HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-35; இந்துமத கலைச்சொல் அகராதி-35 (Post No.15,434)

Written by London Swaminathan

Post No. 15,434

Date uploaded in Sydney, Australia –  18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து I- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “I ”. English  version was posted yesterday.

Here is the Tamil Version

Human sacrifice in Indus valley

இந்திரன்

உலகின் மிகப்பழைய நூலான ரிக் வேதத்தில் இந்திரன் என்னும் கடவுளே அதிகம் போற்றப்படுகிறார் ; ஆனால் இது ஒரே கடவுளைக் குறிப்பது அல்ல; தலைவன் , எல்லோரையும் வழி நடத்துவோன் என்னும் பொருளில் வருகிறது பறவைகளில் பெரியவன் ககேந்திரன்; மிருகங்களின் தலைவன் – ம்ருகேந்திரன்/சிங்கம், யானைகளின் தலைவன் கஜேந்திரன் ; மனிதர்களில் சிறந்தவன் – நரேந்திரன் ; இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திரன் (பிரசாத்).

ரிக்வேதத்தில் 250 துதிகள் இந்திரன் மீதுள்ளன; மேலும் 50  துதிகளில் வேறு தெய்வங்களுடன் இந்திரன் பெயர் வருகிறது ரிக்வேதத்தில் உள்ள மொத்த துதிகள் 1,028 ; இவைகளில் 25  சதவிகிதத்தை இந்திரன் எடுத்துக்கொள்கிறார்.

மிகவும் பலம் உடையவன், வீரன் என்ற பொருளில் வரும் இந்திரன், விருத்திரன் முதலிய முப்பது அசுரர்களைக் கொள்கிறான். இவைகளில் பல ஆட்கள் அல்ல; இயற்கை சக்திகள் ; உதாரணமாக வான வில்லை இந்திர தனுஷ் என்பார்கள்.

தேவர்களைக் காப்பதால் தேவேந்திரன் என்றும் பெயர்; திசைகளில் கிழக்கு திசையின் அதிபதி; அவனுடைய ஆயுதம் வஜ்ராயுதம்; மனைவி- இந்திராணி/ சசி; மகன்- ஜயந்தன்

புராணக்கதை

கெளதம ரிஷியின் மனைவியான அஹல்யாவை இந்திரன் மானபங்கப்படுத்தியதால் அவரது உடலில் ஆயிரம் குறிகளை ஏற்படுத்தும்படி சாபம் இடுகிறார் ரிஷி; பின்னர் இறைவனை வேண்டி அவைகளைக் கண்களாக மாற்றியதாக சம்பந்தர் முதலியோர் தேவாரப்பாடல்களில் பாடியுள்ளனர்; தமிழிலும் கண்ணாயிரம் என்றபெயர் உண்டு.

சங்க இலக்கியத்தில் இந்திரன்

தொல்காப்பியம் என்னும் பழைய நூல் இந்திரனையும் வருணனையும் தமிழர்களின் தெய்வம் என்று கூறுகிறது; வேந்தன் என்ற பெயரில் அவரைத் தமிழர்கள் குறிப்பிடுகிறார்கள்; சங்க இலக்கியத்திலும் திருக்குறளிலும் இந்திரன் என்ற கடவுள் பல இடங்களில் வருகிறார். புத்தரும் தம்மபத்தில் இந்திரனைப் போற்றுகிறார்.

***

இந்திரா விழா

மழை பெய்வதற்காக ஆண்டு தோறும் இந்திரவிழாவைக்  கொண்டாடுவார்கள்; கடைசி நாளில் இந்திரத் த்வசம்/ கொடி உள்ள கம்பத்தைச் சாய்ப்பார்கள்; இதை ராமாயணத்தில் உவமையாகப் பயன்படுத்துகிறார் வால்மீகி. இந்திர விழாவை தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை நூல்களிலும் காணலாம்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திர விழா இன்றும் தண்ணீர் விழா WATER FESTIVAL என்ற பெயர்களில் நடைபெறுகிறது; ஆசியா முழுதும் இந்திரனின் பெயர்களை இன்றுவரை மக்கள் ஆண் குழந்தைகளுக்குச் சூட்டுகிறார்கள்; மன்னர்களின் பெயர்களில் இந்திரன் அதிகம் வருகிறார். நேபாள நாட்டில் இப்போதும் இந்திரவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.

***

ஐராவதம்

இந்திரனின் யானையின் பெயர் ; தமிழ்நாட்டில் இந்தப்பெயரை ஆண்களுக்கும் சூட்டுகிறார்கள் ;ஐராவதநல்லூர் போன்ற ஊர்ப்  பெயர்களும் இருக்கின்றன. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தெருச் சந்திப்புகளிலும், பூங்காக்களிலும் தபால் தலை களிலும் நான்கு தலைகள் அல்லது நான்கு தந்தங்களுடன் ஐராவதம் உருவம் உள்ளது.

***

இல்வலன்

வாதாபியும் அவனுடைய சகோதரன் இல்வலனும் மனித மாமிசம் உண்ணும் அரக்கர்கள்; பிராமண ரிஷிகளுக்கு வாதாபியை வெட்டி சமைத்துப் போடுவார்கள் . அவர்கள் சாப்பிட்டவுடன் வாதாபி வெளியே வா என்று இல்வலன் கூவுவான். பிராமண ரிஷிகளின் வயிறு கிழிய அவன் வெளியே வருவான். அப்படிப்பட்ட வாதாபியை அகத்தியர் தன்னுடைய வயிற்றைத் தடவி வாதாபி ஜீர்ணோ பவ என்று சொல்லி அவனை ஜீரணம் செய்தார் . இல்வலனும் அழிந்தான்.

***

ஈஸ்வர

சிவனின் பெயர்; கடவுள் என்ற பொதுப் பெயரில் ஏனைய கடவுளுக்கும் பொருந்தும். சிவ பெருமானுடைய பெயர்களில் பின்னொட்டுகளாக ஈஸ்வர வரும்; உ-ம் சுந்தரேஸ்வரர், மஹேஸ்வரன், சோமேஸ்வரன், த்ரயம்பகேஸ்வரன், ராமேஸ்வரன்.

****

இஷ்டதேவதா

ஒருவர் மிகவும் விருப்பப்பட்டு வணங்கும் தெய்வம் ; சிலருக்கு பிள்ளையாரையும் சிலருக்குப் பெருமாளையும் பிடிக்கலாம். பெரும்பாலும் எல்லோரும் குடும்பத்துக்குரிய குல தெய்வத்தை இப்படி இஷ்ட தேவதையாகக் கருதுவார்கள் .

இண்டஸ் வேலி INDUS VALLEY CIVILIZATION

என்னும் சிந்து சமவெளி நாகரீகம்

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மொஹன்சதாரோ ஹரப்பா என்னும் (பாகிஸ்தான்) நகரங்களில் பெரிய நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரை வெள்ளைக்காரர்கள்   சூட்டினார்கள்; ஆனால் இப்போது இது கங்கை- யமுனை நதிக்கரை வரையிலும் குஜராத், ராஜஸ்தான் வரையிலும் 2500  இடங்களில் காணப்படுவதால் இந்தப் பெயர் பொருந்தாது; மேலும் சிந்துவுக்கு முந்திய சரஸ்வதி நதி தீர விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகள் அந்த நதியையும் இத்தோடு தொடர்பு படுத்துகிறது. மார்ட்டிமர் வீலர், மக்கே சார் ஜான் மார்ஷல் Sir John Marshall: Director-General of the Archaeological Survey of India (ASI) ,Mortimer Wheeler: Excavated Harappa and Mohenjo-daro in the 1940s, Mackay போன்ற ஆராய்ச்சியாளர்கள் அவசரப்பட்டு உளறினார்கள். இதனால் இந்த நாகரிக ஆய்வுகள் திசை மாறிப்போய் இன்று வரை எழுத்துக்களைப்    படிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஐம்பதுக்கும் மேலான ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு மொழிகளில் எழுத்துக்களைப்  படித்தும் விளக்கியும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டார்கள் .

ஆரியர்கள் தாக்கியதால் அழிந்தது; திராவிடர்கள் பயந்து ஓடிவிட்டார்கள் என்று உளறிய வெள்ளைத் தோல் ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் குதிரைகளையோ, இரும்பு ஆயுதங்களையோ காட்ட முடியாமல் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள்! ; ஆண்குறி போல இருப்பது சிவலிங்கம் என்றும் மிருகங்கள் சூழ்ந்த உருவம் பசுபதி என்றும் உளறியவர்கள் நர பலி, புலி ராணி, பேய் முத்திரைகள், ஏழு பெண்கள் , நாகராணி, சுவஸ்திகா சின்னங்களுக்கு விளக்கம் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள் தற்கால ஆராய்ச்சியாளர்கள்,  இந்த உளறல் பேர்வழிகளுக்குத் தக்க பதிலடி கொடுத்து வாயை மூடி இருக்கிறார்கள். திராவிட அரசியல்வாதிகள் மட்டும் இது தமிழர் நாகரீகமே என்று சொல்லி நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சொல்லி எல்லோரையும் நகைக்க வைக்கிறார்கள் . கிடைத்த எலும்புக்கூடுகள் எதிலும் திராவிட GENE மரபணுவும் இல்லை; திராவிட குட்டை உருவமும், திராவிட போண்டா மூக்கும் இல்லை. இதுவரை சிந்து சமவெளி மொழியைப் படிக்க ஒரு தமிழனாலும் முடியவில்லை. ஹீராஸ் பாதிரியார் போன்றோர் சொன்ன விளக்கங்கள் எல்லோரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது . அஸ்கோ பர்போலா எழுதிய மிக அருமையான புஸ்தகத்தில் நமது காலத்தில் யாரும் இந்த எழுத்தைப் படிக்க முடியாது என்றே தோன்றுகிறது என்று சொல்லி முடித்துவிட்டார் .

இதன் காலம் 2500 BCE to 1700 BCE

எத்தனை பேர் இது தமிழ் மொழி எழுத்து என்று சாதித்தார்களோ அத்தனை பேர் இது சம்ஸ்க்ருத எழுத்து என்றும் சாதித்து இருக்கிறார்கள் ; எத்தனை பேர் இது திராவிட நாகரீகம் என்று சத்தியம் செய்தார்களோ அத்தனை பேர் இது ஆரிய நாகரீகம் என்றும் சத்தியம் செய்கிறார்கள்!

புதிருக்கு இன்று வரை விடை இல்லை. சிந்து வெளி புஸ்தகங்களைப் படித்தால் மண்டை குழம்பும்; அல்லது நல்ல நல்ல ‘ஜோக்’குகள் கிடைக்கும்!!

முதலில் ஆராய்ச்சி செய்த வெள்ளை முட்டாள்கள், எது எந்த இடத்தில் PROVENANCE , எந்த மட்டத்தில் கிடைத்தது என்று எழுதாததால் அவர்களுக்கு தற்கால ஆராய்ச்சியாளர்கள் முட்டாள் பட்டம் சூட்டுகிறார்கள்.

Neither John Marshal, Director General of Archaeology nor Mackay nor Vats (later excavators) gave any information about the places, layers in their reports.

Later, on examination G.F.Dales did find that Wheeler has misread the archaeological evidence. Neither they belonged to one and the same stratigraphical context nor were there proof of any massacre of Dravidians. Most of the skeletons positively showed that the persons were actually drowned in severe and sudden flood in the river Indus.. K.M Srivatsava aptly remarks “ Indra, therefore ,stands completely exonerated”.

BB Lal says 50 major sites are on Indus river where as 177 early and 283 mature Harappan sites are on the banks of dried Saraswati river that existed before 1700 BC !

***

ஐயர் , ஐயங்கார்

தமிழ்நாட்டிலும் அருகாமை இடங்களிலும் பிராமணர்களுக்கு ஐயர் , ஐயங்கார் என்ற பின்னொட்டு surname suffix இருக்கும் .

உ-ம் பால கிருஷ்ண ஐயங்கார் , சாமிநாத அய்யர்.

