சர்ச்சைக்குரிய விவேக சிந்தாமணி பற்றி 10 கேள்விகள் (Post.16,118)

Written by London Swaminathan

Post No. 16,118

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 விவேக சிந்தாமணி  நூலின் ஆசிரியர் யார் என்று தெரியாது; தமிழ் நடையைப் பார்க்கையில் அண்மைக்காலத்தில் 200, 300 ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று  தெரிகிறது . பெண்களை இவர் தாக்கி எழுதியிருப்பதைக் காணலாம் சிலர் அதை குடும்பப்  பெண்களைக் குறிக்காது என்பர். இந்தக் காலத்தில் மழை குறைந்ததற்குப் புலவர் கூறும் காரணமும் கலியுகம் இது என்று காட்டுகிறது. குறைந்தது 135 பாடல்கள் உள்ளன. சில பதிப்புகளில் கூடுதல் பாடல்களும் காணப்படுகின்றன .

இதை ஆதி சங்கரர் இயற்றிய விவேக சூடாமணியுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது .

Full book is available in Project Madurai website.

***

1

புலவரே! பெண்களை நம்பலாமா ?

2

புலவரே! முன்னொரு  காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்ததாம் ; இப்போது வருஷத்துக்கு மூன்று முறைதான் மழை பெய்கிறது; ஏனோ ?

3

அச்சாணி இல்லாத வண்டி போல எவை அழியும்?

4

பாம்பாட்டிக்கும், யானைப்பாகனுக்கும் ஆயுள் குறைவா ?

5

பெண்ணின் மனது எவ்வளவு ஆழமானது ?

6

புத்தியுள்ளவனே பலமானவன் என்பதற்கு நீவீர் சொல்லும் எடுத்துக்காட்டு என்னவோ?

7

ஏதோ ஒரு 13 பெயர்களைச் சொல்லி அவை போல குணம் இருக்க வேண்டும் என்று பாடுகிறீர்; அவை யாவை ?

8

உமது கருத்தில் பேயன், மூடன், கசடன் யார் யார்? அப்படியே பயனில்லாத ஏழு பொருட்களையும் சொல்லுங்கள்.

9

பெண்களின் அழகு எப்போது குறையும் ?

10

நரகத்துப் போவோர் யார் யார் என்று அருணகிரி நாதர் பாடிய திருப்புகழில் நீண்ட பட்டியல் உள்ளது. உங்கள் கருத்து என்ன புலவரே ?

**********************************

விடைகள்

1.ஆல கால விடத்தையும் நம்பலாம்

      ஆற்றை யும்பெருங் காற்றையும் நம்பலாம்

கோல மாமத யானையை நம்பலாம்

      கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்

கால னார்விடு தூதரை நம்பலாம்

      கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்

சேலைகட்டிய மாதரை நம்பினால்

      தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.       12

(ஆலகால விஷம், ஆறு, பிரசண்ட காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லத்தக்க வேங்கைப்புலி, யமனால் விடும் தூதர்கள், கள்ளர், வேடர், மறவர் இத்யாதி பேர்களையும் நம்பலாம். [ஆனால்] சேலைகட்டிய மாதரை (வேசியரை??) [நம்பொணாது] நம்புவரேல் தெருவில் நின்று தவிப்பார்கள்)

***

அந்தக் காலத்தில்

2.வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர்மழை

நீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை

மாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே       26

வேதம் ஓதுகின்ற அந்தணர்க்கு ஒரு மழை; நீதிநெறி தவறாத அரசர்க்கு ஒரு மழை, அழகிய கற்பிற் சிறந்த மங்கையர்க்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு மாதத்திலும் மூன்று மழை என்று சொல்லும்படி வருஷிக்கும் .

இப்போதோ

அரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை

வரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை

புருஷணைக் கொன்ற பூவையருக்கு ஓர்மழை

வருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே.       27

 (தற்காலம்] அரிசிவிற்பனை செய்கின்ற பிராமணர்களுக்கு ஒருமழை, நியாயந் தவறிய இராஜாக்களுக்கு ஒரு மழை, கணவனைக்கொன்ற பெண்களுக்கு ஒரு மழை. ஆக ஒவ்வொரு வருஷத்திலும் மூன்றுமழை என்று சொல்லும்படி பொழிகின்றன.

***

3.மூப்பிலாக் குமரி வாழ்க்கை முனிவிலா அரசன் வீரம்

காப்பிலா விளைந்த பூமி கரையிலா திருந்த ஏரி

கோப்பிலான் கொண்ட கோலம் குருவிலான்கொண்டஞானம்

ஆப்பிலாச் சகடு போலே அழியுமென் றுரைக்க லாமே.       36

தனக்கு மூத்தோர் இல்லாமல் தனியே வாழும் பாலியப்பெண் வாழ்வும், கோபம் இல்லாத அரசன் வீரமும் காத்தல் இல்லாமல் விளைந்த பூமியும், கரையில்லாதிருந்த ஏரியும், தன்னிடம் வேண்டியவைகள் அமைதல் இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசிரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும் [ஆகிய இவை யாவும் ] அச் சாணியில்லாத வண்டிபோல் அழிந்துபோம் என்று சொல்லலாம்.

****

4.அரவினை ஆட்டு வாரூம் அருங்களி றோட்டு வாரும்

இரவினில் தனிப்போ வாரும் ஏரிநீர் நீந்து வாரும்

விரைசெறி குழலி யான வேசியை விரும்பு வாரும்

அரசனைப் பகைத்திட் டாரும் ஆருயிர் இழப்பர் தாமே.     

பாம்பாட்டுகிறவர்களும், அரிய யானைப்பாகர்களும், இராத்திரியில் தனிவழி செல்கின்றவர்களும், தடாக ஜலத்தில் நீந்துகின்றவர்களும், வாசனை நிறைந்த கூந்தலையுடைய வேசியரை இச்சிக்கின்றவர்களும், அரசர்களைப் பகைத்துக் கொண்டவர்களும் தங்கள் அருமையான உயிரை இழப்பார்கள்.

****

5.அத்தியின் மலரும்வெள்ளை ஆக்கைகொள் காக்கை தானும்

பித்தர்தம் மனமும் நீரில் பிறந்தமீன் பாதந் தானும்

அத்தன்மால் பிரம தேவ னாலள விடப்பட்டாலும்

சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவரில்லை கண்டீர்;       44

அத்திமரத்தின் பூவையும், வெள்ளை நிறம் கொண்ட காக்கையும், பைத்தியக்காரர் மனத்தையும், ஜலத்தில் பிறந்த மச்சங்களின் பாதத்தையும், சிவன் விஷ்ணு பிரம்மதேவன் முதலியவர்களால் அளவிடப்பட்டு ஒருவேளை கண்டறிந்தாலும், சித்திரத்தை யொத்த கண்களையுடைய மாதரின்  நெஞ்சத்தின் அளவைக் கண்டு தெளிந்தவர்கள் உலகத்தில் இல்லை.

***

6.புத்திமான் பலவா னாவான் பலமுள்ளான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலும் இடரது வந்தே தீரும்

மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே

உற்றதோ கிணற்றில் சாயல் காட்டிய உவமை போலாம்.     

ஒரு சிங்கத்தை ஒரு முயல் கூட்டிக்கொண்டு போய் ஒரு கிணற்றில் அதன் சாயலைக்காட்டிக் கொன்ற உவமைக் கதை போல் எவ்வளவு வீரத்தன்மையுள்ளவனும் புத்தியில்லாவிடில் எந்த விதத்தினாலும் அவனுக்குத் துன்பமே வந்து சேரும். ஆதலால் புத்தி யுள்ளவனே பலவான் ஆவான். (இக்கதை பஞ்சதந்திரத்தில் உள்ளது.)

***

7.மயில்குயில் செங்கால் அன்னம் வண்டுகண் ணாடி பன்றி

அயிலெயிற் றரவு திங்கள் ஆதவன் அத்தி கொக்கோடு

உயரும்விண் கமலம்பன்மூன் றுறுகுண முடையோர் தம்மை

இயலுறு புவியோர் போற்றும் ஈசனென் றெண்ண லாமே.

மயில், குயில், சிவந்த கால்களையுடைய அன்னம், வண்டு, கண்ணாடி, பன்றி, கூர்மைபொருந்திய பற்களையுடைய பாம்பு, சந்திரன், சூரியன், சமுத்திரம், கொக்கு, உயர்ந்த ஆகாயம், தாமரை யாகிய –இப்பதின் மூன்று பொருட்களினிடத்திலுமுள்ள குணங்களை வகித்தவர்களை உலகத்தவரெல்லாம் போற்றும் ஈசனென்று எண்ணலாம்.

***

8.கருதிய நூல் கல்லாதான் மூடனாகும்

      கணக்கறிந்து பேசாதான் கசடனாகும்

ஒருதொழிலும் இல்லாதான் முகடி யாகும்

      ஒன்றுக்கும் உதவாதான் சோம்ப னாகும்

பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்

      பேசாம லிருப்பவனே பேய னாகும்

பரிவு சொல்லித் தழுவினவன் பசப்ப னாகும்

      பசித்தவருக் கிட்டுண்ணான் பாவி யாமே    

மதிக்கத்தக்க நல்ல சாஸ்திரங்களைக் கல்லாதவன் மூடன்; அளவறிந்து பேசாதவன் கசடன்; ஒரு தொழிலும் இல்லாதவன் மூதேவி; ஒன்றுக்கும் உதவாதவன் சோம்பன்; மரம்போல வணங்காது அறிவுடையோர் முன்பாக நின்று பேசாமலிருப்பவனே பேயன்; (அன்பின்றி) அன்பு போல் காட்டித் தழுவுகின்றவன் பசப்பன்; பசியாளருக்குக் கொடுத்து உண்ணாதவன் பாவியாம்.

ஆபத்துக் குதவாப் பிள்ளை அரும்பசிக் குதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டீர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும் தானே.      

ஆபத்துக்கு உதவாத பிள்ளையும், அரிய பசிக்கு உதவாத சாதமும், தாகவெப்பத்தைத் தீர்க்காத தண்ணீரும், வறுமை யறியாமல் (அதிக செலவு செய்யும்] மனைவியும், கோபத்தை அடக்காத அரசனும், ஆசிரியன் உபதேசித்த மொழிகளைக் கொள்ளாத மாணாக்கனும், பாவங்களைத் தீர்க்காத தீர்த்தமும், [ஆகிய] இந்த ஏழினாலும் பயன் இல்லை.

****

9.கெற்பத்தால் மங்கையருக் கழகு குன்றும்

      கேள்வியில்லா அரசனால் உலகம் பாழாம்

துற்புத்தி மந்திரியால் அரசுக் கீனம்

      சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கீனம்

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்

      நன்மைசெய்யத் தீமையுடன் நயந்து செய்வார்

அற்பரோ டிணங்கிடில் பெருமை தாளும்

      அரியதவம் கோபத்தால் அழிந்து போமே.      

மங்கையருக்குக் கருப்பத்தால் அழகு குறையும் [நியாய முறை] வினவாத அரசனால் உலகு பாழாகும் இராஜாங்கத்துக்கு துர்ப்புத்தியுள்ள மந்திரிகளால் அரசுக்குக் கெடுதியுண்டாகும். அறிவில்லார்க்கு நல்ல புத்திகளைச் சொன்னாலும் கேளார். நன்மை செய்பவருக்கு உடனே தீமையையே பாராட்டிச் செய்வார். இவ்விதமான அற்பர்களோடு கூடினால் பெருமை குறையும். கோபத்தினால் அருமை யாகிய தவங்களும் சிதைந்து போகும்.

****

10.நரகம் அடைபவர்

தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,

அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,

சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,

 செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.

–subham—

Tags- விவேக சிந்தாமணி ,10 கேள்விகள்

கடவுள் செய்த கற்பழிப்பு! பெரிய விஞ்ஞானச் செய்தி! (Post No.16,117)

Written by London Swaminathan

Post No. 16,117

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நவக்கிரக துதியில் 8 விஞ்ஞான உண்மைகள்

ஜபா குஸும ஸங்காசம் என்னும் சம்ஸ்க்ருத நவக்கிரஹ துதியைத் தினமும் படிப்போர் அமெரிக்க விண்வெளி ஸ்தாபனமான நாசாவும் (NASA= National Aeronautics and Space Administration) அறியாத மிகப்பெரிய உண்மைகளை எடுத்துச் சொல்கின்றனர் ! பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் நர்மதாயை நமஹ மந்திரத்தில் மிகப்பெரிய வரலாற்றுச் செய்தியை தினமும் நினைவுபடுத்துகின்றனர்  (சில பிராமணர்கள் இந்த மந்திரத்தைச் சொல்வதில்லை) . அந்தக்காலத்தில் நாகா பழங்குடி மக்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே குறைந்தது நான்கு தலைமுறைகளுக்கு மோதல் நடந்தது; இறுதியில் ஜனமேஜயன் என்ற மன்னன் நாகர்களை படுகொலை செய்யத் துவங்கியவுடன் ஆஸ்தீக மகரிஷி தலையிட்டு நாகா– யாதவ சமாதான உடன்படிக்கையைச் செய்வித்தார்; இதன் விளைவாக தென் அமெரிக்காவில் மாயா நாகரீகம் உருவானது (இதுபற்றி மாயா நாகரீகம் பற்றிய எனது கட்டுரைகளிலும் அவைகளைக் கொண்ட எனது புஸ்தகத்திலும் உள்ளது) . புறநானூற்றிலும் புராணங்ககளிலும் கூறப்படும் கட்டை விரல் அளவிலான வாலகில்ய முனிவர்கள் சூரியனை நாள்தோறும்  வலம் வருவது பற்றி மட்டும் இன்னும் சரியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது அல்ட்ரா வயலெட் கிரணங்களைத் தடுக்கும் கேடயம்/ ஷீல்ட் என்று ஊகித்து எழுதியுள்ளேன் (பழைய கட்டுரைகளைக் காண்க) .

