HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 (Post No.15,850)

Written by London Swaminathan

Post No. 15,850

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நபக / நாபாக

புராணங்களில் இதே பெயரில் பலர் இருப்பதால் குழப்பமாகத் தோன்றும் .

Nabhaga (नभग):—நபக என்பவர் ஸ்ராத்த தேவ – ஷ்ரத்தா ஆகியோரின் புதல்வர் .

Nābhāga (नाभाग).—நாபாக– என்பவர் இக்ஷ்வாகு மன்னரின் சகோதரர் ; புகழ்பெற்ற அம்பரீஷன் இவருடைய புதல்வர்.; மஹாபாரதம், பாகவதம் ஆகியவற்றில் இவர்கள் கதைகள் வருகின்றன. நாபாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் தானம் செய்தபோது பூமி தேவியே அவரிடம் யாசகத்துக்குச் சென்றாள்;  எப்போதுமே மாமிசம் சாப்பிடாத அவருக்கு பிரம்மலோகத்தில் நிரந்தர வாசம் கிடைத்தது.

இன்னும் ஒரு கதையும் உண்டு;

வைவஸ்வத மனுவின் புதல்வரும் அம்பரீஷனின் தந்தையுமான

 Nābhāga (नाभाग).—நாபாக- பிரம்மச்சாரியாக இருந்தபோது அவருடைய தந்தை எல்லாவற்றையும் மூத்த சகோதர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டதால் அவருக்கு ஒன்றும் கிடைக்கவில்லை; தந்தையின் சொற்படி ஆங்கீர ரிஷி வம்சத்தினர் நடத்திய யாகத்துக்குச் சென்று சடங்குகள் பற்றி விளக்கினார்; யாகம் செய்தவர்கள் சொர்க்கத்துக்குச் சென்ற பின்னர் அவர்களுடைய  செல்வம் அனைத்தும் அவருக்கு கிடைத்தது. அதை எடுத்துக் கொள்ளும் தருணத்தில் கருப்பு மனிதன் வடிவத்தில் ருத்ரன் தோன்றி யாகத்தில் விடப்படும் மிச்சம் மீதியெல்லாம் ருத்ரனுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடினார்; அதற்கென்ன எடுத்துக்கொள்ளுங்கள் என்று நாபாக சொன்னார் ; ருத்ரன் மனம் மகிழ்ந்து அனைத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டு பிரம்மன் பற்றிய ஞானத்தையும் சொல்லிக்கொடுத்தார்

***

நாகர்கள்

சங்கத் தமிழ் இலக்கியத்தில் நீண்ட நாகர் பட்டியல் உள்ளது: இருபது நாகர் குலப் பெயர்களில் மிகவும் புகழ் பெற்றவர்கள்: மருதன் இளநாகன், நன்னாகன், வெண்ணாகன், நாலைக் கிழவன் நாகன், நல்லியக்கோடன், நீலநாகன் (சிறுபாணாற்றுப்படை)

மகாவம்ச இலங்கை மன்னர் பட்டியலில் வரும் நாகர் பெயர்கள்:—

நாகதாச, சிசுநாக (இந்திய மன்னர்): கல்லாட நாகன், சோரநாகன், மஹாநாகன், இளநாகன், மஹல்லநாகன், குஜ்ஜநாகன், குஞ்சநாகன், ஸ்ரீநாகன்.

குப்தர்கால கல்வெட்டுகளிலும் கணபதி நாகன் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன.

நாகர் என்பவர் பற்றி மஹாபாரத காலம் முதல் கேட்டு வருகிறோம். ( நாகர்கள், மஹாபாரத சண்டைக்குப் பின்னர், தென் அமெரிக்காவில் குடியேறி, காண்டவ வனத் தலைவன் மய தானவன் என்பவனின் தலைமையில் புதிய மாயா நாகரீகம் ஸ்தாபித்ததை எனது பழைய கட்டுரையில் காண்க).

நாகர்கள் எந்தப் பாதையில் சென்றார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள்,மத்திய அமெரிக்கா என்று படிப்படியாகச் சென்றதால் இந்த நாடுகள் அனைத்தும் நாகலோகம், நாகத்தீவு என்று அழைக்கப்படுகின்றன. சிந்து நதி முகத் த்வாரத்தில் பாதாள என்ற துறைமுகம் இருந்ததை பழங்கால பயணிகள் எழுதிவைத்தனர். பலி முதலிய மன்னர்களை பாதாள லோகத்துக்கு அனுப்பியதாகக் கூறுவதன் பொருள் அவர்கள் கடல் வழியாக நாடு கடத்தப் பட்டனர் என்பதாகும்.

நாகர்களை வேதமும் பழைய இனமாக (பஞ்சவிம்ச பிராமணம் -9-4) குறிப்பிடும்.

 சங்க இலக்கியமும் மஹாபாரதமும் நாகர்கள் செய்யும் அரிய வேலைப்பாடமைந்த ஆடைகளைக் குறிப்பிடுகின்றன. மஹாபாரத காலத்தில் அர்ஜுனன் இரண்டு நாகர் இனப் பெண்களை திருமணம் செய்துகொண்டான்: உலூபி, சித்திராங்கதை. (தமிழ்நாட்டில் இவளை அல்லி ராணி என்று பாடுகின்றனர்).

 நாகர் இனப் பெண்களை எல்லோரும் மணந்தனர். அகத்தியர் வழியில் வந்த பிற்கால அகத்தியர் கம்போடியாவில் யசோவதி என்ற பெண்ணைக் கல்யாணம் செய்தார்.

 கிருஷ்ணர் இரண்டு முறை நாகர்களுடன் மோதினார்: காண்டவ வனத்தை எரித்தார், காளீயன் என்ற நாகர் இனத் தலவனைக் கொன்றார்.

அர்ஜுனனின் பேரன் ஆன பரீட்சித்தை நாகர்கள் படுகொலை செய்ததால் நாகர்கள் வெளிநாட்டில் குடியேற நேரிட்டது.

ஜனமேஜயன் துவக்கிய நாகர் ஒழிப்பு இயக்கத்தை ஆஸ்தீகர் என்ற பிராமண ரிஷி ஒரு சமாதான உடன்பாடு மூலம் நிறுத்தினார்.  நர்மதை நதிக் கரையில் மஹிஸ்மதி நகரில் நடந்த சர்ப்ப யாகத்தையும் (நாகர் படுகொலை) சமாதான உடன்பாட்டையும் இன்றுவரை பிராமணர்கள் தினசரி சந்தியாவந்தனத்தில் கூறிவருகிறார்கள். உலகிலேயே நீண்ட வரலாறு படைத்த சமாதான உடன்பாடு இதுதான்!

தமிழர்களும் தெலுங்கர்களும் விளையாடும் பரமபத சோபான படத்தில் இன்றும் தடசகன், கார்க்கோடகன் போன்ற நாகர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

நாகர்கள் தங்கள் உடம்பில் பச்சைக் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் இவர்கள் ஓவியர்கள், அருவாளர்கள் என்றும் வடமொழியில் இவர்களுடைய பெயர்கள் சித்திர என்ற சொல்லுடனும் உள்ளன. கிரேக்க வரலாற்று ஆசிரியர்களும் ஒபைட்ஸ் ( ஒவியர்) என்பவர்களை நாகங்களை வழிபடும் இனம் என்று வருணிப்பர்.

பஞ்சவிம்ச பிராமணத்தில் சர்ப்பராக்ஞி ( பாம்பு ராணி) யும் அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி- யும் குறிப்பிடப்படுகின்றனர். அலிகி, விளிகி சுமேரியாவிலும் வேறு பெயர்களில் இருக்கிறார்கள்.

 நாகர்கள் எகிப்து வழியாகச் சென்றனரோ என்ற ஐயப்பாடும் உண்டு. எகிப்தில் 17 மன்னர்கள் ராம சேஷன் அல்லது ரமேசன் என்ற பெயரில் கி.மு 1500 முதல் ஆண்டார்கள். அவர்கள் தலையில் சிவன் மாதிரி பாம்பு இருக்கும். ரிக் வேத காலம் முதல், சிந்து சமவெளியில் கிடைத்த பாம்புராணி முத்திரை முதல்– இன்று சபரிமலையில் உள்ள நாகராணி வரை— தொடர்ச்சியாக நாக வழிபாடு உள்ள மதம் – கலாசாரம் இந்துமதம் மட்டுமே. இமயம் முதல் குமரி வரை கோவில்களில் உள்ள நாகர்கள் சிலை பல லட்சம்!

ஆயிரம் தலையுடைய வாஹனத்தைச் செய்ய முடியாதென்பதால் நமது கோவில் நாக வாஹனத்தில் 5, 7, 9 தலைகள்மட்டுமே சித்தரிக்கப் பட்டிருக்கும் – வடிவமைக்கப் பட்டிருக்கும்.

ஸ்னேக் (ஸ்+நாக), செர்பெண்ட் (ஸர்ப்ப) SNAKE, SERPENT என்ற ஆங்கிலச் சொற்கள் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தவை என்பதையும் நோக்குக. சுருக்கமாகச் சொன்னால், ரிக்வேத நாகர் வழிபாடு இன்று நாகர்கோவில், நாக்பூர், நாகாலாந்து வரை இருப்பது நம் பண்பாட்டில் மட்டுமே. மறைபொருளில்—நான் ‘மறை’– பாடிய ரிஷிகள், பாம்பு வடிவ சுனாமிப் பேரலைகளையே ஆதி சேடன் – ஆயிரம் தலையுடைய ஆதி சேடன் – என்று பாடினரோ என்று வியக்க வேண்டியுள்ளது. சுனாமிப் பேரலைகளின் படங்களைக் கூர்ந்து நோக்கினால் ஆயிரம் பாம்புத் தலைகளுடன் சுனாமி அலைகள் , நிலப் பகுதிக்குள் ஆக்ரோஷத்துடன் – சீற்றத்துடன் – பிரவேசிப்பதைப் பார்க்கலாம்.

இதைப்படங்களுடன் நான் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன் (காண்க- நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!! (Post No. 2722).

***

நகர

சங்க இலக்கியத்தில் புறநானூற்றில் கோயிலை நகர் என்று குறிப்பிட்டனர் ; முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன் பாடலில் இது வருகிறது. சம்ஸ்க்ருத நூல்களிலும் நாகர என்ற கோவில் வகைகளைக் குறிப்பிடுகின்றனர் இன்னுமொரு பொருள் – நகரம் – பெரிய ஊர் என்பதாகும்.  வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திர நூலிலும் நகரம் வருகிறது; நாகரீகம் என்பதும் நகர மக்களின் குணங்களைக் குறிக்கிறது இதற்கு எதிர்ப்பதம் பட்டிக்காட்டான்.

***

நசிகேதன்

சாந்தோக்ய உபநிஷத்தில் நசிகேதன் கதை வருகிறது ; இவர் உத்தாலக ஆருணியின் மகன். சின்னப்பையனாக இருந்தபோது தந்தை செய்த தானங்களை உற்று நோக்குகிறார் ; பால் வற்றிப்போன கிழட்டுப் பசுக்களை அவர் பிராமணர்களுக்குத் தானம் கொடுத்ததை பார்த்து வருத்தப்பட்ட நசிகேதன் , அப்பா என்னை யாருக்குத் தானம் கொடுக்கப்போகிறீர்கள்? என்று கேட்டான் ; இதையே மூன்று முறை கேட்டவுடன் அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது ; உன்னை ம்ருத்யுவுக்குக் (யமதர்மன்) கொடுக்கப்போகிறேன் என்று கத்திவிட்டார்; உடனே மயங்கி விழுந்த நசிகேதன் யமலோகம் சென்று மூன்று நாட்களுக்கு காத்துக் கிடக்கிறான்; அவனைக் கண்டு அதிசயித்த யமன் எப்படி வந்தான் என்ற விஷயத்தை அறிந்தபின்னர் நீ போ!  பூலோகத்துக்கே திரும்பிப் போ; உனக்கு வரம் தருகிறேன் என்றான் . அப்படியா எனக்கும் என்னுடைய தந்தைக்கும் மீண்டும் சுமுக உறவு ஏற்பட்ட வேண்டும் என்று வேண்டுகிறான் ;அப்படியே ஆகுக என்று யமனும் சொல்கிறான் .

ஆயினும் நசிகேதன் கிளம்பவில்லை ; பல ஆசைகளைக் காட்டியும் மயங்காத நசிகேதன், தனக்கு ஆன்மா , பிரம்மன் பற்றிச் சொல்ல வேண்டும் என்கிறான் ; யமனும் அவ்வாறே செய்கிறான் .

உபநிஷத்தைத் தவிர, மஹாபாரதத்தில் வேறு ஒரு செய்தி வருகிறது; பசு தானம் செய்து மேன்மை அடைந்தவர்களைக் காண வேண்டும் என்று நசிகேதன் சொன்னவுடன் அவர்களைக் காணவும் யமதர்மன் ஏற்பாடு செய்கிறான் ; இது கோ தானத்தின் சிறப்பினைக் காட்டுகிறது.  .

