We have seen a lot of books on Indian literature, but there are very few books that give the literary wonders in Indian inscriptions, stone epigraphs and copper plates. Most of them are in praise of the kings who donated lands or money given to Brahmin scholars. But there are some inscriptions which are inscribed with hymns just dedicated to gods.
There is a beautiful Swastika shaped water well in Tiruvellarai, a town near Trichy, in Tamil Nadu. There we find a four line verse in praise of Vishnu. It is behind the Pundarikakshan temple in the town. It is written during the time of Pallava king Danti varma around 800 CE. The temple is older than Dantivarman period, because Periyazvar and other Vaishnavite Saints have sung in praise of the god residing there.
Though it is a 4 line verse, the message it gives is very important; it says life is short and worship god without delay.
(Stotra, Stuti- hymn on gods)
Nowadays it has become a fashion to inscribe the verses of local saints on the walls of the temples. We can see big marble slabs with those holy verses in several Tamil Nadu temples. Probably all of them copied what one great poet by name Halayudha did in Gujarat. He was from the village Navagrama in Hugly district in Bengal. He composed the well known Halayudha stotra, a hymn on Shiva. He composed this 63 verses long hymn on the god during the rule of Paramar king Vakpati Munja who ruled from 974 to 993 CE.
They are inscribed on four stone slabs fixed on the southern wall of Amareswara temple at Mandhata on the banks of the river Narmada. It is in Madhya Pradesh.
The date of the inscription is 1063 CE. That shows the inscription was made some time after the poet.
Under the hymn is a colophon verse which gives an account of the author. At the end of the stotra is another hymn called Siva dwadasa stotra describing Jyotir Lingas and some Saivaite teachers.
Halayudha served in the court of two kings-
Rashtrakuta king Krishna III, 934-967
Paramara king Vakpati Munja, 974-993
Besides the well known Siva hymn, the poet is known to be the author of the following literary works:
Kavirahasya, a pedantic work of Sanskrit grammar;
Abhidana ratnamala;
Mritasanjivini, a commentary on Pingala s Chandasutra.
There were three more poets or scholars with the same name Halayudha.
One Halayudha, belonging to Vatsa gotra, was the son of Dhananjaiya . He was a great scholar in the court of 12th century ruler of Bengal Lakshmana sena. He wrote
Brahmana sarvasva
Pandita sarvasva
Mimamsa sarvasva
Two more Halayudhas served two more Sena kings of Bengal.
Halayudha means a man with a plough, the name of Balarama, brother of Krishna.
Source book:– Sanskrit and Prakrit Poets known from Inscriptions, Prof. DB Diskalkar,Pune, 1993, with my inputs
Xxx Subham xxx
Tags- Halayudha, stotra, hymn on Shiva, Tiruvellarai, Swastika well, Inscription
இவர்கள் 10 சாளுக்கிய அரசர்களின் அவையில் பணிபுரிந்த 10 பேர் பட்டியல்
கல்வெட்டிலுள்ள சாளுக்கிய அரசர்கள்- சாமுண்ட ராஜ, துர்லப ராஜ பீமா, கர்ண, சித்த ராஜ ஜெய சிம்ம, குமாரபால, அஜயபால மூல ராஜ, பீமா
இவர்கள் 250 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். பலரும் யாக யக்ஞங்கள் செய்தனர்.
சோமேஸ்வர தேவ ஒரு பல்துறை வித்தகர். மஹா காவ்யம் , நாடகம், சுபாஷிதம், ஸ்தோத்ரம், பிரசஸ்தி (புகழுரை) யாத்தவர் ..
அவர் எழுதிய மஹா காவ்யங்கள் – கீர்த்தி கெளமுதி , சுரதோத்ஸவ
எழுதிய நாடகம் – உல்லாச ராகவ
எழுதிய துதி – ராம சதகம், 100 செய்யுட்கள் உடையது.
தனிப்பாடல்/சுபாஷித தொகுப்பு- கர்ணாம்ரித பிரபா
குமார பால என்ற மன்னர் சரிதத்தை அவர் எழுதினார். அது இப்போது கிடைக்கவில்லை
கீழ்கண்ட கல்வெட்டுகள், பிரசஸ்திகளுடன் (மன்னர் மீதான புகழ் உரைகள்) கிடைத்து இருக்கின்றன
1)அபு, தேல்வட , அரசன் விரதவால மற்றும் அவனது சமண மத அமைச்சர்கள் வஸ்துப்பால , தேஜாபால மீதான 74 செய்யுட்கள்
2)வஸ்துப்பால கோவிலில் உள்ள 2 கிர்னார் கல்வெட்டுகள்
3)சத்ருஞ்ஜய பிரசஸ்தி
4)தபோய், வைத்யநாத பிரசஸ்தி
5)தோல்காவிலுள்ள வீரநாராயண கோவிலில் 108 ஸ்லோகங்களுடன் ஒரு பிரசஸ்தி இருந்தது ; ஆனால் இபோது இல்லை.. அவருக்கு போட்டியாக இருந்த கவிஞர் ஹரிஹர பற்றி பிரபந்த கோச நூலில் ராஜசேகரன் என்பவர் எழுதிய குறிப்பில் இந்த தகவல் உள்ளது.
