HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL ; இந்து மத கலைச்சொல் அகராதி-114 (Post16,197)

Written by London Swaminathan

Post No. 16,197

Date uploaded in London – 14 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ஆங்கில அரிச்சுவடி வரிசையில் இப்பொழுது வி V என்னும் எழுத்தின் கீழுள்ள முக்கிய சொற்களைக் காண்போம் :

வாசஸ்பதி மிஸ்ரா (900-980 CE)

உலகத்தில் இலக்கிய அதிசயம் புரிந்தவர் வாசஸ்பதி மிஸ்ரா ஆவார் . தான் எழுதிய அத்தனை நூல்களையும் அவர் எழுதிய கால வரிசைக் கிராமத்தில் அவரே கொடுத்துள்ளார் ; எப்பொழுது ? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்! இந்திய தத்துவ முறைகளை பற்றி விளக்கியவர்களில் இவரே முதல்வர் ; இவர் ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர உரைக்கு உரை எழுதியவர் அந்த நூல் பாமதி என்ப்படும்இவர் எழுதிய நூல்களில் இதுதான் புகழ்பெற்றது. இவர் பீஹார் மாநிலத்தின் மிதிலா பிராந்தியத்தைச் சேர்ந்தவர் ; அந்த பகுதியிலிருந்து வந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்றும் பெயர் .

வாசஸ்பதி மிஸ்ரா வாழ்ந்த நகரின் பெயர் வாசஸ்பதி; இவர் மனைவியின் பெயர் பாமதி . காலம் – பத்தாவது நூற்றாண்டு.

பாமதி பற்றி காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

மிதிலையைச் சேர்ந்த சிறந்த அறிஞரான வாசஸ்பதி மிஸ்ரர், ஆதிசங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு மிக விரிவானதொரு விளக்க உரையை (விவரணம்) எழுதத் தொடங்கினார்.அந்தத் தத்துவப் பணியில் அவர் தன்னை முற்றிலும் மறந்து, இரவும் பகலும் பல ஆண்டுகள் தீவிரமாக மூழ்கியிருந்தார். அவரது மனைவியான பாமதி, கணவரின் தியானத்திற்கும் எழுத்திற்கும் எந்தவித இடையூறும் நேராத வண்ணம், அவரிடமிருந்து எந்தவொரு உலகியல் எதிர்பார்ப்பும் இல்லாமல் பல வருடங்களாக அமைதியாகப் பணிவிடை செய்து வந்தார். அவளுக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பதைக் கூட வாசஸ்பதி மிஸ்ரர் மறந்திருந்தார். நூல் முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட அன்று இரவு, விளக்கு வெளிச்சத்தில் தனக்கு எண்ணெய் ஊற்றி உதவிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து வியப்புடன், “நீ யார்?” என்று கேட்டார்.அவளோ எவ்வித வருத்தமும் இன்றி, “நான் உங்கள் மனைவி, என் பெயர் பாமதி” என்று கூறினாள். )தனது ஞானத் தேடலால் மனைவியின் வாழ்வையும் இளமையையும் கவனிக்கத் தவறிவிட்டோமே என்று வாசஸ்பதி மிஸ்ரர் வருந்தினார். அவளது அசாத்தியமான தியாகத்திற்கும், எதிர்பார்ப்பற்ற சேவைக்கும் கைமாறாக, தான் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவழித்து எழுதிய அந்த உன்னத வேதாந்த நூலுக்கு ‘பாமதி’ என்றே பெயரிட்டார். இந்த நூல் உலகம் உள்ளவரை அவளது பெயரை நிலைநிறுத்தும் என்று ஆசீர்வதித்தார். தத்துவ விளக்கம் (அவச்சேத வாதம்)’தெய்வத்தின் குரல்’ ஐந்தாம் பகுதியில், மஹா பெரியவா அத்வைதக் கோட்பாட்டை விளக்கும் போது, அத்வைதத்தில் உள்ள இரு முக்கியப் பிரிவுகளான விவரண பிரஸ்தானம் (VivaraNa Prasthaanam) மற்றும் பாமதி பிரஸ்தானம் (Bhamati Prasthaanam) ஆகியவற்றின் தத்துவ வேறுபாடுகளை எளிமையாக விளக்கியுள்ளார்: பிம்ப-பிரதிபிம்ப வாதம் (விவரண முறை): சூரியனின் ஒளி தண்ணீர்த் துளிகளில் பிரதிபலிப்பதைப் போல, ஒரே பரமாத்மா மாயையின் காரணமாகப் பல ஜீவாத்மாக்களாகத் தெரிகிறது என்பது விவரணப் பிரிவின் வாதம். [அவச்சேத வாதம் (பாமதி முறை): பாமதி பிரஸ்தானம் ‘அவச்சேத வாதம்’ (Avachchinna / Avachcheda Vaadam) எனப்படும் தத்துவத்தைக் கையாள்கிறது. ‘அவச்சேத’ என்றால் எல்லைகளுக்கு உட்பட்டது என்று பொருள். மஹா பெரியவா / காஞ்சி சங்கராசார்யார் (1894-1994)

 இதற்கு ஒரு எளிய உதாரணம் தருவார்: ஆகாயம் (வெட்டவெளி) என்பது எங்கும் நிறைந்தது. நாம் ஒரு திறந்தவெளியில் பல வெற்றுப் பானைகளை வைத்தால், ஒவ்வொரு பானைக்குள்ளும் ஆகாயம் இருக்கிறது. பானைக்குள் இருக்கும் ஆகாயத்தை ‘கடா ஆகாயம்’ (பானை ஆகாயம்) என்றும், வெளியில் இருக்கும் எல்லையற்ற ஆகாயத்தை ‘மஹா ஆகாயம்’ என்றும் சொல்கிறோம்.உண்மையில் ஆகாயம் இரண்டாகப் பிரியவில்லை. பானை என்ற எல்லை (உபாதி) இருக்கும் வரைதான் உள்ளே, வெளியே என்ற பேதம் தெரிகிறது. பானை உடைந்ததும் உள்ளே இருந்த ஆகாயம் மஹா ஆகாயத்தோடு ஒன்றிவிடுகிறது.இதேபோல, மனித உடலும் மனமும் பானையைப் போன்ற எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்குள் கட்டுப்பட்டுக் காணும் ஆன்மாவே ‘ஜீவாத்மா’. அறியாமை நீங்கி இந்த எல்லைகள் உடையும் போது, ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற அத்வைத உண்மை புலப்படும் என்று பாமதி பிரஸ்தானம் விளக்குவதாக மஹா பெரியவா /காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார். அத்வைத தத்துவ உலகிற்கு வாசஸ்பதி மிஸ்ரரின் ‘பாமதி’ உரை ஒரு மிகச்சிறந்த கொடை என்றும், இல்லறத்தில் இருந்துகொண்டே தியாக உணர்வோடு ஆன்மீகப் பணிக்குத் துணைநின்ற பாமதியின் பெருமைக்கு அது ஒரு சான்று என்றும் காஞ்சி ஆச்சார்யார் போற்றியுள்ளார்.

வாசஸ்பதி மிஸ்ரா எழுதிய நூல்கள்

1) நியாய கனிகா : This is a commentary on Vidhiviveka, a Bhāṭṭa Mīmāṃsā work of Maṇḍanamiśra.

2)  நியாயசூத்ரோத்தாரா : This is a compilation of the Nyāyasūtra fixing the readings of the text of the sūtras.

3)நியாய சூஸிநிபந்த : This arranges the same Nyāyasūtra.

4) நியாயவார்த்திக்க தாத்பர்ய டீகா : This work also known by its shorter and more popular name, ‘tātparyaṭīkā’, is an extensive commentary on the Nyāyavārtikā of Uddyotakara Bhāradvāja.

5) தத்வஷமீக்க்ஷ : It is generally believed to be a commentary on the Brahmasiddhi of Maṇḍanamiśra. But it has been recently suggested that this is also an independent Mīmāṃsa treatise of Vācaspati Miśra. This work is lost.

6) தத்வ பிந்து : This is also an independent Bhāṭṭa Mīmāṃsa treatise of Vācaspati Miśra.

7) சாணக்யா தத்வ கெளமுதி : This work, known briefly as Tattvakaumudī, is a brilliant commentary on the famous Sāṅkhyakārikā of Īśvarakṛṣṇa.

8) யோக தத்வ வைசாரதி known also by its shorter title Tattvavaiśāradī: This work is a commentary on the Pātañjalayogasūtrabhāṣya of Vyāsa.

9) பாமதி: The full title of this work is perhaps Śārīrakabhāṣya bhāmatī. This is the earliest known exhaustive and complete commentary on the Brahmasūtraśāṅkara-bhāṣya.

It is interesting to note that in a verse in the epilogue of the Bhāmatī Vācaspati Miśra gives a full list of his own works arranged exactly in the above order suggested by the modern researchers. In the Indian tradition Vācaspati Miśra is again perhaps the first writer to give a complete list of his works, that too in a chronological order.

***

வைதேஹி – சீதாதேவியின் பெயர்; ஜனகர் ஆண்ட விதேஹ நாட்டிலிருந்து வந்தவள் என்று பொருள்; விதேஹ என்றால் தேகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் ஆத்ம விடுதலையைப் பற்றி தியானம் செய்பவர்  என்று பொருள் . மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும் மதி ஜனகன் மதி என்று பாரதியார் புகழந்ததிலிருந்து இதை அறியலாம்.

***

வைகுண்டம்

விஷ்ணுவின் இருப்பிடம் ; லெட்சுமி தேவியுடன் வாசம் செய்யும் இடம் ; வானவியல் ரீதியில் இது மகர ராசியில் உள்ளது . சம்ஸ்க்ருத மொழியில் இதற்கு கவலை இல்லாத இடம் என்று பொருள்; வைகுண்டத்தை அடைவோருக்கு நித்திய ஆநந்தம், பேரானந்தம் இருக்கும்; பிறப்பு இறப்பு என்ற கவலையே இல்லை

இந்து சமய நூல்களில் பரமபதம்விஷ்ணு லோகம் என்றும் சொல்லுவார்கள் ;அங்கே தங்க மயமான கட்டிடங்களும் ரத்தின கற்களாளான கட்டிடங்களும் தொங்கும் தோட்டங்களும் இருப்பதாக புராணங்கள் வருணிக்கின்றன .

வைகுண்ட ஏகாதசி

மாதம் தோறும் இரண்டு முறை வரும் ஏகாதசி உண்ணாவிரத நாட்களில் மிகவும் சிறப்புடையது டிசம்பர் மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி  ஆகும்; இதற்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு . 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 20 இது வருகிறது. மார்கழி மாதத்தில் வரும் இந்த ஏகாதசியில் நாள் முழுதும் பட்டினி கிடந்து இரவு முழுதும் விஷ்ணுவைப் பற்றி கதைகளை அல்லது பாடல்களைக் கேட்டு பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறந்தவுடன் உள்ளே சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம்; அவ்வாறு செய்தால் பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை  (மோக்ஷம்/ முக்தி) பெற்று வைகுண்டத்தை அடைவார்கள் என்பது நம்பிக்கை.

***

வாஜசநேயி

வாஜசநேயி சம்ஹிதை , நான்கு வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தின் (சுக்ல யஜுர் வேதம்) மந்திரத் தொகுப்பாகும். சூரிய பகவான் குதிரை (வாஜி) வடிவம் எடுத்து யக்ஞவல்கிய முனிவருக்கு இந்த வேதத்தை உபதேசித்ததால், இதற்கு ‘வாஜசநேயி சம்ஹிதை’ என்ற பெயர் வந்தது.  சமஸ்கிருதத்தில் ‘வாஜி’ என்றால் அன்னம் (உணவு) அல்லது குதிரை என்று பொருள்.  யக்ஞவல்கியர்: சூரிய தேவனை நோக்கித் தவம் புரிந்து, அவரிடமிருந்து நேரடியாகப் பெற்ற தூய்மையான வேதம் என்பதால் இது சுக்ல யஜுர் வேதம் (வெள்ளை யஜுர் வேதம்) என்றும் அழைக்கப்படுகிறது. வாஜசநேயி சம்ஹிதை இரண்டு முக்கிய கிளைகளாகப் (சாகாக்கள்) பிரிக்கப்பட்டுள்ளது: மத்யந்தின சாகா (Madhyandina Recension): வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இதில் 40 அத்தியாயங்கள், 303 அனுவாகங்கள் மற்றும் 1975 மந்திரங்கள் உள்ளன.

காண்வ சாகா (Kanva Recension): தென்னிந்தியாவில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இதிலும் 40 அத்தியாயங்கள் இருந்தாலும், 2086 மந்திரங்கள் உள்ளன. யாகங்கள் மற்றும் சடங்குகள்: தர்சபூர்ணமாஸம் (அமாவாசை, பௌர்ணமி யாகங்கள்), அக்னிஹோத்திரம், சோமயாகம், வாஜபேயம், அஸ்வமேதம் மற்றும் புருஷமேதம் போன்ற பல்வேறு வேத கால யாகங்களை நடத்துவதற்கான மந்திரங்கள் இதில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

ஈசாவாஸ்ய உபநிடதம்: இந்த சம்ஹிதையின் இறுதி அத்தியாயமான 40-வது அத்தியாயம் உலகப் புகழ்பெற்ற ஈசாவாஸ்ய உபநிடதம் ஆகும். இது ஆன்மா, தியாகம் மற்றும் பிரம்ம ஞானத்தைப் பற்றிப் பேசும் மிக முக்கியமான வேதாந்தப் பகுதியாகும்.

ருத்ராஷ்டாத்யாயி: சிவபெருமானை வழிபடும் புகழ்பெற்ற ‘ஸ்ரீ ருத்ரம்’ (நமகம், சமகம்) மந்திரங்கள் இந்த சம்ஹிதையின் 16 மற்றும் 18-வது அத்தியாயங்களில் இடம்பெற்றுள்ளன.

***

வஜ்ர

கடினமான என்பது இதன் பொருள்; இந்திரனின் ஆயுதம் இதுதான் ; தீய சக்திகளை அழிப்பதற்காக ததீசி முனிவர் தன்னுடைய முதுகெலும்பினைக் கொடுத்தார்; விஷ்வகர்மா அதிலிருந்து வஜ்ராயுதத்தை உருவாக்கி இந்திரனிடம் கொடுத்தார்

வைரம் என்னும் ரத்தினைக் கல்லுக்கும் இதே பெயர்; அது வஜ்ரம் என்னும் சொல்லின் மருவு ஆகும் ; பிராமணப் பெண்கள் பேசிய பிராகிருத மொழியிலிருந்து வந்தது ; வீட்டிலுள்ள பெண்களும் கீழ்மட்ட ஊழியர்களும் கொச்சையான சம்ஸ்க்ருதம் பேசுவர் ; இந்தப் பேச்சு வழக்கினை பிராகிருதம் என்பார்கள் ; காளிதாசன் நாடகங்களிலும் பெண்களும் வேலைக்காரர்களும் மீனவர்களும் பேசிய பிராகிருத வசனங்களைக் காணலாம் .

***

வாக்கியபதீயம்

வாக்கியபதீயம் (Vakyapadiya) என்பது 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய இலக்கண அறிஞரும் தத்துவஞானியுமான பர்த்ருஹரியால் (Bhartrihari) சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு புகழ்பெற்ற நூலாகும். இது மொழியியல் தத்துவம் (Philosophy of Language) மற்றும் சமஸ்கிருத இலக்கணத்தின் (Vyakarana) அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும் மிக முக்கியமானதொரு நூல் [இந்த நூலின் முக்கிய அம்சங்கள் :1. மூன்று பிரிவுகள் (திரிகாண்டீ – Trikandi)இந்நூல் மூன்று முக்கிய காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம காண்டம் (Brahma-kanda): இது மொழியின் ஆன்மீக மற்றும் பிரபஞ்சத் தன்மையை விளக்குகிறது. பிரம்மமும் மொழியும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இது ஆராய்கிறது. 2.வாக்கிய காண்டம் (Vakya-kanda): இது வாக்கியங்களின் அமைப்பு, அதன் அர்த்தம் மற்றும் ஒரு வாக்கியம் எவ்வாறு முழுமையான பொருளைத் தருகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. 3.பத காண்டம் (Pada-kanda): இது சொற்கள், அவற்றின் இலக்கணக் கூறுகள், பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களின் பகுப்பாய்வு போன்றவற்றை விரிவாகக் கூறுகிறது.

