HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 74; இந்து மத கலைச்சொல் அகராதி- 74 (Post No.15,920)

Written by London Swaminathan

Post No. 15,920

Date uploaded in London –26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 74

“N”  words continued…………………….

நக்கீரர்

சர்ச்சைக்குரிய சங்க காலப்  புலவர் ; மதுரைக் கணக்காயனார் என்ற பிராமணனின் மகன் ; சிவ பெருமானுடன் மோதியவர் ; ஏழைப் பிராமணன் தருமிக்கு சிவபெருமானே எழுதித் தந்த கவிதையில் குற்றம் கண்டவர்; பின்னர் சிவனருளும் முருகன் அருளும் பெற்றார்; சங்க இலக்கியத்தில் கடவுளைப் போற்றும் புறநானூற்றுப் பாடலையும் முழுநீள தெய்வீக நூலான திருமுருகாற்றுப்  படையையும் , பாண்டிய மன்னனைப் போற்றும் நெடுநல்வாடை நூலையும் ஏனைய பாடல்களையும் இயற்றியவர். பிராமணப் புலவன் தருமிக்காக சிவபெருமானே சங்கத்துச் சென்றார் என்று அப்பர் பெருமான் (600 CE) தேவாரத்தில் பாடியதால் இந்த நிகழ்ச்சி 300  CE வாக்கில் நடந்திருக்க வேண்டும்.

***

நலுங்கு- நலங்கு

பிராமணர் கல்யாணங்களில் தாலி கட்டிய நாளன்று மலையில் நடைபெறும் கேளிக்கை , வேடிக்கை , ஆட்டம்- பாட்டம் நிறைந்த சடங்கு ஆகும் . கல்யாணத்திலேற்பட்ட மனத்தொய்வு, களைப்பு ஆகியவற்றைக் குறைத்து பெண் வீட்டாரையும் மாப்பிள்ளை வீட்டாரையும் இணைக்கும் நிகழ்ச்சி இது ; இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்த்துக்கொண்டு,  பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே பல போட்டிகளை நடத்துவார்கள்; வெற்றி பெற்ற குழுவினர் ஆரவாரம் செய்து உலகக் கோப்பையை வென்றதாக எண்ணி மகிழ்ச்சிக் கூத்தாடுவார்கள்; பெண் வீட்டாரையும் மாப்பிள்ளை வீட்டாரையும் கிண்டலும் கேலியும் செய்து பாட்டும் பாடுவார்கள் ; சில உதாரணங்கள் :

தண்ணீர் நிறைந்த குடத்தில் மோதிரத்தைப் போட்டு பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஏவி விடுவார்கள் முதலில் மோதிரத்தை எடுத்தவர் வெற்றி வீரர் ; பெண் அல்லது மாப்பிள்ளை கையில் காசுகளைக் கொடுத்து இறுக்க மூடச் சொல்லுவார்கள் ; அந்தக் குரங்குப் பிடியிலிருந்து காசினை எடுக்கும் முதல் நபர் வெற்றி! .

மாப்பிள்ளையை ஹிட்லர் மீசை, கோணல் மூஞ்சி , ஒல்லிப்பிச்சான் அல்லது பூசணிக்குண்டு என்று வருணித்துப் பெண் வீட்டுப் பெண் கள் ஏசுவார்கள் ; உடனே மாப்பிள்ளை வீட்டுப் பையன்கள் பெண்ணுக்கு காக்கையின் குரல், முடியே இல்லாத டோபா முடி, அடுப்பையே பார்த்திராத பெண்! என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள் ; இதற்கான பாட்டுகள் சிலவற்றைச் சேகரித்து நான் வெளியிட்டேன் ; கால வேகத்தில் அவை அழிந்து வருகின்றன .

வேறு சில பண்பாடுகளைப்  பின்பற்றுவோர் பெண்ணுக்கு மஞ்சள் பூசும் சடங்கினை நலங்கு என்பார்கள்; இது வடக்கத்திய மெஹந்தி (மருதாணி) சங்கீத் சடங்குகளைப் போன்றது .

மன நெருக்கத்தை, மன அழுத்தத்தைக் குறைக்க இந்துக்கள் கண் டுபிடித்த மகத்தான சடங்கு நலங்கு !

நலுங்குப் பாட்டு

அனுப்பியவர் திருமதி தயா நாராயணன் ,

Mrs Daya Narayanan from London, Now in Sydney, Australia.

சம்பந்திப் பாட்டு

சம்மந்தி அம்மா வந்தாளாம்

சந்தோஷமாகவே

சம்மந்தி அம்மா வந்தாளாம்

சந்தோஷமாகவே

பானைபோல் வயிறும் பட்டாணிக்கண்ணும்

யானை ரூபமும்  எலி வால்  பின்னலும் 

சம்மந்தி அம்மா வந்தாளாம்

வெகு சந்தோஷமாகவே

ஜப்பான் குள்ளம் ஜெர்மனி உயரம்

ஹிட்லர் மூக்கும் சர்ச்சில் வாயும்

சம்மந்தி அம்மா வந்தாளாம்

வெகு சந்தோஷமாகவே !

வெகு சந்தோஷமாகவே !

வெகு சந்தோஷமாகவே !

குறிப்பு – இது இரண்டாம் உலகப் போர் காலப் பாட்டு ; அந்தக் காலத்தில் ஹிட்லர், சர்ச்சில் படங்கள், கார்ட்டூன்கள் அடிக்கடிப் பத்திரிகைகளில் வெளியானதால் இதை மக்கள் ரசித்து இருப்பார்கள்.

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ராஜ கோபாலா

கனகாம்பரதாரா கெளஸ்துப ஹாரா

கவச குண்டல தாரா

வனமா    தாரா வாசுதேவா  காலி

வைகுண்ட ஜகன்னாதா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

பக்தவத்சல பரமதயாளா

பரிபூரணானந்தா நித்யானந்தா

உத்தம புருஷா

சித்தடி  நலுங்கிடரே

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

அந்தக் காலத்தில் மிக இளம் வயதில் கல்யாணங்கள் நடந்தன கோவலன் , இராமபிரான் ஆகியோருக்கெல்லாம் 18  வயதுக்குள்ளேயே திருமணங்கள்  நடந்ததாக நமது இலக்கியங்கள் செப்புகின்றன. அந்த சூழ் நிலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட இந்தப் பாடல்களை ரசித்து இருப்பார்கள்.

இப்போது போல எருமைக்கடா வயதில் கல்யாணங்கள் நடக்கவில்லை!.

***

நால்வர் 

தமிழ்நாட்டில் சைவ சமயத்தில் எத்தனையோ பெரியோர்கள் இருந்தும் , 63 நாயன்மார்கள் இருந்தும்,  சைவ சமயத்துக்குப் புத்தியிரூட்டிய நான்கு பேரை- அப்பர்சம்பந்தர், சுந்தரர்,  மாணிக்க வாசகர்  – மட்டும் நால்வர் என்று போற்றித் துதிப்பர்; இவர்களில் முதல் மூவர் பாடியது தேவாரம்; மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களைப் பாடிய சேக்கிழார், மாணிக்கத்தைப் பாடாமல்  விட்டது பெரிய புதிர்; முதல் மூவர் மாணிக்கத்தைக் குறிப்பிடாததும் முதல் மூவரை மாணிக்கம் குறிப்பிடாததும் அதைவிடப் பெரிய புதிர்! அப்பர் காலம் மஹேந்திர வர்மன் 600 CE காலம் என்பது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டாலும்  மாணிக்கம் காலம் என்ன என்பது சர்ச்சைக்குரியதாகவே நீடிக்கிறது; ஆயினும் சில குறிப்புகளிலிருந்தும்,  திருவிளையாடல் புராண மன்னர் வரிசையிலிருந்தும் மாணிக்கம் முதல் மூவருக்கு 100 அல்லது 200 ஆண்டு முந்தையவர் என்று தெரிகிறது. (Please see my research articles on this topic).

***

நாமம்

வைஷ்ணவர்கள் – அதாவது விஷ்ணுவை வணங்குவோர் – நெற்றியில் இட்டுக்கொள்ளும் புனிதக் குறியீடு நாமம் ஆகும் ; சைவர்களின் விபூதி மூன்று படுக்கைக்கோடுகள் கொண்டது; நாமமென்பது மூன்று நெடுங்கோடுகள் கொண்டது;  இரண்டு வெள்ளைக்கோடுகளுக்கு இடையே ஒரு சிவப்புக்கோடு இருக்கும்.

இவர்களில் இரு பிரிவினர் தென்கலை என்றும் வடகலை என்றும் உள்ளனர் ; தென்கலையைப் பின்பற்றுவோர் ஆங்கில எழுத்து Y ஒய் போல நாமம் போடுவார்கள்; வட கலையைப் பின்பற்றுவோர் ஆங்கில எழுத்து யு U போல நாமம்  போடுவார்கள்; தென்கலையினர் திவ்யப் பிரபந்த தமிழ் பாசுரங்களையும் வடகலையினர் வேதாந்த தேசிகரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்களையும் போற்றுகிறார்கள். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெரிய கோவில்களில் எல்லோரும் வித்தியாசமில்லாமல்  வணங்கினாலும் சிறிய கோவில்களில் இந்த வேறுபாடு , நடைமுறைகள் முதலியன தெளிவாகத் தெரியும்; யானைகளுக்கு நாமம் போடுவதில் கூட இதைப் பின்பற்றுவார்கள்; சில நேரங்களில் இந்த வேறுபாடு ஏற்படுத்திய சர்ச்சை,  நீதிமன்றம் வரை சென்றதும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் உடலில் 12 இடங்களில் நாமங்களை இட்டுக்கொள்வார்கள் ; சிவனை வழிபடும் பிராமணர்கள் தினமும் மூன்று  வேளை சந்தியாவந்தனத்தின் போதும் விபூதியை இதே போல 12 இடங்களில் இட்டுக் கொள்கிறார்கள்.

****

நம்மாழ்வார்

நம்மாழ்வார் (மாறன் சடகோபன்) 12 ஆழ்வார்களில் தலைசிறந்தவராகவும், வைணவ மரபில் ‘ஆழ்வார்களுக்குத் தலைவராகவும்’ போற்றப்படுகிறார். பிறந்ததிலிருந்து பேசவும் கேட்கவும் முடியாமல் இருந்த இவர், தனது 16 வயதில் ஞானம் பெற்று, இறைவனின் புகழைப் பாடும் திருவாய்மொழி உள்ளிட்ட நான்கு பிரபந்தங்களை அருளினார். இவர்  பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி;  வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் சடகோபன் என்றும் அறியப்படும் நம்மாழ்வாரின் அவதார மகிமையால் ஆழ்வார் திருநகரி என்ற பெயரை இத்தலம் பெற்றது.

