ஒட்டக்கூத்தர் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,160)

TWO TAMIL FILMS PORTRAY TAMIL POET OTTAKKUTHAR.

Written by London Swaminathan

Post No. 16,160

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PProject Madurai website has full story of Ottakkuthar

1

ஒட்டக்கூத்தர் யார் ? எப்போது வாழ்ந்தார் ?

2

ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று மஹாராணி சொன்னது ஏன்?

3

அவர் எழுதிய நூல்களின் பெயர் என்ன ?

4

ஒட்டக்கூத்தர் எழுப்பிய கோயில் எங்கே உள்ளது ?

5

நெய்த்தானத்திலுள்ள சிவபெருமானைப் போற்றி இவர் பாடிய பிரபல பாடலின் வரிகள் என்ன ?

6

இவர் பாடிய வேறு நூல்கள்  யாரைப் பற்றியவை?

7

ஒட்டக்கூத்தருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்துக்கும் என்ன சம்பந்தம் ?

8

இந்தப் புலவர் இலக்கணப் பிழைகள் செய்த போலிக் புலவர்களைக் கண்டித்தார் என்பதற்கு ஆதாரம் என்ன ?

9

தவறான புலவர்களின் குடுமியை முடிந்து அவர்களை ஒட்டக்கூத்தன் வாட்டி வதைத்தான் என்பதை படிக்காசுப்  புலவர் எப்படிக்   குறிப்பிட்டார் ?

10.

ஒட்டக்கூத்தர் “ஈட்டி எழுபது” என்னும் நூலைப் பாடினாரா?

*********************

விடைகள்

1.விக்கிரம சோழன்இரண்டாம் குலோத்துங்க சோழன்இரண்டாம் இராசராச சோழன் ஆகிய சோழப் பெருமன்னர் மூவர் காலத்திலும் ஒட்டக்கூத்தர் அவர்கட்குக் கல்வி கற்பித்த ஆசிரியராய்ப் பின் அரண்மனைப் புலவராய் இறுதியில் ஞானாசிரியராய் விளங்கித் தம் தொண்ணுற்றேழாவது வயதில் சிவகதி அடைந்த்தார். கூத்தரின் பிறப்பிடம் மலரி என்றும் சீர்காழியென்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன;  காலம் 12 ஆம் நூற்றாண்டு. ஒட்டக்கூத்தர் கைக்கோளார் என்று கூறப்படும் செங்குந்தர் மரபில் தோன்றியவர். சைவ சமயத்தவர்; சக்தி வழிபாட்டில் நாட்டம் மிக்கவர்; தம் நூல்களில் திருமாலைப் பற்றிய பெருமைகளைக் கூறி வணங்குதலால், சமயப் பொதுமை உடையவர்;சிறந்த முருகபக்தர். தக்கயாகப் பரணியில் கோயில் பாடியது என்ற பகுதியில் திருஞானசம்பந்தர் வரலாறு காணப்படுகின்றது. இங்கே திருஞானசம்பந்தரை முருகப் பெருமானாகவே கூத்தர் காட்டுகின்றார்.

***

2.பாண்டிய நாட்டின் இளவரசியாயிருந்துபின் குலோத்துங்க சோழனின் மனைவியான சோழ நாட்டின் மஹாராணி, தன்னுடன் சீதனமாக பாண்டிய நாட்டிலிருந்து சோழ நாட்டிற்கு வந்திருந்த தனது ஆசானும், அருந்தமிழ்ப் புலவருமான புகழேந்தியை ஒட்டக்கூத்தர் எவ்விதக் காரணமுமின்றிச் சிறையிலடைத்த விவரம் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்தாள். அவள் குலோத்துங்கன் தன்னைக் காண அந்தப்புரத்திற்கு வருகையில் கதவைத் தாளிட்டுக்கொண்டு திறக்க மறுத்துவிட்டாள். உடனே  குலோத்துங்கன் தன் ஆசானும் அவைக்களப் புலவருமான ஒட்டக்கூத்தரைத் தூதனுப்பினான்.

ஒட்டக்கூத்தர் அரசியின் அறை வாயிலில் வந்து நின்று,  ஒரு பாட்டுப்பாடி கதவைத் திறந்து விடுங்கள் மஹாராணி என்றார் ; இந்தப் புலவர்தானே எனது குருவாகிய புகழேந்திப் புலவரைச் சிறையில் அடைத்தவர் என்று மேலும் கோபமுற்று இரண்டாவது தாழ்ப்பாளையும் போட்டாள்; உடனே ஊர் முழுதும் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற செய்தி பரவியது; பின்னர் மன்னன், புகழேந்திப் புலவரை விடுதலை செய்தான் 

3.எழுதிய நூல்கள் மூவருலா (விக்கிரமசோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசசோழன் உலா), குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கயாகப்பரணி, உத்தர காண்டம் .

***

4.கூத்தனூரில் இவர் சரஸ்வதி தேவிக்கு எழுப்பிய கோயில் இருக்கிறது; பல கோயில்களில் சரஸ்வதிக்குச் சந்நிதி இருந்தாலும் தமிழ்நாட்டில் கலைமகளுக்கு நிறுவப்பட்ட தனிக்கோயில் இது ஒன்றுதான்.

***

5.நெய்த்தானப் பெருமானை ஒட்டக்கூத்தர் பாடியதாகப் பின்வரும் செய்யுள் தனிப்பாடல் திரட்டில் காணப் படுகின்றது. இப் பாடலில் அமைந்துள்ள அரிய பொருள், வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.

விக்கா வுக்கா வித்தா விப்போய்

விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்

இக்காயத்தா சைப்பா டுற்றே

இற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர்

அக்காடப் பேய் தொக்கா டச்சூ

ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்

கெக்கா டக்கா னத்தா டப்போம்

நெய்த்தா னத்தா னைச்சே வித்தே. [87]

பொருள் :

“விக்கித் தளர்ந்து உயிர் உடலை விட்டுப்போய் விட்டால், உறவினர் பிணத்தைத் தகனஞ் செய்துவிட்டு ஊர்க்குள் போய்விடுவர். இத்தகைய இயல்புடைய உடம்பில் பற்றுவைத்து, செல்வத்தைத் தேடிச் சம்பாதித்து வீட்டிற்கொண்டு வைக்கின்றவர்களே! தாம் அணிந் திருக்கும் எலும்பு மாலை அசையும் பேய்கள் ஒருங்குகூடிக் கூத்தாடவும், சடையிற் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும், திருக்கைகளில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு அசையவும், அச் சுடுகாட்டினிடத்தில் நடனஞ் செய்கின்ற அந்தப் பெருமை பொருந்திய நெய்த்தான மென்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு நிலையான கதியைப் பெறுவீராக.”

***

6.விக்கிரமசோழன் உலா- விக்கிரம சோழனைப் புகழும் நூல்;

குலோத்துங்க சோழன் உலா: இது, இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாவது சிறப்பான நூலாகும்.

இராசராசன் உலா: இது, மூன்றாவது உலாவாகும். பிரமன் தொடங்கி இரண்டாம் இராசராசன் வரை உள்ள வரலாறு உள்ளது ; இவ்வுலாவிற்கு, இம்மன்னன், கண்ணி தோறும் ஆயிரம் பொன் சொரிந்ததாகச் சங்கர சோழனுலா கூறுகிறது.

தக்கயாகப்பரணி:  இதுவும் இராசராசனைச் சிறப்பித்து எழுதப்பட்டது. பண்டைய பரணி நூல்களில் கலிங்கத்துப்பரணிக்கு அடுத்த பழமையும் சிறப்பும் உடையது இந்நூல்.

உத்தரகாண்டம்: இராமர் பட்டம் சூட்டிக் கொள்வதுடன் இராமாயணம் முடிவுறும். அதன் பின்பு நடந்த செய்திகளைக் கூறுவது உத்தர ராமாயணம். இது, ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டது 

***

7.ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர் என்றும், அம்பலக்கூத்தர் என்றும், ஆனந்தக் கூத்தர் என்றும் குறிப்பர் ஒரு சாரார்.

டாக்டர் மு. வரதராசனார் எழுதிய  ‘தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் ஒட்டக்கூத்தர் பெயர்க்காரணம் பின்வருமாறு சுட்டப் படுகின்றது

“அவர் (ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டோடு பெற்றிருந்த தொடர்பு காரணமாக ஒட்ட (ஒரிசா நாட்டு) என்ற அடையுடன் ஒட்டக்கூத்தர் என வழங்கப் பெற்றார் முதற் குலோத்துங்கனின் கலிங்க வெற்றிக்குப் பிறகு, தமிழர் கலிங்க நாட்டோடு – ஒரிசாவோடு– நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடும். எனவே அம்முறையில் சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராகவும், ஆசிரியராகவும், இலக்கியச் செம்மலாகவும் விளங்கிய ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டிற்குப் பன்முறை சென்று வந்திருக்கலாம். அதுவும் அரசியற் பணியின் பொருட்டுச் சென்று வந்திருக்கலாம். இக்காரணம் பற்றி இவர் ‘ஒட்டக்கூத்தர்’ என்று அழைக்கப்பட்டார்.–[88]. தமிழ் இலக்கிய வரலாறு பக். 157.

***

8.பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே

தாட்டுக் கடற்புலி யஞ்சலன் றோவறுத் துக்கிடந்த

சூட்டுக் கதிர்க ணிலத்தடங்கா மற் றொகுத்துமள்ளர்

மேட்டுக் குவாலிடும் பொன்னிநன் னாடுடை வேற்கண்டனே.

என்னும் பாடல் தமிழ் நாவலர் சரிதையிற் [94] காணப்படுகின்றது. இப் பாடலின் கொளு, ‘அது கவிகளை அறுத்த போது புலவரெல்லாம் வெகுள, ஒட்டக்கூத்தர் பாடியது’ என்று அமைந்துள்ளது.

***

9.தனிப்பாடல் திரட்டில் ‘பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் பாடியது’ என்ற தலைப்பில் கீழ்க்காணும் பாடல் காணப்படுகின்றது.

குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னிங்கில்லைக்

குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி

எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை

இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு

வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை

விளையாட்டாக் கவிதைகளை விரைந்துபாடித்

தெட்டுதற்கோ வறிவில்லாத் துரைகளுண்டு

தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே. [98]

‘போலிப் புலவர்களைப் பற்றிப் பாடியது’ என்ற தலைப்பில் இப்பாடல் அமைந்துள்ளது.

***

10.அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை,  “அவர் (ஒட்டக்கூத்தர்) அம்மரபின் (செங்குந்தர் மரபு) பெருமை விளங்க ஈட்டியெழுபது என்னும் நூலினைப் பாடியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிஞர். மு. இராகவையங்கார் அவர்கள், “இப்புலவர் (ஒட்டக்கூத்தர்) பாடிய நூல்களிலே ஈட்டியெழுபது என்பதும் ஒன்று. இஃது இவரது குலப் பெருமைகளையெல்லாம் கம்பீரமாக விளக்குவது.” என்று குறிப்பிடுவர்.

–Subham—

Tags- ஒட்டக்கூத்தர் பாடல்,  10 கேள்விகள் , ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

World Wonder -99 Flowers! Kapilar imitated Kalidasa!  Purananuru wonders-62; Tamil Encyclopaedia 102(Post.16,159)

Written by London Swaminathan

Post No. 16,159

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-62; Tamil Encyclopaedia 102, One Thousand Interesting Facts -Part 102

The next book we are going to see is Kurinchip Pattu (pronunciation- kurinjip paattu), one of the Ten Idylls ( Paththup Paattu) in Sangam Tamil Literature. It is a 261 lines long poem. It is a love poem. Kurichip pattu means mountain song; Tamils called the mountain landscape as Kurinchi; Kurinchi  is the name of a plant and its flowers blossom once in 12 years. Kurinchi blossom itself is a natural wonder. Tamils visit Nilgris and Kodaikanal to see the once in 12 year flowering.

Subject of the poem

A mother sees her daughter pine away day by day and is distressed, not knowing the causes. She consults soothsayers and makes offerings to gods for her daughter’s cure. A girl friend of the maiden knows the real cause and keeps it a secret. The girl fell in love with a man she met in the millet field. The poem described the meeting of the hero and the heroine in the natural surroundings.

***

 First, let me list the wonders in it:

It was written by the Brahmin poet KAPILAR who contributed highest number of poems to Sangam Tamil Literature;

He changed the mind of a North Indian Musician who criticised Tamil language and made him a Tamil poet!

To impress him Kapilar imitated Kalidasa’s poems; Rev G U Pope said that the poem was an imitation of Kalidasa, whose Rtu Samharam and Sakuntalam have beautiful description of Nature.

Biggest wonder is Kapilar listed 99 flowers at one go; it is not found in any other literature.

Reference to Sun God with a Chariot pulled by Seven Horses, worship of many gods; belief in rebirth;

Reference to the custom of Tamil women arranging their hair into five separate braids; it is seen in some parts of Burma and Iraq; in the absence of any painting or sculptures some scholars think it is five different hair styles.

***

Item 872 –Flower Wonder

The biggest wonder in Kurinchip Paattu is the list of 99 flowers at one go! Though Kalidasa, a Pre-Sangam Age poet and Valmiki also used as many flowers but not in one place in a poem.

Few of the flowers have Sanskrit names and few of the flowers are not satisfactorily identified; yet it shows the interest and  knowledge of botany in Sangam Age.

Following is the list: Lines 61- 98

பாறையில் மலர் குவித்த பாவையர்

———– ———— ———– வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,  65
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,   70
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,   75
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை   80
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,   85
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி,   90
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும்,   95
அரக்கு விரித்தன்ன பரு ஏர் அம் புழகுடன்
மால் அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல் அறைக் குவைஇப், (61-98)

Collecting flowers and placing them on boulders

Attracted to the flowers that were
there, with desire,
we collected the flowers of red
kānthal with thick leaves, white āmpal,
delicate anichamkuvalai from cool
ponds, kurinji, vetchi, chenkoduvēri,
sweet mango, manichikai, unthoozh with
fragrant clusters of flowers, koovilam,
flame-like erulam, sulli, kooviram,
vadavanam, vākai, kudasam with white
flowers, eruvai, seruvilai, and
karuvilai with gem-colored flowers,
payini, vāni, kuravam with many clusters
of flowers, pasumpidi, vakulam, kāyā with
many clusters of flowers, āvirai with open
blossoms, vēral, sooral, small poolai,
small and fragrant kanni, kurukilai,
marutham, kōngam with open blossoms,
pōngam, thilakam, honey-fragrant pāthiri,
cherunthi, athiral, large cool chenbakam,
karanthai, kulavi, flourishing
fragrant mango, thillai, pālai, mullai
that has spread on rocks, kullai, pidavam,
siru mārōdam, banana, vallineythal flowers
with long stems, coconut, thalavam, lotus
with thorns on its stems, gnāzhal, wild
jasmine, cool fragrant kokudisedal,
chemmal
, small chengurali, kōdal, kaithai,
mature naruvalai, kānji, sapphire-colored
clusters of neythal flowers, pānkar, marām,
thanakkam with clusters, eengai, ilavam,
kondrai, adampu, perfect
āthi, avarai with long vines, pakandrai,
palāsam, pindi 
with clusters of blossoms,
vanji, large pithikam, sinthuvāram, thumpai,
thulāi, flame-like thōndri, nanthi, naravam,
fragrant punnākam, pāram, peeram, fresh
kurukkathi, āram, kāzhvai, fragrant punnai,
narantham, nākam, nallirul nāri, kuruntham,
vēngai and vermilion-hued thick, beautiful, red,
wild puzhaku, that were washed by the
rains, and piled them on a wide, clean boulder.

(Translation of Vaidehi Herbert is used; thanks)

My comments:

Anicham is not identified but guessed what it was; now not seen in any part of the world. Many of the flowers are not seen in other books of Sangam literature. Few are from Sanskrit literature that existed before Sangam Age.

***

Item 873 -New Poet Made

Yaaz Brahma Dutt was a North Indian musician and Aryan chieftain, who was an expert in playing Yaaz (lyre, lute); he criticised Tamil language. Kapilar being a Brahmin , taught him Tamil via Sanskrit. He impressed him and in course of time Yaaz Brahma Dutt became a Tamil Poet! That Brahma Dutt composed a poem in Tamil and, compilers included it in the Sangam corpus (see Kuruntokai 184)! This is really a wonder because within a short time a poet was created in the language which he was not speaking.

***




Item 874 -Many Gods Worship

Lines 1 to 8 give vital information about Hindu religion followed by the Sangam Age Tamils 2000 years ago. A friend of a women was consoling a mother whose daughter was love sick. That friend said that the mother worshipped MANY DIFFERENT GODS using flowers and fragrant materials. This is a severe blow to Anti Hindu Dravidians who projected Tamils as a No Faith Gang!

Using soothsayers is also mentioned.

***

Item 875 Rebirth

Lines 23 to 26 show Tamil girl’s strong belief in REBIRTH

 Heroine worries about her parent’s mis understanding of her ‘sickness’ and says “if I can’t get him as my husband in this birth I will get him in my next birth”.

There is a golden saying as well; if jewels are broken, they can be repaired, but if one’s character is ruined , cannot be set right.

***

Item 876 – Another Wordsworth

Kapilar described the beautiful Kurinchi landscape in lines 31- 61, that is before listing the 99 flowers.  The girl/heroine said where and when she fell in love. That was the place full of birds, waterfalls, bathing in crystal clear water etc. here we are reminded of William Wordsworth and his Daffodils!

***

Item 877 -Film Director of Indian Love Films!

107-127 a handsome man appeared

Here Kapilar, like a Tamil or Hindi film director , suddenly introduces appearance of some big hounds. When the girls got scared, the owner of the hounds appear and pacify the scared ladies and use the opportunity to talk to them and praise their beautiful faces. He asked whether they (heroine and her friends) saw the animal that escaped from him. He controlled the barking hunting dogs.

Another scene is introduced now . an angry elephant entered the fields to eat the millets. The girls ran towards the young man hugged him. He gave him full protection and praised girl, who is the heroine of the poem. Then, his country with natural spots is described.

***

Item 878

Dances -Lines 186-199

Here we come across different dances. Dancing girls’ rope walking adventures is mentioned.

Poet compared the peacock to the dancing girl who did rope walking- line 194.

Young man’s promise to marry that girl and provide wedding feast;

Sun riding a chariot with seven horses Line 215 ; mountain god’s worship;

Love at first sight; Meetings of lovers were  done more often;

Heroine worried about the safety of her lover b coming via forest route;

Delay in marriage made her lovesick.

***

Item 879 Peacocks drink Liquor!

People indulged in ‘honey sweet toddy’. The peacocks too drank it, only they drank the home made variety, mistaking it for water.

***

Item 880- Water used for swearing.

Hindus use water while giving away donations. They also use water for making promises or taking oaths. Here is an interesting reference to the custom of swearing  with water taken in hand by the one who makes the oath. Lines 210-213

****

Item 881 Nineteen Sanskrit words!

J V Chelliah (year 1946) says, “There are 261 lines in the poem, containing 1440 words of which 22 are not Tamil words. Nineteen are of Sanskrit origin, four are common to Tamil and Sanskrit and three are provincial words”.

My comments: even among the 99 flowers there are Sanskrit names; few examples Asoka, Palaasam, Tilakam, Bahulam (Vakulam) etc.

Apart from these wonders usual things like Nagaratna (cobra Jewel) in/ line 221, women lighting lamps in the evening, brahmins performing religious rites/ line 223, worship of Lord Muruga/Skanda, Gods residing caves, feast, pearl from elephant tusk/ line 36, body of women like flowers and birds are also mentioned.

To be continued……………………

Tags –  Kurichippattu, Kapilar, 99 flowers, Yaz Brahmdutt, Kalidas, Purananuru wonders-62; Tamil Encyclopaedia 102, One Thousand Interesting Facts -Part 102

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108 (Post16,158)

Written by London Swaminathan

Post No. 16,158

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version posted already.

துளசிதாஸ்

கோஸ்வாமி துளசிதாஸ் இயற்றிய Tulsidas (1543?–1623) ஹிந்தி மொழி ராமாயணம் வட இந்தியா முழுதும் பிரபலமான புனித நூலாகும்; அதன் பெயர் ராம சரித மானஸ் (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa),  துளசிதாஸ், உத்தர பிரதேசத்தில் ராஜாப்பூரில் பிறந்து காசியில் முக்தி அடைந்தார் அவர் இயற்றிய ஹனுமான் சாலிசா துதியை வட இந்தியக் குழந்தைகள் மனப்பாடமாகச்  சொல்லுவார்கள். எழுத்தறிவு இல்லா தோ ருக்கும் துளசிதாஸரின் இராமாயண வசனங்கள் அத்துபடி. அவர் வாழ்வும் தியாகராஜ சுவாமிகள் வாழ்வினைப்போல அற்புதங்கள் நிறைந்தது ; கம்ப ராமாயணப் பாடல் தெரியாத தமிழர் உண்டு; ஆனால் துளசி ராமாயணம் தெரியாதோர் வடக்கில் இல்லை.

***

தொல்காப்பியர்


(இவரைப் பற்றி இதே பிளாக்கில் நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி அதைப் புஸ்தகமாகவும் வெளியிட்டுவிட்டேன்; ஆகையால் புல்லட் பாயிண்டில் சொல்கிறேன் ).

தமிழில் கிடைக்கும் நூல்களில் இவர் எழுதிய தொல்காப்பியமே மிகவும் பழமையானது என்று பெரும்பாலோர் நம்புகிறார்கள். இவரைப் பற்றியோ நூல் பற்றியோ சங்க இலக்கியத்தில் 30,000 வரிகளில் ஒரு வார்த்தையும் இல்லை. ஆனால் இரண்டு தகவல்களை  இலக்கிய முன்னோர்கள் விட்டுச் சென்றனர் . இவருடைய வகுப்பறை மாணவர் பனம்பாரனார் ,தொல்காப்பிய நூலுக்கு பாயிரம் (முன்னுரை) வழங்கியுள்ளார்; அதில் இந்த தொல்காப்பியர் அதங்கோடு என்னும் ஊரிலுள்ள நான்கு வேதம் படித்த (பார்ப்பன) ஆசார்யாரிடம் சர்ட்டிபிகேட் வாங்கினார், நிலந்தரு திருவில் பாண்டியன் அவையில் அரங்கேற்றினார் என்று எழுதியுள்ளார் இன்னொரு தகவலை மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர், 700 ஆண்டுகளுக்கு  முன்னர் எழுதிவைத்துள்ளார் தொல்காப்பியரின் பெயர் த்ருணதூமாக்கினி என்றும் அவர் அகஸ்தியரின் மாணாக்கர் என்றும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாபமிடும் அளவுக்கு மோதல் ஏற்பட்டது என்றும் எழுதியுள்ளார் . இது ஒரு சில்லறை விஷயத்தில் நடந்த தகராறு ! அகஸ்தியரின் மனைவி லோபாமுத்ரா; அவர் மத்தியப்பிரதேச இளவரஸி ; அவரை அழைத்துவரத் தொல்காப்பியரை அனுப்பினார்; மதுரைக்கு அருகில் வந்தபோது வைகை நதி வெள்ளப்பெருக்கோடு ஓடியது. மாற்றான் மனைவியைத் தொடவும் கூடாது, பக்கத்தில் நெருங்கவும் கூடாது என்பதால் ஒரு கம்பினை எடுத்து நீ ஒரு பக்கம் பிடி; நான் எதிர்ப்புறத்தைப் பிடிக்கிறேன் என்று கடந்து வந்தனர். இதை அகஸ்தியர் அறிந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது ; சாபத்தில் முடிந்தது என்பது நச்சினார்க்கினியர் சொல்லும் கதை . இதை நம்புவோருக்கு ஒரு நற்செய்தியும் உள்ளது அகஸ்தியர்- லோபாமுத்ரா தம்பதிகளை ரிக்வேதம் சொல்லுவதால் தமிழும் ரிக்வேதம் போல 6000 ஆண்டுப் பழமை உடைத்து . உண்மையில் அதைப் பார்ப்பான் நச்சினார்க்கினியர் அப்படியே நம்பியது ராவணன் – பாண்டியன் சமாதான உடன்படிக்கைக் கதையிலும் உறுதியாகிறது; ராமன் எவ்வளவு பழமையோ பாண்டியர்களும் அவ்வளவு பழமை உடையவர்கள் என்பது நச்சி. யின் நம்பிக்கை. தொல்காப்பியர் காப்பியக்குடி என்னும் கோத்திரத்தில் தோன்றியவர்; இவர் பிராமணர் அல்ல என்று காட்டும்வகையில், இந்து விரோத திராவிடர்கள், இவருக்கு மீசை வைத்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய படமும் வரைந்து, வெளியிட்டுப் பரப்பி வருகின்றனர் ! காப்பியக்குடி உசனஸ் கவி என்பவர்தான் கவிகளின் மூல கர்த்தா. அதிலிருந்துதான் கவிகவிதைகாவ்யம் என்ற சொற்கள் பிறந்தன; பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவும் கவிகளில் நான் உசனஸ் என்று சொல்கிறார் அந்தக் கவி, ரிக் வேத காலத்தின் மிக மூத்த கவிஞன்.

தொல்காப்பிய பாயிரம்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்

புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

தொல்காப்பியம் எழுத்துசொல்பொருள் என்ற மூன்று அதிகாரங்களை உடைத்து ; ஒவ்வொன்றிலும் ஒன்பது அத்தியாயங்கள் (இயல்கள்) . சுமார் 1612 சூத்திரங்கள் உள்ளன

இதன் காலமும் நூலாசிரியர் காலமும் பெரும் வாதப்பிரதிவாதங்களில் சிக்கியுள்ளது. தமிழ் வெறியர்கள் இதை 20,000 ஆண்டுப் பழையது என்றும் தமிழ்ப்  பிரியர்கள்  இது  2000 அல்லது 2300 ஆண்டு பழமையானது என்றும் கருதுகிறார்கள். மொழியியல் ஆய்வின்படி பொருள் அதிகாரம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது தெரிகிறது; மனு தர்மம் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள், பரத முனி சொல்லும் எட்டு வகை ரசங்களை இவர் கிளிப்பிள்ளை போல் சொல்வதும் வேத கால வருணனையும் இந்திரனையும் தமிழர் தெய்வங்கள் என்று சொல்லிவிட்டு சிவ பெருமானை அடியோடு மறந்ததும்  (மறைத்ததும்) பலருடைய புருவங்களை உயர்த்துகின்றன . (என்னுடைய கருத்து:– அதிகாரம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் இருப்பதால் திருக்குறள், சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம் ஆகியன ஐந்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை; தொல்காப்பியத்தில் என்மனார் புலவர் என்ற தொனி  200, 300 இடங்களில் வருவதால் தொல்காப்பியர் காலம் வேறு,  நூலின் காலம் வேறு என்பது தெரிகிறது- இது என் கருத்து )

***

திருவாசகம்

நால்வரில் – அதாவது நான்கு பெரியார்களின் ஒருவரான மாணிக்கவாசகர் பாடி அருளிய நூல்; இதைத் தவிர திருக்கோவையார் என்ற நூலினையும் யாத்தார் .திருவாசகம் நூலிலுள்ள சிவபுராணம் பகுதியும்  திருவெம்பாவைப் பகுதியும் மிகவும் பயிலப்படுபவை.  இவைகளோடு 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது ஆன்றோர் வாக்கு. பன்னிரு திருமுறைகள் என்ற 12 நூல் தொகுப்பில், இது எட்டாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது . மாணிக்கவாசகர் என்ற தலைப்பில் மேல் விவரம் காண்க .

***

திருமுறை – தேவாரம் என்ற தலைப்பில் விவரம் காண்க ; முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும் .

பன்னிரு திருமுறைகள் விவரம்

1, 2, 3 திருமுறைகள்: திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்.

4, 5, 6 திருமுறைகள்: திருநாவுக்கரசர் (அப்பர்) தேவாரப் பாடல்கள்.

7ஆம் திருமுறை: சுந்தரர் தேவாரப் பாடல்கள்.

8ஆம் திருமுறை: மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.

9ஆம் திருமுறை: திருவிசைப்பா மற்றும் திருப்பல்லாண்டு (ஒன்பது புலவர்கள்).

10ஆம் திருமுறை: திருமூலரின் திருமந்திரம்.

11ஆம் திருமுறை: காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட பல புலவர்களின் பிரபந்தங்கள்.

12ஆம் திருமுறை: சேக்கிழாரின் பெரியபுராணம்.

***

திருமூலர் – திருமந்திரம்

திருமூலர் என்ற பெரிய சித்தர் எழுதிய நூல் திருமந்திரம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களில் ஒருவராகவும் 18 சித்தர்களில் ஒருவராகவும் இடம்பெறுகிறார் இவர் காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்த சைவர் என்று கருதப்படுகிறது . இவருடைய தமிழ் நடையும் 3000 பாடல்களில் உள்ள விஷயங்களும் இவரை வெளி மாநிலத்தவர் என்பதையும் காலத்தால் பிந்தியவர் என்றும் சைவ – சாக்த- வேதாந்த கலப்பட நம்பிக்கையை உள்ளவர் என்பதையும் காட்டுகிறது . திருவாவடுதுறை என்ற ஊருக்கு வந்த பொழுது ஒரு பசுமாட்டு இடையன் திடீரென்று இறந்தவுடன், அஷ்ட மா சித்திகளில் பரகாயப்ரவேசம் என்ற சித்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்து பசுக்களை மகிழ்வித்தார் . பின்னர் அந்த ஊரிலேயே சமாதி அடைந்தார் . திருவாவடுதுறை சிவன் கோவிலில் அவருடைய சமாதி உள்ளது .

திருமந்திரப் பாடல்களில் சக்தி வழிபாடு, அஹம் பிராம்மாஸ்மி போன்ற வேதாந்தக் கருத்துக்கள், பசு-பதி- பாசம் என்ற சைவ சித்தாந்த கருத்துக்கள் , மந்திரம், தந்திரம், யந்திரம் என்ற சுவையான அவியலைக் காணலாம் ( என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள்  இதே பிளாக்கில் உள்ளன ; புஸ்தகமாகவும் கிடைக்கும்). யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இவருடைய பாலிசி . தேவாரம் திருவாசகம் சொல்லாத சிவலிங்கம் போன்ற விஷயங்கள் இருப்பதால் இவரை எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாராண்டில் வைக்கலாம்.

***

திரு வள்ளுவர் – திருக்குறள்

திரு வள்ளுவர் எழுதிய  திருக்குறள் பாரத நாடு உலகிற்கு  வழங்கிய நன்கொடைகளில் ஒன்றாகும் . இரண்டே வரிகளில் அரிய, பெரிய இந்து மதக் கருத்துக்களை ஜூஸ் பிழிந்து தருகிறார். இந்து மத நூல்களில் அடிக்கடி கூறப்படும் தர்ம அர்த்த காமம் என்பதையே தன் நூலுக்கும் பெயர் சூட்டினார் அறம், பொருள், இன்பம் என்று அவற்றை மொழிபெயர்த்து மூன்று பிரிவுகளில் 1330 குறட்பாக்களாக உலகத்துக்கு வழங்கினார் .

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு — என்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது எவ்வளவு பெரிய உண்மை என்பது திருக்குறளை படிப்போருக்கு விளங்கும்

இந்திரன், கிருஷ்ணன், வாமனாவதாரம், லெட்சுமி, யமன், பிரம்மா,  சிவபெருமான் விஷம் குடித்தது முதலிய இந்து தெய்வங்களை மட்டும் பயன்படுத்துகிறார். பஞ்ச தந்திரக்கதைகள் , மனு ஸ்ம்ருதி, பகவத் கீதை அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களின் முக்கிய பாக்களைக் கையாண்டுள்ளார் முதல் பத்து கடவுள் வாழ்த்துப் பாடல்களிலேயே ஏழு குறள்களில் இறைவனின் உருவத்தைக் குறிப்பிடுவதாலும் கொல்லாமையை அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்துவதாலும் இந்துக்களைத் தவிர வேறு எவருக்கும் பயன்படாத நூல் இது . நாஸ்தீகர்களை பேய் என்று திட்டுவதும், கஞ்சப்பயல்களின் கையை முறுக்கி குத்து, கரும்பு போலப்  பிழி என்று சொல்வதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலத்தில் இந்த நூலின் காமத்துப் பால் பகுதியைக் கண்டு கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர்கள் பயந்து போய்விட்டனர் அதை வெளிப்படுத்தினால் வள்ளுவன் பெயர்  ரிப்ப்பேர் ஆகி விடும்மானம் விமானத்தில் பறந்துவிடும்,  திருக்குறளின் கதி சகதி ஆகிவிடும் என்று எண்ணி அதை மொழிபெயர்க்கவில்லை ; உலகில் இந்து மதம் ஒன்று மட்டுமே காமத்தையும் தர்ம -அர்த்த- காம- மோட்சம் என்ற நான்கில் வை த்திருப்பது அவர்களுக்குப் புரியாது; சுமார் 600 குறள்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள் இருப்பதால் இவர் தமிழையும்  ஸம்ஸ்க்ருதத்தையும் இரண்டு  கண்களாகப் போற்றிய பேரறிஞர் என்பதும் தெரிகிறது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான எல்லா புஸ்தகங்களிலும் இவர் உயர் வகுப்பு- கீழ்ஜாதி தம்பதியருக்கு அவ்வையாரோடு ஏழு சகோததர சகோதரிகளுடன் அவதரித்த கதை சுவையாக வருணிக்கப்பட்டுள்ளது இவருடைய காலம் மொழி இயல் ரீதியில் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரியவருகிறது; ஆனால் தமிழ் நாடு அரசு கி.மு 31 என்பதை ஒப்புக்கொண்டுள்ளது கிறிஸ்துவுடன் இவரைத் தொடர்பு படுத்தி கிறிஸ்தவப் பிரச்சாரகர்கள் பேசத் துவங்கியவுடன் அவர்களுக்கு ஆப்புவைக்க இந்த புதிய ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்து விரோத திராவிடர்கள் , வள்ளுவர் முகத்தில் இருந்த விபூதியை அழித்துப் புதிய படம் வெளியிட்டுள்ளனர் ; குறள்களுக்குப் புதிய வியாக்கியானமும் செய்துவருகின்றனர் ; பழங்காலத்தில் பத்துப் பேர் எழுதிய உரையில் ஐந்து உரைகள் மட்டுமே இப்பொழுது கிடைக்கிறது; அவர்களில் காஞ்சிபுர விஷ்ணு கோவில் பட்டர் பரிமேல் அழகர், 800 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய உரையே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

***

திரயம்பகேஸ்வரர்

சிவபெருமானின் பெயர்களில் ஒன்று; முக்கண்ணன் என்பது இதன் பொருள். புறநானூறு முதலிய நூல்களில் முக்கண்ணன் பற்றிய குறிப்புகள் உள்ளன . இதே பெயரில் சிவபெருமான், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார். அந்தத் தலம், ராமேஸ்வரம் முதல் இமயமலை வரை  இடம்பெற்றுள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்று  .

***

துருக்கி – துரகம்

சம்ஸ்க்ருத மொழியில் துரகம் என்றால் குதிரை. இது நிறைந்த நாடு என்பதால் அந்த நாட்டுக்குத் துருக்கி என்ற பெயர் ஏற்பட்டது . 3000  ஆண்டுகளுக்கு முன்னர் இந்துக்கள் நல்ல ஜாதிக் குதிரைகளைக் கொண்டுவந்து அந்த நாட்டில் பயிற்சி அளித்தனர். இபோது துலுக்க நாடாகத் திகழும் அந்த இடம் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் ஹிந்து பூமியாகத் திகழ்ந்தது. துருக்கியிலுள்ள போகஸ்கொய் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்துள்ள கல்வெட்டுகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள கட்டளைகளைக் குறிப்பிடுகிறது; அதை எழுதியவர் கிக்கூலி என்பவர் ஆவார் ; கல்வெட்டின் தேதி கி.மு.BCE 1350 . அவன், அருகிலுள்ள மிட்டன்னி  சாம்ராஜ்யத்திலிருந்து வந்தவன் ; இராக், சிரியா, துருக்கி, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளடக்கிய பகுதிகளை மிட்டன்னி அரசர்கள் ஆண்டார்கள். தசரதன், பிரதஸ்தனன்  முதலிய இந்து மன்னர்கள் ஆண்டதையும் கல்வெட்டு காட்டுகிறது. அத்தோடு வேதகாலத் தெய்வங்களை சொல்லி உடன்படிக்கை செய்த கல்வெட்டும் கிடைத்தது. இவையெல்லாம் மாக்ஸ்முல்லர் (1823-1900) செத்துப்போன பின்னர் கிடைத்தது. அவர் சொன்ன வேத காலம் தப்பு என்பதையும் நிரூபித்தது.

To be continued…………………

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 108; இந்து மத கலைச்சொல் அகராதி-108, துருக்கி, துரகம், துளசிதாஸ் திரு வள்ளுவர் ,திருக்குறள்,  தொல்காப்பியம் , தொல்காப்பியர்

ராமாயணத்தில் வரங்கள் 72  – சிவபிரான் அரக்கன் மதுவிற்கு வரம் அளித்தது! (Post.16,157)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,157

Date uploaded in London – 3 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 72  – சிவபிரான் அரக்கன் மதுவிற்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் அறுபத்தோராவது ஸர்க்கமாக அமைவது ‘லவணாஸுரனுடைய உபத்திரவத்தைத் தெரிவித்தல்’ என்னும் ஸர்க்கமாகும். ஒரு நாள் ஶ்ரீராமரைப் பார்க்க பல முனிவர்கள் பார்க்கவருடன் வந்திருந்தனர்.

பார்க்கவரை வரவேற்ற ஶ்ரீ ராமரிடம் அவர் லவணாஸுரனைப் பற்றியும் அவன் கொடுக்கும் தொல்லையையும் எடுத்துக் கூறி தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினார்.

அதைப் பற்றிய வரலாறை இந்த ஸர்க்கம் தெரிவிக்கிறது.

ஸ மதுவீர்யஸம்பன்னோ தர்மே ச சுசமாஹித: |                        பஹுமானஸ்ய ருத்ரேண தத்தஸ்தஸ்யாத்புதோ வர: ||

               உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 5

ஸ: – அந்த                                                                              மது: – மதுவானவன்                                                            வீர்யஸம்பன்ன: – வீரிய சம்பன்னன்                                           ச- அன்றியும்                                                                        தர்மே- தருமத்தில்                                                               சுசமாஹித: – ஊக்கம் கொண்டவன்                                                     தஸ்ய – அவனுக்கு                                                                                 ருத்ரேண ச- ருத்திரதேவராலேயே                                              பஹுமானாத் – அபிமானத்தால்                                                 அத்புத: – அற்புதமான                                                                     வர: – வரம் ஒன்று                                                              தத்த: – தந்தருளப்பட்டது

சூலம் சூலாத்வினிக்ருஷ்ய மஹாவீர்யே மஹாப்ரபம் |                              ததௌ மஹாத்மா சுமீதோ வாக்யம் சைதத்துவாச||                 

               உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 6

மஹாத்மா – மஹாத்மாவாகிய இவர்                                            சுமீத: – உபகாரகுணமுடையவராகி                                      சூலாத் – சிவபெருமானுடைய சூலத்திலிருந்து                             மஹாவீர்யே – சிறந்த வீரியம் உடையதும்                                          மஹாப்ரபம் – சிறந்த ஜோதியை உடையதுமான                                 சூலம் – சூலம் ஒன்றை                                                 வினிக்ருஷ்ய – பிரித்தெடுத்து                                                      ததௌ – சன்மானமாய்த் தந்தனர்.                                                             ச- அன்றியும்                                                                               ஏதத்- இந்த                                                                        வாக்யம் – வாக்கியத்தையும்                                                        உவாச – திருவாய் மலர்ந்தருளினார்                                                      ஹ – காண்!

த்வாயயமதுலோ தர்மோ மத்ப்ரசாதாத்க்ருத: சுப: |                                 ப்ரீத்யா பரமயா யுக்தோ ததாம்யாயுதமுத்தமம் ||

               உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 7

த்வயா – உன்னால்                                                        அயம் – இந்த                                                         தர்ம: – தர்மமானது                                                                   அதுல: -அத்வீதியமாய் அனுஷ்டிக்கப்பட்டது                                           மத்ப்ரசாதாத் – என் அனுக்கிரகத்தால்                                                சுப: – பாக்கியம் பெற்றதாய்                                                       க்ருத: – ஏற்பட்டு விட்டது பரமயா – அத்தியந்த ப்ரீத்யா – அபிமானத்தால் யுக்த: – அனுக்ரகம் செய்ய வேண்டியவனாகி                                உத்தமம் – உத்தமமான                                                    ஆயுதம் – ஆயுதத்தை                                                        ததாமி – சன்மானமாய் அளிக்கிறேன்

யாவத்சுரைஸ்ச விப்ரேஸ்ச ந விருத்யேர்மஹாசுர: |                       தாவஸ்சூலம் தவேதம் ஸ்யாதன்யதா நாஷமேஷ்யதி |

               உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 8

மஹாசுர: – ஹே, மஹா அசுரனே!                                        சுரை: ச – தேவர்களுடனும்                                                    விப்ரை: ச – பிராம்மணர்களுடனும்                                           யாவத் – எவ்வளவு காலம்                                                          ந விருத்யே – விரோதம் ஏற்படவில்லையோ                                                தாவத் – அதுவரை                                                     இதம் – இந்த                                                                  சூலம் – சூலம்                                                                        தவ – உன்னுடையதாக                                                             ஸ்யாத் – விளங்கும்                                                               அன்யதா – அப்படி இல்லாத பட்சத்தில்                                                     நாஷம் – கண்ணுக்குப் புலப்படாததாய்                                         ஏஷ்யதி – மறைந்து விடும்

யஸ்ச த்வாமபியுஜ்வீத யுத்தாய விகத்ஜ்வர: |                              தம் சூலோ பஸ்மசாத்க்ருத்வா புனரேஷ்யதி தே கரம் ||

               உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 9

ய: ச – “எவரேனும்                                                                 யுத்தாய – யுத்தத்தில்                                                            விகதஜ்வர: – பயமின்றி                                                               த்வாம் – உன்னை                                                             அபியுஜ்வீத – விழுந்து தாக்கினால்                                                    தம் – அவனை                                                                          சூல: – சூலமானது                                                         பஸ்மாசாத்க்ருத்வா – சாம்பலாக்கி                                                    தே – உனது                                                                கரம் – கையில்                                                             புன: – மறுபடியும்                                                               ஏஷ்யதி – வந்து சேரும்”

ஏவம் ருத்ராத்வரம் லப்த்வா பூய ஏவ மஹாசுர: |                                  ப்ரணிபத்ய மஹாதேவ்ம் வாக்யமேததுவாச ஹ ||     

               உத்தரகாண்டம், அறுபத்தோராவது ஸர்க்கம் ஸ்லோக எண் 10

மஹாசுர: – மஹா அசுரன்                                                            ருத்ராத் – சிவனிடமிருந்து                                                            ஏவம் – இவ்வாறு                                                                 வரம் – வரத்தை                                                                    லப்த்வா – பெற்ற பின்னர்                                                        பூய ஏவ – மறுபடியும்                                           மஹாதேவம் – மஹாதேவனை                                                 ப்ரணிபத்ய – பக்தியுடன் அடி பணிந்து நமஸ்கரித்து                                  ஏதத் – இந்த                                                                          வாக்யம் ஹ – வாக்யத்தையும்                                                 உவாச – மொழிந்தான்

சிவபிரானிடமிருந்து வரமாக சூலத்தைப் பெற்ற பின்னர் அரக்கனான மது இப்படி மேலும் மொழிந்தான்:

“தேவர்களுக்கும் தேவராய் இருக்கிறீர். ஆனபடியால் ஹே, பகவானே! இந்த இணையில்லாத சூலமானது எப்போதும் எனது வம்சத்துக்குரியதாய் இருக்க அனுக்ரகிக்க வேண்டும்.”

இதைக் கேட்ட சிவபிரான்,” இது இப்படி இருக்க முடியாது” என்று பதில் கூறி விட்டு மேலும் கூறினார்: “என்றபோதிலும் என் அனுக்ரகத்தால் விளைந்ததும் சிறந்ததுமான உன்னுடைய வேண்டுகோள் வீணானதாக ஆக வேண்டாம். உனது ஒரு புதல்வனை இந்த சூலமானது காத்துக் கிடக்கும். இந்த சூலமானது உனது ஒரு குமாரனுக்கு கையில் இருப்பதாய் இருக்கும். சூலத்தைக் கையிலேந்தியவனாய் எதுவரை இருக்கிறானோ அதுவரையில் எப்படிப்பட்ட பிராணிகளாலும் கொல்லப்பட முடியாதவனாக இருப்பான்.”

பின்னர் மது சிவனிடமிருந்து வரத்தைப் பெற்ற பின்னர் ஒரு சிறந்த மாளிகையை அமைத்துக் கொண்டான். அவனுக்கும் கும்பீனஸி என்பவளுக்கும் லவணன் என்ற மகன் பிறந்தான். அவன் கையில் சூலம் வந்தது. அவன் அனைவரையும் துன்புறுத்தலானான். அவனிடமிருந்து தம்மைப் பாதுகாக்க வேண்டி பார்க்கவரும் இதர முனிவர்களும் ஶ்ரீராமரிடம் வந்து முறையிட்டனர்.

இந்த வரம் சிவபிரானின் அபிமானத்தால் அரக்கன் மதுவிற்கு அளிக்கப்பட்ட வரமாகும்.

**

காளமேகப்புலவர் பாடல்களில்  10 கேள்விகள் (Post.16,156)

Written by London Swaminathan

Post No. 16,156

Date uploaded in London – 2 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Go to Project Madurai to get his 280 poems

1

பாக்கள் வகையில் காளமேகப் புலவரின் சிறப்புகள் என்ன ? கவிதைகளைத் தவிர ஏதெனும் நூல்களை எழுதினாரா ?

2

பிள்ளையாரையும் முருகப்பெருமானையும் இவர் கிண்டல் தொனியில் பாடிய பாடலின் வரிகள் என்ன ?

3

இவர் யாருடைய பக்தர்? எப்படிக் கவி மழை பொழிந்தார் ?

4

ஒரு விபச்சாரி  மேல்  காளமேகப் புலவர் பாடிய நகைச் சுவை பாடல் என்ன ?

5

திருமலை ராயன் பட்டினத்தை இவர் அழித்தது எப்படி ?

6

வைணவராக இருந்த இவரை சைவத்துக்கு தாவச் செய்த சம்பவம் எது?

7

புலவர்களை குரங்கு என்று எப்படிக் கவி பாடினார்?

8

சிவபெருமானைக் கேலி செய்வது  போலப் புகழ்ந்தது எப்படி?

9

நம் புலவர் ஒரு நொடியில் ஆயிரம் பாடல்களை எப்படிப்பாடினார்?

10

முற்றவும் கரவருக்க எழுத்துக்களே அமைந்து வருமாறு இயற்றுக’ என்று கேட்ட ஒருவருக்குச் சொல்லியது என்ன பாடல் ?

********************

விடைகள்

1.காளமேகப்புலவர் இரு பொருள் தரும் சிலேடைப் பாடல்களை பாடுவதில்வல்லவர் ; அவைகளில் பல புகழ்வது போல இகழ்வதாகவும் இகழ்வது போலப் புகழ்வதாகவும் இருக்கும் (நிந்தாஸ்துதி) . மேலும் ஒரு நொடியில், சொன்ன பொருளில் பாடும் வல்லமை படைத்த ஆசு கவி ஆவார் . அரிகண்டம் என்னும் பாடல் வகையைப் பாடி எதையும் அழிக்கும் வல்லமை படைத்தவர். காளமேகம் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார். மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூரில் பிறந்ததால் காளமேகம் என்று பெயர்; திருவரங்கத்தில் கோவில் பரிசாரகராக வேலை செய்தபொழுது காதல் வலையில் விழுந்தார். திருவானைக்கா உலாசரசுவதி மாலைபரப்பிரம்ம விளக்கம்சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.

****

2.(காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)

மூப்பான் மழுவும், முராரிதிருச் சக்கரமும்

பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? – மாப்பார்

வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!

எலி இழுத்துப் போகின்றது, ஏன்?         6

**

(முருகக் கடவுளைத் தரிசித்துப் பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;

ஒப்பரிய மாமன் உறிதிருடி; – சப்பைக்கால்

அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு

எண்ணும் பெருமை இவை..         7

****

3.இவர் பிறப்பில் வைணவர்; பின்னர் காதல் காரணமாக சைவராக மாறினார் ; காளிதாசன் காளியின் அருளைப்பெற்று கவிஞன் ஆனது போல இவர் அகிலாண்டேஸ்வரியின் அருளால் பாடல்களை பாடும் வல்லமை படைத்தார்.

****

4.(நாகைப்பட்டினம் தாசி ஒருத்தி பாடிய பாட்டைக் கேட்டு அப்பாட்டு இனிமையாய் இல்லாதபடியால் அவளைப் பழித்துப் பாடியது)

வாழ்த்து திருநாகை வாகுஆன தேவடியாள்

பாழ்த்த குரல்எடுத்துப் பாடினாள் – நேற்றுக்

கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண்டேன் என்று

பழுதைஎடுத்து ஓடிவந்தான் பார்.

***

5.காரைக்கால் பகுதியில், புலவர் அதிமதுரகவி அகம்பாவத்துடன் பல்லக்கில் சென்றதை இவர் வெறுப்புடன் கண்டார். பின்னர் அதிமதுரகவி பணிசெய்யும் திருமலைராயன் (1453 – 1468) சபையில் பாக்கள் வடிவில் நடந்த மோதல்கள் முற்றின ; ஆட்களையே கொல்லும் அரிகண்டம் பாடும்படி அவைப்புலவர் வலியுறுத்தினார் ; அரிக்கண்டம் என்ன எம கண்டமே பாடி உங்களை அவனிடம் அனுப்புகிறேன் என்று சொல்லிப் படவே அந்த ஊரில் மண்மாரி  ( மண் மழை) பெய்து ஊரே மணல் மேடிட்டது.

(திருமலைராயன் பட்டினத்தில் மண்மாரி பெய்யப் பாடியது)

செய்யாத செய்த திருமலைரா யன்வரையில்

அய்யா! அரனே! அரைநொடியில் – வெய்யதழல்

கண்மாரி யான்மதனைக் கட்டுஅழித்தால் போல்தீயோர்

மண்மாரி யால்அழிய வாட்டு.         193

(இதுவும் அது)

கோளர் இருக்கும்ஊர் கோள்கரவு கற்றஊர்

காளைகளாய் நின்று கதறும்ஊர் – நாளையே

விண்மாரி அற்று வெளுத்து மிகக்கறுத்து

மண்மாரி பெய்கஇந்த வான்.         194

****

6.வைணவராக இருந்த காளமேகப் புலவரை  சைவத்துக்கு தாவச் செய்த சம்பவம்

 வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோயிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார்.

****

7.கவி/ குரங்கு என்ற சிலேடைப்பாடல்

திருமலைராயன் (1453 – 1468) சபையில் தலைக்கனம்மிக்க புலவர்கள் நாங்கள் கவிராஜர்கள் என்று சொன்னார்கள்.

காளமேகம் உடனே கலகலவெனச் சிரித்தார். சிரித்தபடியே அவர்களை நோக்கிக்

கவிதையொன்றை உதிர்த்தார்.

வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே சாலப்

புவிராயர் போற்றும் புலவீர்காள் நீவிர்

கவிராயர் என்றிருந்தக்கால்.

சம்ஸ்க்ருதத்தில் கபி ( தமிழில் கவி என்று மாறும் பி=வி); குரங்கு என்று பொருள் .

நீங்கள் குரங்குகளா? குரங்குகள் என்றால் உங்களின் வாலெங்கே? நீளமான வயிறெங்கே? முன்னங்கால்கள்

எங்கே? உட்குழிந்திருக்கும் கண்கள் எங்கே? நீங்கள் குரங்குத் தலைவர்களென்றால் இவையெல்லாம் இருக்கவேண்டுமே என்று ஏளனமாகப் பாடினார்.

****

8.(தில்லை நடராசர் மீது பழிப்பதுபோலப் புகழ்ந்து பாடியது)

வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்

கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில்

அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா

இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.         25

****

9.திருமலைராயரின் அரசவைப் புலவர் அதிமதுரக் கவிராயரின் பாட்டுக்கு எதிர்ப்பாட்டுப் பாடியது

அதிமதுரக் கவிராயர் பாடியது

மூச்சுவிடு முன்னே முந்நூறு நானூறும்

ஆச்சென்றா லாயிரம்பாட் டாகாதோ – பேச்சென்ன

வெள்ளக் கவிகாள மேகமே நின்னுடைய

கள்ளக் கவிக்கடையைக் கட்டு .(159)

மூச்சு விடும் முன்னே முந்நூறும், நானூறும், “ஆச்சு” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? பேச்சு என்ன வெள்ளக் கவி காளமேகமே நின்னுடைய கள்ளக் கவிக் கடையைக் கட்டு .(159)

காளமேகம் பாடியது

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்

அம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ –சும்மா

இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்

பெருங்காள மேகம் பிளாய் . (160)

“இம்” என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் “அம்” என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ? சும்மா இருந்தால் இருந்தேன் எழுந்தேனே ஆயின் பெரும் காளமேகம் (கரிய மழைமேகம்) பிளாய் . (59)

***

10.தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி

துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி

தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த

தெத்தாதோ தித்தித்த தாது? (71)

பொருள் :

வண்டே! தத்தி தாது ஊதுதி – தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; தாது ஊதித் துத்தி – பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி துதைதி – துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; துதைந்து அத்தாது ஊதுதி – அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய். தித்தித்த தாது எது – நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? தித்தித்தது எத் தாதோ – இனித்திருந்தது எதன் மகரந்தமோ? தித்தித்த தாது – இதழாக அழகியதும் எப் பூவோ?

துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது – பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம்.

—subham—

Tags-காளமேகப்புலவர் பாடல், 10 கேள்விகள், ஆசு கவி, சிலேடை, அரிகண்டம், நிந்தாஸ்துதி

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 107; இந்து மத கலைச்சொல் அகராதி-107 (Post.16,155)


Written by London Swaminathan

Post No. 16,155

Date uploaded in London – 2 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

T Words Continued………………….

English version posted yesterday

துர்வாசு

யயாதிக்கும் தேவயானிக்கும் பிறந்த இளைய மகன்; அவனுடைய தந்தை முன்கூட்டியே முதுமை களையைப் பெற்றதால்  யார் இளமையைத் தருகிறீர்கள் எண்டு மகன்களை வினவினார்; அவனுடைய அண்ணன் யது என்பவனைப் போலவே, துர்வாசுவும் தந்தைக்கு இளமையைக் கொடுக்க மறுத்துவிட்டான் . உடனே தந்தை யயாதி சாபமிட்டார்: நீ ஆளக்கூடிய மக்கள் எல்லோரும் பாவம் செய்த  கும்பலாக இருக்கும்; அவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்பது  அந்த சாபம் ஆகும்.

***

த்வஷ்டா

ஒரு  நல்ல குணமுள்ள பிராமணன் இவன்; விஸ்வரூபா என்ற மூன்று தலையுள்ள மகனைப் பெற்றார் .இந்திரன் பொறாமையால் அவனைக் கொன்றான் . இந்திரனைப் பழிவாங்குவதற்காக த்வஷ்டா, மீண்டும் ஒரு மகனை உருவாக்கினார் . அவன் பெயர் விருத்ராசுரன் ;அவனையும் இந்திரன் கொன்றான்; பிராமணனைக் கொன்ற பாவம் – பிரம்மஹத்தி– இந்திரனைப் பீடித்தது ; ஒவ்வொரு புனிதத் தலமாகச் சென்று தனது பிராமணக் கொலை பாவம் தீர வேண்டும் என்று மன்றாடினான் . இந்தக் கதை தமிழ்நாட்டின் பல கோயில்களின் தல புராணத்திலும் உள்ளது

சிலர், இது பருவ நிலை பற்றிய கதை என்று வியாக்கியானம் செய்வார்கள்; அதாவது விருத்திரன் என்னும் வறட்சியை, இந்திரன் என்னும் மழை அழித்தது என்பது  அவர்களுடைய விளக்கம் ; இதில் கவனிக்க வேண்டிய விஷயம்: இந்திரனின் உணவை அவனுக்கு அளிக்க வேண்டாம் என்று இடையர்களிடம் கிருஷ்ணன் கூறியதால் இந்திரன் கோபம் கொண்டு மழையைக் கொட்டினான் ; அப்போது கோபாலர்களைக் காப்பதற்காக கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கினான் என்ற கதைக்கு விளக்கம் தருவதாகச் சொல்லிக்கொண்டு இது யாதவர்- இந்திரன் இன மோதல்  என்று இனபேதம் கற்பிக்கும் வெள்ளைக்காரர்கள் இந்த சம்பவம் பற்றி வாய்மூடி மெளனியாகி விடுவார்கள்; இந்திரன் ஏன்  காரணமில்லாமல் பிராமணனைக் கொன்றான் என்று விளக்க மாட்டார்கள் ; சம்பவமே நடக்காதது போல நடிப்பார்கள். 

***

தியாகராஜர் (1767-1847)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர்;  ஏனைய இருவர் சியாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர்.  திருவாரூரில் த்ரிலிங்க வைதிக தெலுங்கு பிராமணரான ராம ப்ரம்மம் என்ற பெரியாருக்கு மூன்றாவது மகனாக தியாகராஜர் அவதரித்தார்.  இவரது 18 வயதிற்குள்ளே வேதாத்யயனம், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றில் நல்ல பயிற்சியைப் பெற்றுத் தேர்ந்தார். 18வது வயதில் திருமணமும் நடைபெற்றது. அவரது மனைவியார் காலமானார்.;அவர்களுடைய மக்களின் பெயர் சீதம்மா. சோந்தி வெங்கடராமையர் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். 79 வருடம் வாழ்ந்த அவர் சுமார் 24000 கிருதிகளை இயற்றியதாகவும் இப்போது சுமார் 730 கிருதிகள் மட்டுமே கிடைப்பதாகவும் சங்கீத விற்பன்னர்கள் கூறுவர். அவரது வாழ்வில் ஏராளமான அற்புத சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒவ்வொரு கிருதியின் பின்னாலும் ஒரு சம்பவம் இருக்கும் . 96 கோடி முறை ராம நாமத்தை ஜபித்து ராமபிரானின் தரிசனம் பெற்றார். சியாமா சாஸ்திரிகள் அடிக்கடி திருவையாறு சென்று அவரை சந்தித்து இசை பற்றி விவாதிப்பது வழக்கம். தன்னுடைய மகன் சுப்பராய சாஸ்திரியை தியாராஜரிடம் அனுப்பி சங்கீதம் கற்கவும் செய்தார் திருவையாறு என்னுமிடத்தில் தியாகராஜருடைய சமாதி உள்ளது ஆண்டுதோறும் அவர் சமாதி ஆன நாளில் தியாகராஜ ஆராதனை நடத்தப்படுகிறது அப்போது அவர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை பிரபல இசைக் கலைஞர்கள் கீழே தரையில் உட்கார்ந்து பக்தி சிரத்தையுடன் இசைப்பார்கள்.

1847ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதிக்குச் சமமான பராபவ வருடம் தை மாதம் பகுள பஞ்சமி நாளன்று திருவையாறு தலத்திலேயே அவர் சித்தியாகி மோக்ஷம் அடைந்தார் சுமார் 212 ராகங்களில் அவரது கிருதிகள் அமைந்துள்ளன. அவரே உருவாக்கிய சுமார் 66 புதிய அற்புத ராகங்களில் அவர் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.

***

தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி (பிப்ரவரி 192012-ல்  இதே பிளாக்கில் வெளியான என்னுடைய படைப்பு )

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ!  13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?

நமோ நமோ  ராகவாய

**

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை  ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர்.  “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா” என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?

மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ

நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே

சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின——–

( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட———– ராமா, உன் நாமமே சுகம் தரும்)

**

அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?

முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)

(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா—-)

**

ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?

பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)

**

திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?

சிவ சிவ சிவ யனராதா,  பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)

**

உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்..

சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்………

நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)

**

இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!

அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா……..

(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே………..என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)

**

உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்…….

சாந்தமுலேக சவுக்கியமுலேது —–(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை).

**

நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில்  சில……

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).

**

வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)

**

18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?

பிரஹலாத பக்தி விஜயம்நவ்க சரித்திரம்சீதாராம விஜயம்

**

புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?

நா ஜீவாதார நாநோமு பலமா

ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி

நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா

நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)

(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)

**

திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம்  சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு  முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?

கிரிபை நெல (சகானா ராகம்)

***

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக;

ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனேஓ மனசா;

கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர;

வராளி ராகத்தில் – கன கன ருசிரா;

ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு

***

கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)

***

துளசி

Tulsi [तुलसी]

இந்துக்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று துளசி. இதை நாம் மூலிகைகளின் ராணி QUEEN OF HERBS என்று அழைப்போம் , வெளிநாட்டினர் இதை மூலிகைகளின் ராஜா KING OF HERBS என்பார்கள் .

துளசி- Holy Basil,  Ocimum sanctum ; Family Lamiaceae

எந்தப் பெருமாள் கோவிலுக்கு எப்போது போனாலும்  உத்தூரணியில் துளசி ஜலத்தைக் கொடுப்பார்கள் . அதை மரியாதையுடன் உறியாமல் குடித்துவிட்டு தலையிலும் தடவிக்கொள்ளும்போது கிடைக்கும் புத்துணர்ச்சியைச் சொல்லில் வடிக்க இயலாது . வைணவப்  பெரியார்கள் இறந்தாலோ சமாதி அடைந்தாலோ அவர்கள் அடக்கம் செய்யப்பட இடத்தில் பிருந்தாவனம் என்ற பெயரில் ஒரு மடத்தை அமைப்பார்கள் . இந்தியா முழுதும் வீடுகளின் பின்புறத்தில் துளசி மாடங்களை அமைத்து அதை பய பக்தியுடன் பராமரித்து, தினமும் சில இதழ்களை பெருமாளுக்குப் படைத்துவிட்டு பிரசாதமாக உட்கொள்ளுவர். இதனால் இருமல் சளி , கபம் நோய்கள் வராது.இந்துக்கள் துளசி விவாஹம் நடத்திக் கொண்டாடுகிறார்கள் . துளசி மாலையை அணிகிறார்கள் . வட இந்தியாவில் துளசி  டீ யைக் குடிக்கிறார்கள் ; இது ஒரு மூலிகை டானிக் போன்றது .

துளசிக்கு பிருந்தா என்ற பெயரும் உண்டு; கிருஷ்ணர் சின்னப்பையனாக இருந்தபோது விளையாடிய துளசி வனத்துக்கு பிருந்தாவனம் என்று பெயர் .xxxx

துளசி விவாஹம்

துளசி விவாகம் (Tulsi Vivah) அல்லது துளசி கல்யாணம் (Tulasi Kaḷyaṇam) என்பதை வட இந்தியர்கள் கொண்டாடி வருகிறார்கள் .கார்த்திகை  மாதத்தில் பௌர்ணமி நாள் முதல் பதினொன்றாவது நாளுக்கு இடையில் வரும் நாட்களில் இந்த மங்கள விழா நடத்தப்படுகிறது.

 இதில்சாளக்கிராமம் அல்லது நெல்லி மரக் கிளையுடன் துளசிக்கு சம்பிரதாயத் திருமணம் நடைபெறுகிறது.

இது  திருமண பருவத்தின் தொடக்கத்தைக்  குறிக்கிறது.

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு “பிருந்தாவன துவாதசி’  என்றும் பெயர்.

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

துளசி இலையின்,நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். சிலர் சாளக்கிராமம் என்னும் கல்லினை வைத்து அதைக் கல்யாண மாப்பிள்ளையாக அலங்கரிப்பார்கள்; அதே நேரத்தில் துளசியை மணப்பெண்ணாகப் பாவித்து  கல்யாணனப் பெண்ணைப்போல அலங்கரிப்பார்கள் ; இஷ்ட மித்ர பந்துக்களையும் நண்பர்களையும் அமர வைத்து சில துதிகளைப்பாடி ஆரத்தி எடுத்த பின்னர் பிரசாதம் வழங்குவார்கள்; வேத பண்டிதர்களை அழைத்து மந்திரமும் ஓதும்படி வேண்டுவார்கள் .

To be continued………………….

Tags– துளசி விவாஹம் HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 107; இந்து மத கலைச்சொல் அகராதி-107, தியாகராஜர்

S Nagarajan Articles index for AUGAUST 2026 (Post.16,154)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,154

Date uploaded in London – 2 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

  S Nagarajan Articles index AUGAUST 2026

1-8-26 16040 மலடிக்குத் தெரியாது பிரசவ வேதனை!                                                                                2-8-26 16043 S Nagarajan Articles Index July 2026

3-8-26 16047 தியானம் வாழ்க்கையை மாற்றுமா? ஶ்ரீ சத்ய

           சாயிபாபாவின் அருளுரை! (கல்கிஆன்லைன் கட்டுரை)                         4-8-26 16051 கடலில் மிதந்த இரும்பு குண்டுகள் (கதிர் 1-2-8-26 \ 

             கட்டுரை)                                                      5-8-26 16054 வருமுன் காப்பதே சிறப்பாகும்! (சுபாஷிதம்)                                 6-8-26 16057 116 வயதான பாட்டி திருமலையில் படியேறி செய்த                         தரிசனம்!                                                                         7-8-26 16061 பிரகலாதனின் உபதேசம் – 1

8-8-2616065 பிரகலாதனின் உபதேசம் – 2

9-8-2616069 தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன்

          கோவிலா) – 1                                                                                                        

 10-8-26 16072 தாஜ்மஹாலா அல்லது தேஜோ மஹாலயமா? (சிவன் கோவிலா? – 2

 11-8-26 16076  வட் பூர்ணிமா விழாவில் பங்கேற்கக் கூடாதா, என்ன அநியாயம் இது?!                                                                                                                                 12-8-26 16079 போர்! போர்! போர்! மனித குல வரலாற்றில் போரும் சமாதானமும் (கல்கி 23-7-26 கட்டுரை)                               13-8-26 16083 கர்வத்தால் அழிவாள் பெண் (சுபாஷிதம்)                                            14-8-26 16087 சுதந்திரப் போராட்ட வீரர்களைப் போற்றி வெளிவந்த சிறப்பு    மலர்!

                                  15-8-26 16090 ஆகஸ்ட் 15 திரு வெ.சந்தானம் நினைவு நாள்               16-8-26 16093 ஆயிரம் பொன்மொழிகள் (1-20)                                 17-8-26 16097 ஆயிரம் பொன்மொழிகள் (21-50)                           18-8-26 16101 ஆயிரம் பொன்மொழிகள் (51-80)                             19-8-26 16104 ஆயிரம் பொன்மொழிகள் (81-110)                           20-8-26 16108 ஆயிரம் பொன்மொழிகள் (111-140)                             21-8-26 16111 ஆயிரம் பொன்மொழிகள் (141-160)                               22-8-26 16115 ஆயிரம் பொன்மொழிகள் (161-180)                          23-8-26 16119 சீன ஆக்கிரமிப்பா? பலூசிஸ்தானின் கவலை!                24-8-26 16123 மறக்கப்பட்ட மாபெரும் இந்தியப் போர்வீரன்!                25-8-26 16126 ஹகாகுரே (HAGAKURE) மரணத்தைக் கண்டு அஞ்சாது வாழ                        வழி! (கல்கி 27-7-26 இதழ் கட்டுரை)                                      26-8-26 16129 வெளி உலகத் தொடர்பு இல்லாமல் வாழும் பழங்குடி   மக்கள்! (23-8-26 கதிர் கட்டுரை)                                      27-8-26 16132 கடலுக்கடியில் இருக்கும் அதிசய ஏரி! (தினமணி          கொண்டாட்டம் 23-8-26 கட்டுரை)                                       28-8-26 16136 ஆயிரம் பொன்மொழிகள் (181-200)                           29-8-26 16140 ஆயிரம் பொன்மொழிகள் (201-220)                        30-8-26 16144 பக்தர்களிடையே பொறாமையையும் வெறுப்பையும் பொறுக்கமாட்டார்: சத்ய சாயிபாபா அருளுரை! (கல்கி 31-7-26 கட்டுரை) 31-8-26 16147 நினைவாற்றலை வலுப்படுத்த சில வழிகள்! (5-8-26 கல்கி கட்டுரை)

**

நளவெண்பாவில் 10 கேள்விகள் (Post.16,153)

Written by London Swaminathan

Post No. 16,153

Date uploaded in London – 1 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

நளவெண்பா நூலை இயற்றியவர் யார் அந்த நூலில் யார் கதையை அவர் கூறினார் ?

2

அந்த நூலில் உள்ள பகுதிகள் எவை? பாடல்கள் எத்தனை?

3

புகழேந்திப் புலவர் எந்தக் கடவுளின் பக்தர் என்பதை நளவெண்பா காட்டுகிறது ?

4

இந்தப் பாடலுக்கான மூலக் கதையை அவர் எங்கிருந்து பெற்றார் ?

 5

ருது பர்ணனுக்கு தேரோட்டியாக இருந்த நளன் ஓட்டிய தேரின் வேகம் என்ன ?

6

நூலாசியரை  யார் சிறையில் அடைத்தார் ?அப்போது  புலவர் இயற்றிய நூல்கள் யாவை ?

7

கம்பன் அவரை ஆதரித்த சடையப்ப வள்ளலை ஆங்காங்கே பாடலில் குறிப்பிட்டு நன்றிக் கடன் செலுத்தினான். நமது புலவரை ஆதரித்தவர் யார்? அவரைபுகழேந்தி  எப்படிப் புகழ்ந்தார் ?

8

யுதிஷ்டிரன் என்னும் தர்மனைப்போல நளனும் சூதாட்டத்தில் நாட்டை இழந்தான். பின்னர் எப்படி சூதாட்டத்தின் மூலம் நாட்டினைத் திரும்பப்பெற்றான் ?

9

தமிழ் இலக்கியத்தில் பறவைகளையும் தேனீக்களையும் காதலிகள் தூது விடுவதைப் படித்திருக்கிறோம் ;அதற்கெல்லாம் முன்னதாக நளனும் தமயந்தியும் காதல் தூதுவிட்ட பறவை எது?

10

நளவெண்பாவில் இலக்கிய நயம் உள்ளது;  சூரியன் மாலைப்பொழுதில் மறைந்ததை எப்படி வருணிக்கிறார் ?

*******************

விடைகள்

1.நளவெண்பா என்ற நூலினை வெண்பாவிற்குப் புகழேந்தி என்று தமிழ் அறிஞர்கள் போற்றிய புகழேந்திப் புலவர் இயற்றினார் ; அவர் தொண்டை நாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் வேலை செய்து, சோழநாட்டுக்குச் சென்று சிக்கலில் மாட்டினார். அவர் வாழ்ந்த காலம் காலம்: 12-ஆம் நூற்றாண்டு .அவர் இயற்றிய நூலில், நளன்- தமயந்தி காதலையும் அவர்கள் கலி புருஷனால் பட்ட துன்பங்களையும், இறுதியில் இருவரும் மீண்டும் சேர்ந்து, துயர் நீங்கியதையும் பாடல் வடிவில் கொடுத்துள்ளார் .

****

2.இந்நூல் மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது:சுயம்வர காண்டம் (171 வெண்பாக்கள்)கலிதொடர் காண்டம் (155 வெண்பாக்கள்)கலிநீங்கு காண்டம் (94 வெண்பாக்கள்); பாயிரம் மற்றும் நூல் வரலாறு உள்ளிட்டவை சேர்த்து மொத்தம் 427 வெண்பாக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

***

3.புகழேந்திப் புலவர், விஷ்ணு பக்தர் ஒவ்வொரு காண்டத்திலும் விஷ்ணுவைப் புகழந்து பாடியுள்ளார் ஆயினும் நூலின் துவக்கத்தில் பிள்ளையார், முருகன், சிவன் ஆகியோரையும் பாடியுள்ளார் ; நம்மாழ்வாரையும் இவர் போற்றித் துதித்துள்ளார்.

ஆதித் தனிக்கோலம் ஆனான் அடியவற்காச்

சோதித் திருத்தூணில் தோன்றினான் – வேதத்தின்

முன்நிற்னான் வேழம் முதலே எனஅழைப்ப

என்என்றான் எங்கட் கிறை.- என்ற பாடலில் வராக அவதாரம், நரசிம்மவதாரம், கஜேந்திர மோட்சம் மூன்றினையும் குறிப்பிட்டு விஷ்ணுவைத் துதிக்கிறார் .

***

4.மகாபாரதத்தில் ஆரண்ய காண்டத்தில் நளோபாக்கியானம் உள்ளது; அதுவே மூலக்கதை;  தர்மபுத்திரனுக்கு வியாச பகவான் இதைக்கூறி, நீ மட்டும் வனவாசத்தில் துன்புறுவதாக நினைக்காதே உன்னையும் விடத் துன்பங்கள் அடைந்து, பின்னர் இன்பத்தை அனுபவித்ததை பார் என்று நளன்-தமயந்தி கதையைச் சொல்லி ஆறுதல்படுத்துகிறார்.

****

5.நளன், தன் பெயரை பாகுகன் என்று மாற்றிக்கொண்டு ருதுபர்ணன் என்னும் மன்னனிடம் வேலை செய்கிறான். தமயந்தி நளனைக் கண்டுபிடிப்பதற்காக, போலியாக இரண்டாவது சுயம்வரத்தை அறிவிக்கிறான்; அதற்கு ருதுபர்ணன் செல்ல விரும்பியபோது ஒரே நாளில் தேரில் அவரை நிடத நாட்டுக்கு அழைத்துவருகிறான். அப்போது தேரின் வேகத்தைக் காட்டுவதற்கு சுவையான ஒரு பாடலைப் புகழேந்திப் புலவர் நமக்கு அளிக்கிறார்.

நளவெண்பா பாடலில் தேரின் வேகம் குறித்து புகழேந்தி பாடியது:

மேலாடை வீழ்ந்ததெடு என்றான் அவ்வளவில்

நாலாறு காதம் நடந்ததே — தோலாமை

மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக்க லிச்சூதில்

மால்கொண்டான் கோல்கொண்ட மா”

பொருள் :

  “எனது மேலாடை விழுந்துவிட்டது, தேரை நிறுத்தி அதை எடு” என்று மன்னன் இருதுபன்னன் கூறி முடிப்பதற்குள், நளன் செலுத்திய குதிரைகள் இருபத்து நான்கு காதம் தூரம் (நாலாறு காதம்) கடந்து முன்னேறிச் சென்றுவிட்டன. (ஒரு காதம் என்பது சுமார் 10 முதல் 14 கிலோமீட்டர் தூரத்தைக் குறிக்கும்; எனவே 24 காதம் என்பது மிக நீண்ட தூரமாகும்)

****

6.இவர் பாண்டியமன்னன் பேரவையில் தலைமைப் புலவராக இருந்தபோது குலோத்துங்கசோழன் பேரவைப் புலவராகிய ஒட்டக்கூத்தர், சோழமன்னனுக்குப் பெண் கேட்பதற்கு  பாண்டியன்பால் வந்தார்.  அப்போது புகழேந்தியாருக்கும் ஒட்டக்கூத்தருக்கும் வாக்குவாதம் நிகழ, இருவரும் தம்தம் அறிவின் ஆற்றலைக் காட்டினர். அதில்  ஒட்டக்கூத்தர் தோற்றுப்போனார். பின்னர்ப் பாண்டியன் புதல்வியைச் சோழமன்னனுக்கு திரு மணம் செய்தனர் ; அதற்கு மகட்கொடை (சீதனம்) ஆகக் கொடுத்த பொருள்களுடன், புகழ்ந்தியாரையும் விடுத்தனன் எனவும், ஏற்கெனவே நிகழ்ந்த உரையாடலினால் ஆத்திரம் கொண்ட ஒட்டக்கூத்தர், இவரைச் சிறைப்படுத்தினர் எனவும், அது காலையே ‘அல்லியரசாணி மாலை,’ ‘பஞ்சபாண்டவர் வனவாசம்,’ போன்ற அம்மானை நூல்கள் பாடினாரென்றும் கூறுவர்.

****

7. புலவரை ஆதரித்த சிற்ரசனின் பெயர் சந்திரன் சுவர்க்கி. சந்திரன் சுவர்க்கி யென்னும் இவன், சோழ நாட்டுச் சிற்றரசன். இவன்றன் வேண்டுகோட்கிசைந்தே இந் நூலைப் பாடி அரங்கேற்றினார். இவன் நீதி தவறாது குடிமக்கள்பால் அன்பு காட்டி நாட்டை ஆண்டான் என்பதை ‘மாமனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி’ என்னும் தொடரினால் காட்டுகின்றார்.

24. மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி

தாமரையாள் வைகும் தடந்தோளான் – காமருபூந்

தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்

பாராளும் வேந்தன் பதி.

இவன் இவர் போன்ற பல புலவர்களை ஆதரித்து வேண்டுவன நல்கிப்புரந்து வந்த அருளாளன் என்பதைக் கலிநீங்கு காண்டத்து, நளனைப் பற்றியிருந்த கலி அறவே நீங்கிச் சென்றுவிட்டதைக் குறித்து உவமையாக,

வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்

தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி – கொண்டாடும்

பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே

காவலன்பால் நின்ற கலி’ (48)

‘சந்திரன் சுவர்க்கி வேந்தனாற் கொண்டாடப்படுகின்ற பாவலன்பால் நின்ற பசிப்பிணி அறவே இல்லாமல் போவதுபோல், நளவேந்தன்பால் நின்ற கலி நீங்கினான்’ என்று எவ்வளவு சிறப்பாகத் தம் நன்றி மறவாத நலத்தையும், தம்மைப் புரந்த அரசன் புகழையும் நிறுவிக் காட்டுகின்றார்.

***

8.அசுவஹிருதயம் மந்திரம்: நளன் குதிரைகளை மிக அதிவேகமாக செலுத்தும் அசுவஹிருதயம்‘ என்ற அரிய கலையை அறிந்தவர். அவரது அசாத்திய தேரோட்டும் திறமையைக் கண்டு ருதுபர்ணன் வியப்படைந்தார். தமயந்தியின் இரண்டாம் சுயம்வர செய்தி கேட்டு, ருதுபர்ணனை ஒரே நாளில் விதர்ப்ப நாட்டிற்கு நளன் தேரில் அழைத்துச் சென்றார். அந்தப் பயணத்தின் போது, நளன் தனது தேரோட்டும் கலையை (அசுவஹிருதயம்) ருதுபர்ணனுக்குக் கற்றுக் கொடுத்தார். அதற்குப் பதிலாக, சூதாட்டத்தில் வெல்வதற்குக் காரணமான எண்கணித வித்தையான அக்ஷஹிருதயம் (பகடை ரகசியம்) என்ற கலையை ருதுபர்ணனிடம் இருந்து நளன் கற்றுக் கொண்டார்.ருதுபர்ணனிடம் இருந்து பகடை வித்தையை நளன் கற்றுக் கொண்ட அடுத்த கணமே, அவரைப் பிடித்திருந்த கலி புருஷன் அவரிடமிருந்து நீங்கினான். மீண்டும் சூதாடி புஷ்காரன் என்பவரிடமிருந்து நாட்டை பெற்றார்.

***

9.இருவரும் அன்னப் பறவையை தூதுவிட்டுக் காதல் செயதிகளை பரிமாறிக்கொண்டனர்.

****

10.வையம் பகல்இழப்ப வானம் ஒளிஇழப்ப

  பொய்கையும் நீள்கழியும் புள்இழப்பப் – பையவே

  செவ்வாய் அன்றில் துணைஇழப்பச் சென்றடைந்தான்

  வௌவாய் விரிகதிரோன் வெற்பு (நளவெண்பா 104)

மாலையில் பகற்பொழுதும் வானத்து ஒளியை இழக்க, பொய்கை கடற்கரை உப்பங்கழிகள் பறவைகளை இழக்க(அவை கூடடைந்ததால்) அன்றில் பறவைகள் பிரிவை இழக்கக்(தத்தம் துணையோடு கூட்டினை அடைய) காரணமாய் இருந்த சூரியன், தன் கதிர்களை மறைத்து மேற்கு மலையை அடைந்து மறைந்தான்.

-subham-

Tags- நளவெண்பா, 10 கேள்விகள், புகழேந்தி, ஒட்டக்கூத்தர்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 106; இந்து மத கலைச்சொல் அகராதி-106 (Post.16,152)

Written by London Swaminathan

Post No. 16,152

Date uploaded in London – 1 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PART 106

T words continued……………..

Turvasu

Younger son of Yayati and Devayani. Like his elder brother Yadu, he too declined to exchange his youth for his father’s pre mature old age caused by the curse of Shukracharya. For not obeying him, Yayati cursed that his descendants would rule over sinful population and would be annihilated completely.

***

Twashta

A virtuous Brahmana who created a three headed son called Vishwaroopa who was killed by Indra out of envy.  Twashta then created another son Vritrasura to take revenge against Indra. That Brahmin was also killed by Indra;  because he killed a Brahmin, Indra went to many shrines for purification which is in Sanskrit Puranas and Tamil Temple Puranas called Sthala Puranas (sthala= holy spot). Vritrasura has another interpretation; it is the drought which Indra/rain killed.

This episode exposes foreign “scholars” who hide that Vritra was a Brahmin or completely ignore this incident as it had not happened. The same “scholars” create mountain out of a mole in the episode of Krishna denying food meant for Indra in the Govardhana Hill Lifting Episode.

***

Tyagaraja (1767-1847)

Great musician and composer who was born in Tiruvarur in Tamil Nadu. His Kritis/compositions in Telugu and Sanskrit are sung in all Carnatic Music Concerts until this day. His compositions are mostly on Lord Rama. He is regarded as one of the “trinities” of Carnatic music composers, along with Muthuswami Dikshitar and Syama Sastri. He was a devotee of Rama. Tyagaraja started his musical training under Sri Sonti Venkataramanayya at an early age. He started his musical career at the age of 13. His Samadhi is in Thiruvaiyaru in Tamil Nadu. To this day, a commemorative music festival called the Tyagaraja Aaradhana is held at Thiruvaiyaru in the months of January to February every year. Scholars and musicians generally agree that roughly 700 to 730 songs have survived and are sung or documented today. Legend suggests Tyagaraja composed 24,000 songs (matching the number of verses in the Valmiki Ramayana). He is believed to have recited the Rama Nama 96 crore (960 million) times. Saint Tyagaraja experienced visions of Lord Rama through his intense devotion, spiritual penance, and musical compositions.

Gems from Tyagaraja:

Pancharatna Kritis: The “Five Gems” set in master Ghana ragas (Nata, Arabhi, Varali, Sri, and Gowla) stand as monumental pillars of Carnatic composition. Musical Operas: He wrote groundbreaking narrative works like [Prahlada Bhakti Vijayam and Nauka Charitram] using a rich sequence of ragas. He composed accessible, choral, and devotional pieces meant for group singing and daily temple rituals. He pioneered anagata eduppu, writing songs where the lyrics start dynamically after the primary beat (sama) rather than directly on it. The Jagadanandakaraka kriti by Saint Tyagaraja contains 108 names of Lord Rama. Historical accounts and traditions state that Tyagaraja and Syama Sastri met. Syama Sastri was the oldest of the Trinity of Carnatic music. He often travelled to Thiruvaiyaru to visit Tyagaraja at his home, and the two masters discussed music and sang together. Syama Sastri also sent his son, Subbaraya Sastri, to study music under Tyagaraja. He explicitly signed his name—usually as “Tyagaraja” or variants like “Tyagarajuni”—typically in the final charanam (stanza) of his compositions

***

Tulsi


Most scared plant for Vaishnavites like Bilva (vilvam in Tamil) for Saivites.

Tulsi [तुलसी] in the Hindi language is the name of a plant identified with Ocimum tenuiflorum  from the Lamiaceae (Mint) family. It is kept in a raised place called Mandap at the back of the house in open space. Hindus, particularly women worship it every day. The plant has good medicinal properties. Krishna is said to have great respect for this plant. There are many stories to show how Krishna valued it. Tulasi is also referred to as Vrinda, Brinda. The forested area of Tulasi plants where Krishna grew up has for this reason been called V/Brindavan. Tulsi refers to  the plant basil.

**

Tulsi Vivah

Tulasi Vivah festival is usually observed on the 11th Day after the Full Moon of the bright fortnight of the month of Karthika. Vivah means wedding, marriage.

Women clean the area around the Tulasi plant or place the pot on a decorated rangoli base. They construct a small wedding canopy (mandap) using sugarcane stalks, banana leaves, and marigold flowers. Tulasi plant is the Bride; women bathe the Tulasi plant and drape a red or yellow sari or red cloth around it. Adorn the plant with vermilion (kumkum), turmeric (haldi), bangles, and ornaments. Bridegroom is Vishnu and he is represented by a Shaligram (fossil with marks like Vishnu Chakra/wheel). So, a shaligram stone (representing Lord Vishnu) or an idol of Lord Krishna/Vishnu is placed next to the plant, dressing the idol in traditional yellow garments and a crown. After lighting oil lamps and incense sticks, Lord Ganesha is invoked to remove obstacles before starting the main worship. The Union: Tie a sacred cotton thread (mauli) or garland between the Tulasi plant and the Shaligram/Vishnu idol to symbolize the marital knot. Family members act as parents to perform the symbolic Kanyadaan (giving away the bride) while priests or participants chant Vedic mantras and wedding hymns. Shower flowers and vermilion-mixed rice over the divine couple, perform the Mangal Aarti, and offer seasonal fruits, sweets, and jaggery as bhog before distributing prasad to family and friends.  They celebrate it to quicken the marriages in the family. It signals the official opening of the auspicious Hindu wedding season.

***

Tulsidhas

Goswami Tulsidas composed the epic poem Ramcharitmanas in the 16th century to retell the sacred story of Lord Rama in the vernacular Awadhi dialect of Hindi language. Goswami Tulsidas (1543?–1623), was a poet-saint and devoted follower of Rama. He spread bhakti movement across northern India by bringing the ancient story into the hearts and daily lives of ordinary households. Ramcharitmanas (Devanagari: रामचरितमानस rāmacaritamānasa), is an epic poem in seven cantos.The word Ramcharitmanas literally means “Lake of the deeds of Rama”. It is considered one of the greatest works of Hindu literature. Most scholars identify his birthplace as Rajapur, a village on the banks of the Yamuna River in the Chitrakoot district of Uttar Pradesh . He died in Varanasi (specifically near Assi Ghat), Uttar Pradesh, India

The ‘Hanuman Chalisa was composed by the saint; the hymn is a timeless ode recited by millions of Hindus every day. It is believed that an ailing Tulsidas composed it and  helped Tulsidas regain his health. It has 40 verses.

***

Tolkappiar and Tolkappiam (kaappiyam)

Tolkappiyam (or Tolkaappiam) is the most ancient extant Tamil grammar text and the oldest surviving Tamil book. Authored by the sage Tolkaappiyar, it serves not only as a comprehensive manual on linguistics but also as a unique guide to the social, cultural life of ancient Tamil Nadu. The text is composed of approximately 1,612 condensed aphoristic verses called Sutras. It is systematically divided into three major sections (adhikarams), each containing exactly nine chapters: Ezhuthadhikaram (Phonology and Orthography). Solladhikaram (Morphology and Syntax), Poruladhikaram splits literature and life into two distinct categories:Akam (Interior): Deals with the subjective emotions of love, courtship, and marital life. Puram (Exterior): Focuses on objective public virtues, heroism, governance, social conduct, and warfare.

Controversies

The exact age remains a subject of heavy debate among scholars. Traditional views tie it to the mythical Second Sangam period (ranging from 1st millennium BCE or earlier), while modern consensus places its earliest layers between the 3rd century BCE and 1st century BCE, with updates settling around the 5th century CE. But the last section called Porul Adhikaram is a alter addition.

The Author: Tradition identifies Tolkappiyar as one of the twelve core disciples of the legendary Sage Agastya.. Only two things are known about the book and the author. The Paayiram (Intro) says it was approved by a Brahmin teacher of Athankodu who was well versed in Four Vedas. Paayiram was composed by his classmate Panamparanaar.  Next information comes from most famous Tamil commentator Nacchinarkiniyar of Madurai, a Brahmin of Bharadvaja Gotra. He says Tolkappiar’s name was Trunadumagni Rishi and he clashed  with his Guru Agastya and was cursed by him. In turn Tolkappiar also cursed him and his grammar Agastyam disappeared because of this. The clash was on a stupid  matter. Agastya asked his disciple Tolkappiar to bring his wife Lopamudra (both names are in the last section of Rig Veda) from Vidharba in modern Madhya Pradesh. When they approached Madurai, river Vaigai was in floods. Just to cross the river safely Tolkappiar took a pole and asked Lopamudra to hold one end of the pole. Tolkappiar brought her safely across the river by holding the other end. When Agastya came to know about it he was angry and cursed him.

If one believes in this story ,it is a proof that Tamil existed at the time of Rig Veda.

Controversy about the book

Tolkappiar and modern version of Tolkappaim (his book) existed in different times. The modern version is from Fifth Century CE which is proved by the word Adhikaaram; this word is used throughout Tirukkural and Tamil epic SilappaDIKAARAM. So, we can conclude all these books were reacted at the same time by Tamil Academy (Sanagam or by a team of Tamil Scholars.

The book is not the original version is known by his expressions, ‘They say’, ‘It is said’ by  at least 300 times. This journalistic cliché shows it is a compilation and not his original.

Strangely, Tolkappiam mentioned Vedic Gods Indra and Varuna as Tamil Gods. Thouh, he mentioned Vishnu, Skanda/Muruga, Kali/Kotravai, Balarama etc. he never mentioned Lord Siva!

Other facts like Tolkappiar using Manu Smriti’s Eight Types of Marriages and Bharata Muni’s Eight Types of Sentiments or moods, reference to Vedic pronunciation etc show the book was compiled later. No reference to book or the author is in 2000 year old Sangam Literature. Some contents of Tolkappiam may be older than Sangam literature. Even the word KAAPPIYA in the name of the book and the name of the author is still debated without an agreeable solution. Kaappiya is the name of the most famous Gotra in the Rig Veda. Lord Krishna in the Bhagavad Gita also praised the Usanas Rishi of Kappiya Gotra. Words like Kavi, Kavithai, Kaavya (poet, poem) are derived from the mysterious poet of Rig Veda Ucanas Kavi.

**

Tiruvasagam 

Saivite hymn authored by mysterious saint Manikavasagar (maanikka vaasagar); his date is still debated; why he was not included in the great list of 63 Saivite Saints, absence of his reference to other three Tevara Moovar, vice versa the absence of their reference to Manikavasagar etc remain unsolved mysteries in Tamil Devotional literature. But his superb hymns, 658 verses under 51 chapters (3295 lines), will move anyone. Even Reverend Dr G U Pope who came to spread Christianity in Tamil Nadu was so moved that he spent his life in Translating this hymn, and Tirukkural and other ancient Tamil poem. Author Manikavasagar’s life was full of clashes with the Pandya king and the Buddhist scholars from Sri Lanka. My long research placed him before the time of Tevara Moovar. He must have lived around fifth century CE.

His hymns, full of compassion, on Lord Shiva are sung in Mohana Raga. It is said that even stones will melt when one sings his hymns.

***

Tirumurai – Please see Tevaram

***

Tiru mular and Tiru Manthiram

Great Saivite saint. He is one of the 63 Nayanamars (naayanmaaras) sung in Periya Puranam and one of the 18 Siddhas (Tamil Mystics). His work TIRUMANTHIRAM in Tamil consists of 3000 poems dealing with Saiva Siddhanta, Sakta and Vedanta- a rare combination. The contents of the book dealing with Devi, Tantras, Mantras and Yantras, reference to Siva Linga (which is absent in Tevaram & Tiruvasagam etc), and  his Non-Tamil expressions, his style, use of Sanskrit words – all place him in 8th or ninth century CE. He travelled from Kashmir and saw a dead body of a cow herd and the cows longing for him. Immediately he used one of the Eight Mystic Powers called Ashta Maa Siddhi, and entered the body of the cowherd to the delight of the cows. This happened in Aaduthurai in Tamil Nadu. The samadhi of the saint is located within the ancient temple in Thiruvavaduthurai, Tamil Nadu

***

Tiru Valluvar and Tirukkural

london swaminathan with Valluvar statue in London University.

The most famous poet of Tamil Nadu who authored TIRUKKURAL which consists of 1330 couplets dealing with Dharma Artha Kama (Virtue, Wealth and Sex). In the contents he also deals with asceticism and Moksha (liberation of soul). He was a staunch Hindu and summarised all the Hindu thoughts in the briefest poems called Kural. His reference to Hindu Gods Indra, Yama, Vamana Avatar, Krishna Avatar, Lakshmi, her elder siter, Brahma, Siva (indirectly) show him as a master of Hindu scriptures. His knowledge in Sanskrit is also evident in his indirect references to Bhagavad Gita, Manu smriti, Artha Shastra and Pancha Tantra. In addition to reference to Hindu Gods, he ued Sanskrit words in about 600 couplets out of 1330. Tiru Valluvar was a staunch supporter Vegetarianism

Tamils placed his book in the post Sangam group of 18 Minor poems. He belonged to Fifth Century CE, but Tamil fanatics gave him a new date 31 BCE to shut the mouth of Christians who started comparing his couplets with Bible. Hundred year old Tirukkural books show him as a man born to high and low class woman and man  with six siblings. Modern books wiped out those facts and portrayed him differently.  Political Tamils are doing it to every ancient Tamil author including Tolkappiar..

Tirukkural is one of the greatest contributions of India to the world.  Though he begins with ten couplets on God with Feet and Head (God with a form). Most of what he said is applicable to honest human beings in any part of the world. Still it is not out of controversy. He refers to slavish wife and attributes supernatural powers to such women. Like Kalidasa he also portrayed Kings as Gods and attributed supernatural harvest happening in his kingdom.  English people who saw the third part of his book on Love and Sex were appaleed in the beginning and hid it from the light of the world. They did not realise that sex was not a taboo to Hindus.

***

Trayambhaka (Three Eyed)

God with Three Eyes is Lord Siva. This Vedic reference to Lord Siva is in the earliest part of Sangam tamil Literature. But oldest book Tolkaappiam completely ignored him. Traymabaka is the name of one of the 12 Jyotir Linga shrines in India, located from Rameswaram to Himalayas. Lord Siva used his Laser Eye to burn Manmatha  (God of Love) and three hanging Space Stations of three demons. Siva’s attributes are put in Tamil by Appar and Sambndar around 600 CE

 Tamils proved Siva and Rudra are one and the same, countering foreign mischiefs.

Trayambakeswar /Trimbakeshwar Shiva Temple (श्री त्र्यंबकेश्वर ज्योतिर्लिंग मंदिर) in Nashik district of Maharashtra. It is 28 kilometres from Nashik city.

***

Tri siras- see Twasta.

***

Turaga /Turkey

Turaga means horse. Turkey was the land of horses in Vedic days. All the best kind of horses were brought to Turkey by Vedic Hindus and trained by them. This is proved by the Kikkuli manual with Sanskrit instructions found in Turkey. The manual is dated around 1400 BCE.

A Brief Introduction to the Kikkuli Text

The Kikkuli Text is a Late Bronze Age (ca. 1350 B.C.) set of instructions for training and conditioning horses. It is connected to Kikkuli, who identifies himself as a Mitannian “master horse trainer.” The text survives on clay tablets written in Hittite cuneiform and found at the Hittite capital of Ḫattuša (modern Boğazköy, Turkey). While the main language of the tablets is Hittite, the text also preserves specialized technical terms, including numbers and training vocabulary, that reflect knowledge transferred from the Mitanni and Hurrian world into the Hittite court.

Mitannian was a Hindu Kingdom ruling areas in Turkey, Syria, Iraq and Iran . All the names of the kings were in pure Sanskrit. There we have Dasaratha, Pratardhana etc. found Iin Ramayana and Vishnu Sahasra namam.

Horse manual with Sanskrit words in cuneiform clay tablets in Turkey.

To be continued………………………

Tags – Kikkuli, , Turvasu, Twashta, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL, part 106; இந்து மத கலைச்சொல் அகராதி-106

விண்வெளியில் துணி வெளுக்க துப்பாக்கி! (Post.16,151)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,151

Date uploaded in London – 1 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தினமணி கதிர் 30-8-26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

விண்வெளியில் துணி வெளுக்க துப்பாக்கி!

(துணிகளை விண்வெளியில் சுத்தப்படுத்த விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!)

ச. நாகராஜன்

ஒரு சின்ன விஷயம் – பேயிங் கெஸ்டாக பலருடன் ஒரு அறையில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஒருவருக்கு ஏற்பட்டதாக வைத்துக் கொள்வோம். அங்கு நிலவி வரும் பரபரப்பான சூழ்நிலையில் சில நாட்களிலேயே அந்த அறையின் – “நறுமணம்” – துர்நாற்றம் அனைவரையும் துரத்தி அடிக்கும். தோய்க்காத துணிகள், கண்ட இடங்களில் சுற்றி வந்து அறையில் அனைவரும் இருத்தல் ஆகியவற்றால் ஏற்படும் நாற்றம் சகிக்க முடியாது!

இதே நிலை தான் விண்வெளியில் விண்கலத்தில் இருக்கின்ற குட்டி அறையிலும் ஏற்படுகிறது!

அதை விட மோசம், பூமியிலாவது சடக்கென்று எல்லாத் துணிகளையும் ஒரு வாஷிங் மெஷினில் போட்டு எடுத்து விடலாம், ஆனால் விண்வெளியிலோ தண்ணீருக்கு எப்போதும் தட்டுப்பாடு தான். அளவோடு கவனமாக நீரை அங்கு உபயோகிக்க வேண்டும். அங்கு துணியைத் துவைப்பது என்பது எண்ணிக்கூட பார்க்க முடியாத ஒரு விஷயம்!

உடல் நாற்றத்தை விட மோசமான துணிகளின் நாற்றம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களால் உருவாகிறது. விண்வெளிவீரர்கள் ஒரே ஆடையை பலநாட்கள் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் விண்வெளியில் விண்கலத்தில் உண்டு. பல வாரங்கள் தாங்கள் உபயோகித்த துணிகளை காற்று புகமுடியாத ஏர்-டைட் பைகளில் போட்டு வைத்து விடுவது அவர்களின் வழக்கம். பூமிக்குத் திரும்பி வந்து தங்களின் பழைய துணிகளைத் தோய்ப்பார்கள் அல்லது எரித்து விடுவார்கள், இதுவே அவர்களின் பழக்கம்.

சரி, இப்போது செவ்வாய் கிரகத்திற்கு தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் போது இந்த துணி பிரச்சினையை எப்படி சமாளிப்பது?

விஞ்ஞானிகள் இந்த தீராத பிரச்சினைக்கு இப்போது ஒரு தீர்வைக் கண்டுபிடித்து விட்டார்கள். தங்கள் லாண்ட்ரி பிரச்சினையைப் பற்றி இனி அவர்கள் கவலைப்பட வேண்டாம். துணிகளைச் சுத்தம் செய்ய ஒரு   லாண்ட்ரி கன் (Laundry Gun) இனி அவர்களுக்குத் தரப்படும்!

அது அவர்களின் அழுக்குத் துணியைச் சுத்தமாக்கி விடும். அந்த லாண்ட்ரி துப்பாக்கியை வைத்து துணிகளின் மீது ‘சுட்டால்’ போதும் அது வயலட் நிறமுள்ள பிளாஸ்மாக்களை துணிகளில் செலுத்தி பாக்டீரியாக்களை அழித்து துணிகளை நன்கு சுத்தமாக்கி விடும்.

இந்த ‘கன்’, நுண்ணுயிரிகள் எனப்படும் மைக்ரோபியல் லோடை (Microbial Load)  சுத்தப்படுத்தி விண்வெளி வீரர்களின் உடல்நலத்தைக் காப்பாற்றும்.

ஹண்ட்ஸ்வில்லியில் உள்ள அலபாமா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான கபே ஸு (Gabe Xu) தான் இந்த துணி துவைக்கும் துப்பாக்கியை உருவாக்கியவர்.

“இந்த துப்பாக்கி அவர்கள் துணிகளைச் சுத்தப்படுத்துவதோடு அவர்களின் கருவிகளையும் அவர்கள் செவ்வாய் கிரகத்தில் காலடி பதிக்கும் முன்னர் சுத்தமாக்கி விடும்” என்கிறார் அவர்.

பிளாஸ்மா என்பது ஆற்றல் ஊட்டப்பட்ட அணுத்துகள்கள், ஐயான்கள்,  எலக்ட்ரான்களால் ஆக்கப்பட்ட ஒரு சூப் ஆகும்.

பொதுவாக பிளாஸ்மாக்கள் சூரிய வெளிச்சத்தில் காணப்படும் உஷ்ணத்துடன் இருக்கும், ஆனால் இந்த கன்னில் உள்ள பிளாஸ்மாக்கள் குளிர்ச்சியுடன் இருக்கும். கிட்டதட்ட அறையில் இருக்கும் உஷ்ணநிலையில் இருக்கும்.

இது பார்க்கவும் அழகாக இருக்கும் என்று இதை அணியும் ஆர்டிமிஸ் விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்து விட்டார்கள்.

இனி என்ன, விண்வெளி வீரர்களும் வீராங்கனைகளும் அழகுடன் சுத்தமான ஆடைகளை அணிந்து விண்வெளியில் பயமின்றி பயணிப்பார்கள்!

வாழ்த்துக்கள் விண்வெளி அழகர்களுக்கும், அழகிகளுக்கும்!

***