Important Upanishad Mantras in English and Devanagari- Part 1 (Post.15,890)

Written by London Swaminathan

Post No. 15,890

Date uploaded in London –19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(Tamil version posted separately)

ईशा वास्यमिथम् सर्वम् यथकिन्च्च जकथ्याम् जगथ् !

तेन त्यक्तेन भुन्चिच्था मा ग्रुध कस्य स्विद् ध्नम्  !!

OM

 Ishaa Vaasyam Idam Sarvam

Yat Kincha Jagatyaam Jagat Tena

Tyaktena Bhunjeethaa

Maa Grudhah Kasya-svit Dhanam.

The whole Universe is enclosed or enveloped in God. And also, He dwells or resides in the entire Universe. So, God is in everything and everything is clothed within God.

Whatever is moving (or not moving) in this Universe, is all penetrated and also enclosed by Him. All that is living or non-living, pleasing or otherwise, planets, stars or even our Self, the Atma, is pervaded by him.As everything is in Him and He is in everything, you may “let go”, “rejoice” or experience Bliss! Do not grab or hold on to anyone’s wealth.

****

2

dahraṁ vipāpaṁ varaveśmabhūtaṁ yat puṇḍarīkaṁ puramadhya saṁstham |tatrāpi dahre gaganaṁ viśokaṁ tasmin yadantastadupasitavyam ||

द॒ह्रं॒-विँ॒पा॒प-म्प॒रमे᳚श्म भूतं॒-यँ-त्पु॑ण्डरी॒क-म्पु॒रम॑द्ध्य स॒ग्ग्॒स्थम् ।

त॒त्रा॒पि॒ द॒ह्र-ङ्ग॒गनं॑-विँशोक॒-स्तस्मि॑न्. यद॒न्तस्त-दुपा॑सित॒व्यम् ॥

Dahram: The subtle or small (space of the heart).Vipāpam: Sinless, pure, and untainted by any evil. Varaveśmabhūtam: A beautiful, exalted abode or mansion.Yat Puṇḍarīkam: The lotus of the heart.Puramadhya saṁstham: Situated directly in the center of the city of the body.Tatrāpi: Inside that.Dahre gaganam viśokam: An inner expanse (ether) that is entirely free from sorrow.Tasmin yadantaḥ tadupāsitavyam: That which resides inside it is what must be meditated upon.

****

3

yō vēda̠ nihi̍ta̠-ṅguhā̍yā-mpara̠mē vyō̍mann । sō̎-‘śnu̠tē sarvā̠nkāmā̎n​thsa̠ha

यो वेद॒ निहि॑त॒-ङ्गुहा॑या-म्पर॒मे व्यो॑मन्न् । सो᳚-ऽश्नु॒ते सर्वा॒न्कामा᳚न्​थ्स॒ह ।

Yō: He who / whoeverVēda: Knows / realizesNihi̍taṅ: Hidden / placed / establishedGuhā̍yām: In the cave / secret place (representing the intellect or the heart)Para̠mē: In the highest / supreme

ALL HIS DESIRES ARE FULFILLED.

****

4

एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा।
कर्माध्यक्षः सर्वभूताधिवासः साक्षी चेता केवलो निर्गुणश्च॥

—Shvetashvatara Upanishad (Chapter 6, Verse 11)

eko devah sarvabhuteshu gudhah sarvavyapi sarvabhutantarathma I

karmadhyakshah sarvabhutadhivasah sakshi cheta kevalo nirgunascha II 6.11 II

–Shvetashvatara Upanishad (Chapter 6, Verse 11)

The non-dual and resplendent Lord is hidden in all beings. He is all-pervading and is the innermost Self of all creatures.  He presides over all actions and He is the support of all beings. He is the Witness, the Animator and the Absolute, free from the three gunas.

OR

One God who alone is & He lurketh hidden in every creature for He pervadeth and is the inmost Self of all beings, He presideth over all work and is the home of all things living. He is the Mighty Witness who relateth thought with thought and again He is the Absolute in whom mood is not nor any attribute.

****

5

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात् ॥

Transliteration (IAST)Aum Tryambakam yajaamahe sugandhim pushtivardhanam |Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat ||

-Rig Veda (Mandala 7, Hymn 59). YAJUR VEDA RUDRAM, MAHA NARAYANA UPANISHAD 56-1

Meaning

“We worship the three-eyed Lord Shiva, who is fragrant and nourishes all beings. Just as a ripe cucumber is effortlessly detached from the vine, may He liberate us from death and mortality, and lead us to immortality.”

****

6

असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥

Asuryā nāma te lokā andhena tamasāvṛtāḥ,Tāṃste pretyābhigacchanti ye ke cātmahano janāḥ.

3. Those births partake of the nature of the Asuras and are enveloped in blind darkness. After leaving the body they who kill their Atman attain them.

****

7

नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।

यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूँ स्वाम् ॥ २३ ॥

nāyamātmā pravacanena labhyo na medhayā na bahunā śrutena |

yamevaiṣa vṛṇute tena labhyastasyaiṣa ātmā vivṛṇute tanūm̐ svām || 1-2-23 ||

23. This atman is not to be attained by a study of the Vedas, nor by intelligence, nor by much hearing, but the atman can be attained, only by him who seeks to know it. To him, this atman reveals its true nature.

****

8

न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥

—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

Na tatra sūryo bhāti na candratārakaṃ nemā vidyuto bhānti kuto’yamagniḥ |
Tameva bhāntamanubhāti sarvaṃ tasya bhāsā sarvamidaṃ vibhāti ||

—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

10. The sun shines not there, nor the moon and the stars. Nor do these lightnings shine. How could this fire? All shine after him who shines. All this is illumined by his radiance.

To be continued………………………

Tags- Part 1, Important Upanishad Mantras, in English and Devanagari

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 1 (Post.15,899)

Written by London Swaminathan

Post No. 15,889

Date uploaded in London –19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(English version  posted separately)

1

இந்த பிரபஞ்சத்தில் அசையும் மற்றும் அசையாத ஒவ்வொரு பொருளிலும் இறைவன் (ஈசன்) நீக்கமற நிறைந்துள்ளார்”

ईशा वास्यमिथम् सर्वम् यथकिन्च्च जकथ्याम् जगथ् !

तेन त्यक्तेन भुन्चिच्था मा ग्रुध कस्य स्विद् ध्नम्  !!

ஈஸா வாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச  ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்ஜீதா  மா க்ருத:  கஸ்ய ஸ்வித்தனம்

ஈசாவாஸ்யோபநிஷதம்  

  ஜகத்தில் மாறி மாறி அமைகின்ற  யாவும் ஈசனால் வியாபிக்கப்பெற வேண்டும் . இத்தகைய தியாகத்தின் மூலம் உன்னை போஷித்துக்கொள் ; யாருடைய செல்வதடையும் அபகரிக்காதே .– சுவாமி சித்பவானந்தரின் மொழிபெயர்ப்பு.

OM

 Ishaa Vaasyam Idam Sarvam

Yat Kincha Jagatyaam Jagat Tena

Tyaktena Bhunjeethaa

Maa Grudhah Kasya-svit Dhanam.

****

2

தஹ்ரம் விபாபம் பரமேஸ்ப பூதம்

யத் புண்டரீகம் புர மத்ய ஸம்ஸ்தம்

தத்ராபி தஹ்ரே  தகனம் விசோகம்

தஸ்மின் யதந்தஸ்  ததுபா ஸி தவ்யம் 

மஹா நாராயணோபநிஷதம் 12-16

பரம்பொருளுக்கு உறைவிடமாக உடலின் மத்தியில்  சிறிய தூய ஹிருதய கமலம் இருக்கிறது. இந்த தஹராலயத்தில்  சோகமில்லாத –  துயரற்ற — வெட்டவெளி  உள்ளது ; அது உபாசிப்பதற்குரியது – வழிபட வேண்டியது .

dahraṁ vipāpaṁ varaveśmabhūtaṁ yat puṇḍarīkaṁ puramadhya saṁstham |tatrāpi dahre gaganaṁ viśokaṁ tasmin yadantastadupasitavyam ||

द॒ह्रं॒-विँ॒पा॒प-म्प॒रमे᳚श्म भूतं॒-यँ-त्पु॑ण्डरी॒क-म्पु॒रम॑द्ध्य स॒ग्ग्॒स्थम् ।

त॒त्रा॒पि॒ द॒ह्र-ङ्ग॒गनं॑-विँशोक॒-स्तस्मि॑न्. यद॒न्तस्त-दुपा॑सित॒व्यम् ॥

****

3

யோவேத  நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன்

ஸமஸ்னுதே  ஸர்வான் காமான்  ஸ:

தைத்ரீயோபநிஷத்   2-1

பரம ஆகாசமாகிய ஹிருதய குகையில்  வீற்றிருக்கும் பிரம்மத்தை யார் அறிகிறானோ  அவன் ஆசைகள் அனைத்தும் நிறைவேறப்பெறுபவன் ஆகிறான்.

