Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
சிவப்பிரகாசர் யார் ? அவர் எழுதிய நூல்களில் நன்னெறி எதைப் பற்றிய நூல் ?
2
நன்னெறி நூலின் இரண்டு தனிச் சிறப்புகள் என்ன ?
3
அறநெறி நூல்கள் எல்லாம், நல்லோர் நட்பு- தீயோர் நட்பு பற்றி கூறுகின்ற ன ? இந்த நூலில் அவர் என்ன சொல்கிறார் ?
4
ஆதிசங்கரரும் திருவள்ளுவரும் கலப்படமற்ற தூய நன்மை பயக்குமானால்,பொய்யும் சொல்லலாம் என்று பாடிச் சென்றனர் ; சிவப்பிரகாசர் கொடுஞ் சொல்லும் இனிய சொல் என்கிறாரே! ஏன் ?
5
சூரியனால் கடலினைப் பொங்கச் செய்ய முடியாது; ஆனால் சந்திரனால் கடலினைப் பொங்கச் செய்ய முடிகிறது; அதேபோல சுடும் சொற்களால் மகிழ்ச்சி பொங்காது. நிலவு போல குளிர்ந்த சொற்களால் மகிழ்ச்சி பொங்கும் என்ற அருமையான உவமை சொல்லும் பாடல் எது?
6
நெல்லுக்கு எல்லோரும் நீர் இரைப்பார்கள்; புல்லுக்கு யாராவது நீர் இரைப்பார்களா? என்று அவர் கேட்பது ஏன்?
7
சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்களின் பெயர்கள் என்ன ?
8
நம்முடைய உடலில் ஒன்பது துவாரங்கள் இருப்பதால் இதை நவத்வாரபுரி என்று சம்ஸ்க்ருத நூல்கள் விளம்புகின்றன; ஒரு ஓட்டை இருந்த பானையில்கூடத் தண்ணீர் நிற்பது இல்லையே! இந்த ஒன்பது துளை உடலில் உயிர் ஓடுவது எப்படி என்று வியக்கும் பாடல் எது?
9
இலக்கணம் கற்றவனே மொழி அறிஞன் என்று ஏன் சொல்கிறார் ?
10
முனிவர்கள் போலத் தவம் இயற்றுவோர் , பெண்களுக்கு முன்னால் இருப்பது ஆபத்து என்பதை எந்த உவமை மூலம் விளக்குகிறார் ?
**********************
விடைகள்
1.சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்யாமல் வாழ்ந்த அவர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார்; முப்பது நூல்களை இயற்றியுள்ளார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் துறைமங்கலத்தில் வசித்தார் ; அவர் எழுதிய நூல்களில் நன்னெறி என்பது ஏனைய அற நூல்களைப்போல மக்களுக்கு நல்ல நெறிகளைப் புகட்டும் நூலாகும் அதில் நாற்பது பாடல்கள் உள்ளன.
***
2ஆசிரியர் சிவப்பிரகாசர் முதலில் மணலில் பாடல்களை எழுதினாராம்; அதை அவரது சீடர்கள் எழுத்து வடிவில் பாதுகாத்து நமக்கு வழங்கியது ஒரு தனிச் சிறப்பு;இரண்டாவது ஒரு பெண்ணை முன்னிலையில் வைத்து அவளுக்குச் சொல்லுவது போல அமைந்த பாடல்கள் இவை. இந்த வகைச் செய்யுட்களை ‘மகடூஉ முன்னிலை என்பார்கள்.
***
3.நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செயும்கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்
காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்
போய்முற்றின் என்ஆகிப் போம்.
காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும். இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும். இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.
***
4.மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க – ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு
உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும்.
***
5.இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய்
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல் (18)
***
6. தக்கார்கே உதவுக
தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று
மிக்கார்குதவார் விழுமியோர் – எக்காலும்
நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புலலுக்கு யிரைப்ரோ போய்.
தகுந்தவர்களுக்குத்தான் தானம் செய்ய வேண்டும்; உதவி செய்ய வேண்டும். தகாதவர்க்கு தானம் கொடுப்பது புல்லுக்கு நீர் இரைப்பது போன்றதே .
***
7.அவர் எழுதிய நூல்கள் :-
பிரபுலிங்கலீலை
திருக்கூவப்புராணம்
சித்தாந்த சிகாமணி
வேதாந்த சூடாமணி
சிவப்பிரகாசவிகாசம்
சிவநாம மகிமை
தர்க்கபாஷை
சோணசைலமாலை
திருவெங்கையுலா
திருவெங்கை யலங்காரம்
திருச்செந்திலந்தாதி
திருவெங்கைக் கலம்பகம்
திருவெங்கைக்கோவை
சதமணிமாலை
நால்வர் நான்மணிமாலை
நிரஞ்சனமாலை
கைத்தலமாலை
அபிஷேகமாலை
வெங்கைக்கோவை
வெங்கைக்கலம்பகம்
நன்னெறி
கொச்சகக்கலிப்பா
இயேசுமத நிராகரணம்
தலவெண்பா
பிக்ஷாடன நவமணிமாலை
பழமலை அந்தாதி
சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம்
சிவஞான பாலய சுவாமிகள் திருப்பள்ளியெழச்சி
சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்
சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு
சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது
இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில் விருத்தம்
இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில் விருத்தம்
இட்டலிங்க அபிடேகமாலை
திருச்செந்தினிரோட்ட யமகவந்தாதி
பெரியநாயகியம்மை ஆசிரியவிருத்தம்
பெரியநாயகியம்மை கட்டளைக்களித்துறை
***
8. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.
வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை – தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.
***
9. தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளாதவர்களுடைய அறிவு, கற்றார் அறிவுக்குமுன் செல்லாது: இலக்கணத்தை முறையாகக் கற்றறிந்த அறிஞர்களின் அறிவுக்கு முன்னால் செல்லுபடியாகாது (மதிப்பற்றதாகிவிடும்).அதாவது, ஒருவர் எவ்வளவுதான் பல நூல்களைப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொண்டாலும், மொழியின் அடிப்படைக் கட்டமைப்பான இலக்கணத்தைக் கற்கவில்லை என்றால், அவரது அறிவு அறிஞர்கள் அவையில் மதிக்கப்படாது என்பதாகும். கடல்போலப் பிரவாகம் எடுக்கும் கங்கை நதியானது, சிவன் தலைமுடிக்கு வந்தவுடன் அடங்கிவிடுகின்றதல்லவா ?
எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்
எழுத்தறிவார்க் காணின் இலையாம் – எழுத்தறிவார்
ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்
வீயும் சுரநீர் மிகை.
The learning of those who lack knowledge in grammar
is exposed as inadequate in the presence of the experts.
It is like the mighty river Ganges hiding itself
When it reaches our Lord’s crown of hair.
***
10. பகர்ச்சி மடவார் பயிலநோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் – நெகிழ்ச்சி
பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்
எறும்பூரக் கல்குழியுமே.
எறும்பு ஊர, ஊர கல்லும் தேயும் ; பெண்கள் முன்னிலையில் தவசீலர்கள் தொடர்ந்து இருந்தால் மனமும் தேயும்.
47Tirukkural Encyclopaedia- Chapter 29 Absence of Fraud,கள்ளாமை (Post.16,148) 31/8
Tamil Music Wonders! Purananuru wonders-47, Tamil Encyclopedia-87 (Post.16,045)2/8
Tamils Rewrite History: Purananuru wonders-48, Tamil Encyclopedia-88 (Post.16,055)5/8
Tamil attacks on Atheists: Purananuru wonders-49, Tamil Encyclopedia-89 (Post No.16,060)6/8
Different Types of Tamil Swearing! Purananuru wonders-50, One Thousand Interesting Facts – Part 90 (Post No.16,064)7/8
Airplane shadow in Vaigai River 2000 years ago! Purananuru wonders-51, Tamil Encyclopedia-91 (Post.16,068)8/8
Sexy Joke; Purananuru wonders-52, One Thousand Interesting Facts – Part 92 (Post.16,078)11/8
Tamil Women’s Psychology!Purananuru wonders-53, Tamil Encyclopedia-93 (Post.16,086)13/8
Hindus knew about Rivers in the Sky! Purananuru wonders-54, Tamil Encyclopedia-94 (Post.16,094)16/8
Tamil Wordsworth! Purananuru wonders-55, Tamil Encyclopedia-95 (Post No.16,099)17/8
Tamil Non- Vegetarian Food! Sanskrit Idiots and English Idiots Exposed! Purananuru wonders-56 (Post.16,110)20/8
Richest Tamil Women! Tamil Attacks on Chinese and Romans! Purananuru wonders-57 (Post.16,121)23/8
Karikal Choza: Purananuru wonders-58, Tamil Encyclopaedia 98 (post.16,125)24/8
Brahmins, pure Vegetarians! 73 Similes! Yadava Lady’s Investment Plan! Ghost’s Riddle to Goddess Durga! Purananuru wonders-59(Post.16,130)26/8
Wigs of British Judges! Seven Step Good-bye! Purananuru wonders-60 (Post.16,138)28/8
Vastu Shastra, Thali, Zodiac! Purananuru wonders-61; Tamil Encyclopaedia 101 (Post.16,146)30/8
90HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 90; இந்து மத கலைச்சொல் அகராதி-90 (Post.16,041) Sakuntalam to Santhana Lakshmi 1/8
91HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91 (2/8) சந்தான லக்ஷ்மி, சகுந்தலா, அஷ்ட லக்ஷ்மி.
92HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 92; இந்து மத கலைச்சொல் அகராதி-92 (Post.16,056) Sandhyavandana to Saraswathy 5/8
93HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 93; இந்து மத கலைச்சொல் அகராதி-93 (Post.16,058) 6/8சனத் குமாரர், ஏழரை நாட்டு சனி, சந்தியா வந்தனம்
94HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 94; இந்து மத கலைச்சொல் அகராதி-94 (Post.16,063)7/8 சப்த ரிஷி to சரஸ்வதி
95HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 95; இந்து மத கலைச்சொல் அகராதி-95 (Post No.16,071)9/8 Sarayu to Shyamantaka Gem
96HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 96; இந்து மத கலைச்சொல் அகராதி-96 (Post.16,075) சரயு, சங்கரதேவ, சதி, , சத்யம், சியமந்தக, டைமண்ட்
97HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 97; இந்து மத கலைச்சொல் அகராதி-97 (Post.16,082)12/8 Shyama Shastri to Sthanu
98HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 98; இந்து மத கலைச்சொல் அகராதி-98 (Post.16,084)13/8 ஷ்யாமா சாஸ்திரி, ஸ்தாணு, சோமாஸ்கந்த சிந்து நதி, நவரஸம்
99HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 99; இந்து மத கலைச்சொல் அகராதி-99 (Post.16,098) Shubadra, Shushruta to Swastika 17/8
100HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 (Post.16,103)18/8 சுஸ்ருதர், சுபத்ரா, சூரியன், சூர்ய வம்சம்
101HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 101; இந்து மத கலைச்சொல் அகராதி-101 (Post 16,106)19/8 ஸ்வஸ்திகா, துறக்கம், ஸ்வயம்பூ,லிங்கம்,
102 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 102; இந்து மத கலைச்சொல் அகராதி-102 (Post.16,116) 22/8 Cosmology, Taittriya, Tara, Rape Story, Jupiter
103HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 103; இந்து மத கலைச்சொல் அகராதி-103 (Post.16,124) 24/8 தைத்திரீய உபநிஷத், தாரா(கற்பழிக்கப்பட்ட கதை) காஸ்மாலாஜி விஷயம் என்னும் சோலார் சிஸ்டம் உருவான கதை
104 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 104; இந்து மத கலைச்சொல் அகராதி-104 (Post.16,135)27/8 Tevaram to Trita
105HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105 (Post.16,143)29/8 திரிசங்கு, தேவாரம், த்ரித, தாயுமானவர்
**********************
TAMIL ARTICLES WRITTEN BY LONDON SWAMINATHAN
சிதம்பரம் சிறையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாடிய பாடல்கள் (Post.16,091) 15/8
தமிழ் மரபு அறக்கட்டளை 14/8 my message to THF
செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள் (Post.16,142)29/8
கடவுள் செய்த கற்பழிப்பு! பெரிய விஞ்ஞானச் செய்தி! (Post No.16,117) 22/8
பாரதியின் குயில்பாட்டு பற்றி 10 கேள்விகள் (Post.16,042) 1/8
அறப்பளீச்சுர சதகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,046) 2/8
கலிங்கத்துப் பரணி பற்றி 10 கேள்விகள் (Post No.16,050) 3/8
திருவள்ளுவமாலை பற்றி 10 கேள்விகள் (Post.16,052)4/8
பட்டினத்தார் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,055) 5/8
பஜ கோவிந்தம் பாடல் பற்றி 10 கேள்விகள் (Post.16,062)7/8
நாலடியார் நூல்பற்றி 10 கேள்விகள் (Post No.16,067)8/8
தாயுமானவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,059)6/8
சீவக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,070)9/8
முத்தொள்ளாயிரம் நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,074)
மணிமேகலைக் காப்பியம் பற்றி 10 கேள்விகள் (Post.16,077)11/8
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,081)12/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)14/8
பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)15/8
பாரதி பாட்டில் 16 நாடுகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,095) 16/8
மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102) 18/8
ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107) 19/8
கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085) 13/8
கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100) 17/8
திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)20/8
மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112) 21/8
சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)22/8
பாபநாசம் சிவன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,122)23/8
பார்ப்பனரை வசைபாடிய பாரதிதாசன் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,123)24/8
ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் அற்புதத் தமிழ் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,128) 25/8
அருணாசலக் கவிராயர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,131)26/8
முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)27/8
புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)28/8
மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)29/8
ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145) 30/8
பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)31/8
London Swaminathan in July 2026.
–subham—
Tags London Swaminathan, Article Index August 2026; Index No.165 ,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to be noted:
A simple message- Don’t feel angry; it will harm you.
But it can be told in different ways is shown here.
Very important Kural is 306. In the forest, wildfires are caused when two trees rub against one another; the tree which creates the fire is also destroyed. Kambaramayana Uttarakandam explains it with two bamboo trees. When such a bamboo creates fire by friction, it destroys the entire forest. This beautiful simile is taken from a Sanskrit phrase; Valluvar has taken it from Manu Smriti!
Asrayasah (आश्रयाश) is a Sanskrit word primarily used as a title or synonym for Agni (the god of fire), literally translating to “the one who devours or consumes his own shelter/refuge.சேர்ந்தாரைக் கொல்லி
1) Āśrayāśa (आश्रयाश):—சேர்ந்தாரைக் கொல்லி [from ā-śraya > ā-śri] m. ‘consuming everything with which it comes in contact’, fire, [Hitopadeśa; Manu-smṛti etc.]
Another comparison is mother devouring her own baby; that is, the bamboo mother creates baby=fire which destroys even the kith and kin, that is other trees in the forest.
But one may wonder why Valluvar suddenly introduced a boat or raft in the same couplet. Only Parimel Azakar, the Kanchipuram Vishnu Temple priest and the most famous Tirukkural commentator, explained it. He says, Look, this chapter comes under asceticism section. So, Valluvar meant only ascetics in the Kural. That is an ascetic who crosses the ocean of birth and death by the boat is also affected.
In the tenth couplet in the first chapter Valluvar said CROSSING THE OCEAN OF BIRTH AND DEATH BY SWIMMING. Here he says CROSSING THE OCEAN OF BIRTH AND DEATH BY BOAT OR RAFT OR CANOE.
Where did he get this idea? He translated it from Bhagavad Gita!
अपिचेदसिपापेभ्यःसर्वेभ्यःपापकृत्तमः।
सर्वंज्ञानप्लवेनैववृजिनंसन्तरिष्यसि॥३६॥
: “Even if you are considered the most sinful of all sinners, you will be able to cross over the ocean of miseries (and sins) entirely by taking shelter of the boat of transcendental knowledge.”
The idea of crossing by a boat is taken from Bhagavad Gita sloka 4-36.
***
How do sages perform Miracles?
If one controls anger in his life he can perform Ashta Ma Siddhis= Eight Great Supernatural powers; see Kural309.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Project Madurai website has all the Tamil books.
Part 49 வெகுளாமை, கோபம், சினம் – Wrath, Abstaining from Anger, Refraining from Anger- Control of Temper- The not being Angry;
***
301.Only in him does the true spirit of forbearance dwell who has the power to strike, but withholds; but what avail of the forbearance of the weak? – A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
301.Only the man who controls his temper, where it can hurt, is in fact controlling it-
Where his anger cannot have sway, such an exercise is futile either way- S M Diaz, I G of Police- SMD, Year 2000
***
301 Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it rein? He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ? -Rev.Dr.GU Pope – GUP, Year 1886
*** 301.Anger against the weak is wrong It is futile against the strong -Suddhananda Bharathiyar- SB ***
301.The man who controls his anger toward the weak who is helpless against it is the one who controls it truly. What matters it controlled or not towards others- EVS Publishers, Singapore – EVS, Year 1986
***
301.Who curbs his wrath, when it has power, curbs it indeed;
When power there is none, what matters if he curbs or not?- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
***
301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
302.Impotent fury against a foe mightier than one doeth breed harm unto ourselves. And the wrath turned against the weak is wrought with greater disaster-– ANM+2
***
302.Even where it cannot hurt others, anger is bad;
But where is does hurt, there is nothing worse-– SMD
***
302 Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, ’tis greater, evil still. Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil. – GUP *** 302.Vain is wrath against men of force Against the meek it is still worse– SB
***
302.Anger towards those stronger than oneself is harmful. There is no harm greater than losing one’s temper towards the weak– EVS
***
302. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற XXXXXXXXXXXXXXXXXXX
303.Whosoever your offender may be, forget your wrath; for out of it does spring a host of evils-– ANM+2
***
303.As only evil consequences can come out of it,
Anger is bet avoided in respect of all-– SMD
***
303 If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will beget. Forget anger towards every one, as fountains of evil spring from it. – GUP *** 303.Off with wrath with any one. It is the source of sin and pain– SB ***
303.Great harm may be caused by anger. Therefore, one should restrain anger towards anybody– EVS
***
303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும்
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
304.Anger slays our smiles and takes away the cheer of our hearts; is there a foe deadlier than wrath?- – ANM+2
***
304.Can there be any greater enemy to mankind than anger, which kills laughter and joy? – SMD
***
304 Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoy? Is there a greater enemy than anger, which kills both laughter and joy ? – GUP *** 304.Is there a foe like harmful ire Which kills the smile and joyful cheer? – SB
***
304.Can there be a greater enemy than ager which flares up, destroying one’s peace of mind and cheerfulness? – EVS
305.If thou decide to guard thyself, guard against blind anger, lest it should destroy thy soul-– ANM+2
***
305.If you would protect yourself, guard against your own anger;
For, anger not controlled, would lead to self-destruction-– SMD
***
305 If thou would’st guard thyself, guard against wrath alway; ‘Gainst wrath who guards not, him his wrath shall sla y. If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him. – GUP *** 305.Thyself to save, from wrath away! If not thyself the wrath will slay– SB
***
305.If one wishes to safeguard oneself, one should control anger. If not, it is bound to ruin oneself– EVS
***
305.Curb well your wrath, if you would guard yourself;
For wrath will ruin you, if you will curb it not– HAP
306.Wild wrath is flaming fire that consumes even the blessed hearts who are very canoes of our souls in our voyage to the unknown-– ANM+2
***
306.Anger not only destroys those whom it affects, like fire, but it will also burn
Those kindred souls, who step in to help as a raft towards salvation-– SMD
***
306 Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful ‘raft’ of kindred dear. The fire of anger will burn up even the pleasant raft of friendship. – GUP *** 306.Friend-killer is the fatal rage It burns the helpful kinship-barge– SB
***
306.The fire of anger will destroy not only the person under its influence but also his kin who ministers to him in the path of righteousness – EVS
***
306.The fire of wrath, that burns up all that is near,
Will burn up, too, the pleasant bark of friendship rare– HAP
307.Pain awaits the hand that strikes against a stony ground. Ruin awaits the soul that seeks its strength in deadly wrath-– ANM+2
***
307.He, who sees substance in anger and gives way to it, will suffer evil consequences,
Even as the fool who slaps the ground-– SMD
***
307 The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thing. Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail. – GUP *** 307.The wrath-lover to doom is bound Like failless-hand that strikes the ground– SB
***
307.The ruin of the man who regards anger as a quality of his power is as certain as the destruction one’s hand which smites the ground– EVS
308.It were well for you if you abstain from wrath even against the loveless being whose injuries are as painful as the thousand tonged flame of fire-– ANM+2
***
308.Even if the memory of a great wrong burns one up like a holocaust,
It is best to strain oneself to hold back the anger-– SMD
***
308 Though men should work thee woe, like touch of tongues of fire. ‘Tis well if thou canst save thy soul from burning ire. Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger. – GUP *** 308.Save thy soul from burning ire Though tortured like the touch of fire– SB
***
308.Even when tormented as if scorched to soaring flames of fire, it is well, if possible, to control anger– EVS
309.All the longings of our soul become fulfilled, if you banish anger from your heart-– ANM+2
***
309.To an ascetic, who does not even think angry thoughts
Every constructive thought will result in instant success-– SMD
***
309 If man his soul preserve from wrathful fires, He gains with that whate’er his soul desires. If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of. – GUP *** 309.Wishes he gains as he wishes If man refrains from rage vicious! – SB
***
309.If a man could check the feeling of anger in his mind, he would get all that he wishes to have—EVS
310.Death is the heart which is blinded by wrath; but he that is free from it is one with the immortals-– ANM+2
***
310.Those who have yielded to anger and to consequent evils, are like the dead,
While those who have reined in anger, are like the good ascetics-– SMD
***
310 Men of surpassing wrath are like the men who’ve passed away; Who wrath renounce, equals of all-renouncing sages they. Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death). – GUP ***
310.Dead are they who are anger-fed Saints are they from whom wrath has fled– SB
***
310.Those who lose their temper are likened to the dead. Those who control their anger are likened to the sages who have overcome death– EVS
Tags- Bhagavad Gita and Manu Smriti again in Kural! Tirukkural Encyclopaedia- Chapter 31-Anger Part 49 வெகுளாமை, கோபம், சினம் – Wrath, Abstaining from Anger, Refraining from Anger- Control of Temper- not being Angry;
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வங்கத்தில் உள்ள அதினா மசூதி, ஆதிநாத் சிவன் கோவிலா? ஹிந்துக்களின் விழிப்புணர்வு!
ச. நாகராஜன்
மேற்கு வங்கத்தில் மால்டாவில் உள்ள அதீனா மசூதி புராதனமான ஆதிநாத் சிவன் கோவிலே என்று பக்தர்கள் இப்போது விழிப்புணர்ச்சியுடன் கூறுகின்றனர்.
இது பற்றி ஶ்ருதி சாகர் 25-7-26 opindiaவில் உண்மைகளைச் சித்தரித்துள்ளார்.
650 ஆண்டு பழமையான அதினா மசூதிக்கு வெளியே உள்ளூர் பிஜேபி தலைவர்கள் ஆதரவுடன் பக்தர்கள் வழிபாடுகளைத் தொடங்கியுள்ளனர்.
‘ஆதிநாத் புராதன் சிவ மந்திர் இயக்கத்தைச்’ செர்ந்தவர்கள் இங்கு
3.6 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான சிவலிங்கத்தை நிறுவ ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இதனுடைய எடை 1.5 டன்னாகும். இங்கிருந்து 289 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாரகேஸ்வரத்திலிருந்து இந்த சிவலிங்கம் மால்டாவிற்கு கொண்டு வரப்படுகிறது.
பிஜேபியைச் சேர்ந்த காஜல் கோஸ்வாமி, ‘மசூதி என்று சொல்லப்படும் இதன் உள்ளே ஏராளமான புத்த மத மற்றும் ஹிந்து மதம் சார்ந்த சிலைகள் உள்ளன’ என்று கூறுகிறார்.
இதை மீட்டு இங்கு சிவலிங்கத்தை நிறுவுவதே எங்களது பிரதான லட்சியமாகும் என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆனால் சட்டத்திற்கு உட்பட்டே தங்கள் செயல்கள் இருக்கும் என்று அவர் உறுதிபடக் கூறுகிறார்.
ஆர்கலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா மசூதிக்கு உள்ளே எந்த வித வழிபாடும் நடத்தக் கூடாது என்றும் வெளியே நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.
1958ம் ஆண்டின் AMASR ACTஇன் படி இது பாதுகாக்கப்பட்ட இடமாகும். இதன் உள்ளே எந்தவித சடங்கும் வழிபாடும் நடத்தப்படக் கூடாது.
மால்டா மாவட்டத்தில் பாண்டுவா என்ற இடத்தில் உள்ள அதினா மசூதி 1373 முதல் 1375 உள்ள ஆண்டுகளில் சுல்தான் சிகந்தர் ஷாவால் கட்டப்பட்டது. இவர் இல்யாஸ் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்தவர்.
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த பால சேனா காலத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹிந்து மற்றும் புத்த கட்டுமானங்களைச் சிதைத்து அங்கிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள், தூண்கள், செதுக்கப்பட்ட கற்கள் உள்ளிட்டவற்றால் இது அமைக்கப்பட்டது.
இங்குள்ள கட்டுமான அமைப்பு இது புராதனமான ஆதிநாத சிவாலயத்தை அழித்து கட்டப்பட்டதைத் தெளிவாக விளக்குகிறது. சிவாலயத்தை அடுத்து இங்கு ஒரு விஷ்ணு ஆலயமும் அமைந்திருந்திருக்கிறது.
இங்குள்ள கதவுகள், செதுக்கப்பட்ட சிலைகள் உள்ளிட்ட அனைத்தும் இதை நிரூபிக்கின்றன.மலர்களின் அமைப்பு, கர்பக்ருஹத்தின் அமைப்பு ஆகியவை பால சேனா வம்ச கட்டுமான வழிமுறைகளைச் சுட்டிக் காட்டுகின்றன.
சீனியர் அட்வகேட்டான ஹரிசங்கர் ஜெயின் இதை மீட்டு ஹிந்துக்கள் தங்கள் வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்று குரல் கொடுத்த பின்னர் இந்த இயக்கம் சூடு பிடித்துள்ளது.
உலகநீதி நூலினை இயற்றியவர் யார் ? அவரைப்பற்றிய முக்கிய வாழ்க்கைக் குறிப்புகள் என்ன?
2
இந்த நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன ? அவற்றில் இழையோடும் விஷயம் என்ன ?
3
இந்த நூல் எப்படித் துவங்குகிறது ?
4
கெட்ட நண்பர்களுடன் சேரக்கூடாது; உண்மையே பேசவேண்டும் என்பதை எப்படி வலியுறுத்துகிறார் ?
5
பாரதியார் பெண்ணுரிமையைப் பாடிப் புகழ் பெற்றார் ? உலக நீதி நூல், பெண்களுக்கு எவ்வாறெல்லாம் ஆதரவு தருகிறது ?
6
தமிழ்நாடு என்றாலே வானளாவிய கோபுரங்கள்தான் நினைவுக்கு வரும்; தமிழ் நாடு அரசின் சின்னத்திலும் கோபுர படத்துடன் வாய்மையே வெல்லும் என்ற முண்டகோபநிஷத் வசனம்தான் உள்ளது; உலக நீதி கோயில் பற்றி என்ன செப்புகிறது ?
7
ஐந்து பேருக்கு கூலி தராமல் ஏமாற்றினால் எமன் சும்மாவிடமாட்டான் என்று எப்படி எச்சரிக்கிறார் ?
8
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்- என்று சொல்கிறாரே! இதன் பொருள் என்ன ?
9
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்- என்று ஏன் சொன்னார்
10
உலக நீதியைக் கேட்டு அதைப் பின்பற்றினால் என்ன பலன் கிடைக்கும்?
*********************
விடைகள்
1.உலகநாதர் , திருவாரூரைச் சேர்ந்தவர் என்றும் சைவத் திருமுறைகள் வெளிவர உதவியவர் என்றும் தெரிகிறது . பாடல் நடையைப் பார்க்கையில் எளிய தமிழாக இருப்பதால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாழ்ந்தவர் என்று ஊகிக்கமுடிகிறது.
***
2.இவர் ஒரு முருக பக்தர். ஆகையால் 1 3 பாடல்களை இயற்றிய இவர் ஒவ்வொரு பாடலிலும் முருகப்பெருமானைப் போற்றுகிறார் ; ஒருவர் எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்யாமல் இருக்கக்கூடாது என்று நீதிநெறிகளை எளிய தமிழில் எதுகை மோனையுடன் பாடியுள்ளார்; சிறுவர்கள் மனப்படமாகப் பாடும் வகையில் அமைந்தது இதன் சிறப்பு .
***
3.உலக நீதி – ஆசிரியர்: உலகநாதர் நூலினைத் துவக்கியவிதம்:
மனைவியை குறைகூறக் கூடாது ; இந்தக் கருத்து வேறு எவரும் சொல்லாத புரட்சிக்கருத்து !
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்:-
இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு
இருதலைப்பாம்பு போல இருக்காதே.
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்(இதை ஏன் சொன்னார் என்று விளங்கவில்லை )
***
6.கடவுள் விரோதக் கயவர்களுக்கு செமை அடி கொடுக்க ஒரே வரியில் சொல்கிறார்: கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.
XX
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
XX
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
***
7.அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே. #11
Don’t forget to give the fees to washerman(laundry), barber (hair cutting saloon), Teacher or school, nurse, and doctor.
***
8.பழங்காலத்தில் பெரும்பாலும் நிலத் தகராறுகள் விசாரணைக்கு வரும் ; அதற்குப் பொய் சாட்சி சொல்லவும் ஆட்களைத் தயார் செய்வார்கள்; அதுபோன்ற விசாரணைகள் கிராமத்தலைவர் தலைமையில் ஆலமரத்துக்கு அடியிலுள்ள மேடை அருகே நடைபெறும் அப்போது மண் தரை மீது நின்று கொண்டு மண் / நிலம் தொடர்பான சாட்சியம் சொல்ல சிலர் வருவார்கள் ; அப்படி பூமி மீதே நின்று கொண்டு பூமி பற்றியே பொய்ச் சாட்சியம் சொல்லுவது தகாது என்பதே இந்த வாசகத்தின் பொருள்.
***
9.தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ஒரு பழமொழி உள்ளது; தானும் உண்ணாமல் மற்றவர்களுக்கு காசு கொடுத்தும் உதவாமல் பொற் காசுகளைப் பானையில் வைத்து அவருக்கு மட்டுமே தெரிந்த இடத்தில் புதைத்துவிடுவார் அதை யாருக்கும் சொல்லாமலேயே இறந்த பின்னர் அது யாரோ ஒருவருக்குப் புதையலாகக் கிடைத்துவிடும்; பெரும்பாலும் புதையலை எடுப்போர் அதை யாருக்கும் தெரிவிக்காமல்பங்கு பிரித்துக் கொள்வார்கள் ; தொல்பொருட் துறையினர் கண்டுபிடிக்கும்போது மட்டும் அந்தச் செய்தி பத்திரிகையில் வரும்.
***
10.உலக நீதியால் கிடைக்கும் பலன்:
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே. #13
–subham—
Tags.உலகநீதி, நூல், 10 கேள்விகள், உலகநாதர், பெண்கள் உரிமை, 5 பேர் கூலி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ENGLISH VERSION POSTED YESTERDAY.
Word beginning with letter U
உதயணன்
உதயணன் – வாசவதத்தா காதல் கதை உலகத்தின் பழங்கால காதல் கதைகளில் முக்கியமான ஒன்றாகும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நடந்த உண்மைக் கதை . சந்திர வம்சத்தில் தோன்றிய உதயணனன் வத்ச நாட்டை ஆண்டுவந்தான் . சஹஸ்ரானிகா என்ற மன்னன் மனைவி ம்ருகாவதி ஜமதக்கினி முனிவரின் ஆஸ்ரமத்தில் தஞ்சம் புகுந்து வாழ்ந்த காலத்தில் உதயணன் பிறந்தான் . பிறக்கும்போதே இவன் உலகப் புகழ்பெறுவான் என்ற அசரீரி வானில் ஒலித்தது.தமிழில் பெருங்கதை என்னும் காப்பியத்திலும், சம்ஸ்க்ருதத்தில் ஸ்வப்னவாசவதத்தம் போன்ற நூல்களிலும் இக்கதை விவரிக்கப்பட்டுள்ளது. காளிதாசனும் உதயணனைக் குறிப்பிட்டுள்ளான். பெருங்கதை என்னும் தமிழ் நூலில் காணப்படும் கதை பின் வருமாறு : பெருங்கதை நூல் முழுவதும் கிடைக்கவில்லை காண்டங்களின் உட்பிரிவுகள் ஆகிய காதைகள் பல அழிந்துள்ளன.உதயணன் யாழிசையில் வல்லவன். அவனது யாழின் இசைக்கு மயங்கி ஒரு தெய்வீக யானை அவனிடம் வந்தது.உதயணன் ஒரு நாள் சோர்வு மிகுதியால் யானைக்கு உணவு தரும் முன்பாக, தான் உண்டு விட்டான். இதனால் யானையும் அவனைப் பிரிந்து சென்று விட்டது. வருத்தம் அடைந்த உதயணன், யாழை இசைத்துக் கொண்டே காடு மலைகளில் எல்லாம் யானையைத் தேடி அலைந்தான். இந்நிலையில் உச்சயினியை ஆண்ட மன்னன், ஓர் இயந்திர யானையைப் பயன்படுத்தி உதயணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த யூகி உதயணனை மீட்கத் திட்டம் இட்டான். இதன்படி உச்சயினியின் பட்டத்து யானையை மதம் கொள்ள வைத்துத் தெரு வீதிகளில் திரிய விட்டான். யானையை எவராலும் அடக்க இயலவில்லை. இறுதியில் மன்னன் உதயணனைச் சிறையில் இருந்து விடுவித்தான். யானையை அடக்க வேண்டினான். யானையை அடக்கிய உதயணன் அரசனின் நன்மதிப்பைப் பெற்றான்.பின்பு உச்சயினி மன்னன் மகள் வாசவதத்தைக்கு யாழ் கற்றுத்தரும் வேளையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. உதயணன் வாசவதத்தையைத் திருமணம் செய்தான் . தன்னுடைய நாட்டினை ஆளவதற்குத் திரும்பிவந்தான் .நாட்டைக் கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை. இதனால் இருவரையும் பிரித்தலே நாட்டுக்கு நன்மை என்பதை அவனுடைய நண்பன்/அமைச்சன் யூகி உணர்ந்தான். இருவரையும் பிரித்து வைக்கத் திட்டமும் தீட்டினான். வாசவதத்தையை யாரும் அறியாமல் வேறோர் இடத்திற்கு மாற்றி, அவள் தீயினால் மாண்டு விட்டதாகவும் செய்தி பரப்பினான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் பெரிதும் மனம் கலங்கினான். அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்த ஒரு முனிவரை அடைந்தான்.
இராசகிரி நகரில் இருந்தபோது அந்த நகரத்து அரசன் தங்கை பத்மாவதியை மணந்தான். பின்பு தன் நகராகிய கௌசாம்பிக்கு வந்தான். அங்கு, யூகியும் வாசவதத்தையும் மீண்டும் வருவதைக் கண்டு உதயணன் மகிழ்ந்தான். அதன் பின்னர், மானனீகை என்பவளையும், விரிசிகை என்பவளையும் மணந்து கொண்டு வாழ்ந்தான். வாசவதத்தையின் மகன் நரவாகன தத்தன் காந்தருவ உலகத்தை வெற்றி கொண்டு அங்கு ஆட்சி புரிந்தான். இதன் பின்னர் உதயணன், பதுமாவதியின் மகன் கோமுகனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். இறுதியில் துறவு மேற்கொண்டான்.
***
உத்தவ
Uddhava (उद्धव).—கிருஷ்ண பரமாத்மாவின் நெருங்கிய நாப்பண்; யாதவ குலத்தில் உதித்த அவன் கிருஷ்ணருக்கு நண்பனாகவும் தூதனாகவும் செயல்பட்டான் . அவனை ஹரிதாசன் என்று பாகவத புராணம் புகழ்கிறது . துவாரகை மதுரா ஆகிய நகரங்களுக்கு இடையே சென்று திரும்புகையில் கோபியர்கள் கிருஷ்ணரை மீண்டும் மதுரா நகரத்துக்கு அழைத்து வருமாறு கெஞ்சினார்கள். ஒரு சாபத்தினால் யாதவ குலம் அழியப்போவதை மனதில் கொண்டு, கிருஷ்ணரிடம் சென்று, யாது செய்வதென்று வினவினான் ; அவர் பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்று தவம் இயற்றுவாயாக என்று ஆலோசனை வழங்கினார் .
உத்தவகீதை
இந்துமதத்திலுள்ள 64 கீதைகளில் இதுவும் போற்றப்படுகிறது ; உரையாடல் வடிவிலுள்ள உத்தவகீதையிலும் தத்துவ விஷயங்கள் இருக்கின்றன .உத்தவர் பற்றியும் நூல்கள் உள. அவை उद्धवदूत (உத்தவதூத), उद्धवसंदेश (உத்தவசந்தேச) எனப்படும்
***8****
உலூகUlūka (उलूक).—
ஆந்தை என்று பொருள் ; ஆங்கிலத்திலுள்ள அவ்ல் OWL என்ற சொல் ஸம்ஸ்க்ருத்திலிருந்து உதித்ததே ! ஆந்தை என்னும் பறவை மிகவும் புத்திசாலி என்பதால் லண்டனிலும் லநாதனிலும் கிரேக்க நாட்டிலும் பல பள்ளி கல்லூரிகளில் இதை சின்னத்தில் பொறிக்கின்றனர் ; தமிழில் பிசிர் ஆந்தையார் போன்ற பல புலவர்களின் பெயரில் ஆந்தை உள்ளதும் ஆராய்ச்சிக்குரியதே ; ரிக் வேதத்திலும் பாணினி சூத்திரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையுடைய சொல் ஆந்தை ; இந்திரனுக்கும் ஆந்தை என்ற பெயர் உண்டு
பழைய நூல்களில் முனிவர், மன்னர், நாகர், இடங்களின் பெயராகவும் கையாளப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் சகுனியின் மகனாகவும் பாண் டவர்களிடத்தில் துரியோதனனுப்பிய தூதுவனாகவும் இருந்தவன் பெயரும் உலூக என்பதே . யுத்தத்தில் அர்ஜுனன் அவனைத் தோற்கடித்தான்; சகாதேவன் உலூகனைக் கொன்றான்
ஆந்தை என்ற பொருளில் ஆயுர்வேத நூல்களில் இதன் மாமிசத்தை மருந்தாகப் பயன்படும் செய்திகள் உள்ளன ; ஸ்ம்ருதிகள் என்னும் இந்துமத சட்டப்புஸ்தகங்களில் இதன் மாமிசத்தை திவசம் என்னும் திதிகளில் பயன்படுத்தும் குறிப்புகளும் உள. பஞ்ச தந்தரக் கதையின் கடைசி கதை ஆந்தைகள்- காக்கைகள் போராட்டக் கதை ஆகும் ;இறுதியில் காக்கைகள் மகாநாடு கூட்டித் திட்டமிட்டு பகல் நேரத்தில் ஆந்தைகளின் கூடுகளுக்கு தீ வைத்து அவைகளை அழிக்கிறது ; இதை ஒரு முன்னுதாரணமாக மனதில் நினைத்து பாண்டவர்களின் கூடாரத்துக்கு அஸ்வத்தாமன் தீ வைத்து பாண்டவர்களில் இளையோர் அனைவரையும் அழிக்கிறான்.
***
உலூபி என்பவள் நாக இளவரசி-(उलूपी)
ஒரு நாள், அர்ஜுனன், தனது அன்றாடச் சடங்குகளைச் செய்ய கங்கைக்குள் இறங்கினான்.அப்போது காம தேவனால் உந்தப்பட்ட நாக மன்னனின் மகளான உலூபி, அர்ஜுனனை நீருக்கு அடியில் இழுத்துச் சென்றாள். நாக மன்னன் மகளைக் {உலூபியைக்} கண்டு அவளிடம் சிரித்துக் கொண்டே,(16) “ஓ அழகானவளே, உனது துடுக்குத் தனத்தால் என்ன காரியத்தைச் செய்தாய்? ஓ மருண்டவளே! இந்த அழகான பகுதி யாருக்குச் சொந்தமானது? நீ யார்? யாருடைய மகள்?” என்று கேட்டான்.”ஐராவதனின் குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகளே. எனது பெயர் உலூபி ஆகும்என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மன்றாடினாள் {உலூபியே}, நான் 12 வருட பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறேன் என்று சொல்லி மறுத்தான் . ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன். உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை நிறைவேற்றும் ” என்றாள்.அவனும் அவளுடன் இரவில் தங்கி அவளது விருப்பத்தை நிறைவேற்றினான் “நீரிலும், நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்” என்று வரம் கொடுத்தாள் உலூபி”. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான்.
பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.அர்ஜுனனுக்கும் சித்திராங்கதைக்கும் பிறந்தவனின் பெயர் பப்புருவாகனன். மஹாபாரத போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உலூபி உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் இறப்பதற்க் அர்ஜுனனும் ஒரு காரணம் பீஹ்மரின் சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அர்ஜுனனை உலூபி காப்பாற்றுகிறாள்.உலூபி ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று குரு குல மன்னர்கள் அனைவருக்கும் சேவை செய்கிறாள் பாண்டவர்கள் இமயமலை நோக்கி நடந்து உயிர்விடச் சென்ற போது உலூபி கங்கையில் மூழ்குகிறாள் . சித்ராங்கதை மணலூர் புரத்துக்குத் திரும்புகிறாள் இந்தக் கதை பாண்டவர்களையும் பாண்டியர்களையும் இணைக்கும் கதையாக உள்ளது.
***
உமா
பார்வதியின் பெயர்; சிவ பெருமானின் மனைவி; 2000 ஆண்டுப் பமையான சங்கத் தமிழ் இலக்கியத்தில் சம்ஸ்க்ருதத்தில் இறைவியின் பெயர் உள்ளது உண்மைதான்; ஏனைய லெட்சுமி, துர்கா, சரஸ்வதி லட்சுமியின் அக்காள் முதலியோர் எல்லோரும் தமிழ்ப்பெயர்களில் குறிப்பிடப்படுகின்றனர் உபநிஷத்துக்களிலும் வரும் பெயர் உமாதான்! உமா என்றால் காட்டில் தவம் செய்யப்போக்காதே என்று அவளுடைய அம்மா சொன்ன சொற்கள் ஆகும்
அப்போது அவளுடைய அம்மாவின் பெயர் மேனா; அப்பாவின் பெயர் இமவான் ; காளிதாசனின் குமார சம்பவம் என்னும் நூல் உண்மை அம்மையின் பெருமையை உலகரியச் செய்தது.
****
உபநிஷத் Upaniṣad (उपनिषद्).—
(उपनिषद्) அருகிலிருந்து ஞான விஷயங்களைக் கற்றல் அல்லது அறிதல் என்பது இந்தச் சொல்லின் பொருள்; வேத இலக்கியம் என்பது சம்ஹிதை பிராமணங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்ற நான்கு பகுதிகளை உடைத்து ; இவற்றில் ஆரண்யகங்கள் என்ற வனம்/ காடுகளில் ரிஷிகள் வாழ்ந்த வாழ்க்கையின் தொடர்ச்சியாகவே உபநிஷத்துக்கள் வருகிறது; ஜீவாத்மா என்னும் மனிதன் பரமாத்மா என்னும் இறைவனின் அம்சமே என்ற விஷயத்தைக் கூறும் இப்பகுதியை வேதாந்தம் என்பார்கள்; வவேதத்தின் அந்தம் — அதாவது வேதத்தின் சாரம்- முடிவு—இதுதான். 108 உபநிஷத்துக்கள் பட்டியல் இருந்தாலும் ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய பத்துதான் பழையவை, ஒரிஜினல்; ஏனையவை இமிடேஷன் கோல்ட் போன்றவை; பத்து முக்கிய — ஒரிஜினல்– உபநிஷத்துக்கள் பின்வருமாறு:
முக்கிய உபநிஷத் மந்திரங்கள் என்ற என்னுடைய ஆங்கில, தமிழ்க் கட்டுரைகளில் ஒரிஜினல் உபநிஷத் மந்திரங்களை அர்த்தத்தோடு கொடுத்துள்ளேன் .
1.ஐதரேய உபநிஷத் -ரிக்வேதம் சார்ந்தது
2.பிருஹதாரண்யக உபநிஷத் (யஜுர்வேத)
3.சாந்தோக்கிய உபநிஷத் (connected to the சாமவேத)
4. ஈஷா உபநிஷத் (also called ஈசாவாஸ்ய)
5.கத உபநிஷத்- கடோபநிஷத்
6. கேன உபநிஷத்
7.மாண்டூக்ய உபநிஷத்
8.முண்டக உபநிஷத்
9.ப்ரஸ்ன உபநிஷத்
10.தைத்திரீய உபநிஷத்
***
உபரிசர வசுUparicaravasu (उपरिचरवसु)
சேதி நாட்டினை ஆண்ட ஒரு மன்னன் உபரிசர வசு; அவனுக்கு இந்திரன், ஒரு விமானத்தையும் வாடாத தாமரை மாலையையும் கொடுத்தான் . அந்த மாலை அவனுக்கு, யாராலும் வெல்ல முடியாத கவசம் போன்றது . அவன் கிரிகா என்ற பெண்ணை மணந்தான் .சக்திமதி ஆற்றினைத் தடுத்த கோலாகல மலையை அவன் காலால் உடைத்த போது தோன்றிய பெண் கிரிகா; ஒரு நாள் கானகம் சென்றான் ;அவளுடன் இன்பமாக இருந்த நினைவுகள் வந்தபோது, விந்து வெளியேறியது ; அதை வீணடிக்க மனம் இல்லாமல் ஒரு பறவையிடம் இலையில் கொடுத்து கிரிஜாவுக்கு அனுப்பினான் . அது இன்னொரு பறவையுடன் சண்டையிட்டபொழுது அதை நழுவ விட்டது கங்கை ஆற்றில் விழுந்த அந்த விந்துவை ஒரு மீன் சாப்பிடவே மீனவப் பெண் மத்ஸ்யகந்தி பிறந்தாள். அவள் சத்யவதி என்னும் பெயரில் சந்தனுவை மணந்தாள். அவளுக்குப் பிறந்த ஐந்து பிள்ளைகளும் ஐந்து அரசர்களாகி புதிய வம்சங்களை உருவாக்கினார்கள் ; சத்யவதி- சந்தனு- பீஷ்மர் கதைகள் வேறு பதிவுகளில் உள்ளன.
TO BE CONTINUED………………
TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 110; இந்து மத கலைச்சொல் அகராதி-110, உதயணன் , உபரிசரவசு , உபநிஷத், உலூபி, உலோக, உமா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம பலனும் கடவுளின் கருணையும்!
ச. நாகராஜன்
ஶ்ரீ ஓம்கார்நாத் தேவ் அவர்களின் புத்தகம் ‘கேபர் ஜூலி’யிலிருந்து
ஒரு சம்பவம்.
‘ராம ராம’ என்ற நாமத்தை ஜெபித்தால் மோசமான ஒரு சம்பவம் கூட நல்லதாக ஆகிவிடும்.
ஒரு நாள் கேபா (வங்காளத்தில் இறைபக்தியினால் ஊக்கமூட்டப்பட்ட ஒருவருக்கான சொல்) தெய்வ பக்தியில் திளைந்திருந்த போது ஒரு வயதான பெண்மணி அழுதவாறே அவர் அருகில் வந்ததைக் கண்டார்.
அவள், “ஓ! என் மகனே! எங்கே போனாய் நீ? எனக்கு இப்போது யாருமே இல்லை. என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? யார் எனக்கு உணவளிப்பார்கள்? உனக்காக நான் எல்லாவற்றையும் இழந்தேன். இப்போது நான் பிச்சை எடுத்துத் தான் வாழ வேண்டும்” என்று கூறிக் கதறினாள்.
கேபா அந்தப் பெண்மணி தன் ஒரே மகனை இழந்து விட்டாள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர் உள்ளம் இரக்கத்தால் நிரம்பியது. ‘எப்படி இது அவளுக்கு நல்லதாக ஆக முடியும்?’ என்று எண்ணிய அவர் அந்தப் பெண்மணியை நோக்கி, “கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்காகவே இருக்கும்” என்றார்.
தாங்க முடியாத துக்கத்தை அனுபவிக்கும் போது இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண்மணி மௌனமாக கேபாவைப் பார்த்தாள்.
கேபா மௌனமாக உடகார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.
அவர் முன்னே ஒரு காட்சி விரிந்தது.
ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் அவர் பார்த்தார்.
“என்னிடமிருந்து வாங்கிய ஒவ்வொரு பைசாவையும் அதற்கான வட்டியுடன் சேர்த்துக் கொடு. இல்லையேல் பெரிய துரதிர்ஷ்டம் உனக்கு வந்து சேரும்” என்றான் அவன்.
அந்தப் பெண் சொன்னாள் :”எப்படி என்னால் தர முடியும்?என்னிடம் ஒன்றுமே இல்லை. பிச்சை எடுத்துத் தான் நான் வாழ்கிறேன். இந்தச் சமயத்தில் என்னால் உனக்கு எப்படி பணம் தர முடியும்?”
அதற்கு அவன் சொன்னான்: “அது பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குச் சேர வேண்டிய பணம் வரும் வரையில் நீ என்னிடமிருந்து தப்பிக்கவே முடியாது! ஒவ்வொரு பைசாவையும் வட்டியுடன் உன்னிடமிருந்து நான் கறப்பேன். என்னை நீ அழ வைத்தது போல நான் உன்னை அழ வைப்பேன்.”
“என்னிடம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது எப்படி என்னிடமிருந்து நீ உன் பணத்தை மீட்பாய்?” என்றாள் அந்தப் பெண்மணி.
அதற்கு அவன் கூறினான்: “எனது அடுத்த பிறவியில் நான் உன் மகனாகப் பிறப்பேன். நீ உன் ரத்தத்தால் அனைத்தையும் தியாகம் செய்து என்னை வளர்ப்பாய். உனது அனைத்துச் செல்வமும் இதில் போய் விடும். மொத்த பணமும் வட்டியுடன் தீரும் போது நான் என் உடலை விடுவேன். எனது பணத்திற்காக இப்போது நான் வருந்துவது போல என்னை இழந்ததற்காக நீ வருந்துவாய்”.
காட்சி இத்துடன் முடிந்தது.
‘ராம ராம’ கடன் மொத்தமும் கொடுத்தாகி விட்டது. கடவுள் எதைச் செய்தாலும் அது நல்லதற்காகவே தான் இருக்கும்” என்று கூவினார் கேபா.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி கேபாவின் காலில் விழுந்து அவரை நோக்கி, “பெரியவரே! கடன் கொடுத்தாகி விட்டதா? இதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டாள்.
“என் காலை விடு! நான் ஒரு வெறும் பக்தன் தான். நான் ஒரு காட்சியைக் கண்டேன். உனது மகன் கடன் கொடுத்தவன். நீ கடனாளி. அவன் உன்னிடம் கடனை வசூலிக்க வந்தான்.” என்றார் கேபா.
பிறகு தான் கண்ட காட்சியை விளக்கினார்.
“நீங்கள் சொல்வதே சரி. நான் கடனாளி தான். அவன் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தான். இப்போது நான் என்ன செய்வது?” என்றாள் அந்தப் பெண்மணி.
கேபா வானத்தை நோக்கிப் பார்த்தார், பின்னர் அந்தப் பெண்மணியிடம் கூறினார்: “இந்த பிரபஞ்சமே அவனுடையது தான். ராம ராம என்று ஜபி. அவனை அழை” என்றார்.
ராம ராம என்று ஜபிக்க ஆரம்பித்த அந்தப் பெண்மணி சாந்தியை அடைந்தாள். கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்குத் தான்; அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
கடவுளின் கருணையால் அவளது தீய கர்மம் தீர்க்கப்பட்டது!
*
நன்றி : கல்கத்தா வார இதழ் ட்ரூத் -தொகுதி 94 இதழ் 19 தேதி:21-8-2026
கிருஷ்ணன் பிறந்த நாளில் கிருஷ்ண பரமாத்மா செய்த அதிசயம் ; ஒன்பது நாளுக்குப் பின்னர் பூமிக்கு அடியிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டவர் ஹரே கிருஷ்ணா மந்திரம் சொல்லி உயிர் பிழைத்தார் ; நேபாள சுரங்க அதிசயம் !
‘Kept chanting Hare Krishna’: Nepal man rescued alive after being trapped in tunnel for 9 days
Sanjay Sah reportedly told security personnel that he had spent the last nine days trapped inside the tunnel, chanting the ‘Hare Krishna’ mantra.
Updated on: Sep 4, 2026, 17:37:27 IST
Two men were rescued alive from a tunnel at the Trishuli 3A hydropower project on Friday, nine days after a flash flood tore through Nepal, with one of the survivors saying he kept chanting the ‘Hare Krishna’ mantra, praying that rescuers would reach him.
The two men were identified as Kabir Maharjan, 45, a mechanical supervisor at the project, and Sanjay Sah, 30, a foreman, the public relations directorate of the Nepal Army said.
Maharjan was airlifted to the Nepal Army Hospital in Kathmandu. His condition is reported to be critical. Sah is receiving treatment at Trishuli Hospital in Nuwakot, Nepali ANepal Tunnel Collapse: Sanjay Sah Rescued on Janmashtami After 9 Days, Says Hare Krishna Mahamantra Kept Him Alive A remarkable rescue in Nepal has drawn attention after worker Sanjay Sah was pulled a…
வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா மூன்றாவது பதிப்பு ஆர். கணபதி அண்டு கம்பெனி, பிரம்பூர், சென்னை. 1919 , 3rd edition All Rights Reserved.) (விலை அணா 5. P.R. Rama Iyar and Co, Printers, Madras ————–
PROJECT MADURAI WEBSITE HAS THE FULL BOOK WITH NOTES AND 100 STORIES.
வெற்றிவேற்கை
1
அதி வீர ராம பாண்டியன் யார் ?
2
அவர் எத்தனை நூல்களை எழுதினார் ?
3
‘வெற்றிவேற்கை’ நூலில் அவர் பெண்களுக்கு கூறும் புத்திமதிகள் என்ன ?
4
66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து
அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் என்ன? நூலாசிரியர் நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?
5
உபநிஷத்தில் ஆலமரத்தின் விதையை வைத்து போதிக்கிறார் ஒரு ரிஷி; பஞ்ச தந்திரக் கதையில் ஆலமரத்தின் அழகான வருணனை வருகிறது; நமது புலவர் அதி வீர ராம பாண்டியன் என்ன சொல்கிறார் ?
6
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்- என்பது சம்ஸ்க்ருதத்தில் மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கியத்திலும் ஆசார்ய தேவோ பவ என்ற வேத வாக்கியத்திலும் வருகிறது . ஆனால் எழுத்து அறிவித்தவன் சிவன் என்ற புதிய விளக்கம் தருகிறார் 1919 ஆம்1919 ஆண்டு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா அது என்ன விளக்கம் ?
7
பயணிகளுக்கு அதி வீர ராம பாண்டியன் சொல்லும் அறிவுரைகள் என்ன ?
8
வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே! மெய்போ லும்மே!- இதற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?
9
தறுகண் யானை தான் பெரி தாயினும்
சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு என்ன பொருள் ?
10
பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு என்ன பொருள் ?
*********************************
விடைகள்
1.இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 (1564–1604 ce) என்று தெரியவருகிறது. கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம்.
***
2.’வெற்றிவேற்கை’, புத்தகத்துக்கு ‘நறுந்தொகை’ என்ற பெயருமு ண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி. அதிவீரராம பாண்டியன் செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம். சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர்.
***
3.பெண்களுக்கு கூறும் புத்திமதிகள்
12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.
பெண்டிர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாவது ஏன், எதிர் பேசாது – (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் – அடங்கியிருத்தலாம்.
14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.
குலமகட்கு – நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு – அழகாவது, தன் – தன்னுடைய, கொழுநனை – நாயகனை, பேணுதல் – காப்பாற்றுதலாம்.
23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.
கொண்டோர் எல்லாம் – (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் – நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.
****
4. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து
அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் – நூலாசிரியர் சொல்லும் கதை :
உள் முதல் – தன்னிடத்துள்ள முதலால், பண்டம் – பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வர்த்தகம் செய்து, அதன் பயன் – அதனால் வரும் லாபத்தை, உண்ணா – அநுபவியாத, வணிகனும் – வைசியனும், பதர்-பதராவான். எ – அசை .
மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு ‘ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்’ என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ‘ என்று கேட்டார்.
அவன் ‘ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!’ என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் ‘வா! வா!’ என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!’ என்கிறீர்கள். நான் ‘வாருங்கள்! வேலைக்குப் போகலாம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது’ என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.
— கதாவாசகம்.
***
5. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.
தெள்ளிய – தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் – ஆலமரத்தின், சிறுபழத்து – சிறிய பழத்தினுடைய, ஒருவிதை – ஒருவிதையானது, தெள் – தெளிந்த, நீர் – நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனின், சினையினும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே – சிறியதே. ஆயினும் – ஆனாலும், அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அழகிய, தேர் – தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாள்களுமாகிய, பெரும் – பெரிய, படையொடு – சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் – நிழலைத் தரும். ஏ- அசை.
நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ‘ இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது’ என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.
— பாகவதம்.
*****
6.எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
a. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் – கடவுளுக்குச் சமானமாக, ஆகும் – (வணங்கத்தக்கவன்) ஆவான்.
b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.
முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.
அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?’ என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!’ என்று திருவாய்மலர்ந்து,
அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.
— திருவிளையாடற் புராணம்.
———-
எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.
b. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவார்.
2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.
வழியே – (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக – செல்லக் கடவன்; வழியே – (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக – (துறவற வழியில்) திரும்பக்கடவன். இன்னுமொரு பொருள் : போன வழியை நினைவு வைத்துக்கொண்டு அதே வழியில் திரும்புக. பலரும் சுற்றுலா செல்கையில் வழித்தவருவது இயற்கை.
***
8. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்
சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.
பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்
மெய்போ லும்மே! மெய்போ லும்மே!
வாய் – வாயானது, பறை ஆகவும் – தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா – நாவானது, கடிப்பு ஆகவும் – அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது – கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை – ஒரு காரியத்தை, போற்றி – ஆதரவுடன், கேண்மின் – கேளுங்கள். பொய் உடை – பொய் பேசுதலையுடைய, ஒருவன் – ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் – (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் – மெய்யேபோலத் தோன்றும். ஏ – இரண்டும் அசைகள்.
71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.
சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்’ என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.
— பாகவதம்.
***
9. தறுகண் யானை தான் பெரி தாயினும்
சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு பொருள்:
தறுகண் – அஞ்சாமையை உடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் – சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு – மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் – பயப்படும்.
முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.
— இராமாயணம்.
***
10. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு பொருள்:
பெற்றமும் – பசுக்களும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த – மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் – அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி – பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் – பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து – நிறைந்து, நெல் பொலி – நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் – பெரிய பட்டணம், ஆயினும் – ஆகும், ஆனாலும் – ஆகும்.
நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.– சிவபுராணம்.
–subham—
Tags- அதிவீர ராம பாண்டியன் நூல்கள், 10 கேள்விகள், வெற்றிவேற்கை, கதைகள் , சுப்பிரமணிய சர்மா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Points to be noted:
Adi Sankara, the greatest philosopher of India, and Tiru Valluvar, the greatest poet of Tamil Nadu, says lying is OK provided it results in something good (See Kural 292). All of us know how Lord Krishna made Yudhishthira to tell a lie in the middle of the war (Asvathama Dead Episode). In Tamil we have a proverb saying You can do a marriage . even by telling 1000 lies! Someone getting married id a good thing. So, their general policy is Ends justify means.
This chapter echoes Subramanya Bharati’s saying that one’s words become bright like light when there is truth inside.
In Kural 295 Vallluvar again repeats Bhagavad Gita’s DHAANAM and TAVAM which shows he hia memorised Bhagavad Gita; earlier we saw this in chapter two. Valluvar likes Sanskrit words.
Throughout Vedas and Upanishads, we see Sathyam/Truthis praised as God.
Kural 298 shows Bathing done by Hindus every day, unlike other communities
Mano Vaak, Kaayam is a cliché in Sanskrit scriptures. But Tamil wonder is that we have three separate words for them : UNMAI (mano),VAAIMAI( vaak)and MEIMAI (kaaya)
One must be truthful in WORD ,THOUGHT and DEED is insisted throughout Sanskrit scriptures, Tamil has separate words!
***
Shankara’s View
Adi Shankara in the Prasna Uttara Ratna Malika (Gem Garland of Questions and Answers) hymn says There are 67 verses in question and answer format. In the 46th verse he puts one question ‘Who is not to be trusted?’ The answer is ‘one who as a rule utters lies’. In the next verse (47), one of the questions is ‘on what occasions even a lie is sinless?’ ‘That which is uttered for the sake of protecting righteousness (Dharma)’. One should not harm anyone while telling a truth and one can tell a lie if it can bring some good to someone.
Plato’s View
SM Diaz in his commentary on Tirukkural adds: “The eminent Greek philosopher Plato, of a date prior to Thiruvalluvar , has discussed in his Republic, the concept of the Noble Lie, which statesmen may use under certain circumstances as an instrument of state-craft or education. G.C.Field who discusses this matter in his book entitled The Philosophy of Plato quotes as example, Mr Churchill’s ‘ terminological inexactitudes’, used during World War II, as a means of deceiving the enemy, in the national interest.”
“ In the Mahabharata, Dharmaputra’s true statement, drowned in noise and made to appear false, in order to produce a certain good result, was also considered to come under this category. In Tamil Nadu the proverb that Even a thousand lies would be worthwhile to bring about a marriage, is based on the same principle of Plato’s Noble Lie.”
Aswaththama Hatha: Narova Kunjarova: (Aswaththama dead; whether man or elephant) Krishna had arranged to have an elephant named Aswatthma sacrificed in the battle. Yudhistira confirmed that Aswatthma had been killed adding in a lower tone Aswaththama ‘the elephant’ or man which had been killed. This news shattered Aswatthma ‘s father Drona who threw down his arms in despair. Unarmed Drona was killed by Dhristadymna . Story of Kausika in the Mahabharata also shows this type of approach
***
Hindu children are taught the story of Harishchandra from the Puranas; Mahatma Gandhi himself said that this story made the biggest impact in his life.
His mother used to tell him bed side stories.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
2.S M Diaz, I G of Police- SMD, Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS, Year 1986
6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
7.Tamil Original
****
Project Madurai website has all the Tamil books.
Part 48
Chapter 30. வாய்மை – Veracity
***
1.3.6 Veracity
291.What is truthfulness? It is the utterance of such words that smack not of even the slightest taint of evil-.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933
***
291.If one’s speech does not wrong any living creature,
While being factually correct, that is truthfulness-.S M Diaz, I G of Police – SMD, Year 2000
***
291 You ask, in lips of men what ‘truth’ may be; ‘Tis speech from every taint of evil free. Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).- Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
291.If “What is truth”? the question be, It is to speak out evil-free. Suddhananda Bharathiyar- SB
*** 291.Speech which causes no harm whatsoever to anyone is what is called truth — EVS Publishers, Singapore- EVS, Year 1986
***
291.What is it that men truthfulness do call?
It is speech that is free from any taint of evil fruit- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931
*** 291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்
XXXXXXXXXXXXXXXXXX
292.Even falsehood carries with it’s the very stamp and ring of truth, if unmixed goo springs from it-– ANM+2
***
Even untruth might attain the value of truth,
If it is productive of unmixed good, without the least blemish-– SMD
***
292 Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford. Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault. – GUP
*** 292.E’en falsehood may for truth suffice, When good it brings removing vice. – SB
***
292.If it will produce, unmixed good even falsehood may be considered truth- EVS
***
292.Even untruth may in truth’s own nature share,
If faultless good it can produce-HAP
***
292. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்.
XXXXXXXXXXXXXXXXXXXXX
293.speak not a word which you know in the innermost core of your being as false, lest your own conscience should smite you-– ANM+2
***
293.Do not utter falsehood about what your conscience knows to b true;
For later your own conscience will continue to hurt you-– SMD
***
293 Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one’s spirit glows. Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt). – GUP
*** 293.Let not a man knowingly lie; Conscience will scorch and make him sigh. – SB
***
293.If a man should utter a lie consciously, his own mind would torture him for the lie uttered – EVS
***
293.Tell not a lie, even though your heart alone does know;
294.behold the man who is true to the very marrow of his bones; he lives enshrined in the hearts of all-– ANM+2
***
294.If he lives true to his inner mind,
He lives in the hearts of all mankind-– SMD
***
294 True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind. He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men. – GUP
***
294.He lives in loving hearts of all Who serves the Truth serene in soul. – SB
***
294.If a man could conduct himself true to his own self he would be in the heart of all in the world –– EVS
***
294.Who in his soul doth walk from falsehood free,
Will live for ever in the souls of noble-minded men –HAP
295.More glorious than a benefactor and an ascetic is a sincere heart from whose depths words of truth gush out-– ANM+2
***
295.if one is truthful in thought and word,
It is better than doing penance and charity-– SMD
***
295 Greater is he who speaks the truth with full consenting mind. Than men whose lives have penitence and charity combined. He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities. – GUP *** 295.To speak the truth from heart sincere Is more than giving and living austere. – SB
***
295.One who is true in thought and word is greater even those who perform Tapas (penance) and do charity — – EVS
*** 295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
XXXXXXXXXXXXXXXXXXXXXX
296.Who speaketh forth the truth with all his heart,
Is chief among those who do both alms and tapas too-HAP
***
296.Tere is no other renown greater than that which comes of truthfulness; for it easily unlocks the treasures of every other virtue-– ANM+2
***
296.All the world esteems a truthful man, for whom
Other virtues come without any effort-– SMD
***
296 No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneously. There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue. – GUP
***
296.Not to lie brings all the praise All virtues from Truth arise. – SB
*** 296.There is no renown equal to the reputation of truthfulness. It is capable of bringing all the other virtues in its train besides averting suffering hereafter– EVS –
***
296. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமும் தரும்.
XXXXXXXXXXXXXXXXXXX
297.every other penance is superfluous to him that dwells in the light of truth-– ANM+2
***
297.If one speaks the truth and only truth,
He need not seek any other virtue-– SMD
***
297 If all your life be utter truth, the truth alone, ‘Tis well, though other virtuous acts be left undone. If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue. – GUP
***
297.Lie not lie not. Naught else you need All virtues are in Truth indeed. – SB
*** 297.If one could safeguard oneself against flinching from truth one need practise no other virtue — – EVS
***
297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX 298.Water cleanses the body; truth cleanses the soul-– ANM+2
***
298.Water makes the external cleanliness;
Truthfulness is the detergent of the heart-– SMD
***
298 Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow. Purity of body is produced by water and purity of mind by truthfulness. – GUP
***
298.Water makes you pure outward Truth renders you pure inward. – SB
*** 298.Outward purity may be secured by the use of water. Inward purity of the heart comes from truthfulness.- – EVS ***
298.An outward purity by water’s aid is caused;
But inward purity by truthfulness is shown-HAP
***
298. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
299.All the lights that shine in the realm of nature are not lights in the eyes of the sages; for to them, the lamp of truth, which chases away the hidden darkness of their soul, is the only light-– ANM+2
***
299.Lamps do not give the light that holy men desire;
It is the light of Truth that illuminates their path –– SMD
***
299 Every lamp is not a lamp in wise men’s sight; That’s the lamp with truth’s pure radiance bright. All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise. – GUP
*** 299.All lights are not lights for the wise; Truth light is light bright like sun-light – SB
*** 299.All lamps are of no avail. The light of truth is the only is the only lamp which the wise cherish- – EVS
***
299.Not every kind of lamp is really a Light.
The lamp of Truth alone to wise men is Light- HAP
***
299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.
XXXXXXXXXXXXXXXXXXXXXXX
300.In my all-ceaseless wanderings in the world of thought and imagination, I have found nothing worthier than truthfulness-– ANM+2
***
300.Of all things confirmed in our experience,
There is nothing more precious than truth –– SMD
***
300 Of all good things we’ve scanned with studious care, There’s nought that can with truthfulness compare. Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness. – GUP
***
300.Of all the things we here have seen Nothing surpasses Truth serene ! – SB
***
300.In all true scriptures we have known, nothing is praised so highly as truthfulness– – EVS
***
300.Of all true things that we have ever known
Not one with truthfulness can ever compare- HAP
***
300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.