தமிழ்ச்சங்க நூலிலும்,பைபிளிலும் கின்னரம்; பாபிலோனியாவில் தமிழ் தம்பட்டம்! (Post.15,655)

ராமேசுவத்தில் கின்னரி 

Written by London Swaminathan

Post No. 15,655

Date uploaded in London –25 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாங்காக் அரண்மனையில் கின்னரி; லண்டன் சுவாமிநாதன் மார்ச் 2026 -ல் எடுத்த படம்

பத்துப்பாட்டில் தமிழ்ச் சங்கப்புலவர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பெரும்பாணாற்றுப்படை என்ற நூல் உள்ளது; அதில் கின்னரம் குறிப்பிடப்படுகிறது. இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்; பைபிளில் 47 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது . பாபிலோனியாவில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தம்பட்டம் பயன்படுத்தப்பட்டது ; இதோ ஆதாரங்களுடன் சுவையான செய்திகள்!

***

சீனாவில் இந்து இசைக் கலைஞர்கள்

சீன மன்னரின் அழைப்பின்பேரில் ( 581 CE )  பல சங்கீத விற்பன்னர்கள் சீனாவுக்குச் சென்றார்கள்; சுஜிவன் என்ற வீணை வித்வான் சீன மன்னர் (560 – 578 CE) அவையை அலங்கரித்தார்.

அவர் சீன சங்கீதப் பிரியர்களுக்கு இந்திய ராகங்களைப்  பயிற்றுவித்தார். சப்த ஸ்வரங்களைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே ; இதற்கான சான்றுகள் வேதங்களில் உள்ளன. இந்த ஸ்வரங்களையும் அவர் பிரபலப்படுத்தினார் என்பது ஓலைச் சுவடிகள், பழங்கால காகித ஆவணங்களிலிருந்து தெரிகிறது ; சீனாவின் சங்கீதத்தில்  சட்ஜ,  ரிஷப , பஞ்சம ஆகிய மூன்றும் தூக்கலாக உள்ளன .

***

ஜப்பானில்

ஜப்பான் நாட்டில் சீனாவிலிருந்து வந்த போதிசத்வ, பைரோ ஆகிய இரண்டு இசைகள் பிரபலமாகின; இந்தியாவிலிருந்து சென்ற பிராமணன் போதி ,இதை அவர்களுக்கு கற்றுத்தந்தான் என்று பாரம் பரியக்கதைகள் உள்ளன ; இவை இரண்டும் இந்தியப் பெயர்கள் என்பதில் எவருக்கும் ஐயமில்லை ; இப்போதும் பைரவி ரகத்தை இந்தியில் பைரோ என்றுதான் சொல்கிறார்கள் .

***

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இந்திய கலாசாரமும் குறிப்பாக சங்கீதமும் நடனமும் இருந்ததற்கு நிறைய சான்றுகள் இருப்பதோடு ராமாயண மஹாபாரதக் காட்சிகளை இன்றுவரை நடித்தும் ஆடியும் பாடியும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் ; ஜாவா சுமத்ரா, பாலி தீவுகளின்  சிற்பங்களிலும் இவைகளைக் காண முடிகிறது .

திபெத்திய புத்தமத குருமார்கள் சாம் வேத ராகத்தில் பெளத்த கிரந்தங்களைப்  பாடுகிறார்கள் ; தொலைவிலிருந்து இவைகளைக் கேட்டால் பிராமணர்கள் வேதம் ஓதுகிறார்கள் என்றே நினைப்போம்.

***

கிரீஸ் நாட்டில்

எகிப்திலும் , குறிப்பாக கிரேக்க நாட்டிலும் இந்திய சங்கீதத்தின் தாக்கத்தைக் காண முடிகிறது பெரும்பாலான கிரேக்க எழுத்தர்கள் இதைக் குறிப்பிட்டார்கள்; ஸ்ட்ராபோ என்பவர் இந்தியாவிலிருந்து சங்கீதம் வந்ததை தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

கிரேக்க நாட்டிலுள்ள பழைய ஸ்வரங்களான மிக்ஸோலிடிக், டோரிக் (Mixolydic and Doric)  ஸ்வரங்கள் இந்து சங்கீதத்தை ஒத்திருக்கிறது ;    பிதகோரஸ் முறையிலுள்ள சங்கீதத்தில் இந்து நாட்டிய சாஸ்திரத்தின்  சட்ஜ பஞ்சம , சட்ஜ -மதியம – பாவ -ங்களைக் காணலாம்  அரிஸ்டாட்டில் வருணிக்கும் ஒரு கருவி இந்துமத நூல்களில் காணப்படும் ஏகதந்திரி  வீணையை நினைவுபடுத்துகிறது .

அதர்வண வேத பூமி / ப்ருத்வீ சூக்தத்தில் நாரதர் வீணை வருகிறது தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை முதல் தடவையாக குறிப்பிடப்பட்டுகிறது; சங்க காலம் வரை யாழ் மட்டுமே இருந்தது அதற்குப் பின்னார் ஐந்தாம் நூற்றாண்டில் இளங்கோ எழுதிய சிலப்பதிகாரத்தில் நிறைய புராண விஷயங்களைக் காணமுடிகிறது. 

அரபு நாட்டு எழுத்தாளர் ஜாகீஸ் (Arabian writer, Jahiz ) அப்பாஸித் (The Abbasid Caliphate (750–1258 CE) மன்னர்கள் காலத்தில் இந்து சங்கீதம் பிரபலமாக இருந்தது என்று எழுதியுள்ளார்.ஈரான் என்னும் பாரசீக நாட்டில் இது போல இருந்ததும் குறிப்பிடத்தத்தக்கது .அராபிய சங்கீதத்தின் அடித்தளம்  இந்திய சங்கீதமே என்று பிரபல இசை மேதை Yehudi Menuhin  எஹுதி மெனுஹினும் விளம்பியுள்ளார் 

***

தமிழ்நாட்டின் தம்பட்டம்

பாபிலோனியாவிலுள்ள timbutu திம்புட்டு, தமிழ்நாட்டின் தம்பட்டம் என்று கார்ட் சாக்ஸ் Curt Sachs  எழுதியுள்ளார் ; டேவிட் மன்னரின் கின்னொர் , சம்ஸ்க்ருத கின்னரம் என்கிறார் (Hindu kinnari was king David’s kinnor).

சிவனின் உடுக்கையின் பெயர் டமருகம் . பழைய சிவ புராணம், பாகவத புராணம் ஆகியவற்றில் வரும் இந்தச் சொல் திரிந்து தமிழில் டமாரம்ஆங்கிலத்தில் DRUM டிரம் என்ற சொற்களை உருவாக்கியது ; தம்பட்டம் என்பதும் சம்ஸ்க்ருத டமருகம் என்ற சொல்லின் மரூஉ-வுவாக இருக்கலாம் இந்தச் சொல் சங்க காலத்தில் இல்லை !

தமுக்கு / டமருகம் (சம்ஸ்க்ருதம்) டாம் டாம் ,தம்பட்டம்

தமுக்கு என்பது மக்களுக்குத் தகவல்களை அறிவிக்க, முக்கியமாக கிராமப்புறங்களில் செய்தி தெரிவிக்கப் பயன்படும் ஒரு பழமையான, வட்ட வடிவத் தமிழரின் இசைக்கருவி (பறை வகை) ஆகும். இது அரசாங்க அறிவிப்புகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது அறிவிப்புகளுக்கு முன் முழக்கப்படும். இது ‘தமுக்கு’ அல்லது ‘தமருகம்’ என்றும் அழைக்கப்படுகிறது

***

பைபிள் நூலில் கின்னர

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பைபிளில் சம்ஸ்க்ருதம் என்று நான் எழுதிய கட்டுரையில் 47 முறை பைபிளில் கின்னரம் பயன்படுத்தப்பட்டதைக் குறிப்பிட்டேன் . இசைக்கருவி என்ற பொருளில் அது பயிலப்பட்டது; இப்பொழுது கிரேக்க புராணக்கதைகளை நான் ஆராய்ந்ததில் மேலும் சுவையான தகவல்கள் கிடைத்தன.

***

கின்னரர்கள் யார் ?

இந்துமத புராணங்களில் தேவலோக இசைக் கலைஞர்களைக் கந்தர்வர்கள் என்றும் கின்னரர்கள் என்றும் வருணித்துள்ளனர் குதிரை உடலுடனோ அல்லது பறவை உடலுடனோ கின்னரர்களை வரைந்தனர் ; செதுக்கினர் ; ராமேஸ்வரத்தில் கின்னரி சிலை உள்ளது ; இவர்கள் இமய மலையில் குபேரன் என்னும் யக்ஷர் அவையில் இருப்பதாவதும் எழுதினர். ஒரு கையில் வீணையுடன் காட்சி தரும் இவர்கள் தட்சிணாமூர்த்தியின் சிலைகளில் இருப்பதையும் ஹெச் சாஸ்திரி தனது நூலில் குறிப்பிடுகிறார் அவர்தான் கின்னரி படத்தையும் வெளியிட்டார்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலிய நூல்களிலும் மஹாபாரத ஆதி பருவத்திலும் கின்னரர் விஷயங்கள் வருகின்றன . சங்கத்தமிழ் நூலான பெரும்பாணாற்றுப்படையையும் பட்டினப்பாலையையும் (ருத்திரன் மகன் கண்ணனார்) உருத்திரங்கண்ணனார் என்ற பிராமணப்புலவர் இயற்றினார் அதிலும் கின்னரர்களை இசைக்கலைஞராக புலவர் பாடியுள்ளார்.

