Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-14;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,699)

Kambar Stamp.

Written by London Swaminathan

Post No. 15,699

Date uploaded in London –5 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவழுந்தூர்/ தேரழுந்தூர் 

23. திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

மூலவர்:தேவாதிராஜன் 

உற்சவர்:ஆமருவியப்பன் 

தாயார்:செங்கமலவல்லி 

தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி

மங்களாசாசனம்திருமங்கையாழ்வார்

விமானம்:கருட விமானம் 

கல்வெட்டுகள்:உண்டு

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.

*** 

தலவரலாறு: 

பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.

 ***

மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் மார்க்கண்டேய முனிவரும் உள்ளனர்.

 பாசுரங்கள்

     வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி

          அடியேன் மனம் புகுந்தென்

     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்

          நின்றார் நின்ற ஊர் போலும்

     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி

          போனகாதல் பெடையோடும்

     அள்ளல் செறுவில் கயல் நாடும்

          அணியார் வயல் சூழ் அழுந்தூரே

                   (1591) பெரியதிருமொழி 7-5-4

     பிள்ளைக்கு இரைதேடித் தன் பெடையோடு செல்லும் பறவைகளின்

காலடிச் சத்தத்தைக் கேட்டு நீர்சூழ்ந்த கழனிகளில் சரேல்சரேலென்று மீன்கள்

பாயக்கூடிய அழகிய வயல்கள் சூழ்ந்த அழுந்தூரில், ஆலமரத்திலை மேல்

துயில் கொண்டு, தன் உள்ளத்தில் உறைகின்ற பிரான் நின்றவூர் இதுதான் போலும்— திருமங்கையாழ்வார் 

***

திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் – கும்பகோணம் பாதையில் இரண்டாவது ரயில் நிலையம். 

இத்தலத்தைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் கதை:     “கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை நதிக்குச் சென்றிருந்த போது, அப் பசுமந்தையை பிரம்மா தேரழுந்தூருக்குஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக் கண்ணன். உடனே அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே படைத்து விட, தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ளவேண்டுமென்று விண்ணப்பிக்க, அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக” வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இங்குள்ளஉற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ளன.

 ***

ஊர்ப்பெயர் காரணம்

     தனது தவ வலிமையால் விமானத்துடன் ஆகாசத்தில் சஞ்சரிக்கும் தன்மை பெற்ற உபரிசரவசு என்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த ஒரு விவாதத்தில் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பளிக்க, இதனால் கோபமுற்று ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் விழுகையில் இங்குள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர்

என்ற பெயருடயதுயாயிற்றென்பர். கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு) என்பது புராணம் சூட்டும் பெயர்.

     1. மொத்தம் 11 சந்நிதிகள் உள்ள திருத்தலம்.

     2. கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இந்த தேரழுந்தூரேயாகும்.

இப்பெருமான் மீது கம்பன் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இக்கோவிலில் சிலைகள் உள்ளன.

“கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர்         

கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத்    

தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா          ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

     என்பது புலவர் புராணம் என்னும் நூலில் வரும் செய்தியாகும். இங்கு கம்பர் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இப்போது அழகான கம்பன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்களில் தேரழுந்தூர் மிகச் சிறப்பான இடத்தைப்

பெற்றுள்ளது. நீடாமங்கலத்துக்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊரில் (வெண்ணிப் பறந்தலை) கரிகாலன் பதினொரு குறு நில மன்னரையும், சேர, பாண்டியரையும் ஒருங்கே முறியடிக்க அந்த ஆரவாரம் அழுந்தூரில் கொண்டாடப்பட்ட செய்தியை புறநானூற்றின் 65,325,395 ஆம் பாடல்கள்

விளக்குகின்றன.

  மார்க்கண்டேயன் கதை அனைவரும் அறிந்தவொன்றாகும்.

இத்தலத்துப் பெருமாளைச் சேவித்து மார்க் கண்டேயர் மோட்சம் பெற்றார  என்பதும் ஒரு வரலாறு. இத்தலத்தில் பிரகலாதனும் இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான்.

  “திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத்

திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார்.

—Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-14;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், கம்பன் பிறந்தவூர், திருவழுந்தூர், தேரழுந்தூர்,தேவாதிராஜன், ஆமருவியப்பன்

பெருமை மிகு தமிழகத்தில் கொங்கு மண்டலம்! (Post.15,698)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,698

Date uploaded in London – 5 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலம் சோழ மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கொங்கு மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் கொங்கு மண்டலம்! 

ச. நாகராஜன் 

தான் நீண்ட நாள் வாழ்வதை விட தமிழ்ப் புலவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று தான் பெற்ற நெல்லிக் கனியைக் கொடுத்த வள்ளல் வாழ்ந்த பூமி எது?`குளிர் தாங்காமல் தோகை விரித்து ஆடும் மயில் வருந்துவதைக் கண்டு தன் மேலாடையைப் போர்த்திய வள்ளல்

வாழ்ந்த மண்டலம் எது? தமிழ் இலக்கணத்தில்

பெற்றுத் தமிழை வளர்க்க தொல்காப்பிய வழியில் எளிய நூல் இயற்றிய தமிழ்ப் பாவலனின் பூமி எது? இயற்கை வளம் வாய்ந்த மலைச் சிகரம் எங்கே உள்ளது? நவீன காலத்திற்கேற்ப தொழிலில் முன்னோடி நகரம் என அனைவரையும் பிரமிக்க வைக்கும் நகரைக் கொண்ட பகுதி இது? இன்ன பிற கேள்விகளுக்கெல்லாம் தமிழ் வளர்த்த கொங்கு மண்டலம் என்பதே பதிலாக அமையும். 

கொங்குமண்டலத்தில் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படும் நகர் அந்தக் காலத்தில் தகடூர் என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்தது. அதை ஆண்டு வந்த மன்னன் அதியமான் ஒரு நாள் பருத்திப்பள்ளிக்காட்டில் இருக்கும் கஞ்சமலை மீது உள்ள கருங்காடு என்னும் பகுதியில் சஞ்சரித்தான். அப்போது ஒரு துறவி அவனிடம் ஒரு நெல்லிக்கனியைத் தந்து, இதை உண்டால் நெடுங்காலம் வாழலாம் என்று ஆசீர்வதித்தார். அதை வாங்கிய அதியமான் தான் நீண்ட காலம் வாழ்வதை விட தமிழ்ப் பாக்களை அள்ளித் தரும் ஔவையாருக்கு அதைத் தந்தால் இன்னும் நிறைய தமிழ்ச் செல்வத்தை தமிழகம் பெறுமே என்று ஔவையாருக்கு அதைத் தந்தான். இதை அறிந்த மக்கள் அவனது தமிழ் நெஞ்சத்தை வாழ்த்தினர்.

கொங்குமண்டலத்தில் அமைந்துள்ள சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வளம் வாய்ந்தவை. நாமக்கல்தலில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை கோவில் 15000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்தர்கள் கூறுகின்றனர். இங்கு உயரமான சிகரங்கள் உள்ளன. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி 600 அடி உயரத்திலிருந்து விழுகிறது.  கொல்லி மலைப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஓரி, தமிழை வளர்ப்போர்க்கு அள்ளி அள்ளித் தந்து வள்ளல்களில் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்தான். 

இன்று நாம் பழனி என்று வழங்கி வரும் முருகனின் திருத்தலம் பழைய காலத்தில் வையாபுரி என்று வழங்கப்பட்டு வந்தது. நாடெங்கிலுமிருந்து முருகனின் அருள் வேண்டி பக்தர்கள் கூட்டம் அன்றிலிருந்து இன்று வரை இங்கு திரண்டு வருகிறது. 

இயல்பாகவே கருணை வாய்ந்த உள்ளம் கொண்ட மக்கள் இப்பகுதி மக்கள். இதை நிரூபிக்கும் ஒரு சம்பவத்தை நம் இலக்கியம் கூறுகிறது. பேகன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். ஒருநாள் மலை வழியே அவன் சென்று கொண்டிருந்தபோது தோகை விரித்து ஆடும் மயில் ஒன்று குளிருக்கு ஆற்றாமல் வருந்துவதைக் கண்டான். உடனே தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி மகிழ்ந்தான். இதை அறிந்த மக்கள் அவனை வெகுவாகப் போற்றினர். கடையெழு வள்ளல்களில் ஒருவனாக அவன் திகழ்ந்தான். 

தொல்காப்பியத்தை சுருக்கமாக எளிய தமிழில் அனைவரும் பயனுறும் வகையில் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் அனைவரும் விரும்பினர். இதை கொங்குமண்டல மக்கள் வேண்டிக் கேட்கவே பவணந்தி முனிவர் நன்னூல் என்னும் அருமையான இலக்கண நூலை இயற்றினார். 

திருச்செங்கோட்டைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற புலவர் கொங்குமண்டலத்தில் காரையூர் சென்று சர்க்கரை என்ற வள்ளலைச் சந்தித்தார். அவரை வரவேற்று உள்ளே சென்று சர்க்கரையார் மனைவியுடன் பேசினார். அவர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கையில் புலவரைக் காணோம். சரியாக உபசரிக்கவில்லை என்ற எண்ணத்துடன் புலவர் இருப்பதை அறிந்த சர்க்கரை அப்படி ஒரு எண்ணம் தமக்கு இல்லை என்றார். இருந்தாலும் புலவரின் திருப்திக்காக கொதிக்கும் நெய்யில் கையை விட்டுத் தன்னை நிரூபித்தார். 

கொங்கு புலவர் சபையின் மாண்பு மகத்தானது. 

இப்படி தமிழுக்காக உயிர் வாழ்ந்த, உயிர் வாழும் மண்டலம் தான் கொங்கு மண்டலம். 

