Buddhist Treasures from Five Pakistani Museums-1 (Post 15,790)
Written by London Swaminathan
Post No. 15,790
Date uploaded in London –26 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Following are treasures from Five Pakistani Museums in Karachi, Taxila (Thatchaseelam), Peshawar (Purushapuram), Swat, and Lahore. They are mainly Buddhist treasures.
They are taken from the following book:
Title of the book- ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN
Author – DR F A KHAN
Published by ELITE PUBLISHERS LIMITED, KARACHI
OLD MAN
FROM JATAKA STORY
SLEEPING MUSICIAN
-Subham—
Tags- part 1, ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN, five Pakistani museums, Buddhist treasures
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 66
மாரியம்மன்
தமிழ்நாட்டிலும் தமிழர் குடியேறிய உலக நாடுகளிலும் வணங்கப்படும் தெய்வம் மாரியம்மன். பார்வதியின் மறு வடிவம் இவள் ; சக்தி மற்றும் துர்க்கையின் அம்சமும் இணைந்தவள் ; அம்மை போன்ற நோய்களுக்கு காரணமானவள்; அவைகளை விலக்குபவளும் அவளே. மலேசியா இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், தாய் லாந்து முதலிய நாடுகளிலும் அன்னைக்கு கோவில் உண்டு; மதுரை போன்ற பெரிய நகரங்களிலும் மாரியம்மன் கோவில் இருக்கிறது ; நோய்களும் இயற்கைக் சேதங்களும் வராமல் இருப்பதற்காக கோடை காலத்தில் பொங்கல் வைத்தும், கஞ்சி, கூழ் வார்த்தும் மாவிளக்கு வைத்தும் இவளை வழிபடுகிறார்கள்; உடலில் எந்த பாகம் பாதிக்கப்பட்டதோ அந்த பாகத்தை வெள்ளியில் செய்து உண்டியலில் காணிக்கையாகவும் செலுத்துவார்கள்; சில ஊர்களில் பூக்குழி இறங்குதல் என்னும் தீ மிதித்தல் . முதுகில் கொக்கியை மாட்டி கம்பத்தில் தொங்குதல், தேர் இழு த்தல் ஆகியனவும் மாரியம்மனுக்கு செய்வார்கள்.
Bangkok, Thailand, Muthu Maraiamman Temple
***
மர்ம ஸ்தானம்
உடலில் உயிரை ஆரோக்கியமான நிலையில் வைக்க உதவும் உறுப்புகள் அல்லது இடங்களை மர்ம ஸ்தானம் என்பார்கள்; ஆயுர்வேதம், சில்ப சாஸ்திரம் முதலிய துறைகளில் பயன்படும் சொல் இது; அவைகள் பாதிக்கப்பட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதால் இந்தப் பெயர்; அன்றாடப் பேசசு வழக்கில் மலஜலம் கழிக்கும் உறுப்புகளுக்கும் இந்தப் பெயர் உண்டு ; மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் இவைகளைத் தாக்கக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன .
***
மரீசி
மனு உண்டாக்கிய அல்லது பிரம்மாவின் மனதில் பிறந்த பத்துப் பேரில் ஒருவர் மரீசி ஆவார்; சம்ஸ்க்ருதத்தில் தீப் பொறி என்பது பொதுவான அர்த்தம்
A spark of fire; मरीच्य इव निष्पेतु- रग्नेर्धूमाकुलार्चिषः (marīcya iva niṣpetu- ragnerdhūmākulārciṣaḥ) Rām.1.56.18.
காஸ்யப முனிவரின் தந்தை; கலா என்பவரை மணந்து
அவரைப் பெற்றார்
***
மார்க்கண்டேயன்
மிருகண்டு முனிவரின் புதல்வர் ; நீண்ட காலமாகத் தவம் இயற்றிய பின்னர் அவருக்கு மார்க்கண்டேயன் பிறந்தார் ; அறிவு குறைந்த, ஆனால் நீண்ட காலம் வாழக்கூடிய பிள்ளைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய புத்திசாலிப் பிள்ளையொருவன் வேண்டுமா என்று சிவ பெருமான் வினவியபோது அவர் அறிவுள்ள பிள்ளையே வேண்டும் என்றார் ; அந்தப்பிள்ளை மாபெரும் சிவ பக்தன் ஆனான் . பதினாறு வயது ஆனபோது எமன் தோன்றினான்; அப்போது அவன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிராத்தனையைத் தொடர்ந்தான்; எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் பெயர்த்து இழுத்தது; அதிலிருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை எட்டி உதைத்துத் தள்ளினார் இந்தப் பிள்ளைக்கு வயது என்றும் பதினாறு என்றார் ; இந்த நிகழ்ச்சி திருக்கடையூரில் நடந்ததாக தல வரலாலறு கூறும்
***
மருத் – வேத கால தெய்வங்கள்
மருத் என்றால் காற்று, புயல்காற்று என்றுபொருள் ; இதிலிருந்து வந்த சொற்களே மாருதி – காற்றின் புதல்வன் அனுமன் மற்றும் மந்த மாருதம் சண்ட மாருதம் என்ற சொற்கள் ஆகும் ; இவர்களை இந்திரனின் நண்பர்கள் என்றும் ருத்ர சிவனின் புதல்வர்கள் என்றும் இந்து சமய நூல்கள் பலவாறாக விளம்பும்
திதி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை இந்திரன் கலைக்கவே அது 49 துண்டுகளாகச் சிதறியதாகவும் பார்வதி தேவி கருணை கொண்டு அவைகளுக்கு உயிரூட்ட சிவ பெருமானை வேண்டியதாகவும் அவர் அவ்வாறே செய்ததால் அந்த 49 பேரும் ருத்ரனின் பிள்ளைகள் என்றும் ராமாயணம் பகரும் ; அவர்கள் மின்னல் இடியுடன் வலம் வருவார்கள் ; மா ரோதித– அழாதே என்று இந்திரன் சொன்னதால் மருத் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் புராணங்கள் உரைக்கும் ; அஷ்ட திக் பாலகர்களில் வடமேற்கு திசைக்கு அதிபதி வாயு அல்லது மருத்.
