முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,180)

Written by London Swaminathan

Post No. 16,180

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

முத்து சுவாமி தீட்சிதருக்கு காசியில் கங்கை நதியில் கிடைத்த அற்புத வீணை இப்பொழுது எங்கே உள்ளது ?

2

தீட்சிதர் எத்தனை கிருதிகளை பாடினார்? இப்போது அவைகளை எங்கே பெறலாம்?

3

தீட்சிதர் பிறந்தது எங்கே? இசை பயின்றது எங்கே ?

4

இவர் பாடிய வாதாபி கணபதிம் பஜே என்ற பாட்டை முதல் முதலில் கற்றுத் தருகிறார்கள் ;  முழுப் பாடல் தெரியுமா ?

5

இவர்  இயற்றிய  எந்தப் பாடலினால் வறண்ட எட்டயபுரத்தில் அற்புத மழை  பெய்தது ?

6

இவர் பாடல்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும் முத்திரை என்ன?

7

திருவாரூரில் இவர் செய்த அற்புதம் என்ன ?

8

இவரைப் பற்றிய சுருக்கமான தகவலை எங்கே பெறலாம் ?

9

இவர் இயற்றிய பாடல்களில் மிகவும் சிறப்பிடம் பெறுபவை எவை ?

10

சங்கீத மும்மூர்த்திகளில் இவருக்குள்ள தனிச் சிறப்பு என்ன?

****************************

விடைகள்

1.அந்த வீணைகோயம்புத்தூரில் வசிக்கும் முத்துசாமி தீட்சிதரின் சகோதரர் வழிவந்த ஏழாம் தலைமுறை வாரிசான ஆடிட்டர் முத்துசாமியிடம் இருப்பதாக தினமலர் இணையதளம் (நவம்பர் 23, 2025) கோவையில் பூஜிக்கப்படும் முத்துசாமி தீட்சிதர் வீணை’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. கோவையில் ஆண்டுதோறும், சத்காரியா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் முத்துசாமிதீட்சிதர் ஜெயந்தி கீர்த்தனாஞ்சலி இசைவிழாவில், அந்த வீணை எடுத்து வரப்பட்டு ஆராதிக்கப்படுவதாகவும் அது செய்தி வெளியிட்டிருந்தது. நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தினமலருக்கு நன்றி தெரிவித்து டிவிட்டர் மெஸேஜ் வெளியிட்டார். காசி சங்கமத்தில் இளையராஜா இந்த விஷயம் பற்றிப் பேசியவுடன் இது பேசுபொருளாகியது. அதன் விளைவே இந்த தினமலர் செய்தி. 

***

2.அவருடைய 525 கிருதிகளை கர்னாடிக்.காம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. ஒரு கிளிக்கில் அதனை பாடல்களையும் இலவசமாகப் பெறலாம்.

Royal Carpet Carnatic Composers: MuthuswAmy Dikshithar

 

karnATik

***

3. தீட்சிதர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

·  பிறப்பு: மார்ச் 24, 1775, திருவாரூர்.

·  இறப்பு: அக்டோபர் 21, 1835, எட்டயபுரம்.

தீட்சிதர் சிதம்பரநாத யோகியிடம் ஸ்ரீவித்யா மகாமந்த்ர தீட்சை பெற்ற பின்னர் அவருடனே காசிக்குச் சென்று விசுவநாத தரிசனம் செய்தார். அவர் சொற்படி திருத்தணி முருகனை தரிசிக்கச் சென்றார் .மலை ஏறும் போது ஒரு கிழவர் எதிரில் வந்து “முத்துஸ்வாமி வாயைத் திற” என்று சொல்லி ஒரு கற்கண்டைப் போட்டு ஆசீர்வதித்து மறைந்து விட்டார். அப்போதே முருகனைத் தரிசித்து பரவசமுற்ற தீட்சிதர், முருகனின் அருளால் பாடல்களை மழையெனப் பொழிந்தார்.

***

4.திருவாரூர் வாதாபி கணபதி ஷோடச கணபதி கீர்த்தனை

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம் வாரணாஸ்யம் வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம்ஸேவித சரணம் பூதபௌதிக ப்ரபஞ்ச பரணம்

வீதராகிணம் வினதயோகினம் விச்வகாரணம் விக்னவாரணம்

சரணம்

புராகும்ப ஸம்பவ முனிவரப்ரபூஜிதம் த்ரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ரஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவஸ்வரூப வக்ரதுண்டம்

நிரந்தரம் நிடில சந்த்ரகண்டம் நிஜவாமகர வித்ருதேகக்ஷுதண்டம்

கராம்புஜபாச’பீஜாபூரம் கலுஷவிதூரம் பூதாகாரம்

ஹராதிகுரு ஹதோஷித பிம்பம் ஹம்ஸத்வனி பூஷித ஹேரம்பம்

XXXXXX

ராக³ம்: ஹம்ஸத்⁴வனி (ஸ, ரி2, க3³, ப, நி3, ஸ)

வாதாபி க³ணபதிம் பஜேஹம்

வாரணாஶ்யம் வரப்ரத³ம் ஶ்ரீ ।

பூ⁴தாதி³ ஸம்ஸேவித சரணம்

பூ⁴த பௌ⁴திக ப்ரபஞ்ச ப⁴ரணம் ।

வீதராகி³ணம் வினுத யோகி³னம்

விஶ்வகாரணம் விக்⁴னவாரணம் ।

புரா கும்ப⁴ ஸம்ப⁴வ முனிவர

ப்ரபூஜிதம் த்ரிகோண மத்⁴யக³தம்

முராரி ப்ரமுகா²த்³யுபாஸிதம்

மூலாதா⁴ர க்ஷேத்ரஸ்தி²தம் ।

பராதி³ சத்வாரி வாகா³த்மகம்

ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்ட³ம்

நிரந்தரம் நிகி²ல சந்த்³ரக²ண்ட³ம்

நிஜவாமகர வித்³ருதேக்ஷுக²ண்ட³ம் ।

கராம்பு³ஜ பாஶ பீ³ஜாபூரம்

கலுஷவிதூ³ரம் பூ⁴தாகாரம்

ஹராதி³ கு³ருகு³ஹ தோஷித பி³ம்ப³ம்

ஹம்ஸத்⁴வனி பூ⁴ஷித ஹேரம்ப³ம் ।

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் பஜனை செய்கிறேன்.

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்னும்

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

***

5. எட்டயபுரத்தில்  வறட்சி நிலவிய காலத்தில் அங்கு சென்றார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ பெருமக்கள் வரிசையில், மரபில் வந்தவர் அவர். உடனே அமிர்தவர்ஷினி ராகத்தில் அம்பிகை மீது ‘ஆனந்தாமிர்தகர்ஷினி’ என்ற க்ருதியைப் பாடவே மழை ‘பெய்யெனப் பெய்தது’.

***

6. முருக பக்தன் என்பதால் தன்னுடைய பாடல்களில் குருகுஹ என்ற முத்திரையைச் சொல்லி ராகத்தின் பெயரையும் சொல்லி கிருதியை பூர்த்தி செய்வார்.

***

7. இவருடைய சீடர்களில் திருவாரூர் நடன மாது திருவாரூர் கமலமும் ஒருவர். அவர் கோவிலில் ஆடுவதற்காக 2 தெலுங்கு பாடல்களையும் இயற்றினார். அதைப் பார்க்க நாட்டியப் பேரறிஞர்களான தஞசாவுர் நால்வரான பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ஆகிய நால்வரும் வந்தனர். திருவாரூரில் தியாகராஜருக்கு வேண்டிய பூஜைகளைச் செய்யுமளவுக்கு பண வசதி இல்லையே என்று வருத்தம் அடைந்தார்; உடனே நடன மாது தன்னுடைய நகைகளை எல்லாம் அடகு  வைத்து பணம் பெற்றுவருவதாகச் சொன்னார்; அதை வாங்க மறுத்த தீட்சிதர் , இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து தியாகராஜம் பஜே என்று அந்த ஊர் ஆண்டவன் மீதே பாடல் இயற்றினார் ; அந்த ஊர் சத்திர மானேஜர் இடந்து வந்து நிறைய உணவுப்பண்டங்களை வீட்டில் கொண்டு இறக்கினார்.

****

8.: ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும், எழுதியவர்: என். பார்த்தசாரதி, ஆண்டு 2002.

சென்னை மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 24 பக்க புத்தகத்தில் ஒரு கலைக்களஞ்சிய அளவுக்கு தகவல்கள் உள்ளன. சங்கீத ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

 டி.எஸ்.பார்த்தசாரதி எழுதிய   ‘Muthuswami Dikshitar’ ( in the book Great Composers ) என்ற ஆங்கிலக் கட்டுரையையும் படிக்கவும்.

 ****

9.இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார். பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்..

தமிழ்சம்ஸ்கிருத மொழிகளில் வேற்றுமைகள் (விபக்தி) எட்டு ஆகும். இவைகளை வைத்துப் பாடினால் விபக்தி கிருதிகள் என்பர். இவ்வகையில் 32 கீர்த்தனைகள் இயற்றினார். ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையில் அதே வேற்றுமையில் வரிகள் அமையும். அபயாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பிகை, மதுராம்பிகை பெயர்களில் (4 x 8=32) இப்படிப் பாடினார். 

 சிவன் மீது பாடிய ‘ஸ்ரீ விஸ்வநாதம்’ என்ற கிருதி சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு சிவனின் பெருமைகளை விளக்குகிறார். ஒரே பாட்டில் 14 ராகம்

***

10. கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் இவர்தான் இளையவர்; இவரைப்போல எல்லா கடவுளர் மீதும் இவ்வளவு பாடல்களை ஏனைய இருவரும் பாடவில்லை இவர் சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த  மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன. இவர் பாடல்களில் வரும் புராணஇதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்.

 —subham—

Tags- முத்து சுவாமி தீட்சிதர் கிருதிகள் , 10 கேள்விகள், வாதாபி கணபதிம் பஜே , சங்கீத மும்மூர்த்திகள் , நவாவர்ணக் கிருதிகள் , முருகன் அருள் 

Lanka, Naga Mystery, Camel! Purananuru wonders-64; Tamil Encyclopaedia 104 (Post.16,179)

 Written by London Swaminathan

Post No. 16,179

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-64; Tamil Encyclopaedia 104, One Thousand Interesting Facts -Part 104

CAMEL FAIR IN PUSHKAR, RAJASTHAN.

Item 892

Next let us look at the wonders in SIRU PANATRUPPADAI (siru paan aatruppadai); it is one of the ten idylls (Paththup Paattu), part of Tamil Sangam Literature that is 2000 years old.

Poem was written by Nallur Naththathanaar; Lines 269.

Subject – a bard is guided by another bard to the town of Nalliakodan for getting gifts.