***

கிரேக்க நாட்டில் கந்தர்வர் , கின்னரர் 

கிரேக்க நாட்டில் ரிக்வேத நாய் சரமேயஸை ஹெர்மிஸ் HERMES  என்று திரித்து எழுதியது போல நிறைய பெயர்களை மாற்றி எழுதினார்கள்; கந்தர்வர் என்பதை CENTAUR சென்டார் என்றும் கின்னரரை கிரோன் CHIRON  என்றும் எழுதி படங்களை மட்டும் இந்துக்களைப் போலவே வரைந்தனர்; அதாவது குதிரை உடல்; மனித முகம்! இவர்களில் கிரோன் / கின்னர, ஒரு புராண புருஷர் என்றும் அவர்தான் மூலிகை விஷயங்களை ஜேசன், அக்கிலிஸ் போன்ற புராண புருஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார் என்றும் பகர்ந்து , யாழுடனும் குதிரை உடலுடனும் ( chiron) கிரோனை சித்தரித்துள்ளார்கள். இந்த இசைக் கருவியும் குதிரை உடலும் மனித முகமும் இவரை கின்னரர்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன . சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து சென்ற இந்துக்கள்தான் கிரேக்கர்கள் . இதை இந்திய வேதங்களை ஆராய்ந்து எழுதிய வெள்ளைக்காரர்களும் விளம்பியுள்ளனர் .  

–subham—

Tags- தமிழ்ச் சங்க நூல்,  பைபிள், கின்னரம் பாபிலோனியா, தமிழ் தம்பட்டம்!

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-4 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,654)

Written by London Swaminathan

Post No. 15,654

Date uploaded in London –25 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 4

திருக்கூடலூர் பாசுரங்கள்

திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)

சோழநாட்டு திருப்பதி’

திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோவில், ஸங்கம க்ஷேத்திரம்)

கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உத்சவருக்கும் அதே திருநாமம் தான்! மூலவ மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர் என்பது விசேஷம். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. அவர்களின் வேண்டுதலே, எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்கக் காரணமானது !

கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மாள் மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.

திருமங்கையாழ்வார்,  பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.

தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*

துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*

எக்கலிடு* ஞுண்மணல்மேல்* எங்கும்

கொக்கின் பழம்வீழ்* கூடலூரே

**

காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்

மேவித்திகழும்* கூடலூர்மேல்*

கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*

பாவைப் பாடப்* பாவம் போமே (5.2.10)

**

1364

கருந்தண் கடலும்* மலையும் உலகும்*

அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*

பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*

குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)

**

மூலவர் – வையங்காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்) , உய்யவந்தார், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – அதே பெயருடன் கையில் செங்கோல் தாங்கி நிற்கிறார்.

தாயார் – பத்மாஸனி, புஷ்பவல்லி.

தீர்த்தம் – சக்ர தீர்த்தம், காவிரி நதி.

விமானம் – சுத்தஸத்வ விமானம்.

ப்ரத்யக்ஷம் – நந்தகமுனி.

தஞ்சாவூரிலிருந்து பஸ்மார்க்கமாய் திருவையாறு சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்ஸில் 7 மைல் தூரம் சென்று இவ்வூரை அடையலாம். அல்லது தஞ்சாவூர் – கணபதி அக்ரஹாரம் மார்க்கம் டவுன் பஸ்ஸிலும் செல்லலாம். இவ்வூருக்கு ஐயம்பேட்டை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 4 மைல் வண்டியில் செல்லவும் முடியும்.

–SUBHAM—

TAGS- திருக்கூடலூர், part 4, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-4 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள், ராணி மங்கம்மாள்

உலகம் கண்ட தீயினால் சுடப்படாத விசித்திர மனிதர்! (Post.15,653)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,653

Date uploaded in London – 25 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1-12-25 கல்கிஆன்லைன் இதழில் வெளிவந்த கட்டுரை! 

உலகம் கண்ட தீயினால் சுடப்படாத விசித்திர மனிதர்! 

ச. நாகராஜன் 

விஞ்ஞானம் விளக்க முடியாத பல விசித்திர மனிதர்கள் காலம் தோறும் தோன்றி அனைவரையும் வியக்க வைப்பது வழக்கம்.

அப்படி ஒரு அதிசய மனிதராகத் திகழ்ந்து உலகை பிரமிக்க வைத்தவர் டேனியல் டக்ளஸ் ஹோம் என்னும் அமெரிக்கர்.

(பிறப்பு: 20-3-1833 மறைவு: 21-6-1886)

இவரது அபூர்வ அதீத உளவியல் ஆற்றல்கள் பல! இவரை தீ சுடாது; எரிக்காது!

எரியும் நிலக்கரியைக் கையில் எடுப்பார். கொள்ளிக்கட்டையால் சொறிந்து விட்டுக் கொள்வார். ஒன்றும் இவருக்கு நேராது.

இவரது இந்த அதிசய சக்தியைப் பார்வையிட ஏராளமானோர் கூட்டமாகக் கூடுவதுண்டு.

அப்படி வரும் பார்வையாளர்களில் ஒருவருக்கு அவர் இந்த சக்தியை மாற்றுவார். அப்படி இந்த சக்தியைப் பெற்ற பார்வையாளரும் கொதிக்கும் பொருள்களைக் கையில் எடுப்பார். அவர்களுக்கு ஒன்றும் நேராது.

இவரது இந்த அதீத ஆற்றலினால் ஏராளமான அரசர்களும், செல்வந்தர்களும் இவருக்கு நெருங்கிய நண்பர்களாயினர்.

பிரிட்டனில் இருந்த பிரிட்டிஷ் சொஸைடி ஃபார் சைகிகல் ரிஸர்ச் இயக்குநரான சர் வில்லியம் க்ரூக்ஸ்  (Sir William Crookes) இவரை ஆராய முன் வந்தார்.

ஆரஞ்சு அளவில் உருண்டையாக இருந்த ஒரு நிலக்கரித் துண்டை இவர் முன்னிலையில் ஹோம் கையில் எடுத்துக் கொண்டார். அதை ஊதவே அது கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அவர் கைகளுக்கு ஒன்றும் நேரவில்லை.  சற்று நேரம் கையில் வைத்து விட்டு நிலக்கரித் துண்டை ஹோம் கீழே வைத்தார். அவரது கை ஒரு அழகிய இளம் பெண்ணின் கை போல பளபளத்தது. சோதனைக்கு முன்னர் க்ரூக்ஸ் அவரை கையை நன்கு பார்த்தார். அதில் ஏதேனும் மூலிகைப் பசையோ அல்லது ஆயின்மெண்ட் ஏதாவது கையில் தடவப் பட்டிருக்கிறதா என்று பார்த்து ஒன்றுமில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்.

அயர்லாந்தைச் சேர்ந்த லார்ட் அடேர் (Lord Adare) என்பவர் ஹோமின் சரிதத்தை எழுதியுள்ளார். Experiences in Spiritualism with D. D. Home என்ற அடேரின் புத்தகம் பல சுவையான நிகழ்ச்சிகளைச் சொல்கிறது. அவருடன் கூடவே பயணிப்பது அடேரின் வழக்கம். ஒரு முறை அடேரின் முன்பாக ஹோம் எரியும் தீயில் தன் முகத்தை விட்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆட்டினார். அவரது முகத்தில் தீக்காயமே காணப்படவில்லை.

இன்னொரு சமயம் ஒரு எரியும் துண்டை எடுத்து அடேரின் கையில் ஹோம் கொடுத்தார். அடேரின் கை சுடவே இல்லை. சற்று நேரம் கையில் வைத்திருந்த அந்த எரி துண்டை அவர் கீழே வைத்தார். கை எப்போதும் போலவே இருந்தது.

இன்னும் பல அதிசய ஆற்றல்களும் அவருக்கு இருந்ததைப் பல பார்வையாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.

ஒரு முறை மூன்று பார்வையாளர்கள் முன்பு அவர் இரண்டாவது மாடியில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே சென்று பறந்தார். பின்னர் மீண்டும் உள்ளே வந்தார். கயிறைக் கட்டி பாதுகாப்பாக அவர் பறந்தாரா என்று ஆராயப்பட்டது. அப்படி ஒரு கயிறும் காணப்படவில்லை.

INCIDENTS IN MY LIFE என்று ஒருபுத்தகத்தை எழுதியுள்ள ஹோம்

அதில் 1852ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான் செய்த சாகஸ செயல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். சவுத் மான்செஸ்டர் நகரில் பட்டு தயாரிப்பாளரான வார்ட் செனய் என்பவரின் வீட்டில் பல பார்வையாளர்களின் முன்னர் தான் இருமுறை பறந்து கூரையைத் தொட்டதாக அவர் கூறுகிறார்.

ஹோம் நிகழ்த்திய பல அமர்வுகளுக்குச் (Séance), நியூயார்க் ஈவினிங் போஸ்டின் ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் கல்லன் ப்ரையண்ட் சென்று அது பற்றிக் கூறியுள்ளார்.

இறந்தவருடன் பேசும் ஆற்றலும் ஹோமுக்கு இருந்தது.

இவரது ஐரோப்பிய விஜயம் மகத்தான வெற்றியைக் கண்டது. மூன்றாம் நெப்போலியன் முன்னால் ஒரு அமர்வை நடத்திக் காட்டினார். அயர்லாந்து ராணியின் முன் இவர் நடத்திக் காட்டிய அபூர்வ காட்சிகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. “மிக மிக ஆச்சரியகரமானவை. இவரைப் பார்த்ததில் நான் சந்தோஷப்படுகிறேன்” என்றார் அவர்.

பிரபல நாவலாசிரியரான சர் ஆர்தர் கானன் டாயில் இவரை வெகுவாகப் புகழ்ந்தார். அதே சமயம் இவரை கடுமையாக விமரிசித்தவர்களுள் முக்கியமானவர் கவிஞர் ராபர்ட் ப்ரௌனிங்.

“இவர் செய்வது எல்லாம் மோசடி” என்று அவர் கூறிய அதே வேளையில் அவருடன் கூடவே சென்று ஹோம் நடத்திய நிகழ்வுகளில் கலந்து கொண்ட கவிஞரின் மனைவி, இவையெல்லாம் உண்மை தான் என்று அடித்துக் கூறினார். கவிஞருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த இந்தக் கருத்து வேறுபாடு நெடுங்காலம் தொடர்ந்தது.