ஆர்ய என்றால் கற்றவர் , பாண்பாடு உடையவர், உயர்ந்தோரென்று பொருள்; இது பிராக்ருதத்ததில் அஜ்ஜ என்று மருவி தமிழில் அய்யர் என்று மாறியது. பெரும்பாலும் விபூதி பூசும் சைவர்கள் இப்படி தங்களை அழைத்துக்கொண்டார்கள்; அவர்களிலிருந்து வேறுபடுத்திக்   காட்டுவதற்காகப் பெருமாளை வணங்கும் வைஷ்ணவ பிராமணர்கள் கார் என்ற உயர்வுப் பெயரைச் சேர்த்துக்கொண்டு அய்யங்கார் ஆனார்கள்; இப்பொழுதும் தெலுங்கில் பெரியவர்களுக்கு காரு அடைமொழி உண்டு .

சைவர்களாகிய தமிழ் நாட்டுப் பிராமணர்களில் வடமா, பிரஹத்சரணம், அஷ்டஸஹஸ்ரம் முதலிய பிரிவுகள் உண்டு.

அதேபோல வைவ்ணவர்களில் தென் கலை, வடகலை, செல்லுர் அய்யங்கார் பிரிவுகள் உண்டு.

தென்கலைப் பிரிவினர் ஆங்கில எழுத்து ஒய் Y போல நாமம் இட்டுக்கொள்வார்கள்; தமிழ் மொழிப்   பாஸுரங்களைப் பாடுவார்கள். வடகலைப் பிரிவினர் ஆங்கில எழுத்து யு U  போல நாமம் இட்டுக்கொள்வார்கள் ; சம்ஸ்க்ருத மொழி துதிகளைப் போற்றுவார்கள்.

To be continued ………………………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-34; இந்துமத கலைச்சொல் அகராதி-34, இந்திரன், சிந்துவெளி நாகரீகம், அய்யர் , அய்யங்கார்

அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)

Written by London Swaminathan

Post No. 15,433

Date uploaded in Sydney, Australia –  18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 24

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 24

***

முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. …

முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே,

என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே,

முக்தியைத் தரும் பெருமாளே.

இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     595 – மெய்ச் சார்வு அற்றே,

     768 – கட்காமக்ரோத,

     1116 – உற்பாதம் பூ,

     1117 – எற்றா வற்றா,

     1118 – செட்டாகத் தேனை,

     1119 – பட்டு ஆடைக்கே,

     1120 – பத்து ஏழு எட்டு,

     1121 – பொற்கோ வைக்கே,

     1122 – பொற் பூவை,

     1123 – மெய்க்கூணைத் தேடி  … என்று தொடங்கும் பாடல்கள்.

***

ஐந்து கோசங்களும் திருப்பதி மலையில் முருகனும்

திருப்பதி மலையில் முருகன் இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறுகிறார் அருணகிரி .

சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி … சீச்சீ என்று வெறுக்கத்தக்க

தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற)

மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி,

நித்திரைக் கோசம் வேரற … தூக்கமும், ஆன்மாவை

முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும்* வேரோடு அற,

சீவன் முத்தியிற் கூடவே … ஆன்மா முக்தி நிலை அடைந்து

விடுதலை பெற,

களித்து அநுபூதி சேர … யான் மகிழ்ந்து பேரின்ப

அநுபவத்தைப் பெற,

அற்புதக் கோல மாமென … அற்புதத் தோற்றம் இது என்று

கூறும்படியாக

சூரியப்புவிக் கேறி யாடுக … சூரிய மண்டலத்தில் யான் சென்று

அங்கு நடனம் புரிய,

சீலம் வைத்தருள் தேறியேயிருக்க அறியாமல் … ஒழுக்க

வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல்,

பாசம் விட்டுவிட் டோடி போனது … பாசங்கள் என்னை

விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை

போது மிப்படிக்கு ஆகிலேன் … போதும் போதும். இப்படிப்

பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம்.

இனிப் பாழ்வழிக்கு அடைக்காமலே … இனியாகிலும்

இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல்

பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென …

என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக

இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து,

தாபரித்து நித்த ஆரம் ஈதென … ஆதரவுடன் யான்

நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக

பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே … உன்

திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக.

தேசில் துட்டநிட்டூர … ஞானம் இல்லாத துஷ்டனும்,

கொடுமை வாய்ந்தவனும்,

கோதுடைச் சூரை வெட்டி … குற்றங்கள் நிறைந்தவனுமான

சூரனை வெட்டி,

யெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட்கு … எட்டுத்

திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான

அறிஞர்களின்

ஏத மேதவிர்த்தருள்வோனே … துயரத்தை நீக்கி அருளியவனே,

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி … தன் திருக்கரங்களில்

சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும்,

வித்துருப் பாதன் … பவளம் போன்ற சிவந்த பாதங்களை

உடையவருமான சிவபெருமானின்

ஓர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா …

ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி

பெற்றெடுத்த அழகிய குருநாதனே,

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான …

காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா,

நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்

புலிவேளூர் … நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில்,

காள அத்தியப் பால்சி ராமலை … திருக்காளத்தி, அதன்பின்

திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும்

தேச முற்றுமுப் பூசை மேவி … நாடு முழுவதும் மூன்று

காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று,

நற் காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே. … நல்ல

காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி

வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்):

அன்னமய கோசம் – உணவும் உடலும் கூடியது,

பிராணமய கோசம் – வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள்  இவற்றுடன் உயிரும் கூடியது,

மனோமய கோசம் – மனம் மட்டும்,

விஞ்ஞானமய கோசம் – ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது,

ஆனந்தமய கோசம் – ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது.

***

கதை 1

கிரவுஞ்ச மலையின் கதை

பாவக்கார் கிரி பொடி பட்டுப் போகச் சூரர்கள் தலை இற்று

இட்டு ஆடப் போர் புரிகின்ற வேலா … (வருபவர்களை உள்ளே

மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன்* என்னும் அசுரனாகிய)

மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து

வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே,

திகிரிப் பொன் பாணிப் பாலனை மறை கல் புத்தேள் அப்

பூம(ன்)னை சினம் உற்றுச் சேடில் சாடிய கந்த வேளே …

சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின்

பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில்

வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது

திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே,

தினை உற்றுக் காவல் காரியை மணம் உற்றுத் தேவ பூவொடு

திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ் தம்பிரானே. … தினைப்

புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து

கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து,

விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே.

தன்னிடத்தே வழி காட்டி உள்ளே வந்தவர்களை மாயையால் மடக்கி மாய்வித்த கிரவுஞ்சன் என்னும் அசுரன், அகத்திய முனிவர் அங்கு வர, அவரையும் வழி தடுமாறச் செய்தான். இதை அறிந்த முனிவர் நீ இந்த மலையாகவே இருக்கக் கடவாய். முருகன் கை வேலால் இறப்பாய் என்று சாபம் இட்டார்.

***

ஒரே நொடியில் உலகம் சுற்றிய முருகன்

பூமியை முதலில் வலம் வந்தவர் யூரி ககாரின் இல்லை !

மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த

குமரேசா … மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே,

மறி தாவு செங்கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த

முருகேசா … மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய

சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி

தேவி பெற்ற முருகேசனே,

***

கதை 2

காஞ்சீபுர ஏகாம்பரேஸ்வரர் கதை

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறுகைக்கு … ஏகாம்பரேஸ்வரராய்

விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு,

கற்புத் தவறாதே … கற்பு நிலை தவறாமல்,

கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி … கம்பா நதிக்கரையில்

காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த*

கச்சிச் சொக்கப்பெருமாளே. … கச்சி என்ற காஞ்சீபுரத்தில்

அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் காமாக்ஷி தேவி சிவபிரானின் இடது பாகத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்தாள். தேவியின் திறத்தை உலகுக்குத் தெரிவிக்க எண்ணி சிவனார் கம்பா நதியில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார். லிங்கம் வெள்ளத்தில் கரையுமே எனக்கருதி தேவி லிங்கத்தைத் தழுவ, லிங்கத்தில்  தேவியின் வளைத் தழும்பும், மார்த் தழும்பும் தோன்றின. ஈசன் தேவிக்குத் தன் இடப்பாகத்தை ஈந்தான் – கச்சி புராணம்.

***

கதை 3

காந்தமும் ஊசியும் கச்சியப்பரும் கந்த புராணமும்

காந்தக் க(ல்)லும் ஊசியுமே என ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர்

பெறு(ம்) … காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற* மேன்மை பொருந்திய

காஞ்சிப் பதி மா நகர் மேவிய பெருமாளே. … காஞ்சி

என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதி ஏட்டை தினம் இரவில் முருகன் திருவடியின் கீழ் வைக்க,  மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிய குறிப்பு எனக் கருதலாம்.

***

கதை 4

குமர கோட்டத்தின் கதை

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த … தன்

வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே,

குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே. … குமரக்கோட்டம்*

என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன் குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்- காஞ்சிப் புராணம்.

***

கற்பக விநாயகரின் மஹிமை

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் …

யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி,

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்

நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை

இளையோனே … துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே,

துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட

நிக்ரக … அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின்

பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே,

துஷ்டர்களை அழிப்பவனே,

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா …

(மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*,

துங்க கஜாரணியத்தில் உத்தம … உயர்வு பெற்ற

திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே,

சம்பு தடாகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து

உறை பெருமாளே. … சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.

To be continued…………………..

Tags – அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 24 , பஞ்ச கோசம் , காஞ்சீபுர கதை, காந்த ஊசி, கந்த புராணம், சொல் அழகு, கிரவுஞ்ச மலை

ராமாயணத்தில் வரங்கள் (39) காலகேயனை ராவணன் வென்றது! (Post.15,432)

Ravana scaring children in Dasara Festival. 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,432

Date uploaded in London – 17 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (39)    

ராமாயணத்தில் வரங்கள் (39) காலகேயனை ராவணன் வென்றது!

ச. நாகராஜன்

அடுத்து யுத்த காண்டத்தில் பத்து வரங்கள் பற்றிய செய்திகளைக் காண்கிறோம்.

யுத்தகாண்டத்தில் ‘ராக்ஷஸர்களது வசனம்’ என்ற ஏழாவது அத்தியாயத்தில் ராமனுடன் போர் தொடுப்பது பற்றி மந்திராலோசனை செய்ய விரும்பிய ராவணன் அனைவரையும் அழைத்து ஆலோசனை கூறுமாறு அழைக்கிறான். 

உடனே அங்கு குழுமியிருந்த அனைத்து ராக்ஷஸர்களும் ராவணனைப் புகழ்ந்து அவனுடைய வலிமையைச் சுட்டிக் காட்டுகின்றனர். அவன் பெற்ற வெற்றிகளைப் பட்டியலிட்டுச் சொல்கின்றனர்.

“போகவதி என்னும் நகருக்குச் சென்று நீங்கள் பன்னகர்களை வென்றீர்கள்.கைலாச மலையில் வசிக்கும் குபேரனை ஜெயித்து புஷ்பக விமானத்தைப் பறித்துக் கொண்டு வந்தீர்கள். உங்கள் நட்பை விரும்பிய அசுரமன்னன் மயன் தன் மகளை உங்களுக்கு மணம் முடித்து நட்பைப் பெற்றான். மது என்ற அசுர மன்னனை அடிமை ஆக்கினீர்கள். பாதாள லோகம் சென்று வாஸுகியும் தக்ஷகனும், சங்கனும் ஜடீ என்பவனும் உங்கள் அடிமையாக ஆகச் செய்தீர்கள்.” 

இவ்வாறு கூறிய அசுரர்கள் மேலும் கூறினார்கள் இப்படி: 

அக்ஷயா பலவந்தஸ்ச சூரா லப்தவரா: புன: |

த்வயா சம்வத்ஸரம் யுதத்வா சமரே தானவா விபோ ||

ஸ்வபலம் சமுபாஸ்த்ரித்ய நீதா வஷமரிந்தம் |

மாயாஸ்சாதிகதாஸ்தத்ர வஹவோ ராக்ஷஸாதிப ||  

யுத்த காண்டம் ஏழாம் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 10, 11

ராக்ஷஸாதிப – ராக்ஷஸ மன்னா!