NASA stands for the National Aeronautics and Space Administration. It is an official agency of the United States government. This group is in charge of the country’s space program, space travel, and scientific research on airplanes and flight.

***

இப்போது கடவுளின் கற்பழிப்பைக் கண்டு மகிழ்வோம்

இந்து மதத்தில் ஏதேனும் செக்ஸ் SEX விஷயங்கள் வந்தால் வெள்ளைக்காரர்களுக்கு ஒரே குஷி ! கிளுகிளுப்பு ! உடனே அதை வெளியிட்டு அவர்களுடைய பொன்மொழிகளையும் திருவாய் மலர்ந்து கொட்டியிருப்பதைக் காணலாம் . பிரம்மா, ஒரு பேரழகியைப் படைத்தார் அவள் பெயர் சதரூபா; அவள் படைத்த மகள் மீதே அவர் காதல் கொண்டார் . அவள் போன பக்கம் எல்லாம் அவருடைய தலை திரும்பியது ; அதனால் அவருக்குப் பல தலைகள். இப்படி ஒரு கதை ! ரிக் வேதத்தில் பல SEXY செக்சி (இந்திராணி – வ்ருஷாகபி) உரையாடல்கள் உள்ளன . இவைகள் எல்லாம் நம்முடைய காமன் பண்டிகை தெருக்கூத்து போன்ற நாடக வசனங்கள் ; அவை நாடகம் என்று அறியாத வெள்ளைத்  தோல்கள், அதை செக்ஸ் SEX என்று எழுதி மகிழ்கின்றன ! வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலைப் படங்களுடன் வெளியிட்டு மகிழ்கின்றன; அதே காலத்தில் எழுந்த பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தைக் கண்டு மகிழ்வதில்லை ; இது வெள்ளைக்காரன் அணுகுமுறை!

பல விஷயங்களை பாமர மக்களுக்காக இந்துக்கள், சிம்பாலிக் SYMBOLIC காகக், கதைகளாகச் சொல்லுவார்கள் ! கிரஹணம் பற்றிச் சொன்னால் புரியாது என்பதற்காகப் பாம்பு விழுங்குகிறது என்பார்கள்; இது 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது .

இப்போது ஒரு கற்பழிப்புக் கதையைப் பார்ப்போம்.

பிருஹஸ்பதியின் (குரு JUPITER அல்லது வியாழன் கிரஹம்)  அழகான மனைவி தாரா ; அவளைச் சந்திரன் (நிலவு MOON அல்லது மூன்) கடத்தி சென்றான் ; உடனே வியாழன் போய், பிரம்மாவிடம் ஒரு COMPLAINT கம்பளைண்ட் / புகார் மனு கொடுத்தார் ; அவர் சமாதானம் செய்தவுடன் சந்திரன் , தாராவை விடுவித்தான் ; என்ன அநியாயம்? வீட்டுக்கு வந்த அந்த தாரா கர்ப்பவதி! பிள்ளைத் தாய்ச்சி !

அடி போடீ , வெளியே” என்று பிருஹஸ்பதி / வியாழன் வெளியே விராட்டிவிட்டான் ; அவளுக்கு மிக அழகான குழந்தை பிறந்தது ; அதற்குப் புதன் என்று பெயரிட்டாள் ; அதன் அழகைக் கண்டு இருவரும் இது என் பிள்ளை ; எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்கள் . இப்படி ஒரு புராணக்கதை .

இது உண்மையில் பல கோடி , பல பில்லியன், ஆண்டுகளுக்கு முன்னர் சோலார் சிஸ்டத்தில் — SOLAR SYSTEM சூரிய மணடலத்தில் நடந்த  செயல் ! புதன் கிரஹம் MERCURY எப்படி உருவானது சந்திரன் எப்படி தோன்றியது என்பதை விளக்குகிறது .

அதாவது ஒரு குட்டி  கிரஹம் அல்லது பெரிய வால் நட்சத்திரம் (COMET or ASTEROID) இன்னுமொரு கிரகத்தை அணுகும்போது மாற்றங்கள் நிகழும். இப்போது சூரிய மண்டலத்தில் புதன் முதல் புளூட்டோ வரை சுற்றும் கிரஹங்கள் ஆரம்பத்திலேயே இப்படி வரவில்லை.

குரு கிரஹத்துக்கு அருகில் இன்னுமொரு பெரிய கிரஹம் இருந்தது ; அதாவது தாரா என்னும் அழகி ! இப்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரன் அப்போது அந்த கிரகத்துடன் மோதியது (அதாவது தாராவை சந்திரன் கற்பழித்தான்) ; இந்த மோதலின் விளைவாக வேறு ஒரு குட்டி (புதன்) பிறந்தது . அந்தக் குட்டிப்  பிள்ளை சூரியனுக்கு அருகில் இப்போது சுற்றி வருகிறது !  சந்திரனோ பூமிக்கு அருகில் வந்துவிட்டது . இதைக் கற்பழிப்புக் கதையாக– புதிய பிள்ளை பிறந்ததாகப் –புராணங்கள் எழுதின; அந்தக்காலத்தில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும்.

சூரியனைச் சுற்றி நிறைய குட்டி கிரகங்கள் ASTEROIDS சுற்றி வருகின்றன ; இவை தவிர ஜூப்பிட்டர் என்னும் (வியாழன், குரு, பிருஹஸ்பதி ) மிகப்பெரிய கிரஹத்தைச் சுற்றி சந்திரன் போன்ற மிகப்பெரிய துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன . இந்த சந்திரன்களின் எண்ணிக்கை 115 MOONS FOR JUPITER.

நிலவு எப்படி உருவானது என்பதையும் நம் புராணங்கள் எழுதி வைத்துள்ளன .

பாற்கடலைக் கடைந்த போது, நிலவு உருவானது ; இப்போது பசிபிக் மஹா சமுத்திரத்தில் நிலவை வைக்கும் அளவுக்கு அதன் விட்டம் உள்ளதைக் கண்டு அது பூமியிலிருந்து பிய்த்து எறியப்பட்ட துண்டு துன்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்; இவை எல்லாம் பில்லியன்– கோடி கோடி ஆண்டுகளில் நடந்தவை. இதை நாம் பாற்கடலைக் கடைந்த போது நிலவும் வெளியே வந்தது என்று சொல்கிறோம் .

பாற்கடல் என்பதை மில்கி வே காலக்சி MILKY WAY= MILKY OCEAN  என்று பொருள்கொள்ள வேண்டும்

சுருங்கச் சொன்னால், சோலார் சிஸ்டம் ஆரிஜினை ORIGIN OF SOLAR SYSTEM விளக்குவதே இந்துக் குழந்தைகள் நாள்தோறும் சொல்லும் நவக்கிரஹ ஸ்தோத்திரம்!

***

எட்டு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு எட்டு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

கட்டுரைக்கான மேற்கோள்கள்
1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)
இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,
நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

–subham—

Tags- கடவுள் செய்த கற்பழிப்பு, விஞ்ஞானச் செய்தி, நவக்கிரக துதி, 8  விஞ்ஞான உண்மைகள்

COSMOLOGY in HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 102; இந்து மத கலைச்சொல் அகராதி-102 (Post.16,116)

Written by London Swaminathan

Post No. 16,116

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

T words are as follows; English alphabetical order is followed in Hindu Dictionary

 This is Part 102

Taittiriya 

The Taittiriya Samhita is an ancient sacred Vedic text. It belongs to the Krishna (Black) Yajurveda. It contains seven books of sacrificial hymns, mantras, and ritual instructions. The Taittiriya Upanishad, belonging to the Krishna Yajur Veda, is a major Upanishad that deeply analyzes the nature of the Self (Ātman), the structure of human personality, and the realization of ultimate reality (Brahman). In traditional commentaries (Bhāshyam), especially those attributed to Adi Shankaracharya, the text is explained as a systematic guide to Self-realization through inquiry, discipline, and meditation. One of its most famous teachings is the doctrine of the Five Sheaths (Pancha Kosha) — showing that the true Self is beyond the body, mind, and intellect. It also declares the powerful statement: “Satyam Jnanam Anantam Brahma” (Brahman is Truth, Knowledge, Infinity). The Upanishad guides seekers from outer personality to inner awareness, ultimately revealing that bliss (Ananda) is the very nature of the Self.

The text is divided into three main chapters called vallis: [1]

  • Shiksha Valli: Focuses on phonetics, pronunciation, ethical values, and the famous convocation address given to graduating students.
  • Brahmananda Valli: Explores the nature of Brahman (infinite reality) and introduces the doctrine of the five sheaths (Pancha Koshas).
  • Bhrigu Valli: Relates the story of sage Bhrigu’s gradual realization of Brahman through deep inquiry and meditation (tapas)

***

Tala dwaja – Palmyra Flag of Balarama, Krishna’s elder brother. This flag is referred to even in Tamil Sangam literature that is 2000 years old.

***

Takshaka

Chief of the Naga tribe. He was away from Khandava forest when Krishna and Arjuna burnt it down. When Shrungi , son of Shamika Rishi, cursed king Parikshit would die by a snake bite within seven days , it was Takshaka who carried out the task. He hid himself in a fruit basket that was carried out into the palace and assassinated Parikshit. Because of this Nagas were by Janamaejayan . Astika rishi stopped the tribal massacre. Nagas, under Maya, migrated to central America and south America and established Mayan civilization.

*** 

Tamas, Tamo guna

There are three qualities according to Bhagavad Gita and other scriptures.  Sattva (purity and balance) and Rajas (activity and passion) and Tamasa.

Lord Krishna explains in Chapter 14  of Bhagavad Gita that the material world operates through three qualities or gunasSattva (goodness), Rajas (passion), and Tamas (ignorance). Together, they bind the eternal soul to the physical body

When Tamo Guna is too strong in a person, it shows up as:

  • Laziness and lack of energy
  • Ignorance and confusion
  • Procrastination and sleeping too much
  • Resistance to change or movement
  •  

More in Bhagavad Gita chapter 14.

***

Tamraparani

Tamraparni River of southern India rises in the Pothigai hills, flows through Tirunelveli, supports irrigation projects, biodiversity and drains into the Gulf of Mannar.

The old Tamil name of the river is Porunai. From the source to sea, the river is about 128 kilometres (80 mi) long . At least seven tributaries including Manimuthar, Chitra Nadhi pours water into it. Importants temples of Lord Vishnu and Lord Siva are on the banks of this river. Sri vaikundam, Alar Tirunagari, Papanasam are among them. Nine Shiva temples grouped under Nava Kaliasam, Nine Navagraha temples grouped under Nava Tiruppathi  are in this region.

***

Tandava

Tāṇḍava (ताण्डव) refers to “class dance” and was created by Taṇḍu after receiving instructions from Śiva, according to the Nāṭyaśāstra chapter 4. Accordingly, “after inventing the Recakas, Aṅgahāras and Piṇḍīs, Śiva communicated them to the sage Taṇḍu who in his turn made out of them dance together with songs and instrumental music; and hence this dance is known as tāṇḍava (i.e. of Taṇḍu’s creation.

Tāṇḍava (ताण्डव) refers to the dance of Lord Kālāgni-Rurdra appearing at the time of Prākṛta-Pralaya (“dissolution at the end of the span of life of Brahmā”), according to the 10th century Saurapurāṇa: one of the various Upapurāṇas depicting Śaivism.—Prakṛta-pralaya occurs when the span of life of Brahmā is over. The span of life of Brahmā continues for two parārdhas. At the end of the two parārdhas Lord Kālāgni-Rurdra having burnt the Universe resorts to Tāṇḍava-dance. Then the earth with its qualities merge in water, water in turn merges in Agni, Agni merges in vāyu while vāyu merges in ākāśa.

THIS SEQUENCE IS IN SANGAM TAMIL PURANANURU VERSE AND TEVARAM VERSE.

Tandava is a vigorous, divine dance performed by the Hindu god Shiva. It symbolizes the cosmic cycle of creation, preservation, and destruction, as well as the eternal flow of birth, life, and death.

