பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)

Written by London Swaminathan

Post No. 16,123

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதிதாசன் (29 April 1891 – 21 April 1964 ) தமிழ்நாட்டின் புரட்சிக் கவிஞர். தமிழ் மொழி, இயற்கை, சமத்துவம், பெண்ணுரிமை மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்டு பல பாடல்களை எழுதியுள்ளார். பெயர்- கனக சுப்புரத்தினம், தாய் பெயர் -லெட்சுமி அம்மாள், தந்தை பெயர் -கனகசபை முதலியார்.

இயற்கை பற்றி பாரதிதாசன் அழகான கவிதைகளை இயற்றியுள்ளார்; அவற்றை இன்னொரு பதிவில் தருகிறேன் ; அவருடைய நல்ல பாடல்களும், கெட்ட பாடல்களும் ப்ராஜெக்ட் மதுரை வெப்சைட்டில் உள்ளன.

***

Please go to Project Madurai website to read all his poems.

1

பாரதிதாசனின் குரு சுப்பிரமணிய பாரதியார். பாரதி பற்றி பாரதிதாசன் எப்படி வருணித்தார்?

2

பாரதிதாசனின் புகழ்பெற்ற ஒரு பாடலுக்கு இசை அமைப்பதற்கு தண்டபாணி தேசிகர் இரண்டு வருஷம் கஷ்டப்பட்டார். அது என்ன பாடல் ?

3.

கவிஞரின் முக்கியப்படைப்புகள் என்ன ?

4

தமிழ் மொழி அமுதம் போன்றது என்று கவிஞர் பாடியது என்ன ?

5

திரு ஞான சம்பந்தர் முதலிய பார்ப்பனர்களை புரட்சிக் கவி எப்படி வசை பாடுகிறார் ?

6

பாரதிதாசன் எதற்காக சங்கே முழங்கு என்று பாடினார் ?

7

கவிஞர் கண்ட புதிய உலகம் எப்படி இருக்குமாம் ?

8

கொலை வாளினை  எடடா — என்று தமிழர்களை எதற்காகத் தூண்டிவிட்டார் ?

9

தீபாவளிப் பண்டிகையைக் கவிஞர் எப்படி வசை பாடுகிறார் ?

10.

பாரதி சொன்னவுடன்  பாரதிதாசன் இயற்றிய முதல் பாட்டு எது ?

****************************

விடைகள்

1.“ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை !

குவிக்கும் கவிதைக் குயில் ! இந் நாட்டினரைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு !

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா !

காடு கமழும் கற்பூரச் சொற்கோ !

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் !

திறம் பாட வந்த மறவன்; புதிய

அறம் பாட வந்த அறிஞன்: நாட்டிற்

படரும் சாதிப்படைக்கு மருந்து !

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன் !

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன் !

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் !

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”

****

2.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று “துன்பம் நேர்கையில்…………..” என்ற பாடல். இது திரைப்படத்திலும் இடம் பெற்றுள்ளது. இதற்கு இசை அமைத்தவர் திக்கெட்டும் தமிழ் இசை மணம் கமழ வைத்த M M தண்டபாணி தேசிகர் ஆவார். இதற்கு இசை அமைக்க அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஆயிற்றாம். இது அவரே சொன்ன செய்தி. இதற்கு மிகவும் பொருத்தமான ராகம் ‘தேஷ்’ என்னும் ராகம்தான் என்கிறார் தேசிகர்.

தண்டபாணி தேசிகர் சொல்கிறார்:

“இந்த பாட்டுக்கு சரியான ராகத்தைக் கண்டுபிடித்து இசை அமைக்க இரண்டு வருஷம் ஆச்சு. இதற்கு தேஷ் ராகம்தான் பொருத்தம். பாருங்கள்! நான் இதையே அடானா ராகத்தில் பாடுகிறேன் (தேசிகர் பாடியும் காட்டுகிறார்). இப்படி அடானா ராகத்தில் பாடினால், வருத்தமுற்ற பெண் ‘அம்மா, அப்பா’ என்று அழுதுகொண்டு ஓடிப் போய்விடும். பொருளுக்கேற்ற ராகம் இருக்க வேண்டும். இதை வள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லி வைத்தார்:-

பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண் என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் — குறள் 573

பொருள்:-

பாடலின் பொருளோடு இயைந்து வராத பண்ணால் (ராகத்தால்) என்ன பயன்?  அதைப்போல கண்ணோட்டத்துடன் (இரக்கம், அருள்) பொருந்தாத கண்ணால் என்ன பயனுண்டாகும் ?”

இதிலிருந்து வள்ளுவனுக்குள்ள சங்கீத ஞானமும் புலப்படும்.

இதோ பாரதிதாசனின் முழுப்பாடல்:–

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்கமாட் டாயா? — எமக்

கின்பம் சேர்க்கமாட் டாயா? — நல்

லன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்கமாட் டாயா? — கண்ணே

அல்லல் நீக்கமாட் டாயா?     …… துன்பம்…

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வில் உணர்வு சேர்க்க — எம்

வாழ்வில் உணர்வு சேர்க்க — நீ

அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்

ஆடிக் காட்டமாட் டாயா? — கண்ணே

ஆடிக் காட்டமாட் டாயா?   — துன்பம்…

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே

அறிகி லாத போது — யாம்

அறிகி லாத போது — தமிழ்

இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்

இயம்பிக் காட்டமாட் டாயா? — நீ

இயம்பிக் காட்டமாட் டாயா?       —துன்பம்…

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் — தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் — நல்

திறமை காட்டிஉனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட் டாயா? — தமிழ்ச்

செல்வம் ஆகமாட் டாயா?   துன்பம்…

——-பாவேந்தர் பாரதிதாசன் (Poem is taken from Project Madurai website)

***

3.முக்கியப் படைப்புகள் புரட்சிக் கவிசஞ்சீவி பர்வதத்தின் சாரல்அழகின் சிரிப்புகுடும்ப விளக்குஇருண்ட வீடு

****

4.தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! இன்பத்

தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! – இன்பத்

தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

                   (பாரதிதாசன் கவிதைகள்)

****

5.குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்
குருநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்
படியேறும் சமண் கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலைப் புரிந்திட்ட பல்லாயிரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்….

**

இராசாசி வயிற்றெரிச்சல்

இராசாசி வயிற்றெரிச்சல்‌

உம்‌ நாடகம்‌ செல்லுமா நரியாரே?

சென்னை விலங்கு மருத்துவம்‌ செய்முறைக்‌

கல்லூரியின்‌ தமிழ்க்‌ கழகந்‌ தன்னைத்‌

தொடக்கம்‌ செய்த இராசாசி சொன்னார்‌?

“வெறுங்‌ கூச்சலிடுவதால்‌ சாதிவோர்‌ அறாது”*

பெரியார்‌ தாமும்‌, பெரியார்‌ கொள்கைக்‌

குரியார்‌ தாமும்‌, சாதிக்‌ கொள்ளை நோய்‌

ஒழிக்கும்‌ பணியில்‌ ஒய்விலா துழைப்பது

வையம்‌ அறியும்‌! மறுக்க ஓண்ணாது! —

வெறுங்கூச்ச லிடுவதாய்‌ இராசாசி விளம்பினா்ல்‌

ஆரைப்‌ பற்றி விளம்பிய தாகும்‌?

வெல்லும்‌ பெரியார்‌ வெறும்‌ பேச்சுக்காரரா?

வீரத்‌ தமிழர்‌ வெறும்‌ பேச்சுக்‌ காரரா?

முன்னாள்‌ நீர்‌ ஒரு முதலமைச்சராய்‌

இருந்தீர்‌ இந்தியைக்‌ கொண்டு வந்தீர்‌!

உமது வாலை ஒட்ட அறுத்தது

……………………………

பார்ப்பான்‌ என்ற பேர்ப்‌ பலகைதான்‌

போனதா புகலுக௧! இல்லையே! இல்லையே!

…………………………………………..

**மக்கள்‌ நிகர்‌”£* எனும்‌ மிக்க சிறிய

பாடமும்‌ அறியாக்‌ குள்ள |

நாடகம்‌ செல்லுமோ நரியாரே? |

***

வலை விரித்தான் ஆச்சாரி

போகாதே சாகாதே

வலைவிரித்தான் பார்ப்பானடா

மக்களெலாம் வருகஎன்பான்

கலையழித்தான் கண்ணிவைத்தான் போகாதே — நாம்

கண்டபயன் போதுமினிச் சாகாதே!

நலிவுசெய்வான் பார்ப்பானடா

நாலுசாதி வாழ்க என்பான்

புலியடிப்பான் கறிக்காகப் போகாதே — நீ

போனமட்டும் போதும் இனிச் சாகாதே!

பள்ளிஇரு பத்தாயிரம்

படிப்பவர்கள் படிக்காமல்

கொள்ளிவைத்தான் ஆச்சாரிதான் போகாதே — அக்

கெள்ளைநோய்க்கு மருந்துமில்லை சாகாதே!

மதிதமிழர் ஒழியவேண்டும்

மடப்பார்ப்பான் வாழவேண்டும்

இதுதான்ஆச் சாரிஎண்ணம் போகாதே — நீ

இதுவரைக்கும் பார்த்துவிட்டாய் சாகாதே!

பன்னாடைக் கட்சிகளும்

பழிவாங்கும் சின்னவரும்

என்கூட்டம் என்றுரைப்பான் போகாதே — அவ்

வெறிமூட்டும் கூட்டத்தினாற் சாகாதே!

***

கழுகான தில்லியின் கண்ணைப் பிடுங்கு!

காம ராசனே போரைத் தொடங்கு

…………………………….

ஆட்சியின் அடிப்படை பார்ப்பனர் தந்நலம்;

ஆட்சியில் இருப்பதும் அதேபார்ப் பனகுலம்

காட்டி வந்துள மனப்பான்மை யாவும்

கருதும் நெஞ்சில் நெருப்பைத்தான் தூவும்.

(கழுகான தில்லியின்)

*****

6.எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன்

பிறந்தோம் நாங்கள், ஆண்மைச்

சிங்கத்தின் கூட்டம் என்றும் சிறியோர்க்கு

ஞாபகம் செய் முழங்கு சங்கே!

சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்

தீராதி தீரரென்று ஊது சங்கே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்

தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!

கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள்

ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!

வெங்குருதி தனில் கமழ்ந்து வீரஞ்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம்!

****

7.புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

பொதுஉடைமைக் கொள்கை திசை எட்டும் சேர்ப்போம்

புனிதமோடு அதை எங்கள் உயிர் என்று காப்போம்

இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்

இது எனது என்னும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்

****

8.கொலை வாளினை எடடா மிகு

கொடியோர் செயல் அறவே

குகைவாழ் ஒரு புலியே உயர்

குணமேவிய தமிழா!

அலைமா கடல் நிலம் வானிலுன்

அணி மாளிகை ரதமே

அவை ஏறிடும் விதமே யுன

ததிகாரம் நிறுவுவாய்!

வலியோர் சிலர் எளியோர் தமை

வதையே புரிகுவதா?

மகராசர்கள் உலகாளுதல்

நிலையாம் எனும் நினைவா?