அரிந்தம – சத்துரு சம்ஹார

விபோ – பிரபுவே

புன: – மேலும்

லப்தவரா – வரம் பெற்று

அக்ஷயா – அழிவற்ற

பலவந்த: – பலசாலிகளும்

சூரா: ச – சூரர்களுமான

தானவா: – அசுரர்கள்

ஸ்வபலம் – தேவரீரது பலத்தை

சமுபாஸ்த்ரித்ய -கொண்டு

சம்வத்ஸரம் – ஒரு வருட காலம்

சமரே யுத்தயா – போரிட்டு

த்வயா – தேவரீரால்

வசம் – அடிமைத்தனத்தில்

நீதா: – கொண்டுவரப்பட்டார்கள்’

தத்ர – அவ்விடத்தில்

மாயா: ச – மாயா வித்தைகளும்

பஹவ: – பல

அதிகதா: – தெரிந்து கொள்ளப்பட்டன

இவ்வாறு கூறிய அசுரர்கள் மேலும் பலபடியாக ராவணனைப் புகழ்ந்தனர்.

இங்கு அவர்கள் காலகேயனை ராவணன் வென்றதைக் குறித்துப் பேசுகின்றனர். ஒரு வருட காலம் யுத்தம் செய்து காலகேயனை ராவணன் வெற்றி பெற்றான்.

இங்கு வரம் பெற்ற செய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. எப்போது எதற்காக என்பன போன்ற விவரங்கள் தரப்படவில்லை. 

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-34; இந்துமத கலைச்சொல் அகராதி-34 (Post No.15,431)

Indra on Iravata in Indus Valley Seal (Harappa)

 Written by London Swaminathan

Post No. 15,431

Date uploaded in Sydney, Australia –  17 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 ஆங்கில எழுத்து I– ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “I ”. Tamil version will be published tomorrow.

INDRA

Indra is the most celebrated deity in the Rig Veda, with approximately 250 hymns directly dedicated to him. As the king of gods and god of storms/war, he is featured in over 25% of the 1,028 total hymns in the text, with an additional 50 hymns often co-praising him alongside other deities. 

Indra is a supreme heroic figure, often associated with the star Antares. These hymns focus on his martial prowess, destruction of Vritra, and role as protector, with significant references in the Rig Veda and Atharva Veda.

 Known as the King of Gods (Vendhan in Tamil literature) and a powerful warrior. He possesses over 35-40 names, including Vritrahan (slayer of Vritra) and Aaji krt (race maker).

He is the God of the East.

His name is used in male names throughout Asia until this day. His weapon is Vajrayudha.

Indra is not one person according to Kanchi Shankaracharya (1894-1994)

It means leader, head, chief; examples- Mrgendra, Gagendra, Gajendra

According to the Mahabharata, Indra seduced or tried to seduce Ahalya, wife of Gautama Rishi. And the sage’s curse impressed upon him a thousand marks resembling the female organ, so he was called Sa-yoni; but these marks were afterwards changed to eyes and hence he is called Netra Yoni and Sahasraksha, the thousand eyed (Yoni is female organ). But there is no support for this story in the Rig Veda, the oldest book in the world.

Tiru Jnana Sambandar who lived 1400 years ago during the reign of Mahendra Pallava and Pandyan Nedumaran refers to 1000 eyes of Indra. After Indra’s prayer Lord Shiva changed his 1000 Yoni signs into 1000 eyes.

In Tamil Nadu you may find men named ‘ Mr One Thousand’ (Kan Ayiram in Tamil)

Indra in Tamil Literature

Indra is the most popular Tamil God according to the oldest Tamil book Tolkappiam. Tolkappiar wrote this grammatical treatise around 1st century BC. He lists all the four important Vedic Gods INDRA, VARUNA, VISHNU and SKANDA (another form of AGNI) as Gods of four Tamil Lands.  

Tolkappiar was not the only one who praised Indra. We see Indra throughout Tamil literature. Sangam Tamil literature mentions his name in several places and the heaven under Indra is mentioned in innumerable places. Pura Nanauru, Tirukkural and Tamil epics did not miss his name.

***

INDRA FESTIVAL

Indra Festival was a very popular festival in ancient Tamil Nadu according to twin Tamil epics Silappadikaram and Manimekalai. It was first mentioned in Mahabharata and Ramayana. But in the Vedas we have some information which is interpreted by scholars as Indra festival. Atharva Veda mentioned Indra Dwaja (banner or flag of Indra). Rig Veda hinted at it.

At present Indra festival is celebrated as a grand Royal festival in Nepal. Gunabhadra, a king of 10th century CE started this festival in Nepal. They call it Yenya or Indra Jatra. Bengalese also celebrated it.

Raksha Bhandan celebrated all over India and the Water Festivals celebrated in Laos, Cambodia, Thailand and Burma has got some links with Indra, the god of rain.

***

IRAVATA

Airavata, also known as Iravata or Irawatha, is the mythical white elephant and vahana of Indra, the King of the Gods, considered the “king of elephants”. Airavata represents power, is associated with rain and clouds, and its depiction alongside Indra is found on seals from the Indus Valley Civilization.

He is shown with Four Heads or Four Tusks in sculptures, stamps and seals of South East Asia.

*** 

INDRANI

Wife of Indra.

***

ILVALAN

Ilvalan is a character from Hindu mythology, an Asura brother of Vatapi, known for a trap where Vatapi would turn into an animal to be eaten by Brahmins before being called out of their stomachs. The stories highlight that Sage Agastya defeated them by digesting Vatapi. Vatapi Jeerno Bhava- Let Vatapi be digested—story shows that Agastya annihilated the cannibals in the Indian forests.

***

ISVARA

A term used in the text to refer to God, indicating the supreme deity worshipped by the followers. Mostly used with Lord Siva as a suffix.

Sundareswara, Maheswara, Someswara, Rameswara , Trayambakeswara

***

ISHTADEVATA

Iṣṭadeva (इष्टदेव).—a favourite god, one’s tutelary deity. The deity one particularly likes to  aore.

Derivable forms: iṣṭadevaḥ (इष्टदेवः).

Iṣṭadeva is a Sanskrit compound consisting of the terms iṣṭa and deva (देव).

a chosen tutelary deity, favourite god, one particularly worshipped. Each family has a Kula Devata as well. Mostly, that God will be Ista Devata.

***

INDUS VALLEY CIVILIZATION

Tiger Goddess in Harappa 

Narabali in Harapa

The world was misled by some scholars in the case of Indus Valley Civilization. They made two or three false statements as a result of which we are unable to decipher the script until today. More than fifty different decipherments are available today and none of them is accepted by everyone. The first false statement made by the early excavators introduced the Aryan- Dravidian division into it. The second false statement introduced the Dravidian decipherment theory in the script. Both not only failed to make any progress but also prevented others to look at it from different angles.

Calling the greatest civilization of the world as “Indus” Valley Civilization itself is wrong. Most of the scholars agree on it because more than 2000 sites have been discovered since the excavation of Mohenjo-Daro and Harappa on the banks of River Indus. Satellite information from space and ground water analysis by the nuclear scientists show that the mighty River Saraswati was flowing through North India long ago

Religious belief of Indus valley people remains a puzzle until today. John Marshal, Director General of Archaeology made some sweeping statements about certain objects he discovered in Mohenjo-Daro and misled the world. He was very unprofessional and forgot to mention where these objects were discovered.  

He described some objects as symbols of phallic worship. He said the circular stone objects were representations of female genital organs (Yoni) and lingam shaped objects were male organs. Those were up to two feet in height. Marshal classified these objects into three groups: Lingas, Baetylic Stones and Ring Stones. No information is published to show where they were found. Neither Mackay nor Vats (later excavators) gave any information or new finds in their reports.

 Later scholars pointed out the linga stones may be gamesmen or weights. Ring Stones might have been used to erect pillars or used for astronomical calculations. Since they did not find anything like this anywhere else in further excavations they even questioned the statement ‘’Phallic worship was an important element of Harappan religion’’.

Ghost Seal in Harappa

Sir Mortimer Wheeler was the one who made all Indians idiots! He fooled all the Indians by saying that he found a clinching evidence for the massacre of Indus people when he saw 37 skeletons scattered in disorderly manner at Mohenjodaro. “It may be no mere chance that at a late period at Mohenjodaro, men, women and children appeared to have been massacred there. On circumstantial evidence, Indra stands accused” (Wheeler 1947:82). Later, on examination G.F.Dales did find that Wheeler has misread the archaeological evidence. Neither they belonged to one and the same stratigraphical context nor were there proof of any massacre. Most of the skeletons positively showed that the persons were actually drowned in severe and sudden flood in the river Indus. Only two or three out of 37 skeletons bore cut marks and those too were found to have healed up. So he wrote a paper entitled ‘The Mythical Massacre at Mohenjo-Daro’ and exploded the myth of Aryan destruction of Harappan cities. K.M Srivatsava aptly remarks “ Indra, therefore ,stands completely exonerated”.

Indus civilization is not Indus civilization anymore. There are more sites on the banks of River Sarasvati than Indus. BB Lal says 50 major sites are on Indus river where as 177 early and 283 mature Harappan sites are on the banks of dried Saraswati river. All the early scholars were proved wrong on Indus Civilization when the scientific proof for drying of Sarasvati was dated 1700 BC. According to Kalyanaraman (2002), out of 2600 archaeological sites, over 1500 settlements were found on the Saraswati River Basin.

Horse: Use of Horse was debated for long. At first, foreigners wrote that Aryans came by horses and destroyed Indus people with iron instruments. But they could not find any iron or horse bones! They contradicted themselves! Now there are horse bones. But they are not foreign horses!

***

IYER, IYENGAR

The name “Iyer” is a title and a caste name primarily associated with a Brahmin community from the South Indian state of Tamil Nadu. The term “Iyer” is believed to have originated from the Sanskrit word “Arya,” signifying a person of noble or respectable lineage. Historically, Iyers have been priests, scholars, and administrators, known for their adherence to Vedic traditions and their contributions to various fields, including Carnatic music, literature, and mathematics. The name is a marker of social identity and is often used as a surname by individuals belonging to this community. Derivable or associated names are not typically found, as Iyer is more of a caste marker than a given name. Later others also used it to mean they are equal to Iyers. Even Christian preachers misused it.

There are subsects in the community like Vadama, Brahacharnam , Ashtasahsram etc.

***

The name Iyengar is a surname primarily found among the Vaishnavite Brahmin community of Tamil Nadu, India. It is a derivative of “Aiyar,” a common Brahmin surname, with the honorific suffix “-gar” added, denoting respect and status.

Tami Followers of Vishnu also are divided into sub sects like Vadakalai (northern branch) and Thenkaalai (southern branch) and Sellur Iyangars.

Iyers have Vibhuti as caste mark and Iyangars have Namam as caste mark. Thenkalai followers have Y shaped Namam (naamam). Vadakalai followers have Ushaped Namam (naamam).

To be continued ………………………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-34; இந்துமத கலைச்சொல் அகராதி-34, Indra, Indus valley, Iyer, Iyengar

முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)

Written by London Swaminathan

Post No. 15,430

Date uploaded in Sydney, Australia –  17 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 23

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 23

***

திருமால் முருகனின் யானை வாகனம் ஆனார் !

