நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)

Written by London Swaminathan

Post No. 16,153

Date uploaded in London – 1 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

நளவெண்பா நூலை இயற்றியவர் யார் அந்த நூலில் யார் கதையை அவர் கூறினார் ?

2

அந்த நூலில் உள்ள பகுதிகள் எவை? பாடல்கள் எத்தனை?

3

புகழேந்திப் புலவர் எந்தக் கடவுளின் பக்தர் என்பதை நளவெண்பா காட்டுகிறது ?

4

இந்தப் பாடலுக்கான மூலக் கதையை அவர் எங்கிருந்து பெற்றார் ?

 5

ருது பர்ணனுக்கு தேரோட்டியாக இருந்த நளன் ஓட்டிய தேரின் வேகம் என்ன ?

6

நூலாசியரை  யார் சிறையில் அடைத்தார் ?அப்போது  புலவர் இயற்றிய நூல்கள் யாவை ?

7

கம்பன் அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆங்காங்கே பாடலில் குறிப்பிட்டு நன்றிக் கடன் செலுத்தினான். நமது புலவரை ஆதரித்தவர் யார்? அவரைபுகழேந்தி  எப்படிப் புகழ்ந்தார் ?

8

யுதிஷ்டிரன் என்னும் தர்மனைப்போல நளனும் சூதாட்டத்தில் நாட்டை இழந்தான். பின்னர் எப்படி சூதாட்டத்தின் மூலம் நாட்டினைத் திரும்பப்பெற்றான் ?

9

தமிழ் இலக்கியத்தில் பறவைகளையும் தேனீக்களையும் காதலிகள் தூது விடுவதைப் படித்திருக்கிறோம் ;அதற்கெல்லாம் முன்னதாக நளனும் தமயந்தியும் காதல் தூதுவிட்ட பறவை எது?

10

நளவெண்பாவில் இலக்கிய நயம் உள்ளது;  சூரியன் மாலைப்பொழுதில் மறைந்ததை எப்படி வருணிக்கிறார் ?

*******************

விடைகள்

1.நளவெண்பா என்ற நூலினை வெண்பாவிற்குப் புகழேந்தி என்று தமிழ் அறிஞர்கள் போற்றிய புகழேந்திப் புலவர் இயற்றினார் ; அவர் தொண்டை நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் வேலை செய்து, சோழநாட்டுக்குச் சென்று சிக்கலில் மாட்டினார். அவர் வாழ்ந்த காலம் காலம்: 12-ஆம் நூற்றாண்டு .அவர் இயற்றிய நூலில், நளன்- தமயந்தி காதலையும் அவர்கள் கலி புருஷனால் பட்ட துன்பங்களையும், இறுதியில் இருவரும் மீண்டும் சேர்ந்து, துயர் நீங்கியதையும் பாடல் வடிவில் கொடுத்துள்ளார் .

****

2.இந்நூல் மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது:சுயம்வர காண்டம் (171 வெண்பாக்கள்)கலிதொடர் காண்டம் (155 வெண்பாக்கள்)கலிநீங்கு காண்டம் (94 வெண்பாக்கள்); பாயிரம் மற்றும் நூல் வரலாறு உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 427 வெண்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

***

3.புகழேந்திப் புலவர், விஷ்ணு பக்தர் ஒவ்வொரு காண்டத்திலும் விஷ்ணுவைப் புகழந்து பாடியுள்ளார் ஆயினும் நூலின் துவக்கத்தில் பிள்ளையார், முருகன், சிவன் ஆகியோரையும் பாடியுள்ளார் ; நம்மாழ்வாரையும் இவர் போற்றித் துதித்துள்ளார்.

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்

சோதித் திருத்தூணில் தோன்றினான் – வேதத்தின்

முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப

என்என்றான் எங்கட் கிறை.- என்ற பாடலில் வராக அவதாரம், நரசிம்மவதாரம், கஜேந்திர மோட்சம் மூன்றினையும் குறிப்பிட்டு விஷ்ணுவைத் துதிக்கிறார் .

***

4.மகாபாரதத்தில் ஆரண்ய காண்டத்தில் நளோபாக்கியானம் உள்ளது; அதுவே மூலக்கதை;  தர்மபுத்திரனுக்கு வியாச பகவான் இதைக்கூறி, நீ மட்டும் வனவாசத்தில் துன்புறுவதாக நினைக்காதே உன்னையும் விடத் துன்பங்கள் அடைந்து, பின்னர் இன்பத்தை அனுபவித்ததை பார் என்று நளன்-தமயந்தி கதையைச் சொல்லி ஆறுதல்படுத்துகிறார்.

****

5.நளன், தன் பெயரை பாகுகன் என்று மாற்றிக்கொண்டு ருதுபர்ணன் என்னும் மன்னனிடம் வேலை செய்கிறான். தமயந்தி நளனைக் கண்டுபிடிப்பதற்காக, போலியாக இரண்டாவது சுயம்வரத்தை அறிவிக்கிறான்; அதற்கு ருதுபர்ணன் செல்ல விரும்பியபோது ஒரே நாளில் தேரில் அவரை நிடத நாட்டுக்கு அழைத்துவருகிறான். அப்போது தேரின் வேகத்தைக் காட்டுவதற்கு சுவையான ஒரு பாடலைப் புகழேந்திப் புலவர் நமக்கு அளிக்கிறார்.

நளவெண்பா பாடலில் தேரின் வேகம் குறித்து புகழேந்தி பாடியது:

மேலாடை வீழ்ந்ததெடு என்றான் அவ்வளவில்

நாலாறு காதம் நடந்ததே — தோலாமை

மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக்க லிச்சூதில்

மால்கொண்டான் கோல்கொண்ட மா”

பொருள் :

  “எனது மேலாடை விழுந்துவிட்டது, தேரை நிறுத்தி அதை எடு” என்று மன்னன் இருதுபன்னன் கூறி முடிப்பதற்குள், நளன் செலுத்திய குதிரைகள் இருபத்து நான்கு காதம் தூரம் (நாலாறு காதம்) கடந்து முன்னேறிச் சென்றுவிட்டன. (ஒரு காதம் என்பது சுமார் 10 முதல் 14 கிலோமீட்டர் தூரத்தைக் குறிக்கும்; எனவே 24 காதம் என்பது மிக நீண்ட தூரமாகும்)

****

6.இவர் பாண்டியமன்னன் பேரவையில் தலைமைப் புலவராக இருந்தபோது குலோத்துங்கசோழன் பேரவைப் புலவராகிய ஒட்டக்கூத்தர், சோழமன்னனுக்குப் பெண் கேட்பதற்கு  பாண்டியன்பால் வந்தார்.  அப்போது புகழேந்தியாருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் வாக்குவாதம் நிகழ, இருவரும் தம்தம் அறிவின் ஆற்றலைக் காட்டினர். அதில்  ஒட்டக்கூத்தர் தோற்றுப்போனார். பின்னர்ப் பாண்டியன் புதல்வியைச் சோழமன்னனுக்கு திரு மணம் செய்தனர் ; அதற்கு மகட்கொடை (சீதனம்) ஆகக் கொடுத்த பொருள்களுடன், புகழ்ந்தியாரையும் விடுத்தனன் எனவும், ஏற்கெனவே நிகழ்ந்த உரையாடலினால் ஆத்திரம் கொண்ட ஒட்டக்கூத்தர், இவரைச் சிறைப்படுத்தினர் எனவும், அது காலையே ‘அல்லியரசாணி மாலை,’ ‘பஞ்சபாண்டவர் வனவாசம்,’ போன்ற அம்மானை நூல்கள் பாடினாரென்றும் கூறுவர்.

****

7. புலவரை ஆதரித்த சிற்ரசனின் பெயர் சந்திரன் சுவர்க்கி. சந்திரன் சுவர்க்கி யென்னும் இவன், சோழ நாட்டுச் சிற்றரசன். இவன்றன் வேண்டுகோட்கிசைந்தே இந் நூலைப் பாடி அரங்கேற்றினார். இவன் நீதி தவறாது குடிமக்கள்பால் அன்பு காட்டி நாட்டை ஆண்டான் என்பதை ‘மாமனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி’ என்னும் தொடரினால் காட்டுகின்றார்.

24. மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி

தாமரையாள் வைகும் தடந்தோளான் – காமருபூந்

தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்

பாராளும் வேந்தன் பதி.

இவன் இவர் போன்ற பல புலவர்களை ஆதரித்து வேண்டுவன நல்கிப்புரந்து வந்த அருளாளன் என்பதைக் கலிநீங்கு காண்டத்து, நளனைப் பற்றியிருந்த கலி அறவே நீங்கிச் சென்றுவிட்டதைக் குறித்து உவமையாக,

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்

தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி – கொண்டாடும்

பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே

காவலன்பால் நின்ற கலி’ (48)

‘சந்திரன் சுவர்க்கி வேந்தனாற் கொண்டாடப்படுகின்ற பாவலன்பால் நின்ற பசிப்பிணி அறவே இல்லாமல் போவதுபோல், நளவேந்தன்பால் நின்ற கலி நீங்கினான்’ என்று எவ்வளவு சிறப்பாகத் தம் நன்றி மறவாத நலத்தையும், தம்மைப் புரந்த அரசன் புகழையும் நிறுவிக் காட்டுகின்றார்.

***

8.அசுவஹிருதயம் மந்திரம்: நளன் குதிரைகளை மிக அதிவேகமாக செலுத்தும் அசுவஹிருதயம்‘ என்ற அரிய கலையை அறிந்தவர். அவரது அசாத்திய தேரோட்டும் திறமையைக் கண்டு ருதுபர்ணன் வியப்படைந்தார். தமயந்தியின் இரண்டாம் சுயம்வர செய்தி கேட்டு, ருதுபர்ணனை ஒரே நாளில் விதர்ப்ப நாட்டிற்கு நளன் தேரில் அழைத்துச் சென்றார். அந்தப் பயணத்தின் போது, நளன் தனது தேரோட்டும் கலையை (அசுவஹிருதயம்) ருதுபர்ணனுக்குக் கற்றுக் கொடுத்தார். அதற்குப் பதிலாக, சூதாட்டத்தில் வெல்வதற்குக் காரணமான எண்கணித வித்தையான அக்ஷஹிருதயம் (பகடை ரகசியம்) என்ற கலையை ருதுபர்ணனிடம் இருந்து நளன் கற்றுக் கொண்டார்.ருதுபர்ணனிடம் இருந்து பகடை வித்தையை நளன் கற்றுக் கொண்ட அடுத்த கணமே, அவரைப் பிடித்திருந்த கலி புருஷன் அவரிடமிருந்து நீங்கினான். மீண்டும் சூதாடி புஷ்காரன் என்பவரிடமிருந்து நாட்டை பெற்றார்.

***

9.இருவரும் அன்னப் பறவையை தூதுவிட்டுக் காதல் செயதிகளை பரிமாறிக்கொண்டனர்.

****

10.வையம் பகல்இழப்ப வானம் ஒளிஇழப்ப

  பொய்கையும் நீள்கழியும் புள்இழப்பப் – பையவே

  செவ்வாய் அன்றில் துணைஇழப்பச் சென்றடைந்தான்

  வௌவாய் விரிகதிரோன் வெற்பு (நளவெண்பா 104)

மாலையில் பகற்பொழுதும் வானத்து ஒளியை இழக்க, பொய்கை கடற்கரை உப்பங்கழிகள் பறவைகளை இழக்க(அவை கூடடைந்ததால்) அன்றில் பறவைகள் பிரிவை இழக்கக்(தத்தம் துணையோடு கூட்டினை அடைய) காரணமாய் இருந்த சூரியன், தன் கதிர்களை மறைத்து மேற்கு மலையை அடைந்து மறைந்தான்.

-subham-

Tags- நளவெண்பா, 10 கேள்விகள், புகழேந்தி, ஒட்டக்கூத்தர்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 106; இந்து மத கலைச்சொல் அகராதி-106 (Post.16,152)

Written by London Swaminathan

Post No. 16,152

Date uploaded in London – 1 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PART 106

T words continued……………..

