும் பிரமஹத்தி பிடித்ததை ராமேஸ்வரம் முதலிய தல புராணங்களில் காண்கிறோம் ராவணனும் ஒரு அசுரன்!

பெண்கள் வசப்பட்ட க்ஷத்ரிய விசுவாமித்திர பின்னர் பிராமணனாக மாறியதும் நந்தனார் கதையும் எவரும் பிராமணன் ஆக முடியும் என்றும் காட்டுகிறது

நமுசி என்ற அரக்கனை இந்திரன் கொன்றான் என்ற ரிக் வேதக் கதையிலும் நமுசியை பிராமணன் என்றே காட்டுகிறது; நமுசியின் சகோதரன்தான் அசுரத் தச்சனான மயன்.

நேபாளம் பூட்டானில் இப்போதும் நமுசி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

ரிக்வேதத்தில் வேறு ஒரு கிருஷ்ணன் உள்ளான்; அவனுக்கும் இந்திரனுக்கும் மோதல்! த்வஷ்டா மகனும் தேவர்களின் புரோகிதனுமான பிராமணன் திரிசரஸின் மூன்றுதலைகளையும் இந்திரன் துண்டித்தான் என்றும் ரிக் வேதம் 10-8 கூறுகிறது ; திரிசிரசும் ஒரு அசுரன் என்கிறது ! ஆகவே அசுரர் என்பது குணத்தால் வந்த அடைமொழிதான்பிறப்பால் அல்ல. வெள்ளைக்காரன் கணக்குப்படி இவை எல்லாம் இன மோதல்கள் .

இப்படி ஏனைய மத நூ ல்களில் ஆயிரம் விஷயம் இருந்தும் அவைகளுக்கு வெள்ளைக்காரன் இன வேற்றுமை கற்பிக்கவில்லை;

ஆக பிராமணர்களையும் அசுரர்கள் அல்லது  ராக்ஷஸர்கள் என்று வருணித்ததை ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் காண்கிறோம் ; அவ்வளவு அசுரர்களும் ராக்ஷஸர்களும் பிரம்மா அல்லது சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து ஏராளமான வரங்களை பெற்றதையும் புராண, இதிகாசங்களில் படிக்கிறோம்;  இவர்கள் திராவிடர்கள் என்றால் எப்படி ஆரிய தெய்வங்களை வழிபட்டு வரங்களை பெற்றார்கள் ? இவைகளை எல்லாம்  மறைத்ததால்தான் வெள்ளைக்கார்களை  அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறேன் .

இந்திரன் என்பது பட்டம்; ஒரே ஆள் அல்ல; ராஜா, தலைவன் என்று பொருள்;

ரிக்வேதத்தில் கீழ் ஜாதி முனிவர் தீர்க்கதமஸ் என்ற ரிஷி, தாசர் குல மமதாவின் புதல்வர் . வெள்ளைக்காரன் கணக்குப்படி மமதா திராவிடப் பெண் .

கவச ஐலுசர் என்ற ரிக்வேத ரிஷியும் கிழ்ஜாதி தாசர் மகன்தான் .

சுதாஸ் என்ற ரிக்வேத கால மன்னனும் தாசன் என்பதை பெயரே காட்டிவிடுகிறது

உபநிஷத்தில் வரும் ஜாபாலா வேலைக்காரப்பெண் ; அவளுக்குப் பிறந்தவன் ரிஷியிடம் போய் “என் அப்பா யார் என்று தெரியாது என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றான்.  அப்படியானால் நீ பிராமணன்தான் ஏனெனில் பிராமணன் உண்மையே பேசுவான் உன் பெயர் இன்றுமுதல் உண்மை விளம்பி — அதாவது சத்யா காமன்- வா, வா! வேத வகுப்பில் உட்கார்! என்கிறார் வண்டிக்காரன் ரைவக் , ஜானுசுருதி என்ற மன்னனுக்கு ஆத்ம ஞானம் போதித்ததை சாந்தோக்கிய உபநிடதம் சொல்கிறது .

ஒரே வேதம் பயிலும் வெள்ளை நிறத்தவன் , இரு வேதம் பயிலும் மாநிறத்தவன் மூன்று வேதம் பயிலும் கருப்பு நிறத்தவன் பற்றி உபநிஷத்துக்களிலேயே பழமையான பிருஹத் ஆரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது. வெள்ளைக்காரன் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் கருப்பு நிற திராவிடன்மட்டும்தான்  3 வேதங்களையும் படித்தான் என்று எழுதவேண்டி வரும்!

கசாப்புக் கடை வைத்திருந்த தர்மவியாதனிடம் கெளசிக முனிவர் அறிவுபெறச் சென்ற செய்தி மஹாபாரதத்தில் உள்ளது.   

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் ; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினைக்கு வேதங்களிலும் சங்க கால இலக்கியங்களிலும் ஆதாரம் இல்லை ; ஆரிய, திராவிடச் சொற்களுக்கு இனவாத அர்த்தம் நம்முடைய நூல்களில் இல்லை ; குணத்தால் ஒருவன் தேவன் ஆகலாம் அல்லது அசுரன் ஆகலாம் ஆரியன்  என்றால் படித்தவன், நாகரீகம் உடையவன்; திராவிடன் என்றால் தென் இந்தியாவில் வசிப்பவன் என்பதே உண்மைப்பொருள்.

–Subham—

Tags- ஆரியன், திராவிடன், கலப்பு மணம், திருமணம் 

 Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-47; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Written by London Swaminathan

Post No. 15,842

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அஹோபிலம்

இந்தப் புனிதத்தலம் 108  திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

அஹோபிலத்தில் இப்போதுள்ள கோவில்கள் வைஷ்ணவ கோவில்கள் என்பதை ஐயமில்லை. ஆனால் திருப்பதி பாலாஜி பெருமாளை அருணகிரி நாதர் முருகப்பெருமானே என்று பாடியது போல ஆதி சங்கரர் 18 தேவி பீடங்களை பாடிய துதியில் அஹோபில கிரிஜா தேவி என்றும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார். ஒரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும் இருந்தது தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இன்றும் பிரதானசந்நிதியில் நரசிம்மருக்கு முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. நுழை வாயிலில் பைரவர் கோவிலும் உளது.

ஆதி சங்கரர் தொடர்பு

ஆதி சங்கரரை  ஒரு காபாலிகன்  பலி கொடுக்க அழைத்துச் சென்றபோது நரசிம்மர் தோன்றி அந்தக் காபாலிகனை கிழித்தெறிந்த வரலாறு சங்கர விஜயத்தில் உள்ளது. அது நடந்த இடம் அஹோபிலம் என்ற ஐதீகமும் இருக்கிறது .

அஹோபிலம் இருக்கும் இடம் ‘நல்லமலை’  என்று அழைக்கப்படுகிறது. இது திருப்பதியில் துவங்கி சிருங்கேரி வரை செல்கிறது . இந்த மலையை சேஷ பர்வதம் என்றும் அழைக்கிறார்கள் .

அஹோபில நரசிம்மர் பற்றிய இன்னுமொரு சுவையான விஷயம் அவர் அமர்ந்த நிலையில் இருப்பதாகும். யோக நரசிம்மர் உட்கார்ந்த நிலையில் பல இடங்களில் இருந்தாலும் இங்குள்ளது யோக நரசிம்மர் இல்லை.

தங்க நரசிம்மர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்யாணி சாளுக்கிய வம்ச அரசன் ஆறாவது விக்கிரமாதித்யன் அஹோபிலத்தில் வணங்கியதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. . காகதீய அரசன் பிரதாப ருத்ரன் கொடுத்த தங்கத்தினாலான உற்சவ மூர்த்தி இன்றும் வழிப்பாட்டில் இருக்கிறது .40 நாள் பருவேட்ட உற்சவம்

வள்ளியை முருகன் மணந்ததால் மலைஜாதி மக்கள் அனைவரும் முருக பக்தர்கள் ஆனார்கள். இலங்கையிலுள்ள கதிர்காமம் முதலிய இடங்களில் இன்றும் இதைக் காண்கிறோம்.

மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ள பெருமாள் மதுரைக்கு வரும் 13 மைல் நெடுகிலும் பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் கள்ளழகரை  வணங்குவதற்காக  கள்ளர் வேடத்தில் வருவதைக் காணலாம் .

இதே போல செஞ்சு பழங்குடி மக்களை இணைக்கும் 40 நாள் உற்சவம் — பருவேட்ட உற்சவம் — அஹோபிலத்தில் நடக்கிறது வள்ளி எனும் வேடர் குலப் பெண்ணை முருகன் மணந்தது போல செஞ்சு என்ற மலைஜாதி வேடர் குலப் பெண்ணை பெருமாள் கல்யாணம் கட்டினார் . இதைக்கொண்டாட  40 நாள் உற்சவம் நடக்கிறது; அப்போது பெருமாள் நரசிம்மர்,  35 கிராமங்களுக்குச் செல்கிறார் . அவர் பவனி வரும் வழியில் உள்ள கிராம மக்கள் அவரை வரவேற்று வணங்குவார்கள் அப்போது ஒவ்வொரு ஜாதி மக்களும் ஒவ்வொரு பணியைச்  செய்கின்றனர். இது மகத்தான ஒற்றுமை உற்சவம்; இதே போல பூரி ஜெகந்நாத ரத யாத்திரைக்கு பழங்குடி மக்கள் உதவுவதையும் ஒப்பிடலாம் . இந்த நாற்பது நாள் உற்சவம் உலகில் ஒப்பற்றது .