பிரம்மாவின் கர்வத்தை அடக்க சிவபிரான், காமதேனுவிடம் படைப்புத் தொழிலை அளிக்க காமதேனு அதை மேற்கொண்டு பிரம்மாவின் கர்வத்தை ஒடுக்கியது. இதை விளக்கும் திருத்தலம் கருவூர் ஆநிலை என்னும் வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர் தலமாகும். 

முதலை வாய் அகப்பட்டு மாண்ட சிறுவனை மூன்று வயது வளர்ச்சியுடன் ஏழு வயதுச் சிறுவனாக குளத்திலிருந்து ஒரு  பாடலைப் பாடி மீட்டார் சுந்தரர். இந்த ஐதீகத் திருவிழா இன்றளவும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. 

சங்ககிரி துர்க்கத்தில் எம்பெருமான் என்ற கவிராயர் இராமாயணத்தை அற்புதமாக ஆங்காங்கே சொல்லி வந்தார். இதை இசை நூலாக ஆக்கினால் அனைவரும் இன்பம் பயப்பர் என்ற கருத்து உருவானது. அப்போது கீழ்கரைப் பூந்துறை நாட்டை மோரூரில் இருந்து ஆண்டு வந்த நல்லதம்பிக் காங்கேயன் அவரை அணுகி இசை இராமாயணத்தை இயற்றுமாறு வேண்டினான். அவரும் உடனே கோட்டையுள் இருந்த வரதராஜப் பெருமாள் சந்நிதியை அடைந்து வேண்டினார். உலகமாதா என்ற சொல் ஒலிக்க உடனே அந்தச் சொல்லுடன் அவர் தக்கை இசையால் இராமாயணத்தை இயற்றினார். ஆறு காண்டம் கொண்ட  அபூர்வமான இந்த நூல் வெண்பா, தக்கை, ஒற்றை இரட்டை என்னும் குடகம் முதலிய வரிப்பாட்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டதாகும். 

இங்குள்ள நீலகிரி மலை உலகின் அற்புதமான மலைகளுள் ஒன்று. மூலிகை வளம் கொட்டிக் கிடக்கும் மலைத் தொடர் இது. இங்கும் கொல்லி மலையிலும் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர்.

             சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகள் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற பகுதிகளாகும். திருப்பூரில் உருவாகும் ஜவுளிப் படைப்புகள் உலக அரங்கில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 இந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரைக் கொண்டு விளங்கும் கோயம்புத்தூர் ஜவுளி உற்பத்தியில் தனி இடத்தைப் பெறுகிறது.  அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் போதிக்கும் கல்லூரிகள் ஒரு புறம் என்றால் அந்தக் கல்வியைச் செயல் வடிவத்தில் காட்டும் தொழிலகங்கள் இங்கு ஏராளம். மென்பொருள் உற்பத்தியிலும் வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பிலும் முன்னணியில் கோவை இருக்கிறது. அது மட்டுமின்றி அறிஞர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் பல படைப்புகளைச் செய்து காட்டிய ஜி.டி.நாயுடு  அவர்களை தமிழகம் மறக்க முடியுமா? 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் உலகில் உள்ள அனைவரையும் ஈர்க்கும் ஒரு கோடைவாசஸ்தலமாகும். இயற்கையின் எழிலை ரசிக்கவும், கோடையின் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும் ஆயிரக் கணக்கில் இங்கு மக்கள் திரளுகின்றனர். 

கொங்கு மண்டலத்தில் உள்ள விஜயமங்கலத்தில் பிறந்த கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களையும் படித்தால் அந்த மண்டலத்தின் பெருமையைக் கண்டு பிரமிப்போம். தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.

 இப்படி தமிழ் வளர்ச்சி, தமிழர் தம் கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் வளர்த்த, வளர்த்து வரும் கொங்கு மண்டலத்தின் புகழ் எங்கும் பரவுவதில் வியப்பேது?

**

பன்னிரெண்டு வயதில் திருமணம்! கணவனுடன் சிதைத் தீயில் மரணம் -பெரிய புராணம் (Post.15,697)

Written by London Swaminathan

Post No. 15,697

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெரிய புராணம்  திருநாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் , மருள் நிக்கியார்) கதை

கண்ணகிக்கு12 வயதில் திருமணம் :சிலப்பதிகாரத்தில் திருமணத்தின் போது கோவலனுக்கு வயது 16, கண்ணகிக்கு 12 வயதுமானது என்று குறிப்பிடப்படுகிறது.

சிலப்பதிகாரம்

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு

போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்

மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்

ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,2X6=12

அவளுந்தான்,

………………………………

பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த

ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்

வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்

இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான், 2X8=16

அவனுந்தான்– புகார்க்காண்டம்

கந்தபுராணத்தில் முருகன் – வள்ளிக்குத் திருமணம் நடைபெறும் போதும்  வள்ளியின் வயது 12 தான் 

அப்பரின் சகோதரி திலகவாதியாருக்கு 12 வயதானபோது திருமணம் நிச்சயிக்கப்பட்டதை சேக்கிழாரும் குறிப்பிடத் தவறவில்லை

1292    அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்

முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்

மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்

பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்—பெரிய புராணம் 

பெரிய புராணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது ; ஆயினும் அதில்  வரும் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தது கல்வெட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

அப்பரின் சகோதரியின் பெயர் திலகவதி ; அவர்கள் பிராமணர்கள் அல்ல; அதற்கு முன்னர் காரைக்காலில் வாழந்த காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ; அவரும்  பி பிராமணர்

அல்ல; செட்டியார் ஜாதி ; இரண்டும் தூய ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இவர்களுக்கு முன்னர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்ணின் பெயர் ஐயை என்று சிலப்பதிகாரம் சொல்கிறது ; இது ஆர்யை/ ஆர்யா என்பதன் தமிழ் வடிவம் . ஆதி சங்கரரின் தாயார் பெயரும் ஆர்யாம்பாள்தான் ; சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் இருபது, முப்பது பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களே; இவை தவிர நாகன் என்று முடியும் புலவர்கள் இருபது பேர் உள்ளனர் ; நாகன் என்பது குப்தர் , சாதவாகன, வாகதர் கல்வெட்டுகளிலும் வருகிறது. அதுவும்  ஸம்ஸ்க்ருதப் பெயர் ! ஆகவே திருமணம் செய்யும் வயது, பெயரிடும் முறை ஆகியன வடக்கில் இருந்ததைப் போலவே தெற்கிலும் இருந்தது ; அக்கால மக்கள் தமிழ் மொழியையும் சம்ஸ்க்ருத மொழியையும் இரு கண்களாகவே பாராட்டினார்கள்;பயன்படுத்தினார்கள்.

கோவலன் என்பதும் கோபாலன் என்பதன் தமிழ் வடிவமே !

***

ராமாயணத்தில் ராமன் சீதையின் கல்யாண வயது 16-12 என்றே வருகிறது . நான் 12 ஆண்டுகள் அயோத்தியில் சுகமாக இருந்தேன் என்று சுந்தர காண்டத்தில் வரும் ஒரு வரியை வைத்து கூட்டல் கணக்குப் போட்டு சிலர் சீதைக்கு கல்யாணம் ஆனபோது வயது ஆறு என்று தத்துப்பித்து என்று எழுதியுள்ளனர் ; ஆறு வயதாக இருந்திருந்தால் அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்ற வரிக்களுக்குப் பொருளே வராது . ஆறு வயதில் சீதைக்கு காதல் பார்வை வருமா?

12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்தேன் என்பதை கல்யாணத்துக்கு முன்னர் வாழ்ந்த காலத்தையும் சொல்லியிருக்கலாம் என்பது அறிஞர்களின் விளக்கம்

சங்க இலக்கியம் முழுதும் ஓடிப்போன சின்னப்  பெண்களின் பொம்மை, அம்மானை சொப்பு , சிறு முலை ஆகியன  பாடப்படுவதால் 12 முதல் 16 வயதுக்குள் அவர்கள் காதலனுடன் ஓடிப்போனது புலப்படுகிறது .

***

மனு நீதி நூலில்

त्रिंशद्वर्षो वहेत् कन्यां हृद्यां द्वादशवार्षिकीम् ।

त्र्यष्टवर्षोऽष्टवर्षां वा धर्मे सीदति सत्वरः ॥ ९४ ॥

triṃśadvarṣo vahet kanyāṃ hṛdyāṃ dvādaśavārṣikīm |

tryaṣṭavarṣo’ṣṭavarṣāṃ vā dharme sīdati satvaraḥ || 9-94 ||

A man thirty years old shall marry a charming maiden twelve years old; or one twenty four years old, a damsel eight years old; in the event of his duties suffering, he may do it sooner.—(9-94)

மனு சொல்கிறார் : முப்பது வயது ஆண் மகன் 12 வயதுப் பெண்ணை  மணக்கலாம் ; 24 வயது ஆண் மகன் எட்டு வயதுப் பெண்ணை  மணக்கலாம்.

இதைத் திருமணம் என்னும் தலைப்பில் சொல்லாமல் வேறு ஓரிடத்தில் சொல்கிறார் ; இவளவு தாமதமாக அந்தக்காலத்தில் ஆண்கள் திருமணம் செய்யவில்லை ஆகையால் இதை மேல் வரம்பு- கீழ் வரம்பு என்றும் கொள்வதே பொருந்தும் என்று மனு தர்ம உரை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்..

