ஆய் குல/ யாதவ குல செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,107)

TRAVANCORE KINGDOM INCLUDED MODERN KANYAKUMARI DISTRICT

Written by London Swaminathan

Post No. 16,107

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

கலியுகம் பற்றி இந்த செப்பேடுகள் சொல்லும் அதிசயச் செய்தி என்ன ?

2

பாண்டியர்களின் இரண்டு வரகுணன்களைக் கண்டோம்; இங்குள்ள வரகுணன் யார் ? ஆயர் குல வரகுணனின் மனைவி பெயர் என்ன ? யார் அந்தப் பெண்மணி ?

3

இந்த செப்பேடுகள் சொல்லும் பார்த்திவசேகரபுரம் எங்குள்ளது ?

4

கோ கரு நந்த அடக்கன் நிறுவிய வேத பாட சாலையில் என்னென்ன  பாடத்தைப் படிக்க எவ்வளவு மாணவர்கள் இருந்தார்கள்?

5

ஆய் மன்னர்களைக் குறிப்பிடும் யவன ஆசிரியன் யார் ?

6

வேத பாடசாலையில் அனுமதி பெற என்ன விதிகள் பின்பற்றப்பட்டன ?

7

வகுப்பறை விதிகள் என்ன ?

8

கோவில் குறித்து இந்த செப்பேடு நவில்வது என்ன ?

9

இந்தச் செப்பேட்டில் காணப்படும் மொழிகள் என்ன ? எழுத்துக்கள் என்ன ?

10

இந்த செப்பேடுகள் சொல்லும் நாழி , முக்குறுணி என்றால் என்ன அளவு ?

*****************************

விடைகள்

TRAVANCORE ROYAL FAMILY 

1.கலியுகம் பற்றி நாட்களில் சொல்லும் செப்பேடு

பாரதப் போர் – கலியுகம் துவங்கும் கி.மு 3102-க்கு முன் – 36 ஆண்டுகளுக்கு முன்னர் – 3138ல் நடந்தது என்பது இந்துக்கள் நம்பும் கொள்கை. நம்முடைய பஞ்சாங்கங்களும் இதை ஒட்டியே கலி ஆண்டு என்று பிரசுரித்து வருகின்றன.

இதில் வியப்பு என்னவென்றால் இரண்டு கல்வெட்டுகள் – சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே — கலியுகத்தைக் குறிப்பிட்டு கல்வெட்டு வெளியிட்டுள்ளனர். அதாவது அறியாத மக்கள் – கேள்வி கேட்பர் என்றோ, என்னவோ ஒரு தமிழ் செப்பேடும் இந்த ஆண்டை நாட்கள் கணக்கில் எழுதி தமிழன் உலக மகா கணித வல்லுநன் என்பதையும் காட்டி இருக்கிறது!

கோ கருநந்தடக்கனின் பார்த்திவ சேகரபுர செப்பேடு கூறுகிறது:

ஸ்வஸ்தி ஸ்ரீ கலியுகக் கோட்டு நன்னாள் பதினான்கு நூறாயிரத்து நாற்பத்து ஒன்பதினாயிரத்து எண்பத்து ஏழு சென்றநாள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கோக்கருநந்தடக்கனுக்கு யாண்டு ஒன்பது நாள் பதினைஞ்சு இந்நாளால் முடால நாட்டுப் பசுங்குளத்துப் படுநிலத்தில் முன்சிறைச் சவையாருடைய உழக்குடி விளை————————-

வேணாட்டை ஆண்ட ஆய்குல மன்னன் கோகருந்தடக்கன் இச்செப்பேட்டில் கலியுக ஆண்டு 14,49,087 என்று செப்புவது கலி 3967 ஆடி 15ஆம் தேதி ஆகும். சற்றேறக்குறைய கி.பி.865 ஆகும். ஆய் குல மன்னர்கள் தங்களை ஆயர்கள் என்றும் யாதவர்கள் என்றும் கண்ணன் வழிவந்தவர்கள் என்றும் கூறிக்கொண்டனர் .

தமிழர்களுக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கலியுகத்தில் நம்பிக்கை இருந்ததும் அதை மக்கள் புரிந்துகொண்டு நடைமுறைப் படுத்தியதும் இதனால் தெரிகிறது. இதற்கு முந்தைய இரண்டாம் புலிகேசியின் ஐஹோல் கல்வெட்டும் கலி ஆண்டை 3735 (சக 556) என்று கூறும்.

பார்த்திவசேகரபுரம் முன்சிறைக்கு அருகிலுள்ளது .  கோ கரு நந்த அடக்கன் என்பவன்  அங்கிருந்து நிலத்தை வாங்கி விஷ்ணு கோவிலைக்கட்டி  அந்த  இடத்துக்கு பார்த்திப சேகரபுரம் என்று பெயரிட்டான் போலும் . அவனுக்கு மற்றோரு பெயர்  ஸ்ரீ வல்லபன் . அவன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன் என்று சாசனம் கூறுகிறது.

****

2.விக்ரமாதித்ய வரகுணனின் திரு நந்திக்கரை சாசனம் ஒரே ஏட்டில் முழு மையாயாக உள்ளது . இந்த மன்னன் தெங்காடுகிழவன் மகள் முருகஞ்சேந்தியை மணந்த செய்தி இதில் உள்ளது ;அவளை ஆய்குல மாதேவி என்று செப்பேடு குறிப்பிடுகிறது . ஆகவே கரு நந்த அடக்கனுக்குப் பின்னர் ,  விக்ரமாதித்ய  வரகுணன் ஆண்டான் என்பது தெரிகிறது . இதே காலத்தில் முதலாம் வரகுணன் பாண்டிய நாட்டை ஆண்டதால் இவன் மஹாராஜாவின்  பெயரை சூட்டிக்கொண்டவனாக இருக்கலாம்; ஏனெனில் அக்காலத்தில் அரசனுடைய பெயர்களை அதிகாரிகளும் , கப்பம் காட்டும் குறுநில மன்னர்களும் வைத்துக்கொள்வார்கள்.

திருவனந்தபுரம் பழைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் தலை நகர் ; அங்குள்ள அலமாரியில் பல செப்பேடுகள் துண்டு துண்டாக்க கிடைத்தன. ஒரே ஒரு ஏடு மட்டும் விக்ரமாதித்ய வரகுணன்  என்ற பெயருடன் முழு ஏடாகக் கிடைத்தது .

***

3.பழைய தென் திருவங்ககூர்ப்பகுதிகள் இப்போது கன்யாகுமரி மாவத்தில் உள்ளன. ஆகவே முன்சிறை பார்த்திவ ஸ்சேகரபுரம் முதலியன  தற்கால கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளது. பார்த்திவசேகரபுரம் பார்த்தசாரதி கோவில் (விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரம்), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், பார்த்திவபுரத்தில் அமைந்துள்ளது. ஆய்குல மன்னன் கருநந்தடக்கன் என்னும் கோகருநந்தடக்கன் (கி.பி. 857–885), ஸ்ரீ வல்லப பார்த்திபசேகரன் என்ற பாண்டியர் பெயரைச் சூடிக்கொண்டான். இவன் கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆட்சி செய்தான். “ஸ்ரீ வல்லபன்”, “பார்த்திவசேகரன்” ஆகிய பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்த கோகருநந்தடக்கன், இந்த கிராமத்திற்கு பார்த்திவசேகரபுரம் என்று தன் பட்டப்பெயரையே சூட்டினான். கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை வட்டம், முஞ்சிறைப் பஞ்சாயத்தில் பார்த்திவபுரம் கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் மார்த்தாண்டம் தேங்காப்பட்டணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது

****

4. கருநந்தடக்கன் நிலம் கொடுத்து வேறு நிலங்களை மாற்றி வாங்கிக்கொண்டு அதில் திருமால் கோவில் கட்டினான். அங்கு ஒரு வேத பாடசாலையையும் நிறுவி சம்ஸ்க்ருத நூற்களை படிக்க ஏற்பாடு செய்தான் .

சாத்திரங்களை பயிலும் 95 சட்டர்கள், இவன் நிறுவிய வேதப்பள்ளிக்கூடத்தில் பயின்றார்கள்; அவர்களில் பவிஷ்ய சரணம் /ருக் வேதம் படித்தோர் 45 சட்டர்கள்; தைத்ரீய சரணம்  /யஜுர் வேதம் படித்தோர் 36 சட்டர்கள்; தலவகார சரணம் சாமவேதம் படித்தோர் 14 சட்டர்கள்.

சட்டர் என்று செப்பேடு சொல்லும் சொல் சாதாரண மாணவரைக்  குறிக்காது ; மேலும் சில துறைகளில் புலமை பெற்றவர் என்றும் வாழ்நாள் முழுதும் பிரம்மசரி ம் அனுஷ்டிப்போர் என்றும்  கருதப்படுகிறது.பார்த்திவ சேகரபுர  சாசனம் சொல்லும் செய்திகள் –

சட்டங்கள் சேர, சோழ, பாண்டிய ஆகிய த்ரைராஜ்ய விவகாரத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் ; சில கட்டுப்பாடுகளுடன் ஆயுதங்கள் வைத்துக்கொள்ளலாம் .

***

5.ஆய் மன்னர்களைக் குறிப்பிடும் யவன ஆசிரியன் கிரேக்க எழுத்தாளன் வரலாற்று பூகோள அறிஞன் டாலமி.

Ptolemy usually refers to Claudius Ptolemy (c. 100 – c. 170 CE), a famous ancient Greek-Egyptian scientist who lived in Alexandria, Egypt. He wrote major books on astronomy, geography, and math. It can also refer to the Ptolemaic dynasty of Egyptian pharaohs, starting with Alexander the Great’s general, Ptolemy I Soter.

***

6.அட்மிஷன் ரூல்ஸ் / பிரவேச விதிகள்

படிக்க வருவோர் இலக்கணம் , மீமாம்சம், புரோகிதம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் . இதற்கு எதுவும் சர்ட்டிபிகேட் தேவை இல்லை ; இன்டெர்வியுவும் கிடையாது ; அங்கு பயிலும் ஐந்து மாணவர்களிடம் இவை எனக்குத் தெரியும் என்று சத்தியம் செய்துகொடுத்தால் போதும் ; சொன்ன சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு ; இதனால்தான் இந்திய அரசும் சத்யமேவ ஜெயதே என்னும் முண்டகோபநிஷத் வாக்கியத்தை தேசீய சின்னத்தில் பொறித்தது போலும்! அதைத் தமிழ் நாடு அரசும் தனது கோபுர சின்னத்தில் வாய்மையே வெல்லும் என்று மொழிபெயர்த்து போட்டுக்கொண்டுள்ளது!

***

7.வகுப்பறை விதிகள்

மாணவர்கள்/ சட்டர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டை போடக்கூடாது; குட்டிக் கொள்ளக் கூடாது; ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது; பணிப்பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது . கோயில் நிலத்தையும் வேதபாட சாலை நிலத்தையும் உழுவோரிடம் சம்திங் வாங்கக்கூடாது . அப்படி வாங்கினால் அது போல பத்து மடங்கு அபராதம்; மேலும் ஊர்ச் சபை சொல்லும்போதெல்லாம் கட்டாய சேவை செய்ய வேண்டும்; பிழைகள் செய்தால் அபராதமும் உண்டு .

***

8.இரண்டாவது ஏடு கோயிற் பணியாளர் கடமைகளையும் பூத்தொண்டு செய்பவனின் கடமையையும் தெரிவிக்கிறது ; கோயிலில் நுந்தா விளக்கு எரிப்பதற்காக நில தானம் செய்யப்பட்டதையும் சொல்கிறது . பங்குனி விசாக நாளில் முடியும்படி ஏழுநாள் திருவிழா நடத்தவேண்டிய வகையும் ஏழாவது நாள் ஆற்றில் தீர்த்தவாரி செய்வதும் குறிப்பிடப்படுகின்றன .

ஓவர்டைம் அலவன்ஸ்

இந்த விழாக்காலத்தில் கோயிற் பணியாளர்களுக்கும் சட்டங்களுக்கும் இரு மடங்கு ஊதியம் தர வேண்டும் என்கிறது .

மூன்றாவது ஏடு கோயிற் பணியாளர்களின் சம்பளத்துக்காக நிலங்கள் அளிக்கப்பட்டதைக் ;அவர்கள் சாந்தி செய்வான், அகநாழிகைப்பணி செய்வார், பஞ்ச்ச கவ்யம் தெளிப்பான், பூத் தொண்டு செய்வான், இசைக்காரர் முதலானோர்

நான்காவது ஏட்டிலே சட்டரகள் படிக்கும் பாடங்களும் பயில்வோர் எண்ணிக்கையும் நடத்தை விதிகளும் உள்ளன

கரு நந்த அடக்கநின் இன்னுமொரு பெயர் ஸ்ரீவல்லபன் என்பது ஒரு ஏட்டில் கிடைக்கும் தகவல் ஆகும்

***

9.தமிழ்ப்பகுதி பல்லவர் கால தமிழ் எழுத்துக்களிலும் சம்ஸ்க்ருத பகுதி நாகரி எழுத்திலும் உள்ளன. கரு நந்த அடக்கன் வெளியிட்ட இன்னுமொரு சாசனம் திருப்பரப்பு என்னுமிடத்தில் வெளியிடப்பட்டது ஸம்ஸ்க்ருதப் பகுதி கிரந்த எழுத்தில் உள்ளது.

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

***

10. பார்த்திவசேகரபுரம் சாசனத்தில் ஒவ்வொரு மாணாக்கருக்கும் நாள்தோறும் பத்து நாழி வீதம் நெல் அளிக்கப்பட்டது இவர்கள் அங்கேயே தங்கிப் படித்தவர்கள்.

