London Swaminathan’s Article Index for April 2026; Index No.161 (Post.15,696)

Written by London Swaminathan

Post No. 15,696

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Omens, Sanskrit Words and Valakhilya Rishis in Purananuru – Part 57 (Post No.15,566) 2/4

Two Tamil Kings acted as Servants of Common People!- Part 58; Purananuru Wonders -18 (Post No.15,585) 6/4

Image Worship in Sangam Tamil Literature! – Part 59 (Post No.15,604) 10/4

Famous Shiva Story in Purananuru- Part 60 (Post No.15,616) 13/4

Purananuru Wonders -21 Full-fledged Hinduism in Tamil Sangam Literature(Post No.15,625)16/4

Aliens / ETs, Sati and Samudrika lakshana in Sangam Tamil literature -Part 62 (Post No.15,637) 23/4****

46 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 46; இந்து மத கலைச்சொல் அகராதி-46 (Post.15,576) 5/4To

56 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 56; இந்து மத கலைச்சொல் அகராதி-56 (Post No.15,651)24/4***

Tiruppavai in Pictures with English Translations- Part One (Post No.15,573) 3/4/26

Tiruppavai in Pictures with Three English Translations- Part Two (Post No.15,577)4/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Three (Post No.15,582) 5/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Four (Post No.15,586)6/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Five (Post No.15,589) 7/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Six (Post No.15,594) 8/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Seven (Post No.15,598)9/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 8 (Post.15,603) 10/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 9 (Post No.15,607) 11/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 10 Last Part (Post No.15,611) 12/4

****

Tirukkural Encyclopaedia- Chapter 1 (Kural1 to 5) Post.15,659 (26/4)

Tirukkural Encyclopaedia- Chapter 1 (Kural 6 to 10) Post.15,662 (27/4)

Tirukkural Encyclopaedia- Chapter 2 (Kural 11 to 15) Post No.15,669 (28/4)

Tirukkural Encyclopaedia- Chapter 2 (Kural 16 to 20) Post.15,674 (29/4)

****

Uraiyur -Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,647) 23/4

Thiru Anbil-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-3 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,560) 24/4

Tiruk Kudalur-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-4 திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,654)25/4

Kapisthalam-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-5 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,657) 26/4

Tiru Adanur-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-6 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,661)27/4

Pullap Puthankudi-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-7;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,668) 28/4

Sarngapani temple-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-8;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,672) 29/4

Oppiliappan-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-9;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,675) 30/4

****

Tamil Articles

முருகப் பெருமானிடம் மோதி, தோல்வி அடைந்த புலவர் கதை- Part 62 (Post No.15,561) 1-4-76

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை; மார்க்கண்டேயன் கதை -Part 63 (Post No.15,565) 2/4

விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை! (Post No.15,570) ¾

அருணகிரிநாதர் ஒரு ‘இலி’-ச்சவாயன்!- Part 65 (Post No.15,575) 4/4

குகையில் நவ நாத சித்தர்கள்! வியாசருக்கு பிள்ளையார் உதவி!- Part 66 (Post No.15,579) 5/4

உடல் ஒரு 9 வாசல் நகரம்: அதர்வண வேதம் முதல் திருப்புகழ் வரை சொல்லும் அதிசயம்! (Post.15,584) 6/4

திருப்புகழில் சாரதாபீடம்! கடவுளர்கள் ஆடிய அற்புத நடனங்கள்! – Part 68 (Post.15,588)7/4

உடலும் மாமரமும் – நல்ல உருவகம்!- Part 69 (Post No.15,592) 8/4

இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597) 9/4

உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி  அருணகிரிநாதர்!  Part 71 (Post No.15,601)10/4

நடராஜர் உடலில் நமசிவாய எழுத்துக்கள்! அருணகிரிநாதரின் புது விளக்கம்- Part 72 (Post.15,606) 11/4

திருப்புகழில் 18  கணங்கள்எட்டு வகை வாதிகள்- part 73 (Post No.15,610) 12/4

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614) 13/4

காதலியைக் காண முருகன் போட்ட வேஷங்கள் – 75 (Post No.15,618)14/4

சிவபெருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621) 15/4

திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624) 16/4

‘ஆறுமுகம்’ என்பதன் பொருள்; இலங்கையில் பிரம்மா வேடனாக பிறந்த கதை–78 (Post.15,627)17/4

புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633) 19/4

கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)20/4

*******

வாஞ்சிநாதனை தரிசித்தேன் (Post No.15,562) 1/4/26

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!- Part 1 (Post No.15,658)26/4

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!-Part 2ஆறு கதைகள்! (Post.15,664)27/4

உலகு இன்பக் கேணி என வேதம் சொல்கிறதா ? பாரதியார் கூற்றுக்கு ஆதாரம் எங்கே? (Post.15,622) 15/4

ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part1 (Post.15,615)13/4

கல்யாண சுந்தர சிவாச்சார்யாவுக்கு லண்டனில் அஞ்சலி (Post No.15,640)21/4

சங்க காலத் தமிழ் நாட்டில் உருவ வழிபாடு (Post No.15,628) 17/4

சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666) 28/4

சித்திரா பெளர்ணமியும் சித்திர குப்தன் கோயிலும் (Post No.15,671) 29/4

தமிழ்ச்சங்க நூலிலும்,பைபிளிலும் கின்னரம்; பாபிலோனியாவில் தமிழ் தம்பட்டம்! (Post.15,655) 25/4

Q & A தொல்காப்பியம் – பாயிரம் – நச்சினார்க்கினியர் உரை – சந்தேகம் (Post.15,581) 5/4

பைரவர்களில் இத்தனை பேரா?  ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரைத் தரிசித்தேன் (Post.15,572) 3/4

–Subham—

Tags- London Swaminathan’s Article Index for April 2026; Index No.161

லண்டன் சுவாமிநாதனின் 81 திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்! (Post No.15,695)

Pictures of Lord Kanda, Subrahmanyar, Kartikeyan

Written by London Swaminathan

Post No. 15,695

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எனது பிளாக்குகளில் இலவசமாகப் படிக்கலாம்

முதலில் தலைப்புகளை மட்டும் படியுங்கள் ; எவ்வளவு சுவையானவையென்பது புரியும் ; 1300௦++ திருப்புகழ் பாடல்களை படித்து எடுத்த குறிப்புகள் இவை ; கட்டுரைகளை எழுதப் பிடித்த நாட்கள் 81; கட்டுரைகளை எழுதப் பிடித்த நேரம் 81X3 மணி நேரம்!

***

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362)  26/1

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2 (27/1)

திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள்! 28/1

நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371) 29/1

அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் ! (Post No.15,375)30/1

ராவணன் ஒரு முட்டாள்! திருப்புகழில் அரிய செய்திகள்- Part 6 (31-1-26)

அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 7 (Post.15,382)1/2/2026

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் -Part 8 (Post No.15,385)

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11 (Post.15,396)

அருணகிரி நாதர் பாடலில் முஸ்லீம் ஸலாமும் ஆதி சங்கரரின் அத்வைதமும்!-Part 12 (Post.15,398)

கனவுகள், எட்டுவகைப் பறவைகள், முருகன் கொடிகள் பற்றி முக்கிய செய்திகள்-13 (Post.15,401)

மூளையின் கலர் என்ன?  செட்டியார் வடிவில் முருகன்!- Part 14 (Post.15,404)

திருப்புகழில் பங்களாதேஷ் கோவில்;  காகத்துக்கு ஏன் ஒரு கண்? Part-15 (Post.15,407)

திருப்புகழில் வாளை மீன் ! யாதவர்கள் அழிந்த கதை – Part 16 (Post.15,410)

முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் ! திருத்தணி என்ற பெயர் எப்படி வந்தது ?- 17 (Post.15,413)

அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்! – Part 18 (Post No.15,416)

திருப்புகழில் புஸ்தகப் பித்தர்கள் மீது தாக்குதல்! எட்டு அபூர்வ சக்திகளை அடைய உதவும் துதி!—Part 19 (Post.15,419)

பறவை ஞானிகள் ‘பரமஹம்சர்’ பற்றி அருணகிரிநாதர் (Post.15,423)

சரஸ்வதியின் சகோதரன் முருகன்!  திருப்புகழில் மேலும் ஒரு புதிர்!- Part 21(Post No.15,425)

திருப்புகழில் திருமால் அவதாரங்கள்! விஷ்ணுவை விநாயகர் அடக்கிய கதை! -22 (Post No.15,428)

முருகனின் யானை வாகனம்- திருமால்! திருப்புகழில் பஞ்ச பாண்டவர்கள்!- Part 23 (Post No.15,430)

அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)

முருகன் ஒரு மாலுமி! அவன் ஓட்டும் கப்பல் பற்றி அருணகிரிநாதர்!-Part 25 (Post.15,436)

திருமாலை முருகன் அடக்கிய கதை! வேதத்தின் ஆறங்கம்! மதுரையின் பெருமை- Part 26(Post.15,438)

20 ரி ரி ரி ரி ரி தேவியர் நாமங்கள்; திருப்புகழில் சொல் அழகும் பொருள் அழகும்! -27 (Post No.15,442)

திருப்புகழில் ஐம்படைத் தாலி, பாற்கடலைக் கடைந்த காட்சி, ஏழுவகை நரகம்- Part 28 (Post.15,445) 22/2/26

திருப்புகழில் சிவாய நம மந்திர விளக்கம்;

சரப பட்சி கதை; அணு விஞ்ஞானம் – 29 (Post.15,448) 23/2/26

நான் ஒரு முட்டாளுங்க! அருணகிரிநாதரின் அவலக்குரல்- PART 30 (Post No.15,451)24/2/26

ஆறுமுறை ‘எட்டு இரண்டு’- அருணகிரியின் சொற்சிலம்பம்! 4 வகை ஜீவன் முக்தர்கள்- Part 31 (Post.15,454) 25/2/26

வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு! ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும்! தில்லை மூவாயிரர் புகழ் – Part 32, 26-2-2026

பச்சிலைக்கும், எச்சிலுக்கும் மயங்கியவன் சிவன் ! ஞான சம்பந்தரின் ஞான வாள்! – Part 33 (Post.15,459) 27/2

திருப்புகழில் ஐந்து கலைகள், ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463) 28/2/26

பாரதியும் அருணகிரியும்! திருப்புகழில் துரியோதனன்- பீமன் கதை – Part 35 (Post No.15,467) 1/3/2026

முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 (Post.15,471 )2/3

திருப்புகழில் நரகத்தின் வருணனை!  யானையைக் கோழி வென்ற கதை ! Part-37 (3/3/26)

திருப்புகழில் ராகங்கள்! ஆதிஷேனுக்கு ஆயிரம் தலைகள் உண்டான கதை- Part 38 (Post.15,473) 8/3

சிவன் பெயரில் ரி ரி ரி ரி! அருணகிரிநாதர் சொற்சிலம்பம்! -Part 39 (Post 15,477) 9/3

தாமா தாமா யாமா யாமா காமா காமா தேமார் தேமா: அருணகிரியின் சொற் சிலம்பம்– 40(15,480)10/3

சேவல் பற்றி அருணகிரி வருணனை- Part 41! 10/3

கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்குபற்றி அருணகிரிநாதர் (Post No.15,489) 12/3

இறைவனின் எட்டு குணங்கள்; பாரதியாரும் அருணகிரியும் கேட்ட வரங்கள் (Post.15493) 13/3

சிவன்: பரித்தார், சிரித்தார், எரித்தார், பொரித்தார், உரித்தார், விரித்தார், தரித்தார் -44 (Post.15,495)14/3

அந்தகாசுரன் கதை; ஆண் பனை மரங்கள் காய்த்த கதை – Part 45 (Post.15,499)15/3

ஆறு பெரியோர்கள் புகழ்ந்த கரு நெல்லிக் காயின் மஹிமை- பகுதி-46 (Post.15,501)16/3

கண்ணகி எரித்த மதுரையும், அனுமன் எரித்த இலங்கையும்! முருங்கைக்காயும் முருகனும்- 47 (Post.15,504) 17/3

வெளி உலகவாசிகள் ET, ALIEN CIVILIZATION, பிராமணர் எண்ணிக்கை CENSUS பற்றி அருணகிரிநாதர்! -48 (Post.15,507)18/3

அ’ என்றால் சிவன்; முதல் குறளுக்கு புதுப் பொருள்! (Post No.15,511)-49 (19/3)

ஆறு சாஸ்திரங்கள், ஏழு குலகிரிகள்,  துவார பாலகர், ஏழிசை பெயர்கள்-Part 50 (Post.15,515)20/3

முத்துக்களின் வகைகள், விஸ்வரூப தரிசனம் பற்றி அருணகிரிநாதர்! -51 (Post.15,518)21/3

சிவனுக்குப் பிடித்த இலைகளும், பூக்களும்; முருகனின் 16 லக்ஷணங்களும்-52 (Post.15,522)22/3

கண்ணனுடன் 16,000 பெண்கள்! திருப்புகழில் ரத்தினைக் கற்கள் -53 (Post.15,525)23/3

முக்தி தரும் தலங்களின் பட்டியல்! யோகிகள் உணரும் பத்து நாதங்கள் ! (Post No.15,529)24/3

அவனிபுகழ் சோமநாதன் யார்? அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 55 (Post No.15,532)25/3

சப்தஸ்தான தலங்களின் பட்டியல், துஷ்டர்கள் பட்டியல் (Post No.15,535)26/3

தாருகாவன சம்பவம்: அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்-Part 57 (Post.15,540)27/3

வயலூரில் முருகன் செய்த அற்புதங்கள்- Part 58 (Post No.15,544)28/3

கொங்கணச் சித்தர் செய்த அற்புதம்  பற்றி அருணகிரி நாதர் -59 (Post No.15,548)29/3

யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை; முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ? (Post.15,552)30/3

சரபேஸ்வரர் பற்றி அருணகிரிநாதர்; நரி பரியான கதை (Post No.15,556)1/3

முருகப் பெருமானிடம் மோதி, தோல்வி அடைந்த புலவர் கதை- Part 62 (Post No.15,561) 1-4-76

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை; மார்க்கண்டேயன் கதை -Part 63 (Post No.15,565) 2/4

விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை! (Post No.15,570) ¾

அருணகிரிநாதர் ஒரு ‘இலி’-ச்சவாயன்!- Part 65 (Post No.15,575) 4/4

குகையில் நவ நாத சித்தர்கள்! வியாசருக்கு பிள்ளையார் உதவி!- Part 66 (Post No.15,579) 5/4

உடல் ஒரு 9 வாசல் நகரம்: அதர்வண வேதம் முதல் திருப்புகழ் வரை சொல்லும் அதிசயம்! (Post.15,584) 6/4

திருப்புகழில் சாரதாபீடம்! கடவுளர்கள் ஆடிய அற்புத நடனங்கள்! – Part 68 (Post.15,588)7/4

உடலும் மாமரமும் – நல்ல உருவகம்!- Part 69 (Post No.15,592) 8/4

இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597) 9/4

உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி  அருணகிரிநாதர்!  Part 71 (Post No.15,601)10/4

நடராஜர் உடலில் நமசிவாய எழுத்துக்கள்! அருணகிரிநாதரின் புது விளக்கம்- Part 72 (Post.15,606) 11/4

திருப்புகழில் 18  கணங்கள்எட்டு வகை வாதிகள்- part 73 (Post No.15,610) 12/4

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614) 13/4

காதலியைக் காண முருகன் போட்ட வேஷங்கள் – 75 (Post No.15,618)14/4

சிவபெருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621) 15/4

திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624) 16/4

‘ஆறுமுகம்’ என்பதன் பொருள்; இலங்கையில் பிரம்மா வேடனாக பிறந்த கதை–78 (Post.15,627)17/4

புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633) 19/4

கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)20/4

—subham—

Tags- லண்டன் சுவாமிநாதன் , 81 திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்!

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-13; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,694)

Written by London Swaminathan

Post No. 15,694

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவெள்ளியங்குடி

திருவெள்ளியங்குடி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள கோலவில்லி ராமர் கோயில், சுக்கிரன் வழிபட்ட பார்கவ க்ஷேத்திரம் ஆகும்; சுக்கிர தோஷ பரிகாரத் தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, மயன் உருவாக்கிய இந்தத் தலத்தில் பெருமாள் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.

கோலவில்லி ராமர் கோயில்

மூலவர் – கோலவில்லி ராமர், க்ஷீராப்திநாதன்(சயன கோலம்).

உற்சவர் – சிருங்கார சுந்தரர்

தாயார் – மரகதவல்லி (ஸ்ரீதேவி, பூதேவி)

தலவிருட்சம் – செவ்வாழை

தீர்த்தம் – சுக்கிர தீர்த்தம்,பிரம்ம தீர்த்தம்,பரசுராம தீர்த்தம், இந்திர தீர்த்தம்

விமானம்: புஷ்கலாவர்தக விமானம்.

சுக்கிரன் தலம்: சுக்கிரன் (வெள்ளி) தன் கண் பார்வையை மீண்டும் பெற வழிபட்டதால், இது சுக்கிர பரிகாரத் தலமாக விளங்குகிறது.

இந்த ஒரு தலத்தைத் தரிசித்தால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 16-18 கி.மீ தொலைவில் திருப்பாணாந்தாள் சாலையில் இத்தலம் அமைந்துள்ளது.

பெருமாளின் 108 திருத்தலங்களில் இங்கு மட்டும் கருடாழ்வார் சங்கு,சக்கரம் ஏந்தி 4 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்து வருடத்திற்கு ஒரு தார் போட்டு வாழையடி வாழையாக இருந்து வரும் காட்சியை இன்றும் காணலாம்.

தனக்குக் கண்ணில் ஒளி தந்த பெருமாளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சுக்கிர பகவான் அணையா தீபமாக இத்தலத்தில் இரவு பகலாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே இத்தலம் நவக்கிரகத் தலங்களில் சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.

மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்க, வந்தது இறைவன் என்றறியாத மன்னனும் சம்மதிக்க..ஆனால், உண்மை நிலை அறிந்த சுக்கிராச்சாரியார், தாரை வார்க்கும் செம்புக்குடத்தின் துவாரத்தை…வண்டாக உருவெடுத்து அடைத்துவிட்டார்.

இந்தச் செயலை அறிந்தபகவான் , ஒரு குச்சியால் துவாரத்தைக் குத்த, ஒரு கண்ணை இழந்தார் சுக்கிராச்சாரியார்.சுக்கிரன் ஒரு கண் இழ்ந்த நிலையில் பலத் தலங்களில் வழிபட்டு இங்கு மீண்டும் பார்வையினைப் பெற்றார்.இதனால் இத்தலம் வெள்ளி (சுக்கிரன்)யங்குடி என்றானது

தவிர்த்து, தேவ சிற்பியான விஸ்வகர்மா, பெருமாளுக்கு அழகிய கோயில்களைக் கட்டி முடித்ததைப் பார்த்த, அசுரகுல சிற்பி மயன், தன்னால் கட்டமுடியவில்லையே என வருத்தப்பட்டு பிரம்மனை வேண்டினான். பிரம்மனும், இத்தலம் பற்றிக் கூறி இங்கு மயனை பெருமாளை வேண்டி தவம் இருக்கச் சொன்னான்.

பெருமாள், சங்கு சக்கரத்துடன் மயனுக்கு தரிசனம் தர, மயனோ, தனக்கு ராம அவதாரமாய் காட்சித் தர வேண்டினான்.தன் கரத்திலிருந்த சங்கு, சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்துவிட்டு பெருமான் கோலவில்லி ராமனாக அம்புகளுடன் காட்சி தந்தார்.

மண்டோதரியின் தந்தை மயன் வழிபட்ட தலம். நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான் வழிபட்ட தலம்.

கண் தோஷத்தை போக்கும் திருவெள்ளியங்குடி :-

நவக்கிரகங்களில் “வெள்ளி” எனப்படும் “சுக்கிர பகவான்”, இத்தல இறைவனை தவமிருந்து வழிபட்டமையால் இவ்வூர் “வெள்ளியங்குடி” எனப் பெயர் பெற்றது.  மேலும், இவ்வூர் “சுக்ரபுரி”

****

திருவெள்ளியங்குடி  பாசுரங்கள்

“ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு

தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு திக்குற வளர்ந்தவன் கோயில்

அள்ளியம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரியரி யென்றவை யழைப்ப

வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான் திருவெள்ளியங் குடியதுவே”

***

முடியுடையமரர்க்கு இடர்செய்யும்அசுரர்தம் பெருமானை அன்று

அறியாய்

மடியிடைவைத்து மார்வை முன்கீண்ட மாயனார் மன்னிய கோயில்

படியிடை மாடத்து அடியிடைத் தூணில்nபதித்த பன் மணிகளின் ஒளியால்

விடிபகல் இரவென்று அறிவரிதாய        திருவெள்ளியங்குடியதுவே.                   –   திருமங்கையாழ்வார்.

—Subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-13;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவெள்ளியங்குடி, சுக்கிரன் தலம், சுக்கிர பரிகாரத் தலம், கோலவில்லி ராமர் கோயில்

பெருமை மிகு தமிழகத்தில் சோழ மண்டலம்! (Post No.15,693)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,693

Date uploaded in London – 4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது சோழ மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் சோழ மண்டலம்! 

ச. நாகராஜன்

 தமிழகத்தில் அனைவரும் தொழுதுண்டு செல்லும் ஒரு பகுதியைக் காண்பியுங்கள் என்றால் பச்சைபசேலென எங்கு நோக்கினும் திகழும் அற்புதமான வயல்களைக் கொண்டுள்ள சோழ மண்டலத்தையே அனைவரும் சுட்டிக் காட்டுவர்.

சோழநாடு சோறுடைத்து என்பது முதுமொழி.

உழுதுண்டு அனைவருக்கும் அமுது படைக்கும் தஞ்சைப் பகுதியை அனைவரும் தொழுதுண்டு பின் செல்வதில் வியப்பே இல்லை.

 வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் பெருமையை சங்க இலக்கியம் முதல் இன்றைய திரைப்படப் பாடல் வரை முழங்குகிறது.

 காலம் காலமாக வணிகத்திலே சிறந்து விளங்கிய பூம்புகார் துறைமுகம் பற்றிய வியத்தகும் செய்திகளை இலக்கியத்தில் காண்கிறோம். கலைகளின் தாயகமாக விளங்கி, இந்திர விழா முதல் பல்வேறு விழாக்களைக் கண்ட சோழ மண்டல நகர்கள் தமிழகத்தின் பெருமையைச் சேர்க்கும் இடங்களாகும்.

 வீரத்தின் விளைநிலமாய்த் திகழ்ந்து உலகம் வியக்கும் மன்னர்களெனத் திகழ்ந்த இராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் பற்றியும் கரிகால் வளவன் பற்றியும் வரலாறு பிரமிப்புடன் விளக்குகிறது.

 கட்டிடக் கலையின் உச்சமாக ராஜராஜன் அமைத்த பெரியகோவில் தஞ்சையில் திகழும் போது, கடல் கடந்து சென்று ராஜேந்திர சோழன் வென்ற நாடுகள் அவனது தீரம், வீரம், கடற்படை நுட்பம், தொழில்துறையில் மேலோங்கி நின்ற தகைமை ஆகியவற்றைப் பறை சாற்றுகின்றன.

சீர்காழியில் அவதரித்து சிவபிரானின் எல்லையற்ற மகிமையை ஆயிரக் கணக்கில் தேவாரப் பாடல்களாகப் பொழிந்த ஞான சம்பந்தரின் திருமுறைகள் தமிழுக்குத் தெய்வ மாண்பைத் தருபவை.

 பிரபஞ்சத்தின் மர்மத்தை விளக்கும் சிதம்பரத் திருத்தலம் எல்லையில்லாப் பெருமையைக் கொண்ட ஆதித் திருத்தலமாகும்.

நடராஜரின் தாண்டவம் பிரபஞ்ச மர்மத்தை விளக்குகிறது என்பதை அறிந்த பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன் நேரடியாக மனைவியுடனும் தன் படப்பிடிப்பினருடனும் சிதம்பரம் வந்தார். அறிவியல் கூறும் பிரபஞ்சத்தின் ஆரம்பத் தோற்றமும் இந்துமதம் கூறும் வரலாறும் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒத்துப் போவதை ஆராய்ந்த அவர் சிதம்பரம் நடராஜரை பிரபலமான தன் காஸ்மாஸ் தொடரில் ஒரு எபிசொடில் காட்டி மகிழ்ந்தார். அமெரிக்காவின் பிரபலமான தொடர் இது என்பது குறிப்பிடத்தகுந்தது,

 ‘காட் பார்டிகிள்’ எனப்படும் கடவுள் துகளை ஆராயும் செர்ன் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவா அருகே உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய அரசு கடவுள் மர்மத்தை விளக்கும் நடராஜரின் திருவுருவச் சிலையை அன்பளிப்பாக வழங்கியது. அது உலகின் இந்த பிரபல ஆய்வுக்கூடத்தின் முகப்பில் நிறுவப்பட்டிருக்கிறது.

உலகையெல்லாம் மயக்கும் இசையின் ஆணிவேராகத் திகழ்ந்து கீர்த்தனைகளைத் தந்த கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோர் பிறந்த திருவாரூர் மண்ணின் சிறப்பே சிறப்பு. அங்குள்ள கோவிலின் பிரமிப்பூட்டும் வரலாறும் கமலாலயக் குளத்தின் அழகும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

ஊழியின் போது அழியாமல் நின்ற மகாமகக் குளம் கும்பகோணத்தின் பெருமையை உயர்த்தும் போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள சைவ, வைணவ, சக்தி ஸ்தலங்களும் நவகிரக தலங்களும் லட்சக் கணக்கான பக்தர்களை ஈர்த்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன.

 சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம், தர்மபுர ஆதீனம், திருப்பனந்தாள் உள்ளிட்ட சைவ மடங்கள் சைவ சமயத்தை மேம்படுத்தும் வரலாறைச் சுட்டிக் காட்டும் மடங்களாகும்.

 இது ஒரு புறமிருக்க என்றும் நிலைத்திருக்கும் மகா காவியமான இராமாயணத்தைத் தமிழிலே பத்தாயிரம் பாடல்களாகப் பாடி உலகையே கொள்ளை கொண்ட கம்பனது பூமியும் சோழ பூமி தான்.

தேரழுந்தூரில் வாழ்ந்து அனைத்து அறிஞர்களையும் தன் பக்கம் பார்க்க வைத்த கம்பனின் சொற்களுக்கு ஈடு இணை இல்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

சொல் கண்டார் சொல்லே கண்டார்சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

 என்பார் கம்பனை அணு அணுவாக ரசித்த கம்ப ரசிகர் கவிஞர் கே.என். சிவராஜ பிள்ளை.

 கம்பனைப் போல பத்து மடங்காக, ஒரு லட்சம் பாடல்களைப் பாடி பத்துக் கம்பன் என்று பெயர் பெற்ற மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் எண்ணற்ற நூல்கள் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பவையாகும். இவரது சீடராக மிளிர்ந்து தமிழ் நூல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை கிராமம் கிராமமாகத் தேடி அலைந்து சேகரித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட எண்ணற்ற அரும் தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழின் எல்லையற்ற பெருமையை உணர்த்திய மகாமகோபாத்தியாய உ.வே.சுவாமிநாதையரின் பெருமையும் தனி தான்!

 திருச்சி மலைக்கோட்டையின் மாண்பை ரசிப்பதோடு அங்குள்ள அதி நவீன தொழில்நுட்பத்தைப் பறைசாற்றும் பிரம்மாண்டமான தொழிலகங்களையும் காண முடியும்.

 அன்னை அகிலாண்டேஸ்வரி, சுவாமிமலை முருகன், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதன் என்று அனைவருக்கும் அருள் பாலிக்கும் தெய்வங்கள் கோவில் கொண்டிருக்கும் இடங்கள் சோழ மண்டலத்தில் எண்ணற்றவை.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமுனைப்பாடியில் அவதரித்து சைவ சமய மேன்மையைப் பறைசாற்றிய அப்பர் தேவார மூவருள் இரண்டாமவர் ஆவார். இவர் இயற்றி அருளியுள்ள தேன் சொட்டும் தேவாரப் பாடல்கள் இன்றும் கோவில்களில் ஓதப்படுவது கண்கூடு.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்யஞானசபை பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் சித்த பூமியாக விளங்குகிறது. ராமலிங்க ஸ்வாமிகள் என்று ஆரம்பத்தில் அறியப்பட்ட வடலூர் வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை உலகிற்குக் காட்டினார். தன் அறையின் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்ட அவர் உடலுடன் மறைந்தார் என்பது உலகையே ஆச்சரியப்பட வைத்தது. பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில், அரசின் உயர் அதிகாரி இதை ஆய்வு செய்து இது உண்மை தான் என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். ஆயிரக் கணக்கான பாடல்களை அருள் மழையாகப் பொழிந்து திரு அருட்பாவை உலகிற்குத் தந்து சாகாப் பெருநெறியைக் காட்டியவர் வள்ளலார் பெருமான்.