53 வயதில் மறைந்த ஹோம் காலத்தால் மறக்கப்படாமல் இன்றும் அதிசய மனிதராகவே பேசப்பட்டு வருகிறார்.

உலகம் கண்ட அதிசய மனிதர்களுள் ஹோம் வியப்பூட்டும் தீயும் கூட எரிக்க முடியாத மனிதர்’ தான்!

**

Tamil Musical instrument in Ancient Babylonia! Devaloka Kinnara in Bible! (Post No.15,652)

|Apsaras in Bangkok Palace

I took this picture of Kinnara in Bangkok Palace

Written by London Swaminathan

Post No. 15,652

Date uploaded in London –24 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Kinnari in Rameswaram; from my H Shastry’s 100 year old book.

Hindu Musicians in China

In 581 CE, at the invitation of then Chinese emperor, many Indian musicians went to China. Sujiva, an expert vina (VEENAA) player adorned the royal court of China in the period between 560 and 578 CE; he used to train the music lovers of China in the modes of Indian ragas (raagaas). Ancient Chinese manuscripts testify to their familiarity with the seven swaras, graamas, muurchanaas etc of the Indian system. According to some, the musical notes of China have been modelled on those of India. At least three Chinese notes correspond to the three swaras called Sadja Rsabha and Panchama.

Japan

According to ancient Japanese tradition, two chief types of music, called Bodhisattva and Bhairo were imported from China to Japan by an Indian Brahmin, named Bodhi. Bodhisattva is an Indian name. Bairo seems to have been derived from the Indian raga bhairava, which is still called Bhairo in Hindi.

Of the far eastern countries , Java, Bali, Sumatra  and Cambodia actively cultivated Indian music.

Some songs of Tibet, particularly those of the devotional character, appears to have elements in imitations of Vedic saaman (Saama Veda) songs.

Musical instruments like the harp which resemble the Indian vina, were borrowed from India by such ancient lands as Greece, Egypt and Alexandria.

***

Hindu and Greek Music

There are noteworthy parallelisms between the Indian and Greek systems of music. For example, the two earliest scales of Greece called Mixolydic and Doric resemble early Indian scales. Pythagoras scheme of cycle of the fifth and the cycle of fourth in musical system corresponding to the sadja Panchama and the sadja -madhyama- bhava-s  of the Naaatya shaastra. It may be mentioned that the ancient Greek writers claim that the greater part of their music was borrowed from Asia. Among others, Strabo holds this view. Aristotle’s description of a lyre reminds one of the Hindu Ekatantri vinaCurt Sachs holds that the south Indian drum tambattam தம்பட்டம், was known in Babylonia in the name of timbutu. According to him, the Hindu kinnari was king David’s kinnor.

The Arabian writer, Jahiz tells us that Indian music was popular in the Abbasid court. The Arabic magma iqa appears to be Persian rendering of the Indian melodic rhythmic system. Yehudi Menuhin is sure that some elements of Indian music became the mainstay of Arabic music.

(Suresh Chandra Banerji has given the above details in an article published in the Ludwik Sternbach Felicitation Volume, Part two, published by Akhila Bharatiya Sanskrit Parishad, Lucknow, 1979)

***

Tom Tom தம்பட்டம்

English words Drum, Tom Tom and Tamil words Tamukku, Damaaram தம்பட்டம் are derived from the Sanskrit word Damaruka of Lord Siva.

A tom-tom is a cylindrical, small-headed drum (often used in drum kits) played with hands or sticks. It also refers to a monotonous beating sound, or traditionally a signalling drum. As a brand, TomTom is a Dutch company specializing in GPS navigation systems, traffic flow analysis, and mapping technology. 

Merriam-Webster +6

Usage Examples & Synonyms

  • Drum (noun): “The drummer played a fast rhythm on the tom-toms and cymbals”. Synonyms: drum, tom, tabor, tam-tam.
  • Sound (noun): “The incessant tom-tom of the drums in the distance”. Synonyms: drumming, beat, tapping, reverberation.
  • Navigation (Proper Noun): “I used my TomTom to navigate through London”. Synonyms: GPS, SatNav, navigator.
  • Informal Verb (dated): To tomtom news (to spread gossip quickly). 

Cambridge Dictionary +4

Key Contexts

  • Music: A “tom” is a drum without snares in a drum kit.
  • Navigation: TomTom offers services like live traffic flow updates, speed camera alerts, and route planning.
  • Origin: The term is believed to be of Hindi/imitative origin (ṭamṭam).

தமுக்கு / டமருகம் (சம்ஸ்க்ருதம்) டாம் டாம் ,தம்பட்டம்

ட்ரம் என்னும் ஆங்கிலச் சொல்லும், டமாரம் , தமருகம், தமுக்கு, தம்பட்டம்  என்ற தமிழ்ச் சொற்களும் சம்ஸ்க்ருத  டமருகம்  என்ற சொல்லிலிருந்து பிறந்தன . டமருகம்  என்ற சொல் பாகவதம், சிவபுராணம் முதலிய நூல்களில் உள்ளது

தமுக்கு என்பது மக்களுக்குத் தகவல்களை அறிவிக்க, முக்கியமாக கிராமப்புறங்களில் செய்தி தெரிவிக்கப் பயன்படும் ஒரு பழமையான, வட்ட வடிவத் தமிழரின் இசைக்கருவி (பறை வகை) ஆகும். இது அரசாங்க அறிவிப்புகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது அறிவிப்புகளுக்கு முன் முழக்கப்படும். இது ‘தமுக்கு’ அல்லது ‘தமருகம்’ என்றும் அழைக்கப்படுகிறது

***

Greeks copied from Hindu literature!

Greeks Centaur and Chiron are Kinnaras. They are depicted in the same way as Hindu books.

Centaurs are described as wild monsters, generally pictures as a combination of man and horse, dwelling on mount Pelion in Thessaly, having an inherent primitive attraction on account of their human lusts for wine and sexuality.

Centaur is the corrupted form Sanskrit Gandharva.

Chiron is the king of centaurs. Chiron is the corrupted form of kinnara. Chiron was the gentlest and wisest of the centaurs who instructed many heroes of the Grecian tradition in the arts of music, prophesy, healing and hunting. He gave up his immortality to Prometheus, and was placed among the stars as Sagittarius . Heroes  like Jason and Achilles were in their youth, pupils of the wise centaur Chiron, who taught them about medicinal herbs. He discovered a herb with medicinal properties and the herb is called centaury.

***

Kinnara in the Bible

In 2012, I wrote the following under Sanskrit in Bible article; it is in my blogs:

Kinnar: Kinnaras are celestial musicians according to Sanskrit literature. The Bible mentions Kinnor 47 times to mention a stringed musical instrument. Even today the Malayalees in south India use this word for musical instruments which is a pure Sanskrit word. It is similar to Greek lyre. Sometimes called David’s Harp, the Kinnor is not a true harp. Sangam Tamil literature is of full of praise for the Yaz (lyre or harp).

***

From wisdomlib.org

Kinnara (किन्नर), like Yakṣas, are the attendants of Kubera. They are represented as mythical beings with a human figure and the head of a horse or with a horse’s body and the head of a man. They are described as celestial choristers and musicians who dwell in the paradise of Kuvera on Kailāsa. They are called Aśvamukhas, Turaṅgavaktras, “horse-faced” and Mayus.

2) [=kiṃ-nara] [from kiṃ > kim] b m. ‘what sort of man?’ a mythical being with a human figure and the head of a horse (or with a horse’s body and the head of a man, [Śiśupāla-vadha iv, 38]; originally perhaps a kind of monkey cf. vā-nara; in later times (like the Naras) reckoned among the Gandharvas or celestial choristers, and celebrated as musicians; also attached to the service of Kubera.

Centaur/Gandarva in Greece

Kinnara in Tamil Sangam Literature

In 2000 year old Perumpanatruppadai , a Sangam Tamil book, written by Brahmin Poet Mr Rudraksha (in Tamil uruththiran kannanaar) Kinnaram figures in line 494. The same author has written another Sangam book Pattinappaalai .

கின்னரம் – பெரும்பாணாற்றுப்படை , உருத்திரங்கண்ணனார். ருத்ரனின் மகன் கண்ணன் என்றும் திரு. ருத்ராக்ஷம் என்றும் பொருள் கொள்ளலாம். 

His name may also mean Kannan, son of Rudra according to commentators.

In Tamil literature Kinnaras are celestial beings known as divine musicians and singers, often depicted as half-human and half-bird (or sometimes half-horse). While primarily found in Sanskrit and Buddhist texts, they are integrated into Tamil-Nadu traditional lore and religious contexts, appearing in the Nalayira Divyaprabandham and as attendants of Kubera.

In the Mahabharata (Adi Parva), they are described as eternal lovers who are always paired (male Kinnara and female Kinnari), never separating, and known for their deep devotion and perpetual pleasure.

They are associated with the Gandharvas and Apsaras as a class of demigods known for their ability to play music and sing.

Iconography in Tamil Temples: Sculptures of Kinnaras playing musical instruments can be found in Tamil Nadu, such as at the Srirangam Sri Venu Gopala Swamy temple.

Kinnara and the Kinnari Vina: They are closely associated with an ancient stringed instrument called the Kinnari Veena, which is still used as a folk instrument in parts of South India.

Divine Helpers: In Buddhist texts (such as the Jataka tales), they are depicted as compassionate beings living in the Himalayas (Himavanta), who sometimes help humans.

In modern contexts, the Indian transgender (Hijra) community uses the term “Kinnar” to refer to themselves, taking inspiration from these androgynous, gender-fluid celestial beings praised in Hindu scriptures.

Kinnaran/Chiron in Greece

Kinnaras are portrayed in Buddhist temples with wings like a bird. Golden coloured Kinnaras are in Bangkok Palce in Thailand (See picture taken by London swaminathan in March 2026)

***

Kinnaras in Kalidasa’s works

In the works of the ancient Sanskrit poet Kālidāsa, Kinnaras are depicted as celestial, demi-god musicians dwelling in the Himalayas, frequently mentioned in the context of their haunting music and the scenic beauty of the mountains. They are often described as attendants of Kubera, the god of wealth, residing on Mount Kailāsa.

