Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-52; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,861)

Written by London Swaminathan

Post No. 15,861

Date uploaded in London –12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 52

தஞ்சசையாளி நகர்

திருத்தஞ்சை மாமணிக் கோயில்

சோழநாட்டு திருப்பதி

இத் தலத்தில், வெண்ணாற்றங்கரையில் அருகருகே அமைந்துள்ள நீலமேகப் பெருமாள் கோயில்மணிகுன்றப் பெருமாள் கோயில், நரசிம்மப் பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் அடங்கும். இம் மூன்று கோயில்களும் சேர்த்தே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று திருமால் வழிபடப்படுகிறார். மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரே தலமாகவே பாடல் பெற்றுள்ளன. இம்மூன்றும் சுமார் ஒரு மைலுக்கும் குறைவான சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளன. இத்தலத்திற்கு பராசர சேத்ரம், வம்புலாஞ்சோலை, அழகாபுரி, கருடாபுரி, சமீவனம், தஞ்சையாளி நகர் எனப் பல பெயர்களுண்டு.

1. தஞ்சை மாமணிக் கோவில்

மூலவர் – நீலமேகப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – செங்கமலவல்லி.

தீர்த்தம் – அம்ருத தீர்த்தம், கன்னிகாபுஷ்கரிணி, வெண்ணாறு.

விமானம் – சௌந்தர்ய விமானம்.

ப்ரத்யக்ஷம் – பராசரமுனி.

****

2. மணிக்குன்றம்

மூலவர் – மணிக்குன்றப்பெருமாள், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – அம்புஜவல்லி.

தீர்த்தம் – ஸ்ரீ ராம தீர்த்தம்.

விமானம் – மணிக்கூட விமானம்.

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயர்.

****

3. தஞ்சையாளி நகர்

மூலவர் – நரஸிம்மன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – தஞ்சை நாயகி.

தீர்த்தம் – ஸ¨ர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம்.

விமானம் – வேதஸுந்தர விமானம்.

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயர்.

மூன்று கோவில்களிலும் உத்ஸவர் பெயர் ஸ்ரீ மந்நாராயணன்தான்.

****

பகவான் தஞ்ச யானையைப் பிளக்க நரஸிம்மாவதாரம் எடுத்து நகங்களால் குத்தி கிழத்தபோது, தஞ்சகன் வேண்டிக்கொண்டபடி நரஸிம்ம உருவத்தோடு ஸேவை ஸாதிப்பதால் தஞ்சாபுரி அல்லது தஞ்சை என்ற பெயர் உண்டாயிற்று. தஞ்சையைப் பார்த்தபடி விக்ரஹங்கள் அமைந்திருப்பதால், ‘தஞ்சையைக் காத்தருளும் தெய்வம்’ என வழங்கப்படுகிறது.

***

மங்களா சாஸனம் –

திருமங்கையாழ்வார் – 953, 1090, 1576

பூதத்தாழ்வார் – 2251.

நம்மாழ்வார் – 3139.

மொத்தம் 5 பாசுரங்கள்

இத்தலத்தின் சிறப்புகளை திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் 3 பாசுரங்களில் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

“எம்பிராணெந்தை யென்னுடைச் சுற்றம்

எனக்கர சென்னுட்டை வானாள்

அம்பினா லரக்கர் வெருக்கொன நெருக்கி

அவருயிர் செகுந்தவெம் மண்ணல்

வம்புலாஞ்ச் சோலைமாமதில் தஞ்சை

மாமணிக் கோயிலே வணங்கி

நம்பிகான் உய்ய நான் கண்டு கொண்டேன்

நாராயணா வென்னும் நாமம்”

திருமணங்கொள்ளையில் மகாவிஷ்ணுவிடம் திருமந்திர உபதேசம் பெற்ற திருமங்கையாழ்வார் இத்தலத்தை இரண்டாவதாக மங்களாசாசனம் செய்துள்ளார். வீரநரசிம்மர் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.

மூலவர்: நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்

உற்சவர்: நாராயணர்

தாயார்: செங்கமலவல்லி, அம்புஜவல்லி, தஞ்சை நாயகி

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, வெண்ணாறு, ஸ்ரீராம தீர்த்தம், சூர்ய புஷ்கரிணி

தல விருட்சம்: மகிழ மரம்

விமானம்: வேத சுந்தர விமானம், மணிக்கூடம் விமானம்

***

இத்தலத்தை திருமங்கையாழ்வார் 3 பாசுரங்களில் பாடியுள்ளார்.

அவற்றுள் ஒரு பாடல்:

உடம்பு உருவில் மூன்று ஒன்றாய், மூர்த்தி வேறு ஆய்

உலகு உய்ய நின்றானை; அன்று பேய்ச்சி

விடம் பருகு வித்தகனை; கன்று மேய்த்து

விளையாட வல்லானை; வரைமீ கானில்

தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில்

தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை; வையம் காக்கும்

கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன்

கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே

மணிக்குன்றம் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் மணிக்குன்றப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி: அம்புச வல்லி. தீர்த்தம்: ஸ்ரீராம தீர்த்தம்.

இக்கோயிலின் விமானம் மணிக்கூட விமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.

 இத்தலத்தை நம்மாழ்வார் பாடியுள்ளார்.

#தஞ்சையாளி நகர் கோயிலின் இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் ஸ்ரீவீரசிங்கப்பெருமாள், நரசிம்மன் என அழைக்கப்படுகிறார். இறைவி:தஞ்சை நாயகி தீர்த்தம் சூர்ய புஷ்கரணி. இக்கோயிலின் விமானம் வேதசுந்தரவிமானம் எனும் வகையைச் சேர்ந்தது. இருந்த திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம். இத்தலத்தை பூதத்தாழ்வார் ஒரு பாசுரத்தில் பாடியுள்ளார்.

*சிறப்புகள்:

நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரசிங்கப்பெருமாள் இம்மூவரும் முறையே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியின் மயக்கிற்பட்டு இவ்விடத்திலிருந்து பக்தர்களுக்கு அருளுவதாகவும் மரபு. இம்மூன்று தலங்களும் முன்காலத்தில் தஞ்சை நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்தது. நீலமேகப் பெருமாள் மணிமுத்தா நதியருகேயும், மணிக்குன்றப் பெருமாள் தஞ்சையருகேயுள்ள களிமேட்டுப் பகுதியிலும், நரசிங்கப் பெருமாள் சீனிவாசபுரம் செவப்ப நாயக்கர் குளமருகில் உள்ள சிங்கப்பெருமாள் குளத்தருகேயும் இருந்தது. பிற்காலத்து நாயக்க மன்னர்களால் தஞ்சையிலிருந்து பெயர்க்கப்பட்டு இப்போது உள்ளவாறு அமைக்கப்பட்டது.

புராணம்:

பராசரர் எனும் மகரிஷி பாற்கடலில் கிடைத்த அமிர்தத்தை, மணிமுக்தா நதியில் இட்டு அதன் கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார்.

அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் எனும் மூன்று கொடிய அசுரர்கள் பராசரையும், அவருடன் தவம் செய்து வந்த முனிவர்களையும் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களிடம் அசுர குணங்களை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். அவர்களோ கேட்பதாக இல்லை.

எனவே அசுரர்களை அழிக்கும்படி சிவனிடம் வேண்டினார் பராசரர். சிவன் மாயா சக்தியாக காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்திருந்த தீர்த்தத்தை பருகி மீண்டும், மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர். கலக்கமடைந்த பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்.

மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்க சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து வீழ்த்தினார். அவனை கொல்வதற்காக தன் மடியில் கிடத்தினார். மகாவிஷ்ணுவின் திருமேனியில் கிடத்தப்பட்டவுடன் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப்பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், “எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும். எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்” என கேட்டான்.

அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் “தஞ்சமாபுரி” எனப்பட்டது. தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்ய அருளினார்.

மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நிலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். இவர் மூன்று திருநாமங்களில் தனித்தனி கோயில்களில் இத்தலத்தில் அருள்புரிகிறார்.

***

திருத்தஞ்சை மாமணிக் கோயில்

கும்பகோணம் தஞ்சாவூர் பஸ்ஸில் வரும்போது தஞ்சை ஊர் எல்லையில் வெண்ணாற்றங்கரையில் இறங்கிக் கொள்ளலாம். தஞ்சையிலிருந்தும் டவுன் பஸ்ஸில் வரலாம். மூன்று கோவில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாகப் பாடல் பெற்றுள்ளன மூன்றும் அருகருகே 1 பர்லாங் தூரத்துக்குள் உள்ளன. தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து 2 1/2 மைல் தூரத்தில் வெண்ணாற்றங்கரையில் உள்ளன

****

நவநீத சேவை:

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

திருவிழாக்கள்:

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மூன்று பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.

***

மூன்று கோவில்கள் பற்றிய கூடுதல் விவரங்கள்

1*தஞ்சாவூர் வீரநரசிம்மப் பெருமாள் கோயில்:

இக்கோயிலை மேல நரசிங்கப்பெருமாள் என்றும் அழைப்பர்.

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலுக்கான வளைவைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் வீரநரசிம்மப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் ரங்கநாதர், வரதராஜர், விஷ்வக்சேனர், பெரிய நம்பிகள், ஆளவந்தார், ராமானுஜர், மணவாள முனிகள் ஆகியோர் உள்ளனர்.

திருச்சுற்றில் தஞ்சைநாயகி சன்னதியும், ஆண்டாள் சன்னதியும், திருமங்கையாழ்வார் சன்னதியும் உள்ளன. இந்த கோயில் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்தது.

2. மணிக்குன்றப் பெருமாள்:

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் கருடாழ்வாரும், இடப்புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் மணிகுன்றப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் விருத்தசேனம், உடையார், நம்மாழ்வார் ஆகியோர் உள்ளனர்.மூலவர் சன்னதிக்கு வலப்புறம் வெளியில் அம்புஜவல்லித்தாயார் சன்னதி உள்ளது.

3.நீலமேகப் பெருமாள்:

கோயிலுக்கான நுழைவாயில் சிறிய ராஜகோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடன் சன்னதி உள்ளது.

முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் நீலமேகப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் வராகப்பெருமாள், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் ஆகியோர் உள்ளனர். மூலவர் சன்னதியின் வலப்புறம் தாயார் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் வலப்புறம் லட்சுமி ஹயக்ரீவர் சன்னதியும், இடப்புறம் ஆழ்வார், ஆச்சார்யார்கள் சன்னதியும் உள்ளன. இச்சன்னதியில் ஆழ்வார்கள், தேசிகன், ராமானுஜர் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.

***

பஞ்ச நரசிம்மர் அருள்:

சிங்கப் பெருமாள் கோவிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சந்நிதி தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என்று இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் உள்ளனர்.

வீரநரசிம்மர் கோவில் சக்கரத்தில் பெருமாளே சக்கரத்தாழ்வாராக அருள்பாலிக்கிறார். சக்கரத்தாழ்வார், வலப்புறத்தில் உள்ள யானையின் (தஞ்சகன்) மீது ஒரு கை வைத்தபடி உள்ளார். இவரது பின்புறத்தில் உள்ள யோக நரசிம்மர் அருகே இரண்யகசிபு மற்றும் பிரகலாதன் உள்ளனர்.

நீலமேகப் பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள நரசிம்மரின் வலப்புறத்தில் மகாலட்சுமி அமர்ந்துள்ளதால், இந்த நரசிம்மர், ‘வலவந்தை நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார்.

To be continued……….

Tags – Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-52; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் ,Part 52, தஞ்சசையாளி நகர் ,திருத்தஞ்சை மாமணிக் கோயில்

அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன்! கிஷ்கிந்தா காண்டம்-ஓர் ஆய்வு–18 (Post.15,860)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,860

Date uploaded in London –   12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ஆர், சேஷாத்ரிநாதன்)

அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன்

प्रभु पहिचानि परेउ गहि चरना। सो सुख उमा जाइ नहिं बरना॥

पुलकित तन मुख आव न बचना। देखत रुचिर बेष कै रचना॥3

பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டார்.. உடனே  அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு  சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினார். பக்தரான ஆஞ்சநேயர் தன்னை ஆளும் தலைவனைக் கண்டு கொண்ட அந்தக் காட்சி பார்வதிக்குக் கதை சொல்லிவந்த சிவபெருமான் புளகாங்கிதம் அடைந்து பார்வதியிடம் சொல்கிறார் “பார்வதி! அந்த சுகத்தை வர்ணிக்க முடியாது.. உடல் புளகாங்கிதம் அடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாத நிலை. அவர் பகவானின் அழகிய வேடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்”

பாகவதத்தில் சொல்லியபடி

न वै जनो जातु कथञ्चनाव्रजेत्

मुकुन्दसेव्यन्यवदङ्ग संसृतिम् ।

स्मरन्मुकुन्दाङ्‌घ्र्युरपगूहनं पुनः

विहातुमिच्छेन्न रसग्रहो जनः ॥ १९ ॥

முகுந்தனை (விஷ்ணுவை) ஒருமுறை சேவித்தவன்,

அவனைத் தவிர்த்து வேறு வழியில் சஞ்சரிக்க விரும்பமாட்டான்.

அவன் திருவடிகளை நினைத்தவுடன்,

அவனிடமிருந்து விலக விரும்பாதான்,

ஏனெனில் அவன் உண்மையான ரஸத்தை (பரம ஆனந்தத்தை) அனுபவித்துவிட்டான்.

இந்த ஸ்லோகம் பக்தியின் உச்ச நிலையை சித்தரிக்கிறது:- முகுந்தன் என்பது விஷ்ணுவின் முக்தி தரும் வடிவம்.- ஒருவர் முகுந்தனை உண்மையாக சேவித்துவிட்டால்,அவர் சம்சாரம் (பிறவிப் பந்தம்) போன்ற மாயை வழிகளை மீண்டும் நாடமாட்டார்.- முகுந்தனின் திருவடிகளை நினைத்தவுடன்,அந்த பரம ஆனந்தம் அவரை மீண்டும் வேறு எதற்கும் செல்ல முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.- இது ரஸானுபவம் – பக்தியின் அமிர்தம்.

– “रसग्रहो जनः – உண்மையான ரஸம் (ஆனந்தம்) பெற்றவன், மாயை, சம்சாரம், வேறு தேவைகள் அனைத்தையும் விட்டு விடுகிறான்.- இது பக்தி யோகத்தின் உச்ச நிலை –அனுபவம், நினைவு, மற்றும் அழிவில்லா ஈர்ப்பு.

முகுந்தன் திருவடி நினைத்தவுடன்,

மாயையின் வலை கிழிந்ததடி!

சஞ்சாரம் எனும் சுழற்சி நின்றது,

சதாசிவம் போல ஆனந்தமடி!

—-

ஒருமுறை முகுந்தனைச் சேவித்தால்,

மீண்டும் பிறவிக்கு இடமில்லை!

திருவடியில் விழும் என் மனம்,

திரும்பிப் போகும் வழியில்லை!

अतिसय प्रबल देव तव माया।

छूटइ राम करहु जौं दाया।।

பகவானை அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். எப்படி கண்டு கொண்டான்? இரண்டுவிதமாக ஒன்று அசரீர் குரல்

कस्यप अदिति महातप कीन्हा। तिन्ह कहुँ मैं पूरब बर दीन्हा॥

ते दसरथ कौसल्या रूपा। कोसलपुरीं प्रगट नर भूपा॥2

இராவணனின் கொடுமையால் தேவர்களும் பூமாதேவியும் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் “கவலையை விடுங்கள்.  முனிவர் காஷ்யபரும் அவரது மனைவியும் நான் அவர்கட்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்துள்ளனர். அவர்கள் தசரதராகவும் கோசலையாகவும் பிறந்து மனிதர்களாக கோசல நாட்டில் உள்ளனர். அவர்கள் மகனாக நான் அவதாரம் எடுப்பேன்” என்று சொன்னார்.  தற்பொழுது ஹனுமனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘நான் கோசலை அரசன் தசரதனின் மகன்’ என்று சொன்னார். இரண்டையும் இணைத்து வந்திருப்பவன் பகவான் மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். இது போக நாரதரும் இராமனுக்கு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று  ஒரு சாபம் கொடுக்கிறார் அது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. அதனால் பூமிக்கு நன்மையே விளைந்தது.

நாரதர் இராமனுக்கு சாபம் இட்டார் என்ற கருத்து, அத்யாத்ம ராமாயணம் மற்றும் சிவபுராணம் போன்ற தத்துவ ரீதியான புராணங்களின் ஒரு ஆழமான விளக்கம் ஆகும். இது இறைவன் ஏன் மனிதராக அவதரிக்க வேண்டியது ஏற்பட்டது என்பதை விளக்கும் ஒரு கதை.

