Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
பொருள்: இறைவா! உனது திருவடிகளைத் தவிர நான் வேறென்ன நினைப்பேன்? வேறு புகலிடம் எனக்கு இல்லை. இந்த ஒன்பது வாசல்கள் கொண்ட உடலை (ஒக்க அடைக்கும் போது) உயிர் பிரியும் காலத்தில், உன்னை நினைத்து உணரமாட்டேன். அதனால், இப்போதே உன் பாதங்களை வணங்கி சரணடைகிறேன் என, பூம்புகலூர் இறைவனைப் போற்றி அப்பர் பாடியுள்ளார்.
***
மார்ச் ஆறாம் தேதி (2026) அப்பர் பெருமானையும் அக்னீச்வரரையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது கும்பகோணம் முதியோர் இல்லமான ஸ்ரீவத்சம் கட்டிடத்திலுள்ள டிவைன் இன் DIVINE INN ஹோட்டல் அறையிலிருந்து புறப்பட்டு திருச்செங்காட்டன் குடி, திருப்புகலூர் , திருவாஞ்சியம் ஆகிய மூன்று சிவன் கோவில்களையும் மூன்றே மணி நேரத்தில் தரிசித்தேன். நான் எடுத்த புகைப்படங்களையும் கண்டு களியுங்கள்.
திருப்புகலூர், பாடல் பெற்ற சிவத்தலமாகும். அக்னி பகவான் சிவனை வழிபட்ட தலமாகவும், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த இடமாகவும், சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய அற்புதத் தலமாகவும் இது போற்றப்படுகிறது.
முக்தி தலம்: திருநாவுக்கரசர் தனது 81-வது வயதில் திருப்புகலூர் (அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்) என்னும் தலத்தில் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.
இறுதி பதிகம்: “எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேன்” எனத் தொடங்கி, “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்” என முடியும் பதிகத்தை பாடினார்.
சிறப்பு: இங்கு அப்பருக்கெனத் தனியாகத் திருமடம் மற்றும் நந்தவனம் உள்ளன. இத்தலம் திருநாவுக்கரசர் மட்டுமின்றி, முருக நாயனார் அவதரித்த தலமாகவும், சுந்தரர் பாடிய தலமாகவும் போற்றப்படுகிறது.
இங்குள்ள அக்னீஸ்வரர் கோயிலில் அப்பர் தனது இறுதி நாட்களைக் கழித்துச் சிவத்தொண்டு புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Appar/ Tiru Navukkarasar
நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது.
இறைவன் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது.
திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.
சிறப்பு: திருநாவுக்கரசர் சிவனுடன் கலந்த இடம். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய 75-வது காவிரி தென்கரைத் தலம்.
சிறப்பம்சம்: அக்னி பகவான் காட்சியளிக்கும் அபூர்வ தலம்.
அக்னி வழிபட்ட தலம்: அக்னி பகவான் இத்தலத்தில் சிவனை வணங்கித் தன் பாவம் நீங்கப் பெற்றதால், இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
செங்கல்லைப் பொன்னாக்கியது: சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூருக்குச் செல்லும்போது, அவருக்காகச் சிவபெருமான் இத்தலத்தில் செங்கற்களைப் பொன் கற்களாக மாற்றிய அற்புதத் தலம்.
வேளக்குறிச்சி ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில்
கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்திற்கு எதிரில் அகழி இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தம், அக்கினி தீர்த்தம் எனப்படுகிறது.அதன் படிக்கட்டருகே சந்திர சேகரர் சன்னதி அமைந்துள்ளது.
ராஜ கோபுர வாயிலைக் கடந்தவுடன் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அம்பிகையின் சன்னதியைக் காண்கிறோம். கருந்தாழ் குழலி என்று இந்த அம்பிகை இத்தலத்துத் தேவாரப் பாடலில் குறிப்பிடப்படுகிறாள். வடமொழியில் இந்த இறைவியை சூளிகாம்பாள் என்று அழைக்கின்றனர்.
இத்தலத்தின் முக்கிய சன்னதி அக்னீசுவரர். சரண்யபுரீசுவரர், கோணப்பிரான் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இதை ஒட்டி மற்றும் ஓர் சிவ சன்னதி உள்ளது . அங்குள்ள சுவாமிக்கு வர்தமாநீசுவரர் என்றும் அம்பிகைக்கு மனோன்மணி என்றும் பெயர்கள். இந்தப் பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் முருக நாயனார் ஆவார். அக்நீசுவரரைப் பாடிய திருஞானசம்பந்தர் வர்த்தமானீசுவரரையும் ஒரு பதிகத்தால் பாடியிருக்கிறார். அதில் முருக நாயனாரது தொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
உட்ப்ராகாரத்தில் கணபதி ,பூதேஸ்வரர், பவிஷ்யேசுவரர், அகோர லிங்கம், சிந்தாமணீசுவரர் ஆகிய மூர்த்திகளும், ததீசி, பராசரர், பிருகு, புலஸ்தியர்,ஜாபாலி, பாரத்வாஜர், வாமதேவர், ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்களையும் தரிசிக்கலாம். உள் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அப்பர் (திருநாவுக்கரசர்) சன்னதியும் உள்ளது.
***
அப்பர் ஐக்கிய விழா பத்து நாள் நிகழ்வுகள்
இத்தலத்தின் பிரமோற்சவம் வைகாசி விசாகத்தை முன்னிட்டுப் பத்து நாட்கள் நடைபெறுகிறது
முதல் நாளன்று, சூலை நோய் தீரப் பெற்ற வரலாற்று நிகழ்ச்சி விழாவும், இரண்டாம் நாள் பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் இட்ட பொது, ” மாசில் வீணையும் ” என்ற பதிகம் பாடி சிவானந்தத்தில் திளைத்திருந்ததும், மூன்றாம் நாள் சமணர்கள் ஏவிய யானை இவரைத் தீங்கு செய்யாது வணங்கிச் சென்றதும், நான்காம் நாள் சமணர்கள் இவரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது, நமசிவாயப் பதிகம் பாடிக் கரை ஏறியதும், ஐந்தாம் நாள், பெண்ணாகடத்தில் சூலக் குறியும், ரிஷபக் குறியும் தோள்களில் பொறிக்கப் பெற்றதும், ஆறாம் நாள் , திருநல்லூரில் திருவடி தீக்ஷை பெற்றதும், ஏழாம் நாள் திங்களூரில் அப்பூதி அடிகளின் பாம்பு தீண்டிய மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், எட்டாம் நாளன்று திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் மூடியிருந்த ஆலயக் கதவைப் பதிகம் பாடித் திறந்ததும், ஒன்பதாம் நாள் பழையாறை வடதளியில் சமணர்களால் மூடப்பட்டிருந்த ஆலயத்தைப் பதிகம் பாடித் திறந்ததும், கயிலை யாத்திரை செய்து, திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டதும், பத்தாம் நாள் காலையில் திருப்பைஞ்ஞீ லியில் கட்டமுது பெற்றதும் ஆகிய நிகழ்ச்சிகள் ஐதீக விழாக்களாக நடைபெறுகின்றன.
பத்தாம் திருநாளான சித்திரை சதயத்தன்று மாலை அப்பர் பெருமான் ,ப்ராகாரத்திலுள்ள கட்டமுது மண்டபத்திலிருந்து புறப்பாடாகிப் பிராகாரத்தில் எழுந்தருளுகிறார். அவர் உழவாரப் பணி செய்ததை நினைவு கூறுவதாகப் பிராகாரத்தில் உழவாரப் பணி செய்யப்படுகிறது.
அப்போது இறைவன் அவரைச் சோதிக்க வேண்டி அவ்விடத்தில் பொன்னும்,மணிகளும் தோன்றச் செய்தபோது, நாட்டம் எதுவும் கொள்ளாமல் அவற்றைப் பருக்கைக் கற்களோடு கோயிலுக்கு வெளியில் அகற்றிய வரலாறும் நடத்திக் காட்டப் படுகிறது. அப்பரது பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் தேவ லோக அரம்பையர்களை அவருக்கு முன்னே தோன்றி நடனமாடச் செய்தபோது, ஐம்புலன்களையும் வென்ற நாவுக்கரசர், ” பொய்ம்மாயப் பெருங் கடலில்.. ” எனத் துவங்கும் பதிகத்தைப் பாடியவுடன் அவரது உறுதியைக் கண்ட அரம்பையர்கள் அங்கிருந்து அகன்ற வரலாற்றைப் பிராகாரத்தில் செய்து காட்டுகிறார்கள். சிறுமியர்கள் நடனம் ஆடிவிட்டுப் பிறகு அப்பர் பெருமானை வலம் வந்து திருநீறு பெற்றுக் கொண்டு செல்வதாக நடத்திக் காட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சிகள், இவ்வாலயத்தை நிர்வகிக்கும் வேளக்குறிச்சி ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடை பெறுகிறது.
பிறகு இரவு 12 மணி அளவில் ப்ராகாரத்திலுள்ள அப்பர் சன்னதியில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அலங்காரமாகி வீதி புறப்பாடு நடைபெற்று,மீண்டும் கோயிலுக்குக் காலை சுமார் 5 மணிக்கு வந்து சேர்ந்தவுடன், அப்பர் சுவாமிகள் நேராக அக்னீசுவரப் பெருமான் சன்னதிக்கு, “எண்ணுகேன் ” எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடியவாறு வந்தடைகிறார். சுவாமி சன்னதிக்குள் சென்றதும் நாம் காண்பது ஒளிப் பிழம்பு மட்டுமே. ” அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார் ” என்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுவதை நேரில் காண்கையில் புல்லரிக்கும்; பேரானந்தம் கிடைக்கும் .
Muruga Nayaanr
Sundrar got Golden Bricks
Appar Shrine
செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது:
இங்கு வந்த சுந்தரர், ஆலயம் மூடியிருக்கவே, களைத்தவராக, அங்கிருந்த செங்கல்லைத் தலைக்கு வைத்தவாறு உறங்கி விட்டுக் கண் விழித்த போது ,அக்கல்லானது செம் பொன்னாக மாறி இருப்பதைக் கண்டு பரவசமாகித் , ” தம்மையே புகழ்ந்து .. ” எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் பாடினார்
திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை ‘தம்மையே புகழ்ந்து‘ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
ஆலய முகவரி
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்
திருப்புகலூர், நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN – 609704
Subham-
Tags- திருப்புகலூர், அக்னீஸ்வரர் தரிசனம் , அப்பர் , திருநாவுக்கரசர் , சதயம், ஐக்கிய விழா ,எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?, pictures of Tiruppugalur, London Swaminathan
** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம்
ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும்,
குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது – பெரிய புராணம்.
*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது.