Here are the wonders or unique things from this book:

Mahabharata’s Bhima is mentioned because of his skill in cooking;

Ramayana’s Lanka is mentioned along with Mavilanka, a small town;

For the first time all the Last Seven Philanthropists listed together;

For the first time camel is mentioned;

New dream miracle reported-Nalliayakkodan’s dream of Lord Muruga led to his victory;

Doors of kings always open to Brahmins, Poets and Bards

Monkeys are kept by salt vendors, as their own children;

New type of Anthathi is used; word- word Anthathi;

Naga mystery continues with Puram verse of Perun Chitran;

Madurai city’s link with Tamil language reconfirmed;

Tamil’s belief in Moon devoured by Snake during eclipse is repeated;

Boy soldiers, Laughing Ghouls, usual description of Body Parts of Woman from Head to Foot is also found;

Great three Cities of Chera, Pandya and Choza kings are portrayed.

***

Item 893- Atharvana Veda Echo-Tamil Line one

Foreigners called earth as Fatherland where male dominance and male chauvinism is seen.

Hindus are the one who called the earth MOTHER EARTH. We see it in the most famous Ode to Earth in the Atharvana Veda. The hymn is called Bhumi Sukta or Prithvi Sukta.

Here the poet in the very first line said Mother Earth. Hindus named all the rivers after women; Hindus named all the good virtues after women.

***

Item 894-  Word Anthathi – lines 21, 22

Anthathi is a Sanskrit word that means End- Beginning.

The last word of the previous line or previous stanza will be the beginning of the next line.

Elsewhere in Sangam poems we see Anthaathi just in few lines.

In the devotional poems of middle Ages of Tamil literature we see 100 stanzas anthathi hymns.

Here in lines 21, 22 we see words used twice consequently.

***

Item 895-MullaiFlower linked to Chastity

Strange custom of Tamils is linking MULLAI flowers with chastity; Mullai is a kind of Jasmine.

Here poet links Mullai flowers with virtuous woman. We see it in other Sangam Poems as well;

Narrinai- 142;Akananuru – 274;

***

Item 896- monkeys as pets-  lines 56-61

Poet Naththathhanar depicts an interesting scene of a female monkey playing with the rattle. Salt vendors keep monkeys as pets. They are treated like their own sons or daughters, says the poet. The rattle that is used by the monkey, we can guess,it is from one of the babies of the salt vendor.

***

Item 897- Madurai -seat of Tamil Sangam- lines 66-67

We know that at least forty poets are from Madurai city in Tamil Sangam poetry, much higher than other towns. That is a proof for Third Tamil Academy  located in Madurai. Here poet confirms Tamil Link with Madurai.

தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று, (62-67)

***

Item 898- Divine Lotus-line 73

Poet described the lotus as DIVINE LOTUS. Hindus only knew the reason.

All the Hindu goddesses, especially Lakshmi and Sarasvati, Gods Brahma and Vishnu, are associated with lotus flower. India also declared it as the National Flower of India.

திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை,

***

Item 899-Strange link between Lord Shiva and Choza Kings! Lines 81-82

Throughout Tamil devotional poems Lord Shiva is praised for destroying three hanging fortresses of Demons/Asuras by laughing; I always described it as the destruction of Three space stations in the sky by laser rays from Shiva’s third eye. But why the poet linked it with a Choza king is not explained properly. We know that Chozas migrated from North West India where Sibi race ruled once upon a time; Here also poet called the Choza as SEMBIAN which is derived from Sanskrit SIBI=SAIBHYA=SEMBIYA.

The connection between Lod Shiva and Choza needs more explanation, which is lacking in the commentaries. Both are depicted as destroying Three Hanging Castles!

தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக்கை,
நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்

***

Item 900-lines 84-11- Last Seven Philanthropists

Here we get details of seven great chieftains who were famous for their munificence, generosity, compassion and love towards animals.

Bekan gave his clothes to a peacock (thinking that it is shivering in cold);

Pari (paari) gave his chariot to a Mullai (jasminium) creeper for support (thinking that it is struggling without a post to climb)

Kari (kaari) gifted horses (to bards);

Ay Andiran gave a rare cloth given by snake Neela Naagam to Lord Siva under Banyan Tree;

(I have some comments ;see below)

Athikan (Athiyamaan Anji) gave a rare black gooseberry (which lengthens life) to poetess Avvai;

Nalli donated lot of wealth (as charity);

Ori gave lands to dancers and singers;

This is the first reference to Seven generous men together grouped as the Great Seven

From this we know this poet lived later than many Sangam poets who praised the seven people separately.

Probably a gap of 200 years.

My comments :

Neela naakam is not a snake; it may be the name of a Naga leader who weaves very fine cloths.

***

Item 901- Ramayana Lanka and New Maavilanka- lines 110-120

Capital of chieftain Nalliyakkodan was Maavilanka

Poet says his town is Maavi Lanka which is similar to the old and famous Lanka (of Ravana).

Hindus of Tamil Nadu were well versed in Hindu epics Ramayana and Mahabharata (we are going to see Bhima soon)

***

Item 902-OVIYAR clan is Mysterious Naga Clan

Oviyar in today’s Tamil is a painter; but in the poem he is a man from Naga clan; we have about 20 Naga poets in Sangam corpus; they may be from North India or Sri Lanka; Ceylon/Sri Lanka was a Naga Island. We have Naga names in Mahavamsa and Gupta inscriptions. So their origin is still an unsolved mystery. OVIYAR hear meant who has Snake tattoos on their bodies. Puram 176 where this chieftain is praised is also a Naga poet. We have another poet named Perun Chitran in Purananuru. He used same words in his poem; Perum Chitran is Maha Chitran meaning Great Painter; it means he is also a poet with big snake tattoo on his body or a great Naga clan leader. In short Oviyar is misunderstood and misinterpreted. Neela Naakam is also a Naga Chief (see seven Generous Men above)

Last but not the least , Nalliya KODAN is similar to great snake KAARKODAN in Sanskrit books. Karkodan is also depicted as man and snake.

***

Item 903- CAMEL! in Tamil literature! Line 154

For the first time Sangam Age, Tamils hear about camel in this poem; Tamils must have already seen it, because the poet used it as a simile. It is compared to the woods washed by the waves; the logs lying on the sea shore looked like the back of a sleeping camel.

Sanskrit word Ushta for camel is changed to Ottakam in Tamil. It is a desert animal found in Rajasthan deserts. So, Tamils must have imported them from Rajasthan.

to be continued………….

Tags. Purananuru wonders-64; Tamil Encyclopaedia 104, One Thousand Interesting Facts -Part 104 , item 903, camel, Ramayana Lanka, Naga Mystery

மோடிஜியைக் கவிழ்க்க சர்ச் சதியா? (Post No16,178)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,178

Date uploaded in London – 9 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மோடிஜியைக் கவிழ்க்க சர்ச் சதியா? 

ச. நாகராஜன்

கார்டினல்கள், ஆர்ச் பிஷப்கள், பிஷப்கள், விகார்கள் ஆகியவர்களின் பிரத்யேக அறைகள் இப்போது ‘வார் ரூம்’ ஆகி விட்ட அதிர்ச்சி செய்தியை கேரளாவின் மூத்த பத்திரிகையாளரான குமார் செல்லப்பன் அவர்கள் சனாதன் ப்ரபாத் 2026, ஆகஸ்ட் 1-15 இதழில் தெரிவித்துள்ளார்.

சனாதன தர்மத்தை ஒழித்துக் கட்ட திட்டங்களையும் உத்திகளையும் அவர்கள் வகுத்து வருகிறார்களாம்.

ஆப்ரஹாமிக் தலைவர்கள் ஹிந்துக்களை பலியாக்குவது சுலபம் என்று கருதுகிறார்களாம்.

இதன் உச்சகட்டமாக இவர்கள் கோபம் நரேந்திர மோடியின் மீது திரும்பி இருக்கிறது.

இதற்காக இவர்கள் ராகுல் காந்தியுடன் கூட்டணி சேர்ந்து விட்டார்கள்.

ராகுல் காந்தி, கடந்த ஜூன் மாதம் நியூ டில்லியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும் போது, “இன்னும் ஒரு வருட காலத்தில் நரேந்திர மோடியின் அரசு இருக்காது. மோடிக்கு எதிராக பிரம்மாண்டமான எதிர்ப்பலை இந்தியாவில் எழுந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

அத்தோடு அவர் மேலும் கூறுகையில், எலக் ஷன் கமிஷனர்களும், நீதிபதிகளும் அவருக்கு பிஜேபி அரசின் மேலாதிக்க மனப்பான்மையிலிருந்து தம்மைக் காக்குமாறு தனக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

1978ம் ஆண்டு மொரார்ஜி தேசாயின் அரசு ஓபி தியாகி மூலம் ‘ஃப்ரீடம் ஆஃப் ரெலிஜின் பில்” ஐ கொண்டுவந்த போது கல்கத்தாவில் மதர் தெரஸா பெரிய கலவரத்தைத் தூண்டி விட்டார். இந்தச் சட்டம் சட்டத்திற்குப் புறம்பாக மதம் மாற்றுவதைத் தடுப்பதற்கான சட்டமாகும். கலவரக் கூட்டங்களின் விளைவாக மொரார்ஜி அரசு கவிழ்ந்தது.

 இப்போது Foreign Contribution Regulation Amendment Act (FCRAA ACT 2026) பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டு வரப்பட இருக்கிறது. இதற்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்த இந்திய கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு திட்டமிட்டுள்ளது.

சனாதன தர்மத்திற்கு எதிராக Catolic Bishops’ Conference of India – CBCI – எவ்வளவு வெறுப்பைக் கொண்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர்.

ஹிந்து தர்மத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இரவு பகலாக இது வேலை பார்த்து வருகிறது. ஆனால் இதை ஓசைப்படாமல் பகிரங்க விளம்பரம் இல்லாமல் செய்து வருகிறது.

இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருப்பதாக தங்களுக்கு ஜால்ரா போடும் உலகளாவிய ஊடகங்கள் மூலமாக தொடர்ந்து இது செய்திகளை வெளியிட்டு வருகிறது.

1959ம் ஆண்டு இதன் பிரம்மாண்டமான தாக்குதல் கேரளாவில் நடைபெற்றது.

1957ல் அரசை அமைத்த நம்பூதிரிபாட் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர் இவர்கள்.

காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீகுடன் கூட்டு சேர்ந்து இவர்கள் கம்யூனிஸ அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கம்யூனிஸ அரசு பள்ளிகளின் செயல்பாட்டில் குறுக்கிட்டதையும் சர்ச் விரும்பவில்லை. ஏனெனில் பள்ளிகளில் பெருவாரியான பள்ளிகள் கிறிஸ்தவ சர்ச்சினாலேயே நடத்தப்பட்டவையாகும்.

இவர்களின் கிளர்ச்சி பெரிதாக ஆகவே அப்பாவியான 20 உயிர்கள் பலி ஆயின.

இறுதியில் நேருவின் அரசு 356 சட்டப்பிரிவின் படி நம்பூதிரிபாட் அரசை கலைத்தது.

இதற்குப் பின்னர் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.கம்யூனிஸ்டுகளும் சர்ச் பிஷப்புகளும் ஒருவருக்கொருவர் கொண்டிருந்த செல்வாக்கையும் செல்வத்தையும் நன்கு புரிந்து கொண்டனர்.

இடையே அமெரிக்க சி.ஐ.ஏயும் வடிகனும் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களை ஆதரிக்காத அரசுகளைக் கவிழ்க்கலாயின.

