Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சோளிங்கர்
மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
உற்சவர் : பக்தவத்சலம், சுதாவல்லி
தாயார் : அமிர்தவள்ளி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
புராண பெயர் : திருக்கடிகை, சோளசிம்மபுரம்
ஊர் : சோளிங்கர்
திருமாலின் தசாவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும்.
பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார்.
கோயில் சிறப்புகள் :
சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.
புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது.
சிம்மபுரம் எனவும் அழைக்கப்பட்டது.
மலை மீது யோக நிலையில் நரசிம்மரும், அருகில் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்
1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் சந்நிதி உள்ளது . பெரிய மலை – 1,305 படிகள், சிறிய மலை – 400 படிகள்.
சோளிங்கர் ரோப்கார் வசதி :23 Mar 2024 — சென்னை அருகே சோளிங்கூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்வாமி கோவிலில் ரோப் கார் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹100 கட்டணத்தில் ரோப் கார் சேவை தொடங்கியதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருகை அதிகரித்துள்ளது
யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது.
நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். இங்கு தாயார், பெருமாள். பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும்.
அக்கார அடிசில் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்ல 406 படிகள் ஏறவேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார்.
தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார்.
அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.
***
தொட்டாச்சார்யர்
இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு வருகிறார் .
***
திருவிழா:சித்திரை மாதம்: சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர்.
***
சோளிங்கர் தலமானது திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. அரக்கோணம் புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணியில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவு. சென்னை, அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலுக்கு உள்ளூர் வாகனங்களில் செல்லலாம்.
***
திவ்யதேச பாசுரங்கள்
1731.
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
1736.
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை* விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
வரிசை எண்
கட்டண விளக்கம்
குறிப்புரை
கட்டணம்
1
திருமஞ்னம்
600.00
2
தளிகை புளியோதரை
200.00
3
தளிகை – சர்க்கரை பொங்கல்
400.00
4
அருள்மிகு ஆஞ்சநேயர் பிராத்தனை உற்சவம்
5750.00
5
தளிகை – ததியோதனம்
220.00
6
தளிகை – வெண்பொங்கல்
350.00
7
அருள்மிகு இராமர் பிராத்தனை உற்சவம்
5750.00
8
தளிகை – பானகம்
70.00
9
சுவாதி திருமஞ்சனம்
1500.00
10
வெள்ளிக்கிழமை அன்று அருள்மிகு அமிர்தவள்ளித்தாயார் பிராத்தனை உற்சவம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நர்த்தன விநாயகரைத் தரிசிக்கும்போது நமக்கு ஆனந்தம் ஏற்படுகிறது ;இவரைப் பற்றிய ஸ்லோகங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோமாதேவர் எழுதிய கதைக்கடல் நூலில் இருப்பது பலருக்கும் தெரியாது. சோமதேவர் கதா சரித் சாகரத்தில் தொகுத்த கதைகள் அதற்கு முன்னரும் பாரத நாட்டில் இருந்தவைதான் ; அவர் அதை நமக்கு சம்ஸ்க்ருத மொழியில் தொகுத்தது நமது பாக்கியமே
அவர் நடனமாடும் கணபதியையும் சிவபெருமானையும் வருணித்துப் பாடியுள்ளார் . அதன் பெயர் ந்ருத்த கணபதி .
அதற்கு முன்னர் அவர் பாடிய கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் மாலை நேர சந்தியாகாலத்தில் நடனமாடியதைக் கண்ட விநாயகர் ஆனந்தமடைந்து துதிக்கையை உயரத்தூக்கி பிளிறல் சப்தத்தை உண்டாக்கி, தாளம் எழுப்பியதையும் சோமதேவர் நமக்கு ஒரு காட்சியாகத் தருகிறார்.
நடனமாடும் கணபதிக்கு எட்டு கைகள் ; அவற்றில் அவர் பாசம் அங்குசம், மோதகம், வளையம், தந்தம் முதலியவற்றை வைத்திருக்கிறார் ; சில கைகள் ஆயுதமின்றி இருக்கும்.
வங்களத்தையும் பீகாரின் பெரும்பகுதியையும் ஆண்ட பால வம்ச மன்னர்கள் பெளத்த மதத்தைப் பின்பற்றியபோதும் ஹிந்து தெய்வங்களையும் ஆதரித்தனர்; இதனால் அற்புதமான சிலைகளும் விக்கிரகங்களும் தோன்றின. இவைகளை தற்போது வங்க தேசத்தில் டாக்கா, ராஜசாஹி, மைநாமதி மியூசியங்களில் காணலாம் இவைகளில் நடனமாடும் கணபதி சிலை குறிப்பிடத்தக்கது ; பால வம்ச நர்த்தன கணபதி சிலை ஒன்று சென்னனை மியூசியத்தில் உள்ளது . தமிழ் நாட்டின் கோவில்களில் கூத்தனுர், சென்னை மயிலாப்பூர் கோயில்களிலும் நடனமாடும் வின்யாகரின் சிலைகள் இருக்கின்றன .
நர்த்தன விநாயகர் (நடனமாடும் கணபதி) விநாயகரின் 32 திருவுருவங்களில் ஒன்றாகும். இவர் மகிழ்ச்சியுடன் நடனமாடும் கோலத்தில், தனது வாகனமான மூஞ்சுறுவின் மீது அல்லது நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
நர்த்தன கணபதி ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும், கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருவார்.
முருகப்பெருமான் சூரனை சம்கரிக்கச் செல்லும்போது, விநாயகர் நர்த்தன கோலத்தில் ஆசிர்வதித்ததாக தலபுராணம் கூறுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார்.
கங்கைகொண்ட சோழபுரம் ,திருச்சி மன்னார்புரம் நர்த்தன விநாயகர் கோயில், மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்வயம்பு நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். மேலும், தருமபுரம் ஆலய கோஷ்ட மூர்த்தங்களிலும் நர்த்தன கணபதி இடம்பெற்றுள்ளார்; சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நர்த்தன விநாயகர் பெண் வடிவில் (கணேஷினி) ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளார்.
பல மாநிலலங்களிலும் நர்த்தன கணபதி சிலைகளும் விக்கிரககங்களும் உள்ளன .
கணபதி பற்றிய பாடல்கள் நமக்கு பக்தி இலக்கிய காலத்திலிருந்தான் கிடைக்கின்றன ; சம்பந்தரும் அப்பரும் கணபதி குறித்துப் பாடி இருப்பதால் 1400 ஆண்டுகளுக்கு மன்னரே தமிழ் நாட்டில் கணபதி வழிபாடு இருந்திருக்கிறது. காளிதாசானிலோ மாணிக்க வாசகரிலோ கணபதி இல்லை ;இவர்கள் காலத்தால் முந்தியவர்கள். அதற்காக கணபதி வழிபாடு இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. விநாயகரை முதலில் வணங்கும் கோட்பாடு இல்லை. சங்க இலக்கியத்திலும் கணபதி இல்லாவிட்டாலும் அவருடைய தந்தை சிவன் மீது ஐந்து கடவுள் வாழ்த்துப்பாக்கள் உள்ளன .
இத்துடன் நர்த்தன கணபதி படங்கள் இணைக்கப்பட்டுள்ளன .அவர் ஒரு காலைத்தூக்கிக்கொண்டு மூஞ்சுறு மீது தனியாகவோ ஆடுவதைப் பார்க்கலாம்; சம்ஸ்க்ருதத்தில் பவபூதி எழுதிய மாளவி மாதவ நாடகத்திலும் விநாயகர் இருப்பதால் தமிழுக்கும் முன்னரே அங்கு பிரபமாகிவிட்டதை அறியலாம் . முன் காலத்தில் பல நாடுகளிலும் கணபதி வழிபாடு இருந்தது. ஆயினும் அவை இந்தியாவைவிடக் காலத்தால் பிற்பட்டவைதான்.
Ganesh, Pala Dynasty, Bengal
–subahm—
Tags- நர்த்தன விநாயகர், தோன்றியது எங்கே?, நடனம் ஆடும், விநாயகர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் ஆறாவது ரிஷி!
ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி – அசாத்திய சாதகர் – சப்தரிஷிகளின் வரிசையில் ஆறாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி.
1924ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கிருஷ்ணப்பா அவர்களுக்கும் சுந்தரம்மா அம்மையாருக்கும் மைசூரில் சூரியநாராயணராவ் பிறந்தார்.