அத் தத்து அத்திக்கு அத்தற்கு எய்த்த அத்திக்கு அத்துப்

பலம் ஈவாய் … அந்த மனக் கவலை கொண்டிருந்த, ஐராவதம் என்றயானைக்குத் தலைவனாகிய இந்திரனுக்கும், (தவம் செய்து) இளைத்துப்போயிருந்த அந்த (திருமாலாகிய) யானைக்கும்* சித்திக்கும்படியான பலம் அளித்தவனே,

அர்ச்சித்துப் பொன் செக்கக் கொச்சை தத்திக்குச் செச்சைத்

தொடை சூழ்வாய் … வள்ளியைப் பூஜித்து**, அழகிய செம்மை வாய்ந்த திருந்தாப் பேச்சைப் பேசும் கிளிபோன்ற அந்த வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டியவனே,

கத்து அத்தித் தத்து அத்தில் கொக்கைக் கைத்தச் சத்திப்

படை ஏவும் … ஒலிக்கின்ற கடலில் ஆபத்தான நிலையில் இருந்த மாமரமாகிய சூரன் மீது கையில் இருந்த சக்தி வேலைச் செலுத்தியும்,

கற்பச் சத்திப் பொற்புச் சத்தி கச்சிச் சொக்கப் பெருமாளே. …

கற்புக்கு அணிகலமாகிய பார்வதி அளித்த அழகிய சக்தி வேற்படையை ஏந்தியும், காஞ்சீபுரத்தில் வாழும் அழகிய பெருமாளே.

நீண்ட தவத்துக்குப் பின்பு, திருமாலை யானையாக்கி அதனை முருக வேள் ஊர்ந்தார். இதனால் முருகன் கயாரூட மூர்த்தி ஆனார் – திருமுருகாற்றுப்படை.

** வள்ளிக்கு அர்ச்சித்ததும், மாலை சூட்டியதும் வள்ளியிடம் முருகனுக்கு இருந்த பெருங் காதலை விளக்கும் – கந்த புராணம்.

****

வல்லினப்ப பாடல் – சொல் வளம் !

கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக்

கொத்து உற்று … கொக்கின் நிறம் போல தலையில் பற்றியுள்ள

சிகையின் மயிர்த் தொகுதி வெண்மை நிறத்தை அடைந்து,

உக்குப் பிணி உற்றவனாகிக் குக்கிக் கக்கிக் கடையில் பல்

தத்து உற்றுக் கழல … மெலிந்து, நோயுற்றவனாகி, இருமி, வாந்தி

செய்து, இறுதியில் பற்கள் எல்லாம் ஆட்டம் கண்டு விழுந்து ஒழிய,

கொத்தைச் சொல் கற்று உலகில் பல பாஷை திக்கித்

திக்கிக் குளறிச் செப்பி … இழிவான சொற்களைக் கற்று

உலகத்திலுள்ள பல மொழிகளை தடைபட்டுத் தடைபட்டுக் குழறிப் பேச,

தப்பிக் கெடு பொய்ச் செற்றைச் சட்டைக் குடிலைச் சுமை

பேணும் சிக்கு அற்று … தவறுதலான வழியில் சென்று, குப்பை

நிறைந்த சட்டை என்னும் இந்தக் குடிசையாகிய உடலின் சுமையை

விரும்புகின்ற சிக்கல் நீங்கப் பெற்று,

உட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப்

புகலப் பெறுவேனோ … உள்ளத்தில் கருணை என்னும் எண்ணம்

வாய்க்கப் பெற்று, தூய்மையானதும் நற் கதியைத் தர வல்லதுமான தமிழ்ப்பாக்களை நினைத்தபடி கோர்வையாகச் சொல்லும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு

எதிரிட்டு … அங்குமிங்குமாகப் பல இடங்களில் போர் செய்யத் துணிந்து, மிக அருகில் வந்து நெருக்கி எதிர்த்து,

அத்ரத்து எற்றிக் கடுகப் பொரு சூரன் … ஆயுதங்களைச்

செலுத்தி விரைவாகச் சண்டை செய்த சூரன்

அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள்

புக்குப்பட்டுத் துருமத்து அடைவாக … உடம்பு கெட்டுப் போய்,

ஆயுதங்களைக் கைவிட்டு, பயந்து, கடலுக்குள்ளே புகுந்து, மாமர

உருவத்தை அடைந்து நிற்க,

தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது கண் …

அகங்காரத்துடன் இருந்த வீரம் எல்லாம் தக்குத் திக்கெனத் தடுமாற,

கண்ணும், மற்ற உணர்ச்சிகளும் அழிந்துவிட,

கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில் கணம் ஆடி …

கைகளை மட்டும் மிகவும் கொட்டி ஆர்ப்பரித்து, உடலுடன் சில விநாடிகள் ஆட்டம் கண்டு,

சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய் … சக்தியாகிய

வேற்படை குத்திய வலியால் (சூரன்) துடித்துக் கதறி ஒலி செய்ய, தர்மமான போரைச் செய்தவனே,

சத்திக் கச்சிக் குமரப் பெருமாளே. … சக்தியாகிய காமாட்சி தங்கும்

காஞ்சீபுரத்தில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே.

வலிய சூர சம்ஹாரத்தை விவரிக்கும் இந்தப் பாடல் வல்லினங்கள் மிகுதியாக அமைந்த பாடல்.

***

WORLD’S FIRST MIGRATION AND POPULATION EXPLOSION ANECDOTES

உலகின்  முதல் மைக்ரேஷன்= பாபுலேஷன் எக்ஸ்ப்ளோசன் நிகழ்ச்சி

புயல் அத்தைக் குயில் தத்தைக் கிளை புக்குத் தொளை

பச்சைப் புன முத்தைப் புணர் சித்ரப் புய வீரா … புயலை*

வாகனமாகக் கொண்ட தேவயானையையும், குயில் போன்ற பேச்சை உடையவளும், (நிறத்தால்) கிளி போன்றவளும், கிளிகள் புகுந்து மூக்கால் தொளைத்து உண்கின்ற பச்சைத் தினை விளைந்த புனத்தில் (காவல் இருந்த) முத்துப் போன்ற வள்ளி நாயகியையும் சேர்க்கின்ற அழகிய புயங்களை உடைய வீரனே,

புரவிக் கொட்பு இரத அற்றத்து இருள் திக்கிப் படி மட்கப்

புகல் பொன் குக்குட வெற்றிக் கொடியோனே … குதிரைகள்

சுழன்று வரும் சூரியனுடைய தேர் இருளான சமயத்தில் உலகு

தடுமாறி வலிமை குன்றிப் போக, (இருள் நீங்கும்படி) உரத்துக்

கூவுகின்ற அழகிய சேவல் என்ற வெற்றிக் கொடியை உடையவனே,

கயில் அச்சுத் தர தத்துச் சயிலத்து உத்தர நிற்கக் கரணிச்

சித்தர் உள் கச்சிப் பதியோனே … பூமியை சமநிலையில்

வைத்துள்ள ஆதாரமானது சாய்ந்து பயத்தைத் தர, ஆபத்தான

நிலையிலிருந்த இமய மலையில் வட திசை உயர்ந்து சமமான

நிலையில் நிற்கச் செய்தவரான சித்தராகிய அகத்திய முனிவர்*

தியானித்து வணங்கிய காஞ்சீபுரத்தில் வாழ்பவனே,

கடலில் கொக்கு அடல்கெட்டுக் கரம் உட்கத் தரம் உட்கப்

பொரு சத்திக் கர சொக்கப் பெருமாளே. … (சூரனாகிய) மாமரம்

வலிமை இழந்து தன்னுடைய தீமை போய் நடுங்குதல் உண்டாக,

மேன்மை போய் அஞ்சுதல் உண்டாகும் படியாக சண்டை செய்த

சக்தி வேலை ஏந்திய திருக்கரத்தனே, அழகிய பெருமாளே.

இந்திரனுக்கு மேகம் வாகனம். எனவே அது அவன் மகள்

தேவயானைக்கும் வாகனம்.

** பார்வதியின் திருமணத்தின் போது இமய மலையில் கூடிய முனிவர் பெருங் கூட்டத்தால், வட திசை தாழ்ந்தது. சிவபெருமான் ஆணையின்படிஅகத்தியர் தென் திசைக்குச் சென்று, பொதிய மலையை அடைந்து, பூமியை நிலை நிறுத்தினார்.

வட நாட்டிலிருந்து அகத்தியர் 18  குடிகளுடன் தென்னாட்டிற்கு வந்த நிகழ்ச்சிஉலகின் முதல் குடிப் பெயரேற்றம் ஆகும்.மேலும் உலகத்தின் முதல் ஜனத் தொகைப் பெருக்க நிகழ்ச்சியும் இதுதான்.பைபிளில் உள்ள யூதர் (EXODUS) குடியேற்றத்துக்கும் முந்தியது இது !

****

திருப்புகழில் பஞ்ச பாண்டவர் பெயர்கள்

கருமமான பிறப்பற … வினையின் காரணமாக நேர்ந்த இந்தப் பிறப்பு தொலைவதற்கு

ஒருகதி காணாது எய்த்துத் தடுமாறும் … ஒரு வழியும் தெரியாமல் இளைத்துத் தடுமாறுபவரும்,

கலக காரண துற்குண சமயிகள் … குழப்பத்தை விளைவிக்கும்

பொல்லாத குணமுடையவருமான சமயவாதிகளின்

நானா வர்க்கக் கலைநூலின் … பலவிதமான சாஸ்திர நூல்களில்

வரும் அநேக விகற்ப விபரித … சொல்லப்பட்ட அனேக

மாறுபாடுகள் கொண்டதும், பொருந்தாததுமான

மனோபாவத்துக்கு அரிதாய … மன உணர்ச்சிக்கு எட்டாததான,

மவுன பூரித சத்திய வடிவினை … மெளனநிலை, நிறைவு இவற்றைக் கொண்டதான, உண்மை ஒளியை

மாயா மற்குப் புகல்வாயே … நான் இறப்பின்றி விளங்குவதற்காக

உபதேசித்து அருள்வாயாக.

தரும வீம அருச்சுன நகுல சகாதேவர்க்குப் புகலாகி … தருமன்,

வீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவர்க்கும் பாதுகாப்பு அளிப்பவனாகி,

சமர பூமியில் விக்ரம வளைகொடு … போர்க்களத்தில் வெற்றிச்

சங்கை (பாஞ்சஜன்யத்தை) ஊதி,

நாளோர் பத்தெட்டினிலாளும் … நாள் ஒரு பதினெட்டில் நிகழும் போரில்

குரு மகீதல முட்பட … குருக்ஷேத்திரம் பாழ்நிலமாக,

உளமது கோடாமல் க்ஷத்ரியர்மாள … தனது திருவுள்ளம்

கோணாது நெறிமுறையில் நிற்கவும், கெளரவ அரசர்கள் யாவரும் இறந்து படவும்,

குலவு தேர்கடவு அச்சுதன் மருக … (அர்ச்சுனனின்) விளக்கமுற்ற

தேரைச் செலுத்திய அச்சுதனின் (திருமாலின்) மருகனே,

குமாரா கச்சிப் பெருமாளே. … குமாரஸ்வாமியே, காஞ்சீபுரத்துப்

பெருமாளே.

—-SUBHAM—

TAGS- திருமால், முருகனின், யானை வாகனம் , திருப்புகழில் அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part -23, பஞ்ச பாண்டவர்

உலகால் போற்றப்படுவது எப்படி? (Post No.15,429)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,429

Date uploaded in London – 16 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம் 

உலகால் போற்றப்படுவது எப்படி?

 ச. நாகராஜன்

கர்மணா மனஸா வாசா சக்ஷுஷா ச சதுர்விதம் |

ப்ரசாதயதி யோ லோகம் தம் லோகோனுப்ரஸீததி ||

எவன் ஒருவன் தனது செயலாலும் மனதாலும் வாக்காலும் கண்களாலும் உலகை சந்தோஷப்படுத்துகிறானோ அவன் உலகால் போற்றப்படுவான்.

நல்லோர் மகிழ்வது எப்போது?

துஷ்யந்தி போஜனே விப்ரா மயூரா கனகர்ஜனே |

சாதவ: பரகார்யேஷு கலா: பரவிபத்திஷு ||

அந்தணர்கள் போஜனத்தால் சந்தோஷம் அடைகிறார்கள்.

மயிலானது மேக கர்ஜனையைக் கேட்டு மழை வருவதால் சந்தோஷப்படுகிறது.

நல்லவர்கள் மற்றவர்களுடைய சாதனையால் சந்தோஷப்படுகிறார்கள்.