***
மனு நீதிச் சோழன் கதை
சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி
மணி அசைவு உற அவ் இசை மிகு துயரில் செவியினில் அடி
பட வினவுமின் அதி தீது … பசு இறந்த தனது கன்றை எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி மனு நீதிச் சோழனின் ஆராய்ச்சி மணியைச் சென்று அசைத்து ஆட்ட, அந்த மணியின் ஒலி மிக்க துயரை விளைவித்து
அரசனின் காதுகளில் ஒலிக்க, மிகவும் கொடிய செயல் ஏதோ
நடந்திருக்கின்றது, போய் விசாரிக்கவும் என்று அவர் சொல்ல,
துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர
சிவ சிவ பெறுமது ஒர் சுரபி அலமர விழி புனல் பெருகிட
நடுவாகப் பரவி … நிச்சயமாக இது பெரிய தவறாகும் என்று எழுந்து வந்த மன்னனாகிய மநு மனம் கசிந்து, அரகர சிவசிவ என்ற வார்த்தைகள் வரச் செய்த ஒரு பசு வேதனைப்பட்டு கண்ணீர் பெருகுதலைப் பார்த்து, நடு நிலைமையை அறிந்து இறைவனைத் தியானித்து,
அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு
பிளவொடு படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள்
ஆரூர்ப் படியில் அறுமுக … அந்தப் பசுவுக்கு துயரத்தைத்
தரும்படியாக ரதத்தை ஓட்டிய குற்றத்துக்கு ஆளான தன் மகனை உடல் இரண்டு பிளவாகும்படி, அவன் மேல் படியுமாறு ரதத்தை நடத்தும்படி சொன்னவனாகிய மநு நீதிச் சோழன் ஆட்சி செய்த திருவாரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஆறு முகனே,
மகனே, விநாயகப் பெருமானின் தம்பியே, குமரனே, அரசர்கள் தலைவனே, சரவணப் பெருமாளே, கடல் முறை இடும்படி வேல் கொண்டு செலுத்திய பெருமாளே.
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
*****
மனுநீதிச் சோழன்கதை
திருவாரூரில் மனுநீதிச் சோழன் என்பவன் அரசாண்டு வந்தான். இவனது கதை பெரிய புராணத்திலும் , சிலப்பதிகாரத்திலும், பழமொழியிலும் உள்ளது. அவனது மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி நூறு மைல் (100 mph) வேகத்தில் தேரை ஓட்டிச் சென்றான். அபோது துள்ளிக் குதித்து வந்த ஒரு பசு மாட்டின் கன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தக் காலத்தில் போக்குவரத்து போலீஸோ சிக்னல் லைட்டோ (No Traffic Police or Signal light) கிடையாது. ஆனால் அரண்மனை வாசலில் எமர்ஜென்ஸி பெல் (Emergency alarm bell) உண்டு. யாருக்காவது துயரம் என்றால் உடனே ஓடிப் போய் காலிங் பெல்லை (Calling Bell) அமுக்கினால் அரசின் வேலைக்காரர்கள் அல்லது மன்னர் அல்லது அமைச்சரே நேரே வந்து மனுவை வாங்கிக் கொள்வார். இதை ஒரு பசு மாடும் தினமும் கவனித்து வந்தது. அந்தப் பசு மாட்டின் கன்று ட் ரா ஃபிக் ஆக்ஸிடெண்டில் (Traffic accident) இறந்தவுடன் அந்த வண்டி ‘ஸ்டாப்’ பண்ணாமல் போனவுடன் ஓடி வந்து அரண்மனையின் ‘காலிங் பெல்’லை அடித்தது. அந்த பெல்லின் பெயர் ஆராய்ச்சி மணி. மன்னன் இதுவரை அந்த சப்தத்தைக் கேட்டதே இல்லை. அது துருப்பிடித்து போயிருந்தாலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் (good working condition) இருந்தது!
மன்னர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வாயிலுக்கு ஓடி வந்து பார்த்தால் ஒரு பசு மாடு நின்று கொண்டிருந்தது. “ஓஹோ, ஏதோ ஒரு மிஸ்டேக் (mistake)கில் கொம்பு கயிற்றில் மாட்டிக் கொண்டு அடித்தி ருக்கும் அதனால் என்ன, ஒரு கட்டு அகத்திக் கீரை வாங்கிப் போடு! அது போய்விடும்” என்று ஒரு மந்திரி சொன்னார். இப்படி விவாதம் நடக்கையில் அரசு நியமித்த 007 ஜேம்ஸ்பாண்டு (007 James Bond) ஓடி வந்து உளவுத் தகவல் சொன்னான்.
“மன்னர் மன்னா! உன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றான். அதன் தாய் இங்கே வந்து உன் முன்னால் நிற்கிறது என்றான். பசுவின் காதிலும் அது விழுந்தவுடன் எல்லோரையும் பின் தொடர்ந்து வருமாறு அது ‘சிக்னல்’ (Signal) கொடுத்து விட்டு, ஆம்புலனஸ் கார் சப்தம் போடுவது போல ‘நீனா நீனா நீனா’, ‘உய்ந் உய்ந் உய்ந்’ என்று ஓலமிட்டுக் கொண்டே (accident spot) ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தது.
மன்னனுகுக்கு வருத்தமும் கோபமும் ; என்ன செய்யலாம் என்றான்? உடனே ஒரு திராவிட அமைச்சர் கேஸை (case) யாருக்கும் தெரியாமல் அமுக்கிவிடலாம் என்றார். அதற்குள் ஒரு பிராஹ்மணன் நூறு தங்க பசுங் கன்றுகள் செய்து பிராஹ்மணாளு க்குத் தந்தால் போதும். அதுதான் பிராயச் சித்தம் என்றார். ஒரு புத்திசாலி அமைச்சர், மநு நீதி சாஸ்திரத்தில் சொன்ன தண்டனையைச் சொன்னவுடன், “அப்படித்தான் செய்யவேண்டும்; ‘பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்; கொண்டா என் மகனை என்றான். மன்னன்; ஏறினான் தேரில்; 70 மைல் ஸ்பீடில் (70 mph) போய் மகனைக் கொன்றான்; தேவர்கள் பூமாரி பெய்தனர்.
உன் நேர்மையை மெச்சினோம்; பசுவின் கன்றுக்கும் உன் மகனுக்கும் உயிர்ப் பிச்சை தந்தோம் என்று சொல்ல இருவரும் உயிர் பெற்று நடந்தனர்.
***
மன்னா! நேர்மையாக நாட்சி நடந்தால் அங்கே பயிர் செய்யாமலேயே தானியங்கள் விளையுமென்று வள்ளுவன் தமிழ் வேதம் செப்புவதை நீ அறியாயோ? காளிதாஸன் ரகுவம்ஸ காவியத்தின் ஐந்தாவது அத்திய,,,யத்தில் ரகு என்ற மன்னன் கௌத்ஸ முனிவருக்கு 14 கோடிப் பொன்னை குபேரனிடம் வாங்கிக் கொடுத்ததை அறியாயோ? ரகு படை எடுக்க, முதல் நாள் இரவில் ஆயுத ரதத்தை தயார் செய்தவுடன் குபேரனே பயந்து போய் இரவோடிரவாக 14 கோடிக்கும் மேல் அவன் கஜானாவில் கொட்டி நிரப்பினானே. அது போல உன் நாட்டிலும் தன, தான்யம் செழிக்கும் என்று தேவர்கள் சொன்னார்கள்:
சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும்- மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்
முறைமைக்கு முப்பிளமை யில் – பழமொழி
மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை– நறுந்தொகை, அதிவீரராம பாண்டியன்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள் 559
நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையும் தொக்கு – குறள்
தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.
–subham
Tags- முக்தி தரும் தலங்களின் பட்டியல்! யோகிகள் உணரும் பத்து நாதங்கள் ! மனுநீதிச் சோழன் கதை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தினமணி 22-3-26 இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை!
லிப்டில் போகும் போது உங்கள் எடை கூடுகிறதா? குறைகிறதா? விண்வெளியில் உடலின் எடை பற்றிய மர்மம்!
ச. நாகராஜன்
புவி ஈர்ப்பு விசை பற்றிய புதிரான பல உண்மைகளை சாதாரணமாக நாம் அறிவதில்லை. அந்த அதிசய உண்மைகளைப் பற்றி சற்று அறிந்து கொள்வோமா?
லிப்டில் ஏறியவுடன் அது மேலே கிளம்பும் போது உங்கள் கால்களில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. லிப்ட் மேலே செல்லச் செல்ல நீங்கள் அந்த அழுத்தத்திலிருந்து விடுபட்டு சற்று லேசாக உணர்கிறீர்கள்.
எடை பார்க்கும் மெஷினை லிப்டில் வைத்து இதைச் சரி பார்க்கலாம். லிப்ட் மேலே ஏறத் தொடங்குகையில் உங்கள் எடை சற்று கூடும். ஆனால் மேலே ஏற ஆரம்பித்தவுன் எடை மெஷினில் உங்கள் எடை குறைந்து பழைய நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்.
68 கிலோ எடை என்பது 75 கிலோ வரை உயரலாகும். இந்த அதிசயம் எதனால்?
இதே போலவே விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் எடையற்ற நிலையில் இருப்பதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மை என்ன? அவர்கள் எடை மாறுவதே இல்லை. பூமிக்கு மேலே 250 மைல் உயரத்தில் உள்ள இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் பூமியின் புவி ஈர்ப்பு விசை 90 சதவிகிதம் என்ற அளவுக்கு வலிமை உள்ளதாகவே இருக்கிறது.
ஆனால் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் விண்வெளி நிலையம் அதனுள் இருக்கும் விண்வெளிவீரர்களுடன் ஃப்ரீ பால் எனப்படும் இயல்வீழ்வினால் பூமியை நோக்கி வருகிறது.
அந்த நிலையம் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பக்கவாட்டில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. பூமியின் வளைவினால் அது பூமியின் மீது மோதுவதில்லை. அது மோதலைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறது.
பூமியில் இருக்கும் நாமோ தரையானது நம்மை எப்போதும் மேலே தள்ளிக் கொண்டே இருப்பதால் நாம் கீழே விழுவதே இல்லை.
விண்வெளி வீரர்களுக்கு புவி ஈர்ப்பு விசையின் செல்வாக்கு உண்டு என்றாலும் விண்கலத்தை மேலே செலுத்தும் அழுத்தம் அங்கு இல்லாததால் அவர்கள் எடையற்ற தன்மையை உணர்கிறார்கள்.
இந்த அன்றாட லிப்ட் அனுபவம் நமக்கு ஒரு மாபெரும் உண்மையை உணர்த்துகிறது. உடல் எடை எப்போதும் மாறுவதே இல்லை. புவி ஈர்ப்பு விசையும் பூமிக்கு அருகில் எப்போதுமே மாறுவதில்லை. மாறுவது என்னவென்றால் லிப்ட் மேலே செல்லும் போது ஏற்படும் அழுத்தம் தான். அதன் காரணமாகத் தான் அப்போது அங்குள்ள எடை பார்க்கும் மெஷின் உங்களின் எடையைக் கூட்டுகிறது.