Turvasu

Younger son of Yayati and Devayani. Like his elder brother Yadu, he too declined to exchange his youth for his father’s pre mature old age caused by the curse of Shukracharya. For not obeying him, Yayati cursed that his descendants would rule over sinful population and would be annihilated completely.

***

Twashta

A virtuous Brahmana who created a three headed son called Vishwaroopa who was killed by Indra out of envy.  Twashta then created another son Vritrasura to take revenge against Indra. That Brahmin was also killed by Indra;  because he killed a Brahmin, Indra went to many shrines for purification which is in Sanskrit Puranas and Tamil Temple Puranas called Sthala Puranas (sthala= holy spot). Vritrasura has another interpretation; it is the drought which Indra/rain killed.

This episode exposes foreign “scholars” who hide that Vritra was a Brahmin or completely ignore this incident as it had not happened. The same “scholars” create mountain out of a mole in the episode of Krishna denying food meant for Indra in the Govardhana Hill Lifting Episode.

***

Tyagaraja (1767-1847)

Great musician and composer who was born in Tiruvarur in Tamil Nadu. His Kritis/compositions in Telugu and Sanskrit are sung in all Carnatic Music Concerts until this day. His compositions are mostly on Lord Rama. He is regarded as one of the “trinities” of Carnatic music composers, along with Muthuswami Dikshitar and Syama Sastri. He was a devotee of Rama. Tyagaraja started his musical training under Sri Sonti Venkataramanayya at an early age. He started his musical career at the age of 13. His Samadhi is in Thiruvaiyaru in Tamil Nadu. To this day, a commemorative music festival called the Tyagaraja Aaradhana is held at Thiruvaiyaru in the months of January to February every year. Scholars and musicians generally agree that roughly 700 to 730 songs have survived and are sung or documented today. Legend suggests Tyagaraja composed 24,000 songs (matching the number of verses in the Valmiki Ramayana). He is believed to have recited the Rama Nama 96 crore (960 million) times. Saint Tyagaraja experienced visions of Lord Rama through his intense devotion, spiritual penance, and musical compositions.

Gems from Tyagaraja:

Pancharatna Kritis: The “Five Gems” set in master Ghana ragas (Nata, Arabhi, Varali, Sri, and Gowla) stand as monumental pillars of Carnatic composition. Musical Operas: He wrote groundbreaking narrative works like [Prahlada Bhakti Vijayam and Nauka Charitram] using a rich sequence of ragas. He composed accessible, choral, and devotional pieces meant for group singing and daily temple rituals. He pioneered anagata eduppu, writing songs where the lyrics start dynamically after the primary beat (sama) rather than directly on it. The Jagadanandakaraka kriti by Saint Tyagaraja contains 108 names of Lord Rama. Historical accounts and traditions state that Tyagaraja and Syama Sastri met. Syama Sastri was the oldest of the Trinity of Carnatic music. He often travelled to Thiruvaiyaru to visit Tyagaraja at his home, and the two masters discussed music and sang together. Syama Sastri also sent his son, Subbaraya Sastri, to study music under Tyagaraja. He explicitly signed his name—usually as “Tyagaraja” or variants like “Tyagarajuni”—typically in the final charanam (stanza) of his compositions

***

Tulsi


Most scared plant for Vaishnavites like Bilva (vilvam in Tamil) for Saivites.

Tulsi [तुलसी] in the Hindi language is the name of a plant identified with Ocimum tenuiflorum  from the Lamiaceae (Mint) family. It is kept in a raised place called Mandap at the back of the house in open space. Hindus, particularly women worship it every day. The plant has good medicinal properties. Krishna is said to have great respect for this plant. There are many stories to show how Krishna valued it. Tulasi is also referred to as Vrinda, Brinda. The forested area of Tulasi plants where Krishna grew up has for this reason been called V/Brindavan. Tulsi refers to  the plant basil.

**

Tulsi Vivah

Tulasi Vivah festival is usually observed on the 11th Day after the Full Moon of the bright fortnight of the month of Karthika. Vivah means wedding, marriage.

Women clean the area around the Tulasi plant or place the pot on a decorated rangoli base. They construct a small wedding canopy (mandap) using sugarcane stalks, banana leaves, and marigold flowers. Tulasi plant is the Bride; women bathe the Tulasi plant and drape a red or yellow sari or red cloth around it. Adorn the plant with vermilion (kumkum), turmeric (haldi), bangles, and ornaments. Bridegroom is Vishnu and he is represented by a Shaligram (fossil with marks like Vishnu Chakra/wheel). So, a shaligram stone (representing Lord Vishnu) or an idol of Lord Krishna/Vishnu is placed next to the plant, dressing the idol in traditional yellow garments and a crown. After lighting oil lamps and incense sticks, Lord Ganesha is invoked to remove obstacles before starting the main worship. The Union: Tie a sacred cotton thread (mauli) or garland between the Tulasi plant and the Shaligram/Vishnu idol to symbolize the marital knot. Family members act as parents to perform the symbolic Kanyadaan (giving away the bride) while priests or participants chant Vedic mantras and wedding hymns. Shower flowers and vermilion-mixed rice over the divine couple, perform the Mangal Aarti, and offer seasonal fruits, sweets, and jaggery as bhog before distributing prasad to family and friends.  They celebrate it to quicken the marriages in the family. It signals the official opening of the auspicious Hindu wedding season.

***

Tulsidhas

Goswami Tulsidas composed the epic poem Ramcharitmanas in the 16th century to retell the sacred story of Lord Rama in the vernacular Awadhi dialect of Hindi language. Goswami Tulsidas (1543?–1623), was a poet-saint and devoted follower of Rama. He spread bhakti movement across northern India by bringing the ancient story into the hearts and daily lives of ordinary households. Ramcharitmanas (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa), is an epic poem in seven cantos.The word Ramcharitmanas literally means “Lake of the deeds of Rama”. It is considered one of the greatest works of Hindu literature. Most scholars identify his birthplace as Rajapur, a village on the banks of the Yamuna River in the Chitrakoot district of Uttar Pradesh . He died in Varanasi (specifically near Assi Ghat), Uttar Pradesh, India

The ‘Hanuman Chalisa was composed by the saint; the hymn is a timeless ode recited by millions of Hindus every day. It is believed that an ailing Tulsidas composed it and  helped Tulsidas regain his health. It has 40 verses.

***

Tolkappiar and Tolkappiam (kaappiyam)

Tolkappiyam (or Tolkaappiam) is the most ancient extant Tamil grammar text and the oldest surviving Tamil book. Authored by the sage Tolkaappiyar, it serves not only as a comprehensive manual on linguistics but also as a unique guide to the social, cultural life of ancient Tamil Nadu. The text is composed of approximately 1,612 condensed aphoristic verses called Sutras. It is systematically divided into three major sections (adhikarams), each containing exactly nine chapters: Ezhuthadhikaram (Phonology and Orthography). Solladhikaram (Morphology and Syntax), Poruladhikaram splits literature and life into two distinct categories:Akam (Interior): Deals with the subjective emotions of love, courtship, and marital life. Puram (Exterior): Focuses on objective public virtues, heroism, governance, social conduct, and warfare.

Controversies

The exact age remains a subject of heavy debate among scholars. Traditional views tie it to the mythical Second Sangam period (ranging from 1st millennium BCE or earlier), while modern consensus places its earliest layers between the 3rd century BCE and 1st century BCE, with updates settling around the 5th century CE. But the last section called Porul Adhikaram is a alter addition.

The Author: Tradition identifies Tolkappiyar as one of the twelve core disciples of the legendary Sage Agastya.. Only two things are known about the book and the author. The Paayiram (Intro) says it was approved by a Brahmin teacher of Athankodu who was well versed in Four Vedas. Paayiram was composed by his classmate Panamparanaar.  Next information comes from most famous Tamil commentator Nacchinarkiniyar of Madurai, a Brahmin of Bharadvaja Gotra. He says Tolkappiar’s name was Trunadumagni Rishi and he clashed  with his Guru Agastya and was cursed by him. In turn Tolkappiar also cursed him and his grammar Agastyam disappeared because of this. The clash was on a stupid  matter. Agastya asked his disciple Tolkappiar to bring his wife Lopamudra (both names are in the last section of Rig Veda) from Vidharba in modern Madhya Pradesh. When they approached Madurai, river Vaigai was in floods. Just to cross the river safely Tolkappiar took a pole and asked Lopamudra to hold one end of the pole. Tolkappiar brought her safely across the river by holding the other end. When Agastya came to know about it he was angry and cursed him.

If one believes in this story ,it is a proof that Tamil existed at the time of Rig Veda.

Controversy about the book

Tolkappiar and modern version of Tolkappaim (his book) existed in different times. The modern version is from Fifth Century CE which is proved by the word Adhikaaram; this word is used throughout Tirukkural and Tamil epic SilappaDIKAARAM. So, we can conclude all these books were reacted at the same time by Tamil Academy (Sanagam or by a team of Tamil Scholars.

The book is not the original version is known by his expressions, ‘They say’, ‘It is said’ by  at least 300 times. This journalistic cliché shows it is a compilation and not his original.

Strangely, Tolkappiam mentioned Vedic Gods Indra and Varuna as Tamil Gods. Thouh, he mentioned Vishnu, Skanda/Muruga, Kali/Kotravai, Balarama etc. he never mentioned Lord Siva!

Other facts like Tolkappiar using Manu Smriti’s Eight Types of Marriages and Bharata Muni’s Eight Types of Sentiments or moods, reference to Vedic pronunciation etc show the book was compiled later. No reference to book or the author is in 2000 year old Sangam Literature. Some contents of Tolkappiam may be older than Sangam literature. Even the word KAAPPIYA in the name of the book and the name of the author is still debated without an agreeable solution. Kaappiya is the name of the most famous Gotra in the Rig Veda. Lord Krishna in the Bhagavad Gita also praised the Usanas Rishi of Kappiya Gotra. Words like Kavi, Kavithai, Kaavya (poet, poem) are derived from the mysterious poet of Rig Veda Ucanas Kavi.

**

Tiruvasagam 

Saivite hymn authored by mysterious saint Manikavasagar (maanikka vaasagar); his date is still debated; why he was not included in the great list of 63 Saivite Saints, absence of his reference to other three Tevara Moovar, vice versa the absence of their reference to Manikavasagar etc remain unsolved mysteries in Tamil Devotional literature. But his superb hymns, 658 verses under 51 chapters (3295 lines), will move anyone. Even Reverend Dr G U Pope who came to spread Christianity in Tamil Nadu was so moved that he spent his life in Translating this hymn, and Tirukkural and other ancient Tamil poem. Author Manikavasagar’s life was full of clashes with the Pandya king and the Buddhist scholars from Sri Lanka. My long research placed him before the time of Tevara Moovar. He must have lived around fifth century CE.

His hymns, full of compassion, on Lord Shiva are sung in Mohana Raga. It is said that even stones will melt when one sings his hymns.

***

Tirumurai – Please see Tevaram

***

Tiru mular and Tiru Manthiram

Great Saivite saint. He is one of the 63 Nayanamars (naayanmaaras) sung in Periya Puranam and one of the 18 Siddhas (Tamil Mystics). His work TIRUMANTHIRAM in Tamil consists of 3000 poems dealing with Saiva Siddhanta, Sakta and Vedanta- a rare combination. The contents of the book dealing with Devi, Tantras, Mantras and Yantras, reference to Siva Linga (which is absent in Tevaram & Tiruvasagam etc), and  his Non-Tamil expressions, his style, use of Sanskrit words – all place him in 8th or ninth century CE. He travelled from Kashmir and saw a dead body of a cow herd and the cows longing for him. Immediately he used one of the Eight Mystic Powers called Ashta Maa Siddhi, and entered the body of the cowherd to the delight of the cows. This happened in Aaduthurai in Tamil Nadu. The samadhi of the saint is located within the ancient temple in Thiruvavaduthurai, Tamil Nadu

***

Tiru Valluvar and Tirukkural

london swaminathan with Valluvar statue in London University.

The most famous poet of Tamil Nadu who authored TIRUKKURAL which consists of 1330 couplets dealing with Dharma Artha Kama (Virtue, Wealth and Sex). In the contents he also deals with asceticism and Moksha (liberation of soul). He was a staunch Hindu and summarised all the Hindu thoughts in the briefest poems called Kural. His reference to Hindu Gods Indra, Yama, Vamana Avatar, Krishna Avatar, Lakshmi, her elder siter, Brahma, Siva (indirectly) show him as a master of Hindu scriptures. His knowledge in Sanskrit is also evident in his indirect references to Bhagavad Gita, Manu smriti, Artha Shastra and Pancha Tantra. In addition to reference to Hindu Gods, he ued Sanskrit words in about 600 couplets out of 1330. Tiru Valluvar was a staunch supporter Vegetarianism

Tamils placed his book in the post Sangam group of 18 Minor poems. He belonged to Fifth Century CE, but Tamil fanatics gave him a new date 31 BCE to shut the mouth of Christians who started comparing his couplets with Bible. Hundred year old Tirukkural books show him as a man born to high and low class woman and man  with six siblings. Modern books wiped out those facts and portrayed him differently.  Political Tamils are doing it to every ancient Tamil author including Tolkappiar..

Tirukkural is one of the greatest contributions of India to the world.  Though he begins with ten couplets on God with Feet and Head (God with a form). Most of what he said is applicable to honest human beings in any part of the world. Still it is not out of controversy. He refers to slavish wife and attributes supernatural powers to such women. Like Kalidasa he also portrayed Kings as Gods and attributed supernatural harvest happening in his kingdom.  English people who saw the third part of his book on Love and Sex were appaleed in the beginning and hid it from the light of the world. They did not realise that sex was not a taboo to Hindus.

***

Trayambhaka (Three Eyed)

God with Three Eyes is Lord Siva. This Vedic reference to Lord Siva is in the earliest part of Sangam tamil Literature. But oldest book Tolkaappiam completely ignored him. Traymabaka is the name of one of the 12 Jyotir Linga shrines in India, located from Rameswaram to Himalayas. Lord Siva used his Laser Eye to burn Manmatha  (God of Love) and three hanging Space Stations of three demons. Siva’s attributes are put in Tamil by Appar and Sambndar around 600 CE

 Tamils proved Siva and Rudra are one and the same, countering foreign mischiefs.

Trayambakeswar /Trimbakeshwar Shiva Temple (श्री त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग मंदिर) in Nashik district of Maharashtra. It is 28 kilometres from Nashik city.

***

Tri siras- see Twasta.

***

Turaga /Turkey

Turaga means horse. Turkey was the land of horses in Vedic days. All the best kind of horses were brought to Turkey by Vedic Hindus and trained by them. This is proved by the Kikkuli manual with Sanskrit instructions found in Turkey. The manual is dated around 1400 BCE.

A Brief Introduction to the Kikkuli Text

The Kikkuli Text is a Late Bronze Age (ca. 1350 B.C.) set of instructions for training and conditioning horses. It is connected to Kikkuli, who identifies himself as a Mitannian “master horse trainer.” The text survives on clay tablets written in Hittite cuneiform and found at the Hittite capital of Ḫattuša (modern Boğazköy, Turkey). While the main language of the tablets is Hittite, the text also preserves specialized technical terms, including numbers and training vocabulary, that reflect knowledge transferred from the Mitanni and Hurrian world into the Hittite court.

Mitannian was a Hindu Kingdom ruling areas in Turkey, Syria, Iraq and Iran . All the names of the kings were in pure Sanskrit. There we have Dasaratha, Pratardhana etc. found Iin Ramayana and Vishnu Sahasra namam.

Horse manual with Sanskrit words in cuneiform clay tablets in Turkey.

To be continued………………………

Tags – Kikkuli, , Turvasu, Twashta, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, part 106; இந்து மத கலைச்சொல் அகராதி-106

விண்வெளியில் துணி வெளுக்க துப்பாக்கி! (Post.16,151)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,151

Date uploaded in London – 1 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தினமணி கதிர் 30-8-26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

விண்வெளியில் துணி வெளுக்க துப்பாக்கி!

(துணிகளை விண்வெளியில் சுத்தப்படுத்த விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!)

ச. நாகராஜன்

ஒரு சின்ன விஷயம் – பேயிங் கெஸ்டாக பலருடன் ஒரு அறையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஒருவருக்கு ஏற்பட்டதாக வைத்துக் கொள்வோம். அங்கு நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சில நாட்களிலேயே அந்த அறையின் – “நறுமணம்” – துர்நாற்றம் அனைவரையும் துரத்தி அடிக்கும். தோய்க்காத துணிகள், கண்ட இடங்களில் சுற்றி வந்து அறையில் அனைவரும் இருத்தல் ஆகியவற்றால் ஏற்படும் நாற்றம் சகிக்க முடியாது!

இதே நிலை தான் விண்வெளியில் விண்கலத்தில் இருக்கின்ற குட்டி அறையிலும் ஏற்படுகிறது!

அதை விட மோசம், பூமியிலாவது சடக்கென்று எல்லாத் துணிகளையும் ஒரு வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து விடலாம், ஆனால் விண்வெளியிலோ தண்ணீருக்கு எப்போதும் தட்டுப்பாடு தான். அளவோடு கவனமாக நீரை அங்கு உபயோகிக்க வேண்டும். அங்கு துணியைத் துவைப்பது என்பது எண்ணிக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயம்!

உடல் நாற்றத்தை விட மோசமான துணிகளின் நாற்றம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களால் உருவாகிறது. விண்வெளிவீரர்கள் ஒரே ஆடையை பலநாட்கள் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் விண்வெளியில் விண்கலத்தில் உண்டு. பல வாரங்கள் தாங்கள் உபயோகித்த துணிகளை காற்று புகமுடியாத ஏர்-டைட் பைகளில் போட்டு வைத்து விடுவது அவர்களின் வழக்கம். பூமிக்குத் திரும்பி வந்து தங்களின் பழைய துணிகளைத் தோய்ப்பார்கள் அல்லது எரித்து விடுவார்கள், இதுவே அவர்களின் பழக்கம்.

சரி, இப்போது செவ்வாய் கிரகத்திற்கு தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் போது இந்த துணி பிரச்சினையை எப்படி சமாளிப்பது?

விஞ்ஞானிகள் இந்த தீராத பிரச்சினைக்கு இப்போது ஒரு தீர்வைக் கண்டுபிடித்து விட்டார்கள். தங்கள் லாண்ட்ரி பிரச்சினையைப் பற்றி இனி அவர்கள் கவலைப்பட வேண்டாம். துணிகளைச் சுத்தம் செய்ய ஒரு   லாண்ட்ரி கன் (Laundry Gun) இனி அவர்களுக்குத் தரப்படும்!

அது அவர்களின் அழுக்குத் துணியைச் சுத்தமாக்கி விடும். அந்த லாண்ட்ரி துப்பாக்கியை வைத்து துணிகளின் மீது ‘சுட்டால்’ போதும் அது வயலட் நிறமுள்ள பிளாஸ்மாக்களை துணிகளில் செலுத்தி பாக்டீரியாக்களை அழித்து துணிகளை நன்கு சுத்தமாக்கி விடும்.

இந்த ‘கன்’, நுண்ணுயிரிகள் எனப்படும் மைக்ரோபியல் லோடை (Microbial Load)  சுத்தப்படுத்தி விண்வெளி வீரர்களின் உடல்நலத்தைக் காப்பாற்றும்.

ஹண்ட்ஸ்வில்லியில் உள்ள அலபாமா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான கபே ஸு (Gabe Xu) தான் இந்த துணி துவைக்கும் துப்பாக்கியை உருவாக்கியவர்.

“இந்த துப்பாக்கி அவர்கள் துணிகளைச் சுத்தப்படுத்துவதோடு அவர்களின் கருவிகளையும் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் காலடி பதிக்கும் முன்னர் சுத்தமாக்கி விடும்” என்கிறார் அவர்.

பிளாஸ்மா என்பது ஆற்றல் ஊட்டப்பட்ட அணுத்துகள்கள், ஐயான்கள்,  எலக்ட்ரான்களால் ஆக்கப்பட்ட ஒரு சூப் ஆகும்.

பொதுவாக பிளாஸ்மாக்கள் சூரிய வெளிச்சத்தில் காணப்படும் உஷ்ணத்துடன் இருக்கும், ஆனால் இந்த கன்னில் உள்ள பிளாஸ்மாக்கள் குளிர்ச்சியுடன் இருக்கும். கிட்டதட்ட அறையில் இருக்கும் உஷ்ணநிலையில் இருக்கும்.

இது பார்க்கவும் அழகாக இருக்கும் என்று இதை அணியும் ஆர்டிமிஸ் விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்து விட்டார்கள்.

இனி என்ன, விண்வெளி வீரர்களும் வீராங்கனைகளும் அழகுடன் சுத்தமான ஆடைகளை அணிந்து விண்வெளியில் பயமின்றி பயணிப்பார்கள்!

வாழ்த்துக்கள் விண்வெளி அழகர்களுக்கும், அழகிகளுக்கும்!

***

பாஸா நாடகங்கள் பற்றி 10 கேள்விகள் (Post.16,150)

Written by London Swaminathan

Post No. 16,150

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பாஷா அல்லது பாஸா என்பவர் யார்அவர் எத்தனை நாடகங்களை எழுதியுள்ளார் ?

2

அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது எதுஅது யாரைப் பற்றியது ?

3

அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள் என்ன?

4

பாஸா வின் காலத்தை அறிய உதவும் முக்கிய விஷயம் எது ?

5

கிரேக்க நாடகங்களைக் காப்பி அடித்துதான் நாடகம் என்பதே இந்தியாவுக்கு வந்ததா ?

6

இவருடைய நாடகங்களில் நாம் காணும் சிறப்பு அம்ஸங்கள் என்ன ?

7

இவருக்குப்பின்னர் நாடகம் எழுதிய காளிதாசன் உவமைகளால் சிறப்பு அடைந்தார் இவர் பெயர் அந்த அளவுக்குப் பரவாதது ஏன் ?

8

காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களை தமிழ் உபாதா எல்லா மொழிகளிலும் காணலாம்  பாஸா நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தார்களா?

9

இவர் வாழ்ந்த காலம் பற்றி சம்ஸ்க்ருத அறிஞர்கள் கூறுவது என்ன ?

10

பாஸா நாடகங்களில் காணப்படும் பொன்மொழிகள் என்ன ?

**********************

விடைகள்

1.பாஷா அல்லது பாஸா அல்லது பாசர் என்று குறிப்பிடப்படும் இவர் காளிதாசனுக்கும் முன்னால் வாழ்ந்த இந்தியாவின் முதல் நாடக ஆசிரியர் ஆவார்; இவர் 13  நாடகங்களை எழுதியுள்ளார் .பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எழுதிய டிஸ்கவரி ஆப் இந்தியா (DISCOVERY OF INDIA) என்ற நூலில் வேறு இடத்தில் கிடைக்காத பல செய்திகளை எழுதியுள்ளார்.

ஸம்ஸ்க்ருத மொழியில் பாஷா, காளிதாசன்,சூத்ரகன், ஹர்ஷர் முதல் ஒன்பதாம் நுற்றாண்டு முராரி வரை பலரும் நாடகங்களை எழுதினர். சில்வன் லெவி (SYLVAIN LEVY) என்ற பிரபல இந்தியவியல் அறிஞர் 189 ஆசிரியர்கள் எழுதிய 377 நாடகங்களின் பட்டியலை வெளியிட்டார். அதற்குப் பின்னர் வெளியான ஒரு பட்டியலில் 650 நாடகங்கள் இருப்பதாக நேருஜி தனது புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

***

அவருடைய நாடகங்களில் மிகவும் புகழ்பெற்றது “ஸ்வப்னவாசவாதத்தா“.இது உதயணன் – வாசவாதத்தா ஆகிய இருவரின் காதல் கதை ; இதில் அரசியல் செய்திகளும் உள்ளான

 பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படுகிறது.