The Shiva Tandava Stotram is a powerful Sanskrit hymn that praises Lord Shiva and his cosmic dance of creation and destruction. It is traditionally attributed to Ravana, the demon king of Lanka and a supreme devotee of Shiva. Ravana tried to lift Mount Kailash out of pride, but Shiva pressed the mountain down with his toe, trapping Ravana underneath. To appease Shiva, Ravana composed and sang this hymn; Impressed by his deep devotion and the resounding rhythm of the poetry, Shiva released Ravana and blessed him with immense power and wisdom.

***

Taraka Asura

Chief of the Daitya clan  who had fought against the devas. Kumara , lord skanda killed this demon..after his death his sons tarakaksha , kamalaksha, vidyunmali tried to take revenge but failed. Lord Siva destroyed their space stations. Puranas describe them as hanging palaces in the sky. 

***

Tara, Rape Story is Astronomy/Cosmology!

Name of three women. Tara, wife of Brihaspati.

Tara wife of Vanara king Vali;

Tara , Buddhist Goddess.

Tara and Cosmology – Origin of Planet Mercury

Tara was wife of Brihaspati (Jupiter). once Atri’s son Chandra (moon) abducted her and forced himself upon her. When Brihaspati complained about this to Brahma, Tara was released. But when Brihaspati found out that Tara was pregnant, he forced her to get rid of the life within her. However when they saw the divine child, both Chandra and Brihaspati claimed as his. Upon questioning Tara admitted that the child Budha was Chandra’s.

This is nothing but an astronomical  or cosmological report. Hindus knew what happened billions of years ago. Jupiter (Brihaspati) approached a big heavenly body (Moon), Moon lost one part and planet Mercury came out of Moon. This approach and the repercussions are called Rape of Tara by Moon.

Tara, wife of Jupiter= Comet or Asteroid; there are lots of asteroids in the Asteroid Belt; also Jupiter has very big satellites like Moon. Total number of Moons for Jupiter 115!

Abduction by Chandra/Moon= Gravitational pull;

Rape of Tara by Moon= Clash between two heavenly objects;

Birth of a Baby= Origin of Mercury, a new planet.

(Jupiter has 115 moons that have been officially recognized by the International Astronomical Union, as of August 2026. But the number doesn’t capture the complexity of the Jovian system of moons, rings and asteroids. The giant planet has thousands of small objects in its orbit. Scientists are getting so good at spotting tiny moons orbiting distant, giant planets that the International Astronomical Union has decided the smallest will no longer be given mythological names unless they are of “significant” scientific interest.)

If scientists get some samples from moon, they will know Hindus are right.

The story of Moon is also told in Hindu scriptures. When the Milky Way galaxy (Hindus call it Milky Ocean) was disturbed (when Milky Ocean was churned), the moon came out.

Now scientists knew that Moon fits into Pacific Ocean. So when the earth was disturbed (by some asteroid or a comet), it split and one part went out as moon. Then the Story of Tara followed.

Milky Way Galaxy= Milky Ocean of Puranas;

Churning of Milky Ocean by Devas and Asuras= Gravitational Disturbance or Changes in Milky Way.

Moon came out of Milky Ocean according to Puranas.

If one reads the Navagraha Stotra one can easily understand the Origin of Solar System. Everyday millions recite this hymn. It

****

ORIGIN OF MOON FROM EARTH/PACIFIC OCEAN

दधिशंखतुषाराभं क्षीरोदार्णव संभवम् I

नमामि शशिनं सोमं शंभोर्मुकुट भूषणम् II २ II

Dhadhi sanka Thushaaraabham – Ksheero Dhaarnava Sambhavam

Namaami sasinam Somam – Sambhor makuta Bhooshanam

The one who has the hue of curd and icebergs, one who emerges from the milky ocean, Chandra who adorns Shiva, I prostrate. that Chandra.

****

ORIGIN OF PLANET MERCURY

प्रियंगुकलिकाश्यामं रुपेणाप्रतिमं बुधम् I

सौम्यं सौम्यगुणोपेतं तं बुधं प्रणमाम्यहम् II ४ II

Piryangu kali Kaasyaamam – Roope’naa Prathimam Budham

Sowmyam sowmya Gunopetham – Tham Bhudham Pranamaam Yaham

The one who is dark like the bud of Priyangu flower, One who is unequalled in beauty and is intelligent, And the son of Chandra, One who is peaceful, I prostrate that Budha.

To be continued……………………

Tags- origin of mercury, origin of moon, 102 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 102; இந்து மத கலைச்சொல் அகராதி-102

ஆயிரம் பொன்மொழிகள்! (161-180) Post No.16,115)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,115

Date uploaded in London – 22 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆயிரம் பொன்மொழிகள்! (161-180) 

ச. நாகராஜன்

பொன்மொழிகள் தொடர்கின்றன… 

161. I CAN

I Ought, Therefore I CAN.   – Kant

Politeness

An Englishman once said to the artist, James Mcnell Whistller, that the politeness of the French was ‘all on the surface’, to which he replied: ‘And a very good place for it to be’.

Professional Man – Amateur Man

A professional is a man who do is job when he doesn’t feel like it. An amateur is a man who can’t do his job when he does feel like it.     – James Agate

Immortal – Dream

If we are immortal souls, we are immortal here: death is but our great progression; let us begin to live as the immortals should.    – William Smith

Heart

My heart is wax to be moulded as she pleases, but enduring as marble to retain.   – Cervantes

Heart – Love

One loving heart sets another on fire.   – St Augastine

Gentleman

I would rather prove myself to be a gentleman by being learned and humble, valiant and inoffensive, virtuous and communicable, than by a fond ostentation of riches.   – Izaak Walton

Gentleman – Mind – Vigour – Softness

If you would fall into any extreme, let it be on the side of gentleness. The human mind is so constructed that it resists vigour and yields to softness.    – S. Francis de Sales

Fool – Life

Long is the night to him who is awake; long is a mile to him who is tired; and long is life to the fool who does not know the true law.     – Dhammapada

Futility

A constant smirk upon face and a whiffling activity of the body are strong indications of futility. Whoever is in a hurry, shows that the thing he is about is too big for him.   – Lord Chesterfield

171. Purpose – Wish

Great men have purposes: Others have wishes.

Revenge

It is certain that a man who studieth revenge, keeps his own wounds green, which would otherwise heal and do well.                                                                                                – Bacon

Reform – Public Opinion

It is not the many who reform the world; but the few who rise superior to that Public Opinion which crucified Our Lord many years ago.                – Charles Kingsley

Rich and Poor

There are two things needed in these days, first for rich men to find out how poor men live, and second, for poor men to know how rich men work.   

Routine

Routine as a law is deadly. Routine as a resource in the temporary exhaustion of impulse and suggestion is often our salvation.                – Phillips Brooks

Prupose

A man without a purpose is soon sown at zero.                    – Carlyle

நல்ல குறிக்கோள் நயவா மனிதனிலை

ஒல்லி யிழிந்து விழும்               –  உலக உள்ளங்கள் (484)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetry

You will find poetry nowhere, unless you bring some with you.    – Joubert

கவியின் கனிவெங்கும் காணாய் உனதுன்

கவியுணர்வில்லை எனின்                   –  உலக உள்ளங்கள் (243)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetry

Poetry is the record of the best and happiest moments of the happiest and best minds.  – Shelley

ஆன்ற பெரியோர் அனுபவ வாழ்வுகளின்

சான்றுகளே காவியங்கள்                 –  உலக உள்ளங்கள் (750)

                                         ஜெகவீரபாண்டியனார்

Poetical Mind

A right moral state of heart is the formal and scientific condition of a poetical mind.  – Newman

நீதிநெறி நிறைந்த நெஞ்சமே நேரேசீர்

ஓது கவியின் உளம்                       –  உலக உள்ளங்கள்

                                         ஜெகவீரபாண்டியனார்

180. Idleness

Idleness is the key of beggary, and the roof of all evil.   – Purgeon

சிறுமைத் துயரெல்லாம் சேரவரும் சோம்பல்

வறுமைக் குரிய வழி                     –  உலக உள்ளங்கள் (134)

                                         ஜெகவீரபாண்டியனார்

***

Tirukkural Encyclopaedia- Chapter 25 (Kural 241-250) – Post No.16,114

Written by London Swaminathan

Post No. 16,114

Date uploaded in London – 21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted:

Kural 245 shows that Valluvar and other Hindus knew that only earth has got an atmosphere (with oxygen). I say this because in Puram verse 20 and 365 also they say it clearly. Whenever they described the land mass, they always had the epithet “that which is surrounded by sea”. It shows they know the geography of the whole earth and the atmosphere above. There is another proof where they say, “all rivers run towards sea and all payers go to one God”. Tis shows they know hundreds or thousands of rivers around the world.

***

Compare Bhagavad Gita 6-40 with Kural 245

श्रीभगवानुवाच ।
पार्थ नैवेह नामुत्र विनाशस्तस्य विद्यते ।
न हि कल्याणकृत्कश्चिद्दुर्गतिं तात गच्छति ॥ 40

śhrī bhagavān uvācha
pārtha naiveha nāmutra vināśhas tasya vidyate
na hi kalyāṇa-kṛit kaśhchid durgatiṁ tāta gachchhati

BG 6.40: The Supreme Lord said: O Parth, one who engages on the spiritual path does not meet with destruction either in this world or the world to come. My dear friend, one who strives for God-realization is never overcome by evil.

***

***

Compare the style of Kural247 and BG 4-31 (this world and the world above)

Bhagavad Gita Chapter 4, Verse 31 (4.31) states that those who live a life of sacrifice and partake of its spiritual remnants attain the eternal divine, while those who perform no sacrifice cannot find happiness in this world or the next

Hindus like Valluvar think the same way; they worry about life in this world and the world above!

***

Linguistic points

Ulaka= Lokam ; Sanskrit and Tamil have the same parent language.

More interesting is POORIYAAR (Kural 241) is the opposite of Arya;

Arya = good, cultured; Spuriya= Wicked, bad.  I say this because we have similar word in English SPURIOUS!

Synonyms: Fake, false, bogus, counterfeit.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

Part 43

Kindliness; Mercy ; Ascetic Virtue; The Possession of Benevolence; துறவறவியல் – ASCETIC VIRTUE
25. அருளுடைமை – Compassion

241.A tender and merciful heart is the loveliest and the most precious of all our possessions; for are not the riches of this earth found among the vilest of men?- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

241.The best of all possessions is the wealth of compassion;

For the meanest of men too possess worldly wealth- S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

241
Wealth ‘mid wealth is wealth ‘kindliness’;
Wealth of goods the vilest too possess.
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men – Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***
241.The wealth of wealth is wealth of grace
Earthly wealth e’en the basest has Suddhananda Bharathiyar- SB.       

***

241. Wealth of kindliness is real wealth. Material wealth is possessed by even the basest- .EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

241.The wealth of kindliness is wealth indeed;

For even vicious men have worldly wealth- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***
241. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள

XXXXXXXXXXXXXXXXXXXXX

242.Search within yourself and seek in mercy a tower of strength; for do not all the tenets of the world proclaim that she is the surest and safest guide in your journey to the unknown?- ANM+2

***

242.The search for virtue’s path, cutting across all religions and moral teachings,

Will leave invariably to spiritual deliverance through compassion – SMD

***

242
The law of ‘grace’ fulfil, by methods good due trial made,
Though many systems you explore, this is your only aid.
(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.) – GUP

***

242.Seek by sound ways good compassion;
All faiths mark that for-salvation -SB       

***

242.After due consideration of what will stand you in good stead, be compassionate. Nothing but compassion can sustain you—EVS

***

242.Walk the good way, consider and be kind;

Though many ways you study, this your aid will be- HAP

***

242. நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

XXXXXXXXXXXXXXXXXXXX

243.They enter not the dark and dreadful valley of the shadow of death whose hearts glow with tender light of mercy- ANM+2

***

243.Men with hearts, overflowing with gentle compassion, will never

Have to go to the nether-world of darkness- SMD

***

243
They in whose breast a ‘gracious kindliness’ resides,
See not the gruesome world, where darkness drear abides.
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness. – GUP

***

243.The hearts of mercy shall not go
Into dark worlds of gruesome woe-SB              

***

243.Those who have compassion will never be cast into the hell of darkness and sorrow—EVS

***

243.There is no dark and dismal hell ordained

For those whose heart is full of kindliness- HAP

***
243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

XXXXXXXXXXXXXXXXXXX

244.The shoals and sand banks that a heart dreads in its voyage to the promised land beyond the clouds are not for the soul which loves all that lives on earth— ANM+2

***

244.The besetting sins that endanger the soul, will not approach those,

Who encompass all living creatures with their love- SMD

***

244
Who for undying souls of men provides with gracious zeal,
In his own soul the dreaded guilt of sin shall never feel.
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures) – GUP

***

244.His soul is free from dread of sins
Whose mercy serveth all beings-SB              

***

244.The wise say that those who protect other living beings with compassion need have no fear of evil for their own souls—EVS

***

244. மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

XXXXXXXXXXXXXXXXXXXXXX

245.Sorrow never afflicts a merciful soul; and to this, the vast teeming earth, round which the wanton winds do merrily blow, is a mighty witness- ANM+2