எல்லாவற்றுக்கும் மேலாக சாவித்ரி, தமயந்தி, திரவுபதி முதலிய கதைகளை படிக்கையில் அவர்கள் எவ்வளவு அறிவு முதிர்ச்சி பெற்றிருந்தனர் எனபதும் தெரிகிறது; மனு ஸ்ம்ருதியில் வரும் ஒரு ஸ்லோகமும் இவ்வாறு பலவிதமாக விளக்கப்படுகிறது அந்தக் காலத்தில்  முறைப் பெண்ணை மணக்கும் வழக்கம் இருந்ததால் வாய் வார்த்தனையாக இப்படித் திருமணத்தைப்பேசி வைப்பார்கள்;

உண்மையான திருமணம் பிற்காலத்தில் நடந்தது; ஆகையால்  மனு எட்டு வயதுக்கு முன்னர் கல்யாணம் பேசக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறார் என்பதே பொருந்தும். மேலும் இருவருக்கு இடையேயுள்ள வயது வித்தியாசத்துக்காக இதைச் சொல்கிறார் .

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கூட கணவன் மனைவி இடையே இருபது ஆண்டுகள் இடைவெளி இருந்தது நன்றாகத் தெரிகிறது இதனால்தான் கணவர்கள் முதலில் இறப்பதும் விதவைகள் புலம்புவதும் சங்க இலக்கி யத்தில் கூட அதிகமாகக் காணப்படுகிறது.

***

காதல் திருமணம் அல்ல !

அப்பர் வீட்டுத் திருமணமும்  கோவலன் வீட்டுத் திருமணமும் காதல் திருமணம் அல்ல ; தாய் தந்தையர் பேசி முடித்த திருமணம் ; சங்க காலத்திலும் காதல் திருமணமே நடந்ததாக எண்ணுவது தவறு; மனு நீதி நூல் சொன்ன எட்டு வகைத் திருமணங்களையும் தொல்காப்பியரும் அப்பாடியே தமிழர் திருமணங்களாகக் காட்டியுள்ளார்!

வேத காலத்தில் எட்டு வகைத் திருமணங்களும் நடந்தன இதற்கு மஹாபாரதம் மற்றும் புராணங்களில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன ;

வேத காலத்தில் சமனஸ் என்னும் பொது விழாக்களில் ஆண்களும் பெண்களும் சந்தித்துக் காதல் புரிந்ததை ரிக் வேத மந்திரங்களில் காணலாம்; அது மட்டுமல்ல; சமனஸ் கூட்டத்துக்கு அலங்கரித்துக் கொண்டு இளம் பெண்கள் சென்றதைப் போல என்பதை புலவர்கள் உவமைகளாக கையாளுவதால் வேத காலத்தில் காதல் திருமணங்கள் மிகவும் நடைபெற்றதும் தெரிகிறது. .

***

அப்பர் காலத்தில் குலம் கோத்திரம் பேசிக் கல்யாணம் முடிப்பதையும் சேக்கிழார் கீழ்கண்ட பாடலில் குறிப்பிடுகிறார் .

294       அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு

மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்

குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்

பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்-பெரிய புராணம்

***

SATI pictures

அப்பர் – திலகவதியின் தந்தை புகழனார் நோய்வாய்ப்பட்டு இறந்தவுடன் அவருடைய மனைவி மாதினியார் உடன்கட்டை  ஏறி உயிர்விடுகிறார்.

1298    மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்

சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்

பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்

கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்

5.1.28-பெரிய புராணம்

இதே போல கலிப்பகையார் போரில் இறந்தவுடன் அவருடைய மனைவியாகப் போகின்ற திலகவதியாரும் கணவரின் சிதைத் தீயில் ஏறி உயிரத்தியாகம் செய்ய முயன்றதையும் அப்போது மருள்நீக்கியார் என்ற பெயர்கொண்ட அப்பர், அவர் காலில் விழுந்து அழுது  புரண்டு அதைத்  தடுத்ததையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்  .

புறநானூற்றில் குறைந்தது நான்கு பாடல்களில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் குறிப்பிடப்படுகிறது. பூதப்பாண்டியன் தேவி, பலர் தடுத்தும் கேளாமல் வீர வசனம் பேசிவிட்டுத் துணிச்சலாக தீயில் பாய்ந்து கருகி இறந்ததை பாடல்களில் படிக்கிறோம்.

சங்க காலம் — சிலப்பதிகார காலம் — பெரிய புராண காலம் வரை சில வழக்கங்கள் போற்றப்படுவதை நாம் காணமுடிகிறது .

–Subham—

Tags- சதி, உடன்கட்டைஏறும் வழக்கம், அப்பர் திலகவதி, சாதி குலம், பெரிய புராணம்,மனு நீதி நூல்,சேக்கிழார், Sati images

London Swaminathan’s Article Index for April 2026; Index No.161 (Post.15,696)

Written by London Swaminathan

Post No. 15,696

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Omens, Sanskrit Words and Valakhilya Rishis in Purananuru – Part 57 (Post No.15,566) 2/4

Two Tamil Kings acted as Servants of Common People!- Part 58; Purananuru Wonders -18 (Post No.15,585) 6/4

Image Worship in Sangam Tamil Literature! – Part 59 (Post No.15,604) 10/4

Famous Shiva Story in Purananuru- Part 60 (Post No.15,616) 13/4

Purananuru Wonders -21 Full-fledged Hinduism in Tamil Sangam Literature(Post No.15,625)16/4

Aliens / ETs, Sati and Samudrika lakshana in Sangam Tamil literature -Part 62 (Post No.15,637) 23/4****

46 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 46; இந்து மத கலைச்சொல் அகராதி-46 (Post.15,576) 5/4To

56 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 56; இந்து மத கலைச்சொல் அகராதி-56 (Post No.15,651)24/4***

Tiruppavai in Pictures with English Translations- Part One (Post No.15,573) 3/4/26

Tiruppavai in Pictures with Three English Translations- Part Two (Post No.15,577)4/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Three (Post No.15,582) 5/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Four (Post No.15,586)6/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Five (Post No.15,589) 7/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Six (Post No.15,594) 8/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Seven (Post No.15,598)9/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 8 (Post.15,603) 10/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 9 (Post No.15,607) 11/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 10 Last Part (Post No.15,611) 12/4

****

Tirukkural Encyclopaedia- Chapter 1 (Kural1 to 5) Post.15,659 (26/4)

Tirukkural Encyclopaedia- Chapter 1 (Kural 6 to 10) Post.15,662 (27/4)

Tirukkural Encyclopaedia- Chapter 2 (Kural 11 to 15) Post No.15,669 (28/4)

Tirukkural Encyclopaedia- Chapter 2 (Kural 16 to 20) Post.15,674 (29/4)

****

Uraiyur -Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,647) 23/4

Thiru Anbil-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-3 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,560) 24/4

Tiruk Kudalur-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-4 திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,654)25/4

Kapisthalam-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-5 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,657) 26/4

Tiru Adanur-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-6 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,661)27/4

Pullap Puthankudi-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-7;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,668) 28/4

Sarngapani temple-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-8;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,672) 29/4

Oppiliappan-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-9;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,675) 30/4

****

Tamil Articles

முருகப் பெருமானிடம் மோதி, தோல்வி அடைந்த புலவர் கதை- Part 62 (Post No.15,561) 1-4-76

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை; மார்க்கண்டேயன் கதை -Part 63 (Post No.15,565) 2/4

விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை! (Post No.15,570) ¾

அருணகிரிநாதர் ஒரு ‘இலி’-ச்சவாயன்!- Part 65 (Post No.15,575) 4/4

குகையில் நவ நாத சித்தர்கள்! வியாசருக்கு பிள்ளையார் உதவி!- Part 66 (Post No.15,579) 5/4

உடல் ஒரு 9 வாசல் நகரம்: அதர்வண வேதம் முதல் திருப்புகழ் வரை சொல்லும் அதிசயம்! (Post.15,584) 6/4

திருப்புகழில் சாரதாபீடம்! கடவுளர்கள் ஆடிய அற்புத நடனங்கள்! – Part 68 (Post.15,588)7/4

உடலும் மாமரமும் – நல்ல உருவகம்!- Part 69 (Post No.15,592) 8/4

இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597) 9/4

உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி  அருணகிரிநாதர்!  Part 71 (Post No.15,601)10/4

நடராஜர் உடலில் நமசிவாய எழுத்துக்கள்! அருணகிரிநாதரின் புது விளக்கம்- Part 72 (Post.15,606) 11/4

திருப்புகழில் 18  கணங்கள்எட்டு வகை வாதிகள்- part 73 (Post No.15,610) 12/4

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614) 13/4

காதலியைக் காண முருகன் போட்ட வேஷங்கள் – 75 (Post No.15,618)14/4

சிவபெருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621) 15/4

திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624) 16/4

‘ஆறுமுகம்’ என்பதன் பொருள்; இலங்கையில் பிரம்மா வேடனாக பிறந்த கதை–78 (Post.15,627)17/4

புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633) 19/4

கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)20/4

*******

வாஞ்சிநாதனை தரிசித்தேன் (Post No.15,562) 1/4/26

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!- Part 1 (Post No.15,658)26/4

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!-Part 2ஆறு கதைகள்! (Post.15,664)27/4

உலகு இன்பக் கேணி என வேதம் சொல்கிறதா ? பாரதியார் கூற்றுக்கு ஆதாரம் எங்கே? (Post.15,622) 15/4

ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part1 (Post.15,615)13/4

கல்யாண சுந்தர சிவாச்சார்யாவுக்கு லண்டனில் அஞ்சலி (Post No.15,640)21/4

சங்க காலத் தமிழ் நாட்டில் உருவ வழிபாடு (Post No.15,628) 17/4

சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666) 28/4

சித்திரா பெளர்ணமியும் சித்திர குப்தன் கோயிலும் (Post No.15,671) 29/4

தமிழ்ச்சங்க நூலிலும்,பைபிளிலும் கின்னரம்; பாபிலோனியாவில் தமிழ் தம்பட்டம்! (Post.15,655) 25/4

Q & A தொல்காப்பியம் – பாயிரம் – நச்சினார்க்கினியர் உரை – சந்தேகம் (Post.15,581) 5/4

பைரவர்களில் இத்தனை பேரா?  ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரைத் தரிசித்தேன் (Post.15,572) 3/4

–Subham—

Tags- London Swaminathan’s Article Index for April 2026; Index No.161

லண்டன் சுவாமிநாதனின் 81 திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்! (Post No.15,695)

Pictures of Lord Kanda, Subrahmanyar, Kartikeyan

Written by London Swaminathan

Post No. 15,695

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எனது பிளாக்குகளில் இலவசமாகப் படிக்கலாம்

முதலில் தலைப்புகளை மட்டும் படியுங்கள் ; எவ்வளவு சுவையானவையென்பது புரியும் ; 1300௦++ திருப்புகழ் பாடல்களை படித்து எடுத்த குறிப்புகள் இவை ; கட்டுரைகளை எழுதப் பிடித்த நாட்கள் 81; கட்டுரைகளை எழுதப் பிடித்த நேரம் 81X3 மணி நேரம்!