***

3. அவருடைய 13 நாடகங்களின் பெயர்கள்:

மகாபாரதம், ராமாயணம் மற்றும் மக்கள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு பாஷா இந்த நாடகங்களை இயற்றியுள்ளார்.ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:

1.பிரதிமா நாடகம் (Pratima Nataka): ராமாயணத்தின் ஆரண்ய காண்டம், அயோத்தியா காண்டப் பின்னணியில், கைகேயி போன்ற பாத்திரங்களின் நற்பண்புகளையும் விளக்கும் தனித்துவமான நாடகம்.

2.அபிஷேக நாடகம் (Abhiseka Nataka): ராமரின் பட்டாபிஷேகத்தை மையமாகக் கொண்ட நாடகம்.

மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டவை:

3. ஊருபங்கம் (Urubhanga): துரியோதனனின் தொடை பிளக்கப்பட்டு வீழ்வதைச் சித்தரிக்கும் சமஸ்கிருதத்தின் அரிய சோக நாடகம்.

4. கர்ணபாரம் (Karnabhara): கர்ணனின் அஸ்திரக் கொடை மற்றும் அவனது மனபாரத்தை விவரிக்கும் ஒரு அங்கம் கொண்ட நாடகம்.

5. தூதவாக்யம் (Duta Vakya): கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது செல்லும் கதை.

6. தூதகடோத்கஜம் (Duta Ghatotkaca): கடோத்கஜனின் தூது பற்றிய நாடகம்.

7. மத்யமவ்யாயோகம் (Madhyama Vyayoga): பீமனுக்கும் இடும்பனைக்கும் இடையிலான கதையை அடிப்படையாகக் கொண்டது.

8. பஞ்சராத்ரம் (Panca Ratra): பாண்டவர்களின் ஐந்து இரவு கால மறைமுக வாழ்வை மையமாகக் கொண்டது.கிருஷ்ணரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது:

9. பாலசரிதம் (Bala Carita): கிருஷ்ணரின் இளமைக்கால லீலைகள் மற்றும் கம்ச வதத்தைப் பாடும் நாடகம்.உதயணன் மற்றும் கற்பனைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை:

10. ஸ்வப்ன வாசவதத்தா (Svapna Vasavadatta): பாஷாவின் நாடகங்களிலேயே மிக உயரிய படைப்பாகக் கருதப்படும் அரசியல் மற்றும் காதல் கலந்த நாடகம்.

11. பிரதிஞ்ஞா யுகந்தராயணம் (Pratijna Yugandharayana): வாசவதத்தையின் தந்தை பிரத்யோதனின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் மந்திரி யுகந்தராயணனின் கதை.

12. சாருதத்தம் (Carudatta): ஏழை வணிகன் சாருதத்தன் மற்றும் வசந்தசேனையின் காதலைப் பேசும் சமூக நாடகம்.

13. அவிமாரகம் (Avi maraca): இளவரசன் அவிமாரகன் மற்றும் குந்தீபோஜனின் மகள் குரங்கியின் காதல் கதை

***

4. இவர் நந்த வம்ச மன்னர்களைக் குறிப்பிட்டு வாழ்த்துகிறார்; ஆகையால் மெளரியர்களுக்கும் முன்னால் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டும். உதயணன் என்ற புகழ்பெற்ற மன்னன் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தான். அவருடைய காதல் கதையே இவருடைய புகழ்மிகு படைப்பின் கரு ஆக அமைந்துள்ளது . சமஸ்கிருதத்தின் மகாக்கவியான காளிதாசரே தனது மாளவிகாக்னிமித்ரம் நாடகத்தின் முன்னுரையில், தனக்கு முந்தைய சிறந்த நாடக ஆசிரியராகப் பாஷாவைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.

ஆகையால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாஸருக்கும் முன்னால் இவர் இருந்தது  உறுதியாகிறது . இருவருடைய கதை களுக்கும் அணுகுமுறைக்கும் இடையே நல்ல  வித்தியாசம் இருப்பதால் 100, 200 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். பரத முனியின் நாட்டிய சாஸ்திர விதிகள் முழுமையாக பின்பற்றப்படும் காலத்துக்கு   முன்பே பாஷா வாழ்ந்ததும் காலத்தைக் கணைக்கப்பயன்படுகிறது

***

5.கிரேக்க நாடகங்கள் கிண்டல்கேலிகீழ்த்தரமான செக்ஸ் ஜோக்குகள் உடையவை ; இந்துக்களின் நாடகங்கள் எல்லாம் புனிதக்  கதைகள் அல்லது தர்ம விஷயங்கள் கொ ண்டவை. மேலும் கிரேக்கர்கள் நாடக ம் எழுதுவதற்கு 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரிக் வேதத்தில் சுமார் 20 நாடக உரையாடல்கள் உள்ளன. இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர். கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம்

****

6.பாஸா நாடகங்கள் ஒவ்வொன்றிலும் நந்த வம்சத்தைக் குறிப்பிடுகிறார். அவருடைய நாடகங்களில் 230 கதா பாத்திரங்கள் வருகின்றனர் . அவர்  நட்சத்திரங்களை மட்டும் குறிப்பிடுகிறர்; 12 ராசி மண்டலம் பற்றிக் குறிப்பிடவில்லை. 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்தில் கூட ராசி மண்டலம் வருணிக்கப்பட்டுள்ளது . காசு என்று குறிப்பிடும் போதெல்லாம் சுவர்ண மாசக என்கிறார் கனிஷ்கர் காலம் முதல் நாணயம்/ நானக என்ற சொல் புழக்கத்துக்கு வந்தது . மெளரியர்களின் தென் இந்தியப்  படையெடுப்பு குறித்து சங்கப் புலவர் மாமூலரும், மைசூர் கல்வெட்டுகளும் பேசுகின்றன. அதற்கு முன் வாழ்ந்த பாஸா, நர்மதைக்கு வடக்கேயுள்ள நிலப்பரப்பையே குறிப்பிடுகிறார் . பரத வாக்கியம் என்னும் தேசீய கீதம், நாந்தி என்னும் துவக்க அறிமுகங்களும் உள்ளன . பிற்கால நாடக ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது, இவரது நாடகங்கள் தேவையற்ற வர்ணனைகள் இன்றி, மிகச் சுருக்கமான மற்றும் வேகமான உரையாடல்களைக் கொண்டவை.நாடகத் தொடக்கம்: வழக்கமான சமஸ்கிருத நாடகங்கள் போலன்றி, ‘நாந்தி’ (மங்கள வாழ்த்துப் பாடல்) முடிந்தவுடனேயே சூத்திரதாரன் (நாடகப் இயக்குனர்) மேடைக்கு வந்து கதையைத் தொடங்கிவிடுவார்

***

7.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1912 ஆம் ஆண்டு) தி. கணபதி சாஸ்திரிகள் என்பவரால் திருவிதாங்கூர் பகுதியில் 13 நாடகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கண்டு பிடிக்கப்கப்பட்து மிகவும் பிந்தியகாலம்; மேலும் பிறமொழிகளிலோ இந்திய மொழிகளிலோ உடனே மொழிபெயர்க்கப்  படவில்லை; இவை உண்மையிலேயே  பழைய நாடகங்கள்தானா? ஏன் கேரளத்தில் மட்டும் கிடைத்தது? என்றெல்லாம் வாதப்பிரதிவாதங்கள் நடந்தன; ஆகையால் காளிதாசன் எழுதிய சாகுந்தலம்  நாடகத்துக்கு கிடைத்த பப்ளிசிட்டி இவரது  நாடகங்களுக்குக் கிடைக்கவில்லை ; உண்மையில் ஸ்வப்னவாசவதத்தம் மிகவும் சிறப்புடையது.

***

8. ஸ்வப்னவாசவதத்தம் முதலிய சில நாடகங்கள் மட்டும் மொழிபெயர்க்கப்பட்டன எல்லா நாடகங்களும் மொழிபெயர்க்கப்படவில்லை ; மொழிபெயர்ப்போரும் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கின்றனர் ; ஸம்ஸ்க்ருத்த்திலிருந்து மொழிபெயர்க்கவில்லை

***

பாஸாவின் காலம் குறித்துப் பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லும் காலம்:

பிடே, தீட்சிதர், கணபதி சாஸ்திரி, ஹரிப்பிரசாத் சாஸ்திரி – BCE கி.மு. நாலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றா ண்டு வரை ;

ஜஹாங்கிர்த்தார், குல்கர்னி, செம்பவனேகர்- BCE கி.மு. மூன்றாம் நூற்றாண்டு ;

செளத்ரி , ஜெயஸ் வால், துருவ – BCE கி.மு.முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு;

லிண்டனோவ், சரூப், கோனோவ்  வெல்லர் – CE.கி.பி.இரண்டாம்  நூற்றாண்டு;

பானர்ஜி, பண்டார்கர், ஜாகோபி, ஜாலி, கீத் – CE> கி.பி.மூன்றாம் நூற்றாண்டு;

***

10. நாடகமே உலகம் என்று பலரும் பிற்காலத்தில் சொன்ன பொன்மொழி, கடவுள் ஒரு குழந்தை, காதலன், நண்பன் என்ற பொன்மொழி. நீதி நெறியுடன் மன்னன் ஆண்டால் புலிப்போத்தும் புல்வாயும் ஒருதுறையில் நீருண்ணும் என்னும் பொன்மொழி முதலியன 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாஷா நாடகங்களில் காணக்கிடக்கின்றன :

பாஸா133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1133 Beautiful Quotations (Subhashitas) of Playwright Bhasa – Part 1

Post No. 1050; Dated 18th May 2014

(Earlier on 18th April 2014, I posted under the title “Beautiful quotations from a Great Playwright”; Post No. 987. Following post is more comprehensive and 133 quotations are arranged subject wise.)

133 Beautiful Quotations of Playwright Bhasa – Part 1


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/18 › 133-beautifu…

18 May 2014 — GOD 1.God owns everything in the universe, but keeps nothing for himself; He is the supreme renouncer. 2.God is our soul refuge, there is no …

133 Beautiful Quotations of Bhasa – Part 2


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/05/19 › 133-beautifu…

19 May 2014 — 133 Beautiful Quotations of Bhasa. DHARMA 76.Dharma is the foundation of universe. 77.Who in this world can ultimately survive his own misdeeds …

Missing: Playwright ‎| Show results with: Playwright

Beautiful Quotations from a Great Playwright


Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/04/18 › beautiful-qu…

18 Apr 2014 — Compiled by By London Swaminathan Bhasa is one of the greatest playwrights of the world. Beautiful Quotations from a Great Playwright | Tamil …

Missing: 133 ‎| Show results with: 133

–subham—

Tags- பாஸா நாடகங்கள் ,10 கேள்விகள், பொன்மொழி, ஸ்வப்னவாசவதத்தம்

September 2026 Calendar with More Quotes from Dhammapada (Post No.16,149)

Note the Punul and Tilak of Buddha in 4 Mudra Poses

Written by London Swaminathan

Post No. 16,149

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Twelve years ago (February calendar 2012) I posted just 28 quotations from Dhammapada, Veda of the Buddhists; here are 30 more quotations from the mouth of Gautama Buddha. Dhammapada has 423 slokas in Pali under 26 chapters.

**

Festivals –Sep.4- Gokulashtami, Janmashtami, Lord Krishna’s Birth Day or Sri Jayanthi;11- Bharatiyar Remembrance /Memorial Day; 13- Samaveda Upakarma; 14- Ganesh Chaturthy; 15-Rishi Panchami;  27- Mahalaya Paksha begins (departed souls visit earth for next 15 days);29-Mahabharani (important day for honouring earth visiting souls).

Auspicious days-sep.13, 17;

Amavasyai/new moon day- Sep.10; Purnima/full moon day-26;

Ekaadasi ( Hindu Fasting Days)- Sep.7 and 22.

**

September 1 Tuesday

7 He who lives looking for pleasures only, his senses uncontrolled, immoderate in his food, idle, and weak, Mara (the tempter) will certainly overthrow him, as the wind throws down a weak tree.

****

September 2 Wednesday

4 As rain does not break through a well-thatched house, passion will not break through a well-reflecting mind.

****

September 3 Thursday

18 The virtuous man is happy in this world, and he is happy in the next; he is happy in both. He is happy when he thinks of the good he has done; he is still more happy when going on the good path.

****

September 4 Friday

27 Follow not after vanity, nor after the enjoyment of love and lust! He who is earnest and meditative, obtains ample joy.

****

September 5 Saturday

34 As a fish taken from his watery home and thrown on dry ground, our thought trembles all over in order to escape the dominion of Mara (the tempter).

****

September 6 Sunday

46 He who knows that this body is like froth, and has learnt that it is as unsubstantial as a mirage, will break the flower-pointed arrow of Mara, and never see the king of death.

****

September 7 Monday

51 Like a beautiful flower, full of colour, but without scent, are the fine but fruitless words of him who does not act accordingly.

****

September 8 Tuesday

60 Long is the night to him who is awake; long is a mile to him who is tired; long is life to the foolish who do not know the true law.

****

September 9 Wednesday

69 As long as the evil deed done does not bear fruit, the fool thinks it is like honey; but when it ripens, then the fool suffers grief.

****

September 10 Thursday

75 “One is the road that leads to wealth, another the road that leads to Nirvana;” if the Bhikshu, the disciple of Buddha, has learnt this, he will not yearn for honour, he will strive after separation from the world.

****

September 11 Friday

76 If you see an intelligent man who tells you where true treasures are to be found, who shows what is to be avoided, and administers reproofs, follow that wise man; it will be better, not worse, for those who follow him.

****

September 12 Saturday

78 Do not have evil-doers for friends, do not have low people for friends: have virtuous people for friends, have for friends the best of men.

****

September 13 Sunday

92 Men who have no riches, who live on recognised food, who have perceived void and unconditioned freedom (Nirvana), their path is difficult to understand, like that of birds in the air.

****

September 14 Monday

100 Even though a speech be a thousand (of words), but made up of senseless words, one word of sense is better, which if a man hears, he becomes quiet.

****

September 15 Tuesday

107 If a man for a hundred years worship Agni (fire) in the forest, and if he but for one moment pay homage to a man whose soul is grounded (in true knowledge), better is that homage than sacrifice for a hundred years.

****

September 16 Wednesday

111 And he who lives a hundred years, ignorant and unrestrained, a life of one day is better if a man is wise and reflecting.

****

September 17 Thursday

117 If a man commits a sin, let him not do it again; let him not delight in sin: pain is the outcome of evil.

****

September 18 Friday

120 Even a good man sees evil days, as long as his good deed has not ripened; but when his good deed has ripened, then does the good man see happy days.

****

September 19 Saturday

124 He who has no wound on his hand, may touch poison with his hand; poison does not affect one who has no wound; nor is there evil for one who does not commit evil.

****

September 20 Sunday

127 Not in the sky, not in the midst of the sea, not if we enter into the clefts of the mountains, is there known a spot in the whole world where a man might be freed from an evil deed.

****

September 21 Monday

132 He who seeking his own happiness does not punish or kill beings who also long for happiness, will find happiness after death.

****

September 22 Tuesday

137 He who inflicts pain on innocent and harmless persons, will soon come to one of these ten states:

****

September 23 Wednesday

144 Like a well-trained horse when touched by the whip, be ye active and lively, and by faith, by virtue, by energy, by meditation, by discernment of the law you will overcome this great pain (of reproof), perfect in knowledge and in behaviour, and never forgetful.

****

September 24 Thursday

148 This body is wasted, full of sickness, and frail; this heap of corruption breaks to pieces, life indeed ends in death.

****

September 25 Friday

152 A man who has learnt little, grows old like an ox; his flesh grows, but his knowledge does not grow.

****

September 26 Saturday

155 Men who have not observed proper discipline, and have not gained treasure in their youth, perish like old herons in a lake without fish.

****

September 27 Sunday

158 Let each man direct himself first to what is proper, then let him teach others; thus a wise man will not suffer.

****

September 28 Monday

160 Self is the lord of self, who else could be the lord? With self well subdued, a man finds a lord such as few can find.

****

September 29 Tuesday

168 Rouse thyself! do not be idle! Follow the law of virtue! The virtuous rests in bliss in this world and in the next.

****

September 30 Wednesday

173 He whose evil deeds are covered by good deeds, brightens up this world, like the moon when freed from clouds.

–Subham—

Tags- September 2026 Calendar , more Quotes , Dhammapada, Gautama Buddha

Tirukkural Encyclopaedia- Chapter 29 Absence of Fraud, கள்ளாமை (Post.16,148)

Written by London Swaminathan

Post No. 16,148

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted:

This advice of Don’t steal or Don’t desire for others; property is already n the Isavasya Upanishad and the Ten Commandments in the Bible. Being an ardent Hindu, Valluvar talks about heaven in the last couplet 290.

But I wonder why Valluvar included under asceticism. It should be in the previous Virtue section.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Project Madurai website has all the Tamil books.

Part 47

 Chapter 29. Absence of Fraud; கள்ளாமை,

***

281.Guard yourself against every dark thought of fraud, lest you should become the scorn of the world- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

281.All who seek to free of ill-repute and others’ contempt,

Shall guard against fraudulent and deceitful thought- S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

281
Who seeks heaven’s joys, from impious levity secure,
Let him from every fraud preserve his spirit pure.
Let him, who desires not to be despised, keep his mind from (the desire of) defrauding another of the smallest thing. Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
281.Let him who would reproachless be
From all frauds guard his conscience free. – Suddhananda Bharathiyar – SB

***

281.One who would be esteemed as a person desirous of attaining bliss should keep his mind free from fraudulent intentions- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

282.The very thought of stealing others’ riches is sin; for, if you lust the possessions of another, you have committed theft already in your heart- ANM+2

***

282.The very thought of annexing other people’s property,

By fraudulent means, is grossly sinful-– SMD

***

282
‘Tis sin if in the mind man but thought conceive;
‘By fraud I will my neighbour of his wealth bereave.’
Even the thought (of sin) is sin; think not then of crafiily stealing the property of another– GUP.
***
282.”We will by fraud win other’s wealth”
Even this thought is sin and stealth.        – SB

***
282.Evil though is sinful. Therefore, one should not even think of defrauding another of his possession – EVS

***

282.Think not “we will by fraud another’s riches steal “

For even to think of doing ill is sinfulness indeed- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
283.Behold the fortune that is built up by fraud; verily it decays even in the midst of its smiling plenty-ANM+2

***

283.The wealth accumulated by fraud,

Will disappear equally fast-– SMD

***

283
The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.
The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase. – GUP
***
283.The gain by fraud may overflow
But swift to ruin it shall go.        – SB

***
283.Wealth begotten by fraudulent means may seem to increase for a time, but will eventually disappear altogether- EVS

***

283. As riches won by fraud grow quickly more and more,

So will they, just like that, as swiftly come to nought- HAP

***

283. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

XXXXXXXXXXXXXXXXXX

284.The insatiable thirst for plunder brings in the long run endless grief- ANM+2

***

284.The love of fraudulent gain, in its result,

Leads to ever-lasting misery-– SMD

***

284
The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.
The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow. – GUP
***
284.The fruit that fraud and greed obtain
Shall end in endless grief and pain.        – SB

***
284.The inordinate desire of defrauding another’s wealth will bring unending misery when the time for retribution comes- EVS

***

284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

XXXXXXXXXXXXXXXXXX


285.Does the villain who lies in wait to rob another of his wealth in his unguarded moment ever know the acts of tenderness which spring out of a benevolent heart?- ANM+2

***

285.Those who lie in wait for an oof-chance to appropriate others’ possessions,

Will never widen such love as they have into a living compassion-– SMD

***

285
‘Grace’ is not in their thoughts, nor know they kind affection’s power,
Who neighbour’s goods desire, and watch for his unguarded hour.
The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another’s forgetfulness, though desire of his property. – GUP
***

285.Love and Grace are not their worth
Who watch to waylay dozer’s wealth.        – SB
***
285.Looking for opportunities of defrauding others is not in the nature of those who desire grace and are kindly- EVS

***

285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

286.He walks not in the path of rectitude who is full of consuming thoughts of plunder- ANM+2

***

286.Those who aim at fraudulent gain all the time,

Can abide by the rule of law and code of righteousness-– SMD

***

286
They cannot walk restrained in wisdom’s measured bound,
In whom inveterate lust of fraudful gain is found.
They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others. – GUP
***
286.They cannot walk in measured bounds
who crave and have covetous ends.        – SB
***
286.Those who are possessed of an inordinate desire for theft will never conform to the code of right living- EVS

***

286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

XXXXXXXXXXXXXXXXX

287.The dark forces of fraud and deceit do no not invade a devout heart that hungers for the joy which comes of righteousness- ANM+2

***

287.Those who abide by the guidelines of wisdom, progressing towards righteousness,

Will never be guilty of dark and fraudulent gain-– SMD

***

287
Practice of fraud’s dark cunning arts they shun,
Who long for power by ‘measured wisdom’ won.
That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude. – GUP
***
287.Men of measured wisdom shun
Black art of fraud and what it won– SB
***
287.The illusion of a thieving nature cannot be fraud in those who desire the magnanimity of living righteously – EVS

***

287. களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

288. Righteousness for ever dwells in the heart of one that treads the path of virtue; even so does the soul of a robber become the haunt of foul thoughts of deceit- ANM+2

***

288.Just as virtue reigns in the heart, regulated by a correct sense of values,

Fraud lives in the heart that is full of deceit-– SMD

***

288
As virtue dwells in heart that ‘measured wisdom’ gains;
Deceit in hearts of fraudful men established reigns.
Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the mind s of those who are conversant with rectitude. – GUP
***
288.Virtue abides in righteous hearts
Into minds of frauds deceit darts.       – SB
***
288.As virtue dwells in the heart of those who have realised the truth, even so will deceit dwell in the mind of those skilled in theft- EVS

***

288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல் நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

289.Behold the man who thinks on nothing but fraud and deceit; he straightaway perishes in the dust- ANM+2

***

289.Those who cherish the art of fraud

Will perish by their own actions-– SMD

***

289
Who have no lore save that which fraudful arts supply,
Acts of unmeasured vice committing straightway die.
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression. – GUP
***
289.They perish in their perfidy
Who know nothing but pilfery.        – SB
***
289.Those who know nothing but theft will come to sudden ruin by the commission of the theft they planned- EVS

***

289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

XXXXXXXXXXXXXXXXXX

290.Even his body is not his own who practises deceit on the world; but heaven awaits the soul which is free from it- ANM+2

***

290.Even the powers of the body will fall, when fraud is constantly practise;

On the other hand, the man of rectitude will be in such form as to be loved by the Gods-– SMD

***

290
The fraudful forfeit life and being here below;
Who fraud eschew the bliss of heavenly beings know.
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud. – GUP

***

290.Even the body rejects thieves;
The honest men, heaven receives.       – SB

***

290.Those who practise theft suffer here and hereafter. Those who are free from this evil will not be rejected even by the gods- EVS

***
290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

–Subham—

Tags –Tirukkural Encyclopaedia, Chapter 29,  (Kural 281-290) Part 47, Chapter 29, Absence of Fraud, கள்ளாமை,

நினைவாற்றலை வலுப்படுத்த சில வழிகள்! (Post.16,147)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,147

Date uploaded in London – 31 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-8-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

நினைவாற்றலை வலுப்படுத்த சில வழிகள்! 