மலைப்பாங்கான இடத்தில் இயற்கைச்  சூழ்நிலையில்  கோவில் அமைந்துள்ளது .சீதையைத் தேடி வந்த ராம, லட்சுமணர்கள் அஹோபில நரசிம்மனைத் தரிசித்தவுடன் சீதாதேவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக ஐதீகம் .

நவ நரசிம்ம க்ஷேத்ரம் /தலம் என்று அழைப்பது ஏன் ?

அஹோபிலத்தில் ஒன்பது நரசிம்மர்கள் கோவில் கொண்டிருப்பதால் நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று அழைப்பார்கள்.

ஒன்பது நரசிம்மர்கள் :

அஹோபில, வராஹ, மாலோல, யோகானந்த, பாவந, காரஞ்ச, சக்ரவட , பார்கவ, ஜ்வாலா நரசிம்ஹர் கோவில் கொண்டுள்ளனர்.

அஹோபிலத்தினை தமிழில் சிங்கவேள் குன்றம் என்பார்கள். எல்லா கோவில்களையும் தரிசிக்க இரண்டு நாட்களாவது ஆகும்.

மலை மீதும், கீழும் சந்நிதிகள் உள்ளன. புகழ்பெற்ற அஹோபில மடம் , மலை அடிவாரத்தில் உள்ளது

மூலவர்- பிரஹ்லாதவரதன் லெட்சுமி  நரசிம்மன்

உற்சவர்- மாலோல நரசிம்மர் . அவரைத் தவிர எட்டு நரசிம்ம மூர்த்திகளின் விக்கிரகங்களும் உள .

தாயார் – அம்ருதவல்லி, செஞ்சு லெட்சுமி

தீர்த்தம் – இந்திர, நரசிம்ம  (ந்ருசிம்ஹ ), பாபநாச, கஜ, பார்கவ தீர்த்தங்கள்

விமானம்- குகை விமானம்

அஹோபில  நரசிம்மர் கோவில்  மலை மேல் இருக்கிறது . இது ஒரு குடைவரைக்  கோவில்.. கீழ் அஹோபிலத்திலிரிருந்து 14 கி.மீ சாலை வழியாக மேல் அஹோபிலத்தை அடையலாம்.

அஹோபிலம் நரசிம்மர் கோவில்  எங்கே உள்ளது?

ஆந்திர பிரதேசத்தில் கர்நூல்  மாவட்ட த்தில் அஹோபிலம் இருக்கிறது .

சென்னையிலிருந்து 365 கி.மீ. தொலைவு.- சுமார் எட்டு மணி நேரத்தில் அடையலாம்..

ஹைதராபாத்திலிருந்தும் ஏறத்தாழ அதே தூரம்தான்.

நந்தியால் என்னும் ஊர்தான் அருகிலுள்ள பெரிய நகரம்; அங்கிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அஹோபிலம் இருக்கிறது.

கோவில் வரலாறு

சீதையைத் தேடிவந்த இராமபிரான் ஐந்து ஸ்லோகங்களால் நரசிம்மனைத் துதித்ததால்தான் சீதை கிடைத்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அஹோபில மடத்தில் மூலவர் லக்ஷ்மீ நரசிம்ஹராகவும் உத்சவர் சக்ரவர்த்தித் திருமகனாகவும் தரிசனம் அளிக்கின்றனர்

நரசிம்மர் வேடனாக வந்து செஞ்சு லட்சுமித் தாயாரை மணந்ததாக ஒரு கதையும் உண்டு.இப்போதும் மாசி மாத பிரம்மோற்சவத்தின்போது , மறவர் கூத்தும், ஆட்ட பாட்டங்களும் , சீர்வரிசையும் நடக்கிறது

மலையின் பெயர் – கருடாத்ரி அல்லது கருடாசலம்

((பிலம் என்றால் குகை; அத்ரி, அசலம் என்றால் மலை ))

மலையிலுள்ள நீர்வீழ்ச்சியின் பெயர் பாவ நாசினி. அதைக் கடந்து மலை ஏறிச் சென்றால் வராஹ நரசிம்மனைச் சேவிக்கலாம்.மேலும் ஏறிச் சென்றோமானால் செங்குத்தான பாறையில் வீற்றிருக்கும் மாலோல நரசிம்மனைத் தரிசிக்கலாம்.

இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் ந்ருஸிம்ஹன் காட்சி தந்த தூண் உள்ளது. நரசிம்மாவதாரத்தில் நாஸ்தீகர்களை அழித்து பிரஹ்லாதன் என்ற சிறிய பையனைக் காப்பாற்ற விஷ்ணு அவதரித்தார். அப்போது ஒரு தூணிலிருந்து சிங்க முகத்துடன் தோன்றி ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற மரபுச் சொற்றொடர் இதனால் தோன்றியது. .பெயர்க் காரணம்

நரசிம்மர், எதிரியின் உடலைக் கிழித்தெறிந்ததைக்  கண்டவர்கள் என்ன பலம்!, என்ன பலம்!! என்று வியந்ததால் அஹோ பலம்! அஹோ பலம்!!  என்பது அஹோபிலம் என்பதாயிற்று ..

இன்னும் ஒரு பொருள் – ஆச்சர்யமான குகை = அஹோ + பிலம் .

ஜ்வாலா நரசிம்மன்

இந்தக் கோவிலுக்குச் செல்வதுதான் கடினமானது . பொதுவாக மலை மீதுள்ள கோவில்களுக்குச் செல்லுகையில் துணையுடன் சென்று மாலைக்குள் திரும்பிவர வேண்டும் .

மங்களா சாஸனம்

திருமங்கை ஆழ்வார் பாடிப் பரவிய தலம் -1008 முதல் 1017– பத்து பாசுரங்கள்மடத்தின் வரலாறு

இந்த ஸ்தலத்தில்தான் அஹோபில மடத்தின் முதலாவது அழகிய சிங்கர் , மலையில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்குச் சென்ற சமயம் பெருமாள் தோன்றி மந்திர உபதேசம் செய்தார். அங்குள்ள ராமானுஜர் சந்நிதியிலிருந்து காஷாயம் (காவி உடை), த்ரி தண்டம் (முக்கோல்) ஆகியவற்றைக் கொடுத்து துறவறத்தில் சேர்த்தார்.அவருக்கு ஜீயர் பட்டத்தை அளித்து  ஒரு மடத்தினை ஸ்தாபிக்கவும் ஆசி வழங்கினார் என்பது  வரலாறு.  அப்போது அவருக்கு வயது 17. அவருக்கு சடகோப ஜீயர் என்ற பெயர் சூட்டப்பட்டது . நரசிம்மரை எந்த உருவத்தில் ஆராதிப்பது என்று தியானம் செய்த தருணத்தில் மாலோல நரசிம்ம மூர்த்தி அவருக்கு கிடைத்தது ; அன்றுமுதல் ஜீயர் பட்டம் பெறும் எவரும் மாலோல நரசிம்ம விக்கிரகத்தை போகும் இடமெல்லாம் எடுத்துச் சென்று பூஜிப்பது வழக்கமாக இருக்கிறது.

அஹோபில மடத்தின் ஜீயர்களில் ஒருவரான ஆறாவது பட்டம் ஸ்ரீ சஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிகன் ஆவார் . மேல் அஹோபிலத்தில் இருக்கும் குகைக்குள் தியானத்துக்குச் சென்றவர் வெளியே வரவில்லை. அவர் சிரஞ்சீவியாக  இப்போதும் அங்கே தியானம் செய்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

அஹோபில மடம்  மிகப்பெரியது; தங்கும் வசதிகள் உண்டு

மலையைச் சுற்றி குளங்களும் மண்டபங்களும் இருக்கின்றன.

கீழ் அஹோபில கோவிலின் ராஜகோபுரத்துக்கு எதிரே ஜயஸ்தம்பம் உள்ளது.80 அடி உயர ஜயஸ்தம்பம் என்னும் வெற்றித் தூண் நிற்கிறது. பூமிக்கு அடியில் 30 அடி ஆழம் செல்கிறது இதுவும் ஒரு சிறப்பு ஆகும்

–SUBHAM–TAGS—அஹோபிலம்,  நரசிம்மர் கோவில்,  Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-47; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் 

சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரில் புஸ்தகம்! புஸ்தகப் பிரியர்கள் இரண்டு வகை! (Post.15,841)

Written by London Swaminathan

Post No. 15,841

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அண்மைக் காலமாக ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்குப் பதிலாக தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது ; உஸ்தகம் புது என்ற சொல்லை நூல் என்று மாற்றி வருகின்றனர் . நான் அப்படித்த காலத்தில் தமிழ்ப் பாட புஸ்தகம் என்று கடையில் கேட்டு வாவங்குவோம்; இப்போதெல்லாம் ஹமிப்பட நாள் என்றே சொல்வர் . ஆயினும் இந்த புஸ்தாக்ம் என்ற சொல் முதலில் தமிழ் இலக்கியத்தில் புகுந்தது நாலடியார் என்னும் நூலில்தான் ; இது சாமானை முனிவர்கள் எழுதிய நூல் ; சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டது அக்காலத்தில் தமிழில் ஸ, ஜெ ஹா ஷா முதலிய எழுத்துக்கள் இல்லை ஆகையால் புத்தகம் என்றே எழுதியுள்ளார்கள் .