  5 செவிடு = 1 ஆழாக்கு

  2 ஆழாக்கு = 1 உழக்கு

  2 உழக்கு = 1 உரி

  2 உரி = நாழி (படி)

  8 நாழி (அல்லது 4 நாழி வட்டார வழக்கில்) = 1 குறுணி (மரக்கால்)

  3 குறுணி = 1 முக்குறுணி (சுமார் 16.1 லிட்டர்) 21 லிட்டர் என்பது மதுரை வட்டாரக் கணக்கு

.

முக்குறுணி

மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள எட்டு அடி உயர பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் பிள்ளையார் சதுர்த்தியன்று 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக்கட்டையை நைவேத்தியம் செய்வார்கள் . இதை பழைய அளவுகோலில் சொல்லவேண்டுமானால் முக்குறுணி என்று சொல்ல வேண்டும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம். பிள்ளையார் சதுர்த்தி நாளன்று இவ்வளவு பெரிய கொழுக்கட்டையை நைவேத்தியம்  செய்வார்கள். அதை ஒட்டியே இவருக்கு முக்குறுணி விநாயகர்/ பிள்ளையார் என்ற பெயர் வந்தது.

–subham—

ஆய்குல, யாதவ குல, செப்பேடுகள், 10 கேள்விகள், கோ கருநந்தடக்கன், பார்த்திவ சேகரபுர செப்பேடு,  நாட் கணக்கில் கலியுகம், பாண்டியர் செப்பேடுகள் பத்து

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 101; இந்து மத கலைச்சொல் அகராதி-101 (Post 16,106)

Written by London Swaminathan

Post No. 16,106

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

Part 101

ஸ்வயம்பு

சுயமாக , அதாவது தாமாக  உருவாகும் சிலைகள் ; பல பாறை வடிவங்களும் கற்களின் வடிவங்களும் இயற்கையாகவே கடவுள் உருவங்கள் போல இருத்தல்; பாணலிங்கம், சாளக்கிராமம் முதலி யன இயற்கை யில் நதிகளில் கிடைக்கின்றன ; இவைகளை சிவன், விஷ்ணு வடைவங்களாக வணங்குவர் ; கயிலாயம் , அமர்நாத்திலுள்ள ஐஸ் லிங்கம் முதலியன இயற்கையில் காணப்படும் சிவ லிங்க வடிவங்களாகும் . இவை தவிர பூமிக்கடியில் நிகழும் அதிர்வலைகளால் பூமிக்கு மேலே வடிவங்கள் தோன்றுவதும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது . பிரம்மாவுக்கும் ஸ்வயம்பூ என்று பெயர்

ஸ்வயம்பூ லிங்கம் தோன்றுவது எப்படி?

ஆதிசங்கரர் போன்ற பெரிய மகான்கள் பல இடங்களில் இப்படி லிங்கங்களைக் கண்டுபிடித்து அவைகளை உரிய இடத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள் என்று படிக்கிறோம். மதுரை நகரம் ஒருகாலத்தில் கடம்பவனக் காடாக இருந்தது என்றும் தனஞ்செயன் என்ற வணிகன் இரவு நேரத்தில் காட்டைக் கடந்து போகும் நேரத்தில் ஒளிமயமான ஒருகாட்சியைக் கண்டான் என்றும் இந்திரன் முதலானோர் வந்து பூஜை செய்த காட்சி அது என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது. அதுவும் ஸ்வயம்பூ லிங்கம்தான். பாண்டிய மன்னனுக்கு இச்செய்தியை அறிவித்தவுடன் அவன் அங்கே கோவில் அமைத்தான்..

ஆனால் இதைத்தவிர வேறு ஒரு சக்தியும் உண்டு. அது பூமிக்கடியில் இருக்கும் கற்களை மேலே தள்ளுகிறது. அதை அறிவியல் படித்தவர்கள் ஈ.எல்.எf. என்று சொல்லுவார்கள். அதாவது மிகவும் சன்னமான அதிர்வு அலைகள். இவைகள் பூமிக்கு அடியில் உள்ள கற்களை சிறிது சிறிதாக அசைத்து பூமிக்கு மேலே கொண்டுவந்துவிடும்! லண்டனைத் தாண்டியுள்ள பர்மிங்ஹாம்சைரில் சில்டெர்ன் என்னும் இடத்தில் இப்படி பூமிக்கு மேலே வரும் கற்களை விலைக்கும் விற்கிறார்கள். இதை மே 1994ல் சி.ஏ.சில்க் என்பவர் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். இந்த இடத்துக்கே கல் விளையும் பூமி என்று பெயர்!

Science behind Swayambhu Lingams

A letter published in London Times newspaper on 20th May, 1994 explains this. Anne C.A. Silk wrote this letter in reply to a reader’s query. The letter gives some interesting information about “stone growing fields” in Chiltern Hills. (These Hills are not far from London). “There was a local industry of gathering the large flints, some the size of a fist, to sell to local builders by the roadside.

There is a further reason for the ascending mode of flints and rocks worldwide, over and above the fork disturbance proposed by Brian Parker (May 14 letter). This is the natural extremely low frequency (ELF) seismic energy from deep within earth.

Micro seismic activity from faults such as Church Stratton Fault, Mere Fault, Great Glen Fault, sub terranean settling and indeed traffic at roundabouts will generate ELF energy sufficient enough to vibrate rocks and stones to the surface.

It is of relevance to note that ELF frequencies from 30 Hz to 300 Hz also cover brain waves in humans”.

***

சுகன்யா

பொது அர்த்தம் – நல்ல பெண் அல்லது  நல்ல அழகு ;இளவரசி சுகன்யா ஒரு சமயம் தந்தையுடன் காட்டுக்குச் சென்ற போது ஸ்யவன முனிவர் ஆஸ்ரமத்துக்குச் சென்றனர் ; அங்கு புற்று போல வளர்ந்திருந்த ஓரிடத்தில் இரண்டு கண்கள் மட்டும் தெரிந்தவுடன் விளையாட்டாக அதைக் குத்தவே புற்று மண்ணில் தவம் செய்துகொண்டிருந்த ஸ்யவன முனிவரின் கண்கள் குருடாயின. இந்தத் தவற்றுக்குப் பிராயச்சித்தமாக  சுகன்யாவின் தந்தை சர்யாதி அவளை முனிவருக்குத் திருமணம் செய்து கொடுத்தான். ஸ்யவன முனிவர் கிழவர் ; அஸ்வினி தேவர்கள் ஸ்யவன முனிவருக்கு இளமையைக் கொடுத்தனர் .

***

ஸ்வேதாஸ்வதர உபநிஷத்

 கிருஷ்ண-யஜுர்வேதத்தைச் சேர்ந்த உபநிஷத் இது . ஸ்வேதாஸ்வதர முனிவர் போதனை இதில் உள்ளது சிவா பெருமானையும் ருத்ரனையும் புகையும் இந்த உபநிஷத் , பிற்காலத்தில் எழுதப்பட்டது

சிவா பெருமானை உயர்த்தி பிரம்மன் ஆக — உயர்ந்த கடவுளாக – காட்டுகிறது . வேதாந்த ஸாங்க்ய விஷயங்கள் இதில் காணப்படுகிறது . ஆறு அத்தியாயங்களைக் கொண்டது .ஸ்வேதாஸ்வதர என்பதன் இன்னுமொரு பொருள் வெள்ளைக் குதிரை என்பதாகும் .

சில எடுத்துக் காட்டுகள்:-

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை

வேதாம்ஸ்ச ப்ரஹிணோதி  தஸ்மை 

தம் ஹ தேவம்  ஆத்மபுத்திப்ரகாசம்  முமுக்ஷுர்வை

சரணமஹம் ப்ரபத்யே

–ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -6-18,19

யார் பிரம்மதேவனை சிருஷ்டியின்போது தோற்றுவித்தானோ , யார் மேலும் அந்த வேதங்களை பிரம்மதேவனுக்குக் கொடுத்தானோ , அப்பரமனை,  அறிவை ,ஆத்ம ஞானத்தில் ஒளிர்பவனை, அவயங்கள் இல்லாதவனை, கர்மங்கள் இல்லாதவனை, சாந்த மூர்த்தியை, குற்றமற்றவனை, மாசற்றவனை மரணமில்லாத நிலைக்கு இட்டுச் செல்லும் பாலமாக இருப்பவனை, விறகு எரிந்த பின்னர்  ஒளிரும் தீப்போன்றவனை, மோக்ஷத்தை நாடுகின்ற நான் சரணடைகிறேன்.

யோ யோனிம் யோனிமதி  திஷ்டத்யேகோ 

யஸ்மின்னிதம்  ஸம் ச  வி சைதி ஸர்வம்

தமீசானம் வரதம் தேவமீட்யம்    

நிசாய்யேமாம் சாந்திமத்யந்தமேதி

—-ஸ்வேதாச்வத்ரோபநிஷதம் -4-11

எந்த ஒரு இறைவன் பிரகிருதியின் / இயற்கையின்  பிறப்பிடங்களிலெல்லாம் தலைமை தாங்குகிறானோ , எவனிடத்து இவை யாவும் ஒடுங்குகின்றனவோ , எவன் பல வடிவங்களை எடுக்க வல்லவனோ , அந்த ஈசனை, வரம் கொடுப்பவனை,  போற்றுதற்குரியவனை, பிரகாசமானவனை  அனுபவத்தில் அறிகிற ஒருவன் அளவுகடந்த சாந்தியை அடைகிறான்.

ஆதி சங்கரர் இந்த உபநிஷத்துக்கு உரை எழுதவில்லை.

***

ஸ்வர்கம்

தமிழ் மொழியில் இதைத் துறக்கம் என்பர் ; நாகலோகம் மேலுலகம் தேவ லோகம் என்ற பொருளைகளும் உண்டு. இந்திரன் இதன் தலைவர் புண்ணியம் செய்தொரர் இங்கு இன்பத்தை அனுபவித்துவிட்டு பூமிக்குத் திரும்புவார் கள். ஆனால் இங்கு பார்வதியின் சாபத்தால் செக்ஸ் தடை செய்யப்பட்டுஉள்ளது . மேரு மலை உச்சியில் இருப்பதாகவும் சில கருதுகிறார்கள் ஸ்வர்க்க என்ற எழுத்துக்களுக்கு ஒருவித கணிதத்தில் 21 என்ற பொருளும் உண்டு  . சங்க காலாட் தமிழர்களுக்கு இதில் நம்பிக்கை இருந்ததால் மேற்கூறிய ட்கமிழ்ச் சொற்களை பயன்படுத்தியுள்ளனர்.

 . ரம்பா, ஊர்வசி, திலோத்தமை, மேனகா ஆகியோர் இங்கு நடனமாடி எல்லோரையும் மகிழ்விப்பார்கள் என்பது புராணம் சொல்லும் செய்தி .

***

ஸ்வஸ்திகா

 1200 YEAR OLD SWASTIKA WELL NEAR TRICHY

SWASTIKA IN INDUS VALLEY SEALS

இந்துக்களின் புனிதத் சின்னம் ; மணங்களாம் சுபம் என்று பொருள்; சிந்து சமவெளி முத்திரைகளில் காணப்படுகிறது உலகின் பழைய கிரேக்க, ரோமானிய பாண்டங்களிலும் இந்தச் சின்னம் உள்ளது ; ஆயினும் இன்றுவரை இந்துக்கள் மட்டுமே இதை 4500 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர் . சம்ஸ்க்ருத தமிழக கல்வெட்டுகள் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றே துவங்குவம் .

மாக்ஸ்முல்லர் , ஜெர்மானியர்களும் ஆரியர்கள் என்று சொன்னதை மனதில் கொண்டு ஹிட்ட லரும் ஜெர்மனியின் கொடி மற்றும் அரசாங்க   சின்னங்களில் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தினார் . ஆகையால் மேலை உலகம்  முழுதும் இந்த சின்னத்தத் த்தை தடை செய்துவிட்டார்கள்; எங்காவது இந்த சின்னத்தைக் கண்டால்  கூச்சல் போட த்துவங்குவார்கள் . சில கட்டடங்கள் இயற்கையாக இந்த வடிவத்தில் இருந்ததையும் இடித்து வேறு வடிவத்தில் கட்டிய செய்திகளை அ வ்வப்போது பத்திரிகைகளில் படிக்கலாம் . இந்துக்களுக்கு இது சுப சகுனம் என்பதால் கல்யாணப் பத்திரிகைகள் , அழைப்பிதழ்களிலும் போடுவார்கள்; மேலை நாட்டினருக்கோ இது சிம்ம சொப்பனம்!

1200  ஆண்டுகளுக்கு  முன்னால் திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் தந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சியில் சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு தோண்டி அமைக்கப்பட்டது . அதில் ஒரு பாடல் கல்வெட்டும் உள்ளது  . மேலை நாட்டில் இந்த வடிவத்தில் எந்த அமைப்பு,  கட்டிடம்,  குளம், கிணறு இருந்தாலும் மக்களும் அரசாங்கமும்  சேர்ந்து இடித்துத் தள்ளிவிடுவார்கள்! ஹிட்லர் மீது அவ்வளவு கோபம், வெறுப்பு  .

–Subham— .

Tags– ஸ்வஸ்திகா, துறக்கம், ஸ்வயம்பூ, லிங்கம், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL -101; இந்து மத கலைச்சொல் அகராதி-101

Bhagavad Gita Echo Again! Tirukkural Encyclopaedia- Chapter 24 (Kural 231-240) Post. 16,105

Written by London Swaminathan

Post No. 16,105

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted

The most famous command of Lord Krishna in the Bhagavad Gita is UTHTHSTA! YASO LABHA!!= Arise! Attain Fame!

Also we are reminded of Swami Vivekananda’s famous command from the Upanshad: ARISE! AWAKE! STOP NOT TILL THE GOAL IS REACHED!

Probably Valluvar had Bhagavad Gita  in his mind when he gave the title Pukaz= Fame, Glory, Reputation, Renown.

तस्मात्त्वमुत्तिष्ठ यशो लभस्व
जित्वा शत्रून्भुङ् क्ष्व राज्यं समृद्धम् 
मयैवैते निहतापूर्वमेव
निमित्तमात्रं भव सव्यसाचिन्  11-33

tasmāt tvam uttiṣhṭha yaśho labhasva
jitvā śhatrūn bhuṅkṣhva rājyaṁ samṛiddham
mayaivaite nihatāḥ pūrvam eva
nimitta-mātraṁ bhava savya-sāchin

BG 11.33: Therefore, arise and attain fame/glory! Conquer your foes and enjoy prosperous rulership. These warriors stand already slain by Me, and you will only be an instrument of My work, O expert archer. (Compare it with Kural 236)

**

Isai (fame, glory) is linked to Yasas (fame) in Sanskrit; once again I emphasize that both languages came from one source (Lord Shiva); we have a word Yaso dhanam ( Fame Wealth) in Sanskrit literature.

The word Isai/Yasas is used in 4 Kurals.  Other Sanskrit words in this chapter are- Lokam (Ulakam) in two couplets ; also Viththakar in 235.

**

Kural 236 is the most popular and most quoted one; but look at the translations from five scholars! Even the title Pukaz in Tamil has four different words here!

Amazing are the different translations!

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

 

Part 42

Chapter 24  Renown 24புகழ் Fame, Glory, Good Reputation

H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931 did not do any transaction for this chapter.

***

231.Give unto the poor; live in glory; there is no greater gain on earth— A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

231.In life, nothing is as worthwhile as

The public esteem arising out of charity- S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

231
See that thy life the praise of generous gifts obtain;
Save this for living man exists no real gain.
Give to the poor and live with praise. There is no greater profit to man than that. Rev.Dr.GU Pope  – GUP, Year 1886

***

231.They gather fame who freely give
The greatest gain for all that live– Suddhananda Bharathiyar – SB

***

231.There is no greater boon to man than the renown gained by giving the poor— EVS Publishers, Singapore- EVS, Year 1986

***


231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

232.The theme of all ages is the one song of praise of the glory of those who help the needy and the poor– ANM+2

***

232.The fame of a man , who gives freely to sufferers

Will live forever in the words of all speakers and writers—– SMD

***

232
The speech of all that speak agrees to crown
The men that give to those that ask, with fair renown.
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor. – GUP

***

232.The glory of the alms-giver
Is praised aloud as popular– SB.       

***
232.All the praise that learned sing  centres on the fame of those who gives the needy— EVS

***

232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

XXXXXXXXXXXXXXXXXXXXX

233.All things bloom and fade on earth; but the peerless renown of one stands forever– ANM+2

***

233.The outstandingly unique renown (of a benevolent man alone)

Will live for ever; all the rest will die out—– SMD

***

233
Save praise alone that soars on high,
Nought lives on earth that shall not die.
There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness. – GUP

***

233.Nothing else lasts on earth for e’er
Saving high fame of the giver! – SB     
***
233.There is nothing that endures in the world other than matchless high renown– EVS

***

233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

234.In the abode of the Gods, more honoured than the saints are those that has won lasting fame on earth– ANM+2

***

234.If one earns an outstanding reputation on earth,

Knowing people will honour him and not the Gods— SMD

***

234
If men do virtuous deeds by world-wide ample glory crowned,
The heavens will cease to laud the sage for other gifts renowned.
If one has acquired extensive fame within the limits of this earth, the world of the Gods will no longer praise those sages who have attained that world. – GUP

***

234.From hailing gods heavens will cease
To hail the men of lasting praise – SB      
***
234.The Gods will honour those who have earned rver lasting fame rather than  the sages who have attained the abode of the Gods– EVS

***


234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

XXXXXXXXXXXXXXXXXXXXXX

235.Out of the ruins and death of their selves, it is only the wise that fashion out a name for themselves – ANM+2

***

235.Poverty is wealth, if it arises from causes which give a man fame; such death too

Is life everlasting and welcome to the noble sages – SMD

***

235
Loss that is gain, and death of life’s true bliss fulfilled,
Are fruits which only wisdom rare can yield.
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise. – GUP
***

235.Fame in fall and life in death
Are rare but for the soulful worth– SB.     

*** 

235.Poverty, which conduces to fame, and death which brings glory, are the lot of none but the wise– EVS

*** 

235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

236.Better to be born covered with glory on earth than never to be born at all– ANM+2

***

236.If one is born at all, he should be born to glory;

Otherwise, it were better that he were not born– SMD

***

236
If man you walk the stage, appear adorned with glory’s grace;
Save glorious you can shine, ’twere better hide your face.
If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born. – GUP
***
236.Be born with fame if birth you want
If not of birth you must not vaunt– SB.        236

***

236.If one takes birth in this world one should come with qualities which bring fame; if not it is better not to appear at all— EVS

*** 
236. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

237.Bemoan your own sloth that stands in your way to glory; why fret about the insults that others hurl at you– ANM+2

***

237.If some men are strangers to fame, they should blame themselves;

Why blame those who scorn them for it? – SMD

***

237
If you your days will spend devoid of goodly fame,
When men despise, why blame them? You’ve yourself to blame.
Why do those who cannot live with praise, grieve those who despise them, instead of grieving themselves for their own inability. – GUP

***

237.Why grieve at those who blame the shame
Of those who cannot live in fame? – SB      

***
237.Those who cannot achieve fame should blame themselves and not those who criticise them— EVS

*** 

237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

238.Verily do the wise do cry shame on those that leave no foot-prints on the sands of time, when there is glory to be sought and won in the world of men– ANM+2

***

238.If, in the final analysis, one fails to earn the esteem of the public

One is sure to get the blame of all the world– SMD

***

238
Fame is virtue’s child, they say; if, then,
You childless live, you live the scorn of men.
Not to beget fame will be esteemed a disgrace by the wise in this world. – GUP

***

238.To men on earth it is a shame
Not to beget the child of fame– SB.       

***
238.If a man cannot acquire fame so that it may live after him, such failure is a source of ignominy to him— EVS

***
238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறா விடின்

XXXXXXXXXXXXXXXXXXX

239.The glory and the freshness of the earth shrivels into nothingness, before the unholy tread of an inglorious band of men– ANM+2

***

239.The earth that bears men of no renown,

Will itself shrink up its fruits– SMD

***

239
The blameless fruits of fields’ increase will dwindle down,
If earth the burthen bear of men without renown.
The ground which supports a body without fame will diminish in its rich produce. – GUP

***

239.The land will shrink in yield if men
O’erburden it without renown– SB.     

***
239.The land burdened with bodies of flesh and blood without fame will grow barren of useful products— EVS

***
239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

240.Alive is the soul that is free from reproach; but dead is the heart that lives without a name– ANM+2

***

240.Only those who live shunning blame may be said to live, while the others

 Who live without a good name, do not live at all– SMD

***

240
Who live without reproach, them living men we deem;
Who live without renown, live not, though living men they seem.
Those live who live without disgrace. Those who live without fame live not. – GUP
***

240.They live who live without blemish
The blameful ones do not flourish– SB.       

***

240.Only those who live without creating a bad reputation may be said to live, and those that do not earn fame may be counted among the dead- EVS

 ***

240. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

To be continued………………..Tags- Chapter 24 , Renown, 24. புகழ், Fame, Glory, Good Reputation, part 42

ஆயிரம் பொன்மொழிகள்! (81-110) Post.16,104

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,104

Date uploaded in London – 19 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (81-110)

ச. நாகராஜன்

சில பொன்மொழிகளின் தொடர்ச்சி…! (From my collection!)

81. Way – Will

Find a way or make one. The world always listens to a man with a will in him.   – Mandoc

Word – Kind

Start some kind word on its travels; there is no telling where the good it may do will stop.  – Talmage

Wisdom

What is the part of wisdom? To dream with one eye open; to be detached from the world without being hostile to it; to welcome fugitive beauties and pity fugitive sufferings, without forgetting for a moment how fugitive they are.      – G. Santayana

Man – Wisdom – God – Charm

Man could direct his ways to plain wisdom, and support his life by tasteless food; but God has given us wit and flavour, and laughter and perfumes to enliven the days of man’s pilgrimage and to “charm his painted steps over the burning mart.”     – Sydney Smith

Will – Intellect

For though with judgement we on things reflect, our will determines not our intellect. – Edmund Waller

Women

Regard the society of women as a necessary unpleasantness of social life, and avoid it as much as possible. – Leo Tolstoy

Writer

It is the glory and merit of some men to write well, and of others not to write at all.  – La Bruvers

Wife

Begging and death are better than living with a bad wife.  – Sukra Niti

Mind

Cultivate not only the cornfields of your mind, but the pleasure grounds also.  Whateley

90. Mind

Uncultivated minds are not full of wild flowers, like uncultivated fields. Villainous weeds grow in them and they are the haunt of toads.  

Mind – Power – Cheerfulness

It lies in our own power to attune the mind to cheerfulness.

Mind

The truest state of mind, rested in, becomes false.   – Emerson

Habit

The diminutive chain of habit is scarcely felt till it is too strong to be broken.   Dr. Johnson

Happiness

No human being can come into this world without increasing or diminishing the sum total of human happiness, not only of the present, but of every sub-sequent age of humanity.  – Elihu Burritt

Happiness

Happiness is a thing to be practiced like the violin.    – Lord Avebury

Great men

The great saints, the heroes, the pioneers, the artists have rarely been ‘nice people’. – Winifred Holtby

Great men

It is a wonderful thing that here and there in this hard, uncharitable world there should be left a few rare souls who think no evil. This is the great unworldliness.   – H. Drummond

Grief

Don’t grieve more than a shilling’s worth over a lost shilling.

Grief – Joyousness

We have not met grief aright if we come out of it with a loss of joyousness.  –   J.R. Miller

100. Good Man

It is surprising how much good a man may do in the world if he allows others to take the credit for it.

Seeing – Tears

There’s no seeing one’s way through tears.  – W.G. Benham

Fate

Hundred arrows do not hurt the quarry, if not fated to die; but when the how comes, a blade grass is enough to kill.                                                                                                                   – Hitopadesha

Peace of Mind – Present

Don’t destroy your peace of mind by looking back. Live in the present. Enjoy the present.

Thinking

Those who think nobly are noble.    – Berkeley

மேலான சிந்தனைகள் மேவி வருவோரே                                மேலோரா கின்றார் விரைந்து                     – உலக உள்ளங்கள் (90) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Thought

Thought is all light, and publishes itself to the universe.   – Emerson

ஒளிமயமே எண்ணம் உலகிற் கதுவே                               வெளியாகி நிற்கும் விரைந்து                  – உலக உள்ளங்கள் (167) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Thought – Deed

Our thoughts are like to tiny seeds

That soon must blossom into deeds.     – A.E. Anderson

எண்ணம் விதையாகும் இயல்செயல்கள் எல்லாமவ்                      வண்ணம் வளர்ந்து வரும்                      – உலக உள்ளங்கள் (93) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Frugality – Industry

Frugality is a fair fortune; and habits of industry a good estate.     – Franklin

சீரான செட்டு சிறந்த செல்வம்; செய் முயற்சி                               நேரா நிலைத்த நிதி.                              – உலக உள்ளங்கள் (360) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

Patience

Patience is bitter, but its fruit is sweet.     – Rousseau

பொறுமை கடுமை பொறையின் பயனோ                           இருமையும் இன்பம் தரும்.                       உலக உள்ளங்கள் (98) –  

                                                  ஜெகவீரபாண்டியனார்

110. Woman

It is better to be a woman than be subject to a woman.  

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்                 பெண்ணே பெருமை யுடைத்து.                    உலக உள்ளங்கள் (901)

                                                  ஜெகவீரபாண்டியனார்

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 (Post.16,103)

Written by London Swaminathan

Post No. 16,103

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted yesterday

சுபத்ரா

வாசுதேவனின் பெண் ; கிருஷ்ணர், பலராமன் ஆகியோரின் சகோதரி; அர்ஜுனனின் மனைவி; அபிமன்யுவின் தாய். இதே பெயரில் பலர் இருந்ததை மஹாபாரதம் தெரிவிக்கிறது. பூரி ஜகந்நாதரின் ரத யாத்திரையில் சுபத்ராவுக்கு ஒரு ரதம் உள்ளதால், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் உலகம் முழுதும் நடத்தும் ரத யாத்திரையில் சுபத்ரா ரதத்தையும் கொண்டுவருவதால், மேலும் பிரபலமாகிய பெயர் ஆகிவிட்டது. தமிழ் நாடு வரை பெண்களின் பெயராகவும் இருக்கிறது; சங்க இலக்கியத்தில் வரும் மாறோக்கத்து நப்பசலையார் என்ற பெண் கவிஞரின் பெயர் சுபத்ரா என்பது நான் ஆராய்ச்சியில் கண்ட துணிபு. தமிழ் நாட்டைப்போலவே அம்மான் மகளான சுபத்ராவை அர்ஜுனன் மணந்தான் . ஆகவே முறைப் பெண்ணை மணப்பது வடக்கிலும் இருந்தது உறுதியாகிறது . துவாரகாவுக்கு விருந்தினராக வந்த அர்ஜுனன் , சுபத்ராவைக் கடத்தி கல்யாணம் கட்டியதை பலராமன் கடுமையாக ஆட்சேபித்தார். ஏனெனில் சுபத்திராவை துர்யோதணனுக்கு மணம் செய்விக்க பலராமன் திட்டமிட்டிருந்தார் ;கடைசியில் கிருஷ்ணன் தனது அண்ணனை சமாதானப்படுத்தினார்.

***

சுக்ரன் / சுக்ராச்சார்யா

சுக்ரன் என்பது வெள்ளி கிரகம் ; சுக்ல என்றால் வெள்ளை நிறம் . வெள்ளி என்னும் கிரகத்தையும் மழையையையும் தொடர்புபடுத்தி பல செய்யுட்கள் புறநானூற்றிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் உள்ளன ; விஞ்ஞானிகளுக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது .

சுக்ராச்சார்யா என்ற பிராமணன் அசுரர்களின் குரு;  பிருஹஸ்பதி என்ற பிராமணன் தேவர்களின் குரு. இருவரையும் இரு அந்தணர் என்று சங்க இலக்க்கி யம் பாடுகிறது; சுக்ராசார்யாரின் மகள் தேவயானி , பிருஹஸ்பதியின் மகன் கச்சனின் மீது கொண்ட காதல் கதை திரைப்படமாக வந்ததால் தமிழர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவள் தேவயானி. (இந்த பிளாக்கில்  கச்ச-தேவயானி கதை முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது ).

பிராமணர்கள் தான் அசுரர்களுக்கும் குரு என்ற உண்மையும் அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடமிருந்தும் சிவ பெருமானிடமிருந்தும் வரங்களைப் பெற்றனர் என்ற புராண உண்மையும் திராவிட- ஆரிய வாதத்துக்கு செமை அடி கொடுக்கிறது; வெளிநாட்டு விஷமிகள் அசுரர்களை திராவிடர் என்று வருணித்து இந்துக்களை பிரிக்கப்ப்பார்த்தனர்  ; அந்த வாதம் செல்லாக்காசாகிவிட்டது .

***

சுக்ர நீதி

சுக்ராசார்யார் அல்லது உஷனர் என்பவர் தங்களுடைய அரசியல், சமூகம், தர்மம், நீதி முதலிய தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டனர் ; அவை சுக்ர நீதி என்ற பெயரில் பிரபலமாகிவிட்டது.

***

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ஐந்தாவது காண்டம்  இது;  சுந்தர காண்டத்தைப் படித்தால்ர்      ஆ  அஞ்சசனேயரைப் போல எடடுத்த காரியம் யாவினும் வெற்றியும் மங்களமு ம் ஏற்படும் என்ற நம்பிக்கையால் சம்ஸ்க்ருத சுந்தர காண்டம் அல்லது அதன் தமிழ் மொழிபெயர்ப்பைப் படிப்பது வழக்கத்தில் உள்ளது அதை பூஜை அறையில் வைத்து மரியாதை செய்வார்கள்  . சுந்தர காண்டஉபன்யாசம் செய்யும் சாஸ்திரிகளுக்கு கணையாழி அத்தியாயம் சொல்லும்போது பட்டு சால்வை, தங்க மோதிரம் ஆகியவற்றையும் பரிசாக அளிப்பார்கள் . இதில் முக்கிய அத்தியாயங்கள் என்னவென்றால் அனுமன் சீதையை சந்த்தித்து ராமனனின்  மோதிரத்தைக் கொடுத்துவிட்டு அவளுடைய மோதிரத்தை ராமனுக்கு அளித்தது மற்றும் இலங்கைக்கு தீ வைத்தது முதலியன ஆகும்; அனுமனின் வெற்றிப்பயணத்தால் இதைப்படித்தாலோ கேட்டாலோ எல்லா காரியங்களும் வெற்றியடையும், சுபமாக முடியும், கல்யாணங்கள் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

முக்கிய அத்தியாயங்கள்

Chapter 1 – அனுமனின் புறப்பாடு;

Chapter 6 – ஹனுமான் ராவணன் அரண்மனையை நோட்டம் விடுதல்;

Chapter 7 – புஷ்பக விமான வருணனை

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 15 – ஹனுமான் சீதா தேவியைக் காணுதல்; 

Chapter 22 – சீதைக்கு ராவணன் விடும் மிரட்டல்

Chapter 27 – திரிஜடையின் சுபக் கனவு

Chapter 32 –  ஹனுமான் சீதையின் முன் தோன்றி ராமபிரானைப் புகழ்தல்

Chapter 37 – ஹனுமான்சொன்ன மீட்பு திட்டாத்தை சீதா தேவி நிராகரித்தல்

Chapter 38 – சீதாதேவி தனது நகையை ராமனுக்கு கொடுத்து அனுப்புதல் ;

Chapter 49 – ஹனுமான் பல இடங்களை அளித்து பல தளபதிகளைக் கொன்றதால் அரக்கர்கள் பிடித்தல்

Chapter 53 – அனுமனை தெருத்தெருவாக இழுத்துச் செல்லும்படி ராவணன் உத்தரவு; வாலில் வைத்த தீயை அவன் இலங்கை நகருக்கு இட்டான்

Chapter 54 – லங்கா நகரம் தீக்கிரை

Chapter 64 – சுக்ரீவன் , ராமபிரானுக்கு ஆறுதல் சொல்லல்;

Chapter 65 – கண்டேன் சீதையை என்ற தலைப்புச் செய்தியுடன் ராமனை அனுமன் சந்தித்து அளவளாவுதல்

Chapter 68 – சீதாதேவிக்கு சொன்ன ஆறுதலை ராமனுக்கு அப்படியே எடுத்துரைத்தல்

***

சுமேரு

இமய மலைக்கும் அப்பாலுள்ள ஒரு தங்க நிற மலை என்றும் வடதுருவம்தான் சுமேரு என்றும் கருத்துக்கள் உள்ளன இதை சூரியனும் சந்திரனும் வலம் வருவதாகச் சொல்வதால் வடதுருவம் அல்லது ஆர்ட்டிக் வட்ட நா டுகள் என்பது ஒரு வாதம்.

வித்யாதரர்கள், கிம்புருஷர்கள் முதலிய தெய்வீக புருஷர்கள் சுமேருவில் வசிக்கிறார்கள் .

***

சுரா  பானம்

இது சோம ரசத்திலிருந்து வேறுபட்ட பானம்; இந்த வேற்றுமைகளை விளக்கிவிட்டு  இதைத்  தவிர்க்கும்படி வேதம் புத்தி சொல்கிறது.  அரிசியை அல்லது தேனை அல்லது கரும்புச் சாற்றை புளிக்கவைத்து இதைச் செய்வதையும் சம்ஸ்க்ருத நூல்கள் விளக்குகின்றன

***

சூர்ய வம்சம் 

புராதன மன்னர்களை சந்திர வம்சம் என்றும் சூரிய வம்சம் என்றும் இந்துமத புராணங்கள் பிரிக்கின்றன. அதன்படி இக்ஷ்வாகு முதல் 145-க்கும் மேற்பட்ட மன்ன ர்களின் பட்டியலைப் புராணங்கள் தருகின்றன . இதன் கடைசி மன்னர் சுமித்ரன், நந்த வம்ஸத்துக்கு முன்னால் வாழ்ந்தவன் ; அதாவது 2600 ஆண்டுகளுக்கு முந்தையவன் சுமித்ரன்! ஒரு மன்னனுக்கு 20 அல்லது 25 ஆண்டுகளை வரலாற்று அறிஞர்கள் ஒதுக்குகின்றனர்;

ராம பிரான் , சோழ மன்னர்கள் ஆகியோர் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்துமத புராணங்களை நம்புவோர் சிந்து வெளி நாகரீகமும்  சூர்ய வம்ச ஆட்சிக்குள் வந்துவிடுவதை ஒப்புக்கொள்ள வேண்டும் ஏனெனில் இக்சிவாகு 2800+600=3400 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியை ஆண்டிருப்பார் ; அயோத்தியிலிருந்து ஹரப்பாவும் மொஹன்சதாரோவும் அதிக தூரம் இல்லை.

ஆரிய- திராவிடம் பேசும் அறிவிலிகளுக்கு இது செமை அடி கொடுக்கும் ;மாக்ஸ்முல்லரைப் புரட்டிப் புரட்டி அடித்த பேராசிரியர் வில்சன் சொல்வது போல ரிக்வேதத்துக்கு 2000 BCE  கொடுத்தாலும் சிந்து வெளி நாகரிகத்துக்கு , அடி உதை விழும் !

***

சூர்யன்

சோலார் என்ற ஆங்கிலச் சொல் சூர்ய என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் திரிபே; ர+ல இடம் மாறும் என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்கண விதி

 சூரியனுக்கு ஒரு சக்கரமும் ஏழு குதிரைகளும் இருப்பதாக புராணங்கள் சொல்லுவதை சங்கத் தமிழ் புலவர்களும் செப்புகின்றனர் வானவில்லில் காணப்படும் ஏழு நிறங்களை ஏழு குதிரைகள் என்று அடையாள பூர்வமாகச் சொல்லுவார்கள். சூரியனுக்கு முன்னால், பல்லாயிரம் குள்ள  முனிவர்கள் — வாலகில்யர்கள்–  செல்வதை புராணங்களும் சங்கப்புலவர்களும் செப்புகின்றனர்; இதுவரை விஞ்ஞானிகள் இதை விளக்கவில்லை . அவர்கள் விளங்காதவர்களே! காஷ்மீர் முதல் பாகிஸ்தானில் இப்போதுள்ள மூல்டான் முதல் ஒரிஸ்ஸாவிலுள்ள கோனார்க் வரை சூரியனுக்கு கோவில்கள் இருந்தன . முஸ்லீம் வெறியர்கள்  அவைகளை உடைத்து அழித்ததை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். சூரிய கிரஹணம் பற்றி ரிக் வேதத்திலும் மகாபாரதத்திலும் புறநானூற்றிலும் குறிப்புகள் காணப்படுகின்றன; சூரியனுக்கு மனைவிககள் உண்டு என்று சொல்லுவதும் அடையாள பூர்வ செய்திகளே நிழல் / சாயா ஒரு மனைவி!

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா =

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

அக்கினியே ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

***

சுஸ்ருதர் 

சுஸ்ருதர் எழுதிய சுஸ்ருத சம்ஹிதை என்னும் மருத்துவ நூல் 2600 ஆண்டு பழமையானது. அவர் அட்டை என்னும் பூச்சியைப் பயன்படுத்தி ரத்தம் எடுக்கும் வைத்தியம், செயற்கை மூக்கு ஆபரேஷன், 145 வகையான கருவிகளைக் கொண்டு ஆபரேஷன் செய்வது முதலியன பற்றி எழுதி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன .

சர்ஜரி என்னும் அறுவைச் சிகிச்சையின் தந்தை இவரே என்று இப்போது உலகம் ஒப்புக்கொண்டு ஆஸ்திரேலியா முதலிய இட்டங்களில் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் இவருடைய சிலையை வைத்துள்ளனர்.

சுஸ்ருத ஸம்ஹிதாவில் 186 அத்தியாயங்கள் உள.  பூர்வ-தந்த்ராவில் 120-ம்  , உத்தர-தந்த்ரா வில் 66-ம் உள்ளன.

பூர்வ-தந்த்ராவில்

•             சூத்ர ஸ்தான (46 அத்தியாயங்கள் ): மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கைகள், அறுவைச் சிகிச்சைக் கருவிகள்; மருத்துவ மாணவர் பயிற்சி, மருந்தியல்

•             நிதான ஸ்தான (16 ): நோய்களை உண்டாக்கும் கிருமிகளும் பொருள்களும்

•             சரீர ஸ்தான (10 ): மனித உடற்கூறு, கருவின் வளர்ச்சி, முக்கிய உ டல் உறுப்புகள் , மர்ம ஸ்தானங்கள்

•             சிகித்ஸா ஸ்தான (40 ): பொதுவான சிகிச்சை , அறுவைச் சிகிச்சை செய்வது எப்படி;

•             கல்ப ஸ்தான (8 ): விஷங்களும் , விஷத்தை அகற்றும் சிகிச்சைகளும்

•            

உத்தர-தந்த்ரா ( – 66 அத்தியாயங்கள் )

•             கண், காது மூக்கு நோய்களும் சிகிச்சைகளும் (சாலக்கிய தந்த்ரா), குழந்தை வைத்தியம் (கௌமார பிரித்ய), மன நோய் வைத்தியம் (பூத வித்யா), பொதுவான மருந்துகள்  (காய சிகித்ஸா)

To be continued…..

Tags- சுஸ்ருதர் , சுபத்ரா , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 100; இந்து மத கலைச்சொல் அகராதி-100 , சூரியன், சூர்ய வம்சம்

மலைபடு கடாம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,102)

Written by London Swaminathan

Post No. 16,102

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

மலைபடு கடாம் நூல் எந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது? அதை எழுதியவர் யார்?

 2

இப்படி தடா புடா கடா முடா என்று பல்லை உடைக்கும் தலைப்பைக் கொடுத்து இருக்கிறாரே ! அதன் பொருள்தான் என்ன ?

3

இவர் யாரை வைத்து இந்த நூலினை இயற்றினார் ? அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ?

4

இந்த நூலுக்கு வேறு பெயரும் உண்டாமே! அது என்ன ?

5

இந்த நூலின் ஆசிரியரை உலகப்புகழ்பெற்ற ஒரு கவிஞருடன் ஒப்பிடுகிறார்கள்.ஏன் ?

6

இவர் நூலில் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது கூத்தர் ஆற்றுப்படை என்பதிலிருந்து புலனாகிறது ; அதற்கு ஆதாரம்/ சான்று  என்ன ?

7

காரியுண்டிக்கடவுள்” என்று புலவர் பாடியுள்ளார் ; யார் அது ? அப்படி ஒரு கோவில் உள்ளதா ?

8

மலைகளில் எழும் ஓசையை இவர் 40 வரிகளில் கொட்டி முழக்கியுள்ளாராமே! கொஞ்சம் சாம்பிள் கிடைக்குமா?

9

கார்த்திகை நட்சத்திரம் பற்றியும், பெண்களின் தழை உடை, நகை நட்டுகள் குறித்தும் பாடிய புலவர் குழந்தை பிறந்தால் பெண்கள் வளையல் அணிய மாட்டார்கள் என்கிறாரே ! இது என்ன புது வழக்கம் ?

10

புலவர் சரியான பத்தாம் பசலி ஆள். ஏனெனில் ஆடல்- பாடல் மாக்களிடம் சகுனம் பாத்துப் புறப்படு என்கிறார் வேறு என்ன பொன்மொழிகளை உதிர்க்கிறார் ?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடைகள்

1.சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உண்டு; அதாவது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் 10+8= 18 ; அந்த 18 ல் பத்துப்பாட்டில் ஒரு நூல் மலைபடு கடாம். இதை எழுதியவர் ஒரு பிராமணர் ; அந்தப் பார்ப்பானின் பெயர் இரணியமுட்டத்துப் பெருங் கெளசிகனார் . அந்த அந்தணன் கெளசிக கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

***

2.மலைகளிலிருந்து ஒழுகும் ஓசை; அதாவது மலை என்பது யானைக்கு உவமை; ஆகவே யானையிலிருந்து ஒழுகும் மதம்.

***

3.நன்னன் என்ற மன்னனைப் பாராட்டி இந்த நூலினை யாத்தார் ; ஆவர் ஆண்டது திருவண்ணாமலைக்கு அப்பாலுள்ள நவிர மலைப்பகுதி. சேயாறு பாயும் ஊர் நன்னன் நகர்.

***

4.ஆமாம் கூத்தர் ஆற்றுப்படை என்றும் பெயர் ; ஏனெனில் கூத்தர் என்னும் நாடக / ஆடல் மக்களை மன்னனிடம் போய் பரிசுபெறுங்கள் என்று வழிப்படுத்தலால் — ஆற்றுப்படுத்துவதால் — கூத்தர் ஆற்றுப்படை என்றும் சொல்லுவார்கள்.

***

5.ஆங்கிலத்தில் ஏராளமான இயற்ககைக் கவிதைகளை யாத்த புலவன் WILLIAM WORDSWORTH வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் . அவரைப்போல பெருங் கெளசிகனாரும் இயற்கையைப் பாடியுள்ளார் . ஆகவே இவரை தமிழ் வோர்ட்ஸ்வொர்த் என்பார்கள் பாடலில் மொத்த வரிகள் 583. அதில் 400 வரிகள் இயற்கையைப் பற்றியது .

***

6.பாடலின்/ நூலின் முதல் 10, 15 வரிகளில் இசைக்கருவிகளின் பெயரை அடுக்கி , நூலினைத் துவக்குகிறார். கூத்தர் பலவகை இசைக்கருவிகளைப் பையில் போட்டுக் கொண்டு போகிறார்கள்

திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்

விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,

திண் வார் விசித்த முழவொடுஆகுளி,

நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,

மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு,   5

கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,

இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,

விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,

நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,

கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி,  10

நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,

கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,

நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்; (1 – 13)—மலைபடுகடாம்

(பிறவும் = பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண் விடு தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை, கிணைப் பறை)

**

பேரியாழின் இயல்பு

தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின்,
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ,   25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப்,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப்,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை

***

7.விஷத்தை உண்டவன் என்ற பொருள்படும்படி சிவபெருமானை காரி உண்டிக்கடவுள் என்று பாடிப் பரவியுள்ளார். இப்போதும் காலகண்டீஸ்வரர் கோவில் உள்ளது .தமிழகத்தில் அடையபுலம் காலகண்டீஸ்வரர் கோயில் (திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில்) மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நாவலூர் உள்ளிட்ட சில இடங்களில் காலகண்டீஸ்வரர் (சிவன்)  கோயில்கள் உள்ளன. இவர் பாடியது திருவண்ணாமலை மாவட்ட கோவிலாக இருக்கலாம்

நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும், 

***

8. மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்

கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும்
அருவி நுகரும் வான் அர மகளிர்,

வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும்  295

தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்;

சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின்   300

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்;
தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை   305

மலைமார் இடூஉம் ஏமப் பூசல்;
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு,

நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல்,   310

கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாப் பூசல்;

கலை கையற்ற காண்பு இன் நெடு வரை   315

நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை;
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என,

நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு,   320

மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;

நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து,   325

உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளிபடு பூசல்;

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு   330

மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,

நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை;   335

காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை

மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக்   340

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,

என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி,   345

அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த

மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்பக், (292 – 348)

Various Sounds Heard in the Mountains

Male monkeys dig out jackfruits and their oozing

juice sprays in the wind, spreading fragrances in

all directions.

There are sweet sounds from waterfalls, that rise

when celestial women catch the rapidly flowing

water in their hands and play in the waterfalls,

sounding like those produced by your musical

instruments.

There are sounds of forest dwellers sitting on high

platforms chasing a stray bull elephant with raised

tusks, that has strayed from his herd and entered

their millet field, and laments of those from whom

a porcupine with sharp quills, that resides in a cave,

escaped.

A mountain woman with wavy hair sings songs,

believing that it will heal the deep chest wounds

of her husband who was attacked by a tiger with curved

stripes.  Women who want to wear fresh vēngai flowers

shout ‘tiger’ ‘tiger’ without fear.

In the tall mountains, the painful roaring trumpets of a

naive, tender-headed pregnant cow elephant and her herd

are heard, since she was attacked by a tiger when her strong

mate went to get her food.  An uproar was caused by a

black-fingered female monkey and her troop who feed on

sprouts, when her untrained young child fell off the

mountains since she did not hold it tight.

In the tall mountains, the painful roaring trumpets of a

naive, tender-headed pregnant cow elephant and her herd

are heard, since she was attacked by a bright-colored, mighty

tiger when her strong mate went to get her food.  An uproar

was caused by a black-fingered female monkey and her troop

who feed on sprouts, when her untrained young child fell

off the mountains since she did not hold it tight.

Climbing on bamboo ladders on the tall mountains where

even male monkeys are unable to climb, forest dwellers

gather honey collected by bees from huge honeycombs,

and celebrate happily since they have destroyed forts

of their enemies, and that the loot got will serve as

gifts to Nannan with perfect spears.  The men drink

liquor and celebrate with kuravai dances in the sky-high

mountain, with their women, to the accompaniment of

small, loud deer hide parai drums.

There are roaring sounds produced by rivers with rocks

as they enter rocky crannies,

appearing like beautiful chariots riding in a row.

There are clamors of elephant trainers who speak mixing

languages, who bind their fierce elephants to tall posts,

reducing their great rage, after saving them when they fell

into huge whirlpools, and there are the sounds of bamboo

gadgets used by women to chase parrots from millet fields.

A bull with a moving hump, that strayed from its herd and a

marai stag that came from the mountains, fine males, fought

with each other with strength without backing down, causing

wounds to each other,

and ruining thick-petaled kulavi flowers and kurinji plants,

and cattle herders and mountain dwellers raised uproars.

There are noises made by children who thresh the

seeds of sweet, mature jackfruits that grow in clusters,

dropped on the ground by many who ate the fruits, using

calves that they control with ladle-like clusters of fragrant

kānthal flowers.

There are loud noises of machines which crush sugarcane

rapidly in factories, where crushed juice pours like pouring

rain.

Vallai songs are sung by women pounding millet grains.

There are roars of parai drums beat by those who grow

turmeric and chēmpu yam, beaten to chase marauding pigs.

All these and other sounds, countless in numbers, are

heard in the canyons and mountain peaks in all directions.

The sounds join together and ooze from the mountain like

musth flowing from a bull elephant.

(Vaidehi Herbrrt’s translation is given;thanks)

***

9.உண்மைதான். குழந்தைக்குப் பாலூட்டும்போது வளையல் சத்தம் கேட்டல் அது பால் குடிப்பதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கும்; மேலும் வளையல்களில் துருசு, தும்பு, பாக்டீரியா, வைரஸ் ஒட்டியிருந்தால் ரெசிஸ்டன்ஸ் பவர் குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தொற்று நோய் வரக்கூடும். மேலும் அந்த காலத்தில் மலைவாழ் மக்கள் அணி ந்தது கண்ணாடி அல்லது சங்கு வளையலாக இருக்கலாம் அவை உடைந்தாலோ குழந்தைகள் அதைக் கடித்தாலோ ஹெல்த் ரிஸ்க் அதிகம் ; இன்ன பல காரணங்களால் புலவர் புதுமைச் செய்தியை மொழிகிறார் .

 புள் கை போகிய (253) – நச்சினார்க்கினியர் உரை – பிள்ளையைப் பெற்றால் பெண்கள் வளையல் இடார்.  ஆதலின் வளை போதற்குப் பிள்ளைகள் காரணமாயினார்.  பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளையல் தம் தாயர் கையினின்றும் அகலுதற்கு காரணமான மகார் என்றவாறு.

***

10.

பொன்மொழிகள் உவமைகள்

ஞமலி நாவின் அன்ன

துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடிக் நாக்கு (நாயின் போன்ற சிற்றடி)

****

வரையர மகளிர் இருக்கை காணினும்,   190

உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;

பல நாள் நில்லாது, நிலநாடு படர்மின்(தெய்வீகப் பெண்கள் இருக்கும் மலை )

***

பராவு அரு மரபின் கடவுட் காணின்,   230

தொழாநிர் கழியின் அல்லது வறிது (போகும் வழியில் உள்ள கோயிலில் கடவுளைக்கும்பிட்டு விட்டுச் செல்லுங்கள் )

***

கயம் கண்டன்ன அகன் பை அம் கண்

மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும்   260

துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி,

(யானைகளை விழுங்கும் மலைப்  பாம்புகள் வழியில் இருக்கும்; பார்த்தால் காய்ந்த மரம் போல இருக்கும்; ஜாக்கிரதை; உஷார்! உஷார் !)

***

பாடு இன் அருவிப் பயங் கெழு மீமிசைக்

காடு காத்து உறையும் கானவர் உளரே;

நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள்   280

புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி,

(மலை வாழ் மக்கள் உதவுவதற்குத் தயாராக இருப்பார்கள்; ஆற்றில் விழுந்த ஒருவனை நாம் எவ்வளவு விரைவாகக் காப்பாற்றச்  செல்வோமோ அந்த வேகத்தில் உதவி செய்வார்கள்!)

***

ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென

நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென

நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்

செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட,

கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;

இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத்   390

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்; (376 – 391)

***

புதியவர்களுக்கு வழி தெரியபுல்லை முடிந்து

இட்டுச் செல்லுதல்

பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்

சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்; (392 – 393)

(கானகத்தில் செல்லுவோர், வழி தவறுவது மிகவும் அதிகம்; ஆகையால் பாதையின் இருபுறங்களிலும் உள்ள செடிகளில் புதர்களில் முடிச்சுப் போடுவார்கள்; இதைப்பார்த்து எல்லோரும் நடப்பார்கள்; அருமையான செலவில்லாத உத்தி).

***

செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன

வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த,   435

சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;

(போகும் வழியில் உங்களுக்குத் புளியஞ்சாதம் கிடைக்கும்; அதில் நல்ல விதைகள், அவரை முதலியன போட்டு வழங்குவார்கள் ((நாக்கில் உமிழ்நீர் சுரக்கிறது). இதற்கு முன்னர் மாமிச உணவு கிடைப்பது பற்றியும் புலவர் பாடியுள்ளார் )

****

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு,   465

(முள்ளை அகற்றிய மீன்களோடு சோறும் கிடைக்கும்)

***

இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு,

நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,

தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து,   565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என,
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்,
தலைவன் தாமரை மலைய விறலியர்

அருமையான மெல்லிய ஆடை ; நல்ல மாமிச உணவு; எல்லாம் கொடுப்பான் நன்னன் ; முதல் நாள் விருந்து போல எத்தனை நாள் தங்க்கி னாலும் கிடைக்கும் . பழைய பழமொழி:

(முதல் நாளில் தலை வாழை இலை விருந்து ;

இரண்டாம் நாள் கையில விருந்து;

மூன்றாம் நாள் தரையில விருந்து– என்பது நன்னனிடம் கிடையாது )

***

உணவு வகைகள் பற்றியும் , இசைக்கருவிகள் வகைகள் பற்றியும் , கானகத்தில் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கைகள் பர்றியும் அங்கே காணப்படும் விலங்குகள், தாவரங்கள் பற்றியும், வரிக்கு வரி காணலாம் !!

–subham—

Tags- மலைபடு கடாம் , 10 கேள்விகள், இரணியமுட்டத்துப் பெருங் கெளசிகனார், கூத்தராற்றுப்படை ,தமிழ் வோர்ட்ஸ்வொர்த்

ஆயிரம் பொன்மொழிகள்! (51-80) Post No.16,101

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,101

Date uploaded in London – 18 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆயிரம் பொன்மொழிகள்! (51-80) 

ச. நாகராஜன்

அறிஞர்களின் பொன்மொழிகள், அறநூல்களின் வழிகாட்டுதல்கள் நமக்கு இன்றியமையாத ஒன்று.

இதோ சில பொன்மொழிகள்! (From my collection!)

51. Ching Chow – Kindness

‘Tis written- A forced kindness deserves No Thanks…

Ching Chow – Flattery

Flattery is indeed sweet food to those who can swallow It ..

Ching Chow – Evil man

‘Tis written – An evil man always stumbles over evil….

Ching Chow – Fools

Twin fools are they who know everything and they who know nothing..

 Mind – Simplicity

Maintain a holy simplicity of mind, and do not smother yourself with a host of cares, wishes, or longings, under any pretext.                                                        – S. Francis de Sales

Mistake – Fool

Anyone can make a mistake, but it is only a fool who makes the same mistake twice.

Speech – Silence

Speak the truth, but without offence. Should this be too disagreeable, be silent: but tell no pleasant lies.

–          Manu

Rise

Those who live on the mountains have a longer day than those who live in the valley. Sometimes all we need to brighten our day is to rise a little higher.   

Temper

Keep your temper. It is worth more to you than to anyone else. 

60. Friendship

We meet at meals three times a day, and give each other a new taste of that old musty cheese that we are. We live thick, and we are in each other’s way, and stumble over one another, and I think that we thus lose some respect for one another.                     – Walden

Be Second – Leader

Be second, and not the first; if all goes well the share will be the same; if not, the leader is to blame.

–          Hitopadesha

Friend – Foe – Wealth – Woe

Fail not thy Friend,

      Fear not thy Foe,

Vaunt not thy Wealth,

      Wail not thy Woe

Kindness

Each of us can bring the dream of peace nearer realisation by being in our individual relations more kindly, more tolerant, more sympathetic, and, above all, less critical of each other.      Ida Clarke

Judge – Portrait

No man is a judge of his own portrait.     – G. Bernard Shaw

Actions – Just

The bright actions of the just

Survive unburied in the kindred dust.            – Pindar

Atmosphere – Beauty

It is something to be able to paint a particular picture, or to carve a statue, and so to make a few objects beautiful; but it is far more glorious to carve and paint the very atmosphere and medium through which we look, which morally we can do.                  – Thoreau

Love

Sun of my soul! Thou Saviour dear;

It is not night if thou be near.                       – John Kelley

Love

Better to be carving with love and a jack-knife than waiting discontentedly for a sculptor’s chisel.

Evil – Good

Evil no nature hath, the loss of good is that which gives to sin a livelihood.   – Robert Derrick

70. Evil

It’s easy enough to bear our own evils, all we need for that is a little manliness; what’s intolerable is the evil, often so unmerited in appearance, that befalls others.     – W. Somerset Maugham

Evil – Goodmen

All that is necessary for the victory of evil is that good men do nothing. – Edmund Burke

Fault – People – Picture

They are neither the best pictures, nor the best people, that have no faults.  – Van Gogh

Equity

Give no bounties, make equal laws, secure life and prosperity and you need not give aims. – Emerson

Error – Dogma

A dogma learnt is only a new error – the old one was perhaps as good; but a spirit communicated is a perpetual possession.              –   R. L. Stevenson

Energy

Energy is eternal delight.   – William Blake

Energy

It is good to battle, to suffer, to be thrown overboard and left to save ourselves. What we lose in comfort we gain in energy, and energy is the most precious of man’s weapons.   – Charles Wagner

Do A Thing – Talk – Discussion – Irritation

Just do a thing, and don’t talk about it. This is the great secret of success in all enterprises. Talk means discussion, discussion means irritation, irritation means opposition; and opposition means hindrance always, whether you are right or wrong.                       – Sarah Grand

Difficulty – Greatman – Mind

A difficult raiseth the spirits of a great man, he hath a mind to wrestle with it, and give it a fall.

–          Halifax

Desire – Peace

The Fewer Desires

The more Peace. —– Bishop Wilson

80. Draughts

Other people’s draughts are draughts; our own are ventilation.   –  The Etchingham Letters

**

கொங்கு மண்டல சதகம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,100)


Written by London Swaminathan

Post No. 16,100

Date uploaded in London – 17 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏற்கனவே இந்த பிளாக்கில் எஸ்.நாகராஜன் எழுதிய நீண்ட கட்டுரைத் தொடரைப் படித்தவர்கள் எளிதில் விடை சொல்ல முடியும் .

1

கொங்கு மண்டல சதகம் என்ற நூலினை எழுதியவர் யார் ?

2

கொங்கு நாடு என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வரும் மன்னர்கள் யார் ?

 3

கொங்குநாட்டின் புலவர் சபை பற்றிக் கார்மேகப் புலவர் என்ன சொல்கிறார்?

4

வாலிபன் மூலிகை கலந்த சோற்றினைச் சாப்பிட்டு இளைஞன் ஆனா அதிசயத்தை   எந்தப் பாட்டலில்  காணலாம் ?

5

சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி  என்று கவிஞர் விளக்குகிறார் ?

6

கொங்கு மண்டலத்தில் ஓடும் நதிகள் யாவை ?

7

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லையே  என்று  வருத்தப்பட்டு புலிக்கு இரையாகச் சென்றவருக்கு என்ன நடந்தது ?

8

படிக்காசுப் புலவரை வாதில் வென்ற கொங்குமண்டலப் புலவர்கள் என்ன செய்தார்கள் ?

9

அவ்வையார், பவணந்தி, வில்லிப்புத்தூரார் முதலியோரை கொங்கு நாடு எப்படிப் போற்றியது ?

 10

கரிகால் சோழன் மகளுக்கு வந்த வலிப்பு நோயைக் கொங்கு மண்டல மருத்துவர்கள் எப்படிக் குணம் ஆக்கினார்கள் ?

*******************

விடைகள்

1.கார்மேகக் கவிஞர் இதை எழுதினார்; பின்னர் வாலசுந்தரக் கவிராயர், கம்பநாதசாமி ஆகியோர் இதே பெயரில் நூல்களை இயற்றினார்கள்.

***

2.செங்குட்டுவன் போன்ற சேர

வேந்தரது திறமையான ஆட்சியும் காரி,  ஓரி, அதியன் முதலாய புகழ்

பெற்ற குறுநில மன்னர்களின் வரலாறும் கொங்குநாட்டின் புகழைக் காட்டும்.

***

3.கொங்குப் புலவர் சபை ஒன்று அக்காலத்தில் இருந்தமையை (பக். 30)

இத்தொகுதியால் அறிய முடிகின்றது. ‘பழந்தமிழ் ஐவாணர்’ என்று கார்மேகக்

கவிஞரின் பாடல் (31) ஒன்று கூறும். ஐவாணர்கள் யார்யார் என்பதனை

உரையாசிரியர் பின்வருமாறு விளக்குவர்.

இதனைக் கொங்கு வேளாளர் கல்யாணத்தில் பாடும் மங்கலவாழ்த்து என்று நாளும் பாராட்டப்படும் நூலில் காணலாம் :

“பட்டன் புலவன் பண்பாடி தக்கையன்

திட்டமாய்ச் சோபனஞ் செப்பிமுன் னேவர

அரம்பை மேனமை அணிகொள் திலோத்தமை

திரம்பெறு மூர்வசித் தெரிவையர்க் கொப்பாய்

வண்மைசேர் கூத்தி வகைபெற நின்று

நன்மை சேர்பரத நாட்டிய மாடிட”

என்ற வரிகளால் காணலாம்.

இங்கு பட்டன் – தலைவனை புகழை அவன் முன்னே நின்று பாராட்டுவோன்.

புலவன் – இயற்றமிழால் பாடல் பாடிப் புகழ்வோன்

பண்பாடி – இசைத் தமிழ் பாடுவோன்

தக்கைகொட்டி – தக்கை என்னும் ஒரு வகை வாத்தியத்தை வாசிப்பவன்

கூத்தாடி – நாடகத் தமிழை நடத்துவோன்.

***

4.இந்த அரிய சம்பவத்தைக் கொங்கு மண்டல சதகம் தன் 69வது பாடலில் கூறிப் போற்றுகிறது.

பாடல் இதோ:

உலையி லமுது படைத்துண்டு சீட னொளித்திருப்பத்

தலையின் மயிருங் கருக்கக் கண் டேயவன் சற்குருவும்

நிலையுடன் கக்குவித் துண்டடைந்த் தானன் னெறியிற்

கஞ்சமலையி லதிசயங் கண்டது வுங்கொங்கு மண்டலமே.

இப்பாடலின் பொருள் :உலை வைத்துச் சமைத்துச் சாப்பிட்டுத் தன் உருவம் மாறி விட்டதால் சீடனுடைய முன் உருவம் தெரியாமல் நரைதிரை நீங்கி இருக்கக் கண்ட அவனது சற்குரு, (உண்மை அறிந்து) தன் சீடன் அருந்தியிருந்த உணவைக் கக்கச் செய்து அதைத் தானும் அருந்தி குமரன் ஆனதுவும் கொங்கு மண்டலமேயாம்.

***

5.நடராஜர் ஆனந்த தாண்டவம் புரியும் சிதம்பரத்தைக் கனக சபையாகச் செய்ய நினைத்த ஆதித்தன் என்னும்  அரசன் அதற்கான தங்கத்தை எங்கிருந்து, எப்படி பெற்றான்?

இதற்கான பதிலை கொங்கு மண்டல சதகத்தின் 29ஆம் பாடல் தருகிறது.

பற்றறுத் தாளும் பரமனா னந்தம் பயினடஞ்செய்

சித்தம் பலத்தைப்பொ னம்பல மாகச் செயச்செலும்பொன்

முற்றிலுந் தன்னகத் தேவிளை வாவதை மொய்ம்பிறையுண்

மற்றும் புகழக் கொடுத்ததன் றோகொங்கு மண்டலமே

இந்தப் பாடலின் பொருள் : சிவபிரான் ஆனந்த தாண்டவம் புரிந்தருளும் சிதம்பரத்தைக் கனகசபையாக்கத் தேவையான தங்கம் அனைத்தையும் தன்னிடத்தே விளைந்த பொன்னைக் கொடுத்து அரசனும் வியக்கப் புகழை அடைந்ததும் கொங்கு மண்டலமே. (முழுக்கதை வேண்டுவோர் பிளாக்கில் முன்னம் வெளியான கட்டுரைகளைக் காண்க.)

***

6.திருமணி தொப்பைபூங் காவேரி வானியுஞ் செய்யநதி

தருமணி காஞ்சி பொருனைநள் ளாறொடு சண்முகமுங்

குருமணி பாலை நதிவாழை காரி குடவனதி

வருமணி சண்பகஞ் சிற்றாறு சூழ்கொங்கு மண்டலமே.

–    பாடல் 6

 திருமணிமுத்தாறு – தொப்பையாறு – பவானியாறு -
செய்யாறு – நொய்யலாறு – ஆம்பிராவதி – நள்ளாறு – சண்முக நதி -
பாலையாறு – வாழையாறு +பாரத்துவாசநதி – குடவனாறு – சண்பக நதி -
சிற்றாறு சூழ்ந்துள்ளது கொங்குமண்டலம் என்பதாம்.

***

7.பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.

அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.

கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.

கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்

புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை

மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்

வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே

இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!

***

8.படிக்காசுப் புலவர், ராமநாதபுர சமஸ்தானத்தில் இரகுநாத சேதுபதியின் சமஸ்தான வித்வானாக இருந்து பெரும் புகழ் பெற்றார்.ஒரு சமயம் தல யாத்திரையை  மேற்கொண்ட அவர் கொங்கு மண்டலம் வந்தார்.கவசை நகரில் கல்வி கேள்விகளில் வல்லவராயும் வள்ளன்மையில் சிறந்தவராயும் இருந்த மசக்காளி மன்றாடி தலைமையில்  தமிழ்ப் புலவர் சபை ஒன்று கூடிற்று.அதில் வண்ணப் பாக்கள் சொல்வது பற்றிய வாதம் ஒன்று நடந்தது.அதில் படிக்காசுப் புலவர் எடுத்துக் கொடுத்தபடி முடிக்கவில்லை என்று சொல்லி அவர் கொண்டு வந்த பல்லக்கு முதலியவற்றை கொங்கு மண்டலப் புலவர்கள் எடுத்துக் கொண்டனர்.

படிக்காசுப் புலவர் தனது ஆடை முதலியவற்றைச் சுமந்து கொண்டு பாடலைப் பாடினார்:

“அஞ்சாலி மக்களுஞ் சாணாகும் பாணரு மம்பட்டருஞ்

செஞ்சாயக் காரரும் வேசையர் மக்களுஞ் செந்தமிழைப்

பஞ்சாகப் பன்னி யொருகாசுக் கோர்வண்ணம் பாடலுற்றார்

நஞ்சாகப் போச்சுதை யோவென் றமிழ்கொங்கு நாடெங்குமே”

பின்னர்உடல்நலம் குன்றி  , திருச்செங்கோட்டுக்கு வந்து அர்த்த நாரீஸ்வரர் மீது  பதிகம் பாடி,  தேக சுகத்தை அடைந்து உமைபாகப் பதிகம் பாடினார். பின்னர் சமீபத்தில் உள்ள மோரூர்க்குச் சென்று பாம்பலங்காரர் மீது வருக்கக் கோவை பாடி அரங்கேற்றினார். அதற்காகக் குமாரசாமிக் காங்கேயன் சன்மானம் தர அதை ஏற்றார்.

***

9.வில்லிபாரதத்தைத் தமிழில் பாடும்படி செய்வித்த ஆட்கொண்டான் என்பவனும் கொங்கு மரபினன் என்று சதகநூல் கூறுகின்றது. அதற்குச் சான்றாக வில்லிபுத்தூராரின் மகனார் வரந்தருவார் பாடிய பாயிரத்தைக் காட்டுவார்.

ஒளவையாருக்குப் பொன்னிலை பரப்பி அன்னமிட்டு விருந்துபசரித்தான் கொங்கு நாட்டைச் சார்ந்த அசதி என்பான் (50) என்று பிறிதொரு பாடல்

கூறும். ‘கங்கக் குரிசில் உவக்க நன்னூலைக் கனிந்து புகல் துங்கப் புலமைப் பவணந்தி’ கொங்கு மண்டலத்தைச் சார்ந்த சனகாபுரம் என்னும் ஊரினர் (54) என்பர். ‘பண்பார் சிவப்பிரகாசரைப்’ போற்றியது கொங்கு மண்டலமாகும் (57). ஆணூர்ச் சர்க்கரை புலவர்களைப் போற்றிப்புரந்த செயல்

வியப்பிற்குரியதாகும். புலவர்கள் அவனைப் பற்றிப் பாடிய அழகிய பாடல்

வருமாறு:

செங்குன்றை யெல்லாநின் செங்கைக் கொடையதனுக்

கெங்கெங்குந் தேடியிணை காணேங் – கொங்கதனிற்

சர்க்கரையைப் பாடலாம் தண்டமிழ்க்கொன் றீயாத

எக்கரையாம் பாடோ மினி.

புலவருக்காகக் காய்ச்சிய நெய்யில் கையிட்டுச் சத்தியம் செய்தவன்

ஆணூர்ச்சக்கரையாவன் (63).