நம்மாழ்வாரின் பாடல்கள் தத்துவார்த்த சிந்தனைகள்,  மற்றும் பல அதிசயத் தகவல்களைக் கொண்டுள்ளன (எ.கா: 7 மலைகள், 7 கடல்கள் குறித்த தகவல்கள்). வானியல் மற்றும் ஜோதிடக் கருத்துக்கள்: இவரது திருவாய்மொழியில், அன்றைய கால ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் வேலன் வெறியாடல் குறித்த சுவையான குறிப்புகளும், விபூதியின் மகிமையும் இடம்பெற்றுள்ளன.

நம்மாழ்வார் தனது பாடல்களில் ‘Wheel of Time’ எனப்படும் காலச் சக்கரத்தைப் பற்றி விவரித்துள்ளார். இவற்றில் சில சங்ககால மற்றும் அரிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. திருக்குறள் மீதும், வாமன அவதாரம் மீதும் ஆழ்வார் கொண்டுள்ள ஈடுபாடு குறித்தும் காணலாம் .

பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் நம்மாழ்வார். கலியுகத்தைக் கொன்று கிருத யுகத்தை மீண்டும் இப்பூவுலகில் கொண்டுவருவேன் என்று ஆழ்வார் பாடியது, பாரதியை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கட்டுரைகளை எழுதினார்

புத்தர் போதி மரம் என்னும் அரச மரத்துக்கு  அடியில் அமர்ந்து ஞானம் அடைந்ததைப் போல நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்;  இன்றும் அந்தப் புளிய மரம் வணங்கப்படுகிறது.

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 74; இந்து மத கலைச்சொல் அகராதி- , நக்கீரர், நம்மாழ்வார், நாமம்

To be continued………………………….

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் முடிவுரை (Post.15,919)

Written by London Swaminathan

Post No. 15,919

Date uploaded in London –26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திவ்ய தேச வரிசையில் இது கடைசி கட்டுரை 

துவக்கத்திலேயே நான் எழுதியதை மீண்டும் சொல்கிறேன் ; எவ்வளவோ பேர் இந்த 108 திவ்யதேசங்கள் பற்றி எழுதியபோதும் நான் இதை எழுதத் துவங்கியதன் காரணம் ஸ்ரீ  பெரும்புதூர் கோவில் சுவர்களிலும் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவில் சுவர்களிலும் நான் கண்ட  சித்திரங்களை புகைப்படம் எடுத்ததே.

அந்தப் புகைப்படங்களை வீணடிக்க மனம் வராததால் வாசகர்களுடன் பகிர்ந்தேன். பல க்ஷேத்திரங்களில் படங்களை ஐ பேட் I Pad   மூலம் எடுக்க முடியாதபடி இருள் சூழ்ந்து இருந்ததால் 108 படங்களும் இருக்காது; ஆயினும் திருநாங்கூர் என்ற இடத்தில் மட்டும்  11 திருப்பதிகள் ஒன்றாக அமைந்துள்ளன. 108 திவ்ய தேசங்களில் 15 திவ்ய தேசங்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளன. ஆக  இரண்டே ஊர்களில் 26 க்ஷேத்திரங்களைக் கண்டுவிட்டோம் ! எனக்கு முன்னர் இது பற்றி வெளியான கட்டுரைகளின் சுருக்கத்தை நான் சேர்த்து இருந்தேன்; அவர்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.

***

பரமபதம்

தாயார் : ஸ்ரீ பெரிய பிராட்டியார்

மூலவர் : ஸ்ரீ பரமபத நாதன்

தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் இறைவன் பரமபதநாதன், வைகுண்டபதி என்று அழைக்கப்படுகிறான்.

தீர்த்தம் விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி.

திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும்.

இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்ட கத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது.

பரமபதம் (வைகுந்தம்) அடைவது குறித்து ஆழ்வார்கள் பல பாசுரங்களைப் பாடியுள்ளனர். குறிப்பாக, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி 10-ஆம் பத்து 9-ஆம் திருவாய்மொழியான “சூழ்விசும்பு அணிமுகில்” (முதல் பாசுரம்) பரமபத அனுபவத்தை நேரில் காண்பதுபோல விளக்குகிறது:

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலைதிரை கையெடுத்தாடின

ஏழ்பொழிலும் வளமேந்திய என்னப்பன்

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே

“எம்பெருமானின் அடியார்கள் வைகுந்தம் (பரமபதம்) செல்லும் போது, ஆகாயத்தில் உள்ள மேகங்கள் வாத்தியங்களை முழங்கின. ஆழமான கடல்கள் அலைகளெனும் கைகளை உயர்த்தி நடனமாடின. இத்தகைய பெருமைகளை உடைய நாரணனின் அடியார்களைக் கண்டு அனைத்து உலகங்களும் மகிழ்ந்து கொண்டாடின.*

****

வைணவ சித்தாந்தங்களின் படி இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு இறைவனைப் போலவே வடிவம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் இறைவனோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து தொண்டு செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர். நித்ய சூரியாகி இங்கு சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர். இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம் என்பது பொருள். இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பம் “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்றும் பெயருண்டு.

***

பரமபதசோபான பட விளையாட்டு !

இந்துக்கள்தான் போர்ட் கேம்களை Board Games கண்டுபிடித்தனர் என்று லண்டன் மியூசியங்களில் பட்டவர்த்தனமாகப் பொறித்துள்ளனர் நாம் உண்டாக்கிய Chess செஸ் / சதுரங்கம் இன்று உலகம் முழுதும் நமது பெருமையைப் பறைசாற்றி வருகிறது விளையாட்டில் இறைவனையும் மோட்சத்தையும் சேர்த்த ஒரே நாடு பாரதம்தான்! இதில் இறைவனை கீழேபோட்டுவிட்டு Snakes and Ladders ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்று நம்முடைய பரமபத சோபனா படத்தை அவர்கள் இன்றுவரை விற்கின்றனர்; விளையாடுகின்றனர்.

அந்தக் காலத்தில் மதுரையில் புதுமண்டபத்திலுள்ள புஸ்தகக்கடைகளில் இதை வாங்கி இரவும் பகலும் விளையாடினோம் !

பரமபதம் என்னும் இறைவனின் திருநாடு அடைய உதவும் பரமபத விளையாட்டின் மூலம் இறை வழிபாடு வலுவடைகிறது.

பரமன் என்றால் திருமால் என்று பொருள், பரமபதம் என்றால் திருமாலின் இருப்பிடம்- வைகுந்தம்; அதை அடைவதே வாழ்வின் குறிக்கோள்.

நூற்றுக்கும் மேற்பட்ட கட்டங்களுடைய வரை  படத்தின் மீது பல படங்கள் இருக்கும்; தாயக்கட்டங்களை உருட்டி எண்ணிக்கைக்கு ஏற்ப காய்களை ஒவ்வொருவரும் நகர்த்துவார்கள் .

கட்டங்களில் கீழிலிருந்து மேல் நோக்கி காய்களை நகர்த்த வேண்டும். இடைபட்ட கட்டங்களில் ஏணிகளும், பாம்புகளும் வரையப்பட்டிருக்கும். ஏணியில் ஏறினால் புண்ணியம் செய்ததாகவும், பாம்பின் வாய் வழியாக கீழே இறங்கினால் பாவம் செய்ததாகவும் கருதப்படுகிறது இறுதியில் கடைசி கட்டத்தைச் சென்றடைந்தால் வைகுண்டத்த சென்றடைந்ததாக  கருத்து!   இவ்விளையாட்டு பெரும்பாலும் மார்கழி மாத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் விளையாடப்படுகிறது. ஒவ்வெரு கட்டத்திலும் கடவுள்கள், கடவுளால் படைக்கப்பட்ட தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பறப்பன, ஊர்வன, போன்ற அனைத்து ஜிவராசிகள் களும்  உள்ளன; ஒவ்வொரு கட்டமும் ஒரு தத்துவ ஆன்மீக கருத்தை விளக்குகிறது .

***

Tags- பரமபதசோபான படம், திருநாடு, பரமபதம், வைகுந்தம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன், முடிவுரை, கடைசி கட்டுரை 

—subham—

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு– 20 (Post No.15,918)


FRIENDSHIP AGREEMENT SEALED 
 

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,918

Date uploaded in London –   26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

HANUMAN MEETING RAM LAKSHMAN 

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு – 20

(ஆர், சேஷாத்ரிநாதன்)

பிஹாரி சத்சயி  என்ற நூலில் கவிஞர் பிஹாரி சொல்வதாவது

नर की अरु नल-नीर कीगति एकै करि जोड़।

जेतौ नीचो है चलेतेतौ ऊँचौ होइ ॥

நதி தன் தாழ்வான பாதையில் ஓடுகிறது –
ஆனால் அந்த நீர் பின்னர் மேகமாக, மழையாக,
மலைகளில், மேலே எழுகிறது.

அதுபோல, மனிதன் தன் நடையில், தாழ்மையில்,
தன்னலமில்லாமல் நடந்தால்,
அவன் உயர்ந்த நிலையை அடைகிறான்.

தாழ்வு தான் உயர்வு” – என்பதற்கான ஒரு பாரம்பரிய உவமை.

தாழ்மையும், சீரான நடையும் –
உயர்வு பெறும் மூலக் காரணங்கள்.

நதி ஓடுமடி தாழ்வழியில் –

நன்மைதான் அதில் பிறக்கும்!

மலைகளிலே மேகமாய் –

மறுபிறவி அதில் வரும்!

மனிதனும் அதே நெறியில் –

மடமையின்றி நடக்க வேண்டும்!

தாழ்மையுடன் வாழ்ந்தவனுக்கே –

தரணியில் உயர்வு காத்திருக்கும்!

தாழ்வு என்பது வீழ்ச்சி அல்ல –

தர்மத்தின் வாசல் அது!

நடையில் நிமிர்ந்தவன் அல்ல –

நெஞ்சத்தில் நிமிர்ந்தவனே நாயகன்!

நதி ஓடும் பாதை போல –

நம் வாழ்வும் தாழ்வாக ஓடட்டும்!

உயர்வாகும் அந்த ஓட்டத்தில் –

உன்னதம் தான் பிறக்கட்டும்!

अस कहि परेउ चरन अकुलाई। निज तनु प्रगटि प्रीति उर छाई॥

तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि जुड़ावा॥3

 THINKING WHAT TO DO.

