Written by London Swaminathan
Post No. 16,010
Date uploaded in London – 23 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
பன்னிரு திருமுறைகளில் திருமூலர் இயற்றிய திருமந்திரம், எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது ?
2
திருமந்திரத்தில் எத்தனை பாடல்கள் ? எத்தனை அத்தியாயங்கள் அல்லது தந்திரங்கள் உள்ளன?
3
இதை அவர் எந்த ஆண்டில் இயற்றினார் ?
4
திருமூலர் எந்த மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இதை இயற்றினார் ?
5
பாயிரத்தில் என்ன சொல்கிறார் ?
6
முதல் தந்திரத்தில் என்ன விஷயங்களைப் பாடுகிறார்? இலிங்க புராணம் தக்கன் வேள்வி , அடிமுடி தேடல் எந்த தந்திரத்தில் வருகிறது?
7
மூன்றாவது தந்திரம் எந்த ஆகமத்தின் பிழிவு ? ஏன் ? நான்காவது தந்திரத்தில் திருவைந்தெழுத்தின் பெருமையை உலோகங்களை உவமையாக்கி எப்படி எடுத்துரைக்கிறார் ?
8
ஐந்தாவது ஆறாவது தந்திரங்கள் சாரம் என்ன
ஆறு ஆதாரங்கள் பற்றி எங்கு பாடுகிறார் ?
9
திருமூலரின் புகழ்பெற்ற மேற்கோள்களை நிரப்புங்கள் :
ஒன்றே குலமும் …………………………………………..
சிவனொடு ஒக்கும் தெய்வம் …………………………..
ஆர்க்கும் இடுமின்…………………………………………
மரத்தை மறைத்தது ………………………..
மரத்தின் மறைந்தது …………………………
யான்பெற்ற இன்பம் …………………………………..
அன்பும் சிவமும் இரண்டு …………………………………
என்னை நன்றாக …………………………….
தன்னை ……………………………………………..
10
திருமூலர் ஒரு ஆட்டு இடையன் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்த ஊர் எது? அவருடைய சமாதி உள்ள இடம் எது?
****
விடைகள்
1.இதனைச் சைவத்திருமுறை பன்னிரண்டினுள் பத்தாவது திருமுறையாய்த் தொகுத்துள்ளனர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், பதினெண் சித்தர்களுள் ஒருவரும் ஆவார்.
***
2.திருமந்திரத்தில் எத்தனை 3000 பாடல்கள்; ஒன்பது அத்தியாயங்கள் அல்லது தந்திரங்கள் உள்ளன.
***
3.திருமந்திரம் பாடல்களின் மொழி அமைப்பும் ஏராளமான சம்ஸ்க்ருத சொற்களும், லிங்க புராண விஷயங்களும் கணபதி வழிபாடும் இவரை மாணிக்கவாசகருக்குப் பின்னரே வைக்கும் . இவர் சம்பந்தர், அப்பர் சுந்தரர் காலத்துக்குப் பின்னர் அல்லது சுந்தரர் காலத்தை ஒட்டியே இருந்திருக்கவேண்டும் இவரை இதற்கு முன்னால் வைத்தால், மொழியியல் விதிகளைத் தலைகீழாக மாற்றவேண்டியிருக்கும் . மூவாயிரம் ஆண்டுக்கு ஒரு பாடல் என்பதெல்லாம் உலக மொழிகளையெல்லாம் ஏளனம் செய்யும் கூற்று ஆக அமையும் . உலக மொழிகளின் தோற்றம் ,வளர்ச்சி, முதலியவற்றை அறியாதோர் பிதற்றும் வாதங்கள் இவை ; பிள்ளையார் துதியில் துவங்குவதும் லிங்க, தந்திர, ஆகம , யந்திர விஷயங்களைக் கதைப்பதைக் கொண்டும், தந்திரம்-அதிகாரம் என்ற பிரிவினையும் இவரை சேக்கிழார் காலத்துக்கு முன்னர் வைக்கலாம் .
***
4. கைலாயத்தில் நந்தியின் உபதேசம் பெற்றவர். கைலாயத்தில் இருந்து பொதிகைக்கு வரும்போது பசுக்களின் துயரினை நீக்க, மூலரின் உடலில் புகுந்து வாழ்ந்தவர். இவருடைய பாடல்களில் காஷ்மீர் சைவ செல்வாக்கு இருப்பதால் இவர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது ஒரு சாரார் கொள்கை.
***
5.பாயிரத்தில் விநாயகர் காப்புடன் நூல் தொடங்கி , கடவுள் வாழ்த்தாக ஐம்பது பாடல்கள் உள்ளன ; வேதச் சிறப்பு, ஆகமச் சிறப்பு, குருபரம்பரை, திருமூலர் வரலாறு , அவையடக்கம், குரு மட வரலாறு, மும்மூர்த்திகளின் முறைமை முதலியன உள்ளன .
***
6.முதல் தந்திரத்தில் உபதேசப்பகுதியை அடுத்து நீதி நூல்களைப்போல யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன் மனை நயவாமை, நல்குரவு, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, கள்ளுண்ணாமை, அறம், தானச் சிறப்பு முதலியன வருகிறது. இலிங்க புராணம், தக்கன் வேள்வி , அடிமுடி தேடல் முதலியன இரண்டாம் தந்திரத்தில் வருகிறது.
***
7.வீராகமம் என்னும் நூலின் பிழிவு என்று கருதலாம் ; மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தல், அட்டாங்க யோகம் முதலியன உள்ளன.
நாலாவது தந்திரத்தில் ஐந்தெழுத்தின் பெருமையை விளக்குகையில் செம்பு பொன்னாகும் சிவாய நமவென்னில் என்கிறார்.
***
8.ஐந்து: இறைவனை அடைவதற்கு உரிய நூல் நெறிகள்:
சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்தி நிபாதம்
ஆறு: குருதரிசனப் பயன், திருநீற்றின் சிறப்பு, துறவு நிலை
.ஏழாவது தந்திரத்தில் ஆறு ஆதாரங்கள், சிவபூசை, குருபூசை, சமாதி அமைத்து வழிபடும் முறை, உயிர் இலக்கணம்ஆகியவற்றைப்பாடுகிறார்
***
9.ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
ஆர்க்கும் இடுமின்: அவர்இவர் என்னன்மின்
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
***
10.திருமூலர் ஒரு ஆட்டு இடையன் உடலில் கூடுவிட்டுக் கூட்டு பாய்ந்த ஊர் திருவாவடுதுறை. புகழ்பெற்ற திருமூலர், திருமந்திரம் எனும் நூலை இயற்றியதும், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து முத்தி பெற்றதும் இத்தலத்தில்தான். ஆடுதுறைக்கு அருகில் உள்ள சாத்தனூர் என்ற ஊரில் உள்ள ஐயனார் கோவில் பின்புறம் ,மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலும் திருமூலர் சமாதி அமைந்துள்ளதாகவும் நம்புவோர் உளர்.
–Subham—
Tags- திருமந்திரம் ,10 கேள்விகள் , திருமூலர், திருவாவடுதுறை

