Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
16-8-26 தீபம் இதழில் வெளியான கட்டுரை!
ஒன்றில் பதினான்கு : ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
ச. நாகராஜன்
நமது புராணங்கள் பதினான்கு லோகங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. (மேலே ஏழு லோகங்கள்; கீழே ஏழு லோகங்கள்). மக்கள் இதற்கான அர்த்தத்தை மேலெழுந்தவாரியாகப் புரிந்து கொண்டு புனித லோகங்கள், பாவ லோகங்கள் – தேவ லோகம், பாதாள லோகம் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த எல்லா லோகங்களும் நமது உடலிலேயே இருக்கின்றன. ஏழு மேல் பாகத்திலும் ஏழு கீழ் பாகத்திலும் உள்ளன.
உடலின் மேல் பாகம் எது? தலை! உயர்ந்த பகுதி திரிகூட சிகரம். அதில் ஏழு லோகங்களும் அமைந்துள்ளன. கருட லோகம், கந்தர்வ லோகம், யக்ஷ லோகம், கின்னர லோகம் மற்றும் கிம்புருஷ லோகம் என்பவையே அவையாகும். அவையெல்லாம் தலையில் உள்ளன. கருட லோகம் என்பது மூக்கு. சுவாசத்தை உள்ளிழித்து வெளியிடும் இடம். கந்தர்வ லோகம் என்பது கண்கள். யக்ஷ லோகம் என்பது நாக்கு. கின்னர லோகம் என்பது காது. கிம்புருஷ லோகம் என்பது தோல். தொடும் உணர்வைத் தரும் இடம்.
இந்த லோகங்களின் பெயர்கள் ஐந்து தான் என்றாலும் இந்தப் பெயர்கள் குறிப்பிடுவனவற்றில் ஏழு பகுதிகள் உள்ளன. மூக்கு முதலாவது, கண்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது, நாக்கு நான்காவது, காதுகள் ஐந்தாவது மற்றும் ஆறாவது, தோல் ஏழாவது. இவையே மேல் லோகங்கள்.
இந்த அங்கங்களை மேலான லட்சியத்திற்கானவை என்பதை உணர்ந்து இவற்றை எவர் ஒருவர் போற்றித் தொழுகிறாரோ அவரே மனிதப் பிறவி எடுத்ததற்கான தகுதி உடையவர் ஆவார். அதாவது, சுவாசத்தை உள்ளிழுக்கையில் மாசுபடாத சுத்தக் காற்றை சுவாசிப்பது, புனிதமானவற்றைப் பார்ப்பது,ஊக்கமூட்டும் ஒலிகளைக் கேட்பது முதலானவற்றைச் சொல்லலாம். இந்த லோகங்களை முறையாகப் பண்படுத்தும் போது ஒரு மனிதன் தெய்வீகமானவன் ஆகிறான்.
உனக்கு ஏன் கண்கள் கொடுக்கப்பட்டது தெரியுமா?
பார்க்கமுடிந்ததை எல்லாம் பார்ப்பதற்காகவா?
இல்லை, இல்லை.
எவர் கைலாய சிகரத்தில் அமர்ந்திருக்கிறாரோ
அந்தக் கடவுளின் தரிசனத்தைக் கண்களில் நிரப்புவதற்காகவே!
நாம் நமது கண்களை புனிதமான இடங்களைப் பார்க்குமாறு செய்ய வேண்டும். எவை நல்லவையோ எவை புகழ் பெற்றவையோ அவற்றில் மட்டிலுமே நாம் பார்வையைச் செலுத்த வேண்டும். கண்களை கடவுள் படைத்ததற்கான நோக்கம் அதுவேதானாகும்.
மற்றவர்களைப் பார்த்து அவர்களை மதிப்பீடு செய்வதற்காகவோ, சந்தையில் மற்றவரைப் பின் தொடர்ந்து செல்வதற்காகவோ பார்க்கக்கூடாத படங்களைப் பார்க்கவோ அவற்றைக் கடவுள் பரிசாகத் தரவில்லை.
உனக்கு ஏன் நாக்கு தரப்பட்டிருக்கிறது தெரியுமா?
சுவையான உணவு வகைகளை ருசிப்பதற்காகவா?
இல்லை, இல்லை!
உணவை மென்று விழுங்குவதானது முதல் நோக்கம் இல்லை. தெய்வீகமான வார்த்தைகளை உச்சரிப்பதே நோக்கமாகும். இப்போது, சிலர் நல்ல சம்பவங்களை விவரிக்கும் போது காதுகள் அவற்றைக் கேட்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் ஒருவர் இன்னொருவரிடம் ரகசியமாக ஒன்றைக் கூறும் போது இரண்டு காதுகளும் இணைந்து அதை ஒட்டுக் கேட்க முனைகின்றன. இதற்காகவா கடவுள் காதுகளைப் படைத்து நமக்கு அளித்திருக்கிறார்?
ஆகவே ஏழு மேல் லோகங்களும் தெய்வீகத்தைக் குறித்தே பயன்படுத்தப்பட வேண்டும். அப்படிச் செய்யும் போது ஒருவன் தெய்வீகமயமாகிறான். அவன் முக்தி அடைகிறான்.
மீதியுள்ள லோகங்கள் உடலில் இருந்து உடல் வடிவத்தைப் பராமரிக்க உத்தேசிக்கப்பட்டவையாகும். வயிறு என்பது தான் பெட்ரோல் டாங்க். அது நிரப்பப்படும் போது ஒவ்வொரு அங்கத்திற்கும் திசுவிற்கும் சக்தி அளிக்கப்பட்டு அவை தர வேண்டிய நல்ல கடமைகளுக்காக அவை இயக்கப்படுகின்றன. இரண்டு கைகளும் இரண்டு கால்களும் சேர்க்கப்பட்டால் இப்போது இவை ஐந்து லோகங்களாகும். மற்ற இரண்டு – குதமும் சிறுநீர் கழிக்க உதவும் உறுப்புமாகும். இந்த ஏழு பாதாள லோகங்களும் உடலைப் பராமரிக்கின்றன.
மேல் லோகங்கள் ஏழும் கீழ் லோகங்கள் ஏழும் இன்றியமையாதவை. அவை பரஸ்பரம் ஒன்றுக்கொன்று உதவுகின்றன. கீழே உள்ளவை புராணங்களின் கூற்றுப்படி பாதாள லோகங்கள். அவையே அடிப்படையான அஸ்திவாரத்தை உருவாக்குகின்றன. எவர்கள் புஷ்பங்களுக்கும் பழங்களுக்கும் ஆசைப்படுகிறார்களோ அவர்கள் பார்க்க முடியாமல் இருக்கும் வேருக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். கீழே என்பதால் பாதாள லோகங்கள் அலட்சியப்படுத்தப்படக் கூடாது. சந்தோஷமானது துக்கத்திலிருந்தே கடைந்தெடுக்கப்பட வேண்டும். இன்பம் என்பது துன்பத்திலிருந்து விளையும் ஒன்றேயாகும்.
25-8-1982 அன்று Shri Sathya Sai Institute of Higher Learning இல் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
SEPTEMBER 2026
HANUMAN DISCOVERED IN VIETNAM (Post 16,215)
வியட்நாம் நாட்டில் அனுமன் சிலை கண்டுபிடிப்பு
ஆயிரம் ஆண்டுகள் பழமையுடைய அந்த சிலையை ஒப்படைத்ததற்காக அவருக்கு வியட்நாம் அரசு அமெரிக்க டாலர் 3574 வெகுமதியை அளிக்கிறது.
A man in central Vietnam’s Quang Ngai Province will receive a reward of nearly VND93 million (US$3,574) for handing over a rare Hanuman statue believed to date back to the 11th-12th centuries.
Quang Ngai man awarded nearly USD 3,600 for donating ancient statue
Vietnam’s Ministry of Culture, Sports and Tourism has approved a reward for a resident of Quang Ngai Province who voluntarily donated a valuable archaeological artefact to a provincial museum.
மீன் பிடிக்கும் தொழிலாளியான அவர் கடலில் மணலுக்கு அடியில் புடைத்திருந்ததை2021 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார் . அமெரிக்கர் ஒருவர் பெருந்தொகை கொடுப்பதாகக் கூறியும் அதை ஏற்க மறுத்தார். இப்பொழுது வியட்நாம் நாட்டின் கலாசாரத்துறையிடம் அதை ஒப்படைத்தார் .
வியட்நாமில்தான்1800ஆண்டு பழமையான முதல் சம்ஸ்க்ருத கல்வெட்டு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது அதிலுள்ள ஸ்ரீமாறன் என்ற பெயரினைவைத்து வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் என்ற கட்டுரையை1990களில் லண்டனிலிருந்து வந்த மேகம் பத்திரிகையில் எழுதினேன். அதில் மேல்விவரம் காண்க வியட்நாமின் பழைய பெயர் சம்பா.
According to local authorities, Duong Dinh Luc of Van Tuong Commune received nearly VND 93 million (about USD 3,600) for handing over a stone statue of the monkey god Hanuman to the Quang Ngai Provincial Museum.
The reward will be funded through the budget of the provincial Department of Culture, Sports and Tourism.
Luc discovered the statue in 2021 while fishing off the coast near his hometown. The artefact was found buried beneath sand about 50 metres from shore at a depth of around four metres.
Due to its size and weight, Luc enlisted relatives and hired lifting equipment to recover the statue and transport it home.
He later said that a buyer had offered him VND 2 billion (about USD 77,000) for the artefact, but he declined the offer and instead chose to donate it to the museum for preservation and public display.
13 Sept 2011 — The first king in Vietnam was known by the name Sri Maran. Translated in to Tamil it is Thiru Maran. We knew several Pandya kings by these names …Read more
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடந்த எட்டு நாட்களில் படித்த கேள்வி பதில்களுக்கு நிறைவாக வரும் (கடைசி) பகுதி இது.
81
இலங்கை கலாவன் போரில் வெற்றிபெற்ற பல்லவன் யார்?
82
திருவெள்ளறையில் உள்ள பாடல் கல்வெட்டின் சிறப்பு என்ன ?
83
அபராஜித வர்மனின் பாடல் கல்வெட்டு எங்கே உள்ளது ?
84
எங்தக் கல்வெட்டில் மகேந்திரவர்மன் யாரும் செய்யாத முறையில் கோயில் கட்டியதாக பெருமைப்படுகிறான்?
85
செப்பேடுகளைத் தவிர பல்லவர் வரலாற்றைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் எங்கே உள்ளன ?
86
பல்லவ மன்னர்கள் பற்றிய தமிழ் நாவல்கள் யாவை ?
87
பல்லவ மன்னர்கள் பற்றிய தமிழ் திரைப்படங்கள் உண்டா ?
88
வெளிநாட்டில் பல்லவர் செல்வாக்கினைக் காட்டும் அம்சங்கள் என்ன ?
89
பல்லவ மன்னர்கள் பற்றிய தமிழ்ப்புஸ்தகங்கள் எவை ?
90
பல்லவர் தொடர்பாக இனி செய்ய வேண்டியது என்ன ?
****
விடைகள்
81.பாகூர்ச் செப்பேடுகள் பல்லவ மன்னன் நிருபதுங்கநின் பிரம்மதேயத்தைக் கூறுகிறது; பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு வழங்கும் தானம். இதில் நிருபதுங்கனைப் பற்றிக்கூறும்பொழுது , அவன் பாஆண்டியர்களுக்கு உதவியது அரிசில்கரையில் கொண்ட வெற்றி , கலாவின் போரில் அவன் பெற்ற வெற்றி , இலங்கையில் அவன் புகழ் பரவியது ஆகியன கூறப்பட்டுள்ளன . கலாவின் என்பது இலங்கையில் உள்ளத்துக்களா ஓய என்னும் ஆற்றினை ஒட்டி அமைக்கப்பட்ட நீர் நிலையான அது, கலாவால், க்ளாவாபி என்று அழைக்கப்படும் இடம் ஆகும் அந்நாட்டில் நடந்த போர்களில் அந்த இடம்பள முறை தாக்குதலு உள்ளானது ; போர்களில் அந்த ஆறு ஒரு எல்லைக் கோடாக இருந்துள்ளது .
***
82.ஸ்வஸ்திகா வடிவ கிணறு ,திருவெள்ளறை
தமிழ் மொழியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட துதிகள் பொறித்த கல்வெட்டுகள் இல்லை.ஆனால் தந்தி வர்ம பல்லவனின் (CE 800) திருவெள்ளறைப் பாடல் கல்வெட்டு குறிப்பிடத்தக்கது
திருவெள்ளறை சுவஸ்திகா கிணறு
திருச்சிக்கு அருகில் திருவெள்ளறை என்னும் ஊரில் புண்டரீகாக்ஷப் பெருமாள் கோவில் உள்ளது. பெரியாழ்வார் முதலிய ஆழ்வார்களால் பாடப்பெற்றதால் குறைந்தது 1400 ஆண்டுக்கால வரலாறு பெற்ற கோவில் இது. கோவிலுக்குப் பின் புறம் இந்துக்களின் புனிதத் சின்னமான சுவஸ்திகா வடிவில் ஒரு கிணறு உள்ளது. அதில் அருமையான பாடல் உள்ளது. நேற்று வாழ்ந்த ஒருவன் இன்று இல்லை என்னும் சிறப்புடையது இந்த உலகம் என்று வள்ளுவன் பாடுகிறான். மஹாபாரதம் யக்ஷப் பிரஸ்னத்திலும் இக்கருத்து உள்ளது. ஆகையால் இறைவனை உடனே பாடிப் பரவுவோம் என்கிறார்கள் பெரியோர்கள்
பல்லவ மன்னன் தந்திவர்மனால் உருவாக்கப்பெற்ற இது மாற்பிடுகு பெருங்கிணறு என்று அழைக்கப்பெறும்.. கி.பி 800ல் ஆலம்பக் கிழான் விசைய நல்லூழான் என்பவன் தோண்டி அமைத்தான் இந்த கிணற்றின் சுவற்றில் ஒரு கல்வெட்டு பாடல் ஆலம்பாக்கத்து கம்பன் அறையனால் பொறிக்கப்பெற்றுள்ளது,
ஸ்ரீ கண்டார் காணா உலகத்திற் காதல் செய்து நில்லாதேய்
பண்டேய் பரமன் படைத்த நாள் பார்த்து நின்று நைய்யாதேய்
தண்டார் மூப்பு வந்து உன்னைத் தளரச் செய்து நில்லாமுன்
உண்டேல் உண்டு மிக்கது உலகமறிய வைம்மினேய்!
பொருள்: நேற்று இருந்த ஒருவரை இன்று காண முடியாது இந்த உலகத்தில் ! மனித வாழ்க்கை நிரந்தரமில்லாதது. அத்தகைய நிலையற்ற உலகில் எதன் மீதும் ஆசை வைக்காதீர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள காலத்தை எண்ணி க் கலங்காதீர்கள் ; வயதாகி ஏதும் செய்ய முடியாத நிலை வருவதற்கு முன்னர் செய்ய வேண்டிய அறப்பணிகளை செய்யுங்கள்
– பல்லவ அதிகாரி கம்ப அரையனின் அறிவுரை. மார்ப்பிடுகு பெருங்கிணற்றில் உள்ள நிலையாமைச் சார்ந்த கல்வெட்டு
**
‘நெருநல் உளன்,ஒருவன்;இன்று இல்லை!’என்னும்
பெருமை உடைத்து,இவ் உலகு. 336. குறள்
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று காட்டும் பெருமை உடையது இந்த உலகம்.
