வள்ளுவர் மனைவி பற்றி பாரதியார் என்ன சொன்னார் ? (Post.16,187)

Written by London Swaminathan

Post No. 16,187

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம்

பாரதியார் (1882-1921)

வள்ளுவர், இளங்கோ, கம்பன் ஆகியோரைப் பாரதியார் பாடியதை பெரும்பாலோர் அறிவார்கள். ஆனால் அவர் வள்ளுவரின் மனைவி , ராமரின் மனைவி, வசிட்டரின் மனைவி, கண்ணம்மா, பாண்டவர்களின் மனைவி ஆகியோரைப் பாராட்டிப் பாடியதை பலரும் அறியார்; அத்தோடு விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி பற்றி அவர் பாடியதையும் எத்தனை பேர் அறிவார்கள்? கண்ணம்மா என்ற தலைப்பில் ஏழு பாடல்களை பாடினார் அவற்றில் பல திரைப்படங்களில் வந்தன.

 சுருக்கமாகக் காண்போம்.

1

அவ்வையார் பற்றி இரண்டு பாடல்கள்:-

மனைவியும் தெய்வமே !

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி

பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்!

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,

மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!

விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,

விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,

பெண்ணுக்கு விடுதலைநீரில்லை யென்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. 45

தாய் மாண்பு

பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்

பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?

கண்டார்க்கு நகைப் பென்னும் உலக வாழ்க்கை

காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ?

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி ஒளவை: — “அன்னையும் பிதாவும்”

பாரிடை “முன்னறிதெய்வம்” என்றாள் அன்றோ?               46

தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?

தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை

வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?

மனைவியொருத் தியையடிமைப் படுத்தவேண்டித்

தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?– பாரதி அறுபத்தாறு

****

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்

நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்

நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். —பாரத தேசம் – பாரதியார் பாடல்

****

2

அருந்ததி பற்றி இரண்டு பாடல்கள்:–

ராமன்  மனைவி வசிட்டன் மனைவி – பாரதி பாடல்

பாரதி சுய சரிதை  கவிதையில் ஆயிரம் ஆண்டு தவம் செய்தாலும் அருந்ததி, வாசுகி, சீதா தேவி போன்ற பெண்ணரசிகள் கிடைப்பது அரிது என்கிறார்

வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு

வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்

பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து

பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண்.

(வசிஷ்ட மஹரிஷியின் மனைவி-அருந்ததி ; ராமரின் மனைவி- சீதா தேவி; வல்லஉவரின் மனைவி- வாசுகி )

***

3

பாஞ்சாலி சபதத்தில் சபையில் திரெளபதி நீதி கேட்டழுதல் என்ற தலைப்பிலுள்ள கண்ணியில்

விம்மியழுதாள் – விதியோ கணவரே !

அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை

வேதகி சுடர்த் தீமுன்  வேண்டி மணஞ்செய்து

பாதகர்முன் இந்நாளில் பரிசழிதல்  காண்பீரோ 

இந்துக்கள்தான் உலகத்தில் விண்வெளியை ஆராய்ந்து முதலில் ரிக்கார்ட் செய்த மாபெரும் விஞ்ஞானிகள் ! இதை பால கங்காதர திலகரும் ஜெர்மன் சம்ஸ்க்ருத அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் ஒருவர் ஒருவர் அறியாமல் தனித்தனியே ஆராய்ந்து ரிக்வேதம் 6000 ஆண்டுப் பமையானது என்று பறைசாற்றினார்கள் என்பதிலிருந்து நாம் அறிகிறோம்  ; வானத்தில் உள்ள விண்மீண்களுக்கு துருவன்அகஸ்தியன், திரிசங்கு , சப்தரிஷிகள் கார்த்திகை ,ரோகிணி என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள் ; இதில் என்ன அதிசயம் என்னவென்றால் வேதகாலம் முதல் 6000 ஆண்டுகளாக இந்துக்கள் இதை இன்றும் பின்பற்றிவருவதே!  பாணினி குறிப்பிடும் ,சங்க இலக்கியம் குறிப்பிடும், ஏழு நட்சத்திரங்களை பிராமணர்கள் தினமும் 3 முறை வணங்குகின்றனர்; அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் — இந்துக்களின் திருமணச் சடங்கில் இன்றும் உளது . கார்த்திகை நட்சத்திரத்தைக் கொண்டாடாத முருக பக்தன் உண்டோ! வானவியலில் இந்துக்களை மிஞ்சிய பழங்கால சமுதாயம் உலகில் இல்லை . வேதங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப்  பின்னர்தான் கிரேக்க நாட்டில் ஹோமர் எழுதவே தொடங்கினார்! பாபிலோனிய, எகிப்திய நாகரீகங்களில் உள்ள குறிப்புகளும் நம்மிடையே கடன் வாங்கியதைக் காட்டுகின்றன.

****

4

முஸ்லீம் பெண்கள் பற்றி ஒரு பாடல்:–

பர்தா’ ஒழிக – பாரதியார் முழக்கம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லைமன்மதக்கலை – முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண் பசப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2- பாரதியார்

தற்காலத்து தமிழ் உலகின் மிகப் பெரிய கவிஞன் பாரதியார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அவர் மாபெரும் தமிழ் அபிமானி, தேச பக்தர், சர்வ சமய புரவலர், இந்து மத போற்றுநர் என்பதிலும் எவருக்கும் ஐயமில்லை. ஏசுவையும், புத்தரையும், முகமது நபியையும் பாராட்டிப் பாடல்களும் இயற்றினார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவருக்கு பர்தா , முகத்திரை பிடிக்காது. ஏனெனில் இது வேத காலப் பெண்களிடத்தில் கிடையாது. இது அவர் சொல்லும் செய்தி; நான் செய்யும் விமர்சனம் அல்ல.

****

5

நிவேதிதா தேவி

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
  கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
  டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
  பெரும்பொருளாய்ப் புன்பைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய
  தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

நிவேதிதா தேவியைச் சந்தித்த பின்னர் அவருக்கு பெண்ணுரிமைப்  பாடல்களைப் பாடும் உத்துவேகம் பிறந்தது. ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை என்ற அவருடைய கேள்வி பாரதியாரின் உள்ளத்தில் இருந்த அறியாமை என்னும் இருளை அகற்றியது . கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு (1905-1906) மனைவியையும் அழைத்து வராத பிழையை உணர்ந்தார் ; பின்னர் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக என்ற ஒளிபடைத்த வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினார் .  

NIVEDITA STATUE WIITH LONDON SWAMINATHAN IN WIMBLEDON, LONDON.

–subham—

Tags- வள்ளுவர் மனைவி, பாரதியார், பாரதியார் பாடல்களில் ,  அருந்ததி, சீதா தேவி, வாசுகி , நிவேதிதா, வசிட்டன்

மகாகவியின் கவித்திறம்! (Post No.16,186)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,186

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

செப்டம்பர் 11 – மகாகவி பாரதியார் நினைவு தினம்!

மகாகவியின் கவித்திறம்!

ச. நாகராஜன்

மகாகவி பாரதியாரின் கவித்திறத்தை எப்படி வியந்து சொல்வது?

இதற்கு அவரே தன்னை எப்படிப் பாராட்டிக் கூறியுள்ளனர் என்று ஒரு கவிதையில் கூறி விடுகிறார்.

பிரான்ஸ் என்னும் நாட்டைச் சேர்ந்த உயர் புலவோரும் பிற ஆங்கில கவியரசர் தாமும் கூறுவதை அப்படியே அவர் எட்டயபுரம் மஹாராவுக்கு எழுதி அனுப்பிய சீட்டுக் கவியில் கூறி விடுகிறார்:

“சுவை புதிது, நயம் புதிது, வளம் புதிது

  சொற்புதிது ஜோதி கொண்ட

நவகவிதை எந்நாளும் அழியாத

   மஹாகவிதை”

இதற்கு மேல் அவரது கவித்திறத்தை நயம்பட எப்படிக் கூற முடியும்!

சங்க காலத் தமிழ் புலவர்தம் ஆற்றலும், மேற்கில் உயர் ஆங்கிலக் கவிஞர் தம் திறமும், வெவ்வேறு மொழியில் கவிதை இயற்றிய பாரதக் கவிஞர்களின் நுணுக்கங்களையும் திறன்களையும் ஒருங்கே சேர்த்து காலத்திற்கேற்ப புதுப் பாடல்களை தமிழில் பாடி புதுமை படைத்த மகாகவி அவர்.

தெய்வீக திரௌபதியை அவன் வர்ணிக்கும் அழகே அழகு!

“புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை

ஆவியில் இனியவளை – உயிர்த்

தணி சுமந்து உலவிடு செய்யமுதை

ஓவியம் நிகர்த்தவளை – அருள்

ஒளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்

தேவியை, நிலத்திருவை – எங்குத்

தேடினும் கிடைப்பருந் திரவியத்தை

படிமிசை யிசையுறவே – நடை

பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்

கடிகமழ் மின்னுருவை – ஒரு

கமனியக் கனவினைக் காதலினை

வடிவுறு பேரழகை – இன்ப

வளத்தினை” –“

இது தான் பாரதியின் தெய்விக திரௌபதி!

