திருமந்திரம் பற்றி 10 கேள்விகள் (Post No.16,010)

Written by London Swaminathan

Post No. 16,010

Date uploaded in London – 23 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பன்னிரு திருமுறைகளில் திருமூலர் இயற்றிய திருமந்திரம், எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது ?

2

திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் ? எத்தனை அத்தியாயங்கள் அல்லது தந்திரங்கள் உள்ளன?

3

இதை அவர் எந்த ஆண்டில் இயற்றினார் ?

4

திருமூலர் எந்த மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இதை இயற்றினார் ?

5

பாயிரத்தில் என்ன சொல்கிறார் ?

6

முதல் தந்திரத்தில் என்ன விஷயங்களைப் பாடுகிறார்?  இலிங்க புராணம் தக்கன் வேள்வி , அடிமுடி தேடல் எந்த தந்திரத்தில் வருகிறது?

7

மூன்றாவது தந்திரம் எந்த ஆகமத்தின் பிழிவு ? ஏன் ? நான்காவது தந்திரத்தில் திருவைந்தெழுத்தின்  பெருமையை உலோகங்களை உவமையாக்கி எப்படி எடுத்துரைக்கிறார் ?

8

ஐந்தாவது ஆறாவது தந்திரங்கள் சாரம் என்ன

ஆறு ஆதாரங்கள் பற்றி எங்கு பாடுகிறார் ?

9

திருமூலரின் புகழ்பெற்ற மேற்கோள்களை நிரப்புங்கள் :

ஒன்றே குலமும் …………………………………………..

சிவனொடு ஒக்கும் தெய்வம் …………………………..

ஆர்க்கும் இடுமின்…………………………………………

மரத்தை மறைத்தது ………………………..

மரத்தின் மறைந்தது …………………………

யான்பெற்ற இன்பம் …………………………………..

அன்பும் சிவமும் இரண்டு …………………………………

என்னை நன்றாக …………………………….

தன்னை ……………………………………………..

10

திருமூலர் ஒரு ஆட்டு இடையன் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த ஊர் எது? அவருடைய சமாதி உள்ள இடம் எது?

****

விடைகள்

1.இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார்.

***

2.திருமந்திரத்தில் எத்தனை 3000 பாடல்கள்; ஒன்பது அத்தியாயங்கள் அல்லது தந்திரங்கள் உள்ளன.

***

3.திருமந்திரம் பாடல்களின் மொழி அமைப்பும் ஏராளமான சம்ஸ்க்ருத சொற்களும், லிங்க புராண  விஷயங்களும் கணபதி வழிபாடும் இவரை மாணிக்கவாசகருக்குப் பின்னரே வைக்கும் . இவர் சம்பந்தர், அப்பர் சுந்தரர் காலத்துக்குப் பின்னர் அல்லது சுந்தரர் காலத்தை ஒட்டியே இருந்திருக்கவேண்டும் இவரை இதற்கு முன்னால் வைத்தால், மொழியியல் விதிகளைத் தலைகீழாக மாற்றவேண்டியிருக்கும் . மூவாயிரம் ஆண்டுக்கு ஒரு பாடல் என்பதெல்லாம் உலக மொழிகளையெல்லாம் ஏளனம் செய்யும் கூற்று ஆக அமையும் . உலக மொழிகளின் தோற்றம் ,வளர்ச்சி, முதலியவற்றை அறியாதோர் பிதற்றும் வாதங்கள் இவை ; பிள்ளையார் துதியில் துவங்குவதும் லிங்க, தந்திர, ஆகம , யந்திர விஷயங்களைக் கதைப்பதைக் கொண்டும், தந்திரம்-அதிகாரம் என்ற பிரிவினையும்  இவரை சேக்கிழார் காலத்துக்கு முன்னர் வைக்கலாம் .

***

4. கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர். இவருடைய பாடல்களில் காஷ்மீர் சைவ செல்வாக்கு இருப்பதால் இவர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது ஒரு சாரார் கொள்கை.

***

5.பாயிரத்தில் விநாயகர் காப்புடன் நூல் தொடங்கி , கடவுள் வாழ்த்தாக ஐம்பது பாடல்கள் உள்ளன ; வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, குருபரம்பரை, திருமூலர் வரலாறு , அவையடக்கம்,  குரு மட வரலாறு,  மும்மூர்த்திகளின் முறைமை முதலியன உள்ளன .

***

6.முதல் தந்திரத்தில் உபதேசப்பகுதியை அடுத்து நீதி நூல்களைப்போல யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை, நல்குரவு, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, கள்ளுண்ணாமை, அறம், தானச் சிறப்பு முதலியன வருகிறது. இலிங்க புராணம், தக்கன் வேள்வி , அடிமுடி தேடல் முதலியன இரண்டாம்  தந்திரத்தில் வருகிறது.

***

7.வீராகமம் என்னும் நூலின் பிழிவு என்று கருதலாம் ; மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தல், அட்டாங்க யோகம் முதலியன உள்ளன.

நாலாவது தந்திரத்தில் ஐந்தெழுத்தின் பெருமையை விளக்குகையில் செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில் என்கிறார்.

***

8.ஐந்து: இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:

சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம்

ஆறு: குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு நிலை

.ஏழாவது தந்திரத்தில் ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை, உயிர் இலக்கணம்ஆகியவற்றைப்பாடுகிறார்

***

9.ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை

ஆர்க்கும் இடுமின்: அவர்இவர் என்னன்மின்

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே

***

10.திருமூலர் ஒரு ஆட்டு இடையன் உடலில் கூடுவிட்டுக் கூட்டு பாய்ந்த ஊர் திருவாவடுதுறை.  புகழ்பெற்ற திருமூலர், திருமந்திரம் எனும் நூலை இயற்றியதும், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து முத்தி பெற்றதும் இத்தலத்தில்தான். ஆடுதுறைக்கு அருகில் உள்ள சாத்தனூர் என்ற ஊரில் உள்ள ஐயனார் கோவில் பின்புறம் ,மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலும் திருமூலர் சமாதி அமைந்துள்ளதாகவும் நம்புவோர் உளர்.

–Subham—

Tags- திருமந்திரம் ,10 கேள்விகள் , திருமூலர், திருவாவடுதுறை

Hindu Fasting! Tirukkural Encyclopaedia- Chapter 16 (Kural 156-160) – (Post.16,009)

Written by London Swaminathan

Post No. 16,009

Date uploaded in London – 23 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted:

I have already pointed out the first couplet is from Atharva Veda where mother is compared to Earth.

Here in couplets 169 and 170 Hindu ascetics are referred to, which shows Tiru Valluvar was a practising Hindu.

Hindus fast for good things to happen; earlier he mentioned getting a child by fasting (See Kural 70).

