Part 6 of Kumbakonam Wonders Picture Ramayana on Temple Walls (Post No.11,846)

Hanuman  giving Rama’s ring to Sita Devi in Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,846

Date uploaded in London – –  27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 6

Pictures of Ramayana incidents and anecdotes were painted on Ramaswami Temple walls at Kumbakonam in Tamil Nadu.

About 220 pictures from the Ramayana were painted a few hundred years ago.

Here are some more pictures:

Rama asking Sugreeva to send his army for his help

Dangerous Nikumbha Cave Yaga to finish Rama

Hanuman searching Sita devi in Ravana’s Palace

Hanuman fighting with Angaradhara

Ravana asking Rakshasis to persuad Sita

Ravana’s source of strength is explained to Rama by Angathan and Jambavan

Hanuman fighting with Seven Sons

Indrajit shooting Brahmastra on Hanuman 

Hanuman fighting with Akshayakumara

Indrajit, binds Hanuman with Brahmastra

—subham–

Pictures, Ramayana, Ramaswami Temple, Kumbakonam, Part 6

கரும்பு ஆயிரம் பிள்ளையார் கோவிவிலில் தரிசனம் (Post.11,845)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,845

Date uploaded in London – –  27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிள்ளையாருக்கு உள்ள வினோத அடைமொழிகள் போல வேறு எந்த இந்துக் கடவுளுக்கும் விசித்திரமான அடைமொழிகள் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு பெயருக்கும் பின்னர், ஒரு கதை அல்லது சம்பவம் இருக்கும். மதுரை மேல மாசிவீதி பிள்ளையார் கோவிலில் நேருஜி பெயர் ஒட்டிகொண்டது ! சாமியே கும்பிடாத காஷ்மீரிப் பார்ப்பான் ஜவஹர்லால் நேரு. ஒரு காங்கிரஸ்கார கவுன்சிலர் சொன்னதற்காக மதுரையில் நேருவின் கார் அங்கே நின்றதாம். இதனால் நேருவின் பெயர் ஒட்டப்பட்டது.

அட , இது புது வழக்கம் என்று நினைத்து விடாதீர்கள்.   இது புது வழக்க ம் அல்ல. திருவண்ணாமலைக் கோவிலுக்குள்நுழைந்தால் ஒரே கோவிலுக்குள் பல பிள்ளையார் பெயர்களைக் காணலாம். அவ்வளவு பிள்ளையார் பெயர்களுக்கும் விளக்கம்  எழுத ஒரு ‘என்சைக்ளோபீடியா’ தேவைப்படும். இது 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ராஜ ராஜன் சோழன் காலத்திலிருந்து இருந்து வருகிறது. நம்பி ஆண்டார் நம்பியைத் திருப்திப் படுத்துவதாற்காக சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட பொல்லாப் பிள்ளையார் முதல் மதுரை மீனாட்சி  கோவில் முக்குறுணி விநாயகர், விபூதிப்  பிள்ளையார் வரை  சொல்லிக்கொண்டே போகலாம்.

லண்டனில் வசிக்கும் சாமிநாதன் என்ற நண்பர், கும்பகோணம் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் ஆலயம் கோவிலில் நீண்ட நெடுங்காலம் பூ ஜை செய்த பட்டரின் மகன் ஆவார். அவர் இந்தப் பிள்ளையாரின் மஹிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்த தால். இந்த முறை இந்திய விஜயத்தில் அவரைச் சந்தித்து ஒரு ஸலாம் (சல் யூட்).போடத்  தீர்மானித்தேன். அதன்படி ஒரே நாளில் 6 கோவில் தரிசன சூறாவளி சுற்றுப் பயணத்தில் 19-3-2023 அன்று நாங்கள் 3 பேர் அந்தக் கோவிலில் பிள்ளையாரைத் தரிசி த்து அருளாசி பெற்றோம். நல்ல சாந்நித்யம் உள்ள கோவில். நாமே வைப்ரேஷன்VIBRATIONSகளை உணரலாம். சுமாரான கூட்டம்; எளிதான தரிசனம்.

Xxxx

இதோ அவர் கதை  :

இக்கோயில் பற்றி திருக் குடந்தைப்  புராணம் போற்றுவதைக் கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.

அருகரும்புத் தரும்வியப்ப அவனியொரு

கோட்டுநுனி அமைத்துத் தீயோர்

திருகரும்புக் கிடங்கொடாச் செங்கண்வரி

கமும்கிழத் தேதே யென்று

வருகரும்புட் குலமுழக்கு மலர்க்கேழற்

புனற் கோட்டார் வணிகன் பாங்கர்

ஒருகரும்புக் காயிரங்கொண் டுறுகரும்பா

யிரக்களிற்றை உளங்கொள்வோமே“

பிரசித்திபெற்ற கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு அணித்தே உள்ளது கரும்பாயிரம் பிள்ளையார் கோவில் . ஒரு காலத்தில் வராகப் பிள்ளையார் என்ற பெயர்தான் இருந்தது. ஏனெனில் அருகிலுள்ள வராகப் பெருமாள் கோவிலை ஒட்டி அதற்காக அமைக்கப்பட்டது. பின்னர் பிள்ளையார் செய்த லீலையால் கரும்பு ஆயிரம் ஒட்டிக்கொண்டது.

அது என்ன கதை?

ஒரு வியாபாரி ஆயிரக்கணக்கான கரும்புகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு கரும்பு ஆலைக்குச் சென்று கொண்டிருந்தான். யானைக்கு கரும்பு என்றால் கொ ள்ளை ஆசைதானே ! ஆனை  முகப் பிள்ளையார் ஒரு சிறுவன் வேடத்தில் வந்து ஒரே ஒரு க ரும்பைக் கேட்டார். எச்சில் கையாலும் காகத்தை ஓட்டா தக் கஞ்சன் அந்த வியாபாரி . ஒரு கருபம்பைக் கூடத்  தர மாட்டேன் என்றான். மேலும் அதற்காக சில பொய்களையும் சொல்லிவிட்டுப் போனான். ஆனால் அவன் கரும்பாலைக்குச் சென்றபோது அவை எல்லாம் தரக்குறைவானவை என்று நிராகரிக்கப்பட்டன. கவலை அடைந்த வியாபாரியின் கனவில் பிள்ளையார் தோன்றி , அவனது கஞ்சசத்தனத்தால் விளைந்த கருமம் இது என்று விளக்கினார். பின்னர் அவனும் மனம் திருந்தி பிள்ளையாரை கரும்பு சகிதம் வந்து வணங்கினான் ; அது முதற்கொண்டு புதுப்பெயருடன் புகழ் பெற்றார் ஆயிரம் கரும்புப் பிள்ளையார்!

கோவில்களும் இத்தகைய கதைகளும் நமக்குப்  போதிப்பது என்ன?

பிறருக்கு உதவி செய்; ஐயமிட்டு உண் ; யாராவது , எதையாவது கேட்டால் , உன்னிடம் அதிகம் இருந்தால், அதைப் பிறருக்கும் கொடு.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்.

–subham—

Tags- கும்பகோணம், கரும்பாயிரம் பிள்ளையார், கோவில் , ஆயிரம் கரும்பு

உண்மையான மகன் யார்? மனைவி யார்? நண்பன் யார்? (Post.11,844)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,844

Date uploaded in London –   27 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதச் செல்வம்

உண்மையான மகன் யார்மனைவி யார்நண்பன் யார்?

ச.நாகராஜன்

உண்மையான மனைவி யார்?

ஒரு உண்மையான மனவிக்கான இலக்கணம் என்ன? யாரை மகன் என்று கூற முடியும்? ஒரு நல்ல நண்பன் என்று கூறத் தக்கவன் யார்?

இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரு பாடலில் விடை தரப்படுகிறது.