உலகாள உனது தாய் மிக

உயிர் வாதை யடைகிறாள்;

உதவாதினி ஒரு தாமதம்

உடனே விழி தமிழா!

கலையே வளர் தொழில் மேவிடு!

கவிதை புனை தமிழா!

கடலே நிகர் படைசேர் கடு

விடநேர் கருவிகள் சேர்!

நிலமே உழு நவதானிய

நிறை யூதியம் அடைவாய்;

நிதி நூல் விளை! உயிர் நூல் உரை

நிச நூல் மிக வரைவாய்!

தலையாகிய அறமே புரி

சரி நீதி யுதவுவாய்!

சமமே பொருள் ஐனநாயகம்

எனவே முரசறைவாய்!

இலையே உணவிலையே கதி

இலையே எனும் எளிமை

இனி மேலிலை எனவே முரசறைவாய்

முரசறைவாய்!– -பாவேந்தர்.

***

9.நரகனைக் கொன்ற நாள் நல்விழா நாளா?

நரகன் இறந்தால் நன்மை யாருக்கு?

நரகன் என்பவன் நல்லனா? தீயனா?

அசுரன் என்றவனை அறைகின்றாரே?

இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?

இப் பெயரெல்லாம் யாரைக் குறிப்பன?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச் சிலர்

பன்னுகின்றனர் என்பது பொய்யா?

***

10.பாரதி சொன்னவுடன்  பாரதிதாசன் இயற்றிய முதல் பாட்டு :

எங்கெங்குக் காணினும் சக்தியடா! – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா! – அங்குத்

தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்தத்

தாயின் கைப்பந்தென ஓடுமடா – ஒரு

கங்குகளில் ஏழு முகிலினமும் – வந்து

கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ ? – எனில்

மங்கை நகைத்த ஒலியெனலாம் – அவள்

மந்த நகையங்கு மின்னுதடா!

காளை ஒருவன் கவிச்சுவையைக் – கரை

காண நினைத்த முழுநினைப்பில் – அன்னை

தோளசைத்தங்கு நடம் புரிவாள் – அவன்

தொல்லறிவாளர் திறம் பெறுவான் – ஒரு

வாளைச் சுழற்றும் விசையினிலே – இந்த

வையமுழுவதும் துண்டு செய்வேன் – என

நீள இடையின்றி நீநினைத்தால் – அம்மை

நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

–subham—

Tags- பார்ப்பனரை வசைபாடிய, பாரதிதாசன் பாடல்கள், 10 கேள்விகள்

Karikal Choza: Purananuru wonders-58, Tamil Encyclopaedia 98 (Post.16,125)

Karikal Choza in Grand Anicut, Tamil Nadu

 Written by London Swaminathan

Post No. 16,125

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-58, Tamil Encyclopaedia 98, One Thousand Interesting Facts Part 98,

Item 816- Beautiful Tamil Words

For windows the poet Uruththirankannan (Mr Rudraksha)  used Tamil words Vali Nuzaiyum Vaay= wind entering opening. வளி நுழையும் வாயில்

For different sounds from different musical instruments, he used different verbs

Kuzal Akava, Yaaz Murala, Muzavu Athira, Murasu Iyampa Line 155

The flutes do pipe, the lyres do twang,

The drums roll loud, and the tabors sound

குழல் அகவ யாழ்  முரலமுழவு அதிரமுரசு இயம்ப

***

Item 817- Debates and Challenges

From Kanyakumari to Kashmir, Hindu philosophers challenged the Anti Hindu forces and won them to their side. We see it in the lives of Adi Sankara, Ramanuja and Madhwa. Few Buddhist and Jain Scholars also won some debates increased their strength. The main place for such debates was Varanasi/Kasi. But from Tamil literature we knew that such debates happened in the Royal courts. But poet Rudraksha gives us some new information. Here in Kaveri Poompattinam in Tamil Nadu, the debaters planted their flags and invited all the interested persons to challenge them. We must remember that this happened 2000 years ago. No part in the world such organised debates happened 2000 years ago. Read any saint’s history and you will see some reports about scholarly debates.

Here in lines 169-171 pet gives us such information

***

Item 818- Cosmopolitan Harbour City


Kaveri Poom Pattinam (meaning is city where Kaveri enters sea) was cosmopolitan city where different nationalities established their colonies for business purpose.  We know such colonies of Hindu merchants existed from Alexandria in Egypt to several South East Asian cities.

Here in lines 216 clearly say this. People from countries of different languages were there.

***

Item 819– Good Business People

While describing the qualities of city’s merchants, poet makes a beautiful comment

Afraid of
blame, they trade well, respecting their
goods and those of others. They do not
take much when they buy and do not
give less when they sell.

***

Item 820 lines 200-204 Punyam

Support to Brahmins and cow worship

Merchants worshipped gods, they maintained bulls and cows, did Yagas and gave oblations, spread the fame of people well versed in four Vedas, did punya and did give donations

Important words- Amarar= devas/gods; Aavuthi= Aahuthi from Sanskrit Havis;

Naan marai= four Vedas;

Poet has used PUNNIYAM

***

Item 821 story of choza king/ animal intelligence

Karikalvalavan was also known as Tirumavalavan . he was denied the throne because of infighting in the family. But he, like a tiger in cage, came out and got his post. Here the simile is more important. It shows Hindus knew about animal intelligence. When the elephant catchers trap an elephant, it it is a male elephant, it uses its trunk and tusks to make way and escape. Karikalan also did this and came out of his prison.

In poet’s words,

As a long trunked tusker falls when trapped

Within a pit and breaks with tusks

The sides. And on the piled-up earth

He steps, escapes, and joins his mate

So planning his escape with care

The king doth scale his foremen’s walls

Unsheathes his sword, regains his crown……………..

While we get some historical anecdote, we also come to know the intelligence of animals/elephants.

***

Item 822  Karikalan’s determination

Karikal Choza in Grand Anicut, Tamil Nadu


Karikalan’s will power is portrayed beautifully

So strong his will to carry out

His aim without defeat, that one

Would think that he could mountains move

Fill up the sea, bring down the sky.

மலை அகழ்க்குவனேகடல் தூர்க்குவனே,
வான் வீழ்க்குவனேவளி மாற்றுவன்,

***

Item 823 war atrocities

Karikalan after defeating enemies brought the omen from enemy countries who did the worship in the temples. they lit the never extinguishable lamps, washed the floor with cow dung paste.

Poet narrated first how festive the enemy country was and the condition now of enemy territory,

The jackal shrieks and howls;

The owl’s dad hoot is heard;

The bitten whoops; dread goblin crowds

And female ghouls that corpses eat

With hair dishevelled fill the place.

…………………………

He ruins thus the hamlets fair

Whose walls are strongly fortified,

And wipes out those that lived in them.

Even then he is not satisfied.

The poet finishes the poem with the list of countries Karikalan won

பல் ஒளியர் பணிபு ஒடுங்க,
தொல் அருவாளர் தொழில் கேட்ப,   275
வடவர் வாடக்குடவர் கூம்பத்,
தென்னவன் திறல் கெடச் சீறி

This poem has 301 lines.

The same poet has authored another long poem called Perumpanatruppadai .

To be continued……………….

Tags- Purananuru wonders-58, Tamil Encyclopaedia 98, One Thousand Interesting Facts Part 98, Karikal Choza, Pattinappalai, Item 823.

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103; இந்து மத கலைச்சொல் அகராதி-103 (Post.16,124)

Written by London Swaminathan

Post No. 16,124

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already

தைத்திரீய சம்ஹிதா தைத்திரீய உபநிஷத்

தைத்திரீய சம்ஹிதா என்னும் வேதம்  கிருஷ்ண யஜுர்வேத.த்தின் ஒரு பிரிவு.  அதில் ஏழு பகுதிகளில் யாக யக்ஞங்கள் குறித்த மந்திரங்களைக் காணலாம். தைத்திரீய உபநிஷத், கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும், ஆத்மாவின் இயல்பு மற்றும் பிரம்மன் என்னும் இறைவனை உணர்வது, அடைவது எப்படி என்று விளக்குகிறது. இதற்கு ஆதி சங்கரர் பாஷ்யம்/ விரிவுரை வழங்கியுள்ளார்.  பஞ்ச கோஷங்கள் என்னும் உடலை மூடியுள்ள திரைகளை விளக்கும் உபநிஷத் இது . “சத்யம் ஞானம் அனந்தம் பிரம்மா” (பிரம்மன் என்பதே சத்தியமானது, அறிவு , எல்லையில்லாதது ) என்ற இதன் வாசகம் மிகவும் பிரபலமானது . சத்ய சாய் பாபா பஜனைகளில் இது மிகவும் விரும்பிக் கேட்கும் பஜனை. அவரே பாடியுள்ளார் . இந்த உபநிஷதத்தை மூன்றாக பிரித்து வழங்கியுள்ளார்கள் ரிஷி முனிவர்கள்; அவையாவன —

•     சிக்ஷா வல்லி: உச்சரிப்பு, உச்சரிப்புவியல் மற்றும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா உரை அடங்கிய பகுதி.

•     ப்ரஹ்மானந்த வல்லி: பிரம்மனின் இயல்பு, பஞ்ச கோஷங்கள் எனப்படும் உடலை மூடியுள்ள ஐந்து திரைகளின் விளக்கம்.

•     பிருகு வல்லி:  பிருகு’என்ற ரிஷி முனிவர் தியானத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் எவ்வாறு பிரம்மனை அறிந்தார் என்பதை விளக்கும் பகுதி இது பிருகு’என்ற ரிஷி முனிவர் தியாகத்தாலும் ஆத்ம விசாரத்தாலும் இவ்வரசு பிரம்மனை அறைந்தார் என்பதை விளக்கும் பகுதி இது

***

தாள துவஜம்  – கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் ஆன  பலராமனின் கொடி.  2000 ஆண்டுகளுக்கு முன்னரே இது புறநானூற்றில் உள்ளது; தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

தாடங்கம், தோடு முதலிய சொற்கள் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தவை ; காஞ்சி சுவாமிகள் (1894-1994)  அழகாக விளக்கியுள்ளார்