***

245.The vast and flourishing wind-blown earth is witness to the fact,

That those who practise compassion will never be subjected to suffering- SMD

***

245
The teeming earth’s vast realm, round which the wild winds blow,
Is witness, men of ‘ grace’ no woeful want shall know.
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted. – GUP

***

245.The wide wind-fed world witness bears:
Men of mercy meet not sorrows-SB            

***

245.The compassionate know no misery. this will be borne out by all in this wide world—EVS

***
245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி

XXXXXXXXXXXXXXXXXXX

246.Behold an unloving heart that is blind to mercy, and doth inequity; the wise say of him that he has forgotten the bitter  lesson which is learnt in his former birth, in the school of affliction- ANM+2

***

246.Men of no compassion, who indulges in unkindness to all creatures,

Will so forget themselves as to lose the means of reaching heaven- SMD

***

246
Gain of true wealth oblivious they eschew,
Who ‘grace’ forsake, and graceless actions do.
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.) – GUP

***

246.Who grace forsake and graceless act
The former loss and woes forget-SB              

***

246.The hard hearted who indulge in cruelties are those who have forgotten the sufferings they underwent in consequence of deviating from the path of virtue—EVS

***

246. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

247.The kingdom of heaven is not for the soul devoid of mercy, even as the joys of this earth are not for those sunk in the  very depths of poverty- ANM+2

***

247.Even as happiness in the world depends wholly on material possessions,

Happiness in the world beyond will surely depend on compassion- SMD

***

247
As to impoverished men this present world is not;
The ‘graceless’ in you world have neither part nor lot.
As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness. – GUP

***

 247.This world is not for weathless ones
That world is not for graceless swines-SB          

***

247.As those without riches can have no enjoyments in this world so also are those without compassion

 Denied the blessings of the world above—EVS

***

247.You world’s joy is not for those who kindness lack,

As the world’s joy is not for those who riches lack- HAP

***

 247. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
248.Some day fortune may smile on the ragged poor; but only endless gloom awaits a loveless heart- ANM+2

***

248.Worldly wealth once lost may be recouped,

But compassion lost cannot be made up- SMD

***

248
Who lose the flower of wealth, when seasons change, again may bloom;
Who lose ‘benevolence’, lose all; nothing can change their doom.
Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no change. – GUP

***

248.The wealthless may prosper one day;
The graceless never bloom again-SB         

***

248.The poverty stricken may sometimes prosper, but those without the trace of compassion will be runed without redemption—EVS

***

248. Those lacking wealth one day  may prosperous be;

Those lacking kindness for ever will lack all- HAP

***

248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

XXXXXXXXXXXXXXXXXXXXXX

249. A merciless being striving to walk in virtue is like a bewildered one catching the glimpse of truth- ANM+2

***

249.It is easy to see that clear understanding is essential for acquiring knowledge;

Nut it is not so easy to visualise that compassion is essential for goodness- SMD

***

249
When souls unwise true wisdom’s mystic vision see,
The ‘graceless’ man may work true works of charity.
If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom. – GUP

***

249.Like Truth twisted by confused mind
Wisdom is vain in hearts unkind-SB              

***

249.The virtue of the man who has no compassion is as rare as the perception of truth by those who have no wisdom—EVS

***

249.Ponder the charity of those who kindness lack;

It is like Truth’s vision seen by muddled minds- HAP

***
249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

250.Knit not your brows against the weak in your insolent might, but remember the day when your own cheeks turned pale with fear in the presence of a mightiest foe— ANM+2

***

250.When one tends to become cruel to those under his control

One should think of himself cowering before stronger men- SMD

***
250
When weaker men you front with threat’ning brow,
Think how you felt in presence of some stronger foe.
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself. – GUP

***

250.Think how you feel before the strong
When to the feeble you do wrong-SB              

***

250.When a man is about to pounce upon another weaker than himself, let him remember how he trembled in the presence of those superior to him—EVS

***
250. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.

–subham—

Tags- Kindliness; Mercy ; Ascetic Virtue; The Possession of Benevolence; துறவறவியல் – ASCETIC VIRTUE
25. அருளுடைமை – Compassion, part 43, Tirukkural Encyclopaedia- Chapter 25 (Kural 241-250)

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்;  ஓர் ஆய்வு-  Part 24 (Post.16,113)



 

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,113

Date uploaded in London –   21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்;  ஓர் ஆய்வு  –  24 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

இங்கு மீண்டும் ஒரு கேள்வி எழலாம். ஹனுமன் இராமனை எப்போது அறிந்து கொண்டானோ, அப்பொழுதே சுக்ரீவன் உங்கள் அடியார்களில் ஒருவன் என்று சொல்லி இருக்கலாமே? என்று. சந்தேகமில்லாமல் சுக்ரீவன் இராமனின் பக்தன் தான். துளசிதாசரே சொல்கிறார் ‘हम सब सेवक अति बड़भागी। संतत सगुन ब्रह्म अनुरागी॥ निज इच्छा अवतरड प्रभु सुर महि गो द्विज लागि। सगुन उपासक संग तब रहहिं मोक्ष सुख त्यागि॥ நாங்கள் எல்லோரும் உங்கள் சேவகனாக இருப்பதில் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். தேவர்கள், பூமி, பசு, மற்றும் ப்ராம்மணர்களுக்காக இறைவன் தனது விருப்பபடி அவதாரம் எடுக்கிறான். அந்த இராமனுக்குச் சேவை செய்வதில் மோக்ஷத்தையும் தியாகம் செய்யத் தயாராக அடியார்கள் உள்ளனர்.. ஆக இராமனைச் சந்திக்காமலேயே சுக்ரீவன் இராம பக்தனாக இருப்பதில் வியப்பில்லை. பல அடியார்கள் இறைவனைச் சந்திக்காமலேயே அவரது பக்தனாக இருந்து அவருக்குச் சேவை செய்வதில்லையா?

तेहि सन नाथ मयत्री कीजे। दीन जानि तेहि अभय करीजे॥

सो सीता कर खोज कराइहि। जहँ तहँ मरकट कोटि पठाइहि॥2

एहि बिधि सकल कथा समुझाई। लिए दुऔ जन पीठि चढ़ाई॥

தாங்கள் சுக்ரீவனுடன்  நட்புக் கொண்டு  அவருக்கு அபயம் அளித்து அவரது  பயத்தைப் போக்குவீராக. அவர் ஆங்காங்கே கோடிக்கணக்கான வானரங்களை அனுப்பி அன்னை சீதையைக் கண்டுபிடிக்க உதவுவார். இவ்வாறு கூறிவிட்டு இராமன் இலக்ஷ்மணன் இருவரையும்  முதுகில்  சுமந்து சுக்ரீவனிடம் அழைத்துச் சென்றான்.

இங்கு ஹனுமன் ஒரு உத்தம தூதனைப் போல் நடந்து கொள்கிறான். சுக்ரீவன் வானர அரசன்.  சாஸ்திரங்கள் அறிந்தவன். நீதி மான். மனைவியைப் பிரிந்து வாழ்பவன் என்று இராமனிடம் சுக்ரீவனின் குண நலன்களை எடுத்துச் சொல்கிறான். இராமனையும் இலக்ஷ்மணனையும் பார்த்த சுக்ரீவன் ஓடுவதற்குத் தயாராக இருந்தான். அத்தகைய சுக்ரீவனுடன் இராமனுக்கு நட்பு ஏற்படுத்த முயற்சி செய்கிறான். தாங்கள் அவனுக்கு அபயம் அளித்தால் அவன் தங்களுக்கு நிச்சயம் கைம்மாறு செய்வான்..

அன்னை சீதையை அபஹரித்துச் சென்ற அரக்கனை இந்த அடர்ந்த காட்டில் நீங்கள் இருவர் மட்டும் தேடுவது என்பது மிகச் சிரமமான காரியம். சுக்ரீவன் கோடிக்கணக்கான வானரர்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பி இந்த வேலையை எளிதாக்குவான். வானரங்களுக்கு எங்கும் செல்லத் தடையில்லை. ஆதலால் இந்த உலகில் எந்த மூலையில் அன்னை சீதை இருந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆதலால் தாங்கள் தயவு கூர்ந்து சுக்ரீவனுக்கு நட்புக்கரம் நீட்டுங்கள். தாங்களும் அரசன் சுக்ரீவனும் அரசன் . ஆகையால் தாங்கள் சுக்ரீவனுடன் நட்புக்கொள்ளுதல் தகும் प्रीति बिरोध समान सन कारिय नीति असि आहि। என்ற பொருளில் சொன்னான் ஹனுமன். மேலும் तेहि अभय करीजै॥   அதாவது சுக்ரீவனது எதிரியைக் கொன்று தாங்கள் அபயக் கரம் நீட்ட வேண்டும் என்று சொல்கிறான் ஹனுமன் .

 அடுத்து ஹனுமன் சீதையைக் கண்டுபிடிக்க சுக்ரீவன் உதவுவான் என்று கூறுகிறான். இங்கு ஒரு கேள்வி எழலாம். ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் எப்படித் தெரிந்தது?  இராமன் ஹனுமனிடம் “इहाँ हरी निसिचर बैदेही।  வைதேஹியை இராக்ஷசன் அபஹரித்துவிட்டான் என்றுதான் சொல்கிறான். வைதேஹிதான் சீதை என்று ஹனுமனுக்கு எப்படித் தெரிந்தது? பத்ம இராமாயணத்தில்  இராமனும் ஹனுமனும் குழந்தைப் பருவத்தில் ஒன்றாக விளையாடியுள்ளனர் என்று சொல்லப்பட்டுள்ளது அப்போது இராமனுக்குத் திருமணம் ஆகவில்லை. ஆக அப்போதும் ஹனுமனுக்கு சீதை என்ற பெயர் தெரிய வாய்ப்பில்லை.

பிறகு எப்படி தெரிந்திருக்ககூடும்? இங்கு உரையாசிரியர்கள் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றனர். அதாவது துளசிதாசர் இராமாக்யா ப்ரஸ்ன रामाज्ञा प्रश्न

என்ற ஜோதிட நூல் ஒன்றை எழுதி உள்ளார். அதில் நாலாவது சர்கத்தில் ஒரு சுலோகம் வருகிறது.

“राम जनम सुभ काज सब कहत देवरिषि आइ़।

सुनि सुनि मन हनुसानके प्रेम उमंग न अमाड़॥” (२२)

நாரதர் இகஷ்வாகு குலத்தில் நடக்கும் பிறப்பு, உபநயனம், திருமணம் போன்ற எல்லா மங்களகரமான விஷயங்களையும் ஹனுமனுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தி இருந்தார். அதனால் விதேக அரசன் ஜனகனின் மகளான வைதேகிதான் சீதை என்று தெரிய வந்து இருக்கலாம். அடுத்து ஹனுமனுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தது சூர்ய பகவான்.. சுக்ரீவனின் பாதுகாப்புக்காகவே ஹனுமனை சூரியன் நியமித்து இருந்தான். அப்பொழுது சூர்ய பகவன் ஹனுமனிடம் இராம இலக்ஷ்மனர்கள் சீதையைத் தேடி அங்கு வருவர் என்று சொல்லி இருந்தார். அதன் மூலமும் தெரிந்து இருக்கலாம். இராம  இலக்ஷ்மணர் இருவரையும் பார்த்ததும் இராமனும் வைதேகி என்று சொன்னதும் ஹனுமனுக்கு அது சீதை என்று தெரிந்திருக்கும். ஹனுமன் இராமனைப் பார்த்ததும் இவன் பிரம்மமான மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான். இவருடைய சக்தி சீதையாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்து கொண்டான்.

 ஹனுமன் இராமனிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்து விட்டான் என்பதை துளசிதாசர் ‘एहि बिधि सकल कथा समुझाई- என்று சொல்லுகிறார். அதாவது ஹனுமனின் நோக்கம்  இராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்தவேண்டும். அந்த முயற்சியில் ஏதாவது விவரங்கள் விடுபட்டு, மறைக்கப்பட்டு பிற்காலத்தில் அவர்களது உறவில் ஏதாவது விரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து விவரங்களையும் ஹனுமான் தெரிவித்துவிட்டான் என்று சொல்கிறார் துளசி தாசர்.

 இதுவரை வனங்களில் இராமனும் இலக்ஷ்மணனும் நடக்கத் தகுதியல்லாத கரடு முரடான பாதைகளில் நடந்தே வந்துள்ளனர். இதை மனதில் கொண்டே இருவரையும் தனது முதுகில் சுமந்து சென்றான் पीठि चढ़ाई ஹனுமன் என்று சொல்லுகிறார் துளசிதாசர்.

 சிலர் ஹனுமன் இருவரையும் தோளில் சுமந்து சென்றார் என்கின்றனர். ஆனால் துளசிதாசர் இருவரையும் முதுகில் சுமந்து சென்றான் என்றே சொல்லுகிறார். காரணம் ஹனுமன் வானரம் வானரங்கள் இரு கைகளையும் கால்களாகப் பயன்படுத்தக் கூடியவை.. காரணம் மலைகளில் ஏறுவதற்கு அவை வசதியானவை.  வால்மீகி இராமாயணத்திலும் இதை வால்மீகி உறுதி செய்கிறார்.