இவற்றிற்கு வரும் நிதியை இந்திய அரசின் FCRA கண்காணிக்க ஆரம்பித்தது.

இதனால் சர்ச்சுக்கும் எப்சி ஆர் ஏக்கும் தீராப் பகை ஏற்பட்டு விட்டது.

 இந்த நிலையில் தான் சட்டத்திற்கு மேல் சட்டம் வந்து தங்களின் மதமாற்ற நடவடிக்கை, அரசு கவிழ்ப்பு நடவடிக்கை ஆகியவற்றைச் செய்ய விடாமல் தடுக்கிறதே என்று சர்ச் பிஷப்புகள் ஆத்திரப்படுகின்றனர்.

இப்போது ராகுல் காந்தி ஒரு வருடத்திற்குள் மோடி அரசு போய்விடும் என்று பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் சவால் விட்டு அறிவித்திருப்பதால் சர்ச்சுகளுக்கு ஏக சந்தோஷம்.

அவருடன் கூட்டு சேர்ந்து இணைவது தானே நல்லது!

இதற்கான நடவடிக்கைகளைத் தான் மூத்த பத்திரிகையாளர் குமார் செல்லப்பன் சுட்டிக் காட்டுகிறார்.

என்ன நடக்கப் போகிறது? பிஜேபி உஷாராகச் செயல்படுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

**

ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் படைப்புகள் பற்றி 10 கேள்விகள் (Post.16,177)

Written by London Swaminathan

Post No. 16,177

Date uploaded in London – 8 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இவருடைய 471 கீர்த்தனைகளை கர்னாடிக்.காம் வெளியிட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கிளிக் செய்து படிக்கலாம்

https://www.karnatik.com/co1024.shtml

1

ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் எங்கு பிறந்தார்? எங்கு கற்றார் ?

2

இவர் எழுதிய நூலின் பெயர் என்ன ? அதில் என்ன எழுதியுள்ளார் ?

3

சங்கீத உலகத்துக்கு இவர் அளித்த கொடை என்ன ? இவருடைய புதிய இசைக் கண்டுபிடிப்புகள் என்ன ?

4

இவருக்கு ஆதரவளித்த மகாராஜாக்கள் யார் யார் ?

5

இவருக்கு பரிசாக அளித்த குட்டியானை என்ன செய்தது ?

6

திரைப்படத்தில் முத்தையா பாகவதரின் கீர்த்தனைகள் இடம்பெற்றதுண்டா ?

7

இவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது யார் ?

8

இவருடைய சீடர்கள் யார் ?

9

மைசூர் சாமுண்டீச்வரியுடன் மேல் பக்தி ஏற்பட்டு என்ன செய்தார் ?

10

இவரால் பாராட்டப்பட்ட இன்னொரு புகழ்பெற்ற இசைக்க கலைஞர் யார்?

********************

விடைகள்

1.ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (நவம்பர் 15, 1877 – ஜூன் 30, 1945) புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஹரிகேசவ நல்லூரில் பிறந்தார். தந்தையின் பெயர் லிங்கம் அய்யர்; தாயாரின் பெயர் ஆனந்த வல்லி.திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பயின்ற இவருக்கு மாமா உறவுமுறையில் வந்த லட்சுமணசூரி பல சாஸ்த்திரங்களை சொல்லிக்கொடுத்து திருவையாறு முத்து கனபாடிகள் நடத்திவந்த வேத பாடசாலையில் சேர்த்தார் அங்கே  தியாகராஜர் சிஷ்ய பரம்பரையில் வந்த சாம்பசிவம் அய்யரிடம் இசையும் கற்றார் . மாமன் மகளான சிவகாமியை திருமணம் செய்தார். ஹரிகேசவநல்லூர் (அரிகேசவநல்லூர்), தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், அம்பாசமுத்திரம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் கிராமம் ஆகும்.  இவர் தன் ஊரின் பெயரையே இவர், ‘ஹரிகேச’ (Harikesa) என்ற முத்திரையுடன்பயன்படுத்தினார் இவ்வூரில் இருக்கும் அரியநாதசுவாமி – பெரியநாயகி அம்பாள் விஸ்வநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவத்தலமாகும்.

***

2.இவர் எழுதிய நூலின் பெயர் ஸங்கீத கல்பத்ருமம் . நூல் முழுதையும் கேரள கவர்ட்மெ ண்டார் வெளியிட்டுள்ளனர் தமிழ் விக்கிப்பீடியாவின் அடிக்குறிப்பில் இந்த நூலின் பெயரை கிளிக் செய்தால் முழு நூலையும் படிக்கலாம் . அதன் முன்னுரையில் அவரே சொல்கிறார் : பதினைந்து ஸங்கீத நூல்களின் பெயரை எழுதிவிட்டு  அவைகளை பலமுறை ஆராய்ச்சி செய்து தற் கால ஸங்கீதத்துக்கு  வேண்டிய விஷ்யங்களைத் தமிழ்பாஷையில் எழுதியுள்ளேன்  . ஸங்கீதஉற்பத்தி ஸங்கீத மஹிமை என்ற தலைப்புகளில் துவங்கி வர்ணங்கள் கீர்த்தனங்கள், ஜாவளிகள், தில்லானா என்று 82 தலைப்புகளில் அரிய விஷயங்களை எழுதியுள்ளார். (முதலில் அவர் குறிப்பிட்ட 15 நூல்களின் பெயரைப் படிக்கும்போதே சங்கீத விற்பன்னர்களுக்கு வியப்பு மேலிடும்; இத்தனை நூல்களா ? அவைகளைக் கேட்டதும் பார்த்தும் இல்லையே! என்று கவலை வேண்டாம்; அவைகளின் சாரத்தை நமக்கு பாகவதர் கொடுத்துவிட்டார் அதை இலவசமாகவம் கேரள கவர்மெண்டார் 1977 ஆம் ஆண்டில் நமக்கு அளித்துவிட்டனர்.

***

3.சுமார் 470-க்கும் மேற்பட்ட புதிய கீர்த்தனைகள் மற்றும் இசை வடிவங்களை இயற்றினார்.நிரோஷ்டா(உதடு ஒட்டாத ) போன்ற புதிய ராகங்களை இசையுலகிற்கு வழங்கினார்.ஹரிகதா காலட்சேபம் செய்வதில் வல்லவர் என்பதால் ‘ஹரிகதா சக்ரவர்த்தி’ என அழைக்கப்பட்டார்.வானொலிக்கான சிக்னல் ட்யூன் (Signature Tune) உருவாக்கத்தில் உதவினார். முருக பக்தர் ஆனதால் ஹரிகேசவ நல்லூரில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி உற்சவத்தை நடத்தினார் ; வள்ளி நாயகனே என்ற கீர்த்தனையை இயற்றறி னார் ; இவர் பாடிய ஹிமகிரிதனயே ஹேமலதே என்ற கீர்த்தனையை பலரும் பாடிப் பிரபலம் அடைந்தனர் ; மதுரை மணி அய்யர் பாடிய இங்க்லிஷ் நோட்டுகள் இவர் உருவாக்கியவையே. பசுபதிப்பிரியா புதமனோகரி நிரோஷ்ட்டா முதலிய ராகங்களை உருவாக்கினார். மராட்டி மொழி உள்பட ஏழு மொழிகளில் கீர்த்தனைகளை இயற்றினார். இவரது தியாகராஜ ராமாயணம்,  வள்ளி பரிணயம் என்ற ஹரிகதையை எல்லோரும் கேட்டு மகிழ்ந்தனர். சித்தி விநாயகம் கீர்த்தனை புவனேஸ்வரியா  கீர்த்தனை ஆகிய இரண்டும் மோகன கல்யாணி ராகத்தில் அமைந்தவை. 20 புதிய ராகங்களை உருவாக்கிருக்கிறார்.

முத்தையா பாகவதர் முத்திரை பாடலின் இறுதியில் ‘ஹரிகேஷ’ என்று வரும்.

இவருடைய 471 கீர்த்தனைகளை கர்னாடிக்.காம் வெளியிட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் கிளிக் செய்து படிக்கலாம்

https://www.karnatik.com/co1024.shtml

***

4.எட்டையபுரம் ஜமீன்தார் , திருவாங்கூர் மஹாராஜா பலராம வர்மா, சுவாதித்திருநாள் மஹாராஜா ,மைசூர் மஹாராஜா கிருஷ்ணராஜ உடையார் முதலியோரின் பேராதரவைப் பெற்றார் .

***

5.மைசூர் மஹாராஜா இவரு டைய கீர்த்தனைகளைக்கேட்டு மனம் மகிழ்ந்து ஒரு குட்டி யானையைப் பரிசளித்தார் ; அது இவருடைய சங்கீதக் கருவிகளை பதம் பார்த்தது! உடைத்துத் தள்ளியது . பாகவதரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்ற பழமொழிக்கு ஏற்ப யானையைத் திருப்பி அனுப்பிவிட்டார் அங்கே ஆஸ்த்தான வித்வானாக இருந்த காலத்தில் இது நடந்தது.

***

6. முத்தையா பாகவதர் 1934-ஆம் ஆண்டு வெளியான ‘சங்கீத லவகுசா’ (Sangeetha Lavakusa) என்ற தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்து, மொத்தம் 63 பாடல்களைப் பதிவு செய்தார். 

 அடுத்த ஆண்டு, பாகவதர் இசையில், ‘ராதா கல்யாணம்’ வந்தது..ஹம்சானந்தி ராகம், அப்போது பிரபலம் ஆகாத காலம். பஞ்சமம் இல்லாத ராகம். பாடுவது கஷ்டம். இரண்டு மூன்று சங்கதிகளை அடுக்கியிருந்தார் பாகவதர்.கேமராவின் முன்னே நின்று, பாடி நடிக்க வேண்டிய காலம் என்பதால், பாடும்போது நடிகர் முகம் கோணக் கூடாது. 15 நாட்கள் ஒத்திகை நடந்தது. ஒரே ‘டேக்’கில் பாட்டும் காட்சியும் பதிவாகின. பாடி நடித்த எஸ்.ராஜத்திற்கு, தன்னுடைய பரிசாக, தங்க மெடல் அளித்தார், பாகவதர்.பாகவதரின், புவனேஸ்வரியா, சாரஸமுகி போன்ற பல பாடல்கள், கர்நாடக இசை மேடைகளில், இன்று அழகாக ஒலிக்கின்றன. ‘ஆண்டவன் தெரிசனமே’ என்று எஸ்.ஜி.கிட்டப்பாவிற்காக, பாகவதர் அமைத்த பாடலைத் தான், சில வரி மாற்றங்களுடன், ‘அகத்தியர்’ படத்தில், டி.ஆர். மகாலிங்கம் இசைத்தார்.

***

7.திருவாங்கூர் சர்வகலாசாலை இவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளித்தது . கர்நாடக சங்கீதத்தில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவர் இவர்தான்.

***

8..மதுரையில் இவர் இசைப்பள்ளியைத் துவக்கி சங்கர சேர்வையை முதல்வர் ஆக்கினார். மதுரை மணி அய்யர், டி என்,. சேஷ கோபாலன் முதலிய பல இசைக்கலைஞர்கள் அங்கே சங்கீதம் பயின்றனர் . கே ஏ ஸ்ரீனிவாசன் , அவருடைய சீடர்களில் ஒருவர் ; மாயா பஜார் மாயா மச்சேந்திரா திரைப்படங்களில் சீனிவாசன் நடித்துள்ளார் .

