முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள் (Post No.16,027)

 Written by London Swaminathan

Post No. 16,027

Date uploaded in London – 28 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மிகப் புகழ்பெற்ற ஆற்று வெள்ளப் பாடல் முக்கூடற் பள்ளு நூலில் உள்ளது; அது என்ன பாடல்?

 2

முக்கூடற்பள்ளு நூலை இயற்றியவர் யார் ? அவர் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் ?

3

முக்கூடல் என்றால் என்ன ?

4

பள்ளு என்ற பெயர் எதைக் குறிக்கிறது?

5

இந்த நூலில் முக்கிய கதாபாத்திரங்கள் யார் ?


6

பிள்ளையாருக்குப் பதிலாக திருமால் கடவுள் வாழ்த்தோடு துவங்கும் இந்நூலில் பெருமாளை ஆதரிக்கும் பாட்டு எது ?

7

முக்கூடற்பள்ளு  நூலில் ஒரு  பாடலில் என்னென்ன நெல்வகைகள் குறிப்பிடப்படுகின்றன ?

8

முக்கூடற்பள்ளு காட்டும் மாடு வகைகளின் பெயர்கள்?

9

முக்கூடற்பள்ளு  நூலில் ஒரு பாடலில் என்னென்ன உழவுக்  கருவி வகைகள் குறிப்பிடப்படுகின்றன ?

10

ஒரு பாடலில் திருமாலின் அடியார்கள் (ஆழ்வார்கள்) பத்துப் பேர் என்று கூறியதற்கு உரைகாரர் சொல்லும் விளக்கம் என்ன ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ANSWERS

1.ஆற்று வெள்ளம் நாளை வரத்

தோற்று தேகுறி- மலை

      யாள மின்னல் ஈழமின்னல்

      சூழமின்னுதே

நேற்று மின்றுங் கொம்புசுற்றிக்

காற்ற டிக்குதே-கேணி

      நீர்ப்படு சொறித்த வளை

      கூப்பிடு குதே

சேற்று நண்டு சேற்றில்வளை

ஏற்றடைக்கு தே-மழை

      தேடியொரு கோடி வானம்

      பாடி யாடுதே

**

2. என்னயினாப் புலவர்/ நயினார் புலவர் என்பவர் இயற்றினார் ??? அவரைப்பற்றி வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை . இது 17 ஆம் நூற்றாண்டு நூல். 

**

3.மூன்று நதிகள் கூடும் இடம் புனிதமான இடம்; கங்கா யமுனா சரஸ்வதி கூடும் திரிவேணி சங்கம் உலகலப்பு கழ்பெற்ற இடம். இதே போல பல முக்கூடல்கள் உள்ளன . இந்தப் பள்ளு நூலில் வரும் முக்கூடல் என்பது திருநெல்வேலி வடகிழக்கில் தண்பொருநை (தாமிரபரணி), சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடமாகும்.

**

4.பள்ளர்கள் என்பவர்கள் வயல்வெளிகளில் பயிர் தொழில் செய்யும் உழவர்கள் ஆவார்கள். அவர்களின் வாழ்க்கையை  எடுத்துக்கூறும் இலக்கியமாக பள்ளு இலக்கியங்கள் காணப்படுகின்றன. பள்ளு இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கது முக்கூடற் பள்ளு ஆகும். இது சிற்றிலக்கியங்களில் ஒன்று ஆகும்.

**

5.பள்ளன் மற்றும் அவனுடைய இரண்டு மனைவிகள் — மூத்த இளைய பள்ளிகள்

**

6.முக்கூடல் அழகர் திருவடிகளைக் கருதாத மனத்தை உடையோரும் உள்ளனர். அவர்களின் மனத்தைத் தரிசு நிலம் என்று எண்ணி, கொழுப் பாய்ச்சி உழுபவன் பள்ளன் ஆவான். சுருதிகள் போற்றும் எட்டு எழுத்துகள் (ஓம் நமோ நாராயணாய) வைணவத்தில் முதன்மை பெற்றவை. இந்த எழுத்துகளைப் பெரிய நம்பியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாத துட்டர்களின் காதுகளைப் பாம்புப் புற்றுகள் என்று கருதி வெட்டி எறிபவன் பள்ளன். பெருமானுடைய நூற்று எட்டுத் திருப்பதிகளையும் வலம் செய்து வணங்காதவர் கால்களை வடத்தால் பிணித்து ஏர்க்காலில் சேர்த்துக் கட்டுபவன் பள்ளன். திருவாய்மொழிப் பாசுரங்களைக் கல்லாதவர்களை இருகால் மாடுகளாக ஆக்கி ஏரிலே பூட்டித் ‘தீத்தீ’ என்று கோலால் அடித்து ஓட்டுபவன் பள்ளன். இவ்வாறாகப் பள்ளனின் பெருமை கூறப்பட்டுள்ளது. இதனைப் பின்வரும் பாடல் விளக்கக் காணலாம்:

ஒருபோதும் அழகர் தாளைக்

கருதார் மனத்தை வன்பால்

உழப் பார்க்கும் தரிசுஎன்று

கொழுப் பாய்ச்சுவேன்

சுருதி எண்எழுத்து உண்மைப்

பெரிய நம்பியைக் கேளாத்

துட்டர் செவி புற்று எனவே

கொட்டால் வெட்டுவேன்

பெருமாள் பதிநூற்று எட்டும்

மருவி வலம் செய்யார்தம்

பேய்க்காலை வடம் பூட்டி

ஏர்க்கால் சேர்ப்பேன்

திருவாய் மொழிகல்லாரை

இருகால் மாடுகள் ஆக்கித்

தீத்தீ என்று உழக்கோலால்

சாத்துவேன் ஆண்டே

**

7.முக்கூடற்பள்ளு காட்டும் நெல் வகைகள்

நூலில் (பாடல் 108) குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நெல் வகைகளின் பெயர்கள்:

சித்திரக்காலி

வாலான்

சிறைமீட்டான்

மணல்வாரி

செஞ்சம்பா

கருஞ்சூரை

சீரகச் சம்பா

முத்துவிளங்கி

மலைமுண்டன்

பொற்பாளை

நெடுமூக்கன்

அரிக்கிராவி

மூங்கில் சம்பா

கத்தூரிவாணன்

காடைக் கழுத்தன்

இரங்கல் மீட்டான்

கல்லுண்டை

பூம்பாளை

பாற்கடுக்கன்

வெள்ளை

புத்தன்

கருங்குறுவை

புனுகுச் சம்பா

**

8.மாடு வகைகளின் பெயர்கள்

குடைக்கொம்பன், குத்துக்குளம்பன், கூடுகொம்பன், மயிலை, மட்டைக்கொம்பன், கருப்பன், மஞ்சள்வாலன், வெள்ளைக்காளை, குடைச்செவியன், படைப்புப்பிடுங்கி.

***

9.உழவுக் கருவிகளின் வகைகள்

  • மேழி மற்றும் வளை மேழி: நிலத்தை ஆழமாக உழப் பயன்படும் ஏரின் முக்கிய அமைப்பு.
  • கலப்பை: பூமிக்கு அடியில் உள்ள மண்ணை மேல்புறமாகப் புரட்டப் பயன்படும் முதன்மைக் கருவி.
  • நுகம்: காளையின் கழுத்தில் மாட்டி ஏருடன் இணைக்கப் பயன்படும் மரத்தாலான கட்டமைப்பு.
  • கொழு: கலப்பையின் அடியில் மாட்டப்படும் கூர்மையான இரும்புப் பகுதி.
  • பரம்பு: உழப்பட்ட மண்ணைப் சமப்படுத்தப் பயன்படும் பலகைக் கருவி.
  • ஏர்க்கால்: ஏரின் நீளமான மரப்பகுதி.

**

10.பன்னிரு ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரும் ஆண்டாளும் விடப்பட்டனர் ;.மதுர கவி என்பவர் நம்மாழ்வாரின் சீடர்தான் என்பதாலும் ஆண்டாள் பெண் என்பதாலும் குறிப்பிடப்படவில்லை.

–Subham—

Tags– உழவுக் கருவிகள், மாடு வககள், முக்கூடற்பள்ளு, நெல் வகைகள்ஆற்று வெள்ளம் நாளை வரத்,முக்கூடற் பள்ளு பற்றி 10 கேள்விகள்

Tamil Wars and Battle Fields; Purananuru wonders-44 (Post No.16,026)

 Written by London Swaminathan

Post No. 16,026

Date uploaded in London – 28 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Wars  and Battle Fields;Purananuru wonders-44, Tamil Encyclopedia-84, One Thousand Interesting Facts -Part 84

Item 659

Battle of Venni

A place near Thanjavur, now known as Kovilvenni is the place where a battle  took place between Chozan Karikalan and 11 Velirs, probably his kinsmen and neighbours. Period: BCE

Velirs were Chieftans controlling small areas.