***.

தக்ஷக

நாகர் என்னும் பழங்குடி மக்களின் தலைவன் தக்ஷகன்.. காடு திருத்தி நாடாக்குவது அரசர்களின் கடமை ; கரிகால் சோழனும் இதைச் செய்தான்; இதற்கு முன்னுதாரணமாக கிருஷ்ணனும் அர்ஜுனனும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, காண்டவ வனத்தை  தகனம் செய்தார்கள் ; அப்போது தஷகன் வெளியே இருந்ததால் உயிர் பிழைத்தான் . யாதவர்களுக்கும் நாகர்களுக்கும் நீண்ட கால  பகைமை இருக்கையில் இது ஒரு முக்கிய சம்பவமாக அமைந்தது ; இதற்குமுன்னர் சமீக மஹரிஷியின் மீது பரீக்ஷித் என்னும் மன்னன் ஒரு பாம்பினை விளையாட்டாகத் தூக்கி எறிந்தான் ; அவனுடைய மகன் ஸ்ருங்கி , அப்பாவை அவமதித்தவனை ஏழே நாட்களில் கொல்வேன் என்று சபதம் எடுத்தான் . உடனே அரண்மனையில் செக்யூரிட்டியை அதிகப்படுத்தினார்கள் ஆனால் ஸ்ருங்கி, அரண்மனைக்குள் நாள் தோறும் செல்லும் பழக்கூடையில்  ஒளிந்து கொண்டுசென்று பரீட்சித் மன்னனை வெட்டிச் சாய்த்தான். அந்த மன்னின் மகன் ஜனமேஜயன் ஆவான்  ; அவன் சர்ப்ப யாகம் என்ற பெயரில் நாகா இன மக்களை வெட்டி வீழ்த்தினான் ; அப்போது ஜரத்காருஆஸ்தீகர் என்ற இரண்டு ரிஷிகள் தலையிட்டு நாகா- யாதவ சமாதான உடன்படிக்கையை ஒப்புக்கொள்ள வைத்தனர் . பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த வரலாற்றுச் சம்பவத்தையும், உடன்படிக்கையையும் பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் நர்மதாயை நமஹ என்னும் மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் . அதே காலத்தில் மயன் என்ற நாகன் மட்டும் கிருஷ்ணனுடன் நண்பனாக இருந்தான் ; அவன் காணடவ வன எரியூட்டலுக்குப் பின்னர், தனது குழுவை அழைத்துக்கொண்டு பாதாள லோகததுக்குச் சென்றான் பாதாள லோகம் என்பது அமெரிக்கா ஆகும்; தென் அமெரிக்காவில் இவர்கள் குடியேறி மாயா நாகரீகத்தைத்  தோற்றுவித்தனர் .  பழக்க கூடைக்குள் ஒளிந்து கொண்டு தப்பிக்கும் தந்திரத்தைப் பிற் காலத்தில் வீர சிவாஜியும் பின்பற்றி ஒளரங்கசீப் என்ற வெறியனின் கண்ணில்  மண்ணைத் தூவினான். 

***

தமஸ், தமோ குணம்

தமஸ் என்றால் இருள், அறியாமை .

மனிதனின் மன நிலையை இந்துக்கள் மூன்றாகப் பிரித்தார்கள் ; சத்வ குணம், ராஜஸ குணம், தமோ குணம் என்று ; மன மைதியுடன் சாந்தமாக நல்லதையே மட்டும் நினைக்கும் பாசிட்டிவ் குணம் உயர்ந்த சத்வ குணம் ஆகும்; செயல் வேகம் நிறைந்த , ஆனால் நல்லதையும் கெட்டதையும் செய்யும் மன நிலை  ராஜஸ குணம் ஆகும் . ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களளை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம் ; சுடு என்றால் சுடுவார்கள் ; நல்லது- கெட்டது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை ; வெறித்தனமாக வேலை செய்து இன்பத்தை மட்டும் அனுபவிக்க காலத்தை விரயம் செய்வோரும் இவ்வகையே;  மூன்றாவது வகை தமோ குணம்– மஹா சோம்பேறிகள் ; தூங்கித் தூங்கி காலத்தை நாசம் செய்யும் வகை; குடி, கூத்து, மாயை, மயக்கம் , வெட்டிப்பொழுது, எந்தக் காரியத்தையும் ஒத்திப்போடுவது என்பது இவர்களின் கொள்கை ; இந்த மூன்று குணங்களையும் பகவத் கீதையின் 14 ஆவது அத்தியாயத்தில் கிருஷ்ண பரமாத்மா விளக்குகிறார் .

***

தாம்ரபரணி

பொதிகை மலையில் உற்பத்தியாகி , திருநெல்வேலி வட்டாரத்தில் ஒடி, மன்னார் வளைகுடாவில் கலக்கும் ஜீவ நதி; அதாவது ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடும் ஆறு;  பொருநை நதி என்ற பெயரில் இலக்கியங்களில் இந்த ஆற்றினைக் காணலாம். இதன் நீளம்

 128 கிலோமீட்டர், (80 மைல்கள் ) மணிமுத்தாறு, சித்ரா நதி முதலிய ஏழு உபநதிகள் இந்த ஆற்றில் நீரைக் கொட்டுகின்றன ; ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி முதலிய புகழோங்கிய வைணவ தலங்கள் இதன் கரையில் அமைந்துள்ளன ; நவ திருப்பதி என்னும் நவக்கிரக தலங்கள், நவ கைலாசம் என்னும் சிவன் கோவில்கள் ஆகியனவும் இந்த நதி பாயும் வட்டாரத்தில் அமைந்துள்ளன. காவிரி, வைகை போனற நதிகளின் குறுக்கேயும் அவற்றுக்கு நீராய்க் கொண்டுவரும் உபநதிகளின் குறுக்கேயும் அணைகளைக் கட்டுவதற்கு முன்னர் எல்லா தமிழ் நாட்டு நதிகளும் ஜீவ நதிகளாகவே இருந்ததை இலக்கியங்களில் காண முடிகிறது .

***

தாண்டவம்

சிவ பெருமானின் கட்டளைகளுக்கு இணங்க தண்டு என்ற முனிவர் உருவாக்கிய நாட்டிய வகை  இது என்று பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திர புஸ்த்தகத்தில் 14 ஆவது அத்யாயத்தில் உள்ளது.

ஒரு பிரம்மாவின் ஆயுள் முடிந்தவுடன் சிவ பெருமான் ஆடும் தாண்டவத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும்; பின்னர் புதிய பிரம்மாவுடன் க்ரியேஷன் என்னும் படைப்புத் தொழில் ஆரமபாகும்; இவ்வகை நடனம், ஆண்கள் மட்டுமே ஆடக்கூடியது  பூமி, தண்ணீர், அக்கினி,  வாயு, ஆகாசம் என்பன மீண்டும் உருவாகும் இந்த வரிசைக்கிரமம் புறநானூறு பாடல்களிலும் தேவாரத்திலும் அப்படியே உள்ளன .

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் , சம்ஸ்க்ருத மொழியில் உள்ள ஒரு அருமையான துதி; தாள நயம் மிக்கது ; இது தாண்டவ நடனத்தை மனக் கண்ணுக்கு முன்னே கொண்டுவரும்; சிவ பெருமான் வசிக்கும் கயிலாய மலையை ராவணன் ,அகந்தையால் அசைக்க முயன்றவுடன் சிவன் ஒரு அமுக்கு, அமுக்கினார் ; ராவணன் கதறி, சிவ பெருமானைப் போற்றி,  இதைப் பாடியவுடன் சிவன் மனம் மகிழ்ந்து, அகம் குளிர்ந்து, ராவணன் மீது கருணை மழை பொழிந்து, ஒரு வரமும் கொடுத்து, இலங்கைக்கு அனுப்பினார் . ராவணன் நலல சிவ பக்தன்; ஆனால் அஹம்காரத்தின் மொத்த உரு ; ஆகையால் சிவன் பாடம் கற்பித்தார்.

***

தாரக அசுரன்

தேவர்களை எதிர்த்துப் போரிட்ட தைத்ய குல தலைவன்;  இவனை ஒழிக்க முருகப்பெருமான் அவதரித்தார்;  அவன் இறந்த பின்னர் அவனுடைய மூன்று புதல்வர்களான தாரகாக்ஷ கமலாக்ஷ, வித்யுன்மாலி ஆகியோர் பழிவாங்கத் துடித்தனர்; விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் அமைத்து தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் ;   தேவர்கள் சிவனை வேண்டவே, அவர் இவர்களை பார்த்து சிரித்தார்; முன்று விண்வெளி ஸ்பேஸ் ஸ்டேஷன்களும் பூமியில் சாம்பலாய் விழுந்தன . சிவனின் நெற்றிக் கண் என்பது லேசர் ஆயுதம் . இந்த சம்பவத்தைத் தேவாரப்பாடல்களிலும் திருப்புகழ் பாடல்களிலும் படிக்கலாம்.

***

தாரா

(கற்பழிக்கப்பட்ட கதை)

Planet Jupiter and its four large moons.

தாரா என்பது மூவரைக் குறிக்கும் ; வாலியின் மனைவி; திபெத்திய புத்த மத தேவதை;  பிருஹஸ்பதி என்றும் வியாழன் என்றும், குரு பகவான் என்றும் இந்துக்கள் போற்றும் ஜூப்பிட்டர் என்னும் கிரகத்தின் மனைவி பெயரும் தாரா தான் . கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த காஸ்மாலாஜிக்கல் விஷயத்தை– அதாவது சூரிய மணடலம் என்னும் சோலார் சிஸ்டம் உருவான கதையின் ஒரு பகுதி இது .

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

“அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 .

To be continued……………….

Tags- தாரா ,

இந்து மத கலைச்சொல் அகராதி-103 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103, தைத்திரீய உபநிஷத்

மறக்கப்பட்ட மாபெரும் இந்தியப் போர்வீரன்! (Post.16,123)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,123

Date uploaded in London – 24 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மறக்கப்பட்ட மாபெரும் இந்தியப் போர்வீரன்! 

ச. நாகராஜன்

1965ம் ஆண்டு.

பாகிஸ்தானிய அதிபர் அயூப்கான் அவசரம் அவசரமாக சீனாவுக்குச் சென்றார். சீனா ஒரு புதிய போர்முனையை இந்தியாவுடன் உருவாக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சீனாவிடம் வைத்தார். இதனால் இந்தியா தோற்கடிக்கப்படும் என்றார் அவர்.

சீனா உடனே இந்தியாவிடம் அது தனது புதிய இரண்டு எல்லை நிலையங்களைக் காலி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியது. எல்லையோரத்தில் இருந்த ஜெலப் லா மற்றும் நாது லாவில் உள்ள இந்திய வீரர்களை அங்கிருந்து வாபஸ் வாங்க வேண்டும் என்று அது வற்புறுத்தியது.

 சூடுபட்ட பூனை போல காங்கிரஸ் அரசு அதற்கு ஒப்புக் கொண்டு அந்த இரண்டு எல்லையோர காவல்நிலையங்களிலிருந்து உடனடியாக ராணுவ வீரர்கள் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.

 அந்தக் காலத்தில் தான் 1966ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் தேதியன்று

இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த லால்பகாதூர் சாஸ்திரி மர்மமான முறையில் தாஷ்கண்டில் மரணமடைந்திருந்தார்.

 எல்லையோரத்தில் இருந்த ஒரு காவல்நிலையம் அரசின் ஆணைப்படி காலி செய்யப்பட்டது.

உடனடியாக  ஒருதுளி ரத்தமும் சிந்தாமல் அதை சீனா எடுத்துக் கொண்டது.

நாது லாவில் இருந்த காவல்நிலையத்தை காலி செய்யுமாறு தலைமையக தலைமையாளரான மேஜர் ஜெனரல் பெவூர் தனது வீரர்களிடம் அறிவுறுத்தினார். ஆனால் ராணுவத்தில் மேஜர் ஜெனரல் சகத் சிங் அப்படிச் செய்யவேண்டாமென்று ஆணை பிறப்பித்தார். அது இரு நாடுகளுக்கும் பொதுவாக அமைந்த எல்லை நிலையம் என்பது அவர் கருத்து.