ய: ப்ரீணயேத்சுசாரிதை: பிதரம் ச புத்ரோ

      யத்பர்த்ருரேவ ஹிதமிச்சதை தத்களத்ரம் |

தன்மித்ரமாபதி சுகே ச சமக்ரியம் ய-

     தேதத் த்ரயம் ஜகதி புண்யக்ருதோ லபந்தே ||

இந்த சுபாஷிதத்தின் பொருள்:

தனது மேன்மையான நடத்தையால் எந்த ஒருவன் தனது தந்தையை சந்தோஷப்படுத்துகிறானோ அவனே புத்திரன் எனச் சொல்லப்படுவான்.

தனது கணவனின் ஹிதத்தை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஒருத்தியே மனைவி எனப்படுவாள்.

 வளமாக சுகத்துடன் இருக்கும் காலத்திலும் அபாயகரமான காலத்திலும் எவன் ஒருவன் உதவி செய்கிறானோ அவனே நண்பன் எனப்படுவான்.

இந்த மூவரும் யாருக்குக் கிடைக்கும் எனில் புண்யம் செய்தவர்களுக்கே இப்படிப்பட்ட மூவர் கிடைப்பார்கள்.

இங்கு திருவள்ளுவரின்

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு”    – (குறள் எண் 788)

என்ற குறளை ஒப்பு நோக்கலாம்.

 காலால் தொடாதே!

எதையெல்லாம், யாரையெல்லாம் காலால் மறந்தும் தொடக் கூடாது.

ஒரு பட்டியலையே தருகிறார் கவிஞர்:

பாதாப்யாம் ந ஸ்ப்ருஷேதக்னிம் ந குரும் ப்ராஹ்மணம் ததா|

ந காம் ச ந குமாரிம் ச ந சிஷும் ந ச தேவதாம்.

பாதத்தால் தீயைத் தொடாதே.

அது மட்டுமல்ல பாதத்தால் தொடக் கூடாதவர்கள் இதோ;

குரு

ப்ராஹ்மணர்

பசு

குமாரி

குழந்தை

(தெய்வ) தேவதைகள்

சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால்….

சொர்க்கத்திற்குச் செல்ல யாருக்குத் தான் ஆசை இருக்காது.

சொர்க்கத்திற்குச் செல்வது பற்றி ஒரு கவிஞர் ‘டிப்ஸ்’  (TIPS) தருகிறார் இப்படி:

கொடுக்கப்படாததை மனதால் கூட இச்சிக்கக் கூடாது.

மதுபானத்தை அருந்தக் கூடாது.

உயிருள்ளவற்றை இம்சிக்கக் கூடாது.

தவறானவற்றைச் சொல்ல கூடாது.

அடுத்தவர் மனைவியை மனதாலும் விரும்பக் கூடாது. அடைய முயற்சிக்கக் கூடாது.

இவற்றை எல்லாம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவோர் க்டைப்பிடிக்க வேண்டும்.

கடைப்பிடித்தால்,

பிறகென்ன, சொர்க்கம் நிச்சயம் தான்!

நாதத்தமிச்சேன்ன பிபேச்ச மத்யம்

     ப்ராணான்ன ஹிம்ஸென்ன வதேச்ச மித்யா |

பரஸ்ய தாரான்மனசாபி நேச்சேத்ய:

    ஸ்வர்காமிச்சேஎதூக்ருஹவத்ப்ரவேஷ்டம் ||

பண்டிதன் யார்?

பண்டிதன் என்று யாரைச் சொல்லலாம். கவிஞர் வழி காட்டுகிறார்:

எவன் ஒருவனின் செயல்கள் தடைகளைச் சந்திக்கவில்லையோ அவனே பண்டிதன்.

தடைகள் என்பவற்றில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

குளிர்,

வெப்பம்,

பயம்,

பற்று,

வளம்,

வளமின்மை

இந்தத் தடைகள் அனைத்தையும் கடந்து தாண்டித் தன் செயல்களைச் செய்பவனே பண்டிதன் ஆவான்.

யஸ்ய க்ருத்யம் ந விதந்தி ஷீதமுஷ்ணம் பயம் ரதி: |

சம்ருத்திரசம்ருத்திர்வா ச வை பண்டித உச்யதே ||

கிடைக்கவே கிடைக்காதது எது?

ஒருவனுக்கு  இன்னொரு வளமான வாழ்வு கிடைக்கலாம்.

இன்னொரு நண்பன் கிடைக்கலாம்.

இன்னொரு மனைவி கிடைக்கலாம்.

இன்னொரு நிலம் கிடைக்கலாம்.

இந்த எல்லாமும் கூட கிடைக்கலாம். ஆனால்

ஒருவனின் உடல் கிடைப்பதென்பது முடியவே முடியாது.

புனர்வித்த்தம் புனர்மித்ரம் புனர்பார்யா புனர்மஹீ |

ஏதத்சர்வம் புனர்லப்யம் ந சரீரம் புன: புன: ||

***

Part 5 of Kumbakonam Wonders; Chitra Ramayana on Temple walls (Post No.11,843)

Sugreeva is advised by Rama

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,843

Date uploaded in London – –  26 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Rama and Lakshmana getting permission to leave for the forest.

Sugreeva has been crowned as the King of Kishkinda

Maya Sita, Magically created Sita, was cut by Indrajith

Yatra Dhanam given by Rama Lakshmana;

Ruma and Tara met  by Lakshmana

Rama piercing Seven Trees with one arrow

Vali- Sugreeva Fight; Rama gave garland symbol to Sugreeva

Ramayana pictures on the walls of Ramaswami Temple at Kumbakonam Over 200 Ramayana scenes are painted on the walls in three tiers.

Part 5

Sugreeva carrying Vali to crematoriumm

Vali was killed  by Rama.

Lakshmana’s Wedding

Bharata’s Wedding

Sathrunan Wedding

Dasaratha with his wives

–subham–

Tags- Chitra Ramayana, Wall paintings, Ramaswami Temple

Tags- Chitra Ramayana, Wall paintings, Ramaswami Temple

கோவிந்தபுரத்தில் பகவந்நாம போதேந்திராள் அதிஷ்டானம் (11,842)

Anjaneyar temple at theAdhistanam

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,842

Date uploaded in London – –  26 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சம்பிரதாய பஜனை செய்வோர் அனைவருக்கும் தெரிந்த மகானின் பெயர் பகவந் நாம போதேந்திராள் . இவருடைய அதிஷ்டானத்துக்குச் செல்லும் பாக்கியம் பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது கிடைத்தது. முதலில் கும்பகோணத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவிசை நல்லூருக்குச் சென்று கங்கை நதி பெருக்கெடுத்த ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றையும் கோவில் போன்று அருள்பொங்கும் மடத்தையும் தரிசித்துவிட்டு திருவிடை மருதூருக்கு அருகிலுள்ள கோவிந்தபுரத்துக்கு வந்தோம். ஒரு புறம் விட்டல் மந்திர் ; அதன் எதிர்ப்புறம் ஆயிரம் பசு மாடுகளைக் கொண்ட கோ சாலா. அருகிலேயே எல்லா சாமியார்களின் மடங்கள். அவற்றில் நாம் தரிசிக்கப்போவது போதேந்திராள் அதிஷ்டானம். அதாவது அவர் சமாதி மீது எழுப்பப்பட்ட கோவில் போன்ற புனித இடம்.

கோவிந்தபுரம் புனித மணம் கமழும் இடம் என்பதால் ., பல சாமியார்களை பின்பற்றுவோரும் அங்கு மடம் அமைத்து , பிரசாரம் செய்து வருகின்றனர்.

Bhavannama Bodhendral Adhistanam

பகவந்  நாம போதேந்திராள் (1638- 1692) , காஞ்சி காமகோடி மடத்தின் 59ஆவது பீடாதிபதியாக விளங்கிய மஹான். அவர் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். திருவிசை நல்லூர் ஸ்ரீதர ஐயாவாளின்  சமகாலத்தவர்.இறைவனை அடைய அவருடைய நாமத்தைச் சொல்லி ஆடிப்பாடினாலே போதும்; பக்திதான் முக்கியம் என்று வலியுறுத்தியவர். போதேந்திராள்.. இதில் ஜாதி, இன  வேறுபாடுகள் கிடையாது..

போதேந்திராள் அதிஷ்டானத்தில் பெரிய, உயரமான ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது. நாங்கள் சென்றபொழுது, நைவேத்தியம் செய்து தயிர்சாதம் வழங்கினர்.அதிஷ்டானத்தில் கோ சாலையும் இருக்கிறது..

XXX

FOLLOWING MATTER IS ALREADY POSTED IN THIS BLOG BY S.NAGARAJAN

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 58வது பட்டம் பெற்று அந்தப் பீடத்தை அலங்கரித்தவர்  ஸ்ரீ விஸ்வாதிகேந்த்ர ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் கேசவ பாண்டுரங்கர் என்ற ஒரு பிராமணர் கைங்கரியம் செய்து வந்தார். அவருக்கு வெகுகாலம் வரை மகப்பேறு இல்லாமல் இருந்தது. இறைவனை வேண்டஇறைவனின் திருவருளால் அவருக்கு ஒரு ஆண் குழந்தை 1610 ஆம் ஆண்டு பிறந்தது. காஞ்சியில் மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு புருஷோத்தமன் என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தையை கேசவ பாண்டுரங்கர் தம் குருநாதரிடம் காட்டக் கொண்டு வந்தார். குழந்தையை ஆசீர்வதித்த ஆத்ம போதேந்திரர் அந்தக் குழந்தையை  ஸ்ரீமடத்திற்கு அர்ப்பணம் செய்யும்படி கேசவரிடம் கூறினார். அவரும் அதற்கு இசைந்தார். ஆனால் தன் மனைவியைக் கேட்கவில்லையே என்ற அவர் மனதில் ஒரு தவிப்பு ஏற்பட்டது. வீட்டில் வந்து நடந்ததைச் சொன்ன போது பதிவிரத சிகாமணியான அவரது மனைவி சுகுணா, ‘அது நமது பாக்கியமே என்று கூற அவர் மிகவும் மகிழ்ந்தார்.

குழந்தை புருஷோத்தமன் பக்தியோடு வளர்ந்ததுதனது சேவையைச் செய்ய ஆரம்பித்தது. 15 வயதிற்குள் வேததர்மசாஸ்திரங்களை முற்றுமாகக் கற்றுத் தேர்ந்தார் புருஷோத்தமர்.

சில வருடங்கள் கழிந்தன. அப்போது  ஸ்ரீஜகத்குரு காசிக்கு யாத்திரையாகச் சென்றார். புருஷோத்தமனும் காசிக்கு யாத்திரை சென்று குருநாதரை தரிசிப்பது என்று தீர்மானம் செய்து கொண்டார். தனது நெருங்கிய நண்பரான ஞானசாகரனையும் காசிக்கு அழைத்தார்அவரும் உடன் வர இணங்கினார். அவர்கள் இருவரும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டனர். “காசிக்குச் செல்லும் போது இருவரில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால்அடுத்தவர் அவருக்கு ஈமக்கிரியைகளைச் செய்து விட்டு தானும் தனது உயிரைத் தியாகம் செய்து விட வேண்டும் – இப்படி இருவரும் முடிவு செய்தனர். துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே ஞானசாகரன் இறந்து விடவேஅவருக்கு உரிய கிரியைகளைச் செய்த புருஷோத்தமன் காசி சென்று தன் குருநாதரை தரிசித்து நடந்ததைச் சொல்லி தான் தனது உயிரை கங்கை நதியில் தியாகம் செய்யப் போவதாகவும்அதற்கு குருதேவரின் அனுமதி வேண்டும் என்றும் வேண்டினார்.

ஆசார்யாள்புருஷோத்தமன் சொல்வது அனைத்தையும் கேட்டு விட்டுப் பின்னர், “நீ பிராண தியாகம் செய்ய வேண்டாம். எப்போது ஒருவன் சந்யாசம் வாங்கிக் கொள்கிறானோ அப்போதே அவன் மறு ஜென்மம் எடுத்ததாக ஆகி விடுகிறது. அப்போது தர்ம சாஸ்திரத்தை ஒட்டி உனது சத்தியத்தைக் காப்பாற்றியதாக் ஆகி விடுகிறது என்று கூறி அருளினார். உடனே புருஷோத்தமனும் அதை ஏற்று சந்யாசம் மேற்கொண்டார். அவர் பகவன் நாம போதேந்திராள் என்ற யோகபட்டத்தையும் பெற்றார்.

ஆசார்யரின் ஆக்ஞைப் படி அவர் காஞ்சிக்குத் திரும்பிச் சென்றார்.

போதேந்திரரின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத் தகுந்த சம்பவம் அந்தக் காலத்தில் நடைபெற்றது. இஸ்லாமியரின் ஆதிக்கமும் அட்டூழியமும் நிறைந்த காலம் அது. தக்ஷிண தேசத்திலிருந்து ஒரு பிராமணர் தன் மனைவியுடன் வட தேச யாத்திரைக்குக் கிளம்பினார். வழியில் அவர்கள் இருவரும் ஒரு கிராமத்தில் இரவு தங்கினர். நள்ளிரவில் பிராமணரின் மனைவியாகிய அந்த அழகிய பெண்ணை இஸ்லாமியன் ஒருவன் வாயைப் பொத்தி கூக்குரலிட முடியாதபடி செய்து தூக்கிச் சென்று விட்டான். காலையில் மனைவியைக் காணாது திகைத்து அழுது புலம்பிய பிராமணர் தன் யாத்திரையைத் தொடர்ந்தார்காசிக்குச் சென்றார்.

முரடர்களிடம் உள்ள பயத்தினால் அந்தக் கிராம மக்கள் எதையும் அந்த பிராமணரிடம் சொல்லவில்லை. காசிக்குச் சென்று தன் யாத்திரையை முடித்த அந்த பிராமணர் மீண்டும் திரும்பி வரும் போது அதே கிராமத்திற்கு வந்தார். அந்த ஊரில் காலையில் ஒரு குளத்தில் குளித்து விட்டு குளக்கரையில் தனது அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தார்.

அப்போது  அங்கு முஸ்லீம் ஆடை அணிந்து வந்த ஒரு பெண்மணி அவரிடம் வந்து கதறி அழுதாள். “நான் தான் உங்கள் மனைவி. ஒரு மஹாபாவி என்னை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டான். அவன் வருவதற்குள் நாம் தப்பி ஓடி விடலாம் என்றாள் அவள். அத்தோடு தன்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் ஒரு வேலைக்காரியாகவாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் அழுது புலம்பினாள். அவளது நிலையைக் கண்டு வருந்திய பிராமணர்இந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று பார்க்கலாம் என்றார். அங்குள்ள சிலர் அதே ஊரில் இருக்கும் ஜகந்நாத கவியைச் சந்தித்துக் கேட்டால் அவருக்கு தக்க விடை கிடைக்கும் என்றனர். ஜகந்தாத கவியைச் சந்தித்த தம்பதி நடந்ததைக் கூறஜகந்நாதர் மூன்று  முறை ராம ராம ராம என்று கூறினால்

போதும்அவளை ஏற்றுக் கொண்டு விடலாம் என்றார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜகந்நாத கவியின் அன்னையார் அங்கு வந்தார். அவர் அத்வைத மகரந்தம் உள்ளிட்ட பல நூல்களை எழுதிப் புகழ் பெற்ற பண்டிதரான லக்ஷ்மிதரர் என்னும் பிரசித்தமான கவிஞரின் மனைவி. அவர் தனது மகனான ஜகந்நாத கவியிடம், “ மூன்று முறை வேண்டாமே! எத்தனை பாவமானாலும் ஒரு முறை ராம நாமத்தை உச்சரித்தாலே போதுமேஅனைத்துப் பாவங்களும் தீருமே என்றார்.

வழிப்போக்கராக அந்த கிராமத்திற்கு வந்து இதையெல்லாம் திண்ணையிலிருந்து கேட்டு கொண்டிருந்த பகவந்நாம போதேந்திரர் ஜகந்நாதரிடம் இதற்கு ஆதாரம் உள்ளதா என்றார்.

உடனே ஜகந்நாதர் தனது தந்தையான லக்ஷ்மிதரர் இயற்றிய ‘பகவந்நாம கௌமுதி என்ற நூலை ஆதாரமாகக் காட்டினார்.

பொழுது விடிந்தது. அங்கு வந்த பிராமணர் தனது மனைவியைக் குளத்தில் இறங்கி ராம நாமத்தை உச்சரிக்கச் சொன்னார். அவரது மனைவியும் ஸ்நானம் செய்து கொண்டே ராம நாமத்தை உச்சரித்தார். என்ன ஆச்சரியம்!  முன்போலவே காதில் தோடு அணிந்தும்நெற்றியில் குங்குமப் பொட்டுடனும்பழையபடி புடவையை உடுத்தியும் அவரது மனைவி காட்சி அளித்தாள். கண் எதிரே பிரத்யக்ஷமாக ராம நாமத்தின் மஹிமையைப் பார்த்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அன்றே அவள் கையினாலேயே பிக்ஷையை வாங்கிக் கொண்ட போதேந்திரர் பகவந்நாம கௌமுதி நூலின் பிரதி ஒன்றையும் வாங்கிக் கொண்டு காஞ்சி வந்து சேர்ந்தார்.

குருவான ஆத்ம போதேந்திரர் தனது சீடரான பகவந்நாம போதேந்திரரை பீடாரோகணம் செய்வித்தார். அவர் ஸ்ரீ காஞ்சி பீடத்தின் 59வது ஆசார்யராக பீடம் ஏறினார். சுமார் 50 வருடங்கள் பகவந்நாம மஹிமையை உலகெங்கும் உபதேசித்து அனைவரையும் நாம சங்கீர்த்தனம் செய்யச் செய்தார் போதேந்திரர்.

ஸ்ரீஜகத்குரு போதேந்திராளும் அவரது குருவும் இராமேஸ்வர யாத்திரையை மேற்கொண்டனர். அப்போது கெடில நதி தீரத்தில் குரு சித்தி அடைந்தார். அவரது சமாதி இருப்பதை வடவாம்பலம் கிராமத்தில் காஞ்சி காமகோடி பெரியவாள் 68வதுபீடாதிபதி  ஸ்ரீ சந்த்ர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தனது தீர்க்க திருஷ்டியால் கண்டு பிடித்து 1927ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிருந்தாவன பிரதிஷ்டை செய்வித்தார்.

போதேந்திரர்தனது குருவின் மனோரதமாகிய இராமேஸ்வர யாத்திரையை பூர்த்தி செய்தார். திரும்பி வரும் போது திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் இருந்து கொண்டு திருவிசைநல்லூர் ஐயாவாளின் மஹிமையை அறிந்து கொண்டார். அவருடன் அறிமுகம் ஏற்பட இருவரும் பகவன் நாம கீர்த்தனையை செய்து ஆனந்தமாய் அதைப் பரப்பிய வண்ணம் இருந்தனர்.

பிறகு இருவரும் ஒரு முறை பிரம்பூர் என்ற கிராமத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கினர். அங்கு ஒரு ஊமைப் பையன் இருந்தான். அவனைப் பேசும்படி அருள் பாலித்து அவர்அவனைப் பேசச் செய்தார். அந்தப் பையனும் இராம பஜனை செய்யத் துவங்கினான். அந்த ஊரில் அவர் ஒரு ஆஞ்சனேயரையும் பிரதிஷ்டை செய்தார்.

ஸ்வாமிகள் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய  ஸ்ரீமடத்தின் பொறுப்பை தனது சீடரான அத்வைதாத் பிரகாசகரிடம் ஒப்படைத்து அவரை 60வது பீடாதிபதியாக ஆக்கினார். நாம சங்கீர்த்தன மஹிமையை உலகிற்கு போதிப்பதில் அதிகம் ஈடுபட்டார்.  ஸ்வாமிகள்  ஸ்ரீதர ஐயாவாளின் மறைவுக்குப் பின்னர் அதிகம் பேசுவதை நிறுத்திக் கொண்டார். திருவிடைமருதூரில் சில காலம் வசித்தார். அருகிலுள்ள கோவிந்தபுரமும் அவரைக் கவர்ந்தது. ‘பகவன் நாம ரஸோதயம் உள்ளிட்ட எட்டு நூல்களை அவர் இயற்றியுள்ளார். தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட முறை ராம நாமத்தை உச்சரிப்பது அவரது அன்றாடப் பழக்கம்.

ஸ்வாமிகள் காலத்தில் பல அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஸ்வாமிகள் எப்போதும் தனிமையில் இருப்பார். மாலை நேரத்தில் காவேரிக் கரையில் சிறுவர்களுடன் சேர்ந்து தாமும் விளையாடுவார். அந்தச் சமயத்தில் பல அதிசயங்களை அவர் செய்வார். அதைப் பார்த்து சிறுவர்கள் மகிழ்வர்.

கோடை காலத்தில் குழி தோண்டி மண்ணை வண்டி வண்டியாக எடுப்பது மக்களின் வழக்கம். அப்போது அந்தக் குழியில் அமர்ந்து சிறுவர்களை விட்டு மண்ணைப் போட்டு மூடச் சொல்வது போதேந்திரரின் வழக்கம். ‘யாரிடமும் சொல்லாதீர்கள்நாளை வந்து பாருங்கள் என்று அவர்அந்தச் சிறுவர்களை அனுப்பி விடுவார். மறுநாள் சிறுவர்கள் குழியிலிருந்து மண்ணை எடுத்து அப்புறப்படுத்த போதேந்திரர் வெளியே வருவார். அடிக்கடி இப்படி நடந்தது. ஒரு நாள் ஸ்வாமிகளைக் காணாத ஊர் மக்கள் அவரைத் தேடத் தொடங்கவே சிறுவர்கள் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியைக் கூறி ஆற்றுக்கு அழைத்துச் சென்றனர். ஊர் மக்கள் குழியிலிருந்த மண்ணை அகற்ற முற்பட்டனர். ஆனால் அப்போது ஒரு ஒலி எழுந்தது: “நாம் இவ்விடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்து கொண்டு ஜீவன் முக்தராக யோக சக்தியால் உலக நலனுக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டே இருப்போம். இதற்கு விக்னம் செய்ய வேண்டாம். இந்த இடத்தில் எவர் ஒருவர் தினமும் லட்சத்து எண்ணாயிரம் தரம் நாம ஜபத்தைச் செய்கிறாரோ அந்த பக்குவமுடைய பக்தருக்கு நாம் தரிசனம் தருவோம். இந்த இடத்தில் பிருந்தாவனம் அமைத்து ஆராதித்தும் வரலாம்.

இந்த அருளுரைப்படியே அவர் பிருந்தாவனம் அமைக்கப்பட்டது.

கோவிந்தபுரம் கிராமத்தில் சாலிவாஹன சகாப்தம் பிரஜோத்பத்தி வருடம் ப்ரோஷ்டபத மாதம் பௌர்ணமி அன்று ஸ்வாமிகள் நிர்விகல்ப சமாதி அடைந்து  பிரம்ம ஸ்வரூபமாய் விளங்க ஆரம்பித்தார்அது 1692ஆம் ஆண்டாகும்.

புரட்டாசி மாதம் மாளய பக்ஷத்தில்  ‘யதி மஹாளயம் என்று கூறப்படும்  கிருஷ்ண பக்ஷ துவாதசியில்  வருடந்தோறும் போதேந்த்ராளின் ஆராதனை இன்றளவும் நடை பெற்று வருகிறது. பக்தர்கள் அவருடைய ஆராதனையை அங்குள்ள பிருந்தாவனத்தில் கூடி சிறப்பாக இன்றளவும் நடத்தி வருகின்றனர்.

இன்று அங்குள்ள அதிஷ்டானத்திற்கு செல்வோர் பாரம்பரிய முறைப்படி மேலாடை இன்றி பயபக்தியுடன் உள்ளே சென்று வணங்குவது மரபாக இருக்கிறது.

another saint samadhi in govindapuram adhistanam

இந்த அதிஷ்டானத்தில் அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரம்மாண்டமான ஸ்ரீ விட்டல் ருக்மிணி மந்திர் அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.சேங்காலிபுரம் ப்ரஹ்ம ஸ்ரீ அனந்தராம தீக்ஷிதரின் பேரனும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளின் சீடருமான ப்ரஹ்ம ஸ்ரீ விட்டல் தாஸ் ஜயகிருஷ்ண தீக்ஷிதர் அவர்களின் அரும் முயற்சியால் இந்த பிரம்மாண்டமான ஆலயம் அமைக்கப்பட்டது. இந்தக் கோவிலையும் அதிஷ்டானத்தையும் தரிசிக்க கோவிந்தபுரத்திற்கு பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர். ‘கலௌ சங்கீர்த்ய கேசவம் என்ற அருள் மொழிக்கு இணங்க கலியுகத்தில் கடைத்தேற நாம சங்கீர்த்தனம் ஒன்றே சுலபமான வழி என்பதை போதிக்க அவதரித்துள்ள மகான்களில் போதேந்திரர் மிகவும் பூஜிக்கத் தகுந்த சிறப்பான மகான். அவரை வணங்கி நாம ஜபம் செய்வோம்நலம் பெறுவோம்

— SUBHAM— 

 tags- சம்பிரதாய பஜனை, பகவந் நாம போதேந்திராள் .,கோவிந்தபுரம்

யமுனா நதியில் குளியல்! (Post No.11,841)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,841

Date uploaded in London –   26 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

யமுனா நதியில் குளியல்!

ச.நாகராஜன் 

அழகிய யமுனை நதி.

நினைத்தாலே நெஞ்சம் பரவசமாகும். ஶ்ரீ கிருஷ்ணரின் நினைவு. கோபிகைகளின் பக்தி அனைத்தும் நெஞ்சத்தை நிறைக்கும்.

காலம் காலமாக பக்தர்கள் அலைமோதி அங்கு சென்று யமுனா ஸ்நாநம் செய்து ஜன்ம சாபல்யம் பெற்று வந்துள்ளதை நினைத்தாலே நெஞ்சம் பரவசமாகும்.

ஒரு பக்தர். அவர் பெயர் பி.என் மாலிக் தாதா (B.N.Maik Dada).

அவர் பெரிய மகானான அனந்த ஶ்ரீ ஶ்ரீ தாகூர் சீதாராம்தாஸ் ஓம்கார்நாத் தேவ் அவர்களின் சீடரும் கூட. (Ananta Sri Sri Thakur Sitaramdas Onkarnathdev).

 அவர் தனது யமுனா ஸ்நாநம் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதன் சாரம் தான் இந்தக் கட்டுரை.

அவரது எழுத்திலேயே அவர் கூறுவதைப் பார்ப்போம்:

 சைத்ர சங்கராந்தி தினம். இடம் டெல்லி.

ஶ்ரீ ஶ்ரீ பாபா டெல்லிக்கு விஜயம் செய்திருந்தார்.  யமுனா நதியில் ஸ்நாநம் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார்.

இருபது வருட காலமாக நான் டெல்லியில் வசித்து வந்தாலும் கூட ஒரு தடவை கூட யமுனா நதியில் நான் குளித்ததில்லை.

பாபா எனது தயக்கத்தைப் புரிந்து கொண்டார்.

“உனக்கு கங்கை தான் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்று யமுனைக்குச் செல்வோம்” என்றார் அவர்.

யமுனைக்குச் சென்றோம்.

இடுப்பளவு ஆழத் தண்ணீரில் இறங்கினோம்.

பாபா 12 தடவை யமுனா நதியில் மூழ்கி எழுந்தார்.

நான் மூன்று தடவை மூழ்கி எழுந்தேன்.

அதற்கு மேல் என்னால் முடியவில்லை.

நீர் சகதியும் சேறுமாக இருந்தது.

பாபாவோ சந்தோஷமாகக் காணப்பட்டார். அழகிய முகம் பிரகாசமாக இருந்தது. தூய்மையாகவும் காணப்பட்டது.

நானோ உள்ளுக்குள் புழுங்கினேன். மிக மோசமாக உணர்ந்தேன்.

இன்னும் இரு இடங்களுக்கு நாங்கள் சென்றோம். பாபாவோ பிரகாசமாக இருந்தார்.

என்னாலோ பேசவே முடியவில்லை. சகதியும் அதிலிருந்த துர்நாற்றமும் என்னைத் தொந்தரவு செய்து கலங்க வைத்தது.

பாபா தங்கி இருந்த  லக்ஷ்மி நாராயணன் ஆலயம் சென்ற போது, அவரிடம் விடை பெற்று சட்டென்று என் வீடு நோக்கி விரைந்தேன்.

எனது வீடு பக்கத்தில் தான் இருந்தது.

நல்ல வெந்நீரில் பல தடவை என்னை சுத்தம் செய்து கொண்டேன்.  சோப்பை நன்றாகப் போட்டுத் தேய்த்துத் தேய்த்துக் குளித்தேன்.

நிறைய தண்ணீரை மொண்டு எடுத்துக் குளித்துக் கொண்டே இருந்தேன்.

ஓரளவு சுத்தமாக ஆகி விட்டோம், துர்நாற்றமும் தொலைந்தது என்ற உணர்வு வந்தவுடன் தான் குளிப்பதை நிறுத்தினேன்.

சுத்தமான நல்ல ஆடைகளை அணிந்து கொண்டேன்.

பாபாவைப் பார்க்க ஆலயம் சென்றேன்.

அவர் என்னைப் பார்த்தவுடன், “வா, வா, உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன். எங்கே போனாய் இவ்வளவு நேரம்? யமுனா நதி குளியல் எவ்வளவு அழகாக இருந்ததுஅதில் குளிக்க நீயோ தயங்கினாய்?!” என்றார்.

நான் கம்மிய குரலில், “ஆமாம், ஆமாம், பிரமாதம். நன்றாக  இருந்தது” என்றேன்.

ஶ்ரீ கிருஷ்ணரும் கோபிகைகளும் குளித்த யமுனா நதியில் பாபா குளித்து விட்டு வந்திருந்தார்.

நானோ டெல்லி சாக்கடை நீரெல்லாம் கலந்த அழுக்கும் நாற்றமும் உடைய யமுனா நதியில் குளித்து விட்டு வந்திருந்தேன்.

5000 ஆண்டுகளாக யமுனை அன்னை அதே மாதிரியாகத் தான் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறாள். அதிலே தான் பாபா குளித்தார். சுத்தமாக ஆனார்.

ஆனால் எனக்கோ அதே யமுனா நதி தான் இன்றைய அழுக்கு நீராக இருந்தது.

கடவுள் அழுக்கு நீரைச் சுத்தமாக ஆக்குகிறார். மனிதனோ நல்ல நீரை அழுக்காக ஆக்குகிறான்!

நன்றி : ட்ரூத் 30-12-2022 இதழ்

Source & Thanks Truth Kolkata Weekly Issue 30-12-2022 Vol 90 No 36

***

Part 4 of Kumbakonam Wonders :Ramayana Paintings on Temple Walls (Post No.11,840)

Hanuman showing his Visvarupa to Ramaand Lakshmana

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,840

Date uploaded in London – –  25 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Jatayu, the eagle attacks Ravana

Ravana in disguise of a saint

Mareecha with Ravana

Ravana with his Ten Heads

KUMBAKARNA SLEEPING; ELEPHANTS ARE SENT TO WAKE HIM UP

This is part 4 of Ramayana Paintings on the walls of Ramaswami Temple at Kumbakonam in Tamil Nadu.

Pictures were taken by me with my I- pad in February, 2023.

There are over 200 pictures on the walls.

The pictures are in three tiers (rows) on the wall and so the pictures posted here may not be in number order.

Ravana attacking Jatayu, the Eagle

Sita Devi in Asoka Vana

Ravana threatening Sita Devi

Jatayu reporting to Ravana; Jatayu cremated by Rama

Rama’s wedding

Friendship Agreement with Sugreeva, Fire as witness

Sugreevan tests Rama’s Strength with Dundubhi’s bone

Rama shoots arrow at Seven Mighty Trees

–subham–

Tags- Ramayana, Wall Paintings, Kumbakonam, Part 4, Ramaswami Temple

River Ganges appeared in a Tamil Village Well! (Post no.11,839)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,839

Date uploaded in London – –  25 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Thiruvisai Nallur is a village situated ten kilometres from Kumbakonam. We were fortunate enough to see the house (now a holy mutt) and the miracle well in the house.

Sridhara Venkatesa Ayyaval 1635-1720 (aiyaavaaL) lived about 400 years before our time. The area was under the Maratha Kings of Thanjavur then. His father served as a Diwan of Mysore King. Ayyaval was also offered good posts in the kingdom; but he rejected those offers and started visiting Shiva Temples in Kaveri basin. He was very much attracted towards Lord Shiva of Thiruvidaimaruthur (Sri Mahalinga Swami).

When he settled down in the nearby village Thiruvisainallur, several miracles happened in his life. He was the composer of several popular hymns. He used one of his hymns to revive a dead boy, who died of snake bite.

Another miracle that happened in his life is remembered until today and celebrated annually on Karthikai Amavasai Day (New moon day in the month of Krittika).

xxxx

This is the story of the miracle:

Once he performed the ritual Sraddha (ceremony in memory of departed souls) and went towards river Kaveri (also Cauvery). He saw a low caste man suffering from acute hunger. Though Ayyaval was a strict Brahmin, he fed the low caste man with the remaining food in his house. Brahmins are supposed to leave the reminder only to cows. Only close family can eat Sradhdha food.

The village came to know what he did against the prescribed rule. They told him that he must go to Kasi (Varanasi/ Benares) and bathe in the Holy Ganga River to atone for his blasphemous act.

Being a great saint, he saw all men as equal and sons of God. He prayed strongly to Lord Shinva and it was answered immediately. He was told that he need not travel to Kasi, but Ganges river itself will come to him on the Newmoon day of Karthikai. That happened on the day in the well situated in his house and the water overflew flooding the streets. Now all orthodox village community knew his greatness. Then followed several miracles.

His hymn on River Ganga is called Gangashtakam. He was a contemporary of other great composers like Bodhendra and Sadhasiva Brahmendra. I was fortunate enough to visit hose holy places in Govindarajapuram and Nerur of those two great men.

You may read a lot about holy shrines and saints who did miracles. Bu when you visit those places in person, you get a great thrill and complete satisfaction. Moreover, their power remains there for several centuries. We were fortunate enough to sprinkle the holy water on our heads from the village well at Sridhara Ayaaval’s house. Now it has been made a temple/Mutt . On the Karthikai Amavasai Day every year, thousands of devotees come here to bathe or sprinkle the holy well water.

(Please see the pictures taken by me in February 2023)

— subham —Tags- Thiruvisainallur, Sridhara Ayyaval, Well, Ganges water, Gangashtakam

வீட்டுக் கிணற்றில் கங்கை நதி வந்த அதிசயம் (Post No.11,838)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,838

Date uploaded in London – –  25 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நதியின் போக்கையே திருப்பிவிட்ட ஆதி சங்கரர் முதலிய பெரியோரின் வாழ்க்கை பற்றி அறிவோம்.; நதி மீதே நடந்த ஆதி சங்கரரின் சீடர் பத்மபாதர் முதலிய பெரியோரின் வாழ்க்கை பற்றி அறிவோம்.. யமுனை நதியே பிளந்து வாசுதேவ கிருஷ்ணனுக்கு வழிவிட்ட அற்புதத்தையும் அறிவோம். அடியார்களுக்காக காவிரி நதி வெள்ளம் குறைந்து வழிவிட்ட செய்திகளையும் அறிவோம். இப்படி எவ்வளவோ விஷயங்களைப் படித்திருந்தாலும், வீட்டுக் கிணற்றில் கங்கை நதியைக் கொண்டுவந்த ஸ்ரீதர அய்யாவாள் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது ; தண்ணீர் அற்புதங்கள் ரிக்  வேத காலம் முதல் நடந்து வருகிறது; விசுவாமித்திரர்- நதி சம்பாஷணை (RV 3-33) பற்றி முன்னரே கண்டோம்.

xxx

கிணற்றில் கங்கை நதி பெருக்கெடுத்து பொங்கிய அதிசயம் திருவிசை நல்லூர் என்ற கிராமத்தில் நடந்தது.

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் திருவிசை நல்லூர் இருக்கிறது.இங்கு திருமடமும் உற்சவ விக்கிரகமும் உள்ளன.

ஸ்ரீதர ஐயாவாள் பற்றி ஏற்கனவே இந்த பிளாக்கில் நாகராஜன் எழுதிய விஷயத்தை அப்படியே தருகிறேன்.என்னதான் பல அற்புதங்களைப் படித்தாலும், தலங்கள் பற்றிக் கேட்டிருந்தாலும் , அங்கே நேரில் சென்று அதைப்  பார்க்கையில் தனி ஆனந்தம் கிடைக்கிறது. நாங்கள் நேரில் சென்றபோது (பிப்ரவரி 2023) அதிக கூட்டம் இல்லை. கிணற்றிலிருந்து நாங்களே தண்ணீரை இறைத்து தலையில் ப்ரோக்ஷ்ணம் செய்துகொண்டோம். மடத்திலுள்ள திருவுருவங்களை நமஸ்கரித்து, சிறிய காணிக்கை செலுத்திவிட்டு விடை பெற்றோம். ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசையில் நடக்கும் கங்கை நதி விழாவுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து அருளாசி பெறுகின்றனர்.

தண்ணீர் கரை புரண்டு ஓடினாலும் ஊற்று நீருக்குள்ள மஹிமை தனிதான். எங்கள் இங்கிலாந்தில் Mineral Water மினரல் வாட்டர் என்ற பெயரில் விற்கப்படும் ஊற்று நீரைத்தான் நாங்கள் விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம். அதில் எந்த ஊற்று நீர், எவ்வளவு ரசாயன உப்புகள் எந்த விகிதத்தில் உள்ளன என்று எழுதியும் இருப்பார்கள். அந்த ஊற்றின் மகிமைக்கு ஏற்ப விலையும் இருக்கும். அது போல சிறிய கிராமங்களில் கூட பெரிய மஹான்கள் அவதரித்து அற்புதம் புரிகின்றனர்.அப்படிப்பட்ட இடமான திருவிசை நல்லூரையும் கிணற்றையும் தரிசிக்கத் தவறாதீர்கள்

(இதிலுள்ள படங்களைக் காணத் தவறாதீர்கள்; Pictures are taken by me during my February 2023 visit))

Xxx

Following is taken from S Nagarajan’s article in this blog:

கங்கையிற் புனிதமாய காவிரி தீரம் கண்ட மகான்கள் பலர். அவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்கிறார் திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்! இவர் 1635ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி பிறந்தார். 1720 இல் மறைந்தார்.

அற்புதமான இவர் சரித்திரம் பல அபூர்வமான நிகழ்ச்சிகளைக் கொண்டதாகும்.

தெலுங்கு பிராமணரான இவர் கர்நாடகத்தில் மைசூரில் தந்தை தாயுடன் வசித்து வந்தார். மைசூர் அரசாங்கத்தில் இவரது தந்தையார் லிங்கராயர் திவானாகப் பதவி வகித்து வந்தார். பெற்றோர்கள் காலமானவுடன் இவரை மைசூர் மஹாராஜா தன்னிடம் திவானாகப் பணி செய்ய அழைத்தார். ஆனால் இவருக்கோ அந்த ‘மன்னர் சேவகம்’ பிடிக்கவில்லை. மறுத்து விட்டார். இதனால் கோபம் கொண்ட மைசூர் அரசர் அவருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவைக் கேள்விப்பட்ட ஸ்ரீதர ஐயாவாள் மன்னரின் வீரர்கள் தனது வீட்டிற்கு வந்து சேர்வதற்கு முன்பாகவே  தனது வீட்டின் கதவுகளைத் திறந்து விட்டார். யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். அனைவரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ள அரசனின் வீரர்கள் அவர் இல்லம் வந்த போது அங்கு எடுத்துச் செல்லும்படியாக ஒன்றுமே இல்லை. ஸ்ரீதர ஐயாவாளும் அவரது மனைவி லக்ஷ்மியும்  உஞ்சவிருத்தி ஜீவனம் செய்ய ஆரம்பித்தனர். இதைக் கேள்விப்பட்ட மைசூர் மன்னர் மனம் மிக வருந்தினார். தனது செயலுக்கு மன்னிக்க வேண்டும் என்று அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். அவர்களும் அரசனை மன்னித்து விட்டு மைசூரை விட்டுப் புறப்பட்டனர். தீர்த்த யாத்திரையை மேற்கொண்ட ஸ்ரீதர ஐயாவாள் திருச்சி, ஜம்புகேஸ்வரம், ஸ்ரீரங்கம் முதலிய ஸ்தலங்களை தரிசித்தார். திருச்சியில் மாத்ருபூதேஸ்வர சதகத்தைப் பாடி வழிபட்டார். ஒவ்வொரு ஸ்தலத்திலும் பாடல்களைப் பாடித் துதித்த அவர், சகாஜிராஜபுரம் என்று அழைக்கப்பட்ட திருவிசைநல்லூரை வந்து அடைந்தார். 1685ஆம் ஆண்டு முதல் 1712ம் ஆண்டு முடிய தஞ்சையை ஆண்ட இரண்டாம் ஷாஷி 45 வேத பண்டிதர்களுக்கு தானமாக அளித்ததால் இந்த ஊர் அந்தப் பெயரைப் பெற்றது. மிகவும் ரமயமான அந்த ஊர் அவரது மனதைக் கவரவே அங்கேயே தங்கலானார்.

தங்கள் ஊருக்கு வந்து தங்கியுள்ள மஹானின் மஹிமையை ஊரார் நன்கு உணர்ந்தனர். தஞ்சை அரசனான ஷாஜியை அணுகிய ஊர் மக்கள் தங்கள் ஊரில் வசிக்கும் மகானின் பெருமையைச் சொல்லி அவர் வாழ்வதற்காக ஒரு வேலி நிலத்தையும் ஒரு வீட்டையும் அளிக்குமாறு வேண்டினர். தஞ்சை அரசனும் மனமுவந்து அதை அளித்தார். ஊர் மக்கள் இதை ஸ்ரீதர ஐயாவாளிடம் சொன்னால் அவர் இதை ஏற்க மாட்டார் என்பதை அறிந்து அதைச் சொல்லாமல் அங்கேயே வசிக்குமாறு செய்தனர்.

தஞ்சையை ஆண்ட மன்னரான ஷாஜி ஸ்ரீதர ஐயாவாளைப் பெரிதும் போற்றி வணங்கியவர். ஐயாவாள் அவருக்குப் பல விதத்திலும் ஆலோசனை சொல்லுவது வழக்கம். அவரது பெருமையை உணர்த்தும் வண்ணம் அவரது வாழ்க்கை வரலாற்றை எட்டு சர்க்கம் அடங்கிய ஷாஷி ராஜ சரித்ரம் அல்லது ஷாஹேந்த்ர விலாஸம் என்ற நூலாக அவர் எழுதினார். அதில் அவர் ஷாஜியின் ராமேஸ்வர யாத்திரையைக் குறிப்பிடுகிறார். ஷாஜிக்காக அவர்  பதமணி மஞ்சரி என்ற சம்ஸ்க்ருத அகராதி நூலையும் இயற்றினார்.

தினமும் உஞ்சவிருத்தி செய்து சாப்பிடுவது அவரது வழக்கமானது. பகலில் கர்கடேஸ்வரர் தரிசனம் செய்வதும்  மாலையில் அருகில் உள்ள திருவிடைமருதூர் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் மஹாலிங்க ஸ்வாமியை தரிசிப்பதும் அவரது வழக்கம்.

தன்னிடம் வரும் மாணாக்கர்களுக்கு அவர் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுப்பார். நாட்கள் கழிந்தன. சிறந்த பாகவதோத்தமராகத் திகழ்ந்த அவர் நாமசங்கீர்த்தன மஹிமையை உலகெங்கும் பரப்பினார். தவளை ஒன்று கரக், கரக், கரக் என்று போடும் சத்தத்தில் கூட ஹர ஹர ஹர என்ற நாமம் தெரிவதாக அவர் கண்டார். ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் சதாசிவ ப்ரஹ்மேந்திராள் மற்றும் போதேந்திர ஸ்வாமிகள் வாழ்ந்து வந்தனர். போதேந்திரர் திருவிசைநல்லூருக்கு மிக அருகில் உள்ள கோவிந்தபுரத்தில் இருந்ததால் இருவரும் அடிக்கடி சந்தித்து நாம மஹிமை பற்றியும் இதர ஆன்மீக விஷயங்களையும் பற்றிப் பேசி அதை உரிய வகையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லலாயினர். செங்கோட்டை ஆவுடை அக்காள் உள்ளிட்டவர்கள் அவரிடமிருந்து நாம மஹிமையைக் கேட்டறிந்தனர். ஆவுடை அக்காள் தனது பாடல்களில் ஐயாவாளைக் குறிப்பிடுகிறார்.

Ganges Miracle

ஒரு நாள் தனது தாயாருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டியிருந்த தினத்தன்று காவேரிக்கு ஸ்நானம் செய்ய அவர் சென்றார்.  அங்கே வழியில் ஒரு தாழ்ந்த குலத்தவன் பசியால் வருந்தி இரண்டு நாட்கள் ஏதும் சாப்பிடாமல் வாடி இருந்ததைக் கண்டார். அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து சிரார்த்தத்திற்காக சமைத்த உணவை அவனுக்கு அளித்து உண்ணுமாறு செய்தார். பசியாறிய அவன் திருப்தியுற்றான். ஆனால் இதைக் கண்ட ஊர் பிராமணர்கள் அவரது இல்லம் சென்று, “சிரார்த்த தினத்தன்று இப்படிச் செய்யலாமா? நீங்கள் சுத்தி செய்து கொண்டால் தான் உங்கள் வீட்டிற்குள் நாங்கள் நுழைவோம். கங்கையில் நீங்கள் ஸ்நானம் செய்ய வேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறினர்.

அவர் இறைவனைத் துதித்து கூர்ச்சத்தைப் போட்டு மந்திரங்களைச் சொல்ல திரிமூர்த்திகளும் பிராமணர்களாக வந்தனர். அவரும் சிரார்த்தத்தை முறையாகச் செய்து முடித்தார். இதைப் பார்த்த ஊரார் அதிசயித்தனர்.

ஊர் அபவாதம் நீங்க அவர் கங்கைக்கு யாத்திரையாகக் கிளம்ப யத்தனிக்க, கங்கை அவர் முன் தோன்றி, “நான் கார்த்திகை  மாதம் அமாவாசையன்று உங்கள் இல்லத்திற்கு வருகிறேன்” என்று கூறி மறைந்தாள்.

கார்த்திகை அமாவாசை தினம் வந்தது. அன்று அவர் கிணற்றின் முன் நின்று கங்காஷ்டகத்தை இயற்றிப் பாட கங்கை கிணற்றில் புகுந்தாள். கிணற்றிலிருந்து கங்கை நீர் பெருகிப் பொங்கி வீட்டை நிறைத்து வெளியில் வீதியிலும் பிரவாகமாக ஓட ஆரம்பித்தது. எல்லோரும் அவரது மஹிமையை உணர்ந்தனர்.

இன்று வரை கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று அவரது இல்லத்தில் கங்கை வருவதும் பக்தர்கள் அங்கு ஸ்நானம் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

xxxx

ஒரு சமயம், தஞ்சாவூரில் அவர் இருந்த போது  ஒரு சிறு பையனைப் பாம்பு கடித்து விட்டது. அவன் இறந்து போனான். அவன் மீது கருணை கொண்ட அவர் 29 துதிப்பாடல்கள் அடங்கிய தாராவளி ஸ்துதி என்ற துதியை இயற்றிப் பாட பாம்பின் விஷம் கீழே இறங்கி கடிபட்ட பையன் உயிரைப் பெற்றான்.

இதனால் அவர் மஹிமையை உலகம் நன்கு உணர்ந்தது.

தினமும் மாலையில் மஹாலிங்க ஸ்வாமியையும் ப்ருஹத் சுந்தர குஜாம்பாளையும்  அவர் தரிசித்து வரும் நாளில் ஐப்பசி மாதம் ஒரு நாள் மழை கொட்டு கொட்டென்று கொட்ட காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. ஐயாவாள் வெளியே செல்ல முடியாத அளவு  மழை இருக்கவே அவர் மனம் மிக வருந்தினார். தரிசனம் முடிந்த பின்னரேயே உணவு அருந்துவது அவர் பழக்கம் என்பதால் உணவும் உண்ணாமல் அவர் தியானத்திலேயே இருந்தார். அப்போது இரவு நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க கதவைத் திறந்தார். அங்கு திருவிடைமருதூர் அர்ச்சகர் கையில் பிரசாதத் தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

“நீங்கள் ஸ்வாமியை தரிசிக்காமல் உணவு உண்ணுவதில்லை என்பதை நான் அறிவேன். வீரசோழன் ஆற்றைக் கடக்க முடியாத நிலையில் இருப்பதும் எனக்குத் தெரியும். அதிர்ஷ்டவசமாக ஒரு படகுக்காரன் என்னை இங்கு கொண்டு வந்து விட்டான். இதோ, பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் அர்ச்சகர்.

மஹாலிங்க ஸ்வாமியின் கருணையை எண்ணி அதை எடுத்து உண்ட ஐயாவாள் அர்ச்சகரை வீட்டில் இரவு நேரத்தில் படுத்து உறங்க ஒரு போர்வையைக் கொடுத்தார்.

காலையில் அர்ச்சகரைக் காணோம். நேராகக் கோவில் சென்ற ஐயாவாள் குருக்களைக் கண்டு, “ என்ன, சொல்லாமல் கிளம்பி விட்டீர்களே” என்று சொல்ல அவர் திகைத்தார். “நான் வந்தால் அல்லவா சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும். நேற்று பெயத மழையில் நான் எப்படி உங்கள் இல்லத்திற்கு வர முடியும்?” என்று அவர் வியப்புடன் கேட்டார்.

அர்ச்சகருடன் அவர் கர்பக்ருஹம் சென்று பார்க்கையில் அவர் அர்ச்சகருக்கு அளித்த போர்வை அங்கு இருந்தது.

இறைவனே அர்ச்சகர் உருவில் அவர் இல்லம்  எழுந்தருளியிருப்பதை அறிந்த அவர் விழிகளில் கண்ணீர் ததும்ப இறைவனின் கருணையை நினைத்து வழிபட்டார். அவர் நாவிலிருந்து தயா சதகம் என்ற அற்புத சதகம் வெளிப்பட்டது. இந்த சம்பவம் எங்கும் பரவ அவரது மஹிமை இன்னும் அதிகமாக மக்களால் உணரப்பட்டது.

–subham—

Tags- திருவிசைநல்லூர், கிணறு, கங்கை, ஸ்ரீதர ஐயாவாள் , அய்யாவாள்

பிரக்ஞை பற்றி புத்தபிரானின் அருளுரை! (Post No.11,837)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,837

Date uploaded in London –   25 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

பிரக்ஞை பற்றி புத்தபிரானின் அருளுரை!

ச.நாகராஜன் 

பிரக்ஞை என்பது எல்லா திசைகளிலும் ஊடுருவி எங்கு பரந்திருக்கும் பார்க்க முடியாதது, ஒளி மிக்கது, எல்லையற்றது –

இதுவே புத்தபிரான் பிரக்ஞையைப் பற்றி கூறி அருளிய உபதேச உரையாகும்.

அவர் ஆயிரக் கணக்கில் சித்திரங்களையும், உவமைகளையும் வெவ்வேறு வடிவங்களையும் தனது உரைகளில் வழங்குவது வழக்கம்.

ஏனெனில் மனிதர்கள் ஆயிரம் வகையினர்.

ஒருவருக்குச் சொன்னது இன்னொருவருக்குப் புரியாது.

ஆகவே கேட்பவர் மனநிலை, பக்குவத்திற்கு ஏற்ப அவர் உபதேச மொழிகளை அருள்வது வழக்கம்.

ஒரு முறை பிரக்ஞையைப் பற்றி அவர் கூறியது ஒரு சீடருக்குப் புரியவில்லை.

அவர் மனநிலையையும் பக்குவ நிலையையும் புரிந்து கொண்ட புத்தபிரான் அவரை நோக்கிக் கேட்டார்:

“ அப்பனே! கிழக்கு நோக்கி இருக்கும் சுவரைக் கொண்ட ஒரு வீட்டில், அந்த சுவரில் ஒரு ஜன்னலும் இருக்கும் போது, காலையில் சூரியன் உதிக்கும் போது, சூரிய ஒளியானது எங்கு விழும்?”

சீடர் யோசித்தார்,, பதில் சொன்னார் இப்படி: “மேற்குப் பக்க சுவரில்.”

புத்தர் கேட்டார்: “ மேற்குப் பக்கம் சுவரே இல்லை என்றால் சூரிய ஒளி எங்கு விழும்?”

சீடர் யோசித்துச் சொன்னார் : “நிலத்தில் விழும்”.

புத்தர் மேலும் கேட்டார் : “நிலமே இல்லை எனில் எங்கு விழும்?”

சீடர் கூறினார் : “நீரில் விழும்”.

புத்தர் : நீரும் இல்லை என்றால்?

சீடர் கூறினார் : “ நீரும் இல்லை என்றால் அது எங்கும் விழாது.

புத்தர் சந்தோஷத்துடன் கூறினார்: “சரியாகச் சொன்னாய்.  நமது இதயம் எப்போதும் பற்றி கொண்டிருக்கும் நான்கு சத்துணவுகளான உணவு, புலன் சார்ந்த தொடர்பு (பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல்), எண்ணம் மற்றும் பிரக்ஞை ஆகிய நான்கிலிருந்தும் விடுபடும் போது பிரக்ஞையானது எங்கும் விழாது. அந்த நிலை தான் துக்கம், பற்று, ஏமாற்றம் எதுவும் இல்லாத இடம், இதை தான் நான் உனக்குச் சொல்கிறேன்”

சீடன் நன்கு புரிந்து கொண்டான்.

ஒரு புத்த பிட்சு புத்தரை நோக்கி, “ஐயனே! பூமி, தீ, காற்று, நீர் ஆகியவை மங்கி மிதி மிச்சமில்லாமல் போய்விடும் இடம் எது? என்று கேட்டார்.

புத்தபிரான், “ நீ கேட்ட கேள்வி தவறு. அதை இப்படி மாற்றிக் கேட்டிருக்க வேண்டும். பூமி, தீ, காற்று, நீர் ஆகியவை இருக்க முடியாத இடம் எது? என்று கேள்.

 எல்லையற்று எல்லா திசைகளிலும் உள்ள பார்க்க முடியாத, ஒளிர்கின்ற, எல்லையற்ற பிரக்ஞையில் அந்த நான்கும் உள்ளன. அந்த நான்கு பூதங்கள்(Elements), பெரியது, சிறியது, கரடு முரடானது, மிருதுவானது, சுத்தமானது, அசுத்தமானது எதற்கும் அங்கு இடமில்லை. அதில் தான் நாமமும் ரூபமும் ஒரு முடிவுக்கு வருகிறது. இந்த முற்றுப் பெற்ற நிலையில், பிரக்ஞை இல்லாத நிலையில், எல்லாமும் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது” என்றார்.

பிரக்ஞையைப் பற்றி ஆங்காங்கே சீடர்களுக்கு புத்தபிரான் பல அரிய ரகசியங்களை, பெரிய உண்மைகளை அருளியுள்ளார்.

அவை பிரக்ஞை பற்றிய தெளிவான உண்மையை நமக்கு நல்கும்!

***