भिक्षुरूपं परित्यज्य वानरं रूपमास्थित:।

पृष्ठमारोप्य तौ वीरौ जगाम कपिकुञ्जर:॥ ३४॥

அதாவது ஹனுமன் தனது துறவி வேடத்தைத் துறந்து வானர வேடத்தில் இரு வீரர்களையும் தனது முதுகில் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

हनूमान सम नहिं बड़भागी। नहिं कोउ राम चरन अनुरागी॥4॥

गिरिजा जासु प्रीति सेवकाई। बार बार प्रभु निज मुख गाई॥5॥

ஹனுமனைப் போல நல்ல அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை. அவனைப் போன்ற சிறந்த இராம பக்தனும் இல்லை. அவனது அன்பையையும் சேவையையும் இராமன் பல முறை புகழ்ந்துள்ளார்.

**

மஹாபாரதம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,112)

Written by London Swaminathan

Post No. 16,112

Date uploaded in London – 21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மஹாபாரதப் போர் நடந்த தேதி பற்றி அறிஞர்கள் கூற்று என்ன ?

2

மஹாபாரதத்துக்கும் மர்ம எண் 18-க்கும் உள்ள தொடர்பு என்ன ?

3

சங்க இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் இந்த இதிகாசம் குறித்து என்ன சொன்னார்கள் ?

4

உலக இலக்கியங்களோடு ஒப்பிடுகையில் மஹா பாரதத்தின் சிறப்பு என்ன ?

5

மஹாபாரதத்தை எழுதியர் யார் ? மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் யார் ?

6

மஹாபாரத யுத்தத்தில் எத்தனை டிவிஷன் படைகள் இருந்தன   ? அவைகளின் கமாண்டார்கள்/ தளபதிகள் யார் ?

7

பழங்காலத்தில் தமிழ்மொழியில் இதை மொழிபெயர்த்தர்களா ? அது பற்றிய செய்தி எந்தக் கல்வெட்டில் உள்ளது ?

8

பீஷ்மர் அக்குபங்க்சர் முறையை பயன்படுத்தி எத்தனை நாட்களுக்கு அம்புப் படுக்கையில் இருந்தார்; ஏன் ?

9

அர்ஜுனன் தன்னுடைய சொந்த மகனையே இழந்தான் ! அது எப்படி?

10

மறைந்து வாழவேண்டிய 13 ஆவது ஆண்டில் யார் யார் என்னென்ன வேஷம் போட்டார்கள் ?

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடைகள்

Sculpture of Chakra Vyuha- army formation– that caused the death of Arjuna’s son.

1.மஹாபாரதம் பற்றி நடந்த ஆய்வரங்கங்களிலும் அது தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், ஆய்ந்தவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் கூறும் சில ஆண்டுகளைக் கண்போம்:–

எஸ்.பி.ராய் என்பார் ஆராய்ச்சியாளர்களை 4 பிரிவுகளாகப் பிரிக்கிறார்:–

முதல் அணி ( சம்பிரதாய கொள்கையினர் கி.மு 3100 க்கு முன்னர்)
டி.ஆர். மங்கட் — 3201
எம்.எம்.கிருஷ்ணமாச்சாரி 3137
சி.வி.வைத்யா — 3102
வி.பி.அத்வாலே – 3016

**

இரண்டாம் அணி ( கி.மு. 2500 ஆண்டை ஒட்டி)
வராஹமிகிரர்
கல்ஹணர்
பி.சி.சென்குப்தா

**

மூன்றாம் அணி ( கி.மு.1450 அல்லது அதன் கீழ்)
ஏ.கன்னிங்ஹாம் -1424
கே.பி.ஜைஸ்வால் –1424
தாரகேஸ்வர பட்டாசார்யா –1432
கிரிதர சேகர வசு (பாசு) – 1416
பங்கிம் சந்திர சாட்டர்ஜி — 1400
சுவாமி விவேகாநந்தா –1400
ஏ.டி.புசல்கர் – 1400
பால கங்காதர திலகர் – 1400
எச்.டி. தேவ் – 1400
பி.பி.கேட்கர் – 1267
ஸ்ரீ அரவிந்தர் -1191
கே.எல். தப்தாரி –1197
கே.ஜி.சங்கர் – 1197
சீதாநாத் பிரதான் – 1151

**

நான்காம் அணி ( கி.மு.950)
பர்ஜிட்டர் — 950
ராய் சௌத்ரி – 900

எச்.டி.சங்காலியா போன்றோர் இது நடந்திருந்தாலும் கி.மு.1500க்குப் பின்னரே நடந்திருக்க முடியும் என்பர்.

எஸ்.பி. ராய் என்பார் வானியல் கணக்குப்படி 1424 என்றும் மார்டன் ஸ்மித் என்பார் வம்ச கணக்குப்படி 1050 என்றும், சீனிவாச ராகவன் கி.மு 3067 என்றும் செப்புவர்.

எனது கருத்து:–

நாற்பது ஆண்டுக்காலமாக மஹாபாரதம் ஆராய்ச்சி தொடர்பான பத்துப் பதினைந்து புத்தகங்களைப் படித்ததில் எழுந்த கருத்துக்கள் இவை:–

ஆரிய – திராவிட இனவெறி வாதம் என்னும் சகதியில் சிக்காத மெகஸ்தனீஸ் போன்றோரும் அவரது கருத்துக்களை நமக்கு தெரிவித்த கிரேக்க ஆசிரியர்களும் மகத சாம்ராஜ்யத்தின் 143ஆவது மன்னர் ஆட்சிக் காலத்தில் தாங்கள் வந்ததாகச் சொல்லுகின்றனர். இவர்கள் இன்றைய அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் — ஒரு மன்னருக்கு உலகம் முழுதும் பின்பற்றப்படும் சராசரி 20 ஆட்சி ஆண்டு என்று கொண்டாலும் மெகஸ்தனீசுக்கு முன்னர் 2860 ஆண்டுகள் கிடைக்கும். ஆக, கலியுகத்தின் முதல் ஆண்டு கி.மு.3102 என்பது பொருந்தும். அதற்கு 36 ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தது.

***

2.மஹாபாரத்திலுள்ள 18 பருவங்கள்

சித்தர்கள் 18, தர்ம நூல்கள் 18, யாகங்கள் 18, பாஷைகள் 18, புராணங்கள் 18, உப புராணங்கள் 18, தேவாசுரப் போர் 18 ஆண்டுகள், ராம- ராவணன் யுத்தம் 18 மாதங்கள், மஹா பாரதப் போர் 18 நாட்கள், சேரன் செங்குட்டுவன் – க னக  விஜயன் போர் 18 நாழிகை,மஹா பாரத பர்வங்கள் 18, கீதையில் அத்தியாயங்கள் 18, தமிழ் நாட்டுக்கு அகஸ்தியர் அழைத்து வந்தா குடிகள் 18,  சங்க இலக்கிய நூல்கள் 18, அதற்குப்பின் வந்த கீழ்க்கணக்கு நூல்களை 18, கணங்கள் 18, சைவத் திரு மடங்கள் 18…….இவ்வாறு 18–ன் பெருமை மஹத்தானது. மகாபாரதப் போரில் மொத்தம் 18 அட்சௌகிணி (11+7 Divisions) சேனை பங்கேற்றது. இதில் கௌரவர்களின் தரப்பில் 11 அட்சௌகிணி சேனைகளும், பாண்டவர்களின் தரப்பில் 7 அட்சௌகிணி சேனைகளும் சண்டையிட்டன.

 மஹாபாரதம் 18 பர்வங்களின் பெயர்

1.   ஆதிபர்வம்      

2.   சபாபர்வம்   

3.   வனபர்வம்    

4.   விராடபர்வம்                 

5.   உத்யோகபர்வம்                

6.   பீஷ்மபர்வம்                           

7.   துரோணபர்வம்                      

8.   கர்ணபர்வம்               

9.   சல்யபர்வம்                        

10. சௌப்திகபர்வம்                 

11. ஸ்த்ரீபர்வம்                       

12. சாந்திபர்வம்                       

13. அநுசாஸனபர்வம்                    

14. அஸ்வமேதிகபர்வம்             

15. ஆஸ்ரமவாசிகபர்வம்                    

16. மௌஸலபர்வம்                 

17. மஹாப்ரஸ்தானிக பர்வம்       

18 ஸ்வர்காரோஹண பர்வம்      

****

பகவத் கீதையின் 18 அத்தியாயங்கள்

பகவத் கீதை 18 அத்தியாயங்களின் பெயர்கள்

  • அத்தியாயம் 1: அர்ஜுன விஷாத யோகம் (அருச்சுனின் கவலை மற்றும் ஏக்கம்)
  • அத்தியாயம் 2: சாங்கிய யோகம் (கீதையின் சாரம் மற்றும் ஆத்மாவின் தன்மை)
  • அத்தியாயம் 3: கர்ம யோகம் (செயல் மற்றும் கடமையின் வழி)
  • அத்தியாயம் 4: ஞான கர்ம சந்நியாச யோகம் (மெய்யறிவு மற்றும் தியாகம்)
  • அத்தியாயம் 5: கர்ம சந்நியாச யோகம் (செயல்களும் துறவும்)
  • அத்தியாயம் 6: த்யான யோகம் / ஆத்ம சம்யம யோகம் (தியானப் பயிற்சி)
  • அத்தியாயம் 7: ஞான விஞான யோகம் (இறைவனின் முழுமையான அறிவு)
  • அத்தியாயம் 8: அட்சர பிரம்ம யோகம் (எல்லையற்ற பிரம்மத்தை அடைதல்)
  • அத்தியாயம் 9: ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம் (மிக இரகசியமான தூய அறிவு)
  • அத்தியாயம் 10: விபூதி யோகம் (இறைவனின் எல்லையற்ற பெருமைகள்)
  • அத்தியாயம் 11: விஸ்வரூப தர்சன யோகம் (இறைவனின் பேரருள் வடிவம்)
  • அத்தியாயம் 12: பக்தி யோகம் (இறைப்பற்றின் வழி)
  • அத்தியாயம் 13: சேத்ர சேத்ரக்ஞ விபாக யோகம் (உடலும் ஆன்மாவும்)
  • அத்தியாயம் 14: குணத்ரய விபாக யோகம் (இயற்கையின் மூன்று குணங்கள்)
  • அத்தியாயம் 15: புருஷோத்தம யோகம் (உயரிய பரம்பொருளின் நிலை)
  • அத்தியாயம் 16: தெய்வாசுர சம்பத் விபாக யோகம் (தெய்வ மற்றும் அசுர குணங்கள்)
  • அத்தியாயம் 17: ச்ரத்தாத்ரய விபாக யோகம் (நம்பிக்கையின் வகைகள்)
  • அத்தியாயம் 18: மோட்ச சந்நியாச யோகம் (முழுமையான துறவும் சரணடைதலும்

****

3.போரில் இறந்த பாண்டவர், கௌரவர், நினைவாக தமிழ் மன்னன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பெருஞ்சோறு படைத்தான் . பெருஞ்சோறு என்பது போர் வீரர்களின் நினைவாக  திதி போல ஆண்டில் ஒரு தினத்தில் எல்லோருக்கும் விருந்து வைப்பதாகும் பெருஞ்சசோறு என்ற சொல் சங்க இலக்கியங்களில் வரும் வேறு இடங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ

நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

(புறநானூறு – 2)

(அலங்கு = அசைகின்ற; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; ஐவர் = பாண்டவர் / தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன்; பொலம் = பொன்; தும்பை = வலிமை காரணமாகப் போர்புரியும் வீரர்கள் அணியும் பூ / தும்பைப் பூ; ஈரைம்பதின்பர் = நூற்றுவர் / துரியோதனன் முதலிய நூறு சகோதரர்கள்; ஒழிய = செத்த பின்னர் ;  வரையாது = அளவில்லாது)பெருஞ்சசோறு  படைத்த

xxx

பகவத் கீதை உபதேசத்தைக்  கூறியது

தொல் ஆணை நல் ஆசிரியர்

புணர்கூட்டு உண்ட  புகழ்சால் சிறப்பின்

நிலந்தரு திருவின் நெடியோன் போல — என்ற மதுரைக்கு காஞ்சி வரிகளில் உள்ளதை நச்சினார்க்கினியர் உரையில் காணலாம்.

xxxx

சிறுபாணாற்றுப்படை

காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்

பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்

(சிறுபாணாற்றுப்படை அடிகள்,  238-239)

(கா = காடு, வனம், காண்டவ வனம்; எரி = தீ; காவெரி ஊட்டல் = காண்டவ வனம் எரியூட்டப் பெறுதல்; கவர் = பல; கணை = அம்பு; தூணி = அம்பு வைக்கும் கூடு; கச்சை = ஆடை வகை)

என்ற பாடல் பாண்டவருள் அருச்சுனனையும் வீமனையும் குறிப்பிடுகிறது.