***

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362)  26/1

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2 (27/1)

திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள்! 28/1

நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371) 29/1

அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் ! (Post No.15,375)30/1

ராவணன் ஒரு முட்டாள்! திருப்புகழில் அரிய செய்திகள்- Part 6 (31-1-26)

அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 7 (Post.15,382)1/2/2026

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11 (Post.15,396)

அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)

கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள்-13 (Post.15,401)

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)

திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்;  காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)

திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)

முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)

அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)

திருப்புகழில் புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்! எட்டு அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி!—Part 19 (Post.15,419)

பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)

சரஸ்வதியின் சகோதரன் முருகன்!  திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21(Post No.15,425)

திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)

முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)

அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)

முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)

திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை- Part 26(Post.15,438)

20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)

திருப்புகழில் ஐம்படைத் தாலி, பாற்கடலைக் கடைந்த காட்சி, ஏழுவகை நரகம்- Part 28 (Post.15,445) 22/2/26

திருப்புகழில் சிவாய நம மந்திர விளக்கம்;

சரப பட்சி கதை; அணு விஞ்ஞானம் – 29 (Post.15,448) 23/2/26

நான் ஒரு முட்டாளுங்க! அருணகிரிநாதரின் அவலக்குரல்- PART 30 (Post No.15,451)24/2/26

ஆறுமுறை ‘எட்டு இரண்டு’- அருணகிரியின் சொற்சிலம்பம்! 4 வகை ஜீவன் முக்தர்கள்- Part 31 (Post.15,454) 25/2/26

வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு! ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும்! தில்லை மூவாயிரர் புகழ் – Part 32, 26-2-2026

பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் ! ஞான சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 (Post.15,459) 27/2

திருப்புகழில் ஐந்து கலைகள், ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463) 28/2/26

பாரதியும் அருணகிரியும்! திருப்புகழில் துரியோதனன்- பீமன் கதை – Part 35 (Post No.15,467) 1/3/2026

முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 (Post.15,471 )2/3

திருப்புகழில் நரகத்தின் வருணனை!  யானையைக் கோழி வென்ற கதை ! Part-37 (3/3/26)

திருப்புகழில் ராகங்கள்! ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை- Part 38 (Post.15,473) 8/3

சிவன் பெயரில் ரி ரி ரி ரி! அருணகிரிநாதர் சொற்சிலம்பம்! -Part 39 (Post 15,477) 9/3

தாமா தாமா யாமா யாமா காமா காமா தேமார் தேமா: அருணகிரியின் சொற் சிலம்பம்– 40(15,480)10/3

சேவல் பற்றி அருணகிரி வருணனை- Part 41! 10/3

கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்குபற்றி அருணகிரிநாதர் (Post No.15,489) 12/3

இறைவனின் எட்டு குணங்கள்; பாரதியாரும் அருணகிரியும் கேட்ட வரங்கள் (Post.15493) 13/3

சிவன்: பரித்தார், சிரித்தார், எரித்தார், பொரித்தார், உரித்தார், விரித்தார், தரித்தார் -44 (Post.15,495)14/3

அந்தகாசுரன் கதை; ஆண் பனை மரங்கள் காய்த்த கதை – Part 45 (Post.15,499)15/3

ஆறு பெரியோர்கள் புகழ்ந்த கரு நெல்லிக் காயின் மஹிமை- பகுதி-46 (Post.15,501)16/3

கண்ணகி எரித்த மதுரையும், அனுமன் எரித்த இலங்கையும்! முருங்கைக்காயும் முருகனும்- 47 (Post.15,504) 17/3

வெளி உலகவாசிகள் ET, ALIEN CIVILIZATION, பிராமணர் எண்ணிக்கை CENSUS பற்றி அருணகிரிநாதர்! -48 (Post.15,507)18/3

அ’ என்றால் சிவன்; முதல் குறளுக்கு புதுப் பொருள்! (Post No.15,511)-49 (19/3)

ஆறு சாஸ்திரங்கள், ஏழு குலகிரிகள்,  துவார பாலகர், ஏழிசை பெயர்கள்-Part 50 (Post.15,515)20/3

முத்துக்களின் வகைகள், விஸ்வரூப தரிசனம் பற்றி அருணகிரிநாதர்! -51 (Post.15,518)21/3

சிவனுக்குப் பிடித்த இலைகளும், பூக்களும்; முருகனின் 16 லக்ஷணங்களும்-52 (Post.15,522)22/3

கண்ணனுடன் 16,000 பெண்கள்! திருப்புகழில் ரத்தினைக் கற்கள் -53 (Post.15,525)23/3

முக்தி தரும் தலங்களின் பட்டியல்! யோகிகள் உணரும் பத்து நாதங்கள் ! (Post No.15,529)24/3

அவனிபுகழ் சோமநாதன் யார்? அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 55 (Post No.15,532)25/3

சப்தஸ்தான தலங்களின் பட்டியல், துஷ்டர்கள் பட்டியல் (Post No.15,535)26/3

தாருகாவன சம்பவம்: அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்-Part 57 (Post.15,540)27/3

வயலூரில் முருகன் செய்த அற்புதங்கள்- Part 58 (Post No.15,544)28/3

கொங்கணச் சித்தர் செய்த அற்புதம்  பற்றி அருணகிரி நாதர் -59 (Post No.15,548)29/3

யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை; முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ? (Post.15,552)30/3

சரபேஸ்வரர் பற்றி அருணகிரிநாதர்; நரி பரியான கதை (Post No.15,556)1/3

முருகப் பெருமானிடம் மோதி, தோல்வி அடைந்த புலவர் கதை- Part 62 (Post No.15,561) 1-4-76

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை; மார்க்கண்டேயன் கதை -Part 63 (Post No.15,565) 2/4

விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை! (Post No.15,570) ¾

அருணகிரிநாதர் ஒரு ‘இலி’-ச்சவாயன்!- Part 65 (Post No.15,575) 4/4

குகையில் நவ நாத சித்தர்கள்! வியாசருக்கு பிள்ளையார் உதவி!- Part 66 (Post No.15,579) 5/4

உடல் ஒரு 9 வாசல் நகரம்: அதர்வண வேதம் முதல் திருப்புகழ் வரை சொல்லும் அதிசயம்! (Post.15,584) 6/4

திருப்புகழில் சாரதாபீடம்! கடவுளர்கள் ஆடிய அற்புத நடனங்கள்! – Part 68 (Post.15,588)7/4

உடலும் மாமரமும் – நல்ல உருவகம்!- Part 69 (Post No.15,592) 8/4

இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597) 9/4

உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி  அருணகிரிநாதர்!  Part 71 (Post No.15,601)10/4

நடராஜர் உடலில் நமசிவாய எழுத்துக்கள்! அருணகிரிநாதரின் புது விளக்கம்- Part 72 (Post.15,606) 11/4

திருப்புகழில் 18  கணங்கள்எட்டு வகை வாதிகள்- part 73 (Post No.15,610) 12/4

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614) 13/4

காதலியைக் காண முருகன் போட்ட வேஷங்கள் – 75 (Post No.15,618)14/4

சிவபெருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621) 15/4

திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624) 16/4

‘ஆறுமுகம்’ என்பதன் பொருள்; இலங்கையில் பிரம்மா வேடனாக பிறந்த கதை–78 (Post.15,627)17/4

புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633) 19/4

கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)20/4

—subham—

Tags- லண்டன் சுவாமிநாதன் , 81 திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்!

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-13; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,694)

Written by London Swaminathan

Post No. 15,694

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவெள்ளியங்குடி

திருவெள்ளியங்குடி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள கோலவில்லி ராமர் கோயில், சுக்கிரன் வழிபட்ட பார்கவ க்ஷேத்திரம் ஆகும்; சுக்கிர தோஷ பரிகாரத் தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, மயன் உருவாக்கிய இந்தத் தலத்தில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

கோலவில்லி ராமர் கோயில்

மூலவர் – கோலவில்லி ராமர், க்ஷீராப்திநாதன்(சயன கோலம்).

உற்சவர் – சிருங்கார சுந்தரர்

தாயார் – மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)

தலவிருட்சம் – செவ்வாழை

தீர்த்தம் – சுக்கிர தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்

விமானம்: புஷ்கலாவர்தக விமானம்.

சுக்கிரன் தலம்: சுக்கிரன் (வெள்ளி) தன் கண் பார்வையை மீண்டும் பெற வழிபட்டதால், இது சுக்கிர பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இந்த ஒரு தலத்தைத் தரிசித்தால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 16-18 கி.மீ தொலைவில் திருப்பாணாந்தாள் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

பெருமாளின் 108 திருத்தலங்களில் இங்கு மட்டும் கருடாழ்வார் சங்கு,சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.