இதோ அந்தப்பாடல் 

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு. –318,  நாலடியார்

பொருள்

புத்தகங்களை மிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின் பொருள் தெரியாதவராவர்; நூல்களை வீடு முழுமையும் நிறைத்து ,அவற்றை அவர்கள் அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்கள்தான்; அவர்கள் வேறு . அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும் தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்கள் வேறு .

அதாவது புஸ்தகப்பிரியர்களில் இரண்டு வகை; ஒரு வகையினர் லைப்ரரி அலமாரி போல வீட்டில் அவைகளை அடுக்கி மட்டும் வைத்திருப்பார்கள் ; இன்னொரு வகை அவைகளின் பொருள் தெரிந்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்பார்கள் .

உண்மைதான் ; நானே பல வீடுகளில் அவர்களுடைய அப்பா தாத்தா கொள்ளுத்  தாத்தா சேர்த்துவைத்த புஸ்தகங்களை தூசி கூட தட்டாமல் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறேன் ; மற்றவர்களுக்கும் கொடுக்கமாட்டார்கள் ; ஒரு காலத்தில் படிக்கப்போவதாகச் சொல்லுவார்கள் ; வேறு சிலரோ வலிய வந்து நமக்கு அந்தப் புஸ்தகம் பற்றி அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்லி தயவு செய்து இதை படியுங்கள் என்று கொடுப்பார்கள் எனக்கே பலர் இப்படிக்கொடுத்தனர்; நானும்  படித்துப் பலன் அடைந்தேன்.

தொல்பொரு ட்த்துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி, லண்டன்  பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்சந்திரன் . லண்டனில் வசித்த டாக்டர் V S ரெங்கநாதன் , மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்  வி ஜி சீனிவாசன், மதுரை டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (பேராசிரியர் எஸ் ஆர் கே ) முதலிய பலர் நூல்களைக் கொடுத்தார்கள்;   இவர்கள் அனைவரும்    நன்றியுடன் நினைவுகூறத்  தக்கவர்கள் ஆவர் .

***

ஆதி காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் நாட்டில் பாறையில் எழுதும் வழக்கத்தைத் துவங்கினர். பிராமி லிபியில் இவர்கள் எழுதும்போது கொச்சைத் தமிழிலும் பிராகிருதம் கலந்த மொழியிலும் எழுதினார்கள்; இவை,  மதுரை முதலிய இடங்களில் சமண முனிவர்கள் வாழ்ந்த இடங்களை சுற்றி கிடைக்கின்றன. இவை அனைத்தும் மிகச் சின்ன கல்வெட்டுகள்; ஒரு வரி அல்லது இரண்டு வரிக்குட்பட்டவை இவை சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை ; ஆனால் இதற்கும் முன்னால், அசோகர் எழுதிய கல்வெட்டுகள் மிகவும் நீண்டவை; சொல்லப்போனால் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்!

ஒருவேளை அசோகருக்கும் முன்னால், வடக்கில் எழுதியது போல, நாமும் துணிகளிலும் பனை ஓலைகளிலும், மரப்பட்டைகளிலும் எழுதியிருக்கலாம் ; அவை எல்லாம் பருவ நிலையைத் தாங்கி நிற்கக்கூடியவை அல்ல . காலத்தால் அழிந்துபோய்விட்டன  என்றே கருத வேண்டும்!

–subham –

Tags– சமண முனிவர்கள்,  நாலடியார் ,  புஸ்தகம் , பிராகிருதம் அசோகர், பிராமி லிபி, புஸ்தகப் பிரியர்கள், இரண்டு வகை

ராமாயணத்தில் வரங்கள் (57) இந்திரன் மயிலுக்கு வரம் அளித்தது! (Post.15,840)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,840

Date uploaded in London – 7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (57) இந்திரன் மயிலுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் மயிலுக்கு இந்திரன் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

ஒரு சமயம் புஷ்பக விமானத்தில் ராவணன் பூமி முழுதும் சுற்றி வருகையில் கந்தஹார் என்று விளங்கும் க்ஷேத்திரத்திற்குச் சென்று அங்கு யாகம் செய்து கொண்டிருந்த மருத்தர் என்ற மன்னனைக் கண்டான்.அவருக்கு சம்வர்த்தர் என்ற மஹரிஷி யாகத்தைச் செய்வித்து வந்தார்.

யாகத்திற்கு வந்திருந்த தேவர்கள் ராவணன் ஜெயிக்க முடியாதவன் என்பதை உணர்ந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டார்கள்.

இந்திரன் மயிலாக ஆனான். தர்மராஜர் காக்கையாக ஆனார். குபேரன் ஓணானாகவும் வருணன் ஹம்ஸமாகவும் ஆனார்கள்.

இராவணன் மருத்த மன்னரை யுத்தத்திற்கு அழைத்தான் . அவனும் யுத்தத்திற்கு ஆயத்தமானான். ஆனால் யாகத்தை நடத்திய சம்வர்த்த ரிஷி மருத்த மன்னனிடம், “நீ யாகதீக்ஷை கொண்டிருப்பதால் போர் புரிதல் தகாது” என்றார். அவனும் அதை ஏற்று தனது வில்லை கீழே விட்டெறிந்தான்.

இதனால் ராவணன் வெற்றி பெற்று விட்டதாக சுகன் என்பவன் கூச்சலிட்டான்.

யாகத்திற்கு வந்திருந்த மஹரிஷிகள் புசித்துத் தின்னப்பட்டனர். ராவணன் பூமியில் சுற்றலானான்.

இராவணன் போய்விடவே இந்திரன் உள்ளிட்ட அனைவரும் தங்கள் சுய உருவத்தை அடைந்தனர்.

அந்தக் காலத்தில் மயில்கள் கருநிற தோகையையே கொண்டிருந்தன.

மயிலைப் பார்த்து இந்திரன் சந்தோஷத்துடன் கூறினான் இப்படி:

ப்ரீதோஸ்மி தவ தர்மக்ஞ உபகாரார்த்திவிஹங்கம|

உத்தரகாண்டம் பதினெட்டாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 23

தர்மக்ஞ – தர்மம் தெரிந்த                                            விஹங்கம – பறவையே                                                  தவ – உனது                                                           உபகாராத் – பேருதவியால்                                                       ப்ரீத: – திருப்தி அடைந்தவனாக                                            அஸ்மி – இருக்கிறேன்

மம நேத்ர ஸஹஸ்ரம் து யத்த்வபஹர்ஹே பவிஷ்யதி |

வர்ஷமாணே மயி முதம் ப்ராப்யஸே ப்ரீதிலக்ஷணாம் ||

ஏவமிந்த் ரோ வரம் ப்ராதான்மயூரஸ்ய சுரேஸ்வர: ||

                உத்தரகாண்டம் பதினெட்டாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 24

மம – எனது                                                       நேத்ர ஸஹஸ்ரம் – கண்களில் அநேகம்                                     யத் து – எதுவோ அதெல்லாமே                                      த்வதபர்ஹே – உன் தோகையில்                                           பவிஷ்யதி – விளங்கட்டும்                                               மயி – நான்                                                     வர்ஷமாணே – மழை பொழிகையில்                                 ப்ரீதிலக்ஷணம் – ப்ரீதிக்கு அடையாளமாய்                             முதம் – ஆனந்தத்தை                                           ப்ராப்யஸே – பெற்று விளங்குவாய்!                                   சுரேஸ்வர – தேவராஜனான                                           இந்த்ர – இந்திரன்                                                            மயூரம் – மயிலுக்கு                                                    வரம் – வரத்தை                                                              ஏவம் – இப்படி                                                      ப்ராதாத் – தந்தருளினான்.

கருநிறம் கொண்ட தோகைகளையே இது வரை கொண்டிருந்த மயில்கள் வண்ண மயமான தோகைகளைப் பெறலாயின. அது பற்றிய வரம் தான் இது!

இது மயில்கள் கேட்காமல் அவற்றிற்குக் கிடைத்த வரமாகும்!