காட்டிற்கு எரி ஊட்டியவனும், அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவனும், கச்சையை அணிந்தவனும் ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) வீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். மேலும் வீமனின் சமையல் சிறப்பும் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

xxx

பதிற்றுப் பத்தின் பாடல் (14) ஒன்று,  அக்குரன் என்றபெயரைக் கூறுகிறது  ; தலை ஏழு வள்ளல்களில் ஒருவனாக இருக்கலாம்; அல்லது கர்ணன் ஆக இருக்கலாம்; ஆதாரம் கிடைக்கவில்லை என்று தமிழ் தாத்தா உ வே சா எழுதியுள்ளார்

போர்தலை மிகுத்த  ஈர் ஐம்பதின் மரோடு

துப்புத்துறை போக்கிய , துணிவுடை ஆண்மை

அக்குரல் அனைய கைவண்மையையே – 14-5/7  பதிற்றுப்பத்து.

xxx

கலித்தொகையில் நிறைய செய்திக ள் உள்ளன

திருதராட்டினை வயக்குறு மண்டிலம் வடமொழிப்பெயர்பெற்ற முகத்தவன் – கலி25-1

என்று ஒரு புலவர்  குறிப்பிடுகிறார் 

கர்ணன் ஞாயிற்றின் மகனாகக் கலித்தொகைப் பாடல் ஒன்றில் குறிக்கப்பெற்றுள்ளான் (முல்லைக் கலி, 28). துரியோதனன் முதலியோர் சூழ்ச்சியால் பாண்டவர் தங்கி இருந்த அரக்கு மாளிகை தீ வைக்கப்படுகிறது. அத்தீயிலிருந்து வீமன் தன் சகோதரர்களைக் காப்பாற்றிய நிகழ்ச்சியை மற்றொரு கலித்தொகைப் பாடல் (பாலைக்கலி, 25) விவரித்துள்ளது.

பாடல் 25 வரிகள் 1-5

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக்,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்குக்,
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா,

பொருள்
வடமொழிப் பெயர்பெற்ற வயக்கறு மண்டிலம்போலும் முகத்தவனுடைய மக்களுள் மூத்த துரியோதனன் சூழ்ச்சியாலே ஐவரென்று உலகத்தார் புகழும் தன்மபுத்திரர் முதலியோர் உள்ளேயாகக் கையாலே புனையப்பட்ட அரக்கு மாளிகையை விரைந்து நெருப்பு சூழ்ந்தாற் போலக் களிப்பு விளங்குகின்ற மதத்தவாகிய கடிய களிகள் உள்ளேயாக.

பாடல் 52 வரிகள் 1 3
நூற்றுவர் தலைவனை துரியோதனனை பீமன் வெல்வதை குறிக்கிறது

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்

பொருள்
முறம் போலுஞ் செவியாகிய மறைப்பிமாக வந்து பாய்ந்து மாறுபாடு செய்த புலியைக் கோபித்து மறத்தைத் தம்மிடத்தே கொண்ட நூற்றுவர்குத் தலைவனாகிய துரியோதனனைக் குறங்கில் உயிரை போக்குகின்ற பீமசேனனை போல் ……..

பாடல் 101 வரிகள் 15 – 20
பீமன் துரியோதனனின் மார்பை பிளந்து ரத்தம் குடித்தல்

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக்,
கோட்டு இடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்-
அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்!
பொருள்
உயர்ந்த கொம்பிடத்தே வைத்த உலண்டினது நிறத்தையொக்கும் புல்லிய நிறத்தைத் தன்னிடத்தேயுடைய எருத்தினது நோக்கை அஞ்சானாய் அதின்மேலே பாய்ந்த இடையனைச் சாவக்குத்திக் கொம்பிடத்தே எடுத்துக்கொண்டு உடலைக்குலைக்கின்றதனுடைய தோற்றரவைக் காணாய்; அழகிய தலைமையினையுடைய மனமசைந்த இயல்பினையுடையளாகிய துரோபதையது துய்ய கூந்தலிலே கையை நீட்டிய துச்சாதனனுடைய நெஞ்சைப் பிளந்துபோகட்டுப் பகைவர்நடுவே தான்சொன்ன வஞ்சினத்தை வாய்க்கச்செய்த வீமசேனைப்போலும்

அசுவத்தாமா சிகண்டியை கொன்றது
பாடல் 101 வரிகள் 30 – 32

ஆர் இருள் என்னான், அரும் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டுத், தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்!

பொருள்
வருதற்கரிய கங்குலிலே அரிய இருளென்று கருதானாய் வந்து துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியைத் தன் முயற்சியாலேவென்று கொன்று தன் தோளால் தலையைத் திருகும் அச்சுவத்தாமாவைப்போலும்

பாடல் 104 வரிகள் 56 – 59

புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ.

பொருள்
போரைவிரும்பி மேலே சென்று துரியோதனாதிகள் படும்படி வரிந்து புனைந்த வலிய வில்லையுடைய தருமன்முதலியோர் கொன்ற பொருகின்ற களத்தையொக்கும்

xxx

பெரும்பாணாற்றுப்படையில், பாண்டவர் ஐவரும் கௌரவர் நூற்றுவரைப் போர்க்களத்தே வென்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்

பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்

ஆராச் செருவின் ஐவர் போல

 (பெரும்பாணாற்றுப்படை அடிகள்,  415-417)

(ஈரைம் பதின்மர் = கௌரவர் நூற்றுவர்; பொருது = சண்டை இட்டு; களத்து = போர்க் களத்து; அவிய = இறக்க; பேர் = பெரிய; அமர்க் கடந்த = வெற்றி பெற்ற; கொடிஞ்சி = தேரின் ஒரு பகுதி; ஆரா = தணியாத; செரு = போர்; ஐவர் = பாண்டவர்)

பெரிய வெற்றியைப் பெற்றவர் பாண்டவர்; இவர்கள் நெடிய தேரினையும் தீராத போர் வேட்கையையும் உடையவர்கள்; கௌரவர்கள் நூறு பேரும் போர்க்களத்தில் இறக்குமாறு இவர்கள் பெரிய வெற்றியைப் பெற்றார்கள் என்பது இவ்வரிகளின் பொருள்.

சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்தைப் பாடியவரை  பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைத்தனர் . இவர் பாடிய பாரத நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இதை பிற்கால பாண்டியர் சாசனமும் உறுதிப்படுத்துகிறது

****

4. இரண்டு சிறப்புகள் மகாபாரதத்துக்கு உண்டு ; உலகிலேயே மிக நீண்ட புஸ்தகம்;இதுதான்  ஒரு லட்சம் ஸ்லோகங்களை , அதாவது குறைந்தபட்சம் இரண்டு லட்சம் வரிகளை, அதாவது குறைந்தபட்சம்  பத்து லட்சம் சொற்களை உடைய புஸ்தகம் !

இரண்டாவது சிறப்பு :–

அதன் ஆதி பர்வத்தில் உள்ள ஸ்லோகம் சொல்கிறது:

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் இதனில் உள. இதில் உள்ள எல்லாப் பொருட்களையும் காணும் இடம் உலகில் வேறு இல!!

வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம் — என்று சம்ஸ்கிருதத்தில் சொல்லுவர். அதாவது உலகில் நீங்கள் பார்க்கும் எல்லாம் வியாசரின் எச்சில்!

இதன் பொருள் என்ன என்றால் — வியாசர் என்னும் மாமுனிவர் எல்லா விஷயங்களையும் சுவைத்து, ரசித்து, சொல்லால் கடித்து — ராமனுக்கு மலை ஜாதி வேடுவச்சி சபரி என்னும் கிழவி — அன்போடு கடித்துக் கொடுத்த இலந்தைப் பழம் போல — நமக்கு அன்போடு “கடித்துக்” கொடுத்த கதை!

****

5.மஹாபாரதத்தை எழுதியர் பிள்ளையார்; மஹாபாரதத்தை “டிக்டேட்” செய்தவர் வியாசர். இதை அருணகிரிநாதர் சில திருப்புகளாகில் 500 ஆண்டுகளுக்கு முன்னரே பாடிவைத்துள்ளார்.

***

6.மஹாபாரத யுத்தத்தில் கெளரவர் தரப்பில் 11 டிவிஷன் படைகளும் பாண்டவர் தரப்பில் 7 11 டிவிஷன் படைகளும் இருந்தன.  

மாபாரதப் போரில்  கமாண்டார்கள்/ தளபதிகள் :–

பாண்டவர் படையின் தலைமை தளபதிதிருஷ்டத்துயுணன் (Dhrishtadyumna): பாண்டவர்களின் முழு 18 நாள் போருக்கும் இவரே தலைமைத் தளபதியாக (Supreme Commander-in-Chief) செயல்பட்டார். பாண்டவர் படையின் முக்கிய தளபதிகள் மற்றும் மாவீரர்கள்:அர்ச்சுனன் மற்றும் பீமன்: போர்க்களத்தின் முக்கிய வியூகங்களை தாங்கிப் போராடிய முதன்மைக் கமாண்டர்கள்.  சாத்யகி (Satyaki): யாதவப் படைப்பிரிவின் முக்கிய வீராதிவீரன்.  அபிமன்யு: அருச்சுனனின் மகன்,.கடோற்கஜன்: பீமனின் அரக்க மகன்.விராடன் மற்றும் துருபதன்: பாண்டவர்களை ஆதரித்த நாட்டின் மன்னர்கள்.

கௌரவர் படையின் தலைமை தளபதிகள் (சேனாதிபதிகள்)கௌரவர் தரப்பில் 18 நாள் போரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஐந்து முக்கிய தளபதிகள் தலைமைப் பொறுப்பை ஏற்றனர்: பீஷ்மர் (Bhishma) – 1 முதல் 10 நாட்கள் வரை): போரின் முதல் பத்து நாட்கள் கௌரவப் படையின் தலைமைத் தளபதியாக இருந்து கடுமையாகப் போராடினார். துரோணாச்சாரியார் (Drona )- 11 முதல் 15 நாட்கள் வரை): பீஷ்மரின் வீழ்ச்சிக்குப் பிறகு குருவான துரோணர் தளபதியாகப் பொறுப்பேற்றார்.கர்ணன் (Karna – )16 மற்றும் 17-வது நாள்): துரோணரின் மறைவுக்குக் பின் கர்ணன் தளபதியாக நியமிக்கப்பட்டார்.சல்லியன் (Shalya – 18-வது நாள்): கர்ணனின் மறைவுக்குப் பின் இறுதி நாள் போரில் மத்வதேச மன்னரான சல்லியன் தளபதியானார். அஸ்வத்தாமன் (Ashwatthama): துரியோதனன் வீழ்ந்தபின் இறுதி இரவில் கௌரவப் படையின் கடைசித் தளபதியாகப் பொறுப்பு வகித்தான்.

கௌரவர் படையின் மற்ற முக்கிய கமாண்டர்கள்:துரியோதனன் மற்றும் துச்சாதனன்: கிருபாச்சாரியார் (Kripacharya): போரில் உயிர் பிழைத்த முக்கிய குரு மற்றும் தளபதி.கிருதவர்மன் (Kritavarma).

***

7.பாரதம் பாடிய மிஸ்டர் மஹாதேவன் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) பாரதத்தை மொழிபெயர்த்ததை சங்க இலக்கிய கடவுள் வாழ்த்துக்கள் மூலம் அறிகிறோம்; மேலும் மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி  சங்கம் வைத்தும் என்று சின்னமனூர் பெரிய சாசனமும் முன்னாள் பாண்டியர்களைப் பற்றி கூறுகிறது

***

8.பீஷ்மர் போரில் வீழ்ததப்பட்டவுடன் அக்குபங்க்சர் முறையைப் பயன்படுத்தி 58 நாட்கள் அம்ம்புப்படுக்கையில் இருந்தார் ; அவர் தன்னுடைய வாழ்நாள் முழுதும் பிரம்மச்சர்யம் அனுஷ்ட்டி ப்பதாக அற்புத சபதம் செய்த போது அவர் நினைத்த தருணத்தில் உயிர்விடலாம் என்ற வரம்   அவருக்குக் கி டைத்தது . உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விட்டால் நல்லது என்ற நம்பிக்கை காரணமாக சுமார் இரண்டு மாதங்களுக்கு உயிரோடு உருந்து பின்னர் மேலுலகம் சென்றார் . இன்று ம் கூட ஆண்டுதோறும் பீஷ்ம அஷ்டமி என்று எல்லோரும், குறிப்பாக பிராமணர்கள், அவருக்குத் தர்ப்பணம் செய் கின்றனர் தந்தையின் காதலி — மீனவப் பெண்மணி – தனக்குப் பிறக்கும் பிள்ளைதான் அரசனாக வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தாள்; அப்போது பீஷ்மர் உலகம் வியக்கும் பிரம்மச்சர்ய விரதம் பற்றி அறிவித்தார்  வானஉலகம் முழுதும் Terrific! Terrific! Wonderful! Amazing!   பீஷ்ம பீஷ்ம என்று ஆரவாரம் செய்தது. அவரது உண்மைப்ப பெயர் தேவவிரதன் . சந்தனு மஹாராஜாவுக்கும் கங்கா என்ற பெண்ணுக்கும் மகனாக அவதரித்தார்  .