 ஸ்போட வாதம் (Sphota Theory)

பர்த்ருஹரியின் மிக முக்கியமான பங்களிப்பு ஸ்போட (Sphota) என்ற கோட்பாடு ஆகும். இதன்படி, நாம் கேட்கும் ஒலிகள் தனித்தனியாக இருந்தாலும், அவை நம் மனதில் ஒரு முழுமையான கருத்தையோ அல்லது அர்த்தத்தையோ திடீரெனத் தோற்றுவிக்கின்றன (Bursts of sound conveying meaning). ஒரு வாக்கியத்தின் உண்மையான அர்த்தம் அதன் தனித்தனி சொற்களைக் கூட்டுவதால் வருவதில்லை, மாறாக அது ஒட்டுமொத்தமாகவே மனதில் புலப்படுகிறது என்று அவர் வாதிடுகிறார்.  மொழியும் அறிவும்  பர்த்ருஹரியின் கூற்றுப்படி, “உலகில் மொழி வடிவம் இல்லாத அறிவு என்று எதுவுமே இல்லை”. மனிதர்களின் அனைத்து எண்ணங்களும், உலகத்தைப் பற்றிய புரிதல்களும் மொழியின் மூலமாகவே கட்டமைக்கப்படுகின்றன என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது.

***

வலன்  (वल).—(பலன் ) அசுரர்.

ரிக்வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அசுரர்களில் ஒருவன் . தேவர்களின் பசுக்களைத் திருடி குகைகளில் அடைத்துவைத்த இவனை இந்திரன் வஜ்ராயுதத்தால் கொன்றான் . இதற்கு தத்துவ விளக்கமும் உண்டு. உஷஸ் என்னும் ஒளி தேவதையை அசுரர் வலன் ஒளித்து வைக்கவே இந்திரன் அதை நீக்கினான்;   வலன் பற்றி அரவிந்தர் கூறியதாவது- இறைவனை அடைய முடியாது மனிதர்களை தடுக்கும் இருள் என்னும் அறியாமைதான் வலன்.

வேதங்களை மொழி பெயர்த்த வெளிநாட்டினர் இதை இயற்கை நிகழ்ச்சி என்றே கருதுகின்றனர் ; பசுக்களை குகையில் ஒளித்துவைத்தான் வலன், என்று எண்ணற்ற இடங்களில் ரிக் வேதம் சொல்கிறது ; இதை பசுக்கள் என்று எடுத்துக்கொள்ளாமல்,  திருமூலர் பசுக்களை எப்படிக் கையாள்கிறாரோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து; பார்ப்பான் அகத்திலே பாற் பசு ஐந்துண்டு என்பது ஐந்து புலன்கள் என்று திரு மூலர் உவமிக்கிறார் . பத்ம புராண பூமி காண்டத்தில் இவனைப்பற்றிய கதை வருகிறது  – வலன் , ஒரு நாள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட இந்திரன் அவன் மீது வஜ்ராயுதம் என்னும் இடி மின்னலைப் பாய்ச்சி அவனை வீழ்த்தினான் .

***

வால்மீகி கதை राम से बड़ा राम का नाम .

ராம் சே படா ராம் கா நாம்

“ராம் சே படா ராம் கா நாம்” (राम से बड़ा राम का नाम) என்பது புகழ்பெற்ற ஒரு இந்திப் பழமொழி ;. இதற்கு “ராமனை விட ராமனின் நாமமே (பெயரே) பெரியது” என்று பொருள்.இந்து மதக் கதைகளின்படி, இந்த வரிகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது:கடலைக் கடந்த அனுமன்: ராமபிரான் சீதையை மீட்பதற்காக இலங்கைக்குச் செல்ல கடலில் பாலம் கட்ட வேண்டியிருந்தது. அப்போது வானரங்கள் ‘ராம்’ என்ற திருநாமத்தை கல்லில் எழுதி தண்ணீரில் போட்டபோது, அந்தப் பாறைகள் நீரில் மிதந்தன. ஆனால், ராமரே ஒரு கல்லை எடுத்துப் போட்டபோது அது நீரில் மூழ்கியது. இதன் மூலம் ராமரின் சக்தியை விட அவரது பெயருக்கு அதிக சக்தி இருப்பது உலகிற்கு உணர்த்தப்பட்டது. ராமபிரானால் நேரடியாக சிலருக்கு மட்டுமே உதவ முடிந்தது. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகும் இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்கள் “ராம” நாமத்தை உச்சரிப்பதன் மூலம் தங்களின் இன்னல்களிலிருந்து விடுபட்டு அமைதி பெறுகிறார்கள்.

மிக முக்கியமான ஒரு விஷயம் ராமாயணத்திலேயே வருகிறது ;அதாவது வேடனாக வாழ்க்கை நடத்திய வால்மீகிக்கு ராம என்ற நாமத்தைச் சொல்ல  தெரியவில்லை. மரா,  மரா என்று நாரதர் உபதேசிக்கிறார் . அவன் முனிவர் ஆகி நமக்கு உலகப் புகழ்பெற்ற , காலத்தால் அழிக்க முடியாத ராமாயணத்தைக் கொடுத்தார் ; இதிலுள்ள மிகப்பெரிய உண்மை, ராமன் பிறப்பதற்கு முன்னரே ராம நாமம் துவங்கிவிட்டது பின்னர்தான் நமக்கு ராமாயணம் என்னும் நூல் கிடைத்தது ; இந்த சொல்லுக்கு உள்ள மந்திர சக்தியை வைத்தே வசிஷ்ட முனிவர் கெளசல்யா  தேவியின் குழந்தைக்கு ராம என்ற நாமத்தைச் சூட்டினார்.

வால்மீகி மர்மம்

சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய பகுதி புறநானூறு. இதில் 358–ஆவது பாடலை இயற்றியவர் வால்மீகி (வன்மீகனார், வான்மீகனார் என்று எழுதப்பட்டுள்ளது). யார் இந்த வால்மீகி என்று தெரியாமலேயே இருந்தது. இவரும் உலகப் புகழ்பெற்ற ராமாயணப் புகழ் வால்மீகி போலவே தவத்தின் பெருமையைப் பாடி இருக்கிறார். துறவறமே பெரிது, இல்லறம் அதற்குப் பக்கத்தில் கூட வரமுடியாது. யார் வேண்டாம் என்று சொல்லி ஒதுங்குவார்களோ அவளிடம் தான் லெட்சுமி தேவி ஒட்டிக்கொள்வாள். யார் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்கள் மீது லெட்சுமி தேவிக்குப் பற்று இராது. உலகம் நிலயற்றது. ஒரே நாளில் ஏழு மன்னர்களைக் கண்டது இந்த உலகம் என்று தத்துவ விஷயங்களைக் கூறியுள்ளார். இவர் ராமாயண வால்மீகியாக இருக்கலாம் என்று கூட சில அறிஞர்கள் கருதினர். அனால் உண்மையில் வால்மீகி என்பது ஒரு கோத்திரப் பெயர்.

வால்மீகி கோத்திரத்தில் பிறந்த எல்லோரும் அப்பெயரைவைத்துக் கொள்ளமுடியும். இது போதாயன ஸ்ரௌத சூத்திரத்தில் உள்ளதை பி.எல்.பார்கவா எழுதிய ‘’புராணத்தில் வரலாற்றுச் செய்திகள்’’ என்ற நூலில் எழுதியிருக்கிறார். கீழே ஆங்கிலப் பகுதியில்  இருப்பது அவருடைய வாசகம்: 

The following note was copied by me on 5th May 2002 from the book ‘’Retrieval of History from Puranic Myths’’ by P.L.Bhargava (available at SOAS LiBrary, University of London): 

Pravaradhyaya of the ancient Baudhayana Srauta Sutra (800 to 400 BC) mentions Valmiki as a Gotra in the Vatsa Paksha of the family of Bhrgu. This name thus could be borne by other persons of this gotra and this is proved by tha fact that we learn from the Taitriya Pratisakhya of a Phoenician Valmiki who was different from the famous poet Valmiki.’’

 ராமாயணம் எழுதிய வால்மீகி கொள்ளைக்காரனாக இருந்து—முனிவராகவும், உலக மஹா கவிஞராகவும் மாறினார். அவர் ராம ராம என்று செபித்து தவம் செய்த காலத்தில் அவர் மீது புற்று வளர்ந்தது. கறையான் புற்றுக்கு வன்மீகம் என்று சம்ஸ்கிருதத்தில் பெயர். அதன் காரணமாக அவர் வால்மீகி என்று பெயர் பெற்றார். ஆனால் புறநானூற்று வால்மீகி அவர் பிறந்த குலம், கோத்திரம் காரணமாகப் பெயர் பெற்றார்.

 பிற்காலத்தில் பல முனிவர்களும் சித்தர்களும் இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர்கள் எழுதிய பாடல்களே அவர்களைப் பிற்காலத்தியவர் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வன்மீகநாதர் சந்நிதியும், திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வன்மீகர் என்பது எவ்வளவு பொதுவாகப் புழங்கப்பட்ட பெயர்கள் என்பதற்குச் சான்று பகரும். ஒருவேளை ராமாயண வால்மீகியின் மீது அன்பு கொண்டு அவர் பெயரையே பலரும் சூட்டிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சோகம் மாறி ஸ்லோகம் பிறந்தது

வால்மீகி தன் இளமைப் பருவத்தில் ரத்னாகரர் என்ற பெயருடன் காடுகளில் வழிப்பறிக் கொள்ளை அடிக்கும் வாழ்க்கை வாழ்ந்தார்.

நாரதரின் கேள்வி: ஒருமுறை நாரத முனிவர் அங்கு வந்தார். அவரிடம் ரத்னாகரர் சிக்கினார். நாரதர் அவரிடம், “நீ செய்யும் பாவங்களுக்காக உன்னுடைய குடும்பத்தினர் உன்னுடன் பங்கு பெற்றுக்கொள்வார்களா?” என்று கேட்டார்.ரத்னாகரர் தன் மனைவியையும் குடும்பத்தினரையும் கேட்டபோது, “உன் பாவத்திற்கு நாங்க பொறுப்பல்ல” என்று அவர்கள் கூறினர். இதனால் மனம் மாறிய ரத்னாகரர் நாரதரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நாரதர் அவருக்கு ‘ராம’ நாமத்தை உச்சரிக்க உபதேசித்தார். ரத்னாகரர் முழுமையான தியானத்தில் ஆழ்ந்து பல ஆண்டுகள் ராம நாமத்தை জபித்தார்.  அவரைச் சுற்றிலும் கறையான்கள் புற்று மூடிக்கொண்டன.மறுபிறப்பு: புற்றிலிருந்து (வால்மீகம் என்றால் புற்று) வெளிப்பட்டதால் அவர் ‘வால்மீகி’ என்று அழைக்கப்பட்டார்.

 ஒருநாள் தமஸா நதிக்கரையில் குளிக்கச் சென்றபோது, வேடன் ஒருவன் அம்பால் வீழ்த்திய இணைப் பறவைகளில் ஒன்று வீழ்ந்து இறக்க, மற்றொரு பறவை துயரத்தால் அலறியதைக் கண்டார்.அந்தத் துயரம் வால்மீகியின் நாவில் ஒரு சாபக் கவிதையாக இசை வடிவில் வெளிப்பட்டது. அங்கு தோன்றிய பிரம்ம தேவன்,  ஸ்ரீராமரின் வரலாற்றை இராமாயணம் என்ற காவியமாக எழுதும்படியும் வால்மீகியை ஆசீர்வதித்தார்.உலகில் மலைகளும் நதிகளும் எதுவரைக்கும் இருக்குமோ அது வரைக்கும் ராமாயணக் கதை உலகங்களில் விளங்கப் போகிறது என்று ஆசீர்வதித்தார் பிரம்மா.

யாவத் ஸ்தாஸ்வந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே I

தாவத் ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், முப்பத்தியேழாம் ஸ்லோகம்

பூமி உள்ளவரை ராமாயணம் ஒலிக்கும்!!!

ராமாயணம் தோன்றக் காரணமாக அமைந்ததே ஒரு சிலேடை ஸ்லோகத்தால் தான்!

இனிமையான குரலுடைய இரண்டு க்ரௌஞ்ச பக்ஷிகளுடைய ஆண்,பெண் ஜோடியை குரூரங்களுக்கு இருப்பிடமான ஒரு வேடன் பார்த்தான்.அதில் ஆண் பறவையைக் கொன்றான்.பெண் பறவை கீழே தள்ளப்பட்டு பூமியில் புரளுகிற ரத்தத்தினால் பூசப்பட்ட சரீரமுடைய தன் ஜோடிப் பறவையைப் பார்த்து பரிதபிக்கத்தக்க புலம்பலைப் புலம்பிற்று. அந்தப் பறவையைப் பார்த்த தர்மாத்மாவான வால்மீகி முனிவருக்குக் கருணை உண்டாயிற்று. அவர் ‘இது அதர்மம்’ என்று ஒரு வசனத்தைக் கூறினார்:

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

நிஷாத – வேடா! க்ரௌஞ்சமிதுனா – க்ரௌஞ்ச மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் மயங்கி இருந்த ஏகம் – ஒன்றை அவதீ: – கொன்றாய் தத் ஸ்வே – அதனால் நீ ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – இருப்பை மா அகம::-அடைய மாட்டாய்

இதைச் சற்று சிந்தித்த அவருக்கு இதே வசனத்திற்கு வேறு ஒரு பொருள் தோன்றியது!

மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: ஷாஸ்வதீ: சமா:I

யத்க்ரௌஞ்சமிதுனாதேகமவதீ: காமமோஹிதம் II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினான்காம் ஸ்லோகம்

மாநிஷாத – ஸ்ரீனிவாஸ! க்ரௌஞ்சமிதுனாத் – ராக்ஷஸ மிதுனத்தில் காம மோஹிதம் – காமத்தால் புத்தி கெட்ட ஏகம் – ஒருவனை அவதீ: – கொன்றீர்; யத் ஸ்வே – அதனால் நீர் ஷாஸ்வதீ: – நீடித்த சமா -ஆண்டுகளில் ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை மா அகம::-அடைந்தீராக!

ஆக இந்த ஸ்லோகமே இரு அர்த்தம் கொண்ட ச்லேடை ஸ்லோகமாக ஆனது!

சற்று சிந்தித்த அவருக்கு ஒரு அதிசயம் விளங்கியது!

பாதபத்தோக்ஷரசமஸ்தந்த்ரிலயசமன்வித: I

ஷோகார்தஸ்ய ப்ரவ்ருத்தோ மே ஸ்லோகோ பவது நான்யதா II

– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம், பதினேழாம் ஸ்லோகம்

சோகார்தஸ்ய – சோகத்தால் பீடிக்கப்பட்ட மே – என்னிடமிருந்து ப்ரவ்ருத்த – உண்டானதும் பாதபத்த: – பாதங்களோடமைந்த அக்ஷரசம: – எழுத்தொத்த தந்த்ரிலயசமன்வித: – வீணைத் தந்தியில் தாள லயத்தோடு கூடினது ஸ்லோக: – ஸ்லோகம் என்ற பெயர் உடையதாகவே பவது – இருக்கட்டும் அன்யதா ந – வேறு விதமாக இல்லை.

தானே தாள லயத்துடனும் அற்புதமான அர்த்தத்துடனும், பொருத்தமான சந்தத்துடனும் அமைந்த அந்தச் செய்யுளுக்கு ஸ்லோகம் என்று அவர் பெயர் தந்தார். இப்படியாகத் தான் சங்கீத லயமும் அர்த்தமும் சந்தமும் உள்ள ராமாயணம் உதயமாயிற்று!

Tags- வாசஸ்பதி மிஸ்ரா, பாமதி, .HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL , இந்து மத கலைச்சொல் அகராதி-114, வால்மீகி கதை

–subham

விநாயகரின் 32 திருநாமங்களும் திருத்தலங்களும்! (Post.16,196)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,196

Date uploaded in London – 14 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

14-9-2026 விநாயக சதுர்த்தி – சிறப்புக் கட்டுரை!

விநாயகரின் 32 திருநாமங்களும் திருத்தலங்களும்! 

ச. நாகராஜன்

எந்த வழிபாட்டிற்கும் தொடக்கம் விநாயகர் வழிபாடு தான்.

விநாயகர் பட்டிதொட்டிகளிலெல்லாம் இருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற பழமொழி அவரது வழிபாட்டில் உள்ள எளிமையைக் காண்பிக்கிறது.

கணபதி பூஜை கை மேல் பலன் என்பது இன்னொரு பழமொழி. இது வழிபாட்டின் உடனடி பலனைக் குறிக்கிறது.

பிள்ளையாருக்கு 32 திருநாமங்கள் உண்டு.

அவையாவன:

1)      பால கணபதி

2)      தருண கணபதி\

3)      பக்தி கணபதி

4)      வீர கணபதி

5)      சக்தி கணபதி

6)      துவிஜ கணபதி

7)      சித்தி கணபதி

8)      உச்சிஷ்ட கணபதி

9)      விக்ன கணபதி

10)   க்ஷிப்ர கணபதி

11)   ஏரம்ப கணபதி

12)   லட்சுமி கணபதி

13)   மஹா கணபதி

14)   விஜய கணபதி

15)   நிருத்த கணபதி

16)   ஊர்த்துவ கணபதி

17)   ஏகாட்சர கணபதி

18)   வர கணபதி

19)   திரயாட்சர கணபதி

20)   க்ஷிப்ரப்ரசாத கணபதி

21)   ஹரித்ரா கணபதி

22)   ஏகதந்த கணபதி

23)   சிருஷ்டி கணபதி

24)   உத்தண்ட கணபதி

25)   ரணமோசன கணபதி

26)   துண்டி கணபதி

27)   துவிமுக கணபதி

28)   மும்முக கணபதி

29)   சிங்கமுக கணபதி

30)   யோக கணபதி

31)   துர்க்கா கணபதி

32)   சங்கடஹர கணபதி

பிள்ளையாரின் திருவிளையாடல்கள் அற்புதமானவை.

திருநாரையூரில் இருந்து அருள் பாலிப்பவர் பொல்லாப் பிள்ளையார்.

சிதம்பரத்திற்கு மேற்கே அமைந்துள்ள தலம் இது.

இதில் ஆதிசைவர் மரபில் நம்பியாண்டார் நம்பி என்ற பக்தர் ஒருவர் தோன்றினார். அவரது தந்தையார் பிள்ளையார் கோவில் அர்ச்சகர்.

ஒரு நாள் வேலை நிமித்தமாக அவர் அயலூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே சிறுவனான தன் மகனை அழைத்து நைவேத்யம் செய்யக் கூறினார்.

நைவேத்யத்தைப் படைத்த நம்பி அது அப்படியே இருக்கக் கண்டு அழத் தொடங்கினார். விநாயகரை உண்ணுமாறு வேண்ட அவரும் அருள் பாலித்து நைவேத்யத்தை உண்டார். பின்னர் நம்பிக்கு அவர் அருளால் கவிதா திறம் தோன்றியது. விநாயகர் மீது பல பாடல்களைப் புனைந்தார். அவரது அருளால் திருமுறைகள் இருக்கும் இடம் தெரிந்து அவற்றை எடுத்து உலகுக்கு அளித்தார்.

இப்படி விநாயகரின் திருவிளையாடல்கள் தலம் தோறும் உண்டு;

ஒவ்வொரு தலத்திலும் பிள்ளையாருக்குச் சிறப்புப் பெயர் உண்டு.

சில தலங்களும் அங்குள்ள பெயர்களையும் காணலாம்:

திருவாவடுதுறை : துணைவந்த விநாயகர், அழகிய விநாயகர், சிவப்பிரகாச விநாயகர்,

திருநறையூர்ச் சித்திச்சுரம் : திருவிடைமருதூர் : ஆண்ட விநாயகர்.

திருவையாறு : ஆதி விநாயகர்.

விருத்தாசலம் : ஆழத்துப் பிள்ளையார்

திருச்சிராப்பள்ளி : உச்சிப் பிள்ளையார்

குமாரவயலூர் : பொய்யாக் கணபதி

குடந்தைக் கீழ்க்கோட்டம் : கங்கை கணபதி

திருக்காறாயில் : கடுக்காய் விநாயகர்.

திருக்கச்சூர் : தாலமூல விநாயகர், சருக்கடி விநாயகர்.

திருக்கடவூர் : கள்ளவாரணப் பிள்ளையார்

கடிக்குளம், திருக்கருகாவூர், சிதம்பரம் : கற்பக விநாயகர்.

திருமுருகன்பூண்டி : கூப்பிடு விநாயகர்.

திருநாட்டியத்தான் குடி: கைகாட்டி விநாயகர்.

திருக்கொட்டையூர் : கோடி விநாயகர்.

திருமறைக்காடு : சிந்தாமணி விநாயகர், வீரசத்தி விநாயகர்.

கீழ்வேளூர், திருமழபாடி : சுந்தர கணபதி

திரு உசாத்தானம் : சூதவனப் பிள்ளையார்

அன்பிலாந்துறை : செவி சாய்த்த விநாயகர்

திருநள்ளாறு : சொர்ண விநாயகர்.

சிதம்பரம் : திருமுறை காட்டிய விநாயகர்,  கற்பகப் பிள்ளையார், க்ஷேத்ரபாலப் பிள்ளையார், முக்குறுணி விநாயகர், முகக் கட்டண விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், நரமுக விநாயகர்.

திருப்பனையூர் : துணையிருந்த விநாயகர்.

நாகப்பட்டினம் : மாவடிப் பிள்ளையார், நாகாபரணப் பிள்ளையார், பஞ்சமுக விநாயகர்.

திரு இன்னம்பர் : நிருத்தன விநாயகர்.

திருவீழிமலை : படிக்காசு விநாயகர்.

திருப்புறம்பயம் : தேன் விநாயகர், பிரளயங்காத்த பிள்ளையார்

திருமாகறல் : பொய்யா விநாயகர்.

சீகாழி : ஆபத்துக் காத்த விநாயகர்.

திருநாரையூர், திருவெண்ணெய்நல்லூர் : பொல்லாப் பிள்ளையார்

அம்பல் : சுட்டு விநாயகர்.

திருவாரூர் : மாற்றுரைத்த விநாயகர், வாதாபி விநாயகர்

மதுரை : சித்தி விநாயகர், முக்குறுணிப் பிள்ளையார்

வல்லம் : வரசித்தி விநாயகர்.

திருக்களர், காஞ்சீபுரம், அத்திகிரி : வலம்புரி விநாயகர்.

திருப்புகலூர், திருச்செங்காட்டங்குடி, திருவாரூர் : வாதாபி விநாயகர்.

காஞ்சீபுரம் : விகடச் சக்கர விநாயகர்.

திருவலஞ்சுழி : வெள்ளை விநாயகர்.

திருவேதிகுடி : வேதப் பிள்ளையார்

திருநல்லூர் : சாளக்கிராம விநாயகர்.

திருந்துதேவன் குடி : கர்க்கடக விநாயகர்.

மயூரபுரம் : மயூரேச விநாயகர்.

காசி : துண்டி விநாயகர்.

காளத்தி : மஞ்சந்தி விநாயகர்.

திருச்செந்தூர் : தூண்டுகை விநாயகர்.

திருக்கோகர்ணம் : மகா கணபதி

செல்வக் கதிர்காமம் : மகா கணபதி

திருநெல்வேலி : பொல்லாப் பிள்ளையார், முக்குறுணிப் பிள்ளையார், திருப்பணி விநாயகர். கற்பக விநாயகர், அக்கசாலை விநாயகர், வெள்ளந்தாங்கி விநாயகர், வினைதீர்த்த விநாயகர், அன்னதான விநாயகர்.

இந்தத் தலங்கள் ஒவ்வொன்றிலும் விசேஷமான திருவிளையாடல்களை விநாயகர் நிகழ்த்தி இருப்பதை அந்தந்தத் தல வரலாறு மூலமாகக் காணலாம்.

விநாயகரை வழிபட்டால் :

திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்; செஞ்சொற்

பெருவாக்கும்: பீடும் பெருக்கும் – உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர் தம் கை.        – கபில தேவ நாயனார்

*** 

பல்லவர் செப்பேடுகள் பற்றி மூன்றாவது 10 கேள்விகள் (Post.16,195)

Written by London Swaminathan

Post No. 16,195

Date uploaded in London – 13 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கடந்த இரண்டு நாட்களில் இருபது கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்

21

கும்பகோணத்துக்கு அருகில் தண்டம்தோட்டம் என்ற இடத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் பிராமணர்கள் பற்றி சொல்லும் செய்திகள் என்ன ?

22

எத்தனை கோத்திரங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன ?

23

பட்டத்தாள்மங்கலம் அல்லது கொற்றங்குடி செப்பேடுகள் சொல்லும் அதிசயச் செய்திகள் என்ன ?

24

பல்லவர் செப்பேடுகளில் காணப்படும் ஆணி எழுத்தின் பொருள் என்ன ?

25

உருவப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் எழுத்துக்களுக்கு பெட்டித் தலை எழுத்து  என்ற பெயர்  ஏன் வந்தது?

26

சோழனுக்குப் புலி, பாண்டியனுக்கு மீன், சேரனுக்கு வில், பல்லவனுக்கு என்ன சின்னம் ?

27

வாதாபி கொண்டான் என்ற பல்லவ மன்னன் யார் ?அவருக்கு படைத்தைவராக இருந்து புகழ்பெற்றவர் யார் ?

28

பல்லவரின் கொடி என்ன கொடி?

29

பல்லவர்களைத் திட்டும், வசை பாடும் நிகண்டு எது?

30

அஸ்வமேத யாகம் செய்த பல்லவ மன்னன் யார் ?

***********************

விடைகள்

21.தண்டம்தோட்டம் (அல்லது தண்டந்தோட்டம்) என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செப்பேடுகள் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்ம பல்லவ மல்லனின் (கி.பி. 731–796) ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். கும்பகோணம் அருகே உள்ள ஒரு சிவன் கோயிலில் இந்தச் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன. சாசனத்தில் உள்ள 222 வரிகளில் முதல் 26 வரிகள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன ; இடையிடையே சில ஏடுகள் காணவில்லை .308 பிராமணர்களுக்கு அந்தக் கிராம ம் தானமாக  வழங்கப்பட்டது.அதில் 244 பேரின் பெயர்களும் அவர்களின்கோத்திரங்களும்  சூத்திரங்களும் சொல்லப்பட்டுள்ளன . பிராமணர் வரலாற்றினை அறிய முக்கியத் தகவல்களை அளிக்கும் செப்பேடு இது.

***

22.செப்பேட்டில் வரும் பிராமண கோத்திரங்கள் :- காஸ்யப , கெளதம, ஆத்ரேய, அக்நிவேசியா, பாரத்வாஜ, வத்ச, முதுகல, ரத்தீதர, காமிக, வாதூல, லோஹிதா, கெளசிக, சாலவாத, குத்ச, வசிஷ்ட, சாவர்ணி , பராசர, வாராகிய, கபி, தூம்ராயான, பவுருகுத்ச, சாம்க்ரிஷி , ஹரித, மாத்தர, கார்க , பாதரணி  கோத்திரங்கள் .

சூத்ரங்களைப் பொருத்த மட்டில் ஆபஸ்தம்ப சூத்ரமே அதிகம் . பிரவச்சன, ஹிரண்யகேசி, சந்தோக சூத்திரங்களும் கூறப்பட்டுள்ளன . இவைகளை விட அதிசயமான தகவல்கள் அவர்களுடைய  ஊர்களும் பிராமணர்களின் பெயர்களும் ஆகும் .

***

23.கரிகாலனும் நெடுஞ்செழியனும் திருவிளையாடல் புராணம் சொல்லும் ஒரு பாண்டியனும் சிறுவயதில் மன்னர் பதவியை ஏற்று வெற்றி வாகை சூடியதை அறிவோம். நந்தி வர்ம பல்லவன் 12 வயதில் முடி சூட்டினான் என்ற அதிசயச்செய்தி இந்த செப்பேட்டில் உள்ளது, அவன் 61 ஆவது ஆண்டில் இந்த சாசனத்தை வெளியிட்டான்! இது மன்னரின்  வயதானால் ஆச் ச ரியப்பட்ட எதுவும் இல்லை; ஆனால் அவனது 61 ஆவது ஆட்சி ஆண்டு என்றால் அது பெரிய அதிசயமே. தண்டம்தோட்டம் செப்பேடுகள்  நந்திவர்மனின் 58-வது ஆட்சியாண்டில் (சுமார் கி.பி. 790 இல்) வெளியிடப்பட்டவை. அவனும் 58 ஆண்டுகள் ஆண்டது குறிப்பிடத்தக்கது . இது போல நீண்ட ஆண்டுகள், பதிற்றுப்பத்தின் பதிகங்களிலும் உள்ளது. இவை ஆராயப்படவேண்டிய விஷயம் சில நேரங்களில் தந்தை உயிருடன் உள்ள போதே மகனுக்கும் பட்டாபிஷேகம் செய்வதால் இப்படி நிகழவும் வாய்ப்பு உள்ளது. பரத்வாஜ முனிவரிடமிருந்து துரோணர் தோன்றினார்; அவருடைய மகனான அச்வத்தாமனிடமிருந்து பல்லவன் தோன்றினான் என்ற செய்திஇந்த செப்பேட்டில் உள்ளது மிக முக்கியமானது. அப்படியானால் பல்லவ மன்னர்கள் பிராமணர்ககள்! பிற்கால பல்லவர் கல்வெட்டுகள் பல்லவர்களின் கோத்ரம் பாரத்வாஜ கோத்ரம் என்று செப்புவதும் ஆராய்ச்சிக்குரிய விஷயம் ஆகும் !

***

24. ஆந்திராவில் குண்டூர் ஜில்லா நெலட்டூர் கிராமத்தில் ஒரு பைராகியிடமிருந்த செப்பேடு அவர் இறந்த பின்னர் அது சென்னை மியூசியத்துக்கு வந்து சேர்ந்தது;  இதை சிம்மவர்மனுடைய பீகிரச் செப்பேடுகள் என்று சொல்லுவார்கள்; சாசனம் ஆணித் தலையெழுத்து என்று சொல்லப்படும் ஒருவகை எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது ; ஒவ்வொரு எழுத்தின் தலையிலும் வட்டமாகச் சிறிய குண்டு போன்ற தலைக்கட்டு காணப்படுகிறது . உருவப்பள்ளி, மங்களூர்ச் சாசனங்கள் எழுத்துக்களோடு  இந்த எழுத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் . பல்லவ வம்சத்து மஹாராஜா சிம்மவர்மன் பீகிர  என்னும் கிராமத்தை காசியப கோத்திர தைத்ரீய சாகை விலாச சர்மனுக்கு தானம் செய்ததைத் தெரிவிக்கும் சாசனம் இது.

***

25.உருவப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் எழுத்துக்கள்  பீகிரம், மங்களூர்ச் சாசன எழுத்துக்களையே ஒத்திருக்கிறது; ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் எழுத்தின் தலைக்கட்டு நான்கு கோடுகளால் ஆன மிகச் சிறிய உருவில் ஆன ஒரு சதுரமாக உள்ளது ; அதன் நடுப்பாகம் தோண்டி எடுக்கப்பட வில்லை இந்த வகை எழுத்துக்களைப் பெட்டித் தலை எழுத்து என்று சொல்வார்கள் ; யுவ மகாராஜன் விஷ்ணுகோப வர்மன் அளித்த தானத்தைச் சொல்லும் சாசனம் இது.

***

26.பல்லவர்கள் நந்தியைக் காளை/ ரிஷப மாட்டினைச் சின்னமாக வைத்துக்கொண்டதை நாணயங்கள் முத்திரைகளை மூலம் அறிகிறோம்.

***

27.மகேந்திர வர்ம பல்லவனின் மகன் முதலாம் நரசிம்ம வர்மன்—630 CE– வாதாபி நகரை வெற்றிகொண்டதால் இந்தப் பட்டம் உடையவன் என்பதைக் கூரம் செப்பேடுகளால் அறியலாம் 

பரஞ்சோதி முனிவர் அவனுடைய படைத்த தலைவர் ஆவார் ; இவரே பிற்காலத்தில் முழுநேர ஆன்மீகத்தில் ஈடுபட்டு சிறுத்தொண்ட  நாயனார் ஆனார் . வாதாபியிலுருந்து இவர் கணபதி சிலையைக் கொண்டுவந்ததாகவும் சொல்வார்கள்; வாதாபி / பாதாமி என்னும் நகரம் சாளுக்கிய மன்னர்களின் தலை நகரம் ஆகும் .

***

28.திருமங்கை ஆழ்வாரின் பாசுரப்படி பல்லவர்களின் கொடியில் பாம்பு இருந்ததை அறிகிறோம்.ஒரு நாக கன்னிகையை பல்லவர்களின் மூதாதையர் மணந்தது குறிப்பிடத் தக்கது;  துரியோதனனுக்கும் பாம்புக்கொடிதான். பாரதியார் பாடிய பாஞ்சாலி சபதத்திலும், துரியோதனனைப் பாம்புக் கொடியுடையன் என்று குறிப்பிடுகிறார்   .

தேம்பொழில் குன்றையில் தென்னவனைத்

திசைப்பதிச் செருமேல் வியந்து அன்று சென்ற

பாம்புடைப் பல்லவர்கோன்  பணிந்த

பரமேச்சுர விண்ணகரம் அதுவே – திருமங்கை ஆழ்வார் 

***

29.பிங்கலந்தை நிகண்டு, பல்லவர்களை கயவர், படகர், நீசர் என்று வசைபாடுகிறது

***

30.சிவஸ்கந்த  வர்மன் என்ற பல்லவ  மன்னன் வழங்கிய ஹீரஹட கள்ளிச் செப்பேடுகள் , அவன் செய்த அஸ்வமேதம் வாஜபேயம், அக்னிஷ்டோமம் ஆகிய யாகங்களைக் குறிப்பிடுகிறது.

