HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 65; இந்து மத கலைச்சொல் அகராதி-65 (Post.15,785)

Madurai Mariamman Tank near the temple.

Written by London Swaminathan

Post No. 15,785

Date uploaded in London –25 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil version will be posted tomorrow

Bangkok Mariamman Temple

MARIYAMMAN

Hindu Goddess worshipped in Tamil Nadu. She is the goddess of rain, prosperity, and healing. Mariamman is a manifestation of the goddess – Parvati, an incarnation embodying Mother Earth with all her terrifying force. She protects her devotees from unholy or demonic events. Hindu migrant workers have erected her temples around the world, particularly in Sri Lanka, Malaysia, Singapore, Mauritius, South Africa and other countries. Even in UK, there are three temples dedicated to her. When ever there is an outbreak of diseases such as small pox devotees vow to offer her body parts in silver or walk on fire in Fire Walking Ceremonies. Neem tree leaves are hung around the fire pots the devotees carry during festivals. Madurai Mari Amman temple is one of the famous temples with a big tank opposite it.

In some towns devotees suspend themselves in ropes and an iron hook through the flesh of the back and whirled around a pole. Villagers believe she can cause diseases and eradicate diseases. They offer her Rice Pongal or Rice Gruel. High caste Hindus offer her Maa Vilakku= sweet flour with ghee lamp in the middle. In each village same ceremonies are done to local goddesses with different names. Some local anecdotes or incidents are linked to her.

Foreigners who could not understand the ceremonies have used wrong words to describe her.

***

MARMA STHANA

Marma sthaana refers to vital points in the body that are crucial for health and well-being, as detailed in Shilpashastra, Ayurveda, and scientific perspectives. These locations, often associated with critical biological functions, are marked by their vulnerability; injury to them can lead to serious consequences such as deformity or death. Marma sthaana also means excretory organs in common parlour.

***

Marichi

A spark of fire; मरीच्य इव निष्पेतु- रग्नेर्धूमाकुलार्चिषः (marīcya iva niṣpetu- ragnerdhūmākulārciṣaḥ) Rām.1.56.18.

-ciḥ 1 Name of a Prajāpati, one of the ten patriarchs created by the first Manu, or one of the ten mindborn sons of Brahman; he was father of Kaśyapa.

He married Kala , the daughter of Kardama rishi by Devahuti . Kashyapa was his son.

***

Markandeya with Siva; Yama is kicked away by Lord Siva.

Markandeya

Mārkaṇḍeya (मार्कण्डेय)  the son of Sage Mṛkaṇḍu was born to a couple when they propitiated Śiva with their prayers. At the time of granting them their wish, Shiva offered them two choices, a son who would be wealthy, powerful and long lived, but of ill character, or a son who would be virtuous, but who will die when he turns sixteen. The Brahmana asked for a son who would be virtuous. The Lord granted the boon and disappeared. The young Mārkaṇḍeya was not only extremely intelligent but also a great devotee of Śiva. When Yama, God of Death came to take his life at the age of sixteen, he was praying to Shiva as usual. He hugged Shiva Linga when he saw Yama with terrible appearance. When Yama tried to pull him away from Shiva’s statue, Lord Shiva himself came out and kicked Yama away. Lord Shiva told Yama that he will remain Sixteen for ever. There is a Purana called Markandeya Purana detaining the story.

Pronunciation- maarkandeya.

***

Marut

Vedic God of storm. Vedas say that Maruts are sons of Rudra.

The storm gods hold a very prominent place in the Vedas and they are represented as friends and allies of Indra. Various origins are assigned to them. They are sons of Rudra, brothers of Indra and and sons of ocean and earth. They are armed with lightnings and thunderbolts, and ride on the whirlwind and direct the storm. The number of them is said in one place to be thrice sixty and in another only 27.

In Ramayana, they are represented to have their origin in an unborn son of Diti, whom Indra dashed into 49 pieces with his thunderbolt and in compassion converted them into Maruts. They have obtained their name from the words maa roadih , weep not, which Indra addressed to them.

One more view is Siva and Parvati beheld them in great affliction and Parvati asked Siva to transform the lumps into boys; he accordingly made them boys of like form, like age, and similarly accounted, and gave them to Parvati as her sons, whence they are called the sons of Rudra.

The world of the Maruts, called Maaruta, is the appointed heaven of Vaisyas. The god of the wind, and regent of the north west quarter. Maruti , Anjaneya is related to the word Wind/Marut

Puranic Story:  Marut (मरुत्).—Fortynine in number, born of Diti and Kaśyapa; seven in each of the seven vātaskandhas; brothers of Indra and participators in sacrifices;1 when Diti conceived a son to be the slayer of Indra, the latter began to serve her throughout her pregnancy. Once finding that she did not keep to her vows he entered her womb and cut the foetus into 49 pieces, when they cried. He said to them mā ruda and hence māruta: being divine, were born as 49 sons: at the request of their mother Indra made them a Devagaṇa, called Marutgaṇa

***

Maruti– Another name of Anjaneya/ Hanuman. Son of Vayu Deva.

See Hanuman and Anjaneya

***

MARUTHAM MANTHA/ CHANDA

Maarutham is wind or Breeze. Mantha Marutham is the southern breeze coming from Malaya Mountain (part of Western Ghats/ Sahyadri. Chanda Marutham is gale fore wind.

***

Matali – maatali

Charioteer of Indra. World’s first pilot of Space Shuttle.

He came down to earth to escort Arjuna to Swarga/heaven and then return him to earth after five years. He is the first pilot of space shuttle in literature. During Arjuna’s stay in swarga/heaven  it was Matali who showed him celestial places. Arjuna’s space travel is in Vana Parva of Mahabharata.

***

MATHA/ MUTT

Religious centres where the head of a particular sect lives. Kanchi Kamakoti Mutt in Tamil Nadu and Sringeri Mutt in Karnataka and Ahobilam Mutt in Andhra Pradesh are very famous. In Tamil Nadu, Adeenams are Mutts of Saivite saints . Vaishnavites have Jeeyar Mutts. All these Mutts have branches in different parts of the country. Pujas and worship happen everyday in the popular Mutts. In Tamil they are called Matam.

***

Matsya Avatara

Matsyāvatāra (मत्स्यावतार).—the first of the ten incarnations of Viṣṇu; (during the reign of the seventh Manu, the whole earth, which, had become corrupt was swept away by a flood, and all living beings perished except the pious Manu and the seven sages who were saved by Viṣṇu in the form of a fish.

Matsya means Fish; in Tamilized form it is Machcha. Lord Vishnu’s first Avatar/incarnation. This story is in various religions as Nova or Flood Story etc.

Name of a country as well in ancient India.

***

Matsya purana

It gives the story of fish incarnation of lord Vishnu. it has about 15,000 slokas/couplets. Many of its chapters are same as the parts of Vishnu and Padma Puranas.

***

Maya

A Daitya  who was the architect of the Asuras and as Viswakarma as the architect of the Devas.

Maya was the son of Viprachitti and father of Vajra karma and Mandodari, wife of Ravana.The Mahabharata speaks of a palace he built for the Pandavas. In Hari-vamsa he appears frequently both as victor and vanquished in contests with the Gods.

Story in Mahabharata

When Khandava forest was being burnt by Arjuna and Krishna with the help of  Agni, Maya sought and received protection from Arjuna.  To show his gratitude he built the central court of Yudhisthira’s new capital Indraprastha; the court was unparalleled in beauty and architectural skill. It was to this court Duryodhana was invited later at the time of Yudhithira’s Rajasuya Yajna and where Duryodhana mistook  the highly polished marble floors for water and vice versa bringing ridicule upon himself. Draupadi with her companions, watched it from the balcony , laughed, which hurt Duryodhana very much. He revenged upon her by disrobing her IN public assembly when Pandavas lost everything including her in the gambling.

***

Maya- mayaa

Illusion, deception.

Illusion personified as a female form of celestial origin, created fro the beguiling some individual. Goddess Durga is also called Mahaa Maayaa or Maayaa Devi. The name shows that she is capable of destabilising even people of wisdom, if they do even a single mistake.