**

London Swaminathan’s Article Index for May 2026; Index No.162 (Post No.15,839)

Written by London Swaminathan

Post No. 15,839

Date uploaded in London –6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Ancient Tamil Poets Copied Kalidasa -Purananuru wonders-23, Tamil Encyclopedia-63 (Post No.15,684)1/5/26

Tamils Discovered Monsoon! Not Hippalus! Purananuru wonders-24, Tamil Encyclopedia-64 (Post.15,701)5/5

Tamils have no Tamil Names for 12 Months:25Purananuru wonders-25, Tamil Encyclopedia-65  (Post.15,729)12/5

Sad Story of Chera King Kanaikkal Irumporai-Purananuru wonders-26, Tamil Encyclopedia-66  (Post No.15,745)16/5

Tiger Claw Pendant and Long balloon vine- Purananuru wonders-27, Tamil Encyclopedia-67 (Post No.15,762)20/5

Low Castes and Nayudus in Sangam Literature; Purananuru wonders-28, Tamil Encyclopedia-68 (Post.15,771)22/5

Athiyaman was not a Tamil King! No AVV in Tamil! Purananuru wonders-29, Tamil Encyclopedia-69 (Post.15,793)27/5

Bhagavad Gita and Brahmins’ Big Role! Purananuru wonders-30, Tamil Encyclopedia-70  (Post.15,807)30/5

Buddhist Treasures from Five Pakistani Museums-2 (27/5)

Harappa Mohenjo-Daro Artifacts in Pakistan Museums Part 2 (Post No.15,772)22/5

Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 21 to 25) Post 15,688 (2/5)

Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 26 to 30) Post.15,692 (3/5)

Tirukkural Encyclopaedia- Chapter Four (Kural 31 to 35) Post.15,725 (11/5)

Tirukkural Encyclopaedia- Chapter Four (Kural 36 to 40) Post.15,730 (12/5)

Hindutva in Tamil Veda-Tirukkural Encyclopaedia- Chapter Five (Kural 41 to 45) Post.15,734 (13/5)

Valluvar Neither a Buddhist nor a Jain: Tirukkural Encyclopaedia- Chapter Five (Kural 46 to 50) Post 15,738 (14/5)

Women won’t Support Orthodox Valluvar-Tirukkural Encyclopaedia Chapter 6 (Kural 51-55) Post 15,746 (16/5)

Who is a Good Wife? Who is a Bad Wife? Tirukkural Encyclopaedia Chapter 6 (Kural 56-60) 17/5

Manu Smriti Slokas used by Valluvar ! 13 Tirukkural Encyclopaedia- Chapter 7 (Kural 61 to 65) Post.15,764 (20/5)

Getting Children through Penance: Tirukkural Encyclopaedia- Chapter 7 (Kural 66 to 70) Post.15,767 (21/5)

Adi Sankara, Dadhichi and Dikshitar: Tirukkural Encyclopaedia- Chapter 8 (Kural 71 to 75) Post.15,773 (22/5)

धर्मो रक्षति रक्षितः Tirukkural Encyclopaedia- Chapter 8 (Kural 76 to 80) Post.No.15,777 (23/5)

Dravidians may ban Hindutva Vallluvar! Tirukkural Encyclopaedia- Chapter 9 (Kural 81-85) Post 15,795(27/5)

Mythical Flower in Tamil Veda; Tirukkural Encyclopaedia- Chapter 9 (Kural 86-90) Post.15,798)28/5

***

தமிழ்க் கட்டுரைகள்

முருகப்பெருமான்,  நம்மாழ்வார், புத்தர் அவதரித்த வைகாசி விசாகம் (Post No.15,681) 1/5/2026

லண்டன் சுவாமிநாதனின் 81 திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்! (Post No.15,695) 4/5

உலக இந்துமத செய்தி மடல் WORLD HINDU NEWS IN TAMIL 17- 5 -2026 (Post (Post No.15750)

உலக இந்து மத செய்தி மடல் 25 5 2026 (Post.15,786)

கங்கை நதி பற்றி வியத்தகு புதிய தகவல்! 1117 மூலிகைகள்! 935 மருந்துகள்! (Post.15,724)11/5

கல்யாணத்தில் டான்ஸ் ஆடவேண்டும்: பரத முனி உத்தரவு (Post.15,733)13/5

கனவு பற்றிய சுவையான உரையாடல் (Post No.15,741) 15/5

தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் -1 (Post No.15,713)8/5

தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் – 2 ; பாம்பாட்டியும் குரங்காட்டியும்; காளையும் யானையும் (Post.15,716) 9/5

தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள்- Part 3;  சிற்பத்தில் அதிபயங்கர சர்ப்ரைஸ் ! (Post.15,749) 17/5

கோவிலில் பிரமிப்பூட்டும் குறத்தி, வேடுவச்சி சிற்பங்கள்! (Post.15,760)19/5

நர்த்தன விநாயகர் தோன்றியது எங்கே? (Post No.15,736) 14/5

 பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தது பாண்டவர்கள்! (Post No.15,712) 8/5

பன்னிரெண்டு வயதில் திருமணம்! கணவனுடன் சிதைத் தீயில் மரணம் -பெரிய புராணம் (Post.15,697)4/5

பாம்பு மந்திரம் பற்றி ஆறு புலவர்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்! (Post.15,803)29/5

புறநானூற்றில் சாமுத்ரிகா லக்ஷணம் (Post No.15,705)6/5

***

நாச்சியார்கோயில்Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-10;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,683) 1/5/26

திருச்சேறை Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-11;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்  (Post.15,686)2/5

திருக்கண்ணங்குடி Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-12;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,690) 3/5

திருவெள்ளியங்குடி Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-13;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,694)4/5

திருவழுந்தூர்/ தேரழுந்தூர்  Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-14;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,699)5/5

திரு இந்தளூர்Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-15;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,703)6/5

தலைச்சங்காடுVishnu Temples 108 “Divya Desams” in Pictures-16;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,707)

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17;  திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்கள் 8/5

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-18;  திருநாங்கூர் கோவில்கள்  தொடர்ச்சி(Post.15,715)9/5

தில்லைத் திருச்சித்ரகூடம் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-19;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,719)10/5

திருப்பார்த்தன்பள்ளிVishnu Temples 108 “Divya Desams” in Pictures-20;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,723) 11/5

சீர்காழி Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,728) 12/5

திருவஹீந்திரபுரம் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-22;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,732)13/5

சோளிங்கர் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-23; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்  (Post No.15,737) 14/5

திருக்கடல் மல்லை Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-24; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,740)15/5

திருக்கள்வனூர் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-25; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,744) 16/5

திருக்காரகம்Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-26; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,748) 17/5

திருப்பாடகம்Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-28; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,758)19/5

திருவேளுக்கை Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-29; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,763)20/5

திருக்கோளூர்mVishnu Temples 108 “Divya Desams” in Pictures-30; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,766) 21/5

திருமாலிருஞ்சோலை Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-31; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,770) 22/5

திருமெய்யம்Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-32; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,776)23/5

திருவில்லிப்புத்தூர் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-33; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,781)24/5

திருக்கோஷ்டியூர்34Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-34; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,784)25/5

வரகுணமங்கை Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-35; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,788)26/5

திருவைகுண்டம் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-36; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,792)27/5

திருமோகூர் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-37; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,797) 28/5

திருக்குறுங்குடிVishnu Temples 108 “Divya Desams” in Pictures-38; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,802) 29/5

திருமூழிக்களம் Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-39; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post No.15,806)30/5

திருவாட்டாறு Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-40; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்(Post.15,811)31/5

***

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 57; இந்து மத கலைச்சொல் அகராதி-57 (Post .15,687) 2/5

To Parts 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 66; இந்து மத கலைச்சொல் அகராதி-66 (Post.15,789) 26/5

***

தாய்லாந்து ,ஆந்திர ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளில் காவியங்கள் (Post.15,776)23/5

ஹிந்துப் பெண்களின் தலை முடி அலங்காரம்;Hair do, Hair Style of Ancient Hindu Women (Post.15,756) 18/5

மேலும் 30 நாரத பக்தி சூத்திர பொன்மொழிகள் -2026 ஜூன்  மாத காலண்டர் (Post.15,809) 31/5/2026

–subham—

Tags- London Swaminathan’s Article Index for May 2026; Index No.162

நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடகக் கம்பெனிகளும், தமிழ் நாடகங்களும் (Post.15,838)

Written by London Swaminathan

Post No. 15,838

Date uploaded in London –6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சென்னை வி ஏ தியாகராஜ செட்டியார் அவர்கள் எழுதிய சாகுந்தலம் நாடகத்தின் புஸ்தகத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் படித்துவிட்டு 7, 8  பக்கங்களை பேஸ்புக்கில் போட்டேன் ; இன்று பேஸ்புக் அவைகளை வெளியிட்டு எனக்கு நினைவுபடுத்தியது ; அது மட்டுமல்ல; மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி பற்றி நீங்கள் எழுதியதைக் கண்டேன் ; மேற்கொண்டு விவரங்களைத் தரமுடியுமா என்று சென்னை அன்பர் ஒருவர் சென்ற மாதம் எனக்கு E மெயில் அனுப்பியிருந்தார். அதனால் இதையும் எழுத்தில் வடிக்கலாமே என்று துவங்கினேன்.

சென்னை தியாகராஜ செட்டியார் தன்னை ம. ப. க . அழகர்சாமி பாவலர்  மாணவன் என்றும் நாடக ஆசிரியர் என்றும் அறிமுகப்படுத்திக்  கொள்கிறார் .

முதல் பக்கத்தில் அவர் தன்னுடைய நாடகங்களை யார், யார் பயன்படுத்துகிறார்கள் என்று நன்றிப் பெருக்குடன் பட்டியல் போட்டுள்ளார்; அதைப் பார்க்கும்போது அக்காலத்தில்– 1930 களில்– எவ்வளவு பேர் இத்துறையில் ஈடுபட்டிருந்தனர் என்ற விவரம் கிடைக்கிறது ; இதோ அந்த நடிகர்களின் பெயர்கள்:

S G கிட்டப்பா, K B  சுந்தராம்பாள், S V   சுப்பையா பாகவதர், P S வேலுநாயர், P S கோவிந்தன், T S பரமேஸ்வரய்யர், K S செல்லப்பய்யர் K S அனந்த நாராயணய்யர்,  ஆலந்தூர் ஒரிஜினல் இந்து ட்ரம்மடிக் கம்பெனியார், ஸ்ரீ வித்வ இரத்தின வினோத ரஞ்சித பால்ய சபையார் , மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் இன்னும் பல நாடக கம்பெனியார்களும் நடத்திவரும்

சம்பூர்ண

சகுந்தலா சரித்திரம்

நாடகாசிரியர்

சென்னை முத்தியாலுப்பேட்டை

பால சந்தச் சரபக்  கவி

V A தியாகராஜ செட்டியாரவர்களால்

இயற்றப்பெற்று

மேற்படி

V A தியாகராஜ செட்டியாரவர்களால்

சென்னை ஆர் ஜி அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பெற்றது

காப்பிரைட்  1935          விலை அணா 4

இதைவிட சுவையான விஷயம், அவர் 1935 ஆம் ஆண்டுக்குள் எழுதிய நீண்ட நாடகங்களின், சரித்திரங்களின் பட்டியல் கடைசி பக்கத்தில் வெளியாகியுள்ளது ; அவையாவன ( எல்லாம் நான்கு அணா விலையில் விற்கப்பட்டுள்ளது) :

1.வள்ளித் திருமணம்,

2.லவகுச சரித்திரம்,

3.அல்லி அர்ஜுனா,

4.சம்பூர்ண அரிச்சசந்திரா ,

5.சாவித்திரி,

6.கோவலன் சரித்திரம் ,

7.ஞான சவுந்தரி டிராமா ,

8.கபீர்தாஸ் சரித்திரம் ,

9.ராமதாஸ் சரித்திரம் ,

10.மார்க்கண்டேயர் சரித்திரம் ,

11.நந்தனார் சரித்திர டிராமா,

12.நல்லதங்காள் டிராமா,

13.சக்குபாய் சரித்திரம்,

14.சிறுத்தொண்ட பத்தன் சரித்திரம் ,

15.பாரிஜாத புஷ்பஹரணம்,

16.பவளக்கொடி டிராமா,

17.பக்த பிரஹலாதா ,

18.தூக்குத் தூக்கி டிராமா,

19.சாரங்கதரன் ,

20.டம்பாச்சாரி

21.குலேபகாவலி

22.பாதுகா பட்டாபிஷேகம்

23.துளசிதாஸ் சரித்திரம்

இன்னும் அநேக சரித்திரங்களை அச்சிட்டு வருகிறேன்.

***

அந்தக்காலத்தில் நாடகம் என்பது குறைவான வசனங்களுடனும் அதிகப் பாடல்களுடனும் இருந்தன ; மக்கள் இசைப்  பிரியர்களாக இருந்தனர் .

இவ்வளவு அரிய படைப்புகளை அக்காலத்திலேயே எழுத்து வடிவில் வெளியிட்டு நாடக மேடைகளில் ஏற்றிய தியாகராஜ செட்டியாருக்கு ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும்; அவர் எழுதியதில் சில நாடகங்களைத் தவிர பெரும்பாலும் புராண, இதிஹாஸக் கதைகளாவும் சாதுக்களின் சரித்திரமாகவும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது . தியாக ராஜ செட்டியார் முழு சாகுந்தல நாடகத்தையும் கவிகள் வடிவில் நூதன மெட்டுகளுடன் ஆக்கியதாகவும் முன்னுரையில் எழுதியுள்ளார்.

–SUBHAM—

TAGS– சென்னை V A தியாகராஜ செட்டியார், நூறு ஆண்டுகளுக்கு முன், நாடகக் கம்பெனிகள் , தமிழ் நாடகங்கள்

கற்புக்கரசி இந்திராணியும் நஹுஷன் கதையும்! நம்ம ஊர்ப் பெண்களுக்கும் புத்திமதி! (Post .15,837)

Written by London Swaminathan

Post No. 15,837

Date uploaded in London –6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன

பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் — விரும்பிப்

பெறுநசையாற் பின்நிற்பா ரின்மையே பேணும்

நறுநுதலாள் நன்மைத் துணை –நாலடியார் 381

பொருள்:

அரிதாகப் பெறக்கூடிய கற்புடைமையில் இந்திராணி போன்றவள் என்று உலகத்தில் பெரும் புகழோடு விளங்கும் பெண்ணாகவே இருந்தாலும், அவளைத் தவறான நோக்கத்தோடு விரும்பிப் பின் தொடரும் ஆடவர் இல்லாத தூய்மையான வாழ்க்கை, வாழவேண்டும்;  அவர்தான்  நல்ல நெற்றியை உடைய பெண் அல்லது மனைவி ஆவார் –நாலடியார் பாடல் 381

அதாவது தேவலோக கற்புக்கரசியான இந்திராணி போல வாழ்ந்திருக்கலாம் ; ஆயினும் நடை, உடை, பாவனைகளில் அடக்கம் வேண்டும் ; எல்லோரும் தன்னைப் பார்க்க வேண்டும், விரும்ப வேண்டும் என்ற முறையில் நடை உடை பாவனை இருக்கக்கூடாது ; இதற்கு எடுத்துக் காட்டாக அக்கால பெண் பாடகிகளையும் இக்காலப் பெண் பாடகிகளையும் கூறலாம்; அக்காலத்தில் புடவையைப் போர்த்திக்கொண்டு வருவார்கள், அமர்வார்கள், செல்வார்கள்; இக்காலத்திலோ ஆடையின் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் 50 % காணோம் ! அப்படியே வீடியோவும் எடுத்து விற்பனையும் செய்கிறார்கள்!

நஹுஷன் கதையே காரணம் !

நாலடியார் பாடலுக்கு காரணம் நஹுஷன் செய்த சேட்டைதான் ; அவர் இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .

முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் அல்லது பேய் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும். ராமன் கூட பிராமணன் ஆகிய அசுரன் ராவணனைக் கொன்றதால் ராமேஸ்வரம் முதலிய இடங்களில் பரிகாரம் செய்ததாகத் தலபுராணம் பகரும். இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT VACANT விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; டெம்பொரரி/ தற்காலிக பிரதமைச்சர் TEMORARY PRIME MINISTER பதவிக்குப்   பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா ஆகியவர்களின் நடனத்தை தினமும் காணவே அவருக்கு மூட் MOOD வந்தது ; இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ஜாலியாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது. 

அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!

நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசமபாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா டெம்பொரரி பிரதம அமைச்சரே! ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான்: உடனே அதைச் செய்யுங்கள் என்று.

ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; AFRICAN PIGMY   ஆப்பிரிக்க பிக்மி! பல்லக்கு ரெடி. நஹுஷனும் உலகிலும் அத்தனை AFTER SHAVE LOTIONS ஆப்டர் ஷேவ் லோஷன்களையும் பூசிக்கொண்டு பல்லக்கில் ஏறினான் ; அது ROLLSROYCE  ரோல்ஸ்ராய் கார் இல்லையே! மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும் அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையயல் கார் கொஞ்சம wobbling /வாப்ளிங் ஆட்டம் ஆகிறது அதற்காகத்தான் மெதுவாகச் செல்கிறோம்” .

உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான பிக்மி அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப்ப பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.– குறள் 29  

குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார்

சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்– பாம்பு

ஆங்கிலத்தில் பாம்புக்குள்ள சர்பண்ட் SERPENT, SNAKE ஸ்நேக் என்பதெல்லாம் சம்ஸ்க்ருத மொழியிலிருந்து சென்றவை ; அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான்.

இந்தக் கதையை மனத்தில் வைத்துக்கொண்டுதான் அயிராணி/ இந்திராணி பற்றி சமண முனிவர் எழுதினார் போலும்; இந்திராணி தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப்  பயன்படுத்தினாள். 

–subham—

Tags- கற்புக்கரசி, இந்திராணி,  நஹுஷன் கதை, பெண்களுக்கு புத்திமதி, அயிராணி , நாலடியார் பாடல் சர்ப்ப சர்ப்ப, அகஸ்தியர் சாபம்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-46; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post No.15,836)

Written by London Swaminathan

Post No. 15,836

Date uploaded in London –6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 46

திருவாறன்விளை, கேரளம்

திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

மலைநாட்டுத் திருப்பதி

மூலவர் – திருக்குறளப்பன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – பத்மாஸநி நாச்சியார்.

தீர்த்தம் – வேதவ்யாஸ ஸரஸ், பம்பா தீர்த்தம்.

விமானம் – வாமன விமானம்.

ப்ரத்யக்ஷம் – ப்ரஹ்மா, வேதவ்யாஸர்.

விசேஷங்கள் – யுத்தத்தில், கர்ணனின் தேர் இடது சக்கரத்தை பூமிவிழுங்கிய பொழுது, கர்ணன், தன் ரதத்தைத் தூக்கிவிட்டு வரும்வரை பூமியில் இருக்கும் தன்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்லியும், வஞ்சகமாக பாணத்தைப் போட்டுக் கொன்றதால், மனது வருந்திய அர்ஜுனன், இவ்விடம் வந்து தவம் செய்து இந்த கோவிலை ஜூர்ணோத்தாரணம் செய்ததாக ஸ்தலபுராணம்.

ஒரு பெரிய மேட்டின் மேலுள்ள இப்பெரிய கோயில் அர்ஜுனனால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாம். பக்கத்தில் கோவில் மதிலைத் தொட்டுக்கொண்டு அழகிய பம்பாநதி ஓடுகிறது.    பிரம்மனிடம் இருந்து வேதங்களை மது, கைடபன் என்ற இரண்டு
அரக்கர்கள் பிடுங்கிச் சென்று விட்டனர். பிரம்மன் திருமாலைத் துதித்து நின்றான். திருமால் அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். இதற்கு நன்றி கூறும் முகத்தான் இத்தலத்தில் பிரம்மன் திருமாலைக் குறித்து தவமிருந்தான் என கூறுவர்.

இந்த ஸ்தலத்தில்தான் சபரிமலை ஐயப்பஸ்வாமியின் ஆபரணங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின்போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் பஜனைப் பாடல்களுடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

 நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

செங்கண்ணூரிலிருந்து கிழக்கே 6 மைல், பஸ்ஸில் போகலாம்.

அர்ஜுனன் ஆறு மூங்கில் துண்டுகளாலான மிதவையில் இறைவன் சிலையைக் கொண்டு வந்ததினால் இத்தலம் திருவாறன்விளை (ஆறு மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது.

இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும்
வன்னி மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ் தம்பத்தின் முன்பு குவித்துவைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில்இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

 குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும்
துலாபாரம்கொடுக்கும் முறை நடைமுறைப் பழக்கத்திலிருந்து வருகிறது இங்கு துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது.

  இங்கு அர்ஜு னனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பார்த்தசாரதி சிலை ஒன்று உள்ளது. இவரது கரம் மூளியாக இருந்ததாகவும், கோவில் வேலை பார்க்கும் தந்திரி. தங்கத்தால் கை செய்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

  கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி
இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது.
பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ள இக்காட்சி இக்கோவிலுக்கு மேலும் மெருகூட்டுகிறது.
     
   நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் மங்களாசாசனம்
செய்யப்பட்ட ஸ்தலம். இத்தலத்து எம்பெருமானின் திருக்குறளப்பன் என்ற திருநாமத்தை தலைப்பில் இட்ட பாடலில் நம்மாழ்வார் பாசுரித்துச் செல்கிறார்.
****

பாசுரங்கள்

3552.  

இன்பம் பயக்க எழில் மலர் மாதரும்*  தானும் இவ் ஏழ் உலகை,*

இன்பம் பயக்க இனிது உடன் வீற்றிருந்து*  ஆள்கின்ற எங்கள் பிரான்,*

அன்புற்று அமர்ந்து உறைகின்ற*  அணி பொழில் சூழ் திருவாறன்விளை,*

அன்புற்று அமர்ந்து வலஞ்செய்து*  கைதொழும் நாள்களும் ஆகும்கொலோ! (2)     

3553.  

ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே*

ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்*

மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,*

மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!      

3554.  

கூடும் கொல் வைகலும்*  கோவிந்தனை மதுசூதனை கோளரியை,*

ஆடும் பறவைமிசைக் கண்டு*  கைதொழுது அன்றி அவன் உறையும்,*

பாடும் பெரும் புகழ் நான்மறை வேள்வி*  ஐந்து ஆறு அங்கம் பன்னினர் வாழ்,*

நீடு பொழில் திருவாறன்விளை தொழ*  வாய்க்கும்கொல் நிச்சலுமே!    

3555.  

வாய்க்கும்கொல் நிச்சலும்*  எப்பொழுதும் மனத்து ஈங்கு நினைக்கப்பெற*

வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்*  வயல் சூழ் திருவாறன்விளை,*

வாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்*  வடமதுரைப் பிறந்த,*

வாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்*  மலர் அடிப்போதுகளே.   

3556.  

மலர் அடிப்போதுகள் என் நெஞ்சத்து எப்பொழுதும்*  இருத்தி வணங்க,*

பலர் அடியார் முன்பு அருளிய*  பாம்பு அணை அப்பன் அமர்ந்து உறையும்,*

மலரின் மணி நெடு மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,*

உலகம் மலி புகழ் பாட*  நம்மேல் வினை ஒன்றும் நில்லாகெடுமே.

3557.  

ஒன்றும் நில்லா கெடும் முற்றவும்*  தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்,*

அன்று அங்கு அமர் வென்று உருப்பிணி நங்கை*  அணி நெடும் தோள் புணர்ந்தான்,*

என்றும் எப்போதும் என் நெஞ்சம் துதிப்ப*  உள்ளே இருக்கின்ற பிரான்,*

நின்ற அணி திருவாறன்விளை என்னும்*  நீள் நகரம் அதுவே.

3558.  

நீள் நகரம் அதுவே மலர்ச் சோலைகள் சூழ்*  திருவாறன்விளை,*

நீள் நகரத்து உறைகின்ற பிரான்*  நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்*

வாணபுரம் புக்கு முக்கண் பிரானைத் தொலைய*  வெம் போர்கள் செய்து.,*

வாணனை ஆயிரம் தோள் துணித்தான்*  சரண் அன்றி மற்று ஒன்று இலமே.

3559.  

அன்றி மற்று ஒன்று இலம் நின்சரணே! என்று*  அகல் இரும் பொய்கையின்வாய்,*

நின்று தன் நீள் கழல் ஏத்திய*  ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான்,*

சென்று அங்கு இனிது உறைகின்ற*  செழும் பொழில் சூழ் திருவாறன்விளை,*

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ?*  தீவினை உள்ளத்தின் சார்வு அல்லவே.

3560.  

தீவினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி*  தெளி விசும்பு ஏறலுற்றால்,*

நாவினுள்ளும் உள்ளத்துள்ளும்*  அமைந்த தொழிலினுள்ளும் நவின்று,*

யாவரும் வந்து வணங்கும் பொழில்*  திருவாறன்விளை அதனை,*

மேவி வலஞ்செய்து கைதொழக் கூடும்கொல்*  என்னும் என் சிந்தனையே.

3561.  

சிந்தை மற்றொன்றின் திறத்தது அல்லாத்தன்மை*  தேவபிரான் அறியும்,*

சிந்தையினால் செய்வ தான் அறியாதன*  மாயங்கள் ஒன்றும் இல்லை,*

சிந்தையினால் சொல்லினால் செய்கையால்*  நிலத்தேவர் குழுவணங்கும்,*

சிந்தை மகிழ் திருவாறன்விளை உறை*  தீர்த்தனுக்கு அற்ற பின்னே.    

3562.  

தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே

தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,*

தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல்

தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)

–subham—

Tags Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-65; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 46, திருவாறன்விளை, கேரளம்,  ஆறன்முளா, ஆரன்முளா, அர்ஜுனன் கர்ணன் வன்னிமரக் காய்கள், துலாபாரம்

ஹனுமனுக்கு இராமனின் பதில் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 17 (Post.15,835)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,835

Date uploaded in London –   6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ஆர், சேஷாத்ரிநாதன்)

ஹனுமனுக்கு இராமனின் பதில்

कोसलेस दसरथ के जाए । हम पितु बचन मानि बन आए॥ १॥

नाम राम लछिमन दोउठ भाई । संग नारि सुकुमारि सुहाई॥ २॥

इहाँ हरी निसिचर बेदेही। बिप्र फिरहिं हम खोजत तेही॥ ३॥

आपन चरित कहा हम गाई । कहहु बिप्र निज कथा बुझाई॥ ४॥

இதனைக் கேட்ட ஸ்ரீ இராம பிரான் கூறினார் “ நாங்கள் கோசல நாட்டு மன்னர் தசரதனின் மைந்தர்கள். தந்தையின் கட்டளையை ஏற்று வனத்திற்கு வந்தோம்”. இங்கு தனது  அவதார ரகசியத்தை வெளிப்படுத்தவில்லை (இராமன் வனவாசத்திற்கு கிளம்பும்போதே தனது தாயான கௌசல்யாவிடம் சந்கேதமாகத் தெரிவித்து விட்டான். துளசிதாசர் அயோத்திய காண்டத்திலேயே நமக்குத் தெரிவித்துவிட்டார்.

पिताँ दीन्ह मोहि कानन राजू। जहँ सब भाँति मोर बड़ काजू॥3

தாயிடம் இராமன் சொல்கிறான் “அன்னையே! தந்தை வனராஜ்ஜியத்தை எனக்கு தந்தருளியுள்ளார்.. அங்குதான் எனக்கு முக்கியமான வேலைகள் உள்ளன” என்று சூசகமாகச் சொல்லிவிட்டான்.)

ஹனுமனிடம் இராமன் சொல்வதாவது “இராமன், இலக்ஷ்மணன் என்பது எங்கள் பெயர்.  நாங்கள் இருவரும் சகோதரர்கள். எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள்.  இங்கு வனத்தில் ஒரு அரக்கன் எனது மனைவி வைதேகியைக் கவர்ந்து சென்று விட்டான். ஆஞ்சநேயரே! நாங்கள் அவளைத்தான் தேடிக் கொண்டு அலைகிறோம். நாங்கள் எங்களைப் பற்றிய வரலாற்றைக் கூறிவிட்டோம். அந்தணரே! உங்களைப் பற்றிய கதையைத் தெளிவாகச் சொல்வீராக.” என்றான்.

இதையே ஆத்யாத்ம இராமாயணத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று பார்க்கலாமா?

अहं दाशरथी रामस्त्वयं मे लक्ष्मणोऽनुजः ।

सीतया भार्यया सार्धं पितुर्वचनगौरवात् ॥ १९॥

आगतस्तत्र विपिने स्थितोऽहं दण्डके द्विज ।

तत्र भार्या हृता सीता रक्षसा केनचिन्मम ।

तामन्वेष्टुमिहायातौ त्वं को वा कस्य वा वद ॥

“நான் தசரத  புத்திரன் ராம். இவன் எனது தம்பி இலக்ஷ்மணன். தந்தையின் உத்திரவுப்படி நான் எனது மனைவி சீதையுடன் வனம் வந்தேன். தண்டகாரண்யத்தில் என் மனைவி சீதையை ஒரு இராட்சஸன் அபகரித்துச் சென்று விட்டான். அதனால் எனது மனைவி சீதையைத் தேடி இங்கு வந்தோம்” என்று தன்னைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொல்கிறான் இராமன்.

இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும்.ஆத்யாத்மா இராமாயணத்தில் இராமன் தனது மனைவியின் பெயர் சீதை என்று குறிப்பிடுவதோடு சீதையை அரக்கன் கடத்திச் சென்றுவிட்டான்;  சீதையைத் தேடி நாங்கள் இங்கு வந்தோம் என்று மூன்று முறை குறிப்பிடுகிறான். ஆனால் துளசி இராமாயணத்தில்  இராமன் ஹனுமனிடம் ஒரு அரக்கன் கடத்திச் சென்ற  தனது மனைவியான வைதேஹியைத்  தேடி அலைவதாகக் குறிப்பிடுகிறான். மனைவியின் பெயரை  ஜானகி என்றோ சீதை என்றோ குறிப்பிடவில்லை.

விதேகம் என்றால் தேகமற்ற உடல் என்று பொருள். அப்படியானால் வைதேஹி என்றால் தேகமற்றவள் என்று பொருள். இது எவ்வாறு சாத்தியமாகும்.? ராம சரித மானஸ் ஆரண்ய காண்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இதை முன்னமே நீங்கள் படித்திருக்கலாம். ஒரு நாள் இராமன்,  இலக்ஷ்மணன் வனத்தில் பழங்கள் பூக்களைச் சேமிக்கச் சென்றபோது சீதையிடம், ‘ஒரு காரணமாக நீ இந்த அக்னி குண்டத்தில் இறங்கி  அக்னி பகவானிடம் அடைக்கலமாக இரு” என்று சொன்னதும் எந்த வித மறுப்பும் சொல்லாமலும், காரணம் கேட்காமலும் சீதை  நெருப்பில் இறங்கி அக்னி பகவனை அடைந்தாள். நெருப்பில் இருந்து மாயா சீதை வெளி வந்தாள் மாயா சீதை என்றால் பார்பவர்கள் கண்களுக்கு சீதையின் உருவம் தெரியும். ஆனால் உண்மையில் உடலற்றவள். இது இலக்ஷ்மணனுக்கும் தெரியாது. அதைத்தான் அரக்கன் தூக்கிச் சென்றது மாயா சீதையைத் தான் உண்மை சீதையை அல்ல என்று உணர்த்தத்தான் தேகமற்ற சீதையை தூக்கிச் சென்றான் (வைதேஹி) என்று இராமான் சொன்னான் என்பதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

“सुकुमारि सुहाई़’ என்று இராமன் சொல்வதன் பொருளாவது  “அவள் மிகவும் மென்மையானவள்.  கரடுமுரடான இந்த வனத்திற்கு வரத் தகுதி அற்றவள். ஆனாலும் என் மீது கொண்டிருந்த அன்பின் காரணமாக உடன் வந்தாள். இப்பொழுது அவளில்லாமல் எனக்கு எந்தச் சுகமும் இல்லை” என்கிறான். இதையே துளசிதாசர்  தன்னுடைய கவிதாவளி என்ற நூலில் கூறியுள்ளார்.

पुर ते निकसी रघुबीर-बधू, धरि धीर दये मर्ग में डग है ।

झलक भरि भाल कनी जल की, पुट सूखि गये मधुराधर वै ॥

फिरि बूझति हैं-”चलनो अब केतिक, पर्णकुटी करिहौ कित है?”

तिय की लखि आतुरता पिय की अँखिया अति चारु चलीं जल च्वै॥

இராமன் சீதை இலக்ஷ்மணன் மூவரும் வனவாசத்திற்காக அயோத்தியிலிருந்து இரதத்தில் கிளம்பி ஓரளவு தூரம் சென்ற பிறகு ஸ்ருங்கிபேரபுறம் நோக்கி நடக்கிறார்கள். நல்ல வெயில். இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே சீதையின் நெற்றியில் வியர்வைத் துளிகள். தண்ணீர் இல்லாமல் உதடுகள் வறண்டன. இராமனை நோக்கி “ஐயனே! இன்னும் எவ்வளவு தூரம் நாம் நடக்கவேண்டும். எவ்வளவு தூரத்தில் பர்ணசாலை அமைப்பீர்கள்” என்று கேட்கிறாள். இராமனுக்கு அவளது வேதனை புரிந்தது. அவள் களைத்துவிட்டாள் ஓய்வெடுக்க விரும்புகிறாள் என்று புரிந்து கொண்டான். அரணமனையில் இராணியாக உள்லசாமாக இருந்தவள் இன்று இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறாளே என்பதை நினைத்து இராமனின் கண்களில் கண்ணீர் வந்ததாம்.

மீண்டும் துளசிதாஸ்

ஹனுமனின் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டான் இராமன். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்மீகி இராமாயணத்தில் இராமன் தான் பதிலுரைக்கவில்லை. மாறாக இலக்ஷ்மணன்தான் பதிலளித்தான்.. காரணம் இராமனுக்கு ஹனுமனைத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை அந்நியன். ஒரு அந்நியனிடம் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூற விரும்பவில்லை. மேலும் அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், எந்த அரசரும் தனக்குச் சமமாக உள்ளவர்களிடம்தான் பேசுவார்கள். அதனால் அந்தப் பொறுப்பை இலக்ஷ்மணனிடம் விட்டுவிட்டார். இலக்ஷ்மணனும் துளசிதாசர் சொன்ன விவரங்களையே வால்மீகி இராமயணத்தில் கூறி உள்ளார்.

ஹனுமான் கேட்டான் “இந்தக் கடினமான கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் மிருதுவான பாதங்கள் கொண்ட தாங்கள் ஏன் வந்தீர்கள்? “काठिन भूमि कोमल पद गामी। कवन” என்று கேட்டதற்கு  தந்தையின் கட்டளைப்படி ‘हम पितु बचन मानि बन आए! வந்தோம் என்று சுருக்கமாகச் சொல்கிறார்.

இராமன் ஹனுமனிடம் எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். संग नारि सुकुमारि सुहाई.எப்படிப்பட்ட அழகு? ஏற்கனவே பல இடங்களில் சீதையின் அழகைத் துளசி தாசர் சொல்லியுள்ளார். ஆனால் இந்த இடம் ஒரு சிறப்பு  வாய்ந்த இடம். துளசிதாசரின் புலமைக்கு ஒரு எடுத்தக்காட்டு. அதாவது சீதையை இராவணன் அபகரித்துச் சென்றவுடன் இராமன் சீதையைத் தேடி வனத்தில் அலைகிறான். மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நதிகள் ஆகியவற்றிடம் சீதையைப் பற்றி விசாரிக்கிறான்.

कुंद कली दाड़िम दामिनी। कमल सरद ससि अहिभामिनी॥

बरुन पास मनोज धनु हंसा। गज केहरि निज सुनत प्रसंसा

இயற்கை எல்லாம் இன்று மகிழ்கிறது — 

அவள் இல்லாத உலகம், 

அழகை மீண்டும் புகழ்கிறது! 

ஆனால் என் இதயம் — 

அவள் இல்லாமல், 

அழகின் அர்த்தம் இழந்துவிட்டது!

“குந்த மலரின் மொட்டு, மாதுளை பழம், மின்னல், தாமரை, சரத்கால சந்திரன், பாம்பு, வருணனின் பாசம், மன்மதனின் வில், அன்னப்பறவை, யானை, சிங்கம் — இவை எல்லாம் இன்று தங்கள் அழகைப் பற்றி புகழப்படுகிறதைக் கேட்டு மகிழ்கின்றன.”