**
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்-335
****
83.அபராஜித வர்மனின் பாடல் கல்வெட்டு என்பது, பல்லவ வம்சத்தின் இறுதி மன்னனான அபராஜித வர்ம பல்லவனின் (ஆட்சி: கி.பி. 882-901) ஆட்சிக் காலத்தில், திருத்தணி வீரட்டானேசுவரர் கோயில் சுவரில் செதுக்கப்பட்ட புகழ்பெற்ற ஒரு வெண்பாப் பாடல் கல்வெட்டு ஆகும். பல்லவர் வரலாற்றில் அரசரே ஒரு கோயிலின் கட்டுமானத்தைப் பாராட்டி, சொந்தமாகத் தமிழ் வெண்பா இயற்றிய பெருமை இக்கல்வெட்டுக்கு உண்டு.
இக்கோயிலைக் கரும்பாறையைக் கொண்டு (கற்றளியாக) மிக அழகாகக் கட்டி முடித்த நம்பி அப்பி என்ற குறுநில மன்னனை/அதிகாரியைப் பாராட்டி, அரசன் இந்த வெண்பாவைப் பொறித்துள்ளார்.
“திருந்திய கொள்கைசெருத் தணியில் தேவர்
பொருந்தும் திருவீரட்டானம் – வருந்தாமல்
கற்றளியாச் செய்தான் கலிப்பகை நல்நம்பி
அப்பியாற் செய்தமைத் தான் ஆங்கு
நல்வழிக் கொள்கைகளைக் கொண்ட திருத்தணியில், தேவர்கள் வந்து வணங்கி மகிழும் திருவீரட்டானேசுவரர் கோயிலை, எவ்விதக் குறையுமின்றி (வருந்தாமல்) முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு அழகிய கற்றளியாக மாற்றியமைத்தான் வறுமையைப் போக்கும் நற்பண்புடைய நம்பி அப்பி என்பவன் ஆவான்.
***
Mahabalipuram Sculpture
84.பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் யாரும் செய்யாத புதுமையான முறையில் கோயில் கட்டியதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் கல்வெட்டு மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு ஆகும்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகிலுள்ள மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலில் இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இதுவே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலாகக் கருதப்படுகிறது
புதுமையான முறை: அக்காலத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அழியக்கூடியப் பொருட்களான செங்கல், மரம், உலோகம், சுதை (சுண்ணாம்பு/சாந்து) ஆகிய எவையும் இல்லாமல், முற்றிலும் ஒரு மலையைக் குடைந்து பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்காக இக்கோயிலை உருவாக்கியதாக மன்னன் இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளான்.
சமஸ்கிருத ஸ்லோகம்: பல்லவ கிரந்த எழுத்து வடிவில் உள்ள இந்த சமஸ்கிருத ஸ்லோகம் பின்வருமாறு அமைகிறது:
“ஏததநிஷ்டகமத்ருமமலோஹமஸுதம விசித்ரசித்தேன நிம்மாபிதந் நிருபேண பிரஹ்மேஸ்வர விஷ்ணு லக்ஷிதாயநம”
இந்த விசித்திரமான மற்றும் புதுமையான முயற்சியைச் செய்ததால், மகேந்திரவர்மனுக்கு “விசித்திரசித்தன்” (புதுமைய விரும்புபவன்/சிந்தனையுடையவன்) என்ற பட்டப்பெயரும் இக்கல்வெட்டின் மூலம் கிடைத்தது.
***
85.செப்பேடுகளைத் தவிர,பல்லவர் கால வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் கல்வெட்டுகள் (பாறைக் கல்வெட்டுகள், குடைவரைச் சுவர்கள் மற்றும் நடுகற்கள்) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.முக்கியமாகப் பல்லவர் கல்வெட்டுகள் அமைந்துள்ள இடங்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:
முக்கியக் கோயில்கள் மற்றும் குடைவரைகள் (சுவர்கள் மற்றும் தூண்கள்)பல்லவ மன்னர்கள் தங்களின் குடைவரைக் கோயில்களிலும், கற்றளிகளிலும் ஏராளமான கல்வெட்டுகளைப் பொறித்துள்ளனர்:காஞ்சிபுரம்: வைகுண்டப் பெருமாள் கோயில் (இரண்டாம் நந்திவர்மனின் வரலாற்று நிகழ்வுகளை விவரிக்கும் சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்குள்ளன), கைலாசநாதர் கோயில்.மாமல்லபுரம் (மகாபலிபுரம்): அங்குள்ள ஒற்றைக்கல் ரதங்கள் (உதாரணமாக கணேச ரதம்), கடற்கரைக் கோயில் மற்றும் பாறைச் சிற்பங்களில் (அர்ச்சுனன் தபசு) பல்லவர் காலக் கல்வெட்டுகள் நிறைந்துள்ளன. பல்லவ சிற்பிகளின் பெயர்கள் செதுக்கப்பட்டுள்ள பூஞ்சேரி பாறைகளும் இதன் அருகில்தான் உள்ளன.மண்டகப்பட்டு: முதலாம் மகேந்திரவர்மன், செங்கல் மற்றும் மரம் இல்லாமல் கட்டிய தனது முதல் குடைவரைக் கோயிலைப் பற்றிய புகழ்பெற்ற கல்வெட்டு இங்குள்ளது.
திருச்சிராப்பள்ளி (திருச்சி): திருச்சி மலைக்கோட்டைக் குடைவரைக் கோயிலில் மகேந்திரவர்மனின் கல்வெட்டுகள் மற்றும் பட்டப்பெயர்கள் காணப்படுகின்றன.பிற குடைவரை இடங்கள்: பல்லாவரம், வல்லம் (செங்கல்பட்டு அருகில்), சீயமங்கலம், தளவானூர், மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் பல்லவர் கல்வெட்டுகள் தூண்களிலும் சுவர்களிலும் காணப்படுகின்றன.
2. கிராமக் கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் (சுமார் 260-க்கும் மேல்)பல்லவர்களின் ஆட்சி அதிகாரம், நிலக்கொடைகள் மற்றும் போர்களைப் பற்றிக் கூறும் நடுகல் கல்வெட்டுகள் வட தமிழ்நாட்டு மாவட்டங்களில் பரவலாகக் கிடைத்துள்ளன:உத்திரமேரூர்: பல்லவர் கால நிர்வாகம் மற்றும் கிராம சபை முறைகளைப் பற்றி இங்குள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்: சிம்மவிஷ்ணு மற்றும் இதர பல்லவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பழமையான நடுகல் கல்வெட்டுகள் அரூர் (கோரையாறு, ஆலம்பாடி) போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன.திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர்: செய்யாறு (கீழ்பழந்தை கிராமம் ஜலகண்டேஸ்வரர் கோயில்) மற்றும் ஜவ்வாது மலைப் பகுதிகளில் (புங்கம்பட்டு நாடு) பல்லவர் காலக் கல்வெட்டுகளும் நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.திருவெள்ளறை (திருச்சி): தந்திவர்ம பல்லவன் காலத்தில் தோண்டப்பட்ட சுவஸ்திக் வடிவக் கிணற்றில் பல்லவர் கல்வெட்டு உள்ளது.3. ஆந்திரப் பிரதேசப் பகுதிகள் (முற்காலப் பல்லவர் கல்வெட்டுகள்)பல்லவர்களின் தொடக்ககால கல்வெட்டுகள் முற்காலத்தில் அவர்கள் ஆட்சி செய்த ஆந்திரப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன:பெல்லாரி, குண்டூர், நெல்லூர் மற்றும் சித்தூர் ஆகிய மாவட்டப் பகுதிகளில் பல்லவர்களின் மிகப்பண்டைய பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகள் பாறைகளிலும் தூண்களிலும் கண்டறியப்பட்டுள்ளன.
பல்லவர் காலத்தைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் இதுவரையில் சுமார் 260 கிடைத்துள்ளன. இவற்றில் கி.பி. 850க்கு முந்தியவை சுமார் 140 கல்வெட்டுகள் ஆகும். கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன் அரசு செலுத்திய பல்லவர்கள் தங்களது செப்பேடுகளைப் பிராகிருத மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் வெளியிட்டார்கள். சிம்மவர்மன் காலம் தொடங்கி சமஸ்கிருதத்தோடு தமிழிலும் செப்புப் பட்டயங்களை வெளியிடத் தொடங்கினர்.
***
86.கல்கி கிருஷ்ணமூர்த்திசிவகாமியின் சபதம்: தமிழ் வரலாற்று நாவல்களின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மற்றும் அவரது மகன் முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் (மாமல்லன்) ஆகியோரின் ஆட்சிக் காலத்தை விவரிக்கிறது. காஞ்சிபுரத்தின் மீது சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி தொடுத்த போரையும், அதற்கு மாமல்லர் வாதாபி வரை சென்று பழிவாங்கியதையும் மையமாகக் கொண்டது.
பார்த்திபன் கனவு: சோழ மன்னன் பார்த்திபனின் சுதந்திரக் கனவை மையமாகக் கொண்ட புதினம் என்றாலும், அக்காலத்தில் தமிழகத்தை ஆண்ட முதலாம் நரசிம்மவர்ம பல்லவரின் மாபெரும் ஆளுமையையும், பல்லவப் பேரரசின் பின்னணியையும் இதில் கல்கி விரிவாகக் காட்டியுள்ளார்.
2. சாண்டில்யன் –பல்லவ திலகம்: பல்லவ வம்சத்தின் புகழ்பெற்ற மன்னரான மூன்றாம் நந்திவர்மன் (தெள்ளாறெறிந்த நந்திவர்மன்) காலத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட விறுவிறுப்பான வரலாற்று நாவல்.விஜய மகாதேவி: பல்லவ-சாளுக்கிய போர்கள் மற்றும் பல்லவ அரச குடும்பத்து அரசியலை விவரிக்கும் நாவல்.
3. கோவி. மணிசேகரன்-சித்ரவல்லி: பல்லவ மன்னர்களின் காஞ்சிபுரத்துக் கலைக் கூடங்கள் மற்றும் சிற்பக் கலைப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல்.பல்லவ சிம்மம்: பல்லவ வம்சத்தின் எழுச்சி மற்றும் போர்க்கள வீரத்தைப் பேசும் புதினம்
.4. ஜெகசிற்பியன்-நந்திவர்மன் காதலி: நந்திவர்ம பல்லவனின் காதல் மற்றும் அவரது ஆட்சிக் காலத்துச் சூழ்ச்சிகளை விவரிக்கும் நாவல்.5. பிற முக்கிய நாவல்கள்பல்லவ மோகினி – நா. பார்த்தசாரதிபல்லவ பேரழகி – பாரதவன்.
இவற்றுள் சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு ஆகிய இரு நாவல்களும் பல்லவ வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் வாசகர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்களாகும்.
****
87.பல்லவர் தொடர்பான திரைப்படங்கள் :_
87.தமிழ் சினிமாவில் சோழர்கள் மற்றும் பாண்டியர்களைப் பற்றிய வரலாற்றுப் படங்கள் அதிகளவில் வெளிவந்திருந்தாலும், பல்லவர் கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட திரைப்படங்கள் மிகக் குறைவே. பல்லவ மன்னர்கள், அவர்களின் ஆட்சி மற்றும் கலைகளை மையப்படுத்தி வெளிவந்த முக்கியத் திரைப்படங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன
:1. பார்த்திபன் கனவு (1960)பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்திபன் கனவு திரைப்படம் உருவாக்கப்பட்டது.பின்னணி: கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சோழ நாடு, அதிலிருந்து எவ்வாறு விடுதலை பெற்றுத் தனித்து நின்றது என்பதே இதன் கதைக்களம்.பல்லவப் பாத்திரங்கள்: இதில் பல்லவப் பேரரசர் முதலாம் நரசிம்மவர்மன் (மாமல்லர்) பாத்திரத்தில் நடிகர் எஸ். வி. ரங்கராவ் நடித்திருந்தார். பல்லவ இளவரசி குந்தவியாக வைஜயந்திமாலாவும், சோழ இளவரசன் விக்கிரமனாக ஜெமினி கணேசனும் நடித்திருந்தனர்.
2. நந்திவர்மன் (2023 )இயக்குநர் பெருமாள் வரதன் இயக்கத்தில் சுரேஷ் ரவி, ஆஷா கௌடா நடிப்பில் வெளியான ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட மிஸ்டரி த்ரில்லர் திரைப்படம்.பின்னணி: பல்லவ வம்சத்தின் மிகச்சிறந்த அரசர்களில் ஒருவரான நந்திவர்மனின் பெயரை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.கதைக்களம்: பல்லவர்கள் ஆண்ட அனுமந்தபுரம் என்ற பகுதியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான நந்திவர்மனின் புதையலைத் தேடி வரும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு நடக்கும் மர்மமான சம்பவங்களைச் சுற்றியே இதன் கதை நகர்கிறது. படத்தின் தொடக்கத்தில் பல்லவ வம்சத்தின் வரலாற்றை விளக்கும் ஒரு 2D அனிமேஷன் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
3. ஏழாம் அறிவு (2011)இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ஒரு நவீன கால அறிவியல் மற்றும் வரலாற்றுத் திரைப்படம்.பின்னணி: பல்லவ மன்னர் கந்த வர்மனின் மகனான போதிதர்மனின் வரலாற்றை இப்படம் பேசுகிறது.கதைக்களம்: கி.பி. 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ இளவரசரான போதிதர்மன் சீனாவுக்குச் சென்று, அங்கு பௌத்த மதம், தற்காப்புக் கலை (குங்ஃபு) மற்றும் மருத்துவக் கலைகளைப் பரப்பிய வரலாற்றை இப்படம் தொடக்கக் காட்சிகளில் விரிவாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
குறிப்பு: கல்கியின் மற்றொரு பிரம்மாண்ட வரலாற்றுப் புதினமான‘சிவகாமியின் சபதம்’ (மகேந்திரவர்ம பல்லவர் மற்றும் நரசிம்மவர்ம பல்லவர் காலத்துக் கதை) பலமுறை நாடகங்களாக மேடையேற்றப்பட்டிருந்தாலும், அது இன்னும் முழுநீளத் திரைப்படமாகத் தயாரிக்கப்படவில்லை.
***
88.வெளிநாடுகளில் பல்லவர்களின் செல்வாக்கினை வெளிப்படுத்தும் முக்கிய அம்சங்கள் :-
இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எழுத்து, கலை, சமயம் மற்றும் அரசியல், கலாச்சார , எழுத்து முறை ஆகியவற்றில் பல்லவர்களின் செல்வாக்கு நன்றாகத் தெரிகிறது .
சயாம் நாட்டில் உள்ள தக்கோலம் (தகூஉபா) என்ற இடத்திலும் பல்லவர்கள் காலத் தமிழ்க் கல்வெட்டு கிடைத்துள்ளது.
பிரம்பானன் மற்றும் போரோபுதூர்: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள இந்த உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளில் பல்லவக் கலையின் தாக்கம் வலுவாகக் காணப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய மொழிகளின் வரிவடிவம்: பல்லவர்கள் பயன்படுத்திய ‘கிரந்தம்’ என்னும் எழுத்துமுறைதான் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எழுத்து வடிவங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.கல்வெட்டுகள்: தாய்லாந்து, கம்போடியா (காம்போஜம்), வியட்நாம் (சம்பா), மற்றும் இந்தோனேசியா (சுமத்ரா, ஜாவா) ஆகிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால சமஸ்கிருதக் கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துமுறையிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.கம்போடியா மற்றும் வியட்நாம் நாட்டுப் பழங்கால அரசர்கள் பல்லவ மன்னர்களைப் போலவே தங்களது பெயர்களுக்குப் பின்னால் ‘வர்மன்’ (எடுத்துக்காட்டாக: முதலாம் ஜெயவர்மன், யசோவர்மன்) என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டனர்.பல்லவப் பேரரசின் ஆதரவு பெற்ற ‘மணிக்கிராமம்’, ‘நானாதேசிகன்’ போன்ற தமிழ்ப் பெருவணிகக் குழுக்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிக மையங்களை நிறுவித் தங்கியிருந்தனர். இதற்கான சான்றுகள் தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைத்துள்ளன.
***
89.பல்லவர் செப்பேடுகள் முப்பது
பல்லவர் வரலாறு – டாக்டர் ராஜமாணிக்கனார்
காஞ்சிபுரம் தொடர்பான கோவில் , கலைகள் பற்றிய நூல்கள்
தெய்வத்தின் குரல்
டாக்டர் இரா. நாகசாமி எழுதிய கட்டுரைகள்
(டாக்டர் மீனாட்சி எழுதிய பல்லவர் கால நிர்வாகம்- ஆங்கில நூல்;
வெளிநாட்டினர் எழுதிய ஆங்கில நூல்கள்;
பல்லவர் நாணயங்கள் பற்றி ஆர் கிருஷ்ணமூர்த்தில் எழுதிய ஆங்கில நூல் )
***
90.சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் பெருமையைப் பரப்பிய அளவுக்கு யாரும் பல்லவர் பெருமையைப் பரப்பவில்லை ; சரித்திர புஸ்தக வெளியீட்டிலோ, திரைப்படங்கள் எடுப்பத்திலோ, வரலாற்றுப் புதினங்களை எழுதும் விஷயத்திலோ இந்தக் குறை உள்ளது; இதை அகற்ற வேண்டும். பல்லவர் செப்பேடுகள் சுமார் இருபது மன்னர் பெயர்களை ஸம்ஸ்க்ருதப் பகுதியில் கூறிப் புகழ்கின்றன அஸ்வத்தாமன் முதல் உள்ள ஐயாயிரம் ஆண்டு தொடர்பினைவிட இந்த இருபது மன்னர்களின் வரலாற்றுக்கு காலத்தைக் கண்டுபிடிக் கவேண்டும் இவைகளில் ஒருவர் பெயரினை– விஷ்ணுகோபன் பெயரினை – சமுத்திர குப்தன் கல்வெட்டு குறிப்பிடுவதால் இது உண்மைதான் என்பது தெரிகிறது . எல்லாவற்றுக்கும் மேலாக கங்க, சாளுக்கிய நுளம்ப, ராஷ்டிரகூட வம்ச மன்னர்களின் கல்வெட்டுகளில் உள்ள விஷயங்களைத் திரட்டி ஒப்பிட வேண்டும். சமண மத நூல்களிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் நிறைய குறிப்புகள் உள்ளன . பல்லவர் ஆராய்ச்சி மகாநாட்டினைக் கூட்டி ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவேண்டும்; திரைப்படங்களை எடுக்காவிட்டால் டாக்குமெண்டரிகளையாவது தயாரிக்கலாம்.
–சுபம்–
tags-பல்லவர் செப்பேடுகள் பற்றி, ஒன்பதாவது 10 கேள்விகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
67Purananuru wonders-76, Tamil Encyclopaedia 107, One Thousand Interesting Facts -Part 107
Greatest Hindu Wonder! A couple wanted to go to heaven (probably with human body). Chera king conducted ten Yagas after consulting Yaga experts. While the tenth Yaga was performed, the couple disappeared. Details are given below. We know Visvamitra failed in this space mission and his devotee Tri Shaku is still hanging in the sky as Southern Cross constellation shown on five country flags including Australia, Brazil and New Zealand.
Let us continue with the book ‘Ten times Ten’ (Pathitrup paththu in Tamil)
***
Item 919- kalaznku –
In the first ten verses, 15-5 line is about Kazangu seeds. Commentators add some interesting detail here; whenever and wherever big number of things are counted, for every hundred they put a kalangu seed or bean away . At the end they count how many hundreds are there. Here the poet says the number of enemy soldiers is counted with kalangu seeds. And they are all finished; exhausted; no more kazangus are available.
In short, the number of enemy soldiers killed by the Chera king is uncountable.
***
Item 920- five types of hair style- five part braids
Throughout ancient Tamil literature we come across AIMPAAL KOONTHAL- interpreters give two different explanations.
Women made five plaits or five braids in their hair. Nowadays young girls make two plaits – in Tamil irattaich sadai pinnal
But for 18-4 line AIMPAAL KOONTHAL, one commentator gives five different hair styles-surul, kuzal, panichchai, vilotham, kondai.
ஐம்பால் = சுருள், குழல், பனிச்சை, விலோதம், கொண்டை
***
Item 921- Army Divisions – kooliyar
Tamil word Kooliyar has two meanings. One is ghouls (ghosts); another is an army which clears the path for the invading army. Ancient Hindus made good war preparations. The only task for Kooliar brigade is to pave the way for army to march; the interesting thing is we see it in Valmiki Ramayana as well; when Bharata came with an army to see Rama in the forest they cleared the way, so it was practised for thousands of years in the whole of india.கூளியர்
***
Poems 21 – 30 were written by poet Pālai Kouthamanār for King Palyānai Selkelu Kuttuvan, the younger brother of Imayavarampan Nedunchēralāthan.
Paalai Gowthaman is also a Brahmin poet like previous Kumattur Kannan.
***
Item 922- Greatest Hindu Honder-
Chera king asked the poet Paalai Gowthaman, “how can I help you?”
Immediately the Brahmin poet said I and my Brahmin wife (Paarppani in Tamil) wanted to go to heaven (Swarga in Sanskrit).
Chera King Palyānai Selkelu Kuttuvan consulted Brahmin scholars and performed Ten Maha Yajnas (Peru Velvi in Tamil) and they disappeared when the tenth Yaga was performed; the implied meaning is they went to heaven.
***
Item 923- Water from two seas-
Tamil inscriptions used to boast that the king used water from four seas for his bathing. In one of my research articles, I wrote how Mayans in South America sent messages quickly. They stationed marathon runners in equal distance and they did the job quickly. Veera Pandya Kattabomman,Tamil king who fought with the British and sacrificed his life, used another method. He wanted to have his lunch every day only after the Arti done at Tiru Chendur Temple of Lord Muruga/Skanda/Kartikeya. He built Bell Towers at equal distance. Once the Tiruchendur Temple bell rang for the Mid Day Arti (ceremony) each Bell Tower worker rang his bell and passed the message. Kattabomman in Panchalankurichi had his lunch after the palace bell rang.
But here the commentator has added another detail. Chera King brought water from two seas by using elephants. They were placed in a line linking two seas. We can guess that they were stationed at equal distance between eastern and western seas. Sea water is considered holy by Hindus even today. For Temple consecration they bring water from 108 holy spots in India.
***
Item 924- Vanaprastha Ashram-
Another interesting detail is added by the commentators. Chera king retired to the forest with his priest Nedumbharathayanar . First his priest went to the forest and he followed him. This is called Vanaprastham, one of the Four Stages in a Hindu’s life:
Brahmachari- Student Life;
Grahastha Aashram -married family life;
Vaanaprastham- retiring to Vana/forest to detach from family. Nowadays OAPs (Old Age Pensioners) retire to old Age People’s homes- a kind of Vaanaprastham.
Sanyasam- Fourth Ashram is to become an ascetic ; many ascetics cover themselves with saffron cloth.
**
And being a great devotee of Goddess Durga, he worshipped Durga in Ayirai Hills.
***
Item 925- master of five branches
This is from Third Ten Verses from the book “Ten X Ten Verses”.
21-1 line mentioned five branches which the Vedic priests mastered who were performing yagas.
The five branches mentioned are
Praatisaakhyam- Vedic pronunciation guide;
Nirukta- etymology;
Jyotisha – astrology and astronomy;
Vedas ;
Fifth is pure heart.
Item 926-Anthanar doing six tasks
Lines 24-6/8 lists the six tasks of Brahmins .
Anti Hindu gangs question the meaning of ANTHANAR.
Their question is whether it meant Brahmins or any scholar.
But throughout Tamil literature we see naan marai or aru thozil used as epithets for Anthanar/brahmins
Naan marai= four Vedas;
Aru thozil = six tasks or duties.
Here the poet lists the six tasks and then say anthanar-
The six tasks are reciting Vedas, teaching them to others; performing fire sacrifices, and helping others to perform; accepting fees, and giving donations to others;
This is said in the context of Chera king giving respects to brahmins.
***
Item 927- Planet Venus and Rain
Planet Venus is mentioned at least in 30 poems in Sangam Tamil literature. In one verse we saw that it should not go towards Mars.
Here line 24-24, poet refers to Venus and its effects on rain. Commentator gives us some new information.
If the planet appears in direct east, the rains won’t be good. If it rises in slightly north (towards North East), the rain fall will be good according to astrology books.
***
Item 928- angry Muruga / skanda
In Pathitrup paththu all the gods such as Durga, Siva, Vishnu and Muruga are referred to.
Here in lines 26-12/14 lord Muruga is compared to heroic Chera king. Angry Muruga destroyed demons; Chera destroyed his enemies.
***
Item 929- how to make war drums
Drums are royal symbols; no disrespect to it is allowed. Nowadays desecrating national flag is an offence in all the countries. In olden days, particularly in Tamil Nadu , war drums were worshipped. They made offerings to it. If a king plans an invasion, they move the drum and sword in the direction of enemy country, on an auspicious day. Here commentator adds some information about making drum.
Line 29-12, refers to drum with hairy skinned war drums. In Tamil mayir puthai maakkan.
If a wild bull or wild beast fights with a tiger and die after killing the tiger, then the hide of that dead bull is used for the drum without shaving off the hair on it. Hindus believed anything that shows heroism is worth respecting. Kattabomman chose Paanchalankurichi as his capital, because his hounds were chased by a heroic rabbit. He chose that place to construct his palace after seeing this. India is abounded with such stories.
Tags- Greatest Hindu Wonder! Purananuru wonders-76, Tamil Encyclopaedia 107, One Thousand Interesting Facts -Part 107, item 929
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1990ம் ஆண்டு நடந்த ஒரு ரயில் பயணம்?! என்ன நடந்தது?
ச. நாகராஜன்
இரண்டு தோழிகள் ரெயில்வேயில் வேலைக்கு ஆள் எடுப்பதைக் கேள்விப்பட்டு குஜராத்திற்குப் பயணமானார்கள். அவர்கள் ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ரயிலைப் பிடிக்க வேண்டும். ஆனால் முதல் ரயிலில் ஏராளமான இளைஞர்கள் அவர்களை சீண்டி கேலி செய்யத் தொடங்கியதால் ரயிலிலிருந்து இறங்கினர்.
அடுத்த ரயில் பயணமாவது நல்ல பயணமாக அமைய வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்தனர்.
அடுத்த ரயிலுக்கான ரிசர்வ் சார்ட்டில் அவர்கள் பெயர் இல்லை. அவர்கள் டிக்கட் பரிசோதகரை நாடி தங்களுக்கு
ரிஸர்வேஷன் செய்து இடம் ஒதுக்குமாறு வேண்டினர்.
அடுத்த ரயிலும் வந்தது. அதில் ஏறி இரண்டு இடங்களைப் பிடித்தனர். அவர்களுக்கு முன்னால் இரண்டு ஆண்கள் உட்கார்ந்திருந்தனர். முந்தைய அனுபவம் அவர்களை உஷார் படுத்தியது. ஆனால் வேறு வழியில்லை. அங்கேயே உட்கார்ந்தனர். டிக்கட் பரிசோதகர் வருகிறாரா என்று ஆவலுடன் பார்த்த வண்ணம் இருந்தனர். சிறிது நேரம் கழித்து அவர் வந்தார். ஆனால் வேறு எங்கும் சீட் இல்லை என்றும் அவர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைகள் அடுத்த ஸ்டேஷனிலிருந்து வரப்போகும் பயணிகள் ரிஸர்வ் செய்த சீட்டுகள் என்றும் அவர் கூறினார். ஆகவே அடுத்த ஸ்டேஷனில் வேறெங்காவது காலியாக இடங்கள் இருக்கிறதா என்று அவர்கள் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
ராத்திரி நேரத்தில் எங்கு போய் இடம் தேடுவது? இரண்டு தோழிகளும் மலைத்தனர்.
அவர்கள் கலவரப்பட்டு பேய் அடித்தது போல இருந்ததை எதிரில் உட்கார்ந்திருந்த இரு ஆண்களும் பார்த்தவண்ணம் இருந்தனர்.
அடுத்த ஸ்டேஷனும் வந்தது. என்ன செய்வது என்று தோழிகள் மலைக்கும் போது எதிரில் இருந்த இரு ஆண்களும் வேகமாக வண்டியிலிருந்து
இறங்கினர். உடனே அவர்கள் சீட்டில் தோழிகள் அமர்ந்தனர். ரயில் கிளம்பியது.
அப்போது ரயிலிலிருந்து இறங்கிய இரண்டு பேரும் உள்ளே வந்தனர். பேசாமல் தரையில் படுத்தனர். எதுவும் பேசவில்லை.
ஒருவாறாகப் படுத்துத் தூங்கிய அவர்கள் காலையில் டீ, டீ என்ற சப்தம் கேட்டு எழுந்தனர்.
காலை விடிந்து விட்டது. இருவரும் அந்த இரு ஆண்களுக்கும் மனமார்ந்த தங்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
அதில் ஒருவர் பேசினார்; “ சகோதரி! உங்களுக்கு குஜராத்தில் ஏதாவது உதவி வேண்டுமென்றால் தயங்காமல் எங்களைக் கேளுங்கள்.”
ஒருவாறாக தைரியம் அடைந்த தோழிகள், தங்கள் டயரியை அவர்களிடம் நீட்டினர்.
அவர்கள் தங்கள் பெயரையும் விலாசத்தையும் எழுதினர்.
“நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்து விட்டது. போய்வருகிறோம்” என்று கூறிய அவர்கள் ஸ்டேஷனில் இறங்கினர்.
கூட்டத்தோடு கூட்டமாக கலந்தனர்.
