உலகநீதி நூலில் 10 கேள்விகள் (Post No.16,167)

 Written by London Swaminathan

Post No. 16,167

Date uploaded in London – 5 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Project Madurai website has got the whole book. https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0022.html

1

உலகநீதி நூலினை இயற்றியவர் யார் ? அவரைப்பற்றிய முக்கிய வாழ்க்கைக் குறிப்புகள் என்ன?

2

இந்த நூலில் எத்தனை பாடல்கள் உள்ளன ? அவற்றில் இழையோடும் விஷயம் என்ன ?

3

இந்த நூல் எப்படித் துவங்குகிறது ?

4

கெட்ட நண்பர்களுடன் சேரக்கூடாது; உண்மையே பேசவேண்டும் என்பதை எப்படி வலியுறுத்துகிறார் ?

5

பாரதியார் பெண்ணுரிமையைப் பாடிப் புகழ்   பெற்றார் ? உலக நீதி நூல், பெண்களுக்கு எவ்வாறெல்லாம் ஆதரவு தருகிறது ?

6

தமிழ்நாடு என்றாலே வானளாவிய கோபுரங்கள்தான் நினைவுக்கு வரும்; தமிழ் நாடு அரசின் சின்னத்திலும் கோபுர படத்துடன் வாய்மையே வெல்லும் என்ற முண்டகோபநிஷத் வசனம்தான் உள்ளது; உலக நீதி கோயில் பற்றி என்ன செப்புகிறது ?

7

ஐந்து பேருக்கு கூலி தராமல் ஏமாற்றினால் எமன் சும்மாவிடமாட்டான் என்று எப்படி எச்சரிக்கிறார் ?

8

மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்- என்று சொல்கிறாரே! இதன் பொருள் என்ன ?

9

தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்- என்று ஏன் சொன்னார்

10

உலக நீதியைக் கேட்டு அதைப் பின்பற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

*********************

விடைகள்

1.உலகநாதர் , திருவாரூரைச் சேர்ந்தவர் என்றும் சைவத் திருமுறைகள் வெளிவர உதவியவர் என்றும் தெரிகிறது . பாடல் நடையைப் பார்க்கையில் எளிய தமிழாக இருப்பதால் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாழ்ந்தவர் என்று ஊகிக்கமுடிகிறது.

***

2.இவர் ஒரு முருக பக்தர். ஆகையால் 1 3 பாடல்களை இயற்றிய இவர் ஒவ்வொரு பாடலிலும் முருகப்பெருமானைப் போற்றுகிறார் ; ஒருவர் எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்யாமல் இருக்கக்கூடாது என்று நீதிநெறிகளை எளிய தமிழில் எதுகை மோனையுடன் பாடியுள்ளார்; சிறுவர்கள் மனப்படமாகப் பாடும் வகையில் அமைந்தது இதன் சிறப்பு .

***

3.உலக நீதி – ஆசிரியர்: உலகநாதர்  நூலினைத் துவக்கியவிதம்:

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

      ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

      போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்

வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்

      மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.

***

4.நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்

      நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்

      நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்

அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்

      அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்

மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்

      மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.       #2

XXX

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

***

5.பெண்களுக்கு ஆதரவான வரிகள்:-

கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்:- பிறருடைய மனைவியை மனதிலும் விரும்பக்கூடாது .

வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்:-

பெண்களுக்கு விரைவாகத் திருமணம் செய்ய வேண்டும் .

மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்:–

மனைவியை குறைகூறக் கூடாது ; இந்தக் கருத்து வேறு எவரும் சொல்லாத புரட்சிக்கருத்து !

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்:-

இரண்டு பெண்டாட்டிகளைக் கட்டிக்கொண்டு

இருதலைப்பாம்பு  போல இருக்காதே.

கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம் (இதை ஏன் சொன்னார் என்று விளங்கவில்லை )

***

6.கடவுள் விரோதக் கயவர்களுக்கு செமை அடி கொடுக்க ஒரே வரியில் சொல்கிறார்: கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்.

XX

தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

XX

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

***

7.அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்

      அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்

தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி

      சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி

வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி

      மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி

இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை

      ஏதெது செய்வானோ ஏமன்றானே.       #11

Don’t forget to give the fees to washerman(laundry), barber (hair cutting saloon), Teacher or school, nurse, and doctor.

***

8.பழங்காலத்தில் பெரும்பாலும் நிலத் தகராறுகள் விசாரணைக்கு வரும் ; அதற்குப் பொய் சாட்சி சொல்லவும் ஆட்களைத் தயார் செய்வார்கள்; அதுபோன்ற விசாரணைகள் கிராமத்தலைவர் தலைமையில் ஆலமரத்துக்கு அடியிலுள்ள மேடை அருகே நடைபெறும் அப்போது மண் தரை மீது நின்று கொண்டு மண் / நிலம் தொடர்பான சாட்சியம் சொல்ல சிலர் வருவார்கள் ; அப்படி பூமி மீதே நின்று கொண்டு பூமி பற்றியே பொய்ச் சாட்சியம் சொல்லுவது தகாது என்பதே இந்த வாசகத்தின் பொருள். 

***

9.தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ஒரு பழமொழி உள்ளது; தானும் உண்ணாமல் மற்றவர்களுக்கு காசு கொடுத்தும் உதவாமல் பொற்  காசுகளைப்  பானையில் வைத்து அவருக்கு மட்டுமே தெரிந்த இடத்தில் புதைத்துவிடுவார் அதை யாருக்கும் சொல்லாமலேயே இறந்த பின்னர் அது யாரோ ஒருவருக்குப் புதையலாகக்  கிடைத்துவிடும்; பெரும்பாலும் புதையலை எடுப்போர் அதை யாருக்கும் தெரிவிக்காமல் பங்கு பிரித்துக்  கொள்வார்கள் ; தொல்பொருட் துறையினர் கண்டுபிடிக்கும்போது மட்டும் அந்தச் செய்தி பத்திரிகையில் வரும்.

***

10. உலக நீதியால் கிடைக்கும் பலன்:

ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி

      அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்

      உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

      கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு

போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்

      பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமே.       #13

–subham—

Tags. உலகநீதி, நூல், 10 கேள்விகள், உலகநாதர், பெண்கள் உரிமை, 5 பேர் கூலி

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 110; இந்து மத கலைச்சொல் அகராதி-110 (Post.16,166)

Written by London Swaminathan

Post No. 16,166

Date uploaded in London – 5 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ENGLISH VERSION POSTED YESTERDAY.

Word beginning with letter U

உதயணன்

உதயணன் – வாசவதத்தா காதல் கதை உலகத்தின் பழங்கால காதல் கதைகளில் முக்கியமான ஒன்றாகும். சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நடந்த உண்மைக் கதை  . சந்திர வம்சத்தில் தோன்றிய உதயணனன் வத்ச நாட்டை ஆண்டுவந்தான் . சஹஸ்ரானிகா என்ற மன்னன் மனைவி ம்ருகாவதி ஜமதக்கினி முனிவரின் ஆஸ்ரமத்தில் தஞ்சம் புகுந்து வாழ்ந்த காலத்தில் உதயணன் பிறந்தான் . பிறக்கும்போதே இவன் உலகப் புகழ்பெறுவான் என்ற அசரீரி வானில் ஒலித்தது. தமிழில் பெருங்கதை என்னும் காப்பியத்திலும், சம்ஸ்க்ருதத்தில் ஸ்வப்னவாசவதத்தம் போன்ற நூல்களிலும் இக்கதை விவரிக்கப்பட்டுள்ளது. காளிதாசனும் உதயணனைக் குறிப்பிட்டுள்ளான். பெருங்கதை என்னும் தமிழ் நூலில் காணப்படும் கதை பின் வருமாறு : பெருங்கதை நூல் முழுவதும் கிடைக்கவில்லை காண்டங்களின் உட்பிரிவுகள் ஆகிய காதைகள் பல அழிந்துள்ளன.உதயணன் யாழிசையில் வல்லவன். அவனது யாழின் இசைக்கு மயங்கி ஒரு தெய்வீக யானை அவனிடம் வந்தது.உதயணன் ஒரு நாள் சோர்வு மிகுதியால் யானைக்கு உணவு தரும் முன்பாக, தான் உண்டு விட்டான். இதனால் யானையும் அவனைப் பிரிந்து சென்று விட்டது. வருத்தம் அடைந்த உதயணன், யாழை இசைத்துக் கொண்டே காடு மலைகளில் எல்லாம் யானையைத் தேடி அலைந்தான். இந்நிலையில் உச்சயினியை ஆண்ட மன்னன், ஓர் இயந்திர யானையைப் பயன்படுத்தி உதயணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த யூகி உதயணனை மீட்கத் திட்டம் இட்டான். இதன்படி உச்சயினியின் பட்டத்து யானையை மதம் கொள்ள வைத்துத் தெரு வீதிகளில் திரிய விட்டான். யானையை எவராலும் அடக்க இயலவில்லை. இறுதியில் மன்னன் உதயணனைச் சிறையில் இருந்து விடுவித்தான். யானையை அடக்க வேண்டினான். யானையை அடக்கிய உதயணன் அரசனின் நன்மதிப்பைப் பெற்றான்.பின்பு உச்சயினி மன்னன் மகள் வாசவதத்தைக்கு யாழ் கற்றுத்தரும் வேளையில், இருவருக்கும் காதல் மலர்ந்தது. உதயணன் வாசவதத்தையைத் திருமணம் செய்தான் . தன்னுடைய நாட்டினை ஆளவதற்குத் திரும்பிவந்தான் .நாட்டைக் கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தவில்லை. இதனால் இருவரையும் பிரித்தலே நாட்டுக்கு நன்மை என்பதை அவனுடைய நண்பன்/அமைச்சன்  யூகி உணர்ந்தான். இருவரையும் பிரித்து வைக்கத் திட்டமும் தீட்டினான். வாசவதத்தையை யாரும் அறியாமல் வேறோர் இடத்திற்கு மாற்றி, அவள் தீயினால் மாண்டு விட்டதாகவும் செய்தி பரப்பினான். இருவரின் பிரிவையும் தாங்காத உதயணன் பெரிதும் மனம் கலங்கினான். அக்கவலையை மாற்ற இராசகிரியத்தில் இருந்த ஒரு முனிவரை அடைந்தான்.

இராசகிரி நகரில்  இருந்தபோது அந்த நகரத்து அரசன் தங்கை பத்மாவதியை மணந்தான். பின்பு தன் நகராகிய கௌசாம்பிக்கு வந்தான். அங்கு, யூகியும் வாசவதத்தையும் மீண்டும் வருவதைக் கண்டு உதயணன் மகிழ்ந்தான். அதன் பின்னர், மானனீகை என்பவளையும், விரிசிகை என்பவளையும் மணந்து கொண்டு வாழ்ந்தான். வாசவதத்தையின் மகன் நரவாகன தத்தன் காந்தருவ உலகத்தை வெற்றி கொண்டு அங்கு ஆட்சி புரிந்தான். இதன் பின்னர் உதயணன், பதுமாவதியின் மகன் கோமுகனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். இறுதியில் துறவு மேற்கொண்டான்.

***

உத்தவ

Uddhava (उद्धव).—கிருஷ்ண பரமாத்மாவின் நெருங்கிய நாப்பண்; யாதவ குலத்தில் உதித்த அவன் கிருஷ்ணருக்கு நண்பனாகவும் தூதனாகவும் செயல்பட்டான் . அவனை ஹரிதாசன் என்று பாகவத புராணம் புகழ்கிறது . துவாரகை மதுரா ஆகிய நகரங்களுக்கு இடையே சென்று திரும்புகையில் கோபியர்கள் கிருஷ்ணரை மீண்டும் மதுரா நகரத்துக்கு அழைத்து வருமாறு கெஞ்சினார்கள். ஒரு சாபத்தினால் யாதவ குலம் அழியப்போவதை மனதில் கொண்டு, கிருஷ்ணரிடம் சென்று, யாது செய்வதென்று வினவினான் ; அவர் பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்று தவம் இயற்றுவாயாக என்று ஆலோசனை வழங்கினார் .