இதைத் தான் ஐன்ஸ்டீன் முதலில் உணர்ந்தார். அவரது தியரி ஆஃப் ரிலேடிவிடி தத்துவம் கண்டுபிடிக்க முனைந்த போது அவர் இதைக் கண்டார். காலமும் இடமும் கொண்ட வளைவுத் தன்மையினாலும் விரைவு படுத்தும் வேகத்தினாலும் அவர் இந்த (Equivalance Principle) ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்.
அட, லிப்டில் ஏறிப் போவதில் இவ்வளவு பெரிய உண்மை அடங்கி இருக்கிறதா என்று பிரமிப்போடு அடுத்த முறை லிப்டில் ஏறலாமே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாரதர்
ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் சாந்தோக்ய உபநிஷத்திலும் நாரதர் பெயர் அடிபடுகிறது; ஆகையால் வேதத்துக்கும் முந்தியவர் என்றால் மிகையாகாது
நாரதர் தேவரிஷியாகவும், கலகப் பிரியராகவும், ஸ்ரீமந் நாராயணனின் தீவிர பக்தராகவும் அறியப்படுகிறார். மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட!
நாரதர் பெரிய விஷ்னு பக்தர்; த்ரி லோக சஞ்சாரி ; பிரபஞ்சம் விட்டுப் பிரபஞ்சம் செல்லுமற்புத சக்தி உண்டு; சென்றவிடமெல்லாம் சர்ச்சசையைக் கிளப்புவார் ; அது நன்மையில் முடியும்; வீணையைக் கண்டு பிடித்தவர்; எப்போதும் வீணையைக் கையில் வைத்திருப்பார்; நடராஜர் நடனத்தை குதிரைமுகம் கொண்ட இசை மேதை தும்புருவுடன் நின்று ரசிப்பார். இவரைப்பற்றிய எண்ணற்ற கதைகள் உண்டு;
தமிழ் இலக்கியத்தில் முதல் தடவையாக, சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை வருகிறது; இவர் இசை மேதை. ஜோதிட வல்லுநர்; பரம யோகி ; ரிஷிகளின் தலைவர் ; பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்.
பக்தியின் ஒட்டுமொத்த உருவம் இவர்; நாராயண நாராயண என்று வினாடிதோறும் ஜெபிப்பவர். நாரத பக்தி சூத்திரம், நாரத புராணம், நாரத தர்ம சாஸ்திரம் என்று பல நூல்கள் இவர் பெயரில் உள்ளன
தனது பக்தி சூத்திரத்தில் பக்தி எத்தனை வகைப்படும் என்பதை நாரதர் விளக்குகிறார்.
நாரதர் “கலகம் நன்மையில் முடியும்” என்ற தத்துவத்தின்படி, நாரதர் பிரச்சனைகளை உண்டாக்கி, இறுதியில் அதற்குத் தீர்வும் காணும் பல சம்பவங்கள், கதைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
நாரத கலகப் ப்ரியா – பாரிஜாத மரத்தின் கதை:
நாரதர் கலகம் – அனுமன்-ராமன் போட்டி:— சில எடுத்துக்காட்டுகள்
வால்மீகி ராமாயணத்தில் வரும் “தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்” என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமை பற்றிக் கூற! நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.
Narada
Nārada, is a revered divine sage in Hinduism, known as a mind-born son of Brahmā. He is a pivotal figure in Vaishnavism and Puranic literature, recognized for his immense wisdom, devotion, and role as a messenger between the divine and devotees.
In Tamil literature Ilango used the word Naradar Veenai in Silappadikaram.
From Kanchi Shankaracharya’s1894-1994 speech,
Unlike Svetaketu, sage Narada who had mastered all branches of learning, was humble and full of regret that he had been ignorant of the atman. He finds enlightenment in the teachings of Sanatkumara which are included in the Chandogya Upanishad. In the Chandogya Upanishad, Narada speaks about the subjects he learned and they included puranas. From this we infer that they must have existed during the time of the Vedas and the Upanishads.
The Rig Veda describes him as of the Kanwa family. Another authority says he sprang from the head of Brahma.
He is the inventor of veena and the chief of the Gandharvas or heavenly musicians.in later times he is connected with the legends of Krishna.
Narada was also one of the great writers upon law. His textbook called Naradiya dharma sastra has been translated into English by dr jolly 100 years ago.
Narada purana has 3000 slokas. They glorify bhakti. Narada has many other appellations Kali-karaka/strife maker, Kapi vaktra/monkey faced and Pisuna/messenger/spy.
He is always portrayed with Nataraja where he is standing with Tumburu.
Role and Characteristics: He is considered a “king of sages” (Rishi raja) with the ability to travel across heavenly, earthly, and subterranean worlds.
Symbolism: He symbolizes spiritual dedication, musical expertise, and sometimes serves as an instigator of healthy conflict (troubleshooter) to fulfill a higher divine purpose.
Muni Narada also appears in Jainism as a divine sage, representing wisdom and focusing on issues such as discouraging animal sacrifice.
Divine Messenger: Considered the first journalist on Earth, he frequently interacts with deities, humans, and sages, often transmitting crucial information. He is an Inter Galactic Traveller; he can go to any place on earth or universe. He is called Triloka Chanchari
Devotion and Wisdom: As a foremost devotee of Vishnu, he sings his praises while traveling with his musical instrument, the Veena.
The Narada Bhakti Sutra: Credited as the author of this important text, which emphasizes the path of devotion as a means of self-realization.
Role in Mythology: He is portrayed as a creator of necessary conflict or “mischief” that ultimately results in a greater good or lesson, earning him the reputation of a divine troublemaker who facilitates spiritual progress.
Appearance and Attributes: Often described as a serene sage, he is known for his ability to travel freely across all worlds.
Star Trek: The Narada is the name of the mining vessel/warship commanded by Nero, which serves as the primary antagonist ship in the 2009 Star Trek film
· Narada with veena is referred to in Tamil epic Silappadikaram . Narada is distinguished from other sages by the veena which he holds in his hands, being always engaged in singing the praises of Vishnu. His catch phrase is Narayana Narayana.
***
தும்புரு
தும்புரு (Tumburu) இந்து புராணங்களில் போற்றப்படும் மிகச்சிறந்த தேவலோக கந்தர்வ இசைக்கலைஞர் ஆவார். இவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்டவராக வர்ணிக்கப்படுகிறார். இந்திரன் மற்றும் குபேரனின் அவைகளில் பாடக்கூடிய இவர், நாரதருக்கு இணையான இசை ஞானம் கொண்டவர். இவர் வீணை போன்ற நரம்பிசைக் கருவியை வாசிப்பதில் வல்லவர்.
காசியபர் முனிவரின் மூத்த மகனான இவர், குதிரை முகத்துடன் காட்சி தருகிறார்.
நாரதருக்கு இசையில் குருவாகவும், நாரதருக்கு நிகரான இசை வல்லுநராகவும் கருதப்படுகிறார்.
திருப்பதி தும்புரு தீர்த்தம்: திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி இவர் தவம் இருந்த இடம் ‘தும்புரு தீர்த்தம்’ எனப் போற்றப்படுகிறது.
மனைவி: ரம்பா இவருடைய மனைவி.
கதை: இராமாயணத்தில், தும்புரு ஒரு சாபத்தினால் பூமியில் விராத என்ற அசுரனாகப் பிறந்து, பின்னர் ராமரால் சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இவரது இசைத்திறன் நாரத கானத்திற்கு இணையான ‘தேவ கானம்’ என்று போற்றப்படுகிறது. ஆடல் வல்லானின் நடனத்தைக் காண எப்போதும் நாரதர் அருகில் நிற்பார்.
Tumburu
Tumburu is one of the most celebrated celestial musicians in Indian mythology. He is usually recognized with his horse head. This horse faced Gandharva is described in ancient Indian literatures as a master of music, skilled in dancing, good in playing stringed instruments. He leads the Gandharvasin music and singing
Tumburu (तुम्बुरु) was the son of Kaśyapa, son of Marīci and grandson of Brahmā, born of his wife Pradhā. Of the sons of Kaśyapa the four Gandharva sons, Tumburu, Bāhu, Hāhā and Hūhū were noted for their sweet and pleasant conversation
2) (i) This sage was one among the many sages who came from the north to visit Śrī Rāma on his return to Ayodhyā after the exile. Those who came from the north were—Kaśyapa, Vasiṣṭha, Atri, Viśvāmitra, Gautama, Jamadagni, Bharadvāja, Sanakādis, Śarabhaṅga, Durvāsas, Mataṅga, Vibhāṇḍaka and Tumburu. (Uttara Rāmāyaṇa).
2) (ii) Tumburu was one among the ṛṣis who visited Bhīṣma lying on his bed of arrows. (Chapter 47, Śānti Parva).
Tumburu (तुम्बुरु) was a gandharva (demi god) who, owing to a curse, became a demon (yakṣa). Tumburu, in the service of Kubera, lord of treasures, happens to see Rambhā, one of the celestial nymphs and falls in love with her. He tries his luck on her. Being not happy with the attitude of Tumburu, Kubera, curses him to become a terrific demon. On realising his mistake Tumburu begs to Kubera to put a term to the curse. Kubera tells him that he will have an encounter with Rāma and when the latter cuts off his (Virādha’s) arms, he will be relieved from his curse. Till then he will wander in the forest under the name of Virādha.
In Mahabalipuram and Namakkal Trivikrama avatar sculpture shows Tumburu flying in the air.
· Karanagama says that Tumburu and Narada should be shown reciting vocal music in the sculptures of Nataraja.
***
சரபேஸ்வரர்
சரபேஸ்வரர், நரசிம்மரின் உக்கிரத்தைக் தணிக்க சிவனார் எடுத்த அவதாரமாகக் கருதப்படும் உக்கிர மூர்த்தி ஆவார். பறவை (அன்னம்), விலங்கு (சிங்கம்), மனித உருவம் கலந்த வினோத வடிவத்தில், எட்டு கால்களுடன் காட்சி தருகிறார். ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது பகை, பயம் மற்றும் தீவினைகளை அகற்றி, எண்ணிய காரியங்களை வெற்றியாக்கும் என நம்பப்படுகிறது.
அவதார நோக்கம்: ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னும் நரசிம்மரின் கோபம் தணியாததால், சிவபெருமான் சரபப் பறவையாக விஸ்வரூபம் எடுத்து அவரை சாந்தப்படுத்தினார். வைணவர்கள் இதை ஏற்பதில்லை!
பிரசித்தி பெற்ற தலம்: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில் மிக முக்கியமான தலம். சென்னை மயிலை ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தாராசுரம், கிருஷ்ணாபுரம் முதலிய இடங்களில் சரபேஸ்வரர் சிற்பங்கள் உள்ளன
***
Sarabha
Sharabha is a creature in Hindu mythology that is part lion and part bird. According to Sanskrit literature, Sharabha is an eight-legged beast, mightier than a lion and elephant and which can kill the lion. Sharabha, can clear a valley in one jump. In later literature, Sharabha is described as an eight-legged deer.
Śarabha (शरभ) is the name of some wild animal in the Atharvaveda and later. In the classical literature it is a fabulous, eight-legged beast, dwelling in the snowy mountains, a foe of lions and elephants.
