இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1 (Post.15,866)

Written by London Swaminathan

Post No. 15,866

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டன் சுவாமிநாதனின் ஆராய்ச்சிக் கட்டுரை

உலகிலேயே அதிக நகைகளை இந்துக்களின் சிலைகளில் மட்டும்தான் காண முடியும்; எகிப்திய பெண்களின் சிலைகள், ஓவியங்களில் கழுத்தில் மட்டும் நகைகளை காணலாம்; ஆனால் தெய்வங்களிடத்தில் இருக்காது ; கிரேக்க சிலைகளில் நகைகளையே காண முடியாது ; வேதத்தில் நகைகளின் பெயர்கள் உள்ளன; அதையடுத்து ஹரப்பா மொகஞ்சதாரோவில் தேவி சிலைகளில் மூன்று அல்லது நான்கு சங்கிலிகள் தொங்குவதைக் காணலாம் ; இந்துப் பெண்கள் திருமணத்தின்போது அணியும் நகைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் ; தலையில் அணியும் சுட்டி முதல் காலில் உள்ள மெட்டி வரை  எங்கும் நகைகள் தான்!

இங்கு சில நகைகளின் பெயர்களைக் காண்போம்; அவைகளைக் கோவில் சிலைகளிலும் எல்லோரும் காணலாம் .

கோவிலுக்குள் இறைவனுக்கு அணிவிக்கப்படும் தங்க வைர இரத்தின நகைகள் அவ்வளவையும் சேர்த்துப் பார்த்தால் உலகிலேயே இன்றும் பணக்கார நாடு இந்தியாதான் என்பது வெள் ளிடை மலை என விளங்கும் . திருவனந்தபுரம், பூரி ஜகந்நாதர் கோவில் நகைகளின் பட்டியல் கூட பொதுமக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை ; திருப்பதி , மூகாம்பிகை கோவில்களில் தினமும் நகைகள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது அயோத்திலுள்ள புதிய ராமர் கோவிலுக்கும் நிறைய நகைகள்  காணிக்கைகளாக  வந்து கொண்டிருக்கின்றன. 

மாயா நாகரீகம்

இந்தியாவுக்கு வெளியே மாயன் (மயன்)ஆஸ்தீக (அஸ்டெக்) நாகரிக மக்கள் மட்டும் இந்துக்களைப் போலவே கை, கால், கழுத்து காது ஆகிய உறுப்புகளில் ஆபரணங்களை அணிந்தார்கள் ; ஏனெனில் அவர்கள் இந்தியாவிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள லோகத்துக்கு ( தென் அமெரிக்காவுக்கு ) அனுப்பப்பட்டார்கள் .

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர்.  மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் -கிருஷ்ணர் தரப்பில் இருந்தான். மஹாபாரத யுத்தத்துக்குப் பின்னர் மய தானவன் இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி!

காண்டவ வனம் என்பதைத் திரித்து கோண்ட்வானா லேண்ட் என்ற புதிய சொல்லை வெள்ளியர்கள் உருவாக்கினர் .

Kahaandava Vana= Gondwana (land)

இந்துக்களுக்கும் மாயாக்களுக்கும் உள்ள அறுபது ஒற்றுமைகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளாக எழுதினேன்; அது புஸ்தகமாகவும் வந்து விட்டது

***

இதோ நகைகளின் பெயர்கள்:–

ஆங்கிலக் கட்டுரையில் ரிக் வேத துதிகள் எண்களையும் குறிப்பிட்டுள்ளேன்

ரிக் வேதத்தில் ஆபரணங்கள்; அணிகலன்கள், நகைகளின் பெயர்கள்:

கர்ணசோபனா – காதணி – ரிக் வேதம்

காதி  – கங்கணம் தோள் வளையம்

காதி  ஹஸ்த- கங்கணம் அணிந்த

காதி பாத – காலில் வளையம் , சிலம்பு

க்ருசணம் – முத்து அல்லது முத்து போன்ற

கிருஷ்ணவத் – முத்து அணிந்த

சந்த்ர – வெள்ளி

சந்த்ரவத் – வெள்ளி நகை அணிந்த

தம்ச- அணிந்து  கொள்

நிஸ்கா- காலத்தில்  அணிய தங்கக்காசு / சங்கிலி 

நிஸ்க க்ரீவ – கழுத்தில் தங்கச்சி சங்கிலி அணிந்த

மணி – ரத்தினம், ஸ்படிகம் ; உருண்டை வடிவ

மணிக்ரீவ – கழுத்தில் ரத்தினம் உடைய

ரஜத – வெள்ளி

ரத்ன- ரத்தினைக் கற்கள் ; நவ ரத்தினம்

ரத்னதா – பெரும் செல்வமுடைய

ரத்னதேய – கோட்டை வள்ளல், ரத்தினங்களை வழங்குவோன்

ருக்ம – தங்கச் சங்கிலி

ருக்மவக்ஷ – மார்பிலே தங்கச் சங்கிலி உடைய

ருக்மி  – தங்க நகை அணிந்த

வருஷகாதி – நீண்ட சங்கிலி அணிந்த

ஹிரண்யய- தங்கம் கொழிக்கும்

 ஹிரண்யம் – தங்கம் 

ஹிரண்ய பாணி – தங்க நகை அணிந்த கைகள்

ஹிரண்ய பிண்ட – தங்க கட்டி

ஹிரண்ய பாஹு-  தங்கத் தோள் வளையம்

 ஹிரண்ய பேஷ – தங்க நகைகள் அணிந்த

ஹிரண்ய கர்ண- காதில் தங்க நகைகள்

புஷ்கர ராஜ்  – தாமரை மாலை  (தங்கத்தினால் ஆனது)

****

இவைகளில் பிண்டம் (கட்டி)மணி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலும் உள்ளன . ஆண்களும் பெண்களும் கை,கால், தோள்களில் அணியும் நகைகளை சங்கத் தமிழ்ப் பாடல்கள் அதிகம் குறிப்பிடுகின்றன; பாணர்களுக்கு பொற்றாமரை வழங்கி கெளரவிக்கும் வழக்கத்தை சங்கப் புலவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றனர் ; வளையல், கழல், சிலம்பு ,தோள் வளையம் என்பன அடிக்கடி வரும் அணிகலன்களாகும்.

இவைதவிர அதர்வண வேதம், யஜுர் வேதம்  பிராமண, உபநிஷத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன ; அவைகளைப் பட்டியலிட்டால் புஸ்தக அளவுக்கு கட்டுரை வளர்ந்துவிடும்.

வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதையில் ஒரு என்சைக்ளோபீடியா தயாரிக்கும் அளவுக்கு தகவல்கள் இருக்கின்றன . (பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய  நவரத்தினங்கள்பற்றிய கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்துள்ளேன் ; எனது ‘பிளாக்’குகளில் காண்க)

***

இந்துக்கள் அணியும் நகைகளின் பெயர்கள்

உடலின் மேல் பகுதி —

புல்லகம்- தென் பல்லி, வட பல்லி;

பூரப் பாளை;

தந்தளம்;செவிப்பூ   ;

அளக சூடம் ; தொய்யகம் ;

குதம்பை;

சாவடி;

காறை;

வாகுமாலை ;

முத்தாரம்;

தோள் வளை ;வாளைப்பகு வாய் மோதிரம் ;

பரியகம்;

வீரச் சங்கிலி ; சூடகம்;

பவழ வளை;

கடக வளை;

ஆடைக்கட்டு

*****

உடலின் நடுப்  பகுதி –

முத்தரை ;

விரிசிகை

***

உடலின் கால்ப்  பகுதி –

உடைதாரம்

குறங்குச் செறி  ;

நூபுரம்;

பாடகம்

காற் சவடி (பரியகம்)

To be continued…………………..

Tags- இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1, நகைகள் , ஆபரணங்கள்; அணிகலன்கள், ஆராய்ச்சிக் கட்டுரை, ரிக் வேதம் , நகைகள் பட்டியல்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,865)

Written by London Swaminathan

Post No. 15,865

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திரு நாகை

தாயார் : ஸ்ரீ சௌந்தர்ய வல்லி

மூலவர் : நீலமேகப் பெருமாள்

உட்சவர்: சௌந்தர்யராஜன்

மண்டலம் : சோழ நாடு

இடம் : நாகப்பட்டினம்

கடவுளர்கள்: நரசிம்மா,கஜலெட்சுமி

வைணவ திவ்யதேசம் (திருநாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில்)

தீர்த்தம் – ஸாரபுஷகரிணி.

விமானம் – ஸெளந்தர்ய விமானம்.

ப்ரத்யக்ஷம் – நாகராஜன், திருமங்கையாழ்வார், கலியன், ப்ரஹ்மாதிகள்.

விசேஷங்கள் – வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு ஸந்நிதிகள். வேறு பல ஸந்நிதிகளும் உண்டு. ரங்கநாதன் ஸந்நிதியில் மிக அபூர்வமான அஷ்டபுஜ நரஸிம்ஹரின் வெண்கலச்சிலை உள்ளது. ஒருகை பிரஹ்லாதன் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்ற கைகள் ஹிரண்யவதம் செய்கின்றன. இந்த க்ஷேத்ரம் த்ருவனுக்கு ஸேவை தந்த அவஸரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோலத்தில் இன்னும் சில சிறு அழகிய கோவில்கள் உள்ளன.

****

பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் அருளிய 10 பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளன.இப்பதிகம் அச்சோப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளின் அழகில் ஆழ்வார் மயங்கி, “அச்சோ, ஒருவன் அழகியவா!” என்று ஒவ்வொரு பாசுரத்திலும் வியந்து பாடியுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்– இரண்டாம் ஆயிரம்– திருமங்கை ஆழ்வார்– பெரிய திருமொழி–  திருநாகை: அச்சோப்பதிகம்.

1757    பொன் இவர் மேனி மரகதத்தின்

      பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்

மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்

      வேதியர் வானவர் ஆவர் தோழீ

என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி

      ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்

      அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (1)

1758    தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்

      சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த

சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்

      செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி

பாடக மெல் அடியார் வணங்க

      பல் மணி முத்தொடு இலங்கு சோதி

ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (2)

1759    வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த

      மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்

தாயின நாயகர் ஆவர் தோழீ

      தாமரைக் கண்கள் இருந்த ஆறு

சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்

      செவ்விய ஆகி மலர்ந்த சோதி

ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (3)

1760    வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்

      கையன ஆழியும் சங்கும் ஏந்தி

நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்

      நாகரிகர் பெரிதும் இளையர்

செம் பவளம் இவர் வாயின் வண்ணம்

      தேவர் இவரது உருவம் சொலலில்

அம் பவளத் திரளேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (4)

1761    கோழியும் கூடலும் கோயில் கொண்ட

      கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன

பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்

      பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்

      வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்

      மா கடல் போன்று உளர் கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-

      அச்சோ ஒருவர் அழகியவா             (5)

1762    வெம் சின வேழ மருப்பு ஒசித்த

      வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்

தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்

      தாமரைக் கண்கள் இருந்த ஆறு

கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த

      காளையர் ஆவர் கண்டார் வணங்கும்

அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (6)

1763    பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்

      பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்

பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ

      பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்

அணி கெழு தாமரை அன்ன கண்ணும்

      அம் கையும் பங்கயம் மேனி வானத்து

அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (7)

1764    மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட

      மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்

      நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்

மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த

      மா முகில் போன்று உளர் வந்து காணீர்

அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (8)

1765    எண் திசையும் எறி நீர்க் கடலும்

      ஏழ் உலகும் உடனே விழுங்கி

மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்

      மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்

      கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்

      கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்

அண்டத்து அமரர் பணிய நின்றார்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (9)

1766    அன்னமும் கேழலும் மீனும் ஆய

      ஆதியை நாகை அழகியாரை

கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்

      காமரு சீர்க் கலிகன்றி குன்றா

இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை

      ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்

மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்

      வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே            (10)

***

இங்கு புகழ்பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது

அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.

மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.

மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.

—subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திரு நாகை, அம்பாள் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி

சோஷியல் மீடியாக்களில் பொய் சொல்லியே பிழைப்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? (Post.15,864)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,864

Date uploaded in London – 12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

5-6-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

சோஷியல் மீடியாக்களில் பொய் சொல்லியே பிழைப்பவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?ச. நாகராஜன்                                  

அப்பப்பா! ஒரு வழியாக ஓய்ந்தது ஒரு அரசியல் அலை! எத்தனை பொய்கள்!     எத்தனை கட்டி விடப்பட்ட கதைகள்! எத்தனை அவதூறுகள்!

மண்டையே சுழல்கிறது.

நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள். கெட்டவர்கள் “கடவுளாகி” விடுகிறார்கள்.

எல்லோரும் அறிஞர்கள்! எல்லோரும் அரசியல் வல்லுநர்கள்! யார்              வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் “உண்மையாக்கலாம்”            உண்மையைப் பொய் ஆக்கலாம்!

சோஷியல் மீடியாக்களில் எத்தனை மணி நேரம் வேஸ்ட்!

“இப்பதான் பிரதம மந்திரி என்னிடம் மட்டும் சொன்னாரு” என்று

 டெல்லியிலிருந்து வரும் பொய்க்குரலைக் கேட்டு ஏமாந்தவர்கள் எத்தனை      லட்சம்!

இப்படி ஏமாறுவதைத் தவிர்க்க வழி உண்டா?

2005ம் ஆண்டு பிலிப் டெட்லாக் என்பவர் “நிபுணர்களின் அரசியல் ஆரூடம்” என்று ஒரு ஆய்வை மேற்கொண்டார். இஷ்டத்திற்கு “அள்ளி விடுபவர்களைப்” பற்றிய  ஆய்வு இது.

எதிர்காலத்தைப் பற்றி இந்த நிபுணர்களின் ஆரூடமும் கணிப்பும் உண்மை தானா, நம்பலாமா என்பதே அவரது ஆய்வின் அடிப்படைக் கேள்வி.

ஆச்சரியகரமான பதில் வந்தது.

உண்மை இல்லை!

284 அரசியல் நிபுணர்களிடமிருந்து அவர் 28000 அரசியல் கணிப்புகளை எடுத்து    அலசி ஆராய்ந்தார்.

முடிவைக் கண்டவுடன் அவர் திகைத்தே போனார். 

கூக்குரலிட்டு கத்தி ‘நாளையே உலகம் பாழாய் போகப் போகிறது, இவர் தோற்கப் போகிறார் அவர் ஜெயிப்பார்’ என்ற கணிப்புகள் எல்லாம் பொய்யாய்ப் போயின. 

மிகச் சில கணிப்புகளே அதிர்ஷ்டவசமாக உண்மை ஆயின.

எதைப் பற்றிய கணிப்பை வெளியிடும் அறிஞராக இருந்தாலும் அவர் இந்த      அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறாரா என்று பாருங்கள் என்கிறார் பிலிப்..

  1. கணிப்பை நம்பரில் சொல்லுங்கள்.

இ’ந்தக் கட்சி பெரும்பான்மையாக ஆகும். அது தேறவே தேறாது’ என்று    அடித்துச் சொல்பவர்கள் போலி கணிப்பாளர்கள். இவர் 150 இடங்களை    பெறுவார் அவர் 30 இடங்களையே பெறுவார் என்று ஒருவர் சொல்லும்   போது உண்மையான கணிப்பாளர் சற்று அடிப்படை வேலைகளைச் செய்தே ஆக வேண்டும். களத்திற்குச் சென்று அவர்கள் நிலவரத்தை ஆராய்ந்த    பின்னரே நம்பரைச் சொல்வார். இதையும் மீறி இரண்டு சீட்டுகளே வாங்குவார் என்று   சொல்லும் போலி அறிவாளி ஒருவர், எதிராளி 108 இடங்களை வாங்கி விட்டால் 

முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?  

அவர் ஒரு போலி என்பதை முத்திரை குத்தித் தெரிந்து கொள்ளலாம். அவர் சொல்வதை இனி யாராவது கேட்பார்களா?

  1. கேள்வியைச் சுருக்கி குறிப்பாகக் கேளுங்கள்.    

தினசரி உடற்பயிற்சி செய்தால் நான் கட்டமைப்பான உடலைப் பெறுவேனா என்று கேட்கக் கூடாது.இன்றிலிருந்து தினமும் ஒரு மணி நேரம்         உடற்பயிற்சியை நான்கு வாரங்கள் செய்தால் என் எடை எவ்வளவு        குறையும் என்று குறிப்பாகக் கேளுங்கள்.முதல் கேள்விக்கான பதிலை ”அளக்க” முடியாது. இரண்டாம் கேள்விக்கான பதிலை அளக்க முடியும்.    தவறாக இருப்பின் அடுத்து என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகப்     புரிந்து கொள்ள இது உதவும்.

  1. உண்மைக்கான அடிப்படை விகிதத்தைக் கேளுங்கள்.  ‘இது போல எப்போது யாருக்கெல்லாம் நடந்தது. அதன் பலன் அல்லது     விளைவு என்ன’ என்று கேளுங்கள். இது உண்மையின் அடிப்படையை    ஆராயும் கேள்வி. இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறதா, அதே போலத்   தான் இன்றும்  சகல அம்சங்களும் உள்ளனவா என்பனவற்றைக் 

கேட்டால் கணிப்பு தவறாகப் போனாலும் அடிப்படையைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

  1. ஃபெர்மி வழியைக் கடைப்பிடியுங்கள். பிரபல விஞ்ஞானியான என்ரிகோ ஃபெர்மி கண்டுபிடித்து  கடைப்பிடித்த வழி இது. ஒரு 

பிரச்சனையை ஏழு எட்டு துண்டுகளாகப் பிரித்து  உண்மையை அறிவது

தான் இந்த வழி உதாரணமாக இந்த வேலையை நள்ளிரவுக்குள் 

முடிப்பேனா என்று கேட்காதீர்கள். இரவு 9 மணிக்கு எத்தனை பக்கம் 

முடிப்பேன். அதற்கு அப்புறம் எவ்வளவு முடிக்க வேண்டி இருக்கிறது. இதில் என் வேகம் அல்லது ஆற்றல் என்ன என்று பல சிறு துண்டுகளாக பிரச்சினையை ஆக்கி விடை என்ன என்பதைப் பற்றி யோசித்தால் பதில் – உண்மையான பதில் -கிடைக்கும்.

இப்படித்தான் ஆரூடக் கணிப்புகளைச் செய்வோரையும் அலசி ஆராய வேண்டும். காசுக்காக சோஷியல் மீடியாக்களில் ஆரூடம் சொல்பவர்களைக் கேட்டுக்     கொண்டே இருந்தால் நமது மூளையும் பாதிக்கப்படும்; நமது பொன்னான நேரமும் வீணாகும். அவர்களின் கணிப்புகளுக்கான பலிக்கடாக்களில் நாமும் ஒரு        எண்ணிக்கையைக் கூட்டுவோம்.

இந்த நான்கு அம்ச வழிமுறையை பிலிப் சொல்கிறார்; கேட்டுப் பலனை அனுபவிப்போமே!

**

Morning Prayer – Pratas Smaranam (Post.15,863)

Written by London Swaminathan

Post No. 15,863

Date uploaded in London –12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

The Pratasmaranam consists of some verses that are to be recited in the morning soon after waking up from the bed. प्रातः = at dawn, and

स्मरणम् = remembering.

There are many versions of this poem containing  less number of verses or more. One well known version is that of Sri Sankaracharya and this consists of just four verses. These verses are highly significant as

they contain thoughts about the godhead residing within us.

When I was in India until December 1986, I ued to attend RSS shaka every morning in Madurai Simmakkal Shaka (Simmakkal Branch). There we used to recite the updated version of old Pratasmaran. RSS authorities included Tiru Valluvar, Rajendra Choza, Orissa Jain King Kharavela etc.

Now in London I recite only the first sloka every morning: Karagre Vasate Lakshmi………………

The wonder is in this morning prayer the Indian rivers, mountains,heroes, famous women, kings, saints, poets, Gods, Goddesses etc are included. When children are taught this, they will learn little by little about all in the Slokas. This is vey unique in Hinduism. You teach Religion, Geography, History, Sacred places and our location in the universe.

Though the full updated RSS version I recited in those days was very long taking 20 minutes, here below is a short version taken from Sanskrit documents.org

            ॥ प्रातःस्मरणम् ॥

कराग्रे वसते लक्ष्मीः करमध्ये सरस्वती ।

करमूले तु गौरी च प्रभाते करदर्शनम्  ॥ १॥

Meaning:- Laksmi ( the goddess of wealth) resides in the upper part of hands, Sarasvati (the goddess of learning) resides in the middle, and Gauri (the goddess of valour) in the lower part. Therefore, every

morning one should respectfully have a look at one’s hands.

(In some versions Gauri is replaced by Govindah)

***

Big Salute to Earth!

Hindus are great environmentalists. Even when they dig earth for wells or ploughing, they first apologise for hurting or changing the environment. This feeling will make anyone to use anything carefully with minimum wastage. In Tamil there is a proverb about using water with respect/appreciation. In Sanskrit there are Vedic mantras praising water.

समुद्रवसने देवी पर्वतस्तनमण्डले ।

विष्णुपत्नि नमस्तुभ्यं पादस्पर्शं क्षमस्व मे ॥ २॥

Meaning:- O Devi! You are wearing the ocean as a clothing on your body. The mountains are your breasts!  O Consort of Visnu! I salute you and beg your pardon for having to set foot on your body for my routine activities.

***

नमोऽस्तु प्रियदत्तायै तुभ्यं देवि वसुन्धरे ।

त्वं माता सर्वलोकानां पादन्यासं क्षमस्व मे ॥ ३॥

Meaning:- O Devi! I salute you and beg your pardon for having to set foot on your body for my routine activities.  You are the giver of all that is dear to us. You are the mother and repository of all wealth.

***

Hindu Belief in Astrology; Salute to Nine Heavenly Bodies!

ब्रह्मा मुरारिस्त्रिपुरान्तकारी भानुः शशी भूमिसुतो बुधश्च ।

गुरुश्च शुक्रः शनि-राहु-केतवः कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्  ॥ ४॥

Meaning:- Brahma (the Creator), Murari (Visnu), Tripurantakari (Siva, the slayer of Tripuras), the nine planets, Sun, the Moon, Mars the son of Bhumi, Budha (Mercury), Brihaspati (Jupiter), Sukra (Venus), Sani (Saturn), Rahu and Ketu; may all these make the morning auspicious for me.

***

About Music, About Universe!

सनत्कुमारः सनकः सनन्दनः सनातनो-ऽप्यासुरि-पिङ्गलौ च ।

सप्तस्वराः सप्त रसातलानि कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्  ॥ ५॥

Meaning:- Sanatkumara, Sanaka, Sanadana and  Sanatana ( whom Brahma, the creator,  begot by wish); Rsi Asuri ( a disciple of Rsi Kapila, the founder of the Samkhya system of philosophy), Rsi Pingala  ( the author of Hindu Prosody); the Seven Svaras (tones) (i.e. Shadja, Rsabha, Gandhara, Madhyam, Panchama, Dhaivata and Nisada); and the seven nether-worlds

(Atala, Vitala, Sutala, Talatala, Rasatala, Mahatala and Patala) —may all these make the morning auspicious for me !

***

Blow to Idiots (actors and actresses)

Now and then we read in newspapers about the bluffing of idiots (mostly from film stars)  who believed that British united India. But the rivers, mountains, sacred cities we recite every day show Hindus know the Akhanda Bharath. Many reciters are children or illiterate or neo literates!

सप्तार्णवाः सप्त-कुलाचलाश्च सप्तर्षयो द्वीप-वनानि सप्त ।

भूरादिकृत्वा भुवनानि सप्त कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्  ॥ ६॥

Meaning:- The seven oceans ( Lavanabdhi, Iksu, Suravarpa, Ajay, Dadhi, Ksira and Svadu-jala); the seven mountains (Mahendra, Malaya, Sahydri, Suktiman, Rkasavan, Vindhya and Pariyatra): the seven Rsis (Kasyapa,Atri, Bharadvaja, Visvamitra, Gautama, Jamadagni and Vasishta): the seven dvipas ( Continents) (i.e. Jambu, Plaksa, Salmala, Kusa, Kroncha, Saka and Puskara): the seven vanas (forests) ( i.e. Dandakaranya, Khandaranya,  hampakaranya, Vedaranya, Naimisaranya, Brahmaranys and Dharmaranya); and the seven bhuvanas (heavens) (i.e.) Bhuh, Bhuvah, Svah, Mahah, Janah, Traph and Satyam) —may all these make the morning auspicious for me

***

पृथ्वी सगन्धा सरसास्तथापः स्पर्शी च वायुर्ज्वलनं च तेजः ।

नभः सशब्दं महता सहैव कुर्वन्तु सर्वे मम सुप्रभातम्  ॥ ७॥

Meaning:- The Earth with its quality of smell , Water with its quality of taste, Air with its quality of touch, Fire with its quality of teja (glow), Akasa (space) with its quality of sabda (sound)—- may all these elements along with the element of Buddhi (intellect) make my morning auspicious for me !

(This is in 2000 year old Tamil Literature as well)

***

Mountains

महेन्द्रो मलयः सह्यो देवतात्मा हिमालयः ।

ध्येयो रैवतको विन्ध्यो गिरिश्चारावलि-स्तथा ॥ ८॥

***

Rivers

गङ्गा सिन्धुश्च कावेरी यमुना च सरस्वती ।

रेवा महानदी गोदा ब्रह्मपुत्रा पुनातु मम्  ॥ ९॥

Himalaya, Ganga are mentioned in 2300 year old Sangam Tamil literature.

