Hinduism through 500 Pictures in Tamil and English 42; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-42 (Post.15,527)

Sarabha 

Written by London Swaminathan

Post No. 15,527

Date uploaded in London – 23 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நாரதர்

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் சாந்தோக்ய உபநிஷத்திலும் நாரதர் பெயர் அடிபடுகிறது; ஆகையால் வேதத்துக்கும் முந்தியவர் என்றால் மிகையாகாது

நாரதர் தேவரிஷியாகவும், கலகப் பிரியராகவும், ஸ்ரீமந் நாராயணனின் தீவிர பக்தராகவும் அறியப்படுகிறார். மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட!

நாரதர் பெரிய விஷ்னு பக்தர்; த்ரி லோக சஞ்சாரி ; பிரபஞ்சம் விட்டுப் பிரபஞ்சம் செல்லுமற்புத சக்தி உண்டு; சென்றவிடமெல்லாம் சர்ச்சசையைக் கிளப்புவார் ; அது நன்மையில் முடியும்; வீணையைக் கண்டு பிடித்தவர்; எப்போதும் வீணையைக்  கையில் வைத்திருப்பார்; நடராஜர் நடனத்தை குதிரைமுகம் கொண்ட இசை மேதை தும்புருவுடன் நின்று ரசிப்பார். இவரைப்பற்றிய எண்ணற்ற கதைகள் உண்டு;

தமிழ் இலக்கியத்தில் முதல் தடவையாக, சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை வருகிறது; இவர் இசை மேதை. ஜோதிட வல்லுநர்; பரம யோகி ; ரிஷிகளின் தலைவர் ; பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்.

பக்தியின் ஒட்டுமொத்த உருவம் இவர்; நாராயண நாராயண என்று வினாடிதோறும் ஜெபிப்பவர். நாரத பக்தி சூத்திரம்நாரத புராணம், நாரத தர்ம சாஸ்திரம் என்று பல நூல்கள் இவர் பெயரில் உள்ளன

தனது பக்தி சூத்திரத்தில் பக்தி எத்தனை வகைப்படும் என்பதை நாரதர் விளக்குகிறார்.

நாரதர்  “கலகம் நன்மையில் முடியும்” என்ற தத்துவத்தின்படி, நாரதர் பிரச்சனைகளை உண்டாக்கி, இறுதியில் அதற்குத் தீர்வும் காணும் பல சம்பவங்கள், கதைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

நாரத கலகப் ப்ரியா – பாரிஜாத மரத்தின் கதை:

நாரதர் கலகம் – அனுமன்-ராமன் போட்டி:— சில எடுத்துக்காட்டுகள்

வால்மீகி ராமாயணத்தில் வரும் “தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்” என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமை பற்றிக் கூற! நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.

Narada

Nārada, is a revered divine sage in Hinduism, known as a mind-born son of Brahmā. He is a pivotal figure in Vaishnavism and Puranic literature, recognized for his immense wisdom, devotion, and role as a messenger between the divine and devotees. 

In Tamil literature Ilango used the word Naradar Veenai in Silappadikaram.

From Kanchi Shankaracharya’s1894-1994  speech,

Unlike Svetaketu, sage Narada who had mastered all branches of learning, was humble and full of regret that he had been ignorant of the atman. He finds enlightenment in the teachings of Sanatkumara which are included in the Chandogya Upanishad.  In the Chandogya Upanishad, Narada speaks about the subjects he learned and they included puranas. From this we infer that they must have existed during the time of the Vedas and the Upanishads.

The Rig Veda describes him as of the Kanwa family. Another authority says he sprang from the head of Brahma.

He is the inventor of veena and the chief of the Gandharvas or heavenly musicians.in later times he is connected with the legends of Krishna.

Narada was also one of the great writers upon law. His textbook called Naradiya dharma sastra  has been translated into English by dr jolly 100 years ago.

Narada purana has 3000 slokas.  They glorify bhakti. Narada has many other appellations Kali-karaka/strife maker, Kapi vaktra/monkey faced and Pisuna/messenger/spy.

He is always portrayed with Nataraja where he is standing with Tumburu. 

  • Role and Characteristics: He is considered a “king of sages” (Rishi raja) with the ability to travel across heavenly, earthly, and subterranean worlds.
  • Symbolism: He symbolizes spiritual dedication, musical expertise, and sometimes serves as an instigator of healthy conflict (troubleshooter) to fulfill a higher divine purpose.

Muni Narada also appears in Jainism as a divine sage, representing wisdom and focusing on issues such as discouraging animal sacrifice.

  • Divine Messenger: Considered the first journalist on Earth, he frequently interacts with deities, humans, and sages, often transmitting crucial information. He is an Inter Galactic Traveller; he can go to any place on earth or universe. He is called Triloka Chanchari
  • Devotion and Wisdom: As a foremost devotee of Vishnu, he sings his praises while traveling with his musical instrument, the Veena.
  • The Narada Bhakti Sutra: Credited as the author of this important text, which emphasizes the path of devotion as a means of self-realization.
  • Role in Mythology: He is portrayed as a creator of necessary conflict or “mischief” that ultimately results in a greater good or lesson, earning him the reputation of a divine troublemaker who facilitates spiritual progress.
  • Appearance and Attributes: Often described as a serene sage, he is known for his ability to travel freely across all worlds. 
  • Star Trek: The Narada is the name of the mining vessel/warship commanded by Nero, which serves as the primary antagonist ship in the 2009 Star Trek film

·         Narada with veena is referred to in Tamil epic Silappadikaram . Narada is distinguished from other sages by the veena which he holds in his hands, being always engaged in singing the praises of Vishnu. His catch phrase is Narayana Narayana.

***

தும்புரு

தும்புரு (Tumburu) இந்து புராணங்களில் போற்றப்படும் மிகச்சிறந்த தேவலோக கந்தர்வ இசைக்கலைஞர் ஆவார். இவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்டவராக வர்ணிக்கப்படுகிறார். இந்திரன் மற்றும் குபேரனின் அவைகளில் பாடக்கூடிய இவர், நாரதருக்கு இணையான இசை ஞானம் கொண்டவர். இவர் வீணை போன்ற நரம்பிசைக் கருவியை வாசிப்பதில் வல்லவர்.

காசியபர் முனிவரின் மூத்த மகனான இவர், குதிரை முகத்துடன் காட்சி தருகிறார்.

நாரதருக்கு இசையில் குருவாகவும், நாரதருக்கு நிகரான இசை வல்லுநராகவும் கருதப்படுகிறார்.

திருப்பதி தும்புரு தீர்த்தம்: திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி இவர் தவம் இருந்த இடம் ‘தும்புரு தீர்த்தம்’ எனப் போற்றப்படுகிறது.

மனைவி: ரம்பா இவருடைய மனைவி.

கதை: இராமாயணத்தில், தும்புரு ஒரு சாபத்தினால் பூமியில் விராத என்ற அசுரனாகப் பிறந்து, பின்னர் ராமரால் சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இவரது இசைத்திறன் நாரத கானத்திற்கு இணையான ‘தேவ கானம்’ என்று போற்றப்படுகிறது. ஆடல் வல்லானின் நடனத்தைக் காண எப்போதும் நாரதர் அருகில் நிற்பார்.

Tumburu

Tumburu is one of the most celebrated celestial musicians in Indian mythology. He is usually recognized with his horse head. This horse faced Gandharva is described in ancient Indian literatures as a master of music, skilled in dancing, good in playing stringed instruments. He leads the Gandharvasin music and singing

Tumburu (तुम्बुरु) was the son of Kaśyapa, son of Marīci and grandson of Brahmā, born of his wife Pradhā. Of the sons of Kaśyapa the four Gandharva sons, Tumburu, Bāhu, Hāhā and Hūhū were noted for their sweet and pleasant conversation

2) (i) This sage was one among the many sages who came from the north to visit Śrī Rāma on his return to Ayodhyā after the exile. Those who came from the north were—Kaśyapa, Vasiṣṭha, Atri, Viśvāmitra, Gautama, Jamadagni, Bharadvāja, Sanakādis, Śarabhaṅga, Durvāsas, Mataṅga, Vibhāṇḍaka and Tumburu. (Uttara Rāmāyaṇa).

2) (ii) Tumburu was one among the ṛṣis who visited Bhīṣma lying on his bed of arrows. (Chapter 47, Śānti Parva).

Tumburu (तुम्बुरु) was a gandharva (demi god) who, owing to a curse, became a demon (yakṣa). Tumburu, in the service of Kubera, lord of treasures, happens to see Rambhā, one of the celestial nymphs and falls in love with her. He tries his luck on her. Being not happy with the attitude of Tumburu, Kubera, curses him to become a terrific demon. On realising his mistake Tumburu begs to Kubera to put a term to the curse. Kubera tells him that he will have an encounter with Rāma and when the latter cuts off his (Virādha’s) arms, he will be relieved from his curse. Till then he will wander in the forest under the name of Virādha.

In Mahabalipuram and Namakkal Trivikrama avatar sculpture shows Tumburu flying in the air.

·         Karanagama says that Tumburu and Narada should be  shown reciting vocal music in the sculptures of Nataraja.

***

சரபேஸ்வரர்

சரபேஸ்வரர், நரசிம்மரின் உக்கிரத்தைக் தணிக்க சிவனார் எடுத்த அவதாரமாகக் கருதப்படும் உக்கிர மூர்த்தி ஆவார். பறவை (அன்னம்), விலங்கு (சிங்கம்), மனித உருவம் கலந்த வினோத வடிவத்தில், எட்டு கால்களுடன் காட்சி தருகிறார். ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது பகை, பயம் மற்றும் தீவினைகளை அகற்றி, எண்ணிய காரியங்களை வெற்றியாக்கும் என நம்பப்படுகிறது.

அவதார நோக்கம்: ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னும் நரசிம்மரின் கோபம் தணியாததால், சிவபெருமான் சரபப் பறவையாக விஸ்வரூபம் எடுத்து அவரை சாந்தப்படுத்தினார். வைணவர்கள் இதை ஏற்பதில்லை!

பிரசித்தி பெற்ற தலம்: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில் மிக முக்கியமான தலம். சென்னை மயிலை ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலும் குறிப்பிடத்தக்கது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தாராசுரம், கிருஷ்ணாபுரம் முதலிய இடங்களில் சரபேஸ்வரர் சிற்பங்கள் உள்ளன

***

Sarabha

Sharabha is a creature in Hindu mythology that is part lion and part bird. According to Sanskrit literature, Sharabha is an eight-legged beast, mightier than a lion and elephant and which can kill the lion. Sharabha, can clear a valley in one jump. In later literature, Sharabha is described as an eight-legged deer.

Śarabha (शरभ) is the name of some wild animal in the Atharvaveda and later. In the classical literature it is a fabulous, eight-legged beast, dwelling in the snowy mountains, a foe of lions and elephants.

It is known as a ferocious form of Lord Shiva—often part-lion and part-bird—created to subdue Narasimha, the avatar of Vishnu. The Vaishnavas refute the portrayal of Narasimha as being destroyed by Shiva-Sharabha and regard Sharabha as a name of Vishnu.

It also appears in Buddhist literature (Sarabhamiga Jataka). 

  • Shiva Purana: Sarabha is an incarnation of Shiva, specifically the “Annihilator” form created to calm Narasimha’s fury.
  • Mythological Beast: Described in Sanskrit literature as an eight-legged beast or deer, capable of jumping over valleys.

Sharabha according to Kalikagama.—The body of Sharabha should be that of a bird of golden hue, having two red eyes; and it should have two up-lifted wings and eight limbs. Sharabha, which is said to be mightier than an elephant, should have the fierce face of a lion grinning widely, having tusks and wearing Kiriti makuta. The torso of Sharabha resembles that of human male having four hands. The lower part of its body should resemble that of a lion having four legs, sharp claws and a tail. Sharabha should be shown carrying the figure of Narasimha in his human form with upraised folded hands, anjali-mudra.

***

Purushamriga

புருஷாமிருகம்

புருஷாமிருகம் (Purushamirugam) என்பது மனித முகம் மற்றும் சிங்க உடலமைப்பு கொண்ட ஒரு புராண வடிவம் ஆகும். இது தீவிர சிவ பக்தராகவும், குபேர வனத்தைக் காப்பவனாகவும் கருதப்படுகிறது. மகாபாரதத்தில், பீமனுடன் போரிட்ட கதையிலும், சென்னை கபாலீஸ்வரர் கோயில் போன்ற சிவத்தலங்களில் வெள்ளி வாகனமாகவும் இது போற்றப்படுகிறது.

தோற்றம்: மனிதத் தலை மற்றும் சிங்கத்தின் உடலைக் கொண்ட உருவம் ; சிவ பக்தி: சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட இது, சிவலிங்கத்தைக் கண்டால் உடனே பூஜிக்கும் பண்புடையது.

மகாபாரதத் தொடர்பு: பீமனின் பயணத்தின்போது அவனைத் தடுத்து நிறுத்திய கதையில், லிங்க பூஜை செய்வதன் மூலம் பீமன் இதனிடமிருந்து தப்பிக்கிறான்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனிப் பெருவிழாவில், புருஷாமிருக வாகனம் முக்கிய இடம் வகிக்கிறது.

தலம்: கொள்ளிட வடகரையில் உள்ள திருப்பராய்த்துறை (திருமழபாடி) போன்ற சிவத்தலங்களில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குபேர வனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, இதைப் பெரும் பலம் வாய்ந்ததாக சித்தரிக்கிறது

திரு மழபாடி : காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.

புருஷாமிருகம் பூஜித்து பேறு பெற்ற தலம்,

கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள மழபாடியில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அதற்கு உடல் வலிமையையும், தீர்க்க ஆயுளையும் பிறரால் வெல்ல முடியாத ஆற்றலையும் இறைவன் அருளினார்..

சிவலிங்கத்தைப் பெற தவம் செய்த புருஷாமிருகத்திற்கு  பூமியைப் பிளந்து கொண்டு வஜ்ஜிர ஸ்தம்ப வடிவமாக ஈசன் தோன்றினார். அதனால் அவருக்கு வச்சிரஸ்தம்பேஸ்வரர் என்று பெயர். பிரமதேவன் பூஜித்த சிவலிங்கமே இங்கு இந்த வடிவமாகத் தோன்றியது. தான் பூஜித்த லிங்கத்தைக் காணாது திகைத்த பிரமதேவன் இந்த இடத்தில் வந்து அதைப் பார்க்கும் போது லிங்கத்தை புருஷாமிருகம் பூஜித்துக் கொண்டிருந்தது.  உடனே  பிரம்மா தனது லிங்கத்தை புருஷாமிருகம் திருடிக் கொண்டு வந்து விட்டதென்று எண்ணி அதனுடன் போர் செய்யத் தொடங்கினார். போர் நீடித்துக் கொண்டே போன சமயம் பரமசிவன் லிங்கத்தினின்று தோன்றி, “யாமே இந்த மிருகத்தின் தவத்திற்கு இரங்கி இங்கு வந்து விட்டோம் இந்த மிருகம் திருடவில்லை. இனி யாம் இங்கேயே இருப்போம். நீ இங்கு வந்து பூஜை செய்க” என்று அருளினார்.