: இரண்டு புள்ளி இருந்தால் ஹ என்று உச்சரிக்கவும் )

yō vēda̠ nihi̍ta̠-ṅguhā̍yā-mpara̠mē vyō̍mann । sō̎-‘śnu̠tē sarvā̠nkāmā̎n​thsa̠ha

यो वेद॒ निहि॑त॒-ङ्गुहा॑या-म्पर॒मे व्यो॑मन्न् । सो᳚-ऽश्नु॒ते सर्वा॒न्कामा᳚न्​थ्स॒ह ।

****

4

ஏகோ தேவ : ஸர்வ பூதேஷு கூட :   ஸர்வ வ்யாபி

ஸர்வ பூதந்தராத்மா

கர்மாத்யக்ஷ:  ஸர்வபூதாதிவாஸ: ஸாக்ஷீ

சேதா கேவலோ   நிர்குணஸ் ச

— ஸ்வேதாஸ்வதரோபநிஷதம் 6-11

கடவுள் ஒருவரே ; அவர் எல்லார் உள்ளத்திலும் மறைந்திருக்கிறார் . அவர் எங்கும் உள்ளார். எல்லோரிடத்திலும் ஊடுருவியிருப்பவர். எல்லாச் செயல்களையும் அவர் கண்காணிக்கிறார். உயிர்கள் அனைத்துக்கும் அவரே இருப்பிடம். சாட்சியாகவும் சுத்த சைதன்யமாகவும் குணரகிதராகவும் அவர் இருக்கிறார்-.– சுவாமி சித்பவானந்தரின் மொழிபெயர்ப்பு.

एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा।
कर्माध्यक्षः सर्वभूताधिवासः साक्षी चेता केवलो निर्गुणश्च॥

—Shvetashvatara Upanishad (Chapter 6, Verse 11)

eko devah sarvabhuteshu gudhah sarvavyapi sarvabhutantarathma I

karmadhyakshah sarvabhutadhivasah sakshi cheta kevalo nirgunascha II 6.11 II

–Shvetashvatara Upanishad (Chapter 6, Verse 11)

****

5

த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

–மஹாநாராயண உபநிஷதம் 56-1Rig Veda (Mandala 7, Hymn 59).

இது முதலில்  யஜுர்வேத ருத்ரத்தில் வருகிறது

பொருள்

நறுமணத்தோடு கூடியவரும் போஷித்து வளர்ப்பவருமாகிய முக்கண்ணனைப் போற்றுவோம் . வெள்ளரிப்பழம் தன கொடிக்கம்பினின்று விலக்கிக்கொள்வது போன்று நாம் மரணத்தினின்று  விடுபட்டு மோக்ஷம் அடைவோமாக; அமிதா சொரூபமாகிய  சிவனாரிடமிருந்து நாம் விலகாமல் இருப்போமாக . 

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ।उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय माऽमृतात् ॥

Aum Tryambakam yajaamahe sugandhim pushtivardhanam |Urvaarukamiva bandhanaan-mrityormuksheeya maamritaat ||

-Rig Veda (Mandala 7, Hymn 59). YAJUR VEDA RUDRAM, MAHA NARAYANA UPANISHAD 56-1

****

6

அஸூர்யா நாம தி லோகோ  அந்தேன தமஸா வ்ருதாஹா

தாம்ஸ்தே ப்ரேத்யாபி கச்சந்தி யே கே சாத்மஹனோ ஜனாஹா

ஈஸா வாஸ்ய உபநிஷத் –3

அசுரப்பிறவிகள் அஞ்ஞான இருளில் மூடப்பட்டுள்ளன . யாரெல்லாம் ஆத்மீகத்தைப் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் இறந்த பின்  அந்த அசுரலோகத்தை அடைகின்றனர் .

असुर्या नाम ते लोका अन्धेन तमसावृताः ।तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥

Asuryā nāma te lokā andhena tamasāvṛtāḥ,Tāṃste pretyābhigacchanti ye ke cātmahano janāḥ.

****

7

நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ ந மேதயா ந பஹுனா ஸ்ருதேன 

யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ் தஸ்யைஷ

ஆத்மா  விவ்ருணுதே தனூம் ஸ்வாம்   

கடோபநிஷத் 1-2-23

இந்த ஆத்மனை வேதம் கற்பதால் அடைய முடியாது; புத்தி கூர்மையாலோ , ஏராளமான சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ அடைய முடியாது; யாரை இது ஆட்கொள்கிறதோ அவனால் இது அடையப்படுகிறது ; அவனிடத்தே இந்த ஆத்மன் தனது சொரூபத்தில் விளங்குகிறது. 

नायमात्मा प्रवचनेन लभ्यो न मेधया न बहुना श्रुतेन ।

यमेवैष वृणुते तेन लभ्यस्तस्यैष आत्मा विवृणुते तनूँ स्वाम् ॥ २३ ॥

nāyamātmā pravacanena labhyo na medhayā na bahunā śrutena |

yamevaiṣa vṛṇute tena labhyastasyaiṣa ātmā vivṛṇute tanūm̐ svām || 1-2-23 ||

****

8

ந தத்ர ஸூர்யோ பாதி  ந சந்த்ரதாரகம் நேமா

வித்யுதோ பாந்தி குதோ யமக்னி:

தமேவ பாந்தமானுபாதி  ஸர்வம் தஸ்ய

பாஸா ஸர்வமிதம் விபாதி — கடோபநிஷதம் 5-15

சூரியன் அங்கு பிரகாசிப்பதில்லை; சந்திரனும் நக்ஷத்திரங்களும் மின்னலும் அங்கு ஒளிர்வதில்லை ; இனி இந்த நெருப்பு  (நாம் காட்டும் சிறிய தீபம்) எப்படி பிரகாசிக்கும் ? பிரம்மத்தைச் சார்ந்து யாவும் பிரகாசிக்கின்றன . அதன் பிராகாசத்திலிருந்து எல்லாவற்றுக்கும் பிரகாசம் வருகிறது. Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥

—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

Na tatra sūryo bhāti na candratārakaṃ nemā vidyuto bhānti kuto’yamagniḥ |
Tameva bhāntamanubhāti sarvaṃ tasya bhāsā sarvamidaṃ vibhāti ||

—Katha Upanishad (Chapter 2, Valli 2, Verse 15) and the Mundaka Upanishad (Chapter 2, Verse 10).

To be continued………………………

Tags-முக்கிய உபநிஷத மந்திரங்கள்,  Part 1,

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-59; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,888)

Written by London Swaminathan

Post No. 15,888

Date uploaded in London –19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

வடநாட்டுத்திருப்பதி

Part 59

நைமிசாரண்யம்

தாயார் : ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி

மூலவர் : ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)

இடம் : உத்தரப் பிரதேசம்

கடவுளர்கள்: தேவ ராஜா ,புண்டரீகவல்லி தாயார்

“குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !…” என்று சொன்னவர் காஞ்சி மஹாபெரியவர்.

இந்த திருத்தலம் லக்னோவில் இருந்து மேற்கே சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது[3]. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர்.

நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று.

வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர்.

இந்தக்காட்டில் சூதர்என்ற முனிவர் வசித்தார். இவரே புராணங் களுக்கு மூலகர்த்தா. வியாசர் எழுதியபதினெட்டு புராணங்களையும் மற்ற முனிவர்களுக்கு உபதேசித்தவர் இவர். இதுதவிர, எல்லா தெய்வங்களின் வரலாற்றையும் சொல்லியிருக்கிறார்.

தற்போதுள்ள சன்னதியிலும் ஆழ்வார் பாடிய மூர்த்திகள் இல்லை. ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

சக்கர தீர்த்தம், கோமதி நதி என்று இரண்டு புண்ணிய தீர்த்தங்கள். கோமதி நதிக்கு ஆதிகங்கை என்று மற்றொரு பெயர் உண்டு. இந்த கோமதி தான் முதலில் பூமியில் பிரம்மனால் படைக்கப்பட்ட நதி என்று சொல்வார்கள். கோமதி நதியில் நீராடிவிட்டு, சக்ரதீர்த்ததில் நீராடுவது விசேஷம்.

இங்குள்ள சக்ர தீர்த்தம் 14 லோகங்களில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களையும் உள்ளடக்கியது என்று சொல்லப்படுவதால், சகல பாவங்களையும் போக்க வல்லது. எம்பெருமானுக்கும் சக்ரநாராயணன் என்றொரு திருநாமம் உண்டு. இந்த சக்ரதீர்த்த கரையில் சக்கரத்தாழ்வார் ராம, லட்சுமண, சீதை முதலியோருக்கும் சன்னதிகள் உண்டு.

இங்கிருந்து கோமதி நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி (வ்யாஸகத்தி) என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகப்பிரும்ம முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் போன்ற புராணங்களை உருவாக்கினார்கள். வேத நூல்களை உருவாக்கிய முனிவர்கள் வாஸம் செய்த பெருமை இத்தலத்திற்கு உண்டாகிறது. இந்த கோவிலில் ஓலை வடிவில் இந்த புராணங்கள் இன்றும் பாதுகாக்கப் படுகின்றன. இங்கேயுள்ள ஆலமரத்தடியில் பல மஹரிஷிகள் இருந்து உபதேசம் செய்ததால், அதனை சுற்றி வருபவர்களுக்கு, இன்றும் இந்த ஆலமரமே, அதில் இருந்து வீசும் புண்ணிய கிரணங்கள் மூலம், அந்த ரிஷிகளின் அருளை அள்ளி வழங்குவதாக நம்பிக்கை.

இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள ஹனுமான்கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் உள்ள பிரும்மாண்ட அனுமார், இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள காட்சி மிகவும் ரம்மியமானதாகும்.

ஹநுமான்கட்டி செல்வதற்கு சற்று முன்னால், புராண மந்திர் என்று சுகப்பிரம்ம ரிஷிக்கு ஒரு கோவில் உள்ளது, கிளி மூக்குடன் பெரிய வெண்கல சிலை உள்ள கோவில் ஆகும்.

இங்கு ராமானுஜ கூடமும், அஹோபில மடமும் தங்குவதற்கும் தென்னிந்திய உணவுக்கும் உள்ளன. அஹோபில மடத்தில், தேவனார் விளாக அழகியசிங்கர் என்ற ஆச்சாரியாரின் பிருந்தாவனம் உள்ளது.

*****

Picture used from a website;thanks.

நைமிசாரண்யம்    பாசுரங்கள் 

998.  

வாள் நிலா முறுவல் சிறு நுதல் பெருந் தோள்*  மாதரார் வன முலைப் பயனே பேணினேன்*

அதனைப் பிழை எனக் கருதி*  பேதையேன் பிறவி நோய் அறுப்பான்*

ஏண் இலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி*   இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்*

வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!

999.  

சிலம்பு அடி உருவின் கரு நெடுங் கண்ணார்*  திறத்தனாய் அறத்தையே மறந்து*

புலன் படிந்து உண்ணும் போகமே பெருக்கி*  போக்கினேன் பொழுதினை வாளா*

அலம் புரி தடக்கை ஆயனே! மாயா!*  வானவர்க்கு அரசனே!* 

வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!    

1000.  

சூதினைப் பெருக்கி களவினைத் துணிந்து*  சுரி குழல் மடந்தையர்திறத்துக்*

காதலே மிகுத்து கண்டவா*  திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*

வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்*  வேலை வெண் திரை அலமரக் கடைந்த நாதனே*

வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!  

1001.  

வம்பு உலாம் கூந்தல் மனைவியைத் துறந்து*  பிறர் பொருள் தாரம் என்று இவற்றை*

நம்பினார் இறந்தால்*  நமன் தமர் பற்றி எற்றி வைத்து*

எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையை*  பாவீ ! தழுவு என மொழிவதற்கு அஞ்சி*

நம்பனே! வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!   

1002.  

இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்று என்று*  இரந்தவர்க்கு இல்லையே என்று*

நெடுஞ் சொலால் மறுத்த நீசனேன் அந்தோ!*  நினைக்கிலேன் வினைப் பயன் தன்னை*

கடுஞ் சொலார் கடியார் காலனார் தமரால்*  படுவது ஓர் கொடு மிறைக்கு அஞ்சி*

நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!

1004.  

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும்*  நீதி அல்லாதன செய்தும்*

துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே*  துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*

வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா*  வானவா! தானவர்க்கு என்றும் நஞ்சனே!*

வந்து உன் திருவடி அடைந்தேன்*  நைமிசாரணியத்துள் எந்தாய்!           

1007.  

ஏதம் வந்து அணுகாவண்ணம் நாம் எண்ணி*  எழுமினோ தொழுதும் என்று*

இமையோர் நாதன் வந்து இறைஞ்சும்*  நைமிசாரணியத்து*  எந்தையைச் சிந்தையுள் வைத்து*

காதலே மிகுத்த கலியன் வாய் ஒலிசெய்*  மாலைதான் கற்று வல்லார்கள்*

ஓத நீர் வையம் ஆண்டு வெண் குடைக் கீழ்*  உம்பரும் ஆகுவர் தாமே. (2)     

–subham—

Tags– Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-59; திவ்யதேசம்- நைமிசாரண்யம் , லண்டன் சுவாமிநாதன் படங்கள், வடநாட்டுத்திருப்பதி, Part 59.

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 19 (Post No.15,887)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,887

Date uploaded in London –   19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 19 

(ஆர், சேஷாத்ரிநாதன்) 

पुनि धीरजु धरि अस्तुति कीन्ही। हरष हृदयँ निज नाथहि चीन्ही॥

मोर न्याउ मैं पूछा साईं। तुम्ह पूछहु कस नर की नाईं॥4 

மீண்டும் துளசிதாசரிடம்…………………..

பிறகு ஹனுமன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  பகவானைப் போற்றினார். தமது தலைவனை அடையாளம் கண்டு கொண்ட  அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்ரீ இராமனைப் பார்த்து ஹனுமான் “சுவாமி! நான் தங்களைக் கேட்டவை அனைத்தும் நியாயமானதே. பல்லாண்டுகளுக்குப் பிறகு தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தவசி கோலத்தில். நான் ஒரு குரங்கு. அதனால் குரங்கு புத்திக்கு ஏற்ப உங்களை ஏதேதோ கேட்டேன். நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.  ஆனால் நீங்கள் மனிதனைப் போல என் கதையைச் சொல்லும்படி கேட்பது விந்தையினும் விந்தை” என்றான்.

..

 निज नाथहि चीन्हीं பல ஆண்டுகளுக்குப் பிறகு  தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தபஸ்வி கோலத்தில் . இங்கு தான் மீண்டும் அந்த பத்ம இராமாயணத்தை நமக்கு நினைவு படுத்துகிறார், சிறு வயதில் இராமுனுடன் விளையாடியுள்ளார். பல ஆண்டுகள் ஓடி விட்டன. அதுவும் தவசி கோலத்தில் வேறு இருப்பதால் உடனே அடையாளம் தெரியவில்லை என்பதாகச் சொல்கிறார். அதனால் நான் கேட்டதில்  நியாயம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக நீங்கள் கேட்டதில் என்ன நியாயம்? நீங்கள் பரப்பிரம்மம், எல்லாம் அறிந்தவர். அப்படி இருக்கும்போது தாங்கள் என்னிடம் எப்படிக் கேள்வி கேட்கிறீர்கள். தாங்கள் எல்லாம் தெரிந்தவர்தானே? என்று ஹனுமன் நினைக்கிறான். 

तव माया बस फिरउँ भुलाना। ता ते मैं नहिं प्रभु पहिचाना।।5

एकु मैं मंद मोहबस कुटिल हृदय अग्यान।

पुनि प्रभु मोहि बिसारेउ दीनबंधु भगवान॥2 

“நானோ தங்கள் மாயாவசத்தால் என்னை மறந்து திரிந்து கொண்டிருக்கிறேன். எனவே என் சுவாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.” 

प्रष्टव्यं योग्यमस्माकं त्वं पृच्छसि कथं नृवत्। 

मायावश्यो भ्रमाम्यत् प्रभु न ज्ञातवानतः॥

 “நான் உங்கள் மாயையால் கட்டுண்டவன். ஆம். எனக்கு காலத்தின் கொடுமையினால், விதியின் கடுமையினால் பல அவகுணங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஸ்வாமி ! நான் உனக்கு சேவகம் செய்யப் பிறந்திருக்கும் புத்திரன் அல்லவா? என் பிரபுவாகிற நீர்,எனக்கு எஜமானரல்லவா? (அதாவது நான் மாயையில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் விளையாடியவர் ஆயிற்றே. தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா?” என்று கேட்கிறான்)

जदपि नाथ बहु अवगुन मोरें। सेवक प्रभुहि परै जनि भोरें॥

नाथ जीव तव मायाँ मोहा। सो निस्तरइ तुम्हारेहिं छोहा॥1

“இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. சுவாமி! ஜீவர்கள் அனைவரும் உங்கள் மாயையினால் தானே கட்டுண்டு நிற்கிறார்கள். உனது அருள்தான் அவர்களை  உய்விக்கும். அண்ணலே!

ता पर मैं रघुबीर दोहाई। जानउँ नहिं कछु भजन उपाई॥

सेवक सुत पति मातु भरोसें। रहइ असोच बनइ प्रभु पोसें॥2

 “உன் மேல் ஆணை உம்மை பூஜிப்பதோ  உம்மை அடைவதற்கு யோகசாதனகளைச செய்வதோ  எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கேயாவது சேவகன் தனது எஜமானனை நம்பி வாழ்பவன் கவலைப் பாடுவானா? அது போல் தாயை நம்பி வாழும் குழந்தை கவலைப் படுமா? அதுபோல என்னை ரட்சிப்பவர் தாங்கள் தான். உமது திருவடிகளைச்  சரணம் அடைந்து  உம்மையே அண்டி நான் வாழ்வேன், துளசிதாசர் இங்கு कछु भजन उपाई॥ என்றப் பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உன்னை நினைத்து சிறிதளவே பூஜித்தாலும் தாங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் எனக்கு அந்தச் சிறிதளவு பூஜைகூட செய்யத் தெரியாது என்று ஹனுமன் பணிவுடன் சொல்ல முயல்கிறார். இந்த சுலோகம் ஹனுமானின் பதினாலாவது ஸ்துதி.. நட்சத்திரங்களில்  பதினாலாவது சித்திரை . ஹனுமானின் நட்சத்திரம் சித்திரை. மேற்கண்ட ஸ்லோகத்தை சொல்பவர்களுக்கு நன்மையே நடக்கும்.

 ஹனுமன் தனக்கு ஒன்றுமே தெரியாது ஞானமில்லாதவன். எனது தலைவனை மட்டும் நம்பி இருக்கிறேன் என்று சொல்கிறான். அதாவது எனக்கு இறைவனை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வேறு பாதையும் இல்லை என்று அந்த நாராயணனிடம் சரண் அடைகிறான். அதாவது சர்ரனாகதி தத்துவத்தில் இது முதல் அம்சம். . அப்படியானால் சரணாகதி தத்துவத்தின் அந்த ஆறு அங்கங்கள் என்ன?

अनुकूलस्य संकल्पः प्रतिकूलस्य वर्जनम् ।

रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्वे वरणं तथा ।

आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागति:

இந்த சுலோகம் ஹரி-பக்தி-விலாஸம் (என்ற வைஷ்ணவக் கிரந்தத்தில் இருந்து வருகிறது, இது ஸ்ரீ சனாதன கோஸ்வாமி அவர்கள் எழுதியது. இதில் ஷட்விதா சரணாகதி — பகவானிடம் சரணாகதியாக இருப்பதற்கான ஆறு முக்கிய அம்சங்கள் விளக்கப்படுகின்றன.