குஜராத்தை ஆண்ட மன்னர்கள் சோமேஸ்வர தேவை மிகவும் மதித்தனர். அவர் அரசவைக் கவிஞர் மட்டும் அல்ல. அரசவைப் புரோகிதரும் ஆவார்.. காளிதாசரை மிகவும் மதிக்கும் அவர், காளிதாசர் மீதும் கவி இயற்றினார் சுரதோத்ஸவ காவியத்தில் உள்ள அந்தக் கவிதை பினருமாறு-
ஸ்ரீ காளிதாஸஸ்ய வசோ விசார் யா நைவால்ய காவ்யே ரமதே மதிர் மே
கிம் பாரிஜாதம் பரிஹ்ருத்ய அந்த பிருங்காலி ரானந்ததி ஸிந்து வாரே
இன்னும் ஒரு இடத்தில் காளிதாசனை பிறவிக் கவிஞர் என்றும், ஸ்ரீ ராமனுடைய வாழ்க்கையையே நேரில் கண்டவர் என்றும் புகழ்கிறார். பாண என்ற கவிஞரையும் அவர் போற்றுகிறார்.
இந்தக் கல்வெட்டு ஒருவரின் பெற்றோர், சகோதரர், பல அரசவைக் கவிஞர்கள், பல மன்னர்கள், பல கோவில்கள், உதலிய பல்வேறு தகவல்களை வெளியிடுவதால் மிகவும் முக்கியமான ஒன்றாகும் .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
உங்களின் பாராசூட்டை பாக் செய்வது யார்?
ச.நாகராஜன்
சார்லஸ் ப்ளம்ப் (Charles Plumb) அமெரிக்காவில் கான்ஸாஸில் ஒரு பண்ணையில் வளர்ந்தவர். கடற்படை அகாடமியில் சேர்ந்த அவர் தனது திறமையால் பைலட்டாக ஆனார்.
அவருக்கு ‘டாப் கன்’ (TOP GUN) என்ற திட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
ஜெட் ஃபைட்டராக ஆன அவர் உக்கிரமான வடக்கு வியட்நாம் போரில் 75 முறை விமானத்தில் பறந்து சாகஸ செயல்களைச் செய்தார்.
இறுதியில் 75வது முறையாக அவர் வியட்நாமில் பறக்கும் போது, அவரது பணி முடிய இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் போது, வியட்நாமில் அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாராசூட் மூலமாகத் தப்பிக்க முயன்ற போது ஹனாய் அருகே அவர் எதிரிகளால் பிடிக்கப்பட்டார்.
ஆறு வருட காலம் வியட்நாமிய சிறையில் அவர் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். சரியாகச் சொல்லப் போனால் 2103 நாட்கள், எட்டு அடிக்கு எட்டு அடி கொண்ட ஒரு செல்லில் அவர் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளானார். C
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் சில காலம் தொடர்ந்து பணியில் இருந்தார். பின்னர் பணி ஓய்வு பெற்றார்.
ஒரு நாள் தனது மனைவி மகனுடன் அமெரிக்க ஹோட்டல் ஒன்றில் அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் அருகே ஒரு மனிதர் வந்தார்.
“நீங்கள் ப்ளம்ப் தானே!. வியட்நாமுக்கு ஜெட் ஃபைட்டரில் பறந்தவர் ஆயிற்றே, சரி தானா?” என்றார் அவர்.
ப்ளம்பிற்கு அவர் யார் என்றே தெரியவில்லை. குழப்பமாக இருந்தது.
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று கேட்டார் அவர்.
“நான் தான் உங்கள் பாராசூட்டை பாக் செய்தவன்” என்று பதில் சொன்னார் அந்த மனிதர்.
பின்னர் மெதுவாகத் தன் தலையை ஆட்டியவாறெ அவர் கூறினார்: “அது நன்கு வேலை செய்தது என்று நான் நினைக்கிறேன்”
உடனடியாக ப்ளம்ப் பதில் சொன்னார் ;”அது அற்புதமாக வேலை செய்தது. இல்லையென்றால் நான் இப்படி உங்களுடன் பேசிக் கொண்டிருக்க மாட்டேன்!”
அன்று முழுவதும் ப்ளம்ப் தான் ஒரு போதும் முன்னர் பேசி இராத அந்த மனிதரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
தனது உயிரே அவர் கையில் இருந்ததை அப்போது தான் அவர் உணர்ந்து கொண்டார். அவர் கப்பலில் இருந்த போது அந்த மனிதரை எத்தனை முறை பார்த்திருக்கக் கூடும். ஒரு முறை கூட அவரைப் பார்த்து புன்சிரிப்பை உதிர்த்ததில்லை; பேசியதில்லை..
பின்னால் சார்லஸ் ப்ளம்ப் அனைவரையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கும் சுயமுன்னேற்றப் பேச்சாளராகத் திகழ்ந்தார்.
தனது உரைகளில் மறந்து விடாமல் அவர் அரங்கத்தில் உள்ள அனைவரையும் பார்த்துக் கேட்கும் ஒரு கேள்வி:
“உங்கள் பாராசூட்டை பாக் செய்தது யார்?”
நம்மில் ஒவ்வொருவரும் உடல்ரீதியிலான பாராசூட், மன ரீதியிலான பாரசூட், உணர்வு ரீதியிலான பாராசூட் மற்றும் ஆன்மீக ரீதியிலான பாராசுட்டி ஆகியவற்றின் தேவையைக் கொண்டுள்ளோம்.
