Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
71.
கண்டாலே கொல்லும் பாம்பு விஷம் பற்றி பல்லவர் செப்பேடுகள் சொல்லும் சுவையான விஷயம் என்ன ?
72
கர்ணன் பற்றி வேலூர்ப்பாளையம் செப்பேடு என்ன சொல்கிறது ?
73
எந்த ஒரு செப்பேட்டில் மட்டும் தமிழே இல்லாமல் சம்ஸ்க்ருதம் மட்டும் உள்ளது ?
74
பல்லவர் கால தொழிலாளர் வகைகளைக் கூறும் செப்பேடு எது ?
75
பிராமணர்களுக்கும் பல்லவர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
76
தொத்தி ஸ்வாமி,கண்ணஸ்வாமி, நந்தி ஸ்வாமி ஆகிய மூவர்களின் பெயர்கள் தெரிவிக்கும் செய்தி என்ன ?
77
பல்லவர் செப்பேடுகளில் பழமையானது எது ?புதுமையானது எது?இடைப்பட்டவை யாவை ?
78
வரலாற்றில் உள்ள பல்லவ மன்னர்களின் கால வரிசை என்ன ?
79
பிராமணர்களுக்கு கிரஹண தானம் கொடுத்த பல்லவன் யார் ? உத்தராயண புண்ய கால தானம் கொடுத்தபல்லவன் யார் ?
80
பல்லவர் செப்பேடுகளில் உள்ளஅஷ்ட மங்கல சின்னம் என்றால் என்ன ?
******************************
விடைகள்
71.சிம்ம விஷ்ணுவுக்கு முன்னால், அரசுபுரிந்த நந்தி வர்மன், திருஷ்டி விஷம் என்ற ஒருவனை வெற்றி கொண்ட செய்தி வேலூர் ப்பாளையம் செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது . பார்வையினாலேயே மரணத்தை விளைவிக்கக்கூடிய விஷத்தைக் கொண்ட பாம்பையே திருஷ்டி விஷம் என்பார்கள். ஆனால், இங்கே அது அந்தப் பெயரைக்கொண்ட நாகராஜன் ஒருவனையே குறிக்கும் கர்நாடகத்தில் ஆட்சி புரிந்த சிந்தர் என்னும் அரச பரம்பரையினர் தங்களை த்ருஷ்டிவிஷனுடைய சந்ததியாகக் கூறிக்கொள்வார்கள் . நாக வம்சத்தைச் சேர்ந்த அந்த மூல புருஷன் கர்நாடகத்துக்கு வந்தான் என்றும் அவன் தங்கியிருந்த காலத்தில் தோன்றிய சந்ததியார் சிந்தர் என்றும் அவர்களுடைய சாசனங்கள் கூறுகின்றன . அவர்களில் ஒருவனைத்தான் நந்தி வர்மன் தோற்கடித்திருக்க வேண்டும்.
அரக்கோணத்துக்கு அருகில் கிடைத்த வேலூர்ப்பாளையம் செப்பேடு, மேலும் கூறுவதாவது
ஸ்லோகம் 4
அசோகவர்மன் போன்ற மன்னர்களுக்குப்பிறகு அந்த வம்சத்தில் கால பார்த்தாரு பிறந்தான் .
ஸ்லோகம் 5
அவன் மகன் சூத பல்லவன் .அவனுக்குப் பிறந்தவன் வீர கூர்ச்சன். அவன் நாகராஜன் மக்களுடைய கைத்தலத்தோடு அரசையும் பற்றினான்.
ஸ்லோகம் 6
அவனுக்கு ஸ்கந்த சிஷ்யன் மகனாகப்பிறந்தான் அவன் இருபிறப்பாளர்களின் கடிகையை சத்யசேனன் என்ற அரசனிடம் கைப்பற்றினான். அதற்குப்பிறகு காஞ்சீபுரத்தைக் கைப்பற்றிய குமார விஷ்ணுவும் சோழர்களுடைய சென்னைக்கு வடவாகினியான புத்த வர்மனும் அரசரானார். இந்த நான்கு அரசர்களும் இதே முறையில் வாயலூர்க் கல்வெட்டிலும் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்காத தக்கது . அப்பால் விஷ்ணுகோபன் போன்ற பல அரசர்களுக்குப் பிறகு சிவா பெருமான் அருளால் திருஷ்டிவிஷனை ஆடச்செய்த நந்தி வர்மன் அரசனானான் . அப்பால் சிம்மவர்மன் அரசன் ஆனான் அவன் மகன் சிம்ம விஷ்ணு காவிரி பாயும் சோலா நாட்டைக் கைப்பற்றி பல்லவர் ஆட்சிக்கு உட்படுத்தினால். அவன் மகனான மகேந்திரனுக்கு வாதாபி நகரின் நடுவிலிருந்த வெற்றித்தூணை எடுத்து வந்த நரசிம்ம அவர்மன் பிறந்தான். 13 ஆவது சுலோகத்தில் பிராமணர்களுடைய கடிகையை மீண்டும் அமைத்தான் சந்திரனைத் தலையில் தரித்த சிவபெருமானுக்கு கைலாயத்தைப் போன்று கல்லால் ஒரு ஆலயம் அமைத்தான் .
என்னுடைய கருத்து
ஒவ்வொரு செப்பேடும் புதுப்புது மன்னர் கள் பெயர்களைச் சொல்கின்றன அவைகளை க்க கால வரிசைப்படி தொகுத்து ஆராய வேண்டும்
(முன்னர் வரும் ஸ்லோகங்களில்( எண் 23) பிராமணர் பெயர்களில்சிவதாசன் என்ற பெயரும் உள்ளது பிற்காலத்தில் தாசன் என்ற பெயரைப் பிராமணர்களிடையே காண்பது அரிது ).
அந்தக் காலத்திலேயே தியாகத்துக்கு கோட்டைக்கும் கர்ணன் பெயரை ஒப்பிடுவது குறிப்பிட்டது தக்கது .
***
73.தமிழ்நாட்டில் வாணியம்பாடிக்கு அருகில் கிடைத்த உதயேந்திரம் செப்பேடுகள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும் உள்ளது . கூலசர்மன் என்ற பிராமணனுக்கு முதல் நந்தி வர்மன் கொடுத்த தானத்தைக் குறிப்பிடும் சாசனம் இது . கி.பி 550.
ஆயினும் இது ஒரிஜினல் சாசனம் இல்லை பிற்காலத்தில் காபி/ நகல் எடுத்ததால் பிழைகள் மலிந்துள்ளன ஆயினும் இது உண்மையாசை சாசனம் என்பதற்குச் சான்றாக முதல் ஏட்டின் முன்புறத்தில் முதல் பராந்தக சோழன் காலத்தில் எழுதப்பட்ட கடையீடு ஒன்றும் காணப்படுகிறது
ஒரு கீழ்நிலை அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவு அல்லது ஆணையை கடையீடு என்பார்கள்.
தமிழ் வாசகம் சொல்லுவதாவது ,
மாதிரைகொண்ட கோப்பரகேசரி வர்மனான முதற் பராந்தக சோழனுடைய ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டு ,காஞ்சி வாயிலாகிய இகன்மறை மங்கலத்து ஸபையோமும் உதயசந்திர மங்கலத்து ஸபையோமும் இவ்விரண்டு ஊரோமும் கூடி ஒன்றானமையில் இதன் மேற்பட்டது ஓரூராய் வாழ்வோமானோம் .
சோழர் காலத்தில் இந்த பல்லவ சாசனத்தை உண்மையென்று கருதியத்தால்தான் இதன் மீது கடையீடு எழுதியுள்ளனர்.
***
74.கர்நாடகத்தில் பெல்லாரி ஜில்லாவில் ஹீரடஹள்ளி என்னுமிடத்தில் சின்னப்பா என்ற வியாபாரியிடம் வாங்கப்பட்ட செப்பேடுகளில் எட்டு ஏடுகள் உள்ளன . இது சிவஸ்கந்த வர்மன் , பிராமணர்களுக்கு அளித்த தானத்தைச் சொல்லும் சாசனம் இது .
வரி 1
காஞ்சீபுரத்திலிருந்து பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவரும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவனுக்கு அக்னிஷ்டோமம் , வாஜபேயம் அஸ்வமேதம் ஆகிய யாகங்களை செய்தவனும் தர்ம மகா ராஜாதிராஜனுமான சிவஸ்கந்த வர்மன்
வரி 3
நம்முடைய விஷயத்தில்—(அதாவது ராஜ்யத்தில்)– உள்ள எல்லா அரச குமாரர், சேனாபதி , ராஷ்டிரிக்கர்—(ராஷ்டிரபாலர்)–மாதவிக்கர்—(சுங்க அதிகாரி)– தேசாதிகர்—(நாடு ஆட்சி செய்வோர்)– கிராமகிராம போஜர்—(அந்தந்த ஊரின் போஜர்)–வல்லபர்- (குதிரை காவலர்,) கோவல்லபர்—(ஆநிரை காவலர்)–அமைச்சர், அரக்கஅதிகர்—(காவலர்)– குமிக்கர், தூதிகர், நெய்கர், –( நையா யோகிக்கர்-அதிகாரி)– மற்றும் நம்மால் ஏவலை நிறைவேற்றச் செல்லும் சஞ்சரந்தர் — (ஒற்றர், சஞ்சரிப்போர்)– படைவீரர் ஆகியோருக்கு கட்டளை :
வரி 5
ஆப்பிட்டி கிராமத்தில் வசிப்பவர்களும் சில்லரேகை கொடுங்கை அனுபவிப்பவர்களுமான பிராமணர்களுக்கு நம்மால் இங்கே இப்போது வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன .
இதற்குப்பின்னர் பிராமணர்களின் கோத்திரம் முதலியவற்றுடன் அவர்களுடைய பெயர்கள் உள்ளன.
இப்போது நாம் லட்சம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினை பயன்படுத்துகிறோம் ; பல்லவர் செப்பேடுகளில், குறிப்பாக இந்தச் செப்பேட்டில் நூறாயிரம் என்ற சொல் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது அனால் இதிலும் ஆயிரம் என்ற எண், சம்ஸ்க்ருத சஹஸ்திரத்தின் திரிபு ஆகும் .
***
75.பல்லவர் செப்பேடுகள் முப்பது நூலிலுள்ள செப்பேடுகள் ஒன்றிரண்டினைத் தவிர மீதி எல்லாம் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த செய்தியைக் கூறுகின்றன. அந்த தான விஷயம் இல்லாவிடில் இவ்வளவு வரலாற்றுச் செய்திகள் கிடைத்திராது; முப்பது செப்பேடுகளிலும் சுமார் 600 பிராமணர்களின் பெயரும் கோத்திரமும் உள்ளதை போல வேறெங்கும் தொடர்ச்சியாக தகவல் கிடைப்பது அரிதாகும்.
இவர்கள் ஓவர் பெயருக்கும் முன்னால் நதிப்பி போஜர் என்ற அடைமொழி உள்ளது . பிரம்மதேயம் என்று சொல்லாமல் சாரணிக கிராமம்- அதாவது சரண டைந்தவர்களுக்கு க்க கொடுக்கப்பெற்ற ஊர் என்றே குறிக்கப்பட்டுள்ளது . சுவாமி என்ற சொல் அந்நாளிலே அரசுரிமை கொண்டிருந்தவர்களுக்கே வழங்கப் பெற்று வந்தது ; ஆகவே இவர்கள் மூவரும் சிற்றரசர்களாக இருந்து பதவியை இழந்து பல்லவர்களிடம் புகலிடம் தேடி வந்தவர்கள் என்று கருதப்படுகிறது . நதிப்பி என்பது அவர்களுடைய ஊராக இருந்திருக்கலாம் .
போஜர் என்ற பெயர் கொண்ட குறுநில மன்னர்களின் வம்சம் மேலைக் கடற்கரை ஓரமாக கோவாவை ஒட்டிய பிரதேசத்தில் ஆட்சி புரிந்திருந்தது அவர்கள் யதுகுளத்தில் ஹேஹய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் . நாலாம் நூற்றா ண்டு முதல் ஏழாம் நூற்றா ண்டு வரை மன்னர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கொங்கணத்து மெளரியர்கள் அவதிகளை அடிமைப்படுத்தியதால் பல்லவர்களிடம் புகலிடம் தேடி வந்தனர் போலும் .
***
77.பல்லவர் செப்பேடுகள் முப்பது புஸ்தகம் கால வரிசைப்படுத்திய் கொடுத்துள்ளது :
79.கிரஹண தானம் கொடுத்த பல்லவன் – இரண்டாம் நரசிம்ம வர்மன் சந்திர கிரஹண காலத்தில் தானம் அளித்த செய்தி ரேயுறுத் செப்பேடுகளில் காணப்படுகிறது
உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டுத் தானம் வழங்கிய பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆவார்.ஆந்திரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இவருடைய பல்லவர் செப்பேட்டின்படி, தனது ஆட்சியின் 19-ஆம் ஆண்டில், பௌஷ்ய மாத சுக்ல பக்ஷ திரயோதசி திதி கொண்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, உத்தராயண புண்ணிய கால நிமித்தமாக ‘குப்புநூறு’ என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவசர்மன் என்ற பிராமணருக்கு அவர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.உன்னக்குரவய பாளையம் செப்பேடு தரும் தகவல் இது.
***
80.பல்லவர் செப்பேடுகளில் உள்ளஅஷ்ட மங்கல சின்னம் :
பல்லவர் காலச் செப்பேடுகள் மற்றும் அவர்களின் நாணயங்களில் அஷ்டமங்கலச் சின்னங்கள் (அல்லது மங்கலச் சின்னங்கள்) இடம்பெற்றுள்ளன.
பல்லவர்கள் தங்களது அரசு ஆவணங்களான செப்பேடுகளைப் பாதுகாப்பாக இணைக்கும் செப்பு வளையங்களின் முகப்பு முத்திரைகளிலும் (Seals), அவர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் பல்வேறு மங்கலச் சின்னங்களைப் பொறித்துள்ளனர்.
ஸ்ரீவத்ஸம் (மறுவடிவம்): திருமகளின் மறுவடிவமாகக் கருதப்படும் இந்த மங்கலச் சின்னம் பல்லவர் நாணயங்களிலும் செப்பேட்டு முத்திரைகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.நந்தி (காளை): பல்லவ மன்னர்களின் முதன்மை இலச்சினையான நந்திச் சின்னம் செப்பேட்டு முத்திரைகளின் மையப்பகுதியில் வீற்றிருக்கும்.இருவிளக்குகள் (குத்துவிளக்கு): மங்கலத்தைக் குறிக்கும் விளக்குகள் நந்தியின் இருபுறமும் செப்பேடுகளில் செதுக்கப்பட்டிருக்கும்.சாமரம் (கவரி): அரச மரியாதையையும் சுபிட்சத்தையும் குறிக்கும் சாமரம் போன்ற அஷ்டமங்கலக் கூறுகள் இவர்களின் முத்திரைகளில் உண்டு.பூரண கும்பம் (கலசம்) & குடை: சில பிற்காலப் பல்லவர் செப்பேட்டு முத்திரைகளில் மங்கலக் கலசம் மற்றும் வெண்கொற்றக்குடை போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
Tags- பல்லவர் செப்பேடுகள், எட்டாவது 10 கேள்விகள் , பல்லவர் செப்பேடுகள் முப்பது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்
ஓர் ஆய்வு – 28
(ஆர், சேஷாத்ரிநாதன்)
இராமன் சுக்ரீவன் நட்பு
இலக்ஷ்மணன் இராமன் காட்டிற்கு வந்த செய்தியையும் சீதை கவர்ந்து செல்லப்பட்ட விவரத்தையும் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறினான். ஹனுமன்/
ஏற்கனவே ஹனுமன் இருதரப்புக் கதைகளையும் சொல்லிவிட்டா.ன். பிறகு இலக்ஷ்மணன் இராம சரிதத்தை மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். ஹனுமன் இருவருக்கும் இடையே நட்பை உருவாக்கி மொத்தக் கதையையும் சுருக்கமாகச் சொன்னான். அதவாது தெரிந்தவரை சொன்னான்.. ஹனுமனுக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சுருக்கமாகச் சொல்லிவிட்டான். இலக்ஷ்மணன் அதை முழுமையாகச் சொன்னான். இராமனின் பிறப்பு, கல்வி முறை, சீதையுடன் திருமணம், தந்தையின் கட்டளைக்கிணங்க வனவாசம், இராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட விவரங்கள் ஆகியவை. இதை இராமன் ஏன் சொல்லவில்லை? தனது வீரத்தையும், பிரதாபத்தையும் தனது வாயால் சொல்வதைவிட இலக்ஷ்மணன் சொல்வதே சிறப்பு என்று இராமன் முடிவு செய்திருக்கலாம். நட்பு உடன்படிக்கை எற்பட்டபிறகே இலக்ஷ்மணன் இந்த விவரங்களைச் சொல்கிறான். காரணம் இரண்டு நண்பர்களிடையே எந்தவித ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதற்காக.
ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्याति पृच्छति!
भुङ्क्ते भोजयते चैव षड्विधं प्रीतिलक्षणम्!!
நட்பின் இலக்கணம் என்ன? பர்த்ருஹரி சதகம் என்ற நூலில் சொல்லப்படுவதாவது. தேவைப்படும்போது கொடுப்பது, தேவைப்படும்போது எடுத்துக் கொள்வது, ரகசியங்களைச் சொல்வது, ரகசியங்களைக் கேட்பது, நமக்கு பிடித்த உணவைச் சாப்பிடுவது, அவர்களுக்குப் பிடித்த உணவைக் கொடுப்பது ஆகியவைதான் நட்பின் இலக்கணங்களாகக் கருதப்படுகின்றன.
அடுத்து ஹனுமான் சொன்னது கதா “कथा” இலக்ஷ்மணன் சொன்னது “चारित. இங்கு கதா என்பது பெண்பால். ஹனுமான் சீதை அபகரிப்பு மற்றும் சுக்ரீவன் மனைவி உருமை வாலியால் அபகரிப்பு விஷயங்களைச் சொன்னான். இலக்ஷ்மணன் சொன்னது சரிதம். சரித என்பது ஆண்பால். இலக்ஷ்மணன் இரானின் வீர வரலாறான தாடகை வதம், சுபாகு வதம், மாரீசன் வதம், கர தூஷண வதம், விராதன் மற்றும் கபந்தன் வதம் ஆகிய வீர வரலாற்றைச் சொன்னான் என்று உரையாசிரியர்கள் சொல்லியுள்ளனர். இந்த விவரங்கள் ஹனுமனுக்குத் தெரியவில்லை.
இலக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஜானகி கிடைத்துவிடுவாள். கவலை வேண்டாம்” என ஆறுதல் கூறினான். சுக்ரீவனின் நட்பு உண்மையான நட்பு. அதனால் இராமனின் துயரத்தைக் கேட்டதும் தான் கண்ணீர் விட்டு அழுதான்.
जे न मित्र दु:ख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥
எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கேட்டு தான் துக்கப்பதுவதில்லையோ, அத்தகையவனைப் பார்ப்பதே பாவம் என்கிறார் துளசிதாசர்.
இங்கு உரையாசிரியர்கள் வேறு ஒரு கருத்தும் சொல்கிறார்கள். இராமன் சீதையின் பிரிவால் துயரப்படுவதைக் கேட்ட சுக்ரீவனுக்குத் தனது மனைவியின் நினைவு வந்திருக்கக் கூடும். தன்னைப் போலவே இராமனும் மனைவியின் பிரிவால் வருந்துகிறான் என்பதை நினைத்துக் கண்ணீர் வடித்திருப்பான் என சொல்கின்றனர்..
निज दुख गिरि सम रज करि जाना।
मित्रक दुख रज मेरु समाना॥
அதாவது உண்மையான நண்பன் தனது துன்பத்தைத் தூசிபோல நினைத்து நண்பனுக்கு ஏற்பட்ட துன்பத்தை இமய மலையாகக் கருதுவான்..
சுக்ரீவன் சீதை கண்டிப்பகக் கிடைப்பாள் “मिलिहि’ என்று சொல்கிறான். காரணம் சீதை இராவணன் தன்னைக் கடத்திச் செல்லும்போது கீழே சில குரங்குகளைப் பார்த்ததும் தன்னுடைய நகைகளை அடையாளமாக விட்டுச் செல்கிறாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது இராமன் கண்டிப்பாக தன்னைத் தேடி அங்கு வருவான் என்று. அதைத்தான் சுக்ரீவன் உறுதியாக சீதை கிடைத்துவிடுவாள் என்று சொல்கிறான்..
சுக்ரீவன் சீதையைப் பற்றிக் கூறுதல்
मंत्रिन्ह सहित इहाँ एक बारा। बैठ रहेउँ मैं करत बिचारा॥
गगन पंथ देखी मैं जाता। परबस परी बहुत बिलपाता॥2॥
மேலும் “நான் ஒருமுறை இங்கு அமைச்சர்களுடன் (நளன், நீலன், ஜாம்பவான் மற்றும் ஹனுமன்) அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவன் ஒரு பெண்ணைக் கவர்ந்து ஆகாய மார்க்கமாகச் சென்றதையும், அழுது கண்ணீர் வடித்தவளாய் “புலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தோம்” என்றான் சுக்ரீவன்,
இதற்கு சமமான சுலோகம் ஆத்யாத்ம இராமாயணத்தில் உள்ளது.
एकदा मन्त्रिभिः सार्द्ध स्थितो5हं गिरिमूर्द्धनि।
विहायसा नीयमानां केनचित् प्रमदोत्तमाम्॥’
===================
राम राम हा राम पुकारी। हमहि देखि दीन्हेउ पट डारी॥
मागा राम तुरत तेहिं दीन्हा। पट उर लाइ सोच अति कीन्हा॥3॥
“எங்களைப் பார்த்ததும் இராமா இராமா என்று அழைத்தபடியே ஓர் ஆடையைக் கீழே போட்டார்” என்றான் சுக்ரீவன். இராமன் அந்த ஆடையைக் கொண்டுவரச் சொன்னான். அந்த ஆடையை மார்போடு அனைத்துக் கொண்டு மிகவும் வருந்தலானான்..
இங்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது. பொதுவாக பெண்கள் தங்கள் கணவன் பெயரைச் சொல்வதில்லை. ஆனால் இங்கு சீதை இராமா! இராமா! என்று அலறியதன் மூலம் நான் இராமனின் மனைவி. எனது நிலையை எனது கணவர் இராமனிடம் தெரிவியுங்கள் என்பதற்காகப் பெயரைச் சொன்னார் என்று சொல்கின்றனர். மேலும் சீதை மிக உயரத்தில் சென்று கொண்டிருந்ததளால் மெதுவாகச் சொன்னால் கீழே நிற்கும் குரங்குகளுக்கு கேட்காது என்று எண்ணி உரத்த குரலில் கூறியதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆபத்தில் இருக்கும் சமயம் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கணவன், மகன், குரு ஆகியோர் பெயரைச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். (பொதுவாக
आत्मनाम गुरोर्नाम नामातिकृपणस्य च ।
आयुष्कामो न गृह्णीयात् ज्येष्ठापत्यकलत्रयोः ॥
வாழ்க்கையில் செழிப்பை விரும்புவன் தனது பெயரையே உச்சரிக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இது எப்படிச் சாத்தியம்? பொதுவாக ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர்கள் இருக்கும். அதிகாரபூர்வமான பெயர். செல்லமான பெயர். தனது செல்லப் பெயரை உச்சரிக்கலாம். அதிகாரபூர்வ பெயரை உச்சரிக்ககூடாது. உபநயனத்தின் போது ஷர்மா நாம் என்று ஒரு பெயரைச் சொல்வர். இதைத்தான் உச்சரிக்கக்கூடாது என்று சொல்வர். அபிவாதயே சொல்லி வணங்கும்போது மட்டும் இந்தப் பெயரை உச்சரிக்கலாம். ஆனால் அதை உச்சரிப்பவர் அதைக் கேட்கக்கூடாது. இதனால் தான் அபிவாதயே சொல்லி வணங்கும்போது இரு காதுகளையும் பொத்திக் கொண்டு சொல்லவேண்டும் என்று சொல்லப் படுகிறது.)
சுக்ரீவன் சீதை இராமா! இலக்ஷ்மணா! என்று அலறிக் கொண்டே இராவணன் பிடியில் தத்தளிப்பதைப் பார்த்தேன் என்று சொல்கிறான்.
வால்மீகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 58 வது சர்கத்தில் சம்பாதி
क्रोशन्ती राम राम इति लक्ष्मण इति च भामिनी |
भूषणानि अपविध्यन्ती गात्राणि च विधुन्वती || ४-५८-१६
மீண்டும் அதே நிகழ்வை அங்கதனிடம் தெரிவிக்கிறான். மேலும் இராமா! இராமா! என்று கத்திக் கொண்டே இருந்ததனால் அந்தப் பெண் சீதையாக இருக்கவேண்டும் என்றும் ताम् तु सीताम् अहम् मन्ये रामस्य परिकीर्तनात् | சொல்கிறான்.
ஹனுமான் நாடகம் என்ற நூலிலும் இந்த விவரங்கள் கிடைக்கின்றன
पापेनाकृष्यमाणा रजनिचरवरेणाम्बरेण ब्रजन्ती किष्किन्धादोौं मुमोच प्रचुरमणिगणैर्भूषणान्यर्जितानि। हा
சீதை, இராவணனால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டபோது,தன் நகைகள், ஆபரணங்களை வழியிலே தரையில் விட்டாள்.- அவள் மனம் கலங்கி, “ஹா இராமா! என் உயிர்நாதா!” என்று அழுதாள்.- “லட்சுமணா! எதிரியை அழித்துவிடு!” என்று கூவினாள்.- அவள் விட்ட ஆபரணங்களை ஹனுமன் சேகரித்து, பின்னர் ராமனிடம் கொண்டு வந்து காட்டினான்.)
இது சம்பந்தமாக பல நூல்களில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இங்கு சுவையான ஒரு விஷயத்தை உரையாசிரியர்கள் சொல்கின்றனர். துளசிதாசர், சீதை மூன்று முறை இராமா, இராமா, இராம என்று கத்தியாதகச் சொல்கின்றனர். இதன் தாத்பர்யம் என்ன? இராவணன் மிகச் சாமர்த்தியமாக யாருக்கும் தெரியாமல் மிக உயரத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தான். கிஷ்கிந்தாவின் மேலே செல்லும்போது சீதை கீழே குனிந்து பார்த்ததில் மூன்று குரங்குகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. அவர்கள் கவனத்தைக் கவர வேண்டும். வெறும் ஆடையைக் கீழே வீசினால் அது காற்றில் பறந்து சென்று விடும். அதற்குள் தனது கொலுசு, குண்டலம் இவைகளை வைத்துக் கட்டி மூன்று முறை இராமா என்று அலறியபடி கீழே வீசினாள். இராமன் வந்துவிடுவானோ என்ற பயத்தில் இராவணன் வேகமாகச் சென்று கொண்டிருந்தபடியால் பின்னால் திரும்பி சீதை என்ன செய்து கொண்டிருந்தாள் எனப் பார்க்கவில்லை.
சீதையின் முதல் இராமா என்ற கூக்குரல் குரங்குகளின் கவனத்தைக் கவருவதற்காக. இரண்டாவது அலறல் இந்த ஆடையையும் நகைகளையும் இராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்வதற்காக. மூன்றாவது அலறல் நான் இராமனை விரும்புகிறேன். இவன் என்னைக் கடத்திச் செல்கிறான் என்று தெரிவிப்பதற்காக. சுக்ரீவன் இராமனிடம் சீதை ஆடையை எறிந்தாள் என்று மட்டும் சொல்கிறான். காரணம் அவன் சீதை எறிந்ததை பிரிக்கவில்லை, காரணம் அது இன்னொருவருக்குச் சேர வேண்டியது. “धन पराव बिष ते बिष भारी சுக்ரீவனைப் பொறுத்தவரை அடுத்தவரின் செல்வம் விஷத்தை விட கொடிய விஷம், அதனால் சீதை வீசியதை அவன் திறந்து பார்க்காமல் அப்படியே குகைக்குள் வைத்துவிட்டான்.. இந்த விலை மதிக்க முடியாத வஸ்து சுக்ரீவனின் கையில் கிடைத்ததுமே “சீதையைத் தேடும் பணி தொடங்கி விட்டது मम दिसि देखि दीन्ह पट डारी। என்று உரையாசிரியர்கள் சொல்கின்றனர்.
துளசிதாசர் இங்கு “मागा राम तुरत तेहि दीन्हा” என்ற பதப் பிரயோகம் செய்துள்ளார். அதாவது तुरत என்ற வார்த்தை இங்கு முக்கியமானது.. இராமனுக்கு சீதை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் வேகத்தைக் குறிக்கிறது. சுக்ரீவனைப் பார்த்து இன்னும் ஏன் தாமதம். உடனே அதைக் கொண்டுவா என்று சொல்கிறார்.. இராமனுக்கு சுக்ரீவன் சொன்ன பொருள் சீதையுடைதுதானா என்று பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல். வால்மீகி இராமாயணத்திலும் சுக்ரீவனிடம்
ஆத்யாத்ம இராமாயணத்திலும் இந்தக் காட்சி சொல்லப்பட்டுள்ளது
क्रोशन्तीं रामरामेति दृष्ट्वास्मान् पर्वतोपरि ।
आमुच्याभरणान्याशु स्वोत्तरीयेण भामिनी ॥ ३८॥
निरीक्ष्याधः परित्यज्य क्रोशन्ती तेन रक्षसा ।
नीताहं भूषणान्याशु गुहायामक्षिपं प्रभो ॥ ३९॥
दि निक्षिप्य तत्सर्वं रुरोद प्राकृतो यथा ॥ ४१॥
இராமன் அவற்றைப் பார்த்ததும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு சீதையை நினைத்து சாதாரண மனிதன் போல புலம்பினான். வால்மீகியும் இராமனின் துயரத்தை தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
हा प्रिये इति रुदन् धैर्यम् उत्सृज्य न्यपतत् क्षितौ || ४-६-१७
===========================
சர்கம் 4
இராமனுக்கு சுக்ரீவன் அறுதல்
कह सुग्रीव सुनहु रघुबीरा। तजहु सोच मन आनहु धीरा॥
सब प्रकार करिहउँ सेवकाई। जेहि बिधि मिलिहि जानकी आई॥4
அதைக் கண்ட சுக்ரீவன் “ஐயனே! கேளுங்கள். கவலையை யொழித்து மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஜானகியைத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவி புரிவேன்” என்றான்.
अलम् वैक्लव्यम् आलम्ब्य धैर्यम् आत्मगतम् स्मर |
त्वत् विधानाम् न सदृशम् ईदृशम् बुद्धि लाघवम् || ४-७-५
महात्मा च विनीतः च किम् पुनर् धृतिमान् महान् || ४-७-७
मर्यादाम् सत्त्व युक्तानाम् धृतिम् न उत्स्रष्टुम् अर्हसि || ४-७-८
व्यसने वार्थकृच्छ्रे वा भये वा जीवितान्तगे ।
विमृशंश्च स्वया बुद्ध्या धृतिमान्नावसीदति ॥ ४.
ये शोकम् अनुवर्तन्ते न तेषाम् विद्यते सुखम् |
तेजः च क्षीयते तेषाम् न त्वम् शोचितुम् अर्हसि || ४-७-१२
शोकेन अभिप्रपन्नस्य जीविते च अपि संशयः |
स शोकम् त्यज राजेन्द्र धैर्यम् आश्रय केवलम् || ४-७-१३
வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி சொன்னதுபோல சுக்ரீவன் இராமனுக்கு ஆறுதல் கூறுகிறான். “தாங்கள் தைரியத்தைக் கைவிடாதீர்கள். தங்களைப் போன்ற உத்தமர்கள்,தைரியசாலிகள் இப்படி துக்கப்படலாமா? ஒரு வானரமான நானும் மனைவியைப் பிரிந்தவன்தான். ஆனாலும் தைரியத்தைக் கைவிடாமல் மனத்தைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.. அப்படி இருக்கும்போது தங்களைப் போன்ற வீரர்கள், படித்தவர்கள், நல்ல நடத்தை உள்ளவர்கள் இப்படிக் கண்ணீர் விடலாமா? ஆதலால் துயரத்தை விட்டு மனதைத் திடப் படுத்திக் கொண்டு தைரியமாக இருங்கள். ரகுவம்சத்தில் எல்லோரும் வீரர்கள். அந்தக் குலத்தில் பிறந்த வீரனான நீங்கள் தைரியத்தைக் கைவிடலாமா? இது தங்களுக்கு அழகல்ல “तब भार्या महाबाहो भक्ष्यं विषकृतं यथा। त्यज शोकं-॥தங்கள் மனைவி ஜீரணிக்க முடியாத விஷம் கலந்த அன்னத்தைப் போன்றவள். அவளை யாரும் எளிதில் நெருங்க முடியாது. ஆகையால் கவலையை விடுங்கள் ” என்று சுக்ரீவன் கூறினான்.
சுக்ரீவன் सब प्रकार कारिहाँ सेवकार्ड என்று சொல்கிறான். அதாவது சீதை இருக்குமிடத்தைக் கண்டறிவது, எதிரிகளுடன் போரிடுவது, சீதையை மீட்டுக் கொண்டுவருவது ஆகிய சேவைகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.
‘जेहि बिधि मिलिहि जानकी आई இங்கு ‘ஆயி’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அதாவது இதற்காக தாங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. நாங்களே சீதையைக் கண்டுபிடித்து, எதிரிகளுடன் போரிட்டுச் சீதையை மீட்டு வரும்வோம் என்ற பொருளாகும்..
வால்மீகி இராமாயணத்திலும் இதே கருத்தை சுக்ரீவன் சொல்வதாக எழுதி இருந்தார்
भर्या वियोगजम् दुःखम् न चिरात् त्वम् विमोक्ष्यसे |
त्यज शोकम् महाबाहो ताम् कान्ताम् आनयामि ते | ४-६-८
अनुमानात् तु जानामि मैथिली सा न संशयः
“உமது மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்து விரைவில் விடுபடுவீராக. {தொலைந்து போன} வேதசுருதியைப் போல, நான் அவளை மீட்டு வருவேன்[ அரிந்தமரே }, ரசாதலத்தில் {பாதாளத்தில்} இருந்தாலும், நபஸ்தலத்தில் {வானத்தில்} இருந்தாலும், நான் உமது மனைவியைக் கொண்டு வந்து உம்மிடம் கொடுப்பேன். இராகவரே, என்னுடைய இந்தச் சொற்கள் உண்மையானவை என்பதை அறிவீராக. மஹாபாஹுவே, உமது {மனைவியான சீதை விஷம் கலந்த உணவைப்} போல, இந்திரன் முதலிய ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} செரிக்கப்பட சாத்தியமற்றவள் ஆவாள்.” இவ்வாறு சுக்ரீவன் இராமனிடம் கூறினான். இத்தோடு நில்லாமல் சுக்ரீவன் பிரதிஞ்ஞையும் செய்கிறான்..
இது ஆத்யாத்ம இராமாயணத்தில்
सुग्रीवो5प्याह हे राम प्रतिज्ञां करवाणि ते। समरे रावणं हत्वा तव
दास्यामि जानकीम्॥’
இது வால்மீகி இராமயணத்தில்
सत्यम् तु प्रतिजानामि त्यज शोकम् अरिन्दम |
करिष्यामि तथा यत्नम् यथा प्राप्स्यसि मैथिलीम् || ४-७-३
रावणम् सगणम् हत्वा परितोष्य आत्म पौरुषम् |
तथा अस्मि कर्ता नचिराद् यथा प्रीतो भविष्यसि ||
“அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். மைதிலியை எவ்வாறு மீட்க முடியுமோ அவ்வாறு முயற்சி செய்வேன். சோகத்தைக் கைவிடுவீராக. இராவணனையும், அவனது கணங்களையும் {தொண்டர்களையும்} கொன்று, என் ஆற்றலுக்கு நிறைவளிக்கும் வகையிலும், நீர் மகிழ்ச்சியடையும் வகையிலும் விரைவிலேயே நான் செயல்படுவேன்” என்றான் சுக்ரீவன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-66; Tamil Encyclopaedia 106, One Thousand Interesting Facts -Part 106
Let us take one more book from Eight Anthologies (Ettuth Thokai) in Sangam Tamil Literature. It is called Pathitrup Paththu in Tamil meaning 10 X 10 songs= 100. It is an anthology, dealing with all about ancient mysterious Kerala (Chera Nadu). Many of their customs are not known in other parts of Tami Nadu. This ancient land of Tamils has created a new language called Malayalam. That itself shows it is very different from other Tamil areas. But Malayalam is the closest language to modern Tamil. Malayalam is noting but a mixture of pure Tamil and pure Sanskrit with nasal accent. strangest thing is Sanskrit is studied by the lowest castes and mastered! This book is full of mysteries. The biggest mystery is a famous poet and his wife disappeared after a Yaga (Hindu Fire Ceremony). The Yaga was performed at his request who wanted to go to heaven!(probably like Trin Shanku with his own human body)! Unfortunately two of the ten songs are missing in the book. We have very interesting details about a Chera king punishing the Yavanas (Roman pirates from Italy). At last they cried and gave diamonds and gold to Chera king and got their release. And that gold and diamonds were given to poets!
In his book ‘The Eight Anthologies’, John Ralston Marr gives detailed information about the pathikams and the poems. He identifies the rivers, forests, kingdoms, kings and towns indicated in the poems.
Poems 11 – 20 were written by poet Kumattūr Kannanār for King Imayavarampan Nedunchēralāthan, son of King Uthiyan Chēral and Queen Nallini. This king is said to have defeated the Aryans and Yavanas and carved a bow–emblem on the Himalayas.
Poems 21 – 30 were written by poet Pālai Kouthamanār for King Palyānai Selkelu Kuttuvan, the younger brother of Imayavarampan Nedunchēralāthan.
Poems 31 – 40 were written by poet Kāppiyatru Kāppiyanār for King Kalangāykanni Nārmudichēral, son of Imayavarampan Nedunchēralāthan and his queen, daughter of king Pathuman.
Poems 41 – 50 were written by poet Paranar for King Kadal Pirakōttiya Chenguttuvan, son of Imayavarampan Nedunchēralāthan and the daughter of Manakkilli, a Chōzha king. King Chenguttuvan was a contemporary of Gajabāhu of Sri Lanka (A.D. 180).
Poems 51 – 60 were written by poetess Kākkai Pādiniyār Nachellaiyār for king Ādukotpāttu Chēralāthan, son of Imayavarampan Nedunchēralāthan and his queen, a daughter of a Velāvi king.
The above five kings belonged to the Chēral Uthiyan clan.
Poems 61 – 70 were written by poet Kapilar for King Selvakadungō Vāzhiyāthan, son of King Chēran Anthuvan.
Poems 71 – 80 were written by poet Arisil Kizhār for King Perunchēral Irumporai, son of King Selvakadungo Vāzhiyāthan and his queen, daughter of Velāvi king Pathuman. This king was the victor of Thakadūr. He was the greatest of the Uthiyan kings.
Poems 81 – 90 were written by poet Perunkundrūr Kizhār for King Ilanchēral Irumporai, son of King Perunchēral Irumporai and Princess Anthuvan Chellai.
The above three kings belonged to the Irumporai clan. Both clans were related through marriages.
Let us look at the wonders. Because the first song (or book ) is missing we go to Number Two song.
***
item 911 -Himalayas to Tamil Nadu
Poems 11 – 20 were written by Brahmin poet Kumattūr Kannanār for King Imayavarampan Nedunchēralāthan, son of King Uthiyan Chēral and Queen Nallini. This king is said to have defeated the Aryans and Yavanas and carved a bow–emblem on the Himalayas.
There is prayer to God. It is about Lord Siva. பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்து
Prayer song is taken from most famous Tamil commentator Nachchinarkiniyar. It may not be part of Pathitruppaththu. All the qualities attributed to Lord Siva is in one beautiful verse.
The first wonder is King Imayavarampan Nedunchēralāthan ruled for 58 years, according to Pathikam attached to it. He went upto the Himalayas and carved his bow symbol on it. He made cultured Aryan kings salute him. His mother was Mrs Nallini; his father was Uthiyan Cheral.
***
item 912- Punished Yavana Rouges
He arrested the harsh worded Yavanas, tied their hands behind, poured oil on their head; to release them he got precious gold and diamonds and distributed them to others. Commentators interpreted others as poets, bards, dancers and army commanders.
Two points must be noted here: when the poet described Yananas negative words are used. whenAryas mentioned appreciatory words are added. Second point is he distributed Yavana gold and diamonds to others. He did not add them to his treasury. Yavanas were the Italian pirates who did bad things in the western sea what we call now as Arabian sea, a misnomer!
***
item 913- Lord Skanda Muruka and Chera King- lines 1-15
Lord Murugan (Skanda/ Kartikeyan) destroyed Sura Padman, a demon. This story is enacted on the shores of Tiru Chendur coast on Skanda Sashti day every year. Million Hindus assemble there to worship Lord Murugan. So we see 2000 years continuity in Hindu beleifs.
All Tamil Kings had Trees as totem symbols. Lord Muruga is said to have cut the Mango tree of demon Sura Padman.
In the same way Chera King cut down the Kadampa tree in the island in the Arabian sea. He used the tree to make a war drum
The pirates were occupying one of the islands of Arabian sea and were robbing all the gold ladden ships.
***
Map of Chera Nadu (Kerala)
item 914- Beautiful Himalayas with Aryan Sages and Dreaming Deer
Here comes beautiful lines which explode the myth that British united India. Now and then we see some comments by Hollywood and Kollywood idiots saying British united India. From Mahabharata to Sangam Tamil literature we see repeated words Himalayas to Kanyakumari ruled or controlled by a king. Here we see it in lines 17-25
Aryan= Sages; not the racial meaning given by Foreign Gangs.
Here the poet described the dream of Kavari Deer or Yaks. I have already explained Hindus are the one who repeatedly talked about animal dreams. Now western magazines are WRITING RESEARCH ARTICLES!! As if they have discovered something new! Sangam Tamil literature, Tamil epics and Tamil Bhakti literature have hundreds of dreams.
All the Himalayan descriptions in the early strata of Purananuru and Pathitru Pathu are copied from the first ten stnzas of Kalidasa’s Kumara Sambhava.
***
item 915- Blood Changed the colour of the sea Red!
Like him, you struck your enemies with your blood-tipped sword, and slaughtered them to pieces on battlefields. Blood from wounds your sword caused flowed into the sapphire- colored, dark backwaters, the color changing to that of saffron dye.
We know this as an exaggeration. But the same thing said about Charmanvati river (Chambal river) on the banks of which King Ranti Deva performing Yagas with animal sacrifice, and river water turning blood red, was used by idiots .
***
Cheran Senguttuvan on March
item 916- Mars and Venus-
Line 25 is about the old belief of Hindus about the position of planet Venus.
Venus does not run toward Mars, rains fall without fail in the lands where they are needed and when they are needed
The movement of Venus as seen from earth is always noted. Here poet says if Venus moves too close to planet Mars there will be drought. In 2021 and 2015 both Venus and mars were seen close to one another from earth. Though they are millions of miles away, we see them close. More research has to be done by Hindus to see how correct they are.
***
item 917- Unwoven Clothes- Silk-
The kings munificence towards the bards and dancers were explained in many words. King gave them goat meat, rice, toddy, golden ornaments and clothes not woven in the normal way (from cotton). It is silk. From this we know the poverty of the bards and the wealthy life style of the cities. Silk clothes were made from the silk worms. Poet has coined a new word Noolaak Kalingam நூலாக் கலிங்கம்in Tamil.
***
Statue of Yavana
item 918- Mysterious Akkuran!
In the verse 14 the king is compared to five elements and stars and planets. He is not measurable like these elements and heavenly bodies. This comparison with planes five elements is in Manu Smriti and Valmiki Ramayana . அக்குரன் அனைய கைவண்மையையே;
The king is praised as generous as Akkuran. No details of that philanthropist are available in Hindu scriptures. Karna of Mahabharata is the greatest philanthropist in Hindu literature.
In the Mahabharata and Bhagavata Purana, Akrura is a Yadava prince and the maternal uncle of Lord Krishna. He is famously known for his righteousness and for driving the chariot that brought Krishna and Balarama to Mathura. Note the difference in spellings.
Tags – Purananuru wonders-66, Tamil Encyclopaedia 106, One Thousand Interesting Facts -Part 106, Item 918, Akkuran, Yavana
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நவீன ராமரும் நவீன சீதையும்! ஒரு உண்மைச் சம்பவம்!!
ச. நாகராஜன்
12, ஜூன் 2020.
மஹராஷ்டிராவில் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ளது சிறிய நகரான கோபர்கோன். அந்த ஊரின் நெடுஞ்சாலையில் கடுமையான கோடைகால வெப்பத்தில் ஒரு தம்பதியினர் கஷ்டப்பட்டு நடந்து சென்று கொண்டிருப்பதை உள்ளூர்வாசி ஒருவர் பார்த்தார்.
வழக்கமாகச் செய்யும் விருந்தினர் உபசாரமாக அவர் அந்த தம்பதியினருக்கு உணவு அளிக்க முன் வந்தார். ஆனால் தம்பதியினர் மறுத்து விட்டனர். உடனே சிறிது பணம் தருவதாக அவர் சொன்னார். அதையும் வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். எதற்காக அந்தக் கடும் பகலில் அவர்கள் நடக்க வேண்டும் என்று பின்னர் அவர் கேட்டார்.
உடனே பிறந்தது அவர்களின் கதை!
அவர்கள் இதுவரை சுமார் 2200 கிலோமீட்டர் நடந்து விட்டதாகவும் தங்கள் ஊரான குஜராத்தில் உள்ள
த்வாரகாவிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஒரு வருடத்திற்கு முன்னால் அவர் கண்ணில் ஏற்பட்ட கோளாறினால் முழுப் பார்வையும் போய் குருடாக இருந்ததாகத் தெரிவித்தார். டாக்டர்களில் கண்பார்வை நிபுணர்களும் சர்ஜன்களும் நம்பிக்கை இழந்து அவரது பார்வையை மீட்க முடியாது என்று தெரிவித்து விட்டனர். என்றாலும் கூட அவரது தாயார் ஒரே ஒரு ஆபரேஷன் மட்டும் செய்து பார்க்குமாறு டாக்டரை வேண்ட அவரும் ஒத்துக் கொண்டார். அறுவை சிகிச்சையும் முடிந்தது.
ஆபரேஷன் நடந்த சமயத்தில் அவரது தாயார் ஶ்ரீ கிருஷ்ணர் ஆலயம் சென்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தால் தனது மகன் பாதயாத்திரையாக சென்று திருப்பதி பாலாஜியைத் தரிசித்து விட்டு அங்கிருந்து பண்டர்பூர் சென்று அங்கும் தரிசனத்தை முடித்து விட்டு த்வாரகா திரும்புவார் என்று ப்ரதிக்ஞை செய்தார். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.
ஆகவே தனது தாயாரின் வேண்டுதலை நிறைவேற்ற தான் பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சரி, கூடவே அவரது மனைவி ஏன் வருகிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர், தானும் கூட வந்தே ஆவேன் என்று தன் மனைவி கூறியதாகவும் அவருக்கு வேண்டிய உணவை சமைத்துத் தருவதோடு அவர் உடல்நலத்தையும் நன்கு பாதுகாப்பதாகவும் அவர் உறுதி கூறியதாகவும் அதனாலேயே அவர் கூட வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மிக நளினமாக ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அவர்கள் மாறி மாறிப் பேசினர்.
அவர்களது பேச்சைக் கேட்ட உள்ளூர்வாசி அவர்கள் எதுவரை படித்திருக்கிறார்கள் என்று கேட்டார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வானியல் படிப்பை முடித்து தான் டாக்டரேட் பட்டம் பெற்றிருப்பதாகவும் அதே பல்கலைக் கழகத்தில் அவரது மனைவியும் சைக்காலஜி துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் பேச்சில் துளிக்கூட கர்வம் இல்லை. ரிஸர்வ் பேங்க் கவர்னராக இருந்த டாக்டர் சி. ரங்கராஜனுக்கும் துரதிர்ஷ்டவசமாக விண்வெளிப் பயணத்தில் உயிரிழந்த கல்பானா சாவ்லாவுக்கும் அவர்கள் மிக நெருக்கமானவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இந்த தம்பதிகள் தங்கள் மாதாந்திர பென்ஷனை கண்பார்வையற்றவர் நலத்திற்காக ஒரு என் ஜி வோவுக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனராம்.
சமூக ஊடகங்களிலிருந்து விலகியே இருக்கின்றனர் இந்த தம்பதியினர்.
தனது தாயாரின் வேண்டுதலுக்காக ராமராக ஒருவர் மாற கலியுக சீதையாக அவர் மனைவி அவரைப் பின் தொடர்ந்து வந்தது நிஜமான ஒரு சம்பவம் தான். மூன்று மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் அவர்கள் இன்னும் மூன்று மாதங்கள் நடந்து தங்கள் சொந்த ஊரான த்வாரகாவுக்குத் திரும்புவர்.
அது சரி அந்த தம்பதியினரின் பெயர் என்ன?
டாக்டர் தேவ் உபாத்யாய மற்றும் அவர் மனைவி டாக்டர் சரோஜ் உபாத்யாய!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
61
ஒரு முஸ்லீம் கொண்டுவந்த சாசனம் எப்படி வியப்பை உண்டாக்கியது ?
62
அவந்தி சுந்தரி கதை மூலம் நாம் அறியும் பல்லவர்கள் யார் ?
63
பல்லவ மன்னர்கள் விதித்த விசித்திர வரிகள் யாவை?
64
பல்லவர்களைக் குறிக்கும் போத்தரையன் பற்றிக் காஞ்சிப் பெரியவர் சங்காராச்சார்யார் கூறுவது என்ன ?
65
கிழமையைக் குறிப்பிடும் செப்பேடு எது ?
66
நிலைதாங்கி என்றால் என்ன ? நிலைதாங்கி = மார்த்தாண்டன்=சூரியன் ?
.
67
பல்லவ மஹாராணிகளில் ரங்க பதாகா (பறக்கும் வர்ணக் கொடி) , சாரு தேவி ஆகியோரை முன்னர் கண்டோம் ; அக்கள நிம்மடி, சங்கா தேவி , கோண தேவி பற்றி செப்பேடுகள் செப்புவது என்ன?
68
ஐந்து குடுமி வைத்து செம்புள்ளி கரும்புள்ளி வைக்கும் தண்டனை என்ன ?
69
எந்த நாலு பேருக்கு மட்டும் சிம்ம வர்மன் வணக்கம் செலுத்துவான் என்று ஆந்திர மாநில பீகிராச் செப்பேடுகள் விளம்புகின்றன ?
70
அஸ்வமேத யாகம்பற்றிச் செப்பேடுகள் தரும் செய்தி என்ன ?
***
விடைகள்
61.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முஸ்லீம் இதோ பாருங்கள் எனக்குதான் இந்த நிலம் சொந்தம் என்று அதற்கு ஆதாரமாக ஆந்திர பிரதேச குண்டூர் ஜில்லா உதவி கலெக்டரிடம் சில செப்புப்பட்டயங்களைக் கொடுத்தார் . அந்த முஸ்லீம் நர்ஸார்ப்பேட்டையில் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டயம் என்று நினைத்துக்கொண்டு அதைக் கொண்டு வந்திருக்கிறார் . அவர் அதை வாங்கி தென் இந்திய சாசன ஆராயச்சித் துறைக்கு அனுப்பி வைத்தார். அதில் முழுக்க முழுக்க பிராமணர்களு க்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பிரம்மதேயம் கொடுத்த — நிலத்தானம் — செய்திதான் இருந்தது!அவைகள் 1913 ஆம் ஆண்டில் சுரஞ்ச் செப்பேடுகள் என்ற பெயரில் வெளியிட்டனர் ; அது விஜய விஷ்ணு கோப வர்மன் என்ற பல்லவ மன்னர் அழைத்த செப்பேடு ;அதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரிகிறது ஆயினும் அதை யாரோ 200 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுத்துப் பிற பிழைகளுடன் நகல் எடுத்ததும் தெரிகிறது.
காண்க- பக்கம் 341 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
***
62.அவந்தி சுந்தரி கதை (Avantisundari Katha) என்பது வடமொழியில் தண்டி யென்ற புலவர் இயற்றிய ஒரு புகழ்பெற்ற உரைநடை காப்பியமாகும்.தண்டி (Dandin) காவ்யதர்சம் போன்ற நூல்களையும் எழுதியவர். இது ராஜவாஹனன் மற்றும் அவனது நண்பர்களான தசகுமாரர்களின் சாகசங்களைக் கூறும் ‘தசகுமாரசரிதம்’ போன்ற கதைகளின் தொடர்ச்சியாகவும், தண்டியின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுத் குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை; பல பகுதிகள் சிதைந்த நிலையில் ஒரு உரைநடைத் துண்டாகவும், பின்னர் கவிதை வடிவிலும் மீட்கப்பட்டுள்ளது. தமிழில் பிரேமா பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் இந்நூலை வெளியிட்டது.
மேலைக் கங்க வம்சத்தில் அவிநீதன், துர்விநீதன் , நிர்விநீதன் என்ற மூன்று மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அவர்களுள் அவிநீதன் என்பவன் ஆட்சியிலேதான் சிம்ம விஷ்ணுவின் தாயார் அருகக்கடவுளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அவிநீதன் மகன் துர்விநீதன் சம்ஸ்க்ருதத்தில் சிறந்த வித்வான் ; அவன் சப்தாவதாரம், வட்ட கதா நூல்களை ஆக்கியோன் ஆவான். அவந்திசுந்தரி கதையிலிருந்து பல்லவ விஷ்ணுவர்மன், சாளுக்கிய விஷ்ணுவர்த்தனன், கங்க வம்ச துர்விநீதன் சமகாலத்தர் என்று தெரிகிறது . அவந்தி சுந்தரி கதையை எழுதிய தண்டி யின் முப்பாட்டனான தாமோதரன், தீர்த்த யாத்திரையின்போது துர்விநீதன் சபையில் வந்து தங்கியிருந்தானாம் . அப்பால் அவன் பல்லவ மன்னனின் ஆதரவினைப்பெற்று காஞ்சீபுரத்துக்கு வந்து ஒரு பெண்ணை மணந்து அங்கேயே தங்கி விட்டானாம் . துர்விநீதன் ஆட்சிக் காலம் ஏழாம் நூற்றாண்டு ஆகும் . காண்க- பக்கம் 36 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
***
63.பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய விழாவெட்டிச் செப்பேடுகள் பல வகையான வினோத வரிகளைக் குறிப்பிட்டுள்ளது ; சாசனத்தைப் பதிப்பித்த சாசன இலாகா அதிகாரியான கிருஷ்ணமாசார்லு சொல்கிறார் :”உலோக வேலை செய்வோர், தோல் பதனிடுவோர், கடை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரி இறுக்கமில்லாத ஆடை அணிந்து சஞ்சரிக்கும் அதிகாரம் பெற்ற ஒற்றர்கள், கழைக் கூத்தாடிகள் , ஆஜீவகர்கள் ஆகியோர் செலுத்த வேண்டிய வரிகளும், புறம்பானவர்கள் , மிலேச்சர்கள் போன்றவர்கள் , வேஷம் அணிபவர்கள், கிணறு வெட்ட நீரோட்டம் காண்பவர்கள் , துணி நெய்பவர்கள், சூதாடுவோர், திருமணம் நடத்துவோர், நாவிதர் முதலியோர் செலுத்த வேண்டிய கடமைகளும் , எல்லா விலங்குகளையும் பெற்ற கைவினைஞர்கள் செலுத்த வேண்டியவைகளும் இன்னும் நமக்குச் சேரவேண்டிய மற்ற வரிகள் அனைத்தும் இவருக்கு பிரம்மதேயமாக அளிக்கப்பட்டன . இது விஷ்ணுசர்மன் என்ற பிராம்மணனுக்கு பல்லவ மன்னன் அளித்த கொடை
. காண்க- பக்கம் 317 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
(சாசனத்தின் வாசகங்களில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களும் உள்ளன; அவைகளை ஆராய்ந்து சரியான விளக்கம் பெறவேண்டும்)
பிரம்மதேயம்- பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தானம்;தேவதானம் – கோயில்களுக்கு வழங்கப்படும் தானம்.
***
64.பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப்படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் ‘பல்லவன்’ என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது. தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள ஸிம்ஹவர்ம பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதையை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாம்ர சாஸனத்திலும் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த ப்ராம்மணர். அவருடைய பிதாவான த்ரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்ரக்காரர்களாகவே சாஸனங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்லவ ராஜாக்களே சாஸனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள். நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது; அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை ஸமுத்ரத்தில் மிதக்க விட்டுவிட்டாள்; அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சீ மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர். தொண்டைக் கொடியை ஸம்ஸ்க்ருதத்தில் ‘துண்டீரம்’ என்பார்கள். அதனால் ஸம்ஸ்க்ருத நூல்களில் துண்டீர மண்டலம், துண்டீர சக்ரவர்த்தி என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.
குழந்தையை தேவ ஸ்த்ரீ படுக்கவிட்ட படுக்கையானாலும் ஸரி, நாக ஸ்த்ரீ அதன் இடுப்பில் சுற்றிய கொடியானாலும் ஸரி, இரண்டும் துளிர்களால் ஆனதுதான். துளிர்தான் பல்லவம். அதனால், எந்தக் கதைப்படி பார்த்தாலும் பல்லவர் என்ற பெயர் பொருத்தமானதாகிறது.
துளிருக்கேதான் இன்னொரு பேர் போதம், அல்லது, போத்ரம். தமிழிலும் சின்னஞ்சிறு கன்றாக உள்ள செடியைப் ‘போத்து’ என்றே சொல்கிறோம். ‘பல்லவ மஹாராஜா’ என்பதே இன்னொரு விதமான பத ப்ரயோகத்தில் ‘போத்ர அதிராஜன்’, ‘போத்ராதி ராஜன்’ என்றாயிற்று. அதனால்தான் ஸிம்ஹ விஷ்ணுப் பல்லவச் சக்ரவர்த்தி என்பது ‘சிம்ம விண்ண போத்ராதி ராஜன்’ என்றாயிற்று.
‘போத்ர ராஜன்’ என்பதைத் தமிழில் ‘போத்தராயன்’ என்று சொல்லியிருக்கும். ஒரு வேலையும் செய்யாமல் கொழுத்துப் போனவர்களை ‘போத் (த) ராசா’ என்று திட்டுகிற வழக்கம் இருக்கிறதே, இந்த ‘போத் (த) ராசா’ கூட ‘போத்ர ராஜா’ விலிருந்து வந்ததுதான்!
***
65.ஆடி மாத வெள்ளிக்கிழமையை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது; திருஞான சம்பந்தரின் கோளறு திருப்பதிகம் ‘ஞாயிறு திங்கள் செவ்வாய்’- என்று துவங்கி நவக்கிரகங்களையும் குறிப்பிடுகிறது ; பிராமணர்கள் தினமுமிதை மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் நவக்கிரக தர்ப்பணமாக சம்ஸ்க்ருதத்தில் சொல்லி வழிபடுகிறார்கள்; முதலாம் பரமேஸ்வர வர்மனின் உன்னக்குரவய பாளையம் செப்பேடுகள் ஞாயிற்றுக் கிழமையைக் குறிப்பிடுகிறது ; ஏனைய செப்பேடுகளில் பஞ்சாங்கத்தில் உள்ளதைப்போல மாதம்- பக்ஷம்- திதி ஆகியவற்றை மட்டும் காண்கிறோம். ஆந்திரத்தில் கிடைத்த இந்த செப்பேடு முதலாம் பரமேஸ்வர வர்மன், அவனுடைய ஆட்சியின் பத்தொன்பதாம் ஆண்டில் பெளஷ்ய மாதம் சுக்கில பக்ஷத் திரயோதசி கொண்ட ஞாயிற்றுக் கிழமை உத்தராயண நிமித்தம் குப்புநூறு என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவசர்மன் என்ற பிராமணனுக்கு தானம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இந்த தேதி கி பி 668 ஆம் ஆண்டினை ஒட்டி வருகிறது . வியப்பான விஷயம் ஏறத்தாழ ஞான சம்பந்தரின் காலம்!(கி.பி. 600 முதல் 630 வரை); ஆனால் சீர்காழிக்கும் ஆந்திரத்துக்கும் உள்ள தூரமோ நெடுந்தூரம்! (பெளஷ்ய மாதம்= தை மாதம்)
***
66.ந்ருப துங்க வர்மனின் பாகூர்ச் செப்பேடுகள் முப்பது ஸம்ஸ்க்ருதச் ஸ்லோகங்களை கொண்டுள்ளது; 18 ஆவது ஸ்லோகம் அரசனின் அதிகாரி அல்லது சிற்றரசன் மார்த்தாண்டனின் பெயரைக் குறிப்பிடுகிறது . 19 ஆவது ஸ்லோகம் சந்த்திர சூரியர்களைப்போல பாதுகாத்து அவன் உலகமக்களுக்கு இருப்பிடம் ( நிலையம்) ஆனான்
பின்னர் 20 ஆவது ஸ்லோகம் பின்வருமாறு உள்ளது :
“அதனால் நிலைதாங்கி என்ற பெயர் ஒரு தெய்வத்துக்கு ஏற்றது போல அந்த அரசனுக்கும் பொருத்தமாக அமைந்தது; அல்லது அவன் (அரசன்) இயற்பெயர் நேரிடையாக நன்கு தோற்றமளித்தது எனலாம்.”
இதில் நிலைதாங்கி என்பதன் பொருள் என்ன? சூரியனா ? அகராதியில் இல்லை . 18 ஆவது ஸ்லோகத்தில் வரும் மார்த்தாண்டன் என்பது சூரியனின் பெயர் . சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் பார்த்தால் விடை கிடைக்கலாம்
உரைநடை விளக்கப்பகுதியில் குறுநில மன்னனான மார்த்தாண்டனுக்கு நிலைதாங்கி என்ற பெயரும் உண்டு – பக்கம் 264- காணப்படுகிறது . அப்படியானால் நிலை தாங்கி சூரியன் தானோ !
நிருப துங்க வர்மன் யார்?
பல்லவ வம்சத்தின் பிற்கால மன்னர்களில் ஒருவர் (ஆட்சிக் காலம்: கி.பி. 850–880). இவன் புகழ்பெற்ற மூன்றாம் நந்திவர்மனின் மூத்த மகன் ஆவான். பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனுடன் இணைந்து அரிசிலாற்றங்கரையில் நடந்த போரில் பல்லவப் படை வெற்றி பெறக் காரணமானவன். இவனது ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற பாகூர்ப் பட்டயம் வெளியிடப்பட்டது.பல்லவ வம்சத்தின் இறுதி வாரிசுரிமைப் போரில் இவனுக்கும் இவனது தம்பி அபராசித வர்மனுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன
***
67.அக்கள நிம்மடி
பல்லவ அரசி: பல்லவ மன்னனான தந்திவர்மனின் (கி.பி. 796–846) பட்டத்தரசி ஆவார். இவர் கடம்ப மன்னர் குலத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். கூரம் கல்வெட்டுகளில் இவரைப் பற்றியும், இவர் ஆற்றிய நிலக்கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தந்திவர்மன் என்பவன் நந்திவர்மப் பல்லவமல்லன் மகன். கி. பி. 7231 மு தல்
கி. பி. 880 வரை ஆண்டவன். இவன் “ பாரத்துவாஜ கோத்திரத்
தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவன் தந்திவர்மன் ்
எனவும், * கோவிசைய தந்திவிக்கிரமபர்மன்” எனவும் கல்வெட்டுக் களில் குறிக்கப் பெற்றுள்ளான். இவனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும், வைரமேகன் என்னும் வேறுபெயரும் உண்டு. இவன் கதம்ப மன்னர் குலத்தில் பிறந்த அக்கள நிம்மடி என்னும் பெண்ணை மணந்து கொண்டவன்.
மூன்றாம் நந்திவர்மனின் வேளூர்ப் பாளையம் செப்பேடுகள் 31 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது அதில் 18 ஆவது ஸ்லோகம்-
“கதம்ப வம்சத்தின் திலகமாக பிரசித்தி பெற்ற அரசனுடைய மக்களும் , நற்குலத்தில் பிறந்தவளுமான அக்கள நிம்மடி என்பாள் முப்புரங்களை வெற்றிகொண்ட பரமசிவனின் தேவியான கெளரி- பார்வதி- யைப்போல , வீரர்களில் முதல்வனும் , ஒளி பொருந்தியவனும் , பூமியின் அரசனுமான , பல்லவ மகாராஜனுக்கு மனைவியானாள்” . அடுத்த ஸ்லோகம் அவளுக்கு நந்திவர்மன் பிறந்ததைக் கூறுகிறது.
(திருச்சிராப்பள்ளி தாலூகரவில் ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டியுள்ளான். இங்கே ஒரு ஏரி – ஓன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி என்று பெயர் வைத்துள்ளான்.)
கோஷ தேவி =கோண தேவி
பல்லவர்களில் தெள்ளாறெறிந்த நந்தி வர்மனை அங்க நாடன் என்று நந்திக்கலம்பகம் கூறுகிறது . இது பாகல்பூயூர் பிரதேசம். வங்காளத்தில் தேவகரில் கிடைத்த கல்வெட்டுக்கு தலையும் இல்லை; வாழும் இல்லை . இடைப்பட்ட பகுதியில் ஆதித்யசேனன் சோழநாட்டிலிருந்து திரும்பினான் என்றுள்ளது அவனுடைய மனைவி கோஷா தேவி என்றும் காணப்படுகிறது ; ஆனால் பாகல்பூரில் மந்தார கிரியிலுள்ள கல்வெட்டுகளில் ஆதித்யசேனன் மனைவி கோண தேவி என்றுள்ளது . அதுதான் சரியான பெயர் . கூ ரம் செப்பேட்டில் முதலாம் பரமேச்வரனைக் கர்ணனுடன் (அங்க நாட்டரசன்) ஒப்பிட்ட விளக்கத்தில் இந்தச் செய்தி கூறப்படுகிறது – பக்கம் 44- பல்லவர் செப்பேடுகள் முப்பது .
சங்கா தேவி
பாகூர்ச் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் தந்தி வர்மனுக்கு நந்தி வர்மன் பிறந்தான்; அவன் ராஷட்ரகூட வம்சத்தில் பிறந்த சங்கா என்ற தேவியை மணந்தான் . அவர்களுக்கு நிருபதுங்கன் என்ற மகன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது .பக்கம் 264
***
பாகூர்ச் செப்பேட்டில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் விளக்கப் பகுதியில் – பக்கம் 273- சுவையான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது
ஸ்லோகம் 11
யமனுடைய இருப்பிடத்தைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையோடு தன்னிடம் சிறைப்பட்டவர்களோடு கூடியவர்களாக — அவர்களுடைய– வழிநடைக் கட்டுச்சோறு போல பேடிகளான எதிரிகளை செய்து அவன் அனுப்பிவைத்தான்
அடிக்குறிப்பு
சிறைப்பட்டோரையும் எதிரிகளின் தூதுவர்களையும் முன்னாளில் நம் அரசர்கள் பெண் வேடம் போட்டோ , ஐங்க்குடுமி வைத்தோ முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியோ அனுப்புவது வழக்கம் ; சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் அது வழக்கில் இருந்திருக்கிறது ..
எனது கருத்து
பெண்களுக்கு ஐம்பால் கூந்தல் இருந்ததாக சங்க இலக்கியம் முழுதும் காணப்படுகிறது ; அதனால்தான் ஐங்க்குடுமி வைத்தனரோ! பதிற்றுப்பத்தில் சேர மன்னன், கடலில் சேட்டை செய்த யவனர்களைப் பிடித்து, மொட்டையடித்து, தலையில் எண்ணெய் ஊற்றி, பின்னால் கைகளைக் கட்டி தண்டித்த செய்தியுடன் இதை ஒப்பிடலாம் .
***
69. தெய்வம், இரு பிறப்பாளர் ( பிராமணர்), ஆசான், முதியோர் ஆகியவர்களை உபசரிப்பான்; அவன் யுவ மஹாராஜா விஷ்ணு கோபனின் மகன் ; பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன்; கலியுக தோஷத்தினால் கீழே விழுந்த தர்மத்தை உயர்த்தி நிறுத்துவதில் எப்போதும் தயாராக இருப்பவன் ராஜ ரிஷிகளின் கு ணங்கள் அனைத்தையும் உடையவன் .
(சமுத்திர குப்தன் கால பல்லவ மன்னன் விஷ்ணு கோபனை பிரயாகை பிரஸ்த்தி உறுதி செய்கிறது; அந்த விஷ்ணு கோபன் என்றால் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே கலி யுகம் பற்றிக் கவலைப்பட்டது தெரிகிறது!)
***
70.பல்லவர் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகப் பகுதிகளில் பொதுவாக பல்லவ மன்னர்கள் அஸ்வமேத யாகம் செய்பவர்கள் என்று வருகிறது; யுவராஜா விஷ்ணுகோப வர்மனின் செப்பேடுகளில் மன்னனின் சேனாபதியான விஷ்ணுவர்மன் எழுப்பிய விஷ்ணுவின் ஆலயத்துக்கு உருவப்பள்ளி கிராமத்தில் நில தானம் செய்த செய்தி வருகிறது ; கோயில் எழுப்பிய விஷ்ணு வர்மன் , கதம்ப வம்சத்து அரசனும் அச்வமேத யாகம் செய்தவனுமான முதலாம் கிருஷ்ண வர்மனின் மகன் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுவர் -பக்கம் 284 அவன் செய்த அஸ்வமேத யாகத்தை வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
Tags- பல்லவர் செப்பேடுகள், ஏழாவது 10 கேள்விகள் , பல்லவ மஹாராணிகள் , நிலைதாங்கி, போத்தரையன் , யாகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில அரிச்சுவடியின்படி வி V எழுத்தில் வரும் சொற்கள்
வாகனங்கள்
கடவுள் பவனி வரும் வாகனங்கள் உண்மையில் ஆழ்ந்த மறை பொருளை கொண்டுள்ளது; அவைகள் குணங்களின் அடையாள பூர்வ சின்னங்கள் ; இதனால்தான் எலி மீது பவனிவரும் யானை முகக்கடவுளைக் காண்கிறோம். முன் காலத்தில், உலகம் முழுதும் இந்துக்களைப்போல கடவுளரை வாக்கங்களில் காட்டியதை எகிப்து, இராக் துருக்கி ஆகிய இடங்களில் இன்றும் காணலாம் ; அனால் அந்தக் கடவுள்கள் எல்லாம் செத்துப் போய் மியூசியங்களில் முடங்கிக்கிடக்கின்றனர் . இந்துக்களின் கடவுள்களோ இன்றும் பல லட்சம் மக்கள் புடைசூழ பவனி வருகின்றனர் . முதலில் கொடியில் இருந்த சின்னங்களே பிற்காலத்தில் வாகனமாக பரிணாம வளர்ச்சி பெற்றன. இதை இலக்கியக் குறிப்புகளில் இருந்து தெளிவாகப் பெறலாம்.
காளிதாசனின் காலத்தைக் கணக்கிட சங்க இலக்கியம் எப்படி துணை செய்கிறது என்பதை ஏற்கனவே ஐந்தாறு கட்டுரைகளில் விளக்கினேன். அவன் சங்க காலத்துக்கு முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இப்போது அவன் அளித்த வாகனக் குறிப்புகள் தமிழ் இலக்கியத்திலும் வருவது அவன் காலத்தால் முந்தியவன் என்பதை மேலும் உறுதி செய்கிறது.
புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் சிவனின் வாகனமும் கொடியும் ரிஷபம் (ஏறு) என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் (மஹாதேவன்) பாடுகிறார்.
ரிஷபக் கொடி: காளிதாசனின் ரகு வம்சம்11-44;
விஷ்ணுவின் கருட வாகனம்: ரகு 10-13;10-61
இந்திரன் வாகனம் 4 மருப்புடைய யானை- திரு முருகாற்றுப்படை 155-159
நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் யமதர்ம ராஜனின் எருமை வாகனம் பாற்றிப் பாடுகிறார்- பாடல் 1- வரி 25/26
முருகப் பெருமானின் யானையை பிணிமுகம் என்று அழைப்பர்:
பிணிமுக ஊர்தி வெல்போர் இறைவன் (பரி.17-49)
பிணிமுக ஊர்தி ஒண்செய்யோன்-புறம் 56
மயில் வாகனம் : மேகதூதம் பாடல் 46 (காளிதாசன்); பாடல் 54ல் சிவ பெருமானின் விடை ஏறு (ரிஷபம்). மகாபாரதத்திலும் இதே குறிப்பு வருகிறது (8-24)
மணிமயில் உயரிய மாறாவென்றி (புறம் 56)
முருகன் மஞ்ஞையன் (முருகு 210)
விரைமயில் மேல் ஞாயிறு (பரி 18-26)
சேவலங்கொடியோன் (குறுந்தொகை கடவுள் வாழ்த்து)
சேவலங்கொடியன் (முருகு 210)
கலித்தொகையில் சிவபெருமானின் காளைவாகனம் வருகிறது (150-13; 26-5)
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரின் கொடி வாகனங்கள் பற்றிப் பாடிப் பரவுகிறார்.
காளிதாசனும் கொடியும் வாகனமும் சிவனுக்கு ஒன்றுதான் என்று சொல்லி வ்ருஷபத்வஜன், வ்ருஷாங்கன், வ்ருஷபாருடன் என்று ரகு வம்சம் ,குமார சம்பவம் ஆகியவற்றில் புகழ்கிறார். இதைத் தமிழ் புலவர்களும் பாடியதை மேலே கண்டோம்.
காளிதாசன் இந்திரனின் வஜ்ரக் கொடி, வாகனம் ஐராவதம் ஆகியன பற்றியும் பாடுகிறார் ( ரகு3-56; 1-36. ரகு வம்சத்தில் முருகனின் மயில் பற்றி ‘மயூரப் ப்ருஷ்ட ஆஸ்ரயினா குஹேன’ என்று சொல்கிறார்.
புறம் 58- பலராமனின் பனைக்கொடியைக் குறிக்கும், தொல்காப்பியமும் பனைக் கொடியைக் குறிப்பிடுகிறது.
ஆக கொடியையும் வாகனத்தையும் மாறி மாறி ஒரே கடவுளருக்கு தமிழ் ,சம்ஸ்கிருத இலக்கியங்கள் பகர்வதாலேயே கொடியிலிருந்து வாகனம் தோன்றியதாக நான் கூறினேன்.
பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் வாகனம் பற்றிய மேலும் பல சுவையான கதைகளைக் கூறுகின்றன. திரு ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் துர்க்கைக்கு மான் வாகனம் இருப்பதை ‘கலையதூர்தி’ என்ற சொல்லால் விளக்குகிறார்.
“திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும்”– (பதிகம் 921, இரண்டாம் திருமுறை)
xxx
வேதத்தில் பல மிருகங்கள் குறிப்பிடப்படுகின்றன. புராண இதிகாசங்களில் வாகனங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் ஒரு முத்திரையில் யானை மீது ஒரு ஆணோ பெண்ணோ நிற்கும் காட்சி இருக்கிறது. இந்து வாகனங்கள் உலகம் முழுதும் இருந்ததற்கான சான்றுகள் இதோ:
எகிப்தில் துதன்காமுன் (கி.மு. 1333) என்ற மன்னனை கருஞ்சிறுத்தை மீது நிற்பதாகக் காட்டியுள்ளனர். எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள்) இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவனுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்து இந்துப் பண்பாட்டில் இருந்த தொடர்பு இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். மிட்டன்னி (சிரியா/துருக்கி/இராக் பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள்) மன்னர் தசரதன், தன் பெண்களை எகிப்திய மன்னனுக்கு மணம் முத்துவிட்டு எழுதிய கடிதங்கள் இன்றும் எகிப்தில் உள்ளன. துதன்காமுனுக்குப் பின் சேதி என்ற மன்னர் ஓவியங்களிலும் வாகனத்தைப் பார்க்கலாம்.
இந்துக் கடவுள்களில் துர்க்கா தேவி, அய்யப்பன், புத்த மதத்தில் பத்மசம்பவர் ஆகியோர் புலி வாகனத்தில் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கின்றனர்.
சிம்ம வாகனம்
வாகனங்களில் மிகவும் பழைய வாகனம் சிம்ம வாகனம். இன்றும் துர்கா தேவியின் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தேவி, காளி வழிபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் சிம்ம வாகனம் இருக்கிறது.
கதேஸ் என்று சிரியா நாட்டிலும் ஹதோர் என்று எகிப்திலும் வழிபடப்பட்ட தேவியின் வாகனம் சிங்கம். நிர்வாணமாக நிற்கும் இந்தக் கடவுளின் ஒரு கையில் பாம்பு இருக்கும். இனவிருத்திக்கான தேவதை.ஹீப்ருக்கள் வணங்கிய லிலித் என்ற தேவதை இரண்டு சிங்கங்களின் மீது நிற்பதாகக் காட்டப்படுகிறது. லிலித், முதல் மனிதன் ஆன ஆதாமின் மற்றொரு மனைவி. ஜில்காமேஷ் கதையிலும் லிலித் வருகிறாள். அவர் தாக்கியவுடன் லிலித் பாலைவனத்துக்குள் ஓடியதாக கதை.
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று அசீரிய காதல்-போர் அதி தேவதையான இஷ்டாரையும் சிம்ம வாகினியாகக் காட்டுகிறது.
கி.மு 133 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழிலிகாயாவில் அரின்னா, சுர்ருமா ஆகிய தெய்வங்களும் சிம்ம வாகனத்தில் நிற்கின்றனர்.
காளை வாகனம்
காளையை இந்திரனுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் உவமையாகக் கூறுவதை வேதத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் காளையை சிவனுக்கு வாகனமாக்கினர்.5500 ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் ஒருகாளை மீது தெய்வம் உட்காரும் ஆசனம் போடப்பட்டிருக்கிறது
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று புயலுக்கு அதிபதியான பாபிலோனிய அதாத் என்னும் கடவுளை காளை வாகனத்தில் நிற்கும்படி செதுக்கியுள்ளது. அதாத் இந்திரன் போல கையில் வஜ்ராயுத்தை தாங்குகிறார்.
இந்திய வாகனங்களுக்கும் முற்கால வெளிநாட்டு வாகனங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அந்த கடவுள்கள் வாகனங்கள் மீது நிற்பார்கள். இந்துக் கடவுளோவெனில் வாகனத்தில் அமந்திருப்பார்கள்.
பாபா இயாகா என்ற ஸ்லாவ் இனக் கடவுள் பன்றியின் மீது பயணம் செய்கிறார்.
இதோ முக்கிய வாகனங்களின் பட்டியல் :
1.ஸ்ரீ மஹா கணபதி—மூஞ்சுறு Ganesh/Vinayaka=Mouse
2.வேல் முருகன் —மயில் Kartikeya/Skanda/Murugan–Peacock
3.சிவ பெருமான் காளை, நந்தி Shiva=Bull/ Nandhi
4.ராஜ ராஜேஸ்வரி—சிம்மம் Raja Rajeswari= Lion
5.மஹா விஷ்ணு— கருடன் Vishnu= Garuda/Eagle
6.பைரவர்— நாய் Bhairava=Dog
7.சாஸ்தா—குதிரை Sastha= Horse
8.அய்யப்பன்— புலி Ayyappa= Tiger
9.சனைச்சரன்–காகம் Sani/Saturn= Crow
10.கல்கி—- குதிரை Kalki Avatar=Horse
11.இந்திரன்—ஐராவதம் யானை Indra= Airavata/ Elephant
12.லெட்சுமி—செந்தாமரை, ஆந்தை Lakshmi= Red Lotus, Owl
அசிதாங்க பைரவர் – அன்ன வாகனம் (Swan)ருரு பைரவர் – காளை வாகனம் (Bull / Vrushabha)சண்ட பைரவர் – மயில் வாகனம் (Peacock)குரோத பைரவர் – கருட வாகனம் (Garuda)உன்மத்த பைரவர் – குதிரை வாகனம் (Horse)கபால பைரவர் – யானை வாகனம் (Elephant)பீஷண பைரவர் (Bitchana) – பேய் / பிரேத வாகனம் (Pretha) (சில குறிப்புகளில் சிம்ம வாகனம் என்றும் கூறacknowledgeப்படுகிறது) சம்ஹார பைரவர் – நாய் வாகனம் (Dog / Swana)
Please read my other articles on Vahanas in my blogs:
Iraq: 7 Gods Procession on Vahanas
Deer Chariot: Rig Veda to Santa Claus
Hindu Vahanas around the World
Vahanas in Kalidasa and Tamil Literature
உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்
வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?
எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?
Who Rides What Vahanas?
***
வாமன அவதாரம்
திருக்குறளிலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் 2000 ஆண்டுகளாகப் பாடப்பட்ட வாமன அவதாரம் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் ஆகும்; வாமன என்றால் குள்ளம் குட்டை; அவரே மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் தானம் கேட்டு ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரமன் ஆனார் . மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்க அவர் செய்த யாகத்தின்போது குள்ள பிராமணச் சிறுவனாக வந்து மூன்றே அடி மண் கேட்டபோது அந்த அசுர சக்கரவர்த்திக்கு ஆசிரியராக இருந்த பிராமண ஆசிரியர் சுக்ராச்சார்யார் அவரை எச்சகரித்தார்; அதையும் மீறி மஹாபலி தருகிறேன் என்று வாக்கு கொடுத்த போது, வானத்தையும் பூமியையும் இரண்டே அடிகளால் அளந்த வாமனன், முன்றாவது அடி எங்கே என்று கேட்டவுடன் , வந்தவர் விஷ்ணு என்றுஅறிந்து என் தலை மீது மூன்றாவது அடியை வையுங்கள் என்று காட்டினான் . அதன் மூலம் அவரை பாதாள உலகத்துக்கு அனுப்பிய விஷ்ணு , உனது பணிவு காரணமாக ஒவ்வொரு ஆண்டு ம் என்னுடைய திருவோண நட்சத்திரத்தன்று இந்த பூமிக்கு வா என்று ஆசீர்வதித்தார் . இப்பொழுது கேரளத்தில் மட்டும் அந்த ஓண விழாவைப் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள்.
வாமன (वामन).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற, உலகத்தின் முதல் இலக்கண நூலான அஷ்டாத்யாயிக்கு பதஞ்சலிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ப்பின்னர் வாமனர் என்பவரும் ஜயாதித்ய जयादित्य (jayāditya). என்பவரும் உரை எழுதினார்கள்; அதற்கு காசிகா என்று பெயர்; இருவர் எழுதிய இந்த பாஷ்யத்தில் வாமனர் எழுதிய பகுதி எது என்று சொல்ல முடியாது இவர்களைத் தவிர காஷ்மீரில் ஒரு வாமனர் பத்தாம் நூற்றாண்டில் சில நூல்களை எழுதினார்.
***
வாமாசாரம்
சிவனின் வாம / இடது பாகத்தில் இருப்பவள் சக்தி/ பார்வதி/ உமை; அவளை தாந்திர முறைகளில் வழிபடுவது வாமாசாரம் எனப்படும்; இதைப் பின்பற்றுவோர் மது, மாது, மாமிசம் என்பதையும் வழிபாட்டு முறைகளில் பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெறுவார்கள் இவையல்லாமல் யாக யக்ஞங்களை செய்தோ அல்லது பக்தி முறையில் பூஜைகளை செய்தோ வழிபடும் முறை பழைய சம்பிரதாய முறை ஆகும் ; அவர்களை வாமாசாரத்தை ஆதரிப்பதில்லை ; பிரிட்டிஷ் நீதிபதி Arthur Avalon (the pen name of British high court judge Sir John Woodroffe) ஆர்தர் ஆவலோன் இந்த முறை பற்றியும் இதன் பின்னுள்ள தத் துவங்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் பிரபலமான நூல்கள் ஆகும்.
***
வரருசி
Vararuci (वररुचि).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற இலக்கண நூலுக்கு வார்த்திகா என்னும் குறிப்புகளை எழுதியவர் வரருசி; இவரை காத்யாயனர் என்றும் சொல்லுவார்கள். இவர் சுமார் 4000 ‘அப்டேட்’களை செய்தார்; அதாவது பாணினி எழுதியதைத் திருத்தி, தனது காலத்தில் வழங்கிய மொழியைக் காட்டினார் . இவர் விக்ரமாதித்தன் அவையில் இருந்த நவரத்தினங்களில் ஒருவர்.
***
வார்த்திக
Vārtika (वार्तिक).—பாணினியின் அஷ்டாத்யாயீ நூலுக்கு வரருசி எழுதிய திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இவை ; பிரபல சம்ஸ்க்ருத அறிஞர் தியோடர் கோல்ட்ஸ்டாக்கர் prominent 19th-century German Sanskrit scholar Theodor Goldstücker, மொழியியல் வல்லுநர் ஆவார்; அவருடைய கணக்குப்படி பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்; அவருக்கு 200 ஆழ்ந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வரருசி வாழந்தார் என்பதாகும் . ஏனெனில் ஒரிஜினல் நூலில் 4000 மாற்றங்களை செய்வதானால் பாணினிக்கும் இவருக்கும் பல நூற்றாண்டு இடை வெளி இருக்க வேண்டும் தமிழிலும் தொல்காப்பியத்து க்கு அப்டேட் குறிப்புகள் எழுதிய பவணந்தி சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மாற்றங்களைச் செய்தார் .இவருக்குப்பின்னர் மஹாபாஷ்யம் எழுதியா பதஞ்சலி முனிவர் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை உறுதியான வரலாறு காட்டுகிறது; இந்த மூ வரையும் வணங்கும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதம் பயில்வோர் சொல்லும் ஸ்லோகம்
வாக்கியகாரஞ் வரருசிஞ் பாஷ்யகாரஞ் பதஞ்சலிம் |
பாணினிஞ் சூத்ரகாரஞ் ச ப்ரணதோஸ்மி முனித்ரயம் ||
சுலோகத்தின் பொருள்:வாக்யகாரம் வரருசிம்: பாணினியின் சூத்திரங்களுக்கு ‘வார்த்திகம்’ என்னும் விளக்க வாக்கியங்களை எழுதிய வரருசி (காத்யாயனர்).பாஷ்யகாரம் பதஞ்சலிம்: அந்த சூத்திரங்களுக்கும் வார்த்திகங்களுக்கும் ‘மஹாபாஷ்யம்’ என்னும் விரிவுரை எழுதிய பதஞ்சலி முனிவர்.பாணினிம் சூத்ரகாரம் ச: சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையான ‘அஷ்டாத்யாயி’ சூத்திரங்களை இயற்றிய பாணினி மகரிஷி.ப்ரணதோஸ்மி முனித்ரயம்: சமஸ்கிருத இலக்கணத்தை நமக்கு அருளிய இந்த மூன்று சிறந்த முனிவர்களையும் (முனித்ரயம்) நான் வணங்குகிறேன்.
***
வருணன்
வேதகால முக்கியக்கடவுளான வருணன் தமிழர்களின் நெய்தல் நிலக்கடவுள் என்று தொல்காப்பியம் கூறுகிறது பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா வர்ண பகவானை புகழ்கிறது. துருக்கி நாட்டில் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கியூனிபார்ம் களிமண் கல்வெட்டில் வருணன் புகழப்பட்டுள்ளான்; பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியா வந்தன கிரியைகளில் வருணனை பயபக்தியுடன் வணங்கித் துதிக்கின்றனர் .
ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.
மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.
வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்
தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.
தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)
‘’ மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’
தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.
பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:
‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலிந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும் பரதவர்
பனிதழை மா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா
துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)
பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.
வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.
மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.
வள்ளுவன் போற்றிய வருணன்
இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :
‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)
‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)
பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;
மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.
மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.
தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?
ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing) ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?
இதோ கணக்கு
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப் பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள் அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)
சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை
ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது
600x 16 மணி = 9600 முறை
உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..
7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700
இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.
உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .
நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை
9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)
இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!
இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .
பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று
துருக்கி- சிரியா எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!
இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–
1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்
2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!
3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.
நாலாவது மந்திரம்
4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )
ஐந்தாவது மந்திரம்
வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!
ஆறாவது மந்திரம்
6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக் கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே
ஏழாவது மந்திரம் 7.
ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய் சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்
எட்டாவது மந்திரம்
8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய் நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்
ஒன்பதா வது மந்திரம்
9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.
ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான் : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.
xxx
லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்
இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை
1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான். இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .
2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.
3. வருணன் இன்விஸிபிள் மேன் ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்; டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று
இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?
பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.
மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது
நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.
பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)
மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..
கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.
–சுபம்—–
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-116 ; இந்து மத கலைச்சொல் அகராதி-116, வசிஷ்டர், வாகனங்கள், வருணன் , வரருசி வார்த்திக , வாமன
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
9-8-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
ஏ. ஐ. செய்ய முடியாத வேலைகளைத் தேர்ந்தெடுங்கள்!
ச. நாகராஜன்
உலகெங்கும் இளைஞர்களை பயமுறுத்தும் நவீன தொழில்நுட்பமாகி விட்டது செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ. ஐ. (ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்)
நொடியில் ஆயிரக்கணக்கான தரவுகளை அலசி ஆராயும் திறனைப் படைத்த இந்த ஏஐயால் உலகெங்கும் லக்ஷக்கணக்கான நபர்கள் வேலையை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ஏஐ செய்ய முடியாத ஐந்து வேலைகளை அறிஞர் குழுக்கள் இப்போது கண்டுபிடித்துள்ளன.
கீழே தரப்பட்டுள்ள ஐந்து வேலைகளை ஏஐ செய்ய முடியாது என்பது ஒரு நல்ல செய்தி தான்.
உணவைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏஐயால் ஆபத்தே கிடையாது. மெஷினால் ஆர்டரை எடுக்க முடியும், டெலிவரி செய்ய முடியும் ஆனால் தனிப்பட்ட முறையில் கைமணம் மணக்க சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரிக்கவே முடியாது. அதிலும் பெண்களுக்கே உரித்தான படைப்பாற்றல் திறனும், வேகமும், வெவ்வேறு விதமாக உணவு வகைகளைத் தயாரிப்பதும் ஒருபோதும் ஏஐக்கு வராது.
அடுத்து பாதுகாப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் செக்யூரிடி வேலையை ஏஐயால் திறம்பட மனிதர்கள் போலச் செய்ய முடியாது. நேரடியாக களத்தில் இருக்க வேண்டும், அந்தந்த கணத்தில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும், திறம்பட நிலைமையை சமாளிக்க வேண்டும். இது ஏஐயால் முடியாத காரியம். நிலைமைக்குத் தக மனிதனின் மதிப்பீட்டுத் திறனை ஏஐ கொள்ளவே முடியாது. வீடியோவால் ஆங்காங்கே நடப்பதைத் திறம்பட கண்காணிக்க ஏஐயால் முடியும். ஆனால் அச்சுறுத்தல்களை சமாளித்து உடனுக்குடன் முடிவுகளை எடுக்க திறமையான பாதுகாவலர்களாலேயே முடியும்.
குழாய் ரிப்பேர்காரர்கள் பிரச்சினையுள்ள ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று விதவிதமான பிரச்சினைகளை ஆராய்ந்து இடத்திற்கும் பிரச்சினைக்கும் தக முடிவெடுக்கிறார்கள். பெரிய பைப்புகள் உடைந்து நீர் பீறிட்டு வெள்ளமாக வெளி வரும் காலத்தில் குழாய் ரிப்பேர் செய்வதில் நிபுணர்களாக உள்ளவர்கள் செயல்படும் அபார வேகமும் திறமையும் ஏஐக்கு வராது. என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுமே தவிர எப்படிச் செய்வது என்பது ஏஐக்குத் தெரியாது.
இறந்து போன ஒரு சவத்தை தைலமிட்டுத் தடவி பாதுகாப்பாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் வேலை ஒரு உன்னதமான வேலை. அதில் உணர்ச்சி, வேகம், திறன், கலை உணர்வு, சடங்குகளை அனுசரித்தல், மரியாதை உள்ளிட்ட அனைத்தும் பல்வேறு விகிதத்தில் கலந்திருக்கும்.
இதை ஏஐயால் செய்ய முடியாது. துக்கப்படும் குடும்பத்தினருக்கு மெஷின் பாஷையில் செயற்கையாக ஆறுதலை அது தர முடியுமே தவிர மனித உணர்ச்சியில் பங்கு கொள்ள முடியாது.
அடுத்து திடீரென்று ஏற்படும் தீ விபத்தைத் தடுக்க விரைந்தோடும் தீயணைப்பு வீரர்களின் சாகஸமே தனி தான். மிக மிக அதிக உயரத்தில் சர்ரென்று ஏணி மூலம் ஏறிச் சென்று புகைக்கு நடுவே நுழைந்து பச்சிளம் குழந்தைகளை அலாக்காகத் தூக்கி மீண்டும் ஏணி வழியே அல்லது கயிறு வழியே இறங்கும் அவர்களின் திறனை ஏஐ கொள்ள முடியுமா? முடியாது.
ஆக இப்போதைக்கு இந்த ஐந்து வேலைகளை ஏஐ செய்ய முடியாது என்பதை நிபுணர் குழு சொல்லியுள்ளது.
இந்த ஐந்து வேலைகளையும் எவர் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம்!
இன்னும் மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட வேலைகளையும் கண நேரத்தில் முடிவெடுக்க வேண்டிய பணிகளையும் ஆராய்ந்தால் இன்னும் பல காரியங்களையும் ஏஐயால் செய்ய முடியாது என்பதை அறிய முடியும். அவற்றையும் மனிதர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மனித மூளை நுட்பமானது, செயல்திறம் மிக்கது, நிலைமைக்குத் தக அனுசரித்து முடிவெடுக்க வல்லது, உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தக பணியைச் செய்யத் தூண்டும் அற்புத ஆற்றலைக் கொண்டதாகும். மனித மூளையின் இப்படிப்பட்ட பல குணாதிசயங்களை அறிந்தோமானால் ஏஐ பற்றிய பயமே வேண்டாம்! செயற்கை நுண்ணறிவை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த 5 நாட்களில் 50 கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்
51
காணாமற் போன 300 ஆண்டு பல்லவர்களின் பெயர்கள் என்ன ?
52
திராவிட நாடு எது ?
53
கண்ணாடிக் கொடி பற்றிய அதிசயச் செய்தி எங்கே உள்ளது ?
54
இலங்கை மானவர்மனுக்கு பல்லவ மன்னன் இளநீர் கொடுத்த சுவையான சம்பவம் எப்படி நிகழ்ந்தது?
55
ராமபிரானைவிட, அகஸ்தியனை விட பல்லவ மன்னன் மேல் என்று சொல்லும் சாசனம் எது ?
56
முருகனுக்குச் சமமாகப் பல்லவரை ஒப்பிடும் சாசனம் எது?
57
விபீஷணன் போல பல்லவனிடம் அடைக்கலம் புகுந்த இலங்கை மானவர்மன் பல்லவனுக்குத் தெரியாமல் என்ன செய்தான் ?
58
புள்ளூர்ச் செப்பேடுகளில் காணப்படும் பிராமணர்களின் விநோதப் பெயர்கள் என்ன ?
59
முக்கண்டிக் காடுவெட்டி யார் பல்லவர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு ?
.60
பல்லவர்களைப் பற்றி வைகுண்டப்பெருமாள் கோயில் சிற்பங்கள் காட்டுவது என்ன ?
*************************************
விடைகள்
51.சிம்ம விஷ்ணு முதல் அபராஜித பல்லவன் வரை 300 ஆண்டுப் பல்லவர்களுக்குச் செப்பேடு மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளன . ஏனையோரை சாசனங்களில் வரும் பெயர்களிலிருந்து அறிகிறோம் அவர்களில் ஒருவருக்கு மட்டும் சமுத்திர குப்தன் கல்வெட்டில் சான்று கிடைத்துள்ளது
சான்று கிடைக்காத முற்கால பல்லவர்கள் –
கந்த வர்மன்
கலந்த வர்மன்
காணகோபன்
விஷ்ணுகோபன் – சமுத்திர குப்தன் கல்வெட்டிலும் உள்ளது
வீர கூர்ச்சன்
வீர சிம்மன்
சிம்ம வர்மன்
ஆகியோர் எதிரிகளுக்கு தூமகேதுவாக விளங்கினர் என்று கசாக்குடி செப்பேடுகள் கூறுகிறது . இவை தவிர சித்திரமாயன், ஸ்கந்த சிஷ்யன் போன்ற பெயர்களை நாமாக தெரிந்த பல்லவர்களுடன் தொடர் புபடுத்த வேண்டியுள்ளது..
அசோக வர்மன் -கசாக்குடி செப்பேடு தகவல்
அவனி சிம்மன் கசாக்குடி செப்பேடு தகவல்
***
52.சேர சோழ பாண்டிய நாடுகளுக்குத் தொடர்பில்லாத வகையிலேயே திராவிட நாடு குறிப்பிடப்படுகிறது வரைபடங்களில் தமிழ் நாட்டின் வடபகுதி அல்லது அதற்கு மேலே உள்ளது . இது பல்லவர் ஆண்டபகுதிதான் என்பதைக் காட்டும் வாசக வரிகள் சாசனங்களில் கிடைக்கின்றன .
திராவிட அல்லது த்ரமிள என்ற சொல் காஞ்சீபுரத்தை தலைநகராகக் கொண்ட தொண்டை மண்டலத்தையே குறித்து வந்திருக்கிறது; வாதாபிக்குக் கிழக்கே மஹா கூடம் என்னுமிடத்திலுள்ள மகுடேச்வரர் ஆலயத்தின் கல் தூணிலுள்ள கல்வெட்டில் அவன் அண்ணனான முதலாம் கீர்த்தி வர்மனின் புகழைக் கூறுமிடத்தில் அவன் வங்க, அங்க, கலிங்க, வட்டூர மகத , மத்ரக, கேரள, கங்க, மூஷக, பாண்டிய, த்ரமிள , சோளிய, ஆளுக, வைஜயந்தி, ஆகியவற்றையும் வேறு நாடுகளையும் வெற்றி கொண்டான் என்று உள்ளது . பல்லவர்களைக் குறிப்பிடும் சாளுக்கிய சாசனங்கள் த்ரைராஜ்ய பல்லவர் என்று குறிப்பிடுகின்றன. முக்காவல் நாடு என்ற தமிழ்ச் சொல்லை முவுவட்டிய மார்க்கம் என்று தெலுங்கில் பொறித்துள்ளனர் . புறநானூற்றுப் பாடல் 90 சாத்தந்தையார் பாடியது . முக்காவல் நாடு வருகிறது ; இதுவே த்ரைராஜ்ய பல்லவரைக் குறிக்கும் சொல்லாகும். நிறைய சாசனங்களில் பல்லவ மன்னருடன் வரும் இச்சொல் தொண்டை மண்டலம் அல்லது அதற்கு மேலுள்ள பகுதியைக் குறிக்கும். மாமூலனார் எழுதிய அகநானூற்றுப் பாடலிலும் தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர்தேயம் என்று வருகிறது . இதன் பொருள் தமிழ் பேசாத ஆனால் தமிழர்களின் ஆளுகைக்கு அல்லது பாதுகாப்புக்கு உட்பட்டது என்பதாகும் . பாடல்கள் 67, 211, 295 ஆகியவற்றிலும் வேங்கடத்துக்கு அப்பால் வடுகர் போர் புரியும் இடம் என்று வருகிறது .
என்னுடைய கருத்து
தொல்காப்பியமும் வேங்கட மலை வரைதா ன் தமிழ் மொழி வழங்கும் இடம் என்று கூறியுள்ளது ; ஆக, சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வடக்கே இருந்த இடம்தான் 56 தேசங்களில் வரும் திராவிட நாடு என்று துணியலாம்
***
53.உதயேந்திரம் செப்பேடுகள் பல்லவ மன்னன் நந்தி வர்மனின் 21-ஆவது ஆட்சியாண்டில் அவனுடைய படைத்தலைவன் உதய சந்திரனின் விண்ணப்பத்தால் பாலாற்றங்கரையில் அமைந்த ஒரு கிராமத்தை உதயசந்திரமங்கலம் என்ற பெயரில் 108 பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த செய்தியை கூறுகிறது . அதிலுள்ள எழுத்துக்கள் அதற்கு 200 ஆண்டுகளுக்குப்பின்னர் வழங்கிய எழுத்தாக உள்ளது. உதய சந்திரன் சபர மன்னனான உதயணனுடன் போரிட்டு மயில் தொகையால் அலங்கரிக்கப்பெற்ற அவனுடைய கண்ணடித் த்வஜத்தைக் கைப்பற்றினான் என்பது கூறப்பட்டுள்ளது. சபரர்கள் யார் என்று தெரியாவில்லை. தீவு தேசங்களில் அத்தகைய கொடி இருந்தது சீன தேசத்து வரலாற்றில் உள்ளது . டாலமி எழுதிய நூலில் பர்மாவில் அரக்கன் பகுதியில் சபரர்கள் வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறார் . இது பல வித ஊகங்களுக்கு வழிசெய்கிறது
***
54.மானவர்மன் என்ற இலங்கை மன்னன் இரண்டாம் காஸ்யபனுடைய மகன் ; தந்தை இறந்தவுடன் அவனுக்கு அரசு கிடைக்காமல் வேறு ஒருவன் கைப்பற்றிவிட்டான் ; சிறிது காலம் இலங்கையின் வடபகுதியில் தங்கிவிட்டு இந்தியாவுக்கு வந்து காஞ் சீபுரத்தில் அரசுபுரிந்த நரசிங்க வர்மனை அடைந்து உதவி கேட்டான் ; பல்லவ மன்னன் ஆதரவு கிடைத்தவுடன் மனைவியையும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துக்கொண்டான்.
நாளடைவில் அவன் நரசிங்கனுக்கு நெருங்கிய நண்பன் ஆனான்; ஒரு சமயம் இருவரும் யானை மீது போய்க்கொண்டிருந்த்தார்கள் ; ஓரிடத்தில் பல்லவன் ஒரு இளநீரைச் சீவி பாதி குடித்துவிட்டு ஏதோ ஞாபகத்தில் பின்னால் நீட்டினான்; பின்னால்உட்கார்ந்திருந்த மானவர்மன் அதைக் கையில் வாங்கி ஒரு கணம் திகைத்தான் ; நண்பன் தானே என்று அதைக்குடிக்க முற்பட்டான்; சட்டென்று நரசிம்ம வர்மன், பின்னால் திரும்பி, தான் செய்த தவற்றை உணர்ந்து அதை வாங்கி மீதி இளநீரையும் தானே குடித்தான்; இந்த சம்பவம் அவர்களிடையே இருந்த நட்பினை அதிகரித்து . அதற்குப்பிறகு தனக்கு கிடைக்கும் அத்தனை கெளரவங்களும் மரியாதையும் மானவர்மனுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்தான்– பக்கம் 149, பல்லவர் செப்பேடுகள் முப்பது
***
55.கசாக்குடி செப்பேடு 22 ஆவது ஸ்லோகத்தில் இலங்கையை வென்ற ராமனின் பராக்ரமத்தைத் தாழ்த்தும்படியான வீரம் கொண்டவனும் எதிரி அரசர்களை நாசம் செய்யும் தூமகேது/ வால் நடபத்திரம் ஆனவனும் வாதாபி என்ற நகரத்தை வென்று அதே பேர் கொண்ட அசுரனை ஜெயித்த, கும்பத்தில் தோன்றிய , அகஸ்தியனைவிட வேகமுள்ளவனும் வெற்றி வீரனுமான நரசிம்மன் தோன்றினான் . இது ஸ்லோகம் கூறும் புகழ்ச்சி உரை . (வாதாபி என்ற அரக்கனை அகஸ்தியர் வாதாபி ஜீர்ணோ பவ என்று வயிற்றைத் தடவி அழித்தார்; நரசிம்ம வர்மன் வாதாபி என்றந கரினை அழித்தான்
***
56.கசாக்குடி செப்பேடு பல்லவர்களை குமாரக் கடவுளுடன் பலவாறாக ஒப்பிடுகிறது . சங்க காலப் பாடல்களில் முருகனின் சீற்றத்தை தமிழ் மன்னர்களுடன் புலவர்கள் ஒப்பிவிட்டனர். அதற்கு முன்னர் காளிதாசன் அப்படிச் செய்தான். அதைக் காப்பியடித்த அஷ்வகோஷர் புத்த சரித நூலின் முதல் பத்து ஸ்லோகங்களுக்குள் புத்தரை ஷண்முகனுடன் ஒப்பிட்டது நகைப்புக்குரியது ! புத்தருக்கும் முருகனின் சீற்றத்துக்கும் சம்பந்தம் வர வாய்ப்பே இல்லை .
***
57.ஒரு சமயம் சாளுக்கிய அரசன் பல்லவ சாம்ராஜ்யத்தை நோக்கி படை எடுத்து வந்தான் ; அடைக்கலம் புகுந்த மான வர்மனை இந்தப் போரில் ஈடுபடுத்துவது நியாயம் ஆகாது என்று எண்ணி நரசிம்ம வர்மன் புறப்பட்டுச் சென்று விட்டான் . மான வர்மன் நண்பனுக்கு உதவாமல் இருப்பது முறையல்ல என்று எண்ணி தானும் ஒரு படையைத் திரட்டி பல்லவ மன்னனை அடைந்தான் . இது நரசிங்க வர்மனின் மனதை நெகிழவைத்த ஒரு சம்புபவம் ஆகும் – இதற்குப்பின்னர் மானவர்மனை பெரிய கடற்படையுடன் இலங்கைக்கு அனுப்பி பதவியில் அமர்த்தினான்; ஆனால் மானவர்மன் சிறிது காலத்திற்குள் ஒடி வந்துவிட்டான். அடுத்த முறை பெரிய கடற்படையுடன் அவனை அனுப்பி, இதோ பார் நானும் உன்னுடன் வருகிறேன் என்று பாவலா/ போக்கு காட்டினான நரசிம்ம வர்மன் . ஆனால் உண்மையில் போகவில்லை; இந்த முறை மான வர்மன் வெற்றி பெற்று நிலையாக ஆட்சியில் அமர்ந்தான் (காண்க பக்கம் 140, பல்லவர் செப்பேடுகள் முப்பது).
***
58.கூள சர்மன், சின்னக்கல்லா சர்மன், தாழி சர்மன், உழுதமண்டை சர்மன், கந்தமண்டசர்மன் , திண்டசர்மன், சட்டிசர்மன், நாகசர்மன், பத்ரகாளிசர்மன், வடுக சர்மன், சூலமண்டைசர்மன் சொப்பறி தூக்கசர்மன் மோதில சர்மன் — இப்படி நிறைய பொருள் சொல்ல முடியாத பெயர்கள் தானம் வாங்கிய பிராமணர் பட்டியலில் உள்ளன .
***
59.பிற்காலத்தில் தோன்றிய பல்லவ மன்னர்கள் தங்களை முக்கண்டிக் காடுவெட்டி அல்லது த்ரிநயன பல்லவர் வழிவந்தவர்களாகவே கூறிக்கொள்வார்கள் ; அதனால் முதல் அரசன் மூன்று கண்களையுடையவன் என்று அர்த்தம்; அதாவது முக்கண்ணன் சிவபெருமான் . பல்லவர்களின் ஒரு கிளையினர் நாங்கள் என்று சொல்லிக்கொண்டு எட்டாம் நூற்றாண்டிலிருந்து சுமார் 300 ஆண்டுகளுக்கு கர்நாடக தேசத்தை நுளம்பர்கள் ஆண்டார்கள்; தங்களைக் காஞ்சீபுர திரிநயனன் வழிவந்த ஈச்வர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டனர் ; ஆனால் காஞ்சிப் பல்லவர்கள் யாரும் சிவபெருமான் வழிவந்தவர்கள் என்று கூறவில்லை
ராஜஸிம்ஹன் கைலாஸநாதர் கோவில் கட்டினமாதிரியே, அவனுக்குப் பின் இரண்டாவது பட்டமாக வந்த நந்திவர்மா வைகுண்டப் பெருமாள் கோவில் கட்டினான். அதற்குப் ‘பரமேச்வர விஷ்ணுக்ருஹம்’ என்றே பழைய பெயர். விஷ்ணுவின் க்ருஹம், ஆனால் பரமேச்வரனின் பேரில் இருக்கிறது என்கிறபோதே நான் இத்தனை நேரம் சொன்ன சைவ-வைஷ்ணவ ஒற்றுமை தெரிகிறது. ஆனால் இங்கே ‘பரமேச்வரன்’ என்பது கோயில் கட்டிய நந்திவர்மாவின் இன்னொரு பெயரை வைத்துத்தான்! ராஜராஜன் கட்டியது ராஜராஜேச்சுரம், கங்கைகொண்ட சோழன் கட்டியது கங்கைகொண்ட சோழீச்சுரம் என்கிற மாதிரி பரமேச்வரப் பல்லவமல்லனான நந்திவர்மா கட்டிய வைகுண்டப் பெருமாள் கோவில் அவன் பெயரிலேயே பரமேச்வர விண்ணகரம் ஆயிற்று.
கைலாஸநாதர் கோவில் சிற்பங்கள் புராண ஸம்பந்தமானவையாகப் பிரஸித்தி பெற்றிருக்கின்றன. வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பங்களோ சரித்ர ஸம்பந்தத்தினால் முக்யத்வம் பெற்றிருக்கின்றன.முக்யமாக இந்தக் கோவிலுக்கு என்ன சரித்ர ப்ரஸித்தி என்றால், மஹாவிஷ்ணுவிலிருந்து ஆரம்பித்து ப்ரம்மா வழியாகப் பல்லவ ராஜாக்கள் அத்தனை பேரின் வம்சாவளிக் கதைகளையும் – இந்தக் கோவிலைக் கட்டினவர் வரையில் – சிற்ப வரிசைகளில் வடித்துக் காட்டியுள்ள ஒரு மண்டபம் அங்கே இருப்பதுதான்..
சரித்ர முக்யத்வம் மட்டும்தானென்றில்லாமல் மத ஸம்பந்தமான விசேஷமும் அந்தக் கோவிலுக்கு உண்டு. இங்கே மூன்று அடுக்குகளாக ஸந்நிதிகளை அமைத்து, பெருமாளின் நின்ற திருக்கோலத்தைக் கீழ் தளத்திலும், இருந்த (உட்கார்ந்த) திருக்கோலத்தை நடு தளத்திலும், கிடந்த (சயனித்த) திருக்கோலத்தை மேல்தளத்திலும் அமைத்திருக்கிறது. ‘அஷ்டாங்க விமானம்’ என்பதாகப் பொதுவாகச் சொல்லப்படுகிற ஆகம விதிகளின்படி இப்படிப் பல அடுக்குகளில் ஆலயம் நிர்மாணிப்பது ரொம்பவும் அபூர்வமே. பாண்டி நாட்டில் திருக்கோட்டியூரிலுள்ள பெருமாள் கோவில், மதுரையிலேயே கூடலழகர் கோவில், காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில், இதைக்கட்டிய நந்திவர்மனின் பிள்ளையான தந்திவர்மன் காஞ்சிக்கு ஸமீபத்திலுள்ள உத்திரமேரூரில் கட்டிய ஸுந்தர வரதப்பெருமாள் கோவில் ஆகிய நாலில்தான் இந்த அமைப்பு இருப்பதாகத் தெரிகிறது.
Tags –பல்லவர் செப்பேடுகள் ,ஆறாவது 10 கேள்விகள், வைகுண்டப்பெருமாள் கோயில் சிற்பங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Vahana
Mounts of Gods or Vehicles of Hindu Gods
They are actually the symbols of Gods; they appear on their flags as well. They have symbolic meaning. That will explain why an elephant (god Ganesh) riding on a mouse
Following is the first list of Hindu Vahanas:
1.Ganesh/Vinayaka=Mouse
2.Kartikeya/Skanda/Murugan–Peacock
3.Shiva=Bull/ Nandhi
4.Raja Rajeswari= Lion
5.Vishnu= Garuda/Eagle
6.Bhairava=Dog
7.Sastha= Horse
8.Ayyappa= Tiger
9.Sani/Saturn= Crow
10.Kalki Avatar=Horse
11.Indra= Airavata/ Elephant
12.Lakshmi= Red Lotus, Owl
13.Sarasvati=White Lotus, Swan
14.Ganga Devi= Crocodile
15.Manamatha & Rathi= Parrot
16.Kubera= Man,Parrot or Horse
17.Vishnu= 7 headed Snake/ Sesha
18.Krishna=Banyan leaf
19.Brahma= Swan
20.Kartikeya=Rhino (Vietnam)
21.Chandi= Pig
22.Sindhi saint= Fish
23.Ganda Beranda Bird= Mannarkudi Rajagopalswamy
24.Varuna= Makara (Shark or Crcodile)
25.Agni / Fire= Ram
26.Durga= Antelope
27.Marut= Deer
28.Lakshmi in Nepal=Turtle, In Bengal=owl
29.Durga= Lion or Tiger
30.Chamundi- Owl
31.Asvini Devas= Donkey (also for Indra and Agni)
32.Dead Body= Niruthi
33.Sun= 7 Horse Chariot
34.Rahu/ Shasti= Cat
35.Rathi= Pigeon
Following Vahanas are used by different temples in Tamil Nadu
36.Surya Prabha (SUN)= Northern Districts of Tamil Nadu
37.Chandra Prabha (MOON)= Northern Districts of Tamil Nadu
3.Vahana Order in Temples: 6th Day=Gaja, 8th Day=Horse Vahana
Temple Vahanas are taken out in a particular order. The Agama Shastras have stipulated some rules regarding this. For instance Ani Thirumanjana Festival at Chidamabaram Shiva Temple is celebrated in the following order:
First Day: Dwaja Arohanam (Flag Hoisting),In the night Pancha murthy procession in Manjam
Second day: Silver ChandraPrabha Vahana
Third day: Gold Surya Prabha Vahana
Fourth day: Silver Bhutavahana
Fifth Day: Silver Rishaba Vahana
Sixth day: Silver Elephant Gaja Vahana
Seventh day: Gold Kailash Vahana
Eighth day: Bhikshadanar in Gold Chariot
Ninth Day: Rathothsavam (Ratham= Big Chariot)
Tenth day: Maha Abhishekam
Eleventh day: Muthu Pallakku ( Pearl Palanquin)
Saivaite temples do elephant vahana on the sixth day of festival.
Tirupati-Tirumala Brahmorchavam Calendar:
First Day-Dwajarohan: Flag of Eagle hoisted, Pedda Sesha Vanam/many headed snake vahana;
9th day: Chakra snanam/lord’s disc is immersed in the tank and flag is lowered.
This is typical of North Tamil Nadu and Andhra temples. Surya and Chandra Prabha vahanas are absent in Southern Tamil Nadu. They replace it with other Vahanas. But 8th day is allocated for Kuthirai/Aswa/Horse vahana.
Amarasimhan’s Amarakosha (First Dictionary of Synonyms in the World) gives Vahana names as other names for Gods. This shows people were very familiar with all Vahanas and flags 2000 years ago.
Hamsa Vahana means Brahma (Swan Vehicle)
Garudadwaja means Vishnu (Eagle Flag)
Vishnuratha means Garuda (chariot of Vishnu)
Vrushadwaja means Shiva (Bull Flag)
Siki Vahana means Lord Kartikeya (Peacock Vehicle)
Megha Vahana means Indra (Cloud as Vehicle)
Havya Vahana means Agni (Fire takes all Havis/food in Yagas)
Picture of Ashta Matrika with Vahanas
5.Unusual Vahanas
Some temples have lotus (India’s national flower) as vahana for goddess Devi. Tulsi (Holy Basil plant) also used as a Vahana. Alwartirunagari near Tirunelveli in Tamil Nadu, has a strange vahana –Tamarind Tree (Imli in Hindi). This is used for one of the twelve Alvars known as Nammalvar. He attained wisdom under a tamarind tree. Another unusual vahana associated with this town is Parangi Narkali (Foreign Chair).The origin of this vahana is shrouded in mystery.
Chandi Devi in Sujanaghat has got varaha (pig) as vahana which is unusual.
6.Vahanas of Ganesh
Dhumaketu (kaliyuga): Horse Vahana
Vinayakar (Kritayuga):Simha Vahana
Mayuresar (Treta yUga):Mayura Vahana
Gajananar (Dwapara Yuga): Mushika Vahana
7.Buddhist Vahanas
Buddists also have vahanas for their gods:
Vairochana- Dragon Vahana
Ratna Sambhava- Lion/simha
Amitabha—Mayura/peacock
Amoka siddhi-Eagle
Ashosabya-Elephant
8.Strange Vahanas of Temples
Several temples have unusual vahanas. It is a long list of strange things. Let us look at a few:
In the next part we will look at the Vahanas on ancient Indian coins.
XXXX
Vahana in Egypt
Also read my earlier posts:
1.Iraq: 7 Gods Procession on Vahanas
2.Deer Chariot: Rig Veda to Santa Claus
3.Hindu Vahanas around the World
4.Vahanas in Kalidasa and Tamil Literature
5.Who Rides What Vahanas?
6.உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்
7.சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்
8.வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?
9.எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?
10.Interesting Facts on Vahanas
***
Vamana
Vāmana (वामन).—An incarnation of Mahāviṣṇu. There are ten main incarnations of Mahāviṣṇu. Of these, the incarnation of Vāmana is the fifth.
Avatar of Viṣnu. Vamana, the dwarf, appeared in the Treta Yuga. The fourth descendant of Hiranyakashyap, Bali, with devotion and penance was able to defeat Indra, the god of firmament. This humbled the other deities and extended his authority over the three worlds. The gods appealed to Vishnu for protection and he descended as the dwarf Vamana. During a yajna of the king, Vamana approached him in the midst of other Brahmins. Bali was happy to see the diminutive holy man, and promised whatever he asked. His Brahmin teacher Shukracharaya warned him not to entertain him. But Bali ignored his advice. Vamana asked for three paces of land. Bali agreed, and the dwarf then changed his size to that of a giant. He stepped over heaven in his first stride, and the netherworld with the second. Bali realized that Vamana was Vishnu incarnate. In deference, the king offered his head as the third place for Vamana to place his foot. The avatar did so and thus granted Bali immortality. Then in appreciation to Bali and his grandfather Prahlada, Vamana made him ruler of Pathala, the netherworld. Bali is believed to have ruled Kerala and Tulunadu. He is still worshiped there as the king of prosperity and recalled before the time of harvest.
Tamil Sangam literature and later Tirukkural refers to Vamana Avatara.
**
Vāmana (वामन).—Name of one of the joint authors of the well-known gloss or वृत्ति (vṛtti) upon the Sutras of Panini, who lived in the seventh century A. D. It cannot be ascertained which portion of the Kasika was written by Vamana and which by his colleague जयादित्य (jayāditya). There was another famous scholar of Kashmir by name Vamana who flourished in the tenth century and who wrote an independent grammar treatise विश्रान्तविद्याधर (viśrāntavidyādhara), together with उणादि-सूत्रवृत्ति (uṇādi-sūtravṛtti) and लिङ्गानुशासन (liṅgānuśāsana).
***
Vamachara
Worship of female energy. Goddess is on the left side of Lord Siva. Left belongs to Devi or Shakti.
Vāmācāra (वामाचार).—the left-hand ritual or doctrine of the Tantras; the doctrine of resorting to मांस, मद्य, मत्स्य, मैथुन (māṃsa, madya, matsya, maithuna) and मुद्रा (mudrā).
Vāmācāra (वामाचार):—[from vāma] m. the left-hand practices or doctrines of the Tantras (id est. the worship of the Śakti or Female Energy personified as the wife of Śiva, as opposed to dakṣiṇācāra .
These practices are often generally considered to be Tantric in orientation. The converse term is dakṣiṇācāra “Right-Hand Path”, which is used to refer to “orthodox” (Āstika) sects .
Arthur Avalon (the pen name of British high court judge Sir John Woodroffe) wrote and edited several seminal books on Tantric worship and Shakta philosophy. His most notable books focusing on Tantric worship, doctrine, and ritual practices include: The_Serpent_Power, Shakti and Shakta.
***
Vararuchi
Vararuci (वररुचि).—A reputed ancient grammarian who is identified with Katyayana, the prominent author of the Varttikas on the Sutras of Panini. Both the names वररुचि (vararuci) and कात्यायन (kātyāyana) are mentioned in commentary works in connection with the Varttikas on the Sutras of Panini, and it is very likely that Vararuci was the individual name of the scholar, and Katyayana his family name.
Name of a grammarian (also a poet, lexicographer, and writer on medicine, sometimes identified with Kātyāyana, the reputed author of the Vārttikas or supplementary rules of Pāṇini; he is placed by some among the nine gems of the court of Vikramāditya, and by others among the ornaments of the court of Bhoja.
***
Vartika
Vārtika (वार्तिक).—An additional statement which is as much authoritative as the original one to which it is appended for the purposes of correction, completion of explanation. Kātyāyana wrote about 4000 Vārttikas on the sūtras of Pāṇini’s Aṣṭādhyāyī.
According to the prominent 19th-century German Sanskrit scholar Theodor Goldstücker, the Vartika (Vāttika) of Kātyāyana was composed around the 4th century BCE. Goldstücker established this chronology by analyzing the significant linguistic and structural evolution of the Sanskrit language between the periods of the great grammarians. Goldstücker placed Pāṇini (the author of the Aṣṭādhyāyī) in the 7th century BCE (or late 8th century BCE). He argued that Kātyāyana lived at least 300 years after Pāṇini. Goldstücker argued that during the 300-year interval, grammatical forms current in Pāṇini’s time had become obsolete or incorrect, and words had assumed entirely new meanings, forcing Kātyāyana to write the Vartika to rectify and complete the rules.
***
Varuna
Brahmins worship him in the daily ritual Sandhyavandana with reverential fear.
Oldest Tamil book Tolkappiam has named Varuna as the god of the Tamil community living in the coastal area.
Zoaroaster has praised him as an Asura in Zend Avesta
VEDIC GOD VARUNA is described as a spy in the Vedas. The implied meaning is ‘nothing can happen without his knowledge’. His description beats all the spies from RAW, Mossad, CIA, KGB, FBI, MI 5, MI 6, Scotland Yard and James Bond Films. After reading the Atharva Veda hymn on Varuna, even anti Hindu German Indologist Von Roth said this was The Best Description of a God in the Vedas. His omnipresence and Omnipotence are described beautifully and powerfully.
Varuna is said to count the batting of eyelids of every human being. That means he is the most advanced Super Computer; because he counts 75840 billion every day.
Following is my calculation:
Average 10 blinks per minute; X 60 minutes= 600 per hour
600X16 hours (eight hour sleep deleted from 24 hours a day)= 9600 blinks per day per person X 7.9 billion =75840 billon blinks per day in the whole world
In numbers 75840 ,000, 000,000 PER DAY
IN SHORT
VARUNA IS THE CCTV OF THE WORLD
VARUNA IS THE SUPER SPY WITH 1000 EYES
VARUNA IS THE MOST ADVANCED SUPER COMPUTER WITH BILLIONS OF CALCULATIONS EVERY MINUTE
VARUNA IS EVERY WHERE ‘UP ABOVE THE WORLD SO HIGH’ AND BOTTOM OF THE MARIANA TRENCH IN PACIFIC OCEAN, DEEPEST POINT in ocean
VARUNA IS HUMAN AND DIVINE
VARUNA IS IN EVERY WATER DROP.
HE IS THE INVISIBLE THIRD MAN IN EVERY SECRET MEETINGS.
HE HAS THE NOOSE WHICH WILL BIND EVERYONE.
HE PUNISHES ALL THE EVIL DOERS.
HE IS IN CHARGE OF THE LAW DEPARTMENT OF THE UNIVERSE
HE IS THE CHIEF JUSTICE OF THE SUPREME COURSE OF THE UNIVERSE.
xxx
ALL BRAHMINS WORSHIP VARUNA EVERYDAY IN THE SANDHYA VANDANA MANTRA. THEY SALUTE HIM WITH SPEACIAL MANTRA EVERY EVENING. HE IS MENTIONED IN THE BOGAZKOY INSCRIPTION DATED 1340 BCE (in Turkey)
xxx
Here is the hymn from Atharva Veda; though there are hymns on Varuna in Rig Veda , this is the best. Not only that, it shows how powerful Hindu Gods are.
xxx
HYMN XVI, CANTO 4, ATHARVA VEDA
On the omnipresence and omniscience of Varuna
1)The mighty Ruler of these worlds beholds as though from close
at hand,
The man who thinks he acts by stealth: all this the Gods
perceive and know.
2)If a man stands or walks or moves in secret, goes to his lying-
down or his uprising,
What two men whisper as they sit together, King Varuna knows:
he as the third is present.
3)This earth, too, is King Varuna’s possession, and the high
heaven whose ends are far asunder.
The loins of Varuna are both the oceans, and this small drop of
water, too, contains him. p. a124
4)If one should flee afar beyond the heaven, King Varuna would
still be round about him.
Proceeding hither from the sky his envoys look, thousand-eyed,
over the earth beneath them.
5)All this the royal Varuna beholdeth, all between heaven and
earth and all beyond them.
The twinklings of men’s eyelids hath he counted. As one who
plays throws dice he settles all things.
6)Those fatal snares of thine which stand extended, threefold,
O Varuna, seven by seven,
May they all catch the man who tells a falsehood, and pass un-
harmed the man whose words are truthful.
7)Varuna, snare him with a hundred nooses! Man’s watcher! let
not him who lies escape thee.
There let the villain sit with hanging belly and bandaged like a
cask whose hoops are broken.
8)Varuna sends, and drives away, diseases: Varuna is both native
and a stranger,
Varuna is celestial and is human.
9)I bind and hold thee fast with all these nooses, thou son of such
a man and such a mother.
All these do I assign thee as thy portion.
Von Roth said
There is no hymn in the whole Vedic literature which express the divine omniscience in such forcible (forceful) terms as this .
Hindus believe diseases come to one who does sinful activities in previous births. So we find diseases in this mantra.
Griffith points out that there is one statement in the Bible (Psalms 139-2-3 which can be compared to one line here in Mantra 2.
Griffith gives references in RV1-25-13; 7-87-3; 7-89-2
Mantra 7 has reference to 7,7,7=21 which is in Tamil Sangam Purananuru 166.
Six foreigners have translated this hymn:- Muir, Max Muller, Von Roth, Ludwig, Grill and Kaegi
This can be compared with Bharatiyar’s description of his poem
***
Vasishtha
Brahmins worship him thrice a day in their Sandhyavandana ritual.
His wife Arundhati is worshipped by all Hindus and mentioned in 2000 year old Sangam Tamil literature many times.
Viewing Arundhati star in the night is done on the first day of a Hindu’s marriage.
Vasishtha (Sanskrit: वसिष्ठ, vasiṣṭha) is a revered Vedic sage . He is one of the Saptarishis (seven great Rishis) of India. Vasishtha is credited as the chief author of Mandala 7 of Rigveda. Vasishtha and his family are mentioned in Rigvedic verse 10.167.4, other Rigvedic mandalas and in many Vedic texts.
xxx
POWER OF BRAHMINS IS GREATER THAN THE POWER OF RULERS: SANGAM TAMIL LITERATURE AND MAHABHARATA
The clash between the great two Vedic Rishis Vasishta and Viswamitra is a well known story. It established the supremacy of Brahmins. Both rishis/seers figure in the oldest book in the world- The Rig Veda (RV). People who are pure at heart and selfless are more powerful than the AK 47 wielding Clint Eastwoods!
This message is in both the Mahabharata, the longest epic in the world and Purananuru, the oldest anthology in 2000 year old Sangam Tamil literature.
First let us look at Mahabharata (Adi Parva, the first of the 18 Books in the Mahabharata):_
Once upon a time great king Viswamitra went out on a hunting expedition. When he and his retinue were tired, they visited the great saint Vasistha. His ashramam (House of Saints; hermitage) was in the middle of the forest. He had a beautiful cow named Nandini. It had the power of fulfilling anyone’s wishes like Kamadhenu.
Vasistha received him with great honour. He gave to Viswamitra precious jewels which were obtained from his wonder working cow Nandini. Viswamitra wondered how come this sage in the middle of the forest , could feed all his retinue and give him precious gifts. Vasishta explained that his holy cow can give anything he wished for. Viswamitra asked Vasishta to give him the cow in exchange for hundred million cows or even his kingdom. When Vasishta refused to comply with his demand Viswamitra threatened to use force. He dragged the cow and pushed it hither and thither, but she would not move. She became angry and in order to punish Viswamitra and his army, she created Pahlavas , Dravidas, Sakas,Yavanas , Kiratas and other tribes. The words of the poet Vyasa are
Shame on a Kshatriya’s strength. The strength of a Brahmins lustre is strength indeed. Determining what is strength and what is weakness, we see that, penance is the greatest strength.
This legend is found in Valmiki Ramayana as well .
Later Viswamitra went for doing Tapas(penance), but failed in first two attempts because of ego and women (Trisanku Episode and Menaka episode). When he won at the third attempt, Vasishta himself called him “Hello Mr Brahmin” (Brahma Rishi). That has become a phrase in Hindusim equal to ‘From the horse’s mouth’ in English.
The power of penance is in Purananuru, oldest portion of 2000 year old Sangam Tamil literature and later moral book Tirukkural of Tiru Valluvar
Here is the verse from Purananuru:-
Vanmiki , similar to Valmiki, the Ramayana author, has penned the verse 358 in Purananuru. Though there are very interesting information in these seven lined verse, I will highlight only one point here. If you weigh the earth and the penance, penance is so big that earth will look like an iota. Earth means earthly life that is family life, but penance is far greater than the family life. Tamil poet Vanmiki use the Sanskrit word Tavam. Tapo in Sanskrit is tamilized Tavam (P=V). here we are concerned only about the greatness of penance. It is a repetition of what is said in Mahabharat. True Brahmins are doing penance even when they are in family life. So the word Antanar is used for anyone who is inward looking, ie. God searching. Brahmin also meant the same, i.e. Brahmam seeking. So it is an echo of Mahabharata lines. Even a kshatriya like Viswamitra is called Brahmin when he competed his penance successfully.
Tiruvalluvar also elucidated the power of saints. If any one does any harm to a saint the empire will crumble like dust, he says.
“If those of rigorous penance become enraged, even Indra will crash from power and position” – Kural 899
Venthan is the Tamil word used in this couplet. It means King or Indra. Tolkaappiam used the word for Indra.
The next couplet emphasizes this point,
“Though possessed of great support, they who are exposed to the wrath of persons of exceeding penance will perish”- Kural 900.
Brahma tejo balam balam!!
Curses of Vasistha (RV 7-104)
1.Indra and Soma, burn and destroy the demon foe. Annihilate the fools, slay them and burn them up. Send downward who adds gloom to gloom. Chase them away. Pierce the voracious ones.
2.Let sin around the wicked boil like as a cauldron set amid the flames of fire. Against the foe of prayer, devourer of raw flesh, the vile fiend fierce of eye, keep your perpetual hate against cruel eyed .
My comments
This is a curse against anti god, anti -prayer gangs. The very interesting point is to throw them into cauldron in the middle of fire. Later day pictures of hell show this. Even 1400 years ago, Saivite saint Appar was thrown into a burning Lime kiln but he was saved by Lord Siva.
Another interesting point is that anti Hindu gangs were cannibals. Like Chinese eat scorpions, lizards, rats and snakes today, like the East Europeans eat horses today, there was a gang of cannibals in Vedic period. Even the Rakshasas of Sri Lanka ate human flesh. Story of Agastya show that Vatapi and Ilvalan ate human flesh. And the same story show that the forest was full of human skeletons of seers.
So the curses were thrown against the barbaric tribes.
Cruel eyed : commentators say spy or gossip mongers.
xxx
RV.7-104-3
Indra and Soma , plunge the wicked in the depth, yes, cast them into darkness that has no support. So that none of them may ever return.
7-104-4
Hurl your deadly crushing bolt down on the wicked fiend from heaven and earth. Burn them to death
7-104-5
Let them sink without a sound.
7-104-6
Indra and Soma, I offer these prayers with wisdom. Accept my prayers; let both of you be united like two horses in the chariot.
Mantra 7
Slay the treacherous fiends; let the wicked have no bliss who evermore assails us with malignity.
Mantra 8
I pursue my way with guileless spirit; whoever accuses me with words of falsehood, may the speaker of untruth be crushed like water in the hand.
Mantra 9
Those who harm the righteous must be given to snakes or to Nirruti (Hindu goddess personifying death, decay and destruction)
Mantra 10
May he a thief or a robber, sink to destruction; both himself and offspring.
Mantra 11
May he be swept away himself and children; may all the three earths press him down beneath them.
Mantra 12
A wise man can easily distinguish the true and false.
Soma protects the true and honest
My comments
This is a good quotation. A prudent man can easily find out who is honest. Several Hindu stories in the Vikram and Vetal and Katha sarit sagara stand examples for this.
But Sayana, commentator, gives the story of Kalmashapada here. I give the story from Who is Who in the Mahabharata by Subash Mazumdar
“ Kalmashpada was a king of Ikshwaku dynasty. He once encountered Shakti, son of sage Vasistha, on a narrow forest path. The question of relative priority as to who should pass first and who should give way, led to heated argument until the king losing his temper started mercilessly whipping \shakti in a demonic raage. Thereupon Shakti collecting his spiritual strength, cursed the king would become a Rakshasa hungering for human flesh wandering the forest for 12 years.
At this juncture Visvamitra who had earlier been bested by Vaishtha and therefore wanted to please Shakti, arranged for a Rakshasa called Kinkara to enter the body of Kalmashapada. Later this curse upon the king was redoubled in force by the pronouncement of a brahmana who was erroneously served human by orders of the king.(It is in Adi Parva of Mahabharata).
The king in his rakshasa form initiated his consumption of human flesh by killing and devouring Shakti himself. Later he also killed Vaishtha’ss other sons.
Once Kalmasha pada , while in Rakshasa form, saw a brahmin couple enjoying conjugal pressure. He killed and ate the Brahmana. Thereupon the brahmana cursed that the king would also die if he ever attempted to enjoy conjugal bliss with his queen.
Years later when he wanted to kill and eat Adashyanti, widow of Shakti, Vasishta sprinkled holy water on him and the curse having ended the king expressed his lifelong indebtedness to Vasishta .
There are 25 mantras . I have covered only 12 out of 25.
To be continued……………………..
Tags- Vahana, Varuna, Vasistha, Vararuchi, Vamana, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ; இந்து மத கலைச்சொல் அகராதி-115
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15-8-26 கல்கியில் வெளிவந்த கட்டுரை!
KFC யின் வெற்றி வரலாறு!
ச. நாகராஜன்
இன்று KFC நிறுவனத்தின் வெற்றியைப் பற்றி அறியாதவர் இல்லை.
கோழி இறைச்சி பொதியப்பத்திற்குப் (Chicken Burger பெயர் பெற்ற அந்த நிறுவனத்தை உருவாக்கியவர் கர்னல் சாண்டர்ஸ் (Colonel Sanders) என்னும் அமெரிக்கர்.
65 வயது ஆகும் போது அவர் வேலையற்றவராக ஆனார். பரிதாபகரமான வாழ்க்கையைக் கொண்டு அவரது காரிலேயே தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. அவரிடம் இருந்தது ஒரு பிரஷர் குக்கர் தான். ஆயிரக்கணக்கான பேரைச் சந்திக்கும் மனதிடமும் அவரிடம் இருந்தது.
கெண்டுகியில் தனது வியாபாரத்தைத் தொடங்கிய அவர் ஒரே இரவில் கண்டது படு தோல்வியைத் தான்.
ஆகவே தனது உணவு விடுதியை அவர் மூடினார்.கையில் இருந்தது 105 டாலருக்கான ஒரு சோஷியல் செக்யூரிடி செக். அதைக் காசாக்கினார்.
இது அவருக்கு ஏற்பட்ட முதல் தோல்வி அல்ல. தோல்வித் தொடரில் நான்காவது தோல்வி.
1920ம் ஆண்டு அவர் ஒரு படகு கம்பெனியை ஆரம்பித்தார். அதில் வெற்றி பெற முடியாமல் தனது கம்பெனியை விற்றார்.
அடுத்து அசிடிலின் விளக்குகளை தயாரிக்கும் ஒரு கம்பெனியை அவர் தொடங்கினார். ஆனால் மின்விளக்குகள் எங்கும் ஒளியைப் பரப்பவே அவரது கம்பெனி இருளில் மூழ்கியது. அதையும் அவர் மூடினார்.
அடுத்து நிகோலஸ்வில்லியில் ஒரு கேஸ் ஸ்டேஷனை அவர் தொடங்கினார். ஆனால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அவரது கேஸ் ஸ்டேஷனை மூடியது.
என்ன செய்வது?
அவருக்கு கோழி இறைச்சி எனப்படும் சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும்.
தன்னிடமிருந்த பிரஷர் குக்கருடன் தனது 1946ம் வருட மாடல் ஃபோர்டு காரில் ஏறினார். தனது சிக்கன் தயாரிக்கும் விதத்தை ஊர் ஊராகச் சென்று காண்பித்தார். அதைப் பார்ப்பவர்கள் தனது உணவு விடுதியைத் தொடங்குவார்களா என்று பார்த்தார்.
ஊஹூம், ஒருவருக்கும் ஆர்வம் இல்லை.
ஒருவர் அல்ல, இருவர் அல்ல, 1009 பேர்களை அவர் பார்த்தார். அனைவரும் அவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டனர்.
1010ம் நபரை அவர் பார்த்தார். அந்த நபர் சரி என்றார்.
உடனே வியாபாரம் தொடங்கியது. கெண்டுகி ஃப்ரைட் சிக்கன் (Kentucky Fried Chicken – KFC) என்ற தனது உணவு விடுதியை அவர் தொடங்கினார்.
தனது 73ம் வயதில் நாடெங்கும் 600 கிளைகளை அவர் திறந்திருந்தார்.
அவர் மரணமடையும் போது 48 நாடுகளில் கே எஃப் சி என்று பிரபலமான அவரது உணவுவிடுதி ஒரு ஆண்டிற்கு 200 கோடி டாலர் விற்பனையைச் செய்து சாதித்தது.
1890ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி பிறந்த அவர் 1980ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மறைந்தார். அப்போது அவருக்கு வயது 90. ல்யூகேமியா வியாதியால் பாதிக்கப்பட்ட அவர் தான் மறைவதற்கு ஒரு மாதம் முன்னர் வரை மிகவும் சுறுசுறுப்பாக தனக்கே உரித்தான வெள்ளை உடையை அணிந்து கூட்டங்களில் கலந்து கொண்டார்.
அவரது இறுதிச் சடங்கில் 500 பேர்கள் கலந்து கொண்டனர். அவரது உடல் அனைவரின் பார்வைக்காகவும் கே எஃப் சியின் தலைமையகம் இருந்த லூயிஸ்வில்லியில் வைக்கப்பட்டது. அவரது மனைவியான க்ளாடியா தனது 94ம் வயதில் 1996, டிசம்பர் மாதம் 31ம் தேதி மறைந்தார்.
சாண்டர்ஸின் வெற்றிக்குக் காரணம் என்ன? அதிர்ஷ்டமா, கடினமான முயற்சியா? 1009 முறை அவருக்குத் தோல்வி வழங்கி 1010ம் முறை வெற்றியைத் தந்தது அவரது விடா முயற்சியா, அல்லது அதிர்ஷ்டமா?
இதைப் பற்றிய விவாதம் இன்றும் தொடரத்தான் செய்கிறது.