கண்ணனை அவன் காணும் பாங்கே தனி.

பாகவதத்தை மீறி, நாலாயிர திவ்யபிரபந்தத்தை மீறி அவன் கண்ணனைப் புகழும் அழகே அழகு!

கண்ணனின் செயல்திறத்தை அவன் வர்ணிக்கிறான்:-

“சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்;

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;

இக்கணத்தில் இடைக் கணம் ஒன்றுண்டோ

இதன் உள்ளே பகை மாய்த்திட வல்லான்காண்!”

பகவத் கீதையின் எழுநூறு ஸ்லோகங்களையும் வில்லிப்புத்தூரார் தனது வில்லி பாரதத்தில் ஆறு பாடல்களில் சுருக்கி அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால் பாரதியோ பகவத் கீதையை இரண்டே அடிகளில் சுருக்கிப் பாடி பிரமிக்க வைக்கிறான்”

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்.

அவ்வளவு தான்! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் மூன்றையும்  எட்டே சொற்களில் அடக்கி விட்டான்!

“வேண்டிய கொடுத்திடுவான்; – அவை

விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவான்

ஆண்டருள் புரிந்திடுவான்; – அண்ணன்

அருச்சனன் போல் எனை ஆக்கிடுவான்”

அர்ஜுனன் தம்பிகளாக மாற ஆசைப்படுவோர் கண்ணன் என்னும் அருள் தாயை உரிமையுடன் வேண்டலாம்! – இதுவே பாரதியின் பார்வை!

பாரதியின் உவமைகள் எல்லையற்ற பரவசத்தை கணம்தோறும் உருவாக்கும் அற்புத உவமைகளாகும். இவற்றை வேறெந்த இலக்கியத்திலும் காண முடியாது.

சுட்டும் விழிச்சுடர் தான் – சூரிய சந்திரரோ

வட்டக் கரியவிழி – வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் – புடவை பதித்த நல் வயிரம்

நட்ட நடுநிசியில் – தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலர் ஒளி – சுந்தரப் புன்னகை!

நீலக் கடல் அலையே – நெஞ்சின் அலைகள்!

கோலக் குயிலோசை – குரல் இனிமை

இப்படி ஒரு வர்ணணையை எளிய சொற்களில் பாரதியிடம் மட்டுமே பார்க்க முடியும்!

“பெண்டிர் தமக்கெல்லாம் கண்ணன் பேச அருந்தெய்வமடீ” என்று உறுதி கூறும் பாரதி, அவன் தரும் குங்குமத்தை குழைத்து மார்பெழுத, மங்களம் ஆகுமடீ – பின்னோர் வருத்தம் இல்லையடீ என்று முடிக்கிறான்.

தேசபக்திப் பாடல்கள், தமிழைப் போற்றும் பாடல்கள், தெய்வபக்திப் பாடல்கள், வாழ்க்கை நடைமுறைப் பாடல்கள், பெண்ணுரிமைப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், இயற்கை அழகுப் பாடல்கள், காவியப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள் என பாரதி தொடாத துறை இல்லை; வியக்க வைக்காத முறை இல்லை!

பாரதியைப் பயில்வோம்; ஊக்கம் கொள்வோம்; உயர்வோம்!

***

சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)

Written by London Swaminathan

Post No. 16,185

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

சதாசிவ பிரம்மேந்திராள் எங்கு பிறந்தார் ? அவருடைய தாய் தந்தையர் யார் ?

2

அவர் பாடிய புகழ்பெற்ற கீர்த்தனைகள் என்ன ?

3

அவர் எத்தனை கீர்த்தனைகளை பாடினார்? அவர் பாட்டிலுள்ள முத்திரை என்ன ?

4

திருவிசை நல்லூரில் ஒரு வீட்டின் கிணற்றில் கங்கை நதி பொங்கி தெருவெல்லாம் ஓடியபோது அவர் என்ன பாடினார் ?

5

அவர் எழுதிய நூல்கள் யாவை ?

6

சதாசிவ பிரம்மேந்திராளுடைய எல்லா கீர்த்தனைகளும் எங்கே கிடைக்கும் ?

7

அவருடைய எந்த நூலினை நாம் மேலும் ஆராய வேண்டும் என்று நமக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) கட்டளையிட்டுள்ளார் ?

8

அவருடைய சமாதிகள் எங்கெங்கு இருக்கின்றன?

9

அவர் பாடத்துவங்கிய சம்பவம் எது ?

10

முஸ்லீம் பக்தருக்கு அவர் சொன்ன உபதேசத்தின் பொருள் என்ன ?

****

விடைகள்

1. சதாசிவ பிரம்மேந்திராள் மதுரையில் பிறந்தார் மதுரையில் பிறந்த அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன் . செல்லப்  பெயர் பிச்சுக்குப்பன் ;

தாயார் பெயர் — பார்வதி,  தந்தை பெயர் – சோமநாத யோகி. அவருடைய குரு- காஞ்சி காமகோடி பீடம் 57-ஆவது பீடாதிபதி ஸ்ரீ பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள். மைசூர் மஹாராஜாவிடம் வித்வானாக வேலை பார்த்தார் .புதுக்கோட்டை மகாராஜாவுக்கு மண்ணில் மந்திரம் எழுதிக் கொடுக்கவே அதை அவரும், பின்னர் அவரது வாரிசுகளும் பேழையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

***

2.சதாசிவ பீரம்மேந்திராளின் சம்ஸ்கிருதப் பாடல்கள் மிகவும் சுருக்கமானவை. ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள அற்புத ரத்தினங்கள்!! கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது கீர்த்தனைகள் இடம்பெறும். சிந்தா நாஸ்தி கில, மானச சஞ்சரரே, க்ரீடதி வனமாலி, ப்ரூஹி முகுந்தேகி, கேளதி மமஹ்ருதயே, காயதி வனமாலி, பஜரே கோபாலம், பஜரே யதுநாதம், பிபரே ராமரசம் முதலிய பாடல்கள் நினைவில் நிற்கும் பாடல்களாகும். மஹாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில் இவரது வாழ்க்கை காட்டப்படுகிறது. பாலகுமாரன் எழுதிய ‘தோழன்’ என்ற நாவல் இவரது வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது.

பஜரே கோபாலம், மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

பஜரே  யது நாதம்,  பஜரே ரகு வீரம்

***

3. சதாசிவ பிரம்மேந்திராள் 23 கீர்த்தனைகளை இயற்றினார்; அவருடைய முத்திரை பரமஹம்ச. மிகவும் சுருக்கமானவை இனிமையும் அர்த்த புஷ்டியும் நிறைந்தவை; எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளவை. புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் அனைவரும் பாடியுள்ளனர்.

***

4.திருவிசை நல்லூரில் ‘அமாவாசை கிணறு புகழ்’ ஸ்ரீதர ஐயாவாள் இவருடைய கிளாஸ்மேட்Classmate . கிணற்றில் தோன்றிய கங்கையைப் பார்த்து ஆனந்தம் எய்திய சதாசிவர் , துங்கதரங்கே கங்கே ஜெய துங்கதரங்கே கங்கே  என்ற பாடலைப் பாடினார்.

***

5. சதாசிவ பிரம்மேந்திராள் எழுதிய நூல்கள்

தக்ஷிணாமூர்த்தி தியான ஸ்தோத்திரம், நவமணி மாலா, ஸ்வப்னோ திதம், அத்வைத ரஸ மஞ்சரி, அத்வைத தாராவளி, சிவாநுபூதி, ப்ராகாஷிகா, ஆத்மானு சந்தானம், பிரணவ சஹஸ்ர நாமாவளி ,ஆத்ம வித்யா விலாசம்,மநோ நியமனம் மற்றும் சில நூல்கள் .

***

6.கர்னாடிக். காம் சைட்டில் ஒரே கிளிக்கில் அதனை பாடல்களையும் இலவசமாகப் பெறலாம்.

https://www.karnatik.com/co1045.shtml

***

7.குருரத்தினமாலிகை (Guru Ratna Malika) என்பது புகழ்பெற்ற அத்வைத ஞானியான ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் ஆன்மீக நூலாகும். இந்த நூல் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சாரியர்களின் வரலாற்றையும், அவர்களின் குரு பரம்பரை வரிசையையும் விரிவாக விளக்குகிறது.  சதாசிவ பிரமேந்திரர் தனது குருநாதரான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதியின் மீது கொண்ட பக்தியினால் இந்நூலை 87 ஸ்லோகங்களில் அமைத்துள்ளார். இதில் காஞ்சி பீடத்தின் ஆச்சாரியர்கள் மட்டுமன்றி, அந்தந்த காலகட்டங்களில் பாரத நாட்டை ஆண்ட மன்னர்கள் மற்றும் அவர்களின் அரசவைகளில் இருந்த புலவர்கள், கவிகள் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் விவரிக்கப்பட்டுள்ளன.ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரின் சக-சீடரும், காஞ்சி பீடத்தின் ஆச்சாரியராக விளங்கியவருமான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி கொடுத்த தூண்டுதலின் பேரில் தான் பிரமேந்திரர் இந்நூலை இயற்றினார். பிற்காலத்தில், இந்த குருரத்தினமாலிகை நூலுக்கு ஆத்மபோதேந்திரரே ‘சுஷமா’ (Sushama) என்ற பெயரில் மிக விரிவானதொரு விளக்கவுரையையும் எழுதியுள்ளார் இந்த நூலை ஆராய்ந்து வெளியிட வேண்டியது மடத்தின் சீடர்களின் பொறுப்பாகும்.