***

9.மைசூர் மகாராஜா இவரிடம் “ சாகித்தியங்கள் செய்வதில் நீர் சமர்த்தரானால் ஒரே இரவிற்குள் நூறு கீர்த்தனைகள் செய்து காட்டும்” எனக்கேட்க, அம்பாள் அருளால் அவற்றை பாடி முடித்தார். அவையே “சாமுண்டாம்பா அஷ்டோத்ர கீர்த்தனைகள்”.

இதைக்கண்ட மகாராஜா இவருக்கு “காயகசிகாமணி” எனும் பட்டத்தை வழங்கினார். சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று மனம் உருகி பல கீர்த்தனைகளைப்  பாடுவார் ; ஒரு சமயம் மைசூர் மஹாராஜா உடல் நலம் குன்றியதை அறிந்து சாமுண்டீஸ்வரி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்து கீர்த்தனைகளை இசைத்தவுடன் மஹாராஜா குணம் அடைந்தார்.

***

10.பாகவதரின் துவக்க காலத்தில் இசைத்தட்டுகளை வெளியிட்டு வந்தார்; அதில் ஒரு கீர்த்தனை எவரளி என்பதாகும் . எதேச்சையாக பிறர் பாடியதையும் கேட்டுக்கொண்டிருந்த போது, இவரைவிட அதே கீர்த்தனையை இன்னும் ஒருவர் அழகாகப் பாடியதைக்கேட்டு வியந்தார்; அத்தோடு நில்லாமல் அதனது இசைத்தட்டினை  வெளியிட வேண்டாம் என்று அந்தக் கம்பெனிக்கும் தகவலனுப்பிவிட்டு எவரளி கீர்த்தனையை அற்புதமாகப் பாடிய கலைஞரைச் சந்தித்து பாராட்டும் தெரிவித்தார்; அப்படி பாராட்டுப்பெற்ற இசைக் கலைஞர் புகழ் பெற்ற எஸ்.ஜி கிட்டப்பா ஆவார் 

.

–subham—

Tags- ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதர், படைப்புகள், 10 கேள்விகள், பாடல்கள் , கீர்த்தனைகள்

Hindu’s Karma Theory! Tirukkural Encyclopaedia- Chapter 32-not doing evil- இன்னா செய்யாமை (Post16.176)

Written by London Swaminathan

Post No. 16,176

Date uploaded in London – 8 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Points to be noted:

Karma theory as explained in Hindu scriptures is used by Valluvar here. He used the Tamil word NOY, which means disease, four times in the last couplet 320. Hindus only use disease for the evil effects of karma. They call the birth as PIRAVIP PINI- meaning the disease of birth (and death) .

**

Kural 314 is in Dhammapada and Manu smriti:

1-5. Hatred is never appeased by hatred in this world. By non-hatred alone is hatred appeased. This is a law eternal.- Dhammapada

क्रुद्ध्यन्तं न प्रतिक्रुध्येदाक्रुष्टः कुशलं वदेत् ।
सप्तद्वारावकीर्णां च न वाचमनृतां वदेत् ॥ ४८ ॥

kruddhyantaṃ na pratikrudhyedākruṣṭaḥ kuśalaṃ vadet |
saptadvārāvakīrṇāṃ ca na vācamanṛtāṃ vadet || 6-48 ||

Towards an angry man he shall not retort in anger; when he is cursed, he shall pronounce a blessing; and he shall not utter an untrue word—(6-48) Manu Smriti

**

Kural 320 is also in Dhammapada; Buddha says

1-15. The evil-doer grieves here and hereafter; he grieves in both the worlds. He laments and is afflicted, recollecting his own impure deeds.

1-16. The doer of good rejoices here and hereafter; he rejoices in both the worlds. He rejoices and exults, recollecting his own pure deeds.

Karma Theory is seen throughout Tamil Sangam poems as well

***

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

2.S M Diaz, I G of Police- SMD, Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP, Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

7.Tamil Original

****

Part 50- Kural Chapter 32

இன்னா செய்யாமை – Not Injuring-non-violence- Not doing Evil-

****

311.Not injuring is the religion of the pure in heart they injure not for all the glory and the wealth of the world- A Aranganatha Mudaliyar – ANM+2 ( B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan), Year 1933

***

311.Even if it is productive of wealth and attendant fame,

Men of virtue will surely not do harm to others -S M Diaz, I G of Police – SMD, Year 2000

***

311
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,
No ill to do is fixed decree of men in spirit pure.
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness- Rev.Dr.GU Pope – GUP, Year 1886

***

311.The pure by faith mean pain to none
Though princely wealth by that is won.        Suddhananda Bharathiyar- SB   

***

311.Refraining from doing harm to others , is the ideal of the good-harted, though by doing harm one may gain rare attainments- EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

311.It is the motto of the pure to no one to give pain,

Even though great glory- giving wealth they win.H A Popley – HAP (not full book; only selected couplets) Year 1931

***
311. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

312.Behold the blessed souls that walk in truth; they return not evil for evil done out of malice; for that is their way– ANM+2

***

312.Even to a man who maliciously did him harm,

The righteous man’s ideal is no to return evil– SMD

***
312
Though malice work its worst, planning no ill return, to endure,
And work no ill, is fixed decree of men in spirit pure.
It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil. – GUP

***

312.The spotless hearts seek not revenge
Though Malice does the worst in rage.    Suddhananda Bharathiyar- SB   

***
312.Refraining from doing harm in retaliation of harm done with animosity is the rule of conduct of the noble hearted- EVS

***

312.It is the motto of the pure to make no ill return

Even though with malice men do ill to them-.H A Popley

***

312. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

313.Retaliation even for unprovoked injuries brings in its train endless woes– ANM+2

***

313.A vengeful harm done even on an unprovoked wrong,

Will bring endless evil in its trail– SMD

***

313
Though unprovoked thy soul malicious foes should sting,
Retaliation wrought inevitable woes will bring.
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow. – GUP

***

313.Revenging even causeless hate
Bad-blood breeds and baneful heat– SB   .       

***
313. The harm done even to a person who harbours enmity without  any provocation will bring irretrievable distress -EVS

***
313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

XXXXXXXXXXXXXXXXXXXXX

314.The noblest revenge is to put the wrong-doer to the blush by doing him a good turn for the harm done unto you– ANM+2

***

314.The best punishment for those who do evil to you,

Is to shame them by returning good for evil– SMD

***

314
To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides. – GUP

***
314.Doing good-turns, put them to shame
Thus chide the evil who do harm.       – SB   .       

***

314.The best way to punish those who harm you  is to make them feel abashed by doing them good and thinking no more of it-EVS

***

314.If you would punish those who have done you ill,

Shame them by kindness in return .H A Popley

***
314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.

XXXXXXXXXXXXXXXXXXX

VALLUVAR WITH OM GARLAND IN LONDON.

315.Of what avail is your knowledge of men and things, if you treat not others alike and shield them not  from sorrow and pain? – ANM+2

***

315.If others’ grief, as yours you do not treat,

Of what avail is wisdom great? – SMD

***

315
From wisdom’s vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others’ souls from pain?
What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ? – GUP

***

315.What does a man from wisdom gain
If he pines not at other’s pain?   – SB   

***

315.Of what use is one’s knowledge if one cannot feel the sufferings of others as one’s own, and ward them off-EVS

***

315.If others’ pains you cannot feel, just as your own,

What good can ever come from knowledge gained-.H A Popley

***
315. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

316. Refrain from what your heart has conceived as injurious to mankind-– ANM+2

***

316.What one has realised as causing pain to himself,

Should not be inflicted on the neighbour-– SMD

***

316
What his own soul has felt as bitter pain,
From making others feel should man abstain.
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow. – GUP

***

316.What you feel as ‘pain’ to yourself
Do it not to the other-self        – SB   

***

316.One should refrain from doing deeds which to one’s knowledge will cause harm to others -EVS

***

316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

317.It is the height of perfection not to injure anyone in the least at any time of your life– ANM+2

***

317.If no wrong is ever done to anyone even in thought,

That itself is a cardinal virtue– SMD

***

317
To work no wilful woe, in any wise, through all the days,
To any living soul, is virtue’s highest praise.
It is the chief of all virtues not knowingly to do any person evil, even in the lowest degree, and at any time. – GUP

***

317.Any, anywhere injure not
At any time even in thought.       – SB   

***

317.Refraining from doing intentional harm, however slight it may be to anybody to anytime, is the best policy-EVS

***

317.Never doing the least hurt to any with intent

Is chief of all the virtues rare .H A Popley

***


317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

XXXXXXXXXXXXXXXXXXXXXX

318.It baffles our mind why a soul that felt the bitter smart of wrong should inflict it on others– ANM+2

***

318.Whyshould man who has experienced, the pain off injury,

Cause harm to be done to other beings? – SMD

***

318
Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man?
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ? – GUP

***

318.How can he injure other souls
Who in his life injury feels.        – SB   

***
318.When a man experienced pain caused by  harm done to him , how can he cause pain to others? -EVS

***

318. தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

319.Evil pursues the wrong-doer close on his heals as even tide follows dew-washed morn– ANM+2

***

319.If a man harms his neighbour in the forenoon,

Sure harm will come to him in the afternoon– SMD

***

319
If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening. – GUP

***

319.Harm others in the forenoon
Harm seeks thee in afternoon.       – SB   

***
319.The harm we do unto others will bring, in quick succession, harm unto ourselves-EVS

***

319.If ere noon day you ill to others do,

At evening will ill it .H A Popley – HAP

***
319. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

XXXXXXXXXXXXXXXXXXXX

320.Evil recoils on him that doth evil; therefore, shuns he evil who seeks freedom from the ills of life– ANM+2

***

320.All pain in the world rebounds on the man who caused it

One who seeks freedom from it, should not give pain– SMD

***

320
O’er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill.
Sorrow will come upon those who cause pain to others; therefore those, who desire to be free from sorrow, give no pain to others. – GUP

***

320.No harm is done by peace-lovers
For pains rebound on pain-givers.       – SB   

***

320.All suffering is retribution brought by suffering caused to others. Those who would be free from pain would refrain from causing pain -EVS

***

320. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

–subham—

Tags- Tirukkural Encyclopaedia- Chapter 32-not doing evil-  இன்னா செய்யாமை,

நல்ல மனைவி யார்? (Post No.16,175)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,175

Date uploaded in London – 8 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சுபாஷிதச் செல்வம்! 

நல்ல மனைவி யார்? 

ச. நாகராஜன் 

அறிவு, தர்மம். செல்வம் வளரும் விதம்! 

ஜலதிபிந்துநிபாதேன க்ரமஷ: பூர்யதே கட: |                                ஸ ஹேது: சர்வவித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச ||

ஒவ்வொரு துளியாக விழும் போது பானை நிரம்பி வழிகிறது. இதே போலத்தான் அறிவும், தர்மமும், செல்வமும் துளித்துளியாக சேர்ந்து வளர்கிறது. 