ச. நாகராஜன்                                  

நினைவாற்றல் திறன் வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத ஒரு திறனாகும்.

அன்றாடம் நாம் பல்வேறு செயல்களைச் செய்கிறோம். பல்வேறு அனுபவங்களைப் பெறுகிறோம். அனைத்தையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில்லை.

நமது மூளையானது தேவையான இன்றியமையாத நினைவுகளை மட்டும் சேமித்து வைத்துக் கொள்கிறது. இதை நீண்டகால ஃபைலாக – கோப்பாக – அது வைத்துக் கொள்கிறது. டாக்டர் ஆண்ட்ரூ பட்ஸன் என்பவர் போஸ்டன் ஹெல்த்கேர் அமைப்பில் மூளையியல் நிபுணராகப் பணியாற்றுபவர். அவர் நினைவாற்றல் பற்றிய பல்வேறு தகவல்களைச் சேகரித்துத் தருகிறார்.

உணர்ச்சிகள் அடிப்படையிலான நினைவு: ஒருவரது வாழ்க்கையில் மிக முக்கியமான உணர்ச்சி சம்பந்தப்பட்டதான ஒரு சம்பவம் திருமணம் என்பதாகும். பற்பல கெமிக்கல்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அது சம்பந்தமான பல நினைவுகளைச் சேமித்து வைத்துக் கொள்கிறது” என்கிறார் டாக்டர் பட்ஸன்.

அன்றாட தனிநபர் முக்கியத்துவம் சம்பந்தமானவை:  இன்று காலை நாம் சாப்பிட்ட உணவு வகைகள் எவை, நேற்று எந்த உடையை நாம் அணிந்திருக்கிறோம் என்பதை சில நாட்கள் கழித்து ஒருவர் நம்மைக் கேட்டால் நாம் பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறோம். ஏனென்றால் நமது மூளை இந்த மாதிரி அம்சங்களுக்கு முக்கியத்துவமோ, முதலிடமோ அளிப்பதில்லை.

சில சமயம் மிக முக்கியமான வாழ்க்கை நினைவுகளைக் கூட நம்மால் உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடிவதில்லை.

இது ஏன்?

இங்கு தான் வயது என்ற காரணம் முக்கியமாக வருகிறது.

30 வயதுக்குப் பிறகு நினைவு மங்கலாகிறது: இருபதிலிருந்து முப்பது வயது வரை நமது நினைவாற்றல் உச்சகட்டத்தில் இருக்கிறது. முப்பது வயதுக்குப் பிறகு இது படிப்படியாக மங்க ஆரம்பிக்கிறது. ஐம்பது வயது ஆகும் போது ஃப்ரண்டல் லோப்ஸ் எனப்படும் நமது மூளையின் முன்மடலானது பழைய காலம் போல அவ்வளவாக வேலை செய்வதில்லை. இது தான் பழைய கால நினைவுகளைத் தேடி நமது நினைவுக்குக் கொண்டு வரும் வேலையைச் செய்யும் மூளையின் பகுதியாகும்.

பல வருடங்களாக நினைக்காத ஒரு பழைய கால அனுபவம் அதே வலிமையுடன் நமது நினவுக்கு வருவதில்லை. அடிக்கடி அதை நினைக்காததால் நீங்கள் உங்கள் மூளைக்கு அது அவ்வளவாக முக்கியம் இல்லை என்பதைச் சொல்லி விடுகிறீர்கள். ஆகவே மூளை அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மற்ற சில நினைவலைகளை அது மேலாக வைத்துக் கொள்கிறது.

சரி, நமது நினைவாற்றலை எப்படி மேம்படுத்தி பல பழைய நினைவுகளை அப்படியே வைத்துக் கொள்வது?

இதற்கு ஹார்வர்ட் மெடிகல் ஸ்கூலைச் சேர்ந்த நிபுணர்கள் பதிலை அளிக்கிறார்கள்.

பழைய கால சம்பவங்களை நினைவுக்கு கொண்டு வர உதவும் வழிகள் இதோ:

உங்களது வீடு, குடும்பம், நண்பர்கள் பற்றிய பல போட்டோக்களைப் பாருங்கள்.

நீங்கள் இளமையாக இருந்த போது அடிக்கடி பாடும் ஒரு பாடலை நினவுபடுத்துங்கள்.

பழைய காலத்தில் நீங்கள் அணிந்து இப்போதும் வைத்திருக்கும் ஒரு ஆடையையோ அல்லது அணியையோ எடுத்துப் பாருங்கள்.

பழைய டைரி, கடிதம், பழைய காலத்தில் நீங்கள் படித்து சேமித்து வைத்திருக்கும் பத்திரிகை கட்டிங் – இவற்றை எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்த, குடும்பத்துடன் சேர்ந்து பாடும் பாடலை நினைத்துப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்த வாசனையை பழைய கால தலையணை, புத்தகம், உணவுவகை ஆகியவற்றில் முகர்ந்து பாருங்கள்.

இளமைக் காலத்தில் நீங்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று பாருங்கள்.

பழைய காலத்தில் பார்த்த ஒரு சினிமாவையோ அல்லது தொலைக்காட்சித் தொடரையோ மீண்டும் பாருங்கள்.

கண்களை மூடி கவனத்துடன் காட்சிகள், ஒலிகள், வாசனைகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றை நினைத்துப் பாருங்கள். 

இவற்றை எழுதி வைத்து அடிக்கடி பார்ப்பதும் ஒரு வழியாகும். 

இவையெல்லாம் நினைவலைகளை மீண்டும் கொண்டு வரும் வழிகள் என்று கூறுகிறார் டாக்டர் ஆண்ட்ரூ பட்ஸன்.

**

Vastu Shastra, Thali, Zodiac! Purananuru wonders-61; Tamil Encyclopaedia 101 (Post.16,146)

Written by London Swaminathan

Post No. 16,146

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

part 61

Item 854

The next book we are going to see is Nedu Nal Vaadai, one of the Ten Idylls ( Paththup Paattu) in Sangam Tamil Literature.

 First let me list the wonders in it:

Vaastu shaastra in Sangam literature;

Zodiac in poem;

Reference to stars Rohini, Uttara;

Gajalakshmi figure ;

Thaali = Mangala Sutra;

Full description of Queen’s Bed with elephant tusks;

Mattress with feathers of Swan that were shed during mating;

Yavana lamp;

Women won’t put on ornaments when husband is away;

White umbrella and Valampuri Chank (conch) as in Kalidasa books;

Description of Army Camp as in Mahabharata.

Women using their swelling breasts to warm Veena Strings!

***

Item 855

Name of the book: Nedu= long; Nal=good; Vaadai= Northerly, cold wind.

(Vadai is fried spicy doughnut; vAAdai is hated cold northerly wind in India).

Author : Brahmin poet Nakkirar who is the author of Tiru Murugu Aatruppadai as well.

Subject: how queen suffered because of Pandya King Neduncheziyan’s absence/separation; he was in battle field.

Length of the poem- 188 lines.

Strange thing: no mention of the name of the king; only from famous commentator Nachchinarrkiniyar, we know it was Nedunchezian; and Tamils  know that there were two Nedunchezians. So, a bit of little confusion.

Lines 29, 30 – Streets were as broad as rivers and with tall buildings.

It is guessed the poet is talking about the great Madurai city, capital of Pandya Kingdom.

Madurai is the only planned city in the whole of India 2000 years ago which we knew from another Sangam book called Paripaatal.

Whenever the poets describe tall buildings they say Seven Storied Buildings; but here poet said only mansion.

***

Item 856

Gods in the houses!

Lines 36 to 44 show what Hindu women did in the evenings in ancient Madurai.

We know from these lines and from line 578 in Maduraik Kaanchi, another Sangam book, every house has a prayer room or prayer place. There was a god before which Hindu women lighted lamps and offered paddy and flowers around sunset. Even today Tamil Hindu women do it. This gives a severe blow to anti Hindu political Dravidians!

***

Item 857 two linguistic points:

In Sanskrit literature, poets say Aho Raatri= Day (and) Night; in Tamil, poets say Iravum Pahalum= Night(and) Day (line  47).

Both Iravu and Pahal are Sanskrit words but in Tamiized form.

I am writing this because South Indians and North Indians changed direction of writing at one time. In the Indus Valley, scholars believe that they wrote from Right to left. But now in India, we write from left to right.

This is seen in many other places as well

Tamils say Lava Kusa (sons of Rama); north Indians say Kusa Lava.

This is a subject for research. Hindus always give respect for Right hand; they are still Rightists! If anyone use left hand to receive anything, it is disrespect; in temples, it is blasphemy.

Mothers force their children to use right hand from the birth.

Another linguistic point here is the poet used PITHI (line 40) for a kind of jasmine flower. But in modern Tamil it is called PICHCHI.

This shows T=S. I have been showing it in all my linguistic articles.

English pronounce TION as SION (E.g. Condition, education and hundreds of such words)

Again, I use this to say all ancient languages can be traced back to Tamil and Sanskrit.

Again, I emphasize there is no Dravidian or Aryan language in India. One language split it into two, and thousands of years gap in time and location,changed them

Example : French spoken in Indian ocean island countries.

***

Item 858– round stone from Himalayas

வடவர் தந்த வான் கேழ்  வட்டம் -51

Very interesting line is 51 where we come across north Indian, round, grinding stone for south Indian sandal!

Poet deliberately used it to emphasize the unity of India.

In Purananuru book, we saw southern pothiyam compared to north Indian Himalayas.

Here also poet refers to Himalayas which is confirmed by Tamil epic Silappadikaram 4-37-8

Commentators showed it. What a wonderful unity 2000 years ago!

Just to grind south Indian sandal and other spices, they imported Himalayan stones, round in shape.

This also shows the pilgrimage. Tamils bring Ganges water even today from North Indian holy spots.( I also did bring Ganga Jal from Haridwar).

***

Item 859 Breast for warming Veena

Verey interesting and strange habit of lute players.

When the cold windblows in winter, women warmed the strings of the lute by rubbing them against their breasts!  Strange indeed! Poet was a keen observer!

He says,

Fair dancing girls to keep their songs in tune

With small and dark stemmed Ayaz on which they play

Warm the sweet toned strings made useless by the cold

By rubbing them upon their swelling breasts….

***

Item 860 -VAASTU SHASSTRA-

Lines 76-80

The broad sun travelling in its western course

Its widespread rays diffuse everywhere

And shadows cast by two poles planted straight

Do not incline at noon tide either way.

Then architects with care compute tapes

And note the quarters where the gods reside

They mansions build befitting noted kings…..

Because all the ancient Tamil kings were Hindus, they followed Shilpa Shastra and Vastu Shastra to build temples and palaces. They were very different from other parts of the world.

In Vastu, they have different Gods managing or controlling different directions. If the builders want to set up Treasury then they do it in Kubera Direction (North).

Ancient Hindu Palaces like Mysore Palace, Tirumalai Nayak Mahal in Madurai were all constructed following Vastu rules.

For the measurements, they plant two sticks straight and see that no shadows cast at noon. That means 100 % straight. Then they use threads or strings as tapes for the measurement. In Sanskrit, Sutra. Egyptian Pyramid Builders also used Sutra (String or rope).

நூலறி புலவர் நுண்ணிதின் கயிறிட்டு

தே எம் கொண்டு தெய்வம் நோக்கி  76/77

Play on words : Nuul = Suutra; both in Tamil and Sanskrit it has two meanings =thread and book.

If you say one who knows Nuul= Suutra, it means one who knows to handle plumbing line and one who knows scriptures (Vaaastu Shasstra books etc). Once again, it shows that both languages have the same source.

***

Item 861 -Zodiac and Stars

Though we have indirect reference to Zodiac in Purananuru, here we see poet himself refers to Aries (goat sign). He refers also to Rohini star and Uttara star. This shows the knowledge of astronomy in ancient Tamil Nadu.

Line 82 – Uttara nakshatra

Uttaram is beam in Tamil; poet plays on words following Kalidasa.