தனக்குக் கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே இத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, வந்தது இறைவன் என்றறியாத மன்னனும் சம்மதிக்க..ஆனால், உண்மை நிலை அறிந்த சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை…வண்டாக உருவெடுத்து அடைத்துவிட்டார்.

இந்தச் செயலை அறிந்தபகவான் , ஒரு குச்சியால் துவாரத்தைக் குத்த, ஒரு கண்ணை இழந்தார் சுக்கிராச்சாரியார்.சுக்கிரன் ஒரு கண் இழ்ந்த நிலையில் பலத் தலங்களில் வழிபட்டு இங்கு மீண்டும் பார்வையினைப் பெற்றார்.இதனால் இத்தலம் வெள்ளி (சுக்கிரன்)யங்குடி என்றானது

தவிர்த்து, தேவ சிற்பியான விஸ்வகர்மா, பெருமாளுக்கு அழகிய கோயில்களைக் கட்டி முடித்ததைப் பார்த்த, அசுரகுல சிற்பி மயன், தன்னால் கட்டமுடியவில்லையே என வருத்தப்பட்டு பிரம்மனை வேண்டினான். பிரம்மனும், இத்தலம் பற்றிக் கூறி இங்கு மயனை பெருமாளை வேண்டி தவம் இருக்கச் சொன்னான்.

பெருமாள், சங்கு சக்கரத்துடன் மயனுக்கு தரிசனம் தர, மயனோ, தனக்கு ராம அவதாரமாய் காட்சித் தர வேண்டினான்.தன் கரத்திலிருந்த சங்கு, சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு பெருமான் கோலவில்லி ராமனாக அம்புகளுடன் காட்சி தந்தார்.

மண்டோதரியின் தந்தை மயன் வழிபட்ட தலம். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான் வழிபட்ட தலம்.

கண் தோஷத்தை போக்கும் திருவெள்ளியங்குடி :-

நவக்கிரகங்களில் “வெள்ளி” எனப்படும் “சுக்கிர பகவான்”, இத்தல இறைவனை தவமிருந்து வழிபட்டமையால் இவ்வூர் “வெள்ளியங்குடி” எனப் பெயர் பெற்றது.  மேலும், இவ்வூர் “சுக்ரபுரி”

****

திருவெள்ளியங்குடி  பாசுரங்கள்

“ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்

அள்ளியம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப

வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளியங் குடியதுவே”

***

முடியுடையமரர்க்கு இடர்செய்யும்அசுரர்தம் பெருமானை அன்று

அறியாய்

மடியிடைவைத்து மார்வை முன்கீண்ட மாயனார் மன்னிய கோயில்

படியிடை மாடத்து அடியிடைத் தூணில்nபதித்த பன் மணிகளின் ஒளியால்

விடிபகல் இரவென்று அறிவரிதாய        திருவெள்ளியங்குடியதுவே.                   –   திருமங்கையாழ்வார்.

—Subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-13;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவெள்ளியங்குடி, சுக்கிரன் தலம், சுக்கிர பரிகாரத் தலம், கோலவில்லி ராமர் கோயில்

பெருமை மிகு தமிழகத்தில் சோழ மண்டலம்! (Post No.15,693)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,693

Date uploaded in London – 4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது சோழ மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் சோழ மண்டலம்! 

ச. நாகராஜன்

 தமிழகத்தில் அனைவரும் தொழுதுண்டு செல்லும் ஒரு பகுதியைக் காண்பியுங்கள் என்றால் பச்சைபசேலென எங்கு நோக்கினும் திகழும் அற்புதமான வயல்களைக் கொண்டுள்ள சோழ மண்டலத்தையே அனைவரும் சுட்டிக் காட்டுவர்.

சோழநாடு சோறுடைத்து என்பது முதுமொழி.

உழுதுண்டு அனைவருக்கும் அமுது படைக்கும் தஞ்சைப் பகுதியை அனைவரும் தொழுதுண்டு பின் செல்வதில் வியப்பே இல்லை.

 வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் பெருமையை சங்க இலக்கியம் முதல் இன்றைய திரைப்படப் பாடல் வரை முழங்குகிறது.

 காலம் காலமாக வணிகத்திலே சிறந்து விளங்கிய பூம்புகார் துறைமுகம் பற்றிய வியத்தகும் செய்திகளை இலக்கியத்தில் காண்கிறோம். கலைகளின் தாயகமாக விளங்கி, இந்திர விழா முதல் பல்வேறு விழாக்களைக் கண்ட சோழ மண்டல நகர்கள் தமிழகத்தின் பெருமையைச் சேர்க்கும் இடங்களாகும்.

 வீரத்தின் விளைநிலமாய்த் திகழ்ந்து உலகம் வியக்கும் மன்னர்களெனத் திகழ்ந்த இராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் பற்றியும் கரிகால் வளவன் பற்றியும் வரலாறு பிரமிப்புடன் விளக்குகிறது.

 கட்டிடக் கலையின் உச்சமாக ராஜராஜன் அமைத்த பெரியகோவில் தஞ்சையில் திகழும் போது, கடல் கடந்து சென்று ராஜேந்திர சோழன் வென்ற நாடுகள் அவனது தீரம், வீரம், கடற்படை நுட்பம், தொழில்துறையில் மேலோங்கி நின்ற தகைமை ஆகியவற்றைப் பறை சாற்றுகின்றன.

சீர்காழியில் அவதரித்து சிவபிரானின் எல்லையற்ற மகிமையை ஆயிரக் கணக்கில் தேவாரப் பாடல்களாகப் பொழிந்த ஞான சம்பந்தரின் திருமுறைகள் தமிழுக்குத் தெய்வ மாண்பைத் தருபவை.

 பிரபஞ்சத்தின் மர்மத்தை விளக்கும் சிதம்பரத் திருத்தலம் எல்லையில்லாப் பெருமையைக் கொண்ட ஆதித் திருத்தலமாகும்.

நடராஜரின் தாண்டவம் பிரபஞ்ச மர்மத்தை விளக்குகிறது என்பதை அறிந்த பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன் நேரடியாக மனைவியுடனும் தன் படப்பிடிப்பினருடனும் சிதம்பரம் வந்தார். அறிவியல் கூறும் பிரபஞ்சத்தின் ஆரம்பத் தோற்றமும் இந்துமதம் கூறும் வரலாறும் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒத்துப் போவதை ஆராய்ந்த அவர் சிதம்பரம் நடராஜரை பிரபலமான தன் காஸ்மாஸ் தொடரில் ஒரு எபிசொடில் காட்டி மகிழ்ந்தார். அமெரிக்காவின் பிரபலமான தொடர் இது என்பது குறிப்பிடத்தகுந்தது,

 ‘காட் பார்டிகிள்’ எனப்படும் கடவுள் துகளை ஆராயும் செர்ன் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவா அருகே உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய அரசு கடவுள் மர்மத்தை விளக்கும் நடராஜரின் திருவுருவச் சிலையை அன்பளிப்பாக வழங்கியது. அது உலகின் இந்த பிரபல ஆய்வுக்கூடத்தின் முகப்பில் நிறுவப்பட்டிருக்கிறது.

உலகையெல்லாம் மயக்கும் இசையின் ஆணிவேராகத் திகழ்ந்து கீர்த்தனைகளைத் தந்த கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோர் பிறந்த திருவாரூர் மண்ணின் சிறப்பே சிறப்பு. அங்குள்ள கோவிலின் பிரமிப்பூட்டும் வரலாறும் கமலாலயக் குளத்தின் அழகும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

ஊழியின் போது அழியாமல் நின்ற மகாமகக் குளம் கும்பகோணத்தின் பெருமையை உயர்த்தும் போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள சைவ, வைணவ, சக்தி ஸ்தலங்களும் நவகிரக தலங்களும் லட்சக் கணக்கான பக்தர்களை ஈர்த்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன.

 சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம், தர்மபுர ஆதீனம், திருப்பனந்தாள் உள்ளிட்ட சைவ மடங்கள் சைவ சமயத்தை மேம்படுத்தும் வரலாறைச் சுட்டிக் காட்டும் மடங்களாகும்.

 இது ஒரு புறமிருக்க என்றும் நிலைத்திருக்கும் மகா காவியமான இராமாயணத்தைத் தமிழிலே பத்தாயிரம் பாடல்களாகப் பாடி உலகையே கொள்ளை கொண்ட கம்பனது பூமியும் சோழ பூமி தான்.

தேரழுந்தூரில் வாழ்ந்து அனைத்து அறிஞர்களையும் தன் பக்கம் பார்க்க வைத்த கம்பனின் சொற்களுக்கு ஈடு இணை இல்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

சொல் கண்டார் சொல்லே கண்டார்சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

 என்பார் கம்பனை அணு அணுவாக ரசித்த கம்ப ரசிகர் கவிஞர் கே.என். சிவராஜ பிள்ளை.

 கம்பனைப் போல பத்து மடங்காக, ஒரு லட்சம் பாடல்களைப் பாடி பத்துக் கம்பன் என்று பெயர் பெற்ற மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் எண்ணற்ற நூல்கள் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பவையாகும். இவரது சீடராக மிளிர்ந்து தமிழ் நூல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை கிராமம் கிராமமாகத் தேடி அலைந்து சேகரித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட எண்ணற்ற அரும் தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழின் எல்லையற்ற பெருமையை உணர்த்திய மகாமகோபாத்தியாய உ.வே.சுவாமிநாதையரின் பெருமையும் தனி தான்!

 திருச்சி மலைக்கோட்டையின் மாண்பை ரசிப்பதோடு அங்குள்ள அதி நவீன தொழில்நுட்பத்தைப் பறைசாற்றும் பிரம்மாண்டமான தொழிலகங்களையும் காண முடியும்.