Tags- பல்லவர் செப்பேடுகள், மூன்றாவது 10 கேள்விகள்

–Subham-

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 113; இந்து மத கலைச்சொல் அகராதி-113 (Post.16,194)

Written by London Swaminathan

Post No. 16,194

Date uploaded in London – 13 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Words beginning with letter V

***

Vachaspati Mishra

Vācaspati Miśra, c. 10th century CE, was a gṛhastha scholar from the Mithilā region in modern Bihar state (bordering Nepal). He was knowledgeable in several disciplines connected to the Dharma and is traditionally hailed as a sarva-tantra-svatantra.

The uniqueness of Vācaspati Miśra was his ability to write on almost every darśana with the perspective of an insider. This is perhaps unparalleled in the history of the Dharma. Perhaps his most well-known work is the Bhāmatī, an exposition of Adi Shankaracharya’s Brahmasūtra Bhāṣya.

Vācaspati Miśra is a colossus among the Indian philosophers. One of the great Maithila scholars of the period, Vācaspati Miśra came from a family of Mīmāṃsakas and made his fame as an authority on that topic, on which he says himself. He was, the teacher of Smārta Vardhamāna, author of Danḍaviveka.

Vācaspati Miśra’s family appears to have lived in several different villages of Mithila

Vācaspati Miśra has to his credit nine valuable treatises contributed to different orthodox systems of philosophy. On the basis of the internal evidences provided by these works, modern scholars arrange them in the following chronological order.[15]

1) Nyāyakaṇikā: This is a commentary on Vidhiviveka, a Bhāṭṭa Mīmāṃsā work of Maṇḍanamiśra.

2) Nyāyasūtroddhāra: This is a compilation of the Nyāyasūtra fixing the readings of the text of the sūtras.

3) Nyāyasūcīnibandha: This arranges the same Nyāyasūtra.

4) Nyāyavārtikatātparyaṭīkā: This work also known by its shorter and more popular name, ‘tātparyaṭīkā’, is an extensive commentary on the Nyāyavārtikā of Uddyotakara Bhāradvāja.

5) Tattvasamīkṣā: It is generally believed to be a commentary on the Brahmasiddhi of Maṇḍanamiśra. But it has been recently suggested that this is also an independent Mīmāṃsa treatise of Vācaspati Miśra. This work is lost.

6) Tattvabindu: This is also an independent Bhāṭṭa Mīmāṃsa treatise of Vācaspati Miśra.

7) Sāṅkhyatattvakaumudī: This work, known briefly as Tattvakaumudī, is a brilliant commentary on the famous Sāṅkhyakārikā of Īśvarakṛṣṇa.

8) Yogatattvavaiśāradī known also by its shorter title Tattvavaiśāradī: This work is a commentary on the Pātañjalayogasūtrabhāṣya of Vyāsa.

9) Bhāmatī: The full title of this work is perhaps Śārīrakabhāṣya bhāmatī. This is the earliest known exhaustive and complete commentary on the Brahmasūtraśāṅkara-bhāṣya.

It is interesting to note that in a verse in the epilogue of the Bhāmatī Vācaspati Miśra gives a full list of his own works arranged exactly in the above order suggested by the modern researchers. In the Indian tradition Vācaspati Miśra is again perhaps the first writer to give a complete list of his works, that too in a chronological order.

Date

1. Since Vācaspati Miśra refutes Bhāskara in his Bhāmatī, he must be 10th century at earliest.

2. Vācaspati Miśra quotes Dharmottara respectfully, so must have lived a century or so after him. Since Dharmottara is 9th century C.E, Vācaspati Miśra must be 10th century C.E.

***

Vaidehi

Vaidehi is an alternate name for Goddess Sita that means “princess or daughter of the Videha kingdom”.  Sita’s father, King Janaka, ruled the ancient kingdom of Videha. In ancient times, people often named princesses after their home kingdom. King Janaka was also called Videha because he lived free from worldly attachments. Because he was Videha, his daughter became Vaidehi.

***

Vaikuntha

Vaikuntha is the eternal celestial abode of the Hindu god Lord Vishnu and his consort Goddess Lakshmi.  The word Vaikuntha translates from Sanskrit as “a place without anxiety” (vai means without, and kuntha means anxiety or distress). It exists completely outside the temporary, material universe and is free from time, fear, birth, and death.It serves as the ultimate destination for pure devotees and liberated souls who achieve moksha (salvation). Scriptures describe the realm as self-illuminated by divine energy, featuring golden palaces, jewel-studded buildings, and lush hanging gardens.  Puranas and Vaishnava traditions often place Vaikuntha—also known as Vishnuloka or Param Padam—far above the material worlds in the direction of the Capricorn constellation (Makara rashi).

Vaikuntha Ekadashi is a sacred Hindu festival dedicated to Lord Vishnu, observed on the 11th lunar day of the waxing fortnight in the Tamil month of Margazhi (December–January). Devotees believe that the gateway to Lord Vishnu’s celestial abode (Vaikuntha) opens on this day, granting liberation (moksha) from the cycle of birth and death. Observing a fast on this single Ekadashi is considered equal in merit to fasting on all 23 other Ekadashis of the year. Mukkoti Ekadasi: Also known as Mukkoti Ekadasi, it is believed that three crore deities gather in Vaikunth during this auspicious occasion. The next Vaikuntha Ekadashi falls on Sunday, December 20, 2026.

***

Vajasneyi

Vajasaneyi is the name of the primary mantra collection (Samhita) of the Shukla Yajurveda and the school of Vedic study founded by the ancient sage Yajnavalkya.   It includes 40 chapters of verses and prayers used by priests during Vedic ritual sacrifices (yajna). The 40th chapter is the Isha Upanishad, a major philosophical text.

Vājasaneyī (वाजसनेयी).—(VĀJASANEYAS). A group of Priests. Priest Yājñavalkya was one of the disciples of Yajur Veda-group of Vyāsa. Of the line of disciples, Yājñavalkya had fifteen disciples. They were called Vājasaneyins or Vājasaneyas.

The Yajus—collection received from the god Sun were divided into fifteen groups by Yājñavalkya and given to each of his disciples. From that day onwards, his disciples became famous by the name Vājasaneyas. (Br. U 7-3-7).The name Vajasaneyi is derived from Vajasaneya, patronymic of sage Yajnavalkya, an authority and according to tradition, founder of the Vajasaneyi branch.

***

Vajra

Vajra (वज्र):—[from vaj] mn. ‘the hard or mighty one’, a thunderbolt that of Indra, said to have been formed out of the bones of the Ṛṣi Dadhīca or Dadhīci  and shaped like a circular discus, or in later times regarded as having the form of two transverse bolts crossing each other thus x; also applied to a thunderbolt in general or to the lightning evolved from the centrifugal energy of the circular th° of Indra when launched at a foe.

Vajra (वज्र):—It is mentioned in the Ṛgveda mostly as a weapon of Indra. It is suggested that it was originally made of stone and later of bone. a weapon shaped out of Dadhīci’s limbs by Viśvakarman for the use of Indra; with this Indra was able to break the back of the mountains. By this Vṛtra was slain. But it was of no use against Namuci.

Diamond is also called Vajra. It became Vairam in Tamil, because Brahmin women spoke Prakrit at home like women found in 2200 year old Kalidasa’s works. In other words, it is the spoken form of Sanskrit.

Vajra is the symbol of sacrifice; Dadhichi Rishi gave his own backbone to destroy the evil forces.

***

Vakyapadiya

The Vākyapadīya is an ancient Sanskrit masterpiece on the philosophy of language and grammar written by the poet-grammarian Bhartṛhari around the 5th century CE. The Vakyapadiya is an ancient Sanskrit text dealing with the philosophy of language. Bhartrhari authored this book in three parts and propounds his theory of Sphotavada (sphota-vada) which understands language as consisting of bursts of sounds conveying their meaning, as opposed to the theory of Varnavada (varna-vada) which states that language is interpreted as a combination of indivdual letters.Three Books (Trikāṇḍī): Divided into Book 1 (Brahma-kāṇḍa on the spiritual reality of the word), Book 2 (Vākya-kāṇḍa on the sentence), and Book 3 (Pada-kāṇḍa on individual words and meanings). Famous verses argue that all human knowledge and awareness are fundamentally intertwined with language.

***

Vala

Vala (वल).—(bala) An asura.

In the Rig Veda, Vala is a demonic rock enclosure or cave personified as an asura (demon) who traps the stolen morning light, dawn (Ushas), and radiant divine cows. Mention is made about this asura in many hymns in the Ṛgveda.

Translating to “enclosure” or “cave” in Vedic Sanskrit, Vala is described as the brother of Vrtra (the serpent of drought) and son of Tvashtr, sharing the root meaning of covering or blocking.

The god Indra—strengthened by drinking Soma and aided by divine allies like Brhaspati, Trita, and the Angiras (Angirasas) rishis—shatters Vala’s stone cavern to release the imprisoned cows (representing light rays and illumination) back to the world. While Indra typically uses his thunderbolt, certain hymns (such as RV 2.24) describe Brahmanaspati or Indra breaking open Vala using spiritual power, divine sound, and true prayer (brahman) rather than physical weapons. In esoteric and spiritual commentaries (such as those by Sri Aurobindo), Vala symbolizes the forces of darkness and the subconscious mind that block human perception from reaching the supreme truth. It is stated in Padma Purāṇa, Bhūmikhaṇḍa, how Indra killed this asura.

One day Vala went to the sea for his evening worship. Devendra saw the asura, shining with the radiance of celibacy and the divine rod and deer-hide, praying on the sea-shore. Instantly Indra cut him into two with his weapon, the thunderbolt. Vala fell down motionless

***

Valmiki

Valmiki was a Maharishi, a great saint, who portended the story of Lord Rama. He is regarded as the first poet in Sanskrit language and hence, also revered as Adi Kavi. He composed the first poem, RAMAYANA, wherein he brought himself into this epic.

Interestingly, after he repented for his sins, he was initiated by the Great Sage, Narada, to meditate on the name, “Rama”, with the purpose of bringing in balance and further Spiritual upliftment to become a Saint.

The First Verse in Sanskrit

Strangely enough, the words of the first shloka were curse words from the Maharishi. One day, as he was bathing in the river Ganges, he saw a crane (kraunch) couple mating. He was extremely happy and experienced bliss seeing the birds. Suddenly, the male bird was hit by an arrow, and died. The female bird screamed in pain and died immediately. Anger came upon Valmiki and he cursed the hunter in a haste. This spontaneous curse became the first verse in Sanskrit. The curse literally meant, “Oh hunter, may you not get rest for eons, for you killed a ‘Kraunch’ from the pair, when they were in so much bliss”. After calming down, when he looked upon the curse from a higher perspective, it sparked a vision to create a Mahakavya, which is known as Ramayana.

Valmiki’s Life before Transformation as a Saint

He is said to be a robber named Ratnakkardah in his early life. He lived in a forest and his wife and children were in a town nearby. Before that, he was a soldier and he used to kill soldiers who behaved brutally towards the women of those who lost the war. That made the king and other soldiers go against him. So, he had to escape from there. Later, he became a robber and lived in a forest.

One day as sage Narada passed through the forest, Ratnakkardah threatened to kill him, if he did not give away all the wealth that he had. Narada did not get afraid, and instead asked him why he was committing such a sin. Ratnakkardah did not consider this to be a sin and justified that he was robbing others of wealth in order to take care of his family. To this, Narada questioned if his family would be willing to share the sins that he was earning while using the money from such wrong doings? Ratnakkardah had never thought about this earlier. He tied Narada to a tree and hurried home to check with his family. His family disagreed to share his sins. They said that it was his responsibility to earn for them and that they had nothing to do with how he earned the money.

Suddenly, reality dawned upon him and he realized the negative entitlement that he was generating by his actions. He ran back to Narada and pleaded him to help and save him from all the sins that he had committed.

Narada was delighted at this change and initiated him to repeat the sacred name “Rama” with his mind and soul to get uplifted. As Ratnakkardah found it difficult to pronounce the word Rama, Narada suggested him to repeat the word “mara” instead. And slowly, he was able to chant the name “Rama”.

There are a few different versions of this story, but essentially, he was initiated to chant the mantra of “Rama”. With this immense tapas he became a great saint and came to be known as Valmiki (the one who came out of an ant hill, which was formed around him during the long intense tapas). He later went on to write the epic of Ramayana.

The “RAMA” Mantra

You can notice here that the mantra “Rama” was chanted even before Lord Rama was born. Hence, you can observe this indication in many bhajans as “Ram se bada Ram ka Naam”.

अंत में निकला ये परिणाम, ये परिणाम,

राम से बड़ा राम का नाम ..

Anth  mein  nikala   ye parinam  ,Ye parinam

Ram se  bada  Ram Ka nam

At the end emerged this result  , thus result

The name of  Rama is greater  than Rama

Tags- Vachaspati Mishra , Valmiki, Vala, Vajra, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 113; இந்து மத கலைச்சொல் அகராதி-113

To be continued…………………..

மாறி வரும் தொழில் யுகம்! போட்டியிட்டு முன்னேறுவது எப்படி? (Post.16,193)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,193

Date uploaded in London – 13 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

12-9-26 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை! 

மாறி வரும் தொழில் யுகம்! போட்டியிட்டு முன்னேறுவது எப்படி?

                       ச. நாகராஜன் 

மாறும் யுகம்! 

மாறிக்கொண்டே இருக்கும் வேக யுகத்தில் மாறாதது மாற்றம் ஒன்றே தான். 

இந்த மாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும்.

சில எடுத்துக்காட்டுகளை நினைத்தால் உண்மை புலப்படும்.

பழைய காலத்தில் போட்டோ ஸ்டுடியோவிற்குச் சென்று போட்டோ எடுத்தால், அடுத்த நாள் வெள்ளை- கறுப்பு நிறத்தில் நமது படம் கிடைக்கும். அதற்கான கட்டணமோ மிக அதிகம். பின்னர் ஒரே மணி நேரத்தில் வண்ணப் படத்தை ஒரே ஒரு ரூபாய் கொடுத்து ஸ்டுடியோவில் பெற்றோம். பின்னர் நாமே நமது மொபைலில் போட்டோ எடுத்து கண நேரத்தில் வாட்ஸ் ஆப் மூலமாக உலகெங்கும் அனுப்பலானோம்.

அடுத்ததாக, வழி விசாரித்து விசாரித்து நொந்து போய் சேர வேண்டிய இடத்திற்குத் தாமதமாகச் சேர்ந்த காலம் போய், கையில் கூகிள் மேப் இருக்க உல்லாசமாக சேரும் இடத்தைக் குறித்த நேரத்தில் இப்போது அடைகிறோம்.

சைக்கிள் காலம் போய் ட்ரோன் காலமாக இது ஆகி விட்டது.

கட்டுரை எழுத வேண்டுமா? கூகிளில் சில கருத்துகளைப் பதிவிட்டால்

அற்புதமாக மலர்கிறது ஒரு கட்டுரை!!

எழுதிய கட்டுரையை நல்ல குரலில் கேட்க வேண்டுமா? கூகிள் மூலம் அற்புதமாக ஒரே நிமிடத்தில் அதை நல்ல இனிய குரலில் கேட்க முடிகிறது.

மண்ணில் தான் இந்த முன்னேற்றம் என்றால் விண்ணிலும் முன்னேற்றம் உண்டு!

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் நடக்கும் சாடலைட் போட்டி பல விசித்திரங்களை நம் முன் காட்டுகிறது. தென் கொரியாவின் சாம் சங் சாடலைட் பாகங்களின் தயாரிப்பில் முன்னேறி அமெரிக்காவை அதிர வைக்கிறது.

வானமெங்கும் குறுங்கோளாக பவனி வரும் வைரக் குறுங்கோள்களை முதலில் பிடிப்பவர் பல நூறு ஆண்டுகள் பூமியில் முன்னணியில் இருப்பார்கள்.

பூமி அருகே சுற்றும் வைரக் கோள்களில் ஒன்றை யார் முதலில் பிடிக்கப் போகிறார்கள்? வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.

ஜப்பானிலோ இது ரொபாட் யுகம்.

ரொபாட்டுகள் வீட்டைச் சுத்தம் செய்கின்றன. உணவு விடுதிகளில் ஆர்டரை எடுத்து அவற்றை பரிமாறுகின்றன. பெரிய கட்டிடங்களின் காவல் பொறுப்பை மேற்கொள்கின்றன. இது மட்டுமா? மின்னணுக் கருவிகளில் இசையை இசைக்கின்றன; மருத்துவ மனைகளில் அனைத்து நர்ஸ் வேலைகளையும் பார்க்கின்றன!