 கதைச் சூழ்நிலை:

ஒரு முறை, சிவபெருமான் பார்வதிக்கு இராமரின் அவதார ரகசியத்தை விளக்குகிறார். பார்வதி கேட்கிறாள்: “ராமர் ஜய-விஜயன் சாபத்தால் அவதரித்தாரா?”சிவபெருமான் பதிலளிக்கிறார்: “இல்லை, நாரதரின் சாபத்தினால்தான் திருமால் ராமராக அவதரித்தார்”.

சாபக் கதை:

நாரதர், ஒரு சமயம் தபசில் ஈடுபட்டிருந்தார். தபசின் முடிவில், அவர் மனதில் ஒரு சிறிய அகந்தை கொண்டார்: “நான் காமத்தை வென்றவன்!”

அதைக் கண்டு விஷ்ணு, அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

அவர் மாயையால் உருவாக்கினார் — ஒரு அழகிய ராஜகுமாரி, ஒரு மன்னன், ஒரு திருமண சூழ்நிலை.

நாரதர், அந்த ராஜகுமாரியை விரும்பி, திருமணத்திற்காக விஷ்ணுவிடம் அழகான முகம் வேண்டினார்..ஆனால் விஷ்ணு, வானர முகம் (குரங்கு முகம்) கொடுத்தார்..

திருமணத்தில், ராஜகுமாரி மற்றொரு அரசனைத் திருமணம் செய்தாள், நாரதர்  உண்மையை உணர்ந்தார். – கோபத்தில், நாரதர் விஷ்ணுவை சபித்தார்:.“நீயும் மனிதராக பிறந்து,மனைவியை இழந்து,வானர உதவியால் தேட வேண்டிய நிலைக்கு வருவாய்!”- இதுவே ராமாவதாரத்தின் தத்துவ ரீதியான காரணம்

இறைவன், சாபத்தின் வழியே தர்மத்தை நிலைநிறுத்த மனிதராக அவதரிக்கிறார்.

 தத்துவ விளக்கம்:

-நாரதரின் சாபம் என்பது மனித வாழ்வின் சோதனைகளை இறைவன் தானே அனுபவிக்க வேண்டும் என்பதற்கான தத்துவ அடிப்படை.

அஹங்காரம், மாயை, விரகி, தர்மம், பக்தி — இவை அனைத்தும் இந்தக் கதையில் பின்னப்பட்டுள்ளன.

இறைவன் கூட மனிதனாக, துன்பம் அனுபவித்து, தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கான புராண ரீதியான விளக்கம்.

बंचेहु मोहि जवनि धरि देहा। सोड़ तनु धरहु

श्राप मम् एहा॥ कापि आकृति तुम्ह कीन्हि हमारी। कारिहहिं कीस सहाय तुम्हारी॥ म्र अपकार कौनह तुम्ह

भारी। नारि बिरह तुम्ह होब दुखारी॥

இங்கு இன்னொரு கதை சொல்லப்படுகிறது. பத்ம இராமாயணம்  என்ற இராமாயணத்தில் இராமனின் இளமைக் கால விளையாட்டுகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் இளம்வயதில் இராமன் குரங்ககுகளுடன் விளையாட ஆசைப்பட்டதாகவும் அதற்காக குரங்குகள் வரவழைக்கப்பட்ட்டதாகவும் ஆனால் இராமனுக்கு அந்த குரங்குகள் பிடிக்காததால் வசிஷ்டர் அஞ்சனையின் மகனான் ஹனுமனைக் கொண்டு வந்ததாகவும். இராமன் ஹனுமனுடன்  விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது. இராமனுக்கு ஐந்து வயதானவுடன் கல்வி கற்கச் சென்றபோது ஹனுமன் மீண்டும் அஞ்சனையிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது.

சில உரையாசிரியர்கள் விஸ்வாமித்திரர் தாடகையின் வாதத்திற்காக இராமனையும் இலக்ஷ்மணனையும் கூட்டிச் சென்றபோது ஹனுமன் அவர்களிடமிருந்து பிரிந்ததாகவும் சொல்லப்படுக்றது. இதனால் ஹனுமனுக்கு இராமனின் அடையாளம் புரிந்தது என்றும் சொல்கிறார்கள்.

 இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது சூரியன் ஹனுமனின் குரு. அவருக்கு வேதங்கள் அனைத்தும் கற்றுத் தந்தவர்,  ஆப்பொழுது அவர் ஹனுமனிடம் “எனது அம்சமாக சுக்ரீவன் பூமியில் வானரனாகத் தோன்றுவான். அவனுக்கு அசம்பாவிதம் உண்டாகும்.. அப்போது நீ அவனுக்குத் துணை நிற்கவேண்டும். இதனால் உனக்கு நல்லது நடக்கக்கூடும். மாகாவிஷ்ணு பூமியில் மனிதனாக அவதாரம் எடுப்பார், அப்போது அவரது மனைவி அபஹரிக்கப்படுவாள்,, அவளைத் தேடிக்கொண்டு அவர் அங்கு வருவார்” என்று சொல்லி இருந்தார். அதனால் இராமனை எளிதில் அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சில உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

**

ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம் அளித்தது! (Post.15,859)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,859

Date uploaded in London – 12 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (62) பரமசிவன் மேகநாதனுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் இருபத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘மது சக்யம்’ என்ற ஸர்க்கமாகும்.

ஒரு நாள் ராவணன் லங்காபுரியில் ஒரு உத்தியானவனத்திற்குச் சென்றான்.

அங்கே ஒரு யாகம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டான். தன் புதல்வன் மேகநாதனே அந்த யாகத்தை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்து,”இது என்ன? சொல்!” என்றான். உடனே யாகத்தை நடத்திக் கொண்டிருந்த அசுர குருவாகிய சுக்ராசாரியர் ராவணனிடன், “நானே சொல்கிறேன். உனது புதல்வனால் ஏழு யாகங்கள் இயற்றப்பட்டன” என்று ஆரம்பித்து விவரங்களைக் கூறுகிறார்.

அக்னிஷ்டோமஸ்வமேதஸ்ச யக்ஞோ பஹுசுவர்ணக: |                  ராஜசூயஸ்ததா யக்ஞோ கோமேதோ வைஷ்ணவஸ்ததா||

மாஹேஸ்வர ப்ரவ்ருத்தே து யக்ஞே பும்பி: சுதுர்லபே |
வராம்ஸ்தே லப்தவாபுத்ர: சாக்ஷாத் பசுபதேரிஹ ||

உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 8&9

அக்னிஷ்டோம: – அக்னிஷ்டோமம் என்ற                               யக்ஞ – யாகமும்                                                அஸ்வமேத: – அஸ்வமேதம் என்ற யாகமும்                                      பஹுசுவர்ணக: –  பஹுசுவர்ணம்                                      யக்ஞ ச – என்ற யாகமும்                                               ராஜசூய: – ராஜசூயம் என்ற யாகமும்                                        ததா – அவ்வண்ணமே                                                       கோமேத: – கோமேதம் என்ற                                              வைஷ்ணவ: – வைஷ்ணவம் என்ற யாகமும்                                            ததா – அவ்விதமே                                                              பும்பி: – மனிதர்களால்                                                             சுதுர்லப: – செய்து முடிக்க கஷ்டமாயுள்ள                                            மாஹேஸ்வர யக்ஞே – மாஹேஸ்வரம் என்ற யாகமும்                             ப்ரவ்ருத்தே – குறையின்றி நடைபெறுகையில்                                        தே – உனது                                                           புத்ர – புதல்வன்                                                                   இஹ து – இவ்வுலகில்                                                                       பசுபதே: – பரமசிவனுடைய                                                 சாக்ஷாத் – பிரத்யக்ஷத்தில்                                                    வரான் – வரங்களை                                                    லப்தவான் – வரங்களைப் பெற்றான்

காமகம் ஸ்யந்தனம் திவ்யம்ந்தாரிக்ஷசரம் த்ருவம் |                  மாயாம் ச தாமஸீம் நாம யயா சம்பத்யதே தம: ||

ஏதயா கில சங்க்ராமே மாயயா ராக்ஷஸேச்வர |                        ப்ரயுக்தயா கதி: ஷக்யா ந ஹி ஞாதும் சுராசுரை: || |

அக்ஷயாவிஷுதீ பாணைச்சாபம் சாபி சுதுர்ஜயம் |                         அஸ்த்ரம் ச பலவத்சௌம்ய சத்ருவித்வம்ஸனம் ரணே ||

ஏதான்ஸர்வான்வரான்லப்த்வா புத்ரஸ்தேயம் தசானன |
அத்ய யக்ஞசமாப்தௌ ச த்வாம் தித் ருக்ஷு: ஸ்திதோஹ்யஹம்

உத்தரகாண்டம் இருபத்தைந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் – 10,11,12,13

தசானன – தசானன                                                 ராக்ஷஸேச்வர – ராக்ஷஸ மன்னா                                          சௌம்ய – அன்பனே                                                    தே – உனது                                                              அயம் – இந்த                                                                  புத்ர – புதல்வன்                                                        ஏதான் – பின்கண்ட                                                          வரான் – வரங்கள்                                                           ஸர்வான் – எல்லாவற்றையும்                                                அத்ய – இப்போது                                                              லப்த்வா – பெற்றான்                                                              திவ்யம் – தேவநிர்மிதமானதும்                                                     காமகம் – இஷ்டப்படியெல்லாம் செல்ல வல்லதும்                                     அந்தரிக்ஷசரம் – ஆகாயமார்க்கத்தில் செல்ல வல்லதும்                        த்ருவம் – என்றும் அழியாததுமான                                    ஸ்யந்தனம் – ஒரு தேரையும்                                              யயா – எந்த ஒன்றால்                                                           தம: – பிரத்யக்ஷத்திலும் கண்களால்                                      சம்பத்யதே – உண்டாகிறதோ                                       சங்க்ராமே – போரில்                                             ப்ரயுக்தயா – பிரயோகிக்கப்பட்ட                                        ஏதயா – இந்த                                                                   மாயயா – மாயையால்                                                              சுராசுரைபி: – தேவர்களாலும் அசுரர்களாலும் கூட                                         யதி: – இருக்குமிடம்                                                           ஞாதும் – கண்டுகொள்ள                                                          கில ஹி – எப்படியும்                                                         ந ஷக்யா – முடியாதோ அந்த                                             தாமஸீம் – தாமஸி                                                     நாம – என்கிற                                                             மாயாம் ச – மாயையையும்                                              அக்ஷயௌ – அக்ஷயமான                                                       இஷுதீ ச – அம்பராத்துணிகள் இரண்டையும்                                பாணை: – பாணங்களால்                                                   சுதுர்ஜயம் – வெல்வதற்கரிய                                               சாபம் ச – தனுசையும்                                                  ரணே – போரில்                                                               சத்ரு வித்வத்வம்ஸனம் – எதிரிகளை ஹதம் செய்யும்                                பலவத – எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாகிய                                     அஸ்த்ரம் ச – ஒரு அஸ்திரத்தையும் பெற்றான்                            யக்ஞ சமாப்தௌ – யாக முடிவில்                                    த்வாம் – உன்னை                                                தித்ருக்ஷு: – காண                                                    அஹம் ஹி – நானும்                                                               ஸ்தித: – இருந்தேன்

இப்படியாக சுக்ராசாரியார் ராவணனிடம் அவன் புத்திரனாகிய மேகநாதன் பரமசிவனிடமிருந்து வரங்கள் பெற்றதைக் கூறினார்.

யாகங்களை இயற்றி பெறப்பட்ட இந்த வரங்களை வால்மீகி விவரமாக இப்படி எடுத்துரைக்கிறார்.

**

You can also become an Elephant Man! (Post No.15,858)

Written by London Swaminathan

Post No. 15,858

Date uploaded in London –11 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Following news items are from my paper cuttings file:

1

Elephants nearly cost alexander his empire, Hannibal managed to cross the alps with a herd of elephants; they helped Tarzan out of a few tight corners. now there is a training course available for anyone to become a mahout- elephant man. Tourists can train to become mahouts in Anantara resort in northern Thailand through the neighbouring Golden Triangle Asian Elephant Foundation.

The Golden Triangle Asian Elephant Foundation (GTAEF) is a non-profit NGO based in Chiang Rai, Thailand. Established in 2005 by the Minor Group, it provides a safe haven for rescued captive elephants and their mahouts, while also supporting wild elephant conservation programs.

 GTAEF takes in elephants from dangerous urban environments (like Bangkok streets) where they face abuse and lack proper care. It supports both the animal and its mahout (handler) by providing food, lodging, and medical care.

The foundation aims to employ mahouts in ethical, sustainable roles so they do not have to resort to illegal logging or begging. It also provides English lessons and educational support for their children.

Beyond captive elephants, GTAEF funds field research, supports local community ranger teams, and protects wild elephant corridors.

The foundation is located at the confluence of the Thailand, Myanmar, and Laos borders, and operates in close partnership with luxury eco-tourism resorts.

***

2 Elephant Memory

Elephants are renowned for their long memories, so it is not probably a good idea to make an enemy of one. Scientists in Africa have made the alarming claim that the mammals can store up grievances and wreaking their revenge – even on humans.

And evidence is now emerging that Elephants can pass these grievances down from mother to calf- ensuring their anti-human vendettas carry on for generations.

The discovery has been charted by Kenya based expert Joyce Poole. He claims disputes between elephants and humans are becoming increasingly common as the two growing populations are battling for land. There are more reports of elephants trampling African villages apparently without any cause or motivation.

Mr Poole who is research director at the Amboseli elephant project in Kenya, says the distrust of humans probably dates back to the age of poaching in the 1970s and 1980s. this has created a generation of teenage delinquent elephants bent on taking out their grievances on humans.

Mr Poole told new scientist magazine “they are certainly intelligent enough and have good enough memories to take revenge.

Wildlife managers may feel it is easier just to shoot so called problem elephants; but they could be stimulating a cycle of violence “.

Metro newspaper 16-2-2006

***

3 Soccer

Elephants play soccer matches in Thailand. Ayuththaya (named after Rama’s Ayodhya) province is 50 miles north of Bangkok, capital city of Thailand. There soccer /football matches are organised to campaign against gambling on the world cup.

***

Petulant Pachyderms

A student nurse was killed when a bull elephant went berserk at a show at an animal park in Thailand in 2000. Briton Andrea Taylor , 20, was sitting in the front row at the Nong Nooch Tropical Garden when one of the animals charged at her.

Maxi, the elephant found a novel way of child control in august 2005. At a zoo in Zurich , maxi enjoyed flicking his helpless son through the air with his tusks. –Metro newspaper 16-2-2006 

–subham— 

Tags – elephants, revenge, memory, foot ball, titbits, mahout.

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-51; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,857)

Written by London Swaminathan

Post No. 15,857

Date uploaded in London –11 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மதுரை கூடல் அழகர் கோயில்

அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அஷ்டாங்க விமானத்துடன், மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது இது ;  பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழ்கிறது.

வேறு பெயர்கள்–    இருந்தையூர், திருக்கூடல், நியமம், வெள்ளை நகரம், நான்மாடக்கூடல்

தாயார் / அம்மன் பெயர்   மதுரவல்லி நாச்சியார், வரகுண வல்லி, மரகத வல்லி

திருக்குளம் / ஆறு   கிருதமாலா நதி, ஹேமபுஷ்கரிணி

இங்கே பெருமாள் கிழக்குத் திசை நோக்கியவாறு வீற்றிருந்த கோலத்தில்  காட்சியளிக்கிறார். தாயாருக்கு மதுரவல்லி நாச்சியார், வரகுணவல்லி, மரகதவல்லி, என்னும் திருநாமங்கள் உண்டு. இங்குள்ள தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி, கிருதமாலா . பிருகு முனிவர், வல்லபர், பெரியாழ்வார், ஆகியோருக்குக் கூடலழகர் காட்சியளித்துள்ளார்.

.இத்திருக்கோயிலில் பூஜைகள் வைகாணச ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது, இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது அட்டாங்க விமானமாகும்,  நவகிரக சன்னதி அமைந்துள்ள வைணவ திவ்ய தேசமாகும். இத்தலமிருந்த பகுதி  இருந்தையூர் என சங்க காலத்தில் அழைக்கப்பட்ட.து

ஸ்ரீவல்லபதேவன் என்ற பாண்டிய மன்னன் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் ஸ்ரீமந் நாராயணனே பரம் பொருள் என மெய்பித்துக் காட்டிய திருத்தலமாகும்.

திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற திருத்தலம். திவ்ய பிரபந்த பாசுரங்களுள் முதன்மையாக விளங்கும் திருப்பல்லாண்டு பாடப்பெற்ற திருத்தலமாகும்.