உத்தவகீதை

இந்துமதத்திலுள்ள 64 கீதைகளில் இதுவும் போற்றப்படுகிறது ; உரையாடல் வடிவிலுள்ள உத்தவகீதையிலும் தத்துவ விஷயங்கள் இருக்கின்றன .உத்தவர் பற்றியும் நூல்கள் உள. அவை उद्धवदूत (உத்தவதூத), उद्धवसंदेश (உத்தவசந்தேச) எனப்படும்

***8****

உலூக Ulūka (उलूक).—

ஆந்தை என்று பொருள் ; ஆங்கிலத்திலுள்ள அவ்ல் OWL என்ற சொல் ஸம்ஸ்க்ருத்திலிருந்து உதித்ததே  ! ஆந்தை என்னும் பறவை மிகவும் புத்திசாலி என்பதால் லண்டனிலும் லநாதனிலும் கிரேக்க நாட்டிலும் பல பள்ளி கல்லூரிகளில் இதை சின்னத்தில் பொறிக்கின்றனர் ; தமிழில் பிசிர்  ஆந்தையார் போன்ற பல புலவர்களின் பெயரில் ஆந்தை உள்ளதும் ஆராய்ச்சிக்குரியதே ; ரிக் வேதத்திலும் பாணினி சூத்திரத்திலும் உள்ள ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையுடைய சொல் ஆந்தை ; இந்திரனுக்கும் ஆந்தை என்ற பெயர் உண்டு

பழைய நூல்களில் முனிவர், மன்னர், நாகர், இடங்களின் பெயராகவும் கையாளப்பட்டுள்ளது. மஹாபாரதத்தில் சகுனியின் மகனாகவும் பாண் டவர்களிடத்தில் துரியோதனனுப்பிய தூதுவனாகவும் இருந்தவன் பெயரும் உலூக என்பதே . யுத்தத்தில் அர்ஜுனன் அவனைத் தோற்கடித்தான்; சகாதேவன் உலூகனைக் கொன்றான்

ஆந்தை என்ற பொருளில் ஆயுர்வேத நூல்களில் இதன் மாமிசத்தை மருந்தாகப் பயன்படும் செய்திகள் உள்ளன ; ஸ்ம்ருதிகள் என்னும் இந்துமத சட்டப்புஸ்தகங்களில் இதன் மாமிசத்தை திவசம் என்னும் திதிகளில் பயன்படுத்தும் குறிப்புகளும் உள. பஞ்ச தந்தரக் கதையின் கடைசி கதை ஆந்தைகள்- காக்கைகள் போராட்டக் கதை ஆகும் ;இறுதியில் காக்கைகள் மகாநாடு கூட்டித் திட்டமிட்டு பகல் நேரத்தில் ஆந்தைகளின் கூடுகளுக்கு தீ  வைத்து அவைகளை அழிக்கிறது  ; இதை ஒரு முன்னுதாரணமாக மனதில் நினைத்து பாண்டவர்களின் கூடாரத்துக்கு அஸ்வத்தாமன் தீ வைத்து பாண்டவர்களில் இளையோர் அனைவரையும் அழிக்கிறான். 

***

உலூபி என்பவள் நாக இளவரசி-(उलूपी)

ஒரு நாள், அர்ஜுனன், தனது அன்றாடச் சடங்குகளைச் செய்ய கங்கைக்குள் இறங்கினான்.அப்போது காம தேவனால் உந்தப்பட்ட நாக மன்னனின் மகளான உலூபி, அர்ஜுனனை நீருக்கு அடியில் இழுத்துச் சென்றாள். நாக மன்னன் மகளைக் {உலூபியைக்} கண்டு அவளிடம் சிரித்துக் கொண்டே,(16) “ஓ அழகானவளே, உனது துடுக்குத் தனத்தால் என்ன காரியத்தைச் செய்தாய்? ஓ மருண்டவளே! இந்த அழகான பகுதி யாருக்குச் சொந்தமானது? நீ யார்? யாருடைய மகள்?” என்று கேட்டான்.”ஐராவதனின் குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகளே. எனது பெயர் உலூபி ஆகும்என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று மன்றாடினாள்  {உலூபியே}, நான் 12 வருட பிரம்மச்சரிய விரதம் அனுஷ்டிக்கிறேன் என்று சொல்லி மறுத்தான் . ஆசை நிரம்பிய நான் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.  உம்மை எனக்குக் கொடுத்து எனது விருப்பத்தை நிறைவேற்றும் ” என்றாள்.அவனும் அவளுடன் இரவில் தங்கி அவளது விருப்பத்தை நிறைவேற்றினான்  “நீரிலும், நிலத்திலும் வாழும் எந்த உயிரினத்தையும் உம்மால் வெற்றி கொள்ள இயலும்” என்று வரம் கொடுத்தாள் உலூபி”. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான்.

பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள்.அர்ஜுனனுக்கும் சித்திராங்கதைக்கும் பிறந்தவனின் பெயர் பப்புருவாகனன்.  மஹாபாரத  போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உலூபி உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் இறப்பதற்க் அர்ஜுனனும் ஒரு காரணம் பீஹ்மரின் சகோதரர்களான  வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அர்ஜுனனை உலூபி காப்பாற்றுகிறாள்.உலூபி ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று குரு குல மன்னர்கள் அனைவருக்கும் சேவை செய்கிறாள் பாண்டவர்கள் இமயமலை நோக்கி நடந்து உயிர்விடச் சென்ற போது உலூபி கங்கையில் மூழ்குகிறாள் . சித்ராங்கதை மணலூர் புரத்துக்குத் திரும்புகிறாள் இந்தக் கதை பாண்டவர்களையும்  பாண்டியர்களையும் இணைக்கும் கதையாக உள்ளது.

***

உமா

பார்வதியின் பெயர்; சிவ பெருமானின் மனைவி; 2000 ஆண்டுப் பமையான சங்கத் தமிழ் இலக்கியத்தில் சம்ஸ்க்ருதத்தில் இறைவியின் பெயர் உள்ளது உண்மைதான்; ஏனைய லெட்சுமி, துர்கா, சரஸ்வதி லட்சுமியின் அக்காள் முதலியோர் எல்லோரும் தமிழ்ப்பெயர்களில் குறிப்பிடப்படுகின்றனர் உபநிஷத்துக்களிலும் வரும் பெயர் உமாதான்! உமா என்றால் காட்டில் தவம் செய்யப்போக்காதே என்று அவளுடைய அம்மா சொன்ன சொற்கள் ஆகும்

அப்போது அவளுடைய அம்மாவின் பெயர் மேனா; அப்பாவின் பெயர் இமவான் ; காளிதாசனின் குமார சம்பவம் என்னும் நூல் உண்மை அம்மையின் பெருமையை உலகரியச் செய்தது. 

****

உபநிஷத் Upaniṣad  (उपनिषद्).—

(उपनिषद्) அருகிலிருந்து ஞான விஷயங்களைக் கற்றல் அல்லது அறிதல் என்பது இந்தச் சொல்லின் பொருள்; வேத இலக்கியம் என்பது சம்ஹிதை பிராமணங்கள், ஆரண்யகங்கள் உபநிஷத்துக்கள் என்ற நான்கு பகுதிகளை உடைத்து ; இவற்றில் ஆரண்யகங்கள் என்ற வனம்/ காடுகளில் ரிஷிகள்  வாழ்ந்த  வாழ்க்கையின் தொடர்ச்சியாகவே உபநிஷத்துக்கள் வருகிறது; ஜீவாத்மா என்னும் மனிதன் பரமாத்மா என்னும் இறைவனின் அம்சமே  என்ற விஷயத்தைக் கூறும் இப்பகுதியை வேதாந்தம் என்பார்கள்; வவேதத்தின் அந்தம் — அதாவது வேதத்தின் சாரம்- முடிவு—இதுதான். 108 உபநிஷத்துக்கள் பட்டியல் இருந்தாலும் ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய பத்துதான் பழையவை, ஒரிஜினல்; ஏனையவை இமிடேஷன் கோல்ட் போன்றவை; பத்து முக்கிய — ஒரிஜினல்– உபநிஷத்துக்கள் பின்வருமாறு:

முக்கிய உபநிஷத் மந்திரங்கள் என்ற என்னுடைய ஆங்கில, தமிழ்க் கட்டுரைகளில் ஒரிஜினல் உபநிஷத் மந்திரங்களை அர்த்தத்தோடு கொடுத்துள்ளேன் .

1.ஐதரேய உபநிஷத் -ரிக்வேதம் சார்ந்தது

2.பிருஹதாரண்யக உபநிஷத் (யஜுர்வேத)

3.சாந்தோக்கிய உபநிஷத் (connected to the சாமவேத)

4. ஈஷா உபநிஷத் (also called ஈசாவாஸ்ய)

5.கத உபநிஷத்- கடோபநிஷத்

6. கேன உபநிஷத்

7.மாண்டூக்ய உபநிஷத்

8.முண்டக உபநிஷத்

9.ப்ரஸ்ன உபநிஷத்

10.தைத்திரீய உபநிஷத்

***

உபரிசர வசு Uparicaravasu (उपरिचरवसु)

சேதி நாட்டினை ஆண்ட ஒரு மன்னன் உபரிசர வசு; அவனுக்கு இந்திரன், ஒரு விமானத்தையும் வாடாத தாமரை மாலையையும் கொடுத்தான் . அந்த மாலை அவனுக்கு, யாராலும் வெல்ல முடியாத கவசம் போன்றது . அவன் கிரிகா என்ற பெண்ணை மணந்தான் .சக்திமதி ஆற்றினைத் தடுத்த கோலாகல மலையை அவன் காலால் உடைத்த போது  தோன்றிய பெண் கிரிகா;  ஒரு நாள் கானகம் சென்றான் ;அவளுடன் இன்பமாக இருந்த நினைவுகள் வந்தபோது, விந்து வெளியேறியது ; அதை வீணடிக்க மனம் இல்லாமல் ஒரு பறவையிடம் இலையில் கொடுத்து  கிரிஜாவுக்கு அனுப்பினான் . அது இன்னொரு பறவையுடன் சண்டையிட்டபொழுது அதை நழுவ விட்டது கங்கை ஆற்றில் விழுந்த அந்த விந்துவை ஒரு மீன் சாப்பிடவே மீனவப் பெண் மத்ஸ்யகந்தி பிறந்தாள். அவள் சத்யவதி என்னும் பெயரில் சந்தனுவை மணந்தாள். அவளுக்குப் பிறந்த ஐந்து பிள்ளைகளும் ஐந்து அரசர்களாகி புதிய வம்சங்களை உருவாக்கினார்கள் ; சத்யவதி- சந்தனு-  பீஷ்மர் கதைகள் வேறு பதிவுகளில் உள்ளன.  

TO BE CONTINUED………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 110; இந்து மத கலைச்சொல் அகராதி-110, உதயணன் , உபரிசரவசு , உபநிஷத், உலூபி, உலோக, உமா

கர்ம பலனும் கடவுளின் கருணையும்! (Post.16,165)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,165

Date uploaded in London – 5 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கர்ம பலனும் கடவுளின் கருணையும்!

ச. நாகராஜன்

ஶ்ரீ ஓம்கார்நாத் தேவ் அவர்களின் புத்தகம் ‘கேபர் ஜூலி’யிலிருந்து

ஒரு சம்பவம்.

‘ராம ராம’ என்ற நாமத்தை ஜெபித்தால் மோசமான ஒரு சம்பவம் கூட நல்லதாக ஆகிவிடும்.

ஒரு நாள் கேபா (வங்காளத்தில் இறைபக்தியினால் ஊக்கமூட்டப்பட்ட ஒருவருக்கான சொல்) தெய்வ பக்தியில் திளைந்திருந்த போது ஒரு வயதான பெண்மணி அழுதவாறே அவர் அருகில் வந்ததைக் கண்டார்.

அவள், “ஓ! என் மகனே! எங்கே போனாய் நீ? எனக்கு இப்போது யாருமே இல்லை. என்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? யார் எனக்கு உணவளிப்பார்கள்? உனக்காக நான் எல்லாவற்றையும் இழந்தேன். இப்போது நான் பிச்சை எடுத்துத் தான் வாழ வேண்டும்” என்று கூறிக் கதறினாள்.

கேபா அந்தப் பெண்மணி தன் ஒரே மகனை இழந்து விட்டாள் என்பதைப் புரிந்து கொண்டார். அவர் உள்ளம் இரக்கத்தால் நிரம்பியது. ‘எப்படி இது அவளுக்கு நல்லதாக ஆக முடியும்?’ என்று எண்ணிய அவர் அந்தப் பெண்மணியை நோக்கி, “கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்காகவே இருக்கும்” என்றார்.

தாங்க முடியாத துக்கத்தை அனுபவிக்கும் போது இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பெண்மணி மௌனமாக கேபாவைப் பார்த்தாள்.

கேபா மௌனமாக உடகார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.

அவர் முன்னே ஒரு காட்சி விரிந்தது.

ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் அவர் பார்த்தார்.

“என்னிடமிருந்து வாங்கிய ஒவ்வொரு பைசாவையும் அதற்கான வட்டியுடன் சேர்த்துக் கொடு. இல்லையேல் பெரிய துரதிர்ஷ்டம் உனக்கு வந்து சேரும்” என்றான் அவன்.

அந்தப் பெண் சொன்னாள் :”எப்படி என்னால் தர முடியும்?என்னிடம் ஒன்றுமே இல்லை. பிச்சை எடுத்துத் தான் நான் வாழ்கிறேன். இந்தச் சமயத்தில் என்னால் உனக்கு எப்படி பணம் தர முடியும்?”

அதற்கு அவன் சொன்னான்: “அது பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குச் சேர வேண்டிய பணம் வரும் வரையில் நீ என்னிடமிருந்து தப்பிக்கவே முடியாது! ஒவ்வொரு பைசாவையும் வட்டியுடன் உன்னிடமிருந்து நான் கறப்பேன். என்னை நீ அழ வைத்தது போல நான் உன்னை அழ வைப்பேன்.”

“என்னிடம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது எப்படி என்னிடமிருந்து நீ உன் பணத்தை மீட்பாய்?” என்றாள் அந்தப் பெண்மணி.

அதற்கு அவன் கூறினான்: “எனது அடுத்த பிறவியில் நான் உன் மகனாகப் பிறப்பேன். நீ உன் ரத்தத்தால் அனைத்தையும் தியாகம் செய்து என்னை வளர்ப்பாய். உனது அனைத்துச் செல்வமும் இதில் போய் விடும். மொத்த பணமும் வட்டியுடன் தீரும் போது  நான் என் உடலை விடுவேன். எனது பணத்திற்காக இப்போது நான் வருந்துவது போல என்னை இழந்ததற்காக நீ வருந்துவாய்”.

காட்சி இத்துடன் முடிந்தது.

‘ராம ராம’ கடன் மொத்தமும் கொடுத்தாகி விட்டது. கடவுள் எதைச் செய்தாலும் அது நல்லதற்காகவே தான் இருக்கும்” என்று கூவினார் கேபா.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி கேபாவின் காலில் விழுந்து அவரை நோக்கி, “பெரியவரே! கடன் கொடுத்தாகி விட்டதா? இதற்கு அர்த்தம் என்ன?” என்று கேட்டாள்.

“என் காலை விடு! நான் ஒரு வெறும் பக்தன் தான். நான் ஒரு காட்சியைக் கண்டேன். உனது மகன் கடன் கொடுத்தவன். நீ கடனாளி. அவன் உன்னிடம் கடனை வசூலிக்க வந்தான்.” என்றார் கேபா.

பிறகு தான் கண்ட காட்சியை விளக்கினார்.

“நீங்கள் சொல்வதே சரி. நான் கடனாளி தான். அவன் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தான். இப்போது நான் என்ன செய்வது?” என்றாள் அந்தப் பெண்மணி.

கேபா வானத்தை நோக்கிப் பார்த்தார், பின்னர் அந்தப் பெண்மணியிடம் கூறினார்: “இந்த பிரபஞ்சமே அவனுடையது தான். ராம ராம என்று ஜபி. அவனை அழை” என்றார்.

ராம ராம என்று ஜபிக்க ஆரம்பித்த அந்தப் பெண்மணி சாந்தியை அடைந்தாள். கடவுள் எது செய்தாலும் அது நல்லதற்குத் தான்; அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

கடவுளின் கருணையால் அவளது தீய கர்மம் தீர்க்கப்பட்டது!

*

நன்றி : கல்கத்தா வார இதழ் ட்ரூத் -தொகுதி 94 இதழ் 19 தேதி:21-8-2026

**

MIRACLES DO HAPPEN EVEN TODAY ; KRISHNA MANTRA SAVED TUNNEL WORKER IN NEPAL

கிருஷ்ணன் பிறந்த நாளில் கிருஷ்ண பரமாத்மா செய்த அதிசயம் ; ஒன்பது நாளுக்குப் பின்னர் பூமிக்கு அடியிலிருந்து  உயிருடன் மீட்கப்பட்டவர் ஹரே கிருஷ்ணா மந்திரம் சொல்லி உயிர் பிழைத்தார் ; நேபாள சுரங்க அதிசயம்  !

‘Kept chanting Hare Krishna’: Nepal man rescued alive after being trapped in tunnel for 9 days

Sanjay Sah reportedly told security personnel that he had spent the last nine days trapped inside the tunnel, chanting the ‘Hare Krishna’ mantra.

Updated on: Sep 4, 2026, 17:37:27 IST

Two men were rescued alive from a tunnel at the Trishuli 3A hydropower project on Friday, nine days after a flash flood tore through Nepal, with one of the survivors saying he kept chanting the ‘Hare Krishna’ mantra, praying that rescuers would reach him.

The two men were identified as Kabir Maharjan, 45, a mechanical supervisor at the project, and Sanjay Sah, 30, a foreman, the public relations directorate of the Nepal Army said.

Maharjan was airlifted to the Nepal Army Hospital in Kathmandu. His condition is reported to be critical. Sah is receiving treatment at Trishuli Hospital in Nuwakot, Nepali ANepal Tunnel Collapse: Sanjay Sah Rescued on Janmashtami After 9 Days, Says Hare Krishna Mahamantra Kept Him Alive A remarkable rescue in Nepal has drawn attention after worker Sanjay Sah was pulled a…

Read more at: https://organiser.org/2026/09/04/378795/world/nepal-tunnel-collapse-sanjay-sah-rescued-on-janmashtami-after-9-days-says-hare-krishna-mahamantra-kept-him-alive/rmy spokesperson Raja Ram Basnet said.

–SUBHAM–

அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பற்றி 10 கேள்விகள்(Post.16,164)

Written by London Swaminathan

Post No. 16,164

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Source:
வெற்றிவேற்கை
(ஆசிரியர் : அதிவீரராம பாண்டியன்)
உரையும் கதைக்குறிப்பும்

வாழ்குடை, சுப்பிரமணிய சர்மா
மூன்றாவது பதிப்பு
ஆர். கணபதி அண்டு கம்பெனி,
பிரம்பூர், சென்னை.
1919 , 3rd edition
All Rights Reserved.)
(விலை அணா 5.
P.R. Rama Iyar and Co, Printers, Madras
————–

PROJECT MADURAI WEBSITE HAS THE FULL BOOK WITH NOTES AND 100 STORIES.

வெற்றிவேற்கை

1

அதி வீர ராம பாண்டியன்  யார் ?

2

அவர் எத்தனை நூல்களை எழுதினார் ?

3

வெற்றிவேற்கை’ நூலில் அவர் பெண்களுக்கு கூறும் புத்திமதிகள் என்ன  ?

4

66. முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் என்ன? நூலாசிரியர் நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

5

உபநிஷத்தில் ஆலமரத்தின் விதையை வைத்து போதிக்கிறார் ஒரு ரிஷி; பஞ்ச  தந்திரக் கதையில் ஆலமரத்தின் அழகான  வருணனை வருகிறது; நமது புலவர் அதி வீர ராம பாண்டியன்  என்ன சொல்கிறார் ?

6

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்- என்பது சம்ஸ்க்ருதத்தில் மாதா பிதா குரு தெய்வம் என்ற வாக்கியத்திலும் ஆசார்ய தேவோ பவ என்ற  வேத வாக்கியத்திலும் வருகிறது . ஆனால் எழுத்து அறிவித்தவன் சிவன் என்ற புதிய விளக்கம் தருகிறார் 1919 ஆம்1919 ஆண்டு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா அது என்ன விளக்கம் ?

7

பயணிகளுக்கு அதி வீர ராம பாண்டியன்  சொல்லும் அறிவுரைகள் என்ன ?

8

வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!- இதற்கு நூலாசிரியர் சுப்பிரமணிய சர்மா சொல்லும் கதை என்ன ?

9

தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு என்ன பொருள் ?

10

பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு என்ன பொருள் ?

*********************************

விடைகள்

1.இவர் பாண்டி நாட்டிலுள்ள தென்காசியில் அரசு செலுத்தினவர். சந்திரவம்சத்துச் சிற்றரசர். சைவ சமயத்தினர். இவர் சகோதரர் வரதுங்கராம பாண்டியன். தென்காசியின் சிலாசாசனத்தினால் இவர் காலம் சாலிவாகன சகம் 1485 (1564–1604 ce)  என்று தெரியவருகிறது. கொற்கை யென்னும் பட்டணத்தில் இவரிருந்து அரசு நடத்தவில்லை. அஃது ஒருசமயம் இவரைச் சேர்ந்ததாக விருந்திருக்கலாம்.

***

2.’வெற்றிவேற்கை’, புத்தகத்துக்கு ‘நறுந்தொகை’ என்ற பெயருமு ண்டு. வெற்றிவேற்கை யென்பது புத்தகத்திலுள்ள தொடர்மொழி.  அதிவீரராம பாண்டியன்  செய்த வேறு நூல்கள் நைடதம், கூர்ம புராணம், காசிகாண்டம் என்பன. இவா சகோதரர் செய்த நூல் பிரமோத்தரகாண்டம். சிலர், கருவை வெண்பவந்தாதி கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற மூன்று அந்தாதிகளை யும் இவர் செய்தாரென்று சொல்லுகின்றனர்.

***

3.பெண்களுக்கு கூறும் புத்திமதிகள்

12. பெண்டிர்க் கழகெதிர் பேராதருத்தல்.

பெண்டிர்க்கு – பெண்களுக்கு, அழகு – அழகாவது ஏன், எதிர் பேசாது – (கணவர் மொழிக்கு) எதிர்த்துப் பேசாமல், ஒருத்தல் – அடங்கியிருத்தலாம்.

14. குலமகட் கழகு தன் கொழுநனைப் பேணுதல்.

குலமகட்கு – நற்குலத்தில் ( உசித்த) பெண்களுக்கு, அழகு – அழகாவது, தன் – தன்னுடைய, கொழுநனை – நாயகனை, பேணுதல் – காப்பாற்றுதலாம்.

23. கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர்.

கொண்டோர் எல்லாம் – (மணஞ் செய்து) கொண்ட மனைவிகள் யாவரும், பெண்டிரும் அல்லர் – நன்மனைவிகள் ஆகமாட்டார்கள்.

****

4.  முதலுள பண்டம் கொண்டுவாணிபம் செய்து

அதன்பயன் உண்ணா வணிகனும் பதரே.– இதன் பொருள் – நூலாசிரியர் சொல்லும் கதை :

உள் முதல் – தன்னிடத்துள்ள முதலால், பண்டம் – பொருள்களை, கொண்டு – வாங்கி வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து – வர்த்தகம் செய்து, அதன் பயன் – அதனால் வரும் லாபத்தை, உண்ணா – அநுபவியாத, வணிகனும் – வைசியனும், பதர்-பதராவான். எ – அசை .

 மைசூரில் சங்கரராவ் என்று ஒருவர் இருந்தார். அவருக்குப் பிதிரார்ஜிதமாக நாற்பது ஏகர் நிலம் இருந்தது. அவர் காலமறிந்து பயிர் செய்யத் தெரியாமல் வீண் செலவு செய்து கடன் பட்டுப் பாதி நிலத்தை விற்றுவிட்டார். மற்ற நிலங்கள் குத்தகையில் இருந்தன. தாசப்பா என்றவன் அவற்றை வைத்துக் கொண்டிருந்தான். ஒருநாள் தாசப்பா சங்கரராவைக் கண்டு ‘ஐயா! தாங்கள் நிலங்களை விற்கப்போவதாகச் சொல்கிறார்கள்; அது மெய்யாயின் அவற்றை எனக்கு விலைப்படுத்துங்கள் ! நான் பணம் கொடுக்கிறேன்’ என்றான். அவர் ஆச்சரியப் பட்டுத் தாசப்பா! எனக்கு எல்லா நிலங்களும் இருந்தும் செலவுக்குப் பற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை விற்றுக்கொண்டு வருகிறேன். நீ பாதி நிலத்தைக் குத்தகை யெடுத்து கொண்டு நிலம் வாங்குவதற்குப் பணம் சம்பாதித்திருக்கிறாய்; பணம் எப்படிச் சேர்த்தாய்? அதனை எனக்குச் சொல் ‘ என்று கேட்டார்.

அவன் ‘ஐயா! நீங்கள் எல்லாவற்றிற்கும் போ! போ!’ என்கிறீர்கள். நான் ஒவ்வொன்றுக்கும் ‘வா! வா!’ என்கிறேன். இதுதான் வித்தியாசம். அதாவது, நீங்கள் வேலையாட்களைப் போய் வேலை செய்யுங்கள்!’ என்கிறீர்கள். நான் ‘வாருங்கள்! வேலைக்குப் போகலாம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் அவர்களோடு வேலை செய்து வருகிறேன். அதனால், எனக்கு அதிக லாபம் கிடைக்கின்றது’ என்று சொல்லி அந்நிலங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டான். ஆதலால், காலத்தில் பயிர் செய்து லாபம் சம்பாதிக்கத் தெரியாதவன் நெற்பதர் போலப் பயன்பட மாட்டான்.

— கதாவாசகம்.

***

5. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும், அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 

தெள்ளிய – தெள்ளி யெடுக்கத்தக்க, ஆலின் – ஆலமரத்தின், சிறுபழத்து – சிறிய பழத்தினுடைய, ஒருவிதை – ஒருவிதையானது, தெள் – தெளிந்த, நீர் – நீரையுடைய, கயத்து – குளத்திலுள்ள, சிறு மீன் – சிறிய மீனின், சினையினும் – முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே – சிறியதே. ஆயினும் – ஆனாலும், அண்ணல் – பெருமை பொருந்திய, யானை – யானையும், அணி – அழகிய, தேர் – தேரும், புரவி – குதிரையும், ஆள் – காலாள்களுமாகிய, பெரும் – பெரிய, படையொடு – சேனைகளோடு, மன்னர்க்கு- அரசருக்கும், இருக்க (வெயிலில்) தங்கியிருக்க, நிழல் ஆகும் – நிழலைத் தரும். ஏ- அசை.

 நெடுங்காலத்துக்கு முன்னர்க் காசிபர் என்ற முனிவருக்கு இரணியகசிபு என்று ஒரு புத்திரன் பிறந்தான். அவன் மிகவும் பெரிய வடிவத்தைக் கொண்டவன். உதயகிரி அஸ்தமனகிரி என்ற இரண்டு மலைகளையும் அவன் தன் காதுக்குக் குண்டலங்களாக அணிந்து திரிந்ததுவே அவன் பெரிய வடிவத்தைப் பிரசித்தியாக்கும். அவன் ஒருவரும் பெறமுடியாத உயர்ந்த வரத்தைப் பிரமதேவரிடத்தில் பெற்றிருந்தான். அவன் வரம் இது:- ‘ இரவிலும், பகலிலும், உயிருள்ளவற்றிலும், உயிரில்லாதவற்றிலும், உள்ளிலும் வெளியிலும், தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன நிற்பன என்ற எழுவகைத தோற்றத்திலும் தான் இறக்கலாகாது’ என்பதாம். அவனைப்போல யோசித்து வரம் பெற்றவர் ஒருவரும் இல்லை. பெரும்பாலும் அவன் வரமடைந்ததற்கு இறவாமலேயே இருந்திருக்கவேண்டும். அவனுக்குப் பிடிவாதமும் பெருங்கோபமும் அதிகம். கருவம் அவன் நெஞ்சத்தில் குடி புகுந்தது. அதனால், அவன் கடைசியில் கொஞ்சமும் அறிவில்லாமல் எல்லாரும் தன்னையே கடவுள் என்று கொண்டாடும் வண்ணம் கட்டாயப்படுத்தத் தொடங்கினான். அறிவுள்ளவர் பலரும் அதனைச் சிறிதும் அங்கீகரிக்க வில்லை. உலகத்தில் அவன் உபத்திரவமும் பயமும் அதிகமாக வளரத்தொடங்கின. அப்புறம் ஸ்ரீ மகாவிஷ்ணு நரசிங் காவதாரம் செய்து அவனை உபாயமாகக் கொன்று உலகத்தின் பயத்தை நீக்கினார். ஆதலால், உருவத்தில் பெரியவர்களான அனைவரும் அறிவிலும் பெரியவர்களாக முடியாது.

— பாகவதம்.

*****

6.எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

a. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (நமக்குக்) கற்பித்தவன், இறைவன் – கடவுளுக்குச் சமானமாக, ஆகும் – (வணங்கத்தக்கவன்) ஆவான்.

b. முற்காலத்தில் பாணினி என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் வடமொழியில் நிகரற்ற பண்டிதர். அவர் அப்பாஷைக்குத் தாம் ஓரிலக்கணம் செய்யவேண்டும் என்று பனிமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யத் தொடங்கினார். அப்பொழுது சிவபெருமான் அவருக்குத் தரிசனம் கொடுத்துத் தமது இடக் காத்திலிருந்த டமருகம் என்ற வாத்தியத்தை ஒலிக்கப் பண்ணினார். அவ்வாத்தியத்திலிருந்து பதினான்கு வகையான அக்ஷா சப்தங்கள் உண்டாயின. பாணினி முனிவர் அச்சப்தங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு இலக்கண சூத்திரங்களை உண்டு பண்ணினார். அதற்குப் பாணினி வியாகர்ணம் என்று பெயர். அப்புறம் பதஞ்சலி என்ற வேறொரு முனிவர் அதற்குப் பாஷியம் (உரை) எழுதி விளக்கினார்.

முன்பு இமயவரசன் புத்திரியான பார்வதிதேவிக்குப் பனிமலையில் திருக்கலியாணம் நடந்தது. அதற்கு உலகத்திலுள்ள எல்லாத் தேவர்களும் எல்லா முனிவர்களும் ஒன்றாகத் திரண்டு வந்திருந்தார்கள். அதனால், உலகத்தின் வடக்குத் திசையில் பளு அதிகமாயிற்று. அந்தப் பாரத்தைத் தாங்கமாட்டாமல் அத்திசை தாழ்ந்து தெற்குத் திசை உயர்ந்து போயிற்று. சிவபெருமான் அதன் காரணத்தை உணர்ந்து தெற்கில் சென்று உலகத்தின் பளுவைச் சமன் செய்யும்படி முனிவரிற் சிறந்த அகஸ்தியருக்குக் கட்டளை யிட்டனர்.

அம்முனிவர் கடவுளை வணங்கித் ’தலைவரே! தங்கள் திருக்கலியாணம் காண உலகத்தில் உள்ள அனைவரும் வந்து ஒன்றாகத் திரண்டிருக்கின்றனர். நான் மாத்திரம் அதனைக் காணாமல் அகல்வது நியாயமாகுமா? அதனுடன் தெற்குத்திக்கு திராவிட தேசம். எனக்கு அந்தப் பாஷை கொஞ்சமும் தெரியமாட்டாது. நான் சென்று அங்கு எப்படியிருப்பேன் ?’ என்று சொன்னார். சிவபெருமான் ’அன்பனே! கவலையுறாதே ; எமது திருமணக்கோலத்தை நீ விரும்பும் ஒவ்வொரு சிவதலந்தோறும் உனக்குக் காண்பிக்கிறோம். திராவிட பாஷையில் உனக்குச் சிறந்த ஞானம் உண்டாகும் வண்ணம் அநுக்கிரகம் செய்கிறோம். உன் பெயரால் இலக்கணமியற்றி நீ அந்தப் புராதன பாஷைக்குத் தலைவனாக விளங்கிவா!’ என்று திருவாய்மலர்ந்து,

அவருக்குத் தமிழ்ப்பாஷையையும் அதன் இலக்கணத்தையும் உபதேசம் செய்தனர். உடனே முனிவர் கடவுளிடம் விடை பெற்றுக்கொண்டு தென் திக்கை அடைந்து பொதிகை மலையில் தங்கித் தமது பெயரால் அகத்தியம் என்று ஒரு பெரிய இலக்கணமியற்றித் தமிழ்ப் பயிரை வளர்த்தார். ஆதலால், வடமொழி தென்மொழி யென்ற இரண்டு பாஷைகளுக்கும் முதலில் இலக்கணத்தை அறிய வித்தவர் சிவபெருமானே யாவர்.

— திருவிளையாடற் புராணம்.

———-

 எழுத்தறிவித்தவன் இறைவ னாகும்.

b. எழுத்து – இலக்கண இலக்கிய நூல்களை, அறிவித்தவன் – (உலகத்துக்கு) முதலில் கற்பித்தவன், இறைவன் ஆகும் – கடவுள் ஆவார்.

2. முன்னர்ச் சொன்ன பட்டணத்தைச் சார்ந்த மைலாப்பூரில் திருவள்ளுவர் என்று ஒரு தமிழ்ப்புலவர் இருந்தார். அவர் தமிழ்ப்பாஷையைத் தெளிவாகக் கற்றவர். நல்லொழுக்கம் நிறைந்தவர். இல்வாழ்க்கையில் இயைந்தவர். முனிவர்களைப்போல முக்காலத்தையும் அறிந்து சொல்கின்ற ஞானக்கண் பெற்றவர். அவர் திருக்குறள் என்று மிகவும் சிறந்த நீதி நூலொன்று இயற்றி அதனை மதுரைப் பட்டணத்துக்கு எடுத்துக் கொண்டு சென்று அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். அதன் பொருள் இணையற்றதென்று எல்லா மதத்தவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மிகவும் சிறிய வாக்கியங்களில் பெரிய விஷயங்களை அடக்கித் தெளிவாகச் சொல்லியிருக்கும் நீதி நூல் தமிழ்ப்பாஷையில் அஃதொன்றேயாகும் அந் நூல் அவர்கள் திறமையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணர்த்துவது மல்லாமல், படிப்பவர் மனத்தைப் பாகுபோல வுருக்கிப் பயன் பெறவும் செய்கின்றது. ஆதலால், திருவள்ளுவரைப் போலக் குற்றமும் சந்தேகமும் இல்லாமற் சொல்வது தான் ஒருவன் கற்ற கல்விக்கு அழகாகும்.

— புலவர் புராணம்.

****

7.பயணிகளுக்கு அவர் சொல்லும் அறிவுரைகள் :

76. சுழியா வருபுனல் இழியா தொழிவது.

சுழியா – சுழித்துக்கொண்டு, வரு – வருகின்ற, புனல் – வெள்ளத்தில், இழியாது- இறங்காமல், ஒழிவது – நீங்கவேண்டும்.

76. துணையோ டல்லது நெடுவழி போகேல்.

துணையோடு – துணையினோடு, அல்லது – அல்லாமல், நெடுவழி – தூரமான வழியில், போகேல் – (நீ செல்லாதே.

77. புணைமீதல்லது நெடும்புனல் ஏகேல்.

புணைமீது- தெப்பத்தின்மேல், அல்லது-அல்லாமல், நெடும் புனல் – பெரிய நீரில், ஏகேல்- (நீ ) நீந்திச் செல்லாதே.

79. வழியே யோக வழியே மீளுக.

வழியே – (ஒருவன் இல்லற) வழியிலே, ஏகுக – செல்லக் கடவன்; வழியே – (பின்னர் ) அவ்வழியிலிருந்து, மீளுக – (துறவற வழியில்) திரும்பக்கடவன். இன்னுமொரு பொருள் : போன வழியை நினைவு வைத்துக்கொண்டு அதே வழியில் திரும்புக. பலரும் சுற்றுலா செல்கையில் வழித்தவருவது இயற்கை.

***

8. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்

சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின்.

பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால்

மெய்போ லும்மே! மெய்போ லும்மே!

வாய் – வாயானது, பறை ஆகவும் – தம்பட்டம் என்ற பறை வாத்தியமாகவும், நா – நாவானது, கடிப்பு ஆகவும் – அடிக்கும் கோலாகவும் கொண்டு, சாற்றுவது – கொட்டித் தெரிவிப்பதாகிய, ஒன்றை – ஒரு காரியத்தை, போற்றி – ஆதரவுடன், கேண்மின் – கேளுங்கள். பொய் உடை – பொய் பேசுதலையுடைய, ஒருவன் – ஒருமனிதன், சொல் பேசுகின்ற, வன்மையினால் உறுதிப்பாட்டினால், மெய்போலும் – (அவன் பேசிய பொய்ச் சொற்கள் ) மெய்யே போலத்தோன் றும்; மெய்போலும் – மெய்யேபோலத் தோன்றும். ஏ – இரண்டும் அசைகள்.

71. முன்னொரு காலத்தில் சத்திராஜித்து என்று ஒரு உயர்ந்த அரசன் இருந்தான். அவன் சூரியனைக் குறித்துத் தவம் செய்து ஸ்யமந்தகமணி யென்ற ஒரு சிறந்த இரத்தினத்தைப் பெற்றான். அம்மணி நாள் தோறும் ஒரு பாரம் எடையுள்ள தங்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமயத்தில் கிருஷ்ணன் என்பவன் தனக்கு அந்த மணியைத் தரும்படி கேட்டதற்குச் சத்திராஜித்து மன்னவன் கொடுக்கமுடியாதென்று சொல்லிவிட்டான். பிற்பாடு அவன் தம்பி பிரேசனன் அம்மணியைக் கழுத்தில் தரித்துக்கொண்டு ஒருநாள் காட் டில் வேட்டையாடப் போனான். அவனை ஒரு சிங்கம் கொன்றுவிட்டு அத்தெய்வ மணியை எடுத்துக்கொண்டு போயிற்று. அதனைக்கண்ட ஜாம்பவான் என்னும் கரடி அச்சிங்கத்தைக் கொன்று தான் அம்மணியை அடைந்தது.

சத்திராஜித்து தம்பியும் மணியும் காணாமற்போன தனால் கிருஷ்ணன் தன் தம்பியைக் கொன்று ஒருவருமறியாமல் மணியை அபகரித்துக் கொண்டு விட்டான்’ என்று பலரும் கேட்க அவதூறு பேசத்தொடங்கினான். கிருஷ்ணன் அத்தெய்வமணியைத்தான் அப்கரிக்க வில்லையென்று பலர் முன்னிலையில் பலவிதமாகச் சொல்லியுங்கூட அவன் நம்பவில்லை. சத்திராஜித்து மன்னவனைச் சாந்தவர்களும் அவனைப் போலவே அவதூறு சொல்லிக் கிருஷ்ணனைத் தூற்றத் தலைப்பட்டார்கள். பின்பு கிருஷ்ணன் ஜாம்பவானைத் தேடிச் சென்று அவனோடு சண்டை செய்து ரணகளத்தில் அவனை வென்று அம்மணியைக் கொண்டுவந்து சத்திராஜித்து மன்னவனிடம் கொடுத்த பிற்பாடுதான் அவன் சொல் உண்மையாயிற்று. ஆதலால், சில சமயங்களில் மெய்ச் சொற்களும் பொய்ச் சொற்களாக மாறிப் போகின்றன.

— பாகவதம்.

***

9. தறுகண் யானை தான் பெரி தாயினும்

சிறுகண் மூங்கில் கோற்கஞ் சும்மே.- இதற்கு பொருள்:

தறுகண் – அஞ்சாமையை உடைய, யானை – யானையானது, தான் பெரிது ஆயினும் – தான் (எல்லா மிருகங்களையும் விட உருவத்தால்) பெரியதா யிருந்தாலும், சிறுகண் – சிறிய கணுக்கள் (உள்ள), மூங்கில் கோல்கு – மூங்கிற் கோலுக்கு, அஞ்சும் – பயப்படும்.

முன்னாளில் சூரியன் புத்திரனாகிய சுக்கிரீவன் என்ற குரங்குத்தலைவன் ரிசிய மூக மலையில் வாசம் செய்து வந்தான். அநுமான் முதலான அறிவில் மிகுந்த வாநரர்கள் அவனுக்கு மந்திரிகளாகி அப்பொழு தப்பொழுது ஆகுங் காரியங்களை அறிந்து சொல்லிவந்தார்கள். வாலி அவ்விடத்துக்கு வந்தால் இறந்து போவான் என்பதை அவன் அறியாமலிருக்கவில்லை. மதங்கர் என்ற முனிவர் வாலிக்கு அவ்வாறு சாபமிட்டிருந்தார். ஆனாலும், சுக்கிரீவன் இரவும் பகலும் வாலியை நினைந்து பயந்து நடுங்கிக் கொண்டேயிருந்தான். இராமன் வந்த பிற்பாடுதான் அவ னுக்கு அந்தப்பயம் நீங்கிற்று. ஆதலால், எவ்வளவு பத்திரமான இடத்திலிருந்தாலும் பெரிய சத்துருக்களுக்கு அனைவரும் பயப்படுவார்கள்.

— இராமாயணம்.

***

10. பெற்றமும் கழுதையும் மேய்ந்த வப்பாழ்

பொற்றொடி மகளிரும் மைந்தரும் செறிந்து

நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.– இதற்கு பொருள்:

பெற்றமும் – பசுக்களும், கழுதையும் – கழுதைகளும், மேய்ந்த – மேய்ந்து கொண்டிருந்த, அ பாழ் – அந்தப் பாழ் (நிலமானது), பொன் தொடி – பொன்னாலாகிய வளையல்களை (யணிந்த), மகளி ரும் – பெண்களும், மைந்தரும் -புருஷர்களும், செறிந்து – நிறைந்து, நெல் பொலி – நெல்லின் (குதிர்கள் ) விளங்குகின்ற, நெடுநகர் – பெரிய பட்டணம், ஆயினும் – ஆகும், ஆனாலும் – ஆகும்.

நெடுநாளைக்கு முன்பு கவுதமா என்ற முனிவர் தம் மனைவி அநசூயையோடு நைமிச வனத்தில் தவம் செய்துவந்தார். அப்பொழுது உலகத்தில் பன்னிரண்டு வருஷம் வரையில் மழை பொழியாமல் பெரும் பஞ்சம் பாவிப் பீடித்து வந்தது. வனத்திலிருந்த முனிவர்களும் நாட்டிலுள்ள அந்தணர்களும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வகையில்லாமல் கவுதமாச்சிரமத்துக்கு வந்து அவரைத் தஞ்சமடைந்தார்கள். கவுதம முனிவர் தமது உயர்ந்த வேத பாராயணத்தினாலும், சிறந்த தவவொழுக்கத்தினாலும் கோதுமைப் பயிர் செய்து அதிகமான தானியங்களை விளைத்து அத்தனை பெயரையும் குறைவில்லாமல் காப்பாற்றி வந்தார். பின்னர் இரண்டாவது தடவை நேர்ந்த அவ்விதமான மற்றொரு பஞ்சத்திலும் அவர் திரியம்பகம் என்றவிடத்தில் இருந்து கொண்டு தமது வேத பாராயண மகிமையினால் பிடி நெல்லை விதைத்துப் பயிர் செய்து விளைத்து எல்லாம் அந்தணர்களையும் பஞ்சம் தெளியும் வரையில் காப்பாற்றி வந்திருக்கிறார். அம்முனிவரைப்போல வேதமோதுவதும் அடுத்தவர்களை ஆதரிப்பதும் அந்தணர்களுக்குச் சிறந்த தருமமாகும்.– சிவபுராணம்.

–subham—

Tags- அதிவீர ராம பாண்டியன் நூல்கள், 10 கேள்விகள், வெற்றிவேற்கை, கதைகள் , சுப்பிரமணிய சர்மா

Valluvar justifies Lying! End justifies Means! Tirukkural Encyclopaedia- Chapter 30 வாய்மை – Veracity (Post.16,163)

Written by London Swaminathan

Post No. 16,163

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted:

Adi Sankara, the greatest philosopher of India, and Tiru Valluvar, the greatest poet of Tamil Nadu, says lying is OK provided it results in something good (See Kural 292). All of us know how Lord Krishna made Yudhishthira to tell a lie in the middle of the war (Asvathama Dead Episode). In Tamil we have a proverb saying You can do a marriage . even by telling 1000 lies! Someone getting married id a good thing. So, their general policy is Ends justify means.

This chapter echoes Subramanya Bharati’s saying that one’s words become bright like light when there is truth inside.

In Kural 295 Vallluvar again repeats Bhagavad Gita’s DHAANAM and TAVAM which shows he hia memorised Bhagavad Gita; earlier we saw this in chapter two. Valluvar likes Sanskrit words.

Throughout Vedas and Upanishads, we see Sathyam/Truth is praised as God.

Kural 298 shows Bathing done by Hindus every day, unlike other communities

Mano Vaak, Kaayam is a cliché in Sanskrit scriptures. But Tamil wonder is that we have three separate words for them : UNMAI (mano),VAAIMAI( vaak)and MEIMAI (kaaya)

One must be truthful in WORD ,THOUGHT and DEED is insisted throughout Sanskrit scriptures, Tamil has separate words!

***

Shankara’s View

Adi Shankara in the Prasna Uttara Ratna Malika (Gem Garland of Questions and Answers) hymn says
There are 67 verses in question and answer format. In the 46th verse he puts one question ‘Who is not to be trusted?’ The answer is ‘one who as a rule utters lies’.
In the next verse (47), one of the questions is ‘on what occasions even a lie is sinless?’ ‘That which is uttered for the sake of protecting righteousness (Dharma)’.
One should not harm anyone while telling a truth and one can tell a lie if it can bring some good to someone.

Plato’s View

SM Diaz in his commentary on Tirukkural adds:
“The eminent Greek philosopher Plato, of a date prior to Thiruvalluvar , has discussed in his Republic, the concept of the Noble Lie, which statesmen may use under certain circumstances as an instrument of state-craft or education. G.C.Field who discusses this matter in his book entitled The Philosophy of Plato quotes as example, Mr Churchill’s ‘ terminological inexactitudes’, used during World War II, as a means of deceiving the enemy, in the national interest.”

“ In the Mahabharata, Dharmaputra’s true statement, drowned in noise and made to appear false, in order to produce a certain good result, was also considered to come under this category. In Tamil Nadu the proverb that Even a thousand lies would be worthwhile to bring about a marriage, is based on the same principle of Plato’s Noble Lie.”

Aswaththama Hatha: Narova Kunjarova: (Aswaththama dead; whether man or elephant)
Krishna had arranged to have an elephant named Aswatthma sacrificed in the battle. Yudhistira confirmed that Aswatthma had been killed adding in a lower tone Aswaththama ‘the elephant’ or man which had been killed. This news shattered Aswatthma ‘s father Drona who threw down his arms in despair. Unarmed Drona was killed by Dhristadymna . Story of Kausika in the Mahabharata also shows this type of approach

***

Hindu children are taught the story of Harishchandra from the Puranas; Mahatma Gandhi himself said that this story made the biggest impact in his life.

His mother used to tell him bed side stories.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

Part 48

 Chapter 30. வாய்மை – Veracity

***

1.3.6 Veracity

291.What is truthfulness? It is the utterance of such words that smack not of even the slightest taint of evil-.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

291.If one’s speech does not wrong any living creature,

While being factually correct, that is truthfulness-.S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

291
You ask, in lips of men what ‘truth’ may be;
‘Tis speech from every taint of evil free.
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).- Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

291.If “What is truth”? the question be,
It is to speak out evil-free.       Suddhananda Bharathiyar- SB

***
291.Speech which causes no harm whatsoever to anyone is what is called truth — EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

291.What is it that men truthfulness do call?

It is speech that is free from any taint of evil fruit- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***
291. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

XXXXXXXXXXXXXXXXXX

292.Even falsehood carries with it’s the very stamp and ring of truth, if unmixed goo springs from it-– ANM+2

***

Even untruth might attain the value of truth,

If it is productive of unmixed good, without the least blemish-– SMD

***

292
Falsehood may take the place of truthful word,
If blessing, free from fault, it can afford.
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault. – GUP

***
292.E’en falsehood may for truth suffice,
When good it brings removing vice. – SB

***

292.If it will produce, unmixed good even falsehood may be considered truth- EVS

***

292.Even untruth may in truth’s own nature share,

If faultless good it can produce-HAP

***

292. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

XXXXXXXXXXXXXXXXXXXXX

293.speak not a word which you know in the innermost core of your being as false, lest your own conscience should smite you-– ANM+2

***

293.Do not utter falsehood about what your conscience knows to b true;

For later your own conscience will continue to hurt you-– SMD

***

293
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one’s spirit glows.
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt). – GUP

***
293.Let not a man knowingly lie;
Conscience will scorch and make him sigh.       – SB

***

293.If a man should utter a lie consciously, his own mind would torture him for the lie uttered  EVS

***

293.Tell not a lie, even though your heart alone does know;

Your very heart will burn you for that lie-HAP

***

293. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

294.behold the man who is true to the very marrow of his bones; he lives enshrined in the hearts of all-– ANM+2

***

294.If he lives true to his inner mind,

He lives in the hearts of all mankind-– SMD

***

294
True to his inmost soul who lives,- enshrined
He lives in souls of all mankind.
He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men. – GUP

***

294.He lives in loving hearts of all
Who serves the Truth serene in soul.         – SB

***

294.If a man could conduct himself true to his own self he would be in the heart of all in the world – EVS

***

294.Who in his soul doth walk from falsehood free,

Will live for ever in the souls of noble-minded men –HAP

***

294. உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

295.More glorious than a benefactor and an ascetic is a sincere heart from whose depths words of truth gush out-– ANM+2

***

295.if one is truthful in thought and word,

It is better than doing penance and charity-– SMD

***

295
Greater is he who speaks the truth with full consenting mind.
Than men whose lives have penitence and charity combined.
He, who speaks truth with all his heart, is superior to those who make gifts and practise austerities. – GUP
***
295.To speak the truth from heart sincere
Is more than giving and living austere.        – SB