சிவபூஜையைத் தொடர்ந்து செய்த புருஷாமிருகம் ஆடகேஸ்வரர் என்ற மூர்த்தி எழுந்தருளியிருக்கும் கீலமலை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தது.

சிவபக்தியில் சிறந்து விளங்கிய புருஷாமிருகத்தை சிவ பகதர்கள் பெரிதும் போற்றுவர்.

பீமனுக்கும் புருஷாமிருகத்திற்கும் நடந்த ஓட்டப்பந்தயத்தில் புருஷாமிருகம் தன்னை ஓட்டத்தில் வென்று விட்டால் பீமனை விட்டு விடுவதாகக் கூறவே பீமன் பந்தயத்திற்கு இணங்கினான். பந்தயத்தில் பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியேயும் ஒரு கால் எல்லைக்கு உள்ளேயும் இருக்கவே புருஷாமிருகம் பீமனைத் தோற்றதாகக் கூறியது.பீமனோ வெளியே இருந்த ஒரு காலைக் காட்டித் தான் வென்றதாகக் கூறினான். இதற்கு நடுவராக இருந்த தர்மபுத்திரர் தீர்ப்பு சொல்ல வேண்டி இருந்தது. அவர் தீர்க்கமாக புருஷாமிருகமே வென்றதாக அறிவித்தார். தம்பிக்காக சலுகை காட்டவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்தது. நடுவுநிலைமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை கூற விழைந்த குருபாததாசர் தனது குமரேச சதகத்தில் 61ஆம் பாடலில் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறுகிறார்.

வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்

வருமென்றும் நேசரென்றும்

வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன

வானென்றும் ஏழையென்றும்

இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்

எள்ளள வுரைத்திடாமல்

எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்

ஏற்கச்ச பாசமதமாம்

முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்

மொழிந்திடின் தர்மமதுகாண்

முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று

முன்தருமர் சொன்னதலவோ?

மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட

வளர்ந்தருள் குழந்தைவடிவே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே.

Purushamriga

Purusha Mrga Vahana in Temples

Purushamriga, translating to “human-beast” in Sanskrit, is a mythological creature from Hindu tradition, often described as having a human head/torso and a lion’s body. it is frequently depicted on the entrance pillars of South Indian temples to ward off evil and absorb worshippers’ sins. 

  • Mythology: Mentioned in the Mahabharata (Sabha Parva), it is considered one of the greatest devotees of Lord Shiva.
  • Appearance: Typically portrayed with a human face and a lion’s body, sometimes referred to as ‘Vyagra Paada’ (tiger-footed).
  • Symbolism: It functions as a guardian figure protecting sacred spaces.
  • Depictions: Examples are found at the Brihadeeswara Temple in Tamil Nadu and the Someswara Temple in Kolar, Karnataka. 

It is distinct from the Egyptian Sphinx, with its own specific significance within Indian iconography. 

One of the fierce forms of siva is sarabhamurti. Lord siva assumed this form in order to suppress the pride of narasmha, man lion incarnation of Vishnu.

The karanagama describes sarabha as having eight legs, three eyes, long nails two hands and a  body glowing like fire. Sarabhamurti is sculpted in Dharasuram and Madurai.

The story of Bhima and the Purusha-mruga (also known as Vyagrapada) is a fascinating episode from the Mahabharata, commonly found in South Indian versions of the epic, which highlights Bhima’s strength, his devotion to Shiva, and the pivotal role of Hanuman. 

The Background
During the preparation for the Rajasuya Yagna conducted by Yudhishthira, it was considered auspicious to have the presence of a Purusha-mruga—a unique, divine creature with a human face and a lion’s body, who was a great devotee of Lord Shiva. This creature resided in the gardens of Kubera. 

The Challenge
Bhima was assigned the task of inviting the Purusha-mruga. Upon being invited, the beast agreed to attend the yagna on one condition: Bhima had to win a race against him. If Bhima lost, the Purusha-mruga would eat him. 

The Race and Hanuman’s Intervention

  1. The Race: As they ran toward Hastinapura, the Purusha-mruga was much faster and almost caught up with Bhima.
  2. The Escape Plan: Knowing his brother might fail, Krishna had advised Bhima to take three hairs from Hanuman (Bhima’s brother) for protection.
  3. Shiva Devotion: As the Purusha-mruga gained on him, Bhima threw one of Hanuman’s hairs, which immediately turned into numerous Shiva Lingas.
  4. The Delay: The Purusha-mruga, being a staunch devotee of Lord Shiva, had to stop and worship every single Linga, allowing Bhima to get ahead.
  5. The Final Stretch: Bhima used this tactic three times. However, just as Bhima crossed the gates of Hastinapura, the Purusha-mruga managed to grab Bhima’s foot. 

The Judgment
A dispute arose: was Bhima fully inside, or did the creature rightfully catch him? The case was taken to Yudhishthira. The Purusha-mruga asked Yudhishthira to deliver justice, saying, “As per condition, I can consume his leg.” Yudhishthira, acting with impartiality, ruled that since the leg was outside the door, the beast could eat it. 

Bhima and Purushamrga in Krishnapuram

The Resolution
Impressed by Yudhishthira’s unbiased judgment—even when it came to his own brother—the Purusha-mruga blessed the Pandavas and decided to bless the yagna with his presence without eating Bhima. 

  • Symbolism: The Purusha-mruga is often regarded as a “Hindu Sphinx”.
  • Temples: Carvings of the Purusha-mruga can be found in South Indian temples, such as the Thillai Nataraja Temple in Chidambaram and the Bhuleshwar Temple in Maharashtra.
  • Themes: The story reinforces themes of righteousness (Dharma), the immense power of devotion to Shiva, and the wisdom of Yudhishthira. 

–subham-

Tags – Narada, Tumburu, Sarabha, Purushamrga, 42Hinduism through 500 Pictures in Tamil and English 42; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-42, நாரதர் , சரபேசர், புருஷாமிருகம், தும்புரு , சர்ப்ப பக்ஷி, Bhima

Krishna and Balram killed 21 Demons (Post No.15,526)

Written by London Swaminathan

Post No. 15,526

Date uploaded in London – 23 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Lord Krishna killed numerous demons and tyrants to restore dharma, primarily during his childhood in Vrindavana and later in Mathura and Dwarka. Key demons included Putana, Trinavarta, Aghasura, Bakasura, Dhenukasura, Keshi, Vyomasura, Narakasura, and his maternal uncle, Kamsa. His elder brother Balarama also joined him in his adventurous deeds.

1

Putana (Witch): Attempted to poison Krishna with her breast milk.

Putana was a demoness sent by King Kansa to kill the infant Krishna by breastfeeding him with poisoned milk. Disguised as a beautiful woman, she entered Gokul, but Krishna sucked her life force along with the poison, killing her.

2

Trinavarta (Whirlwind): Sent by Kamsa to carry away the infant Krishna.

 Trinavarta  was a demon in the form of a whirlwind sent by King Kansa to kill infant Krishna; he kidnapped the child by creating a massive dust storm in Gokul. As he flew into the sky, Krishna became unimaginably heavy, choking the demon, causing him to crash to the ground dead. Krishna was found unharmed, playing on the demon’s body.

3

Sakatasura (Cart): A ghost inhabiting a cart, broken by infant Krishna.

The Sakatasura anecdote tells of Lord Krishna killing a cart-demon sent by Kamsa to harm him during his childhood. As a three-month-old baby, Krishna kicked over a cart (his disguises) when it tried to crush him, killing the demon.

4

Vatsasura (Calf): Disguised as a calf, killed by being thrown into a tree.

Vatsasura was a demon sent by Kamsa to kill Krishna and Balarama in Vrindavana by disguising himself as a calf. While grazing calves, Krishna recognized the demon, caught him by his hind legs and tail, and spun him to death before throwing him into a tree.

5

Bakasura (Crane Demon):

One day, Kansa called for Bakasura – a fearsome bird – and told him to go get rid of Krishna. At that time, Krishna was playing in the forest with his friends, until a massive shadow fell on them. Looking up, the kids saw a monstrous bird flying straight at them. As Bakasura swooped down with his beak wide open, Krishna grabbed the sharp beak, and jumped right into it. Bakasura’s beak cracked and broke. The pain was too much, and the demon collapsed to the ground, lifeless.

6

Aghasura (Python): Younger brother of Putana, who swallowed the cowherd boys.

Aghasura was a gigantic serpent demon and brother to Putana and Bakasura, sent by Kamsa to kill Krishna in Vrindavan. He took the form of a long snake, creating a cave-like mouth that tempted cowherd boys and calves inside. Krishna rescued them by killing the demon from within, offering him liberation.

7

Dhenukasura (Ass): Killed by Balarama, with assistance from Krishna, at the palm tree forest.

Dhenukasura was a donkey-demon who guarded the Talavana (palm forest) near Vrindavan, preventing anyone from enjoying its fruits. At the urging of cowherd friends, Lord Balarama and Krishna entered the forest, where Balarama shook the trees, provoking Dhenukasura to attack. Balarama swiftly killed the demon by whirling him around and tossing him into a tree.

8

Kaliya (Serpent): Subdued and banished from the Yamuna river.

Kaliya, a Naga (serpent), moved to the Yamuna River to flee Garuda, contaminating the water so heavily that birds and trees died and the area was rendered inhabitable, say Villains Wiki and Facebook post.

While playing, Krishna’s ball went into the river, prompting him to climb a Kadamba tree and jump in to confront the beast,

Kaliya wrapped his coils around Krishna, attempting to kill him. Krishna, as a child, grew in size and began dancing on the snake’s heads, crushing him.

Kaliya’s wives, the Nag-patnis, pleaded for mercy. Krishna granted this, ordering Kaliya to leave the Yamuna forever and return to Ramanaka Dwipa, promising him safety from Garuda.

9

Pralambasura (Fiery/Forest): Slain by Balarama (with Krishna’s aid).

Pralambasura was a powerful demon sent by King Kamsa to kill Krishna and Balarama, who disguised himself as a cowherd boy to join their games in Vrindavan. During a game of tag where losers carried winners, Pralambasura lost to Balarama and carried him, aiming to kill him, but Balarama killed him with a massive blow to the head.

10

Kesi (Horse): A horse demon who was killed by Krishna.

Keshi (also spelled Kesi or Keśī, meaning “the hairy one”) is a fearsome horse-demon who was sent by the evil King Kamsa to kill Lord Krishna.

  •  After his other demons failed to eliminate Krishna, Kamsa sent Keshi, a mighty demon capable of shapeshifting, to Vrindavan to destroy him.
  • Keshi took the form of a gigantic, ferocious horse. He created chaos in Gokula, terrifying residents, shattering the earth with his hooves, and roaring so loudly that clouds were scattered.
  • Krishna, along with his cowherd friends, challenged the horse. Keshi charged at Krishna with his mouth open, intending to devour him. Krishna, appearing unfazed, caught the demon’s legs and threw him a significant distance.
  • Reinvigorated, Keshi charged again. This time, Krishna thrust his left hand into the demon’s gaping mouth
  • Inside the demon’s throat, Krishna’s hand began to expand, choking Keshi. The demon fell to the ground dead.

11

Vyomasura (Sky/Bat): Killed while trying to hide with cowherd boys.

Vyomasura (“sky demon”) was a magical demon and son of Mayasura, sent by Kamsa to kill Krishna. While playing a game of thieves and sheep with cowherd boys on Govardhana Hill, Vyomasura disguised himself as a cowherd and kidnapped most of the boys, trapping them in a mountain cave. Krishna killed him to rescue his friend

12

Kamsa (Uncle): Tyrannical king of Mathura.

A tyrannical king of Mathura. Maternal uncle of Krishna . son of ugrasena and father of Devaki, mother of Krishna. He married twin daughters of Jarasandha named Asti and Prapti, king of Magadha. He deposed his father Ugrasena. It was foretold that a son born of Devaki should kill him. So he killed all children born to her except two. Balarama, her seventh son was smuggled out to Gokula and was brought up by Rohini. When Krishna was born as the eighth child his parents fled with him. The tyrant then gave orders to kill all vigorous male children . Kamsa persecuted Krishna and at the end Krishna killed him. Because of this he earned the enmity of Jarasandha. Kamsa was also called kalaankura, the crane.

***

13

Narakasura (Demon King): Killed for ruling with terror and imprisoning thousands of women.

Narakasura,, the son of Bhudevi (Earth Goddess) and Vishnu’s Varaha avatar, was known for his tyranny, abduction of 16,100 women, and theft of divine treasures. He was killed by Lord Krishna and Satyabhama (reincarnation of Bhudevi) to restore righteousness, with his death celebrated as Naraka Chaturdashi before Diwali. 

  • Born from the union of Vishnu’s Varaha form and Bhudevi, he was initially pious but grew arrogant and evil due to the influence of Banasura.
  • He terrorized the three worlds (heavens and earth), stole Aditi’s (mother of gods) earrings, and forced 16,100 women into captivity.
  • Due to a boon, he could only be killed by his mother. Satyabhama, Krishna’s wife and Bhudevi’s reincarnation, fought him, while Krishna killed him with the Sudarshana Chakra.
  • Legacy (Diwali): He requested that his death be celebrated as a victory of light over dark, leading to the tradition of Naraka Chaturdashi, where his effigies are burned.
  • Liberation of Wives: Following his death, Krishna married the 16,100 women rescued from captivity to restore their social honor.

14

Shishupala

Shishupala was a Chedi king in the Mahabharata born with three eyes and four arms, destined to die at Krishna’s hands. Due to a promise made to Shishupala’s mother, Krishna forgave his first 100 insults, but killed him with the Sudarshana Chakra at the Rajasuya Yajna after the 101st insult, granting him liberation.

Birth & Prophecy: Born to Damaghosha and Shrutashrava (Krishna’s aunt), his physical abnormalities vanished when placed on Krishna’s lap, confirming the prophecy.

The Promise: His mother, knowing his destined death, persuaded Krishna to pardon 100 offenses.

Enmity toward Krishna: Shishupala harbored deep hatred after Krishna married Rukmini, who was intended for him.

The Final Insult: At Yudhishthira’s Rajasuya sacrifice, Shishupala insulted Krishna when he was honored as the supreme guest. Krishna unleashed the Sudarshana Chakra after the 100th insult.

