Vastu Shastra, Thali, Zodiac! Purananuru wonders-61; Tamil Encyclopaedia 101 (Post.16,146)

Written by London Swaminathan

Post No. 16,146

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

part 61

Item 854

The next book we are going to see is Nedu Nal Vaadai, one of the Ten Idylls ( Paththup Paattu) in Sangam Tamil Literature.

 First let me list the wonders in it:

Vaastu shaastra in Sangam literature;

Zodiac in poem;

Reference to stars Rohini, Uttara;

Gajalakshmi figure ;

Thaali = Mangala Sutra;

Full description of Queen’s Bed with elephant tusks;

Mattress with feathers of Swan that were shed during mating;

Yavana lamp;

Women won’t put on ornaments when husband is away;

White umbrella and Valampuri Chank (conch) as in Kalidasa books;

Description of Army Camp as in Mahabharata.

Women using their swelling breasts to warm Veena Strings!

***

Item 855

Name of the book: Nedu= long; Nal=good; Vaadai= Northerly, cold wind.

(Vadai is fried spicy doughnut; vAAdai is hated cold northerly wind in India).

Author : Brahmin poet Nakkirar who is the author of Tiru Murugu Aatruppadai as well.

Subject: how queen suffered because of Pandya King Neduncheziyan’s absence/separation; he was in battle field.

Length of the poem- 188 lines.

Strange thing: no mention of the name of the king; only from famous commentator Nachchinarrkiniyar, we know it was Nedunchezian; and Tamils  know that there were two Nedunchezians. So, a bit of little confusion.

Lines 29, 30 – Streets were as broad as rivers and with tall buildings.

It is guessed the poet is talking about the great Madurai city, capital of Pandya Kingdom.

Madurai is the only planned city in the whole of India 2000 years ago which we knew from another Sangam book called Paripaatal.

Whenever the poets describe tall buildings they say Seven Storied Buildings; but here poet said only mansion.

***

Item 856

Gods in the houses!

Lines 36 to 44 show what Hindu women did in the evenings in ancient Madurai.

We know from these lines and from line 578 in Maduraik Kaanchi, another Sangam book, every house has a prayer room or prayer place. There was a god before which Hindu women lighted lamps and offered paddy and flowers around sunset. Even today Tamil Hindu women do it. This gives a severe blow to anti Hindu political Dravidians!

***

Item 857 two linguistic points:

In Sanskrit literature, poets say Aho Raatri= Day (and) Night; in Tamil, poets say Iravum Pahalum= Night(and) Day (line  47).

Both Iravu and Pahal are Sanskrit words but in Tamiized form.

I am writing this because South Indians and North Indians changed direction of writing at one time. In the Indus Valley, scholars believe that they wrote from Right to left. But now in India, we write from left to right.

This is seen in many other places as well

Tamils say Lava Kusa (sons of Rama); north Indians say Kusa Lava.

This is a subject for research. Hindus always give respect for Right hand; they are still Rightists! If anyone use left hand to receive anything, it is disrespect; in temples, it is blasphemy.

Mothers force their children to use right hand from the birth.

Another linguistic point here is the poet used PITHI (line 40) for a kind of jasmine flower. But in modern Tamil it is called PICHCHI.

This shows T=S. I have been showing it in all my linguistic articles.

English pronounce TION as SION (E.g. Condition, education and hundreds of such words)

Again, I use this to say all ancient languages can be traced back to Tamil and Sanskrit.

Again, I emphasize there is no Dravidian or Aryan language in India. One language split it into two, and thousands of years gap in time and location,changed them

Example : French spoken in Indian ocean island countries.

***

Item 858– round stone from Himalayas

வடவர் தந்த வான் கேழ்  வட்டம் -51

Very interesting line is 51 where we come across north Indian, round, grinding stone for south Indian sandal!

Poet deliberately used it to emphasize the unity of India.

In Purananuru book, we saw southern pothiyam compared to north Indian Himalayas.

Here also poet refers to Himalayas which is confirmed by Tamil epic Silappadikaram 4-37-8

Commentators showed it. What a wonderful unity 2000 years ago!

Just to grind south Indian sandal and other spices, they imported Himalayan stones, round in shape.

This also shows the pilgrimage. Tamils bring Ganges water even today from North Indian holy spots.( I also did bring Ganga Jal from Haridwar).

***

Item 859 Breast for warming Veena

Verey interesting and strange habit of lute players.

When the cold windblows in winter, women warmed the strings of the lute by rubbing them against their breasts!  Strange indeed! Poet was a keen observer!

He says,

Fair dancing girls to keep their songs in tune

With small and dark stemmed Ayaz on which they play

Warm the sweet toned strings made useless by the cold

By rubbing them upon their swelling breasts….

***

Item 860 -VAASTU SHASSTRA-

Lines 76-80

The broad sun travelling in its western course

Its widespread rays diffuse everywhere

And shadows cast by two poles planted straight

Do not incline at noon tide either way.

Then architects with care compute tapes

And note the quarters where the gods reside

They mansions build befitting noted kings…..

Because all the ancient Tamil kings were Hindus, they followed Shilpa Shastra and Vastu Shastra to build temples and palaces. They were very different from other parts of the world.

In Vastu, they have different Gods managing or controlling different directions. If the builders want to set up Treasury then they do it in Kubera Direction (North).

Ancient Hindu Palaces like Mysore Palace, Tirumalai Nayak Mahal in Madurai were all constructed following Vastu rules.

For the measurements, they plant two sticks straight and see that no shadows cast at noon. That means 100 % straight. Then they use threads or strings as tapes for the measurement. In Sanskrit, Sutra. Egyptian Pyramid Builders also used Sutra (String or rope).

நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு

தே எம் கொண்டு தெய்வம் நோக்கி  76/77

Play on words : Nuul = Suutra; both in Tamil and Sanskrit it has two meanings =thread and book.

If you say one who knows Nuul= Suutra, it means one who knows to handle plumbing line and one who knows scriptures (Vaaastu Shasstra books etc). Once again, it shows that both languages have the same source.

***

Item 861 -Zodiac and Stars

Though we have indirect reference to Zodiac in Purananuru, here we see poet himself refers to Aries (goat sign). He refers also to Rohini star and Uttara star. This shows the knowledge of astronomy in ancient Tamil Nadu.

Line 82 – Uttara nakshatra

Uttaram is beam in Tamil; poet plays on words following Kalidasa.

Rohini – line 163;

Mesha rasi – goat sign- line 160;

***

Item 862- Gaja Lakshmi Lines 81-83

Gaja Lakshmi is also in another Sangam book Kalittokai 44.

When I went to palatial houses in Chettinadu, Karaikkudi areas in Tamil Nau and Mysore Palace in Karnataka I noticed Gaja Lakshmi sculpted on doors. It is a symbol of wealth. Goddess Lakshmi is in the centre and two elephants on either side pour water on her.

This shows flow of water; even in British library in London, they have set up big fountain of flowing water.

You can notice that wherever there are big fountains at the entrance, those places doing roaring business.

Gaja Lakshmi was found from Denmark to Sri Lanka . Gaja Lakshmi is in Sri Suktam, part of Vedas.

(Please see my article written in 2012. Hindu Goddess’ march to Denmark !)

Following three Sangam books referred to Gajalakshmi also found in Gundestrup Cauldron in Denmark)

குறிஞ்சிக் கலி- Kurichik Kali in Kalittokai.

வரிநுதல் எழில் வேழம் பூநீர் மேல் சொரிதரப்,

புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறு எய்தித்,

திரு நயந்து இருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்ப! (கலி.44-8-5/7)

மதுரைக் காஞ்சி Maduraik Kaanchi

விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை

தொல் வலி நிலை இய அணங்குடை நெடி நிலை(352-353)

நெடுநல்வாடை Nedun al Vaadai

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக

குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்

திருநிலை பெற்ற தீது தீர் சிறப்பின் (86-89)

Gajalakshmi’s figures have travelled from the Himalayas to the southern most part of Sri Lanka. It is in the form of old coins, lamps, wooden figures, idols and stone sculptures. It has travelled from India to Denmark !! We have Gajalakshmi figure carved in to Gundestrup silver Cauldron. Now it is in Copenhagen. When they dug up a marshy area in Jutland , Denmark in 1891 they recovered a big silver vessel which is dated to second century BC. A very interesting fact about this vessel is that there is a god surrounded by animals like we see in the Indus valley seal (For more details please read my article Vishnu in Indus Valley Seal) The earliest reference to Gajalakshmi is in Sri Suktam of the Vedas:

“Laksmir –divyair-gajendrair-manigana-kasithai: snabitha hemakumbhair nithyam sa pathma hastha”

(Holding a lotus in hand she is bathed by water from the gem studded golden pot by the celestial elephants)

The above is from my article posted here in 2012.

***

Item 863- sanctum sanctorum

Now we have Garbha Grihas (Karu Arai) in temples ;Temple is compared to human body and the sanctum sanctorum is called Garbha Griha (womb) This has been there from Sangam days.

Here the queen’s private inner chamber is called Karu Arai

English word core = Tamil Karu.

Garbhagriha – line 114;

***

Item 864 Dasa Naanku 10 X 4=40 in Sanskrit

In Line 115 we find a strange Sanskrit word Dasa=10; naanku=4;

When the poet wanted to tell us that the queen’s bed had tusk decoration and those ivory objects came from 40 year old elephant, he used it.  It is interesting to note the age of the elephant.

There is a linguistic point as well: D becomes R in the lines.

It is shown as an example for distorting or corrupting Sanskrit words by poets.

***

Item 865 Yavana Lamps

Yavana- we have at least five refences in Sangam literature including Purananuru in addition to intro in Pathitruppaththu.

Yavana made lamps – lines 101-102.

Yavana is a confusing word; in Sangam literature it meant Romans from Italy. But later it is used for Greeks.

But I have a big question. Did Yavana mean carpenters from North west India?

The reason is I could not find Yavana lamps in Greek and Roman sculptures.

Yavana is found in Mahabharat and Valmiki Ramyana too.

By the middle of 15th century, it meant Arab merchants( also called Sonakar).

***

Item 866 Mating Swans shed Feathers!

Swan feathers – 131-133

Poet Nakkirar has described Queen’s bed, her mattress and pillows in minute details.

Someone must draw a picture of it.

Nakkirar added one more interesting detail. Quen’s mattress and pillows had swan feathers which shed them during sexual intercourse/mating because of body heat.

Use of swan feather in bedding is already in Kalidasa who lived before Sangam age.

***

Item 867- Mangala Sutra  of Hindu Women!

Thaali = mangala sutra = 136/37

Very often bad women who want to be in magazines write that Tamil women did not wear Thaali or Mangala Suutra during Sangam Age. They were proved wrong by commentators who lived 700 years ago. They have clearly mentioned Thaali worn by Tamil Hindu women. I wrote on these many years ago quoting famous writers.

Puram 177, Nedu Nal Vaadai 136/7 and Tamil epic Silappadikaram, their commentators said it.

பெண்கள் தாலி :–புறம்127, சிலப்பதிகாரம் 1-47, 4-50
தமிழர்களுக்கு தாலி உண்டு:–ம.பொ.சி

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன.

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.

இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.

“ஈகை அரிய இழை அணி மகளிர்” —

(ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)

“அகலுள் மங்கல அணி எழுந்தது”- சிலப்பதிகாரம்1-47

(மங்கல சூத்திரத்தை ஊர்வ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)

“மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் “

(கண்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்.

. நல்லாவுர் கிழார் குறிப்பிடும் ” வால் இழை மகளிர்” என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.

ம.பொ.சிவஞான கிராமணியார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதிடுகின்றனர்.

***

Item 868

Applying starch to clothes is mentioned here.

134/35- starch to clothes.

***

Item 868 Gold Rings

143/44- finger ring in fish mouth shape.

Queen wore a finger ring shaped like a fish mouth.

Interesting thing is we have found such rings in Tamil Nadu and other places.

They are also known as Makara Mothiram.

***

Item 869

White umbrella is mentioned throughout Kalidasa works and Tamil literature

184- white umbrella

***

Item 869 – Queen without decoration

Hindu women dress their hai , body etc only when their husbands are around.  If they hang their hair without plaits or hair bun something went wrong is the meaning. Here we have a full description of the queen in desperation because her husband was in the battle field.

Her friends even prayed to Goddess Durga for her husband’s safe and quick return.

Tamil lines-136-147

***

Item 870 King in the Army tents

In Mahabharata also we see that after the battle finished , during sun set each leader went to the battle ground or tents of soldiers and treated the wounded soldiers. They consoled some and they boosted confidence in others.

Here also poet Nakkirar described it. Lines 168-177

***

Item 871 Sanskrit words

Saalekam for window is from Jhaalakam in Sanskrit.

Deivam, Dasam,Rohini, Uttaram, Mesham, Gaja Lakshmi, Yavana are also mentioned in Sanskrit or its Tamil translation.

Saalekam – 125 Jalakam in Sanskrit

***

At the end of commentary, we find the following:

Brahmin of Bharadwaja gotra Naccinarkiniyar, teacher in Madurai, finishing the commentary on Nedunal vaadai written by Nakkiranar, son of Maduraik kanakkaayanaar on Pandyan Neduncheziyan .

But Purapporul Veba Malai says it is about Talai aalankaanaththu seru vendra Nedun chezian

–subham—

Tags- Thali, Mangala Sutra, Vastu Shastra, Thali, Zodiac! Purananuru wonders-61; Tamil Encyclopaedia 101, Item 871

ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145)

Written by London Swaminathan

Post No. 16,145

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

ஆண்டாள் மார்கழியில் எந்த நாளில் திருப்பாவையை பாடத் துவங்கினாள்? எப்போது முடித்திருப்பாள் ?

2

ஆண்டாள் ஏன் யாதவப் பெண்மணியாக இதில் தன்னைக் கற்பனை செய்துகொண்டாள்?

3

மார்கழியில் நோன்பு துவங்கிவிட்டது ;அப்போது என்ன என்ன செய்யமாட்டோம் என்று ஆண்டாள் உறுதி எடுத்தார்

4

யாப்பிலணக்கப்படி இது எந்த வகைப்பாடல் ?

