Ornaments in Buddha Charita,Rajatarangini:Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 5 (Post15,885)

Hindu Mather Goddess in Harappan Civilization

Written by London Swaminathan

Post No. 15,885

Date uploaded in London –18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Research article- Part 5

Madurai Menakshi (Wife of Siva).

We get interesting information about jewels and ornaments from Sangam Tamil literature, Rajatarangini of Kalhana and Buddha Charita of Asvaghosa.

Tamil Sangam literature has many Sanskrit words like Valaya (bangles, bracelets) Nupura (anklet), Mani (gem stones) and Mukta (Muthu,Pearl). Mukta may be taken from Tamil. Pravala is used as Pavalam in Tamil.

Tamils wore ornaments from head to foot like their north Indian counterparts.  Only later epic Silappadikaram has full details. Sangam Tamils wore bangles made up of seashells a lot. Both men and women had anklets (Kazal for men; Silambu for women). Children had foot ornaments as well; later literature mentioned Kolusu; but Sanskrit word Kinkini is in Sangam poems. As I mentioned earlier all the Five Tamil Epics are named with ornaments, but with Sanskrit words!

Most interesting thing is the mention of Makara rings (shark shaped) worn by the Sangam Tamils. We find such rings until today.

Kalhana who wrote the history of Kashmir in Sanskrit says in his work Rajataarangini,

“Now, gentle friend! Drink freely, your ears serving the mother of pearl glasses, of this River of Kings (raajatarangini) delightful with the flow of its sustained sentiment- 1-24”.

For this sloka R S Pandit (India’s first Prime Minister Jawaharlal Nehru’s brother-in-law) has given the following detail in the footnote:

Kalhana hoped his poem would be recited like the great epics in time to come. Mother of pearl glasses for drinking wine must have been in use among the people in his day. In Taranga V verse 169, there is a reference to jewelled glasses for liqueur which were used by the nobility.

Bernier speaks of Tibetan jade presented to Aurangazeb in Kashmir, which was “in great estimation in the court of the Mogol; its colour is greenish, with white veins, and it is hard to be wrought only with diamond powder. Cups and vases were made of this stone. I have some of the most exquisite workmanship, inlaid with strings of gold, and enriched with precious stones”– Bernier

***

Hindu woman in Ashmolean Museum, Oxford, UK.

Asvaghosha wrote four books Saundarananda, Buddha Carita, Vajrasuci and Sraddotpada  Sastra.

Jewellery is mentioned as

Bhuushana,

Aabharana ,

Mandana

It included the following ornaments: various kinds of necklaces called Mala (maalaa), Hara(haara), which sometimes were long enough to dangle up to breasts, special necklaces called Yoktraka, Suvarna Suutra and Kantha suutra.

Dangling earrings-Kundala and Mani kundala (studded with precious jewels);

Anklets (Nuupura), bracelets or armlets called Keyuura, Bhujapaasha;

Valaya- bangles and Angad;

Girdle called Mekhalaa, Kaanchi and Jhaghana Vibhuushana. Some of them had jingling bells.

Mahaavastu also mentioned these ornaments.

While ladies of high pedigree used gold, silver studded jewellery, common people used white shell ornaments.

From Begran in Gandhara region a beautiful collection of fragments of ivory toilet boxes have been found from the ruins of Kanishka’s palace.

The kings and princes used a large number of ornaments. Royal tiara with strings of pearls hanging over their shoulders, armlets in the arms, diadem with blazing jewels and necklaces.

Q.Curtius Rufus (First century CE) writes:

“Indians hang precious stones as pendants from their ears, and persons of high social rank or of great wealth, deck their wrist and upper arm with bracelets of gold…. The luxury of their kings or they call it, their magnificence is carried to a vicious excess without a parallel in the world”.

***

Yakshi with head to foot ornaments

Some important Sanskrit Words in modern usage:

Angada- armlet like a coiled snake;

Anguliyaka- finger ring;

Arsi- thumb ring set with mirror;

Baahu- armlet;

Bali- ring type earring with pearl strung on it;

Bina- star shaped forehead ornament;

Bindi -forehead ornament;

Chaulari- four stringed necklace;

Chuudaamani- ornament for hair, lotus shaped, its petals ornamented with pearls and precious stones;

Ekavali- single strand pearl necklace;

Chungru- anklet with small bells (kinkini)

Hamsa mithuna- decorative motif consisting of a pair of swans;

Hiranya- gold;

Hirnyasraj- gold garlands;

Kaksha- red seeds for making ornaments;

Kanaka kamala – a full blown lotus design earring set in rubies, still used in South India;

Kancala- elaborate earrings with pendants;

Kaachis- hip girdle with bells;

Kangan- bracelet;

male and female jewellery;  Ashmolean Museum, Oxford, UK.

Kanta- short necklace broad and flat;

Karnika- earring;

Karnphul-flower shaped earring;

Kinkini- anklet with small bells suspended;

Kirita- crown;

Kundela- simple earring or circular;

Maangaa maalaai- gold coin necklace of south Indians;

Manjira- hollw anklets;

Mekhalaa- hip belt or girdle;

Mukta – pearl; muktavali-pearl necklace;

Nishka- necklace of gold coins;

Pattabandha- ornamented gold strip for holding the turban in position;

Phalaka- slab like gems;

Phalaka haara- necklace with slab like gems at intervals;

Phalaka valaya – bracelet with slab like gems set into it;

Rasana-girdle;

Ratnajali- a net of braid and pearls worn around chignon by women ;

Ratnanguliya- finger ringsl studded with gems; one of them is NAVA RATNA RING;

Satlar- seven stringed necklace;

Tilari- three  stringed necklace;

Tulakoti- heavy anklets with two ends enlarges at their meeting point;

Valaya- bracelet; bangles;

Yashti- necklace of gems and gold beads with large central head.

Tamils of later days also had a long list of ornaments but not found in ancient literature. The sculptures and paintings show this jewellery.

–subham—

Tags- Ornaments, Buddha Charita, Rajatarangin, :Ancient Hindu Jewellery,  You can get Ph.D., Part 5, Research article

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-58; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,884)

Written by London Swaminathan

Post No. 15,884

Date uploaded in London –18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கண்டமெனும் கடிநகர் / தேவப்பிரயாகை

திருக்கண்டமென்னும் கடிநகர் (தற்காலத்தில் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது) என்பது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். உத்தரகண்ட் மாநிலத்தின் தேரி கார்வால்  மாவட்டத்தில், அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆறுகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இது பெரியாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

திவ்யதேசம்- திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’    

மூலவர்-நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி

தாயார்-  புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா

திருக்கோலம்- நின்ற திருக்கோலம் 

திசை      -கிழக்கு  

பாசுரங்கள்-     11   

மங்களாசாசனம்- பெரியாழ்வார்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தேவப்ரயாகை அமைந்திருக்கிறது. ஹரித்துவாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், ரிஷிகேஷில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் பத்ரிநாத்தில் இருந்து சுமார் 290 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன.

1

அலக்நந்தா நதியுடன் பாகீரதி சங்கமமாகும் தேவப்ரயாகை ( ரிஷிகேஷில் இருந்து 70 கிமீ ) ;

2

அலக்நந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் ருத்ரப்ரயாகை (140 கிமீ) ;

3

அலக்நந்தாவுடன் பிண்டர்நதி சேரும் கர்ணப்ரயாகை (170 கிமீ);

4

அலக்நந்தாவுடன் நந்தாகினி சேரும் நந்தப்ரயாகை (190 கிமீ) ;

5

அலக்நந்தாவுடன் கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப்ரயாகை (260 கிமீ) என ஐந்து ப்ரயாகைகள் ( பஞ்ச ப்ரயாகை) பத்ரிநாத்திற்கு முன்பு உள்ளன.