Liberation: Shishupala was a reincarnation of Jaya (a gatekeeper of Vishnu) cursed to spend three lives as Vishnu’s enemy. His death by Krishna granted his soul liberation

15

Dantavakra: Dantavakra, the King of Karusha and a cousin to Krishna, was a ferocious enemy of Krishna, acting as a mortal incarnation of Vishnu’s gatekeeper, Vijaya. Seeking to avenge the death of his friend Shishupala, he attacked Krishna alone with a mace but was killed, granting him salvation.

16

Wrestler Chanura

The fight between Chanura/Mushtika and Krishna/Balarama was a pivotal wrestling match held in Mathura, orchestrated by King Kamsa to kill Krishna. 

  • Kamsa invited Krishna and Balarama to a Dhanur Yajna (bow ceremony) intending to trap them. He set up his strongest wrestlers, Chanur and Mushtika, to fight the young brothers, hoping to end them.
  • Despite the unfair matchup, Krishna fought Chanur while Balarama took on Mushtika. The fight took place in an arena watched by Kamsa.
    • Krishna defeated and killed Chanur, showcasing his divine strength.
    • Balarama defeated and killed Mushtik.
  • Aftermath: Following the defeat of these champions, Krishna killed the tyrant king Kamsa in a subsequent confrontation in the same arena.

17

Wrestler Mushtika

18

Arishtasura (Bull Demon)

The demon Ariṣṭa wanted to kill Krishna and Balarāma, and thus he assumed the form of a huge bull with sharp horns. Everyone in Kṛishṇa’s cowherd village became terrified when Ariṣṭāsura approached it;but twhen the bull demon charged him he seized him by the horns and threw him to the ground and thrashed him like a pile of wet clothing. The demon gave up his life.

19

Kala Yavana

Kalayavana- kaalayavana

Kālayavana (कालयवन).—a kind of yavanas and enemy of Kṛṣṇa and an invincible foe of the Yādavas. Kṛṣṇa, finding it impossible to vanquish him on the field of battle, cunningly decoyed him to the cave where Muchakunda was sleeping who burnt him down.

Lord Krishna was chased by a Kala yavana and Krishna entered the cave where Mucukunda was sleeping. When Mucukunda became tired he got a boon from God to sleep undisturbed for a long time in a cave. Kalayavana also entered the cave and slapped on Mucukundan thinking that it was Krishna pretending to sleep. When Mucukunda opened his eyes, Kalayavana was burnt to ashes. Tricky Krishna came out of his hiding and blessed Mucukunda.

20

Kuvalayapeedam

The anecdote of Kuvalayapida (often referred to as Kuvalaya Peedam in Tamil contexts) concerns a massive, intoxicated royal elephant sent by the tyrant King Kamsa to kill Lord Krishna and his brother Balarama upon their arrival in Mathura. 

  • The Trap: Knowing that Krishna was destined to destroy him, Kamsa arranged a wrestling match and stationed his most feared, maddened elephant, Kuvalayapida, at the gate of the arena, managed by a skilled rider.
  • The Challenge: As Krishna and Balarama approached the entrance, the mahout ordered the elephant to attack.
  • The Victory: Krishna accepted the challenge and, showcasing superhuman strength, seized the elephant by its tusks, broke them off, and used them to instantly kill both the beast and its rider. 

21

·         The Binding (Damodara): Dama means rope, udara means belly; Krishna is named Damodara for having a rope tied around His abdomen.

·         The Turning Point: Seeing His mother tired, Krishna allows Himself to be bound, demonstrating His love for His devotees.

·         The Liberation: While tied to the mortar, Krishna drags it and topples two Arjuna trees, liberating the sons of Kubera, Nalakubara and Manigriva, who were cursed to be trees.

-subham—

Tags- Demons, killed by, Krishna, Balarama, 21 demons, Narakasura, Diwali, 

கண்ணனுடன் 16,000 பெண்கள்! திருப்புகழில் ரத்தினைக் கற்கள் -53 (Post.15,525)

Written by London Swaminathan

Post No. 15,525

Date uploaded in London – 23 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

53திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 53

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 53

***

கண்ணனுடன் 16,000 பெண்கள் !

காம பாணம் அட்டு அநந்த கோடி மாதரைப்புணர்ந்த …

மன்மதனது பாணம் வருத்தினதால், கணக்கில்லாத மாதர்களைக் கலந்த*

காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா … திருமாலாகிய

ரிஷபத்தின்** மேல் ஏறிய தலைவன், எம் தந்தை சிவன் அருளிய பாலனே,

சேலை நேர்விழிக்குறம்பெணாசை தோளுறப்புணர்ந்து … சேல்

மீனைப் போன்ற கண்ணையுடைய குறப்பெண் வள்ளியை ஆசையுடன் அவள் தோள் பொருந்தச் சேர்ந்து உறைபவனே,

சீரை யோது பத்தரன்பிலுறைவோனே … உன் புகழை ஓதும்

பக்தர்களின் அன்பில் வீற்றிருப்பவனே,

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக … தேவர்களும், பெண்டிரும்,

சித்தர்களும், அடியார்களும் சென்று வணங்கும்

வேளுருக்கு உகந்த … புள்ளிருக்கும் வேளூர் ஆகிய வைத்தீசுரன்

கோயில் என்னும் தலத்தை உகந்த பெருமாளே,

சேவல் கேது சுற்று உகந்த பெருமாளே. … சேவற்கொடி

சுற்றியிருக்க மகிழும் பெருமாளே.

கண்ணபிரான் நரகாசுர வதை செய்துப் பின் கொண்டுசென்ற மந்தரமலையின் சிகரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த தேவ, கந்தர்வ, சித்த கன்னிகைகள் பதினாயிரம் பேரையும் மணந்து கொண்டு, கண்ணன் துவாரகையில் வாழ்ந்தான் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

** திரிபுர சம்ஹாரத்துக்கு சிவன் எழுந்த தேர் அச்சு அறுந்து விழுந்த போது, தேர் நிலை கலங்க, திருமால் ரிஷப உருவத்தில் சிவபிரானைத் தாங்கினார் – சிவ புராணம்.

***

ஆழ்வார் பாடலிலும் இது உள்ளது

நரகாசுரனிடமிருந்து 16,000 தேவியரை மீட்ட செய்தி

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க

வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்

பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை

எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.–பெரியாழ்வார் திருமொழி 4-1

அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன்.  கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான்  அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.  16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.  தேவர்கள் எல்லோரும்  கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

***

திருப்புகழில் ரத்தினைக் கற்கள்

சுழலும் எனது உயிர் மவுன பரம சுகம் மகா உததி படியாதோ …

சுழல்கின்ற என்னுடைய உயிர் மவுன நிலை என்கின்ற பரம சுகம் ஆகிய பெரிய கடலில் மூழ்கித் திளைக்காதோ?

கவள கர தல கரட விகட கபோல பூதர முகமான … வாயளவு

கொண்ட உணவை உட்கொள்ளும் துதிக்கையையும், மதம் பாயும் சுவடு கொண்ட அழகிய கன்னத்தையும், யானையின் முகத்தையும் கொண்ட

கடவுள் கணபதி பிறகு வரும் ஒரு காரணா கதிர் வடிவேலா …

கடவுளாகிய கணபதிக்குப் பின்னால் தோன்றிய ஒப்பற்ற மூலப்

பொருளே, ஒளி வீசும் வடி வேலனே,

பவள மரகத கநக வயிர கபாட கோபுர அரி தேரின் பரியும்

இடறிய புரிசை தழுவிய பாகை மேவிய பெருமாளே. …

பவளத்தின் செந்நிறத்தையும், மரகதத்தின் பச்சை நிறத்தையும்,

பொன்னின் மஞ்சள் நிறத்தையும், வைரத்தின் வெண்மை நிறத்தையும் கொண்ட கதவுகளையும், கோபுரத்தையும் கொண்டு, சூரியனது தேரின் குதிரைகளும் இடறும்படி உயர்ந்துள்ள மதில்கள் சூழ்ந்துள்ள பாகை*என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.

***

கபடிகள் அசடிகள்விகடிகள் ,கசடிகள்திருடிகள் !

விலைமாதர்கள் பற்றி உலகில் அதிகமாகப்  பாடியவர் அருணகிரிநாதர்தான் 1311 திருப்புகழில் பெரும்பாலாவற்றில் ன  முதல் பகுதி விலைமாதர்கள் பாற்றியதே. தனது இளமைக் காலத்தை  அவர்கள்  பாழ் படுத்தியதால் வேறு எவரும் அத்துன்பத்துக்கு ஆளாக்கக்கூடாது என்று ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக வேசிகளைப் பேசியுள்ளார்;  ஏசியுள்ளார் ; இதோ ஒரு பாடல் :

முலை குலுக்கிகள் கபடிகள் வடி புழுக்கைகள் அசடிகள்

முறை மசக்கிகள் திருடிகள் … எப்போதும் தங்கள் மார்பகத்தைக்குலுக்குபவர்கள். வஞ்சனை மனம் உடையவர். வடித்து எடுக்கப்பட்ட இழிந்தவர்கள். முட்டாள்கள். உறவு முறை கூறி மயங்கச் செய்பவர்கள். திருடிகள்.

மதவேள் நூல் மொழி பசப்பிகள் விகடிகள் அழு மனத்திகள் தகு நகை முக மினுக்கிகள் கசடிகள் இடையே சூழ் கலை நெகிழ்த்திகள் … மன்மதனுடைய காம நூலில் கூறியவாறு பேச்சினால்

ஏய்ப்பவர்கள். செருக்கு உடையவர். சிணுங்கி அழுகின்ற மனத்தை உடையவர்கள். தக்க சிரிப்புடன் முகத்தை மினுக்குபவர்கள். குற்றம்  உடையவர்கள். இடுப்பில் சூழ்ந்துள்ள ஆடையைத் தளர்த்தி விடுபவர்கள்.

இளைஞர்கள் பொருள் பறித்து அமளியின் மிசை கனி இதழ்ச்

சுருள் பிளவு இலை ஒரு பாதி கலவியில் தரும் வசவிகள் விழி

மயக்கினில் வசம் அழி கவலை அற்றிட நினது அருள்

புரிவாயே … இளைஞர்களின் பொருளை அபகரித்து, படுக்கையில் கனி போன்ற தங்கள் வாயிதழில் உள்ள சுருள் பாக்கு வெற்றிலையில் ஒரு

பாதியை புணர்ச்சி நேரத்தில் கொடுக்கும் கெட்ட நடத்தை உடையவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) கண் மயக்கில் நான் வசம் அழியும் கவலை என்னை விட்டு ஒழிய உன் திருவருளைப் புரிவாயாக.

***

அருணகிரிநாதருக்கு முருகன் கொடுத்த தீட்சை

தலை நாளில் பதம் ஏத்தி அன்புற உபதேசப் பொருள்

ஊட்டி … வாழ்வின் தொடக்கத்தில் உன் திருவடியை என் தலை மேல் வைத்து, அன்புடன் உபதேசப் பொருளை எனக்குப் போதித்து,

மந்திர தவ ஞானக் கடல் ஆட்டி என்தனை அருளால் … சிவ

மந்திரங்களால் என்னைத் தவ ஞானக் கடலில் ஆட்டுவித்து, என்னை

உனது திருவருளால்

உன் சதுர் ஆகத்தோடு கூட்டி அண்டர்கள் அறியா முத்தமிழ்

ஊட்டி … உன்னைச் சார்ந்த சாமர்த்தியம் உள்ள அடியார்களோடு கூட்டி வைத்து, தேவர்களும் அறியாத முத்தமிழ் ஞானத்தைப் புகட்டி,

முண்டக தளிர் வேதத் துறை காட்டி மண்டலம் வலம் மேவும் …

முண்டக உபநிஷதம் முதலிய உபநிஷத உண்மைகளையும் வேத

வழிகளையும் புலப்படுத்தி, அக்கினி முதலிய மும் மண்டல ங்களையும் உள்ள மேலிடத்தில்,

கலை சோதிக் கதிர் காட்டி நன் சுடர் ஒளி நாதப் பரம் ஏற்றி …

இடைகலை பிங்கலை* என்னும் நாடிகளின் மார்க்கமாக ஏற்படும் ஜோதி ஒளியைத் தரிசனம் செய்து வைத்து, ஆன்மாவை நல்ல பேரொளி உள்ளபர நாதத்தோடு (பரசிவத்தோடு) சேர்த்து வைத்து,

முன் சுழி கமழ் வாசல் படி நாட்டமும் கொள விதி தாவி …

முன்னதாக, சுழி முனை நாடி விளங்கும் வாசற்படியில் தியானம்

கொள்ள, சுவாதிஷ்டான** ஆதாரத்தைக் கடந்து,

கமல ஆலைப் பதி சேர்த்து முன் பதி வெளியாகப் புக ஏற்றி …

யோக ஒளியை ஏற்றி வைத்து, (குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும்.)

சஹஸ்ராரம் (Sahasrara) என்பது மனித உடலின் ஏழாவது மற்றும் மிக உயர்ந்த சக்கரமாகும், இது தலை உச்சியில் அமைந்துள்ளது (Crown Chakra). ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாகக் குறிக்கப்படும் இது, பிரபஞ்ச சக்தியுடன் ஆன்மா இணையும் இடம், பேரானந்தம், ஞானம் மற்றும் உச்சக்கட்ட ஆன்மீக உணர்தலை உணர்த்துகிறது.

அன்பொடு கதிர் தோகைப் பரி மேற் கொ(ள்)ளும் செயல்

மறவேனே … அன்புடன் ஒளி வீசும் தோகையை உடைய மயில்

வாகனத்தின் மேல் நீ வந்து அருளிய செயலை நான் மறக்க மாட்டேன்.

……………………………..

சுரர் போற்று(ம்) தண் பொழில் வழுவூர் நல் பதி வீற்றிருந்து

அருள் பெருமாளே. … வழுவூர்*** என்னும் நல்ல ஊரில் வீற்றிருக்கும்பெருமாளே.

இப்பாடல் அருணகிரிநாதர் திருவடி தீக்ஷை, உபதேசம் முதலிய பேறுகளைப் பெற்ற வரலாற்றைக் குறிக்கும்.

–aubham—

Tags- கண்ணனுடன் 16,000 பெண்கள், திருப்புகழில் ரத்தினக் கற்கள், பகுதி -53, விலைமாதர்கள்

வாழ்க்கைக்கு உதவும் சுபாஷிதப் பொன்மொழிகள்! (Post.15,524)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,524

Date uploaded in London – 23 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வாழ்க்கைக்கு உதவும் சுபாஷிதப் பொன்மொழிகள்!