 அடுத்ததாக 65 இந்திய ராணுவ வீரர்கள் இறக்க நேர்ந்தது.

 நமது வீரர்கள் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் நிற்கும் போது சீன வீரர்களோ பாதுகாப்புடன் அங்கு நிலை கொண்டிருந்தனர்.

பாரதத்தின் தலைமை ராணுவ அதிகாரி கூட அங்கு துப்பாக்கி சூடு நிகழ்த்த அந்த நிலையிலும் அனுமதியை வழங்கவில்லை.

நமது வீரர்களின் உயிரைப் பாதுகாக்க இந்த ஆணையை இந்தியாவின் பிரதம மந்திரி ஒருவர் மட்டுமே பிறப்பிக்கமுடியும்.

ஒவ்வொரு நாளும் இந்திய வீரர்கள் இறந்து கொண்டே இருந்தனர். பிரதம மந்திரியோ எதிர்த்து சுடலாம் என்ற ஆணையைப் பிறப்பிக்கவில்லை.

பார்த்தார் மேஜர் ஜெனரல் சகத் சிங். “எதிர்த்துச் சுடுங்கள்” என்று அவர் ஆணையைப் பிறப்பித்தார் உடனே நமது வீரர்கள் சுட ஆரம்பித்தனர். சுமார் 300 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்காக சகத் சிங் தண்டனையை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. அவர் அந்த நிலையத்திலிருந்து மாற்றப்பட்டார்.

இந்த விதமாக நாது லா எல்லை நிலையம் காப்பாற்றப்பட்டது.

1967 செப்டம்பரில் சீன மக்கள் விடுதலை படைக்கும் நமது படைக்கும் இடையே நிகழ்ந்த போரில் நமது நிலையங்களான நாது லா மற்றும் சோ லா ஆகியவற்றை இந்தியப் படை பாதுகாத்து தங்கள் வசமே வைத்துக் கொண்டது.

 ஆனால் போற்றி புகழப்பட வேண்டிய மேஜர் ஜெனரல் சகத் சிங் பற்றி யாருக்குமே தெரியாது. மறக்கப்பட்ட மாவீரரான சகத் சிங்கைப் பற்றி

ஷயாரி வீடியோ இப்போது லக்கி கங்காதரராவ் ‘சகத் சிங் கி சோனியா கதா’ என்ற வெளியீட்டைச் செய்தபின்னரே அனைவரும் சகத் சிங் பற்றி அறிந்தனர்.

(Lucky Gangadharrao’s ‘Sagat Singh ki Sonia Gatha aired by Shayari Video)

Source : Kolkata English weekly Truth Volume 94 Issue no 17 Dated 7-8-2026

Thanks to Truth.

**

பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)

Written by London Swaminathan

Post No. 16,122

Date uploaded in London – 23 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாபநாசம் சிவன் மூன்று விஷயங்களால் பெருமை பெற்றார் : 1.தமிழில் பாடும் கீர்த்தனைகளை இயற்றினார் ; 2.திரைப்படங்கள் மூலம் கர்நாடக இசையையும் தமிழையும் வளர்த்தார்; 3. தாமே நடித்தும் நாடகங்களுக்கு இசை அமைத்தும் திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் புகழ்பெற்றார்.

இறைப்பற்றும் தேசப்பற்றும் மிக்க பாபநாசம் சிவன் அவர்கள் தமது 83-வது அகவையில் 1.10.1973 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவருடைய பாடல்களை ஆறு தொகுதிகளாக இவருடைய புதல்வி ருக்மிணி ரமணி வெளியிட்டுள்ளார்.

லண்டனில் பாபநாசம் சிவன் விழா, 2019 ஆம் ஆண்டு மே மாதம்  26-ஆம் தேதி நடந்தது . நான் அவர் பற்றி சிறப்புரை ஆற்றினேன் .

1

மோஹன ராகத்தில் காபாலி பற்றி அவர் பாடிய பாடல் புகழ்பெற்றது ; அதன் வரிகள் கொஞ்சசமாவது நினைவிருந்தால் சொல்லுங்கள்.

2

சிவ பெருமானை நம்பியவர் கெட்டுப்போனதில்லை என்று ஹிந்தோள ராகத்தில் அவர் பாடிய பாடலையும் பலரும் பாடிப்  பரப்பியுள்ளார்கள் ; அது என்ன பாடல் ? முதல் சில வரிகளைச் சொல்லுங்கள் போதும்.

3

நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள் — என்ற வரியை பாபநாசம் சிவன் இயற்றிய எந்தப்பாடலில் கேட்கலாம்?

4

அந்தக்காலத்திலேயே இவர் இயற்றிய பாடல்களை எம் கே தியாகராஜ பாகவதர் பாடியதால் இருவரும் புகழடைந்தனர் .திருநீலகண்டர் திரைப்படத்தில் குந்தளவராலி ராகத்தில் பாடினார். முதல் வரியாவது நினைவிருக்கிறதா ?

5

தமிழ் திரைப்படத் துறையின் தொடக்க காலத்தில் (1930 மற்றும் 1940களில்) கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டு பல புகழ்பெற்ற பாடல்களை எழுதினார்; இதனால்  “தமிழ் தியாகையா” என்றும் அழைக்கப்பட்டார் . அவர் எத்தனை திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதினார்; அவர் எழுதிய பாடல்கள் எத்தனை ?

6

அவர் பாடல்கள் இயற்றிய சில திரைப்படங்களின் பெயர்களைச் சொல்ல முடியுமா ?

7

பாபநாசம் சிவன் கி.பி.1890 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 26 ஆம் நாளில் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள போலகம் என்னும் சிறிய கிராமத்தில் இராமாமிர்த அய்யருக்கும், யோகாம்பாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். பாபநாசம் சிவனின் இயற்பெயர் “இராமைய்யா” என்பதாகும். பின்னர் என் இவரை பாபநாசம்  சிவன் என்று அழைக்கிறோம்?

8

இராஜ முக்தி படத்தில் இவர் மஹாத்மா காந்தியைப்பற்றி இயற்றிய பிரபல பாடல் என்ன ?

9

கிருஷ்ணா முகுந்தா முராரே- என்ற பாடலை எந்தப்படத்துக்காக இயற்றினார் ?

**************************************************

London Swaminathan paying tributes to Sri Papanasam Sivan on 26, 2019 in a meeting held at London Mahalakshmi Temple organised by Mr and Mrs Prabhakar Kaza.

விடைகள்

1.காபாலி -ராகம் மோஹநம் தாளம் ஆதி

பல்லவி

காபாலி, கருணை நிலவுபொழி வதந மதியனொரு (காபாலி)

அனுபல்லவி

ஆபால கோபாலம் ஆழிசூழ் தலத்தவரும்

பூபாலரும் அஷடதிக் பாலரும் போற்றும் அத்புத (காபாலி)

சரணம்

மதிபுனல் அரவுகொன்றை தும்பை அறுகுந்

மத்தைபுனை மாசடையான்

விதிதலைமாலை மார்பன் உரித்தகரியின்

வெம்புலியின் தோலுடையான்

அதிர முழங்கும் உடுக்கையும் திரிசூலமும்

அங்கியும் குரங்கமும் இலங்கிடு கையான்

த்யுதிமிகு திருமேனி முழுதும் சாம்பல்

துலங்க எதிர்மங்கையர் மநங்கவர் ஜகந் மோஹந (காபாலி)

****

2,நம்பிக்கெட்டவர் எவரய்யா

ராகம்: ஹிந்தோளம்                                        

நம்பிக்கெட்டவர் எவர் ஐய்யா உமை ||

உமை நாயகனை திருமயிலையின் இறைவனை ||

அம்புலி கங்கை அணிந்த ஜடாதரன்

அன்பர் மனம் கவர் சம்புகபாளியை ||

ஒன்றுமே பயனில்லை என்று

உணர்தபின் பலனுண்டேன்பார்

ஒவ்வொரு மனிதனும் ஒருநாள்

இந்நிலை எய்துவதுருதி  இதை மறந்தார்

அன்று செயலழிந்தல  மறு பொழுது

சிவன் பெயர் நாவில் வாறதே

ஆதலினால் மனமே இன்றே

சிவ நாமம் சொல்லிப்பழகு (அன்புடன்) ||

***

3.ராகம்: கல்யாணி

உன்னையல்லால் வேறே கதியில்லை அம்மா உலகெல்லாம் ஈன்ற அன்னை 

என்னையோர் வேடமிட்டு உலகநாடக அரங்கில் ஆடவிட்டாய் (அம்மா)

இனி ஆடமுடியாது(என்னால்) திருவுள்ளம் இறங்கி ஆடினது போதுமென்று ஓய்வளிக்க | |

நீயே மீனாட்சி காமாட்சி நீலாயதாக்ஷி எனபல பெயருடன் எங்கும் நிறைந்தவள்

என்மன கோயிலினில் எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் | |

****

4.தீன கருணாகரனே

தீன கருணாகரனே நடராஜா  நீலகண்டனே

நின்னருள் புகழ்ந்து பணியும்

என்னையும் இறங்கி அருளும்

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||

மீனலோசனி மணாளா

தாண்டவமாடும் சபாபதே

ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே

மௌன குருவே கரனே

எனையாண்ட நீலகண்டனே ||

ஆதியந்தம் இல்லா ஹரனே

அன்பர் உள்ளம் வாழும் பரனே

பாதி மதிவேணியனே பரமேஷ நீலகண்டனே

****

5. சுமார் 120 திரைப்படங்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட பாடல்களை 1933 முதல் 1960 வரை எழுதியுள்ளார்.

***

6.பாபநாசம் சிவன் பணியாற்றிய முக்கிய திரைப்படங்கள்: சீதா கல்யாணம் (1934)பக்த குசேலா (1936)சிந்தாமணி (1937)அம்பிகாபதி (1937)சேவாசதனம் (1938)அசோக்குமார் (1941)சிவகவி (1943)ஹரிதாஸ் (1944)இரும்புத் திரை.

****

7.பாபநாசம் சிவன் முனிவர் போல் புலித்தோலணிந்து கோவில்களுக்குச் சென்று பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த காரணத்தினால் “சிவன்” என்று அழைக்கப்பட்டார். மேலும், பாபநாசத்தில் தங்கிய பொழுது, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த சாம்பசிவ ஐயர் இவரைப் ‘பாபநாசம் சிவன்’ என்று அழைக்க, அன்று முதல் பாபநாசம் சிவன் என்ற பெயர் இசையுலகில் வழங்கப்படலாயிற்று.

