HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105 (Post.16,143)

Written by London Swaminathan

Post No. 16,143

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேவாரம்

சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ; தேவர்களுக்கு அதாவது தெய்வங்களுக்குப் போடப்பட்ட பா மாலை (ஆரம்). இவைகளைப் பிற்காலத்தில் தொகுத்து வகுத்தவர்கள் பன்னிரு திருமுறைகளில் முதலில் வைத்தனர் ; சுமா 9000 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன . இதன் மூலம் தெரியவரும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டில் சுமார் 275 கோவில்கள் மஹேந்திர பல்லவன் காலத்திலேயே புகழ்பெற்றவையாக விளங்கின அதனால்தான் தேவார மூவரான அப்பர்சம்பந்தர், சுந்தரர் அங்கே சென்று பாடிப் பரவினர் ; அதைவிட அதிசயம் என்னவென்றால், யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட நம சிவாய என்ற சம்ஸ்க்ருத மந்திரம் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பரவியதை தேவார மூவர் காட்டுகின்றனர் . அதைவிட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், திராவிட விஷமிகளும் வெள்ளைக்கார இந்து விரோதிகளும் சிவன் வேறு , ருத்திரன் வேறு என்று பரப்பியோருக்கு செமை அடி கொடுக்கின்றனர் தேவார மூவர் ; அதை விட அதிசயம் என்னவென்றால், சிவன் கோவில்கள் எல்லாம் சமணர் இடங்கள், புத்தர் இடங்கள் என்போருக்குத் தேவாரப்   பாடல்களும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணமும் வகையடி, தொகையடி, செமையடி கொடுக்கின்றன ; இதையெல்லாம் விட உலக மஹா அதிசயம்- பெளத்தர்களும் சமணர்களும் பரப்பிய  பாலி, பிராக்ருதத்துக்கு சமாதி கட்டி நம்மை எல்லாம் இன்று வரை தமிழரகளாகவே காத்த பெருமை அப்பர் சம்பந்தரையே சாரும்! அதைவிட அதிசயம்– தமிழ் இசையை முதலில் பண்ணோடு அமைத்துப் பாடியவர்கள் இவர்களதான் .

பாடல் எண்ணிக்கை

  முதலாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,469 பாடல்கள்

  இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,331 பாடல்கள்

  மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,346 பாடல்கள்

  நான்காம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,060 பாடல்கள்

  ஐந்தாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,015 பாடல்கள்

  ஆறாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 980 பாடல்கள்

  ஏழாம் திருமுறை (சுந்தரர்): 1,026 பாடல்கள்

வேத பண்டிதர்கள் வேதங்களை குருமார்களிடம் வாய்மொழியாக கற்று, பாதுகாத்து வருவதுபோல ஓதுவார்கள் அவர்களுடைய குருவிடமிருந்து கற்று இன்றுவரை சிவன் கோவில்களில் பாடி வருகின்றனர் இதன் மூலம் தமிழ் இசை பரவியது ; ஓதுவார்கள் இல்லாவிடில் தமிழ் இசை இல்லை.

*** 

தாயுமானவர் (thaayumaanavar)

 1705 to 1744 CE. செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர். சைவ சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துப் பாடியது இவருடைய ஒப்பற்ற அணுகுமுறைக்குச் சான்றாகத் திகழ்கிறது ; இந்துக்களின் சமயப்பிரிவுகள் அனைத்தும் ஒரே இறைவனை நாடுவதை பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்; தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன. ஸ்வாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து வருகிறது.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார். கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவர்களுக்குப்பிறந்த முதல் குழந்தையை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.பின்னர் பிறந்த குழந்தைக்கு  தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் திருச்சியில்  கோயில் கொண்டுள்ள சிவபெருமானின்  பெயர்.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின. தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசன், அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆன்மீக தாகம் அதிகரிக்கவே , மௌனகுருசாமிகள் என்ற பெரியாரைக் குருவாக ஏற்றார். இதற்கிடையில் திருமணம் நடந்து மட்டுவார் குழலம்மை என்ற நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார் குழலியார் சிவபதம் அடைந்தார். இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். இறுதியில் ராமநாதபுரத்தில் சமாதி ஆனார் .அவருடைய பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பாடல்கள் :

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா

யானந்த பூர்த்தியாகி

யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

யகிலாண்ட கோடி யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினிற்

றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

யென்றைக்கு முள்ள தெது மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது

கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

XXXXX

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;

கண் செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;

மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;

ஜலம் மேல் நடக்கலாம்;

கனல் மேல் இருக்கலாம்;

தன் நிகர் இல் சித்தி பெறலாம்;

என்று பட்டியலிடும் அவர்

“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!

தேஜோமயானந்தமே.

****

தில்லை (சிதம்பரம்)

தமிழ் நாட்டிலுள்ள சைவர்களுக்கு கோயில் என்றால் அது தில்லை என்னும் சிதம்பரமே . சோழ,  பல்லவ மன்னர்கள் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடும் இடம் ; நாட்டியத்துக்கு மூல காரணமான இறைவன் என்பதால் புகழ் வாய்ந்த கோவிலில் நாட்டிய கரணங்களும் உள்ளன; அரியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் வகையில் ஒரே கோயிலில் கோவிந்தப்பெருமாளும் சந்நிதி கொண்டுள்ளார் ; ஊரில் உள்ள தில்லை காளியம்மன் கோயிலும் முழு சக்தி பெற்ற தெய்வமாக தரிசனம் தருகிறார் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுந்தரர் முதலியோரால் புகழப்பட்ட தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்கள் இந்தக் கோவிலை சீரும் சிறப்புடனும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது . சென்னையிலிருந்து தெற்கே 229 கிலோமீட்டர் தூ ரத்திலுள்ள இக்கோயிலை ஐந்து மணி நேரத்தில் அடையலாம் . கோவிலில் உள்ள பொன்னம்பலம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க  நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம். இங்கு உருவம் இல்லாத இடத்துக்கு திரை போட்டு மூடியிருப்பார்கள் அதைத்த திறந்தால் வில்வ இலைகளும் வெற்றிடமும் மட்டுமே இருக்கும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் பஞ்ச பூதங்களில் ஆகாச வடிவினன் என்பதைக் காட்டும் இந்த இடத்தை சிதம்பர ரஹஸ்யம் என்றும் சொல்லுவார்கள்  .

***

திலகம்

இந்துக்களின் நெற்றியிலும் உடலின் பன்னிரு பாகங்களிலும் வரையப்படும் சமய சின்னங்கள் இவை; பொட்டு  என்று பெண்கள் அழைக்கும் இந்தக் குறியீடுகள், புத்தரின் பழைய சிலைகளிலும் உள்ளதால் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்துக்களின் உட்பிரிவுகளான  சாக்தம், வைணவம், சைவம் முதலிய ஆறு பிரிவினரும் விபூதிநாமம், கோபி, குங்குமம் என்று பலபெயர்களில் விதவிதமாக இட்டுக்கொள்வார்கள்; சந்தனம், குங்குமம், விபூதி, நாமக்கட்டி முதலியன முக்கிய இடுபொருட்கள் ஆகும். பெண்களை பொறுத்த மட்டில் திருமணமான  சுமங்கலியாக இருக்கும் வரை இது கட்டாயச் சின்னம் . வெளிநாட்டில் வாழ்வோர் இனவேற்றுமைத் தாக்குதால்களால் இதை முழுதும் பின்பற்றுவதில்லை . நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை பாடிப் போற்றியுள்ளனர்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர்  விபூதி பூசி பாண்டிய  மன்னன் நெடுமாறனின் நோய் நீக்கி அற்புதம் செய்ததை தமிழ் நூல்களில் காணலாம்.

***

பால கங்காதர திலகர் 1856-1920

மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் . பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்; கணேஷ் சதுர்த்தியை பிரபலமாக்கி அதன் மூலம் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இப்போது அது மஹாராஷ்டிரீயர்களின் தேசீயத் திருவிழாவாக மாறிவிட்டது . இவர் வானசாஸ்திரக்  குறிப்புகளைப் பயன்படுத்தி ரிக்வேதம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிரூபித்தார் ;அதிசயம் என்னவென்றால் ஜெர்மனியில் ஹெர்மன் ஜாகோபியும் ஆராய்ந்து இதே காலத்தைக் குறிப்பிட்டார்; இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்த ஆராய்ச்சியின் முடிவு இது.

***

திலோத்தமை

அப்சரஸ்; மூவுலகிலும் கிடைத்த நல்ல பொருட்களைக்கொண்டு பிரம்மா படைத்த பேரழகி . பூவுலகில் சுந்தன்உப சுந்தன் என்ற இரண்டு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர் . இவளைத் தேவர்கள் பூமிக்கு அனுப்பி அவர்கள் முன்னால் ஆடவைத்தார்கள் . இருவரும் இவள் எனக்கே சொந்தம் என்று சண்டை போட்டு ஒருவரின் மண்டையை அடுத்தவன் வெட்டி மாய்ந்தார்கள் .

***

த்ரஸாதஸ்யு

அகஸ்திய முனிவருக்கு  அவரது மனைவி லோபாமுத்ரா ஒரு நிபந்தனை போட்டாள்; படுக்கை அறைக்குள் வருவதற்கு முன்னால், எனக்கு ஏராளமான நகை நட்டுகளைக் கொண்டு வாருங்கள்; பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்று ; அவர் முதலில் பணம் கேட்ட இரண்டு மன்னர்களும் பணம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த மன்னரிடம்தான் வந்தார்.  இவரும் இல்லை என்று கைவிரித்தவுடன்  மிகப்பெரும்  பணக்காரனான அரக்கன் இல்வலனிடம் அகஸ்தியர் சென்றார் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம்– தஸ்யு என்ற சொல் பற்றி வெள்ளைக்காரன் கிளப்பியது  எல்லாம் புரளி என்பதாகும்; அதைவிட முக்கிய விஷயம், இல்வலன் என்ற அரக்கன் மூன்று மன்னர்களும் வந்து கேட்கும் அளவுக்கு பணக்காரனாக இருந்ததாகும்; இவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகையால் வெள்ளைக்காரர்களின் வாதங்கள் பொய் என்பதைக் காட்டும் இலக்கியச் சான்றுகள்ய்வை  ; ஆகையால்  தஸ்யு என்பவனோ அரக்கன் என்பவனோ கீழ் ஜாதியும் இல்லை; திராவிடனும் இல்லை .மன்னர்கள் செல்வந்தர்கள்.

****

த்ரிஜடை (திரிசடை)

ராமாயணத்தில் வரும் நற்பண்புகள் கொண்ட அரக்கர் குல பெண்மணி த்ரிஜடை ஆவார். இலங்கையில் ராவணனால் கடத்தி வரப்பட்டு, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவிக்கு காவல் இருக்கும்படி நியமிக்கப்பட்ட அரக்கிகளில் இவரும் ஒருவர். இவர் ராவணனின் தம்பியும் தர்மவானுமான விபீஷணனின் மகள் ஆவார்.அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தன் தந்தை விபீஷணனைப் போலவே தர்ம சிந்தனையும், கருணையும், நற்குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்தார். அசோக வனத்தில் மற்ற அரக்கிகள் சீதையை மிரட்டி, துன்புறுத்தி, ராவணனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது, த்ரிஜடை மட்டுமே சீதைக்கு ஆதரவாக இருந்தார்.சீதைக்கு தாயைப் போலவும், ஒரு நல்ல தோழியைப் போலவும் இருந்து, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.சீதை துயரம் தாங்காமல் தற்கொலை செய்ய முயன்ற பல தருணங்களில், அவரை தடுத்துப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்.