We read that Adi Sankara, Bhakta Markandeya and other great soul were born after fasting by their parents.

Unless he was a Pukka Hindu, couplets like this won’t come from his mouth.

Later we are going to see more of the same.

Last but not the least , we must note the relationship between Bear and PORU in Tamil.

All the old languages evolved from Tamil and Sanskrit which came out of Lod Siva according to Panini and Bharatiyar. Both say the languages came from Lord Siva.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

The Possession of Patience, Forbearance பொறையுடைமை – Forgiveness

PART 32

156.The joy of the dust of revenge is for a day; but glory eternal to the man  who has the patience of the wise- ANM+2

***

156. relation gives but a day’s joy;

Forbearance brings glory for all time— SMD

***

156
Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.
The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world. – GUP
***

156.Revenge accords but one day’s joy
Patience carries its praise for aye– SB.        

***

156.The gratification which one derives by retaliation is momentary; but the glory of forbearance lasts for all time– EVS

***

156.The overbearing taste their joy but for a day;

The forbearing shall have praise till world shall end— HAP

***

156. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

157.Avenge not the wrongs ever so great for the  for the well being of your soul; but bless them that curse you; for they know not what they do— ANM+2

***

157.Even if a wrong is done to one, and though badly hurt,

It is good not to retaliate with an evil— SMD

***

157
Though others work thee ill, thus shalt thou blessing reap;
Grieve for their sin, thyself from vicious action keep!
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue. – GUP
***

157.Though others cause you wanton pain
Grieve not; from unjust harm refrain- SB.        

***

157.Even when wrong is done by others one should feel compunction for the consequences they should suffer, and refrain from doing any harm in return– EVS

***

157.Though others ill may do, it is better far

On their behalf to suffer, to no one doing ill- HAP

***
157. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

158.Conquer the nobility of your being those who have taunted you in their insolent pride- ANM+2

***

158.Pride m leads a man to do wrong; but this could be overcome

By the greater pride of one’s own forbearance— SMD

***

158
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Let a man by patience overcome those who through pride commit excesses. – GUP
***

158.By noble forbearance vanquish
The proud that have caused you anguish– SB.        

***

158. Overcome by forbearance those that harm thee by this overbearing conduct—EVS

***

158.By their own forbearance let men overcome those

Who, in their pride, have wrought them grievous ill- HAP

***

158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

159.Even holier than the ascetics are those that bear with the slanderous tongue of their detractors- ANM+2

***

159.The householder who practises forbearance in the face of insult,

Is purer than the ascetic himself- SMD

***

159
They who transgressors’ evil words endure
With patience, are as stern ascetics pure.
Those who bear with the uncourteous speech of the insolent are as pure as the ascetics. – GUP
***

159.More than ascetics they are pure
Who bitter tongues meekly endure– SB.      

***

159.Those that forbear the harsh words of the unrighteous one live as holy as a hermit who has renounced the world – EVS

***

NO HAP TRANSLATION

***
159. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

160.Great is the sage who fasts; greater still is the patient heart that forgives the calumny of men – ANM+2

***

160.Great ascetics do penance without food but forbearance

In the face of insults, is greater penance- SMD

***
160
Though ‘great’ we deem the men that fast and suffer pain,
Who others’ bitter words endure, the foremost place obtain.
Those who endure abstinence from food are great, next to those who endure the uncourteous speech of others. – GUP

***
160.Who fast are great to do penance
Greater are they who bear offence– SB.        

***

160.Those who perform penance by fasting are certainly great but even they are not equal to those that forbear the harsh words spoken by others– EVS

***

160.Who, willingly, can hunger bear are truly great;

But yet less great than those who freely bear men’s unkind words- HAP

***
160. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

To be continued…………………………….

Tags- Tirukkural Encyclopaedia- Chapter 16 (Kural 156-160) , patience, forbearance, Hindu fasting

Important Upanishad Mantras in English and Sanskrit with Meaning- 10 (Post.16,008)

Written by London Swaminathan

Post No. 16,008

Date uploaded in London – 23 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 10

Mantra 56

सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम् ।

अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥ ५ ॥

Satyena labhyastapaso hyeṣa ātmā samyag-jñānena brahmacaryeṇa nityam |

antaḥ-śarīre jyotirmayo hi śubhro yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ || Mundaka Upanishad (Chapter 3, Verse 1.5).

  • Satyena: By truthfulness. Not just theoretical truth, but strict alignment with reality and integrity in thought, word, and deed.
  • Labhyaḥ: Attainable / obtainable.
  • Tapasā: By austerity, intense focus, and self-discipline.
  • Eṣa Ātmā: This Supreme Self.
  • Samyag-jñānena: By correct, discriminative knowledge of reality.
  • Brahmacaryeṇa: By celibacy, continence, and controlled senses.
  • Antaḥ-śarīre: Within the body.
  • Jyotirmayo: Full of light, resplendent.
  • Śubhraḥ: Pure and untainted.
  • Yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ: Whom the ascetics (yatayah), whose impurities have been destroyed (kshina-dosha), realize and behold. Mundaka Upanishad (Chapter 3, Verse 1.5).

***

57

यथोदकं शुद्धे शुद्धमासिक्तं तादृगेव भवति |एवं मुनेर्विजानत आत्मा भवति गौतम || १५ || Katha Upanishad Chapter 2, Section 1, Verse 15.

 yathōdakaṃ śuddhē śuddhamāsiktaṃ tādṛgēva bhavati |ēvaṃ munērvijānata ātmā bhavati gautama || 15 ||

“Just as pure water poured into pure water becomes the very same, so too, O Gautama [Nachiketa], does the Self of the wise sage who knows this become identical with the Supreme Self.

***

58

वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद् यतयः शुद्धसत्त्वाः ।

ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ६॥ Mundakopanishad 3-2-6

vedāntavijñānasuniścitārthāḥ saṁnyāsayogādayatayaḥ śuddhasattvāḥ |

te brahmalokeṣu parāntakāle parāmṛtāḥ parimucyanti sarve || 6 || Mundakopanishad 3-2-6

Vedanta-vijnana-sunishcitarthah: Those who have thoroughly and undoubtedly understood the profound wisdom (Vijnana) of Vedanta.

Sannyasa-yogad: Those who have embraced renunciation and spiritual discipline.

Yatayah suddha-sattvah: Seekers of purified minds who continuously exert themselves on the path of truth.

Parantakale: At the time of the great end (at the time of death, when physical constraints are destroyed).

Paramrtah parimucyanti sarve: They become truly immortal (Paramrta) and are entirely liberated (Parimucyanti) in the realm of Brahman.

This verse describes the ultimate spiritual goal of a Jnani (a realized being). It emphasizes that true liberation is not merely an external journey, but an inward realization of one’s immortal nature.