Kumarasambhava: Kālidāsa describes the Kinnaras in the Himalayas, where they act as celestial musicians. In the poem, winds blowing through bamboo caverns are depicted as producing a drone note for the Kinnaras to sing along with.

They are portrayed as innocent, harmless beings fond of music and dancing.

While sometimes generally described as half-bird/half-human or half-horse/half-human, the text sometimes highlights the “kimpuruṣa women” who have a human body and a horse’s face, adding to the romantic imagery of the Himalayan scenery.

In the Meghaduta (Cloud Messenger), the Kinnaras are referenced in relation to the romantic and, at times, melancholy ambiance of the landscapes the cloud passes over.

Kalhana in Rajatarangini mentioned Kinnara twice in the first chapter.

–subham—

Tags- Kinnara, Thambattam, Tom Tom, Babylonia, Bible, Tamil Music, Greek music, Hindu influence, Kalidasa, Damaruka, Tamukku,

தமிழ் டமாரம் பற்றிய அதிசயச் செய்தி (Post No.6756)

Written by London Swaminathan


swami_48@yahoo.com

 Date: 10 AUGUST 2019  


British Summer Time uploaded in London –  8-23 am

Post No. 6756

  1.  

3 Nov 2014 – உலகிலேயே மிகப் பழைய நூல் ரிக் வேதம்— ஜெர்மன் ‘அறிஞர்’ மாக்ஸ் … பூமி துந்துபிரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள்.

பூமி துந்துபி: ரிக் வேதம் சொல்லும் …


3 Nov 2014 – பூமி துந்துபிரிக் வேதம் சொல்லும் அதிசயச் செய்திகள். jaffna. Temple drummer, Jaffna, Sri Lanka. கட்டுரையை எழுதியவர் :– லண்டன் …

Bhumi Dundhubi: Drums in Rig Veda and Sangam Tamil Poems …


2 Nov 2014 – Bhumi DundhubiDrums in Rig Veda and Sangam Tamil Poems ….. You don’t even know the way to Post Office; don’t tell me about Heaven!

வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039 …


  1.  

6 Feb 2019 – வேத காலத்தில் ஆடல் பாடல் (Post No.6039). Written by London … பூமி துந்துபி என்னும் ஒரு வாத்தியம் பற்றி வேத இலக்கியங்கள் சொல்லும்.

HINDU AND BUDDHIST WONDERS IN JAPAN (Post No.5118)Compiled by LONDON SWAMINATHAN

Date: 16 JUNE 2018 

Time uploaded in London –  18-36  (British Summer Time) 

Post No. 5118

–subham–

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 56; இந்து மத கலைச்சொல் அகராதி-56 (Post No.15,651)

Written by London Swaminathan

Post No. 15,651

Date uploaded in London –24 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

English version was posted on 22-4-2026

Tamil version continued…………………….

லோபாமுத்ரா

லோபாமுத்ரா- அகஸ்தியரின் SEXY செக்சி உரையாடல் ரிக் வேதத்தில் உள்ளது (இது பற்றிய மூன்று கட்டுரைகள் என்னுடைய பிளாக்கில் உள்ளது). அவளுடைய கதை,

 18 பர்வங்களைக் கொண்ட மஹாபாரதத்தில் மூன்றாவது பர்வமான ஆரண்ய/ வன பர்வத்தில் உள்ளது.

தவம் செய்து, ,பழுத்த பழமாகப் போன அகஸ்தியர் ஒருநாள் ஜாலியாக WALKING வாக்கிங் போனார். ஒரு பெரிய பள்ளத்திலிருந்து ஒரே கூச்சல்; எட்டிப் பார்த்தார்; அவருடைய தாத்தா, கொள்ளுத்  தாத்தா,பாட்டன், பூட்டன் எல்லோரும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.

அடக்கடவுளே ! உங்களுக்கு  எல்லாம் என்ன ஆயிற்று? என்றார்.அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் எல்லோரும் ‘புத்’ (PUTH) என்னும் நரகத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து மீள உமக்கு ஒரு புதல்வன் பிறக்கவேண்டும். அல்லது எங்களுக்கு விடுதலை இல்லை என்றார்கள்.

அகஸ்தியர் உடனே விரைந்தார்; கல்யாணம் கட்ட ஆசை; ஆனால் உலக மஹா அழகி வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதை உணர்ந்த தேவர்கள், அவருடைய தவத்தை மெச்சி, உலக மஹா அழகிகளின் சிறந்த உறுப்புகளை எல்லாம் எடுத்து பூலோகத்துக்கு அனுப்பினார்கள். அவள் விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாக லோபா முத்ரா என்னும் பெண் பிள்ளையாகப் பிறந்தார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தாள் ; வளர்ந்தாள் ; அகஸ்தியர் தான்  எதிர்பார்த்த அழகி  விதர்பாவில் இருப்பதை அறிந்து விரைந்தார்.

உமது மகளை எனக்குக் கல்யாணம் செய்து வை என்றார்; சாமியார்கள் தாம் செய்த தவ வலிமையால்  சேமித்து வைத்த விந்துவை (SPERM) வீணடிக்காமல் யாராவது ஒருவருக்குக் கொடுத்து பிள்ளையை உண்டாக்குவார்கள் ; இந்த செயற்கை முறை TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி பற்றிச் சொன்னால், பாமர மக்களுக்குப் புரியாது என்பதற்காக “இலையில் விந்து விழுந்தது; அது கர்ப்பமாயிற்று —என்றெல்லாம்” மறைமுக மொழியில் கதைப்பார்கள்; உண்மை என்ன வென்றால் அவர்கள் SEX செக்ஸ் இன்பத்துக்காக ஒரு பெண்ணை அணுகவில்லை

உலக மஹா அழகியை உலக மஹா குட்டையன் SHORTEST MAN விரும்பிய செய்தி விதர்ப்ப நாட்டு ராணியின் காதில் விழுந்தது; அவளும் திகைத்தாள்; முனிவரின் சாபம் வந்தால் குலம் வேரறுந்து போகும். முனிவரிடம் அழகியை ஒப்படைத்தாலோ நல்ல பிள்ளை கிடைக்கும் ; அம்மாவும் அப்பாவும் தவியாய்த் தவிப்பதை பார்த்தாள்  பெண்ணரசி லோபா.

 லோபா முத்ரா சொன்னாள் :- அம்மா ஒரு கவலையும் படாதே ; நான் அகஸ்தியரைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாள். கல்யாணம் முடிந்தது ஒரு நாள்மிஸ் லோபா சொல்கிறாள்

“அன்பரே! விரைந்து படுக்கை அறைக்குள் வாரும் ; மாதவிலக்கு முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டன. சீக்கிரம், சீக்கிரம் ; பிள்ளை பெற அருமையான சந்தர்ப்பம்.

எல்லா பெண்களையும் போல, மிஸ் லோபாவும் ஒரு கண்டிஷன் CONDITION போடறாள் :–

” ஐயா நான் விதர்ப்ப நாட்டு ராஜ குமாரி. தங்கக் கட்டிலில் படுத்து உறங்கிய என்னை மணம் முடித்தீர். என் அம்மா, அப்பாவுக்கும் விதர்ப்ப நாட்டுக்கும் தீங்கு வரக்கூடாது என்று நான் உம்மை மணக்க முடிவு செய்தேன். நான் ராஜ குமாரியாக இருந்த காலத்தில் அணிந்த நகைகளுடன் வருக.

 அகஸ்தியர் சத்ய சீலன்;  ‘சரி,  அப்படியே செய்கிறேன்’ என்று புறப்பட்டார்.

வன பர்வம் ஸ்லோகம் -95-15/18

லோபாமுத்ரா செப்புகிறாள் :–

என் மூலமாக ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக என்னை என் கணவர் திருமணம் செய்து கொண்டார் என்று எனக்குத் தெரியும் . அதில் சந்தே கமில்லை; ஒரு மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்வாரோ அப்படி நீங்கள் என்னிடம் வரலாம். ஆனால் என்னுடைய தந்தையின் அரண்மனை போன்ற  ஓரிடத்தில் என்னைச் சந்தியுங்கள். அத்தோடு  நீங்களும் சிறந்த ஆடை அணிகலன்களை அணிந்து அறைக்குள் வாருங்கள் .

அகஸ்தியர் பகிர்கிறார்

அழகியே; செளபாக்கியவதியே! உங்கள் தந்தையை ஒப்பிடும் அளவுக்கு என்னிடம் செல்வம் இல்லையே (வன பர்வ ஸ்லோகம் 3-95-20)

லோபாமுத்ரா உரைத்தாள் :

நாதா ! சுவாமி! இந்த பூமியில் எவ்வளவு செல்வம் இருக்கிறதோ அத்தனையையும் உமது தவ வலிமையால் பெற  முடியுமே

அகஸ்தியர் பதில்: 3-95-21

உன்னுடைய யோசனைப்படி நான் செய்தால் என் தவ வலிமை செலவழிந்து போகுமே; என் தபோ நிதி குறையாத ஒரு யோஜனையைச் சொல்.

மஹா பாரத வன பர்வ ஸ்லோகம் 3-95 22 முதல் 28

லோபாமுத்ரா மொழிகிறாள்:-

நாதா, நான் மாத விலக்கு முடிந்து குளித்து விட்டேன். ஆகையால் உடனே நீர் வரவேண்டும்; காலம் தாழ்த்த முடியாது ; அதனால்தான் உம்மை அவசரப் படுத்துகிறேன். அதே நேரத்தில் உங்கள் தவம் செய்யும் விஷயத்தில் நான் குறுக்கிட விரும்பவில்லை; உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.

3-95-24

அகஸ்தியர் சொல்கிறார்:-

உன் மனதில் இவ்வளவு நம்பிக்கை இருக்குமானால் நானும் முயற்சியை உடனே துவங்குகிறேன். உன் ஆசையை நிறைவேற்றுவேன்; இங்கேயே காத்திரு.

xxx

வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக முதலில் ஸ்ருதர்வா என்ற மன்னனை அகஸ்தியர் அணுகினார். . அவர் எதிர்பார்த்த பணம் இல்லை . உடனே அந்த அரசனையும் கூட்டிக்கொண்டு பிருஹதஸ்வா என்ற மன்னனைச் சந்திக்கிறார். அவனிடம் தேவையான பணம் இல்லை என்பதைக் கண்டுபிடித்தவுடன் அவனையும் கூட்டிக்கொண்டு த்ருஸாதஸ்யு என்ற அரசனிடம் சென்றனர் . அவனிடமும் பணம் இல்லை அகஸ்தியர் மனம் தளரவில்லை. அந்தக் காலத்தில் இல்வலன் – வாதாபி என்ற இரண்டு அரக்கர்கள் பிராமண மாமிசப் பிரியர்களாக இருந்தனர். இரண்டு அரக்கர்களும் பணம்   படைத்த               இரண்டு அரக்கர்கள்; இருவரும் மாயாஜாலத்தில் வல்லவர்கள்; தம்பி வாதாபியை வெட்டி கறி சமைத்து பிராமணர்களுக்கு பரிமாறுவர். அவர்கள் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்குள் இல்வலன் அவனை அழைப்பான்.உடனே அவன் பிராமணர் வயிற்றைக் கிழித்து வெளியே குதிப்பான். அந்த பிராமண மாமிசத்தை இருவரும் சமைத்து உண்பர். இது அகஸ்தியருக்கு தெரியும்.இல்வலனிடத்தில் இருந்த, செல்வத்தை அபகரிப்பதாற்காக அகஸ்தியர் ஒரு தந்திரம் செய்தார் ; அவனிடம் போய் விருந்தும் உண்டார். வழக்கம் போல ‘வாதாபி வெளியே வா’ என்றான் இல்வலன்; அகஸ்தியர் சிரித்தார் ; வாதாபி இனிமேல் வரவே மாட்டான் என்று அகஸ்தியர் வாதாபி ஜீர்ணோ பவஹ – என்று சொல்லி தொந்தியைத் தடவினார்; இல்வலன் அழுது புரண்டு அகஸ்தியர் காலில் விழுந்து வணங்கினான்.

தன்னுடன் வந்துருந்த 3 அரசர்களுக்கும் 10,000 பசுமாடுகளையும்   தங்க நாணயங்களையும் கொடு என்று அகஸ்தியர் கட்டளை இட்டார். (3-97- 12/13  )

அகஸ்தியர் தனக்கு அது போல இரு மடங்கு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார் அகஸ்தியரும் மூன்று அரசர்களும் அவரவர் இருப்பிடம் அடைந்தனர்.

(இந்தப் பகுதி மூலம் வேத கால அரசர் பெயர்களும், அரக்கர் அல்லது அசுரர் என்பவர்கள் எவ்வளவு பணக்காரர்கள் என்பதும் தெரிகிறது ; த்ரஸா தஸ்யூ முதலிய அரசர் பெயர்கள் ரிக் வேதத்திலும் உள.)

3-97-17/18 லோபா முத்ரா பேசும் ஸ்லோகம்

அன்பரே ! நான் சொன்ன எல்லாவற்றையும் செய்து விட்டீர்; விரைந்து வந்து என் மூலம் குழந்தை பெறுக

அகஸ்தியர் சொல்கிறார் 3-97-18/18

பேரழகியே ! சரி குழந்தை பெறலாம்; அதற்கு முன்னர் என் கேள்விக்குப் பதில் சொல் ;ஆயிரம் மகன்கள் வேண்டுமா? அல்லது 1000 மகன்களுக்கு நிகரான ஒரே மகன் வேண்டுமா?

லோபா புகல்வதாவது :–

சஹஸ்ர சம்மிதஹ புத்ர ஏகோ மே அஸ்து தபோதனஹ

ஏகோ பஹுபிஹி ஸ்ரேயான் வித்வான் சாது ரசாதுபிஹி

தவ சீலரே !ஆயிரம் மகன்கள் தேவையில்லை ; ஏன் எனில் குணமோ கல்வி அறிவோ இல்லாத 1000 மகன்களை விட முனிவர் போன்ற ஒரு மகன் இருந்தால் போதும் .

இதற்குப் பின்னர் ஒரே மகன் பிறக்கட்டும் என்று அகஸ்தியர் வரம் தருகிறார்; அகஸ்தியர்- லோபா ஜோடிக்குக் கிடைத்த லாபம் – த்ரதஸ்யு என்ற புதல்வன்  இன்னும் ஒரு  பெயர் – இத்ம வாஹ ( Drdhaasyu- Idmavaaha) அவரும் வேதம் செய்த ஒரு ரிஷி.

த்ருணாதூமாக்கினி என்னும் பெயர் உடைய தொல்காப்பியருக்கும்  அகஸ்தியருக்கும் லோபாமுத்ரா காரணமாக நடந்த மோதலை உச்சிமேற்புலவர் கொள் நச்சினார்க்கினியர் சொல்கிறார்; அதைத் தொல்காப்பியரின் கீழ் பின்னர் காண்போம் .

***

லோமச ரிஷி

லோமச ரிஷி (Lomasha )

சொர்கத்துக்குச் சென்றபொழுது இந்திரனுடன் சிம்மாசனத்தில் அர்ஜுனனும் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிசயித்தார் . இதைக் குறிப்பாலுணர்ந்த இந்திரன் அர்ஜுனன் பூமியில் பிறந்து முக்கியப்  பணிகளைச் செய்யவிருப்பதாகச் சொன்னார் ; இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க லோமச ரிஷியும் பூமியில் பிறந்தார். கடுமையான தவத்தின் மூலம் அரிய சக்திகளைப் பெற்ற, சிவபக்தர்.

இவர் பாண்டவர்களின் வனவாச காலத்தில், கவலையில் மூழ்கியிருந்த யுதிட்டிரருக்குத் தத்துவ ஞானங்களை உபதேசித்து, தீர்த்த யாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.  அவர்களுடன் யாத்திரை மேற்கொண்டார் , பல்வேறு புனித தலங்களுக்கு அழைத்துச் சென்று கதைகள் மற்றும் ஞானத்தை போதித்தார். இவர் உணவின்றி, கடுமையான தவத்தில் சிறந்து விளங்கியவர். லோமச முனிவரின் கதைகள் மகாபாரதத்தின் வன பர்வத்தில் உள்ளன.

***

லோமபாத

லோமபாத/ ரோமபாதர்

மஹாபாரத வனபர்வத்திலும் வால்மீகி மாயணயத்திலும் இவரைப் பற்றிய கதைகள் உள்ளன ; ரோமபாதர் அங்க தேசத்தின் மன்னர் ;தசரத சக்கரவர்த்தியின் நண்பர். தசரதன்-கோசலை தம்பதியரின் மகளான சாந்தாவை தத்து எடுத்து வளர்த்தவர்.

 இவர் பிராமணர்களை அவமதித்ததால் அவர்களிட்ட சாபத்தினால் பெரும் வறட்சி ஏற்பட்டது. நீண்ட வறட்சியைப் போக்க, ரிஷ்யசிருங்க முனிவரைத் தன் நாட்டுக்கு அழைத்து வந்து, தனது வளர்ப்பு மகள் சாந்தாவை அவருக்கு மணம் முடித்துக் கொடுத்தவர். தன் நாட்டில் நிலவிய கடும் வறட்சியைப் போக்க, அபார பிரம்மச்சரிய சக்தி கொண்ட ரிஷ்யசிருங்க முனிவரை பெண்களை அனுப்பி ஆசை காட்டி தன் நாட்டுக்கு வரவழைத்து மழை பொழியச் செய்தார்.

ரிஷ்ய சிருங்கர் யார் ?

கலைக்கோட்டு முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர்.

பிறக்கும் போதே தலையில் மான் கொம்புகளுடன் பிறந்தவர்.இவரது தந்தை விபாண்டக முனிவர்;தாயார் அப்சரஸ்  தேவலோக நடனப் பெண்ஊர்வசி. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி.

யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத உத்தமராக இருந்தார்.ரிஷ்யசிருங்கர் காலடி வைத்த இடமெல்லாம் மழை பெய்தது.

***

லோகாலோகபர்வதம்

லோகாலோகபர்வதம் (Lokaloka Parvata) என்பது இந்து புராணங்களின்படி, பிரபஞ்சத்தின் எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான மலைத்தொடர் ஆகும்.

அமைவிடம்: இது லோகம் (வெளிச்சம் உள்ள உலகம்) மற்றும் அலோகம் (வெளிச்சம் இல்லாத இருண்ட பகுதி) ஆகிய இரண்டையும் பிரிக்கும் எல்லையாகக் கருதப்படுகிறது.

புராணங்களின்படி, இது ஐம்பது கோடி யோஜனை விஸ்தாரமுடைய பூமியின் நான்கில் ஒரு பாகமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சூரியனின் ஒளி பூமியின் மீது படுவதற்கு ஏதுவாக, ஒளியை பிரதிபலித்து எல்லை அமைக்கும் மலையாக இது வர்ணிக்கப்படுகிறது.  லோகாலோகபர்வதம் என்பது ஒளியுலகிற்கும் இருளுலகிற்கும் இடையிலான எல்லை.