உன்னை மட்டும் தான் நம்புகிறேன் என்று சொல்லும் ஹனுமனைப் போல தன்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறார் துளசிதாசர் இந்த ஸ்லோகத்தின் மூலம்

है तुलसी कें एक गुनअवगुन निधि कह लोग।

भलो भरोसो रावरोराम रिसिवे जोग॥

அதாவது “என்னை (துளஸி) மக்கள் குற்றங்களின் குவியலாகவே சொல்கிறார்கள்,ஆனால் என்னிடம் ஒரு நல்ல குணம் இருக்கிறது –அது உங்கள் மீது (இராமர் மீது) உள்ள முழு நம்பிக்கை.அதனால், இராமா ! நீங்கள் என்மீது தயை கொள்ளத் தகுதியானவர்.”

இவ்வாறு கூறிய அனுமன் இவ்வளவு பேசியும் இராமனிடமிருந்து எந்த பதிலும் வராதது கண்டு மீண்டும் ஸ்ரீ இராமனின் திருவடிகளில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து விட்டார். ஹனுமனுக்குச் சந்தேகம் வந்து விட்டது , நாம் சுக்ரீவனுக்காக அந்தணர் வேடம் பூண்டு வந்துள்ளோம்.. ஒரு வேளை இராமன் இதைத் தவறாக நினைத்துவிட்டால் சுக்ரீவனுக்கான வேலையும் நடக்காது. ஆக தாமும் சுக்ரீவனும் அநாதைகளாகி விடுவோம் என்று நினைத்தவன் பிரபுவிடம் ஒளிவு மறைவா? அதனால் அவருடைய பிரம்மச்சாரி வேடம் அகன்று விட்டடது. தனது சுய ரூபம் பெற்றுப் பெருமாளின் திருவடிகளில்  விழுந்து கிடந்தார்.

तब रघुपति उठाई उर लावा। निज लोचन जल सींचि जुड़ावा॥

सुनु कपि जियँ मानसि जनि ऊना। तैं मम प्रिय लछिमन ते दूना॥

இராமன் மனம் நெகிழ்ந்து போனான். அவன்  கண்களில் நீர் மல்கியது. ஹனுமனைத் தூக்கி மார்புறத் தழுவித்  தனது கண்ணீரால் அவரைக் குளிரச் செய்து “புத்திர! கவலைப் பாடாதே! என் வார்த்தையைக் கேள். உன் மனத்தில் கலக்கம் ஏற்படுத்திக் கொள்ளாதே. நீ இலக்ஷ்மணனுக்குச் சமமாக இந்த அவதாரத்தில் மகாபிரியன்”. இங்கு तब என்பதற்கு எப்பொழுது மனம் வாக்கு காயம் இவை ஒன்று பட்டு தன்னைச் சரணடைந்தாரோ என்ற பொருள்.

 ஹனுமன் இராமனை முதலில் பார்த்ததும் அவரது பாதங்களில் விழுந்தான். அப்பொழுது இராமன் அவனை ஆரத் தழுவவில்லை. ஹனுமன் அந்தண வேடத்தில் இருந்த போது இராமன் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவன் அந்தண வேடத்தைக் களைந்து மீண்டும் வானர வடிவத்திற்கு மாறிய பிறகு அவனைக் கண்ணீருடன் தழுவிக் கொண்டார் . இது எல்லோருக்கும் ஒரு பாடம். அறிவுரை. அந்தப் பரமனின் அருள் வேண்டும் என்றால் கபட வேடம் போடாமல் உள்ளன்புடன் அவனைத் துதிக்கவேண்டும் என்று சொல்கிறார் துளசிதாசர்.

PICTURE OF LAKSHMANA SHOUTING AT SUGREEVA’S WIFE.

பிஹாரி சத்சாயி என்ற நூலில் கவிஞர் பீகாரிலால் இந்தக கருத்தைத்தான் சொல்கிறார்

तौ लगु या मनसदन मैंहरि आर्दै किहिं बाट ।

 विकट जटे जौ लगु निपटखुटै  कपटकपाट ॥

எவனொருவன் கபடங்கள் என்னும் கதவால் தனது இதயக் கதவை மூடி வைக்கிறானோ, அவனது இதயத்திற்குள் இறைவன் பிரவேசிப்பதில்லை என்று சொல்கிறார்.

ஒரு தாய்க்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும்  இரண்டுமே அவளது குழந்தைகளாக இருந்தாலும் முதற்குழந்தையை விட இரண்டாவது குழந்தையின் மீது அன்பு அதிகமாக இருக்கும். அதுபோல ஹனுமனின்   முதல் சரணாகதியை விட இராமனுக்கு  இரண்டாவது சரணாகதி ஏற்புடையதாக இருந்தது., மேலும் இலக்ஷ்மணனைவிட நீ அதிகப் பிரியமானவன் என்று ஹனுமனுக்கு ஒரு உயர்ந்த இடத்தை அளிக்கிறான்..

துளசிதாசர் தனது வினயபத்திரிகா என்ற நூலில் இவ்வாறு சொல்கிறார்

जानत प्रीति-रीति रघुराई ।

नाते सब हाते करि राखतराम सनेह-सगाई ॥

-“जानत प्रीति-रीति रघुराई” 

ரகுநாதர் (ராமர்) பாசத்தின் நெறி, பக்தியின் வழி,

உண்மையான அன்பின் நடைமுறை ஆகியவற்றை நன்கு அறிந்தவர்.

“नाते सब हाते करि राखत” –

அவர் உறவுகள், சம்பந்தங்கள், பந்தங்கள் ஆகியவற்றை விலக்குகிறார் –

ஏனெனில் அவை மாயை சார்ந்தவை.

PICTURE OF VALI AND SUGREEVA.

“राम सनेह-सगाई” –

அவர் பக்தியின் பாசத்துடன் மட்டுமே உறவாடுகிறார்.

பக்தி என்பது அவரின் உண்மையான உறவு.

– உறவுகள் எல்லாம் மாயைதான் –

உண்மைதான் பக்தியின் பாசம்!

ராமன் அறிந்த நெறிதான் இது –

இலக்ஷ்மணன் இராமனின் தம்பி. ஆனால் சுமித்திரை சொன்னது போல அவன் இராமனுக்கு ஒரு வேலைக்காரன் போன்று பணி செய்கிறான். அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. காரணம் அண்ணன் ஒரு தந்தைக்குச் சமம். அண்ணனுக்குப் பணிவிடை செய்யவேண்டியது அவன் கடமை. ஆனால் இராமனுக்கும் ஹனுமனுக்கும் எந்தவித உறவும் இல்லை.. ஹனுமன் ஒரு மனிதனும் அல்லன். ஆனாலும் இலக்ஷ்மணனைவிட ஹனுமான் தனக்கு அதிகமாகப் பிரியமானவன் என்று சொல்கிறான் இராமன். இதைத் தான் உத்தர காண்டத்திலும் இராமன் அனுமனைப் பார்த்துச் சொல்லுகிறார்

सब मम प्रिय नहिं तुम्हहि समाना। मृषा न कहउँ मोर यह बाना॥

सब कें प्रिय सेवक यह नीती। मोरें अधिक दास पर प्रीती॥4

“எல்லோரும் எனக்கு அன்பானவர்கள் ஆனால் உனக்குச் சமமாக அல்ல. நான் பொய்  சொல்வதில்லை இது எனது இயல்பு. சேவகர்களை விட அடியார்கள்தான் எனக்குப் பிரியமானவர்கள்” என்று இராமன் சொல்வதாகத் துளசி தாசர் சொல்கிறார்.

இங்கு துளசி தாசர் तैं मम्र प्रिय लछिमन तें दूना” என்று சொல்கிறார்.  அதாவது இலக்ஷ்மணன் எனக்கு மட்டும் பணிவிடை செய்கிறான். நீ எனக்கும் இலக்ஷ்மணனுக்கும் பணிவிடை செய்யப்போகிறாய். அதனால் தூனா என்ற வார்த்தையைப் போடுகிறார்.  ஹனுமான் தனது இயல்பான வானர உருவத்தைவிட்டு அந்தண வேடமிட்டு வந்ததை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். இராமன்  दूना என்று சொல்லி அவருடைய வருத்தத்தைப் போக்கிவிட்டான். ஒரு சில உரையாசிரியர்கள் இங்கு இராமன் இலக்ஷ்மணனும் நீயும் இருவரல்ல ஒருவரே என்று சொல்வதாகச் சொல்கின்றனர்.

இலக்ஷ்மணன் இராமனின் பாதுகாப்பாளன். कछुक दूरि सजि बान सरासन। जागन लगे बैठि बीरासन॥  வனத்தினுள் வந்த நாளிலிருந்தே தனது வேலையைத் திறம்படச் செய்பவன். இனி ஹனுமன் இலக்ஷ்மணனின் பாதுகாவலன்.. ஹனுமனின் பன்னிரண்டு பெயர்களுள் लक्ष्मणप्राणदाता च दशग्रीवस्य दर्पहा।’ (सुदर्शनसंहिता)  இதுவும் ஒன்று. மீதி பெயர்கள் என்னென்ன

हनुमानजानसुनुर्वायुपुत्रो महाबल :
रामेष्ठ: फाल्गुनसख: पिंगाक्षोमितविक्रम : 1
उदधिक्रमणश्चैव सीताशोकविनाशन :
लक्ष्मणप्राणदतश दशग्रीवस्य दर्पहा

============================================

समदरसी मोहि कह सब कोऊ । सेवक प्रिय अनन्य गति सोऊ॥ ८॥

दो०–सो अनन्य जाके असि मति न टरइ हनुमंत।

में सेवक सचराचर रूप स्वामि भगवंत॥ ३॥

                          **                            தொடரும்

யானைகளும் கூட துயரத்தில் பங்கு கொள்ளும்! (Post.15,917)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,917

Date uploaded in London – 26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

யானைகளும் கூட துயரத்தில் பங்கு கொள்ளும்! 

ச. நாகராஜன்! 

யானைகளும் கூட மனிதர்கள் போல துயரத்தில் பங்கு கொள்ளும் என்பதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் மிருக இயல் பிரிவைச் சேர்ந்த ஐயான் டக்ளஸ் ஹாமில்டன் (Ian Douglas Hamilton) ஒரு சம்பவத்தின் மூலம் அறிவதாக தன் ஆய்வின் முடிவில் கூறியுள்ளார். இதை அவர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகியுள்ள அறிவியல் இதழான Applied Animal Behaviour Science -இல் எழுதியுள்ளார்.

Save the Elephants – யானைகளைக் காப்பாற்றுங்கள் என்ற அறக்கட்டளைக்கு இவர் நிதி உதவியும் அளித்துள்ளார்.

அவர் எடுத்துக்காட்டும் சம்பவம் 2006ம் ஆண்டு நடந்த ஒன்று.

கென்யாவில் உள்ள யானைகளைப் பாதுகாக்கும் முகாம் ஒன்றில் எலினார் என்ற பெயர் கொண்ட ஒரு யானை நோய்வாய்ப்பட்டது. சிகிச்சை பலனின்றி அது உயிரையும் இழந்தது.

அதற்குப் பாதுகாப்பாக இருந்து உதவி செய்யும் உதவியாளரின் பெயர் க்ரேஸ். கீழே விழுந்து விட்ட எலினாரை அதன் துதிக்கையை வைத்து எழும்படி செய்தார் அவர். பின்னர் மீண்டும் ஒரு முறை அது கீழே விழுந்தது. இந்த முறையும் க்ரேஸ் அதை எழும்படி செய்ய முயன்றார். ஆனால் பலனில்லை. அது இறந்தே விட்டது. 

இறந்த யானையைச் சுற்றி யானையின் சொந்தக் குடும்பத்தில் உள்ள இதர யானைகள் குழுமி தங்கள் மரியாதையைச் செய்தன.  அது மட்டுமல்ல, அந்தக் குடும்பத்தைச் சேராத இதர யானைகளும் எலினார் விழுந்த இடத்திற்கு விரைந்து வந்தன. மிகவும் வருந்தின.

அவை தமது துக்கத்தை எப்படி தெரிவித்தன என்பதை விஞ்ஞானிகள் கண்டனர்.

தங்கள் துதிக்கையால் இறந்த யானையை அவை முகர்ந்து பார்த்தன. ஒரு அடிக்கு மேலே தங்கள் துதிக்கைகளைச் சுழற்றின. அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தன.

“இது எதைக் காட்டுகிறது என்றால் யானைகளுக்கும் துக்கம் உண்டு, அதைத் தெரிவிக்கும் முறையும் உண்டு என்பதைத் தான்” என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது இறந்த யானையின் குடும்பத்தைச் சேர்ந்த யானைகளுக்கு மட்டுமல்ல, இதர யானைகளுக்குமான ஒரு வழி முறை என்பதை அவர்கள் கண்டு வியந்தனர்.

 ஆகஸ்ட் 2006 மாதம் வெளியாகியுள்ள அப்ளைட் அனிமல் பிஹேவியர் ஸயின்ஸ் (Applied Animal Behaviour Science) பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் இது விவரிக்கப்பட்டிருக்கிறது.

** 

ஆதாரம், நன்றி : ட்ரூத் வார இதழ் தொகுதி 74 எண் 19 25-8-26 தேதியிட்ட இதழ்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 73; இந்து மத கலைச்சொல் அகராதி- 73 (Post No.15,915)

Written by London Swaminathan

Post No. 15,915

Date uploaded in London –25 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 73

N words continued…………………….

Nakkirar

A controversial and challenging Tamil poet of Sangam age. His clashes with Lord Shiva and others are in the stories of Tiru Vilaiyatal Purana and Tiru Murugatruppadai in Tamil . Tiru Murugu. Is a Sangam age work, that is 2000 years old. His poems are in Purananuru in praise of Hindu Gods. His controversy was documented by Appar (600 CE) in one of his poems, and so he must have lived at least 300 or 400 years before Appar.

***

Nalangu

A Tamil Post Wedding Ceremony to reduce the stress and strain of a wedding ceremony. It is full of fun and frolicks.

Both the bride and bridegroom are asked to take part in various competitive games. One example: a ring is placed in a pot full of water. When they are asked to GO, both dip their hands into the water pot; whoever takes the ring first is the winner; the winner’s family and friends jump with joy making big noise.

Both of them are asked to roll a coconut, powder a few Pappads in the air with both hands; both parties tease or mock at the other group with  some songs; they are like song caricatures of the bride or bride groom family.

An example : bride groom has Hitler moustache or pot belly; bride has a fake plait; hair is not long enough.

Nalangu is a traditional South Indian and Tamil post-wedding ceremony involving the application of sacred pastes and the playing of games to help the couple relax. As documented in ancient texts, this ritual aims to reduce stress and foster bonding between families.

In some communities it is done before the wedding. The bride and others are applied with turmeric paste. Participants also, particularly women, apply the turmeric paste on their feet and hands..

Something similar to North Indian Hindu ceremonies like Mehandi and Sangeet ceremonies.

***

Naalvar – The Four

The Great Four Saivite Saints; Naalvar means The Four persons; they are Appar alias Tirunavukkarasar, Sambandar (Tiru Gnana Sambanthar), Sundarar and Manikkavasagar (maanikkavaasakar); latest research shows that the last one lived at least 100 years before Appar, a contemporary of Mahendra varman, the greatest Pallava king (600 CE).

***

Namam ( naamam )

It is a symbol on the forehead of Vishnu devotees. They are three vertical lines in the shape of English letter Y or U. between the thick white lines a straight red line is drawn in the middle. Tamil Vaishnavites wear Dvaadasa Naamams on 12 places in the body that is comparable to Saivite Brahmins 12 placed Vibhuti (holy ash).

Y shaped Naamam- symbol of Tenkalai sect of Tamil Viashnavites; those who sing Tamil hymns of Alvars (Tamil Vaishnavite Saints)

U shaped Naamam- symbol of Vadakalai sect of Tamil Viashnavites; those who sing Sanskrit hymns of Vedanta Desikan.

Then= south ; Vada = north .

Even the Naamam on temple elephants will show one to which sect the temple belongs.

But when it comes to big temples like Titupati Balaji temple or Srirangam Ranganatha Temple, common devotees don’t bother about the sectorial divisions. But there are extremists in both sects who take the symbol cases up to the highest court in the country.

Vaishnavite Gurus/Acharyas called Jeeyars are very ardent followers of their respective sects and its practices.

***

Nammazvaar


One of the greatest Vaishnavite saints known in Tamil as Alvars (aazvaar).

Tamil Vishnu devotees believe that he composed Vedas in Tamil; his poems are great and meaningful. He was born in Alvar Titunagari in the southern part of Tamil Nadu. Like Buddha attained wisdom under the Peepal/Bodhi tree, Nammalvar  (nammaazvaar) attained wisdom under a Tamarind tree. Like Tansen’s tamarind tree, this tamarind also attained fame and worshipped until this day.

Following Thirumangai Alvar who composed 1,361 verses, Nammalvar is the second most prolific contributor, having composed exactly 1,296 verses across four works (most notably the Tiruvaymoli). They are part of Naalayira Divya Prabandham (the canonical collection of 4,000 Alvar hymns).

***

Nayanmar or Nayanar (naayanmaar or Naayanaar)

Sixty three Tamil saints and mystics are called Nayanmar or Nayanars. They were ardent followers of Lord Siva. Their stories are sung by Sekkizar in Periya Puranam in Tamil. They revived and spread Bhakti movement between fifth and ninth centuries. They belong to all castes. Of them three are women.

We know the date of Sambandar, the greatest of the 63 saints. He lived around 650 CE. Kannappa Nayanar who was a hunter gave his eye to Lord Siva and attained Mukti/liberation. Woman saint Karaikkal Ammaiyar became famous and worshipped in southeast Asian countries too. Of the Four Great Saivite Saints, Manikkaavasagar is left out and not included in the list of 63. This problem has been debated until this day without a definite conclusion. But his poems are included in the Saivite Tirumurais (Scriptures or Hymns on Lord Siva). Indirect references show that he lived before 600 CE.

****

Narada

A great rishi who undertook frequent trips between heaven and earth.

Narada Muni is portrayed as the quintessential traveller, a supreme devotee of Vishnu, and the “first investigative journalist” of the cosmos. He was a messenger of divine wisdom, an Inter Galactic Traveller. He delivered essential philosophical lessons and stories of devotion to many.

He visited the Pandavas a number of times specially during the period of their banishment in the forest and gave them good advice. About righteous conduct and harmonious living. He illustrated his points by appropriate anecdotes  from past history/puranas. He also tried to persuade Dhritarashtra  to keep his son Duryodhana  in check and make peace with the Pandavas.

Nārada (नारद) was one of the twelve, who knew the dharma ordained by Hari; a celibate; an attendant of Hari; was taught the bhāgavata by the father; and he gave it in his turn to Vyāsa. Wherever he  goes he will create a problem and that will bring something good; end justifies means was his policy.

He was in the company of Bharata when he recited the Nāṭyaveda, according to the Nāṭyaśāstra chapter 35.

He was a celebrated Devarṣi (deified saint or divine sage). He is one of the ten mind-born sons of Brahmā, being supposed to have sprung from his thigh (Manusmṛti 1. 35). He is represented as a messenger from the gods to men and vice versa and as being very fond of promoting discords among gods and men; hence his epithet of Kalipriya or kalahapriya. He is said to have been the inventor of the lute or Vīṇā. He is also the author of a code of laws which goes by his name.

In Tamil literature, he was referred to in Tamil epic Silppadikaram as Naradar Veenai (Veena of Narada). He always travelled with his Veena singing the glory of Vishnu.

Many people born later also had his name. So we find many books in his name. But the original Narada is attributed with one famous book, Narada Bhakti Sutra.

Narada Bhakti Sutra has 84 aphorisms on the nature of Bhakti and the condition of Bhaktas/devotees. Swami Vivekananda has explained it in good English. (see my blogs for more details).

***

Narakasura

Asura killed by Lord Krishna and that day is celebrated as Deepavali (Diwali) in Tamil Nadu.

Narakasura was the son of Goddess earth, (referred to as Dharthi), by Lord Vishnu himself during his Varaha (boar) avatar. It was foretold that he would be destroyed by a later incarnation of Vishnu. His mother, the earth, sought the boon from Vishnu that her son should have a long life, and that he should be all powerful. Vishnu readily granted these boons.

Narakasura became evil, in association with another Asura named Bana. Drunk with power, as he knew himself to be unrivalled in prowess, he brought all the kingdoms on earth under his control. Next he turned his eyes towards Swargaloka/ heaven. Even the mighty Indra could not withstand the assault of this son of Vishnu and had to flee the heavens. Now Narakasura had become the overlord of both the heavens and earth. His reign of oppression was in full swing. His capital was in modern Assam

Once granted immense power, he built a seemingly impregnable fortress, terrorized the three worlds, stole divine treasures (such as the earrings of Aditi), and imprisoned 16,000 celestial princesses

Divine Intervention: The tormented devas sought the help of Lord Krishna to defeat Narakasura.

The Battle: Accompanied by his wife Satyabhama—who was the earthly incarnation of Bhudevi—Lord Krishna rode to Pragjyotishapura to confront the demon.

The Final Blow: Because of the boon that only his mother could kill him, Satyabhama took the bow and struck the decisive blow, paving the way for Krishna to sever Narakasura’s head with his Sudarshana chakra.

Liberation: Following Narakasura’s defeat, Krishna liberated the 16,000 captive women and married them to restore their societal honour.

Festival of Lights: The triumph of good over evil that day is spiritually commemorated as Deepavali (Diwali), specifically the day of Naraka Chaturdashi

Sanskrit phrase 60,000 0r 16,000 means a lot, uncountable, innumerable. Even in English we use a million dollar question etc

***

Nikhumba

Several rakshasas had this name. one of them is referred to in Ramayana .

According to Mahabharata, Nikhumba was the father of demons Sunda and Upasunda who killed each other in an intoxicated fight to get hold of apsara

Tilottama . he was a descendent of Hiranyakasipu.

According to Ramayana,

Nikumbha (निकुम्भ).—A very mighty Rākṣasa. Son of Kumbhakarṇa (Rāvaṇa’s brother) by his wife Vajramālā. He had an elder brother called Kumbha.

When Kumbha was killed in the Rāma-Rāvaṇa war Nikumbha rushed to the front line and fought fiercely, and he was killed by Hanūmān. (Vālmīki Rāmāyaṇa, Yuddha Kāṇḍa, Canto 77).

Nikumbha (निकुम्‍भ): One of Ravana’s generals who led the rakshasas against the host of monkeys and was slain

When Indrajit, son of Ravana tried to do an all powerful Yaga to destroy Rama, timely intervention of Lakshmana spoiled it

According to Puranas

the “dreadful cave of Shatpura” is a foreboding site of deception and imprisonment famously linked to the powerful being Nikumbha.

According to ancient texts, Nikumbha—a powerful figure and lord of the Pisacas—used this cave to harbour captives. Its mythological significance centres around a few key details:

The Standoff: Nikumbha emerged from the dreadful cave wielding a thorn-covered club.

The Conflict: Upon stepping out, he was confronted in combat by Dhananjaya (Arjuna), who shot arrows from his Gandiva bow to block the thoroughfare.

Symbolism: The cave serves as an ominous backdrop for themes of entrapment and trickery during pivotal battles.

***

Nimi

Son of Dattatreya. He grieved greatly at the death of his son Shrimana and then he undertook various ritual for the eternal good of his son. It is said that this constituted the beginning of thee “Shraddha” ceremonies relating to death.

***

Nivatakavacha, Nivātakavacha

These innumerable Danavas/demons occupied a city which previously belonged  to Devas. Not being able to defeat the Nivatakavacha danavas, Indra sought the help of Brahma who said that Indra himself in another form would be able to defeat them. Thus it was when Arjuna  had come to the end of his five years stay in Swarga/heaven and was preparing to return to earth, Indra asked as a parting gift he should get rid of his enemies the Nivatkvachas.  Arjuna went to the abode of the Danavas with Matali as his charioteer and using various divine weapons obtained from heaven he defeated the  Nivatkvacha demons.

More  details

The nivatakavachas (Sanskrit: निवातकवच, romanized: Nivātakavaca, lit. ‘the impenetrable armoured ones’) are a sect of daityas, the children of Kashyapa and Diti, classified under the race of asuras in Hindu mythology. They are best known for their battles against Ravana and Arjuna, the latter of which caused their annihilation.[1]

Thirty million nivatakavachas were born in the daitya clan. Allied with the kalakeyas, they triumphed over the devas in battle. They are described to have been skilled in magic and warfare, wielding powerful weapons to defeat their foes.

From Ramayana

The nivatakavachas are said to have terrorised the world, living deep beneath the ocean, and residing in the city of Maṇimatī after securing boons from Brahma. In the Ramayana, Ravaṇa with his sons Meghanada, Atikaya, and with his army attacked these daityas, but found himself unable to defeat the sect after centuries of battle. The two sides finally formed an alliance after Brahma intervened.

From Mahabharata

In the Mahabharata, Indra sought the destruction of the nivatakavachas from his son, Arjuna, as his dakshina (honorarium). Describing the sect as his foes, he stated that the nivatakavachas lived in a fortress under the ocean, numbered thirty million, and were alike in shape, size, and prowess. To achieve this task, Indra sent his own charioteer, Matali, to drive Arjuna to the location of his foes. The devas offered Arjuna a conch named Devadatta, and Matali offered him ornaments that resembled his own. When the two reached the city of the daityas, they closed their gates, fearing that Indra himself had appeared to slay them. When Arjuna blew his conch, the nivatakavachas attacked him, loosing tridents, spears, and arrows upon him. Arjuna released arrows from his Gandiva, slaying the daityas in the thousands. The nivatakavachas rendered themselves invisible, and showered elemental attacks on Arjuna. The prince grew disheartened when he realised that he was unable to manoeuvre their attacks due to the intensity of their barrage.

Matali urged him to employ the thunderbolt missiles he had brought with him, which devastated the daityas, and defeated them. The daitya women sought shelter in their houses as Arjuna entered Maṇimatī, thinking that it looked better than the city of the devas. The charioteer explained that the city had previously belonged to the devas, but had been captured by the daityas following a boon granted to them by Brahma. Brahma assured Indra that the latter himself, in another form, would defeat the daityas, which had just transpired. He encouraged Arjuna to also lay waste to Hiranyapura, a neighbouring city of the danavas who opposed his father as well, which the prince achieved.

***

Nara Narayana

Nara-Narayana are twin sages and a twin-brother avatar of Lord Vishnu in Hinduism, representing the eternal connection between humanity (Nara) and divinity (Narayana). Together, they represent human effort and divine grace working in harmony to uphold righteousness (dharma

The Name: In Sanskrit, Nara means “human being” or “eternal spirit,” while Narayana refers to the Supreme Being (Vishnu).

Divine Origins: They were born as the sons of Dharma (the god of righteousness) and Murti (the daughter of Daksha).

Life of Penance: The twins famously traveled to the Badari hermitage (modern-day Badrinath) in the Himalayas. They engaged in severe austerities and deep meditation to defeat evil and preserve world order.

Mahabharata Connection: Hindus believe Nara and Narayana reincarnated as the heroes Arjuna (human) and Krishna (divine guide) during the events of the Mahabharata.

Iconography: In traditional art, Nara is usually depicted with two hands and wearing deer skin, while Narayana is portrayed with four hands, holding a mace, discus, conch, and lotus.

***

Narasimha

Narasimha is the fourth, half-man and half-lion avatar of Lord Vishnu, manifesting in the Satya Yuga to protect the devotee Prahlada by destroying the demon king Hiranyakashipu. By overcoming Hiranyakashipu’s invincibility boon at twilight on a threshold, this form symbolizes divine intervention that transcends conventional limitations to uphold dharma.

***

Nalanda

Nalanda was an acclaimed university, a large Buddhist monastery in the ancient kingdom of Magadha (modern-day Bihar) in India. The site is located about 95 kilometres southeast of Patna near the town of Bihar Sharif, and was a centre of learning from the fifth century CE to1200 CE. It is a UNESCO World Heritage Site.

 The highly formalized methods of Vedic learning helped inspire the establishment of large teaching institutions such as Taxila, Nalanda, and Vikramashila which are often characterised as India’s early universities. Nalanda flourished under the patronage of the Gupta Empire in the 5th and 6th centuries and later under Harsha, the emperor of Kannauj.The liberal cultural traditions inherited from the Gupta age resulted in a period of growth and prosperity until the ninth century. 

Muslims burnt the library

Historical consensus and primary records attribute the final destruction and burning of the Nalanda Mahavihara to a Turko-Afghan military general Bakhtiyar Khilji of the Delhi Sultanate in the late 12th century.

The Sacking (c. 1200 CE): During his conquests in northern and eastern India, Khilji famously led a marauding army that attacked and plundered several major Buddhist centers, including Nalanda, Vikramashila, and Odantapuri.

The Library Burning: Nalanda boasted a colossal collection of manuscripts housed in multi-story libraries known as RatnasagaraRatnadadhi, and Ratnaranjaka. The attackers set fire to the institution, with historical accounts stating the massive fires burned for three months.

While Khilji is widely cited for the fatal sacking and mass slaughter of the monks, historians and researchers point out that the destruction was not a one-time total evaporation:

Eyewitness Accounts: Tibetan monk Dharmasvamin visited the site in 1234 CE, nearly 40 years after Khilji’s campaign. He found the institution heavily ruined but still functioning, with a small fraction of about 70 monks being taught by a 90-year-old abbot.

Continuous Raids: Surviving monks and local patrons attempted to revive the university, but persistent raids by subsequent groups of Turkish soldiers over the following decades ultimately forced the permanent abandonment of the site

Tags- Nakkirar, Nalangu, Namam, Nalanda, Narasimha, Nivatakavacha, Narakasura, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 73; இந்து மத கலைச்சொல் அகராதி- 73

To be continued……………………

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-65; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post No.15,914)

Written by London Swaminathan

Post No. 15,914

Date uploaded in London –25 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஜோஷிமத், திருப்பிரிதி

தாயார் : ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்

மூலவர் : பரம புருஷன்

மண்டலம் : வட நாடு

இடம் : உத்தராகண்டம்

Part 65

திருப் ப்ரிதி

திருப்பிரிதி ஜோஷிமத் (ஜோதிர் மடம்) என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார்.

பத்ரிநாத் மற்றும் இமயமலை புனித யாத்திரைகளுக்கு ஜோஷிமத் நுழைவாயிலாகும். இப்பகுதி ஆழ்வார்களால் திருப்பிரிதி என்று மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

பத்ரிநாத் யாத்திரை செல்வோர் முதலில் ஜோஷிமத் செல்வார்கள் . இங்கிருந்து பத்ரிநாத் 42 கிலோமீட்டர் தொலைவுதான் என்றாலும் மலைப்பாங்கான பகுதி என்பதால் சாலைப் பயணத்துக்கு 3 மணி நேரம் பிடிக்கும் .

இங்கு திடீரென்ற ஏற்பட்ட வெள்ளம், பனிச் சரிவினால் 2021 ஆம் ஆண்டுமுதல் ஜோஷிமத் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நில அதிர்ச்சசி காரணமாக இப்பகுதிக்குப் பேராபத்து என்று பூகர்பவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இது ஆதிசங்கரர் நிறுவிய நான்கு முக்கிய மடங்களில் ஒன்றாகும். பத்ரிநாத் கோயில் குளிர்காலத்தில் மூடப்படும்போதுஇங்குள்ள ஜோஷிமத் கோவிலில்தான் உற்சவர் வழிபடப்படுகிறார்.

இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது.  இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு

****

Following pictures are frm Tulasidhalam website.

பாசுரங்கள்

958.  

வாலி மா வலத்து ஒருவனது உடல் கெட*  வரி சிலை வளைவித்து*

அன்று ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற*  இருந்த நல் இமயத்துள்*

ஆலி மா முகில் அதிர்தர அரு வரை*  அகடு உற முகடு ஏறி*

பீலி மா மயில் நடம் செயும் தடஞ் சுனைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே. (2)

959.  

கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய*  அரு வரை அணை கட்டி*

இலங்கை மாநகர் பொடிசெய்த அடிகள் தாம்*  இருந்த நல் இமயத்து*

விலங்கல் போல்வன விறல் இரும் சினத்தன*  வேழங்கள் துயர்கூர*

பிலம் கொள் வாள் எயிற்று அரி-அவை திரிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

960.  

துடி கொள் நுண் இடைச் சுரி குழல் துளங்கு எயிற்று*  இளங்கொடிதிறத்து ஆயர்*

இடி கொள் வெம் குரல் இன விடை அடர்த்தவன்*  இருந்த நல் இமயத்து

கடி கொள் வேங்கையின் நறு மலர் அமளியின்*  மணி அறைமிசை வேழம்*

பிடியினோடு வண்டு இசை சொல துயில்கொளும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

961.  

மறம் கொள் ஆள்அரி உரு என வெருவர*  ஒருவனது அகல் மார்வம் திறந்து*

வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்துள்*

இறங்கி ஏனங்கள் வளை மருப்பு இடந்திடக்*  கிடந்து அருகு எரி வீசும்*

பிறங்கு மா மணி அருவியோடு இழிதரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

962.  

கரை செய் மாக் கடல் கிடந்தவன்*  கனை கழல் அமரர்கள் தொழுது ஏத்த*

அரை செய் மேகலை அலர்மகள் அவளொடும்*  அமர்ந்த நல் இமயத்து*

வரைசெய் மாக் களிறு இள வெதிர் வளர் முளை*  அளை மிகு தேன் தோய்த்துப்*

பிரச வாரி தன் இளம் பிடிக்கு அருள்செயும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

963.  

பணங்கள் ஆயிரம் உடைய நல் அரவு அணைப் பள்ளிகொள்*  பரமா என்று*

இணங்கி வானவர் மணி முடி பணிதர*  இருந்த நல் இமயத்து*

மணம் கொள் மாதவி நெடுங் கொடி விசும்பு உற*  நிமிர்ந்து அவை முகில் பற்றிப்*

பிணங்கு பூம் பொழில் நுழைந்து வண்டு இசை சொலும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

964.  

கார் கொள் வேங்கைகள் கன வரை தழுவிய*  கறி வளர் கொடி துன்னிப்*

போர் கொள் வேங்கைகள் புன வரை தழுவிய*  பூம் பொழில் இமயத்துள்*

ஏர் கொள் பூஞ் சுனைத் தடம் படிந்து*  இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள்*

பேர்கள் ஆயிரம் பரவி நின்று அடிதொழும்*  பிரிதி சென்று அடை நெஞ்சே!     

965.  

இரவு கூர்ந்து இருள் பெருகிய வரை முழை*  இரும் பசி அது கூர*

அரவம் ஆவிக்கும் அகன்-பொழில் தழுவிய*  அருவரை இமயத்து*

பரமன் ஆதி எம் பனி முகில் வண்ணன் என்று*  எண்ணி நின்று இமையோர்கள்*

பிரமனோடு சென்று அடிதொழும் பெருந்தகைப்*  பிரிதி சென்று அடை நெஞ்சே! 

966.  

ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு*  உறு துயர் அடையாமல்*

ஏதம் இன்றி நின்று அருளும் நம் பெருந்தகை*  இருந்த நல் இமயத்து*

தாது மல்கிய பிண்டி விண்டு அலர்கின்ற*  தழல் புரை எழில் நோக்கி*

பேதை வண்டுகள் எரி என வெருவரு*  பிரிதி சென்று அடை நெஞ்சே!

967.  

கரிய மா முகில் படலங்கள் கிடந்து*  அவை முழங்கிட*

களிறு என்று பெரிய மாசுணம் வரை எனப் பெயர்தரு*  பிரிதி எம் பெருமானை*

வரி கொள் வண்டு அறை பைம் பொழில் மங்கையர்*  கலியனது ஒலி மாலை*

அரிய இன் இசை பாடும் நல் அடியவர்க்கு*  அரு வினை அடையாவே*  (2)

Tags- ஜோஷிமத், திருப்பிரிதி பாசுரம், Vishnu Temples, 108 “Divya Desams” in Pictures, part 65; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

To be continued…………………………………….

உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே (Post No.15,913)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,913

Date uploaded in London – 25 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே

டிங்கிரி டிங்காலே மீனாச்சி டிங்கிரி டிங்காலே!

ச. நாகராஜன்

நண்பர் ஆர். ரங்கராஜன் அனுப்பிய வாட்ஸ் ஆப் மெஸேஜைப் பார்த்து திடுக்கிட்டேன்.

தலைப்பைக் கொடுங்கள். கவிதை வரும் என்பது தான் செய்தி.

வெண்பா ஒரு வினாடியில் வந்து விடும் உங்கள் தலைப்பிற்கு ஏற்றபடி.

சரி, டெஸ்ட் செய்து தான் பார்ப்போமே என்று நான் எழுதிய பழைய கால வெண்பா ஒன்றின் ஈற்றடியை அனுப்பினேன்.

வந்தது பாருங்கள் ஒரு புதிய வெண்பா. அசந்து போனேன்.

இரண்டையும் கீழே தருகிறேன்:

தலைப்பு: பாட்டிற்கோ பாரதியே தான்

நான் இயற்றிய வெண்பா

செய்யுள் நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்

உய்யு(ம்)நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு

கூட்டிற்கோ தேன் கூடு கொட்டுதமிழ்ச் சந்தமொழி

பாட்டிற்கோ பாரதியே தான்!

கீழே உள்ளது AI கவிதை

காற்றினிலே செந்தமிழைக் காரிகையாய்ப் பாடிநின்ற ஆற்றல் மிகுபாரதி ஆங்கெழுதிக் – கூட்டிவைத்த பாட்டிற்கோ பாரதியே தான்பொருத்தம் பாரினிலே வேறொருவர் இல்லை விரைந்து.

அடுத்தாற்போல இன்னொரு தலைப்பைத் தந்தேன். ஒரு வினாடியில் வெண்பா வந்து விட்டது. அதையும் கீழே தருகிறேன்:

தலைப்பு: நெஞ்சினிலே நின்றாள் அவள்

கீழே உள்ளது AI கவிதை

கண்ணினிலே நின்றாள் கருத்தினிலே மேவினாள் நெஞ்சினிலே நின்றாள் நிலைபெறவே – நெஞ்சத்து அன்பினிலே என்றும் அமர்ந்தாள் உள் அன்புடையவளாய் இன்பமுமே தந்தாள் இனிது.

‘செத்தாண்டா கவிஞர் எல்லாம்’ என்று நண்பருக்கு மெஸேஜ் அனுப்பிய என் மனதில் தோன்றியது ஒரு  ஒரு பழைய கால திரைப்படப் பாடல்! (அன்பு எங்கே படம் -1958 வெளியீடு பாடலாசிரியர் வி. சீதாராமன் இசை: வேதா பாடியவர் டி.எம்.எஸ். நடிப்பு : எஸ்.எஸ். ராஜேந்திரன் 4.51 நிமிடப்பாடல் இது.)

உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே

டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே

சரி, எந்த இணையதளத்தில் இப்படிப்பட்ட வெண்பாக்களை உருவாக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இதோ இருக்கிறது இணையதள சைட்https://www.avalokitam.com/ai

முயன்று பாருங்கள். உடனே வரும் வெண்பா.

உங்கள் கருத்தையும் அனுப்புங்கள் tamilandvedas.com- க்கு!

**

Stars, Planets, Comets, Drones!Purananuru wonders 34; Tamil Encyclopaedia- 74 (Post.15,912)

Written by London Swaminathan

Post No. 15,912

Date uploaded in London –24 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru wonders-34, Tamil Encyclopedia-74; One Thousand Interesting Facts -Part 74

Item 579

Following details are from The Smil of Mrugan by Tamil scholar Kamil Zvelebil who quotes another Sril Lankan Tamil scholar:

Purananuru – early strata – Poems 248-357;

121  poems have defective colophons and so no heroes.

141 poems praising heroes- Paadaan Thinai in Tamil;

43 elegies; Kaiyarunilai in Tamil.

***

Item 580

Kings 18+13+12= 43

27 poems about  18 Cera Kings

74 poems about  13 Choza/Chola Kings

37 poems about  12 Pandya Kings

141 poems about  48 Chietains

Four philanthropists Pari (paari), Kari (kaari), Anji, Bekan – Four poems each;

157 poets sang 397 poems in Puram.

14 poems anonymous;

***

Item 581

Some poems are fully reflexive; i.e.deals with impermanence of life;

Modern attempts to read ethical and  moral motivation into the words of the bards are particularly strained if not irrelevant .

Copied by me (London swaminathan) on 5-3-1995.

***

IF YOU SEE ONLY NUMBERS, THEY DENOTE PURANANURU VERSES

Item 582

Angry poems –  Puram.197-210

Item 583

Sanskrit months- Thai/tishya- 70,

Tamil Sangam- 72

Handicapped –  20, 74,

Item 584

Drone, Pilotless plane- 27

Astronomers-30

Mars- 60

Saturn -117

Venus- Puram.35, 388, 117,385, 386, 397. Madurai-106-109; Pattina-1/2; Akam.17; Perum.318;Narri-230; Narri.356;

Mercury – Budhan- Paripatal 11.

Comet-117, 229.

Asura Guru Venus/Sukra, Deva Guru- Brhaspati Jupiter- Kali 99-1,2.

Seven Star- Sapta Rishi- Ursa Major- Narrinai- 231; Pari 5-37; Par.5-43

Kartika/ Six stars (Pleiades)- Pari.5-43; Murugu-255; Akam.141;

Onam/Sravana star- Madu590-591;

Star Arudra/ Betelgeuse- Pari 8-6; Kali 150-20;

Agastya star (canopus)- Pari.11-11

Star Arundh ati in Ursa Major- Puram 122; Akam.16; Pari.5-43; Perum.302; Ainkuru-442; Kali  2-21; Pathtru 89-19/20.

Rohini- Aldebaran-  Nedunal-161/163;Akam.136;

Makam star- Pattina.33/38;

Avittam/Sravishta, Bharani-Pari.11;

Anusham- Puram 229;

Zodiac- Puram.229

****

Item 585

World is a drama stage- 29

Great sins- 34

Monsoon as in Kalidasa’s Meghadhuta- 34, 66

Five headed snake- 37

Thumb high Valakhilya Rishis- 43,

Sand particles become pearls- 53 (as in Bhartruhari, Varahamihira etc)

Yavana/ Roman Wine- Puram 56,

Tali/ mangala sutra- 127,

Yupam – Yaga Yajna post- Puram.15, 224, 400

Tags- Puram, statistics, , Item 585 ,Purananuru wonders-34, Tamil Encyclopedia-74; One Thousand Interesting Facts -Part 74, Stars, Planets, Comets, Drones

To be  continued……………………

புறநானூறு புள்ளி விவரங்கள் ! -1(Post No.15,911)

Written by London Swaminathan

Post No. 15,911

Date uploaded in London –24 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சங்க இலக்கியத்தில் பதினெட்டு மேற்கணக்கு நூல்கள் உள. அவைகளை பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று கூறுவர். எட்டுத் தொகையில் மிக முக்கியமான நூல் புறநானூறு ; அது கிடைத்திராவிடில் பழங்காலத் தமிழ் நாட்டு மக்களின் வீரமும் கொடையும், பெரிய அரசர்களின் வாழ்வும் தெரியாமல் மறைந்து போயிருக்கும்  . புறநானூறு நூல் பற்றி அறிஞர்கள் உ.வே.சா, கைலாசபதி , கமில் சுவெலபில் தரும் தகவல்  இதோ :

முதல் பாடல் கடவுள் வாழ்த்து – சிவ பெருமானின் புகழ் நிறைந்தது   , பாரதம் பாடிய பெருந்தேவனார் , அதாவது மிஸ்டர் மஹாதேவன் –பாடியது .

****

இந்த நூல் ஹிந்து தர்மத்தின் நான்கு தூண்களான தர்ம, அர்த்த, காம , மோக்ஷம் என்ற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது . திருக்குறளை தர்ம அர்த்த காமம் என்று வள்ளுவன் பிரித்தது போல இதுவும் முப்பால் அடங்கியது .

இது பற்றி உ வே சாமிநாத அய்யர் கூறுவதாவது ,

இந்நூற் பிரதி ஒன்றின் தொடக்கத்தில் அற நிலை என்ற குறிப்பு இருந்ததைக்கொண்டு , இந்நூல் அற நிலை, பொருள் நிலை, இன்ப நிலை என முப்பெரும் பகுதியுடையதாக ஊகிக்கலாம் .

— காண்க எஸ். ராஜம் வெளியீடு , மர்ரே அண்டு கம்பெனி, 1958.

****

வெள்ளைக்காரனுக்கு வேட்டு

சில திராவிட அரை வேக்காடுகளும் , தத்துப்பித்து நடிகர் நடிகையரும் வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒன்றுபடுத்தினான் என்று அவ்வப்போது உளறுவதை பத்திரிகைகளில் காணலாம் . இதற்கு வேட்டு வைக்கும் பாடல்கள்  2, 6 ,17,  67, முதலிய பாடல்கள் ஆகும்; ஏக பாரதம் என்ற கருத்து அவைகளில் உள.

இன்னும் சில திராவிட அசடுகள் ஆரிய- திராவிடம் என்று பேசி தமிழர்களை ஏமாற்றுவதைக் காண்கிறோம்;  முதல் பாடலிலும் கடைசி பாடலிலும் நால் வேதமும் வேள்வியும் புகழப்படுகிறது .

***

நச்சினார்க்கினியர் மறுப்பு

மதுரை பாரத்வாஜக் கோத்திர பார்ப்பான் பெயர் நச்சினார்க்கினியர்; உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று புலவர்கள் போற்றிய பிராமணன் அவன்.

ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் திணை, துறை, பாடப்பட்டோர் , பாடினோர், பாடப்பெற்ற சூழ்நிலை , இவற்றை விளக்கும் குறிப்புகளும் உள்ளன . இவற்றுள் தினை, துறை, பற்றிய குறிப்புகள் அவ்வப்பாட்டிற்குப் பொருத்தமாக அமைந்தனவல்ல  என்று நச்சினார்க்கினியர் கருதுகிறார் (தொல்.பொருள். புறத்.35) .அன்றியும், புறத்திணை இயல் உரையில், இப்புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வேறு திணை,  துறைகளுக்கு உதாரணமாகக் காட்டியதோடு புறநானூற்றுக் குறிப்பை மறுத்தும் உள்ளனர். (சூ 5, 8, 1 உரை). ஆனால் பாடினோர் முதலியனாரைப்பற்றிய  குறிப்புகள் மறுக்கப்படாமையால் , அவை பழைய வரலாற்றைத் தெரிந்து எழுதிய சிறந்த குறிப்புகளாகவே கருதத்தக்கன.

— காண்க எஸ். ராஜம் வெளியீடு , மர்ரே அண்டு கம்பெனி, 1958.

***

பழைய உரைகள் கிடைக்கவில்லை!

இந்நூலின் முதல் 266 பாடல்களுக்கு உரிய பழைய உரை கிடைத்துள்ளது .  இவ் உரையாசிரியர் , சில பாடல்களுக்கு எழுதிய விசேடக்குறிப்புகளிலிருந்து , இவ்வுரைக்கும் முந்திய உரை ஒன்று  இந்நூலுக்கு இருக்கவேண்டும் என்றும் தெரிய வருகிறது .

***

 கிடைக்காத பாடல்கள்

ஆராய்ச்சியாளரின் ஒரு சிலர் கடவுள் வாழ்த்தைத் தவிர்த்து 400 பாடல்கள் இதில் இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர் ;இவற்றுள் 267, 268 பாடல்கள் முற்றும் மறைந்து போயின; இப்பாடல்களுக்குரிய பழைய உரைகள் கூடக்கிடைக்கவில்லை . 266 ஆம் பாடலுக்குப் பிற்பகுதி பாடல்களில் பலவற்றின் அடி  , சீர் , முதலியனவும்  சிதைவுபட்டுள்ளன.

சிதைந்த பாடல்கள் -44;

பாடிய புலவர்கள் – 157  பேர் ;

பெண் புலவர்கள் -15;

அரசர்/புலவர் பாடல்கள் -14;

***

கைலாசபதி கருத்து

மிகப்பழைய பாடல்கள்- 248-357;

121 பாடல்களின்  கொளு -வில் முழு விவரம் இல்லாததால் பாடப்பட்டோன் யார் என்று தெரியவில்லை;

புகழும் பாடல்கள்-141;

இரங்கல் / அழுகைப் பாடல்கள்- 43;;

18 சேர மன்னர்கள் பற்றி 27 பாடல்கள்;

13 சோழ மன்னர்கள் பற்றி 74 பாடல்கள்;

12 பாண்டிய மன்னர்கள் பற்றி 37 பாடல்கள்;

48 குறுநில, வேளிர் தலைவர்கள் பற்றி 141 பாடல்கள்;

காரி, பாரி, அஞ்சி, பேகன்  ஒவ்வொருவருக்கும் 4 பாடல்கள்;

Tags- புறநானூறு ,புள்ளி விவரங்கள்! -1

To be continued…………………….

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-64; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,910)

Written by London Swaminathan

Post No. 15,910

Date uploaded in London –24 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

துவாரகா

தாயார் : ஸ்ரீ கல்யாண நாச்சியார்

மூலவர் : கல்யாண நாராயணன்

திருத் துவாரகை, மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில் 73-வது திவ்ய தேசமாகும். குஜராத் மாநிலத்தின் தேவபூமி துவாரகை மாவட்டத்தில், கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தத் தலம், ‘ஜகத் மந்திர்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது முக்தி தரும் ஏழு மோட்ச நகரங்களில் ஒன்றாகும்.

மூலவர் கல்யாண நாராயணர் (துவாரகாதீசன்) கருப்பு நிறத்தில், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

தாயார்: கல்யாண நாச்சியார் (ருக்மணி தேவி).

தீர்த்தம்: கோமதி நதி மற்றும் சமுத்ர சங்கமம்.

விமானம்: ஹேமகூட விமானம்.

பாசுரங்கள்: பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

துவாரகாதீசர் கோயில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது மற்றும் நான்கு முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள ஆலயம் 16-ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது.இங்குள்ள 56 படிகளைக் கடந்து ‘சொர்க்க துவார’ (Swarga Dwar) வழியாக கோயிலுக்குள் செல்ல வேண்டும்.மூலவருடன் பலராமர், பிரத்யும்னன், அநிருத்தன் மற்றும் பல தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.

ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட நான்கு மடங்களில் ஒன்றான ‘துவாரகா பீடம்’ இங்கே அமைந்துள்ளது.

துவாரகா ரயில் நிலையம் அருகில் உள்ளது. அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.விமான நிலையம்: ஜாம்நகர் விமான நிலையம் (சுமார் 137 கி.மீ) மற்றும் போர்பந்தர் விமான நிலையம் அருகிலுள்ளது.

உண்மையான துவாரகை கடலுள் மூழ்கிவிட்டது. கிருஷ்ணனின் பேரனான வஜ்ரநாபி என்பவனால் கி. மு 400 இல் கட்டப்பட்டதாகக் கூறும் இந்தக்கோவிலை இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்றே அழைக்கிறார்கள். இப்போதுள்ள கோவிலும் நான்காவது முறையாக 16 ஆம் நூற்றாண்டில் மேலைச் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும். கடந்த 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் கோளாலும் பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணர், துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியது.துவாரகா கோவிலுக்கு இரண்டு நுழைவு வாசல்கள் உள்ளன. இதன் வட வாசலை மோட்ச வாசல் என்று அழைக்கின்றனர். இந்த வாசல் வழியாக சென்றால் மூலஸ்தானத்தை அடையலாம். மற்றொரு வாசலான தெற்கு நுழைவு வாசலுக்கு சொர்க்க வாசல் என்று பெயர். இதன் வழியாக சென்றால் கோமதி நதியை அடையலாம். செளலக்கிய முறையிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இது சுண்ணாம்புக்கல் மற்றும் மணல்கற்களால் கட்டுப்பட்டுள்ளதாகும். ஐந்து அடுக்குகளைக் கொண்ட இக்கோவில் 78.3 மீட்டர் உயரம் கொண்டதாகும்.துவாரகா கோவிலின் கருவறையில் அமைந்துள்ள மூலவர் விக்ரஹம் சாளகிராமத்தால் ஆனது. பார்ப்பதற்கு இது கருங்கல்லால் ஆன விக்ரஹம் என்றே காட்சி தோன்றும். துவாரகா கோவிலின் உச்சியில் ஆரஞ்சு, மஞ்சள், நீலம் என பல வண்ணங்கள் கலந்த கொடி ஒன்று எப்போதும் பறந்து கொண்டே இருக்கும். இது சூரியன், சந்திரன் இங்கு வசிப்பதன் அடையாளமாக உள்ளது. இந்த கொடியானது குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படுகிறது.

கிருஷ்ணனின் கையில் எப்போதும் ஓயாது சுழன்று கொண்டிருக்கும் சுதர்சன சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது பல அசுரர்களை போரில் வென்று, வதம் செய்த மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இந்த சுதர்சன சக்கரம் பல நூற்றாண்டுகளாக துவாரகா கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. இந்து புராணங்களின் படி, கிட்டதட்ட 36 ஆண்டுகளுக்கும் மேல் கிருஷ்ணன் துவாரகையை ஆட்சி செய்துள்ளார். துவாரகையில் கிருஷ்ணன், ருக்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. ருக்மணி, கிருஷ்ணன் எட்டு மனைவிகளில் ஒருவர்.பஞ்ச துவாரகா என்று, ஐந்து கிருஷ்ணர் கோவில்களை உள்ளடக்கிய பயணம் ஒன்று சொல்வதுண்டு, அவற்றில், இந்த கோமதி துவாரகா என்னும் துவாரகநாத்ஜீ கோவில், பேட் துவாரகா, ஸ்ரீநாத்ஜீ என்ற நாத் துவாரா, ரண சோடராய் ஜீ என்ற டாகூர் துவாரகா மற்றும் துவாரகீஷ் என்ற காங்கோர்லி கோவில் ஆகியவை உள்ளன. இவற்றில் நாத் துவாரகா (ஸ்ரீநாத் ஜீ), காங்கோர்லி (துவாரகீஷ்) என்ற இரண்டும் ராஜஸ்தானில் உள்ளன. மற்றவை குஜராத்தின் மற்ற பகுதிகளில் உள்ளன.இதனை தவிர, முக்தி துவாரகா, ருக்மணி துவாரகா, சுதாமா துவாரகா மற்றும் மூல துவாரகா என்ற நான்கினை சேர்த்து நவ துவாரக என்றும் கூறப்படுகிறது. 

துவாரகை என்றால், கோமதி துவாரகையையும், பேட் துவாரகையையும் மட்டுமே குறிக்கும். இங்கு அவனது அஷ்ட மகிஷிகளுக்கும், அண்ணன் பலராமனுக்கும், குரு துர்வாசருக்கும் தனித்தனியே சன்னதிகள் உண்டு. கண்ணன் சன்னதிக்கு எதிரே அவன் தாயார் தேவகிக்கு ஒரு சன்னதி உண்டு. அதிகாலையில் எம்பெருமான் கண் விழிப்பது தாயின் திருமுகத்தில் தான்.

.க்ருஷ்ணனுக்குச் செய்யும் உணவும் அலங்காரமும் விடாமல் செய்து கொண்டே இருக்கிறார்கள். அரண்மனையில் கொடுப்பது போல், 56 வகை உணவுகள் கொடுத்து ஒவ்வொரு மணியும் உடை மாற்றுகிறார்கள்.

காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்றழைக்கிறார்கள். அப்போது தங்கப்பல்குச்சியால் பல் விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். காலை 7.30 க்குள் தீர்த்தமும் பிரசாதமும் அமுது செய்த படுகிறது. உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கெல்லாம் சர்க்கரை பால், தயிர் போன்றன பரிமாறுகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலிற் கலந்து சிற்றுண்டியும் அமுதும் செய்கிறார்கள். அதன்பிறகு பலவகை பழங்கள். இவ்வாறு சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். செரித்தலுக்கான லேகியம் தருகிறார்கள். இதன்பின் கண்ணன் சயனம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு செய்யப்படும் திருவாராதனத்திற்கு போக் என்று பெயர், ஒரு நாளைக்கு பண்டா போக், ஸ்நான் போக், ஷ்ருங்கார் போக், ராஜ் போக், உத்தப்பன் போக், சயன் போக் என்று ஆறு காலங்கள். மதியம் உணவிற்கு பிறகு சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர்.

இங்கே, யாத்ரீகர்கள் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், கூட்டம் கூட்டமாக வருவதால் எந்நேரமும் இந்த திருக்கோவில் கலகலப்புடன் இருக்கிறது. இங்கு பெண்கள் ஆயர்ப்பாடி கோபிகைகள் போல் ஆடை அணிந்து வருவது ஒரு சிறப்பு,

இந்த கோவில் ஐந்து நிலைகளைக் கொண்டது, மற்றும் 72 சுண்ணாம்பு தூண்களில் உள்ளன. மேலும், இங்கு கோபுரத்தின் மொத்த உயரம் 157 அடி.

கோகுலாஷ்டமி அன்று ஆண்களும் பெண்களுக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட பானைகளை சுமந்து பாவன் பேடா என்ற நடனம் ஆடுவார்கள்.

காலையில் பால கிருஷ்ணனாகவும், மதியம் மஹாராஜாவாகவும் இரவில் எல்லோரும் வணங்கும் பூஜிக்கும் தெய்வமாகவும் அலங்காரம் நடக்கிறது. ஒவ்வொரு முறை ஆர்த்தி நடக்கும் போது அங்குள்ள பக்தர்கள் கண்ணனுக்கு திருஷ்டி சுற்றி போடுவது கண் கொள்ள காட்சியாக உள்ளது.

இங்கு கோமதி நதி கடலில் கலக்கும் இடத்தில துவாரகசிலா எனப்படும் தெய்வீக கற்கள் கிடைக்கின்றன. இது சாளக்ராமம் போல் வைத்து வீட்டில் பூஜை செய்கிறார்கள்.. இவற்றை தாயார் வடிவம் என்றும் போற்றுகிறார்கள். துவாரகசிலா  மகாலட்சுமியின் அம்சம்.

பம்பாய், ஆமதாபாத், வீராம்காம், ராஜ்கோட், ஜாம்நகர் வழியாக ஓகா துறைமுகம் செல்லும் ரயில்பாதையில் துறைமுகத்துக்கு சுமார் 20 மைலில் துவாரகா ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அங்கிருந்து 1 1/2 மைல் வண்டியில் போய், கோவிலை அடையலாம்.

ஜராஸந்தன், ஜனங்களுக்கு தொந்திரவு கொடுக்காமல் இருக்க, ஸ்ரீ க்ருஷ்ணன் சமுத்திர ராஜனிடம் இடம் கேட்டு, வாங்கி, விச்வகர்மாவைக் கொண்டு துவாரகையை ச்ருஷ்டித்ததாக ஐதீஹம். மோக்ஷத்துக்கு த்வாரமாக இருப்பதால் த்வாரகை என்ற பெயர் உண்டாயிற்று. கோவிலிலிருந்து பலபடிகள் இறங்கிச் சென்றால் எதிரே கோமதி நதி கடலில் சங்கமமாகும் இடத்திலிருந்து பஸ்ஸில் ஓகா துறைமுகம் சென்று, அங்கிருந்து விசைப்படகில் பேட் த்வாரகா (தீவு துவாரகை) என்ற தீவுக்குப் போகலாம். இதுதான் க்ருஷ்ணன் திருமாளிகை. சுமார் 1.500 க்ருஹங்கள் இங்கே இருக்கின்றன. காலை 5 மணிமுதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஸேவையாகும். இங்குள்ள மூலவர் (த்வாரக் நாத்ஜீ) சங்குசக்ர கதாதாரியாக ஸேவை ஸாதிக்கிறார். மூன்று மைல் தூரத்தில் சங்க தீர்த்தம் அற்புதமாயிருக்கிறது. அலங்காரம் நம் எதிரிலேயே நடக்கிறது

****

பாசுரங்கள்

333.  

பொல்லாவடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப்*  புணர்முலைவாய்மடுக்க-

வல்லானை*  மாமணிவண்ணனை*  மருவும்இடம்நாடுதிரேல்

பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு*  பௌவம்எறிதுவரை*

எல்லாரும் சூழச்சிங்காசனத்தே*  இருந்தானைக்கண்டாருளர். 

398.  

திரை பொருகடல் சூழ் திண்மதிள் துவரைவேந்து*  தன்மைத்துனன் மார்க்காய்*

அரசினையவிய அரசினையருளும்*  அரிபுருடோத்தமன் அமர்வு*

நிரைநிரையாக நெடியனயூபம்*  நிரந்தரம் ஒழுக்குவிட்டு*  இரண்டு-

கரைபுரை வேள்விப்புகை கமழ்கங்கை*  கண்டமென்னும் கடிநகரே.

507.  

சுவரில் புராண! நின் பேர் எழுதிச்*  சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்*

கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்*  காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா*

அவரைப் பிராயம் தொடங்கி*  என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்*

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்*  தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.  

541.  

ஆவல் அன்பு உடையார்*  தம் மனத்து அன்றி-

மேவலன் விரை சூழ்*  துவராபதிக்-

காவலன்,கன்று மேய்த்து விளையாடும்*

கோவலன்வரில்*  கூடிடு கூடலே!*

 625.  

கூட்டில் இருந்து கிளி எப்போதும்*  கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்*

ஊட்டக் கொடாது செறுப்பனாகில்*  உலகுஅளந்தான்! என்று உயரக் கூவும்*

நாட்டில் தலைப்பழி எய்தி*  உங்கள் நன்மை இழந்து தலையிடாதே*

சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்*  துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்*.   

1504.  

முலைத் தடத்த நஞ்சு உண்டு துஞ்சப் பேய்ச்சி*  முது துவரைக் குலபதி ஆய் காலிப்பின்னே*

இலைத் தடத்த குழல் ஊதி ஆயர் மாதர்*  இன வளை கொண்டான் அடிக்கீழ் எய்தகிற்பீர்*

மலைத் தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய*  வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னிநாடன்*

சிலைத் தடக் கைக் குலச் சோழன் சேர்ந்த கோயில்*  திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

1521.  

ஓடா அரி ஆய்*  இரணியனை ஊன் இடந்த*

சேடு ஆர் பொழில் சூழ்*  திருநீர்மலையானை

வாடா மலர்த் துழாய்*  மாலை முடியானை*

நாள்தோறும் நாடி*  நறையூரில் கண்டேனே.  

2452.  

சேயன் அணியன்*  சிறியன் மிகப்பெரியன்*

ஆயன் துவரைக்கோனாய்*  நின்ற மாயன்*  அன்று

ஓதிய*  வாக்குஅதனைக் கல்லார்*  உலகத்தில்

ஏதிலர்ஆம்*  மெய்ஞ்ஞானம் இல். 

3260.  

அன்னை என் செய்யில் என்?*  ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்*

என்னை இனி உமக்கு ஆசை இல்லை*  அகப்பட்டேன்*

முன்னை அமரர் முதல்வன்*  வண் துவராபதி-

மன்னன்*  மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே*.  

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-64; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் , துவாரகா, துவாரகை, துவரை

To be continued………………………