***

9 அர்ஜுனன் மகன் அபிமன்யு , கெளரவர்களின் சக்ர வியூயூகத்தில் நுழைந்து சண்டையிட்டான் ; அதிலிருந்து வெளிவருவதை அவன் கற்றுக்கொள்ளவில்லை ; இதனால் மரணம் சம்பவித்தது.

அருச்சுனனை திசைதிருப்ப  கௌரவப் படைகள் சக்கரவியூகம் அமைத்தன. வியூகத்திற்குள் நுழையும் வழி அபிமன்யுவிற்குத் தெரியும். ஆனால் வெளியேறும் வழி அவனுக்குத் தெரியாது.அபிமன்யுவுடன் உள்ளே செல்ல முயன்ற மற்ற பாண்டவர்களை ஜெயத்திரதன் தடுத்து நிறுத்தினான். இதனால் அபிமன்யு மட்டும் தனியாக மாட்டிக்கொண்டான். துரியோதனனின் மகன் லட்சுமணன் உள்ளிட்ட பலரைக் கொன்றான்.போரின் நெறிமுறைகளுக்கு மாறாக, துரோணர், கர்ணன், கிருபர், துரியோதனன் உள்ளிட்ட பல முன்னணி கௌரவ வீரர்கள் சேர்ந்து ஒரே நேரத்தில் அவனைத் தாக்கிக் கொன்றனர்.

***

10.பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் 12 ஆண்டுகள் முடிந்த பிறகு, 13-வது ஆண்டை அஞ்ஞாதவாசம் (யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் மறைந்து வாழும் காலம்) விராட மன்னனின் [விராட தேசம்] அரசவையில் பின்வரும் வேடங்களில் கழித்தனர்:

தருமபுத்திரர்: ‘கங்க பட்டர்’ (Kanka) என்ற பெயரில் விராட மன்னனின் அரசவை ஆலோசகராகவும், தாயம் விளையாடுபவராகவும் இருந்தார்.

பீமசேனன்: ‘வல்லவன்   (Vallava) என்ற பெயரில் அரச சமையலறைச் சமையற்காரராக (Cook) பணியாற்றினார்.

அருச்சுனன்: பிருஹன்னளை ‘ அல்லது ‘பேடி’ (Brihannala – அலியும் பெண்ணுமாக) என்ற உருவத்தில் விராட மன்னனின் மகளான உத்தரأவிற்குப் நடன மற்றும் இசை ஆசிரியராக இருந்தார்

.நகுலன்: ‘கிரந்திகன்’ (Damagranthi) என்ற பெயரில் குதிரை லாயத்தில் குதிரைகளைப் பராமரிக்கும் வேலை செய்தான்.

சகாதேவன்: ‘தந்தபாலன்’ (Tantipala) என்ற பெயரில் பசுப் பட்டறையில் ஆடு, மாடுகளை மேய்க்கும் பணியை மேற்கொண்டான்.

திரௌபதி: ‘ சைரந்திரி  அல்லது ‘மாலினி’ (Sairandhri) என்ற பெயரில் விராட மன்னனின் மனைவி சுதேஷ்ணா தேவியின் அந்தப்புரத் தலைவியாக/சேவையாடியாகப் பணிபுரிந்தார்

–subham—

Tags- மஹாபாரதம் ,10 கேள்விகள்

ஆயிரம் பொன்மொழிகள்! (141-160) Post No.16,111

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,111

Date uploaded in London – 21 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (141-160)

ச. நாகராஜன்

சில பொன்மொழிகளின் தொடர்ச்சி…! (From my collection!)

141. Ching Chow – Hours – Time

NOTICE

Lost yesterday somewhere

Between Sunrise and Sunset

Two Golden Hours,

Each set with sixty diamond minutes

No Reward is offered for

They are gone Forever.

Biography – Lives of Greatmen

Biography is the most universally pleasant and profitable of all reading – Carlyle

உயர்ந்தார் சரிதம் உலகிலுயர் இன்பம்

உயர்ந்த கலையின் பலன்         – உலக உள்ளங்கள் (497)

                                  ஜெகவீரபாண்டியனார்

Literature – Speech

Literature is the immortality of speech.          – Schlegel

என்றும் அழியா இனிய மொழி கலையே

நின்று விளங்கும் நிலைத்து          – உலக உள்ளங்கள் (105)

                                     ஜெகவீரபாண்டியனார்

Literature

Literature is a great stall, but a sorry crutch.    – W. Scott

உல்லாச மாயின் உயர்கலை இன்பமாம்

அல்லலே வாழ்வேல் அது           – உலக உள்ளங்கள் (104)                                                                

                                     ஜெகவீரபாண்டியனார்

God

To will what God wills is the only science that gives us rest. – Longfellow

இறைவன் திருவுளத்தை எண்ணி ஒழுகல்

நிறைவான ஞானம் நினை                   உலக உள்ளங்கள் (21)

                                               ஜெகவீரபாண்டியனார்

God – Obedience

That thou art happy, owe to God

That thou continuest such, owe to thyself,

That is, to thy obedience.                                 – Milton

God

Above all things I wish God’s glory and next her Majesty’s safety.  – Francis Walsingham

God

A pure, single, stable spirit is not distracted though it may be employed in many works; for that it doeth all to the honor of God, and being at rest within, seeketh not itself in anything that of doth.

                                                                                                                             – Thomas a Kempis

God

God is truth and light his shadow.  – Plato

உண்மை கடவுள்; ஒளி அவன் நீழலே;

உண்மை உறுதி உணர்                   – உலக உள்ளங்கள் (1)

                                         ஜெகவீரபாண்டியனார்

Life – Inaction

It is not necessary for a man to be actively bad in order to make a failure of life; simple inaction will accomplish it.   

151. Life – Power – Selfish

Every year I live I am more convinced that the waste of life lies in the love we have not given, the powers we have not used, and the selfish prudence which will risk nothing.   – Mary Cholmondeley

Life

We are too apt to let the mean things of life overgrow the finer nature within us, therefore it is expedient that at least once a day we read a little poetry, or sing a song, or look at a picture.  – Gothe

Life

My life as essentially belongs to the present as that of a willow tree in the Spring. Now, now, its catkins expand, its yellow bark shines, its sap flows, now or never must you make whistles of it.  – Thoreau

Liberty

Liberty –

‘Tis sweeter to bleed for an age at thy shrine

Than to sleep but a moment in chains.    – Thomas Moore

Lives of Greatmen

Lives of greatmen all remind us, we can make our lives sublime.   – Longfellow

மேலோரை எண்ணிவர மேன்மையுடன் நம்வாழ்வு

மேலாய் விளங்கி வரும்                       – உலக உள்ளங்கள் (529)

                                               ஜெகவீரபாண்டியனார்

Lives of Greatmen

The best teachers of humanity are the lives of greatmen.       – O.S. Fowler

பெரியோர் சரிதங்கள் பேருலகில் மாந்தர்க்கு

அரியவுயர் ஆசிரியர் ஆம்                      – உலக உள்ளங்கள்  (231)

                                               ஜெகவீரபாண்டியனார்

Contentment

Contentment is natural wealth , luxury is artificial poverty. –   Socrates

இதயநிறைவே இயற்கையுயர் செல்வம்

விதவிரிவு வெய்ய மிடி                        – உலக உள்ளங்கள் (326)

                                               ஜெகவீரபாண்டியனார்

Cheerfulness – Melancholy

Cheerfulness is health; its opposite melancholy is disease.  – Haliburton

உள்ளமகிழ்ச்சி உயர்சுகம்; வன்கவலை

தள்ளரிய வெய்ய நோய்தான்                   – உலக உள்ளங்கள் (303)

                                              ஜெகவீரபாண்டியனார்

Busy – Idle

As peace is the end of war, so to be idle is the ultimate purpose of the busy. – Dr. Johnson

160. Gleam of Light

A gleam of light on a cottage pane may cross whole leagues of distance.

**

Tamil Non- Vegetarian Food! Sanskrit Idiots and English Idiots Exposed! Purananuru wonders-56 (Post.16,110)

Written by London Swaminathan

Post No. 16,110

Date uploaded in London – 20 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

The author of this 2000 year old Sangam Tamil work was a Brahmin belonging to Kausika Gotra; yet he has honestly presented us a correct picture of ancient Tamil society.

Purananuru wonders-56, Tamil Encyclopaedia 96, One Thousand Interesting Facts, Part 96,

At the end of this write up I have shown how Sanskrit and English writers proved themselves fools.

Malaipatukataam continued………… I am using Vaidehi Herbert’s translation; thanks.

Item 789

One other interesting point is Perum Kausikanar’s reference to food items.

Apart from Brahmins and saints, Tamils were predominantly Non – Vegetarians (in fact Anti Valluvar! Anti Ramalinga Swamikal)

When the Tamil poets describe Brahmin houses, they list the vegetarian dishes; they also add dogs and cocks an hens cannot enter their streets.

Here are the references to Food from this Malaipadukadaam:

Lines 112 to 119

Millets, paddy, sugarcane, yam, beans, sesame seeds, white mustard cultivation;

125- ginger cultivation;

131- plantain trees/ banana cultivation;

135- Jhambu fruits which gave name Jhambudwipa to India;

138/9- jack fruit trees;

Mango tree , bamboo trees are also mentioned; all these were used in the Tamil food. Even today Tamils use these items.

***

Item 790

Lines 168/9

You will receive from

them dishes with big pieces of meat roasted in ghee along with

coloured millet rice.

***

Item 791

Lines 170-185

Along with food that they bring climbing on the

bright mountains,

they will give you sweet liquor aged in bamboo pipes

which you can drink without limits, and for your

hangover to go, in the morning, they will serve you

a dish made with dropped seeds of jackfruits brought

down by waterfalls, big pieces of meat of rapidly running

forest deer that are killed, chopped up pieces of fatty

meat of porcupines killed by female dogs, sweet

tamarind fruits with light covered shells and stems,

fine buttermilk, and seeds growing on bamboo added to

the boiling liquid along with white rice, cooked by

a mountain woman with flowers on her huge hair knot,

***

Item 792 Forest mystery and Poet’s warning

If you touch

the protected kuvalai flowers desired by the gods, or see

the places where the mountain deities reside, you will

tremble in distress as though you are losing your life.

Do not stay there for many days.

Here we are remined of  Poet Tennyson

In Alfred Lord Tennyson’s poem The Lotos-Eaters, the sailors lose their memories and desire to return home after consuming the lotos flower and fruit.

  • The food: The inhabitants of the island give the mariners the “lotos” (lotus), described as a sweet, flowery food and fruit.
  • The effect: Eating it induces a dreamy, lethargic state of forgetfulness.
  • The amnesia: The sailors forget their homes, wives, children, and past heroic deeds at the Trojan War, viewing their former lives as distant, half-forgotten things or vague memories from a dream

***

Item 793 temples and worship

On your path, if you see the god in the temple with

old walls, who is worshipped according to tradition,

worship before you leave, but protect your musical

instruments

(this shows even tribal people had temples deep inside the forest).

***

Item 794 boar meat

You will see boars killed by forest people.

Roast it in the fire created by dry

bamboo rubbing against each other,

which burns without much smoke, remove the hair on it

and eat it.  Relax and drink the clear water from the

faultless, beautiful, sapphire-coloured, fresh spring with

kuvalai flowers.  Carry the excess big pieces of meat in

heavy bundles

***

Item 795

Warriors will feed you

Lines 421-427

If you see warriors ……………………….

they will forcefully feed you abundant

meat and tubers.  They are ones who will protect you,

and not hurt you.

Listen to their command and proceed on the path.

Such is the nature of the forest.

***

Item 796

Tasty Tamaringd Rice Dish (baath)

Lines 434-448

Hospitality of Villages with Huts

At night, for your sorrow to go away, you will be served

food cooked with seeds of bamboo that are red like

vēngai flowers cooked with rice grown on high grounds,

along with tamarind gruel with avarai beans.

In all the villages with huts built with poles and thatched

with grass, you will receive daily, huge balls of rice made

with tiny, perfect rice, like tiny gold pieces, ghee, and

sprinkled white flour.  If you stay there and rest, every

day you will be given dishes made with fine millet flour

mixed with sifted sugar powder.  You will sleep, leaving

cold far away, in the warmth of the fire lit with brittle

wood.  Leave in the morning when birds start chirping.

***

Item 797 Fish and Rice Dish

Lines 454….. 459

Fishermen with nets enter ponds with kanpu

grass with fragrant flowers, and catch vālai fish ………………..

Their women

wearing pakandrai flowers will serve you pieces of fatty

fish that look like the eyes of drums along with white rice

***

Item 798

Nannan = Lord Murugan/Skanda

Lines 490-495

Thinking about Nannan who is like Murukan, victorious

in battles.  They pity you who are like them, and look at

you calmly and sweetly, each one of them accepting you

as their guest, for your sorrow from walking to go away.