அறிவாளியின் தொடர்பு மந்தனையும் அறிவாளியாக்கும்!

மந்தோப்யமந்ததாமேதி சம்சர்கேன விபஷ்சித: |                       பங்கச்சித: பலஸ்யேவ நிகஷேணாவிலம் பய: ||

ஒரு அறிவாளியுடன் தொடர்பு கொள்வதால் ஒரு மந்த புத்தி உள்ளவன் கூட கற்றவனாகிறான். சகதி நீரையும் தனது தொடர்பினால் சுத்தமாக்கும் ஒரு நல்ல பழம் போலத் தான் இதுவும்.

 பெரியோரின் தொடர்பு தரும் நன்மைகள்!

நிதானம் சர்வரத்னானாம் ஹேது: கல்யாணசம்பதாம் |                  சர்வஸ்யா உன்னதேர்மூலம் மஹதாம் சங்க: உச்யதே ||

 ரத்னங்களின் அடிப்படை, வளத்திற்கான காரணம், எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைவது ஆகியவை எல்லாம் பெரியோருடைய தொடர்பால் வருவதேயாகும்.

தர்மசாரிணி – நல்ல மனைவி – யார்?

 வஷ்யபாவேன சுமனா: சுவ்ரதா சுசமாஹிதா |                        அனன்யசித்தா சுமுகீ பர்த்து: நா தர்மசாரிணி ||

 எந்த அழகிய மனைவி புண்யவதியாகவும் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அமைதியான மனதுடனும் இருக்கிறாளோ அவளே நல்ல மனைவி.

லோகாசாரமே முக்கியம்!

 யத்யபி ஸ்யாத்ஸ்வயம் ப்ரஹ்மா த் ரைலோக்யாகர்ஷணக்ஷம: | ததாபி லௌகிகாசாரக் மனஸாபி ந லங்கயேத் ||

மூன்று உலகங்களையும் கவரும் ஆற்றல் கொண்டவனாக இருந்தாலும் கூட ஒருவன் லோக ஆசாரங்களை – உலகின் அன்றாடப் பழக்கவழக்கங்களை மனதால் கூட மீறக்கூடாது.

நல்ல காரியத்திற்காகவே செல்வம் சேர்க்கப்பட வேண்டும்!

 சந்த: குர்வந்தி யத்னேன தர்மஸ்யார்தே தனார்ஜனம் | தர்மாசாரவிஹீனானாம் த்ரவிணம் மலசஞ்சய: ||

 நல்ல காரியங்களுக்காகவே மகான்கள் செல்வத்தைச் சேர்க்கிறார்கள்.  புண்ணிய காரியங்களுக்காக செலவழிக்கப்படாத ஒருவனின் செல்வம் மலக்குவியலுக்குச் சமானமாகும்.

விதியே அனைத்திற்கும் காரணம்!

 குணோபி தோஷமாயாதி வக்ரீபூதே வித்யாதரி |                  சானுகூலே புனஸ்தஸ்மிந்தோஷோபி ச குணாயதே ||

ஒருவனுக்கு விதி எதிராக இருக்குமானால் குணங்களும் கூட தோஷமாகி விடும். விதி அநுகூலமாக இருக்குமானால் தோஷங்களும் கூட நற்குணங்களாகிவிடும். (அதாவது நல்லதைச் செய்யும்.)

**

சங்க கால ஔவையார் பாடல்களில் 10 கேள்விகள் (Post.16,174)

Written by London Swaminathan

Post No. 16,174

Date uploaded in London – 7 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க காலம் முதல் தற்காலம் வரை மூன்று முதல் ஆறு அவ்வையார்கள் இருந்ததாக நூல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பகுதியில் சங்க கால ஔவையார் பற்றிக் காண்போம்.

1

சங்க கால ஔவையார் எத்தனை பாடல்களைப் பாடினார்?அந்தப்பாடல்கள் எந்தெந்த நூல்களில் இடம்பெற்றுள்ளன?

 2

இந்தப் புலவர் ஔவையார் சந்தித்த அல்லது பாட்டிய பெரியோர்கள் அல்லது அரசர்கள் யார் யார் ?

3

நெல்லிக்காயின் மகிமை குறித்து ஆயுர்வேத நூல்கள் விதந்து ஓதுகின்றன. ஆல்பெருனி என்ற யாத்ரீகனும் நெல்லிக்காயைப் புகழ்ந்துள்ளான் சுவாமி  சிவானந்தாவின் தெய்வ  நெறிக்கழகம் ஸ்யவனப் பிராஸ் என்னும் நெல்லிக்காய் லேகியத்தின் புகழைப் பரப்பியதுஅவ்வையாருக்கும் நெல்லிக்காய்க்கும் என்ன சம்பந்தம் ?

4

புலவர்ககள் அஞ்சாநெஞ்சர்கள்; எந்த அரசனுக்கும் முன்னால் நின்று உள்ளதை உள்ளபடி சொல்லத் தயங்க மாட்டார்கள் இரு மன்னர்களிடையே நடக்க விருந்த போரினை ஔவையார் எவ்வாறு தவிர்த்தார் ?

5

இந்தப் புலவர் பற்றிய முக்கிய நூல்கள் என்ன ?

6

அவ்வைப் பிராட்டி பற்றி பாரதியார் என்ன சொன்னார் ?

7

சங்க காலத்தில் தமிழ் நாட்டில் அவ்வையார் கண்ட அதிசயக் காட்சி எது ?

8

பொகுட்டெழினி குறித்து பாடிய  அவ்வையார்பயன்படுத்தும் அருமையான உவமை என்ன ?

9

நாஞ்சில் வள்ளுவன் குறித்து புலவர் என்ன பாடினார்?

10

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே (187)– இந்த புறநானூற்று பாடலின் பொருள் என்ன ?

*********************

விடைகள்

1. பாடல்களின் விவரங்கள்:

  • புறநானூறு: 33 பாடல்கள்
  • அகநானூறு: 4 பாடல்கள்
  • நற்றிணை: 10 பாடல்கள்
  • குறுந்தொகை: 12 பாடல்கள்
  • மொத்தம்: 59 பாடல்கள் (புறத்திணைப் பாடல்கள் 33, அகத்திணைப் பாடல்கள் 26)

****

2.அதியமான் நெடுமான் அஞ்சி;  தொண்டைமான் (காஞ்சி அரசன்); சேர, சோழ, பாண்டிய ஆகிய மூவேந்தர்களும் (சேரமான் மாரிவெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி) நண்பர்களாக ஒன்றாக அமர்ந்திருந்த அரிய காட்சியைக் கண்டு வியந்து, அவர்களை வாழ்த்திப் பாடியுள்ளார். அதியமான் மகன் பொகுட்டெழினி,  நாஞ்சில் வள்ளுவன் பற்றியும் ஔவையார் பாடியுள்ளார்.

***

3.ஔவையாரின் மிக நெருங்கிய நண்பர் மற்றும் கடையேழு வள்ளல்களில் ஒருவர்அதியமான் நெடுமான் அஞ்சி:.ஆவார்.  இவர் ஔவையாருக்குச் சாகா வரம் தரும் அரிய கருநெல்லிக்கனியைப் பரிசாக அளித்தவர். இவருக்காகவே ஔவையார் அதிக பாடல்களைப் பாடியுள்ளார்.

***

4.அதியமானுக்கும் காஞ்சி அரசனான தொண்டைமானுக்கும் இடையே போர் மூளவிருந்த போது, ஔவையார் தொண்டைமானின் அரண்மனைக்குத் தூது சென்றார். தொண்டைமானின் ஆயுதக் கிடங்கைப் பார்த்து, அவனது போர் ஆசையை அடக்கும் விதமாகச் சாதுரியமாகப் பாடிப் போரைத் தடுத்தார். “அடடா உன்னுடைய ஆயுதக் கிடங்கினக் காட்டினாய்; எல்லாம் புத்தம் புதியனவாக பள பளவென்று இருக்கின்றனவே ; அந்த அதியமான் இருக்கானே; அவன் பல போர்களைச் செய்ததால் எல்லா ஆயுதங்களும் கருத்தும் கறைப்பட்டும் உள்ளன” என்றார்  ; தொண்டமானுக்குப் புரிந்துவிட்டது; அதியமான் மாவீரன் பல போர்களில் வெற்றிவாகை சூடியவன்; நீயோ நேற்று முளைத்த காளான்; உனக்கு அனுபவம் கிடையாது என்று அவ்வையார் நாசூக்காக எச்சாரித்ததால் போர் செய்வதைக் கைவிட்டான்.

இவ்வே

பீலி அணிந்து மாலை சூட்டிக்

கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் யணிந்து

கடியுடை வியனக ரவ்வே!

அவ்வே

பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து

கொற்றுறைக் குற்றில மாதோ! என்றும்

உண்டாயின் பதங்கொடுத்து

இல்லாயின் உடனுண்ணும்

இல்லோர் ஒக்கல் தலைவன்

அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே! (95)

***

5.ஒளவை வரலாற்றை எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை  ’நீதி நூல் திரட்டு’ என்ற நூலின் கண் 1906 -இல் ‘ஒளவையார் சரித்திரம்’ என்ற பெயரால் 78 பக்கங்களில் ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அது தனிநூலாகவும் வெளிவந்துள்ளது.  ’சைவ இலக்கிய வரலாறு’ எழுதிய ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை போன்ற  பலர் ஒளவையார்கள் பற்றிய வரலாறுகளை விரிவாகத் தந்துள்ளனர். முனைவர் ந. சுப்பிரமணியன் 1992இல், சங்க இலக்கியத்தில் காணப்படும் 59 பாடல்களையும் உரையுடன் பதிப்பித்து, அதில் சங்க கால ஒளவையின் வரலாற்றை ஆராய்ச்சி முன்னுரையாகத் தந்துள்ளார்.

ராஜாஜி ஆங்கிலத்தில் அவருடைய பாடல்களை மொழிபெயர்த்து சிறிய நூலினை வெளியிட்டார் . டாக்டர் தாயம்மாள் அறவாவாணன் எழுதிய “அவ்வையார் அன்றுமுதல் இன்றுவரை ” (புதுச்சேரி ) என்ற புஸ்தகத்தில் சங்க காலம் முதல் இன்றுவரை குறைந்தது ஆறு அவ்வையார்கள் இருந்தனர் என்று சொல்கிறார்.இறைவனை நாடும் முதிய பெண்களுக்கு ‘அவ்வை’ என்ற பெயர் சூட்டப்பட்டது என்பதை ஆராய்ச்சி மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். இந்திய இலக்கியச் சிற்பிகள் – ஒளவையார்- தமிழண்ணல், © சாகித்திய அக்காதெமி முதல் பதிப்பு 1998- இந்த நூலினை Project Madurai ப்ராஜெக்ட் மதுரை வெப்சைட்டில் படிக்கலாம்.

***

6.”தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஒளவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?” என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், ‘மற்ற செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம்’ என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.–[*] பாரதியார் கட்டுரைகள், பக். 160-161

அவ்வையாரை இமிட்டேட் செய்து புதிய ஆத்திச் சூட்டி எழுதியத்திலிருந்து எந்த அளவுக்கு அவ்வாயார் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதையும் அறியலாம் . இன்னொரு பாடலில் “சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல்அமிழ்தம் என்போம்” என்கிறார் பாரதி.  ஔவையார் தனது தனிப்பாடலில், “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்” என்று பாடினார். அதாவது, உலகில் நல்ல காரியங்களைச் செய்யும் கொடையாளிகள் (இட்டார்) மற்றும் செய்யாதவர்கள் (இடாதார்) என இரண்டே சாதிகள்தான் உள்ளன என்று ஔவை கூறினார். தமிழ் மகள் என்று போற்றி அவள் சொல் அமுதம் என்றார் பாரதி.

***

7.சங்க காலத்தில் சோழன் பெருநற்கிள்ளி இராஜசூய யாகம் செய்தான். அப்போது அவ்வையாருக்கு SPECIAL INVITATION ஸ்பெஷல் இன்விடேஷன்  — சிறப்பு அழைப்பிதழ் — அனுப்பியிருந்தான் . எல்லோருக்கும் புதிர் போடும் அவ்வையாருக்கு பெரிய புதிர் அங்கே காத்து இருந்தது ; கல்தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளொடு முன்தோன்றிய முத்த குடி தமிழர் இனம் . 1500 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தமிழ் மன்னனை மற்றொரு தமிழ் மன்னன் அடித்துக் கொன்ற அசுரர் இனம். அப்படிப்பட்ட இனத்தைச சேர்ந்த சேர, சோழ , பாண்டிய மன்னர் மூவரும் ராஜசூய யக்ஞ மேடையில் ஒருங்கே அமைந்திருந்தனர். பெரு நற் கிள்ளி வளவனுடன், சேரமான் மாரி வெண்கோவும் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தனர். அதைக் கண்டு வியப்புற்ற ஔவையார் ((உடனே, லண்டனிலுள்ள GUINNESS BOOK OF RECORDS கின்னஸ் புஸ்தக அலுவலத்துக்குப் போன் செய்து, உடனே போட்டோகிராஃபரை அனுப்புங்கள்; அரிய காட்சி  ; போனால் கிடைக்காது; பொழுதுவிடிந்தால் இருக்காது என்று சொல்லவே அவர்களும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு குடுமி பிடிச்சண்டை போட்ட தமிழினத்தின் முதல் ஒற்றுமைப்  புகைப்படம் இது என்று வெளியிட்டனர்.;அவ்வையாரும் ஒரு ‘ரிக்கார்ட்’ RECORD  இருக்கட்டும் என்று)) புறநானுற்றுப் பாடல் 367-ல் நீங்கள் மூவரும் இன்று போல் என்றும் வாழ்க உங்களது வாழ்நாள் பெருக வேண்டும். வானத்து மீன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருக வேண்டும்.  மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் பெருகவேண்டும்- என்று வாழ்த்திவிட்டுப் போனார் ஒவ்வொரு தமிழனும் புறனானூறு பாடல் 367-ஐப் படிக்க வேண்டும் .

நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்

தமவே ஆயினும் தம்மொடு செல்லா;

வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,           5

பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய

நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,

இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,

வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;

வாழச் செய்த நல்வினை அல்லது        10

ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;

ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த (Brahmins)

கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!

யான் அறி அளவையோ இதுவே: வானத்து      15

வயங்கித் தோன்றும் மீனினும்இம்மெனப்

பரந்து இயங்கு மா மழை உறையினும்,

உயர்ந்து மேந் தோன்றிப் பொலிகநும் நாளே! –புறநானூறு 367

***

8.அதியமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியை ஒளவை பாடியனவா கவும் மூன்று பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. அஞ்சி போலவே அவனும் பேராற்றலும் கொடைத்திறனும் மிக்கவனாகத் திகழ்ந்துள்ளான்.

உமணர்கள் உப்பேற்றிய வண்டிகளை ஓட்டிக் கொண்டு, நெடுஞ்சேய்மைக்குச் செல்வார்கள். எருதுகள் இளமையாய் இருந்து, பண்டம் மிகக் கூடுதலாக ஏற்றி பள்ளம் மேடுகளில் வண்டியை ஓட்டிப் போகும் பொழுது எதுவும் நேரலாம்தானே? அதனால் உமணர்கள் தம் வண்டிகளில் அச்சு மரத்திற்குக் கீழே வேறு ஒரு சேம் அச்சினைக் கட்டி எடுத்துக்கொண்டு செல்வார்களாம். பொகுட்டெழினி தன் தந்தை எழினிக்கு (அஞ்சிக்கு) அத்தகை யவனாக விளங்குகின்றான் என்று மிக அரிய நுட்பமான உவமை ஒன்றைத் தேடிப் பிடித்துச் சொல்கிற ஒளவையின் புலமையும் பட்டறிவும் நம்மை வியக்க வைக்கின்றன. உமணர்கீழ்மரத்து யாத்த சேமவச்சு அன்ன நெடியோய் (புறநானூறு 102) என்பது அவர் வாக்கு. இன்று காருக்குச் சேமச் சக்கரம் (Stepney) தேவைப்படுவதை இது நினைவூட்டுகிறது..

***

9.அஞ்சியைத் தவிர நாஞ்சில் வள்ளுவன் என்னும் குறுநிலத் தலைவனை மட்டுமே ஒளவையார் பாடியுள்ளார். தாம் உண்ண விரும்பிய அடகு (கீரை) உணவுக்குத் துணையாகச் சிறிது அரிசி வேண்டிய பொழுது, நாஞ்சிற் பொருநன் மிகப் பெரிய யானையைப் பரிசளித்தானாம். அவன் என்னை நினையாமல், தன்னை நினைத்துக் கொண்டு இதைச் செய்துள்ளான்’ என வியந்தும் பெரியோர்களிடம் இத்தகைய கொடை மடமும் உண்டு போலும்’ எனப் புகழ்ந்தும் பாடுகின்றார் ஒளவையார் (புறநானூறு 140)

***

10.புறநானூறு 187 பாடற் பொருள் :

நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக (அவலாக) – பள்ளமாக – இருந்தாலும், மேடான நிலமாக (மிசையாக) இருந்தாலும், எவ்விடத்தில் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே !

(ஆடவர் என்பதை மக்கள் என்றும் ஆண்கள் என்றும் பொருள் கொள்ளலாம்) .

–subham—

Tags –சங்க கால, ஔவையார் பாடல்,10 கேள்விகள் ,

Mlechcha and Yavana! Purananuru wonders-63; Tamil Encyclopaedia 103 (Post.16,173)

Yavana in Bharhut Sculpture

Written by London Swaminathan

Post No. 16,173

Date uploaded in London – 7 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Mlechas=Barbarians

Purananuru wonders-63; Tamil Encyclopaedia 103, One Thousand Interesting Facts -Part 103

Mullaippattu (mullaippaattu) is one of the Ten Idylls called Paththuppaattu; these ten books are part of 2000 year old Sangam Tamil literature. It has 103 lines and the author is Napputhan.

Mullaipattu means jungle idyll; Mullai means the landscape of forest area. Mullai is also the kind of jasmine flower found there. According to Tamil convention, separation (temporary) of husband and wife is discussed. This element is contained in lines 1-28 and 104-127. Some scholars think it is about Pandya king Neduncheziyan and others think it is about one of the Chief commanders who went out to take part in a battle.

First let me list the wonders in the book.

***

Item 882- List of Wonders

Milechca and Yavana are mentioned. Sanskrit word Milechcha is used for the first time. Yavana is found in other books as well.

Asareeri , word from sky or voice from some unknown source is in the book.

Use of Hour Glass by ancient Tamils found in the book.

Seven storey mansion shows ancient aechitecture.

Lakshmi, Vishnu and his Vamana/Trivikrama Avatar is in the very beginning of the work.

Elephant training and Sanskrit instructions to it are mentioned.

Tri Dhandi saint is also mentioned , which is in Kalittokai as well.

Other similes and matters referred to are in other Sangam books as well. Nothing special

***

Item 883 -Lakshmi and Vishnu

Tolkappiam (kaappiyam) mentioned Vishnu (maayon) as the god of Mullai area. So the poet begins the poem mentioning Vishnu with wheel and disc in his hands along with Lakshmi. He is in the form of one who measured the expanse of earth. This is about Vamana cum Tri Vikrama Avatar of Vishnu. Among the ten Avatars (incarnations of Vishnu) this is the one mentioned by all the Vaishnavite poets. Even Tiru Valluvar (Kural 610) could not miss it. It is mentioned from Rig Veda to Alvar hymns.

***

Item 884- Strong belief in Omens- Lines 12-23

When the woman who was temporarily separated from her husband was distressed; old women who are soothsayers go out with rice and flowers for praying. At the time a cowherd woman was telling the distressed calves that your mother (cows) will return soon. Having heard this the old women report it to separated woman her husband would return soon. The worry of any woman whose husband is a soldier, or a commander or king is the safe return from the battlefield. So the cowherd’s words to the calves are taken as good omen. This type of good or bad words coming from unknown or unexpected source is called Asareeri- without body/human being)- voice. Hindu scriptures down to Tamil Periya Puranam and Tiru Vilayadam Puranam have anecdotes saying “a voice from the heaven said X Y Z”. we have no such report from other cultures. This is typically Hindu.

Tamil word used by the poet is Vaay Pul= Mouth Bird/Sakunam; sakunam is omen coming from Sanskrit word for bird.

Flight of birds is used as good or bad omen by the Hindus until this day. Though Romans used it 2000 years ago they don’t use it anymore. Tamil Panchangams (almanacs) have it in the first few pages.

***

Item 885- Sanskrit language to train Elephants- lines 29-36

We have Asva Shastra (Horse Manuals) and Gaja Shastra (Elephant Manuals) only in Sanskrit. Ancient Tamils mastered it or Sanskrit knowing people are invited from North India to train the elephants. Here the poet mentioned it and added what was given to elephants. We know it is usually fed with sugarcane, certain types of grass, rice, ghee etc. but here the poet added liquorice with it. Regarding elephants trained by Aryans (Sanskrit knowing people from North India) is mentioned in Akam. Verse 276 and Malaipadukadam poem.

In the other parts of the world, we get a stronger proof. Kikkuli’s horse manual dated 1350 BCE in the cuneiform clay tablets from Turkey has Sanskrit instructions in the horse training. Moreover the very name of Turkey is derived from Sanskrit word Turaga for horse.

***

Item 886 -Tri Dhandi- Brahmins/sages

Vaishnavite sages or saints carry triple staff unlike other Saivite Sankaracharyas. Here the poet, while describing the army camp, compared it to the Triple Staff covered with saffron coloured cloth.

Triple staff= Tri Dhanda= Muk Kol in Tamil= three wooden sticks are tied together and carried by the Vaishnavite ascetics. They are supposed to have purity in Thought, Word and Deed; in Sanskrit it is called Mano, Vak, Kaya purity. That is repeated 1000 times in Hindu scriptures. Kalittokai also has two mentions of Tri Dhandi.

***

Mlechas= barbarians.