கன்ஸ்யூமர் எனப்படும் நுகர்வோர் தமக்கு வேண்டிய பொருள்களை கடைக்குச் சென்று வாழும் முறை போய் பத்தே நிமிடங்களில் வீட்டு வாசலில் கேட்டது கிடைக்கும் நிலை வந்து விட்டது. பெரிய கடைகள் மூடப்பட்டு வருகின்றன!

ஆட்டோ ரிக்‌ஷாக்களில் முதல் சவாரி இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்து வியக்கும் போது இன்னொரு வண்டியில் முதல் மூன்று சவாரிகள் இலவசம் என்பதைப் பார்த்து மலைக்கிறோம்.

எங்கும் போட்டி; எதிலும் போட்டி!

இதற்கு காரணமாக முதலில் இருந்த கம்ப்யூட்டர் யுகம் போய் இப்போது செயற்கை நுண்ணறிவு என்னும் ஆர்டிஃபிஷியல் யுகம் வந்து விட்டது.

இந்த ஏ ஐ யுகத்தில் தொழிலை நடத்த முடியுமா?

முடியும்!

வெல்லும் வழி!

மக்கென்ஸியின் 2026ம் ஆண்டு அறிக்கையில் 100 சிறப்புக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இந்த நுண்ணறிவு யுகத்தில் இயந்திரத்தை  மனிதன் வெல்லும் வழிகளையும் படிக்க வேண்டிய புத்தகங்களின் விவரங்களையும் அதில் காணலாம்.

மனித மூளை நுட்பமானது. அது உணரும் சக்தி உள்ளது. நிலைமைக்கு ஏற்ப கண நேரத்தில் புதிய முடிவுகளை எடுக்க வல்லது. அவசர யுகத்தில் எதையும் சமாளிக்கும் ஆற்றல் கொண்டது.

இதை எந்தத் தொழிலும் ஈடுபடுத்தி வெற்றி பெற முடியும்!

மூன்று நிலைகளில் முன்னேற்றம்!

முதலில் சாதாரணமாக போட்டி மிகுந்த தொழில் துறையில் – அது எந்தத் தொழிலாகத் தான் இருக்கட்டுமே வெற்றி பெறவும், அதைத் தக்க வைக்கவும் மூன்று நிலைகள் உள்ளன.

முதலில் மற்றவர் ஓடும் ஓட்டத்தின் வேகத்தைக் கண்டுபிடித்து அதே வேகத்தில் ஓட வேண்டும். இது தங்கள் தொழிலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முதல் நிலை.

அதாவது முன்னணியில் இருப்போரின் செயல்முறை, கருவிகள், வழிமுறைகள், வேலைத் திறம், நிதி நிலைமை, தொடர்பு உத்திகள், விளம்பரம் உள்ளிட்டவற்றை கூர்ந்து கவனித்து அதன்படி நடந்து நம்மை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த நிலை ஓட்டத்தின் வேகத்தை நமது புத்திகூர்மையால் அதிகரித்து முன்னேற வேண்டும். இந்த இரண்டாவது நிலையை அடைய முழு உழைப்பும் நிபுணத்துவமும் வேண்டும்.

அடுத்த மூன்றாவது நிலை நம்மைப் பார்த்து மலைத்து நமது வேகத்திற்கு ஈடு கொடுத்து முன்னேற நினைக்கும் அல்லது முன்னேறி வருவோருக்கு ஒரு தடைக் கல்லை வைக்க வேண்டும். தகாத வழியில் அவர்களை முடக்க வேண்டும் என்பதல்ல இதன் பொருள். இதன் பொருள் என்னவெனில் மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாதபடி, யுக மாறுதலுக்கு ஏற்ப ஏற்படும் நவீன தொழில்நுட்ப உத்திகளை முதலில் கைக்கொள்ள வேண்டும்.

முதலில் கம்ப்யூட்டர், அடுத்து ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அடுத்து ரோபாட், அடுத்து விண்வெளி – என இப்படி மாறிக் கொண்டே இருக்கும் தொழில் யுகத்தில் மாறுதலுக்கு ஏற்ப முதலில் நாம் மாற வேண்டும்.

மளிகைக் கடை விற்பனையாக இருந்தாலும் சரி மாளிகை கட்டும் கட்டுமானத் தொழிலாக இருந்தாலும் சரி மாறி வரும் உத்திகளைக் கவனித்து அதைக் கடைப்பிடிப்பவரே இன்று தொழிலில் நிலை நிற்க முடியும்; லாபத்தைச் சம்பாதிக்க முடியும்!

சில துறைகளின் எடுத்துக்காட்டுகள்!

இப்படி நிலைமைக்கு ஏற்ப தம்மை மாற்றி கொண்டு முன்னேறி வந்துள்ள அமெரிக்க நிறுவனங்கள் நூறு உள்ளன.

அவை எப்படிப்பட்ட துறைகளில் முன்னேறி வருகின்றன? சில துறைகளைப் பார்ப்போம்; நமக்குத் தக அவற்றைக் கடைப்பிடித்து முன்னேறலாம்!

1)      உடல்நலப் பராமரிப்பு (ஹெல்த் கேர்) மற்றும் நிதி பற்றி உள்ள ஏஐ சாதனங்களைக் கொண்டு முன்னேறி வரும் நிறுவனங்கள்.

2)      டாக்ஸி சேவையில் செல்ஃப் டிரைவிங் எனப்படும் தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள்

3)      ட்ரோன் மூலம் டெலிவரி என்று எந்தப் பொருளையும் உடனுக்குடன் வீட்டில் விநியோகம் செய்யும் நிறுவனங்கள்

4)      மருத்துவ சிகிச்சையில் ஏராளமான ரொபாட்களை நர்ஸ் வேலைக்கு அமர்த்தும் மருத்துவ மனைகள்

5)      உணவு விடுதிகளில் பரிமாற ரொபாட்டுகளைக் கொண்டுள்ள உணவு விடுதிகள்

6)      திரைபடக்காட்சிகளை பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைத்து கோடிக் கணக்கில் பணத்தை அள்ளும் திரை தயாரிப்பு நிறுவனங்கள். இவற்றில் உள்ள ஸ்டண்ட் காட்சிகளைப் பார்த்து பிரமிக்கிறோம். ஆனால் இவற்றின் தொழில்நுட்பத்தை ‘உள்ளே நுழைந்து” பார்த்தால் பூ, இவ்வளவு தானா என்று நினைப்போம்.

7)      கோடிக்கணக்கான தகவல்களைப் பெற்று அலசி ஆராய்ந்து நமக்கு உகந்த தகவலைத் தரும் நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள்  மக்களின் மனப்பான்மையை அறிந்து தக்க வாசகங்களை அமைத்து தங்கள் பொருள்களை விளம்பரப்படுத்தி முன்னேறுகின்றன.

8)      எந்த இடத்திற்கும் நேரில் போகாமல் தொலைதூரத்தில் உள்ளோரையும் தொடர்பு கொண்டு காரியத்தைச் சாதிக்கும் நிறுவனங்கள். (ஜூம் மீட் உள்ளிட்டவற்றைச் சொல்லலாம்)

9)      தங்களை நன்கு விளம்பரப்படுத்தி இரண்டு லட்சம் பார்வையாளர்களைப் பெற்று பிரபலமாகும் நபர்களும் நிறுவனங்களும் இப்போது உண்டு. யூ டியூபர்களை நினவில் கொள்ளலாம்.

10)   ராணுவத்தில் போர்க்களத்தில் வீரர்கள் நேரில் போய் சண்டையிடாமல் இயந்திர வீரர்களை அனுப்பி வெற்றி பெறல். உளவுத் துறையில் முன்னேறுதல்.

11)   கழிவுப் பொருள்களைச் சேகரித்து மறு சுழற்சி செய்து கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள். கொலொரோடா நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு பத்து லட்சம் டன் கழிவுப் பொருளை சுத்திகரித்து மறு சுழற்சி செய்து கோடி கோடி டாலர்களை சம்பாதிக்கிறது.

12)   சந்தையில் உள்ள நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களுக்கு நலல நிறுவனங்களின் பங்குகளை வாங்க உதவி செய்யும் ஷேர் மார்க்கெட் நிறுவனங்கள்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் – வெற்றியாளர்களின் பட்டியலை.

முதலில் நாம் இருக்கும் நிலையை அலசி ஆராய்ந்து எதில் எப்படி முன்னேற வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

தகுந்தவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.

படிப்படியாக நமது உழைப்பால் முன்னேற வேண்டும். அத்துடன் அந்த முன்னேற்றத்திலும் காலத்திற்கேற்ற மாற்றங்களை முதலில் கடைப்பிடிப்பவராக ஆக வேண்டும்.

இதுவே இன்றைய தொழில் போட்டியில் தொழில் செய்ய நினைப்போர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை.

இதைச் சொல்லித் தரும் நல்ல நூல்கள் குறைந்த பட்சம் நூறு (ஆங்கிலத்தில்) வெளி வந்து விட்டன. முன்னேறும் மனமே தேவை.

மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

**

Nothing New from Valluvar! Tirukkural Encyclopaedia- Chapter 34- Impermanence of the world (Post.16,182)


Written by London Swaminathan

Post No. 16,182

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Go to Project Madurai website for all Tamil books; it is free and trouble free. No advertisements; no cookies!

****

Points to be remembered:

What is said by Valluvar in this chapter is already said in all the Hindu scriptures and Tamil and Sanskrit didactic literature. It is also in old film songs; impermanence of life is a favourite theme for Hindu poets.

But Valluvar used good similes:

1

World is a drama Theatre- Kural 332- is in Bhartruhari Niti Sataka, Viveka Chudamani of Adi Sankara, Shakespeare (Macbeth) and Hindu Upanishads, Epics and Puranas.

They used Puppet show.See Bhagavad Gita 18-61 (Yantra Arudani)

2

Death and Birth- Kural 339- = sleep and waking is in Bhagavda Gita 2-22; also Manu and Bhaja Govindam of Adi Sankara

3

Most important comparison will be Kural 336- Vyasa and Valluvar-

In the Questions of Yaksha/Ghost to Yuthisthira in Mahabharata , known as YAKSHA PRASNA- the last question is about the wonder in the world.

·  The Question (Yaksha): “What is the greatest wonder?”

·  The Answer (Yudhishthira): Day after day, countless living beings are sent to the realm of death, yet those who remain behind believe and desire to live forever. This complete denial and clinging to earthly life, despite witnessing death all around us, is the greatest wonder of all.

4

Kalidasa in Raghuvamsam says

मरणम् प्रकृतिः शरीरिणाम् विकृतिर्जीवितमुच्यते बुधैः|

क्षणमप्यवतिष्ठते श्वसन्यदि जन्तुर्ननु लाभवानसौ॥ ८-८७

maraṇam prakṛtiḥ śarīriṇām vikṛtirjīvitamucyate budhaiḥ|

kṣaṇamapyavatiṣṭhate śvasanyadi janturnanu lābhavānasau || 8-87

8-86. sharIriNAm maraNam prakR^itiH= for bodied beings, death, is a natural condition; jIvitam vikR^itiH= life, is an accidental condition; budhaiH uchyate= so say, wise people; [that being so] jantuH kShaNam api shvasan avatiShThate yadi= living being, for a moment, by breathing, remains [on earth], if; asau lAbhavAn nanu = that being, is a gainer, indeed.

Death is natural while life is accidental to mortals; if, therefore, a living being should remain breathing even for a moment on earth, still it is a gainer.

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Part 52- Kural Chapter 34 நிலையாமை – Instability; Impermanence of the world  

****

331.Is there any folly greater than the infatuation of a man who builds his faith in the passing empty shows as though they were beyond the pale of the ravages of time?- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

331.The base ignorance that mistakes the transient things of life,

As of permanent value, is really despicable- S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

331
Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise). Rev.Dr.GU Pope – GUP, Year 1886
***
331.The worst of follies it is told
The fleeting as lasting to hold-  Suddhananda Bharathiyar – SB 

***
331.Regarding the fleeting as permanent is ignorance and derogatory to the wise – EVS Publishers, Singapore – EVS, Year 1986

***

331.To think that things of time will last always,

Of follies all, the height of folly is- H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***

331.நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

332.The eager crowd that gathers to witness a village show stands as the symbol of the incoming tide of fortune; but its ebb is the melting away of the self-same crowd after the singing and dancing are over. – ANM+2

***

332.Great wealth is gradually accumulated like the audience tickling into  witness a show;

But its disappearance will be instantaneous, also as it happens after a show– SMD

***

332
As crowds round dancers fill the hall, is wealth’s increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly– GUP, Year 1886
***

332.Like a drama-crowd wealth gathers
Like passing show its pride too goes– SB 

***

332.Fortune coming to one and its departure are likened to the assembling crowd to witness a drama and its dispersal respectively– EVS

***

332.கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அருவிளிந் தற்று

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

333.Fickle is fortunes; therefore, if you come by a windfall, delay not to do acts that are of lasting good– ANM+2

***

333.All wealth is fleeting and so when one acquires wealth

It should be promptly spent on works of lasting value-– SMD

***

333
Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable. GUP,
***
333.Wealth wanes away; but when it comes
Take care to do enduring things.  – SB    

***  
333.Wealth is of a transitory nature. Therefore, one should seize the opportunity to do charity when one gets it– EVS

***

333.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

334.Time seems all smile and laughter, but verily it is a saw that ceaselessly saws away the life of man– ANM+2

***

334.The day itself shows as an entity, but in reality, it is just

The relentless movement of a saw, that cuts through life– SMD

***

334
As ‘day’ it vaunts itself; well understood, ’tis knife’,
That daily cuts away a portion from thy life.
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life. GUP,
***
334.The showy day is but a saw
Your life, know that, to file and gnaw.     – SB 

 ***

334.The day which measures time is comparable to a sword which, day by day, cuts short the life of man– EVS

***

334.நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்

வாள துணர்வார்ப் பெறின்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

335.Ere the tongue lies powerless and hiccough arises make your life  all compact with ehe numberless acts of kindness and of love– ANM+2

***

335.Long before the tongue falls and the last hiccup comes up

It is wise go for good deeds, without delay– SMD

***

335
Before the tongue lie powerless, ‘mid the gasp of gur gling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent. GUP,
***
335.Ere tongue benumbs and hiccough comes
Rise up to do good deeds betimes.     – SB 

***

335.Before the pangs of death approach and one loses the power of speech and gasps for death one should hasten to do charity– EVS

***

335.நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

மேற்சென்று செய்யாப் படும்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

336.Yesterday he was; and today he is not; such is glory of this wonderous earth! – ANM+2

***

336.The one, who was here yesterday, is no more today and

That is a matter of great wonderment, in this world– SMD

***

336
Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.
This world possesses the greatness that one who yesterday was is not today. GUP,
***
336.One was yesterday; not today!
The wonder of the world’s way!    – SB 

***   

336.The characteristic feature of the world is the transitoriness of life. The disappearance today of one who existed yesterday is a common occurrence – EVS

***

336.நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை யுடைத்திவ் வுலகு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

337. Man knows not what awaits him the next moment; yet he is a prey to numberless dreams and fancies– ANM+2

***

337.People who are sure of living the nest moment,

Indulge in daydreams and make millions of plans– SMD

***

337
Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment. GUP,
***
337.Man knows not his next moment
On crores of things he is intent.      – SB 

***

337.Man is uncertain of living the very next moment. Yet his ambitions are galore– EVS

***

337.ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப

கோடியு மல்ல பல.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

338.The new fledged bird abandons its own broken sell of egg and flies away into the dreamy blue; that is the mark and the symbol of the union that exists between the soul and the body

***

338.The nexus between soul and body is as between the fledgling bird

And its erstwhile nest, from which it flies away– SMD

***

338
Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty. GUP,
***
338.The soul from body any day
Like bird from egg-shell flies away.    – SB 

***   

338.The affinity of the body and the soul is like that of the egg and the chick within. The soul departs from the body even as the chick deserts the egg– EVS

***

338.The bird forsakes its shell and flies away

So fleeting is the bond of soul and flesh- H A Popley – HAP

***

338.குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

339.Death is akin to sleep; but life is just the waking from that sleep– ANM+2

***

339.Death is like sleep, and birth

Is the awakening from it– SMD

***

339
Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.
Death is like sleep; birth is like awaking from it. GUP,
***
339.Death is like a slumber deep
And birth like waking from that sleep.   – SB     

***

339.Death and Birth are like sleep and the waking state respectively– EVS

***

339.Death is like sinking into sleep

Birth is like waking after sleep- H A Popley – HAP

***

339.உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

340.The soul takes shelter in a fragile and decaying body; that is because she has not a home that she can claim as her own? – ANM+2

***

340.The soul, is, as it were, a passing guest in the body,

Without a permanent abode of its own– SMD

***

340
The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home’s conclusive rest it knows?
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home. GUP,

***

340.The life berthed in this body shows
A fixed home it never knows.     – SB 

***  
340.It would appear that the soul which takes temporary refuge in the body, prone to diseases, has no permanent abode– EVS

***

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள் (Post No.16,192)

Written by London Swaminathan

Post No. 16,192

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பல்லவர் செப்பேடுகளில் இரண்டாவது 10 கேள்விகள்

பல்லவர் செப்பேடுகளில் முதல் 10 கேள்விகள் – என்ற தலைப்பில் நேற்று பத்து கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டோம் ; அதன் தொடர்ச்சியாக மேலும் 10 கேள்விகள் இதோ:

11

முப்பது செப்பேடுகள் Copper Plates பெயர்ப் பட்டியலைக் கண்டோம்; அவைகளில் பழைய செப்பேடு எது ?