It is known as a ferocious form of Lord Shiva—often part-lion and part-bird—created to subdue Narasimha, the avatar of Vishnu. The Vaishnavas refute the portrayal of Narasimha as being destroyed by Shiva-Sharabha and regard Sharabha as a name of Vishnu.
It also appears in Buddhist literature (Sarabhamiga Jataka).
Shiva Purana: Sarabha is an incarnation of Shiva, specifically the “Annihilator” form created to calm Narasimha’s fury.
Mythological Beast: Described in Sanskrit literature as an eight-legged beast or deer, capable of jumping over valleys.
Sharabha according to Kalikagama.—The body of Sharabha should be that of a bird of golden hue, having two red eyes; and it should have two up-lifted wings and eight limbs. Sharabha, which is said to be mightier than an elephant, should have the fierce face of a lion grinning widely, having tusks and wearing Kiriti makuta. The torso of Sharabha resembles that of human male having four hands. The lower part of its body should resemble that of a lion having four legs, sharp claws and a tail. Sharabha should be shown carrying the figure of Narasimha in his human form with upraised folded hands, anjali-mudra.
***
Purushamriga
புருஷாமிருகம்
புருஷாமிருகம் (Purushamirugam) என்பது மனித முகம் மற்றும் சிங்க உடலமைப்பு கொண்ட ஒரு புராண வடிவம் ஆகும். இது தீவிர சிவ பக்தராகவும், குபேர வனத்தைக் காப்பவனாகவும் கருதப்படுகிறது. மகாபாரதத்தில், பீமனுடன் போரிட்ட கதையிலும், சென்னை கபாலீஸ்வரர் கோயில் போன்ற சிவத்தலங்களில் வெள்ளி வாகனமாகவும் இது போற்றப்படுகிறது.
தோற்றம்: மனிதத் தலை மற்றும் சிங்கத்தின் உடலைக் கொண்ட உருவம் ; சிவ பக்தி: சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட இது, சிவலிங்கத்தைக் கண்டால் உடனே பூஜிக்கும் பண்புடையது.
மகாபாரதத் தொடர்பு: பீமனின் பயணத்தின்போது அவனைத் தடுத்து நிறுத்திய கதையில், லிங்க பூஜை செய்வதன் மூலம் பீமன் இதனிடமிருந்து தப்பிக்கிறான்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனிப் பெருவிழாவில், புருஷாமிருக வாகனம் முக்கிய இடம் வகிக்கிறது.
தலம்: கொள்ளிட வடகரையில் உள்ள திருப்பராய்த்துறை (திருமழபாடி) போன்ற சிவத்தலங்களில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
குபேர வனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, இதைப் பெரும் பலம் வாய்ந்ததாக சித்தரிக்கிறது
திரு மழபாடி : காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.
புருஷாமிருகம் பூஜித்து பேறு பெற்ற தலம்,
கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள மழபாடியில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அதற்கு உடல் வலிமையையும், தீர்க்க ஆயுளையும் பிறரால் வெல்ல முடியாத ஆற்றலையும் இறைவன் அருளினார்..
சிவலிங்கத்தைப் பெற தவம் செய்த புருஷாமிருகத்திற்கு பூமியைப் பிளந்து கொண்டு வஜ்ஜிர ஸ்தம்ப வடிவமாக ஈசன் தோன்றினார். அதனால் அவருக்கு வச்சிரஸ்தம்பேஸ்வரர் என்று பெயர். பிரமதேவன் பூஜித்த சிவலிங்கமே இங்கு இந்த வடிவமாகத் தோன்றியது. தான் பூஜித்த லிங்கத்தைக் காணாது திகைத்த பிரமதேவன் இந்த இடத்தில் வந்து அதைப் பார்க்கும் போது லிங்கத்தை புருஷாமிருகம் பூஜித்துக் கொண்டிருந்தது. உடனே பிரம்மா தனது லிங்கத்தை புருஷாமிருகம் திருடிக் கொண்டு வந்து விட்டதென்று எண்ணி அதனுடன் போர் செய்யத் தொடங்கினார். போர் நீடித்துக் கொண்டே போன சமயம் பரமசிவன் லிங்கத்தினின்று தோன்றி, “யாமே இந்த மிருகத்தின் தவத்திற்கு இரங்கி இங்கு வந்து விட்டோம் இந்த மிருகம் திருடவில்லை. இனி யாம் இங்கேயே இருப்போம். நீ இங்கு வந்து பூஜை செய்க” என்று அருளினார்.
சிவபூஜையைத் தொடர்ந்து செய்த புருஷாமிருகம் ஆடகேஸ்வரர் என்ற மூர்த்தி எழுந்தருளியிருக்கும் கீலமலை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தது.
சிவபக்தியில் சிறந்து விளங்கிய புருஷாமிருகத்தை சிவ பகதர்கள் பெரிதும் போற்றுவர்.
பீமனுக்கும் புருஷாமிருகத்திற்கும் நடந்த ஓட்டப்பந்தயத்தில் புருஷாமிருகம் தன்னை ஓட்டத்தில் வென்று விட்டால் பீமனை விட்டு விடுவதாகக் கூறவே பீமன் பந்தயத்திற்கு இணங்கினான். பந்தயத்தில் பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியேயும் ஒரு கால் எல்லைக்கு உள்ளேயும் இருக்கவே புருஷாமிருகம் பீமனைத் தோற்றதாகக் கூறியது.பீமனோ வெளியே இருந்த ஒரு காலைக் காட்டித் தான் வென்றதாகக் கூறினான். இதற்கு நடுவராக இருந்த தர்மபுத்திரர் தீர்ப்பு சொல்ல வேண்டி இருந்தது. அவர் தீர்க்கமாக புருஷாமிருகமே வென்றதாக அறிவித்தார். தம்பிக்காக சலுகை காட்டவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்தது. நடுவுநிலைமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை கூற விழைந்த குருபாததாசர் தனது குமரேச சதகத்தில் 61ஆம் பாடலில் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறுகிறார்.
வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்
வருமென்றும் நேசரென்றும்
வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன
வானென்றும் ஏழையென்றும்
இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்
எள்ளள வுரைத்திடாமல்
எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
ஏற்கச்ச பாசமதமாம்
முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்
மொழிந்திடின் தர்மமதுகாண்
முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று
முன்தருமர் சொன்னதலவோ?
மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட
வளர்ந்தருள் குழந்தைவடிவே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
Purushamriga
Purusha Mrga Vahana in Temples
Purushamriga, translating to “human-beast” in Sanskrit, is a mythological creature from Hindu tradition, often described as having a human head/torso and a lion’s body. it is frequently depicted on the entrance pillars of South Indian temples to ward off evil and absorb worshippers’ sins.
Mythology: Mentioned in the Mahabharata (Sabha Parva), it is considered one of the greatest devotees of Lord Shiva.
Appearance: Typically portrayed with a human face and a lion’s body, sometimes referred to as ‘Vyagra Paada’ (tiger-footed).
Symbolism: It functions as a guardian figure protecting sacred spaces.
Depictions: Examples are found at the Brihadeeswara Temple in Tamil Nadu and the Someswara Temple in Kolar, Karnataka.
It is distinct from the Egyptian Sphinx, with its own specific significance within Indian iconography.
One of the fierce forms of siva is sarabhamurti. Lord siva assumed this form in order to suppress the pride of narasmha, man lion incarnation of Vishnu.
The karanagama describes sarabha as having eight legs, three eyes, long nails two hands and a body glowing like fire. Sarabhamurti is sculpted in Dharasuram and Madurai.
The story of Bhima and the Purusha-mruga (also known as Vyagrapada) is a fascinating episode from the Mahabharata, commonly found in South Indian versions of the epic, which highlights Bhima’s strength, his devotion to Shiva, and the pivotal role of Hanuman.
The Background During the preparation for the Rajasuya Yagna conducted by Yudhishthira, it was considered auspicious to have the presence of a Purusha-mruga—a unique, divine creature with a human face and a lion’s body, who was a great devotee of Lord Shiva. This creature resided in the gardens of Kubera.
The Challenge Bhima was assigned the task of inviting the Purusha-mruga. Upon being invited, the beast agreed to attend the yagna on one condition: Bhima had to win a race against him. If Bhima lost, the Purusha-mruga would eat him.
The Race and Hanuman’s Intervention
The Race: As they ran toward Hastinapura, the Purusha-mruga was much faster and almost caught up with Bhima.
The Escape Plan: Knowing his brother might fail, Krishna had advised Bhima to take three hairs from Hanuman (Bhima’s brother) for protection.
Shiva Devotion: As the Purusha-mruga gained on him, Bhima threw one of Hanuman’s hairs, which immediately turned into numerous Shiva Lingas.
The Delay: The Purusha-mruga, being a staunch devotee of Lord Shiva, had to stop and worship every single Linga, allowing Bhima to get ahead.
The Final Stretch: Bhima used this tactic three times. However, just as Bhima crossed the gates of Hastinapura, the Purusha-mruga managed to grab Bhima’s foot.
The Judgment A dispute arose: was Bhima fully inside, or did the creature rightfully catch him? The case was taken to Yudhishthira. The Purusha-mruga asked Yudhishthira to deliver justice, saying, “As per condition, I can consume his leg.” Yudhishthira, acting with impartiality, ruled that since the leg was outside the door, the beast could eat it.
Bhima and Purushamrga in Krishnapuram
The Resolution Impressed by Yudhishthira’s unbiased judgment—even when it came to his own brother—the Purusha-mruga blessed the Pandavas and decided to bless the yagna with his presence without eating Bhima.
Symbolism: The Purusha-mruga is often regarded as a “Hindu Sphinx”.
Temples: Carvings of the Purusha-mruga can be found in South Indian temples, such as the Thillai Nataraja Temple in Chidambaram and the Bhuleshwar Temple in Maharashtra.
Themes: The story reinforces themes of righteousness (Dharma), the immense power of devotion to Shiva, and the wisdom of Yudhishthira.
–subham-
Tags – Narada, Tumburu, Sarabha, Purushamrga, 42Hinduism through 500 Pictures in Tamil and English 42; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-42, நாரதர் , சரபேசர், புருஷாமிருகம், தும்புரு , சர்ப்ப பக்ஷி, Bhima
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Lord Krishna killed numerous demons and tyrants to restore dharma, primarily during his childhood in Vrindavana and later in Mathura and Dwarka. Key demons included Putana, Trinavarta, Aghasura, Bakasura, Dhenukasura, Keshi, Vyomasura, Narakasura, and his maternal uncle, Kamsa. His elder brother Balarama also joined him in his adventurous deeds.
1
Putana (Witch): Attempted to poison Krishna with her breast milk.
Putana was a demoness sent by King Kansa to kill the infant Krishna by breastfeeding him with poisoned milk. Disguised as a beautiful woman, she entered Gokul, but Krishna sucked her life force along with the poison, killing her.
2
Trinavarta (Whirlwind): Sent by Kamsa to carry away the infant Krishna.