****

நஹுஷன் 

நஹுஷன் ,இந்திராணியிடத்தில் சில்மிஷம் செய்து பாம்பாகப் பூமியில் விழுந்தார் .முன்னொரு காலத்தில் தேவலோக இந்திரன் அசுரராய் பிறந்த பிராமணன் ஒருவரைக் கொன்றான்; அந்த அஸுரன் பெயர் வ்ருத்ராஸுரன் ; பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி என்னும் பாவம் ஒருவன் மீது ஏறிவிடும்; இதைப் போக்க பரிகாரம் செய்ய வேண்டும்.  இவ்வாறு பரிகாரம் செய்ய இந்திரன் பூலோகத்துக்கு VISIT  விசிட் செய்தார் ; அப்போது இந்திரன் பதவி VACANT வேகண்ட் ஆனது ; தற்காலிக இந்திரன் பதவிக்குப்   பூலோகத்தில் இருந்த நஹுஷனுக்கு அழைப்பு வந்தது ! இந்திராணியைப் பிடித்துவிட்டால் பழைய இந்திரன் பூமியிலே கிடப்பான்; நாம் ‘ஜாலி’யாக இந்திராணியுடன் தேவ லோகத்தை ஆளுவோம் என்று திட்டமிட்டு இந்திராணியிடம் நஹுஷன் சேட்டை செய்தான்; அவளுக்குப் புரிந்துவிட்டது. 

அன்பரே தொட்டுப் பேச வேண்டுமானால் சட்டப்படி தொட்டுப் பேச வேண்டும்; நான் சொல்லும் CONDITION கண்டிஷனை முதலில் கேளும் ; நீவீர் எனது பள்ளியறைக்கு எழுந்தருளலாம்; ஆனால் சப்த ரிஷிகள் தூக்கும் பல்லக்கில் என்னுடைய BED ROOM பெட் ரூமுக்கு வர வேண்டும் என்றாள்; இது நடவாத காரியம் என்பது அப் பெண்ணின் கணிப்பு!

நஹுஷனுக்கு ஒரே குஷி; சப்த ரிஷிகளையும் விரட்டிப்பிடித்தான்; அவர்களுக்கும் தெரியும்; ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று ; ஐயா , ஏழு ரிஷிகள் பல்லக்கினைத் தூக்கினால் பேலன்ஸ் BALANCE இருக்காது; எட்டாவது ஆளாக அகஸ்தியரைச் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள்; உடனே அதைச் செய்யுங்கள் என்று தற்காலிக இந்திரன், அதாவது நஹுஷன் சொன்னான் .

ஏழு ரிஷிகளும் – அதாவது சப்த ரிஷிகளும் – நல்ல உயரம்; அகஸ்தியரோ அதி பயங்கர குட்டை ; பல்லக்கு ரெடி. நஹுஷன் பல்லக்கில் ஏறினான் ;  மெதுவாகப் போனது; என்ன தாமதம்? ஏன் பல்லக்கு மெதுவாகப்போகிறது? அதுவும் wobbling/ வாப்ளிங் ஆட்டம் இருக்கிறதே என்றான். அவர்கள் சொன்னார்கள் “ஐயா பொறுத்தருளும்! அகஸ்தியர் குட்டை; நாங்கள் எல்லாம் உயரம். ஆகையால் மெதுவாகச் செல்கிறோம்” .

உடனே நஹுஷன் பல்லக்கிலிருந்து எட்டிப்பார்த்தான்; குட்டையான  அகஸ்தியரைப் பார்த்து சர்ப்ப சர்ப்ப என்றான் ; இந்தச் ஸம்ஸ்க்ருத்ச் சொல்லுக்குப் பொருள் —சலோ சலோ !போங்கள் போங்கள்! என்று விரைவு படுத்துவதாகும். அத்தோடு நில்லாமல் அகஸ்தியரைக் காலால் எட்டி உதைத்து இதைச் சொன்னான் சர்ப்ப சர்ப்ப என்று.

குணக்குன்றான அகஸ்தியருக்குக் கோபம் வந்தது ; பிடி சாபம் ! சர்ப்ப சர்ப்ப என்றார் சர்ப்ப என்பதற்கு இன்னும்மொரு பொருள் SERPENT/சர்பெண்ட்- பாம்பு

 அகஸ்தியன் சாபத்துக்கு ஏற்ப நஹுஷன் பூமியில் பாம்பாக விழுந்தான். அயிராணி/ இந்திராணி / சசி தேவி  தன் கற்பை இழக்காமல் இருப்பதற்கு பல்லக்கு தந்திரத்தைப்  பயன்படுத்தினாள். 

****

நகுலன்

பாண்டுவின் இரண்டாவது  மனைவியான மாத்ரிக்குப் பிறந்தவர் நகுலன்; இரட்டையர்களாகப் பிறந்தவர்களில் சகாதேவன் இவருடைய சகோதரர்  ஆவார் . இவர் குதிரை தொடர்பான சாஸ்திரங்களில் வல்லவர் ஆகையால் மறைந்து வாழும் 13-ஆவது ஆண்டில் கிரந்திகா என்ற பெயரில் விராட மன்னனுக்கு குதிரைகளை பராமரிப்பதில் உதவி செய்தார் ; 13-ஆவது ஆண்டின் இறுதியில் த்ரிகர்த்த தேசப் படைகள் விராடனின் மத்ஸ்ய தேசத்தைத் தாக்கியபோது இவர் தன்னுடைய உண்மை அடையாளத்தைக் காட்டினார் ;  இவரும் சகோதரர் ஆன சகாதேவனும் வேத கால இரட்டையர் அஸ்வினி குமாரர்களின்  அம்ஸங்கள் நிறைந்தவர்கள் ஆவர்.

****

நள தமயந்தி 

கதையின் மிகச் சுருக்கம்:- நளனும் தமயந்தியும் காதலித்துக் கல்யாணம் கட்டினர். தூய்மையற்ற நிலையில் நளனைக் கலி பற்றிக் கொண்டான். சூதாட்டத்தால் நாடிழந்த நளன் மனைவியுடன் காடேகி, இருவரும் பிரியும் நிலை ஏறபடுகிறது. சமையல் கலை, தேரோட்டக் கலை, கவிதைக் கலையில் வல்ல நளன், தமயந்தியின் சமயோஜித புத்தியால் மீண்டும் இணைகின்றனர்.

காதல் கதைக்கும் கற்புக்கும் இலக்கணமாகத் திகழும் இளவரசி. விதர்ப்ப நாட்டு மன்னன் பீமனின் மகளான தமயந்தி, நிடத நாட்டு மன்னனான நளன் மீது காதல் கொண்டு, அன்னப்பறவை மூலம் தூது அனுப்பினாள். மன்னன் கூட்டிய மன்னர்கள் கூட்டத்திலிருந்து ஸ்வயம்வரம் மூலம் நளனைத் தேர்ந்தெடுத்து மணந்தாள் . அங்கு நளன் போலவே வேடமணிந்து வந்த தேவர்களையும் புறக்கணித்தாள்; ஆயினும் திருமணத்துக்குப் பின்னர் சொல்லொணாத் துயரம் அனு பவித்து மீண்டும் நளனை அடைந்தாள். மஹாபாரதத்திலும் புராணங்ககளிலும், தமிழ்ப் பாடல்களிலும் இவர்களுடைய நீண்ட கதை உள்ளது.

சேதி நாட்டில் வியாபாரம் செய்து பெரும் பொருள் ஈட்டும் நோக்கத்தோடு ஒரு பெரிய சார்த்தவாஹன வண்டித் தொடர் சென்று கொண்டிருந்தது. அது வேத்ரவதி நதியைக் கடந்து செல்லும் தருணத்தே தமயந்தியும் அக்கூட்டத்தில் சேர்ந்துகொண்டாள். 

மாலை நேரம் நெருங்கியது; சூரிய தேவன் மலை வாயில் விழுந்து கொண்டிருந்தான். சார்த வாஹத் தலைவன் கட்டளையின் பேரில் அவரவர் முகாம் அடித்தனர். வனவிலங்குகள் குளிக்கவும் தண்ணீர் குடிக்கவும் நீர் நிலைகளை நோக்கி வரும் பாதை அது. யானைகள் தண்ணீர் குடிக்க கூட்டம் கூட்டமாக வரவே வணிகர்கள் பீதி அடைந்து ஓடினர். அவர்களில் பலர் மிதிபட்டு இறந்தனர்; ஒரே களேபரம்; அங்கும் இங்கும் அனைவரும் சிதறி ஓடினர்; துயரக் காட்சி. இத்தகைய குழப்பத்துக்கு இடையே உயிர் தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் தமயந்தியும் ஒருவள் (ஒருத்தி); அவள் நளனைத் தேடிச் செல்லும் நெடும் பயணம் இது. வணிகர்களுடன் சேர்ந்து அவளும் காட்டைக் கடந்தாள்.

நள தமயந்தி கதையில் வரும் விஞ்ஞான விஷயங்கள்:-

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

தகவல் பரிமாற்றம் (SHARING/ EXCANGE OF INFORMATION)

இந்தக் கதையின் மூலம், மஹாபாரதத்தின் 18 பர்வங்களில் மூன்றாவதாக வரும் வன பர்வத்தில் வருகிறது.

நள தமயந்தி சரிதத்தைப் புகழேந்திப் புலவரும், அதிவீரராம பாண்டியனும் தமிழில் யாத்துள்ளனர்.

நளன் செய்த எட்டு அதிசயங்கள்

800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report)  தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;

நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.

அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.

நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை.

மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.

இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!

(இரண்டு நீண்ட கட்டுரைகளில் விஞ்ஞான விஷயங்கள் அனைத்தையும் எனது பிளாக்குகளில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளேன்.)

–SUBHAM—

TAGS –HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 72; இந்து மத கலைச்சொல் அகராதி- 72 நஹுஷன், நகுலன், நளன், நசிகேதன், நாபாக , எட்டு அதிசயங்கள்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-49; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,849)

Written by London Swaminathan

Post No. 15,849

Date uploaded in London –9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருத்தண்கால் (திருத்தங்கல்)

அருள்மிகு நின்ற நாராயணன் திருக்கோவில்:-

மூலவர்: நின்ற நாராயணன்

தாயார்: செங்கமல நாச்சியார்

உற்சவர்: திருத்தண்காலப்பன்

கோலம்: நின்ற திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: தேவச்சந்திர விமானம்

தீர்த்தம்: பாபவிநாச தீர்த்தம்

மங்களாசாசனம்: பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்

பாற்கடலில் படுத்துறங்கும் பரந்தாமனாம் இறைவன் நாராயணன் நான்கு நாச்சியார்களுடன் காட்சி தந்து அருளும் தலம்.

வினாசக முனிவர் “வைகானஸ ஆகமம்” விதிகளை முனிவர்களுக்கு எடுத்துரைத்த தலம்.

திருத்தங்கல் பெயர்க் காரணம் :-

திருமகள் “மகாலஷ்மி” வந்து இங்கு தங்கியிருந்த தலம் ஆதலால் திரு + தங்கல் “திருத்தங்கல்” என்று பெயர் பெற்றது.

இவ்வூர்.சைவ, வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாய்த் திகழும் இத்தலத்தில் “கருநெல்லிநாதர்” என்ற திருப்பெயரோடு சிவபெருமானும், “ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள்” என்ற திருநாமத்தோடு பெருமாளும் தரிசனம் தருகின்றனர்.

தலவரலாறு

பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.

இவர்கள் இருவருக்கும் தென்புறத்தில் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பனாகிய முருகப் பெருமான் பழனி ஆண்டவராக மிக இளமையாக காட்சி தருகிறார்.

வள்ளி – தெய்வானையுடன் குடும்ப சகிதமாய் இல்லாமல் தனித்து அருள்பாலித்தாலும், திருத்தங்கல் மக்களின் பெரும்பாலான திருமணங்கள் இவர் முன்னிலையில் தான் நடக்கின்றன.

ஜாம்பவிதேவி என்பவள் இராம அவதாரத்தில் கிட்கிந்தையில் இருந்த ஜாம்பவானின் மகளாவாள். அவளைத் திருமாலுக்கே திருமணம் செய்து கொடுக்க ஆவல் கொண்ட ஜாம்பவான், கிருஷ்ண அவதாரத்தில் திருமணம் செய்து வைத்ததாகவும், அவர்களின் திருமணம் இத்தலத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இத்தலத்தில் நின்ற திருக்கோலம், சயனத் திருக்கோலம் என இரண்டு திருக்கோலங்களில் பெருமாள் காட்சி தந்தாலும் நின்ற மூர்த்தியே பிரதானமாகக் கருதப்படுகிறார்.

மலையாக மாறிய ஆலமரம்:-

சுவேதம் என்ற தீவில் இருந்த ஆலமரத்திற்கும், ஆதிசேஷனுக்கும் இடையில் தாங்கள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதற்கு தீர்வு காண பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மாவோ “ஆதிசேஷனே சிறந்தவன். அவன் மீது தான் பெருமாள் இப்போதும் சயனிக்கிறார். ஆனால், உலகம் அழியும் காலத்தில் மட்டுமே ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்” என்றார்.

இதைக் கேட்டு வருத்தமடைந்த ஆலமரம் பெருமாளை நோக்கித் தவமிருந்தது. அதன் தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் “உனக்கு என்ன வரம் வேண்டும்?? என்று கேட்க, ஆலமரமோ “தாங்கள் எப்போதும் பான் உதிர்க்கும் இலை மீதும் பள்ளி கொள்ள வேண்டும்” என்று கேட்டது.

“திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக!!! நான் திருமகளை மணம் செய்ய வரும் காலத்தில் உன் மீது நின்றும், பள்ளி கொண்டும் அருள்பாலிப்பேன்”, என்றார் ஸ்ரீமந்நாராயணன்.

மலை வடிவில் இங்கு தங்கிய ஆலமரம், “தங்கும் ஆல மலை” எனப்பட்டது, காலப்போக்கில் இதுவே மருவி “தங்காலமலை” என்றானது.

குடைவரைக் கோவிலாக அமைந்துள்ள அற்புதத் தலம்;

தாயார் நின்ற திருக்கோலத்தில் காட்சி தந்தருளும் ஒரே தலம்;

கருடாழ்வார் சர்ப்பத்துடனும், அமிர்த கலசத்துடனும் காட்சி தரும் ஒரே தலம்.

சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் 4 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருத்தங்கல் இரயில் நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ளது இத்திருக்கோவில்.

திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

****

மங்களாசாசனம் :-

இத்திருத்தலத்தை பூதத்தாழ்வார் -1 பாசுரம், திருமங்கையாழ்வார் – 4 பாசுரங்கள் என மொத்தம் 5 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

***

பாசுரங்கள்

1399.  

பேரானை*  குறுங்குடி எம் பெருமானை*  திருத்தண்கால்

ஊரானை*  கரம்பனூர் உத்தமனை*  முத்து இலங்கு

கார் ஆர் திண் கடல் ஏழும்*  மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டு*

ஆராது என்று இருந்தானைக்*  கண்டது தென் அரங்கத்தே. 

2068.  

பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப*  பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று*

செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும்* சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து* ஆங்கே-

தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித்* தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு*

நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன* நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே!  

2251.  

தமர் உள்ளம் தஞ்சை*  தலை அரங்கம் தண்கால்,*

தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை,*  – தமர் உள்ளும்-

மாமல்லை கோவல்*  மதிள் குடந்தை என்பரே,*

ஏ வல்ல எந்தைக்கு இடம்.

2708.  

ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்

காரார் திருமேனி காணும் அளவும்போய்

சீரார் திருவேங்கடமே திருக்கோவ

லூரே*(2)–மதிள்கச்சி ஊரகமே பேரகமே

பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே

பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர்

ஆராமம் சூழ்ந்த அரங்கம்*–கணமங்கை  (2)

–subham—

Tags—Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-49; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருத்தண்கால், திருத்தங்கல்

ராமாயணத்தில் வரங்கள் (59) வருணன் ஹம்ஸத்திற்கு வரம் அளித்தது! (Post.15,848)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,848

Date uploaded in London – 9 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (59) வருண பகவான் ஹம்ஸத்திற்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் ஹம்ஸத்திற்கு வருண பகவான் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் வருண பகவான் ஹம்ஸத்தை நோக்கி இப்படிக் கூறினார்:

வருணஸ்த்வப்ரவீதத்ஹம்ஸம் கங்காதோயவிஹாரிணம் |             ஸ்ரூயதாம் ப்ரீதிசம்யுக்தம் வச: பத்ரரதேஸ்வர ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 30

வருண: – வருண பகவான்                               கங்காதோயவிஹாரிணம் – கங்காதீர்த்தத்தில் விஹரித்துக் கொண்டிருந்த ஹம்ஸம் – ஹம்ஸத்தைப் பார்த்து                                       து – இப்போழுது இப்படி சொல்லி அருளினார்                      பத்ரரதேஸ்வர – பறவைகளில் சிறந்த ஹம்ஸமே                    ப்ரீதிசம்யுக்தம் – அனுகூலமாயிருக்கிற                                      வச: – ஆக்கினையாவது                                             ஸ்ரூயதாத் – கவனமாய் கேட்கப்படட்டும்

வர்ணோமனோஹர: சௌம்ய சந்த்ரமண்டலசன்னிப: |                      பவிஷ்யதி தவோதக்ர: ஷுத்தபேனசமப்ரப: ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 31

சௌம்ய – குணவானே!                                                 தவ – உனது                                                                 வர்ண: – உருவம்                                                சந்த்ரமண்டலசன்னிப: – சந்திரமண்டலத்தை ஒத்ததாயும்              சுத்தபேண சமப்ரப: – நிர்மலமான வெண்மை நிறமுடைய நீரின் நுரை போன்ற காந்தியுடையதாயும்                                      மனோஹர – மனோஹரமாயும்                                           உதக்ர: – உனக்கு மட்டும் உரியதாயும்                                    பவிஷ்யதி – விளங்கட்டும்

மச்சரீரம் சமாசாத்ய காந்தோ நித்யம் பவிஷ்யஸி |                       ப்ராப்யஸே சாதுலாம் ப்ரீதிமேதன்மே ப்ரீதிலக்ஷணம் ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 32

மச்சரீரம் – பஞ்சபூதங்களினால் என்னால் ஏற்படுத்தப்பட்டதை (அதாவது ஜலத்தை)                                                               நித்யம் – எப்போதுமே                                                     சமாசாத்ய – அடைந்து                                                 அதுலாம் – ஒப்புயர்வில்லாத                                                ப்ரீதிர் – மன சந்துஷ்டியை                                              ப்ராப்யஸே – அடைவாய்                                             காந்த: – மிக அழகாகவும்                                            பவிஷ்யஸி – விளங்குவாய்                                               ஏதத் ச – இதுவே                                                                 மே – எனது                                                               ப்ரீதிலக்ஷணம் – அன்பிற்கு அடையாளம்

இப்படி வருண பகவான் ஹம்ஸத்திற்கு தூய்மையான வெண்மை நிறத்தைத் தந்தருளினார். இதற்கு முன்னர் ஹம்ஸங்கள் வெண்மை கலந்த நீலவர்ணத்தையும், சிறகுகள் கரிய நுனிகளைக் கொண்டவையாகவும் சிறகுகளிடையே பாகங்கள் உயர்ந்த சுத்தமான பசும் புல்லைப் போல இருப்பதையும் கொண்டிருந்தன.

வர்ணனின் அருளால் இனி ஹம்ஸங்கள் வெண்மை நிறத்துடன் விளங்க ஆரம்பித்தன.

இது அன்பிற்கடையாளமாய் தரப்பட்ட வரமாகும்.

**

Were there Dravidians in India at any time? (Post No.15,847)

Written by London Swaminathan

Post No. 15,847

Date uploaded in London –8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

NAMES OF ARYAN HUSBANDS???? AND DRAVIDIAN!!!! WIVES (White men Interpretation)

Rig Vedic seer Deergatamas- Married Dasa caste woman Mamata;

Rishi Kavacha Ailusar – married Dasa caste woman;

Sudasa is a famous king in Rig Veda supported by Rishis;

Satyakama kama Jabala- son of  servant maid Jabala.

Rama’s son Kusa- married Naga Princess Kumudavati;

Rama’s son Lava – Naga Princess Kanjajana;

Brahmin Ravana – married Asura kula Mandodari;

Shantanu- Fisher woman Matsyagandha; Son- Veda Vyasa

Matsyagandha means Fish Smell; She was called Yojanagandha, so smelly, her bad smell will go up to one Yojana= eight miles!

Bhima – married Demoness Hidimba; their son- Kadothkajan;

Arjuna- married Naga woman Ulupi; Pandyan Girl Alli (Chitrangatha)- their Son Aravan of Mahabharat;

Lord Muruga- Huntress Valli;

King Yayati- Brahmin Devayani;

Krishna’s son Pradyumna- married Asura Kula Prabhvati;

Vidharpa Desa Princess Maya – married Narakasura; their son Bagatdatta supported Kauravas)

Asura Guru – Brahmin Sukra!

Deva Guru- Brihaspati (These Gurus are in Sangam Tamil Literature)!

Brahmin Asura Vrtrasura was killed by Indra in Rig Veda ;

Brahmin Asura Trisiras was killed by Indra in Rig Veda;

Brahmin Asura Namuchi was killed by Indra in Rig Veda;

(In Bhutan and Nepal Namuchi is used as names of people even today)

Varuna is praised as ASURA in Rig Veda;

Rig Vedic Indra and Varuna are praised as Gods of Tamil Lands by the oldest Tamil book Tolkappiam;

Siva is praised as ARYAN by great Saivite saints who lived around 600 CE or before

No DRAVIDIAN is found anywhere in ancient Tamil literature

All ASURAS prayed to Lord Shiva and Brahma and received boons. Asuras also were practising Hindus.

The above facts explode the myth of foreign writers who said Demons, Asuras, Black skinned men are Dravidians.

Even the Asura names are in Sanskrit!

***

Toda woman in Nilgris

Cousin Marriage

Cousin marriage is followed in Tamil Nadu until this day and it is in all Tamil films as well. But it is also followed in Maharashtra, Gujarat and Orissa. Arjuna married cousin Subhadra, Krishna’s son married cousin Rukmavati. Ther also Northern Aryan custom, Sothern Dravidian custom is exploded.

Whatever foreigners wrote about “Dravidian” and “Aryan” are proved false and mischievous.

***

According to British rulers of India and Christian preachers in India, Dravidians were black and Aryans were white; according to them Dravidians were driven to south by invading Aryans; according to them Dravidians were described as Asuras, Rakshasas and low caste by the Aryans. Look at the list above which explodes this view.

A gang of foreigners led by Max Muller, John Marshall Mortimer Wheeler, John Mackay misled the world by giving racial connotations to two words Aryan and Dravidian. Neither 2000 year old Sangam Tamil literature nor 5000 year old Vedic literature has no evidence for it.

Arya is found in Rig Veda and the later Tamil Sangam literature. In Sanskrit it meant Cultured, educated, disciplined etc. In Tamil Sangam literature it meant Rishis in the Himalayas, People living in the North. No where Arya meant a race of people.

DRAVIDIAN IS NOT AT ALL FOUND IN TAMIL LITERATURE. Later when it is found in Jain literature it meant South. A reference about Dravida Sangam established by a Jain Muni is oft quoted without any detail. It is understood that there is nothing about Tamil or Tamil Nadu. This is the condition in fifth century CE. Three hundred years after this, Kumarila Bhatta mentioned Dravida Bhasa and refereed to Tamil word Soru (cooked rice). That is the only reference to connect this word DRAVIDA with Tamil. There also he meant a language spoken in the SOUTH. Because the ancient division of India as 56 Countries show Dravidian Desa out side Tamil Nadu. Chera Chola, Pandya desas have nothing to do with it.

Desa= country

One more reference from First Century BCE comes from the most famous Jain King Kharavela. He talks about breaking the Dramila Sanghatan which is 130 year old. Here is a controversy, only interesting to linguists. One group argued the very word TAMIL came from DRAVIDA:

Dravida=Dramila= Tamil.

Another group put it in reverse gear and argued:

Tamil=Dramila= Dravida.

It is true that M becomes V.

Most famous Saivite Saint Manikka vasagar changed Mirugam= Virugam (animal-Mrga)

Mandodari= Vandodari (Ravana’s wife and daughter of Demon Mayan, who married Brahmin Ravana)

Tamil Villagers use Muzi= Vizi (pupil in the eye).

Leaving this to linguists, if we move on to Indus Valley (Harappan or Sarasvati River Civilization), there is no Dravidian skeleton; all the skeletons discovered were of Aryan stature. The mischievous gang led by Jonhn Marshall, Mortimer Wheeler and John Mackay used the word Dravidian with racial tone and misled the world. Because  of this misleading, until this day the script remains undeciphered.

Max Muller after getting severe beatings and bricks from scholars like Goldstucker, changed his tone and said I used it without any racial connotation. When he started writing about Vedas he declared I am a German and so I am an Aryan. Germans are Aryans. Hitler used it in his auto biography and killed millions.

***

What did Hindus say about classification of People?

Before foreign Christian preachers and foreign rulers misused and abused the word DRAVIDIANS, Hindus knew nothing about the word.

They divided the mankind into 18 groups of people. It is in Tamil commentaries on Sangam literature. It is also in Sanskrit literature.

One important point is man kind moved from one place to another place in the past 5000 years. But the big question is whether they moved from West to East or East to West. Tamil literature never know there is a river called Indus/Sindhu! But they sang about the Himalayas and Ganges. Since Vedic God Indra was assigned direct East and Rig Vedic rivers list started from Ganga Hindus believe that Hindus originated in this land. Nowhere in Sangam Tamil literature or in Vedic literature there is evidence. Only linguists said look at Matha=Mother, Bratha= Brother, Hora=Hour; this shows you came fromoutside India. But Hindus argue millions of words spoken by Indians are not found outside India, so there is no connection linguistically. They also pointed out thousands of ancient customs of Hindus are not found anywhere in the world. What the Christian foreigners showed so far is HORSE. Even that argument was exploded because Rig Veda mentioned the number of Ribs which is not same in the European horses.

Th Hindus believed in mixed marriages; all the famous Hindus had black skin which exploded the Aryan White Skin and Dravidian Black Skin.

Veda Vyasa= utter  black= born to fisherwoman.

Krishna = utter black= Yadava caste;  now a backward  caste claiming benefits from Government!

Draupadi/ Krishnaaa= Black Woman

Rig Vedic Rishis Dirgatamas (Long Darkness), Kavacha Ailusha, Satyakama Jabala and many others were from Dasa caste!

So called low caste people like meat vendor Dharmavyadha, cart driver Raivak taught Vedic wisdom to great kings according to Upanishads.

The list of Mixed marriages is given in the beginning is only a short list, mostly from ancient literature. If we look into history we get hundreds of examples.

***

Naga Mystery

Over 20 Sangam poets are Naga poets; even Gupta inscriptions have names like Ganapati Nagan. Tamil epic Manimekalai described Sri Lanka as naga island. It said those Naga women used to entice sailors and devour them according to Mahavamsa. Only Buddha civilised them according to Sri Lankan chronicles.

My conclusion is that there were no Dravidians according to Tamil and Sanskrit literature, but black skinned and white skinned people lived together. Asuras followed certain customs like eating human flesh which others detested Even according to Eight Types of marriages in Tolkappiam and Manu Smriti, Asura marriage is violent abduction of brides. It shows Asuras believed in uncontrolled violence. Bhagavad Gita and other scripture also described the qualities of good and bad people. People with balanced mind wont quote one or two slokas from scriptures, but look at the whole picture and judge.

–subham—

Tags- Aryan, Dravidian, Asura, Demon, Devas, marriage, white skin, Black skin, Naga mystery, mixed marriage, Cousin Marriage

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 71; இந்து மத கலைச்சொல் அகராதி-71 (Post No.15,846)

Written by London Swaminathan

Post No. 15,846

Date uploaded in London –8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

N  Words

Nabhaga / naabhaaga

Many characters in the Puranas have this name; a bit confusing!

Nabhaga (नभग):—

One of the ten sons of Śrāddhadeva  and Śraddhā. This name is not to be confused with Nābhāga (another son of Manu whose name is sometimes replaced with Kavi). (see Bhāgavata Purāṇa 9.1.11-12)

Nābhāga (नाभाग).—Naabhaaga-

A brother of Ikṣvāku. The famous Ambarīṣa was Nābhāga’s son. After conquering all the worlds, he ruled the kingdom strictly along the path of truth and righteousness. (Vana Parva, Chapter 25, Verse 12). In the evening of his life Nābhāga gifted away the whole land to Brahmins. Since she could not leave Nābhāga, Bhūmidevī herself assumed physical form and went to him on the occasion. This emperor never consumed meat. He lives in Brahmaloka according to Chapter 115, Anuśāsana Parva. (Śānti Parva, Chapter 96, Verse 124).

Another story

 Nābhāga (नाभाग).—A son of Vaivasvata Manu and father of Ambarīṣa.*

The last son of Nabhaga and a bachelor; saw his father’s property divided among his other brothers and himself left with nothing; on his father’s advice he went to the sacrifice of Angīra’s descendants and explained the sixth day rituals relating to Viśvedevas. When the sacrificers went to Heaven their unspent wealth was presented to him. At this time appeared a person of dark complexion who was Rudra and who claimed all the property as his own; when Nabhaga was consulted he said that on a certain occasion, all the remainder in a sacrificial hall was left to Rudra. So Nābhāga apologised and gave away all that wealth. With this Rudra was pleased and initiated him into the knowledge of the Brahman. After making a present of all that wealth to the prince, he disappeared.

***

Naga, Naaga, Naaga loka/ Naaga kanya

Naga (नग) is synonymous with Mountain (śaila).

A mysterious name in Indian History and Tamil Sangam Literature; over twenty Tamil poets have this name. Naga lokam is located in the middle of rivers or seas. Arjuna married Naga Kanya Ulupi. Manimekalai, Tamil epic, described Nagaloka. It says Sri Lanka was full of Naga Kanyas.All the river side beauties and sea side beauties are described as Naga Kanyas (snake nymphs). The very word SNAKE is derived from Sanskrit S+naka!

In Sangam Tamil literature Naaka lokam is heaven/Swarga.

Gupta inscriptions talk about Ganapati Naga etc.

Wisdomlib.org gives more on Nagas:

1) Nāga (नाग).—An asura (demon). (See under Nāgāstra).

2) Nāga (नाग).—A class of serpents. It is stated in Vālmīki Rāmāyaṇa, Araṇya Kāṇḍa, Sarga 14, that of the ten daughters of Kaśyapa, from Surasā, the nāgas and from Kadrū, the Uragas (both are serpents) came into the world.

Nāga (नाग) refers to a group of inhabitants of ancient Kaśmīra (Kashmir valley) according to the Nīlamatapurāṇa.—The Nāga deities of the Nīlamata have power over rain, storm and snow, and dwell generally in lakes, pools and springs.

Creatures born with human forms above the naval and of snakes below; born of Kaśyapa and Kadru; their capital was Bhogavatī; their chief was Ananta;1 came to Dvārakā with the gods;2 attacked the chariot of the Lord;3 residents of the Naiṣadha Hill, of all talams and especially Pātalam; capital Māhiṣmatī, renowned for Karkoṭaka sabhā; worship Pitṛs;4 Vāsuki, as their overlord;5 when milking the cow-earth Takṣaka was the calf;6 celebrated the marriage of Śiva and Umā;7 to be worshipped in Palace buildings.

Nāga (नाग) is a name mentioned in the Mahābhārata (cf. I.34, I.35, I.31.6, I.35, I.60.66) and represents one of the many proper names used for people and places.

From Kashmir Ananta nag to Kanyakumari Nagerkoil ,we have hundreds of names with Naga

***

Nagara

In Sangam Tamil literature Nagar means Temple (in Madurai).

Nāgara (नागर, “townsmen”):—The Sanskrit name for a group of Prāsādas (‘town buildings’), according to the 11th-century Samarāṅgaṇasūtradhāra (chapter 63). This work, authored by Bhojadeva, is an encyclopedia dealing with various topics from the Vāstuśāstra.āsāda

Nāgara (नागर) refers to one of the six types of Temples, according to chapter 4 of the Puruṣottamasaṃhitā

Nagara (नगर) refers to a “city”, according to the Śivapurāṇa 2.5.23

Nagara (नगर) refers to a “city” (suitable for the householder to settle down as a citizen), according to chapter 1.4 of Vātsyāyana’s Kāmasūtra:

***

Nachiketa

Son of Rishi Uddalaka Aruni.

The story of Nachiketas appeared first in the Rig Veda. Later Taitriya Brahmana  and Katha Upanishad dealt with it. Vajra sravasva or Uddalaka Aruni, father of Nachiketa, desirous of attaining heaven, performed great sacrifices and was profuse in his gifts to the Brahmins. Nachiketa, as a boy, noted that his father had given only old and barren cows to them.

Nachiketa told his father that he had not given all and asked him ‘To whom I shall be given?’ On repeating the question three times, father angrily replied, ‘To Death’ (Mrtyu).

Thereupon he fell down as though dead and found himself in the presence of Yama, abode of Death. After staying there for three nights, Yama was forced to offer him a boon. He prayed to see his father again and he reconciled. This boon was granted and another one was offered.  All kinds of blessings were proposed but the boy refused to be contented with anything but a true knowledge of the soul. Yama then proceeded to instruct him.

In Mahabharata , it is told that Nachiketa expressed a desire to see some great persons there. Yama then arranged Nachiketa to see some of the great persons who had given away cows to Brahmanas. Bhishma related this episode to Yudhisthira to stress the importance of gifting cows to Brahmana.

***

Nahusha

An ancestor of Kuru Dynasty; son of Ayu and father of Yayati. Once in the temporary absence of Indra, he became the king of Swarga/heaven. There he became intoxicated with power and began to behave like a tyrant. He even entertained a desire that Indrani (Sachi) wife of Indra, should submit to him. Indrani had to seek the help of Brahma and together they devised a plan to topple him

Sachidevi (Indrani) went to Nahusha’s palace. There, she said, “O mighty king of the gods! Before I become your wife, I have a request to make. I wish you to come majestically to my house in a grander style than the Lord Vishnu or Shiva. Let the seven rishis bear your palanquin.” Nahusha, already riding high in his pride, instantly fell into the trap.

Seven revered rishis carried him in a palanquin on the dreadful day of Nahusha’s supposed meeting. Engulfed in lust, Nahusha was impatient to reach Sachidevi soon.  Agastya, shortest of the Rishis, also joined the seven Rishis. Because he was too short the palanquin had wobbled. So Nahusa began goading the rishis to go faster and, out of mad wickedness, kicked the pious sage Agastya, saying “sarpa, sarpa.” Sanskrit has two meanings of ‘sarpa’- one is ‘‘to move’, and the other is ‘serpent’. Agastya cried out loud in anger, “O wicked Nahusha, you out of pride had made us the rishis bearer of your palanquin. On top of it, you are also goading us and saying sarpa, sarpa constantly. I curse you now and here that thou shall fall from heaven and become a sarpa on earth.”

Immediately, Nahusha fell headlong from heaven and became a python in the jungle. There, he had to wait for long period for deliverance. His progeny, Yudhisthira, came to rescue him in Dwapara Yuga.

When Nahusha got his deliverance from the curse, he told Yudhisthira:

सुप्रज्ञमपि चेच्छूरमृद्धिर्मोहयते नरम् ⁠।

वर्तमानः सुखे सर्वो मुह्यतीति मतिर्मम ⁠।⁠।⁠

suprajñamapi cecchūramṛddhir mohayate naram

vartamānaḥ sukhe sarvo muhyatīti matir mama

“O righteous king Yudhisthira! The wealth and opulence fascinate even the most intelligent and brave man. I believe that everyone immersed in pleasure is disillusioned by it and subjected to the great fall as I did.”

Goswami Tulasidas ji also said in Ramcharitmanas:

नहिं कोउ अस जनमा जग माहीं,

प्रभुता पाई जाहि मद नाहीं ⁠।

nahim kou asa janama jaga māhī,

prabhutā pā’ī jāhi mada nāhī

“Never has a creature born in this world who doesn’t get intoxicated with pride when exalted with power and opulence.”

The story of Nahusha proves that excessive fame and power lead to pride, and pride leads to the ultimate downfall. So, one must always be conscious of one’s surroundings and not allow pride to take over.

***

Nakula

Youngest of the five Pandava brothers, he was the son of Madri and twin brother of Sahadeva. He was an extremely handsome youth renowned for his mastery in sword fighting. As he was an expert rider, he had no difficulty in obtaining a post as the keeper of royal stable of King Virata of Matsya Desa during the thirteenth year of banishment. Under the name of Granthika, he spent one year without anyone recognising him. At the end, just before revealing his identity,  he fought along with the Matsya forces against the invading army of Susharma of Trigarta desa and earned the respect of King Virata.

Mythologically he was the son of Aswins, also known as Nasatya in the Vedas. He had a son named Niramitra by his wife Karenu-mati, a princess of Chedi desa.

In Indonesia, Nakula is a highly prominent name in Bali. It is a major street in the upscale resort town of Seminyak (Jalan Nakula) and the namesake of Nakula, a leading Bali-based hospitality and private villa management company

***

Nala and Damayanthi

This interesting love story of Nala and Damayanthi is in the third chapter, Vana Parva, of Mahabharata. The story was adapted into Tamil by two poets Pukazenthi and Athi Veera Rama Pandyan.  Other poets of Tamil epic Silappadikaram and Thevaram made passing references to it. Because the story is so moving, a lot of other important things in the story are missed by many.

Following subjects are dealt within the story:-

1.Extra Terrestrials

Art of Disguise

Eight Paranormal Powers

4.Bird Migration and Training Birds for communication

5.Art of Cookery

6.Art of Charioting

7.Magic Numbers

8.Art of Gambling and Manipulation

9.invisible Cloaking

10.Toxicology

11.Moral Teaching and Psychology

12.Letter Writing by Kings

13.Truth alone Triumphs

14.Necessity of cleanliness

15.Role of Poetry

16.Brahmin Ambassadors/ Role of Ambassadors

17.Travellers’ Tale & Business Travel & Robbers

18.Geography

19.History

20.Role of Saints/Psychologists

21.Child care

22.Unusual Freedom of Indian Women

23.Body marks

24.Science of Horses

25.Tree Science

NALA DAMAYANTI story was translated into Latin by Bopp and into English verse by Dean Milman. 

DAMAYANTHI was the only daughter of King Bhima of Vidarbha (Nagpur region in Maharashtra). She was very beautiful and clever. Nala, King of Nishada, was a brave and handsome person. He was learned in Vedas and virtuous. He had great skills in arms, management of horses and cooking. His only weakness was addiction to gambling (which we see later in Yudhishthira of Mahabharata as well). Nala and Damayanti loved each other, though they have never met. Nala sent a message using swans.

(This shows the use of animals for human communication; it is in Sangam literature Purananuru verse as well.)

Bhima determined that his daughter should hold a swayamvara. The warrior class Hindu women of India had the highest freedom in the world. They chose the bravest and the cleverest prince or a king as their husband. This explodes the theory of Aryan immigration and Aryan-Dravidian division. Since it was not practised anywhere in the world except Hindus

Bhima sent letters to all the kings inviting them to Swayamvara (princess choosing her own partner).

Kings flocked to Damayanti’s Swayamvara and among them was Nala. Having heard the beauty of Damayanti through the Inter Galactic traveller Narada, even the Vedic Gods Indra, Varuna, Agni and Yama came to it. Nala who met them on the way, without knowing their intention, promised them to help. Even when they asked his help in marrying Damayanti, he did not go back on his words.

Nala reluctantly performed the promised task, but his presence perfected his conquest, and the maiden announced her resolve to pay due homage to Four Vedic Gods, but choose him for her lord. Nala entered the harem of Damayanti by becoming invisible with the power given by the Vedic gods. Now we read in science magazines about ‘Invisible cloaks’. We had such facilities thousands of years ago!

During the Swayamvara (princess freely choosing her own lord), all the four gods looked like Nala (art of disguise), but Damayanti was able to see the features of Extra Terrestrials in the Four heavenly Gods. Their feet never touched the ground (floating), they never winked (no beating of brows) and their garlands never withered.

When Damayanti chose Nala as her husband, they got married formally and lived happily for some time. Kali, the symbol of bad age- Iron Age- also came for the Swayamvara, but very late. When he heard that everything was over, he decided that he would separate the couple in future. One day when Nala did not wash his hands and feet before worshipping God, Kali entered him and made him an addict to gambling. Hindus always quote this event to emphasize cleanliness

At Kali’s instigation Pushkara, younger brother of Nala challenged him to come for a game of dice. Nala lost everything and his brother Pushkara became king. Both Nala and Damayanthi were forced to leave the country

As he lost even his clothes, he shared the cloth of Damayanti and decided at one stage that he should leave her alone. While she was sleeping, he slipped out leaving her in great distress. When she came to forest she wisely sent her two children Indrasena and Indrasenaa (long vowel is used for females in Sanskrit; Krishna is lord; Krishnaa is Draupadi).

This shows the importance of child care. A woman worries more about the safety and welfare of her children than her life.

Damayanti joined the caravan that was passing through the forest. We find such caravans going through forest in Tamil literature as well. The caravan of merchants was attacked by an elephant, and the chaotic scene is described vividly in the Mahabharata. Even Brahmins joined the group of tradesmen passing through the forest.

When the queen mother of Chedi Kingdom saw a beautiful woman with all the features of a queen, walking with the traders, she called her and gave her refuge.

Nala was bitten by the king of serpents Karkotaka in the forest, who was under a curse from which Nala was to deliver him. The serpent bit Nala and the poison should work upon him till the evil spirit (Kali) was gone out of him, and then he should restore his original handsome form. The serpent’s poison made him ugly and deformed. Here we learn about toxicology.

Later, Nala entered the service of King Rituparna of Ayodhya, as a trainer of horses and an accomplished cook, under the name of Bahuka.

Damayanti was sent to her father’s kingdom of Vidarbha where he found her children. Then she devised a clever plan to bring back Nala. She announced a second swayamvara.

In those days Brahmins were used as ambassadors, and Damayanti also employed a Brahmin to find Nala with all the available information. One Brahmin identified and informed Damayanti about his whereabouts.

In the meantime, Rituparna, having heard the second swayamwara of Damayanti, decided to attend it. Since he knew that Nala was a great driver of chariots, he employed the service of him to travel 800 miles in 24 hours (100 yojanas in the original).

On their way Rituparna taught Nala the science of numbers and the rule of chances and learnt from Nala, the science of horses. This shows the Exchange of Knowledge and Sharing Information. As soon as Nala acquired this knowledge, the evil spirit (Kali which means Dark) went out of him.

Damayanti convinced that it was her husband Nala by the flavour of a dish he cooked. Here comes the art of cooking.

Afterwards Nala and Damayanti met and Nala resumed his form. Now that he knew the science of numbers, he challenged Pushkara for a game of dice and won the game. Rituparna’s teaching helped him. Nala got back his kingdom and lived happily with his wife.

—Subham—

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 71; இந்து மத கலைச்சொல் அகராதி-71 (Post No.15,846), Nahusa, Nala, Nachiketa, Naga

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-48; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,845)

Written by London Swaminathan

Post No. 15,845

Date uploaded in London –8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவேங்கடம் (திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)

ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவ தலம்.. இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது.

1) முதல்பிரிவு – கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாள், கோவில்

மூலவர் – கோவிந்தராஜப் பெருமாள், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – புண்டரீகவல்லி.

விசேஷங்கள் – இங்கு, ஆண்டாள், உடையவர், முதலியவர்களின் ஸந்நிதிகள் உள்ளன.

2) இரண்டாம் பிரிவு – திருமலை.

மூலவர் – திருவேங்கடமுடையான், ஸ்ரீ நிவாஸன், வெங்கடாசலபதி, பாலாஜி, நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – கல்யாண வெங்கடேச்வரர்.

தீர்த்தம் – சேஷாசல ஸ்வாமி புஷ்கரிணி, பாபவிநாச நீர்வீழ்ச்சி, ஆகாசகங்கை, கோனேரி தீர்த்தம். 14 தீர்த்தங்கள் – வைகுண்ட தீர்த்தம், சக்ர தீர்த்தம், ஜாபாலி தீர்த்தம். வருண தீர்த்தம், ஆகாசகங்கை, பாபவிநாசம், பாண்டவ தீர்த்தம், குமாரதாரை, ராமக்ருஷ்ண தீர்த்தம், தும்புரு தீர்த்தம், சேஷ தீர்த்தம், ஸுகஸந்தன தீர்த்தம், யுத்தகள தீர்த்தம், சீதம்ம தீர்த்தம் உள்ளன.

விமானம் – ஆநந்த நிலய விமானம்.

ப்ரத்யக்ஷம் – தொண்டைமான், ஆறுமுகன்.

ஆதீவராஹர் ஸந்நிதி – ஸ்வாமி புஷ்கரிணியின் வடமேற்கு மூலையில் கோவில் கொண்டுள்ள இப்பெருமாளக்கு தளிகை ஸமர்ப்பித்த பிறகே, அது ஸ்ரீநிவாஸனுக்கும் ஸமர்ப்பிக்கப்படுகிறது. ஏழு பர்வதங்கள் வெங்கடாத்ரி, சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, ஆனந்தாத்ரி என்ற பெயர்களுடன் இருக்கின்றன. இதன் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ நீவாஸன் எழுந்தருளுவதற்கு முன் ஆதிவராஹன் இத்தலத்தில் ஸேவை ஸாதித்ததனால் ஆதிவராஹரைஸேவித்த பிறகுதான் ஸ்ரீநிவாஸனை ஸேவிக்கவேண்டும்.

3) மூன்றாம் பிரிவு – திருச்சானூர் (அலர்மேல் மங்காபுரம்)

மூலவர் தாயார் – அலர்மேல்மங்கை (பத்மாவதி) , கிழக்கே திருமுக மண்டலம்.

தீர்த்தம் – பத்மஸரோவரம்.

விசேஷங்கள் – இக்கோவிலில் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் ஸெனந்தரராஜனுக்கும் ஸந்நிதிகள் உள்ளன. இந்தக்கோயிலை ஸ்ரீநிவாஸன் நியமனப்படி, தொண்டைமான் என்ற அரசர் கட்டி பகவான் மிக்க ஆனந்தத்துடன் எழுந்தருளியதால் ஆனந்த விமானம் என்று பெயர் உண்டானதாக ஸ்தலவரலாறு.

திருமலைமேல் கல்யாண உத்ஸவம், ப்ருஹ்மோத்ஸவம் முடியளிப்பது ஏராளமான பிரார்த்தனைகள் செலுத்தப்படகின்றன. காணிக்கைகளின் காரணமாக உலகத்திலேயே பணக்காரக் கோவில் இதுதான்.

திருப்பதி பாசுரங்கள்

மங்களாசாஸனம் –

பெரியாழ்வார் – 56, 104, 180, 184, 207, 247, 463

ஆண்டாள் – 504, 506, 535, 546, 577-586, 601, 604.

குலசேகராழ்வார் – 677-87.

திருமழிசையாழ்வார் – 799, 811, 832, 2415, 2420-29, 2471.

திருப்பாணாழ்வார் – 927, 929

திருமங்கையாழ்வார் – 1018-1057, 1275, 1312, 1371, 1388, 1404, 1518, 1572, 1640, 1660, 1811, 1836, 1849, 1946, 1978, 2001, 2038, 2059, 2060, 2067, 2673 (69) , 2674 (6, 124)

பொய்கையாழ்வார் – 2107, 2118-21, 2149, 2157, 2158, 2163, 2180

பூதத்தாழ்வார் – 2206, 2209, 2214, 2226, 2227, 2234, 2235, 2256.

பேயாழ்வார் – 2295, 2307, 2311, 2313, 2320, 2321, 2326, 2339, 2342-44, 2349-54, 2356, 2370

நம்மாழ்வார் – 2485, 2487, 2492, 2508, 2527, 2537, 2544, 2558, 2754, 2848, 2849, 2862, 2919-29, 2948, 2985, 3061, 3282-92, 3326-36, 3458, 3586, 3716, 3740

மொத்தம் – 202 பாசுரங்கள்.

சென்னை – பம்பாய் ரயில்பாதையிலுள்ள ரேணிகுண்டாவிலிருந்து சுமார் 7 மைல் தூரத்திலுள்ள ரயில்வேஸ்டேஷன் திருப்பதி.. திருப்பதி, திருமலை, திருச்சானூர் என்ற மூன்று முக்ய பிரிவுகளிலும், தேவஸ்தான சத்திரங்களும் ஹோட்டல்களும் மற்ற எல்லா வசதிகளும் உள்ளன.

சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும்  காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும்.

மலை அடிவாரத்திலிருந்து, மலை உச்சியிலுள்ள வெங்கடாசலபதி கோவிலுக்கு நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறு மணி நேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.

***

திருப்பதி அதிசயங்கள்

திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா  விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.

உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி,  முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!

பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள்  உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.

பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.

மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.

இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.

பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா  மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.

சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.

தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.

இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி,  சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள். 

தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.

 இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று. 

****

 திருப்பதி லட்டு 

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர். 

****

நான்  24 AUGUST 2019-ல் எழுதிய கட்டுரையிலிருந்து  முக்கியத் தகவல்கள்

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.

2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்

பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.

சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.

kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi

dAsanendare biDa gaTTi namma kEsakki timmappasetti

இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.

பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!

திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?

சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.

ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+  பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.

1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி  மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.

1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.

பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.

51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.

பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.

ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-

சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,

கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,

அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்

சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்

ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்

இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்

 பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன.

*****

திருப்பதி மலைமேல் முருகன் !

(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை  கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

1.            திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் புதிர்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

****

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை.

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி),  முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.

நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள் தரும் தகவல்

R.Nanjappa

  /  August 24, 2019

Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?

If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.

On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!

When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.

So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.

****

திருப்பதி கோவில் அறிவிப்பு

திருமலையில் பிறந்தார் அனுமன்!

’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.

ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.

இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)

Post No. 12,291

Date uploaded in London –   18 July , 2023                 

1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?

****

2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன ?

****

3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?

****

4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?

 ****

5.வெங்கடேச சுப்ரபாதத்தை  இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

****

6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?

****

7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?

****

8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?

****

9.பெருமாள் எப்படி  உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?

****

10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும்  திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?

****

விடைகள்

1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்

****

2.திருமலை-திருமலை கோவிலிலும்  அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள  வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர்  காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக்  கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

****

3. குலசேகர ஆழ்வார்

****

4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா

****

5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால்  ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.

இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।

उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana

kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।

uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥

Valmiki Ramayna Translation, 1.23.2

O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.

The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.

****

6.வடவேங்கடம் முதல் தென்குமரி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

****

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

****

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )

****

7.ஆகாய கங்கா.

திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

****

8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:

Vrushabhadri – விருஷபாத்ரி

Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)

Neeladri – நீலாத்ரி

Garudadri or Garudachalam – கருடாத்ரி

Seshadri or Seshachalam – சேஷாத்ரி

Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி

Venkatadri – வேங்கடாத்ரி

****

9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை  அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்.

****

10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

****

தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு……………………………

பொருள்:-

வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;

வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி

நான் மறையும் மற்றை நூலும்

இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்

நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்துநின்ற

அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ

பொருள்:-

வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும்,  ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்.

சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது.

****

பாசுரங்கள்

3101.  

சொன்னால் விரோதம் இது*  ஆகிலும் சொல்லுவான் கேண்மினோ,*

என் நாவில் இன்கவி*  யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்,*

தென்னா தெனா என்று*  வண்டு முரல் திருவேங்கடத்து,*

என் ஆனை என் அப்பன்*  எம் பெருமான் உளனாகவே.

3177.  

மாரி மாறாத தண் அம் மலை*  வேங்கடத்து அண்ணலை,*

வாரி மாறாத பைம் பூம் பொழில்சூழ்*  குருகூர் நகர்க்,*

காரி மாறன் சடகோபன்*  சொல் ஆயிரத்து இப் பத்தால்,*

வேரி மாறாத பூமேல் இருப்பாள்*  வினை தீர்க்குமே.

3398.  

மாலுக்கு*  வையம் அளந்த மணாளற்கு,*

நீலக் கருநிற*  மேக நியாயற்கு,*

கோலச் செந்தாமரைக்*  கண்ணற்கு,*

என் கொங்குஅலர்ஏலக் குழலி*  இழந்தது சங்கே.

3399.  

சங்கு வில் வாள் தண்டு*  சக்கரக் கையற்கு,*

செங்கனிவாய்ச்*  செய்ய தாமரைக் கண்ணற்கு,*

கொங்கு அலர் தண் அம் துழாய்*  முடியானுக்கு,*  என்

மங்கை இழந்தது*  மாமை நிறமே.

56.  

சுற்றும் ஒளிவட்டம்*  சூழ்ந்து சோதி பரந்து எங்கும்*

எத்தனை செய்யிலும்*  என்மகன் முகம் நேரொவ்வாய்*

வித்தகன் வேங்கட வாணன்*  உன்னை விளிக்கின்ற*

கைத்தலம் நோவாமே*  அம்புலீ! கடிது ஓடி வா     

104.  

என் இது மாயம்?*  என் அப்பன் அறிந்திலன்*

முன்னைய வண்ணமே*  கொண்டு அளவாய் என்ன*

மன்னு நமுசியை*  வானிற் சுழற்றிய*

மின்னு முடியனே!  அச்சோ அச்சோ*

 வேங்கடவாணனே! அச்சோ அச்சோ 

180.  

தென் இலங்கை மன்னன்*  சிரம் தோள் துணிசெய்து*

மின் இலங்கும் பூண்*  விபீடண நம்பிக்கு*

என் இலங்கும் நாமத்து அளவும்* அரசு என்ற*

மின் அலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா!

வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா.

504.  

தை ஒரு திங்களும் தரை விளக்கி*  தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்*

ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து*  அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!*

உய்யவும் ஆம்கொலோ என்று சொல்லி*  உன்னையும் உம்பியையும் தொழுதேன்*

வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை*  வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே. (2)   

020.  

நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்*

என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்*

கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்*

சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!  

1021.  

பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்*

கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*

ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்*

தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!  

1023.  

எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து*

பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*

ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு*

திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!

–SUBHAM–

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-48, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவேங்கடம் ,திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம், திருச்சானூர் திருப்பதி அதிசயங்கள் .

ராமாயணத்தில் வரங்கள் (58) யமன் காக்கைக்கு வரம் அளித்தது! (Post.15,844)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,844

Date uploaded in London – 8 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (58) யமன் காக்கைக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் காக்கைக்கு யமன் அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

சென்ற அத்தியாயத்தில் மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் பார்த்தோம்..

இந்திரன் மயிலாக ஆனான். தர்மராஜர் காக்கையாக ஆனார். குபேரன் ஓணானாகவும் வருணன் ஹம்ஸமாகவும் ஆனார்கள்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் இந்திரன் மயிலுக்கு வண்ணத் தோகைகள் ஏற்படும்படி வரம் அளித்தான்.

தர்மராஜர் எதிரில் மூங்கிலில் இருந்த ஒரு காக்கையைப் பார்த்து இப்படிக் கூறலானார்:

தர்மராஜோப்ரவீத் ராம ப்ராக்வம்ஷே வாயஸம் ஸ்திதம்|          பக்ஷின்ஸ்தவாஸ்மி சுப்ரீத: ப்ரீதஸ்ய வசனம் ஸ்ருணு ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 26

ராம – ஶ்ரீ ராம (அகஸ்தியர் ராமருக்கு இந்த  வரலாறைக் கூறுகிறார்) தர்மராஜ – தருமராஜர்                                                   ப்ராக்வம்ஷே – எதிரில் ஒரு மூங்கிலில்                                 ஸ்திதம் – தங்கி இருந்த                                                 வாயஸம் – காக்கையைப் பார்த்து                                               அப்ரவீத் – இப்படிச் சொல்லியருளினார்                                பக்ஷின் – பறவையே                                                             தவ – உன் மீது                                                                        சுப்ரீத: – மிகத் திருப்தி கொண்டவனாக                                                      அஸ்மி – இருக்கிறேன்                                                ப்ரீதஸ்ய – ப்ரீதி கொண்டிருக்கிற என்னுடைய                                வசனம் – ஆசீர்வாதத்தைக்                                             ஸ்ருணு – கேள்

யதான்யைர்விவிதை ரோகை: பீட்யந்தே ப்ராணினோ மயா |
தே ந தே ப்ரபவிஷ்யந்தி மயி ப்ரீதே ந சம்ஷய: ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 27

யதா – என்னவெனில்                                              ப்ராணின: – ஜீவன்கள் எல்லாமும்                                      மயா – என்னால்                                                           அன்யை: – வெவ்வேறான                                                   விவிதை: – சித்திர விசித்திரங்களான                                      ரோகை: – வியாதிகளால்                                               பீட்யந்தே – பீடிக்கப்படுகின்றன                                              மயி – நான்                                                                        ப்ரீதே – ப்ரீதி கொண்டிருக்கும் காரணத்தினால்                             தே – அவைகள்                                                         தே – உனக்கு                                                            ந ப்ரபவிஷ்யந்தி – உண்டாகாது                                           ந சம்ஷய: – இதில் சந்தேகமில்லை

ம்ருத்யுதஸ்தே பயம் நாஸ்தி வரான்மம விஹங்கம |              யாவத்வாம் ந வதிஷ்யந்தி நராஸ்தாவத்பவிஷ்யந்தி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 28

விஹங்கம – பறவையே                                                 மம – எனது                                                                வராத் – வரத்தினால்                                                     தே – உனக்கு                                                                       ம்ருத்யுத: – யமனிடமிருந்து                                             பயம் – பயம்                                                                 ந அஸ்தி – இல்லை                                                          யாவத் – எவ்வளவு காலம்                                              நரா: – மனிதர்கள்                                                             த்வாம் – உன்னை                                                        ந வதிஷ்யந்தி – கொல்லாமல் இருக்கிறார்களோ                         தாவத் – அவ்வளவு காலம்                                      பவிஷ்யந்தி – உயிருடன் வாழ்வாய்

ஏதே மத்திஷயஸ்தா வை மானவா: க்ஷுப்தயார்திதா: |                   த்வயி பூக்தே து த்ருப்தாஸ்தே பவிஷ்யந்தி சபாந்தவா: ||

உத்தர காண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 29

ஏதே – இந்த                                                         மத்திஷயஸ்தா – என்னோடுவாசிகளான மானிடர்கள்                  க்ஷுப்தயார்திதா: து – பசியினால் துன்பமுற்று தவிக்கும் போது             த்வயி – நீ                                                            புக்தே வை – புசிப்பாயானால்                                            தே – அவர்கள்                                                   சபாந்தவா: – பந்துக்களுடன் கூடியவர்களாய்                       பவிஷ்யந்தி – ஆவார்கள்

இப்படியாக மகிழ்ச்சி அடைந்த யமன் காகத்திற்கு வரத்தை அருளினான். இது கேட்காமல் தரப்பட்ட வரமாகும்

**

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்(Post.15,843)

Written by London Swaminathan

Post No. 15,843

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நான் கொடுத்த தலைப்பு பொய்யான தலைப்பு.

ஏனெனில் சங்க இலக்கியத்திலோ  பிறகால தமிழ் இலக்கியத்திலோ பாரதி பாடல்களிலோ தேவாரம் திருவாசகத்திலோ திராவிட என்ற  சொல் கிடையாது . ஆயினும் சங்க இலக்கியம் முதல் பாரதி பாடல் வரை ஆரிய ARYA என்ற சொல் உண்டு. தேவார,  திருவாசககங்களில் ஆரியன் என்றால் சிவ பெருமான்!  சங்க இலக்கியத்திலும் ஆரிய என்றல் வடக்கில் இமய மலையில் வாழும் முனிவர்கள் அல்லது பண்பாடுமிக்க மனிதர்கள்; ஆங்கிலத்தில் CULTURED, EDUCATED என்று சொல்வதற்கு சமம் ; இதனால் அந்த திசையிலிருந்து வந்த கூத்தாடிக்கும், பயில்வான்களுக்கும் ஆரிய மல்லன், ஆரிய கூத்தாடி என்று சொல்லத் துவங்கினர்; ஆனால்  திராவிட என்ற சொல்லை எங்குமே தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ காண முடியாது; இது வெள்ளைக்காரன் கட்டிவிட்ட கதை ; இப்படிச் சொன்னால் தென்னாட்டில் கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று கனக்குப் போட்டனர்; அது ஓரளவுக்குப் பலித்தது. மீனவர்களையும் பனை ஏறிகளையும் மலையாள ஈழவாக்களையும் மாற்றினார்கள்

பிற்காலத்தில் தென் பகுதியையும் அங்கு பேசப்பட்ட மொழிகளையும் குமாரில பட்டர் (EIGTH CENTURY CE ) போன்றோர் திராவிட பாஷை என்று அழைத்தனர்; அதற்கு முன்னர் சமணர்கள் ஸ்தாபித்த சங்கத்தை திராவிட சங்கம் (FIFTH EIGTH CENTURY CE) என்றனர் ; இரண்டும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்கள்; அதற்கும் முன்னதாக ஒரிஸ்ஸா என்னும் கலிங்கத்தை ஆண்ட காரவேலன் த்ரமிள என்ற சொல்லை பயன்படுத்தினான்; சிலர் தமிழ் – த்ரமிள- திராவிட என்று விளக்கினர் இன்னும் சிலர் இல்லை திராவிட- த்ரமிள- என்பது தமிழ் ஆயிற்று என்று REVERSE GEAR  ரிவர்ஸ் கியரில் பயணம் செய்தனர் . 56 தேச வரைபடங்களிலும் விளக்கங்களிலும் திராவிடம் என்பதைத் தமிழ் நாட்டுக்கு மேலே ஆந்திரப் பகுதியைக் காட்டியுள்ளார்கள்;  ஆக இது தமிழ் நாடோ சேர, சோழ, பாண்டிய நாடோ இல்லை!

****

கணவன்மாரும் மனைவியரும்

“திராவிடர்”!? ! ? களை மணந்த “ஆரியர்”!?!? கள்!

ரிக்வேத ரிஷி தீர்க்கதமஸ் – தாசர் குலப் பெண் மமதா ;

கவச ஐலுசர் – தாசர் குலப் பெண்;

உபநிஷத பெண்மணி ஜாபாலா- பணிப்பெண் ; மகன் சத்யகாம ஜாபாலன்  ;

பிராமண ராவணன் – அசுரர் மகள் மண்டோதரி ;

பீமன் – அரக்கி ஹிடிம்பா; பீமன் மற்றும் அரக்கி இடும்பி ஆகியோரின் மகன் கடோத்கஜன்.

அர்ஜுனன் – நாக கன்னிகை உலூபி , மணலூர் சித்ராங்கதா ; அல்லி ராணி ; அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலூபிக்கும் பிறந்தவன் அரவான்.

முருகபப்பெருமான் – வேடுவச்சி வள்ளி ;

யயாதி – பிராமண தேவயானி

உதயணன் – நடன மாது வாசவத்தா

சந்தனு – மீனவப் பெண் மத்ஸ்யகந்தி; அவள் மகள் வேத வியாசர்

கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னன் – அசுரர் இளவரசி பிரபாவதி

ராமனின் மகன் குசன் – நாக இளவரசி- குமுதவதி; அவர்கள் மகன் அதிதி

ராமன் மகன் லவன் – நாக இளவரசி கஞ்சசனா

நரகாசுரன் -மனைவி மாயா ; விதர்ப்ப நாட்டு இளவரசி; மகன் பகதத்தன்

முறைப்பெண்ணை மணப்பது தமிழ்நாடு மட்டுமின்றி ஒரிஸ்ஸா, குஜராத், மகாராஷ்டிரத்தில் உண்டு ; அவர்களுக்கு முன்னால் அர்ஜுனன்  முறைப்பெண் சுபத்ராவையும் , கிருஷ்ணன் மகன் பிரத்யும்னன் முறைப்பெண், ருக்மவதியையும் மணந்தனர்.

***

வெள்ளைக்காரன் வந்து ஆரிய திராவிட என்று பிரிப்பதற்கு முன்னர் நச்சினார்க்கினியர் முதலியோர் 18 குடிகள் அல்லது 18 பிரிவுகள் பற்றிப் பேசினார்கள். அதிலும் ஆரியர் திராவிடர் கிடையாது இவைகளுக்கு எல்லாம் இனவாதப் பொருளை கற்பித்தோர் பட்டியலில்  முதலிடம் பிடிப்பவர்கள் மாக்ஸ் முல்லர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் , ஜான் மக்கே ஆவர். இந்தப் பட்டியல் மிகவும் நீண்டது ; நாலு பேரைக் குறிப்பிட்டதற்கு காரணம் இவர்கள் எல்லோரும் சிந்து வெளி எழுத்துக்களை படிக்க முடியாமல் திசை திருப்பியதோடு வேதத்தையும் நேற்று வந்தது, அதாவது பைபிளின் பழைய ஏற்பாடு, யூத மதம் ஆகியவற்றுக்குப் பிற்பாடு வந்தது என்று பொய்யுரை பரப்பினர்நான் சொல்வதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) மிக அழகாக, பாலீஷாக, திட்டாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சொல்லி இருக்கிறார்  (காண்க தெய்வத்தின் குரல்).

இந்தக் கொள்ளைக்காரர்கள் ஸாரி, ஸாரி SORRY,  SORRY  வெள்ளைக்காரர்கள் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதினாலும் அது யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க முயன்றனர்.  

ஆயினும் கம்பனும் மில்டனும் எழுதி டாக்டர் பட்டம் பெற்ற எஸ் ஆர் கே ( எங்கள் வீட்டுக்கு நாலு வீடுக்கு தள்ளி மதுரையில் வசித்த பேராசிரியர்; சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி பரப்புரையாளர் எஸ் ராம கிருஷ்ணன் ) போன்றோர் சில விஷயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். (காண்க – இந்திய பண்பாடும் தமிழரும் , எஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை , 1971).அவைகளைக் காண்போம் .

எந்தெந்த ஜாதிக்காரரை மணந்து பெற்ற பிள்ளைகளுக்கு என்ன பெயர் என்பதை மனு ஸ்ம்ருதியும் கூறுவதால் அப்படி நிகழ்ந்தது தெரிகிறது ஆனால் உதாரணங்களைக் காண்போம். 

மஹாபாரதம் சொல்லும் கதையில் சந்தனு மகாராஜன் மீனவப் பெண்ணான மத்ஸ்ய கந்தியை மணந்தது வருகிறது; மத்திய கந்தி என்றால் மீன் நாற்றம் என்று பொருள் ;அவர்களுக்குப் பிறந்தவர்தான் வியாசர்- வேத வியாசர் இல்லாவிடில் மஹாபாரதமும் கிடையாது, புராணங்களும் கிடையாது, நான்கு வேதங்களும் கிடையாது; ஆகையால் இன்றுவரை குருபூர்ணிமா தினத்தன்று அவரைக் குருவாக எல்லா இந்துக்களும் வணங்குகின்றனர் அவர் நிறமோ கருப்பு ; காக்காக் கருப்பு! UTTER BLACK!

இங்கு இன்னுமொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்; திராவிடர்கள் கோழி முட்டைக் கண்களும், போண்டா மூக்கும், சுருட்டை முடியும், குட்டையான தோற்றமும் உடையவர்கள் என்று வெள்ளைக்காரர்கள் எழுதிவைத்தார்கள். ஆரியர்கள் இதற்கு நேர் மாறாக கூரிய மூக்கும், நல்ல உயரமும், வெள்ளைத் தோலும்  தாமரைக் கண்களும் உடையவர்கள் என்றும் வருணித்தார்கள் !

ஆனால் வியாசர் கருப்பு! திரவுபதி கருப்பு! கிருஷ்ணன் கருப்பு! ரிக் வேத அகஸ்தியர் குட்டை !

இதிலும் வெள்ளைக்காரன் புளுகு அம்பலமாகிறது (ஹரப்பாவில் குட்டையான திராவிடர் எலும்புக்கூடு எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை !!!) ராமன் வேடர் குலத் தலைவன் குகனைத் தழுவிக்கொண்டு யூ ஆர் மை பிரதர் YOU ARE MY BROTHER TOO   என்று சொன்னதெல்லாம் நமக்குத் தெரியும்.

திருவிளையாடல் புராணக் கதைப்படி மதுரை மீனாட்சி கூட வடக்கத்திப் பெண்தான் ! சூரசேன மஹாராஜாவின்  பெண்ணான  காஞ்சன மாலாவுக்குப் பிறந்தவள் மீனாட்சி . 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மெகஸ்த்னீஸ் கூட அவளைக் குறிப்பிட்டான் .ஆனால் அவளை திருஞான சம்பந்தர் அழகான தமிழ்ப்பெயர் சொல்லி — அங்கயற்கண்ணி என்று சொல்லித் –தேவாரம் பாடினார்; 1400 ஆண்டுகளுக்கு முன்னர் !

அசுரர்கள் என்றால் திராவிடர்கள், தேவர்கள் என்றால் ஆரியர்கள் என்றும் வெள்ளைக்கார கிறிஸ்தவன் கதை கட்டி விட்டான் ; விருத்திராசுரன் என்ற பிராமணனைக் கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதை ரிக் வேதம் முதல்  நம்ம ஊர் தல புராணங்கள் வரை ஆயிரம் முறையாவது சொல்லி இருக்கும்;

ராவணன் என்ற 50% பிராமணனைக் கொன்றதற்காக ராம பிரானையும் பிரமஹத்தி பிடித்ததை ராமேஸ்வரம் முதலிய தல புராணங்களில் காண்கிறோம் ராவணனும் ஒரு அசுரன்!

பெண்கள் வசப்பட்ட க்ஷத்ரிய விசுவாமித்திர பின்னர் பிராமணனாக மாறியதும் நந்தனார் கதையும் எவரும் பிராமணன் ஆக முடியும் என்றும் காட்டுகிறது

நமுசி என்ற அரக்கனை இந்திரன் கொன்றான் என்ற ரிக் வேதக் கதையிலும் நமுசியை பிராமணன் என்றே காட்டுகிறது; நமுசியின் சகோதரன்தான் அசுரத் தச்சனான மயன்.

நேபாளம் பூட்டானில் இப்போதும் நமுசி என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்.

ரிக்வேதத்தில் வேறு ஒரு கிருஷ்ணன் உள்ளான்; அவனுக்கும் இந்திரனுக்கும் மோதல்! த்வஷ்டா மகனும் தேவர்களின் புரோகிதனுமான பிராமணன் திரிசரஸின் மூன்றுதலைகளையும் இந்திரன் துண்டித்தான் என்றும் ரிக் வேதம் 10-8 கூறுகிறது ; திரிசிரசும் ஒரு அசுரன் என்கிறது ! ஆகவே அசுரர் என்பது குணத்தால் வந்த அடைமொழிதான்பிறப்பால் அல்ல. வெள்ளைக்காரன் கணக்குப்படி இவை எல்லாம் இன மோதல்கள் .

இப்படி ஏனைய மத நூ ல்களில் ஆயிரம் விஷயம் இருந்தும் அவைகளுக்கு வெள்ளைக்காரன் இன வேற்றுமை கற்பிக்கவில்லை;

ஆக பிராமணர்களையும் அசுரர்கள் அல்லது  ராக்ஷஸர்கள் என்று வருணித்ததை ரிக் வேதத்திலும் ராமாயணத்திலும் காண்கிறோம் ; அவ்வளவு அசுரர்களும் ராக்ஷஸர்களும் பிரம்மா அல்லது சிவ பெருமானை நோக்கித் தவம் செய்து ஏராளமான வரங்களை பெற்றதையும் புராண, இதிகாசங்களில் படிக்கிறோம்;  இவர்கள் திராவிடர்கள் என்றால் எப்படி ஆரிய தெய்வங்களை வழிபட்டு வரங்களை பெற்றார்கள் ? இவைகளை எல்லாம்  மறைத்ததால்தான் வெள்ளைக்கார்களை  அயோக்கியர்கள் என்று குறிப்பிடுகிறேன் .

இந்திரன் என்பது பட்டம்; ஒரே ஆள் அல்ல; ராஜா, தலைவன் என்று பொருள்;

ரிக்வேதத்தில் கீழ் ஜாதி முனிவர் தீர்க்கதமஸ் என்ற ரிஷி, தாசர் குல மமதாவின் புதல்வர் . வெள்ளைக்காரன் கணக்குப்படி மமதா திராவிடப் பெண் .

கவச ஐலுசர் என்ற ரிக்வேத ரிஷியும் கிழ்ஜாதி தாசர் மகன்தான் .

சுதாஸ் என்ற ரிக்வேத கால மன்னனும் தாசன் என்பதை பெயரே காட்டிவிடுகிறது

உபநிஷத்தில் வரும் ஜாபாலா வேலைக்காரப்பெண் ; அவளுக்குப் பிறந்தவன் ரிஷியிடம் போய் “என் அப்பா யார் என்று தெரியாது என்று அம்மா சொல்லிவிட்டாள் என்றான்.  அப்படியானால் நீ பிராமணன்தான் ஏனெனில் பிராமணன் உண்மையே பேசுவான் உன் பெயர் இன்றுமுதல் உண்மை விளம்பி — அதாவது சத்யா காமன்- வா, வா! வேத வகுப்பில் உட்கார்! என்கிறார் வண்டிக்காரன் ரைவக் , ஜானுசுருதி என்ற மன்னனுக்கு ஆத்ம ஞானம் போதித்ததை சாந்தோக்கிய உபநிடதம் சொல்கிறது .

ஒரே வேதம் பயிலும் வெள்ளை நிறத்தவன் , இரு வேதம் பயிலும் மாநிறத்தவன் மூன்று வேதம் பயிலும் கருப்பு நிறத்தவன் பற்றி உபநிஷத்துக்களிலேயே பழமையான பிருஹத் ஆரண்யக உபநிஷத் குறிப்பிடுகிறது. வெள்ளைக்காரன் சொல்லுவதை ஒப்புக்கொண்டால் கருப்பு நிற திராவிடன்மட்டும்தான்  3 வேதங்களையும் படித்தான் என்று எழுதவேண்டி வரும்!

கசாப்புக் கடை வைத்திருந்த தர்மவியாதனிடம் கெளசிக முனிவர் அறிவுபெறச் சென்ற செய்தி மஹாபாரதத்தில் உள்ளது.   

இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும் ; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆரியன், திராவிடன் என்ற பிரிவினைக்கு வேதங்களிலும் சங்க கால இலக்கியங்களிலும் ஆதாரம் இல்லை ; ஆரிய, திராவிடச் சொற்களுக்கு இனவாத அர்த்தம் நம்முடைய நூல்களில் இல்லை ; குணத்தால் ஒருவன் தேவன் ஆகலாம் அல்லது அசுரன் ஆகலாம் ஆரியன்  என்றால் படித்தவன், நாகரீகம் உடையவன்; திராவிடன் என்றால் தென் இந்தியாவில் வசிப்பவன் என்பதே உண்மைப்பொருள்.

–Subham—

Tags- ஆரியன், திராவிடன், கலப்பு மணம், திருமணம் 

 Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-47; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Written by London Swaminathan

Post No. 15,842

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அஹோபிலம்

இந்தப் புனிதத்தலம் 108  திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

அஹோபிலத்தில் இப்போதுள்ள கோவில்கள் வைஷ்ணவ கோவில்கள் என்பதை ஐயமில்லை. ஆனால் திருப்பதி பாலாஜி பெருமாளை அருணகிரி நாதர் முருகப்பெருமானே என்று பாடியது போல ஆதி சங்கரர் 18 தேவி பீடங்களை பாடிய துதியில் அஹோபில கிரிஜா தேவி என்றும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார். ஒரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும் இருந்தது தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இன்றும் பிரதானசந்நிதியில் நரசிம்மருக்கு முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. நுழை வாயிலில் பைரவர் கோவிலும் உளது.

ஆதி சங்கரர் தொடர்பு

ஆதி சங்கரரை  ஒரு காபாலிகன்  பலி கொடுக்க அழைத்துச் சென்றபோது நரசிம்மர் தோன்றி அந்தக் காபாலிகனை கிழித்தெறிந்த வரலாறு சங்கர விஜயத்தில் உள்ளது. அது நடந்த இடம் அஹோபிலம் என்ற ஐதீகமும் இருக்கிறது .

அஹோபிலம் இருக்கும் இடம் ‘நல்லமலை’  என்று அழைக்கப்படுகிறது. இது திருப்பதியில் துவங்கி சிருங்கேரி வரை செல்கிறது . இந்த மலையை சேஷ பர்வதம் என்றும் அழைக்கிறார்கள் .

அஹோபில நரசிம்மர் பற்றிய இன்னுமொரு சுவையான விஷயம் அவர் அமர்ந்த நிலையில் இருப்பதாகும். யோக நரசிம்மர் உட்கார்ந்த நிலையில் பல இடங்களில் இருந்தாலும் இங்குள்ளது யோக நரசிம்மர் இல்லை.

தங்க நரசிம்மர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்யாணி சாளுக்கிய வம்ச அரசன் ஆறாவது விக்கிரமாதித்யன் அஹோபிலத்தில் வணங்கியதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. . காகதீய அரசன் பிரதாப ருத்ரன் கொடுத்த தங்கத்தினாலான உற்சவ மூர்த்தி இன்றும் வழிப்பாட்டில் இருக்கிறது .40 நாள் பருவேட்ட உற்சவம்

வள்ளியை முருகன் மணந்ததால் மலைஜாதி மக்கள் அனைவரும் முருக பக்தர்கள் ஆனார்கள். இலங்கையிலுள்ள கதிர்காமம் முதலிய இடங்களில் இன்றும் இதைக் காண்கிறோம்.

மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ள பெருமாள் மதுரைக்கு வரும் 13 மைல் நெடுகிலும் பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் கள்ளழகரை  வணங்குவதற்காக  கள்ளர் வேடத்தில் வருவதைக் காணலாம் .

இதே போல செஞ்சு பழங்குடி மக்களை இணைக்கும் 40 நாள் உற்சவம் — பருவேட்ட உற்சவம் — அஹோபிலத்தில் நடக்கிறது வள்ளி எனும் வேடர் குலப் பெண்ணை முருகன் மணந்தது போல செஞ்சு என்ற மலைஜாதி வேடர் குலப் பெண்ணை பெருமாள் கல்யாணம் கட்டினார் . இதைக்கொண்டாட  40 நாள் உற்சவம் நடக்கிறது; அப்போது பெருமாள் நரசிம்மர்,  35 கிராமங்களுக்குச் செல்கிறார் . அவர் பவனி வரும் வழியில் உள்ள கிராம மக்கள் அவரை வரவேற்று வணங்குவார்கள் அப்போது ஒவ்வொரு ஜாதி மக்களும் ஒவ்வொரு பணியைச்  செய்கின்றனர். இது மகத்தான ஒற்றுமை உற்சவம்; இதே போல பூரி ஜெகந்நாத ரத யாத்திரைக்கு பழங்குடி மக்கள் உதவுவதையும் ஒப்பிடலாம் . இந்த நாற்பது நாள் உற்சவம் உலகில் ஒப்பற்றது .