Points to be noted—Asvaghosa  a COPY CAT!

Asvaghosa who wrote Buddhacharita, was a copycat.

Kalidasa the greatest of Indian poets and Sangam poets always compared Hindu Gods with heroic kings.

They compare Muruga/Skanda with Hindu Kings because Muruga/Skanda was the Commander in Chief of Divine Army in Indra Loka.

Here also Poet Kaushika compared Heroic Muruga/ Skanda with King Nanna.

Would you believe that in the very beginning of BUDDHACHARITA, poet Asvaghosa who wrote in Sanskrit compared Buddha with Shanmuka (Muruga, Skanda, Kartikeya) ?

Buddha was a compassionate personality according to other texts. This stupid ASVAGHOSA copied Kalidasa and compared him with Buddha in the very beginning of his book.

Foreign rowdies place Kalidasa after him and blamed Kalidasa stealing Deepa Sikha simile. Actualyy Dipa sikha simil is in Madurai Kanchi, a Sanagam tamil work and Gatha Sapta Sati, a Prakrit work.

I am writing this to expose foreign Sanskrit idiots .

***

Item 799 Great Tamil Weavers

In many Sangam poems Tamil weavers are praised making clots with RAT HAIR that can be rolled into and sent through a finger ring.

Here also poet Kaushik praised the Tamil weavers!

Lines 565…………..

Nannan’s Generosity

He will give you perfect clothing on which

woven threads cannot be seen and tie it well

around your faultless body, and fresh meat with

***

Item 800 Food Again! First Day Treatment on all days!

fat brought by a female dog cooked with long,

white rice and served without limits.  He will give

you gifts with desire even if you stay there for

many days, like what you received on the first day.

If you tell him that you have to leave for your

ancient town, he will give the leader among you

golden lotus flowers, adorn viralis with fine, bright

jewels, give you tall chariots that run perfectly like

flowing water, trained mountain-like elephants

seized or received from enemies as tributes,

large herd of cattle with bulls with ringing bells,

horses with trimmed tufts decorated with golden

saddles, wealth lying on the ground, and all this.

He fills the hands of poets who have nothing,

with his large hands with whirling

bracelets.  He showers unspoiled wealth like the

rain showers on Naviram Mountain where bamboo

grows, the lord of the country surrounded by

mountains from which waterfalls flow down like

raised victory flags, who gives you gifts on the

first day and lets you leave.

***

Item 801 Oxford Cambridge Idiots Exposed!

Yousuf became Joseph;

Yesu became Jesus;

Yaaz became Jazz;

Yaazpaanam became Jaffna;

Yava Dwipa became Java in Indonesia;

Hundreds of Y words became J words.

For this stupid English Lexicographers say at one stage Y was introduced into English language and it was written like J.

That is incorrect; I have proved this change is in the Vedas, Zend Avesta and Sangam Tamil literature thousands of years before English language came into this world. English came after Hindi language of India.

N Tamil aJa for Brahma is written as aYan (in Sangam Literature)

Here in line 500 மட நடை ஆமான் கயமுனிக் குழவி   500 , kaYamuni is gaJamuni (elephant calf);

Here we see clearly Y=J; so English Lexicographers must rewrite their INVENTION!

To continued……………………….

Tags – English lexicographers, idiots, Sanskrit idiots, Asvaghosa, copycat, Tamil Non Vegetarian Food! Purananuru wonders-56, Tamil Encyclopaedia 96, One Thousand Interesting Facts, Part 96, item 801

திருவருட்பா நூல் பற்றி 10 கேள்விகள் (Post.16,109)


Written by London Swaminathan

Post No. 16,109

Date uploaded in London – 20 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ராமலிங்க சுவாமிகளின் பொன்மொழிகள் என்ற தலைப்பில் நூறு பொன் மொழிகளை  இந்த பிளாக்கில் மூன்று மாத காலண்டர்களில் (Year 2021) காணலாம்).

1

திருவருட்பா நூலைப்  பாடியவர் யார்? எப்போது பாடினார்?

2

திருவருட்பா நூலில் என்னென்ன கடவுளின் துதிகள் உள்ளன ?

3

சிவன் மீது அவர் பாடிய 100 பாடல்கள் உள்ள தொகுப்புக்கு என்ன பெயர் ?

4

தெய்வமணிமாலை  என்ற பாடலில் என்ன உள்ளது ? 

5

தாயை மகன் மறந்தாலும் மகனைத் தாய் மறந்தாலும் சிவ பெருமானை நான் மறக்க மாட்டேன் என்ற புகழ்பெற்ற பாடல் எது ?

6

மாமிச உணவு பற்றி வள்ளலார் என்ன சொன்னார் ?

7

வடிவுடை மாணிக்கமாலை (இரண்டாம் திருமுறை) என்ற பாடலை எந்த ஊர் அம்பிகையின் மீது பாடினார் வள்ளலார் ?

.8

நிறைய பாடகர்களால் பாடப்பட்ட  ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும் — என்ற பாடலின் முழு வடிவம் என்ன ? திரைப்படத்தில் இடம்பெற்ற வள்ளலார் பாடல்கள் எவை ?

9

வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி

என்ற பாடலின் மொத்தக் கருத்து என்ன ?

10

அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் பற்றி வள்ளலார் (ராமலிங்க சுவாமிகள்) என்ன சொல்கிறார் ? 

****

விடைகள்

1.ராமலிங்க சுவாமிகள் பாடினார்; அவர் வாழ்ந்த காலத்தில் பாடினார். ராமலிங்க சுவாமிகள் (வாழ்ந்த காலம் அக்டோபர் 5, 1823 முதல் ஜனவரி 30, 1874 வரை ஆகும்).

***

2.பெரும்பாலும் சிவன், முருகன் பற்றிய துதிகள் உள்ளன. பிள்ளையார் பற்றியும் அவர் பாடியுள்ளார்.  அம்பிகையையும் ராம பிரானையும் பல பாடல்களில் போற்றியுள்ளார். இராமநாமப்பதிகம் என்று பத்து பாடல்களும், வீரராகவர் போற்றிப் பஞ்சகம் என்ற பெயரில் ஐந்து பாடல்களும் பாடினார். திருவொற்றியூயூர் வடிவுடை அம்மனைப் பாடினார்.  ஆங்காங்கே கலைமகளையும் திருமகளையும் துதித்துள்ளார்

****

3.சிவபெருமான் மீது வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடிய மஹாதேவ மாலையில் நூறு பாடல்கள் இருக்கின்றன. அவற்றில் சிவ பெருமானின் போற்றுதலை விட தத்துவ வசனங்களே அதிகம். பஜனைகளில் பாடக்கூடிய தாளத்துடன் வரக்கூடிய சிவ நாமாவளி அம்பலத் தரசே என்று துவங்கும் பாடல் ஆகும்.

****

4.தெய்வமணிமாலை என்பது இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) இயற்றிய திருவருட்பாநூலில் ஐந்தாம் திருமுறையில் இருக்கிறது .சென்னை கந்தகோட்டத்தில் உள்ள முருகப்பெருமான் (சண்முகப் பெருமான்) மீது பாடிய பாடல்கள் இதில் உள்ளன;

தெய்வமணி மாலையில் 31 பாடல்கள் உள்ளன ; எல்லா பாடல்களும் சென்னையில• கந்தகோட் டத்துள்வளர்

தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே….. என்று முடியும். இராமலிங்க வள்ளலார், சென்னை, ஏழுகிணறுப் பகுதியில் உள்ள வீ ராசாமிப் பிள்ளைத் தெருவில் வாழ்ந்திருந்த காலத்தில், சென்னை, கந்தகோட்டம் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள முருகப் பெருமானை வழிபட்டுப் பாடியது தெய்வமணி மாலை. . இந்தப் பாடல்களை இராமலிங்க வள்ளலார், தனது ஒன்பதாம் வயதில், பள்ளியில் படிக்கும் காலத்தில் இறையருளால் பாடியதாகக்சொல்லப்படுகிறது.

****

5.இரண்டாம் திருமுறையில் வரும் கீழ்கண்ட பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல் ஆகும்; இதையும் எம் எஸ் . உள்பட நிறைய  சங்கீத வித்துவான்கள் பாடியுள்ளனர் . இது திருவருட்பா நூலில் இடம் பெற்றுள்ளது.

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்

நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே

****

6 .”கொல்லா நெறியே குருவருள் நெறி எனப்

பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே”

இவ்வரிகளால் புலால் தவிர்த்தலே குருவருளைப் பெறுவதற்கான வழி என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

வடலூரில் பெருமனார் அமைத்த சத்திய ஞானசபையின் நுழைவு வாயிலில் ” புலை கொலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே நுழையவும் “என்ற அறிவிப்பு உள்ளது. இதன் மூலம் வள்ளல் பெருமனாரின் ஞான மார்க்கத்திற்குப் புலால் தவிர்த்தல் அடிப்படை தகுதி என்பது உறுதியாகின்றது.

*உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்; அவர் புற இனத்தார். அவர்களுக்குப்

பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக; பரிந்து மற்றைப் பண்பு உரையேல்….*

என்று வள்ளல் பெருமனார் திருஅருட்பா ஆறாம் திருமுறையில் 607 -ஆம் பாடலில் பாடியுள்ளார்.

****

7.அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள் திருவொற்றியூரில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். அங்கு தியாகராஜருடன் கோவில் கொண்ட வடிவுடை அம்மனைப் போற்றி 101 பாடல்களைப் பாடினார். ஒரு பாடலில்  என் குல தெய்வமே என்று அம்மனைப் பாடிப் பரவுகிறார்

****

8.கொஞ்சும் சலங்கை (1962): இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்” என்ற வள்ளலாரின் பாடல் பிலஹரி ராகத்தில் அமைக்கப்பட்டு சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்களால் பாடப்பட்டது.கோகிலவாணி (1956): இத்திரைப்படத்திலும் வள்ளலாரின் திருவருட்பா பாடல்கள் சில பின்னணியில் இடம்பெற்றுள்ளன/

1988 ஆம் ஆண்டு வெளிவந்த சர்க்கரைப் பந்தல் திரைப்படத்தில் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) எழுதிய வரிகளில் இடம்பெற்ற பாடல் “அன்பென்னும்” என்ற பாடலாகும். இப்பாடலை சுனந்தா பாடியுள்ளார், இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவுகல வாமைவேண்டும்

பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை

பேசா திருக்க்வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்

பிடியா திருக்கவேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை

மறவா திருக்கவேண்டும்

மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

****

9.”வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்” என்பது இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) இயற்றிய திருவருட்பா பாடலாகும். ஆன்மீக அனுபவத்தின் உச்ச நிலையில் மாயைக் காட்சிகள் நீங்கி, மெய்யான ஓம்கார நாதம் வெளிப்படுவதை விளக்கும் உயர்ந்த ஆன்மீகப் பாடலாகும். திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் இடம்பெற்ற இப்பாடலை எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பாடி பரப்பியுள்ளனர். வானத்தில் ஆடிய மயில் குயிலாக மாறியது என்பது ஆன்மீகத்தில் மனம் ஒடுங்கி, பேரின்த நாதம் உண்டாவதைக் குறிக்கும் குறியீடாகும்.

1. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி

மயில்குயில் ஆச்சுதடி.

2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்

வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி

வள்ளலைக் கண்டேனடி.

3. சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்

சோதியைக் கண்டேனடி – அக்கச்சி

சோதியைக் கண்டேனடி.

4. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்

ஐயரைக் கண்டேனடி – அக்கச்சி

ஐயரைக் கண்டேனடி.

****

10.வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

    நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

    தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்

    ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே– என்று மாணிக்கவாசகரைப் போற்றுகிறார் .

**

 வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்

    கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்

    வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான

    நாட்டமுறு மென்னிலிங்கு நான்அடதல் வியப்பன்றே.

அப்பர் பெருமானையும் அவரை மீண்டும் சைவ நெறிக்கு அழைத்துவந்த திலகவதியாரையும்

அருள்வழங்கும் திலகவதி அம்மையார் பின்

அவதரித்த மணியே சொல்லரசே — என்று போற்றுகிறார்.

**

மூன்று வயதில் உமாதேவியின் ஞானப்பாலுண்டு கவி மழை பொழிந்த ஞான சம்பந்தரை ,

ஏரார் பருவம் மூன்றில்  உமை இனிய  முலைப்பால் எடுத்து ஊட்டும் இன்பக் குதலை மொழிக் குருந்தே — என்றும்

பேரார் ஞான சம்பந்தப்பெருமானே  நின் திருப்புகழைப் பேசுகின்றார் மேன்மேலும் பெருஞ்செல்வத்தில் பிறங்குவரே– என்றும் பாடி மகிழ்கிறார் .–subham—

Tags– திருவருட்பா நூல்,10 கேள்விகள் ,ராமலிங்க சுவாமிகள் , வள்ளலார், தெய்வமணிமாலை , பெற்றதாய்தனை மக, ஒருமையுடன் நினது, வனத்தின் மீது மயில், வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை