பாண்டியர் செப்பேடுகள் பற்றி மேலும் 10 கேள்விகள் (Post.16,092)

Darkest Period of Tamil History 400 CE to 550 CE

Pandya Flag; London Swaminathan Creation.

Written by London Swaminathan

Post No. 16,092

Date uploaded in London – 15 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பாண்டிய மண்ணுக்கு முன்னால், கண்ணகி போல, துணிச்சலாக ஒரு பிராமணன் மனம் கொதித்துக் கூச்சல் போட்டதால் நமக்கு ஆறு பாண்டிய மன்னர்களின் வரலாறு கிடைத்தது. 1500 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்தப் பார்ப்பானின் பெயர் என்ன ?

2

ஒரு பாண்டிய மன்னன் தலையை வெட்டி பலி கொடுத்தைக் கூறும் செப்பேடு எது ?

3

அதர்வண வேதமுறைப்படி முடி சூட்டிக்கொண்டான் பாண்டிய மன்னன் என்று பெருமைப்படும் கூறும் செப்பேடு எது?

4

வரகுணன் என்று புகழப்படும் இரண்டு பாண்டிய மன்னர்கள் எப்போது ஆண்டார்கள் ? இவர்களில் ஒருவரை மாணிக்கவாசகர் திருக்கோவையாரில் பாடியதாகச் சொல்லுவார் கள்.

5

சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த நூலை இயற்றிய மெய்கண்டார் பற்றிய புதிர் என்ன ?

6

பெரியாழ்வார் தொடர்புள்ள பாண்டியன் யார்?

7

சேர சோழ பாண்டிய மன்னர்களை களப்பிர மன்னன் எந்த ஊர் சிறையில் அதைத்தான் அப்போது 3மன்னர்களும் பாடிய வெண்பாக்களை நமக்கு அளிக்கும் நூலின் பெயர் என்ன?

8

வால்மீகி ராமாயணம் சிலப்பதிகாரம்  மணிமேகலை குறிப்பிடும் இந்திரவிழா  பற்றிச் சொல்லும் பாண்டியர் செப்பேடு எது ?

9

ராவணனை சமாதான உடன்படிக்கை செய்யும்படி வலியுறுத்திய செய்தி எங்கே கிடைக்கிறது?

10

சின்னமனூர் பெரிய செப்பேடு சொல்லும் செய்திகள் என்ன?

சிவகாசிச் செப்பேடு தரும் புதிய பாண்டிய வம்சம் பற்றி என்ன அறிகிறோம்?

**************************

Agastya and Tolkappian?

விடைகள்

1. கொற்கைகிழான் காமக்காணி நற்சிங்கன். மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் மீட்டுக் கொடுத்த நிலத்தில் மூன்று பாகம் போட்டு ஒரு பாகத்தைத் தனக்கு வைத்துக்கொண்டு எஞ்சிய இரண்டு பாகங்களை ஐம்பது அந்தணர்களுக்கு  நற்சிங்கன், நீர்வார்த்துக் கொடுத்தான் . ஆண்டு CE 770. அவனுடைய முன்னோர்களுக்கு வேள்விக்குடியைத் தானம் கொடுத்தவன் புறநானூறு புகழும் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி ஆவான்.

****

2.சின்னமனூர் பெரியசாசனம் இரண்டாம் இராஜ சிம்மன் காலத்தியது; முதல் ஏடும் கடைசி ஏடும் கிடைக்கவில்லை. ஒரு பாண்டியன் தன்னுடைய குருவைக்காப்பதற்காக தன் கழுத்தை அரிந்துகொண்ட செய்தி காணப்படுகிறது

***

3.தளவாய்புர சானத்தின் ஸம்ஸ்க்ருதப்பகுதி  கூறும் செய்தி –

அதர்வண வேத விதி ப்படி முடி சூட்டப்பெற்ற தன் தலையை தானே அறுத்துக் கவந்தங்களின் கூத்தை நிறுத்தினான் . இது பாண்டியர்களின் முன்னோன் செய்த செயல்

***

4.தளவாய்புரச் செப்பேடுகள் பராந்தக வீரநாராயணனின் 895-907 புகழ்பாடுகிறது ; விஷ்ணுவின் வணக்கத்தோடு துவங்கும் இது அவனது ஆட்சி ஆண்டு 45ல் கரவந்த புரத்தில் தங்கியபோது சாசனம் வழங்கப்பட்டது . ஸ்ரீவல்லபமங்கலம் முதலிய பல கிராமங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினான். அத்தகைய தானம் ஒன்று நாராயணன், ஈசானன் ஆகியோருடைய அர்ச்சனைக்காக வழங்கப்பட்டது. பாண்டியர்களின் 18 சாதனைகளை இது பட்டியலிட்டது  தென் மதுராபுரியை நிர்மாணித்து அங்கே சங்கம் நிறுவி தமிழை வளர்த்ததும் அவைகளில் அடக்கம் . மாணிக்கவாசகர் குறிப்பிடும் வகுணனின் தம்பி இந்த மன்னன் 895-907 CE. சிவபக்தன் . இவன் இரண்டாம் வரகுணன் . இவனுக்கு முன்னர் முதலாம் வரகுணன் 765-815 ல் ஆட்சி புரிந்தான்.

***

5.மெய்கண்டாரின் தந்தையின் பெயர் அச்சுத களப்பாளர்; ஆயினும் இவர் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ; ஆயினும் களப்பாளர் என்ற பெயர் ஆராய்ச்சிக்குரியது.

***

6.பரமவைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீள் முடி நிலமன்னவன்– என்று சீவரமங்கலச் சாசனம், பராந்தக நெடுஞ்சடையன், குருசரிதம் கொண்டாடிய செய்தியையும் அதே சாசனம் தெரிவிக்கிறது. பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான்  என்று பெரியாழ் வார் திருமொழித் தனியனும் கூறுகிறது; ஆகவே பாண்டியன் நெடுஞ்சடையன் கொண்டாடிய பட்டர்பிரான் பெரியாழ்வார்தான் என்று துணியலாம் – மன்னனின் காலம் – 765-815 CE

***

7.மூவேந்தர்களையும் அச்சுதக் களப்பாளன், தில்லை என்னும் சிதம்பரத்தில் சிறைவைத்தான் ; பத்தாம் நூற்றாண்டு யாப்பருங்கல விருத்தி உரையில் மூன்று மன்னர்களும் பாடிய பாடல்கள் உள்ளன.

***

8. இந்திரவிழா பற்றிக்கூறும் சாசனம் சின்னமனூர்ப் பெரிய செப்பேடு ஆகும் .

தடம் பூதம் பணிகொண்டு  தடாகங்கள் பல திருத்தியும் அடும் பசிநோய் நாடகற்றி  அம்பொற் சித்ரமுயரியும் — என்ற வரிகளில் இந்திரவிழா வருகிறது . காளிதாசனின் ரகுவம்சத்தில் 4-3 இந்திர விழா கொண்டாடப்பட்ட செய்தி கிடைக்கிறது; இதற்கு மல்லிநாதர் எழுதிய உரைதான் நமக்கு முழு விவரங்களையும் தருகிறது. மல்லிநாதர் உரை  தரும்   தகவல்கள் ,

நகர வாயிலில் நான்கு  கம்பங்களில்  யானை உருவக்கொடிகள் ஏற்றப்படும்;

அரசனின் அரண்மனைக்கு எதிராக  சதுர வடிவ சக்ரத்வஜம் கட்டப்படும் ; சக்ர என்பது இந்திரனின் பெயர் ; அது நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் . இந்திர விழா நடத்தும் நாட்டில் வேண்டிய அளவு மழை பெய்யும் ; ஆகவே 2200 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு காளிதாசனே விரிவான தகவல்களைத் தந்தான் எனலாம் தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண, மஹா பாரத இதிஹசங்களிலும் உள்ளது.

டாங்கே, மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும், அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திர த்வஜம் (இந்திரன் கொடி) பற்றி அதர்வ வேதம் பேசுகிறது. ரிக் வேதத்தில் மறை மொழியில் இதே விஷயம் உள்ளது. “மருத்துக்கு முன் இந்திரன் நடுங்கியதாக” ஒரு இடத்தில் வருகிறது. இதன் பொருள்—காற்றில் இந்திரன் கொடி படபடத்தது என்பதாகும். மருத் என்பது காற்றுக் கடவுள். அதிலிருந்தே அனுமனைக் குறிக்கும் மாருதி என்ற சொல் வந்தது. ரிக் வேதத்தில் இன்னும் ஒரு இடத்தில் , “ஏ இந்திரனே உன்னை புரோகிதர்கள் உயரே ஏற்றிவிட்டார்கள்” என்ற வரிகள் வருகின்றன. இது இந்திரன் கொடி ஏற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இந்திர விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும். ஆனால் உபரிசார வசு துவக்கியதாக மகா பாரதம் கூறும்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

***

9.ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

Written by London Swaminathan, June 24, 2014 in tamilandvedas.com

swamiindology.blogspot.com

தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்:- 1127; தேதி:- 24th June 2014

அகத்திய முனிவருடன் அமர்ந்து பாண்டியர்கள் தமிழ் ஆராய்ந்த செய்தி பாண்டியர் செப்பேடுகளில் வருகிறது. மற்றொரு புதுமையான செய்தியும் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுகிறது.

“அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத் திறனுடைய வேந்தழித்து

தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்

படை முழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்

……………………………………………….. “

இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.

பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்றும் அவர் மூலமாகவே பாண்டியர்கள் முடி சூட்டப்பட்டதாகவும் வேறு சில பாண்டியர் கல்வெட்டுகளும் செப்புகின்றன.

ஆயினும் –தசவதனன் சார்பாகச் சந்து செய்வித்தும் — என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றே அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர். “ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” – என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும்.

‘உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:–

“தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” – என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.

“தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்

தொன்முது கடவுள் பின்னர் மேய

வரைத் தாழ் அருவி பொருப்பின் பொருந

– என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.

இதற்குப் பின் வேறு சில நூல்களிலும் மிகவும் அறியப்படாத செய்திகள் வருகின்றன. திருவாசகத்தில் மண்டோதரிக்காக சிவன் கடலில் நடந்த வரலாறு ஒன்றும் வருகிறது. உத்தரகோச மங்கை தல புராணம் இதை விரித்துரைக்கிறது. ஆக பாண்டியர்—அகத்தியர் உறவும், தமிழ்நாடு—இலங்கை தொடர்பும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.

காளிதாசன் என்னும் உலக மஹா கவிஞன், அவனது ரகுவம்ச காவியத்தில் தரும் தகவலைக் கொண்டு ஆராய்கையில் பாண்டியன் – ராவணன் புதிருக்கு விடை கிடைக்கிறது.

ராவணன் அவ்வப்போது தென் இந்தியாவுக்குள் புகுந்து அட்டூழியம் செய்தது வேறு பல இடங்களிலும் வருகிறது. ராவணனை வென்று அவனை மடியில் கட்டிக் கொண்டு நாற்கடலில் நீராடி, வாலி, சந்தியா வந்தனம் செய்த செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

காளிதாசன் தரும் அரிய தகவல்

காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் இந்துமதி சுயம்வரத்தில் ஆறு ஸ்லோகங்களில் பாண்டியன் புகழ் பாடுகிறார். அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்) பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது குடுமிப் பெருவழுதி கி.மு. முதல் நூற்றாண்டு என்பது நிரூபணமானால் காளிதாசன் குறிப்பிடும் பாண்டியன் அவன் என்ற வரலாற்றுச் செய்தியும் கிடைக்கும்.

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:–

அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:

புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:– தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.

ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம் என்பதும் தெளிவாகிறது.

ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்!

***

Pandya Coin

10. சின்னமனூர் பெரியசாசனம் இராஜ சிம்மன் காலத்தியது; முதல் ஏதும் கடைசி ஏதும் கிடைக்கவில்லை. ஒரு பாண்டியன் தன்னுடைய குருவைக்காப்பதற்காக தன கழுத்தை அறிந்துகொண்ட செய்தி காணப்படுகிறது பல்கலைகளையும் கற்ற சுந்தர பாண்டியன் பெருமையும் பேசப்படுகிறது. இவன் இரண்டாவது இராஜ சிம்மன் ஆவான்.

சிவகாசிச் செப்பேடு ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பாண்டியர் வரலாற்றினைச் செப்புகிறது பாண்டிய வம்சாவளியைச் சொல்லும்போது  தீவிரகோபன்,  ஸ்ரீ வல்லபன், மணகுலாசலன், மானாபரணன் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன்  என்று சொல்கிறது. இந்த வம்ச பரம்பரை வேறு எந்த சாசனத்தில் இல்லை ;தீவிரகோபன்,   மான  குலாசலன் என்போரை முதல்முதலில் காண்கிறோம் . சங்க காலத்தில் ஆட்சி புரிந்த காய் சின  வழுதி, உக்கிரப் பெருவழுதி ரன்போரை இந்தப் பெயர் நினைவுபடுத்துகிறது.

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

–subham—

Tags- பாண்டியர் செப்பேடுகள், மேலும் 10 கேள்விகள்,  சிவகாசிச் செப்பேடு, இந்திரவிழா,  மெய்கண்டார், வரகுணன்

சிதம்பரம் சிறையில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாடிய பாடல்கள் (Post.16,091)

Written by London Swaminathan

Post No. 16,091

Date uploaded in London – 15 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிதம்பரம் சிறையில் மூவேந்தர் பாடிய வெண்பாக்கள்

அச்சுத  களப்பாளன் (இந்து விரோத களப்பிரன்)  என்ற மன்னன் சேர, சோழ, பாண்டிய  மன்னர்களை  வென்று அவர்களை சிதம்பரத்தில் சிறையில் அடைத்தான்; அவர்களின்  கை,கால்களில் விலங்கு மாட்டினான். அப்போது மூவரும் மனம் நொந்து பாடிய பாடல்களை   யாப்பருங்கல விருத்தியுரை நமக்கு அளிக்கிறது . இந்தக் களப்பிரனை புத்த மதத்தினர் புகழ்கின்றனர்; அவன் ஏராளமான புத்த விகாரங்களை எழுப்பவும் அவர்கள் நூல்களை எழுத உதவி செய்ததையும் பெளத்தர்கள் கூறுகின்றனர்; பூத மங்கலம் என்ற பிராமணர் ஊரை பெளத்தர்கள் ஆக்ரமித்தனர்; திருஞான சம்பந்தர் அவர்களை வாதில் வென்று அதை மீட்டார் . சங்க கால பாண்டியர் பிராமணர்களுக்கு அளித்த வேள்விக்குடியையும் சமணர்கள் எடுத்துக்கொண்டனர் ; பராந்தக நெடுஞ்சடையன் அதை மீட்டு பிராமணர்களுக்கு மீண்டும் கொடுத்தான் ; பல ஊர் சிவன் கோவில்களை அவர்கள் ஆக்ரமித்ததையும் அவைகளை அப்பர் பெருமான் மீட்டுக்கொடுத்ததையும் தேவாரப் பாடல்களில் காண்கிறோம் ; அச்சுத  களப்பாளனு க்கு சாவு மணி  அடித்தது கடுங்கோன் என்ற பாண்டியன் ஆவான்; அதே நேரத்தில் சிம்ம விஷ்ணு என்ற பல்லவ மன்னனும் அவர்களைத் தமிழ் நாட்டுக்கு வெளியே துரத்தினான்; இவைகளை பாண்டியர் கல்வெட்டு, செப்பேடுகளிலிருந்து அறிய முடிகிறது ; பெரிய புராணம் சொல்லும் மூர்த்தி நாயனார் என்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் தானா என்பது ஆராய வேண்டிய விஷயம் . 

யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலின் கி. பி. 10ஆம் நூற்றாண்டு விருத்தியுரையில் காணப்படும் செய்யுட்கள் :

சேர சோழ பாண்டிய மன்னர்களின் கால்களில் தளை (விலங்கு) மாட்டியபோது  சேர அரசன் பாடியது 

தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல்

தனை விளைத்தார் முற்ற மதுதானாம் – கனைசீர்

முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை

அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து

****

சோழ அரசன் பாடியது:

அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில்

அரச ரவதரித்த வந்நாள் – முரசதிரக்

கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை

வெட்டிவிடு ஓசை மிகும்

***

பாண்டிய மன்னன் பாடியது:

குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்

நிறையறு திங்கள் இருந்தான் – முறைமையால்,

ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சத! முன்

வாலிக் கிளையான் வரை

இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டான். அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான்.

குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்

கிடகர் வடகடலென் றார்த்தார் – வடகடலர்

தென்கடலென் றார்த்தார் தில்லையச் சுதானந்தன்

முன்கடை நின்றார்க்கும் முரசு

***

களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி. பி. 10ஆம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடி – வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம்

என்பது அந்தப் பாடல். களப்பாள (களப்பிர) அரசனுடைய யானை சேனைகள் போர்க்களத்துக்குப் போகும்போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளும் அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது, போர்க் களத்தில் போர்வீரர்களும் யானை, குதிரைகளும் செத்துமடியு மாகையால் இந்தப் பிணந்தின்னிப் பிராணிகளுக்கு இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாள அரசன் மற்ற அரசர் களோடு போர்செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள்.

இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன. அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப் பெயர் என்று ஒரு  சாரார் கருதுகின்றனர் .

அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டுபுலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

***

ஆசார்யர் புத்த தத்த தேரர் என்னும் புத்த பிக்கு சோழ நாட்டில்  ஐந்தாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர அரசன் காலத்தில் இருந்தவர் . கவீர பட்டினம் / காவிரிப் பூம்பட்டினம் , உரகபுரம்/உறையூர் , பூதமங்கலம் முதலிய ஊர்களில் வாழ்ந்தவர் . கண்ணதாசர் /வேணுதாஸர்  என்ற பெயருள்ள அமைச்சர்  ஒருவர் கட்டிய புத்த விகாரையில் இந்த புத்த தத்தர் தங்கி விநயவினிச்சயம் என்ற பாலி மொழி நூலை எழுதினார் . அதில் அச்சுதவிக்கந்தனை களபகுல  நந்தன என்று கூறுகிறார்.

விளக்கத்தனார் இயற்றிய  விளக்கத்தார் கூத்து என்னும் நூலிலுள்ள செய்யுளும், இவன் மூன்று நாடுகளையும் வென்றவன் என்று புகழ்கிறது

ஆதார நூல்

பாண்டியர் செப்பேடுகள் பத்து ,

தமிழ் வரலாற்றுக் கழகம், 1967

****

எனது கருத்து

இவை கட்டாயம் அச்சுத களப்பாளனிடம் பரிசு பெற எவரோ ஒருவர் பாடியிருக்க வேண்டும் ; மூவேந்தர்களும் இந்த அளவுக்குத் தாழ்ந்திருக்க மாட்டார்கள் .

***

புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்

தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்

சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்

அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடாமோ. ⁠– என்று மாணிக்கவாசகர் தில்லையில் பாடியதை ஒப்பிட்டு ஆராய வேண்டும்.

அப்பர் சம்பந்தர் போல சமணர்களை, மாணிக்கவாசகர் தாக்காதது, அவரை களப்பிரர் காலத்துக்கு முன்னரோ அல்லது தொடக்கத்திலோ வைக்கிறது.

–SUBHAM—

TAGS- சேர, சோழ, பாண்டிய, மன்னர்கள்,  சிதம்பரம், சிறையில், மூவேந்தர், பாடிய, வெண்பாக்கள்

ஆகஸ்ட் 15 திரு வெ.சந்தானம் நினைவு நாள் (Post No.16,090)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,090

Date uploaded in London – 15 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆகஸ்ட் 15 திரு வெ.சந்தானம் நினைவு நாள்.

அன்னா கரீன

ஆசிரியர் : லியோ டால்ஸ்டாய்

மொழிபெயர்ப்பு: தினமணி உதவி ஆசிரியர் வெ. சந்தானம்

முதற் பதிப்பு மார்ச் 22 1947

தமிழ்ச் சுடர் நிலையம் திருவல்லிக்கேணி, சென்னை

முன்னுரையின் இறுதியில் திரு வெ. சந்தானம் கூறுவது:

“பேணுமொரு காதலை வேண்டியன்றோ பெண்மக்கள்…” என்று மகாகவி பாரதி எழுதிய உண்மை துலங்கும் இந்த வாழ்க்கைச் சித்திரத்தைத் தமிழன்னையின் பிரதிநிதிகளான தமிழர் சந்நிதானத்தில் பக்தியுடனும் ஆர்வத்துடனும் சமர்ப்பிக்கிறேன். ஆசையில் செய்த பணி; அன்பர்கள் ஆசீர்வாதம் வேண்டி நிற்கும் ,

திருவல்லிக்கேணி                                 வெ. சந்தானம்

21-3-1947

நாவலின் துவக்க பாரா:

ஸௌபாக்கியங்களுடன் வாழும் குடும்பங்கள் எல்லாம் அநேகமாக ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் துருப்பாக்கியம் பிடித்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் துன்பமும் துயரமும் ஒவ்வொரு தினுசு!

8ம் பாகம், 15ம் அத்தியாயத்தில் ஒரு பாரா”

பிறகு லெவின் அங்கிருந்து கிளம்பினான். போகும்போது மீண்டும் வேதாந்த விசாரத்தில் இறங்கினான். “நன்மை, தீமை முதலிய சக்திகள் தான் கடவுள் இருக்கிறாரென்பதற்குத் தக்க ருசு. இதை நான் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, என் மனம் அறியும். இந்த மாதிரி உணருகிறவர்களுடன் நான் ஐக்கியமாகிறேன். இப்படிப் பொதுவாக நம்புகிறவர்களின் ஆத்ம ஐக்கியந்தான் மதம்” என்று யோசித்தான் லெவின்.

முகம்மதியர், யூதர், பௌத்தர் ஆகியோர் சமாசாரமென்னவென்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது. இவ்விஷயமாக நீண்ட நேரம் யோசித்தான். நல்லது எதுவென்பதைத் தான் அறிந்திருப்பதாகவும், இது எல்லோருக்கும் ஒரே மாதிரியானது தானே என்றும் பதில் சொல்லிக் கொண்டான்.

நாவலின் கடைசி இரண்டு பாராக்கள்:

“நான் அவளிடம் சொல்லப் போவதில்லை. இது எனக்கு மட்டும் முக்கியமானதொரு ரகசியம்….. வார்த்தைகளால் சொல்லவும் முடியாது” என்று தீர்மானித்தான் லெவின்.

“இந்த புது உணர்ச்சி என்னை மாற்றிவிடவில்லை. என்னை இன்பத்திலாழ்த்தியது. ஞானத்தை தந்தது. இது திடீரென்றும் வரவில்லை. மிகுந்த வேதனைப்பட்டபின் என்னை யறியாமலேயே இது என் ஹிருதயத்தில் குடியேறிவிட்டது. ஒருவேளை முன்மாதிரியே வேலைக்காரர்களை நான் கோபித்துக்கொள்ளக் கூடும். உதவாக்கரை விவாதங்களில் கலந்து கொள்ளக் கூடும். ஆயினும் என் ஆத்மாவுக்கும், என் மனைவியுள்பட இதரருக்குமிடையே அதே மதில் தான் இருக்கும். என்னுடைய கவலையில் ஒருவேளை அவள்மீது நான் புகார் கூறிக்கொண்டிருந்தாலும் இருப்பேன்; பிறகு வருந்தக் கூடும். நான் எதற்காக தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன் என்பது இன்னமும் என் அறிவுக்கு எட்டாத விஷயமாக இருக்கலாம். ஆயினுமென்ன? பிரார்த்தித்துக்கொண்டே இருப்பேன்! ஆனால் என் வாழ்க்கை – என்ன நடந்தாலும் சரி – முன்போல அர்த்தமற்றதாக இருக்காது; ஆனால் ஒவ்வொரு செய்கையும் சத்காரியமாக இருக்கும். அர்த்தமுள்ளதாக இருக்கும். இவ்விதம் செய்யக்கூடிய சக்தி எனக்கு இருக்கிறது” என்று சங்கற்பம் செய்து கொண்டால் லெவின்.

ஸாயி கீதங்கள்

திரு வெ. சந்தானம் அவர்கள் இயற்றிய ஸாயி கீதங்கள் என்ற நூலிலிருந்து ஒரு கீதம்!

மனோலயம்

ராகம் – ஸாரமதி தாளம் – ஆதி தாளம்

பல்லவி

மனோலயம் ஈயும் கருணாலய சாயி

பாவப் பெருங் கூட்ட்ம் பவமு மெடுக்க ஓட்டம்

அனுபல்லவி

இருள்சேரி ருவினை மருள் தருமாயை யேக

அருள்கூரவர் பூதிபோல பொருளேது பாக்யசித்தி

சரணம்

ஊழிற் பெரு வலியும்

சுழலும் கருச் செலவும்

கழிய மந்திரம் கூறும்

வேழ முகன்விண்டு சிவன்

சமுசார வாழ்வதிலே

யம சார நஞ்சை நீக்கும்

வாம பாகீ பாலாம் பிகே

வைத்யநாதா யுக சாரதி

–subham–

பாண்டியர் செப்பேடுகள் பற்றி 10 கேள்விகள் (Post No.16,089)

Written by London Swaminathan

Post No. 16,089

Date uploaded in London – 14 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

வேள்விக்குடி சாசனத்தின் தோற்றம் பற்றிய கதை என்ன ?

2

வேள்விக்குடி செப்பேடுகள் இப்போது எங்கே உள்ளன ?

3

அகத்தியன் பற்றி வேள்விக்குடி சாசனம் கூறுவது என்ன ?

4

இந்துக்களுக்கு நேர்ந்த அநீதியை வேள்விக்குடி சாசனம் எப்படிக் காட்டுகிறது ?

5

வேள்விக்குடி சாசனம் சொல்லும் அரிய செய்திகள் என்ன ?

6

வேள்விக்குடிச் சாசனத்தை வழங்கிய ஜடில பராந்தக நெடுஞ்சடையன் வழங்கிய வேறு இரண்டு சாசனங்கள் யாவை ?

7

பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட சாசனங்களில் என்ன மொழி, என்ன எழுத்துக்கள்  உள்ளன ?

8

மேற்கூறிய சாசனங்களில் உள்ள வரலாற்றுச் செய்திகள் என்ன?

9

சின்னமனுர் சிறிய சாசனம் பாண்டியர்களின் முன்னோர்களின் புகழைப்  பாடுவது எவ்வாறு?

10

பராந்தக வீர நாராயணனின் தளவாபுரச் செப்பேடு சொல்லும் அதிசயச் செய்திகள் என்ன?

.

********************************************

AGASTYA RISHI; GURU OF PANDYAS.

விடைகள்

1.சமண, பெளத்த மதத்தைச் சேர்ந்த களப்பிரர்களை விரட்டிய பின் மீண்டும் பாண்டிய ஆட்சி ஏற்பட்டது. அவர்களில் ஏழாவது  அரசனான  பராந்தக  நெடுஞ்சடையன்  (765-815 CE) ஆட்சியில் முன்னொரு காலத்தில் முதுகுடுமிப்ப பெரு வழுதியிடம் தானம் பெற்ற கொற்கைக்கிழான் என்ற பிராமணனின் வம்சத்தில் வந்த  ஒரு பிராமணன் மனங்கொதித்துக் கூச்சலிட்டான்.  அதைக்கேட்ட  பாண்டிய அரசன் அவனை அழைத்து விசாரித்தான் . களப்பிரர்கள் என்னும் கலி அரசர்கள்  நிலத்தைப்  பறித்துக்கொண்டனர்  என் றான்  ; இதை ஆதாரங்களோடு அந்தப் பிராமணன் கொடுக்கவே மீண்டும் வேள்விக்குடி அவனது பரம்பரையில் வந்த நற் சிங்கனுக்கு கொடுக்கப் க்கப்பட்டது; இந்த விவரம் வேள்விக்குடி செப்பேட்டில் உள்ளது  .நற்சிங்கன் மீண்டும் தானம் பெற்று, அந்தத் தானம் முழுவதையும் தனக்கே வைத்துக்கொள்ளாமல், அதில் ஒரு பகுதியை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு, மற்ற பாகத்தைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்தான். இத்தானத்தை நிறைவேற்றுவதற்குக் கரவந்தபுரத்து வாசியான மூவேந்த மங்கல பேரரையன் ஆன வைத்ய சிகாமணி மாறன் காரி என்பான் நியமிக்கப்பட்ட செய்தியும் காணப்படுகிறது.

*****

2.லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ளன; இவை எப்படி அங்கே சென்றன என்று தெரியவில்லை; ஆனால் யூகச் செய்திகள் உள்ளன.

*****

3.காளிதாசன் என்னும் உலகப்புகழ்பெற்ற கவிஞன் ரகுவம்ச காவியத்தில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியனையும் அகத்தியனையும் முதல் முதலில் தொடர்புபடுத்தி எழுதினான்; பின்னர் மணிமேகலையில் அகத்தியன் என்ற பெயர் வருகிறது. முதல் தொல்பொருட்துறைச் சான்று வேள்விக்குடி சாசனத்தில்தான் கிடைக்கிறது; பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்று கூறுகிறது .

*****

4.இந்துக்களின் கோவில்களை பெளத்தர்களும் சமணர்களும் ஆக்ரமித்து அவர்களது சிலைகளை வைத்தனர்; இந்துக்களின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டனர். இந்துக்களின் நிலத்தை களப்பிரர்கள் பிடுங்கிக் கொண்டதை வேள்விக்குடி சாசனம் தெள்ளிதின் விளக்குகிறது ; சில திராவிட முட்டாள்கள் இதை மாற்றி எழுதி நாம் அவர்கள் இடத்தை ஆக்ரமித்ததாக எழுதியுள்ளனர். அவர்களுக்கு வேள்விக்குடி சாசனமும் பின்னர் வந்த பெரிய புராணமும் செமை அடி கொடுக்கிறது.

****

5.இந்த சாசனம் புறநானூற்றில் வரும் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதலிய ஆறுமன்னர்களின் பெயர்களை நமக்கு எடுத்துரைக்கிறது .பாண்டிய வம்சத்தின் பழைய சாதனைகளை பட்டியலிட்டுள்ளது –

மேருவின் உச்சியில் இரு மீன் உருவங்களை பொறித்தது;

இந்திரனின் சிம்மாசனத்தில் ஒரு பாதியையும் அவனுடைய மாலையையும் அடைந்து; பூமி தேவிக்கு கணவனாக அமைந்தது;

அரக்கர் தலைவர்களை வென்றது;

தேவர்களைத் தூதராகக் கொண்டது;

பாற்கடலைக் கடைந்தது ;

அகத்தியரால் முடிசூட்டப்பட்டது;

குடிமக்கள் விரும்பியதை அளித்தது.

வேள்விக்குடி சாசனம் சிவபெருமான் வாழ்த்துடன் துவங்குகிறது.

*****

6.ஸ்ரீவர மங்கலச் செப்பேடு; அந்த ஊரை தானமாக வழங்கியதால் அதே பெயரில் அழைக்கப் படுகிறது; சின்னமனூர்ச் சிறிய சாசனம்.

*****

7.தமிழ் மொழி வசனங்கள் வட்டெழுத்திலும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் கிரந்த எழுத்திலும் உள்ளன.

*****

8.ஸ்ரீ வர மங்கலச் செப்பேட்டுச் செய்திகள் —

இந்தச் செப்பேட்டில் துவக்கத்தில் 6 ஸம்ஸ்க்ருதச் ஸ்லோகங்கள் உள்ளன ; முதல் நான்கு ஸ்லோகங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன், பாண்டிய குலம் தோன்றிய சந்திரனைப் போற்றுகிறது. அடுத்த இரண்டு ஸ்லோகங்கள் பல்லவ பஞ்சனன் / முறியடித்தவன் மாறவர்மன், அவன் மகன் ஜடிலவர்மனைப் பற்றியது.

ஜடிலவர்மன் என்னும்  நெடுஞ்சடையன் , குடகொங்க மன்னனைப் பிடித்துவந்து மதுரையில் சிறையில் அடைத்தான் ; அவனுக்கு உதவியாக வந்த பல்லவனும் கேரளனும் ஓடிப்போனார்கள்; அதியனையும் வென்றான் . பரம வைஷ்ணவனான இவன் காஞ்சி ஆற்றங்கரையில் போரூரில் திருமாலுக்கு குன்றமன்னதோர் கோவிலைக் கட்டினான் .

இவனது சிறப்புப் பெயர்கள் –

பாண்டியநாதன், பண்டித வத்சலன், வீரபுரோகன், விக்ரமபாரகன், பராந்தகன், பரம வைஷ்ணவன் .

பர அந்தகன் என்றால் எதிரிகளுக்கு யமன் போன்றவன்;

ஜடில வர்மன் என்றால் நெடுஞ்சடையன்.

*****

9.சந்திரவம்சத்தில் தோன்றி அசுரர் கூட்டத்தை அழிக்க இந்திரனுக்கு உதவினார்கள்;

இமயமலை உச்சியில் அழகிய கயற் சின்னம் பொறித்தார்கள் ;

தெற்குத்திக்கிலுள்ள மலையில் உறையும் குடமுனியின் இனிய தமிழால் தங்கள் காதுகளைக் கழுவிக்கொண்டார்கள் ;

இந்திரன் ஆரத்தை அணிந்து அவனுக்குச் சமமாக அமர்ந்தார்கள்;

அவனுடைய திருமுடியில் வளை உடைத்தார்கள்;

கடல் பின்வாங்க வேல் எறிந்தார்கள் ;

ஓராயிரம் வேள்விகளைச் செய்தார்கள்;

பூதகணங்களைக்கொண்டு  பணிகளை ச் செய்வித்தார்கள்;

பாவலர்களுக்கு ஆயிரம் யானைகளை வழங்கினார்கள்;

உலகம் பாடிப்பரவும் ஜெயந்தவர்மனின் மகனாக பரமேச்வரன் வெளிப்பட்டான் ;

அவன் அரிகேசரி, அசமசமன், அலங்க்யவிக்ரமன்,

அந்தணர் இடர் நீங்க அவர்களுக்கு முகில்போல பொன் மழை பொழிந்தான்;

துலாபாரம் ஏறியும், இருமுறை இரணிய கர்ப்பம் புகுந்தும், கோஸஹஸ்ரம் முதலான பெரிய தானங்களைச் செய்தும் இந்திரன் போல வீற்றிருந்தான்  

*****

10.திருமால் வணக்கத்தோடு சாசனம் ஆரம்பிக்கிறது.

பாண்டியர்களின் முன்னோர்கள் செய்த அருஞ்செயல்கள் –

கடலைக் கடைந்து அமிர்தம் கொண்டது;

அகத்திய முனிவருடன் தமிழ் ஆராய்ந்து;

இராவணனுடன் சமாதானம் செய்வித்தது;

திருதராட்டிரான்  மக்கள் அனைவரும் அழியும்படி போர்க்களத்தில் யானைகளை நடத்திச் சென்றது;

அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட வசு சாபத்தை நீக்கியது ;

அரிச்சந்திரன் நகரை அழித்து அவன் பரிச்சந்தம் பலவற்றைக் கவர்ந்தது ;

நாற்கடலின் நீரினால் ஒரே பகல் நீராடியது;

நாற் கோடிப் பொன் கொடுத்து  நூற்கடலைக் கரைகண்டது; ஆயிரம் யானை வழங்கியது;

தென் மதுராபுரியை நிர்மாணித்தது;அங்கே சங்கம் நிறுவித் தமிழை வளர்த்தது;

இந்த சாசனத்தில் களப்பிரருக்கு களப்பாழர்  என்ற சொல் உள்ளது. சிலேடையாக வரகுணன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் உள்ளது

இந்த சாசனத்தில் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனின் தந்தை பராந்தகன் என்று உள்ளது . சின்னமனூர்  பெரிய சாசனத்தில் அது வரகுணன் என்று காணப்படுகிறது; ஆகவே இவ்விரண்டு பெயர்களும் ஒரே அரசனை குறிப்பதாகும்.

-SUBHAM—

TAGS- பாண்டியர் செப்பேடுகள் , 10 கேள்விகள் , வேள்விக்குடி சாசனம், சின்னமனூர் செப்பேடு, தளவாய்புரம், சாசனம், ஜடில பராந்தகன், நெடுஞ்சடையன், அகத்தியன்

Bhagavad Gita Echo! Tirukkural Encyclopaedia- Chapter 22 (Kural 211-220) – Post No.16,088

Written by London Swaminathan

Post No. 16,088

Date uploaded in London – 14 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

***

Points to be noted

I am amazed at the English translations of six scholars! Even the title is translated with different words!

**

The gist of Bhagavad Gita is

            Do your duty without thinking about the fruits of your action; in other words don’t expect any rewards. It is echoed by Valluvar in the very first couplet (211)  in this chapter. Compare 2-47 in B G.

कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।

मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गोऽस्त्वकर्मणि ॥ 2-47 ॥

karmaṇy-evādhikāras te mā phaleṣhu kadāchana

mā karma-phala-hetur bhūr mā te saṅgo ’stvakarmaṇi 2-47

BG 2.47: You have a right to perform your prescribed duties, but you are not entitled to the fruits of your actions. Never consider yourself to be the cause of the results of your activities, nor be attached to inaction.

**

We lived in 20 North Masi Street, Madurai, Tamil Nadu for quarter of a century or more. At the entrance of my house was a big framed picture of SWAMI VIVEKANANDA with the saying, THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS, THE REST ARE MORE DEAD THAN ALIVE; it was a picture given to my father V Santanam News Editor, Dinamani, Madurai by someone. In those days there was no mobile camera or I Pad; but yet who ever came to my house wrote it in a paper and left. This in Kural 214.

**

Note that Tiru Valluvar used fruit tree, medicinal tree , village pond, lake etc as similes; he was a great nature lover.

**

Also note he used Deva loka in Kural 213. This word is also in Pura Nanuru; he was a great Hindu.

**

Sanskrit word Loka (Ulakam in Tamil) is in three couplets.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Projectmadurai website has all the Tamil books.

Part 40; ஒப்புரவறிதல் – Duty to society; Benevolence; social cooperation; The knowledge of what is Befitting a Man’s Position; beneficence

CHAPTER 22

211.The spirit of benevolence looks for no return; what do men give back to the clouds that delight the earth with their gentle refreshing showers? — A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

211.The benevolent man should serve society seeking no return for,

How can the earth recompense the bounty of the rain clouds?– S M Diaz, I G of Police  – SMD, Year 2000

***

211
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?– Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***
211.Duty demands nothing in turn;
How can the world recompense rain?  —Suddhananda Bharathiyar – SB

***
211.How can the world reward rain? Likewise to duty requires no reward— EVS Publishers, Singapore – EVS, Year 1986

***

211.True charity never seeks return;

To rain cloud what return can men can ever make?– H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***
211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

212.Only for the benefit of humanity do the noble gather wealth in the sweat of their brow—– ANM+2

***

212.Good men industriously produce wealth, so that

They may dutifully use it for the benefit of society—– SMD

***
212
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone ’tis ours.
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.– GUP
***

212.All the wealth that toils give
Is meant to serve those who deserve.     – SB  

***

212.The wealth acquired by the worthy through their industry is intended for charity—– EVS

***
212.Wealth won by toil, among worth folk,

Is meant for doing good- HAP

***

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

***

213.A lovelier and a better thing than a benevolent heart can scarcely be seen either in the world of men or in the land of the gods—– ANM+2

***

213.There is no pleasure in this or in the other world

Equal to the joy of being helpful to those around you—– SMD

***
213
To ‘due beneficence’ no equal good we know,
Amid the happy gods, or in this world below.
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods. .– GUP
***
***
213.In heav’n and earth ’tis hard to find
A greater good than being kind.        – SB

***
213.Doing good to others is the best virtue of all—– EVS

***
213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

XXXXXXXXXXXXXXXXXXXX

214.He alone breathes who is alive to the crying needs of the world; but “Oh death in life” the heart that is blind to them—– ANM+2

***

214.Only those, who know and practise social co-operation, live their life;

The others are as good as dead—– SMD

***

214
Who knows what’s human life’s befitting grace,
He lives; the rest ‘mongst dead men have their place.
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows the m not will be reckoned among the dead. .– GUP
***
***
214.He lives who knows befitting act
Others are deemed as dead in fact.        – SB
***

214.Only the man who acts in conformity  with the world may be called a living being. The others will be counted among dead—– EVS

***

214. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

215.Behold how the waters lap on the lovely shores of a lake to the delight of the villager; like unto it are the riches of the wise that love all mankind—– ANM+2

***

215.When the good man, who knows and does his duty to his fellowmen, acquires wealth,

It is like the village drinking water pond getting filled up by rain—– SMD

***

215
The wealth of men who love the ‘fitting way,’ the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank. .– GUP
***

215.The wealth that wise and kind do make
Is like water that fills a lake.        – SB
***

215.The wealth of the wise who confirm to the world may be compared to the fullness of the village tank—– EVS

***
215.The wiseman’s wealth, if he doth care for men

Is like overflowing waters of the village tanks– HAP

***

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

XXXXXXXXXXXXXXXXXXX

216.The wealth of a generous being is like a shady tree that bends low with he weight of its fruit in the heart of a hamlet—– ANM+2

***

216.When prosperity comes to a large- hearted man

It is like the useful village tree bearing fruit—– SMD

***

216
A tree that fruits in th’ hamlet’s central mart,
Is wealth that falls to men of liberal heart.
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town. .—GUP

***
216.Who plenty gets and plenty gives
Is like town-tree teeming with fruits.        – SB

***
216.Wealth in the hands of a liberal person is like a useful tree bearing  fruits in the middle of a town square—– EVS

***

216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

217.The possessions of a large noble heart are like an unfailing tree which breathes ot from every leaf a healing balm to all that gather around—– ANM+2

***

217.If wealth comes to a generous soul, with a large heart,

It becomes an unfailing drug  for all ills of society—– SMD

***

217
Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease. .– GUP
***
217.The wealth of a wide-hearted soul
Is a herbal tree that healeth all.        – SB

***

217.If a noble-minded benevolent person comes by wealth that wealth is like a medicinal tree accessible without let or hindrance—- EVS

***
217.The wealth of generous souls is like the tree

That healing balm distils for every ill- HAP

****

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

218.Men of stern sense of duty never fail in their offices of tenderness even when fortune is at its lowest ebb—– ANM+2

***

218.Even when the resources are limited, those who know their duty

Will not shrink from their efforts to social co-operation—– SMD

***

218
E’en when resources fall, they weary not of ‘kindness due,’-
They to whom Duty’s self appears in vision true.
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth. .– GUP
***
218.Though seers may fall on evil days
Their sense of duty never strays.        – SB

***
218.Those who have a proper sense of duty will not fail in their duty to others even though they become poor—– EVS

***

218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்

XXXXXXXXXXXXXXXXXXX

219.The poverty of a generous soul is nothing but the sense of regret of its inability to extend the hand of fellowship in the hour of need–– ANM+2

***

219.The worst misery, that poverty brings to the large-hearted man, is the pain

Of not having resources enough to serve others the way he had been accustomed to—– SMD

***

219
The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same. .—GUP

***
219.The good man’s poverty and grief
Is want of means to give relief.        – SB

***
219.The poverty of a charitable man is his embarrassment in his inability to render help due to others—– EVS

***
219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு

***

220.The ruin that springs from benevolence is a jewel of such rare device that it shall be purchased even by going into the very bonds of slavery–– ANM+2

***

220.Even if social co-operation throws up harm, it is worth embracing at any price

If it appears to ruin you, it is indeed well worth  being so ruined—– SMD

***

220
Though by ‘beneficence,’ the loss of all should come,
‘Twere meet man sold himself, and bought it with the sum.
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one’s self.—GUP

***
220.By good if ruin comes across
Sell yourself to save that loss.       – SB

***

220.If loss of wealth results from doing one’s duty to others, such loss is worthy of having even at the price of one’s own life-– EVS

***
220.Even should beneficence to ruin lead,

It is well worth while to sell oneself for that- HAP

***

220. ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

To be continued………………….

Tags- Tirukkural Encyclopaedia- Chapter 22 (Kural 211-220) , Part 40; ஒப்புரவறிதல், Duty to society, Benevolence,social cooperation, The knowledge of what is Befitting a Man’s Position

சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றி வெளிவந்த சிறப்பு மலர்! (Post.16,087)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,087

Date uploaded in London – 14 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜூலை-ஆகஸ்ட் புதுகைத் தென்றல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

சுதந்திரப்  போராட்ட வீரர்களைப் போற்றி வெளிவந்த

சிறப்பு மலர்! 

ச. நாகராஜன், பெங்களூர் 

புதுகை திரு பி. வெங்கட்ராமன் மாபெரும் டி.வி.எஸ். நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றும் போது நிறுவனத்தின் உள்சுற்று இதழான ஹார்மனி (HARMONY) இதழின் ஆசிரியராகவும் விளங்கினார்.

சுதந்திரதின பொன்விழா ஆண்டை ஒட்டி 1997 ஜூலை-ஆகஸ்ட் ஹார்மனி இதழை சிறப்பு மலராக வெளியிட அவர் திட்டமிட்டார்.

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான ராஜாஜி, சேலம் திரு. விஜயராகவாச்சாரியார், தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம், திரு சுப்ரமணியம் சிவா மற்றும் மதுரை திரு ஏ. வைத்தியநாதய்யர் ஆகியோரது  வழித்தோன்றல்கள் டி.வி.எஸ். நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் பணியாற்றி வந்தனர். அவர்கள் அனைவரையும் திரு பி. வெங்கட்ராமன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைத்து போராட்ட தியாகிகளைப் பற்றிய கட்டுரைகளை எழுத ஊக்குவித்து,  அவற்றை மலரில் வெளியிட்டார்.

நிறுவனத்தின் உள்சுற்று இதழ் இதனால் மிக்க பெருமை பெற்று பத்திரிகை உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் வித்தகரான ராஜாஜியைப் பற்றி வெளியுலகம் அறியாத அரிய விஷயங்களை அவர் பேரன் தர, பாரதமாதாவிற்குக் கோவில் எழுப்பிய திரு. சுப்ரமணிய சிவா பற்றி அவரது பேரன் வருஷவாரியாக குறிப்புகளைத் தர, தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டிய திரு. வைத்தியநாதய்யரைப் பற்றி அவரது பேரன் எழுத, வெகுஜன விழிப்புணர்ச்சி ஊட்டியதற்கான விருதாக சிறைவாசம் பெற்ற தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ. சந்தானம் பற்றி அவர் மகன் விவரங்களைத் தர சிறப்பு மலர் கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாக மலர்ந்தன. 

இப்படி ஒரு கருத்தை முன்வைத்து ஒரு பொன்விழா மலர் மலர்ந்தது சுதந்திர பாரதம் மலரக் காரணமாக இருந்த தமிழகத்தின் பங்களிப்பை உலகிற்கு உணர்த்திய ஒரு அரிய நிகழ்வாகும் என்பதில் ஐயமில்லை.

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

**

Tamil Women’s Psychology! Purananuru wonders-53, Tamil Encyclopedia-93 (Post.16,086)


Written by London Swaminathan

Post No. 16,086

Date uploaded in London – 13 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

53Purananuru wonders-53, Tamil Encyclopedia-93, One Thousand Interesting Facts – Part 93.

We will continue with Sangam work Paripatal – paripaatal—

Item 761

Courtesan/ prostitute / para stree= paraththai in Tamilization………. is chased.

Then she retorts;

There is a beautiful quotation given by the poet, where he says,

NEVER EVER SCHOLD THE CHASTE WOMEN WHOSE VERY THOUGHT WILL CURE ALL TYPES OF SINS—paripatal verse 20

THIS IS THE BASIS OF HINDU SLOKA IN   PRATASMARAN (Morning Thoughts)  IN SANSKRIT.

Hindu women recite every day in the morning (Prata= Morning)

Ahalyā Draupadī Kuntī Tārā Mandodarī tathā
Pañcakanyāḥ smarennityaṃ mahāpātakanāśinīḥ

अहल्या द्रौपदी कुन्ती तारा मन्दोदरी तथा ।
पञ्चकन्याः स्मरेन्नित्यं महापातकनाशिनीम् ॥

“Ahalya, Draupadi, Kunti, Tara, and Mandodari—one should remember these five ever-living maidens daily, as doing so destroys the greatest of sins.” (A variant of the verse sometimes replaces Kunti with Sita)

Paripatal verse 20 is sung by Nalanthuvanar, who is praised by Maruthan Ilanagan of Purananuru. So, it is not a later addition.

 ***

Item 762

Mirror Scene from Tirupparamkundram near Madurai

In Paripatal verse 21 on Lord Skanda/ Muruga,  beauty of several (drunken) women was described and compared to paintings. So once again we are reminded of the paintings of beautiful women in Sangam age. One man was enjoying the dance of a beautiful dancer. Immediately his wife was furious; this shows the psychology of Tamil women; they were very jealous and possessive. Another woman looked at the mirror and adjusted her ornaments to look showier. Here we come across the Tamil word for mirror-

NIZAL KAAN MANDILAM = round shaped object that reflects.

Andal in Tiruppavai used another word for mirror- THATTOLI= plate that reflects light.

Another woman was applying paste on her breasts again and again and wiping it , probably to get attention.

May be a case of ADHD.

Attention deficit syndrome is an older or informal term for Attention-Deficit/Hyperactivity Disorder (ADHD), a common brain-based condition. It affects how a person focuses, sits still, and controls actions. While it often starts in childhood, it can last into adult life. You can learn more about clinical definitions and support via the Attention Deficit Disorder Association.

Doctors split the signs of this condition into three groups:

  • Inattention: Trouble staying on task, losing items, and forgetting daily steps.
  • Hyperactivity: Too much body movement, restlessness, or trouble staying seated.
  • Impulsivity: Acting without thought, speaking out of turn, or cutting in on others.
  • Combined Type: Showing both focus issues and high energy or impulsive traits.

More scenes are described involving lovers.

***

Item 763

Paripatal verse 22 on river Vaigai is the last verse available. We lost about 48 verses .

Here again the water sports are described.

There is a long metaphor—

Rain= Pandian invasion;

Clouds= row of war elephants;

Thunder = war cries;

Lightning= shiny spears;

Poring raindrops = arrows;

Raining= generosity;

Floods= increasing battalions;

***

Item 764

There is a beautiful quotation,

Poet is wondering whether the river decorated the women

Or the women decorated the Vaigai river; who beautified who?

(Beautify is a verb that means to make something or someone more attractive, pretty, or pleasing to look at. It involves improving an existing appearance by adding nice details, cleaning up, or decorating).

***

Item 765

Orchestra Vs Nature

Another interesting description is the competition between human orchestra and Nature orchestra:

The poet says,

Competing with the drummers, the thunder roared;

Competing with the lute player, the bees and beetles buzzed and hummed;

Competing with the flutists, dragon flies made buzzing sound;

Competing with the dancing women, wind made the creepers dancing!

Nature orchestra is in many other Sangam poems too.

***

Item 766

Echoes of Bhagavad Gita

To Tirumal (Vishnu):

தீயினுள் தெறல் நீ;
பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ;
சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ;
மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ;
பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ;
திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ;
அனைத்தின் உட்பொருளும் நீ;

— Paripadal, iii: 63-68

Translation:

In fire, you are the heat;
in blossoms, the fragrance;
among the stones, you are the diamond;
in speech, truth;
among virtues, you are love;
in valour—strength;
in the Veda, you are the secret;
among elements, the primordial;
in the burning sun, the light;
in moonshine, its sweetness;
you are all,
and you are the substance and meaning of all.

— F Gros, K Zvelebil[20]

This is similar to the Vibhuti Yoga of Bhagavad Gita

Vibhuti Yoga is Chapter 10 of the Bhagavad Gita. It is the “Yoga of Divine Manifestations” or “Opulence of the Absolute”. Lord Krishna explains to Arjuna how His infinite splendour, power, and glory shine through the greatest, most excellent things and beings in the universe.

To be continued……………………..

Tags– Tamil Women’s Psychology! Purananuru wonders-53, Tamil Encyclopedia-93, One Thousand Interesting Facts – Part 93, attention deficiency syndromes

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 98; இந்து மத கலைச்சொல் அகராதி-98 (Post.16,084)

Written by London Swaminathan

Post No. 16,084

Date uploaded in London – 13 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 98; English version posted yesterday

ஷ்யாமா சாஸ்திரி (1762-1827)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் சியாமா சாஸ்திரிகள் ; தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரைவிட மூத்தவர் ; திருவாரூரில் பிறந்தார் ; தஞ்சை பங்காரு காமாட்சி அம்மன் கோவில் மூலம் பிரபலமானார் ; 300 கிருதிகளுக்கும் மேலாக, பெரும்பாலும் தமிழ் நாட்டில் உறையும் தேவியர்கள் மீது , இயற்றினார். தஞ்சாவூர் சரபோஜி மன்னரின் ஆதரவையும் பெற்று பல வித்வான்களை சங்கீதப்போட்டிகளில் வென்றார். தமிழ் பிராமணர் குடும்பத்தில், விஸ்வநாத அய்யரவுக்கும் வெங்கலட்சுமி அம்மாளுக்குக்கும் புதல்வனாக அவதரித்தார் ( at Tiruvarur on April 26, 1762)  வேங்கட ஸுப்ரஹ்மண்ய என்பது தாய் தந்தையர் சூட்டிய பெயர்

தந்தைதான் சங்கீதத்தில் முதல் குரு; ஆனால் குடும்பம் அர்ச்சககர் குடும்பம்; கால சூழ்நிலை காரணமாக திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு குடும்பம் குடியேறியபோது காசியிலிருந்து யாத்திரை வந்த சந்நியாசி சங்கீத சுவாமியைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டியது ; சுமார் நான்கு மாதங்களுக்கு அவர் சங்கீத நுணுக்கங்களைக் கற்பித்தார் ; பின்னர் தஞ்சாவூர் அரசவை வித்வான் பச்சிமிரியம்  ஆதியப்பையாவிடம் அவர் அனுப்பினார் ; சியாமா சாஸ்திரிகளின் இசை மெருகேறியது ; மதுரை மீனாட்சி கோவில் உள்பட பல அம்மன் கோவில்களுக்குச் சென்று இசை மழை பொழிந்தார் .தியாகராஜரைச் சந்த்தித்து இசை பற்றியும் அளவளாவினார்; முமூர்த்திகளில் இவர் ஒருவர்தான் தமிழில் பாடியவர்; தெலுங்கு, சம்ஸ்கிருத மொழிகளிலும் கிருதிகளை இயற்றினார் ; இவருடைய பாடல்களில் ஷியாம கிருஷ்ணா என்று முத்திரை இருக்கும்; இறைவனடி சேர்ந்த நாள்  பிப்ரவரி 6, 1827, அப்போது வயது 65. சங்கீத கணிதத்தில் அவர் ஆற்றியுள்ள சேவையை அவர் தன் கைப்பட எழுதியுள்ள 79 அக்ஷர தாள பிரஸ்தார வரைபடங்களில் கண்டு மகிழ முடியும்வியக்க முடியும்!

***

சிந்து

இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதி திபெத், இந்தியா பாகிஸ்தான் வழியாக ஒடி அரபிக் கடலில் சங்கமிக்கிறது . இதன் நீளம் 1980 மைல்;3180 கிலோமீட்டர். இந்தியா என்ற பெயர் ஏற்பட இந்த நதிதான் காரணம் ; கிரேக்க பாரசீக மொழிகளில் ச என்ற எழுத்து இல்லாததால் இதை ஹிந்து ; இந்து என்று உச்சரிக்கவே நதியின் பெயர் இண்டஸ் ஆகியது ; அதை அடுத்த பகுதி இந்தியா ஆனது  .கங்கை நதியை 17 முறை குறிப்பிட்ட சங்க காலத் தமிழர்களுக்கு இந்த நதி பற்றி எதுவும் தெரியாது ; ஆகவே இப்போது பாகிஸ்தானிலுள்ள ஹரப்பா, மொஹஞ்ச தாரோ நகர நாகரீகத்துக்கும் தமிழர்களுக்கும் தொடர்பே இல்லை என்பது வலுவான வாதம். சிந்து நதியின் முக்கிய உபநதிகள் –  ஜீலம் , சீனாப், , ரவி, வியாஸ் ,  சட்லெஜ்; ரிக் வேதத்தில் சிந்து நதி பற்றி கூறப்பட்டுள்ளதால் அவர்களுக்கு 6000 ஆண்டுகளுக்கு உன்னரே இந்த நதி பற்றித் தெரிந்திருந்தது ; ஹரியுபா என்ற இடப்பெயரும் ரிக்வேதத்தில் இருப்பதால் பிராமணர்கள் வேத வேள்வி இயற்றி யூப ஸ்தம்பங்களை நிறுவிய ஊர்தான் ஹரப்பா என்பதும் அறிஞர்கள் கூற்று .

***

சிகண்டி

Śikhaṇḍī (शिखंडी).—மஹாபாரதப்போரில் பாண்டவர்கள் தரப்பில் போரிட்டவர் துருபத மன்னனுக்கு பெண்ணாகப் பிறந்த போது அவர் பெயர் சிகண்டினி. பின்னர் ஆணாக மாறினார்; மஹாபாரதப்போரில் 18 ஆவது நாள் யுத்தத்தில் இவரை அஸ்வத்தாமன் கொன்றான். காசி நகர மன்னன் அம்பாவின் மறு  அவதாரம் இவர் என்பது ஐதீகம்; பீஷ்மரால் அவமதிக்கப்பட்ட இளவரசி அம்பா சாகும்போது, தான் மீண்டும் பிறந்து பீஷ்மரைக் கொன்று பழிவாங்குவேன் என்று சொல்லியிருந்தாள்;   மஹாபாரதப்போரில் அர்ஜுனன் இவருக்குப் பின்னால் நின்று அம்புகளை எய்தான் ; சிகண்டியை ஆண் என்று கணக்கில் பீஷ்மர் சேர்க்கததால் வில் அம்புகளைக் கீ ழே போட்டுவிட்டு வெறுமனே நின்றார் ; பெண்களைக் கொல்லக் கூடாது என்பது இந்து தர்ம சட்டம்; இதைப் பயன்படுத்தி அர்ஜுனன் சரமாரி பெய்யவே பீஷ்மர் படுகளத்தில் வீழ்ந்தார் ; பீஷ்மரைக் கொன்றதற்குப் பழிவாங்குவதற்கு 18 நாள் போர் முடிந்த இரவில் பாண்டவர் கூடாரத்தில் படுத்திருந்த அனைவரையும் தீ வைத்து அஸ்வத்தாமன் கொன்றான்; அதில் சிகண்டி உயிர்நீத்தான் ; போர் என்பதில் விதிகளை விட அக்கிரமங்களே அதிகம் என்பதை மஹாபாரதப் போர் காட்டுகிறது; ஆயினும் தர்ம விரோதிகள் அடியோடு அழிந்தனர்.

***

சீதா

ராமனின் மனைவி ; இந்துக்களின் முன்னுதாரணப் பெண்மணி; கணவனின் துன்பங்களை மனமுவந்து பகிர்ந்து கொண்டாள்; 14 ஆண்டு வனவாசத்தின்போது இலங்கை அரக்கன் ராவணனால் கடத்தப்பட்டவள் ; ராமபிரான் வானர சேனை உதவியுடன் அவளை மீட்டு வந்தான்; ஒரு சலவைத்தொழிலாளி அவளது கற்பினைப்   பற்றிக்கேலி செய்தவுடன் சீதா தேவியை, வால்மீகி ஆஸ்ரமத்தின் அருகில் இறக்கி  விட, லெட்சுமணனை அனுப்பினார்  ராம பிரான்  ; அங்கே குசன் லவன் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்று எடுத்தாள்  சீதா தேவி;  அந்த இரட்டையர் ராமபிரானைச் சந்தித்து ஆட்சி உரிமையைப் பெற்று நீண்ட காலம் சூர்ய வம்ச ஆட்சியை நிலை நாட்டினார்கள்; சீதாதேவியோ தனது கடமை முடிந்து விட்டது என்று எண்ணி தான் தோன்றிய பூமிக்குள் இறங்கிச் சென்றாள்; அவள் நிலத்தில் பிறந்தவள்; ஜனக மஹாராஜா ஆண்டுதோறும் நடக்கும் ஏர் உழும் சடங்கினைச் செய்தபோது அவளை நிலத்தில் கண்டெடுத்தான்; அவள் இள மங்கையாக இருந்தபோது விசுவாமித்திர முனிவர் மூலம் மிதிலை நகருக்கு வந்த ராம பிரான் சிவ தனுஷை முறித்து சீதையை மணந்தான் .

சங்க இலக்கியத்தில் வரும் இரண்டு ராமாயணப்     பாட ல்கள் சீதையை, ராம பிரானைப் போற்றியும் ராவணனைக் கண்டித்தும் புதிய செய்திகளைத் தருகின்றன.

கம்பனும் வால்மீகியும் சீதா தேவிக்குச் சூட்டிய புகழ் மாலையைப் படிப்போர் மனதிலிருந்து அந்தக் கற்புக்கரசி  என்றும் நீங்கமாட்டாள்

.***

சிவன் .

ரிக்வேதத்தில் ஒரே ஒரு முறை சிவபெருமான்  வருவதாகப் பேராசிரியர் வில்சன் பகர்கிறார்; ஏனைய இடங்களில் மங்களம் என்ற பொருளில் வருகிறது ; யஜுர் வேதத்தில் உள்ள நமக்கும்- சமகம் என்னும் ருத்ர மந்திரத்தின் மூலம் சிவாய நம என்ற மந்திரம் உலகிற்குக்கிடைத்தது ; சிவனும் ருத்ரனும் ஒருவரே என்பதை இந்த மந்திரம் நிரூபிக்கிறது; தேவாரம் திருவாசகத்தில் இருவரையும் ஒருவராகவே பாடினர் அடியார்கள் ; இந்து விரோத வெள்ளைக்காரர்கள் மட்டும் வேற்றுமை கற்பித்து தோல்வி அடைந்தனர்.தமிழ் மொழியிலும் சிவன் என்ற சொல் சங்க இலக்க்கி யத்திலும் தொல்காப்பியத்திலும் இல்லை; ஆயினும் சிவ பெருமானின்  நீலக் கழுத்தும் , மூன்று கண்களும் ரிஷ்பக் கொடியும் புறநானூற்றில் உள்ளது; இதே போல லிங்கம் என்ற உருவமற்ற சிவனையும் சம்ஸ்க்ருத நூல்களிலும் தமிழ் நூல்களிலும் மிகவும் பிற்காலத்தில்தான் காண முடிகிறது ; சிவனுடைய ஐந்து உருவங்களையும் ஐந்து நிறங்களையும் தேவார  மூவரும் மாணிக்கவாசகரும் பாடிப்பரவியுள்ளார்கள்

சிவன் தோன்றும் ஐந்து முகங்கள் :

1.           ஈசான;

2.           தத் புருஷ;

3.           அகோர;

4.           வாமதேவ;

5.           ஸத்யோஜாத.

***

சோம

சோம என்ற சொல்லுக்கு நிலவு என்றும் சோமபானம் என்றும் பொருள்; சுரா பானம் என்ற கள்ளுக்கும் சோமபானம் என்னும் அபூர்வ பானத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு என்பதை வேதங்களே சொல்கின்றன.  6000 ஆண்டுகள் பழமையான ரிக்வேதத்தில் ஒன்பதாவது  மண்டலம் முழுதும் சோமபானம், சோம ரஸம் பற்றிப் பாடியுள்ளனர்.

சோமம் என்னும் மூலிகை குறித்து வெளிநாட்டினர் நிறையவே பிதற்றி உள்ளனர். காரணம் என்னவெனில் இதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டு பிடித்திருந்தால் அதைப் பயிரிட்டு, சோம ரசத்தைப் புட்டியில் அடைத்து கோடி கோடியாகச் சம்பாதித்திருப்பர். ஆகையால் காளான் என்பர்; கொடி என்பர்; இல்லை செடி என்பர்; உளறலுக்கு அளவே இல்லை. அதிலுள்ள 114 துதிகளைத் தவிர இன்னும் ஏராளமான இடங்களில் சோமரசத்தின் பெருமையைப் பாடியுள்ளனர் .

இந்தியாவில் இருந்து ஈரானுக்குச் சென்று பார்ஸி மாதத்தை ஸ்தாபித்த ஜொராஸ்தரும் இதைப் புகழ்ந்து பேசியுள்ளார் பழங்கால உலகில் இவ்வளவு கீர்த்தி பெற்ற செடி கொடி வேறு எதுவும் இல்லை. தென் புற ஆந்திரம், தமிழ் நாடு, கீழ்ப்புற கங்கைச் சமவெளி முதல் ஈரான் வரை இதன் புகழ் பரவியது

ஒரு மண்டலம் முழுதும் ரிக் வேதம் பாடியும் , வேதத்தை யாரும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் வெள்ளைக்கார்கள் வெட்டி முழக்கியுள்ளனர்.

சோம பானத்தின் நன்மைகளை தமிழ்க் கல்வெட்டிலும் காணலாம். ஒருவரை “மனோ சுத்த சோம யாஜி” என்று அழைக்கிறது.

இதன் பொருள் மனதைச் சுத்தப்படுத்தும் சோம யாகம் செய்தவர்.

1.சோம பானம் ஆயுளைக் கூட்டும்

2.மனதைச் சுத்தப்படுத்தும்

3.உற்சாகத்தைத் தரும்

4.இது ஒரு தெய்வீக மூலிகை

5.இதைக் கருடன் கொண்டு வந்து கொடுக்கும்

6.இது முஜாவத் பர்வதத்தில் விளையும்

சோம பானம் பற்றிய 114 துதிகளையும் படித்தவர்களுக்கு ஒன்று தெளிவாகத் தெரியும்; இது போதைப் பொருள் அல்ல என்பது விளங்கும்

உலகில் போதைப் பொருளைப் போற்றி ஆயிரம் ஆண்டுகள் குடித்து/ சாப்பிட்டு வளர்ந்த எந்த இனமும் கிடையாது. இது போதை தரும் குடியாக இருந்தால் இந்துக்களும் அவர்கள் பாடிய வேதமும் அழிந்து போய் இருக்கும். மேலும் கள் போன்ற சுரா பானத்தையும் சோம ரசத்தையும் ஒரு பாடல் ஒப்பிட்டுவேறு காட்டுகிறது.

வெள்ளையர்களோவெனில் பரம்பரைக் குடிகாரர்கள்; போதை மருந்து மன்னர்கள் அடிமைகள்; பாவம் அவர்களுக்கு வேறு பொருள் தெரியவில்லை.அவ்வளவு துதிகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு அவர்களே வேண்டிய ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்வர்.

சோமம் என்பது சந்திரனையும் குறிக்கும். காலையில் சூரியன் உதவுவது போலத் தாவரங்களுக்கு இரவில் சந்திரன் உதவுகிறான் என்று வேதம் பாடுகிறது. இது வெள்ளைக்காரர்களுக்கு விளங்கவில்லை.. ஏன் ஒரே சொல் ஒரு மூலிகையையும்  நிலவையும் குறிக்கிறது என்பது விளங்காததால் அதைத் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் விட்டு விடுவர். நிலவுக்கும் தாவரங்களுக்கும் உள்ள தொடர்பை இதுவரை எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடிக்கவில்லை. இந்துக்கள் மட்டும் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.

7.சோம லதை களைப்பை நீக்கும்

8.மனத் தொய்வை நீக்கும்

9.இது சாவின்மையை—மரணமில்லாப் பெருவாழ்வை நல்கும்

இதை மூன்று காலங்களில் மந்திரம் சொல்லிப் பிழிய வேண்டும்

மந்திரம் சொல்லி யாகத்தில் விட வேண்டும்; மந்திரம் சொல்லி சாப்பிடவேண்டும்

இதெல்லாம் குடிகாரர்களோ, போதை மருந்து அடிமைகளோ செய்வதில்லை.

10.சோம மந்திரம் ஒன்று சொல்கிறது:

“எல்லா சக்திகளும் அவனுடையதே

நிர்வாணமாக உள்ளோருக்கு ஆடை அணிவிப்பான்

நோயாளிகளைக் குணப்படுத்துவான்

கண் பார்வையற்றோருக்கு கண் பார்வை அளிப்பான்

ஆண்மை குறைந்தோருக்கு ஆண்மை தருவான்

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் முக்தி தருவான்”

11.”ஓ, பவமான, அழியாத, என்றுமுள உலகில் என்னை வைப்பாயாக. எந்த இடத்தில் அழியாத ஒளியும், புகழும் உள்ளதோ அந்த இடத்தில் என்னை வைப்பாயக.”

பிரார்த்தனை முழுதும் பாஸிட்டிவ் எண்ணங்களுடன் கூடியது.

சோம லதை பற்றி பல “மறை” பொருளுடைய கதைகளும் உள. இதுவும் வெள்ளைகளுக்கு விளங்காமல் பேந்தப் பேந்த முழிக்கின்றன

பிரம்மாவின் மனைவியான காயத்ரீ ஒரு பறவை வடிவத்தில் சென்று அதைக் கொண்டுவரச் சென்றாள். ஆனால் அதைக் காக்கும் கந்தர்வர்கள் தடுத்து விட்டனர். பின்னர் “வாக்” தேவதை சென்றாள் கந்தர்வர்களுக்கு பெண்கள் மீது ஆசை உண்டென்பதால் தாம் செல்வதாக வாக்கு தேவதை சொன்னாள். நீ எப்படி திரும்பி வருவாய் என்று தேவர்கள் கேட்டதற்கு நீங்கள் அழைத்தால் நான் வருவேன் என்றாள் வாக் (சொல்) தேவதை.

இதெல்லாம் அடையாள பூர்வ கதைகள்

சோமக் கொடியை முதலில் பார்த்தபோது யார் முதலில் சாப்பிடலாம் என்று போட்டி ஏற்பட்டது. ஒரு பந்தயம் வைப்போம்; முதலில் யார் ஓடிச் செல்கிறார்களோ அவருக்கே என்று முடிவு செய்தனர். வாயுதேவன் முதலிலும் இந்திரன் இரண்டாவதாகவும் வந்தான். முதலில் இந்திரன், நிறைய பங்கு கேட்டான். வாயு மூன்றில் இரண்டு பங்கைச் சாப்பிட்டது. இந்திரனுக்கு நாலில் ஒரு பங்கு கிடைத்தது.

இப்படிப் பல அடையாள பூர்வ கதைகள்.

எங்கு எங்கு விளங்கவில்லையோ அங்கு எல்லாம் விநோத வியாக்கியானம் செய்வர் வெள்ளையர்.

சங்கத் தமிழ் நூல்களில் அமிர்தம் பல இடங்களில் வருகிறது. அருந்ததி, இந்திரன், வருணன் முதலியோரைக் குறிப்பிடுகிறது. ஆனால் சோம லதை பற்றிய பேச்சே இல்லை. ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அதைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். அதற்குப் பின் எழுந்த சங்கத் தமிழ் நூல்களில் சோம லதை பற்றி எதுவும் சொல்லவில்லை. வேள்வி தொடர்பான வேறு பல சொற்கள் காணப்படுகின்றன.

இந்து இளைஞர்கள் இந்த சோம லதையைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்; இதன் மூலம் உய்வும் பெறலாம்; பணமும் கிடைக்கும்..

***

சோமாஸ்கந்த

சிவனுடன், உமையுடன் சேர்ந்து ஸ்கந்தன்/ முருகன் அமர்ந்திருக்கும் உருவம் சோமாஸ்கந்தர் எனப்படும்; தென்னிந்தியக் கோவில்களில் மட்டும் இந்த மூர்த்தி காணப்படுகிறது .

சம்ஸ்க்ருத சந்தி/ புணர்ச்சி விதிகளின்படி ,

ச+உ =சோ (ச , உமா, ஸ்கந்த)= சோமாஸ்கந்த ;

சிவனுக்கும் உமாதேவிக்கும் நடுவில் முருகப்பெருமான் அமர்ந்த இந்த உருவங்களை உலகின் பெரிய மியூசியங்களிலும் மதராஸ் மியுசியத்திலும் தமிழ் நாட்டுக்கோவில்களிலும் கண்டு மகிழலாம் ; தமிழன் கண்டுபிடித்த நடராஜர் போல இதுவும் ஒரு விக்கிரகம் ஆகும்.

***

சிருங்கேரி

சிருங்கேரி புனிதத்தலம்,  நாட்டின் நான்கு திக்குகளில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடங்களில் தென்பகுதி மடம் ஆகும் துங்கா நதியின் கரையில் அமைந்துள்ளது . கிழக்குத் திக்கில் துங்காவோடு கலக்கும் நதியே பத்ரா. இதை துங்கபத்ரா என்று அழைக்கிறோம் . இங்குள்ள சாரதாம்பிகை கோவில் மிகவும் புகழ்பெற்ற ஸ்தலம் ஆகும்.  இங்கு சாரதா தேவியை பிரதிஷ்டை செய்தார் ஆதி சங்கரர். சாரதா என்றால் சரஸ்வதி அல்லது வாக்கிற்கு அதி தேவதை என்று பொருள்.ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரையாக வரும் சங்கராச்சாரியார்கள் மூலம் இந்து மத   சேவை ஆற்றிவரும் சிருங்கேரி மடத்துக்கு தற்போது ஜகத் குரு சங்கராச்சார்ய ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாஸ்வாமிஜி தலைமை  வகிக்கிறார். அடுத்த பட்டத்துக்கு அவர் ,  ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளை நியமித்துள்ளார்; கர்நாட கத்திலும் கேரளத்திலும் தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்  . உலகின் முக்கிய நகரங்களில்  அவர்களுடைய பக்தர்கள் யாக யக்ஞங்களை நடத்தி வருகின்றனர் .  சிருங்கேரி மடத்திலும் சாரதாம்பிகை கோவிலிலும் தினசரி பூஜைகள் சிறப்பா க நடந்து வருகின்றன.

***

சிருங்கார  ரசம்

சிருங்கார  ரசம் (शृङ्गाररस).—என்பது நவரசங்களில் ஒன்று;

காதல் மற்றும் காம உணர்வுகளை முக பாவம், அபிநயம் மூலம் பரத நாட்டியத்திலும் நாடகங்களிலும் காணலாம் . 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் இயற்றிய நாட்டிய சாஸ்திரத்தில் சிருங்காரம் உள்பட எட்டு ரசங்களை மட்டுமே பட்டியலிட்டார்; தமிழில் தொல்காப்பியரும் இதை அப்படியே மொழிந்தார் ; மிகவும் பிற்பட்ட  காலத்தில் சாந்தம் என்னும் ரசத்தைச் சேர்த்து ஒன்பது ஆக்கினார்கள்.

முதலில்  பரத முனி கூறிய எட்டு ரசங்கள்

சிருங்காரம் ;

ஹாஸ்யம்

கருணை; 

ரௌத்ரம்/ கோபம்;

வீரம்;

பயம்,

பீபஸ்தம் ; அருவெறுப்பு 

அற்புதம்/ வியப்பு

கடைசி ரசம் சாந்தம்

***

ஸ்தாணு

சிவ பெருமானின் பெயர்;  அசையாத, உறுதியான , நிலையானவர் என்பது பொருள்; பிரளயம் வரை அவர் இப்படி தியான நிலையில் இருந்து அழிக்கும் காலத்தில் ருத்ர தாண்டவம் ஆடினார் . தமிழ் நாட்டில் சுசீந்திரத்திலுள்ள புகழ்பெற்ற கோவில் தான் + மால் + அயன் = தாணுமாலயன் கோவில் ஆகும்; மும்மூர்த்திகளும்  ஒருவரே; மூன்று பணிகளைச் செய்ய  மூன்று கோலங்களை பூணுகிறார் என்பதைக் காட்டுகிறது.

To be continued…………………….

Tags- ஷ்யாமா சாஸ்திரி, ஸ்தாணு, சிவா, சோமாஸ்கந்த சிந்து நதி, நவரஸம், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, இந்து மத கலைச்சொல் அகராதி, part -98

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,085)

Written by London Swaminathan

Post No. 16,085

Date uploaded in London – 13 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கவிமணி’ தேசிக விநாயகம் (1876 – 1954)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்… என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

1

ஆயிரம் ஆண்டுகளும் முன்னர் வாழ்ந்த பாரசீகக் கவிஞன் உமர் கய்யாம் எழுதிய கவிதைகளை தழுவிப் பாடினார் கவிமணி; அதில் ஒரு பாடல் கள்வனின் காதலி திரைப்படத்தில் வெற்றி நடை போட்டது. அது என்ன பாடல்?

****

2

கவிமணி எழுதிய நூல்கள் எவை?

3

பாரதியின் கவிதைகளில் தம் உள்ளத்தைப் பறிகொடுத்த கவிமணி, பாரதி பற்றி என்ன சொன்னார்

4

கவிதை பற்றி அவர் பாடியது என்ன ? கவிச் சக்ரவர்த்தி கம்பனைக் கவிமணி எவ்வாறு புகழ்ந்தார்?

5

பசுவும் கன்றும் என்று சிறுவர் பாட அவர் எழுதிய கவிதை எது?

6

ஒரு காகம் தண்ணீர் தேடச் சென்று தன் புத்திசாலித்த தனத்தால் தண்ணீரைக் குடித்த கதையை அவர் எப்படி பாட்டில் அமைத்தார் ?

7

காந்தி அடிகள் பற்றி ?

8

தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக அவர் எழுதிய கவிதை என்ன?

9

கவிமணி தேசிக விநாயகம்,  தீபாவளிப் பண்டிகைப்பற்றி என்ன பாடினார் ?

10

வெள்ளையனை எதிர்த்த வ உ சி.வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் குறித்து அவர் பாடிய எழுச்சி மிகு கவிதைகள் எவை?

***********************************************

விடைகள்

1.உமர் கய்யாம் பாடலைத் தழுவி எழுதியபாடல் (திரைப்படம்- கள்வனின் காதலி)

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

கையில் கம்பன் கவியுண்டு கையில் கம்பன் கவியுண்டு

கலசம் நிறை அமுதுண்டு கலசம் நிறை அமுதுண்டு அமுதுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

தெய்வ கீதம் பலவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு

தெரிந்து பாட நீயுண்டு தெரிந்து பாட நீயுண்டு பாட நீயுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

வையந்தரும் இவ்வனமன்றி வையந்தரும் இவ்வனமன்றி

வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ வாழும் ஸ்வர்க்கம் வேறுண்டோ

ஸ்வர்க்கம் வேறுண்டோ

வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

வெய்யிற்கேற்ற நிழலுண்டு

****

2.கவிமணியின் நூல்கள்

அழகம்மை ஆசிரிய விருத்தம்

ஆசிய ஜோதி , (1941)

மலரும் மாலையும், (1938)

மருமக்கள்வழி மான்மியம், (1942)

கதர் பிறந்த கதை, (1947)

உமார் கய்யாம் பாடல்கள், (1945)

தேவியின் கீர்த்தனங்கள்

குழந்தைச்செல்வம்

கவிமணியின் உரைமணிகள்

****

3.“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்

பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா ! – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா.”

அமரகவி பாரதியார்

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
     ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்,
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்.
     அமரகவி யென்றெவரும் புகழப் பெற்றோன்,
சீருயரும் தமிழ்மக்கள் செய்த வத்தால்
     தென்னாடு சிறக்க வந்த சுப்ரமண்ய
பாரதியார் பெயர்போற்றி ஏத்து வோமே
     பாமாலை புனைந்தவற்குச் சாத்துவோமே.

***

4.உள்ளத்துள்ளது கவிதை – இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

தெரிந்துரைப்பது கவிதை.

                  (மலரும் மாலையும், 45)

கம்பன்

9.ஆரியம் நன்குணர்ந்தோன் – தமிழின்

     ஆழம் அளந்து கண்டோன்;

மாரி மழைபோலக் – கவியின்

     மழைபொ ழிந்திடு வோன்.1

உலக உண்மைகளை – எவரும்

     உணரக் கூறிடு வோன்;

அலகி லாக்கலைகள்-உறையும்

    ஆலய மாகிடு வோன்.

எவரும் போற்றிடவே – தமிழில்

     இராம கதைபுனைந்தோன்;

புவனம் உள்ளளவும் – அழியாப்

     புகழ் பரந்திடு வோன்.3

மூவர் முடிவேந்தர் – போற்றும்

     முத்தமிழ்ப் பாவேந்தன்,

தேவி அருள்பெற்றான் – தமிழ்த்தாய்

     செய்தவத் தால்பிறந் தான்.4

கம்பன் கவிவாழ்க! – இராம

     கதை நிதம் வாழ்க!

அம்புவி மீதெங்கள் – அருமை

     அமுதத் தமிழ் வாழ்க!

***

5.தோட்டத்தில் மேயுது

வெள்ளைப் பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது

கன்றுக் குட்டி

அம்மா என்குது

வெள்ளைப் பசு – உடனே

அண்டையில் ஓடுது

கன்றுக் குட்டி

நாவால் நக்குது

வெள்ளைப் பசு – பாலை

நன்றாய்க் குடிக்குது

கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது

வெள்ளைப் பசு – மடி

முட்டிக் குடிக்குது

கன்றுக் குட்டி

            (மலரும் மாலையும், 265-268)

***

6.காகம் உடன்எழுந்து – சிறுசிறு

கற்கள் பொறுக்கிவந்து

ஊகமாய்ச் சாடியினுள் – அவற்றை

ஒவ்வொன்றாய் இட்டதம்மா.

இட்டிடவே நீரும் – மேலே

எழுந்து வந்ததம்மா!

சட்டமாகக் குடித்துக் – காகம்

தளர்ச்சி தீர்ந்ததம்மா!

ஊக்கமுடையவர்க்குத் – துன்பம்

உலகில் இல்லையம்மா!

ஆக்கம் பெருகும் அம்மா – இதை நீ

அறியவேண்டும் அம்மா.

                 (மலரும் மாலையும், 415)

***

7.சத்தியத்தால் மன்அரிச் சந்திரனைத் தண்ணருளால்

புத்தபெரு மானை யொத்த புண்ணியனை – உத்தமனாம்

அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு

சிந்தனைசெய் நெஞ்சே தினம்!

                    (மலரும் மாலையும், 1050)

***

8.தீண்டாதோர் விண்ணப்பம் என்ற தலைப்பில்

8விண்ணப்பம் செய்தோம் – விடையை

வேண்டிக் கொள்கிறோம்.

கண்ணப்பன் பூசை கொள்ளும்

கடவுள் திருக்கோயிலிலே

நண்ணக் கூடாதோ? நாங்கள்

நடையில் வரல் ஆகாதோ

நந்தனுக்குப் பதமளித்த

நடராசன் கோயிலிலே

வந்தனைகள் செய்து நாங்கள்

வழிபடுதல் முறை அலவோ

              (மலரும் மாலையும், 763,741)

என்று தன் விண்ணப்பத்தினை எடுத்துரைக்கின்றார்.

நாயனார் வந்த திருக்குலத்தை – உயர்

நந்தனார் வந்த பெருங்குலத்தை

தீய குலமெனத் தள்ளுவரேல் – அது

தெய்வம் பொறுக்குஞ் செயலாமோ?

                     (மலரும் மாலையும், 730)

காப்பாற்றி நம்மையாளும்

கடவுளரும் மக்களுள்ளே

பார்ப்பார்கள் பறையரென்றே

பகுப்பேதும் வைத்ததுண்டோ?

                    (மலரும் மாலையும்,746)

******

9.தீபாவளிப் பண்டிகை

பண்டிகை தீபாவளிப் பண்டிகையாம் – இந்தப்

     பாரத நாட்டுக்கோர் பண்டிகையாம்;

தண்டிகை மன்னவர், ஏழை எளியவர்,

     சந்தோஷம் கொண்டாடும் பண்டிகையாம்.1

ஆண்டிலோர் தீபா வளியாம், அடா! – அதை

     ஆண்டியும் கொண்டாட வேண்டும்.அடா!

தீண்டு துயர்போகும் நாள் இதடா!-உள்ளம்

     தேடித் தவித்திடும் நாள் இதடா!

உற்றார் உறவினர் யாவருமே – கூடி

     ஒன்றாக உண்டிடும் நாள் இதடா!

வற்றாத செல்வம் படைத்தவர்போல் -நாம்

     வாழ்வின் நலம்பெறும் நாள் இதடா!3

வாழத் தயங்கும்இக் காலத்திலே – துளி

     வாழ்வை அளித்திடும் நாள் இதடா!

ஏழைக் கிரங்கி நரகாசுரன் – முன்னம்

     ஈசனை வேண்டிய நாள் இதடா!4

நல்லெண்ணெய் பூசிக் குளிப்போம், அடா! – நல்ல

     நல்ல உணவுகள் உண்போம்,அடா!

அல்லும் பகலும் உழைப்பதெல்லாம்-வயிறு

     ஆரப் புசிப்பதற் கல்லவோடா!5

இட்டெலி வீரர்தென் னிந்தியராம் – என்பது

     இன்று நாம் காட்டி விடுவோம்,அடா!

சட்டினி நண்பன் துணையிருக்க – அதில்

     சந்தேகம் உண்டோ? நீ சொல்வாய், அடா!6

பெண்டுகள் பிள்ளைகள் நெய்த கதருடை

     பீதாம் பரத்தினும் மேலாம், அடா

கொண்டாடிப் பண்டிகை நாளில் அணிந்திடில்

     கோடி கோடிப்புண்யம் உண்டாம். அடா!

***

10. வ.உ.சிதம்பரம் பிள்ளை     

கைநோவக் கால்நோவக் கல்லுடைத்து செக்கிழுத்து

மெய்சோர்ந்தும் ஊக்கம் விடாதுநின்ற – ஐயன்

சிதம்பரம் அன்றுசிறை சென்றிலனேல், இன்று

சுதந்திரம் காண்பாயோ? சொல்.

அஞ்சுவனோ வெள்ளையரின் ஆட்சியொழிப் பேன்என்று

வஞ்சினம் கூறிநின்ற மாவீரன் – விஞ்சுபுகழ்

செந்தமிழ்ச் செல்வன் சிதம்பரப்பே ரண்ணலை நாம்

வந்தனை செய்வோம் மகிழ்ந்து,

கப்பலை ஒட்டிக் கடுங்காவதற்கு ஆளாகி

உப்பிலாக் கூழ்உண் டுடல்மெலிந்தோன் – ஒப்பிலாத்

தென்னாட்டு வீர திலகன் சிதம்பரத்தின்

நன்னாமம் வாழ்த்துகவென் நா.

***

வீரபாண்டியக் கட்டபொம்மன்

மீசை முறுக்கிநின்று வெள்ளையரே உங்களுக்கோர்

காசும் தாரோமென்று கர்ஜித்த – கேசரியாம்

பாஞ்சைப் பதிவீர பாண்டியனை நெஞ்சமே

வாஞ்சையொடு பாடுவோம் வா.

                        வேறு

செந்தில் முருகன் சேவடியைத்

     தினமும் போற்றித் தொழுதிடுவோன்;

சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து

     தரளம் வாரி அளித்திடுவோன்;

—subham—

Tags– கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள், வீரபாண்டியக் கட்டபொம்மன் ,பாரசீகக் கவிஞன் உமர் கய்யாம்

கர்வத்தால் அழிவாள் பெண்! (Post.16,083)