***

Item 660

Second Battle of Venni

Between the Chera king Peruncheral Adan and Karikal Chozan . as the Chera king was wounded in the back , he starved unto death. It is a Hindu custom. If the king is dead, war is finished; if the king is wounded on the back, it was also considered defeat. Bhagavad Gita and Sangam literature say that those who die on the battle fields get direct entry into swarga/heaven. Visa free, ticket less flight to heaven.

***

Item 661

Third Battle of Venni

It was between Karikal Chozan and Pandya king where Karikalan defeated two kings.

***

Item 662

Battle of Tirupporpuram

Chozan Peruvirarkilli and Cheran Kudakko Neduncheral adan fought at Tirupporpuram. Both died in the battlefield.

***

Item 663

Battle of Kurapalli

This place is called Thiruvidaikazi now.  Chera king  Kalankai  Kanni  Nedumudicheral fought with  Choza king  Perum Tirumavalavan. Choza king was defeated.

***

Item 664

Battle of Mohur

It happened between Cheran Senguttuvan and  Palaiyan/ pazaiyan, the  Chief of  Mohur, where Pazaiyan was defeated.

***

 Item 665

Battle of Gangai

Cheran Senguttuvan invaded Northern India and fought with Kongu kings of the north who were aided by the Kalingas (of Orissa) and other kings in the north. Cheran was victorious.

***

Item 666

Battle of Avur

The war was between two Choza Princes, viz., Mavalattan and Nedumkilli. And in the battle Nedumkilli was defeated.

***

Item 667

Battle of Kudar Parantalai

Between the Pandya king Pazaiyan Maran and the Choza Killivalavan, where the Choza was defeated.

***

Item 668

Battle of Talaiyalankanam

This is one of the famous battles of Sangam Age. This place is in the Nannilam Taluka of old Thanjavur district. Pandya Neduncheziyan fought with the allied forces of Choza, Titiyan, Ezini, and Erumaiyuran where the Pandya was victorious.

***

Item 669

Battle of Tirukkoliyur

Choza Killivalavan fought with Malaiyaman Kari where Malaiyaman was defeated. This place is in South Arcot District.

***

Item 670

Battle of Kumamurram

Located in Cheranadu (Kerala). Between  Choza Killivalavan and the combined forces of Chera and Pandya, where Killivalavan was killed.

***

Item 671

Battle of Tagadur

Modern Dharmapuri was called Tagadur. Chera king Peruncheral Irumporai and Kari on one side and Atiyaman of Tagadur, Ori, the Pandya and the Choza on the other, where the Chera was victorious.

***

Item 672

Battle of Kanappereyil

Pandya Ukkiraperu vazuthi and Venkai Marban , the chief of Kanappereyil fought and the Pandya was victorious.

***

Item 673

Battle of Kazumalam

It happened between the Choza king Senganan and the Chera king Kanaikkal Irumporai, where the Chera was defeated. The Chera king was imprisoned in the port of Kudavayil. Here the Chera king committed suicide on account of the delay in supply of drinking water to  him.

(These are some of the wars of Sangam Age covering a period of five hundred years from First Century BCE)

***

Item 674

Imayavrampan Neduncheralathan

One who had Himalayas as his Norther border.

He defeated Aryan Kings and Yavana (Roman) pirates. He caught the Yavanas and tied their hands behind and poured oil on their head. Hindu kings used to punish the kings by shaving of hair in their head and pour oil on it. After the Yavanas/Roman gave him diamonds and gold they were released. According to Pathiruppattu, a Sangam book, he ruled 58 years.

***

Item 675

Pal Yanai Sekezu Kuttuvan

Sent Brahmin Couple to Swarga/heaven

Brother of Imyavarampan (see above).

He demolished Agappa Aran (rampart and moat of a Fort)

He worshipped Durga in Ayirai Hills.

When Vedic couples asked him to send them to heaven in human bodies, as they instructed did ten Yagas; the couple disappeared at the time of tenth Yaga (Fire Ceremony) according to intro of Pathitruppattu book. Brahmin poet Palaikkauthamanar (Gowthama) sang in praise of him. He ruled for 25 years.

He went to forest for Vanaprastha stage with Nedum Bharatayanar.

Dhritrashtra, Kunti and Gandhari also went like this and burnt themselves in a forest fire. All the three oldies joined hands and welcomed forest fire to burn them alive according to Mahabharata.

***

Item 676

Kalankai Kanni Narmudi Cheral

Son of Neduncheralatan ( nedum cheral adan)

Ruled for 25 years.he defeated Chieftain Nannan in Katampin Peruvayil.

He captured Poozi country (part of Pandya area). He defeated Maravas and assumed the title Vaanavarampan (Sky is the limit)

Kapya Gotra Brahmin poet Kappiyanar sang in praise of him

***

Item 677 Kannaki Statue Inauguration

Cheran Senguttuvan, who installed Kannaki Statue. He went all the way to Holy Himalayas to bring stone and bathed it in Holy Ganga River before sculpting Kannaki figure. On his way he defeated two unknown chieftains Kanaka and Vijaya. Made them to carry the stone on their head. They were released on the consecration day. Sri Lanka King Gajabahu participated in 135 CE in the Installation ceremony.

***

Item 678

Cheran Senguttuvan demolished Viyalur town of Nanan.

He captured Kodugur; defeated Mahur Pazaiyan. Defeated nine chieftains in Choza country He enthroned his brother in law Valavan Killi in the choza country;

He ruled fro 55 years. He had a powerful navy and controlled the Arabian sea.

To be continued……………………

Tags- Tamil Wars  and Battle Fields;Purananuru wonders-44, Tamil Encyclopedia-84, One Thousand Interesting Facts -Part 84, ITEM 678

தவறுகளை வாய்ப்புகளாக மாற்றும் கலை: மேதைகளின் பொன்மொழி ரகசியங்கள் (Post.16,025)

CARL SAGAN

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,025

Date uploaded in London – 28 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-7-26 kalkionline இதழில் வெளியான கட்டுரை!

தவறுகளை வாய்ப்புகளாக மாற்றும் கலை: மேதைகளின் பொன்மொழி ரகசியங்கள்!

ச. நாகராஜன்

         Einstein          

மிக பிரமாதமாக பெரிய வேலையைச் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் செய்யும் வேலையை நேசிக்க வேண்டும். – ஸ்டீவ் ஜாப்ஸ்

ஒவ்வொரு கஷ்டத்தின் நடுவிலும் வாய்ப்புகள் இருக்கின்றன – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அரிஸ்டாடில் சொன்னார்: உன்னை உணர்வது தான் பேரறிவின் முதல் படி.

பேரறிவை வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்த வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும். காலம் வென்ற பொன்மொழிகளைப் படித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

சாக்ரடீஸ் கூறினார்: ‘ஆச்சரியப்படுவது தான் பேரறிவின் முதல் படி’ என்று.  ஆர்வம் உந்தும் போது கற்பனை கொடி கட்டிப் பறக்கிறது. புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. புதிய வழிகள் புலப்படுகின்றன. அவை நம்மை சாதாரண மனிதன் என்ற நிலையிலிருந்து துடிப்பான திறம்பட்ட மனிதன் என்ற நிலைக்கு உயர்த்துகிறது. படைப்பாற்றல் திறன் உள்ளவர்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் கேள்விகளை எழுப்புகின்றனர்/

உலகில் நாம் காணும் தலைவர்களும். வெற்றி வீர்ர்களும், திறன் உடையவர்களும் நிறைய நல்ல புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். உங்கள் பரிமாணத்தை வானளவு உயர்த்த நல்ல புத்தகங்கள் வழி காட்டுகின்றன. வெவ்வேறு விதமான பார்வைகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. உங்களது எழுத்துத் திறன், எதையும் ஆராயும் மனப்பான்மை, சாதாரண சிந்தனா முறையிலிருந்து விலகி புதிய பார்வையில் சிந்திப்பது, எப்போதும் மனதளவில் வெளிப்படையாகவும், துடிப்புடனும் இருப்பது ஆகிய அனைத்தும் நல்ல புத்தகங்கள் தரும் சில நற்பண்புகளாகும்.

நல்ல சிந்தனையாளர்களுடன் பழகி அவர்களுடன் சிறிது நேரம் பேசினாலும் போதும், நம் வாழ்க்கையின் திசையே வெற்றியை நோக்கிச் செல்லும். நேருக்கு நேர் பேசுவது, குழுவாக அமர்ந்து விவாதங்களில் ஈடுபடுவது, தெரியாத அன்னியர்களிடம் சிறிது நேரம் பேசி அவர்களின் கண்ணோட்டத்தை அறிவது ஆகிய இவையெல்லாம் அறிவைப் பெறுவதற்கான வழிகளாகும். பிரான்ஸிஸ் பேகன், ‘புத்திசாலியான ஒருவன் அவன் காண்பதை விட அதிக வாய்ப்புகளை உருவாக்குவான்’ என்று கூறுகிறார்.