இந்தச் ஸ்லோகம், அவளின் அழகுடன் ஒப்பிடப்படும் இயற்கை உருவங்கள், இப்போது சீதையைக் காணாமல், தங்கள் அழகைப் பற்றிப் புகழப்படுவதால் மகிழ்கிறார்கள் என்கிற விலாபக் கவிதை.

இயற்கையின் அழகு கூட சீதையின் அழகின் முன்னிலையில் மங்கியதாக இருந்தது. இப்போது அவள் இல்லாததால், அவை தங்கள் பெருமையை மீண்டும் கேட்டு மகிழ்கின்றன.

 இராமன்  வைதேஹியைத்  தேடி இங்கு வந்தோம்.என்று சொல்கிறான். இதை ஏன் ஹனுமனிடம் சொல்லவேண்டும்? ஹனுமன் அந்தண வேடத்தில் உள்ளான். திருமணத்தில் கணவன் மனைவியிடம் உன்னை வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணி போல பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறான்.  அந்தணன் என்ற முறையில் ஹனுமன்  இதை அறிந்திருப்பான். அதனால் எனது மனைவியான வைதேஹியைத் தேடி இங்கு வந்தேன் என்று சொல்கிறான்..

இராமன் எங்கள் சரித்திரத்தை நான் சொல்லிவிட்டேன். இனி உனது கதையைச் சொல் आपन चरित कहा हम गाई। बिप्र कहहु निज कथा“! உரையாசிரியர்கள் இதுவரை உள்ள “आपन चारित!  இராமாயணத்தையே இராமன் சொல்லிவிட்டான் என்கிறார்கள் . எப்படி? ‘कोसलेस दसरथ के जाए” இது பால காண்டம் हम पितु बचन मानि बन आए य இது அயோத்யா காண்டம்  “इहाँ हरी निसिचर बेदेही இது ஆரண்ய காண்டம் “बिप्र फिरहिं हम खोजत तेही இது கிஷ்கிந்தாக் காண்டம் .இதைச் சொல்லிவிட்டு ஹனுமனிடம் அவனைப் பற்றிய விவரத்தைக் கேட்கிறான்., ‘कहहु बिप्र निज कथा बुझाई இதன் மறைமுகமாகன பொருள் என்னவென்றால் உனது பேச்சிலும் உச்சரிப்பிலும்  வேதங்களின் சாயல் தெரிகிறது.. இதைத்தான் வால்மீகியும் கூறி உள்ளார்

न अन् ऋग्वेद विनीतस्य न अ\-\-यजुर्वेद धारिणः |

न अ\-\-साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || ४-३-२८

नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |

बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || ४-३-२९

வால்மீகி ராமாயணத்தின்படி இராமன் இலக்ஷ்மணனிடம் ஹனுமன் இதுவரை பேசியதை வைத்து அனைத்து வேதங்கள் மற்றும் இலக்கணங்கள் தெரியாதவனால் இவ்வாறு பேசமுடியாது. என்று கூறுகிறான். அதைத்தான் சுருக்கமாக துளசிதாசர் கூறிவிட்டார்,. அதுபோக துளசிதாசர் “निज कथा” என்ற பதத்தையும் கொடுத்துள்ளார். இதன் பொருள் உனது தந்தை பெயர், உனது பெயர், என்ன குலம், உனது கல்வி, குருவின் பெயர், இந்த காடுகளில் நீ ஏன் சுற்றுகிறாய், யாரால் அனுப்பப்பட்டு நீ இங்கு வந்தாய் போன்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். இராமனுக்குத் தெரியாததா? ஹனுமான் வானர வடிவத்தை விட்டு இளம் பிராமணனாக வந்துள்ளான். உருவத்தை மறைத்தது போல் விவரங்களையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற தொனியில் சொல்கிறான்.

தனது விவரத்தை ‘சரித’ என்று சொல்லுகிறான் ஆனால் ஹனுமனின் விவரங்களை ‘கதா; என்று சொல்லுகிறான். இதன் உட்பொருள்  “எங்களுக்கு ஒரு பிரச்னை நிகழ்ந்துள்ளது அதனால் நாங்கள்  கோரமான வனத்தில் சுற்றுகிறோம். உனக்கு அப்படி என்ன பிரச்னை வந்துள்ளது? நீ ஏன் இந்த அடர்ந்த வனத்தில் சுற்றுகிறாய்” என்று தெரிந்து கொள்வதற்காக.

**

ராமாயணத்தில் வரங்கள் (56) ராவணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,834

Date uploaded in London – 6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (56) ராவணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் என்ற பெயரை அடைவது’ என்ற ஸர்க்கமாகும்.

ஒரு சமயம் புஷ்பக விமானத்தில் ராவணன் செல்லும் போது அது ஒரு இடத்தில் அசையாமல் நின்று விட்டது. ஏன் இப்படி இந்த விமானம் இங்கு நின்று விட்டது என்று ராவணன் யோசித்த சமயத்தில் சிவபெருமானின் அனுசரராகிய நந்தீஸ்வரர் அங்கு வந்து ராவணனிடம், ‘இது சங்கர பகவான் எழுந்தருளியிருக்கும் இடம். நீ திரும்பிப் போய் விடு” என்றார்.

கோபமடைந்த ராவணன், ‘இந்த சங்கரன் என்பவன் யார்?’ என்று கேட்டவாறே கைலாஸத்தை நெருங்கினான். அங்கு வானர முகத்துடன் இருந்த நந்தீஸ்வரரைப் பார்த்து அவன் அலட்சியம் செய்தான். இதனால் வெகுண்ட நந்தீஸ்வரர், “என் வானர முகத்தைக் கண்டு எள்ளி நகையாடினாய்.. உன் குலத்தை அழிக்க வானரர்கள் உதிப்பார்கள்’ என்றார்.

ராவணன் கைலாஸ மலையைப் பெயர்த்து எறிய எண்ணம் கொண்டு அந்த மலையின் அடியில் கைகளை வைத்து மலையைக் குலுக்கினான். உடனே சங்கரர் அந்த மலையை தன் திருவடிப் பெருவிரலினால் விளையாட்டாக அழுத்தினார்.

கைகள் நசுக்குண்ட நிலையில் ராவணன் ஓவென்று அலறினான். உடனே அவனது மந்திரிகள் அவனிடம் சிவபெருமானை வணங்கித் துதிக்குமாறு கூறினார்கள். ராவணனும் அப்படியே ஸ்தோத்திரங்களால் சிவனைத் துதிக்கலானான்.

இதனால் மகிழ்ந்த சங்கரர், “ஓ! தசானனா! நீ இட்ட கூச்சலினால் உலகமே நடுங்கியது. ஆகவே இனி ராவணன் என்ற பெயரை இட்டு அனைவரும் உன்னை அழைப்பார்கள் என்றார்.

அப்போது ராவணன் அவரை வணங்கி, ‘மஹாதேவரே. பிரஸன்னராய் இருக்கிறீர்கள் என்றால் வருந்திக் கேட்கும் எனக்கு ஒரு வரத்தை அருள்வீராக’ என்றான்.

ப்ரீதோ யதி மஹாதேவ வரம் மே தேஹி யாசத: |

   உத்தரகாண்டம், பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 34

மஹாதேவ – ,மஹாதேவரே                                           ப்ரீதி: – பிரஸன்னராய்                                                  யதி – இருக்கிறீர்கள் என்றால்                                       யாசத: – வருந்திக் கேட்கும்                                              மே – எனக்கு                                                                வரம் – ஒரு வரத்தை                                                         தேஹி – தந்தருள்வீர்

இப்படிச் சொன்ன ராவணன் தனக்கு தீர்க்க ஆயுளைக் கேட்டதோடு ஒரு சஸ்திரத்தையும் தந்தருளுமாறு வேண்டினான்.

வாஞ்சிசதம் சாயுஷ: சேஷம் சஸ்த்ரம் த்வம் ச ப்ரயஸ்ச  மே|

உத்தரகாண்டம், பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 36

வாஞ்சிசதம் – பிரார்த்திக்கப்பட்டதாகிற                                  சேஷம் – குறையாமலிருக்கிற                                          ஆயுஷ: ச – ஆயுளையும்                                                சஸ்த்ரம் ச ஒரு சஸ்திரத்தையும்                                          மே – எனக்கு                                                            ப்ரயஸ்ச – தந்தருள வேண்டும்.

சிவபெருமானும் உடனே அப்படியே அருளினார்.  சந்திரஹாஸம் என்ற வாளை ராவணனுக்குத் தந்தார். அத்தோடு ராவணனைப் பார்த்து சங்கரர், “இந்த வாள் உன்னால் அவமரியாதை செய்யப்படத் தக்கதன்று. அப்படி அவமரியாதை செய்யப்பட்டால் இது என்னிடமே திரும்பி வந்து விடும்” என்றார்.

ராவணன் அதைப் பெற்றுக் கொண்டு தன்னிடத்திற்குத் திரும்பினான்.

இந்த வரம் கேட்டுப் பெற்ற ஒன்றாகும்.

**