***

8.நெரூரில் உள்ள அவருடைய சமாதி மிகவும் புகழ்பெற்றது அதற்கு காஞ்சி சிருங்கேரி சங்கராசார்யார்களா விஜயம் செய்துள்ளனர் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அங்கே  பத்து நாட்கள் தங்கி தியானம் செய்தார் ; மிகவும் சக்தி வாய்ந்த சமாதி . மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சியிலும் நர்மதா நதியின் கரையிலுள்ள ஒம்மகாரிலும், காசியிலும் இவர் சமாதி அடைந்ததாகச் சொல்லுவார்கள் .மானாமதுரையிலும் நெரூர் போல சமாதி இருக்கிறது . ஒரே நேரத்தில் பல இடங்களில் வாழ்ந்து அற்புதம் நடத்திய சித்தர் அவர்.

***

9.எங்கள் ‘சைட்’டின் வாசகர் ஆர் நஞ்சப்பா எழுதிய தகவல்:

ப்ரஹ்மேந்திரரின் கீர்த்தனைகள் அத்வைத ஞானத்துடன் தெய்வ பக்தியையும் போற்றுவதாக இருக்கும். இவை சம்ப்ரதாய பஜனைகளில் தவராமல் இடம்பெறும். இவற்றில் சாமா ராகத்தில் அமைந்த “மானஸ சஞ்சரரே” பாடலும் சுருட்டி ராகத்தில் அமைந்த “ப்ருஹி முகுந்தேதி” பாடலும் மிகவும் ப்ரசித்தமானவை. ( இதை குறிஞ்சி ராகம் என்பவர்களும் உண்டு). இந்தப்பாடல் “சாவித்ரி” திரைப்படத்தில் எம்.எஸ். ஸுப்புலக்ஷ்மி பாடி மிகவும் பிரபலமானது. ( நாரதர் பாடுவதாக வரும்)

இந்தப் பாடலின் பின் ஒரு ரசமான நிகழ்ச்சியைச் சொல்வார்கள். பாடசாலையில் படிக்கும் நாட்களில் சதாசிவப் ப்ரம்மேந்திரர் சிவராமக்ருஷ்ணன் என்ற பெயர் தாங்கியிருந்தார். ஸ்ரீதர ஐயாவாள் எனப் புகழ்பெற்ற பெரியவரும் இவருடன் படித்தவரே. சிவராமக்ருஷ்ணனுக்கு தர்க்கத்தில் அதிக ஈடுபாடு, குருவின் இடத்திற்கு வருபவர்களையெல்லாம் தர்க்க வாதத்திற்கு இழுத்து பேசிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் குரு சற்றுப் பொறுமை இழந்து , ‘சிவராம க்ருஷ்ணா, நீ பேசமலே இருக்கமாட்டாயா’ என்றாராம். இந்த வார்த்தைகள் சட்டென்று உறைத்தன, அன்றிலிருந்து மௌனம் பூண்டார். பிறகு வித்யாப்பியாசம் எல்லாம் முடிந்து துறவியாகிச் சஞ்சரித்துவந்தார். ஒருமுறை சொந்த வூருருக்கு வந்தார். அங்கு பழைய சகபாடி ஸ்ரீதர ஐயாவாளையும் சந்தித்தார், ஆனால் ஏதும் பேசவில்லை. ” உன்னை வீண்பேச்சு பேசவேண்டாம் என்றுதானே குரு சொன்னார், நீ ஏன் தெய்வவிஷயமாகப் பேசக்கூடாது, அதை யார் தடைசெய்தது” என்று ஐயாவாள் கேட்டாராம். இதன் நியாயத்தை உணர்ந்த சதாசிவர் உடனே “ப்ரூஹி முகுந்தேதிரசனே ப்ரூஹி முகுந்தேதி” [ முகுந்தனே என்று சொல்,

நாவேமுகுந்தனே என்று சொல்” எனத் தொடங்கிப்பாடினார். பின்னர் வேறு பல கீர்த்தனங்களையும் பாடினார். பரம ஞானியின் அனுபவத்தில் எழுந்த கீர்த்தனைகளாதலால் இவை விசேஷ சக்தியுடன் அமைந்திருக்கின்றன.பாடுபவர்களுக்கும் ஶ்ரேயஸ், கேட்பவர்களுக்கும் ஆனந்தம்.

ஸ்ரீ ப்ரஹ்மேந்த்ரர் இயற்றிய சிவ மானஸிக பூஜா கீர்த்தனங்களும் ஆத்ம வித்யா விலாசம் என்னும் 65 ஶ்லோகங்கள் கொண்ட சிறு நூலும் ஆஸ்திகர்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றவை, இவற்றை 1958ம் வருஷம் காஞ்சி மடத்தில் ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டது. பின்னர் பிற பதிப்புக்கள் பற்றித் தெரியவில்லை. சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாலும் சில க்ரந்த அக்ஷரங்களைக் கொண்டிருப்பதாலும் இவற்றைப் புரிந்துகொள்ள சரியான விளக்கம் தேவைப்படுகிறது. ஆனால் இவருடைய கீர்த்தனங்கள் எளியவையே. பக்தியும் ஞானமும் சங்கமித்தவை.

***

10. சதாசிவ பிரம்மேந்திராள் அவதூதர் என்னும் நிர்வாண சாமியார் அணியைச் சேர்ந்த சித்தர்; ஒரு முறை பெண்களுடன் இருந்த ஒரு முஸ்லீம் படைத் தலைவரின்  கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஆத்திரப்பட்டு கையை வாளை வாளால் வெட்டினான்; இவர் ஒன்றுமே நடவாதது போல சாதாரணமாகக் நடந்து சென்றார்; பின்னர் இவருடைய மஹிமையை உணர்ந்து அவன் அடிபணிந்தான். அவரை அந்த முஸ்லீம் தொடர்ந்து வரலானான் நெடுநாட்களுக்குப் பின் இவனைக் கண்ட யோகியர் பின்பற்றக் காரணம் வினவ, நடந்தது அறிவித்துப் பிழைபொறுக்க வேண்ட, மற்றொரு கரத்தால், அக்கையைத் தடவ அக்கை வளர்ந்தது. மகமதியன் அருள் பெற்று நீங்கினன்.பிரம்மேந்திராளுக்கு முஸ்லீம் சீடர்களும் உண்டு ; அவர்களில் புகழ்பெற்றவர்கள் இரட்டை மஸ்தான்கள் ; அவர்களுடைய சமாதி தஞ்சாவூரில் உள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார். இவரைப் பின் தொடர்ந்த முஸ்லீம் , இவரது சீடராகி, உபதேசம் செய்யுமாறு வேண்ட, ‘’ நீ உனக்கு வேண்டுவதைச் செய்யாதே, அதற்குப் பின்னால் நீ விரும்புவதைச் செய்யலாம்’’ என்றாராம். (அதாவது மனம்போன போக்கில் போக வேண்டாம்; சுய கட்டுப்பாடு வந்துவிட்டால் பின்னர் நம்முடைய செயல்கள் நம்மைப் பாதிக்காது என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த உபதேசம் ஒரு விடுகதை போன்றது. ஆழமான அர்த்தமுடையது(“Do not do what you want, and then you may do what you like”).