***

8. காந்தியைப் போலொரு சாந்த சொரூபனை

படம்: இராஜமுக்தி

பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1948

காந்தியைப் போலொரு

சாந்த சொரூபனைக்

காண்பதும் எளிதாமோ  – மஹாத்மா  (காந்தியை)

மாந்தரிலே

ஞான யோகம் மேவும் – தவ

வேந்தரிலே சுயநலம் சிறிதும் இல்லா

மாந்தரிலே

சுயநலம் சிறிதும் இல்லா

அஹிம்சை தனிலே புத்தரவர்

ஆத்ம சோதனையில் யேசு நாதரவர்

அறுபகையும் வென்ற கர்ம சீலரவர் – நமது

ராஜ்ஜியத்தாய் இந்திய நாட்டிலவதரித்த

குழந்தை உள்ளமும்  – அன்பு

கனிந்த மொழியும் கொண்டு

கொடுமைகளை எதிர்த்து வெல்லும் சித்தன்

முழங்கால் துணியும் மோகனப் புன்னகையும்

தவழப் பகைவரும் கண்டஞ்சும் சுத்தன் – இனிமேல்  (காந்தியை)

***

 9.மன்மத லீலையை வென்றார் உண்டோ?

திரைப்படம் : ஹரிதாஸ்

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1944

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

நின்மதி வதனமும் நீள் விழியும் கண்டு

என்மதி மயங்கினேன் நான்

என்மதி மயங்கினேன் மூன்று உலகிலும்

என்னுடனே நீ பேசினால் வாய்முத்துதிர்ந்து விடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ? – உனை

எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம் வந்தால் மெனக்கெடுமோ?

உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம் தந்தால் குறைந்திடுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? –  மனம் கவர்

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

***

10. கிருஷ்ணா முகுந்தா முராரே

திரைப்படம் : ஹரிதாஸ்

பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

இசை: ஜி. இராம நாதன்

பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்

ஆண்டு: 1944

கிருஷ்ணா முகுந்தா முராரே – ஜெய

கிருஷ்ணா முகுந்தா முராரே

கருணா சாகர கமலா நாயக

கனகாம்பர தாரி கோபாலா

காளிய மர்த்தன கம்சனி தூஷன

கமலாயத நயனா கோபாலா

குடில குண்டலம் குவலய தளநீலம்

மதுர முரளீ ரவலோலம்

கோடி மதன லாவண்யம்

கோபி புண்யம் பஜகோபாலம்

கோபி ஜன மன மோகன வியாபக

குவலய தள நீலா கோபாலா

—subham—

Tags- பாபநாசம் சிவன் பாடல்கள் , 10 கேள்விகள் ,

Richest Tamil Women! Tamil Attacks on Chinese and Romans! Purananuru wonders-57 (Post.16,121)


Written by London Swaminathan

Post No. 16,121

Date uploaded in London – 23 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-57, Tamil Encyclopaedia 97, One Thousand Interesting Facts Part 97,

Two more Sangam Tamil Books from Ten Idylls. A Brahmin poet by name Mr RUDRAKSHA (in Tamil Uruththiran Kannan) composed two long poems

The Ten Idylls, known in Tamil as Pattuppāṭṭu (பத்துப்பாட்டு), form an ancient collection of ten long narrative poems from the Sangam Literature

  • Perumpāṇāṟṟupaṭai: A guide poem for bards praising Toṇṭaimān Ilantiraiyan, by Rudran Kannanar.
  • Paṭṭiṉappālai: A descriptive poem on the Chola port city of Kaveripattinam and King Karikāla, by Rudran Kannanar.

***

 Item 802 -Two Unproved Ancient Beliefs!

Very first four lines of Pattinappaalai brings out two ancient beliefs found in Sanskrit books and Tamil books.

Ancient Hindus believed that the unfavourable position of the planet Venus will cause drought in the country Some clever guy arranged all the Venus poems at the end of Purananuru.

Here the poet Mr Rudraksha says even if Venus moved towards south, No Worries; the sea like vast Kaveri River will feed the land and the people.

Immediately he adds even if the lark that feeds on rain drops becomes sad and weak.

Hindus used many birds as similes; one of them is a bird like sky lark that feeds on rain drops only.

Even Adi Sankara, the greatest philosopher, has used these birds as similes.

Neither the Venus reference nor the Bird that feeds only on raindrops is proved by science!

One may guess that kind of birds became extinct like Dodo; as dead as Dodo.

Puram verse 198 also mentioned that rare bird.

J V Chelliah (1946) translated those lines:

Though Venus, star of splendour bright,

Strays southward from its wonted course,

Cool showers fail to fall, and the lark

That feeds on rain in silence droops,

Yet sea-like Kaveri mountains-fed

Its waters spread over golden sands.

***

Item 803 Richest Women in the World!

Poet Mr Rudraksha paints a beautiful picture of the richest Tamil Women of Choza country.

The women, throw their golden pendants to chase the village animals.

You and I will throw stones at the dog but,

On spacious fronts of houses wide

With shining foreheads, guileless looks,

Bejewelled maids scare fowls away

That come to feed on drying grains

By throwing pendants round and thick

(it is understood that they wore only golden Pendants)

***

Item 804 Toy Carts, Golden Anklets

Then the poet portrays the streets where children play with Toy Carts.

When he described the boys’ jewels, he says

Which (fowls) bar the way of tiny cars

That horseless move upon three wheels

Which boys with golden anklets drive

***

Item 805- Makam Star on Full Moon Day (Tamil lines 34,35)

Poet also shows his knowledge in Astronomy.  He described the pond and flowers in Kaveri Poom Pattinam area (now called Poompuhar) and say the looked like Makam star on Purnima day.

If one lives in Tamil Nadu, one will figure out the scene.

There are some phrases Tamils use very often;

Aippasi Karththikai Adai Mazaik Kaalam;

Maasi Nilaa Paasi Padarum;

ஐப்பசி கார்த்திகை அடைமழைக்க்  காலம்

மாசி நிலா பாசி படரும் ( மாசி மாத பெளர்ணமி)

The meaning is “there will be heavy rains in two Tamil months Aippasi, Karththikai “

  Aippasi (ஐப்பசி): Mid-October to mid-November

  Karthigai (கார்த்திகை): Mid-November to mid-December

In the month of Maasi, the sky will be crystal clear, and the ponds will be full; most of temple will celebrate Float Festival in the Big Tanks.

The Masi Full Moon Day will look like Thousand Watt Bulb ;That is why they say Maasi Nilaa Paasi Padarum= the moon light will lit even the green algae on the banks.

***

Item 806 , lines 40, 41

Tiger Emblem everywhere! There were public kitchens in the port city Kāvirippoompattinam. Doors had Tiger Emblem.

Choza Kings’ Tiger Emblem, Pandya’s Double Fish Emblem and Chera’s Bow Emblem were cared even on Holy Himalayas according to Sangam poems and later inscriptions.

 The tiger emblem is referred to in Puram. Poems 33 and 174 also.

***

Item 807 — Paintings on Palace walls

There were huge paintings on palace walls, but they were soild y the dust from speeding chariots.

From this we can imagine how beautiful the city was.

Poet compared the dusty paintings to elephants in muddy soil,

The thick dust  raised by running cars

Doth soil the various pictures drawn

On temples white, and make the bulls

Resembles elephants that role

In lime……………………………

***

Item 808- Hindus with long hair performed Yagas

Poet made a passing remark about Jain and Buddhist monasteries and then adds,

There hermitages too are seen.

The cuckoos with their great black mates

From shrubby groves do fly away

To shun the smoke of oblation’s fire

That hermits bright with matted locks…………….

Neither Jains nor Buddhist monks grow matted locks ; they have shaved heads

Puram 43 also mentioned the saints with matted locks

***

Item 809 pigeons eat small stones

Do light in demon guarded shrines,

Not easy of access and grim

To live with pebble eating doves

In these lines we get two facts. Kali temples had huge ghostly statues in the entrance.

Even today we can see such huge scary statues in Ayyanar temples and devi temples in tamil nadu and kerala

The second fact is pigeons swallowing small stones. Poet was a keen observer of nature.

It is believed that doves do it to help in their digestion.

***

Item 810 -Wrestling scenes and Non Veg food

The warriors were practising wrestling; in poet’s words,

There are seen wrestling grounds with ancient trees

They eat sweet roasted shrimp, and feed

On turtles boiled. They wear the blooms

of  adampu dry that creeps on land

and ambal that in water grows

as stars that move in blue expanse

mix with planets, so the men

in ample commons mingle free

and fight with hands and weapons so

that body touches body close.

In ire they yield no to foe

And unappeased with vigour fight.

The stones that fly from slings do scare

The birds that sit on dusky palms.

Here we get what men ate what men wore and how they fought.

 Poet has given us the minutest details.

***

Item 811 Indus Valley Fish symbols

நாள்மீன் விராய கோள்மீன் போல Naal Meen viraaya Kol Meen

Naal Meen= star; Kol Meen= planet;

Two Tamil terms for stars and planets

Ancient Tamils compared fish in the sea and the stars in the  sky; both are blue.

They added MEEN (Fish; Meenam in Sanskrit) with Day and Planet.

If they say Day Fish, it meant Star;

If they say Planet fish, it meant planet.

These words led many Indus valley decipherers to say that the Harappan seals have Tamil words!

If the Indus seal shows six vertical lines and a fish symbol, they said it meant Kartikai (Krittika in Sanskrit) star; Pleiades constellation in the sky!

If they see three vertical lines and a fish on the Harappn seal, they said it is Mrgaseersha star; it appealed to many;

But the pity is fish appeared on hundreds of seals in various combinations with different symbols. They got stuck up!

Till this day no one was able to decipher it inspaite of 100++++ guesses!

***

Item 812 Sea God Worship!

Barter trade where salt vendors exchanged salt for paddy with city people, Hero stones or Memorial stones (Nadu Kal in Tamil), leafy garments of women are also mentioned by the poet.

Also Sheep Fight and Cock fight were also mentioned.

Very important point is Worship of Sea God. Hindus believe that Vedic God Varuna control all water sources including sea.

Brahmins around the world recite Varuna mantra in their daily Sandhyavandana even today.

Tolkappiar, believed to be the oldest poet, mentioned VARUNA as Tamil God of coastal region.

He used Sanskrit word Varuna in the third section of Tolkappiam.

Coastal people worshipped sea god by planting Shark fins in the sandy area. Poet says,

Beneath the pines with hanging roots

They plant the sword of the gravid shark

To seat their Sea God great, for whom they wear the bloom of sheathed pine

And toddy drawn from rugged palms

They drink. Their women dark are clad

In green leaf garments, and with these

On Full Moon days, neglecting work

Not fishing on the wild cold sea………………

On full moon days because of the rough tides, fishermen don’t go for fishing.

***

Item 813

Religious Beliefs

In Line 99, poet says that people took sea bath to wash away their sins.

Lines 154-155 described the Murugan worship;

Lines 159, 160 also mentioned worship of Gods;

And their children played with crabs.

Playing with crabs அலவனாட்டுதல் is also seen in Kuru. Poems303, 316.

***

Item 814 Bharatiyar Verse and Mr Rudraksha verses

Nationalist poet Bharatiyar was greatly influenced by Sangam poets. It is evident in many of his poems. To emphasize National Unity Bharatiyar said ” Ganges region Wheat should be exchanged with Betel leaves of Kaveri Region; Maharashtriyan’s poems should be exchanged with Kerala Ivory products etc.

He must have been influenced by these lines:

The good and worthy gods protect

The city limits. Here are brought

Swift prancing steeds by sea in ships

And bales of pepper black, by carts.

Himalayas sends gems and godl

While kudagu hill, sweet sandal wood

And Akhil; pearls fom the south sea come,

Red coral from the eastern sea

The ganges aand the kaveri bring

Their yield; Ceylon provides its food,

And Burma, manufactures rare

With other rare and rich imports

This wealth lies close and thickly piled

Confused along the spacious streets.

This is what the poet saw 2000 years ago!

***

1tem 815 -Tamil Attacks on Chinese and Yavanas

மக்கள் Vs மாக்கள்

Line 217 has some interesting comments from ancient commentators!

We already know that the great Chera King Imayavaramban Nedun Cheralathan arrested mischievous Roaman pirates, tied their hands behind, poured oil on their heads. When they apologised, he got lot of gold and diamonds and distributed them to Tamil poets. It is in Sangam book Pathiruppathu. Sanskrit books also attack Yavanas (Romans and Greeks) as people of uncouth manners.

Here the poet used a Tamil word MAAKAL.

MAKKAL means people;

MAAKKAL (long sound) means Animals. They can’t think like men. Man is called Man because he has Mind (thinking and knowing what is right and what is wrong). This is the definition in Sanskrit scriptures.

The commentators say that Tamil Poet Rudraksha used this word for foreign settles of Poompukaar because Chines and Yavanas have only Five faculties in their brain. They are equal to animals.

ஆதாரம் :

பத்துப்பாட்டு மூலமும்  (பக்கம் 551)

நச்சினார்க்கினியர் உரையும் 

மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி 

டாக்டர் உ வே சாமிநாதைய்யர்

நான் காம் பாதிப்பு 1950  

Tamil poet Bharati also knowingly or unknowingly used Seenaththaraa viduvaaro- pirapala desaththaar por pala Theenkizaipaaro (Once again I think Bharati was influenced by this Makkal- Maakkal commentary. சீனத்தராய்விடுவாரோ -பிற  தேசத்தார் போல

பற்பல தீங்கிழைப்பாரோ

Makkal/people have six faculties in their brain.

Oldest book Tolkappiam defined Makkal and Maakkal.

ZHOU ENLAI WHO ATTCKED INDIA FOOLING JAWAHARLAL NEHRU AND OCCUPIED 30000 SQUARE MILES OF INDIA UNTIL THIS DAY.

TO BE CONTINUED……………………

TAGS- item 815 , attack on Chinese, Yavanas, richest Tamil women, Purananuru wonders-57, Tamil Encyclopaedia 97, One Thousand Interesting Facts Part 97, Pattinappalai, Uruththiran Kannan, Mr Rudraksha

Tirukkural Encyclopaedia- Chapter 26 (Kural 251-260) – Post.16,120

Written by London Swaminathan

Post No. 16,120

Date uploaded in London – 23 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

***

Points to be noted:

Two controversies are here; one is vegetarianism; Valluvar attacks carnivorous fellows in 20 couplets here and in the following chapter; that means Christians and Muslims can never follow the poet; among Hindus also we have lots of Non-vegetarians but they don’t eat meat everyday and avoid it on many religious days. At one stage, they completely stop eating it.

Second controversy is about Kural 259 where he mentioned 1000 Yagas. But all the translators have got the correct meaning. Actually, Manu said this before Titu Valluvar; Aayiram for 1000 is a Sanskrit word according to all linguists.

What did Manu say?

वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः ।
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥

varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ |
māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam || 53 || Manu

If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred years,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(Manu 5-53.)

 ***

Naladiyar Surprise:

A lot of Tamil idiots and half-baked foreign scholars have written that Vegetarianism came to Hindus from Jains and Buddhists.  The Upanishads or the Bhagavad Gita never mentioned Non- Vegetarian food.  They were written before these two religions appeared on earth. Vedas and Smritis mentioned  Non Vegetarian dishes for limited purpose; but whoever dealt with this subject are all carnivorous fellows! They are all Pukka beef eaters or pork eaters. What right they have got to criticise others?

Naladiyaar- naaladiyaar- supposed to be written by Jain saints of Tamil Nadu, has no chapter on Vegetarianism while Great Hindu Valluvar devoted two chapters against meat eating. I still wonder whether any Christian or Muslim (except Abdu Kalam) can follow Valluvar. Is Valluvar out of date /Expired medicine like Mahatma Gandhi? Let us hang their pictures and pretend that we follow them!

Even in Valmiki Ramayana, when Rama leads ascetic life for 14 years he went for hunting to get meat only to do Thithi- ritual for departed souls. Manu also suggested Non -Veg for this ritual. It is a subject for research; but only vegetarians must do it; otherwise, it would be like Bombay Red-light area women writing about Chastity!

Please don’t read Tirukkural Commentaries or Vallalar Books written by carnivorous fellows!

(I deliberately use the word carnivorous, which is used for animals)

Sangam Literature clearly shows that Brahmins cooked only Veggy. Dishes. They even added neither hens nor dogs could enter their streets.

***

Look at the last couplet in this chapter: All living beings will raise their hands in worship to him who has never taken a living being’s life. This is the reason Brahmins are called Bhu surar= Devas on Earth= Angles on Earth!


This is the reason Buddha praised Brahmins sky high in Dhammapada:

“And a saint, a Brahmin, is pure from past sins; even if he had killed his father and mother, had murdered two noble kings, and had ravaged a whole kingdom and its people”

–Buddha in Dhammapada, Sloka 294.

A man becomes not a Brahmin by long hair or family of birth. The man in whom truth and holiness, he is in joy and he is a Brahmin -(Dhammapada 393)

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

Part 44

Chapter 26- The Renunciation of Flesh– புலால் மறுத்தல் – Vegetarianism; Abstinence from flesh; Avoidance of Meat-Eating; Refraining from eating flesh

251.Will a heart that battens on the flesh of other creatures ever feel the tender dew drops of mercy? – A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

251.It is inconsistent with the way of living compassion,

To fatten oneself on the flesh of a fellow-creature- S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

251
How can the wont of ‘kindly grace’ to him be known,
Who other creatures’ flesh consumes to feed his own?
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures. -Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

251.What graciousness can one command
who feeds his flesh by flesh gourmand Suddhananda Bharathiyar- SB .       
***
251.How can a man be compassionate, who, for the purpose of increasing his own flesh, etas the flesh of other animals- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

251.How ever can kindness rule the man,

Who eateth other flesh to make his own increase?- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***
251. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


252.The treasures of the world are not for the thriftless and improvident; even so all the joys and blessings of mercy are not unto them that feed on flesh-– ANM+2

***

252.Just as wealth does no good to those who do not cherish it in the right spirit,

Compassion too will not coexist with meat-eating-– SMD

***

252
No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate.
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh. – GUP
***

252.The thriftless have no property
And flesh-eaters have no pity– SB.       
***
252.Those who safeguard their wealth enjoy the possession of it, likewise those who would be compassionate should abstain from eating meat- EVS

***

253.A pitiless flesh eater hungers ever more for the delights of tasting flesh on even as an assassin armed revels ever more in thoughts of murder-– ANM+2

***

253.The butcher with knife in hand, cannot have compassion in his heart;

It is just the same with those who relish taste of blood-– SMD

***

252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

253
Like heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find.
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness. – GUP
***

253.Who wields a steel is steel-hearted
Who tastes body is hard-hearted– SB.     
***

253.The mid of those who feed on flesh of animals, like the cruel mentality of those who carry deadly weapons is devoid of all compassion- EVS

***
253. 
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

254.Not to kill is mercy; to slaughter is cruel; and to taste flesh is sin-– ANM+2

***

254.To make others break the law of not killing is inconsistent with compassion;

There is, therefore, no sense in eating the meat of obtained by such killing-– SMD

***

254
‘What’s grace, or lack of grace’? ‘To kill’ is this, that ‘not to kill’;
To eat dead flesh can never worthy end fulfil.
If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life). – GUP
***
254.If merciless it is to kill,
To kill and eat is disgraceful– SB.       
***

254.Grace or sin results from non-killing or killing respectively. It is sinful, therefore, to eat what is obtained by killing- EVS

***

254. அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

255.The spirit of not eating flesh keeps secure the life of a being. And the merciless flesh eater who stifles the life breath of an animal is for ever hurled into the very jaws of hell-– ANM+2

***

255.Avoidance of meat-eating is a vital virtue; on the other hand

Meat-eating leads to sin that cannot be eradicated-– SMD

***

255
If flesh you eat not, life’s abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again.
Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in). – GUP
***

255.Off with flesh; a life you save
The eater hell’s mouth shall not waive– SB!       
***
255.Abstinence from meat eating contributes to this maintenance of life. Therefore, if a man has once committed the sin of eating meat the hell which swallowed him will not open its mouth again to release him- EVS

***

255. To keep from eating flesh is life’s stability;

Hell will never open its mouth the flesh eater to free—HAP

***

255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

256.If the world were to forswear flesh , no longer would it be held up for sale-– ANM+2

***

256.If there is no slaughtering, arising out of the desire for meat-eating,

There will be none to sell meat for profit-– SMD

***

256
‘We eat the slain,’ you say, by us no living creatures die;
Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?
If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money. – GUP
***
256.None would kill and sell the flesh
For eating it if they don’t wish– SB.       
***

256.If the world will not kill for the sake of eating, then there will be none to sell meat- EVS

***
256. 
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

257.Be not a riotous flesh eater; for what is flesh but the festering ulcer of an animal-– ANM+2

***

257.Those who realise the flesh eaten is, as it were, a wound on another body;

Will not have recourse to meat-eating-– SMD

***
257
With other beings’ ulcerous wounds their hunger they appease;
If this they felt, desire to eat must surely cease.
If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it. – GUP
***

257.From eating flesh men must abstain
If they but feel the being’s pain– SB.       
***
257.If one realises that meat is the carrion ulcer of an animal’s body, one should abstain from eating meat- EVS

***
257. 
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

258.Behold the men who have emerged from the bonds of ignorance; they taste not the flesh of a  creature from which life has taken flight-– ANM+2

***

258.Those who have a vision that is not blurred by mental confusion,

Will not eat the meat of dead carcasses-– SMD

***

258
Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave.
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal. – GUP
***
258.Whose mind from illusion is freed
Refuse on lifeless flesh to feed– SB.       
***

258.The wise, who have transcended unrighteousness, will not eat flesh from which life has departed- EVS

***

258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

XXXXXXXXXXXXXXXXXXXXX

259.Far better and holier than a thousand oblations the sacrificial fires is the one sacred act of  abstaing from the flesh and holds all life tender and sacred-– ANM+2

***

259.More meritorious than thousand burnt offerings is to give up

The practice of killing a living creature and eating its carcass-– SMD

***

259
Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices. – GUP
***

259.Not to-kill-and-eat, truly
Excels thousand pourings of ghee– SB!       
***
259.Better to refrain from killing and abstain from eating the flesh obtained thereby, than kindling a thousand sacrificial fires- EVS

***
259. 
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

260.Verily on its bended knees, does the whole creation pay its reverence to the great heart that abjures flesh and holds all life tender and sacred-– ANM+2

***

260.Those who refrain from killing animals and abstain from eating its flesh,

Will receive with folded hands from all creatures of this world- – SMD

***

260
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh. – GUP

***

260.All lives shall lift their palms to him
Who eats not flesh nor kills with whim– SB.     