மந்த மாருதம் என்பது பொதிகை என்னும் மலய மலையிலிருந்து வீசும் தென்றல் காற்று .
சண்ட மாருதம் என்பது சூறாவளிக் காற்று
***
மாதலி
இந்திரனின் விண்கலத்தைச் செலுத்தும் விமானி அல்லது பைலட்; மஹாபாரத வனபர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் பற்றிய விரிவான வருணனை உள்ளது ; மாதலி, ஸ்பேஸ் ஷட்டில் போன்ற விண்கலத்தில் பூமிக்கு வந்து அர்ஜுனனை அழைத்துச் சென்றார்; அங்கு ஐந்து ஆண்டுகள் தங்கிய அர்ஜுனன் பல வீரதீரச் செயல்களைச் செய்தான். இந்திரனின் வாகனம் மீண்டும் மீண்டும் பயன்டுத்தவல்ல ஸ்பேஸ் ஷட்டில் என்பதால் அதே கலத்தில் அர்ஜுனன் பூமிக்குத் திரும்பிவந்தான் .
***
மடங்கள்
தென்னாட்டில் ஆதி சங்கரர், மத்வர் போன்ற பெரிய சன்யாசிகளும் மகான்களும் வசித்த இடங்கள் மடங்கள் ஆகும். இப்போது காஞ்சி காமகோடி சங்கச்சாரியார், சிருங்கேரி சங்கராச்சாரியார் மடங்களும் வைணவர்களுக்கு அஹோபில மடமும் இருப்பது போல், பல மடங்கள் உண்டு; அவர்களின் வழிவந்தோர் பரம்பரை பரம்பரையாக இவைகளை நிர்வகித்து வருகின்றனர் அங்கு தினசரி பூஜைகளும் சொற்பொழிவுகளும் நடக்கும்; அவர்கள் பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிடுகிறார்கள் அவர்களைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள் ; பல இடங்களில் முந்தைய ஆச்சார்யார்களின் சமாதிகளும் இருக்கின்றன.
Sringeri Mutt in Kochi, Kerala
***
மத்ஸ்ய அவதாரம் மச்சா வதாரம்
மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் மீன் அவதாரம் ;மத்ஸ்ய அல்லாம் து மச்சம் என்பதன் பொருள் மீன் ; உலகில் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது அவதாரம் தோன்றும்; ஒரு முறை மஹா பிரளயம் வந்த போது ஒரு படகில் நல்லோர் அனைவரையும் விஷ்ணு ஏற்றிச் சென்றார்; மனு என்ற பெயரிலும் நோவா முதிய பெயர்களிலும் இந்தப் பிரளயக் கதை பல சமய புஸ்தகங்களில் உள்ளன .
***
மத்ஸ்ய புராணம்
மச்சாவதாரக் கதை கூறும் இந்தப் புராணத்தில் 15,000 ஸ்லோகங்கள் வரை உள்ளன ; புராணத்துக்கான பஞ்ச லட்ஷணங்களும் உள்ள இந்தப் புராணம் விஷ்ணு மற்றும் வாயு புராணம் போலவே உள்ளது.
***
மயன்
அசுரர்களின் தச்சன் ; விஷ்வகர்மா என்பவன் தேவர்களின் தச்சன் ; இவன் விப்ரசித்தியின் மகன் ; மண்டோதரி மற்றும் வஜ்ரகர்மாவின் தந்தை.
மஹாபாரதம், ஹரிவம்சம் நூல்களில் பல கதைகள் உள்ளன காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது மயன் என்பவர் தப்பித்துச் செல்ல அவர்கள் உதவினார்கள்; இதற்கு நன்றிக்கடனாக இந்திரப்பிரஸ்தம் என்னும் தலை நகரில் பளிங்குக் கற்களால் ஆன அழகான மண்டபத்தை மயன் கட்டிக்கொடுத்தான்; அதைப் பார்வையிட வந்த துரியோதனன் கண்ணாடி போன்ற ஹாலில் தண்ணீர் என்று நினைத்து ஆடையைத் தூக்கிக் கொண்டான்; இன்னும் ஒரு இடத்தில் உண்மையிலேயே தண்ணீர் இருந்த இடத்தில் பளிங்குத் தரை என்று நினைத்துக் காலை விட்டான்; இதை எல்லாம் சாளரத்திலிருந்து தோழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்த திரவுபதி கொல் என்று உரக்கச் சிரித்துவிட்டாள். அவளைப் பழிவாங்கத்துடித்த துரியோதனன் பாண்டவர்கள சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தபோது திரவுபதியின் ஆடையை விலக்கச்செய்து பழி தீர்த்துக் கொண்டான் ; பெண்கள் மற்றவர்களை இகழ்ச்சி செய்யும் வித்த்தில் சிரித்தால் அழிவு உண்டாகும் என்பதை விளக்கும் கதை இது .
மயன் என்பவன் தென் அமெரிக்காவுக்குச் சென்று பிரம்மாண்டமான கட்டிடங்களைக் காட்டி மாயன் நாகரீகத்தை உண்டாக்கினான்
ராமாயண மஹாபாரத காலத்தில் ஒரே மயன் இருந்திருக்க முடியாது; பொதுவாக மயன் என்ற சொல்லுக்குத் சிறந்த கட்டிடக் கலைஞன் என்றே பொருள் கொள்ள வேண்டும் .
***
மாயா /மாயை
பொய்த் தோற்றம் – கானல் நீர் போன்றது ; இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது மாயை ;
உபநிஷத ரிஷிகள் இதைப் பல உதாணரங்களில் விளக்கினார்கள்; பாம்பைக் கயிறு என்றும் கயிற்றைப் பாம்பு என்றும் எண்ணுவது மாயைக்கு ஆதிசங்கரர் கொடுத்த உதாரணம் ஆகும் இந்த உலகே மாயம் பரம்பொருள் ஒன்றே சத்தியம் அதுவும் நாமே என்று உணர வேண்டும் என்று சொல்லி ஆதி சங்கரர் அத்வைதக் கொள்கையைப் பரப்பினார்.
***
மணிகர்ணிகா காட்
மணிகர்ணிகா படித் துறை காசியில் கங்கைக் கரையிலுள்ள மயானம் ஆகும்; உலகிலேயே 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து சடலங்கள் எரியும் புனித இடம் இது ; விடுமுறை நாளே இல்லாமல் சடலங்களை எரிப்பதற்குக் காரணம் காசியில் இறந்தால் நேரடியாக முக்தி பெறலாம்; மறு பிறப்பு என்னும் பெரும் பிணியிலிருந்து தப்பிக்கலாம் என்று இந்துக்கள் நம் புவதே . உறவினர்களோ பிறரோ சடலங்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை ஆனால் படகுகளில் சவாரி செய்த வாறே வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடத்தைக்காணலாம் . சடலத்தை தகனம் செய்வதற்கு சந்தனக் கட்டை என்றால் கட்டணம் அதிகம்; சாதாரண விறகு என்றால் கட்டணம் குறைவு ; ஆயினும் முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பாராய்ப் போகும்இந்து மத தத்துவத்தை விளக்கும் புண்ய பூமி இது.
****
மாயாதேவி
கெளதம புத்தரின் அன்னையின் பெயர் இது . நேபாளத்தில் கபிலவஸ்து என்னும் பிரதேசத்தில் லும்பினி என்னும் இடத்தில் புத்தர் அவதரித்தார் . மாயாதேவி, லும்பினி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது இடுப்பு வலி அதிகரிக்கவே சால் மரக் கிளையினைப் பிடித்துக்கொண்டு நின்றவாறே பிள்ளையைப் பெற்றார் மஹாராணி என்பதால் தோழிகள் புடை சூழ வந்திருந்தார்; இப்போது அந்த இடம் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் பக்தர்களையும் கவர்ந்து இழுக்கிறது அது யுனெஸ் கோ அங்கீகரித்த பாரம்பர்ய இடம் ஆகும்.
***
மாயாவதி
ரதிதேவியின் மறுபிறப்பு மாயாவதி.
காதல் கடவுளான மன்மதனின் (காமன்) மனைவியே ரதி தேவி. மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கியபோது, ரதி தேவி மிகுந்த துயரமடைந்தாள்.அவள் தனது கணவனை மீண்டும் அடைய வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவன், மன்மதன் பூமியில் பிறப்பான் என்றும், ரதி மாயாவதி என்னும் பெயரில் பூவுலகில் அவதரித்து அவனை மீண்டும் மணந்து கொள்வாள் என்றும் வரமளித்தார்.
பூமியில் பிறந்த மாயாவதி, சம்பரன் என்ற அசுரனின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வளர்ந்தாள். (மன்மதனின் சாம்பல் கடலில் வீசப்பட்டபோது, அதை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை மீனவர்கள் பிடித்து சம்பரனின் சமையல்காரனிடம் கொடுத்தனர் சமையல்காரன் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த மீனில் இருந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மன்மதனின் மறுபிறவியான பிரத்யும்னன் (கிருஷ்ணன் மற்றும் ருக்மிணியின் மகன்) ஆவான்.
மாயாவதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தாள். நாரதர் மூலம் அக்குழந்தையின் உண்மையான வரலாற்றை அவள் அறிந்தாள். மாயாவதி தனது மாயா சக்தியால் அசுரனான சம்பரனை அழித்து, மன்மதனின் மறுபிறவியான பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொண்டு வைகுண்டம் திரும்பினாள்.
To be continued………………….
Tags–மாயாவதி HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 66; இந்து மத கலைச்சொல் அகராதி-66, PART 66, மாரியம்மன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 35
வரகுணமங்கை ( நத்தம் )
வரகுணமங்கை (தற்போது நத்தம் என்று அழைக்கப்படும் ஊர்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். 108 திவ்ய தேசங்களில் 92-வது தலமாகவும், நவ திருப்பதி வரிசையில் 2-வது (சந்திரனுக்குரிய) தலமாகவும் போற்றப்படுகிறது
மூலவர்: விஜயாசனப் பெருமாள் (கிழக்கு நோக்கி அமர்ந்த
இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.
தல வரலாறு: ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமாளுக்கு குடை பிடித்த ஆதிசேடன், இங்கு அமர்ந்த நிலையில் உள்ள பெருமாளுக்குக் குடை பிடித்திருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். சந்திரனின் சாபம் தீர்த்த தலமாக இது நம்பப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ (1 மைல்) தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது
ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, ‘ஆஸனதை’ என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். “சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏற்ற இடம்” என்று கூறினார்.
வேதவித்தும் ஆஸனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து ஜபித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமாலின் தரிசனம் கிடைத்து வைகுண்டம் சென்றடைந்தான். வெற்றியைத் தரக்கூடிய ‘ஆஸனதை’ என்னும் மந்திர ஜபத்திற்கு கட்டுப்பட்டு, அனைத்து நலன்களையும் நல்கும் பெருமாளாக ‘விஜயாசனப் பெருமாள்’ இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.
ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன.. பெருமாளின் வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் இருந்து பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து அருள்புரிகின்றனர்.
வரகுணமங்கை என்று தாயார் பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்பட்டாலும், நத்தம் என்று சொன்னால் மட்டுமே பலருக்குப் புரியும்.
அக்னி, உரோமச முனிவர், சத்தியவான் ஆகியோருக்கும் பெருமாள் இங்கு காட்சி அளித்துள்ளார்.
இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச ரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும், அதர்மத்தை சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார்.
இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருவிழா:
சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
முகவரி:
அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்
நத்தம் (வரகுணமங்கை) – 628 601
*****
Taken from another website
தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர
என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,
ஸ்ரீ ராமாவதாரம் – சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் – சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் – புதன்
ஸ்ரீ வாமனவதாரம் – குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் – சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் – சனி
ஸ்ரீ மச்சாவதாரம் – கேது
ஸ்ரீ வராகவதாரம் – ராகு
ஸ்ரீ பலராமவதாரம் – குளிகன்
என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.
நவ திருப்பதிகள்-வைணவ நவக்கிரக ஸ்தலங்கள்
அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,
ஸ்ரீவைகுண்டம் – சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) – சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் – செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி – புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி – குரு ஸ்தலம்
தென்திருப்பேரை – சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் – சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) – ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) – கேது ஸ்தலம்
To be continued……………………
Tags- நவ திருப்பதிகள், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-35, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 35, வரகுணமங்கை,தசாவதாரமும் நவகிரகங்களும் வைணவ நவக்கிரக ஸ்தலங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-5-26 தீபம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ராம நாம மஹிமை – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
ச. நாகராஜன்
ராம நாம மஹிமையை விளக்கும் கதை ஒன்று உள்ளது.
ஒரு சமயம், ப்ரசேதஸ் என்ற மஹரிஷி நூறு கோடி ஸ்லோகங்கள் கொண்ட ஒரு நூலை இயற்றினார்.
மூன்று லோகங்க்ளும் அந்த நூலுக்காக போட்டி போட்டன. இந்த போட்டியானது மிக மோசமான நிலையை அடையவே கடவுளே மூன்று லோகங்களையும் அழைத்தார்.
ஒவ்வொரு லோகத்திற்கும் மூன்றில் ஒரு பங்கு தந்து அதை அந்தந்த லோகம் ஏற்குமாறு அவர் கூறினார்.
அதாவது ஸ்வர்க்கம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று லோகங்களுக்கும் சமமான பங்கு அது.
முப்பத்துமூன்று கோடியே முப்பத்துமூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரத்து முன்னூற்றி முப்பத்தி மூன்று என்பது மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
ஆக இப்போது மீதி ஒரே ஒரு ஸ்லோகம் இருந்தது. அதில் 32 எழுத்துக்கள் இருந்தன. ஆகவே அதில் ஒவ்வொருவருக்கும் பத்து எழுத்துக்கள் அளிக்கப்பட்டன. மீதம் இருந்தவை இரண்டு எழுத்துக்கள்.
இரண்டு எழுத்துக்களை எப்படி மூன்று லோகத்திற்கு சரிசமமாகப் பிரிக்க முடியும்?
ஆகவே அந்த இரண்டு எழுத்துக்களை மூன்று லோகமும் சமமாக மதித்து போற்ற வேண்டும் என்று கடவுள் அறிவுறுத்தினார்.
அந்த இரண்டு எழுத்துக்களே ரா மற்றும் ம ஆகும். மதிக்கவே முடியாத எல்லையற்ற மதிப்பு கொண்ட ராம நாமம் அதுவேயாகும்.
ராம என்பது தேனீ. இதய தாமரையிலிருந்து தேன் என்ற பக்தியை அது உருவாக்குகிறது. தேனீ தான் உட்கார்ந்திருக்கும் இலைகளை விட்டு எழுகிறது. ஆனால் ராம அதன் அழகைக் கூட்டி மணத்தைத் தருகிறது. ராமர் சூரியன் போல.
சூரியன் நீரை தன்னிடம் தனது கிரணங்களால் இழுத்து அதை மேகமாக மாற்றி மழையாக பூமியின் தாகத்தைத் தணிக்க அனுப்புகிறது.
ராம என்ற தெய்வீக ஆற்றலுடைய ஒலியானது நாபியில் பிறந்து நாக்கிற்கு வந்து அங்கு சந்தோஷமாக நர்த்தனமாடுகிறது.
வேதம் செய்யும் பிரகடனமான தத்வமஸி என்பது ராம என்ற எழுத்துக்களில் ஜொலிக்கிறது.
ராம என்பது மூன்று ஒலிகளை உள்ளடக்கியுள்ளது.
ர, ஆ, ம என்ற ஒலிகள் அதில் உள்ளன.
இவற்றில் ர என்பது சத்தியத்தின் சின்னம். (தத் – ப்ரஹ்மம் – கடவுள்)
ம என்பது த்வம் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும் (த்வம் – ஜீவி – தனிநபர்)
ஆ என்பது இரண்டையும் இணைக்கும் அடையாள சின்னமாகும்.
ராம என்ற எழுத்து எண்கணித சாஸ்திரப்படியும் பொருள் பொதிந்ததாகும்.
ர என்பதற்கு உரிய எண் 2.; ஆ என்பதற்கு உரிய எண் 0; ம என்பதற்கு உரிய எண் 5. ஆகவே ராம என்பதைக் கூட்டினால் – ஐந்தும் இரண்டும் கூட்டப்பட்டால் – வருவது 7 என்ற எண்ணாகும். இது ஒரு புனிதமான எண்ணாகும்.
நாம் இசையில் ஏழு ஸ்வரங்களைக் கொண்டுள்ளோம். சொர்க்கத்தில் சப்த ரிஷிகளைக் கொண்டுள்ளோம். ராம என்பதை ஏழு நாட்கள் தொடர்ச்சியாக ஜபித்தால் மிகவும் பலன் தருவதாக ஆகிறது.
பகவான் ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் உலக மாநாட்டை மும்பையில் பாரதீயவித்யாபவைன் வளாகத்தில் 16-3-1968 அன்று ஶ்ரீ சத்ய சாயிபாபா துவக்கி வைத்து ஆற்றிய உரை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தொகுத்து வழங்குபவர் லண்டன் சுவாமிநாதன்
பிரிட்டனில் புதிய விநாயகர் கோயில்
பிரிட்டனில் தெற்கு வேல்ஸில் உள்ள கற்பக விநாயகர் கோயில் (கணபதி கோயில்) கும்பாபிஷேகம் ஜூன் ஏழாம் தேதி நடைபெறவுள்ளது; முதல் தேதி முதல் கும்பாபிஷேகத்துக்கான யாக யஃஞங்கள் துவங்குகின்றன
The Hindu temple in Bridgend is the Wales Shri Kalpaga Vinayagar Temple (Ganesh Temple). It is located on Pandy Road in Aberkenfig, Bridgend. This temple serves as a local religious, cultural, and spiritual hub for devotees in the area.
Facilities: The temple relocated to this building to better serve the growing Hindu community in South Wales.
****
லண்டனில் ஒரே நாளில் இரண்டு பெரிய நிகழ்ச்சிகள்
மே 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் மித்ர சேவா சார்பில் மஹாருத்ர யக்ஞமும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சார்பில் மத்திய லண்டனில் ரத யாத்திரையும் நடந்தன ; ஆங்கிலத்தில் (Go to my blogs or my Facebook Page) விரிவான செய்தியை வெளியிட்டுள்ளேன் . இரண்டிலும் வளமைபோல ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .
***
குருவாயூர் கோவிலுக்கு கேரள முதல்வர் விஜயம்! 71 கிலோ வெண்ணெய்!
கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் வி.டி. சதீசன் குருவாயூர் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் முதல்வர் வி.டி. சதீசன் வழிபாடு மேற்கொண்டார்.அப்போது கோயில் விதிமுறைங்கள் மீறயப்பட்டதாக கேரள பாரதீய ஜனதாக கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது .
சதீசன் துலாபார நேர்த்திக் கடனாக வெண்ணெய் செலுத்தினார் எடைக்கு எடை கொடுப்பதற்காக 71 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது
***
தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும்
தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை – முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு!தேசிய விலங்காக பசுவை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
வட மாநிலங்களில் பசுவை பலியிடுவது அல்லது துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் ஜமாயத் உலமா – இ – ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் எனவும் இறைச்சிக்காக பசுவை வளர்ப்போர் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.மேலும், இந்த கோரிக்கை தொடர்பாக முஸ்லீம்கள் ஒருமித்த கருத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதனடிப்படையில் அகில இந்திய குரேஷி ஜமாத் உள்ளிட்ட முஸ்லீம் அமைப்புகள் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
***
இந்து முன்னணி தலைவர் கண்டனம்
ராமேஸ்வரம், திருச்செந்தூர் கோயில்களில் ஊழல்
கோவிலை சுரண்டும் ஊழல் பெருச்சாளிகளான, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.
கோவிலை சுரண்டும் ஊழல் பெருச்சாளிகளான, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராமேஸ்வரம் திருக்கோவிலில் லட்டு பிரசாதம் முறைகேட்டில் அதிகாரிகள் துணையோடு ஊழியர்கள் பல கோடி ரூபாய் சுருட்டிய அதிர்ச்சி செய்தி வெளி வந்துள்ளது. நேற்று (21.5.26) திருச்செந்தூர் கோவிலில் தரிசன கட்டண ரசீது முறைகேட்டில் 25 லட்சம் ரூபாய் திருடிய பெண் அதிகாரி பிடிபட்டுள்ளார். தப்பு செய்தால் இறைவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மக்களுக்கு இன்றும் முழுமையாக உள்ளது. ஆனால் கோவிலில் இறைவன் முன்பே மனசாட்சி இல்லாமல் பக்தர்களை ஏமாற்றி திருடும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் செயல்கண்டிக்கத்தக்கது.
உதயநிதியைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘சனாதன தர்மத்தை அழிப்போம்’ என்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம், உதயநிதியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் வெளியிட்டுள்ளார். மாநில தழுவிய போராட்டங்கள்: உதயநிதியை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களான சென்னை, விழுப்புரம், கடலூர் மற்றும் விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் கண்டனப் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியது.
–SUBHAM—
TAGS- உலக இந்து மத செய்தி மடல் 25 5 2026, WORLD HINDU NEWS BULLETIN 25 5 2026
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Tamil version will be posted tomorrow
Bangkok Mariamman Temple
MARIYAMMAN
Hindu Goddess worshipped in Tamil Nadu. She is the goddess of rain, prosperity, and healing. Mariamman is a manifestation of the goddess – Parvati, an incarnation embodying Mother Earth with all her terrifying force. She protects her devotees from unholy or demonic events. Hindu migrant workers have erected her temples around the world, particularly in Sri Lanka, Malaysia, Singapore, Mauritius, South Africa and other countries. Even in UK, there are three temples dedicated to her. When ever there is an outbreak of diseases such as small pox devotees vow to offer her body parts in silver or walk on fire in Fire Walking Ceremonies. Neem tree leaves are hung around the fire pots the devotees carry during festivals. Madurai Mari Amman temple is one of the famous temples with a big tank opposite it.
In some towns devotees suspend themselves in ropes and an iron hook through the flesh of the back and whirled around a pole. Villagers believe she can cause diseases and eradicate diseases. They offer her Rice Pongal or Rice Gruel. High caste Hindus offer her Maa Vilakku= sweet flour with ghee lamp in the middle. In each village same ceremonies are done to local goddesses with different names. Some local anecdotes or incidents are linked to her.
Foreigners who could not understand the ceremonies have used wrong words to describe her.
***
MARMA STHANA
Marma sthaana refers to vital points in the body that are crucial for health and well-being, as detailed in Shilpashastra, Ayurveda, and scientific perspectives. These locations, often associated with critical biological functions, are marked by their vulnerability; injury to them can lead to serious consequences such as deformity or death. Marma sthaana also means excretory organs in common parlour.
***
Marichi
A spark of fire; मरीच्य इव निष्पेतु- रग्नेर्धूमाकुलार्चिषः (marīcya iva niṣpetu- ragnerdhūmākulārciṣaḥ) Rām.1.56.18.
-ciḥ 1 Name of a Prajāpati, one of the ten patriarchs created by the first Manu, or one of the ten mindborn sons of Brahman; he was father of Kaśyapa.
He married Kala , the daughter of Kardama rishi by Devahuti . Kashyapa was his son.
***
Markandeya with Siva; Yama is kicked away by Lord Siva.
Markandeya
Mārkaṇḍeya (मार्कण्डेय) the son of Sage Mṛkaṇḍu was born to a couple when they propitiated Śiva with their prayers. At the time of granting them their wish, Shiva offered them two choices, a son who would be wealthy, powerful and long lived, but of ill character, or a son who would be virtuous, but who will die when he turns sixteen. The Brahmana asked for a son who would be virtuous. The Lord granted the boon and disappeared. The young Mārkaṇḍeya was not only extremely intelligent but also a great devotee of Śiva. When Yama, God of Death came to take his life at the age of sixteen, he was praying to Shiva as usual. He hugged Shiva Linga when he saw Yama with terrible appearance. When Yama tried to pull him away from Shiva’s statue, Lord Shiva himself came out and kicked Yama away. Lord Shiva told Yama that he will remain Sixteen for ever. There is a Purana called Markandeya Purana detaining the story.
Pronunciation- maarkandeya.
***
Marut
Vedic God of storm. Vedas say that Maruts are sons of Rudra.
The storm gods hold a very prominent place in the Vedas and they are represented as friends and allies of Indra. Various origins are assigned to them. They are sons of Rudra, brothers of Indra and and sons of ocean and earth. They are armed with lightnings and thunderbolts, and ride on the whirlwind and direct the storm. The number of them is said in one place to be thrice sixty and in another only 27.
In Ramayana, they are represented to have their origin in an unborn son of Diti, whom Indra dashed into 49 pieces with his thunderbolt and in compassion converted them into Maruts. They have obtained their name from the words maa roadih , weep not, which Indra addressed to them.
One more view is Siva and Parvati beheld them in great affliction and Parvati asked Siva to transform the lumps into boys; he accordingly made them boys of like form, like age, and similarly accounted, and gave them to Parvati as her sons, whence they are called the sons of Rudra.
The world of the Maruts, called Maaruta, is the appointed heaven of Vaisyas. The god of the wind, and regent of the north west quarter. Maruti , Anjaneya is related to the word Wind/Marut
Puranic Story: Marut (मरुत्).—Fortynine in number, born of Diti and Kaśyapa; seven in each of the seven vātaskandhas; brothers of Indra and participators in sacrifices;1 when Diti conceived a son to be the slayer of Indra, the latter began to serve her throughout her pregnancy. Once finding that she did not keep to her vows he entered her womb and cut the foetus into 49 pieces, when they cried. He said to them mā ruda and hence māruta: being divine, were born as 49 sons: at the request of their mother Indra made them a Devagaṇa, called Marutgaṇa
***
Maruti– Another name of Anjaneya/ Hanuman. Son of Vayu Deva.
See Hanuman and Anjaneya
***
MARUTHAM MANTHA/ CHANDA
Maarutham is wind or Breeze. Mantha Marutham is the southern breeze coming from Malaya Mountain (part of Western Ghats/ Sahyadri. Chanda Marutham is gale fore wind.
***
Matali – maatali
Charioteer of Indra. World’s first pilot of Space Shuttle.
He came down to earth to escort Arjuna to Swarga/heaven and then return him to earth after five years. He is the first pilot of space shuttle in literature. During Arjuna’s stay in swarga/heaven it was Matali who showed him celestial places. Arjuna’s space travel is in Vana Parva of Mahabharata.
***
MATHA/ MUTT
Religious centres where the head of a particular sect lives. Kanchi Kamakoti Mutt in Tamil Nadu and Sringeri Mutt in Karnataka and Ahobilam Mutt in Andhra Pradesh are very famous. In Tamil Nadu, Adeenams are Mutts of Saivite saints . Vaishnavites have Jeeyar Mutts. All these Mutts have branches in different parts of the country. Pujas and worship happen everyday in the popular Mutts. In Tamil they are called Matam.
***
Matsya Avatara
Matsyāvatāra (मत्स्यावतार).—the first of the ten incarnations of Viṣṇu; (during the reign of the seventh Manu, the whole earth, which, had become corrupt was swept away by a flood, and all living beings perished except the pious Manu and the seven sages who were saved by Viṣṇu in the form of a fish.
Matsya means Fish; in Tamilized form it is Machcha. Lord Vishnu’s first Avatar/incarnation. This story is in various religions as Nova or Flood Story etc.
Name of a country as well in ancient India.
***
Matsya purana
It gives the story of fish incarnation of lord Vishnu. it has about 15,000 slokas/couplets. Many of its chapters are same as the parts of Vishnu and Padma Puranas.
***
Maya
A Daitya who was the architect of the Asuras and as Viswakarma as the architect of the Devas.
Maya was the son of Viprachitti and father of Vajra karma and Mandodari, wife of Ravana.The Mahabharata speaks of a palace he built for the Pandavas. In Hari-vamsa he appears frequently both as victor and vanquished in contests with the Gods.
Story in Mahabharata
When Khandava forest was being burnt by Arjuna and Krishna with the help of Agni, Maya sought and received protection from Arjuna. To show his gratitude he built the central court of Yudhisthira’s new capital Indraprastha; the court was unparalleled in beauty and architectural skill. It was to this court Duryodhana was invited later at the time of Yudhithira’s Rajasuya Yajna and where Duryodhana mistook the highly polished marble floors for water and vice versa bringing ridicule upon himself. Draupadi with her companions, watched it from the balcony , laughed, which hurt Duryodhana very much. He revenged upon her by disrobing her IN public assembly when Pandavas lost everything including her in the gambling.
***
Maya- mayaa
Illusion, deception.
Illusion personified as a female form of celestial origin, created fro the beguiling some individual. Goddess Durga is also called Mahaa Maayaa or Maayaa Devi. The name shows that she is capable of destabilising even people of wisdom, if they do even a single mistake.
Om jñānināmapi cetāṁsi devī bhagavatī hi sā balādākr̥ṣya mohāya mahāmāyā prayacchati
Meaning: “Even the minds of the wise are forcibly drawn by the Goddess Bhagavati—the Great Maya—and led into delusion.”- says Durga Saptasati/ Devi Mahatmya.
Adi Shankara frequently used this word in his propagation oof Advaita. He said seeing a rope as a snake is Maayaa/illusion.
***
Manikarnika Ghat
Manikarnika Ghat, located on the banks of the Ganges in Varanasi, India, is one of the oldest and holiest cremation grounds in Hinduism. It operates 24/7, with hundreds of pyres burning continuously as families gather to cremate their deceased with the belief that it grants eternal liberation (Moksha).
Location: Situated in the Kashi region of Varanasi, Uttar Pradesh.
Operation: 24 hours a day, 365 days a year.
Visitors typically observe the process from a boat on the Ganges River or from designated safe vantage points onshore.
Costs: For those arranging a cremation, costs range from ₹4,000 to ₹20,000 depending on wood quality and specific rituals.
The ghat is named after Sati’s (a Hindu goddess) earring, which is believed to have fallen there.
The Eternal Flame: According to tradition, the main funeral pyre has been continuously burning for over 3,000 years.
The Dom Community: The cremation rituals are traditionally overseen and managed by the local Dom community, who prepare the bodies and maintain the sacred fires
***
Mayadevi – maayaadevi-
Māyādevī (मायादेवी).—Name of the mother of Buddha.
The Maya Devi Temple refers to one of the sacred or popular destinations of Lumbini (Rupandehi District, Nepal).—Description of the Maya Devi Temple: This UNESCO world heritage site is the birthplace of Siddhartha Gautama (Buddha), the son of King Suddhodhana, the once ruler of the ancient kingdom of Kapilvastu, and his Queen Maya Devi. The queen gave birth here in the garden of Lumbini Park, while on her way home, holding onto a branch of a Sal tree. Today, this site is where the Maya Devi temple stands. There is an older temple structure under the current building. A few years ago, ancient tree roots dating to the 6th century BCE were found in the temple, which correlates to the story of how Queen Maya gave birth to Buddha.
***
Mayavati- maayaavati
Māyāvatī (मायावती).—An incarnation of Ratidevī. An asura named Śambara made her his wife. But Pradyumna, son of Kṛṣṇa, carried her away to Dvārakā.
Māyāvatī (मायावती).—Rati in her former birth: when her husband was burnt by śiva, she was reborn as the superintendent of Śambara’s kitchen. Hearing from Nārada that Pradyumna was Kāma and that he was thrown into sea by Śambara and swallowed by a fish and was brought to her kitchen, she nursed him lovingly and when he came of age, she spoke the truth and taught him mahāmāyā vidyā with which he killed Śambara: She took him by air to Kṛṣṇa and was rejoiced to become the daughter-in-law of Kṛṣṇa and Rukmiṇī.*
To be continued……………………
Tags—Mayadevi, Mayavati, Manikarnika, Markandeya, Mariamman, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 65; இந்து மத கலைச்சொல் அகராதி-65
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 34
திருக்கோஷ்டியூர்
திருக்கோஷ்டியூர் ,சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 104-வது தலமாகும்.
சிறப்பம்சங்கள்:மூலவர்: சௌமியநாராயண பெருமாள். பெருமாள் நின்ற, நடந்த, கிடந்த, இருந்த என நான்கு நிலைகளிலும் காட்சி தரும் அபூர்வ தலம்.
ராமானுஜர் உபதேசம்: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், எட்டெழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” ரகசியத்தை சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உபதேசம் செய்த தலம்.
மூலவர் பெயர் சௌமிய நாராயணன்;
தாயார் மகாலட்சுமி.
திருவிழாக்கள்:
வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி.
கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புரூருவ சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.
அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.
அஷ்டாங்க விமானம் :
ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.
விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.
மகாமக கிணறு :
புரூருவ சக்கரவர்த்திக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.
ராமானுஜருக்கு உபதேசம் :
திருக்கோஷ்டியூர் நம்பி , ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார்.
தல வரலாறு:
இரணியகசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார்.
தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.
தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.
கோபுர விமானத்தின் சிறப்பம்சம் :
மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஓரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.
கோயில் பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் உள்ளது.
மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் :பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
மதுரையிலிருந்து 65 கி. மீ தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
30-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
மா ஆனந்தமயி!
ச. நாகராஜன்
பாரதத்தின் சமீப கால வரலாற்றில் தோன்றிய பெரும் ஞானி மா ஆனந்தமயி.
இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று சகல மதத்தினரைச் சார்ந்தவர்களும் அவரிடம் வந்து ஆசி பெற்றனர்.
நிர்மலா சுந்தரி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட மா ஆனந்தமயி வங்காளத்தில் கேயோரா என்ற ஊரில் 1896ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியன்று பிறந்தார்.
இளமையிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட அவருக்கு அந்தக் கால வழக்கப்படி அவரது பதிமூன்றாம் வயதில் திருமணம் செய்விக்கப்பட்டது. கணவர் போலோநாத் அவரது ஆன்மீகச் சிறப்பை உணர்ந்து கொண்டார். அவரை மா என்றே அழைத்தார்.
1922ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பௌர்ணமி தினத்தன்று நள்ளிரவில் அவருக்கு பெரும் ஆன்மீக உணர்வு ஏற்பட்டது. அவர் உயரிய ஞான நிலையைத் தானே யாருடைய உபதேசமும் இன்றி அடைந்தார்.
அடுத்த ஐந்து மாதங்களில் அவரது சாதனை உச்ச கட்டத்தை அடைந்தது.
1922 டிசம்பர் முதல் மூன்று ஆண்டுகள் அவர் மௌன விரதத்தை அனுஷ்டித்தார். உணவும் மிகச் சிறிய அளவே அவருக்கு ஊட்டி விடப்பட்டது.
அவரது ஆன்மீக சக்தி வெளி உலகிற்குத் தெரிய வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் கூட்டம் அவரை நாடி வந்தது. வருபவர்களின் உடல் நோயை அவர் தீர்ப்பதைக் கண்ட மக்கள் வியந்தனர்.
வீட்டை விட்டு வெளியே வந்த அவர் சித்தேஸ்வரி ஆசிரமம் என்று தனி ஆசிரமம் ஒன்றை அமைத்தார். பின்னர் ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார்.
வாரணாசியில் 1928ம் ஆண்டில் பண்டிதர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றில் அவர் உபயோகித்த சம்ஸ்கிருத வார்த்தைகளும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
அவரது முத்திரைகளும் ஆசனங்களும் அவரது உடலில் இயல்பாய்த் தோன்றின.
சுமார் 30 ஆசிரமங்களை அவர் அமைத்தார். அவரது புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அரவிந்த மஹரிஷி, “இது சச்சிதானந்த சொரூபம்” என்றார்.
மகாத்மா காந்திஜி ஜமனாலால் பஜாஜை நேரடியாக ஆனந்தமயி மாவிடம் அனுப்பி தனது ஆசிரமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அவரும் காந்திஜி ஆசிரமத்திற்கு வந்தார்.
அவரைச் சந்தித்த பரமஹம்ஸ யோகானந்தர் அவரை ஆனந்தமயமான அம்மா என்றார்.
கமலா நேரு அவரது சிறந்த பக்தையானார். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லப்படும் பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர் மீது மிகவும் மரியாதை கொண்டிருந்தார்.
பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அவரது பக்தையாக ஆனார்.
1982ல் மா மறைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தனது புதல்வர் ராஜீவ் காந்தி, மருமகள் சோனியா காந்தி மற்றும் பேரக் குழந்தைகளுடன் அவர் ஆசிரமம் சென்று அவரை தரிசித்தார்.
தூரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆற்றலையும் பிறர் கேட்காமலேயே அவர்கள் மனதில் உள்ள சந்தேகங்களை அறிந்து பதில் சொல்வதும் அவருக்கு இயல்பான சித்தியாக இருந்தது.
வங்காளத்தில் உள்ளவர்கள் அவரை மானுஷ் காளி (வாழ்கின்ற காளி) என்று போற்றி வணங்கினர். மதுரைக்கு அவர் வந்த போது அனைவரும் அவரை மீனாக்ஷி தேவி என்று போற்றி வணங்கினர். பஞ்சாபில் புனிதமான கிரந்த சாஹிபிற்கு அளிக்கும் மரியாதையை அவருக்கு சீக்கியர்கள் அளித்தனர். நர்மதை நதிக்கு அவர் செல்கையில் இதோ நர்மதா தேவி என்று கூவி பக்தர்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். கிறிஸ்தவர்கள் அவரை தரிசித்து ஆசி பெற்றனர்.
1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் நாளன்று நாராயண ஹரி என்று பலமுறை அவர் கூறியவாறே தனது உடலை உகுத்தார். கிஷன்பூர் ஆசிரமத்திலிருந்து அவரது உடல் ஹரித்வார் அருகே உள்ள கன்கால் ஆசிரமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை இறுதியாக தரிசித்தனர். கன்காலில் அவரது மஹாசமாதி நிறுவப்பட்டது. பிரதம மந்திரி இந்திராகாந்தி முன்னிலை வகித்தார்.
அவரது உபதேச உரைகள் எளிமையான வார்த்தைகளில் ஆழமான அர்த்தத்துடன் அமைந்திருக்கும்.
“எப்போதும் உயரிய சிந்தனையைக் கொண்டிருங்கள். புகழையும், இகழையும், சகதியையும், சந்தனத்தையும் ஒன்றாகவே கருதுங்கள். இதயத்தின் உள்ளே இருப்பதைப் பாருங்கள்” என்பது அவரது உபதேசங்களில் ஒன்றாகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026. But two great events happened at the same time. And yet I did not hesitate to ……………………………………
Balabhadra, Subhadra, Jagannatha on Three Chariots/ Rathas
Ceremonial cleaning of the rodas for God’s Visit
Hinduja Foundation provide Prasad/ Food Every Year.
–Subham—
Tags- Last Part , London Rath Yatra, Rudra Yaga, Two Great Events, Mitra Seva, ISKCON