நமது வாழ்வில் பலரும் நமக்கு பாராசூட்டை பத்திரமாக மடித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நாம் தான் அவர்களை இனம் காண வேண்டும். பாராட்ட வேண்டும். பரிசுகள் வழங்க வேண்டும்.
தினமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி : ‘எனது பாராசூட்டை மடித்து வைப்பது யார்?’ என்று தான்!
உலகத்தில் உள்ள ஒப்பற்ற நூல்களில் முதலிடத்தைப் பெறும் அதிசய நூல் திருக்குறள்.
இதில் உள்ள 4310 சொற்களை ‘திருக்குறள் சொல்லடைவு’ என்ற தனது நூலில் தமிழ் மணி சாமி.வேலாயுதம் பிள்ளை அவர்கள் விளக்கி அரும் பணி ஆற்றியுள்ளார். 1952இல் வெளிவந்த நூல் இது.
இந்தச் சொற்கள் மூலம் உலகம் முழுமைக்கும் பொதுவான, எந்தக் காலத்திற்கும் எல்லோருக்கும் பொருத்தமான, ஒரு நூலை இயற்றியுள்ள வள்ளுவரின் மாண்பை எப்படிப்பட்ட சொற்களாலும் விளக்கி விட முடியாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பின் மூலம் பல்வேறு வழிகளில் அவற்றை இணைத்துப் பொருள் காண வழி வகுத்துள்ள வள்ளுவரே வள்ளுவர்.
அவருக்கு இணை யாரும் இருக்க முடியாது.
மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக அமையும் நூல் இதுவே.
பலகாலும் இதைப் படித்து மகிழ்ந்து வருபவன் என்ற முறையில் இதை ஆராய்ந்து என்னிடம் வைத்திருக்கும் குறிப்புகளைக் கொண்டு அவ்வப்பொழுது கட்டுரைகள் படைத்து வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.
இதை www.tamilandvedas.com இல் அவ்வப்பொழுது வெளியிட்டு வந்த லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.
இந்த நூலை நல்ல முறையில் வெளியிட முன் வந்த PUSTAKA DIGITAL MEDIA வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பங்களூர் 13-1-2022
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
தற்காலத்தில் கோவில்களின் சுவர்களில் தேவாரம், திவ்யப் பிரபந்தம் , திருமந்திரம் , திருப்புகழ், அபிராமி அந்தாதி துதிகளை, திருக்குறள் போன்ற நீதி நூல்களை பொறி ப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் இந்த வழக்கத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஹலாயுதன் என்பவர் செய்து இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் மாந்தாதா என்னும் இடத்தில் அமரேஸ்வரா கோவில் இருக்கிறது. அதன் சுவற்றில் சிவ பெருமான் மீது ஹலாயுதர் என்பவர் இயற்றிய ஹலாயுத ஸ்தோத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.பரமார வம்சத்தைச் சேர்ந்த முஞ்ஜா என்ற மன்னரின் அவைக்கள புலவர் அவர்.. அது கி.பி.1063ல் எழுதப்பட்டது . 63 செய்யுட்களைக் கொண்ட அந்த துதியின் பின்னால், செய்யுளை இயற்றியவர் பற்றிய குறிப்பும் உளது.
அதைத்தொடர்ந்து சிவ துவாதச ஸ்தோத்திரம் ஒன்றும் காணப்படுகிறது. அதில் துவாதச (12) ஜோதிர்லிங்க பற்றிப் பாடியுள்ளார் . விவேக ராசின் என்பவரின் சீடரும் சாபல கோத்திரத்தவரும் ஆன கந்தத்வஜர் என்றும் உள்ளது. அந்தக் கவிஞர் ஒரு சைவத் துறவி என்றும் ராஷ்ட்ர கூட வம்ச மன்னர் மூன்றாம் கிருஷ்ணர் சபையிலும் கிபி. 934-967 பரமார வம்ச அரசர் வாக்பதி முஞ்ச சபையிலும் 974-993 பணியாற்றியவர் என்றும் தெரிகிறது
ஹலாயுதன் வேறு சில நூல்களையும் இயற்றியுள்ளார் ; அவையாவன-
கவி ரஹஸ்ய – சம்ஸ்க்ருத இலக்கணம் பற்றியது மூன்றாம் கிருஷ்ணர் என்ற மன்னர் பற்றிய புகழுரையும் இணைக்கப்பட்டுள்ளது.
அபிதான ரத்ன மாலா
ம்ருத சஞ்சீவினி — இது பிங்கலரின் சாந்த சூத்ரம் மீதான வியாக்கியானம்/ உரை
ஹலாயுத: – ஹல என்றால் கலப்பை . இது கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமரின் நாமம்.; தமிழ் சொல் கலப்பை என்பதும் ஹல என்பதும் ஒரே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தன.
முன்காலத்தில் சைவ பெயர் கொண்டவர்கள் விஷ்ணு மீதும், வைஷ்ணவ பெயர் கொண்டவர்கள் சிவன் மீதும் துதிகளை இயற்றி வந்தனர். பிற்காலத்தில் வேற்றுமை பெருகவே அந்த வழக்கம் அருகிவிட்டது
கல்வெட்டுகளில் துதிகளை பொறிப்பதால் அவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் உள்ளது.
xxx
இவர் தவிர மேலும் மூன்று ஹலாயுதர்கள் வாழ்ந்தனர்.வங்காளத்தைச் சேர்ந்த லட்சுமண சேனா மன்னரின் அவையில் இருந்த ஹலாயுதன் , வத்ச கோத்ர தனஞ்சயனின் மகன் ஆவார்.அவர் பிராஹ்மண ஸர்வஸ்வ , பந்த ஸர்வஸ்வ , மீமாம்ச ஸர்வஸ்வ ஆகியவற்றை எழுதியவர்.
