Nothing New from Valluvar! Tirukkural Encyclopaedia- Chapter 34- Impermanence of the world (Post.16,182)


Written by London Swaminathan

Post No. 16,182

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!

****

Points to be remembered:

What is said by Valluvar in this chapter is already said in all the Hindu scriptures and Tamil and Sanskrit didactic literature. It is also in old film songs; impermanence of life is a favourite theme for Hindu poets.

But Valluvar used good similes:

1

World is a drama Theatre- Kural 332- is in Bhartruhari Niti Sataka, Viveka Chudamani of Adi Sankara, Shakespeare (Macbeth) and Hindu Upanishads, Epics and Puranas.

They used Puppet show.See Bhagavad Gita 18-61 (Yantra Arudani)

2

Death and Birth- Kural 339- = sleep and waking is in Bhagavda Gita 2-22; also Manu and Bhaja Govindam of Adi Sankara

3

Most important comparison will be Kural 336- Vyasa and Valluvar-

In the Questions of Yaksha/Ghost to Yuthisthira in Mahabharata , known as YAKSHA PRASNA- the last question is about the wonder in the world.

·  The Question (Yaksha): “What is the greatest wonder?”

·  The Answer (Yudhishthira): Day after day, countless living beings are sent to the realm of death, yet those who remain behind believe and desire to live forever. This complete denial and clinging to earthly life, despite witnessing death all around us, is the greatest wonder of all.

4

Kalidasa in Raghuvamsam says

मरणम् प्रकृतिः शरीरिणाम् विकृतिर्जीवितमुच्यते बुधैः|

क्षणमप्यवतिष्ठते श्वसन्यदि जन्तुर्ननु लाभवानसौ॥ ८-८७

maraṇam prakṛtiḥ śarīriṇām vikṛtirjīvitamucyate budhaiḥ|

kṣaṇamapyavatiṣṭhate śvasanyadi janturnanu lābhavānasau || 8-87

8-86. sharIriNAm maraNam prakR^itiH= for bodied beings, death, is a natural condition; jIvitam vikR^itiH= life, is an accidental condition; budhaiH uchyate= so say, wise people; [that being so] jantuH kShaNam api shvasan avatiShThate yadi= living being, for a moment, by breathing, remains [on earth], if; asau lAbhavAn nanu = that being, is a gainer, indeed.

Death is natural while life is accidental to mortals; if, therefore, a living being should remain breathing even for a moment on earth, still it is a gainer.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Part 52- Kural Chapter 34 நிலையாமை – Instability; Impermanence of the world  

****

331.Is there any folly greater than the infatuation of a man who builds his faith in the passing empty shows as though they were beyond the pale of the ravages of time?- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

331.The base ignorance that mistakes the transient things of life,

As of permanent value, is really despicable- S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

331
Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise). Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
331.The worst of follies it is told
The fleeting as lasting to hold-  Suddhananda Bharathiyar – SB 

***
331.Regarding the fleeting as permanent is ignorance and derogatory to the wise – EVS Publishers, Singapore – EVS, Year 1986

***

331.To think that things of time will last always,

Of follies all, the height of folly is- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

331.நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

332.The eager crowd that gathers to witness a village show stands as the symbol of the incoming tide of fortune; but its ebb is the melting away of the self-same crowd after the singing and dancing are over. – ANM+2

***

332.Great wealth is gradually accumulated like the audience tickling into  witness a show;

But its disappearance will be instantaneous, also as it happens after a show– SMD

***

332
As crowds round dancers fill the hall, is wealth’s increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly– GUP, Year 1886
***

332.Like a drama-crowd wealth gathers
Like passing show its pride too goes– SB 

***

332.Fortune coming to one and its departure are likened to the assembling crowd to witness a drama and its dispersal respectively– EVS

***

332.கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அருவிளிந் தற்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

333.Fickle is fortunes; therefore, if you come by a windfall, delay not to do acts that are of lasting good– ANM+2

***

333.All wealth is fleeting and so when one acquires wealth

It should be promptly spent on works of lasting value-– SMD

***

333
Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable. GUP,
***
333.Wealth wanes away; but when it comes
Take care to do enduring things.  – SB    

***  
333.Wealth is of a transitory nature. Therefore, one should seize the opportunity to do charity when one gets it– EVS

***

333.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

334.Time seems all smile and laughter, but verily it is a saw that ceaselessly saws away the life of man– ANM+2

***

334.The day itself shows as an entity, but in reality, it is just

The relentless movement of a saw, that cuts through life– SMD

***

334
As ‘day’ it vaunts itself; well understood, ’tis knife’,
That daily cuts away a portion from thy life.
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life. GUP,
***
334.The showy day is but a saw
Your life, know that, to file and gnaw.     – SB 

 ***

334.The day which measures time is comparable to a sword which, day by day, cuts short the life of man– EVS

***

334.நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்

வாள துணர்வார்ப் பெறின்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

335.Ere the tongue lies powerless and hiccough arises make your life  all compact with ehe numberless acts of kindness and of love– ANM+2

***

335.Long before the tongue falls and the last hiccup comes up

It is wise go for good deeds, without delay– SMD

***

335
Before the tongue lie powerless, ‘mid the gasp of gur gling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent. GUP,
***
335.Ere tongue benumbs and hiccough comes
Rise up to do good deeds betimes.     – SB 

***

335.Before the pangs of death approach and one loses the power of speech and gasps for death one should hasten to do charity– EVS

***

335.நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யாப் படும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

336.Yesterday he was; and today he is not; such is glory of this wonderous earth! – ANM+2

***

336.The one, who was here yesterday, is no more today and

That is a matter of great wonderment, in this world– SMD

***

336
Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.
This world possesses the greatness that one who yesterday was is not today. GUP,
***
336.One was yesterday; not today!
The wonder of the world’s way!    – SB 

***   

336.The characteristic feature of the world is the transitoriness of life. The disappearance today of one who existed yesterday is a common occurrence – EVS

***

336.நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

337. Man knows not what awaits him the next moment; yet he is a prey to numberless dreams and fancies– ANM+2

***

337.People who are sure of living the nest moment,

Indulge in daydreams and make millions of plans– SMD

***

337
Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment. GUP,
***
337.Man knows not his next moment
On crores of things he is intent.      – SB 

***

337.Man is uncertain of living the very next moment. Yet his ambitions are galore– EVS

***

337.ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடியு மல்ல பல.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

338.The new fledged bird abandons its own broken sell of egg and flies away into the dreamy blue; that is the mark and the symbol of the union that exists between the soul and the body

***

338.The nexus between soul and body is as between the fledgling bird

And its erstwhile nest, from which it flies away– SMD

***

338
Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty. GUP,
***
338.The soul from body any day
Like bird from egg-shell flies away.    – SB 

***   

338.The affinity of the body and the soul is like that of the egg and the chick within. The soul departs from the body even as the chick deserts the egg– EVS

***

338.The bird forsakes its shell and flies away

So fleeting is the bond of soul and flesh- H A Popley – HAP

***

338.குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

339.Death is akin to sleep; but life is just the waking from that sleep– ANM+2

***

339.Death is like sleep, and birth

Is the awakening from it– SMD

***

339
Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.
Death is like sleep; birth is like awaking from it. GUP,
***
339.Death is like a slumber deep
And birth like waking from that sleep.   – SB     

***

339.Death and Birth are like sleep and the waking state respectively– EVS

***

339.Death is like sinking into sleep

Birth is like waking after sleep- H A Popley – HAP

***

339.உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

340.The soul takes shelter in a fragile and decaying body; that is because she has not a home that she can claim as her own? – ANM+2

***

340.The soul, is, as it were, a passing guest in the body,

Without a permanent abode of its own– SMD

***

340
The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home’s conclusive rest it knows?
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home. GUP,

***

340.The life berthed in this body shows
A fixed home it never knows.     – SB 

***  
340.It would appear that the soul which takes temporary refuge in the body, prone to diseases, has no permanent abode– EVS

***

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)

Written by London Swaminathan

Post No. 16,192

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள்

பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் – என்ற தலைப்பில் நேற்று பத்து கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டோம் ; அதன் தொடர்ச்சியாக மேலும் 10 கேள்விகள் இதோ:

11

முப்பது செப்பேடுகள் Copper Plates பெயர்ப் பட்டியலைக் கண்டோம்; அவைகளில் பழைய செப்பேடு எது ?

12

மஹாபாரதம் பற்றி எந்த செப்பேடு, என்ன கூறுகிறது ?

13

செப்பேடுகளுக்கு தமிழில் வேறு என்ன பெயர்கள் பயிலப்படுகின்றன ?

14

பல்லவர் பெயர்களைக் கொண்ட ஊர்களோ அல்லது கோவில்களோ எவை ?

15

பல்லவருடன் தொடர்புடைய ஆழ்வார் யார் ?

16

நந்திக் கலம்பகம் என்னும் நூல் எந்த மன்னனைப் புகழ்கிறது?

17

காடவர்கோன் என்று சைவத்திருமுறைகள் போற்றும் பல்லவ மன்னன் யார் ?

18

கழற்சிங்க நாயனார் யார் ?

19

காடவர் கோன், கழற்சிங்க நாயனார் பற்றி  பல்லவர் செப்பேடுகள் புஸ்தம் தரும் தகவல் என்ன?

20

கசாக்குடி சாசனம் தெரிவிக்கும் புள்ளலூர் போர்ச் செய்தி என்ன ?

****

விடைகள்

11.மயிதவோலு செப்பேடு கண்டுபிடிக்கப்பட்ட இடம்: ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம், மயிதவோலு சிற்றூர்.காலம்: கி.பி. நான்காம் நூற்றாண்டு CEபல்லவ அரசன் சிவஸ்கந்தவர்மன் இளவரசராக (யுவமகாராஜா) இருந்தபோது வெளியிடப்பட்டது.பிராகிருத மொழி மற்றும் முற்கால பல்லவ பிராமி எழுத்துக்கள். ஆந்திரபதா பகுதியில் உள்ள ‘விரிபரா’ என்ற கிராமத்தை பிராமணர்களுக்கு தானமாக வழங்கியதை இது குறிக்கிறது.

***

12.கூரம் செப்பேடு மஹாபாரதம் பற்றிக் கூறுகிறது கூரம் செப்பேடு பல்லவர் காலத்தில் பொது மக்கள் மத்தியில் மகாபாரதம் வாசிக்கப்பட்டதற்கான மிக முக்கிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது. ஏழாம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வரவர்மன் (670-695 CE) என்பவரால் இந்தச் செப்பேடு வெளியிடப்பட்டது.  பல்லவ மன்னன் கூரம் என்ற சிற்றூரில் (இன்றைய காஞ்சிபுரம் அருகில்) ஒரு சிவன் கோவிலைக் கற்றளியாகக் கட்டினான். அக்கோவிலில் வழிபாடுகள் மற்றும் பராமரிப்புக்காக ‘பரமேஸ்வரமங்கலம்’ என்ற ஊரின் நிலங்களை இருபத்தைந்து பங்குகளாகப் பிரித்து மானியமாக வழங்கினான்.  அந்த நிலப் பகிர்வில், கோவிலின் அருகே அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் மகாபாரதம் வாசிப்பதற்காக ஒரு பங்கு நிலம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டதாக இச்செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில், “. இம்மண்டகத்தே பாரதம் வாசிப்பதற்கு ஒரு பங்காகவும்…” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், பல்லவர் காலத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் பொது மண்டபங்களிலும் மகாபாரதக் கதைகளை மக்கள் முன்னிலையில் வாசித்து, சொற்பொழிவு நிகழ்த்தும் வழக்கம் அரசு ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைமுறையில் இருந்தது என்பது உறுதியாகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூரம் செப்பேடு தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

****

13.செப்புப் பட்டயம், தாமிர பட்டயம், சாசனம் முதலிய பெயர்கள்.

***

14.பல்லவர் பெயர்களைக் கொண்ட ஊர்களும் அல்லது கோவில்களும் :

பரமேஸ்வரவிண்ணகரம், ராஜசிம்மேஸ்வரம் , பல்லாவரம் (சென்னை), மஹேந்திரவாடி,  மாமல்லபுரம் .

கோவில்கள் : காஞ்சி கைலாசநாதர் கோவில்,    காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில்

****

15.திருமங்கை ஆழ்வார் பரமேஸ்வர வர்மனைப் போற்றியுள்ளார்.

ஆழ்வார்களில் இறுதியானவரான திருமங்கை ஆழ்வார், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதற்கு அவர் பாடிய பல்லவர் காலப் பாசுரங்களே முக்கிய வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அவர் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மன் (பல்லவமல்லன் – கி.பி. 731–796) மற்றும் இரண்டாம் பரமேசுவரவர்மன் ஆகியோரின் சமகாலத்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளத. இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் காஞ்சீபுரத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற தலம் பரமேசுவர விண்ணகரம் (வைகுண்ட பெருமாள் கோவில்) ஆகும். இத்தலத்து இறைவனை மங்களாசாசனம் செய்து திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்கள் பாடியுள்ளார்.தன் பாடல்களில், பல்லவ மன்னனின் போர்த்திறமையையும், அவன் வடநாட்டு அரசர்களான சாளுக்கியர்களையும் ஏனைய எதிரிகளையும் வென்றதையும் விரிவாகப் பாடியுள்ளார். பல்லவ அரசன் கடல் போன்ற முழக்கமிடும் பறை வாத்தியங்களை (கடுவாய் பறை) உடையவன் என்பதை, “கடல் போல முழங்கும் குரல்கடுவாய் பறையுடைப் பல்லவர் கோன்” என ஆழ்வார் வர்ணிக்கிறார். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திபுர விண்ணகரம் என்னும் வைணவத் தலம் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் புதுப்பிக்கப்பட்டு, அவனது பெயராலேயே அழைக்கப்பட்டது.இக்கோட்டையின் மதில் சுவர்கள் மற்றும் பல்லவர்களின் காவல் சிறப்பை ஆழ்வார் போற்றிப் பாடியுள்ளார்.பல்லவ மன்னனை, “நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப் பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்” என்று போற்றி, அவன் நென்மலி என்ற இடத்தில் பெற்ற போர் வெற்றியைக் குறிப்பிடுகிறார். காஞ்சியில் உள்ள அட்டபுயகரம் (அஷ்டபுஜ பெருமாள் கோவில்) உள்ளிட்ட பிற பல்லவர் காலத்துத் தலங்களையும் ஆழ்வார் பாடியுள்ளார். காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்கள் கலைக்கும் வைணவத்திற்கும் ஆற்றிய தொண்டுகளைத் தன் பாசுரங்களில் பதிவு செய்துள்ளார்.

***

16.நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் (846-869 CE) குறித்துப் பாடப்பட்டது.

***

17. காடவர் கோன்

பதினொன்றாம் திருமுறைஇத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார்முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்பநேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

***

18.கழற்சிங்க நாயனார்:

இவர் பல்லவ அரச குலத்தில் வந்த பல்லவ மன்னன். கழற்சிங்கன் என்பது இவருடைய சிறப்புப் பெயர். இவரே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆவர்..

கழற்சிங்க நாயனார் ஒரு சமயம் மாதேவியோடு திருவாரூர் திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினார். அவருடன் சென்ற அரசியார் அங்கிருந்த பூவொன்றைக் கையிலெடுத்து மோந்தார். அதனைக் கண்டு, அங்கிருந்த செருத்துணை நாயனார் சினங் கொண்டு, சிவபெருமானுடைய பூவை மோந்த மூக்கை அரிவேன் என்று கூறி, தம் கையிலிருந்த கத்தியினால் அவர் மூக்கை அரிந்தார். மாதேவியார் கூச்சலிட்டு அலறினார். உடனே கழற்சிங்கர் வந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று சினந்து கேட்டார். செருந்துணை நாயனார் தாமே இப்படிச் செய்ததாகவும் அதன் காரணத்தையும் கூறினார். அப்போது, கழற்சிங்கர், “மூக்கை அரிந்ததுமட்டும் போதாது; புவை எடுத்த கையையும் துண்டிக்க வேண்டும்” என்று கூறி வாளை எடுத்துத் தமது மனைவியாரின் கையைத் துண்டித்தார். இக் கதையைப் பெரியபுராணம் கழற்சிங்க நாயனார் புராணத்தில் காண்க.

சுந்தரமூர்த்தி நாயனார், இந்த நாயனாரைத் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில்,

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று சிறப்பித்திருக்கிறார்.

***

19.காடவர் கோன்கழற்சிங்க நாயனார் பற்றி பல்லவர் செப்பேடுகள் புஸ்தம் தரும் தகவல் :

பள்ளங்கோயில் செப்பேடு மிகப்பழைய செப்பேடு ஆகும். இது கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மூன்றாம் சிம்மவர்மன் காலத்தில் வெளியிடப்பட்டது. காலம்: கி.பி. 550 (6-ஆம் நூற்றாண்டு) இடம்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பள்ளங்கோயில்அமைப்பு: என்ற ஊரில் கிடைத்தது . மொத்தம் 5 ஏடுகளும், 8 பக்கங்களும் கொண்டவை. இதில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.பல்லவ மன்னன் சிம்மவர்மன், பருத்திக்குன்று ஜைன முனிவர் வஜ்ரநந்தி என்பவருக்கு அமண்சேர்க்கை நிலத்தைப் பள்ளிச்சந்தமாகத் (தானமாக) வழங்கியதை இச்செப்பேடு விளக்குகிறது. இந்த செப்ப்பே ட்டினை வழங்கிய சிம்மவர்மன் பெரிய சிவபக்தன் . இவன்தான்  63 நண்பார்களில் ஒருவராக காடவர் கோன் ஐயடிகள்.

இரண்டாம் நரசிம்மவர்மனின் இன்னுமொரு பெயர் ராஜசிம்மன். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவன்; கழற்சிங்க நாயனார்க்கேன்ற பெயர் கொண்ட இவன் சுந்தர மூர்த்தி நாயனார் கால  மன்னன். இவன் வெளியிட்ட செப்பேடுகள் ரேய்ரு செப்பேடுகள் ஆகும் .

***

20.கசாக்குடி சாசனம் தெரிவிக்கும் புள்ளலூர் போர்ச் செய்தி :

இரண்டாம் புலிகேசியை காஞ்சிபுரம் அருகிலுள்ள புள்ளலூர் என்னுமிடத்தில் மஹேந்திர வர்ம பல்லவன் தோற்கடித்தான் ஆனால் குண்டூர் பகுதியில் உள்ள சிலப்பகுதிகளை புலிகேசி கைப்பாற்றி கர்நாடகத்திலுள்ள மங்களூரிலிருந்து ஆளுப்பா அரசன் ஒருவனை ஆட்சியாளராக நியமித்தான் என்று புலிகேசியின் ம்ருட்டூர்ச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது.

Tags- பல்லவர் செப்பேடு, இரண்டாவது, 10 கேள்விகள், காடவர் கோன், கழற்சிங்க நாயனார், திருமங்கை ஆழ்வார், காஞ்சிபுரம் , கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், நந்திக் கலம்பகம்

—Subham—

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்?  துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்; ஓர் ஆய்வு  – 27 (Post.16,192)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,192

Date uploaded in London –   12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்; ஓர் ஆய்வு  –  27

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்? 

ரிக் வேதத்தின் முதல் ஸ்லோகமே அக்னியை வணங்கும் சுலோகம் தான் 

ॐ अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् । होतारं रत्नधातमम् ॥

 “ஓம்! எல்லா யாகங்களுக்கும் தலைமை தாங்கும், தேவர்களுக்கு ஆகுதி கொண்டு செல்லும்,அழியா செல்வத்தை அள்ளித் தரும் அக்னி தெய்வத்தை வணங்கி வேண்டுகிறேன்!” 

அக்னி ஏன் இவ்வளவு முக்கியம்? 

தேவ-மனித இடைத்தொடர்பு 

மனிதன் நேரே தேவர்களிடம் பேச முடியாது → அக்னி மூலமாகவே ஆகுதி சென்றடையும். 

→ அதனால் அக்னியை “தேவதூதன்” என்று அழைப்பார்கள். 

மூன்று அக்னிகள் (திரிகால யாகம்) 

கார்ஹபத்ய அக்னி (வீட்டு அடுப்பு – தினசரி யாகம்)

ஆஹவனீய அக்னி (வடகிழக்கு – பெரிய யாகம்)

தட்சிண அக்னி (தெற்கு – பித்ரு காரியம்)

 காயத்ரி மந்திரத்திலும் அக்னி 

“தத் சவிதுர் வரேண்யம்… தியோ யோ நஃ ப்ரசோதயாத்”

→ இங்கு “தியோ” = அக்னி (ஒளி உருவம்)

உதாரணம் ஒரு ஹோமத்தில்

நீங்கள் “ஸ்வாஹா” என்று நெய் விடுகிறீர்கள் → அக்னி அதை எடுத்துக்கொண்டு

→ இந்திரனுக்கு, வருணனுக்கு, சூரியனுக்கு… என்று பிரித்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் தேவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது! அதனால்தான் ரிக் வேதம் தொடங்குவது 

ॐ अग्निमीळे पुरोहितं… 

“அக்னியை வணங்குகிறேன் – ஏனெனில் அவர்தான் எல்லா யாகங்களுக்கும் தலைவர்!”

 ஒரு வரியில் சாரம் 

“அக்னி இல்லையெல் யாகமும் இல்லை, தேவர்களுக்குப் படையலும் இல்லை, மனிதனுக்குப் புண்ணியமும் இல்லை!” 

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்? பகவத் கீதை அத்யாயம் 15  சுலோகம் 14

இதைத் தெளிவாக்குகிறது.

 अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रित: |

प्राणापानसमायुक्त: पचाम्यन्नं चतुर्विधम् || 14||

நான் (பரமாத்மா), வைஷ்வானரனாக (அக்னி வடிவில்) உயிரினங்களின் உடலில் குடிகொண்டு, பிராணன்–அபானன் ஆகிய உயிர்வாயுக்களுடன் இணைந்து,நான்கு வகையான உணவுகளைச் செதுக்குகிறேன் (செரிமானம் செய்கிறேன்).

 விளக்கம்: 

அஹம் வைஷ்வானர: “நான் வைஷ்வானரன்” – இது அக்னி வடிவில் பரமாத்மா.

-பிராணினாம் தேஹமாஶ்ரித: உயிரினங்களின் உடலில் குடிகொள்கிறேன்.

-பிராண–அபான சமாயுக்த: உயிர்வாயுக்கள் (prāṇa – மேலே செல்லும், apāna – கீழே செல்லும்) மூலம் செயல்படுகிறேன். 

அன்னம் சதுர்விதம் பசாமி: நான்கு வகையான உணவுகளைச் செரிமானம் செய்கிறேன்: 

பூதபாகம் (மெல்லும்),

பேயம் (குடிக்கும்),

லேஹ்யம் (நக்கும்),

சோஷ்யம் (உணவாக உறிஞ்சும்). 

இது பரமாத்மா உடலுக்குள் இருப்பது, உணவின் செரிமானம் கூட தெய்வீக செயலாகும் என்பதை உணர்த்துகிறது. 

Shree Krishna says that God exists inside all living beings as vaiśhvānara, meaning “fire of digestion,” which is ignited by the power of God.  The Bṛihadāraṇyak Upaniṣhad has also stated:

 अयमाग्निर्वैश्वानरो योऽयमन्तः पुरुषे, येनेदमन्नं पच्यते यदिदमद्यते; तस्यैष घोषो भवति यमेतत्कर्णावपिधाय शृणोति; स यदोत्क्रमिष्यन्भवति नैनं घोषं शृणोति ॥ १

इति नवमं ब्राह्मणम् ॥

 “God is the fire inside the stomach that enables living beings to digest food.”

 Though the scientific community has concluded, that the organs of the digestive system such as the stomach, liver, pancreas, gall bladder, etc. secrete digestive juices enabling the digestion of food in living beings. This revelation by God suggests that such an approach is naïve. It is God’s energy which fires up the digestive process in living beings.

 Chaturvidham means four types and annam means food. Food is categorized into four types: 1. Bhojya – Foods that are chewed, such as bread, chapatti, etc.  2. Peya – These are mostly liquid or semi-solid foods which we have to swallow or drink, such as milk, juice, etc.  3. Kośhya – Foods that are sucked, such as sugarcane.  4. Lehya – This includes foods that are licked, such as honey, etc.

 In the last few verses, Shri Krishna has explicated how God supports every aspect of our life. With his energy, He makes the earth habitable, nourishes all vegetation, and even ignites the gastric fire to digest our food. In the next verse, he concludes by stating that He is the master of all knowledge.

 இராமயணத்தில் அக்னிக்கு முக்கிய இடம் உள்ளது. தசரதன் செய்த வேள்வித் தீயிலிருந்து வெளிவந்த பாயசத்தினால் வந்தவர்கள் தான் இராமனும் அவனது தம்பியரும். துளசி இராமாயணத்தில் இராமன் சீதையை அக்னியிடம் ஒப்படைத்து விட்டு அதிலிருந்து வெளிவரும் மாயா சீதையைத்தான் இராமன் கடத்திச் சென்றான். ஹனுமான் இலங்கையைத் தீக்கிரையாகியது அக்னியின் உதவியால். கடைசியில் சீதை அக்னிப் பிரவேசம் செய்து மாயா சீதை அக்னிக்குள் பிரவேசித்து உண்மையான சீதை அக்னியிலிருந்து வெளிவருகிறாள். ஆகையால் இராமாயணத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவில் அக்னியின் பங்கு உள்ளது.

 அக்னி சிவஸ்வரூபம். ஆக இங்கு சிவனையும் சாட்சியாக கருதலாம்.

कीन्हि प्रीति कछु बीच न राखा। लछिमन राम चरित्‌ सब भाषा॥

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 112; இந்து மத கலைச்சொல் அகராதி-112 (Post.16,191)

Written by London Swaminathan

Post No. 16,191

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

U words continued…………….. English version posted yesterday.