Trinavarta was a demon in the form of a whirlwind sent by King Kansa to kill infant Krishna; he kidnapped the child by creating a massive dust storm in Gokul. As he flew into the sky, Krishna became unimaginably heavy, choking the demon, causing him to crash to the ground dead. Krishna was found unharmed, playing on the demon’s body.
3
Sakatasura (Cart): A ghost inhabiting a cart, broken by infant Krishna.
The Sakatasura anecdote tells of Lord Krishna killing a cart-demon sent by Kamsa to harm him during his childhood. As a three-month-old baby, Krishna kicked over a cart (his disguises) when it tried to crush him, killing the demon.
4
Vatsasura (Calf): Disguised as a calf, killed by being thrown into a tree.
Vatsasura was a demon sent by Kamsa to kill Krishna and Balarama in Vrindavana by disguising himself as a calf. While grazing calves, Krishna recognized the demon, caught him by his hind legs and tail, and spun him to death before throwing him into a tree.
5
Bakasura (Crane Demon):
One day, Kansa called for Bakasura – a fearsome bird – and told him to go get rid of Krishna. At that time, Krishna was playing in the forest with his friends, until a massive shadow fell on them. Looking up, the kids saw a monstrous bird flying straight at them. As Bakasura swooped down with his beak wide open, Krishna grabbed the sharp beak, and jumped right into it. Bakasura’s beak cracked and broke. The pain was too much, and the demon collapsed to the ground, lifeless.
6
Aghasura (Python): Younger brother of Putana, who swallowed the cowherd boys.
Aghasura was a gigantic serpent demon and brother to Putana and Bakasura, sent by Kamsa to kill Krishna in Vrindavan. He took the form of a long snake, creating a cave-like mouth that tempted cowherd boys and calves inside. Krishna rescued them by killing the demon from within, offering him liberation.
7
Dhenukasura (Ass): Killed by Balarama, with assistance from Krishna, at the palm tree forest.
Dhenukasura was a donkey-demon who guarded the Talavana (palm forest) near Vrindavan, preventing anyone from enjoying its fruits. At the urging of cowherd friends, Lord Balarama and Krishna entered the forest, where Balarama shook the trees, provoking Dhenukasura to attack. Balarama swiftly killed the demon by whirling him around and tossing him into a tree.
8
Kaliya (Serpent): Subdued and banished from the Yamuna river.
Kaliya, a Naga (serpent), moved to the Yamuna River to flee Garuda, contaminating the water so heavily that birds and trees died and the area was rendered inhabitable, say Villains Wiki and Facebook post.
While playing, Krishna’s ball went into the river, prompting him to climb a Kadamba tree and jump in to confront the beast,
Kaliya wrapped his coils around Krishna, attempting to kill him. Krishna, as a child, grew in size and began dancing on the snake’s heads, crushing him.
Kaliya’s wives, the Nag-patnis, pleaded for mercy. Krishna granted this, ordering Kaliya to leave the Yamuna forever and return to Ramanaka Dwipa, promising him safety from Garuda.
9
Pralambasura (Fiery/Forest): Slain by Balarama (with Krishna’s aid).
Pralambasura was a powerful demon sent by King Kamsa to kill Krishna and Balarama, who disguised himself as a cowherd boy to join their games in Vrindavan. During a game of tag where losers carried winners, Pralambasura lost to Balarama and carried him, aiming to kill him, but Balarama killed him with a massive blow to the head.
10
Kesi (Horse): A horse demon who was killed by Krishna.
Keshi (also spelled Kesi or Keśī, meaning “the hairy one”) is a fearsome horse-demon who was sent by the evil King Kamsa to kill Lord Krishna.
After his other demons failed to eliminate Krishna, Kamsa sent Keshi, a mighty demon capable of shapeshifting, to Vrindavan to destroy him.
Keshi took the form of a gigantic, ferocious horse. He created chaos in Gokula, terrifying residents, shattering the earth with his hooves, and roaring so loudly that clouds were scattered.
Krishna, along with his cowherd friends, challenged the horse. Keshi charged at Krishna with his mouth open, intending to devour him. Krishna, appearing unfazed, caught the demon’s legs and threw him a significant distance.
Reinvigorated, Keshi charged again. This time, Krishna thrust his left hand into the demon’s gaping mouth
Inside the demon’s throat, Krishna’s hand began to expand, choking Keshi. The demon fell to the ground dead.
11
Vyomasura (Sky/Bat): Killed while trying to hide with cowherd boys.
Vyomasura (“sky demon”) was a magical demon and son of Mayasura, sent by Kamsa to kill Krishna. While playing a game of thieves and sheep with cowherd boys on Govardhana Hill, Vyomasura disguised himself as a cowherd and kidnapped most of the boys, trapping them in a mountain cave. Krishna killed him to rescue his friend
12
Kamsa (Uncle): Tyrannical king of Mathura.
A tyrannical king of Mathura. Maternal uncle of Krishna . son of ugrasena and father of Devaki, mother of Krishna. He married twin daughters of Jarasandha named Asti and Prapti, king of Magadha. He deposed his father Ugrasena. It was foretold that a son born of Devaki should kill him. So he killed all children born to her except two. Balarama, her seventh son was smuggled out to Gokula and was brought up by Rohini. When Krishna was born as the eighth child his parents fled with him. The tyrant then gave orders to kill all vigorous male children . Kamsa persecuted Krishna and at the end Krishna killed him. Because of this he earned the enmity of Jarasandha. Kamsa was also called kalaankura, the crane.
***
13
Narakasura (Demon King): Killed for ruling with terror and imprisoning thousands of women.
Narakasura,, the son of Bhudevi (Earth Goddess) and Vishnu’s Varaha avatar, was known for his tyranny, abduction of 16,100 women, and theft of divine treasures. He was killed by Lord Krishna and Satyabhama (reincarnation of Bhudevi) to restore righteousness, with his death celebrated as Naraka Chaturdashi before Diwali.
Born from the union of Vishnu’s Varaha form and Bhudevi, he was initially pious but grew arrogant and evil due to the influence of Banasura.
He terrorized the three worlds (heavens and earth), stole Aditi’s (mother of gods) earrings, and forced 16,100 women into captivity.
Due to a boon, he could only be killed by his mother. Satyabhama, Krishna’s wife and Bhudevi’s reincarnation, fought him, while Krishna killed him with the Sudarshana Chakra.
Legacy (Diwali): He requested that his death be celebrated as a victory of light over dark, leading to the tradition of Naraka Chaturdashi, where his effigies are burned.
Liberation of Wives: Following his death, Krishna married the 16,100 women rescued from captivity to restore their social honor.
14
Shishupala
Shishupala was a Chedi king in the Mahabharata born with three eyes and four arms, destined to die at Krishna’s hands. Due to a promise made to Shishupala’s mother, Krishna forgave his first 100 insults, but killed him with the Sudarshana Chakra at the Rajasuya Yajna after the 101st insult, granting him liberation.
Birth & Prophecy: Born to Damaghosha and Shrutashrava (Krishna’s aunt), his physical abnormalities vanished when placed on Krishna’s lap, confirming the prophecy.
The Promise: His mother, knowing his destined death, persuaded Krishna to pardon 100 offenses.
Enmity toward Krishna: Shishupala harbored deep hatred after Krishna married Rukmini, who was intended for him.
The Final Insult: At Yudhishthira’s Rajasuya sacrifice, Shishupala insulted Krishna when he was honored as the supreme guest. Krishna unleashed the Sudarshana Chakra after the 100th insult.
Liberation: Shishupala was a reincarnation of Jaya (a gatekeeper of Vishnu) cursed to spend three lives as Vishnu’s enemy. His death by Krishna granted his soul liberation
15
Dantavakra: Dantavakra, the King of Karusha and a cousin to Krishna, was a ferocious enemy of Krishna, acting as a mortal incarnation of Vishnu’s gatekeeper, Vijaya. Seeking to avenge the death of his friend Shishupala, he attacked Krishna alone with a mace but was killed, granting him salvation.
16
Wrestler Chanura
The fight between Chanura/Mushtika and Krishna/Balarama was a pivotal wrestling match held in Mathura, orchestrated by King Kamsa to kill Krishna.
Kamsa invited Krishna and Balarama to a Dhanur Yajna (bow ceremony) intending to trap them. He set up his strongest wrestlers, Chanur and Mushtika, to fight the young brothers, hoping to end them.
Despite the unfair matchup, Krishna fought Chanur while Balarama took on Mushtika. The fight took place in an arena watched by Kamsa.
Krishna defeated and killed Chanur, showcasing his divine strength.
Balarama defeated and killed Mushtik.
Aftermath: Following the defeat of these champions, Krishna killed the tyrant king Kamsa in a subsequent confrontation in the same arena.
17
Wrestler Mushtika
18
Arishtasura (Bull Demon)
The demon Ariṣṭa wanted to kill Krishna and Balarāma, and thus he assumed the form of a huge bull with sharp horns. Everyone in Kṛishṇa’s cowherd village became terrified when Ariṣṭāsura approached it;but twhen the bull demon charged him he seized him by the horns and threw him to the ground and thrashed him like a pile of wet clothing. The demon gave up his life.
19
Kala Yavana
Kalayavana- kaalayavana
Kālayavana (कालयवन).—a kind of yavanas and enemy of Kṛṣṇa and an invincible foe of the Yādavas. Kṛṣṇa, finding it impossible to vanquish him on the field of battle, cunningly decoyed him to the cave where Muchakunda was sleeping who burnt him down.
Lord Krishna was chased by a Kala yavana and Krishna entered the cave where Mucukunda was sleeping. When Mucukunda became tired he got a boon from God to sleep undisturbed for a long time in a cave. Kalayavana also entered the cave and slapped on Mucukundan thinking that it was Krishna pretending to sleep. When Mucukunda opened his eyes, Kalayavana was burnt to ashes. Tricky Krishna came out of his hiding and blessed Mucukunda.
20
Kuvalayapeedam
The anecdote of Kuvalayapida (often referred to as Kuvalaya Peedam in Tamil contexts) concerns a massive, intoxicated royal elephant sent by the tyrant King Kamsa to kill Lord Krishna and his brother Balarama upon their arrival in Mathura.
The Trap: Knowing that Krishna was destined to destroy him, Kamsa arranged a wrestling match and stationed his most feared, maddened elephant, Kuvalayapida, at the gate of the arena, managed by a skilled rider.
The Challenge: As Krishna and Balarama approached the entrance, the mahout ordered the elephant to attack.
The Victory: Krishna accepted the challenge and, showcasing superhuman strength, seized the elephant by its tusks, broke them off, and used them to instantly kill both the beast and its rider.
21
· The Binding (Damodara):Dama means rope, udara means belly; Krishna is named Damodara for having a rope tied around His abdomen.
· The Turning Point: Seeing His mother tired, Krishna allows Himself to be bound, demonstrating His love for His devotees.
· The Liberation: While tied to the mortar, Krishna drags it and topples two Arjuna trees, liberating the sons of Kubera, Nalakubara and Manigriva, who were cursed to be trees.
மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே,
சீரை யோது பத்தரன்பிலுறைவோனே … உன் புகழை ஓதும்
பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே,
தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக … தேவர்களும், பெண்டிரும்,
சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும்
வேளுருக்கு உகந்த … புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன்
கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே,
சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே. … சேவற்கொடி
சுற்றியிருக்க மகிழும் பெருமாளே.
* கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின் சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள் பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.
** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது, தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார் – சிவ புராணம்.
அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான் அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது. 16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். தேவர்கள் எல்லோரும் கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.
கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
***
திருப்புகழில் ரத்தினைக் கற்கள்
சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ …
சுழல்கின்ற என்னுடைய உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகம் ஆகிய பெரிய கடலில் மூழ்கித் திளைக்காதோ?
கவள கர தல கரட விகட கபோல பூதர முகமான … வாயளவு
கொண்ட உணவை உட்கொள்ளும் துதிக்கையையும், மதம் பாயும் சுவடு கொண்ட அழகிய கன்னத்தையும், யானையின் முகத்தையும் கொண்ட
கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடிவேலா …
கடவுளாகிய கணபதிக்குப் பின்னால் தோன்றிய ஒப்பற்ற மூலப்
பொருளே, ஒளி வீசும் வடி வேலனே,
பவள மரகத கநக வயிர கபாட கோபுர அரி தேரின் பரியும்
இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே. …
பவளத்தின் செந்நிறத்தையும், மரகதத்தின் பச்சை நிறத்தையும்,
பொன்னின் மஞ்சள் நிறத்தையும், வைரத்தின் வெண்மை நிறத்தையும் கொண்ட கதவுகளையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியனது தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் சூழ்ந்துள்ள பாகை*என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.
***
கபடிகள் அசடிகள், விகடிகள் ,கசடிகள், திருடிகள் !
விலைமாதர்கள் பற்றி உலகில் அதிகமாகப் பாடியவர் அருணகிரிநாதர்தான் 1311 திருப்புகழில் பெரும்பாலாவற்றில் ன முதல் பகுதி விலைமாதர்கள் பாற்றியதே. தனது இளமைக் காலத்தை அவர்கள் பாழ் படுத்தியதால் வேறு எவரும் அத்துன்பத்துக்கு ஆளாக்கக்கூடாது என்று ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக வேசிகளைப் பேசியுள்ளார்; ஏசியுள்ளார் ; இதோ ஒரு பாடல் :
முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்
முறை மசக்கிகள் திருடிகள் … எப்போதும் தங்கள் மார்பகத்தைக்குலுக்குபவர்கள். வஞ்சனை மனம் உடையவர். வடித்து எடுக்கப்பட்ட இழிந்தவர்கள். முட்டாள்கள். உறவு முறை கூறி மயங்கச் செய்பவர்கள். திருடிகள்.
மதவேள் நூல் மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் கலை நெகிழ்த்திகள் … மன்மதனுடைய காம நூலில் கூறியவாறு பேச்சினால்
ஏய்ப்பவர்கள். செருக்கு உடையவர். சிணுங்கி அழுகின்ற மனத்தை உடையவர்கள். தக்க சிரிப்புடன் முகத்தை மினுக்குபவர்கள். குற்றம் உடையவர்கள். இடுப்பில் சூழ்ந்துள்ள ஆடையைத் தளர்த்தி விடுபவர்கள்.
இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ்ச்
சுருள் பிளவு இலை ஒரு பாதி கலவியில் தரும் வசவிகள் விழி
மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்
புரிவாயே … இளைஞர்களின் பொருளை அபகரித்து, படுக்கையில் கனி போன்ற தங்கள் வாயிதழில் உள்ள சுருள் பாக்கு வெற்றிலையில் ஒரு
பாதியை புணர்ச்சி நேரத்தில் கொடுக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) கண் மயக்கில் நான் வசம் அழியும் கவலை என்னை விட்டு ஒழிய உன் திருவருளைப் புரிவாயாக.
***
அருணகிரிநாதருக்கு முருகன் கொடுத்த தீட்சை
தலை நாளில் பதம் ஏத்தி அன்புற உபதேசப் பொருள்
ஊட்டி … வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து,
மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை அருளால் … சிவ
மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை
உனது திருவருளால்
உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ்
ஊட்டி … உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி,
முண்டக தளிர் வேதத் துறை காட்டி மண்டலம் வலம் மேவும் …
முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத
வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும் மண்டல ங்களையும் உள்ள மேலிடத்தில்,
கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி …
இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ளபர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து,
முன் சுழி கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி …
முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம்
கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து,
கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி வெளியாகப் புக ஏற்றி …
யோக ஒளியை ஏற்றி வைத்து, (குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.)
சஹஸ்ராரம் (Sahasrara) என்பது மனித உடலின் ஏழாவது மற்றும் மிக உயர்ந்த சக்கரமாகும், இது தலை உச்சியில் அமைந்துள்ளது (Crown Chakra). ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாகக் குறிக்கப்படும் இது, பிரபஞ்ச சக்தியுடன் ஆன்மா இணையும் இடம், பேரானந்தம், ஞானம் மற்றும் உச்சக்கட்ட ஆன்மீக உணர்தலை உணர்த்துகிறது.
அன்பொடு கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல்
மறவேனே … அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில்
வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kamsa killing Male children; Yoga Maya disapperas.
Bhutaki lst her life
Krishna fighting wit wrestlers
Butter Thief
என்றும் நீல உடை அணிபவன் – பலராமன் ( நீலாம்பரன் )
என்றும் மஞ்சள் உடை அணிபவன் – கிருஷ்ணன் ( பீதாம்பரன் )
மதுப் ப்ரியன் – பலராமன் ( மது அருந்துபவர் )
மாதுப் ப்ரியன் – கிருஷ்ணன் ( கோபியர் பின்னால் சென்றவர் )
வெள்ளைக் காரன் – பலராமன்
கருப்பன் – கிருஷ்ணன்
பனைக் கொடி ஏந்தியவன் – பலராமன்
கருடக் கொடி ஏந்தியவன் – கிருஷ்ணன்
***
ஆழ்வார் பாசுரங்களில் கண்ணனின் லீலைகள் (Krishna Leelas) முக்கிய இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாகப் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளையும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோபியர் பாவத்திலும் பாடியுள்ளனர். வெண்ணெய் திருடுதல், கோவர்த்தன கிரியைத் தூக்குதல், கம்ச வதம் போன்ற கிருஷ்ண லீலைகள் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளன.
ஆழ்வார் பாசுரங்களில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய கிருஷ்ண லீலைகள்:
குழல் ஊதும் கண்ணன்: கண்ணனின் குழலிசையைக் கேட்டு ஆயர்பாடிப் பெண்கள் மயங்குவதைப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
வெண்ணெய் திருடுதல்: தமிழ் வேதம் குறிப்பிடுவது போல, வீடுகளில் வெண்ணெய் உண்டது மற்றும் கோபியர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடிய லீலைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
ஆழ்வார்கள் கண்ணனின் லீலைகளை வெறும் கதைகளாகப் பார்க்காமல், அவனது கருணையின் வெளிப்பாடாகவும், பக்தியின் உச்சமாகவும் பாசுரங்களில் அனுபவித்துள்ளனர்.
***
கிருஷ்ணன் கொன்ற அசுரர்கள்
கிருஷ்ணர் அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் கம்சன் அனுப்பிய பல அசுரர்களைத் தனது சிறு வயதிலேயே வதம் செய்தார். பூதனை, சகடசுரன், திருணாவர்த்தன், பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன், அரிஷ்டாசுரன், கேசி, வியோமாசுரன் மற்றும் நரகாசுரன் ஆகியோர் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள் ஆவர்.
கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள்:
பூதனை: கிருஷ்ணனுக்கு விஷப்பால் கொடுக்க வந்த அரக்கி (இவர் அழிவின் அடையாளமாக கருதப்படுகிறார்) Wikipedia.
சகடசுரன்: கம்சனின் கட்டளைப்படி வண்டி வடிவில் வந்து கிருஷ்ணனை நசுக்க முயன்றவன்.
திருணாவர்த்தன்: சூறாவளி வடிவில் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்ற அசுரன்.
பகாசுரன்: கொக்கு வடிவில் வந்து கிருஷ்ணனை விழுங்க முயன்ற அசுரன் Wikipedia.
அகாசுரன்: மலைப்பாம்பு வடிவில் வந்து தோழர்களை விழுங்கியவன் Wikipedia.
தேனுகாசுரன்: கழுதை வடிவில் வந்து தாலவனத்தில் இருந்த அசுரன்.
அரிஷ்டாசுரன்: காளை வடிவில் வந்து கம்சனால் அனுப்பப்பட்டவன்.
கேசி: குதிரை வடிவில் வந்து வந்த அசுரன்.
வியோமாசுரன்: ஆகாயத்தில் மறைந்து அசுர சக்தி கொண்டவன்.
நரகாசுரன்: சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன் (சுதர்சன சக்கரத்தால் இரு துண்டாக்கப்பட்டது)
கம்சன்: கிருஷ்ணனின் தாய்மாமன், இவன் மதுராவில் கொல்லப்பட்டான்.
இவர்கள் தவிர, கம்சன் அனுப்பிய பல அசுரர்களை கிருஷ்ணர் மற்றும் பலராமர் வதம் செய்தனர்
****
Krishna killing Bakasura- Crane Demon
Krishna killing Agasura- Python Demon
Krishna killing Dhenukasura a- Donkey
Demon
Krishna dancing on Kaliya Snake
பெரியாழ்வார் திருமொழி – முதற்பத்து
ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு
(செங்கீரைப்பருவம்)
பாடல் 4
வானவர் தாம்மகிழ வன் சகட முருள
வஞ்சமுலைப்பேயின் நஞ் சமுது உண்டவனே!*
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்
கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்
என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*
ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
பொருள்:
விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு (1)சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் (2)நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த (3)வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! (4)தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட (5)முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட (6)நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.
அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான் அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது. 16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன். தேவர்கள் எல்லோரும் கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.
கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
***
கம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தா ன். அவன் கன்றுக் குட்டியாக உருமாறி, கிருஷ் ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான் கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி விளா மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான்.
இன்னொரு முறை, ஒரு பெரிய கொக்கின் வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப் பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை, (7)அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். ஒரு பாம்பின் வடிவெடுத்து வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கிருஷ்ணரும் அவனது சகாக்களும் பாம்பின் வாயில் புகுந்தனர் ; அதுவும் வாயை மூடியது ;கிருஷ்ணர் தனது உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப் பாம்பு வயிறு கிழிந்து இறந்தது..
Krishna lifting Govardhana Hill.
Krishna killing Horse and Elephant
குன்றினால் குடை கவித்ததும் கோலக்
குரவை கோத்ததுவும் குடமாட்டும்
கன்றினால் விளவு எறிந்ததும் காலால்
காளியன் தலை மிதித்ததும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்
அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி உண்டெனில் அருளே.