***

Sacred Cities

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।

पुरी द्वारावती चैव सप्तैता मोक्षदायिकाः ॥ १०॥

प्रयागा पाटलीपुत्रं विजयानगरं पुरीम् ।

इन्द्रप्रस्थं गयां चैव प्रत्यूषे प्रत्यहं स्मरेत् ॥ ११॥

***

Great Women!

Who in the world gave this much importance and respect to women? Only Hindus can show Gargi and Maitreyi from Vedic literature.

अरुन्धत्यनुसूया च सावित्री जानकी सती ।

तेजस्विनीइ च पाञ्चाली वन्दनीया निरन्तरम्  ॥ १२॥

Arundhati, Sita and others are mentioned in Ancient Tamil verses.

वैन्यं पृथुं  हैहयमर्जुनं च

शाकुन्तलेयं भरतं नलं च ।

रामं च यो वै स्मरति प्रभाते

तस्यार्थलभो विजयश्च हस्ते ॥ १३॥

***

Great Puranic Men

दध्यङ् मनुर्भृगुरसौ हरिपूर्वचन्द्रो

भीष्मार्जुन-ध्रुव-वशिष्ट-शुकादयश्च ।

प्रह्लाद-नारद-भगीरथ-विश्वकर्म-

वाल्मीकयोत्र चिरचिन्त्यशुभाभिधानाः ॥ १४॥

***

Seven People with Eternal Life! (meaning is ever remembered)

अश्वत्थामा बलिर्व्यासो हनूमांश्च विभीषणः ।

कृपः परशुरामश्च सप्तैते चिरजीविनः ॥ १५॥

सप्तैतान् संस्मरेन्नित्यं मार्कण्डेयमथाष्टमम् ।

जीवेत् वर्षशतं साग्रमपमृत्युविवर्जितः ॥ १६॥

***

Great People who succeeded after a long period of suffering!

पुण्यश्लोको नलो राजा पुण्यश्लोको युधिष्ठिरः ।

पुण्यश्लोको विदेहश्च पुण्यश्लोको जनार्दनः ॥ १७॥

***

Great Women from Epics and Puranas

अहल्या द्रौपदी कुन्ती तारा मन्दोदरी तथा ।पञ्चकन्याः स्मरेन्नित्यं महापातकनाशनम् ॥Ahalya Draupadi Kunti Tara Mandodari tathaPanchakanya smaren nityam mahapataka-nashanamMeaning and Translation”One who daily remembers the five maidens—Ahalya, Draupadi, Kunti, Tara, and Mandodari—is freed from even the greatest of sins.”The Five Revered WomenThese women are celebrated for their resilience, immense wisdom, and moral courage in the face of extraordinary adversity:Ahalya: Praised for her incredible patience, endurance, and ability to begin anew.Draupadi: Known for her fierce courage and her refusal to silently accept injustice.Kunti: Symbolizes sacrifice, immense maternal strength, and resilience.Tara: Revered for her sharp political intelligence and wisdom.Mandodari: Represents righteousness and unwavering wisdom, even in the midst of a corrupt kingdom.

This is only a short version; there are longer versions with regional variations. The very concept is unique to Hinduism.

When you remember 100+++ good things you day will bring you 1000+++ good things!

Please recite as many slokas as possible.

–Subham—

Tags- Pratas smaranam, Morning prayer, Hills rivers, sacred cities, Nine planets, Gods, Goddesses, Gret women, seven Chiranjeevi

Brahmin Gotras on Tamil Inscriptions (Post.15,862)

Written by London Swaminathan

Post No. 15,862

Date uploaded in London –12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Brahmins lived not only in India but also in Sri Lanka and all over Southeast Asia. The Tamil and Sanskrit inscriptions and books like Mahavamsa confirm it. Agastya and Kaundinya, two Brahmins, occupy an important place in the literature, Historical inscriptions and folklore of Southeast Asian Countries. Sanskrit inscriptions of Mulavaman, Purnavarman (Fourth Century CE) and others were discovered inside the deep virgin forest of Borneo (Indonesia). Yupas (Yaga Pillars) were also found there. That shows Brahmins did big Yagas as well.

The suffix Varman has been continued with the name of Kings from Mahabharata days to the modern period.

Sangam Tamil poets proudly include their Gotra names. Dr R Nagaswamy, famous historian and archaeologist, N.Subramanian, Tamil scholar gave us a list of the gotras found in Tamil Nadu in their books.

Here is a list given by N.Subramanian in his book The Brahmin in the Tamil country, Madurai, 1989 :

The following Brahminical Gotra names are heard of in early and medieval Tamil inscriptions:

1.MAUTKALYAYANA

2.SRIVATSA

3.KAUNDINYA (GNANA SAMBANDAR’S GOTRA)

4.KASYAPA

5.BHARADVAJA (NACHCHINARKINIYAR  GOTRA)

6.JATUKARNA

7.VADULA

8.AGNIVESHYA

9.ATREYA

10.VISHNU VRIDHDHA

11.LOHITA

12.VASISTHA

13.GAUTAMA

14.PARASARA

15.HARITA

16.MUTKALA

17.KAUSIKA

18.SANDILYA

19.TARAYANA

20.AUSITHA

21.SAVARNI

22.SANKRIYAYANA

23.MASHALA

24.GARKA

25.RATHITARA

26.KANEKA

27.SALAVATA

28.KUTSA

29.VARAKYA

30.KAPI

31.TUMRAYANA

32.PAURUKUTSA

33.SAMKRASHTI

34.MATTARA

35.JANATKARNA

36.MADALA

37.KAPPA (KAVYA?

38.UDAMEGHA

39.LAKSHANYA

40.KANVAYANA

41.VISVAMITRA

42.ASHMATYA

****

The following Sutra names are also found in inscriptions:

1.APASTAMBHA

2.PRAVACHANA

3.BAHUVRIKSHA

4.SANDIKA

5.VASAUNI

6.HIRNYAKESI

7.ASVALAYANA

8.BAUVISHYA

9.KALARASPA(KALASARPA?)

10.KALARCHCHA

11.VAJAYANESYA

****

Following suffixes to names occur

1.SARMA, 2.BATTAR, 3.SOMASI (SOMA YAJI), 4.KILAN, 5.SARMAN, 6.CHATURVEDI, 7.VASANTAYAJI, 8.TRIVEDI, 9.SANGHVI (SATANGAVIT), 10.AIYAN, 11.VAJAPEYI, 12.UPADYAYA, 13.DVIVEDI

Chaturvi- one who mastered four Vedas; oldest Tamil book was approved by Chaturvedi Acharya of Tiruvithankodu in Kerala.

Trivedi- one who mastered three Vedas.

Dvivedi – one who mastered two Vedas.

Tamil Brahmins were great scholars; throughout Sangam Tamil literature we hear only Chaturvedi (in Tamil Naan Marai)

Sanghvi is Shat Andga Vit= one who is an expert in Six Angas/parts of Vedas.

In Tamil we call it Sadangu.

***

The following sacrifices are also mentioned:

Vajapeyam (Indian Prime minister Atal Behari Vajpeyi was from the family of Vajapeya Yaga experts)

Agnishtomam;

Asvamedham (horse sacrifice)

Rajasuyam is mentioned in Purananuru (Sangam Tamil Literature)

Kalidasa mentions that Pandyas are always with wet clothes because eof bathing called Avabrudha Snanam (in Raghuvamsa; it may be about Pal yaaga salai Mudu Kudumi Peruvazuthi)

Pal yaaga saalaa= one who constructs many Yaga Kundas at the same time)

The following Sakais (shakaa= branch) or Charanams are mentioned:

Asvalayana – Rig Veda;

Apastambha , Bharadvaja, Baudhayana, Satyasadha, Vaikanasa 0f Yajur Veda; Katyayana- Sukla Yajur Veda; Drahyayana- Sama Veda.

From Madurai N Subramanyam’s book

****

My old article on this subject follows: –

Brahmin Poets and Gotras

Brahmin poets of Sangam age identified themselves by thier Gotras. This gives valuable information to us. Even when Asoka sent his emissaries to Sri Lanka, they were welcomed by Brahmin priests. Mahavamsam says Brahmins were living in Sri Lanka even before Vijayan’s arrival there. It shows Brahmins were there at least from sixth Century BCE.

But most famous Brahmin poets Kapilar, Paranar, Mamulanar (Maamuulanaar) ,Kadiyalūr Uruthirankannanār etc. never mentioned their castes. Only other poets praised Kapilar as the most celebrated Brahmin because he was pure and self-controlled.

Pulan Azukkatra Anthanaalan – in Tamil

செறுத்த செய்யுட் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’  (புறம்.53) ;

‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ – நப்பசலையார் (புறம் 126); ‘

பொய்யா நாவிற் கபிலன் (புறம் 74)

***

We find the following Gotras in Sangam books:

The Gotras mentioned are: Atreya, Kausika, Kaundinya, Gowthama, Kasyapa, Kapya (Kaavya), Vatulya, Gargya,

Ilankousikanār         இளங்கௌசிகனார்

Iraniyamuttathu Perunkundrūr Perunkousikanār     இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்

Kallil Āthiraiyanār   கள்ளில் ஆத்திரையனார்

Kāppiyan Chēnthanār       காப்பியஞ் சேந்தனார்

Kāppiyātru Kāppiyanār     காப்பியாற்றுக் காப்பியனார்

Kāsipan Keeranār   காசிபன் கீரனார்

Kavuthaman Sāthēvanār  கவுதமன் சாதேவனார் (ஆமூர் கவுதமன் சாதேவனார்)

Kondimankalathu Vāthuli Narchēnthanār       கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்

Kōthamanār  கோதமனார்

Madhurai Ilankanni Kōsikanār    மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்

Madhurai Ilankousikanār மதுரை இளங்கௌசிகனார்

Madhurai Kavuniyan Poothathanār      மதுரைக் கவுணியன் பூதத்தனார்

Neythal Kārkkiyār  நெய்தல் கார்க்கியர்

Pālai Gouthamanār           பாலைக் கெளதமனார்

Perunkousikanār    பெருங்கௌசிகனார்

Sellūr Kōsikan Kannan      செல்லூர் கோசிகன் கண்ணனார்

From other sources we know Chandilya, Bharadvaja Gotras. Most famous commentator Nachchinarkiniyar , and Nedum Bharatayanar, Teacher of a Chera king, belong to Bharadwaja Gotra.

Post Sangam epic Silappadikrama gives more information. Dr Nagaswamy, famous historian and archaeologist, lists 32 Gotras that lived in Tamil Nadu, from post Sangam period inscriptions.

List of Brahmin poets and their contribution in Sangam/ Cankam literature:

List of Famous Brahmin Poets:

Agasthyar ,who received Tamil language from Shiva

Tolkappiyar (Thruna dumagni), who wrote grammar after Agaththiyam became obsolete.

Amur Gowthaman Sathevanar (Sahadevan)

Kadiyalur uruththiran Kannanar ( Rudra Aksha)

Kodimangalam Vathula (Gothra) Narsenthan

Sellur Kosikan (Kausika Gothra) kannanar

Madurai Teacher Nalanthuvan

Madurai Ilam kausikanar

Madurai Kanakkayanar

Nakkiran,son of Madurai Kanakkayanar

Madurai gownian (Kaundinya Gothra) daththnar

Mamulanar

Uraiyur enicheri mudamosi

Perunkundrur Perungkausikan

Kumattur kannan

Gowthaman

Valmiki

Vadamavannakkan damodaran

Vembathur kumaran

Paranar

Kapilar-Paranar

*****

Books written by Brahmin poets

Tolkappiyam (Pre Cankam period); His name was Truna Dhumagni, according to most famous commentator Nachchinarkiniyar. Tolkappiyar beloned to Kavya Gotra (  Kappiyak Kuti in Tamil) Lord Krishna in Bagavad Gita praised this clan. Usanas was the greatest Kavi= Kavya= Kappiya.

Kurinji pattu (lines 261)

Thiru murugatruppadai (lines 317)

Pattinap palai (Lines 301)

Perumpanatrup padai (Lines 500)

Malaipadukadam (lines 583)

Nedunal vadai (lines 188)

Six out of Ten Idylls sung by Brahmins

Pathitrup pathu (all except one)

Ainkurunuru (Kapilar’s 100)

Brahmin’s contribution adds up to 10,000 lines, nearly one third of the Sangam/ Cankam literature.

****

No Brahmins, No Tamil!!


Tamil and Vedashttps://tamilandvedas.com › 2012/01/14 › no-brahmins…

14 Jan 2012 — Without Brahmins Tamil would have died or at least become poorer two thousand years ago. The reason being Brahmins were the teachers of that language

Also more details are given in my article No Brahmins, No Tamil.

–Subham—

Tags- Brahmins, Gotras, Yagas, Tamil inscriptions, Brahmin poets, Sutras, Tolkappiar

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-52; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,861)

Written by London Swaminathan

Post No. 15,861

Date uploaded in London –12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 52

தஞ்சசையாளி நகர்

திருத்தஞ்சை மாமணிக் கோயில்

சோழநாட்டு திருப்பதி

இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில்மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் சுமார் ஒரு மைலுக்கும் குறைவான சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

1. தஞ்சை மாமணிக் கோவில்

மூலவர் – நீலமேகப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – செங்கமலவல்லி.

தீர்த்தம் – அம்ருத தீர்த்தம், கன்னிகாபுஷ்கரிணி, வெண்ணாறு.

விமானம் – சௌந்தர்ய விமானம்.

ப்ரத்யக்ஷம் – பராசரமுனி.

****

2. மணிக்குன்றம்

மூலவர் – மணிக்குன்றப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – அம்புஜவல்லி.

தீர்த்தம் – ஸ்ரீ ராம தீர்த்தம்.

விமானம் – மணிக்கூட விமானம்.

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயர்.

****

3. தஞ்சையாளி நகர்

மூலவர் – நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – தஞ்சை நாயகி.

தீர்த்தம் – ஸ¨ர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம்.

விமானம் – வேதஸுந்தர விமானம்.

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயர்.

மூன்று கோவில்களிலும் உத்ஸவர் பெயர் ஸ்ரீ மந்நாராயணன்தான்.

****

பகவான் தஞ்ச யானையைப் பிளக்க நரஸிம்மாவதாரம் எடுத்து நகங்களால் குத்தி கிழத்தபோது, தஞ்சகன் வேண்டிக்கொண்டபடி நரஸிம்ம உருவத்தோடு ஸேவை ஸாதிப்பதால் தஞ்சாபுரி அல்லது தஞ்சை என்ற பெயர் உண்டாயிற்று. தஞ்சையைப் பார்த்தபடி விக்ரஹங்கள் அமைந்திருப்பதால், ‘தஞ்சையைக் காத்தருளும் தெய்வம்’ என வழங்கப்படுகிறது.

***

மங்களா சாஸனம் –

திருமங்கையாழ்வார் – 953, 1090, 1576

பூதத்தாழ்வார் – 2251.

நம்மாழ்வார் – 3139.

மொத்தம் 5 பாசுரங்கள்

இத்தலத்தின் சிறப்புகளை திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் 3 பாசுரங்களில் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

“எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம்

எனக்கர சென்னுட்டை வானாள்

அம்பினா லரக்கர் வெருக்கொன நெருக்கி

அவருயிர் செகுந்தவெம் மண்ணல்

வம்புலாஞ்ச் சோலைமாமதில் தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி

நம்பிகான் உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா வென்னும் நாமம்”

திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

மூலவர்: நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்

உற்சவர்: நாராயணர்

தாயார்: செங்கமலவல்லி, அம்புஜவல்லி, தஞ்சை நாயகி

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, வெண்ணாறு, ஸ்ரீராம தீர்த்தம், சூர்ய புஷ்கரிணி

தல விருட்சம்: மகிழ மரம்

விமானம்: வேத சுந்தர விமானம், மணிக்கூடம் விமானம்

***

இத்தலத்தை திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களில் பாடியுள்ளார்.

அவற்றுள் ஒரு பாடல்:

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய், மூர்த்தி வேறு ஆய்

உலகு உய்ய நின்றானை; அன்று பேய்ச்சி

விடம் பருகு வித்தகனை; கன்று மேய்த்து

விளையாட வல்லானை; வரைமீ கானில்

தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்

தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை; வையம் காக்கும்

கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்

கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

மணிக்குன்றம் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் மணிக்குன்றப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: அம்புச வல்லி. தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம்.

இக்கோயிலின் விமானம் மணிக்கூட விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.

 இத்தலத்தை நம்மாழ்வார் பாடியுள்ளார்.

#தஞ்சையாளி நகர் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவி:தஞ்சை நாயகி தீர்த்தம் சூர்ய புஷ்கரணி. இக்கோயிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார்.

*சிறப்புகள்:

நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருளுவதாகவும் மரபு. இம்மூன்று தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் சீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.

புராணம்:

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார்.

அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை.

எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்.

மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், “எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும். எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்” என கேட்டான்.

அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் “தஞ்சமாபுரி” எனப்பட்டது. தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார்.

மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நிலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

***

திருத்தஞ்சை மாமணிக் கோயில்

கும்பகோணம் தஞ்சாவூர் பஸ்ஸில் வரும்போது தஞ்சை ஊர் எல்லையில் வெண்ணாற்றங்கரையில் இறங்கிக் கொள்ளலாம். தஞ்சையிலிருந்தும் டவுன் பஸ்ஸில் வரலாம். மூன்று கோவில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாகப் பாடல் பெற்றுள்ளன மூன்றும் அருகருகே 1 பர்லாங் தூரத்துக்குள் உள்ளன. தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து 2 1/2 மைல் தூரத்தில் வெண்ணாற்றங்கரையில் உள்ளன

****

நவநீத சேவை:

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

திருவிழாக்கள்:

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

***

மூன்று கோவில்கள் பற்றிய கூடுதல் விவரங்கள்

1*தஞ்சாவூர் வீரநரசிம்மப் பெருமாள் கோயில்:

இக்கோயிலை மேல நரசிங்கப்பெருமாள் என்றும் அழைப்பர்.

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலுக்கான வளைவைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் வீரநரசிம்மப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் ரங்கநாதர், வரதராஜர், விஷ்வக்சேனர், பெரிய நம்பிகள், ஆளவந்தார், ராமானுஜர், மணவாள முனிகள் ஆகியோர் உள்ளனர்.

திருச்சுற்றில் தஞ்சைநாயகி சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், திருமங்கையாழ்வார் சன்னதியும் உள்ளன. இந்த கோயில் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்தது.

2. மணிக்குன்றப் பெருமாள்:

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் கருடாழ்வாரும், இடப்புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் மணிகுன்றப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் விருத்தசேனம், உடையார், நம்மாழ்வார் ஆகியோர் உள்ளனர்.மூலவர் சன்னதிக்கு வலப்புறம் வெளியில் அம்புஜவல்லித்தாயார் சன்னதி உள்ளது.

3.நீலமேகப் பெருமாள்:

கோயிலுக்கான நுழைவாயில் சிறிய ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடன் சன்னதி உள்ளது.

முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் நீலமேகப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் வராகப்பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதியின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் வலப்புறம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியும், இடப்புறம் ஆழ்வார், ஆச்சார்யார்கள் சன்னதியும் உள்ளன. இச்சன்னதியில் ஆழ்வார்கள், தேசிகன், ராமானுஜர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.

***

பஞ்ச நரசிம்மர் அருள்:

சிங்கப் பெருமாள் கோவிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சந்நிதி தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என்று இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் உள்ளனர்.

வீரநரசிம்மர் கோவில் சக்கரத்தில் பெருமாளே சக்கரத்தாழ்வாராக அருள்பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார், வலப்புறத்தில் உள்ள யானையின் (தஞ்சகன்) மீது ஒரு கை வைத்தபடி உள்ளார். இவரது பின்புறத்தில் உள்ள யோக நரசிம்மர் அருகே இரண்யகசிபு மற்றும் பிரகலாதன் உள்ளனர்.

நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள நரசிம்மரின் வலப்புறத்தில் மகாலட்சுமி அமர்ந்துள்ளதால், இந்த நரசிம்மர், ‘வலவந்தை நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.

To be continued……….

Tags – Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-52; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் ,Part 52, தஞ்சசையாளி நகர் ,திருத்தஞ்சை மாமணிக் கோயில்

அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன்! கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு–18 (Post.15,860)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,860

Date uploaded in London –   12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ஆர், சேஷாத்ரிநாதன்)

அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன்

प्रभु पहिचानि परेउ गहि चरना। सो सुख उमा जाइ नहिं बरना॥

पुलकित तन मुख आव न बचना। देखत रुचिर बेष कै रचना॥3

பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டார்.. உடனே  அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு  சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினார். பக்தரான ஆஞ்சநேயர் தன்னை ஆளும் தலைவனைக் கண்டு கொண்ட அந்தக் காட்சி பார்வதிக்குக் கதை சொல்லிவந்த சிவபெருமான் புளகாங்கிதம் அடைந்து பார்வதியிடம் சொல்கிறார் “பார்வதி! அந்த சுகத்தை வர்ணிக்க முடியாது.. உடல் புளகாங்கிதம் அடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாத நிலை. அவர் பகவானின் அழகிய வேடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

பாகவதத்தில் சொல்லியபடி

न वै जनो जातु कथञ्चनाव्रजेत्

मुकुन्दसेव्यन्यवदङ्ग संसृतिम् ।

स्मरन्मुकुन्दाङ्‌घ्र्युरपगूहनं पुनः

विहातुमिच्छेन्न रसग्रहो जनः ॥ १९ ॥

முகுந்தனை (விஷ்ணுவை) ஒருமுறை சேவித்தவன்,

அவனைத் தவிர்த்து வேறு வழியில் சஞ்சரிக்க விரும்பமாட்டான்.

அவன் திருவடிகளை நினைத்தவுடன்,

அவனிடமிருந்து விலக விரும்பாதான்,

ஏனெனில் அவன் உண்மையான ரஸத்தை (பரம ஆனந்தத்தை) அனுபவித்துவிட்டான்.

இந்த ஸ்லோகம் பக்தியின் உச்ச நிலையை சித்தரிக்கிறது:- முகுந்தன் என்பது விஷ்ணுவின் முக்தி தரும் வடிவம்.- ஒருவர் முகுந்தனை உண்மையாக சேவித்துவிட்டால்,அவர் சம்சாரம் (பிறவிப் பந்தம்) போன்ற மாயை வழிகளை மீண்டும் நாடமாட்டார்.- முகுந்தனின் திருவடிகளை நினைத்தவுடன்,அந்த பரம ஆனந்தம் அவரை மீண்டும் வேறு எதற்கும் செல்ல முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.- இது ரஸானுபவம் – பக்தியின் அமிர்தம்.

– “रसग्रहो जनः – உண்மையான ரஸம் (ஆனந்தம்) பெற்றவன், மாயை, சம்சாரம், வேறு தேவைகள் அனைத்தையும் விட்டு விடுகிறான்.- இது பக்தி யோகத்தின் உச்ச நிலை –அனுபவம், நினைவு, மற்றும் அழிவில்லா ஈர்ப்பு.

முகுந்தன் திருவடி நினைத்தவுடன்,

மாயையின் வலை கிழிந்ததடி!

சஞ்சாரம் எனும் சுழற்சி நின்றது,

சதாசிவம் போல ஆனந்தமடி!

—-

ஒருமுறை முகுந்தனைச் சேவித்தால்,

மீண்டும் பிறவிக்கு இடமில்லை!

திருவடியில் விழும் என் மனம்,

திரும்பிப் போகும் வழியில்லை!

अतिसय प्रबल देव तव माया।

छूटइ राम करहु जौं दाया।।

பகவானை அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். எப்படி கண்டு கொண்டான்? இரண்டுவிதமாக ஒன்று அசரீர் குரல்

कस्यप अदिति महातप कीन्हा। तिन्ह कहुँ मैं पूरब बर दीन्हा॥

ते दसरथ कौसल्या रूपा। कोसलपुरीं प्रगट नर भूपा॥2

இராவணனின் கொடுமையால் தேவர்களும் பூமாதேவியும் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் “கவலையை விடுங்கள்.  முனிவர் காஷ்யபரும் அவரது மனைவியும் நான் அவர்கட்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்துள்ளனர். அவர்கள் தசரதராகவும் கோசலையாகவும் பிறந்து மனிதர்களாக கோசல நாட்டில் உள்ளனர். அவர்கள் மகனாக நான் அவதாரம் எடுப்பேன்” என்று சொன்னார்.  தற்பொழுது ஹனுமனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘நான் கோசலை அரசன் தசரதனின் மகன்’ என்று சொன்னார். இரண்டையும் இணைத்து வந்திருப்பவன் பகவான் மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். இது போக நாரதரும் இராமனுக்கு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று  ஒரு சாபம் கொடுக்கிறார் அது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. அதனால் பூமிக்கு நன்மையே விளைந்தது.

நாரதர் இராமனுக்கு சாபம் இட்டார் என்ற கருத்து, அத்யாத்ம ராமாயணம் மற்றும் சிவபுராணம் போன்ற தத்துவ ரீதியான புராணங்களின் ஒரு ஆழமான விளக்கம் ஆகும். இது இறைவன் ஏன் மனிதராக அவதரிக்க வேண்டியது ஏற்பட்டது என்பதை விளக்கும் ஒரு கதை.

 கதைச் சூழ்நிலை:

ஒரு முறை, சிவபெருமான் பார்வதிக்கு இராமரின் அவதார ரகசியத்தை விளக்குகிறார். பார்வதி கேட்கிறாள்: “ராமர் ஜய-விஜயன் சாபத்தால் அவதரித்தாரா?”சிவபெருமான் பதிலளிக்கிறார்: “இல்லை, நாரதரின் சாபத்தினால்தான் திருமால் ராமராக அவதரித்தார்”.

சாபக் கதை:

நாரதர், ஒரு சமயம் தபசில் ஈடுபட்டிருந்தார். தபசின் முடிவில், அவர் மனதில் ஒரு சிறிய அகந்தை கொண்டார்: “நான் காமத்தை வென்றவன்!”

அதைக் கண்டு விஷ்ணு, அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

அவர் மாயையால் உருவாக்கினார் — ஒரு அழகிய ராஜகுமாரி, ஒரு மன்னன், ஒரு திருமண சூழ்நிலை.

நாரதர், அந்த ராஜகுமாரியை விரும்பி, திருமணத்திற்காக விஷ்ணுவிடம் அழகான முகம் வேண்டினார்..ஆனால் விஷ்ணு, வானர முகம் (குரங்கு முகம்) கொடுத்தார்..

திருமணத்தில், ராஜகுமாரி மற்றொரு அரசனைத் திருமணம் செய்தாள், நாரதர்  உண்மையை உணர்ந்தார். – கோபத்தில், நாரதர் விஷ்ணுவை சபித்தார்:.“நீயும் மனிதராக பிறந்து,மனைவியை இழந்து,வானர உதவியால் தேட வேண்டிய நிலைக்கு வருவாய்!”- இதுவே ராமாவதாரத்தின் தத்துவ ரீதியான காரணம்

இறைவன், சாபத்தின் வழியே தர்மத்தை நிலைநிறுத்த மனிதராக அவதரிக்கிறார்.

 தத்துவ விளக்கம்:

-நாரதரின் சாபம் என்பது மனித வாழ்வின் சோதனைகளை இறைவன் தானே அனுபவிக்க வேண்டும் என்பதற்கான தத்துவ அடிப்படை.

அஹங்காரம், மாயை, விரகி, தர்மம், பக்தி — இவை அனைத்தும் இந்தக் கதையில் பின்னப்பட்டுள்ளன.

இறைவன் கூட மனிதனாக, துன்பம் அனுபவித்து, தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கான புராண ரீதியான விளக்கம்.

बंचेहु मोहि जवनि धरि देहा। सोड़ तनु धरहु

श्राप मम् एहा॥ कापि आकृति तुम्ह कीन्हि हमारी। कारिहहिं कीस सहाय तुम्हारी॥ म्र अपकार कौनह तुम्ह

भारी। नारि बिरह तुम्ह होब दुखारी॥

இங்கு இன்னொரு கதை சொல்லப்படுகிறது. பத்ம இராமாயணம்  என்ற இராமாயணத்தில் இராமனின் இளமைக் கால விளையாட்டுகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் இளம்வயதில் இராமன் குரங்ககுகளுடன் விளையாட ஆசைப்பட்டதாகவும் அதற்காக குரங்குகள் வரவழைக்கப்பட்ட்டதாகவும் ஆனால் இராமனுக்கு அந்த குரங்குகள் பிடிக்காததால் வசிஷ்டர் அஞ்சனையின் மகனான் ஹனுமனைக் கொண்டு வந்ததாகவும். இராமன் ஹனுமனுடன்  விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது. இராமனுக்கு ஐந்து வயதானவுடன் கல்வி கற்கச் சென்றபோது ஹனுமன் மீண்டும் அஞ்சனையிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது.

சில உரையாசிரியர்கள் விஸ்வாமித்திரர் தாடகையின் வாதத்திற்காக இராமனையும் இலக்ஷ்மணனையும் கூட்டிச் சென்றபோது ஹனுமன் அவர்களிடமிருந்து பிரிந்ததாகவும் சொல்லப்படுக்றது. இதனால் ஹனுமனுக்கு இராமனின் அடையாளம் புரிந்தது என்றும் சொல்கிறார்கள்.

 இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது சூரியன் ஹனுமனின் குரு. அவருக்கு வேதங்கள் அனைத்தும் கற்றுத் தந்தவர்,  ஆப்பொழுது அவர் ஹனுமனிடம் “எனது அம்சமாக சுக்ரீவன் பூமியில் வானரனாகத் தோன்றுவான். அவனுக்கு அசம்பாவிதம் உண்டாகும்.. அப்போது நீ அவனுக்குத் துணை நிற்கவேண்டும். இதனால் உனக்கு நல்லது நடக்கக்கூடும். மாகாவிஷ்ணு பூமியில் மனிதனாக அவதாரம் எடுப்பார், அப்போது அவரது மனைவி அபஹரிக்கப்படுவாள்,, அவளைத் தேடிக்கொண்டு அவர் அங்கு வருவார்” என்று சொல்லி இருந்தார். அதனால் இராமனை எளிதில் அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சில உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

**

ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம் அளித்தது! (Post.15,859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,859

Date uploaded in London – 12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘மது சக்யம்’ என்ற ஸர்க்கமாகும்.

ஒரு நாள் ராவணன் லங்காபுரியில் ஒரு உத்தியானவனத்திற்குச் சென்றான்.

அங்கே ஒரு யாகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான். தன் புதல்வன் மேகநாதனே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து,”இது என்ன? சொல்!” என்றான். உடனே யாகத்தை நடத்திக் கொண்டிருந்த அசுர குருவாகிய சுக்ராசாரியர் ராவணனிடன், “நானே சொல்கிறேன். உனது புதல்வனால் ஏழு யாகங்கள் இயற்றப்பட்டன” என்று ஆரம்பித்து விவரங்களைக் கூறுகிறார்.

அக்னிஷ்டோமஸ்வமேதஸ்ச யக்ஞோ பஹுசுவர்ணக: |                  ராஜசூயஸ்ததா யக்ஞோ கோமேதோ வைஷ்ணவஸ்ததா||

மாஹேஸ்வர ப்ரவ்ருத்தே து யக்ஞே பும்பி: சுதுர்லபே |
வராம்ஸ்தே லப்தவாபுத்ர: சாக்ஷாத் பசுபதேரிஹ ||

உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 8&9

அக்னிஷ்டோம: – அக்னிஷ்டோமம் என்ற                               யக்ஞ – யாகமும்                                                அஸ்வமேத: – அஸ்வமேதம் என்ற யாகமும்                                      பஹுசுவர்ணக: –  பஹுசுவர்ணம்                                      யக்ஞ ச – என்ற யாகமும்                                               ராஜசூய: – ராஜசூயம் என்ற யாகமும்                                        ததா – அவ்வண்ணமே                                                       கோமேத: – கோமேதம் என்ற                                              வைஷ்ணவ: – வைஷ்ணவம் என்ற யாகமும்                                            ததா – அவ்விதமே                                                              பும்பி: – மனிதர்களால்                                                             சுதுர்லப: – செய்து முடிக்க கஷ்டமாயுள்ள                                            மாஹேஸ்வர யக்ஞே – மாஹேஸ்வரம் என்ற யாகமும்                             ப்ரவ்ருத்தே – குறையின்றி நடைபெறுகையில்                                        தே – உனது                                                           புத்ர – புதல்வன்                                                                   இஹ து – இவ்வுலகில்                                                                       பசுபதே: – பரமசிவனுடைய                                                 சாக்ஷாத் – பிரத்யக்ஷத்தில்                                                    வரான் – வரங்களை                                                    லப்தவான் – வரங்களைப் பெற்றான்

காமகம் ஸ்யந்தனம் திவ்யம்ந்தாரிக்ஷசரம் த்ருவம் |                  மாயாம் ச தாமஸீம் நாம யயா சம்பத்யதே தம: ||

ஏதயா கில சங்க்ராமே மாயயா ராக்ஷஸேச்வர |                        ப்ரயுக்தயா கதி: ஷக்யா ந ஹி ஞாதும் சுராசுரை: || |

அக்ஷயாவிஷுதீ பாணைச்சாபம் சாபி சுதுர்ஜயம் |                         அஸ்த்ரம் ச பலவத்சௌம்ய சத்ருவித்வம்ஸனம் ரணே ||

ஏதான்ஸர்வான்வரான்லப்த்வா புத்ரஸ்தேயம் தசானன |
அத்ய யக்ஞசமாப்தௌ ச த்வாம் தித் ருக்ஷு: ஸ்திதோஹ்யஹம்

உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 10,11,12,13

தசானன – தசானன                                                 ராக்ஷஸேச்வர – ராக்ஷஸ மன்னா                                          சௌம்ய – அன்பனே                                                    தே – உனது                                                              அயம் – இந்த                                                                  புத்ர – புதல்வன்                                                        ஏதான் – பின்கண்ட                                                          வரான் – வரங்கள்                                                           ஸர்வான் – எல்லாவற்றையும்                                                அத்ய – இப்போது                                                              லப்த்வா – பெற்றான்                                                              திவ்யம் – தேவநிர்மிதமானதும்                                                     காமகம் – இஷ்டப்படியெல்லாம் செல்ல வல்லதும்                                     அந்தரிக்ஷசரம் – ஆகாயமார்க்கத்தில் செல்ல வல்லதும்                        த்ருவம் – என்றும் அழியாததுமான                                    ஸ்யந்தனம் – ஒரு தேரையும்                                              யயா – எந்த ஒன்றால்                                                           தம: – பிரத்யக்ஷத்திலும் கண்களால்                                      சம்பத்யதே – உண்டாகிறதோ                                       சங்க்ராமே – போரில்                                             ப்ரயுக்தயா – பிரயோகிக்கப்பட்ட                                        ஏதயா – இந்த                                                                   மாயயா – மாயையால்                                                              சுராசுரைபி: – தேவர்களாலும் அசுரர்களாலும் கூட                                         யதி: – இருக்குமிடம்                                                           ஞாதும் – கண்டுகொள்ள                                                          கில ஹி – எப்படியும்                                                         ந ஷக்யா – முடியாதோ அந்த                                             தாமஸீம் – தாமஸி                                                     நாம – என்கிற                                                             மாயாம் ச – மாயையையும்                                              அக்ஷயௌ – அக்ஷயமான                                                       இஷுதீ ச – அம்பராத்துணிகள் இரண்டையும்                                பாணை: – பாணங்களால்                                                   சுதுர்ஜயம் – வெல்வதற்கரிய                                               சாபம் ச – தனுசையும்                                                  ரணே – போரில்                                                               சத்ரு வித்வத்வம்ஸனம் – எதிரிகளை ஹதம் செய்யும்                                பலவத – எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாகிய                                     அஸ்த்ரம் ச – ஒரு அஸ்திரத்தையும் பெற்றான்                            யக்ஞ சமாப்தௌ – யாக முடிவில்                                    த்வாம் – உன்னை                                                தித்ருக்ஷு: – காண                                                    அஹம் ஹி – நானும்                                                               ஸ்தித: – இருந்தேன்

இப்படியாக சுக்ராசாரியார் ராவணனிடம் அவன் புத்திரனாகிய மேகநாதன் பரமசிவனிடமிருந்து வரங்கள் பெற்றதைக் கூறினார்.

யாகங்களை இயற்றி பெறப்பட்ட இந்த வரங்களை வால்மீகி விவரமாக இப்படி எடுத்துரைக்கிறார்.

**

You can also become an Elephant Man! (Post No.15,858)

Written by London Swaminathan

Post No. 15,858

Date uploaded in London –11 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Following news items are from my paper cuttings file:

1

Elephants nearly cost alexander his empire, Hannibal managed to cross the alps with a herd of elephants; they helped Tarzan out of a few tight corners. now there is a training course available for anyone to become a mahout- elephant man. Tourists can train to become mahouts in Anantara resort in northern Thailand through the neighbouring Golden Triangle Asian Elephant Foundation.

The Golden Triangle Asian Elephant Foundation (GTAEF) is a non-profit NGO based in Chiang Rai, Thailand. Established in 2005 by the Minor Group, it provides a safe haven for rescued captive elephants and their mahouts, while also supporting wild elephant conservation programs.

 GTAEF takes in elephants from dangerous urban environments (like Bangkok streets) where they face abuse and lack proper care. It supports both the animal and its mahout (handler) by providing food, lodging, and medical care.

The foundation aims to employ mahouts in ethical, sustainable roles so they do not have to resort to illegal logging or begging. It also provides English lessons and educational support for their children.

Beyond captive elephants, GTAEF funds field research, supports local community ranger teams, and protects wild elephant corridors.

The foundation is located at the confluence of the Thailand, Myanmar, and Laos borders, and operates in close partnership with luxury eco-tourism resorts.

***

2 Elephant Memory

Elephants are renowned for their long memories, so it is not probably a good idea to make an enemy of one. Scientists in Africa have made the alarming claim that the mammals can store up grievances and wreaking their revenge – even on humans.

And evidence is now emerging that Elephants can pass these grievances down from mother to calf- ensuring their anti-human vendettas carry on for generations.

The discovery has been charted by Kenya based expert Joyce Poole. He claims disputes between elephants and humans are becoming increasingly common as the two growing populations are battling for land. There are more reports of elephants trampling African villages apparently without any cause or motivation.

Mr Poole who is research director at the Amboseli elephant project in Kenya, says the distrust of humans probably dates back to the age of poaching in the 1970s and 1980s. this has created a generation of teenage delinquent elephants bent on taking out their grievances on humans.

Mr Poole told new scientist magazine “they are certainly intelligent enough and have good enough memories to take revenge.

Wildlife managers may feel it is easier just to shoot so called problem elephants; but they could be stimulating a cycle of violence “.

Metro newspaper 16-2-2006

***

3 Soccer

Elephants play soccer matches in Thailand. Ayuththaya (named after Rama’s Ayodhya) province is 50 miles north of Bangkok, capital city of Thailand. There soccer /football matches are organised to campaign against gambling on the world cup.

***

Petulant Pachyderms

A student nurse was killed when a bull elephant went berserk at a show at an animal park in Thailand in 2000. Briton Andrea Taylor , 20, was sitting in the front row at the Nong Nooch Tropical Garden when one of the animals charged at her.

Maxi, the elephant found a novel way of child control in august 2005. At a zoo in Zurich , maxi enjoyed flicking his helpless son through the air with his tusks. –Metro newspaper 16-2-2006 

–subham— 

Tags – elephants, revenge, memory, foot ball, titbits, mahout.

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-51; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,857)

Written by London Swaminathan

Post No. 15,857

Date uploaded in London –11 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மதுரை கூடல் அழகர் கோயில்

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அஷ்டாங்க விமானத்துடன், மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது இது ;  பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழ்கிறது.

வேறு பெயர்கள்–    இருந்தையூர், திருக்கூடல், நியமம், வெள்ளை நகரம், நான்மாடக்கூடல்

தாயார் / அம்மன் பெயர்   மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி

திருக்குளம் / ஆறு   கிருதமாலா நதி, ஹேமபுஷ்கரிணி

இங்கே பெருமாள் கிழக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருந்த கோலத்தில்  காட்சியளிக்கிறார். தாயாருக்கு மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி, என்னும் திருநாமங்கள் உண்டு. இங்குள்ள தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி, கிருதமாலா . பிருகு முனிவர், வல்லபர், பெரியாழ்வார், ஆகியோருக்குக் கூடலழகர் காட்சியளித்துள்ளார்.

.இத்திருக்கோயிலில் பூஜைகள் வைகாணச ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது, இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது அட்டாங்க விமானமாகும்,  நவகிரக சன்னதி அமைந்துள்ள வைணவ திவ்ய தேசமாகும். இத்தலமிருந்த பகுதி  இருந்தையூர் என சங்க காலத்தில் அழைக்கப்பட்ட.து

ஸ்ரீவல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் ஸ்ரீமந் நாராயணனே பரம் பொருள் என மெய்பித்துக் காட்டிய திருத்தலமாகும்.

திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திருத்தலம். திவ்ய பிரபந்த பாசுரங்களுள் முதன்மையாக விளங்கும் திருப்பல்லாண்டு பாடப்பெற்ற திருத்தலமாகும்.

சங்ககாலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்கு ஆவணி திருவோணத்தில் விழாக்கள் பல செய்து கூடலழகரை வழிபட்டார் .

வைகை நதி இரண்டாகப்பிரிந்து மதுரை நகருக்கு

மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு

கிருதமால் எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில்

இப்பெருமாள் எழுந்தருளினார். ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்பார்கள்; இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன் ஒருவன் இக்கூடலழகர்பால் மிக்க பக்தி கொண்டு கடும் விரதம் மேற்கொண்டான். அவன் ஒரு நாள் மாலை வேளையில்  சந்தியாவந்தனம் செய்யும்போது அந்த நீரில் பெருமாள் மச்சாவதராமாய் மீனாக எழுந்தருளினார். அவனுக்கு அருள் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது..

சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க

விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும்

கொண்டு (அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது.

அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் நாயக்க மன்னர்களின்

திருப்பணியைத் தெரிவிக்கிறது.

இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து

எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்

எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால்

தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இங்கு இருக்கும் ஆண்டாள் சன்னதி சிறப்புடையது.

திருவிழாக்கள் வைகாசிப் பெருவிழா, தைலக்காப்பு, பகல் பத்து, இராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கனு விழா, பங்குனி திருக்கல்யாண உற்சவம்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர், தனது தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டதிக் பாலகர்கள் ஓவிய வடிவில் அருளுகின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் இங்கு உள்ளன. மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப் பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும் காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

–subham—

Tags– Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-51; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், மதுரை கூடல் அழகர் கோயில்