தோழிகள் அந்த இருவரின் பெயரைப் படித்தனர்.
ஒருவர் நரேந்திர மோடி. இன்னொருவர் சங்கர் சிங் பகேலா.
இந்த சம்பவத்தை விவரிக்கும் நண்பர் இப்போது புதுடில்லியில் மத்திய ரயில்வே தகவல் அமைப்பில் ஜெனரல் மானேஜராகப் பணி புரிகிறார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
71.
கண்டாலே கொல்லும் பாம்பு விஷம் பற்றி பல்லவர் செப்பேடுகள் சொல்லும் சுவையான விஷயம் என்ன ?
72
கர்ணன் பற்றி வேலூர்ப்பாளையம் செப்பேடு என்ன சொல்கிறது ?
73
எந்த ஒரு செப்பேட்டில் மட்டும் தமிழே இல்லாமல் சம்ஸ்க்ருதம் மட்டும் உள்ளது ?
74
பல்லவர் கால தொழிலாளர் வகைகளைக் கூறும் செப்பேடு எது ?
75
பிராமணர்களுக்கும் பல்லவர் வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு என்ன ?
76
தொத்தி ஸ்வாமி,கண்ணஸ்வாமி, நந்தி ஸ்வாமி ஆகிய மூவர்களின் பெயர்கள் தெரிவிக்கும் செய்தி என்ன ?
77
பல்லவர் செப்பேடுகளில் பழமையானது எது ?புதுமையானது எது?இடைப்பட்டவை யாவை ?
78
வரலாற்றில் உள்ள பல்லவ மன்னர்களின் கால வரிசை என்ன ?
79
பிராமணர்களுக்கு கிரஹண தானம் கொடுத்த பல்லவன் யார் ? உத்தராயண புண்ய கால தானம் கொடுத்தபல்லவன் யார் ?
80
பல்லவர் செப்பேடுகளில் உள்ளஅஷ்ட மங்கல சின்னம் என்றால் என்ன ?
******************************
விடைகள்
71.சிம்ம விஷ்ணுவுக்கு முன்னால், அரசுபுரிந்த நந்தி வர்மன், திருஷ்டி விஷம் என்ற ஒருவனை வெற்றி கொண்ட செய்தி வேலூர் ப்பாளையம் செப்பேடுகளில் கூறப்பட்டுள்ளது . பார்வையினாலேயே மரணத்தை விளைவிக்கக்கூடிய விஷத்தைக் கொண்ட பாம்பையே திருஷ்டி விஷம் என்பார்கள். ஆனால், இங்கே அது அந்தப் பெயரைக்கொண்ட நாகராஜன் ஒருவனையே குறிக்கும் கர்நாடகத்தில் ஆட்சி புரிந்த சிந்தர் என்னும் அரச பரம்பரையினர் தங்களை த்ருஷ்டிவிஷனுடைய சந்ததியாகக் கூறிக்கொள்வார்கள் . நாக வம்சத்தைச் சேர்ந்த அந்த மூல புருஷன் கர்நாடகத்துக்கு வந்தான் என்றும் அவன் தங்கியிருந்த காலத்தில் தோன்றிய சந்ததியார் சிந்தர் என்றும் அவர்களுடைய சாசனங்கள் கூறுகின்றன . அவர்களில் ஒருவனைத்தான் நந்தி வர்மன் தோற்கடித்திருக்க வேண்டும்.
அரக்கோணத்துக்கு அருகில் கிடைத்த வேலூர்ப்பாளையம் செப்பேடு, மேலும் கூறுவதாவது
ஸ்லோகம் 4
அசோகவர்மன் போன்ற மன்னர்களுக்குப்பிறகு அந்த வம்சத்தில் கால பார்த்தாரு பிறந்தான் .
ஸ்லோகம் 5
அவன் மகன் சூத பல்லவன் .அவனுக்குப் பிறந்தவன் வீர கூர்ச்சன். அவன் நாகராஜன் மக்களுடைய கைத்தலத்தோடு அரசையும் பற்றினான்.
ஸ்லோகம் 6
அவனுக்கு ஸ்கந்த சிஷ்யன் மகனாகப்பிறந்தான் அவன் இருபிறப்பாளர்களின் கடிகையை சத்யசேனன் என்ற அரசனிடம் கைப்பற்றினான். அதற்குப்பிறகு காஞ்சீபுரத்தைக் கைப்பற்றிய குமார விஷ்ணுவும் சோழர்களுடைய சென்னைக்கு வடவாகினியான புத்த வர்மனும் அரசரானார். இந்த நான்கு அரசர்களும் இதே முறையில் வாயலூர்க் கல்வெட்டிலும் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்காத தக்கது . அப்பால் விஷ்ணுகோபன் போன்ற பல அரசர்களுக்குப் பிறகு சிவா பெருமான் அருளால் திருஷ்டிவிஷனை ஆடச்செய்த நந்தி வர்மன் அரசனானான் . அப்பால் சிம்மவர்மன் அரசன் ஆனான் அவன் மகன் சிம்ம விஷ்ணு காவிரி பாயும் சோலா நாட்டைக் கைப்பற்றி பல்லவர் ஆட்சிக்கு உட்படுத்தினால். அவன் மகனான மகேந்திரனுக்கு வாதாபி நகரின் நடுவிலிருந்த வெற்றித்தூணை எடுத்து வந்த நரசிம்ம அவர்மன் பிறந்தான். 13 ஆவது சுலோகத்தில் பிராமணர்களுடைய கடிகையை மீண்டும் அமைத்தான் சந்திரனைத் தலையில் தரித்த சிவபெருமானுக்கு கைலாயத்தைப் போன்று கல்லால் ஒரு ஆலயம் அமைத்தான் .
என்னுடைய கருத்து
ஒவ்வொரு செப்பேடும் புதுப்புது மன்னர் கள் பெயர்களைச் சொல்கின்றன அவைகளை க்க கால வரிசைப்படி தொகுத்து ஆராய வேண்டும்
(முன்னர் வரும் ஸ்லோகங்களில்( எண் 23) பிராமணர் பெயர்களில்சிவதாசன் என்ற பெயரும் உள்ளது பிற்காலத்தில் தாசன் என்ற பெயரைப் பிராமணர்களிடையே காண்பது அரிது ).
அந்தக் காலத்திலேயே தியாகத்துக்கு கோட்டைக்கும் கர்ணன் பெயரை ஒப்பிடுவது குறிப்பிட்டது தக்கது .
***
73.தமிழ்நாட்டில் வாணியம்பாடிக்கு அருகில் கிடைத்த உதயேந்திரம் செப்பேடுகள் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும் உள்ளது . கூலசர்மன் என்ற பிராமணனுக்கு முதல் நந்தி வர்மன் கொடுத்த தானத்தைக் குறிப்பிடும் சாசனம் இது . கி.பி 550.
ஆயினும் இது ஒரிஜினல் சாசனம் இல்லை பிற்காலத்தில் காபி/ நகல் எடுத்ததால் பிழைகள் மலிந்துள்ளன ஆயினும் இது உண்மையாசை சாசனம் என்பதற்குச் சான்றாக முதல் ஏட்டின் முன்புறத்தில் முதல் பராந்தக சோழன் காலத்தில் எழுதப்பட்ட கடையீடு ஒன்றும் காணப்படுகிறது
ஒரு கீழ்நிலை அதிகாரி பிறப்பிக்கும் உத்தரவு அல்லது ஆணையை கடையீடு என்பார்கள்.
தமிழ் வாசகம் சொல்லுவதாவது ,
மாதிரைகொண்ட கோப்பரகேசரி வர்மனான முதற் பராந்தக சோழனுடைய ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டு ,காஞ்சி வாயிலாகிய இகன்மறை மங்கலத்து ஸபையோமும் உதயசந்திர மங்கலத்து ஸபையோமும் இவ்விரண்டு ஊரோமும் கூடி ஒன்றானமையில் இதன் மேற்பட்டது ஓரூராய் வாழ்வோமானோம் .
சோழர் காலத்தில் இந்த பல்லவ சாசனத்தை உண்மையென்று கருதியத்தால்தான் இதன் மீது கடையீடு எழுதியுள்ளனர்.
***
74.கர்நாடகத்தில் பெல்லாரி ஜில்லாவில் ஹீரடஹள்ளி என்னுமிடத்தில் சின்னப்பா என்ற வியாபாரியிடம் வாங்கப்பட்ட செப்பேடுகளில் எட்டு ஏடுகள் உள்ளன . இது சிவஸ்கந்த வர்மன் , பிராமணர்களுக்கு அளித்த தானத்தைச் சொல்லும் சாசனம் இது .
வரி 1
காஞ்சீபுரத்திலிருந்து பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவரும் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவனுக்கு அக்னிஷ்டோமம் , வாஜபேயம் அஸ்வமேதம் ஆகிய யாகங்களை செய்தவனும் தர்ம மகா ராஜாதிராஜனுமான சிவஸ்கந்த வர்மன்
வரி 3
நம்முடைய விஷயத்தில்—(அதாவது ராஜ்யத்தில்)– உள்ள எல்லா அரச குமாரர், சேனாபதி , ராஷ்டிரிக்கர்—(ராஷ்டிரபாலர்)–மாதவிக்கர்—(சுங்க அதிகாரி)– தேசாதிகர்—(நாடு ஆட்சி செய்வோர்)– கிராமகிராம போஜர்—(அந்தந்த ஊரின் போஜர்)–வல்லபர்- (குதிரை காவலர்,) கோவல்லபர்—(ஆநிரை காவலர்)–அமைச்சர், அரக்கஅதிகர்—(காவலர்)– குமிக்கர், தூதிகர், நெய்கர், –( நையா யோகிக்கர்-அதிகாரி)– மற்றும் நம்மால் ஏவலை நிறைவேற்றச் செல்லும் சஞ்சரந்தர் — (ஒற்றர், சஞ்சரிப்போர்)– படைவீரர் ஆகியோருக்கு கட்டளை :
வரி 5
ஆப்பிட்டி கிராமத்தில் வசிப்பவர்களும் சில்லரேகை கொடுங்கை அனுபவிப்பவர்களுமான பிராமணர்களுக்கு நம்மால் இங்கே இப்போது வரி விலக்குகள் அளிக்கப்படுகின்றன .
இதற்குப்பின்னர் பிராமணர்களின் கோத்திரம் முதலியவற்றுடன் அவர்களுடைய பெயர்கள் உள்ளன.
இப்போது நாம் லட்சம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லினை பயன்படுத்துகிறோம் ; பல்லவர் செப்பேடுகளில், குறிப்பாக இந்தச் செப்பேட்டில் நூறாயிரம் என்ற சொல் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது அனால் இதிலும் ஆயிரம் என்ற எண், சம்ஸ்க்ருத சஹஸ்திரத்தின் திரிபு ஆகும் .
***
75.பல்லவர் செப்பேடுகள் முப்பது நூலிலுள்ள செப்பேடுகள் ஒன்றிரண்டினைத் தவிர மீதி எல்லாம் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த செய்தியைக் கூறுகின்றன. அந்த தான விஷயம் இல்லாவிடில் இவ்வளவு வரலாற்றுச் செய்திகள் கிடைத்திராது; முப்பது செப்பேடுகளிலும் சுமார் 600 பிராமணர்களின் பெயரும் கோத்திரமும் உள்ளதை போல வேறெங்கும் தொடர்ச்சியாக தகவல் கிடைப்பது அரிதாகும்.
இவர்கள் ஓவர் பெயருக்கும் முன்னால் நதிப்பி போஜர் என்ற அடைமொழி உள்ளது . பிரம்மதேயம் என்று சொல்லாமல் சாரணிக கிராமம்- அதாவது சரண டைந்தவர்களுக்கு க்க கொடுக்கப்பெற்ற ஊர் என்றே குறிக்கப்பட்டுள்ளது . சுவாமி என்ற சொல் அந்நாளிலே அரசுரிமை கொண்டிருந்தவர்களுக்கே வழங்கப் பெற்று வந்தது ; ஆகவே இவர்கள் மூவரும் சிற்றரசர்களாக இருந்து பதவியை இழந்து பல்லவர்களிடம் புகலிடம் தேடி வந்தவர்கள் என்று கருதப்படுகிறது . நதிப்பி என்பது அவர்களுடைய ஊராக இருந்திருக்கலாம் .
போஜர் என்ற பெயர் கொண்ட குறுநில மன்னர்களின் வம்சம் மேலைக் கடற்கரை ஓரமாக கோவாவை ஒட்டிய பிரதேசத்தில் ஆட்சி புரிந்திருந்தது அவர்கள் யதுகுளத்தில் ஹேஹய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் . நாலாம் நூற்றா ண்டு முதல் ஏழாம் நூற்றா ண்டு வரை மன்னர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கொங்கணத்து மெளரியர்கள் அவதிகளை அடிமைப்படுத்தியதால் பல்லவர்களிடம் புகலிடம் தேடி வந்தனர் போலும் .
***
77.பல்லவர் செப்பேடுகள் முப்பது புஸ்தகம் கால வரிசைப்படுத்திய் கொடுத்துள்ளது :
79.கிரஹண தானம் கொடுத்த பல்லவன் – இரண்டாம் நரசிம்ம வர்மன் சந்திர கிரஹண காலத்தில் தானம் அளித்த செய்தி ரேயுறுத் செப்பேடுகளில் காணப்படுகிறது
உத்தராயண புண்ணிய காலத்தை முன்னிட்டுத் தானம் வழங்கிய பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆவார்.ஆந்திரப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட இவருடைய பல்லவர் செப்பேட்டின்படி, தனது ஆட்சியின் 19-ஆம் ஆண்டில், பௌஷ்ய மாத சுக்ல பக்ஷ திரயோதசி திதி கொண்ட ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, உத்தராயண புண்ணிய கால நிமித்தமாக ‘குப்புநூறு’ என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவசர்மன் என்ற பிராமணருக்கு அவர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார்.உன்னக்குரவய பாளையம் செப்பேடு தரும் தகவல் இது.
***
80.பல்லவர் செப்பேடுகளில் உள்ளஅஷ்ட மங்கல சின்னம் :
பல்லவர் காலச் செப்பேடுகள் மற்றும் அவர்களின் நாணயங்களில் அஷ்டமங்கலச் சின்னங்கள் (அல்லது மங்கலச் சின்னங்கள்) இடம்பெற்றுள்ளன.
பல்லவர்கள் தங்களது அரசு ஆவணங்களான செப்பேடுகளைப் பாதுகாப்பாக இணைக்கும் செப்பு வளையங்களின் முகப்பு முத்திரைகளிலும் (Seals), அவர்கள் வெளியிட்ட நாணயங்களிலும் பல்வேறு மங்கலச் சின்னங்களைப் பொறித்துள்ளனர்.
ஸ்ரீவத்ஸம் (மறுவடிவம்): திருமகளின் மறுவடிவமாகக் கருதப்படும் இந்த மங்கலச் சின்னம் பல்லவர் நாணயங்களிலும் செப்பேட்டு முத்திரைகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.நந்தி (காளை): பல்லவ மன்னர்களின் முதன்மை இலச்சினையான நந்திச் சின்னம் செப்பேட்டு முத்திரைகளின் மையப்பகுதியில் வீற்றிருக்கும்.இருவிளக்குகள் (குத்துவிளக்கு): மங்கலத்தைக் குறிக்கும் விளக்குகள் நந்தியின் இருபுறமும் செப்பேடுகளில் செதுக்கப்பட்டிருக்கும்.சாமரம் (கவரி): அரச மரியாதையையும் சுபிட்சத்தையும் குறிக்கும் சாமரம் போன்ற அஷ்டமங்கலக் கூறுகள் இவர்களின் முத்திரைகளில் உண்டு.பூரண கும்பம் (கலசம்) & குடை: சில பிற்காலப் பல்லவர் செப்பேட்டு முத்திரைகளில் மங்கலக் கலசம் மற்றும் வெண்கொற்றக்குடை போன்ற சின்னங்கள் இடம்பெற்றுள்ளன.
Tags- பல்லவர் செப்பேடுகள், எட்டாவது 10 கேள்விகள் , பல்லவர் செப்பேடுகள் முப்பது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்
ஓர் ஆய்வு – 28
(ஆர், சேஷாத்ரிநாதன்)
இராமன் சுக்ரீவன் நட்பு
இலக்ஷ்மணன் இராமன் காட்டிற்கு வந்த செய்தியையும் சீதை கவர்ந்து செல்லப்பட்ட விவரத்தையும் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறினான். ஹனுமன்/
ஏற்கனவே ஹனுமன் இருதரப்புக் கதைகளையும் சொல்லிவிட்டா.ன். பிறகு இலக்ஷ்மணன் இராம சரிதத்தை மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். ஹனுமன் இருவருக்கும் இடையே நட்பை உருவாக்கி மொத்தக் கதையையும் சுருக்கமாகச் சொன்னான். அதவாது தெரிந்தவரை சொன்னான்.. ஹனுமனுக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சுருக்கமாகச் சொல்லிவிட்டான். இலக்ஷ்மணன் அதை முழுமையாகச் சொன்னான். இராமனின் பிறப்பு, கல்வி முறை, சீதையுடன் திருமணம், தந்தையின் கட்டளைக்கிணங்க வனவாசம், இராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட விவரங்கள் ஆகியவை. இதை இராமன் ஏன் சொல்லவில்லை? தனது வீரத்தையும், பிரதாபத்தையும் தனது வாயால் சொல்வதைவிட இலக்ஷ்மணன் சொல்வதே சிறப்பு என்று இராமன் முடிவு செய்திருக்கலாம். நட்பு உடன்படிக்கை எற்பட்டபிறகே இலக்ஷ்மணன் இந்த விவரங்களைச் சொல்கிறான். காரணம் இரண்டு நண்பர்களிடையே எந்தவித ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதற்காக.
ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्याति पृच्छति!
भुङ्क्ते भोजयते चैव षड्विधं प्रीतिलक्षणम्!!
நட்பின் இலக்கணம் என்ன? பர்த்ருஹரி சதகம் என்ற நூலில் சொல்லப்படுவதாவது. தேவைப்படும்போது கொடுப்பது, தேவைப்படும்போது எடுத்துக் கொள்வது, ரகசியங்களைச் சொல்வது, ரகசியங்களைக் கேட்பது, நமக்கு பிடித்த உணவைச் சாப்பிடுவது, அவர்களுக்குப் பிடித்த உணவைக் கொடுப்பது ஆகியவைதான் நட்பின் இலக்கணங்களாகக் கருதப்படுகின்றன.
அடுத்து ஹனுமான் சொன்னது கதா “कथा” இலக்ஷ்மணன் சொன்னது “चारित. இங்கு கதா என்பது பெண்பால். ஹனுமான் சீதை அபகரிப்பு மற்றும் சுக்ரீவன் மனைவி உருமை வாலியால் அபகரிப்பு விஷயங்களைச் சொன்னான். இலக்ஷ்மணன் சொன்னது சரிதம். சரித என்பது ஆண்பால். இலக்ஷ்மணன் இரானின் வீர வரலாறான தாடகை வதம், சுபாகு வதம், மாரீசன் வதம், கர தூஷண வதம், விராதன் மற்றும் கபந்தன் வதம் ஆகிய வீர வரலாற்றைச் சொன்னான் என்று உரையாசிரியர்கள் சொல்லியுள்ளனர். இந்த விவரங்கள் ஹனுமனுக்குத் தெரியவில்லை.
இலக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஜானகி கிடைத்துவிடுவாள். கவலை வேண்டாம்” என ஆறுதல் கூறினான். சுக்ரீவனின் நட்பு உண்மையான நட்பு. அதனால் இராமனின் துயரத்தைக் கேட்டதும் தான் கண்ணீர் விட்டு அழுதான்.
जे न मित्र दु:ख होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥
எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கேட்டு தான் துக்கப்பதுவதில்லையோ, அத்தகையவனைப் பார்ப்பதே பாவம் என்கிறார் துளசிதாசர்.
இங்கு உரையாசிரியர்கள் வேறு ஒரு கருத்தும் சொல்கிறார்கள். இராமன் சீதையின் பிரிவால் துயரப்படுவதைக் கேட்ட சுக்ரீவனுக்குத் தனது மனைவியின் நினைவு வந்திருக்கக் கூடும். தன்னைப் போலவே இராமனும் மனைவியின் பிரிவால் வருந்துகிறான் என்பதை நினைத்துக் கண்ணீர் வடித்திருப்பான் என சொல்கின்றனர்..
निज दुख गिरि सम रज करि जाना।
मित्रक दुख रज मेरु समाना॥
அதாவது உண்மையான நண்பன் தனது துன்பத்தைத் தூசிபோல நினைத்து நண்பனுக்கு ஏற்பட்ட துன்பத்தை இமய மலையாகக் கருதுவான்..
சுக்ரீவன் சீதை கண்டிப்பகக் கிடைப்பாள் “मिलिहि’ என்று சொல்கிறான். காரணம் சீதை இராவணன் தன்னைக் கடத்திச் செல்லும்போது கீழே சில குரங்குகளைப் பார்த்ததும் தன்னுடைய நகைகளை அடையாளமாக விட்டுச் செல்கிறாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது இராமன் கண்டிப்பாக தன்னைத் தேடி அங்கு வருவான் என்று. அதைத்தான் சுக்ரீவன் உறுதியாக சீதை கிடைத்துவிடுவாள் என்று சொல்கிறான்..
சுக்ரீவன் சீதையைப் பற்றிக் கூறுதல்
मंत्रिन्ह सहित इहाँ एक बारा। बैठ रहेउँ मैं करत बिचारा॥
गगन पंथ देखी मैं जाता। परबस परी बहुत बिलपाता॥2॥
மேலும் “நான் ஒருமுறை இங்கு அமைச்சர்களுடன் (நளன், நீலன், ஜாம்பவான் மற்றும் ஹனுமன்) அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவன் ஒரு பெண்ணைக் கவர்ந்து ஆகாய மார்க்கமாகச் சென்றதையும், அழுது கண்ணீர் வடித்தவளாய் “புலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தோம்” என்றான் சுக்ரீவன்,
இதற்கு சமமான சுலோகம் ஆத்யாத்ம இராமாயணத்தில் உள்ளது.
एकदा मन्त्रिभिः सार्द्ध स्थितो5हं गिरिमूर्द्धनि।
विहायसा नीयमानां केनचित् प्रमदोत्तमाम्॥’
===================
राम राम हा राम पुकारी। हमहि देखि दीन्हेउ पट डारी॥
मागा राम तुरत तेहिं दीन्हा। पट उर लाइ सोच अति कीन्हा॥3॥
“எங்களைப் பார்த்ததும் இராமா இராமா என்று அழைத்தபடியே ஓர் ஆடையைக் கீழே போட்டார்” என்றான் சுக்ரீவன். இராமன் அந்த ஆடையைக் கொண்டுவரச் சொன்னான். அந்த ஆடையை மார்போடு அனைத்துக் கொண்டு மிகவும் வருந்தலானான்..
இங்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது. பொதுவாக பெண்கள் தங்கள் கணவன் பெயரைச் சொல்வதில்லை. ஆனால் இங்கு சீதை இராமா! இராமா! என்று அலறியதன் மூலம் நான் இராமனின் மனைவி. எனது நிலையை எனது கணவர் இராமனிடம் தெரிவியுங்கள் என்பதற்காகப் பெயரைச் சொன்னார் என்று சொல்கின்றனர். மேலும் சீதை மிக உயரத்தில் சென்று கொண்டிருந்ததளால் மெதுவாகச் சொன்னால் கீழே நிற்கும் குரங்குகளுக்கு கேட்காது என்று எண்ணி உரத்த குரலில் கூறியதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆபத்தில் இருக்கும் சமயம் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கணவன், மகன், குரு ஆகியோர் பெயரைச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். (பொதுவாக
आत्मनाम गुरोर्नाम नामातिकृपणस्य च ।
आयुष्कामो न गृह्णीयात् ज्येष्ठापत्यकलत्रयोः ॥
வாழ்க்கையில் செழிப்பை விரும்புவன் தனது பெயரையே உச்சரிக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இது எப்படிச் சாத்தியம்? பொதுவாக ஒவ்வொருவருக்கும் இரண்டு பெயர்கள் இருக்கும். அதிகாரபூர்வமான பெயர். செல்லமான பெயர். தனது செல்லப் பெயரை உச்சரிக்கலாம். அதிகாரபூர்வ பெயரை உச்சரிக்ககூடாது. உபநயனத்தின் போது ஷர்மா நாம் என்று ஒரு பெயரைச் சொல்வர். இதைத்தான் உச்சரிக்கக்கூடாது என்று சொல்வர். அபிவாதயே சொல்லி வணங்கும்போது மட்டும் இந்தப் பெயரை உச்சரிக்கலாம். ஆனால் அதை உச்சரிப்பவர் அதைக் கேட்கக்கூடாது. இதனால் தான் அபிவாதயே சொல்லி வணங்கும்போது இரு காதுகளையும் பொத்திக் கொண்டு சொல்லவேண்டும் என்று சொல்லப் படுகிறது.)
சுக்ரீவன் சீதை இராமா! இலக்ஷ்மணா! என்று அலறிக் கொண்டே இராவணன் பிடியில் தத்தளிப்பதைப் பார்த்தேன் என்று சொல்கிறான்.
வால்மீகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் 58 வது சர்கத்தில் சம்பாதி
क्रोशन्ती राम राम इति लक्ष्मण इति च भामिनी |
भूषणानि अपविध्यन्ती गात्राणि च विधुन्वती || ४-५८-१६
மீண்டும் அதே நிகழ்வை அங்கதனிடம் தெரிவிக்கிறான். மேலும் இராமா! இராமா! என்று கத்திக் கொண்டே இருந்ததனால் அந்தப் பெண் சீதையாக இருக்கவேண்டும் என்றும் ताम् तु सीताम् अहम् मन्ये रामस्य परिकीर्तनात् | சொல்கிறான்.
ஹனுமான் நாடகம் என்ற நூலிலும் இந்த விவரங்கள் கிடைக்கின்றன
पापेनाकृष्यमाणा रजनिचरवरेणाम्बरेण ब्रजन्ती किष्किन्धादोौं मुमोच प्रचुरमणिगणैर्भूषणान्यर्जितानि। हा
சீதை, இராவணனால் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டபோது,தன் நகைகள், ஆபரணங்களை வழியிலே தரையில் விட்டாள்.- அவள் மனம் கலங்கி, “ஹா இராமா! என் உயிர்நாதா!” என்று அழுதாள்.- “லட்சுமணா! எதிரியை அழித்துவிடு!” என்று கூவினாள்.- அவள் விட்ட ஆபரணங்களை ஹனுமன் சேகரித்து, பின்னர் ராமனிடம் கொண்டு வந்து காட்டினான்.)
இது சம்பந்தமாக பல நூல்களில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இங்கு சுவையான ஒரு விஷயத்தை உரையாசிரியர்கள் சொல்கின்றனர். துளசிதாசர், சீதை மூன்று முறை இராமா, இராமா, இராம என்று கத்தியாதகச் சொல்கின்றனர். இதன் தாத்பர்யம் என்ன? இராவணன் மிகச் சாமர்த்தியமாக யாருக்கும் தெரியாமல் மிக உயரத்தில் எடுத்துச் சென்று கொண்டிருந்தான். கிஷ்கிந்தாவின் மேலே செல்லும்போது சீதை கீழே குனிந்து பார்த்ததில் மூன்று குரங்குகள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தன. அவர்கள் கவனத்தைக் கவர வேண்டும். வெறும் ஆடையைக் கீழே வீசினால் அது காற்றில் பறந்து சென்று விடும். அதற்குள் தனது கொலுசு, குண்டலம் இவைகளை வைத்துக் கட்டி மூன்று முறை இராமா என்று அலறியபடி கீழே வீசினாள். இராமன் வந்துவிடுவானோ என்ற பயத்தில் இராவணன் வேகமாகச் சென்று கொண்டிருந்தபடியால் பின்னால் திரும்பி சீதை என்ன செய்து கொண்டிருந்தாள் எனப் பார்க்கவில்லை.
சீதையின் முதல் இராமா என்ற கூக்குரல் குரங்குகளின் கவனத்தைக் கவருவதற்காக. இரண்டாவது அலறல் இந்த ஆடையையும் நகைகளையும் இராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்று சொல்வதற்காக. மூன்றாவது அலறல் நான் இராமனை விரும்புகிறேன். இவன் என்னைக் கடத்திச் செல்கிறான் என்று தெரிவிப்பதற்காக. சுக்ரீவன் இராமனிடம் சீதை ஆடையை எறிந்தாள் என்று மட்டும் சொல்கிறான். காரணம் அவன் சீதை எறிந்ததை பிரிக்கவில்லை, காரணம் அது இன்னொருவருக்குச் சேர வேண்டியது. “धन पराव बिष ते बिष भारी சுக்ரீவனைப் பொறுத்தவரை அடுத்தவரின் செல்வம் விஷத்தை விட கொடிய விஷம், அதனால் சீதை வீசியதை அவன் திறந்து பார்க்காமல் அப்படியே குகைக்குள் வைத்துவிட்டான்.. இந்த விலை மதிக்க முடியாத வஸ்து சுக்ரீவனின் கையில் கிடைத்ததுமே “சீதையைத் தேடும் பணி தொடங்கி விட்டது मम दिसि देखि दीन्ह पट डारी। என்று உரையாசிரியர்கள் சொல்கின்றனர்.
துளசிதாசர் இங்கு “मागा राम तुरत तेहि दीन्हा” என்ற பதப் பிரயோகம் செய்துள்ளார். அதாவது तुरत என்ற வார்த்தை இங்கு முக்கியமானது.. இராமனுக்கு சீதை பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மற்றும் வேகத்தைக் குறிக்கிறது. சுக்ரீவனைப் பார்த்து இன்னும் ஏன் தாமதம். உடனே அதைக் கொண்டுவா என்று சொல்கிறார்.. இராமனுக்கு சுக்ரீவன் சொன்ன பொருள் சீதையுடைதுதானா என்று பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல். வால்மீகி இராமாயணத்திலும் சுக்ரீவனிடம்
ஆத்யாத்ம இராமாயணத்திலும் இந்தக் காட்சி சொல்லப்பட்டுள்ளது
क्रोशन्तीं रामरामेति दृष्ट्वास्मान् पर्वतोपरि ।
आमुच्याभरणान्याशु स्वोत्तरीयेण भामिनी ॥ ३८॥
निरीक्ष्याधः परित्यज्य क्रोशन्ती तेन रक्षसा ।
नीताहं भूषणान्याशु गुहायामक्षिपं प्रभो ॥ ३९॥
दि निक्षिप्य तत्सर्वं रुरोद प्राकृतो यथा ॥ ४१॥
இராமன் அவற்றைப் பார்த்ததும் நெஞ்சில் அணைத்துக் கொண்டு சீதையை நினைத்து சாதாரண மனிதன் போல புலம்பினான். வால்மீகியும் இராமனின் துயரத்தை தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.
हा प्रिये इति रुदन् धैर्यम् उत्सृज्य न्यपतत् क्षितौ || ४-६-१७
===========================
சர்கம் 4
இராமனுக்கு சுக்ரீவன் அறுதல்
कह सुग्रीव सुनहु रघुबीरा। तजहु सोच मन आनहु धीरा॥
सब प्रकार करिहउँ सेवकाई। जेहि बिधि मिलिहि जानकी आई॥4
அதைக் கண்ட சுக்ரீவன் “ஐயனே! கேளுங்கள். கவலையை யொழித்து மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஜானகியைத் தங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அனைத்து வழிகளிலும் உதவி புரிவேன்” என்றான்.
अलम् वैक्लव्यम् आलम्ब्य धैर्यम् आत्मगतम् स्मर |
त्वत् विधानाम् न सदृशम् ईदृशम् बुद्धि लाघवम् || ४-७-५
महात्मा च विनीतः च किम् पुनर् धृतिमान् महान् || ४-७-७
मर्यादाम् सत्त्व युक्तानाम् धृतिम् न उत्स्रष्टुम् अर्हसि || ४-७-८
व्यसने वार्थकृच्छ्रे वा भये वा जीवितान्तगे ।
विमृशंश्च स्वया बुद्ध्या धृतिमान्नावसीदति ॥ ४.
ये शोकम् अनुवर्तन्ते न तेषाम् विद्यते सुखम् |
तेजः च क्षीयते तेषाम् न त्वम् शोचितुम् अर्हसि || ४-७-१२
शोकेन अभिप्रपन्नस्य जीविते च अपि संशयः |
स शोकम् त्यज राजेन्द्र धैर्यम् आश्रय केवलम् || ४-७-१३
வால்மீகி இராமாயணத்தில் வால்மீகி சொன்னதுபோல சுக்ரீவன் இராமனுக்கு ஆறுதல் கூறுகிறான். “தாங்கள் தைரியத்தைக் கைவிடாதீர்கள். தங்களைப் போன்ற உத்தமர்கள்,தைரியசாலிகள் இப்படி துக்கப்படலாமா? ஒரு வானரமான நானும் மனைவியைப் பிரிந்தவன்தான். ஆனாலும் தைரியத்தைக் கைவிடாமல் மனத்தைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.. அப்படி இருக்கும்போது தங்களைப் போன்ற வீரர்கள், படித்தவர்கள், நல்ல நடத்தை உள்ளவர்கள் இப்படிக் கண்ணீர் விடலாமா? ஆதலால் துயரத்தை விட்டு மனதைத் திடப் படுத்திக் கொண்டு தைரியமாக இருங்கள். ரகுவம்சத்தில் எல்லோரும் வீரர்கள். அந்தக் குலத்தில் பிறந்த வீரனான நீங்கள் தைரியத்தைக் கைவிடலாமா? இது தங்களுக்கு அழகல்ல “तब भार्या महाबाहो भक्ष्यं विषकृतं यथा। त्यज शोकं-॥தங்கள் மனைவி ஜீரணிக்க முடியாத விஷம் கலந்த அன்னத்தைப் போன்றவள். அவளை யாரும் எளிதில் நெருங்க முடியாது. ஆகையால் கவலையை விடுங்கள் ” என்று சுக்ரீவன் கூறினான்.
சுக்ரீவன் सब प्रकार कारिहाँ सेवकार्ड என்று சொல்கிறான். அதாவது சீதை இருக்குமிடத்தைக் கண்டறிவது, எதிரிகளுடன் போரிடுவது, சீதையை மீட்டுக் கொண்டுவருவது ஆகிய சேவைகளைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான்.
‘जेहि बिधि मिलिहि जानकी आई இங்கு ‘ஆயி’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான். அதாவது இதற்காக தாங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. நாங்களே சீதையைக் கண்டுபிடித்து, எதிரிகளுடன் போரிட்டுச் சீதையை மீட்டு வரும்வோம் என்ற பொருளாகும்..
வால்மீகி இராமாயணத்திலும் இதே கருத்தை சுக்ரீவன் சொல்வதாக எழுதி இருந்தார்
भर्या वियोगजम् दुःखम् न चिरात् त्वम् विमोक्ष्यसे |
त्यज शोकम् महाबाहो ताम् कान्ताम् आनयामि ते | ४-६-८
अनुमानात् तु जानामि मैथिली सा न संशयः
“உமது மனைவியைப் பிரிந்த துக்கத்தில் இருந்து விரைவில் விடுபடுவீராக. {தொலைந்து போன} வேதசுருதியைப் போல, நான் அவளை மீட்டு வருவேன்[ அரிந்தமரே }, ரசாதலத்தில் {பாதாளத்தில்} இருந்தாலும், நபஸ்தலத்தில் {வானத்தில்} இருந்தாலும், நான் உமது மனைவியைக் கொண்டு வந்து உம்மிடம் கொடுப்பேன். இராகவரே, என்னுடைய இந்தச் சொற்கள் உண்மையானவை என்பதை அறிவீராக. மஹாபாஹுவே, உமது {மனைவியான சீதை விஷம் கலந்த உணவைப்} போல, இந்திரன் முதலிய ஸுராஸுரர்களாலும் {தேவர்களாலும், அசுரர்களாலும்} செரிக்கப்பட சாத்தியமற்றவள் ஆவாள்.” இவ்வாறு சுக்ரீவன் இராமனிடம் கூறினான். இத்தோடு நில்லாமல் சுக்ரீவன் பிரதிஞ்ஞையும் செய்கிறான்..
இது ஆத்யாத்ம இராமாயணத்தில்
सुग्रीवो5प्याह हे राम प्रतिज्ञां करवाणि ते। समरे रावणं हत्वा तव
दास्यामि जानकीम्॥’
இது வால்மீகி இராமயணத்தில்
सत्यम् तु प्रतिजानामि त्यज शोकम् अरिन्दम |
करिष्यामि तथा यत्नम् यथा प्राप्स्यसि मैथिलीम् || ४-७-३
रावणम् सगणम् हत्वा परितोष्य आत्म पौरुषम् |
तथा अस्मि कर्ता नचिराद् यथा प्रीतो भविष्यसि ||
“அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, உமக்கு சத்தியப்ரதிஜ்ஞை செய்கிறேன். மைதிலியை எவ்வாறு மீட்க முடியுமோ அவ்வாறு முயற்சி செய்வேன். சோகத்தைக் கைவிடுவீராக. இராவணனையும், அவனது கணங்களையும் {தொண்டர்களையும்} கொன்று, என் ஆற்றலுக்கு நிறைவளிக்கும் வகையிலும், நீர் மகிழ்ச்சியடையும் வகையிலும் விரைவிலேயே நான் செயல்படுவேன்” என்றான் சுக்ரீவன்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-66; Tamil Encyclopaedia 106, One Thousand Interesting Facts -Part 106
Let us take one more book from Eight Anthologies (Ettuth Thokai) in Sangam Tamil Literature. It is called Pathitrup Paththu in Tamil meaning 10 X 10 songs= 100. It is an anthology, dealing with all about ancient mysterious Kerala (Chera Nadu). Many of their customs are not known in other parts of Tami Nadu. This ancient land of Tamils has created a new language called Malayalam. That itself shows it is very different from other Tamil areas. But Malayalam is the closest language to modern Tamil. Malayalam is noting but a mixture of pure Tamil and pure Sanskrit with nasal accent. strangest thing is Sanskrit is studied by the lowest castes and mastered! This book is full of mysteries. The biggest mystery is a famous poet and his wife disappeared after a Yaga (Hindu Fire Ceremony). The Yaga was performed at his request who wanted to go to heaven!(probably like Trin Shanku with his own human body)! Unfortunately two of the ten songs are missing in the book. We have very interesting details about a Chera king punishing the Yavanas (Roman pirates from Italy). At last they cried and gave diamonds and gold to Chera king and got their release. And that gold and diamonds were given to poets!
In his book ‘The Eight Anthologies’, John Ralston Marr gives detailed information about the pathikams and the poems. He identifies the rivers, forests, kingdoms, kings and towns indicated in the poems.
Poems 11 – 20 were written by poet Kumattūr Kannanār for King Imayavarampan Nedunchēralāthan, son of King Uthiyan Chēral and Queen Nallini. This king is said to have defeated the Aryans and Yavanas and carved a bow–emblem on the Himalayas.
Poems 21 – 30 were written by poet Pālai Kouthamanār for King Palyānai Selkelu Kuttuvan, the younger brother of Imayavarampan Nedunchēralāthan.
Poems 31 – 40 were written by poet Kāppiyatru Kāppiyanār for King Kalangāykanni Nārmudichēral, son of Imayavarampan Nedunchēralāthan and his queen, daughter of king Pathuman.
Poems 41 – 50 were written by poet Paranar for King Kadal Pirakōttiya Chenguttuvan, son of Imayavarampan Nedunchēralāthan and the daughter of Manakkilli, a Chōzha king. King Chenguttuvan was a contemporary of Gajabāhu of Sri Lanka (A.D. 180).
Poems 51 – 60 were written by poetess Kākkai Pādiniyār Nachellaiyār for king Ādukotpāttu Chēralāthan, son of Imayavarampan Nedunchēralāthan and his queen, a daughter of a Velāvi king.
The above five kings belonged to the Chēral Uthiyan clan.
Poems 61 – 70 were written by poet Kapilar for King Selvakadungō Vāzhiyāthan, son of King Chēran Anthuvan.
Poems 71 – 80 were written by poet Arisil Kizhār for King Perunchēral Irumporai, son of King Selvakadungo Vāzhiyāthan and his queen, daughter of Velāvi king Pathuman. This king was the victor of Thakadūr. He was the greatest of the Uthiyan kings.
Poems 81 – 90 were written by poet Perunkundrūr Kizhār for King Ilanchēral Irumporai, son of King Perunchēral Irumporai and Princess Anthuvan Chellai.
The above three kings belonged to the Irumporai clan. Both clans were related through marriages.
Let us look at the wonders. Because the first song (or book ) is missing we go to Number Two song.
***
item 911 -Himalayas to Tamil Nadu
Poems 11 – 20 were written by Brahmin poet Kumattūr Kannanār for King Imayavarampan Nedunchēralāthan, son of King Uthiyan Chēral and Queen Nallini. This king is said to have defeated the Aryans and Yavanas and carved a bow–emblem on the Himalayas.
There is prayer to God. It is about Lord Siva. பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்து
Prayer song is taken from most famous Tamil commentator Nachchinarkiniyar. It may not be part of Pathitruppaththu. All the qualities attributed to Lord Siva is in one beautiful verse.
The first wonder is King Imayavarampan Nedunchēralāthan ruled for 58 years, according to Pathikam attached to it. He went upto the Himalayas and carved his bow symbol on it. He made cultured Aryan kings salute him. His mother was Mrs Nallini; his father was Uthiyan Cheral.
***
item 912- Punished Yavana Rouges
He arrested the harsh worded Yavanas, tied their hands behind, poured oil on their head; to release them he got precious gold and diamonds and distributed them to others. Commentators interpreted others as poets, bards, dancers and army commanders.
Two points must be noted here: when the poet described Yananas negative words are used. whenAryas mentioned appreciatory words are added. Second point is he distributed Yavana gold and diamonds to others. He did not add them to his treasury. Yavanas were the Italian pirates who did bad things in the western sea what we call now as Arabian sea, a misnomer!
***
item 913- Lord Skanda Muruka and Chera King- lines 1-15
Lord Murugan (Skanda/ Kartikeyan) destroyed Sura Padman, a demon. This story is enacted on the shores of Tiru Chendur coast on Skanda Sashti day every year. Million Hindus assemble there to worship Lord Murugan. So we see 2000 years continuity in Hindu beleifs.
All Tamil Kings had Trees as totem symbols. Lord Muruga is said to have cut the Mango tree of demon Sura Padman.
In the same way Chera King cut down the Kadampa tree in the island in the Arabian sea. He used the tree to make a war drum
The pirates were occupying one of the islands of Arabian sea and were robbing all the gold ladden ships.
***
Map of Chera Nadu (Kerala)
item 914- Beautiful Himalayas with Aryan Sages and Dreaming Deer
Here comes beautiful lines which explode the myth that British united India. Now and then we see some comments by Hollywood and Kollywood idiots saying British united India. From Mahabharata to Sangam Tamil literature we see repeated words Himalayas to Kanyakumari ruled or controlled by a king. Here we see it in lines 17-25
Aryan= Sages; not the racial meaning given by Foreign Gangs.
Here the poet described the dream of Kavari Deer or Yaks. I have already explained Hindus are the one who repeatedly talked about animal dreams. Now western magazines are WRITING RESEARCH ARTICLES!! As if they have discovered something new! Sangam Tamil literature, Tamil epics and Tamil Bhakti literature have hundreds of dreams.
All the Himalayan descriptions in the early strata of Purananuru and Pathitru Pathu are copied from the first ten stnzas of Kalidasa’s Kumara Sambhava.
***
item 915- Blood Changed the colour of the sea Red!
Like him, you struck your enemies with your blood-tipped sword, and slaughtered them to pieces on battlefields. Blood from wounds your sword caused flowed into the sapphire- colored, dark backwaters, the color changing to that of saffron dye.
We know this as an exaggeration. But the same thing said about Charmanvati river (Chambal river) on the banks of which King Ranti Deva performing Yagas with animal sacrifice, and river water turning blood red, was used by idiots .
***
Cheran Senguttuvan on March
item 916- Mars and Venus-
Line 25 is about the old belief of Hindus about the position of planet Venus.
Venus does not run toward Mars, rains fall without fail in the lands where they are needed and when they are needed
The movement of Venus as seen from earth is always noted. Here poet says if Venus moves too close to planet Mars there will be drought. In 2021 and 2015 both Venus and mars were seen close to one another from earth. Though they are millions of miles away, we see them close. More research has to be done by Hindus to see how correct they are.
***
item 917- Unwoven Clothes- Silk-
The kings munificence towards the bards and dancers were explained in many words. King gave them goat meat, rice, toddy, golden ornaments and clothes not woven in the normal way (from cotton). It is silk. From this we know the poverty of the bards and the wealthy life style of the cities. Silk clothes were made from the silk worms. Poet has coined a new word Noolaak Kalingam நூலாக் கலிங்கம்in Tamil.
***
Statue of Yavana
item 918- Mysterious Akkuran!
In the verse 14 the king is compared to five elements and stars and planets. He is not measurable like these elements and heavenly bodies. This comparison with planes five elements is in Manu Smriti and Valmiki Ramayana . அக்குரன் அனைய கைவண்மையையே;
The king is praised as generous as Akkuran. No details of that philanthropist are available in Hindu scriptures. Karna of Mahabharata is the greatest philanthropist in Hindu literature.
In the Mahabharata and Bhagavata Purana, Akrura is a Yadava prince and the maternal uncle of Lord Krishna. He is famously known for his righteousness and for driving the chariot that brought Krishna and Balarama to Mathura. Note the difference in spellings.
Tags – Purananuru wonders-66, Tamil Encyclopaedia 106, One Thousand Interesting Facts -Part 106, Item 918, Akkuran, Yavana
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நவீன ராமரும் நவீன சீதையும்! ஒரு உண்மைச் சம்பவம்!!
ச. நாகராஜன்
12, ஜூன் 2020.
மஹராஷ்டிராவில் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ளது சிறிய நகரான கோபர்கோன். அந்த ஊரின் நெடுஞ்சாலையில் கடுமையான கோடைகால வெப்பத்தில் ஒரு தம்பதியினர் கஷ்டப்பட்டு நடந்து சென்று கொண்டிருப்பதை உள்ளூர்வாசி ஒருவர் பார்த்தார்.
வழக்கமாகச் செய்யும் விருந்தினர் உபசாரமாக அவர் அந்த தம்பதியினருக்கு உணவு அளிக்க முன் வந்தார். ஆனால் தம்பதியினர் மறுத்து விட்டனர். உடனே சிறிது பணம் தருவதாக அவர் சொன்னார். அதையும் வாங்க அவர்கள் மறுத்து விட்டனர். எதற்காக அந்தக் கடும் பகலில் அவர்கள் நடக்க வேண்டும் என்று பின்னர் அவர் கேட்டார்.
உடனே பிறந்தது அவர்களின் கதை!
அவர்கள் இதுவரை சுமார் 2200 கிலோமீட்டர் நடந்து விட்டதாகவும் தங்கள் ஊரான குஜராத்தில் உள்ள
த்வாரகாவிற்குத் திரும்பிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஒரு வருடத்திற்கு முன்னால் அவர் கண்ணில் ஏற்பட்ட கோளாறினால் முழுப் பார்வையும் போய் குருடாக இருந்ததாகத் தெரிவித்தார். டாக்டர்களில் கண்பார்வை நிபுணர்களும் சர்ஜன்களும் நம்பிக்கை இழந்து அவரது பார்வையை மீட்க முடியாது என்று தெரிவித்து விட்டனர். என்றாலும் கூட அவரது தாயார் ஒரே ஒரு ஆபரேஷன் மட்டும் செய்து பார்க்குமாறு டாக்டரை வேண்ட அவரும் ஒத்துக் கொண்டார். அறுவை சிகிச்சையும் முடிந்தது.
ஆபரேஷன் நடந்த சமயத்தில் அவரது தாயார் ஶ்ரீ கிருஷ்ணர் ஆலயம் சென்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தால் தனது மகன் பாதயாத்திரையாக சென்று திருப்பதி பாலாஜியைத் தரிசித்து விட்டு அங்கிருந்து பண்டர்பூர் சென்று அங்கும் தரிசனத்தை முடித்து விட்டு த்வாரகா திரும்புவார் என்று ப்ரதிக்ஞை செய்தார். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.
ஆகவே தனது தாயாரின் வேண்டுதலை நிறைவேற்ற தான் பாதயாத்திரை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சரி, கூடவே அவரது மனைவி ஏன் வருகிறார் என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர், தானும் கூட வந்தே ஆவேன் என்று தன் மனைவி கூறியதாகவும் அவருக்கு வேண்டிய உணவை சமைத்துத் தருவதோடு அவர் உடல்நலத்தையும் நன்கு பாதுகாப்பதாகவும் அவர் உறுதி கூறியதாகவும் அதனாலேயே அவர் கூட வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மிக நளினமாக ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அவர்கள் மாறி மாறிப் பேசினர்.
அவர்களது பேச்சைக் கேட்ட உள்ளூர்வாசி அவர்கள் எதுவரை படித்திருக்கிறார்கள் என்று கேட்டார்.
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் வானியல் படிப்பை முடித்து தான் டாக்டரேட் பட்டம் பெற்றிருப்பதாகவும் அதே பல்கலைக் கழகத்தில் அவரது மனைவியும் சைக்காலஜி துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்கள் பேச்சில் துளிக்கூட கர்வம் இல்லை. ரிஸர்வ் பேங்க் கவர்னராக இருந்த டாக்டர் சி. ரங்கராஜனுக்கும் துரதிர்ஷ்டவசமாக விண்வெளிப் பயணத்தில் உயிரிழந்த கல்பானா சாவ்லாவுக்கும் அவர்கள் மிக நெருக்கமானவர்கள் என்பதும் தெரிய வந்தது.
இந்த தம்பதிகள் தங்கள் மாதாந்திர பென்ஷனை கண்பார்வையற்றவர் நலத்திற்காக ஒரு என் ஜி வோவுக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனராம்.
சமூக ஊடகங்களிலிருந்து விலகியே இருக்கின்றனர் இந்த தம்பதியினர்.
தனது தாயாரின் வேண்டுதலுக்காக ராமராக ஒருவர் மாற கலியுக சீதையாக அவர் மனைவி அவரைப் பின் தொடர்ந்து வந்தது நிஜமான ஒரு சம்பவம் தான். மூன்று மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் அவர்கள் இன்னும் மூன்று மாதங்கள் நடந்து தங்கள் சொந்த ஊரான த்வாரகாவுக்குத் திரும்புவர்.
அது சரி அந்த தம்பதியினரின் பெயர் என்ன?
டாக்டர் தேவ் உபாத்யாய மற்றும் அவர் மனைவி டாக்டர் சரோஜ் உபாத்யாய!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
61
ஒரு முஸ்லீம் கொண்டுவந்த சாசனம் எப்படி வியப்பை உண்டாக்கியது ?
62
அவந்தி சுந்தரி கதை மூலம் நாம் அறியும் பல்லவர்கள் யார் ?
63
பல்லவ மன்னர்கள் விதித்த விசித்திர வரிகள் யாவை?
64
பல்லவர்களைக் குறிக்கும் போத்தரையன் பற்றிக் காஞ்சிப் பெரியவர் சங்காராச்சார்யார் கூறுவது என்ன ?
65
கிழமையைக் குறிப்பிடும் செப்பேடு எது ?
66
நிலைதாங்கி என்றால் என்ன ? நிலைதாங்கி = மார்த்தாண்டன்=சூரியன் ?
.
67
பல்லவ மஹாராணிகளில் ரங்க பதாகா (பறக்கும் வர்ணக் கொடி) , சாரு தேவி ஆகியோரை முன்னர் கண்டோம் ; அக்கள நிம்மடி, சங்கா தேவி , கோண தேவி பற்றி செப்பேடுகள் செப்புவது என்ன?
68
ஐந்து குடுமி வைத்து செம்புள்ளி கரும்புள்ளி வைக்கும் தண்டனை என்ன ?
69
எந்த நாலு பேருக்கு மட்டும் சிம்ம வர்மன் வணக்கம் செலுத்துவான் என்று ஆந்திர மாநில பீகிராச் செப்பேடுகள் விளம்புகின்றன ?
70
அஸ்வமேத யாகம்பற்றிச் செப்பேடுகள் தரும் செய்தி என்ன ?
***
விடைகள்
61.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முஸ்லீம் இதோ பாருங்கள் எனக்குதான் இந்த நிலம் சொந்தம் என்று அதற்கு ஆதாரமாக ஆந்திர பிரதேச குண்டூர் ஜில்லா உதவி கலெக்டரிடம் சில செப்புப்பட்டயங்களைக் கொடுத்தார் . அந்த முஸ்லீம் நர்ஸார்ப்பேட்டையில் தனக்குச் சொந்தமான நிலத்தின் பட்டயம் என்று நினைத்துக்கொண்டு அதைக் கொண்டு வந்திருக்கிறார் . அவர் அதை வாங்கி தென் இந்திய சாசன ஆராயச்சித் துறைக்கு அனுப்பி வைத்தார். அதில் முழுக்க முழுக்க பிராமணர்களு க்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பிரம்மதேயம் கொடுத்த — நிலத்தானம் — செய்திதான் இருந்தது!அவைகள் 1913 ஆம் ஆண்டில் சுரஞ்ச் செப்பேடுகள் என்ற பெயரில் வெளியிட்டனர் ; அது விஜய விஷ்ணு கோப வர்மன் என்ற பல்லவ மன்னர் அழைத்த செப்பேடு ;அதன் காலம் ஐந்தாம் நூற்றாண்டு என்று தெரிகிறது ஆயினும் அதை யாரோ 200 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுத்துப் பிற பிழைகளுடன் நகல் எடுத்ததும் தெரிகிறது.
காண்க- பக்கம் 341 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
***
62.அவந்தி சுந்தரி கதை (Avantisundari Katha) என்பது வடமொழியில் தண்டி யென்ற புலவர் இயற்றிய ஒரு புகழ்பெற்ற உரைநடை காப்பியமாகும்.தண்டி (Dandin) காவ்யதர்சம் போன்ற நூல்களையும் எழுதியவர். இது ராஜவாஹனன் மற்றும் அவனது நண்பர்களான தசகுமாரர்களின் சாகசங்களைக் கூறும் ‘தசகுமாரசரிதம்’ போன்ற கதைகளின் தொடர்ச்சியாகவும், தண்டியின் வாழ்க்கை மற்றும் வரலாற்றுத் குறிப்புகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை; பல பகுதிகள் சிதைந்த நிலையில் ஒரு உரைநடைத் துண்டாகவும், பின்னர் கவிதை வடிவிலும் மீட்கப்பட்டுள்ளது. தமிழில் பிரேமா பிரசுரம் போன்ற பதிப்பகங்கள் இந்நூலை வெளியிட்டது.
மேலைக் கங்க வம்சத்தில் அவிநீதன், துர்விநீதன் , நிர்விநீதன் என்ற மூன்று மன்னர்கள் ஆட்சி புரிந்தனர் ; அவர்களுள் அவிநீதன் என்பவன் ஆட்சியிலேதான் சிம்ம விஷ்ணுவின் தாயார் அருகக்கடவுளுக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அவிநீதன் மகன் துர்விநீதன் சம்ஸ்க்ருதத்தில் சிறந்த வித்வான் ; அவன் சப்தாவதாரம், வட்ட கதா நூல்களை ஆக்கியோன் ஆவான். அவந்திசுந்தரி கதையிலிருந்து பல்லவ விஷ்ணுவர்மன், சாளுக்கிய விஷ்ணுவர்த்தனன், கங்க வம்ச துர்விநீதன் சமகாலத்தர் என்று தெரிகிறது . அவந்தி சுந்தரி கதையை எழுதிய தண்டி யின் முப்பாட்டனான தாமோதரன், தீர்த்த யாத்திரையின்போது துர்விநீதன் சபையில் வந்து தங்கியிருந்தானாம் . அப்பால் அவன் பல்லவ மன்னனின் ஆதரவினைப்பெற்று காஞ்சீபுரத்துக்கு வந்து ஒரு பெண்ணை மணந்து அங்கேயே தங்கி விட்டானாம் . துர்விநீதன் ஆட்சிக் காலம் ஏழாம் நூற்றாண்டு ஆகும் . காண்க- பக்கம் 36 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
***
63.பல்லவ மன்னன் சிம்மவர்மனுடைய விழாவெட்டிச் செப்பேடுகள் பல வகையான வினோத வரிகளைக் குறிப்பிட்டுள்ளது ; சாசனத்தைப் பதிப்பித்த சாசன இலாகா அதிகாரியான கிருஷ்ணமாசார்லு சொல்கிறார் :”உலோக வேலை செய்வோர், தோல் பதனிடுவோர், கடை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரி இறுக்கமில்லாத ஆடை அணிந்து சஞ்சரிக்கும் அதிகாரம் பெற்ற ஒற்றர்கள், கழைக் கூத்தாடிகள் , ஆஜீவகர்கள் ஆகியோர் செலுத்த வேண்டிய வரிகளும், புறம்பானவர்கள் , மிலேச்சர்கள் போன்றவர்கள் , வேஷம் அணிபவர்கள், கிணறு வெட்ட நீரோட்டம் காண்பவர்கள் , துணி நெய்பவர்கள், சூதாடுவோர், திருமணம் நடத்துவோர், நாவிதர் முதலியோர் செலுத்த வேண்டிய கடமைகளும் , எல்லா விலங்குகளையும் பெற்ற கைவினைஞர்கள் செலுத்த வேண்டியவைகளும் இன்னும் நமக்குச் சேரவேண்டிய மற்ற வரிகள் அனைத்தும் இவருக்கு பிரம்மதேயமாக அளிக்கப்பட்டன . இது விஷ்ணுசர்மன் என்ற பிராம்மணனுக்கு பல்லவ மன்னன் அளித்த கொடை
. காண்க- பக்கம் 317 , பல்லவர் செப்பேடுகள் முப்பது.
(சாசனத்தின் வாசகங்களில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்களும் உள்ளன; அவைகளை ஆராய்ந்து சரியான விளக்கம் பெறவேண்டும்)
பிரம்மதேயம்- பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தானம்;தேவதானம் – கோயில்களுக்கு வழங்கப்படும் தானம்.
***
64.பல்லவம் என்றால் துளிர். போதம் அல்லது போத்ரம் என்றாலும் துளிர் என்றே அர்த்தம். அச்வத்தாமாவிடம் ஒரு வனத்திலே தேவ ஸ்த்ரீ ஒருத்தி ஒரு பிள்ளையைப் பெற்றாள் என்றும், அதைத் துளிர்ப்படுக்கையிலே போட்டுவிட்டு தேவலோகம் போய்விட்டாள் என்றும், அந்தப் பிள்ளைதான் துளிரில் வளர்ந்ததால் ‘பல்லவன்’ என்று பெயர் பெற்று ராஜாவாக ஆட்சிக்கு வந்தான் என்றும் கதை இருக்கிறது. தெலுங்கு தேசத்தில் அமராவதி என்ற இடத்திலுள்ள ஸிம்ஹவர்ம பல்லவனின் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டில் இந்தக் கதையை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அரக்கோணத்திற்கு ஏழெட்டு மைலிலுள்ள வேலூர் பாளையம் என்கிற இடத்தில் அகப்பட்ட மூன்றாவது (விஜய) நந்தவர்மாவின் தாம்ர சாஸனத்திலும் இந்தக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறது. அச்வத்தாமா பாரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்த ப்ராம்மணர். அவருடைய பிதாவான த்ரோணாசார்யாருக்கு பாரத்வாஜர் என்றே ஒரு பெயர். பல்லவ ராஜாக்கள் தங்களை பாரத்வாஜ கோத்ரக்காரர்களாகவே சாஸனங்களில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பல்லவ ராஜாக்களே சாஸனங்களில் இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டாலும், பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து ஆராய்ச்சி பண்ணித் தமிழபிமானிகள் பல்லவர்களின் ‘ஆரிஜின்’ (தோற்றுவாய்) பற்றி வேறே ஒரு கதை சொல்கிறார்கள். நாகப்பட்டினத்துச் சோழ ராஜா ஒருத்தனுக்கு நாக கன்னிகையிடம் ஒரு பிள்ளை பிறந்தது; அவள் தொண்டைக் கொடியைச் சுற்றி அந்தக் குழந்தையை ஸமுத்ரத்தில் மிதக்க விட்டுவிட்டாள்; அதுதான் கரையேறித் தொண்டைமான் என்ற பல்லவ ராஜா ஆயிற்று என்று இந்தக் கதை. காஞ்சீ மண்டலத்துக்கே தொண்டை மண்டலம் என்று பெயர். தொண்டைக் கொடியை ஸம்ஸ்க்ருதத்தில் ‘துண்டீரம்’ என்பார்கள். அதனால் ஸம்ஸ்க்ருத நூல்களில் துண்டீர மண்டலம், துண்டீர சக்ரவர்த்தி என்றெல்லாம் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.