****

10. அறுவைச் சிகிச்சையில் தேர்ந்த மருத்துவப் பெண்டிர் அக்காலத்தில் விளங்கியிருந்தமையைக் கொங்கு மண்டல சதகப்பாடல் ஒன்று கூறுகிறது. வயிற்றைக் கீறிக் குழந்தையை எடுக்கும் இம்முறையை அக்காலத்திலேயே பின்பற்றியுள்ளனர் கரிகாலர் சோழன் மகளுக்கு வந்த வலிப்பு நோயை ஒரு குலாலன் மட்பாவை செய்து குறிபார்த்துச் சுட அவ்வலிப்புநோய் நீங்கியது எனப் பாடல் கூறும்  C-section (caesarean operation/section) normally takes about 40 to 50 minutes from start to finish.

கரிகாலச் சோழன் மகளுக்கு வந்த கனவலிப்பு

மெரியா மூடலை மயக்கமட் கோவ னிறைமகளைப்

பரிபா லனஞ்செய மட்பாவை யிய்குறி பார்த்துச்சுட

மரியாம லவ்வலி யேகிய துங்கொங்கு மண்டலமே. 89

–subham—

Tags- கொங்கு மண்டல சதகம் , 10 கேள்விகள், மருத்துவச் செய்திகள், படிக்காசுப்புலவர், அவ்வையார், கார்மேகக் கவிஞர்

Tamil Wordsworth! Purananuru wonders-55, Tamil Encyclopedia-95 (Post No.16,099)

Written by London Swaminathan

Post No. 16,099

Date uploaded in London – 17 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-55, Tamil Encyclopedia-95, One Thousand Interesting Facts – Part 95

From now on let me tell you about the wonders in PATHTHUPPAATTU (Ten Idyls); ten books in Sangam Tamil Literature

Item 774

J V Chellaiah’s translation is used; (year 1946)

Malaipadaukadam (kadaam) is the last book in the group called Paththu (10) Paattu(poems/songs).

The meaning is SECRETION OOZING FROM THE MOUNTAIN. The mountain is compared to elephant and rut from it is oozing is the implied meaning. As like other books it has got many interesting similes and information.

The author’s name is Iraniamuttattup Perunkundrur Perum Kausikan (Senior Kausikan). He is a brahmin which is evident from his Gotra Kausika.

Subject matter is mostly the description of the mountainous country of King Nannan.

Another name for this book is KOOTHTHARAATRUPPADAI.

Where is it?

Naviram hills watered by Seyaru river in Tiruvannamalai area.

First wonder is the m list of Musical Instruments. Though we see these instruments in other books like Purananuru, here all are listed in one place: the big drum, the small drum/aguli,  the cymbal, the horn, the long oboe, , the pipe the flute, he karandikai/ a peculiar drum, large cymbal/ellari, wide faced drum/padali.

THESE ARE IN THE FIRST FIFTEEN LINES.

Explanation:

Thattai , also known as Karadigai because it resembles the grunt of a bear.

Pathali – a wide faced drum with only one side.

***

Item 775 Polygamy

Kings were allowed to marry as many women as they want to protect the country; except Lord Rama all Hindu kings married many women. Here also Nannan is called Spouse of women (Line 70 in English translation).

He is the spouse of women chaste with breasts

Resembling those of statues, shoulders smooth,

And eyes like blossoms cool.

***

Item 776 Popular simile

आकाशात् पतितं तोयं यथागच्छति सागरम् ।

सर्वदेव नमस्कारः केशवं प्रतिगच्छति ॥

Transliteration

ākāśāt patitaṃ toyaṃ yathāgacchati sāgaram .

sarvadeva namaskāraḥ keśavaṃ pratigacchati .

Translation

Just as water fallen from the sky goes to the ocean, so too all salutations to the gods reach Keshava (Krishna/Vishnu).

It is a mantra which Brahmins recite thrice a day when they do Sandhya Vandana. 

This simile is here in Malaipadukadam (line 51 in Tamil poem). Before Sangam age Kalidasa used it in Raghuvamsam 9-17 and Sakuntalam 3-13. Later Tamil Sangam poets used in Puram.42 and Perump-Line 427

***

Item 777 Music Tunes

Kooththar  aatruppadai in another name for this book because prominence is given to dancers/actors and music in it. There were special songs sung by women when they pounded rice. Tribal wives sang songs to alleviate the pain caused by wounds received by their husbands while hunting. They had separate tunes appropriate to the five various conventional tracts. Of these Kurinchi and Marutham tunes are mentioned in the poem.

***

Item 778 no bangles for mothers

An unknown custom is mentioned in the poem.  Women discarded their bangles when they became  mothers. We can guess the reason for it. Bangles make noise and distract babies while breast feeding. Bangles may carry virus and bacteria; bangles made up of conch shells and glass are dangerous for babies.

***

Item 779 only leafy garments

All Kurinchi women wore garments made up of leaves and plant fibres. It was the custom even in Pacific Ocean islands. We see it in Hawaii islands, USA.

The women wore their hair in five plaits. Some scholas thought that it was five different hair styles like modern women. Rich women, however, wore fine spun clothes. Such garments were presented to dancing women. Even semi- nude women wore lot of ornaments. We see them in Yakshi statues of Second Century BCE in Bharhut and Tamil temple statues.

***

Item 780

 Ingenious methods were followed to indicate the paths in the jungle and bushy areas. They made grass knots on either side along the path so that people in the day time don’t lose tract.  If one lays stones on either side it may be hidden by the over growth of plants.

***

Item 781

Barter trade was given in details. They exchanged or sold their goods this way.

***

Item 782

One of the pastime was watching bull fight.

***

Item 783

Kartikai star/Pleiades constellation is mentioned. We must remember the composer of this poem was a Brahmin. They had knowledge of all the 27 stars. Tamil word used for this star in this pome means fire. It is the abbreviated form of Azarkuttam which Agni Nakshatram in Sanskrit.

***

Item 784 Lord Siva

There was a temple for Lord Siva in Naviram hills. He was called the person who swallowed poison ( in Tamil Kaariundik Kadavul). Lord Muruga was praised as war god corresponding to Sanskrit name Deva Senapati, Commander in Chief of Indra’s army.

Gods were worshipped in dedicated pillars called Kandhu.

***

Item 785 DARE NOT FORGET THE PAST

It is a significant phrase (translated line 264) indicating the belief in Karma theory.  If you have done something wrong in the past, you will have to face the effect in this birth. The implied meaning is Don’t Do anything wrong in this birth.

***

Item 786 Auspicious Time

Even now Anti God Dravidians too file their nomination papers for contesting in elections in an auspicious hour. They go to temples secretly or send their proxies to do special Pujas. Throughout Tamil literature, from Tolkappiam to latest works, we see Nimiththam and Sakunam etc. The auspicious hour for starting on a journey is mentioned in this poem.

***

Item 787

Malaipadukadam is more appreciated for the portrayal of NATURE than anything else. The list of sounds heard in the mountain is depicted in this poem- lines 294-348 in Tamil. This elaborate description extends to more than fifty lines

Tamil Wordworth

Total lines 583. Out of it, more than 400 lines are devoted to descriptions of nature. The poem is one stretch of pen pictures of nature beautified by countless similes.  It shows  not only the poet’s keen perception of nature’s beauties but also his capacity for painting nature.

Dark hills, swift streams, and steep ways appear. Gloomy caves, deep clefts, dangerous slopes and rough tracts are all depicted in detail with the various plants and animals of the region. The poet has an unerring ear for the various sounds heard in the mountain, these sounds combine together and echo far off. This conglomeration of sounds is likened to the rut of the elephant to which the mountain itself is compared and hence the suggestive title Malaipatukataam = the Rut of the Mountain.

***

Item 788

References: Tamil line numbers are given below:

Musical instruments- lines 1 to 11;

Phrase -Not even an iota of defect – lines 22-24;

Five plaits hair style- lines 30-31;also Kuruntokai-2;

Small feet like the tongue of a dog;

Rain from the sky go to sea- 51-53;

Birds seeking only fruit trees- common simile- 53-55;

Sandal paintings on breasts- 57 (Beautiful Tamil Words- Vanai Punai Ezil Mulai)

To be continued…………………………….

Tags- Tamil Wordsworth! Purananuru wonders-55, Tamil Encyclopedia 95, One Thousand Interesting Facts, Part 95, Malaipatukataam, item 788

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 99; இந்து மத கலைச்சொல் அகராதி-99 (Post.16,098)

Hitler misused Swastika.

Hindus’ Auspicious symbol Swastika 

Written by London Swaminathan

Post No. 16,098

Date uploaded in London – 17 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Subhadra

Subhadra was daughter of Vasudeva, sister of Krishna and Balarama, and wife of Arjuna. She was the mother of Abhimanyu.

Subhadra (सुभद्र) is a name mentioned in the Mahābhārata (cf. VI.68.8) and represents one of the many proper names used for people and places. Her name is found in many stories as a proper noun. Hare Krishna Movement has made her popular through Rath Yatras around the world. The sister of Jagannath whose image is worshipped with those of that deity and his brother Balarama, and carried in procession with them in the Ratha- Yatra, or annual movement of the car of Jagannath.

***

Sukra/ sukracharya

Sukra is planet Venus, meaning white. Sukracharya is Asura Guru—brahmin teacher of the Demons in Hindu literature. Sukra as planet Venus is in Purananuru, Sangam Tamil Book, and Brhat Samhita. The planet’s movement is associated with rain on earth; yet to be proved by science.

Sukracharya is also mentioned in Sangam Tamil books as Two Great Brahmins (other one is Brhaspati, planet Jupiter, teacher of Devas.

Point to be notes is all Asuras worshipped Hindu Gods and got boons and they were taught by Brahmins. .

Sukracharya’s daughter was Devayani . her love affair with Kacha, son of Deva Guru Brhaspati, was a long and popular story; feature fils had been made on Kacha Devayani. Another story is her clash with Sarmishta.

Devayānī (देवयानी).—Name of the daughter of Śukra, preceptor of the Asuras. [She fell in love with Kacha, her father’s pupil, but he rejected her advances. On this she cursed the youth, who in return cursed her that she should become the wife of a Kṣatriya (See kaca.) Once upon a time Devayānī and her companion Śarmiṣṭhā, the daughter of Vṛṣaparvan, the king of the Daityas, went to bathe keeping their clothes on the shore. But the god Wind changed their clothes, and when they were dressed they began to quarrel about the change until Śarmiṣṭhā, so far lost her temper that she, slapped Devayānī’s face, and threw her into a well. There she remained until she was seen and rescued by Yayāti, who, with the consent of her father, married her, and Śarmiṣṭhā became her servant as a recompense for her insulting conduct towards her. Devayānī lived happily with Yayāti for some years and bore him two sons, Yadu and Turvasu. Subsequently her husband became enamoured of Śarmiṣṭhā, and Devayānī, feeling herself aggrieved, abruptly left her husband and went home to her father, who at her request condemned Yayāti with the infirmity of old age. (Kacha Devayani Story is already given under Devayani, Kacha).

***

Sukra niti

Śukrācārya (शुक्राचार्य) or Uśanā is one of the most important political thinkers of India, The school established by him had become famous and came to be recognised by the names or Auśanasa. It appears that he and his followers and disciples had introduced quite a large number of works to propagate their views and popularise their idealism. But till today only one of such works is available and that is also most probably an abridged edition of one of his texts. The name of that book is Śukranītisāra .

***

Sundara kanda

Sundara kaanda is the fifth book in Valmiki Ramayana. this is the most celebrated part in Ramayana. People read the full canto in Sanskrit or Tamil as a ritual. It is believed that such a reading or recitation will bring all the auspicious things into a family. Those who seek wealth or wish someone’s wedding read it in the prayer room. Even the printed book is worshipped by the Hindus.  Hanuma is the hero who meets Sita Devi and Lanka report it back to Lord Rama. So it is considered a story of a successful venture. Those who do traditional discourse receive gifts from the listeners when the Golden Ring part is narrated

Chapter 1 – The Departure of Hanuman

Chapter 2 – Hanuman’s Arrival in Lanka

Chapter 3 – Hanuman enters the City

Chapter 4 – Hanuman observes the City and its Inhabitants

Chapter 5 – Hanuman ranges the City without finding Sita

Chapter 6 – Hanuman explores Ravana’s Palace

Chapter 7 – Description of the Aerial Chariot Pushpaka

Chapter 8 – Further Description of the Aerial Chariot Pushpaka

Chapter 9 – Hanuman searches the Harem

Chapter 10 – Hanuman sees Ravana surrounded by his Wives

Chapter 11 – Description of the Banqueting Hall

Chapter 12 – Hanuman becomes despondent

Chapter 13 – Hanuman’s Dilemma

Chapter 14 – The Ashoka Grove

Chapter 15 – Hanuman sees Sita

Chapter 16 – Hanuman’s Reflections on seeing Sita

Chapter 17 – Description of the Female Titans who guarded Sita

Chapter 18 – Ravana goes to the Ashoka Grove

Chapter 19 – Sita’s Grief

Chapter 20 – Ravana begs Sita to wed him

Chapter 21 – Sita rejects Ravana’s Advances with disdain

Chapter 22 – Ravana’s Threats

Chapter 23 – The Female Titans seek to persuade Sita to wed Ravana

Chapter 24 – Menace of the Female Titans

Chapter 25 – Sita gives way to Despair

Chapter 26 – Sita prophesies the Titan’s Destruction

Chapter 27 – Trijata’s Dream

Chapter 28 – Sita’s Lament

Chapter 29 – Sita observes auspicious Portents

Chapter 30 – Hanuman’s Reflections

Chapter 31 – Hanuman praises Rama

Chapter 32 – Sita sees Hanuman

Chapter 33 – Hanuman’s Converse with the Princess Sita

Chapter 34 – Sita’s Uncertainty on seeing Hanuman

Chapter 35 – Hanuman makes himself known to Sita

Chapter 36 – Sita questions Hanuman

Chapter 37 – Sita refuses to be rescued by Hanuman

Chapter 38 – Sita gives Hanuman her Jewel

Chapter 39 – Hanuman calms Sita’s Fears

Chapter 40 – Hanuman takes leave of Sita

Chapter 41 – Hanuman destroys the Ashoka Grove

Chapter 42 – Hanuman destroys the Kinkaras

Chapter 43 – Hanuman burns the Temple and Monument

Chapter 44 – The Death of Jambumalin

Chapter 45 – Hanuman slays the Sons of Ravana’s Ministers

Chapter 46 – Hanuman annihilates five Generals and their Forces

Chapter 47 – The Death of Aksha

Chapter 48 – Hanuman allows himself to be taken captive by the Titans

Chapter 49 – Hanuman’s astonishment on beholding Ravana

Chapter 50 – Hanuman is questioned by the Titans

Chapter 51 – Hanuman’s words

Chapter 52 – Bibishana pleads for Hanuman

Chapter 53 – Hanuman is led bound through the City

Chapter 54 – Hanuman sets fire to Lanka

Chapter 55 – Hanuman’s Anxiety concerning Sita

Chapter 56 – Hanuman’s takes leave of Sita

Chapter 57 – The Return of Hanuman

Chapter 58 – Hanuman recounts his Experiences

Chapter 59 – Hanuman appeals to the Monkeys to rescue Sita

Chapter 60 – mbavan rejects Angada’s Project

Chapter 61 – The Devastation of Madhuvana

Chapter 62 – The Fight Between Dadhimukha And The Intruders

Chapter 63 – Dadhimukha relates how Madhuvana has been laid waste

Chapter 64 – Sugriva consoles Rama

Chapter 65 – Hanuman tells Rama of his Meeting with Sita

Chapter 66 – Rama’s Grief

Chapter 67 – Hanuman describes his Interview with Sita

Chapter 68 – Hanuman repeats his Words of Consolation to Sita

***

Sumeru

One meaning is North Pole. Hindu literature says Sun and Moon are going around it for ever which is scientifically correct if one lives in North Pole  or in polar regions. Another meaning is Golden Mountain.

Sumeru (सुमेरु).—One of the mountains of Jambūdvīpa.—Sumeru has received a fabulous treatment at the hands of ancient Indian writers. Kālidāsa and other Sanskrit poets call it a mountain of gold and make it the dwelling place of supernatural beings like Vidyādharas and Kiṃpuruṣas. According to Rājaśekhara the Meru mountain is situated in the middle of the Jambūdvīpa. It is encircled by Ilāvartavarṣa.

***

Sura (intoxicating liquor/Toddy)alcoholic drinks

Vedas and Sanskrit books clearly differentiate alcoholic Sura from Soma, the Divine Elixir.

Surā (सुरा) refers to a type of drink mentioned in the Ṛgveda VIII.2.12, and is commonly found in literature dealing with the topics of dietetics and culinary art, also known as Pākaśāstra or Pākakalā.—Other common intoxicating drinks mentioned in Vedic literature are parisrutkīlāla and māsara. Ṛgveda describes another drink also which is known as surā. This was prepared by fermenting barley or wild paddy after distilling it. Drinking of sura is not considered as meritorious as soma.

According to Ayurvedic saṃhitas/ treatises, intoxicating drinks can be prepared with rice , sugar (śārkara), and unboiled juice of sugarcane (śīdhu). According to Suśruta, in the preparation of these drinks, when surā is used instead of water it was called surāsavā. Liquors were also prepared with madhūka flowers and honey.

***

Surya vamsa

Sūryavaṃśa (सूर्यवंश):—According to Puranas, one of the two great dynasties of ancient India, the counterpart to the Candravaṃśa or ‘Lunar Dynasty’. The descendants of Iḷa’s eldest son, Ikṣvāku, including, notably, Rāma, belong to the Sūryavaṃśa/ Solar Dynasty.

In the traditional genealogies of the Suryavamsha (Solar Dynasty) recorded in Hindu Puranas (such as the Vishnu Purana and Agni Purana), a total of 146 kings are listed from the founder Ikshvaku down to the final recorded ruler, Sumitra. Then Nanda Dynasty ruled India.

The lineage traces back from the Sun God (Vivasvan) to Vaivasvata Manu, whose son Ikshvaku became the first earthly king of the dynasty.

Choza Kings of Tamil Nadu belong to Surya Vamsa and Pandya Kings belong to Chandra Vamasa (lunar dynasty, according to ancient inscriptions.

Indus Valley Theories Exploded

Even if 20 year rule per king is given, the beginning will be 3000 years before sixth century BCE (Nanda Dynasty).

Those who believe this cant agree with foreigners’ date of Rig Veda or Indus Valley civilization.

***

Surya

Sun God in Hindu literature. Tamil Nadu temples have his statue in the corridor. In Tamil and Sanskrit literature he has been portrayed as riding a one wheeled chariot pulled by seven horses. It is a symbolic way of describing the rainbow (VIBGYOR in science).

Most of the Sanskrit books and inscriptions end with the sentence AS LONG AS THE SUN AND MOON EXIST, which shows their knowledge in science. Uless one knows the continuous existence of heavenly bodies one could not make such statement . in ancient India there were special temples for Sun God like Konark in Odisah, which were destroyed by Muslim invaders. Most beautiful description of the temple Multan temple is still available but not the temple. Maga Brahmins of Saka Dwipa worshipped Sun. They migrated from Iran to India.

Astrological and Astronomical descriptions of Sun are available from Rig Vedic periods.

***

Surya Siddhanta

The Sūrya-siddhānta is by far the most widely used Sanskrit text on astronomy. It has been held in great esteem in India. Its opening verses say that an incarnation of the sun taught it to the great asura named Maya at the end of the last kṛta-yuga, or age of perfection. According to the information given in its first chapter on the lengths of the yugas and how many of these ages have passed in this kalpa or world-period, this would have been more than two million years ago. If so, the Sūrya-siddhānta has undergone a lot of change since then. Based solely on what can be seen in the last 1,500 years, material has been deleted from it, material has been added to it, and its arrangement has frequently been altered.

It is attributed to Lāṭadeva, a student of Aryabhatta and the current edition is dated to somewhere between the end of the 4th and 5th centuries by most modern scholars, and it comprises fourteen chapters.

***

Sushruta

Sushruta who lived 2600 years ago in India is the Father of Surgery. He described  over 100 medical instruments. He was famous for nose surgery known as rhinoplasty. The amazing thing about the Nose Surgery is that it was used even 300 years ago in India.

Suśruta (सुश्रुत).—Reputed master of the science of Surgery, Suśruta was the grandson of King Gādhi and son of Viśvāmitra. (Anuśāsana Parva, Chapter 4, Verse 55).

 Name of the author of a system of medicine, whose work, together with that of Charaka, is regardad as the oldest medical authority, and held in great esteem in India even to this day.

Sushruta was the Father of Surgery. He describes a lot of surgical instruments. On the basis of his description, model instruments were created

Among the surgical techniques described in the  Ssruta Samhiat is rhinoplasty, the repair of a severed nose. Variations of this technique have survived in India over the centuries. In 1794, an article in the Gentleman’s magazine of London reported an operation carried out on an employee of the British East India Company who had been captured and mutilated during the Mysore Wars. As witnessed by Company surgeons, a flap of skin incised from the forehead was grafted onto the stump from which a new nose was formed. Such reports heled the resurgence of Indian surgical methods in the 1700s and foreshadowed the modern plastic surgery.

His statues are installed in several reputed medical institutions around the world

The Sushruta Samhita contains a total of 186 chapters (and up to 184–186 depending on the recension), divided into two main parts: the Purva-tantra (5 sections with 120 chapters) and the Uttara-tantra (66 chapters).

Purva-tantra (First Part – 120 Chapters)

  • Sutra Sthana (46 chapters): Basic principles, definitions, surgical instruments, medical student training, and pharmacology.
  • Nidana Sthana (16 chapters): Pathogenesis and causes of various diseases.
  • Sharira Sthana (10 chapters): Human anatomy, embryology, and vital body parts (marmas).
  • Chikitsa Sthana (40 chapters): Therapeutics, general treatment methods, and surgical procedures.
  • Kalpa Sthana (8 chapters): Toxicology, including animal and plant poisons and antidotes.
  •  

Uttara-tantra (Complementary Part – 66 Chapters)

  • Deals with specialized branches including eye, ear, nose, and throat diseases (Shalakya Tantra), pediatrics (Kaumara Bhritya), psychiatry (Bhuta Vidya), and general medicine (Kaya Chikitsa)

***

Swayambhu

Sanskrit: स्वयम्भू) translates to “self-born,” “self-existent,” or “self-manifested”. Statues in several temples are considered Self born. Some natural rocks or stone formations looked like divinities. Some natural formations such as the famous Kailash Mountain or Tiruvannamlai hill look like Shivaling. This is nature’s work of art. Some are scientifically explained. The most famous Amarnath Ice Linga is formed by dropping water through the mountain crevices. But yet it is a natural wonder to see it in a particular season every year in Amarnath, Kashmir. But there is another category explained by science.

Brahma is also called Swayambhu.

Science behind Swayambhu Lingams

A letter published in London Times newspaper on 20th May, 1994 explains this. Anne C.A. Silk wrote this letter in reply to a reader’s query. The letter gives some interesting information about “stone growing fields” in Chiltern Hills. (These Hills are not far from London). “There was a local industry of gathering the large flints, some the size of a fist, to sell to local builders by the roadside.

There is a further reason for the ascending mode of flints and rocks worldwide, over and above the fork disturbance proposed by Brian Parker (May 14 letter). This is the natural extremely low frequency (ELF) seismic energy from deep within earth.

Micro seismic activity from faults such as Church Stratton Fault, Mere Fault, Great Glen Fault, sub terranean settling and indeed traffic at roundabouts will generate ELF energy sufficient enough to vibrate rocks and stones to the surface.

It is of relevance to note that ELF frequencies from 30 Hz to 300 Hz also cover brain waves in humans”.

So we can conclude that Swayambu Lingams come from below the earth by ELF or some forces yet unknown to science.

***

Sukanya

Sukanyā (सुकन्‍या): Meaning – Fair-maid, Sukanya was a princess. She once mistakenly blinded the sage Chyavana, and to make amends for her mistake married him. He was much older than her, yet they were very happy together. The Ashwini twins were smitten by her beauty so they came up with a plan to trick her. They offered to restore her husband’s sight and youth. As she did not have any suspicions of their motive, she accepted.

Another version gives more details

Sukanyā (सुकन्या).—A daughter of Sayāti: when once she went with her father to the hermitage of Cyavana, she saw an anthill with two luminous objects in holes which she pricked with a thorn. This resulted in blood-flowing from the eyes of the sage Cyavana. The king asked the sage’s pardon by giving his daughter in marriage. Aśvins called on them and made Cyavana look young to the puzzle of Sukanyā. The Aśvins revealed to her of Cyavana’s rejuvenation. Once her father came and seeing her with a young man, he took him to be her paramour and scolded her. But when he heard the truth of the matter he was pleased.*

***

Svetasvatara Upanishad

This Upanishad belongs to the Krishna-Yajurveda. It gets its name from Rishi Svetasvatara who taught the truth contained in it to his disciples. It presents a mixture of Vedanta, Sankhya and Yoga tenets.
In this Upanishad Siva or Rudra is declared to be the creator, preserver and destroyer of the world. He is the material and efficient cause of this world. He is identified with the Supreme Brahman.

It explores the Supreme Reality (Brahman), individual souls, and yoga. It bridges philosophical knowledge with devotion (Bhakti) and meditation to achieve liberation.

The text has six Adhyaya (chapters), each with varying number of verses. The epilogue verse 6.21 is a homage to sage Shvetashvatara for proclaiming Brahman-knowledge to ascetics.

The name “Shvetashvatara” has the compound Sanskrit root Shvetashva (श्वेताश्व, Shvet + ashva), which literally means “white horse” and “drawn by white steeds. The chronology of Shvetashvatara Upanishad is contested, but it is generally accepted to be a late-period Upanishadic composition.

The text is  notable for its multiple mentions of both Rudra and Shiva, along with other Vedic deities, and of crystallization of Shiva as a central theme.

Adi Shankara did not write an undisputed formal commentary (bhashya) on the Svetasvatara Upanishad. While a commentary on it has been historically attributed to him by some traditions and minor printings, mainstream scholars and traditional Advaita authorities do not count it among his authentic works

***

Swarga

Svarga (स्वर्ग) refers to “heaven” (i.e., Svarga signifies the heaven of Indra which is supposed to be situated on Mount Meru), according to the Siva Purana. Svarga (स्वर्ग) represents the number 21 (twenty-one) in the “word-numeral system” (bhūtasaṃkhyā), which was used in Sanskrit texts.

In Tamil it is called Thurakkam, a word formed by linguistic rules S=T

Like in hundreds of English words TION=SION, here also S becomes T and thus  Suvarkka became Turakka. According to Hindu scriptures, SEX is banned in Swarga. The residents are in the form of Light, but can travel faster than light. There are beautiful girls like Rambha, Urvasi, Tilottama, Menaka etc

***

Swastika

Swastik refers to “An auspicious figure generally drawn on the floor near main door of a house”. Svastika (स्वस्तिक) refers to a mystical cross which is believed to bring good fortune to the wearer thereof and which resembles a Greek cross with ends turned in at right angles.

The Svastika has been observed on  Harappan seals, greek pottery of antiquity, on innumerable ornaments in the catacombs of Rome, on ancient personal ornaments in Scandinavia, on ancient urns and weapons in Britain, in devices in Japan and Britain, on coffins in China and on Church bells in England..

Hitler used this symbol in his army, flags etc. Since Max Muller boasted Germans and Aryans, Hitler used this symbol  and proclaimed that Aryan race is a superior race.

North Indians print this symbol even in Wedding invitations.

To be concluded ………………..

Tags- Swastika, Sukanya, Sukra, Surya , Sumeru, Sundara Kanda, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 99; இந்து மத கலைச்சொல் அகராதி-99 , sushruta