Om jñānināmapi cetāṁsi devī bhagavatī hi sā
balādākr̥ṣya mohāya mahāmāyā prayacchati

Meaning:
“Even the minds of the wise are forcibly drawn by the Goddess Bhagavati—the Great Maya—and led into delusion.”- says Durga Saptasati/ Devi Mahatmya.

Adi Shankara frequently used this word in his propagation oof Advaita. He said seeing a rope as a snake is Maayaa/illusion.

***

Manikarnika Ghat

Manikarnika Ghat, located on the banks of the Ganges in Varanasi, India, is one of the oldest and holiest cremation grounds in Hinduism. It operates 24/7, with hundreds of pyres burning continuously as families gather to cremate their deceased with the belief that it grants eternal liberation (Moksha).

  • Location: Situated in the Kashi region of Varanasi, Uttar Pradesh.
  • Operation: 24 hours a day, 365 days a year.

Visitors typically observe the process from a boat on the Ganges River or from designated safe vantage points onshore.

Costs: For those arranging a cremation, costs range from ₹4,000 to ₹20,000 depending on wood quality and specific rituals.

The ghat is named after Sati’s (a Hindu goddess) earring, which is believed to have fallen there.

The Eternal Flame: According to tradition, the main funeral pyre has been continuously burning for over 3,000 years.

The Dom Community: The cremation rituals are traditionally overseen and managed by the local Dom community, who prepare the bodies and maintain the sacred fires

***

Mayadevi – maayaadevi-

Māyādevī (मायादेवी).—Name of the mother of Buddha.

The Maya Devi Temple refers to one of the sacred or popular destinations of Lumbini (Rupandehi District, Nepal).—Description of the Maya Devi Temple: This UNESCO world heritage site is the birthplace of Siddhartha Gautama (Buddha), the son of King Suddhodhana, the once ruler of the ancient kingdom of Kapilvastu, and his Queen Maya Devi. The queen gave birth here in the garden of Lumbini Park, while on her way home, holding onto a branch of a Sal tree. Today, this site is where the Maya Devi temple stands. There is an older temple structure under the current building. A few years ago, ancient tree roots dating to the 6th century BCE were found in the temple, which correlates to the story of how Queen Maya gave birth to Buddha.

***

Mayavati- maayaavati

Māyāvatī (मायावती).—An incarnation of Ratidevī. An asura named Śambara made her his wife. But Pradyumna, son of Kṛṣṇa, carried her away to Dvārakā.

Māyāvatī (मायावती).—Rati in her former birth: when her husband was burnt by śiva, she was reborn as the superintendent of Śambara’s kitchen. Hearing from Nārada that Pradyumna was Kāma and that he was thrown into sea by Śambara and swallowed by a fish and was brought to her kitchen, she nursed him lovingly and when he came of age, she spoke the truth and taught him mahāmāyā vidyā with which he killed Śambara: She took him by air to Kṛṣṇa and was rejoiced to become the daughter-in-law of Kṛṣṇa and Rukmiṇī.*

To be continued……………………

Tags—Mayadevi, Mayavati, Manikarnika, Markandeya, Mariamman, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 65; இந்து மத கலைச்சொல் அகராதி-65

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-34; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,784)

Written by London Swaminathan

Post No. 15,784

Date uploaded in London –25 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 34

திருக்கோஷ்டியூர்

திருக்கோஷ்டியூர் ,சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இது 104-வது தலமாகும்.

சிறப்பம்சங்கள்:மூலவர்: சௌமியநாராயண பெருமாள். பெருமாள் நின்ற, நடந்த, கிடந்த, இருந்த என நான்கு நிலைகளிலும் காட்சி தரும் அபூர்வ தலம்.

ராமானுஜர் உபதேசம்: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர், எட்டெழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணாய” ரகசியத்தை சாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உபதேசம் செய்த தலம்.

மூலவர் பெயர் சௌமிய நாராயணன்;

தாயார் மகாலட்சுமி.

திருவிழாக்கள்:

வைகுண்ட ஏகாதசி, மாசி தெப்பத் திருவிழா மற்றும் நவராத்திரி.

கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை சௌமியநாராயணருடன் மது, கைடபர், இந்திரன், புரூருவ சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.

அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் உள்ளார். இவருக்கு பிரார்த்தனை கண்ணன் என்று பெயர். மகாலெட்சுமி தாயாருக்கு தனிச்சன்னதி இருக்கிறது.

அஷ்டாங்க விமானம் :

ஓம் நமோ நாராயணாய எனும் மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.

விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.

மகாமக கிணறு :

புரூருவ  சக்கரவர்த்திக்காக இத்தலத்தில் ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள இந்த கிணறை “மகாமக கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமியநாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி செய்கிறார்.

ராமானுஜருக்கு உபதேசம் :

திருக்கோஷ்டியூர் நம்பி   , ஓம் நமோநாராயணாய என்ற மந்திர உபதேசம் செய்தார்.

தல வரலாறு:

இரணியகசிபை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார்.

தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார்.

தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

கோபுர விமானத்தின் சிறப்பம்சம் :

மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம் ஓரு சில கோயில்களில் மட்டும் அமைந்துள்ளது.

கோயில் பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் உள்ளது.

மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் :பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்

மதுரையிலிருந்து 65 கி. மீ தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கி.மீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கி.மீ. தொலைவில் திருக்கோஷ்டியூரில் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

***

திருக்கோஷ்டியூர் பாசுரங்கள்

13.  

வண்ண மாடங்கள் சூழ்*  திருக்கோட்டியூர்க்*

கண்ணன் கேசவன்*  நம்பி பிறந்தினில்*

எண்ணெய் சுண்ணம்*  எதிரெதிர் தூவிடக்*

கண்ணன் முற்றம்*  கலந்து அளறு ஆயிற்றே. (2)

14.  

ஓடுவார் விழுவார்*  உகந்து ஆலிப்பார்*

நாடுவார் நம்பிரான்*  எங்குத்தான் என்பார்*

பாடுவார்களும்* பல்பறை கொட்ட நின்று*

ஆடுவார்களும்* ஆயிற்று ஆய்ப்பாடியே

15.  

பேணிச் சீர் உடைப்*  பிள்ளை பிறந்தினில்*

காணத் தாம் புகுவார்*  புக்குப் போதுவார்*

ஆண் ஒப்பார்*  இவன் நேர் இல்லை காண்*  திரு-

வோணத்தான்*  உலகு ஆளும் என்பார்களே

16.  

உறியை முற்றத்து*  உருட்டி நின்று ஆடுவார்*

நறுநெய் பால் தயிர்*  நன்றாகத் தூவுவார்*

செறி மென் கூந்தல்*  அவிழத் திளைத்து*  எங்கும்

அறிவு அழிந்தனர்*  ஆய்ப்பாடி ஆயரே

17.  

கொண்ட தாள் உறி*  கோலக் கொடுமழுத்*

தண்டினர்*  பறியோலைச் சயனத்தர்*

விண்ட முல்லை* அரும்பு அன்ன பல்லினர்*

அண்டர் மிண்டிப்*  புகுந்து நெய்யாடினார்

18.  

கையும் காலும் நிமிர்த்துக்*  கடார நீர்*

பைய ஆட்டிப்*  பசுஞ் சிறு மஞ்சளால்*

ஐய நா வழித்தாளுக்கு*  அங்காந்திட*

வையம் ஏழும் கண்டாள்*  பிள்ளை வாயுளே

19.  

வாயுள் வையகம் கண்ட*  மடநல்லார்*

ஆயர் புத்திரன் அல்லன்*  அருந்தெய்வம்*

பாய சீர் உடைப்*  பண்பு உடைப் பாலகன்*

மாயன் என்று*  மகிழ்ந்தனர் மாதரே

20.  

பத்து நாளும் கடந்த*  இரண்டாம் நாள்*

எத் திசையும்*  சயமரம் கோடித்து*

மத்த மா மலை*  தாங்கிய மைந்தனை*

உத்தானம் செய்து*  உகந்தனர் ஆயரே

21.  