Item 887- lines – girls in Army Camps- lines 45-49

Ancient heroines are introduced here by the poet. They protected the army camps with swords in their hands. They filled oil in oil lamps which converted the night to daytime. Their belts, their hair style etc are also described. We get more details of the Yavana Lamps, that is statues of women holding lamps in their hands, from another idyll called Nedu Nal Vaadai (lines 101-103). They are called Yavana lamps. The girls doing army camp duty were Hindu girls, because their bangles are also mentioned. Girls accompanying kings to the battlefield are mentioned in Kalidasa’s Sakuntalam play as well.

***

 Item 888-use of Water clock- lines 55-58

Water clock is coined as Kuru Neerk Kannal in Tamil. Unlike other parts of the world where sand was used, ancient Hindus used water in a bowl. They announced time for the public by ringing the bell; they also wished kings great victory ; we see all positive messages. Water clock is portrayed in Akam verse 43.

***

Item 889- Yavana constructions in the Army Camps- lines 59-63

While describing the Yavanas who set up camps and decorate them with tiger pendants poet portrayed their appearance:

These men are armed with whips  and there were harsh, they wore bulging dress, their limbs were strong and they had fierce appearance.

Tamils did not have contacts with Greeks, but Roman contacts are confirmed by enormous coin hoards found throughout India and cross references by Roman writers. Yavanas are referred to in Ramayana and Mahabharata too. It is a confusing term because the term was used for Greeks, Romans and Arabs in course of time. Probably people coming via North West India or by sea were referred to. Elsewhere their gold, their wine and special type of lamps are praised, but their disgusting habits are criticised. Pathiruppathu says how Chera king treated them as criminals and punished.

***

Item 890 -Mlechas-line 66

We have only one reference in the whole Tamil literature for Milechchar.

Poet says they were working as guards. They could not speak and they used only gestures.

The same description is in Sanskrit books as well.

Very important point is no community of India is dubbed as Mlechas. It is about foreign barbarians. Bharatiyar made it very clear in his poems

Mleccha (म्लेच्छ) refers to “persons whose language is not intelligible”. The word is used throughout Dharmaśāstra literature such as the Manusmṛti. ( see the Manubhāṣya verse 7.149)

It makes it clear they spoke a foreign language. All other books show him as barbarians who did not follow Hindu customs.

Mleccha (म्लेच्छ).—A tribe of people of ancient India. This tribe was born from the tail of the celestial cow Nandinī, kept by Vasiṣṭha for sacrificial purposes when there was a fight between Viśvāmitra and Vasiṣṭha. Mahābhārata gives the following information regarding them.

The mlecchas who sprang up from the tail of the celestial cow Nandinī sent the army of Viśvāmitra flying in terror. (Śloka 38, Chapter 174, Ādi Parva). (See full article at Story of Mleccha from the Puranic encyclopaedia by Vettam Mani)

Mleccha is used for one who is impure, dirty or uncultured. It is derived from the root mlich~mlech, meaning to speak indistinctly .

Mleccha (म्लेच्छ) were wild ferocious tribes whose acts of violence caused vast devastations and destructions, struck terror in the social life of the country. They are said to have been repulsed and destroyed by lord Śiva.

Mleccha.—(EI 22), name applied to the Muhammadans and other foreigners; cf. Mleccheśvara (EI 32). Note: mleccha is defined in the “Indian epigraphical glossary” as it can be found on ancient inscriptions

Mleccha (म्लेच्छ).—m.

(-cchaḥ) 1. The generic term for a barbarian or foreigner; that is, for one speaking any language but Sanskrit, and not subject to the usual Hindu institutions. 2. A sinner, a criminal. 3. Indistinct or barbarous speech. E. mlecch to speak inarticulately, aff. ghañ .

In later Tamil poems Muslims were called Mlechas.

Greatest of the modern age Tamil poets, Subramanya Bharatiyar use it for Anti Hindu Muslims.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது பாடல்களில் “மிலேச்சர்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். பண்டைய தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில், வேற்று நாட்டவர்கள் அல்லது அந்நியர்களைக் குறிக்க ‘மிலேச்சர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

பாரதியின் பாடல்களில் இச்சொல் இடம்பெறும் முக்கிய இடங்கள்:

  • பாரத மாதா நவரத்தின மாலை:
    பாரதியார் தனது “பாரத மாதா நவரத்தின மாலை” என்ற பாடலில், பாரத தேவியின் பெருமைகளைப் பாடும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?”
(இதன் பொருள்: நமது நாட்டின் வேதங்களையும் பண்பாட்டையும் பழிக்கும் அந்நியர்களின் ஆதிக்கத்தை அல்லது அவர்களின் பாதங்களை பாரத மாதா பொறுத்துக் கொள்ள மாட்டாள் என்பதாகும்).

***

  • சத்ரபதி சிவாஜி தனது சைனியத்திற்கு உரைத்தது:
    சிவாஜியின் வீர வரலாற்றைப் பாடும் “சத்ரபதி சிவாஜி” என்ற பாடலில், மிலேச்சர்களின் (அந்நிய ஆட்சியாளர்களின்) கொடுங்கோன்மையை வீழ்த்தியதை பாரதி விவரிக்கிறார்:

வீரர் வாழ்த்த மிலேச்சர் தம் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்…”

***

Item 891- Very Tall Buildings- line 86- Copied Kalidasa?

Here the woman or the queen is shown as living in a seven storied mansion.

Though the poem is about forest landscape we have to Imagin a town with tall buildings .

In Tamil the word seven and eight can be interpreted differently.

Eight is EN in Tamil which means number as well; in the same way EZU means constructed, erected as well.

But it means a tall building in this poem.

When we look at other descriptions such as windows, gates that allow free flow of wind etc we can conclude tall buildings existed in ancient Tamil Nadu.

Copied from Kalidasa?

In the Meghaduta, Kalidasa beautifully compares passing monsoon clouds to the magnificent seven-storied palaces (Saptabhumi) of the ancient, wealthy city of Ujjain (his presumed home). According to traditional Indian architectural treaties like the Manasara, a saptabhumi is a majestic seven-tiered structure featuring elaborate pavilions, balconies, and intricate pillars.

Naulakha Palace (Bihar): A historic seven-storeyed old palace structure located in Rajnagar, Madhubani. It holds significant local history linked to a shrine where the goddess Durga is traditionally said to have blessed Kalidasa with his legendary poetic genius.

To be continued……………………………..

Tags- Mlechcha and Yavana, Purananuru wonders-63, Tamil Encyclopaedia 103, One Thousand Interesting Facts -Part 103 , Elephant language, Seven Storied building, Asareeri, voice from sky, barbarian, Tridhandi, Three staff, Mukkol

ஆமாம்’ என்பவர்களுக்கு நான் ‘ஆமாம்’ தான்;

‘இல்லை’ என்பவர்களுக்கு நான் ‘இல்லை’ தான்; – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!(Post.16,172)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,172

Date uploaded in London – 7 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

5-8-26 கல்கி ஆன் லைன் இதழில் வெளியான கட்டுரை!               

‘ஆமாம்’ என்பவர்களுக்கு நான் ‘ஆமாம்’ தான்;

‘இல்லை’ என்பவர்களுக்கு நான் ‘இல்லை’ தான்; – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

 ச. நாகராஜன்

கடவுள் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார். கடவுளே தான் எல்லாம்.

 நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் தெய்வீகமானது சாஸ்திரங்களுக்கு உள்ள பெருமதிப்பை மீட்டுக் கொண்டுவரவும் அறநெறியைக் கடைப்பிடிக்கச் செய்யவும் 

எப்படிப்பட்ட வழிமுறையையும் மேற்கொள்ளும். அந்த வழிமுறைகளைப் பற்றி விவாதித்தோ அல்லது அவற்றின் மீது உங்கள் கருத்துக்களைத் தெரிவித்தோ உங்களால்  ஒரு லாபத்தையும் பெற முடியாது. நீங்கள் நம்பிக்கையை  மட்டுமே வளர்த்துக் கொண்டு பெரும் ஆனந்தத்தை அடைய வேண்டும்.

இறைவனின் பெயரான ‘விஷ்ணு’ என்பதற்கான அர்த்தம் ‘எல்லா இடத்திலும் இருப்பவர்’ என்பதாகும்.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. அப்படி என்றால் அவரை ஏன் பார்க்க முடியவில்லை??

ஆனால் நம்மைச் சுற்றி இருக்கின்ற காற்றை நாம் பார்க்கிறோமா? அப்போது காற்றே இல்லை என்று சொல்லி விட முடியுமா கடவுளும் கூட அணுவை விட நுண்மையானவர். பெரியதை விட பெரியவர் என்று சொல்லப்படுகிறது.

தைத்திரீய உபநிடதம் கடவுளை ‘அணோரணீயான் மஹதோ மஹீயான்” என்று கூறுகிறது. (அணுவிற்கும் அணுவானவர். பெரிதுக்கும் பெரிதானவர்).

இந்தக் கூற்றை ஒட்டியே தியாகராஜ ஸ்வாமிகள் இப்படி பாடினார்:  “பிரம்மாவாகவும் சிவனாகவும் கேசவனாகவும் இருக்கிறாய் நீ, ராமா!”

 வேதங்களும் கூட அவனை நெடுந்தூரத்தில் இருப்பதாகவும் மிக மிக அருகில் இருப்பதாகவும் விளக்குகின்றன. உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் அமெரிக்காவில் இருக்கலாம், ஆனால் உங்கள் அன்பு அவரை மிகவும் அருகில் இருப்பது போல வைக்கிறது. உங்களது அண்டைவீட்டுக்காரர் உங்களுக்கு ஒரு எதிரி என்றோ அன்னியமானவர் எனறோ இருந்தால் அவர் உங்களுக்கு ‘நெடுந்தொலைவில்’ இருக்கிறார்.

மனமே தள்ளி விடுகிறது, இழுக்கிறது, வெறுக்கிறது, அன்பு செலுத்துகிறது.

எதை உணர்கிறாயோ அதுவாகவே நீ இருக்கிறாய்.

 என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

 ‘ஆமாம்’ என்பவர்களுக்கு நான் ‘ஆமாம்’ தான்;

‘இல்லை’ என்பவர்களுக்கு நான் ‘இல்லை’ தான்;

‘இல்லை’ என்பதும் ‘ஆமாம்’ என்பதும் நீங்கள் பேசும் வார்த்தைகள்.

சாயிக்கு எப்போதுமே ‘ஆமாம்’, ‘ஆமாம்’, ‘ஆமாம்’ தான்!

(எஸ் ஏஸ் எஸ் தான் SSS – SRI SATYA SAI )

நாம் நமது உடலில் அடைபட்டிருப்பதால் அகங்காரம் வெகுவாக வளர்கிறது, ஆத்மா நம்பப்படுவதில்லை. தெலுங்கு மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது: “பால் பொங்கி எழும் போது அது தீயில் விழுகிறது”.

அது சொல்லும் பாடம் இது தான்: “கர்வம் ஒருவனை சாம்பலாக்குகிறது”.

 தர்மம், பற்றற்ற தன்மை ஆகியவற்றிலிருந்து தான் எளிமை எழுப்பப்பட முடியும்.

தியாகம் மனிதனுக்கு அளப்பற்ற ஆனந்தத்தைத் தருகிறது.