 ச. நாகராஜன் 

1.ராஜா பஷ்யதி கர்ணாப்யாம் யுக்த்யா பஷ்யதி பண்டிதா: |

 ராஜா காதால் கேட்டதை வைத்து எதையும் பார்க்கிறார்; ஆனால் பண்டிதரோ தர்க்கரீதியாக எதையும் பார்த்து நிர்ணயிக்கிறார்.

2. ரஸமூலா ஹி வ்யாத்ய:|

உணவின் சுவையை வைத்தே வியாதிகள் உருவாகின்றன. 

3. யேன கேன ப்ரகாரேண ப்ரஸித்த: புருஷோ பவேத் | 

எந்த வழியினாலாவது ஒருவன் புகழை அடைய வேண்டும்.

4. யாத்ருஷி பாவனா யஸ்ய சித்திர்பவதி தாத்ருஷி| 

எதை ஒருவன் மனதில் நினைத்துத் திட்டமிடுகிறானோ அதற்கேற்பவே

விளைவு அமைகிறது.

5. முராரே த்ரூதிய பந்தா: | 

முராரிக்கு மூன்றாவது வழி உண்டு!

6. கா ப்ராஞோ வாஞ்சதி ஸ்நேகம் வேஷ்யாஸு சிகத்ஹாஸு ச | 

யார் வேசிகளிடத்தும் பாம்புப் புற்றுகளிடத்தும் வாஞ்சை கொள்வார்?

7. தன்யோ க்ருஹஸ்தாஸ்ரம:| 

க்ருஹஸ்தாஸ்ரமே சிறந்தது.

8. தர்மசாரவிஹீனானாம் த் ரவ்யம் மலசஞ்சய: | 

தர்மவழியில் அல்லாது ஒருவனிடம் இருக்கும் பணம் மலத்திற்குச் சமமாமும்.

9. திக்தானம் ச் ரத்தயா ஹீனம். 

சிரத்தையில்லாமல் தரப்படும் தானம் இழிவானதே.

10. தூர்த்தே: கோ நஹி வஞ்சயதே | 

தூர்த்தனால் வஞ்சிக்கப்படாதவர் யார் தான் உண்டு? 

11. ப்ரக்ஷாலநாத்தி பங்கஸ்ய தூராதஸ்பர்ஷணம் வரம்| 

சகதியைத் தவிர்ப்பதானது அதைக் கழுவுவதை விடச் சிறந்தது. 

12. பதிரான்மந்தகர்ண ;ஸ்ரேயான் |   

செவிடனாயிருப்பதை விட மந்தமாகக் காது கேட்க வல்லவன் சிறந்தவன்.

**

21அரக்கர்கள் ‘காலி’! ஆழ்வார் பாசுரங்களில் கிருஷ்ண லீலைகள்! (Post.15,523)

Krishna fighting with wrestlers 

Written by London Swaminathan

Post No. 15,523

Date uploaded in London – 22 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Kamsa killing Male children; Yoga Maya disapperas.

Bhutaki lst her life

Krishna fighting wit wrestlers 

Butter Thief

என்றும் நீல உடை அணிபவன் – பலராமன் ( நீலாம்பரன் )

என்றும் மஞ்சள் உடை அணிபவன் – கிருஷ்ணன் ( பீதாம்பரன் )

மதுப் ப்ரியன் – பலராமன் ( மது அருந்துபவர் )

மாதுப் ப்ரியன் – கிருஷ்ணன் ( கோபியர் பின்னால் சென்றவர் )

வெள்ளைக் காரன் – பலராமன்

கருப்பன் – கிருஷ்ணன்

பனைக் கொடி ஏந்தியவன் – பலராமன்

கருடக் கொடி ஏந்தியவன் – கிருஷ்ணன்

***

ஆழ்வார் பாசுரங்களில் கண்ணனின் லீலைகள் (Krishna Leelas) முக்கிய இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாகப் பெரியாழ்வார் கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளையும், நம்மாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் கோபியர் பாவத்திலும் பாடியுள்ளனர். வெண்ணெய் திருடுதல், கோவர்த்தன கிரியைத் தூக்குதல், கம்ச வதம் போன்ற கிருஷ்ண லீலைகள் ஆழ்வார்களால் பாடப்பட்டுள்ளன.

ஆழ்வார் பாசுரங்களில் விவரிக்கப்பட்டுள்ள முக்கிய கிருஷ்ண லீலைகள்:

குழல் ஊதும் கண்ணன்: கண்ணனின் குழலிசையைக் கேட்டு ஆயர்பாடிப் பெண்கள் மயங்குவதைப் பல ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

வெண்ணெய் திருடுதல்: தமிழ் வேதம் குறிப்பிடுவது போல, வீடுகளில் வெண்ணெய் உண்டது மற்றும் கோபியர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணெய் திருடிய லீலைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

கோவர்த்தன கிரியைத் தூக்குதல்: இந்திரனின் கோபத்திலிருந்து ஆயர்களைக் காக்கக் கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிய நிகழ்வு.

அசுர வதம்: கம்சனால் அனுப்பப்பட்ட கேசி, அரிஷ்டாசுரன் போன்ற அசுரர்களைக் கொன்ற லீலைகளைப் பொய்கையாழ்வார் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

நப்பின்னை மணாளன்: கண்ணன் நப்பின்னையை மணந்த லீலையும் பாசுரங்களில் சிறப்பிக்கப்படுகிறது.

***

பாடிய முக்கிய ஆழ்வார்கள்:

பெரியாழ்வார்: கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகளைத் தன் பிள்ளையாகப் பாவித்து அனுபவித்துள்ளார் (பெரியாழ்வார் திருமொழி).

நம்மாழ்வார் & திருமங்கை ஆழ்வார்: கோபிகை பாவனையில் கண்ணனோடு ஊடல் மற்றும் பிரேமையை அனுபவித்துப் பாடியுள்ளனர்.

குலசேகராழ்வார்: கண்ணனின் லீலைகளைப் பாடியுள்ளார்.

ஆழ்வார்கள் கண்ணனின் லீலைகளை வெறும் கதைகளாகப் பார்க்காமல், அவனது கருணையின் வெளிப்பாடாகவும், பக்தியின் உச்சமாகவும் பாசுரங்களில் அனுபவித்துள்ளனர்.

***

கிருஷ்ணன் கொன்ற அசுரர்கள்

கிருஷ்ணர் அதர்மத்தை அழிக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் கம்சன் அனுப்பிய பல அசுரர்களைத் தனது சிறு வயதிலேயே வதம் செய்தார். பூதனை, சகடசுரன், திருணாவர்த்தன், பகாசுரன், அகாசுரன், தேனுகாசுரன், அரிஷ்டாசுரன், கேசி, வியோமாசுரன் மற்றும் நரகாசுரன் ஆகியோர் கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள் ஆவர்.

கிருஷ்ணரால் கொல்லப்பட்ட முக்கிய அசுரர்கள்:

பூதனை: கிருஷ்ணனுக்கு விஷப்பால் கொடுக்க வந்த அரக்கி (இவர் அழிவின் அடையாளமாக கருதப்படுகிறார்) Wikipedia.

சகடசுரன்: கம்சனின் கட்டளைப்படி வண்டி வடிவில் வந்து கிருஷ்ணனை நசுக்க முயன்றவன்.

திருணாவர்த்தன்: சூறாவளி வடிவில் வந்து குழந்தையைத் தூக்கிச் சென்ற அசுரன்.

பகாசுரன்: கொக்கு வடிவில் வந்து கிருஷ்ணனை விழுங்க முயன்ற அசுரன் Wikipedia.

அகாசுரன்: மலைப்பாம்பு வடிவில் வந்து தோழர்களை விழுங்கியவன் Wikipedia.

தேனுகாசுரன்: கழுதை வடிவில் வந்து தாலவனத்தில் இருந்த அசுரன்.

அரிஷ்டாசுரன்: காளை வடிவில் வந்து கம்சனால் அனுப்பப்பட்டவன்.

கேசி: குதிரை வடிவில் வந்து வந்த அசுரன்.

வியோமாசுரன்: ஆகாயத்தில் மறைந்து அசுர சக்தி கொண்டவன்.

நரகாசுரன்: சத்யபாமாவின் உதவியுடன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன் (சுதர்சன சக்கரத்தால் இரு துண்டாக்கப்பட்டது)

கம்சன்: கிருஷ்ணனின் தாய்மாமன், இவன் மதுராவில் கொல்லப்பட்டான்.

இவர்கள் தவிர, கம்சன் அனுப்பிய பல அசுரர்களை கிருஷ்ணர் மற்றும் பலராமர் வதம் செய்தனர்

****

Krishna killing Bakasura- Crane Demon

Krishna killing Agasura- Python Demon

Krishna killing Dhenukasura a- Donkey

Demon

Krishna dancing on Kaliya Snake

பெரியாழ்வார் திருமொழி – முதற்பத்து

ஐந்தாம் திருமொழி – உய்யவுலகு

(செங்கீரைப்பருவம்)

பாடல் 4

வானவர் தாம்மகிழ வன் சகட முருள

வஞ்சமுலைப்பேயின் நஞ் சமுது உண்டவனே!*

கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்

கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!*

தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்

என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்*

ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.

பொருள்:

விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு (1)சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் (2)நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த (3)வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! (4)தேனுகாசுரன்நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட (5)முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட (6)நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

***

நரகாசுரனிடமிருந்து 16,000 தேவியரை மீட்ட செய்தி

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க

வல்லானை மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல்

பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு பௌவம் ஏறி துவரை

எல்லாரும் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.–பெரியாழ்வார் திருமொழி 4-1

அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம் ;பிரக்யோதிஷ்பூர் என்னும் கிழக்கு இந்திய பகுதியின் மன்னனாக இருந்தவன் நரகாசுரன்.  கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். ஆண்கள் எவராலும் கொல்லப் படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான்  அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.  16 ஆயிரம் பெண்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.  தேவர்கள் எல்லோரும்  கிருஷ்ணனை சந்தித்தனர். விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான். பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

***

கம்சனால் அனுபப்பட்ட வத்ஸாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தா ன். அவன் கன்றுக் குட்டியாக உருமாறி, கிருஷ் ணர் மேய்த்த கன்றுகளுடன் கலந்து நின்றான் கிருஷ்ணர் அதை அடையாளம் கண்டு கொண்டார். அதன்காலைப் பிடித்து தூக்கி விளா மரத்தில் அடித்தார். வத்ஸாசுரன் மடிந்தான்.

இன்னொரு முறை, ஒரு பெரிய கொக்கின்  வடிவில் பகாசுரன் என்பவன் கிருஷ்ணரைக் கொல்ல வந்தான். அதன் அலகுகளைப் பிளந்து, கிருஷ்ணர் கொன்றார். ஒருமுறை, (7)அகாசுரன் என்பவன் விருந்தாவனத்திற்கு வந்தான். ஒரு பாம்பின் வடிவெடுத்து வாயைப் பிளந்தபடி படுத்துக் கொண்டான். கிருஷ்ணரும் அவனது சகாக்களும் பாம்பின் வாயில் புகுந்தனர் ; அதுவும் வாயை மூடியது ;கிருஷ்ணர் தனது உருவத்தை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அகாசுரப் பாம்பு வயிறு கிழிந்து இறந்தது..

Krishna lifting Govardhana Hill.

Krishna killing Horse and Elephant

குன்றினால் குடை கவித்ததும் கோலக்

      குரவை கோத்ததுவும் குடமாட்டும்

கன்றினால் விளவு எறிந்ததும் காலால்

      காளியன் தலை மிதித்ததும் முதலா

வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம்

      அனைத்திலும் அங்கு என் உள்ளம் உள்குளிர

ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்

      காணுமாறு இனி உண்டெனில் அருளே.   

இவ்வடிகள் குலசேகராழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில் (7-ஆம் திருமொழி) இடம்பெற்றுள்ளன. கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் செய்த லீலைகளைப் பாடும் இப்பாசுரம், கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்ததையும், ஆயர்களுடன் குரவைக் கூத்து ஆடியதையும், கன்றைக் கொண்டு விளாமரத்தை வீழ்த்தியதையும், காளியன் தலையில் நடனமாடியதையும் குறிப்பிடுகிறது

ஒரு சமயம் கிருஷ்ணர், யமுனை நதிக்கரைக்கு தனித்துச் சென்றார். அந்த ஆற்றில் (8) காளிங்கன் என்ற நாகம் வசித்தது அதற்கு நூறு தலைகள். அந்தக் கொடிய நச்சுப்பாம்பு, தன் விஷத்தை தண்ணீரில் பரப்பியது.  கிருஷ்ணர் தண்ணீரில் குதித்து அவனது தலையில் ஏறி நர்த்த னமாடினார். வலி தாளாமல் மரண ஓலமிடத் துவங்கினான். அப்போது, காளிங்கனின் பத்தினியர்  ஓடி வந்தனர். எங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தர வேண்டும், என்றனர். கிருஷ்ணர் அதை ஏற்றார். காளிங்கன் அவரை தன் தலையில் உயர்த்தி நீர்மட்டத்துக்கு மேலே கொண்டு வந்து விட்டது. காளிங்கனின் பத்தினியர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். காளிங்கன் அந்த நதியிலிருந்து வேறு இடத்துக்குச் சென்றான் .

(9)தேனுகாசுரன் கதை

தாளவனம் என்ற காட்டில் ஈச்ச மரங்கள் (பனை மரங்கள்) மிகுதியாக இருந்தன, ஆனால் தேனுகாசுரன் என்னும் கழுதை வடிவிலான அசுரன் தன் அசுர நண்பர்களுடன் அக்காட்டை ஆக்கிரமித்து, அதன் பழங்களை யாரும் உண்ணாதபடி தடுத்து வந்தான் கிருஷ்ண பலராமரின் வருகை: கிருஷ்ணரும் பலராமரும் நண்பர்களுடன் அந்தக் காட்டிற்குச் சென்று, தேனுகாசுரனின் கழுதை வடிவ அரக்கர்களைக் கொன்று, பனைப் பழங்களை உண்டு மகிழ்ந்தனர்.

***

Peethambara Krishna, Neelaambhara Balarama 

‘கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.’

ஆண்டாள் திருப்பாவை பாசுரம்- 8

மல்லர்களைக் கொன்ற கிருஷ்ணன்

” மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்”

கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.(10)சாணூரன், (11)சலன் முதலிய மல்லர்களை அழைத்து கண்ணன்,  பலராமன் அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம்செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஆணையிட்டான். அவர்களை கண்ணனும் பலராமனும் கொன்றனர்.