கிடக்கில் தொட்டில்*  கிழிய உதைத்திடும்*

எடுத்துக் கொள்ளில்*  மருங்கை இறுத்திடும்*

ஒடுக்கிப் புல்கில்*  உதரத்தே பாய்ந்திடும்*

மிடுக்கு இலாமையால்*  நான் மெலிந்தேன் நங்காய்.

22.  

செந்நெல்லார் வயல் சூழ்*  திருக்கோட்டியூர்*

மன்னு நாரணன்*  நம்பி பிறந்தமை*

மின்னு நூல்*  விட்டுசித்தன் விரித்த*  இப்

பன்னு பாடல் வல்லார்க்கு*  இல்லை பாவமே (2)  

73.  

கொங்கும் குடந்தையும்*  கோட்டியூரும் பேரும்*

எங்கும் திரிந்து*  விளையாடும் என்மகன்*

சங்கம் பிடிக்கும்*  தடக்கைக்குத் தக்க*  நல்

அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா!

அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா.

360.  

நாவகாரியம்சொல்இலாதவர்*  நாள்தொறும்விருந்துஓம்புவார்*

தேவகாரியம்செய்து*  வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர்*

மூவர்காரியமும்திருத்தும்*  முதல்வனைச்சிந்தியாத*  அப்-

பாவகாரிகளைப்படைத்தவன்*  எங்ஙனம்படைத்தான்கொலோ! (2)

361.  

குற்றம்இன்றிக்குணம்பெருக்கிக்*  குருக்களுக்குஅனுகூலராய்*

செற்றம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்த்*

துற்றிஏழ்உலகுஉண்ட*  தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர்*

பெற்றதாயர்வயிற்றினைப்*  பெருநோய்செய்வான்பிறந்தார்களே.

362.  

வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி*  நிழல்எழும்-

திண்ணைசூழ்*  திருக்கோட்டியூர்த்*  திருமாலவன்திருநாமங்கள்*

எண்ணக்கண்டவிரல்களால்*  இறைப்போதும்எண்ணகிலாதுபோய்*

உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக்*  கவளம்உந்துகின்றார்களே.

363.  

உரகமெல்அணையான்கையில்*  உறைசங்கம்போல்மடஅன்னங்கள்*

நிரைகணம்பரந்துஏறும்*  செங்கமலவயற் திருக்கோட்டியூர்*

நரகநாசனைநாவிற் கொண்டுஅழையாத*  மானிடசாதியர்*

பருகுநீரும்உடுக்குங்கூறையும்*  பாவம்செய்தனதாம்கொலோ!   

364.  

ஆமையின்முதுகத்  திடைக்குதிகொண்டு*  தூமலர்சாடிப்போய்த்*

தீமைசெய்து இளவாளைகள்*  விளையாடுநீர்த் திருக்கோட்டியூர்*

நேமிசேர்தடங்கையினானை*  நினைப்புஇலா வலிநெஞ்சுஉடை*

பூமிபாரங்கள்உண்ணும் சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.  

365.  

பூதம்ஐந்தொடு வேள்விஐந்து*  புலன்கள்ஐந்துபொறிகளால்*

ஏதம்ஒன்றும்இலாத*  வண்கையினார்கள் வாழ்திருக்கோட்டியூர்*

நாதனை நரசிங்கனை*  நவின்றுஏத்துவார்கள்உழக்கிய*

பாததூளிபடுதலால்*  இவ்உலகம்பாக்கியம்செய்ததே.

366.  

குருந்தமொன்றொ சித்தானொடும்சென்று*  கூடிஆடிவிழாச்செய்து*

திருந்துநான்மறையோர்*  இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்க்*

கருந்தடமுகில்வண்ணனைக்*  கடைக்கொண்டு கைதொழும்பத்தர்கள்*

இருந்தஊரில்இருக்கும்மானிடர்*  எத்தவங்கள்செய்தார்கொலோ! 

367.  

நளிர்ந்தசீலன்நயாசலன்*  அபிமானதுங்கனை*  நாள்தொறும்-

தெளிந்தசெல்வனைச்*  சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்க்*

குளிர்ந்துஉறைகின்றகோவிந்தன்*  குணம்பாடுவார்உள்ளநாட்டினுள்*

விளைந்ததானியமும் இராக்கதர்*  மீதுகொள்ளகிலார்களே.

368.  

கொம்பின்ஆர்பொழில்வாய்க்*  குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்*

செம்பொன்ஆர்மதில்சூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

நம்பனைநரசிங்கனை*  நவின்றுஏத்துவார்களைக் கண்டக்கால்*

எம்பிரான் தனசின்னங்கள்*  இவர்இவர்என்றுஆசைகள்தீர்வனே .

369.  

காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு*

தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*

கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று*

பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.

370.  

சீதநீர்புடைசூழ்*  செழுங்கழனிஉடைத்திருக்கோட்டியூர்*

ஆதியான்அடியாரையும்*  அடிமையின்றித்திரிவாரையும்*

கோதில்பட்டர்பிரான்*  குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல்*

ஏதம்இன்றிஉரைப்பவர்*  இருடீகேசனுக்குஆளரே (2)

1550.  

தாரேன் பிறர்க்கு*  உன் அருள் என்னிடை வைத்தாய்*

ஆரேன் அதுவே*  பருகிக் களிக்கின்றேன்*

கார் ஏய் கடலே மலையே*  திருக்கோட்டி*

ஊரே உகந்தாயை*  உகந்து அடியேனே*.      

1838.  

எங்கள் எம்இறை எம்பிரான்*  இமையோர்க்கு நாயகன்,*  ஏத்து அடியவர்-

தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*

பொங்கு தண்அருவி புதம்செய்ய*  பொன்களே சிதற இலங்குஒளி,*

செங்கமலம் மலரும்*  திருக்கோட்டியூரானே.   ,

1839.  

எவ்வநோய் தவிர்ப்பான்*  எமக்குஇறை இன்நகைத் துவர்வாய்,*  நிலமகள்–

செவ்வி தோய வல்லான்*  திருமா மகட்குஇனியான்,*

மௌவல் மாலை வண்டுஆடும்*  மல்லிகை மாலையொடும் அணைந்த,*  மாருதம்-

தெய்வம் நாறவரும்*  திருக்கோட்டியூரானே.

1840.  

வெள்ளியான் கரியான்*  மணிநிற வண்ணன் விண்ணவர் தமக்குஇறை,*  எமக்கு-

ஒள்ளியான் உயர்ந்தான்*  உலகுஏழும் உண்டு உமிழ்ந்தான்,*

துள்ளுநீர் மொண்டு கொண்டு*  சாமரைக் கற்றை சந்தனம் உந்தி வந்துஅசை,*

தெள்ளுநீர்ப் புறவில்*  திருக்கோட்டியூரானே.

1841.  

ஏறும் ஏறி இலங்கும்ஒண் மழுப்பற்றும்*  ஈசற்கு இசைந்து,*  உடம்பில் ஓர்-

கூறுதான் கொடுத்தான்*  குலமாமகட்கு இனியான்,*

நாறு செண்பகம் மல்லிகை மலர்புல்கி*  இன்இள வண்டு,*  நல்நறும்-

தேறல்வாய் மடுக்கும்*  திருக்கோட்டியூரானே.

1842.  

வங்க மாகடல் வண்ணன்*  மாமணி வண்ணன் விண்ணவர் கோன்*  மதுமலர்த்

தொங்கல் நீள்முடியான்*  நெடியான் படிகடந்தான்,*

மங்குல் தோய்மணி மாட வெண்கொடி*  மாகம்மீது உயர்ந்துஏறி,*  வான்உயர்-

திங்கள் தான்அணவும்*  திருக்கோட்டியூரானே. 

1843.  

காவலன் இலங்கைக்கு இறைகலங்க*  சரம் செல உய்த்து,*  மற்றுஅவன்-

ஏவலம் தவிர்த்தான்*  என்னை ஆளுடை எம்பிரான்,*

நாவலம் புவிமன்னர் வந்து வணங்க*  மால் உறைகின்றது இங்குஎன,*

தேவர் வந்துஇறைஞ்சும்*  திருக்கோட்டியூரானே.

