March 2026 Calendar with Golden Sayings from Kumaresa Satakam (Post.15,465)

Thanjavur Pictures taken by A Narayanan, Sydney, Australia

Written by London Swaminathan

Post No. 15,465

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Festival Days- March 03 Tue Lunar Eclipse, Holi, Masi Magam, Full Moon Day; 08 Sun International Women’s Day; 14 Sa Karadaiyan Nonbu; 15 Sun Ekadasi Fasting; 19 Thu New Moon Day, Ugadi New Year Day; 21 Sat Ramadan; 27 Fri Rama Navami; 29 Sun Ekadasi; 31 Tue Mahavir Jayanthi

Auspicious Days March 5,6, 8, 15 16, 25

Kumaresa Satakam is an 18th-century Tamil literary work consisting of 100 poems (stanzas) praising Lord Muruga (Kumaresan), often attributed to the poet Gurupatha Dasar. It is a didactic text that offers profound insights into life, human nature, and morals through maxims and proverbs. Following is a rough translation of the Tamil verses.

March 1 Sunday

Benefits to mankind: The rain giving clouds, Generous/kind hearted king, The water from the lake in the country, The shade of the tree where people gather, The agriculture of the farmer.

***

March 2 Monday
Benefits to mankind: The tree bearing lots of fruits that grow in a place beneficial for the people. Free Drinking Water distribution centres  in public places. The spring that has water flowing like the river Kaveri.

***

March 3 Tuesday

The rays of the Sun and the Moon, The gentle breeze, the wealth in the hands of a wiseman, all of above-mentioned things will benefit many in the country.

***

March 4 Wednesday

Effects of Kaliyuga (Iron Age): Children not following the advice of their mother. They fight with their respectable father; their guru is being insulted. People don’t think about the real God.

***

March 5 Thursday
Effects of Kaliyuga (Iron Age) : Ghost like people are hailed as Gods. People hear to the wife shouting and scolding them. Words of the wise people are neglected.

***

March 6 Friday
Effects of Kaliyuga (Iron Age) : Great people are being denigrated and mean and useless people increase. Cowards are honoured as war heroes.

***

March 7 Saturday

Goddess of Wealth Lakshmi sticks to those who are truthful ; they will shine in life. They will be compassionate.

***

March 8 Sunday

Those who are devoted to God will be a terror to their enemies. They will be the source of compassion and justice.

***

March 9 Monday

Gods are those who provide food for the poor; teacher is god for the pupils; those who shelter to the refugees.

***

March 10 Tuesday

Husbands are Gods for wives; kings are gods for the people; fathers are gods for their sons.

***

March 11 Wednesday

Gods are their relatives for those who are born in high castes; devotees of Lord Siva are gods for the faithful; Lord Skanda is god for the people in the heaven; Brahmins are gods for the low-class people (This last line is found in old versions; but Dravidians has changed it now).

***

March 12 Thursday

Saints always think about liberation (Moksha); wise men think about Dharma/rules and regulations; ruler think about the welfare of the people.

***

March 13 Friday

Sex maniacs always think about women; frauds think about cheating the public; businessmen think about gains; farmers think about their fields; prostitutes target the wealthy; students think about their education; honourable people expect respect. I (author of the verse) always think about Lord Kumara/Skanda.

***

March 14 Saturday

Prostitutes lack truth; thieves have no relatives; poor never think about prostitutes; rude people lack love and affection.

***

March 15 Sunday

Rulers lack gratitude; mlechas/foreigners lack character. Lovers lack shyness; good hearted devotees don’t care about rules for worship; poets lack enemies (all are their friends).

***

March 16 Monday

A ruler is the one who follows the Raja Dharma (established rules); a minister is the statesman who gives proper advice; a hero is the one who does not care about his life.

***

March 17 Tuesday

A poet is the person who knows the prosody and old literature; a doctor is the one who has learnt the medical books and the anatomy; a wiseman is the person who has full control over his five senses.

***

March 18 Wednesday

Better to have intercourse with your wife twice a month; and that woman should have black hair (don’t go to bed with her when she becomes grey haired) one should have oil bath twice a week.

***

March 19 Thursday

Take laxatives to clean your stomach twice a year.

Have curd, butter milk, ghee, hot milk and tender coconut water every day.

***

March 20 Friday

Murderers, and those who left their parents in a miserable state also go to hell. Cowards who let their kings down in the battlefield go to hell; so do students who violated teacher’s command.

***

March 21 Saturday

Those who have illegal intimacy with others’ wives, and those who show ingratitude to the people who provided them food fall in hell.

***

March 22 Sunday

Those who denigrate gods and saints fall into hell; so do who insult the devotees of Lord Siva.

Liars and the people who covet others’ properties fall into hell.

***

March 23 Monday

Qualities of Great men are like Gold which does not change even when it is melted; lie sandal wood which gives fragrance even when it is rubbed hard; they are like white conches which remains white even when it is burnt.

***

March 24 Tuesday

Qualities of Great men are like milk which tastes good even when it is heated and they are like iron weapons which shine even when they are put in grindstone.

***

March 25 Wednesday

Daytime shines because of sun;  Night time becomes bright due to moon; land becomes fertile due to rain; in the same way husband becomes great because of his wife.

***

March 26 Thursday

A horse gets appreciated because of its speed; citizens are protected by the king; character makes one beauty; music becomes perfect with tuning box; human body becomes beautiful because of healthy food

***

March 27 Friday

Sweet words are the sign of compassion; giving makes one famous; flowers are liked because of its fragrance; happiness makes face bright; Yagas are made great by Vedic chanting; truth makes the words respectful.

***

March 28 Saturday

Place of birth is immaterial; it won’t make one great: even when crows are born in beautiful gardens, they could not become cuckoos; even when weeds are grown in flowerpots, they are not considered flowers.

***

March 29 Sunday

Place of birth is immaterial; it won’t make one great: when rabbits are born in forest, they are not equal to calves of elephants; even if snails have shells, they are not used as conches; even when dullards born in a wiseman’s family he is not considered wise. White salt produced by the vast sea does not become sugar

***

March 30 Monday

Best in each category: sandal among the trees; Ganges among the rivers; Kashmir among the regions; Chidambaram among the shrines; Vasishtha among Rishis; Narada among the Munis.

***

March 31 Tuesday

Best in each category: Ruby among Gems; Arundhati among women; Airavata among elephants; Kamadhenu among cows; Meru among the mountains; Agaththiyam in Tamil; Milky ocean among the seas; Pranava among the Mantras.

–Subham—

Tags- March 2026 Calendar, Golden Sayings, Kumaresa Satakam, Gurupada Dasar

மார்ச் 2026 காலண்டர்- குமரேச சதகம் பொன்மொழிகள் (Post No.15,464)

Rama in ivory;picture by A Narayanan, Sydney, Australia.

Written by London Swaminathan

Post No. 15,464

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் பொன்மொழிகள்

காஷ்மீரே சிறந்த இடம்! குருபாததாசர் கண்டுபிடிப்பு! —11 (Post No.14,590) Date uploaded in London –  4 June 2025 என்ற கட்டுரையில் முதல் 24  பாடல்களில் உள்ள விஷயங்களை கண்டோம். இதோ மேலும் 31  பொன்மொழிகள்.

பண்டிகைகள் :-

மார்ச் 03 Tue சந்திர கிரஹணம், ஹோலி,/மாசி மகம் , பௌர்ணமி விரதம் , பௌர்ணமி; 08 Sun உலக மகளிர் தினம்; 14 Sat காரடையான் நோன்பு; 15 Sun                ஏகாதசி விரதம் , சபரிமலையில் நடை திறப்பு;  19 Thu  அமாவாசை , யுகாதி, தெலுங்கு வருஷப் பிறப்பு; 21 Sat          ரம்ஜான் ; 27 Fri     ஸ்ரீராமநவமி; 29 Sun ஏகாதசி விரதம் ; 31 Tue            மகாவீரர் ஜெயந்தி.

      மார்ச் சுப முகூர்த்தம்- 5,6, 8, 15 16, 25

மார்ச் 1 ஞாயிற்றுக் கிழமை

அந்தணர்க்கு பலம் தருவது வேதம் .க்ஷத்ரியர்க்கு பலம் வீரம்.

வைச்யர்களுக்கு பலம் தருவது நிதி/ செல்வம் ; வேளாளர்க்கு பலம் என்பது உழவுத் தொழில்

***

மார்ச் 2 திங்கட் கிழமை

மந்திரிக்கு  பலம் தருவது சதுர் உபாயம், அதாவது சாம தான பேதா  தண்டம்;  நீதி மானுக்கு பலம் நாடு நிலைமை ஆகும்; சன்யாசிகளுக்குப் பலம் தவம் செய்வது ; பெண்களுக்குக் கற்பு பலம்.

***

மார்ச் 3 செவ்வாய்க் கிழமை

சான்றோர்க்கு பொறுமை பலம்; புலவர்க்கு நல்ல கலவி அறிவு பலம்

***

மார்ச் 4 புதன் கிழமை

தக்க தருணத்தில் உதவி செய்யாத நபர்கள் இருந்தும் பயனில்லை; தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான்.

***

மார்ச் 5 வியாழக் கிழமை

ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்

     பெற்றென பெறாமலென்ன! அன்பிலாதவர் நட்பும் பயனற்றதே.

***

மார்ச் 6 வெள்ளிக் கிழமை

மானமற்ற பிழைப்பு பிழைப்பே அல்ல ; கொடு என்று கெஞ்சுவோருக்குக் கொடுக்காத செல்வம் இருந்தென்ன போயென்ன

***

மார்ச் 7 சனிக் கிழமை

இளமைப் பருவத்தில் திருமணம ம்  செய்யாத பெண் பயனற்றவளே

***

Siva Linga, Lepakshi; picture by A Narayanan, Sydney.

மார்ச் 8 ஞாயிற்றுக் கிழமை

கடல் நீரும், காட்டில் பூக்கும் மலரும் காட்டில் பெய்யும் மழையும் நாயின் பாலும், கருவேல மரத்தின் பழமும் பயனற்றவைதான்

***

மார்ச் 9 திங்கட் கிழமை

கழுதை லத்தி குவியல் குவியலாக கிடைத்தும் என்ன பயன்? அழகு இருந்து குணமில்லாத பெண்ணும் யாருக்கும் பயனில்லை; சபையில் பேச அஞ்சும் அறிஞனாலும் பயனில்லை.

***

மார்ச் 10 செவ்வாய்க் கிழமை

பூதம் காத்திருக்கும் தங்கத்தால் பயன் உண்டா ? அடர்த்தியான கரடி மயிரினால் ஆடை நெய்ய முடியுமா?

***

மார்ச் 11 புதன் கிழமை

தற் பெருமை பேசி எப்போதும்  தன்னைப் புகல்பவன் நெல்லில் உள்ள பதர் போன்றவனே;  போர் என்றவுடன் பயந்து ஓடுபவனும், பெரி யோர்புத்தி கேளாதவானும் பதருக்குச் சமம்.

***

மார்ச் 12 வியாழக் கிழமை

பிறரைப் பற்றி அவர் போனவுடன் குறை கூ றுவோனும், பெற்றதாய் தந்தையரைத் துன்பத்தில் வாழ வைப்போனும், பெண்புத்தி கேட்டு  நடப்போனும் பதர்.

***

மார்ச் 13 வெள்ளிக் கிழமை

பணம் இருந்தும் பிறரிடம் யாசகம் கேட்போனும் பொய்ச்சாட்சி சொல்லும் மனிதர்களும் பதர் போன்றவர்களே.

***

மார்ச் 14 சனிக் கிழமை

சூரிய ஒளியே புகாத இருந்த காடு , மழையே பேயாத இடத்தில் உள்ள பயிர், அன்புடன் போடப்படும் உணவு ஆகியன விரும்பத் தக்கதல்ல.

***

மார்ச் 15 ஞாயிற்றுக் கிழமை

தாயைக் காணாத குழந்தை, பசுவினைக் காணாத கன்று சோலைகள் இல்லாத இடத்திலுள்ள வந்து முதலியன பரிதாபத்துக்குரியவை ஆகும்.

***

மார்ச் 16 திங்கட் கிழமை

பெரியோர் இல்லாத சபையும், கணவர் இல்லாத பெண்களும் மேகமே காணாத மயில்களும், குழந்தை பெறாத மலடிகளும் ; வசந்தம் காணாத குயில்களும் ஒரே நிலையில் உள்ளவைதான்

***

மார்ச் 17 செவ்வாய்க் கிழமை

வரவுக்கேற்ற செலவு செய்யாதவனும் இளமையில் நல்ல வாழ்வு அமையாதவனும் ஒரே நிலையில் உள்ளவர்களே.

***

மார்ச் 18 புதன் கிழமை

அதிக உணவு உண்ணுதலும், கவலையாலும், மலஜலத்தை அடக்குவதாலும் வியாதிகள் உண்டாகும்.

***

மார்ச் 19 வியாழக் கிழமை

சாப்பாட்டில் நெல்லும் உமியும் இருக்கக்கூடாது ; சரியான அளவு தூக்கம் இருக்க வேண்டும் ; தண்ணீரிலும் பனியிலும் நீண்ட நேரம் இருக்கக்கூடாது இவைகளை மீறுவது நோய்களுக்கு வழிவகுக்கும் .

*** 

மார்ச் 20 வெள்ளிக் கிழமை

அதிக உடலுறவு கொள்வதாலும் மலச் சிக்கலாலும் அதிக பாரத்தைச் சுமப்பதாலும் இளம் வெய்யிலில் உலவுவதாலும் உடல் நோக வேலை செய்வதாலும் நோய்கள் தோன்றும்.

***

மார்ச் 21 சனிக் கிழமை

இரவில் தயிர் சாப்பிடக்கூடாது ; ஜீரணமாகாத கடினமான பொருள்களைச்  சாப்பிடக்கூடாது ; இவைகளை நோய்களை உண்டாக்கும்.

***

மார்ச் 22 ஞாயிற்றுக் கிழமை

எல்லோருக்கும் உதவி செய்தவரும், பொதுமக்களுக்கான கிணறு வெட்டியோரும் ஆலயங்கள் கட்டியோரும் இறந்தாலும் என்றும்  புகழோடு வாழ்பவர்களே.

***

மார்ச் 23 திங்கட் கிழமை

புகழ் பெற்ற புதல்வர்களைப்  பெற்றவர்களும் போரில் வெற்றிபெற்ற வீரர்களும் , பூமியில் அழியாத தருமங்கள் செய்தொரும் இறந்தும் இறவாதவர்களே.

***

மார்ச் 24 செவ்வாய்க் கிழமை

பெரிய கொடையாளர், காவியம் செய்த கவிஞர்கள் , பத்தினிப் பெண்களை மணந்தோர் ஆகியோரும் இறந்தும் இறவாதவர்களே.

***

மார்ச் 25 புதன் கிழமை

மாறாத வறுமையோர் தீராத பிணியாளர், மனைவியை வழங்கியே சீவனம் செய்குர் உயிருடன் செத்தசவம் ஆகி மாய்வர்..

***

மார்ச் 26 வியாழக் கிழமை

பல்லக்கு  சுமந்தே பிழைக்கின்றவர்கள், சொற்பிழை உடையோர் , மனையாள் தனக்கஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்துவிடுவோர், வீம்புடன் செல்லாத விஷயங்களுக்கு கோர்ட்டுக்குப் போவோர் இருந்தும் இறந்தவர்களே.

***

மார்ச் 27 வெள்ளிக் கிழமை

பணந் தேடிப் புதைத்துவைப்பார், நல்அமுது  செய்து  உண்ணாதவர்கள்  தருமம் செய்யாதவர்கள் கருமிகள் ஆவர்.

***

மார்ச் 28 சனிக் கிழமை

பொய்வார்த்தை சொல்லாத     நல்லோ ரிடந்தன்னிலும்

நல்லசுப லட்சண மிகுந்தமனை தன்னிலும்     ரணசுத்த வீரர்பாலும் லெட்சுமி வசிப்பாள்.

***

மார்ச் 29 ஞாயிற்றுக் கிழமை

யானையிடத்திலும் கங்கா சலத்திலும், தாமரையிலும், விஷ்ணுவின்  மார்பிலும் அரசரிடத்திலும் லெட்சுமி தங்குவாள்.

***

மார்ச் 30 திங்கட் கிழமை

துளசியிலும்  வில்வத்திலும் கடப்பமலர் தனிலும், இரதத்திலும்,  குணம் உடைய பெண்ணிடத்திலும் ,திருமகள் வாழ்கிறாள்.

***

மார்ச் 31 செவ்வாய்க் கிழமை

மனத்தில் கடும்பகை இருப்பதைக் கடுத்த முகத்தினால் அறியலாம்;     மாநிலப் பூடுகளெலாம் மழையினால் அறியலாம்; நல்லார்பொல்  லார்தமை அவர்கள் பெற்ற பிள்ளைகளால் அறியலாம்.

—subham—

Tags- மார்ச் 2026 காலண்டர், குமரேச சதகம், பொன்மொழிகள்

திருப்புகழில் ஐந்து கலைகள்,  ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463)


Written by London Swaminathan

Post No. 15,463

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part34

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 34

***

பஞ்சாட்சர விளக்கம்

மதியம் மண் குணம் அஞ்சு நால் முக(ம்) நகர(ம்) முன்கலை …

சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.*1 (அந்த மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்)

 என்னும் எழுத்தையும், (பஞ்ச*2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது.

கங்கை நால் குண(ம்) மகரம் … நீர் (அப்பு மண்டலம்)

நான்கு*3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் ம என்னும்

எழுத்தைக் குறிக்கும்.

முன் சிகர(ம்) அங்கி மூணிடை தங்கு கோண(ம்) … அப்பு

மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில்

சி என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்)

மூன்று*4 குணமும் முக்கோணமும் கொண்டது.

மதனம் முன் தரி சண்ட மாருதம் இரு குணம் பெறில் அஞ்சு

எல் ஓர் தெரு வகரம் … அழித்தல் தன்மையை தன்னிடத்தே

கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு*5

குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி

பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண

வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள வா என்னும் எழுத்தைக் குறிக்கும்.

மிஞ்சி அகன் படாகம் ஒர் ஒன்று சேரும் கதிர் அடங்கிய

அண்ட கோளகை யகர(ம்) நின்றிடும் … விரிந்துள்ள ஆகாயம்

ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்தஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும்.

(இ)ரண்டு கால் மிசை ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால்

பரி கந்து பாயும் … (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு

அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை,

பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும்.

கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்

கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் …

(அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க,

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும்

மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர

சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்?

அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து

பேரிகை டகுட டண்டட தொந்ததோதக என்று தாளம்

அதிக … ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க,

விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு இத விதம் பெறு சிந்து பாடிட

அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு …

பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர்

என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை

வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட

ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே

மேலெழுந்து பொங்க,

உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை

உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ உறு சினம்

கொண்டு எதிர்த்த சேவக … இரத்தப் பெருக்கின் வெள்ளம்

எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும்

மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே,

மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற உரகனும் புலி கண்ட ஊர்

மகிழ் தம்பிரானே. … மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர்

வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான

வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய

சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.

*1 – மண்ணின் ஐந்து குணங்கள்:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

*2 – ஐந்து கலைகள்:

நிவிர்த்திகலை – ஆன்மாக்களை பாசத்தினின்று விடுவிப்பது.

பிரதிஷ்டாகலை – ஆன்மாக்களை முக்தியில் உய்ப்பது.

வித்யாகலை – பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது.

சாந்திகலை – ஆன்மாக்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது.

சாந்தியதீதகலை – சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.

*3 – நீரின் நான்கு குணங்கள்:

சப்தம், பரிசம், உருவம், ரஸம்.

*4 – தீயின் முக்குணங்கள்:

சப்தம், பரிசம், உருவம்.

*5 – வாயுவின் இரண்டு குணங்கள்:

சப்தம், பரிசம்.

****

மாணிக்க வாசகர் பற்றி

குருவின் உரு என அருள் செய் துறையினில் குதிரை கொள

வரு நிறை தவசி தலை கொற்றப் பொன் பதம் வைத்திட்டு

அற்புதம் எற்றிப் பொன் பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும்

முதல்வர் … குருவாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறையில் (அரசனுக்காக) குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டிஅற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டருளிய முதன்மையரான சிவ பெருமான்.

இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு

புயர் கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ விட்டத் திக்கு

அணை நக்கர்க்கு அற்புத குமரன் என … இளம் பிறை நிலவை

அடைந்துள்ள சடையினர். சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த

அழகிய புயத்தினர். இறுமாப்பும் சேட்டையும் கொண்ட திரிபுராதிகள்

கேடுற்று அழியும்படிச் செய்து, திக்குக்களை எல்லாம் ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவனே,

***

மனத்துக்குக் கட்டளை

மனமே உனக்கு உறுதி புகல்வேன் … மனமே, உனக்கு உறுதி

தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன்,

எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே … என்

சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக.

மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு … மயிலை வாகனமாகக்

கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர்,

மனமாயை யற்ற சுக மதிபாலன் … மனம், மாயை என்பதெல்லாம்

இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை.

நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு … உனக்கு

வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும்

உனக்குத் தந்தருளி,

மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன் … மும்மலங்களில்

(ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல

ஒளியுருவானவர்,

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம … சங்க நிதி, பதுமநிதி,

கற்பக மரம்* போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரேமுழு முதற் கடவுள்.

நிழல் ஆளியைத் தொழுது வருவாயே … நீதிமான், அத்தகைய

பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக.

மனம் பற்றி பாரதியார்

பாரதியாரின் நீண்ட கவிதையில் கடைசி பகுதியை மட்டும் தருகிறேன்

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்;

இத்தனை நாட்போல இனியும் நின்னின்பமே

விரும்புவன்; நின்னை மேம்படுத்திடவே

முயற்சிகள் புரிவேன்; முத்தியும் தேடுவேன்;

உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட

சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி

உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்.

மனம் பற்றி பகவத் கீதை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்

அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் ஊசலாடிகொண்டுமோய்வற்றும் இருக்கும் அதைக் காப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். அம்பு செய்பவர்கள் அதை எப்படிக் கூராகச் செய்வார்களோ அதே போல அறிவாளிகளும் அதை நேராகவும் கூராகவும் வைப்பர் (33)

மனம் ஒரு புலி

ஆதிசங்கரர் மனதையும் எண்ணத்தையும் புலிக்கு ஒப்பிடுகிறார். ஐம்புலன்கள் செயல்படும் அடர்ந்த காட்டில் மனது என்னும் கொடும் புலி வசிப்பதால், முக்தியை நாடுவோர் அந்தக் கட்டுக்குள் அகப்படாமல் இருக்க வேண்டும் (விவேக சூடாமணி 176)
ஆதிசங்கரரின் வினா – விடை துதியிலும் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) மனதைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன.

மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமான செயல் எது என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் “ எப்போதும் மனதைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே” என்பார்.

***

வினைகளைப் பொடியாக்கு!

தேன் உந்து முக்கனிகள் … நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,

பலா, வாழை)

பால்செங் கருப்பிளனிர் … பால், சிவந்த கரும்பு, இள நீர்

சீரும் … இவைகளின் இனிப்பின் சிறப்பையும்

பழித்த … (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)

தாழ்மைப்படுத்துகின்ற

சிவம் அருள் ஊற … மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்

பெருகவும்,

தீதும் பிடித்தவினை யேதும் … தீவினைநல்வினை முழுவதும்

பொடித்துவிழு … தூள்பட்டு ஒழியவும்,

சீவன் சிவச்சொருபம் … இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது

என தேறி … என்று நன்கு தெளிந்து,

நானென்ப தற்று … அகங்காரத்தை அடியோடு நீத்தும்,

உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று … உயிர்ப்பற்று, உடற்பற்று

இரண்டையும் அகற்றியும்,

வெளிநாதம் பரப்பிரம … (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள

அருள்நாதப் பிரம்மமாம்

ஒளிமீதே … பரஞ்ஜோதியில்

ஞானம் சுரப்ப … சிவ ஞானம் பெருகிவரவும்,

மகிழ் ஆனந்த சித்தியொடு … மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோட்சத்தில்,

எநாளும் களிக்க … அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு

பதம் அருள்வாயே … நின் திருவடியைத் தந்தருள்வாயாக

***

உடல் ஒரு பொம்மை

பனியின் விந்(து) துளி போலவே கருவின் உறு அளவில் …

பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில்,

அங்கு ஒரு சூசம் ஆய் மிளகு துவர் … அவ்விடத்தில் ஒரு

அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய்,

பனை தெ(ன்)னங் கனி போலவே பல கனியின் வயிறு

ஆகி … பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப்

பழ அளவுக்கு வயிறு பெரிதாகி,

பருவமும் தலை கீழதாய் நழுவி நிலம் மருவி … (பூமிக்கு

வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப்

பூமியை அடைந்து,

ஒன்பது வாசல் சேர் உருவம் உள பதுமையின் செயல்

போலவே வளி கயிறின் உடன் ஆடி ம(ன்)ன … ஒன்பது

துவாரங்களைக்* கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது,

விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து அழுது

ஆறியே … இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மலசலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும்,

அ(ன்)னை முலையின் மயம் அயின்று ஒரு பாலனாய் இகம்

உடைய செயல் மேவி … தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு,ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து,

வடிவம் முன் செய்த தீமையால் எயும் உனையும் அற மறந்து

அகம் மீது போய் … உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர,

தின(ம்) தினமும் மனம் அழிந்து உடல் நாறினேன் இனி

உனது கழல் தாராய் … நாள்தோறும் மனம் உடைந்து, உருக்

குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து

அருள்வாயாக.

–subham—

Tags- திருப்பபுகழ், அருணகிரிநாதர், ,அரிய செய்திகள் Part 34

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு  – 5 (Post.15,462)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,462

Date uploaded in London –  27 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

கிஷ்கிந்தாக் காண்டத் தொடக்கம் சர்கம் 1 

कुन्देन्दीवरसुन्दरावतिबलौ विज्ञानधामावुभौ

शोभाढ्यौ वरधन्विनौ श्रुतिनुतौ गोविप्रवृन्दप्रियौ।

मायामानुषरूपिणौ रघुवरौ सद्धर्मवर्मौ हितौ

सीतान्वेषणतत्परौ पथिगतौ भक्तिप्रदौ तौ हि नः ॥1 

இங்கு இராம இலக்ஷ்மணர்களை துளசிதாசர்  வணங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆரம்பத்திலேயே நமக்கு வேலை கொடுத்துவிட்டார் துளசிதாசர். ஸ்லோகத்தின் பொருள் என்ன?

 இறைவன் இராமன் மல்லிகைப் பூ போலவும் தாமரை மலரைப்  பூ போலவும் அழகானவர் வசீகரமானவர் விதிவிலக்காக வலிமையானவனவர்   சக்திவாய்ந்தவர். உயர்ந்த ஞானம் . மற்றும் புலமையின் களஞ்சியம். மகத்துவம்  மற்றும் கருணை ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர். சிறந்த வில்லாளி. வேதங்களால் பாராட்டுப் பெற்றவர். பிராம்மணர்களால் (சமுகத்தின் முதியவர்கள் மற்றும் கற்றவர்களால்) நேசிக்கப்படுபவர் தனது உண்மை அடையாளத்தை மறைக்க மானுட வடிவம் எடுத்தவர, ரகு வம்சத்தின் மன்னர்களில் சிறந்தவர்,  உயர்ந்தவர், தர்மத்திற்கு ஒரே கேடயம் போன்றவர், அனைவரின் நலவிரும்பி, வனத்தில் பயணித்து விடாமுயற்சியுடன் சீதையைத் தேடி வருபவர், அந்த இறைவன் நமக்கு பக்தியின் வரத்தை வழங்குவானாக   …………….ஒரு சில உரையாசிரியர்கள் இவ்வாறு இந்த காண்டத்தை ஆரம்பிக்கின்றனர். 

ஒரு சிலர்  இவ்வாறு சொல்கின்றனர்…..முல்லை மலர் போலவும்,  நீல ஆம்பல் போலவும், மஞ்சள் நீல  நிறமுடையவர்கள், மிக்க வலிமையானவர்கள், விஞ்ஞானத்தின் உறைவிடங்கள், பொலிவு உள்ளவர்கள், சிறந்த வில்லாளிகள், வேதங்களால் கொண்டாடப்படுபவர்கள், பசுக்கள் அந்தணர்கள் கூட்டத்திற்கு பிரியமானவர்கள், மாயையாக மனித வடிவெடுத்தவர்கள், அனைவருக்கும் நன்மை புரிபவர்கள். சீதையைத் தேடுவதில் முனைந்து வழிநடப்பவர்கள், அத்தகைய ரகுகுலத்தின் சிறந்த சகோதரர்களான இருவர் நமக்கு பக்தியை அளிக்கட்டும். 

முதல் சுலோகம் இராமனை மட்டும் குறிக்கிறது. 

இரண்டாவது சுலோகம் இராம இலக்ஷ்மணர்களைக் குறிக்கிறது.

 அதாவது சீதையைத் தேடி இராமனும் இலக்ஷ்மணனும் காட்டில் சென்றதால் இந்த சுலோகம் இருவரையும் குறிக்கும் என்று ஒரு சில அறிஞர்கள் சொல்லுகின்றனர். ஒரு சில அறிஞர்கள் ரகு குலத்தின் புகழ் பெற்றவர, 

மூத்தவர் என்று பொருள்படும் रघुवरौ  raghuvarau என்ற சொல் இருவரை அல்ல ஒரு தனி நபரைக் குறிக்கும் என்பதால் ஸ்லோகத்தை இராமன் மீதே மையப் படுத்த விரும்புகிறார் துளசிதாசர் என்று சொல்கின்றனர்.  இராம சரித மானஸில்  இந்த வார்த்தை அல்லது அதன் வெவ்வேறு மாறுபாடுகள் எங்கெல்லாம் பயன்படுத்தப் பட்டிருக்கிறதோ அவை அனைத்தும் இராமனை மட்டும் குறிக்கின்றன. வேறு யாரையும் அல்ல. இலக்ஷ்மணன் உட்பட அவரது சொந்த சகோதரர்களைக் கூட அல்ல என்று ஒரு சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

                       **                     தொடரும்

பக்தியினால் திருப்பிக் கிடைத்த மோதிரம்! சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்! (Post.15,461)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,461

Date uploaded in London – 27February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

 பக்தியினால் திருப்பிக் கிடைத்த  மோதிரம்: ஷீர்டி சாயியாக இருந்த போது நடந்த சம்பவத்தை ஶ்ரீ சத்ய சாயிபாபா விவரித்த ரகசியம்! 

ச. நாகராஜன் 

ஶ்ரீ சத்யசாயிபாபா  பிறந்த நாள் விழாவில் 23-11-1962 அன்று பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய உரை! 

வேத பண்டிதர்கள் வேதத்தின் மீது முழு நம்பிக்கையோடு இருத்தல் வேண்டும். அப்படி இருந்தால் அவர்கள் மிகவும் சந்தோஷத்துடன் இருப்பார்கள். வேதங்கள் ஒரு மனிதனை சந்தோஷமாக இருக்க வைக்க முடியாவிடில் வேறு எது தான் சந்தோஷத்தைத் தரும்?

ஹோட்டல் வைத்து நடத்தும் ஒருவர் தனக்கு தலை வலிக்கும் போது மருந்துக் கடைக்குச் சென்று தலைவலி மாத்திரையை வாங்கிச் சாப்பிடுகிறார். மருந்துக் கடை வைத்து நடத்துபவரோ தனக்கு காப்பி வேண்டும் என்கின்ற போது அதே ஹோட்டலுக்குச் சென்று காப்பி அருந்துகிறார். மேலைநாடுகள் கீழை நாடுகளை நோக்கி மன அமைதிக்காக வருகின்றன; கிழக்கோ மன அமைதி என்று தாங்கள் நினைத்துக் கொள்வதை அடைய மேலை நாடுகளை நோக்கிச் செல்கின்றன. 

உங்களுக்கு எனது முந்தைய பிறவியில் ஷீர்டி சாயியாக நான் இருந்த போது நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

எனது பக்தையான ஒரு எழுத்தறிவற்ற பெண்மணி பகல்ஹானில் வாழ்ந்து வந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளபளக்கும் பித்தளைக் குடங்களில் நீரை நிரப்பி வைத்துக் கொள்வாள்.   அந்த மூன்று குடங்களுக்கும் அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று பெயர் சூட்டியிருந்தாள். அவள் அந்தப் பெயரால் தான் அந்தக் குடங்களைக் குறிப்பிடுவது வழக்கம்.

யாரேனும் வழிப்போக்கர் ஒருவர் தாகமாக இருக்கிறது என்று அந்தப் பெண்மணியிடம் சொன்னால், அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நீரையும் கலந்து திரிவேணி சங்கமமாக வந்த வழிப்போக்கருக்குத் தருவாள்.

அவளது இந்தச் செய்கையைக் கண்டு அண்டை அயலார் எள்ளி நகையாடுவது வழக்கம். ஆனால் அவளோ அந்த மூன்று குடங்களில் உள்ள தண்ணீர் நிலத்தடி வழியே கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புனித நதிகளுடன் இணைந்திருப்பதாக நம்பினாள்.அவளது இந்த நம்பிக்கை அசைக்க முடியாததாக இருந்தது.

அவளது கணவன் ஒரு முறை காசி யாத்திரைக்குக் கிளம்பினான். அவனது தாயார் அவனிடம் தான் அணிந்திருந்த தங்க மோதிரத்தைத் தந்து அவனை அணிவிக்கச் சொன்னாள். அது அவனை  நன்கு காக்கும் தாயத்தாக இருக்கும் என்று அவள் கூறினாள். அவனும் அதை அணிந்து கொண்டு காசிக்குக் கிளம்பினான். கங்கையில் மணிகர்ணிகா துறையில் அவன் நீராடும் போது அந்த மோதிரம் நழுவி நீரினில் விழுந்து விட்டது. தேடிப் பார்த்தும் அது கிடைக்கவில்லை.

அவன் திரும்பி வந்து நடந்ததைச் சொல்லி தாயாரிடம் ஆறுதலுக்காக,
“கங்கை அது வேண்டுமென்று விரும்பினாள் போலும், எடுத்துக் கொண்டாள்” என்றான்.

ஆனால் அவனது மனைவி இதைக் கேட்ட போது, “கங்கை ஒரு நாளும் ஒரு எளிய வயதான பெண்மணியின் மோதிரத்தை வலிய எடுத்துக் கொள்ள மாட்டாள். அன்புடன் எதைத் தருகிறோமோ அதை மட்டுமே அவள் பெற்றுக் கொள்வாள். அதை அவள் நமக்குத் திருப்பித் தருவாள்.  இது நிச்சயம். அவள் நமது சமையலறையிலேயே தான் இருக்கிறாளே!” என்றாள். 

இதைச் சொல்லி விட்டு நேராக சமையலறைக்குச் சென்ற அவள் கங்கை என்று பெயரிட்டிருந்த குடத்தின் முன்னர் கூப்பிய கையுடன் மனதார பிரார்த்தனை செய்தாள். பின்னர் குடத்தில் தன் கையை விட்டுத் துழாவினாள்.

என்ன ஆச்சரியம்! கங்கையில் தொலைந்து போன அந்த மோதிரம் அவள் கையில் கிடைத்தது.

அவள் த்வாரகாமாயிக்கு தன் கணவனுடனும் மாமியாருடனும் வந்தாள்.

நம்பிக்கையே முக்கியம். பெயரும் வடிவமும் முக்கியம் அல்ல! ஏனெனில் எல்லா பெயர்களும் அவனுடையவையே! எல்லா வடிவங்களும் அவனுடையவையே!

நம்பிக்கை என்பது தர்ம பூமியிலே வேதம் என்ற செழிப்பான மணல் உள்ள பூமியிலேயே வளரும். ஆகவே தான் இங்கு பாடசாலை இன்று ஆரம்பிக்கப்பட்டது!

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40 (Post No.15,460)

Written by London Swaminathan

Post No. 15,460

Date uploaded in Sydney, Australia –  27 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து K- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “K”. (Tamil Version is posted here)

காளிதாசன்

காளிதாசன் உலக மகா கவிஞர்களில் ஒருவன். மிகப் பெரிய நாடகாசிரியன். அவனுடைய ஏழு நூல்கள் அவனுக்கு உலகப் உகழை ஈட்டித் தந்துள்ளன. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் அதிகமான உவமைகளை ரத்தினக் கற்கள் போல ஆங்காங்கு பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளான். சங்க இலக்கிய நூல்களில் இவனுடைய 1250 உவமைகளில் அல்லது சொற்றொடர்களில் 225 வரை அப்படியே கையாளப்பட்டுள்ளன.

காளிதாசனின் முக்கிய நூல்கள்:

மகா காவியங்கள்:

ரகுவம்சம் (Raghuvamsa)

குமாரசம்பவம் (Kumarasambhava)

கண்ட காவியங்கள்:

மேகதூதம் (Meghaduta)

ருதுசம்காரம் (Ritusamhara)

நாடகங்கள்:

அபிஞான சாகுந்தலம் (Abhijnanashakuntalam)

மாளவிகாக்கினிமித்திரம் (Malavikagnimitram)

விக்ரமோர்வசியம் (Vikramorvashiyam)

இவைதவிர ஏராளமான ஸ்லோககங்களும் சுபாஷிதங்களும் அவர் பெயரில் வெளியாகியுள்ளன.

காளிதாசன் எழுதிய மேகதூதம் உலகின் முதல் பயண நூல் ஆகும். டூரிஸ்ட் கைடு புஸ்தகம் போல மத்திய இந்தியா முதல் இமை யா  மலை வரை வரிசையாக வருணிக்கிறார். மேலும் மேகதூதம் தான் தென் மேற்குப் பருவக்காற்றின் போக்கை வருணிக்கும் உலகத்தின் முதல் வானிலை இயல் நூலும் ஆகும் இதைப் பார்த்துதான்  கபிலர் என்னும் உலகப் புகழ சங்கத் புலவன் குறிஞ்சிப்பாட்டினை எழுதினார் என்று தமிழ்  அறிஞர் ரெவரென்ட்  ஜி யு போப் குறிப்பிட்டுள்ளார்.

காளிதாசனின் காலம்

காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதித்தன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது. டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் திருமதி சந்திரா ராஜன் வெளியிட்ட Penguin publication காளிதாசர் நூல்களின் மொழிபெயர்ப்பில் கூட அவரை சங்க காலத்துக்கு முன்னரே வைக்கின்றார்

காளிதாசன் ஒரு மாமேதை. அவன் பேசாத பொருள் இல்லை. அவனுடைய பூகோள அறிவோ மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் உள்ளது. இமய மலையை பூமியை அளக்கவந்த அடிக் கோல் என்கிறார். வரை படம் இல்லாத காலத்தில் 1500 மைல் நீளமுள்ள இமயமலையை அவர் எப்படி இப்படி வருணித்தார் என்பது ஆச்சரியமே.

ஈரான் முதல் இந்தோனேஷியா வரை பல இடங்களை அவர் குறிப்பிடுகிறார். கப்பல் கவிழ்ந்தால் அந்த சொத்துயாருக்குப் போய்ச் சேரும் என்ற சட்ட விசயங்களை அலசுகிறார். ரகு வம்ச காவியத்தில் ஸ்வயம்வரத்துக்கு வந்த மன்னர்களை வருணிக்கையிலும் பாண்டிய மன்னனையும் ஆதித்ய முனிவரையும் குறிப்பீடுகிறார் ; தமிழ் இலக்கியத்தின் அஸ்திவாரமே அகத்தியர்தான்.

காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!

காளிதாசனின் உவமைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. எண்ணிக்கையிலும் அதிகம்; தரத்திலும் அதிகம்; அவருடைய ஏழு நூல்களில் எங்கும் மிகப் பொருத்தமான உவமைகளைக் காணலாம். அவற்றில் இரு நூற்றுக்கும் மேலான உவமைகளை சங்கத் தமிழ்ப்புலவர்கள் எடுத்தாண்டதை, நான் எழுதிய  இரண்டு தமிழ், ஆங்கில நூல்கள் மூலமாகவும் அறியலாம் சுமார் 1250 உவமைகளை அவர் பயன்படுத்தியதால் உபமா காளிதாஸஸ்ய – உவமைக்கு காளிதாசன் என்று சம்ஸ்க்ருத மொழியில் ஒரு பொன்மொழி உள்ளது .

 அதனால்தான் அவரை உலக மஹா கவிஞன் என்றும் நாடக ஆசிரியன் என்றும் உவமைச் சக்ரவர்த்தி என்றும் இன்றும் அறிஞர்கள் போற்றுகின்றனர்.

;இந்த உவமைப் பட்டியலிலும் அவர் மன்னர்களை வேத கால தெய்வங்களுடன் ஒப்பிடுவதால் அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று தெளிவாகிறது;  சங்க நூல்களிலும் மன்னர்களை வேத கால தெய்வங்களுக்கும் பின்னர் முருகன் விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கும் ஒப்பிடுவது காலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது.

***

கல்பம்

வேதப் படிப்பினைப் படிப்போருக்கு வேதங்களோடு ஆறு துணைப்பாடங்களையும் கற்க வேண்டும் என்று ஆயிரக்கண ஆண்டுகளுக்கு முன்னர் சிலபஸ் வகுத்துள்ளனர் . அவைகளில் ஒன்று கல்பம் . ஆறு பாடங்களை ஷட் அங்கம் என்று சொல்லுவார்கள். இதிலிருந்து சடங்கு என்ற தமிழ்ச் சொல் உண்டாக்கியது .

இன்னும் ஒரு பொருள் காலம் பற்றியது .

பிரம்மாவின் நூறு வயதில் ஒரு நாள் கல்பம் ஆகும்

இது 14 மன்வந்தரங்களைக் கொண்ட மிக நீண்ட கால அளவாகும்.

ஒரு கல்பம் என்பது 1,000 மகாயுகங்கள் அல்லது 14 மன்வந்தரங்கள், இது பிரம்மனுக்கு ஒரு நாள் (சுமார் 4.32 பில்லியன் மனித ஆண்டுகள்) ஆகும்.

வேதாங்கம்: வைதீகக் கர்மாக்கள், யாகம், திருமணம் போன்ற சடங்குகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்ற நெறிமுறைகளை (கல்ப சூத்திரங்கள்) விளக்கும் நூல்.

***

கற்பக விருட்சம்

இது  தேவலோகத்தில் உள்ளது;  கேட்டதையெல்லாம் வாரி வழங்கும் தெய்வீக மரம்  கல்பதரு மரம் ஆகும். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய இது, செல்வத்தையும், நினைத்ததெல்லாவற்ரையும் தரும்  இதன் இன்னுமொரு பெயர் கல்பதரு.

பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது, காமதேனுவுடன் சேர்ந்து இந்த மரமும் தோன்றியது. இந்திரன் இந்த மரத்தைத் தனது தேவலோகத்திற்கு (சொர்க்கம்) எடுத்துச் சென்றான்

பாரிஜாதம்ஹரிசந்தனம்சந்தனம்மந்தாரம்கற்பக விருட்சம் ஆகிய ஐந்தும் தேவலோக மரங்கள்.

***

காம

ஆசை, விருப்பம் என்பது பொதுவான அர்த்தம் ஆயினும் பிற்காலத்தில் உடல் தொடர்பான காம உணர்வு என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டது சங்க இலக்கியம்திருக்குறள் முழுவதிலும் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லைக் காணலாம் அமோரஸ் AMOROUS என்ற ஆங்கிலச் சொல், இதிலிருந்து பிறந்தது .

***

காம சூத்திரம்

உலகின் முதல் உடலுறவு பற்றிய செக்ஸ் புஸ்தகம்  இது . வாத்ஸ்யாயனர் என்ற ரிஷி சம்ஸ்க்ருதத்தில் இந்த நூலினை சுமார் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார் இதில் உலகத்தில் முதல் முதலில் பெண்கள்  கல்வி பற்றிய சிலபஸ் உள்ளது 64  கலைகளையும் பெண்கள் கற்க வேண்டும் என்று இவர் பட்டியலிட்டுள்ளார் அவை சரஸ்வதேவியிடமிருந்து தோன்றிய கலைகள் பிற்காலத்தில் எல்லாப் புலவர்களும் ஆய கலைகள்64  என்று எழுதினர் வெறும் உடலுறவுபற்றி மட்டும் சொல்லாமல் அழகு  சாதனங்கள், காய கல்ப மூலிகைகள் பற்றியும் வாத்ஸ்யாயனர் எழுதியுள்ளார்.

***

காமன்

மன்மதனின் பெயர் .

***

காமதேனு

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய  தெய்வீகப் பசு காமதேனு . இது வசிஷ்ட மகரிஷியிடம் இருந்தது ; கற்பக விருட்சம் என்ற மரம் போலவே நினைத்தை எல்லாம் உண்டாக்கும். காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு பெயர்களும் உண்டு. இதன் உடலில் தேவர்கள் அனைவரும் வசிப்பதாக ஐதீகம்; கோவில்களிலும் வீடுகளிலும் வாகனமாகவும் சிலையாகவும் விக்ரகமாகவியம் வழிபாட்டில் உள்ளது .

***

கர்மாவினை

வினைப் பயனை கர்மா என்பார்கள் இந்துமதம், பெளத்த மதம், சமண மதம் ஆகியன கர்ம வினைப்பயனிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை வைத்துள்ளன

பல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனையும் பல்லக்கில் அமர்ந்து செல்பவனையும் பார்த்த உடனேயே தெரியும்- அறத்தின் பயன் என்ன என்று. புண்ணியம் செய்தவன் பல்லக்கில் பவனி வருவான். இது பரிமேல் அழகர் எழுதிய திருக்குறள் உரை.

ஒருவர் செய்த நல்லதும் கெட்டதும் ஏழு பிறப்புக்கும் தொடர்ந்து வரும் என்பது இந்த மூன்று மதங்களின் நம்பிக்கை

வினைகளை வெல்லலாம் என்று மாணிக்க வாசகர், திருமூலர் போன்றோர் பாடியுள்ளனர்

வினைகளை இந்துக்கள் மூன்றாக வகுத்துள்ளனர் அவை சஞ்சிதம்பிராரப்தம் ஆகாமியம் எனப்படும்.

சஞ்சிதம் (கடந்தகால சேமிப்பு)பிராரப்தம் (தற்போதைய அனுபவம்)மற்றும் ஆகாமியம் (எதிர்கால வினை) 

ஒருவன் செய்த செயல்கள் என்ன செய்யும் என்பதற்கான இந்துமத உவமையை  திருவள்ளுவர் அளித்தார்.

புத்தமத உவமையை கவுதம புத்தர் அளித்தார்.

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.- தம்மபதம் 1,2

வினை பற்றி சமணர்கள் -ஆயிரம் பசு உவமை !

இந்துக்கள் கர்ம பலனில் நம்பிக்கை கொண்டாலும் அதை நமக்கு அளிக்கும் ஆண்டவன் ஒருவன் உளன் என்று நம்புகின்றனர். சமணர்களோ ஒரு பசுக்கூட்ட உவமையைச்  சொல்லுவார்கள் ; ஆயிரம் பசுக்கள் இருந்தாலும் ஒரு கன்றுக்குட்டி எப்படி தாய்ப் பசுவைக் கண்டு  பிடிக்கிறதோ அப்படி ஒருவன் செய்த வினை, அவனைக் கண்டுபிடித்துவிடும் என்பது அவர்கள் கூற்று; சமணர்கள் இயற்றிய நாலடியாரில் இந்தப்   பாட்டு வருகிறது :

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று

வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்

பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த

கிழவனை நாடிக் கொளற்கு.—நாலடியார்

(பொ-ள்.) பல ஆ (பசு)க்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ;  இளைய ஆன்கன்று,  தன் தாய் ஆ(பசு)வினைத் தேடித் தெரிந்தடைதலை, போன்ற தாகும்; பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும்,  தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அத்தகைய தன்மையுடையதேயாகும்.

(க-து.) பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும்.

***

கர்மேந்திரியங்கள்

கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்) என்பவை மனித உடல் செயல்களைச் செய்ய உதவும் ஐந்து முக்கிய உறுப்புகள் ஆகும். வாக்கு, கைகள், கால்கள், மலத்துழை, மற்றும் பிறப்புறுப்பு ஆகிய ஐந்தும் கர்மேந்திரியங்கள் ஆகும், அவை முறையே பேசுதல், கையாளுதல், நடத்தல், கழிவகற்றல் மற்றும் இன்புறுதல் ஆகிய செயல்களைச் செய்கின்றன

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை ஐம்புலன்களின் மூலம் அறியப்படும் ஐந்து உணர்வுகளாகும். இவை முறையே நாவினால் சுவைத்தல், கண்ணால் பார்த்தல், உடலால் தொடுதல், காதால் கேட்டல், மூக்கால் முகர்தல் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவற்றை ஆராய்ந்து கட்டுப்படுத்துபவன் அறிவில் உலகம் அடங்கும் என்பது திருவள்ளுவரின் குறள் (27) கருத்தாகும்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு-27

***

கர்த்தா

கர்த்தா (Karta) என்பது ஒரு செயலைச் செய்பவர், படைப்பவர், அல்லது மூல காரணத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆன்மீகத்தில் இது கடவுள், இறைவன், அல்லது தலைவனைக் குறிக்கப் பயன்படுகிறது.

சம்ஸ்க்ருத இலக்கணத்தில் (வ்யாகரணம்), கர்த்தா (Karta – कर्ता) என்பது ஒரு வாக்கியத்தில் வினையைச் செய்பவரை (Subject/Doer) குறிக்கும். இது காரகங்களில் (Karaka – வேற்றுமைப் பொருட்கள்) முதன்மையானது. 

***

காவியம்

தமிழ் இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

ஐஞ்சிறு காப்பியங்கள்: சூளாமணி, நீலகேசி, உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதா காவியம்.

சம்ஸ்க்ருத மஹா காவியங்கள்

வால்மீகி ராமாயணம் ஆதிகாவியமாகப் போற்றப்படுகிறது

குமாரசம்பவம், ரகுவம்சம், கிராதார்ஜுனீயம், சிசுபாலவதம், மற்றும் நைஷதசரிதம் ஆகியவை ஸம்ஸ்க்ருதத்தின் பஞ்ச மஹா காவியங்கள்

ஹேமசந்திரரின் சூத்திரம்

காவ்யமானந்தாய யஷஸ்ச காந்தாதுல்யதயோபதேஷாய ச I

(ஆனந்தம் – மகிழ்ச்சி; யஷஸ் –புகழ்; காந்தா – மனைவி; துல்யம் – சமமாக;

உபதேசம் – அறிவுரை)

இப்படி ஹேமசந்திர்ர் காவ்யானுசாஸனத்தில் ( I -3) காவியத்தின் பிரயோஜனத்தை ஒரு சூத்திரமாகக் கூறுகிறார்.

ஹேமசந்திரர் கூறிய மூன்றைத் தவிர, ஆசார்ய மம்மட பட்டர் என்னும் புகழ்பெற்ற அறிஞர், செல்வம், பண்பாடு மற்றும் அறிவு, தீமையை அறவே நீக்கிக் கொள்ளும் பண்பு ஆகிய இன்னும் மூன்றையும் ஒரு காவியம் தருகிறது என்கிறார். இந்த உரைகல்லில் தேருகின்றவையே காவியம். 

***

கதிர  மரம் / கருங்காலி

Khadira (खदिर) is a Sanskrit word referring to the “Catechu tree” tree from the Fabaceae family, and is used throughout Ayurvedic literature such as the Caraka-saṃhitā.

சரக சம்ஹிதை முதலிய ஆயுர்வேத நூல்கள்  கருங்காலி மரத்தின் மருத்துவப் பயன்களை எடுத்துரைக்கின்றன சம்ஸ்க்ருதத்தில் கதிர என்றும் தாவரவியலில் Acacia catechu அக்கேசியா கடேச்சு என்றும் சொல்லுவார்

திருவாதிரை நட்சத்திரத்தின் விருட்சம் கருங்காலி. செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தது. கருங்காலி மரம் (Ebony Tree) மருத்துவ மற்றும் ஆன்மீக நன்மைகள் கொண்ட, மிகவும் உறுதியான மரமாகும்.

***

கரகம் காவடி

இவை இரண்டும் தமிழ்நாட்டின் கிராமீய நடனங்கள் ஆகும்

காவடி எடுக்கும் வழக்கத்தை நாம் எல்லோரும் அறிவோம். முருகனுக்கு காவடி எடுப்பதைப் பார்க்கிறோம். இதே போல காவடி பட எழுத்து சிந்து சமவெளி முத்திரையிலும் கிடைத்திருகிறது. உடனே இதை தமிழ் வழக்காகவும் ஆகையால் சிந்து சமவெளியினர் திராவிடரே என்றும் இனபேதம் காட்டி கட்டுரை எழுதிவிட்டார்கள். உண்மையில் இது பாரதம் முழுதும் உள்ள வழக்கம். சொல்லப்போனால் காவடி என்பது உலகம் முழுதும் இருக்கிறது.

நம் தமிழர்கள் ஆண்டுதோறும் முருகனுக்குக் காவடி எடுப்பதுபோலவே வடக்கேயுள்ள ஹிந்துக்கள் சிவபெருமானை வழிபட ஹரித்வாருக்கு லட்சக் கணக்கில் காவடி எடுக்கிறார்கள். ஹரித்வாரில் கங்கை நதியை வணங்கிவிட்டு இரு புறமும் தொங்கும் பானைகளில் கங்காஜலம் கொண்டு போகிறார்கள். இப்படி காவடியில் தண்ணீர் கொண்டு போகும் வழக்கம் இதாலி, மேரற்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற பல நாடுகளில் இருந்திருக்கிறது. சாலைப் போகுவரத்து மற்றும் வாஹன வசதிகள் இல்லாத இடங்களில் காவடி இருப்பது சகஜம்.

மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் சீஷெல்ஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தைப்  பூசம் முதலிய நாட்களில் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர் மலேசியா பத்துமலை முருகனைத் தரிசிக்க லட்சக்கணக்கில் செல்வதால் அன்று அரசாங்கம் விடுமுறை அறிவித்துள்ளது

தமிழ் நாட்டில் முருகனுக்கு விசேஷமான தினங்களில் பக்தர்கள் காவடி எடுக்கின்றனர் ஏதேனும் வேண்டுதலை நிறைவேற்றவோ நேர்த்திக் கடனாகவோ காவடி எடுக்கிறார்கள் அப்போது பலரும் பரவச நிலையை அடைகின்றதனார் வெற்றி வேல்  என்ற கோஷமும் அரோஹரா என்ற கோஷமும் விண்ணதிர முழங்கப்படும்.

காவடிகளில் பல வகை உண்டு அப்போது முதுகில் கொக்கியைக் குத்தி க்கொண்டும் வாயில் வேலைக்குத்திக்கொண்டும் காவடி எடுக்கிறார்கள்

***

கரகம்

தமிழ் நாட்டில் ஆண்களும் பெண்களும் கரகம் ஆடுகிறார்கள் ; அப்போது தலையில் குடம் அல்லது மார்க் கம்பத்தை வைத்துக்கொண்டு அதைக் கீ ழே விழாமல் ஆடுவர் இது தவிர கீழே  உருளும்  மரக்கட்டையிலும் ஆணிகளிலும் நின்றும் கூட ஆடுகின்றனர்  கோவில் திருவிழாக்களில் மட்டுமின்றி பெரிய ஊர்வலங்களிலும் கரகாட்டத்தை  ஏற்பாடு செய்கிறார்கள். 

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 40; இந்து மத கலைச்சொல் அகராதி-40  , காளிதாசன், காவியம், கரகம் காவடி, கர்மா, வினைகளின் வகைகள், pictures

பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் ! ஞான சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 (Post.15,459)

Written by London Swaminathan

Post No. 15,459

Date uploaded in Sydney, Australia –  27 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 33

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 33

***

புலி முனிவரும்  பாம்பு  முனிவரும் 

இடர்கலிகள் பிணியோட எனையுமருள் … துன்பங்களும், கிரகக்

கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக.

குறமாதின் இணையிளநிர் முலைமார்பின் அணைமார்பா …

குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே,

இனிய முது புலிபாதனுடன் … இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன்,

அரவு சதகோடி யிருடியர்கள் … பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும்

புகழ்ஞான பெருமாளே. … புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே.

சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை ‘முதிய முநி’ எனக் குறிப்பிட்டார் – தில்லைப் புராணம்.

***

நித்திய கல்யாணிசிவகாமிஅபிராமி- சொல் நயம்

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி

எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி

சிவகாமி உமை அருள் பாலா … சக்தி, தனித்து விளங்கும் ஜோதி,

அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே,

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி

விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள்

சிறை மீள நடம் இடுவோனே … சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த

பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே,

***

யோக ரகசியங்கள்

நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை … நாலு

சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்*

செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை

நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே … பிராணாயாம மந்திர

ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி,

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற …

விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக,

இசை நடத்தி மண்டல சந்தி ஆறில் … (அனாகதம் முதலிய மற்ற

நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களிலும்சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய

கோலமும் உதிப்ப கண்டு … பல திருக் கோலங்களையும் பார்த்து,

உள நாலினை மறித்து … சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து,

இதம் பெறு கோ என முழக்கு சங்கு ஒலி … இனிமையாகிய

கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு,

விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை

உண்டு … விந்து சம்பந்த (சிவ – சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி,

ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன் …

கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்?

** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு: நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் ‘பூரகம்’ என்றும், வெளிவிடும் காற்றுக்கு ‘ரேசகம்’ என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு ‘கும்பகம்’ என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ‘ஆதாரங்கள்’ (நிலைகள்,

சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் ‘பிரம கபால’த்தில் உள்ள ‘ஸஹஸ்ராரம்’ (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் ‘மூலாதார’த்தை வந்து அடையும்.சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால்மன அமைதி ஏற்படும்.

***

ஞான சம்பந்தரின் ஞான வாள்!

ஜகதலம் அதில் அருள் ஞான வாள் கொ(ண்)டு தலை பறி

அமணர் சமூகம் மாற்றிய தவ முனி சகம் உளர் பாடு பாட்டு

என மறை பாடி … இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக்

கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த

(ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே,

தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ

னாச்சில சபதமொடு எழுவன தாள் வாச்சியமுடனே நீள்

அகு குகுகுகு என ஆளி வாய்ப் பல அலகைகள் அடைவுடன்

ஆடும் ஆட்டமும் … தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாளவாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும்,

அரன் அவனுடன் எழு காளி கூட்டமும் அகலாதே அரி

துயில் சயன வியாள மூர்த்தனு(ம்) மணி திகழ் மிகு புலியூர்

வியாக்ரனும் … சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து

ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதிசேஷ மூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகுபொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும்,

அரிது என முறை முறை ஆடல் காட்டிய பெருமாளே. …

நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.

பகவத் கீதையில்

பகவத் கீதையில் ஞானம் ( பகவத் கீதை அத்தியாய எண்களும் ஸ்லோக எண்களும்) பின்வருமாறு

ஞானப் படகு – 4-36

ஞான விளக்கு- 10-11

ஞானத் தீ – 4-3, 19

ஞானக் கண் – 15-10

ஞான வேள்வி – 4-33; 9-15; 18-70

ஞானத் தவம்  – 4-10

ஞான யோகம்- 3-3; 16-1

திருமந்திரத்தில்

திருமந்திரத்தில் 406, 877, 1033, 1335, 1423, 1403, 1416, 1454, 1500, 1541, 1605, 1640, 1814, 1860, 1858, 1913, 2000, 2167, 2277, 2285, 2598, 2677, 2695, 2755, 2747, 2782, 2777, 2807, 2803, 2927,

ஞான வாள்

நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன்
சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம்
பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன்
தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே.

(சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்ட திருமந்திரம் நூல் எண்கள் இவை )

ஞானக் கொழுந்து (406), ஞானத் தலைவன் (878), ஞானக் கொம்பு (1033), ஞானப் பொருள் (1335), ஞானபூபதிஞானோதயம் (1403) ஞான நிர்வாணம் (1449), ஞான சமாதி (1605) ஞான வேடம் (1640), ஞான முத்திரை (1860), ஞானத் தறி (2000), ஞானம் படர்கின்ற கொம்பு,ஞானத் தலைவன்,  ஞானானந்தம்ஞான விளக்கொளிஞான நெறிஞான மார்க்கம்ஞானக் கூத்து

***

பச்சிலைக்கும்எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் !

பொக்கணத்து நீற்றை இட்டு ஒருத்தனார்க்கு … விபூதிப்

பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு

புத்தி மெத்த காட்டு(ம்) புன வேடன் … உண்மை அறிவை நன்கு

காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைக்கும் வாய்க்குள் எச்சிலுக்கும் … பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும்,

வீக்கு பைச் சிலைக்கும் ஆட்கொள் அரன் வாழ்வே … (அவன்)

தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே,

பத்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட … முறைமையுடன்

வீட்டின்பத்தை உபதேசித்து தந்தையாகிய சிவபெருமானுடைய

உள்ளத்தை வசப்படுத்தியவனே,

பத்தருக்கு வாய்த்த பெருமாளே. … பக்தர்களுக்கு அருமையாகக்

கிட்டியுள்ள பெருமாளே.

–subham—

Tags- பச்சிலைக்கும், எச்சிலுக்கும் , சிவன் ! சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 திருப்புபுகழ் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள்

நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக! (Post.15,458)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,458

Date uploaded in London – 26 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சுபாஷிதச் செல்வம் 

நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக! 

ச. நாகராஜன் 

அர்த்தமுள்ள சில சுபாஷிதங்கள் இதோ: 

இனிய சொற்களைப் பேசுக!

 ப்ரிய வாக்ய ப்ரதாதேன சர்வே ஜந்தவ: துஷ்யந்தி |

தஸ்மாத் (ப்ரிய வாக்யம்) வக்தவ்யம் ஏவ வசனே கா தரித்ரதா ||

இனிமையான வார்த்தைகளைப் பேசுவதால் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள்.  அப்படி இருக்க, எனது நண்பனே! ஏன் இனிமையாகப் பேசுவதில் கஞ்சத்தனத்தைக் காட்ட வேண்டும்?

திருவள்ளுவரின் குறளுடன் இதை ஒப்பிடலாம். 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் எண் 100)

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுவது இனிய பழம் இருக்கும் போது அதை உண்ணாமல் காயைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும். 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

 பஹுனாம் அல்பசாராணாம் சம்ஹதி: கார்யசாதிகா |

த்ருணை விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: ||

 ஏராளமான பலஹீனமான அல்ப பூச்சிகள் ஒன்றாக இணைந்து கடினமான காரியங்களைச் சாதிக்கின்றன. பலமான மதம் பிடித்த யானையைக் கட்டி இழுக்க மெல்லிய வைக்கோல் இழைகள் ஒன்று சேர்ந்து பலமான கயிறாகத் திரிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக! 

கதே ஷோகோ ந கர்தவ்யோ, பவிஷ்யம் நைவ சிந்தயேத் |

வர்தமானேன காலேன, வர்தயந்தி விசக்ஷணா: ||

 பழைய கால (கடந்து போன) நஷ்டங்களையோ எதிர்காலத்தையோ நினைத்து கவலைப்படாதீர்கள். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துபவர்களே புத்திசாலிகள்!

குணம் வம்ச பரம்பரையாக வருமா?

 ந வ்யாப்திரேஷா குணினோ குணவான் ஜாயதே த்ருவம் |

சந்தனோநளசந்தக்தோ ந பஸ்ம சுரபி க்வசித் || 

நல்ல குணமுள்ள புண்யசாலிகளுக்குப் பிறந்தவர்கள் அவர்களுடைய குணங்களை அப்படியே கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு உலக நியதியும் இல்லை. சந்தனக்கட்டைகளை எரித்து சாம்பலாக்கிய பிறகு அந்த சாம்பல் சந்தனத்தின் மணத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதைக் கவனியுங்கள்!

நிர்வாண தேசத்தில் வண்ணானுக்கு என்ன வேலை!

 கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே |

நக்னக்ஷபணாகே தேஷே ரஜக: கிம் கரிஷ்யந்தி || 

கேட்க ஒருவரும் கூடியிருக்காத இடத்தில் ஒரு பேச்சாளர் என்ன செய்வார்? நிர்வாண தேசத்தில் அனைவரும் நிர்வாணமாக இருக்கும் போது அங்கு வண்ணானுக்கு என்ன வேலை?

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL – 39; இந்து மத கலைச்சொல் அகராதி-39 (Post.15,457)


Written by London Swaminathan

Post No. 15,457

Date uploaded in Sydney, Australia –  26 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

xxxx  

ஆங்கில எழுத்து K- ல் துவங்கும் சொற்கள்

Words beginning with “K”. (Tamil Version will be posted tomorrow)

Kalidasa (kaalidaasa)

Kalidasa is widely considered to be the greatest Indian poet and playwright of all time. He wrote in Sanskrit. There are seven works written by him-two epic poems, two shorter poems and three plays. They are 1.Raghu Vamsa (dynasty of Raghu),2.Kumara Sambhava (Birth of Kumara, 3.Megha Duta (Cloud Messenger),4.Ritu Samhara (Cluster of Sesons), 5.Malavikagnimitram (Malavika and Agnimitra),6.Abijnana Shakuntala (The recognition of Shakuntala) and 7.Vikramorvasiya (Urvasi won by valour).His master piece was Shakuntala.

The age of Kalidasa has been debated for long. He could have lived anytime between 2nd century BC and 4th Century AD. Though the western scholars have placed him in the period of Gupta dynasty, Indians believe that he lived in the time of the great Indian King Vikramaditya who started his own Vikrama era in 56 BCE. Kalidasa was one of the Nine Jewels (Navaratna) of Vikramaditya’s court.

My research into Tamil Cankam (also known as Sangam) literature shows that Kalidasa lived sometime before the birth of Christ. Tamil poets have used a lot of his similes. Kalidasa was most famous for his apt similes. The Sanskrit poets praised him as Upama Kalidasasya: ( Kalidasa owns similes).Tamil poets have used lot of common Indian/ Hindu beliefs. The source may be different ancient Indian works. But there are very clear indications to show that the poets have got them from Kalidasa’s works. There are over 200 similarities between the works of Kalidasa and the Sangam Tamil works. No one can reject them as coincidences or of pan Indian origin.

Seven Books—40,000 words—93 commentaries for three of his works—he beat Shakespeare in writing poetry+ dramas+ Epics+  stotras (Shyamaladandakam) and usage of similes. He covered the history of 29 kings in Raghuvamsam. He used 1250 similes! He gives a description of a vast geographical area from Iran to Indonesia! He called the Himalayas “the measuring rod of earth” even before George Everest told the world the height of Everest Peak!!! An amazing poet the world has ever produced. First poet to write a travelogue called Meghadutam in Sanskrit and first poet to report the progress o South West Monsoon from South India to Himalayas.

First poet to link Pandyas and Agastya, which is the foundation of Tamil History.

***

Kalpa

Kalpa (कल्प) refers to “one day in the life of Lord Brahmā. It is equivalent to one thousand catur-yugas. Each catur-yuga is one cycle of the four yugas: Satya, Dvāpara, Tretā and Kali, totalling 4,320,000,000 years.

It signifies a period of creation, duration, and destruction of the universe.

One of the six Vedāṅgas, i. e. that which lays down the ritual and prescribes rules for ceremonial and sacrificial acts; शिक्षा कल्पो व्याकरणम् (śikṣā kalpo vyākaraṇam) Muṇdtod; 1.1.5 see under वेदाङ्ग (vedāṅga).

The doctrine of poisons and antidotes.

 One of the trees of paradise; cf. कल्पद्रुम (kalpadruma).

***

Kalpakavriksa- Wish fulfilling tree

Kalpavṛkṣa (कल्पवृक्ष).—A tree in Devaloka. It has the power of giving any object that one wishes to get. There are five Kalpavṛkṣas in Devaloka. Their names are: Mandāra, Pārijāta, Santāna, Kalpavṛkṣa and Haricandana.

***

Kama (kaama)

Wish, desire; this Sanskrit word is used throughout ancient Tamil literature.

Kāma means desire, wish, longing in Indian literature. Kāma often connotes sexual desire and longing in contemporary literature, but the concept more broadly refers to any desire, wish, passion, longing, pleasure of the senses, the aesthetic enjoyment of life, affection, or love, with or without sexual connotations.

Love or desire of sensual enjoyments, considered as one of the ends of life (puruṣārtha); cf. अर्थ (artha) and अर्थकाम (arthakāma).

Dharama, Artha, Kama, Moksha are the four values that Hindus should aim for.

***

Kama – God of Love

 Kama is the God of Love and Lust. He is also referred to as Manamatha. He is the most handsome among both men and Gods. He is equivalent to the Greek/Roman Cupid. He uses a bow of sugarcane, and shoots flower tipped arrows at humans to make them fall in love. He is married to Rati, one of the daugters of Daksha.

***

Kāmaśāstra (कामशास्त्र) refers to the “science of erotics”.

Kamasutra

Kāmasūtra (कामसूत्र).—

 Name of an erotic work by Vātsyāyana.

First book on sex in the world. Vatsyayana wrote it in Sanskrit. First book in the world which prescribed educational syllabus for women.

“ A woman should study even before reaching adolescence, and then, once married should continue her studies with her husband.” ( Sutra 2, Chapter 3, Kamasutra of Vatsyayana)

Vatsyayana, the Brahmin author of Kamasutra listed all the 64 arts that a woman should learn. Tamil and Sanskrit poets referred to this 64 arts in their poems. Goddess Sarasvati is the source of those 64 subjects.

Kāmasūtra (कामसूत्र) (lit. “principles of love”’) is an ancient Indian Sanskrit text on sexuality, eroticism and emotional fulfillment in life.—The Kāmasūtra is a Sūtra-genre text with terse aphoristic verses that have survived into the modern era with different bhāṣyas (exposition and commentaries). The Kāmasūtra acknowledges the Hindu concept of Puruṣārthas, and lists desire, sexuality, and emotional fulfilment as one of the proper goals of life. Its chapters discuss methods for courtship, training in the arts to be socially engaging, finding a partner, flirting, maintaining power in a married life, when and how to commit adultery, sexual positions, and other topics.

***

Kamadhenu- Wish fulfilling Cow

Kamadhenu is the wish fulfilling cow. The picture and statues of Kamadhenu are in Hindu houses and temples.

It refers to the “celestial cow” also known as Surabhi (सुरभि Surabhī).

Kamadhenu, the divine “cow of plenty” originating from the Churning of the Ocean, is revered as a symbol of abundance and divinity with the power to fulfil desires. According to tradition, she is depicted with various divine attributes, serves as a protective force for sages, and is worshipped for prosperity and to bring good luck to homes and businesses

Kāmadhenu (कामधेनु) was the mythical cow of Vasiṣṭha which satisfies all desires, cow of plenty (= surabhi).

***

Karma

“Karma” (Sanskrit: कर्म) primarily means action, work, or deed, acting as the fundamental spiritual principle of cause and effect in Hinduism, Buddhism, and Jainism. It governs the moral law of actions, shaping future destiny, rebirth, and experiences, often categorized into Sanchita (accumulated), Prarabdha (fruiting), and Agamya or Kriyamana (current). 

Karma (कर्म) refers to “action”, “deed”.—1) any action or deed; 2) the principle of cause and effect; 3) a consequence or “fruit of action” (karmaphala) or “after effect” (uttaraphala), which sooner or later returns upon the doer. What we sow, we shall reap in this or future lives. Selfish, hateful acts (pāpakarma or kukarma) will bring suffering. Benevolent actions (puṇya-karma or sukarma) will bring loving reaction.

Karma is three fold:—sañcita,prārabda, kriyamāṇa (or āgāmi)

Also any religious act or rite (as sacrifice, oblation etc., [especially] as originating in the hope of future recompense.

Karman (कर्मन्).—[neuter] action, deed, work, [especially] holy work, sacrifice, rite; result, effect; organ of sense; the direct object ([grammar]); fate, destiny.

***

Karmendriya

Karmendriya (कर्मेन्द्रिय):—[from karma > karman] n. an organ of action (five in number like the five organs of sense, viz. hand, foot, larynx/ogan of voice, organ of generation, and excretion).

The Five Faculties of Action (Karmendriya):

  1. vak-tattva: speech (voice)
  2. pani-tattva: grasping (hands)
  3. pada-tattva: walking (feet)
  4. payu-tattva: excretion (anus)
  5. upastha-tattva: procreation (genitals)

Speaking, Grasping, Moving About, Excreting and Sexual Activities are the Soul’s Powers of responding to and interacting with, the external World.

***

Karta

Karta (Sanskrit: कर्ता, kartā) primarily refers to the “doer,” “agent,” or “creator” of an action. It is a term deeply rooted in Indian philosophy, grammar, and traditional law, representing the individual responsible for bringing about change or taking initiative.

 It is a foundational concept in Indian philosophy, grammar, and art, embodying initiative and responsibility.

Sanskrit Grammar (Vyakarana): Karta is the agent or subject of an action.

***

Khadira

Khadira (खदिर)—Sanskrit word for a plant (Acacia catechu).

Khadira (खदिर) is mentioned frequently from the Rigveda1 onwards as a tree with hard wood—the Acacia catechu. The Aśvattha is referred to as engrafting itself upon it in the Atharvaveda, and from it the climbing plant Arundhatī is said to have sprung.

***

Kavya (kaavya)

Kāvya (काव्य).

A poem; महाकाव्यम् (mahākāvyam); मेघदूतं नाम काव्यम् (meghadūtaṃ nāma kāvyam) .  Poetics, poetry, a poetical composition

 Prophetic, inspired, poetical; अशंसीत् काव्यः कविः (aśaṃsīt kāvyaḥ kaviḥ) Ṛgveda 8.8.11.

 Name of Śukra, preceptor of the Asuras.

Mahākāvya (महाकाव्य):— the Raghu-vaṃśa, Kumārasambhava and Megha-dūta by Kālidāsa, the Śiśupāla-vadha by Māgha, the Kirātārjunīya by Bhāravi and the Naiṣadha-carita by Śrī-harṣa; [according to] to some the Bhaṭṭi-kāvya is also a Mahakavya.

In Tamil Five Great Epics (Tamil: Aimperumkāppiyaṅkaḷ) are:

Cilappatikāram (or Silappadikaram), Maṇimēkalai, Cīvaka Cintāmaṇi (or Jivak Chintamani), Vaḷayāpati (or Valayapathi), Kuṇṭalakēci (or Kundalakesi)

***

Karakam- Tamil Folk Dance

Karakam, or Karagaattam, is a traditional, ancient folk dance from Tamil Nadu, India, performed to honour the rain goddess Mariamman. It features dancers balancing decorated pots (karakam) on their heads while performing intricate movements, acrobatics, and sometimes balancing on a rolling wooden block.

Though associated with religious festivals, nowadays they are part of cultural and political processions.

***

Kavadi (kaavadi)

This semi-circular decorated canopy supported with wooden cross-pieces is called a kavadi, meaning ‘burden’ or ‘load’.

A kavadi is a ceremonial, often ornate, wooden or metal arch decorated with peacock feathers, flowers, and photos of Hindu deities, carried by devotees of Lord Murugan as an act of penance, gratitude, or devotion,  during the Thaipusam and other Murugan (Skanda/Kartikeya) festivals. It represents a “burden” or sacrifice, often involving fasting, rituals, and sometimes body piercings with hooks or skewers, particularly in Malaysia, Singapore, and Tamil Nadu.

Devotees carry the kavadi to fulfill vows, seek blessings for health or success, or express gratitude to Lord Murugan, the Hindu god of war and wisdom.

Types of Kavadi:

Paal Kavadi: A simple, less painful offering involving pots of milk (paal) carried on a wooden pole.

Alagu Kavadi: A more complex, heavy structure often attached to the body via hooks and spikes piercing the skin (alagu means small spears).

Sangili Kavadi: Involves dragging heavy chariot or metal structures via chains attached to the body.

During the procession, devotees often enter a trance-like state, facilitated by the rhythmic, loud, and intense drumming (urumi melam) and chanting of “Vel Vel” (referring to Lord Murugan’s spear).

In Malaysia, devotees often ascend 272 steps to the shrine in the Batu Caves during Thaipusam. Other famous Murugan temples are also on hills. They also climb the steps.

Gangajal taken in Kavadi poles

TO BE CONTINED……………….

–SUBHAM—

TAGS- Karakam, Kavadi, Kalpa, Kalidasa, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL – 39, இந்து மத கலைச்சொல் அகராதி-39 

வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு! ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும்! தில்லை மூவாயிரர் புகழ் – Part 32 (Post.15,456)

Written by London Swaminathan

Post No. 15,456

Date uploaded in Sydney, Australia –  26 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

32 திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 32

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 32

வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு!

கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர …

கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண்

உருவாய் வர,

கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே …

காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே,

தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் … ஆய்ந்து,

இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி* தப்பாமல்,

தான் ஒரு வான் உறு செல்வி மார்பில் பூஷணமாய் அணை

மணவாளா … விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே,

தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய வள்ளி வேளைக்கார

மனோகர … நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு

காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே,

தில்லை மேலைக் கோபுரம் மேவிய பெருமாளே. … தில்லை

மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.

***

அருணகிரியின் வரிகள்

கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர …

கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண்

உருவாய் வர,

கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே …

காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே,

கம்பரின் வரிகள்

ராமபிரானின் கைவண்ணத்தையும் கால் வண்ணத்தையும் கம்பனும் அழகாக வருணிக்கிறார் 

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

உய்வண்ணம் அன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ

மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்

கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன்

***

தில்லை மூவாயிரர் புகழ்

வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை

மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே …

வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும்

யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே*,

வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள்

கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே. …

பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே.

***

ராவணன் நசுங்கிய கதை

வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்தப் போது …

வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது*,

உடல் கீழ் விழவே செய்து மகிழ்ப் பொன் பாத … அவனுடைய

உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும்,

சிவாய நமோ அர சம்பு பாலா … சிவாயநம என்னும்

ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே,

மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து … மலை

போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி,

சீர் புலியூர் பரமாகிய … பெருமை வாய்ந்த புலியூர் என்னும்

சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும்

வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே. … வடக்குக்

கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே.

இராவணன் திக்கு விஜயம் செய்த போது, அவனுடைய புஷ்பக

விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாது தடைபட்டது. அந்த மலையை வேரோடு பறித்து எறிய, அவன் தன் கைகளால் பெயர்த்து அசைக்க, சிவ பெருமான் தமது கட்டை விரலால் அம் மலையை அழுத்த, இராவணன் நசுக்குண்டு சாமகானம் பாடி, இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.

மூவர் பாடிய தேவாரப் பாடல்களிலும் இதைக் காணலாம்.

***

ராமாயணக் காட்சிகள்

கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க … நீண்ட

கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள்

நடுங்கும்படியாக அம்பை விட்டும்,

சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று …

சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும்,

மகா உததி தூள் எழ நிருதேசன் … பெரிய கடலில் தூசி

கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ராவணனுடைய

குலம் கண் பட்ட நிசாசரர் கோ என … குலத்தைச் சார்ந்த

அரக்கர்கள் எல்லாம் கோவென்ற சத்தத்தோடு அலற,

இலங்கைக்குள் தழலோன் எழ … இலங்கை நகருள் அக்கினி

பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய,

நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே

பிடுங்க … செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த

இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு

விழும்படியாக

தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா

மருகா … செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே,

இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என … இந்த

உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று

விருது ஊதும் ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி …

வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக்

கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே,

ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ … நூல் வகைகளுக்கெல்லாம்

ஒப்பற்ற தலைவனே, என்றும் மங்களகரமானவனே,

பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே. …

பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

ஏழு கடல் மணல் துளிகளை எண்ண முடியுமா ?

எழுகடல் மணலை … ஏழு கடல்களின் கரையிலுள்ள

மணலையெல்லாம்

அளவிடி னதிகம் … எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம்

எனதிடர் பிறவி அவதாரம் … என் துன்பம் நிறை பிறவிகள் என்ற

அவதாரங்கள்.

இனியுன தபய மெனதுயி ருடலும் … இனி உனக்கே

அடைக்கலமாம் என் உயிரும், உடலும்.

இனியுடல் விடுக முடியாது … இனியும் பிறப்பெடுத்து உடலைவிட

என்னால் முடியாது.

கழுகொடு நரியு மெரிபுவி … கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும்,

மறலி கமலனு மிகவும் அயர்வானார் … யமனும், பிரம்மாவும்,

என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள்.

கடனுன தபயம் … என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம்

புகுவதே ஆகும்.

அடிமையு னடிமை … யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை

பூணுதற்கே ஆகும்.

கடுகியு னடிகள் தருவாயே … நீ விரைவில் உன் திருவடிகளைத்

தர வேண்டும்.

***

சீவன் சிவன் ஆக வேண்டும் !

காவி யுடுத்தும் … காவித் துணியை உடுத்திக் கொண்டும்,

தாழ்சடை வைத்தும் … தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து

வைத்தும்,

காடுகள் புக்கும் தடுமாறி … காடுகளில் புகுந்து தடுமாறியும்,

காய்கனி துய்த்தும் … காய், பழவகைகளைப் புசித்தும்,

காயம் ஒறுத்தும் … தேகத்தை விரதங்களால் வருத்தியும்,

காசினி முற்றும் திரியாதே … உலகம் முழுவதும் திரிந்து

அலையாமல்,

சீவன் ஒடுக்கம் … சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்

பூத வொடுக்கம் … ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்

தேற உதிக்கும் … நன்றாக உண்டாகும்படி,

பரஞான தீப விளக்கம் காண … மேலான ஞான ஒளி

விளக்கத்தினையான் காணும்படி,

எனக்குன் சீதள பத்மம் தருவாயே … எனக்கு உன் குளிர்ந்த

தாமரை அடிகளைத் தந்தருள்க.

சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன் சிவன் என்று ஆகிவிடும்.

***

நாதத்து ஓசைக் காண் துணையே சுடர் மூலத்தோனைத்

தூண்டிடவே உயிர் நாடிக் காலில் சேர்ந்திடவே அருள் …

உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை* நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக.

அவ்வையாரும் விநாயகர் அகவலில் இதையே சொல்கிறார்

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி

ஆறா தாரத்து அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையுங் கூறி……

***

ஐந்து வகை இசைக் கருவிகள்

திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட

டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண்

டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்றே

சங்கம் பல பேரி … (இதே ஒலியில்) ஒலிக்கும் சங்கமும் பல

பேரிகைகளும்,

செக கணம் சஞ்ச(ல்)லிகை பஞ்சம் பறை முழங்கும் போர் …

செககணம்சம் என்று ஒலித் திரளை எழுப்பும் சல்லிகை என்ற பெரும்பறையும், ஐந்து* வகையான இசைக் கருவிகளும் பறைகளும் முழங்குகின்ற போர்க் களத்தில்,

ஐந்து வகையான பறைகள்:

தோல்கருவி, தொளைக்கருவி, நரப்புக் கருவி, மிடற்றுக் கருவி, கஞ்சக் கருவி.

–subham—Tags– வள்ளி, தேவயானை முற்பிறப்பு, ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும், தில்லை மூவாயிரர் புகழ் ,Part 32, அருணகிரிநாதர் ,அரிய செய்திகள்