12

மஹாபாரதம் பற்றி எந்த செப்பேடு, என்ன கூறுகிறது ?

13

செப்பேடுகளுக்கு தமிழில் வேறு என்ன பெயர்கள் பயிலப்படுகின்றன ?

14

பல்லவர் பெயர்களைக் கொண்ட ஊர்களோ அல்லது கோவில்களோ எவை ?

15

பல்லவருடன் தொடர்புடைய ஆழ்வார் யார் ?

16

நந்திக் கலம்பகம் என்னும் நூல் எந்த மன்னனைப் புகழ்கிறது?

17

காடவர்கோன் என்று சைவத்திருமுறைகள் போற்றும் பல்லவ மன்னன் யார் ?

18

கழற்சிங்க நாயனார் யார் ?

19

காடவர் கோன், கழற்சிங்க நாயனார் பற்றி  பல்லவர் செப்பேடுகள் புஸ்தம் தரும் தகவல் என்ன?

20

கசாக்குடி சாசனம் தெரிவிக்கும் புள்ளலூர் போர்ச் செய்தி என்ன ?

****

விடைகள்

11.மயிதவோலு செப்பேடு கண்டுபிடிக்கப்பட்ட இடம்: ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டம், மயிதவோலு சிற்றூர்.காலம்: கி.பி. நான்காம் நூற்றாண்டு CEபல்லவ அரசன் சிவஸ்கந்தவர்மன் இளவரசராக (யுவமகாராஜா) இருந்தபோது வெளியிடப்பட்டது.பிராகிருத மொழி மற்றும் முற்கால பல்லவ பிராமி எழுத்துக்கள். ஆந்திரபதா பகுதியில் உள்ள ‘விரிபரா’ என்ற கிராமத்தை பிராமணர்களுக்கு தானமாக வழங்கியதை இது குறிக்கிறது.

***

12.கூரம் செப்பேடு மஹாபாரதம் பற்றிக் கூறுகிறது கூரம் செப்பேடு பல்லவர் காலத்தில் பொது மக்கள் மத்தியில் மகாபாரதம் வாசிக்கப்பட்டதற்கான மிக முக்கிய வரலாற்று ஆதாரமாகத் திகழ்கிறது. ஏழாம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவ மன்னனான முதலாம் பரமேஸ்வரவர்மன் (670-695 CE) என்பவரால் இந்தச் செப்பேடு வெளியிடப்பட்டது.  பல்லவ மன்னன் கூரம் என்ற சிற்றூரில் (இன்றைய காஞ்சிபுரம் அருகில்) ஒரு சிவன் கோவிலைக் கற்றளியாகக் கட்டினான். அக்கோவிலில் வழிபாடுகள் மற்றும் பராமரிப்புக்காக ‘பரமேஸ்வரமங்கலம்’ என்ற ஊரின் நிலங்களை இருபத்தைந்து பங்குகளாகப் பிரித்து மானியமாக வழங்கினான்.  அந்த நிலப் பகிர்வில், கோவிலின் அருகே அமைக்கப்பட்ட பொது மண்டபத்தில் மகாபாரதம் வாசிப்பதற்காக ஒரு பங்கு நிலம் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டதாக இச்செப்பேட்டின் தமிழ்ப் பகுதியில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில், “. இம்மண்டகத்தே பாரதம் வாசிப்பதற்கு ஒரு பங்காகவும்…” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், பல்லவர் காலத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் பொது மண்டபங்களிலும் மகாபாரதக் கதைகளை மக்கள் முன்னிலையில் வாசித்து, சொற்பொழிவு நிகழ்த்தும் வழக்கம் அரசு ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைமுறையில் இருந்தது என்பது உறுதியாகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூரம் செப்பேடு தற்போது சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

****

13.செப்புப் பட்டயம், தாமிர பட்டயம், சாசனம் முதலிய பெயர்கள்.

***

14.பல்லவர் பெயர்களைக் கொண்ட ஊர்களும் அல்லது கோவில்களும் :

பரமேஸ்வரவிண்ணகரம், ராஜசிம்மேஸ்வரம் , பல்லாவரம் (சென்னை), மஹேந்திரவாடி,  மாமல்லபுரம் .

கோவில்கள் : காஞ்சி கைலாசநாதர் கோவில்,    காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில்

****

15.திருமங்கை ஆழ்வார் பரமேஸ்வர வர்மனைப் போற்றியுள்ளார்.

ஆழ்வார்களில் இறுதியானவரான திருமங்கை ஆழ்வார், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதற்கு அவர் பாடிய பல்லவர் காலப் பாசுரங்களே முக்கிய வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அவர் பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவர்மன் (பல்லவமல்லன் – கி.பி. 731–796) மற்றும் இரண்டாம் பரமேசுவரவர்மன் ஆகியோரின் சமகாலத்தவர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளத. இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் காஞ்சீபுரத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற தலம் பரமேசுவர விண்ணகரம் (வைகுண்ட பெருமாள் கோவில்) ஆகும். இத்தலத்து இறைவனை மங்களாசாசனம் செய்து திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்கள் பாடியுள்ளார்.தன் பாடல்களில், பல்லவ மன்னனின் போர்த்திறமையையும், அவன் வடநாட்டு அரசர்களான சாளுக்கியர்களையும் ஏனைய எதிரிகளையும் வென்றதையும் விரிவாகப் பாடியுள்ளார். பல்லவ அரசன் கடல் போன்ற முழக்கமிடும் பறை வாத்தியங்களை (கடுவாய் பறை) உடையவன் என்பதை, “கடல் போல முழங்கும் குரல்கடுவாய் பறையுடைப் பல்லவர் கோன்” என ஆழ்வார் வர்ணிக்கிறார். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திபுர விண்ணகரம் என்னும் வைணவத் தலம் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் புதுப்பிக்கப்பட்டு, அவனது பெயராலேயே அழைக்கப்பட்டது.இக்கோட்டையின் மதில் சுவர்கள் மற்றும் பல்லவர்களின் காவல் சிறப்பை ஆழ்வார் போற்றிப் பாடியுள்ளார்.பல்லவ மன்னனை, “நென்மலியில் வெருவச் செருவேல் வலக்கைப் பிடித்த படைத்திறல் பல்லவர்கோன்” என்று போற்றி, அவன் நென்மலி என்ற இடத்தில் பெற்ற போர் வெற்றியைக் குறிப்பிடுகிறார். காஞ்சியில் உள்ள அட்டபுயகரம் (அஷ்டபுஜ பெருமாள் கோவில்) உள்ளிட்ட பிற பல்லவர் காலத்துத் தலங்களையும் ஆழ்வார் பாடியுள்ளார். காஞ்சியை ஆண்ட பல்லவ மன்னர்கள் கலைக்கும் வைணவத்திற்கும் ஆற்றிய தொண்டுகளைத் தன் பாசுரங்களில் பதிவு செய்துள்ளார்.

***

16.நந்திக் கலம்பகம் தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று. இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் (846-869 CE) குறித்துப் பாடப்பட்டது.

***

17. காடவர் கோன்

பதினொன்றாம் திருமுறைஇத்திருமுறையில் ஐந்தாவது பிரபந்தமாகிய சேத்திரத் திருவெண்பாவை அருளியவர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார். இவர் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் `ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்` எனப் போற்றப் பெறுபவராவார். சேக்கிழார் பெரிய புராணத்தில் இந்நாயனாரின் வரலாற்றை விளங்க விரித்துரைத்துள்ளார்.மன்னரெல்லாம் தம் ஆணைவழி நிற்கவும் வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம் மாமன்னர் அரசுரிமை தன் சிவனடித் தொண்டுக்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துத் தலயாத்திரை மேற்கொண்டு சிதம்பரம் முதலான அனைத்துச் சிவ தலங்களையும் வழிபட்டு ஓரோர் வெண்பாவால் அத்தலங்களைப் போற்றிப் பாடினார். அவ்வெண்பாக்களில் இருபத்து நான்கு பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றின் தொகுப்பே சேத்திரத் திருவெண்பா எனப் பெறுகிறது. இப்பாடல்கள் பலவற்றிலும் நாயனார் நிலையாமையை உணர்த்தி தலங்களுக்கு ஆற்றுப்படுத்தலால் இவரது துறவுள்ளம் இப்பாடல்களில் விளங்கக் காணலாம்.காஞ்சியில் கைலாசநாதர் கோயிலைக் கட்டிய இராஜசிம்மப் பல்வனாவான் என்றும் அம்மன்னனது தந்தையாகிய முதலாம் பரமேசுவரவர்மனே ஐயடிகள் காடவர்கோன் ஆவார்முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தில் பெரும் போர் ஒன்று நிகழ்ந்தது. சாளுக்கிய வேந்தனாகிய இரண்டாம் புலிகேசியின் மகன் விக்கிரமாதித்தன் என்பான் தமிழ் மாநிலத்தைக் கைப்பற்றக் கருதி தமிழகம் வந்து இம் மன்னனோடு பெரும் போர் புரிந்து வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது பாண்டியன் நெடுமாறன் மகனாகிய கோச்சடையன் என்பானிடம் தோல்வியுற்றுத் திரும்பநேர்ந்தது. இவ்வேளையில் அவனிடம் தோற்ற பல்லவனாகிய முதலாம் பரமேசுவரவர்மன் தன் படைகளுடன் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள பெருவளநல்லூரில் விக்கிரமாதித்தனோடு போரிட்டு வெற்றி கொண்டான். தோற்ற விக்ரமாதித்தன் ஒரு கந்தையைப் போர்த்திக்கொண்டு தன் நாடு திரும்பினான்.

விக்கிரமாதித்தனைப் பரமேசுவரவர்மன் வெற்றி கொண்டதைக் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. சேக்கிழார் ஐயடிகள் காடவர்கோனின் பெருவீரத்தைக் குறிப்பிடும் பாடல் இப்போரைக் குறித்ததாகலாம். ஆதலின் அம்மன்னனே ஐயடிகள் என்பதையும் அறியலாம்.

பரமேசுவரவர்மன் கூரம் என்ற ஊருக்குப் பரமேசுவர மங்கலம் எனப் பெயர் சூட்டி அவ்வூரில் விச்சாவிநீத பல்லவ மன்ன பரமேசுவரக்கிருகம் என்ற சிவாலயத்தை முதன் முதல் கற்றளியாகக் கட்டிய பெருமைக்கு உரியவன். மாமல்லபுரத்தில் இவன் பாட்ட னாகிய நரசிம்மவர்மன் காலத்தில் தொடங்கி இம்மன்னனால் முற்று விக்கப்பட்ட ஆலயத்தில் காணும் கல்வெட்டால் இவன் வடமொழி தென்மொழிகளில் வல்லவன் என்பதை உணரலாம்.

இவ்வாறு பெருவீரனாகவும், சிவநெறியாளனாகவும் புலமையாள னாகவும் விளங்கிய பரமேசுவரவர்மன் தன் ஆட்சியைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்துவிட்டு, தலங்கள் தோறும் சென்று வழிபட்டு வெண்பா மாலைகளால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்ததால் அவன் மகனாலும் குடிமக்களாலும் இம்மன்னன் `ஐயடிகள்` எனப் போற்றப் பெற்றான் என்று கொள்ளலாம். இவர் காலம் கி.பி. 670 முதல் 685 வரையாகும்.

***

18.கழற்சிங்க நாயனார்:

இவர் பல்லவ அரச குலத்தில் வந்த பல்லவ மன்னன். கழற்சிங்கன் என்பது இவருடைய சிறப்புப் பெயர். இவரே தெள்ளாறெறிந்த நந்திவர்மன் ஆவர்..

கழற்சிங்க நாயனார் ஒரு சமயம் மாதேவியோடு திருவாரூர் திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்கினார். அவருடன் சென்ற அரசியார் அங்கிருந்த பூவொன்றைக் கையிலெடுத்து மோந்தார். அதனைக் கண்டு, அங்கிருந்த செருத்துணை நாயனார் சினங் கொண்டு, சிவபெருமானுடைய பூவை மோந்த மூக்கை அரிவேன் என்று கூறி, தம் கையிலிருந்த கத்தியினால் அவர் மூக்கை அரிந்தார். மாதேவியார் கூச்சலிட்டு அலறினார். உடனே கழற்சிங்கர் வந்து “இப்படிச் செய்தவர் யார்” என்று சினந்து கேட்டார். செருந்துணை நாயனார் தாமே இப்படிச் செய்ததாகவும் அதன் காரணத்தையும் கூறினார். அப்போது, கழற்சிங்கர், “மூக்கை அரிந்ததுமட்டும் போதாது; புவை எடுத்த கையையும் துண்டிக்க வேண்டும்” என்று கூறி வாளை எடுத்துத் தமது மனைவியாரின் கையைத் துண்டித்தார். இக் கதையைப் பெரியபுராணம் கழற்சிங்க நாயனார் புராணத்தில் காண்க.

சுந்தரமூர்த்தி நாயனார், இந்த நாயனாரைத் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தில்,

“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்

காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று சிறப்பித்திருக்கிறார்.

***

19.காடவர் கோன்கழற்சிங்க நாயனார் பற்றி பல்லவர் செப்பேடுகள் புஸ்தம் தரும் தகவல் :

பள்ளங்கோயில் செப்பேடு மிகப்பழைய செப்பேடு ஆகும். இது கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மூன்றாம் சிம்மவர்மன் காலத்தில் வெளியிடப்பட்டது. காலம்: கி.பி. 550 (6-ஆம் நூற்றாண்டு) இடம்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள பள்ளங்கோயில்அமைப்பு: என்ற ஊரில் கிடைத்தது . மொத்தம் 5 ஏடுகளும், 8 பக்கங்களும் கொண்டவை. இதில் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.பல்லவ மன்னன் சிம்மவர்மன், பருத்திக்குன்று ஜைன முனிவர் வஜ்ரநந்தி என்பவருக்கு அமண்சேர்க்கை நிலத்தைப் பள்ளிச்சந்தமாகத் (தானமாக) வழங்கியதை இச்செப்பேடு விளக்குகிறது. இந்த செப்ப்பே ட்டினை வழங்கிய சிம்மவர்மன் பெரிய சிவபக்தன் . இவன்தான்  63 நண்பார்களில் ஒருவராக காடவர் கோன் ஐயடிகள்.

இரண்டாம் நரசிம்மவர்மனின் இன்னுமொரு பெயர் ராஜசிம்மன். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டியவன்; கழற்சிங்க நாயனார்க்கேன்ற பெயர் கொண்ட இவன் சுந்தர மூர்த்தி நாயனார் கால  மன்னன். இவன் வெளியிட்ட செப்பேடுகள் ரேய்ரு செப்பேடுகள் ஆகும் .

***

20.கசாக்குடி சாசனம் தெரிவிக்கும் புள்ளலூர் போர்ச் செய்தி :

இரண்டாம் புலிகேசியை காஞ்சிபுரம் அருகிலுள்ள புள்ளலூர் என்னுமிடத்தில் மஹேந்திர வர்ம பல்லவன் தோற்கடித்தான் ஆனால் குண்டூர் பகுதியில் உள்ள சிலப்பகுதிகளை புலிகேசி கைப்பாற்றி கர்நாடகத்திலுள்ள மங்களூரிலிருந்து ஆளுப்பா அரசன் ஒருவனை ஆட்சியாளராக நியமித்தான் என்று புலிகேசியின் ம்ருட்டூர்ச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது.

Tags- பல்லவர் செப்பேடு, இரண்டாவது, 10 கேள்விகள், காடவர் கோன், கழற்சிங்க நாயனார், திருமங்கை ஆழ்வார், காஞ்சிபுரம் , கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், நந்திக் கலம்பகம்

—Subham—

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்?  துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்; ஓர் ஆய்வு  – 27 (Post.16,192)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 16,192

Date uploaded in London –   12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்; ஓர் ஆய்வு  –  27

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்? 

ரிக் வேதத்தின் முதல் ஸ்லோகமே அக்னியை வணங்கும் சுலோகம் தான் 

ॐ अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवमृत्विजम् । होतारं रत्नधातमम् ॥

 “ஓம்! எல்லா யாகங்களுக்கும் தலைமை தாங்கும், தேவர்களுக்கு ஆகுதி கொண்டு செல்லும்,அழியா செல்வத்தை அள்ளித் தரும் அக்னி தெய்வத்தை வணங்கி வேண்டுகிறேன்!” 

அக்னி ஏன் இவ்வளவு முக்கியம்? 

தேவ-மனித இடைத்தொடர்பு 

மனிதன் நேரே தேவர்களிடம் பேச முடியாது → அக்னி மூலமாகவே ஆகுதி சென்றடையும். 

→ அதனால் அக்னியை “தேவதூதன்” என்று அழைப்பார்கள். 

மூன்று அக்னிகள் (திரிகால யாகம்) 

கார்ஹபத்ய அக்னி (வீட்டு அடுப்பு – தினசரி யாகம்)

ஆஹவனீய அக்னி (வடகிழக்கு – பெரிய யாகம்)

தட்சிண அக்னி (தெற்கு – பித்ரு காரியம்)

 காயத்ரி மந்திரத்திலும் அக்னி 

“தத் சவிதுர் வரேண்யம்… தியோ யோ நஃ ப்ரசோதயாத்”

→ இங்கு “தியோ” = அக்னி (ஒளி உருவம்)

உதாரணம் ஒரு ஹோமத்தில்

நீங்கள் “ஸ்வாஹா” என்று நெய் விடுகிறீர்கள் → அக்னி அதை எடுத்துக்கொண்டு

→ இந்திரனுக்கு, வருணனுக்கு, சூரியனுக்கு… என்று பிரித்துக் கொடுக்கிறார்.

இல்லையென்றால் தேவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது! அதனால்தான் ரிக் வேதம் தொடங்குவது 

ॐ अग्निमीळे पुरोहितं… 

“அக்னியை வணங்குகிறேன் – ஏனெனில் அவர்தான் எல்லா யாகங்களுக்கும் தலைவர்!”

 ஒரு வரியில் சாரம் 

“அக்னி இல்லையெல் யாகமும் இல்லை, தேவர்களுக்குப் படையலும் இல்லை, மனிதனுக்குப் புண்ணியமும் இல்லை!” 

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்? பகவத் கீதை அத்யாயம் 15  சுலோகம் 14

இதைத் தெளிவாக்குகிறது.

 अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रित: |

प्राणापानसमायुक्त: पचाम्यन्नं चतुर्विधम् || 14||

நான் (பரமாத்மா), வைஷ்வானரனாக (அக்னி வடிவில்) உயிரினங்களின் உடலில் குடிகொண்டு, பிராணன்–அபானன் ஆகிய உயிர்வாயுக்களுடன் இணைந்து,நான்கு வகையான உணவுகளைச் செதுக்குகிறேன் (செரிமானம் செய்கிறேன்).

 விளக்கம்: 

அஹம் வைஷ்வானர: “நான் வைஷ்வானரன்” – இது அக்னி வடிவில் பரமாத்மா.

-பிராணினாம் தேஹமாஶ்ரித: உயிரினங்களின் உடலில் குடிகொள்கிறேன்.

-பிராண–அபான சமாயுக்த: உயிர்வாயுக்கள் (prāṇa – மேலே செல்லும், apāna – கீழே செல்லும்) மூலம் செயல்படுகிறேன். 

அன்னம் சதுர்விதம் பசாமி: நான்கு வகையான உணவுகளைச் செரிமானம் செய்கிறேன்: 

பூதபாகம் (மெல்லும்),

பேயம் (குடிக்கும்),

லேஹ்யம் (நக்கும்),

சோஷ்யம் (உணவாக உறிஞ்சும்). 

இது பரமாத்மா உடலுக்குள் இருப்பது, உணவின் செரிமானம் கூட தெய்வீக செயலாகும் என்பதை உணர்த்துகிறது. 

Shree Krishna says that God exists inside all living beings as vaiśhvānara, meaning “fire of digestion,” which is ignited by the power of God.  The Bṛihadāraṇyak Upaniṣhad has also stated:

 अयमाग्निर्वैश्वानरो योऽयमन्तः पुरुषे, येनेदमन्नं पच्यते यदिदमद्यते; तस्यैष घोषो भवति यमेतत्कर्णावपिधाय शृणोति; स यदोत्क्रमिष्यन्भवति नैनं घोषं शृणोति ॥ १

इति नवमं ब्राह्मणम् ॥

 “God is the fire inside the stomach that enables living beings to digest food.”

 Though the scientific community has concluded, that the organs of the digestive system such as the stomach, liver, pancreas, gall bladder, etc. secrete digestive juices enabling the digestion of food in living beings. This revelation by God suggests that such an approach is naïve. It is God’s energy which fires up the digestive process in living beings.

 Chaturvidham means four types and annam means food. Food is categorized into four types: 1. Bhojya – Foods that are chewed, such as bread, chapatti, etc.  2. Peya – These are mostly liquid or semi-solid foods which we have to swallow or drink, such as milk, juice, etc.  3. Kośhya – Foods that are sucked, such as sugarcane.  4. Lehya – This includes foods that are licked, such as honey, etc.

 In the last few verses, Shri Krishna has explicated how God supports every aspect of our life. With his energy, He makes the earth habitable, nourishes all vegetation, and even ignites the gastric fire to digest our food. In the next verse, he concludes by stating that He is the master of all knowledge.

 இராமயணத்தில் அக்னிக்கு முக்கிய இடம் உள்ளது. தசரதன் செய்த வேள்வித் தீயிலிருந்து வெளிவந்த பாயசத்தினால் வந்தவர்கள் தான் இராமனும் அவனது தம்பியரும். துளசி இராமாயணத்தில் இராமன் சீதையை அக்னியிடம் ஒப்படைத்து விட்டு அதிலிருந்து வெளிவரும் மாயா சீதையைத்தான் இராமன் கடத்திச் சென்றான். ஹனுமான் இலங்கையைத் தீக்கிரையாகியது அக்னியின் உதவியால். கடைசியில் சீதை அக்னிப் பிரவேசம் செய்து மாயா சீதை அக்னிக்குள் பிரவேசித்து உண்மையான சீதை அக்னியிலிருந்து வெளிவருகிறாள். ஆகையால் இராமாயணத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவில் அக்னியின் பங்கு உள்ளது.

 அக்னி சிவஸ்வரூபம். ஆக இங்கு சிவனையும் சாட்சியாக கருதலாம்.

कीन्हि प्रीति कछु बीच न राखा। लछिमन राम चरित्‌ सब भाषा॥

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 112; இந்து மத கலைச்சொல் அகராதி-112 (Post.16,191)

Written by London Swaminathan

Post No. 16,191

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

U words continued…………….. English version posted yesterday.

ஊர்மிளா

லெட்சுமணனினின் மனைவி; ராமபிரான் சீதையை மணந்த அதே நாளில் ஜனகரின் மகளான ஊர்மிளாவை லெட்சுமணன் மணந்தான்;  வால்மீகி  ராமாயணத்தில் இல்லாத ஒரு விஷயம் வாய்மொழிக் கதைகளிலும் உள்ளூர்க் கதைகளிலும் உள்ளது: அதாவது லட்சுமணன் காட்டில் 14 ஆண்டுகளும் ராமனையும் சீதையையும் காவல் காத்ததால் தூங்கவே இல்லை என்பது அந்தக் கதை; அந்தக் காலத்தில் அவனுக்குப் பதில் பதிவிரதையான ஊர்மிளை அந்த தூக்கத்தை ஏற்றுக்கொண்டதாகவும் பல செய்திகள் உள்ளன . ஆனால் வால்மீகி ராமாயணத்தில் அவள் ராம லெட்சுமணர்களின் தாய் தந்தையருக்கு நல்ல பணிவிடை செய்ததாக மட்டுமே உள்ளது; சீதைபோல, கானகத்துக்கு வர விரும்பியதையும் லட்சுமணன் மறுப்பு தெரிவித்ததையும் வால்மீகி கூறியுள்ளார்.

***

ஊர்வசி

ஊர்வசி, தேவலோகத்தில் உள்ள நான்கு ஆடல் அழகிகளில் புகழ்ப்பெற்ற ஒருத்தி ஆவாள்.

மித்திரன்  -வருணன் சாபம்,  ராமாயணத்தின் உத்தர காண்டத்தில் வருகிறது.  மித்திர தேவனும் வருண தேவனும் ஊர்வசியின் பேரழகைக் கண்டு அவள் பால் ஈர்க்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கோபமும் முரண்பாடும் காரணமாக, ஊர்வசி பூலோகத்திற்குச் சென்று மனிதனான புரூரவஸை மணந்து வாழுமாறு சாபமிட்டனர்.  பூமிக்கு வந்த ஊர்வசி, சந்திர வம்சத்து அரசனான புரூரவஸை (Pururavas) சில நிபந்தனைகளுடன் மணக்கிறாள்; தன்னுடைய இரு ஆடுகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்; மற்றும் உடலுறவுக் காலத்தைத் தவிர மற்ற நேரங்களில் அரசன் நிர்வாணமாகத் தன் கண்முன்னே தோன்றக் கூடாது என்பவையே அவை. இந்த நிபந்தனைகளைத் தேவேந்திரன் (இந்திரன்) தந்திரமாக முறிக்கச் செய்தான்; இந்திரன்  ஆடுகளைத் திருடுகிறான் ; அதை மீட்க அவசரத்தில் புரூரவஸ் ஆடையில்லாமல் ஓடிவருகிறான்., ஊர்வசி மீண்டும் தேவலோகம் திரும்பினாள். இவர்களது காதல் மற்றும் பிரிவின் கதையை காளிதாசரின் விக்ரமோர்வசியம் நாடகம் விளக்குகிறது.சிலப்பதிகார  மாதவி, இந்த ஊர்வசியின் வம்சாவளி அல்லது அவளது சாபத்தின் மறுபிறவி என்றும் ஒரு கதை உள்ளது; தேவலோகத்தில் இந்திரன் அவையில் சரியாக ஆடாததால் சாபம் பெற்று, பூமியில் மாதவியாகப் பிறந்தாள் என்பது அக்கதையாகும்.

***

உசனஸ் கவி

உலகிலேயே மிகவும் பழைய கவிஞன் பெயர் உசனா கவி; அவரை உசனஸ் என்றும் அழைப்பர். கிருஷ்ணன், பகவத் கீதையில் காலங்களில் நான் வசந்தம், மாதங்களில் நான் மார்கழி என்று கூறும் விபூதி யோகத்தில் கவிஞர்களுள் நான் உசனா கவி என்கிறார். அவ்வளவு மிகப்பெரிய கவி அவர். ரிக் வேத காலத்திலேயே அவர் மிகவும் பழங்காலக் கவிஞர் ஆகிவிட்டார். அப்படியானால் இற்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருப்பாரென்பது துணிபு. பாலகங்காதர திலகரும் ஜெர்மானிய  அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் வானியல் ரீதியில் 6000 ஆண்டுக்கு முந்தையது ரிக் வேதம் எனக் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதன் தெய்வமாகலாம் என்று வள்ளுவரின் திருக்குறளும்  ரிக்வேதமும் செப்புகின்றன.பல கவிஞர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுவதை நாம் அறிவோம். ‘தெய்வப் புலவர்’ திருவள்ளுவர் என்பது ஆன்றோர் வாக்கு. ‘பகவான் பாணினி’ என்று இலக்கணப் பேருரை (மஹாபாஷ்யம்) எழுதிய பதஞ்சலி முனிவர்பாணியைப் புகழ்கிறார். கிரேக்க நாட்டிலும் ஹோமர் என்னும் மஹா கவியை Divine Homer ‘டிவைன் ஹோமர்’ என்று கிரேக்கர்கள் போற்றினர். பகவத் கீதையில் கண்ணபிரானும் கவிகளுள் ‘நான் உசனஸ் கவி’ என்று ரிக்வேத கவிஞரை தன நிலைக்கு உயர்த்துகிறார்.

वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जय: ।
मुनीनामप्यहं व्यास: कवीनामुशना कवि: ॥ ३७ ॥

vṛṣṇīnāṁ vāsudevo ’smi
pāṇḍavānāṁ dhanañ-jayaḥ
munīnām apy ahaṁ vyāsaḥ
kavīnām uśanā kaviḥ 10-37 Bhagavad Gita

எப்படித் தமிழில் பல கபிலர்கள், பல நக்கீரர்கள், பல அவ்வையார்கள் இருந்தனரோ அதே போல பிற்காலத்தில் வந்த சுக்ராச்சார்யாரையும் உசனா கவி என்றனர். ஆயினும் அவருக்கு முந்தி வாழ்ந்த முதல் உசனஸ் பற்றி மனு ஸ்மிருதி ஒரு ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார். அதற்கு உரை எழுதியோர் மஹாபாரதத்திலும் (9-50), பஞ்சவிம்ச பிராமணத்திலும் உள்ள ஒரு சுவையான கதையைச் சொல்லுகின்றனர். இதோ அந்தக் கதை:

ஆங்கிரஸின் புதல்வரான உசனஸ், வயதில் மிகவும் சிறியவர். ஆனால் வேதத்தைக் கரை கண்டவர். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. அவர் தன்னைவிட வயதானவர்க ளுக்குப் பாடம் நடத்துகையில், “ஓ! சின்னப் பிள்ளைகளே! நன்றாகக் கவனியுங்கள்” என்று அடிக்கடி சொல்லுவார். வயதானவர்களுக்கோ கோபமும் ஆத்திரமும் வந்தது. இவனே பொடிப்பயல்; இவன் நம்மைப் பார்த்து, சின்னப் பையன்களே (புத்ரஹா) என்று சொல்லுவதாவது என்று முறைத்துப் பார்த்தனர். முகக்குறிப்பால அதிருப்தியைக் காட்டினர். ஆனால் உசனா கவி தன் வழக்கத்தை மாற்றிக்கொள்ளவிலை. எல்லா ரிஷிகளும் ஒரு மஹஜரை எடுத்துக்கொண்டு, கடவுளிடம் போனார்கள். அவரும் சொல்லிவிட்டார், அவன் உங்களை சின்னப் பையன்களே என்று சொல்லுவது சரிதான் என்று! அவன் அறிவினால் தந்தைக்குச் சமமானவன் என்றும் கடவுள் தீர்ப்பு சொல்லி விடுகிறார்!  இக்கதையில் மிகப்பெரிய கருத்து உள்ளது. வேதங்களைக் கரைத்துக் குடித்தவனே அறிவாளி; மூத்தவன். மேலும் கவிஞன் என்பவன் தந்தைக்கு சமமானவன்; அவன் முக்காலமும் உணர்ந்தவன்.

இந்தச் சின்னப் பையன் கதையுள்ள பிராமணம் என்னும் இலக்கியம், சம்ஹிதைக்குப் பிறகு வந்தது. அதை கி.மு 1000 என்று மாக்ஸ்முல்லர் முதலியோரும் ஏனையோர் அதற்கும் முந்தையது என்றும் செப்புவர். எப்படிப் பார்த்தாலும் கிரேக்க நாட்டு ஹோமர் போன்றோர் தோன்றுவதற்கு நீண்ட நெடுங்காலம் முன்னரே உசனா கவி வாழ்ந்தார். ஆக அவரே உலகின் மிகப் பெரிய கவி; உலகின் மிக மூத்த கவி. மேலும் கவி, கவிஞன், கவிதை என்ற சொல்லெல்லாம் அவர் முதற்றே பிறந்தது எனின் மிகையாகாது. 

சுமேரியாவிலுள்ள ஜில்காமேஷ் கவிதை போன்றவை வேதத்திற்குப் பிற்காலத்தில் வந்தவை. மேலும் மிகவும் நாகரீகத்தில் பின் தங்கியோரால் எழுதப்பட்டவை. ஆனால் வேத காலக் கவிதைகளோ நாகரீகத்தின் உச்சநிலையைத் தொட்ட ஒரு சமுதாயம் இயற்றியது. உலக அமைதி, மனித நேயம் பற்றிப் பாடுகிறது. அவர்களுக்கெல்லாம் மூத்தவர் நம் கவி – உசனா கவி. வேத இண்டெக்ஸ் தொகுத்த கீத், மக்டொனால்டு ஆகிய இருவரும், இந்தப் பெயர் வேத காலத்திலேயே, புராதனப் பெயராகிவிட்டது என்று பகர்வர். கண்ண பிரானும் பகவத் கீதையில் இவரைப் புகழ்வதால் கி.மு 3102 க்கு முன் அவர் வாழ்ந்தது உறுதியாகிறது. 

மூத்தவர் என்ற தகுதி நரைமுடியாலோ, செல்வத்தாலோ, பரம்பரையாலோ வருவதில்லை. இது ரிஷிகள் வகுத்த சட்டம்; வேதங்களையும் வேதத்தின் அங்கங்களையும் கற்றவனே நம்மில் உயர்ந்தோன் (2-154 மனு).

பிராமணர்களில் மூத்தவன் வேதம் கற்றோன்;

க்ஷத்ரியர்களில் மூத்தவன், வீரம் மிக்கவன்;

வைஸ்யர்களில் மூத்தவன், அதிக தானியம் வைத்திருப்பவன்.

சூத்திரர்களில் மூத்தவன், வயதில் பெரியவன்! (மனு 2-155) 

வேதத்தைப் படித்தவன், இளைஞனாக இருந்தாலும் அவனே பெரியவன் (2-156).

சங்க இலக்கியமான புறநானூற்றிலும் இதுவே வலியுறுத்தப்படுகிறது:

“ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்

மூத்தோன் வருக என்னாது, அவருள்

அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்” – (புறம் 183)

கவி என்றாலேயே அறிஞன் என்று பொருள்!

தொல்காப்பியர் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் சங்கப் புலவர் ஆகியோர் இந்தப் பழைய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்; இதனால்தான் தொல் என்ற அடைமொழியை  தொல்காப்பியர் பெயரில் சேர்த்தனர் ; கவிதை, கவி, காவியம், கவிஞன்  என்று நாம் பயன்படுத்தும் எல்லா சொற்களும் உசனா கவியிடமிருந்து வந்தவையே.

***

உஷா

உஷா – அநிருத்தன் காதல் கதை

(புராணம்)பாகவத புராணம் மற்றும் மகாபாரதத்தில் வரும் புகழ்பெற்ற காதல் மற்றும் வீரக் கதை இதுவாகும்.

கனவில் வந்த காதல்: அசுர குல மன்னனான பாணாசூரனின் மகள் உஷா. அவள் ஒரு இரவு தன் கனவில் ஒரு அழகான இளைஞனைக் கண்டு அவன் மீது காதல் கொள்கிறாள். உஷாவின் தோழியான சித்திரலேகா, தன் அபூர்வ சக்தியால் பல தேவர்கள் மற்றும் மனிதர்களின் படங்களை வரைந்து காட்டுகிறாள். ஸ்ரீ கிருஷ்ணரின் பேரனும், பிரத்யும்னனின் மகனுமான அநிருத்தனின் படத்தைக் கண்டதும் உஷா அவன்தான் தன் கனவு நாயகன் என அடையாளம் காட்டுகிறாள். சித்திரலேகா வான்வழியாகச் சென்று துவாரகையிலிருந்த அநிருத்தனை இரகசியமாகக் கடத்தி வந்து உஷாவின் அந்தப்புரத்தில் சேர்க்கிறாள். இதனையறிந்த பாணாசூரன் அநிருத்தனைச் சிறையிலடைக்கிறான். தன் பேரனைக் காக்க ஸ்ரீ கிருஷ்ணர் பாணாசூரனுடன் பெரும் போர் புரிந்து, இறுதியில் பாணாசூரனின் அகந்தையை அடக்கி, உஷா – அநிருத்தன் திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

***

உஷஸ்

உஷா என்பது விடியற் காலம் ஆகும்; இதை வருணிக்கும் ரிக் வேதக் கவிதைகள் உலகிலேயே மிகப் பழமையான அழகுக் கவிதைகளாகக் கருதப்படுகிறது

உஷா (Ushas) அல்லது விடியற்காலை தேவதையே ரிக் வேதத்தில் “வானத்தின் மகள், இரவின் சகோதரி” என்று வர்ணிக்கப்படுகிறாள். உஷா தேவி ஆகாயத்தின் (Dyaus Pita / Sky) மகளாகக் கருதப்படுகிறாள்.இரவின் சகோதரி: அவள் இரவு தேவதையான ராத்ரியின் (Ratri / Night) சகோதரி ஆவாள். ரிக் வேதத்தில் உள்ள மிக அழகான, கவித்துவமான பாடல்கள் பல இந்த உஷா தேவியின் அழகைப் போற்றிப் பாடுபவையாக அமைந்துள்ளன. சிவந்த ஆடைகளை உடுத்தி, இருளை விரட்டி, உயிரினங்களை விழித்தெழச் செய்யும் என்றும் இளமை மாறாத கன்னியாக அவள் வர்ணிக்கப்படுகிறாள்.

***

உத்தரா

Uttarā (उत्तरा).—விராட மஹா ராஜாவின் புதல்வி ; அர்ஜுனனின் புதல்வனான அபிமன்யுவின் மனைவி; முதலில் விராட ராஜன் அர்ஜுனனைக் கல்யாணம் செய்யும்படி வேண்டினான்; ஆனால் அர்ஜுனன் தன்னுடைய மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைப்பதே பொருத்தம் என்றவுடன் அபிமன்யு- உத்தரா கல்யாணம் நடைபெறுகிறது; துரோணரின் மகனான அஸ்வத்தாமன், போர் முடிந்த நாளன்று இரவில், பாண்டவர்கள் கூடாரத்துக்கு தீ வைத்த போது ஆண்கள் அனைவரும் அழிகின்றனர். பாண்டவர் வம்சத்தை, உத்தராவின் கர்ப்பத்தில் இருந்த குழநதை காப்பாற்றியது; அவளுடைய கர்ப்பத்தைக் காத்து, பரீட்சித் என்னும் மகன் பிறக்க கிருஷ்ணன் உதவுகிறான் . பின்னர் உத்த்ராவின் மகன் மூலம் சந்திர வம்சம் என்னும் பாண்டவர் வம்சம் உலகினை ஆள்கிறது .

உத்தர என்பது நட்சத்திரத்துக்கும் வீட்டின் உத்தரம் என்னும் அமைப்பினையும் குறிக்கும்; சங்க இலக்கியத்தில் இது வருகிறது.

***

உத்தர காண்டம் – ராமாயணத்தின் ஏழாவது காண்டம் . இதில் ராமர் அயோத்தி திரிரும்பி வைத்து ஆட்சி செய்த விஷயங்கள் வருகின்றன .

 ராம பிரானுடன் புஷ்பக விமானத்தில் வந்த அனுமன் சுக்ரீவன் ஆகியோருக்கு ராமன் பரிசுகளைக் கொடுத்து  திருப்பி அனுப்புகிறான். சீதா தேவியின் கர்ப்பம் குறித்து ஒரு சலவைத் தொழிலாளி பேசிய அபவாதம் ராமர் காதில் விழுகிறது; மக்களின் சந்தேகத்தை அகற்ற, லட்சுமணனின் ரதத்தில் சீதா தேவியை ஏற்றி வால்மீகி  ஆஸ்ரமத்தின் அரு கில் இறக்கிவிட ராமன் உத்தரவிடுகிறான்; அங்கே வசித்த சீதைக்கு லவ குசன் என்ற இரட்டையர் பிறக்கின்றனர்; அவர்கள் சிறு வயதில் ராம பிரான் அவைக்குச் சென்று ராமனின் கதையைப் பாடியவுடன் அவர்கள் தன்னுடைய பிள்ளை என்பதை அறிந்து ஆட்சிப்பொறுப்பினை ஒப்படைக்கிறார். இதன் மூலம் சூரிய வம்சம் பாரினை ஆள்கிறது தொடர்ச்சியாக 143 தலைமுறைகள் உள்ளதால் இந்தியாவின் 5000 ஆண்டுப்பழமை உறுதியாகிறது; சீதா தேவி தனது பணி முடிந்ததை அறிந்து பூமா தேவியை வேண்டவே பூமி திறக்கிறது. அவள் பூமிக்குள் புகுகிறாள்; ராமனும் தனது அவதாரப்பணி முடிந்ததை அறிந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் புடை சூழ சரயு நதியில் இறங்கி அனைவருடன் வைகுந்தம் அடைகிறான் ; அற்புதமான பல பழைய கதைகள் நிறைந்த இந்தப்பகுதி பிற்காலத்தில் வால்மீகி   அல்லது அவர்களின் சீடர்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்களின் கருத்து.

***

உத்தரகுரு

வேத கால இலக்கியம் முதல் இதிஹாச, புராண, தமிழ் இலக்கியம் வரை குறிப்பிடப்படும் மர்மமான நிலப்பரப்பு இது  ஆனந்த மயமான வாழ்வும் செல்வமும் நிறைந்த பூமி. இமயமலைக்கு அப்பால் உள்ள பகுதியாக இது விவரிக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியர்கள் இதை காஷ்மீர் அல்லது காஷ்மீருக்கு கிழக்கே உள்ள பகுதியாக அடையாளம் காண்கின்றனர்.: ஐதரேய பிராமணம், மகாபாரதம், ராமாயணம் மற்றும் சமண, பௌத்த நூல்களில் உத்தரகுரு குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழ் இலக்கியம்: பதிற்றுப்பத்து (9-14) மற்றும் சிலப்பதிகாரம் (2-10) ஆகிய நூல்களில் உத்தரகுரு பற்றிய குறிப்புகள் உள்ளன. பூம்புகார் நகரைச் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் உத்தரகுருவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். போகபூமி: இது நிலையான இன்பமும் செல்வமும் நிறைந்த ஒரு பூமியாகவும், தவப்பேறுடையோர் வாழும் இடமாகவும் தமிழ்ப் புலவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. யுதிஷ்டிரன் என்னும் தர்மபுத்ரன் ராஜசூயம் நடத்தியபொழுது , அர்ஜுனன், உத்தர குருவுக்குச் சென்று பொன்னையும் ரத்தினங்களையும் பெற்று வந்த செய்தி மஹாபாரதத்தில் காணப்படுகிறது..

-subham—

Tags- உத்தரகுரு ,ஊர்மிளா, ஊர்வசி , HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 112; இந்து மத கலைச்சொல் அகராதி-112

தேசமும் தமிழுமே தெய்வம் – பாரதியின் மூன்றடுக்கு வழிபாடு! (Post.16,190)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,190

Date uploaded in London – 12 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாரதியார் நினைவு தினம் – 11-9-26 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

தேசமும் தமிழுமே தெய்வம் – பாரதியின் மூன்றடுக்கு வழிபாடு! 

ச. நாகராஜன்                    

 தமிழ் தந்த உலக மகாகவி பாரதியாரின் சொற்கள் மிகவும் நுட்பமானவை.

மகாகவியைப் புரிந்து கொள்ள ஆழ்ந்த மனதுடன் அவன் சொற்களை மீண்டும் மீண்டும் படித்து உண்மைப் பொருளை உணர்தல் வேண்டும்.

‘அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்’ என்று அவனே குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு கூரலாம்.

 பாரதிக்கு தேசமும் தெய்வமும் ஒன்றே தான்.

“காளியும் நமது கனக நன்னாட்டுத்

தேவியும் ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்’

என்று குரு கோவிந்த ஸிம்ஹ விஜயம் பாடலில் இதை பாரதி எடுத்துக் காட்டுகிறான்.

 இராமர் லட்சுமணனிடம் பொன் மயமாக ஒளிரும் லங்கையைப் பார்த்து அதன் வனப்பில் கவரப்படாமல் தாய்நாட்டையும் தாயையும் உயர்வாகப் பேசியதை ராமாயணத்திலிருந்து “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே” என்று இப்படி மொழி பெயர்த்துச் சுட்டிக் காட்டுகிறான்.

(அபி ஸ்வர்ணமயி லங்கா ந மே ரோசதே லக்ஷ்மணா! ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி! – லக்ஷ்மணா இந்த ஸ்வர்ணமயமான இலங்கை என்னைக் கவரவில்லை. என் தாயும் தாய்நாடும் ஸ்வர்க்கத்தை விட மேலானவையாகும்.)

 தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு

   சூழ்கலை வாணர்களும் – இவள்

என்று பிறந்தவ ளென்றுணராத

   இயல்பினலாமெங்கள் தாய் ( எங்கள் தாய் பாடலில்)

என்று தாயின் தொன்மையைச் சுட்டிக் காட்டும் பாரதி அண்டங்களைப் படைத்தவனைப் பற்றிக் கூறுகிறான் இப்படி:

“நக்க பிரானருளால் – இங்கு

      நடைபெறும் உலகங்கள் கணக்கிலவாம்

தொக்கன அண்டங்கள் – வளர்

     தொகை பல்கோடி பல் கோடிகளாம்:

என்று சிவபிரானைக் கூறிய பாரதி “ஆதி சிவனின் சோதியே சக்தி” என்று இன்னொரு பாடலில் கூறி, காளியும் சிவனும் ஒன்றே தான் என்று தெளிவு படுத்துகிறான்.

இப்படி ஆதிசிவனையும் காளியையும் பல்வேறு பாடல்களில் துதித்துக் கொண்டாடிய பாரதி தமிழின் தோற்றத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறான் ‘தமிழ்த் தாய்’ பாடலில் இப்படி:

“ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை

    ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

     மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்”

சிவன் பெற்ற தெய்வமே தமிழ்!

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று பாப்பாவிடம் உறுதி சொல்லும் பாரதி,

“தமிழ்த்திரு நாடு தன்னைப் – பெற்ற

   தாயென்று கும்பிடடி – பாப்பா

அமிழ்தில் இனியதடி பாப்பா – எங்கள்

    ஆன்றோர்கள் தேசமடி பாப்பா”

என்று கூறுகிறான்.

தொடர்ந்து,

வேதம் உடையதிந்த நாடு – நல்ல

 வீரர் பிறந்ததிந்த நாடு

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் – இதைத்’ 

  தெய்வமென்று கும்பிடடி பாப்பா”

என்று கூறுகிறான்.

தேசமே தெய்வம்; அந்த ஆதிசிவன் பெற்றதே தமிழ்; அதுவே தெய்வம்” என்று கூறி தனது மூன்றடுக்கு வழிபாட்டு மர்மத்தை பாரதி விளக்குகிறான்.

தேசமே தெய்வம்

தமிழே தெய்வம்

தெய்வமே ஆதிசிவன்; அதில் ஜோதியே சக்தி.

இப்படி கூறும் பாரதி, மனிதர்களை நன்கு வகைப்படுத்துகிறான்.

மூடர் யார் என்பதை வரையறுத்துக் கூறுகிறான்:

தெய்வம் பலபல சொல்லி – பகைத்

  தீயை வளர்ப்பவர் மூடர்: (முரசு பாடலில்)

மேலோர் யார் என்ற கேள்விக்கு அவனது பதில் இது:

வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

புண்ணியம் செய்பவர் யார்? யோகி யார்?

பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (தேசமுத்துமாரி பாடல்) என்று அறிவுறுத்தும் பாரதி யோகசித்தி பாடலில் தனக்கு வேண்டிய சில வரங்களைக் கேட்கிறான்:

நின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை

   நேரே இன்றெனக்குத் தருவாய்” என்று ஆரம்பிக்கும் பாரதி தன்னை புதிய உயிர் ஆக்க வேண்டும் என்று வேண்டுகிறான்.

“முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்

    மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி

என்னைப் புதிய உயிர் ஆக்கி – எனக்கு

    ஏதும் கவலையறச் செய்து – மதி

தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும் 

    ஸந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்”

பின்னர் தொடர்ந்து தனது பட்டியலை முன் வைக்கிறான்.

“கல்லை வயிரமணி ஆக்கல் – செம்பைக் கட்டித் தங்கமெனச் செய்தல், வெறும் புல்லை நெல்லெனப் புரிதல்” என்று ஒரு நீண்ட பட்டியலை விண்ணப்பம் செய்யும் பாரதி,

“இந்த நாட்டோர் கீர்த்தியெங்கும் ஓங்கக்  – கலி

    சாடும் திறன் எனக்குத் தருவாய்:

என்று முடிக்கிறான்.

அற்புதமான மூன்றடுக்கு வழிபாட்டை மேற்கொண்டு தேசம், தமிழ், ஆதிசிவன், காளி ஆகிய மூன்றையும் தெய்வமாக்கும் ஒரே வழிபாட்டு வித்தையை அவனிடம் கண்டு வியக்கிறோம்.

அவன் வேண்டியபடியே தெய்வம் அவனுக்கு புதிய உயிர் ஒன்று தந்து மீண்டும் தமிழகத்திற்கு அவனை அனுப்பி அவன் வரங்களைச் சாதிக்கச் செய்யும் என்பதில் ஐயம் உண்டா என்ன?

வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித் திருநாடு.

 மகாகவியைப் போற்றுவோம் ;தேசத்தை உயர்த்துவோம்!

***