1844.  

கன்று கொண்டு விளங்கனி எறிந்து*  ஆநிரைக்கு அழிவுஎன்று,*  மாமழை-

நின்று காத்துஉகந்தான்*  நிலமாமகட்கு இனியான்,*

குன்றின் முல்லையின் வாசமும்*  குளிர்மல்லிகை மணமும் அளைந்து,*  இளம்-

தென்றல் வந்துஉலவும்*  திருக்கோட்டியூரானே. 

1845.  

பூங்குருந்து ஒசித்து ஆனைகாய்ந்து*  அரிமாச் செகுத்து,*  அடியேனை ஆள்உகந்து-

ஈங்கு என்னுள் புகுந்தான்*  இமையோர்கள் தம் பெருமான்,*

தூங்கு தண்பலவின்கனி*  தொகுவாழையின் கனியொடு மாங்கனி*

தேங்கு தண்புனல் சூழ்*  திருக்கோட்டியூரானே.

1846.  

கோவைஇன் தமிழ் பாடுவார்*  குடம்ஆடுவார் தட மாமலர்மிசை,*

மேவும் நான்முகனில்*  விளங்கு புரிநூலர்,*

மேவும் நான்மறை வாணர்*  ஐவகை வேள்வி ஆறுஅங்கம் வல்லவர் தொழும்,*

தேவ தேவபிரான்*  திருக்கோட்டியூரானே.   

1847.  

ஆலும்மா வலவன் கலிகன்றி*  மங்கையர் தலைவன்*  அணிபொழில்-

சேல்கள் பாய்கழனித்*  திருக்கோட்டியூரானை,*

நீல மாமுகில் வண்ணனை*  நெடுமாலை இன்தமிழால் நினைந்த,*  இந்-

நாலும் ஆறும் வல்லார்க்கு*  இடம்ஆகும் வான்உலகே.    (2)

1856.  

கம்ப மாகளிறு*  அஞ்சிக் கலங்க,*  ஓர்-

கொம்பு கொண்ட*  குரைகழல் கூத்தனை*

கொம்புஉலாம் பொழில்*  கோட்டியூர்க் கண்டுபோய்*

நம்பனைச் சென்று காண்டும்*  நாவாயுளே. 

2268.  

இன்றா அறிகின்றேன் அல்லேன்*  இரு நிலத்தைச்-

சென்று ஆங்கு அளந்த திருவடியை.*  – அன்று-

கருக்கோட்டியுள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்,*

திருக்கோட்டி எந்தை திறம்.   

2343.  

விண்ணகரம் வெஃகா*  விரிதிரைநீர் வேங்கடம்,*

மண்நகரம் மாமாட வேளுக்கை,* – மண்ணகத்த

தென்குடந்தை*  தேன்ஆர் திருவரங்கம் தென்கோட்டி,*

தன்குடங்கை நீர்ஏற்றான் தாழ்வு.

2415.  

குறிப்பு எனக்குக்*  கோட்டியூர் மேயானைஏத்த*

குறிப்பு எனக்கு நன்மை பயக்க*  வெறுப்பனோ

வேங்கடத்து மேயானை*  மெய்வினைநோய் எய்தாமல்*

தான்கடத்தும் தன்மையான் தாள்.

  —Subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-34; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்,Part 34, திருக்கோஷ்டியூர்

மா ஆனந்தமயி! (Post No.15,783)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,783

Date uploaded in London – 25 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

30-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

மா ஆனந்தமயி! 

ச. நாகராஜன்

பாரதத்தின் சமீப கால வரலாற்றில் தோன்றிய பெரும் ஞானி மா ஆனந்தமயி.

 இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று சகல மதத்தினரைச் சார்ந்தவர்களும் அவரிடம் வந்து ஆசி பெற்றனர்.

நிர்மலா சுந்தரி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட மா ஆனந்தமயி வங்காளத்தில் கேயோரா என்ற ஊரில் 1896ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியன்று பிறந்தார்.

 இளமையிலேயே ஆன்மீக நாட்டம் கொண்ட அவருக்கு அந்தக் கால வழக்கப்படி அவரது பதிமூன்றாம் வயதில் திருமணம் செய்விக்கப்பட்டது. கணவர் போலோநாத் அவரது ஆன்மீகச் சிறப்பை உணர்ந்து கொண்டார். அவரை மா என்றே அழைத்தார்.

1922ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பௌர்ணமி தினத்தன்று நள்ளிரவில் அவருக்கு பெரும் ஆன்மீக உணர்வு ஏற்பட்டது. அவர் உயரிய ஞான நிலையைத் தானே யாருடைய உபதேசமும் இன்றி அடைந்தார்.

 அடுத்த ஐந்து மாதங்களில் அவரது சாதனை உச்ச கட்டத்தை அடைந்தது.

1922 டிசம்பர் முதல் மூன்று ஆண்டுகள் அவர் மௌன விரதத்தை அனுஷ்டித்தார். உணவும் மிகச் சிறிய அளவே அவருக்கு ஊட்டி விடப்பட்டது.

 அவரது ஆன்மீக சக்தி வெளி உலகிற்குத் தெரிய வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பக்தர்கள் கூட்டம் அவரை நாடி வந்தது. வருபவர்களின் உடல் நோயை அவர் தீர்ப்பதைக் கண்ட மக்கள் வியந்தனர்.

 வீட்டை விட்டு வெளியே வந்த அவர் சித்தேஸ்வரி ஆசிரமம் என்று தனி ஆசிரமம் ஒன்றை அமைத்தார். பின்னர் ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார்.

 வாரணாசியில் 1928ம் ஆண்டில் பண்டிதர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றில் அவர் உபயோகித்த சம்ஸ்கிருத வார்த்தைகளும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

 அவரது முத்திரைகளும் ஆசனங்களும் அவரது உடலில் இயல்பாய்த் தோன்றின.

 சுமார் 30 ஆசிரமங்களை அவர் அமைத்தார்.  அவரது புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் அரவிந்த மஹரிஷி, “இது சச்சிதானந்த சொரூபம்” என்றார். 

மகாத்மா காந்திஜி ஜமனாலால் பஜாஜை நேரடியாக ஆனந்தமயி மாவிடம் அனுப்பி தனது ஆசிரமத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அவரும் காந்திஜி ஆசிரமத்திற்கு வந்தார்.

அவரைச் சந்தித்த பரமஹம்ஸ யோகானந்தர் அவரை ஆனந்தமயமான அம்மா என்றார்.

கமலா நேரு அவரது சிறந்த பக்தையானார். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லப்படும் பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர் மீது மிகவும் மரியாதை கொண்டிருந்தார்.

பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அவரது பக்தையாக ஆனார்.

1982ல் மா மறைவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தனது புதல்வர் ராஜீவ் காந்தி, மருமகள் சோனியா காந்தி மற்றும் பேரக் குழந்தைகளுடன் அவர் ஆசிரமம் சென்று அவரை தரிசித்தார்.

 தூரத்தில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆற்றலையும் பிறர் கேட்காமலேயே அவர்கள் மனதில் உள்ள சந்தேகங்களை அறிந்து பதில் சொல்வதும் அவருக்கு இயல்பான சித்தியாக இருந்தது.

வங்காளத்தில் உள்ளவர்கள் அவரை மானுஷ் காளி (வாழ்கின்ற காளி) என்று போற்றி வணங்கினர். மதுரைக்கு அவர் வந்த போது அனைவரும் அவரை மீனாக்ஷி தேவி என்று போற்றி வணங்கினர். பஞ்சாபில் புனிதமான கிரந்த சாஹிபிற்கு அளிக்கும் மரியாதையை அவருக்கு சீக்கியர்கள் அளித்தனர். நர்மதை நதிக்கு அவர் செல்கையில் இதோ நர்மதா தேவி என்று கூவி பக்தர்கள் அவரை வணங்கி ஆசி பெற்றனர். கிறிஸ்தவர்கள் அவரை தரிசித்து ஆசி பெற்றனர்.

 1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் நாளன்று நாராயண ஹரி என்று பலமுறை அவர் கூறியவாறே தனது உடலை உகுத்தார். கிஷன்பூர் ஆசிரமத்திலிருந்து அவரது உடல் ஹரித்வார் அருகே உள்ள கன்கால் ஆசிரமத்திற்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இரவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரை இறுதியாக தரிசித்தனர். கன்காலில் அவரது மஹாசமாதி நிறுவப்பட்டது. பிரதம மந்திரி இந்திராகாந்தி முன்னிலை வகித்தார்.

 அவரது உபதேச உரைகள் எளிமையான வார்த்தைகளில் ஆழமான அர்த்தத்துடன் அமைந்திருக்கும்.

“எப்போதும் உயரிய சிந்தனையைக் கொண்டிருங்கள். புகழையும், இகழையும், சகதியையும், சந்தனத்தையும் ஒன்றாகவே கருதுங்கள். இதயத்தின் உள்ளே இருப்பதைப் பாருங்கள்” என்பது அவரது உபதேசங்களில் ஒன்றாகும்.

***

 Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)- Last Part

Three Hare Krishna Chariots on London Roads

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026. But two great events happened at the same time. And yet I did not hesitate to ……………………………………

Balabhadra, Subhadra, Jagannatha on Three Chariots/ Rathas

Ceremonial cleaning of the rodas for God’s Visit

Hinduja Foundation provide Prasad/ Food Every Year.

–Subham—

Tags- Last Part , London Rath Yatra, Rudra Yaga, Two Great Events, Mitra Seva, ISKCON

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)[- Part 3

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)-3

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026……………………………………

 to be continued……………………

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)[- Part 2

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026. But two great events happened at the same time. And yet I did not hesitate to attend both and take pictures for you. I had to walk over three miles in central London to cover the Rath Yatra by the ISKCON (Hare Krishna Movement). Thousands of people participated in the Rath Yatra . Several thousand more tourists saw the Rath Yatra from cars and buses. At the end of the Rath Yatra several thousand had Tasty Prasad with six mouth watering items. When ISKCON organise an event there is no police seen on the roads. They are so organised and disciplined and there is no work for the police. On the other hand, 6000 police were on the roads last Saturday to maintain peace when Anti Refugee and Pro Palestinian marches were held in London. That is the big difference between the well-disciplined, peace- loving Hindu crowd and others. Men and women danced on the roads to the tune of loud music in spite of the scorching sun.

Maha Rudra Yaga

In the morning Mitra Seva UK organised their annual Maha Rudra Yaga. Every years Siva devotees from Scotland to Southampton participate in it. Over ten priests did the Rudra Homam from the morning till late afternoon. Prasad was distributed to everyone. A dedicated group of volunteers led by M Rajagopalan, Mrs Uma Rajagopalan, Mr Raj Iyer and Mrs Meena Raj, Mr Balasubramanian and Mrs Padma Balasubramanian, Mr Subrahmanyam and Mrs Gayatri Subrahmanyam made the event a grand success.

Priests led by Madurai Chandrasekaran, Chennai Raja Skaran, Devarajan, Agastya Kurukkal conducted the Rudra Homam in the traditional way. Rudram and Chamakam were recited along with Tevaram and other Tamil hymns by them. This annual event is attended regularly by 150 to 200 devotees. Organisers got Nava Dhanya and Nava Samits in plenty which is very rare to see in London.

Please see the pictures which will give you more details.

–Subham—

Tags – Rath Yatra 2026, Maha Rudra 2026, May 24, London Events, Mitra Seva, ISKCON, Hare Krishna

Two Great Events on Same Day in London; 70 Pictures by London Swaminathan (Post No.15,782)

Written by London Swaminathan

Post No. 15,782

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

London was burning with over 30 degree Centigrade on Sunday 24th May 2026. But two great events happened at the same time. And yet I did not hesitate to attend both and take pictures for you. I had to walk over three miles in central London to cover the Rath Yatra by the ISKCON (Hare Krishna Movement). Thousands of people participated in the Rath Yatra . Several thousand more tourists saw the Rath Yatra from cars and buses. At the end of the Rath Yatra several thousand had Tasty Prasad with six mouth watering items. When ISKCON organise an event there is no police seen on the roads. They are so organised and disciplined and there is no work for the police. On the other hand, 6000 police were on the roads last Saturday to maintain peace when Anti Refugee and Pro Palestinian marches were held in London. That is the big difference between the well-disciplined, peace- loving Hindu crowd and others. Men and women danced on the roads to the tune of loud music in spite of the scorching sun.

Maha Rudra Yaga

In the morning Mitra Seva UK organised their annual Maha Rudra Yaga. Every years Siva devotees from Scotland to Southampton participate in it. Over ten priests did the Rudra Homam from the morning till late afternoon. Prasad was distributed to everyone. A dedicated group of volunteers led by M Rajagopalan, Mrs Uma Rajagopalan, Mr Raj Iyer and Mrs Meena Raj, Mr Balasubramanian and Mrs Padma Balasubramanian, Mr Subrahmanyam and Mrs Gayatri Subrahmanyam made the event a grand success.

Priests led by Madurai Chandrasekaran, Chennai Raja Skaran, Devarajan, Agastya Kurukkal conducted the Rudra Homam in the traditional way. Rudram and Chamakam were recited along with Tevaram and other Tamil hymns by them. This annual event is attended regularly by 150 to 200 devotees. Organisers got Nava Dhanya and Nava Samits in plenty which is very rare to see in London.

Please see the pictures which will give you more details.

–Subham—

Tags – Rath Yatra 2026, Maha Rudra 2026, May 24, London Events, Mitra Seva, ISKCON, Hare Krishna, part 1

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-33; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,781)

Written by London Swaminathan

Post No. 15,781

Date uploaded in London –24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

திருவில்லிப்புத்தூர் (ஸ்ரீவில்லிப்புத்தூர்) மூலவர் – வடபத்ரசாயீ (ரங்கமன்னார்) ,புஜங்கசயனம்கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ஆண்டாள் (கோதா நாச்சியார்)

தீர்த்தம் – திருமுக்குளம்.

விமானம் – ஸம்சன விமானம்.

ப்ரத்யக்ஷம் – மண்டூகமணிபெரியாழ்வார்.

விசேஷங்கள் – ஆண்டாளும் பெரியாழ்வாரும் அவதரித்த ஸ்தலம்.

ஆண்டாள் ரெங்கநாதரை மணந்த ஸ்தலம். ரங்கமன்னாருக்கு வலதுபுறம் ஆண்டாளும் இடதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். பெருமாளுடன் கருடாழ்வார் நிற்பது இந்த ஸ்தலத்தின் விசேஷம். பெருமாள் வடபத்ரசாயீயாயிருந்தாலும் ஆதிசேஷன் உண்டு. வழக்கம்போல் பெருமாளின் நாபீகமலத்திலுருந்து ப்ரஹ்மா ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களான வில்லிபுத்தன் என்ற இரு வேடுவ அரசர்களுடனும் உள்ளனர். இவ்வேடுவர்களால் இந்நகரைக் கட்டப்பட்டபடியால் வில்லிப்புத்தூர் என்று பெயர் வந்துள்ளது. பெரியாழ்வார் ஸந்நிதி ஒன்றும்ஆண்டாள் கண்டெடக்கப்பட்ட நந்தவனத்தில் துளசிசெடி பக்கத்தில் ஆண்டாள் ஸந்நிதி ஒன்றும் உள்ளன. ஸ்ரீரங்கத்திற்போல் இங்கும் “அரையர்ஸேவை” உண்டு.

பெரியாழ்வார் நந்தவன கைங்கர்யம் செய்து கொண்டுமாலை பெருமாளுக்கு ஸமர்ப்பித்து வருகையில்ஆண்டாள்ஆழ்வாருக்குத் தெரியாமல் பெருமாளுக்கு ஸமர்பபிக்கும் மாலையை தான் அணிந்து கொண்டு கணணாடியில் அழகு பார்க்கஇதனைக் கண்ட ஆழ்வார் ஆண்டாளை கோபிக்க, ‘ஆண்டாள்‘ சூடிக் கொடுத்த மாலையே தனக்கு உகந்தது என்று பெருமாள் கனவில் சொல்அது முதல் கோதை நாச்சியாருக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் உண்டாயிற்று.

தென்காசி – விருதுநகர் ரயில்பாதையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனிலிருந்த இப்பெரிய ஊர் 1 1/2 மைல் தூரத்திலுள்ளது. பலவிடங்களிலிருந்தும் பஸ்களும் உண்டு. அஹோபில மடம்சத்திரங்கள்ஹோட்டல்கள் வசதிகள் உண்டு. மலைமீது ஸ்ரீநிவாஸர் கோயில்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம் மற்றும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வைணவ கோவில் ஆகும். வரலாறு இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. திருமலைநாயக்கர் மற்றும் இராணிமங்கம்மாள் தங்கள் ஆட்சிகாலத்தில் இவ்வூர் கோயில்களில் பல திருப்பணிகளை செய்துள்ளனர்

தாயார் : ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)

மூலவர் : ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)

மங்களாசாஸனம் –

பெரியாழ்வார் – 133

ஆண்டாள் – 549

ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய பெரியாழ்வார் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூரின் மற்றொரு அதிசயம் ஆடிப்பூரம் அன்று இழுக்கப்படும் அழகியதேர் ஆகும்.

இப்பகுதி மல்லி என்ற அரசியின் ஆட்சியில் இருந்தது. வில்லி காட்டை திருத்தி கோயில் எழுப்பி அழகிய நகரமைத்தான். இதனாலே வில்லிபுத்தூர் எனும் பெயர் பெற்றது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பாசுரங்கள்

1. திருப்பாவை (ஆண்டாள் அருளியது):மார்கழி மாதத்தில் பாவை நோன்பிருந்து, ஆண்டாள் தன் தோழியரை எழுப்பும் விதமாகப் பாடிய 30 பாசுரங்கள்.திருப்பாவை பாசுரங்களை தமிழ் வேதம் தளத்தில் முழுமையாக வாசிக்கலாம்.2. நாச்சியார் திருமொழி (ஆண்டாள் அருளியது):ஆண்டாள் தனது பாசுரங்கள் மூலம் பெருமாள் மீது கொண்ட தூய அன்பை வெளிப்படுத்தும் 143 பாடல்கள்.3. பெரியாழ்வார் திருமொழி (பெரியாழ்வார் அருளியது):பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து, கண்ணனின் சிறு வயது லீலைகளைப் பாடிய 473 பாடல்கள்

மொத்தம் 2 பாசுரங்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும் இது 11 அடுக்குகளைக் கொண்டது;  கோபுரத்தின் உயரம்  192 அடி

புராணம்

ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக சேத்திரம் என்று அழைக்கப்பட்டது. சேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது. அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு வேட்டுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன் புலி ஒன்றை துரத்தி செல்கிறான். அவனை புலி கொன்று விடுகிறது. இதை அறியாத வில்லி தன் தம்பியை தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன் கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையை கூறுகிறார். பின்னர் தாம் இங்கு ‘காலநேமி’ என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும் பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் “வடபத்ரசாயி” என்கிற திருநாமத்துடன் காட்சி அளிக்கபோவதாகவும் கூறி, இந்த காட்டை அழித்து நாடாக்கி தமக்கு கோயில் எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். இதனால் இந்த ஊருக்கு “ஸ்ரீவில்லிப்புத்தூர்” என்று பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகிறது.

ஆண்டாள் எண்ணெய்க்காப்பு


திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில், மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது. நல்லெண்ணெய், பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர். இதில் நாலுபடி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது. மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் உள்ளது

ஆடிப்பூர தேரோட்ட உற்சவம்

18 ஆண்டுகள் ஓடாதிருந்த ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு பழமைவாய்ந்தது. கலைநயமிக்க பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்கு சாரம் அலங்கார பதாகைகளும் அதன் உச்சியில் கும்ப கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு கொடியும், ஒன்பது பெரிய வடமும் அமையப்பெற்றது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும்.

முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும். பாதுகாப்பு கருதி அலங்கார மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு அடிசட்டம்,விசைத்தடையுடன் கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே); ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவில் 12-ஆம் நாள், தேரோட்டம் நடைபெறும். மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டாள் கோயிலில் வருடாந்திர தேர்த் திருவிழா பார்க்க வருவர். 

இலக்கியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர்

பெரியாழ்வார் இயற்றிய “திருப்பல்லாண்டு”, ஆண்டாள் இயற்றிய “திருப்பாவை”, “நாச்சியார் திருமொழி” ஆகியவை தமிழுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் தந்த இலக்கியங்கள். அன்றைய நாளில் இவ்வூர் எப்படி இருந்தது என்பதற்கான குறிப்புகள் ஆண்டாளின் பாசுரங்களில் காணப்படுகின்றன.

பால்கோவா தயாரிப்பு

இவ்வூர் நெசவுத் தொழிலுக்குப் புகழ் பெற்றது.மிகப் பிரபலமான துணி விற்பனை செய்யும் நிறுவம் போத்தீஸ் முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் தான் துவங்கப்பட்டது. அதே போல், பால்கோவா என்ற இனிப்புத் தயாரிப்புக்கும் புகழ் பெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வெளிநாட்டில் வாழும் தமிழர்களாலும் விரும்பி உண்ணப்படும் இனிப்பு ஆகும்.

முக்கிய ஆலயங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில்

திருவண்ணாமலை கோயில்

பெரிய மாரியம்மன் கோயில்(mariamman kovil)

சந்தன மாரியம்மன் கோயில்

செண்பகத்தோப்பின் எழில்மிகு காட்சி

செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ. மேற்கே அமைந்துள்ள ஒரு காட்டு பகுதி. செண்பகத்தோப்பு செல்வது மலையேற்றம் செய்வதை விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஆகும்.. காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவுகளில் காணப்படுகின்றன.. அரிய தாவரங்கள் மற்றும் விலங்கின வகைகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் செண்பகத்தோப்பில் 1989 ஆம் ஆண்டு, 480 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஒரு வனவிலங்கு சரணாலயம் நிறுவப்பட்டது. இந்த சரணாலயத்தின் தென்மேற்குப் பகுதியில் ‘பெரியார் புலிகள் காப்புக்காடுகள் சரணாலயம்’ மற்றும் வடமேற்குப் பகுதியில் ‘மேகமலை காப்புக்காடுகள்’ அமைந்துள்ளன.

இந்த சரணாலயம் அழிந்து வரும் இனமாகிய சாம்பல் நிற அணில்களுக்கு (Grizzled Giant Squirrel, Ratufa macrora)

புகலிடமாகத் திகழ்கிறது.இந்த சாம்பல்நிற அணில் 1 முதல் 1.8 கிலோ எடையுள்ளதாகவும் மற்றும் ஒரு சிறிய பூனை அளவில் இருக்கும். இந்த வகை அணில்கள் அருகருகேயுள்ள மரங்களில் கூட்டை கட்டும்.

. புலி, சிறுத்தை, வரையாடு, புள்ளி மான்கள், மான், கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீலகிரி குரங்குகள், சிங்கவால் குரங்கு, குரங்குகள், தேவாங்கு, வானரம், குரைக்கும் மான், கரடி மற்றும் பறக்கும் அணில் என மற்ற விலங்குகளும் காணப்படுகின்றன. பறவை இனங்கள் 100-க்கும் மேல் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரிய வகை பறவை இனமான ‘இந்திய பெரிய கருப்பு வெள்ளை இருவாயன்’ இங்கே காணப்படுகிறது.

தாலுகாவில் உள்ள அழகர்கோவில் பள்ளத்தாக்கு மற்றும் சதுரகிரியில் உள்ள காடுகளில் காணப்படுகின்றன. 275 மருத்துவ மூலிகைகள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்கிட் மலர் வகைகள் மற்றும் பல்வேறு மலரற்ற தாவரங்கள் இந்த காடுகளில் காணப்படுகின்றன.

மலையைச் சில அருவிகள் உள்ளன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள், குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் இங்கே கூடுகின்றனர். இங்குள்ள காட்டழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது. செண்பகத்தோப்பு மீன்வெட்டிப் பாறை நதி நீர்வீழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுபுறத்தில் பிரபலமானது.

–SUBHAM—

TAGS-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-33; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ,ஆண்டாள் கோவில்

ஹனுமனின் வியப்பு !  துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம் –ஓர் ஆய்வு – 15(Post No.15,780)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,780

Date uploaded in London –   24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹனுமனின் வியப்பு துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்ஓர் ஆய்வு – 15

(ஆர், சேஷாத்ரிநாதன்)

ஹனுமன்  அவர்களுடன் பேசத் தொடங்குகிறார்.

की तुम्ह तीनि देव महँ कोऊ। नर नारायन की तुम्ह दोऊ॥

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥1

को तुम्ह स्यामल गौर सरीरा। छत्री रूप फिरहु बन बीरा ॥

कठिन भूमि कोमल पद गामी। कवन हेतु बिचरहु बन स्वामी॥4॥

பொருள்:

की तुम्ह तीनि देव महँ कोऊ। (கீ தும்ஹ தீனி தேவ மஹம் கோஊ)

பொருள்: நீங்கள் மூன்று முக்கிய தெய்வங்களில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஒருவரா? இந்த வரியில், கவிஞர் (துளசிதாஸ்) இராமரைப் பார்த்து, அவர் திருமூர்த்திகளில் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஒருவராக இருக்கலாமா என்று வினவுகிறார். இது இராமரின் தெய்வீகத் தன்மையை உயர்த்திப் புகழும் ஒரு கேள்வியாக அமைகிறது.

नर नारायन की तुम्ह दोऊ॥ (நர நாராயண கீ தும்ஹ தோஊ)

பொருள்: அல்லது நீங்கள் இருவரும் (ராமர் மற்றும் இலக்ஷ்மணர் ) நர-நாராயணர்களா? இங்கு, ராமர் மற்றும் இலகஷ்மணர் ஆகியோர் நர-நாராயணர்களின் அவதாரங்களாகக் கருதப்படுகிறார்கள்.

की तुम्ह अखिल भुवन पति लीन्ह मनुज अवतार॥ (கீ தும்ஹ அகில புவன பதி லீன்ஹ மனுஜ அவதார்)

 பொருள்: அல்லது நீங்கள் (ராமர்) முழுப் பிரபஞ்சத்தின் இறைவனாக இருந்து மனித அவதாரம் எடுத்தவரா? இந்த வரி இராமரை முழுப் பிரபஞ்சத்தின் அதிபதியாக (விஷ்ணு) குறிப்பிடுகிறது. அவர் தெய்வீக இறைவனாக இருந்தாலும், மனிதர்களுக்கு மத்தியில் மனித உருவில் (மனுஜ அவதாரம்) அவதரித்தவர் என்று புகழ்கிறது. இது ராமரின் மனித உருவில் உள்ள தெய்வீகத் தன்மையை வலியுறுத்துகிறது.

இந்த வரிகள் இராமனையும் இலக்ஷ்மணரையும் தெய்வீக அவதாரங்களாக உயர்த்திப் புகழ்கின்றன. துளசிதாஸ், இராமனைப் பற்றி பேசும்போது, அவர் மூவுலகங்களையும் ஆளும் விஷ்ணுவின் அவதாரமாகவும், இலக்ஷ்மணரையும் நர-நாராயணரின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடுகிறார். இராமன் மனித உருவில் அவதரித்தாலும், அவரது தெய்வீகத் தன்மை மறைந்துவிடவில்லை; அவர் முழு பிரபஞ்சத்தின் இறைவனாகவே இருக்கிறார். இந்த வரிகள் பக்தி மற்றும் ஆன்மீக உணர்வைத் தூண்டி, ராமரின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. 

ஹனுமனுக்கு ஒரு சந்தேகம். இராமாவதார நோக்கத்திற்காக பிரம்மா, தேவர்களில் ஒரு பகுதியினரை குரங்குகளாகவும் கரடிகளாகவும் பிறப்பெடுத்து பூமியில் அந்த முழுமுதற் கடவுளுக்காகக் காத்திருங்கள் அன்று சொன்னாரே அந்த முழுமுதற்கடவுள் இவர்கள்தானா? என்று வியந்து நோக்கிக் கொண்டிருந்தார்.

இராமனிடம் கேள்வி

இராம இலக்ஷ்மணர்களை வணங்கிவிட்டு ஹனுமன் “சுவாமி! மகாவீரர்களான  நரநாராயணர்களே! அழகில் அஸ்வினி குமாரர் போலிருப்பவர்களே! தாங்கள் யார்? கருமேகம் போல நிறமுடைய  தாங்கள் யார்? அதில் பொலிந்திருக்கும்  (லக்ஷ்மி தத்வமாகிற) மின்னல் போல நிறமுள்ள தாங்கள் யார்? ஆயுதங்களைத் தரித்த க்ஷத்ரிய வீரர்களைப் போலவும், ராஜகுமாரர்கள் போலவும்,  ஜடாதரர்களாவும் வனத்தில் சஞ்சாரம் செய்கின்றீர்களே! உங்களுடைய பாதங்கள் மெல்லிய மலராலான பூமியைச் ஸ்பர்சித்ததும் சிவந்து போய் விடுமே? அப்பேர்பட்ட மேன்மையுள்ள மலர்ப் பாதங்கள் கடினமான மலைப்ரதேசங்களில் ஸ்பரிசம் செய்வதைப் பொறுக்க மாட்டாதவையன்றோ?  (தாங்கள் அரண்மனையின் சுகபோகங்கள் அனைத்தையும்  அனுபவிக்கத்தகுந்த இராஜகுமாரர்களாக இருந்தும்) வனத்தில் எதையோ தேடிக்கொண்டு அலைந்து போகிறீர்களோ? தாங்கள் எதை என்ன காரணத்தினால் தேடி அலைகிறீர்கள்? உங்களுக்கு சம்மதமிருப்பின் சுவாமி தயவு செய்து எனக்கு விளக்க வேண்டும். என்றான்.

Hanuman in America

வால்மீகியும் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சொல்லி இருக்கிறார்

ममैवाभिमुखं स्थित्वा पृच्छ त्वं हरिपुङ्गव।

प्रयोजनं प्रवेशस्य वनस्यास्य धनुर्धरौ॥ २६॥

அதாவது சுக்ரீவன் ஹனுமனிடம் வீரர்கள் இருவரும் எந்தக் காரணத்திற்க்காக இந்த வனத்தில் நுழைந்திருக்கின்றனர் என்று கேட்டுத் தெரிந்துகொள் என்று சொல்கிறான். அங்கு தான் ஒரு தூதன் எப்படி நடந்து கொள்ளவேண்டுமோ அப்படி நடந்து கொள்கிறான் ஹனுமன். சந்தித்த உடனேயே நேரடியாக இந்த விஷயத்தைக் கேட்காமல் அவர்களைப் புகழ்ந்து பேசிவிட்டு தங்களுடைய மென்மையான பாதங்கள் இந்தக்  கடின மலைப் பிரதேசங்களில் நடப்பதற்கு ஏற்றவை அல்லவே. அதையும் மீறி நீங்கள் இங்கு நுழைந்துள்ளதால் தங்களுக்கு என்ன பயன்? என்று நளினமாகப் பேசி விஷயத்தைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறான் ஹனுமன்.

.(இங்கு துளசி தாஸர் போடும் பதங்களைக் கவனிக்க வேண்டும். को तुम्ह स्यामल गौर सरीरा  இருவரில் இராமன் பெரியவன் இலக்ஷ்மணன் இளையவன். காரணம் இராமன் முன் செல்கிறான். இலக்ஷ்மணன் இராமனைத் தொடர்கிறான். இராமனின் உடலில் அதிக தேஜஸ் தெரிகிறது. அதனால் முதலில் இராமனை ஸ்யாம (கரிய மின்னல்) இலக்ஷ்மணனை கோர் (பொன்னிறத்தான்) என்று கிரமமாக அழைத்தான். துளசி தாசர் சொன்ன கருத்துக்களைத் தான் வால்மீகியும் சொல்லி இருந்தார்.)

सिंह विप्रेक्षितौ वीरौ महाबल पराक्रमौ |

शक्र चाप निभे चापे गृहीत्वा शत्रु नाशनौ || ४-३-९

उभौ योग्यौ अहम् मन्ये रक्षितुम् पृथिवीम् इमाम् || ४-३-१५

स सागर वनाम् कृत्स्नाम् विन्ध्य मेरु विभूषिताम्

महा प्रमाणौ विपुलौ तप्त हाटक भूषणौ || ४-३-१८

खड्गौ एतौ विराजेते निर्मुक्त भुजगौ इव |

(சிங்கம் போன்ற கூரிய பார்வையைக் கொண்டவர்களாகவும், வீரர்களாகவும், மகா பலசாலிகளாகவும், பராக்கிரமசாலிகளாகவும், இந்திரனின் வில்லைப் போன்ற வில்லை சுமந்திருப்பவர்களாக்வும் தோற்றமளிக்கும் நீங்கள் இந்த தேசத்திற்கு ஏன் வந்தீர்கள்? நான் உங்கள் இருவரையும் மொத்த அகிலத்தையும் காக்கும் தகுதி உள்ளவர்கள் என அறிகிறேன். கடல்கள், வனங்கள், விந்தியம், மேரு {போன்ற மலைகள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மொத்த பூமண்டலத்தையும் ரக்ஷிப்பதற்கு பூமியையும் தகுதியானவர்கள் என்று உங்கள் இருவரையும் நான் கருதுகிறேன். சித்திரமானவையும், வழுவழுப்பானவையும், அற்புதமாகப் பளபளப்பவையுமான இந்த விற்கள் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தைப் போலப் பிரகாசிக்கின்றன.)

(துளசி  தாசர் कठिन भूमि कोमल पद गामी என்ற பதத்தைப் பயன் படுத்தி உள்ளார்.  தங்களுடைய மெல்லிய பாதங்கள் கல்லும், முள்ளும் நிறைந்த இந்த மலைப் பிரதேசத்தில் நடக்க ஏற்றவை அல்ல. அவை மிகவும் நோகும். உரையாசிரியர்கள் இதற்கான விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது இவ்வளவு கடினமான பகுதிகளில் நடந்த பிறகும் தங்களுடைய பாதங்கள் மெல்லியதாக அழகாக இருக்கின்றன. தங்களுடைய பாதங்கள் படும் பூமியும் மிருதுவாக ஆகிவிடுகின்றது.. உண்மையாகவே தாங்கள் யார்? என்று கேட்கிறார் ஹனுமன். அவர்களின் பாதங்களைப் பற்றி துளசிதாசர் அவரின் கீதாவலி என்ற நூலில் அயோத்யா காண்டத்தில் சொல்லி உள்ளார் )

पथिक पयादे जात पङ्कज-से पाय हैं |

मारग कठिन, कुस-कण्टक-निकाय हैं ||

सखी! भूखे-प्यासे, पै चलत चित चाय हैं |

इन्हके सुकृत सुर-सङ्कर सहाय हैं ||

பாதயாத்திரை செய்யும் பயணியின் கால்கள்

தாமரை இதழ் போல மென்மையானவை

ஆனால் பாதை மிகக் கடினமானது –

வெயில், முள்ளு, கல், காட்டு முட்கள் நிறைந்தது

சகியே! பசியோடும் தாகமோடும்

இருந்தாலும் அவர்களது மனம் சோர்ந்து போவதில்லை

ஏனெனில், அவர்களுடைய முற்பிறவி புண்ணியமும்

இறைவனின் (சங்கரனின்) அருளும் துணையாக இருக்கின்றன!

to be continued……………………………………. 

எல்லன் ஓச்சுவா – அதிசயப் பெண்மணி! (Post No.15,779)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,779

Date uploaded in London – 24 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

13-5-26 மங்கையர்மலரில் வெளியான கட்டுரை

எல்லன் ஓச்சுவா – அதிசயப் பெண்மணி!

ச. நாகராஜன்

உலகின் அதிசயப் பெண்மணி என்றும், விண்வெளி வீராங்கனை என்றும் புகழப்படும் எல்லன் ஓச்சுவா உலகப் பெண்மணிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் ஒளி நட்சத்திரம் அல்லது விண் நட்சத்திரம்!

லடினா கேர்ல் என்றும் ஹிஸ்பானிக் உமன் என்றும் அழைக்கப்படுகிறார் இவர். லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களின் வழி வந்தவர் என்பதால் இவர் லடினா பெண்மணி ஆகிறார். ஸ்பெயினை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தின் வழி வந்தவர் என்பதால் ஹிஸ்பானிக் பெண்மணி ஆகிறார் இவர்.

விண்வெளியில் பறக்க ஆசை கொண்ட இவர் பலமுறை நாஸாவிற்கு தனது விண்ணப்பதை அனுப்பினார். மூன்று முறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. விண்வெளிக்கு பெண்மணிகளை அனுப்பும் திட்டமே இல்லை என்றது நாஸா.

ஆனால் இவர் விடவில்லை. நான் ஒரு ஸ்டெம் கேர்ள் என்றார் இவர்.

ஸ்டெம் என்றால் – STEM – Science, Technology, Engineering, Math – –  ஸயின்ஸ், தொழில்நுட்பம், எஞ்ஜினியரிங், மேதமேடிக்ஸ் – பெண்மணி என்றார் இவர்.

1958ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி பிறந்த இவர் 1990ம் ஆண்டு நாஸாவால் விண்வெளி செல்லும் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாண்டியாகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் ஒரு ஆராய்ச்சியாளர்.

1991ம் ஆண்டு ஜூலை மாதம் முதன் முறையாக விண்வெளி சென்றார். கம்ப்யூட்டர் மென்பொருள், ரொபாடிக்ஸ் போன்றவற்றிற்கு விண்வெளிக்கான தொழில்நுட்பத்தில் இவர் பொறுப்பாளராக இருந்தார்.

நான்கு முறை வெற்றிகரமாக விண்வெளிக்குச் சென்ற இவர் மலைக்க வைக்கும் ஆயிரம் மணி நேரங்களை விண்ணில் கழித்தார். மிஷன் ஸ்பெஷலிஸ்ட் என்று போற்றப்பட்டார்.

2007ல் பணி ஓய்வு பெற்ற ஓச்சுவா நாஸாவின் ஜான்ஸன் ஸ்பேஸ் சென்டரில் துணை இயக்குநராகப் பதவி பெற்றார்.  விண்வெளி செல்லும்  வீரர் குழுவினருக்கும் விண்வெளி பயண இயக்கத்திற்குமான பணியகத்தில் இவர் இயக்குநராகவும் ஆனார்.

பத்துக்கும் மேற்பட்ட உயரிய அமெரிக்க விருதுகளைப் பெற்ற பெண்மணி இவர்.

இவர், பெண்மணிகளுக்கு உத்வேகமூட்டும் விதத்தில் நட்சத்திரங்களை அடைய பயப்படாதீர்கள் என்ற பொன்மொழியை உதிர்த்தார்.

பெரிதாகக் கனவு காணுங்கள் என்ற அறைகூவலை விடுத்த இவர் அனைத்துப் பெண்மணிகளும் ஸ்டெம் கேர்ள் ஆக வேண்டும் என்றார்.

பெரிய குறிக்கோளை முன் வைத்து ஒவ்வொரு படியாக முன்னேறுங்கள் என்று கூறும் இவர் பெண்களைப் பார்த்து, “உங்களால் முடியும்” என்று அடித்துச் சொல்கிறார்.

எதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள் என்பது தான் இவர் தரும் விசேஷ உத்தியாகும்.

இவர் புகழ் இன்னும் பெருகிக் கொண்டே போகிறது!

**