ஆனைகாத்து ஒர் ஆனைகொன்று*  அதுஅன்றி ஆயர் பிள்ளையாய்,*

ஆனைமேய்த்தி ஆனெய் உண்டி*  அன்று குன்றம் ஒன்றினால்,*

ஆனைகாத்து மைஅரிக்கண்*  மாதரார் திறத்து, முன்*

ஆனைஅன்று சென்றுஅடர்த்த*  மாயம் என்ன மாயமே? 

“ஆனை காத்து ஓர் ஆனை கொன்று” என்பது திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தத்தின் 40-வது பாசுர அடி (பாடல் 791). இது கஜேந்திரனைக் (யானை) காப்பாற்ற முதலை வாயிலிருந்து காத்து, கம்சனின் குவலயாபீடம் எனும் யானையைக் கொன்ற கிருஷ்ணனின் மாயாஜால லீலைகளை வியந்து கூறும் பாடல் வரிகளாகும்.

Venugopalan, Flute Master

பாசுரத்தின் விளக்கம்:

ஆனை காத்து: கஜேந்திர ஆழ்வானைக் காத்தது.

ஓர் ஆனை கொன்று: கம்சனின் குவலயாபீடம் என்ற யானையை கொன்றது.

ஆயர் பிள்ளையாய்: ஆயர்பாடியில் கிருஷ்ணனாக வளர்ந்தது.

ஆனை மேய்த்து: பசுக்களை (ஆ) மேய்த்தது.

ஆ நெய் உண்டு: பசுவின் நெய்யை உண்டது.

அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து: கோவர்த்தன கிரியைத் தூக்கி பசுக்களை (ஆ-பசு) மழையிலிருந்து காத்தது.

இந்தச் செயல்கள் அனைத்தும் கிருஷ்ணன் செய்த “மாயம்” (அதிசயங்கள்) என்று ஆழ்வார் போற்றுகிறார்.

(12)‘குவலயாபீடம்’ என்னும் போர் யானையின் பாகனை அழைத்து ‘மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்’ என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்.

(13)கம்சன் கதை

கம்சன் கிருஷ்ணரின் தாய்மாமன். கிருஷ்ணரின் தாயான தேவகியின் அண்ணன் தான் இந்த கம்சன். கம்சனின் விதி கிருஷ்ணரால் முடியும் என்ற அசரீரி ஒலித்தது. இதனால் கிருஷ்ணரைக் கொல்ல பல வழிகளில் முயற்சித்தான் கம்சன். கம்சனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக சானுரா மற்றும் முஷ்டிகா என்னும் மல்யுத்த வீரர்களைக் கொண்டு கிருஷ்ணரைக் கொல்லத் திட்டமிட்டான் கம்சன்.அவர்களையும் வீழ்த்தினான் கண்ணன் .இரண்டு மல்யுத்த வீர்களும் மடிந்தவுடன், யாதவர்களைத் தாக்க படைகளுக்கு உத்தரவிட்டான் கம்சன்.  கிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் கையில் ஒரு வாளோடு கிருஷ்ணரை நோக்கி வந்தான்.  கிருஷ்ணர் சற்று குனிந்து, கம்சன் மீது குதித்து அவர் முடியை பற்றி இழுத்து பின்புறம் இழுத்தார். இதனால் கம்சன் கையில் இருந்த வாள் கீழே விழுந்தது. கிருஷ்ணர் உடனே அந்த வாளைப் பற்றி, தாமதிக்காமல் கம்சனின் தலையைக் கொய்தார்.

(14)அரிஷ்டாஸுரன் ஒரு க்ரூரமான பெரிய எருதின் வடிவில் கண்ணனையும் பலராமனையும் கொல்லலாம் என்கிற வெறியுடன் வந்தான். அவன் கண்ணனை நோக்கி வேகமாக வர, அவன் கால்களை பிடித்து உயரத்தில் தூக்கி வீசி அவனைக் கொன்றான்.

^^^

வாட மருது இடை  போகி* மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*

ஆடல் நல் மா உடைத்து* ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

கூடிய மா மழை காத்த* கூத்தன் என வருகின்றான்*

சேடு உயர் பூம் பொழில் தில்லைச்* சித்ரகூடத்துள்ளானே*3.3.1

உரலில் கட்டப்பட்ட குழந்தை கண்ணன் நெருக்கமான இரண்டு மருத மரங்களின் இடையே

போய் மரங்களை முறித்து இருவரின் சாபம் நீக்கியவனும், கம்சன் அனுப்பிய பயில்வான்களை

கொன்றவனும், நடை பழகுவது போல ஆடி கொண்டு நல்ல பிள்ளையை போல குதிரை

வடிவில் வந்த கேசி என்ற அரக்கனை கொன்றவனும்,

திரண்டு வந்த பலத்த மழையால் பசு மேய்ப்பவர்களுக்கும், பசுக்களுக்கும் ஏற்பட்ட

துன்பத்தை போக்குவதற்காக மலையை குடையாக எடுத்தவன்  கூத்தன் என சொல்லும்படியாக

என் முன்னே நடனமாடி கொண்டே வருகின்றான். அப்பெருமான் ஓங்கிய பூஞ்சோலைகள்

சூழ்ந்த சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!.

(15)கேசி என்னும் அரக்கன் ஒரு பெரிய குதிரை வடிவிலே வந்தான். அவன் வாயைப் பிடித்து, இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்றான். இதை ஆழ்வார்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். பொய்கை ஆழ்வார் தன் முதல் திருவந்தாதியில் “மா வாய் பிளந்து” என்றும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் “துரங்கம் வாய் பிளந்தானுறை தொலைவில்லிமங்கலம்” என்றும் குலசேகர ஆழ்வார் தன் பெருமாள் திருமொழியில் “மாவினை வாய் பிளந்து உகந்த மாலை” என்றும் ஆண்டாள் தன் திருப்பாவையில் “மா வாய் பிளந்தானை” என்றும் , திருமங்கை ஆழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் “மா கீண்ட கைத்தலத்து என் மைந்தா ” என்றும் பாடிப் போற்றினார்கள் துரங்கம் என்பதும் மா என்பதும் குதிரையைக் குறிக்கும் சொற்கள்.

Calf demon killed

(16) கம்ஸன் அனுப்பிய (16) வ்யோமாஸுரன் என்பவன் கண்ணன் இடைப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் தானும் ஒரு இடைப்பிள்ளை வேடத்தில் வந்து ஒவ்வொரு பிள்ளையாகக் கொண்டு போய் ஓரிடத்தில் மறைத்து வைத்துக் கடைசியைல் கண்ணனைக் கொல்லப் பார்த்தான். இதை உணர்ந்த கண்ணன் அந்த இடையன் வேடத்தில் இருந்த யோமாஸுரனையும் கொன்றான்.

***

தூசு போன்ற ரூபத்தில் செயல்படும் (17) திருணாவர்த்தன் என்ற அசுரனை கம்சன் அனுப்பினான். யசோதை கண்ணனை படுக்கையில் கிடத்திவிட்டு வேலை செய்தாள். அந்த நேரத்தில், பயங்கரமான புழுதியுடன் சூறாவளி காற்று ரூபத்தில் திருணாவர்த்தன் வந்து குழந்தையை எடுத்துச் சென்றான். திருணாவர்த்தன் ஆகாயத்தில் உயரே தூக்கிச் செல்லும்போது, கிருஷ்ணர் தனது எடையை  அதிகமாக்கினார். எடையைத் தாங்க முடியாத அசுரன், இறுதியில் கீழே விழுந்து உயிர் துறந்தான். கிருஷ்ணர் பத்திரமாகக் கோகுலம் திரும்பினார்.

***

பாகவதத்தில்  (18) ப்ராலாம்பாசுரன் கதை

கம்சன் அனுப்பிய ப்ராலாம்பாசுரன் இடையன் போல் வேடமிட்டு வந்தான்.கிருஷ்ணனும் பலராமனும் தோழர்களுடன் விளையாடும்போது, ப்ராலாம்பாசுரன் அவர்களுடன் சேர்ந்து, தானும் அவர்களோடு விளையாடினான்.

அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடினார்கள் – ஒருவரை ஒருவர் தூக்கிச் சுமக்க வேண்டும். தோற்றவர்கள் வென்றவர்களைத் தூக்கிச் சுமக்க வேண்டும்.இந்த விளையாட்டில், ப்ராலாம்பாசுரன் பலராமனைத் தூக்கிக் கொண்டு வெகுதூரம் ஓடினான்.

 பலராமன், அவனுடைய உண்மையான அசுர வடிவத்தைக் கண்டு, தன் சக்தியால் அவனைக் கொன்றார். ப்ராலாம்பாசுரன் தலை பிளந்து, அந்த இடத்திலேயே மடிந்தான்.

***

சிசுபாலன் கதை – 

(19).சிசுபாலன் சேதி நாட்டு மன்னன், கிருஷ்ணனின் அத்தை மகன் . பிறக்கும்போதே நான்கு கைகள், மூன்று கண்களுடன் பிறந்த இவன், இந்திரப்பிரஸ்தத்தில் யதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தின்போது கிருஷ்ணரை அவமதித்ததால், சக்ராயுதத்தால் வதம் செய்யப்பட்டான்.

சிசுபாலன் பிறந்தபோது விசித்திரமான தோற்றத்துடன் (4 கைகள், 3 கண்கள்) இருந்தான். எவனொருவன் இவன் மடியில் அமரும்போது இந்த கூடுதல் அம்சங்கள் மறைகின்றனவோ, அவனாலேயே இவன் இறப்பு நேரிடும் என்று அசரீரி கூறியது.

 கிருஷ்ணர் சிசுபாலனை மடியில் எடுத்தவுடன், அவனது கூடுதல் கைகள் மற்றும் கண் மறைந்தன. சிசுபாலனின் தாய் (கிருஷ்ணனின் அத்தை) தன் மகனை கொல்லக்கூடாது என்று வேண்ட, கிருஷ்ணர் சிசுபாலனின் நூறு தவறுகளை மன்னிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

சிசுபாலன், கிருஷ்ணரை எப்போதும் வெறுத்து வந்தான். பாண்டவர்களின் ராஜசூய யாகத்தின்போது, கிருஷ்ணருக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத சிசுபாலன், கிருஷ்ணரை அவதூறாகப் பேசினான்.அவனது நூறாவது அவதூறு முடிந்தவுடன் அடுத்த முறை கேலி செய்தபோது , கிருஷ்ணர் தனது சக்ராயுதத்தால் சிசுபாலனின் தலையை வெட்டினார். 

***

(20)தந்தவக்ரன் கதை

தந்தவக்ரன், ஜராசந்தனின் கூட்டாளியும், சிசுபாலனின் உறவினரும் ஆவான். கிருஷ்ணனின்  பகைவன் ஆவான். தருமனின், இந்திரப்பிரஸ்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள பலராமனுடன் கிருஷ்ணர் சென்ற நேரத்தில், தந்தவக்ரன், துவாரகையை முற்றுகையிட்டுத்  தாக்கினான். மீண்டும் துவாரகையை தந்தவக்ரன் தாக்கிய போது கிருஷ்ணனின் சக்கராயுதத்தால் மாண்டான்.

***

(21). கால யவனன் ( கறுப்பு நிற யவனர் )

ஒரு அசுரர் மன்னன் ; கிருஷ்ணனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து அவரைத் துவாரகைக்கு விரட்டியவன் ; உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்குப் போகச்   செய்தவன் ; ஆயினும் அவனைக் கிருஷ்ணன் தந்திரமாகத் தீர்த்துக் கட்டினார்

மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் .

இந்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கிடைத்தது; நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை யாரவது எழுப்பினால், யார் முகத்தில் விழிக்கிறாரோ அவர் எரிந்து போவார் ; கிருஷ்ணனை கால யவனன் விரட்டிக்கொண்டு வரவே , முசுகுந்தன் தூங்கிய குகையில் கிருஷ்ணன் நுழைந்து ஒளிந்துகொள்கிறார் உள்ளே நுழைந்த காலயவனன் முசுகுந்தனை கிருஷ்ணன் என்று தவறாக எண்ணி எழுந்திரு என்று உதைக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் , காலயவனனனைப் பார்க்கவே அவன் எரிந்து அழிகிறான்.

***

ஸ்வாகதம் க்ருஷ்ணா –ஊத்துக்காடு வேங்கட சுப்ப ஐயர் பாடல்

பல்லவி

ஸ்வாகதம் க்ருஷ்ணா – வரவேண்டும் க்ருஷ்ணா.

சரணாகதம் க்ருஷ்ணா – பணிகிறேன் க்ருஷ்ணா

இஹ. – இங்கு

அனுபல்லவி

போகதாப்த சுலபா – அன்பு ஆர்வம் அல்லது பக்தியினால் அவனை அடைவது சுலபம் .

சுபுஷ்ப கந்த களப – வாசனை மலர்கள்,சந்தணத்தை தரித்தவன்.

கஸ்தூரி திலக மஹிபா – கஸ்தூரி திலகம் அணிந்தபெருமை மிகுந்தவனான அவனே

மம காந்த – என்னுடைய தலைவன்

நந்தகோப கந்த – நந்தகோபர் மகன் .

சரணம்

முஷ்டிகாசூர சாணூரமல்ல மல்லவிஷாரத மதுசூதனா (குவலயாபீட) – முஷ்டிகன் சாணூரன் போன்ற அசுரர்களை மல்யுத்தத்தில் வென்றவன்.மது குவலயாபீட போன்ற அரக்கர்களை .

மர்த்தன- வதம் செய்தவன்

காளிங்க நர்த்தன – காளிங்கன் எனும் பாம்பின் தலை மீது நடனம் ஆடியவன்

கோகுல ரக்ஷண – கோகுலத்தைக் காத்தவன்

ஸகல ஸுலக்ஷண – ஸர்வ லக்ஷணங்களும் பொருந்தியவன்

தேவா சிஷ்ட ஜனபால – தேவர்கள் நல்ல மனிதர்கள் இவர்களை காப்பதில்

ஸங்கல்ப கல்ப ஸதகோடி – பலப்பல கோடி யுகங்களாக

ஸமபராபவ தீர – தீர சிந்தையுடன் விளங்குபவன்.

முனிஜன விஹார – முனிவர்களிடத்தில் வசிப்பவன்

மதன சுகுமார – மன்மதனைப் போன்ற அழகுடையவன்.

தைத்ய ஸம்ஹார – அசுரர்களை வதம் செய்தவன்

தேவா மதுர மதுரதி ஸாஹஸ ஸாஹஸ வ்ரஜ – தன் அற்புத ஸாஹஸங்களினால் தேவர்களுக்கு இனிமையானவன்.

யுவதி ஜன மானஸ பூஜித – கோபிகைகளால் மானஸீகமாக பூஜிக்கப்பட்டவன்.