 அன்னை அகிலாண்டேஸ்வரி, சுவாமிமலை முருகன், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதன் என்று அனைவருக்கும் அருள் பாலிக்கும் தெய்வங்கள் கோவில் கொண்டிருக்கும் இடங்கள் சோழ மண்டலத்தில் எண்ணற்றவை.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமுனைப்பாடியில் அவதரித்து சைவ சமய மேன்மையைப் பறைசாற்றிய அப்பர் தேவார மூவருள் இரண்டாமவர் ஆவார். இவர் இயற்றி அருளியுள்ள தேன் சொட்டும் தேவாரப் பாடல்கள் இன்றும் கோவில்களில் ஓதப்படுவது கண்கூடு.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்யஞானசபை பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் சித்த பூமியாக விளங்குகிறது. ராமலிங்க ஸ்வாமிகள் என்று ஆரம்பத்தில் அறியப்பட்ட வடலூர் வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை உலகிற்குக் காட்டினார். தன் அறையின் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்ட அவர் உடலுடன் மறைந்தார் என்பது உலகையே ஆச்சரியப்பட வைத்தது. பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில், அரசின் உயர் அதிகாரி இதை ஆய்வு செய்து இது உண்மை தான் என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். ஆயிரக் கணக்கான பாடல்களை அருள் மழையாகப் பொழிந்து திரு அருட்பாவை உலகிற்குத் தந்து சாகாப் பெருநெறியைக் காட்டியவர் வள்ளலார் பெருமான்.

 தஞ்சாவூர் மற்றும் கடலூர் பகுதியில் உள்ள மண்வளம் இயற்கை தாதுக்கள் நிரம்பியது என்பது கடைசியாக அறிவியல் தரும் அற்புதச் செய்தி!

 வேளூர் ஆத்மநாத தேசிகரால் இயற்றப்பட்ட சோழமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களும் தமிழகத்தில் சோழமண்டலம் கொண்டிருக்கும் பெருமையைப் பறை சாற்றுபவை.

 இப்படி தமிழுக்கு ஏற்றம் தந்து கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிலகங்கள் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சோழ மண்டலம் பெருமை மிகு தமிழகத்தின் சிறப்பான மண்டலம் அல்லவா!

***

Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 26 to 30) Post.15,692

Picture of Anthanar- Brahming doing Gayatri Japa

Picture of Group of Anthanars- Brahmins

Written by London Swaminathan

Post No. 15,692

Date uploaded in London –3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tiru Valluvar is a great Hindu of fifth century CE is proved by his use of Sanskrit words GUNAM, GANAM, LOKA etc.

Kural 28 is in Tolkappiam which also belongs to fifth century CE linguistically, used MANTRAM for maraimozi. This shows both belong to the same age and both talk about Vedic mantras.

The five senses, Gunam etc are repeated in Upanishads Bhagavad Gita umpteen times

Kual 23 used IRUMAI for dwatvam which is used by LordKkrishna inBbhagavad Gita to denote opposites e.g. hot and cold, up and down, this birth and next birth, lower world and upper world etc. it is typical Hindu expressions.

*Anthanar is a word that is often used to refer to Brahmins in ancient literature as well as contemporary language.

ANTHANAR IS BRAHMIN in Kural 543; it is also used for Kapilar in Purananuru; Anthanars are compared to cows throughout Sanskrit and Tamil literature to say both are tame, not violent in nature.

In short more places in Tamil literature show Anthanar is Brahmin not saint. But both are equally compassionate.

For Kurals 28, 29, 30 parallels and examples are available only from Hindu scriptures. Durvasar, Agastyar episodes

Kural 30 is in Satapata Brahmanam and Dhammapadam of Buddha. Satapata Brahmanam is at least 300 years older than Buddha.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.Himalayan Academy- HA

7.H A Popley – HAP (not full book) Year 1931

8.Tamil Original

****

 Rishi- Seer- Ascetic Picture

26.The great achieve the impossible; the low cannot– ANM+2

***

26.Those who accomplish there things  are considered great;

While those who cannot, remain small–-SMD

***

26.
Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them. –GUP

***
The small the paths of ease pursue
The great achieve things rare to do.         26– SB

***

26.The great will do what is difficult but the low cannot do it– EVS

***

Verse 26 The great ones are they who can dispatch the most Difficult tasks; the small ones are they who cannot. HA

***

26. Hard things the great will always do

Hard things the mean can never do –HAP

***

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார். 26

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Picture of Ascetics in Kasi- Varanasi

27.The infinite book of the secret of nature lies open to only those who are endowed with  the gift of understanding  the sensations of  touch and taste and sight and sound and smell– ANM+2

***

27.Only a person who comprehends the real nature of the five senses,

Can appropriately live his life on earth–-SMD

***

27.
Taste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway.
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell. –GUP

***

They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell.         27– SB
***

27.He who knows the qualities of the five senses – taste, sight, touch, hearing and smell –has the full knowledge of the world– EVS

***

Verse 27 Touch, taste, sight, smell and hearing- He who controls these five magically controls the world. HA

***

27.He holds the world in fief,

Who knows the measure of the senses five – HAP

***

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.  27

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Siva as a Yogi

28.The greatness of the sages of wisdom is known by their mighty words that act like the spell of a new prophesy and shape the destinies of men — ANM+2

***

28.One’s prophetic words alone will prove

worth and greatness, in course of time– SMD

***
28.
The might of men whose word is never vain,
The ‘secret word’ shall to the earth proclaim.
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world. –GUP

***

Full-worded men by what they say,
Their greatness to the world display.         28– SB
***

28.The mystic words of ascetics which are full of effect will show their greatness to the world– EVS

***

Verse 28 Their own secret sayings reveal to the world The greatness of men whose words prove prophetic. HA

***

28.The greatness of the men of certain speech

On earth by hidden word is shown –HAP

***

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். 28

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

29.The wrath of those who stand secure on the mountain heights of virtue, though lasting for a second, is so terrible and volcanic that the world can hardly resist– ANM+2

***

29.The anger of the righteous cannot

be endured even for a moment – SMD

***
29.
The wrath ’tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure.
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted. –GUP

***
Their wrath, who’ve climbed the mount of good,
Though transient, cannot be withstood.         29– SB
***

29.The wrath of those of good disposition cannot be resisted even for a moment– EVS

***

Verse 29 It is impossible to endure even a moment’s wrath of those Who have scaled and stand upon the mountain called virtue. HA

***

29.Even for a moment, it is hard to check the wrath

Of those who have climbed the mount of saintliness—HAP

***

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது. 29

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Picture of an Anthanar/ Brahmin doing Vishnu Puja


30.It is the virtuous that are called Anthanar; it is for they that scatter kindness towards all the breathes– ANM+2

***

30.Those who are merciful are really the men of virtue, because they have compassion for all living creatures – SMD

***

30.
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue’s sons the name of ‘Anthanar’ men give.
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness. –GUP

***

With gentle mercy towards all,
The sage fulfils the vitue’s call.         30– SB

***

30.The ascetics are called truly anthanars because they are kind to all creatures– EVS

Verse 30 Renunciates are called the priestly ones For they are clothed in robes of compassion for all life. HA

***

30.The learned say that saints alone are Brahmans true,

For they behave as clothed in grace to every living thing—HAP

***

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.     30

–Subham—

Tags- Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 26 to 30) , Anthanar, Gunam, Mantra, Pictures, Ascetics, Brahmins, Anthanar images

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 58; இந்து மத கலைச்சொல் அகராதி-58 (Post 15,691)

Written by London Swaminathan

Post No. 15,691

Date uploaded in London –3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

English version was posted yesterday; here is the Tamil version.

மதலசா

இந்தப் பெண்மணியின் கதை மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது.  மதலசா, தனது குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே ஆன்ம ஞானம் மற்றும் வைராக்கியத்தை தாலாட்டுப் பாட்டுகள் மூலம் புகட்டினார். அவர் ஒரு ஞானமுள்ள தாயார். . சத்வம், ஆன்ம ஞானம், மற்றும் உலக ஆசைகளைத் துறத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் இவரது போதனைகள் ‘மதலசா உபதேசம்’ என்று அழைக்கப்படுகிறது.

அவர் ஒரு ப்ரஹ்மவாதினி ;அதாவது தத்துவ வாதினி.

விசுவாவசு என்னும் கந்தர்வனின் புதல்வி. ரிதத்வஜன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் .

அவருக்கு விக்ராந்த ஸுபாஹு,  க்ஷத்ருமர்தானா  என்ற மூன்று புதல்வர்கள் ; அவர்கள் மூவரும் வாலிபப் பருவம் எய்தியவுடன் சந்யாசிகள் ஆகிவிட்டனர்  . ஒரு தாயாரின் தாலாட்டுப்பாட்டுக்குள்ள சக்தியை இது காட்டுகிறது ; சிறுவயதிலிருந்தே காதில் நல்ல விஷயங்களைப் போட்டுக்கொண்டே இருந்தால், அவர்கள் வாழ்நாள் முழுதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்; எந்த தீய சக்தியும் அவர்களை அணுக முடியாத கவசம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் .

***

மாதவி  ( மஹாபாரத மாதவி )

யயாதி மன்னனின் மகளான மாதவி, கன்னித் தன்மையை மீண்டும் பெறும் வரத்தைப் பெற்ற பேரழகியாவாள். காலவ முனிவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, அவள் நான்கு மன்னர்களிடம் அனுப்பப்பட்டு 800 குதிரைகளைப் பெற்றுத் தந்தாள்

மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் இந்தக்  கதை உள்ளது.  காலவர் என்பவர் விச்வாமித்ரரிடம் கல்வி கற்றார். குருகுல வசம் முடிந்தது. குருவே! என்ன தட்சிணை கொடுக்க வேண்டும்? என்று பணிவுடன் கேட்டார். காலவர் ஏழை மாணவர் என்பதால் போய் வா! சீடா ! போய் வா! சீடா!  என்று இருமுறை கூறினார்; பொருள் விளங்காத  காலவர் குரு தட்சிணை எவ்வளவு வேண்டும்? என்று மீண்டும் மீண்டும் வினவ , கோபத்தில் குரு விச்வாமித்தார் சொன்னார்,“போ! 800 வெள்ளைக் குதிரைகளைக்   கொண்டுவா; அதன் காதுகள் ஒருபுறம் மட்டும் கருப்பாக  இருக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார் .