த்ரிஜடையின் தீர்க்கதரிசனக் கனவு (திரிசடை சொப்பனம்)

ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் த்ரிஜடையின் கனவு மிகவும் பிரபலமானது.அவர் ஒரு தீர்க்கதரிசனக் கனவு கண்டார்; அதில் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணன் வெற்றி பெறுவதையும், ராவணனும் அவனது அரக்கர் குலமும் முற்றிலும் அழிவதையும், லங்காபுரி எரிவதையும் கண்டார்.இக்கனவை அசோக வனத்து அரக்கிகளிடம் கூறி, “இனி சீதையைத் துன்புறுத்தாதீர்கள், அவளிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று எச்சரித்தார். இது சீதையின் மனக்கவலையைப் போக்கி, ராமன் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை அளித்தது. போர்க்களத்தில் ராம-லட்சுமணர்கள் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்தபோது, ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி அதைக் காட்டி கலங்கடித்தான்.அப்போதும் த்ரிஜடை சீதையுடன் சென்று, “அம்மா, கவலைப்படாதே! ராம-லட்சுமணர்கள் இறக்கவில்லை, இது அரக்கர்களின் மாயாஜாலம். புஷ்பக விமானம் சுமங்கலிகளை மட்டுமே சுமக்கும், ஸ்ரீராமனுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் இந்த விமானம் உன்னைச் சுமக்காது” என்று கூறி சீதையின் கற்பின் வலிமையையும் ராமனின் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதையும் உணர்த்தினார். யுத்தம் முடிந்து ராவணன் மடிந்த பிறகு, ஆஞ்சநேயர் சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி கேட்டார்.ஆனால் சீதா தேவி, த்ரிஜடையின் காவலால்தான் தான் உயிர் பிழைத்ததாகக் கூறி, மற்ற அரக்கிகளையும் மன்னித்து விடுவித்தார். ஸ்ரீராமனும் சீதையும் த்ரிஜடைக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

***

திரி-லோக

திரி என்றால் மூன்று ; ஆங்கில எண் த்ரீ என்பதும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததை நாம் அறிவோம் 

மூடு உலகங்கள் என்பது பூ லோகம் புவர் லோகம் ஸ்வர் லோகம் ஆகும் . பிராமணர்கள் இன்றும் மூன்றுமுறை   செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த மூண்டு உலகங்களுடன் மொத்தமுள்ள ஏழு உலகங்களையும் சொல்லி வணங்குவார்கள்

போர் புவசுவரோம் என்பது சுருக்கம்

Triloka (त्रिलोक).—அவையாவன —பூமி, பூமிக்கு மேலுள்ள வெளி,  ஸ்வர்கம்

தேவ ரிஷியான நாரதரை திரிலோக சஞ் சாரி என்பார்கள் ; இவர் ஐன்ஸ்ட்டின் தத்துவத்தை எல்லாம் பொய்யாக்கி ஒளியை மிஞ்சும் வேகத்தில் பயணம் செய்ட்வார் .

பூர்லோக: நாம் வாழும் பூமி;

புவர்லோக: காற்று மண்டலம்; தெய் வீக புருஷர்கள் வலம் வரும் இடம்;

ஸ்வர்(க)லோக (Svargaloka): திண்திறன் வாழும் சுவர்க்கம்;

மஹர்லோக: ரிஷிகளும் ஞானிகளும் வாழும் இடம்;

ஜனலோக: பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் இருக்கும் இடம்;

தபோலோக: தவசீலர்கள் எப்போதும் தவம் செய்யும் இடம்;

சத்தியலோக (ப்ரஹ்மலோக): சத்தியத்தின் உறைவிடம்; பிரம்மா வாழும் இடம் .

மூன்று அல்லது ஏழு உலகங்களுக்கு யோக சாஸ்திரப்படியும் விளக்கம் உண்டு

***

திரிசங்கு

அயோத்திலிருந்து ஆட்சிபுரிந்த சூர்ய வம்ச அரசர்களில் ஒருவன் ; இளவரசனாக இருந்தபோது தந்தையால் நாடு கடத்தப்பட்டு பின்னர் விசுவாமித்திரர் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தார் . அவருக்கு ஒரு ணப்பபஸ்ஸை பிறந்தது உடலோடு சுவர்க்கத்துக்குப் போகவேண்டும் என்று வசிஷ்ட முனிவரிடம் போய் சொன்னார் அவர் முடியவே முடியாது என்றார் ; திரும்பாத திரும்ப சொன்னதையே சொன்னவுடன் வசிட்டரின் மகன் சாபம் கொடுத்தார் பின்னர் விச்வாமித்திரரிடம் வைத்து அதே கோரிக்கையை முன்வைத்தார் அதுக்கென்ன செய்கிறேன் என்று யாகாதீ வளர்த்தார் ; முடிவில் போ போ மேலே போ என்று உடலோடு திரிசங்குவை ஏற்றினார் .உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.

அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால்  நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான். உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார். உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான். இதை திரிசங்கு சுவர்க்கம் என்பார்கள் . தமிழில் அரைக்க கிணறு தாண்டியவன் என்போம்; இங்கும் இல்லை அங்கும் இல்லை என்ற அந்தர  நிலைமை!. சிலுவை போலத் தோன்றும் நட்சத்திரக் கூட்டத்தை இந்துக்கள் திரிசங்கு நட்சத்திரம் என்பார்கள் மேலை  நாட்டினர் இதை சதர் ன்  க்ராஸ் என்பார்கள் ஆஸ்திரேலியா பிரேசில் நியூசிலாந்து, சமோவா , பப்புவா நியூ கினி என்ற ஐந்து நட்டுக்கொடிகளில் இந்த நட் சத் திரத்தைக்  காணலாம் .

பத்துப்பாட்டு என்னும் சங்கநூல்களில் பதிற்றுப்பத்து என்ற ஒரு நூல் இருக்கிறது; அதில் ஒரு  புலவரும் மனைவியும் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பியவு டன் அவர்கள் சொன்னபடி, சேர மன்னன் யாகம் செய்தான். பத்தாவது யாக முடிவில் இருவரும் மாயமாய் மறைந்தனர் .

***

த்ரித

த்ரித,  த்வித,  ஏகத என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; மூவரும் பெரிய ரிஷிகள். தமிழில் மொழிபெயர்த்தால் ரிஷிக ளின் பெயர்கள் 3, 2, 1 எண்கள் ஆகும் ; மூவரும் யாக யக்ஞங்களுக்குச் சென்று நிறைய பசு மாடுகளைத் தானம் வாங்கி இருந்தார்கள் . ஒரு முறை காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஓநாய் தாக்கவே மூவரும் ஓடினார்கள் அவர்களில் திரித ரிஷி கிணற்றில் விழுந்து விட்டார் வேறு பக்கம் ஒடிய ஏகத ரிஷியும் த்வித ரிஷியும் அவர்களுடைய அண்ணன் கூக் குரலைக் கேட்ட போதும் காப்பாற்றச் செல்லவில்லை ; மூத்தவருடைய பசுமாடுகளையும்  எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசை பிறந்தது . ஆனால் திரித மனம் தளரவில்லை ;பூசலார் நாயனார் மனத்திலே கோவில் எழுப்பி, சிவபெருமானை அழைத்தது போல இவரும் மனத்திலே யாகப்பொருட்களைத் தருவித்து பெரிய யாகம் செய்தார். இந்திரனும் தேவர்களும் மனம் மகிழ்ந்து அவரைக் காப்பாற்றினார்கள்; வெளியே வந்த இவர் மற்ற இருவரையும் ஓநாயாக  போகும்படி சாபம் இட்டார் என்பது மஹாபாரதத்தில்உள்ள கதை.  மனத்தின் அபாரசக்தியை விளக்கும் கதை இது. 

To be continued…………………

–subham—

Tags- திரிசங்கு,த்ரித, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105, தாயுமானவர்

செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்(Post.16,142)

 Written by London Swaminathan

Post No. 16,142

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்; சதகம் என்றால் 100 பாடல்கள் என்று பொருள்; அனைத்தும் பழங்கால பாண்டிய நாட்டின் எல்லைக்குள் நடந்த  சம்பவங்களையும் அறிஞர்களையும் கவிகளையும் குறிப்பிடுகிறது. 30 பாடல்களை மட்டும் காண்போம்.

பாண்டிமண்டல சதகத்தை இயற்றியவர் மதுரை ஐயம்பெருமாள். http://www.projectmadurai.org/

பண்டிகைகள் செப்டம்பர் 4 கோகுலாஷ்டமிஸ்ரீஜயந்திகிருஷ்ணன் பிறப்பு13 சாமவேத  உபாகர்மா14 விநாயக சதுர்த்தி15 ரிஷி பஞ்சமி19 தூர்வாஷ்டமி23 வாமன ஜயந்தி27 மஹாளய பக்ஷ ஆரம்பம்29 மஹா பரணி.

சுப முகூர்த்த தினங்கள் – செப்டம்பர் 1317,

அமாவாசை 10பெளர்ணமி 26ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் 722;

***

செப்டம்பர் 1 செவ்வாய்க் கிழமை

தென்கும ரிக்கும் வடக்குவெள் ளாற்றுக்குந் தெற்குவரு

மன்புறு திண்டுக்கல் லுக்குங்கா ரைக்காட்டிற் குங்கிழக்கா

யன்புறு சேதுவின் மேற்கான வெல்லைக்கு ளானதெல்லாம்

வன்பெரு மாறன் புரக்கின்ற பாண்டியன் மண்டலமே. (98)

***

செப்டம்பர் 2 புதன் கிழமை

திருமிக்க சேரற் கரசு பெறத்தமிழ் செப்பிடவுந்

தருமிக்கு மிக்கசுத் தித்தமிழ் கொங்கென்று தான்சொலவும்

கருணைக் கடல்நங் கடம்பா டவியிற் கலந்திருக்க

வரிசைப் புலமை செலுத்திய பாண்டியன் மண்டலமே. (93)

***

செப்டம்பர் 3 வியாழக்கிழமை

 கல்லாடம் சிற்றம் பலக்கோவைக் கொப்பக் கடம்பவனத்

தெல்லோருங் கொண்டேத்து வாரலா திந்தமேல் காரிகைக்குத்

துல்லிய சங்கத்தார் கொண்ட வுரைநற சுருதியெனச்

சொல்லிய வேளாளர் சூழ்வதும் பாண்டியன் மண்டலமே. (92)

***

செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை

இடைக்காடர் முன்செல்லப் பின்செலு மீச னிருப்பதுபோல்

தடைக்கான காட்டினில் முட்டையென் றேபெயர் சாற்றிச்செஞ்சொற்

றொடைக்கான பாடல்பொய் யாமொழி யார்தொடுத் தேத்துமடி

மடக்கான பாடல்கொள் செவ்வேளும் பாண்டியன் மண்டலமே. (81)