மலைப்பாங்கான இடத்தில் இயற்கைச்  சூழ்நிலையில்  கோவில் அமைந்துள்ளது .சீதையைத் தேடி வந்த ராம, லட்சுமணர்கள் அஹோபில நரசிம்மனைத் தரிசித்தவுடன் சீதாதேவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக ஐதீகம் .

நவ நரசிம்ம க்ஷேத்ரம் /தலம் என்று அழைப்பது ஏன் ?

அஹோபிலத்தில் ஒன்பது நரசிம்மர்கள் கோவில் கொண்டிருப்பதால் நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று அழைப்பார்கள்.

ஒன்பது நரசிம்மர்கள் :

அஹோபில, வராஹ, மாலோல, யோகானந்த, பாவந, காரஞ்ச, சக்ரவட , பார்கவ, ஜ்வாலா நரசிம்ஹர் கோவில் கொண்டுள்ளனர்.

அஹோபிலத்தினை தமிழில் சிங்கவேள் குன்றம் என்பார்கள். எல்லா கோவில்களையும் தரிசிக்க இரண்டு நாட்களாவது ஆகும்.

மலை மீதும், கீழும் சந்நிதிகள் உள்ளன. புகழ்பெற்ற அஹோபில மடம் , மலை அடிவாரத்தில் உள்ளது

மூலவர்- பிரஹ்லாதவரதன் லெட்சுமி  நரசிம்மன்

உற்சவர்- மாலோல நரசிம்மர் . அவரைத் தவிர எட்டு நரசிம்ம மூர்த்திகளின் விக்கிரகங்களும் உள .

தாயார் – அம்ருதவல்லி, செஞ்சு லெட்சுமி

தீர்த்தம் – இந்திர, நரசிம்ம  (ந்ருசிம்ஹ ), பாபநாச, கஜ, பார்கவ தீர்த்தங்கள்

விமானம்- குகை விமானம்

அஹோபில  நரசிம்மர் கோவில்  மலை மேல் இருக்கிறது . இது ஒரு குடைவரைக்  கோவில்.. கீழ் அஹோபிலத்திலிரிருந்து 14 கி.மீ சாலை வழியாக மேல் அஹோபிலத்தை அடையலாம்.

அஹோபிலம் நரசிம்மர் கோவில்  எங்கே உள்ளது?

ஆந்திர பிரதேசத்தில் கர்நூல்  மாவட்ட த்தில் அஹோபிலம் இருக்கிறது .

சென்னையிலிருந்து 365 கி.மீ. தொலைவு.- சுமார் எட்டு மணி நேரத்தில் அடையலாம்..

ஹைதராபாத்திலிருந்தும் ஏறத்தாழ அதே தூரம்தான்.

நந்தியால் என்னும் ஊர்தான் அருகிலுள்ள பெரிய நகரம்; அங்கிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அஹோபிலம் இருக்கிறது.

கோவில் வரலாறு

சீதையைத் தேடிவந்த இராமபிரான் ஐந்து ஸ்லோகங்களால் நரசிம்மனைத் துதித்ததால்தான் சீதை கிடைத்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அஹோபில மடத்தில் மூலவர் லக்ஷ்மீ நரசிம்ஹராகவும் உத்சவர் சக்ரவர்த்தித் திருமகனாகவும் தரிசனம் அளிக்கின்றனர்

நரசிம்மர் வேடனாக வந்து செஞ்சு லட்சுமித் தாயாரை மணந்ததாக ஒரு கதையும் உண்டு.இப்போதும் மாசி மாத பிரம்மோற்சவத்தின்போது , மறவர் கூத்தும், ஆட்ட பாட்டங்களும் , சீர்வரிசையும் நடக்கிறது

மலையின் பெயர் – கருடாத்ரி அல்லது கருடாசலம்

((பிலம் என்றால் குகை; அத்ரி, அசலம் என்றால் மலை ))

மலையிலுள்ள நீர்வீழ்ச்சியின் பெயர் பாவ நாசினி. அதைக் கடந்து மலை ஏறிச் சென்றால் வராஹ நரசிம்மனைச் சேவிக்கலாம்.மேலும் ஏறிச் சென்றோமானால் செங்குத்தான பாறையில் வீற்றிருக்கும் மாலோல நரசிம்மனைத் தரிசிக்கலாம்.

இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் ந்ருஸிம்ஹன் காட்சி தந்த தூண் உள்ளது. நரசிம்மாவதாரத்தில் நாஸ்தீகர்களை அழித்து பிரஹ்லாதன் என்ற சிறிய பையனைக் காப்பாற்ற விஷ்ணு அவதரித்தார். அப்போது ஒரு தூணிலிருந்து சிங்க முகத்துடன் தோன்றி ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற மரபுச் சொற்றொடர் இதனால் தோன்றியது. .பெயர்க் காரணம்

நரசிம்மர், எதிரியின் உடலைக் கிழித்தெறிந்ததைக்  கண்டவர்கள் என்ன பலம்!, என்ன பலம்!! என்று வியந்ததால் அஹோ பலம்! அஹோ பலம்!!  என்பது அஹோபிலம் என்பதாயிற்று ..

இன்னும் ஒரு பொருள் – ஆச்சர்யமான குகை = அஹோ + பிலம் .

ஜ்வாலா நரசிம்மன்

இந்தக் கோவிலுக்குச் செல்வதுதான் கடினமானது . பொதுவாக மலை மீதுள்ள கோவில்களுக்குச் செல்லுகையில் துணையுடன் சென்று மாலைக்குள் திரும்பிவர வேண்டும் .

மங்களா சாஸனம்

திருமங்கை ஆழ்வார் பாடிப் பரவிய தலம் -1008 முதல் 1017– பத்து பாசுரங்கள்மடத்தின் வரலாறு

இந்த ஸ்தலத்தில்தான் அஹோபில மடத்தின் முதலாவது அழகிய சிங்கர் , மலையில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்குச் சென்ற சமயம் பெருமாள் தோன்றி மந்திர உபதேசம் செய்தார். அங்குள்ள ராமானுஜர் சந்நிதியிலிருந்து காஷாயம் (காவி உடை), த்ரி தண்டம் (முக்கோல்) ஆகியவற்றைக் கொடுத்து துறவறத்தில் சேர்த்தார்.அவருக்கு ஜீயர் பட்டத்தை அளித்து  ஒரு மடத்தினை ஸ்தாபிக்கவும் ஆசி வழங்கினார் என்பது  வரலாறு.  அப்போது அவருக்கு வயது 17. அவருக்கு சடகோப ஜீயர் என்ற பெயர் சூட்டப்பட்டது . நரசிம்மரை எந்த உருவத்தில் ஆராதிப்பது என்று தியானம் செய்த தருணத்தில் மாலோல நரசிம்ம மூர்த்தி அவருக்கு கிடைத்தது ; அன்றுமுதல் ஜீயர் பட்டம் பெறும் எவரும் மாலோல நரசிம்ம விக்கிரகத்தை போகும் இடமெல்லாம் எடுத்துச் சென்று பூஜிப்பது வழக்கமாக இருக்கிறது.

அஹோபில மடத்தின் ஜீயர்களில் ஒருவரான ஆறாவது பட்டம் ஸ்ரீ சஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிகன் ஆவார் . மேல் அஹோபிலத்தில் இருக்கும் குகைக்குள் தியானத்துக்குச் சென்றவர் வெளியே வரவில்லை. அவர் சிரஞ்சீவியாக  இப்போதும் அங்கே தியானம் செய்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

அஹோபில மடம்  மிகப்பெரியது; தங்கும் வசதிகள் உண்டு

மலையைச் சுற்றி குளங்களும் மண்டபங்களும் இருக்கின்றன.

கீழ் அஹோபில கோவிலின் ராஜகோபுரத்துக்கு எதிரே ஜயஸ்தம்பம் உள்ளது.80 அடி உயர ஜயஸ்தம்பம் என்னும் வெற்றித் தூண் நிற்கிறது. பூமிக்கு அடியில் 30 அடி ஆழம் செல்கிறது இதுவும் ஒரு சிறப்பு ஆகும்

–SUBHAM–TAGS—அஹோபிலம்,  நரசிம்மர் கோவில்,  Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-47; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் 

சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரில் புஸ்தகம்! புஸ்தகப் பிரியர்கள் இரண்டு வகை! (Post.15,841)

Written by London Swaminathan

Post No. 15,841

Date uploaded in London –7 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

அண்மைக் காலமாக ஸம்ஸ்க்ருதச் சொற்களுக்குப் பதிலாக தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது ; உஸ்தகம் புது என்ற சொல்லை நூல் என்று மாற்றி வருகின்றனர் . நான் அப்படித்த காலத்தில் தமிழ்ப் பாட புஸ்தகம் என்று கடையில் கேட்டு வாவங்குவோம்; இப்போதெல்லாம் ஹமிப்பட நாள் என்றே சொல்வர் . ஆயினும் இந்த புஸ்தாக்ம் என்ற சொல் முதலில் தமிழ் இலக்கியத்தில் புகுந்தது நாலடியார் என்னும் நூலில்தான் ; இது சாமானை முனிவர்கள் எழுதிய நூல் ; சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தொகுக்கப்பட்டது அக்காலத்தில் தமிழில் ஸ, ஜெ ஹா ஷா முதலிய எழுத்துக்கள் இல்லை ஆகையால் புத்தகம் என்றே எழுதியுள்ளார்கள் .

இதோ அந்தப்பாடல் 

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் – மற்றவற்றைப்

போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு. –318,  நாலடியார்

பொருள்

புத்தகங்களை மிகுதியாகத் தொகுத்து வைத்தும் பலர் அவற்றின் பொருள் தெரியாதவராவர்; நூல்களை வீடு முழுமையும் நிறைத்து ,அவற்றை அவர்கள் அன்புடன் பாதுகாக்கும் அறிஞர்கள்தான்; அவர்கள் வேறு . அவற்றின் கருத்தறிந்து தம்மையும் பிறரையும் தெளிவித்துக் கொள்ளும் பேரறிஞர்கள் வேறு .

அதாவது புஸ்தகப்பிரியர்களில் இரண்டு வகை; ஒரு வகையினர் லைப்ரரி அலமாரி போல வீட்டில் அவைகளை அடுக்கி மட்டும் வைத்திருப்பார்கள் ; இன்னொரு வகை அவைகளின் பொருள் தெரிந்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லிக் கொடுப்பார்கள் .

உண்மைதான் ; நானே பல வீடுகளில் அவர்களுடைய அப்பா தாத்தா கொள்ளுத்  தாத்தா சேர்த்துவைத்த புஸ்தகங்களை தூசி கூட தட்டாமல் வைத்திருப்பதை பார்த்து இருக்கிறேன் ; மற்றவர்களுக்கும் கொடுக்கமாட்டார்கள் ; ஒரு காலத்தில் படிக்கப்போவதாகச் சொல்லுவார்கள் ; வேறு சிலரோ வலிய வந்து நமக்கு அந்தப் புஸ்தகம் பற்றி அருமை பெருமைகளை விளக்கமாகச் சொல்லி தயவு செய்து இதை படியுங்கள் என்று கொடுப்பார்கள் எனக்கே பலர் இப்படிக்கொடுத்தனர்; நானும்  படித்துப் பலன் அடைந்தேன்.

தொல்பொரு ட்த்துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி, லண்டன்  பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி என் ராமச்சந்திரன் . லண்டனில் வசித்த டாக்டர் V S ரெங்கநாதன் , மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்  வி ஜி சீனிவாசன், மதுரை டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன் (பேராசிரியர் எஸ் ஆர் கே ) முதலிய பலர் நூல்களைக் கொடுத்தார்கள்;   இவர்கள் அனைவரும்    நன்றியுடன் நினைவுகூறத்  தக்கவர்கள் ஆவர் .

***

ஆதி காலத்தில் சமண முனிவர்கள் தமிழ் நாட்டில் பாறையில் எழுதும் வழக்கத்தைத் துவங்கினர். பிராமி லிபியில் இவர்கள் எழுதும்போது கொச்சைத் தமிழிலும் பிராகிருதம் கலந்த மொழியிலும் எழுதினார்கள்; இவை,  மதுரை முதலிய இடங்களில் சமண முனிவர்கள் வாழ்ந்த இடங்களை சுற்றி கிடைக்கின்றன. இவை அனைத்தும் மிகச் சின்ன கல்வெட்டுகள்; ஒரு வரி அல்லது இரண்டு வரிக்குட்பட்டவை இவை சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை ; ஆனால் இதற்கும் முன்னால், அசோகர் எழுதிய கல்வெட்டுகள் மிகவும் நீண்டவை; சொல்லப்போனால் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்!

ஒருவேளை அசோகருக்கும் முன்னால், வடக்கில் எழுதியது போல, நாமும் துணிகளிலும் பனை ஓலைகளிலும், மரப்பட்டைகளிலும் எழுதியிருக்கலாம் ; அவை எல்லாம் பருவ நிலையைத் தாங்கி நிற்கக்கூடியவை அல்ல . காலத்தால் அழிந்துபோய்விட்டன  என்றே கருத வேண்டும்!

–subham –

Tags– சமண முனிவர்கள்,  நாலடியார் ,  புஸ்தகம் , பிராகிருதம் அசோகர், பிராமி லிபி, புஸ்தகப் பிரியர்கள், இரண்டு வகை