காலவர் கவலையுடன் குதிரை தேடி அலைந்தபோது கருடன் வந்து, “வா உன்னை யயாதி மன்னரிடம் அழைத்துச் செல்கிறேன்; அவர் உதவிடுவார்” என்று சொல்லி கூட்டிச் சென்றார் யயாதி , “எதையும் கேள்” தருகிறேன்” என்றார்; வினோதமான 800 குதிரைகள் தேவை என்றவுடன் அவருக்குத் திகில் ஏற்பட்டது.  இரு நூறு குதிரைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் என் மகள் மாதவி பேரழகி. அவளை அடுத்த நாட்டு மன்னரிடம் அழைத்துச் சென்று உன் கோரிக்கையைச் சொல்; சரி என்று சொன்னால் உனக்குக் குதிரைகள் கிடைக்கும் என்றார். அந்தப் பெண்ணரசி மாதவி, யாருடன் படுத்தாலும் கன்னித் தன்மையை இழக்காமல் குழந்தை பெறும் பாக்கியத்தை—வரத்தைப்– பெற்றிருந்தாள். கடைசியாக அவள் திவோதசன் என்ற மன்னருடன் படுக்கச் சென்றபோது இந்தக் கதை வருகிறது.    

மன்னர்கள் பல பெண்களை மணப்பதும் ஒரு மன்னன் போரில் தோற்றால் அவனுடைய மனைவியர்,  கொள்ளையிட்ட செல்வத்தின் பகுதியாக மாற்றானுக்குச் சொந்தமாவதும் இந்தியா முழுதும் வழக்கில் இருந்தது . ஆகவே மாதவி பல மன்னர்களுடன் படுத்தது  தவறில்லை என்ற கட்டத்தில் புகழ்பெற்ற கணவன்- மனைவி பட்டியல் வருகிறது

ஹர்யாஸ்வ  ( அயோத்தி மன்னன்) , திவோதாச  ( காசி மன்னன்)  , உசிநார ( போஜமன்னன் ) ஆகியோருடன் இன்பம் துய்த்து 600 குதிரைகளைப் பெற்று காலவரிடம் கொடுத்தாள்; மீண்டும் கன்னித் தன்மையைப் பெற்றவுடன்  நாடு திரும்பினாள் ; அவளுக்குப் பிறந்த வசுமனஸ், ப்ரதர்தன, சிபி,  அஷ்டக ஆகிய  நால்வரும் பேரரசர்களாகத் திகழ்ந்தனர் . அவளுடைய தந்தை முறையான திருமணத்துக்காக ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தபோது அவள் மறுத்துவிட்டு துறவற வாழ்க்கை வாழ்ந்தாள்செக்ஸ் இன்பத்துக்கு பிறருடன் படுக்காமல், ஒரு முனிவர்க்கு உதவுவதற்புகாகப் பிறருடன் படுத்தாள் ; இதனால் இவரை தியாகத்தின் சின்னமாகவும் நல்ல மனைவியரில் ஓருவராகவும் மஹாபாரதம் காட்டுகிறது .

***

மாதவி  (சிலப்பதிகாரத்தில்)

சிலப்பதிகாரத்தில் கோவலனைக் கவர்ந்த நடன மாது மாதவி ;

ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகியையும், மாதவியையும்  இரு மாறுபட்ட துருவங்களாகவே படைத்திருக்கிறார்.  கண்ணகி ஒரு பெரும் வணிகனின் குடும்பத்தில் பிறந்து கோவலனுக்கு வாக்குப்பட்டாள்;  கண்ணகியின் கணவன் கோவலன், நடன மங்கை, பேரழகி மாதவியிடம் மையல் கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ்கிறான்.  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அவள் பெயர் மணிமேகலை. இது இராண்டாவது காவியத்தின் பெயரும் ஆகும்

மாதவி பிறப்பால் கணிகையாக இருந்தபோதிலும் கோவலனை மணந்த பிறகு அவன் ஒருவனை மட்டுமே தன் வாழ்வில் ஏற்றாள்.   ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனம் வெறுத்து கோவலன் மாதவியைப் பிரிந்து தன் மனைவி கண்ணகியைத் தேடிப் போகிறான். மதுரை நகரில் புது வாழ்வுத் துவாங்கப்போன இடத்தில் பொற்கொல்லன் ஒருவனின் சதியால் கோவலனுக்கு பாண்டிய மன்னன் மரணதண்டனை கொடுத்துவிட்டான். இந்தத் துயரச்  செய்தியை அறிந்த மாதவி துறவறம் பூண்டு,  புத்த மதத்தில் சேர்கிறாள்; தன் மகள் மணிமேகலையையும் துறவறம் ஏற்கச்  செய்கிறாள்.

***

மாத்ர தேசம் 

பழங்கால இந்தியாவின் 56 தேசங்களில் ஒன்றான மாத்ர தேசம் வடமேற்கு இந்தியாவில் பஞ்சாப் பகுதியில் இருந்தது ;அதை ஆண்ட சல்ய என்ற மன்னன் , மஹாபாரத யுத்தத்தில் கெளரவர்களுக்குத் துணையாக நின்றான் ; அங்கிருந்து வந்த இளவரசி மாத்ரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆனாள். 

***

மாத்ரி

மாத்ர தேச மன்னன் சல்யனின் சகோதரி மாத்ரி  ; அவளை பாண்டு மன்னன் இரண்டாவது மனைவியாகக் கட்டிக்கொண்டான் ; பாண்டு செக்ஸ் அனுபவித்தால் இறந்துவிடுவான் என்று கிண்டம மகரிஷி சாபம் போட்டிருந்தார் ; இதனால் முதல் மனைவியான குந்தி , துர்வாச முனிவர்  கொடுத்த வரத்தால் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ( அதற்கு முன்னர் கர்ணன் ) ஆகியோரைப் பெற்றாள்; யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் என்று கருதி துர்வாசர் சொன்ன மந்திரத்தை மாத்ரிக்கும் கற்பித்தாள்; அவள் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரை  வரவழைத்து நகுலன், சகாதேவன் என்ற இரட்டையரைப்  பெற்றாள்; ஒரு நாள் பாண்டுவுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கவே மாத்ரியை அணைத்தார் ; சாபத்தினால் உடனே இறந்தார் ; தன்னால்தானே இப்படி நடந்தது என்று வருத்தப்பட்ட மாத்ரி கணவனின் சிதைத்தீயில் படுத்து உயிர்த்தியாகம் செய்தாள் ; புறநானூற்றில் பூதப் பாண்டியன் மனைவியும் இப்படி இறந்ததை ஒப்பிடலாம் .

(பாண்டு மரணத்துக்கு என்னுடைய விளக்கம் : இருதய நோய் காடுமையாக உள்ளவர்கள், செக்ஸ் போன்ற விஷயங்களில் ஈடு படும்போது மாரடைப்பு ஏற்பட்ட வாய்ப்புண்டு; இது டாக்டர்களின் எச்சரிக்கை; அதை சாபம் என்றால்தான் பழைய கால ஆட்கள் நம்புவார்கள் ; இது மிக அரிதாகவே நிகழும்) 

***

மத்வாசார்யார்

துவைதம் என்னும் கொள்கையைப் பரப்பியவர் ; சங்கரர், ராமானுஜர் ஆகிய இரண்டு தென்னிந்திய தத்துவ தரிசிகளுக்கு இணையாக நிற்பவர்.

இவர் ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்பி வருடம் ஆடி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று அந்தண குலத்தில் மத்யகேஹர் – வேதவதி ஆகிய தம்பதியருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு பெற்றோர் வாசுதேவன் என்று பெயர் சூட்டினர். வேத அத்யயனம் முடிந்த பின்னர் தர்க்கம் வியாகாரணம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார் வாசுதேவர். உலக வாழ்க்கையில் சற்றும் பற்றில்லாத நிலையில் உடுப்பி தலத்தில் ஸ்ரீ அனந்தேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மடத்தில் ஸ்ரீ அச்யுதப்பிரக்ஷர் இருப்பதை அறிந்தார் அவர். அவரை அணுகி தனக்கு சந்யாச தீக்ஷை அளிக்குமாறு வேண்டினார். அவரும் இவரது ஆர்வத்தையும் தகுதியையும் பார்த்து அவருக்கு துறவற தீக்ஷையைக் கொடுத்து ‘பூர்ண ப்ரஜ்ஞர்’ என்னும் சந்யாச நாமத்தை அளித்தார். இவர் வாழ்க்கையில் ஏராளமான அற்புதங்களைச் செய்தார்.

மத்வருக்கு இஷ்ட தெய்வம் கிருஷ்ணர். அவருக்கு ஒரு கோயில் கட்ட அவர் விரும்பினார். ஒரு நாள் தனது ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் அவர் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த போது கடலில் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் கப்பலின் தலைவன் அவரை அணுகி நமஸ்கரித்து கப்பலைக் காப்பாற்றுமாறு வேண்டினான். மத்வர் காற்று அடிக்கும் திசையை மாற்றி கப்பலை மூழ்காமல் கரைக்கு வாச் செய்தார். கப்பலுக்குரியவன் கப்பலிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற மத்வர் கப்பலில் இருந்த கோபீ திருமண் இட்டுக்கொள்வதற்கான பாறையை எடுத்துக்கொண்டார் ; அதை உடைத்தபோது  இடையே ஒரு ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதனால் மத்வர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். அந்த விக்ரஹம் ருக்மிணி தேவியால் த்வாரகையில் பூஜிக்கப்பட்டு வந்த விக்ரஹம். த்வாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி இருந்த அதுவே மத்வரின் கைக்கு இப்போது வந்து சேர்ந்திருந்தது. உடுப்பியில் அதைப் பிரதிஷ்டை செய்தார்.அதைத் தான் வாழ்நாள் முழுவதும் தன் கையினாலேயே அர்ச்சித்து வந்தார் மத்வர்.