5

இந்தப் பாடல்களை ஆராய்ச்சியாளர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கிறர்கள்?

கிருஷ்ணனை எத்தனை பெயர்களால் கூப்பிடுகிறாள் அல்லது குறிப்பிடுகிறாள் ?

முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஆண்டாள் கொடுத்த பெயர்  என்ன ?

6

ஆண்டாள் குறிப்பிடும் நகைகள் யாவை ? நோன்புக் காலத்தில் சாப்பிடாமல் இருந்த ஆண்டாள் என்னென்ன தின்பண்டங் களை பின்னர் குறிப்பிடுகிறார் ?

7

சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து — பாடலைச் சொல்ல முடியுமா ?

8

ஆண்டாள் குறிப்பிடும் இரண்டு கிரகங்கள் யாவை ? அதை எந்தப்பாட்டில் குறிப்பிடுகிறார் ?

9

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை…………..  என்று கடைசி பாடலில் பாடுகிறார் . இதில் வாங்க கடல் என்ற சொற்களின் பொருள் என்ன ?

10

முதல் திருப்பாவையில் வரும் மார்கழி மாதம் வேறு எந்தப்பாடலில் வருகிறது ?

**********************

விடைகள்

1.மதி நிறைந்த நந்நாள் என்று சொல்வதால் பெளர்ணமி யன்று அவள் பாடத் துவங்கியது தெரிகிறது; ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் பாடியிருந்தால் அதற்கடுத்த தை மாத பெளர்ணமியில் அவர் பாடல் முடிந்திருக்கும். மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின்  முதல் பாசுரமான ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார் என்பது ஒரு கருத்து. இது சரியென்றால் அவர் முப்பது பாடல்களையும் பாடி முடிக்கும் நாளன்று அடுத்த பௌர்ணமி திதி வந்திருக்க வேண்டும் அது தைப்பூச பௌர்ணமி திதியாக இருக்கவேண்டும் ; இதற்கிடையில் பொங்கல் என்னும் மகர சங்கராந்தி முடிந்திருக்கவேண்டும் 

***

2.ஆயர்பாடி என்பது கண்ணன் பிறந்த மதுராவிலுள்ள இடைச் சேரியென்று கொண்டால், அவளை நாம் ஒரு கோபிகையாக எண்ணலாம்; அவள் மற்ற கோபியரையும் அழைத்துக் கொண்டு யமுனை நதிக்கு நீராடச் செல்வதாகக்கருதலாம் 

***

3.இரண்டாவது பாடலில் என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை ஆண்டாள் தருகிறாள்;

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

நெய், பால் சாப்பிட மாட்டோம்;

கண்ணுக்கு மையும் கூந்தலுக்குப் பூவும் பயன்படுத்த மாட்டோம்.

(குழாயடியிலும் கிணற்றடியிலும் வம்பளக்க மாட்டோம்)).

கோள் சொல்லமாட்டோம் .

தடைசெய்யப்பட்ட விஷயங்களையும் செய்யமாட்டோம்.

செய்யக்கூடியது

பரமனடி பாடுவோம் ;

அதிகாலையில் நீராடுவோம்;

பிரம்மச்சாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வறியோருக்கும் வேண்டும் அளவுக்கு  உணவு இடுவோம்

***

4.பாவை வகை நூல்களில் இப்பொழுது நமக்கு கிடைத்திருப்பது இரண்டே  நூல்கள்தான்; அவை திருப்பாவை, திருவெம்பாவை .

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாடல்களை உள்ளன. அவற்றுள் கலிப்பாவானது ஒத்தாழி சைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி,   என மூன்றுவகையாம்.

கொச்சகக்கலிப்பாவானது  தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணை கொச்சகக்கலிப் பா,  சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகையாம்.

திருப்பாவையின் பாசுரங்கள் தனிச் சொல்லும் சுரிதரமும் இன்றி  வந்த தரவு கொச்சகக்கலிப்பாக்களே. இவற்றுள் ஒவ்வொன்றும் எட்டடி கொண்டுவந்திருக்கின்றது . இப்பாசுரங்களில் பெரும்பாலன முழுதும் வெண்டளை வரப்பெற்றுள்ளன. சில பாசுரங்கள் கலிப்பாவிற்குரிய கலித்தளையும் வெண்டளையும் கலந்தும் ,  சில பாசுரங்கள் வெண்டளையும், நேரென்றோராசிரியத்தளையும் கலந்தும் வரப்பெற்றிருக்கின்றன என்று தமிழ் வித்துவான் திருமலை அய்யங்கார் விளக்குகிறார்.

இதை மூன்று பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். முதல் ஐந்து பாசுரங்கள் ஒரு களத்திலும், ஆறு முதல் பதினைந்து பாசுரங்களில் பாடியவை வேறொரு களத்திலும், பதினாறு முதல் இருபத்தொன்பது வரை பாடியவை வேறொரு களத்திலும் அமைந்துள்ளன.

***

5.முப்பது பாசுரங்களில் கண்ணனை, அவனது அவதாரங்களை 56 வகையாக அழைக்கிறார்; நப்பின்னையை எட்டு விதமாகத் துதி பாடுகிறார். நந்த கோபாலனையும் யஸோதையையும் கொண்டாடுமிடத்து     ஐந்தைந்து வெவ்வேறு சொற்களைக் கையாளுகிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நில்லாமல் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்ற பாரதியார் வகுத்த இலக்கணப்படி பாடியுள்ளார். கண்ணாடிக்கு தட்டொளி என்ற அழகான புதுச் சொல்லை உருவாக்கியுள்ளார்.

***

6.திருப்பாவை நோன்பு முடிந்தவுடன் என்ன செய்வோம் என்பதை – 27-ஆவது பாடலில் வரிசைப்படுத்துகிறார்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கையில் சூடகம் அணிவோம்

தோள் ல் பாஹுவலயம் அணிவோம்

காதுகளில்    தோடு ம் கர்ணப் பூவும் அணிவோம்

காலில் பாடகமும் அணிவோம்

பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும் 

முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்.

***

7.சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

***

8.வியாழன் என்றால் ஜூபிடர் JUPITER  என்னும் பிருஹஸ்பதி/ குரு கிரகம். வெள்ளி என்றால் சுக்ரன் என்னும் வீனஸ் VENUS அல்லது வெள்ளி கிரகம்.  இந்த இரண்டையும் வானத்தில்  காணலாம். இதில் வெள்ளி மட்டும் சில காலத்தில் விடி வெள்ளியாக சூரிய உதயத்துக்கு முன்னரும் சில காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் தோன்றும். ஆண்டாள் அதிகாலைப் பொழுதில் தோழிகளை எழுப்பச் சென்றபோது வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமனமானதைக் கண்டார்  உடனே இதை பாடலில் குறிப்பிட்டுத் தோழிகளே எழுந்திருங்கள் என்று பாடுகிறார். வானவியல் தெரிந்தவர்கள் இது கிபி. 600 முதல் கி.பி 900 வரை 4 முறை நிகழந்ததைக் கொண்டு அவரை  300 ஆண்டு கால வட்டத்திற்குள் வைக்கின்றார்கள்.

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.- பாடல் 13

****

வங்கம் என்றால் பெரிய படகுகள் , கப்பல்கள் ; அவை செல்லும் கிழக்கு கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் ஆண்டாள் வாழ்ந்தாள்; கப்பல்கள் செல்லும் கடலை அவள், கடல் கடைந்த கதையுடன் ஒப்பிட்டுப் பாற்கடலாக நினைக்கிறாள்; இந்து மஹா சமுத்திரத்தின்  சிறிய  கடற்பகுதியை நாம் இப்போது வங்காள விரிகுடா என்று அழைக்கிறோம் ; இந்த வங்கம் என்ற சொல்லே வங்க தேசம், மேற்கு வங்காளம்,  வங்காள விரிகுடா  ஆகிய அனைத்திலும் வந்துள்ளது.

***

10.திருப்பாவையில் மார்கழி என்ற சொல் 1-வது, 4-வது மற்றும் 26-வது பாசுரங்களில் வருகிறது. [123]

  • பாடல் 1 (முதல் வரி):

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்”

  • பொருள்: மார்கழி மாதத்தின் முழுநிலவு நிறைந்த நன்னாளில் நோன்பிருக்கத் தொடங்குதலைக் குறிக்கிறது. [12]
  • பாடல் 4 (நான்காவது வரிகள்):

“நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்”

  • பொருள்: உலக மக்கள் நலமாக வாழ மழை பெய்ய வேண்டும், நாங்களும் மார்கழி நீராடி மகிழ வேண்டும் என்ற வேண்டுதல். [1]
  • பாடல் 26 (முதல் வரி):

“மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்”

  • பொருள்: மார்கழி நோன்பினை நோற்று நீராடுவதற்கான வழிமுறைகளையும், அதற்குத் தேவையான பொருட்களையும் பெருமாளிடம் கேட்பது

–subham—

Tags– ஆண்டாள், திருப்பாவை,10 கேள்விகள், வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று, வங்கம்,

பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! (Post.16,144)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,144

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!                  

 சாயி தனது பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

ச. நாகராஜன்

சாயி ஒருநாளும் தனது பக்தர்களுக்கிடையே வெறுப்பை பொறுக்க மாட்டார்!

 25-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஶ்ரீ சத்ய சாயிபாபா தன் பக்தர்களிடையே ஆற்றிய உரை:

 மஹராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெண் பக்தையைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் கூட அவள் அர்ப்பண மனோபாவத்துடன் அவற்றைச் செய்து வந்தாள். நடப்பது என்பது அவளைப் பொறுத்த மட்டில் ஒரு புனித யாத்திரை தான்; பேசுவது அவளைப் பொறுத்தமட்டில் ஜபமாகும். தனது கணவன் சாப்பிட உட்காரும் போது தரையை சாணி உருண்டையால் சுத்தம் செய்யும் போது கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டே சுத்தம் செய்வாள்.

அவளது தவமானது எவ்வளவு ஆழ்ந்த பக்தியுடன் செய்யப்பட்டது என்றால் அந்த சாண உருண்டை அந்தக் கிராமத்தில் இருந்த கோவிலில் உள்ள கிருஷ்ணனின் சிலையின் மீது ஒவ்வொருநாளும் விழுந்து படிந்தது.

 கோவிலின் குருக்கள் இந்த மர்மமான அசிங்கத்தைப் பார்த்து பிரமித்துப் போனார். பீதியால் அவர் நடுங்கினார். இப்படிப்பட்ட அசிங்கத்தைத் தினமும் தான் பார்க்க வேண்டியிருக்கும் துரதிர்ஷ்டத்துடன் தான் வாழ வேண்டியிருக்கிறதே என்று வருந்தினார். தினமும் குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட்ட அளவேயான சாண உருண்டை சிலையின் மீது படிந்திருக்கும் அசிங்கம்.. அவர் அவமானத்தால் தலை குனிந்தார்.

இந்த இழிவான நிகழ்வைப் பற்றி நினைத்துக் கொண்டே ஒரு நாள் அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண்மணி கிருஷ்ணார்ப்பணம் என்று கூவுவதைக் கேட்டார். மற்ற பெண்மணிகள் சொல்வது போலச் சொல்லிய அவள் சாண உருண்டையை வெளியே எறிந்தாள்.

இதைப் பார்த்த குருக்களுக்கு சந்தேகம் வந்தது. சாண உருண்டையை அவள் எறிந்த நேரம், அதன் அளவு, வடிவம் எல்லாவற்றையும் நன்கு கவனித்த அவர் அவளே தினமும் கிருஷ்ணர் மீது படிந்து சிலையை அசிங்கப்படுதும் சாணத்திற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.

அவளைப் பிடித்து அடி அடியென்று அவர் அடித்ததனால் சாணத்தை எறிந்த கை முறிந்தது.

அந்தப் பெண்மணியை அடித்து தண்டித்த தன் செயலுக்காக தன்னை கடவுள் ஆசீர்வதிப்பார் என்ற வெற்றி நினைப்புடன் கோவிலுக்குத் திரும்பினார் குருக்கள்.

ஆனால் கிருஷ்ணரின் வலது கை உடைந்திருப்பதைக் கண்டு அவர் திடுக்கிட்டார். அதிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அது அந்தப் பெண்மணியின் கரத்திலிருந்த அதே இடம் தான்! பாவம், பரிதாபமான அந்தக் குருக்கள், “ ஓ, கிருஷ்ணா, உன் மீது கொண்ட பக்தியினால் தானே அவளை அடித்தேன், உன்னை அவள் அசிங்கப்படுத்தி வந்தாளே” என்று வேதனையுடன் ஓவென்று அழுதார்.

கிருஷ்ணர் உடனே, “நான் நேசிக்கும் எல்லோரையும் நீயும் நேசிக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்” என்றார்.

