கம்ப ராமாயண பொன்மொழிகள்- ஜூலை 2026 காலண்டர்

Written by London Swaminathan

Post No. 15,926

Date uploaded in London –28 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜூலை 17 ஆடிப்பண்டிகை தக்ஷிணாயனத்தின் தொடக்கம்; 25 ஆஷாட ஏகாதசி; 26 சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்; 29 பெளர்ணமி குரு பூர்ணிமா/ வியாச பூஜை 

ஜூலை 14 அமாவாசை ; 29 பெளர்ணமி;

ஏகாதசி விரத நாட்கள் 10, 25

சுப முஹுர்த்த நாட்கள் 2, 5, 9, 12 ;

****

யுத்த காண்டத்திலிருந்து 31 பொன்மொழிகளைக் காண்போம் :

ஜூலை 1 புதன் கிழமை

MAHODARAN SAID TO RAVANA; VICTORY AND DEEFAT ARE COMMON;NO LIMIT FOR ONE’S POWER

‘”வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்

நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே”

என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?

புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ?-புகழ்க்கு மேலோய்! 37

****

ஜூலை 2 வியாழக் கிழமை

இராவணன் இலங்கை மீளுதல் RAVANA’S FIRST DEFEAT; WALKED WITH BARE HANDS

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும்சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும்களத்தே போட்டுவெறுங் கையே மீண்டு போனான். 1

****

ஜூலை 3 வெள்ளிக்கிழமை RAVANA WENT ALONE WITHOUT HIS USUAL ROYAL PARAPHERNALIA

மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும்,

தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும்,

எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றிதான் ஓர்

சிந்துரக் களிறு கூடம் புக்கெனகோயில் சேர்ந்தான்

****

ஜூலை 4 சனிக் கிழமை RAVANA PRAISED RAMA’S POWER

‘இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும்

மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்;

அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா

நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்23

****

ஜூலை 5 ஞாயிற்றுக் கிழமை EVEN IF VEDAS FAIL, RAMA’S ARROWS WONT FAIL

‘முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ் சிலையும், வீரன்

அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக் கொளலும் ஆகா;

ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை; வேதம்

தப்பின போதும்அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா. 26

****

ஜூலை 6 திங்கட் கிழமை I HAVE GOT A GOOD ENEMY: RAVANA ABOUT RAMA

‘வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழு வாள் அங்கை

ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி,

நாசம் வந்து உற்ற போதும்நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;-

பூசல் வண்டு உறையும் தாராய்!-இது இங்குப் புகுந்தது’ என்றான். 31

****

ஜூலை 7 செவ்வாய்க்கிழமை  DON’T WORRY, RAVANA; IT IS LIKE SUN EVAPORATING A LITTLE WATER FROM THE SEA- MAHODARAN

பனியுடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத் துனி உழந்து அயர்வது என்னே? துறத்தியால் துன்பம்’ என்றான்

***

ஜூலை 8 புதன் கிழமை RAVANA PRAISED MAHODARA; NO LIMIT FOR YOUR AFFECTION.

‘பெறுதியே, எவையும் சொல்லி;-பேர் அறிவாள்!-சீரிற்று அறிதியே; என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ?

****

ஜூலை 9 வியாழக் கிழமை

KUMBAKARNA’S BREATHING; JONATHAN SWIFT COPIED IT IN HIS GULLIVER’S TRAVELS

திண் திறல் வீரன் வாயில் திறத்தலும், சுவாத வாதம் மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக, கொண்டுறு தடக் கை பற்றி, குலமுடை வலியினாலே கண் துயில் எழுப்ப எண்ணி, கடிது ஒரு வாயில் புக்கார். 49

ALL KUMBAKARNA;S ACTS ARE USED BY JONATHAN SWIFT

***

ஜூலை 10 வெள்ளிக்கிழமை KUMBAKARNA ATE FOOD FROM 600 CARTS

ஆறு நூறு சகடத்து அடிசிலும், நூறு நூறு குடம் களும், நுங்கினான்; ஏறுகின்ற பசியை எழுப்பினான்- சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 60

****

ஜூலை 11 சனிக் கிழமை YOU CAN ERECT FENCE AROUND EARTH, BUT CANT DEFEAT RAMA- KUMBAKARNA

‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும் சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை வெல்லலாம் என்பது, சீதை மேனியைப் புல்லலாம் என்பது போலுமால்-ஐயா! 81

****

ஜூலை 12 ஞாயிற்றுக் கிழமை QUALITY OF WATER CHANGE ACCORDING TO LAND IT FLOWS-  RAVANA! YOU DESTRYED PULASTYA’S FAME;-KUMBAKARNA

‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ? வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்.

****

ஜூலை 13  திங்கட் கிழமை RAMA GOT A MONKEY THAT CROSSED THE SEA LIKE WIND- KUMBAKARNA

‘காலினின் கருங் கடல் கடந்த காற்றது போல்வன குரங்கு உள;

****

ஜூலை 14 செவ்வாய்க்கிழமை RELEASE SITA; SURRENDER TO RAMA;MAKE FRIEND WITH UR BROTHER- KUMBAKARNA’S ADVICE

‘தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின் ஐயறு தம்பியோடு அளவளாவுதல் உய் திறம்; 

****

ஜூலை 15 புதன் கிழமை GET OUT! I WONT BOW TO TWO HUMANS AND HUNCHBACKED MONKEY- RAVANA TO KUMBAKARNA

‘மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில் ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்; யான் அது புரிகிலேன்; எழுக போக!’ என்றான்.

****

ஜூலை 16 வியாழக் கிழமை INDRAJIT WILL BE KILLED BY RAMA’S BROTHER-KUMBAKARNA’S PREDICTION

‘இந்திரன் பகைஞனும், இராமன் தம்பி கை மந்திர அம்பினால் மடிதல் வாய்மை

****

ஜூலை 17 வெள்ளிக்கிழமை I DON’T SEE VEENA FLAG, BUTA  LION FLAG ON THE CHARIOT; WHO ISTHIS  SHINING HERO? RAMA ASKED VIBHISHANA

வீணை என்று உணரின், அஃது அன்று; விண் தொடும் சேண் உயர் கொடியது, வய வெஞ் சீயமால்; காணினும், காலின் மேல் அரிய காட்சியன்; பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்

****

ஜூலை 18 சனிக் கிழமை HE IS KUMBAKARNA WHO GOT SEVERAL BOONS THROUGH PENANCE- VIBHISANA SAID.

‘ஊன் உயர்ந்த உரத்தினான், மேல் நிமிர்ந்த மிடுக்கினான்; தான் உயர்ந்த தவத்தினான், வான் உயர்ந்த வரத்தினான்; 120

***

ஜூலை 19 ஞாயிற்றுக் கிழமை LIFE IS LIKE A WHEEL; RAMA IS MEDICIE FOR BIRTH AND DEATH DISEASE; SURRENDER TO HIM-VIBHISHANA TO KUMBAKARNA

‘இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி, மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும் உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139

****

ஜூலை 20  திங்கட் கிழமை KUMBAKARNA’S REPLY: TRY TO CORRECT YOUR LEADER; IF IT DOESN’T WORK BE LOYAL AND DIE FOR HIM ( IS MY POLICY).

‘கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின், பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி, ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா. 

****

ஜூலை 21 செவ்வாய்க்கிழமை BROTHER! GO BACK TO RAMA; WHEN WE DIE DO THE FUNERAL RITES FOR US- KUMBAKARNA

‘போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி, மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165

****

ஜூலை 22 புதன் கிழமை VIBHISHANA! DON’T FEEL SORRY FOR ME; WHATEVER SHOULD HAPPEN WOULD HAPPEN; YOU KNOW IT.- KUMBAKARNA

‘ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப் போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்; சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது, ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!’ 166

***

ஜூலை 23 வியாழக் கிழமை THOSE WHO DIE IN WARS GO TO HEAVEN; APSARAS HUGGED EVEN DEMONS WHEN THEY ENTERED HEAVEN; HEROISM DESTROYS SINS

‘துரக்கம், மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின் கரக்கும் வீரதை தீமையை’ எனும் இது கண்டோம்; இரக்கம் நீங்கினர், அறத்தொடும் திறம்பினர் எனினும், அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர், விரும்பி, 223

*****

ஜூலை 24 வெள்ளிக்கிழமை NO BETTER PLACE THAN VEERA SWARGA-KAMBAN

மறக் கொடுந் தொழில் அரக்கர்கள், மறுக்கிலா மழைபோல் நிறக் கொடுங் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர, இறக்கம் எய்தினர் யாவரும், எய்தினர் எனின், அத் துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம். 224

****

ஜூலை 25 சனிக் கிழமை POETS PRAISE ACCORDING TO GIFTS THEY GET; LAKSHMAN’S ARROWS  ALSO DID IT TO THE BODY PARTS OF DEMONS

சிலவரைக் கரம், சிலவரைச் செவி, சிலர் நாசி, சிலவரைக் கழல், சிலவரைக் கண், கொளும் செயலால், நிலவரைத் தரு பொருள்வழித் தண் தமிழ் நிரப்பும் புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன-சரங்கள். 226

****

ஜூலை 26 ஞாயிற்றுக் கிழமை I DON’T KNOW PROPER WORDS “SOL” TO ANSWE YOU; BUT MY “VIL”  WILL GIVE PROPER REPLY- LAKSHMAN TO KUMBAKARNA

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர, மல்லினால் செய்த புயத்தவன், ‘மாற்றங்கள் நும்பால் வில்லினால் சொல்லின் அல்லது, வெந் திறல் வெள்கச் சொல்லினால் சொலக் கற்றிலம், யாம்’ எனச் சொன்னான்

****

ஜூலை  27 திங்கட் கிழமை LAKSHMAN WENT ROUND ARYAN (RAMAN) THREE TIMES AND ENETRED BATTLE FILED

அக் காலை இலக்குவன் ஆரியனை

முக்காலும் வலங்கொடு மூதுணர்வின்

மிக்கான் மதி வீடணன் மெய் தொடரப்

புக்கான் அவன் வந்து புகுந்த. களம்

****

ஜூலை 28 செவ்வாய்க்கிழமை LAKSHMANA’S BOW MADE THE SOUND LIKE THE ETERNAL FOUR VEDAS AFTER THE ARMAGEDDON

நூல் மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள்

மேல் மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும்,

கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின், கண் அகல்

நான் மறை ஆர்ப்பென நடந்தது, அவ் ஒலி

****

ஜூலை 29 புதன் கிழமை ONE HEADLESS BODY DANCES FOR EVERY 14,000 KILLED– SAYS WAR MANUALS; BUT CRORES DANCED WHEN LAKSHMAN MASSACRED DEMONS. CAN ANYONE MEASURE HIS POWER ?

ஆடுவ கந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம்

வீடியபொழுது  எனும் பனுவல் மெய்யதேல்

கோடியின் மேல் உள குனித்த கொற்றவன்

பாடு இனி ஒருவனால் பகரற்பாலதோ  

****

ஜூலை 30 வியாழக் கிழமை LAKSHMANA’S ARROWS NEVER FAILED; THEY WERE LIKE RISHIS’ CURSES.

வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்

கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம்

கை வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா

எய்வன எனை பல; இரத மேலன.7972

****

ஜூலை 31  வெள்ளிக்கிழமை LAKSHMAN KILLED INNUMERABLE ELEPHANTS WHICH MADE EVEN ELEPHANT FACED GANAPATI SCARED TO DEATH!

8010.  மலை அஞ்சின; மழை அஞ்சின; வனம் அஞ்சின; பிறவும்

நிலை அஞ்சின; திசை வெங்கரி; நிமிர்கின்றன கடலின்

அலை அஞ்சின; பிறிது என் சில?  தனி ஐங்கர கரியும்,

கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால்.

TAGS- கம்ப ராமாயண பொன்மொழிகள், ஜூலை 2026 காலண்டர்  

–SUBHAM—

மாமனிதர் பாக்யராஜ் மறைந்தார்! (Post.15,925)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,925

Date uploaded in London – 28 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாமனிதர் பாக்யராஜ் மறைந்தார்! 

ச. நாகராஜன்

தாங்க முடியாத துயருடன் இந்த வார்த்தைகளை எழுத வேண்டியிருக்கிறது : மாமனிதர் பாக்யராஜ் மறைந்தார். 

இன்று (27-6-26) காலை நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்தவர் மார்பு வலிக்கிறது என்று சொன்னார். மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் காலமானார்.

 பெரிய இயக்குநர். சிறந்த திரைக்கதாசிரியர். சிறந்த நடிகர். பெரிய எழுத்தாளர். பல நடிகர்களையும் நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர். உதவி இயக்குநர்களை ஆதரித்து அவர்களைப் பெரும் வெற்றி பெறும் இயக்குநர்களாக உயர்த்தியவர். பத்திரிகை ஆசிரியர்….. இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் என் மனதில் வரும் சொற்கள் : இவர் ஒரு மாமனிதர்.

 மனிதப் பண்புகளுடன் கர்வம் இன்றி அனைவரது நலனுக்காகவும் அயராது உழைத்தவர்.

இவருடனான எனது நட்பு 1998ல் தொடங்கியது. மினி பாக்யாவில் எழுத ஆரம்பித்து பிறகு பாக்யாவில் இடை விடாது இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதியதால் இவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

 “நாகராஜன் எத்தனை வாரம் வேண்டுமானாலும் எழுதலாம். அவரது கட்டுரைகளை உடனே பிரசுரியுங்கள்” என்று இவர் தன் உதவியாளர்களுக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறார். அவ்வளவு அன்பு என் மீது. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் 26 வாரம் அல்லது 52 வாரமே எழுத அனுமதித்த பாக்யா என்னை தொடர்ந்து பல வருடங்கள் எழுத அனுமதித்தது.

விண்வெளியில் மனித சாதனைகள் 156 வாரம், அறிவியல் துளிகள் 460 வாரம், மாயாலோகம், விந்தை மனிதர்கள் – பல வாரங்கள் – என எனது படைப்புகள் இடைவிடாமல் பாக்யாவில் இடம் பெற்றன.

 18-9-2010 அன்று அறிவியல் எழுத்துச் சேவைக்காக மன்னை ஶ்ரீ பார்த்தசாரதி டிரஸ்ட் எனக்கு ‘அறிவியல் எழுத்துச் செம்மல்’ என்ற விருதை அளித்த போது மகிழ்ச்சியுடன் தனது உதவி டைரக்டர்களிடம் மலர்க் கொத்தை விழா மேடைக்கு அனுப்பித் தனது பாராட்டுதல்களை வழங்கினார்.

 வெற்றிக்கலை புத்தகத்திற்கு முன்னுரை கேட்கச் சென்ற போது உடனடியாக தருகிறேன் என்று சொன்னவர் இரண்டே நாட்களில் ரெடி வாருங்கள் என்றார்.

ஒரு முறை காலை பத்து மணிக்குச் சந்திப்பதாக ஏற்பாடு. ஆனால் அன்று மழை. ஆகவே எனது டிரைவர் வரவில்லை. அவரிடம் தொடர்பு கொண்டு டிரைவர் வரவில்லை. ஆகவே இன்னொரு நாள் வருகிறேன் என்றேன்.

உடனே, “உங்கள் டிரைவர் வரவில்லை என்றால் என்ன? எனது காரை அனுப்புகிறேன்” என்றார். காரும் வந்தது. உரிய நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது அலுவலகம் சென்றேன். பேச்சு சுவாரசியமாக ஆரம்பித்தது.

உதவியாளர்களை அழைத்த அவர், “யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்” என்று கட்டளை இட்டார்.

12 மணி ஆனது. உணவு நேரம். “உங்களுக்காக பூர்ணிமா அனுப்பி இருக்கிறார். வாருங்கள் சாப்பிடுவோம்” என்றார்.

சோபா அருகில் தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். மீண்டும் பேச்சு.

பல விஷயங்களைக் குறித்துக் கொண்டார்.

அருகிலிருந்த கட்டு கட்டான காகிதம்/போஸ்ட் கார்ட் அவருக்கு வந்தவை. அவற்றை அவரே படித்து குறிப்பு எடுப்பது வழக்கம்.

உதவியாளரிடம் தனது பதிலைச் சொல்வது வழக்கம்.

எதையும் கூர்ந்து அணுகும் அற்புத திறமை. தெரியாத கலைகளை முயன்று கற்கும் ஊக்கத் திறன்.

அனைவரையும் சமமாக பாவிக்கும் உயர்ந்த மனிதத் தன்மை.

 மாலயில் வெகு நேரம் ஆயிற்று. கிளம்புகிறேன் என்று சொல்லி மாடியில் இருந்த அவர் அறையிலிருந்து கீழே வந்த போது ஏராளமானோர் அங்கு நின்றிருந்தனர்; வீற்றிருந்தனர்.

பலரது ஆச்சரியப்பார்வை என் மீது படிந்தது.

யார் இவர்கள்? என்று என்னை வழி அனுப்ப வந்த உதவியாளர்களிடம் கேட்ட போது, “சார்! இவர்கள் எல்லாம் காலையிலிருந்து டைரக்டரைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். சிலர் நடிகைக்கான வாய்ப்பு கேட்க வந்துள்ளனர். சிலர் நடிகர்கள். சிலர் உதவி இயக்குநர்கள்..” என்றனர் அவர்கள்.

“நீங்கள் இருக்கும் போது டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று டைரக்டர் சொன்னதால் யாரையும் அனுப்பவில்லை. நாங்களும் உள்ளே வரவில்லை” என்றனர்.

திடுக்கிட்டேன். அன்றிலிருந்து பிரபலங்களைப் பார்க்க நேர்ந்தால் சில நிமிடங்களில் சந்திப்பை முடிப்பதை வழக்கமாகக் கொண்டேன்.

எனது மகனின் திருமணத்திற்கு திருமதி பூர்ண்மா, சாந்தனு ஆகியோருடன் வந்து என்னை கௌரவித்தார்.

இறுதியாக அவருடன் பேசியது கோவிட் காலத்தில். ஒரு நாள் அவர் தொலைபேசியில் என்னை அழைத்து கோவிட் பற்றிய தகவல்களை அனுப்புமாறு கேட்டார். உடனே அனுப்பினேன்.

அவர் இன்று இல்லை என்பதை நினைக்கும் போது உள்ளம் வேதனைப் படுகிறது.

பல்துறை வித்தகராக உலகம் அவரைப் பார்த்தாலும் அவரை ஒரு மாமனிதராக முதலில் பார்க்கவே என் மனம் விழைகிறது.

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

ஓம் சாந்தி!

**

Upanishad in Sangam Literature; Purananuru wonders 35; Tamil Encyclopaedia- 75 (Post No.15,924)

Written by London Swaminathan

Post No. 15,924

Date uploaded in London –27 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Picture – Lord Krishna in Yaga Fire

Purananuru wonders-35, Tamil Encyclopedia-75; One Thousand Interesting Facts -Part 75

Item 586 Taittriya Upanishad

Purananuru Verse two

Puranānūru 2, Poet Muranjiyur Mudinākanār sang to Cheraman Perunchōtru Uthiyan Cheralathan,
Your nature is like the five elements – the earth filled with sand,
the sky raised above the earth, wind that blows in the sky, fire that
sweeps up the wind, and water that differs from that fire.

Earth

Wind /Air

Sky/ Vacuum

Fire

Water

Due to Tamil prosody the order is changed from the Taittriya Upanishad which is more scientific. The same verse mentioned also Brahmins’ Four Vedas, Brahmins’ Three Fires, Himalaya and Pothiyam Mountains, Mahabharata battle and so,  we are sure the poet was well versed in Sanskrit scriptures. And his name is Mr Nagarajan!

Here is the Mantra from Taittriya Upanishad

Taittiriya Upanishad (Brahmananda Valli, Chapter 2, Section 1) of the Krishna Yajurveda

It outlines the creation of the universe, explaining how all elements and life emerged sequentially from the Supreme Brahman (the ultimate cosmic reality).

तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः ।
आकाशाद्वायुः । वायोरग्निः । अग्नेरापः ।
अद्भ्यः पृथिवी । पृथिव्या ओषधयः ।
ओषधिभ्योऽन्नम् । अन्नात्पुरुषः ॥

Tasmād-vā etasmād-ātmana ākāśah sambhūtah |
Ākāśād-vāyuh | Vāyor-agnih | Agner-āpah |
Adbhyah prithivī | Prithivyā oshadhayah |
Oshadhibhyo-‘nnam | Annāt-purushah ||

“From that (Supreme) Atman, space (Akasha) was born. From space, air (Vayu). From air, fire (Agni). From fire, water (Apah). From water, earth (Prithivi). From earth, herbs and plants (Oshadhayah). From plants, food (Annam). From food, the human being (Purushah).”

Space – air—fire—water—earth- -plants—food- man .

This is what scientists also tell us. Big Bang happened in Space. Then Atmosphere (air) was formed; fire subsided and oceans formed; water receded and land appeared; plants appeared and animals and men came.

****

Item 587  Origin of Vahanas and Flags

Many foreign scholars dated Hindu Puranas around Gupta Dynasty which is definitely after Sangam Tamil literature. They are wrong. Because they don’t know Tamil they bluffed and Hindu scholars of British Rule period also followed them. But the Puranic stories, Epic paintings, Hindu Vahanas, Hindu Flags are in 2000 year old Tamil literature. So Puranas are older than Sangam Tamil literature. 

Just a few examples:

Palmyra tree flag of Balarama ,

Garuda/ eagle flag of Vishnu ,

Piniukha vahana of Muruga/Skanda ,

Are mentioned by Nakkirar in verse 56.

We have got more references to fish flag of Manmata in Paripatal .

It is a well known fact that chera choza pandya also had flags with bow, tiger and fish pictures.

****

Picture – Rama Duta Anjaneya in Yaga Fire

Item 588 Vishnudasan praised

Yaagaas , Yajnaas = Fire sacrifices

n Purananuru 166, poet Avur Mulan kizar praises one Brahmin called Vinnan Dayan.

Vinnan Daayan is the tamilized Sanskrit name Vishnu dasa. Poets surname shows that he was from the caste of agriculturists.

He got gifts, probably, after attending the Yajna . This shows that even non Brahmins attended yagas and received prizes.

The verse begins with a praise for Lord Shiva. He says Vishnu dasa was a great devotee of Lord Shiva whose mouth is always reacting Vedas .

He praised Brahmins mastered Four Vedas And Six ancillary subjects. We know that it includes grammar, astrology, etymology etc.

He also said Brahmins rejected the atheists’ argument and established One Dharma.

While praising Brahmins like this he says Vishnu dasa came in the family of who did 21 types of Yagas.(see the explanation at the bottom)

This is the one which helps us to understand RV I-164-3.

Dirgatamas, the blind poet of Rig Veda, used lots of numbers.

He says

THE SEVEN WHO ON THE SEVEN WHEELED CAR ARE MOUNTED HORSES, SEVEN IN TALE, WHO DRAW THEM ONWARD.

SEVEN SISTERS UTTER SONGS OF PRAISE TOGETHER, IN WHO THE NAMES OF THE SEVEN COWS ARE TREASURED… RV 1-164-3

Commentators interpreted the Seven as seven swaras of music, seven meters in

Prosody, seven rays of sun etc.

The three sevens may mean 3×7 Yagas. The Vedic hymn might have meant two types of cows like the Tamil poem.

Here is another mantra with Number Seven,

KNOWING THE LAW, THE SEVEN STRONG FLOODS FROM HEAVEN, FULL OF GOOD THOUGHT, DISCERNED THE DOORS OF THE RICHES.

SARAMA FOUND THE CATTLE S FIRM BUILT PRISON WHERE BY THE RACE OF MAN IS STILL SUPPORTED – RV 1-72-8.

Here also the seven floods from heaven is not explained satisfactorily.

Three Sevens are all not explained by the Vedic commentators.

So we have to review all the sevens in the verses. Sangam Tamils commentaries may help us to clear the vagueness.

****

Picture- Hindu Women gathering flowers for Gods.

Item 589

27 Yagas in Purananuru

What is 3 X 7 ?

In the commentary of Puram 166,

The doyen of Tamil literature Dr U V Swaminatha Iyer listed all the 21 yagas..

They are broadly divided into three sevens and they are

Soma Yajnas 7

Havir yajnas 7

Paga Yajna  7.

(I have given all the 21 names in my Tamil article.)

What is  2 X 7 ?

And in another Tamil line of the verse two (2×7)  sevens come. These are ghee made from the milk of seven domestic cows and ghee made from the milk of seven wild cows.

****

Item 590

Special Dress for Yaga in Puram 166

Later the poet added that the Brahmin ladies who assisted Vishnu dasa wore special head ornaments and the gentleman wore deer skin.

Sangam Age Tamils were very familiar with the Himalayas and the Ganges river because of Kalidasa’s works. Of the 1500 images and similes of Kaliadsa, Sangam poets have used at least 200 similes. Avur Mulankizar wished the king to live a “long life like the Himalayas”.

When he praised the wife of Vishnu dasa he praised their chastity and their beauty. He added two interesting points also,

She is a woman of few words.

And she did what he said.

Here we are reminded of the saying of Greek philosopher Democritus, who said,

FEWSNESS OF WORDS IS AN ORNAMENT TO A WOMAN- Democritus.

Vishnudasa performed the Yagas, Fire Ceremonies, where

His use of Ghee (clarified butter) shamed Water

His lot of Yagas shamed the Numbers

His Spread of fame shamed the Earth

(such was his great ness, says the poet.)

****

Tags- Purananuru wonders-35, Tamil Encyclopedia-75, One Thousand Interesting Facts ,Part 75, Flags, Vahanas, Yagas, Tattriya Upanishad, item 590

To be continued ……………………….

Important Upanishad Mantras in English and Devanagari- Part 4 (Post.15,923)

Written by London Swaminathan

Post No. 15,923

Date uploaded in London –27 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 4

26

Taittiriya Upanishad (Brahmananda Valli, Chapter 2, Section 1) of the Krishna Yajurveda

It outlines the creation of the universe, explaining how all elements and life emerged sequentially from the Supreme Brahman (the ultimate cosmic reality).

तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः ।
आकाशाद्वायुः । वायोरग्निः । अग्नेरापः ।
अद्भ्यः पृथिवी । पृथिव्या ओषधयः ।
ओषधिभ्योऽन्नम् । अन्नात्पुरुषः ॥

Tasmād-vā etasmād-ātmana ākāśah sambhūtah |
Ākāśād-vāyuh | Vāyor-agnih | Agner-āpah |
Adbhyah prithivī | Prithivyā oshadhayah |
Oshadhibhyo-‘nnam | Annāt-purushah ||

“From that (Supreme) Atman, space (Akasha) was born. From space, air (Vayu). From air, fire (Agni). From fire, water (Apah). From water, earth (Prithivi). From earth, herbs and plants (Oshadhayah). From plants, food (Annam). From food, the human being (Purushah).”

Space – air—fire—water—earth- -plants—food- man .

27

यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमाथ यत्रान्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं यो वै भूमा तदमृतमथ यदल्पं तन्मर्त्य्ं स भगवः कस्मिन्प्रतिष्ठित इति स्वे महिम्नि यदि वा न महिम्नीति ॥ ७.२४.१ ॥

yatra nānyatpaśyati nānyacchṛṇoti nānyadvijānāti sa bhūmātha yatrānyatpaśyatyanyacchṛṇotyanyadvijānāti tadalpaṃ yo vai bhūmā tadamṛtamatha yadalpaṃ tanmartyṃ sa bhagavaḥ kasminpratiṣṭhita iti sve mahimni yadi vā na mahimnīti || 7.24.1 || Chandogya Upanishad (Chapter 7, Verse 24.1).

1.     Sanatkumāra said: ‘Bhūmā [the infinite] is that in which one sees nothing else, hears nothing else, and knows [i.e., finds] nothing else. But alpa [the finite] is that in which one sees something else, hears something else, and knows something else. That which is infinite is immortal, and that which is finite is mortal.’ Nārada asked, ‘Sir, what does bhūmā rest on?’ Sanatkumāra replied, ‘It rests on its own power—or not even on that power [i.e., it depends on nothing else]’. Chandogya Upanishad (Chapter 7, Verse 24.1).

28

ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोतमथो बलमिन्द्रियाणि च सर्वाणि।सर्वं ब्रह्मोपनिषदं माऽहं ब्रह्म निराकुर्यां मा मा ब्रह्म निराकरोदनिराकरणमस्त्वनिराकरणं मेऽस्त्वत्।तदात्मनि निरते या उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु।ॐ शान्तिः शान्तिः शान्तिः

OM Aapyayantu Mama-Angani Vaak Praanah-Chakshu

Shrotram-Atho Balam-Indriyaani Cha Sarvaani!

Sarvam Brahma-Upanishadam

Ma-Aham Brahma Niraakuryaam Maa maa

Bhahman Niraakarot,

Aniraakaranam-Astu Aniraakaranam Me Astu

Tat-Aatmani Nirate Ya Upanishatsu Dharmaah

Te Mayi Santu Te Mayi Santu

OM Shanti Shanti Shanti Hi!Kenopanishad (embedded in the Sama Veda)

Meaning of the Shanti Mantra

1. “OM Aapyayantu Mama-Angani Vaak”:

We invoke to the Supreme God that may we grow very vigorous, with joyful interest and enthusiasm. May our limbs become vigorous. May our speech become vigorous with affirmations and conviction.

2. “Praanah-Chakshu Shrotram-Atho”:

May the vital air or energy, our eyes and ears become vigorous too.

3. “Balam-Indriyaani Cha Sarvaani”:

May there be strength in our senses and everything in us.

We are thus asking for our energy, vitality, vehicles, senses, mind and emotions to become vigorous and are also asking for strength.

4. “Sarvam Brahma-Upanishadam”:

All is Brahman of the Upanishads. It implies that in Upanishads itself, Brahman is there.

5. “Ma-Aham Brahma Niraakuryaam Maa maa”:

May we never reject Brahman. Never, never!

Never may we reject anyone. May we not reject any aspect of Brahman. Brhaman is in everyone!

6. “Bhahman Niraakarot”:

Also, may Brahman not reject us.

7. “Aniraakaranam Astu, Aniraakaranam Me Astu”:

May there be no denial by Brahman. And may there be no denial of Brahman by me. May Brahman, including everyone, not reject or deny existence of each other (all are part of Brahman).

8. “Tat-Aatmani Nirate Ya Upanishatsu Dharmaah”:

Delighting in the Atman, may all the virtues that are mentioned in the Upanishads… (continued in next line)

9. “Te Mayi Santu”:

May they (all these virtues) be present or fostered in me by my effort. May I acquire all that by being vigorous by all my senses, energy, vitality, body and mind.

10. “Te Mayi Santu”:

Reaffirming the same. May we acquire and internalize them.

11. “OM Shanti Shanti Shanti Hi”:

By chanting OM, we request Supreme Parabrahman to bestow us with peace on all the lower three planes of physical, emotional and mental, as peace is already permeating in all the planes higher. Thus, the word shanti here is repeated three times and is not a mere coincidence.

29

Mundaka Upanishad Mantra 3.1.5,

सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्य्येण नित्यम् ।अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥

satyena labhyas tapasā hy eṣa ātmā samyag-jñānena brahmacaryeṇa nityam |antaḥ-śarīre jyotir-mayo hi śubhro yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ ||

Meaning

Satyena (Truthfulness): Living a life of absolute truth in thought, word, and deed.

Tapasa (Austerity/Penance): Engaging in concentrated spiritual discipline, self-restraint, and meditation.

Samyag-jñānena (Right Knowledge): Cultivating the correct understanding of the Self and distinguishing the eternal from the transient.

Brahmacaryeṇa (Celibacy/Self-Control): Practicing continuous self-control and directing one’s energy toward spiritual pursuits.

antaḥ-śarīre jyotir-mayo hi śubhro – When these virtues are practiced constantly and without interruption, the radiant, pure Atman shines forth within the heart.

yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ – It is beheld by the sages who have cleansed themselves of all impurities, defects, and sins.

30

Shvetashvatara Upanishad (Chapter 3, Verse 12).

mahān prabhur vai puruṣaḥ sattvasyaiṣa pravartakaḥsunirmalam imāṃ prāptim īśāno jyotir avyayaḥ

महान् प्रभुर वै पुरुषः, सत्त्वस्यैष प्रवर्तकः

The Supreme Person is the great controller, the source of light, and the prime mover of the inner consciousness. He is the ruler who bestows ultimate purity and liberation. He is the imperishable Lord and the source of all illumination.

Tags- Important Upanishad mantras, Part 4

TO BE CONTINUED……………………….

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 4 (Post No.15,922)

Do you see Sri Krishna?

Written by London Swaminathan

Post No. 15,922

Date uploaded in London –27 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

26

English version with meaning in English posted separately.

தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாச: ஸம்பூத:

ஆகாசாத் வாயு: வாயோரக்னி:  அக்னோராப:

அத்பய ப்ருதிவீ  ப்ருதிவ்யா ஒஷதய:

ஓஷதீப்யோ (அ)ன்னம் அன்னாத் புருஷ :

தைத்ரீயோபநிஷதம் 2-1 

தஸ்மாத்வா ஏதஸ் மாதாத்மன ஆகாச: ஸம்பூத:

ஆகாசாத் வாயு: வாயோரக்னி:  அக்னோராப:

அத்பய ப்ருதிவீ  ப்ருதிவ்யா ஒஷதய:

ஓஷதீப்யோ (அ)ன்னம் அன்னாத் புருஷ :

ஆகாச: = ஆகாசஹ

வாயு: = வாயுஹு

வாயோரக்னி: = அக்னி ஹி – என்று உச்சரிக்க வேண்டும் .

பொருள்

பிரம்மம் என்ற அந்த ஆத்மனிடமிருந்து நிச்சயமாகவே ஆகாசம் உண்டாயிற்று ; ஆகாசத்திலிருந்து வாயு உண்டாயிற்று ; வாயுவிலிருந்து அக்கினி உண்டாயிற்று ; அக்கினியிலிருந்து தண்ணீர் உண்டாயிற்று ; தண்ணீரிலிருந்து பூமி வந்தது; பூமியிலிருந்து தாவரங்கள்/ மூலிகைகள் தோன்றின ;  தகவரங்களிலிருந்து உணவு உண்டானது ; உணவிலிருந்து மனிதன் உண்டானான் .

Taittiriya Upanishad (Brahmananda Valli, Chapter 2, Section 1) of the Krishna Yajurveda

तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः ।
आकाशाद्वायुः । वायोरग्निः । अग्नेरापः ।
अद्भ्यः पृथिवी । पृथिव्या ओषधयः ।
ओषधिभ्योऽन्नम् । अन्नात्पुरुषः ॥

Tasmād-vā etasmād-ātmana ākāśah sambhūtah |
Ākāśād-vāyuh | Vāyor-agnih | Agner-āpah |
Adbhyah prithivī | Prithivyā oshadhayah |
Oshadhibhyo-‘nnam | Annāt-purushah ||

Space – air—fire—water—earth- -plants—food- man.

****

27

யத்ர நான்யத் பச்யதி நான்யச் ச்ருணோதி

நான்யத்விஜானாதி  ஸ பூமா

சாந்தோக்ய உபநிஷத் 7-24-1

எதற்கு அந்நியமாக வேறு  எதையும் ஒருவன் காண்கிறதில்லையோ , வேறு  எதையும் கேட்கிற தில்லையோ ,வேறு  எதையும் அறிகிறதில்லையோ அது அகண்ட வஸ்து.

यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमाथ यत्रान्यत्पश्यत्यन्यच्छृणोत्यन्यद्विजानाति तदल्पं यो वै भूमा तदमृतमथ यदल्पं तन्मर्त्य्ं स भगवः कस्मिन्प्रतिष्ठित इति स्वे महिम्नि यदि वा न महिम्नीति ॥ ७.२४.१ ॥

yatra nānyatpaśyati nānyacchṛṇoti nānyadvijānāti sa bhūmātha yatrānyatpaśyatyanyacchṛṇotyanyadvijānāti tadalpaṃ yo vai bhūmā tadamṛtamatha yadalpaṃ tanmartyṃ sa bhagavaḥ kasminpratiṣṭhita iti sve mahimni yadi vā na mahimnīti || 7.24.1 || Chandogya Upanishad (Chapter 7, Verse 24.1).

****

28

ஓம் ஆப்யாயந்து  மமாங்கானி  வாக் ப்ராணஸ் சக்ஷு 

ச் ரோத்ர மதோ பலமிந்தரியாணி  ச  ஸர்வாணி

ஸர்வம்    ப்ரஹ்மெளபநிஷதம்  மாஹம் ப்ரஹ்ம  நிராகுர்யா மா

 மா ப்ரஹ்ம    நிராகரோத் அ நிராகரணம் மே அஸ்து

ததாத்மனி நிரதே  ய  உபநிஷத்ஸு   தர்மாஸ்தே மயி

 ஸந்து  தே மயி ஸந்து – கேனோபநிஷத்

என்னுடைய அங்கங்கள் உறுதிபெறுவனவாகுக  ; அங்ஙனமே எனது வாக்கும் பிராணனும் கண்ணும் காதும் உடல் வலிமையையும்  இந்திரியங்கள் யாவும் உறுதி பெறுக . உபநிஷதங்கள் லட்சியமாகிய பிரம்மமே  அனைத்துமாயிருக்கிறது . பிரம்மத்தை நான் புறக்கணிக்காமல்  இருப்பேனாக. பிரம்மம் எண்ணெய் புறக்கணியாதிருக்கட்டும். புறக்கணித்தல் ஆகாது ;புறக்கணித்தலை நான் செய்யவே மாட்டேன் ; உபநிஷதங்களில் என்னென்ன தர்மங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ  அவை யாவும் பிரம்மத்தின்கண் பக்திவைத்துள்ள என்னிடத்தில் நிலைத்திருக்கட்டும் .

ॐ आप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोतमथो बलमिन्द्रियाणि च सर्वाणि।सर्वं ब्रह्मोपनिषदं माऽहं ब्रह्म निराकुर्यां मा मा ब्रह्म निराकरोदनिराकरणमस्त्वनिराकरणं मेऽस्त्वत्।तदात्मनि निरते या उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु।ॐ शान्तिः शान्तिः शान्तिः

OM Aapyayantu Mama-Angani Vaak Praanah-Chakshu

Shrotram-Atho Balam-Indriyaani Cha Sarvaani!

Sarvam Brahma-Upanishadam

Ma-Aham Brahma Niraakuryaam Maa maa

Bhahman Niraakarot,

Aniraakaranam-Astu Aniraakaranam Me Astu

Tat-Aatmani Nirate Ya Upanishatsu Dharmaah

Te Mayi Santu Te Mayi Santu

OM Shanti Shanti Shanti Hi!Kenopanishad (embedded in the Sama Veda)

****

29

ஸத்யேன லப்யஸ் தபஸா ஹ்யேஷ ஆத்மா

ஸம்யக்ஞானேன ப்ரஹ்மசர்யேனே நித்யம் 

அந்த: சரீரே ஜ்யோதிர்மயோ ஹி சுப்ரோ

யம் பச்யந்தி யதய: க்ஷீண தோஷா:

முண்டகோபநிஷத் 3-5

PRONUNCIATION உச்சரிப்பு:– 

அந்த: = அந்தஹ.

யதய: =  யதயஹ.

தோஷா:  =  தோஷாஹா.

இந்த ஆத்மாவானது சாத்தியதாலும் தவத்தாலும் நிறை ஞானத்தாலும்  நைஷ்டிக பிரம்மச்சர்யத்தாலும்  நிச்சயமாக அடையப்படுகிறது . பரிபக்குவம் அடைந்த துறவியர்கள் இந்த ஆத்மனை  தங்கள் உள்ளத்தின் உள்ளேயே ஜோதிர்மயமானதாகவும் தூயதாகவும் காண்கின்றனர் .

Mundaka Upanishad Mantra 3.1.5,

सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्य्येण नित्यम् ।अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥

satyena labhyas tapasā hy eṣa ātmā samyag-jñānena brahmacaryeṇa nityam |antaḥ-śarīre jyotir-mayo hi śubhro yaṃ paśyanti yatayaḥ kṣīṇa-doṣāḥ ||

****

30

மஹான் ப்ரபுர்வை புருஷ:  ஸத்வைஸ்யைஷ: ப்ரவர்த்தக:

ஸுநிர்மலாமிமாம்  ப்ராப்திமீசானோ  ஜ்யோதிரவ்யய:

ச்வேதாச்வரோபநிஷத் 3-12   

PRONUNCIATION

உச்சரிப்பு:–  இரண்டு புள்ளி : உள்ள இட த்து ஹ என்று முடிக்கவும்

புருஷ:  – புருஷஹ.

ஜ்யோதிரவ்யய= ஜ்யோதிரவ்யயஹ.

ஸத்வைஸ்யைஷ: = ஸத்வைஸ்யைஷஹ.

ப்ரவர்த்தக: = ப்ரவர்த்தக ஹ.

பரமபுருஷன் பெரிய தலைவன் ஆகிறான் . அவன் நிச்சயமாகவே அனைத்தையும் அடக்கி ஆளுகிற  அழிவற்ற அந்தர் ஜோதி – உள் ஒளி – யாயிருக்கிறான். நிர்மலமான இந்த நிலையை உயிர்கள் அடையும்பொருட்டு  உயிர்களின் அறிவை அவன் நடத்துகிறான்.

Shvetashvatara Upanishad (Chapter 3, Verse 12).

mahān prabhur vai puruṣaḥ sattvasyaiṣa pravartakaḥsunirmalam imāṃ prāptim īśāno jyotir avyayaḥ

महान् प्रभुर वै पुरुषः, सत्त्वस्यैष प्रवर्तकः

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள் , Part 4

TO BE CONTINUED……………………….

சலிப்பின்றி வேலை செய்ய… பொமொடோரோ நுட்பத்தை இன்றே தொடங்குங்கள்! (Post No.15,921)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,921

Date uploaded in London – 27 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

23-6-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

சலிப்பின்றி வேலை செய்ய… பொமொடோரோ நுட்பத்தை இன்றே தொடங்குங்கள்! 

ச. நாகராஜன்

காலையில் தினமும் வேலைக்குச் சென்றவுடன் மேஜை முன் உள்ள நாற்காலியில் அமர்ந்து கம்ப்யூட்டரிலோ அல்லது இதர லெட்ஜர்களை எடுத்தோ வேலை பார்ப்பவர் என்றால் அவருக்குத் தேவையான ஒரு நல்ல வழிமுறை பொமொடோரோ வழி! (POMODORO METHOD). 

ஒரே இடத்தில் “குந்தி” ஸ்க்ரீனை எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? மனம் எங்கோ இருக்கும் போது வேலை திறம்பட நடக்குமா என்ன?

அலுப்பு, சலிப்பு, போர்…. இது என்னடா வேலை… என்று வெறுப்பும் தோன்றும். இதன் விளைவாக வேலைத் திறனும் குறையும்

இதை நீக்க மிகச் சிறந்த ஒரு வழியைக் கண்டுபிடித்தார் ஃப்ரான்செஸ்கோ சிரில்லோ (Francesco Cirillo).

இத்தாலியைச் சேர்ந்த இவர் மாணவராக இருந்த போது தினமும் போர் அடிக்கும் ஒரே விதமான வாழ்க்கைமுறையால் சலிப்படைந்தார்.

அதன் விளைவாக அவர் கண்டு பிடித்தது தான் பொமொடோரோ வழி.

 பொமொடோரோ என்றால் இத்தாலிய மொழியில் தக்காளி என்று அர்த்தம்.

சமையலறையில் பயன்படுத்திய நேரத்தைக் குறிக்கும் டைமர் மெஷின் ஒன்று தக்காளி போல இருக்கும்.

இந்த கிட்சன் மெஷினை உபயோகித்துத் தன் வாழ்க்கைப் போக்கை மாற்றினார் சிரில்லோ.

இந்த டைமர் மெஷினைத் தன் முன் வைத்துக் கொண்டு 25 நிமிடம் முடிந்தவுடன் அதன் மூலம் தெரிந்து கொண்டார். அடுத்த ஐந்து நிமிடம் நிதானமாக ஓய்வெடுத்தார்.

என்ன ஆச்சரியம்? அவரது சலிப்பு நீங்கியது. கவனத் திறன் கூடியது. வேலை சிறப்பாக நடைபெற்றது.

இதை டைம் மேனேஜ்மெண்ட் என்னும் நேரத்தை நிர்வகிக்கும் வழிமுறைக்கு உதவுமாறு செய்தார். அதிலிருந்து உருவானது தான் பொமொடோரோ வழி.

1987ல் உருவான இந்த உத்தி, ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் தொழில்துறையில் ஒரு பெரிய புரட்சியையே செய்தது.

பொமொடோரோ வழிமுறை என்பது இது தான்:

முதலில் நீங்கள் செய்ய வேண்டியதைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து டைமரில் 25 நிமிடத்தை செட் செய்யுங்கள்.

டைமர் உங்களுக்கு 25 நிமிடம் முடிந்ததை அறிவிக்கும் வரை நல்ல கவனத்துடன் உங்கள் வேலையைப் பாருங்கள்.

டைமர் ஒலித்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் ஓய்வெடுங்கள்.

இதே வழியை திரும்பத் திரும்ப வேலை நேரம் முடியும் வரை செய்யுங்கள். 

நான்கு பொமொடோரோ இடைவெளி வந்தவுடன் 15 முதல் 30 நிமிடம் வரை ஒரு நீண்ட இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள்.

டைமர் என்பது தக்காளி வடிவில் இருந்த சமையலறை டைமராக இருக்கலாம்; உங்கள் போனிலோ அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ஒரு ‘ஆப்பிலோ’ அல்லது சின்ன கடிகாரத்திலோ கூட இருக்கலாம்.

வேலையை ஆரம்பிக்கும் முன்னர் எத்தனை பொமொடோரோ இடைவெளி வரக்கூடும் என்பதை உத்தேசமாகக் கணித்து அதற்குத் தக வேலைகளைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

சரி, பொமொடோரோ இடைவெளியில் என்ன செய்வது? நீர் அருந்தச் செல்லலாம். சின்ன உடல்பயிற்சியைச் செய்யலாம். அல்லது தியானத்தில் அமரலாம். இல்லை என்றால் ஒரு சின்ன நடையை மேற்கொள்ளலாம்.

இந்த உத்தியை உங்கள் வேலைக்குத் தக சற்று மாற்றியும் கூட பயன்படுத்தலாம். 25 நிமிடம் என்பதை சற்று மாற்றியும் பயன்படுத்தலாம்.

விளைவு எப்படி இருக்கும்?

நீங்களே உணர்ந்து பார்க்கலாம். வேலைத் திறன் கூடுவதோடு சலிப்பே இருக்காது.

இதை நமது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளிலும் கூட செயல்படுத்திப் பார்க்கலாம்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 74; இந்து மத கலைச்சொல் அகராதி- 74 (Post No.15,920)

Written by London Swaminathan

Post No. 15,920

Date uploaded in London –26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 74

“N”  words continued…………………….

நக்கீரர்

சர்ச்சைக்குரிய சங்க காலப்  புலவர் ; மதுரைக் கணக்காயனார் என்ற பிராமணனின் மகன் ; சிவ பெருமானுடன் மோதியவர் ; ஏழைப் பிராமணன் தருமிக்கு சிவபெருமானே எழுதித் தந்த கவிதையில் குற்றம் கண்டவர்; பின்னர் சிவனருளும் முருகன் அருளும் பெற்றார்; சங்க இலக்கியத்தில் கடவுளைப் போற்றும் புறநானூற்றுப் பாடலையும் முழுநீள தெய்வீக நூலான திருமுருகாற்றுப்  படையையும் , பாண்டிய மன்னனைப் போற்றும் நெடுநல்வாடை நூலையும் ஏனைய பாடல்களையும் இயற்றியவர். பிராமணப் புலவன் தருமிக்காக சிவபெருமானே சங்கத்துச் சென்றார் என்று அப்பர் பெருமான் (600 CE) தேவாரத்தில் பாடியதால் இந்த நிகழ்ச்சி 300  CE வாக்கில் நடந்திருக்க வேண்டும்.

***

நலுங்கு- நலங்கு

பிராமணர் கல்யாணங்களில் தாலி கட்டிய நாளன்று மலையில் நடைபெறும் கேளிக்கை , வேடிக்கை , ஆட்டம்- பாட்டம் நிறைந்த சடங்கு ஆகும் . கல்யாணத்திலேற்பட்ட மனத்தொய்வு, களைப்பு ஆகியவற்றைக் குறைத்து பெண் வீட்டாரையும் மாப்பிள்ளை வீட்டாரையும் இணைக்கும் நிகழ்ச்சி இது ; இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்த்துக்கொண்டு,  பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே பல போட்டிகளை நடத்துவார்கள்; வெற்றி பெற்ற குழுவினர் ஆரவாரம் செய்து உலகக் கோப்பையை வென்றதாக எண்ணி மகிழ்ச்சிக் கூத்தாடுவார்கள்; பெண் வீட்டாரையும் மாப்பிள்ளை வீட்டாரையும் கிண்டலும் கேலியும் செய்து பாட்டும் பாடுவார்கள் ; சில உதாரணங்கள் :

தண்ணீர் நிறைந்த குடத்தில் மோதிரத்தைப் போட்டு பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஏவி விடுவார்கள் முதலில் மோதிரத்தை எடுத்தவர் வெற்றி வீரர் ; பெண் அல்லது மாப்பிள்ளை கையில் காசுகளைக் கொடுத்து இறுக்க மூடச் சொல்லுவார்கள் ; அந்தக் குரங்குப் பிடியிலிருந்து காசினை எடுக்கும் முதல் நபர் வெற்றி! .

மாப்பிள்ளையை ஹிட்லர் மீசை, கோணல் மூஞ்சி , ஒல்லிப்பிச்சான் அல்லது பூசணிக்குண்டு என்று வருணித்துப் பெண் வீட்டுப் பெண் கள் ஏசுவார்கள் ; உடனே மாப்பிள்ளை வீட்டுப் பையன்கள் பெண்ணுக்கு காக்கையின் குரல், முடியே இல்லாத டோபா முடி, அடுப்பையே பார்த்திராத பெண்! என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள் ; இதற்கான பாட்டுகள் சிலவற்றைச் சேகரித்து நான் வெளியிட்டேன் ; கால வேகத்தில் அவை அழிந்து வருகின்றன .

வேறு சில பண்பாடுகளைப்  பின்பற்றுவோர் பெண்ணுக்கு மஞ்சள் பூசும் சடங்கினை நலங்கு என்பார்கள்; இது வடக்கத்திய மெஹந்தி (மருதாணி) சங்கீத் சடங்குகளைப் போன்றது .

மன நெருக்கத்தை, மன அழுத்தத்தைக் குறைக்க இந்துக்கள் கண் டுபிடித்த மகத்தான சடங்கு நலங்கு !

நலுங்குப் பாட்டு

அனுப்பியவர் திருமதி தயா நாராயணன் ,

Mrs Daya Narayanan from London, Now in Sydney, Australia.

சம்பந்திப் பாட்டு

சம்மந்தி அம்மா வந்தாளாம்

சந்தோஷமாகவே

சம்மந்தி அம்மா வந்தாளாம்

சந்தோஷமாகவே

பானைபோல் வயிறும் பட்டாணிக்கண்ணும்

யானை ரூபமும்  எலி வால்  பின்னலும் 

சம்மந்தி அம்மா வந்தாளாம்

வெகு சந்தோஷமாகவே

ஜப்பான் குள்ளம் ஜெர்மனி உயரம்

ஹிட்லர் மூக்கும் சர்ச்சில் வாயும்

சம்மந்தி அம்மா வந்தாளாம்

வெகு சந்தோஷமாகவே !

வெகு சந்தோஷமாகவே !

வெகு சந்தோஷமாகவே !

குறிப்பு – இது இரண்டாம் உலகப் போர் காலப் பாட்டு ; அந்தக் காலத்தில் ஹிட்லர், சர்ச்சில் படங்கள், கார்ட்டூன்கள் அடிக்கடிப் பத்திரிகைகளில் வெளியானதால் இதை மக்கள் ரசித்து இருப்பார்கள்.

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ராஜ கோபாலா

கனகாம்பரதாரா கெளஸ்துப ஹாரா

கவச குண்டல தாரா

வனமா    தாரா வாசுதேவா  காலி

வைகுண்ட ஜகன்னாதா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

பக்தவத்சல பரமதயாளா

பரிபூரணானந்தா நித்யானந்தா

உத்தம புருஷா

சித்தடி  நலுங்கிடரே

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

அந்தக் காலத்தில் மிக இளம் வயதில் கல்யாணங்கள் நடந்தன கோவலன் , இராமபிரான் ஆகியோருக்கெல்லாம் 18  வயதுக்குள்ளேயே திருமணங்கள்  நடந்ததாக நமது இலக்கியங்கள் செப்புகின்றன. அந்த சூழ் நிலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட இந்தப் பாடல்களை ரசித்து இருப்பார்கள்.

இப்போது போல எருமைக்கடா வயதில் கல்யாணங்கள் நடக்கவில்லை!.

***

நால்வர் 

தமிழ்நாட்டில் சைவ சமயத்தில் எத்தனையோ பெரியோர்கள் இருந்தும் , 63 நாயன்மார்கள் இருந்தும்,  சைவ சமயத்துக்குப் புத்தியிரூட்டிய நான்கு பேரை- அப்பர்சம்பந்தர், சுந்தரர்,  மாணிக்க வாசகர்  – மட்டும் நால்வர் என்று போற்றித் துதிப்பர்; இவர்களில் முதல் மூவர் பாடியது தேவாரம்; மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களைப் பாடிய சேக்கிழார், மாணிக்கத்தைப் பாடாமல்  விட்டது பெரிய புதிர்; முதல் மூவர் மாணிக்கத்தைக் குறிப்பிடாததும் முதல் மூவரை மாணிக்கம் குறிப்பிடாததும் அதைவிடப் பெரிய புதிர்! அப்பர் காலம் மஹேந்திர வர்மன் 600 CE காலம் என்பது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டாலும்  மாணிக்கம் காலம் என்ன என்பது சர்ச்சைக்குரியதாகவே நீடிக்கிறது; ஆயினும் சில குறிப்புகளிலிருந்தும்,  திருவிளையாடல் புராண மன்னர் வரிசையிலிருந்தும் மாணிக்கம் முதல் மூவருக்கு 100 அல்லது 200 ஆண்டு முந்தையவர் என்று தெரிகிறது. (Please see my research articles on this topic).

***

நாமம்

வைஷ்ணவர்கள் – அதாவது விஷ்ணுவை வணங்குவோர் – நெற்றியில் இட்டுக்கொள்ளும் புனிதக் குறியீடு நாமம் ஆகும் ; சைவர்களின் விபூதி மூன்று படுக்கைக்கோடுகள் கொண்டது; நாமமென்பது மூன்று நெடுங்கோடுகள் கொண்டது;  இரண்டு வெள்ளைக்கோடுகளுக்கு இடையே ஒரு சிவப்புக்கோடு இருக்கும்.

இவர்களில் இரு பிரிவினர் தென்கலை என்றும் வடகலை என்றும் உள்ளனர் ; தென்கலையைப் பின்பற்றுவோர் ஆங்கில எழுத்து Y ஒய் போல நாமம் போடுவார்கள்; வட கலையைப் பின்பற்றுவோர் ஆங்கில எழுத்து யு U போல நாமம்  போடுவார்கள்; தென்கலையினர் திவ்யப் பிரபந்த தமிழ் பாசுரங்களையும் வடகலையினர் வேதாந்த தேசிகரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்களையும் போற்றுகிறார்கள். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெரிய கோவில்களில் எல்லோரும் வித்தியாசமில்லாமல்  வணங்கினாலும் சிறிய கோவில்களில் இந்த வேறுபாடு , நடைமுறைகள் முதலியன தெளிவாகத் தெரியும்; யானைகளுக்கு நாமம் போடுவதில் கூட இதைப் பின்பற்றுவார்கள்; சில நேரங்களில் இந்த வேறுபாடு ஏற்படுத்திய சர்ச்சை,  நீதிமன்றம் வரை சென்றதும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் உடலில் 12 இடங்களில் நாமங்களை இட்டுக்கொள்வார்கள் ; சிவனை வழிபடும் பிராமணர்கள் தினமும் மூன்று  வேளை சந்தியாவந்தனத்தின் போதும் விபூதியை இதே போல 12 இடங்களில் இட்டுக் கொள்கிறார்கள்.

****

நம்மாழ்வார்

நம்மாழ்வார் (மாறன் சடகோபன்) 12 ஆழ்வார்களில் தலைசிறந்தவராகவும், வைணவ மரபில் ‘ஆழ்வார்களுக்குத் தலைவராகவும்’ போற்றப்படுகிறார். பிறந்ததிலிருந்து பேசவும் கேட்கவும் முடியாமல் இருந்த இவர், தனது 16 வயதில் ஞானம் பெற்று, இறைவனின் புகழைப் பாடும் திருவாய்மொழி உள்ளிட்ட நான்கு பிரபந்தங்களை அருளினார். இவர்  பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி;  வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் சடகோபன் என்றும் அறியப்படும் நம்மாழ்வாரின் அவதார மகிமையால் ஆழ்வார் திருநகரி என்ற பெயரை இத்தலம் பெற்றது.

நம்மாழ்வாரின் பாடல்கள் தத்துவார்த்த சிந்தனைகள்,  மற்றும் பல அதிசயத் தகவல்களைக் கொண்டுள்ளன (எ.கா: 7 மலைகள், 7 கடல்கள் குறித்த தகவல்கள்). வானியல் மற்றும் ஜோதிடக் கருத்துக்கள்: இவரது திருவாய்மொழியில், அன்றைய கால ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் வேலன் வெறியாடல் குறித்த சுவையான குறிப்புகளும், விபூதியின் மகிமையும் இடம்பெற்றுள்ளன.

நம்மாழ்வார் தனது பாடல்களில் ‘Wheel of Time’ எனப்படும் காலச் சக்கரத்தைப் பற்றி விவரித்துள்ளார். இவற்றில் சில சங்ககால மற்றும் அரிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. திருக்குறள் மீதும், வாமன அவதாரம் மீதும் ஆழ்வார் கொண்டுள்ள ஈடுபாடு குறித்தும் காணலாம் .

பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் நம்மாழ்வார். கலியுகத்தைக் கொன்று கிருத யுகத்தை மீண்டும் இப்பூவுலகில் கொண்டுவருவேன் என்று ஆழ்வார் பாடியது, பாரதியை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கட்டுரைகளை எழுதினார்

புத்தர் போதி மரம் என்னும் அரச மரத்துக்கு  அடியில் அமர்ந்து ஞானம் அடைந்ததைப் போல நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்;  இன்றும் அந்தப் புளிய மரம் வணங்கப்படுகிறது.

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 74; இந்து மத கலைச்சொல் அகராதி- , நக்கீரர், நம்மாழ்வார், நாமம்

To be continued………………………….

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் முடிவுரை (Post.15,919)

Written by London Swaminathan

Post No. 15,919

Date uploaded in London –26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திவ்ய தேச வரிசையில் இது கடைசி கட்டுரை 

துவக்கத்திலேயே நான் எழுதியதை மீண்டும் சொல்கிறேன் ; எவ்வளவோ பேர் இந்த 108 திவ்யதேசங்கள் பற்றி எழுதியபோதும் நான் இதை எழுதத் துவங்கியதன் காரணம் ஸ்ரீ  பெரும்புதூர் கோவில் சுவர்களிலும் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவில் சுவர்களிலும் நான் கண்ட  சித்திரங்களை புகைப்படம் எடுத்ததே.

அந்தப் புகைப்படங்களை வீணடிக்க மனம் வராததால் வாசகர்களுடன் பகிர்ந்தேன். பல க்ஷேத்திரங்களில் படங்களை ஐ பேட் I Pad   மூலம் எடுக்க முடியாதபடி இருள் சூழ்ந்து இருந்ததால் 108 படங்களும் இருக்காது; ஆயினும் திருநாங்கூர் என்ற இடத்தில் மட்டும்  11 திருப்பதிகள் ஒன்றாக அமைந்துள்ளன. 108 திவ்ய தேசங்களில் 15 திவ்ய தேசங்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளன. ஆக  இரண்டே ஊர்களில் 26 க்ஷேத்திரங்களைக் கண்டுவிட்டோம் ! எனக்கு முன்னர் இது பற்றி வெளியான கட்டுரைகளின் சுருக்கத்தை நான் சேர்த்து இருந்தேன்; அவர்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.

***

பரமபதம்

தாயார் : ஸ்ரீ பெரிய பிராட்டியார்

மூலவர் : ஸ்ரீ பரமபத நாதன்

தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் இறைவன் பரமபதநாதன், வைகுண்டபதி என்று அழைக்கப்படுகிறான்.

தீர்த்தம் விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி.

திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும்.

இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்ட கத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது.

பரமபதம் (வைகுந்தம்) அடைவது குறித்து ஆழ்வார்கள் பல பாசுரங்களைப் பாடியுள்ளனர். குறிப்பாக, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி 10-ஆம் பத்து 9-ஆம் திருவாய்மொழியான “சூழ்விசும்பு அணிமுகில்” (முதல் பாசுரம்) பரமபத அனுபவத்தை நேரில் காண்பதுபோல விளக்குகிறது:

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலைதிரை கையெடுத்தாடின

ஏழ்பொழிலும் வளமேந்திய என்னப்பன்

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே

“எம்பெருமானின் அடியார்கள் வைகுந்தம் (பரமபதம்) செல்லும் போது, ஆகாயத்தில் உள்ள மேகங்கள் வாத்தியங்களை முழங்கின. ஆழமான கடல்கள் அலைகளெனும் கைகளை உயர்த்தி நடனமாடின. இத்தகைய பெருமைகளை உடைய நாரணனின் அடியார்களைக் கண்டு அனைத்து உலகங்களும் மகிழ்ந்து கொண்டாடின.*

****

வைணவ சித்தாந்தங்களின் படி இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு இறைவனைப் போலவே வடிவம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் இறைவனோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து தொண்டு செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர். நித்ய சூரியாகி இங்கு சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர். இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம் என்பது பொருள். இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பம் “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்றும் பெயருண்டு.

***

பரமபதசோபான பட விளையாட்டு !

இந்துக்கள்தான் போர்ட் கேம்களை Board Games கண்டுபிடித்தனர் என்று லண்டன் மியூசியங்களில் பட்டவர்த்தனமாகப் பொறித்துள்ளனர் நாம் உண்டாக்கிய Chess செஸ் / சதுரங்கம் இன்று உலகம் முழுதும் நமது பெருமையைப் பறைசாற்றி வருகிறது விளையாட்டில் இறைவனையும் மோட்சத்தையும் சேர்த்த ஒரே நாடு பாரதம்தான்! இதில் இறைவனை கீழேபோட்டுவிட்டு Snakes and Ladders ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்று நம்முடைய பரமபத சோபனா படத்தை அவர்கள் இன்றுவரை விற்கின்றனர்; விளையாடுகின்றனர்.

அந்தக் காலத்தில் மதுரையில் புதுமண்டபத்திலுள்ள புஸ்தகக்கடைகளில் இதை வாங்கி இரவும் பகலும் விளையாடினோம் !

பரமபதம் என்னும் இறைவனின் திருநாடு அடைய உதவும் பரமபத விளையாட்டின் மூலம் இறை வழிபாடு வலுவடைகிறது.

பரமன் என்றால் திருமால் என்று பொருள், பரமபதம் என்றால் திருமாலின் இருப்பிடம்- வைகுந்தம்; அதை அடைவதே வாழ்வின் குறிக்கோள்.

நூற்றுக்கும் மேற்பட்ட கட்டங்களுடைய வரை  படத்தின் மீது பல படங்கள் இருக்கும்; தாயக்கட்டங்களை உருட்டி எண்ணிக்கைக்கு ஏற்ப காய்களை ஒவ்வொருவரும் நகர்த்துவார்கள் .

கட்டங்களில் கீழிலிருந்து மேல் நோக்கி காய்களை நகர்த்த வேண்டும். இடைபட்ட கட்டங்களில் ஏணிகளும், பாம்புகளும் வரையப்பட்டிருக்கும். ஏணியில் ஏறினால் புண்ணியம் செய்ததாகவும், பாம்பின் வாய் வழியாக கீழே இறங்கினால் பாவம் செய்ததாகவும் கருதப்படுகிறது இறுதியில் கடைசி கட்டத்தைச் சென்றடைந்தால் வைகுண்டத்த சென்றடைந்ததாக  கருத்து!   இவ்விளையாட்டு பெரும்பாலும் மார்கழி மாத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் விளையாடப்படுகிறது. ஒவ்வெரு கட்டத்திலும் கடவுள்கள், கடவுளால் படைக்கப்பட்ட தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பறப்பன, ஊர்வன, போன்ற அனைத்து ஜிவராசிகள் களும்  உள்ளன; ஒவ்வொரு கட்டமும் ஒரு தத்துவ ஆன்மீக கருத்தை விளக்குகிறது .

***

Tags- பரமபதசோபான படம், திருநாடு, பரமபதம், வைகுந்தம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன், முடிவுரை, கடைசி கட்டுரை 

—subham—

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு– 20 (Post No.15,918)


FRIENDSHIP AGREEMENT SEALED 
 

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,918

Date uploaded in London –   26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

HANUMAN MEETING RAM LAKSHMAN 

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 20

(ஆர், சேஷாத்ரிநாதன்)

பிஹாரி சத்சயி  என்ற நூலில் கவிஞர் பிஹாரி சொல்வதாவது

नर की अरु नल-नीर कीगति एकै करि जोड़।

जेतौ नीचो है चलेतेतौ ऊँचौ होइ ॥

நதி தன் தாழ்வான பாதையில் ஓடுகிறது –
ஆனால் அந்த நீர் பின்னர் மேகமாக, மழையாக,
மலைகளில், மேலே எழுகிறது.

அதுபோல, மனிதன் தன் நடையில், தாழ்மையில்,
தன்னலமில்லாமல் நடந்தால்,
அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

தாழ்வு தான் உயர்வு” – என்பதற்கான ஒரு பாரம்பரிய உவமை.

தாழ்மையும், சீரான நடையும் –
உயர்வு பெறும் மூலக் காரணங்கள்.

நதி ஓடுமடி தாழ்வழியில் –

நன்மைதான் அதில் பிறக்கும்!

மலைகளிலே மேகமாய் –

மறுபிறவி அதில் வரும்!

மனிதனும் அதே நெறியில் –

மடமையின்றி நடக்க வேண்டும்!

தாழ்மையுடன் வாழ்ந்தவனுக்கே –

தரணியில் உயர்வு காத்திருக்கும்!

தாழ்வு என்பது வீழ்ச்சி அல்ல –

தர்மத்தின் வாசல் அது!

நடையில் நிமிர்ந்தவன் அல்ல –

நெஞ்சத்தில் நிமிர்ந்தவனே நாயகன்!

நதி ஓடும் பாதை போல –

நம் வாழ்வும் தாழ்வாக ஓடட்டும்!

உயர்வாகும் அந்த ஓட்டத்தில் –

உன்னதம் தான் பிறக்கட்டும்!

अस कहि परेउ चरन अकुलाई। निज तनु प्रगटि प्रीति उर छाई॥

तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि जुड़ावा॥3

 THINKING WHAT TO DO.

உன்னை மட்டும் தான் நம்புகிறேன் என்று சொல்லும் ஹனுமனைப் போல தன்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறார் துளசிதாசர் இந்த ஸ்லோகத்தின் மூலம்

है तुलसी कें एक गुनअवगुन निधि कह लोग।

भलो भरोसो रावरोराम रिसिवे जोग॥

அதாவது “என்னை (துளஸி) மக்கள் குற்றங்களின் குவியலாகவே சொல்கிறார்கள்,ஆனால் என்னிடம் ஒரு நல்ல குணம் இருக்கிறது –அது உங்கள் மீது (இராமர் மீது) உள்ள முழு நம்பிக்கை.அதனால், இராமா ! நீங்கள் என்மீது தயை கொள்ளத் தகுதியானவர்.”

இவ்வாறு கூறிய அனுமன் இவ்வளவு பேசியும் இராமனிடமிருந்து எந்த பதிலும் வராதது கண்டு மீண்டும் ஸ்ரீ இராமனின் திருவடிகளில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டார். ஹனுமனுக்குச் சந்தேகம் வந்து விட்டது , நாம் சுக்ரீவனுக்காக அந்தணர் வேடம் பூண்டு வந்துள்ளோம்.. ஒரு வேளை இராமன் இதைத் தவறாக நினைத்துவிட்டால் சுக்ரீவனுக்கான வேலையும் நடக்காது. ஆக தாமும் சுக்ரீவனும் அநாதைகளாகி விடுவோம் என்று நினைத்தவன் பிரபுவிடம் ஒளிவு மறைவா? அதனால் அவருடைய பிரம்மச்சாரி வேடம் அகன்று விட்டடது. தனது சுய ரூபம் பெற்றுப் பெருமாளின் திருவடிகளில்  விழுந்து கிடந்தார்.

तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि जुड़ावा॥

सुनु कपि जियँ मानसि जनि ऊना। तैं मम प्रिय लछिमन ते दूना॥

இராமன் மனம் நெகிழ்ந்து போனான். அவன்  கண்களில் நீர் மல்கியது. ஹனுமனைத் தூக்கி மார்புறத் தழுவித்  தனது கண்ணீரால் அவரைக் குளிரச் செய்து “புத்திர! கவலைப் பாடாதே! என் வார்த்தையைக் கேள். உன் மனத்தில் கலக்கம் ஏற்படுத்திக் கொள்ளாதே. நீ இலக்ஷ்மணனுக்குச் சமமாக இந்த அவதாரத்தில் மகாபிரியன்”. இங்கு तब என்பதற்கு எப்பொழுது மனம் வாக்கு காயம் இவை ஒன்று பட்டு தன்னைச் சரணடைந்தாரோ என்ற பொருள்.

 ஹனுமன் இராமனை முதலில் பார்த்ததும் அவரது பாதங்களில் விழுந்தான். அப்பொழுது இராமன் அவனை ஆரத் தழுவவில்லை. ஹனுமன் அந்தண வேடத்தில் இருந்த போது இராமன் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவன் அந்தண வேடத்தைக் களைந்து மீண்டும் வானர வடிவத்திற்கு மாறிய பிறகு அவனைக் கண்ணீருடன் தழுவிக் கொண்டார் . இது எல்லோருக்கும் ஒரு பாடம். அறிவுரை. அந்தப் பரமனின் அருள் வேண்டும் என்றால் கபட வேடம் போடாமல் உள்ளன்புடன் அவனைத் துதிக்கவேண்டும் என்று சொல்கிறார் துளசிதாசர்.

PICTURE OF LAKSHMANA SHOUTING AT SUGREEVA’S WIFE.

பிஹாரி சத்சாயி என்ற நூலில் கவிஞர் பீகாரிலால் இந்தக கருத்தைத்தான் சொல்கிறார்

तौ लगु या मनसदन मैंहरि आर्दै किहिं बाट ।

 विकट जटे जौ लगु निपटखुटै  कपटकपाट ॥

எவனொருவன் கபடங்கள் என்னும் கதவால் தனது இதயக் கதவை மூடி வைக்கிறானோ, அவனது இதயத்திற்குள் இறைவன் பிரவேசிப்பதில்லை என்று சொல்கிறார்.

ஒரு தாய்க்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும்  இரண்டுமே அவளது குழந்தைகளாக இருந்தாலும் முதற்குழந்தையை விட இரண்டாவது குழந்தையின் மீது அன்பு அதிகமாக இருக்கும். அதுபோல ஹனுமனின்   முதல் சரணாகதியை விட இராமனுக்கு  இரண்டாவது சரணாகதி ஏற்புடையதாக இருந்தது., மேலும் இலக்ஷ்மணனைவிட நீ அதிகப் பிரியமானவன் என்று ஹனுமனுக்கு ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறான்..

துளசிதாசர் தனது வினயபத்திரிகா என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார்

जानत प्रीति-रीति रघुराई ।

नाते सब हाते करि राखतराम सनेह-सगाई ॥

-“जानत प्रीति-रीति रघुराई” 

ரகுநாதர் (ராமர்) பாசத்தின் நெறி, பக்தியின் வழி,

உண்மையான அன்பின் நடைமுறை ஆகியவற்றை நன்கு அறிந்தவர்.

“नाते सब हाते करि राखत” –

அவர் உறவுகள், சம்பந்தங்கள், பந்தங்கள் ஆகியவற்றை விலக்குகிறார் –

ஏனெனில் அவை மாயை சார்ந்தவை.

PICTURE OF VALI AND SUGREEVA.

“राम सनेह-सगाई” –

அவர் பக்தியின் பாசத்துடன் மட்டுமே உறவாடுகிறார்.

பக்தி என்பது அவரின் உண்மையான உறவு.

– உறவுகள் எல்லாம் மாயைதான் –

உண்மைதான் பக்தியின் பாசம்!

ராமன் அறிந்த நெறிதான் இது –

இலக்ஷ்மணன் இராமனின் தம்பி. ஆனால் சுமித்திரை சொன்னது போல அவன் இராமனுக்கு ஒரு வேலைக்காரன் போன்று பணி செய்கிறான். அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. காரணம் அண்ணன் ஒரு தந்தைக்குச் சமம். அண்ணனுக்குப் பணிவிடை செய்யவேண்டியது அவன் கடமை. ஆனால் இராமனுக்கும் ஹனுமனுக்கும் எந்தவித உறவும் இல்லை.. ஹனுமன் ஒரு மனிதனும் அல்லன். ஆனாலும் இலக்ஷ்மணனைவிட ஹனுமான் தனக்கு அதிகமாகப் பிரியமானவன் என்று சொல்கிறான் இராமன். இதைத் தான் உத்தர காண்டத்திலும் இராமன் அனுமனைப் பார்த்துச் சொல்லுகிறார்

सब मम प्रिय नहिं तुम्हहि समाना। मृषा न कहउँ मोर यह बाना॥

सब कें प्रिय सेवक यह नीती। मोरें अधिक दास पर प्रीती॥4

“எல்லோரும் எனக்கு அன்பானவர்கள் ஆனால் உனக்குச் சமமாக அல்ல. நான் பொய்  சொல்வதில்லை இது எனது இயல்பு. சேவகர்களை விட அடியார்கள்தான் எனக்குப் பிரியமானவர்கள்” என்று இராமன் சொல்வதாகத் துளசி தாசர் சொல்கிறார்.

இங்கு துளசி தாசர் तैं मम्र प्रिय लछिमन तें दूना” என்று சொல்கிறார்.  அதாவது இலக்ஷ்மணன் எனக்கு மட்டும் பணிவிடை செய்கிறான். நீ எனக்கும் இலக்ஷ்மணனுக்கும் பணிவிடை செய்யப்போகிறாய். அதனால் தூனா என்ற வார்த்தையைப் போடுகிறார்.  ஹனுமான் தனது இயல்பான வானர உருவத்தைவிட்டு அந்தண வேடமிட்டு வந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். இராமன்  दूना என்று சொல்லி அவருடைய வருத்தத்தைப் போக்கிவிட்டான். ஒரு சில உரையாசிரியர்கள் இங்கு இராமன் இலக்ஷ்மணனும் நீயும் இருவரல்ல ஒருவரே என்று சொல்வதாகச் சொல்கின்றனர்.

இலக்ஷ்மணன் இராமனின் பாதுகாப்பாளன். कछुक दूरि सजि बान सरासन। जागन लगे बैठि बीरासन॥  வனத்தினுள் வந்த நாளிலிருந்தே தனது வேலையைத் திறம்படச் செய்பவன். இனி ஹனுமன் இலக்ஷ்மணனின் பாதுகாவலன்.. ஹனுமனின் பன்னிரண்டு பெயர்களுள் लक्ष्मणप्राणदाता च दशग्रीवस्य दर्पहा।’ (सुदर्शनसंहिता)  இதுவும் ஒன்று. மீதி பெயர்கள் என்னென்ன

हनुमानजानसुनुर्वायुपुत्रो महाबल :
रामेष्ठ: फाल्गुनसख: पिंगाक्षोमितविक्रम : 1
उदधिक्रमणश्चैव सीताशोकविनाशन :
लक्ष्मणप्राणदतश दशग्रीवस्य दर्पहा

============================================

समदरसी मोहि कह सब कोऊ । सेवक प्रिय अनन्य गति सोऊ॥ ८॥

दो०–सो अनन्य जाके असि मति न टरइ हनुमंत।

में सेवक सचराचर रूप स्वामि भगवंत॥ ३॥

                          **                            தொடரும்

யானைகளும் கூட துயரத்தில் பங்கு கொள்ளும்! (Post.15,917)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,917

Date uploaded in London – 26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

யானைகளும் கூட துயரத்தில் பங்கு கொள்ளும்! 

ச. நாகராஜன்! 

யானைகளும் கூட மனிதர்கள் போல துயரத்தில் பங்கு கொள்ளும் என்பதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் மிருக இயல் பிரிவைச் சேர்ந்த ஐயான் டக்ளஸ் ஹாமில்டன் (Ian Douglas Hamilton) ஒரு சம்பவத்தின் மூலம் அறிவதாக தன் ஆய்வின் முடிவில் கூறியுள்ளார். இதை அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ள அறிவியல் இதழான Applied Animal Behaviour Science -இல் எழுதியுள்ளார்.

Save the Elephants – யானைகளைக் காப்பாற்றுங்கள் என்ற அறக்கட்டளைக்கு இவர் நிதி உதவியும் அளித்துள்ளார்.

அவர் எடுத்துக்காட்டும் சம்பவம் 2006ம் ஆண்டு நடந்த ஒன்று.

கென்யாவில் உள்ள யானைகளைப் பாதுகாக்கும் முகாம் ஒன்றில் எலினார் என்ற பெயர் கொண்ட ஒரு யானை நோய்வாய்ப்பட்டது. சிகிச்சை பலனின்றி அது உயிரையும் இழந்தது.

அதற்குப் பாதுகாப்பாக இருந்து உதவி செய்யும் உதவியாளரின் பெயர் க்ரேஸ். கீழே விழுந்து விட்ட எலினாரை அதன் துதிக்கையை வைத்து எழும்படி செய்தார் அவர். பின்னர் மீண்டும் ஒரு முறை அது கீழே விழுந்தது. இந்த முறையும் க்ரேஸ் அதை எழும்படி செய்ய முயன்றார். ஆனால் பலனில்லை. அது இறந்தே விட்டது. 

இறந்த யானையைச் சுற்றி யானையின் சொந்தக் குடும்பத்தில் உள்ள இதர யானைகள் குழுமி தங்கள் மரியாதையைச் செய்தன.  அது மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தைச் சேராத இதர யானைகளும் எலினார் விழுந்த இடத்திற்கு விரைந்து வந்தன. மிகவும் வருந்தின.

அவை தமது துக்கத்தை எப்படி தெரிவித்தன என்பதை விஞ்ஞானிகள் கண்டனர்.

தங்கள் துதிக்கையால் இறந்த யானையை அவை முகர்ந்து பார்த்தன. ஒரு அடிக்கு மேலே தங்கள் துதிக்கைகளைச் சுழற்றின. அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தன.

“இது எதைக் காட்டுகிறது என்றால் யானைகளுக்கும் துக்கம் உண்டு, அதைத் தெரிவிக்கும் முறையும் உண்டு என்பதைத் தான்” என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது இறந்த யானையின் குடும்பத்தைச் சேர்ந்த யானைகளுக்கு மட்டுமல்ல, இதர யானைகளுக்குமான ஒரு வழி முறை என்பதை அவர்கள் கண்டு வியந்தனர்.

 ஆகஸ்ட் 2006 மாதம் வெளியாகியுள்ள அப்ளைட் அனிமல் பிஹேவியர் ஸயின்ஸ் (Applied Animal Behaviour Science) பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் இது விவரிக்கப்பட்டிருக்கிறது.

** 

ஆதாரம், நன்றி : ட்ரூத் வார இதழ் தொகுதி 74 எண் 19 25-8-26 தேதியிட்ட இதழ்