***

செப்டம்பர் 5 சனிக் கிழமை

தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர் தென்னவன்றன்

கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்

தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து

மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே. (78)

***

செப்டம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை 

ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்

துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்

தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்

வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே. (71)

***

செப்டம்பர் 7 திங்கட் கிழமை

நரதுங்கன் கொண்டாடு முச்சங்கங் கூறுநற் காசிகண்ட

மரதுங்க மேசொல் இலிங்க புராணமந் நைடதஞ்செய்

கரதுங்க சீல னதிவீர ராமனுங் காசினியில்

சரதுங்க ராமனும் வாழ்வது பாண்டியன் மண்டலமே. (66)

***

செப்டம்பர் 8 செவ்வாய்க் கிழமை

அகத்திய ரேவிட வாட்சேபஞ் செய்ததங் கோட்டுமுனி

மிகக்களி கூரப் புலவோர்கள் வாழ்த்த வியன்மதுரைச்

செகத்தர சென்பவன் முன்னேதொல் காப்பியச் செந்தமிழை

மகத்துவ மாயரங் கேற்றிய பாண்டியன் மண்டலமே. (64)

***

செப்டம்பர் 9 புதன் கிழமை

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமுந்

தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்

நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை

வரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே. (60)

***

செப்டம்பர் 10 வியாழக்கிழமை 

அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்

தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்

கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்

வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே. (56)

***

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை BHARATI MEMORIAL DAY

பந்தா முலையுமை தாயென வாரிதன் பால்முழுகத்

தந்தீரம் விட்டுக் கடவாத வாரிதி தானைமுன்னம்

செந்தே னொழுகுங் கடம்பா டவியில் திருக்குளத்தில்

வந்தே யெழுகட லானதும் பாண்டியன் மண்டலமே. (54)

***

செப்டம்பர் 12 சனிக் கிழமை

பாலினும் வெண்ணெ யினுந்தயிர் மீதினும் பட்சம்வைத்த

வேலினுங் கூரிய கண்ணா ளகோதைதன் வீட்டிடத்தே

ஆலினும் வேலையி னுந்துயில் சங்கத் தழகரெனு

மாலிருஞ் சோலை மலையாரும் பாண்டியன் மண்டலமே. (53)

***

செப்டம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை 

மடலுற்ற புட்ப மணிநாச்சி யாரம்மை மாமணஞ்செய்

திடமிக்க வாசை யுடனே புதுவையிற் சென்றுமென்றே

யடல்பெற்ற வேங்கடத் தாருமன் னாரு மழகருந்தென்

வடபத்ர சாயியுந் தாமமர் பாண்டியன் மண்டலமே. (52)

***

செப்டம்பர்  14 திங்கட் கிழமை

தெள்ளிய சங்கப் புலவோரும் வாணியுஞ் செஞ்சடைமே

லொள்ளிய கங்கை தரித்தோருங் கூறி யொரோர்கவிதை

வெள்ளிய செஞ்சொற் றொடர்பா வகையை வியந்துகொண்டு

வள்ளுவர் மாலை பகர்ந்தாரும் பாண்டியன் மண்டலமே. (49)

***

செப்டம்பர் 15 செவ்வாய்க் கிழமை

திருவாத வூரரெம் மாணிக்க வாசகர் தென்னவன்முன்

வெருவாது காட்டு நரிபரி யாய்விற்க மீண்டவைதாம்

நரியாக வைகை நதிபெருக் காய்வரும் நாளிற்சொக்க

ரறியாது போய்மண் சுமந்ததும் பாண்டியன் மண்டலமே. (48)

***

செப்டம்பர்  16 புதன் கிழமை

செய்கை தவத்த சமண்குண் டரையவர் சென்றுசெய்த

துய்யற்கு மங்கைக் கரசி குலச்சிறை யுண்மகிழ்ந்து

சைவத்தை யோங்கச்செய் சம்பந்த ரேட்டைத்தண் ணாற்றெதிரே

வையைக்கு ளேயோடச் செய்தது பாண்டியன் மண்டலமே. (45)

***

செப்டம்பர்  17 வியாழக்கிழமை 

முதியவர் மூவர் தமிழ்கொள் சுழியல் முதிரநெல்லை

துதிசெய் பரங்குன்ற மாடானை காளையார் தூவாப்பனூ

ரெதிர்கொடுங் குன்று புனவாயில் பூவண மேடகமே

மதுரைகுற் றால மிராமேசம் பாண்டியன் மண்டலமே. (44)

***

செப்டம்பர்  18 வெள்ளிக்கிழமை

தணவா வறுபத்து மூவரிற் றாமும் முதன்மைபெற்றுப்

பணவா ரணிகின்ற பெம்மான்பொற் பாதத்தைப் பற்றவைத்துக்

குணமான சைவ நெறிநின்று வாழுங் குலச்சிறையும்

மணமேற் குடியில்வாழ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (43)

***

செப்டம்பர்  19 சனிக் கிழமை

புகுந்த சமயம் விடார்தேரர் ஞானமில் புல்லவரா

லுகந்தவர் போலவர்க் குள்ளாகி யின்மை யொழிக்குமருள்

மிகுந்த சிவனிடத் தன்பாகிப் பூவென மேற்கல்லினால்

மகிழ்ந்தெறி சாக்கியர் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (41)

***

செப்டம்பர்  20 ஞாயிற்றுக் கிழமை 

தேனலர் கொன்றை யணிசிவன் கோயிலைச் செம்பொன்னினால்

தூநல மாகும் பிராகாரங் கோபுரங் தூபிமுத

லூன மிலாது புரிவாயி லாரென்று முள்ளத்திலே

மானத பூசைசெய் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (40)

***

செப்டம்பர்  21 திங்கட் கிழமை

வேட்கையிற் றண்டி யடிகட் கமுதிட வேண்டிவைத்தும்

பாட்பட வேயெடுத் துண்டிடுஞ் சுற்றத்தைப் பற்றறுத்துக்

கோட்புலி யாரென் றிடுபேர்கொண் டார்முன்பு கொண்டுபெற்ற

வாட்படை யாளரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (38)

***

செப்டம்பர்  22 செவ்வாய்க் கிழமை

ஈசனைத் தூது விடுத்தாரைக் காணி னிறப்பனென்று

பேசுவார் முன்னரவ் வன்றொண்டர் நக்கர் பிரான்வரவே

காசுறும் வாளால் வயிற்றைக் கிழித்த கலிக்காமரு

மாசற்ற தொல்குடி வேளாளர் பாண்டியன் மண்டலமே. (37)

***

செப்டம்பர் 23 புதன் கிழமை

பொல்லாச் சமண ரிடுந்துன்ப நீறிட்டுப் போக்கிக்கடல்

கல்லாற் கடந்து படிக்காசு வாங்கிக் கபாடந்திறந்

தெல்லாரும் பேறு பெறத்திருத் தாண்டக மேத்துமையர்

வல்லாள ராகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. (34)

***

செப்டம்பர்  24 வியாழக்கிழமை 

நாமா ரடிமைவே ளாள ரடிமையெந் நாளுமென்று

கோமான் வளவன்முன் கூற வவனுரை கூறித்தென்னன்

பாவாண னாகவந் தாண்டவ னென்று பகருங்கஞ்ச

மாவார் களந்தைப் புகழேந்தி பாண்டியன் மண்டலமே. (33)

***

செப்டம்பர்  25 வெள்ளிக்கிழமை

கடிமணக் கோலஞ்செய் மங்கைநற் கூந்தலைக் கண்டுசிவன்

அடியவர் பஞ்ச வடிக்கா மெனவடி யோடரிந்து

படிமிசைக் கீர்த்தி கொளக்கொடுத் தேயரன் பாற்கருணை

வடிவான மானக்கஞ் சாறனும் பாண்டியன் மண்டலமே. (32)

***

செப்டம்பர்  26 சனிக் கிழமை

பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் பிள்ளைத்தமிழ்

கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக் கோவைமுதல்

தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்

பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே. (30)

***

செப்டம்பர்  27 ஞாயிற்றுக் கிழமை 

தென்றிசை மேலும் வடதிசை தாழவுந் தேவிமண

மன்றுசெய் கின்ற வரனா ரகத்திய வப்பொதிகைக்

குன்றினி லேகு கெனவுந் தமிழ்பொதி கூடல்வெள்ளி

மன்றினில் வந்து சமானஞ்செய் பாண்டியன் மண்டலமே. (4)

இரண்டு பாடல்களில் அகத்தியர் பெருமை

தண்டமிழ் கொண்டு சிவத்தலம் விண்டு தலம்விளக்கி

யெண்டரு முற்சங்க மேறி யிலக்கண லக்யஞ்செய்து

குண்டிகை நீர்கொண்டு காவேரி தந்து கொழுந்தமிழின்

மண்டலங் கண்ட குறுமுனி பாண்டியன் மண்டலமே. (5)

***

செப்டம்பர்  28 திங்கட் கிழமை

உழுதுண்டு வாழ்பவ ரேவாழ் பவர்மற் றுலகிலுள்ளோர்

தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரப்

பழுதின்றி யேகம்ப னாரே ரெழுபது பாடியவர்

வழுவொன்றி லாதவவ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (23)

***

செப்டம்பர் 29 செவ்வாய்க் கிழமை

பொருந்திய சீவில்லி புத்தூரின் மேவிய புண்டரிகத்

திருந்தரு ளேசெய் திடுநாச்சி யாரம்ம னென்பவரைத்

தரும்பெரும் பொன்மதிச் சீர்க்கரு ணைப்பெயர் தாங்குகின்ற

வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (16)

***

செப்டம்பர் 30 புதன் கிழமை

ஒருகவிக் கோரொரு தேங்காய்பொன் னாற்செய் துருட்டிக்கல்வி

பெருகச்செய் நாவலர் வாழக் கொடுத்துப்ர தாபம்பெற்றான்

திருமலி தஞ்சையிற் கோவைத் தமிழ்கொண்டு செல்வமிக

வருதரு வாகிய வாணனும் பாண்டியன் மண்டலமே. (6)

–SUBHAM—

TAGS- செப்டம்பர் 2026 காலண்டர், பாண்டி மண்டல சதகம், பொன்மொழிகள், ஐயம்பெருமாள்.

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)

Written by London Swaminathan

Post No. 16,141

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?

2

மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?

3

இவர் எழுதிய நூல்கள் யாவை ?

4

மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?

5

நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?

6

காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர்  யார்?

7

மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?

8

சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?

9

தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?

10

எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை   — என்ற பாடலின் வரிகள் என்ன ?

***

விடைகள்

1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)”..

XXX

இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா  கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.

மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்

அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்  போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள். 

***

2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே (ராகம்: யதுகுலகாம்போதி, தாளம்: ஆதி) – இவரின் மிகப்பிரபலமான பாடல்.