இவ்வடிகள் குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில் (7-ஆம் திருமொழி) இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் செய்த லீலைகளைப் பாடும் இப்பாசுரம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததையும், ஆயர்களுடன் குரவைக் கூத்து ஆடியதையும், கன்றைக் கொண்டு விளாமரத்தை வீழ்த்தியதையும், காளியன் தலையில் நடனமாடியதையும் குறிப்பிடுகிறது
ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அந்த ஆற்றில் (8) காளிங்கன் என்ற நாகம் வசித்தது அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது. கிருஷ்ணர் தண்ணீரில் குதித்து அவனது தலையில் ஏறி நர்த்த னமாடினார். வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர் ஓடி வந்தனர். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அந்த நதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றான் .
(9)தேனுகாசுரன் கதை
தாளவனம் என்ற காட்டில் ஈச்ச மரங்கள் (பனை மரங்கள்) மிகுதியாக இருந்தன, ஆனால் தேனுகாசுரன் என்னும் கழுதை வடிவிலான அசுரன் தன் அசுர நண்பர்களுடன் அக்காட்டை ஆக்கிரமித்து, அதன் பழங்களை யாரும் உண்ணாதபடி தடுத்து வந்தான் கிருஷ்ண பலராமரின் வருகை: கிருஷ்ணரும் பலராமரும் நண்பர்களுடன் அந்தக் காட்டிற்குச் சென்று, தேனுகாசுரனின் கழுதை வடிவ அரக்கர்களைக் கொன்று, பனைப் பழங்களை உண்டு மகிழ்ந்தனர்.
***
Peethambara Krishna, Neelaambhara Balarama
‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.’
ஆண்டாள் திருப்பாவை பாசுரம்- 8
மல்லர்களைக் கொன்ற கிருஷ்ணன்
” மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்”
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.(10)சாணூரன், (11)சலன் முதலிய மல்லர்களை அழைத்து கண்ணன், பலராமன் அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம்செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஆணையிட்டான். அவர்களை கண்ணனும் பலராமனும் கொன்றனர்.
ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று* அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்,*
ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி* அன்று குன்றம் ஒன்றினால்,*
ஆனைகாத்து மைஅரிக்கண்* மாதரார் திறத்து, முன்*
ஆனைஅன்று சென்றுஅடர்த்த* மாயம் என்ன மாயமே?
“ஆனை காத்து ஓர் ஆனை கொன்று” என்பது திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தத்தின் 40-வது பாசுர அடி (பாடல் 791). இது கஜேந்திரனைக் (யானை) காப்பாற்ற முதலை வாயிலிருந்து காத்து, கம்சனின் குவலயாபீடம் எனும் யானையைக் கொன்ற கிருஷ்ணனின் மாயாஜால லீலைகளை வியந்து கூறும் பாடல் வரிகளாகும்.
Venugopalan, Flute Master
பாசுரத்தின் விளக்கம்:
ஆனை காத்து: கஜேந்திர ஆழ்வானைக் காத்தது.
ஓர் ஆனை கொன்று: கம்சனின் குவலயாபீடம் என்ற யானையை கொன்றது.
இந்தச் செயல்கள் அனைத்தும் கிருஷ்ணன் செய்த “மாயம்” (அதிசயங்கள்) என்று ஆழ்வார் போற்றுகிறார்.
(12)‘குவலயாபீடம்’ என்னும் போர் யானையின் பாகனை அழைத்து ‘மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்’ என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்.
(13)கம்சன் கதை
கம்சன் கிருஷ்ணரின் தாய்மாமன். கிருஷ்ணரின் தாயான தேவகியின் அண்ணன் தான் இந்த கம்சன். கம்சனின் விதி கிருஷ்ணரால் முடியும் என்ற அசரீரி ஒலித்தது. இதனால் கிருஷ்ணரைக் கொல்ல பல வழிகளில் முயற்சித்தான் கம்சன். கம்சனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக சானுரா மற்றும் முஷ்டிகா என்னும் மல்யுத்த வீரர்களைக் கொண்டு கிருஷ்ணரைக் கொல்லத் திட்டமிட்டான் கம்சன்.அவர்களையும் வீழ்த்தினான் கண்ணன் .இரண்டு மல்யுத்த வீர்களும் மடிந்தவுடன், யாதவர்களைத் தாக்க படைகளுக்கு உத்தரவிட்டான் கம்சன். கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் கையில் ஒரு வாளோடு கிருஷ்ணரை நோக்கி வந்தான். கிருஷ்ணர் சற்று குனிந்து, கம்சன் மீது குதித்து அவர் முடியை பற்றி இழுத்து பின்புறம் இழுத்தார். இதனால் கம்சன் கையில் இருந்த வாள் கீழே விழுந்தது. கிருஷ்ணர் உடனே அந்த வாளைப் பற்றி, தாமதிக்காமல் கம்சனின் தலையைக் கொய்தார்.
(14)அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் என்கிற வெறியுடன் வந்தான். அவன் கண்ணனை நோக்கி வேகமாக வர, அவன் கால்களை பிடித்து உயரத்தில் தூக்கி வீசி அவனைக் கொன்றான்.
^^^
வாட மருது இடை போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*
ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*
கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*
சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்ரகூடத்துள்ளானே*3.3.1
உரலில் கட்டப்பட்ட குழந்தை கண்ணன் நெருக்கமான இரண்டு மருத மரங்களின் இடையே
போய் மரங்களை முறித்து இருவரின் சாபம் நீக்கியவனும், கம்சன் அனுப்பிய பயில்வான்களை
கொன்றவனும், நடை பழகுவது போல ஆடி கொண்டு நல்ல பிள்ளையை போல குதிரை
வடிவில் வந்த கேசி என்ற அரக்கனை கொன்றவனும்,
திரண்டு வந்த பலத்த மழையால் பசு மேய்ப்பவர்களுக்கும், பசுக்களுக்கும் ஏற்பட்ட
துன்பத்தை போக்குவதற்காக மலையை குடையாக எடுத்தவன் கூத்தன் என சொல்லும்படியாக
என் முன்னே நடனமாடி கொண்டே வருகின்றான். அப்பெருமான் ஓங்கிய பூஞ்சோலைகள்
சூழ்ந்த சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!.
(15)கேசி என்னும் அரக்கன் ஒரு பெரிய குதிரை வடிவிலே வந்தான். அவன் வாயைப் பிடித்து, இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்றான். இதை ஆழ்வார்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “மா வாய் பிளந்து” என்றும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “துரங்கம் வாய் பிளந்தானுறை தொலைவில்லிமங்கலம்” என்றும் குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “மாவினை வாய் பிளந்து உகந்த மாலை” என்றும் ஆண்டாள் தன் திருப்பாவையில் “மா வாய் பிளந்தானை” என்றும் , திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா ” என்றும் பாடிப் போற்றினார்கள் துரங்கம் என்பதும் மா என்பதும் குதிரையைக் குறிக்கும் சொற்கள்.
Calf demon killed
(16) கம்ஸன் அனுப்பிய (16)வ்யோமாஸுரன் என்பவன் கண்ணன் இடைப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தானும் ஒரு இடைப்பிள்ளை வேடத்தில் வந்து ஒவ்வொரு பிள்ளையாகக் கொண்டு போய் ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கடைசியைல் கண்ணனைக் கொல்லப் பார்த்தான். இதை உணர்ந்த கண்ணன் அந்த இடையன் வேடத்தில் இருந்த யோமாஸுரனையும் கொன்றான்.
***
தூசு போன்ற ரூபத்தில் செயல்படும் (17) திருணாவர்த்தன் என்ற அசுரனை கம்சன் அனுப்பினான். யசோதை கண்ணனை படுக்கையில் கிடத்திவிட்டு வேலை செய்தாள். அந்த நேரத்தில், பயங்கரமான புழுதியுடன் சூறாவளி காற்று ரூபத்தில் திருணாவர்த்தன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். திருணாவர்த்தன் ஆகாயத்தில் உயரே தூக்கிச் செல்லும்போது, கிருஷ்ணர் தனது எடையை அதிகமாக்கினார். எடையைத் தாங்க முடியாத அசுரன், இறுதியில் கீழே விழுந்து உயிர் துறந்தான். கிருஷ்ணர் பத்திரமாகக் கோகுலம் திரும்பினார்.
***
பாகவதத்தில் (18) ப்ராலாம்பாசுரன் கதை
கம்சன் அனுப்பிய ப்ராலாம்பாசுரன் இடையன் போல் வேடமிட்டு வந்தான்.கிருஷ்ணனும் பலராமனும் தோழர்களுடன் விளையாடும்போது, ப்ராலாம்பாசுரன் அவர்களுடன் சேர்ந்து, தானும் அவர்களோடு விளையாடினான்.
அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடினார்கள் – ஒருவரை ஒருவர் தூக்கிச் சுமக்க வேண்டும். தோற்றவர்கள் வென்றவர்களைத் தூக்கிச் சுமக்க வேண்டும்.இந்த விளையாட்டில், ப்ராலாம்பாசுரன் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடினான்.
பலராமன், அவனுடைய உண்மையான அசுர வடிவத்தைக் கண்டு, தன் சக்தியால் அவனைக் கொன்றார். ப்ராலாம்பாசுரன் தலை பிளந்து, அந்த இடத்திலேயே மடிந்தான்.
***
சிசுபாலன் கதை –
(19).சிசுபாலன் சேதி நாட்டு மன்னன், கிருஷ்ணனின் அத்தை மகன் . பிறக்கும்போதே நான்கு கைகள், மூன்று கண்களுடன் பிறந்த இவன், இந்திரப்பிரஸ்தத்தில் யதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தின்போது கிருஷ்ணரை அவமதித்ததால், சக்ராயுதத்தால் வதம் செய்யப்பட்டான்.
சிசுபாலன் பிறந்தபோது விசித்திரமான தோற்றத்துடன் (4 கைகள், 3 கண்கள்) இருந்தான். எவனொருவன் இவன் மடியில் அமரும்போது இந்த கூடுதல் அம்சங்கள் மறைகின்றனவோ, அவனாலேயே இவன் இறப்பு நேரிடும் என்று அசரீரி கூறியது.
கிருஷ்ணர் சிசுபாலனை மடியில் எடுத்தவுடன், அவனது கூடுதல் கைகள் மற்றும் கண் மறைந்தன. சிசுபாலனின் தாய் (கிருஷ்ணனின் அத்தை) தன் மகனை கொல்லக்கூடாது என்று வேண்ட, கிருஷ்ணர் சிசுபாலனின் நூறு தவறுகளை மன்னிப்பதாக வாக்குறுதி அளித்தார்.
சிசுபாலன், கிருஷ்ணரை எப்போதும் வெறுத்து வந்தான். பாண்டவர்களின் ராஜசூய யாகத்தின்போது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத சிசுபாலன், கிருஷ்ணரை அவதூறாகப் பேசினான்.அவனது நூறாவது அவதூறு முடிந்தவுடன் அடுத்த முறை கேலி செய்தபோது , கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை வெட்டினார்.