மேலும் இரண்டு ஹலாயுதர்கள் சேன வம்ச அரசர்களிடம் பணியாற்றினர்..
Xxx
தமிழ் மொழியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட துதிகள் பொறித்த கல்வெட்டுகள் இல்லை.ஆனால் தந்தி வர்ம பல்லவனின் (CE 800) திருவெள்ளறைப் பாடல் கல்வெட்டு குறிப்பிடத்தக்கது
திருவெள்ளறை சுவஸ்திகா கிணறு
திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவில் உள்ளது. பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடப்பெற்றதால் குறைந்தது 1400 ஆண்டுக்கால வரலாறு பெற்ற கோவில் இது. கோவிலுக்குப் பின் புறம் இந்துக்களின் புனிதத் சின்னமான சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு உள்ளது. அதில் அருமையான பாடல் உள்ளது. நேற்று வாழ்ந்த ஒருவன் இன்று இல்லை என்னும் சிறப்புடையது இந்த உலகம் என்று வள்ளுவன் பாடுகிறான். மஹாபாரதம் யக்ஷப் பிரஸ்னத்திலும் இக்கருத்து உள்ளது. ஆகையால் இறைவனை உடனே பாடிப் பரவுவோம் என்கிறார்கள் பெரியோர்கள்
பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்ற இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும்.. கி.பி 800ல் ஆலம்பக் கிழான் விசைய நல்லூழான் என்பவன் தோண்டி அமைத்தான் இந்த கிணற்றின் சுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது,
ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்
தண்டார் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்!
—சுபம் —
TAGS- ஸ்வஸ்திகா கிணறு, திருவெள்ளறை, கண்டார் காணா , ஹலாயுத, ஸ்தோத்திரம், கல்வெட்டு
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 13
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!
ச.நாகராஜன்
இன்றைய தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தலம் திருச்செங்கோடு ஆகும்.
பழைய காலத்தில் இது திருக்கொடிமாடச் செங்குன்றனூர் என்றும் திருச்செங்கோட்டாங்குடி என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
செந்நிறத்தில் அமைந்த மலை உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சந்நிதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் இல்லாமல் 6 அடி உயரமுடன் முழுத் திருமேனியுடன் காட்சி யளித்து அருள் பாலிக்கிறார்.
பாதி வேட்டி, பாதி புடவை என அர்த்தநாரீஸ்வர விளக்கத்தின் வடிவமாக மூலவர் காட்சி அளிக்கிறார். முழு வடிவமும் வெள்ளை பாஷாணத்தால் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தைப் பற்றிய சுவைமிகு வரலாறு ஒன்று உண்டு.
ஒரு சமயம் கைலாயத்தில் சிவபிரானை வணங்குவதற்கு மஹரிஷி பிருங்கி வந்தார்.
பரமசிவத்தைத் தவிர மற்ற அனைத்தும் அழியக் கூடியதே என்று எண்ணிய முனிவர் பார்வதியாரை வணங்க வேண்டாம் என்று நினைத்து சிவபிரானை மட்டும் வணங்கிச் சென்றார். இன்னொரு நாள் சிவபிரானும் உமாதேவியாரும் ஓர் ஆசனத்தில் பிரிவு இல்லாமல் இறுக அணைந்து வீற்றிருத்தலைக் கண்ட முனிவர் ஒரு வண்டின் உருவத்தை எடுத்துப் பறந்து இருவரின் இடையே இருந்த இடைவெளியில் புகுந்து சிவனை மட்டும் வலம் செய்து, பறந்து சென்றார்.
தேவி சினம் கொண்டாள்.
“என்னை வழிபடாமல் அவமதித்தாய். ஆகவே உன் உடலில் உள்ள என் கூறாக உள்ள அனைத்தும் நீங்கட்டும்” எனக் கூறினாள். உடனே தேவியின் அம்சமான ஊன் முதலியன பிருங்கி முனிவரின் உடலிலிருந்து நீங்கின.
வலுவை இழந்த முனிவர் கீழே விழுந்தார்.
சிவபிரான் முனிவரை நோக்கி, “கிரணம் இன்றி சூரியன் இல்லை. சூடு இன்றி நெருப்பு இல்லை. சக்தி இன்றி சிவம் இல்லை. இந்த உண்மை காணாது மயங்கினையே” என்று கூறி அருள் பாலித்து முனிவரைத் தேற்றினார்.
உண்மையை உணர்ந்த பிருங்கி மாமுனிவர் மனம் மிக மகிழ்ந்து பார்வதி பரமேஸ்வரரை வணங்கி அருள் வேண்டினார்.
சிவம் வேறு, நாம் வேறாக இருத்தலினால் அன்றோ ஒரு முனிவன் ‘நம்மை இகழ நேர்ந்தது’ என்று எண்ணிய தேவியார் கேதாரம், காசி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை முதலிய திருத்தலங்களில் தவம் புரிந்து திருச்செங்கோட்டில் எழுந்தருளி கேதார கௌரி விரதம் இயற்றி சிவபிரானின் இடது பாகம்தனைப் பெற்றார். அர்த்தநாரீஸ்வரராகத் தோற்றமளித்தார்.
இதைத் திருச்செங்கோட்டு புராணம் இப்படி விவரிக்கிறது:
பணிமலையி லெழுந்தருளிப் பரைக்கொருபா கங்கொடுத்த பரிசின் தோற்றம்
இத்தகு பெருமை வாய்ந்த திருச்செங்கோடு கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம் என்று கூறி கொங்குமண்டல சதகம் புகழ்கிறது.
சதகத்தின் 13வது பாடலாக அமைந்துள்ள பாடல் இது:
நெடுவா ரிதிபுடை சூழல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே
இதன் பொருள் : கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் உமாதேவியாரோடு சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரு வடிவாகத் திகழும் திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே என்பதாம்.
திரு ச.நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்’ என்ற அருமையான, பயனுள்ள நூலைப் படித்து மகிழ்ந்தேன்.
திரு ச.நாகராஜன் ஓர் சிறந்த இலக்கியவாதி. சமூக சிந்தனையாளர். பேச்சாளர். இயல், இசை, நாடகம், அறிவியல் சார்ந்த இலக்கியங்களைப் புத்தகங்களாகவும், பத்திரிகைகளில் கட்டுரைகளாகவும் எல்லோருக்கும் பயன் தரும் வகையில் அவர் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அகில இந்திய வானொலியில் அவருடைய சுற்றுப்புறச் சூழல் பற்றிய உரைகள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பல்வேறு மேடைகளிலும் சொற்பொழிவாற்றி எண்ணற்ற தமிழ் நெஞ்சங்களின் இதயம் கவர்ந்தவர். ஆன்மீகம், இலக்கியம், ஜோதிடம், அறிவியல் போன்ற பல துறைகளில் எந்த ஒரு விஷயத்திற்கும் நம் ஐயம் தீரும் வகையில் விடையளிப்பார்.
இன்று உலகெங்கும் உள்ள நாடுகளின் தலைவர்கள் அச்சத்தோடு பார்ப்பது, சீரழிந்து, மாசுபட்டு, சிதையும் சுற்றுப்புறச் சூழல் பற்றியே.
இந்த நூலில் சுற்றுப்புறச் சூழல் பற்றி பல்வேறு கோணங்களில் தகவல்களைத் திரட்டி அலசி ஆராய்ந்து நல்ல கருத்துக்களைத் தெளிவுறத் தந்துள்ளார். 41 கட்டுரைகளில், நம் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் நீர், நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசு படும் விதத்தை அருமையாக விவரித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில ‘நௌலா’ திட்டம் பற்றிய புதுச் செய்தி வழங்குவதோடு, பசுமைக் கட்டிடம் – Green Building – பற்றி, அதன் அவசியத்தையும் விளக்குகிறார். பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டிய அவசியம், நச்சு இரசாயனங்களால் ஏற்படும் கேடுகள், ஒலியால் ஏற்படும் மாசு, அரிய வகை உயிரினங்கள் அழிந்து விடும் அபாயம் பற்றி விவரித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருள்களை எவ்வாறு பராமரித்து சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கலாம் என்பதற்கான வழி முறைகளையும் வாழ்க்கை முறையை எவ்வாறு அதற்குத் தக மாற்றுவது என்பது பற்றியும் கூறுகிறார். தேனீக்கள் அழிந்து விட்டால் உலகமே நான்கு ஆண்டுகளில் அழிந்து விடும் என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கூற்றை நமக்குச் சொல்லி எச்சரிக்கிறார். இன்றைய கால கட்டத்தில், அவசியம் நாம் செயல்பட வேண்டிய தருணத்தை எடுத்துரைக்கிறார்.
நீர் சேமிப்பு, மரம் வளர்த்தல், காடுகளைப் பாதுகாத்தல், வாகனங்கள் உருவாக்கும் மாசு, தட்ப வெப்ப நிலையால் ஏற்படு ஆரோக்கிய சீர் கேடு பற்றி எடுத்துரைத்து நம் சிந்தனைக்கு உரம் இடுகிறார்.
சூழலைப் பாதுகாக்க எளிய வழிகளைத் தெரிவிப்பதோடு, சூரிய சக்தியைப் பயன்படுத்தல், வன விலங்குகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை விவரித்து, நம்மையும் சுற்றுச் சூழல் ஆர்வலராக மாற்றி, சமுதாயம் பயன்படும் நபராக மாறச் சொல்வது நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்தப் புவியை வாழ்வதற்கேற்ற தூய்மையான ஒரு கிரகமாக எதிர் கால சந்ததியினருக்கு, நாம் விட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தும் அற்புதமான நூல் இது.
இதனைப் படித்து, மரம் நடுதல், நீர் சேமித்தல், பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், பிற உயிரினங்களைப் பாதுகாத்தல் போன்ற நற்செயல்களில் நாம் ஈடுபடுவோமாக.
திரு நாகராஜன் தந்துள்ள இந்த நூல் மிகவும் பயனுள்ளது.
மகத்தான அவரின் பணிக்கு, என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லோரிடமும் இந்நூலை எடுத்துச் சென்று, சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமையாகும். மேலும் இது போல் அவர், உபயோகமான நூல்களை வெளியிட, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சென்னை – 11 24-12-2021
சந்தானம் சூரியநாராயணன் M.Sc. M.Phil (Retd) முதல்வர், சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை
*
இந்த நூலுக்கு நான் அளித்த என்னுரையில் ஒரு பகுதி :
என்னுரை
அகில இந்திய வானொலி நிலையம் காலையில் ஒலிபரப்பும் ‘சுற்றுப்புறச் சூழல் சிந்தனை’ பகுதிக்கான உரைகளை கடந்த பல ஆண்டுகளாக அவ்வப்பொழுது வழங்கி வந்தேன். அதன் தொகுப்பை ஒவ்வொரு பாகமாக வெளியிட்டும் வந்தேன். இது ஆறாவது தொகுதி.
இந்த பூமியைக் காக்கும் விழிப்புணர்வைத் தொடர்ந்து ஊட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை.
அதற்கான ஒரு சிறு முயற்சியே இந்த நூல்.
இந்த நூலுக்கு அழகிய முன்னுரை அளித்து என்னை கௌரவித்த திரு சூரியநாராயணன் அவர்களுக்கு என் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி அரும் சாதனைகளைப் படைத்துள்ளார். அத்துடன் அவர் வயலின் வாசிப்பதில் தேர்ச்சி பெற்ற ஒரு நிபுணர். பஞ்சமி நாளன்று பல்வேறு பிரபலமான இசைக் கலைஞர்களை இல்லத்திற்கு அழைத்து கச்சேரிகளை நடத்தி இசை வளர்த்து இசை பட வாழ்பவர். இசைக் கலை நுட்பங்களை நன்கு அறிந்த அவருக்குக் கலாநிதி பட்டம் கிடைத்ததில் வியப்பே இல்லை. பல்வேறு சேவா நிறுவனங்களில் முக்கியப் பங்காற்றி பாரம்பரியம் காக்கும் பண்பாளரான அவர் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரும் கூட.
அவர் இந்த நூலுக்கான அணிந்துரை அளித்திருப்பது மிகவும் பொருத்தமானது.
இந்த நூலை வெளியிட முன் வந்த Pustaka Digital Media நிறுவன உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக.
பங்களூர் 24-12-2021
ச.நாகராஜன்
*
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
English word DOOR is derived from the Sanskrit word DWAAR. Lord Krishna used it in at least two places to give us an important message.
In the Bhagavad Gita, Lord Krishna used it to tell us about the Gate Way (door) to Heaven and Gate Way to Hell. Anyone who reads crime news in Newspapers would agree with Lord Krishna.
First look at the slokas and then we will discuss it.
Happy are the Kshatriyas (warriors), O Partha/Arjuna, for whom such a war comes of its own accord as an open door to heaven.
My comments
All religions say that fighting for own country or religion and dying in such a fighting will take one to Heaven. In Tamil Sangam poems, we see a mother rejoicing after his son died in the war heroically fighting for his country. This Veera Maathaa (Heroic Mother) concept is seen in the Rig Veda as well.
Hindus never believed in absolute Ahimsa/non violence. And the 200 ++++ countries in the world also agree with the Hindus. Army, Navy and Air Force employ the highest number of people in the world. Western countries make big money by selling arms to fighting groups. We also salute our ever vigilant heroic soldiers guarding our borders in the snow clad Himalayas.
We see Asuras and Demons in all religious books and the goodies are always fighting for the welfare of people. Hindus believe in the Tenth Avatar- Kalki Avatar – who will destroy the bad people. In the Fourth Chapter of Bhagavad Gita Lord Krishna says Sambhavaami Yuge Yuge he would manifest himself in every era to protect the good and destroy the evil forces. So Hindus expect another fighting.
Vyasa makes it clear in Udhyoga Parva of Mahabharata as well:
O, you Tiger among men! There are only two types who can pierce the constellation of the Sun (and reach the sphere of Brahman); the one is the Sanyasin who is steeped in Yoga and the other is the warrior who falls in the battle field while fighting– Udhyoga Parva 3-65
There are three gates leading to the hell of self-destruction for the soul—lust, anger, and greed.
Therefore, one should abandon all three.
My comments
I used to go to HM Prisons every week to see Hindu prisoners in England. Hindu prisoners are very few compared to the huge number of Muslim and Christian prisoners. But when Hindu prisoners come with their friends belonging to other religions, they will tell me the stories of their friends as well. For all the prisoners, the reason for coming into the prison is same- Kaama, Krodha, Lobha= Sex, Anger, Greediness.
Everyday we read crime news in newspapers. One can easily divide the offenders into these three types. Lord Krishna told us at least 5000 years ago.
So if we remember these doors or gate ways, we can chose the best or at least avoid the worst.
ஹ்ருஷ்ட ரோமா 11-14 புளகாங்கிதனாய் , மயிர்க்கூச்சம் அடைந்து
ஹ்ருஷ்யதி 12-17 மகிழ்கிறான், மகிழ்தல்
ஹ்ருஷ்யாமி 18-77 மகிழ்ச்சி அடைகிறேன்
ஹே 11-41 அடே
ஹேதவஹ 18-15 காரணங்கள்
ஹேதுனா 9-10 காரணத்தால்
ஹேது மத்பிஹி 13-4 காரணங்களுடன் கூடியதும்
ஹேது ஹு 13-20 ஹேதுவாக, காரணமாக
ஹேதோ ஹோ 1-35 பொருட்டு, காரணமாக
ஹ்ரியதே 6-44 கவரப்படுகிறான்
ஹ்ரீ ஹி 16-2 நாணம்
பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் இத்துடன் நிறைவு பெற்றது . பகவத் கீதையில் 3865 சொற்கள் உள்ளன என்பது ஒரு கணக்கு. இவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகையில் அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் .
இதை புஸ்தகமாகப் பெற விரும்புவோர் எங்களுக்கு எழுதவும். தேவைக்கேற்ப புஸ்தகங்கள் அச்சடிக்கப்படும் .ஈ புக் E BOOK வடிவிலும் கிடைக்கும் .
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
திதி, வார நாட்கள் : ஒரு விளக்கம்!
வாஸரா
தமிழில் : ச.நாகராஜன்
இன்றைய நவீன காலத்து வார நாட்களுக்குச் சமமாக தற்காலத்திய பயன்பாட்டிற்கு ஹிந்து பஞ்சாங்கம் வாஸரா அல்லது வார நாட்களைத் தருகிறது. ரவி வாஸரா, சோம வாஸரா, மங்கள வாஸரா என்பது ஞாயிற்றுக் கிழமை திங்கள் கிழமை, செவ்வாய்க் கிழமை ஆகியவற்றிற்குச் சமமான வார்த்தைகள். இவை குறிப்பிடத்தக்க சொல் இலக்கணச் சாயலையும் கொண்டுள்ளது.
சாந்திரமான நாட்காட்டி ஒரு நாளை நிர்ணயிக்கப் திதிகள் பயன்படுவது போல, கணக்கீட்டிற்கு வாஸாரங்கள் எந்த ஒரு விதப் பயனையும் தருவதில்லை; என்றாலும் கூட, அவை பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களுல் ஒன்றாகவே உள்ளது. இதர நான்கு அங்கங்கள் யோகம், திதி, நக்ஷத்திரம், கரணம். இவையும் கூட வேதாங்க
ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவே ஹிந்து ஜோதிடத்தின் மூலமாகக் கருதப்படுகிறது.
இந்த அமைப்புக்கு எது காரணம் என்று பார்க்கப் போனால் நமக்குக் கிடைக்கும் விடை நவகிரகங்கள் என்பது தான்: சூரியன் (ரவி) சந்திரன் (சோம), செவ்வாய் (மங்கள்), புதன் (புத), வியாழன் (குரு), வெள்ளி (சுக்ர), சனி (சனி), ராகு மற்றும் கேது.
இதில் முதல் ஏழும் ஒவ்வொரு வாஸரத்தின் தலைமையாகும். ராகுவும் கேதுவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களுக்கு உரியன.
இந்த ஒன்பது கிரகங்களும் ராசிகளின் ஊடே செல்பவை. ஆகவே அந்தந்த ராசிக்கு உரியவர்களின் வாழ்க்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துபவை.
ஒரு நாளின் ஆரம்ப மணிக்கு தலைமையாக மேற்கத்திய ஜோதிடத்தில் தரப்படும் வெவ்வெறு தேவதைகள் அதற்குரிய பெயர்களால் தரப்படலாம்.
ஆகவே நமது அமைப்பு மேலை நாடு தருவது போன்ற ஒன்றே தான் என்பதில்லை.
திதிகளும் வாரங்களும் ஒன்றையொன்று சார்ந்திராமல் தனித்தனியாக இருப்பவை. வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்பவை.
திதிகள் வானவியலில் நாட்களைக் கணக்கிடுவதிலும் வானில் நிகழும் கிரகணங்கள் போன்றவற்றைக் கணிப்பதிலும் அதிகமான இடத்தை வகிக்கின்றன.
ஒரு மனிதனின் வாழ்வில் இன்றைய நிலையில் உள்ள நக்ஷத்திரத்திங்கள் அவனுக்கு ஏற்படுத்தக் கூடிய விளைவை நிர்ணயிக்க உதவுவதற்கு வாஸரங்கள், ஜோதிடத்தில் பிரதான இடத்தை வகிக்கிறது.
ஹிந்து மதத்தில் வானவியலும் ஜோதிடமும் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டவை. இவை ஒன்றுடன் ஒன்று கலந்தே இருப்பவை. நாட்களில் ஏற்படும் நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு திதிகளைப் பார்ப்பதே சிறந்தது.
நன்றி : 17-6-2022 TRUTH கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ்
.
*
மூலக் கட்டுரை ஆங்கிலத்தில் கீழே தரப்படுகிறது:
VASARA
The Hindu equivalent for the modernweekday is called as Vâsara or Vâra in themodern usage. Ravi-Vâsara, Som-Vâsara,Mangal-Vâsara etc, which are equivalent ofSunday, Monday and Tuesday, do bear astriking resemblance etymologically.
Although Vâsaras do not serve anycomputational purpose, unlike Tithis, which areused to determine a day in the lunar calendar,they still do form one of the five angas of theHindu Panchanga, the other four being tithi,nakshatra, yoga and karna. They are also
mentioned in the Vedanga Jyotisha, which isconsidered to be the origin of Hindu Astrology.
As for what could be the origin of thissystem, the answer is the Navagrahas: Surya(Ravi, Sun), Som (Moon), Mangal (Mars),Budha (Mercura), Guru (Jupiter), Shukra(Venus), Shani (Saturn), Rahu and Ketu.
The first seven preside over individualVâsaras, while Rahu and Ketu are responsiblefor the Solar and Lunar eclipses. All these nineGrahas are said to move with respect to thefixed constellations in the zodiac, henceinfluencing the lives of the people affected by the
respective constellations. It is not very unlikely,the western belief in astrology, where differentdeities were said to preside over the openinghours of the days, were named after them.
So it is not just a westernised version of ourown system. Tithis and Vâsaras existindependently of each other and fulfil differentrequirements. Tithis have more significance inthe field of Astronomy for maintaining calendarsand predicting celestial events like eclipses.
Vâsaras have Astrological significance, helpingdetermine the effect of the current arrangementof stars on the life of an individual.
But as with everything else in Hinduism,Astronomy and Astrology are closely relatedand these two are easily mixed up with oneanother. It is better to keep track of tithis forthe purposes of a calendar of events.
நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.
பகவத் கீதையின் மொத்த கருத்தை மனதில் கிரகிக்க ஒரு சுலபமான வழி , சுவையான சொற்களை நினைவு வைத்துக் கொள்வதாகும். பகவான் கிருஷ்ணர் சொர்க்கத்தின் கதவுகள் மற்றும் நரகத்தின் கதவுகள் எது என்று சொல்கிறார். இதோ இரண்டு ஸ்லோகங்கள் :
தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக/ ஸ்வர்க வாயில் போன்றது இத்தகைய போர்;
இது கிடைக்கப் பெறும் மன்னர் அனைவரும் பாக்கியவான்கள் .
என்னுடைய வியாக்கியானம்
பகவத் கீதை யுத்தத்தை ஆதரிக்கிறதா? உண்மைதான். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே எப்போதும் யுத்தம் நடை பெறுகிறது. ரிக் வேதத்திலேயே அசுரர்கள் காணப்படுகிறார்கள் . பகவான் கிருஷ்ணரும் நாலாவது அத்தியாயத்தில் ஸம்பவாமி யுகே யுகே என்று சொல்கிறார். அதர்மத்தை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் நல்லோரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் கடவுள் யுகம் தோறும் அவதரிப்பார் என்ற கருத்தே அசுரர்கள்/ அரக்கர்கள்/ தீயோர் எப்போதும் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறது. மேலும் நாம் எல்லோரும் கலியுக அவதாரமாகிய கல்கி அவதாரத்தை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்கிறோம்.
அப்படியானால் யுத்தத்தில் நிறைய பேர் இறப்பார்களே ! அதுவும் உண்மை தான் ; அர்ஜுனன் தனது சொந்த மகனானான அபிமன்யுவையே இழந்தான்; பீஷ்ம பிதாமஹர் , துரோணர், கர்ணன் ஆகியோரும் இறந்ததைக் கண்டோம். ஆனால் போரில் இறப்போர் அனைவரும் சொர்க்கத்துக்குச் செல்வர் என்ற நம்பிக்கை எல்லா மதங்களிலும் உள்ளது. உலகிலுள்ள 200+++++ நாடுகளின் படை வீரர்களின் எண்ணிக் கை யைக் கூட்டிப்பார்த்தால் பல கோடிகள் வரும். நாட்டைக் காப்பதும் தர்மத்தைக் காப்பதும் புனிதமான தொழில். உலகம் அஹிம்சையை ஏற்பது இல்லை. அப்படி ஏற்றால் அவதாரங்களுக்குப் பொருள் இராது. இந்த ஸ்லோகத்தில் அர்ஜுனனை ப் பார்த்து “போர் செய்; இறந்தால் சொர்க்கம் ; வாழ்ந்தால் அரசாட்சி” என்கிறார். நமது எல்லைகளைக் காத்து நிற்கும், இமய மலையைக் காத்து நிற்கும், நம் வீரர்களை ஊக்குவிக்கும் ஸ்லோகம் இது.
ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நரகம் :(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.
எனது வியாக்கியானம்
இது அற்புதமான உண்மை. தினமும் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புகளையும், பத்திரிகையில் வரும் குற்றவியல் செய்திகளையும் படியுங்கள்; செக்ஸ் அல்லது கோபம் அல்லது பேராசை ஆகிய மூன்று வகைகளில் பிரித்து விடலாம். இதை நாம் நன்கு புரிந்துகொண்டு இந்த மூன்று நன்றாக வாயில்களையும் மூட வேண்டும்.
நான் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தில் சிறைச் சாலைகளுக்கு விஜயம் செய்து இந்து மத சிறைக் கைதிகளின் (Hindu Chaplain) ஆன்மீக தேவைகளைப் பூர்த்தி செய்துவந்தேன். கிறிஸ்தவ, முஸ்லீம் கைதிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இந்தக் கைதிகளின் எண்ணிக்கை மிக, மிக ,மிகக் குறைவு. ஆயினும் அவர்களையும் இந்த மூன்று வகைகளில் அடக்கி விடலாம் (செக்ஸ், கோபம், பணத்துக்கு ஆசை).; இதைக் கிருஷ்ணர் இவ்வளவு அழகாக ஒரே வரியில் சொன்னதை எண்ணி எண்ணி வியப்பேன் . ஆகையால் இந்த இரண்டு ஸ்லோகங்களும் என் மனதில் எப்போதும் நிற்கும்.
நீங்களும் சொர்க்க வாசல், நரக வாசல்களை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.
நாட்டிற்காக உயி துறப்போர் அனைவரும் சொர்க்கம் செல்லுவார்கள்.