***

295.One who is true in thought and word is greater even those who perform Tapas (penance) and do charity —  EVS

***
295. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

XXXXXXXXXXXXXXXXXXXXXX

296.Who speaketh forth the truth with all his heart,

Is chief among those who do both alms and tapas too-HAP

***

296.Tere is no other renown greater than that which comes of truthfulness; for it easily unlocks the treasures of  every other virtue-– ANM+2

***

296.All the world esteems a truthful man, for whom

Other virtues come without any effort-– SMD

***

296
No praise like that of words from falsehood free;
This every virtue yields spontaneously.
There is no praise like the praise of never uttering a falsehood: without causing any suffering, it will lead to every virtue. – GUP

***

296.Not to lie brings all the praise
All virtues from Truth arise.        – SB

***
296.There is no renown equal to the reputation of truthfulness. It is capable of bringing all the other virtues in its train besides averting suffering hereafter EVS –

***

296. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

XXXXXXXXXXXXXXXXXXX

297.every other penance is superfluous to him that dwells in the light of truth-– ANM+2

***

297.If one speaks the truth and only truth,

He need not seek any other virtue-– SMD

***

297
If all your life be utter truth, the truth alone,
‘Tis well, though other virtuous acts be left undone.
If a man has the power to abstain from falsehood, it will be well with him, even though he practise no other virtue. – GUP

***

297.Lie not lie not. Naught else you need
All virtues are in Truth indeed.        – SB

***
297.If one could safeguard oneself against flinching from truth one need practise no other virtue —  EVS

***

297. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
298.Water cleanses the body; truth cleanses the soul-– ANM+2

***

298.Water makes the external cleanliness;

Truthfulness is the detergent of the heart-– SMD

***

298
Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.
Purity of body is produced by water and purity of mind by truthfulness. – GUP

***

298.Water makes you pure outward
Truth renders you pure inward.     – SB

***
298.Outward purity may be secured by the use of water. Inward purity of the heart comes from truthfulness.-  EVS
***

298.An outward purity by water’s aid is caused;

But inward purity by truthfulness is shown-HAP

***

298. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

299.All the lights that shine in the realm of nature are not lights in the eyes of the sages; for to them, the lamp of truth, which chases away the hidden darkness of their soul, is the only light-– ANM+2

***

299.Lamps do not give the light that holy men desire;

It is the light of Truth that illuminates their path –– SMD

***

299
Every lamp is not a lamp in wise men’s sight;
That’s the lamp with truth’s pure radiance bright.
All lamps of nature are not lamps; the lamp of truth is the lamp of the wise. – GUP

***
299.All lights are not lights for the wise;
Truth light is light bright like sun-light         – SB

***
299.All lamps are of no avail. The light of truth is the only is the only lamp which the wise cherish-  EVS

***

299.Not every kind of lamp is really a Light.

The lamp of Truth alone to wise men is Light- HAP

***

299. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

300.In my all-ceaseless wanderings in the world of thought and imagination, I have found nothing worthier than truthfulness-– ANM+2

***

300.Of all things confirmed in our experience,

There is nothing more precious than truth –– SMD

***

300
Of all good things we’ve scanned with studious care,
There’s nought that can with truthfulness compare.
Amidst all that we have seen (described) as real (excellence), there is nothing so good as truthfulness. – GUP

***

300.Of all the things we here have seen
Nothing surpasses Truth serene !         – SB

***

300.In all true scriptures we have known, nothing is praised so highly as truthfulness–  EVS

***

300.Of all true things that we have ever known

Not one with truthfulness can ever compare- HAP

***


300. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

To be continued….

Tags-Valluvar justifies Lying! End justifies Means! Tirukkural Encyclopaedia- Chapter 30 வாய்மை – Veracity 

துளசிதாசரின்   கிஷ்கிந்தா காண்டம்    ஓர் ஆய்வு  –  26(Post.16,163)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,163

Date uploaded in London –   4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின்   கிஷ்கிந்தா காண்டம்    ஓர் ஆய்வு  –  26 

(ஆர்சேஷாத்ரிநாதன்)

 சர்கம் 3

तब हनुमंत उभय दिसि की सब कथा सुनाइ।

पावक साखी देइ करि जोरी प्रीति दृढ़ाइ॥4॥ 

அப்பொழுது  ஹனுமன் இரு பக்கத்துக் கதைகளையும்  இரு தரப்பினருக்கும் எடுத்துக் கூறி  அக்னியை சாட்சியாக வைத்து இருவருக்குமிடையே உள்ள நட்பை உறுதி செய்தார். 

துளசி தாசர் तब என்ற பதப் பிரயோகம் போடுகிறார். அதாவது எப்போது பரஸ்பரம் நட்பு கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்ததோ என்ற பொருள். அதாவது எப்போது இரு தரப்பு கதைகளையும் கேட்டு இருவருக்கிடையேயும் நட்பு மலர்கிறதோ என்ற பொருள். காரணம் பின்னல் இருவருக்கிடையே எந்தவித பிணக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக., அப்படி என்ன இருபக்க கதைகள்?. இராமன் சார்பாக ஹனுமன் சொன்னது வான்மீகத்தில்

 अयम् रामो महाप्राज्ञ संप्राप्तो दृढ विक्रमः |

लक्ष्मणेन सह भ्रात्रा रामोऽयम् सत्य विक्रमः || ४-५-२

इक्ष्वाकूणाम् कुले जातो रामो दशरथात्मजः |

धर्मे निगदितः च एव पितुर् निर्देश कारकः || ४-५-३

राजसूय अश्वमेधैः च वह्निः येन अभितर्पितः |

दक्षिणाः च तथा उत्सृष्टा गावः शत सहस्रशः || ४-५-४

तपसा सत्य वाक्येन वसुधा येन पालिता |

स्त्री हेतोः तस्य पुत्रोऽयम् रामः अरणयम् समागतः || ४-५-५

तस्य अस्य वसतो अरण्ये नियतस्य महात्मनः |

रावणेन हृता भार्या स त्वाम् शरणम् आगतः || ४-५-६

भवता सख्य कामौ तौ भ्रातरौ राम लक्ष्मणौ |

प्रगृह्य च अर्चयस्व एतौ पूजनीयतमौ उभौ || ४-५-७

“இவர் இக்ஷ்வாகு குல அரசன் தசரதனின் புதல்வன். தந்தையின் கட்டளையை ஏற்று மனைவியுடனும்  தனது தம்பியான இலக்ஷ்மணனுடனும் வனத்திற்கு வந்துள்ளார். இராவணன் இவரது மனைவியை கவர்ந்து சென்றுவிட்டான். தனது மனைவியைத் தேடி இங்கு வந்துள்ளார். இவர் சத்யசாந்தன். நேர்மையின் அவதாரம். தாங்கள் சீதையை தேடித் தர இவருக்கு உதவ வேண்டும்”

 இப்பொழுது சுக்ரீவன் தரப்பிலிருந்து இந்த விவரங்களைச் சொன்னான் ஹனுமன் “சுக்ரீவனை அவனது அண்ணன் வாலி நாட்டைவிட்டு துரத்தி விட்டான். அவனது ராஜ்ஜியம் அவனது மனைவி எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டதோடல்லாமல் அவரிடம் இன்னும் பகைமை கொண்டுள்ளான். வாலியைக் கண்டு பயந்து சுக்ரீவன் இங்கு தங்கியுள்ளான். சீதையைத் தேடித் தருவதில் இவன் உதவியாக இருப்பான். தாங்கள் அவனுக்கு வாலியிமிருந்து அவனது மனைவியை மீட்டுத் தருவதுடன் அரசையும் பெற்றுத் தரவேண்டும்.  

சுக்ரீவன் இராமன் உடன்படிக்கை

 பிறகு அக்னியை சாக்ஷியாக வைத்து ஒருவொருக்கொருவர் உதவி செய்வதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

काष्ठयोः स्वेन रूपेण जनयामास पावकम् |

दीप्यमानम् ततो वह्निम् पुष्पैः अभ्यर्च्य सत्कृतम् || ४-५-१४

तयोर् मध्ये तु सुप्रीतो निदधौ सुसमाहितः |

तो अग्निम् दीप्यमानम् तौ चक्रतुः च प्रदक्षिणम् || ४-५-१५

सुग्रीवो राघवः च एव वयस्यत्वम् उपागतौ |

ततः सुप्रीत मनसौ तौ उभौ हरि राघवौ || ४-५-१६

अन्योन्यम् अभिवीक्षन्तौ न तृप्तिम् अभिजग्मतुः |

त्वम् वयस्योऽसि हृद्यः मे हि एकम् दुःखम् सुखम् च नौ |

வால்மீகி சொல்வதாவது – ஹனுமான் இரண்டு சுள்ளிகளை எடுத்து அவற்றை ஒன்றோடொன்று உராயவைத்து நெருப்பை உண்டாக்கினான். பிறகு அதற்கு பூக்களால் பூஜை செய்து அதை இராமன் சுக்ரீவன் இருவருக்கும் இடையில் வைத்தான். பிறகு இராமனும் சுக்ரீவனும் அக்னியை வலம் வந்து நண்பர்களானார்கள். சுக்ரீவன் இராமனிடம் சொன்னான் “இனி நாம் நண்பர்கள். இருவரது சுக துக்கங்களும் ஒன்றுதான்.. இதே கருத்தைத்தான் ஆத்யாத்ம இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது

ततो हनूमान् प्रज्वाल्य तयोरग्निं समीपतः ।

तावुभौ रामसुग्रीवावग्नौ साक्षिणि तिष्ठति ॥ ४४॥

बाहू प्रसार्य चालिङ्ग्य परस्परमकल्मषौ

 இங்கு ஒரு கேள்வி எழலாம் . அக்னிக்கு இணையான சக்தி உள்ளவன் சூர்யன் . பிறகு அவனை ஏன் சாக்ஷியாக வைத்துக் கொள்ளவில்லை? இதற்கு உரையாசிரியர்கள்  சொல்வதாவது.  – இராமன் சூரிய வமசத்தைச் சேர்ந்தவன். சுக்ரீவன் சூரியனின் ஒரு அம்சம். தங்களைச் சார்ந்தவர்களைச் சாக்ஷியாக வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்திலேயே சூரியனை சாட்சியாகக் கருதவில்லை.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 109; இந்து மத கலைச்சொல் அகராதி-109 (Post.16,162)

Written by London Swaminathan

Post No. 16,162

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Word beginning with letter U

Udayana

One of the oldest romantic stories in the world. It is the Love Story of Udayana and Vasavadtta.

Udayana (उदयन).—A renowned king of the Candravaṃśa (Lunar dynasty).

Udayana (उदयन) is the name of the King of Vatsa, according to the Kathāsaritsāgara, chapter 9. He was born to Mṛgāvatī (the wife of King Sahasrānīka) while she was taking refuge at the hermitage of Jamadagni. Accordingly,

“And some days after the blameless one (Mṛgāvatī) gave birth to a charmingly beautiful son… At that moment a voice was heard from heaven: ‘An august king of great renown has been born, Udayana by name, and his son shall be monarch of all the Vidyādharas.’” King Udayana of Vatsa is the legendary ancient Indian monarch whose romance with Princess Vasavadatta is celebrated as one of India’s earliest secular love stories.

His story is used or mentioned by various authors. Playwrights Bhasa, Kalidasa, Harsha and many others mentioned him.

Udayana grew up with exceptional talents, including mastery of the lute (veena) and a unique ability to tame wild elephants through music. King Pradyota of Ujjayini wanted Udayana’s elephant-taming secrets and lured him into a trap using a mechanical wooden elephant, holding him prisoner. Imprisoned in the capital, Udayana was assigned to teach the lute to Pradyota’s daughter, Vasavadatta. The two fell deeply in love and eventually eloped on a swift elephant back to Udayana’s capital, Kaushambi. Fearing the king had grown soft, Udayana’s ministers faked Vasavadatta’s death in a fire to push him into a politically advantageous marriage with Padmavati, princess of Magadha. The truth was later revealed, reuniting the family.  His life inspired classic Sanskrit masterpieces, most notably Svapnavasavadattam by the ancient playwright Bhasa.

***

Udhdhava

Uddhava (उद्धव).—A learned disciple of Bṛhaspati and confidential friend of Lord Kṛṣṇa in Dvārakā.A member of the Yadu dynasty. In Mathurā and Dvārakā he is Kṛṣṇa’s dearmost friend. In Śrīmad Bhāgavatam, he is called hari-dāsa, the most dear servant of Śrī Hari.