இப்போத்து நானும் நீங்கள் இப்படியே நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் உங்களை விரும்ப வேண்டும். உங்களது சிறந்த ஆசைகளை விரும்பவேண்டும்.  எனது பக்தர்களிடையே வெறுப்பையோ அல்லது பொறாமை படுவதையோ அல்லது உங்களை நீங்களே பலஹீனமானவன், சாதாரணமானவன் என்று நினைத்து வெறுப்பதையோ நான் பொறுக்க மாட்டேன்,

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வார்த்தை! நீங்கள் உங்கள் உள்ளே இருக்கும் தூய்மைக்கும் வலிமைக்கும் தக்கபடி வாழ வேண்டும்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105 (Post.16,143)

Written by London Swaminathan

Post No. 16,143

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தேவாரம்

சிவனடியார்கள் மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு ; தேவர்களுக்கு அதாவது தெய்வங்களுக்குப் போடப்பட்ட பா மாலை (ஆரம்). இவைகளைப் பிற்காலத்தில் தொகுத்து வகுத்தவர்கள் பன்னிரு திருமுறைகளில் முதலில் வைத்தனர் ; சுமா 9000 பாடல்கள் நமக்கு கிடைத்துள்ளன . இதன் மூலம் தெரியவரும் மிகப்பெரிய உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டில் சுமார் 275 கோவில்கள் மஹேந்திர பல்லவன் காலத்திலேயே புகழ்பெற்றவையாக விளங்கின அதனால்தான் தேவார மூவரான அப்பர்சம்பந்தர், சுந்தரர் அங்கே சென்று பாடிப் பரவினர் ; அதைவிட அதிசயம் என்னவென்றால், யஜுர் வேதத்தில் சொல்லப்பட்ட நம சிவாய என்ற சம்ஸ்க்ருத மந்திரம் அதற்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பரவியதை தேவார மூவர் காட்டுகின்றனர் . அதைவிட மிகப்பெரிய அதிசயம் என்னவென்றால், திராவிட விஷமிகளும் வெள்ளைக்கார இந்து விரோதிகளும் சிவன் வேறு , ருத்திரன் வேறு என்று பரப்பியோருக்கு செமை அடி கொடுக்கின்றனர் தேவார மூவர் ; அதை விட அதிசயம் என்னவென்றால், சிவன் கோவில்கள் எல்லாம் சமணர் இடங்கள், புத்தர் இடங்கள் என்போருக்குத் தேவாரப்   பாடல்களும் சேக்கிழார் பெருமான் பெரிய புராணமும் வகையடி, தொகையடி, செமையடி கொடுக்கின்றன ; இதையெல்லாம் விட உலக மஹா அதிசயம்- பெளத்தர்களும் சமணர்களும் பரப்பிய  பாலி, பிராக்ருதத்துக்கு சமாதி கட்டி நம்மை எல்லாம் இன்று வரை தமிழரகளாகவே காத்த பெருமை அப்பர் சம்பந்தரையே சாரும்! அதைவிட அதிசயம்– தமிழ் இசையை முதலில் பண்ணோடு அமைத்துப் பாடியவர்கள் இவர்களதான் .

பாடல் எண்ணிக்கை

  முதலாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,469 பாடல்கள்

  இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,331 பாடல்கள்

  மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர்): 1,346 பாடல்கள்

  நான்காம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,060 பாடல்கள்

  ஐந்தாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 1,015 பாடல்கள்

  ஆறாம் திருமுறை (திருநாவுக்கரசர்): 980 பாடல்கள்

  ஏழாம் திருமுறை (சுந்தரர்): 1,026 பாடல்கள்

வேத பண்டிதர்கள் வேதங்களை குருமார்களிடம் வாய்மொழியாக கற்று, பாதுகாத்து வருவதுபோல ஓதுவார்கள் அவர்களுடைய குருவிடமிருந்து கற்று இன்றுவரை சிவன் கோவில்களில் பாடி வருகின்றனர் இதன் மூலம் தமிழ் இசை பரவியது ; ஓதுவார்கள் இல்லாவிடில் தமிழ் இசை இல்லை.

*** 

தாயுமானவர் (thaayumaanavar)

 1705 to 1744 CE. செந்தமிழில் அழகிய வேதாந்தக் கருத்துக்களையும் இறைவனின் இயல்புகளையும் அனைவருக்கும் புரியும்படி எளிய இனிய சொற்களால் பாக்களைப் பாடியவர் தாயுமானவர். மாபெரும் வேதாந்தி அவர். சைவ சித்தாந்தத்தையும் வேதாந்தத்தையும் இணைத்துப் பாடியது இவருடைய ஒப்பற்ற அணுகுமுறைக்குச் சான்றாகத் திகழ்கிறது ; இந்துக்களின் சமயப்பிரிவுகள் அனைத்தும் ஒரே இறைவனை நாடுவதை பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்; தாயுமானவர் பாடல்களில் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1452 பாடல்கள் ஆகும். இவை 56 தலைப்புகளில் உள்ளன. ஸ்வாமி சித்பவானந்தர் அந்தர்யோகங்களை ஆங்காங்கே நடத்தி தாயுமானவர் பாடல்களுக்கான விரிவுரை தந்து வந்தார்; பல நூல்களையும் அவர் படைத்துள்ளார். அவரது திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனமே தாயுமானவரின் சமாதியை பரிபாலித்து வருகிறது.

சோழ நாட்டின் தென் கோடியில் அமைந்துள்ள வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு தலத்திலே அவர், வேளாளர் குலத்திலே கேடிலியிப்ப பிள்ளை- கெஜவல்லி தம்பதியினருக்குப் பிறந்தார். கேடிலியப்ப பிள்ளை சிவத்தல விசாரணைக் கர்த்தராக இருந்தார். அச்சமயம் 1704ஆம் ஆண்டு முதல் 1731 முடிய திருச்சியை ஆண்ட முத்து விஜய ரகுநாத சொக்கலிங்க நாயகர் கேடிலியப்ப பிள்ளையின் அருமை பெருமைகளை அறிந்து அவரைத் தன்னிடம் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தார். அதை அவரும் ஏற்றார்.

அவர்களுக்குப்பிறந்த முதல் குழந்தையை சந்ததியின்றி இருந்த தனது தமையனாருக்கு சுவீகாரமாகக் கொடுத்து விட்டார்.பின்னர் பிறந்த குழந்தைக்கு  தாயுமானவர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் திருச்சியில்  கோயில் கொண்டுள்ள சிவபெருமானின்  பெயர்.

தாயுமானவருக்கு இலக்கிய இலக்கணம், இதிஹாஸ புராணம், சிவாகமம், உபநிடதம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ் உள்ளிட்ட சகலமும் அத்துபடியாயின. தந்தைக்கு வயதானதையொட்டி மகன் தாயுமானவரை அரசன், அரசுக் கணக்கராகப் பணி புரிய அழைத்தான். பதினான்கு வயதே ஆன தாயுமானவர் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆன்மீக தாகம் அதிகரிக்கவே , மௌனகுருசாமிகள் என்ற பெரியாரைக் குருவாக ஏற்றார். இதற்கிடையில் திருமணம் நடந்து மட்டுவார் குழலம்மை என்ற நங்கையை மணந்தார். ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கனக சபாபதி என்ற பெயர் இடப்பட்டது. காலம் சென்றது. மட்டுவார் குழலியார் சிவபதம் அடைந்தார். இல்வாழ்க்கையில் ஈடுபாடில்லாத தாயுமானவர் தலம் தலமாகச் சென்றார். இறுதியில் ராமநாதபுரத்தில் சமாதி ஆனார் .அவருடைய பாடல்களில் மிகவும் புகழ்பெற்ற இரண்டு பாடல்கள் :

அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமா

யானந்த பூர்த்தியாகி

யருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே

யகிலாண்ட கோடி யெல்லாந்

தங்கும்படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினிற்

றட்டாம னின்றதெது சமய கோடிகளெலாந்

தந்தெய்வ மெந்தெய்வ மென்

றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவு நின்றதெது

எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமா

யென்றைக்கு முள்ள தெது மேற்

கங்குல் பகலற நின்ற வெல்லை யுள தெதுவது

கருத்திற்கிசைந்த ததுவே

கண்டன எல்லாம் மோன உருவெளியது ஆகவும்

கருதி அஞ்சலி செய்குவாம்

XXXXX

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்;

கண் செவி எடுத்து ஆட்டலாம்;

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து லோகத்தையும் வேதித்து விற்று உண்ணலாம்;

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடு இருக்கலாம்;

மற்று ஒரு சரீரத்தினுள் புகுதலாம்;

ஜலம் மேல் நடக்கலாம்;

கனல் மேல் இருக்கலாம்;

தன் நிகர் இல் சித்தி பெறலாம்;

என்று பட்டியலிடும் அவர்

“சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது;

சத்து ஆகி என் சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!

தேஜோமயானந்தமே.

****

தில்லை (சிதம்பரம்)

தமிழ் நாட்டிலுள்ள சைவர்களுக்கு கோயில் என்றால் அது தில்லை என்னும் சிதம்பரமே . சோழ,  பல்லவ மன்னர்கள் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த நடனம் ஆடும் இடம் ; நாட்டியத்துக்கு மூல காரணமான இறைவன் என்பதால் புகழ் வாய்ந்த கோவிலில் நாட்டிய கரணங்களும் உள்ளன; அரியும் சிவனும் ஒன்று என்பதைக் காட்டும் வகையில் ஒரே கோயிலில் கோவிந்தப்பெருமாளும் சந்நிதி கொண்டுள்ளார் ; ஊரில் உள்ள தில்லை காளியம்மன் கோயிலும் முழு சக்தி பெற்ற தெய்வமாக தரிசனம் தருகிறார் ; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சுந்தரர் முதலியோரால் புகழப்பட்ட தில்லை மூவாயிரவர் என்னும் தீட்சிதர்கள் இந்தக் கோவிலை சீரும் சிறப்புடனும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது . சென்னையிலிருந்து தெற்கே 229 கிலோமீட்டர் தூ ரத்திலுள்ள இக்கோயிலை ஐந்து மணி நேரத்தில் அடையலாம் . கோவிலில் உள்ள பொன்னம்பலம் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். பூக்களைப் பறிக்க புலிக்கால்களை இறைவன் அருளால் பெற்றவர் வியாக்ரபாதர். யோக நூலை எழுதியவர் பதஞ்சலி. இந்த இருவரின் பிரார்த்தனைக்கு இணங்க  நடராஜர் தனது ஆனந்த தாண்டவத்தைக் காட்டிய இடம் சிதம்பரம். இங்கு உருவம் இல்லாத இடத்துக்கு திரை போட்டு மூடியிருப்பார்கள் அதைத்த திறந்தால் வில்வ இலைகளும் வெற்றிடமும் மட்டுமே இருக்கும் சிவபெருமான் எங்கும் நிறைந்தவன் பஞ்ச பூதங்களில் ஆகாச வடிவினன் என்பதைக் காட்டும் இந்த இடத்தை சிதம்பர ரஹஸ்யம் என்றும் சொல்லுவார்கள்  .

***

திலகம்

இந்துக்களின் நெற்றியிலும் உடலின் பன்னிரு பாகங்களிலும் வரையப்படும் சமய சின்னங்கள் இவை; பொட்டு  என்று பெண்கள் அழைக்கும் இந்தக் குறியீடுகள், புத்தரின் பழைய சிலைகளிலும் உள்ளதால் மூவாயிரம் ஆண்டுப் பழமை உடையது. இந்துக்களின் உட்பிரிவுகளான  சாக்தம், வைணவம், சைவம் முதலிய ஆறு பிரிவினரும் விபூதிநாமம், கோபி, குங்குமம் என்று பலபெயர்களில் விதவிதமாக இட்டுக்கொள்வார்கள்; சந்தனம், குங்குமம், விபூதி, நாமக்கட்டி முதலியன முக்கிய இடுபொருட்கள் ஆகும். பெண்களை பொறுத்த மட்டில் திருமணமான  சுமங்கலியாக இருக்கும் வரை இது கட்டாயச் சின்னம் . வெளிநாட்டில் வாழ்வோர் இனவேற்றுமைத் தாக்குதால்களால் இதை முழுதும் பின்பற்றுவதில்லை . நாயன்மார்களும் ஆழ்வார்களும் இதை பாடிப் போற்றியுள்ளனர்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர்  விபூதி பூசி பாண்டிய  மன்னன் நெடுமாறனின் நோய் நீக்கி அற்புதம் செய்ததை தமிழ் நூல்களில் காணலாம்.

***

பால கங்காதர திலகர் 1856-1920

மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் . பெரிய சம்ஸ்க்ருத அறிஞர்; கணேஷ் சதுர்த்தியை பிரபலமாக்கி அதன் மூலம் தேசீய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இப்போது அது மஹாராஷ்டிரீயர்களின் தேசீயத் திருவிழாவாக மாறிவிட்டது . இவர் வானசாஸ்திரக்  குறிப்புகளைப் பயன்படுத்தி ரிக்வேதம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று நிரூபித்தார் ;அதிசயம் என்னவென்றால் ஜெர்மனியில் ஹெர்மன் ஜாகோபியும் ஆராய்ந்து இதே காலத்தைக் குறிப்பிட்டார்; இருவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் செய்த ஆராய்ச்சியின் முடிவு இது.

***

திலோத்தமை

அப்சரஸ்; மூவுலகிலும் கிடைத்த நல்ல பொருட்களைக்கொண்டு பிரம்மா படைத்த பேரழகி . பூவுலகில் சுந்தன்உப சுந்தன் என்ற இரண்டு அரக்கர்கள் அட்டூழியம் செய்து வந்தனர் . இவளைத் தேவர்கள் பூமிக்கு அனுப்பி அவர்கள் முன்னால் ஆடவைத்தார்கள் . இருவரும் இவள் எனக்கே சொந்தம் என்று சண்டை போட்டு ஒருவரின் மண்டையை அடுத்தவன் வெட்டி மாய்ந்தார்கள் .

***

த்ரஸாதஸ்யு

அகஸ்திய முனிவருக்கு  அவரது மனைவி லோபாமுத்ரா ஒரு நிபந்தனை போட்டாள்; படுக்கை அறைக்குள் வருவதற்கு முன்னால், எனக்கு ஏராளமான நகை நட்டுகளைக் கொண்டு வாருங்கள்; பின்னர் ஜாலியாக இருக்கலாம் என்று ; அவர் முதலில் பணம் கேட்ட இரண்டு மன்னர்களும் பணம் இல்லை என்று சொன்னவுடன் அவர்களையும் அழைத்துக்கொண்டு இந்த மன்னரிடம்தான் வந்தார்.  இவரும் இல்லை என்று கைவிரித்தவுடன்  மிகப்பெரும்  பணக்காரனான அரக்கன் இல்வலனிடம் அகஸ்தியர் சென்றார் . இதில் கவனிக்க வேண்டிய விஷயம்– தஸ்யு என்ற சொல் பற்றி வெள்ளைக்காரன் கிளப்பியது  எல்லாம் புரளி என்பதாகும்; அதைவிட முக்கிய விஷயம், இல்வலன் என்ற அரக்கன் மூன்று மன்னர்களும் வந்து கேட்கும் அளவுக்கு பணக்காரனாக இருந்ததாகும்; இவர்கள் எல்லோரும் ரிக்வேதத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஆகையால் வெள்ளைக்காரர்களின் வாதங்கள் பொய் என்பதைக் காட்டும் இலக்கியச் சான்றுகள்ய்வை  ; ஆகையால்  தஸ்யு என்பவனோ அரக்கன் என்பவனோ கீழ் ஜாதியும் இல்லை; திராவிடனும் இல்லை .மன்னர்கள் செல்வந்தர்கள்.

****

த்ரிஜடை (திரிசடை)

ராமாயணத்தில் வரும் நற்பண்புகள் கொண்ட அரக்கர் குல பெண்மணி த்ரிஜடை ஆவார். இலங்கையில் ராவணனால் கடத்தி வரப்பட்டு, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவிக்கு காவல் இருக்கும்படி நியமிக்கப்பட்ட அரக்கிகளில் இவரும் ஒருவர். இவர் ராவணனின் தம்பியும் தர்மவானுமான விபீஷணனின் மகள் ஆவார்.அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும், தன் தந்தை விபீஷணனைப் போலவே தர்ம சிந்தனையும், கருணையும், நற்குணங்களும் கொண்டவராகத் திகழ்ந்தார். அசோக வனத்தில் மற்ற அரக்கிகள் சீதையை மிரட்டி, துன்புறுத்தி, ராவணனைத் திருமணம் செய்யும்படி வற்புறுத்தியபோது, த்ரிஜடை மட்டுமே சீதைக்கு ஆதரவாக இருந்தார்.சீதைக்கு தாயைப் போலவும், ஒரு நல்ல தோழியைப் போலவும் இருந்து, அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினார்.சீதை துயரம் தாங்காமல் தற்கொலை செய்ய முயன்ற பல தருணங்களில், அவரை தடுத்துப் புதிய நம்பிக்கையை ஊட்டினார்.

த்ரிஜடையின் தீர்க்கதரிசனக் கனவு (திரிசடை சொப்பனம்)

ராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் த்ரிஜடையின் கனவு மிகவும் பிரபலமானது.அவர் ஒரு தீர்க்கதரிசனக் கனவு கண்டார்; அதில் ஸ்ரீராமன் மற்றும் லட்சுமணன் வெற்றி பெறுவதையும், ராவணனும் அவனது அரக்கர் குலமும் முற்றிலும் அழிவதையும், லங்காபுரி எரிவதையும் கண்டார்.இக்கனவை அசோக வனத்து அரக்கிகளிடம் கூறி, “இனி சீதையைத் துன்புறுத்தாதீர்கள், அவளிடம் மன்னிப்புக் கேளுங்கள்” என்று எச்சரித்தார். இது சீதையின் மனக்கவலையைப் போக்கி, ராமன் விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை அளித்தது. போர்க்களத்தில் ராம-லட்சுமணர்கள் நாகபாசத்தால் மயங்கிக் கிடந்தபோது, ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் ஏற்றி அதைக் காட்டி கலங்கடித்தான்.அப்போதும் த்ரிஜடை சீதையுடன் சென்று, “அம்மா, கவலைப்படாதே! ராம-லட்சுமணர்கள் இறக்கவில்லை, இது அரக்கர்களின் மாயாஜாலம். புஷ்பக விமானம் சுமங்கலிகளை மட்டுமே சுமக்கும், ஸ்ரீராமனுக்கு ஆபத்து நேர்ந்திருந்தால் இந்த விமானம் உன்னைச் சுமக்காது” என்று கூறி சீதையின் கற்பின் வலிமையையும் ராமனின் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதையும் உணர்த்தினார். யுத்தம் முடிந்து ராவணன் மடிந்த பிறகு, ஆஞ்சநேயர் சீதையைத் துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி கேட்டார்.ஆனால் சீதா தேவி, த்ரிஜடையின் காவலால்தான் தான் உயிர் பிழைத்ததாகக் கூறி, மற்ற அரக்கிகளையும் மன்னித்து விடுவித்தார். ஸ்ரீராமனும் சீதையும் த்ரிஜடைக்கு பல பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

***

திரி-லோக

திரி என்றால் மூன்று ; ஆங்கில எண் த்ரீ என்பதும் ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து வந்ததை நாம் அறிவோம் 

மூடு உலகங்கள் என்பது பூ லோகம் புவர் லோகம் ஸ்வர் லோகம் ஆகும் . பிராமணர்கள் இன்றும் மூன்றுமுறை   செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த மூண்டு உலகங்களுடன் மொத்தமுள்ள ஏழு உலகங்களையும் சொல்லி வணங்குவார்கள்

போர் புவசுவரோம் என்பது சுருக்கம்

Triloka (त्रिलोक).—அவையாவன —பூமி, பூமிக்கு மேலுள்ள வெளி,  ஸ்வர்கம்

தேவ ரிஷியான நாரதரை திரிலோக சஞ் சாரி என்பார்கள் ; இவர் ஐன்ஸ்ட்டின் தத்துவத்தை எல்லாம் பொய்யாக்கி ஒளியை மிஞ்சும் வேகத்தில் பயணம் செய்ட்வார் .

பூர்லோக: நாம் வாழும் பூமி;

புவர்லோக: காற்று மண்டலம்; தெய் வீக புருஷர்கள் வலம் வரும் இடம்;

ஸ்வர்(க)லோக (Svargaloka): திண்திறன் வாழும் சுவர்க்கம்;

மஹர்லோக: ரிஷிகளும் ஞானிகளும் வாழும் இடம்;

ஜனலோக: பிரம்மாவின் மானஸ புத்திரர்கள் இருக்கும் இடம்;

தபோலோக: தவசீலர்கள் எப்போதும் தவம் செய்யும் இடம்;

சத்தியலோக (ப்ரஹ்மலோக): சத்தியத்தின் உறைவிடம்; பிரம்மா வாழும் இடம் .

மூன்று அல்லது ஏழு உலகங்களுக்கு யோக சாஸ்திரப்படியும் விளக்கம் உண்டு

***

திரிசங்கு

அயோத்திலிருந்து ஆட்சிபுரிந்த சூர்ய வம்ச அரசர்களில் ஒருவன் ; இளவரசனாக இருந்தபோது தந்தையால் நாடு கடத்தப்பட்டு பின்னர் விசுவாமித்திரர் தயவுடன் ஆட்சியில் அமர்ந்தார் . அவருக்கு ஒரு ணப்பபஸ்ஸை பிறந்தது உடலோடு சுவர்க்கத்துக்குப் போகவேண்டும் என்று வசிஷ்ட முனிவரிடம் போய் சொன்னார் அவர் முடியவே முடியாது என்றார் ; திரும்பாத திரும்ப சொன்னதையே சொன்னவுடன் வசிட்டரின் மகன் சாபம் கொடுத்தார் பின்னர் விச்வாமித்திரரிடம் வைத்து அதே கோரிக்கையை முன்வைத்தார் அதுக்கென்ன செய்கிறேன் என்று யாகாதீ வளர்த்தார் ; முடிவில் போ போ மேலே போ என்று உடலோடு திரிசங்குவை ஏற்றினார் .உடனே திரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்தான்.

அங்கே தேவேந்திரன் திரிசங்குவைப் பார்த்து, “ திரிசங்குவே! நீ, திரும்பிப் போ! முட்டாளே! ஆசார்ய சாபத்தால்  நீ கெட்டுப் போனவன்! உனக்கு ஸ்வர்க்கத்தில் இடமில்லை. தலைகீழாக பூமியில் விழு” என்றான். உடனே திரிசங்கு தலைகீழாக ஸ்வர்க்கத்திலிருந்து கதறிக் கொண்டே கீழே விழ ஆரம்பித்தான். அவன் கதறலைக் கேட்டு விஸ்வாமித்திரர் “நில், நில்!” என்றார். உடனே திரிசங்கு தலைகீழாக அந்தரத்தில் அப்படியே நின்றான். இதை திரிசங்கு சுவர்க்கம் என்பார்கள் . தமிழில் அரைக்க கிணறு தாண்டியவன் என்போம்; இங்கும் இல்லை அங்கும் இல்லை என்ற அந்தர  நிலைமை!. சிலுவை போலத் தோன்றும் நட்சத்திரக் கூட்டத்தை இந்துக்கள் திரிசங்கு நட்சத்திரம் என்பார்கள் மேலை  நாட்டினர் இதை சதர் ன்  க்ராஸ் என்பார்கள் ஆஸ்திரேலியா பிரேசில் நியூசிலாந்து, சமோவா , பப்புவா நியூ கினி என்ற ஐந்து நட்டுக்கொடிகளில் இந்த நட் சத் திரத்தைக்  காணலாம் .

பத்துப்பாட்டு என்னும் சங்கநூல்களில் பதிற்றுப்பத்து என்ற ஒரு நூல் இருக்கிறது; அதில் ஒரு  புலவரும் மனைவியும் சுவர்க்கத்துக்குச் செல்ல விரும்பியவு டன் அவர்கள் சொன்னபடி, சேர மன்னன் யாகம் செய்தான். பத்தாவது யாக முடிவில் இருவரும் மாயமாய் மறைந்தனர் .

***

த்ரித

த்ரித,  த்வித,  ஏகத என்று மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்; மூவரும் பெரிய ரிஷிகள். தமிழில் மொழிபெயர்த்தால் ரிஷிக ளின் பெயர்கள் 3, 2, 1 எண்கள் ஆகும் ; மூவரும் யாக யக்ஞங்களுக்குச் சென்று நிறைய பசு மாடுகளைத் தானம் வாங்கி இருந்தார்கள் . ஒரு முறை காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்த போது, ஓநாய் தாக்கவே மூவரும் ஓடினார்கள் அவர்களில் திரித ரிஷி கிணற்றில் விழுந்து விட்டார் வேறு பக்கம் ஒடிய ஏகத ரிஷியும் த்வித ரிஷியும் அவர்களுடைய அண்ணன் கூக் குரலைக் கேட்ட போதும் காப்பாற்றச் செல்லவில்லை ; மூத்தவருடைய பசுமாடுகளையும்  எடுத்துக்கொள்ளலாம் என்ற ஆசை பிறந்தது . ஆனால் திரித மனம் தளரவில்லை ;பூசலார் நாயனார் மனத்திலே கோவில் எழுப்பி, சிவபெருமானை அழைத்தது போல இவரும் மனத்திலே யாகப்பொருட்களைத் தருவித்து பெரிய யாகம் செய்தார். இந்திரனும் தேவர்களும் மனம் மகிழ்ந்து அவரைக் காப்பாற்றினார்கள்; வெளியே வந்த இவர் மற்ற இருவரையும் ஓநாயாக  போகும்படி சாபம் இட்டார் என்பது மஹாபாரதத்தில்உள்ள கதை.  மனத்தின் அபாரசக்தியை விளக்கும் கதை இது. 

To be continued…………………

–subham—

Tags- திரிசங்கு,த்ரித, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 105; இந்து மத கலைச்சொல் அகராதி-105, தாயுமானவர்

செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்(Post.16,142)

 Written by London Swaminathan

Post No. 16,142

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

செப்டம்பர் 2026 காலண்டர் பாண்டி மண்டல சதக பொன்மொழிகள்; சதகம் என்றால் 100 பாடல்கள் என்று பொருள்; அனைத்தும் பழங்கால பாண்டிய நாட்டின் எல்லைக்குள் நடந்த  சம்பவங்களையும் அறிஞர்களையும் கவிகளையும் குறிப்பிடுகிறது. 30 பாடல்களை மட்டும் காண்போம்.

பாண்டிமண்டல சதகத்தை இயற்றியவர் மதுரை ஐயம்பெருமாள். http://www.projectmadurai.org/

பண்டிகைகள் செப்டம்பர் 4 கோகுலாஷ்டமிஸ்ரீஜயந்திகிருஷ்ணன் பிறப்பு13 சாமவேத  உபாகர்மா14 விநாயக சதுர்த்தி15 ரிஷி பஞ்சமி19 தூர்வாஷ்டமி23 வாமன ஜயந்தி27 மஹாளய பக்ஷ ஆரம்பம்29 மஹா பரணி.