சரணாகதி – ஆறு அம்சங்கள்

1.       அனுகூலஸ்ய ஸங்கல்பः –

 நன்மைக்கே மனதளவில் ஒப்புதல்

பகவானுக்கு ஏற்ற, தர்மத்துக்கு ஏற்ற, பக்திக்கு ஏற்ற செயல்களை மனதாலும், செய்கையாலும் ஏற்கும் மனநிலை.

-உதாரணம்: ஜபம், பஜனம், தர்மம், பக்தி, சேவை.

“நான் பகவானுக்கே உகந்ததைச் செய்கிறேன்” என்ற மனநிலை.

2.       ப்ரதிகூலஸ்ய வர்ஜனம் –

 தர்மத்துக்கு எதிரானதைத் தவிர்த்தல்

-பக்திக்கு விரோதமான, தர்மத்துக்கு எதிரான, மாயை சார்ந்த செயல்களை முழுமையாக விலக்குதல்.

-உதாரணம்: அகங்காரம், ஆசை, பொய், வன்மம்.

“பகவானுக்கு விரோதமானதை நான் செய்ய மாட்டேன்” என்ற உறுதி.

3.       ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸ: –

 பகவான் என்னை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை

-எந்த சூழ்நிலையிலும், பகவான் என் பாதுகாவலர் என்ற உறுதியான நம்பிக்கை.

-இது பக்தியின் ஆதார நம்பிக்கை.

“என்னை யாரும் காப்பாற்ற முடியாது; பகவானே என் காப்பாளர்”.

4.       கோப்த்ருத்த்வே வரணம் –

 பகவானை என் பாதுகாவலராக ஏற்கும் மனநிலை

-பகவானை என் வாழ்வின் வழிகாட்டி, பாதுகாவலர் என உணர்ந்து ஏற்கும் நிலை.

-இது சரணாகதியின் செயற்கூறு.

“நான் உன்னையே என் வழிகாட்டியாக ஏற்கிறேன்”. 

5.       ஆத்மநிக்ஷேப: –

தன்னை முழுமையாக பகவானிடம் ஒப்படைத்தல்

-சுயம், அகங்காரம், சொந்த விருப்பம் ஆகியவற்றை முழுமையாக விட்டு,

பகவானிடம் தன்னை ஒப்படைக்கும் நிலை.

“என் வாழ்க்கை, என் சிந்தனை, என் செயல்—

6.       கார்பண்யம் –

தாழ்மையும், தனிமையும் உணர்தல்

-தாழ்மை, தன்னம்பிக்கையின் இல்லாமை,

பகவானின் தயை இல்லாமல் நான் ஒன்றும் அல்ல என்ற உணர்வு.

“நான் ஒன்றும் இல்லை; நீயன்றி நான் எதுவும் இல்லை”.

🔱மொத்தமாக: சரணாகதி என்பது ஒரு மனநிலை, ஒரு தத்துவம், ஒரு பக்தி யோகத்தின் உச்சம்.

 இந்த ஆறு அம்சங்கள் இல்லாமல், உண்மையான சரணாகதி இல்லை.

நன்மை எனில் நான் துணிவேன் –

நாயகனுக்கே நான் ஒப்பேன்!

தீமை எனில் நான் தவிர்வேன் –

தேவர் வழியில் நான் நிற்பேன்!

பாதுகாப்பு நீயே எனில் –

பயமென்ன? என் நெஞ்சம் உறும்!

வழிகாட்டி நீயே எனில் –

வஞ்சகங்கள் எல்லாம் மறும்!

என் உயிரை உனக்கே கொடுப்பேன் –

என் உள்ளம் உனக்கே உருப்பேன்!

தாழ்மையுடன் நான் நிற்பேன் –

தந்தை என உன்னை ஏற்பேன்!

ஆறு நெறிகள், ஆறு தீபங்கள் –

ஆனந்தத்தின் வாசல் திறக்கும்!

சரணாகதி எனும் சிகரம் –

சதாசிவத்தின் சுடர் பரக்கும்!To be continued……………………………………………………………………………..

சீதக்காதியின் பெருமை! (Post No.15,886)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,886

Date uploaded in London – 19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தமிழ் இன்பம்

சீதக்காதியின் பெருமை! 

ச. நாகராஜன் 

வள்ளல் சீதக்காதி புலவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல்

வாரி வழங்கிய பெரும் வள்ளல் ஆவார்.

அவரிடம் சென்று பரிசு பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்

நமச்சிவாயப் புலவர்.

சீதக்காதி இருந்ததால் அவருக்கு பணக்கஷ்டமே இருந்ததில்லை; பணத்தின் அருமையும் அவருக்குப் புரிந்ததில்லை.

ஆனால் சீதக்காதி மறைந்தவுடன் தான் அவருக்குப் பணத்தின் அருமையும் பெருமையும் புரிந்தது. 

அவர் பாடினார் இப்படி: 

மைப்போதகமும் வளநாடுஞ் செந்தமிழ் வாணர்க்கருள்

கைப்போ தகமனை யான்சீதக் காதியைக் காத்திருந்த

அப்போ தறிந்தில மிப்பாழ்ப் பணத்தி னருமையெல்லாம்

இப்போ தறிந்தன மீயாத லோப ரிடத்திற்சென்றே

பொருள் : மை – கருமையாகிய 

போதகமும் – யானைகளையும் 

வளநாடும் – வளமாகிய ஊர்களையும் 

செந்தமிழ் வாணர்க்கு – செந்தமிழ் வல்ல புலவர்களுக்கு 

அருள் – கிருபை செய்கின்ற 

கை – துதிக்கையை உடைய 

போதகம் அனையான் – யானையை நிகர்த்தவனாகிய 

சீதக்காதியை – சீதக்காதி துரையை 

காத்திருந்த – காத்துக் கொண்டிருந்த 

அப்போது – அந்தக் காலத்தில் 

இ – இந்த 

பாழ் – பாழாகிய 

பணத்தின் அருமை எல்லாம் – பணத்தின் அருமையை முழுவதுமாக 

அறிந்திலம் – அறிந்தோமில்லை 

இப்போது – இப்பொழுது 

ஈயாத லோபர் இடத்தில் சென்று – ஒன்றும் கொடுக்காத கஞ்சர்களிடத்தில் போய் அறிந்தனம் – (பணத்தின் அருமையை) அறிந்து கொண்டோம்

சீதக்காதி மறைந்தவுடன் எல்லையில்லாத் துக்கம் கொண்ட நமச்சிவாயப் புலவர் ஒரு இரங்கல் பாடலைப் பாடினார்.

பூமா திருந்தென் புவிமா திருந்தென் பூதலத்தில்

நாமா திருந்தென்ன நாமிருந் தென்னநன் நாவலற்குச்

கோமா னழகமர் மால்சீதக் காதிகொடை மிகுந்த

சீமா னிறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே

பொருள்:  பூமாது இருந்து என் – திருமகள் இருந்து என்ன பயன் 

புவிமாதிருந்தென் – நிலமகள் இருந்து என்ன பயன் 

பூதலத்தில் நாமாது இருந்தென்ன – உலகத்தில் கலைமகள் இருந்து தான் பயன் 

என்ன 

நாம் இருந்து என்ன – நாமும் இருந்து தான் என்ன பயன் 

நல் நாவலர்க்கு – நல்ல புலவர்களுக்கு 

கோமான் – தலைவன் 

அழகு அமர் – அழகு வாய்ந்த 

மால் – பெருமையுள்ள 

சீதக்காதி – சீதக்காதி

 கொடைமிகுந்த – ஈகை மிகுந்த 

சீமான் – பெரும் செல்வனான அவன் 

இறந்திட்ட பொழுதே – இறந்த பொழுதே 

புலமையும் செத்தது – புலமையும் இறந்து போயிற்று.

சீதக்காதி மறைந்தவுடன் புலமையும் இறந்தது; வெளியில் புலமைக்கு

மதிப்புத் தருவோரும் இல்லாமல் போய்விட்டனர் என்று வருந்தினார் 

நமச்சிவாயப் புலவர்.

**

Ornaments in Buddha Charita,Rajatarangini:Ancient Hindu Jewellery! You can get Ph.D.- Part 5 (Post15,885)

Hindu Mather Goddess in Harappan Civilization

Written by London Swaminathan

Post No. 15,885

Date uploaded in London –18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Research article- Part 5

Madurai Menakshi (Wife of Siva).

We get interesting information about jewels and ornaments from Sangam Tamil literature, Rajatarangini of Kalhana and Buddha Charita of Asvaghosa.

Tamil Sangam literature has many Sanskrit words like Valaya (bangles, bracelets) Nupura (anklet), Mani (gem stones) and Mukta (Muthu,Pearl). Mukta may be taken from Tamil. Pravala is used as Pavalam in Tamil.

Tamils wore ornaments from head to foot like their north Indian counterparts.  Only later epic Silappadikaram has full details. Sangam Tamils wore bangles made up of seashells a lot. Both men and women had anklets (Kazal for men; Silambu for women). Children had foot ornaments as well; later literature mentioned Kolusu; but Sanskrit word Kinkini is in Sangam poems. As I mentioned earlier all the Five Tamil Epics are named with ornaments, but with Sanskrit words!

Most interesting thing is the mention of Makara rings (shark shaped) worn by the Sangam Tamils. We find such rings until today.

Kalhana who wrote the history of Kashmir in Sanskrit says in his work Rajataarangini,

“Now, gentle friend! Drink freely, your ears serving the mother of pearl glasses, of this River of Kings (raajatarangini) delightful with the flow of its sustained sentiment- 1-24”.

For this sloka R S Pandit (India’s first Prime Minister Jawaharlal Nehru’s brother-in-law) has given the following detail in the footnote:

Kalhana hoped his poem would be recited like the great epics in time to come. Mother of pearl glasses for drinking wine must have been in use among the people in his day. In Taranga V verse 169, there is a reference to jewelled glasses for liqueur which were used by the nobility.

Bernier speaks of Tibetan jade presented to Aurangazeb in Kashmir, which was “in great estimation in the court of the Mogol; its colour is greenish, with white veins, and it is hard to be wrought only with diamond powder. Cups and vases were made of this stone. I have some of the most exquisite workmanship, inlaid with strings of gold, and enriched with precious stones”– Bernier

***

Hindu woman in Ashmolean Museum, Oxford, UK.

Asvaghosha wrote four books Saundarananda, Buddha Carita, Vajrasuci and Sraddotpada  Sastra.

Jewellery is mentioned as

Bhuushana,

Aabharana ,

Mandana

It included the following ornaments: various kinds of necklaces called Mala (maalaa), Hara(haara), which sometimes were long enough to dangle up to breasts, special necklaces called Yoktraka, Suvarna Suutra and Kantha suutra.

Dangling earrings-Kundala and Mani kundala (studded with precious jewels);

Anklets (Nuupura), bracelets or armlets called Keyuura, Bhujapaasha;

Valaya- bangles and Angad;

Girdle called Mekhalaa, Kaanchi and Jhaghana Vibhuushana. Some of them had jingling bells.

Mahaavastu also mentioned these ornaments.

While ladies of high pedigree used gold, silver studded jewellery, common people used white shell ornaments.

From Begran in Gandhara region a beautiful collection of fragments of ivory toilet boxes have been found from the ruins of Kanishka’s palace.

The kings and princes used a large number of ornaments. Royal tiara with strings of pearls hanging over their shoulders, armlets in the arms, diadem with blazing jewels and necklaces.

Q.Curtius Rufus (First century CE) writes:

“Indians hang precious stones as pendants from their ears, and persons of high social rank or of great wealth, deck their wrist and upper arm with bracelets of gold…. The luxury of their kings or they call it, their magnificence is carried to a vicious excess without a parallel in the world”.

***

Yakshi with head to foot ornaments

Some important Sanskrit Words in modern usage:

Angada- armlet like a coiled snake;

Anguliyaka- finger ring;

Arsi- thumb ring set with mirror;

Baahu- armlet;

Bali- ring type earring with pearl strung on it;

Bina- star shaped forehead ornament;

Bindi -forehead ornament;

Chaulari- four stringed necklace;

Chuudaamani- ornament for hair, lotus shaped, its petals ornamented with pearls and precious stones;

Ekavali- single strand pearl necklace;

Chungru- anklet with small bells (kinkini)

Hamsa mithuna- decorative motif consisting of a pair of swans;

Hiranya- gold;

Hirnyasraj- gold garlands;

Kaksha- red seeds for making ornaments;

Kanaka kamala – a full blown lotus design earring set in rubies, still used in South India;

Kancala- elaborate earrings with pendants;

Kaachis- hip girdle with bells;

Kangan- bracelet;

male and female jewellery;  Ashmolean Museum, Oxford, UK.

Kanta- short necklace broad and flat;

Karnika- earring;

Karnphul-flower shaped earring;

Kinkini- anklet with small bells suspended;

Kirita- crown;

Kundela- simple earring or circular;

Maangaa maalaai- gold coin necklace of south Indians;

Manjira- hollw anklets;

Mekhalaa- hip belt or girdle;

Mukta – pearl; muktavali-pearl necklace;

Nishka- necklace of gold coins;

Pattabandha- ornamented gold strip for holding the turban in position;

Phalaka- slab like gems;

Phalaka haara- necklace with slab like gems at intervals;

Phalaka valaya – bracelet with slab like gems set into it;

Rasana-girdle;

Ratnajali- a net of braid and pearls worn around chignon by women ;

Ratnanguliya- finger ringsl studded with gems; one of them is NAVA RATNA RING;

Satlar- seven stringed necklace;

Tilari- three  stringed necklace;

Tulakoti- heavy anklets with two ends enlarges at their meeting point;

Valaya- bracelet; bangles;

Yashti- necklace of gems and gold beads with large central head.

Tamils of later days also had a long list of ornaments but not found in ancient literature. The sculptures and paintings show this jewellery.

–subham—

Tags- Ornaments, Buddha Charita, Rajatarangin, :Ancient Hindu Jewellery,  You can get Ph.D., Part 5, Research article

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-58; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,884)

Written by London Swaminathan

Post No. 15,884

Date uploaded in London –18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கண்டமெனும் கடிநகர் / தேவப்பிரயாகை

திருக்கண்டமென்னும் கடிநகர் (தற்காலத்தில் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது) என்பது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். உத்தரகண்ட் மாநிலத்தின் தேரி கார்வால்  மாவட்டத்தில், அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆறுகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இது பெரியாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

திவ்யதேசம்- திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’    

மூலவர்-நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி

தாயார்-  புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா

திருக்கோலம்- நின்ற திருக்கோலம் 

திசை      -கிழக்கு  

பாசுரங்கள்-     11   

மங்களாசாசனம்- பெரியாழ்வார்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தேவப்ரயாகை அமைந்திருக்கிறது. ஹரித்துவாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், ரிஷிகேஷில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் பத்ரிநாத்தில் இருந்து சுமார் 290 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன.

1

அலக்நந்தா நதியுடன் பாகீரதி சங்கமமாகும் தேவப்ரயாகை ( ரிஷிகேஷில் இருந்து 70 கிமீ ) ;

2

அலக்நந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் ருத்ரப்ரயாகை (140 கிமீ) ;

3

அலக்நந்தாவுடன் பிண்டர்நதி சேரும் கர்ணப்ரயாகை (170 கிமீ);

4

அலக்நந்தாவுடன் நந்தாகினி சேரும் நந்தப்ரயாகை (190 கிமீ) ;

5

அலக்நந்தாவுடன் கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப்ரயாகை (260 கிமீ) என ஐந்து ப்ரயாகைகள் ( பஞ்ச ப்ரயாகை) பத்ரிநாத்திற்கு முன்பு உள்ளன.

Following pictures are taken from a website;thanks

தேவப்பிரயாகை  அலஹாபாத்தின் திரிவேணி சங்கமம் போன்று வழிபடப்படும் வரும் ஒரு புண்ணிய சங்கமம் ஆகும். அமைதியாக நகர்ந்து பச்சை நிறத்துடன் வரும் பாகீரதியும், ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து இளம் சிவப்பு நிறத்துடன் வரும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. சங்கமத்துக்குப் பிறகு ‘கங்கை’ எனப் பெயர் மாறுகிறது. ப்ரயாகை என்றால் சங்கமிப்பது; இங்கு பாகீரதியும் அலகநந்தாவும் சங்கமிப்பதாலும், இங்கு பிரம்மா, விஷணுவே தேவன் என்று அவருக்காக சிறந்த யாகத்தை செய்ததாலும், இந்த இடத்தை இந்திரனே பாதுகாப்பதாலும், இது தேவப்ரயாகை என்று பெயர் பெற்றது.

பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவம் செய்ததாக வரலாறு. ராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக ஸ்ரீராமன் இங்கே தவம் செய்ததாக ஐதீகம்.

கண்டம் என்றால் ஒரு பகுதி என்றும் கடி என்றால் மணம் கமழும் என்றும் அர்த்தம். மணம் கமழும் பகுதி என்று ஆழ்வாரால் பாடப்பட்ட பகுதி, கண்டம் எனும் கடி நகர் ஆகும்.

கடி என்றால் ஒரு நொடி பொழுது என்றும் இந்த திவ்யதேசத்தில் ஒரு நொடி பொழுது இருந்தால் எல்லா ஜென்மங்களிலும் செய்த பாவங்களை போக்கி விடும் என்று ஓர் அர்த்தம் சொல்வார்கள்; 108 திவ்யதேசங்களில் இப்படி சொல்லப்பட்ட திவ்யதேசங்கள் மூன்று, அவை, கண்டமெனும் கடி நகர், திருக்கடிகை, திருக்கடித்தானம் (மலையாள திவ்யதேசம்) ஆகும்.

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீராமன். இவரை ரகுநாத்ஜீ என்று அழைக்கிறார்கள். சுமார் 72 அடி உயரத்துடனும், உச்சியில் கூம்புவடிவத்துடனும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமன் திருவடி பதித்த பாறை ஒன்றும் இங்கிருக்கிறது. ஸ்ரீராமன் இந்த இடத்தில் தசரதருக்கு பிண்டதானம் கொடுத்தாராம். ஸ்ரீரகுநாதரின் ஆலயத்துக்கு அருகில் பத்ரிநாதர், கால பைரவர், ஹனுமான் மகாதேவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சஞ்சீவ பர்வதம் தாங்கிய ஹனுமனும் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் உத்சவர் உண்டு. ஆண்டுக்கு பத்து நாட்கள் உற்சவம் காண்கிறார்.

ஆதி சங்கரர் நிறுவிய கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்று கூறப்படும். ஸ்வாமி ராமானுஜரும் மங்களாசாசனம் செய்த க்ஷேத்திரம் ஆகும்.

தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான் என்றும், இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில் தான் எம்பெருமான் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.

கோவிலுக்குப் பின்பகுதியில் சிறிய ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.

தல வரலாறு: பரத்வாஜ முனிவருக்கு பெருமாள் காட்சி அளித்த தலம் இதுவாகும்.

தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

பாசுரம்

 91.  

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்*

எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*

கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்*

கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)

392.  

சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச*

மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*

நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்*

கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 

393.  

அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு-

எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*

சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*

கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே

394.  

இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை*

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

395.  

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்*

மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்*

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

396.  

தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு*

மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*

அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட*

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

397.  

விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி*

மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*

அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*

கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.

400.  

 மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை-

ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்*

கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

401.  

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்*

வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*

தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு*

கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)

–subham-

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-58; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், கண்டமெனும் கடிநகர் ,தேவப்பிரயாகை

கர்மபூமி பாரதமே சிறந்தது! (Post No.15,883)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,883

Date uploaded in London – 18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

கர்மபூமி பாரதமே சிறந்தது! 

ச. நாகராஜன் 

கர்மபூமி பாரதமே சிறந்தது! 

அத்ராபி பாரதம் ச்ரேஷ்டம் ஜம்புத்வீபே மஹாமுனே |

யதோ ஹி கர்மபூரேஷா அதோன்யா போகபூமிய: || 

ஜம்புத்வீபத்தில் ச்ரேஷ்டமான (உயர்ந்த) இடம் பாரதம் தான்! ஏனெனில் இது கர்ம பூமி. மற்ற அனைத்தும் (பிரதேசங்களும்) போக பூமியாகும்.

பிராமணர்களை இகழாதே!

 அத்யுன்னதபதம் ப்ராப்த: பூஜ்யான் நைவாதவமானயேத் |

நகுஷ: சக்ரதாம் ப்ராப்தஷ ச்யுதோகஸ்யாவமானநாத் || 

ஒரு மனிதன் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும் கூட அவன் ஒருக்காலும் பூஜ்யர்களை (பிராமணர்களை) இகழக் கூடாது. இந்திர பதவியை அடைந்த நகுஷன் அகஸ்தியரை அவமானப்படுத்தியதால் தன் உயர்ந்த பதவியிலிருந்து விழுந்தான்.

முள் தரும் வேதனை போல ஆசை பிறப்பைத் தரும்!

அணுமாத்ரம் யயா ஷல்யம் சரீரே துக்கதாயகம் |

ததாதீசு சம்யுக்தம் மன: சம்சாரதாயகம் ||

முள்ளானது மிகச் சிறியதாக இருந்தாலும் கூட உடலுக்கு எப்படி பெரிய வேதனையைத் தருகிறதோ, அதே போல, உலக விஷயங்களில் ஆசைப்பட்ட மனதுடன் இருப்பவன் மறுஜென்மத்தை அடைவான். (அதனால் துன்பங்களைப் பெறுவான்)

எட்டுவகை சித்திகள் (அஷ்டமாசித்தி)!

அணிமா மஹிமா சைவ லகிமா கரிமா ததா |

ப்ராப்தி: ப்ராகாம்யமீஷித்வம் வசிஷ்த்வம் சாஷ்ட சித்தய: ||

அஷ்டமாசித்தி எனப்படும் எண்வகை சித்திகளாவன:

1)      அணிமா – அணு போல உடலை சிறியதாக ஆக்குதல்

2)       மஹிமா – உடலை மலை போலப் பெரியதாக ஆக்குதல்

3)      லகிமா – காற்றைப் போல லேசாக ஆக்குதல்

4)      கரிமா – அசைக்கமுடியாமல் பாரமாக இருத்தல்

5)      பிராப்தி – மனதால் நினைத்ததை அடைதல்

6)      பிரகாமியம் – கூடு விட்டுக் கூடு பாய்தல்

7)      ஈசத்துவம் – பிரம்மா உள்ளிட்ட அனைவருக்கும் ஆணையிடுதல்

8)      வசித்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்தல்

சிறிய கௌரவமும் பெரியோருக்கு பெரிதாகி விடும்! 

அத்யுதாத்தகணேஷ்வேஷா க்ருதபுண்யை: ப்ரரோபிதா |

சதஷாகிமதத்யேவ யாவன்மாத்ராபி சத்க்ரியா ||

மிக உயர்ந்த குணங்களை உடையோருக்குச் சிறிய கௌரவத்தை அளித்தாலும் கூட அது அவர்கள் ஏற்கனவே செய்த நல்ல செயல்களால் நூறு கிளைகளை உடைய மரம் போல வளரும்.

**

இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும் (Post.15,882)

Written by London Swaminathan

Post No. 15,882

Date uploaded in London –17 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இந்துக்களின் பழங்கால நகைகள்- 5; காம சூத்திரத்தில் நகைகளும் பெண்களுக்கு புத்திமதியும்!

வாத்ஸ்யாயன மஹரிஷி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய புஸ்தகம்தான் உலகில் எழுந்த முதலாவது Sex செக்ஸ் புஸ்தகம்; காமம்  என்பதை வாழ்க்கையில் ஒரு முக்கிய அம்சமாக சேர்த்தது இந்துக்கள் மட்டுமே; ஏனையோர் இது ஆகாததுகூடாதது என்று கருதிய காலையில் தர்ம அர்த்த காம மோக்ஷம் என்பதை — அறம், பொருள், இன்பம், வீடு என்பதை – வாழ்க்கையில் நான்கு லட்சியங்களாக இந்துக்கள் சேர்த்தனர் ; சங்க காலத் தமிழர்கள் பக்கா இந்துக்கள் என்பதால் புறநானூற்றிலும்,  தொல்காப்பியத்திலும் , திருக்குறளிலும் செப்பி இந்துத்துவாவை உறுதிப்படுத்தினர்  ; வள்ளுவன் அதி பயங்கர இந்து என்பதால் நூலுக்கே முப்பால் – அறம்- பொருள்- இன்பம் என்று பெயரிட்டான் ; ஆரம்ப காலத்தில்  வெள்ளைக்கார்கள் காமத்துப் பாலைத் தொட அஞ்சினர்; பின்னர் ரெவரெண்ட் ஜி யு போப், துணிந்து காமத்தையும் இயம்பினார் .சம்ஸ்க்ருதத்தில் வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காமசூத்திரம் ஆழமான செக்ஸ் / பாலியல் தகவல்களை பகர்ந்தாலும் கணவன் இல்லாதபோது பெண்கள் எப்படி டிரஸ் Dress செய்ய வேண்டும், எதை அணிய வேண்டும், எங்கு தூங்க வேண்டும் என்று கூட எழுதிவைத்தார் .

முதலில் அவர் சொல்லும் ஆபரண அணிகலன்களைக் காண்போம் :

ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதை தமிழர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள் ; இதை முதலில் உலகிற்குச் செப்பியவர் வாத்ஸ்யாயன மகரிஷி ; அவர் சம்ஸ்க்ருதத்தில் 64 கலைகளையும் பட்டியலிட்டு இவைகளை பெண்களை கற்க வேண்டும் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே !

அதுதான் உலகில் பெண்களுக்கான முதல் Syllabus சிலபஸ் – பாட திட்டம்- இந்துக்கள் அந்த அளவுக்கு அபார முன்னேற்றம் அடைந்திருந்தார்கள் என்பதை வேதமும் காளிதாசனின் ஏழு நூல்களும் எடுத்துக் காட்டுகின்றன ; சங்கத் தமிழ் இலக்கியத்தில் வந்த ஆபரணங்களை முன்னரே கண்டோம்; அவைகளில் பல நகைகளின் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் அப்படியே உள்ளதையும் முந்தைய கட்டுரையில் கண்டோம்; மாலை செய்தல், உடை அணிதல்,  கிரீடங்கள் -தலைப் பாகைகள் செய்தல் முதலியவற்றையும் அவர் சேர்த்துள்ளார் ;

வாத்ஸ்யாயனர் சொல்லும் 64 கலைகளில் கீழ்கண்ட நான்கும் அடக்கம்:

1

கிரீடங்களும் தலை அணிகளும்

தலையில் வட்டமாக மலர் அணிதல் நாகரீக — அதாவது நகர் வாழ் – மக்களின் பண்பு; அவை பல வண்ணத்தில் இருக்க வேண்டும்  ( சங்க காலத் தமிழர்களும் இவ்வாறு தலையிலும் காதிலும் பூச்சூடியதை சங்கப்புலவர்களும் பாடி வைத்துள்ளனர் ; இப்போது யாராவது அதைச் செய்தால் பட்டிக்காட்டான் என்பார்கள் !

2

ஆடைகளை அணிதல்

இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப ஆடைகளை அணிய வேண்டும்; (இதற்கான விவரங்களையும் அவர் ஸ்லோகம் ஸ்லோகமாக எழுதியுள்ளார்)

3

தந்தம் மற்றும் முத்துக்களாலால் ஆன ஆபரணங்கள்

4

வாசனைப் பூச்சுகள் Perfumes

கஸ்தூரி, புனுகு, சந்தனம், பூக்கள் முதலியவற்றைக்கொண்டு வாசனைப் பூச்சு Perfume செய்வதையும் அவர் புகல்கிறார் 

5

நகைகள் , அணிகலன்கள்

இவைகளை இரண்டு வகை என்று சொல்லி 1.கழுத்தில் அணிபவை 2.  இடுப்பில் அணிபவை என்று வகைப்படுத்துகிறார்.

மாலை நேரத்தில் நடனமாதர்களும் பாடகர்களும் வாத்தியக் கலைஞர்களும் உள்ள அறையில் ஒரு நாகரீக மனிதன் நுழையும்போது படாடோபமாக உடை அணிய வேண்டும்;படாடோபம் என்பதில் நகைகளும் ஆடைகளும் அடக்கம் ; பரத முனிவர் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தில் நான்கு வகையான ஆடைகளைக் குறிப்பிடுகிறார்.

தாவரங்களினால் ஆன ஆடை – சணல், இலை,தழைகள் மற்றும் மரவுரி ஆடைகள்,

பருத்தி ஆடைகள் ,

பட்டு ஆடைகள்,

கம்பளி ஆடைகள் .

இடத்துக்கும் காலத்துக்கும் ஏற்ப ஆடைகளை அணிந்து நகைகளைப் பூண வேண்டும் .

***

நகைகள்

13 வகைப்படும் இரத்தின ஆபரணங்கள், ஒன்பது வகை தங்க ஆபரணங்கள் என்று வராஹமிஹிரர் பிருஹத் சம்ஹிதையில் பட்டியலிட்டுள்ளார் ; ரிக் வேதம் முதல் தங்க நகைகளைக் காண முடிகிறது.

வராஹமிஹிரர் கொடுத்த பட்டியல்

வைர / வஜ்ர,

முத்து /முக்த,

மாணிக்கம் /பத்மராக,

மரகத / மரகத/பச்சைக் கல் ,

நீலம் / இந்திர நீலம் ,

லபிஸ் லசூலி / வைடூர்ய,

புஷ்பராக / புஷ்பராக,

கருப்பு மணி ,

சாணைக்கல்?

ஓர்க்கோலை/புலக,

கார்னெட் /கருமாணிக்கல்,

அமெதிஸ்ட்/ பீஸ்ம

கிரிஸ்டல்/ ஸ்படிக,

ஓபல் / ப்ரவாள.

(இவைகளை மோதிரத்தில், பதக்கத்தில், இரத்தின மாலைகளில் பதிக்கலாம்).

***

நகைகள் நான்கு வகைப்படும் என்கிறது காம சூத்திர நூல்:

அவேத்ய – மூக்கு, காதுகளில் துளையிட்டு அணியும் ஆபரணங்கள்.

நிபந்தனிய– தோள்களில் பொருத்தப்படும் அணிகலன்கள் ;வேணி- தலையில் அணியும் பட்டை சூடாமணி.

பிரக்ஷேப்ய -விரல்களில் சொருகும் மோதிரம், விரல்நுனிகளில் சொருகும் அலங்காரம், காலில் அணியும் ஆபரண வகைகள் (சதங்கை, சிலம்பு , கொலுசு, கிண்கிணி ).

ஆரோப்ய – கழுத்தில்  அணியும் நகை வகைகள் , குறிப்பாக பல்வேறு வரிசை முத்து வடங்கள்; நக்ஷ்த்ரமாலிகா என்னும் 27 முத்துள்ள மாலை.

இதற்குப் பின்னர் Perfume பெர்ப்யும் என்னும் வாசனைப்பூச்சுகள் , களிம்புகள் , பூமாலை வகைகள் முதலியவற்றை விரிவாக விளம்புகிறார் .

***

பெண்களுக்கு புத்திமதிகள்

அடுத்ததாக குடும்பப் பெண்களுக்கு வேறு ஒரு அத்தியாயத்தில் புத்திமதிகள்  சொல்கிறார் :

உல்லாச/ சல்லாப இரவுகளில் பலவித பூக்களையும் நகைகளையும் ஆடம்பர உடைகளையும் அணிந்து தயாராக வேண்டும் .

வெளியே கேளிக்கைகளுக்குச் செல்கையில் (திருமணம், பார்ட்டிகள், நண்பர் வீடுகள்) தலையில் வெள்ளைப்பூ (மல்லிகை, முல்லை, பிச்சி, ஸம்பங்கி) சூடி, கொஞ்சம் நகைகளை அணிய வேண்டும்; படாடோப  உடைகள் அணியலாம். போகும் இடத்துக்கு ஏற்ற வாசனைப் பூச்சு பூசலாம் ; தனிமைப்படுத்திக் காட்டும் பள பள ஆடைகள் வேண்டாம்;

கணவர் பூஜை புனஸ்காரம் நோன்பு, விரதம் இருக்கும் நாட்களில் எளிமையான  ஆடைகளை அணிய வேண்டும் ” நாம் ஒருவருக்கு ஒருவர் கட்டுப்பட்டவர்கள்நான் சுதந்தரப் பறவை அல்ல ” என்று அவரிடம் வாய் திறந்து சொல்ல வேண்டும் ; கணவர் செய்வதை பயபக்தியுடன் பின்பற்ற வேண்டும் .

கணவர் வெளிநாட்டுக்குச் சென்றால் ( அந்தக் காலத்தில் சேர சோழ, பாண்டிய நாட்டுக்கு வெளியே பயணம் செய்வதே அயல் நாடு) அவள் மங்கள சின்னங்களை அகற்றி நகைகளையும் அகற்றி நோன்பு இருக்கலாம்; கணவர் சொன்னபடி வீட்டைப் பராமரிக்க வேண்டும் ; கடவுள் வழிப்பாட்டில் ஈடுபடுவதோடு கணவன் கற்பித்த பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டும் .

மாமனார் மாமியார் படுக்கை அறைகளுக்கு அருகில் உறங்க வேண்டும்

இவ்வாறு வாத்ஸ்யாயனர் நிறைய விஷயங்களைச் சொல்கிறார் ; அவர் புது மண தம்பதிகள் படிக்கக்கூடிய Adults Only  அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களை விளக்கி இருப்பது உண்மைதான்; ஆனால்  காம சூத்திரம் முழுதும் அப்பட்டமான செக்ஸ் என்று ஒதுக்கி விடாமல் அனைவரும் படிக்க வேண்டும் .

இந்துக்கள் அபாரமான நாகரீக முன்னேற்றம் அடைந்ததால் எந்த சப்ஜெக்டிலும் முதல் புஸ்தகம் இந்துக்கள் எழுதியதாகவே இருக்கும் !

To be continued……………………….

Tags- காமசூத்திரம், இந்துக்களின் பழங்கால நகைகள்- 5,  நகைகள்,  பெண்கள்,புத்திமதிகள்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-57; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,881)

Written by London Swaminathan

Post No. 15,881

Date uploaded in London –17 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 57

மூன்று திவ்விய க்ஷேத்திரங்களை சுருக்கமாகக் காண்போம் கோவிலடி ,திருக்கரம்பனூர் (உத்தமர்கோயில்),நாதன் கோயில் (நந்திபுர விண்ணகர்). மூன்றும் சோழநாட்டுத் தலங்கள்.

1

கோவிலடி அப்பக்குடத்தான் கோயில்

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 6-வது திருத்தலமாகும்.

மூலவர்: பெருமாள் ‘அப்பால ரெங்கநாதர்’, ‘அப்பக்குடத்தான்’

இவர் சயனத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

புராணக் கதை: உபமன்யு முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க பெருமாள் ஒரு குடத்தில் அப்பத்தை ஏந்தி வந்து அருளிய தலம் என்பதால் இப்பெயர் பெற்றது.சிறப்பு: இத்தலத்து பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகாவில், கொள்ளிடம் மற்றும் காவிரி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. இது திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், கல்லணையிலிருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது., அன்பில் திவ்ய தேசத்தில் இருந்து கொள்ளிடம் நதியின் மறுகரையை அடைந்தும் இத்தலத்தை அடையலாம்.

***

கோவிலடி என்னும் திருப்பேர் நகர்

     பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து

          பேரேனேன்று என்னெஞ்சு நிறையப் புகுந்தான்

     காரேழ் கடலேழ் மலையேழ்லுல குண்டும்

          ஆராவயிற்றானை அடங்கப் பிடித்தேனே (3745)

                               திருவாய்மொழி 10-8-2

     திருப்பேர் நகர் என்றால் யாருக்கும் தெரியாது. கோவிலடி என்று சொன்னாலே எல்லோருக்கும் தெரியும். இயற்கையின் அரவணைப்பில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ள அழகான தலமாகும் இது.

     இத்தலம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

புராணம் இதனை பலசவனச் ஷேத்திரம் என்று பகர்கிறது. தமிழில்

புரசாங்காடு என்பதையே வட வானர் பலசவனம் என்று எடுத்தாண்டுள்ளனர். இவ்விடத்து புரசஞ் செடிகள் இன்றும் அளவு கடந்து பல்கிக் கிளைத்து சூழ்ந்து வளர்ந்தோங்கிய காட்சியைக் காணலாம்.

     உபமன்யு என்னும் மன்னன் துர்வாச முனிவரின் சாபத்தால்

தன்பலமிழந்து போக அதற்கு விமோசனம் வேண்ட இப்பலசவனம்

ஷேத்திரத்தில் லட்சம்பேருக்கு அன்னதானம் அளித்தால் (ததி ஆராதனம்) சாபந்தீரும் என்று துர்வாசர் தெரிவிக்க இத்தலத்தின் அருகில் ஒரு அரண்மனையெழுப்பி அன்னதானம் செய்யலானார்.

****

2

திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோவில்தக்ஷண ஜகந்நாதம்)

மூலவர் – ஜகந்நாதன், நாதநாதன், விண்ணகரப் பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.

தாயார் – செண்பகவல்லித் தாயார்.

தீர்த்தம் – நந்திதீர்த்த புஷ்கரிணி.

விமானம் – மந்தார விமானம்.

ப்ரத்யக்ஷம் — நந்தி,

விசேஷம் – ஸந்நிதியின் இடது பக்கச்சுவற்றில் அதிகார நந்தி இருக்கிறார். நந்தி இவ்விடத்தில் தவம் செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாதலால் ‘நந்திபுரம்’ என்றும் பகவானுக்கு ‘நந்திநாதன்’ என்றும் பெயர் உண்டாயிற்று. நந்திவர்மன் ஏற்படுத்திய ஊர் என்றும் அவன் கட்டிய கோவில் என்றும் இதனைக் கூறுவர். ‘நந்தி பணி செய்த நகர்’ என்றார் திருமங்கையாழ்வார். CH சக்கரவர்த்தி தன் உயிரைத்துறந்து புறாவின் உயிரை காப்பாற்ற தராசு தட்டில் தன் மாமிசத்தை வைத்து சமமாகாமல் இருக்க, தானே, புறாவின் எடைக்கு சமமாக எதிர்த்தட்டில் உட்கார்ந்த அதிசயத்தைக் காண, கிழக்கே இருந்த பெருமாள் மேற்கு முகமாக ஆனார்.

இந்த ஸந்நிதி வானமாமலை மடத்து ஆதினத்தில் உள்ளது.

மங்களா சாஸனம் –

திருமங்கையாழ்வார் – 1438 – 47 – 10 பாசுரங்கள்.

கும்பகோணத்திலிருந்து பஸ்ஸில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து அங்கிருந்து 1 1/2 மைல் தூரம் செல்ல வேண்டும். வழியில் ஒரு வாய்க்காலைக் கடக்க வேண்டும். டவுன் பஸ்ஸில் கும்பகோணத்திலிருந்து வரலாம்.

நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம்

     தம்பியொடு தாமொருவர் தந்துணைவி

          காதல் துணை யாக முனநாள்

     வெம்பியெரி கானகமு லாவுமவர்

          தாமினிது மேவு நகர்தான்

     கொம்புகுதி கொண்டு குயில் கூவ

          மயிலாலு மெழிலார் புறவு சேர்

     நம்பியுறை கின்ற நகர் நந்தி புர

          விண்ணகரம் நன்னு மனமே

                  (1443) பெரிய திருமொழி 5-10-6

     மரக்கொம்புகளில் தமது தோகைகளை அசைத்து அசைத்து குயில்கள் கூவ, மயிலினங்கள் ஆடிக்கொண்டிருக்க எழில் நிறைந்த பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழப்பட்ட இந்த நந்திபுர விண்ணகரத்தில்தான் தன் மனைவியொடும் தம்பியொடும் கொடிய கானகமெல்லாஞ் சுற்றித்திரிந்த ராமபிரான் உறைகிறான் என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம்கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது.  நாதன் கோவில் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்.

கும்பகோணத்திலிருந்து கொருக்கை என்னும் ஊருக்கு வந்து அங்கிருந்து 11/2மைல் நடத்தும் இத்தலத்தையடையலாம்.     வலங்கை மானிலிருந்தும் இதே தொலைவுதான்.

***

3

திருக்கரம்பனூர் /உத்தமர் கோயில்

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி / தரிசனம் தருகின்றனர் .

மூலவர்: புருஷோத்தம பெருமாள் (ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம்).

தாயார்: பூரணவல்லி.

தீர்த்தம்: கடம்ப தீர்த்தம், திருமஞ்சன தீர்த்தம்.

மூலவர் —    புருஷோத்தமன், புஜங்கசயனம் கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார்  —   பூர்ணவல்லி, பூர்வாதேவி எனவும் பெயர்.

தீர்த்தம் —    கதம்ப தீர்த்தம், கதம்ப மர உருக்கொண்டு நின்ற பெருமானை தம் கமண்டல நீரால் பிரம்மா திருமஞ்சனம் செய்ய அந்நீரே பெருக்கெடுத்து குளமாகத் தேங்கி கதம்பத் தீர்த்தமாயிற்று.

விமானம் —    உத்யோக விமானம்

காட்சி கண்டவர்கள்  —   பிரம்மா, சிவன், உபரிசரவசு, ஸநக ஸந்தன. குமாரர்கள், திருமங்கையாழ்வார்.

விசேஷங்கள்: இத்தலம் சப்த குரு ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன், விஷ்ணு, சிவன், சக்தி, சுப்பிரமணியர், தேவகுரு, அசுரகுரு ஆகிய ஏழு குருக்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

வரலாறு: பிரம்மனின் கர்வத்தைப் போக்க சிவபெருமான் பிச்சாண்டவராக வந்து இத்தலத்தில் பிச்சை ஏற்றார், இதனால் இதற்கு பிச்சாண்டார் கோவில் என்ற பெயரும் உண்டு.

****

     பேரானைக் குறுங்குடி யெம் பெருமானைத் திருத்தண்கா

          லூரானைக் கரம்பனூர் உத்தமனை முத்திலங்கு

     காரார் திண்கடலேழும் மலையேழிவ் வுலகுண்டும்

          ஆராதென் றிருந்தானைக் கண்டது தென்னரங்கத்தே.

                           (1399) பெரிய திருமொழி 5-6-2

     என்று திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் திருச்சியிலிருந்து வடக்கே நான்கு மைல் தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் உள்ளது. ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு மைல் தூரம். திருச்சியிலிருந்து துறையூர்மணச்சநல்லூர் செல்லும் பேருந்துகள் இக்கோவிலைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

     பிரம்மாண்ட புராணமே இத்தலத்தைப் பற்றி கூறுகிறது. பிரம்மன், ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்குட்பட்டு சந்தியா காலத்தில் திருமாலை ஆராதித்து வந்தார். பிரம்மனின் பக்தியைச் சோதிக்க விரும்பிய திருமால் த்தலத்தில் ஒரு கதம்ப மரமாக உருக்கொண்டு நிற்க இதை யுணர்ந்த பிரம்மனும் இவ்விடத்தே வந்து தம் கமண்டல நீரால் கதம்ப மரத்திற்கு திருமஞ்சனம் செய்து திருமாலைத் துதிக்க, பிரம்மனுக்கு காட்சியளித்த திருமால் இதுபோலவே எந்நாளும் என்னைத் துதித்து இவ்விடத்தே

வழிபடவும் என்று கூறியதால் பிரம்மனும் இங்கு கோவில் கொண்டார்.

     பிரம்மனின் கபாலம் கையில் ஒட்டிக் கொள்ள, அத்துடன் தீர்த்த

யாத்திரை செய்த சிவன் இங்கு வந்து சேர்ந்ததும், சிவனுடைய பிட்சா பாத்திரத்தில் பிச்சையிடுமாறு மஹாலட்சுமியை திருமால் கேட்டுக் கொள்ள அவ்விதமே மஹாலட்சுமி பிச்சையிட்டதும் இதுவரை நிறையாத கபாலம் நிரம்பியது. ஆதலால் பிராட்டிக்கும் பூரணவல்லி தாயார் என்னும் பெயர் ஏற்பட்டது.

     தனது பிச்சை பாத்திரம் நிறைந்த காரணத்தால் சிவபெருமானும் இங்கு பிட்சாடன் மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

     திருமால் கதம்ப மரமாக உருவெடுத்து நின்றமையால் கதம்பனூர் என்றே இத்தலம் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் கரம்பனூர் ஆயிற்று, திருமங்கையாழ்வாரால் “உத்தமன்” என்று இப்பெருமாள் அழைக்கப்பட்டதால் உத்தமர் கோவிலாயிற்று. பன்னிரண்டு ஆழ்வார்களில் திருமங்கையாழ்வாரும், ஆண்டாளுமே பெருமாளை உத்தமன் என்ற வார்த்தைகளால் குறிப்பிடுகின்றனர். ஓங்கி உலகளந்த உத்தமன் என்பது ஆண்டாளின் திருப்பாவை.

இக்கோயிலின் விசேஷம், மும்மூர்த்திகள் எனப்படும் சிவனுன், விஷ்ணுவும், பிரம்மனும் ஒரே இடத்தில் தங்கள் துணைவியருடன் எழுந்தருளியிருப்பது தான் ! அதனாலேயே, இக்கோயில் கதம்ப ஷேத்திரம் எனப்படுகிறது. இங்கு கிடைக்கும், (அரிதாகக் காணப்படும்) நாகலிங்கப்பூ கோயில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது. விஷ்ணு, மகாலஷ்மி தவிர, சிவன், பார்வதி (வடிவுடையம்மன்), பிரம்மா, சரஸ்வதி ஆகியோருக்கு தனி சன்னதிகள் இங்கு உள்ளன. மேலும், ஆண்டாள், வரதராஜர், வேணுகோபாலன், ராமர், விநாயகர், நடராஜர், சுப்ரமணியர், சனீஸ்வரர் மற்றும் ஆஞ்சநேயருக்கு இக்கோயிலில் சன்னதிகள் இருக்கின்றன.

பரமசிவன் குடும்பத்தோடு, பிட்சாடன மூர்த்தியாக இங்கு காட்சியளிப்பது, விசேஷமாகக் கருதப்படுகிறது.

—subham—

Tags- கோவிலடி, திருக்கரம்பனூர் ,உத்தமர்கோயில், நாதன் கோயில், நந்திபுர விண்ணகர், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-57, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்