வாழ்க்கையின் அனுபவங்கள் மதிப்பு மிக்கவை. அவை நமக்குப் பல தெரியாத விஷயங்களை போதிக்கின்றன. நமது செயல்களைப் பற்றியும் அவை மற்றவர் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் பற்றி நாம் சிறிது சிந்திக்க வேண்டும். வாழ்க்கையைப் பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க இந்த அனுபவங்களே வழி வகுக்கும். இன்று என்ன நடந்தது, ஏன் நடந்தது என்று அன்றாடம் ஒரு பத்து நிமிடம் யோசித்தாலேயே போதும், நாளை தவறானவற்றைத் தவிர்க்கவும், நல்லனவற்றை மேம்படுத்தவும் அந்த சிந்தனை வழி வகுக்கும்.

ஓவியரான ஹெலன் ஃப்ராங்க் எந்தேலர் கூறுகிறார்: – “தவறுகளும் துரதிர்ஷ்டமும் கூட நாம் எடுக்க வேண்டிய அடுத்த படிக்கான ஆதார விஷயங்களாகும்.”

நீங்கள் உங்கள் விபத்துக்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிதல் அவசியம்.

பிரபல எழுத்தாளரும் அறிஞருமான சி.எஸ். லூயிஸ் கூறுவது சிந்தனைக்குரியது. அவர் கூறுகிறார்: “நீங்கள் கொஞ்சம் உஷ்ணத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தீயின் அருகே நிற்க வேண்டும். கொஞ்சம் நனைந்திருக்க விரும்பினால் நீங்கள் ஷவரின் கீழே இருக்க வேண்டும். அதே போல நீங்கள் சந்தோஷம், அதிகாரம், சமாதானம், நீடித்த வாழ்வு ஆகியவற்றை விரும்பினால் அவற்றிற்கு அருகே நிற்க வேண்டும்.”

பொருள் பொதிந்த இந்த பொன்மொழியை மனதில் கொண்டால் யாரை எப்போது அணுக வேண்டும் என்பதை நிச்சயமாக உணர்ந்து கொள்ளலாம்.

பிரபல விஞ்ஞானியும் ஏராளமான புத்தகங்களை எழுதியதோடு, அமெரிக்க தொலைக்காட்சியில் காஸ்மாஸ் தொடர் மூலம் ஒரு பெரும் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் கார்ல் சகன்! அவர் ஒரு வானியல் விஞ்ஞானி எந்ன்பதால் அவரது பார்வை மற்ற சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுதிய அறிஞர்களிடமிருந்து சற்று வேறுபடுகிறது.

அவர் கூறுகிறார்: “ நம்மில் ஒவ்வொருவருமே இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் மிகவும் முக்கியமானவர்.”

அடடா! எவ்வளவு பெரிய உண்மை!

நாம் பிரபஞ்சத்தில் ஒப்பற்ற தனித்தன்மை கொண்டவர் என்று நினைத்தாலேயே போதுமே, நமது வழி தனி வழியாக அமையுமே!

நம் வழியைக் கண்டுபிடித்து நடப்போமா?

**

கந்த புராணம் பற்றி 10 கேள்விகள் (Post.16,024)

Written by London Swaminathan

Post No. 16,024

Date uploaded in London – 27 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கந்த புராணத்தின் மூலம் எது?  அதை எழுதியவர் யார்? அதைத் தமிழ் மொழியில் தந்தவர் யார்?

இந்தப் புராணத்தின் முதல் செய்யுள் என்ன?

3

அரங்கேற்றம் செய்யும் பொது எழுந்த ஆட்சேபம்/ எதிர்ப்பு என்ன?

4

அதற்கு அவர் கூறிய விளக்கம் என்ன?

5

இதை நிரப்புக – கந்தப் புராணத்தில் இல்லாதது……………

6

கந்தபுராணம் எவ்வளவு பெரியது?

7

இதை எப்படிப் பிரித்துள்ளார்கள்?

8

கந்த புராணத்தில் சுவையான, அதிசய விஷயங்கள்  இருக்கின்றனவா?

9

சைவர்கள் நடத்தும் கூட்டங்களில் நிகழ்ச்சியை முடிக்கும் தருணத்தில் “மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்” என்று  பாடி  முடிப்பார்கள் ? அது எங்கே உளது ?

10

கந்த புராணம் ஸ்காந்தம் முதலிய நூல்களுக்கும் முன்னதாக முருகன் வரலாற்றைப்   பாடியவர் யார் ?

XXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

1.ஸ்காந்தம் என்ற பெயரில் வியாசர் எழுதியதைக் கச்சியப்ப சிவாச்சாரியார் தமிழ் நமக்கு கந்த புராணமாகத் தந்தார்

**

2.திகட சக்கரச் செம்முக மைந்துளான்

     சகட சக்கரத் தாமரை நாயகன்

          அகட சக்கர வின்மணி யாவுறை

               விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். ……  

***

3.காஞ்சீபுரத்தில் கந்தபுராண நூலை அரங்கேற்ற கச்சியப்பர் வந்தபோது முதல் செய்யுளே இலக்கணப் பிழையுடையதென்று அறிஞர்கள் சிலர் ஆட்சேபித்தனர். மறு நாள் விளக்கம் தருவதாகச் சொன்ன கச்சியப்பர் அதற்கான இலக்கண விதியைக் காணாமல் பரிதவித்தார். இரவில் முருகப் பெருமானே கனவில் வந்து வீரசோழியத்தில் அதற்கான விளக்கம் இருப்பதாகச் செய்யுளைக் காட்டியவுடன், மறு நாள் அவர் அதற்கு விளக்கம் தந்து வெற்றி கரமாக அரங்கேற்றினார்.

***

4.திகட சக்கரச் செம்முக மைந்துளான் விளக்கம் :

“திகடச் சக்கரச் செம்முக மைந்துளான்” என்பது கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராண நூலின் முதல் கடவுள் வாழ்த்துப் பாடலின் தொடக்க வரியாகும்.

இதன் பொருள்: திகழ்கின்ற பத்து கரங்களையும் (தசக்கரம்), ஐந்து சிவந்த முகங்களையும் (செம்முகம் ஐந்து) உடைய விநாயகப் பெருமானின் திருவடிகளைப் போற்றுவோம் என்பதாகும்.பாடலின் முதல் வரி விளக்கம்

திகழ் + தச= திகட 

5.தமிழில் ஒரு பழமொழி உண்டு: “எந்தப் பொருளும் கந்தப் புராணத்திலே!”

அல்லது

கந்தப்புராணத்தில் இல்லாதது வேறு இந்தப் புராணத்திலும் இல்லை

ஏன் இப்படிச் சொல்லுகின்றனர்?

மஹாபாரதம் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்: இதில் சொல்லாத பொருள் உலகில் இல்லை என்று; அதில் வியப்பில்லை; ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் உலகிலேயே பெரிய காவியம்; ஆகையால் எல்லாம் இருக்க வாய்ப்புள்ளது. வியாசர் தனது காலத்தில் இருந்த அத்தனை விஷயங்களையும் பாண்டவர் கதைக்குள் அழகுபடப் புகுத்திவிட்டார். அதே போல கந்தப் புராணத்தில்  பல உபகதைகளும் உள்ளன ; அளவிலும் பெரியது.

***

6.கந்த புராணத்திலே 10346 செய்யுட்கள் உள்ளன. “காந்தம் என்னும் பெருங்கடல்”  — என்று அருளினார். 10,346 பாடல்களை ஆறு காண்டங்களாகவும் 94 படலங்களாகவும் அவர் பிரித்தார். சம்ஸ்கிருத மொழியில் உள்ள ஸ்காந்தம்  18 புராணங்களில் மிகப் பெரியது. 81,000 ஸ்லோகங்கள் உடைத்து.

***

7.கந்த புராணத்தில் உள்ள ஆறு காண்டங்கள் :

உற்பத்தி காண்டம், அசுர காண்டம் , மஹேந்திர காண்டம் , யுத்த காண்டம் , தேவ காண்டம், தக்க காண்டம் என்று ஆறு காண்டங்கள்.

இவற்றில் அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறை செய்த வரலாறு,  சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானை திருமணம், முதலியன உடைத்து.

***

8.ஆம். யுத்த காண்டத்தில் 108 பூத கணத் தலைவர்கள் பெயர் உள்ளது. அசுர  காண்டத்தில் காச்யபர் உபதேசம், மாயாதேவி உபதேசம், சுக்கிராச்சாரியார் உபதேசம் உள்ளன. கஸ்யபருக்கு மாயைபால் தோன்றிய சூர பன்மன் , வீர வேள்வி செய்து, சிவனிடம் வரம் பெற்று 1008 அண்டங்களை 108 யுகங்களுக்கு ஆள வரம் பெற்றதையும் காணலாம். தட்ச காண்டத்தில், தக்கன் புதல்வர்களை, நாரதர் தவ வழியில் செலுத்தல், ததீசி முனிவர் பதில் கூறல், வீரபத்திரர், பத்திர காளி தோற்றம், யாக சங்காரம் ஆகியன ஆழ, ஊன்றிப் படித்தற்குரியனவாம். கந்தன் தொடர்பான விரதங்களும் நல்ல தகவல் தருவன.

கந்தபுராணத்தில் சோமாஸ்கந்த மூர்த்தியை, முசுகுந்த சக்ரவர்த்தி கொண்டு வந்து, திருவாரூரில் பிரதிஷ்டை செய்த வரலாறும் ஆறு மூர்த்திகளை  ஆறு ஸ்தலங்களில்  பிரதிஷ்டை செய்த வரலாறும் அறிய வேண்டிய விஷயங்கள்.

***

9.வான்முகில்வழாதுபெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்

     கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க

          நான்மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க

               மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம். …..

 இது கந்த புராணத்திலுள்ள வாழ்த்துப் பாடல் ; சம்ஸ்க்ருதத்தில் காலே வர்ஷது பர்ஜன்ய என்ற ஸ்லோகத்தையோ அல்லது ஸ்வஸ்திப் ப்ரஜாப்ய என்ற ஸ்லோகத்தையோ சொல்லி வாழ்த்தி முடிப்பது போன்றது இது.

காலே வர்ஷது பர்ஜன்ய: ப்ருத்வீ ஸஸ்ய-சாலிநீ |

தேசோயம் க்ஷோப-ரஹிதோ ப்ராஹ்மணா: ஸந்து நிர்பயா: ||

பொருள்

காலே வர்ஷது பர்ஜன்ய: – மேகங்கள் உரிய காலத்தில் சரியான அளவு மழை பொழிய வேண்டும்.

ப்ருத்வீ ஸஸ்ய-சாலிநீ – பூமி எங்கும் பயிர்களும் தாவரங்களும் செழித்து வளர வேண்டும்.

தேசோயம் க்ஷோப-ரஹிதோ – இந்த நாடு எந்தவிதக் கலக்கமும் பயமும் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

ப்ராஹ்மணா: ஸந்து நிர்பயா: – அறிவுடையோரும் ஆன்மீகத்தில் சிந்திப்போரும் அச்சமின்றி வாழ வேண்டும்.

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய:, பரிபாலயந்தாம்

ந்யாயேன மார்கேன மஹிம் மஹீசா:|

கோ ப்ராம்மணேப்ய: சு பம் அஸ்து நித்யம் ,

லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து

உலகத்திலுள்ள எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும் என்று மங்களம் பாடி உபன்யாசகர்கள் சொற்பொழிவினை முடிப்பார்கள் . இதையே ஞான சம்பந்தரும்

வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!

வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!

ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே

சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! என்று பாடினார்.

***

காளிதாசன் என்னும் உலக மகா கவிஞன் குமார சம்பவம் என்னும் நூலில் கந்தனின் பிறப்பை வருணித்தார்; அவர் 2100 ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரமாதித்தன் சபையில் புலவராக இருந்தார் ; அவரது நூல் காரணமாக, பரம வைஷ்ணவர்களாக இருந்த குப்த வம்ச மன்னர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்கந்த குப்தன், குமார குப்தன் என்று பெயர் சூட்டினார்கள்!

–SUBHAM—

TAGS:— கந்தபுராணம், கச்சியப்ப சிவாச்சாரியார், திகடச்சக்கர, ஆறு காண்டங்கள்

Hinduism Lesson by Valluvar: Tirukkural Encyclopaedia- Chapter 17 (Kural 166-170) – Post.16,023

Written by London Swaminathan

Post No. 16,023

Date uploaded in London – 27 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tiruvalluvar, author of Tirukkural, gives a severe blow to the half baked who argued that Valluvar was a Jain, he was a Buddhist etc in the couplet 167. Only Hindus will understand it because he mentioned not only Lakshmi but also  her sister. It is a Pukka Hindu story; in the same way his mention of Indra will be understood only by the Hindus because it is a Puranic story. His 13 Chapters in the section of Asceticism is the gist of Bhagavad Gita. No wonder he never mentioned Buddha or Mahavira or Jabala; he followed Sangam poets strictly.

His mention of Hell and PAAVI (in Sanskrit PAAPI) shows that he was a Sanskrit scholar, and Tamils also knew Paava (in Sanskrit Paapa) and Punya , Sanskrit words. That is why he used ADIKAARAM in all chapters and Sanskrit words in 600 Kurals!

****

Part 34

17. அழுக்காறாமை – Avoid envy  Not Envying

166.Be not envious of the charities done by unto others, lest your children should be sent adrift, shivering and starving, on the world- – ANM+2

***

166. The man, whose envy puts him in the way of other’s charity

Will go to ruin without even food and clothes—SM Diaz

***

166
Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die.
He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment. – GUP

***

166.Who envies gifts shall suffer ruin
Without food and clothes with his kin– SB

***

166.The kith and kin of one who envies another’s generosity

Will become extinct with dire want—EVS

***

166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

167.The Goddess of Wealth will depart introducing her elder sister (The Goddess of Misery) to the envious— ANM+2

***

167.The Goddess of Good Fortune cannot bear the sight of envious people,

Whom she will turn over to her elder sister—ANM+2

***
167
From envious man good fortune’s goddess turns away,
Grudging him good, and points him out misfortune’s prey.
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister. – GUP

***

167.Fortune deserts the envious
Leaving misfortune omnious– SB.        

***

167.The Goddess of Fortune shun the envious and hands

Them over to her sister, the Goddess of Poverty—EVS

***

167.Lakshmi herself the envious cannot bear;

She will show him to her sister sinister and go-  HAP

***
167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

168.It is envy that paves the way to a man’s ruin and plunges him into the fires of hell— ANM+2

***

168.The evil genius of envy will entail the loss of fortune

And render one liable for hell-fire—ANM+2

***
168
Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain.
Envy will destroy (a man’s) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.) – GUP
***

168.Caitiff envy despoils wealth
And drags one into evil path– SB.        

***

168.Envy destroys one’s wealth and leads one to evil deeds—EVS

***
168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்

XXXXXXXXXXXXXXXXXX

169.The riches of the envious and the poverty of the righteous pass one’s understanding— ANM+2

***

169.If an envious man accumulates wealth, and a virtuous man

Comes by misfortune, both these need scrutiny- — ANM+2

***
169
To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the ‘why’ will thoughtful hearts employ.
The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered. – GUP

***

169.Why is envy rich, goodmen poor
People with surprise think over– SB.        

***

169.The prosperity of the envious and the adversity of the righteous, if they do exist, are matters for deep thought- EVS

***

169.The wealth of envious minded men

And ruin of the righteous, should be pondered well- HAP

***
169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXX

170.Glory is not for the envious; nor a fall to those free from envy– ANM+2

***

170.None has grown richer by envying

And no one has lost by not envying- — ANM+2

***
170
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain.
Never have the envious become great; never have those who are free from envy been without greatness. – GUP

***

170.The envious prosper never
The envy less prosper ever– SB.        