கெட்டவர்களோ மற்றவர்கள் அழிவதால் சந்தோஷப்படுகிறார்கள்.

உலோபி மகிழ்வது எப்போது? 

லுப்தமர்த்தேன க்ருஹ்ரீயாத் க்க்ருத்தமஞ்சலிகர்மணா |

மூர்கசந்தாநுவ்ருத்தேன யாதாதத்யேன பண்டிதம் ||

ஒருவருக்கும் ஈயாமல் இருக்கும் உலோபி செல்வத்தால் கவரப்படுகிறான். கோபம் கொள்பவனோ  கைகளைக் குவித்து நிற்பதால் சாந்தமடைகிறான். ஒரு மூர்க்கனோ அவனது நடத்தையை அங்கீகரிப்பதால் மகிழ்கிறான். ஒரு பண்டிதனோ சத்தியத்தின் தன்மையால் கவரப்படுகிறான்.

உலோபியின் குணம் பற்றி வள்ளுவர் கூறுவது இங்கு ஒப்புநோக்கத் தக்கது. குற்றங்களில் எல்லாம் தனித்து இலங்குவது பற்றுள்ளம் கொண்டு யாருக்கும் எதையும் ஈயாத தன்மை தான்!

குறள் 438: பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

            எண்ணப் படுவதொன் றன்று.

சரண் அடைந்தேன்காப்பாற்றுவீராக! பிரார்த்தனை!

ஆயுர்நஷ்யதி பஷ்யதா ப்ரதிதினம் யாதி க்ஷயம் யௌவனம்

ப்ரத்யாயாந்தி கதா: புனர்ன திவஸா: காலோ ஜகத்தக்ஷக: |

லக்ஷ்மீஸ்தோயதரங்கபங்கசபலா வித்யுச்சலம் ஜீவிதம்

தஸ்மான்யாம் சரணாகதம் சரணதம் த்வம் ரக்ஷ ரக்ஷாதுனா ||

வாழ்நாளாவது ஒவ்வொரு நாளும் கழியக் கழிய ஒருவன் பார்க்கும் போதே குறைந்து கொண்டே போகிறது. இளமை கழிகிறது. சத்தியம் அழிகிறது. காலமானது உலகை விழுங்குகிறது. கடல் அலை போல வளமானது நலிகிறது. மின்னல் போல வாழ்க்கை மின்னி மறைகிறது. ஆகவே, ஓ! சரண் அடைவோரைக் காப்பவரே, சரணடைந்த என்னைக் காப்பாற்றுவீராக!

மழை பொழிய பிரார்த்தனை!

ஷம் தோ வாத: பவதாம் ஷம் நஸ்தபது சூர்ய: |

ஷம் ந: கனிக்ரதத் தேவ: பர்ஜன்யோ அபிவர்ஷது ||

எங்களைத் தூய்மைப்படுத்தும் தென்றலுக்கு வெற்றி.

பிரகாசமாக ஒளிரும் சூரியனுக்கு வெற்றி.

மழைமேகத்திற்கு அதிபதியான அஸ்வினுக்கு நமஸ்காரம்.

மழை மேகம் நீரைப் பொழியட்டும்! 

இனிமையாகப் பேசு! 

ப்ரியவாக்யப்ரதாநேன சர்வம் துஷ்யந்தி ஜந்தவ: |

அதஸ்ததேவ வக்தவ்யம் வசனே கா தரித்ரதா || 

பிரியமான வார்த்தைகளைப் பேசுவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.  ஆகவே அப்படி மட்டுமே பேச வேண்டும். ஒருவன் ஏன் வார்த்தைகளில் தரித்திரத்தைக் காட்ட வேண்டும்?!

 “வார்த்தைகளில் கஞ்சத்தனமாக இருக்காமல் இனிய வார்த்தைகளையே பேசு” என்பதே இதன் பொருள்

 இனியவை கூறல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று”  (குறள் 100)

 பொருள்:

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது, கனிகள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துப் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்ற முட்டாள்தனமாகும்.

**

திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)


Written by London Swaminathan

Post No. 15,428

Date uploaded in Sydney, Australia –  16 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

22திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 22

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 22

திருப்புகழில் திருமால் அவதாரங்கள்!

குறியவன் செப்பப் பட்டஎவர்க்கும் பெரியவன் … வாமன

வடிவமாகிக் குறுகி, ஆனால் சொல்லப்படும் யாவரினும் பெரியவர்

ஆனவரும்,

கற்பிக்கப்படு சுக்ரன் குலைகுலைந்து உட்கக் சத்யமிழற்றுஞ்

சிறுபாலன் … கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்கிராச்சாரியார் உள்ளம் நடுநடுங்கி அஞ்சும்படி, உண்மையையே உரைத்த சிறு குழந்தை பிரகலாதனின்

குதலையின் சொற்குத் தர்க்கமு ரைக்குங் … மழலைச் சொல்லிற்கு

எதிர்வாதம் பேசிய

கனகன் அங்கத்தில் குத்தி … ஹிரண்யனுடைய உடலைக் குத்தி,

நிணச்செங் குடர் பிடுங்கி … மாமிசம் நிறைந்த சிவந்த குடலைப்

பிடுங்கி,

திக்குற்ற முகச்சிங்க முராரி … எட்டுத் திசைகளிலும் பிடறி மயிர்

பறக்கும் சிங்க முகத்தை உடைய நரசிம்மரும், முரன் என்ற

அரக்கனைக் கொன்ற முராரியும்,

பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண் … ஒளிவீசும் படப்

பொறிகளை உடைய பாம்பு ஆதிசேஷன் மீது

துயில்கொளுஞ் சக்ரக் கைக்கிரி … துயில்பவரும், சக்ராயுதத்தைக்

கையிலே தாங்கும் மலை போன்றவரும்,

சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்றநி றத்தன் … தூய மேகம்

போன்ற அழகிய நிறத்தை உடையவரும்,

ஜகதாதை … உலகுக்கெல்லாம் தந்தையும்,

புனிதசங்கத்துக் கைத்தல நிர்த்தன் … பாஞ்ச ஜன்யம் என்ற

பரிசுத்தமான சங்கைக் கரத்திலே கொண்டவரும், (காளிங்கன் என்ற

பாம்பின் தலையில்) நடனமாடியவரும்,

பழையசந்தத்தைப் பெற்றமடப்பெண் … பழமையான (மோகினி)

வடிவத்தைப் பெற்று இளம்பெண்ணாக வந்தவரும்,

புகலுகொண் டற்குச் சித்தியளிக்கும் பெருமாளே. … புகழப்

பெறும் நீல மேகம் போன்ற நிறத்தினருமாகிய திருமாலுக்கு வீடு

பேற்றினைத்* தந்தருளிய பெருமாளே.

காஞ்சியில் ‘திருமேற்றளி’ என்ற இடத்தில் திருமால் சிவசாரூபம் பெற வேண்டி, நீண்ட தவம் செய்தார். திருஞானசம்பந்தர் உருவில் முருகன் அங்கு வந்து முகுந்தனை லிங்க வடிவமாக்கினார் – காஞ்சிப் புராணம்.

****


ஏழிசைகள் பற்றி

ப்ரிதி ஒழிந்து ஒக்கக் கைக்கிளை துத்தம் குரல் ஆதி பிரிவில்

கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும் … விருப்பம் முழுதும்

ஒழிந்து ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா

இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம்* முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், ஸ்வர பேதமும்,

சிற்பச் சித்ரம் உருக்கும் பிரதி அண்டத்தைப் பெற்று அருள்

சிற்று உந்தியும் … சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகிய உருக்கமான நுண்கலையும், (இந்த ப்ரபஞ்சத்தின்) ஒவ்வொரு அண்டத்தையும்  பெற்றருளியதுமான சிறிய வயிறும்,

நீலக் கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும் … இருண்ட கறுத்த

மேகத்துக்கு நிகரான கூந்தலும்,

திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின் கன வடம்

கட்டப்பட்ட கழுத்தும் … நெற்றிப் பொட்டும், செம் பொன் பட்டமும்,

முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும்,

திருவான கருணையும் சுத்தப் பச்சை வனப்பும் … தெய்வத்

தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சை நிற அழகும் உள்ளவளும்,

கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும் கவுரி அம்பைக்கு புத்ர

எவர்க்கும் பெருமாளே. … தியானிக்கும் அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் அம்பிகையுமான கெளரி (பார்வதி) தேவிக்கு மகனே, எல்லார்க்கும் பெருமாளே.

தமிழின் ஏழிசைகள்:

குரல் (ஷட்ஜம்), துத்தம் (ரிஷபம்), கைக்கிளை (காந்தாரம்), உழை (மத்திமம்), இளி (பஞ்சமம்), விளரி (தைவதம்), தாரம் (நிஷாதம்) என்பன.

ஒப்பிடுக

காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகத்தில் தமிழ் இசைக் கருவிகள் பட்டியலை ஒரே பாடலில் அழகாகக் கொடுத்திருக்கிறார்:

“ துத்தங்கைக் கிள்ளை விளரி தாரம்

உழைஇளி ஓசைபண் கெழும பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி டாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்து

அத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்பன் இடம்திரு வாலங் காடே”

இதில் குரல், துத்தம், கைக்கிளை உழை இளி விளரி தாரம் என்பன ஏழு ஸ்வரங்களாகும்.

சச்சரி,கொக்கரை, தக்கை, தகுணிதம் கரடிகை, வங்கை, மெந்தோல் ,டமருகம், குடமுழா என்பன தோல் கருவிகள். அல்லது தாளம் எழுப்பும் கருவிகள். துந்துபி ஊதும் கருவி.

***

பார்வதியும் பரமசிவனும் ஒன்றே (அர்த்தநாரி)

குலசயிலத்துப் பிறந்த பெண்கொடி … சிறந்த மலையாகிய

இமயமலைக்குப் பிறந்த கொடி போன்றவள்,

உலகடை யப்பெற் றவுந்தி … உலகம் முழுவதையும் ஈன்றெடுத்த

திருவயிற்றை உடையவள்,

அந்தணி … அழகிய தட்பத்தை (காருண்யத்தை) உடையவள்,

குறைவற முப்பத்திரண்டு அறம்புரிகின்றபேதை …

குறைவில்லாமல் முப்பத்திரண்டு அறங்களையும்* முறையே புரியும்

பாலாம்பிகை,

குணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரி … நற்குணங்களைத் தரித்தவள்,

மந்திர யந்திரத்தில் வீரத்துடன் வீற்றிருக்கும் சங்கரி,

கணபண ரத்நப் புயங்க கங்கணி … கூட்டமான படங்களையும்,

ரத்தினங்களையும் உள்ள சர்ப்பங்களைக் கைகளில் வளையல்களாகத் தரித்தவள்,

குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சி … மேரு மலையை

வில்லாக வளைத்து, திரிபுரத்தைச் சினத்துடன் எரித்த** வஞ்சிக் கொடி போன்றவள்,

நீலி கலப விசித்ரச் சிகண்டி … நீல நிறத்தினள், தோகை மயிலின்

அழகிய சாயலை உடையவள்,

சுந்தரி கடியவி டத்தைப் பொதிந்த கந்தரி … பேரழகிகொடிய

விஷத்தைக் கழுத்திலே பொதிந்தவள்**,

கருணைவி ழிக்கற்பகம் … கருணை பொழியும் விழிகளை உடையவள், கேட்டவரம் நல்கும் கற்பகத் தரு,

திகம்பரி யெங்களாயி … திசைகளையே ஆடைகளாய் உடைய எங்கள் தாய்,

கருதிய பத்தர்க்கிரங்கும் அம்பிகை … அவளை நினைத்த

பக்தர்களுக்கு கருணை புரியும் அம்பிகை,

சுருதிதுதிக்கப் படுந்த்ரியம்பகி … வேதங்களால் போற்றப்படும்

முக்கண்களை (சூரியன், சந்திரன், அக்னி) உடையவள்**,

கவுரிதிருக்கொட்டமர்ந்த … (இத்தனை பெருமைகளை உடைய)

கெளரியாகிய காமாக்ஷியின் கோயிலாகிய திருக்கோட்டத்தில்

(காஞ்சீபுரத்தில்) வீற்றிருப்போனே,

இந்திரர் தம்பிரானே. … தேவர்களுக்கெல்லாம் தலைவர்களான

இந்திரர்கள் வணங்கும் பெருமாளே.

** சிவபிரானைக் குறிக்கும் யல்களும் இயல்புகளும் இங்கு பார்வதி தேவிக்கும் பொருந்துவன. ஏனெனில் தேவி சிவனின் இடது பாகத்தில் இருப்பவள்.

***

விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை

பணம் பத்திக் கணத் துத்திப் படுக்கைக் கச்சபத்து இச்சைப்

படுக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே. … படங்களின்

வரிசையையும், நெருங்கிய புள்ளிகளையும் உடைய ஆதிசேஷனை

படுக்கையாகக் கொண்ட, ஆமை உரு எடுத்ததிருமால் ஆசைப்பட்ட

இடமான* கச்சி நகரில் (காஞ்சீபுரத்தில்) உறையும் அழகிய பெருமாளே.

பாற்கடலைக் கடைந்த போது திருமால் கச்சபமாக (ஆமையாக) முதுகு கொடுத்துத் தாங்கிப் பின்னர் இறுமாப்பு அடைந்து கடலைக் கலக்கினார். அந்த ஆமையை விநாயகர் அடக்கி மடிவிக்கஅதன் ஓட்டைச் சிவ பெருமான் அணிந்தார். பின்னர் திருமால் குற்றம் தீர்ந்து காஞ்சியில் ஜோதிலிங்கத்தைப்

பூஜித்து அந்நகரில் விளங்கினார் – காஞ்சிப் புராணம்.

மேலும் ஒரு கதை !

புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை …

திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவவழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை

புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து அருள்வோனே … கூட்டி

வைத்த (அந்தப்) பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாய் நின்று

பிரணவப் பொருளை) ஓதுவித்து அருளியவனே,

செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து

எற்றி … அகந்தை கொண்ட அந்த நாய் போன்று இழிந்தோர்களாகியஅசுரர்களைக் குத்தியும் போரில் புகுந்து பிடித்து மோதியும், சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும் வீரா … கோபித்து

அழியச் செய்தும் சண்டை செய்த வீரனே,

திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய …

பிழையில்லாமல் சொல்லப்படும் சுத்தமான இயல், இசை, நாடகம் என்று மூவகைகளால் ஓதப்படும் தமிழ் (விளங்கும்)

சித்ரத் திருக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே. … சிறப்பு

வாய்ந்த மேன்மையான கச்சி என்னும் ஊரில் வாழும் அழகிய பெருமாளே.

வித்யுன்மாலிதாரகாட்சன்கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன்வெள்ளிஇரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான்

அவர்களை எரித்தபோதுசிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில்இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்

– சுந்தரர் தேவாரம்.

—subham—

Tags– திருப்புகழில்திருமால் அவதாரங்கள்விஷ்ணு,  விநாயகர் அடக்கிய கதை அரிய செய்திகள் Part ௨௨,  சொல் அழகும்பொருள் வளமும்

Dharma Artha Kama Moksha in Sangam Literature and Tolkappiam- Part 52 (Post.15,427)

Written by London Swaminathan

Post No. 15,427

Date uploaded in Sydney, Australia –  16 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Purananuru Wonders 12 ; Ancient Tamil Encyclopedia  -Part 52 

Ancient Tamil Encyclopedia -Part 52; One Thousand Interesting Facts -Part 52 

Item 365

 Hindu’s Medical Science

 Eight Birth Defects

Hindus classified disabled people into 8 categories. They are listed in Puram verse 28. The disabled are

the blind with no splendor, the shapeless mass of flesh,
the hunchback, the dwarf, the deaf, the dumb, one who
looks like an animal and an imbecile.

 Tamil poetess Avvaiyar also said this 

“ Rare is human birth, Vadivel (Skanda/Subramanya)! Rarer is birth as a male with perfect limbs , not being deaf, dumb, blind and eunuch and with full use of all the senses. Rarer still is attainment of knowledge and wisdom. Rarer than this is the tendency to give and serve; and rarest of all is a life dedicated to spiritual enlightenment, for when one reaches the end the heavens will open to welcome that person—the perfect of all human beings”. 

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு செவிடு
பேடு நீக்கிப் பிறத்தல் அரிது
பேடு நீக்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

 ***

 Item 366

In Puram verse 28 we have Dharma Artha Kama in the same order as in Hindu Scriptures. Tirukkural and Tolkappiyam also repeat it in many places.

 May your wealth nourish righteousness, prosperity and

pleasure! 

 Tolkappiam, though a grammar book says this in Sutras 92 and 418. This is a Hindu concept seen in epics and all Puranas.

 தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம்

தொல்காப்பியர் கடவுள் பற்றி நிறைய இடங்களில் குறிப்பிடுகிறார். ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது)


 ***

 Item 367 

Stage/ Play simile

Poet Muthukannan Sathanar (Puram Verses 28, 29)

said

 the place looks

like the arena where dancers perform dances.

(In the olden days it was only Dance Drama unlike modern dramas where we see dialogues in prose and no songs at all.)

This simile is used by many Indian and Western poets.

 World is a Drama Theatre

Another famous simile is comparing the world to a drama theatre and the people to actors who leave the stage when the drama is over.

“Great wealth is gradually accumulated like the audience tickling in to witness a show

But its disappearance will be instantaneous, also as it happens after a show”-  -Kural 332

It is in Bhartruhari’s Neeti Satakam

Tamil anthology Purananuru 29 has also referred to the filling up and emptying of the show-arena to bring out the impermanence of the world.

Shakespeare in his Play As You Like it, says

“All the world’s a stage, and all the men and women merely players; They have their exits and their entrances, And one man in his time plays many parts, His acts being seven ages. At first, the infant, mewling and puking in the nurse’s arms”.

We come across similar similes in Viveka chudamani 292 and Bhagavad Gita 18-61

Great men think alike!

***

Item 368

 Senior and Junior in Hinduism

 The poet’s name is Muthu + Kannan, meaning Senior Kannan.

In the Western world we see George Bush Senior, George Bush Junior. In Sanskrit and Tamil this comes as a prefix.

Muthu Kannan= Senior Kannan

Ilam Kannan- Junior Kannan. 

When Hindus print wedding invitations, they say Jyesta Putra/ Putri  or Kanishta Putra/Putri  Senior/ Junior Son/Daughter

*** 

Puranānūru 28, Poet Uraiyur Muthukannan Sāthanār sang to Chozhan Nalankilli, Thinai: Pothuviyal, Thurai: Muthumozhikkānji

1
The wise say that these eight births are not of worth –
the blind with no splendor, the shapeless mass of flesh,
the hunchback, the dwarf, the deaf, the dumb, one who
looks like an animal and an imbecile.

 2

the place looks
like the arena where dancers perform dances.

3

May your wealth nourish righteousness, prosperity and
pleasure!  Greatness!   If it does not do that, you neglect
your own welfare!

புறநானூறு 28பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி 

1


சிறப்பு இல் சிதடும்உறுப்பில் பிண்டமும்,
கூனும்குறளும்ஊமும்செவிடும்,
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்’ என  5
முன்னும் அறிந்தோர் கூறினர், இன்னும்
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது,

 2

வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
கானத்தோர், நின் தெவ்வர், நீயே  10
புறஞ் சிறை மாக்கட்கு அறங்குறித்து, அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடு கழை தாமரைப்
பூம் போது சிதைய வீழ்ந்தெனக், கூத்தர்
ஆடுகளம் கடுக்கும்

அக நாட்டையே,

 3

அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்  15
ஆற்றும் பெரும நின் செல்வம்,


ஆற்றாமை நின் போற்றாமையே.

****

 Item 369

 Puranānūru 29, Poet Uraiyur Muthukannan Sāthanār sang to Chozhan Nalankilli, 

In Puram verse 29 the same poet Muthukannan echoes Bhagavad Gita’s most quoted verse

May the evil ones be punished and those who
are good rewarded, 

परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृताम् ।

धर्मसंस्थानार्थाय सम्भवामि युगे युगे ॥4-8 ॥

 paritrāṇāya sādhūnāṁ

vināśāya ca duṣkṛtām

dharma-saṁsthāpanārthāya

sambhavāmi yuge yuge

 பகவத் கீதை 4-8

To deliver the pious and to annihilate the miscreants, as well as to reestablish the principles of religion, I Myself appear, millennium after millennium.Bhagavad Gita 4-8

***

Item 370

Attack on Atheists

 without slack without you listening to those

who say, “There is no good in doing good, nor any evil in evil
deeds!”

 Please don’t listen to Charuvakas- Sweet Talkers (atheists) who argue against Karma Theory.

***

 Item 371 Be compassionate to all

May you be compassionate to those who live in houses with four
stilts, their roofs thatched with koovai leaves, who come to you
in need, like how you are compassionate to your enemies.

May your actions be of friendship and character!

***

Item 372 World is a Drama Stage

In this world where everything appears and disappears like
actors who act various roles in festival, may you be happy with
your relatives!  May the wealth that you protect bring you fame!

Poet Muthu Kannan repeats what he said in his previous verse. See Above item 367 to read what Tiru Valluvar, Bhartruhari and Shakespeare said about World is a Drama stage

Tirukkural 332,

Sankara’s Viveka chudamani 292

Bhagavad Gita 18-61

Shakespear As You Like It and Bhartruhari Nitisataka

 ***

புறநானூறு 29பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி

 ஐது அடர்ந்த நூல் பெய்து,

புனை வினைப் பொலிந்த பொலன் நறுந்தெரியல்
பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்,
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை!  5
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர்
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம்! ஆங்க
முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்பக்,

 1 

Bhagavad Gita – Parithranaya Sadhunaam


கொடியோர்த் தெறுதலும்செவ்வியோர்க்கு அளித்தலும்,
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, 10

2  Don’t Listen to Atheists/ Charuvakas


நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்!
நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு
வெங்கள் தொலைச்சியும் அமையார், தெங்கின்  15
இள நீர் உதிர்க்கும் வள மிகு நன்னாடு
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள்,

3  Show Compassion


பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு  20
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்று ஆக நின் செய்கை! விழவின்

4  World  is a Drama Stage
கோடியர் நீர்மை போல முறை முறை
ஆடுநர் கழியும் இவ் உலகத்துக் கூடிய
நகைப்புறனாக நின் சுற்றம்!  25
இசைப்புறனாக நீ ஓம்பிய பொருளே.

*****

Item 373 Space – Solar System- Atmosphere 

Hindus had advanced knowledge about the seven layers in the atmosphere and the space without air. It has been mentioned in more than one verse in Puram itself. Here poet Muthukannan says about the Solar System

The path of the red sun, its movement, the planets
around the movement, directions of changing winds,
and existing empty spaces without evidence – all
these are known to intelligent people who can
explain them. 

*** 

Item 374 

Puranānūru 30, Poet Uraiyur Muthukannan Sāthanār sang to Chozhan Nalankilli, 


The path of the red sun, its movement, the planets
around the movement, directions of changing winds,
and existing empty spaces without evidence – all
these are known to intelligent people who can
explain them.
  Yet the knowledge that knows all this
is unable to know you, since your strength is hidden
like a stone missile hidden in the cheek of an elephant.

How can poets reveal who you are?

***

Item 375 

like a throwing stone hid in an elephant’s cheeks,

It is not explained properly by commentators.

They think it is wood apple in the mouth of a an elephant.

That does not make any sense.

 Unsolved puzzle!!

*** 

Item 376

Marine Trade



You are lord of the land where precious things come
by sea through ships which enter ports without
lowering their masts or sails and lightening their
cargo that untrained men unload on the wide paths.

From the days of Karikal Choza we have quite  lot of references to Marin Trade. Before that we have Satavahana references and coins with ship emblem

***

புறநானூறு 30பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளிதிணை: பாடாண்துறை: இயன் மொழி


செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்
பரிப்பும்பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போலஎன்றும்  5
இனைத்து என்போரும் உளரே, அனைத்தும்

2

அறிவு அறிவாகச் செறிவினையாகிக்
களிறு கவுள் அடுத்த எறி கல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர்? கூம்பொடு  10

3
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப் புலப் பெருவழிச் சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே.

—–subham—

Tags- Purananuru Wonders 12 , Ancient Tamil Encyclopedia  Part 52 

One Thousand Interesting Facts -Part 52, Dharma Artha kama, World is a stage, 8 defects, disabled, item 376

ராமாயணத்தில் வரங்கள் (38)  அச்வினீகுமாரர்களான மைந்தன் மற்றும் த்விவிதனுக்கு பிரம்மா வரம் அருளியது! (Post.15,426)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,426

Date uploaded in London – 15 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (38)    

ராமாயணத்தில் வரங்கள் (38) அச்வினீகுமாரர்களான மைந்தன் மற்றும் த்விவிதனுக்கு பிரம்மா வரம் அருளியது!

ச. நாகராஜன் 

அடுத்து சுந்தரகாண்டத்தில் அங்கதனுடையவும் ஜாம்பவந்தருடையுவம் ஸம்வாதம் என்ற அறுபதாவது அத்தியாயத்தில் அச்வினீகுமாரர்களான மைந்தன் மற்றும் த்விவிதனுக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.

லங்கையிலிருந்து மீண்டு வந்த ஹனுமார் அங்கு நடந்ததனைத்தையும் விவரமாக வானரர்களுக்கு எடுத்துரைக்கிறார்.

இதைக் கேட்ட அங்கதன்,  மைந்தன் மற்றும் த்விவிதனைப் பற்றியும் அவர்களின் வல்லமையையும் பற்றி இப்படிக் கூறுகிறான்.

அஸ்விபுத்ரௌ மஹாபாகாவேதௌ ப்லவகசத்தமௌ |

ஏதயோ: ப்ரதியோத்தாரம் ந பஷ்யாமி ரணாஜிரே || 

சுந்தரகாண்டம் அறுபதாவது அத்தியாயம் ஸ்லோக எண் 13 

ஏதௌ – இவ்விருவர்கள்

அஸ்விபுத்ரௌ – அச்வினீதேவகுமாரர்களாய்

மஹாபாகௌ  – மஹாபாகர்களான

ப்லவகசத்தமௌ- வானரோத்தமர்கள்

ஏதயோ: – இவ்விருவர்களுடன்

ரணாஜிரே – யுத்தகளத்தில்

ப்ரதியோத்தாரம் – எதிர்த்துப் போர்புரிய வல்லவனொருவனை

ந பஷ்யாமி – நான் அறியேன்

பிதாமஹவரோத்சேகாத் பரமம் தர்பமாஸ்திதௌ |

அம்ருதப்ராஷினாவேதௌ சர்வவானரசத்தமௌ ||

சுந்தரகாண்டம் அறுபதாவது அத்தியாயம் ஸ்லோக எண் 14

ஏதௌ – இவ்விருவர்கள்

பிதாமஹவரோத்சேகாத் – பிரம்மாவினுடைய வரத்தின் பெருமையால்

பரமம் – அதிக

தர்பம் – கர்வத்தை

ஆஸ்திதௌ – அடைந்தவர்கள்

அம்ருதப்ராஷினௌ – அமுதத்தை அருந்தினவர்கள்

சர்வவானரசத்தமௌ – எல்லா வானரர்களிலும் மேலானவர்கள் 

அஸ்வினோர்மானனார்தே ஹி சர்வலோகபிதாமஹ: |

சர்வாவத்யத்வமதுலமனயோர்தத்தவான் புரா || 

சுந்தரகாண்டம் அறுபதாவது அத்தியாயம் ஸ்லோக எண் 15 

புரா – முன்பு

சர்வலோகபிதாமஹ: – உலகங்களுக்கெல்லாம் பிதாமஹர்

அஸ்வினோ: – அச்வினீதேவர்களின்

மானனார்தம் – கௌரவத்திற்காக

அனயோ: – இவ்விருவர்களுக்கும்

சர்வாவத்யத்வம் – எவராலும் அழிவில்லாமையை

தத்தவான் ஹி – அளித்திருக்கிறார் அன்றோ!

இவ்வாறு கூறிய அங்கதன் ஹனுமாரிடம் நாமே லங்கை சென்று அதை அழித்து விட்டு சீதையை மீட்டுக் கொண்டு வருவோம் என்று வீர மொழி புகல்கிறான்.

இங்கு பிரம்மாவிடமிருந்து எப்போது எதற்காக எப்படி மைந்தனும் த்விவிதனும் வரத்தைப் பெற்றார்கள் என்ற செய்தி தரப்படவில்லை.

அழியா வரம் பெற்றதை மட்டும் வால்மீகி இங்கு குறிப்பிடுகிறார்.

          **        தொடரும் 

சரஸ்வதியின் சகோதரன் முருகன்! திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21 (Post No.15,425)

Written by London Swaminathan

Post No. 15,425

Date uploaded in Sydney, Australia –  15 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

21திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 21

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 21

திருப்பதி மலை மீது முருகன் இருக்கிறார், பஞ்சாப்பில் வயிரவி வனத்தில் முருகன் கோவில் உள்ளது , முருகன் கைகளில் மாதுளம்பழம் என்றெல்லாம் புதிர்போட்ட அருணகிரிநாதர் மேலும் ஒரு புதிர் போடுகிறார். சரஸ்வதியின் சகோதரன் முருகன்! 

சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய தட மயில் தனில்

ஏறிய பெருமாளே. … சகல தலங்களுக்கும் முதலாக விளங்கும்

ஆறு திருப்பதியில்* வீற்றிருக்கும், பெரிய மயில் மேல் ஏறிய, பெருமாளே.

* ஆறு திருப்பதிகள் (படை வீடுகள்):

திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி,

திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்பன. இத்தலங்கள் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்ட முருகவேளின் ஆறு படை வீடுகள்.

ஆற்றுப்படை வீடு என்பது ஆறுபடை வீடு என மருவி நின்றது.

ஆற்றுப்படை என்ற சொல் சங்க இலக்கிய நூல்களான திருமுருகாற்றுப்படை , சிறுபாணாற்றுப்படை பெரும் பாணாற்றுப்படை முதலிய நூல்களிலும் இருப்பதால் ஆற்றுப்படை வீடுகள் என்பதே சரி.

***

சரஸ்வதியின் சகோதரன் முருகன்! 

சாரதியுத்தமி துணைவ முருகோனே … சரஸ்வதி தேவியாம்

உத்தமியின் சகோதரனே*, முருகனே,

ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே … திருஞானசம்பந்தராக

வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே,

ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே. … ஆறு படை வீட்டுத்**

திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே.

முருகனுக்கு பிரமன் மாமன் மகனாதலால் மைத்துனன் உறவு.

எனவே சரஸ்வதி சகோதரி உறவு.

***

தக்ஷயாகத்தில் தண்டிக்கப்பட்ட தேவர்கள் யார் யார் ?

கதி பொருந்தக் கற்பித்து நடத்தும் கனல் தலம் புக்கு …

(வேள்வி இயற்ற வேண்டிய) நியதிக்குத் தக்க ஏற்பாடு செய்து

(தக்ஷன்) வேள்வி நடத்திய அக்கினி குண்டங்கள் இருந்த யாக

சாலையுள் நுழைந்து,

சக்ரம் எடுக்கும் கடவுளும் பத்ம தச்சனும் உட்கும் படி

மோதிக் கதிரவன் பல் குற்றி … சக்கரம் ஏந்தும் கடவுளாகியதிருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் படைத்தல் தொழில் புரியும் பிரமனும் அச்சம் உறும்படி தாக்கியும், சூரியனின் பற்களைக் குத்தியும்,

குயிலைத் திண் சிறகு அரிந்து எட்டுத் திக்கர் வகுக்கும்

கடகமும் தட்டுப் பட்டு ஒழியக் கொன்ற … இந்திரனாம் குயிலின்

திண்ணிய சிறகை வெட்டியும், அஷ்ட திக்குப் பாலகர்களான இந்திரன்,அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோர் அணி வகுத்த சேனைகளும் நிலை குலைந்து அழிந்து போகும்படிக் கொன்றும்,

அபிராமி பதிவ்ரதம் பற்றப் பெற்ற மகப் பெண் பரிவு

ஒழிந்து … பேரழகியும், பதிவிரதத் தன்மையைக் கைப்பிடிக்கப் பெற்ற

இன்பப் பெண்ணும், ஆகிய தாக்ஷாயணியின் (தன்னையும் தன் கணவன் சிவனையும் தக்ஷன் புறக்கணித்தான் என்னும்) வருத்தம் தீரவும்,

அக்கிக்கு உட்படு தக்கன் பரிபவம் பட்டுக் கெட்டு ஒழிய …

நெருப்பில் விழப் பெற்ற தக்ஷன் அவமானப்பட்டு கெட்டு ஒழியவும்,

தன் செ(வ்)வி போய் அப் பனவி பங்கப்பட்டு அப்படி

வெட்கும்படி முனிந்து … தனது அழகு போய் அந்தப் பார்ப்பனியாகிய

சரஸ்வதி (மூக்கை இழந்து) பங்கம் அடைந்து வெட்கும்படியாகவும்,

கோபித்து

அற்றைக் கொற்றம் விளைக்கும் பரமர் வந்திக்கக் கச்சியில்

நிற்கும் பெருமாளே. … அன்று இறுதியில் வெற்றி பெற்ற சிவ

பெருமான் வணங்க, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

தக்ஷயாகத்தில் தண்டிக்கப்பட்ட தேவர்கள் அனைவரையும் பட்டியலிட்டுக்கூறுவது இப்பாடல்.

தக்ஷயாகத்தில் (தக்ஷன் நடத்திய வேள்வி) சிவபெருமானை அவமதித்த காரணத்தால்வீரபத்திரரால் தண்டிக்கப்பட்ட முக்கிய தேவர்கள் மற்றும் முனிவர்கள் பின்வருமாறு:

தக்ஷன்: அவனது தலை துண்டிக்கப்பட்டுவேள்வித் தீயிலேயே எரிக்கப்பட்டது. பின்னர் ஆட்டுத் தலை பொருத்தப்பட்டது.

பாகன் (Bhaga): இவனுடைய கண்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

பூஷன் (Pushan): சூரியன் – இவனுடைய பற்கள் பிடுங்கப்பட்டன.

இந்திரன்: வீரபத்திரரால் மிதிக்கப்பட்டுகடுமையாகத் தாக்கப்பட்டான்.

சந்திரன்: கடுமையாகத் தாக்கப்பட்டார்.

பிருகு முனிவர்: இவனுடைய தாடி மற்றும் மீசை பிடுங்கப்பட்டன.

அக்கினி தேவன்: இவனுடைய கைகள் வெட்டப்பட்டன.

சரஸ்வதி தேவி: மூக்கின் நுனி வெட்டப்பட்டது.