Following pictures are taken from a website;thanks

தேவப்பிரயாகை  அலஹாபாத்தின் திரிவேணி சங்கமம் போன்று வழிபடப்படும் வரும் ஒரு புண்ணிய சங்கமம் ஆகும். அமைதியாக நகர்ந்து பச்சை நிறத்துடன் வரும் பாகீரதியும், ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து இளம் சிவப்பு நிறத்துடன் வரும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. சங்கமத்துக்குப் பிறகு ‘கங்கை’ எனப் பெயர் மாறுகிறது. ப்ரயாகை என்றால் சங்கமிப்பது; இங்கு பாகீரதியும் அலகநந்தாவும் சங்கமிப்பதாலும், இங்கு பிரம்மா, விஷணுவே தேவன் என்று அவருக்காக சிறந்த யாகத்தை செய்ததாலும், இந்த இடத்தை இந்திரனே பாதுகாப்பதாலும், இது தேவப்ரயாகை என்று பெயர் பெற்றது.

பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவம் செய்ததாக வரலாறு. ராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக ஸ்ரீராமன் இங்கே தவம் செய்ததாக ஐதீகம்.

கண்டம் என்றால் ஒரு பகுதி என்றும் கடி என்றால் மணம் கமழும் என்றும் அர்த்தம். மணம் கமழும் பகுதி என்று ஆழ்வாரால் பாடப்பட்ட பகுதி, கண்டம் எனும் கடி நகர் ஆகும்.

கடி என்றால் ஒரு நொடி பொழுது என்றும் இந்த திவ்யதேசத்தில் ஒரு நொடி பொழுது இருந்தால் எல்லா ஜென்மங்களிலும் செய்த பாவங்களை போக்கி விடும் என்று ஓர் அர்த்தம் சொல்வார்கள்; 108 திவ்யதேசங்களில் இப்படி சொல்லப்பட்ட திவ்யதேசங்கள் மூன்று, அவை, கண்டமெனும் கடி நகர், திருக்கடிகை, திருக்கடித்தானம் (மலையாள திவ்யதேசம்) ஆகும்.

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீராமன். இவரை ரகுநாத்ஜீ என்று அழைக்கிறார்கள். சுமார் 72 அடி உயரத்துடனும், உச்சியில் கூம்புவடிவத்துடனும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமன் திருவடி பதித்த பாறை ஒன்றும் இங்கிருக்கிறது. ஸ்ரீராமன் இந்த இடத்தில் தசரதருக்கு பிண்டதானம் கொடுத்தாராம். ஸ்ரீரகுநாதரின் ஆலயத்துக்கு அருகில் பத்ரிநாதர், கால பைரவர், ஹனுமான் மகாதேவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சஞ்சீவ பர்வதம் தாங்கிய ஹனுமனும் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் உத்சவர் உண்டு. ஆண்டுக்கு பத்து நாட்கள் உற்சவம் காண்கிறார்.

ஆதி சங்கரர் நிறுவிய கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்று கூறப்படும். ஸ்வாமி ராமானுஜரும் மங்களாசாசனம் செய்த க்ஷேத்திரம் ஆகும்.

தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான் என்றும், இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில் தான் எம்பெருமான் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.

கோவிலுக்குப் பின்பகுதியில் சிறிய ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.

தல வரலாறு: பரத்வாஜ முனிவருக்கு பெருமாள் காட்சி அளித்த தலம் இதுவாகும்.

தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

பாசுரம்

 91.  

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்*

எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*

கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்*

கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)

392.  

சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச*

மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*

நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்*

கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 

393.  

அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு-

எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*

சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*

கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே

394.  

இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை*

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

395.  

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்*

மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்*

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

396.  

தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு*

மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*

அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட*

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

397.  

விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி*

மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*

அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*

கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.

400.  

 மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை-

ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்*

கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

401.  

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்*

வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*

தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு*

கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)

–subham-

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-58; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், கண்டமெனும் கடிநகர் ,தேவப்பிரயாகை

கர்மபூமி பாரதமே சிறந்தது! (Post No.15,883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,883

Date uploaded in London – 18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

கர்மபூமி பாரதமே சிறந்தது! 

ச. நாகராஜன் 

கர்மபூமி பாரதமே சிறந்தது! 

அத்ராபி பாரதம் ச்ரேஷ்டம் ஜம்புத்வீபே மஹாமுனே |

யதோ ஹி கர்மபூரேஷா அதோன்யா போகபூமிய: || 

ஜம்புத்வீபத்தில் ச்ரேஷ்டமான (உயர்ந்த) இடம் பாரதம் தான்! ஏனெனில் இது கர்ம பூமி. மற்ற அனைத்தும் (பிரதேசங்களும்) போக பூமியாகும்.

பிராமணர்களை இகழாதே!

 அத்யுன்னதபதம் ப்ராப்த: பூஜ்யான் நைவாதவமானயேத் |

நகுஷ: சக்ரதாம் ப்ராப்தஷ ச்யுதோகஸ்யாவமானநாத் || 

ஒரு மனிதன் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும் கூட அவன் ஒருக்காலும் பூஜ்யர்களை (பிராமணர்களை) இகழக் கூடாது. இந்திர பதவியை அடைந்த நகுஷன் அகஸ்தியரை அவமானப்படுத்தியதால் தன் உயர்ந்த பதவியிலிருந்து விழுந்தான்.

முள் தரும் வேதனை போல ஆசை பிறப்பைத் தரும்!

அணுமாத்ரம் யயா ஷல்யம் சரீரே துக்கதாயகம் |

ததாதீசு சம்யுக்தம் மன: சம்சாரதாயகம் ||

முள்ளானது மிகச் சிறியதாக இருந்தாலும் கூட உடலுக்கு எப்படி பெரிய வேதனையைத் தருகிறதோ, அதே போல, உலக விஷயங்களில் ஆசைப்பட்ட மனதுடன் இருப்பவன் மறுஜென்மத்தை அடைவான். (அதனால் துன்பங்களைப் பெறுவான்)

எட்டுவகை சித்திகள் (அஷ்டமாசித்தி)!

அணிமா மஹிமா சைவ லகிமா கரிமா ததா |

ப்ராப்தி: ப்ராகாம்யமீஷித்வம் வசிஷ்த்வம் சாஷ்ட சித்தய: ||

அஷ்டமாசித்தி எனப்படும் எண்வகை சித்திகளாவன:

1)      அணிமா – அணு போல உடலை சிறியதாக ஆக்குதல்

2)       மஹிமா – உடலை மலை போலப் பெரியதாக ஆக்குதல்

3)      லகிமா – காற்றைப் போல லேசாக ஆக்குதல்

4)      கரிமா – அசைக்கமுடியாமல் பாரமாக இருத்தல்

5)      பிராப்தி – மனதால் நினைத்ததை அடைதல்

6)      பிரகாமியம் – கூடு விட்டுக் கூடு பாய்தல்

7)      ஈசத்துவம் – பிரம்மா உள்ளிட்ட அனைவருக்கும் ஆணையிடுதல்

8)      வசித்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்தல்

சிறிய கௌரவமும் பெரியோருக்கு பெரிதாகி விடும்! 

அத்யுதாத்தகணேஷ்வேஷா க்ருதபுண்யை: ப்ரரோபிதா |

சதஷாகிமதத்யேவ யாவன்மாத்ராபி சத்க்ரியா ||

மிக உயர்ந்த குணங்களை உடையோருக்குச் சிறிய கௌரவத்தை அளித்தாலும் கூட அது அவர்கள் ஏற்கனவே செய்த நல்ல செயல்களால் நூறு கிளைகளை உடைய மரம் போல வளரும்.

**

இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும் (Post.15,882)

Written by London Swaminathan

Post No. 15,882

Date uploaded in London –17 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும்!

வாத்ஸ்யாயன மஹரிஷி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய புஸ்தகம்தான் உலகில் எழுந்த முதலாவது Sex செக்ஸ் புஸ்தகம்; காமம்  என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக சேர்த்தது இந்துக்கள் மட்டுமே; ஏனையோர் இது ஆகாததுகூடாதது என்று கருதிய காலையில் தர்ம அர்த்த காம மோக்ஷம் என்பதை — அறம், பொருள், இன்பம், வீடு என்பதை – வாழ்க்கையில் நான்கு லட்சியங்களாக இந்துக்கள் சேர்த்தனர் ; சங்க காலத் தமிழர்கள் பக்கா இந்துக்கள் என்பதால் புறநானூற்றிலும்,  தொல்காப்பியத்திலும் , திருக்குறளிலும் செப்பி இந்துத்துவாவை உறுதிப்படுத்தினர்  ; வள்ளுவன் அதி பயங்கர இந்து என்பதால் நூலுக்கே முப்பால் – அறம்- பொருள்- இன்பம் என்று பெயரிட்டான் ; ஆரம்ப காலத்தில்  வெள்ளைக்கார்கள் காமத்துப் பாலைத் தொட அஞ்சினர்; பின்னர் ரெவரெண்ட் ஜி யு போப், துணிந்து காமத்தையும் இயம்பினார் .சம்ஸ்க்ருதத்தில் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காமசூத்திரம் ஆழமான செக்ஸ் / பாலியல் தகவல்களை பகர்ந்தாலும் கணவன் இல்லாதபோது பெண்கள் எப்படி டிரஸ் Dress செய்ய வேண்டும், எதை அணிய வேண்டும், எங்கு தூங்க வேண்டும் என்று கூட எழுதிவைத்தார் .

முதலில் அவர் சொல்லும் ஆபரண அணிகலன்களைக் காண்போம் :

ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதை தமிழர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள் ; இதை முதலில் உலகிற்குச் செப்பியவர் வாத்ஸ்யாயன மகரிஷி ; அவர் சம்ஸ்க்ருதத்தில் 64 கலைகளையும் பட்டியலிட்டு இவைகளை பெண்களை கற்க வேண்டும் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே !

அதுதான் உலகில் பெண்களுக்கான முதல் Syllabus சிலபஸ் – பாட திட்டம்- இந்துக்கள் அந்த அளவுக்கு அபார முன்னேற்றம் அடைந்திருந்தார்கள் என்பதை வேதமும் காளிதாசனின் ஏழு நூல்களும் எடுத்துக் காட்டுகின்றன ; சங்கத் தமிழ் இலக்கியத்தில் வந்த ஆபரணங்களை முன்னரே கண்டோம்; அவைகளில் பல நகைகளின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் அப்படியே உள்ளதையும் முந்தைய கட்டுரையில் கண்டோம்; மாலை செய்தல், உடை அணிதல்,  கிரீடங்கள் -தலைப் பாகைகள் செய்தல் முதலியவற்றையும் அவர் சேர்த்துள்ளார் ;

வாத்ஸ்யாயனர் சொல்லும் 64 கலைகளில் கீழ்கண்ட நான்கும் அடக்கம்:

1

கிரீடங்களும் தலை அணிகளும்

தலையில் வட்டமாக மலர் அணிதல் நாகரீக — அதாவது நகர் வாழ் – மக்களின் பண்பு; அவை பல வண்ணத்தில் இருக்க வேண்டும்  ( சங்க காலத் தமிழர்களும் இவ்வாறு தலையிலும் காதிலும் பூச்சூடியதை சங்கப்புலவர்களும் பாடி வைத்துள்ளனர் ; இப்போது யாராவது அதைச் செய்தால் பட்டிக்காட்டான் என்பார்கள் !

2

ஆடைகளை அணிதல்

இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப ஆடைகளை அணிய வேண்டும்; (இதற்கான விவரங்களையும் அவர் ஸ்லோகம் ஸ்லோகமாக எழுதியுள்ளார்)

3

தந்தம் மற்றும் முத்துக்களாலால் ஆன ஆபரணங்கள்

4

வாசனைப் பூச்சுகள் Perfumes

கஸ்தூரி, புனுகு, சந்தனம், பூக்கள் முதலியவற்றைக்கொண்டு வாசனைப் பூச்சு Perfume செய்வதையும் அவர் புகல்கிறார் 

5

நகைகள் , அணிகலன்கள்

இவைகளை இரண்டு வகை என்று சொல்லி 1.கழுத்தில் அணிபவை 2.  இடுப்பில் அணிபவை என்று வகைப்படுத்துகிறார்.

மாலை நேரத்தில் நடனமாதர்களும் பாடகர்களும் வாத்தியக் கலைஞர்களும் உள்ள அறையில் ஒரு நாகரீக மனிதன் நுழையும்போது படாடோபமாக உடை அணிய வேண்டும்;படாடோபம் என்பதில் நகைகளும் ஆடைகளும் அடக்கம் ; பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு வகையான ஆடைகளைக் குறிப்பிடுகிறார்.

தாவரங்களினால் ஆன ஆடை – சணல், இலை,தழைகள் மற்றும் மரவுரி ஆடைகள்,

பருத்தி ஆடைகள் ,

பட்டு ஆடைகள்,

கம்பளி ஆடைகள் .

இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப ஆடைகளை அணிந்து நகைகளைப் பூண வேண்டும் .

***

நகைகள்

13 வகைப்படும் இரத்தின ஆபரணங்கள், ஒன்பது வகை தங்க ஆபரணங்கள் என்று வராஹமிஹிரர் பிருஹத் சம்ஹிதையில் பட்டியலிட்டுள்ளார் ; ரிக் வேதம் முதல் தங்க நகைகளைக் காண முடிகிறது.

வராஹமிஹிரர் கொடுத்த பட்டியல்

வைர / வஜ்ர,

முத்து /முக்த,

மாணிக்கம் /பத்மராக,

மரகத / மரகத/பச்சைக் கல் ,

நீலம் / இந்திர நீலம் ,

லபிஸ் லசூலி / வைடூர்ய,

புஷ்பராக / புஷ்பராக,

கருப்பு மணி ,

சாணைக்கல்?

ஓர்க்கோலை/புலக,

கார்னெட் /கருமாணிக்கல்,

அமெதிஸ்ட்/ பீஸ்ம

கிரிஸ்டல்/ ஸ்படிக,

ஓபல் / ப்ரவாள.

(இவைகளை மோதிரத்தில், பதக்கத்தில், இரத்தின மாலைகளில் பதிக்கலாம்).

***

நகைகள் நான்கு வகைப்படும் என்கிறது காம சூத்திர நூல்:

அவேத்ய – மூக்கு, காதுகளில் துளையிட்டு அணியும் ஆபரணங்கள்.

நிபந்தனிய– தோள்களில் பொருத்தப்படும் அணிகலன்கள் ;வேணி- தலையில் அணியும் பட்டை சூடாமணி.

பிரக்ஷேப்ய -விரல்களில் சொருகும் மோதிரம், விரல்நுனிகளில் சொருகும் அலங்காரம், காலில் அணியும் ஆபரண வகைகள் (சதங்கை, சிலம்பு , கொலுசு, கிண்கிணி ).

ஆரோப்ய – கழுத்தில்  அணியும் நகை வகைகள் , குறிப்பாக பல்வேறு வரிசை முத்து வடங்கள்; நக்ஷ்த்ரமாலிகா என்னும் 27 முத்துள்ள மாலை.

இதற்குப் பின்னர் Perfume பெர்ப்யும் என்னும் வாசனைப்பூச்சுகள் , களிம்புகள் , பூமாலை வகைகள் முதலியவற்றை விரிவாக விளம்புகிறார் .

***

பெண்களுக்கு புத்திமதிகள்

அடுத்ததாக குடும்பப் பெண்களுக்கு வேறு ஒரு அத்தியாயத்தில் புத்திமதிகள்  சொல்கிறார் :

உல்லாச/ சல்லாப இரவுகளில் பலவித பூக்களையும் நகைகளையும் ஆடம்பர உடைகளையும் அணிந்து தயாராக வேண்டும் .

வெளியே கேளிக்கைகளுக்குச் செல்கையில் (திருமணம், பார்ட்டிகள், நண்பர் வீடுகள்) தலையில் வெள்ளைப்பூ (மல்லிகை, முல்லை, பிச்சி, ஸம்பங்கி) சூடி, கொஞ்சம் நகைகளை அணிய வேண்டும்; படாடோப  உடைகள் அணியலாம். போகும் இடத்துக்கு ஏற்ற வாசனைப் பூச்சு பூசலாம் ; தனிமைப்படுத்திக் காட்டும் பள பள ஆடைகள் வேண்டாம்;

கணவர் பூஜை புனஸ்காரம் நோன்பு, விரதம் இருக்கும் நாட்களில் எளிமையான  ஆடைகளை அணிய வேண்டும் ” நாம் ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பட்டவர்கள்நான் சுதந்தரப் பறவை அல்ல ” என்று அவரிடம் வாய் திறந்து சொல்ல வேண்டும் ; கணவர் செய்வதை பயபக்தியுடன் பின்பற்ற வேண்டும் .

கணவர் வெளிநாட்டுக்குச் சென்றால் ( அந்தக் காலத்தில் சேர சோழ, பாண்டிய நாட்டுக்கு வெளியே பயணம் செய்வதே அயல் நாடு) அவள் மங்கள சின்னங்களை அகற்றி நகைகளையும் அகற்றி நோன்பு இருக்கலாம்; கணவர் சொன்னபடி வீட்டைப் பராமரிக்க வேண்டும் ; கடவுள் வழிப்பாட்டில் ஈடுபடுவதோடு கணவன் கற்பித்த பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும் .

மாமனார் மாமியார் படுக்கை அறைகளுக்கு அருகில் உறங்க வேண்டும்

இவ்வாறு வாத்ஸ்யாயனர் நிறைய விஷயங்களைச் சொல்கிறார் ; அவர் புது மண தம்பதிகள் படிக்கக்கூடிய Adults Only  அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களை விளக்கி இருப்பது உண்மைதான்; ஆனால்  காம சூத்திரம் முழுதும் அப்பட்டமான செக்ஸ் என்று ஒதுக்கி விடாமல் அனைவரும் படிக்க வேண்டும் .

இந்துக்கள் அபாரமான நாகரீக முன்னேற்றம் அடைந்ததால் எந்த சப்ஜெக்டிலும் முதல் புஸ்தகம் இந்துக்கள் எழுதியதாகவே இருக்கும் !

To be continued……………………….

Tags- காமசூத்திரம், இந்துக்களின் பழங்கால நகைகள்- 5,  நகைகள்,  பெண்கள்,புத்திமதிகள்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-57; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,881)

Written by London Swaminathan

Post No. 15,881

Date uploaded in London –17 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 57

மூன்று திவ்விய க்ஷேத்திரங்களை சுருக்கமாகக் காண்போம் கோவிலடி ,திருக்கரம்பனூர் (உத்தமர்கோயில்),நாதன் கோயில் (நந்திபுர விண்ணகர்). மூன்றும் சோழநாட்டுத் தலங்கள்.

1

கோவிலடி அப்பக்குடத்தான் கோயில்

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 6-வது திருத்தலமாகும்.

மூலவர்: பெருமாள் ‘அப்பால ரெங்கநாதர்’, ‘அப்பக்குடத்தான்’

இவர் சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

புராணக் கதை: உபமன்யு முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க பெருமாள் ஒரு குடத்தில் அப்பத்தை ஏந்தி வந்து அருளிய தலம் என்பதால் இப்பெயர் பெற்றது.சிறப்பு: இத்தலத்து பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகாவில், கொள்ளிடம் மற்றும் காவிரி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், கல்லணையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது., அன்பில் திவ்ய தேசத்தில் இருந்து கொள்ளிடம் நதியின் மறுகரையை அடைந்தும் இத்தலத்தை அடையலாம்.

***

கோவிலடி என்னும் திருப்பேர் நகர்

     பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து

          பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்

     காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்

          ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)

                               திருவாய்மொழி 10-8-2

     திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் இது.

     இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில்

புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று எடுத்தாண்டுள்ளனர். இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு கடந்து பல்கிக் கிளைத்து சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக் காணலாம்.

     உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால்

தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட இப்பலசவனம்

ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி ஆராதனம்) சாபந்தீரும் என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின் அருகில் ஒரு அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.

****

2

திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்தக்ஷண ஜகந்நாதம்)

மூலவர் – ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் – செண்பகவல்லித் தாயார்.

தீர்த்தம் – நந்திதீர்த்த புஷ்கரிணி.

விமானம் – மந்தார விமானம்.

ப்ரத்யக்ஷம் — நந்தி,

விசேஷம் – ஸந்நிதியின் இடது பக்கச்சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். நந்தி இவ்விடத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாதலால் ‘நந்திபுரம்’ என்றும் பகவானுக்கு ‘நந்திநாதன்’ என்றும் பெயர் உண்டாயிற்று. நந்திவர்மன் ஏற்படுத்திய ஊர் என்றும் அவன் கட்டிய கோவில் என்றும் இதனைக் கூறுவர். ‘நந்தி பணி செய்த நகர்’ என்றார் திருமங்கையாழ்வார். CH சக்கரவர்த்தி தன் உயிரைத்துறந்து புறாவின் உயிரை காப்பாற்ற தராசு தட்டில் தன் மாமிசத்தை வைத்து சமமாகாமல் இருக்க, தானே, புறாவின் எடைக்கு சமமாக எதிர்த்தட்டில் உட்கார்ந்த அதிசயத்தைக் காண, கிழக்கே இருந்த பெருமாள் மேற்கு முகமாக ஆனார்.

இந்த ஸந்நிதி வானமாமலை மடத்து ஆதினத்தில் உள்ளது.

மங்களா சாஸனம் –

திருமங்கையாழ்வார் – 1438 – 47 – 10 பாசுரங்கள்.

கும்பகோணத்திலிருந்து பஸ்ஸில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து அங்கிருந்து 1 1/2 மைல் தூரம் செல்ல வேண்டும். வழியில் ஒரு வாய்க்காலைக் கடக்க வேண்டும். டவுன் பஸ்ஸில் கும்பகோணத்திலிருந்து வரலாம்.

நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்

     தம்பியொடு தாமொருவர் தந்துணைவி

          காதல் துணை யாக முனநாள்

     வெம்பியெரி கானகமு லாவுமவர்

          தாமினிது மேவு நகர்தான்

     கொம்புகுதி கொண்டு குயில் கூவ

          மயிலாலு மெழிலார் புறவு சேர்

     நம்பியுறை கின்ற நகர் நந்தி புர

          விண்ணகரம் நன்னு மனமே

                  (1443) பெரிய திருமொழி 5-10-6

     மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள் கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன் மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த ராமபிரான் உறைகிறான் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது.  நாதன் கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.

கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம்.     வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.

***

3

திருக்கரம்பனூர் /உத்தமர் கோயில்

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி / தரிசனம் தருகின்றனர் .

மூலவர்: புருஷோத்தம பெருமாள் (ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம்).

தாயார்: பூரணவல்லி.

தீர்த்தம்: கடம்ப தீர்த்தம், திருமஞ்சன தீர்த்தம்.

மூலவர் —    புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்  —   பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர்.

தீர்த்தம் —    கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம் கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய அந்நீரே பெருக்கெடுத்து குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று.

விமானம் —    உத்யோக விமானம்

காட்சி கண்டவர்கள்  —   பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள், திருமங்கையாழ்வார்.

விசேஷங்கள்: இத்தலம் சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன், விஷ்ணு, சிவன், சக்தி, சுப்பிரமணியர், தேவகுரு, அசுரகுரு ஆகிய ஏழு குருக்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

வரலாறு: பிரம்மனின் கர்வத்தைப் போக்க சிவபெருமான் பிச்சாண்டவராக வந்து இத்தலத்தில் பிச்சை ஏற்றார், இதனால் இதற்கு பிச்சாண்டார் கோவில் என்ற பெயரும் உண்டு.

****

     பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா

          லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு

     காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்

          ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே.

                           (1399) பெரிய திருமொழி 5-6-2

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருச்சியிலிருந்து வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம். திருச்சியிலிருந்து துறையூர்மணச்சநல்லூர் செல்லும் பேருந்துகள் இக்கோவிலைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

     பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது. பிரம்மன், ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் த்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க, பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே

வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.

     பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த

யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக் கொள்ள அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.

     தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்கு பிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

     திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை.

இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.

பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாடன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது.

—subham—

Tags- கோவிலடி, திருக்கரம்பனூர் ,உத்தமர்கோயில், நாதன் கோயில், நந்திபுர விண்ணகர், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-57, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

வியாதி போக்கும் நாமங்கள்! (Post.15,880)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,880

Date uploaded in London – 17 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

வியாதி போக்கும் நாமங்கள்!

ச. நாகராஜன்

ரிஷி என்பவர் யார்? – சாணக்கியர் விளக்கம்!

அக்ருஷ்டபலமூலேன வனவாசரத: சதா |

குருதேஹரஹ: ச் ரார்த்தம் ரிஷிர்விப்ர: ச உச்சதே ||

ரிஷி என்பவர் யார் என்பதை சாணக்கியர் சாணக்கிய நீதியில் இப்படிக் கூறுகிறார்:

தானே வளரும் பழங்களையும் வேர்களையும் சாப்பிட்டு, ச்ரார்த்தத்தில்  வழிபடுவதற்குரிய மூதாதையருக்கு அவற்றையே அர்ப்பணிப்பவரே ரிஷி எனப்படுவார்.

முடி இறக்க உகந்த கிழமைகள்!

அக்ஷௌரேபி நக்ஷத்ரே குர்வோத் புதசோமயோ: |

யுக்தேபி திதிநக்ஷத்ரே ந குர்யாச்சனிபௌமயோ: ||

மொட்டை அடிக்க உகந்தபடி கிரகங்கள் இல்லை என்றாலும் கூட, திங்கட்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் ஒருவர் மொட்டை அடித்துக் கொள்ளலாம். (முடி இறக்கிக் கொள்ளலாம்). கிரகங்கள் மிக நல்ல இடங்களில் இருந்தாலும் கூட சனிக்கிழமைகளிலும் செவ்வாய்க்கிழமைகளிலும் மொட்டை அடிக்கக் கூடாது.

சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.

 எந்த திசையில் எந்தக் கிழமைகளில் செல்ல வேண்டும்?

அங்காரபூர்வே கமனே ச லாப:

  சௌமே சனி தக்ஷிணமர்தலாப: |

புதே குரௌ பச்சிமகார்யசித்தி

  ரவி பூகோ சோத்தரமர்தலாப: ||

கிழக்கு திசையில் ஒருவன் செவ்வாய்கிழமைகளில் பயணம் மேற்கொண்டால் அது லாபத்தைத் தரும்.

தெற்கு திசையில் திங்கட்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் பயணம் மேற்கொண்டால் அது லாபத்தைத் தரும்.

மேற்கு திசையில் புதன்கிழமைகளிலும் வியாழக்கிழமைகளிலும் ஒருவர் சென்றால் அது அவர் எடுத்த காரியத்தில் வெற்றியைத் தரும்.

வடக்கு திசையில் ஒருவர் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் சென்றால் அவர் செல்வத்தைப் பெறுவார்.

சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.

நீரை உணவின் போது எப்போது அருந்த வேண்டும்?

அஜீர்ணே பேஷஜம் வாரி  ஜீர்ணே வாரி பலப்ரதம் |

போஜனே சாம்ருதம் வாரி போஜதாந்தே விஷாபஹம் ||

தண்ணீர் என்பது அஜீர்ணத்திற்கு ஒரு நல்ல மருந்தாகும். சாப்பிட்ட உணவு நன்கு ஜீரணமாக அது ஊக்கமளிக்கும். சாப்பாட்டின் நடுவே நீரை அருந்தினால் அது அமிர்தத்திற்குச் சமமாகும். சாப்பாட்டிற்குப் பின்னர் அதை அருந்தினால் அது விஷத்திற்கு ஒப்பாகும்.

 சாணக்கிய நீதியில் சாணக்கியர் கூறும் அறிவுரை இது.

எண்களின் வக்கிரம்!

அங்கேஷு சூன்யவின்யாசாத் வ்ருத்தி: ஸ்யாத் தஷாமிகா |

தஸ்மாஞ்ஞேயா விசேஷேண அங்கூனாம் வாமதோ கதி: ||

பூஜ்யத்தை ஒரு எண்ணுக்குப் பக்கத்தில் போட்டால் அதன் மதிப்பு பத்து மடங்காகிறது. இதிலிருந்து ஒருவர் எண்கள் எவ்வளவு வக்கிரமானவை என்பதை விசேஷமாகத் தெரிந்து கொள்ளலாம்!

சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.

 வியாதி போக்கும் நாமங்கள்!

 அச்யுதானந்தகோவிந்த நாமோச்சாரணமேஷஜாத் |

நஷ்யந்தி சகலா ரோகா: சத்யம் சத்யம் வதாம்யஹம் ||

 அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்ற விஷ்ணுவின் நாமங்களை மருந்தாக உச்சரித்தால் கலியுகத்தின் எல்லா வியாதிகளும் குணமாகிவிடும். இது சத்தியம், சத்தியம் என்று நான் சொல்கிறேன். 

சமயோசிதபத்யரத்னமாலிகாவில் வரும் ஸ்லோகம் இது.

**

Jewellery in Kamasutra: Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 4 (Post No.15,879)

Written by London Swaminathan

Post No. 15,879

Date uploaded in London –16 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Jewellery in Kamasutra: Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 4 (Post No.15,879)

Hindu Mother Goddess in Indus Valley

Vatsayayana’s Kamasutra, the oldest Sex Book in the world, has details of types of jewellery that was used 2000 years ago.

Kamasutra in Sanskrit has the world’s oldest syllabus for teenage girls; Hindu women were far advanced in learning than other ancient cultures. One of the 64 subjects that a girl should study is JEWELLERY.

Apart from jewellery, he has dealt with garland making, the art of dressing and crowns and head ornaments.

Pronunciation – vaatsyaayana, kaama suutra;

1

Crowns and head ornaments

Headbands or circlets of flowers of all colours used especially by town people.

2

Theart of dressing

To chose garments and jewels to embellish the body, according to place and circumstances.

3

Ivory and mother of pearl ornaments

4

Perfumes

5

Jewellery

These are of two kinds: necklaces ornamented with jewels worn around the hips, used mostly for the theatre.

Under the topic of  the conduct of the well-bred townsmen vatsyayana says,

At dusk numerous people gather for reception, including singers, dancers and the players of instruments.

Gentlemen should go to the reception room elegantly dressed. Elegance is a matter of the quality of the clothes and jewels. Bharata gives some indications in his Natya Shastra (naatya shaastra). An elegant man wears four kinds of clothes made of vegetable silk/kshauma, cotton/kaarpaasa, natural silk/kaushysa or wool/rangava. Vegetable silk is made from hemp fibre and can also be made from bark.

After this gentlemen put on their jewels. Varahamihira describes thirteen kinds of precious stones and nine kinds of golden jewels. The gemstones are

Diamond/ vajra,

Pearl/mukta,

Ruby/pamaraga,

Emerald/ maragata

Sapphire/ indranila,

Lapis lazuli/vaidurya,

Topaz/puhparaga,

A black stone,

A whet stone,

Amber/pulaka,

Garnet/rudhiraaksha,

Amethyst/bhiisma

Crystal/sphatika, opla/pravaala.

Jewels are of four kinds:

picture of African Negro Dancer from Indus Valley with Jewels.

Avedhya – for which the flesh is pierced: earrings, diamond in the nose;

Nibhandaniiya- attached with bands; attached to the arm/angada, headband for the hair/venii; crown /shikaa dridhikaa, belt/shroni suutra, diadem/chuudaamani.

Prakshepya –slipped on : ring/urmikaa, nail guards/kataka, bracelets/valaya, anklets/manjiira.

Aaropya – worn around the neck; necklaces/hara, necklace of twenty seven perarls/nakshatramaalikaa.

Then vaatsyaayana describes other flower decorations and perfume types.

Later in a chapter he gives details of how a woman should behave:

For amorous encounters, she must dress luxuriously with many jewels, many flowers and ointments.

On going out to amusements, she must wear elegant but unpretentious garments, only a few jewels, discreet scent and makeup, white flowers in her hair.

Pretty but simple clothes, simple ear rings, no colours that are too flashy.

If her husband practises periodic abstinence or fasting, she does the same. She tells him” We are bound to one another. I am not independent”.

She does as he does to show her devotion.

When her husband departs on a journey abroad, she removes the married woman’s marks and her jewels, dedicates herself to devotion, and looks after the house according to the rules established by her husband.

She attends to worshipping the gods, praying, fasting, and must behave as her husband has taught her.

She must sleep beside her parents-in-law and obey their instructions.

Vaatsyaayana gives more details of daily routine. I am not writing here because it has not anything to do with jewellery.

–to be continued

Tags – Kamasutra, Vatsyayana, jewellery, part 4, Jewellery in Kamasutra: Ancient Hindu Jewellery, You can get Ph.D.

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-56; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Written by London Swaminathan

Post No. 15,878

Date uploaded in London –16 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புட்குழி

திருப்புட்குழி (Thiruputkuzhi) என்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, 108 வைணவ திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகும். ராமாயண காலத்தில் சீதையை மீட்க ராவணனுடன் போரிட்ட ஜடாயு என்ற பறவைக்கு, ஸ்ரீ ராமர் இறுதிச் சடங்குகளைச் செய்து மோட்சம் அளித்த சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் தலமாகும்.

மூலவர்: விஜயராகவப் பெருமாள் (வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்).

தாயார்: மரகதவல்லித் தாயார் (தனி சன்னதி).தீர்த்தம்:

ஜடாயு தீர்த்தம்.

விமானம்: வீரகோடி விமானம்.

இத்தலத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த குழி, இன்றும் ஒரு தீர்த்தமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பித்ரு கடன் மற்றும் தர்ப்பணம் செய்வதற்கு மிகவும் உகந்த தலமாக இது கருதப்படுகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவிலும், சென்னை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் (Baluchetti Chattiram) அருகே அரை கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

****

திருப்பவளவண்ணம் (காஞ்சிபுரம்)

மூலவர் – பவளவண்ணன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் – பவளவல்லி. (தனிக்கோயில் நாச்சியார்) .

தீர்த்தம் – சக்ர திர்த்தம்.

விமானம் – ப்ரவாள விமானம்.

ப்ரத்யக்ஷம் – அச்விநி தேவதை, பார்வதி.

விசேஷங்கள் – இந்த ஸந்நிதிகள் கங்கைகொண்டான் மண்டபத்திலிருந்து கிழக்காகச் செல்லும் செங்கழுநீரோடைத் தெருவின் இடையில் வலது புறம் செல்லும் சாலையில் எதிரெதிராக உள்ளன. பச்சைவண்ணர் ஆதிசேஷன் மீது வீற்றிருந்த திருக்கோலத்தில் பரமபதநாதனாக எழுந்தருளி உள்ளார். ப்ருகுமஹரிஷிக்கு பிரத்யக்ஷம்.

குறிப்பு – “பனிவரையின் உச்சியார், பவளவண்ணா” என்ற திருநெடுந்தாண்டகத்துப் பாசுரம் பெருமாள் திருமேனியின் நிறத்தைக் குறிப்பிடுகின்றதே தவிர, இந்த ஸ்தலத்தின் அடையாளம் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, இதுதான் பழைய திவ்ய தேசமா அல்லது அது வேறெங்காவது இருக்கிறதா என்று அபிப்ராய பேதங்கள் உள்ளன. ஆயினும், பெரியவர்கள் வெகு காலமாக இதைத்தான் திவ்யதேசமாகக் கருதி ஸேவித்து வருகிறார்கள்.

மங்களாசாஸனம்.

திருமங்கையாழ்வார் – 2060 – 1 பாசுரம்.

பெரிய காஞ்சீபுரத்தில், “காஞ்சீபுரம் ரயில்வேஸ்டேஷனின் அருகிலுள்ளது. இதற்கு 2 பர்லாங் மேற்கே உள்ள பச்சை வண்ணரின் ஸந்நிதி மங்களாசாஸனம் செய்யப்படவில்லை ஆனாலும், பவளவண்ன் பச்சைவண்ணன் ஸந்நிதிகள் இரண்டையுமே ஒரே திவ்யஸ்தலமாக சேர்ந்தே ஸேவிப்பது வழக்கமாகவிருக்கிறது. இரண்டு ஸந்நிதிகளும்எதிரெதிராக அமைந்துள்ளன.

*****

காஞ்சீபுரம் திவ்ய தேசங்கள் வைஷ்ணவ தலங்கள்

காஞ்சிபுரம் திவ்ய தேசங்களில் சில இடங்களை முந்தைய பகுதிகளில் கண்டோம் ; மேலும் சில கோவில்களை இங்கே காண்போம்

இங்குள்ள 15 திவ்ய தேசங்கள் தொண்டை நாட்டுத் திருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் 14 கோயில்கள் மாநகர எல்லைக்குள்ளும், 1 கோயில் காஞ்சிபுரத்திற்கு அருகிலும் அமைந்துள்ளன.

1. விஷ்ணு காஞ்சி (சின்ன காஞ்சி): [1]

  • திருக்கச்சி: ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் (அத்திவரதர்)
  • திருப்பாடகம்: பாண்டவதூதர் பெருமாள் கோயில்
  • திருவெஃகா: சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்
  • திருநீரகம் / திருக்காரகம் / திருக்கார்வணம் / திருஊரகம்: இவை அனைத்தும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ளன.
  • திருஅஷ்டபுஜம்: ஆதிகேசவ பெருமாள் கோயில்

****

2. சிவ காஞ்சி (பெரிய காஞ்சி): [1]

  • திருவேளுக்கை: அழகிய சிங்கர் (நரசிம்மர்) பெருமாள் கோயில்
  • திருத்தண்கா: விளக்கொளி பெருமாள் கோயில்
  • திருநிலாத்துண்டம்: ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் அமைந்துள்ள பெருமாள் சன்னதி
  • கள்வப்பெருமாள்: காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தலம்
  • திருப்பவளவண்ணம்: பவளவண்ண பெருமாள் கோயில்
  • திருமறுமார்பன் (பச்சைவண்ணன்): பச்சைவண்ண பெருமாள் கோயில்
  • திருபரமேஸ்வர விண்ணகரம்: வைகுண்ட பெருமாள் கோயில் ****

3. காஞ்சிபுரம் அருகில்:

  • திருப்புட்குழி: ஸ்ரீ விஜயராகவர் பெருமாள் கோயில் (காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ளது)

–subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-56; திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருப்புட்குழி, பவளவண்ண பெருமாள் கோயில் திருமறுமார்பன், பச்சைவண்ணன்

சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள், நகைகள்! இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 4 (Post.15,877)

Written by London Swaminathan

Post No. 15,877

Date uploaded in London –16 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள் , நகைகள்

அணிகலன் = ஆபரணம் , நகை

மிகவும் வியப்பான விஷயம் என்னவென்றால் இப்போது தமிழர்கள் அணியும் பல நகைகளுக்கு சங்க இலக்கியத்தில் சான்றுகளே இல்லை ! இந்தியா முழுதும் சிலைகளிலும் ஓவியங்களிலும் எண்ணற்ற அணிகலன்களைக் காண்கிறோம் ஆயினும் சங்க இலக்கியத்தில் சில அணிகலன்களே பேசப்படுகின்றன .

சங்க காலப் புலவர்கள் நகைகள் ஆபரணங்கள் பற்றி நிறைய பாடல்களில் பாடி இருக்கிறார்கள் ; அவர்கள் நூபுரம் , மணி , கிண்கிணி முதலிய ஸம்ஸ்க்ருதச் சொற்களை பயன்படுத்தியுள்ளனர் ; வளையம் என்பதும் இரண்டு மொழிகளிலும் உள்ளது ; அக்கால மக்கள் பெரும்பாலும் சங்கு வளையல்களை அணிந்தனர் ஹரப்பா மொஹஞ்சதாரோ உருவங்களில் வளையல் சங்கிலி முதலிய ஆபரணங்களைக் காணலாம் .

நூபுரம் – காற்சிலம்பு – நூபுரம் என்பது சிலம்பு, பாதசரம் அல்லது கால் சலங்கை ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சம்ஸ்க்ருதச் சொல். கலித்தொகை 83-16; 96-16

கழல் -பழங்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள், மன்னர்கள் மற்றும் கடவுளர்கள் தங்கள் கால்களில் அணியும் வீரத்தைக் குறிக்கும் அணிகலன் ‘கழல்’ என அழைக்கப்படுகிறது. சங்க இலக்கியத்திலுள்ள 18 நூல்களிலும் – பத்துப்பாட்டு, எட்டுத் தொகை – இதைக்  காணலாம்.

கிண்கிணி – ஸம்ஸ்க்ருதச் சொல்; கிண்கிணி என்பது  அழகிய சதங்கை ஆகும்.குழந்தைகளின் கால்களிலும், இடையிலும் கட்டப்படும் சிறிய மணிகள் கொண்ட சலங்கையை இது குறிக்கும். இது நடக்கும்போது இனிய ஓசையை எழுப்பும். இசைக்க கருவிக்கும் இந்தப் பெயர் உளது

அகம் 254;

கலி.74;81;85;86;96.

குறு.148;

திரு .13;

நற்.250;269;

பதி.52;

புறம் 77;198;

மணி – உருண்டை வடிவிலான ரத்தினக் கல் அல்லது ஸ்படிகம் அல்லது உலோகத்திலான பொருள்; கோவில் மணி என்ற பொருளும் உண்டு; சங்க இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் வருகிறது ; ரிக்வேதம் முதல் எல்லா சம்ஸ்க்ருத நூல்களிலும் அதே பொருளில் உள்ளது ..

சிலம்பு – காலில் அணியும் அணி; சங்க இலக்கியத்தில் அகத்துறைப் பாடல்களில் தேகம் வரும் ஆபரணம் .

வளை– கையில், தோளில்  அணியப்படும் நகை; சங்க இலக்கியத்தில் கணக்கற்ற இடங்களில் வரும் ஆபரணம் இது ; சம்ஸ்கிருதத்திலும் இதே பொருளில் வழங்குகிறது

வளை , மணி போன்ற சொற்கள் மிகப்பழங்காலம் முதல் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் இருப்பதால் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தன என்பது உறுதியாகிறது .

****

மோதிரம் – ஒரே ஒரு இடத்தில் காணப்படுகிறது ; கலி-84;

சுறாமீன் /மகர மோதிரம்

கலித்தொகை 84

சிறு பட்டி; ஏதிலார் கை, எம்மை எள்ளுபு நீ தொட்ட,   20

மோதிரம் யாவோ? யாம் காண்கு

அவற்றுள் நறா இதழ் கண்டன்ன செவ் விரற்கு ஏற்பச்

சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள்

குறி அறிந்தேன்; ‘காமன் கொடி எழுதி, என்றும்

செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில்  25

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல்’ என்பது தன்னை

அறீஇய செய்த வினை

தாய் மகனிடம் சினம் கொண்டு பேசுகிறாள் – குறும்புக்கார பயலே! என்னை ஏளனம் செய்வதற்காக ஒருத்தி அடிவித்த மோதிரம் எது? காட்டு. – என்றாள்.

அவன் கையைக் காட்டினான்.

அவனது விரல்கள் “நறா”ப் பூவின் இதழ்கள் போன்று இருந்தன.

அந்த  விரலுக்கு ஏற்றாற் போல சுறா மீன் போல் கலை வேலைப்பாடு கொண்ட மோதிரம் விரலில் இருந்தது.

அதனைத் தாய் தொட்டுப் பார்த்தாள்.

அது காமனின் கரும்பு வில் எழுதிய தன் தோளில் உன் கணவன் மார்பினைக் கட்டி ஆள்வேன் என்று அந்த விலைமகள் /பரத்தை  சொல்லிக் காட்டுவது போல அவள் இவனுக்கு அணிவித்திருக்கிறாள் – இவ்வாறு தலைவி நினைக்கிறாள்..

***

ஐம்படைத்தாலி, புலிப்பல் தாலி, தங்கத் தாலி பற்றி

புறம் – 374; 77;

குறு -161;

அகம் -7;

ஆகியவற்றில் குறிப்புகள் உள. குழந்தை பிறந்த ஐந்தாம் நாளில் அணியும் ஐம்படைத்தாலி போல , அரையில்- இடுப்பிற்கு கீழே – இடபப்பூணும் அணிவர்.

அதனோடு வெட்டாத மழுவும் வாழும் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருக்கும். இடையுள்ள இடபப்  பூண், ஈசல் பூச்சியின் நிறம்போன்று பவளத்தால் செய்யப்பட்டிருக்கும்.

காலவை, சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு

பொடி அழற் புறம் தந்த செய்வுறு கிண்கிணி

உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசு அமை பொலங் காழ்; மேல்

மை இல் செந் துகிர்க் கோவை; அவற்றின் மேல்

தைஇய, பூந் துகில், ஐது கழல் ஒரு திரை  5

கையதை, அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய

பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி

பூண்டவை, எறியா வாளும் எற்றா மழுவும்

செறியக் கட்டி, ஈர்இடைத் தாழ்ந்த,

பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின்  10

மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண்

சூடின, இருங் கடல் முத்தமும், பல் மணி, பிறவும், ஆங்கு

ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ்; மேல்

சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக,

அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண,   15

சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை

காலில் கிண்கிணி. பொன்னைச் சுட்டு உள்ளே பரல் இடும் இரண்டு அடுக்காகச் சுற்றி அழல் தீயில் இட்டுப்  பொடி வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டது.

உடுத்திருப்பவை – பொன்னும் வயிரமும் பதித்துக் கை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு இடுப்பில் அணியும் காசு. அதன் மேல் பவளம் பதித்துச் செய்யப்பட்ட கோவை.

தைத்துப்  போட்டிருப்பது – பூ தைத்த ஆடை. கால் வரையில் திரைக்கால்-சட்டை.

கையணி – நண்டுக் கண் போல அமைப்பினை உடைய ‘கண்ணுள்’ என்னும் பெயர் கொண்ட ஒளி திகழும் வளையல்

பூண்டிருப்பவை – வெட்டாத வாள். எறியாத மழு. பூண் என்னும் அணிகலன் – இவை பசுவும் காளையும் போல் அமைந்த அணிகலன்கள். மூதாய் என்னும் தம்பலப் பூச்சி நிறத்தில் பவளம் பதித்த அணிகலனில் கட்டப்பட்டிருந்தன.

சூடியவை – கடலில் பிறந்த முத்தும், மலையில் பிறந்த பல்வகை மணிகளும் கோத்து அமைக்கப்பட்ட முக்கோவை வயிர மாலை – இது வண்டு மொய்க்கும் பூ மாலை போல்ஆனால் வண்டு மொய்க்காத மாலையாக  நூலில் கோத்துச் செய்யப்பட்டிருந்தன

****.

அந்தணர்களின் வேதம் ஓதாத சிலர்,  பெண்களுக்கு வளையல் செய்யும் தொழில் ஈடுபட்டதை அகநானுறு கூறுகிறது ; சங்குகளை அறுத்து  அவர்கள் வளையல் செய்தனர் .

வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த

வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,

தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,

சிதரல் அம் துவலை தூவலின், மலரும்

தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,   அகம் –செய்யுள் 24  

***

மூக்குத்தி, காதில் அணியும் தோடு முதலிய சொற்கள் சங்க காலத்தில் இல்லை ; ஆனால் காதில் ஓலை , பூ முதலியன அணிந்தனர் ; பிற்காலத்தில் நுதலணி , மூக்குத்தி, காதணி, கொலுசு முதலியன வழக்கத்தில் வந்தது போலும்! பனைமரத்தின் குறுத்தோலையைச் சுருட்டிக் காதில் அணிந்தனர்.

அட்டிகை ,சங்கிலி , சதங்கை போன்ற சொற்களும் சங்க இலக்கியத்தில் கிடையாது

சங்க காலச் சொல்லடைவில் ஒரு பொருள் குறி க்கப்படாததால் அது அக்காலத்தில் இல்லை என்று எண்ணிவிடக்கூடாது.

பிற்காலத்தில் எழுந்த தேவாரம், திவ்விய பிரபந்தம் திருப்புகழ் முதலிய நூல் களில் பல  anikalankalaik காணலாம்; ஆயினும் சங்க காலப்புலவர்கள் ஏன் இவைகளைக் குறிப்பிடவில்லை என்பது ஆராய்ச்சிக்குரியதே ; நாம் தமிழ் நாட்டில்  நாம் காணும் சிலைகளும் ஓவியங்களும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை  உடையனதான்.

***

நவரத்தினங்களில் முத்தும் பவளமும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் பாடப்பட்டுள்ளன ; வயிரம் அகம், பரிபாடல், பதிற்றுப்பத்தில் உளது ;

நீலம்  என்ற சொல் சம்ஸ்க்ருதம் தமிழ் மொழிகளில் ஒரே பொருளில் கையாளப்படுகிறது நீலமணி என்ற சொல்லும் புறப்பாட்டில் வருகிறது  ; மரகதம் இல்லாவிடினும் பச்சை என்ற நிறம் வரும் இடங்களில் உரைகளில் மரகத்தைக் காணலாம்.

***

தமிழ் அணிகலன்கள் 

நுதலணி என்பது தமிழ் மொழியில் நெற்றிச்சுட்டி (Forehead ornament), மகரநெடுங்குழை, கொலுசு, மகர மோதிரம்,  தாடங்கம், மெட்டி.

–subham—

Tags-   தமிழ் அணிகலன்கள் , சங்க இலக்கியத்தில் ரத்தினக் கற்கள், நகைகள்! ,இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 4, ஐம்படைத்தாலி, புலிப்பல் தாலி, தங்கத் தாலி, சுறாமீன் /மகர மோதிரம்

பூமியின் இருண்ட பாதாள உலகம்: ஆழமான குகைகள்! (Post.15,876)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,876

Date uploaded in London – 16 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

13-6-26 கல்கி ஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

பூமியின் இருண்ட பாதாள உலகம்: மனிதனே செல்ல அஞ்சும் உலகின் மிக ஆழமான குகைகள்!

ச. நாகராஜன்

பூமியில் உள்ள குகைகள் பல்வேறு விதமானவை.

சில குகைகளில் ரிஷிகள் தவம் செய்துள்ளனர்; செய்து வருகின்றனர்.

இன்னும் சில குகைகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.

கெண்டுகியில் உள்ள குகை மிக நீளமான குகை என்று சொல்லப்படுகிறது.

அடுத்த்து வியட்நாமில் உள்ள குகையும் மிக நீளமான ஒன்று தான்! மெக்ஸிகோவில் உள்ள குகை தான் நீருக்கடியில் உள்ள நீளமான குகை.

ஆனால் உலகில் இருளடைந்த மிக ஆழமான குகை எது?

லைவ் ஸயின்ஸ் பத்திரிகை இது பற்றிய தகவல்களைத் தருகிறது.

ரிபப்ளிக் ஆஃப் ஜார்ஜியாவில் அப்காஸியா என்ற இடத்தில் உள்ள சுண்ணாம்பு குகைகளில் இரு குகைகளே மிக ஆழமான குகைகள் என்று அறியப்படுகிறது. விரியோவ்கினா மற்றும் க்ருபேரா வொரொன்ஜோ ஆகிய இரு குகைகள் 6560 அடிக்கும் அதிகமாக ஆழமானவை!

இதை ஆராயப் புகுந்த அலாஸ்கா நேஷனல் பார்க்கைச் சேர்ந்த பால் பர்ஜர் என்ற நிலவியலாளர் விரியோவ்கினா 7257 அடி ஆழமுள்ளது என்று துல்லியமாகக் கூறுகிறார். க்ருபேரா 7215 அடி ஆழம் உள்ளதாகும்.

காகஸஸ் பகுதியில் உள்ள இந்த இரண்டு குகைகளும் மிக மிக இருள் நிறைந்தவை; ஈரமானவை; குளிர்ச்சி உடையவை. இரண்டு முதல் 3 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணநிலை உள்ளவை!

இங்கு வாழும் மிருகங்கள் இந்த இருளடைந்த குகைகளில் சூழ்நிலைக்கேற்ப வாழக் கற்றுக் கொண்டு விட்டன.

ஆழம் அதிகமாக அதிகமாக அங்கு பயிர்களே இருக்காது. ஆகவே இவை இருப்பவற்றை நெடுநாட்களுக்கு ஒருமுறையே உண்கின்றன.

ஸ்பிரிங்டெய்ல் (Springtail) என்று ஒரு பூச்சி வகை இங்கு இருக்கிறது

இதை ஆராய்ச்சியாளரான பெண்மணி ரெபொலெய்ராவும் (Reboleira) அவரது சக ஆய்வாளர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்கு இறக்கைகள் கிடையாது. 6500 அடி ஆழத்தில் இந்த பூச்சி இனம் வாழ்கிறது!

இவற்றை எல்லாம் ஆராய்வதால் நம் கால்களுக்குக் கீழே பூமியில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம் என்கிறார் அவர்.

“பாதாள உலகத்தில் பரந்து கிடக்கும் பகுதியில் குகைகளே ஜன்னல்களாக அமைகின்றன” என்கிறார் அவர்.

 சுற்றுப்புறச்சூழல் அமைப்பிற்கு குகைகளும் ஒரு பெரிய பங்கை அளிக்கிறது. அவை நீரைப் பல்வேறு அடுக்குகளில் சுத்தம் செய்து உலகிற்குத் தருகிறது. கார்பன் என்ற மாசுப் பொருளை தங்கள் பாறைகளில் ஈர்த்து அங்கேயே தக்க வைத்துக் கொண்டு உலகின் மாசுக் கட்டுப்பாடு வேலையைச் செய்கிறது.

16.3 கோடி வருஷங்களுக்கு முன்னர் உருவாகிய இவைகள் காலப்போக்கில் சுண்ணாம்புக் கலவை அடுக்குகளை இறுகச் செய்து இப்படிப்பட்ட ஆழமான குகைகளை உருவாக்கி இருக்கிறது.

நீரானது சுலபமாகப் பாய்வதற்கு ஏற்றபடி இந்தச் சுண்ணாம்புப் பாறைகள் செங்குத்தாக நிற்கின்றன. நீரானது இடுக்குகளின் வழியே பாய்ந்து அருகில் உள்ள தரைப் பகுதிகளை அடைந்து அங்கிருந்து ஆறுகளையும் நீர்நிலைகளையும் அடைந்து நீர் பற்றாக்குறையைப் போக்குகிறது.

நமது இமயமலை குகைகளில் ரிஷிகளும் முனிவர்களும் வாழ்வது நாம் அறிந்த ஒரு செய்தி தான். அஜந்தா, எல்லோரா குகைகளில் உள்ள வண்ணச் சிற்பங்களை உலகினரை ஈர்ப்பவை. திருவண்ணாமலை குகையிலே சமீப காலத்தில் வாழ்ந்த மஹரிஷி ரமணர் திருவண்ணாமலை பற்றிய பல அரிய தெய்வீக தகவல்களை அறிவித்துள்ளார்.

குகைகள் மனித குலத்திற்கு இறைவன் தந்துள்ள வரங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை!

**