
MEGADUTA OF KALIDASA
Written by London Swaminathan
Post No. 15,821
Date uploaded in London –2 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாதங்க
ஸம்ஸ்க்ருத்தில் யானை என்று பொருள்; ஒரு சுவையான கதை இதோ:
இந்தக் கதை மஹாபாரதத்தில் உள்ளது. ராமாயணத்திலும் கூட இவர் பெயர் வருகிறது ;ரிஷ்யமுக மலைக்கு அருகிலுள்ள இவருடைய ஆஸ்ரமத்துக்கு ராமனும் சீதையும் விஜயம் செய்தார்கள். சண்டாளனுக்குப் பிறந்த ஒருவன் பிராமணனாக வளர்க்கப்பட்டான்;அவன் ஒரு பெரிய கழுதைக் கும்பலை முரட்டுத்தனமாக மேய்த்துக் கொண்டிருந்தான். அப்போது தாய்க் கழுதை சொன்னது ; ஏய் கழுதைகளே; இதைவிட அதிகம் எதிர்பார்க்காதீர்கள்; ஏனெனில் நம்மை ஓட்டுபவன் பிராமணன் அல்ல; அவன் ஒரு சண்டாளனுக்குப் பிறந்தவன். இதைக் கேட்ட கழுதை ஒட்டி புத்திசாலிக் கழுதையே உனக்கு இது எப்படித் தெரியும்? என்று கேட்டான் ; கழுதை சொன்னது : உன்னுடைய தாயார் போதையில் இருந்த போது ஒரு கீழ்ஜாதி அம்பட்டன் உன்னுடைய தாயைக் கட்டித் தழுவினான்; அதனால் பிறந்தவன்தான் நீ ; இதைக் கேட்ட சண்டாளன் பிராமணன் ஆக மாறுவதற்கு நீண்ட காலம் தவம் செய்தான் அவனது தவத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சினர்; ஆயினும் இந்திரன் அவனுக்கு அனுமதி மறுத்தான். அவன் மீண்டும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தான் ; 1000 ஆண்டுகள் உருண்டோடின அவன் எலும்பும் தோலுமாக ஆனான். இந்திரனே வந்து அவனைத் தாங்கி நின்றான்; அப்போது அவனுக்கு சில வரங்களை அளித்தான்; “நீ பறவையாகப் பறக்கலாம்; நினைத்த வடிவத்தை எடுக்கலாம்; எங்கு சென்றாலும் உனக்கு மரியாதையும் கெளரவமும் கிடைக்கும்” என்றான் அவர்தான் மாதங்க முனிவர்.
***
மேதாதிதி
காண்வ மகரிஷி குலத்தில் உதித்த வேத ரிஷி இவர். உபநிஷத்தில் இவரைப் பற்றிய கதை வருகிறது ; இவரது தவத்தைக் கண்டு மெச்சிய இந்திரன் இவரை தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றான் ; அப்போது அவரை செம்மறியாட்டு வடிவத்தில் கொண்டு சென்றான் (இதே போல கழுகு வந்து கனிமேட் GANYMEDE என்பவனைத் தேவலோகத்துக்குக் கடத்திச் சென்றதாக கிரேக்க புராணக் கதை ஒன்றும் இருக்கிறது.
***
மேதாவி
பாலாதி என்ற ரிஷியின் புதல்வர் இவர்; தந்தை இயற்றிய கடும் தவத்தால் இவருக்கு ஒரு வரம் கிடைத்தது; அருகிலுள்ள மலை இருக்கும் வரை யாரும் இவரை வெல்லவோ கொல்லவோ முடியாது என்பது அந்த வரம்; மேதாவிக்கு அகந்தை அதிகரித்தது ; உடனிருந்த பிரமணர்களைக் கொடுமைப் படுத்தினான் ; அதைக் கண்ட தனுசக்ஷா என்ற பிராமணர், பலத்த கொம்புள்ள ஒரு செம்மறி ஆட்டினை உருவாக்கினார் அது அந்த மலையை முட்டி முட்டி மோதிச் சிதற அடித்தது ; மேதாவிக்கும் மரணம் சம்பவித்தது; மஹாபாரதத்தில் இந்தக் கதை உள்ளது. பரத்வாஜ முனிவர் இந்த விஷயத்தை அவருடைய மகன் யவக்ரீடனுக்குச் சொல்லி, அகந்தை ஆளையே அழித்துவிடும் என்று அறிவுறுத்தினார்.
***
மேனகா
தேவலோகத்தில் வசிக்கும் அப்சரஸ் என்னும் அழகிகளில் ஒருவர் மேனகா; விச்வாமித்திரர் என்னும் க்ஷத்ரிய மன்னன், பிராமணன் ஆகி பிரம்ம ரிஷி பட்டம் பெறுவதற்கு கடும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார் ; அவருடைய தவத்தைக் கலைக்க இந்திரன் மேனகாவை அனுப்பினான் ; அவளும் வாயுதேவனிடம் பேசி ஒரு உடன்படிக்கை செய்தாள்; விசுவாமித்திர முனிவருக்கு முன்னால், சேட்டைகள் செய்தபோது வாயு தேவன் அவளுடைய ஆடைகளை அகற்றினான்; உடனே முனிவர் தவம் கலைந்து மேனகாவின் வலையில் விழுந்தார்; அவர்கள் இருவரும் குடும்பம் நடத்திய காலத்தில் பிறந்தவள்தான் சகுந்தலா என்ற பெண்; பாரத நாட்டினை ஆண்டு பாரத நாடு என்ற பெயரினை நல்கிய பரதனின் தாயார் சகுந்தலை.

***
மேனா
ரிக்வேதத்தில் வரும் மேனா என்ற பெண், வ்ரிஷனஸ்வாவின் புதல்வி ஆவார் ;இந்திரன் அவளை விரும்பினான்; புராணத்தில் ஹிமவத்தின் மனைவி ; அவர்களுக்குப் பிறந்தவள் உமா , மற்றும் கங்கா ; மகன் பெயர் மைனாகம் (இந்திரன் என்பது ஒருவரைக் குறிக்கும் பெயர் அல்ல; மன்னன் என்ற பொதுப் பெயரில் வேத, இதிஹாச புராணங்களில் வருகிறது ; இமயமலையில் கங்கை நதி பிறக்கிறது என்பதை ஹிமவத்தின் மகள் கங்கை என்று புராணம் சொல்கிறது)
****
மேரு
பூமியின் நடுவிலுள்ள உயரமான மலை மேரு ஆகும் ; வட துருவத்தையும் மேரு என்று புராணங்கள் வருணிக்கின்றன; மேரு மலையின் உச்சியில் ஸ்வர்கம் இருப்பதாகவும் சொல்லும்; இமயமலைக்கு அப்பால் இது இருக்கிறது ; சுமேரு , ஹேமாத்ரி /பொன்மயமான மலை, ரத்னசானு /நவரத்தின சிகரம், கர்ணிகாசலம்/ தாமரை மலை , அமராத்ரி /தேவர்கள் மலை, தேவ பர்வதம் என்ற பெயர்கள் மேருவுக்கு உள்ளன .
***
மிதிலை
ஜனகர் ஆட்சி செய்த விதேஹ நாட்டின் தலை நகரம் மிதிலாபுரி; இப்போதைய வடக்கு பீஹாருக்கு, வேத காலத்தில் விதேஹம் என்ற பெயர் இருந்தது மிதிலையில் பிறந்ததால் சீதா தேவிக்கு மைதிலி என்று பெயர் ; இப்போதும் ஜனகரின் பெயரில் ஜனக்பூர் என்று இந்த ஊரினை அழைக்கிறார்கள் ; வேதாந்த விஷயங்களுக்குப் பெயர் பெற்ற நாடு விதேஹம்.
***
மிலேச்சர்

மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.
பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’BARBARIANS ( காட்டுமிராண்டி ,நாகரிகமற்றவர், முரட்டுத்தனமானவர், அநாகரிகர், பண்பற்றவர்) என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய (காட்டுமிராண்டி) அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” IT IS GREEK TO ME என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.சி ந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். ஆனால் பாரத நாடு முழுதையும் குறித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.
ஆனால் வெளிநாட்டு அறிஞர்கள் இது திராவிடர்களை வசை பாடியது என்றும் மிலேச்சர்கள் என்பவர்கள் திராவிடர்கள் என்றும் எழுதி குழப்பி இருக்கின்றனர்; மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.
சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் ETYMOLOGY வரலாறு காட்டும்.

***
மேகநாதன்
ராவணனின் மூத்த மகன்.
ராமாயணத்தில் வரும் மேகநாதன், இலங்கையின் அரசனான ராவணன் -மண்டோதரி ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவருக்கு இன்னொரு பெயர் இந்திரஜித். இவர் பிறந்தபோது இடியும் மின்னலும் முழங்கியதால் ‘மேகநாதன்’ என்ற பெயரும் , தேவர்களின் தலைவனான இந்திரனைப் போரில் வென்ற காரணத்தினால் ‘இந்திரஜித்’ என்ற பெயரும் ஏற்பட்டன; இவருடைய வீர தீர போர்ச் செயல்களை கம்பனும் வால்மீகியும் வருணித்துள்ளார்கள்.
***
மேக தூதம்
காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை அளிக்கிறான்
மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.
காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of MigratoryBirds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.
காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில் 75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளிதாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.

அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .
ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை. தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems) உள்ளன; தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர்.
***
மித்ரன்
சூரியனின் பெயர்; ஒளி , நேர்மறை சக்தி, பகல்பொழுது என்று பொருள் .
வேத மந்திரங்களில் பெரும்பாலும் மித்ரனையும் வருணனையும் சேர்த்தே சொல்லுவர். உலகம் என்பது நேர்மறை, எதிர்மறை சக்திகளையுடையது. பூமி என்னும் காந்த மண்டலத்திலும் வட துருவம், தென் துருவம் என்று இருக்கும். மின்சாரத்திலும் பாஸிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் உண்டு. அப்பொழுதுதான் அது பூர்த்தியாகும். வேதத்தில் வருணன் என்பது இருளையும், கரு நீலக் கடலையும், குளிர்ச்சியையும் குறிக்கும். வேத மந்திரங்கள் இதைத் தெளிவாகக் கூறும்.
மித்ரன் என்பது பல பொருள்களில் வழங்கப்பட்டாலும் சூரியன் என்பதே அதிகம் புழங்கும் அர்த்தம்.
சூர்ய நமஸ்கார மந்திரங்களில் முதல் மந்திரம் மித்ராய நம: என்பதாகும்.
அர்த்த நாரீஸ்வர உருவத்திலும் உமையை கருப்பாகவும் சிவனை சிவப்பாகவும் காட்டுவர். சங்கர நாராயண உருவத்திலும் சிவனை சிவப்பாகவும் விஷ்ணுவை கார்மேனி வண்ணனாகவும் காட்டுவர். இவை அனைத்திலும் உள்ள பொருள் ஒன்றுதான். ஆக்க சக்தி அழிவு சக்தி இரண்டும் நிறைந்ததே இயற்கை. சிவனின்றி சக்தி இல்லை; சக்தி இன்றி சிவனில்லை.என்ன அதிசயம் என்றால் கி.மு.1400 வாக்கில் கையெழுத்திடப்பட்ட துருக்கி-சிரியா (Mitanni Treaty) பகுதி ஒப்பந்தத்திலும் மித்ர-வருணர்கள் உள்ளனர். இதனால் வேதங்களை எவரும் கி.மு 1400-க்கும் முன்னர்தான் வைக்க முடியும். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர்.
பாரசீக நாட்டிலிருந்து இதை பெற்ற ரோமானியர்கள் இதை ஒரு ரகசிய தெய்வமாக குகைகளில் வைத்து தவறான லீலைகளில் ஈடுபட துவங்கினர் பின்னர் புதிய கதைகளையும் உருவாக்கினர் ஐரோப்பா முழுதும் புதுப்புது மித்ரன் கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுவருகின்றன ரோம் நகரில் மட்டுமே 700 மித்ரன் கோவில்கள்! இருக்கின்றன .
TO BE CONTINUED……………………….
TAGS- மித்ரன், மேக தூதம், மிலேச்சர், மாதங்க, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 68; இந்து மத கலைச்சொல் அகராதி-68, மேனகா