  எதுக்கு இத்தனை மோடிதான் உனக்கு (ராகம்: சுருட்டி, தாளம்: ரூபகம்)

  எந்நேரமும் ஒரு கால் சிவன்கை (ராகம்: ஹனுமத்தோடி)

  தில்லை சிதம்பரமே (ராகம்: ஆனந்தபைரவி / காபி நாராயணி)

  ஒருக்கால் சிவசிதம்பரம் (ராகம்: அரபி)

  என்ன துணிவாய் நெஞ்சே (ராகம்: சாரமதி)

  தரிசித்த பேருக்கு முக்தி (ராகம்: கேதாரகௌளை

***

3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.

***

4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.

***

5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :

இராகம் : தோடி தாளம் : ஆதி

பல்லவி

எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா

அநுபல்லவி

பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்

சரணம்

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.


எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.

***

6. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – பாடல் காவேரி திரைப்படத்தில் இடம்பெற்றது; அதை சி எஸ் ஜெயராமன் பாடினார்.

****

7.மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு:

கடவுளைப்பற்றி பாடினாலும் அதை கிண்டல் தொனியில் பாடுவார்; அதாவது இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை கையாண்டார் ; இதோ ஒரு உதாரணம்

எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”

“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”

என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”

“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”

***

8. சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல் “ஏதுக்கித்தனை மோடி தான்”

***

9.இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.  

பல்லவி    தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ  

 அநுபல்லவி     

விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து

நடந் தெதிர்    கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு,

கோபுரத்தைக்    கண்ணாரவே கண்டு                (தெரிசி)          

சரணங்கள்.

1.      மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி    நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி    போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு    மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா    பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா    மத்திலே தொழுதேத்தித்                (தெரிசி)

2.     நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று    உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி    யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண்    மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ    டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு    கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று         (தெரிசி)

3.     ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி.    வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி     லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ    பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா    னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான    த்தை வேறரச் சாடித்                    (தெரிசி)

***

10. You can all the Keerthanas from

இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்            

பல்லவி.    

தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை            

அநுபல்லவி,    

துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி    யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை    சொல்லப் போமோ வொருவராலே            (தெய்வீக)            

சரணங்கள்

1.     மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம்    பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து    நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு    லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே     பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென்    றுவீணே சொல்லக்கூடுமோ                (தெய்வீக)

2.     மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல    முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி    யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ    துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர்    மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத்    தருமோ சற்றுந் தராது                (தெய்வீக)

3.     எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ    துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக்  கமலத்    தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா    லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப்    பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம்    (தெய்வீக)

–subham—

Tags- பார்ப்பன எதிர்ப்பு, ஆதி சங்கீத மூர்த்திகள், பார்ப்பனர்களை ஓரம் கட்டுவதுமாரிமுத்தா பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள்

ஆயிரம் பொன்மொழிகள்! (201-220) Post No.16,140)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,140

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆயிரம் பொன்மொழிகள்! (201-220) 

ச. நாகராஜன் 

பொன்மொழிகள் தொடர்கின்றன…

 201) Thought

Garner of pleasant thoughts in your mind, for pleasant thoughts make pleasant lives. – Wilkins

நல்ல வுயர் எண்ணங்கள் நல்வாழ் வருளுமவை                         ஒல்லை நிறைக வுளம்       –  உலக உள்ளங்கள் (62)

                                ஜெகவீரபாண்டியனார்

Avarice – Envy – Pride

Avarice, envy, pride

Three fatal sparks    – Dante                                                 ஆசை பொறாமை அகம்பாவம் இம்மூன்றும்                                நாசம் பொறிகள் நடல்     –   உலக உள்ளங்கள் (273)

                            ஜெகவீரபாண்டியனார்

Speech – Best men

Men of few words are the best men.   – Shakespeare                          சொல்லைச் சுருக்கிச் சுகமாகும் பேசினவர்                                  நல்ல மனிதர் நலம்        – உலக உள்ளங்கள்

                            ஜெகவீரபாண்டியனார்       

Good Deed

A good deed is one that brings a smile of joy to the face of another. – Mohammed            மற்றோர் முகம் மலர மாண்ட இதம் செய்துவர்ன்                         ஆற்றேதான் நல்ல வினை         – உலக உள்ளங்கள் 730

                                    ஜெகவீரபாண்டியனார்

Gratitude

Gratitude is the sign of noble souls. – Aesop

நன்றி யறிவது நன்மக்கள் தன்மையாய்                                     ஒன்றி யுளதுன் உணர்            – உலக உள்ளங்கள் (188)

                                 ஜெகவீரபாண்டியனார்

Life

Some come, some go

This life is so.

மாந்தர் வருகின்றார் மாய்ந்தொழிந்து போகின்றார்                     ஆந்தகவே நம் வாழ்வும் ஆம்                 – உலக உள்ளங்கள் (608)                                                                              

                                                                                                                       ஜெகவீரபாண்டியனார்

Officer

Five things are requisite to a good officer – ability, clean hands, despatch, patience and impartiality.

                                                                                                 – Penn

செம்மை பொறுமை திறமை செயல்புனிதம்                               அம்மை தலைவற் கணி                     – உலக உள்ளங்கள் (430)                                                                        

                                            ஜெகவீரபாண்டியனார்

Purposeless Life

A purposeless life is a life of fatigue.                                      – J.A. Hadffield                                                                                   கருத்தில்லா வாழ்வு கடையா யிழிந்து                                 விருத்தம் அடையும் விளிந்து                 – உலக உள்ளங்கள் (605)              

                                             ஜெகவீரபாண்டியனார்

Thought – Deed

Be not careless in deeds, nor confused in words, nor rambling in thought. – Marcus Aurelius

எண்ணம் உரை செயலில் எவ்வழியும் செவ்வையாய்                 நண்ணி யிருத்தல் நலம்                     – உலக உள்ளங்கள் (134)

                                             ஜெகவீரபாண்டியனார்

Speech – Thinking – Act

Think twice before you speak, or act once, and you will speak or act the more wisely for it. – Franklin

பேசுமுன் சிந்தி பிறகுன் மொழிசெயல்கள்                        தேசுமிகுமே தெளிந்து                 – உலக உள்ளங்கள் (410)

                                       ஜெகவீரபாண்டியனார்

211. Great men

Great men are ordinary men with extra ordinary determination.  – Abraham Lincoln

Nation

Nations do not die from invasion; they die from internal rottenness. – Abraham Lincoln

Power

Nearly all men can stand adversity, but if you want to test a man’s character, give him power.                     

                                                                                                           – Abraham Lincoln

Moral

You must remember that some things legally right are not morally right. – Abraham Lincoln

God

Sir, my concern is not whether God is on our side, my greatest concern is to be on God’s side, for God is always right.                        – Abraham Lincoln

Crowd

It’s easy to stand in the crowd but it takes courage to stand alone.  – Mahatma Gandh

My Message

My life is my message.                                       – Mahatma Gandh

Wealth – Pleasure

Seek not greater wealth, but simpler pleasure; not higher fortune, but deeper felicity. – Mahatma Gandh

Love

What barrier is there that love cannot break?     – Mahatma Gandh

220. World – Shake

In a gentle way, you can shake the world.       – Mahatma Gandhi

***

இராமன்- சுக்ரீவன் சந்திப்பு!  துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம் ;ஓர் ஆய்வு – 25

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,139

Date uploaded in London –   28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம் ;ஓர் ஆய்வு  –  25 

(ஆர்சேஷாத்ரிநாதன்) 

இராமன் சுக்ரீவன் சந்திப்பு 

जब सुग्रीवः राम कहूँ देखा। अतिसय जन्म धन्य करि लेखा॥ ६॥

सादर मिलेड नाइ पद माथा। भेंटेड अनुज सहित रघुनाथा॥ ७॥

இராம இலக்ஷ்மணரை ஹனுமன் தூக்கி வருவதைப் பார்த்த சுக்ரீவனுக்கு நம்பிக்கையின் ஒளி தெரிந்தது. யாரால் தீங்கு வரப் போகிறது என்று நினைத்தானோ அவர்களால் நன்மை நடக்கப் போகிறது. இல்லை என்றால் ஹனுமன் அவர்களைத் தூக்கி வர மாட்டானே? இராமனைப் பார்த்த சுக்ரீவன் தான் பிறவிப் பயனை அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தான். இராமனின் உருவத்தில் லயித்து விட்டான். இராமனின் திருவடிகளில் தனது தலையை வைத்து வணங்கினான். இராமன் தம்பி இலக்ஷ்மணனுடன் சுக்ரீவனை மார்புறத் தழுவிக் கொண்டான்.

இங்கு துளசி தாசர் राम कहूँ देखा என்ற பதப் பிரயோகம் செய்துளார்.  ஒரு சிலர் உருவத்தால் மற்றவர்களை ஈர்த்துவிடுவர். இங்கு இராம் என்று சொல்வதன் பொருள் அதுதான். இராமனின் உருவ லாவண்யத்தைப் பார்த்தவர் அதால் ஈர்க்கப்பட்டு மேற்கொண்டு பேச இயலாதபடி நிற்பார். சுக்ரீவன் இராமனைப் பார்த்ததும் அந்த மன நிலையில் தான் இருந்தான் என்று சொல்ல வருகிறார் துளசிதாசர். இதற்கு எடுத்துக்காட்டாக இராமன் சரபங்க முனிவரின் குடிலுக்கு வந்தபோது

देखि राम मुख पंकज मुनिबर लोचन भ्रंग/

सादर पान करत अति धन्य जन्म सरभंग॥” 

சரபங்கர் இராமனின் முகம் என்னும் தாமரையைப் பார்த்தார். அப்போது அவருடைய கண்கள் என்னும் வண்டுகள் இராமனின் முகம் என்னும் தாமரையில் உள்ள தேனை அருந்திக் கொண்டிருந்தன என்று துளசி தாசர் கூறி உள்ளார். பல உதாரணங்களைக் கொடுக்கலாம். 

மற்றொன்று இராம இலக்ஷ்மணர்களை ஹனுமன் முதுகின் மீது தூக்கிக்கொண்டு வந்தான் இராமன் முன்னால் அமர்ந்திருப்பான். அதனால் சுக்ரீவன் முதலில் இராமரைப் பார்த்தான் என்பதற்காகவும் துளசிதாசர் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அடுத்து नाड़ पद नाथा” என்ற பதப் பிரயோகம். ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவன் உங்களின் அடியார்களில் ஒருவன் என்று சொல்லியுள்ளான். அதை நிரூபிக்கும் விதமாக  சுக்ரீவன் தலையை மட்டும் குனிந்து இராமனுக்கு வணக்கம் செலுத்தவில்லை. கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் என்று சொல்லுகிறார். 

कपि कर मन बिचार एहि रीती। करिहहिं बिधि मो सन ए प्रीती॥4॥ 

ஆனால் சுக்ரீவனின் மனதில் ஒரு சந்தேகம் தோன்றியது “வானரமாகிய தன்னுடன் இராமன் நட்புக் கொள்வானோ மாட்டானோ என எண்ணினான்”. இராமனுக்கு அவன் மனதில் உள்ள சந்தேகம் புரிந்தது.. துளசிதாசர் இங்கு येहि रीती என்று சொல்கிறார். அதாவது மேற்கண்ட முறைப்படி.  அதாவது இராமன் சுக்ரீவன் இருப்பிடம் வந்தவுடன் தனது தம்பியையையும் சேர்த்து சுக்ரீவனைத் தழுவிக் கொண்டான். சுக்ரீவன் நினைத்தான் நான் அவரது கால்களில் விழுந்து வணங்கினேன். ஆனால் அவரோ என்னை ஆரத் தழுவிக் கொண்டார். ஆக இராமன் தன்னை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டான் என்று தெரிந்துவிட்டது.

 ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவனைப் பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டான். ஆனால் அதற்கு முன்பே சுக்ரீவனைப் பற்றிய முழு விவரங்களும் இராமனுக்குச் சொல்லப்பட்டுவிட்டன. யார் சொல்லி இருக்கக்கூடும். வேறு யார்? அன்னை சபரிதான்.

 पंपा सरहि जाहु रघुराई। तहँ होइहि सुग्रीव मिताई॥

सो सब कहिहि देव रघुबीरा। जानतहूँ पूछहु मतिधीरा॥6॥ 

“இராமா! நீ பம்பா தீரத்திற்குச் செல். அங்கு சுக்ரீவனுடன் உனக்கு நட்பு உண்டாகும். அவன் எல்லா விவரங்களையும் உனக்குச் சொல்லுவான். உனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் என்னிடம் ஏன் கேட்கிறாய்” என்று சபரி சொல்கிறாள். சபரி சொன்னதை ஹனுமன் இராமனுக்கு நினைவூட்டுகிறான். 

“कारिहहिं बिधि” என்று சொல்வதன் மூலம்  சுக்ரீவன் தனக்கு இராமனுடன் நட்புக் கொள்ளத் தகுதி இல்லை என்ற நினைக்கிறான். காரணம் நட்பு என்பது சம அந்தஸ்து உள்ளவர்களிடம் உண்டாகிறது. சுக்ரீவன் நினைக்கிறான் நான் வானரம் இராமனோ மனிதன். நான் நாட்டை இழந்தவன். இராமனோ அரசகுமாரன். நான் பயந்தவன். இராமனோ வீரன். நான் பயந்து இருக்கிறேன். இராமன் மகிழ்ச்சியாக எந்தவித பயமும் இல்லாமல் இந்தக் கொடிய வனங்களில் சுற்றுகிறான், அத்தகைய இராமன் தன்னுடன் நட்பு கொண்டதில் தன்னைப் பாக்யவானாகக் கருதுகிறான்.

तन् मम एव एष सत्कारो लाभः च एव उत्तमः प्रभो |

यत् त्वम् इच्छसि सौहार्दम् वानरेण मया सह || ४-५-१०

இதைத்தான் வால்மீகி இராமாயணத்திலும் மேற்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. 

இதிலிருந்து தெரிகிறது இறைவன் எல்லா ஜீவராசிகளையும் தன் வயப் படுத்திக் கொள்ள விரும்புகிறான் என்று. அப்படி விரும்பும்போது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவனிடம் சரண் அடையவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.    

வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது 

मित्रभावेन सम्प्राप्तं न त्यजेयं कथंचन।

दोषो यद्यपि तस्य स्यात् सतामेतदगर्हितम्॥३॥

 “”எவன் ஒருவன் நட்புக் கரம் நீட்டி என்னிடம் வந்துவிடுகிரானோ நான் அவனைக் கைவிடுவதில்லை. அவனிடம் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்களுக்கு நல்லவர்கள்  அடைக்கலம் அளிப்பதில் எந்தவித தவறும் இல்லை.” என்று இராமன் சொல்வதாக வால்மீகி கூறி உள்ளார்.

Wigs of British Judges! Seven Step Good-bye! Purananuru wonders-60 (Post.16,138)

Written by London Swaminathan

Post No. 16,138

Date uploaded in London – 28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-60;Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100

***

Item 841

Let me give you wonders from one more book. The name of the book is Porunar Atruppadai (aatruppadai).

Author- Mr or Miss Mudaththama Kanniyar (mudaththaama kanniyaar); some people think she is a oman because of the spelling Kanni; but it may mean garland as well; so maybe a man!

Lines-248; Hero of the poem- Karikal Choza (we have already  seen him in Paaatinappaalai)

This book Porunaratruppadai is one of the Ten Idylls known as Paththuppaattu, which is part of 2000 year old Sangam Tamil Literature. Porunan = a bard; aatruppadai = giving guidance.

The poet imagined himself/herself as a bard receiving a bounty from the famous king.

Summary of Wonders:

Robbers stopped robbery after listening to music;

Judgement with White Wig; British judges follow Karikal Choza!

Chariot with Four White Horses like Chariot of Krishna in Bhagavad Gita;

Karikal Choza walked Seven Steps following Rig Veda;

Bali offering to Crow; (also seen in Kuruntokai);

Seven stringed Yaaz (lyre or lute);

Description of a woman from Foot to Head;

Cloth looking as thin and as transparent as snakeskin;

Karma Theory; Rebirth; effect of fate;

9 flowers, 12 trees, 5 animals.

***

item 842

in the first 22 lines poet compared the lute to a pregnant woman. He also described how the lute was played. Robbers dropped their weapons as soon as they listened to it. Earlier we saw how even wild elephants stopped damaging d crops after listening to songs.

Nationalist poet Subramaniya Bhratiyar described  Kannamma in the lines “Veenaiyadi Nee Enakku, Mevum Viral Naan Unakku”; Oh Kannamma, You are the Veena/ I am the fingers that play on you. Probably he got it after reading these 20 ++ lines!

***

item 843

Kesaati paata Description (Head to Foot Description)

Hindus start describing a Goddess from Foot to Head and the reverse is followed for humans.

Because Goddess Eyes are powerful a devote can’t look at her radiance; so, they always pray for her side glance (Kadaik Kan in Tamil) only!

Here the description shows as if the poet saw a naked woman!

Here is what he/she described:

The singer woman had

Her tresses= as black as sand (if you go to a river you may see the black, smooth sediment)

Her eye brows= killing bows of warriors (beauties ‘Killing’ men is a phrase in Tamil);

Forehead= crescent moon;

Lips = utter sweet words; red in colour like Bombax malabarica flowers; silk cotton tree in Tamil is Ilavam maram.

Her teeth= shiny pearls;

Ears with pendants = looked like scissors that trim hair;

Her shoulders= like bamboo;

Fingers= kanthal flowers;

Finger nails= parrot beaks;

Voluptuous Breasts = so tight that you can’t insert even a thin rib or nib;

Navel= water ripple or whirlpool;

Waist = scarcely visible;

Her belt with beads=  like beehive with bees;

Thighs = trunks of huge female elephants;

Small feet= tongues of panting dogs;

Look= pea hen look.

We may wonder whether the poet saw a naked beauty or she was wearing a nylon transparent sari!

***

Item 844

Most of the above comparison is a cliché in Tamil and Sanskrit literature. You can read almost the same in Kalidasa.

But here is a word the poet coined for SCISSORS!

He says MAYIR KURAI KARUVI= Instrument that trims hair!

No shoes! She walked without shoes, so poor!

Poet says she developed red blisters in her feet when she walked on stones.

***

Item 845

Offers prayers to Forest God, says the poet (line 52).

Poet probably meant Goddess Durga, who is called Kaadukizaal (goddees of forest in other poems)

This shows Hindus worship Gods and Goddesses all along their way. We saw it in Paatinappalai and Perumpanatruppadai.

***

Item 846 Karma Theory

Sangam Tamils were Puka Hindus who saw god everywhere and belived in Karma Theory ; if you do something good that will have its effect in the following seven births . if you have already done good things in your previous birth something good will happen unexpectedly.

Here the poet adds,

O chief of bards whose songs have value great!

It is the fruit of good deeds done by thee

In a former birth that made thee meet me here

Nor miss the proper way in ignorance (line 59)

(J V Chelliah, year 1946, followed Nachinarkkiniyrar commentary).

***

Item 847  Master of Seven Stringed Yaz! (line 63)

ஏழிசை (Ēḻicai) translates to “The Seven Musical Notes” or “The Seven Swaras” in English.

In Tamil music tradition, it refers to the seven basic notes of a musical scale, which correspond directly to the Carnatic and Hindustani classical music notes (Swaras), as well as the Western musical notes.

  • Kural (குரல்) – Sa (Shadjama) – Do / C
  • Thuttham (துத்தம்) – Ri (Rishabha) – Re / D
  • Kaikkilai (கைக்கிளை) – Ga (Gandhara) – Mi / E
  • Uzhai (உழை) – Ma (Madhyama) – Fa / F
  • Ili (இளி) – Pa (Panchama) – Sol / G
  • Vilari (விளரி) – Dha (Dhaivata) – La / A
  • Tharam (தாரம்) – Ni (Nishadha) – Ti / B

Seven strings for playing Seven Notes

***

Item 848 n Nice clothes like Snakeskin

The singing bard wore rags teemed with nits and lice and wet with sweat.lines 79-81

When he met the great king he treated the bard like a friend and gave

Clothes whose texture was so fine

Its threads could not be easily traced, and worked

With floral forms resembling skins of snakes.

In the halls bejwelled, smiling, comely maids

Pored out from spotless golden vessels full

Like cheering rain much stupefying drink

Repeatedly…………………………… lines 82-88

***

Item 849 Reference to great rishis/ ascetics

Lines 91-93

I drank that I might sooth my weariness

And rested in the wealthy palace here and

With joy at eve. Like rishis that enjoy

Devotion’s fruits by taking proper care

Of their own body’s health. I took good care

To rid me of journey’s weariness

Sangam poets were great Hindus! They tried their best o teach the tenets of Hindu religion at every available opportunity.

Even when the poet wanted to show the anger of Karikal Choza the poet compared him to Lord Muruga/Skanda/Kartikeya.line 131

***

Item 850 reference Good bye by walking Seven Steps

Line 166

After spending many days when the bard expressed his desire to return home, Karikalan showed his disapproval but at the end he gave the bard many gifts and walked seven steps with the leaving guest.

We see this Seven Step Walk before saying good bye even in Paranjothi Munivar’s Tiruvilaiyadal Puranam, just a 300 year old book.

This custom originated in the Rig Veda, oldest book in the world. Brahmins and other communities do this in Weddings. Rig Veda’s last book, tenth mandala. has a beautiful Wedding Song. A Hindu marriage is solemnised only when the bride and bridegroom walk around fire doing Seven Steps called Saptapadi. At each step they take a vow. This type of wedding was done by Vaisya community according to Silappadikaram.

  First Step (Nourishment): A promise to provide food, share household responsibilities, and nurture one another.

  Second Step (Strength): A vow to grow together in physical, mental, and emotional strength.

  Third Step (Prosperity): A commitment to share wealth, work for financial stability, and prosper together.

  Fourth Step (Family): A pledge to build a joyful home, raise children with love, and respect each other’s families.

  Fifth Step (Health): A promise to care for each other’s health, well-being, and happiness.

  Sixth Step (Companionship): A vow to remain lifelong best friends and walk as equals through all seasons of life.

  Seventh Step (Loyalty and Friendship): A final pledge of eternal love, loyalty, trust, and spiritual union through every lifetime.

No Hindi or Tamil Feature Film Song can beat the loving words in the Rig Veda Wedding Mantra.

***


Item 851 Bhagavad Gita Chariot line 165

I have a book of Tamil Bhagavad Gita in Tamil published by Ramakrishna Mutt where only for white horses pulling the Chariot of Arjuna with Krishna as the driver. Many pictures show only Four White Horses. Only with four horses one can have a smooth ride. Karikalan also gave the bard a chariot pulled by Four White Horses in addition to silk clothes, gold jewels, gold lotus hair pins for women.

***

Item 852 Balis to Crows

The non vegetarian food items and Karikalan’s  early life and how he got the crown etc are already explained in Pattinappalai.

Here the poet making a passing remark about the food given to crows by Hindus. But we get more details about religiously or ritually feeding crows by Hindus  in Kuruntokai poem 210.

***

Item 853  Origin of Wigs of Judges  (lines 187, 188)

ஆதாரம் , page 122

பத்துப்பாட்டு மூலமும்

நச்சினார்க்கினியருரையும்

டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950

Why Do British Judges Follow a Tamil King?

By S Swaminathan November 13, 2011


Strange as it may look, British judges, magistrates and barristers follow a custom that was started by a Tamil king two thousand years ago. British judges and several others who preside over the courts of justice wear a white wig.

If we go to encyclopaedias, they don’t explain why they wear it or when it was exactly started. Ancient Egyptians wore wigs for protecting their heads from the scorching sun. Then Romans and others wore different types of wigs as symbols of aristocracy.

The British judiciary started wearing wigs from 17th century. Many of the commonwealth countries also followed it. Whenever the reason for the custom is asked many people say that it is the tradition or uniform for professional discipline or it shows experience. Actually it was started by the most famous Tamil king, Karikal Chola two thousand years ago. Crystal clear proof comes from the ancient Tamil Cankam (Sangam) literature.

Karikalan was the greatest of the Tamil kings for three reasons. He ruled vast areas of Tamil-speaking land, subjugating other Tamil kingdoms. He was the first Tamil king who went up to the Himalayas and carved his dynastic emblem there. Till today, there remains a Chola pass in the Himalayas. The second reason was he was a just king and his court of justice in Uraiyur became very famous. Tamil literature praises his justice and gives the story of wigs. And the third reason is the Grand Anaicut he built across the river Cauvery is one of the oldest dam s in the world. 

Though we did not have any historical records scholars have dated him around 1st century BC. He was a boy king – like the Egyptian Tutankhamen. He came to power while he was a teenager.

The Story of Wigs:

One day two elderly people came to his court seeking justice. They had a dispute among themselves. They decided that whatever the Uraiyur court says must be the final settlement. When they came in to royal court they were shocked to see a boy sitting as the judge. They were greatly disappointed – which Karikalan felt immediately by looking at their faces. Indeed the face is the index of the mind.

Karikalan politely asked the elders to take seats and told them to wait for the ‘judge’ and he went in. The entire assembly was puzzled. Then came an elderly person and sat on the chair. After carefully listening to the arguments of both the sides he gave his judgement. Both of them were immensely happy to hear a fair settlement. Now the assembly wanted to know who the elderly judge was. King Karikalan removed his white hair wig (Narai Mudi in Tamil) and revealed himself.  All applauded the Wisdom of the ‘Solomon of India’.

The proof for the anecdote is in three Tamil books:

1.      Porunar Atruppadai –lines 187-188. Porunar Atruppadai is one of the ten long poems of Tamil Cankam literature dated  between 1st to 3rd century AD

2.      Manimekalai- This is one of the five Tamil epics dated 3rd century AD  

3.      Pazamozi – poem 25 translation:

ஆதாரம் , page 122

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்

டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950

“The grey haired old men said the young man could not come to a decision about their case. They were delighted to find the Choza wore a grey wig and understood the case from listening to their statements”.

This proves that even before they learn the arts suited to their caste, men are “ripe for their duties” This book is dated around 5th century AD.

Nobody can deny the fact that Karikalan was the first one to use white wig in judiciary matters.

There are lot of interesting stories about Karikalan in Tamil literature. He had to fight his own relatives to get the throne after the death of his father Ilam Chet Senni. He escaped an arson attack, and his feet were charred and thus he got the name “Kari Kalan” (man with charred legs). The ancient custom in India is to select a king by the Royal elephant if nobody knew who the real heir apparent was. Karikalan was garlanded by the royal elephant when he was standing in the crowd. The episodes about his daughter Adi Mandi also formed the basis of several interesting stories.

–subham—

Tags–Purananuru wonders-60; Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100, Wigs of Judges, Item 853, seven steps, Karikal Choza 

புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)

Written by London Swaminathan

Post No. 16,137

Date uploaded in London – 28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பெளத்தர்கள் வேதப்புத்தகமாகக்கருதும் பாலி மொழி புஸ்தகத்தில் புத்தர் புகன்ற எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன ?

2

அறிவு என்னும் கருவியால் ஐம்புலன்களையும், அதன் போக்கில் விடாமல் அடக்கி ஆள்பவனே, மேல் உலகத்துக்கு விதை ஆவான் (குறள் 24) வள்ளுவர் சொன்னதை புத்தர் எப்படி மொழிகிறார் ?

3 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழல் (குறள் 428)– இந்த வள்ளுவன் கருத்து தம்மபத்தில் எங்கே உள்ளது ?

4

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும் (850)- உலகத்தார் ஒப்புக்கொண்டதை இல்லை என்பான் பேய் என்றா வள்ளுவர். புத்தர் என்ன செப்பினார்?

5

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு (190) என்று வள்ளுவன் சொன்னதையும் புத்தர் சொன்னாரா?

6

ஒன்றே செய்க!

அதுவும் நன்றே செய்க!!

அதுவும் இன்றே செய்க!!! என்று புத்தர் பகர்ந்து எந்த ஸ்லோகத்தில்?

7

பிராமணன் கொலை செய்தாலும் பாவம் வராது என்று புத்தர் பாடினாரா ?

8

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி- குறள் 25 —என்ற குறளுக்கு இந்திரனைத் திட்டி பரிமேலழகர் அர்த்தம் கற்பித்தார் . பத்து பேர் உரையில் ஒருவர் மட்டும் இது இந்திரனைப் புகழும் குறள் என்றார் . புத்தர் என்ன இயம்பினார் ?

9

பிறருடைய மனைவியை நாடுபவனை வள்ளுவர் எச்சரிப்பது போலவே புத்தரும் எச்சரித்தாரா?

10

ஆசை அறுமின், ஆசை அறுமின்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்; ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்” என்று  திருமூலர் உரைத்தை புத்தர் ஒரு உவமையுடன் எப்படிச் சொன்னார் ?

********************

விடைகள்

1.இந்த நூலில் 423 ஸ்லோகங்கள் இருக்கின்றன. 26 அத்தியாயங்களில் அவைகளைத் தொகுத்துள்ளார்கள் .

***

2.புத்தரும் தம்மபதத்தில் 321-324ல் சொல்லுவது இதேதான்:

பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்.

பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும்  பயிற்சி பெற்றவுடனேயே  நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.

*** 

3.பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்படாமல் இருப்பது மடத்தனம். பயப்பட வேண்டிய பழி பாவங்களுக்குப் பயப்படுவதே அறிஞர்கள் செயலாகும். 

இதை புத்தரும் தம்மபதம் 317ல் அப்படியே புகல்வார்:

பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே

***

4.உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று , தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)

***

5.மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே;  உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார்.  நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (50)

****

6.காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)

***

7.ஒரு பிராமணனும்சந்யாசியும் பூர்வ ஜன்ம பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்–  (தம்மபத பாடல் 294)

பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- தம்மபதம், 389

****

8. புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.- தம்மபதம் 30

***

 9.மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309

***

10.உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

–subham—

Tags- புத்த மத வேதம், தம்மபதம், 10 கேள்விகள் , பிராமணன்,  இந்திரன்

ஆயிரம் பொன்மொழிகள்! (181-200) Post.16,136

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,136

Date uploaded in London – 28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆயிரம் பொன்மொழிகள்! (181-200) 

ச. நாகராஜன் 

பொன்மொழிகள் தொடர்கின்றன…

181. Silence

The temple of our purest thoughts is silence. – S.J. Hale

தூயவுயர் எண்ணங்கள் தோய்ந்திருக்கும் பொற்கோயில்

ஆய மவுனம் அறி                                                                 

                                    – உலக உள்ளங்கள் (161)

                                   ஜெகவீரபாண்டியனார்

Silence

Silence alone is great, all the rest is weakness.    – Alfred De Vigny

பேசா மவுனமே பேருயர்வு மற்றவெல்லாம்

ஈசல் எளிமை இளிவு.                                                    –    

                                   உலக உள்ளங்கள்

                                   ஜெகவீரபாண்டியனார்

Word – Silence

The unspoken word never does harm.             – Kossoth

பேசாத வார்த்தை பிழையேதும் செய்யாதே

பேசல் ஒழிக பிறிது                – உலக உள்ளங்கள் (170)

                                    ஜெகவீரபாண்டியனார்

Thinking

My trade is to say what I think.                    – Voltaire

எண்ணுவதைச் சொல்லுவதே என்வேலை எவ்வழியும்

நண்ணுவதை நோக்கி நயந்து       – உலக உள்ளங்கள் (66)    

                                    ஜெகவீரபாண்டியனார்

Today

Be wise today; it is madness to defer.          – Young

இன்றே அறிவா யினிநில் இல்லையேல்

என்றுமே பித்தன் இழிவு            உலக உள்ளங்கள் )     

                                    ஜெகவீரபாண்டியனார்

Thought

Thought means life, since those who do not think do not live in any high or real sense. – A.B.Alcott

ஓர்ந்து நினையார் உயர்வாழ் வடையாரே

ஓர்ந்தவுயர் எண்ணம் உயிர்           உலக உள்ளங்கள் (60)    

                                    ஜெகவீரபாண்டியனார்

Mouth – Ear

That which passes out of one mouth passes a hundred ears.           – Ernest Bramah

Ching Chow – Mouth – Ear – Listen – Talk

We have two ears and one mouth that we may listen the more and talk the less.

Mouth

No pear falls into a shut mouth.                – Italian saying

Truth

When truth is revealed, let custom give place; let no man prefer custom before reason and truth.            

                                                                           – St. Augustine

191. Books

Books are the legacies that genius leaves to mankind, to be delivered down from generation to generation, as presents, to those that are yet unborn.              – Addison

Success

Why shouldn’t you get to the top of the tree? It is still there.    – L.G. Moberly

Friend

If thy friend deceive thee once, shame on him.

If thy friend deceive thee twice, shame on thee.                 – Quaker Motto

Mirth – Word – Sword

Let your mirth be ever void of all scurrility and biting words; for a wound given by a word is harder to be cured than that given by a sword.                                              – Sir Henry Sidney

Man – Peace

Calm soul of all things! Make it mine

   To feel, amid the city’s jar,

That there abides a peace of thine

   Man did not make, and cannot mar.            – Matthew Arnold

Ching Chow – Sorrow – Thing Lost

Take no sorrow of the thing lost which may not be recovered.

Ching Chow – Love – Drink

Two things a man cannot hide – That he is drunk and that he is in love.

Purr

Purr when you are pleased.  – Mrs Gatty

Mankind

What forests of laurel we bring, and the tears of mankind, to those who stood firm against the opinion of their contemporaries.           – Emerson

200. Borrower – Leader

The borrower is the servant to the lender.   – Old Testament            

***

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 104; இந்து மத கலைச்சொல் அகராதி-104 (Post.16,135)

 Written by London Swaminathan

Post No. 16,135

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tevaram (tevaaram)

Book of Tamil poems on Lord Siva. Three great saints Tiru Gnana Sambandar, Tiru Navukkarasar (Appar) and Sundarar composed these poems. Senior most of the three, Appar, was a contemporary of  great king Mahendra Pallava (600 CE) and Sambandar (640 CE). There are about 9000 poems grouped in seven books.

Tevaram means garland of divine songs or poems.

  • Thiru gnana Sambandar: A child prodigy whose lively verses make up the first three volumes.
  • Appar (Tirunavukkarasar): Known for deeply emotional and humble hymns that form volumes four, five, and six.
  • Sundarar (Sundaramoorthy Nayanar): Composed the seventh volume, expressing a personal, close bond with Shiva.
  •  
  • Paadal Petra Sthalams: The Tevaram praises 275 specific Shiva temples (mostly in Tamil Nadu, plus two in Sri Lanka), which are sacred pilgrimage sites known as Paadal Petra Sthalams prefixed with Tiru, equivalent to Sri or Holy.
  • Musical Tradition: The poems are set to ancient Tamil musical modes called Pann, which correspond closely to Carnatic ragas. They are still chanted daily as a living tradition in many South Indian Shiva temples.

Like Vedic pundits learn Vedas from their teachers, Othuvars learn the poems from their seniors. They sing them in the temples every day. Tamil kings provided them grants.

***

Thayumanavar (thaayumaanavar)

Thayumanavar was a distinguished Tamil poet-saint who lived in the first half of the eighteenth century, from 1705 to 1744 CE. His devotional poetry was frequently cited by Sri Ramana Maharishi. Thayumanavar was brought up in the Thanjavur District of Tamil Nadu in the coastal town of Vedaranyam. His father, Kediliappa, came from an agricultural background but progressed from being a farmer to being the administrator of the local Vedapureeswarar Temple. He carried out this responsibility so well, he was subsequently offered the job of palace manager and royal advisor by Vijayaranga Chokkalinga Naicker, the reigning Prince of Tiruchirapalli. When Thayumanavar was born, his father named him after Thayumaneswarar, the presiding deity in the temple of Siragiri, which is nowadays known as the Tiruchirapalli Fort Temple.

Thayumanavar received a good education at court in which he ended up acquiring an outstanding knowledge of both Sanskrit and Tamil language and literature. He lost his father when he was still in his teens, and he was considered qualified to take over his job. Later he showed more interest in spiritualism than worldly affairs.

Thayumanavar articulated the Saiva Siddhanta philosophy. he wrote several tamil hymns of which 1454 are available. Thayumanavar’s key teaching is to discipline the mind, control desires and meditate peacefully. He went on to say that “it is easy to control an elephant, catch hold of the tiger’s tail, grab the snake and dance, dictate the angels, transmigrate into another body, walk on water or sit on the sea; but it is more difficult to control the mind and remain quiet”. He met Mouna Guru Desigar, the head of a Saiva mutt in Tiruchi. Thayumanavar got married and became a father. His son was Kanagasabhapathy. When he lost his wife  he became a wandering saint. Finally he went to Ramanathapuram and attained Samadhi in 1744. He is known for his unceasing emphasis on the unity of all paths to God and of all religions, and, in particular, on the unity of the Shaiva Siddhanta and Vedanta.

***

Thillai (Chidambaram)

Most sacred Shrine for Tamil Saivites; for them temple means Chidambaram like Sri Rangam for Tamil Vasihavites. Thillai Nataraja temple has been in worship for at least 2000 years. Since Lord Siva as Nataraja (King of Dance) is the patron saint of dancers, they always pay tributes to him in dancing events. Choza and Pallava kings put golden roof for the temple. The unique feature of the temple is that it is maintained by Thillai 3000 Priests (Brahmins) unlike other temples. Thillai Vazh Anthaanar: Also known as the Dikshitars, this is an exclusive community of Vedic priests who serve as the hereditary trustees and archakas (priests) of the Nataraja temple.

Chidambara Rahasyam: The temple houses a famous mystical secret representing the formless, invisible aspect of Shiva as pure space or emptiness behind a draped curtain. Thillai Kali Temple: Located on the outskirts of Chidambaram, this historic temple is dedicated to Goddess Kali.  The town is 229 kilometres, south of Chennai and can be reached within five hours.

***

Tilakam/ tilak

Tilak is a sacred mark or symbol applied to the forehead or other parts of the body in Hindu tradition. Though both men and wear Tilaka it is a must for married women. They have to wear it throughout their lives, i.e. as long as their husbands live . But people living in western countries don’t follow it strictly fearing racial discrimination.

  • Sacred Mark: Derived from Sanskrit, a tilaka is a paste made of sandalwood, ash, vermillion, clay, or turmeric.
  • Energy Center: It is placed on the Ajna chakra (the third-eye point between the eyebrows) to help calm the different types of Tilak are used by different Hindu sects.

Even ancient statues of Budddha show it prominently.

***

Tilak B G

Bala Gangadhara Tilak was a freedom fighter and a great scholar. He kindled nationalist spirit in Maharashtra through Ganesh Chaturthy/Jayanti. Now it is the national festival of Maharashtrians. He is known for his research in the Rig Veda. He dated it around 4000 BCE through astronomical calculations. A strange coincidence was that German Sanskrit scholar Herman Jacobi also arrived at the same date  both of them did the research independently.

Buddha with Tilak on his forehead

***

Tilottama

A beautiful Apsaras, divine damsel, created by  Brahma through synthesis of best elements  available in the three worlds.  She was sent down to earth in order to cause mutual destruction of the rakshasa brothers s

Sunda and Upa sunda. She made her seductive appearance in front of the two brothers when they were intoxicated and in their fight for her possession, they killed each other. Narada tod this episode to Yuthisthira.

***

Trasadasyu

A king whom rishi Agastya, accompanied by king Shrutarva and Bragnashwa, went to ask for wealth in order to please his wife Lopamudra.  Trasadasyu expressed his inability to provide any wealth but agreed to accompany the visitors  to demon Ilvala who was wealthy.

***

Trijata

Trijata is a compassionate demoness (rakshasi) in the Ramayana who protects and comforts Sita while she is held captive in Sri Lanka by Ravana. Unlike the other demonic guards who threaten and torment Sita, Trijata shows her deep kindness, empathy, and respect. Trijata dreams of Ravana’s total destruction, Lanka burning in red flames, and Lord Rama’s ultimate victory. She uses this vision to stop the other demonesses from harassing Sita and to give Sita hope. Lineage: She is often described as the daughter of Vibhishana, Ravana’s righteous brother who aids Rama Following Rama’s victory, both Rama and Sita shower Trijata with rich rewards and praise for her loyalty and care.

***

Tri loka

Tri-loka literally means “three worlds” in Sanskrit and refers to the threefold division of the universe in Indian religions like Hinduism, Buddhism, and Jainism.

Triloka (त्रिलोक).—The Sanskrit term tri-loka is often found in Vedic scriptures. Tri-loka means three worlds. The universe is divided into three worlds, or realms of consciousness: bhūr, bhuvaḥ and svaḥ (the gross region, the subtle region and the celestial region).

Triloka (त्रिलोक).—The conception of the triloka—earth, mid-space and heaven, or nether-world, earth and heaven—has been depicted in the figure of Viṣṇu Trivikrama.

Narada, Deva Rishi, is often called Tri Loka Sanchari, meaning that he is an Inter Galactic Traveller and travels faster than light.

Bhurloka: The Earth or the human realm. Bhuvarloka / Svarga: The atmosphere or celestial heaven of the gods. Naraka / Patala: The netherworld or underworld.

Consciousness: These worlds also represent physical, subtle, and celestial planes of existence.

Brahmins use these lokas along with four more lokas in their thrice a day Sandhyavandana.

The Seven Higher Lokas

  • Bhurloka: The physical earth and the realm of human action and karma.
  • Bhuvarloka: The atmospheric intermediate region between earth and the sun, home to semi-divine beings.
  • Svarloka (Svargaloka): The celestial heaven ruled by Indra and inhabited by the devas.
  • Maharloka: The abode of great enlightened sages and rishis.
  • Janaloka: The realm where the pure-minded spiritual sons of Brahma reside.
  • Tapoloka: The sphere of intense penance and ascetics.
  • Satyaloka (Brahmaloka): The highest realm of ultimate truth and the residence of Lord Brahma

***

Tri sankhu

A prince of olden times who was expelled by his father from the kingdom of Ayodhya. He then became a disciple of sage/king vishwamitra with whose blessings he regained the throne. At the end of his life he wanted to ascend to heaven/ swarga with his human body. First he approached Vasishta  to perform an appropriate yagna. When he said that he could not do it he insisted that he must do it. At once Vasishta’s son cursed him to become a low caste chandala. In this form he went to Vishwamitra and he did the yagna as requested by him. When he went up to swarga he was denied entry and pushed back  to earth. When he sought Vishwamitra’s help again he arrested his fall and caused him to remind suspended in mid-air. This episode was related to Pandavas to illustrate the rishi’s powers.

Trisankhu is in the form of stars in the southern heaven which the westerners named the Southern Cross. This constellation is in the flags of five countries: Australia, Brazil, New Zealand, Papua New Guinea, and Samoa.

In Sangam Tamil literature a Chera king helped a poet and his wife to ascend to heaven through Yagna. It is in Sangam book Pathitruppaththu.

***

Trita

Trita – a great rishi/seer of ancient times who was well verse in the Vedas and Vedic fire sacrifices. Trita means Mr Three. He had two brothers Ekata and Dwita. They mean Mr One and Mr Two.  They were also learned and accompanied Trita to various yagnas /fire sacrifices and collected a lot of cattle between them. Once while out in a forest, both Ekata and Dwita planned to take all the cattle for themselves and abandon Trita. They were then attacked by a wolf and all of them ran in different directions. Trita hid himself in a deep well and shouted for help. Ekata and Dwita did not go for his rescue, though they heard his cries.

Trita being unable to get out of the well by himself, decided to perform a yagna to please the gods; by sheer mental force he imagined all the essential articles for the yagna and conducted it. Gods were very pleased and got him out of the well. Trita then cursed his two wicked brothers to be turned into two wolves.  The well where Trita performed mental yagna became a holy spot. During Mahabharata war, Krishna’s brother Balarama remained neutral and went on a pilgrimage. When he visited this holy well, the history of the well was recalled. It is in the ninth parva of Mahabharata.

This story can be compared with great Tamil Saivite saint Poosalaar Nayanar who built a temple mentally and invited god Siva for the consecration. A Choza king fixed the same date for his real Siva temple. When God went to the imaginary mental temple of Poosalar Nayanar, the king came to know about the great Nayanar. There are many stories in Hindu scriptures to show the power of mind.

To be continued…………………

Tags -Trita, Poosalar, Trisanku, Southern Star, Tevaram, Thayumanavar, 104HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 104; இந்து மத கலைச்சொல் அகராதி-104

முத்துத் தாண்டவர் பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,134)

Written by London Swaminathan

Post No. 16,134

Date uploaded in London – 27 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சீர்காழியில் கி.பி. 1525-1625 க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். தமிழ் இசையை வளர்த்தவர்களில் இவர் பங்கு முக்கியமானது

1

முத்துத் தாண்டவரின் முதல் பாடல் தோன்றியது எப்படி ?

2

அப்பர், சம்பந்தர் ஆகியோருக்கு மக்களின் பசிப்பிணியை நீக்க, இறைவன் சிவ பெருமான் படிக்காசு வழங்கினார் என்பதை நாம் அறிவோம். இவருக்கும் பொற்காசுகள் கிடைத்ததா ?

3

இவர் பாடல்களுக்கு முதல் அடி எங்கிருந்து கிடைத்தது ?

4

பிரபல பாடகர்கள் கச்சேரிகளில் பாடும் அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன் —  என்ற பாடலின் சிறப்பு என்ன ?

 5

முத்துத் தாண்டவரின் பாடல்கள்  நடன நிகழ்ச்சிகளிலும் பயன்படுகின்றன : அவைகளில் மிகவும் பிரபலமானவை எவை?

6

நடராஜர் ஆடியதை அப்படியே தாள நயத்துடன் நம்முடைய மனக்கண் முன்னே கொண்டுவரும் ஆட்டுக் காலைத் தாரும்

பாடலின் வரிகள் என்ன ?

7

கொள்ளிடம் ஆறு வெள்ளப்பெருக்கு எடுத்தபோது இவர் பாடியவுடம் வெள்ளம் தணிந்தது என்பார்கள் அந்தப்பாடல் என்ன பாடல் ?

8

இவருடைய எத்தனை கீர்த்தனைகள் நமக்கு கிடைத்தன ?

9

இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது

10

மேலும் சில பு கழ்பெற்ற பாட்டுக்கள் களின் முதல் வரிகள் என்ன ?

*******************************

விடைகள்

1.இவர் தீராத வெப்பு நோயைத் தீர்த்துவைக்கும் இறைவனை நாடி சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது.

***

2.முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கினார் என்று செவி வளை செய்திகள் கூறுகின்றன .

***

3.பக்தர்களின் உரையாடல்களில் கேட்கும் நல்ல சொற்களையே பாடலுக்கு முதல் அடியாக வைத்துப் பாடும் ஒரு கொள்கையை இவர் பின்பற்றினார்.

***

4.இவரை ஒரு முறை பாம்பு தீண்டியது. இந்தப்பாடலைப் பாடியவுடன் விஷம் நீங்கி குணம் அடைந்தார் என்பது வரலாறு

இராகம் : காம்போதி       தாளம் : ரூபகம்

பல்லவி

அருமருந்தொரு தனிமருந்து

அம்பலத்தே கண்டேன்     (அருமருந்)

அநுபல்லவி

திரும ருந்துடன் பாடும் மருந்து

தில்லை யம்பலத் தாடும் மருந்து

இருவி னைகள் அறுக்கு மருந்து

ஏழை யடியார்க் கிரங்கும் மருந்து     (அருமருந்)

சரணம்

கொன்றை தும்பை அணிந்த மருந்து

கோதை மீதில் படர்ந்த மருந்து

மன்று ளேநின் றாடும் மருந்து

மாணிக்க வாசகர் கண்ட மருந்து     (அருமருந்)

இந்திர ரானவர் வானவர் போற்றும்

இருடி கள்தமக் கெட்டா மருந்து

சந்திரர் சூரியர் காணா மருந்து

தானே முளைத்துத் தழைத்த மருந்து     (அருமருந்)

திரித்தி தித்தியென் றாடும் மருந்து

தேவாதி மூவர்கள் காணா மருந்து

கருத்தைத் திருத்தி இருத்தும் மருந்து

காலனைக் காலால் உதைத்த மருந்து     (அருமருந்)

***

5.நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி

2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

***

6.இராகம் : சுவர்ணாங்கி       தாளம் : ரூபகம்

பல்லவி

ஆட்டுக் காலைத்தாரும் என்சாமிவா தாட்டுக் காலைத்தாரும்     (ஆட்டுக்)

அநுபல்லவி

ஆட்டுக் காலைத் தாரும் அம்பல வாணரே

காட்டுப் புலியும் பாம்பும் காத்துக்கொண் டிருக்கின்ற     (ஆட்டுக்)

கின்னரர் கிம்புருடர் ஆதியர் வீணையர்

      கெருட காந்தருவர் சித்தர் வித்தியாதரர்

தன்னிகர் இல்லாத தந்திரர் மந்திரர்

      சரணஞ் சரணமென் றிருகை கூப்பிநிற்கப்

பொன்னின் விமானத்தர் சிவிகை வாகனத்தர்

      பூதகணாதிபர் போற்றி யடிவிரும்ப

அன்ன வாகனத்தன் விண்ணில்ஏற அயன்

      ஆட்டுக் காலைத்தேடிக் கோட்டுப்பன்றி ஆனான்     (ஆட்டுக்)

முப்பத்து முக்கோடி தேவர் குழாங்களும்

      முனிவர் ஆனவரும் இருடிகள் அனைவோரும்

செப்ப மான சந்திராதித்த ருங்கூடிச்

      செயசெய என்று பாதந்தமைத் தேடுகின்றனர்

ஒப்பில்லாத காளி அம்பலத்தே நின்று

      உன்றாளைக் கண்டுதொந் தோமென் றாடுகிறாள்

மெய்ப்பதமாகும் அந்தக் காலைஎனக்குத் தந்தால்

      வேண்டும் அறுபத்தைந்தாம் விளையாட்டாகுஞ் சாமி     (ஆட்டுக்)

ஆக்கிய திசைவளர் திக்குப் பாலகரும்

      ஆதி வைரவரும் நாரணர் அனைவரும்

தாக்கிய தாவர சங்கம கோடியுஞ்

      சந்தித்துப் பாதத்தைக் காத்துக்கொண் டிருக்கவே

பாக்கியஞ் செய்தவன் முயலகன் ஒருகாலைப்

      பற்றி முதுகணையில் வைத்துச் சுமந்துகொண்டான்

தூக்கிய பொற்றாளை எனக்குத்தந்தால் தலைசுமக்கும்

      சுமக்கும்போதும் போதும் போதுஞ்சாமி இந்த     (ஆட்டுக்)

***

7.பல்லவி

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே

அனுபல்லவி:

சேடனார் போற்றும் தில்லை சிதம்பர ஸ்தலத்தை

சரணம்1:

சேரன் சோழன் பாண்டியன் ஹிரண்யவர்மன் கோபுரமும்                                

சூர வீரப்ப பூபன் செய்த திருமதில்களும்                                             

பாருலகும் (பாருளரும்??) போற்றுகின்ற  பஞ்சாக்ஷரப்  படிகளும்         

ஹாரங்கள்  சூழ்ந்த திருவாயிரங்கால்  மண்டபமும்

 சரணம் 2:

கங்கையும் நிறைந்த சிவகங்கையும் படித்துறையும்                  மங்கை சிவகாமி  அம்மை வாசல் மணி மண்டபமும்                திங்களணி திருமூல நாதர் அருட் சன்னிதியும்                              பொங்கு செல்வம் போலுயர்ந்த தங்கப் பேரம்பலமும்

 சரணம்3:

நிர்த்த சபை கனக சபை சிற்சபையின் தரிஸனமும்

முக்தி பெறலாம் எனவே முழங்கும் சின்ன த்வனியும்            

பக்தர்குட் சிறந்த கோவிந்தராஜர் சுற்றிலும் துலங்க                  

ரத்ன ஸ்வர்ணக் கொடி  மரங்களும்

 சரணம்4:

தில்லை மூவாயிரவர் முனிவர் பெரு வீதிகளும்                        அல்லும் பகலும் அளிக்கும் அன்னதான சிறப்பும்                          சொல்லறியா  மாடங்களும் சோலைகளும் வாவிகளும்           நல்ல திருக் கூட்டங்களும் நாலு  திருவீதிகளும்

காணாமல் வீணிலே காலம் கழித்தோமே.

***

8. முத்துத் தாண்டவர் நிறைய கீர்த்தனைகளை எழுதியபோதும் நமக்கு 85 கீர்த்தனைகளே கிடைத்தன.

***

9.இவருடைய எல்லா பாடல்களையும் எழுத்து வடிவில் எங்கே பெறலாம் ?

சைவம்.ஆர்க் 85 பாடல்களை பதிவு செய்துள்ளது. Please go to shaivam. org website

***

10.இயற்றிய பாடல்களில் புகழ்பெற்ற சில:

பூலோக கயிலாசகிரி[2] சிதம்பரம் அல்லாற், புவனத்தில் வேறுமுண்டோ – ராகம் – கல்யாணி, தாளம் – ஜம்பை தாளம்

சேவிக்க வேண்டுமையா[3] – ராகம் -ஆந்தோளிகா, தாளம் – ஆதி தாளம்

சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும் – ராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுட தாளம்

நடனங்கண்ட போதே என்றன் சடலஞ்செய் – ராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம்

பேசாதே நெஞ்சமே பேசாதே – ராகம்-சூரிய காந்தம், தாளம்- மிஸ்ர சம்ப தாளம்

காணாமல் வீணிலே காலங் கழித்தோமே[4] – ராகம் – தன்யாசி, தாளம் – மிஸ்ர சாபு

தரிசனம் செய்வேனே முக்தி கொடுக்கும்[5] – ராகம்- வசந்தா, தாளம்-ஆதி

தெண்டனிட்டே னென்று சொல்லுவீர், நடேசர்க்கு நான் – ராகம் – யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

***

ராகம் -யமுனாகல்யாணி, தாளம் – ஆதி

பல்லவி

தெண்டனிட்டேனென்று சொல்வீர் – நடேசர்க்கு நான்

தெண்டனிட்டேனென்று சொல்வீர்

அனுபல்லவி

அண்டமெல்லாம் பரவுங் கொண்டல் காள் கும்பிட்டேன்

ஆண்டவரெனும் தில்லைத் தாண்டவராயர் முன்போய்த்(தெண்டனிட்டேனென்று)

சரணங்கள்

1. பொருந்தும் காதல்கொண்டு பொன்னிதழ்த் தேனுண்டு

இருந்தோம் சொல்லவோ விண்டு ஏகாந்தம் தனிற்கண்டு(தெண்டனிட்டேனென்று)

2. கண்டால் வரும் அப்பேச்சு கன்னிவயதில் ஏச்சு

பண்டு சொன்னதும்போச்சு பார்வையவன் மேலாச்சு(தெண்டனிட்டேனென்று)

3. மன்னும் நாணம்போக்கி மனதைத் தாள் மலர்க்காக்கிச்

சென்னிமேற்கரங்கள் தூக்கித் தில்லைப்பதியை நோக்கித் (தெண்டனிட்டேனென்று)

–subham—

tags- முத்துத் தாண்டவர் பாடல்கள் ,10 கேள்விகள் ,அருமருந்தொரு தனிமருந்து அம்பலத்தே கண்டேன்