மற்றவருக்கு உதவுவதற்காக எவர் ஒருவர் தனது சௌகரியங்களை தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாரோ, அவரே உண்மையான பக்தர். மனிதர்கள் வசதியையும் சொகுசையும் உயர்ந்த வாழ்க்கையையும் பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  ஆனால் எவ்வளவு நாளைக்குத் தான் அவர்கள் அதைப் பற்றிக்கொண்டு இருக்க முடியும்?  பெரிய மலை எதிர்ப்படும் போது உங்களால் ஓட்டப்பந்தயத்தில்  ஓட முடியாது.  உலகமானது காலத்தாலும்  இடத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் உங்கள் இருப்பும் கூட எல்லைக்கு உட்பட்டிருக்கிறது. லோகாயதப் பொருள்கள் நிரம்பி இருக்கும் உலகில் சந்தோஷத்தை எதிர்பார்ப்பதானது தாமரை இதழிகளில் துளிர்க்கும் பனித்துளிகளை வைரங்களாகத் தவறாக நினைப்பதற்குச் சமமான முட்டாள்தனமாகும். அல்லது கானல்நீரில் கஷ்டப்பட்டு சென்று வாளியில் நீரை நிரப்ப நினைப்பதற்குச் சமமாகும்.

சுத்தமான, அதிக அளவு ஆனந்தம் கடவுளிடமிருந்து மட்டுமே பெற முடியும்; தெய்வீக சட்டங்களுக்கும் வழிகளுக்கும் அடிபணிந்தே அதைப் பெற முடியும். 

27-1-1982 விஜயதசமி அன்று  பகவான் பாபா ஆற்றிய உரை

**********

சிவப்பிரகாசர் நூல்களில் 10 கேள்விகள் (Post.16,171)

Written by London Swaminathan

Post No. 16,171

Date uploaded in London – 6 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

சிவப்பிரகாசர் யார் ? அவர் எழுதிய  நூல்களில் நன்னெறி எதைப் பற்றிய நூல் ?

2

நன்னெறி நூலின் இரண்டு தனிச் சிறப்புகள் என்ன ?

3

அறநெறி நூல்கள் எல்லாம், நல்லோர் நட்பு- தீயோர் நட்பு பற்றி கூறுகின்ற ன ? இந்த நூலில் அவர் என்ன சொல்கிறார் ?

4

ஆதிசங்கரரும் திருவள்ளுவரும் கலப்படமற்ற தூய நன்மை பயக்குமானால்,பொய்யும் சொல்லலாம் என்று பாடிச் சென்றனர் ; சிவப்பிரகாசர் கொடுஞ் சொல்லும் இனிய சொல் என்கிறாரே! ஏன் ?

5

 சூரியனால் கடலினைப் பொங்கச் செய்ய முடியாது; ஆனால் சந்திரனால் கடலினைப் பொங்கச் செய்ய முடிகிறது; அதேபோல சுடும் சொற்களால் மகிழ்ச்சி பொங்காது. நிலவு போல குளிர்ந்த சொற்களால் மகிழ்ச்சி பொங்கும் என்ற அருமையான உவமை சொல்லும் பாடல் எது?

6

நெல்லுக்கு எல்லோரும் நீர் இரைப்பார்கள்; புல்லுக்கு யாராவது நீர் இரைப்பார்களா? என்று அவர் கேட்பது ஏன்?

7

சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்களின் பெயர்கள் என்ன ?

8

நம்முடைய உடலில் ஒன்பது துவாரங்கள் இருப்பதால் இதை நவத்வாரபுரி என்று சம்ஸ்க்ருத நூல்கள் விளம்புகின்றன; ஒரு ஓட்டை இருந்த பானையில்கூடத் தண்ணீர் நிற்பது இல்லையே! இந்த ஒன்பது துளை உடலில் உயிர் ஓடுவது எப்படி என்று வியக்கும் பாடல் எது?

9

இலக்கணம் கற்றவனே மொழி அறிஞன் என்று ஏன் சொல்கிறார் ?

10

முனிவர்கள் போலத் தவம் இயற்றுவோர் , பெண்களுக்கு முன்னால் இருப்பது ஆபத்து என்பதை எந்த உவமை மூலம் விளக்குகிறார் ?

**********************

விடைகள்

1.சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்யாமல் வாழ்ந்த அவர் 32 ஆண்டுகளே வாழ்ந்தார்; முப்பது நூல்களை இயற்றியுள்ளார் . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் துறைமங்கலத்தில் வசித்தார் ; அவர் எழுதிய நூல்களில் நன்னெறி என்பது ஏனைய அற நூல்களைப்போல மக்களுக்கு நல்ல நெறிகளைப்  புகட்டும் நூலாகும்  அதில் நாற்பது பாடல்கள் உள்ளன.

***

2ஆசிரியர் சிவப்பிரகாசர் முதலில் மணலில் பாடல்களை எழுதினாராம்; அதை அவரது சீடர்கள் எழுத்து வடிவில் பாதுகாத்து நமக்கு வழங்கியது ஒரு தனிச் சிறப்பு;இரண்டாவது ஒரு பெண்ணை முன்னிலையில் வைத்து அவளுக்குச் சொல்லுவது போல அமைந்த பாடல்கள் இவை. இந்த வகைச் செய்யுட்களை ‘மகடூஉ முன்னிலை என்பார்கள்.

***

3.நல்லார் செயும்கேண்மை நாள்தோறும் நன்றாகும்

அல்லார் செயும்கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்

காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர்நாள்

போய்முற்றின் என்ஆகிப் போம்.

காயானது முற்றினால் தின்பதற்குப் பயன்படும் இனிய கனியாகும். இளம்தளிர் முற்றினால் அது சருகாகிப் பயன்படாமல் போகும். இவை போன்றே நல்லவர் நட்பு நாள்தோறும் நன்கு வளர்ந்து நன்மையைத் தரும். தீயவர் நட்பு நாள்தோறும் தேய்ந்து துன்பம் தருவதாகவே இருக்கும் என்று சிவப்பிரகாசர் குறிப்பிட்டுள்ளார்.

***

4.மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனிது ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிதுஎன்க – ஈசற்கு

நல்லோன் எறிசிலையோ நல்நுதால் ஒண்கரும்பு

வில்லோன் மலரோ விருப்பு

உள்ளத்தில் கள்ளம் இல்லாதவர்கள் பிறருக்குத் தீமை செய்ய மாட்டார்கள். அவ்வாறு தீமை செய்யாத நல்லவர்கள் கொடிய சொல்லைச் சொல்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு காரணத்தால்தான் அவ்வாறு சொல்லியிருப்பார்கள். அந்தக் கொடிய சொல்லால் பிறருக்கு நன்மையே விளையும்.

***

5.இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய்

அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என்

கதிர்வரவால் பொங்கும் கடல் (18)

***

6.  தக்கார்கே உதவுக

தக்கார்கே ஈவர் தகார்க்களிப்பார் இல்லென்று

மிக்கார்குதவார் விழுமியோர் – எக்காலும்

நெல்லுக்கு இரைப்பதே நீரன்றிக் காட்டுமுளி

புலலுக்கு யிரைப்ரோ போய்.

தகுந்தவர்களுக்குத்தான் தானம் செய்ய வேண்டும்; உதவி செய்ய வேண்டும். தகாதவர்க்கு தானம் கொடுப்பது புல்லுக்கு நீர் இரைப்பது போன்றதே .

***

7.அவர் எழுதிய நூல்கள் :-

பிரபுலிங்கலீலை

திருக்கூவப்புராணம்

சித்தாந்த சிகாமணி

வேதாந்த சூடாமணி

சிவப்பிரகாசவிகாசம்

சிவநாம மகிமை

தர்க்கபாஷை

சோணசைலமாலை

திருவெங்கையுலா

திருவெங்கை யலங்காரம்

திருச்செந்திலந்தாதி

திருவெங்கைக் கலம்பகம்

திருவெங்கைக்கோவை

சதமணிமாலை

நால்வர் நான்மணிமாலை

நிரஞ்சனமாலை

கைத்தலமாலை

அபிஷேகமாலை

வெங்கைக்கோவை

வெங்கைக்கலம்பகம்

நன்னெறி

கொச்சகக்கலிப்பா

இயேசுமத நிராகரணம்

தலவெண்பா

பிக்ஷாடன நவமணிமாலை

பழமலை அந்தாதி

சிவஞான பாலய சுவாமிகள் கலம்பகம்

சிவஞான பாலய சுவாமிகள் திருப்பள்ளியெழச்சி

சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்

சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு

சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடுதூது

இஷ்டலிங்கப் பெருங்கழிநெடில் விருத்தம்

இஷ்டலிங்கக் குறுங்கழிநெடில் விருத்தம்

இட்டலிங்க அபிடேகமாலை

திருச்செந்தினிரோட்ட யமகவந்தாதி

பெரியநாயகியம்மை ஆசிரியவிருத்தம்

பெரியநாயகியம்மை கட்டளைக்களித்துறை

***

8. உடம்பில் உயிர் அமைந்த வியப்பு.

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில்

பொருந்துதல் தானே புதுமை – தீருந்திழாய்

சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது

வீதலோ நிற்றல் வியப்பு.

***

9. தமிழ் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ளாதவர்களுடைய அறிவு, கற்றார் அறிவுக்குமுன் செல்லாது: இலக்கணத்தை முறையாகக் கற்றறிந்த அறிஞர்களின் அறிவுக்கு முன்னால் செல்லுபடியாகாது (மதிப்பற்றதாகிவிடும்).அதாவது, ஒருவர் எவ்வளவுதான் பல நூல்களைப் படித்துப் பொது அறிவை வளர்த்துக் கொண்டாலும், மொழியின் அடிப்படைக் கட்டமைப்பான இலக்கணத்தைக் கற்கவில்லை என்றால், அவரது அறிவு அறிஞர்கள் அவையில் மதிக்கப்படாது என்பதாகும். கடல்போலப் பிரவாகம் எடுக்கும் கங்கை நதியானது, சிவன் தலைமுடிக்கு வந்தவுடன் அடங்கிவிடுகின்றதல்லவா ?

எழுத்தறியார் கல்விப்பெருக்கம் அனைத்தும்

எழுத்தறிவார்க் காணின் இலையாம் – எழுத்தறிவார்

ஆயும் கடவுள் அவிர்சடைமுடி கண்டளவில்

வீயும் சுரநீர் மிகை.

The learning of those who lack knowledge in grammar

is exposed as inadequate in the presence of the experts.

It is like the mighty river Ganges hiding itself

When it reaches our Lord’s crown of hair.

***

10. பகர்ச்சி மடவார் பயிலநோன்பு ஆற்றல்

திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் – நெகிழ்ச்சி

பெறும்பூரிக் கின்றமுலை பேதாய் பலகால்

எறும்பூரக் கல்குழியுமே.

எறும்பு ஊர, ஊர கல்லும் தேயும் ; பெண்கள் முன்னிலையில் தவசீலர்கள் தொடர்ந்து இருந்தால் மனமும் தேயும்.

When ants crawl along a path long enough

Even a rock will be etched with its route

The presence of a woman if long continued

Will make even a sage to lose his resolve.

–SUBHAM—

TAGS– நன்னெறி, சிவப்பிரகாசர்,10 கேள்விகள்