பாகவதத்தில் உள்ள வருணனை :

சுத்த ஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் ஜனஸஞ்சாரமுள்ள உள்பாகத்திற்கும் ஜன ஸஞ்சாரமில்லாத வெளிப்பாகத்திற்கும் இடையில் சுற்றிலும் லோகாலோகமென்னும் பர்வதம் ஏற்பட்டிருக்கின்றது. மானஸோத்தர பர்வதத்திற்கும் மேருபர்வதத்திற்கும் இடையில் எவ்வளவு பூமி இருக்கின்றதோ அவ்வளவு பூமி சுத்தஸமுத்ரத்திற்கு அப்புறத்தில் இருக்கின்றது. அதற்கப்புறமுள்ள பூமி ஸ்வர்ணமயமாய்க் கண்ணாடிப்புறம் போன்றிருக்கும். அப்பூமியில் வைத்த பொருள் எதுவும் மீளவும் புலப்படுகிறதில்லை. ஆகையால் அந்தப் பூமி ஒரு ப்ராணியுமின்றிச் சூன்யமாயிருக்கிறது. அதை அலோகமென்கிறார்கள். தன்வரையிலுமுள்ள பூமி லோகமென்றும் தனக்கு வெளியிலுள்ள பூமி அலோகமென்றும் கூறப்படுகின்றனவாகையால் இடையிலுள்ள பர்வதம் லோகாலோகமென்று பேர்பெற்றது. அப்பர்வதம் மூன்று லோகங்களுக்கும் வெளியில் சுற்றிலும் ஈச்வரனால் ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது அப்பர்வதத்தின் மேல் நான்கு திக்குக்களிலும் ப்ரஹ்மதேவனால் லோகக்ஷேமத்தின் பொருட்டு ருஷபம், புஷ்கரசூடம், விமானம், அபராஜிதம் என்னும் பேருடைய மேலான யானைகள் நான்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஸர்வேச்வரன் சங்கு சக்ரம் முதலிய தன் ஆயுதங்களால் திகழ்கின்ற பாஹுதண்டங்கள் விளங்கப்பெற்றுக் கல்பாவஸானம் வரையில் அந்த லோகாலோக பர்வதத்தில் நாற்புறத்திலும் வீற்றிருக்கிறான்.

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 56; இந்து மத கலைச்சொல் அகராதி-56 லோபாமுத்ரா,லோகாலோகபர்வதம், ரோமபாதர்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-3 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,560)

Written by London Swaminathan

Post No. 15,650

Date uploaded in London –24 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://

திரு அன்பில் (Thiruanbil)

திரு அன்பில் (Thiruanbil) திவ்ய தேசத்தின் வடிவழகிய நம்பி பெருமாள் மீது பெரியாழ்வார் பாடிய பாசுரம், அன்பின் முக்கியத்துவத்தையும் பெருமாளின் கருணையையும் விளக்குகிறது.

இந்தத் தலம் திருச்சிராப்பள்ளி அருகே காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

திரு அன்பில் பாசுரம் (பெரியாழ்வார் திருமொழி):

நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-நாகத் தணைப்

பாசத் தணைப் பொருளைப் – பாகப் பணைத் தோளான்

அன்பில் அமர்ந்தான் அனந்தன் மேல் ஆவதே

அன்பில் அமர்ந்தான் அணை.”

பாசுரத்தின் பொருள்:

ஆதிசேஷன் என்னும் பாற்கடல் படுக்கையில் (நாகத் தணை) பள்ளி கொண்டிருக்கும் திருவரங்கம், அன்பில் எனும் திருத்தலம்,

அன்பு என்னும் கயிற்றால் அடியவர்களைத் தன்பால் பிணைத்து (பாசத் தணை) வைத்திருக்கும் பொருளாகிய,

பாக்யம் மிக்க தோள்களை உடைய வடிவழகிய நம்பி,

அன்பர்கள் உள்ளத்தில் அன்புடனே அமர்ந்திருக்கிறான்.

இத்தலப் பெருமாள், தன்னை அன்புடன் நினைக்கும் அடியவர்களுக்குக் கருணை புரிய, அனந்தன் (ஆதிசேஷன்) மீது அணைந்து (பள்ளி கொண்டு) காட்சி தருகிறார்.

****

“நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்” என்பது திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதியில் (பாடல் 36) இடம்பெறும் புகழ்பெற்ற வரிகளாகும்.

இந்த பாடல் திருமாலை ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் 7 திருத்தலங்களில் வாழும் பெருமானைப் போற்றுகிறது.

இந்தப் பாடல், திருமழிசை ஆழ்வார் திரு அன்பில் சுந்தரராஜ பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது, திருமால் நாகப் படுக்கையில் வீற்றிருக்கும் முக்கிய திருத்தலங்களை வரிசைப்படுத்திப் பாடியதாகும்.

பாடலின் முழு வடிவம் (நான்முகன் திருவந்தாதி – 36):

நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்

நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-நாகத் தணைப்

பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால் அணைப்

பார் கருத்தனா வான். NDP 2417

பொருள்:

ஆதிசேஷன் (பாம்பு) மீது பள்ளிகொண்டுள்ள, திருக்குடந்தை, திருவெஃகா, திருஎவ்வுள், திருவரங்கம், திருப்பேர் நகர், திருஅன்பில் மற்றும் திருப்பாற்கடல் ஆகிய திருத்தலங்களில் நாகப் படுக்கையில் வீற்றிருக்கும் ஆதி நெடுமால் (திருமால்), தன்னை அன்புடனும், பக்தியுடனும் அணைப்பவர்கள் (நினைப்பவர்கள்) கருத்தில் வாழ்பவன் ஆவார்.

This pAsuram by ThirumazhisaiyAzhwAr refers to the seven shrines featuring Vishnu in a recumbent position (on the serpent bed) – Tirukkudandai (Kumbakonam), Tiruvegkaa (Kancheepuram), Tiruvallur (near Chennai), Tiruvarangam (Srirangam), Tiruppernagar (KOvilaDi), Anbil and Tirupparkadal ( the milky ocean). The AzhwAr says the presiding Lord in all these shrines will rule over and protect those who seek His shelter.

–subham—


Tags-3Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-3 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள்திரு அன்பில்,  (Thiru anbil)

 அனுமனின் ஐந்து முகங்கள்: துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 12 (Post.15,649)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,649

Date uploaded in London –   24 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 12

 (ஆர், சேஷாத்ரிநாதன்) 

அனுமனின் ஐந்து முகங்கள் 

அனுமனின் 5 முகங்கள் சொல்லும் ரகசியம்! உங்களுக்குத் தெரியுமா?

 முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான பிரம்மாவுக்கு இருந்த பெருமைகளில் ஒன்று தான் ஐந்து முகங்கள். தனக்கு ஐந்து முகங்கள் இருந்த பெருமையில் ஆணவத்தின் காரணமாக பிரம்மா தனது ஒரு முகத்தை சிவபெருமான் மூலம் பெற்ற சாபத்தினால் இழந்து நான்முகனாக வழிபடும் பெருமை இழந்த கதையும் அறிவோம்.

 ஆனால் எந்த ஆணவமும் இல்லாமல் தெய்வங்களிலேயே பராக்கிரமிக்க அதே சமயம் பணிவுடன் விசுவாசம் மிக்க தெய்வமாக மனிதர்களின் வாழ்வியலோடு பொருந்தி எவ்வித வேறுபாடுமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தெய்வமாக வழிபடப்படுபவர் தான் ஆஞ்சநேயர் எனும் அனுமன். இவரும் ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபடப்படுவது சிறப்பு. அத்துடன் இவரது தனித்துவமான உருவம் குழந்தைகளிடம் கூட கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ப்பது சிறப்பு.

 பஞ்சமுக ஹனுமன் புராண வரலாறு: 

பஞ்சமுக ஹனுமானின் கதை இராமாயணத்தின் பகுதியாகக் கூறப்படுகிறது. மாயையில் வல்லவரும் இராவணனின் சகோதரருமான அஹிரவணா அல்லது மயில்ராவணன் காளிதேவிக்கு பலி தரும் எண்ணத்துடன் இராமனையும் இலட்சுமணனையும் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் சிறை வைத்தான். 

அவர்களை மீட்க வந்த ஹனுமனால் அரக்கனை வதம் செய்ய முடியவில்லை. காரணம் அஹிரவன் ஒரு தனித்துவமான வரம் பெற்றிருந்தான். அவனது உயிர் ஐந்து திசைகளில் வைக்கப்பட்ட ஐந்து எண்ணெய் விளக்குகளில் சேமிக்கப்பட்டு ஐந்தும் ஒரே நேரத்தில் அணைக்கப்பட்டால் மட்டுமே அவன் மரணம் நிகழும் என்பதே அது. அஹிரவணுடன் போரிட்ட ஹனுமன் பஞ்சமுக ஹனுமனாக மாறி, ஐந்து தலைகளையும் மகத்தான சக்தியையும் பெற்றார். ஒவ்வொரு முகமும் வெவ்வேறு திசையில் பார்த்த தெய்வீக வடிவத்துடன் இருந்த அனுமன் ஒரே நேரத்தில் விளக்குகளை ஊதி, அரக்கனை அழித்து, இராமனையும் இலட்சுமணனையும் மீட்டார் என்கிறது புராணக்கதைகள்.

 மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. 

இராவணனை வதம் செய்த செய்தியை அறிந்த சதகண்டன் என்னும் அரக்கன் இராமனோடு போர் புரிய வந்தான். இராவணவதம் முடித்த இராமன் களைப்பு தீர ஓய்வெடுக்கட்டும் என எண்ணிய ஆஞ்சநேயர், தனக்கே உரித்தான வானரம் மற்றும் சிங்கம், கருடன், வராகம்(பன்றி), குதிரை ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக மாறினார். சதகண்டன் எடுத்த மாய வடிவங்களுக்கு ஏற்ப தானும் உருமாறி அழித்தார்.

 பஞ்சமுகத்தின் சிறப்பு 

இந்த ஐந்து முகங்களும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேல் திசைகளை நோக்கியுள்ளன. ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும், பலனையும் குறிப்பதாக கூறப்படுகிறது. ‘பஞ்சமுக ஆஞ்சநேயர் தத்துவம்’ என ஆன்மிகம் சிறப்பிக்கும் இந்த ஐந்து முகங்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன? இங்கு காண்போம்.

1. கிழக்கு முகம் (அனுமன் முகம்): ஆஞ்சநேயரின் உண்மையான சுயரூபத்தைக் குறிக்கும் இந்த முகம் கிழக்கு, புதிய தொடக்கங்கள் மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய கிழக்கு நோக்கி உள்ளது. இது பக்தி, தீர்க்கமான அறிவு, புத்திக்கூர்மை, மற்றும் செயலில் வலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது. 