சுப முகூர்த்த தினங்கள் – செப்டம்பர் 1317,

அமாவாசை 10பெளர்ணமி 26ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் 722;

***

செப்டம்பர் 1 செவ்வாய்க் கிழமை

தென்கும ரிக்கும் வடக்குவெள் ளாற்றுக்குந் தெற்குவரு

மன்புறு திண்டுக்கல் லுக்குங்கா ரைக்காட்டிற் குங்கிழக்கா

யன்புறு சேதுவின் மேற்கான வெல்லைக்கு ளானதெல்லாம்

வன்பெரு மாறன் புரக்கின்ற பாண்டியன் மண்டலமே. (98)

***

செப்டம்பர் 2 புதன் கிழமை

திருமிக்க சேரற் கரசு பெறத்தமிழ் செப்பிடவுந்

தருமிக்கு மிக்கசுத் தித்தமிழ் கொங்கென்று தான்சொலவும்

கருணைக் கடல்நங் கடம்பா டவியிற் கலந்திருக்க

வரிசைப் புலமை செலுத்திய பாண்டியன் மண்டலமே. (93)

***

செப்டம்பர் 3 வியாழக்கிழமை

 கல்லாடம் சிற்றம் பலக்கோவைக் கொப்பக் கடம்பவனத்

தெல்லோருங் கொண்டேத்து வாரலா திந்தமேல் காரிகைக்குத்

துல்லிய சங்கத்தார் கொண்ட வுரைநற சுருதியெனச்

சொல்லிய வேளாளர் சூழ்வதும் பாண்டியன் மண்டலமே. (92)

***

செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமை

இடைக்காடர் முன்செல்லப் பின்செலு மீச னிருப்பதுபோல்

தடைக்கான காட்டினில் முட்டையென் றேபெயர் சாற்றிச்செஞ்சொற்

றொடைக்கான பாடல்பொய் யாமொழி யார்தொடுத் தேத்துமடி

மடக்கான பாடல்கொள் செவ்வேளும் பாண்டியன் மண்டலமே. (81)

***

செப்டம்பர் 5 சனிக் கிழமை

தேனிமிர் காழித் திருஞான சம்பந்தர் தென்னவன்றன்

கூனிமி ரச்செய்து குண்டர்தந் தொண்டரைக் கூர்ங்கழுவில்

தானிடும் நீறும் விளங்க மதுரைத் தனிலிழைத்து

மானிடும் பேறு பெறவாழும் பாண்டியன் மண்டலமே. (78)

***

செப்டம்பர் 6 ஞாயிற்றுக் கிழமை 

ஒள்ளிய மாயனும் வேதனு மெய்திட வும்பர்தொழுந்

துள்ளிய மான்மழுக் கையர்நின் றாடத் துதிபெருகுந்

தெள்ளிய சித்ர சபைவெள்ளி யம்பலம் சீர்மருவும்

வள்ளிய தாம்ர சபைமூன்றும் பாண்டியன் மண்டலமே. (71)

***

செப்டம்பர் 7 திங்கட் கிழமை

நரதுங்கன் கொண்டாடு முச்சங்கங் கூறுநற் காசிகண்ட

மரதுங்க மேசொல் இலிங்க புராணமந் நைடதஞ்செய்

கரதுங்க சீல னதிவீர ராமனுங் காசினியில்

சரதுங்க ராமனும் வாழ்வது பாண்டியன் மண்டலமே. (66)

***

செப்டம்பர் 8 செவ்வாய்க் கிழமை

அகத்திய ரேவிட வாட்சேபஞ் செய்ததங் கோட்டுமுனி

மிகக்களி கூரப் புலவோர்கள் வாழ்த்த வியன்மதுரைச்

செகத்தர சென்பவன் முன்னேதொல் காப்பியச் செந்தமிழை

மகத்துவ மாயரங் கேற்றிய பாண்டியன் மண்டலமே. (64)

***

செப்டம்பர் 9 புதன் கிழமை

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமுந்

தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்

நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை

வரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே. (60)

***

செப்டம்பர் 10 வியாழக்கிழமை 

அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்

தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்

கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்

வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே. (56)

***

செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை BHARATI MEMORIAL DAY

பந்தா முலையுமை தாயென வாரிதன் பால்முழுகத்

தந்தீரம் விட்டுக் கடவாத வாரிதி தானைமுன்னம்

செந்தே னொழுகுங் கடம்பா டவியில் திருக்குளத்தில்

வந்தே யெழுகட லானதும் பாண்டியன் மண்டலமே. (54)

***

செப்டம்பர் 12 சனிக் கிழமை

பாலினும் வெண்ணெ யினுந்தயிர் மீதினும் பட்சம்வைத்த

வேலினுங் கூரிய கண்ணா ளகோதைதன் வீட்டிடத்தே

ஆலினும் வேலையி னுந்துயில் சங்கத் தழகரெனு

மாலிருஞ் சோலை மலையாரும் பாண்டியன் மண்டலமே. (53)

***

செப்டம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை 

மடலுற்ற புட்ப மணிநாச்சி யாரம்மை மாமணஞ்செய்

திடமிக்க வாசை யுடனே புதுவையிற் சென்றுமென்றே

யடல்பெற்ற வேங்கடத் தாருமன் னாரு மழகருந்தென்

வடபத்ர சாயியுந் தாமமர் பாண்டியன் மண்டலமே. (52)

***

செப்டம்பர்  14 திங்கட் கிழமை

தெள்ளிய சங்கப் புலவோரும் வாணியுஞ் செஞ்சடைமே

லொள்ளிய கங்கை தரித்தோருங் கூறி யொரோர்கவிதை

வெள்ளிய செஞ்சொற் றொடர்பா வகையை வியந்துகொண்டு

வள்ளுவர் மாலை பகர்ந்தாரும் பாண்டியன் மண்டலமே. (49)

***

செப்டம்பர் 15 செவ்வாய்க் கிழமை

திருவாத வூரரெம் மாணிக்க வாசகர் தென்னவன்முன்

வெருவாது காட்டு நரிபரி யாய்விற்க மீண்டவைதாம்

நரியாக வைகை நதிபெருக் காய்வரும் நாளிற்சொக்க

ரறியாது போய்மண் சுமந்ததும் பாண்டியன் மண்டலமே. (48)

***

செப்டம்பர்  16 புதன் கிழமை

செய்கை தவத்த சமண்குண் டரையவர் சென்றுசெய்த

துய்யற்கு மங்கைக் கரசி குலச்சிறை யுண்மகிழ்ந்து

சைவத்தை யோங்கச்செய் சம்பந்த ரேட்டைத்தண் ணாற்றெதிரே

வையைக்கு ளேயோடச் செய்தது பாண்டியன் மண்டலமே. (45)

***

செப்டம்பர்  17 வியாழக்கிழமை 

முதியவர் மூவர் தமிழ்கொள் சுழியல் முதிரநெல்லை

துதிசெய் பரங்குன்ற மாடானை காளையார் தூவாப்பனூ

ரெதிர்கொடுங் குன்று புனவாயில் பூவண மேடகமே

மதுரைகுற் றால மிராமேசம் பாண்டியன் மண்டலமே. (44)

***

செப்டம்பர்  18 வெள்ளிக்கிழமை

தணவா வறுபத்து மூவரிற் றாமும் முதன்மைபெற்றுப்

பணவா ரணிகின்ற பெம்மான்பொற் பாதத்தைப் பற்றவைத்துக்

குணமான சைவ நெறிநின்று வாழுங் குலச்சிறையும்

மணமேற் குடியில்வாழ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (43)

***

செப்டம்பர்  19 சனிக் கிழமை

புகுந்த சமயம் விடார்தேரர் ஞானமில் புல்லவரா

லுகந்தவர் போலவர்க் குள்ளாகி யின்மை யொழிக்குமருள்

மிகுந்த சிவனிடத் தன்பாகிப் பூவென மேற்கல்லினால்

மகிழ்ந்தெறி சாக்கியர் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (41)

***

செப்டம்பர்  20 ஞாயிற்றுக் கிழமை 

தேனலர் கொன்றை யணிசிவன் கோயிலைச் செம்பொன்னினால்

தூநல மாகும் பிராகாரங் கோபுரங் தூபிமுத

லூன மிலாது புரிவாயி லாரென்று முள்ளத்திலே

மானத பூசைசெய் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (40)

***

செப்டம்பர்  21 திங்கட் கிழமை

வேட்கையிற் றண்டி யடிகட் கமுதிட வேண்டிவைத்தும்

பாட்பட வேயெடுத் துண்டிடுஞ் சுற்றத்தைப் பற்றறுத்துக்

கோட்புலி யாரென் றிடுபேர்கொண் டார்முன்பு கொண்டுபெற்ற

வாட்படை யாளரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (38)

***

செப்டம்பர்  22 செவ்வாய்க் கிழமை

ஈசனைத் தூது விடுத்தாரைக் காணி னிறப்பனென்று

பேசுவார் முன்னரவ் வன்றொண்டர் நக்கர் பிரான்வரவே

காசுறும் வாளால் வயிற்றைக் கிழித்த கலிக்காமரு

மாசற்ற தொல்குடி வேளாளர் பாண்டியன் மண்டலமே. (37)

***

செப்டம்பர் 23 புதன் கிழமை

பொல்லாச் சமண ரிடுந்துன்ப நீறிட்டுப் போக்கிக்கடல்

கல்லாற் கடந்து படிக்காசு வாங்கிக் கபாடந்திறந்

தெல்லாரும் பேறு பெறத்திருத் தாண்டக மேத்துமையர்

வல்லாள ராகிய வேளாளர் பாண்டியன் மண்டலமே. (34)

***

செப்டம்பர்  24 வியாழக்கிழமை 

நாமா ரடிமைவே ளாள ரடிமையெந் நாளுமென்று

கோமான் வளவன்முன் கூற வவனுரை கூறித்தென்னன்

பாவாண னாகவந் தாண்டவ னென்று பகருங்கஞ்ச

மாவார் களந்தைப் புகழேந்தி பாண்டியன் மண்டலமே. (33)

***

செப்டம்பர்  25 வெள்ளிக்கிழமை

கடிமணக் கோலஞ்செய் மங்கைநற் கூந்தலைக் கண்டுசிவன்

அடியவர் பஞ்ச வடிக்கா மெனவடி யோடரிந்து

படிமிசைக் கீர்த்தி கொளக்கொடுத் தேயரன் பாற்கருணை

வடிவான மானக்கஞ் சாறனும் பாண்டியன் மண்டலமே. (32)

***

செப்டம்பர்  26 சனிக் கிழமை

பேர்கொண் டரசுசெய் மீனாட்சி யம்மன்றன் பிள்ளைத்தமிழ்

கூர்கொண்ட சூலங்கொள் சொக்கேசர் மும்மணிக் கோவைமுதல்

தேர்ந்து சிறக்குங் குமர குருபரத் தம்பிரான்சொல்

பார்கொள் பெருமையைப் பெற்றது பாண்டியன் மண்டலமே. (30)

***

செப்டம்பர்  27 ஞாயிற்றுக் கிழமை 

தென்றிசை மேலும் வடதிசை தாழவுந் தேவிமண

மன்றுசெய் கின்ற வரனா ரகத்திய வப்பொதிகைக்

குன்றினி லேகு கெனவுந் தமிழ்பொதி கூடல்வெள்ளி

மன்றினில் வந்து சமானஞ்செய் பாண்டியன் மண்டலமே. (4)

இரண்டு பாடல்களில் அகத்தியர் பெருமை

தண்டமிழ் கொண்டு சிவத்தலம் விண்டு தலம்விளக்கி

யெண்டரு முற்சங்க மேறி யிலக்கண லக்யஞ்செய்து

குண்டிகை நீர்கொண்டு காவேரி தந்து கொழுந்தமிழின்

மண்டலங் கண்ட குறுமுனி பாண்டியன் மண்டலமே. (5)

***

செப்டம்பர்  28 திங்கட் கிழமை

உழுதுண்டு வாழ்பவ ரேவாழ் பவர்மற் றுலகிலுள்ளோர்

தொழுதுண்டு பின்செல் பவரென்று வள்ளுவர் சொன்னவரப்

பழுதின்றி யேகம்ப னாரே ரெழுபது பாடியவர்

வழுவொன்றி லாதவவ் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (23)

***

செப்டம்பர் 29 செவ்வாய்க் கிழமை

பொருந்திய சீவில்லி புத்தூரின் மேவிய புண்டரிகத்

திருந்தரு ளேசெய் திடுநாச்சி யாரம்ம னென்பவரைத்

தரும்பெரும் பொன்மதிச் சீர்க்கரு ணைப்பெயர் தாங்குகின்ற

வரும்பெரு மேன்மைகொள் வேளாளர் பாண்டியன் மண்டலமே. (16)

***

செப்டம்பர் 30 புதன் கிழமை

ஒருகவிக் கோரொரு தேங்காய்பொன் னாற்செய் துருட்டிக்கல்வி

பெருகச்செய் நாவலர் வாழக் கொடுத்துப்ர தாபம்பெற்றான்

திருமலி தஞ்சையிற் கோவைத் தமிழ்கொண்டு செல்வமிக

வருதரு வாகிய வாணனும் பாண்டியன் மண்டலமே. (6)

–SUBHAM—

TAGS- செப்டம்பர் 2026 காலண்டர், பாண்டி மண்டல சதகம், பொன்மொழிகள், ஐயம்பெருமாள்.

மாரிமுத்தா பிள்ளை பாடல்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,141)

Written by London Swaminathan

Post No. 16,141

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பார்ப்பனர்களை ஓரம் கட்டுவது எப்படி ? பக்கி பீடியா, மங்கி பீடியா, டாங்க்கி பீடியா விஷமிகள் சொல்லும் ஐடியா என்ன ?

2

மாரிமுத்தா பிள்ளையின் புகழ்பெற்ற கீர்த்தனைகள் எவை ?

3

இவர் எழுதிய நூல்கள் யாவை ?

4

மாரிமுத்தா பிள்ளையின் எத்தனை கீர்த்தனைகள் இப்போது கிடைக்கின்றன?

5

நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை எது ?

6

காவேரி திரைப்படத்தில் இவருடைய எந்தப் பாடல் இடம்பெற்றது ? அதைப் பாடியவர்  யார்?

7

மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு என்ன ?

8

சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாட்டிய பாடல் எது ?

9

தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரம் போல வேறு எதுவும் இல்லை என்ற பாடலின் வரிகள் என்ன ?

10

எல்லா கீர்த்தனைகளும் கிடைக்கும் வெப்சைட் எது ? தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை   — என்ற பாடலின் வரிகள் என்ன ?

***

விடைகள்

1.”இவர் (மாரிமுத்தா பிள்ளை) தமிழ் இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. தமிழ் ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர் (1525-1625)”..

XXX

இதில் இரண்டு விஷங்கள்/ விஷமங்கள் இருப்பதைக் கவனிக்க வேண்டும் ; அதாவது பார்ப்பனர்களாகிய மும்மூர்த்திகளுக்கும் முன்னவராம் இவர்கள் ; அதனால் இவர்கள் ஆதி மும்மூர்த்திககளாம் . அதையும் சம்ஸ்க்ருதத்தில் ஆதி, மூர்த்தி என்ற சொற்களுடன் போட்டு சங்கீத மும்மூர்த்திகளை வம்புக்கு இழுத்து அவர்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது அது சரி ! இவர்களுக்கு ஆதி மும்மூர்த்திகள் பட்டம் கொடுத்தது யார் ? அந்த அயோக்கியர் பற்றி பின்னர் எழுதுகிறேன்.