Rohini – line 163;

Mesha rasi – goat sign- line 160;

***

Item 862- Gaja Lakshmi Lines 81-83

Gaja Lakshmi is also in another Sangam book Kalittokai 44.

When I went to palatial houses in Chettinadu, Karaikkudi areas in Tamil Nau and Mysore Palace in Karnataka I noticed Gaja Lakshmi sculpted on doors. It is a symbol of wealth. Goddess Lakshmi is in the centre and two elephants on either side pour water on her.

This shows flow of water; even in British library in London, they have set up big fountain of flowing water.

You can notice that wherever there are big fountains at the entrance, those places doing roaring business.

Gaja Lakshmi was found from Denmark to Sri Lanka . Gaja Lakshmi is in Sri Suktam, part of Vedas.

(Please see my article written in 2012. Hindu Goddess’ march to Denmark !)

Following three Sangam books referred to Gajalakshmi also found in Gundestrup Cauldron in Denmark)

குறிஞ்சிக் கலி- Kurichik Kali in Kalittokai.

வரிநுதல் எழில் வேழம் பூநீர் மேல் சொரிதரப்,

புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறு எய்தித்,

திரு நயந்து இருந்தன்ன தேங்கமழ் விறல் வெற்ப! (கலி.44-8-5/7)

மதுரைக் காஞ்சி Maduraik Kaanchi

விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை

தொல் வலி நிலை இய அணங்குடை நெடி நிலை(352-353)

நெடுநல்வாடை Nedun al Vaadai

ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக

குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்

திருநிலை பெற்ற தீது தீர் சிறப்பின் (86-89)

Gajalakshmi’s figures have travelled from the Himalayas to the southern most part of Sri Lanka. It is in the form of old coins, lamps, wooden figures, idols and stone sculptures. It has travelled from India to Denmark !! We have Gajalakshmi figure carved in to Gundestrup silver Cauldron. Now it is in Copenhagen. When they dug up a marshy area in Jutland , Denmark in 1891 they recovered a big silver vessel which is dated to second century BC. A very interesting fact about this vessel is that there is a god surrounded by animals like we see in the Indus valley seal (For more details please read my article Vishnu in Indus Valley Seal) The earliest reference to Gajalakshmi is in Sri Suktam of the Vedas:

“Laksmir –divyair-gajendrair-manigana-kasithai: snabitha hemakumbhair nithyam sa pathma hastha”

(Holding a lotus in hand she is bathed by water from the gem studded golden pot by the celestial elephants)

The above is from my article posted here in 2012.

***

Item 863- sanctum sanctorum

Now we have Garbha Grihas (Karu Arai) in temples ;Temple is compared to human body and the sanctum sanctorum is called Garbha Griha (womb) This has been there from Sangam days.

Here the queen’s private inner chamber is called Karu Arai

English word core = Tamil Karu.

Garbhagriha – line 114;

***

Item 864 Dasa Naanku 10 X 4=40 in Sanskrit

In Line 115 we find a strange Sanskrit word Dasa=10; naanku=4;

When the poet wanted to tell us that the queen’s bed had tusk decoration and those ivory objects came from 40 year old elephant, he used it.  It is interesting to note the age of the elephant.

There is a linguistic point as well: D becomes R in the lines.

It is shown as an example for distorting or corrupting Sanskrit words by poets.

***

Item 865 Yavana Lamps

Yavana- we have at least five refences in Sangam literature including Purananuru in addition to intro in Pathitruppaththu.

Yavana made lamps – lines 101-102.

Yavana is a confusing word; in Sangam literature it meant Romans from Italy. But later it is used for Greeks.

But I have a big question. Did Yavana mean carpenters from North west India?

The reason is I could not find Yavana lamps in Greek and Roman sculptures.

Yavana is found in Mahabharat and Valmiki Ramyana too.

By the middle of 15th century, it meant Arab merchants( also called Sonakar).

***

Item 866 Mating Swans shed Feathers!

Swan feathers – 131-133

Poet Nakkirar has described Queen’s bed, her mattress and pillows in minute details.

Someone must draw a picture of it.

Nakkirar added one more interesting detail. Quen’s mattress and pillows had swan feathers which shed them during sexual intercourse/mating because of body heat.

Use of swan feather in bedding is already in Kalidasa who lived before Sangam age.

***

Item 867- Mangala Sutra  of Hindu Women!

Thaali = mangala sutra = 136/37

Very often bad women who want to be in magazines write that Tamil women did not wear Thaali or Mangala Suutra during Sangam Age. They were proved wrong by commentators who lived 700 years ago. They have clearly mentioned Thaali worn by Tamil Hindu women. I wrote on these many years ago quoting famous writers.

Puram 177, Nedu Nal Vaadai 136/7 and Tamil epic Silappadikaram, their commentators said it.

பெண்கள் தாலி :–புறம்127, சிலப்பதிகாரம் 1-47, 4-50
தமிழர்களுக்கு தாலி உண்டு:–ம.பொ.சி

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனரா என்று அவ்வப்போது விவாதங்கள் எழுகின்றன.

தமிழர்கள் திருமணத்தில் தாலி கட்டும் வழக்கத்தைக் கடைப்பிடித்தனர் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு முடமோசியாரின் புறநானூற்றுப் பாடலையும் சிலப்பதிகார வரிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையையும் அவர்கள் எடுத்துக் காட் டுகின்றனர்.

இந்தியப் பண்பாடும் தமிழரும் பக்கம் 297/298 ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் (மதுரை எஸ். ஆர்.கே). தமிழர் நாகரீகமும் பண்பாடும் பக்கம் 51, ஆசிரியர் ஆ.தட்சிணாமூர்த்தி, பூண்டி, தஞ்சாவூர்.

“ஈகை அரிய இழை அணி மகளிர்” —

(ஆய் அண்டிரனின் மனைவியர் அணிந்திருந்த மங்கல சூத்திரம் பற்றி முடமோசியார் புறம் 127ல் பாடிய வரிகள்)

“அகலுள் மங்கல அணி எழுந்தது”- சிலப்பதிகாரம்1-47

(மங்கல சூத்திரத்தை ஊர்வ லமாக கொண்டுவந்தனர்-அடியார்க்கு நல்லாரின் உரை)

“மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் “

(கண்ணகி பற்றி இளங்கோ அடிகள் (இதுவும் தாலி என்பது எஸ். ஆர். கே.யின் வாதம்.

. நல்லாவுர் கிழார் குறிப்பிடும் ” வால் இழை மகளிர்” என்பதும் தாலியே என்று அவர் வாதாடுகிறார்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில்தான் தாலி இடம்பெற்றது என்று மா. இராச மாணிக்கனார் கூறுவார்.

ம.பொ.சிவஞான கிராமணியார், பேராசிரியர் வீரபத்திரன் ஆகியோர் சங்க காலத்திலேயே தாலி இருந்ததாக வாதிடுகின்றனர்.

***

Item 868

Applying starch to clothes is mentioned here.

134/35- starch to clothes.

***

Item 868 Gold Rings

143/44- finger ring in fish mouth shape.

Queen wore a finger ring shaped like a fish mouth.

Interesting thing is we have found such rings in Tamil Nadu and other places.

They are also known as Makara Mothiram.

***

Item 869

White umbrella is mentioned throughout Kalidasa works and Tamil literature

184- white umbrella

***

Item 869 – Queen without decoration

Hindu women dress their hai , body etc only when their husbands are around.  If they hang their hair without plaits or hair bun something went wrong is the meaning. Here we have a full description of the queen in desperation because her husband was in the battle field.

Her friends even prayed to Goddess Durga for her husband’s safe and quick return.

Tamil lines-136-147

***

Item 870 King in the Army tents

In Mahabharata also we see that after the battle finished , during sun set each leader went to the battle ground or tents of soldiers and treated the wounded soldiers. They consoled some and they boosted confidence in others.

Here also poet Nakkirar described it. Lines 168-177

***

Item 871 Sanskrit words

Saalekam for window is from Jhaalakam in Sanskrit.

Deivam, Dasam,Rohini, Uttaram, Mesham, Gaja Lakshmi, Yavana are also mentioned in Sanskrit or its Tamil translation.

Saalekam – 125 Jalakam in Sanskrit

***

At the end of commentary, we find the following:

Brahmin of Bharadwaja gotra Naccinarkiniyar, teacher in Madurai, finishing the commentary on Nedunal vaadai written by Nakkiranar, son of Maduraik kanakkaayanaar on Pandyan Neduncheziyan .

But Purapporul Veba Malai says it is about Talai aalankaanaththu seru vendra Nedun chezian

–subham—

Tags- Thali, Mangala Sutra, Vastu Shastra, Thali, Zodiac! Purananuru wonders-61; Tamil Encyclopaedia 101, Item 871

ஆண்டாள் அருளிய திருப்பாவையில்10 கேள்விகள் (Post.16,145)

Written by London Swaminathan

Post No. 16,145

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

ஆண்டாள் மார்கழியில் எந்த நாளில் திருப்பாவையை பாடத் துவங்கினாள்? எப்போது முடித்திருப்பாள் ?

2

ஆண்டாள் ஏன் யாதவப் பெண்மணியாக இதில் தன்னைக் கற்பனை செய்துகொண்டாள்?

3

மார்கழியில் நோன்பு துவங்கிவிட்டது ;அப்போது என்ன என்ன செய்யமாட்டோம் என்று ஆண்டாள் உறுதி எடுத்தார்

4

யாப்பிலணக்கப்படி இது எந்த வகைப்பாடல் ?

5

இந்தப் பாடல்களை ஆராய்ச்சியாளர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கிறர்கள்?

கிருஷ்ணனை எத்தனை பெயர்களால் கூப்பிடுகிறாள் அல்லது குறிப்பிடுகிறாள் ?

முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஆண்டாள் கொடுத்த பெயர்  என்ன ?

6

ஆண்டாள் குறிப்பிடும் நகைகள் யாவை ? நோன்புக் காலத்தில் சாப்பிடாமல் இருந்த ஆண்டாள் என்னென்ன தின்பண்டங் களை பின்னர் குறிப்பிடுகிறார் ?

7

சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்து — பாடலைச் சொல்ல முடியுமா ?

8

ஆண்டாள் குறிப்பிடும் இரண்டு கிரகங்கள் யாவை ? அதை எந்தப்பாட்டில் குறிப்பிடுகிறார் ?

9

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை…………..  என்று கடைசி பாடலில் பாடுகிறார் . இதில் வாங்க கடல் என்ற சொற்களின் பொருள் என்ன ?

10

முதல் திருப்பாவையில் வரும் மார்கழி மாதம் வேறு எந்தப்பாடலில் வருகிறது ?

**********************

விடைகள்

1.மதி நிறைந்த நந்நாள் என்று சொல்வதால் பெளர்ணமி யன்று அவள் பாடத் துவங்கியது தெரிகிறது; ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் பாடியிருந்தால் அதற்கடுத்த தை மாத பெளர்ணமியில் அவர் பாடல் முடிந்திருக்கும். மார்கழி மாதம் முதல் நாள் பௌர்ணமி திதியுடன் கூடிய திருவாதிரை நட்சத்திரத்தன்று ஆண்டாள் தமது திருப்பாவையின்  முதல் பாசுரமான ‘மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடியருளியுள்ளார் என்பது ஒரு கருத்து. இது சரியென்றால் அவர் முப்பது பாடல்களையும் பாடி முடிக்கும் நாளன்று அடுத்த பௌர்ணமி திதி வந்திருக்க வேண்டும் அது தைப்பூச பௌர்ணமி திதியாக இருக்கவேண்டும் ; இதற்கிடையில் பொங்கல் என்னும் மகர சங்கராந்தி முடிந்திருக்கவேண்டும் 

***

2.ஆயர்பாடி என்பது கண்ணன் பிறந்த மதுராவிலுள்ள இடைச் சேரியென்று கொண்டால், அவளை நாம் ஒரு கோபிகையாக எண்ணலாம்; அவள் மற்ற கோபியரையும் அழைத்துக் கொண்டு யமுனை நதிக்கு நீராடச் செல்வதாகக்கருதலாம் 

***

3.இரண்டாவது பாடலில் என்ன செய்யலாம் என்ன என்ன செய்யக்கூடாது என்ற பட்டியலை ஆண்டாள் தருகிறாள்;

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

நெய், பால் சாப்பிட மாட்டோம்;

கண்ணுக்கு மையும் கூந்தலுக்குப் பூவும் பயன்படுத்த மாட்டோம்.

(குழாயடியிலும் கிணற்றடியிலும் வம்பளக்க மாட்டோம்)).

கோள் சொல்லமாட்டோம் .

தடைசெய்யப்பட்ட விஷயங்களையும் செய்யமாட்டோம்.

செய்யக்கூடியது

பரமனடி பாடுவோம் ;

அதிகாலையில் நீராடுவோம்;

பிரம்மச்சாரிகளுக்கும் சன்யாசிகளுக்கும் வறியோருக்கும் வேண்டும் அளவுக்கு  உணவு இடுவோம்

***

4.பாவை வகை நூல்களில் இப்பொழுது நமக்கு கிடைத்திருப்பது இரண்டே  நூல்கள்தான்; அவை திருப்பாவை, திருவெம்பாவை .

தமிழில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று நான்கு வகைப் பாடல்களை உள்ளன. அவற்றுள் கலிப்பாவானது ஒத்தாழி சைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி,   என மூன்றுவகையாம்.

கொச்சகக்கலிப்பாவானது  தரவு கொச்சகக்கலிப்பா, தரவிணை கொச்சகக்கலிப் பா,  சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா என ஐந்து வகையாம்.

திருப்பாவையின் பாசுரங்கள் தனிச் சொல்லும் சுரிதரமும் இன்றி  வந்த தரவு கொச்சகக்கலிப்பாக்களே. இவற்றுள் ஒவ்வொன்றும் எட்டடி கொண்டுவந்திருக்கின்றது . இப்பாசுரங்களில் பெரும்பாலன முழுதும் வெண்டளை வரப்பெற்றுள்ளன. சில பாசுரங்கள் கலிப்பாவிற்குரிய கலித்தளையும் வெண்டளையும் கலந்தும் ,  சில பாசுரங்கள் வெண்டளையும், நேரென்றோராசிரியத்தளையும் கலந்தும் வரப்பெற்றிருக்கின்றன என்று தமிழ் வித்துவான் திருமலை அய்யங்கார் விளக்குகிறார்.

இதை மூன்று பெரும்பிரிவுகளாகவும் பிரிக்கலாம். முதல் ஐந்து பாசுரங்கள் ஒரு களத்திலும், ஆறு முதல் பதினைந்து பாசுரங்களில் பாடியவை வேறொரு களத்திலும், பதினாறு முதல் இருபத்தொன்பது வரை பாடியவை வேறொரு களத்திலும் அமைந்துள்ளன.

***

5.முப்பது பாசுரங்களில் கண்ணனை, அவனது அவதாரங்களை 56 வகையாக அழைக்கிறார்; நப்பின்னையை எட்டு விதமாகத் துதி பாடுகிறார். நந்த கோபாலனையும் யஸோதையையும் கொண்டாடுமிடத்து     ஐந்தைந்து வெவ்வேறு சொற்களைக் கையாளுகிறார். சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக நில்லாமல் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மாகவிதை என்ற பாரதியார் வகுத்த இலக்கணப்படி பாடியுள்ளார். கண்ணாடிக்கு தட்டொளி என்ற அழகான புதுச் சொல்லை உருவாக்கியுள்ளார்.

***

6.திருப்பாவை நோன்பு முடிந்தவுடன் என்ன செய்வோம் என்பதை – 27-ஆவது பாடலில் வரிசைப்படுத்துகிறார்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*

பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்*

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கையில் சூடகம் அணிவோம்

தோள் ல் பாஹுவலயம் அணிவோம்

காதுகளில்    தோடு ம் கர்ணப் பூவும் அணிவோம்

காலில் பாடகமும் அணிவோம்

பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும் 

முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்.

***

7.சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

***

8.வியாழன் என்றால் ஜூபிடர் JUPITER  என்னும் பிருஹஸ்பதி/ குரு கிரகம். வெள்ளி என்றால் சுக்ரன் என்னும் வீனஸ் VENUS அல்லது வெள்ளி கிரகம்.  இந்த இரண்டையும் வானத்தில்  காணலாம். இதில் வெள்ளி மட்டும் சில காலத்தில் விடி வெள்ளியாக சூரிய உதயத்துக்கு முன்னரும் சில காலத்தில் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் தோன்றும். ஆண்டாள் அதிகாலைப் பொழுதில் தோழிகளை எழுப்பச் சென்றபோது வெள்ளி உதயமாகி வியாழன் அஸ்தமனமானதைக் கண்டார்  உடனே இதை பாடலில் குறிப்பிட்டுத் தோழிகளே எழுந்திருங்கள் என்று பாடுகிறார். வானவியல் தெரிந்தவர்கள் இது கிபி. 600 முதல் கி.பி 900 வரை 4 முறை நிகழந்ததைக் கொண்டு அவரை  300 ஆண்டு கால வட்டத்திற்குள் வைக்கின்றார்கள்.

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.- பாடல் 13

****

வங்கம் என்றால் பெரிய படகுகள் , கப்பல்கள் ; அவை செல்லும் கிழக்கு கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் ஆண்டாள் வாழ்ந்தாள்; கப்பல்கள் செல்லும் கடலை அவள், கடல் கடைந்த கதையுடன் ஒப்பிட்டுப் பாற்கடலாக நினைக்கிறாள்; இந்து மஹா சமுத்திரத்தின்  சிறிய  கடற்பகுதியை நாம் இப்போது வங்காள விரிகுடா என்று அழைக்கிறோம் ; இந்த வங்கம் என்ற சொல்லே வங்க தேசம், மேற்கு வங்காளம்,  வங்காள விரிகுடா  ஆகிய அனைத்திலும் வந்துள்ளது.

***

10.திருப்பாவையில் மார்கழி என்ற சொல் 1-வது, 4-வது மற்றும் 26-வது பாசுரங்களில் வருகிறது. [123]

  • பாடல் 1 (முதல் வரி):

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்”

  • பொருள்: மார்கழி மாதத்தின் முழுநிலவு நிறைந்த நன்னாளில் நோன்பிருக்கத் தொடங்குதலைக் குறிக்கிறது. [12]
  • பாடல் 4 (நான்காவது வரிகள்):

“நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்”

  • பொருள்: உலக மக்கள் நலமாக வாழ மழை பெய்ய வேண்டும், நாங்களும் மார்கழி நீராடி மகிழ வேண்டும் என்ற வேண்டுதல். [1]
  • பாடல் 26 (முதல் வரி):

“மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்”

  • பொருள்: மார்கழி நோன்பினை நோற்று நீராடுவதற்கான வழிமுறைகளையும், அதற்குத் தேவையான பொருட்களையும் பெருமாளிடம் கேட்பது

–subham—

Tags– ஆண்டாள், திருப்பாவை,10 கேள்விகள், வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று, வங்கம்,

பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை! (Post.16,144)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,144

Date uploaded in London – 30 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

31-7-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!                  

 சாயி தனது பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

ச. நாகராஜன்

சாயி ஒருநாளும் தனது பக்தர்களுக்கிடையே வெறுப்பை பொறுக்க மாட்டார்!

 25-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஶ்ரீ சத்ய சாயிபாபா தன் பக்தர்களிடையே ஆற்றிய உரை:

 மஹராஷ்ட்ராவில் சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெண் பக்தையைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்.

தனது வாழ்க்கையில் ஒவ்வொரு சிறு அம்சத்திலும் கூட அவள் அர்ப்பண மனோபாவத்துடன் அவற்றைச் செய்து வந்தாள். நடப்பது என்பது அவளைப் பொறுத்த மட்டில் ஒரு புனித யாத்திரை தான்; பேசுவது அவளைப் பொறுத்தமட்டில் ஜபமாகும். தனது கணவன் சாப்பிட உட்காரும் போது தரையை சாணி உருண்டையால் சுத்தம் செய்யும் போது கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லி விட்டே சுத்தம் செய்வாள்.

அவளது தவமானது எவ்வளவு ஆழ்ந்த பக்தியுடன் செய்யப்பட்டது என்றால் அந்த சாண உருண்டை அந்தக் கிராமத்தில் இருந்த கோவிலில் உள்ள கிருஷ்ணனின் சிலையின் மீது ஒவ்வொருநாளும் விழுந்து படிந்தது.

 கோவிலின் குருக்கள் இந்த மர்மமான அசிங்கத்தைப் பார்த்து பிரமித்துப் போனார். பீதியால் அவர் நடுங்கினார். இப்படிப்பட்ட அசிங்கத்தைத் தினமும் தான் பார்க்க வேண்டியிருக்கும் துரதிர்ஷ்டத்துடன் தான் வாழ வேண்டியிருக்கிறதே என்று வருந்தினார். தினமும் குறிப்பிட்ட வேளையில் குறிப்பிட்ட அளவேயான சாண உருண்டை சிலையின் மீது படிந்திருக்கும் அசிங்கம்.. அவர் அவமானத்தால் தலை குனிந்தார்.

இந்த இழிவான நிகழ்வைப் பற்றி நினைத்துக் கொண்டே ஒரு நாள் அவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்தப் பெண்மணி கிருஷ்ணார்ப்பணம் என்று கூவுவதைக் கேட்டார். மற்ற பெண்மணிகள் சொல்வது போலச் சொல்லிய அவள் சாண உருண்டையை வெளியே எறிந்தாள்.

இதைப் பார்த்த குருக்களுக்கு சந்தேகம் வந்தது. சாண உருண்டையை அவள் எறிந்த நேரம், அதன் அளவு, வடிவம் எல்லாவற்றையும் நன்கு கவனித்த அவர் அவளே தினமும் கிருஷ்ணர் மீது படிந்து சிலையை அசிங்கப்படுதும் சாணத்திற்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.

அவளைப் பிடித்து அடி அடியென்று அவர் அடித்ததனால் சாணத்தை எறிந்த கை முறிந்தது.

அந்தப் பெண்மணியை அடித்து தண்டித்த தன் செயலுக்காக தன்னை கடவுள் ஆசீர்வதிப்பார் என்ற வெற்றி நினைப்புடன் கோவிலுக்குத் திரும்பினார் குருக்கள்.

ஆனால் கிருஷ்ணரின் வலது கை உடைந்திருப்பதைக் கண்டு அவர் திடுக்கிட்டார். அதிலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அது அந்தப் பெண்மணியின் கரத்திலிருந்த அதே இடம் தான்! பாவம், பரிதாபமான அந்தக் குருக்கள், “ ஓ, கிருஷ்ணா, உன் மீது கொண்ட பக்தியினால் தானே அவளை அடித்தேன், உன்னை அவள் அசிங்கப்படுத்தி வந்தாளே” என்று வேதனையுடன் ஓவென்று அழுதார்.

கிருஷ்ணர் உடனே, “நான் நேசிக்கும் எல்லோரையும் நீயும் நேசிக்க வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்” என்றார்.

இப்போத்து நானும் நீங்கள் இப்படியே நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் உங்களை விரும்ப வேண்டும். உங்களது சிறந்த ஆசைகளை விரும்பவேண்டும்.  எனது பக்தர்களிடையே வெறுப்பையோ அல்லது பொறாமை படுவதையோ அல்லது உங்களை நீங்களே பலஹீனமானவன், சாதாரணமானவன் என்று நினைத்து வெறுப்பதையோ நான் பொறுக்க மாட்டேன்,

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் ஒரு வார்த்தை! நீங்கள் உங்கள் உள்ளே இருக்கும் தூய்மைக்கும் வலிமைக்கும் தக்கபடி வாழ வேண்டும்.

**