-subham—

Tags-சதாசிவ பிரம்மேந்திராள், பாடல், 10 கேள்விகள். கீர்த்தனைகள் , நெரூர் சமாதி, அவதூத சந்நியாசி

வேலூருக்கு பெயர் வந்தது எப்படி? சங்க இலக்கியம் தரும் அற்புதத் தகவல் (Post No.16,184)

Written by London Swaminathan

Post No. 16,184

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க கால இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில், நல்லியக்கோடன் என்ற மன்னன் தன் பகைவர்கள் மீது குளத்திலிருந்த மலரைப் பறித்து எறிய, அது வேலாக மாறி பகைவர்களை வென்றது என்றும், இதனால் இவ்வூர் ‘வேலூர்’ எனப் பெயர் பெற்றது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

விடர் கால் அருவி வியன் மலை மூழ்கிச்   170

சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித்

திறல் வேல் நுதியின் பூத்த கேணி

விறல் வேல் வென்றி வேலூர் எய்தின், (170-173)-சிறுபாணாற்றுப்படை

உ வே சாமிநாதைய்யர் வெளியிட்ட பத்துப்பாட்டுமூலமும் நச்சினார்க்கினியருரையும்   என்ற நூலில் பக்கம் 166  இல் இந்தச் செய்தி காணப்படுகிறது:

திறல்வேல் நுதி யின் கேணிபூத்த விறல்வேல் வென்றி வேலூரெய்தின் = முருகன் கையில் வலியினை யுடைத்தாகிய  வேலின் நுதி போல பூக்கப்பட்ட  வெற்றியுடைய வேலாலே  வெற்றியுடைய வேலூரைச் சேரின் 

என்றது : நல்லியக்கோடன் தன் பகைமிகுதிக்கு அஞ்சி  முருகனை வழிபட்ட வழி அவன் இக்கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை  எறியென்று  கனவிற் கூறி அதில் பூவைத்து தன் வேலாக நிருமித்ததொரு  கதை கூறிற்று . இதனானே வேலூரென்று பெயராயிற்று” .

கனவு பற்றிய இந்துக்களின் நம்பிக்கை மேலை நாட்டு உளவியில் நிபுணர்களின் கருத்துக்கு மிகவும் மாறு பட்டுள்ளது . மகாபாரத, ராமாயண இதிஹாசம் முதல் அதற்குப் பின்னர் வந்த சமண, புத்த மத இலக்கியங்கள் வரை, தேவார, திருவாசக, பெரிய புராண, திருவிளையாடல் புராணங்கள் வரை பெரியோர்கள் கண்ட கனவுகள்  ஆயிரம் ஆயிரம் ஆகும் .

மனிதன் கனவுகளைக் காணாமல் தூங்க முடியாதென்று தற்கால விஞ்ஞானக் கட்டுரைகளில் காண்கிறோம் ; இதை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் அறிந்ததால் எல்லா துதிகள் பலச்ருதியிலும் கெட்ட கனவுகள்/ துஸ் ஸ்வப்னம்   வரக்கூடாது  என்று வேண்டியதைக் காணலாம் ; அதிலும் குறிப்பாக பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியாவந்தனத்தில், கடைசி மந்திரம் கெட்ட கனவுகளை அழிக்கும் மந்திரமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற நூலினை எழுதிய மதுரை திருஞான சம்பந்தர் மடத்தின் ஆதீன கர்த்தர், இறந்தவர்கள் கனவில் வந்து, வரப்போகும் ஆபத்துக்களை எச்சரித்து,  காப்பாற்றிய நிகழ்ச்சிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளார் . நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் அடிக்கடி சந்தித்த பழைய ஆதீனகர்த்தர் இவர் ; பேரறிஞர்; சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் மடத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தவர் ; யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்.

–subham-

Tags- வேலூர்,  பெயர் வந்தது எப்படி? சங்க இலக்கியம், அற்புதத் தகவல், கனவில் முருகன், நல்லியக்கோடன் , சிறுபாணாற்றுப்படை

Vellore Dream Mystery! Bhima’s Cooking! Laughing Ghosts! Purananuru wonders-65 (Post.16,183)

Vellore in Tamil Nadu

 Written by London Swaminathan

Post No. 16,183

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-65; Tamil Encyclopaedia 105, One Thousand Interesting Facts -Part 105

Sirupaanaatruppadai wonders continued from yesterday.

Vellore Etymology (Dream of Muruga Mystery) and Bhima’s Cooking , Laughing Ghosts, Tamil Atrocities etc Explained (from U Ve Sa Iyer Book)

What is Siru Paan Aatruppadai?

Siru=small

Paan =bard, minstrel, singer

Aatruppadai = Guiding towards a donor/patron/chieftain/king

Greatest of the Tamil scholars Dr U VE SA.Iyer says

It may be about a person carrying a small-size lute/lyre in contrast to Perum (big size) Paan (bard) Aaatruppadai (Guide)

Or

It may be this Sirupan aattrupadai is smaller in size with less lines whereas Perum Panaatrupadai is bigger in size with more lines.

Both may be correct.

***

Item 904 -Tamil Atrocities and Tamil Murders

SIRU PANATRUPPADAI (siru paan aatruppadai); it is one of the ten idylls (Paththup Paattu), part of Tamil Sangam Literature that is 2000 years old- wonders continued………………..

Tamils are the one who fought among themselves for over 1500 years continuously until Sundara Pandyan invited Muslim invaders into Tamil Nadu. For 1500 years Tamils killed Tamils and wrote about it in Sanagm poems as the most heroic acts. In other parts of the world also we see killings nothing but killings, but it was not among their own community. Except Moghuls /Muslims, we don’t see it as a continuous act of killing their own brothers. But Tamils continued murders for 1500 years. It must be entered into Book of Records. DRAVIDIAN E VE RAMASWAMI NAICKER CALLED TAMIL A BARBARIAN LANGUAGE BECAUSE OF THIS.

Here we came across Seven Great Philanthropists called Kadai Ezu Vallal in Tamil. Two of them were Kaari and Ori.

The atrocity is Kaari killed Kollimalai ruler Ori and donated the lands! And yet this murder is

 praised by Tamils. The war between them is sung in Akam.209, Narrinai 320 and here in lines 110/111

ஓரி, வல்வில் ஓரி, குறுநில மன்னன், கொல்லி மலையை உடையவன், கொல்லி மலை நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.  காரிக்கும் ஓரிக்கும் நடந்த போர் பற்றின குறிப்புகள்:  அகநானூறு 209, நற்றிணை 320, சிறுபாணாற்றுப்படை (110-111) ஆகிய பாடல்களில் உள்ளன.  ஓரியைக் கொன்று, பின் ஓரியின் கொல்லி மலையைச் சேர மன்னனுக்குப் பரிசாகக் காரி கொடுத்தான் (அகநானூறு 209).  பொ. வே. சோமசுந்தரனார் உரை – காரிக்குதிரை – கரிய குதிரையுமாம், ஓரிக்குதிரை – பிடரி மயிரையுடைய குதிரையுமாம்.

***

Item 905- names of the Horses

We come across animal names from Vedic days. Whole world followed Hindus and named their pets. Millions of houses have dogs and cats as pets with favourite names. We know from Mahabharata and Bhagavata Purana that two names of elephants as Asvathama and Kuvalayaapeedam. Alexander named his horse Bucephalus. Tamils named a dog Kovilan and inscribed it on Hero Stone (Nadu Kal). Here in this poem both KAARI and ORI are names of the horses owned by them! Rig Veda has the oldest Dog name in the world- Sarameyas!

***

Item 906- scenes of three towns- food

The poet described Eyilpattinam, a seaside town. He mentioned five flowers and compared them with 5 different things (Lines 164-177). Then he portrayed Vellore (VEL+ OOR= Spear Town). He compared five more plants with five different things and continued. And described Aamur of Nalliyakodan, where Brahmins live. Poet also mentioned the variety of food served by the fishermen, farmers etc. what is ne here is we get information about new towns

***

Item 907- flesh eating, laughing Ghosts!

While describing Nalliakodan’s town poet gives us gory scenes. Vaidehi Herbert’s translation of lines 196-202

Splendour of Nalliyakodan’s Town

Appearing like a corpse-eating, laughing
female ghoul with bright, blood-stained
teeth, that wears goats as earrings, has a
slanted, flame-like tongue and forked legs,

are elephants with blood-stained huge nails
on their feet that have kicked corpses.
Their musth flows down their cheeks and
mixes with the fine dust on the streets of
Nalliyakōdan’s ancient town with festivals.
It is not very far.  It is nearby.

***

Item 908- Visa free travel- Ticket free Entry

Throughout Tamil and Sanskrit literature, we see one unique feature. Ascetics, Brahmins, messengers and poets are given immediate audience. Here also poet says the palace gates are always open for poets, bards and Brahmins

பொருநர்க்கு ஆயினும், புலவர்க்கு ஆயினும்,
அருமறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்,
கடவுள் மால் வரை கண்விடுத்தன்ன,   205
அடையா வாயில் அவன் அருங்கடை குறுகி, (203-2

The poet praised the brahmins as one who has rare Vedas in their tongue. It makes clear that Anthanar is Brahmin.

***

Item 909- Bhima of Mahabharata, a great Cheff!

மாசில்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்,
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கிக்,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப்
பூ விரி கச்சைப் புகழோன் தன் முன்
பனி வரை மார்பன் பயந்த நுண் பொருள்   240
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில், (235-241)

he will give you clothing to wear
made from peels of faultless bamboo
and liquor that will give you rise like
a cobra in rage that raises its hood.

He will serve you many different foods
that have been created using a cookbook
written by Bheeman with a chest like
that of the snow-covered Himalayas,
older brother of Arjunan who wears a
breast cloth with flower designs,
and has a quiver which contains the arrow
that he used to burn the Kāndavam forest,
at the request of the fire god.

Earlier we saw the poet comparing two Lankas, showing his knowledge in Ramayana. Here he mentioned Bhima’s skill in cooking. Arjuna’s burning of Khandava forest is also mentioned. It shows Tamils were well versed in both the epics which is confirmed by hundreds of references to Puranic stories in Sangam poems. This gives a severe blow to those who tried to portray Tamils as a different community. Sangam literature portrays them as ardent Hindus.

***

Item 910- Lines 172-173

U Ve Sa Iyer book on Paththup Paattu (Ten Idylls)  gives some interesting information about Nalliakkodan’s dream of Lord Muruga which led him to victory. And this is the true etymology of Velur (Vel+oor= Spear Town)

That are as piercing  as sharp pointed  spears

Approaching Velur thou wilt find tank

Whose blossoms pointed like  spear once served

As conquering spears  and won a victory great  ( J V Chelliah’s translation, year 1946)

He has translated Nacchinarkiniyar’s Commentary (page 166, U Ve Saminatha Iyer Book)

NALLIAKKODAN WAS TOLD IN A DREAM BY LORD MURUGA THAT HE COULD CONQER HIS ENEMIES BY THROWING THE FLOWERS OF A CERATIN POND AT HIS ENEMIES. HE DID SO, AND THE FLOWERS CHANGING INTO SPEARS HELPED HIM TO DEFEAT HIS FOES .

(This is the reason the town is called Velur (modern spelling Vellore)

திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின், (172-173)

–subham—

Tags -65Purananuru wonders-65; Tamil Encyclopaedia 105, One Thousand Interesting Facts -Part 105, Vellore etymology, Muruga dream, Bhima cooking, item 910

Valluvar is rejected by the Majority! Tirukkural Encyclopaedia- Chapter 33-Non- Killing- கொல்லாமை (Post.16,182)

Written by London Swaminathan

Post No. 16,182

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted

Poor Valluvar became a laughing stock in front of the whole wide world; he insisted vegetarian food in 20 couplets so far. Majority of the world including who hang Valluvar picture in their homes and offices, most of the Dravidians who wrote books on Valluvar are Pukka frauds, because they all consume meat. Speaking only Truth, Avoiding anger, following hospitality are difficult to follow.  But avoiding non- vegetarian food and refrain from killing is easy. But yet nobody is ready to follow it. Majority of the world is non-vegetarians. If he has written to ascetics, not for general public, then Jain ascetics and Hindu ascetics are mostly vegetarians. Only Buddhist monks eat flesh when the animal is killed by others. So he wont be accepted by the majority.

**

Sharing food and hospitality as in Kural 322 are done by many. We see it in Rig Veda, Bhagavad Gita and many other cultures.

Kural 326 is about bad cholesterol; cholesterol killing many thousands giving them heart diseases. Many have given up non veg. because of cholesterol.

**

As usual Valluvar talked about sin, next birth etc as an ardent Hindu (last Kural 330).

**

My personal feeling is Parimel Azakar, the Vaishnavite temple priest of Kanchipuram, has misled everyone in the commentary for Kural 328. Who is SANDROR must be debated and defined.

***

Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!

****

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Part 51- Kural Chapter 33 கொல்லாமை– Non-Killing- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931 has skipped this chapter!!!

****

321.Not to kill is the very cream of all virtues; but killing leads to every other sin- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

321.Non -killing in itself is the highest virtue; whereas

The taking of life will bring in its wake, all evil -S M Diaz, I G of Police- SMD, Year 2000

***

321
What is the work of virtue? ‘Not to kill’;
For ‘killing’ leads to every work of ill.
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil. Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

321.What is Virtue? ‘Tis not to kill
For killing causes every ill.        Suddhananda Bharathiyar- SB
***

321.Killing leads to all other sinful acts. Therefore, non-killing is the highest virtue- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

321. அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்

XXXXXXXXXXXXXXXXXXXXXX

322.Share your bread with the needy; love all that breathes on earth: these are the greatest commandments of the prophets of old– ANM+2

***

322.To share your food with and cherish all that lives

Is the best of precepts in the books of the world– SMD

***

322
Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures. – GUP

***

322.Share the food and serve all lives
This is the law of all the laws.        SB
***

322.Enjoying one’s food, sharing it with others and sustaining other lives is held out as the highest virtue by learned sages –EVS

***

322. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
XXXXXXXXXXXXXXXXXXXXXX

323.The scriptures of the world sing the glories of truthfulness, but far greater than truthfulness is non-killing– ANM+2

***

323. Non-killing by itself is an outstanding virtue, while

Non -lying as a virtue, comes only next in precedence– SMD

***

323
Alone, first of goods things, is ‘not to slay’;
The second is, no untrue word to say.
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood. – GUP
***

323.Not to kill is unique good
The next, not to utter falsehood.        SB

***

323.Non-Killing is a matchless virtue according to the teachers of ethics. Truthfulness ranks as second in merit to non-killing- EVS

***

323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

324.Only through non-killing even the very worm that crawls beneath, does the sacred path to the far-off shrine of truth– ANM+2

***

324.The right path could be defined as the one,

Which secures the virtues of non-killing– SMD

***

324
You ask, What is the good and perfect way?
‘Tis path of him who studies nought to slay.
Good path is that which considers how it may avoid killing any creature. – GUP

***

324.What way is good? That we can say
The way away from heat to slay.       SB

***

324.The right road to salvation is to live in cherishment of the virtue of  not killing any living being-EVS

***

.324. நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
XXXXXXXXXXXXXXXXXXXXXX

325.Of all hose that dread the ceaseless cycle  of births and deaths, the greatest is he who, fearing the crime of  slaughter, slays not– ANM+2

***

325.Of all who have taken to renunciation in order to secure release from birth,

The one, who shrinks from violence and promotes non-killing is the leader– SMD

***
325
Of those who ‘being’ dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life. – GUP

***

325.Of saints who renounce birth-fearing
The head is he who dreads killing.        SB

***

325.The man who fails in the virtue of Non-Killing in fear of committing the sin of killing is greater than those who renounce the world for fear of bondage off births-EVS

***

325. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

326.Even death, which devours all, approaches not him that upholds with all his might the divine commandment

“Thou shall not kill”. – ANM+2

***

326.The Lord of Death shall not lay hands on the one,

Who observes the vow of non-killing– SMD

***

326
Ev’n death that life devours, their happy days shall spare,
Who law, ‘Thou shall not kill’, uphold with reverent care.
Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life. – GUP
***

326.Life-eating-Death shall spare the breath
Of him who no life puts to death SB

***

326.The God of Death will not cut hort the life of  the man who upholds the ideal of non-killing in his life-EVS

***

326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
XXXXXXXXXXXXXXXXXXXXXX

327.Kill not any being, though it be rescuing your own from the very jaws of death– ANM+2

***

327.Even if it involves the loss of one’s own life,

It is best to abstain from killing another– SMD

***

327
Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life. – GUP

***

327.Kill not life that others cherish
Even when your life must perish SB

***

327.You shall not do the act of taking the dear ife of a living being even though you may come to lose your own life- EVS

***

327. தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
XXXXXXXXXXXXXXXXXXXXXX
328.Men say  that animal sacrifices in honour of the gods crown a man with countless blessings; but he fortune that is raised on such sacrifices is an abomination to the pure of heart– ANM+2

***

328.Even if great benefits are likely to flow from sacrificial killing,

The men of real nobility and virtue will prefer non-killing– SMD

***

328
Though great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise.
The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good. – GUP

***

328.The gain of slaughter is a vice
Though deemed good in sacrifice.       SB

***

328.Though considerable prosperity and celestial happiness might be gained by killing in sacrifices, the wise who have renounced the world despise such advantages gained by killing-EVS

***

328. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

XXXXXXXXXXXXXXXXXXXXXX

329.In the eyes of the discerning, the scum and refuse of mankind are they who delight in slaughter– ANM+2

***

329.The men who practise slaughter of animals as a profession,

Are identified by the discerning, as vile men– SMD

***

329
Whose trade is ‘killing’, always vile they show,
To minds of them who what is vileness know.
Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness. – GUP

***

329.Those who live by slaying are
Eaters of carrion bizarre!       SB

***
329.Those who destroy life despised as the lowest of humanity by the great who realise the degradation of killing-EVS

***
329. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
XXXXXXXXXXXXXXXXXXXXXX

330.Behold the loathsome leper of a beggar crouching in a street corner to the disgust of all: the wise say of him “Lo! There sits yonder an evil one that has that has taken in a former birth the life of another– ANM+2

***

330.Those, who live by killing animals, will surely go down

To a life of poverty, ill health and disgrace– SMD

***

330
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth). – GUP

***

330.The loathsome poor sickly and sore
Are killers stained by blood before        SB

***

330.Those who suffer from dreadful diseases and ek out a poverty stricken miserable life are regarded by the wise

as those who had committed the sin of killing in their past life- EVS

***
330. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

–subham—

Tags– Tirukkural Encyclopaedia- Chapter 33-Non Killing- கொல்லாமை,, Valluvar rejected

அமெரிக்க அழகிப் போட்டி அதிசயம்! இளம் தாய் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் போட்டியிடத் தேர்வு! (Post.16,181)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,181

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 6-9-26 தினமணி கொண்டாட்டம் பகுதியில் வெளியான கட்டுரை! 

அமெரிக்க அழகிப் போட்டி அதிசயம்! இளம் தாய் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் போட்டியிடத் தேர்வு! 

ச. நாகராஜன் 

2026ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டி 2026 நவம்பர் மாதம் 24ம் தேதி போர்டோ ரீகோவில் நடக்க இருக்கிறது. 75வது ஆண்டு போட்டி இது. இதற்காக போர்டோ ரீகோவின் கவர்னர் 90 லட்சம் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி இருக்கிறார். இதில் 130க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இறுதித் தேர்வை முடிவு செய்வார்கள்.

இதையொட்டி அமெரிக்காவில் நடந்த அழகிப் போட்டியில் ஒரு அதிசயம்   27-8-26 வியாழன் அன்று நிகழ்ந்து சரித்திரம் படைத்து விட்டது.

மிஸ் வர்ஜீனியாவாகத் திகழ்ந்த ஜஸ்டஸ் கெல்லி (Justus Kelley)  மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்குப் போட்டியிட தேர்வு செய்யப்பட்டார். இவர் இரு குழந்தைகளுக்கான வளர்ப்புத் தாய்! மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு

 ஒரு தாய் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் தடவை!

இவருக்கு வயது 31. இவர் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதும் ஒரு எழுத்தாளரும் கூட! மணமானவர், முதல் முதலாக இப்படி தேர்வு செய்யப்படுபவர்.

2023ம் ஆண்டு இந்த  அழகிப் போட்டியை நடத்தும் குழு மணமானவர்களும், தாய்மார்களும் இதில் கலந்து கொள்ளலாம் என்று தங்கள் விதியைத் திருத்தி அறிவித்தது. 2024ம் ஆண்டு 18 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்மணியும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. முந்தைய விதிகளின் படி 28 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ள முடியாது.

அமெரிக்காவை பிரதிநித்வம் செய்யும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 51 அழகிகள் கலந்து கொண்டனர். நீச்சல் உடை, மாலை நேரத்தில் அணியும் கவுன் ஆகியவற்றுடன் இவர்கள் பேட்டிக்குத் தயாராயினர். இதில் முதல் 20 அழகிகள் நீச்சல் உடையுடன் கலந்து கொள்ள 10 பேர் மாலையில் நடந்த தேர்வில் கலந்து கொண்டனர்.

பின்னர் ஐந்து பேருக்கு மட்டும் கடைசியாக ஒரு கேள்வி வைக்கப்பட்டது.

கெல்லிக்கு வைக்கப்பட்ட கேள்வி: “75 வருடங்களாக மிஸ் யு.எஸ்.ஏ மாறி வரும் அமெரிக்கப் பெண்களின் முகத்தைக் காட்டி பிரதிபலிக்கிறது. 75வது வருடத்தில் நீங்கள் மிஸ் யுனிவர்ஸ் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இன்றைய அமெரிக்கப் பெண்மணிகளைப் பற்றி நீங்கள் என்ன கூறுவீர்கள்?”

இதற்கு கெல்லி அளித்த பதில்: “இன்று இதோ இந்த இரவில் நாம் மிஸ் யுனிவர்ஸின் 75வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறோம். அத்துடன் ஒரு வரலாற்றைப் படைக்கப் போகிறோம். எனக்கு வயது 31. எனது கல்லூரி காதலனை நான் மணந்து ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன. இரண்டு குழந்தைகளின் வளர்ப்புத் தாயாக மனமார நான் விளங்குகிறேன். நான் இந்த மேடையில் நான் நானாக இருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் தழுவிக் கொண்டு நிற்கிறேன்.”

சாதாரண அதிகம் விலை இல்லாத உடையை அணிந்து கொண்டு அவர் மேடையில் நடந்த போது நீதிபதிகள், “அட, நீங்கள் பிரமிக்க வைக்கிறீர்களே” என்று உடனடி விமரிசனம் செய்தனர்.

சிறந்த அழகியைத் தேர்ந்தெடுக்க பார்வையாளர்களின் ஓட்டுகளும் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிறது.

இதற்கான இணையதளத்தில் விசிறிகள் 12 நிமிடங்களுக்குள் தங்கள் தேர்வைச் செய்து ஓட்டை அளிக்க வேண்டும்.

ஆக அமெரிக்க அழகிப் பொட்டி சரித்திரத்தில் ஒரு புதிய வரலாற்றைப் படைத்த பெருமிதத்தில் அழகாக விளங்குகிறார் ஜஸ்டஸ் கெல்லி!

இறுதிப் போட்டி யாரை மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப் போகிறது என்பது நவம்பர் 24ம் தேதி தெரியவரும்.

அதுவரை பொறுத்திருப்போம்!

***

முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)

Written by London Swaminathan

Post No. 16,180

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

முத்து சுவாமி தீட்சிதருக்கு காசியில் கங்கை நதியில் கிடைத்த அற்புத வீணை இப்பொழுது எங்கே உள்ளது ?

2

தீட்சிதர் எத்தனை கிருதிகளை பாடினார்? இப்போது அவைகளை எங்கே பெறலாம்?

3

தீட்சிதர் பிறந்தது எங்கே? இசை பயின்றது எங்கே ?

4

இவர் பாடிய வாதாபி கணபதிம் பஜே என்ற பாட்டை முதல் முதலில் கற்றுத் தருகிறார்கள் ;  முழுப் பாடல் தெரியுமா ?

5

இவர்  இயற்றிய  எந்தப் பாடலினால் வறண்ட எட்டயபுரத்தில் அற்புத மழை  பெய்தது ?

6

இவர் பாடல்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் முத்திரை என்ன?

7

திருவாரூரில் இவர் செய்த அற்புதம் என்ன ?

8

இவரைப் பற்றிய சுருக்கமான தகவலை எங்கே பெறலாம் ?

9

இவர் இயற்றிய பாடல்களில் மிகவும் சிறப்பிடம் பெறுபவை எவை ?

10

சங்கீத மும்மூர்த்திகளில் இவருக்குள்ள தனிச் சிறப்பு என்ன?

****************************

விடைகள்

1.அந்த வீணைகோயம்புத்தூரில் வசிக்கும் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் வழிவந்த ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம் இருப்பதாக தினமலர் இணையதளம் (நவம்பர் 23, 2025) கோவையில் பூஜிக்கப்படும் முத்துசாமி தீட்சிதர் வீணை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. கோவையில் ஆண்டுதோறும், சத்காரியா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் முத்துசாமிதீட்சிதர் ஜெயந்தி கீர்த்தனாஞ்சலி இசைவிழாவில், அந்த வீணை எடுத்து வரப்பட்டு ஆராதிக்கப்படுவதாகவும் அது செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தினமலருக்கு நன்றி தெரிவித்து டிவிட்டர் மெஸேஜ் வெளியிட்டார். காசி சங்கமத்தில் இளையராஜா இந்த விஷயம் பற்றிப் பேசியவுடன் இது பேசுபொருளாகியது. அதன் விளைவே இந்த தினமலர் செய்தி. 

***

2.அவருடைய 525 கிருதிகளை கர்னாடிக்.காம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு கிளிக்கில் அதனை பாடல்களையும் இலவசமாகப் பெறலாம்.

Royal Carpet Carnatic Composers: MuthuswAmy Dikshithar

 

karnATik

***

3. தீட்சிதர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

·  பிறப்பு: மார்ச் 24, 1775, திருவாரூர்.

·  இறப்பு: அக்டோபர் 21, 1835, எட்டயபுரம்.

தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார். அவர் சொற்படி திருத்தணி முருகனை தரிசிக்கச் சென்றார் .மலை ஏறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்து “முத்துஸ்வாமி வாயைத் திற” என்று சொல்லி ஒரு கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்து மறைந்து விட்டார். அப்போதே முருகனைத் தரிசித்து பரவசமுற்ற தீட்சிதர், முருகனின் அருளால் பாடல்களை மழையெனப் பொழிந்தார்.

***

4.திருவாரூர் வாதாபி கணபதி ஷோடச கணபதி கீர்த்தனை

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்

வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்

புராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்

நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்

கராம்புஜபாச’பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்

ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

XXXXXX

ராக³ம்: ஹம்ஸத்⁴வனி (ஸ, ரி2, க3³, ப, நி3, ஸ)

வாதாபி க³ணபதிம் பஜேஹம்

வாரணாஶ்யம் வரப்ரத³ம் ஶ்ரீ ।

பூ⁴தாதி³ ஸம்ஸேவித சரணம்

பூ⁴த பௌ⁴திக ப்ரபஞ்ச ப⁴ரணம் ।

வீதராகி³ணம் வினுத யோகி³னம்

விஶ்வகாரணம் விக்⁴னவாரணம் ।

புரா கும்ப⁴ ஸம்ப⁴வ முனிவர

ப்ரபூஜிதம் த்ரிகோண மத்⁴யக³தம்

முராரி ப்ரமுகா²த்³யுபாஸிதம்

மூலாதா⁴ர க்ஷேத்ரஸ்தி²தம் ।

பராதி³ சத்வாரி வாகா³த்மகம்

ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்ட³ம்

நிரந்தரம் நிகி²ல சந்த்³ரக²ண்ட³ம்

நிஜவாமகர வித்³ருதேக்ஷுக²ண்ட³ம் ।

கராம்பு³ஜ பாஶ பீ³ஜாபூரம்

கலுஷவிதூ³ரம் பூ⁴தாகாரம்

ஹராதி³ கு³ருகு³ஹ தோஷித பி³ம்ப³ம்

ஹம்ஸத்⁴வனி பூ⁴ஷித ஹேரம்ப³ம் ।

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் பஜனை செய்கிறேன்.

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும்

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

***

5. எட்டயபுரத்தில்  வறட்சி நிலவிய காலத்தில் அங்கு சென்றார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ பெருமக்கள் வரிசையில், மரபில் வந்தவர் அவர். உடனே அமிர்தவர்ஷினி ராகத்தில் அம்பிகை மீது ‘ஆனந்தாமிர்தகர்ஷினி’ என்ற க்ருதியைப் பாடவே மழை ‘பெய்யெனப் பெய்தது’.

***

6. முருக பக்தன் என்பதால் தன்னுடைய பாடல்களில் குருகுஹ என்ற முத்திரையைச் சொல்லி ராகத்தின் பெயரையும் சொல்லி கிருதியை பூர்த்தி செய்வார்.

***

7. இவருடைய சீடர்களில் திருவாரூர் நடன மாது திருவாரூர் கமலமும் ஒருவர். அவர் கோவிலில் ஆடுவதற்காக 2 தெலுங்கு பாடல்களையும் இயற்றினார். அதைப் பார்க்க நாட்டியப் பேரறிஞர்களான தஞசாவுர் நால்வரான பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ஆகிய நால்வரும் வந்தனர். திருவாரூரில் தியாகராஜருக்கு வேண்டிய பூஜைகளைச் செய்யுமளவுக்கு பண வசதி இல்லையே என்று வருத்தம் அடைந்தார்; உடனே நடன மாது தன்னுடைய நகைகளை எல்லாம் அடகு  வைத்து பணம் பெற்றுவருவதாகச் சொன்னார்; அதை வாங்க மறுத்த தீட்சிதர் , இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து தியாகராஜம் பஜே என்று அந்த ஊர் ஆண்டவன் மீதே பாடல் இயற்றினார் ; அந்த ஊர் சத்திர மானேஜர் இடந்து வந்து நிறைய உணவுப்பண்டங்களை வீட்டில் கொண்டு இறக்கினார்.

****

8.: ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும், எழுதியவர்: என். பார்த்தசாரதி, ஆண்டு 2002.

சென்னை மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 24 பக்க புத்தகத்தில் ஒரு கலைக்களஞ்சிய அளவுக்கு தகவல்கள் உள்ளன. சங்கீத ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

 டி.எஸ்.பார்த்தசாரதி எழுதிய   ‘Muthuswami Dikshitar’ ( in the book Great Composers ) என்ற ஆங்கிலக் கட்டுரையையும் படிக்கவும்.

 ****

9.இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார். பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்..

தமிழ்சம்ஸ்கிருத மொழிகளில் வேற்றுமைகள் (விபக்தி) எட்டு ஆகும். இவைகளை வைத்துப் பாடினால் விபக்தி கிருதிகள் என்பர். இவ்வகையில் 32 கீர்த்தனைகள் இயற்றினார். ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையில் அதே வேற்றுமையில் வரிகள் அமையும். அபயாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பிகை, மதுராம்பிகை பெயர்களில் (4 x 8=32) இப்படிப் பாடினார். 

 சிவன் மீது பாடிய ‘ஸ்ரீ விஸ்வநாதம்’ என்ற கிருதி சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு சிவனின் பெருமைகளை விளக்குகிறார். ஒரே பாட்டில் 14 ராகம்

***

10. கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் இவர்தான் இளையவர்; இவரைப்போல எல்லா கடவுளர் மீதும் இவ்வளவு பாடல்களை ஏனைய இருவரும் பாடவில்லை இவர் சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த  மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன. இவர் பாடல்களில் வரும் புராணஇதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்.

 —subham—

Tags- முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் , 10 கேள்விகள், வாதாபி கணபதிம் பஜே , சங்கீத மும்மூர்த்திகள் , நவாவர்ணக் கிருதிகள் , முருகன் அருள் 

Lanka, Naga Mystery, Camel! Purananuru wonders-64; Tamil Encyclopaedia 104 (Post.16,179)

 Written by London Swaminathan

Post No. 16,179

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-64; Tamil Encyclopaedia 104, One Thousand Interesting Facts -Part 104

CAMEL FAIR IN PUSHKAR, RAJASTHAN.

Item 892

Next let us look at the wonders in SIRU PANATRUPPADAI (siru paan aatruppadai); it is one of the ten idylls (Paththup Paattu), part of Tamil Sangam Literature that is 2000 years old.

Poem was written by Nallur Naththathanaar; Lines 269.

Subject – a bard is guided by another bard to the town of Nalliakodan for getting gifts.

Here are the wonders or unique things from this book:

Mahabharata’s Bhima is mentioned because of his skill in cooking;

Ramayana’s Lanka is mentioned along with Mavilanka, a small town;

For the first time all the Last Seven Philanthropists listed together;

For the first time camel is mentioned;

New dream miracle reported-Nalliayakkodan’s dream of Lord Muruga led to his victory;

Doors of kings always open to Brahmins, Poets and Bards

Monkeys are kept by salt vendors, as their own children;

New type of Anthathi is used; word- word Anthathi;

Naga mystery continues with Puram verse of Perun Chitran;

Madurai city’s link with Tamil language reconfirmed;

Tamil’s belief in Moon devoured by Snake during eclipse is repeated;

Boy soldiers, Laughing Ghouls, usual description of Body Parts of Woman from Head to Foot is also found;

Great three Cities of Chera, Pandya and Choza kings are portrayed.

***

Item 893- Atharvana Veda Echo-Tamil Line one

Foreigners called earth as Fatherland where male dominance and male chauvinism is seen.

Hindus are the one who called the earth MOTHER EARTH. We see it in the most famous Ode to Earth in the Atharvana Veda. The hymn is called Bhumi Sukta or Prithvi Sukta.

Here the poet in the very first line said Mother Earth. Hindus named all the rivers after women; Hindus named all the good virtues after women.

***

Item 894-  Word Anthathi – lines 21, 22

Anthathi is a Sanskrit word that means End- Beginning.

The last word of the previous line or previous stanza will be the beginning of the next line.

Elsewhere in Sangam poems we see Anthaathi just in few lines.

In the devotional poems of middle Ages of Tamil literature we see 100 stanzas anthathi hymns.

Here in lines 21, 22 we see words used twice consequently.

***

Item 895-MullaiFlower linked to Chastity

Strange custom of Tamils is linking MULLAI flowers with chastity; Mullai is a kind of Jasmine.

Here poet links Mullai flowers with virtuous woman. We see it in other Sangam Poems as well;

Narrinai- 142;Akananuru – 274;

***

Item 896- monkeys as pets-  lines 56-61

Poet Naththathhanar depicts an interesting scene of a female monkey playing with the rattle. Salt vendors keep monkeys as pets. They are treated like their own sons or daughters, says the poet. The rattle that is used by the monkey, we can guess,it is from one of the babies of the salt vendor.

***

Item 897- Madurai -seat of Tamil Sangam- lines 66-67

We know that at least forty poets are from Madurai city in Tamil Sangam poetry, much higher than other towns. That is a proof for Third Tamil Academy  located in Madurai. Here poet confirms Tamil Link with Madurai.

தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று, (62-67)

***

Item 898- Divine Lotus-line 73

Poet described the lotus as DIVINE LOTUS. Hindus only knew the reason.

All the Hindu goddesses, especially Lakshmi and Sarasvati, Gods Brahma and Vishnu, are associated with lotus flower. India also declared it as the National Flower of India.

திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,

***

Item 899-Strange link between Lord Shiva and Choza Kings! Lines 81-82

Throughout Tamil devotional poems Lord Shiva is praised for destroying three hanging fortresses of Demons/Asuras by laughing; I always described it as the destruction of Three space stations in the sky by laser rays from Shiva’s third eye. But why the poet linked it with a Choza king is not explained properly. We know that Chozas migrated from North West India where Sibi race ruled once upon a time; Here also poet called the Choza as SEMBIAN which is derived from Sanskrit SIBI=SAIBHYA=SEMBIYA.

The connection between Lod Shiva and Choza needs more explanation, which is lacking in the commentaries. Both are depicted as destroying Three Hanging Castles!

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

***

Item 900-lines 84-11- Last Seven Philanthropists

Here we get details of seven great chieftains who were famous for their munificence, generosity, compassion and love towards animals.

Bekan gave his clothes to a peacock (thinking that it is shivering in cold);

Pari (paari) gave his chariot to a Mullai (jasminium) creeper for support (thinking that it is struggling without a post to climb)

Kari (kaari) gifted horses (to bards);

Ay Andiran gave a rare cloth given by snake Neela Naagam to Lord Siva under Banyan Tree;

(I have some comments ;see below)

Athikan (Athiyamaan Anji) gave a rare black gooseberry (which lengthens life) to poetess Avvai;

Nalli donated lot of wealth (as charity);

Ori gave lands to dancers and singers;

This is the first reference to Seven generous men together grouped as the Great Seven

From this we know this poet lived later than many Sangam poets who praised the seven people separately.

Probably a gap of 200 years.

My comments :

Neela naakam is not a snake; it may be the name of a Naga leader who weaves very fine cloths.

***

Item 901- Ramayana Lanka and New Maavilanka- lines 110-120

Capital of chieftain Nalliyakkodan was Maavilanka

Poet says his town is Maavi Lanka which is similar to the old and famous Lanka (of Ravana).

Hindus of Tamil Nadu were well versed in Hindu epics Ramayana and Mahabharata (we are going to see Bhima soon)

***

Item 902-OVIYAR clan is Mysterious Naga Clan

Oviyar in today’s Tamil is a painter; but in the poem he is a man from Naga clan; we have about 20 Naga poets in Sangam corpus; they may be from North India or Sri Lanka; Ceylon/Sri Lanka was a Naga Island. We have Naga names in Mahavamsa and Gupta inscriptions. So their origin is still an unsolved mystery. OVIYAR hear meant who has Snake tattoos on their bodies. Puram 176 where this chieftain is praised is also a Naga poet. We have another poet named Perun Chitran in Purananuru. He used same words in his poem; Perum Chitran is Maha Chitran meaning Great Painter; it means he is also a poet with big snake tattoo on his body or a great Naga clan leader. In short Oviyar is misunderstood and misinterpreted. Neela Naakam is also a Naga Chief (see seven Generous Men above)

Last but not the least , Nalliya KODAN is similar to great snake KAARKODAN in Sanskrit books. Karkodan is also depicted as man and snake.

***

Item 903- CAMEL! in Tamil literature! Line 154

For the first time Sangam Age, Tamils hear about camel in this poem; Tamils must have already seen it, because the poet used it as a simile. It is compared to the woods washed by the waves; the logs lying on the sea shore looked like the back of a sleeping camel.

Sanskrit word Ushta for camel is changed to Ottakam in Tamil. It is a desert animal found in Rajasthan deserts. So, Tamils must have imported them from Rajasthan.

to be continued………….

Tags. Purananuru wonders-64; Tamil Encyclopaedia 104, One Thousand Interesting Facts -Part 104 , item 903, camel, Ramayana Lanka, Naga Mystery

மோடிஜியைக் கவிழ்க்க சர்ச் சதியா? (Post No16,178)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,178

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மோடிஜியைக் கவிழ்க்க சர்ச் சதியா? 

ச. நாகராஜன்

கார்டினல்கள், ஆர்ச் பிஷப்கள், பிஷப்கள், விகார்கள் ஆகியவர்களின் பிரத்யேக அறைகள் இப்போது ‘வார் ரூம்’ ஆகி விட்ட அதிர்ச்சி செய்தியை கேரளாவின் மூத்த பத்திரிகையாளரான குமார் செல்லப்பன் அவர்கள் சனாதன் ப்ரபாத் 2026, ஆகஸ்ட் 1-15 இதழில் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்ட திட்டங்களையும் உத்திகளையும் அவர்கள் வகுத்து வருகிறார்களாம்.

ஆப்ரஹாமிக் தலைவர்கள் ஹிந்துக்களை பலியாக்குவது சுலபம் என்று கருதுகிறார்களாம்.

இதன் உச்சகட்டமாக இவர்கள் கோபம் நரேந்திர மோடியின் மீது திரும்பி இருக்கிறது.

இதற்காக இவர்கள் ராகுல் காந்தியுடன் கூட்டணி சேர்ந்து விட்டார்கள்.

ராகுல் காந்தி, கடந்த ஜூன் மாதம் நியூ டில்லியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, “இன்னும் ஒரு வருட காலத்தில் நரேந்திர மோடியின் அரசு இருக்காது. மோடிக்கு எதிராக பிரம்மாண்டமான எதிர்ப்பலை இந்தியாவில் எழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அத்தோடு அவர் மேலும் கூறுகையில், எலக் ஷன் கமிஷனர்களும், நீதிபதிகளும் அவருக்கு பிஜேபி அரசின் மேலாதிக்க மனப்பான்மையிலிருந்து தம்மைக் காக்குமாறு தனக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

1978ம் ஆண்டு மொரார்ஜி தேசாயின் அரசு ஓபி தியாகி மூலம் ‘ஃப்ரீடம் ஆஃப் ரெலிஜின் பில்” ஐ கொண்டுவந்த போது கல்கத்தாவில் மதர் தெரஸா பெரிய கலவரத்தைத் தூண்டி விட்டார். இந்தச் சட்டம் சட்டத்திற்குப் புறம்பாக மதம் மாற்றுவதைத் தடுப்பதற்கான சட்டமாகும். கலவரக் கூட்டங்களின் விளைவாக மொரார்ஜி அரசு கவிழ்ந்தது.

 இப்போது Foreign Contribution Regulation Amendment Act (FCRAA ACT 2026) பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்த இந்திய கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு திட்டமிட்டுள்ளது.

சனாதன தர்மத்திற்கு எதிராக Catolic Bishops’ Conference of India – CBCI – எவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

ஹிந்து தர்மத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இரவு பகலாக இது வேலை பார்த்து வருகிறது. ஆனால் இதை ஓசைப்படாமல் பகிரங்க விளம்பரம் இல்லாமல் செய்து வருகிறது.

இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருப்பதாக தங்களுக்கு ஜால்ரா போடும் உலகளாவிய ஊடகங்கள் மூலமாக தொடர்ந்து இது செய்திகளை வெளியிட்டு வருகிறது.

1959ம் ஆண்டு இதன் பிரம்மாண்டமான தாக்குதல் கேரளாவில் நடைபெற்றது.

1957ல் அரசை அமைத்த நம்பூதிரிபாட் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர் இவர்கள்.

காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீகுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் கம்யூனிஸ அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கம்யூனிஸ அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் குறுக்கிட்டதையும் சர்ச் விரும்பவில்லை. ஏனெனில் பள்ளிகளில் பெருவாரியான பள்ளிகள் கிறிஸ்தவ சர்ச்சினாலேயே நடத்தப்பட்டவையாகும்.

இவர்களின் கிளர்ச்சி பெரிதாக ஆகவே அப்பாவியான 20 உயிர்கள் பலி ஆயின.

இறுதியில் நேருவின் அரசு 356 சட்டப்பிரிவின் படி நம்பூதிரிபாட் அரசை கலைத்தது.

இதற்குப் பின்னர் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.கம்யூனிஸ்டுகளும் சர்ச் பிஷப்புகளும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த செல்வாக்கையும் செல்வத்தையும் நன்கு புரிந்து கொண்டனர்.

இடையே அமெரிக்க சி.ஐ.ஏயும் வடிகனும் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களை ஆதரிக்காத அரசுகளைக் கவிழ்க்கலாயின.

இவற்றிற்கு வரும் நிதியை இந்திய அரசின் FCRA கண்காணிக்க ஆரம்பித்தது.

இதனால் சர்ச்சுக்கும் எப்சி ஆர் ஏக்கும் தீராப் பகை ஏற்பட்டு விட்டது.

 இந்த நிலையில் தான் சட்டத்திற்கு மேல் சட்டம் வந்து தங்களின் மதமாற்ற நடவடிக்கை, அரசு கவிழ்ப்பு நடவடிக்கை ஆகியவற்றைச் செய்ய விடாமல் தடுக்கிறதே என்று சர்ச் பிஷப்புகள் ஆத்திரப்படுகின்றனர்.

இப்போது ராகுல் காந்தி ஒரு வருடத்திற்குள் மோடி அரசு போய்விடும் என்று பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் சவால் விட்டு அறிவித்திருப்பதால் சர்ச்சுகளுக்கு ஏக சந்தோஷம்.

அவருடன் கூட்டு சேர்ந்து இணைவது தானே நல்லது!

இதற்கான நடவடிக்கைகளைத் தான் மூத்த பத்திரிகையாளர் குமார் செல்லப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

என்ன நடக்கப் போகிறது? பிஜேபி உஷாராகச் செயல்படுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

**