இரண்டாவது விஷமம் ; சில நாட்களுக்கு முன்னர்தான் இதே பிளாக்கில் பத்து கேள்விகள் வரிசையில் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பற்றி பத்து விஷயங்களை போட்டிருந்தேன். அவருடைய காலம் Oothukkaadu Venkata Kavi (c. 1700-1765) வாழ்ந்த காலம் – (16 அக்டோபர் 1700 – 1765) . அதாவது மேலே குறிப்பிட்ட இருவருக்கு முந்தையவர்; அவர் பாடிய அலைபாயுதே , ஆடாது அசங்காது வா  கண்ணா, கண்ணன் வருகின்ற நேரம் – கரையோரம், அசைந்தாடும் மயிலொன்று , தாயே யசோதா என்ற பாடல்கள் உலககப் பிரசித்தம் . அவர் பிராமணர் என்ற காரணத்துக்காக அவரை ஓரம் கட்டி, அயோக்கியர்கள் கொடுத்த டைட்டில் ஆதி மும்மூர்த்தி.

மூன்றாவது விஷமம், முத்துத் தாண்டவர் ((1525-1625) என்பவருக்கு இவர்கள் கொடுத்த காலம் ஆதாரமற்ற பொய், ஆதி மும்மூர்த்திகளை உண்டாக்கிய அயோக்கியனின் கற்பனை . ஆனால் இவர்கள் மூவரும் மஹா மேதைகள், பெரியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம் சங்கீத மும்மூர்த்திகளைத் தாழ்த்தி, மேலே குறிப்பிட்டோருக்கு மூத்தவரான ஊத்துக்காடு வேங்கட சுப்பையரை ஒதுக்கி வைத்ததைக் காட்டவே இதை எழுதுகிறேன் இந்த விஷமும் விஷமமும் மேலே குறிப்பிட்ட ஆதி மும்மூர்த்திகள் சைட்டில் இருப்பதால்தான் இங்கே எழுதுகிறேன் . இதை உண்டாக்கிய அயோக்கியன், கர்நாடக இசை மீது அணுகுண்டு வீசியுள்ளான். அதைத் தனியாகப் பார்ப்போம்

அப்பர் ,சம்பந்தர், சுந்தரர் ஆகியோர் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இசையைப் பரப்பினார்கள்; நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞான சம்பந்தன் என்று பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார்  போற்றினார் ; ஆகவே தமிழையும் தமிழ் இசையையும் முதலில் பரப்பியவர்கள் தேவார மூவரே ; அதற்குச் சான்றாக இன்றும் ஓதுவா மூர்த்திகள் நிற்கிறார்கள். 

***

2. தமிழிசை மூவர்களில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை (1712–1787) சிதம்பரம் நடராஜ பெருமான் மீது பல புகழ்பெற்ற கீர்த்தனைகளையும் பக்திப் பாடல்களையும் இயற்றியுள்ளார்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே (ராகம்: யதுகுலகாம்போதி, தாளம்: ஆதி) – இவரின் மிகப்பிரபலமான பாடல்.

  எதுக்கு இத்தனை மோடிதான் உனக்கு (ராகம்: சுருட்டி, தாளம்: ரூபகம்)

  எந்நேரமும் ஒரு கால் சிவன்கை (ராகம்: ஹனுமத்தோடி)

  தில்லை சிதம்பரமே (ராகம்: ஆனந்தபைரவி / காபி நாராயணி)

  ஒருக்கால் சிவசிதம்பரம் (ராகம்: அரபி)

  என்ன துணிவாய் நெஞ்சே (ராகம்: சாரமதி)

  தரிசித்த பேருக்கு முக்தி (ராகம்: கேதாரகௌளை

***

3.மாரிமுத்தாபிள்ளை தெய்வம் தொடர்பான பல நூல்களை இயற்றினார். அவை புலியூர் வெண்பா, சிதம்பரேசர் விறலிவிடு தூது, ,தில்லைப் பள்ளு, சித்திரக் கவிகள், புலியூர்ச் சிங்காரவேலர் பதிகம், தில்லை விடங்கன் ஐயனார் நொண்டி நாடகம், வருணாபுரி ஆதிமூலேசர் குறவஞ்சி, வருணாபுரிப்பள்ளு ஆகியவை இவற்றோடு பல கீர்த்தனைகளும் பாடினார்.

***

4.தமிழிசை மூவர்களில் ஒருவரான தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை அவர்கள் நூற்றுக்கணக்கான பாடல்களை (கீர்த்தனைகளை) இயற்றியுள்ளார் என்று கூறப்பட்டாலும், இன்று நமக்கு 25 கீர்த்தனைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன.

***

5.நடராஜர் நடனம் பற்றி இவர் எழுதிய புகழ்பெற்ற கீர்த்தனை :

இராகம் : தோடி தாளம் : ஆதி

பல்லவி

எந்நேரமும் ஒருகாலைத் தூக்கி நொண்டிக்
கொண்டிருக்கிற வகையேதையா

அநுபல்லவி

பொன்னாடர் போற்றுந்தில்லை நன்னாடர்
பொன்னம்பல வாணரே இன்னந்தானும் ஊன்றாமல்

சரணம்

எக்கிய நெருப்பவிக்கத் தக்கன் வீட்டில் நடந்தோ.


எமனை உதைத்த போதில் எதிர் சுளுக்கேறி நொந்தோ.

***

6. காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே – பாடல் காவேரி திரைப்படத்தில் இடம்பெற்றது; அதை சி எஸ் ஜெயராமன் பாடினார்.

****

7.மாரிமுத்தா பிள்ளையின் பாடல்களில் காணப்படும் சிறப்பு:

கடவுளைப்பற்றி பாடினாலும் அதை கிண்டல் தொனியில் பாடுவார்; அதாவது இகழ்வது போலப் புகழும், வஞ்சப்புகழ்ச்சி முறையை கையாண்டார் ; இதோ ஒரு உதாரணம்

எந்நேரமும் ஒரு காலைத் தூக்கி”

“காலைத் தூக்கி நின்றாடுந் தெய்வமே”

என்ன பிழைப்புன்றன் பிழைப்பையா”

“வீடும் அம்பலமாகி நீரும் அந்தரமானீர்”

***

8. சாரங்கதாரா திரைப்படத்தில் ராதா ஜெயலட்சுமி பாடிய பாடல் “ஏதுக்கித்தனை மோடி தான்”

***

9.இராகம்-சவுராஷ்டிரம்- ஆதிதாளம்.  

பல்லவி    தெரிசித்த பேரைப் பரிசுத்தராக்கச் சிதம்பரமன்றியுண்டோ  

 அநுபல்லவி     

விரிவுற்றபூலோக கயிலையென் றுளமொருமித்து

நடந் தெதிர்    கொண்டு, மேரு வொத்த விரண்டோடிரண்டு,

கோபுரத்தைக்    கண்ணாரவே கண்டு                (தெரிசி)          

சரணங்கள்.

1.      மேலைத்திசைக் கோபுரத்தினிற் கற்பகவேழமுகன் றனைவாழ்த்தி    நல்ல நீலத் திருமயிலேறுங் குமரன் முன் நின்று தொழுதடி    போற்றி, அனுகூலச் சிவகங்கை மூழ்கியந் நீரை யுட்கொண்டு    மனக்குறையாற்றி, இந்த ஞாலத்தையீன்ற சிவகாமசுந்தரி பா    பாலுற்றிருவினை மாற்றி வெகு சீலத்துடன் மலர்சாத்தி அர்த்தசா    மத்திலே தொழுதேத்தித்                (தெரிசி)

2.     நம்பித் திருமூலஸ்தானத்திலே துதி நாத்தழும்பேறலேறப் பயின்று    உமை அம்பிகைத் தாளைப்பணிந்து மலாதியோடைந்து புலாதி    யை வென்று நிதமும்பர் வணங்கும் பேரம்பலந் தன்னைக் கண்டுண்    மையாய்ச் சேவித்தகன்று கள்ள -வெம் பிறவிப்பிணி வேரைப் பொ    டிசெய்யுஞ் செம்பொற்சபை நாடிச்சென்று கொடிக்கம்பத் தரு    கினில் நின்று கையால் கும்பிட்டரகராவென்று         (தெரிசி)

3.     ஞானசபை தன்னைச் சேவித்தங்குள்ள ரகசிய வுண்மையை நாடி.    வொளியானத்தை யற்புத ஞானக்கண்ணா லறிந் தானந்தவாரியி     லாடித், தவ மோனத்துட னங்கிருந்து செபங்கண் முழுதுஞ்செ    பித்தன்பு நீடி, நாளும் வானத்தவர்க்குங் கிடையாத முத்தி நிதா    னத்திற் சேவடி தேடி, மெய்த்தியானத்தினாலது பாடி யாக்கியான    த்தை வேறரச் சாடித்                    (தெரிசி)

***

10. You can all the Keerthanas from

இராகம்-பூர்விகலியாணி- ஏக தாளம்            

பல்லவி.    

தெய்வீக ஸ்தலமிந்தத் தில்லை- இந்த வைபோக மெங்கெங்குமில்லை            

அநுபல்லவி,    

துய்யவேதனு மாலுந் தேடியே காணாச் செய்ய தாமரைத் தாளாலாடி    யேநின்ற, வையனிருந்து வாசஞ் செய்யுந் தென்கயிலாசமாமே யிணை    சொல்லப் போமோ வொருவராலே            (தெய்வீக)            

சரணங்கள்

1.     மதிலா யெழுந்து பஞ்சாக்ஷரமே சுற்றி வளைந்திருப்பதுஞ் சிதம்    பரமே, மேலாஞ் சதுர்வேத நாலுங் கோபுரமேயாகிச் சமைந்து    நிற்பதும் நிலவரமே, யிது வதனா லெத்தலத்தையும் வெல்லுமே யு    லகம் பதினாலுமிதைத்தானே சொல்லுமே யார்க்கும், கதி தந்த விதத்தாலே     பதியொன்றையிதைப் போலே காணேனுண்டென்    றுவீணே சொல்லக்கூடுமோ                (தெய்வீக)

2.     மூர்த்தியுந் தீர்த்தமுந் தலமும் மூன்று முக்கியமு மொருமித்த நல    முங் கண்ணாற் பார்த்தவர்க் குண்டோ சஞ்சலமும் நினைவின்படி    யே வந்தெய்துஞ் சகலமும் வேத சாஸ்திரமு மிதைத்தானே யோ    துமே நிமிஷந்தோத்திரமா யுரைத்தாலும் போதுமோ யிதிலோர்    மாத்திரையாம் போது வீற்றிருந்தாற்றீது வருமோ பிறவியைத்    தருமோ சற்றுந் தராது                (தெய்வீக)

3.     எப்போதும் நலந்தருவதுவே யிதுவெல்லாச் சமயத்துக்கும் பொ    துவே-யிதற்கொப்பான தலமினியிதுவே விராட்டுள்ளக்  கமலத்    தானமிதுவே வச்சிரக்கொப்பாருங் குழைச்சியோர் பாகனார் கா    லந்தப்பாத லாறபிஷேகனார் தமக்கொப்பாந் தலந் தமதுமெய்ப்    பாந் தலமிது வுண்மை யிதிலுள்ள வண்மையின் னமனந்தம்    (தெய்வீக)

–subham—

Tags- பார்ப்பன எதிர்ப்பு, ஆதி சங்கீத மூர்த்திகள், பார்ப்பனர்களை ஓரம் கட்டுவதுமாரிமுத்தா பிள்ளை பாடல்கள் , 10 கேள்விகள்

ஆயிரம் பொன்மொழிகள்! (201-220) Post No.16,140)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,140

Date uploaded in London – 29 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஆயிரம் பொன்மொழிகள்! (201-220) 

ச. நாகராஜன் 

பொன்மொழிகள் தொடர்கின்றன…

 201) Thought

Garner of pleasant thoughts in your mind, for pleasant thoughts make pleasant lives. – Wilkins

நல்ல வுயர் எண்ணங்கள் நல்வாழ் வருளுமவை                         ஒல்லை நிறைக வுளம்       –  உலக உள்ளங்கள் (62)

                                ஜெகவீரபாண்டியனார்

Avarice – Envy – Pride

Avarice, envy, pride

Three fatal sparks    – Dante                                                 ஆசை பொறாமை அகம்பாவம் இம்மூன்றும்                                நாசம் பொறிகள் நடல்     –   உலக உள்ளங்கள் (273)

                            ஜெகவீரபாண்டியனார்

Speech – Best men

Men of few words are the best men.   – Shakespeare                          சொல்லைச் சுருக்கிச் சுகமாகும் பேசினவர்                                  நல்ல மனிதர் நலம்        – உலக உள்ளங்கள்

                            ஜெகவீரபாண்டியனார்       

Good Deed

A good deed is one that brings a smile of joy to the face of another. – Mohammed            மற்றோர் முகம் மலர மாண்ட இதம் செய்துவர்ன்                         ஆற்றேதான் நல்ல வினை         – உலக உள்ளங்கள் 730

                                    ஜெகவீரபாண்டியனார்

Gratitude

Gratitude is the sign of noble souls. – Aesop

நன்றி யறிவது நன்மக்கள் தன்மையாய்                                     ஒன்றி யுளதுன் உணர்            – உலக உள்ளங்கள் (188)

                                 ஜெகவீரபாண்டியனார்

Life

Some come, some go

This life is so.

மாந்தர் வருகின்றார் மாய்ந்தொழிந்து போகின்றார்                     ஆந்தகவே நம் வாழ்வும் ஆம்                 – உலக உள்ளங்கள் (608)                                                                              

                                                                                                                       ஜெகவீரபாண்டியனார்

Officer

Five things are requisite to a good officer – ability, clean hands, despatch, patience and impartiality.

                                                                                                 – Penn

செம்மை பொறுமை திறமை செயல்புனிதம்                               அம்மை தலைவற் கணி                     – உலக உள்ளங்கள் (430)                                                                        

                                            ஜெகவீரபாண்டியனார்

Purposeless Life

A purposeless life is a life of fatigue.                                      – J.A. Hadffield                                                                                   கருத்தில்லா வாழ்வு கடையா யிழிந்து                                 விருத்தம் அடையும் விளிந்து                 – உலக உள்ளங்கள் (605)              

                                             ஜெகவீரபாண்டியனார்

Thought – Deed

Be not careless in deeds, nor confused in words, nor rambling in thought. – Marcus Aurelius

எண்ணம் உரை செயலில் எவ்வழியும் செவ்வையாய்                 நண்ணி யிருத்தல் நலம்                     – உலக உள்ளங்கள் (134)

                                             ஜெகவீரபாண்டியனார்

Speech – Thinking – Act

Think twice before you speak, or act once, and you will speak or act the more wisely for it. – Franklin

பேசுமுன் சிந்தி பிறகுன் மொழிசெயல்கள்                        தேசுமிகுமே தெளிந்து                 – உலக உள்ளங்கள் (410)

                                       ஜெகவீரபாண்டியனார்

211. Great men

Great men are ordinary men with extra ordinary determination.  – Abraham Lincoln

Nation

Nations do not die from invasion; they die from internal rottenness. – Abraham Lincoln

Power

Nearly all men can stand adversity, but if you want to test a man’s character, give him power.                     

                                                                                                           – Abraham Lincoln

Moral

You must remember that some things legally right are not morally right. – Abraham Lincoln

God

Sir, my concern is not whether God is on our side, my greatest concern is to be on God’s side, for God is always right.                        – Abraham Lincoln

Crowd

It’s easy to stand in the crowd but it takes courage to stand alone.  – Mahatma Gandh

My Message

My life is my message.                                       – Mahatma Gandh

Wealth – Pleasure

Seek not greater wealth, but simpler pleasure; not higher fortune, but deeper felicity. – Mahatma Gandh

Love

What barrier is there that love cannot break?     – Mahatma Gandh

220. World – Shake

In a gentle way, you can shake the world.       – Mahatma Gandhi

***

இராமன்- சுக்ரீவன் சந்திப்பு!  துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம் ;ஓர் ஆய்வு – 25

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,139

Date uploaded in London –   28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம் ;ஓர் ஆய்வு  –  25 

(ஆர்சேஷாத்ரிநாதன்) 

இராமன் சுக்ரீவன் சந்திப்பு 

जब सुग्रीवः राम कहूँ देखा। अतिसय जन्म धन्य करि लेखा॥ ६॥

सादर मिलेड नाइ पद माथा। भेंटेड अनुज सहित रघुनाथा॥ ७॥

இராம இலக்ஷ்மணரை ஹனுமன் தூக்கி வருவதைப் பார்த்த சுக்ரீவனுக்கு நம்பிக்கையின் ஒளி தெரிந்தது. யாரால் தீங்கு வரப் போகிறது என்று நினைத்தானோ அவர்களால் நன்மை நடக்கப் போகிறது. இல்லை என்றால் ஹனுமன் அவர்களைத் தூக்கி வர மாட்டானே? இராமனைப் பார்த்த சுக்ரீவன் தான் பிறவிப் பயனை அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தான். இராமனின் உருவத்தில் லயித்து விட்டான். இராமனின் திருவடிகளில் தனது தலையை வைத்து வணங்கினான். இராமன் தம்பி இலக்ஷ்மணனுடன் சுக்ரீவனை மார்புறத் தழுவிக் கொண்டான்.

இங்கு துளசி தாசர் राम कहूँ देखा என்ற பதப் பிரயோகம் செய்துளார்.  ஒரு சிலர் உருவத்தால் மற்றவர்களை ஈர்த்துவிடுவர். இங்கு இராம் என்று சொல்வதன் பொருள் அதுதான். இராமனின் உருவ லாவண்யத்தைப் பார்த்தவர் அதால் ஈர்க்கப்பட்டு மேற்கொண்டு பேச இயலாதபடி நிற்பார். சுக்ரீவன் இராமனைப் பார்த்ததும் அந்த மன நிலையில் தான் இருந்தான் என்று சொல்ல வருகிறார் துளசிதாசர். இதற்கு எடுத்துக்காட்டாக இராமன் சரபங்க முனிவரின் குடிலுக்கு வந்தபோது

देखि राम मुख पंकज मुनिबर लोचन भ्रंग/

सादर पान करत अति धन्य जन्म सरभंग॥” 

சரபங்கர் இராமனின் முகம் என்னும் தாமரையைப் பார்த்தார். அப்போது அவருடைய கண்கள் என்னும் வண்டுகள் இராமனின் முகம் என்னும் தாமரையில் உள்ள தேனை அருந்திக் கொண்டிருந்தன என்று துளசி தாசர் கூறி உள்ளார். பல உதாரணங்களைக் கொடுக்கலாம். 

மற்றொன்று இராம இலக்ஷ்மணர்களை ஹனுமன் முதுகின் மீது தூக்கிக்கொண்டு வந்தான் இராமன் முன்னால் அமர்ந்திருப்பான். அதனால் சுக்ரீவன் முதலில் இராமரைப் பார்த்தான் என்பதற்காகவும் துளசிதாசர் அவ்வாறு சொல்லி இருக்கலாம். அடுத்து नाड़ पद नाथा” என்ற பதப் பிரயோகம். ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவன் உங்களின் அடியார்களில் ஒருவன் என்று சொல்லியுள்ளான். அதை நிரூபிக்கும் விதமாக  சுக்ரீவன் தலையை மட்டும் குனிந்து இராமனுக்கு வணக்கம் செலுத்தவில்லை. கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான் என்று சொல்லுகிறார். 

कपि कर मन बिचार एहि रीती। करिहहिं बिधि मो सन ए प्रीती॥4॥ 

ஆனால் சுக்ரீவனின் மனதில் ஒரு சந்தேகம் தோன்றியது “வானரமாகிய தன்னுடன் இராமன் நட்புக் கொள்வானோ மாட்டானோ என எண்ணினான்”. இராமனுக்கு அவன் மனதில் உள்ள சந்தேகம் புரிந்தது.. துளசிதாசர் இங்கு येहि रीती என்று சொல்கிறார். அதாவது மேற்கண்ட முறைப்படி.  அதாவது இராமன் சுக்ரீவன் இருப்பிடம் வந்தவுடன் தனது தம்பியையையும் சேர்த்து சுக்ரீவனைத் தழுவிக் கொண்டான். சுக்ரீவன் நினைத்தான் நான் அவரது கால்களில் விழுந்து வணங்கினேன். ஆனால் அவரோ என்னை ஆரத் தழுவிக் கொண்டார். ஆக இராமன் தன்னை ஒரு நண்பனாக ஏற்றுக் கொண்டான் என்று தெரிந்துவிட்டது.

 ஏற்கனவே ஹனுமன் சுக்ரீவனைப் பற்றிய விவரங்களைச் சொல்லிவிட்டான். ஆனால் அதற்கு முன்பே சுக்ரீவனைப் பற்றிய முழு விவரங்களும் இராமனுக்குச் சொல்லப்பட்டுவிட்டன. யார் சொல்லி இருக்கக்கூடும். வேறு யார்? அன்னை சபரிதான்.

 पंपा सरहि जाहु रघुराई। तहँ होइहि सुग्रीव मिताई॥

सो सब कहिहि देव रघुबीरा। जानतहूँ पूछहु मतिधीरा॥6॥ 

“இராமா! நீ பம்பா தீரத்திற்குச் செல். அங்கு சுக்ரீவனுடன் உனக்கு நட்பு உண்டாகும். அவன் எல்லா விவரங்களையும் உனக்குச் சொல்லுவான். உனக்கு எல்லாம் தெரிந்திருந்தும் என்னிடம் ஏன் கேட்கிறாய்” என்று சபரி சொல்கிறாள். சபரி சொன்னதை ஹனுமன் இராமனுக்கு நினைவூட்டுகிறான். 

“कारिहहिं बिधि” என்று சொல்வதன் மூலம்  சுக்ரீவன் தனக்கு இராமனுடன் நட்புக் கொள்ளத் தகுதி இல்லை என்ற நினைக்கிறான். காரணம் நட்பு என்பது சம அந்தஸ்து உள்ளவர்களிடம் உண்டாகிறது. சுக்ரீவன் நினைக்கிறான் நான் வானரம் இராமனோ மனிதன். நான் நாட்டை இழந்தவன். இராமனோ அரசகுமாரன். நான் பயந்தவன். இராமனோ வீரன். நான் பயந்து இருக்கிறேன். இராமன் மகிழ்ச்சியாக எந்தவித பயமும் இல்லாமல் இந்தக் கொடிய வனங்களில் சுற்றுகிறான், அத்தகைய இராமன் தன்னுடன் நட்பு கொண்டதில் தன்னைப் பாக்யவானாகக் கருதுகிறான்.

तन् मम एव एष सत्कारो लाभः च एव उत्तमः प्रभो |

यत् त्वम् इच्छसि सौहार्दम् वानरेण मया सह || ४-५-१०

இதைத்தான் வால்மீகி இராமாயணத்திலும் மேற்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. 

இதிலிருந்து தெரிகிறது இறைவன் எல்லா ஜீவராசிகளையும் தன் வயப் படுத்திக் கொள்ள விரும்புகிறான் என்று. அப்படி விரும்பும்போது எல்லா ஜீவராசிகளுக்கும் இறைவனிடம் சரண் அடையவேண்டும் என்ற எண்ணம் வருகிறது.    

வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது 

मित्रभावेन सम्प्राप्तं न त्यजेयं कथंचन।

दोषो यद्यपि तस्य स्यात् सतामेतदगर्हितम्॥३॥

 “”எவன் ஒருவன் நட்புக் கரம் நீட்டி என்னிடம் வந்துவிடுகிரானோ நான் அவனைக் கைவிடுவதில்லை. அவனிடம் ஒரு சில குறைகள் இருந்தாலும் அவர்களுக்கு நல்லவர்கள்  அடைக்கலம் அளிப்பதில் எந்தவித தவறும் இல்லை.” என்று இராமன் சொல்வதாக வால்மீகி கூறி உள்ளார்.

Wigs of British Judges! Seven Step Good-bye! Purananuru wonders-60 (Post.16,138)

Written by London Swaminathan

Post No. 16,138

Date uploaded in London – 28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-60;Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100

***

Item 841

Let me give you wonders from one more book. The name of the book is Porunar Atruppadai (aatruppadai).

Author- Mr or Miss Mudaththama Kanniyar (mudaththaama kanniyaar); some people think she is a oman because of the spelling Kanni; but it may mean garland as well; so maybe a man!

Lines-248; Hero of the poem- Karikal Choza (we have already  seen him in Paaatinappaalai)

This book Porunaratruppadai is one of the Ten Idylls known as Paththuppaattu, which is part of 2000 year old Sangam Tamil Literature. Porunan = a bard; aatruppadai = giving guidance.

The poet imagined himself/herself as a bard receiving a bounty from the famous king.

Summary of Wonders:

Robbers stopped robbery after listening to music;

Judgement with White Wig; British judges follow Karikal Choza!

Chariot with Four White Horses like Chariot of Krishna in Bhagavad Gita;

Karikal Choza walked Seven Steps following Rig Veda;

Bali offering to Crow; (also seen in Kuruntokai);

Seven stringed Yaaz (lyre or lute);

Description of a woman from Foot to Head;

Cloth looking as thin and as transparent as snakeskin;

Karma Theory; Rebirth; effect of fate;

9 flowers, 12 trees, 5 animals.

***

item 842

in the first 22 lines poet compared the lute to a pregnant woman. He also described how the lute was played. Robbers dropped their weapons as soon as they listened to it. Earlier we saw how even wild elephants stopped damaging d crops after listening to songs.

Nationalist poet Subramaniya Bhratiyar described  Kannamma in the lines “Veenaiyadi Nee Enakku, Mevum Viral Naan Unakku”; Oh Kannamma, You are the Veena/ I am the fingers that play on you. Probably he got it after reading these 20 ++ lines!

***

item 843

Kesaati paata Description (Head to Foot Description)

Hindus start describing a Goddess from Foot to Head and the reverse is followed for humans.

Because Goddess Eyes are powerful a devote can’t look at her radiance; so, they always pray for her side glance (Kadaik Kan in Tamil) only!

Here the description shows as if the poet saw a naked woman!

Here is what he/she described:

The singer woman had

Her tresses= as black as sand (if you go to a river you may see the black, smooth sediment)

Her eye brows= killing bows of warriors (beauties ‘Killing’ men is a phrase in Tamil);

Forehead= crescent moon;

Lips = utter sweet words; red in colour like Bombax malabarica flowers; silk cotton tree in Tamil is Ilavam maram.

Her teeth= shiny pearls;

Ears with pendants = looked like scissors that trim hair;

Her shoulders= like bamboo;

Fingers= kanthal flowers;

Finger nails= parrot beaks;

Voluptuous Breasts = so tight that you can’t insert even a thin rib or nib;

Navel= water ripple or whirlpool;

Waist = scarcely visible;

Her belt with beads=  like beehive with bees;

Thighs = trunks of huge female elephants;

Small feet= tongues of panting dogs;

Look= pea hen look.

We may wonder whether the poet saw a naked beauty or she was wearing a nylon transparent sari!

***

Item 844

Most of the above comparison is a cliché in Tamil and Sanskrit literature. You can read almost the same in Kalidasa.

But here is a word the poet coined for SCISSORS!

He says MAYIR KURAI KARUVI= Instrument that trims hair!

No shoes! She walked without shoes, so poor!

Poet says she developed red blisters in her feet when she walked on stones.

***

Item 845

Offers prayers to Forest God, says the poet (line 52).

Poet probably meant Goddess Durga, who is called Kaadukizaal (goddees of forest in other poems)

This shows Hindus worship Gods and Goddesses all along their way. We saw it in Paatinappalai and Perumpanatruppadai.

***

Item 846 Karma Theory

Sangam Tamils were Puka Hindus who saw god everywhere and belived in Karma Theory ; if you do something good that will have its effect in the following seven births . if you have already done good things in your previous birth something good will happen unexpectedly.

Here the poet adds,

O chief of bards whose songs have value great!

It is the fruit of good deeds done by thee

In a former birth that made thee meet me here

Nor miss the proper way in ignorance (line 59)

(J V Chelliah, year 1946, followed Nachinarkkiniyrar commentary).

***

Item 847  Master of Seven Stringed Yaz! (line 63)

ஏழிசை (Ēḻicai) translates to “The Seven Musical Notes” or “The Seven Swaras” in English.