 தஞ்சாவூர் மற்றும் கடலூர் பகுதியில் உள்ள மண்வளம் இயற்கை தாதுக்கள் நிரம்பியது என்பது கடைசியாக அறிவியல் தரும் அற்புதச் செய்தி!

 வேளூர் ஆத்மநாத தேசிகரால் இயற்றப்பட்ட சோழமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களும் தமிழகத்தில் சோழமண்டலம் கொண்டிருக்கும் பெருமையைப் பறை சாற்றுபவை.

 இப்படி தமிழுக்கு ஏற்றம் தந்து கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிலகங்கள் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சோழ மண்டலம் பெருமை மிகு தமிழகத்தின் சிறப்பான மண்டலம் அல்லவா!

***

Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 26 to 30) Post.15,692

Picture of Anthanar- Brahming doing Gayatri Japa

Picture of Group of Anthanars- Brahmins

Written by London Swaminathan

Post No. 15,692

Date uploaded in London –3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tiru Valluvar is a great Hindu of fifth century CE is proved by his use of Sanskrit words GUNAM, GANAM, LOKA etc.

Kural 28 is in Tolkappiam which also belongs to fifth century CE linguistically, used MANTRAM for maraimozi. This shows both belong to the same age and both talk about Vedic mantras.

The five senses, Gunam etc are repeated in Upanishads Bhagavad Gita umpteen times

Kual 23 used IRUMAI for dwatvam which is used by LordKkrishna inBbhagavad Gita to denote opposites e.g. hot and cold, up and down, this birth and next birth, lower world and upper world etc. it is typical Hindu expressions.

*Anthanar is a word that is often used to refer to Brahmins in ancient literature as well as contemporary language.

ANTHANAR IS BRAHMIN in Kural 543; it is also used for Kapilar in Purananuru; Anthanars are compared to cows throughout Sanskrit and Tamil literature to say both are tame, not violent in nature.

In short more places in Tamil literature show Anthanar is Brahmin not saint. But both are equally compassionate.

For Kurals 28, 29, 30 parallels and examples are available only from Hindu scriptures. Durvasar, Agastyar episodes

Kural 30 is in Satapata Brahmanam and Dhammapadam of Buddha. Satapata Brahmanam is at least 300 years older than Buddha.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.Himalayan Academy- HA

7.H A Popley – HAP (not full book) Year 1931

8.Tamil Original

****

 Rishi- Seer- Ascetic Picture

26.The great achieve the impossible; the low cannot– ANM+2

***

26.Those who accomplish there things  are considered great;

While those who cannot, remain small–-SMD

***

26.
Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them. –GUP

***
The small the paths of ease pursue
The great achieve things rare to do.         26– SB

***

26.The great will do what is difficult but the low cannot do it– EVS

***

Verse 26 The great ones are they who can dispatch the most Difficult tasks; the small ones are they who cannot. HA

***

26. Hard things the great will always do

Hard things the mean can never do –HAP

***

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார். 26

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Picture of Ascetics in Kasi- Varanasi

27.The infinite book of the secret of nature lies open to only those who are endowed with  the gift of understanding  the sensations of  touch and taste and sight and sound and smell– ANM+2

***

27.Only a person who comprehends the real nature of the five senses,

Can appropriately live his life on earth–-SMD

***

27.
Taste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway.
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell. –GUP

***

They gain the world, who grasp and tell
Of taste, sight, hearing, touch and smell.         27– SB
***

27.He who knows the qualities of the five senses – taste, sight, touch, hearing and smell –has the full knowledge of the world– EVS

***

Verse 27 Touch, taste, sight, smell and hearing- He who controls these five magically controls the world. HA

***

27.He holds the world in fief,

Who knows the measure of the senses five – HAP

***

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.  27

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Siva as a Yogi

28.The greatness of the sages of wisdom is known by their mighty words that act like the spell of a new prophesy and shape the destinies of men — ANM+2

***

28.One’s prophetic words alone will prove

worth and greatness, in course of time– SMD

***
28.
The might of men whose word is never vain,
The ‘secret word’ shall to the earth proclaim.
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world. –GUP

***

Full-worded men by what they say,
Their greatness to the world display.         28– SB
***

28.The mystic words of ascetics which are full of effect will show their greatness to the world– EVS

***

Verse 28 Their own secret sayings reveal to the world The greatness of men whose words prove prophetic. HA

***

28.The greatness of the men of certain speech

On earth by hidden word is shown –HAP

***

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். 28

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

29.The wrath of those who stand secure on the mountain heights of virtue, though lasting for a second, is so terrible and volcanic that the world can hardly resist– ANM+2

***

29.The anger of the righteous cannot

be endured even for a moment – SMD

***
29.
The wrath ’tis hard e’en for an instant to endure,
Of those who virtue’s hill have scaled, and stand secure.
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted. –GUP

***
Their wrath, who’ve climbed the mount of good,
Though transient, cannot be withstood.         29– SB
***

29.The wrath of those of good disposition cannot be resisted even for a moment– EVS

***

Verse 29 It is impossible to endure even a moment’s wrath of those Who have scaled and stand upon the mountain called virtue. HA

***

29.Even for a moment, it is hard to check the wrath

Of those who have climbed the mount of saintliness—HAP

***

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது. 29

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Picture of an Anthanar/ Brahmin doing Vishnu Puja


30.It is the virtuous that are called Anthanar; it is for they that scatter kindness towards all the breathes– ANM+2

***

30.Those who are merciful are really the men of virtue, because they have compassion for all living creatures – SMD

***

30.
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue’s sons the name of ‘Anthanar’ men give.
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness. –GUP

***

With gentle mercy towards all,
The sage fulfils the vitue’s call.         30– SB

***

30.The ascetics are called truly anthanars because they are kind to all creatures– EVS

Verse 30 Renunciates are called the priestly ones For they are clothed in robes of compassion for all life. HA

***

30.The learned say that saints alone are Brahmans true,

For they behave as clothed in grace to every living thing—HAP

***

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.     30

–Subham—

Tags- Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 26 to 30) , Anthanar, Gunam, Mantra, Pictures, Ascetics, Brahmins, Anthanar images

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 58; இந்து மத கலைச்சொல் அகராதி-58 (Post 15,691)

Written by London Swaminathan

Post No. 15,691

Date uploaded in London –3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

English version was posted yesterday; here is the Tamil version.

மதலசா

இந்தப் பெண்மணியின் கதை மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது.  மதலசா, தனது குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே ஆன்ம ஞானம் மற்றும் வைராக்கியத்தை தாலாட்டுப் பாட்டுகள் மூலம் புகட்டினார். அவர் ஒரு ஞானமுள்ள தாயார். . சத்வம், ஆன்ம ஞானம், மற்றும் உலக ஆசைகளைத் துறத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் இவரது போதனைகள் ‘மதலசா உபதேசம்’ என்று அழைக்கப்படுகிறது.

அவர் ஒரு ப்ரஹ்மவாதினி ;அதாவது தத்துவ வாதினி.

விசுவாவசு என்னும் கந்தர்வனின் புதல்வி. ரிதத்வஜன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் .

அவருக்கு விக்ராந்த ஸுபாஹு,  க்ஷத்ருமர்தானா  என்ற மூன்று புதல்வர்கள் ; அவர்கள் மூவரும் வாலிபப் பருவம் எய்தியவுடன் சந்யாசிகள் ஆகிவிட்டனர்  . ஒரு தாயாரின் தாலாட்டுப்பாட்டுக்குள்ள சக்தியை இது காட்டுகிறது ; சிறுவயதிலிருந்தே காதில் நல்ல விஷயங்களைப் போட்டுக்கொண்டே இருந்தால், அவர்கள் வாழ்நாள் முழுதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்; எந்த தீய சக்தியும் அவர்களை அணுக முடியாத கவசம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் .

***

மாதவி  ( மஹாபாரத மாதவி )

யயாதி மன்னனின் மகளான மாதவி, கன்னித் தன்மையை மீண்டும் பெறும் வரத்தைப் பெற்ற பேரழகியாவாள். காலவ முனிவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, அவள் நான்கு மன்னர்களிடம் அனுப்பப்பட்டு 800 குதிரைகளைப் பெற்றுத் தந்தாள்

மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் இந்தக்  கதை உள்ளது.  காலவர் என்பவர் விச்வாமித்ரரிடம் கல்வி கற்றார். குருகுல வசம் முடிந்தது. குருவே! என்ன தட்சிணை கொடுக்க வேண்டும்? என்று பணிவுடன் கேட்டார். காலவர் ஏழை மாணவர் என்பதால் போய் வா! சீடா ! போய் வா! சீடா!  என்று இருமுறை கூறினார்; பொருள் விளங்காத  காலவர் குரு தட்சிணை எவ்வளவு வேண்டும்? என்று மீண்டும் மீண்டும் வினவ , கோபத்தில் குரு விச்வாமித்தார் சொன்னார்,“போ! 800 வெள்ளைக் குதிரைகளைக்   கொண்டுவா; அதன் காதுகள் ஒருபுறம் மட்டும் கருப்பாக  இருக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார் .

காலவர் கவலையுடன் குதிரை தேடி அலைந்தபோது கருடன் வந்து, “வா உன்னை யயாதி மன்னரிடம் அழைத்துச் செல்கிறேன்; அவர் உதவிடுவார்” என்று சொல்லி கூட்டிச் சென்றார் யயாதி , “எதையும் கேள்” தருகிறேன்” என்றார்; வினோதமான 800 குதிரைகள் தேவை என்றவுடன் அவருக்குத் திகில் ஏற்பட்டது.  இரு நூறு குதிரைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் என் மகள் மாதவி பேரழகி. அவளை அடுத்த நாட்டு மன்னரிடம் அழைத்துச் சென்று உன் கோரிக்கையைச் சொல்; சரி என்று சொன்னால் உனக்குக் குதிரைகள் கிடைக்கும் என்றார். அந்தப் பெண்ணரசி மாதவி, யாருடன் படுத்தாலும் கன்னித் தன்மையை இழக்காமல் குழந்தை பெறும் பாக்கியத்தை—வரத்தைப்– பெற்றிருந்தாள். கடைசியாக அவள் திவோதசன் என்ற மன்னருடன் படுக்கச் சென்றபோது இந்தக் கதை வருகிறது.    

மன்னர்கள் பல பெண்களை மணப்பதும் ஒரு மன்னன் போரில் தோற்றால் அவனுடைய மனைவியர்,  கொள்ளையிட்ட செல்வத்தின் பகுதியாக மாற்றானுக்குச் சொந்தமாவதும் இந்தியா முழுதும் வழக்கில் இருந்தது . ஆகவே மாதவி பல மன்னர்களுடன் படுத்தது  தவறில்லை என்ற கட்டத்தில் புகழ்பெற்ற கணவன்- மனைவி பட்டியல் வருகிறது

ஹர்யாஸ்வ  ( அயோத்தி மன்னன்) , திவோதாச  ( காசி மன்னன்)  , உசிநார ( போஜமன்னன் ) ஆகியோருடன் இன்பம் துய்த்து 600 குதிரைகளைப் பெற்று காலவரிடம் கொடுத்தாள்; மீண்டும் கன்னித் தன்மையைப் பெற்றவுடன்  நாடு திரும்பினாள் ; அவளுக்குப் பிறந்த வசுமனஸ், ப்ரதர்தன, சிபி,  அஷ்டக ஆகிய  நால்வரும் பேரரசர்களாகத் திகழ்ந்தனர் . அவளுடைய தந்தை முறையான திருமணத்துக்காக ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தபோது அவள் மறுத்துவிட்டு துறவற வாழ்க்கை வாழ்ந்தாள்செக்ஸ் இன்பத்துக்கு பிறருடன் படுக்காமல், ஒரு முனிவர்க்கு உதவுவதற்புகாகப் பிறருடன் படுத்தாள் ; இதனால் இவரை தியாகத்தின் சின்னமாகவும் நல்ல மனைவியரில் ஓருவராகவும் மஹாபாரதம் காட்டுகிறது .

***

மாதவி  (சிலப்பதிகாரத்தில்)

சிலப்பதிகாரத்தில் கோவலனைக் கவர்ந்த நடன மாது மாதவி ;

ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகியையும், மாதவியையும்  இரு மாறுபட்ட துருவங்களாகவே படைத்திருக்கிறார்.  கண்ணகி ஒரு பெரும் வணிகனின் குடும்பத்தில் பிறந்து கோவலனுக்கு வாக்குப்பட்டாள்;  கண்ணகியின் கணவன் கோவலன், நடன மங்கை, பேரழகி மாதவியிடம் மையல் கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ்கிறான்.  இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அவள் பெயர் மணிமேகலை. இது இராண்டாவது காவியத்தின் பெயரும் ஆகும்

மாதவி பிறப்பால் கணிகையாக இருந்தபோதிலும் கோவலனை மணந்த பிறகு அவன் ஒருவனை மட்டுமே தன் வாழ்வில் ஏற்றாள்.   ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனம் வெறுத்து கோவலன் மாதவியைப் பிரிந்து தன் மனைவி கண்ணகியைத் தேடிப் போகிறான். மதுரை நகரில் புது வாழ்வுத் துவாங்கப்போன இடத்தில் பொற்கொல்லன் ஒருவனின் சதியால் கோவலனுக்கு பாண்டிய மன்னன் மரணதண்டனை கொடுத்துவிட்டான். இந்தத் துயரச்  செய்தியை அறிந்த மாதவி துறவறம் பூண்டு,  புத்த மதத்தில் சேர்கிறாள்; தன் மகள் மணிமேகலையையும் துறவறம் ஏற்கச்  செய்கிறாள்.

***

மாத்ர தேசம் 

பழங்கால இந்தியாவின் 56 தேசங்களில் ஒன்றான மாத்ர தேசம் வடமேற்கு இந்தியாவில் பஞ்சாப் பகுதியில் இருந்தது ;அதை ஆண்ட சல்ய என்ற மன்னன் , மஹாபாரத யுத்தத்தில் கெளரவர்களுக்குத் துணையாக நின்றான் ; அங்கிருந்து வந்த இளவரசி மாத்ரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆனாள். 

***

மாத்ரி

மாத்ர தேச மன்னன் சல்யனின் சகோதரி மாத்ரி  ; அவளை பாண்டு மன்னன் இரண்டாவது மனைவியாகக் கட்டிக்கொண்டான் ; பாண்டு செக்ஸ் அனுபவித்தால் இறந்துவிடுவான் என்று கிண்டம மகரிஷி சாபம் போட்டிருந்தார் ; இதனால் முதல் மனைவியான குந்தி , துர்வாச முனிவர்  கொடுத்த வரத்தால் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ( அதற்கு முன்னர் கர்ணன் ) ஆகியோரைப் பெற்றாள்; யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் என்று கருதி துர்வாசர் சொன்ன மந்திரத்தை மாத்ரிக்கும் கற்பித்தாள்; அவள் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரை  வரவழைத்து நகுலன், சகாதேவன் என்ற இரட்டையரைப்  பெற்றாள்; ஒரு நாள் பாண்டுவுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கவே மாத்ரியை அணைத்தார் ; சாபத்தினால் உடனே இறந்தார் ; தன்னால்தானே இப்படி நடந்தது என்று வருத்தப்பட்ட மாத்ரி கணவனின் சிதைத்தீயில் படுத்து உயிர்த்தியாகம் செய்தாள் ; புறநானூற்றில் பூதப் பாண்டியன் மனைவியும் இப்படி இறந்ததை ஒப்பிடலாம் .

(பாண்டு மரணத்துக்கு என்னுடைய விளக்கம் : இருதய நோய் காடுமையாக உள்ளவர்கள், செக்ஸ் போன்ற விஷயங்களில் ஈடு படும்போது மாரடைப்பு ஏற்பட்ட வாய்ப்புண்டு; இது டாக்டர்களின் எச்சரிக்கை; அதை சாபம் என்றால்தான் பழைய கால ஆட்கள் நம்புவார்கள் ; இது மிக அரிதாகவே நிகழும்) 

***

மத்வாசார்யார்

துவைதம் என்னும் கொள்கையைப் பரப்பியவர் ; சங்கரர், ராமானுஜர் ஆகிய இரண்டு தென்னிந்திய தத்துவ தரிசிகளுக்கு இணையாக நிற்பவர்.

இவர் ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்பி வருடம் ஆடி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று அந்தண குலத்தில் மத்யகேஹர் – வேதவதி ஆகிய தம்பதியருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு பெற்றோர் வாசுதேவன் என்று பெயர் சூட்டினர். வேத அத்யயனம் முடிந்த பின்னர் தர்க்கம் வியாகாரணம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார் வாசுதேவர். உலக வாழ்க்கையில் சற்றும் பற்றில்லாத நிலையில் உடுப்பி தலத்தில் ஸ்ரீ அனந்தேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மடத்தில் ஸ்ரீ அச்யுதப்பிரக்ஷர் இருப்பதை அறிந்தார் அவர். அவரை அணுகி தனக்கு சந்யாச தீக்ஷை அளிக்குமாறு வேண்டினார். அவரும் இவரது ஆர்வத்தையும் தகுதியையும் பார்த்து அவருக்கு துறவற தீக்ஷையைக் கொடுத்து ‘பூர்ண ப்ரஜ்ஞர்’ என்னும் சந்யாச நாமத்தை அளித்தார். இவர் வாழ்க்கையில் ஏராளமான அற்புதங்களைச் செய்தார்.

மத்வருக்கு இஷ்ட தெய்வம் கிருஷ்ணர். அவருக்கு ஒரு கோயில் கட்ட அவர் விரும்பினார். ஒரு நாள் தனது ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் அவர் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த போது கடலில் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் கப்பலின் தலைவன் அவரை அணுகி நமஸ்கரித்து கப்பலைக் காப்பாற்றுமாறு வேண்டினான். மத்வர் காற்று அடிக்கும் திசையை மாற்றி கப்பலை மூழ்காமல் கரைக்கு வாச் செய்தார். கப்பலுக்குரியவன் கப்பலிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற மத்வர் கப்பலில் இருந்த கோபீ திருமண் இட்டுக்கொள்வதற்கான பாறையை எடுத்துக்கொண்டார் ; அதை உடைத்தபோது  இடையே ஒரு ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதனால் மத்வர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். அந்த விக்ரஹம் ருக்மிணி தேவியால் த்வாரகையில் பூஜிக்கப்பட்டு வந்த விக்ரஹம். த்வாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி இருந்த அதுவே மத்வரின் கைக்கு இப்போது வந்து சேர்ந்திருந்தது. உடுப்பியில் அதைப் பிரதிஷ்டை செய்தார்.அதைத் தான் வாழ்நாள் முழுவதும் தன் கையினாலேயே அர்ச்சித்து வந்தார் மத்வர்.

தனக்குப் பின்னர் கிருஷ்ணருக்குப் பூஜை செய்ய, மத்வாசாரியர்  தனது சீடர்களில் விஷ்ணுதீர்த்தர் உள்ளிட்ட எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொருவரும் இரண்டிரண்டு ஆண்டுகள் அர்ச்சனை செய்யுமாறும் இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் அருளாணை பிறப்பித்தார். அதன் படியே இன்றளவும் அங்குள்ள எட்டு மடங்கள் ஒவ்வொன்றும் முறைப்படி இரண்டிரண்டு ஆண்டுகள் உடுப்பி கிருஷ்ணருக்கு அர்ச்சனை புரிந்து வருகின்றன.

மத்வாசாரியார் 37 அபூர்வமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமானவை பகவத் கீதா பாஷ்யம், ஸுத்ர பாஷ்யம், கீதா தாத்பர்யம், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், தசோபநிஷத் பாஷ்யம், பாகவத தாத்பர்ய நிர்ணயம், அனு பாஷ்யம், த்வாதச ஸ்தோத்ரம், தந்த்ர ஸாரம் ஆகியவையாகும். ருக் வேதத்தில் உள்ள முதல் 40 சூக்தங்களுக்கு அவர் பாஷ்யமும் செய்து அருளியுள்ளார்.

–SUBAHM—

TAGS -HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 58; இந்து மத கலைச்சொல் அகராதி-58, மதலசா, மத்வர், மாதவி, சிலப்பதிகாரம், மணிமேகலை, யயாதி, மஹாபாரதம், காலவ முனிவர் விசுவாமித்திரர், மத்வர், மாத்ரி, சல்யன் 

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-12;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,690)

Written by London Swaminathan

Post No. 15,690

Date uploaded in London –3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

விபூதி அணியும் பெருமாள்!

I took this picture from a dark area; no  lights.

திருக்கண்ணங்குடி (க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்)

மூலவர் – லோகநாதன், ச்யாமளமேனிப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – தாமோதர நாராயணன்.

தாயார் – லோகநாயகி உத்ஸவர் – அரவிந்தவல்லி.

தீர்த்தம் – ராவண புஷ்கரிணி.

ஸ்தல விருக்ஷம் – மகிழமரம் (வகுளம்)

விமானம் – உத்பல விமானம்.

ப்ரத்யக்ஷம்- ப்ருகு, ப்ருஹ்மா, உபரிசரவஸு, கெனதமர், திருமங்கையாழ்வார்.

காயாமகிழ், உறங்காப்புளி, தோலாவழக்கு, ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி’ என்பது பழமொழி.

விசேஷங்கள் – இவ்வூரின் முக்கிய அடையாளங்களான ஊறாக்கிணறும்உறங்காப்புளியும் இப்போது இல்லை. காயாமகிழ் (காய்ந்து பட்டுப் போகாத வரம்பெற்ற ஸ்தலவ்ருக்ஷம்) ஸந்நிதியின் பின்புறம் இருக்கிறது.

தாயார் ஸந்நிதியில் மூலவரும் உத்ஸவரும் ஒரே முகஜாடையுடனிருப்பது வேறெங்கும் காணமுடியாத அதிசயம். வஸிஷ்டர் தம் பக்தியால் வெண்ணை மயமான க்ருஷ்ணனை இளகி, த்ரவமாகாமல் கட்டி, திவ்யமங்கள விக்ரஹம்செய்து, த்யானம் செய்வார். இப்படி வெகு காலம் கடந்தபின், ஒரு நாள் பகவான் கோபாலன் உருவம்கொண்டு வஸிஷ்டர் ஆராதனம் செய்யும் வெண்ணை கண்ணனை அமுது செய்ததைப் பார்த்து கோபாலனைப் பிடிக்க ஒட, கோபாலனும் மேற்கு திசை நோக்கி ஒட, மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மஹரிஷிகள் பக்தியாகிய பாசக்கயிற்றால் கட்டியதால், கட்டுண்டு கோயில்கொண்டு கண்ணன் எழுந்தருளியதால்திருக்கண்ணங்குடி என்ற பெயர் உண்டாயிற்று.

திருமங்கையாழ்வார், நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான புத்த விக்ரஹத்தை ரங்கநாதன் கோபுரம் பிராகாரங்கள் முதலிய திருப்பணிகளை செய்ய கொண்டுவந்து புதைத்து, பகவான் அருளால் எடுத்துச் சென்ற ஸ்தலம் இது.

நாகப்பட்டினத்திலிருந்து பஸ் வழியாக சிக்கலுக்கும் கீவளுருக்கும் இடையேயுள்ள ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் தூரம் நடந்தோ வண்டியிலோ செல்லலாம். தஞ்சாவூர்- கீவளூர் ரயில் பாதையிலுள்ள கீவளூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 மைல் தூரம் சென்றும் அடையலாம்.

***

விபூதி அணியும் பெருமாள்!

நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடியில் உள்ள லோகநாதப் பெருமாள் கோயிலில் பெருமாள் விபூதி (திருநீறு) அணிந்து காட்சி தரும் அபூர்வ வைபவம் நடைபெறுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளில், விஷ்ணு சிவனை வணங்கும் ஐதீகத்தின் அடிப்படையில், பெருமாளுக்கு விபூதி காப்பு சாத்தப்பட்டு ‘திருநீரணி விழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [12]

  • திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்: இந்தத் தலத்தில் பெருமாள், திருநீறு அணிந்து, நெற்றியில் விபூதியுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
  •  
  • திருநீரணி விழா: இந்த அபூர்வ விழா சித்திரை மாதத்தில் 7-ஆம் நாள் நடைபெறும்.
  •  
  • ஐதீகம்: பொதுவாக விஷ்ணுவிற்கு நாமம் (திருமண்) சாத்தப்படும் நிலையில், இங்கு சிவபெருமானுக்குரிய விபூதியை பெருமாள் அணிந்து கொள்வது, அரி-ஹரன் (ஹரிஹர) சங்கமத்தைக் குறிக்கும்.
  •  
  • சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த வழிபாடு, விபூதியின் மகிமையை குறிக்கும்.

திருக்கண்ணங்குடி பாசுரங்கள்

திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இந்தப் பாசுரங்கள் “வங்கமா முந்நீர்” (பெரிய திருமொழி 9-1-1) என்ற பாடலுடன் தொடங்கி, திருக்கண்ணங்குடி பெருமாளின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன.

இத்தலத்தை ‘கண்ணன் வாழும் குடி’ (திருக்கண்ணங்குடி) என்று ஆழ்வார் போற்றுகிறார்.பாசுரங்கள் பெரும்பாலும் பெருமாளின் சாமளமேனி (நீலமேகவண்ணன்) மற்றும் லோகநாதன் என்ற திருக்கோலத்தை விவரிக்கின்றன.

மங்களா சாஸனம் –

திருமங்கையாழ்வார் – 1748-57 – 10 பாசுரங்கள்.

1748.  

வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய*  வாள்அரவின் அணை மேவி,*

சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி*  சாமமா மேனி என் தலைவன்,*

அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்*  அருங்கலை பயின்று,*  எரி மூன்றும்-

செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.  (2)

**

1749.  

கவளமா கதத்த கரி உய்ய*  பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-

துவள*  மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட*  சுடுபடை துரந்தோன்,*

குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்*  கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*

திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே 

**

1750.  

வாதை வந்து அடர வானமும் நிலனும்*  மலைகளும் அலைகடல் குளிப்ப,*

மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி*  விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*

போதுஅலர் புன்னை மல்லிகை*  மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,*

சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

**

1751.  

வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி*  வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*

பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்*  பஞ்சவர் பாகன்*

ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து*  உயர்கொடி ஒளிவளர் மதியம்,*

சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.

**

1752.  

மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்*  மூவடி நீரொடும் கொண்டு,*

பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து*  அலைபுனல் இலைக்குடை நீழல்,*

செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே. 

**

1753.  

மழுவினால் அவனி அரசை மூவெழுகால்*  மணிமுடி பொடிபடுத்து*  உதிரக்-

குழுவுவார் புனலுள் குளித்து*  வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*

குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்*  குளிர்தரு சூதம்மாதவியும்*

செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

**

1754.  

வான்உளார் அவரை வலிமையால் நலியும்*  மறிகடல் இலங்கையார் கோனை,*

பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்*  பருமுடி உதிர வில் வளைத்தோன்,*

கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட*  கணமுகில் முரசம் நின்றுஅதிர,*

தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே.

**

1755.  

அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை*  அஞ்சிடாதே இட,*  அதற்கு-

பெரியமா மேனி அண்டம் ஊடுருவ*  பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*

வரையின்மா மணியும் மரகதத் திரளும்*  வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,*

திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்*  திருக்கண்ணங்குடியுள் நின்றானே

**

1756.  

பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய*  பாரத மாபெரும் போரில்,*

மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்*  மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*

துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்*   சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,*

தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்*  திருக்கண்ணங் குடியுள் நின்றானே.

**

1757.  

கலைஉலா அல்குல் காரிகை திறத்து*  கடல்பெரும் படையொடும் சென்று,*

சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற*  திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*

மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*

உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்*  வல்லவர்க்கு இல்லை நல்குரவே.  (2)

—subham—

Tags- திருக்கண்ணங்குடி பாசுரங்கள், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-12;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், விபூதி அணியும் பெருமாள்

பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம்! (Post No.15,689)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,689

Date uploaded in London – 3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம். 

பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம்! 

ச. நாகராஜன் 

பெருமை மிகு தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன.

பழம் பெரும் தொண்டை மண்டலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய பத்து மாவட்டங்களும், புகழ் மிகு சோழ மண்டலத்தில் அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களும், சீர் மிகு கொங்கு மண்டலத்தில் தர்மபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் ஆகிய பத்து மாவட்டங்களும் தமிழ் வளர்த்த பாண்டிய மண்டலத்தில் கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களும் உள்ளன.

தமிழகப் பரப்பில் உள்ள ஒவ்வொரு அடி நிலப்பரப்பும் தமிழ், கலை, பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம், தொழில், நுண்ணறிவுத் துறைகள் என அனைத்திலும் மேம்பட்ட உயரத்தைத் தொட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

 கல் தோன்றி மண் தோன்றாக் காலதே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்பது ஆன்றோர் வாக்கு.

 ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி ஒன்று; ஏனையது

தன்னேர் இலாத தமிழ்

என்பது பழம் பெரும் பாடலாகும். உலகில் இருள் அகற்றுபவை இரண்டே இரண்டு தாம்; ஒன்று புற இருளை அகற்றும் சூரியன்; இன்னொன்று அக இருளை அகற்றும் தமிழ் என்பதே இதன் சாரம்.

தமிழ் வளர்த்த மதுரையின் பெருமையைக் காலமெல்லாம் சொன்னாலும் முற்றிலும் சொன்னதாக ஆகாது.

பாண்டிய மன்னர்கள் அற நெறியுடன் கோலோச்ச வழி வகுத்த அன்னை மீனாட்சி ஆண்ட நாடு பாண்டிய நாடு. மதுரை மீனாட்சியின் ஆட்சி பெண்ணின் பெருமையைச் சொல்லும் ஆட்சி. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சங்கப் புலவர்களின் மண்டபத்தில் இறையனார் தலைமை வீற்றிருப்பதை இன்றும் காணலாம். இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றி அருளிய திருக்குறள் மற்ற நூல்களைப் புறம் தள்ளி பொற்றாமரைக் குளத்தில் மிதந்து உலக சரித்திரம் படைத்த பெருமையை அனைவரும் அறிவோம்.

இங்குள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலின் அருகே ஓடிய கிருதமால் நதியில் தான் உலகின் முதல் அவதாரம் தோன்றியது. (இன்று அந்த நதி சாக்கடை கால்வாயாக ஆகி விட்டது). பெரும் புனல் வைகையும், ஆறு கிடந்தன்ன அகல் நெடும் தெருக்களும் கொண்டு விளங்கிய மதுரை இன்றும் தூங்கா நகரமாக எப்போதும் விழித்திருக்கும் அதிசயக் காட்சியைக் கண்டு ஆனந்திக்கலாம்.

அருகில் உள்ள பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகியவை ஆறுபடை வீடுகளில் அமைந்தவையாகும்.

எல்லாக் கலைகளையும் போற்றி வளர்த்த இங்கு தான் மகாத்மா காந்தி தனது ஆடம்பரமான உடுப்பைக் கழற்றி எறிந்து இடையில் மட்டும் அணியும் எளிய ஆடையை மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.

சங்க காலப் புலவர்களிலிருந்து இன்று வரை தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்  தமிழ்ச் சங்கங்களை அமைத்த பெருமை பாண்டிய மண்டலத்திற்கு உண்டு.

நூற்பாலைகள் பலவற்றைக் கொண்டு தரம் வாய்ந்த ஆடைகளை உற்பத்தி செய்து தொழில் துறையில் முன்னோடியாகத் திகழ்வதும் மதுரை மண்டலமே.

அழகிய தேனி, தேக்கடி என்று இயற்கை வண்ணம் கொஞ்சும் எழில் காட்சிகளும் இங்கே தான் உண்டு.

பொதியமலையிலிருந்து தமிழ் வளர்த்த பெருமை அகத்திய மாமுனிக்கு உண்டு.

கொற்கைத் துறைமுகம் வணிகத் தலைநகரமாகவும், முத்துக்கள் கொழித்த முத்து மண்டலமாகவும் திகழ்ந்தது.

திருநெல்வேலி அருகே உள்ள குற்றால நீர்வீழ்ச்சியும் அதன் வளி மண்டலப் பரப்பும் தூய ஆக்ஸிஜனை ஏராளமாகத் தரும் அழகிய பரப்பாகும். எழில் மிகு தாமிரபரணி ஆற்றின் மூலிகை நீர் பற்றிப் புகழாதவர்களே இல்லை எனலாம்.

திருநெல்வேலி காந்திமதி அம்மன், தென்காசி ஈசன், திருச்செந்தூர் முருகன் என்று ஆன்மீகப் புகழோங்கி பக்தர்களை ஈர்க்கும் மண்டலம் இது.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பாடிய தேசீய கவி சுப்ரமண்ய பாரதியார் தோன்றிப் புகழ்படைத்த எட்டயபுரம் இருப்பதும் இந்த மண்டலத்தில் தான்.

 தூத்துக்குடி துறைமுகம் இந்திய பொருளாதாரத்தை ஏற்றமிகும் ஒன்றாக ஆக்குகிறது எனில், கப்பலோட்டிய தமிழனாக அவதரித்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி சிறை சென்று செக்கிழுத்த பெம்மானாக வாழ்ந்த வ.உ.சி வாழ்ந்த இடமும் இது தான்.

 நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று தவம் செய்யும் குமரி அம்மனின் எழில் மிகு மூக்குத்தியின் ஒளி திக்கெட்டும் பரவி மாலுமிகளுக்குக் கூட வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை வரலாறு சொல்லும்.

 அருகில் உள்ள விவேகானந்தர் பாறையில் தவம் இயற்றி உத்வேகம் பெற்று அமெரிக்கா சென்று சர்வமத மாநாட்டில் உரையாற்றி உலகையே வென்று இந்து மத மாண்பை உலகிற்கு உணர்த்தியவர் விவேகானந்தர். அவர் வெற்றி பெற்று வரும் போது அவரை வணங்கி வரவேற்று வரவேற்பளித்தவர் பாஸ்கர சேதுபதி என்பதையும் வரலாறு பெருமையுடன் சொல்லும்.

 இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் இராமேஸ்வரம் ஆன்மீக பூமியாகத் திகழ்கிறது. இங்கு ராமபிரான் அமைத்த சேது பாலத்தை நாஸா படமெடுத்து அதன் உண்மையை உலகிற்கு அறிவித்தது. காசியில் இருப்போர் ராமேஸ்வரத்திற்கு வந்து யாத்திரையை முடிப்பதும், ராமேஸ்வரத்தில் இருப்பவர்கள் காசியில் யாத்திரை முடிப்பதையும் தொன்று தொட்டு பழக்கமாகக் கொண்டிருந்ததை பாரத சரித்திரம் விளக்குகிறது. உலகின் அதி நீளமான பிரகாரம் கொண்ட இராமேஸ்வரம் கோவிலும், தனுஷ்கோடியும், அழகிய கடலும் காலத்தை வென்ற இயற்கை படைப்புகளாகும்.

காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் சமீப காலத்தில் தோன்றி சுமார் 9000 கவிதைகள் மற்றும் திரைப்படப்பாடல்களை இயற்றி உலகை பிரமிக்க வைத்த கவியரசர் கண்ணதாசன் இந்த பூமியின் இலக்கியவளத்திற்கான சான்றாக மிளிர்கிறார்.

 படிப்பறிவின்றி ஒரு குழந்தையும் இருக்க கூடாது என்ற பெரும் கொள்கையைக் கொண்டு ஏழைப் பிள்ளைகளுக்கு உணவளித்து அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் ஊரும் பாண்டிமண்டலத்தைச் சேர்ந்ததே.

 சுதந்திரத்திற்காக இன்னுயிரைத் தியாகம் செய்த சிவகங்கை மருது பாண்டியரும், வீரபாண்டிய கட்டபொம்மனும் என்றும் புகழுடன் பேசப்படும் முன்னோடி சுதந்திரப் போர்வீரர்களாவர்.

 இன்னும் நேதாஜி புகழ் வளர்த்து தேசீயம் போற்றிய முத்துராமலிங்கத் தேவர், தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர் என்று பெரியோர்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்றாக அமைகிறது.

மதுரையில் பிறந்து மதுரை ஷண்முகவடிவு சுப்புலெட்சுமி என்ற பெயருடன் உலக இசை அரங்கில் கோலோச்சி ஐ.நா. சபை வரை சென்று பாடிய பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெருமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

 பூமாது பொன்னம் புயத்தினில் மேவிப் பொலிந்திருக்க

நாமாது சங்கப் பலகையி லேறி நலம்பெருக்கக்
கோமான் மலயத் துவசன் பயந்த குமரியெனு
மாமாது நீதி யரசாளும் பாண்டியன் மண்டலமே

 என்று பாண்டிமண்டலத்தைப் புகழும் பாண்டிமண்டலச் சதகத்தின் நூறு பாடல்களில் இப்பகுதியின் சிறப்புகள் அனைத்தையும் காணலாம்.

 இப்படி அறத்தின் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆன்மீகம், பண்பாடு, தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறையிலும் மேலோங்கி நிற்கும் தமிழ் மதுரை மண்டலப் பகுதியின் புகழுக்கு எல்லை ஒன்று உண்டோ! 

***

2-5-2026 World Hindu News in Tamil and English from Newspapers


Kannaki- Mangala Devi Temple Pictures

Devotees came in 400 Jeeps

There are eight inscriptions are in the temple

Ritual Pujas Deeparadana are offered to Mangala Devi aleas Kannaki

கண்ணகி கோவிலில் சித்ரா பெளர்ணமி தரிசனம்

தமிழக – கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்தக் கோவிலில், கேரளா மற்றும் தமிழக அரசுகள் இணைந்து இன்று நடத்திய சித்ரா பௌர்ணமி விழாவில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரு மாநில போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மங்களதேவி கண்ணகி கோயில் தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் அமைந்துள்ளது. சித்திரை பௌர்ணமி திருவிழா மே 1), 2026  சிறப்பாக நடைபெற்றது. நானூறு ஜீப் கார்களில் பக்தர்கள் வந்தனர்   

இந்தக் கோவிலில் எட்டுக்  கல்வெட்டுகள் இருக்கின்றன .

மிகவும் பழைய கால நிலையில்  பாழடைந்தது போல கோவில் உள்ளது.

Kannaki – Mangala Devi Temple

The Mangaladevi Temple, located within the Periyar Tiger Reserve in Idukki, Kerala, opens to devotees once a year for the Chitra Pournami celebrations in April or May. This 1,000-year-old temple, built from granite and situated at an altitude of 1,337 meters, honours the deity Mangaladevi, also known as Kannaki.

Chitra Pournami was celebrated this year on 1-5-2028. Thousands of people arrived in 400 Jeep Cars.

Mangaladevi, the heroine of the Tamil epic Silapathikaram, symbolizes moral power and justice. The temple was established by the ancient Tamil king Cheran Chenguttuvan in her honor, commemorating her legendary act of burning the city of Madurai to avenge her husband’s wrongful death.
Eight inscriptions are in the temple.
The Chitra Pournami festival, celebrated on a full moon day in the Tamil month of Chithirai, draws thousands of devotees from Kerala and Tamil Nadu. The festival features ritualistic prayers and poojas conducted by priests from both states. Women devotees participate in large numbers, cooking and offering Pongal, a sweet rice dish, to the goddess. The main deity, decorated with flowers and silk, is the focal point of the rituals, which are believed to bless women with long and happy marriages.

The pilgrimage to Mangaladevi Temple is a significant aspect of the festival. Devotees embark on a 12-kilometer trek through dense forests and grasslands, starting from the Periyar Tiger Reserve. The trek is accessible only by jeep, and the district administrations of Idukki and Theni ensure that the pilgrimage does not disturb the local ecosystem. Forest officials maintain a constant vigil to protect the area’s rich biodiversity, which includes the endangered Nilgiri Tahr and various orchid species.

The temple’s architecture reflects Pandyan influences, with four stone structures housing various idols. Despite its dilapidated condition, the boundary walls and steps made from huge stones bear testimony to its historical grandeur. The temple complex features sculptures and engravings related to Silapathikaram. Visitors are greeted by a statue of Karuppa Swamy at the entrance, alongside a dilapidated Shiva temple and a sanctorum for Lord Ganapathy.

The forest department takes various measures to safeguard the ecosystem, including restricting the number of visitors and ensuring that the surroundings are not disturbed. The trek to the temple offers breathtaking views of the Western Ghats and the lush greenery of the Periyar Tiger Reserve, making it a serene and spiritually enriching experience.

The Chitra Pournami festival at Mangaladevi Temple is a unique blend of history, mythology, and natural beauty. It provides a rare opportunity for devotees to connect with the divine in a pristine, untouched environment while also celebrating the enduring legacy of Kannaki, a symbol of justice and moral strength.

***


உஜ்ஜைனியில் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டுபிடிப்பு

பன்னிரண்டு ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான  உஜ்ஜயினியில் மஹா காலேஷ்வர் சிவன் கோவில் உள்ளது. அங்கு பூமிக்கடியிலிருந்து மேலும் ஒரு லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது . அர்கனைஸர் பத்திரிகை படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது .

Ancient Shivalinga discovery halts Ujjain temple expansion work

A large Shivalinga, possibly dating back to the Parmar dynasty era, was unearthed during excavation for Ujjain’s Mahakaleshwar Temple expansion ahead of Simhastha 2028. The find, made near the temple’s prepaid booth area, coincided with the Bhasma Aarti and drew crowds of devotees offering prayers. Authorities have paused work and called in archaeological experts to assess the artefact’s age and historical context.”We have come here to pay homage to the Shivling that has been found during excavation. It is a very special moment. This is the same place of Baba Mahakaal (Ujjain). And in every corner, there are Baba Mahakaal and Shiva’s remains. In the same way, it is amazing to see Shivling today. And it is about our Sanatan Dharma culture and tradition.”Religious and cultural significance of the find

Priests and locals described the find as spiritually significant, linking it to Ujjain’s deep association with Lord Shiva and Sanatan Dharma traditions. Mahakaleshwar Temple priest Akash Sharma noted that the site is historically rich with Shiva’s remains, and devotees considered the event a divine blessing. Such discoveries reinforce Ujjain’s status as a major centre of Hindu pilgrimage and cultural heritage

***

Modi in Leh (Lafakh) with Buddhist Relics

-லடாக்கிலுள்ள லே நகரில் புத்தமத சின்னங்கள

The Prime Minister said these revered relics are linked to the Piprahwa Stupa in Kapilavastu and were excavated in the closing years of the 19th century

The revered Piprahwa relics of Tathagata Buddha—ancient sacred remains and associated objects linked to the lord discovered at Piprahwa, near the Nepal border in the present-day Uttar Pradesh—arrived in Leh on Wednesday. (Image: X)

Calling it a matter of immense delight a day after Union home minister Amit Shah inaugurated the Tathagata Buddha relics exposition and the 2569th Buddha Purnima celebrations in Leh during his two-day visit to Ladakh, the Prime Minister posted on X, “It is a matter of immense delight that yesterday, on the occasion of Buddha Purnima, the ‘Sacred Exposition of the Holy Relics of the Tathagata’ was inaugurated in Leh.

-subham—

Tags- Ujjaini, Shivalinga unearthed, Kannaki Temple, Mangaladevi, Chitra Pournami , World Hindu News 252026, Leh, Buddha relics

Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 21 to 25) Post 15,688

Written by London Swaminathan

Post No. 15,688

Date uploaded in London –2 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Valluvar is a pukka Hindu is proved by his reference to Indra. There are two interpretations to Kural 25. Manakkudavar, S M Diaz take it as a praise to Indra. Parimelazakar and others have taken it as an insult to Indra because of his immoral approach to Ahalya, wife of Gautama Rishi. Buddha also praised Indra for his great control over five senses. I also pointed out the blunder of Parimel Azakar in one of my articles.

Whatever the interpretation, it shows that Tamils were great Hindus and they are well versed in Puranic Stories.

Another point to be noted is his reference to heaven.

Lost in Translation: in couplet 24, there is a beautiful imagery; Five senses are compared with five elephants in rut and the goad to control them is compared with the will power of a man. All the translators missed elephant and goad that is available in Tamil commentaries. In Upanishads, Horses are used for five senses; five cows are used for five senses in Tirumular’s Tirumanthiram.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.Himalayan Academy- HA

7.H A Popley – HAP (not full book) Year 1931

8.Tamil Original

****

21.All the scriptures of the world rapturously sing with one voice, beyond every other blessing, the praise of those who have renounced all and stand true to their rule of conduct in scorn of consequence —ANM+2

***

1.1.3. The Greatness of Ascetics G U Pope

21.All scriptures uphold the fame of householders, who after a full and faultless life,

Renounce active part in it, to become detached, objective and benevolent —SMD

***

21.
The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood.
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.-GUP

***
3. 
நீத்தார் பெருமை – The merit of Ascetics


No merit can be held so high
As theirs who sense and self deny.         21– SB
***

 21.All the scriptures emphasize, above all other excellence the greatness of those who, having lived according to the injunctions peculiar to their caste and creed, have renounced the worldly life -EVS

***
Greatness of Renunciates Himalayan Academy (HA)

Verse 21 The scriptures exalt above every other good The greatness of virtuous renunciates. HA

***

21.Tis the aim of the holy scripture to reveal

The greatness of those men who all have left for

Virtue’s sake- HAP

***

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.     21

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

22.The greatness of an ascetic baffles one’s understanding ; you may as well count the number of the innumerable dead. —ANM+2

**

22. The greatness of ‘neethar’ is infinite, as is the number,

Of those who have departed from the world—SMD

***

22
As counting those that from the earth have passed away,
‘Tis vain attempt the might of holy men to say.
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead. –GUP

***
To con ascetic glory here
Is to count the dead upon the sphere.         22– SB

***

22. To attempt to estimatethe greatness of ascetics is as absurd as to seek the dead in the world – EVS

***

Verse 22 Attempting to speak of the renunciate’s magnitude Is akin to measuring the human multitudes who have ever died. HA

***

22.To tell their greatness who have left their all

Is just like counting up the whole world’s dead  -HAP

***

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   22

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

23.The greatness of those who weighed this passing empty life  with one eternal beyond the grave and have renounced this world, shines forth on earth. (beyond all others). —ANM+2

**

23.Those who, having experienced  the paths of both householder and  neethar,

Thereafter preach and practise virtue, will be held in high esteem —SMD

***
23.
Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue’s robe arrayed.
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others). –GUP

***

No lustre can with theirs compare
Who know the right and virtue wear.         23– SB

***

23.The greatness of those who renounced the world, having discovered its miseries and the happiness of heavenly life, is really the foremost in the world. – EVS

***

Verse 23 Behold those who have weighed the dual nature of things and followed the renunciate’s way. Their greatness illumines the world. HA

***

23.Their greatness shine throughout the world

Who know both states, and virtue here have donned -HAP

***

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.    23

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

24.Verily he is a seed that can flourish in the soil of heaven who has subdued his rebellious senses with the titanic force of his will. —ANM+2

**

24.The one who has the strength to control his five senses

Prepares the way for a higher place in life—SMD

***

24.
He, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains.
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven. –GUP
***
With hook of firmness to restrain
The senses five, is heaven to gain.         24– SB

***

24.He who controls his five senses by his will gains heavenly bliss – – EVS

***

Verse 24 He whose firm will, wisdom’s goading hook, controls his five senses Is a seed that will flourish in the fields of heaven. HA

***

24.He, in the best states, a seed will be

Who rules the senses five with firmness goad -HAP

***

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.  24

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

25.Indra , the lord of the gods on high is himself a witness to the might of him that has burnt away his five senses–ANM+2

**

25.The lord indra himself is an effective witness to the prowess of a sage

Who has really conquered his five senses—SMD

***
25.
Their might who have destroyed ‘the five’, shall soothly tell
Indra, the lord of those in heaven’s wide realms that dwell.
Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of him who has subdued his five senses. –GUP
***
Indra himself has cause to say
How great the power ascetics’ sway.         25– SB
***

25.Indra , the king of the devas himself, will bear testimony to the  will power of those who curbed the desires of the five senses. – EVS

***

Verse 25 So great is the power of those who subdue the five senses, even Indra, Sovereign of spacious heaven’s celestials, suffered their curse. HA

***

25.Indra himself, heavens king, is witness sure

To the might of him who senses five subdues -HAP

***

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.     25

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

To be continued……………………………………

Tags- Tirukkural Encyclopaedia- Chapter Three (Kural 21 to 25), Tiru Valluvar, Pukka Hindu, Indra, Elephant, goad, lost in translation, images of ascetics