***
(20)தந்தவக்ரன் கதை
தந்தவக்ரன், ஜராசந்தனின் கூட்டாளியும், சிசுபாலனின் உறவினரும் ஆவான். கிருஷ்ணனின் பகைவன் ஆவான். தருமனின், இந்திரப்பிரஸ்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பலராமனுடன் கிருஷ்ணர் சென்ற நேரத்தில், தந்தவக்ரன், துவாரகையை முற்றுகையிட்டுத் தாக்கினான். மீண்டும் துவாரகையை தந்தவக்ரன் தாக்கிய போது கிருஷ்ணனின் சக்கராயுதத்தால் மாண்டான்.
***
(21). கால யவனன் ( கறுப்பு நிற யவனர் )
ஒரு அசுரர் மன்னன் ; கிருஷ்ணனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து அவரைத் துவாரகைக்கு விரட்டியவன் ; உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்குப் போகச் செய்தவன் ; ஆயினும் அவனைக் கிருஷ்ணன் தந்திரமாகத் தீர்த்துக் கட்டினார்
மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் .
இந்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கிடைத்தது; நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை யாரவது எழுப்பினால், யார் முகத்தில் விழிக்கிறாரோ அவர் எரிந்து போவார் ; கிருஷ்ணனை கால யவனன் விரட்டிக்கொண்டு வரவே , முசுகுந்தன் தூங்கிய குகையில் கிருஷ்ணன் நுழைந்து ஒளிந்துகொள்கிறார் உள்ளே நுழைந்த காலயவனன் முசுகுந்தனை கிருஷ்ணன் என்று தவறாக எண்ணி எழுந்திரு என்று உதைக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் , காலயவனனனைப் பார்க்கவே அவன் எரிந்து அழிகிறான்.
***
ஸ்வாகதம் க்ருஷ்ணா –ஊத்துக்காடு வேங்கட சுப்ப ஐயர் பாடல்
பல்லவி
ஸ்வாகதம் க்ருஷ்ணா – வரவேண்டும் க்ருஷ்ணா.
சரணாகதம் க்ருஷ்ணா – பணிகிறேன் க்ருஷ்ணா
இஹ. – இங்கு
அனுபல்லவி
போகதாப்த சுலபா – அன்பு ஆர்வம் அல்லது பக்தியினால் அவனை அடைவது சுலபம் .
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி … அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை,
மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை … மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறுகுடிலாகிய இந்த உடல்
மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்கோலம் எழுந்து … நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து,
அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும் … அவளது திருவடியை வருடி,
மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும்,
பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல்
மறவேனே … மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே
பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன்.
* பறிதலை என்பது:
சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம் என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.
** சலிகை என்றால் செல்வாக்கு – முருகனின் சலிகை முதலிய 16 அருமையான லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர் வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.
***
சிவனுக்குப் பிடித்த இலைகள் – வில்வம், விளா, நாவல் ; பூக்கள் கொன்றை, மாதுளம் பூ
முந்தைய திருப்புகழ் பாடல்களில் அருகம் புல் முதலியவற்றையும் சேர்த்துள்ளார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 7
(ஆர், சேஷாத்ரிநாதன்)
சிவஸ்துதி
அடுத்து சிவபெருமானைத் துதிக்கிறார் துளசிதாசர்.
मुक्ति जन्म महि जानि ग्यान खान अघ हानि कर।
जहँ बस संभु भवानि सो कासी सेइअ कस न ॥
எங்கு சிவபெருமானும், பார்வதியும் வசிக்கின்றனரோ, அந்தக் காசி என்ற க்ஷேத்ரம் முக்தியின் பிறப்பிடம். ஞானத்தின் சுரங்கம். பாபங்களை அழிப்பது. அதில் ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடாது?. இங்கு காசியின் மகத்துவத்தைச் சொல்கிறார்.
जरत सकल सुर बृंद बिषम गरल जेहिं पान किय।
तेहि न भजसि मन मंद को कृपाल संकर सरिस॥
“எந்த ஆலகால விஷம் கண்டு தேவர்கள் கூட்டம் பொசுங்கிக் கொண்டிருந்ததோ, அதை எவர் அருந்தி விட்டாரோ, ஏ அசட்டு மனமே! அந்தச் சங்கர பகவானை ஏன் பற்ற மாட்டேன் என்கிறாய்? அவர் போல் கிருபை செய்பவர் யார்?” என்கிறார் துளசிதாசர்/
பாற்கடலைக் கடைந்தபோது கொடிய ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தின் சக்தியை தேவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். அந்த விஷத்தைச் சிவனே அருந்தினார் என்பது வரலாறு. ஸ்ரீமத் பாகவதம் எட்டாவது ஸ்கந்தம் ஏழாவது அத்யாயத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் சிவனே சொல்வது போல வருகின்றன
आसां प्राणपरीप्सूनां विधेयमभयं हि मे ।
एतावान् हि प्रभोरर्थो यद्दीनपरिपालनम् ॥ ३८॥
तस्मादिदं गरं भुञ्जे प्रजानां स्वस्तिरस्तु मे
तद्विषं जग्धुमारेभे प्रभावज्ञान्वमोदत ॥ ४१
“இவர்கள் உயிர் பிழைக்க விரும்புகிறார்கள்; எனவே, அவர்களுக்கு அபயத்தை அளிப்பது என் கடமை. எனவே, இந்த விஷத்தை நான் குடிக்கிறேன். என் குடிமக்களுக்கு நன்மை உண்டாகட்டும்.அந்த விஷத்தைக் குடிக்க நான் முனைந்தேன்; என் சக்தியும் ஞானமும் அதில் மகிழ்ந்தன.” ஈசனின் (பரமாத்மாவின்) உண்மையான நோக்கம் இதுவே — துன்பத்தில் உள்ளவர்களை பாதுகாப்பது.
பக்தர்களுக்காக விஷத்தையே அருந்த முன்வந்த அந்த சிவபெருமானின் மீது ஏன் பற்று வைப்பதில்லை? என்று தன்னையே நொந்து கொள்கிறார் துளசிதாசர்.
சிவ பெருமான் தேவர்களுக்காக நஞ்சுண்ட விஷயம் மூன்றாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் திருவுச் சாத்தனம் என்ற திருப்பதிகத்தில் வருகிறது. மேலும் இதில் இராமாயணம் பற்றிய செய்தியும் இடம் பெறுகிறது..
நீரிடைத் துயின்றவன்
தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீ
வன்னநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு
காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ்
திருவுசாத் தானமே.
பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும் இலக்ஷ்மணனும் ஜாம்பவான், சுக்ரீவன் ஹனுமான் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிறம் நஞ்சை உண்டி காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல் கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
மீண்டும் துளசிதாசர்
சிவ பெருமானின் பெருமையைச் சொல்லிவிட்டு காசியைப் பற்றியும் பாடினார். காசியைப் பற்றி வினய பத்ரிக என்ற நூலில் ஒன்பது சுலோகங்களில் விரிவாகப் பாடியுள்ளார்.
सइअ सहित सनेेह देह भरि,कामधेनु कलि कासी।
समनि सोक संताप पाप रूज, सकल-सुमंगल-रासी।1।
मरजादा चहुँ ओर चरनबर, सेवत सुरपुर-बासी।
तीरथ सब सुभ अंग रोम सिवलिंग अमित अविनासी।2।
अंतरऐन ऐन भल, थन फल, बच्छ बेद-बिस्वासी।
गलकंबल बरूना बिभा िजनु, लूम लसति, सरिताऽसि।3।
दंड पानि भैरव बिषान,तलरूचि-खलगन-भयदा-सी।
लोलदिनेस त्रिलोचन लोचन, करनघंट घंटा-सी।4।
मनिकर्निका बदन-ससि सुंदर, सुसरि-सुख सुखमा-सी।
स्वारथ परमारथ परिपूरन,पंचकोसि महिमा-सी।5।
बिस्वनाथ पालक कृपालुचित7 लालति नित गिरजा-सी।
सिद्धि, सची, सारद पूजहिं मन जोगवति रहति रमा-सी।
पंचााच्छरी प्रान7 मुद माधव7 गब्य सुपंचनदा-सी।
ब्रह्म-जीव-सम रामनाम जुग, आखर बिस्व बिकासी।7।
चारितु चरिति करम कुकरम करि, मरत जीवगन घासी।
लहत परम पद प्य पावन, जेहि चहत प्रपंच- उदासी।8।
कहत पुरान रची केसव निज कर-करतूति कला -सी।
तुलसी बसि हरपुरी राम जपु, जो भयो चहै सुपासी।9।
காசி (வராணசி) என்பது ஞானமும்) அன்பும் (ஸ்நேஹ) நிறைந்த உடலாக உள்ளது. கலியுகத்தில் காமதேனு (எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும் பசு) போன்றது. இது துன்பம், வேதனை, பாபம், நோய் ஆகியவற்றை அழித்து, அனைத்து நன்மைகளின் குவியலாக உள்ளது.. காசியின் எல்லைகள் நான்கு திசைகளிலும் புனித எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. தேவர்கள் இதை வணங்குகின்றனர். காமதேனுவின் ஒவ்வொரு ரோமமும் சிறந்த தீர்த்தமாகவும், உடலின் அங்கங்கள் அளவில்லாத அழியாத சிவலிங்கங்களாகவும் உள்ளன.
காசி நகரம் — கலியின் காமதேனு!
பாவம் பறந்தது, புனிதம் பரந்தது,
சிவனும், பக்தனும் ஒன்றாய் வாழும்
தர்மத்தின் தீபம் — காசி!
———–
மணிகர்ணிகா — மோட்ச வாசல்,
விஸ்வநாதர் — பரம் பாதுகாவலர்,
பைரவர் — பயம் நீக்கும் வீரன்,
பஞ்சகோசி — பரமார்த்த யாத்திரை!
————-
வேதம் பேசும் ஒலி — ராம நாமம்,
பிரம்மம் வாழும் ஒளி — காசி நாமம்,
சந்திர முகம் போல சாந்தம்,
அக்னி போல சுத்தி — காசி!
———
துளசி சொன்னான் — “இங்கே வாழ்ந்தால்
மாயை நீங்கும், பரம் பதம் கிடைக்கும்!”
அந்த நகரம் — நாமத்தின் நிழல்,
அழிவற்ற ஆனந்தத்தின் நிலம்!
இங்கு ஒரு கேள்வி எழலாம் . கிஷ்கிந்தா காண்டத்தில் காசிக்கு என்ன வேலை? இரண்டிற்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இல்லை. காசி என்பது ஒரு நபருக்கு முக்தி வழங்குவது போன்ற ஆன்மீகத் தகுதியை வழங்கும் ஏழு புனிதத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது., அந்தப் பட்டியலில் காசி நாலாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அயோத்தி உள்ளது. கிஷ்கிந்தா காண்டம் இராமாயணத்தில் நான்காவது இடம் என்பதலால் புனிதத்துவம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காசி அதே நாலாவாது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு புனிதத் தளங்களாவன