மேலும்யாகத்தில் கலந்து கொண்ட பிற தேவர்கள்முனிவர்கள் மற்றும் தக்ஷனின் படைகள் வீரபத்திரரால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

***

குமணன் பற்றி

குமரன் என்று அர்ச்சித்து அப்படி செப்பும் கவி மொழிந்து

அத்தைக் கற்று அற உற்றும் … குமரன் என்று பூஜித்து, அத்தகைய

பாடல்களைச் சொல்லும் கவிகளைப் பாடி, அவற்றை நன்றாகப் படித்து அப்பாடல்களில் முற்றும் ஈடுபட்டும்,

புவியோர் போய் குனகியும் கைக்குக் கற்பகம் ஒப்பென்று

அனகன் என்று இச்சைப் பட்டது அளிக்கும் குமணன் என்று

ஒப்பிட்டு … உலகோர் அறியாமையால் (செல்வந்தரிடம்) போய் கொஞ்சிப் பேசியும், உமது கைக்கு (கேட்டதைத் தரும்) கற்பகத் தரு தான் நிகரானது என்றும், நீர் யாதொரு பாவமும் இல்லாதவர் என்றும், யாசிப்போர் விரும்பியதை எல்லாம் கொடுக்கும் குமண* வள்ளலே என்றும் உவமைகள் கூறி,

****

குமணன் கதை

கேட்பாருக்கு இல்லை என்னாமல், கொடுக்கும் வள்ளல்களுள் ஒருவன் ‘குமணன்’. கொடையில் மஹாபாரத கர்னணனுக்கு நிகரானவன். அவனுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் இளங்குமணன். அவன் கல்வியறிவு இல்லாத மூடன். அவனுக்குப் பல கெட்ட நண்பர்கள் இருந்தார்கள். இளங்குமணன் தருமத்தின் பெருமையை அறியாத மூடனாகையால், தன் அண்ணன் மீது பகைமை கொண்டான்; குமணனைக் கொன்று விடவும் யோசனை செய்தான். இதனை அறிந்த குமணன், நள்ளிருளில், காட்டிற்கு ஓடி விட்டான்.

ஒருகால், பரிசில் வேண்டிவந்த பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காட்டிற் கண்டு பாடிப் பரவினர். புலவருக்கு கொடுப்பதற்கு கையில் காசு பணம் ஏதுமில்லை. அவன், தன் வாளை புலவர் கையில் தந்து தன் தலையைக் கொய்துகொண்டு தன் தம்பிக்குக் காட்டி, வேண்டும் பொருள் பெற்றுச் செல்லுமாறு வேண்டினன். ஏனெனில்  இளங் குமணன் தன் தமையனது தலையைக் கொண்டு வருவார்க்கு ஏராளமான பரிசு கொடுப்பதாகப் அறிவித்து இருந்தான் .

அவருக்கு மனதில் ஒரு யோசனை பளிச்சிட்டது;  ஒரு செவ்வாழைக் கிழங்கை எடுத்துக் குமணன் தலை போலச் செய்தார்; அதனைத் துணியில் சுற்றி  எடுத்துக் கொண்டு இளங்குமணனிடம் சென்றார். தன் சகோதரன் தலையை   இளங்குமணன் கண்டான். கண்டதும்,  கண்களிலிருந்து நீர் அருவி போலப் பாய்ந்தது. புலவர் கொண்டு வந்தது பொய்த் தலை என்பது விளங்கியதும், அவன் அப்புலவரை நோக்கி, ‘ஐய, என் அண்ணனை உயிருடன் நீர் கொண்டு வந்தால், உமக்கு இப்போது சொன்னபொருளைப்போல இரண்டு மடங்கு  தருவேன்,’ என்று கூறினன்.

கவிவாணர் உடனே காட்டிற்கு ஓடினார். குமண வள்ளலிடம் நடந்ததை நவின்றார். குமணன் பெருங்  களிப்படைந்தான். புலவர்  குமணனை அழைத்துச் சென்றார். இளங்குமணன் தன் அண்ணன் கால்களில் வீழ்ந்தான்; தான் செய்த மூடச் செயலுக்காகத் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்; அரசை அண்ணனுக்கே தந்தான். புலவருக்கு இரு மடங்கு பரிசு கிடைத்தது!

***

பிள்ளையார் சாப்பிடும் பொருள்களின்  பட்டியல்

கனப் பெரும் தொப்பைக்கு எள் பொரி அப்பம் கனி கிழங்கு

இக்கு … கனத்த பெரிய வயிற்றில் எள்பொரிஅப்பம்பழம்கிழங்குகரும்பு இவைகளையும்,

சர்க்கரை முக்கண் கடலை கண்டு அப்பி … சர்க்கரைதேங்காய்,கடலைகற்கண்டு இவைகளையும் வாரி உண்டு,

பிட்டொடு மொக்கும் திரு வாயன் … பிட்டுடன் விழுங்கும் திரு

வாயை உடையவர்,

கவள(ம்) துங்கக் கை கற்பக(ம்) முக்கண் … சோற்றுத் திரளை

உண்ணும் சிறந்த துதிக்கையை உடைய கற்பக விநாயகர் (கற்பகத்தரு போல கேட்டதைக் கொடுப்பவர்), முக்கண்ணர்,

திகழு(ம்) நம் கொற்றத்து ஒற்றை மருப்பன் கரி முகன் …

விளங்கும் நமது வீரம் வாய்ந்த ஒற்றைக் கொம்பர், யானை முகத்தினர்,

சித்ரப் பொன் புகர் வெற்பன் தனை ஈனும் பனவி … அழகிய,

பொலிவுள்ள (மத்தகத்தில்) புள்ளிகளை உடைய மலை போன்ற

கணபதியைப் பெற்ற அந்தணி,

ஒன்று எட்டுச் சக்ரத் தலப் பெண் … (1+8) ஒன்பது கோணங்களை உடைய சக்ரத்தில் ( நவாவரணத்தில் ) வீற்றிருக்கும் பெண்,

கவுரி செம் பொன் பட்டுத் தரி அப்பெண் … கெளரி, செவ்விய

அழகிய பட்டாலாகிய மேலாடை அணிந்துள்ள அந்தப் பெண்,

பழய அண்டத்தைப் பெற்ற மடப் பெண் … பழையவளும்,

அண்டங்களைப் பெற்றவளுமாகிய இளம் பெண்,

பணிவாரை பவ தரங்கத்தைத் தப்ப நிறுத்தும் பவதி …

தன்னைப் பணிபவர்களுடைய பிறப்பு என்னும் அலை கடலை விலக்கி நிறுத்தும் பகவதி (பார்வதி),

கம்பர்க்குப் புக்கவள் பக்கம் பயில் … ஏகாம்பர நாதரைக்

கணவராக அடைந்தவள் ஆகிய உமா தேவிக்குப் பக்கத்தில் அமர்ந்து,

வரம் பெற்றுக் கச்சியில் நிற்கும் பெருமாளே. … வரத்தைப்

பெற்று**, காஞ்சீபுரத்தில் நின்றருளும் பெருமாளே.

** தந்தை சொல்லி அனுப்பியும் பிரமனைச் சிறையினின்று விடாதுபின்னர் அவர் நேரில் வந்து சொல்லிய பின் பிரமனை முருகன் விடுத்தார். இந்த குற்றம் நீங்கமுருகவேள் காஞ்சீபுரத்தில் உள்ள குமரக் கோட்டத்தில் தவம் புரிந்து,

தோஷம் நீங்கி வரம் பெற்றார்.

****

தேவியின் நவாவர்ணம் என்றால் என்ன?

தேவியின் நவாவர்ணம் (Navavarana) என்பது ஸ்ரீ லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மனை, ஸ்ரீ சக்கரம் (ஸ்ரீ யந்திரம்) வடிவில், ஒன்பது வெவ்வேறு அடுக்குகளில் (ஆவரணங்கள்) வைத்து வழிபடும் மிக உயரிய தந்திர வழிபாடாகும்.

‘நவ’ என்றால் ஒன்பது, ‘ஆவரணம்’ என்றால் அடுக்கு, திரை அல்லது சுற்று என்று பொருள்.

நவாவரண பூஜையின் சிறப்பம்சங்கள்:

ஸ்ரீ சக்கர வழிபாட்டின் உச்சம்: இந்த வழிபாடு ஸ்ரீ சக்கரத்தின் மையத்தில் இருக்கும் ‘பிந்து’வை அடைவதை நோக்கமாகக் கொண்டது, இதுவே பரசிவமும் சக்தியும் ஒன்றிணைந்து இருக்கும் இடம்.

ஒன்பது அடுக்குகள்: ஸ்ரீ சக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. வெளியே இருந்து உள்ளே செல்ல செல்ல, தேவியின் வெவ்வேறு சக்திகள் (தேவதைகள், யோகினிகள்) மற்றும் ஒன்பது சித்தி தேவதைகள் வழிபடப்படுகிறார்கள்.

பரிவார தேவதைகள்: ஒவ்வொரு ஆவரணத்திலும் குறிப்பிட்ட முத்ரா தேவதைகள், யோகினிகள் மற்றும் பரிவார சக்திகள் உள்ளனர்.

குண்டலினி யோகத்துடன் தொடர்பு: இந்த வழிபாடு உடலிலேயே ஸ்ரீ புரத்தை (தேவியின் இருப்பிடம்) உருவாக்கி, குண்டலினி சக்தியை மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரத்திற்கு உயர்த்துவதற்கு சமமாகக் கருதப்படுகிறது.

முத்து சுவாமி தீட்சிதரின் நவாவர்ண கீர்த்தனைகள்

முத்துசுவாமி தீட்சிதர் (1776-1835) இயற்றிய நவாவர்ண கீர்த்தனைகள், திருவாரூர் கமலாம்பாளைப் போற்றும் ஒன்பது மிகச்சிறந்த சமஸ்கிருத பாடல்களாகும். இவை தந்திர சாஸ்திரத்தின் ஸ்ரீ சக்ர வழிபாட்டு முறையை அடிப்படையாகக் கொண்டவை. கமலாம்பா நவாவர்ணக் கீர்த்தனைகள், நவகிரகக் கீர்த்தனைகள், மற்றும் பல்வேறு ராகங்களில் அமைந்த அபூர்வமான கிருதிகளைப் படைத்தவர். இந்த பாடல்கள் அனைத்தும் தியானம் மற்றும் தீட்சிதரின் ஆத்மார்த்தமான பக்தி உணர்வை வெளிப்படுத்துகின்றன.

முக்கிய நவாவர்ண கீர்த்தனைகள் (கமலாம்பா நவாவர்ணங்கள்):

முதல் ஆவரணம் (பூபுர சக்கரம்): கமலாம்பா ஸம்ரக்ஷது மாம் (ராகம்: ஆனந்தபைரவி)

இரண்டாம் ஆவரணம் (தசதள பத்மம்): கமலாம்பாம் பஜரே (ராகம்: கல்யாணி)

மூன்றாம் ஆவரணம் (அஷ்டதள பத்மம்): ஸ்ரீ கமலாம்பிகாயா (ராகம்: சங்கராபரணம்)

நான்காம் ஆவரணம் (சதுர்தசாரம்): கமலாம்பிகாயை கநகம் (ராகம்: காம்போஜி)

ஐந்தாம் ஆவரணம் (பஹர்தசாரம்): ஸ்ரீ கமலாம்பிகாயா (ராகம்: பைரவி)

ஆறாம் ஆவரணம் (அஷ்டதளம்): கமலாம்பிகாயா தவ (ராகம்: புன்னாகவராளி)

ஏழாம் ஆவரணம் (ஏகதளம்): ஸ்ரீ கமலாம்பிகாயாம் (ராகம்: சகானா)

எட்டாம் ஆவரணம் (திரிகோணம்): ஸ்ரீ கமலாம்பிகே (ராகம்: கண்டா)

ஒன்பதாம் ஆவரணம் (பிந்து): ஸ்ரீ கமலாம்பா ஜயஜய (ராகம்: ஆஹிரி)

இந்தக் கீர்த்தனைகள் அனைத்தும் இசை மற்றும் தத்துவத்தின் உச்சமாக, செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யர் போன்றோரின் ஸ்வர அமைப்புகளுடன் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

***

சிவனுடைய ஆபரணங்கள் பட்டியல் !

பிறை கரந்தை கொத்து பணி மத்தம் … சந்திரன்திருநீற்றுப்

பச்சைக் கொத்துக்கள்பாம்புஊமத்தம் மலர்,

தலை எலும்பு அப்பு கொக்கின் இறகு அக்கம் … கபால எலும்பு,

கங்கை நீர்கொக்கின் இறகுருத்ராக்ஷ மாலை

பிரமன் அன்று எட்டற்கு அற்ற திரு கொன்றையும் வேணி …

பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை

To be continued………………………..

Tags- சரஸ்வதியின் சகோதரன் முருகன்! அருணகிரிநாதர் அரிய செய்திகள் Part 21 , நவாவர்ணம் , முத்து சுவாமி தீட்சிதர், குமணன் கதை , வள்ளல்,