Written by London Swaminathan
Post No. 15,926
Date uploaded in London –28 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜூலை 17 ஆடிப்பண்டிகை தக்ஷிணாயனத்தின் தொடக்கம்; 25 ஆஷாட ஏகாதசி; 26 சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்; 29 பெளர்ணமி குரு பூர்ணிமா/ வியாச பூஜை
ஜூலை 14 அமாவாசை ; 29 பெளர்ணமி;
ஏகாதசி விரத நாட்கள் 10, 25
சுப முஹுர்த்த நாட்கள் 2, 5, 9, 12 ;
****
யுத்த காண்டத்திலிருந்து 31 பொன்மொழிகளைக் காண்போம் :
ஜூலை 1 புதன் கிழமை
MAHODARAN SAID TO RAVANA; VICTORY AND DEEFAT ARE COMMON;NO LIMIT FOR ONE’S POWER
‘”வென்றவர் தோற்பர்; தோற்றோர் வெல்குவர்; எவர்க்கும் மேலாய்
நின்றவர் தாழ்வர்; தாழ்ந்தோர் உயர்குவர்; நெறியும் அஃதே”
என்றனர் அறிஞர் அன்றே! ஆற்றலுக்கு எல்லை உண்டோ?
புன் தவர் இருவர் போரைப் புகழ்தியோ?-புகழ்க்கு மேலோய்! 37
****
ஜூலை 2 வியாழக் கிழமை
இராவணன் இலங்கை மீளுதல் RAVANA’S FIRST DEFEAT; WALKED WITH BARE HANDS
வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,
நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,
வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான். 1
****
ஜூலை 3 வெள்ளிக்கிழமை RAVANA WENT ALONE WITHOUT HIS USUAL ROYAL PARAPHERNALIA
மந்திரச் சுற்றத்தாரும், வாணுதல் சுற்றத்தாரும்,
தந்திரச் சுற்றத்தாரும், தன் கிளைச் சுற்றத்தாரும்,
எந்திரப் பொறியின் நிற்ப, யாவரும் இன்றி, தான் ஓர்
சிந்துரக் களிறு கூடம் புக்கென, கோயில் சேர்ந்தான்
****
ஜூலை 4 சனிக் கிழமை RAVANA PRAISED RAMA’S POWER
‘இந்திரன் குலிச வேலும், ஈசன் கை இலை மூன்று என்னும்
மந்திர அயிலும், மாயோன் வளை எஃகின் வரவும் கண்டேன்;
அந்தரம் நீளிது, அம்மா! தாபதன் அம்புக்கு ஆற்றா
நொந்தனென் யான் அலாதார் யார் அவை நோற்ககிற்பார்? 23
****
ஜூலை 5 ஞாயிற்றுக் கிழமை EVEN IF VEDAS FAIL, RAMA’S ARROWS WONT FAIL
‘முப்புரம் ஒருங்கச் சுட்ட மூரி வெஞ் சிலையும், வீரன்
அற்புத வில்லுக்கு, ஐய! அம்பு எனக் கொளலும் ஆகா;
ஒப்பு வேறு உரைக்கல் ஆவது ஒரு பொருள் இல்லை; வேதம்
தப்பின போதும், அன்னான் தனு உமிழ் சரங்கள் தப்பா. 26
****
ஜூலை 6 திங்கட் கிழமை I HAVE GOT A GOOD ENEMY: RAVANA ABOUT RAMA
‘வாசவன், மாயன், மற்றை மலருளோன், மழு வாள் அங்கை
ஈசன் என்று இனைய தன்மை இளிவரும் இவரால் அன்றி,
நாசம் வந்து உற்ற போதும், நல்லது ஓர் பகையைப் பெற்றேன்;-
பூசல் வண்டு உறையும் தாராய்!-இது இங்குப் புகுந்தது’ என்றான். 31
****
ஜூலை 7 செவ்வாய்க்கிழமை DON’T WORRY, RAVANA; IT IS LIKE SUN EVAPORATING A LITTLE WATER FROM THE SEA- MAHODARAN
பனியுடை வேலைச் சில் நீர் பருகினன் பரிதி என்னத் துனி உழந்து அயர்வது என்னே? துறத்தியால் துன்பம்’ என்றான்
***
ஜூலை 8 புதன் கிழமை RAVANA PRAISED MAHODARA; NO LIMIT FOR YOUR AFFECTION.
‘பெறுதியே, எவையும் சொல்லி;-பேர் அறிவாள்!-சீரிற்று அறிதியே; என்பால் வைத்த அன்பினுக்கு அவதி உண்டோ?
****
ஜூலை 9 வியாழக் கிழமை
KUMBAKARNA’S BREATHING; JONATHAN SWIFT COPIED IT IN HIS GULLIVER’S TRAVELS
திண் திறல் வீரன் வாயில் திறத்தலும், சுவாத வாதம் மண்டுற, வீரர் எல்லாம் வருவது போவதாக, கொண்டுறு தடக் கை பற்றி, குலமுடை வலியினாலே கண் துயில் எழுப்ப எண்ணி, கடிது ஒரு வாயில் புக்கார். 49
ALL KUMBAKARNA;S ACTS ARE USED BY JONATHAN SWIFT
***
ஜூலை 10 வெள்ளிக்கிழமை KUMBAKARNA ATE FOOD FROM 600 CARTS
ஆறு நூறு சகடத்து அடிசிலும், நூறு நூறு குடம் களும், நுங்கினான்; ஏறுகின்ற பசியை எழுப்பினான்- சீறுகின்ற முகத்து இரு செங்கணான். 60
****
ஜூலை 11 சனிக் கிழமை YOU CAN ERECT FENCE AROUND EARTH, BUT CANT DEFEAT RAMA- KUMBAKARNA
‘கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும் சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை வெல்லலாம் என்பது, சீதை மேனியைப் புல்லலாம் என்பது போலுமால்-ஐயா! 81
****
ஜூலை 12 ஞாயிற்றுக் கிழமை QUALITY OF WATER CHANGE ACCORDING TO LAND IT FLOWS- RAVANA! YOU DESTRYED PULASTYA’S FAME;-KUMBAKARNA
‘புலத்தியன் வழிமுதல் வந்த பொய் அறு குலத்து இயல்பு அழிந்தது; கொற்றம் முற்றுமோ? வலத்து இயல் அழிவதற்கு ஏது; மை அறு நிலத்து இயல் நீர் இயல் என்னும் நீரதால்.
****

ஜூலை 13 திங்கட் கிழமை RAMA GOT A MONKEY THAT CROSSED THE SEA LIKE WIND- KUMBAKARNA
‘காலினின் கருங் கடல் கடந்த காற்றது போல்வன குரங்கு உள;
****
ஜூலை 14 செவ்வாய்க்கிழமை RELEASE SITA; SURRENDER TO RAMA;MAKE FRIEND WITH UR BROTHER- KUMBAKARNA’S ADVICE
‘தையலை விட்டு, அவன் சரணம் தாழ்ந்து, நின் ஐயறு தம்பியோடு அளவளாவுதல் உய் திறம்;
****
ஜூலை 15 புதன் கிழமை GET OUT! I WONT BOW TO TWO HUMANS AND HUNCHBACKED MONKEY- RAVANA TO KUMBAKARNA
‘மானிடர் இருவரை வணங்கி, மற்றும் அக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு, உய் தொழில் ஊனுடை உம்பிக்கும் உனக்குமே கடன்; யான் அது புரிகிலேன்; எழுக போக!’ என்றான்.
****
ஜூலை 16 வியாழக் கிழமை INDRAJIT WILL BE KILLED BY RAMA’S BROTHER-KUMBAKARNA’S PREDICTION
‘இந்திரன் பகைஞனும், இராமன் தம்பி கை மந்திர அம்பினால் மடிதல் வாய்மை
****
ஜூலை 17 வெள்ளிக்கிழமை I DON’T SEE VEENA FLAG, BUTA LION FLAG ON THE CHARIOT; WHO ISTHIS SHINING HERO? RAMA ASKED VIBHISHANA
வீணை என்று உணரின், அஃது அன்று; விண் தொடும் சேண் உயர் கொடியது, வய வெஞ் சீயமால்; காணினும், காலின் மேல் அரிய காட்சியன்; பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்
****
ஜூலை 18 சனிக் கிழமை HE IS KUMBAKARNA WHO GOT SEVERAL BOONS THROUGH PENANCE- VIBHISANA SAID.
‘ஊன் உயர்ந்த உரத்தினான், மேல் நிமிர்ந்த மிடுக்கினான்; தான் உயர்ந்த தவத்தினான், வான் உயர்ந்த வரத்தினான்; 120
***
ஜூலை 19 ஞாயிற்றுக் கிழமை LIFE IS LIKE A WHEEL; RAMA IS MEDICIE FOR BIRTH AND DEATH DISEASE; SURRENDER TO HIM-VIBHISHANA TO KUMBAKARNA
‘இருள் உறு சிந்தையேற்கும் இன் அருள் சுரந்த வீரன் அருளும், நீ சேரின்; ஒன்றோ, அவயமும் அளிக்கும்; அன்றி, மருள் உறு பிறவி நோய்க்கு மருந்தும் ஆம்; மாறிச் செல்லும் உருளுறு சகட வாழ்க்கை ஒழித்து, வீடு அளிக்கும் அன்றே. 139
****
ஜூலை 20 திங்கட் கிழமை KUMBAKARNA’S REPLY: TRY TO CORRECT YOUR LEADER; IF IT DOESN’T WORK BE LOYAL AND DIE FOR HIM ( IS MY POLICY).
‘கருத்து இலா இறைவன் தீமை கருதினால், அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகின் அன்றோ திருத்தலாம்? தீராது ஆயின், பொருத்து உறு பொருள் உண்டாமோ? பொரு தொழிற்கு உரியர் ஆகி, ஒருத்தரின் முன்னம் சாதல், உண்டவர்க்கு உரியது அம்மா.
****
ஜூலை 21 செவ்வாய்க்கிழமை BROTHER! GO BACK TO RAMA; WHEN WE DIE DO THE FUNERAL RITES FOR US- KUMBAKARNA
‘போதி நீ, ஐய! பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று, மெய்ம்மை ஆதி நூல் மரபினாலே, கடன்களும் ஆற்றி, ஏற்றி, மா துயர் நரகம் நண்ணாவண்ணமும் காத்தி மன்னோ. 165
****
ஜூலை 22 புதன் கிழமை VIBHISHANA! DON’T FEEL SORRY FOR ME; WHATEVER SHOULD HAPPEN WOULD HAPPEN; YOU KNOW IT.- KUMBAKARNA
‘ஆகுவது ஆகும், காலத்து; அழிவதும், அழிந்து சிந்திப் போகுவது; அயலே நின்று போற்றினும், போதல் திண்ணம்; சேகு அறத் தெளிந்தோர் நின்னில் யார் உளர்? வருத்தம் செய்யாது, ஏகுதி; எம்மை நோக்கி இரங்கலை; என்றும் உள்ளாய்!’ 166
***
ஜூலை 23 வியாழக் கிழமை THOSE WHO DIE IN WARS GO TO HEAVEN; APSARAS HUGGED EVEN DEMONS WHEN THEY ENTERED HEAVEN; HEROISM DESTROYS SINS
‘துரக்கம், மெய்யுணர்வு இரு வினைகளை எனும் சொல்லின் கரக்கும் வீரதை தீமையை’ எனும் இது கண்டோம்; இரக்கம் நீங்கினர், அறத்தொடும் திறம்பினர் எனினும், அரக்கர் ஆக்கையை அரம்பையர் தழுவினர், விரும்பி, 223
*****
ஜூலை 24 வெள்ளிக்கிழமை NO BETTER PLACE THAN VEERA SWARGA-KAMBAN
மறக் கொடுந் தொழில் அரக்கர்கள், மறுக்கிலா மழைபோல் நிறக் கொடுங் கணை நெருப்பொடு நிகர்வன நிமிர, இறக்கம் எய்தினர் யாவரும், எய்தினர் எனின், அத் துறக்கம் என்பதின் பெரியது ஒன்று உளது எனச் சொல்லேம். 224
****
ஜூலை 25 சனிக் கிழமை POETS PRAISE ACCORDING TO GIFTS THEY GET; LAKSHMAN’S ARROWS ALSO DID IT TO THE BODY PARTS OF DEMONS
சிலவரைக் கரம், சிலவரைச் செவி, சிலர் நாசி, சிலவரைக் கழல், சிலவரைக் கண், கொளும் செயலால், நிலவரைத் தரு பொருள்வழித் தண் தமிழ் நிரப்பும் புலவர் சொல் துறை புரிந்தவும் போன்றன-சரங்கள். 226
****
ஜூலை 26 ஞாயிற்றுக் கிழமை I DON’T KNOW PROPER WORDS “SOL” TO ANSWE YOU; BUT MY “VIL” WILL GIVE PROPER REPLY- LAKSHMAN TO KUMBAKARNA
அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர, மல்லினால் செய்த புயத்தவன், ‘மாற்றங்கள் நும்பால் வில்லினால் சொல்லின் அல்லது, வெந் திறல் வெள்கச் சொல்லினால் சொலக் கற்றிலம், யாம்’ எனச் சொன்னான்
****
ஜூலை 27 திங்கட் கிழமை LAKSHMAN WENT ROUND ARYAN (RAMAN) THREE TIMES AND ENETRED BATTLE FILED
அக் காலை இலக்குவன் ஆரியனை
முக்காலும் வலங்கொடு மூதுணர்வின்
மிக்கான் மதி வீடணன் மெய் தொடரப்
புக்கான் அவன் வந்து புகுந்த. களம்
****
ஜூலை 28 செவ்வாய்க்கிழமை LAKSHMANA’S BOW MADE THE SOUND LIKE THE ETERNAL FOUR VEDAS AFTER THE ARMAGEDDON
நூல் மறைந்து ஒளிப்பினும், நுவன்ற பூதங்கள்
மேல் மறைந்து ஒளிப்பினும், விரிஞ்சன் வீயினும்,
கால் மறைந்து ஒளிப்பு இலாக் கடையின், கண் அகல்
நான் மறை ஆர்ப்பென நடந்தது, அவ் ஒலி
****
ஜூலை 29 புதன் கிழமை ONE HEADLESS BODY DANCES FOR EVERY 14,000 KILLED– SAYS WAR MANUALS; BUT CRORES DANCED WHEN LAKSHMAN MASSACRED DEMONS. CAN ANYONE MEASURE HIS POWER ?
ஆடுவ கந்தம் ஒன்று ஆறு எண்ணாயிரம்
வீடியபொழுது எனும் பனுவல் மெய்யதேல்
கோடியின் மேல் உள குனித்த கொற்றவன்
பாடு இனி ஒருவனால் பகரற்பாலதோ
****
ஜூலை 30 வியாழக் கிழமை LAKSHMANA’S ARROWS NEVER FAILED; THEY WERE LIKE RISHIS’ CURSES.
வைவன முனிவர் சொல் அனைய வாளிகள்
கொய்வன தலைகள் தோள்; குறைத்தலைக் குழாம்
கை வளை வரி சிலைக் கடுப்பின் கைவிடா
எய்வன எனை பல; இரத மேலன.7972
****
ஜூலை 31 வெள்ளிக்கிழமை LAKSHMAN KILLED INNUMERABLE ELEPHANTS WHICH MADE EVEN ELEPHANT FACED GANAPATI SCARED TO DEATH!
8010. மலை அஞ்சின; மழை அஞ்சின; வனம் அஞ்சின; பிறவும்
நிலை அஞ்சின; திசை வெங்கரி; நிமிர்கின்றன கடலின்
அலை அஞ்சின; பிறிது என் சில? தனி ஐங்கர கரியும்,
கொலை அஞ்சுதல் புரிகின்றது கரியின் படி கொளலால்.
TAGS- கம்ப ராமாயண பொன்மொழிகள், ஜூலை 2026 காலண்டர்
–SUBHAM—




