சங்ககாலத்தில் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்கு ஆவணி திருவோணத்தில் விழாக்கள் பல செய்து கூடலழகரை வழிபட்டார் .

வைகை நதி இரண்டாகப்பிரிந்து மதுரை நகருக்கு

மாலை போல் ஆயிற்று. ஒரு பிரிவு வையை எனவும் மறு பிரிவு

கிருதமால் எனவும் பெயர் பெற்றது. கிருதமாலா நதியின் கரையில்

இப்பெருமாள் எழுந்தருளினார். ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்பார்கள்; இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும் மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட பாண்டிய மன்னன் ஒருவன் இக்கூடலழகர்பால் மிக்க பக்தி கொண்டு கடும் விரதம் மேற்கொண்டான். அவன் ஒரு நாள் மாலை வேளையில்  சந்தியாவந்தனம் செய்யும்போது அந்த நீரில் பெருமாள் மச்சாவதராமாய் மீனாக எழுந்தருளினார். அவனுக்கு அருள் செய்தார் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது..

சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக இயங்கும் அஷ்டாங்க

விமானங்கொண்ட இத்தலம் மூன்று தளங்களும் 5 சிகரங்களும்

கொண்டு (அஷ்ட அங்கம்) மிக்க எழிலுடன் தோன்றுகிறது.

அஷ்டாங்க விமானத்தின் நிழல் தரையில் விழுவதில்லை.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் நாயக்க மன்னர்களின்

திருப்பணியைத் தெரிவிக்கிறது.

இக்கோவிலின் உட்புறம் சுவர்களில் 108 திவ்ய தேசத்து

எம்பெருமான்கள் அந்தந்த ஸ்தலங்களில் எவ்வித ரூபமாய்

எழுந்தருளியுள்ளரோ அந்த மாதிரியே வர்ண ஓவியங்களால்

தீட்டப்பட்டிருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இங்கு இருக்கும் ஆண்டாள் சன்னதி சிறப்புடையது.

திருவிழாக்கள் வைகாசிப் பெருவிழா, தைலக்காப்பு, பகல் பத்து, இராப்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி, கனு விழா, பங்குனி திருக்கல்யாண உற்சவம்.

அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டாவது நிலையில், சூரிய நாராயணர், தனது தேவியருடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அஷ்டதிக் பாலகர்கள் ஓவிய வடிவில் அருளுகின்றனர். மூன்றாவது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணர், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்களையும் விமானத்தில் தரிசிக்கலாம். மதுரவல்லித்தாயார், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் இங்கு உள்ளன. மதுரை கூடல் அழகர் கோயில் விமானத்தில் இராமாயணம், மகாபாரதம், பாகவதம் தொடர்பான கதைகள் சுதைச் சிற்பங்களாகச் செய்து வைக்கப் பட்டுள்ளன. இதில் இராமர் பட்டாபிடேகம், மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டுள்ளது. இராவண வதைக் காட்சியும், கிருஷ்ணர் வஸ்த்ர அபகரண மூர்த்தியாகக் கோபியரின் ஆடைகளை மரத்தின் மீது எடுத்து வைத்திருக்கும் காட்சியும் அழகாக வண்ணம் தீட்டி வைக்கப் பட்டுள்ளன. ஒரு தளத்தில் இராமாயணக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மற்றொரு தளத்தில் கிருஷ்ண லீலைகள் தொடர்பான சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

–subham—

Tags– Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-51; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், மதுரை கூடல் அழகர் கோயில்

ராமாயணத்தில் வரங்கள் (61) பிரம்மா நிவாதகவசருக்கு  வரம் அளித்தது! (Post.15,856)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,856

Date uploaded in London – 11 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (61) பிரம்மா நிவாதகவசருக்கு  வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் இருபத்துமூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘வருணனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து ராவணனின் பராக்ரமம் பற்றி கூறி வரும் போது பிரம்மா நிவாதகவசருக்கு அளித்த வரம் பற்றிய ஒரு குறிப்பைத் தருகிறார்.

யமனை போருக்கு அழைத்த ராவணன் அவனுடன் யுத்தம் செய்ய யத்தனித்தான். ஆனால் யமன் அவன் எதிரிலிருந்து மறைந்து போகிறார். ராவணன் அவரைத் தோற்கடித்து வீட்டதாக தனது பெயரை பிரபலப் படுத்தினான். பின்னர் ரஸாதலம் என்ற பாதாள லோகத்திற்குச் சென்றான்.

மஹா சமுத்திரத்தினுள் புகுந்தான். மணிமயம் என்ற பட்டணத்திற்கு அவன் சென்று சேர்ந்தான்.

அதில் இருந்த நிவாதகவசர்கள் என்ற தைத்யர்கள் வரப்ரஸாதம் பெற்றவர்கள்.

அவர்களை ராவணன் போருக்கு அழைக்க போர் மூண்டது. ஒரு வருட காலம் போர் தொடர்ந்தது. வெற்றியோ தோல்வியோ கிட்டவில்லை. அப்போது அங்கு பிரம்மா வந்து சேர்ந்தார். அவர் நிவாதகவசர்களின் போரைத் தடுத்து நிறுத்தி, “போரில் ராவணனை ஜயிக்க முடியாது. அவனுடன் ஒற்றுமையாக இருத்தலே நல்லது” என்றார்.

அதன்படி அக்னி சாக்ஷியாக நிவாதவசர்கள் ராவணனுடன் ஒற்றுமை உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.

இங்கு நிவாதகவசர்கள் பற்றிய குறிப்பை வால்மீகி ராமாயணத்தில் இப்படி காண்கிறோம்:

நிவாதகவசாஸ்தத்ர தைத்யா லப்தவராவசன் |

உத்தரகாண்டம் இருபத்துமூன்றாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 6

தத்ர – அங்கு                                                      லப்தவரா: – வரப்பிரஸாதம் பெற்ற                                நிவாதகவச: – நிவாதகவசர்கள் என்ற                                      தைத்யா: – தைத்யர்கள்                                              அவஸன் – வாஸம் செய்து கொண்டிருந்தார்கள்

இங்கு நிவாதகவசர்கள் வரம் பெற்றவர்கள் என்பதை அறிகிறோம். இவர்கள் பிரம்மாவிடம் வரம் பெற்றவர்கள் என்பதை அறிந்தாலும், பிரம்மா எப்போது எதற்காக இவர்களுக்கு வரம் கொடுத்தார் என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

**

Manu, Valmiki Ramayana slokas and Seven Births: Tirukkural Encyclopaedia- Chapter 11 (Kural 106-110) Post.15,855

Written by London Swaminathan

Post No. 15,855

Date uploaded in London –10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 22

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS, Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

****

Chapter XXXIV: Lakshman’s Speech

Lakshmana’s outburst in Kishkinda Kanda against Sugriva

For draughts of wine for slaughtered cows,
For treacherous theft, for broken vows
A pardon is ordained: but none
For thankless scorn of service done.’
Ungrateful, Vanar King, art thou,
And faithless to thy plighted vow.
For Rama brought thee help, and yet
Thou shunnest to repay the debt:- Kishkinda Kanda, Valmiki Ramayana

***

बालघ्नांश्च कृतघ्नांश्च विशुद्धानपि धर्मतः ।
शरणागतहन्तॄंश्च स्त्रीहन्तॄंश्च न संवसेत् ॥ Manu १९० ॥

bālaghnāṃśca kṛtaghnāṃśca viśuddhānapi dharmataḥ |
śaraṇāgatahantṝṃśca strīhantṝṃśca na saṃvaset ||Manu 11- 190 ||

One shall not associate with murderers of children, ungrateful men, murderers of a refugee, and murderers of women,—even though they may have been duly purified.—(Manu Smriti 11-190)

***

Valmiki Ramayana , Pancha Tantra and Purananuru 34 said the same thing about ingratitude. Rama considered it as a great sin. Pura nanuru verse listed grave crimes like killing a cow, Killing a Brahmin and raping a woman and said graver is the crime of ingratitude.

***

Tiru Valluvar did not hesitate to show his belief in REBIRTH; he is talking abot SEVEN BIRTHS in Kural107.

The concept of Seven births encompasses the belief that an individual’s sins accumulate over multiple lifetimes, impacting their spiritual journey. This idea suggests that rituals and worship at various deities can cleanse these sins, offering liberation from past life afflictions. In addition, it signifies a continuous cycle of rebirth where devoted worshipers receive benefits such as health and prosperity. The notion of Seven births, therefore, ties together themes of karma, reincarnation, and spiritual growth across different cultural perspectives.

Tiru Valluvar is a Pukka Hindu who mentioned Seven Births in four Kurals.

Ezumai in two couplets, Ezu Pirappu in two more couplets.

Seven Stages in Births from Tiru Mular and Siddhas: PLANTS; WATER LIVING FISH AND ANIMALS; REPTILES;BIRDS; ANIMALS ON LAND;HUMAN BEINGS;SAINTS AND DEVAS.

எழுவகை உயிரினங்கள்:

1.     தாவரங்கள்: மரம், செடி, கொடி, புல் போன்ற அசையும் தன்மையற்றவை.

2.     நீர்வாழ் உயிரிகள்: மீன், முதலை, ஆமை போன்ற நீரில் வாழும் உயிரினங்கள்.

3.     ஊர்வன: பாம்பு, பல்லி, நத்தை போன்ற தரையில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்.

4.     பறப்பவை: வானில் பறக்கும் அனைத்து வகையான பறவைகள்.

5.     விலங்குகள்: கால்நடைகள் மற்றும் காட்டு விலங்குகள்.

6.     மனிதர்கள்: பகுத்தறிவு மற்றும் சிந்தனை ஆற்றல் பெற்ற உயிரினங்கள்.

7.     தேவர்கள் / முனிவர்கள்: உயர்ந்த நற்குணங்கள் மற்றும் தெய்வீக ஆற்றல் கொண்டவர்கள்.

***

Chapter 11. செய்நன்றி அறிதல் – Gratitude

106.Seek the fellowship of holy ones, forsake not those who have cling to you in the days of your affliction— A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933

***

106.Do not forget the kinship of pure souls;

And do no forsake the friends who have helped in need— S M Diaz, I G of Police- SMD Year 2000

***

106.
Kindness of men of stainless soul remember evermore!
Forsake thou never friends who were thy stay in sorrow sore!
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.–
 Rev.Dr.GU Pope – GUP. Year 1886

***

106.Forget not friendship of the pure
Forsake not timely helpers sure– Suddhananda Bharathiyar- SB

***

106.Forget not the friendship of the pure hearted; forsake not the friends who rendered help at times of distress— EVS Publishers, Singapore- EVS, Year 1986

***

106.Those who in trouble helped you, never forsake;

And never forget the friendship of the pure— HAP (not full book) Year 1931

***

106. மறவற்க மாசற்றார் கேண்மை: துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

107.Through all their wanderings from birth to birth do the wise carry the sacred memory of those who have wiped out their sorrows on earth— ANM+2

***

107. Throughout the seven births, the wise ones will remember

Those who have , at some time, wiped their tears— S M Diaz

***
107.
Through all seven worlds, in seven-fold birth, Remains in mem’ry of the wise.
Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
(The wise) will remember throughout their seven-fold births the love of those who have wiped away their affliction.– GUP

***

107.Through sevenfold births, in memory fares
The willing friend who wiped one’s tears. – SB       

***

107.The noble minded will remember for all time the  friendship of those who saved them from affliction—— EVS

***

107- HAP did not translate this Kural

***

107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு

XXXXXXXXXXXXXXXXXXXXXXX

108.It is good to chase away at once the ranking thought of an injury received, but to forget an act of kindness is ignoble- ANM+2

***

108.To forget a good deed is ‘ just not done’; whereas

All ill-turn is best forgotten then and there— S M Diaz

***
108.
‘Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, ’tis good to rid thy memory that very day.
It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).– GUP

***

108.To forget good turns is not good
Good it is over wrong not to brood. – SB       

***

108.Forget not the good turn done to you; but it is proper that you should forget forthwith the wrong done to you-— EVS

***

108.Ever to forget a kind deed done is bad;

But to forget an ill at once is good- HAP

***
108. நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

XXXXXXXXXXXXXXXXXXXX

109.The sting of the deadliest harm done is gone when the soul lovingly recollects one former act of grace of the miscreant— ANM+2

***

109.Even a deadly hurt is soon effaced,

If one recollects a past good turn— S M Diaz

***
109.
Effaced straightway is deadliest injury,
By thought of one kind act in days gone by.
Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred.– GUP

***

109.Let deadly harms be forgotten
While remembering one good-turn.  – SB      

***

109.The wrong done by a man, however grave they may be, will be forgotten when the one good turn done by him is remembered—— EVS

***

109-HAP did not translate this Kural.

***
109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

110.There is still hope left for men guilty of every other crime but the ungrateful are past redemption- ANM+2

***

110.There may be salvation for  those who have killed all other virtues,

But not for the one who has killed gratitude— S M Diaz

***

110.
Who every good have killed, may yet destruction flee;
Who ‘benefit’ has killed, that man shall ne’er ‘scape free!
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.– GUP
***

110.The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.   – SB     

***

110.There may be forgiveness for any sin but not for ingratitude—— EVS

***

110.For him who has killed all good, escape may be;

But none for him who has killed a kindness done—HAP

***

110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

To be continued….

Tags- Gratitude, Tirukkural, Part 22, Kural 106-110, Valmiki Ramayana, Manu Tirukkural Encyclopaedia- Chapter 11

Bhagavad Gita and Tamil Statistics! Purananuru wonders 32 ;Tamil Encyclopaedia- 72(Post.15,854)

Written by London Swaminathan

Post No. 15,854

Date uploaded in London –10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 72

Purananuru wonders-32, Tamil Encyclopedia-72; One Thousand Interesting Facts -Part 72

Vaidehi Herbert’s English translation of Purananuru is used here; thanks.

Item 563

Kapilar was the greatest poet in Sangam Tamil literature; he was a Brahmin poet praised by many Tamil poets; no other poet has such encomiums. He was praised as a person of spotless character. His quotations are famous and reveal many unknown details; he was like a modern day orator who spoke in bullet points; he must be a mathematician because he gave us Tamil statistical information. He was an example of great friendship. He was the first one to smash the caste barriers. He was the poet who contributed the highest number of poems in Sangam Tamil literature. His name is a Sanskrit name that means great sages of the past as well as Lord Ganesh! Along with another great Brahmin poet of Kerala, named Paranar, both carved a niche for them in Sangam corpus; Paranar was a great historian who gives us over eighty historical anecdotes.

Kapilar was a great Sanskrit scholar and he taught Tamil to a North Indian named Brhad Duttan, because he ridiculed Tamil language. For him, he composed Kurinjippattu where he listed 99 flowers at one go and entered Book of Records. He made that Tamil hater to compose poems in Tamil and included it in the Sangam corpus. Though Kapilar achieved many firsts in Tamil literature, he sacrificed his life by voluntarily entering fire at Tirukkovilur. We have such anecdotes of Hindu saints entering fire in three other places. One happened in front of Alexander; another happened in Europe, both 2000 years ago; third happened in front of Adi Sankara and the person who did it was Kumarila Bhatta, who used Dravida Bhasa for Tamil language.

***

Item 564

All his poems on chieftain Pari- paari–are grouped together and placed one after another in Purananuru- puranaanooru- by the compiler. Pari belonged to Velir tribe who controlled Pudukkotai area of Tamil Nadu.  His capital was at the top of Parampu hills, now called Piraanmalai. He was born in Tiruvat havur near Madurai where one of the greatest Saivite saints, Manikkavasagar was born.

In Puram verse 105, he persuaded a Virali (dancer who accompanies bards) to go to Pari to get good ornaments.

***

Puranānūru 105, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Virali Ātruppadai
virali with a bright forehead!
You’ll get gifts of red gold jewels
if you go and sing to Vēl Pāri,
who is sweeter than the water
that cascades down the sky-high
peaks of his mountain where bamboo
ladders hang, whether it rains or not,
and runs down in canals that wind
through the vast land where horse gram
is farmed, and sprays cool water droplets
on bee-swarming, dark-petaled, fresh
kuvalai flowers that flourish in wide springs.

***

புறநானூறு 105பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: பாடாண்துறை: விறலியாற்றுப்படை
சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி!
தடவுவாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டுபடு புது மலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும் பெய்யாது ஆயினும், அருவி
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக  5
மால்பு உடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

***

Item 565 Bhagavad Gita Echo

In Purananuru verse 106, Kapilar echoed what Krishna says in the Bhagavad Gita.

Kapilar says, whatever given by a devotee , God accepts it. It does not matter whether it is grass or Erukkam flowers; and Pari is also like God; he does not bother about what you take for him, he rewards anyone with faith.

erukkam flowers with dull/small leaves, Calotropis gigantea, 

Puranānūru 106, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi
Neither good nor bad, are offerings of pointed
clusters of erukkam flowers with pale leaves,
and gods don’t say that they do not like them
.
Even if foolish and soft-natured people go to
him, Pāri will reward them, since he is generous.

Bhagavad Gita

पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति |

तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मन|| 9-26||

patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhati

tadahaṁ bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ

BG 9.26: If one offers to Me with devotion a leaf, a flower, a fruit, or even water, I delightfully partake of that item offered with love by My devotee in pure consciousness.

 106, பாடியவர்: கபிலர், பாடப்பட்டோன்: வேள் பாரி, திணை: பாடாண், துறை:  இயன் மொழி
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா ஆங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்,
கடவன் பாரி கைவண்மையே.  5

****

Item 566 Lord Ganesh in Sangam Literature

Though we have Ganapathy/ Vinayaka in Vedas, he was not praised or worshipped as we do today in ancient days. Kalidasa, Manikka vasagar and Sangam poets never mentioned him; there is one rare reference in the added part of Sangam poems; scholars reject it as added one during compilation.

But my research shows the name Kapila and Erukkam flowers show us that Lord Ganesh was known to Sangam Age Tamils. Kapila was the first mantra in Ganesh worship. Any priest who begins a Puja in any place says 16 names of Ganesh, and one of them is om Sri Kapilaaya Namah. Another point is Erukkam flowers. Kapilar who listed 99 flowers in Kurinjippattu left all of them away but mentioned Erukkam in Puram 106. That is the most favourite flower of Ganesh in Tami Nadu. Everyone buys the garland of Erukkam and adorn Ganesh statues. Another word in the poem is Tamil word Pul=grass. Commentators added it with Ilai=leaf in the poem; but if you split it, it means Pul/grass+ Ilai=leaf.

So my argument is Ganesh is the only god offered Arukam Grass and 21 types of different leaves on Ganesh Chaturthy day in Tamil Nadu.

During Ganesh Chaturthi, offering 21 specific types of leaves, known as Patra or Patri, is a sacred ritual called the Ekavimshati Patra Pooja. Each leaf is offered while chanting one of Ganesha’s 21 unique name mantras and corresponds to various health and spiritual benefits.

***

Item 567 Sarcasm and Rhyme

Kapilar’s poems are short but with lot of details. Here is Puram verse 107, Kapilar used Paari to rhyme with Maari

Paari- name of the chieftain

Maari – Rain;

Rain is praised in Hindu literature and compared with donations made without any intention or expectation.

Paari is also like rain who pours down gifts without expecting anything.

Here in a sarcastic language, he wonder why people praised Paari when there is Maari/rain.

Very short poem with excellent meaning!

***

Puranānūru 107, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi
” Pāri! Pāri,” they utter, and poets
with eloquent tongues praise him.
There is not just Pāri!
There is also the rain that gives
and protects this world!

புறநானூறு 107பாடியவர்:  கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: பாடாண்துறை:  இயன் மொழி
“பாரி பாரி” என்று பல ஏத்தி,
ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்,
பாரி ஒருவனும் அல்லன்,
மாரியும் உண்டுஈண்டு உலகு புரப்பதுவே.

***

Item 568

Puram verse 108 was composed after Pari’s death; Three kings of Chera Choza Pandya kingdoms laid a siege around Pari’s Parampu hills and killed him. The verse portrays a scene where a woman burns sandal wood and the smoke engulfs the nearby Venkai tree. The implied meaning is Pari’s fame will spread like Sandal fragrance.

 Puranānūru 108 – Kapilar sang for Vēl Pāri, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi

A mountain woman burns dry sandal
twigs and fragrant smoke spreads through
the branches of nearby vēngai trees
dense with flowers, on the mountain slopes
of Parampu country given to those who sang.
Righteous and generous Pāri yields to
those who request, and goes to their limits. 

புறநானூறு 108பாடியவர்:  கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: பாடாண்துறை:  இயன் மொழி
குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின் அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே அறம் பூண்டு
பாரியும் பரிசிலர் இரப்பின்  5
‘வாரேன்’ என்னான் அவர் வரையன்னே. 

***

Item 569 Bullet Points 

Like great orators, Kapilar says Point No.1, Point No.2, Point No.3………………….. This is not seen in other poems!

First are seeds from bamboos with small leaves,
second are sweet ripe jackfruits, third are valli
yams with thick vines that spread low,
and fourth is bright-colored, mature honey

Apart from bullet point speech, it is also a description of natural products. He says even if your siege continues, people wont starve to death, because honey and other eatable plants grow in plenty. Later we are going to see how he trained birds to bring back grains 

Puranānūru 109, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Nochi, Thurai: Makal Maruthal
Pāri’s Parampu is a pitiable place!
Even if the three of you with royal drums
surround it, there are four crops that flourish
without plowing and planting by farmers.
First are seeds from bamboos with small leaves,
second are sweet ripe jackfruits, third are valli
yams with thick vines that spread low,
and fourth is bright-colored, mature honey
that flows in his tall, dense mountain.

His towering mountain is as tall as the sky
and its springs are like stars.  Even if your
elephants are tied to each tree, and your chariots
are spread over the land, you will not win anything
for your efforts.  He will not yield to your swords.

I know the path to seize his country.  If you tune
the polished, twisted strings of your small yāzhs tight,
have your female artists with thick, fragrant hair
follow you, and go to him dancing and singing,
he will give you both his country and his mountain!

புறநானூறு 109பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரிதிணை: நொச்சிதுறை:  மகள் மறுத்தல்
அளிதோ தானே பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே,
ஒன்றே சிறியிலை  வெதிரின் நெல் விளையும்மே,
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே,  5
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே,
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடுங்குன்றம் தேன் சொரியும்மே,
வான் கண் அற்று அதன் மலையே வானத்து
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு  10
மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன்,
யான் அறிகுவென் அது கொள்ளும் ஆறே,
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,  15
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. 

***

 Item 570 Tamil Statistics and Tamil Geography 

Hindu India has 6 lakhs villages. Here in Puram verse 110, Kapilar says that there are 300 towns under Pari’s rule. For the first time we hear about Tamil geography. In the little mountain kingdom Pari had 300 towns and all were donated to bards. This shows his generosity. Kapilar advised the three great kings to come as bards singing the praise of Pari and then they can get the remaining hill and Pari himself. Beautiful advice. In those days poets were bold and never feared any king.

Puranānūru 110, Poet Kapilar sang to the three great Kings, Thinai: Nochi, Thurai: Makal Maruthal
Even if the three of you
with your murderous armies
unite,
Parampu will be difficult to seize.
There are three hundred villages
in the cool, fine Parampu country.
All the villages were gifted by him
to those who asked.  
But if you go
singing, you can win us and Pāri.
You will also get his mountain!

 ***

 புறநானூறு 110பாடியவர்: கபிலர்பாடப்பட்டோர்: மூவேந்தர்திணை: நொச்சிதுறை:  மகள் மறுத்தல்

கடந்து அடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே,
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்,
யாமும் பாரியும் உளமே,  5
குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே. 

***

Item 571 Woman can win easily! 

Again Kapilar emphasizes saying if you come like a woman singing, it is easy to win the Parampu Hill.

*** 

Puranānūru 111, Poet Kapilar sang for Vēl Pāri, Thinai: Nochi, Thurai: Makal Maruthal

Pitiful is his huge dark mountain!
It would be difficult to conquer it with
spears, even by brave kings,
but easier to win if a female drummer
goes singing with her kohl-lined eyes,
dark like blue waterlily blossoms.

புறநானூறு 111பாடியவர்: கபிலர்பாடப்பட்டோன்: வேள் பாரி,  திணை: நொச்சிதுறை:  மகள் மறுத்தல்
அளிதோ தானே பேர் இருங்குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே,
நீலத்து இணை மலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால், பாடினள் வரினே.

To be continued-

Tags- item 571, Bhagavad Gita and Tamil Statistics! Purananuru wonders 32, Tamil Encyclopaedia 72, One Thousand Interesting Facts -Part 72 , Pari, Parampu Hills, Kapilar,300 towns, God accepts Erukkam flowers, leaf

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-50; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,853)

Written by London Swaminathan

Post No. 15,853

Date uploaded in London –10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 50

ஸ்ரீரங்கம் திருவரங்கம்

விஷ்ணுவின் எட்டு ஸ்வயம் வியக்த ஷேத்திரங்களுள் முதன்மை ஆனது ஸ்ரீரங்கம்.  தமிழ் பேசும்   வைணவர்களுக்கு   கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம்தான் வழிபடப்படும் கோயில்களில் உலகிலேயே பெரிய கோவில் இதுதான் ; கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் போன்ற விஷ்ணு கோவில்களில் வழிபாடு, பூஜை, புனஸ்காரங்கள் கிடையாது.

156 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள திருவரங்கம் கோவில் 108 வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். இந்தக் கோவில் திருவரங்க திருப்பதி, பெரியகோவில், பூலோக வைகுண்டம் மற்றும் போக மண்டபம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி அரண் போன்ற சுற்றுச் சுவர்கள் உள்ளன. இங்கு கம்பீரமான பெரிய 21 கோபுரங்கள் உள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.

இது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு நடுவே தீவு போல உள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த கோவில் சோழர்கள், சேரர்கள் , பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர அரசர்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் திருப்பணியில் மேலும் மேலும் பொலிவுபெற்றதுl

புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்துக்கும் முந்தியது ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கபட்டணம் ஆகும் . கர்நாடகத்தில் மைசூருக்கு அருகில் உள்ளது .காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள மூன்று பெருமாள் கோவில்களில் முதலில் உள்ளது ஸ்ரீரங்கபட்டணம் /ஆதி ரங்கம். இரண்டாவது ரங்கம் சிவ சமுத்திரத்தில் இருக்கிறது ; கடைசி ரங்கம் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீ ரங்கம் ஆகும் . இவை முறையே ஆதி, மத்யம, அந்த்ய ரங்க க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிலப்பதிகாரம், அகநானூறு போன்ற சங்க இலக்கியத்தில் போற்றி புகழப்படும் தலமாக இருப்பதால் இதன் பழம் பெருமை நன்கு விளங்கும்.

பெயர்: அரங்கநாத சுவாமி கோயில்

மூலவர்: அரங்கநாதர்

உற்சவர்: நம்பெருமாள்

தாயார்: ரங்கநாயகி

தல விருட்சம்: புன்னை

தீர்த்தம்: சந்திர தீர்த்தம் உட்பட எட்டு தீர்த்தங்கள்

ஆகமம்: பாஞ்சராத்திரம்

மங்களாசாசனம் செய்தவர்கள்: பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்,

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் (ஆழ்வார்)

தல வரலாறு

திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் “தென்திசை இலங்கை நோக்கி” பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.

குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி

வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு

உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

–ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார்

பஞ்சரங்க தலங்கள்

பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்.

ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் : ஸ்ரீரங்கப்பட்டணம்

திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் : திருவரங்கம்

சாரங்கபாணி திருக்கோவில் : கும்பகோணம்

திருஆப்பக்கூடத்தான் பெருமாள் திருக்கோவில் : திருப்பேர்நகர் என்ற கோவிலடி (திருச்சி)

பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் : மயிலாடுதுறை

கோயில் ஒழுகு

கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் (“வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்” என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.

திருச்சுற்றுகள்

இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர்.

நவ தீர்த்தம்

சந்திர புஷ்கரணி,  வில்வ தீர்த்தம், சம்பு தீர்த்தம், பகுள தீர்த்தம்,  பலாச தீர்த்தம்,  அசுவ தீர்த்தம்,  ஆம்ர தீர்த்தம்,  கதம்ப தீர்த்தம்,  புன்னாக தீர்த்தம்.

கல்வெட்டுகள்

9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. ‘கோவில் ஒழுகு’ 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர்.

இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (கி.பி.1415). 15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது.

ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவரான  விபீஷணர் இப்பொழுதும் இலங்கையிலிருந்து இங்கு இரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

கோயிலின் வடபுறத்தில் தாயார் சந்நிதியும் ராமர் கோவிலும் உள்ளன.

இந்தக் கோயிலில் உள் விமானம் பிரணவ ரூபமாக அமைக்கப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். அந்த விமானத்தில் பர வாஸுதேவருடைய சிலா விக்ரஹம் இடுப்பு வரையிலும் காணப்படுகிறது.

தாயாரின் திரு நாமம் அரங்க நாயகி. தாயார் சந்நிதியின் மூல ஸ்தானத்தில்

இரண்டு தாயார்களின் விக்ரஹங்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

துலுக்க நாச்சியார் அரங்கனின் மீது ப்ரேமை கொண்டு முக்தியடைந்ததாக வரலாறு ஒன்றும் உண்டு.

இங்கு தான், தாயார் கோவிலின் முன் புறம், அழகிய சிங்கர் முன்னிலையில் உள்ள ஓர் மண்டபத்தில், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றினார். கம்பர் மண்டபம் என்ற பெயருடன் இது விளங்குகிறது.

சுக்ர தோஷம் உடையவர்கள் அரங்கநாதரை தரிசித்தால் அந்த தோஷம் நீங்கி விடும் என ஜோதிட சாஸ்திரம் உறுதி கூறுகிறது

வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஸ்ரீரங்கநாதருக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.

–subham—

Tags- கல்வெட்டுகள், Part 50,Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-50; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், ஸ்ரீரங்கம், திருவரங்கம்

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது! (Post No.15,852)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,852

Date uploaded in London – 10 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (60) குபேரன் ஓணானுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினெட்டாவது ஸர்க்கமாக அமைவது ‘மருத்த மஹாராஜனை ஜெயிப்பது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷி ராமருக்குத் தொடர்ந்து கூறிய வரலாறுகளில் குபேரன் ஓணானுக்கு அளித்த வரத்தைப் பற்றிக் கூறலானார்.

மருத்த மன்னன் சம்வர்த்தர் என்ற மஹரிஷியை வைத்து ஒரு யாகம் செய்த போது அங்கு வந்த ராவணன் மருத்தரை யுத்தத்திற்கு அழைத்ததையும் அப்போது தேவர்கள் பயந்து விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் உடலில் மறைந்து கொண்டதையும் முன்னர் பார்த்தோம். குபேரன் ஓணானின் உடலில் மறைந்து கொண்டார்.

ராவணன் ஜயித்து விட்டதாகக் கருதி அங்கிருந்து அகன்றவுடன் குபேரன் ஓணானை நோக்கி இப்படிக் கூறினார்:

அதாப்ரவீத்தைஸ்ரவண: க்ருக்லாஸம் கிரௌ ஸ்திதம் |             ஹைரண்யம் சம்ப்ரயச்சாமி வர்ணம் ப்ரீதம்ஸ்தவாப்யஹம் ||

 உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 35

வைஸ்ரவண: – குபேரர்                                                கிரௌ – மலைமீது                                                  ஸ்திதம் – இருந்த                                                    க்ருகலாஸம் – ஓணானைப் பார்த்து                                     அத – இப்படி                                                          அப்ரவீத் – சொல்லியருளினார்                                             ப்ரீத: – விஸ்வாசமுடைய                                                அஹம் அபி – நானும்                                                  தவ – உனக்கு                                                        ஹைரண்யம் – பொன்னிற                                                      வர்ணம் – நிறத்தை                                                    சம்ப்ரயச்சாமி – கொடுக்கிறேன்

சத் ரவ்யம் ச ஷிரோ நித்யம் பவிஷ்யதி தவாக்ஷயம் |                   ஏஷ காஞ்சனகோ வர்ணோர் மத்ப்ரீத்யா தே பவிஷ்யதி ||

உத்தரகாண்டம் பதினெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 36

தவ – உனது                                                                ஷிர: ச – முடியும்                                                           நித்யம் – எப்போதுமே                                                     அக்ஷயம் – மாறாத                                                       சத்ரவ்யம் – பொன்னிறமுடையதாய்                                  பவிஷ்யதி – விளங்கட்டும்                                       மத்ப்ரீத்யா – எனது ப்ரீதி காரணமாய்                                                தே – உனது                                                              ஏஷ: – இந்த                                                               வர்ணம் – ரூபம்                                                     காஞ்சனக: – பொன்னிறமுடையதாய்                                      பவிஷ்யதி – விளங்கட்டும்

இப்படியாக இந்திரனும், யமனும், வருண பகவானும், குபேரனும் மயிலுக்கும், காக்கைக்கும், ஹம்ஸத்திற்கும், ஓணானுக்கும் வரங்களைத் தந்தருளினர்.  பின்னர் அவரவர் இருப்பிடம் சென்று சேர்ந்தனர்.

இத்துடன் இந்த பதினெட்டாம் அத்தியாயம் முடிகிறது.

**