ஊர்மிளா

லெட்சுமணனினின் மனைவி; ராமபிரான் சீதையை மணந்த அதே நாளில் ஜனகரின் மகளான ஊர்மிளாவை லெட்சுமணன் மணந்தான்;  வால்மீகி  ராமாயணத்தில் இல்லாத ஒரு விஷயம் வாய்மொழிக் கதைகளிலும் உள்ளூர்க் கதைகளிலும் உள்ளது: அதாவது லட்சுமணன் காட்டில் 14 ஆண்டுகளும் ராமனையும் சீதையையும் காவல் காத்ததால் தூங்கவே இல்லை என்பது அந்தக் கதை; அந்தக் காலத்தில் அவனுக்குப் பதில் பதிவிரதையான ஊர்மிளை அந்த தூக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் பல செய்திகள் உள்ளன . ஆனால் வால்மீகி ராமாயணத்தில் அவள் ராம லெட்சுமணர்களின் தாய் தந்தையருக்கு நல்ல பணிவிடை செய்ததாக மட்டுமே உள்ளது; சீதைபோல, கானகத்துக்கு வர விரும்பியதையும் லட்சுமணன் மறுப்பு தெரிவித்ததையும் வால்மீகி கூறியுள்ளார்.

***

ஊர்வசி

ஊர்வசி, தேவலோகத்தில் உள்ள நான்கு ஆடல் அழகிகளில் புகழ்ப்பெற்ற ஒருத்தி ஆவாள்.

மித்திரன்  -வருணன் சாபம்,  ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வருகிறது.  மித்திர தேவனும் வருண தேவனும் ஊர்வசியின் பேரழகைக் கண்டு அவள் பால் ஈர்க்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கோபமும் முரண்பாடும் காரணமாக, ஊர்வசி பூலோகத்திற்குச் சென்று மனிதனான புரூரவஸை மணந்து வாழுமாறு சாபமிட்டனர்.  பூமிக்கு வந்த ஊர்வசி, சந்திர வம்சத்து அரசனான புரூரவஸை (Pururavas) சில நிபந்தனைகளுடன் மணக்கிறாள்; தன்னுடைய இரு ஆடுகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்; மற்றும் உடலுறவுக் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் அரசன் நிர்வாணமாகத் தன் கண்முன்னே தோன்றக் கூடாது என்பவையே அவை. இந்த நிபந்தனைகளைத் தேவேந்திரன் (இந்திரன்) தந்திரமாக முறிக்கச் செய்தான்; இந்திரன்  ஆடுகளைத் திருடுகிறான் ; அதை மீட்க அவசரத்தில் புரூரவஸ் ஆடையில்லாமல் ஓடிவருகிறான்., ஊர்வசி மீண்டும் தேவலோகம் திரும்பினாள். இவர்களது காதல் மற்றும் பிரிவின் கதையை காளிதாசரின் விக்ரமோர்வசியம் நாடகம் விளக்குகிறது.சிலப்பதிகார  மாதவி, இந்த ஊர்வசியின் வம்சாவளி அல்லது அவளது சாபத்தின் மறுபிறவி என்றும் ஒரு கதை உள்ளது; தேவலோகத்தில் இந்திரன் அவையில் சரியாக ஆடாததால் சாபம் பெற்று, பூமியில் மாதவியாகப் பிறந்தாள் என்பது அக்கதையாகும்.

***

உசனஸ் கவி

உலகிலேயே மிகவும் பழைய கவிஞன் பெயர் உசனா கவி; அவரை உசனஸ் என்றும் அழைப்பர். கிருஷ்ணன், பகவத் கீதையில் காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்று கூறும் விபூதி யோகத்தில் கவிஞர்களுள் நான் உசனா கவி என்கிறார். அவ்வளவு மிகப்பெரிய கவி அவர். ரிக் வேத காலத்திலேயே அவர் மிகவும் பழங்காலக் கவிஞர் ஆகிவிட்டார். அப்படியானால் இற்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பாரென்பது துணிபு. பாலகங்காதர திலகரும் ஜெர்மானிய  அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானியல் ரீதியில் 6000 ஆண்டுக்கு முந்தையது ரிக் வேதம் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும்  ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர்பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जय: ।
मुनीनामप्यहं व्यास: कवीनामुशना कवि: ॥ ३७ ॥

vṛṣṇīnāṁ vāsudevo ’smi
pāṇḍavānāṁ dhanañ-jayaḥ
munīnām apy ahaṁ vyāsaḥ
kavīnām uśanā kaviḥ 10-37 Bhagavad Gita

எப்படித் தமிழில் பல கபிலர்கள், பல நக்கீரர்கள், பல அவ்வையார்கள் இருந்தனரோ அதே போல பிற்காலத்தில் வந்த சுக்ராச்சார்யாரையும் உசனா கவி என்றனர். ஆயினும் அவருக்கு முந்தி வாழ்ந்த முதல் உசனஸ் பற்றி மனு ஸ்மிருதி ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு உரை எழுதியோர் மஹாபாரதத்திலும் (9-50), பஞ்சவிம்ச பிராமணத்திலும் உள்ள ஒரு சுவையான கதையைச் சொல்லுகின்றனர். இதோ அந்தக் கதை:

ஆங்கிரஸின் புதல்வரான உசனஸ், வயதில் மிகவும் சிறியவர். ஆனால் வேதத்தைக் கரை கண்டவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அவர் தன்னைவிட வயதானவர்க ளுக்குப் பாடம் நடத்துகையில், “ஓ! சின்னப் பிள்ளைகளே! நன்றாகக் கவனியுங்கள்” என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்களுக்கோ கோபமும் ஆத்திரமும் வந்தது. இவனே பொடிப்பயல்; இவன் நம்மைப் பார்த்து, சின்னப் பையன்களே (புத்ரஹா) என்று சொல்லுவதாவது என்று முறைத்துப் பார்த்தனர். முகக்குறிப்பால அதிருப்தியைக் காட்டினர். ஆனால் உசனா கவி தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவிலை. எல்லா ரிஷிகளும் ஒரு மஹஜரை எடுத்துக்கொண்டு, கடவுளிடம் போனார்கள். அவரும் சொல்லிவிட்டார், அவன் உங்களை சின்னப் பையன்களே என்று சொல்லுவது சரிதான் என்று! அவன் அறிவினால் தந்தைக்குச் சமமானவன் என்றும் கடவுள் தீர்ப்பு சொல்லி விடுகிறார்!  இக்கதையில் மிகப்பெரிய கருத்து உள்ளது. வேதங்களைக் கரைத்துக் குடித்தவனே அறிவாளி; மூத்தவன். மேலும் கவிஞன் என்பவன் தந்தைக்கு சமமானவன்; அவன் முக்காலமும் உணர்ந்தவன்.

இந்தச் சின்னப் பையன் கதையுள்ள பிராமணம் என்னும் இலக்கியம், சம்ஹிதைக்குப் பிறகு வந்தது. அதை கி.மு 1000 என்று மாக்ஸ்முல்லர் முதலியோரும் ஏனையோர் அதற்கும் முந்தையது என்றும் செப்புவர். எப்படிப் பார்த்தாலும் கிரேக்க நாட்டு ஹோமர் போன்றோர் தோன்றுவதற்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே உசனா கவி வாழ்ந்தார். ஆக அவரே உலகின் மிகப் பெரிய கவி; உலகின் மிக மூத்த கவி. மேலும் கவி, கவிஞன், கவிதை என்ற சொல்லெல்லாம் அவர் முதற்றே பிறந்தது எனின் மிகையாகாது. 

சுமேரியாவிலுள்ள ஜில்காமேஷ் கவிதை போன்றவை வேதத்திற்குப் பிற்காலத்தில் வந்தவை. மேலும் மிகவும் நாகரீகத்தில் பின் தங்கியோரால் எழுதப்பட்டவை. ஆனால் வேத காலக் கவிதைகளோ நாகரீகத்தின் உச்சநிலையைத் தொட்ட ஒரு சமுதாயம் இயற்றியது. உலக அமைதி, மனித நேயம் பற்றிப் பாடுகிறது. அவர்களுக்கெல்லாம் மூத்தவர் நம் கவி – உசனா கவி. வேத இண்டெக்ஸ் தொகுத்த கீத், மக்டொனால்டு ஆகிய இருவரும், இந்தப் பெயர் வேத காலத்திலேயே, புராதனப் பெயராகிவிட்டது என்று பகர்வர். கண்ண பிரானும் பகவத் கீதையில் இவரைப் புகழ்வதால் கி.மு 3102 க்கு முன் அவர் வாழ்ந்தது உறுதியாகிறது. 

மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).

பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;

க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;

வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.

சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155) 

வேதத்தைப் படித்தவன், இளைஞனாக இருந்தாலும் அவனே பெரியவன் (2-156).

சங்க இலக்கியமான புறநானூற்றிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:

“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” – (புறம் 183)

கவி என்றாலேயே அறிஞன் என்று பொருள்!

தொல்காப்பியர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் சங்கப் புலவர் ஆகியோர் இந்தப் பழைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்; இதனால்தான் தொல் என்ற அடைமொழியை  தொல்காப்பியர் பெயரில் சேர்த்தனர் ; கவிதை, கவி, காவியம், கவிஞன்  என்று நாம் பயன்படுத்தும் எல்லா சொற்களும் உசனா கவியிடமிருந்து வந்தவையே.

***

உஷா

உஷா – அநிருத்தன் காதல் கதை

(புராணம்)பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில் வரும் புகழ்பெற்ற காதல் மற்றும் வீரக் கதை இதுவாகும்.

கனவில் வந்த காதல்: அசுர குல மன்னனான பாணாசூரனின் மகள் உஷா. அவள் ஒரு இரவு தன் கனவில் ஒரு அழகான இளைஞனைக் கண்டு அவன் மீது காதல் கொள்கிறாள். உஷாவின் தோழியான சித்திரலேகா, தன் அபூர்வ சக்தியால் பல தேவர்கள் மற்றும் மனிதர்களின் படங்களை வரைந்து காட்டுகிறாள். ஸ்ரீ கிருஷ்ணரின் பேரனும், பிரத்யும்னனின் மகனுமான அநிருத்தனின் படத்தைக் கண்டதும் உஷா அவன்தான் தன் கனவு நாயகன் என அடையாளம் காட்டுகிறாள். சித்திரலேகா வான்வழியாகச் சென்று துவாரகையிலிருந்த அநிருத்தனை இரகசியமாகக் கடத்தி வந்து உஷாவின் அந்தப்புரத்தில் சேர்க்கிறாள். இதனையறிந்த பாணாசூரன் அநிருத்தனைச் சிறையிலடைக்கிறான். தன் பேரனைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணர் பாணாசூரனுடன் பெரும் போர் புரிந்து, இறுதியில் பாணாசூரனின் அகந்தையை அடக்கி, உஷா – அநிருத்தன் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

***

உஷஸ்

உஷா என்பது விடியற் காலம் ஆகும்; இதை வருணிக்கும் ரிக் வேதக் கவிதைகள் உலகிலேயே மிகப் பழமையான அழகுக் கவிதைகளாகக் கருதப்படுகிறது

உஷா (Ushas) அல்லது விடியற்காலை தேவதையே ரிக் வேதத்தில் “வானத்தின் மகள், இரவின் சகோதரி” என்று வர்ணிக்கப்படுகிறாள். உஷா தேவி ஆகாயத்தின் (Dyaus Pita / Sky) மகளாகக் கருதப்படுகிறாள்.இரவின் சகோதரி: அவள் இரவு தேவதையான ராத்ரியின் (Ratri / Night) சகோதரி ஆவாள். ரிக் வேதத்தில் உள்ள மிக அழகான, கவித்துவமான பாடல்கள் பல இந்த உஷா தேவியின் அழகைப் போற்றிப் பாடுபவையாக அமைந்துள்ளன. சிவந்த ஆடைகளை உடுத்தி, இருளை விரட்டி, உயிரினங்களை விழித்தெழச் செய்யும் என்றும் இளமை மாறாத கன்னியாக அவள் வர்ணிக்கப்படுகிறாள்.

***

உத்தரா

Uttarā (उत्तरा).—விராட மஹா ராஜாவின் புதல்வி ; அர்ஜுனனின் புதல்வனான அபிமன்யுவின் மனைவி; முதலில் விராட ராஜன் அர்ஜுனனைக் கல்யாணம் செய்யும்படி வேண்டினான்; ஆனால் அர்ஜுனன் தன்னுடைய மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைப்பதே பொருத்தம் என்றவுடன் அபிமன்யு- உத்தரா கல்யாணம் நடைபெறுகிறது; துரோணரின் மகனான அஸ்வத்தாமன், போர் முடிந்த நாளன்று இரவில், பாண்டவர்கள் கூடாரத்துக்கு தீ வைத்த போது ஆண்கள் அனைவரும் அழிகின்றனர். பாண்டவர் வம்சத்தை, உத்தராவின் கர்ப்பத்தில் இருந்த குழநதை காப்பாற்றியது; அவளுடைய கர்ப்பத்தைக் காத்து, பரீட்சித் என்னும் மகன் பிறக்க கிருஷ்ணன் உதவுகிறான் . பின்னர் உத்த்ராவின் மகன் மூலம் சந்திர வம்சம் என்னும் பாண்டவர் வம்சம் உலகினை ஆள்கிறது .

உத்தர என்பது நட்சத்திரத்துக்கும் வீட்டின் உத்தரம் என்னும் அமைப்பினையும் குறிக்கும்; சங்க இலக்கியத்தில் இது வருகிறது.

***

உத்தர காண்டம் – ராமாயணத்தின் ஏழாவது காண்டம் . இதில் ராமர் அயோத்தி திரிரும்பி வைத்து ஆட்சி செய்த விஷயங்கள் வருகின்றன .

 ராம பிரானுடன் புஷ்பக விமானத்தில் வந்த அனுமன் சுக்ரீவன் ஆகியோருக்கு ராமன் பரிசுகளைக் கொடுத்து  திருப்பி அனுப்புகிறான். சீதா தேவியின் கர்ப்பம் குறித்து ஒரு சலவைத் தொழிலாளி பேசிய அபவாதம் ராமர் காதில் விழுகிறது; மக்களின் சந்தேகத்தை அகற்ற, லட்சுமணனின் ரதத்தில் சீதா தேவியை ஏற்றி வால்மீகி  ஆஸ்ரமத்தின் அரு கில் இறக்கிவிட ராமன் உத்தரவிடுகிறான்; அங்கே வசித்த சீதைக்கு லவ குசன் என்ற இரட்டையர் பிறக்கின்றனர்; அவர்கள் சிறு வயதில் ராம பிரான் அவைக்குச் சென்று ராமனின் கதையைப் பாடியவுடன் அவர்கள் தன்னுடைய பிள்ளை என்பதை அறிந்து ஆட்சிப்பொறுப்பினை ஒப்படைக்கிறார். இதன் மூலம் சூரிய வம்சம் பாரினை ஆள்கிறது தொடர்ச்சியாக 143 தலைமுறைகள் உள்ளதால் இந்தியாவின் 5000 ஆண்டுப்பழமை உறுதியாகிறது; சீதா தேவி தனது பணி முடிந்ததை அறிந்து பூமா தேவியை வேண்டவே பூமி திறக்கிறது. அவள் பூமிக்குள் புகுகிறாள்; ராமனும் தனது அவதாரப்பணி முடிந்ததை அறிந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் புடை சூழ சரயு நதியில் இறங்கி அனைவருடன் வைகுந்தம் அடைகிறான் ; அற்புதமான பல பழைய கதைகள் நிறைந்த இந்தப்பகுதி பிற்காலத்தில் வால்மீகி   அல்லது அவர்களின் சீடர்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

***

உத்தரகுரு

வேத கால இலக்கியம் முதல் இதிஹாச, புராண, தமிழ் இலக்கியம் வரை குறிப்பிடப்படும் மர்மமான நிலப்பரப்பு இது  ஆனந்த மயமான வாழ்வும் செல்வமும் நிறைந்த பூமி. இமயமலைக்கு அப்பால் உள்ள பகுதியாக இது விவரிக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இதை காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு கிழக்கே உள்ள பகுதியாக அடையாளம் காண்கின்றனர்.: ஐதரேய பிராமணம், மகாபாரதம், ராமாயணம் மற்றும் சமண, பௌத்த நூல்களில் உத்தரகுரு குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழ் இலக்கியம்: பதிற்றுப்பத்து (9-14) மற்றும் சிலப்பதிகாரம் (2-10) ஆகிய நூல்களில் உத்தரகுரு பற்றிய குறிப்புகள் உள்ளன. பூம்புகார் நகரைச் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் உத்தரகுருவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். போகபூமி: இது நிலையான இன்பமும் செல்வமும் நிறைந்த ஒரு பூமியாகவும், தவப்பேறுடையோர் வாழும் இடமாகவும் தமிழ்ப் புலவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்ரன் ராஜசூயம் நடத்தியபொழுது , அர்ஜுனன், உத்தர குருவுக்குச் சென்று பொன்னையும் ரத்தினங்களையும் பெற்று வந்த செய்தி மஹாபாரதத்தில் காணப்படுகிறது..

-subham—

Tags- உத்தரகுரு ,ஊர்மிளா, ஊர்வசி , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 112; இந்து மத கலைச்சொல் அகராதி-112

தேசமும் தமிழுமே தெய்வம் – பாரதியின் மூன்றடுக்கு வழிபாடு! (Post.16,190)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,190

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதியார் நினைவு தினம் – 11-9-26 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

தேசமும் தமிழுமே தெய்வம் – பாரதியின் மூன்றடுக்கு வழிபாடு! 

ச. நாகராஜன்                    

 தமிழ் தந்த உலக மகாகவி பாரதியாரின் சொற்கள் மிகவும் நுட்பமானவை.

மகாகவியைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த மனதுடன் அவன் சொற்களை மீண்டும் மீண்டும் படித்து உண்மைப் பொருளை உணர்தல் வேண்டும்.

‘அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ என்று அவனே குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம்.

 பாரதிக்கு தேசமும் தெய்வமும் ஒன்றே தான்.

“காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்’

என்று குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் பாடலில் இதை பாரதி எடுத்துக் காட்டுகிறான்.

 இராமர் லட்சுமணனிடம் பொன் மயமாக ஒளிரும் லங்கையைப் பார்த்து அதன் வனப்பில் கவரப்படாமல் தாய்நாட்டையும் தாயையும் உயர்வாகப் பேசியதை ராமாயணத்திலிருந்து “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே” என்று இப்படி மொழி பெயர்த்துச் சுட்டிக் காட்டுகிறான்.

(அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதே லக்ஷ்மணா! ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி! – லக்ஷ்மணா இந்த ஸ்வர்ணமயமான இலங்கை என்னைக் கவரவில்லை. என் தாயும் தாய்நாடும் ஸ்வர்க்கத்தை விட மேலானவையாகும்.)

 தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு

   சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவ ளென்றுணராத

   இயல்பினலாமெங்கள் தாய் ( எங்கள் தாய் பாடலில்)

என்று தாயின் தொன்மையைச் சுட்டிக் காட்டும் பாரதி அண்டங்களைப் படைத்தவனைப் பற்றிக் கூறுகிறான் இப்படி:

“நக்க பிரானருளால் – இங்கு

      நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அண்டங்கள் – வளர்

     தொகை பல்கோடி பல் கோடிகளாம்:

என்று சிவபிரானைக் கூறிய பாரதி “ஆதி சிவனின் சோதியே சக்தி” என்று இன்னொரு பாடலில் கூறி, காளியும் சிவனும் ஒன்றே தான் என்று தெளிவு படுத்துகிறான்.

இப்படி ஆதிசிவனையும் காளியையும் பல்வேறு பாடல்களில் துதித்துக் கொண்டாடிய பாரதி தமிழின் தோற்றத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறான் ‘தமிழ்த் தாய்’ பாடலில் இப்படி:

“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

     மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

சிவன் பெற்ற தெய்வமே தமிழ்!

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று பாப்பாவிடம் உறுதி சொல்லும் பாரதி,

“தமிழ்த்திரு நாடு தன்னைப் – பெற்ற

   தாயென்று கும்பிடடி – பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா – எங்கள்

    ஆன்றோர்கள் தேசமடி பாப்பா”

என்று கூறுகிறான்.

தொடர்ந்து,

வேதம் உடையதிந்த நாடு – நல்ல

 வீரர் பிறந்ததிந்த நாடு

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்’ 

  தெய்வமென்று கும்பிடடி பாப்பா”

என்று கூறுகிறான்.

தேசமே தெய்வம்; அந்த ஆதிசிவன் பெற்றதே தமிழ்; அதுவே தெய்வம்” என்று கூறி தனது மூன்றடுக்கு வழிபாட்டு மர்மத்தை பாரதி விளக்குகிறான்.

தேசமே தெய்வம்

தமிழே தெய்வம்

தெய்வமே ஆதிசிவன்; அதில் ஜோதியே சக்தி.

இப்படி கூறும் பாரதி, மனிதர்களை நன்கு வகைப்படுத்துகிறான்.

மூடர் யார் என்பதை வரையறுத்துக் கூறுகிறான்:

தெய்வம் பலபல சொல்லி – பகைத்

  தீயை வளர்ப்பவர் மூடர்: (முரசு பாடலில்)

மேலோர் யார் என்ற கேள்விக்கு அவனது பதில் இது:

வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

புண்ணியம் செய்பவர் யார்? யோகி யார்?

பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (தேசமுத்துமாரி பாடல்) என்று அறிவுறுத்தும் பாரதி யோகசித்தி பாடலில் தனக்கு வேண்டிய சில வரங்களைக் கேட்கிறான்:

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை

   நேரே இன்றெனக்குத் தருவாய்” என்று ஆரம்பிக்கும் பாரதி தன்னை புதிய உயிர் ஆக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.

“முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்

    மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி

என்னைப் புதிய உயிர் ஆக்கி – எனக்கு

    ஏதும் கவலையறச் செய்து – மதி

தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும் 

    ஸந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்”

பின்னர் தொடர்ந்து தனது பட்டியலை முன் வைக்கிறான்.

“கல்லை வயிரமணி ஆக்கல் – செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல், வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்” என்று ஒரு நீண்ட பட்டியலை விண்ணப்பம் செய்யும் பாரதி,

“இந்த நாட்டோர் கீர்த்தியெங்கும் ஓங்கக்  – கலி

    சாடும் திறன் எனக்குத் தருவாய்:

என்று முடிக்கிறான்.

அற்புதமான மூன்றடுக்கு வழிபாட்டை மேற்கொண்டு தேசம், தமிழ், ஆதிசிவன், காளி ஆகிய மூன்றையும் தெய்வமாக்கும் ஒரே வழிபாட்டு வித்தையை அவனிடம் கண்டு வியக்கிறோம்.

அவன் வேண்டியபடியே தெய்வம் அவனுக்கு புதிய உயிர் ஒன்று தந்து மீண்டும் தமிழகத்திற்கு அவனை அனுப்பி அவன் வரங்களைச் சாதிக்கச் செய்யும் என்பதில் ஐயம் உண்டா என்ன?

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித் திருநாடு.

 மகாகவியைப் போற்றுவோம் ;தேசத்தை உயர்த்துவோம்!

***

பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் (Post.16,189)

Indo Greek King Demeritus

Written by London Swaminathan

Post No. 16,189

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

பல்லவ மன்னர்கள் பற்றிய செய்திகளை எத்தனை செப்பேடுகளிலிருந்து (Copper Plates) நாம் அறிய முடிகிறது? அந்த செப்பேடுகளின் பெயர்கள் என்ன ?

2

இவைகளைப்பற்றிய மேல்விவரங்களை எங்கே பெறலாம்?

3

அப்பர் என்னும் திருநாவுக்கரசரை மஹேந்திர பல்லவன் கொடுமைப்படுத்திய பின்னர் மீண்டும் இந்து மதத்   க்குத் திரும்பி வந்ததை நாம் அறிவோம் ; கல்வெட்டுகளில் அவர் பற்றி உள்ள வியப்பான செய்திகள் என்ன ?

4

பல்லவர்களுக்கும் பாரத நாட்டின் வடமேற்கில் ஆண்ட ஒரு மன்னருக்கும் இடையேயான தொடர்பினைக் காட்டும் அதிசய சம்பவம் என்ன ?

5

இந்தோனேஷியாவுக்கும் பல்லவர்களுக்கும் இடையேயான அதிசயத் தொடர்பு என்ன ?

6

மஹேந்திர பல்லவன் குறித்து செப்பேடுகள் தரும் செய்திகள் என்ன ?

7

கூரம் செப்பேட்டின் சிறப்பு என்ன ?

8

பல்லாங்குழி விளையாட்டு பற்றி தகவல் தரும் செப்பேடு எது?

9

பல்லவர்களின் கோத்திரம் குறித்து செப்பேடுகள் என்ன சொல்கின்றன ?

10

பல்லவர்கள் எந்த நகரிலிருந்து ஆண்டனர் ? எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் ?

************************

விடைகள்

1.முப்பத்துக்கும் மேலான செப்பேடுகள் (Copper Plates) கிடைத்துள்ளன. அவைர்களின் பெயர்கள்:

பள்ளங்கோயில் செப்பேடுகள்

கூரம் செப்பேடுகள்

உன்னக்குரவயபாளையம் செப்பேடுகள்

ரேயுருச் செப்பேடுகள்

ராயக்கோட்டை செப்பேடுகள்

உதயேந்திரம் செப்பேடுகள் -1

காசக்குடி செப்பேடுகள்

புல்லூர்ச் செப்பேடுகள்

தண்டந்தோட்டம் செப்பேடுகள்

பட்டதாள் மங்கலம் செப்பேடுகள்

வேலூர்பாளையம் செப்பேடுகள்

பாகூர் செப்பேடுகள்

ஓங்கோடு செப்பேடுகள் -1

உருவப்பள்ளி செப்பேடுகள்

மாங்களூர் செப்பேடுகள்

பீகிரச் செப்பேடுகள்

நெடுங்கராயச் செப்பேடுகள்  

வேஷந்தச் செப்பேடுகள்

விழவெட்டிச் செப்பேடுகள்

செந்தலூர்ச் செப்பேடுகள்

ஓங்கோடு செப்பேடுகள் -2

தர்சி உதிரி செப்பேடுகள்

சுராச் செப்பேடுகள்

உதயேந்திர செப்பேடுகள் -2

மயிதவோலு செப்பேடுகள்,

ஹீரஹடஹள்ளி செப்பேடுகள்,

குணபதேயம் செப்பேடுகள்

ஹொசக்கோட்டை செப்பேடுகள்

ஹெல்லகரே  செப்பேடுகள்

ஹால்திபூர் செப்பேடு செப்பேடுகள்

****

2.இவைகளைப்பற்றிய மேல்விவரங்களை பல்லவர் செப்பேடுகள் முப்பது (year 1966) என்ற உலகத்த தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட நூலிலிருந்து அறியலாம் ; பல கல்வெட்டு நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய நூல் இது.

***

3.உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்

டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.

“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்றும் நாகசாமி விளக்கினார்  .மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்

“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,

என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;

“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.

செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே  ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.

****

Indo Greek King Demeritus

4.யானைத் தலை மகுடம் கண்டு அதிசயம் அடைந்த பல்லவ மன்னன் ! வடமேற்கு இந்தியாவில் இந்தோ-கிரேக்க மன்னன் அணிந்த ஒரு யானைத்தலை கிரீடம்

பல்லவ மன்னனுக்குச் சூட்டப்பட்டவுடன் எல்லோரும் ஆச்சரியம் அடைந்தனர்

இந்த வியப்பான விஷயம் பல்லவர் கல்வெட்டில் உள்ளது. இது பற்றி வரலாற்றுப் பேரறிஞர்   டாக்டர் இரா.நாகசாமி , “யாவரும் கேளிர்” என்ற அவரது நூலில் கூறுவதாவது:-

“காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் நந்தி வர்மனின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்தி வர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும், யானை உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத்தலை  போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு இவ்வாறு கூறினும் சிற்பத்தில் யானைதத்லை போன்ற முடி காணப்படவில்லை”.

***

5.பல்லவ மன்னர்களின் பெயர்கள் அனைத்தும் வர்மன் என்ற பெயரில் முடியும் இதே போல இந்தோனேஷியாவின் அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் மூல வர்மன் பூர்ண  வர்மன் என்ற இரண் டு பெயர்களைக் கொண்டுள்ளது மேலும் தென் கிழக்காசிய மொழிகளின் லிபிகள் இன்றுவரை பல்லவ கிரந்தத்திலிருந்து உருவான லிபியைப் பயன்படுத்துவதும் பல்லவர் தொடர்பைக் காட்டுகிறது போர்னியோ தீவின் அடர்ந்த கட்டுக்குள் கண் டுபிடிக்கப்பட்ட அந்த சம்ஸ்க்ருத மொழிக்கல்வெட்டுகள் பிராமணர்கள் யாகம் செய்தபோது கொடுக்கப்பட்ட தானங்களைக் குறிக்கின்றன . வேத விற்பன்னர்கள் யாகம் செய்யும் போது நாடும் யூபத் தூண்கள் அங்கே உள்ளன. பல்லவ கிரந்தமும் வர்மன் என்ற மன்னர் பெயரும் பல்லவர் தொடர்பைக் காட்டுகின்றன; வியப்பான விஷயம் என்னவென்றால் நாம் அறிந்த பல்லவ மன்னர்களின் காலத்துக்கு முற்பட்ட தேதியுடைய கல்வெட்டுகள் இவை.

***

6.செப்பேடுகளும் கல்வெட்டுகளும் தரும் செய்திகள்

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

    சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.

பட்டங்கள்

   இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.

   புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.

மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.

   சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

***

7.கூரம் செப்பேடுகள் 

கூரம் செப்பேடுகள் என்பது பல்லவ மன்னர் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு, தோராயமாக கி.பி. 679) வெளியிட்ட புகழ்பெற்ற செப்பேட்டுத் தொகுப்பாகும். இது சென்னை அரசு அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டுள்ளது

காலம்: கி.பி. 7-ஆம் நூற்றாண்டு (சுமார் கி.பி. 679)வெளியிட்டவர்: பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன்மொழி & எழுத்து: சமஸ்கிருதம் (முதல் 4.5 பக்கங்கள்) மற்றும் தமிழ் (மீதமுள்ள பகுதிகள்), கிரந்த எழுத்துகள்அளவு: 7 ஏடுகள் (14 பக்கங்கள்), நந்தி இலச்சினைக் கொண்ட மோதிரத்தால் கோர்க்கப்பட்டதுஆய்வு செய்தவர்: இ. ஹூல்ட்ஸ்

முக்கியச் செய்திகள்1. கோவில் அமைப்புகாஞ்சிபுரம் அடுத்த கூரத்தில் பல்லவர் காலத்துப் தூங்கானை மாடவடிவிலான முதல் கல்லாலான சிவன்கோயில் (வித்யா விநீத பல்லவ பரமேஸ்வர கிருஹம்) எழுப்பப்பட்டதை இது தெரிவிக்கிறது

2. அருகில் உள்ள பரமேஸ்வரமங்கலம் நகர் உருவாக்கத்திற்கு 6,300 குழி (98.44 ஏக்கர்) நிலம் தேர்வு.பரமேஸ்வர தடாகம் ஏரி வெட்டுதல் மற்றும் பாலாற்றில் இருந்து பெரும்பிடுகு கால்வாய் வெட்டுதல்.நீர் பகிர்மான உரிமைகள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டன.செங்கல் உற்பத்திக்கு சூளைமேட்டுப்பட்டி உருவாக்கப்பட்டது.

3. ஊருக்கு நடுவில் மகாபாரதம் வாசிக்கும் மண்டபம் மற்றும் தண்ணீர், தீ பந்தம் செலவுக்கு நிலப்பங்கு ஒதுக்கப்பட்டது.

வணிகர்கள், பொற்கொல்லர்கள், மருத்துவர்களுக்கு முக்கிய இடங்களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது

***

8.பள்ளன்கோயில் செப்பேடுகள்: பல்லவ மன்னன் சிம்மவர்மனால் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டு) அவனது 6-வது ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது; இச்செப்பேடு, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட இருமொழிப் பட்டயமாகும். தமிழரசனின் ஆணையைத் தமிழில் கொண்டு வெளிவந்த செப்பேடுகளில் இதுவே காலத்தால் முற்பட்ட மிகப்பழமையான செப்பேடு என்ற பெருமையைப் பெறுகிறது.இச்செப்பேடு தரும் முக்கிய வரலாற்றுச் செய்திகள் 1. பல்லவ மன்னன் சிம்மவர்மன், காஞ்சிபுரம் திருப்பருத்திக்குன்று (ஜீனகாஞ்சி) பகுதியைச் சேர்ந்த சமண (ஜைன) முனிவரான வஜ்ரநந்திக்கு நிலத்தைத் தானமாக வழங்கியதை இச்செப்பேடு முக்கியமாகப் பதிவு செய்கிறது.2. நிலத்தின் பரப்பளவும் எல்லைகளும்இக்கொடையின் கீழ், நாட்டார் (ஊர் சபையினர்) ‘தாமர்’ (தாமல்) என்னும் ஊரிலிருந்த 16.5 பட்டி நிலத்தை வழங்கினர். இந்தத் தானத்தை வழங்குவதற்கான அரச ஆணையை நிறைவேற்றியவர் பல்லவ அமைச்சரான நரபயன் ஆவார்.தானமாக வழங்கப்பட்ட அந்த நிலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதமான வரிகளும் நீக்கப்பட்டு , முழு உரிமையோடு முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பல்லாங்குழி விளையாட்டு பற்றிய குறிப்பு:

இச்செப்பேட்டின் எல்லைகளைக் குறிப்பிடும் பகுதியில் ‘பல்லாங்குழி கா’ (Pallankuzi Ka) என்ற நில எல்லைக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி, கி.பி. 550-களிலேயே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்தது என்பதற்கான மிக முக்கிய வரலாற்று ஆதாரமாக இச்செப்பேட்டு வரிகள் கருதப்படுகின்றன.

***

9.பல்லவர்களின் கோத்திரம் பாரத்வாஜ கோத்திரம் என்று செப்பேடுகள் சொல்கின்றன.

***

10.காஞ்சீபுரம், பல்லவர்களின் தலை நகரமாகத் திகழ்ந்தது. அவர்கள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். 

–subham–

Tags- பல்லவர் செப்பேடுகள், முதல், 10 கேள்விகள், காஞ்சீபுரம், பல்லாங்குழி, யானைத் தலை மகுடம், மகேந்திர வர்மன்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 111; இந்து மத கலைச்சொல் அகராதி-111(Post.16,188)

Written by London Swaminathan

Post No. 16,188

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Urmila

She was the daughter of King Janaka of Mithila and Queen Sunaina. She married Lakshmana on the exact same day that Rama married Sita. Children: Traditional texts state that Urmila and Lakshmana had two sons named Angada and Chandraketu.  When Rama, Sita, and Lakshmana left for a 14-year forest exile, Urmila wished to accompany them. Lakshmana asked her to stay in Ayodhya to comfort and look after his aging parents and the grieving kingdom.  According to regional folk Ramayanas and Ram-kathas (though absent in Valmiki’s original Sanskrit text), Lakshmana refused to sleep for 14 years so he could continuously guard Rama and Sita. When the Goddess of Sleep (Nidra) approached him, Urmila selflessly volunteered to sleep on his behalf so he could remain awake and fulfil his duty. This quiet act of devotion earned her immense respect as an unsung heroine of the epic. While folk tales vividly celebrate her 14-year slumber and sacrifice, foundational texts like Valmiki’s Ramayana focus more broadly on her quiet endurance and palace duties at home.

***

Urvashi

Urvashi is an Apsara (nymph) in Hindu legend. She was a celestial maiden in Indra’s court and was considered the most beautiful of all the Apsaras. She became the wife of king Pururavas (Purūrávas, from purū+rávas “crying much or loudly”), an ancient chief of the lunar race. ShBr 11.5.1, and treated in Kalidasa’s drama Vikramōrvaśīyam.

Birth: There are many legends about the birth of Urvashi but the following one is most prevalent. Once the revered sages Nara-narayana was meditating in the holy shrine of Badrinath Temple situated in the Himalayas. Indra, the king of the Gods, did not want the sage to acquire divine powers through meditation and sent two apsaras to distract him. The sage struck his thigh and created a woman so beautiful that Indra’s apsaras were left matchless. This was Urvashi, named from ur, the Sanskrit word for thigh. After his meditation was complete the sage gifted Urvashi to Indra, and she occupied the pride of place in Indra’s court. Heard of the beauty of Purūravas from Nārada, when she came to the earth due to a curse of Mitra and Varuṇa, and gave enjoyment to him so long as he satisfied her two conditions—keeping her two sheep safe, and not showing himself naked before her except in sexual intercourse. When after 64 years she saw him naked one day, she left him. He looked for her and saw her at the R. Sarasvati playing with her friends. At his request she promised a day’s enjoyment with him every year. On her advice he prayed to Gandharvas, and got an Agnisthāli. Mother of six sons by Purūravas.4 Returned to Heaven.5 The Goddess enshrined at Badari.6 When she danced before Indra, she forgot her abhinaya and was cursed by Bharata to become an invisible creeper for 55 years on the earth.

Urvaśī (उर्वशी).—One of the heavenly Apsarās. She tried to seduce Arjuna when he was in the heavenly kingdom. Arjuna refused to satisfy her because he considered her the mother of the Kuru dynasty having taken Puru for her husband. Because of Arjuna’s refusal, Urvaśī cursed Arjuna to become a eunuch for one year. This curse took its effect during last year of exile of the Pāṇḍavas in the kingdom of Virāṭa; a woman from the heavenly planets who became enamoured of King Purūravā.

***

Usanas kavi

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जय: ।
मुनीनामप्यहं व्यास: कवीनामुशना कवि: ॥ ३७ ॥

vṛṣṇīnāṁ vāsudevo ’smi
pāṇḍavānāṁ dhanañ-jayaḥ
munīnām apy ahaṁ vyāsaḥ
kavīnām uśanā kaviḥ

“Of the Vrsnis I am Vasudeva; of the Pandavas I am Dhananjaya (winner of wealth); of the sages I am Vyasa and of the poets I am Usana”.
– Bhagavad Gita 10-37

Kavi means seers, that is, one who could see or tell what is going to happen next.

Why did Krishna say that he was Usana Kavi, an ancient poet whom we did not know much? We know a lot of other Vedic seer poets, but not Usanas.

First of all let me give you some basic information:
1.Until this day we use the word ‘Kavi’ for a poet in all the major Indian languages including Tamil (Pulavar was old and Kavinjar is current). This shows that the Rig Vedic Sanskrit lives in all our hearts. Kavi is a poet and Kavitha is a poem in all Indian languages. ‘Kavi’ is in the Veda and in the Gita!

2.Usanas belonged to Kavya Gotra and in Tamil, the oldest poet Tolkappiyan is believed to be from this Gotra. And there is another poet Kappiyatru Kappiyanar of Patitru Pathu (Ten Decads) from the same Gotra.

3. This shows the antiquity of the Gita as well. Krishna mentioned one of the oldest poets of the Rig Veda! AA Macdonell and A B Keith say in their Vedic Index of Names and Subjects, “ Usanas Kavya is an ancient seer, already a half mythical figure in the Rig Veda where he is often mentioned, especially as associated with Kutsa and Indra”. Rig Veda itself is old; in fact the oldest book we know of. Usanas had become ancient to the seers of Rig Veda! But Krishna was able to appreciate it. That means Krishna lived before the collection of Rig Vedic hymns by Vyasa.

4.”Later on Usanas becomes the Purohita/Priest of the Asuras in their contests with the Gods. A Variant of his name is Kavi Usanas. He appears in the Brahmanas as a teacher also”, say the authors. This shows that there were more poets with the same name in later days. We know that Shukracharya was the Guru of Asuras. This reveals another fact that both Asuras and Suras had Brahmin teachers. Both Devas and Asuras were sons of the soil. In Tamil also we have famous names of Sangam period, Kapila, Parana, Nakkirar and Avvaiyar at various ages. All these poets have done some works in later ages in Tamil as well. So it is possible that we had other poets with the name of Usanas. But even their works are not available!!
5.Usana’s name figured as an author of Artha sastras (Books on Economics) earlier than Kautilya alias Chanakya.

References to Usanas in the Rig Veda
His name occurs in seven out of ten Mandalas of the Rig Veda. His name is missing in Mandalas 2,3 and 7. We are unfortunate to lose the poems of such a popular poet. This shows how much of old Sanskrit literature was lost.

The way all the people praise him give the impression that the words Kavi and Kavya (poet and classics)– all originated from Usanas Kavya!

The following references are considered important (from Vedic Index):
Rig Veda 1-51-10, 1-83-5, 1-121-12;
R V 4-16-2, 6-2011, 8-23-17
R V 9-87-3, 9-97-7, 10-40-7
Probably also 1-130-9, 5-31-8, 5-34-2
Also in A V 4-29-6 (A V = Atharva Veda)

Taittriya samhita, Panchavimsa Brahmana, Sakyayana Srauta Sutra mention the Purohit/priest Usanas (Sukracharya).

Kavi Usanas is found in RV 4-26-1.

He appears as a teacher in two of the Brahmanas.
Yajur Veda and Sama Veda also praise him as a great poet.
Usanas’ few compositions are available in the Rig Veda: 9-87 to 89 and 8-84. As usual, the foot notes say that it is difficult to understand certain lines. Ninth Mandala of Rig Veda deals with Soma Pavamana (Soma Plant and Juice).
Usana, the son of Kavi is well known for making Agni the ministrant priest and offerer of the sacrifice for Manu ( RV. 8-23-17)

He is referred to as a seer and leader of the people. By his poetic gift he is said to have discovered the secret milk of cows of Indra which was concealed ( RV. 9-87-3)

Usana is said to have increased the vigour of Indra ( RV. 1-51-10) and fashioned the thunderbolt for him for slaying Vritra( RV. 1-121-12; 5-34-2).

He is characteristically wise and soma is compared with him due to his wisdom ( RV. 9-97-7)

Indu, the well armed god, is flowing onward, who quells the curse and guards from treacherous onslaught,
Father, begetter of the gods, most skilful, the buttress of the heavens and earth’s supporter
Rsi and sage, the champion of the people, deft and sagacious, Usana in wisdom
He had discovered even their hidden nature, the cows concealed and most mysterious title (RV 9-87-2/3)

Source books : Vedic Index of Names and Subjects Volume 1 and Bhrgus – A Syudy by Jayanti Panda, Delhi, 1984; The Rig Veda, Translated by Ralph T H Griffith.

****

Usha

Ūṣā (ऊषा).—(also uṣā) Daughter of Bāṇa. Her companion was Citralekhā. Dreamt one night that she was sleeping with Aniruddha. Informed her friend of the dream but could not give Aniruddha’s name. Citralekhā drew pencil sketches of all gods and men and showed them to her one by one. Seeing Aniruddha’s she identified him. At this, Citralekhā flew through air and brought Aniruddha to her room unnoticed by others. Ūṣā was enjoying his company. The guards who got scent of this reported to Bāṇa who imprisoned Aniruddha. In course of time she married Aniruddha and went to his home with the approval of Bāṇa.*

Aniruddha (अनिरुद्ध), grandson of Kṛiṣhṇa, son of Pradhyumna was born in the race of Yadu in Dvāravatī, and became the lover of Uṣā: daughter of the Asura Bāṇa.

***

Ushas

Ushas:–Goddess of the dawn in the Vedas. She is the all seeing eye of the gods. An auspicious deity heralding Surya and drives away darkness. Rig Veda describes her as a beautiful virginal figure who rides in a hundred chariots. She inspired the finest lyrical hymns in the Rig Veda. Ushas is beautiful, fresh and ever young, dressed in a red garment awakens creatures and send them off to their respective duties.

 Ushas is the goddess of dawn in the Rig Veda, daughter of Dyaus Pita (Sky), and sister of Ratri (Night). She rides a golden chariot drawn by red horses or cows, banishes darkness, and wakes all life. Equivalent to Roman Aurora or Greek Eos. Most beautiful poems are found in the Vedas describing her beauty.

***

Uttara

Uttarā (उत्तरा).—The daughter of King Virāṭa and the wife of Abhimanyu. Virāṭa first want Arjuna to marry his daughter, but Arjuna declined and said that his son, Abhimanyu, should marry her. Uttarā became the mother of King Parīkṣit. She prayed to Śrī Krishna to save her son, who was being attacked within her womb, and Kirshna saved him.

Also the name of a star in the sky.

***

Uttara kanda

Uttara Kanda is the last Book of the great epic Ramayana and it deals with the return of Rama to Ayodhya and his coronation to the throne. The reign of Rama in Ayodhya has also been narrated in this Book along with the second ordeal of Sita. This Kanda or Book also gives a description of the birth of Lav and Kush, the two sons of Rama in the hermitage of Valmiki and the episode ends with the description of the last days of Rama in the world. After the furious war between Rama and Ravana, Ravana was ultimately killed by Rama and Vibhishana was made the king of Lanka. Then Rama met with Sita and Sita had to give an Agnipariksha before Rama could accept her since she stayed for long in another man’s home. Sita went into the burning pyre but was left unhurt and thus her faithfulness to Rama was proved. Then Rama, along with Lakshmana and Sita return to Ayodhya. 

With the rising Sun, Rama taking the car Pushpaka, which was given to him by Vibhishana, stood ready to depart. Self-moving was that car, and it was very fairly painted and large; two stories it had, and windows and flags and banners and many chambers, and it also gave a melodious sound as it coursed along the airy way. Then Vibhishana asked Rama if he could do anything else for him and Rama then told him to content the monkeys and bears who have accomplished his affair with jewels and wealth, so that they could fare to their homes. He also advised him to rule as a righteous, self-controlled, and compassionate and a just collector of revenues, so that all may be attached to him. Vibhishana bestowed wealth on all the host, and Rama was taking leave of all the bears and monkeys and of Vibhishana and at that time all of them cried out in a single voice that they also would like to go with him to Ayodhya. Thus, Rama invited them gladly, and Sugriva and Vibhishana and the entire host mounted the mighty car; and the car rose up into the sky, drawn by golden geese, and sailed on its airy way, while the monkeys, bears, and rakshasas took their ease. 

Hanuman is Rewarded 
The monkeys stayed in the kingdom of Ayodhya more than a month, feasting on honey and well-cooked fruits and meats and roots, though it seemed to them but a moment, because of their devotion toward Rama. The time then came for them to go to their own city, and Rama embraced every one with affection and gave them goodly gifts. But Hanuman bowed and begged this boon, that he might ever be devoted to Rama alone, and that he might live on earth so long as the story of the deeds of Rama was told of amongst men. Hearing this request from Hanuman, Rama granted it and took from his own neck a jeweled chain and put it upon Hanuman. One by one the monkeys came and touched the feet of Rama,and then went their way; but they wept for sorrow of leaving him. 

Ordeal of Sita 
Then Rama governed Ayodhya for ten thousand years; and the news once came out that Sita had conceived. Then Rama asked her if she had any longing, and she replied that she would like to visit the hermitages of the sages by the River Ganga. Rama thus granted her wish and the visit was scheduled for the next day. That very night Rama came to know from his ministers that his subjects were happy since he killed Ravana but were somewhat not pleased for he brought back Sita with him who stayed for long in the house of a different person other than her husband. At this, Rama got utterly shocked and ordered his brothers and told Lakshmana to leave Sita in the jungle and return to Ayodhya. Lakshmana thus left Sita in the hermitage of Valmiki and returned to Ayodhya. 

Lava and Kusha 
Rama ruled his kingdom well and by that time Sita, dwelling at the hermitage of Valmiki, gave birth to two sons, and they were named Kusha and Lava; and they grew up in the forest hermitage, and Valmiki trained them with great wisdom, and he made the book of Ramayana in slokas, and gave them skill in recitation. 

Sita taken home by Earth 


After Rama came to know that Lava and Kusha were his sons and that Sita was living in the hermitage of Valmiki, he send message to the saint enquiring about Sita. Rama asked if Sita would like to return to Ayodhya. Then Valmiki accompanied Sita to Ayodhya and then Rama again asked Sita to prove her faithfulness towards him again. With this Sita prayed to Vasundhara to accept her since he was ever faithful to Rama. Thus a heavenly throne rose up from within the earth, borne on the heads of mighty nagas, decked in shining jewels; and the Earth stretched out her arms and welcomed Sita and placed her on the throne, and the throne sank down again. 

Last Days of Rama 
Rama became heavy-hearted with the disappearance of Sita inside the earth before his very eyes, and the whole world seemed empty without her.. Bharata reigned in Kekaya, and Shatrughna was king of Madhu, while the sons of Lakshmana founded kingdoms of their own. Once came a yogi who called himself Time and told Rama that he was the avatar or incarnation of Lord Vishnu and that he had accomplished his goal by killing Ravana and reigning in the earth for eleven thousand years. Then he advised Rama that the time has come for his return to heaven. Rama accepted his advice and along with his brothers and several rakshasas and monkeys he went to the river Sarayu, from where Rama reached the heaven. 

***

Uttara kuru

Uttarakuru (उत्तरकुरु) play a mythical part in the Epic and later literature, are still a historical people in the Aitareya Brāhmaṇa, where they are located beyond the Himālaya (pareṇa Himavantam). In another passage, however, the country of the Uttara Kurus is stated by Vāsiṣṭha Sātyahavya to be a land of the gods (deva-kṣetra), but Jānaṃ-tapi Atyarāti was anxious to conquer it, so that it is still not wholly mythical.

Uttarakuru (उत्तरकुरु).—A part of the Jambūdvīpa (Island of Jambū). Mention is made in the Mahābhārata that during his conquest Arjuna had gone up to this place and carried away from there plenty of wealth. It is believed by common people that this place is inaccessible to human beings. (Mahābhārata Sabhā Parva, Chapter 28, Stanzas 7 to 20). The southern end of this place is the Nīlagiri and the Northern end Mount Meru. The inhabitants are gifted people, with trees bearing flowers and fruits, the flowers fragrant and the fruits sweet.

A particular type of tree known as Kṣīrī (milky) grows here from which milk will flow. There are also trees which will give you whatever you ask. It was the belief of ancient people that with the fruits of Kṣīrī, you could make garments and ornaments. The soil of this place contains gems and in the sand there is gold. Those who fall down from heaven live in this region. The average age of the inhabitants of this place is said to have been eleven thousand years. There is a kind of bird in this place called Bhāruṇḍa. These birds drag dead bodies away to caves. (Mahābhārata Bhīṣma Parva, Chapter 8, Stanzas 2 to 13).

to be continued…………………….

Tags- Uttarakuru, Urvashi, Uttara Kanda, Usana Kavi, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 111; இந்து மத கலைச்சொல் அகராதி-111

வள்ளுவர் மனைவி பற்றி பாரதியார் என்ன சொன்னார் ? (Post.16,187)

Written by London Swaminathan

Post No. 16,187

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

செப்டம்பர் 11 பாரதி நினைவு தினம்

பாரதியார் (1882-1921)

வள்ளுவர், இளங்கோ, கம்பன் ஆகியோரைப் பாரதியார் பாடியதை பெரும்பாலோர் அறிவார்கள். ஆனால் அவர் வள்ளுவரின் மனைவி , ராமரின் மனைவி, வசிட்டரின் மனைவி, கண்ணம்மா, பாண்டவர்களின் மனைவி ஆகியோரைப் பாராட்டிப் பாடியதை பலரும் அறியார்; அத்தோடு விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி பற்றி அவர் பாடியதையும் எத்தனை பேர் அறிவார்கள்? கண்ணம்மா என்ற தலைப்பில் ஏழு பாடல்களை பாடினார் அவற்றில் பல திரைப்படங்களில் வந்தன.

 சுருக்கமாகக் காண்போம்.

1

அவ்வையார் பற்றி இரண்டு பாடல்கள்:-

மனைவியும் தெய்வமே !

பெண் விடுதலை

பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி

பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்!

மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,

மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!

விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,

விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,

பெண்ணுக்கு விடுதலைநீரில்லை யென்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. 45

தாய் மாண்பு

பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்

பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?

கண்டார்க்கு நகைப் பென்னும் உலக வாழ்க்கை

காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ?

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி ஒளவை: — “அன்னையும் பிதாவும்”

பாரிடை “முன்னறிதெய்வம்” என்றாள் அன்றோ?               46

தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?

தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை, தங்கை

வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?

மனைவியொருத் தியையடிமைப் படுத்தவேண்டித்

தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?– பாரதி அறுபத்தாறு

****

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்

நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்

நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர். —பாரத தேசம் – பாரதியார் பாடல்

****

2

அருந்ததி பற்றி இரண்டு பாடல்கள்:–

ராமன்  மனைவி வசிட்டன் மனைவி – பாரதி பாடல்

பாரதி சுய சரிதை  கவிதையில் ஆயிரம் ஆண்டு தவம் செய்தாலும் அருந்ததி, வாசுகி, சீதா தேவி போன்ற பெண்ணரசிகள் கிடைப்பது அரிது என்கிறார்

வசிட்டருக்கும் இராமருக்கும் பின்னொரு

வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்

பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து

பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண்.

(வசிஷ்ட மஹரிஷியின் மனைவி-அருந்ததி ; ராமரின் மனைவி- சீதா தேவி; வல்லஉவரின் மனைவி- வாசுகி )

***

3

பாஞ்சாலி சபதத்தில் சபையில் திரெளபதி நீதி கேட்டழுதல் என்ற தலைப்பிலுள்ள கண்ணியில்

விம்மியழுதாள் – விதியோ கணவரே !

அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டியெனை

வேதகி சுடர்த் தீமுன்  வேண்டி மணஞ்செய்து

பாதகர்முன் இந்நாளில் பரிசழிதல்  காண்பீரோ 

இந்துக்கள்தான் உலகத்தில் விண்வெளியை ஆராய்ந்து முதலில் ரிக்கார்ட் செய்த மாபெரும் விஞ்ஞானிகள் ! இதை பால கங்காதர திலகரும் ஜெர்மன் சம்ஸ்க்ருத அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் ஒருவர் ஒருவர் அறியாமல் தனித்தனியே ஆராய்ந்து ரிக்வேதம் 6000 ஆண்டுப் பமையானது என்று பறைசாற்றினார்கள் என்பதிலிருந்து நாம் அறிகிறோம்  ; வானத்தில் உள்ள விண்மீண்களுக்கு துருவன்அகஸ்தியன், திரிசங்கு , சப்தரிஷிகள் கார்த்திகை ,ரோகிணி என்றெல்லாம் பெயர் சூட்டினார்கள் ; இதில் என்ன அதிசயம் என்னவென்றால் வேதகாலம் முதல் 6000 ஆண்டுகளாக இந்துக்கள் இதை இன்றும் பின்பற்றிவருவதே!  பாணினி குறிப்பிடும் ,சங்க இலக்கியம் குறிப்பிடும், ஏழு நட்சத்திரங்களை பிராமணர்கள் தினமும் 3 முறை வணங்குகின்றனர்; அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் — இந்துக்களின் திருமணச் சடங்கில் இன்றும் உளது . கார்த்திகை நட்சத்திரத்தைக் கொண்டாடாத முருக பக்தன் உண்டோ! வானவியலில் இந்துக்களை மிஞ்சிய பழங்கால சமுதாயம் உலகில் இல்லை . வேதங்களுக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப்  பின்னர்தான் கிரேக்க நாட்டில் ஹோமர் எழுதவே தொடங்கினார்! பாபிலோனிய, எகிப்திய நாகரீகங்களில் உள்ள குறிப்புகளும் நம்மிடையே கடன் வாங்கியதைக் காட்டுகின்றன.

****

4

முஸ்லீம் பெண்கள் பற்றி ஒரு பாடல்:–

பர்தா’ ஒழிக – பாரதியார் முழக்கம்

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! – பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் – இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பிரண்டையும் – துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லைமன்மதக்கலை – முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென் கிறாய் – பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் – வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார் – வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண் பசப்பிலே – கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பனோ? 2- பாரதியார்

தற்காலத்து தமிழ் உலகின் மிகப் பெரிய கவிஞன் பாரதியார் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. அவர் மாபெரும் தமிழ் அபிமானி, தேச பக்தர், சர்வ சமய புரவலர், இந்து மத போற்றுநர் என்பதிலும் எவருக்கும் ஐயமில்லை. ஏசுவையும், புத்தரையும், முகமது நபியையும் பாராட்டிப் பாடல்களும் இயற்றினார் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அவருக்கு பர்தா , முகத்திரை பிடிக்காது. ஏனெனில் இது வேத காலப் பெண்களிடத்தில் கிடையாது. இது அவர் சொல்லும் செய்தி; நான் செய்யும் விமர்சனம் அல்ல.

****

5

நிவேதிதா தேவி

அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
  கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
  டாம்பயிர்க்கு மழையாய் இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
  பெரும்பொருளாய்ப் புன்பைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய
  தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.

நிவேதிதா தேவியைச் சந்தித்த பின்னர் அவருக்கு பெண்ணுரிமைப்  பாடல்களைப் பாடும் உத்துவேகம் பிறந்தது. ஏன் உங்கள் மனைவியை அழைத்து வரவில்லை என்ற அவருடைய கேள்வி பாரதியாரின் உள்ளத்தில் இருந்த அறியாமை என்னும் இருளை அகற்றியது . கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டுக்கு (1905-1906) மனைவியையும் அழைத்து வராத பிழையை உணர்ந்தார் ; பின்னர் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக என்ற ஒளிபடைத்த வார்த்தைகளை உதிர்க்கத் தொடங்கினார் .  

NIVEDITA STATUE WIITH LONDON SWAMINATHAN IN WIMBLEDON, LONDON.

–subham—

Tags- வள்ளுவர் மனைவி, பாரதியார், பாரதியார் பாடல்களில் ,  அருந்ததி, சீதா தேவி, வாசுகி , நிவேதிதா, வசிட்டன்

மகாகவியின் கவித்திறம்! (Post No.16,186)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,186

Date uploaded in London – 11 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

செப்டம்பர் 11 – மகாகவி பாரதியார் நினைவு தினம்!

மகாகவியின் கவித்திறம்!

ச. நாகராஜன்

மகாகவி பாரதியாரின் கவித்திறத்தை எப்படி வியந்து சொல்வது?

இதற்கு அவரே தன்னை எப்படிப் பாராட்டிக் கூறியுள்ளனர் என்று ஒரு கவிதையில் கூறி விடுகிறார்.

பிரான்ஸ் என்னும் நாட்டைச் சேர்ந்த உயர் புலவோரும் பிற ஆங்கில கவியரசர் தாமும் கூறுவதை அப்படியே அவர் எட்டயபுரம் மஹாராவுக்கு எழுதி அனுப்பிய சீட்டுக் கவியில் கூறி விடுகிறார்:

“சுவை புதிது, நயம் புதிது, வளம் புதிது

  சொற்புதிது ஜோதி கொண்ட

நவகவிதை எந்நாளும் அழியாத

   மஹாகவிதை”

இதற்கு மேல் அவரது கவித்திறத்தை நயம்பட எப்படிக் கூற முடியும்!

சங்க காலத் தமிழ் புலவர்தம் ஆற்றலும், மேற்கில் உயர் ஆங்கிலக் கவிஞர் தம் திறமும், வெவ்வேறு மொழியில் கவிதை இயற்றிய பாரதக் கவிஞர்களின் நுணுக்கங்களையும் திறன்களையும் ஒருங்கே சேர்த்து காலத்திற்கேற்ப புதுப் பாடல்களை தமிழில் பாடி புதுமை படைத்த மகாகவி அவர்.

தெய்வீக திரௌபதியை அவன் வர்ணிக்கும் அழகே அழகு!

“புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை

ஆவியில் இனியவளை – உயிர்த்

தணி சுமந்து உலவிடு செய்யமுதை

ஓவியம் நிகர்த்தவளை – அருள்

ஒளியினைக் கற்பனைக்கு உயிரதனைத்

தேவியை, நிலத்திருவை – எங்குத்

தேடினும் கிடைப்பருந் திரவியத்தை

படிமிசை யிசையுறவே – நடை

பயின்றிடுந் தெய்விக மலர்க்கொடியைக்

கடிகமழ் மின்னுருவை – ஒரு

கமனியக் கனவினைக் காதலினை

வடிவுறு பேரழகை – இன்ப

வளத்தினை” –“

இது தான் பாரதியின் தெய்விக திரௌபதி!

கண்ணனை அவன் காணும் பாங்கே தனி.

பாகவதத்தை மீறி, நாலாயிர திவ்யபிரபந்தத்தை மீறி அவன் கண்ணனைப் புகழும் அழகே அழகு!

கண்ணனின் செயல்திறத்தை அவன் வர்ணிக்கிறான்:-

“சக்கரத்தை எடுப்பது ஒரு கணம்;

தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;

இக்கணத்தில் இடைக் கணம் ஒன்றுண்டோ

இதன் உள்ளே பகை மாய்த்திட வல்லான்காண்!”

பகவத் கீதையின் எழுநூறு ஸ்லோகங்களையும் வில்லிப்புத்தூரார் தனது வில்லி பாரதத்தில் ஆறு பாடல்களில் சுருக்கி அனைவரையும் வியக்க வைத்தார். ஆனால் பாரதியோ பகவத் கீதையை இரண்டே அடிகளில் சுருக்கிப் பாடி பிரமிக்க வைக்கிறான்”

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்

பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்.

அவ்வளவு தான்! பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் மூன்றையும்  எட்டே சொற்களில் அடக்கி விட்டான்!

“வேண்டிய கொடுத்திடுவான்; – அவை

விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவான்

ஆண்டருள் புரிந்திடுவான்; – அண்ணன்

அருச்சனன் போல் எனை ஆக்கிடுவான்”

அர்ஜுனன் தம்பிகளாக மாற ஆசைப்படுவோர் கண்ணன் என்னும் அருள் தாயை உரிமையுடன் வேண்டலாம்! – இதுவே பாரதியின் பார்வை!

பாரதியின் உவமைகள் எல்லையற்ற பரவசத்தை கணம்தோறும் உருவாக்கும் அற்புத உவமைகளாகும். இவற்றை வேறெந்த இலக்கியத்திலும் காண முடியாது.

சுட்டும் விழிச்சுடர் தான் – சூரிய சந்திரரோ

வட்டக் கரியவிழி – வானக் கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் – புடவை பதித்த நல் வயிரம்

நட்ட நடுநிசியில் – தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலர் ஒளி – சுந்தரப் புன்னகை!

நீலக் கடல் அலையே – நெஞ்சின் அலைகள்!

கோலக் குயிலோசை – குரல் இனிமை

இப்படி ஒரு வர்ணணையை எளிய சொற்களில் பாரதியிடம் மட்டுமே பார்க்க முடியும்!

“பெண்டிர் தமக்கெல்லாம் கண்ணன் பேச அருந்தெய்வமடீ” என்று உறுதி கூறும் பாரதி, அவன் தரும் குங்குமத்தை குழைத்து மார்பெழுத, மங்களம் ஆகுமடீ – பின்னோர் வருத்தம் இல்லையடீ என்று முடிக்கிறான்.

தேசபக்திப் பாடல்கள், தமிழைப் போற்றும் பாடல்கள், தெய்வபக்திப் பாடல்கள், வாழ்க்கை நடைமுறைப் பாடல்கள், பெண்ணுரிமைப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், இயற்கை அழகுப் பாடல்கள், காவியப் பாடல்கள், வேதாந்தப் பாடல்கள் என பாரதி தொடாத துறை இல்லை; வியக்க வைக்காத முறை இல்லை!

பாரதியைப் பயில்வோம்; ஊக்கம் கொள்வோம்; உயர்வோம்!

***

சதாசிவ பிரம்மேந்திராள் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,185)

Written by London Swaminathan

Post No. 16,185

Date uploaded in London – 10 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

சதாசிவ பிரம்மேந்திராள் எங்கு பிறந்தார் ? அவருடைய தாய் தந்தையர் யார் ?

2

அவர் பாடிய புகழ்பெற்ற கீர்த்தனைகள் என்ன ?

3

அவர் எத்தனை கீர்த்தனைகளை பாடினார்? அவர் பாட்டிலுள்ள முத்திரை என்ன ?

4

திருவிசை நல்லூரில் ஒரு வீட்டின் கிணற்றில் கங்கை நதி பொங்கி தெருவெல்லாம் ஓடியபோது அவர் என்ன பாடினார் ?

5

அவர் எழுதிய நூல்கள் யாவை ?

6

சதாசிவ பிரம்மேந்திராளுடைய எல்லா கீர்த்தனைகளும் எங்கே கிடைக்கும் ?

7

அவருடைய எந்த நூலினை நாம் மேலும் ஆராய வேண்டும் என்று நமக்கு காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) கட்டளையிட்டுள்ளார் ?

8

அவருடைய சமாதிகள் எங்கெங்கு இருக்கின்றன?

9

அவர் பாடத்துவங்கிய சம்பவம் எது ?

10

முஸ்லீம் பக்தருக்கு அவர் சொன்ன உபதேசத்தின் பொருள் என்ன ?

****

விடைகள்

1. சதாசிவ பிரம்மேந்திராள் மதுரையில் பிறந்தார் மதுரையில் பிறந்த அவருக்கு தாய் தந்தையர் இட்ட பெயர் சிவராமகிருஷ்ணன் . செல்லப்  பெயர் பிச்சுக்குப்பன் ;

தாயார் பெயர் — பார்வதி,  தந்தை பெயர் – சோமநாத யோகி. அவருடைய குரு- காஞ்சி காமகோடி பீடம் 57-ஆவது பீடாதிபதி ஸ்ரீ பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகள். மைசூர் மஹாராஜாவிடம் வித்வானாக வேலை பார்த்தார் .புதுக்கோட்டை மகாராஜாவுக்கு மண்ணில் மந்திரம் எழுதிக் கொடுக்கவே அதை அவரும், பின்னர் அவரது வாரிசுகளும் பேழையில் வைத்து பூஜித்து வருகின்றனர்.

***

2.சதாசிவ பீரம்மேந்திராளின் சம்ஸ்கிருதப் பாடல்கள் மிகவும் சுருக்கமானவை. ஆனால் ஆழ்ந்த கருத்துள்ள அற்புத ரத்தினங்கள்!! கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது கீர்த்தனைகள் இடம்பெறும். சிந்தா நாஸ்தி கில, மானச சஞ்சரரே, க்ரீடதி வனமாலி, ப்ரூஹி முகுந்தேகி, கேளதி மமஹ்ருதயே, காயதி வனமாலி, பஜரே கோபாலம், பஜரே யதுநாதம், பிபரே ராமரசம் முதலிய பாடல்கள் நினைவில் நிற்கும் பாடல்களாகும். மஹாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில் இவரது வாழ்க்கை காட்டப்படுகிறது. பாலகுமாரன் எழுதிய ‘தோழன்’ என்ற நாவல் இவரது வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டது.

பஜரே கோபாலம், மானஸ…………..

ஸ்மர வாரம் வாரம் சேதஹ…………….

ப்ரூஹி முகுந்தேதி ரஸனே……………..

மானஸ ஸஞ்சரரே ப்ரஹ்மணி………….

க்ரீடதி வனமாலி கோஷ்டே………….

பஜரே யதுநாதம் மானஸ…………..

ப்ரதிவாரம் மானஸ…………..

பிபரே ராம ரஸம்…………………

சிந்தா நாஸ்திகில தேஷாம்…………………..

ஸர்வம் ப்ரஹ்ம மயம் ரே ரே

காயதி வனமாலி மதுரம்………………..

பஜரே  யது நாதம்,  பஜரே ரகு வீரம்

***

3. சதாசிவ பிரம்மேந்திராள் 23 கீர்த்தனைகளை இயற்றினார்; அவருடைய முத்திரை பரமஹம்ச. மிகவும் சுருக்கமானவை இனிமையும் அர்த்த புஷ்டியும் நிறைந்தவை; எல்லாம் சம்ஸ்க்ருதத்தில் உள்ளவை. புகழ்பெற்ற கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் அனைவரும் பாடியுள்ளனர்.

***

4.திருவிசை நல்லூரில் ‘அமாவாசை கிணறு புகழ்’ ஸ்ரீதர ஐயாவாள் இவருடைய கிளாஸ்மேட்Classmate . கிணற்றில் தோன்றிய கங்கையைப் பார்த்து ஆனந்தம் எய்திய சதாசிவர் , துங்கதரங்கே கங்கே ஜெய துங்கதரங்கே கங்கே  என்ற பாடலைப் பாடினார்.

***

5. சதாசிவ பிரம்மேந்திராள் எழுதிய நூல்கள்

தக்ஷிணாமூர்த்தி தியான ஸ்தோத்திரம், நவமணி மாலா, ஸ்வப்னோ திதம், அத்வைத ரஸ மஞ்சரி, அத்வைத தாராவளி, சிவாநுபூதி, ப்ராகாஷிகா, ஆத்மானு சந்தானம், பிரணவ சஹஸ்ர நாமாவளி ,ஆத்ம வித்யா விலாசம்,மநோ நியமனம் மற்றும் சில நூல்கள் .

***

6.கர்னாடிக். காம் சைட்டில் ஒரே கிளிக்கில் அதனை பாடல்களையும் இலவசமாகப் பெறலாம்.

https://www.karnatik.com/co1045.shtml

***

7.குருரத்தினமாலிகை (Guru Ratna Malika) என்பது புகழ்பெற்ற அத்வைத ஞானியான ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரால் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட ஒரு முக்கியமான வரலாற்று மற்றும் ஆன்மீக நூலாகும். இந்த நூல் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆச்சாரியர்களின் வரலாற்றையும், அவர்களின் குரு பரம்பரை வரிசையையும் விரிவாக விளக்குகிறது.  சதாசிவ பிரமேந்திரர் தனது குருநாதரான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதியின் மீது கொண்ட பக்தியினால் இந்நூலை 87 ஸ்லோகங்களில் அமைத்துள்ளார். இதில் காஞ்சி பீடத்தின் ஆச்சாரியர்கள் மட்டுமன்றி, அந்தந்த காலகட்டங்களில் பாரத நாட்டை ஆண்ட மன்னர்கள் மற்றும் அவர்களின் அரசவைகளில் இருந்த புலவர்கள், கவிகள் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் விவரிக்கப்பட்டுள்ளன.ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரின் சக-சீடரும், காஞ்சி பீடத்தின் ஆச்சாரியராக விளங்கியவருமான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி கொடுத்த தூண்டுதலின் பேரில் தான் பிரமேந்திரர் இந்நூலை இயற்றினார். பிற்காலத்தில், இந்த குருரத்தினமாலிகை நூலுக்கு ஆத்மபோதேந்திரரே ‘சுஷமா’ (Sushama) என்ற பெயரில் மிக விரிவானதொரு விளக்கவுரையையும் எழுதியுள்ளார் இந்த நூலை ஆராய்ந்து வெளியிட வேண்டியது மடத்தின் சீடர்களின் பொறுப்பாகும்.

***

8.நெரூரில் உள்ள அவருடைய சமாதி மிகவும் புகழ்பெற்றது அதற்கு காஞ்சி சிருங்கேரி சங்கராசார்யார்களா விஜயம் செய்துள்ளனர் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அங்கே  பத்து நாட்கள் தங்கி தியானம் செய்தார் ; மிகவும் சக்தி வாய்ந்த சமாதி . மானாமதுரை, பாகிஸ்தானிலுள்ள கராச்சியிலும் நர்மதா நதியின் கரையிலுள்ள ஒம்மகாரிலும், காசியிலும் இவர் சமாதி அடைந்ததாகச் சொல்லுவார்கள் .மானாமதுரையிலும் நெரூர் போல சமாதி இருக்கிறது . ஒரே நேரத்தில் பல இடங்களில் வாழ்ந்து அற்புதம் நடத்திய சித்தர் அவர்.

***

9.எங்கள் ‘சைட்’டின் வாசகர் ஆர் நஞ்சப்பா எழுதிய தகவல்:

ப்ரஹ்மேந்திரரின் கீர்த்தனைகள் அத்வைத ஞானத்துடன் தெய்வ பக்தியையும் போற்றுவதாக இருக்கும். இவை சம்ப்ரதாய பஜனைகளில் தவராமல் இடம்பெறும். இவற்றில் சாமா ராகத்தில் அமைந்த “மானஸ சஞ்சரரே” பாடலும் சுருட்டி ராகத்தில் அமைந்த “ப்ருஹி முகுந்தேதி” பாடலும் மிகவும் ப்ரசித்தமானவை. ( இதை குறிஞ்சி ராகம் என்பவர்களும் உண்டு). இந்தப்பாடல் “சாவித்ரி” திரைப்படத்தில் எம்.எஸ். ஸுப்புலக்ஷ்மி பாடி மிகவும் பிரபலமானது. ( நாரதர் பாடுவதாக வரும்)

இந்தப் பாடலின் பின் ஒரு ரசமான நிகழ்ச்சியைச் சொல்வார்கள். பாடசாலையில் படிக்கும் நாட்களில் சதாசிவப் ப்ரம்மேந்திரர் சிவராமக்ருஷ்ணன் என்ற பெயர் தாங்கியிருந்தார். ஸ்ரீதர ஐயாவாள் எனப் புகழ்பெற்ற பெரியவரும் இவருடன் படித்தவரே. சிவராமக்ருஷ்ணனுக்கு தர்க்கத்தில் அதிக ஈடுபாடு, குருவின் இடத்திற்கு வருபவர்களையெல்லாம் தர்க்க வாதத்திற்கு இழுத்து பேசிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் குரு சற்றுப் பொறுமை இழந்து , ‘சிவராம க்ருஷ்ணா, நீ பேசமலே இருக்கமாட்டாயா’ என்றாராம். இந்த வார்த்தைகள் சட்டென்று உறைத்தன, அன்றிலிருந்து மௌனம் பூண்டார். பிறகு வித்யாப்பியாசம் எல்லாம் முடிந்து துறவியாகிச் சஞ்சரித்துவந்தார். ஒருமுறை சொந்த வூருருக்கு வந்தார். அங்கு பழைய சகபாடி ஸ்ரீதர ஐயாவாளையும் சந்தித்தார், ஆனால் ஏதும் பேசவில்லை. ” உன்னை வீண்பேச்சு பேசவேண்டாம் என்றுதானே குரு சொன்னார், நீ ஏன் தெய்வவிஷயமாகப் பேசக்கூடாது, அதை யார் தடைசெய்தது” என்று ஐயாவாள் கேட்டாராம். இதன் நியாயத்தை உணர்ந்த சதாசிவர் உடனே “ப்ரூஹி முகுந்தேதிரசனே ப்ரூஹி முகுந்தேதி” [ முகுந்தனே என்று சொல்,

நாவேமுகுந்தனே என்று சொல்” எனத் தொடங்கிப்பாடினார். பின்னர் வேறு பல கீர்த்தனங்களையும் பாடினார். பரம ஞானியின் அனுபவத்தில் எழுந்த கீர்த்தனைகளாதலால் இவை விசேஷ சக்தியுடன் அமைந்திருக்கின்றன.பாடுபவர்களுக்கும் ஶ்ரேயஸ், கேட்பவர்களுக்கும் ஆனந்தம்.

ஸ்ரீ ப்ரஹ்மேந்த்ரர் இயற்றிய சிவ மானஸிக பூஜா கீர்த்தனங்களும் ஆத்ம வித்யா விலாசம் என்னும் 65 ஶ்லோகங்கள் கொண்ட சிறு நூலும் ஆஸ்திகர்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றவை, இவற்றை 1958ம் வருஷம் காஞ்சி மடத்தில் ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம் வெளியிட்டது. பின்னர் பிற பதிப்புக்கள் பற்றித் தெரியவில்லை. சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாலும் சில க்ரந்த அக்ஷரங்களைக் கொண்டிருப்பதாலும் இவற்றைப் புரிந்துகொள்ள சரியான விளக்கம் தேவைப்படுகிறது. ஆனால் இவருடைய கீர்த்தனங்கள் எளியவையே. பக்தியும் ஞானமும் சங்கமித்தவை.

***

10. சதாசிவ பிரம்மேந்திராள் அவதூதர் என்னும் நிர்வாண சாமியார் அணியைச் சேர்ந்த சித்தர்; ஒரு முறை பெண்களுடன் இருந்த ஒரு முஸ்லீம் படைத் தலைவரின்  கூடாரத்தில் நுழைந்தவுடன் அவன் ஆத்திரப்பட்டு கையை வாளை வாளால் வெட்டினான்; இவர் ஒன்றுமே நடவாதது போல சாதாரணமாகக் நடந்து சென்றார்; பின்னர் இவருடைய மஹிமையை உணர்ந்து அவன் அடிபணிந்தான். அவரை அந்த முஸ்லீம் தொடர்ந்து வரலானான் நெடுநாட்களுக்குப் பின் இவனைக் கண்ட யோகியர் பின்பற்றக் காரணம் வினவ, நடந்தது அறிவித்துப் பிழைபொறுக்க வேண்ட, மற்றொரு கரத்தால், அக்கையைத் தடவ அக்கை வளர்ந்தது. மகமதியன் அருள் பெற்று நீங்கினன்.பிரம்மேந்திராளுக்கு முஸ்லீம் சீடர்களும் உண்டு ; அவர்களில் புகழ்பெற்றவர்கள் இரட்டை மஸ்தான்கள் ; அவர்களுடைய சமாதி தஞ்சாவூரில் உள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார். இவரைப் பின் தொடர்ந்த முஸ்லீம் , இவரது சீடராகி, உபதேசம் செய்யுமாறு வேண்ட, ‘’ நீ உனக்கு வேண்டுவதைச் செய்யாதே, அதற்குப் பின்னால் நீ விரும்புவதைச் செய்யலாம்’’ என்றாராம். (அதாவது மனம்போன போக்கில் போக வேண்டாம்; சுய கட்டுப்பாடு வந்துவிட்டால் பின்னர் நம்முடைய செயல்கள் நம்மைப் பாதிக்காது என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த உபதேசம் ஒரு விடுகதை போன்றது. ஆழமான அர்த்தமுடையது(“Do not do what you want, and then you may do what you like”).

-subham—

Tags-சதாசிவ பிரம்மேந்திராள், பாடல், 10 கேள்விகள். கீர்த்தனைகள் , நெரூர் சமாதி, அவதூத சந்நியாசி