2. தெற்கு முகம் (நரசிம்ம முகம்): ஸ்ரீநரசிம்மரின் அம்சத்துடன் மரணம் மற்றும் மாற்றத்தைத் தரும் தெற்கு திசை நோக்கிய இந்த முகம் பயம், எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலுடன் அச்சத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது. 

3. வடக்கு முகம் (வராக முகம்): வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் வடக்கு முகம் வராகரின் அம்சத்தைக் குறிக்கிறது. விஷ்ணுவின் பன்றி அவதாரமான இது பூமிக்குரிய வலிமை, சாபங்கள் மற்றும் எதிர்மறையிலிருந்து ஒருவரை விடுவித்தல், செல்வ செழிப்பு, அமைதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. 

4. மேற்கு முகம் (கருட முகம்): தீமைகளிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றைக் குறிக்கும் மேற்கு முகம் கருடனின் அம்சமாக சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தருகிறது. மேலும் விஷங்கள், பாம்புக்கடிகள் மற்றும் சூனியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது.

 5. மேல் முகம் (ஹயக்ரீவ முகம்): ஆன்மீக விழிப்புணர்வைக் குறிக்கும் விதமாக மேல் நோக்கி காணப்படும் இந்த முகம் ஹயக்ரீவரின் அம்சத்தைக் குறிக்கிறது. இது அறிவு, தெளிவு, ஞானம், கல்வி மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது. 

பஞ்சமுக அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

 பில்லி சூனியம், தீய சக்திகள் அச்சம் அல்லது கெட்ட கனவுகள், கடுமையான உடல்நலக் கவலைகள், மன உளைச்சல், நிதி உறுதியற்ற தன்மை, வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல் போன்ற அனைத்து கவலைகளில் இருந்தும் பஞ்சமுக அனுமன் காக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதன் காரணமாகவே அவரது சிலைகள் அல்லது படங்களை அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர் 

மீண்டும் துளசிதசரிடம் வருவோம்                                **                             தொடரும்

உங்கள் இதய ஊஞ்சலில் ஆடவே எனக்கு விருப்பம்! ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை! (Post .15648)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,648

Date uploaded in London – 24 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

24-4-26 பகவான் ஶ்ரீ சத்யசாயிபாபா மஹா சமாதி தினம்

9-4-26 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை! 

உங்கள் இதய ஊஞ்சலில் ஆடவே எனக்கு விருப்பம்! ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளுரை! 

ச. நாகராஜன் 

உலக இயலில் ஆழ்ந்திருக்கும் குறை கூறுபவர்களைப் பற்றிக் கவலையே படாதீர்கள். அவர்கள் உங்களை ராஜ பாதையான விவேக-வைராக்யத்தை விட்டுவிட்டு சந்துபொந்துகளில் இழுக்கப்பார்ப்பார்கள். அவதாரங்கள் கூட அவர்கள் மீது பொறாமை கொண்ட சின்னபுத்திக்காரர்களால் குறி வைக்கப்பட்டவர்களே. அப்படி இருக்கும் போது தங்கள் பார்வையை விரிவுபடுத்தி அன்பை உலகமயமாக்க விரும்புபவர்களை அவர்கள் எப்படி விடுவார்கள்?

கிருஷ்ணரைப் பற்றிய அவதூறுப் பேச்சுகளை ஒருபோதும் பாண்டவர்கள் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். அவர்களுக்கு அவரது திவ்யமான புகழ் பற்றித் தெரியும். அவரிடம் முழுமையாக பாண்டவர்கள் சரணடைந்து விட்டார்கள். கிருஷ்ணரும் அவர்கள் செலுத்திய அதே அன்பைத் திருப்பித் தந்தார்.

 அவர், தர்மராஜரே தனது தலை, அர்ஜுனனே தனது தோள்கள், பீமனே தனது இடுப்பு, நகுல சகாதேவர்களே தனது கால்கள் என்று பிரகடனம் செய்தார்.

அவரே இதயம். இதுவே பாண்டவர்களுக்கும் கிருஷ்ணருக்குமான உறவுநிலையாகும். இதுவே இறைவனுக்கும் அனைத்து உயிர்களுக்குமான உறவுநிலையாகும்.

பாண்டவர்கள் மட்டுமே இதை உணர்ந்தனர்; நம்பினர்; அதனால் பயனடைந்தனர். மற்றவர்கள் அடையவில்லை.

இறைவனே ஹ்ருதயவாஸி. தனது பணியை முடித்து விட்ட நிலையில் கிருஷ்ணர் உலகை நீத்து விட்டதைக் கேள்விப்பட்டவுடன் தர்மராஜர் மஹாப்ரஸ்தானம் செய்ய முடிவெடுத்தார். மௌனமாக வடதிசையை நோக்கித் தனியே சாகும் வரை நடந்து செல்ல அவர் தீர்மானித்தார்.

பீமனிடம் இதைத் தெரிவித்த அவர், பீமன் என்ன முடிவெடுத்திருக்கிறான் என்று கேட்டார்.

பீமன், “அண்ணா! சூதாட்டம் நடந்தபோது நடந்த முடிவை விட்டுவிட்டு வேறொரு முடிவை எடுக்க நாம் வேறு ஆட்களாக ஆகி விட்டோமா, என்ன? நீங்கள் அப்போது எங்களைக் கேட்காமலேயே, எங்கள் அனுமதியைப் பெறாமலேயே எங்களைப் பணயம் வைத்தீர்கள், இழந்தீர்கள். இப்போது கூட எது உங்களுக்குச் சிறப்பானது என்று தோன்றி முடிவெடுத்தீர்களோ அதுவே எங்களுக்கும் உகந்ததே. ஏனெனில் நாம் ஒரே உடலில் இருக்கும் ஐந்து பிராணன்கள் போல (பஞ்ச ப்ராணன்). ஐந்து முக்கிய உறுப்புகள் ஒரே இழையில் இணைந்தது போலத் தான் அது” என்று பதில் கூறினான்.

 அவர்களின் உடல் ஒன்றே; அதில் கிருஷ்ணரே இதயம். 

கோபர்களுக்கும் கோபிகைகளுக்கும் கிருஷ்ணரே இதயம். பாகவதத்தில் இப்படித் தான் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அவர்கள் கிருஷ்ணரை தங்கள் பதியாக, எஜமானனாக, இறைவனாக நினைத்தார்கள், உண்மையில் சொல்லப் போனால் கிருஷ்ணரை மட்டுமே அவர்கள் ஒரே புருஷனாகக் கருதினார்கள்.  மற்றவர்கள் எல்லாம் அ-பலைகள், பெண்கள், பலவீனமானவர்கள், பலவீனமான பெண்கள். துன்பம் வரும் நேரத்தில் மிகப் பெரும் வீரன் கூட தனிமையில் மௌனமாகப் புலம்பி அழுகிறான்.

அவர்களுக்கும் கூட மற்றவர்களுக்கு ஏற்படுவது போலவே, என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலை உருவாகிறது

எதையும் முடிவு செய்ய முடியாத நிலையில் சந்தேகம் சூழ்ந்த நிலையில் அவர்கள் பிரார்த்தனை புரிந்து உதவி கேட்கிறார்கள்.  அவர்களும் பலவீனமானவர்களே. இறைவன் ஒருவனே எல்லாக் காலங்களிலும் வலிமை வாய்ந்தவன். எவற்றாலும் அசைக்க முடியாதவன். அனைவருக்கும் பலத்தைத் தருபவன். 

ஆகவே நீங்கள் கோபியரின் ப்ரேமை பற்றிப் படிக்கும் போது எல்லா உயிர்களும் பெண்களே, இறைவன் ஒருவனே புருஷன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ப்ரேமை ஒன்றினாலேயே இறைவன் தன்னை வெளிக்காட்டத் தூண்டப்படுவான். ஞானம் கைகூடும்.

 இப்போது நான் பேச்சை நிறுத்த வேண்டும்; ஏனெனில் பங்களூரில் உள்ள பக்தர்கள் ஒரு புஷ்ப ஊஞ்சலை  இங்கே அமைத்திருக்கிறார்கள்; அதில் நான் அமர்ந்து ஊஞ்சலாட வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்.  இதை நான் ஆதரிக்கவில்லை. உங்கள் இதய ஊஞ்சலில் ஆடுவதால் நான் எவ்வளவு ஆனந்தம் அடைவேன் தெரியுமா?

ஓம்காரம் என்னும் ஊஞ்சலில் ஏழு உலகங்களிலும் உள்ள உயிர்களின் இதயத்திலிருந்து  தத் – த்வம் – அஸி என்ற ராகம் இசைக்கப்படும்போது அது எவ்வளவு பிரமாதமாக இருக்கும்! உங்கள் இதய ஊஞ்சலில் நீங்கள் மஹாதேவரை உட்காரவைக்கவில்லை, மனதை உட்கார வைத்திருக்கிறீர்கள். ஆகவே தான் மனிதகுலத்திற்கு அமைதியும் சந்தோஷமும் மறுக்கப்பட்டிருக்கிறது.

24-10-1966 அன்று தசரா விழாவில் பகவான் பாபா ஆற்றிய அருளுரை

**

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள்(Post.15,647)

Written by London Swaminathan

Post No. 15,647

Date uploaded in London –23 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Uraiyur- Tirukkoziyur

திருச்சி உறையூர் அழகிய மணவாளர் (கமலவல்லி நாச்சியார்) திருக்கோயிலை, திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் (1762) ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்துள்ளார். இது 108 வைணவ திவ்ய தேசங்களில் 2-வது தலம்; திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலம்.

உறையூர் பாசுரம்

“கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன

பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்

வாழியரோ இவர் வண்ணமென்னில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா.”

உறையூர் பாசுரம் -திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி. 

திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளேயே உள்ளது. திருச்சி இரயில்வே சந்திப்பிலிருந்து சுமார் மூன்று கி.மீ தொலைவிலுள்ளது.

இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயாருக்கு   கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி என்று பெயர்கள் .

–subham—

TAGS– Vishnu Temples, 108 “Divya Desams” ,  Pictures, Part 2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள்-2Uraiyur- Tirukkoziyur, உறையூர் பாசுரம் ,திருக்கோழி

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 (Post No.15,646)

Written by London Swaminathan

Post No. 15,646

Date uploaded in London –23 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

English version was posted yesterday.

****

லாஸ்யம்

பெண்கள் ஆடும் நடனம் லாஸ்யம் ;ஆண்மைக்குரிய ஆடலாகத் தாண்டவமும், பெண்மைக்குரியனவாக நளின நடனமாகிய லாஸ்யமும்  கூறப்படும். ஒரு போட்டியில் தாண்டவங்களைச் சிவபெருமான் ஆடிக் காட்டினார்; லாஸ்யத்தை உமா தேவியார் ஆடினார்  அந்தப்  போட்டியில் தேவியார் தோற்றுப்போனார் என்றும் கூறுவர்; ஏனெனில் பெண்கள் கால்களை உயர்த்தி தூக்கி ஆடக்கூடாது என்பது நடைமுறை.

***

லவங்கம்

CLOVE கிராம்பு (லவங்கம் Syzygium aromaticum). பூஜையில் பயன்படுத்தப்படும் வாசனைப்பொருள். சமஸ்கிருதத்தில் லவங் என்று அழைக்கப்படுகிறது,  ஆயுர்வேத மூலிகை ஆகும். காரமான சுவையும் வாசனையும் உள்ளது சமையலில் மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளில் பிரபலமாக உள்ளது. பல் வலி மருந்தாகவும் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் மூலிகையாகவும் பயன்படும் இது ஒரு தாவரத்தின் மலர் மொட்டு ஆகும்.

***

லலித விஸ்தார

புத்தரின் வாழ்க்கை வரலாற்றினை  விளக்கும் சம்ஸ்க்ருத நூல் ; இதில் அக்கால  பண்பாட்டு விஷயங்கள் இருப்பதால் அடிக்கடி மேற்கோள்களில் பயன்படுகிறது

***

லக்ஷணம்

லக்ஷணம் (இலக்கணம்/லட்சணம்) என்பது பொதுவாக அழகு, தன்மை, அடையாளம் அல்லது ஒரு பொருளின் சிறப்பியல்பு ஆகியவற்றைக் குறிக்கும். சாமுத்ரிகா லக்ஷணம் போன்ற நூல்களில் இது அங்க அழகு என்றும், ஆன்மீகத்தில் பக்தி அல்லது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கப் பயன்படுகிறது. சில சூழல்களில், இது சாசனப்பத்திரம் (Deed) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

***

லக்ஷியம்

ஒருவருடைய குறிக்கோள் லக்ஷியம் எனப்படும்; ஒருவர் தான் அடைய வேண்டியதை தனது லக்ஷியம் ஆக வைத்துக்கொள்வார் . கீழே காஞ்சி சுவாமிகளின் உரையில் இந்தச் சொல் வருகிறது: “புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தைக் காட்டுகிறார்கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம்”.

***

லெமூரியா

இது ஒரு கற்பனைக் கண்டம் . இந்தச் சொல்லை முதலில் ஒரு ஆங்கிலேயர் (English zoologist Philip L. Sclater (1829-1913) உருவாக்கி அதை கிரேக்கர்கள் சொல்லும் இன்னொரு மறைந்த அட்லாண்டிஸ் கண்டத்துடன் சேர்த்து புஸ்தகம் எழுதினார்.

இந்தச் சொல் இப்பொழுது மடகாஸ்கர் என்னும் பிரம்மாண்டமான தீவு நாட்டில் (இப்போதைய பெயர் மலகாசி) காணப்படும் லெமூர் LEMUR என்னும் பிராணிகளிடத்திலிருந்து அவராக கற்பனையில் உருவாக்கிய சொல்; அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை; இதே பிராணிகளின் பழைய பாசில் FOSSIL சுவடுகள் இந்தியாவிலும் கிடைப்பதால் கோடிக்கணக்கான   ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவும்  இந்தியாவும் இணைந்த நிலப்பரப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் ; அப்போது மனித இனமோ நாகரீகமோ தோன்றவில்லை!

இதே போல குமரிக்கண்டம் என்பதும் உண்மையே ; இரண்டு பெரிய சுனாமி தாக்குதல்களில் கன்னியாகுமரிக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு கடலில் சென்றது; இதற்கும் லெமூரியாயாவுக்கும் தொடர்பு இல்லை. நமது காலத்திலேயே சுனாமி வந்து தனுஷ்கோடி முதலிய இடங்கள் கடலுக்குள் மூழ்கியதையும்  குஜராத்தில் கிருஷ்ணரின் துவாரகை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் மூழ்கியதையும்  எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால்  இவை எல்லாம் சிறு நிலப்பரப்பே . பெரிய கண்டமல்ல ; மேலும் சோழர் கல்வெட்டில் வரும் இலமூரி தேசமும் சுமத்ரா தீவில் உள்ள இடம் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் வெளியிட்ட இந்துமஹாசமுத்திரப்   படம்,  கடலில் மூழ்கிய மலைகளுடன் என்னிடம் உள்ளது; அதிலும் பெரிய நிலப்பரப்பு மூழ்கியதற்கான் தடயங்கள் காணப்படவில்லை ; ஆக நாகரீகமுள்ள லெமூரியா என்பது கற்பனையே .

கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு முதலியன மூழ்கியது பற்றி குறிப்பிடுகின்றன .

SEE THE PICTURE

இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம்ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக் கண்டம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

Lemuria, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.

Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May.

***

லிங்கம்/ சிவலிங்கம்

‘லிங்கம்’ என்றால் குறி MARK என்று பொருள்; பால் GENDER என்ற பொருளிலும் இலக்கணத்தில் வரும். சம்ஸ்க்ருத வகுப்பில் அகாரந்தப் புல்லிங்க: ராம சப்த: இகாரந்த ஸ்த்ரீலிங்க: என்று சொல்வதிலிருந்து இது ஆணையோ பெண்ணையோ அலியையோ குறிக்கப் பயன்படும் என்பதை அறியலாம். இறைவனுக்கு உருவம் உண்டு/ இல்லை என்பதை சிவபெருமானின் அடி முடியைத் தேடுவதற்கு விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற கதை காட்டுகிறது ;12 லிங்கம் உள்ள ஸ்தலங்களை இந்துக்கள் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று வழிபடுகின்றனர்.

நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும்,  லிங்க வடிவிலுள்ள மலையை இமயத்திலுள்ள புனித கயிலாய மாகவும், காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கத்தை ஜஸ் லிங்கமாகவும்  இந்துக்கள் வழிபடுகிறார்கள் .

இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்;.சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. பூமிக்கடியில் ஏற்படும் அதிர்வலைகளால் இப்படி நடக்கிறதென்று ஜியாலஜிகல் மேகசினில் GEOLOGICAL MAGAZINE  கட்டுரை வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளியில் மொஹஞ்சசத்தாரோஹரப்பாவில் கிடைத்தவை லிங்கங்கள் அல்ல; தாயக் கட்டத்தில் வைத்தாடும் காய்கள் அல்லது எடைக் கற்கள் என்று அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

காஞ்சி மஹா பெரியவர் (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1894-1994) லிங்க வழிபாடு மற்றும் சிவலிங்கத்தின் தத்துவம் குறித்துப் பேசியுள்ளார்  .

அருவுருவ நிலை: சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் லிங்கம் ஆகும். இது உருவமும் (ரூபம்) அல்ல, உருவமற்றதும் (அரூபம்) அல்ல. உருவமும் அருவமுமாக இணைந்த அருவுருவம் என்று காஞ்சி சுவாமிகள் லிங்க வடிவத்தை விளக்குகிறார்.

பஞ்ச பூத லிங்கங்கள் என்பன ஐந்து கோயில்களில் உள்ளன ;காஞ்சி சங்கர மடத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சந்திரமௌலீஸ்வரர் (ஸ்படிக லிங்கம்) உள்ளது . லிங்கம் என்பது பரம்பொருளை மனதளவில் உணர்வதற்கான மிக உயர்ந்த குறியீடு .

வேதங்களிலோ சங்க இலக்கியத்திலோ காளிதாசன் மாணிக்கவாசகரின் படைப்புகளிலோ லிங்கம் என்ற சொல்லினைக் காண முடியாது; மிகவும் பிற்கால தமிழ் பக்தி இலக்கியங்களிலும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களிலும் மட்டுமே லிங்கம் என்ற சொல் வருகிறது; ஆனால் அதற்கு முன்னர் வழிபாடு இருந்ததற்குத் தொல்பொருட் துறைச் சான்றுகள் உள்ளன . 

Tallest Lingam in Kerala.

***

லீலாவதி

லீலாவதி ( Līlāvatī )  இரண்டாம் பாஸ்கர‍ரால் சமஸ்கிருத‍த்தில் கி.பி. 1150 இல் எழுதப்பட்ட கணித நூலான சித்தாந்த சிரோன்மணி என்ற நூலின் முதல் பகுதி ஆகும்.இந்தப்  பகுதியின் பெயர் பாஸ்கர‍ரின் மகளான லீலாவதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.  பீ ஜ கணிதம், கிரஹ கணிதம், கோளத்யாயம் என்ற தலைப்புகளில் இந்துக்களின் கணித அறிவு விளக்கப்பட்டுள்ளது ; மேலை நாட்டினாருக்கும் முன்னதாகவே ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா ஆகி யவற்றினை சுவைபட விளக்கும் சம்ஸ்க்ருத நூல் 

Srirangam Temple Tower.

To be continued……………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 ,லீலாவதி,லிங்கம், சிவலிங்கம், லெமூரியா, லாஸ்யம்