***

260.All living beings will raise their hands in worship to him who has never taken a living being’s life and has abstained from eating meat- EVS

***

260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

to be continued……………………..

Tags-Brahmins, Yagas, Vegetarianism, Tirukkural Encyclopaedia, Chapter 26, (Kural 251-260), The Renunciation of Fleshபுலால் மறுத்தல், Abstinence from flesh; Avoidance of Meat-Eating; Refraining from eating flesh

சீன ஆக்கிரமிப்பா? பலூசிஸ்தானின் கவலை! (Post.16,119)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,119

Date uploaded in London – 23 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீன ஆக்கிரமிப்பா? பலூசிஸ்தானின் கவலை! 

ச. நாகராஜன் 

China Pakistan Economic Corridor – CPEC என்பது 3000 கிலோமீட்டர் நீளமுடைய சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கடலிடைப் பாலம். இது வணிகத்தை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு தாழ்வாரம்.

இதை பலூசிஸ்தானுக்கான ஆக்கிரமிப்பிற்கும் சீனா பயன்படுத்தப் போகிறது என்பதை பலூசிஸ்தான் மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.

பலூசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கவும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் மிர் யார் பலூச், “பாகிஸ்தான் என்பது பலூசிஸ்தானில் ஒரு விருந்தாளி தான். இன்னும் சில வருடங்களில் இங்கிருந்து பாகிஸ்தான் போய்விடும்” என்று உறுதிபடக் கூறுகிறார். சீனா பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக ராஜீய ரீதியில் பயன்படுத்துகிறது என்று அவர் குற்றமும் சாட்டுகிறார்.

சீனாவும் பாகிஸ்தானும் சட்டத்திற்கு எதிராக பலூசிஸ்தானை ஆக்கிரமித்திருப்பதாகவும்  அதனுடைய ஆதாரவளங்களைக் கொள்ளையடித்து வருவதாகவும் இதற்கு – CPEC ஐப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

பலூசிஸ்தானில் பாகிஸ்தானும் சீனாவும் செய்து வரும் செயல்களை உலகளாவிய விதத்தில் தெரியப்படுத்தப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார். பீகிங் பாகிஸ்தானுக்கு தொழில்நுட்பம், நுண்ணறிவு மற்றும் இதர பல விதங்களில் உதவி வருவதாகவும் தெரிவித்த அவர் பலூசிஸ்தானின் தேவைகளை அந்த இரு நாடுகளும் அலட்சியப்படுத்துவதாகவும் அறிவித்திருக்கிறார்.

இந்தியா ஐ.நா.வில் சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்களை சுட்டிக் காட்டி அவற்றைத் தடுக்க முனைந்திருக்கிறது.

இந்த நிலையில் பலூசிஸ்தானை விடுவிக்கப் போராடும் பலூசிஸ்தான் விடுதலை இயக்கப்  பிரதிநிதிகள் இந்தியாவின் வெளி விவகார மந்திரி ஜெய்சங்கரிடம் வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். பலூசிஸ்தானில் CPEC தனது ராணுவ வீரர்களை நிரந்தரமாக இருக்க வைக்கத் திட்டமிடுகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காந்தாரம் என்பது பாரதத்தின் பகுதியாக முன்னர் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். மஹாபாரதத்தில் வரும் சகுனி இங்கு ஆண்ட மன்னன் என்பதையும் அனைவரும் அறிவர்.

வங்காளத்தில் ‘மா காளி கி கஸம்’ என்று காளியின் பெயரால் உறுதிமொழி கூறுவது போல ஆப்கானிஸ்தானத்தில் இன்றளவும் ‘ஹிந்து கா கஸம்’ என்றே உறுதிமொழி கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் ராணுவ வீரரும் நிர்வாக அதிகாரியுமான கர்னல் ஸ்லீமன் தனது அபிப்ராயத்தை ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்

துகீஸ் என்பவர்கள் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருந்த மத்யபிரதேசத்தில் கிரிமினல்களுக்கு எதிராக நடந்த ஒரு வழக்கை அவர் பார்வையிட்டிருந்தார். அவர் தனது கனவில் எலும்புக்கூடுகளின் குவியலையும் அது எப்படி ஏற்பட்டது என்பதையும் கண்டார்.

அவர் எழுதினார்: “எனது வாழ்க்கையில் நூற்றுக் கணக்கான கேஸ்களை பார்த்திருக்கிறேன். தனது சொத்து, உயிர், கௌரவம் ஆகிய அனைத்தும் ஒரு பொய் சொன்னால் போதும் என்ற நிலையில் உள்ள கேஸ்கள் அவை. இப்படிப்பட்ட கேஸ்களில் ஒரு ஹிந்து ஒருபோதும் பொய் சொன்னதில்லை. பொய் சொல்லமாட்டான்.”

இது தான் அவர் கொடுத்த அறிக்கை.  150 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்துவின் வாழ்க்கை முறை சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததை அவர் அறிக்கையிலிருந்து உணரலாம்.

அப்படிப்பட்ட ஹிந்துத்வத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் காந்தாரம் தனது உறுதிமொழியை ‘ஹிந்து கா கஸம்’ என்று இன்றளவில் சொல்லி வருவதில் ஆச்சரியமே இல்லை.

பலூசிஸ்தானை காப்பது நமது கடமையும் கூட; ஏனெனில் கொல்லப்புற வழியாக வரும் சீனாவையும் அதற்கு வழி விடும் பாகிஸ்தானையும் நம்ப முடியாது அல்லவா?

**

ஆதாரம், நன்றி : கொல்கத்தா வார இதழ் ட்ரூத் தொகுதி 94; இதழ் 16

31-7-26 தேதியிட்ட இதழ் (Truth, English Weekly)

சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)

Written by London Swaminathan

Post No. 16,118

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 விவேக சிந்தாமணி  நூலின் ஆசிரியர் யார் என்று தெரியாது; தமிழ் நடையைப் பார்க்கையில் அண்மைக்காலத்தில் 200, 300 ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று  தெரிகிறது . பெண்களை இவர் தாக்கி எழுதியிருப்பதைக் காணலாம் சிலர் அதை குடும்பப்  பெண்களைக் குறிக்காது என்பர். இந்தக் காலத்தில் மழை குறைந்ததற்குப் புலவர் கூறும் காரணமும் கலியுகம் இது என்று காட்டுகிறது. குறைந்தது 135 பாடல்கள் உள்ளன. சில பதிப்புகளில் கூடுதல் பாடல்களும் காணப்படுகின்றன .

இதை ஆதி சங்கரர் இயற்றிய விவேக சூடாமணியுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது .

Full book is available in Project Madurai website.

***

1

புலவரே! பெண்களை நம்பலாமா ?

2

புலவரே! முன்னொரு  காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்ததாம் ; இப்போது வருஷத்துக்கு மூன்று முறைதான் மழை பெய்கிறது; ஏனோ ?

3

அச்சாணி இல்லாத வண்டி போல எவை அழியும்?

4

பாம்பாட்டிக்கும், யானைப்பாகனுக்கும் ஆயுள் குறைவா ?

5

பெண்ணின் மனது எவ்வளவு ஆழமானது ?

6

புத்தியுள்ளவனே பலமானவன் என்பதற்கு நீவீர் சொல்லும் எடுத்துக்காட்டு என்னவோ?

7

ஏதோ ஒரு 13 பெயர்களைச் சொல்லி அவை போல குணம் இருக்க வேண்டும் என்று பாடுகிறீர்; அவை யாவை ?

8

உமது கருத்தில் பேயன், மூடன், கசடன் யார் யார்? அப்படியே பயனில்லாத ஏழு பொருட்களையும் சொல்லுங்கள்.

9

பெண்களின் அழகு எப்போது குறையும் ?

10

நரகத்துப் போவோர் யார் யார் என்று அருணகிரி நாதர் பாடிய திருப்புகழில் நீண்ட பட்டியல் உள்ளது. உங்கள் கருத்து என்ன புலவரே ?

**********************************

விடைகள்

1.ஆல கால விடத்தையும் நம்பலாம்

      ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்

கோல மாமத யானையை நம்பலாம்

      கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்

கால னார்விடு தூதரை நம்பலாம்

      கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்

சேலைகட்டிய மாதரை நம்பினால்

      தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.       12

(ஆலகால விஷம், ஆறு, பிரசண்ட காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லத்தக்க வேங்கைப்புலி, யமனால் விடும் தூதர்கள், கள்ளர், வேடர், மறவர் இத்யாதி பேர்களையும் நம்பலாம். [ஆனால்] சேலைகட்டிய மாதரை (வேசியரை??) [நம்பொணாது] நம்புவரேல் தெருவில் நின்று தவிப்பார்கள்)

***

அந்தக் காலத்தில்

2.வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை

நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை

மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே       26

வேதம் ஓதுகின்ற அந்தணர்க்கு ஒரு மழை; நீதிநெறி தவறாத அரசர்க்கு ஒரு மழை, அழகிய கற்பிற் சிறந்த மங்கையர்க்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு மாதத்திலும் மூன்று மழை என்று சொல்லும்படி வருஷிக்கும் .

இப்போதோ

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை

வரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை

புருஷணைக் கொன்ற பூவையருக்கு ஓர்மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே.       27

 (தற்காலம்] அரிசிவிற்பனை செய்கின்ற பிராமணர்களுக்கு ஒருமழை, நியாயந் தவறிய இராஜாக்களுக்கு ஒரு மழை, கணவனைக்கொன்ற பெண்களுக்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு வருஷத்திலும் மூன்றுமழை என்று சொல்லும்படி பொழிகின்றன.

***

3.மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனிவிலா அரசன் வீரம்

காப்பிலா விளைந்த பூமி கரையிலா திருந்த ஏரி

கோப்பிலான் கொண்ட கோலம் குருவிலான்கொண்டஞானம்

ஆப்பிலாச் சகடு போலே அழியுமென் றுரைக்க லாமே.       36

தனக்கு மூத்தோர் இல்லாமல் தனியே வாழும் பாலியப்பெண் வாழ்வும், கோபம் இல்லாத அரசன் வீரமும் காத்தல் இல்லாமல் விளைந்த பூமியும், கரையில்லாதிருந்த ஏரியும், தன்னிடம் வேண்டியவைகள் அமைதல் இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசிரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும் [ஆகிய இவை யாவும் ] அச் சாணியில்லாத வண்டிபோல் அழிந்துபோம் என்று சொல்லலாம்.

****

4.அரவினை ஆட்டு வாரூம் அருங்களி றோட்டு வாரும்

இரவினில் தனிப்போ வாரும் ஏரிநீர் நீந்து வாரும்

விரைசெறி குழலி யான வேசியை விரும்பு வாரும்

அரசனைப் பகைத்திட் டாரும் ஆருயிர் இழப்பர் தாமே.     

பாம்பாட்டுகிறவர்களும், அரிய யானைப்பாகர்களும், இராத்திரியில் தனிவழி செல்கின்றவர்களும், தடாக ஜலத்தில் நீந்துகின்றவர்களும், வாசனை நிறைந்த கூந்தலையுடைய வேசியரை இச்சிக்கின்றவர்களும், அரசர்களைப் பகைத்துக் கொண்டவர்களும் தங்கள் அருமையான உயிரை இழப்பார்கள்.

****

5.அத்தியின் மலரும்வெள்ளை ஆக்கைகொள் காக்கை தானும்

பித்தர்தம் மனமும் நீரில் பிறந்தமீன் பாதந் தானும்

அத்தன்மால் பிரம தேவ னாலள விடப்பட்டாலும்

சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவரில்லை கண்டீர்;       44

அத்திமரத்தின் பூவையும், வெள்ளை நிறம் கொண்ட காக்கையும், பைத்தியக்காரர் மனத்தையும், ஜலத்தில் பிறந்த மச்சங்களின் பாதத்தையும், சிவன் விஷ்ணு பிரம்மதேவன் முதலியவர்களால் அளவிடப்பட்டு ஒருவேளை கண்டறிந்தாலும், சித்திரத்தை யொத்த கண்களையுடைய மாதரின்  நெஞ்சத்தின் அளவைக் கண்டு தெளிந்தவர்கள் உலகத்தில் இல்லை.

***

6.புத்திமான் பலவா னாவான் பலமுள்ளான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலும் இடரது வந்தே தீரும்

மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே

உற்றதோ கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலாம்.     

ஒரு சிங்கத்தை ஒரு முயல் கூட்டிக்கொண்டு போய் ஒரு கிணற்றில் அதன் சாயலைக்காட்டிக் கொன்ற உவமைக் கதை போல் எவ்வளவு வீரத்தன்மையுள்ளவனும் புத்தியில்லாவிடில் எந்த விதத்தினாலும் அவனுக்குத் துன்பமே வந்து சேரும். ஆதலால் புத்தி யுள்ளவனே பலவான் ஆவான். (இக்கதை பஞ்சதந்திரத்தில் உள்ளது.)

***

7.மயில்குயில் செங்கால் அன்னம் வண்டுகண் ணாடி பன்றி

அயிலெயிற் றரவு திங்கள் ஆதவன் அத்தி கொக்கோடு

உயரும்விண் கமலம்பன்மூன் றுறுகுண முடையோர் தம்மை

இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.

மயில், குயில், சிவந்த கால்களையுடைய அன்னம், வண்டு, கண்ணாடி, பன்றி, கூர்மைபொருந்திய பற்களையுடைய பாம்பு, சந்திரன், சூரியன், சமுத்திரம், கொக்கு, உயர்ந்த ஆகாயம், தாமரை யாகிய –இப்பதின் மூன்று பொருட்களினிடத்திலுமுள்ள குணங்களை வகித்தவர்களை உலகத்தவரெல்லாம் போற்றும் ஈசனென்று எண்ணலாம்.

***

8.கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

      கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்

      ஒன்றுக்கும் உதவாதான் சோம்ப னாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

      பேசாம லிருப்பவனே பேய னாகும்

பரிவு சொல்லித் தழுவினவன் பசப்ப னாகும்

      பசித்தவருக் கிட்டுண்ணான் பாவி யாமே    

மதிக்கத்தக்க நல்ல சாஸ்திரங்களைக் கல்லாதவன் மூடன்; அளவறிந்து பேசாதவன் கசடன்; ஒரு தொழிலும் இல்லாதவன் மூதேவி; ஒன்றுக்கும் உதவாதவன் சோம்பன்; மரம்போல வணங்காது அறிவுடையோர் முன்பாக நின்று பேசாமலிருப்பவனே பேயன்; (அன்பின்றி) அன்பு போல் காட்டித் தழுவுகின்றவன் பசப்பன்; பசியாளருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாம்.

ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டீர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே.      

ஆபத்துக்கு உதவாத பிள்ளையும், அரிய பசிக்கு உதவாத சாதமும், தாகவெப்பத்தைத் தீர்க்காத தண்ணீரும், வறுமை யறியாமல் (அதிக செலவு செய்யும்] மனைவியும், கோபத்தை அடக்காத அரசனும், ஆசிரியன் உபதேசித்த மொழிகளைக் கொள்ளாத மாணாக்கனும், பாவங்களைத் தீர்க்காத தீர்த்தமும், [ஆகிய] இந்த ஏழினாலும் பயன் இல்லை.

****

9.கெற்பத்தால் மங்கையருக் கழகு குன்றும்

      கேள்வியில்லா அரசனால் உலகம் பாழாம்

துற்புத்தி மந்திரியால் அரசுக் கீனம்

      சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கீனம்

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்

      நன்மைசெய்யத் தீமையுடன் நயந்து செய்வார்

அற்பரோ டிணங்கிடில் பெருமை தாளும்

      அரியதவம் கோபத்தால் அழிந்து போமே.      

மங்கையருக்குக் கருப்பத்தால் அழகு குறையும் [நியாய முறை] வினவாத அரசனால் உலகு பாழாகும் இராஜாங்கத்துக்கு துர்ப்புத்தியுள்ள மந்திரிகளால் அரசுக்குக் கெடுதியுண்டாகும். அறிவில்லார்க்கு நல்ல புத்திகளைச் சொன்னாலும் கேளார். நன்மை செய்பவருக்கு உடனே தீமையையே பாராட்டிச் செய்வார். இவ்விதமான அற்பர்களோடு கூடினால் பெருமை குறையும். கோபத்தினால் அருமை யாகிய தவங்களும் சிதைந்து போகும்.

****

10.நரகம் அடைபவர்

தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,

அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,

சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,

 செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.

–subham—

Tags- விவேக சிந்தாமணி ,10 கேள்விகள்

கடவுள் செய்த கற்பழிப்பு! பெரிய விஞ்ஞானச் செய்தி! (Post No.16,117)

Written by London Swaminathan

Post No. 16,117

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நவக்கிரக துதியில் 8 விஞ்ஞான உண்மைகள்

ஜபா குஸும ஸங்காசம் என்னும் சம்ஸ்க்ருத நவக்கிரஹ துதியைத் தினமும் படிப்போர் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனமான நாசாவும் (NASA= National Aeronautics and Space Administration) அறியாத மிகப்பெரிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றனர் ! பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் நர்மதாயை நமஹ மந்திரத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் செய்தியை தினமும் நினைவுபடுத்துகின்றனர்  (சில பிராமணர்கள் இந்த மந்திரத்தைச் சொல்வதில்லை) . அந்தக்காலத்தில் நாகா பழங்குடி மக்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே குறைந்தது நான்கு தலைமுறைகளுக்கு மோதல் நடந்தது; இறுதியில் ஜனமேஜயன் என்ற மன்னன் நாகர்களை படுகொலை செய்யத் துவங்கியவுடன் ஆஸ்தீக மகரிஷி தலையிட்டு நாகா– யாதவ சமாதான உடன்படிக்கையைச் செய்வித்தார்; இதன் விளைவாக தென் அமெரிக்காவில் மாயா நாகரீகம் உருவானது (இதுபற்றி மாயா நாகரீகம் பற்றிய எனது கட்டுரைகளிலும் அவைகளைக் கொண்ட எனது புஸ்தகத்திலும் உள்ளது) . புறநானூற்றிலும் புராணங்ககளிலும் கூறப்படும் கட்டை விரல் அளவிலான வாலகில்ய முனிவர்கள் சூரியனை நாள்தோறும்  வலம் வருவது பற்றி மட்டும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுக்கும் கேடயம்/ ஷீல்ட் என்று ஊகித்து எழுதியுள்ளேன் (பழைய கட்டுரைகளைக் காண்க) .

NASA stands for the National Aeronautics and Space Administration. It is an official agency of the United States government. This group is in charge of the country’s space program, space travel, and scientific research on airplanes and flight.

***

இப்போது கடவுளின் கற்பழிப்பைக் கண்டு மகிழ்வோம்

இந்து மதத்தில் ஏதேனும் செக்ஸ் SEX விஷயங்கள் வந்தால் வெள்ளைக்காரர்களுக்கு ஒரே குஷி ! கிளுகிளுப்பு ! உடனே அதை வெளியிட்டு அவர்களுடைய பொன்மொழிகளையும் திருவாய் மலர்ந்து கொட்டியிருப்பதைக் காணலாம் . பிரம்மா, ஒரு பேரழகியைப் படைத்தார் அவள் பெயர் சதரூபா; அவள் படைத்த மகள் மீதே அவர் காதல் கொண்டார் . அவள் போன பக்கம் எல்லாம் அவருடைய தலை திரும்பியது ; அதனால் அவருக்குப் பல தலைகள். இப்படி ஒரு கதை ! ரிக் வேதத்தில் பல SEXY செக்சி (இந்திராணி – வ்ருஷாகபி) உரையாடல்கள் உள்ளன . இவைகள் எல்லாம் நம்முடைய காமன் பண்டிகை தெருக்கூத்து போன்ற நாடக வசனங்கள் ; அவை நாடகம் என்று அறியாத வெள்ளைத்  தோல்கள், அதை செக்ஸ் SEX என்று எழுதி மகிழ்கின்றன ! வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலைப் படங்களுடன் வெளியிட்டு மகிழ்கின்றன; அதே காலத்தில் எழுந்த பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைக் கண்டு மகிழ்வதில்லை ; இது வெள்ளைக்காரன் அணுகுமுறை!

பல விஷயங்களை பாமர மக்களுக்காக இந்துக்கள், சிம்பாலிக் SYMBOLIC காகக், கதைகளாகச் சொல்லுவார்கள் ! கிரஹணம் பற்றிச் சொன்னால் புரியாது என்பதற்காகப் பாம்பு விழுங்குகிறது என்பார்கள்; இது 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது .

இப்போது ஒரு கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம்.

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 MOONS FOR JUPITER.

நிலவு எப்படி உருவானது என்பதையும் நம் புராணங்கள் எழுதி வைத்துள்ளன .

பாற்கடலைக் கடைந்த போது, நிலவு உருவானது ; இப்போது பசிபிக் மஹா சமுத்திரத்தில் நிலவை வைக்கும் அளவுக்கு அதன் விட்டம் உள்ளதைக் கண்டு அது பூமியிலிருந்து பிய்த்து எறியப்பட்ட துண்டு துன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவை எல்லாம் பில்லியன்– கோடி கோடி ஆண்டுகளில் நடந்தவை. இதை நாம் பாற்கடலைக் கடைந்த போது நிலவும் வெளியே வந்தது என்று சொல்கிறோம் .

பாற்கடல் என்பதை மில்கி வே காலக்சி MILKY WAY= MILKY OCEAN  என்று பொருள்கொள்ள வேண்டும்

சுருங்கச் சொன்னால், சோலார் சிஸ்டம் ஆரிஜினை ORIGIN OF SOLAR SYSTEM விளக்குவதே இந்துக் குழந்தைகள் நாள்தோறும் சொல்லும் நவக்கிரஹ ஸ்தோத்திரம்!

***

எட்டு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு எட்டு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

–subham—

Tags- கடவுள் செய்த கற்பழிப்பு, விஞ்ஞானச் செய்தி, நவக்கிரக துதி, 8  விஞ்ஞான உண்மைகள்