In Tamil music tradition, it refers to the seven basic notes of a musical scale, which correspond directly to the Carnatic and Hindustani classical music notes (Swaras), as well as the Western musical notes.

  • Kural (குரல்) – Sa (Shadjama) – Do / C
  • Thuttham (துத்தம்) – Ri (Rishabha) – Re / D
  • Kaikkilai (கைக்கிளை) – Ga (Gandhara) – Mi / E
  • Uzhai (உழை) – Ma (Madhyama) – Fa / F
  • Ili (இளி) – Pa (Panchama) – Sol / G
  • Vilari (விளரி) – Dha (Dhaivata) – La / A
  • Tharam (தாரம்) – Ni (Nishadha) – Ti / B

Seven strings for playing Seven Notes

***

Item 848 n Nice clothes like Snakeskin

The singing bard wore rags teemed with nits and lice and wet with sweat.lines 79-81

When he met the great king he treated the bard like a friend and gave

Clothes whose texture was so fine

Its threads could not be easily traced, and worked

With floral forms resembling skins of snakes.

In the halls bejwelled, smiling, comely maids

Pored out from spotless golden vessels full

Like cheering rain much stupefying drink

Repeatedly…………………………… lines 82-88

***

Item 849 Reference to great rishis/ ascetics

Lines 91-93

I drank that I might sooth my weariness

And rested in the wealthy palace here and

With joy at eve. Like rishis that enjoy

Devotion’s fruits by taking proper care

Of their own body’s health. I took good care

To rid me of journey’s weariness

Sangam poets were great Hindus! They tried their best o teach the tenets of Hindu religion at every available opportunity.

Even when the poet wanted to show the anger of Karikal Choza the poet compared him to Lord Muruga/Skanda/Kartikeya.line 131

***

Item 850 reference Good bye by walking Seven Steps

Line 166

After spending many days when the bard expressed his desire to return home, Karikalan showed his disapproval but at the end he gave the bard many gifts and walked seven steps with the leaving guest.

We see this Seven Step Walk before saying good bye even in Paranjothi Munivar’s Tiruvilaiyadal Puranam, just a 300 year old book.

This custom originated in the Rig Veda, oldest book in the world. Brahmins and other communities do this in Weddings. Rig Veda’s last book, tenth mandala. has a beautiful Wedding Song. A Hindu marriage is solemnised only when the bride and bridegroom walk around fire doing Seven Steps called Saptapadi. At each step they take a vow. This type of wedding was done by Vaisya community according to Silappadikaram.

  First Step (Nourishment): A promise to provide food, share household responsibilities, and nurture one another.

  Second Step (Strength): A vow to grow together in physical, mental, and emotional strength.

  Third Step (Prosperity): A commitment to share wealth, work for financial stability, and prosper together.

  Fourth Step (Family): A pledge to build a joyful home, raise children with love, and respect each other’s families.

  Fifth Step (Health): A promise to care for each other’s health, well-being, and happiness.

  Sixth Step (Companionship): A vow to remain lifelong best friends and walk as equals through all seasons of life.

  Seventh Step (Loyalty and Friendship): A final pledge of eternal love, loyalty, trust, and spiritual union through every lifetime.

No Hindi or Tamil Feature Film Song can beat the loving words in the Rig Veda Wedding Mantra.

***


Item 851 Bhagavad Gita Chariot line 165

I have a book of Tamil Bhagavad Gita in Tamil published by Ramakrishna Mutt where only for white horses pulling the Chariot of Arjuna with Krishna as the driver. Many pictures show only Four White Horses. Only with four horses one can have a smooth ride. Karikalan also gave the bard a chariot pulled by Four White Horses in addition to silk clothes, gold jewels, gold lotus hair pins for women.

***

Item 852 Balis to Crows

The non vegetarian food items and Karikalan’s  early life and how he got the crown etc are already explained in Pattinappalai.

Here the poet making a passing remark about the food given to crows by Hindus. But we get more details about religiously or ritually feeding crows by Hindus  in Kuruntokai poem 210.

***

Item 853  Origin of Wigs of Judges  (lines 187, 188)

ஆதாரம் , page 122

பத்துப்பாட்டு மூலமும்

நச்சினார்க்கினியருரையும்

டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950

Why Do British Judges Follow a Tamil King?

By S Swaminathan November 13, 2011


Strange as it may look, British judges, magistrates and barristers follow a custom that was started by a Tamil king two thousand years ago. British judges and several others who preside over the courts of justice wear a white wig.

If we go to encyclopaedias, they don’t explain why they wear it or when it was exactly started. Ancient Egyptians wore wigs for protecting their heads from the scorching sun. Then Romans and others wore different types of wigs as symbols of aristocracy.

The British judiciary started wearing wigs from 17th century. Many of the commonwealth countries also followed it. Whenever the reason for the custom is asked many people say that it is the tradition or uniform for professional discipline or it shows experience. Actually it was started by the most famous Tamil king, Karikal Chola two thousand years ago. Crystal clear proof comes from the ancient Tamil Cankam (Sangam) literature.

Karikalan was the greatest of the Tamil kings for three reasons. He ruled vast areas of Tamil-speaking land, subjugating other Tamil kingdoms. He was the first Tamil king who went up to the Himalayas and carved his dynastic emblem there. Till today, there remains a Chola pass in the Himalayas. The second reason was he was a just king and his court of justice in Uraiyur became very famous. Tamil literature praises his justice and gives the story of wigs. And the third reason is the Grand Anaicut he built across the river Cauvery is one of the oldest dam s in the world. 

Though we did not have any historical records scholars have dated him around 1st century BC. He was a boy king – like the Egyptian Tutankhamen. He came to power while he was a teenager.

The Story of Wigs:

One day two elderly people came to his court seeking justice. They had a dispute among themselves. They decided that whatever the Uraiyur court says must be the final settlement. When they came in to royal court they were shocked to see a boy sitting as the judge. They were greatly disappointed – which Karikalan felt immediately by looking at their faces. Indeed the face is the index of the mind.

Karikalan politely asked the elders to take seats and told them to wait for the ‘judge’ and he went in. The entire assembly was puzzled. Then came an elderly person and sat on the chair. After carefully listening to the arguments of both the sides he gave his judgement. Both of them were immensely happy to hear a fair settlement. Now the assembly wanted to know who the elderly judge was. King Karikalan removed his white hair wig (Narai Mudi in Tamil) and revealed himself.  All applauded the Wisdom of the ‘Solomon of India’.

The proof for the anecdote is in three Tamil books:

1.      Porunar Atruppadai –lines 187-188. Porunar Atruppadai is one of the ten long poems of Tamil Cankam literature dated  between 1st to 3rd century AD

2.      Manimekalai- This is one of the five Tamil epics dated 3rd century AD  

3.      Pazamozi – poem 25 translation:

ஆதாரம் , page 122

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்

டாக்டர் உ வே சாமிநாதையர் , 1950

“The grey haired old men said the young man could not come to a decision about their case. They were delighted to find the Choza wore a grey wig and understood the case from listening to their statements”.

This proves that even before they learn the arts suited to their caste, men are “ripe for their duties” This book is dated around 5th century AD.

Nobody can deny the fact that Karikalan was the first one to use white wig in judiciary matters.

There are lot of interesting stories about Karikalan in Tamil literature. He had to fight his own relatives to get the throne after the death of his father Ilam Chet Senni. He escaped an arson attack, and his feet were charred and thus he got the name “Kari Kalan” (man with charred legs). The ancient custom in India is to select a king by the Royal elephant if nobody knew who the real heir apparent was. Karikalan was garlanded by the royal elephant when he was standing in the crowd. The episodes about his daughter Adi Mandi also formed the basis of several interesting stories.

–subham—

Tags–Purananuru wonders-60; Tamil Encyclopaedia 100, One Thousand Interesting Facts -Part 100, Wigs of Judges, Item 853, seven steps, Karikal Choza 

புத்த மத வேதப் புஸ்தகம் தம்மபதத்தில்10 கேள்விகள் (Post.16,137)

Written by London Swaminathan

Post No. 16,137

Date uploaded in London – 28 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பெளத்தர்கள் வேதப்புத்தகமாகக்கருதும் பாலி மொழி புஸ்தகத்தில் புத்தர் புகன்ற எத்தனை ஸ்லோகங்கள் உள்ளன ?

2

அறிவு என்னும் கருவியால் ஐம்புலன்களையும், அதன் போக்கில் விடாமல் அடக்கி ஆள்பவனே, மேல் உலகத்துக்கு விதை ஆவான் (குறள் 24) வள்ளுவர் சொன்னதை புத்தர் எப்படி மொழிகிறார் ?

3 

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழல் (குறள் 428)– இந்த வள்ளுவன் கருத்து தம்மபத்தில் எங்கே உள்ளது ?

4

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும் (850)- உலகத்தார் ஒப்புக்கொண்டதை இல்லை என்பான் பேய் என்றா வள்ளுவர். புத்தர் என்ன செப்பினார்?

5

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு (190) என்று வள்ளுவன் சொன்னதையும் புத்தர் சொன்னாரா?

6

ஒன்றே செய்க!

அதுவும் நன்றே செய்க!!

அதுவும் இன்றே செய்க!!! என்று புத்தர் பகர்ந்து எந்த ஸ்லோகத்தில்?

7

பிராமணன் கொலை செய்தாலும் பாவம் வராது என்று புத்தர் பாடினாரா ?

8

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி- குறள் 25 —என்ற குறளுக்கு இந்திரனைத் திட்டி பரிமேலழகர் அர்த்தம் கற்பித்தார் . பத்து பேர் உரையில் ஒருவர் மட்டும் இது இந்திரனைப் புகழும் குறள் என்றார் . புத்தர் என்ன இயம்பினார் ?

9

பிறருடைய மனைவியை நாடுபவனை வள்ளுவர் எச்சரிப்பது போலவே புத்தரும் எச்சரித்தாரா?

10

ஆசை அறுமின், ஆசை அறுமின்; ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்; ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பம்” என்று  திருமூலர் உரைத்தை புத்தர் ஒரு உவமையுடன் எப்படிச் சொன்னார் ?

********************

விடைகள்

1.இந்த நூலில் 423 ஸ்லோகங்கள் இருக்கின்றன. 26 அத்தியாயங்களில் அவைகளைத் தொகுத்துள்ளார்கள் .

***

2.புத்தரும் தம்மபதத்தில் 321-324ல் சொல்லுவது இதேதான்:

பயிற்சி பெற்ற யானைகளையே போருக்கு கொண்டு செல்வர். பயிற்சி பெற்ற யானையின் மீதே அரசனும் பவனி வருவார். அதுபோலவே பயிற்சி – புலனடக்கப் பயிற்சி –பெற்றவர்களே, கஷ்டம் வந்தாலும் சாந்தமாக வாழ்வர்.

பயிற்சிபெற்ற கோவேறுக் கழுதைகளும், சிந்து மாகாணக் குதிரைகளும் பலமான யானைகளும்  பயிற்சி பெற்றவுடனேயே  நன்றாக இருக்கின்றன. அது போலவே புலனடக்கப் பயிற்சி பெறவனே சிறந்தவன்.

*** 

3.பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்படாமல் இருப்பது மடத்தனம். பயப்பட வேண்டிய பழி பாவங்களுக்குப் பயப்படுவதே அறிஞர்கள் செயலாகும். 

இதை புத்தரும் தம்மபதம் 317ல் அப்படியே புகல்வார்:

பயப்பட வேண்டிய விஷயங்களுக்கு பயப்படாமல் இருப்பவர்களும், பயப்படக் கூடாத விஷயங்களுக்கு அனாவசியமாகப் பயப்படுவோரும் தவறான கருத்துடைய மனிதர்களே. அவர்கள் கீழ்நோக்கிச் செல்பவரே

***

4.உண்மையற்ற பொருளை இருக்கிறது என்று எண்ணுவோனும், உண்மையான பொருளை இல்லை என்பானும் என்றும் சத்தியத்தைக் காணவே மாட்டார்கள். அவர்கள் தவறான பாதையில் சென்று , தப்பிப்போனவர்களாவர் (தம்மபதம் 11)

***

5.மற்றவர்களுடைய குறைகளை எண்ணிப் பார்க்காதே; அவர்கள் என்ன செய்தார்கள் என்ன செய்யவில்லை என்று சிந்திக்காதே;  உன்னுடைய பாவச் செயல்களை எண்ணிப் பார்.  நீ என்ன செய்தாய், என்ன செய்யவில்லை என்பதை சிந்தித்துப்பார் (50)

****

6.காலம் தாழ்த்தாது உடனே நல்லது செய்யுங்கள்; கெட்டதிலிருந்து உங்கள் மனது தள்ளியே இருக்கட்டும். ஒரு மனிதன் நல்லது செய்வதை தாமதித்தால் அவன் மனது கெட்டது செய்வதில் இறங்கி ஆனந்தமாக்ச் செயல்படும் (தம்மம் 116.)

***

7.ஒரு பிராமணனும்சந்யாசியும் பூர்வ ஜன்ம பாபத்திலிருந்து விடுபடுகிறார்கள்; தந்தை தாயைக் கொலை செய்திருந்தாலும், இரண்டு அரசர்களைக் கொன்றிருந்தாலும், ஒரு அரசையும் மக்களையும் அழித்திருந்தாலும், பாபங்களிலிருந்து விடுபடுவர்–  (தம்மபத பாடல் 294)

பிராமணனுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக்கூடாது; தீங்கு செய்தவர்களுக்கு பிராமணனும் பதிலடி தரக் கூடாது- தம்மபதம், 389

****

8. புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.- தம்மபதம் 30

***

 9.மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309

***

10.உங்களை நான் நேசிப்பதால் சொல்கிறேன்; ஆசை என்னும் பந்தக்கட்டுகளை அறுத்து எறியுங்கள்; உசிரா என்னும் வாசனைக் கிழங்கு எடுப்பதற்காக, “பிரானா” கொடியை வெட்டி எறிவது போல ஆசையை வெட்டுங்கள் – தம்மபதம் 337

–subham—

Tags- புத்த மத வேதம், தம்மபதம், 10 கேள்விகள் , பிராமணன்,  இந்திரன்