—subham—

Tags- ஸ்வாகதம் க்ருஷ்ணா , ஊத்துக்காடு வேங்கட சுப்ப ஐயர் , கண்ணன், கொன்ற ,21 அரக்கர்கள் பட்டியல்  ஆழ்வார் பாசுரங்களில், கிருஷ்ண லீலைகள்

சிவனுக்குப் பிடித்த இலைகளும்,  பூக்களும்; முருகனின் 16 லக்ஷணங்களும்-52 (Post.15,522)

Written by London Swaminathan

Post No. 15,522

Date uploaded in London – 22 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 52

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 52

***

ஏழு நரகங்களின் பெயர்கள்

அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் புரள வீழ்வர் … தருமம்

இன்னதென்று கூட விசாரணை செய்யாத மூடர்கள் ஏழு* நரகங்களிலும் புரளும்படி விழுவார்கள்.

ஈராறு கர விநோத சேய் சோதி … பன்னிரண்டு திருக் கரங்களை

உடைய விநோதனே, செவ்வேளே, ஜோதி வடிவானவனே,

புரணம் பூரணாகார முருகோனே … நிறைந்த ஒளி பொருந்திய

பூரண உருவத்தனே, முருகனே,

புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி

வாழ் தேவர் பெருமாளே. … மேகம் உலாவும் விண் நாட்டவர்

போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற புகலி என்னும் சீகாழியில்** வீற்றிருந்து வாழ்கின்ற, தேவர்களின் பெருமாளே.

ஏழு நரகங்கள் பின்வருமாறு:

கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).

***

மனித உடலுக்கு வெவ்வேறு பெயர்கள் !

ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி … அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை,

மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை … மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறுகுடிலாகிய இந்த உடல்

மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்கோலம் எழுந்து … நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து,

ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி … ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும்,

கூனித் தடியோடு நடந்து … கூனித் தடிகொண்டு நடந்தும், ஈனப்படு கோழை மிகுந்த கூளச் சடம் ஈதை … இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை,

உகந்து புவி மீதே கூசப் பிரமாண … மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான

ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று … இந்த உலக

மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி,

கோலக் கழலே பெற இன்று அருள்வாயே … உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக.

***

சொல் விளையாட்டு

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. …

முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி

வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.

மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:

 ஆகவனீயம் – வேதத்தை வழங்கச் செய்வது.

  தக்ஷிணாக்கினி – தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.

  காருகபத்தியம் – பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.

… திருமுருகாற்றுப்படை.

***

முருகனின் 16 அருமையான லக்ஷணங்கள்

சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமும் … மதப்

போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும்

வருபவரான சமயவாதிகளும்,

ஒன்றிலை யென்ற வரும் … தெய்வம் என்ற ஒன்றே இல்லை

என்பவர்களும்,

பறிதலையரு நின்று கலங்க … பறிதலையராம்* சமண குருமாரும் -இவ்வாறு யாவரும் நின்று கலங்க,

விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு … அனைவரும் விரும்பத்தக்க

தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும்**,

நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும் … உபகார

குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும்,

கனமுங்குணமும்பயில் சரவணமும் … சீர்மையையும்,

நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப்

பொய்கையையும்,

பொறையும்புகழுந்திகழ் தனிவேலும் … உனது பொறுமையையும்,

புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும்,

விருது துலங்க சிகண்டியில் … வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில் மீது அமர்ந்து

அண்டரும் உருகி வணங்கவரும்பதமும் … தேவர்களும் மனமுருகி வணங்கும்படியாக வரும் திருவடியையும்,

பல விதரணமுந்திறமுந் தரமும் … பலவிதமான

கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும்,

தினைபுனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து …

தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த மார்பிலே மயங்கி நொந்து,

அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும் … அவளது திருவடியை வருடி,

மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும்,

பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல்

மறவேனே … மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே

பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன்.

பறிதலை என்பது:

சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம் என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.

** சலிகை என்றால் செல்வாக்கு – முருகனின் சலிகை முதலிய 16 அருமையான லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர் வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.

***

சிவனுக்குப் பிடித்த இலைகள் – வில்வம்விளாநாவல் பூக்கள் கொன்றைமாதுளம் பூ 

முந்தைய திருப்புகழ் பாடல்களில் அருகம் புல் முதலியவற்றையும் சேர்த்துள்ளார்

பூமாது உரமேயணி மால் … தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மி தேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும்,

மறை வாய்நாலுடையோன் … வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனான பிரமனும்,

மலி வானவர் கோமான் … கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும்,

முநிவோர்முதல் யாரும் … முநிவர்கள் முதலிய யாவரும்,

இயம்புவேதம் பூராயமதாய்மொழி நூல்களும் … இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில்

ஆராய்வதிலாத அடலாசுரர் … ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும்

போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி … போருக்குப் பயந்து,மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி,

நீ மாறு அருளாயென … நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று

ஈசனை பாமாலைக ளால்தொழுதே … ஈசுவரனைப்

பாமாலைகளால் பாடித்தொழுது,

திருநீறார்தரு மேனிய … திருநீறால் அழகு விளங்கும்

திருமேனியனே,

தேனியல் கொன்றையோடு … தேன் பொதிந்த கொன்றை மலருடனே

நீரேர்தரு சானவி* மாமதி … நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும், சிறந்த நிலவையும்,

காகோதர மாதுளை கூவிளை … பாம்பையும், மாதுளம் பூவையும், வில்வ இலையையும்,

நேரோடம் விளாமுதலார்சடை யெம்பிரானே … நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே,

போமாறினி வேறெது வோதெனவே … நாங்கள் உய்ந்து போகும் வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க என்று முறையிடவே,

ஆரருளாலவர் ஈதரு போர்வேலவ … நிறைந்த கருணையினால் அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே,

நீல கலாவி யிவர்ந்து … நீலத் தோகை மயில் மீது ஏறி

நீடு பூலோகமொடே யறு லோகமு … நீண்ட இந்தப்

பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும்

நேரோர் நொடி யேவரு வோய … நேராக ஒரே நொடிப் பொழுதிலே சுற்றி வந்தவனே,

சுர சேனாபதி யாயவனே … தேவர்களின் சேனாதிபதி ஆனவனே,

உனை யன்பினோடுங் காமா அறு சோம சம ஆனன …

உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே,

தாமாமண மார்தரு நீப … மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை அணிந்தவனே,

சுதாமாவெனவேதுதி யாது … நல்ல திவ்விய ஒளியை உடையவனே என்றெல்லாம் போற்றித் துதிக்காமல்

உழல் வஞ்சனேனைக் காவாய் … திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்வாயாக.

அடிநாள் அசு ரேசரையேசாடிய … அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த

கூர்வடி வேலவ … கூரிய வேலாயுதத்தை உடையவனே,

காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே. … மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்** வீற்றிருக்கும் தம்பிரானே.

இப்பாடலின் முக்கால் பகுதி கந்த புராணச் சுருக்கமாக அமைந்துள்ளது.

சானவி = ஜானவி, ஜன்னு என்ற முநிவரின் காது வழியே சென்றதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் உண்டு.

** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.

சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.

–SUBHAM—

TAGS-  திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் ,Part 52 ஜானவி, சிவனுக்குப் பிடித்த, இலை பூ,   முருகனின்,  16 லக்ஷணங்கள்

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு  – 7 (Post.15,521)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,521

Date uploaded in London –  22 March  2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு  –  7 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

சிவஸ்துதி 

அடுத்து சிவபெருமானைத் துதிக்கிறார் துளசிதாசர்.

मुक्ति जन्म महि जानि ग्यान खान अघ हानि कर।

जहँ बस संभु भवानि सो कासी सेइअ कस न ॥ 

எங்கு சிவபெருமானும், பார்வதியும் வசிக்கின்றனரோ, அந்தக் காசி என்ற க்ஷேத்ரம் முக்தியின் பிறப்பிடம்.  ஞானத்தின் சுரங்கம். பாபங்களை அழிப்பது. அதில் ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடாது?. இங்கு காசியின் மகத்துவத்தைச் சொல்கிறார்.

जरत सकल सुर बृंद बिषम गरल जेहिं पान किय।

तेहि न भजसि मन मंद को कृपाल संकर सरिस॥ 

“எந்த ஆலகால விஷம் கண்டு தேவர்கள் கூட்டம் பொசுங்கிக் கொண்டிருந்ததோ, அதை எவர் அருந்தி விட்டாரோ, ஏ அசட்டு மனமே! அந்தச் சங்கர பகவானை ஏன் பற்ற மாட்டேன் என்கிறாய்? அவர் போல் கிருபை செய்பவர் யார்?” என்கிறார் துளசிதாசர்/

 பாற்கடலைக் கடைந்தபோது கொடிய ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தின் சக்தியை தேவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். அந்த விஷத்தைச் சிவனே அருந்தினார் என்பது வரலாறு. ஸ்ரீமத் பாகவதம் எட்டாவது ஸ்கந்தம் ஏழாவது அத்யாயத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் சிவனே சொல்வது போல வருகின்றன  

आसां प्राणपरीप्सूनां विधेयमभयं हि मे ।

एतावान् हि प्रभोरर्थो यद्दीनपरिपालनम् ॥ ३८॥

तस्मादिदं गरं भुञ्जे प्रजानां स्वस्तिरस्तु मे

तद्विषं जग्धुमारेभे प्रभावज्ञान्वमोदत ॥ ४१ 

“இவர்கள் உயிர் பிழைக்க விரும்புகிறார்கள்; எனவே, அவர்களுக்கு அபயத்தை அளிப்பது என் கடமை. எனவே, இந்த விஷத்தை நான் குடிக்கிறேன். என் குடிமக்களுக்கு நன்மை உண்டாகட்டும்.அந்த விஷத்தைக் குடிக்க நான் முனைந்தேன்; என் சக்தியும் ஞானமும் அதில் மகிழ்ந்தன.” ஈசனின் (பரமாத்மாவின்) உண்மையான நோக்கம் இதுவே — துன்பத்தில் உள்ளவர்களை பாதுகாப்பது. 

பக்தர்களுக்காக விஷத்தையே அருந்த முன்வந்த அந்த சிவபெருமானின் மீது ஏன் பற்று வைப்பதில்லை? என்று தன்னையே நொந்து கொள்கிறார் துளசிதாசர்.

 சிவ பெருமான் தேவர்களுக்காக நஞ்சுண்ட விஷயம் மூன்றாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் திருவுச் சாத்தனம் என்ற திருப்பதிகத்தில் வருகிறது. மேலும் இதில் இராமாயணம் பற்றிய செய்தியும் இடம் பெறுகிறது..

நீரிடைத் துயின்றவன்

தம்பிநீள் சாம்புவான்

போருடைச் சுக்கிரீ

வன்னநு மான்றொழக்

காருடை நஞ்சுண்டு

காத்தருள் செய்தஎம்

சீருடைச் சேடர்வாழ்

திருவுசாத் தானமே. 

பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும் இலக்ஷ்மணனும்  ஜாம்பவான், சுக்ரீவன் ஹனுமான் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிறம் நஞ்சை உண்டி  காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல் கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும். 

மீண்டும் துளசிதாசர் 

சிவ பெருமானின் பெருமையைச் சொல்லிவிட்டு காசியைப் பற்றியும் பாடினார். காசியைப் பற்றி வினய பத்ரிக என்ற நூலில் ஒன்பது சுலோகங்களில் விரிவாகப் பாடியுள்ளார். 

सइअ सहित सनेेह देह भरि,कामधेनु कलि कासी।

समनि सोक संताप पाप रूज, सकल-सुमंगल-रासी।1।

मरजादा चहुँ ओर चरनबर, सेवत सुरपुर-बासी।

तीरथ सब सुभ अंग रोम सिवलिंग अमित अविनासी।2।

अंतरऐन ऐन भल, थन फल, बच्छ बेद-बिस्वासी।

गलकंबल बरूना बिभा िजनु, लूम लसति, सरिताऽसि।3।

दंड पानि भैरव बिषान,तलरूचि-खलगन-भयदा-सी।

लोलदिनेस त्रिलोचन लोचन, करनघंट घंटा-सी।4।

मनिकर्निका बदन-ससि सुंदर, सुसरि-सुख सुखमा-सी।

स्वारथ परमारथ परिपूरन,पंचकोसि महिमा-सी।5।

बिस्वनाथ पालक कृपालुचित7 लालति नित गिरजा-सी।

सिद्धि, सची, सारद पूजहिं मन जोगवति रहति रमा-सी।

पंचााच्छरी प्रान7 मुद माधव7 गब्य सुपंचनदा-सी।

ब्रह्म-जीव-सम रामनाम जुग, आखर बिस्व बिकासी।7।

चारितु चरिति करम कुकरम करि, मरत जीवगन घासी।

लहत परम पद प्य पावन, जेहि चहत प्रपंच- उदासी।8।

कहत पुरान रची केसव निज कर-करतूति कला -सी।

तुलसी बसि हरपुरी राम जपु, जो भयो चहै सुपासी।9। 

காசி (வராணசி) என்பது ஞானமும்) அன்பும் (ஸ்நேஹ) நிறைந்த உடலாக உள்ளது. கலியுகத்தில் காமதேனு (எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும் பசு) போன்றது. இது துன்பம், வேதனை, பாபம், நோய் ஆகியவற்றை அழித்து, அனைத்து நன்மைகளின் குவியலாக உள்ளது.. காசியின் எல்லைகள் நான்கு திசைகளிலும் புனித எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. தேவர்கள் இதை வணங்குகின்றனர். காமதேனுவின் ஒவ்வொரு ரோமமும் சிறந்த தீர்த்தமாகவும், உடலின் அங்கங்கள் அளவில்லாத அழியாத சிவலிங்கங்களாகவும் உள்ளன. 

காசி நகரம் — கலியின் காமதேனு!

பாவம் பறந்தது, புனிதம் பரந்தது,

சிவனும், பக்தனும் ஒன்றாய் வாழும்

தர்மத்தின் தீபம் — காசி!

———–

மணிகர்ணிகா — மோட்ச வாசல்,

விஸ்வநாதர் — பரம் பாதுகாவலர்,

பைரவர் — பயம் நீக்கும் வீரன்,

பஞ்சகோசி — பரமார்த்த யாத்திரை!

————-

வேதம் பேசும் ஒலி — ராம நாமம்,

பிரம்மம் வாழும் ஒளி — காசி நாமம்,

சந்திர முகம் போல சாந்தம்,

அக்‌னி போல சுத்தி — காசி!

———

துளசி சொன்னான் — “இங்கே வாழ்ந்தால்

மாயை நீங்கும், பரம் பதம் கிடைக்கும்!”

அந்த நகரம் — நாமத்தின் நிழல்,

அழிவற்ற ஆனந்தத்தின் நிலம்!

இங்கு ஒரு கேள்வி எழலாம் . கிஷ்கிந்தா காண்டத்தில் காசிக்கு என்ன வேலை? இரண்டிற்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இல்லை. காசி என்பது ஒரு நபருக்கு முக்தி வழங்குவது போன்ற ஆன்மீகத் தகுதியை வழங்கும் ஏழு புனிதத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது., அந்தப் பட்டியலில் காசி நாலாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அயோத்தி உள்ளது. கிஷ்கிந்தா காண்டம் இராமாயணத்தில் நான்காவது இடம் என்பதலால் புனிதத்துவம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காசி அதே நாலாவாது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு புனிதத் தளங்களாவன

 1.அயோத்தி. 2.மதுரா. 3, மாயாபுரி 4, காசி 5. காஞ்சி 6. அவந்திக 7. பூரி 

இதில் மாயாபுரி ஹரித்வாரைக் குறிக்கும். அவந்திகா என்பது உஜ்ஜைனைக் குறிக்கும்.

 இனி துளசிதாசரைத் தொடர்வோம்

***

ராமாயணத்தில் வரங்கள் (46) அதிகாயன் உள்ளிட்டோர் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றது! (Post.15,520)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,520

Date uploaded in London – 22 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (46)  

ராமாயணத்தில் வரங்கள் (46) அதிகாயன் உள்ளிட்டோர் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றது!

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘நராந்தக வதம்’ என்ற அறுபத்தொன்பதாவது அத்தியாயத்தில் அதிகாயன் உள்ளிட்ட ராவணனது மூன்று புதல்வர்களும் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றது பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.

யுத்தத்தில் கும்பகர்ணன் வதம் செய்யப்பட்டதைக் கண்ட ராவணன் பலவாறாகப் புலம்பித் தவித்தான். அப்போது ராவணனைப் பார்த்து திரிசிரஸ்,
“எங்களது நடுத்தந்தை இறந்து விட்டார். சாமான்யன் போல வருந்த வேண்டாம். தங்களுக்கு பிரம்மதேவரால் அளிக்கப்பட்ட சக்தியாயுதம் இருக்கிறது. கவசமும், பாணமும், வில்லும், ரதமும் உள்ளன. அதனால் ராமனைக் கொல்வீராக! மன்னா! தாங்கள் இருங்கள், நான் போருக்குச் சென்று வருகின்றேன். என்னால் ராமன் கொல்லப்படுவான்” என்று வீரமொழி புகன்றான்.

திரிசிரஸின் சொல்லைக் கேட்டு தேவாந்தகனும், நராந்தகனும், அதிகாயனும் உற்சாகம் அடைந்தனர்.

இவர்களைப் பற்றிய வால்மீகி முனிவரின் வர்ணனையில் பல விஷயங்களை அறிகிறோம்.

“ராவணனின் புதல்வர்களான அவர்கள் இந்திரனுக்கொப்ப வீரியம் படைத்தவர்கள். எல்லோரும் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள். எல்லோரும் மாயா நிபுணர்கள். அனைவரும் தேவர்களின் செருக்கை அழித்தவர்கள். யாவரும் போரில் வெல்லுதற்கரியவர்கள். மேலான பலம் பெற்றவர்கள்.” இப்படி இன்னும் பலவாறாக அவர்கள் புகழப்படுகின்றனர்.

சர்வே ச விதுஷோ வீரா: சர்வே யுத்த விஷாரதா: |                    சர்வே ப்ரவரவிஞ்ஞானா: சர்வே லப்தவராஸ்ததா ||

    யுத்த காண்டம் 69வது அத்தியாயம் ஸ்லோக எண் 13

சர்வே – யாவரும்                                                விதுஷ: – கற்றுணர்ந்த                                                   வீரா: – நிபுணர்கள்                                                      சர்வே – யாவரும்                                                  யுத்த விஷாரதா: – யுத்தத்தில் நிபுணர்கள்                              சர்வே – யாவரும்                                                 ப்ரவர விஞ்ஞானா: -மேம்பட்ட அறிவுடையவர்கள்                     சர்வே ச – யாவரும்                                           லப்தவரா: – வரங்கள் பெற்றவர்கள்

இதில் அதிகாயன் உள்ளிட்டோர் பல வரங்களைப் பெற்ற செய்தியைக் காண்கிறோம். யாரால் எப்போது எதற்காக அவர்கள் வரங்கள் பெற்றனர் என்ற விவரம் தரப்படவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் வரம் பெற்றவர்கள் என்பதை மட்டும் வால்மீகி முனிவர் குறிப்பிடுகிறார்.

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 43; இந்து மத கலைச்சொல் அகராதி-43 (Post.15,519)

Krishna killing Kamsa

Written by London Swaminathan

Post No. 15,519

Date uploaded in London – 21 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Words beginning with letter K continues…………………………….Tamil Version கே என்னும் ஆங்கில எழுத்தில் துவங்கும் சொற்கள்

இதன் ஆங்கில வடிவம் நேற்று பதிவிடப்பட்டது.

***

கபந்தன்

கபந்தன் அல்லது கவந்தன் (Kabandha) (कबन्ध,) கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசன். இராமாயணக் காவியத்தில் ஆரண்யகாண்டத்தில் கூறப்படும் இந்த  அரக்கனை  ராமன் கொல்கிறான். அப்போது அவன் சாபம் ஒன்றிலிருந்து விடுதலை பெற்றதற்கு நன்றி தெரிவித்துவிட்டு சுக்ரீவனுடன் நட்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டு இறக்கிறான்;

போர்க்களத்தில், இந்திரனுடைய கோபத்தின் விளைவாக இந்த உருவத்தை அடைந்தேன்; பிரம்மாவைக் குறித்து கடுமையான தவத்தை மேற்கொண்டேன். அவர் எனக்கு வரமாக நீண்ட ஆயுளைத் தந்தார். இந்திரனைப் போருக்கு அழைத்தேன். “போரில் வஜ்ரா யுதத்தால், என் தலை, உடலின் நடுப்பகுதியை அடைந்தது; இரு முழங்கால்களும் உடலுக்குள் புதைந்து போயின!. ‘பிரம்ம தேவரின் வரம் உண்மையாக இருக்கட்டும்’ என்று கூறி என்னை விட்டு விட்டார் இந்திரன்.” என்றான் கபந்தன்‌.

வால்மீகி அப்போது அவன் ஆறு விஷயங்களையும் சொன்னதாக எழுதி இருக்கிறார் :

ஒன்றை அறியும் விஷயத்தில் ஆறு பிரமாணங்கள் உண்டு ; எவை?

பிரத்யக்ஷம் – நாமே நேரில் காண்பது

அனுமானம் – தெரிந்த விஷயங்களைக் கொண்டு இதர தீர்மானங்களை அல்லது முடிவை அடைதல்

உபமானம் – ஒன்றை உபமானமாகக் கொண்டு அதன் மூலம் தெளிதல்

சப்தம் – வேதம் முதலிய சப்தங்களைக் கொண்டு அறிதல்

அனுபலப்தி – காணாமையால் இல்லை என்று அறிதல்

அர்த்தாபத்தி – பார்த்தவைகள், கேட்டவைகளைக் கொண்டு மற்றவைகளை ஊகித்தல்

வானில் தோன்றும் வால் நட்சத்திரம், சூரிய சந்திரனில் தோன்றும் கரும் புள்ளிகளுக்கும்  இதே பெயர்தான் என்று வராஹமிஹிரர் பிருஹத் சம்ஹிதையில் கூறியிருக்கிறார்.

***

கச்ச (தேவயானி )

தேவயானி என்ற தலைப்பில் முன்னரே விவரம் உள்ளது .

***

கத்ரு

நாகர்களின் தாய்;

காஸ்யப ரிஷிக்கு கத்ருவினதா என்று இரண்டு மனைவிகள்; பாம்புகளின் தாயார் கத்ரு; பாம்புகளின் எதிரியான கருடன் களுக்குத் தாயார் வினதா; இருவருக்கும் இடையே நிகழந்த பந்தயத்தில் வினதா தோற்று அடிமை ஆனாள்;

இதோ அந்தக் கதை:

காஸ்யப ரிஷிக்கும் வினதாவுக்கும் மகனாக கருடன் பிறந்தார். அவருடைய அண்ணன் பெயர் அருணன் அவளுக்கும் கத்ருவுக்கும் நடந்த போட்டியில் வினதா தோற்றுப்போகவே அடிமையானாள்;

இந்திரனின் உச்சைச்சிரவமென்னும் குதிரையின் நிறம் குறித்து, கத்ரு கேட்டதற்கு, அதன் நிறம் வெண்மை என வினதை சொன்னாள்;  கத்ரு அதன் நிறம் கருமை என்றாள்.

குதிரையின் சரியான நிறம் குறித்த போட்டியில் தோற்றவர், வென்றவர்க்கு அடிமை ஆகவேண்டும் என்பது நிபந்தனை. கத்ரு போட்டியில் வெல்ல வேண்டி ஆயிரக்கணக்கான கருநாகங்களை அழைத்து, உச்சைச்சிரவம் எனும் இந்திரனின் தேவலோக குதிரையின் உடலைச் சுற்றிக் கொள்ளுங்கள் என ஆணையிட, அவ்வாறே கருநாகங்கள் உச்சைச்சிரவம் என்ற வெண் குதிரைச் சுற்றிக் கொண்டன ;குதிரை பார்ப்பதற்கு கருநிறமாக மாறியது.

போட்டியில் தோற்றுப்போன , வினதை தன் குழந்தைகளான கருடன் மற்றும் அருணன் உடன் நாகர்களின் தாயான கத்ருவுக்கு அடிமையானாள். அவளை விடுவிக்க அவளுடைய மகன் கருடன் அமிர்தத்தின் ஒரு பகுதியை சிறிய தாய்க்கு கொண்டுவந்து கொடுத்தான் ; அவள் விடுதலை ஆனாள்.

***

கைகேயி

கேகய நாட்டு மன்னன் யுதாஜித்தின் மகள் ; தசரதனின் நான்கு புதல்வர்களில் பரதனின் தாயார்; தசரதனின் மூன்று மனைவிகளில் இளையவள் ; தேவாசுர போரில் தசரதனுக்கு உதவியதால் அவர் மனம் மகிழ்ந்து இரண்டு வரங்களைக் கொடுத்தார் ; கூனி என்ற கூன் முதுகுக் காரி ராமனின் மீது கோபம் கொண்டு தீய அறிவுரைகளை வழங்கவே கைகேயி மனம் மாறுகிறாள்; ராமர் பாட்டாபிஷேக செய்தியைச் சொல்ல தசரதன் வருகிறார். கைகேயி கோபத்தோடு இருப்பதை பார்த்து அவளை சமாதானம் செய்ய, ‘ராமன் பேரில் ஆணையாக நீ எது கேட்டாலும் தருகிறேன்’ என்று வாக்களிக்கிறார்.

கைகேயி, தேவாசுர யுத்தத்தில் அவர் உயிரைக் காப்பாற்றிய போது, தனக்கு அவர் அளித்த இரண்டு வரங்களை நினைவூட்டி, ஒரு வரத்திற்கு ‘ராமனுக்கு பதிலாக பரதனுக்கு பட்டம் சூட்ட வேண்டும். இரண்டாவது வரத்திற்கு ராமன் பதினான்கு வருடங்கள் காட்டிற்கு போக வேண்டும்’ என்று கேட்கிறாள். இதைக் கேட்ட தசரதன் சிறிது நேரத்தில் இறந்துவிடுகிறார் . அவர் இறந்த பின்னரும் கைகேயி உயிர்வாழ்ந்து பின்னர் ராமனின் அன்பைப் பெறுகிறாள் .

***

கைலாஷ்  , கயிலாயம்

இமயமலையில் உள்ள சிவ பெருமானின் உறைவிடம் ; இந்துக்களுக்கும் பெளத்தர்களுக்கும் புனிதமான மலைச் சிகரம் ; திபெத் என்னும் நாட்டினை சீனா கைப்பற்றியதால் இப்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் சென்று தரிசிக்கின்றனர் வெள்ளி மலையாகவும் சூரிய ஒளியில் தங்கம் போல ஜொலிக்கும் பொன் மலையாகவும் விளங்குகிறது அருகிலுள்ள மானஸ சரோவர் ஏரிப் பகுதியில் கங்கை, சிந்து பிரம்மபுத்ரா நதிகள் உற்பத்தியாகின்றன ;  கயிலை மலையைத் தூக்க ராவணன் முயன்று, சிவனால் நசுக்கப்பட்டு  கதறி அழுத செய்தியைத் தேவாரப் பாடல் முழுதும் காணலாம்.

 21778 அடி உயரம் கொண்டது இந்த தெய்வீக சிகரம். இதைச் சுற்றி வரும் பாதை 52 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர். அருணகிரிநாதர் ஆறு திருப்புகழ் பாடல்களைப்  பாடிப் போற்றியுள்ளார் .

***

கால / ம்

நேரம் என்ற பொருளும் யமன் என்ற பொருளும் உண்டு

இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லினை சங்க இலக்கியம் மற்றும் திருக்குறள் முழுதும் காணலாம் . மகரிஷி, பெண்கள் பெயராகவும் வந்திருப்பதை புராண இதிகாசங்களில் காண முடிகிறது .

***

காலநேமி

திருமாலால் கொல்லப்பட்ட அரக்கன்; ‘காலச்சக்கரம்’ அல்லது ‘காலத்தை வென்றவன்’ என்றும் பொருள்.

இன்னும் ஒரு பொருள்:

மாரீசனின் மகன், ராவணனின் தந்திரமான மந்திரிகளில் ஒருவர். இராமாயண யுத்தகாண்டத்தில், இலட்சுமணனுக்குத் தேவையான சஞ்சீவினி மூலிகையை எடுத்துவர ஹனுமன் செல்லும்போது, அவரைத் தடுத்து நிறுத்த ராவணனால் அனுப்பப்படுகிறார். ஒரு முனிவர் போல வேடமிட்டு, ஆசிரமம் அமைத்து, ஹனுமனை ஆசீர்வதிப்பது போல் நடித்து, நேரத்தைக் கடத்த முயற்சித்தார். ஹனுமன் உண்மையை அறிந்து, காலநேமியின் சூழ்ச்சியை முறியடித்து, அவரை வதம் செய்தார்.

ஆரணிய காண்டத்தில் அகத்தியப் படலத்தில் வரும் ஒரு பாடலைக் காண்போம்:

சூர் அறுத்தவனும் சுடர் நேமியும்

ஊர்  அறுத்த ஒருவனும் ஓம்பினும்

ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்

வேர் அறுப்பென் வெருவன்மின் நீர் என்றான்

பொருள்:-

சூர் அறுத்தவன் – முருகன்

சுடர் நேமி – திருமால்

ஊர் அறுத்தவன் – சிவன்

சூரபதுமனைக் கொன்ற முருகனும், காலநேமியைக் கொன்ற ஒளிமிகுந்த சக்ராயுதம் ஏந்திய திருமாலும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளான ருத்திரனும், அவ்வரக்கருக்குத் துணையாக வந்து காத்தாலும், எந்த அரக்கர் பாவம் செய்தவர்களோ, அவர்களை அடியோடு அழிப்பேன்; எனவே நீங்கள் அஞ்ச வேண்டாம் என்றான் ராமன்.

***

கால யவனன் ( கறுப்பு நிற யவனர் )

ஒரு அசுரர் மன்னன் ; கிருஷ்ணனுக்கு மிகவும் தொல்லை கொடுத்து அவரைத் துவாரகைக்கு விரட்டியவன் ; உத்தரப்பிரதேசத்திலுள்ள மதுராவிலிருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்குப் போகச்   செய்தவன் ; ஆயினும் அவனைக் கிருஷ்ணன் தந்திரமாகத் தீர்த்துக் கட்டினார்

மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)

இந்த முசுகுந்தனுக்கு ஒரு வரம் கிடைத்தது; நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இவரை யாரவது எழுப்பினால், யார் முகத்தில் விழிக்கிறாரோ அவர் எரிந்து போவார் ; கிருஷ்ணனை கால யவனன் விரட்டிக்கொண்டு வரவே , முசுகுந்தன் தூங்கிய குகையில் கிருஷ்ணன் நுழைந்து ஒளிந்துகொள்கிறார் உள்ளே நுழைந்த காலயவனன் முசுகுந்தனை கிருஷ்ணன் என்று தவறாக எண்ணி எழுந்திரு என்று உதைக்கிறார். தூக்கத்தில் இருந்து எழுந்த முசுகுந்தன் , காலயவனனனைப் பார்க்கவே அவன் எரிந்து அழிகிறான்.

புறநாநூறு சிலப்பதிகாரம் முழுதும் மாந்தாதா, முசுகுந்தன், சிபிச் சக்ரவர்த்தி ஆகியோரை சோழர்களின் முன்னோராக கூறுவதால் சோழர்கள் ஆதி காலத்தில் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்ததும் உறுதியாகிறது; இந்தப் பெயர்கள் அனைத்தும் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதும் இதை உறுதி செய்கிறது ; இவ்வகையில் கால யவனர் – முசுகுந்தன் கதை முக்கியத்துவம் பெறுகிறது. இவன் கிருஷ்ணனின் எதிரியான ஜராசந்தனாக இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.

***

கல்ஹணர்

காஷ்மீரின் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருத கவிஞர் கல்ஹணர்; இவரை வெள்ளைக்கார்கள் மெத்தப் புகழ்வர். புராணங்களில் 140 தலைமுறை மன்னர்களின் பெயர்கள் இருந்தாலும் வருஷம் குறிப்பிடவில்லை. கல்ஹணர்தான் முதல் முதலில் வருஷத்தைக் குறிப்பிட்டு வரலாறு எழுதினார் என வெளி நாட்டினர் விளம்புவர். ஆனால்  கல்ஹணரின் கலியுகக் கணக்கு இந்துக்கள் பஞ்சாங்கத்தில் உள்ளது போல கி.மு 3102 துவங்குவது அல்ல, இவர் கி.மு 2600 வாக்கில் என்று செப்புவார். கல்ஹணர் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

கல்ஹணர் என்னும் காஷ்மீரி பிராமணர்,  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சம்ஸ்க்ருதத்தில்  எழுதிய ராஜதரங்கிணி என்ற காஷ்மீர் வரலாற்று நூலில் சுமார் 8000 ஸ்லோகங்கள் உள்ளன .

***

கல்கி அவதாரம்

விஷ்ணுவின் பத்தாவது மற்றும் இறுதி அவதாரமான கல்கி, கலியுகத்தின் முடிவில் மிலேச்சர்களை (தீயவர்களை) அழித்து தர்மத்தை நிலைநாட்ட வெள்ளை குதிரை மீது வாளுடன் தோன்றுவார். இது பாத்ரபத மாதம் (புரட்டாசி) சுக்ல பட்ச துவிதியை அன்று நிகழும் என்று பாரம்பரிய ஸ்லோகம் குறிப்பிடுகிறது, கலியுகம் முற்றும்போது தீயோர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவார் என்று புராணங்கள் கூறுகின்றன.

மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:

ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

பொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.

மிலேச்சர்கள் யார்?

யவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ —- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.

தமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:

அ) அரேபியா நாட்டு மிலேச்சர்

ஆ )யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்

மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர்.

சிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். மலக் (மாலிக்) என்ற ஒரு தெய்வத்துக்கு இஸ்ரேலியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்ததை பைபிள் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களும் மிலேச்சர்கள் என்ற சப்தத்துள் அடங்குவர்.

முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.

ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர்.

கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.

***

காம்போஜ

வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த ஒரு இனம்; பிற்காலத்தில் இவர்கள் குடியேறிய நாட்டினையோ பிரதேசத்தையோ இதே  பேரில் அழைத்தனர் ; இப்போது கம்போடியா என்னும் நாட்டிற்கும் இதே பெயர்;  ஆயினும் இந்தத் தொடர்பு பற்றி எந்தச் செய்தியும் இல்லை ; பாரத நாட்டில் வாழ்ந்த இளவரசிகளுக்கு நடந்த ஸ்வயம்வரத்தில் காம்போஜ மன்னர்களும் கலந்துகொண்டதாக நம்முமுடைய நூல்கள் கூறுகின்றன. குதிரைகளுக்கு மிகவும் புகழ்பெற்ற பிரதேசம் இது. காம்போஜ நாட்டுக் குதிரைகள் தங்களுடைய ரதங்களை இழுத்தன என்று புராண இதிஹாச மன்னர்கள் விளம்புவர் .

***

கம்சன்

கம்சன் என்பவன் கிருஷ்ணரின் தாயான தேவகியின் உடன் பிறந்தவன் ; மதுராவைத் தலைநகராகக் கொண்ட  இராச்சியத்தின் மன்னன். இவனுடைய தந்தை உக்கிரசேனர், தாயார் பத்மாவதி. தந்தையையே சிறையில் போட்டுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய கொடுங்கோல் மன்னன் ; தேவகிக்குப் பிறக்கும் மகனால் இவனுக்கு சாவு ஏற்படும் என்று ஆரூடம் இருந்ததால் அவளுக்குப் பிறந்த எல்லாக் குழந்தைகளையும் பலியிட்டான்; பலராமனும் எடடாவதாகப் பிறந்த கண்ணும் தப்பினர்; இதை அறிந்தவுடன் எல்லா ஆண்குழந்தைகளையும் கொல்ல உத்தரவிட்டான்; இவன் ஏவிய எந்த அசுரர்களும் கிருஷ்ணனையோ பலராமனையோ கொல்ல முடியவில்லை; இறுதியில் கிருஷ்ணன் இவனைக் கொன்றான் .

***

காஞ்சிபுரம்

புஷ்பேஷு ஜாதி , புருஷேஷு விஷ்ணு ,

நாரீஷு ரம்பா , நகரேஷு  காஞ்சி .” என்பது பிரபலமான ஸ்லோகம்.

பூக்களில் சிறந்தது ஜாதி மல்லிகை; புருஷர்களில் சிறந்ததவர் மஹா விஷ்ணு; பெண்களில் சிறந்தவள் ரம்பை; நகரங்களில் சிறந்தது காஞ்சிபுரம்!

பல்லவர்களின் தலை நகரமாகத் திகழ்ந்த நகரம்; சென்னைக்கு அருகில் உள்ளது; காஞ்சி சங்கராசார்ய சுவாமிகளின் காமகோடி பீடம் இருப்பதாலும் 108 கோயில்கள் இருப்பதாலும் புகழ் பெற்று விளங்குகிறது ; பட்டுச் சேலைகளுக்கு பெயர்பெற்ற இடம் இது.

இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் (சப்த புரி) ஒன்று; , சிவகாஞ்சி மற்றும் விஷ்ணுகாஞ்சி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஜைன காஞ்சி என்ற பகுதியில் சமண சமய சின்னங்கள் இருக்கின்றன .

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா

புரி த்வாராவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:

என்ற ஏழு நகரங்களில் காஞ்சியின் பெயரும் உள்ளது.

சாக்த வழிபாட்டின் முக்கிய கோயிலான  காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சிவன்  கோவில் மற்றும் வரதராஜப் பெருமாள் கோவில் போன்றவை இங்கு சிறந்து விளங்குகின்றன. இது “நகரேஷு காஞ்சி” என்ற காளிதாசனின் புகழ்பெற்ற சுலோகத்தால் போற்றப்படும் தொன்மையான நகரம்.

பல்லவர்கள், சோழர்கள், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. காளிதாசர், சங்க இலக்கியங்கள் மற்றும் கருட புராணத்தில் காஞ்சிபுரம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

To be continued……………………

Tags- கபந்தன்,கல்கி, காம்போஜ, கண்ணன் , கம்சன்,  HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL 42; இந்து மத, கலைச்சொல் அகராதி-42, கபந்தன், காஞ்சிபுரம்

முத்துக்களின் வகைகள், விஸ்வரூப தரிசனம் பற்றி அருணகிரிநாதர்! -51 (Post.15,518)

Written by London Swaminathan

Post No. 15,518

Date uploaded in London – 21 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

51திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 51

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 51

கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம்

வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு

உற்ற முகில் கிட்ணன் மருகோனே … பழிப்புக்கு இடம் இல்லாமல்,

முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின்

காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட* மேக நிறக்

கண்ணனது மருகனே,

மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் …

இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது

திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள

விர்த்த கிரி உற்ற பெருமாளே. … முது குன்றம் எனப்படும்

விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும், அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம் தந்தது இங்கு குறிப்பிடப் பெறுகிறது.

***

நாரதரும் தும்புருவும்

நார (தர்) தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய்

தாளர் அருள் பாலா … நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே,

சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர்

ஓட அயில் ஏவீ … சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே,

தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர்

பெருமாளே. … பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன்

சேர்கின்ற, ஒள்ளிய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில்* வீற்றிருக்கும்,

தேவர்கள் பெருமாளே.

கடம்பூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.

***

சீர்காழியின் பெயர்கள்

பெரு முனித் திரள் பரவு செய்ப்பதிப் ப்ரபல கொச்சையில்

சதுர் வேதச் சிறுவ … பெரிய முனிவர்களுடைய கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே, கொச்சையில்

(சீகாழியில்*) நான்கு வேதங்களும் வல்லவனாய் வளர்ந்த (திருஞான சம்பந்தச்) சிறுவனே,

நிற்கு அருள் கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து

அருள் ஈசன் … உன்பால் அருள் வைத்து (முத்துக்) குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளிய** சிவ பெருமான் வீற்றிருக்கும்

செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த் திருவரத் துறைப்

பெருமாளே. … பூமியில் புகழ் பெற்ற சத்தியபுரியாகிய திருவரத்துறையில்***வாழும் பெருமாளே.

* ‘கொச்சை’ சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.

சீகாழிக்கு உரிய பெயர்கள்:

சீகாழி – காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,

பிரமபுரம் – பிரமன் பூஜித்த தலம்,

வேணுபுரம் – கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்

                  பூஜித்த தலம்,

தோணிபுரம் – பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது,

பூந்தராய் – பூவும் தாரையும் பூஜித்த தலம்,

சிரபுரம் – அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு, கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,

புறவம் – புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,

சண்பை – சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,

கொச்சை – பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில்  பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,

வெங்குரு – பிரகஸ்பதி பூஜித்த தலம்,

கழுமலம் – ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,

முதுநகர் – ,புகலி –            … என்பன.

** பெண்ணாடகம் என்ற ஊரில் திருஞானசம்பந்தர் தரிசித்துவிட்டு

திருவரத்துறைக்குப் போகும் வழியில் அவர் களைத்ததைக் கண்ட சிவன் அவர் ஏறிச் செல்ல முத்துச் சிவிகை, குடை ஆகியவற்றைக் கொடுத்து அருளினார்.

*** திருவரத்துறை பெண்ணாடகத்துக்கு அருகில் உள்ளது.

****

முத்துக்களின் வகைகள் பற்றி அருணகிரிநாதர்

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை … கரும்பு தரும்

முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை,

கரிமுத்து மாலை … யானை தரும் முத்தாலான மாலை,

மலைமேவுங் கடிமுத்து மாலை … மலையிற் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை,

வளைமுத்து மாலை … சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை,

கடல்முத்து மாலை … கடலில் பெறப்படும் முத்தாலான மாலை,

அரவீனும் அழல்முத்து மாலை … பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான மாலை,

இவைமுற்று மார்பின் அடைவொத்து உலாவ … இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய,

அடியேன்முன் அடர்பச்சை மாவில் … அடியேனின் எதிரே அடர்ந்த பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில்

அருளிற்பெணோடும் அடிமைக்கு ழாமொடு அருள்வாயே …இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்துஅருள் புரிவாயாக.

***

முத்து பிறக்கும் இருபது இடங்கள்

தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி

நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்

கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்

இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே

—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும். 

இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து. 

1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைகளின் கொம்புகள்

3.இப்பி = முத்துச் சிப்பிகளும்

4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்

5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்

6.நந்து = சங்கும்

7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு

8.மீன்றலை = மீன் தலை

9.கொக்கு= கொக்கின் தலை

10.நளினம் = தாமரை

11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து

12.சாலி = செந்நெற் கதிர்க்குலை

13.கழை = மூங்கில்

14.கன்னல் = கரும்பு

15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்

16.கட்செவி = பாம்பு

17.கார் = மேகம்

18.இந்து = சந்திரன்

19.கரா =முதலை

20.உடும்பு= உடும்பின் தலை

***

காளிதாசன், பர்த்ருஹரி, வராக மிஹிரர் தரும் செய்திகள்

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.

காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;

தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-

முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173

காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.

பறவைகள் குடியேறும் போது ( Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்..

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

—subham—

Tags- திருப்புகழில், அருணகிரிநாதர்,  அரிய செய்திகள், Part 51, விஸ்வரூப தரிசனம் ,முத்து பிறக்கும் இடங்கள், சீர்காழி, நாரதர், தும்புரு