***

59.

न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मण वा ।
ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः ॥ ८ ॥

Mundaka Upanishad 3.1.8

na cakṣuṣā gṛhyate nāpi vācā nānyairdevaistapasā karmaṇa vā |
jñānaprasādena viśuddhasattvastatastu taṃ paśyate niṣkalaṃ dhyāyamānaḥ || 3-1-8 ||

8. He is not grasped by the eye; nor by speech; nor by other senses; nor by tapas; nor by karma; when one’s mind is purified by the clearness of knowledge, then alone he sees the indivisible (Brahman) by contemplation. Mundaka Upanishad 3.1.8

***

60

Atmanam rathinam viddhi shareeram rathameva tu,

Buddhim tu sarathim viddhi manaha pragrahameva tu.

Indriyani hayanyahur vishayansteshu gocharan, Katha Upanishad (1.3.3)

The atman is Ratha – the body,

The intellect is the Sarathi – driver,

The mind is the rein,

The senses are the horses, and

The Panch Vishayas – material objects of the five senses – are

the fields of pasture for the horses.

आत्मनं रथिनं विद्धि शरीरं रथमेव तु ।
बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च ॥

Ātmānaṁ rathinaṁ viddhi śarīraṁ rathameva tu |
Buddhiṁ tu sārathiṁ viddhi manaḥ pragrahamevaca || 

The verse equates the human system to a chariot, identifying each component’s spiritual role:

  • आत्मनं (Ātmānam): The Atman (the Self or Soul) is the owner or rider of the chariot.
  • शरीरम् (Śarīram): The Body is the chariot itself.
  • बुद्धिम् (Buddhi): Intellect is the charioteer (driver) who must guide the journey.
  • मनः (Manaḥ): The Mind is the reigns (used by the driver to steer).
  • इन्द्रियाणि (Indriyāni): The Senses are the five horses that pull the chariot. 

इन्द्रियाणि हयानाहुर्विषयाँ स्तेषु गोचरान् ।

आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४ ॥

indriyāṇi hayānāhurviṣayām̐ steṣu gocarān |

ātmendriyamanoyuktaṃ bhoktetyāhurmanīṣiṇaḥ || 4 || Katha Upanishad (1.3.4)

इन्द्रियाणि (Indriyāṇi): The senses (eyes, ears, etc.).हयान् (Hayān): Horses.आहुः (Āhuḥ): [They] call / say.विषयान् (Viṣayān): The sense-objects.तेषु (Teṣu): On them.गोचरान् (Gocarān): Roads / paths of movement.आत्मेन्द्रियमनोयुक्तम् (Ātmendriyamanoyuktaṃ): The Atman (Self) combined with the senses and the mind.भोक्ता (Bhoktā): The enjoyer.इति (Iti): Thus.मनीषिणः (Manīṣiṇaḥ): The wise ones.

The wise declare that the sense organs (the eyes, ears, etc.) are the horses, and the objects of those senses are the paths they travel. When the Supreme Self (Atman) is connected with the body, the senses, and the mind, the wise call It the “enjoyer” or experiencer of the world.

TO BE CONTINUED……………………….

TAGS- Part 10, important Upanishad mantras

முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 10 (Post.16,007)

Written by London Swaminathan

Post No. 16,007

Date uploaded in London – 23 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

56

ஸத்யேன லப்யஸ்தபஸா ஹ்யேஷ ஆத்மா

ஸம்யக்ஞானேன ப்ரஹ்மசர்யேண நித்யம்

அந்த: சரீரே ஜ்யோதிர்மயோ ஹி  சுப்ரோ யம்

பச்யந்தி யதய: க்ஷீண தோஷா:

-முண்டகோபநிஷதம் 3-1-5

ஜோதிர்மயமானதும் தூயதும் ஆகிய இந்த ஆத்மாவானது சாத்தியத்தாலும் தவத்தாலும் மெய் ஞானத்தாலும்  நெறியில் உறுதிபெற்ற  பிரம்மசாரியத்தாலும்  நிச்சயமாக அடையப்பெறுகிறது . மனது தெளிவு அடையப்பெற்ற துறவிகள் இந்த ஆத்மனைத் தங்கள் தேகத்தின் உள்ளேயே தரிசிக்கிறார்கள் .

सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम् ।

अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥ ५ ॥

Satyena labhyastapaso hyeṣa ātmā samyag-jñānena brahmacaryeṇa nityam |

antaḥ-śarīre jyotirmayo hi śubhro yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ || Mundaka Upanishad (Chapter 3, Verse 1.5)

*** 

57

யதோகம் சுத்தே  சுத்தமாஸிக்தம்  தாத்ருகேவ பவதி

ஏவம் முனேர்  விஜானத ஆத்மா பவதி கெளதம

கடோபநிஷதம் 4-15

கெளதமரே , தூய நீரைத் தூய நீரில் விட்டால்  இரண்டும் எப்படி ஒன்றாகின்றனவோ , அங்கனம் பர ஞானம் பெற்ற முனியின் ஆத்மா  பரமாத்மாவில் ஒன்றுபடுகிறது .

यथोदकं शुद्धे शुद्धमासिक्तं तादृगेव भवति |एवं मुनेर्विजानत आत्मा भवति गौतम || १५ || Katha Upanishad Chapter 2, Section 1, Verse 15.

 yathōdakaṃ śuddhē śuddhamāsiktaṃ tādṛgēva bhavati |ēvaṃ munērvijānata ātmā bhavati gautama || 15 ||

***

58

வேதாந்த விக்ஞான ஸுநிஸ்சிதார்த்தா

ஸந்யாச யோகாத் யதய: சுத்த ஸத்த்வா:

தே ப்ரஹ்மலோகேஷு  பராந்த காலே     

பராம்ருதா: பரிமுச்யந்தி  ஸர்வே

முண்டகோபநிஷதம் 3-2-6 

வேதாந்த விசாரத்தின் முடிந்த குறிக்கோளாயிருக்கிற பரமாத்ம சொரூபத்தில்  நன்கு நிலை பெற்றிருக்கிறவர்களே சந்நியாசிகள்.  துறவும் திருத்தொண்டும் கூடிய வாழ்வின் வாயிலாக  அவர்களின் கருவி காரணங்கள் யாவும் புனிதமடைகின்றன. ஞானா க்கினியில் அவர்களின் உடலங்கள் யாவும் அழியப்பெற்றவர்களாகவும் ஜீவ போதத்தை இழந்தவர்களாகவும், பிரம்ம சொரூபத்தில் அவர்கள் மரணமில்லாப் பெருநிலை எய்துகின்றனர் .