Uddhavagītā refers to one of the sixty-four Gītās commonly referred to in Hindu scriptures.—Gītā is the name given to certain sacred writings in verse (often in the form of a dialogue) which are devoted to the exposition of particular religious and theosophical doctrines. When Kṛṣṇa was taken by Akrūra to Maṭhurā, Uddhava was implored by the citizens of Gokula to go and fetch him. On seeing the destruction of the Yādavas to be inevitable, he went to Kṛṣṇa and asked him what to do; whereupon he was told to go to Badarikāśrama to practise penance and to secure heaven. He is the subject of two short poems, उद्धवदूत (uddhavadūta) and उद्धवसंदेश (uddhavasaṃdeśa).

***

Uluka

English word OWL is derived from Sanskrit ULUKA for owl. In 2000 year old Sangam Tamil literature a few poets are named AANTHAI meaning owl. Owl is considered very intelligent and so used as emblem in many institutions in London. Greek coins have owl prominently displayed.

1) Ulūka (उलूक):—is in all the Vedas and Panini’s sutras.

2) Name of Indra,

3) of a Muni (in the [Vāyu-purāṇa] enumerated together with Kaṇāda, but perhaps identical with him, as the Vaiśeṣika system is called Aulūkya-darśana in the [Sarvadarśana-saṃgraha])

4) of a Nāga, [Suparṇādhyāya]

5) of a king of the Ulūkas

6.Ulūka (उलूक).—The son of Śakuni. (Mahābhārata Udyoga Parva, Chapter 57, Stanza 25). In the Bhārata Battle Ulūka was sent as a messenger to the camp of the Pāṇḍavas by Duryodhana. Arjuna defeated Ulūka in the Mahabharata war. Later in a fight between Sahadeva and Ulūka , Sahadeva killed Ulūka.

Ulūka (उलूक) is a Sanskrit word referring to the biird “owl”. The meat of this animal is part of the māṃsavarga (‘group of flesh’), which is used throughout Ayurvedic literature. It is part of the sub-group named prasaha, refering to animals “who take their food by snatching”. It was classified by Caraka in his Carakasaṃhitā sūtrasthāna (chapter 27), a classical Ayurvedic work. Caraka defined such groups (vargas) based on the dietic properties of the substance.

Ulūka (उलूक) (lit. “one which makes shrill outcry”) is mentioned in Mṛgapakṣiśāstra (Mriga-pakshi-shastra) or “the ancient Indian science of animals and birds” by Hamsadeva, containing the varieties and descriptions of the animals and birds seen in the Sanskrit. These birds [viz., Ulūka] are enumerated in almost several Smṛtis in context of specifying the expiations for killing them and their flesh being used as a dietary article to give satisfaction to the manes (Pitṛs) in Śrāddha rites. These are elaborated especially in the Manusmṛti, Parāśarasmṛti [chapter VI], Gautamasmṛti [chapter 23], Śātātapasmṛti [II.54-56], Uśānasmṛti [IX.10-IX.12], Yājñavalkyasmṛti [I.172-I.175], Viṣṇusmṛti [51.28-51.29], Uttarāṅgirasasmṛti [X.16].

Panchatantra stories has a full story on the fight between the crows and owls. Seeing such an incident Asvattama set fire to the tents of the Pandavas on the last day  of the war. In Panchatantra story crows eliminate their enemis owls by setting fire to theirs nests. Thus it is linked to religious stories.

***

Ulupi

Ulūpī (उलूपी).—A Nāga princess. She was the daughter of the serpent Kauravya. While one day she was bathing in the Ganges, she happened to see Arjuna, and being enamoured of his handsome form, she managed to have him conveyed to her home, the Pātāla, and there induced him to take her as his wife, which he, after considerable hesitation, consented to do. She bore him a son named Irāvat. When Arjuna’s head was cut off by Babhruvāhana’s arrow, it was with her assistance that he was restored to life; Once Arjuna happened to enter the palace in which Dharmaputra was living with Pāñcālī. As a result, Arjuna had to go on a pilgrimage for a year for violating the agreed rules.  Arjuna reached Gaṅgādvāra. When he got down into the river Gaṅgā, he saw Ulūpī the daughter of Nāgarāja (King of the serpents). She fell in love with Ajuna. But he  told her that Dharmaputra had imposed on him celibacy for twelve months and that it was not right to marry in the meantime. Ulūpī argued with Arjuna and convinced him that it was not wrong to marry her. Arjuna married her. A son named Irāvān was born to her. Later in her life  Ulūpī reached Hastināpura with Babhruvāhana and Citrāṅgadā. As soon as she reached there she greeted Kuntī, Draupadī and Subhadrā. She gave them various kinds of presents. Ulūpī served Gāndhārī too. When the Pāṇḍavas began the ‘great departure’ (Mahāprasthāna) Ulūpī entered the River Ganges. Citrāṅgadā went to Maṇalūr pura near modern Madurai in Tamil Nadu.      This story links Pandyas and Pandavas indirectly.

***

Uma

First Sanskrit name of a Goddess to appear in Sangam Tamil Literature; though  other names such as Laksmi, Sarasvati, Durga are mentioned  they are in Tamil .  Upanishads also mentioned Uma.

Name of the daughter of Himavat and Menā, and wife of Śiva; Kālidāsa thus derives the name :उ मेति (u meti) (oh do not, scil. practise penance) मात्रा तपसो निषिद्धा पश्चादुमाख्यां सुमुखी जगाम (mātrā tapaso niṣiddhā paścādumākhyāṃ sumukhī jagāma) Kumārasambhava 1.26; उमावृषाङ्कौ (umāvṛṣāṅkau) R.3.23.

****

Upanishad

Upaniṣad (उपनिषद्) refers to “sitting near devotedly”.—The fourth and final portion of the Vedas, expounding the secret, philosophical meaning of the Vedic hymns. The Upaniṣads are a collection of profound texts which are the source of Vedānta and have dominated Indian thought for thousands of years. They are philosophical chronicles of seers expounding the nature of God, soul and cosmos, exquisite renderings of the deepest Hindu thought.

Shankara’s commentaries established these texts as the primary canon for the Advaita Vedanta

Aitareya Upanishad (connected to the Rigveda)

  (connected to the Rigveda)

  Brihadaranyaka Upanishad (connected to the Yajurveda)

  Chandogya Upanishad (connected to the Samaveda)

  Isha Upanishad (also called Isavasya)

  Katha Upanishad

  Kena Upanishad

  Mandukya Upanishad

  Mundaka Upanishad

  Prashna Upanishad

  Taittiriya Upanishad

These are the true , original Upanishads. Others are added later imitating original Upanishads

Upaniṣad (उपनिषद्).—The four Vedas are Ṛk, Yajus, Sāma and Atharva. Each of these four has a Brāhmaṇa (a treatise relating to prayer and sacrificial ceremony). Next come the Āraṇyakas (forest texts—writings meant for the forest-dwelling hermit) as appendices to the Brāhmaṇas. Then come the Upaniṣads as appendices to the Āraṇyakas. These four classes of literary works (the Vedas, the Brāhmaṇas, the Āraṇyakas and the Upaniṣads) constitute the Vedic literature proper. The Āraṇyakas and the Upaniṣads are inseparably connected with each other. The Upaniṣads are called Vedāntas (the end of the Vedas). The bulk of these Vedāntas belong to different periods anterior to the Later Vedic Period. The students begin the study of Upaniṣads only after having completed the study of the Mantras (Vedic hymns) and the Brāhmaṇas (the ritual).

There are a large number of Upaniṣads. The most important among them are 108 in number.

***

Uparichara

Once Vasu built a hermitage and began to perform penance in accordance with the advice of Indra. When the penance became too severe Indra appeared and gave him an Flying  chariot. Since then Vasu used to travel through air in the chariot. So he got the name ‘Uparicaravasu’ (Vasu, who travels above). (Mahābhārata, Ādi Parva, Chapter 63).

Indra gave Vasu a garland (Vaijayantīmālā) which would never fade, and gave a boon that, so long as he wore that garland, he would not receive any wound. He was given a bamboo stick (Veṇudaṇḍa) and was instructed to fix that rod on the earth and celebrate the festival of Indra. Vasu celebrated the festival of Indra and from that day onwards the festival of Indra came to be celebrated in the world. Ancient Tamils also celebrated Indra Festival.

Five sons named Bṛhadratha, Kuśāmba (Maṇivāhana), Mavella, Yadu and Rājanya were born to him.

The river Śuktimatī flowed through the capital city of Vasu. Once the great hill Kolāhala grew amorous of Śuktimatī and caught hold of her. Uparicaravasu got angry at this and kicked the mountain which was split into two and Śuktimatī flowed out of the gap. Still two children were born to the great hill by Śuktimatī. The river was pleased at the freedom accorded by the king and placed the two children at the feet of the king. They grew up. The son became general of the army and the daughter Girikā became the wife of the king.

One day the king decided to go to hunt. On the same day his wife had her monthly course. Still without changing his programme he started for the forest. Even after entering the forest the thought of his wife lingered in his mind. The forest was in full bloom as it was Spring. Seeing this the king grew amorous and sat under a tree. A mild breeze was blowing. Instantly the king had seminal flow. He collected the semen in the leaf of a tree and sent it to the queen through an eagle. Thinking that to be some food, another eagle got near and a quarrel arose. The semen fell in the river Yamunā. A fish named Adrikā swallowed it. (See under Adrikā). A fisherman caught hat fish. He got a male child and a female child from the stomach of the fish. That girl is the famous Satyavatī  Matsyagandhā who became the queen of Śantanu. The fisherman gave the boy he got from the fish to king Uparicaravasu.

(iv). Once a controversy arose between Indra and the hermits, whether cow-slaughter during sacrifices, was desirable. At this time Uparicaravasu happened to come there. As he was a man of truth, he was asked to make a decision. Uparicaravasu stood on the side of Indra and gave his opinion in favour of slaughter. The hermits who were against cow-slaughter got angry and cursed Uparicaravasu to go down to the world of Pātāla (netherworld). (Matsya Purāṇa, Chapter 152).This story is seen with slight difference in Mahābhārata Śānti Parva, Chapters 322-324.

To be continued………………………………

Tags– Uparichara ,Udayana 109HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 109; இந்து மத கலைச்சொல் அகராதி-109

ராமாயணத்தில் வரங்கள் 73 – வசிஷ்ட முனிவர் ஸௌதாஸருக்கு வரம் அளித்தது! (Post.16,161)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,161

Date uploaded in London – 4 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 73 – வசிஷ்ட முனிவர் ஸௌதாஸருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் அறுபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ஸௌதாஸ சரிதம்’ என்னும் ஸர்க்கமாகும்.

லவணாசுரனைக் கொல்வதற்கு சத்ருக்னனை ராமர் அனுப்ப அவன் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கினான். அப்போது அங்கிருந்த யாகசாலையைப் பார்த்து அது யாருடையது என்று வினவ வால்மீகி முனிவர் பழைய கால சரித்திரத்தைக் கூறலானார்.

இது பற்றி சாபங்கள் புத்தகத்தில் விவரமாகக் காணலாம். சாபத்தையொட்டி தரப்பட்ட வரம் பற்றி இங்கு விளக்கப்படுகிறது.

முன்காலத்தில் சுதாஸர் என்ற ஒரு சக்கரவர்த்தி இருந்தார். அவரது மகன் வீரஸஹர் என்பவர் அரசாட்சிக்கு வந்த போது ஒரு ஜதை பேய்களைக் கண்டார். அவற்றில் ஒன்றைக் கொன்றார். இதனால் வெகுண்ட இன்னொரு பேய் பழிவாங்க சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காத்திருந்தது.

வீரஸஹர் ஒரு சமயம் வசிஷ்டரை வைத்து அஸ்வமேத யாகம் ஒன்றைப் புரிந்தார். அப்போது வசிஷ்டர் வேடம் பூண்ட பேய் அவரிடம் வந்து, “யாகம் முடிந்து விட்டது. மானிட ஊன் கலந்த உணவு வேண்டும்” என்று கூறியது. வசிஷ்டர் கேட்பதாக எண்ணிய வீரஸஹர் அப்படியே மானிட மாமிசம் கலந்த உணவைப் படைத்தார்.

தன் பத்தினி மதயந்தியுடன் அவர்  நர மாமிச உணவைப் படைக்க இதனால் வசிஷ்டர் வெகுண்டு, “இது ஒன்றே உனக்கு இனி உணவாக இருக்கக் கடவது” என்று சாபமளித்தார்.

உடனே வீரஸஹர் நடந்த அசம்பாவிதத்தை உணர்ந்து வசிஷ்டரிம் அதைத் தெரிவிக்க  அவர் மன்னரைப் பார்த்து இப்படிக் கூறினார்:

மயா ரோஷபரீதேன யதிதம் வ்யாஹ்ருதம் வச: |                            நைதச்சக்யம் வ்ருதா கர்தும் ப்ரதாஸ்யாமி ச தே வரம் ||

        உத்தரகாண்டம் அறுபத்தைந்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 35

ரோஷபரீதேன – கோபாவேசத்தில் இருந்த                                      மயா – என்னால்                                                              இதம் வச: – இந்த வாக்கானது                                                          வ்யாஹதம் – சொல்லப்பட்டது                                                                            யத் – எதுவோ                                                                       ஏதத் – அது

வ்ருதா – வீணாகப் போக                                                          கர்தும் – செய்ய                                                                 ந ஷக்யம் ச – முடியாமல் இருந்தாலும்                                                     தே – உனக்கு                                                                     வரம் – ஒரு வரத்தை                                                             ப்ரதாஸ்யாமி – அளிக்கின்றேன்                                          

காலோ த்வாதச வர்ஷாணி சாபஸ்யாந்தோ பவிஷ்யதி |                        மத்ப்ரஸாதாஸ்ச ராஜேந்த்ர வ்யதீதம் ந ஸ்மரிஷ்யாமி ||

  உத்தரகாண்டம், அறுபத்தைந்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 36

த்வாதச வர்ஷாணி – பன்னிரெண்டு வருடங்கள்                                                     கால – முடிந்தவுடன்                                                      சாபஸ்ச – சாபத்திற்கு                                                             அந்த: – முடிவு                                                               பவிஷ்யதி – ஏற்படும்                                                            ச – அன்றியும்                                                               ராஜேந்த்ர அரசர்க்கரசனே                                                       மத் ப்ரஸாதாத் – என் அனுக்ரகத்தினால்                                                 வ்யதீதம் – நடந்தேறியதை                                                                 ந ஸ்மரிஷ்யாமி – நீ நினைக்க மாட்டாய்

ஆக பன்னிரெண்டு வருடங்கள் சாபத்தை அனுபவித்த வீரஸஹர் பின் வரத்தினால் நடந்ததை மறந்தார்.

இது சாபமும் வரமும் கலந்த ஒரு அபூர்வ சம்பவமாகும்.

இந்த வீரஸஹரே ஸௌதாஸர் ஆவார். அவருக்கு கல்மாஷபாதனர் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

இவரது பத்தினியே கற்பில் சிறந்த மதயந்தி ஆவார்.

இந்த சரிதத்தை வால்மீகி முனிவர் சத்ருக்னனுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

**

ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)

TWO TAMIL FILMS PORTRAY TAMIL POET OTTAKKUTHAR.

Written by London Swaminathan

Post No. 16,160

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PProject Madurai website has full story of Ottakkuthar

1

ஒட்டக்கூத்தர் யார் ? எப்போது வாழ்ந்தார் ?

2

ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று மஹாராணி சொன்னது ஏன்?

3

அவர் எழுதிய நூல்களின் பெயர் என்ன ?

4

ஒட்டக்கூத்தர் எழுப்பிய கோயில் எங்கே உள்ளது ?

5

நெய்த்தானத்திலுள்ள சிவபெருமானைப் போற்றி இவர் பாடிய பிரபல பாடலின் வரிகள் என்ன ?

6

இவர் பாடிய வேறு நூல்கள்  யாரைப் பற்றியவை?

7

ஒட்டக்கூத்தருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்துக்கும் என்ன சம்பந்தம் ?

8

இந்தப் புலவர் இலக்கணப் பிழைகள் செய்த போலிக் புலவர்களைக் கண்டித்தார் என்பதற்கு ஆதாரம் என்ன ?

9

தவறான புலவர்களின் குடுமியை முடிந்து அவர்களை ஒட்டக்கூத்தன் வாட்டி வதைத்தான் என்பதை படிக்காசுப்  புலவர் எப்படிக்   குறிப்பிட்டார் ?

10.

ஒட்டக்கூத்தர் “ஈட்டி எழுபது” என்னும் நூலைப் பாடினாரா?

*********************

விடைகள்

1.விக்கிரம சோழன்இரண்டாம் குலோத்துங்க சோழன்இரண்டாம் இராசராச சோழன் ஆகிய சோழப் பெருமன்னர் மூவர் காலத்திலும் ஒட்டக்கூத்தர் அவர்கட்குக் கல்வி கற்பித்த ஆசிரியராய்ப் பின் அரண்மனைப் புலவராய் இறுதியில் ஞானாசிரியராய் விளங்கித் தம் தொண்ணுற்றேழாவது வயதில் சிவகதி அடைந்த்தார். கூத்தரின் பிறப்பிடம் மலரி என்றும் சீர்காழியென்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன;  காலம் 12 ஆம் நூற்றாண்டு. ஒட்டக்கூத்தர் கைக்கோளார் என்று கூறப்படும் செங்குந்தர் மரபில் தோன்றியவர். சைவ சமயத்தவர்; சக்தி வழிபாட்டில் நாட்டம் மிக்கவர்; தம் நூல்களில் திருமாலைப் பற்றிய பெருமைகளைக் கூறி வணங்குதலால், சமயப் பொதுமை உடையவர்;சிறந்த முருகபக்தர். தக்கயாகப் பரணியில் கோயில் பாடியது என்ற பகுதியில் திருஞானசம்பந்தர் வரலாறு காணப்படுகின்றது. இங்கே திருஞானசம்பந்தரை முருகப் பெருமானாகவே கூத்தர் காட்டுகின்றார்.

***

2.பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்துபின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள். உடனே  குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான்.

ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,  ஒரு பாட்டுப்பாடி கதவைத் திறந்து விடுங்கள் மஹாராணி என்றார் ; இந்தப் புலவர்தானே எனது குருவாகிய புகழேந்திப் புலவரைச் சிறையில் அடைத்தவர் என்று மேலும் கோபமுற்று இரண்டாவது தாழ்ப்பாளையும் போட்டாள்; உடனே ஊர் முழுதும் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற செய்தி பரவியது; பின்னர் மன்னன், புகழேந்திப் புலவரை விடுதலை செய்தான் 

3.எழுதிய நூல்கள் மூவருலா (விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசசோழன் உலா), குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி, உத்தர காண்டம் .

***

4.கூத்தனூரில் இவர் சரஸ்வதி தேவிக்கு எழுப்பிய கோயில் இருக்கிறது; பல கோயில்களில் சரஸ்வதிக்குச் சந்நிதி இருந்தாலும் தமிழ்நாட்டில் கலைமகளுக்கு நிறுவப்பட்ட தனிக்கோயில் இது ஒன்றுதான்.

***

5.நெய்த்தானப் பெருமானை ஒட்டக்கூத்தர் பாடியதாகப் பின்வரும் செய்யுள் தனிப்பாடல் திரட்டில் காணப் படுகின்றது. இப் பாடலில் அமைந்துள்ள அரிய பொருள், வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.

விக்கா வுக்கா வித்தா விப்போய்

விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்

இக்காயத்தா சைப்பா டுற்றே

இற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர்

அக்காடப் பேய் தொக்கா டச்சூ

ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்

கெக்கா டக்கா னத்தா டப்போம்

நெய்த்தா னத்தா னைச்சே வித்தே. [87]

பொருள் :

“விக்கித் தளர்ந்து உயிர் உடலை விட்டுப்போய் விட்டால், உறவினர் பிணத்தைத் தகனஞ் செய்துவிட்டு ஊர்க்குள் போய்விடுவர். இத்தகைய இயல்புடைய உடம்பில் பற்றுவைத்து, செல்வத்தைத் தேடிச் சம்பாதித்து வீட்டிற்கொண்டு வைக்கின்றவர்களே! தாம் அணிந் திருக்கும் எலும்பு மாலை அசையும் பேய்கள் ஒருங்குகூடிக் கூத்தாடவும், சடையிற் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும், திருக்கைகளில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு அசையவும், அச் சுடுகாட்டினிடத்தில் நடனஞ் செய்கின்ற அந்தப் பெருமை பொருந்திய நெய்த்தான மென்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு நிலையான கதியைப் பெறுவீராக.”

***

6.விக்கிரமசோழன் உலா- விக்கிரம சோழனைப் புகழும் நூல்;

குலோத்துங்க சோழன் உலா: இது, இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாவது சிறப்பான நூலாகும்.

இராசராசன் உலா: இது, மூன்றாவது உலாவாகும். பிரமன் தொடங்கி இரண்டாம் இராசராசன் வரை உள்ள வரலாறு உள்ளது ; இவ்வுலாவிற்கு, இம்மன்னன், கண்ணி தோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகச் சங்கர சோழனுலா கூறுகிறது.

தக்கயாகப்பரணி:  இதுவும் இராசராசனைச் சிறப்பித்து எழுதப்பட்டது. பண்டைய பரணி நூல்களில் கலிங்கத்துப்பரணிக்கு அடுத்த பழமையும் சிறப்பும் உடையது இந்நூல்.

உத்தரகாண்டம்: இராமர் பட்டம் சூட்டிக் கொள்வதுடன் இராமாயணம் முடிவுறும். அதன் பின்பு நடந்த செய்திகளைக் கூறுவது உத்தர ராமாயணம். இது, ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது 

***

7.ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர் என்றும், அம்பலக்கூத்தர் என்றும், ஆனந்தக் கூத்தர் என்றும் குறிப்பர் ஒரு சாரார்.

டாக்டர் மு. வரதராசனார் எழுதிய  ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் ஒட்டக்கூத்தர் பெயர்க்காரணம் பின்வருமாறு சுட்டப் படுகின்றது

“அவர் (ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டோடு பெற்றிருந்த தொடர்பு காரணமாக ஒட்ட (ஒரிசா நாட்டு) என்ற அடையுடன் ஒட்டக்கூத்தர் என வழங்கப் பெற்றார் முதற் குலோத்துங்கனின் கலிங்க வெற்றிக்குப் பிறகு, தமிழர் கலிங்க நாட்டோடு – ஒரிசாவோடு– நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடும். எனவே அம்முறையில் சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராகவும், ஆசிரியராகவும், இலக்கியச் செம்மலாகவும் விளங்கிய ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டிற்குப் பன்முறை சென்று வந்திருக்கலாம். அதுவும் அரசியற் பணியின் பொருட்டுச் சென்று வந்திருக்கலாம். இக்காரணம் பற்றி இவர் ‘ஒட்டக்கூத்தர்’ என்று அழைக்கப்பட்டார்.–[88]. தமிழ் இலக்கிய வரலாறு பக். 157.

***

8.பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே

தாட்டுக் கடற்புலி யஞ்சலன் றோவறுத் துக்கிடந்த

சூட்டுக் கதிர்க ணிலத்தடங்கா மற் றொகுத்துமள்ளர்

மேட்டுக் குவாலிடும் பொன்னிநன் னாடுடை வேற்கண்டனே.

என்னும் பாடல் தமிழ் நாவலர் சரிதையிற் [94] காணப்படுகின்றது. இப் பாடலின் கொளு, ‘அது கவிகளை அறுத்த போது புலவரெல்லாம் வெகுள, ஒட்டக்கூத்தர் பாடியது’ என்று அமைந்துள்ளது.

***

9.தனிப்பாடல் திரட்டில் ‘பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் பாடியது’ என்ற தலைப்பில் கீழ்க்காணும் பாடல் காணப்படுகின்றது.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னிங்கில்லைக்

குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி

எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை

இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு

வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை

விளையாட்டாக் கவிதைகளை விரைந்துபாடித்

தெட்டுதற்கோ வறிவில்லாத் துரைகளுண்டு

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே. [98]

‘போலிப் புலவர்களைப் பற்றிப் பாடியது’ என்ற தலைப்பில் இப்பாடல் அமைந்துள்ளது.

***

10.அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை,  “அவர் (ஒட்டக்கூத்தர்) அம்மரபின் (செங்குந்தர் மரபு) பெருமை விளங்க ஈட்டியெழுபது என்னும் நூலினைப் பாடியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர். மு. இராகவையங்கார் அவர்கள், “இப்புலவர் (ஒட்டக்கூத்தர்) பாடிய நூல்களிலே ஈட்டியெழுபது என்பதும் ஒன்று. இஃது இவரது குலப் பெருமைகளையெல்லாம் கம்பீரமாக விளக்குவது.” என்று குறிப்பிடுவர்.

–Subham—

Tags- ஒட்டக்கூத்தர் பாடல்,  10 கேள்விகள் , ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்