***

170.Never did envy make one great nor did freedom from envy ever cause the loss of one’s affluence- EVS

***

170.Never have envious men true greatness reached,

Nor we have the envy-free failed greatness to attain- HAP

***
170. அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்

To be continued………………………

Tags- Lakshmi, Goddess of Fortune, Hell, Envy, Tirukkural Encyclopaedia- Chapter 17 (Kural 166-170)

Important Upanishad Mantras in Sanskrit with meaning in English-11 (Post.16,022)

Written by London Swaminathan

Post No. 16,022

Date uploaded in London – 27 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

61

यस्मात्परं नापरमस्ति किंचिद्यस्मान्नणीयो न ज्यायोऽस्ति कश्चित्‌।
वृक्ष इव स्तब्धो दिवि तिष्ठत्येकस्तेनेदं पूर्णं पुरुषेण सर्वम्‌॥

yasmātparaṁ nāparamasti kiṁcidyasmānnaṇīyo na jyāyo’sti kaścit |
vṛkṣa iva stabdho divi tiṣṭhatyekastenedaṁ pūrṇaṁ puruṣeṇa sarvam ||श्वेताश्वतरोपनिषद्

There is naught higher than or different from Him; naught greater or more minute than Him. Rooted in His own glory He stands like a tree, one without a second and immovable. By that Being the whole universe is filled. श्वेताश्वतरोपनिषद्

***

62

Verse 2.4.5:

स होवाच: न वा अरे पत्युः कामाय पतिः प्रियो भवति, आत्मनस्तु कामाय पतिः प्रियो भवति । न वा अरे जायायै कामाय जाया प्रिया भवति, आत्मनस्तु कामाय जाया प्रिया भवति । न वा अरे पूत्राणां कामाय पुत्राः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय पुत्राः प्रिया भवन्ति । न वा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति, आत्मनस्तु कामाय वित्तं प्रियं भवति । न वा अरे ब्रह्मणः कामाय ब्रह्म प्रियं भवति, आत्मनस्तु कामाय ब्रह्म प्रियं भवति । न वा अरे क्षत्रस्य कामाय क्षत्रं प्रियं भवति, आत्मनस्तु कामाय क्षत्रं प्रियं भवति । न वा अरे लोकानां कामाय लोकाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय लोकाः प्रिया भवन्ति । न वा अरे देवानां कामाय देवाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय देवाः प्रिया भवन्ति । न वा अरे भूतानां कामाय भूतानि प्रियाणि भवन्ति, आत्मनस्तु कामाय भूतानि प्रियाणि भवन्ति । न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवति, आत्मनस्तु कामाय सर्वं प्रियं भवति । आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैत्रेयि, आत्मनो वा अरे दर्शनेन श्रवणेन मत्या विज्ञानेनेदं सर्वं विदितम् ॥ ५ ॥

sa hovāca: na vā are patyuḥ kāmāya patiḥ priyo bhavati, ātmanastu kāmāya patiḥ priyo bhavati | na vā are jāyāyai kāmāya jāyā priyā bhavati, ātmanastu kāmāya jāyā priyā bhavati | na vā are pūtrāṇāṃ kāmāya putrāḥ priyā bhavanti, ātmanastu kāmāya putrāḥ priyā bhavanti | na vā are vittasya kāmāya vittaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya vittaṃ priyaṃ bhavati | na vā are brahmaṇaḥ kāmāya brahma priyaṃ bhavati, ātmanastu kāmāya brahma priyaṃ bhavati | na vā are kṣatrasya kāmāya kṣatraṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya kṣatraṃ priyaṃ bhavati | na vā are lokānāṃ kāmāya lokāḥ priyā bhavanti, ātmanastu kāmāya lokāḥ priyā bhavanti | na vā are devānāṃ kāmāya devāḥ priyā bhavanti, ātmanastu kāmāya devāḥ priyā bhavanti | na vā are bhūtānāṃ kāmāya bhūtāni priyāṇi bhavanti, ātmanastu kāmāya bhūtāni priyāṇi bhavanti | na vā are sarvasya kāmāya sarvaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya sarvaṃ priyaṃ bhavati | ātmā vā are draṣṭavyaḥ śrotavyo mantavyo nididhyāsitavyo maitreyi, ātmano vā are darśanena śravaṇena matyā vijñānenedaṃ sarvaṃ viditam || 5 |

The Maitreyi-Yajnavalkya conversation is a profound ancient dialogue from the The Brihadaranyaka Upanishad – Chapter II where Sage Yajnavalkya teaches his wife Maitreyi about wealth, love, the nature of the true Self (Atman), and how to attain immortality. 

5. He said: It is not for the sake of the husband, my dear, that he is loved, but for one’s own sake that he is loved. It is not for the sake of the wife, my dear, that she is loved, but for one’s own sake that she is loved. It is not for the sake of the sons, my dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of wealth, my dear, that it is loved, but for one’s own sake that it is loved. It is not for the sake of the Brāhmaṇa, my dear, that he is loved, but for one’s own sake that he is loved. It is not for the sake of the Kṣatriya, my dear, that he is loved, but for one’s own sake that he is loved. It is not for the sake of the worlds, my dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of the gods, my dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of the beings, my -dear, that they are loved, but for one’s own sake that they are loved. It is not for the sake of all, my dear, that all is loved, but for one’s own sake that it is loved. The Self, my dear Maitreyī, should be realised—should be heard of, reflected on and meditated upon. By the realisation of the Self, my dear, through hearing, reflection and meditation, all this is known.

Brihadaranyaka Upanishad (2.4.5)

***

63

नान्त: प्रजम् न बहि:प्रजम् नभोयत:प्रजम्, न प्रजानघनम्, न प्रजम् नाप्रजम् !

अट्रुष्टमव्यवहार्यम् अलक्षण-मचित्यम्-मव्यपतेश्य-मेकात्म-पोरत्ययसारम्- प्रपन्ज्चोपशमम्

शन्तम् शिव-मद्वैदम् चतुरथम् मन्यन्ते स आत्मा स विजेय !!- Mundakopanishad

nāntaḥprajñaṁ na bahiṣprajñaṁ nobhayataḥprajñaṁ na prajñānaghanaṁ na prajñaṁ nāprajñam|
adṛṣṭamavyavahāryamagrāhyamalakṣaṇamacintyamavyapadeśyamekātmapratyayasāraṁ prapañcopaśamaṁ śāntaṁ śivamadvaitaṁ caturthaṁ manyante sa ātmā sa vijñeyaḥ ||

He who is neither inward wise, nor outward wise, nor both inward and outward wise, nor wisdom self gathered, nor possessed of wisdom, nor unpossessed of wisdom, He Who is unseen and incommunicable, unseizable, featureless, unthinkable, and unnameable,Whose essentiality is awareness of the Self in its single existence, in Whom all phenomena dissolve, Who is Calm, Who is Good, Who is the One than Whom there is no other, Him they deem the fourth; He is the Self, He is the object of Knowledge.

***

64

सर्वे वेदा यत्पदमामनन्ति तपासि सर्वाणि  यद्वदन्ति |

यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पद सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत् ||

sarve vedā yatpadamāmananti tapāṁsi sarvāṇi ca yadvadanti |

yadicchanto brahmacaryaṁ caranti tatte padaṁ saṁgraheṇa bravīmyomityetat ||

All the Vedas talk about which goal, to know which, people take to a life of study and spiritual discipline, I tell you in brief – that is om.

***

65

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।

तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥१५॥

hirāṇmayena pātreṇa satyasyāpihitaṁ mukham |

tat tvaṁ pushann apāvṛṇu satya-dharmāya dṛṣṭaye || Ishavasya Upanishad Part 16, Mantra 15

The threshold of reality is veiled by golden light

Reveal it oh lord, for my dharma is to know the truth

-Isha Upanishad

—Subham-

Important Upanishad Mantras in Sanskrit with meaning in English-11

முக்கிய உபநிஷத மந்திரங்கள்-11(Post No.16,021

Written by London Swaminathan

Post No. 16,021

Date uploaded in London – 27 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

61

यस्मात्परं नापरमस्ति किंचिद्यस्मान्नणीयो न ज्यायोऽस्ति कश्चित्‌।
वृक्ष इव स्तब्धो दिवि तिष्ठत्येकस्तेनेदं पूर्णं पुरुषेण सर्वम्‌॥

yasmātparaṁ nāparamasti kiṁcidyasmānnaṇīyo na jyāyo’sti kaścit |
vṛkṣa iva stabdho divi tiṣṭhatyekastenedaṁ pūrṇaṁ puruṣeṇa sarvam ||श्वेताश्वतरोपनिषद्

யஸ்மாத்பரம் நாபரமஸ்தி கிஞ்சித்

யஸ்மான்னாணீயோ ந ஜ்யாயோ(அ)ஸ்தி கஸ்சித்

வ்ருக்ஷ இவ ஸ்தப்தோ திவி திஷ்டத்யேகஸ்தேனேதம்

பூர்ணம் புருஷேண ஸர்வம்

ஸ்வேதச்வரோபநிஷத்

யாரைக்காட்டிலும் மேலானதும் வேறானதும் ஏதுமில்லையோ, யாரைக்காட்டிலும் நுண்ணியதும் பெரியதும் ஏதுமில்லையோ அவர் தனிப்பொருள் ; மரம் போன்று அவர் உறுதியானவர் .வானத்து மஹிமையில் அவர் நிலைத்து நிற்கிறார். அந்தப் பரம புருஷனால் இவையாவும் நிறைந்திருக்கின்றன.

***

62

Verse 2.4.5:

स होवाच: न वा अरे पत्युः कामाय पतिः प्रियो भवति, आत्मनस्तु कामाय पतिः प्रियो भवति । न वा अरे जायायै कामाय जाया प्रिया भवति, आत्मनस्तु कामाय जाया प्रिया भवति । न वा अरे पूत्राणां कामाय पुत्राः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय पुत्राः प्रिया भवन्ति । न वा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति, आत्मनस्तु कामाय वित्तं प्रियं भवति । न वा अरे ब्रह्मणः कामाय ब्रह्म प्रियं भवति, आत्मनस्तु कामाय ब्रह्म प्रियं भवति । न वा अरे क्षत्रस्य कामाय क्षत्रं प्रियं भवति, आत्मनस्तु कामाय क्षत्रं प्रियं भवति । न वा अरे लोकानां कामाय लोकाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय लोकाः प्रिया भवन्ति । न वा अरे देवानां कामाय देवाः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय देवाः प्रिया भवन्ति । न वा अरे भूतानां कामाय भूतानि प्रियाणि भवन्ति, आत्मनस्तु कामाय भूतानि प्रियाणि भवन्ति । न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवति, आत्मनस्तु कामाय सर्वं प्रियं भवति । आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यो मैत्रेयि, आत्मनो वा अरे दर्शनेन श्रवणेन मत्या विज्ञानेनेदं सर्वं विदितम् ॥ ५ ॥

sa hovāca: na vā are patyuḥ kāmāya patiḥ priyo bhavati, ātmanastu kāmāya patiḥ priyo bhavati | na vā are jāyāyai kāmāya jāyā priyā bhavati, ātmanastu kāmāya jāyā priyā bhavati | na vā are pūtrāṇāṃ kāmāya putrāḥ priyā bhavanti, ātmanastu kāmāya putrāḥ priyā bhavanti | na vā are vittasya kāmāya vittaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya vittaṃ priyaṃ bhavati | na vā are brahmaṇaḥ kāmāya brahma priyaṃ bhavati, ātmanastu kāmāya brahma priyaṃ bhavati | na vā are kṣatrasya kāmāya kṣatraṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya kṣatraṃ priyaṃ bhavati | na vā are lokānāṃ kāmāya lokāḥ priyā bhavanti, ātmanastu kāmāya lokāḥ priyā bhavanti | na vā are devānāṃ kāmāya devāḥ priyā bhavanti, ātmanastu kāmāya devāḥ priyā bhavanti | na vā are bhūtānāṃ kāmāya bhūtāni priyāṇi bhavanti, ātmanastu kāmāya bhūtāni priyāṇi bhavanti | na vā are sarvasya kāmāya sarvaṃ priyaṃ bhavati, ātmanastu kāmāya sarvaṃ priyaṃ bhavati | ātmā vā are draṣṭavyaḥ śrotavyo mantavyo nididhyāsitavyo maitreyi, ātmano vā are darśanena śravaṇena matyā vijñānenedaṃ sarvaṃ viditam || 5 |

மைத்ரேயி – யாக்ஞவல்க்யர் உரையாடல்

Brihadaranyaka Upanishad (2.4.5)

ந வா அரே பத்யு: காமாய பதி: ப்ரியோ பவதி

ஆத் மனஸ்து  காமாய பதி: ப்ரியோ பவதி

 ந வா அரே ஜாயாயை காமாய ஜாயா  ப்ரியா  பவதி

ஆத் மனஸ்து  காமாய ஜாயா  ப்ரியா  பவதி

ந வா அரே புத்ராணாம்  காமாய புத்ரா: ப்ரியா  பவந்தி

 ஆத் மனஸ்துகாமாய புத்ரா: ப்ரியா  பவந்தி

பிருஹதாரண்யக உபநிஷதம் 1-4-5

ஒய் ! கணவனுடைய விருப்பத்துக்காக கணவன் நேசிக்கப்படுபவன் அல்லவே அல்லன்; ஆத்மாவின்  விருப்பத்துக்காகவே  கணவன் நேசிக்கப்படுகிறான்.

ஒய் ! மனைவியுடைய  விருப்பத்துக்காக மனைவி நேசிக்கப்படுபவள்  அல்லவே அல்லள்; ஆத்மாவின்  விருப்பத்துக்காகவே  மனைவி  நேசிக்கப்படுகிறாள்.

 ஒய் ! புதல்வர்களின் விருப்பத்துக்காகப்ப் புதல்வர்கள்   நேசிக்கப்படுபவர்கள்   அல்லவே அல்லர். ஆத்மாவின்  விருப்பத்துக்காகவே  புதல்வர்கள்  நேசிக்கப்படுகிறார்கள் .

***

63

नान्त: प्रजम् न बहि:प्रजम् नभोयत:प्रजम्, न प्रजानघनम्, न प्रजम् नाप्रजम् !

अट्रुष्टमव्यवहार्यम् अलक्षण-मचित्यम्-मव्यपतेश्य-मेकात्म-पोरत्ययसारम्- प्रपन्ज्चोपशमम्

शन्तम् शिव-मद्वैदम् चतुरथम् मन्यन्ते स आत्मा स विजेय !!- Mundakopanishad

nāntaḥprajñaṁ na bahiṣprajñaṁ nobhayataḥprajñaṁ na prajñānaghanaṁ na prajñaṁ nāprajñam|
adṛṣṭamavyavahāryamagrāhyamalakṣaṇamacintyamavyapadeśyamekātmapratyayasāraṁ prapañcopaśamaṁ śāntaṁ śivamadvaitaṁ caturthaṁ manyante sa ātmā sa vijñeyaḥ ||

நாந்த: ப்ரஞம்  ந பஹி: ப்ரஞம்  ந உபயத: ப்ரஞம் ந

ப்ரஞானகனம்  ந ப்ரஞம்  ந  அப்ரஞம்

அத்ருஷ்டம் அவ்யய  கார்யம் அக்ராஹ்யம்  லக்ஷணம் அசிந்த்யம் அவ்யபதேச்யம்  ஏகாத்ம ப்ரத்யய ஸாரம்

ப்ரபஞ்சோபசமம்   சாந்தம் சிவம் அத்வைதம்  சதுர்தம் மன்யந்தே  ஸ ஆத்மா  ஸ விக்ஞேய:

முண்டகோபநிஷத்-7

துரியம் என்னும் சிதாகாசத்தைப் பற்றிச் சான்றோர் பகர்வதாவது : அந்த அறிவுப் பெருவெளி உள்ளத்தினுள் அடங்கியிருப்பதன்று.  புறத்தில் கயிலாயம் போல பூமியில் இருப்பதன்று . அகம், புறம் என்பனவற்றிற்கு  இடைநிலையில்  இருப்பதன்று. அது ஜீவாத்மாக்களின் தொகையன்று . அது தோன்றி வளர்ந்த உணர்வு அன்று. அது மறைந்துள்ள உணர்வு அன்று. அதைக் கண்கொண்டு பார்க்க இயலாது ; எதனோடும் அதைச் சீர்தூக்கமுடியாது ;அது மனதுக்கு எட்டாதது;எடுத்துச் சொல்லும்படியான கூறுகள் அதனிடத்தில் இல்லை. அது நினைவுக்கு எட்டாதது ; அதை விளக்க முடியாது; நனவு, கனவு, உறக்கம் ஆகியவைகளுக்குப் பொதுவாயுள்ள  தனியுணர்வின் தெளிவு அதுவாம். அது பிரபஞ்சசத்துக்கு அப்பாற்பட்டது . அது சாந்தம், சிவம், அத்வைதம். அதுவே மெய்ப்பொருள்.  அது அனுபவ ஞானத்தால் பயிற்சியால் அடையப்பெறுவது .

***

64

ஸர்வே வேதா யத் பதமாமனந்தி 

தபாம்ஸி ஸர்வாணி ச யத் வதந்தி

யதிச்சந்தோ ப்ரஹ்மசர்யம் சாந்தி

தத் தே பதம் ஸங்க்ரஹேண  ப்ரவீம்யோமித்யேதத்

सर्वे वेदा यत्पदमामनन्ति तपासि सर्वाणि  यद्वदन्ति |

यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पद सङ्ग्रहेण ब्रवीम्योमित्येतत् ||

sarve vedā yatpadamāmananti tapāṁsi sarvāṇi ca yadvadanti |

yadicchanto brahmacaryaṁ caranti tatte padaṁ saṁgraheṇa bravīmyomityetat ||

கடோபநிஷதம் 2-15  

எதை வேதங்கள் உயர்த்திவைத்துப் பேசுகின்றனவோ , எதைத் தவங்கள் பாராட்டுகின்றனவோ , எதை நாடி பிரம்மச்சர்ய வாழ்வு  வாழ்கிறார்களோ , அப்பெருநிலையை நான் சுருக்கமாகச் சொல்கிறேன்.  அதுவே ஓம் என்பது .

Or

•     அனைத்து வேதங்களும் எந்த உயர்ந்த இலக்கினை ஒரு குரலில் கூறுகின்றனவோ,

•     அனைத்துத் தவங்களும் எதனைப்பற்றிப் பேசுகின்றனவோ,

•     எதனை அடைவதற்காக மக்கள் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கிறார்களோ,

•     அந்த இலக்கை நான் உனக்குச் சுருக்கமாகக் கூறுகிறேன்: அதுவே ‘ஓம்’ (Om) ஆகும்.

***

65

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।

तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥१५॥

ஹிரண்மயேன   பாத்ரேன  ஸத்யஸ்யாபிஹிதம்

தத் தவம்  பூஷன் ன பாவ்ருனு ஸத்ய தர்மாய த்ருஷ்டயே 

hirāṇmayena pātreṇa satyasyāpihitaṁ mukham |

tat tvaṁ pushann apāvṛṇu satya-dharmāya dṛṣṭaye || Ishavasya Upanishad Part 16, Mantra 15

பொன்னிறமான ஒளி மெய்ப்பொருளை மறைத்து நிற்கிறது; இறைவா! எனக்கு அதைக் காட்டிக்கொடு; உண்மையை அறிவது என்னுடைய கடமை ஆகும்

—Subham—

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள்-11, மைத்ரேயி – யாக்ஞவல்க்யர் உரையாடல்

மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த டாவா ஷெர்பா: 6 நாட்களுக்குப் பின் நிகழ்ந்த அதிசயம்! (Post.16,020)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,020

Date uploaded in London – 27 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

18-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

மரணத்தின் பிடியிலிருந்து மீண்டு வந்த டாவா ஷெர்பா: 6 நாட்களுக்குப் பின் நிகழ்ந்த அதிசயம்!

ச. நாகராஜன்

இமயமலை சிகரங்களில் ஏறுவதற்கு வழிகாட்டியாகப் பணிபுரிந்து வந்த டாவா ஷெர்பா 2026 மே மாதம் 29ம் தேதி அவர் இருந்த கேம்ப் -3 -லிருந்து திடீரென்று காணாமல் போனார். ஆறு நாட்கள் எந்தவிதமான மீட்புப் பணியும் முன்னெடுக்கப்படவில்லை. சிகரம் ஏறும் குழுவினர் தங்கள் ஏணிகளையும் மே 31ம் தேதி எடுத்து விட்டனர். தங்கள் முகாமுக்கும் திரும்பி விட்டனர்.

டாவா ஷெர்பாவின் குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்யவும் ஆரம்பித்து விட்டனர். ஆறு நாட்கள் கழித்து மலையிலிருந்து தவழ்ந்து வந்த டாவாவைப் பார்த்து அனைவரும் பிரமித்தனர்.

அவர் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்; அங்கு அவர் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைக்கப்பட்டார்.

என்ன நடந்தது என்பதை அவர் நேபாளத்தில் இருந்த பி.பி.சிக்கு கூறினார்.

அது உலகளாவிய அளவில் பார்க்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

57 வயதான டாவா முன்னாள்  பிரிட்டிஷ் ராணுவ வீரர். நூறுக்கும் மேற்பட்ட முறைகள் அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக சிகரத்தில் சென்றுள்ளார். 24600 அடி உயரத்தில் இருந்து மீண்ட அவர் கூறியது:

“நான் பிழைப்பேன் என்றே நினைக்கவில்லை. அப்படியே அங்கேயே உயிரை விட்டு விடுவேன் என்றே நினைத்தேன்.”

குழுவோடு இறங்கி வரும்போது ஒரு போலிஷ் நாட்டுக்காரருக்கு ஆக்ஸிஜன் இல்லாததைப் பார்த்த குழுவினர் அவரது உதவிக்குச் சென்றனர்.

ஆனால் டாவா ஷெர்பாவைக் காணோம். அவருக்கும் ஆக்ஸிஜன் இல்லாமல் போகவே அவரால் நடக்க முடியவில்லை. அவர் ஒரு பனிப்பிளவில் சிக்கிக் கொண்டார். இரண்டு நாட்கள் எதையும் அவர் சாப்பிடவில்லை. பின்னர் ஐஸ் கட்டிகளைக் கடிக்க ஆரம்பித்தார். ஆனால் அந்தக் கட்டிகள் அவர் பற்களைச் சேதப்படுத்தின.

பின்னர் தன் பையில் கையை விட்டுத் துழாவிய அவர் சில சாக்லட்களைக் கண்டார். அவற்றை உடனே எடுத்து சுவைக்க ஆரம்பித்தார். உருகிய ஐஸ்கட்டியின் மூலம் கொஞ்சம் நீரைப் பருகினார்,

பிறகு திடீரென்று ஒரு பனிச்சறுக்கில் அவர் வீழ்ந்தார். அங்கேயே நெடுநேரம் இருந்த அவர், பின்னர் மெதுவாக எழுந்து கீழ் நோக்கி நடக்க ஆரம்பித்தார். இரவெல்லாம் நடையாய் நடந்து அடித்தள முகாமிற்கு வந்து சேர்ந்தார்.

அங்கு கழிவுகளைச் சேகரிக்கும் சிறுவர்கள் சிலரைச் சந்திக்க அவர்கள் அவரை முகாமிற்குத் தூக்கிச் சென்றநர்.

ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த வருட சீஸனில்  சுமார் ஆயிரம் பேர்கள் மலையேறச் சென்றனர். அவர்களுள் ஐந்து பேர் இறந்துள்ளனர். 1920 முதல் இதுவரை சுமார் 300 பேர்கள் இந்த மலையேறும் சாகஸத்தில் உயிர் நீத்துள்ளனர்.

 ஷெர்பா டாவா பிழைத்தது மனித எல்லையை மீறிய அற்புதம் என்றே அனைவரும் கூறுகின்றனர்.

இதற்கிடையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவரை எப்படி அணுகி பேட்டி எடுக்கலாம் என்ற கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது பி.பி.சி.

குடும்பத்தினரும் அனுமதிக்கவில்லை, மருத்துவமனை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை. அவரை பி.பி.சி எப்படி பேட்டி எடுத்து ஒளிபரப்பலாம் என்று ஏராளமானோர் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

இந்த நிகழ்ச்சி இப்போது பி.பி.சியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது.

இந்த நிகழ்வைப் பார்க்கும் போது நமது சாஸ்திரங்கள் கூறுவது நினைவிற்கு வருகிறது:
“ஒருவனுக்கு காலம் முடியும் வரை அவன் பேரழிவிலும் கூட மிக நன்றாக இருப்பான். காலம் வரும் போது எதிர்பாராத விதமாக மரணம் அவனை வந்து தழுவும்.”

**

Tirukkural Encyclopaedia- Chapter 17 (Kural 161-165) – Post.16,019

Written by London Swaminathan

Post No. 16,019

Date uploaded in London – 26 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

PART 33

17. அழுக்காறாமை – Avoid envy  Not Envying

161.Be on your guard against creeping envious thoughts; verily freedom from envy is one of the laws of your moral being- A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***

161.Freedom from envious thoughts is to be taken

As the most righteous conduct.–S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

161
As ‘strict decorum’s’ laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct. Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

161.Deem your heart as virtuous
When your nature is not jealous Suddhananda Bharathiyar- SB

***

161.Refraining from envy should be the rule of one’s conduct- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***       
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இல்லாத இயல்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

162. What blessing is greater on earth than freedom from envy ?- ANM+2

***

If a man learns not to be envious of others,

He does not need any greater wealth- – SMD

***

162
If man can learn to envy none on earth,
‘Tis richest gift, -beyond compare its worth.
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towards others. – GUP
***

No excellence excels the one
That by nature envies none– SB.        

***

162.If one could gain freedom from envy, no greater boon than that could be had-EVS

***
162. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

163.Can an envious heart ever dream of virtue or wealth? – ANM+2

***

163.The man who envies another’s wealth is the man,

Who could never aspire to virtue and wealth himself- – SMD

***

163
Nor wealth nor virtue does that man desire ’tis plain,
Whom others’ wealth delights not, feeling envious pain.
Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said “he neither desires virtue not wealth.” – GUP
***

163.Who envies others’ good fortune
Can’t prosper in virtue of his own– SB.        

***
`163.He who does not care for ethics, virtue or wealth is the one who envies another property- EVS

***
163. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Valluvar in Indonesia.

164.The wise commint not evil out of envy; for envy is the deadliest of sins– ANM+2

***

164. Those who know the harm that comes of deeds of envy,

Will shun all evil arising out of it –– SMD

***

164
The wise through envy break not virtue’s laws,
Knowing ill-deeds of foul disgrace the cause.
(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds. – GUP
***

164.The wise through envy don’t others wrong
Knowing that woes from evils throng– SB.        

***
164.The wise will do no wrong actuated by envy as they realise that evil is bound to result from such wrong doing –EVS

***
164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

XXXXXXXXXXXXXXXXXXXXX

165.Envy in itself is a dread enemy to undo the soul— ANM+2

***

165.Even without external enemies, envy is productive of evil;

His own enemy is enough to ruin a man- – SMD

***
165
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate.
To those who cherish envy that is enough. Though free from enemies that (envy) will bring destruction. – GUP

***

165.Man shall be wrecked by envy’s whim
Even if enemies spare him– SB.        

***

165.He who is envious needs no enemy to ruin him. Envy itself is enough to bring him ruin- EVS

***
165.Envy alone is ill enough to envious men; though they escape their foes, it will surely ruin bring- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

165. அழுக்காற உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது

To be continued……………………………………….

Tags- Tirukkural Encyclopaedia- Chapter 17 (Kural 161-165) – Post.16,019

திருமுருகாற்றுப்படை பற்றி 10 கேள்விகள் (Post.16,018)

Written by London Swaminathan

Post No. 16,018

Date uploaded in London – 26 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

திருமுருகாற்றுப்படை எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது ?

2

இதை நக்கீரர் எழுதியதன் பின்னணி என்ன ?

3

சங்க இலக்கியத்திலுள்ள வேறு ஆற்றுப் படை நூல்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?

4

அறுபடை வீடுகள் பாற்றிப்படிய நக்கீரர் முதலில் எந்தத்தலத்தை வைத்தார் ?

5

இந்த நூலின் துவக்கப் பாடல் வரிகளின்  சிறப்பு என்ன?

6

சூரியனைச் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் பற்றி நக்கீரர் என்ன சொல்கிறார் ?

7

நூலாசிரியர் இந்த நூலில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என்ன ?

8

திருமுருகாற்றுப்படை நூலில் முருகனுக்கு வரும் வேறு பெயர்கள் என்ன ?

9

இந்த நூலினில் எத்தனை அடிகள் இருக்கின்றன ?

10

நூல் பற்றிக் கூறும் கதைக்கு வேறு ஆதாரம் ஏதும் உள்ளதா ?

***

விடைகள்

1.சங்க இலக்கியம் என்பது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் அடங்கிய பதினெண் மேல் கணக்கு நூல்கள் ஆகும். பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்து கிடையாது; இந்த நூல்தான் கடவுள் வாழ்த்து; இது பன்னிரு திருமுறை என்னும் 12 சைவ நூல்களில் 11 ஆம் திருமுறையில் உள்ளது.

**

2. கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்ற சந்தேகம் பாண்டிய மன்னுக்குத் தோன்றியது. யாராலும் திருப்தியாக பதில் சொல்ல முடியவில்லை ; தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவபெருமான் கவிதை எழுதிக்கொடுத்தார் ; அதைப் பாண்டிய மன்னன் ஏற்று தங்கம் வைக்கப்பட்ட பொற்கிழியை எடுத்துக்கொள் என்றார் ; தலமைப் புலவர் நக்கீரர் பொருள் குற்றம் உள்ள கவிதை என்று ஆட்சே பித்தவுடன், சிவ பெருமானே வந்து பத்மினி வகைப்பெண்களுக்கு இயற்கை மணம் உண்டென்றார் ; நக்கீரர் அதை ஏற்காமல் சண்டைபோட்டவுடன் சிவ பெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்தார் ; நக்கீரருக்கு வெப்பு நோய் ஏற்படவே கயிலாயம் சென்றால் தீரும் என்றார் . போகும் வழியில் திருப்பரங்குன்றத்தில் சிவ பூஜைக்கு அமர்ந்தார்; ஒரு ஆல மர இலை, குளத்தின் தண்ணீரில் விழுந்தது ; பாதி முழ்கிய நிலையில் ஒரு பாதி மீனாகவும் மறுபாதி பறவையாகவும்  இருக்கக் கண்டவுடன், சிவ பூஜையிலிருந்து மனம் நழுவியது ; அப்படி முறை தவறுவோரைப் பிடிக்கக் காத்திருந்த கற்கிமுகி என்ற குதிரை முகப் பூதம் அவரைப் பிடித்துச் சென்று குகையில் அடைத்தது. அங்கு ஏற்கனவே பிடிபட்டிருந்த 999 பெரும் வருத்தப்பட்டுக் கூச்சலிட்டனர் ஏனெனில் ஆயிரம் பேர் கிடைத்தவுடன் எல்லோரையும் சாப்பிடுவேன் என்று முன்னரே பூதம் அறிவித்திருந்தது அப்போது முருகப்பெருமானை வேண்டி இந்த நூலைப் பாடவே முருகன் வந்து பூதத்தைக் கொன்றார். அனைவரும் விடுதலை ஆனார்கள்

**

.3.ஆறு என்றால் வழி; படை என்றால் வழிப்படுத்தல்; பரிசு   தரும் செல்வந்தர் இடத்தில் புலவர்களை வழிப்படுத்தும் பொருநர் ஆற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை முதலிய நூல்கள் பத்துப்பாட்டில் உள்ளன ; ஆனால் இந்த நூல் மனிதர்களை இறைவன் அளிக்கும் மோட்சம் என்னும் பரிசைப் பெறும் ஆற்றுப்படை நூலாகும்.

**

4.இந்த நூலில் அறுபடைத் தலங்களும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) , திருவாவினங்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி முதலிய குன்றுகள் என்றும் பொருள் கொள்ளலாம்),     பழமுதிர்ச்சோலை என்ற வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.

**

5.உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு கடற் கண்டா அங்கு

ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி – என்ற வரிகளுடன் பாடல் துவங்குகிறது .

இதில் உலகம் என்பது மங்கலச் சொல். கம்ப ராமாயணம், பெரிய புராணம் முதலிய நூல்களும் உலகம் என்ற சொல்லுடன் துவங்கும். ஞாயிறு / சூரியன் என்பதும் மங்கலச் சொல்; சிலப்பதிகாரம் அந்த வாழ்த்துடன் துவங்குகிறது ; ஒளி என்பது சூரிய ஒளியை மட்டும் குறிக்காது அக்கினி அம்சமான முருகனையும் கடவுளையும் குறிக்கும் ; தேவ என்ற சொல்லுக்கே ஒளி என்றே பொருள்.

**

6.சூரியனைச் சுற்றிவரும் குள்ள முனிவர்கள் பற்றி நக்கீரர் விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை என்று பாடுகிறார்.

இதன் பொருள்– வானில் வலம் வரும் சூரியன், அவனை எதிர்த்துப் போரிடும் அசுரர்களான மந்தேகாருணர் என்போரை மாய்த்துக்கொண்டு முன்னேறுகிறான் ; அவனது கதிர்வீச்சின் கொடுமையைக்  குறைக்க வாலகில்யர் என்னும் குள்ள முனிவர்கள் சூரியனுடன் வலம் வருகின்றனர் என்று வேதம் சொல்கிறது . அவர்களுக்கு வேணாவியோர் என்ற பெயரும் உண்டு;  அந்த முனிவர்களை முருகனின் ஒரு கை பாதுகாப்பதை ,விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை என்ற வரிகள் காட்டுகின்றன. வாலகில்யர்களை புறம் .43, சிலப்பதிகாரம் 12-18 இடங்களிலும் காணலாம்.

**

7.நூலாசிரியர் நக்கீரர்,  இந்த நூலில் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் — சேண்விளங்கு, வாரணம், பிணிமுகம், பெரும்பெயர், திலகம், நிதி .

8.திருமுருகாற்றுப்படை நூலில் முருகனுக்கு வரும் வேறு பெயர்கள் — ஆல்கெழு கடவுட் புதல்வ , மலைமகள் மகன், கொற்றவை சிறுவன், பழையோள் குழவி,  மாலை மார்பன், நூலறி புலவன், பொரு விறல் மள்ள , அந்தணர் வெறுக்கை/ செல்வம், குன்றம் எறிந்தவன், குறிஞ்சிக் கிழவன், அறிந்தோர் சொல்மலை, மங்கையர் கணவ , போர்மிகு பொருநன் , அறுவர் பயந்த ஆறமர் செல்வன், வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ, பெரும்பெயர் முருக, புலவர் ஏறு, நெடுவேள், பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்.

**

9. இந்த நூலினில் 317 அடிகள் இருக்கின்றன.

**

10. நக்கீரரைப் பிடித்த பூதம் குதிரை முகம் உடையது ; இந்தக் கதையை திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்,

இவுளிமுகி யைப்பொருத  ராவுத்தனானவனும்

என்றும்

துரகமுகக் கோதைக்கிடை

புலவரின் நக்கீரருக்குதவியவனே வேளே

 என்றும் பாடியிருக்கிறார் .

–SUBHAM—

TAGS- குதிரை முக பூதம், திருமுருகாற்றுப்படை, 10 கேள்விகள், நக்கீரர், வாலகில்யர், அருணகிரிநாதர்