वेदान्तविज्ञानसुनिश्चितार्थाः संन्यासयोगाद् यतयः शुद्धसत्त्वाः ।

ते ब्रह्मलोकेषु परान्तकाले परामृताः परिमुच्यन्ति सर्वे ॥ ६॥ Mundakopanishad 3-2-6

vedāntavijñānasuniścitārthāḥ saṁnyāsayogādayatayaḥ śuddhasattvāḥ |

te brahmalokeṣu parāntakāle parāmṛtāḥ parimucyanti sarve || 6 || Mundakopanishad 3-2-6

 *** 

59

ந சக்ஷுஸா க்ரஹ்யதே  நாபி வாசா

நான்யைர்   தேவைஸ்  தபஸா கர்மணா  வா

ஞான ப்ரஸாதேன  விசுத்த  ஸத் த் வஸ்   ததஸ்து

தம் பச்யதே  நிஷ்கலம் த்யாயமான:

முண்டகோபநிஷதம் 3-1-8

பரமாத்ம தத்துவமானது  கண்களாலோ, வாக்காலோ, மற்ற இந்த்ரியங்களாலோ  கிரஹிக்கப்படுவதன்று. கர்மத்தாலும் தவத்தாலும் அப்பர வஸ்துவை  அறிந்துகொள்ள முடியாது . ஞான பிரசாதத்தால் ஒருவனது உள்ளம் தூயதாகிறது . அப்பொழுது தியானத்தின் வாயிலாக அவயவங்களற்ற  அப்பரமனை (அனுபூதியில்) அவன் அடைகிறான்  .

न चक्षुषा गृह्यते नापि वाचा नान्यैर्देवैस्तपसा कर्मण वा ।
ज्ञानप्रसादेन विशुद्धसत्त्वस्ततस्तु तं पश्यते निष्कलं ध्यायमानः ॥ ८ ॥

Mundaka Upanishad 3.1.8

na cakṣuṣā gṛhyate nāpi vācā nānyairdevaistapasā karmaṇa vā |
jñānaprasādena viśuddhasattvastatastu taṃ paśyate niṣkalaṃ dhyāyamānaḥ || 3-1-8 ||

***

60

ஆத்மானம் ரதினம் வித்தி சரீரம் ரதமேவ து

புத்திம் து ஸாரதிம் வித்தி மன ப்ரக்ரஹமேவ   ச

கடோபநிஷதம் 3-3

உடலை ரதம் எனவும்  ஜீவாத்மனை அதில் பயணம் செய்பவன்  எனவும் அறிக. இனி புத்தியை தேர் ஓட்டுபவன் என்றும் மனத்தைப்  பிடி கயிறு எனவும் அறிந்து கொள்க .

இந்த்ரியாணி ஹயானாஹுர்விஷயான் ஸ்தேஷு கோசரான்

ஆத்மேந்த்ரிய மனோயுக்தம் போக்தேத் யாஹுர்மனீஷிண:

கடோபநிஷதம் 3-4

இந்த்ரியங்களைக் குதிரைகள் என்றும் , அவைகளை செலுத்தும் புலன்களை பாதைகள் என்றும் சொல்கிறார்கள்; உடல், புலன்கள், மனது ஆகியவர்களுடன் பொருந்தியுள்ள  ஆத்மனை – அனுபவிப்பவன் என்று சான்றோர்கள் சொல்கிறார்கள்.

Atmanam rathinam viddhi shareeram rathameva tu,

Buddhim tu sarathim viddhi manaha pragrahameva tu.

Indriyani hayanyahur vishayansteshu gocharan, Katha Upanishad (1.3.3)

इन्द्रियाणि हयानाहुर्विषयाँ स्तेषु गोचरान् ।आत्मेन्द्रियमनोयुक्तं भोक्तेत्याहुर्मनीषिणः ॥ ४ ॥

indriyāṇi hayānāhurviṣayām̐ steṣu gocarān |ātmendriyamanoyuktaṃ bhoktetyāhurmanīṣiṇaḥ || 4 || Katha Upanishad (1.3.4)

TO BE CONTINUED……………………….

TAGS- முக்கிய உபநிஷத மந்திரங்கள்- 10, கடோபநிஷதம், முண்டகோபநிஷதம்

ராமாயணத்தில் வரங்கள் 69  – பிரம்மா மற்றும் விஸ்வகர்மா ஹனுமாருக்கு வரம் அளித்தது! (Post.16,006)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,006

Date uploaded in London – 23 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 6 – பிரம்மா மற்றும் விஸ்வகர்மா ஹனுமாருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன் 

உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு தேவர்கள் ஒவ்வொருவராக வரம் கொடுத்ததைக் கூறி வருகிறார். அதில் பிரம்மா மற்றும் விஸ்வகர்மா ஹனுமானுக்கு அளித்த வரங்கள் அவரால் இப்படி குறிப்பிடப்படுகிறது.

சர்வேஷாம் ப்ரஹ்மதண்டானாமவத்யோயம் பவிஷ்யதி |                    தீர்காயுஸ்ச  மஹாத்மா ச இதி ப்ரஹ்மாப்ரவீதஸ்ச: ||

                உத்தரகாண்டம் முப்பத்தாறாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 18

ப்ரஹ்மா – பிரம்மதேவர்                                               அயம் – ‘இவன்                                                                   சர்வேஷாம் – சகல                                                            ப்ரஹ்மதண்டானாம் – பிரம்மதண்டங்களுக்கும்                                             அவத்ய: – கொல்ல முடியாதவனாகவும்                                           மஹாத்மா ச – மஹானுபாவனாகவும்                                               தீர்காயு: ச – தீர்க்காயுளை உடையவனாகவும்                        பவிஷ்யதி – இருக்கக் கடவது’                                             இதி – என்கிற                                                              வச: – ஆக்கினையை                                               அப்ரவீத் – நியமித்தருளினார்

பிரம்மாவைத் தொடர்ந்து விஸ்வகர்மா இப்படிக் கூறலானார்:

விஸ்வகர்மா ச த்ருஷ்டைனம் பாலசூர்யோபமம் சிசும் |            ஷில்பினாம் ப்ரவர: ப்ராதாத்வரமஸ்ய மஹாமதி: ||

மத்க்ருதானி ச சஸ்த்ராணி யானி திவ்யானி சம்யுகே | தைர்வத்யத்வமாபன்னசிரஞ்சீவி பவிஷ்யதி ||

   உத்தரகாண்டம் முப்பத்தாறாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 19,20

ஷில்பினாம் – சில்பிகளின்                                                    ப்ரவர: – தலைவனான                                                  விஸ்வகர்மா – விஸ்வகர்மா                                                  ஏனம் – இந்த                                                                  பாலசூர்யோபமம் – பாலசூர்யனைப் போலிருக்கின்ற                                        சிசும் – சிசுவை                                                             த்ருஷ்ட்வா – கண்ணுற்று                                               அஸ்ய – ‘இந்த                                                                மஹாத்மன: – மஹாத்மாவுக்கு                                                     மத்க்ருதானி – என்னால் நிர்மிக்கப்பட்ட                                             திவ்யானி – திவ்யமான                                                           சஸ்த்ராணி – சஸ்திரங்கள்                                             யானி – எவைகளோ                                                                  தை: – அவைகளால்                                                              சம்யுகே – போரில்                                                      அவத்யத்வம் – மரணமில்லாமையை                                                  ஆபன்ன: ச – அடைந்தவனாகவும்                                             சிரஞ்சீவி ச – சிரஞ்சீவியாகவும்                                        பவிஷ்யதி – இருக்கக் கடவது’ என்கிற                                              வரம் – வரத்தை                                                        ப்ராதாத் – தந்தருளினார்

பிரம்மாவும், விஸ்வகர்மாவும் தங்கள் பங்கிற்கு இப்படி ஹனுமாருக்கு வரத்தை அளித்தனர்.

**

Purananuru wonders-42, Tamil Encyclopedia-82, One Thousand Interesting Facts -Part 82 (Post.16,005)

Written by London Swaminathan

Post No. 16,005

Date uploaded in London – 22 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 643

In countries like Vietnam, village youths travelling on the back of buffaloes are common. In Tamil Nadu it has become rare. But in Akam 206 we have a description of a buffalo ride. The young boys sitting over the hairy back of a buffalo resemble the monkeys on a huge block of stone.

***

Item 644

The lotus flower is compared to the face of a beautiful lady and the pakandrai blossom just approaching it, is compared to the white vessel from which she drinks honey – Kalittokai 73

***

Item 645

Parrots as pets

In Tamil Nadu, women had parrots and myna birds as pets. Here is a scene in Kali- 72.

A tender mango fruit drops down from the tree on the lotus bud adjacent to an ampal flower and this scene is compared to a lady trying to please her angry parrot bringing to it a white cup full of milk.

Here we can see more; birds also get angry and the humans feel it and show sympathy

Throughout Sambandar Teveram devotional songs, we see Brahmin women raising parrots as pets and they recite Vedas.

This is not only in the south but also was in the vogue in the north; when the great philosopher Adi Sankara asked the village girls taking bath in the river Narmada the way to another great scholar Mandanamishra’s house, the girls relied in Sanskrit sloka asking him to find a house where the parrots are reciting Vedas.

***

Item 646

Vayanthakam ornament of a dancing girl

The Vayantakam is an ancient Tamil ornament traditionally worn on the head, often adorning the hair or forehead of women and classical dancers.

Here is a scene from Kalittokai 79,

The paddy ear bending and falling upon the petals of the lotus flower is compared to the ornament called vayantakam on the forehead of a dancing girl.

***

Item 647

Tamil Poet name- Mr Fishing Rod!

In the Rig Veda we see many poets are named after the phrases they use or the cliché, they used. In Sangam literature also we see a score of poets with strange names; if the name of the poet is not known then the compilers used this method.

Mineri tuntil means fishing rod in Tamil .

In Kuruntokai 54 we come across the poet Mineri tuntil aar ; the AAR suffix is a honorific .

There the poet compares the sudden rise of the bamboo to the fishing rod that rises up as soon as the fish is caught.

***

Item 648

Tamil Poet name – Mr Galloping Horse

Another strange name found in Sangam literature is about galloping Horse.

The poet’s name in Tamil is Vitta Kuthiraiyaar. Kuru. 74

While describing the tall bamboos soaring high towards the sky, the poet compares them to the horse seen leaping at a gallop with great speed which is denoted by the phrase Vitta Kuthirai. The poet is known by the phrase which makes the comparison effective and aids in picturing the bamboos. It is in Kuruntokai 74.

***

Item 649

Hindu Geography

Hindus knew the earth is round and surrounded by 70 % water. Sanskrit and Tamil verses always portrayed earth as clothed by water or surrounded by water.

Following verses described the earth this way:

Perumpan- lines 409-410

Puram.3; Nar.130;

Tolkappiam- Patu Tirai Vaiyam. (Tirai=sea; Vaiyam=earth)

***

Item 650

20 lines for Waterfalls

Kalidasa and Valmiki described nature in most beautiful words. Both used hundreds of flowers in their slokas..Not only women’s body parts but also men’s body parts are compared with flowers. They praised the mountains in many verses. Kalidasa’s first ten verses in his Kumarasambhava, describing the Himalayas is used by many Tamil poets.

The longest description of the mountain waterfall is in Sangam book Tirumurukatruppadai (Murugu. In short)

Murugu. Lines 295 to 316 done by Nakkirar described the waterfall. Nakkirar must have watched with interest and feelings of wonder the waterfall rushing and leaping in sheets resembling waving banners varied in size, sweeping away the products of the mountain, making monkeys and elephants and peacocks shiver with cold and scaring and driving bears and boars to take refuge in caves.

TO BE CONTINUED……………………

TAGS-Purananuru wonders-42, Tamil Encyclopedia-82, One Thousand Interesting Facts -Part 82, waterfalls, buffalo ride, parrots, pets, item 650.

Earth is Mother! Tirukkural Encyclopaedia- Chapter 16 (Kural 151-155) –Post.16,004

Written by London Swaminathan

Post No. 16,004

Date uploaded in London – 22 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Earth is our Mother and the Sky is our father is in all Sanskrit boos. It first appeared in the Bhumi Sukta of Atharvana Veda. It is in Kural 151.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Part 31 The Possession of Patience, Forbearance  பொறையுடைமை  Forgiveness; Patience

151.Behold the earth holding in her lap the very man who delves deep into her; even so the great do bear with those who revile them; for is not forbearance the kingliest of virtues?— 1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

151.Just like the earth which supports the men who dig it

Men of virtues bear with those who heap scorn on them- S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

151
As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.
To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues. – Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***

151.As earth bears up with diggers too
To bear revilers is prime virtue —Suddhananda Bharathiyar- SB.        

***

151.The earth supports the men who dig at it. Similarly, bear with those who scorn you; that is the best virtue– EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

151.As earth bears up the men who pierce her sore,

To bear with our revilers, chief of virtues is— H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

152. To forgive an insult out of strength is noble; nobler still is to forget it— ANM+2

***

152.It is essential to counter wrongs with forbearance

But better still to forget them altogether- SMD

***
152
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that. – GUP

***

152.Forgive insults is a good habit
Better it is to forget it– SB.        

***

152.Forgive wrongs done to you; better still, forget them– EVS

***

152.Forgive always the ills that others do;

But to forget them- this is nobler still – HAP

***
152. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

153.There is a poverty within poverty; it is the poverty of the soul that shuts its doors against a stranger. There is a strength within strength; it is the strength of those who forgive the folly of the ignorant— ANM+2

***

153.It is the worst of poverty to have an unfed guest

While the best in strength is to bear with a fool- SMD

***
153
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might. – GUP

***

153.Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength– SB.        

***

153. The greatest want is not looking after a guest; the greatest courage is suffering fools patiently—EVS

***

153.To turn away a guest is poorest poverty;

But he who bears with fools shows mightiest might— HAP

***

153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

154.It is the unbending spirit of patience that guards the soul of our being- ANM+2

***

154.If a man aspires for the fulness of virtue,

He should cherish the practice of forbearance— SMD

***

154
Seek’st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.
If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience. – GUP

***

154.Practice of patient quality
Retains intact integrity– SB.        

***

154.One who desires to maintain one’s goodness should cultivate forbearance— EVS

***

154.If you nobility would have for aye

Keep on forbearing day by day – HAP

***
154. நிறையுடமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

XXXXXXXXXXXXXXXXXX

155. Mere chaff among men are the unforgiving; but pure gold is the that harbours no thoughts of revenge— ANM+2

***

155.Knowing people will not esteem the vengeful one,

But they will value forbearance as gold— SMD

***
155
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care. – GUP

***

155.Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold– SB.      

*** 
155. The wise regard not those retaliate but they esteem those that forbear—EVS

***
155. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

To be continued…………………

Tags- Earth is Mother!  Tirukkural Encyclopaedia ,Chapter 16, (Kural 151-155)

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 85; இந்து மத கலைச்சொல் அகராதி-85 (Post.16,003)

Written by London Swaminathan

Post No. 16,003

Date uploaded in London – 22 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already; RA beginning words continued…………………

ராமாவதாரம்

விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பற்பல; அவைகளில் பத்து அவதாரங்களை மட்டும் தசாவதாரம் என்ற பெயரில் போற்றி வருகிறோம் ; அந்த பத்து அவதாரங்களில் ராமனே அதிகம் போற்றப்படுகிறார் ; காரணம் ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் (ல்லறத் துணைவி) என்பது அவருடைய கொள்கை ; காலத்தால் அழியாத ராம காவியம் இந்தியாவின் சாது சன்யாசிகளை உருவாக்கியது; காந்தி போன்ற அரசியல்வாதிகளும் ராம நாமமே தன்னைக் காப்பாற்றியது என்று எழுதிவைத்துள்ளனர் ; ஜாதி இன வேறுபாடுகளை அகற்றி குகன் என்னும் வேடனையும், குரங்கு அடையாளம் பொறித்த வன + நர = வானர = காட்டு மனிதர்களையும் , கரடி அடையாளம் போட்டுக்கொண்டு வாழ்ந்த ஜாம்பவான்  இன மக்களையும், , பறவை அடையாளம் போட்டுக்கொண்டு வாழ்ந்த கானக ஜடாயு இனத்தாரையும் சகோதரர்களாக பாவித்து விபிஷணன் போன்றோர் மூலம் அகதிகளுக்கு வாழ்வும் கொடுத்ததால் பெரும்புகழ் பெற்றார் ; அரசர்கள் பல மனைவியரை மணந்து கொள்வதை இந்து மதம் அனுமதிக்கிறது; ஆயினும்  மூன்று மனைவியுடைய தந்தையைப் பின்பற்றாமல் ஒரே மனைவி சீதையுடன் வாழ்ந்தார் ; ராவணன் கடத்திச் சென்ற அந்த சீதையை இலங்கையிலிருந்து மீட்டு வந்து அயோத்தியில் ஆட்சியைத் தொடர்ந்தார் ; ராமனுக்கு இணையாகப் புகழ்பெற்ற பரதனும் சீதையும் இந்துக்களின் உதாரண மனிதர்களாக விளங்குவதால் ராமனின் அவதாரம் பல லட்சம் இந்துக்களை இன்றும் ஊக்குவிக்கிறது .

***

ராமதாஸ் பெயரில் மூன்று சாது சன்யாசிகள்!

ராமதாசர் என்ற பெயரில் மூன்று பெரியார்கள் வாழ்ந்தனர்; வீர சிவாஜியை ஊக்குவித்து வழி நடத்திய சமர்த்த ராமதாசர், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் ; படையெடுத்து வந்த முஸ்லீம்களின் ஆட்சியை ஒழித்து இந்து சாம்ராஜ்யத்தை நிறுவ உதவினார் . சத்ரபதி சிவாஜியின் ஆட்சிக்காலம் (1627/30–1680).

பத்ராசல  ராமதாசு (1620–1688)

இரண்டாவது ராமதாசரை நாம் பத்ராசலம் ராமதாஸ் என்று போற்றுகிறோம் . மாணிக்கவாசகரைப் போலவே அரசாங்க பணத்தைக் கோவில் கட்டப்  பயன்படுத்தியதால் 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்தார்; இறுதியில் ராம லெட்சுமணரே மாறுவேடம் கொண்டு சுல் த்தானிடம் வரிவசூல் பணத்தைத் திருப்பிக் கொடுத்தவுடன் சிறைவாசம் நீங்கியது . பத்ராசலம் இப்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது. இவர் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் இவருடைய பக்தி ரஸ கீர்த்தனைகளை இன்றும் நாம் பஜனைகளில் பாடி வருகிறோம் ; கர்நாடக  இசைக் கச்சேரிகளில் கேட்கிறோம்.

சுவாமி ராமதாஸ் (1884–1963)

மூன்றாவது ராமதாஸ் சுவாமிகள் கேரளத்தில் காசர் கோடு ஜில்லாவில் கஞ்சங்காடு என்ற இடத்தில் ஆனந்தாஸ்ரமத்தை அமைத்தார்; .சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபட்டு சந்நியாசியாக வலம் வந்தார். ராம நாமே சிறந்தது என்று போதித்த அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே பல குட்டிக்கதைகளைக் கூறியுள்ளார் ; ராம கிருஷ்ண உபதேச மஞ்சசரியைப் படித்தவர்கள் இவரது குட்டிக்கதைகளையும் விரும்புவார்கள்.

***

ராமேஸ்வரம்/ ராமநாத (சுவாமி)

இந்தியாவின் புகழ்மிகு புண்யஸ்தலங்களில் ஒன்று ராமேஸ்வரம்; 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரே தலம்.காசி- ராமேஸ்வரம் சென்று வந்தேன் என்பது வாழக்கிலுள்ள பொது மொழி; இவ்விரண்டையும் தரிசிப்பது இந்துக்களின் தலையாய கடமைகளில் ஒன்று. பாம்பன் பாலம் என்னும் புதுமையான  பாலத்தால் இணைக்கப்படும் ராமேஸ்வரம் தீவு,  ராம பிரானால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம்  (ராமநாத சுவாமி)  இருப்பதாலும் எண்ணற்ற தீர்த்தங்கள் இருப்பதாலும் கூடுதல் கவர்ச்சியைப் பெற்றுள்ளது; ராமர், வானர சேனை உதவியுடன் அமைத்த சேது என்னும் கடற் பாலம் அருகிலுள்ள தனுஷ்கோடியில் துவங்கியது. .

மதுரை நகரிலிருந்து 173 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராமேஸ்வரத்தை மூன்றரை மணி நேரத்தில் அடையலாம் .

***

ராம்தீர்த்பஞ்சாப் Swami Rama Tirtha (1873–1906)

சுவாமி ராம தீர்த்தா பெரிய தத்துவ ஞானி ; சுவாமி விவேகானந்தரைப்போல ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றி இந்து சமய தத்துவங்களை விளக்கினார் ; கணிதப் பேராசிரியராக இருந்த அவர் ஆன்மீக நாட்டம் கொண்டு இமயமலையில் தவம் செய்தார். ஜப்பான் , அமெரிக்கா முதலிய  இடங்களில் சொற்பொழிவாற்றினார் ; அவர் பிறந்த இடம் இப்போது பாகிஸ்தானிலுள்ளது . அவருடைய அனுபவம், வாழ்க்கை, சொற்பொழிவுகள் அடங்கிய( a seven-volume collection titled In Woods of God Realization) ஆங்கில நூல் மிகவும் புகழ்பெற்றதாகும்..

***

ரஸம்  – நவரசம்

ரசம் என்பது சாறு என்ற பொருளில் பழ ரசம் , பருப்பு ரசம் என்ற பொருளில் அன்றாட வழக்கில் உள்ளது ; கலைத்துறையில் இது உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்ற பொருளில் பயன்படுகிறது. நாட்டியத்தில் முக பாவம் மூலம் இதைக் காட்டுவார்கள் . நாடகம், திரைப்படங்களில் வசனம்,  குரல் மாற்றம் , முக பாவம் மூலம் இதை வெளிப்படுத்துவார்கள் . பரத நாட்டிய சாஸ்திரத்தை சம்ஸ்க்ருதத்தில் எழுதிய பரத முனி, எட்டு ரசங்களை மட்டுமே இயம்பினார்; ஆனால் பிற்காலத்தில் எழுந்த கலை நூல்கள் அதை நவரசமாக்கி செப்பின. தொல்காப்பியரும் பரத முனியைப் பின்பற்றி எட்டு வகை ரசங்களை/ உணர்ச்சிகளை மட்டுமே உரைத்தார்.

நவ ரசங்கள் என்பன:

1.         வீரம் (heroism)

2.         சிருங்காரம் /காதல்  (eroticism)

3.         அத்புதம் / வியப்பு  (wonder)

4.         ரௌத்ரம் /கோபம்  (fury)

5.         பயனாக  (भयानक): பயம் (fear); in some schools Shame.

6.         பீபத்சம்/ வெறுப்பு  (disgust)

7.         ஹாஸ்யம்/ நகைச்சுவை  (comedy or humour)

8.         கருணை  (pity or compassion)

9.         சாந்தம்  (tranquillity)

அபிநவகுப்தர், சாந்தம் என்ற உணர்ச்சியைப் பிற்காலத்தில் சேர்த்தார்

To be continued……………………….

Tags– ராமதாஸ், ராமதீர்த், ராமேஸ்வரம், நவ ரஸம், ராம, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்து மத கலைச்சொல் அகராதி-85

ராமாயணத்தில் வரங்கள் 67 – வருண பகவான் மற்றும் யமன் ஹனுமாருக்கு வரம் அளித்தது! (Post No.16,002)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,002

Date uploaded in London – 22 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 67  – வருண பகவான் மற்றும் யமன் ஹனுமாருக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பத்தாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமார் வரம் பெற்றுக் கொள்வது’ என்னும் ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவர் ஹனுமாருக்கு இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ஒவ்வொருவராக வரம் கொடுத்ததைக் கூறி வருகிறார். அதில் சூரியனுக்கு அடுத்ததாக வருண பகவான் மற்றும் யமன் ஹனுமாருக்கு வரம் அளித்ததை இப்படிக் கூறுகிறார்: :

வருணஸ்ச வரம் ப்ராதாந்நாஸ்ய ம்ருத்யுர்பவிஷ்யதி |                 வர்ஷாயுசதேநாபி மத்ஷாஷாதுதகாதபி ||                               யமோ தண்டாதவத்யத்வமரோகித்வம் ச நித்யஷ: ||

                          (உத்தர காண்டம் 36ம் ஸர்க்கம் ஸ்லோக எண் 15)

வருண: – வருணன்                                                        அஸ்ய – “இவனுக்கு                                                   வர்ஷாயுசதேநாபி – எந்நாளிலும்                                                  மத்பாஷாத் ச – எனது பாசத்தாலும்                                          உதகாதபி – தண்ணீராலும்                                                           ம்ருத்யு: – மரணம்                                                          ந பவிஷ்யதி – உண்டாகாதிருக்கக் கடவது”” என்கிற                     வரம் – வரத்தை                                                             ப்ராதாத் – தந்தருளினார்                                                         யம: – யமன்                                                               தண்டாத் – தண்டத்தால்                                                      அவத்யத்யம் – மரணமில்லாமையையும்                                      நித்யஷ: – எந்நாளிலும்                                                      அரோகித்வம் – திடகாத்திரத்தையும்                                          ச – அப்படியே தந்தருளினார்

**

திருவாசகம் பற்றி 10 கேள்விகள் (Post.16,001)

Written by London Swaminathan

Post No. 16,001

Date uploaded in London – 21 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பன்னிரு திருமுறையில் திருவாசகம் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது ?

2

திருவாசகத்தால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டினர் யாவர் ?

3

இந்த நூலை யாத்த மாணிக்கவாசகர் எட்டினோடு இரண்டும் அறியேனை என்று பாடியதன் பொருள் என்ன?

4

கயிலாயத்திலுள்ள எவருடைய அம்சம் மாணிக்கவாசகர் என்று திருவாசக உரைகார்கள் கருதுகின்றனர்  ?

5

வள்ளுவர் நூல் அன்பர் திருவாசகத் தொல்காப்பியமே

தெள்ளு பரிமேலகர்  செய்தவுரை – ஒல்லியா சீர்த்

தொண்டர் புராணந்தொகை  சித்தி ஓராறும்

தண்டமிழின் மேலாந்தரம் – என்று பாடிப் புகழந்தவர் யார்  ?

6

வருவாசகத்தினின் முற்றுணர்ந்தோனை  வண்தில்லை மன்னைத்

திருவாதவூர் சிவபாத்தியன் செய் திருச்சிற்றம்பலப்

பொருளார்தரு    திருக்கோவை கண்டேயு மற்றப்பொருளைத்

தெருளாத உள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பவரே —

என்று சொன்னவர் யார் ?

7

திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன ?

8

தேவர் குறளும் திருநான்மறைமுடியும்

மூவர் தமிழும் முனி மொழியும் – கோவைத்

திருவாசமுன் திருமூலர் சொல்லும்

ஒருவாசமென்றுணர் — என்று பாடியவர் யார் ?

9

எழுபதுக்கும் மேலான முறை மாணிக்கவாசகர் பயன்படுத்திய பிராணி எது ?

10

மாணிக்கவாசகர் பிறந்த ஊர் எது இறைவனோடு ஐக்கியமான ஊர் எது?

***

விடைகள்

1.பன்னிரு திருமுறையில் திருவாசகம் எட்டாம் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது.

***

2. திருவாசகத்தால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டினர்: டாக்டர் ரெவரெண்ட் ஜி. யு .போப் , வில்சன் வுட், டாக்டர் ரோஸ்ட், ஸ்டூலின் வில்சன், கெளடி எட்டி ஆகியோராவர்.

***

3.பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை

எட்டினோடு இரண்டும் அறியேனை-

என்பதற்கு உரைகள் கூறும் விளக்கம் : எட்டு என்பது தமிழ் எண்களில் ; இரண்டு என்பது உ ; இவை இரண்டும் சேர்ந்து ஓம் என்னும் எழுத்தை உருவாக்குவதால் திருவாசகம் முழுதும் ஓம்காரப்பொருள் விளக்கம் ஆகும் . முதல் பாட்டாகிய சிவபுராணத்திலேயே ஓம்காரம் வருகிறது ; இரண்டாவது விளக்கம் உ   என்பது சிவனையும் சக்தியையும் குறிக்கும் ; மூன்றாவது விளக்கம் : எட்டும் இரண்டும் சேர்ந்து பத்து என்ற என்னை உருவாக்கும் ; இதற்கான தமிழ் எழுத்து ; இது உயிரைக் குறிக்கும்; ஆக சிவனையும் சக்தியையும் தன்னையும் அறியாத என்பது ஒரு பொருள்; இந்த எட்டும் இரண்டும் அறியாத என்பது திருமந்திரத்திலும் யாப்பருங்கல உரையிலும் கூட வருகிறது.

***

4.கயிலாயத்திலுள்ள நந்திதேவரின் அம்சம் மாணிக்கவாசகர் என்று திருவாசக உரைகார்கள் கருதுகின்றனர்.

***

5.கொற்றன்குடி உமாபதி சிவாச்சாரியார் அருளிய புகழ்பெற்ற தனிப்பாடலில் வரும் வரிகளாகும்.

இப்பாடலில் சிறப்பிக்கப்படும் தமிழ் நூல்கள்:

  1. திருக்குறள்: ‘வள்ளுவர் நூல்’ என அழைக்கப்படும் உலகப் பொதுமறை.
  2. திருவாசகம்: ‘அன்பர் மொழிவாசகம்’ எனப் போற்றப்படும், மாணிக்கவாசகரால் அருளப்பட்ட பக்தி இலக்கியம்.
  3. தொல்காப்பியம்: தமிழ் மொழியின் மிக மூத்த இலக்கண நூல்.
  4. பரிமேலழகர் உரை: திருக்குறளுக்கு எழுதப்பட்ட மிகச்சிறந்த உரை.
  5. பெரியபுராணம்: ‘தொண்டர் புராணம்’ என்ற பெயரில் அறியப்படும் அடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல்.
  6. சிவஞானசித்தியார்: மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றான சைவ சித்தாந்த நூல்

***

6. வருவாசகத்தினின் முற்றுணர்ந்தோனை வண்தில்லை மன்னைத்

திருவாதவூர் சிவபாத்தியன் செய் திருச்சிற்றம்பலப்

பொருளார்தரு    திருக்கோவை கண்டேயு மற்றப்பொருளைத்

தெருளாத உள்ளத்தவர் கவிபாடிச் சிரிப்பிப்பவரே —

என்று சொன்னவர் நம்பியாண்டார் நம்பி .

  வருவாசகத்தினின் முற்றுணர்ந்தோனை: திருவாசகத்தின் உட்கருத்துக்களை முழுமையாக உணர்ந்தவரும்,

  வண்டில்லை மன்னை: வளம் நிறைந்த தில்லை (சிதம்பரம்) நகரத்தின் தலைவனும்,

  திருவாதவூர்ச் சிவபாத்தியன்: திருவாதவூரில் அவதரித்தவரும், சிவபெருமானின் அடியாராகிய மாணிக்கவாசகரையும் குறிக்கும்.

***

7.திருவாசகத்தில் 51 பதிகங்களும் 656 பாடல்களும் உள்ளன.

***

8.தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும் — கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.– இது ஔவையார் அருளிய ‘நல்வழி’ நூலில் இடம்பெற்றுள்ளது.

  • தேவர் குறள்: தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
  • **திருநான் மறைமுடி: ** ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களின் சாரமான (UPANISHADS) முடிவுகள்.
  • மூவர் தமிழ்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரம்.
  • முனிமொழி: அகத்தியர் போன்ற முனிவர்கள் அருளிய தமிழ் நூல்கள்.
  • கோவை: திருக்கோவையார்.
  • திருவாசகம்: மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்.
  • திருமூலர் சொல்லும்: திருமூலர் அருளிய திருமந்திரம்.

இவை அனைத்தும் வெவ்வேறு காலங்களில் தோன்றியிருந்தாலும், இவற்றின் சாரம் (உள்ளடக்கம்) அனைத்தும் ஒன்றே என்பதை உணர்ந்து, அதை ஒருமித்த கருத்தாகக் கொள்ள வேண்டும் என்பது இதன் பொருளாகும்..

***

9.திருவாசகத்தில் எழுபதுக்கும் மேலான முறை மாணிக்கவாசகர் பயன்படுத்திய பிராணி நாய்.

***

10.மாணிக்கவாசகர் பிறந்த ஊர் மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர்; அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்து மந்திரி பதவி கொடுத்தான். இறுதியில் அவர்  இறைவனோடு ஐக்கியமான ஊர் தில்லை என்னும் சிதம்பரம் ஆகும் .

–subham—

Tags- திருவாசகம் ,10 கேள்விகள், மாணிக்கவாசகர், எட்டினோடு இரண்டும்,தேவர் குறளும், வள்ளுவர் நூல்