குழந்தையை தேவ ஸ்த்ரீ படுக்கவிட்ட படுக்கையானாலும் ஸரி, நாக ஸ்த்ரீ அதன் இடுப்பில் சுற்றிய கொடியானாலும் ஸரி, இரண்டும் துளிர்களால் ஆனதுதான். துளிர்தான் பல்லவம். அதனால், எந்தக் கதைப்படி பார்த்தாலும் பல்லவர் என்ற பெயர் பொருத்தமானதாகிறது.
துளிருக்கேதான் இன்னொரு பேர் போதம், அல்லது, போத்ரம். தமிழிலும் சின்னஞ்சிறு கன்றாக உள்ள செடியைப் ‘போத்து’ என்றே சொல்கிறோம். ‘பல்லவ மஹாராஜா’ என்பதே இன்னொரு விதமான பத ப்ரயோகத்தில் ‘போத்ர அதிராஜன்’, ‘போத்ராதி ராஜன்’ என்றாயிற்று. அதனால்தான் ஸிம்ஹ விஷ்ணுப் பல்லவச் சக்ரவர்த்தி என்பது ‘சிம்ம விண்ண போத்ராதி ராஜன்’ என்றாயிற்று.
‘போத்ர ராஜன்’ என்பதைத் தமிழில் ‘போத்தராயன்’ என்று சொல்லியிருக்கும். ஒரு வேலையும் செய்யாமல் கொழுத்துப் போனவர்களை ‘போத் (த) ராசா’ என்று திட்டுகிற வழக்கம் இருக்கிறதே, இந்த ‘போத் (த) ராசா’ கூட ‘போத்ர ராஜா’ விலிருந்து வந்ததுதான்!
***
65.ஆடி மாத வெள்ளிக்கிழமையை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது; திருஞான சம்பந்தரின் கோளறு திருப்பதிகம் ‘ஞாயிறு திங்கள் செவ்வாய்’- என்று துவங்கி நவக்கிரகங்களையும் குறிப்பிடுகிறது ; பிராமணர்கள் தினமுமிதை மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் நவக்கிரக தர்ப்பணமாக சம்ஸ்க்ருதத்தில் சொல்லி வழிபடுகிறார்கள்; முதலாம் பரமேஸ்வர வர்மனின் உன்னக்குரவய பாளையம் செப்பேடுகள் ஞாயிற்றுக் கிழமையைக் குறிப்பிடுகிறது ; ஏனைய செப்பேடுகளில் பஞ்சாங்கத்தில் உள்ளதைப்போல மாதம்- பக்ஷம்- திதி ஆகியவற்றை மட்டும் காண்கிறோம். ஆந்திரத்தில் கிடைத்த இந்த செப்பேடு முதலாம் பரமேஸ்வர வர்மன், அவனுடைய ஆட்சியின் பத்தொன்பதாம் ஆண்டில் பெளஷ்ய மாதம் சுக்கில பக்ஷத் திரயோதசி கொண்ட ஞாயிற்றுக் கிழமை உத்தராயண நிமித்தம் குப்புநூறு என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவசர்மன் என்ற பிராமணனுக்கு தானம் அளித்த செய்தியைக் கூறுகிறது. இந்த தேதி கி பி 668 ஆம் ஆண்டினை ஒட்டி வருகிறது . வியப்பான விஷயம் ஏறத்தாழ ஞான சம்பந்தரின் காலம்!(கி.பி. 600 முதல் 630 வரை); ஆனால் சீர்காழிக்கும் ஆந்திரத்துக்கும் உள்ள தூரமோ நெடுந்தூரம்! (பெளஷ்ய மாதம்= தை மாதம்)
***
66.ந்ருப துங்க வர்மனின் பாகூர்ச் செப்பேடுகள் முப்பது ஸம்ஸ்க்ருதச் ஸ்லோகங்களை கொண்டுள்ளது; 18 ஆவது ஸ்லோகம் அரசனின் அதிகாரி அல்லது சிற்றரசன் மார்த்தாண்டனின் பெயரைக் குறிப்பிடுகிறது . 19 ஆவது ஸ்லோகம் சந்த்திர சூரியர்களைப்போல பாதுகாத்து அவன் உலகமக்களுக்கு இருப்பிடம் ( நிலையம்) ஆனான்
பின்னர் 20 ஆவது ஸ்லோகம் பின்வருமாறு உள்ளது :
“அதனால் நிலைதாங்கி என்ற பெயர் ஒரு தெய்வத்துக்கு ஏற்றது போல அந்த அரசனுக்கும் பொருத்தமாக அமைந்தது; அல்லது அவன் (அரசன்) இயற்பெயர் நேரிடையாக நன்கு தோற்றமளித்தது எனலாம்.”
இதில் நிலைதாங்கி என்பதன் பொருள் என்ன? சூரியனா ? அகராதியில் இல்லை . 18 ஆவது ஸ்லோகத்தில் வரும் மார்த்தாண்டன் என்பது சூரியனின் பெயர் . சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் பார்த்தால் விடை கிடைக்கலாம்
உரைநடை விளக்கப்பகுதியில் குறுநில மன்னனான மார்த்தாண்டனுக்கு நிலைதாங்கி என்ற பெயரும் உண்டு – பக்கம் 264- காணப்படுகிறது . அப்படியானால் நிலை தாங்கி சூரியன் தானோ !
நிருப துங்க வர்மன் யார்?
பல்லவ வம்சத்தின் பிற்கால மன்னர்களில் ஒருவர் (ஆட்சிக் காலம்: கி.பி. 850–880). இவன் புகழ்பெற்ற மூன்றாம் நந்திவர்மனின் மூத்த மகன் ஆவான். பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணனுடன் இணைந்து அரிசிலாற்றங்கரையில் நடந்த போரில் பல்லவப் படை வெற்றி பெறக் காரணமானவன். இவனது ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற பாகூர்ப் பட்டயம் வெளியிடப்பட்டது.பல்லவ வம்சத்தின் இறுதி வாரிசுரிமைப் போரில் இவனுக்கும் இவனது தம்பி அபராசித வர்மனுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன
***
67.அக்கள நிம்மடி
பல்லவ அரசி: பல்லவ மன்னனான தந்திவர்மனின் (கி.பி. 796–846) பட்டத்தரசி ஆவார். இவர் கடம்ப மன்னர் குலத்தைச் சேர்ந்த இளவரசி ஆவார். கூரம் கல்வெட்டுகளில் இவரைப் பற்றியும், இவர் ஆற்றிய நிலக்கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தந்திவர்மன் என்பவன் நந்திவர்மப் பல்லவமல்லன் மகன். கி. பி. 7231 மு தல்
கி. பி. 880 வரை ஆண்டவன். இவன் “ பாரத்துவாஜ கோத்திரத்
தின் வழித்தோன்றிய பல்லவ திலக குலோத்பவன் தந்திவர்மன் ்
எனவும், * கோவிசைய தந்திவிக்கிரமபர்மன்” எனவும் கல்வெட்டுக் களில் குறிக்கப் பெற்றுள்ளான். இவனுக்கு மாற்பிடுகு என்னும் பட்டப்பெயரும், வைரமேகன் என்னும் வேறுபெயரும் உண்டு. இவன் கதம்ப மன்னர் குலத்தில் பிறந்த அக்கள நிம்மடி என்னும் பெண்ணை மணந்து கொண்டவன்.
மூன்றாம் நந்திவர்மனின் வேளூர்ப் பாளையம் செப்பேடுகள் 31 சம்ஸ்க்ருத ஸ்லோகங்களைக் கொண்டுள்ளது அதில் 18 ஆவது ஸ்லோகம்-
“கதம்ப வம்சத்தின் திலகமாக பிரசித்தி பெற்ற அரசனுடைய மக்களும் , நற்குலத்தில் பிறந்தவளுமான அக்கள நிம்மடி என்பாள் முப்புரங்களை வெற்றிகொண்ட பரமசிவனின் தேவியான கெளரி- பார்வதி- யைப்போல , வீரர்களில் முதல்வனும் , ஒளி பொருந்தியவனும் , பூமியின் அரசனுமான , பல்லவ மகாராஜனுக்கு மனைவியானாள்” . அடுத்த ஸ்லோகம் அவளுக்கு நந்திவர்மன் பிறந்ததைக் கூறுகிறது.
(திருச்சிராப்பள்ளி தாலூகரவில் ஆலம்பாக்கம் என வழங்கும் தந்திவர்ம மங்கலத்திலுள்ள கைலாசநாதர் கோயிலை இவன் கட்டியுள்ளான். இங்கே ஒரு ஏரி – ஓன்றை வெட்டி அதற்கு மாற்பிடுகு ஏரி என்று பெயர் வைத்துள்ளான்.)
கோஷ தேவி =கோண தேவி
பல்லவர்களில் தெள்ளாறெறிந்த நந்தி வர்மனை அங்க நாடன் என்று நந்திக்கலம்பகம் கூறுகிறது . இது பாகல்பூயூர் பிரதேசம். வங்காளத்தில் தேவகரில் கிடைத்த கல்வெட்டுக்கு தலையும் இல்லை; வாழும் இல்லை . இடைப்பட்ட பகுதியில் ஆதித்யசேனன் சோழநாட்டிலிருந்து திரும்பினான் என்றுள்ளது அவனுடைய மனைவி கோஷா தேவி என்றும் காணப்படுகிறது ; ஆனால் பாகல்பூரில் மந்தார கிரியிலுள்ள கல்வெட்டுகளில் ஆதித்யசேனன் மனைவி கோண தேவி என்றுள்ளது . அதுதான் சரியான பெயர் . கூ ரம் செப்பேட்டில் முதலாம் பரமேச்வரனைக் கர்ணனுடன் (அங்க நாட்டரசன்) ஒப்பிட்ட விளக்கத்தில் இந்தச் செய்தி கூறப்படுகிறது – பக்கம் 44- பல்லவர் செப்பேடுகள் முப்பது .
சங்கா தேவி
பாகூர்ச் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் தந்தி வர்மனுக்கு நந்தி வர்மன் பிறந்தான்; அவன் ராஷட்ரகூட வம்சத்தில் பிறந்த சங்கா என்ற தேவியை மணந்தான் . அவர்களுக்கு நிருபதுங்கன் என்ற மகன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது .பக்கம் 264
***
பாகூர்ச் செப்பேட்டில் சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் விளக்கப் பகுதியில் – பக்கம் 273- சுவையான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது
ஸ்லோகம் 11
யமனுடைய இருப்பிடத்தைப் பார்க்கவேண்டுமென்ற ஆசையோடு தன்னிடம் சிறைப்பட்டவர்களோடு கூடியவர்களாக — அவர்களுடைய– வழிநடைக் கட்டுச்சோறு போல பேடிகளான எதிரிகளை செய்து அவன் அனுப்பிவைத்தான்
அடிக்குறிப்பு
சிறைப்பட்டோரையும் எதிரிகளின் தூதுவர்களையும் முன்னாளில் நம் அரசர்கள் பெண் வேடம் போட்டோ , ஐங்க்குடுமி வைத்தோ முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியோ அனுப்புவது வழக்கம் ; சோழர்களுடைய ஆட்சிக் காலத்தில் அது வழக்கில் இருந்திருக்கிறது ..
எனது கருத்து
பெண்களுக்கு ஐம்பால் கூந்தல் இருந்ததாக சங்க இலக்கியம் முழுதும் காணப்படுகிறது ; அதனால்தான் ஐங்க்குடுமி வைத்தனரோ! பதிற்றுப்பத்தில் சேர மன்னன், கடலில் சேட்டை செய்த யவனர்களைப் பிடித்து, மொட்டையடித்து, தலையில் எண்ணெய் ஊற்றி, பின்னால் கைகளைக் கட்டி தண்டித்த செய்தியுடன் இதை ஒப்பிடலாம் .
***
69. தெய்வம், இரு பிறப்பாளர் ( பிராமணர்), ஆசான், முதியோர் ஆகியவர்களை உபசரிப்பான்; அவன் யுவ மஹாராஜா விஷ்ணு கோபனின் மகன் ; பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன்; கலியுக தோஷத்தினால் கீழே விழுந்த தர்மத்தை உயர்த்தி நிறுத்துவதில் எப்போதும் தயாராக இருப்பவன் ராஜ ரிஷிகளின் கு ணங்கள் அனைத்தையும் உடையவன் .
(சமுத்திர குப்தன் கால பல்லவ மன்னன் விஷ்ணு கோபனை பிரயாகை பிரஸ்த்தி உறுதி செய்கிறது; அந்த விஷ்ணு கோபன் என்றால் 1700 ஆண்டுகளுக்கு முன்னரே கலி யுகம் பற்றிக் கவலைப்பட்டது தெரிகிறது!)
***
70.பல்லவர் செப்பேடுகளில் சம்ஸ்க்ருத ஸ்லோகப் பகுதிகளில் பொதுவாக பல்லவ மன்னர்கள் அஸ்வமேத யாகம் செய்பவர்கள் என்று வருகிறது; யுவராஜா விஷ்ணுகோப வர்மனின் செப்பேடுகளில் மன்னனின் சேனாபதியான விஷ்ணுவர்மன் எழுப்பிய விஷ்ணுவின் ஆலயத்துக்கு உருவப்பள்ளி கிராமத்தில் நில தானம் செய்த செய்தி வருகிறது ; கோயில் எழுப்பிய விஷ்ணு வர்மன் , கதம்ப வம்சத்து அரசனும் அச்வமேத யாகம் செய்தவனுமான முதலாம் கிருஷ்ண வர்மனின் மகன் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருதுவர் -பக்கம் 284 அவன் செய்த அஸ்வமேத யாகத்தை வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
Tags- பல்லவர் செப்பேடுகள், ஏழாவது 10 கேள்விகள் , பல்லவ மஹாராணிகள் , நிலைதாங்கி, போத்தரையன் , யாகம்