தனக்குப் பின்னர் கிருஷ்ணருக்குப் பூஜை செய்ய, மத்வாசாரியர்  தனது சீடர்களில் விஷ்ணுதீர்த்தர் உள்ளிட்ட எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொருவரும் இரண்டிரண்டு ஆண்டுகள் அர்ச்சனை செய்யுமாறும் இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் அருளாணை பிறப்பித்தார். அதன் படியே இன்றளவும் அங்குள்ள எட்டு மடங்கள் ஒவ்வொன்றும் முறைப்படி இரண்டிரண்டு ஆண்டுகள் உடுப்பி கிருஷ்ணருக்கு அர்ச்சனை புரிந்து வருகின்றன.

மத்வாசாரியார் 37 அபூர்வமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமானவை பகவத் கீதா பாஷ்யம், ஸுத்ர பாஷ்யம், கீதா தாத்பர்யம், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், தசோபநிஷத் பாஷ்யம், பாகவத தாத்பர்ய நிர்ணயம், அனு பாஷ்யம், த்வாதச ஸ்தோத்ரம், தந்த்ர ஸாரம் ஆகியவையாகும். ருக் வேதத்தில் உள்ள முதல் 40 சூக்தங்களுக்கு அவர் பாஷ்யமும் செய்து அருளியுள்ளார்.

–SUBAHM—

TAGS -HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 58; இந்து மத கலைச்சொல் அகராதி-58, மதலசா, மத்வர், மாதவி, சிலப்பதிகாரம், மணிமேகலை, யயாதி, மஹாபாரதம், காலவ முனிவர் விசுவாமித்திரர், மத்வர், மாத்ரி, சல்யன் 

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-12;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,690)

Written by London Swaminathan

Post No. 15,690

Date uploaded in London –3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

விபூதி அணியும் பெருமாள்!

I took this picture from a dark area; no  lights.

திருக்கண்ணங்குடி (க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்)

மூலவர் – லோகநாதன், ச்யாமளமேனிப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – தாமோதர நாராயணன்.

தாயார் – லோகநாயகி உத்ஸவர் – அரவிந்தவல்லி.

தீர்த்தம் – ராவண புஷ்கரிணி.

ஸ்தல விருக்ஷம் – மகிழமரம் (வகுளம்)

விமானம் – உத்பல விமானம்.

ப்ரத்யக்ஷம்- ப்ருகு, ப்ருஹ்மா, உபரிசரவஸு, கெனதமர், திருமங்கையாழ்வார்.

காயாமகிழ், உறங்காப்புளி, தோலாவழக்கு, ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி’ என்பது பழமொழி.

விசேஷங்கள் – இவ்வூரின் முக்கிய அடையாளங்களான ஊறாக்கிணறும்உறங்காப்புளியும் இப்போது இல்லை. காயாமகிழ் (காய்ந்து பட்டுப் போகாத வரம்பெற்ற ஸ்தலவ்ருக்ஷம்) ஸந்நிதியின் பின்புறம் இருக்கிறது.

தாயார் ஸந்நிதியில் மூலவரும் உத்ஸவரும் ஒரே முகஜாடையுடனிருப்பது வேறெங்கும் காணமுடியாத அதிசயம். வஸிஷ்டர் தம் பக்தியால் வெண்ணை மயமான க்ருஷ்ணனை இளகி, த்ரவமாகாமல் கட்டி, திவ்யமங்கள விக்ரஹம்செய்து, த்யானம் செய்வார். இப்படி வெகு காலம் கடந்தபின், ஒரு நாள் பகவான் கோபாலன் உருவம்கொண்டு வஸிஷ்டர் ஆராதனம் செய்யும் வெண்ணை கண்ணனை அமுது செய்ததைப் பார்த்து கோபாலனைப் பிடிக்க ஒட, கோபாலனும் மேற்கு திசை நோக்கி ஒட, மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மஹரிஷிகள் பக்தியாகிய பாசக்கயிற்றால் கட்டியதால், கட்டுண்டு கோயில்கொண்டு கண்ணன் எழுந்தருளியதால்திருக்கண்ணங்குடி என்ற பெயர் உண்டாயிற்று.

திருமங்கையாழ்வார், நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான புத்த விக்ரஹத்தை ரங்கநாதன் கோபுரம் பிராகாரங்கள் முதலிய திருப்பணிகளை செய்ய கொண்டுவந்து புதைத்து, பகவான் அருளால் எடுத்துச் சென்ற ஸ்தலம் இது.

நாகப்பட்டினத்திலிருந்து பஸ் வழியாக சிக்கலுக்கும் கீவளுருக்கும் இடையேயுள்ள ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் தூரம் நடந்தோ வண்டியிலோ செல்லலாம். தஞ்சாவூர்- கீவளூர் ரயில் பாதையிலுள்ள கீவளூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 மைல் தூரம் சென்றும் அடையலாம்.

***

விபூதி அணியும் பெருமாள்!

நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடியில் உள்ள லோகநாதப் பெருமாள் கோயிலில் பெருமாள் விபூதி (திருநீறு) அணிந்து காட்சி தரும் அபூர்வ வைபவம் நடைபெறுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளில், விஷ்ணு சிவனை வணங்கும் ஐதீகத்தின் அடிப்படையில், பெருமாளுக்கு விபூதி காப்பு சாத்தப்பட்டு ‘திருநீரணி விழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [12]

  • திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்: இந்தத் தலத்தில் பெருமாள், திருநீறு அணிந்து, நெற்றியில் விபூதியுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
  •  
  • திருநீரணி விழா: இந்த அபூர்வ விழா சித்திரை மாதத்தில் 7-ஆம் நாள் நடைபெறும்.
  •  
  • ஐதீகம்: பொதுவாக விஷ்ணுவிற்கு நாமம் (திருமண்) சாத்தப்படும் நிலையில், இங்கு சிவபெருமானுக்குரிய விபூதியை பெருமாள் அணிந்து கொள்வது, அரி-ஹரன் (ஹரிஹர) சங்கமத்தைக் குறிக்கும்.
  •  
  • சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த வழிபாடு, விபூதியின் மகிமையை குறிக்கும்.

திருக்கண்ணங்குடி பாசுரங்கள்

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இந்தப் பாசுரங்கள் “வங்கமா முந்நீர்” (பெரிய திருமொழி 9-1-1) என்ற பாடலுடன் தொடங்கி, திருக்கண்ணங்குடி பெருமாளின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன.

இத்தலத்தை ‘கண்ணன் வாழும் குடி’ (திருக்கண்ணங்குடி) என்று ஆழ்வார் போற்றுகிறார்.பாசுரங்கள் பெரும்பாலும் பெருமாளின் சாமளமேனி (நீலமேகவண்ணன்) மற்றும் லோகநாதன் என்ற திருக்கோலத்தை விவரிக்கின்றன.

மங்களா சாஸனம் –

திருமங்கையாழ்வார் – 1748-57 – 10 பாசுரங்கள்.

1748.  

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,*

சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*

அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-

செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2)

**

1749.  

கவளமா கதத்த கரி உய்ய*  பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-

துவள*  மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட*  சுடுபடை துரந்தோன்,*

குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்*  கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*

திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே 

**

1750.  

வாதை வந்து அடர வானமும் நிலனும்*  மலைகளும் அலைகடல் குளிப்ப,*

மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி*  விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*

போதுஅலர் புன்னை மல்லிகை*  மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,*

சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

**

1751.  

வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி*  வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*

பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்*  பஞ்சவர் பாகன்*

ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து*  உயர்கொடி ஒளிவளர் மதியம்,*

சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.

**

1752.  

மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்*  மூவடி நீரொடும் கொண்டு,*

பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து*  அலைபுனல் இலைக்குடை நீழல்,*

செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 

**

1753.  

மழுவினால் அவனி அரசை மூவெழுகால்*  மணிமுடி பொடிபடுத்து*  உதிரக்-

குழுவுவார் புனலுள் குளித்து*  வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*

குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்*  குளிர்தரு சூதம்மாதவியும்*

செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

**

1754.  

வான்உளார் அவரை வலிமையால் நலியும்*  மறிகடல் இலங்கையார் கோனை,*

பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்*  பருமுடி உதிர வில் வளைத்தோன்,*

கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட*  கணமுகில் முரசம் நின்றுஅதிர,*

தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.

**

1755.  

அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை*  அஞ்சிடாதே இட,*  அதற்கு-

பெரியமா மேனி அண்டம் ஊடுருவ*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

வரையின்மா மணியும் மரகதத் திரளும்*  வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,*

திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

**

1756.  

பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய*  பாரத மாபெரும் போரில்,*

மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்*  மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*

துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்*   சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,*

தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்*  திருக்கண்ணங் குடியுள் நின்றானே.

**

1757.  

கலைஉலா அல்குல் காரிகை திறத்து*  கடல்பெரும் படையொடும் சென்று,*

சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற*  திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*

மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*

உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்*  வல்லவர்க்கு இல்லை நல்குரவே.  (2)

—subham—

Tags- திருக்கண்ணங்குடி பாசுரங்கள், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-12;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், விபூதி அணியும் பெருமாள்