பங்களூரில் ஶ்ரீராம் நகரில் சங்க ஷாகா ஆரம்பிக்கப்பட்ட போது அதில் சேர்ந்தார் சூரிஜி.
பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் 1942ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி பங்களூருக்கு சங்க நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை புரிந்தார். அப்போது அவரைப் பார்த்த சூரிஜி அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1943ல் விஸ்தாரக்காகப் பொறுப்பேற்றார். 1946ல் பி.எஸ்.ஸி கணிதத்தில் பட்டம் பெற்றார். உடனே சங்க பிரச்சாரக்காக ஆனார். அன்றிலிருந்து அவர் மறையும் வரை சங்கம் வளர அரும்பாடு பட்டு பணியாற்றினார்.
1948ல் காந்திஜி கொலை வழக்கில் பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரின் உரைகளைக் கூறி சிறைச்சாலையை தவச்சாலையாக மாற்றினார் அவர்.
1969ல் உடுப்பியில் விஸ்வஹிந்துபரிஷத் சார்பில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றது. அதில் செயலாளராகப் பணி புரிந்து மாநாட்டை பெரும் வெற்றிகரமான மாநாடாக ஆக்கினார் சூரிஜி.
1970ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி தக்ஷிண க்ஷேத்ர சஹக்ஷேத்ர பிரசாரக்காக அவர் சென்னை வந்தார். அன்றிலிருந்து சென்னை நகரையே தலைமை மையமாகக் கொண்டு அவர் இயங்கலானார்.
1990ம் ஆண்டு சூரிஜி அகில பாரதீய சேவா பிரமுக்காகப் பொறுப்பேற்றார்.
சேவா பஸ்தி என்ற சேவை பெறும் பகுதிக்கான அமைப்பைத் தொடங்கி கிராமப்புறங்களிலும் சேவையைத் தொடங்க வைத்தார்.
ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களை ஆழப் படித்த காரணத்தினால் எந்தப் பகுதியையும் அவர் சுலபமாகச் சுட்டிக் காட்டி விளக்குவது அவர் பழக்கம்.
அவரிடம் கொடுக்கப்படும் ஆவணங்களை ஊன்றிப் படித்து பிழை திருத்தம் செய்வதில் அவர் வல்லவர்.
இத்தனை ஆண்டுகளில் சங்கத்தில் நீங்கள் கற்றது என்ன என்று ஒரு சிறுமி அவரைப் பார்த்துக் கேட்ட போது “இத்தனை ஆண்டுகளில் நான் கற்றது கீழ்ப்படிதல் தான்” என்றார் அவர்.
அனைவருக்கும் உத்வேகம் ஊட்டி ஒருவரைச் சிறந்த ஸ்வயம்சேவகராக ஆக்குவதே அவரது தனிச் சிறப்பாகும்.
அமெரிக்கா, டிரினிடாட், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, நார்வே, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார்.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரில் காலமானார்.
இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
இந்த நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் ஆறு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த ஏழாவது ரிஷியான இராம.கோபாலன் அவர்கள் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
Picture– நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன்
*****
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Tiru Valluvar, the author of Tiruk Kural declared that he was a Sanatani Hindu in the Kural couplets 41,42, 43. All the translators are clear and loud that Valluvar said House holder helps Brahmachari/bachelor, Vanaprastan/OAP- old age pensioner and Sanyasin/Ascetic. This is the order found only in Manu Smriti and Gruhya Sutras. Even Greek traveller Apollonius mentioned the practice held in India.
Manu says it in 3-78
Thiru Valluvar used the Tamil word Thenpulaththaar- those who live in South- the dead in the land of Yama. This is a Vedic concept. Brahmins face the direction South three times a day and say a Mantra to appease Lord Yama. They praise Yama with 11 names thrice a day. Valluvar also points it out as a daily ritual.
VAT 17 and half percent is mentioned indirectly by Valluvar. In most of the countries the government takes one sixth of one’s income. In couplet 43 he says five parts are for us (and the sixth part is for the government) . This is in all the Smritis (Hindu Law Books) ;Hindus have twenty law books including Manu Smriti. Hindus kept on updating like we enact constitutional amendments via parliament evey now and then.
Buddhists and Jains followed most of the Hindu laws. Even today Hindu Law is appliable for all Indians except the people of Abrahamic religions.
In couplet/Kural 43 and 50 he did not hesitate to use Sanskrit word DEIVAM (English got the word Divine from it: Deva= Divine=Deivam)
Titi and Tarpanam are done by most of the Brahmins for the departed souls. They are supposed to do it 96 times in a year, but most do once or twice a month. Even Non Brahmins do it at least twice a year on Adi and Thai Amavasyai (new moon days). Even before Buddha and Mahavir were born Hindus were doing it.
There is no chapter in Tirukkural without a Sanskrit word. Over 600 Kurals out of 1330 have Sanskrit words.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
Part 9
1.2 Domestic Virtue 1.2.1. Domestic Life
1.2 இல்லறவியல் – DOMESTIC VIRTUE 5. இல்வாழ்க்கை – Married Life
41.The true householder is the mainstay of the student, the hermit and the ascetic –– ANM+2
***
41.It is really the capable householder who sustains
In his respective way of life, the other three orders- SMD
*** 41. The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintain. He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path. –GUP
***
41.The ideal householder is he Who aids the natural orders three– SB 41
***
41.He is true householder who helps the three orders of the virtuous (Brahmachari, Vanaprastan, Sanyasin) in their home life is the fruit of love begotten by a harmonious , right path of life – EVS
***
41.He lives whom life who stands in Virtue’s path
And helps the orders three in their good path –HAP
***
41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
42.Verily the householder is the friend of the forsaken, the poor and the helpless dead-– ANM+2
***
42.The householder is the patron, of those who have left
Their homes, the needy and the aged- SMD
*** 42. To anchorites, to indigent, to those who’ve passed away, The man for household virtue famed is needful held and stay. He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead. –GUP
***
42His help the monk and retired share, And celebrate students are his care. –SB 42
***
42.The true householder gives succour to the forsaken, the poor and the departed—EVS
***
43.He lives home life who is a help
To the lost, the poor, and to the dead– HAP
***
42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
43.The greatest duty of the householder is to keep to the five- fold rule of conduct towards his departed, his gods, his guests, his kith and kin himself-– ANM+2
***
43.It is paramount for the householder to do his five, for the householder
To his ancestors, his parents, guests, kindred and self– SMD
***
43. The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charity. The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself. –GUP
***
43.By dutiful householder’s aid God, manes, kin, self and guests are served. SB — 43
***
43.The paramount duty of a householder is to cherish daily the manes, the gods, his guests, his relations and himself- EVS
***
43.Pitris, gods, kin one’s guests and self-
To serve these five is duty chief- HAP
***
43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
44.Behold a god- fearing man that raises his fortune with an unspotted hand and joyously shares his bread with others; the glorious line of his descendants shall never wane-– ANM+2
***
44,If one earns his wealth by shunning evil and shares it with guests
In virtuous hospitality, his line will never become extinct — SMD
*** 44. Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runs. His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others). –GUP
***
44.Sin he shuns and food he shares His home is bright and brighter fares.– SB 44
***
44.If a man acquires wealth by fair means and is charitable to whom charity is due his progeny will never become extinct—EVS
***
44.Never hall be lack of offspring in his house
Who fearing ill, gives ere he enjoys- HAP
***
44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
45.If the light of love and virtue illumines a home, it becomes perfect and all its ends fulfilled –– ANM+2
***
45.Family life actuated by love and virtue
Endows it with character and happiness — SMD
*** 45. If love and virtue in the household reign, This is of life the perfect grace and gain. If the married life possess love and virtue, these will be both its duty and reward. –GUP
***
45.In grace and gain the home excels, Where love with virtue sweetly dwells. –SB 45
***
45.Love and charity in a householder’s life are its merit and benefit- EVS
***
45.If in the home true love and virtue dwell,
Home-life is full of grace and fruit—HAP
*** 45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
To be continued…………………………….
Tags- Hindutva, Valluvar, Turukkura Encyclopedia, Chapter five, part 9
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரத நாட்டிய சாஸ்திரம் பற்றி சம்ஸ்க்ருத மொழியில் பரத முனி ஒரு அற்புதமான நூலை எழுதியுள்ளார் . அதில் நாட்டியம், நாடகம், நடனம், தியேட்டர்களின் அமைப்பு , நாட்டியம் எப்படி பூமிக்கு வந்தது என்றும் சங்கீதம் பற்றியும் ஆறாயிரம் ஸ்லோகங்களை எழுதியுள்ளார். இப்போது வடநாட்டு இந்து சமய கல்யாணங்களில் ரோட்டிலும், வீட்டிலும் கல்யாண மண்டபங்களிலும் எல்லோரும், குறிப்பாக பெண்கள், நடனம் ஆடுவதைக் காண்கிறோம் ; இது கல்யாணச் சடங்கின் ஒரு பகுதி ; ஆனால் தமிழ் நாட்டில் பிராமண கல்யாணங்களிலும் மற்றவர் கல்யாணங்களிலும் இதை அரிதாகவே காண முடிகிறது .
தமிழ்நாட்டில் தற்போது பஜனைகளில் மட்டுமே பக்தர்கள் ஆனந்தப் பரவசம் அடைந்து நடனம் ஆடுகிறார்கள்
தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தங்களிலும் டான்ஸ் பற்றி வருகிறது; இவர்களுக்கெல்லாம் கதாநாயகர் நடராஜப் பெருமானும், கோபியருடன் ஆடிய கிருஷ்ண பரமாத்மாவும் என்பதை இந்துக்களுக்குச் சொல்லத் தேவை இல்லை. உலகில் வேறு எங்கும் ஆதிகாலத்தில் இப்படி இருந்ததில்லை ; ரிக் வேதத்திலேயே நாட்டியம் பற்றிய குறிப்புகள் வருகின்றன ; ஆகையால் இந்து சமய கலாசாரம், சனாதன தர்மம் கைபர் கணவாய் வழியாக வந்ததாக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் கட்டுக்கதை என்பது வெட்ட வெளிச்ச மாகிவிட்டது .
காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயன மகரிஷி பெண்களுக்கு ஒரு சிலபஸ்syllabusபோட்டுக்கொடுத்துள்ளார் ; அதில் அவர்கள் கற்க வேண்டிய 64 கலைகளில் சங்கீதமும் நடனமும் உள்ளன ; உலகில் இப்படி 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்கள் கல்விக்கு சிலபஸ் போட்டுகொடுத்தை சம்ஸ்க்ருத மொழியில் மட்டுமே காண முடிகிறது!
எகிப்திய, பாபிலோனிய, சுமேரிய, கிரேக்க, சீன நாகரீகங்களில் நடனம், சங்கீதம் இருந்தது உண்மைதான் ; ஆனால் அதை இப்படி முறைப்படுத்தி எழுதிய நூல்கள் இல்லை ; ஆதி மனிதர்களும் கூட டான்ஸ்Dance ஆடத்தான் செய்தார்கள் !
இந்திர லோகத்திலேயே ரம்பா, மேனகா , ஊர்வசி, திலோத்தமா முதலிய நடன மாதர் இருந்ததும் அவர்கள் பூலோகத்துக்கு வந்து விஸ்வாமித்ரர், ரிஷ்யஸ்ருங்கர் போன்றோரை மயக்கியதையும் புராணக் கதைகளில் படிக்கிறோம்
எப்போதெல்லாம் ஆட வேண்டும் என்று பரத முனி எழுதியும் வைத்திருக்கிறார் .
எப்போது டான்ஸ் ஆட வேண்டும் ?
பரத முனி பெரும் சைக்காலஜிஸ்ட், Psychologist; மனிதர்களுக்கு ஆடலும் பாடலும் பிறப்பிலேயே உண்டு; இது அவர்களின் அடிப்படை உணர்ச்சி; இது மனித சுபாவம் என்றும் சொல்கிறார் ; ஆடுவதும் பாடுவதும் மங்களத்தைத் தரும் என்றும் செப்புகிறார் .
கல்யாணத்திலும் குழந்தை பிறந்த வீடுகளிலும் மாப்பிள்ளை, பெண் ஊர்வலங்களில் , ஒருவர் வெற்றி அடைந்த நிகழ்ச்சிகளிலும் ஆட வேண்டும் என்றும் பகிர்கிறார்.
இதற்கெல்லாம் எடுத்துக்காட்டுகள் காளிதாசனின் மாளவிகா அக்நிமித்ரம் நாடகத்திலும் கதாசரித் சாகரக் கதைககளிலும் உள்ளன .சோமதேவர் எழுதிய கதாசரித் சாகரம், தமிழில் கதைக்கடல் என்ற பெயரில் வெளியாகியது.
பெரும்பாலான கதைகளில் ஆண்கள்தான் ஆசிரியர்கள் ; பல கதைகளில், மாணவிகள் ஆசிரியர்களையே காதலித்துக் கல்யாணமும் கட்டிவிடுகிறார்கள்.
கதைக்கடல் நூலில் வரும் கதைகளில் ஏராளமான நாட்டிய வகைகள் குறிப்பிடப்படுகின்றன ; காளிதாசனின் நாடகத்தில் கதா நாயகி மாளவிகா, சலில என்னும் 4 அங்கங்கள் உடைய கடினமான நாட்டியத்தை ஆடுகிறார்
ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நடன அரங்குகள் இருந்ததையும் கதாசரித் சாகரம் ஆசிரியர் சோமதேவ தெரிவிக்கிறார் .
***
நான் 16-6-2012 எழுதிய பழைய கட்டுரை இதோ
மாதவியின் 11 வகைநடனங்கள்
Picture shows famous danseuse Jyotsna Jaganathan
கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைகுடிமால் அல்லியமற்கும்பம்—சுடற்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து
“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ்நாடு” —என்று பாரதியாரால் பாராட்டப்பட்ட சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் மிகவும் சிறந்தது. கண்ணகி-கோவலனின் கதையைக் கூறும் இந்தக் காவியம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது. தமிழ் மக்களின் கலைக் களஞ்சியம் இந் நூல். இதில் நாட்டியம், இசை, சிற்பம், ஓவியம் முதலிய எல்லாக் கலைகள் பற்றிய குறிப்புகளும் உண்டு. இந்த காவியத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.
சிலப்பதிகாரக் காவியத்தில் கண்ணகிக்கு அடுத்தபடியாக வரும் பெண் கதாபாத்திரம் மாதவி. அவள் பேரழகி. சித்திராபதியின் மகள். பூம்புகாரில் அவளை அறியாதோர் இல்லை. காவிரி பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகாரில் இந்திரவிழா கோலாகலமாக நடந்தது. அதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் சீரும் சிறப்புமாக நடந்தது. சோழ மன்னன், மனம் மகிழ்ந்து மாதவிக்கு 1008 பொற்காசுகளையும் தலைக்கோல் பட்டத்தையும் தந்து கவுரவித்தான். ஐந்து வயது முதல் நாட்டியம் கற்ற மாதவி அத்துறையில் கரை கண்டு 12ஆம் வயதில் அரங்கேறினாள்.
இசையிலும் நடனத்திலும் பெரும் ஈடுபாடு கொண்ட கோவலன், மாதவியின் கலைகளில் மயங்கினான். அவனது மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின்னர் கண்ணகியை அடைகிறான். பொய்க் குற்றச் சாட்டின்பேரில் மதுரையில் கொலைத் தண்டணை பெறுகிறான். பொங்கி எழுந்த கண்ணகி மதுரையை எரித்து சேரநாடு சென்று பத்தினித் தெய்வமாகிறாள்.
இந்த அற்புதமான காவியத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களை உரைகாரர்கள் நமக்கு அளிக்கின்றனர். அத்தனையும் அற்புதமான இந்துமத புராணக் கதைகள். 2000 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வாழ்வில் இந்துமதம் எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்ற பேருண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. “நன்மை வந்தெய்துக !! தீதெலாம் நலிக” என்ற வெற்றிச் செய்தியை தமிழர்கள் பறை சாற்றியது தெரிகிறது. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய விஷ்ணு, சிவன், துர்க்கை, முருகன், கண்ணன் ஆகியோரின் அழகிய 11 நடனங்களை மாதவி ஆடினாள். அவைகளைக் காண்போம்:
picture shows Japanese woman performing Bharatanatyam
எண்ணும் எழுத்தும், இயல் ஐந்தும், பண் நான்கும்
பண் நின்ற கூத்து பதினொன்றும்— மண்ணின் மேல்
போக்கினாள்; பூம்புகார்ப் பொன் தொடி மாதவி, தன்
வாக்கினால் ஆடு அரங்கின் வந்து
1.அல்லியம்: கண்ண பிரானை அழிக்க ஏவப்பட்ட யானையை அவன் வென்றதைக் குறித்து ஆடும் ஆட்டம் இது.
2.கொடுகொட்டி: சிவபெருமான் அசுரர்களின் முப்புரத்தை எரித்து ஆடிய ஆடம் கொடுகொட்டி.
3.குடை: முருகப் பெருமான் அவுணர்களை வென்றதைச் சித்தரிப்பது குடை நாட்டியம்
4.குடம்: கண்ண பிரான் தனது பேரப் பிள்ளை அநிருத்தனை பாணாசுரனிடமிருந்து மீட்க ஆடிய ஆடம் குடம் என்னும் வகை ஆகும்
5.பாண்டரங்கம்; சிவன் முப்புரம் எரித்த பின்னர் நான்முகன் காண ஆடியது பாண்டரங்கம் என்னும் வகை.
6.மல்: கண்ணனும், பாணனும் நடத்திய மற்போரைக் காட்டுவது மல் வகை நடனம்.
7. துடி: சூரபத்மனை முருகன் வென்ற பின்னர் ஆடிய ஆடம் துடி
8.கடையம்: வாணாசுரனின் தலைநகரின் வடக்கு வாசலில் அயிராணி (இந்திராணி) ஆடியது கடையம் என்னும் வகையால் காட்டப்படும்
9.பேடு: மன்மதன் தன் மகன் அநிருத்தனை சிறையிலிருந்து மீட்க பேடி வடிவத்தில் ஆடியது பேடு என்பதாகும். பாணாசுரணின் மகள் உஷாவைக் கடத்திச் சென்றதால் அநிருத்தனை பாணன் சிறையில் போட்டான்.
10.மரக்கால்: கொற்றவையை/ துர்க்கையை வெல்ல அவுணர்கள் தேள் ,பாம்பு முதலிய விஷப் பிராணிகளை அனுப்பினர். அப்போது மரக் கால்கள் கொண்டு நடனமாடி துர்க்கை வெற்றி பெறுவதைக் காட்டும் நடனம் இது
11. பாவை: போர் செய்ய வந்த அரக்கர்களை அழித்து திருமகள் ஆடிய ஆட்டம் பாவை எனப்படும்.
இவைகளில் முதல் ஆறும் நின்று ஆடும் ஆட்டங்கள். ஏனைய ஐந்தும் வீழ்ந்தாடுபவை. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள், நாட்டிய மேடை எப்படி இருக்க வேண்டும், எப்படி அலங்கரிக்கப் படவேண்டும் என்ற அரிய தகவல்களையும் தருகிறார்.
காவியத்தில் வேறு மூன்று இடங்களில் வேடுவர் ஆடிய ஆட்டங்கள், ஆய்ச்சியர் என்னும் இடையர்கள் ஆடிய ஆட்டம், மலைவாழ் மக்களாகிய குன்றக் குறவையர் ஆடிய ஆட்டம் என்பனவற்றையும் விளக்குகிறார். சிலப்பதிகார காவியத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் படித்து ஜீரணிக்க பாமர மக்களால் முடியாது. அத்துறையில் வல்ல அறிஞர் பெருமக்கள் வாழ் நாள் முழுதும் ஆராய வேண்டிய அற்புத பொக்கிஷம் அது என்றால் மிகையாகாது.
சில நாத்திகர்கள் பழந்தமிழர்கள் பற்றிப் பரப்பிவரும் தவறான கண்ணோட்டத்தை சங்க இலக்கியத்தில் வரும் நூற்றுக் கணக்கான இந்துமதக் கதைகளும் சிலப்பதிகாரமும் தவிடு பொடியாக்கிவிட்டன.
Picture shows another famous danseuse Charulatha Jayaraman
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவஹீந்திரபுரம்
மூலவர் தெய்வநாயகன்
உத்ஸவர் தேவ நாதன்,
தாயார் ஹேமாம்புஜவல்லி தாயார் , வைகுண்ட நாயகி ,
திருக்கோலம் நின்ற திருக்கோலம்
திசை கிழக்கு
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் 10
ஸ்தல விருட்சம்: வில்வம்
கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.
வஹீந்திரன் என்பது ஆதிசேஷனைக் குறிக்கும் சொல். ஆதிசேஷனால் அமைக்கப்பட்ட கோவில் இது. அதனால் இது திருவஹீந்திரபுரம் என்றும், தமிழில் திருவந்திரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர் திருவந்திபுரம் என்றே அறியப்படுகிறது. இந்த திருத்தலம் இப்போது அயிந்தை என்று வழங்கப் படுகிறது.அருகில் இருந்த மலையில் பிரம்மா தவம் செய்ததால், ப்ரம்மாச்சலம் என்று கூறுவர். தேவர்களுக்குத் தலைவனாக இருந்து, எம்பெருமான் யுத்தம் செய்ததால், தேவநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது. தாயார் தேவர்களைக் காப்பாற்றுவதால் ஹேமாம்புஜவல்லி என்று திருநாமம்.
கிழே தேவநாதப் பெருமாளும், மலைக்கு மேலே லக்ஷ்மி ஹயக்ரீவரும் அருள் பாலிக்கிறார்கள்.
தேவர்களுக்காக விஷ்ணு போரிட்டபோது, அசுரர்கள் பக்கம் நின்று போர் செய்த சிவபெருமான் தன் சூலத்தை விஷ்ணுவின் மீது வீசினார். விஷ்ணு அதைத் தன் சக்கரத்தால் தடுத்து மும்மூர்த்திகளாகத் தன்னை சிவபெருமானுக்கு காட்டினார். அதனால் இந்தக் கோவில் உற்சவருக்கு மூவராகிய ஒருவன் என்ற பெயர்.
திருவஹீந்திரபுரம், கல்விக்கான அவதார மூர்த்தி ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாலும், ஆதிசேஷன் மற்றும் கருடனின் மகத்துவத்தாலும், வேதாந்த தேசிகன் என்ற ஆச்சார்யராலும் பெருமையும் சிறப்பும் பெற்றது. திருவஹிந்திரபுரம் நான்கு வேதங்களையும் சகல கலைகளையும் உலகிற்கு அளித்த பெருமாளைப் பெற்றது.
இந்த எம்பெருமானுக்கு தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜ்யோதிஷ்,
அனகஞ்யோதிஷ், த்ரிமூர்த்தி என்று நாமங்கள் உண்டு.
இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கையாழ்வார் தன் பாடல்களில் கூறி உள்ளார். கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன. இவர் யுகம் கண்ட பெருமாள் என்றும் போற்றப் படுகிறார்.
தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப் பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும் சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார் என்பர்.
கருடனால் உருவாக்கப்பட்ட கெடில நதி, தெற்கில் இருந்து வடக்காக ஓடுகிறது. ஆதிசேஷன் கொண்டு வந்த, பாதாளகங்கை தீர்த்தமும் கருடன் கொண்டு வந்த விரஜாநதி தீர்த்தமும் இந்த திருத்தலத்தில் உள்ளன. பாதாள கங்கை தீர்த்தம், எம்பெருமானின் நிவேதியத்திற்கும் விராஜா நதி தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் எடுத்து கொள்ள படுகின்றன.
இங்கு நரசிம்மர், இராமபிரான், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், பள்ளிகொண்ட நாதர், ஆண்டாள், ஆழ்வார் என்று பல சன்னதிகள் உள்ளன.
வடமொழியில் தேவநாயக பஞ்சாசத் என்னும் ஸ்தோத்ரமும், அச்யுத சதகம் என்ற ஸ்தோத்ரங்கள் அடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றி சிறப்பாக பேசுகின்றன.
***
ஹயக்ரீவர்
தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான பகுதியில் அமைந்துள்ள ஒளஷதகிரி என்று அழைக்கப் படும் ஒரு இடம் மிகவும் பிரசித்தமானது. ஶ்ரீஅனுமன் சஞ்சீவி பா்வதத்தைக் கொண்டு செல்லும் போது அதிலிருந்து விழுந்த ஒரு சிறிய பகுதியே இந்த “ஔஷத மலை” என்றுசொல்வர். அங்கு திருமாலின் அவதாரங்களில் ஒருவரான ஹயக்ரீவ பெருமாளுக்கு ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது. குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாள் சகல வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர், அதாவது இவர் கல்விக் கடவுள். ஞானத்தையும் கல்வியையும் அள்ளி வழங்குபவர். ஆய கலைகள் 64-ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். மூலவர் லட்சுமி ஹயக்ரீவர்.
ஹயக்ரீவ பெருமாள், சந்திர மண்டலம் போல் வெளுத்த திருமேனியும் பஞ்சாயுதங்கள் ஏந்திய நான்கு திருக்கரங்களுடனும், குதிரை முகத்துடனும் நீண்ட காதுகளுடனும் வேதமாகிய அமுதம் நுரை தள்ளும் வாயும், கருணை பொங்கும் விழிகளும், பீதாம்பர ஆடை உடுத்தி, பெரிய பிராட்டியை திருமார்பில் கொண்ட திருக்கோலமும் கொண்டு உள்ளார்.
இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள், அவை ஸ்வாமி இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிகளை குறிப்பதாகச் சொல்வர்.
கருடன் விரஜா நதி தீர்த்தத்தை வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்தார். கருடனால் கொண்டு வரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருட தீர்த்தமாகி, காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
பிருகு மகரிஷி இந்த வனத்தில் தவம் செய்யும் போது மூன்று வயது பெண் குழந்தையை கண்டு எடுத்தார் என்றும், அந்த குழந்தை கடலை நோக்கி சிரித்துக்கொண்டே இருந்தது என்றும் அதனால் அந்த பெண் குழந்தைக்கு தரங்காநந்தினி என்று பெயர் சுட்டி வளர்த்து வந்தார். தரங்கம் என்றால் கடல் அலை, ஆனந்தினி என்றால் மகிழ்ச்சி அடைவாள் என்று பொருள். அவள் திருமண வயதை அடைந்தவுடன், எம்பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். எம்பெருமானும் ஏற்றுக்கொண்டார்.
வ்ருத்தாசுரன் மது, கைடபன் போன்ற அரக்கர் கதைகளுடன் தொடர்புடைய தலம் இது.
திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.
மணவாள மாமுனிகள் பன்முறை மங்களாசாசனம் செய்த தலம். இங்கு மணவாள மாமுனிகளுக்கு ஒரு அழகான கோவில் ஒன்று உள்ளது.
இன்றைக்கு சுமார் 750 வருடங்களுக்கு முன் பிறந்து, ஸ்வாமி ராமானுஜருக்கு பிறகு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் “கவிதார்க்கிக சிம்மம்”, “சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்”, “வேதாந்ததாசரர்” என்று பல பட்டப் பெயர்களுடன் சிறப்பு பெற்றவர் தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியர்.
ஸ்ரீமாந் நிகாமந்த தேசிகர் இங்கே 40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு அரும் பெரும் தொண்டுகள் செய்து வளர்த்தார். சுவாமி தேசிகன் திருமாளிகையும், கிணறும் இங்கே உள்ளன.
சுவாமி தேசிகன், ஒளஷதகிரி என்ற திருத்தலத்தில், அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தைகொண்டு தவம் புரிந்து, கருடனின் ஆசியை பெற்றார். கருடன், தேசிகனுக்கு காட்சி கொடுத்து, அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். அதே இடத்தில, ஹயக்ரீவ மந்திரத்தைக் கொண்டு , மீண்டும் ஒரு கடுமையான தவம் புரிந்து, ஹயக்ரீவரின் அருளையும் பெற்றவர். வேதாந்த தேசிகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூா்த்தியே திருவஹீந்திர புரத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீஹயக்ரீவர் ஆவாா்.
திருவஹீந்திபுரத்தில் ஆனி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் தேசிக ப்ரமோத்ஸவம் மிக பிரசித்தி பெற்றது.
XXX
திருமங்கையாழ்வார் பாசுரங்கள்:
நாலாயிர திவ்ய பிரபந்தம் -இரண்டாம் ஆயிரம் -திருமங்கை ஆழ்வார் -மூன்றாம் பத்து- முதல் திருமொழி
1. இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் ஐந்தாவது ரிஷி!
ஶ்ரீ சிவராம்ஜி – சாமானிய சாதனையாளர் – சப்தரிஷிகளின் வரிசையில் ஐந்தாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ சிவராம்ஜி. அதிசயிக்க வைக்கும் தனது அற்புதமான குணங்களால் அனைவரையும் வியக்க வைத்தவர் சிவராம்ஜி.
ஆர் எஸ் எஸ்ஸின் பிரசாரகராக ஆகி 1942ம் ஆண்டு சென்னைக்கு வந்த சிவராம்ஜி தன் வாழ்நாள் இறுதி வரை தமிழகத்திலேயே இருந்து சங்கப் பணியைச் செய்தார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் புனேயில் 1917ம் ஆண்டு மே மாதம் 17ம் நாளன்று யஷ்வந்த் ஜோக்லேக்கருக்கும் கங்கா என்று அழைக்கப்பட்ட சரஸ்வதி ஜோலேக்கருக்கும் சிவராம்ஜி பிறந்தார் மிகவும் புத்திகூர்மை வாய்ந்த சிவராம்ஜி புனேயில் முதுகலை எம்.எஸ்.சி படிப்பில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தான் பெற்ற தங்கப் பதக்கத்தை குரு பூஜை விழாவில் சங்கத்தி’ற்கென சமர்ப்பணம் செய்தார்..
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது டாக்டர்ஜியை அவர் பார்த்தார். அவரால் ஈர்க்கப்பட்டு சங்கத்தில் சேர்ந்தார்.
நேரம் தவறாமை என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சிவராம்ஜி. தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து அன்றாடப் பணியைத் துவங்கும் அவர், சங்க ஷாகாக்களுக்கு குறித்த நேரத்தில் செல்வதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்.
எளிமையான உருவம். இஸ்திரி போடாத அரைக்கை சட்டை.முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு. சங்க உடையிலோ அமர்க்களமாக இருப்பார். ஆயிரக்கணக்கான கடிதங்களை அவர் ஸ்வயம்சேவகர்களுக்கு எழுதியுள்ளார். தமிழை நன்கு படித்து அறிந்திருந்த அவரது கையெழுத்து முத்துக் கோர்த்தது போல அழகாக இருக்கும்.
ஷாகாவை மையமாக வைத்தே வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவருடன் பழகினாலே போதும் சங்கத்தைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளலாம். புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவர். சங்க கீதங்களை பாடிக் கொண்டே வேலை செய்வார். ஓரிரு சொற்களில் சொல்ல வந்ததை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மனதில் பதிய வைப்பார்.
தினமும் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை எழுதி வைத்துக் கொண்டு திட்டமிட்டபடி வேலை செய்வது அவர் வழக்கம்.
74ம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர் அதற்குப் பின்னும் தீவிரமாக பத்தாண்டுகள் சங்கப் பணியை ஆற்றினார்.
தேகதானம் என்பதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஊட்டிய சிவராம்ஜி தன் தேகத்தையே தானமாகச் செய்தார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவரது மறைவிற்குப் பின் அவரது தேகம் அர்ப்பணிக்கப்பட்டது.
நூற்றுக் கணக்கான புதுபுது சிறு திட்டங்களை வகுத்து அவற்றைச் செய்யும் வழிமுறையையும் காட்டி சேவா பணிகளை அனைவரும் வியக்க வைக்கும்படி அவர் செய்வார்.
நூதன திட்டமான ரவுடிகளைச் சந்திக்கும் திட்டத்தில் அவரால் சந்திக்கப்பட்ட ரவுடிகள் மனம் மாறி சிறந்த மனிதர்களாக ஆனது உண்மைச் சரித்திரம்.
அதே போல ஐந்து மருத்துவர்களைச் சந்திக்கும் திட்டம். ஒரு தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ஒரு சில நிமிடங்கள் பேசி சங்கத்தை விளக்கும் திட்டம் என்று இப்படி நூற்றுக் கணக்கான திட்டங்களை வைத்து அதில் ஸ்வயம்சேவகர்களை ஈடுபடுத்தி வெற்றி பெற வைத்தார் அவர்.
நமக்குத் தெரிந்து இவரது 347 வேலைத் திட்டங்கள் இப்படி தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் கடிதம் எழுத பலரையும் ஊக்குவித்த அவர் சமுதாயத்தின் சிந்தனையை ஒவ்வொரு விஷ்யத்திலும் பிரதிபலிக்க வைத்தார். நல்லோர் வட்டம் என்ற அவரது திட்டம் பிரபலமான ஒரு திட்டமாகும்.
இப்படி ஏராளமான நுணுக்கமான அபூர்வ செய்திகளை அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிவராம்ஜியின் சேவையைப் பாராட்டி மஹாராஷ்டிர மாநில அரசு லோகமான்ய திலகர் விருதை அறிவித்தது. ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து விட்டார். விருது, கௌரவம் ஆகியவற்றை அவர் விரும்பவே இல்லை.
ஶ்ரீ சிவராம்ஜி அவர்கள் 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதியன்று சென்னையில் காலமானார். அவரது விருப்பப்படி அவரது கண்கள் சங்கர நேத்ராலயாவுக்கும் பூதவுடல் போரூர் ராமச்சந்திராக மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டது.
இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ சிவராம்ஜி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் ஐந்து ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த இரண்ட் ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 56 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 8
Tiru Valluvar in his Tirukkural addresses only Hindus, Buddhists, Jains and Sikhs; they only believe in Rebirths. Following couplets make it very clear. Followers of Abrahamic religions cannot follow Tirukkural; Valluvar speaks about Papa, Punya, Dharma and Adharma, Birth and rebirth through out 1330 couplets.
Couplet 36 translated Dharmam Chara in the Vedas as அறஞ்செய்க.
What is said here is in the Hindu epics as well. But Valluvar’s genius brought all the good sayings in one book in the briefest form.
No one can beat Valluvar; He is the greatest in the didactic literature.
In almost every chapter we see Sanskrit words; Here we see Civikai for palanquin.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Chapter 4 The Might of Virtue or Aram/Dharma or The Importance of Virtue
36.Let not the acts of righteousness be deferred to the final day, but do it now, for at the dying hour she will be your undying friend- ANM+2
***
36.Do not postpone virtuous deeds as these alone will befriend you to the full,
Until you die and even afterwards –– SMD
***
36. Do deeds of virtue now. Say not, ‘To-morrow we’ll be wise’; Thus, when thou diest, shalt thou find a help that never dies. Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend. – GUP
*** 36.Do good enow; defer it not A deathless aid in death if sought. 36 SB ***
36.Do the deeds of charity now without postponing them to your old age; for they will be an unfailing help to you in the hour of death–EVS.
***
36.Say not “ We will see another day, but practise virtue now;
‘Twill be in dying day undying help HAP
***
Tamil Original
36. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
37.Toil not through sacred friends to know what the fruits of virtue are; but pause and look at the palanquin bearer and him that proudly rides in it- ANM+2
***
37.Judge not the inequalities of life as the result of righteousness and its reverse
By comparison of the man in the palanquin with the bearer –– SMD
***
37. Needs not in words to dwell on virtue’s fruits: compare The man in litter borne with them that toiling bear! The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein. – GUP ***
37.Litter-bearer and rider say Without a word, the fortune’s way. 37 SB
***
37.It is needless of describe the fruits of charity; it may well be known by comparing the rider and the bearer of a palanquin-EVS.
***
37. There is no need to say: Here is virtue’s path;
Just see the palki bearer, and its rider too -HAP
***
37. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
38.All through life pursue righteousness; you will find in your unwearied search a stone that blocks up the painful road to future births – ANM+2
***
38.Performance of virtuous deeds, leaving no respite, will alone secure
A release from the chain of births-– SMD
*** 38. If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moil. If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births. – GUP
*** 38.Like stones that block rebirth and pain Are doing good and good again. 38 SB
*** 38.He who does charitable deeds everyday of his life will escape births-EVS.
***
38.If wasting never a single day, a man does good.
‘Twill be a stone that blocks the path of endless births- HAP
***
38. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
39.Verily that alone is delight which comes of the stern spirit of pursue righteousness; all else is neither pleasure nor praise –ANM+2
***
39.Virtuous deeds alone give true happiness;
All else is in glorious and bring about unhappiness-– SMD
***
39. What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory’s light. Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise. – GUP
***
39.Weal flows only from virtue done The rest is rue and renown gone. 39 SB
***
39.Virtue alone as a householder’s life gives true pleasure and fame; all else does not-EVS.
40.What is virtue but all the lovely things that must be accomplished on earth; what is vice but all the hideous forces of evil that we should abhor and resist with our very lives- ANM+2
***
40.That which should be done is virtue;
That which should be avoided is vice– SMD
***
40. ‘Virtue’ sums the things that should be done; ‘Vice’ sums the things that man should shun. That is virtue which each ought to do, and that is vice which each should shun. – GUP
***
40.Worthy act is virtue done Vice is what we ought to shun. 40 SB
***
40.What is best for one to do is virtue. What should be avoided is vice-EVS.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Item 508 Poverty
Here in Puram verse 69 composed by Ālathūr Kizhār we get some interesting information about the appearance of a bard suffering from poverty. He is a musician with Yaaz (Veena like instrument). He is wearing torn clothes. The bards led a nomadic life.
***
Item 509 Wealth of Kings
In the next few lines, we see a quite contrasting scene with king wearing golden chains, sitting at Uraiyur with big shining mansions. Also bloddy scenes from battles are described. One more interesting point is kings saw saints and bards without waiting.
***
Item 510 Golden Lotus
Kings used to give Golden Lotus to bards. It is in other poems as well.
***
Puranānuru 69, Poet: Ālathūr Kizhār sang for Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan
1 O bard who is sad! You carry a yāzh used to playing perfect music. Your body is hungry, since you do not have a patron. The clothes around your waist are darned and soaked in sweat. You protect and wear them. You have a large family that is depressed like the body of a man with no will. Since you have travelled around the world and you ask me gently, I will tell you.
2
The battle elephants of kings are in pain in a camp with flags, while other elephants have been cut down and they lie in pools of blood, his army has caused flesh to stink, the King of Uranthai with shining mansions, who raises his spear against advancing warriors and he is ready to march into the lands of his enemies!
If you go and see Killivalavan who wears a fine garland and lovely gold ornaments that flash like fire, you will not have to wait at his tall gate without seeing him donate chariots at harsh noon time
3 in his court. You will not fail to gain a golden lotus flower upon which bees that swarm on flowers do not buzz!
(Vaidehi Herbert’s translation is used; thanks
***
Notes: Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 226, 227, 228, 373, 386, 393 and 397 were written for this Chozha king who wrote Puranānūru 173. Ālathūr Kizhār who came from a town called Ālathūr, wrote Puranānūru 34, 36, 69, 225 and 324.
கையது கடன் நிறை யாழே, மெய்யது புரவலர் இன்மையின் பசியே, அரையது வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதாஅர் ஓம்பி உடுத்த உயவற் பாண! பூட்கை இல்லோன் யாக்கை போலப் 5 பெரும் புல்லென்ற இரும்பேர் ஒக்கலை வையகம் முழுதுடன் வளைஇப் பையென என்னை வினவுதி ஆயின்,
2
மன்னர் அடு களிறு உயவும் கொடி கொள் பாசறைக் குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப், 10 புலாக் களம் செய்த கலாஅத் தானையன் பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் பகைப் புலம் படர்தலும் உரியன், தகைத் தார் ஒள் எரி புரையும் உருகெழு பசும்பூண்15 கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
3 நெடுங்கடை நிற்றலும் இலையே கடும் பகல் தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, நீ அவற்கண்ட பின்றைப் பூவின் ஆடு வண்டு இமிராத் தாமரை 20 சூடாய் ஆதல் அதனினும் இலையே.
****
Item 511 Snskrit names for Tamil Months
Kōvūr Kizhār copied the greatest poet Kalidasa in Puram verse 70
Tamils have no names in Tamil for 12 months. All the names we use now for 12 so called Tamil months are Sanskrit names. In some cases they are Tamilized. Kanchi Shankaracharya (1894-1994) who was a great linguist, has explained the names of all the 12 months. No one could have any doubt because we get Panguni in Akananuru 137, Karthikai in other poems. Silappadikaram also used Sanskrit month. This shows ancient Tamils considered Tamil and Sanskrit as two eyes of a man. More over all the Tamil dictionaries and Nikandus have more Sanskrit words than Tamil.
***
Item 512 Bee= Six Legged Bird
This poem shows that Kovur Kizar as a great Sanskrit scholar. He not only used Sanskrit Thai, but also used Six Legged Bird (bee) of Kalidasa.
***
Item 513 Interesting Folklore- Gold Diggers
Hindu folklore is full of finding gold in the middle of the forest. This is used as a simile here. They always add those gold are protected by snakes. There are two reasons for it:1. Gold is found as nuggets in many places in those days. Now they were all exploited by gold diggers. 2.Tamils have a proverb Tamilan puthithuk kettan—meaning Tamils spoiled themselves by burying (treasures). In those days there were no banks or lockers in villages So they buried the treasure and told no one. After their death, some lucky person stumble on it.
***
Item 514
Another notable point is the appearance of a drum held by the bards.
like a pond tortoise strung on an iron rod
***
Puranānuru 70, Poet: KōvūrKizhār sang for Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan,
1
O bard with ancient wisdom carrying a small yāzh with honey-sweet music! You show me sweetly your clear-eyed kinai drum tied with sticks like a pond tortoise strung on an iron rod, and urge me strongly to rest here a little.
2
Killivalavan is the lord of a fine country with abundant rice and water. His huge city is filled with food and there is constant abundance like a Thai month pond whose level never goes down despite taking. There are only kitchen fires and no war fires. Go to him thinking of his renown.
3
If you travel leisurely and quietly with your female dancer, her forehead glowing, her smile sweet, adorned with pāthiri flowers from Sirukudi of Pannan who gives very generously, where six-legged bees buzz on small white waterlilies desiring fragrance, you will become rich.
4
Do not think that his generosity is not a rare matter, like woodcutters going to the forest to cut wood finding gold. May his efforts prosper!
Notes: Puranānūru poems 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 46, 69, 70, 173, 226, 227, 228, 373, 386, 393 and 397 were written for this Chozha king. Kōvūr Kizhār wrote Puranānūru 31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386 and 400. He hailed from Kōvūr town in Thondai Nadu. It is presently in Chengalpattu district.
தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண! கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை இனிய காண்க இவண் தணிக எனக் கூறி, வினவல் ஆனா முதுவாய் இரவல! 5
1 தைத் திங்கள் தண் கயம் போலக், கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியன் நகர், அடு தீ அல்லது சுடு தீ அறியாது, இரு மருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன், கிள்ளிவளவன் நல் இசை உள்ளி, 10
2 நாற்ற நாட்டத்து அறு கால் பறவை சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் கைவள் ஈகைப் பண்ணன் சிறு குடிப் பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல், இன்னகை விறலியொடு மென்மெல இயலிச் 15 செல்வை ஆயின் செல்வை ஆகுவை
3 விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் தலைப்பாடு அன்று அவன் ஈகை, நினைக்க வேண்டா, வாழ்க அவன் தாளே.
****
Item 515 Bhutapandyan
In Puranānūru 71, we come across the pandya king
Bhuta pandyan. This name is also found in alupa kings of Karnataka. Also we come across a queen, whose husband was Bhuta pandyan; see Puranānūru 246. This is a Sanskrit name. also note devi is used in verse 246.
Item 516 Names of dear friends
The king gives us a list of his dear friends that makes interesting reading.
May I lose the great joy in the company of my friends who are as precious to me as my own eyes – Māvan who is the ruler of Maiyal town and cities surrounded by the famous Vaiyai River with abundant riches and unending prosperity, Ānthai of long established Eyil town, Anthuvan Sāthan of great renown, famous Āthan Azhisi, Iyakkan with intense rage and others!
Also we get the names of river and towns.
***
Item 517 Dhama Sabhai and rebirth and Patriotism
The king makes two more points. His assembly is a place of Justice. Rig Vedic Sanskrit word Sabha is used in the poem. All over India B=V are interchangeable and so we see Avai in Tirukkural and Sangam literature.
Another point is rebirth. He makes a vow that he would be born in a country that is not Pandya country. This shows his patriotism and loyalty towards his mother land. This shows his belief in rebirth as well.
They say that kings enraged like lions and owning armies that do not succumb have formed a federation, and announced that they will go into battle against me.
If I do not assault them so that I can hear their scream in harsh battles as they show their backs and flee in their chariots, may I separate from my wife with large, calm kohl-lined eyes! And in my kind court that does not sway from justice, let me install someone unworthy and rule with a weak scepter, moving away from righteousness!
May I lose the great joy in the company of my friends who are as precious to me as my own eyes – Māvan who is the ruler of Maiyal town and cities surrounded by the famous Vaiyai River with abundant riches and unending prosperity, Ānthai of long established Eyil town, Anthuvan Sāthan of great renown, famous Āthan Azhisi, Iyakkan with intense rage and others!
May I no longer reign as king of this southern land, known for its ancient lineage and protection to its citizens! May I be born into a family that protects the dry lands of others!
*1**
புறநானூறு71, பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்,திணை: காஞ்சி, துறை: வஞ்சினக் காஞ்சி
2 அறன் நிலை திரியா அன்பின் அவையத்துத் திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து மெலி கோல் செய்தேன் ஆகுக, மலி புகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் 10
3 பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் மன் எயில் ஆந்தையும், உரை சால் அந்துவஞ்சாத்தனும் ஆதன் அழிசியும், வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும், கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த 15 இன் களி மகிழ்நகை இழுக்கி யான் ஒன்றோ, மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென் புலம் காவலின் ஒரீஇப், பிறர்
4 வன்புலம் காவலின் மாறி யான் பிறக்கே.
****
Item 518
Puram verse 72 was composed by a famous king called Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan. The battle of Thalaiyālankānam as famous as Venni Battle where Choza Karikalan defeated many kings and Velirs. Here the young Boy King defeated many kings.
His story is in Thiru Vilayadal Puranam which says Lord Siva helped him. I have pointed out in my research articles on Tiru Vilayadal Puranam of Madurai.
***
Item 519 Proof for Tamil Sangam
Sangam is a Sanskrit word which we see from Panini days to modern times. Arthasastra of Kautilya/ Chanakya also mentioned Sangam(Association). But Tamil Tolkappiar banned all Sa beginning words in Tamil. So scholars were wondering what the association was called in Sangam period. We can only guess. But Nedunchezian in this verses says there was a group of poets under the leadership of Mangdi Maruthan. He was the author of the longest Sangam poem Madurai Kanchi.
They cause me anger, those who say, “They are laughable who praise his land. He is too young.”
They also say, “We have fine, tall elephants with wide feet and huge legs that wear tinkling bells, chariots, horses and able warriors.” They have no fear and they are filled with fury as they utter disparaging words.
If I do not attack those enraged kings, who don’t fear my strength, in harsh battles and ruin their drums, may my citizens who live under the protection of my shadow no longer see any shade! Let them cry and and blame me as a cruel king and insult my office!
3
Poets with great skill, their leader Mānkudi Maruthan with his vast and great learning, as well as others firmly established in this earth, let them leave my country and sing no more about it! May I lose wealth and become unable to help those who come to me in need, and remove their sorrow!
Notes: This is the only poem written by this king. Puranānūru 18, 19, 23, 24, 25, 26, 76, 77, 78, 79, 371 and 372 were written for this king. He defeated the Chera and Chozha kings along with five Vēlir kings in a battle at Thalaiyālankānam in the Chozha country.
2 “நகு தக்கனரே, நாடு மீக்கூறுநர், இளையன் இவன்” என உளையக் கூறிப், “படுமணி இரட்டும் பாவடிப் பணைத் தாள் நெடுநல் யானையும் தேரும் மாவும் படை அமை மறவரும் உடையம் யாம்” என்று 5 உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது, 10 “கொடியன் எம் இறை” எனக் கண்ணீர் பரப்பிக் குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக,
3 ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக,
3உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் 15 புலவர் பாடாது வரைக என் நிலவரை புரப்போர் புன்கண் கூர, இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.
To be continued
Tags- No name for months in Tamil, Sangam, Mangudi Maruthan, Item 519, Tamils have no Tamil Names for 12 Months:25Purananuru wonders-25, Tamil Encyclopedia-
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சீர்காழி தாடாளப் பெருமாள் கோவில்
மூலவர் – த்ரிவிக்ரமன், தாடாளன், உலகளந்த திருவுருவம், நின்ற திருக்கோலம், கிழக்கே ஸகல வசதிகளும் உண்டு.
உத்ஸவர் – த்ரிவிக்ரம நாராயணன்.
தாயார் – மூலவர் – லோகநாயகி. உத்ஸவர் – மட்டவிழ்குழலி.
தீர்த்தம் – சங்கபுஷ்கரிணி, சக்ரதீர்த்தம்.
விமானம் – புஷ்கலாவர்த்த விமானம்.
ப்ரதயக்ஷம் – அஷ்டகோண மஹர்ஷி.
விசேஷங்கள் – பெருமாள் இடதுகாலைத் தூக்கி விண்ணை அளக்கிறார். இவ்வூரில் திருமங்கையாழ்வார் திருஞானஸம்பந்தரை வாதில் வென்று அவருடைய வெற்றி வேலைப் பரிசு பெற்றதுடன் “கடியுண்டநெடுவாளை” என்ற ஓர் அழகிய பாடலாலும் புகழப் பெற்றார். நாலுகவிப் பெருமாள் என்ற விருதையும் பெற்றார் என்று ஒரு செய்தி உள்ளது . ஆனால் இருவர் வாழ்ந்த காலமும் வெவ்வேறு என்பதால் சைவர்கள் இந்தக் கதையை மறுக்கின்றனர்
செல்வ தெய்வநாயகன் ஸந்நிதியும் இங்கே உள்ளது.
சீர்காழியிலுள்ள தாடாளப் பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதை காழிச்சீராம விண்ணகரம் என்று கூறுவர். ‘தாள்’ என்றால் ‘பூமி அல்லது உலகம்’, ‘ஆளன்’ என்றால் ‘அளந்தவன்’ என்று பொருள். தன் திருவடியால் பெருமாள் மூன்று உலகங்களையும் அளந்தவர் என்பதால் இவருக்கு ஆண்டாள் இவருக்கு “தாளாளன்’ என்ற பெயரை சூட்டினாள். பின்னாளில் அப்பெயர் தாடாளன் என்று மருவி விட்டது.
ஒருசமயம் கோயில் இருந்த இடம் பாழ் பட்டுப்போனது. அப்போது கோவிலில் இருந்த உற்சவ பெருமாள் விக்ரகத்தை, ஒரு மூதாட்டி தவிட்டுப்பானையில் வைத்து பாதுகாத்து வந்தார். எனவே இப்பெருமாளுக்கு தவிட்டுப்பானைத் தாடாளன் என்ற பெயர் ஏற்பட்டது. திருமங்கையாழ்வார் அம்மூதாட்டியிடம் இருந்து உற்சவ பெருமாள் விக்ரகத்தை பெற்று, மீண்டும் கோவிலில் சேர்த்தார்.
மூலவர் பெருமாள் பூமியில் ஊன்றிய வலது பாதத்துக்கு முன்னே நிற்கின்றார். அதனால் மூலவர் பெருமாளின் வலது பாதத்தை நாம் தரிசிக்க முடியாது. வைகுண்ட ஏகாதசியன்று மட்டும், உற்சவரை அவருடைய இடத்திலிருந்து நகர்த்தி வைப்பார்கள். அன்றைய தினம் மட்டுமே, நாம் மூலவரின் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும். இந்த தரிசனம் கண்டவர்களுக்கு மறுபிறவி கிடையாதென்பது ஐதீகம்.
உலகையே ஒரு அடியில் அளந்த பெருமாள் என்பதால் இங்கு பூமி, வாஸ்து பூஜை செய்யும் முன்பு சுவாமியிடம் தங்களது நிலத்தின் மணலை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் நிலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
ப்ருஹ்மாவுக்கு தன் ஆயுளைப்பற்றி கர்வம் ஏற்பட்ட பொழுது, ரோமசமுனிவர் “உன் ஆயுசும் என் ஒரு ரோமமும்” ஸமம் என்று சொல்லி அவர் கர்வத்தை அடக்கின ஸ்தலம்.
இங்கு விஷ்ணு திரிவிக்கிரம பெருமாளக காட்சியளிக்கிறார். வாமன அவதாரத்தில், வாமனன் மன்னன் மகாபலியிடம் மூன்றடி நிலத்தைக் கேட்டார், பின்னர் அவனது அளவை அதிகரித்து, ஒரு படியால் வானத்தையும், இரண்டாவது படியால் பூமியையும் மூடினான். இந்தக் கோவிலில், விஷ்ணு தனது இடது காலை உயர்த்திக் காட்டுகிறார் –
***
விஷ்ணு நகரம் அல்லது நித்திய இடத்தைக் குறிக்கும் ஆறு இடங்கள் விண்ணகரம் என்று அழைக்கப்படுகின்றன. அவை: திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்), நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்), அரிமேய விண்ணகரம் (நாங்கூரில் உள்ள குடமாடு கூத்தன் கோயில்), வைகுண்ட விண்ணகரம் (நாங்கூரில் உள்ள வைகுண்டநாதர் கோயில்) பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சிபுரம்).
***
இக்கோயிலில் கோதண்டராமருக்கு தனி சன்னதி உள்ளது.
திருக்காழிச்சீராம விண்ணகரம், சீர்காழி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் தூரத்திலுள்ளது. பஸ்ஸில் சென்றால் கோயில் ஸந்நிதி வாசலிலேயே இறங்கலாம்.
சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார்* தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே. (2)
***
திருக்கண்டியூர் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில்
திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவையாறு அருகே உள்ள ஒரு பழைமையான வைணவத் தலம். இது 108 திவ்ய தேசங்களில் 7-வது தலமாகவும், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தொடர்புடைய சிறப்பான தலமாகவும் விளங்குகிறது.
:தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும், திருவையாறிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் குடமுருட்டி மற்றும் வெண்ணாறு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.
வேறு பெயர்கள் கண்டன ஷேத்ரம், பஞ்சகமல ஷேத்ரம்
***
மூலவர்: ஹர சாப விமோசன பெருமாள் (நின்ற கோலம்).
தாயார்: கமலவல்லி நாச்சியார்.
சிவன், பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெருமாளை வணங்கிய தலம். எனவே, இத்தலம் ‘கண்டன க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.மூர்த்திகள்: இங்கு மும்மூர்த்திகளான சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருப்பது சிறப்பாகும்.
சிற்பங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றச் செய்யும் வரப்பிரசாத வடிவமான, ஸ்ரீ லட்சுமி நரசிம்மன், ஸ்ரீ மகா சுதர்சனன், சிலைகள் .
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது.
சிவன் தனது கையில் ஒட்டிக்கொண்ட பிரம்ம கபாலம் நீங்கியதற்கு திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும்முகமாக தானும் இவ்விடத்தே கோவில் கொண்டார். எனவே இது ஒரு மும்மூர்த்திதலம். தற்போது இங்குள்ள பிரம்மாவின் கோவில் மூடப்பட்டு பிரம்மா மற்றும் ஸரஸ்வதி சிலைகள் சிவபெருமானின் தலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூலை எழுதிய ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்னும் மஹான் கண்டியூருக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சார்ந்தவர். கண்டியூர் பெருமான் மீது அளவு கடந்த பக்தி பூண்டவர்.
திருமங்கையாழ்வார் மட்டும் மங்களாசாசனம். ஒரே ஒரு பாடலில் இத்தலத்துப் பெருமை பற்றிக் கூறுகிறார். இத்தலத்தோடு சேர்ந்து ஸ்ரீரங்கம், கச்சி (காஞ்சி) பேர் (திருப்பேர் நகர் என்னும் கோயிலடி) மல்லை என்னும் திருக்கடன்மல்லை என்னும் நான்கு ஸ்தலங்களையுஞ் சேர்த்து மங்களாசாசனம் செய்கிறார்.
. மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஒரு சமயம் இக்கோவிலின் முகப்பில் நின்று சண்டையிட வேண்டிய சந்தர்ப்பம் உண்டாக அப்போது இப்பெருமான் திப்புசுல்தானை ஆட்கொண்டார் எனவும். இப்பெருமான் மீது பக்திகொண்ட திப்பு, கோவிலை வலம் வந்து போர் முடித்து வென்றார் என்பதும் கர்ண பரம்பரையான பழங்கால வாய்வழிக் கதையாகும்.
திருவையாறில் அமைந்துள்ள (தேவாரத்தில்) பாடப் பெற்ற பஞ்சனாதீஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தானங்களில் ஒன்றாகவும் திருக்கண்டியூர் போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே திருக்கண்டியூர் வீரட்ட சிவாலயம், சைவ-வைணவ ஓற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது ! சிவாலயத்தில் பிரம்மனுக்கும், சரஸ்வதி தேவிக்கும் சன்னிதிகள் உள்ளன.
***
திருக்கண்டியூருக்கு அருகே கல்யாணபுரம் என்ற பசுமையான கிராமத்தில் கல்யாண வேங்கடசுவரர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னனின் துணைவியின் (பெயர்: கல்யாணி) நினைவாகவே கல்யாணபுரம் என்ற பெயரை இக்கிராமம் பெற்றது என்று கூறப்படுகிறது.
வருடம் முழுதும், இக்கோயிலில் விழாக்களும், உத்சவங்களும் நடைபெறுகின்றன. சித்திரையில் வசந்த உத்சவமும், அட்சய திருதியையும், வைகாசியில் விசாக உத்சவமும், நவராத்திரியும், தீபாவளியும், கார்த்திகையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தினமும் கருடசேவை நடைபெறுகிறது!
To be continued……………………………….
Tags- சீர்காழி , திருக்கண்டியூர், ஹர சாப விமோசன பெருமாள் கோயில், தாடாளப் பெருமாள் கோவில், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-21, திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள்