புறநானூற்றில் சாமுத்ரிகா லக்ஷணம் (Post No.15,705)

Written by London Swaminathan

Post No. 15,705

Date uploaded in London –6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

புறநானூற்றில் வரும் ஒரு பாடலுக்கு உரைகாரர்கள் சாமுத்ரிகா லட்சணத்தைக் காட்டியுள்ளனர். தோல் உரித்த உடும்பு போல எலும்புகள் தெரியும் ஏழைப் பாணனை ஒரு புலவர் ஆற்றுப்படுத்துகிறார் ; அவருக்கு உதவக்கூடிய மன்னன் செம் பொறி படைத்த ஆகம் / மார்பினை உடையவன் என்கிறார் ; இதற்கு உரைகள் எழுதியோர் பொறி என்ற சொல்லுக்குத் தமிழில் லெட்சுமி என்ற பொருள் இருப்பதைக் காட்டிவிட்டு மார்பில் மூன்று வரிகள் இருப்பதால் அவன் மார்பினை (ஆகம் ) செம்பொறி என்றார் புலவர் என்கின்றனர்

இவ்வாறு மூன்று வரிகள் கழுத்தில் இருந்தால் அவள் தேவிக்குச் சமமான உத்தம லட்சணம் உடையவள் என்று லலிதா சஹஸ்ரநாம மும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரியும் கூறுகிறது ; இது சாமுத்ரிகா லட்சண விளக்கம்.

மன்னரை விஷ்ணுவுக்கு ஒப்பிடுவதைக் காளிதாசன் நூல்களிலும் பிற நூல்களிலும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளிலும் காணலாம் ; அவர்கள் ஆளும் ராஜ்யத்தை ராஜ்ய லட்சுமி என்றும் போற்றுவார்கள் ; ஏனெனில் விஷ்ணுவின் மார்பில் லட்சுமி வசிக்கிறாள் என்று இந்து மத புராணங்கள் பாடுகின்றன

பூவெனப்படுவது பொறி வாழ் பூவே

என்ற பொன் மொழியையும் உரைகாரர்கள்-சுட்டிக் காட்டுகின்றனர்

பொறி= லட்சுமி

இதோ அந்த புறநானூற்றுப் பாடல்:

புறநானூறு 68, பாடியவர்: கோவூர் கிழார், பாடப்பட்டோன், சோழன் நலங்கிள்ளி, திணை: பாடாண், துறை: பாணாற்றுப்படை

1

உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,

சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து

ஈங்கு எவன் செய்தியோ பாண, பூண் சுமந்து,

2

அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து  5

மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்

3

ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை,

புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்

சுரந்த காவிரி மரங்கொல் மலி நீர்

மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்,  10

உள் பகை ஒரு திறம் பட்டெனப்

4

புள் பகைக்கு

ஏவான் ஆகலின் சாவேம் யாம் என,

நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்பத்,

தணி பறை அறையும் அணி கொள் தேர்வழிக்,

கடுங்கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த 15

நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை

நெடுநகர் வரைப்பில் படுமுழா ஓர்க்கும்

உறந்தையோனே குருசில்,

பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே

இதே பாடலில் பஞ்சாங்கத்தில் போட்டுள்ள பஞ்ச பக்ஷி சாஸ்திரத்தையும் புள் பகை என்ற சொற் களால் புலவர் சுட்டிக்காட்டுகிறார்.

***

செளந்தர்யலஹரி பாடல் 69

க³லே ரேகா²ஸ்திஸ்ரோ க³திக³மககீ³தைகநிபுணே

   விவாஹவ்யானத்³த⁴ப்ரகு³ணகு³ணஸங்க்²யாப்ரதிபு⁴꞉ .

விராஜந்தே நானாவித⁴மது⁴ரராகா³கரபு⁴வாம்ʼ

   த்ரயாணாம்ʼ க்³ராமாணாம்ʼ ஸ்தி²திநியமஸீமான இவதே

பொருள்: தாயே!, இசையில் கதி, கமகம், கீதம் ஆகியவற்றில் ஒப்பில்லாத திறமை வாய்ந்தவளே! உன்னுடைய   கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் (மடிப்புகள்), மூன்று சுவரங்களுக்கு (சங்கீதத்தில் ஷட்ஜம, மத்யம, காந்தார ) எல்லைக் கோடுகளாகத் திகழ்கின்றன. இந்த மூன்று ரேகைகளும், சிவபெருமானுடனான திருமணத்தின்போது கட்டப்பட்ட மங்கள சூத்திரத்தின் (தாலி) எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் சாட்சிகள் போல உள்ளன;

இந்த பாடல், அன்னையின் கழுத்து அழகையும், அவளின் சங்கீத ஞானத்தையும், சிவனுடன் அவளுக்கு இருக்கும் திருமண பந்தத்தையும் போற்றுகிறது. மூன்று ரேகைகள் என்பது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தில் உத்தம ஜாதிப் பெண்களின் அம்சமாகச் சொல்லப்பட்டுள்ளது

இதே கருத்து இடுப்பிலுள்ள மூன்று கோடுகளாக 80-ஆவது ஸ்லோகத்தில் வருகிறது.

சௌந்தர்ய லஹரியின் 80-வது பாடல், அம்மனின் அழகு மற்றும் அவளது திருமேனியின் சிறப்புகளை வர்ணிக்கிறது. த்ரிவலி எனப்படும் மூன்று மடிப்புகள் மற்றும் தளிர் போன்ற மார்பகங்களின் அழகை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது.

कुचौ सद्यःस्विद्यत्तटघटितकूर्पासभिदुरौ

कषन्तौ दोर्मूले कनककलशाभौ कलयता

तव त्रातुं भङ्गादलमिति वलग्नं तनुभुवा

त्रिधा नद्धं देवि त्रिवलि लवलीवल्लिभिरिव ॥

குசௌ ஸத்ய:ஸ்வித்யத்தடகடிதகூர்பாஸபிதுரௌ

கஷந்தௌ தோர்மூலே கனககலஶாபௌ கலயதா ।

தவ த்ராதும் பனகாதலமிதி வலக்னம் தனுபுவா

த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீவல்லிபிரிவ ॥॥

ஹே பராசக்தி!

நீ உன் கணவர் பரமேஸ்வரரின் பெருமைகளை நினைத்து நினைத்து பூரிப்பு அடைவதினால், உன்னுடைய தேகம் வியர்வையில் நனைந்து போகின்றது. அப்போது  விம்மும் தங்கக் கலசங்கள் போன்ற உனது ஸ்தனங்கள், உனது ரவிக்கையையும் கிழித்துக் கொண்டு  இடுப்பையும் ஒடித்து விடுமோ என்ற பயத்தில், உன்னுடைய  சரீரத்தை உருவாக்கிய மன்மதன், உனது இடுப்பு ஓடியாமல் இருக்கும்பொருட்டு மூன்று ரேகைகளைப்  போன்று மூன்று மடிப்புக்களையும் ஏற்படுத்தி உள்ளான் என்று தோன்றுகின்றது.

இதே விஷயம் லலிதா சஹஸ்ரநாமத்திலும் இருக்கிறது.

******

இன்னுமொரு பாடல்:

தாள் தோய் தடக்கை  = ஆஜானு பாஹும்

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம் சீதாபதீம்

ரகு குலான்வய ரத்னதீபம்

ஆஜானு பாஹீ மரவிந்த தளாய தாக்ஷம்

ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.”

Sri Raghavam dasarathatmaja maprameyam

Sitapatim raghuvaranvaya ratnadipam

Ajanubahum aravinda dalayataksam

Ramam nisacara vinasakaram namami “

இந்த வரிகள் பகவான் ஸ்ரீ ராமரை வர்ணிக்கும் புகழ்பெற்ற ஸ்லோகம்.

லவகுசா திரைப்படத்திலும் இந்த ஸ்லோகம் வருகிறது சம்ஸ்க்ருத இலக்கியம் முழுதும் இந்த ஆஜானு பாஹும்  என்பதை மன்னர்க்கு வருணனையாக – குறிப்பாக ராமபிரானுக்கு – ப்பாடி  இருக்கிறார்கள்.

பொருள்:

ஆஜானுபாஹும்= (Ajaanubaahum): முழங்கால் வரை நீண்ட கைகளை உடையவர் (நீண்ட புஜங்களை உடையவர்).அரவிந்த லோசனம் (Aravinda Lochana): தாமரை போன்ற கண்களை உடையவர் (அரவிந்தம் = தாமரை, லோசனம் = கண்).ராமம்: ராமனாகிய,நிசாசர வினாசகரம் (Nishachara Vinashakaram): ராக்ஷசர்களை (நிசாசரர்) அழிப்பவர்.

பொதுப்பொருள்:

முழங்கால் வரை நீண்ட கைகளையும், தாமரை போன்ற கண்களையும் உடையவரும், ராக்ஷசர்களை அழிப்பவருமான ராமனை வணங்குகிறேன்.இது பொதுவாக ராமனின் அழகையும், வீரத்தையும் போற்றும் ஸ்லோகமாக பாடப்படுகிறது.

தமிழில் இதை தாள் தோய் தடக்கை ( ஆஜானு பாஹும்) என்று மொழிபெயர்த்துப் பாடி இருக்கிறார்கள்; ஆண்களுக்கான சாமுத்ரிகா லட்சணத்தில் இது ஒரு அம்சம் ; தாமரை இதழ் போன்ற கண்கள் பொதுவாகப் பெண்களுக்கு தமிழில் பயன்படுத்தப்படுகிறது ஆயினும் ராமர் ,கிருஷ்ணர் ஆகியோருக்கு இது சம்ஸ்க்ருதத்தில் நிறைய இடங்களில் வருகிறது

ஆஜானுபாஹும் /தாள் தோய் தடக்கை என்பது சங்க இலக்கியங்களில், குறிப்பாகப் புறநானூற்றில் பாண்டிய மன்னர்களைக் பாடிய இடத்தில் வருகிறது ; இது ஒரு உத்தம இலக்கணம்;  கைகள் முழங்கால் வரை நீண்டிருப்பது வலிமை மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக இந்துக்களால் போற்றப்பட்டது.

புறநானூறு 59

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் இது புலவர் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடிய பாடல்

ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,

தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!

வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;

தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்

காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்

ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு;

திங்கள் அனையை, எம்மனோர்க்கே.

புறநானூறு (59) சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்ற பாண்டிய மன்னனை, புலவர் “தாள் தோய் தடக்கைத் தகை மாண் வழுதி” (முழங்கால் வரை நீண்ட பெரிய கைகளை உடைய, தகுதியால் மாட்சிமைப்பட்ட பாண்டியனே) என்று புகழ்கிறார். , அம்மன்னன் பகைவரை ஞாயிறு போல் எரிப்பவன் என்றும் புகழ்கிறார்.

மன்னர்களை சூரிய சந்திரனுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ஒப்பிடுவதைக் காளிதாசன் நூல்களில் காண்கிறோம்.  இதைச் சங்க இலக்கியத்திலும்  காணலாம். ஆகவே இமயம் முதல் குமரி வரை இந்துக்கள் ஒரே பண்பாட்டினைக்  கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது சங்க இலக்கியத்தின்  30,000 வரிகளில் புத்தரோ மஹாவீரரோ கிடையாது ; இந்து மத தெய்வங்களும் புராணக்கதைகளும் மட்டுமே 200 முதல் 300 பாடல்களில் காணக்கிடக்கின்றன; ஏனையவை மத சம்பந்தம் இல்லாத வாழ்க்கைக் குறிப்புகளே!

—subham—

Tags- புறநானூற்றில், சாமுத்ரிகா லக்ஷணம் ,செம் பொறி ஆகம் , லட்சுமி வசிக்கும் மார்பு, பூவெனப்படுவது பொறி வாழ் பூவே ,மூன்று வரிகள் ,தாள் தோய் தடக்கை  ,ஆஜானு பாஹு, சௌந்தர்ய லஹரி

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60 (Post No.15,704)

Rani Mangammal.

Written by London Swaminathan

Post No. 15,704

Date uploaded in London –6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மந்தபால

மஹாபாரதத்திலுள்ள ஒரு வினோதமான ரிஷியின் கதை. குழந்தைகள் உனக்குப் பிறக்காததால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்ட ரிஷி இவர். அடுத்த ஜென்மத்தில் அவர் ஆண்பறவையாகப் பிறந்து ஜரிதா என்னும் பெண் பறவையின் மூலம் நான்கு பறவைகளைப் பெற்றார் . பின்னர் ஜரிதாவை விட்டுவிட்டு லபிதா பறவையுடன் வாழ்ந்தார் ; காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்னனும் எரிக்கப்போகும் செய்தியை அறிந்து 4 பறவைக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஜரிதாவிடம் திரும்பி வந்து காட்டின் வேறு பகுதியில் சுகமாக வாழ்ந்தார் .

***

மாண்டவ்ய ரிஷி  / ஆணி மாண்டவ்ய

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு.  இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

ஆணி மாண்டவ்ய ரிஷி (Mandavya Rishi), அணி மாண்டவ்யர் (Aṇi Māṇḍavya) என்றும் அழைக்கப்படுபவர்  ஒரு முனிவர் ஆவார். அவருடைய கதை  மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில்  வருகிறது  மாண்டவ்ய ரிஷி இரு கைகளையும் உயரத்  தூக்கியவாறு  தவத்தில் இருந்தார்; அப்போது அரண்மனையில் இருந்து அரசனின் பொருள்களைத் திருடியவர்கள் ஓடி வந்தனர்; பின்னால் சேவகர்கள் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்து முனிவர்களின் ஆசிரமத்துக்குள் பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டனர்;  திருடர்களைத் தேடி வந்த அரச சேவகர்கள் பல  கேள்விகளைக் கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை ஏனெனில் அவர் மெளன விரதத்தில் இருந்தார் . பின்னர் திருடர்களும் பிடிபட்டனர்; முனிவரிடம் திருட்டுப் பொருள்கள் இருந்ததால் அவரையும் திருடர்களுடன் மன்னர் முன்னால் நிறுத்தினர் ; ராஜாவும் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக்கொல்ல உத்தரவிட்டான் அவரைச் சூலத்தில் (Stake) ஏற்றித் தண்டித்தனர். திருடர்கள் அனைவரும் இறந்தனர் ; அணி மாண்டவ்யர் மட்டும் இறக்கவில்லை ; அவர் நிரபராதி என்று தெரிந்தவுடன் அவரைக் கழு மரத்திலிருந்து இறக்கியபோது கூரான ஆணி முனை ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவர் பெயருடன் ஆணியும் சேர்ந்து கொண்டது . தன் தவ வலிமையால் சூலத்தில் இருந்தும் உயிருடன் இருந்த அவர், யமதர்மனிடம் (மரண தேவன்) ஏன் தனக்குத் தண்டனை கிடைத்தது என்று கேட்டார். சிறுவயதில் பூச்சிகளைக் கொன்றதற்கான தண்டனை இது என்று யமன் கூறியதைக் கேட்டு, சிறு வயதில் அறியாமையால் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறி, யமனைப் பூமியில் மனிதனாகப் பிறக்கச் சாபமிட்டார். இதன் காரணமாகவே யமன் விதுரராகப் பிறந்தார் அவர் ஒரு பட்டுப்பூச்சியை வெறும் புல்லினால் குத்தி வேடிக்கையை பார்த்ததற்கு கிடைத்த தணடனை கழுமரம்!மண்டியா(கர்நாடகம்) நகரம்: மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமம் காவேரி நதிக்கரையில் இருந்ததாகவும், அந்த இடமே பின்னர் மண்டியா (Mandya) நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

***

மஹாலக்ஷ்மி: லட்சுமியின் பெயர் ; அஷ்ட லெட்சுமிகளின் விவரம் முன்னரே லெட்சுமி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

***

மஹா கால

சிவனின் பெயர் ; காலம் என்றும் காலன் என்றும் பொருள்; அதாவது எல்லோரின் , எல்லாவற்றின் முடிவுக்கு காரணமானவர் சிவ பெருமான் ; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்த தலங்களில் ஒன்றான உஜ்ஜைனி நகரத்திலுள்ளவர் மஹா காலேஸ்வர்அங்குள்ள ஷிப்ரா நதியில் ஸ்நானம் செய்து சிவலிங்கத்தைத் தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம்  செய்தபலன் கிடைக்கும் இந்த விவரம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது.

***

மகரிஷி / மஹரிஷி

தற்காலத்தில் ராமணரும் மனம் கடந்த தியான முறையைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியும் மகரிஷி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள்.

உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.

யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:

சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.

இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.

நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.

ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.

இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது.

சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.

தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.

தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.

ராஜ ரிஷிகளும் சப்த ரிஷிக்களும்

ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.

இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–

முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:

1.நீண்ட ஆயுள்

2.மந்திரங்களை காணும் சக்தி

3.ஈசுவரத்தன்மை

4.தெய்வீகப்பார்வை

5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு

6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்

7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்

இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–

மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.

இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:

அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்

நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:

ராஜ ரிஷி:

க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்

பிரம்ம ரிஷி:

பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்

ஜன ரிஷி:

மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.

காண்ட ரிஷி:

வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்

மஹரிஷி:

ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல

பரம ரிஷி:

மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி

ச்ருத ரிஷி:

வேத ஒலியைக் கேட்போர்

தவ ரிஷி:

தவத்தில் சிறந்தவர்

சத்ய ரிஷி:

சத்யத்தில் நிலைபெற்றவர்.

தேவ ரிஷி

தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.

பதஞ்சலி பிரிவினை

பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:

மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.

மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:

கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.

ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்

ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்

ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.

யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்

புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்

சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்

சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்

சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்

உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.

சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.

இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.

( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).

****

மஹா வாக்கியங்கள்

மனிதன் என்பவன் இறைவனின் ஒரு அம்சம் ;அவனுக்குள் உறையும் ஆத்மா அழிவில்லாதது ; உடல் மட்டுமே அழியக்கூடியது ; எப்படி பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர் வெளியேயுள்ள காற்றுடன் கலந்து  ஐக்கியமாகிவிடுகிறதோ அது போல ஆத்மாவும் இறைவன் என்னும் பரப் பிரம்மத்துடன் கலந்துவிடும் . இதை விளக்கும் பொன்மொழிகள் ஒவ்வொரு வேதத்துக்கும் உரிய உபநிஷத்தில் உள்ளது; அவை பின்வருமாறு:

1. प्रज्ञानम् ब्रह्म (ப்ரக்ஞாநம் ப்ரஹ்ம )

உணர்வு / பிரக்ஞை பிரம்மம்

ஐதரேய உபநிஷத்  (3.3)  ரிக் வேதம்,

**

2. अयम् आत्मा ब्रह्म (அயம் ஆத்மா  ப்ரஹ்ம )

உள்ளுக்குள் உறையும் ஆத்மாவே பிரம்மம்

: மாண்டூக்ய உபநிஷத்  (2)  அதர்வ வேதம்

**

3. तत् त्वम् असि (தத் த்வம் அசி )

நீயே அதுவாக இருக்கிறாய்

சாந்தோக்கிய உபநிஷத்  (6.8.7) சாம வேதம்

**

4. अहम् ब्रह्म अस्मि அஹம்  ப்ரஹ்மாஸ்மி

நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்

பிருஹதாரண்யக  உபநிஷத்  (1.4.10) of the யஜுர் வேதம் .

**

வேறு சில மஹா வாக்கியங்கள்

सर्वं खल्विदं ब्रह्म (சர்வம் கல்விதம் ப்ரஹ்ம ): இங்குள்ள எல்லாம் பிரம்மம்

इशावास्यमिदं सर्वम् (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ): உலகம் முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது

***

மஹேந்திர வர்மன்

Music Inscription

Pallava Period Hero Stone for a Dog.

உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்

டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.

“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார்.மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்

“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,

என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;

“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.

செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே  ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.

டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் (கி.பி. 590-630) மற்றும் அவனது கலைப்படைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மிகச்சிறந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார் மகேந்திர வர்மன் கி.பி. 600-630 காலகட்டத்தில் ஆட்சி செய்ததை அவர் உறுதிப்படுத்தினார் .

Mamamdur Caves of Mahendra Pallava 

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

    சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.

பட்டங்கள்

   இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.

   புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.

மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.

   சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

***

பாண்டிய நாட்டு ராணி மங்கையற்கரசி

Queen Magaiyarkarasi

மங்கையற்கரசி சோழர் குலப் பெண்மணி ; மாபெரும் சிவ பக்தை; பாண்டிய மகாராஜாவுக்கு வாக்குப்பட்டாள்  பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான்.  இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின; 

இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள்.  அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.

சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கா ட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்து தூதர்கள் மூலம் அழைப்புவிடுத்தார்கள் . ஞானசம்பந்தர், நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.

மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை

வரிவளைக் கைம்மடமானி

பங்கயச் செல்வி பாண்டிமாதேவி

பணி செய்து நாள்தோறும் பரவப்

பொங்கழலுருவன் பூத நாயகன் நால்

வேதமும் பொருள்களும் அருளி

அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த

ஆலவாயாவதும் இதுவே

என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.; இதற்குள் சமணர்கள் சம்பந்தர் தங்கிய மடத்தில் தீ வைத்தார்கள். அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது.  யாராலும் தீர்க்கமுடியாத நோயை சம்பந்தர் மீனாட்சி கோவில் விபூதி மூலம் தீர்த்துவைத்தார் ; அப்போது அவர் பாடியதே

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு

தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு

செந்துவர் வாய் உமை பங்கன் திரு

ஆலவாயன் திருநீறே’

பின்னர் நடந்த அனல்வாதம், புனல் வாதப் போட்டிகளில் சம்பந்தர் வென்றார் ; அவைகளில் தோற்றால், கழுமரத்தில் ஏறி உயிர்விடுவோம் என்று 8000 சமணர்கள் வீ ரவசனம் பேசியிருந்தனர் ; சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் நிறைய சமணர்கள் சைவர்களாக மாறினர்; ஏனையோர் கழுவேறினர் .

பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார். பெரிய புராணத்தில் அழகிய செய்யுட்களால் சேக்கிழார் நமக்கு இந்தக்கதையை செப்புகிறார்.

***

மங்கம்மாள்  , ராணி  மங்கம்மாள்

திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றி பல கதைகள் உண்டு.    எகிப்திய பேரழகியும் ஆட்சியாளருமான  கிளியோபாட்ராவைப்போலவே இவரும் அழகானவர்;  பல போர் புரிந்தவர். அவரைப் போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும் கட்டடங்களும் சாத்திரங்களும் சின்னங்களும் இருக்கின்றன மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எழுதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இதோ :.அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா; அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரசவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை (1659-1682)  மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.

.    மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை  உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.

மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.

அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.

***

மாணிக்கவாசகர்

Manikkavasagar

மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிராமண குலத்தில் பிறந்த இவரை அரிமர்த்தனன் என்னும் பாண்டியன் அழைத்து அமைச்சர் ஆக்கினான் ; கடற்கரைப் பகுதியில் அராபிய வணிகர்கள் குதிரைகளைக்  கொண்டுவந்திருப்பதை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரிடம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான் ; திருப்பெருந்துறையில் ஒரு புனித குருவினை கண்டவுடன் அவர் வசப்பட்டு அரச பணியை மறந்தார் . மன்னர் இவரை அழைத்து பல தண்டனைகளை கொடுத்தான் பின்னர்தான் மன்னருக்குத் தெரிந்தது – இவர் சிவபக்தர் அதைத் தெரிவிக்கவே நரி -பரி லீலைகள் நடந்தன என்று; அவரை விடுதலை செய்து அனுப்பியவுடன் அவர் யாத்திரை செய்து திருவாசகத்தைப் பாடினார். சிதம்பரத்தில் புத்த பிட்சுக்களை வாதத்தில் வென்ற பின்னர் அங்கே கோவிலில் இறைவன் அடி சேர்ந்தார்

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள்.

மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்? இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?

சுருக்கமாகச் சொன்னால் மூவரை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. ‘மாணிக்கவாசகர்  மூவர் குறிப்பிடவில்லை.  திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு மாணிக்கவாசகர்  ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன. அப்பர் தேவாரத்திலும், திருவிளையாடல் புராணத்திலுமுள்ள செய்திகள் இவர் தேவார மூவருக்கு முந்தியவர் என்று காட்டுகின்றன மேலும் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். உண்மையில் மாணிக்க வாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது இவர் பிறந்தது திரு வாதவூர் என்பதால் அந்த ஊரின் கடவுளான சத்ய வாகீஸ்வரர் இவர் பெயர் என்று கருதலாம்  அதையே பின்னர் நமபியாண்டார் நம்பி முதலியோர் பொய் அடிமை இல்லாத புலவர் என்று பாடினார்கள் 

அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.

மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!

–subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60, மாணிக்கவாசகர், ராணி மங்கம்மாள், பாண்டிய ராணி, மங்கையற்கரசி , மகரிஷி, மாண்டவ்யர் , ரிஷி, முனிவர் ஆணி மாண்டவ்ய

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-15;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,703)

Written by London Swaminathan

Post No. 15,703

Date uploaded in London –6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திரு இந்தளூர்

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்ய தேசங்களில் 26-வது தலமாகும். இத்தலத்தைப் பற்றி திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்களை (1852-1861) பாடியுள்ளார்.

பாசுரங்களின் சிறப்பம்சங்கள்:

·         பரிமள ரங்கநாதர்: மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்து, வேதங்களை மீட்டதால், பெருமாளுக்கு ‘பரிமள ரங்கநாதர்’ என்று பெயர்.

·         திருமங்கையாழ்வார் பாசுரம்: “சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், சிறிதும் திருமேனி, இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!” என்று ஆழ்வார், அந்தந்த யுகத்தில் வெவ்வேறு நிறத்தில் இருந்த பெருமாளின் திருமேனி அழகை இந்தளூரில் காட்டி அருளுமாறு பாடியுள்ளார்.

·         பஞ்சரங்க தலம்: இது பஞ்சரங்க தலங்களில் ஒன்றாகும்.

·         சந்திரனின் தவம்: சந்திரன் தன் சாபம் நீங்க இத்தலத்தில் தவம் புரிந்து பயன் பெற்றான்.

திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள், பரிமள ரங்கநாதரின் அழகையும், இத்தலத்தின் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.



எம்பெருமான் திருவடிவம் திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடி;முழுதும் பச்சைக் கல்லில் ஆனது!
பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!

பஞ்ச ரங்க தலங்களுள் என்று சொல்வார்கள்!
1. திருவரங்கம் = கஸ்தூரி ரங்கன் = பெரிய பெருமாள்
2. குடந்தை = ஹேம ரங்கன் = ஆராவமுதன்
3. திரு இந்தளூர் = பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன்
4. கோவிலடி = அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான்
5. மைசூர்-ஸ்ரீ ரங்கப் பட்டினம் = ஆதி ரங்கன் = ரங்கநாத சுவாமி

* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) – என்பதும் இன்னொரு வழக்கு!

சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால்,  இந்தளூர்!

***
திரு இந்தளூர் பாசுரங்கள்

சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில்! நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை!
நல்லார் அறிவீர், தீயார் அறிவீர், நமக்கு இவ்வுலகத்தில்,
எல்லாம் அறிவீர்! ஈதே அறியீர் இந்த ளூரீரே!

**

திருமங்கை ஆழ்வார் வந்த போது சந்நிதி சார்த்தப்பட்டதால் அவர் கோபத்தில் பாடிய நிந்தா ஸ்துதி.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்துஅடியோர்க்கு

தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,

காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்எம்பெருமான்!

வாசி வல்லீர் இந்தளூரீரே! – வாழ்ந்தே போம் நீரே!

**

ஒவ்வொரு யுகத்திலும் திருமாலின் வண்ணம் மாறுபடுவதாக ஐதீகம். அதையும் ப்பாடுகிறார் ஆழ்வார் :

முன்னை வண்ணம் பாலின் வண்ணம்முழுதும் நிலைநின்ற,

பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்வண்ணம் எண்ணுங்கால்

பொன்னின் வண்ணம்மணியின் வண்ணம் புரையும் திருமேனி,

இன்ன வண்ணம் என்று காட்டீர்இந்தளூரீரே!

**

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள். 

சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு, ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.

—Subham—

Tags- திருஇந்தளூர், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-15;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! (Post No.15,702)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,702

Date uploaded in London – 6 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கடைசி கட்டுரையான தொண்ட மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்! 

ச. நாகராஜன்

இறையனார் தலைமை வகித்து சங்கத் தமிழை வளர்த்ததை பாண்டி மண்டலம் விளக்குகிறது என்றால் தமிழ்ப் புலவன் பாயைச் சுருட்டு என்று சொன்னவுடன் திருமால் பாய் சுருட்டி செந்நாப் புலவனுடன் கிளம்பிய வரலாறைச் சொல்கிறது தொண்ட மண்டலம்.

‘கல்வியில் கரையிலாத காஞ்சி’ என்று அப்பர் பெருமானால் புகழப்பட்ட காஞ்சியின் பெருமை தான் என்னே!

திருமழிசை ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனை பல்லவ அரசன் தன்னைப் பாடுமாறு பணிக்க, கனிகண்ணன் மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த அரசன் அவனை நாட்டை விட்டுப் போகுமாறு ஆணையிட்டான். இதை அறிந்த திருமழிசை ஆழ்வார் தானும் அங்கிருந்து கிளம்பலானார். தான் வழிபடும் தெய்வமாகிய மணிவண்ணன் மட்டும் ஏன் அங்கிருக்க வேண்டும் என்று எண்ணிய ஆழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்கா கோவிலில் பாடினார் இப்படி:

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்i 

திருமால் ஆதிசேஷன் என்ற தனது பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்ப உலகமே திகைத்து அதிர்ந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஆழ்வாரிடம் மன்னிப்புக் கேட்க, மனம் இரங்கிய ஆழ்வார்

கணிகண்ணன் போக்கொழிந்தான்! காமரு பூங்கச்சி

மணிவண்ணா! நீ கிடக்கவேண்டும்! – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்!!

என்று பாட திருமால் தன் இருப்பிடம் வந்து அனைவருக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரையும் பெற்றார். தமிழ்ப் புலவனின் ஆற்றலை உலகம் உணர்ந்து கொண்டது. 

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவரே. 

கந்தபுராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார் காஞ்சிபுரத்தில் 

 அவதரித்தவர்.  குமரகோட்டத்தில் உள்ள முருகப் பெருமானின்                       அருளாணையுடன் அதை அவர் இயற்றினார். 10345 பாடல்கள் கொண்ட இந்த நூலுக்கு முருகப் பெருமானே ‘திகடச்       சக்கரச் செம்முகம்’ என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறாகும். 

இன்னும் ஆதிசங்கரர் நிறுவிய காஞ்சி காமகோடி பீடம் இந்து மதத்தின் ஏற்றத்தைப் பறைசாற்றும் மடமாகும். சமீப காலத்தில் வாழ்ந்த இதன் 68வது பீடாதிபதி மகா பெரியவர் என்று உலகோரால் கொண்டாடப்பட்டார். இவர் அருளாசியைப் பெற கிரீஸ் ராணி உள்ளிட்ட மேலை நாட்டோரும் வருவது வழக்கமானது.

 காஞ்சிபுரம் பட்டு சேலைகள், வேஷ்டிகளுக்கும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும். 

14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் முருக பக்தர் அருணகிரிநாதர் ஆவார். இவர் 16000 திருப்புகழ் பாடல்களைப் பாடினார். நமக்கு இன்று

 கிடைத்திருப்பது 1334 பாடல்கள் மட்டுமே. இவர் திருவண்ணாமலை 

அண்ணாமலையார் கோவிலில் வாழ்ந்து முருகன் அருளால் பாடல்களை இயற்றினார். ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர்

 தந்ததனால்’ என்ற இவரது வார்த்தைகளால் முருகனே இவரைப்

பாடல்களை இயற்ற வைத்தான் என்பது தெளிவு. 

திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த ரமண மகரிஷியை உலகம்   முழுவதும் போற்றியது. மேலைநாடுகளிலிருந்து ஏராளமானோர்         

ரமணாசிரமம் வந்து இவரை தரிசித்து அருள் பெற்றனர். குறிப்பாக பால்       பிரண்டன் எழுதிய ‘எ செர்ச் இன் சீக்ரட் இண்டியா’ என்ற நூல் இவரது            அருமைகளைக்  கூற உலகமே இவர் பால் ஈர்க்கப்பட்டது. 

இன்னும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் உள்ளிட்ட              ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 

காஞ்சி வீரத்தின் விளை நிலமாகும். இங்கிருந்து ஆண்ட பல்லவ மன்னர்கள் உலகளாவிய அளவில் புகழ் பெற்றனர். மாமல்லன் என்று அழைக்கப்பட்ட பெரும் வீரன் மாமல்லபுரத்தில் அற்புதமான சிற்பங்களை வடிக்கச் செய்தான். இன்றளவும் அந்த அற்புதச் சிற்பங்களைக் காண உலகெங்குமிருந்து மக்கள் வருகின்றனர். அதன் பெருமையைப் பறை சாற்றுகின்றனர். 

தொண்ட மண்டலத்தில் உள்ள புலியூர் கோட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்த தெய்வப் புலவர் சேக்கிழார் 63 நாயன்மார்களின் வரலாற்றை பெரிய புராணம் என்ற நூலாக வடித்தார். தில்லையில் உலகெலாம் என்ற வார்த்தையை ஒலித்து இறைவனே நூலுக்கு அடி எடுத்துக் கொடுத்தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இவர் விளங்கிப் பெருமை பெற்றார். குன்றத்தூர் சென்னையின் புறநகர்ப் பகுதியாக போரூர் அருகே உள்ள ஊராகும். 

சென்னையின் புகழ் அதன் பல்வேறு துறை விற்பன்னர்களால் உலகம்      முழுவதும் பரவிய ஒன்று.

கணினி சார் துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், வாகனக் 

கட்டுமான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், 

ரயில் பெட்டிகளின் வடிவாக்கத் தொழிலகம், கிரிக்கெட், செஸ்  உள்ளிட்ட விளையாட்டுகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்கள்… இப்படி சென்னையின் புகழ் பட்டியல் நீண்ட ஒன்று.

ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்களை உருவாக்கிய சென்னை மாநகரம் ஆயிரக்கணக்கான திரைத்துறை சார்ந்த கலைஞர்களை உருவாக்கிய நகரமாகும். இசை, நடனம், நடிப்பு, கதை, வசனம், கேமரா உத்தி, வண்ணச் சேர்க்கை, உடை அலங்காரம் என அனைத்துப் பகுதிகளிலும் தன் முத்திரையைப் பதித்த துறை சென்னையின் திரைப்படத் துறையாகும்.

 உலகின் ஆகப் பெரிய கடற்கரைகளுள் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் மரீனா பீச் உலக பயணிகள் அனைவருக்கும் உற்சாகம் தரும் ஒரு கடற்கரையாகும்.

இது இந்திய சுதந்திரப் போரில் லட்சக் கணக்கான மக்களுக்கு விழிப்பூட்டும் மையமாகத் திகழ்ந்தது. இங்கு கூட்டங்களில் பேசாத தேசீயத் தலைவர்களே இல்லை எனலாம். 

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு நடக்கும் படித்திருவிழா முருக பக்தர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் மாபெரும் விழாவாகும். 

தொண்டமண்டலத்தில் உள்ள செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் , இராணிப்பேட்டை உள்ள மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி புகழ் பெற்றவையாகும். விரிப்பின் பெருகும்.

படிக்காசுப் புலவர் எழுதிய தொண்டைமண்டல சதகம் நூலில் உள்ள       100    பாடல்களையும் படித்து இதன் அருமை பெருமைகளை அறியலாம். 

இராமலிங்க சுவாமிகள் தொண்டைமண்டல சதகம் பற்றிய ஒரு ஆய்வுக்    கட்டுரையையே எழுதியுள்ளார். தனது ஆய்வின் முடிவில் அவர்        தொண்டை மண்டல சதகம் என்பது சரியல்ல தொண்டமண்டல  சதகம் என்ற பெயரே சரி என்று நிறுவி இருக்கிறார். 

இப்படிப் பெருமை மிகு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும், பெரும் நகரமும் தமிழகத்தின் காலம் வென்ற சரித்திரத்தையும், பண்பாட்டையும், கலை உணர்வையும், வீரத்தையும், தேசீயப் பற்றையும். இலக்கிய வளத்தையும், காலத்திற்கேற்ற அதி நவீன அறிவியல் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். 

பெருமை மிகு தமிழகத்தின் பெருமைகளை முற்றிலுமாகச் சொல்ல முடியுமா என்ன?

வாழ்க தமிழ், வாழிய தமிழர், வாழிய பழம் பெரும் தமிழ்நாடு!

***

Tamils Discovered Monsoon! Not Hippalus! Purananuru wonders-24, Tamil Encyclopedia-64 (Post.15,701)

Monsoon Pictures

Bird Omen Picture

Written by London Swaminathan

Post No. 15,701

Date uploaded in London –5 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

****

VAIDEHI HERBERT’S ENGLISH TRANSLATION IS USED; THANKS.

xxxx 

வடக்கிருத்தல் SEE ITEM 502 GIVEN HERE Prāyopaveśana (प्रायोपवेशन).—sitting down and abstaining from food and thus preparing oneself for death, fasting oneself to death; मया प्रायोपवेशनं कृतं विद्धि (mayā prāyopaveśanaṃ kṛtaṃ viddhi) Pañcatantra (Bombay) 4; प्रायोपवेशनमति- र्नृपतिर्बभूव (prāyopaveśanamati- rnṛpatirbabhūva) R.8.94; प्रायोपवेशसदृशं व्रतमास्थितस्य (prāyopaveśasadṛśaṃ vratamāsthitasya) Ve.3.1.

Prāyopaveśana (प्रायोपवेशन):—n. dass. [Mahābhārata 3, 15138.] [Rāmāyaṇa 1, 3, 26. 4, 53, 8. 55, 11.] [Raghuvaṃśa 8, 93.] [Rājataraṅgiṇī 4, 99.] [Pañcatantra 50, 15. 110, 10. 207, 7.]

***

Item 498 Shipping using Monsoon

In Puram verse 66, Poet VennikKuyathiyār, gives us some information about meteorology. Karikalan of first or second century used Monsoon Winds for sailing. I wrote in Megham, London Tamil Magazine, in the 990s that Tamils discovered MONSOON quoting this poem (It is in my book published in 2009 as well).

Pliny the Elder claimed that Hippalus discovered not the route, but the monsoon wind also called Hippalus (the south-west monsoon wind).

Later I updated it with another article to show how Asoka’s daughter and sone along wih Buddhist monks used the monsoon to sail between India and Sri Lanka.

Kalidasa who wrote the first travelogue in the world called Meghadutam also described how the monsoon progresses towards the Himalaya.

Date wise Asoka comes first, Kalidasa and Karikalan comes second. Hippalus comes third. So the credit goes to Asoka or the sailors of his time.

***

Item 499 BATTLE OF VENNI

Tamils’ great discovery about Munneer= Three Waters= Sea was described me in the earlier posts.

Facing North to die = Prayopavesam in Sanskrit= Vadakkiruththal in Tamil is escribed by me in the previous post

Here BATTLE OF VENNI is praised by the poet. At the sametime poet praised the defeated Chera King for undertaking the ritual Prayopavesam.

Ancient Tamil Kings Chera, Choza, Pandyas fought hundreds of wars among themselves killing each other. But the most famous of the wars is the Battle of Venni.

King Karikālan brought prosperity to his Chozha kingdom.  He was tutored by his uncle, poet Irumpidarthalaiyār from an early age.  He beat a Pandiyan king, Cheraman Peruncheralathan and 11 Vēlirs at the Venni battlefield in the Chozha country.  There are references to this battle in Akanānūru 55, 246, Puranānūru 65, 66 and Porunarātruppadai 147. 

In that battle, a spear that was thrust into the chest of beat Cheraman Peruncheralathan came out on the other side through his back and wounded him.  He was embarrassed that he was attacked in the back.  He sat facing north and died on the battlefield. This is a ritual ancient Hindus did when something bad, particularly, shameful, humiliating , disgraceful act is done or forced on them.

***

Wind Power in Bhagavad Gita

इन्द्रियाणां हि चरतां यन्मनोऽनुविधीयते |

तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि || 67||

indriyāṇāṁ hi charatāṁ yan mano ’nuvidhīyate

tadasya harati prajñāṁ vāyur nāvam ivāmbhasi

BG 2.67: Just as a strong wind sweeps a boat off its chartered course on the water, even one of the senses on which the mind focuses can lead the intellect astray.

***

Puranānūru 66, Poet VennikKuyathiyār sang to Chozhan Karikāl Peruvalathān (Karikālan),

1
O heir of a mighty man who mastered the movement
of the wind and had his ships sail on the huge, full
ocean! 

2

O Karikalan who owns rutting elephants!
You who won displaying your strength in the
battlefield near prosperous Venni town!

3

He is a better person than you, the king who sat
facing north to die, ashamed of the battle wound on
his back, who attained great fame in this world.

****

Notes:  This is the only poem written by this poet.  Puranānūru poems 7, 66 and 224 were written for Chozhan Karikālan.  The Pathuppāttu songs Pattinappālai and Porunarātruppadai were written for King Karikālan, who brought prosperity to his Chozha kingdom.  He was tutored by his uncle, poet Irumpidarthalaiyār from an early age.  Chozha king Karikālan beat a Pandiyan king, Cheraman Peruncheralathan and 11 Vēlirs at the Venni battlefield in the Chozha country.  There are references to this battle in Akanānūru 55, 246, Puranānūru 65, 66 and Porunarātruppadai 147.  In that battle, a spear that was thrust into the chest of beat Cheraman Peruncheralathan came out on the other side through his back and wounded him.  He was embarrassed that he was attacked in the back.  He sat facing north and died on the battlefield. 

***

புறநானூறு 66பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்பாடப்பட்டோன்: சோழன் கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்)திணை: வாகைதுறை: அரச வாகை

1


நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!

2
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,   5
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

3
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப் புண் நாணி வடக்கிருந்தோனே.

****

Item 500 Bird Migration

Hindu are great nature lovers. They watched the sky and noted birds are migrating from one direction to another, particularly from south to north. Later Saththimutraththu Pulavar also sang about it inNaarai, Naaraai! Sengal Naaraai

Sen Kaal Naarai= red legged Flamingos. Water birds migrating from  far off places lie Russia are found in Vedanthangal, Ranganathan Thittu (Mysore Srirangappattinam) and Kodikkarai/Vedaranyam; they are some of the places where they are found. Researchers ring the birds with microchips and follow their routes.

When they migrate they form rules of aerodynamics. They fly in V shape to tackle the wind. This is watched and sung by Kalidasa and other Tamil poets as well (It is my article Bird Migration in Sangam Literature and Kalidasa).

Th poets described the V shape as pearl garland/necklace

*** 

Item 501 Concept of Eka Bharat= One India

Half baked people thought and wrote that only British rule united India. But the travels of great philosopher Adi Sankara and Rishis like Agastya proved them wrong. Here also the water birds going from Kumari to Himalaya Mountain is explained by the commentators.

***

Puranānūru 67, Poet Pisirānthaiyār sang for Kōperunchozhan, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi

1
O gander!  O gander! (water bird)
Like the bright face of the
noble hero of battles who bestows
grace upon his land, the bright light
of the blossoming moon shines when
its two horns unite and it becomes
full at this confusing evening time
when I am helpless and sad.

2

If you, after feeding on ayirai fish
in the beautiful, huge shores of
Kumari, should fly off to the mountains
of the far north,
and stop on your way in the
land of the Chozha king,
go to the towering mansion at Kōzhi
with your young partner and without
stopping at the gate,

3
enter the palace of the great King Killi
and utter words so that the king hears
you say, “Ānthai of Pisir is your humble
servant.”
He will give desirable gifts of fine jewels
for your beloved mate to wear!

Item 502 Another Ritual Suicide where poets joined!

வடக்கிருத்தல் = பிராயோபவேஷம்

(மகாபாரதம்வால்மீகி ராமாயணம்காளிதாசன் ரகுவம்சத்தில்)

This poem is about the Choza king shows another ritual sacrifie called Payaopavesam by Kopperum Chozan

Notes:  Puranānūru poems 67, 212, 213, 217, 218, 219, 220, 221, 222, and 223 were written for this king.   The king wrote poems 214, 215 and 216.   The poet Pisirānthaiyār wrote Puranānūru 67, 184, 191 and 212.  King Kōperunchozhan sat facing the north and killed himself since he had problems with his sons.  The poet Pisirānthaiyār who was his friend joined him in death.  Also, there were other poets who sat near the king and starved to death along with him, facing the north. 

***

Item 503 Greatest Tamil Wonder! Wonderful Friendship

Poet Pisir Anthai who joined the Choza king in the Facing North and Fast Unto Death Ritual was the best example of Friendship. One will be reminded of the sacrificeof Sydney Carton in the novel The Tale of Two cities by Charles Dickens!

The poet and the king never met but were friends. Choza king toldpease make a seat for Pisur Anthai; all were pauzzled. But as he predicted the never seen friend Pisir came and joined the Fast unto Death Ritual> Great men think alike.

***

புறநானூறு 67பாடியவர்: பிசிராந்தையார்பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்திணை: பாடாண்துறை: இயன் மொழி

1
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலையளிக்கும் ஒள் முகம் போலக்,
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்,
மையல் மாலை யாம் கையறுபு இனையக்  5

2
குமரி அம் பெருந்துறை அயிரை மாந்தி,
வட மலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழ நன்னாட்டுப் படினே, கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ,
வாயில் விடாது கோயில் புக்கு எம்  10

3
பெருங்கோக் கிள்ளி கேட்க “இரும் பிசிர்
ஆந்தை அடியுறை” எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணியத் தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே. 

*****

Item No 504 Monitor Lizards

Comparison of skinned monitor lizard with the ribs of the poor bard. This shows the poverty among bards

***

Item No 505 Generosity

Go to the king and get the money. The river Kaviri in his country is like the mother whose breasts pour out milk for the news born baby .

Another good comparison!

***

Item 506 Shamudrika Lakshana

Kings are compared to Vishnu in Tamil and Sanskrit books and Hindu Puranas say that Lakshmi resides in the chest of Vishnu. Here poet who is well versed in SHAMUDRIKA LAKSHANA says the king has Sempori Maarbu= Chest where Lakshmi lives.

In Tamil AAkam is Chest/maarbu in Modern Tamil

Pori in Tamil is LAKSHMI.

Sem Pori = Three lined chest shows Lakshmi’s residence.

According to Shamudrika lakshan three lines on the neck is good.

The three lines on the neck of Devi (often referred to as Kambugreeva or neck with three lines, like a conch) are a significant feature in Hindu iconography and aesthetic descriptions, such as in the Lalitha Sahasranama and Saundarya Lahari. These lines are considered a sign of high noble birth and spiritual beauty in Samudrika Lakshana.

பூவெனப்படுவது பொறி வாழ் பூவே is a saying in Tamil

***

Item 507 Bad Omens புள் பகை

Bird Omen Chart in Tamil Panchang

Here the bad omen is called harming enemy birds

All the Tamil Panchangs show the Bird Omen Chart

***

Puranānūru 68, Poet Kōvūr Kizhār sang for Chozhan Nalankilli,

1

Their ribs are sticking out like monitor lizards
that have been skinned, your family with great
hunger, unable to find someone who’ll remove it.


O bard who mourns that there are so few ears that
can hear you!  Why do you linger here?

In the fine country where citizens are nourished
by the overflowing water of Kāviri River that
uproots trees and

2

 flows like milk offered from
the breast of a new mother to an infant
, there is
a lord, a great man who bows to gentle women
wearing ornaments on their proud, pretty chests
with red spots
, and imprisons fierce men.

When there is a fight within his army or when there

3
are bad omens, he does not command his army to fight.
His valiant warriors who say they want to die, tap their
bulging shoulders, strike parai drums on the lovely
streets where chariots ride, to reduce their frustration
of not going to war, drink strong liquor which spills from
their trembling hands and creates mud on the ground,
and elephants without mounted keepers play in that
fragrant mud and listen to the roar of the drums in
Uranthai, where the great king reigns.

If you go to him, he will shower gifts abundantly,
making you forget going to the doors of others.

Notes:  Puranānūru 27, 28, 29, 30, 31, 32, 33, 45, 68, 225, 382 and 400 were written for this Chozha king.   This king wrote Puranānūru 73 and 75.  Kōvūr Kizhār wrote Puranānūru 31-33, 41, 44-47, 68, 70, 308, 373, 382, 386 and 400.   He hailed from Kōvūr town in Thondai Nadu.  It is presently in Chengalpattu district.    

****

புறநானூறு 68பாடியவர்: கோவூர் கிழார்பாடப்பட்டோன்சோழன் நலங்கிள்ளிதிணை: பாடாண்துறை: பாணாற்றுப்படை

1
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து
ஈங்கு எவன் செய்தியோ பாண, பூண் சுமந்து,

2
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து  5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்

3

ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்,  10
உள் பகை ஒரு திறம் பட்டெனப்

4

புள் பகைக்கு


ஏவான் ஆகலின் சாவேம் யாம் என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்பத்,
தணி பறை அறையும் அணி கொள் தேர்வழிக்,
கடுங்கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த 15
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பில் படுமுழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்,
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே

To be continued………………

Tags- Tamils Discovered Monsoon! Not Hippalus! Purananuru wonders-24, Tamil Encyclopedia-64 , Item 507, Hindu ritual suicide, Prayopavesa, Facing North, Fast unto death, Bird Migration, Wonderful Friendship, Shamudrika Lakshana, Bird Omen

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL- 59; இந்து மத கலைச்சொல் அகராதி-59 (Post No.15,700)

RANI MANGAMMAL’s  PICTURE

Written by London Swaminathan

Post No. 15,700

Date uploaded in London –5 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version is posted here; Tamil version will be posted tomorrow.

MA words continued…………………………………………

***

Mandapala

A strange story of a rishi is in the Aadi parva of Mahabharata . though he lived a pious life, Mandapala, was denied entry into swarga because he had not produced any children. In the next life he was born as a male bird who produced four baby birds through his wife Jarita. Later he abandoned her in favour of another female bird Lapita. When Arjuna and Krishna planned to burn Khandava (kaandava) forest, Lapita sent him back to Jarita, where he lived happily.

***

Mandavya

His full name is Ani maandavya . Aṇimāṇḍavya (अणिमाण्डव्य)

Brahmin named Māṇḍavya did Tapas/penance for many years standing silent in front of his Āśrama, under a tree, raising his hands in prayer. At that time some thieves happened to pass by that place, with stolen property belonging to the King. Finding that the King’s men were pursuing them, the thieves fled away after leaving their stolen property in Māṇḍavya’s Āśrama. The King’s men seized Māṇḍavya with the king’s property. Even prolonged and repeated questionings did not bring out a single word from Māṇḍavya. At last, the thieves were caught. Mistaking him as one of the thieves, the King’s men produced Māṇḍavya also along with the thieves before the King. The thieves were all condemned to death. The royal executioners took all of them to the place of execution and stuck them up at the tip of a trident (Śūla). The thieves died, but even after a long time Māṇḍavya did not die.

In Mahābhārata, Anuśāsana Parva, Verses 46-51, it is said that at this stage Śiva appeared and blessed him with longevity and then vanished. Several Munis in the shape of birds came near Māṇḍavya who was lying on the trident and made enquiries about him. The King came to know of all these stories. Full of repentance, he went and begged pardon of Māṇḍavya. The attempt to pull out the trident from Māṇḍavya’s body failed. At last it was removed by cutting it off. Since the tip (Aṇi) of the trident was left behind in his body he was thereafter known as “Aṇi Māṇḍavya”. (Mahābhārata, Ādi Parva, Chapter 107).

When he went to Dharma to find out the reason for his suffering, Dharma replied that in his childhood, he had caused some pain to a butterfly with a blade of grass.

***

Mahalakshmi

Goddess of wealth. Wife of Vishnu. Se under Lakshmi.

***

Mahakala (mahaa kaala)

Siva’s another name. one of the 12 Jyotir linga shrines. Mahākāla (महाकाल).—A sacred place situated in the Śiprā river valley in Ujjain. The Śivaliṅga installed in this place is called “Mahākāla.” Mahābhārata, Vana Parva, Chapter 82, Verse 49 says that those who take a bath in the Koṭitīrtha at this place, get the same effect as that of an Aśvamedha yāga.

***

Maharishi

Maharṣi (महर्षि) refers to:—A great sage.

“The seven great sages of old, and four elders and the Manus also are of My nature and born of My mind and from them are all these creatures in the world “ – (10-6 – Bhagavad Gita )

Atri, Brhu, Kutsa, Vasistha, Gautama, Kasyapa and Angirasa are Sapta Rishis (Seven Sages) now. They change during every Manvantara (Life of one Manu is one Manvantar. There are 14 Manus).


Four Elders: Sanakar, Sanandanar, Sanadanar and Sanatkumarar
Saptarishis showed Pravruti Marga and the Four showed Nivruti Marga.

***

“Thus transmitted from father to son, Arjuna, this yoga remained known to the Rajarsis (royal sages). It has, however, long since disappeared from this earth”. (4-2 – Bhagavad Gita)

Rama, Krishna, Buddha and Janaka were all kings —Raja Rsis– who taught the highest wisdom.

***

Agasta image

Baudhayana Dharmasutra Gives a list of different types of seers:

Sruta rsi = One who hears Vedas from their teachers
Kanda rsi = Rishis of different Kanadas (sections) of the Vedas
Tapa rsi = Those who do severe penance
Satya rsi = Those who are truthful learners
Deva rsi = Equal to devas; divine
Sapta rsi = Seven Great Sages
Maha rsi = Great/ Exalted position
Parama rsi = Supreme/ Exalted position
Brahma rsi = Rsi of Brahmana community
Raja rsi = Rsi of Kshatriyas community (Kings)
Jana rsi = Common man becoming a Rsi

Patanjali, author of Mahabhasya on Panini’s Ashtadyayi, affirmed two new categories of Rsis:
Mantrakrit = the revealers or composers of Vedic hymns
Mantrakritsama = a writer of Vedangas like Kalpasutra.

***

Ten Types in the Ramayana and Mahabharata:

Grihasthasramis = Householder but Rsis
Urdhvaretas = who have no wives or children; celibates
Asramavasis = Hermit dwellers
Yayavaras = Continuous wanderers
Purohita- vrittikas = Priestly saints
Sadharana vrittikas = Usual type rsis
Saastras adyapakas = Teacher rsis
Sastras adhyapakas = Rsis who give arms training
Ugra tapasvis = Practising severe penance
Sadharana tapsvis = Practising ordinary austerity
Majority of the seers were householders.

Source: Rsis in Ancient India by C B Pandey 1987.

***

In modern times we call Ramana as Ramana Maharishi. The  tcreator of Transcendental Meditation (TM) is also called Maharishi Mahesh Yogi

***

Types of Rishis (seers)

In fact the English word seer itself came from the Sanskrit word Rishi. Seer is the mirror image of Rsi.


Of the ten Mandalas of the Rig Veda, eight are attributed to eight Rishis or his family:


Rig Veda
Mandala 2: Grtsamada (Brigu)
Mandala 3: Visvamitra
Mandala 4: Gautama (Vamadeva)
Mandala 5: Atri
Mandala 6: Bharadwaja
Mandala 7:Vasistha
Mandala 8: Kanva
Mandala 9: Angira
Mandala 1 and 10 are attributed various Rishis.

***

Mahavakyas (mahaa vaakyaas)

The Vedas offer the highest propositions through the Vedanta comprising the four ‘maha-vakyas ’.

1. प्रज्ञानम् ब्रह्म (Prajñānam Brahma)

Meaning: Consciousness is Brahman.Source: Aitareya Upanishad (3.3) of the Rig Veda.

2. अयम् आत्मा ब्रह्म (Ayam Ātmā Brahma)

Meaning: This Self (Atman) is Brahman.Source: Mandukya Upanishad (2) of the Atharva Veda.

3. तत् त्वम् असि (Tat Tvam Asi)

Meaning: That Thou Art (You are That).Source: Chandogya Upanishad (6.8.7) of the Sama Veda

.4. अहम् ब्रह्म अस्मि (Aham Brahmāsmi)

 Meaning: I am Brahman (I am Divine).Source: Brihadaranyaka Upanishad (1.4.10) of the Yajur Veda.

Other Significant Mahavakyas

सर्वं खल्विदं ब्रह्म (Sarvaṁ khalvidaṁ Brahma): All this is indeed Brahman.

इशावास्यमिदं सर्वम् (Īśāvāsyamidaṁ sarvam): All this is enveloped by the Lord.

***

Mahendravarman

17.6.2.1. Mahendravarman (From Dr R Nagaswamy’s tamilartsacademy.com)

The Pallava Emperor, Mahendra-vikrama-varman, who reigned over the northern part of Tamil Nadu from Kanchipuram to the banks of the Kāverā River in Trichy, during the period from approximately CE 590 to 630, stands out as a unique poet in the realm of Sanskrit literature. His multifaceted personality deserves appreciation, and he undoubtedly ranks among the greatest artist-poets among India’s emperors. His passion for art and poetry emanated from his innate poetic genius, allowing him to perceive and visualize every facet of life from a poetic perspective.

Mahendra was a born kavi, a poet for whom everything unfolded either as a dṛśya kāvya (visual poetry) or as a śravya kāvya (literary poetry). This perspective is evident in his intriguing title, Vicitra-Citta. Here, Citta refers to his mental approach, while the term vi-citra alludes to varied arts. Some scholars interpret Vicitra-Citta as “Curious-minded,” but based on his works, the more fitting interpretation would be “varied arts,” as exemplified by another of his titles: Citra-kāra-puli, signifying “Tiger among artists.” 

Mahendra has left several monuments which are dṛśya kāvyas, and many Sanskrit portic works which are śravya kāvya like the Matta-vilāsa-prahasana and Bhagavad-ajjuka, both in Sanskrit. His love of monumental art is revealed by his titles like Citra-kāra-puliCettā-kāri and Mahā-cettā-kāri. Mahendra also invented a new rāga called the Saṅkīrna-jāti, which he assumed as one of his titles.As Mahendra’s titles found in his monuments engraved by himself are indicative of his personality, his significant titles are given below. He assumed several titles which are inscribed in alphabetic order in his monuments. They generally begin with his Paṭṭābhiśekha name or the coronation title, the rest fall in alphabetical order as follows:

1.               Anumāna

2.               Avani-bhājana

3.               Bhrāntaḥ

4.               Cettā-kāri

5.               Citra-kāra-puli

6.               Guṇa-bhāra

7.               Kalahapriyā

8.               Kāmārṇava

9.               Lakṣita

10.          Lalitāṅkura

11.          Mahā-cettā-kāri

12.          Mahendra-vikrama

13.          Matta-vilāsa

14.          Saṅkārīṇa-jāti

15.          Satya-sandhaḥ

16.          Upamāna

His cave at Maṇdagappaṭṭu was named Lakṣitāyatana; and the trichy cave as Lalitāṅkura-pallaveśwara-gṛha. He emphasizes his title Avani-bhājana in his Matta-Vilāsa-Prahasana which he used in the invocatory verse.

In the Trichy cave inscription he has used different titles, one for each verse as Guṇa-bhāra, Satya-sandhaḥ, and so on. He named his Trichy cave as Lalitam, i.e., beautiful.His attachment to sculpture and painting is revealed in his title Citra-kāra-puli. Interestingly his Gaṅgādhara sculpture at Trichy is the earliest monumental sculpture in Tamiḻnāḍu.

Two Sanskrit Satires by MahendraIt may be advantageous to reflect on his two Sanskrit works Matta-Vilāsa-Prahasana and Bhagavad-ajjuka. Both are farces in Sanskrit with profuse use of Prākṛt, that show the stature of Prākṛt around CE 600 in Tamiḻnāḍu.

The Matta-Vilāsa-Prahasana clearly after one of his titles, Matta-vilāsa, portrays a Kāpālika and his consort Kapālikā, another drunkard.Mahendra’s grasp of śleṣa-alaṅkāra, the different philosophical systems, and ridiculing the Kāpālikas, Buddhists, the then existing judiciary, etc. in a lighter vein. That too coming from the pen of an Emperor, the Matta-Vilāsa-Prahasana is a unique drama in the field of Sanskrit dramas. Playing pun on their vocabulary, he ridicules them quite refreshingly. His command over the Tarka-śāstra is revealed throughout the text and as mentioned earlier he assumed the title Anumāna and Upamāna which are significant that are fully reflected in the text.

Mahendra’s Mastery of Dance Tradition

The invocatory verse of the drama Matta-Vilāsa-Prahasana is an example that illustrates his mastery of Bharata’s Nāñya tradition.भाषा वेश वपुः क्रिया गुण कृतान् आश्रित्य भेतान् गतम् ।भावावेश वशात् अनेक रसताम् त्रैलोक्य यात्रा मयम् ॥नृत्तम् निश्-प्रतिबद्ध-बोध महिमा यः प्रेक्शकश्च ।स्वयम् स व्याप्त अवनिभाजनम् दिशतु वो दिव्य कपालि यशः ॥bhāṣā veśa vapuḥ kriyā guṇa kṛtān āśritya bhetān gatambhāvāveśa vaśāt aneka rasatām trailokya yātrā mayamnṛttam niś-pratibaddha-bodha mahimā yaḥ prekśakaścasvayam sa vyāpta avani-bhājanam diśatu vo divya kapāli yaśaḥThe Nāṭya-śāstra deals with four types of abhinayas  amely āṅgika (bodily abhinaya), vācika (verbal), āhārya (costumes), and guṇa (like sāttvikam). All these are the essential components of dance recitals.

Mahendra himself played a lead role as an actor in the drama.

According to tradition this verse alone used to be interpreted by the Cākkiyār actors of Kerala for seven nights, that indicates the depth of meaning contained in the very first composition of this Great Emperor.

Bhagavad-Ajjuka

Similarly the Bhagavad-ajjuka is another farce where the Yama’s messengers who come to take away the life of a courtesan take the life of another courtesan by mistake. These two satires of Mahendravarman are unique with no parallels in the history of Sanskrit literature. There are a large number of inscriptions of Mahendra.

Mahendra was an extraordinary ruler of great love for Sanskrit, poetry, art, religion and the like. Mahendra is indeed a great poetic emperor India has known.

***

Mangaiyarkarasi

Choza princess who married Pandya King Nedumaran and revived Shaivism in Pandya Country with the help of Tiru Gnana Sambandar, the greatest of the Tamil Saivite saints. She reconverted her husband to Hinduism from Jainism.

Mangayarkarasiyar was born in the royal family of the Chozhas. She was a devotee of Lord Siva. She got married to the Pandya king, Nedumaran. King Nedumaran was influenced by and practised Jainism. During that period in the Pandya kingdom, Hinduism was under the shadow of Jain philosophies. She approached the prime minister Kulachiraiyar for help. They sent messengers to the prodigy young saint Sambandar. He came to Madurai, the capital of Pandyas, and won in all the tests devised by the Jains ; he cured the disease of Pandya king, also called Koon Pandya, because he was a hunchback. Queen Mangaiyarkarasi felt really blessed by the Lord for enlightening her husband and the entire kingdom. This happened around 650 CE.

***

Mangammal , Rani Mangammal

Rani Mangammal (1689 to 1704) was a queen regent of the Madurai Nayak kingdom during the minority of her grandson Vijaya Ranga Chokkanatha in 1689—1704. She was a popular administrator and is still widely remembered as a maker of roads and avenues, and a builder of temples, tanks and choultries with many of her public works still in use. She is also known for her diplomatic and political skills and successful military campaigns. The capital of Madurai Kingdom during her times was Tiruchy.She endowed the temple of Meenakshi for which Madurai is famous, and ruled in the name of the deity. This was a practice by many rulers at the time who considered themselves to only be a servant while the real ruler was God.

Mangammal died in 1706 after her grandson attained majority and was able to rule. The circumstances of her death are unclear since no verified account is available. 


***

Manikkavasagar

Manikkavasagar (maanikkavaasagar) was one of the Four Great Saivite Saints of Tamil Nadu (other three are Sambandar, Appar, and Sundarar). His statue is worshipped in all the shrines of Lord Siva. His great work is a sacred book called Tiruvasagam in Tamil. Even foreigners like Rev G U Pope were attracted by its contents. G U Pope translated the Tamil work into English.

Like other three saints Manikkavasagar also performed miracles, most of which were centred around Madurai Temple. Latest research shows that he lived just before Appar and Sambandar (500 CE).

The strangest mystery is we could not find his name in 9000 poems of Tevaram. Nor we find any reference to other three saints in his Tiruvasagam or Tirukkovaiyar.

In the beginning, he was appointed as the Chief minister by Pandya King Arimarthana. He was born in Tiruvathavur near Madurai. Pandya king came to know that he was a Vedic scholar born in a Brahmin’s family, and appointed him as the Chief minister. Later he faced several problems from the king and led the life of a saint and travelled to several Siva temples in Tamil Nadu. He fought with some Buddhists in Chidambaram. He reached the feet of God at Chidambaram temple.

The history of this great saint is narrated in the Tiruvadavur Puranam and the Tiruvilaiyadal Puranam. All the miracles of his time are reenacted every year in Madurai temple festivals.

To be continued……………….

Tags – HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 59; இந்து மத கலைச்சொல் அகராதி-59, Mandavya, Mahavakyas, Maharishi, Manikkavasagar, Mangayarkarasi, Mahendra Pallava

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-14;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,699)

Kambar Stamp.

Written by London Swaminathan

Post No. 15,699

Date uploaded in London –5 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவழுந்தூர்/ தேரழுந்தூர் 

23. திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

மூலவர்:தேவாதிராஜன் 

உற்சவர்:ஆமருவியப்பன் 

தாயார்:செங்கமலவல்லி 

தீர்த்தம்:தர்சன புஷ்கரிணி, காவிரி

மங்களாசாசனம்திருமங்கையாழ்வார்

விமானம்:கருட விமானம் 

கல்வெட்டுகள்:உண்டு

சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.

*** 

தலவரலாறு: 

பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம்.

 ***

மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் மார்க்கண்டேய முனிவரும் உள்ளனர்.

 பாசுரங்கள்

     வெள்ளத்துள் ஓராலிலை மேல் மேவி

          அடியேன் மனம் புகுந்தென்

     உள்ளத்துள்ளும் கண்ணுள்ளும்

          நின்றார் நின்ற ஊர் போலும்

     புள்ளுப் பிள்ளைக்கு இரைதேடி

          போனகாதல் பெடையோடும்

     அள்ளல் செறுவில் கயல் நாடும்

          அணியார் வயல் சூழ் அழுந்தூரே

                   (1591) பெரியதிருமொழி 7-5-4

     பிள்ளைக்கு இரைதேடித் தன் பெடையோடு செல்லும் பறவைகளின்

காலடிச் சத்தத்தைக் கேட்டு நீர்சூழ்ந்த கழனிகளில் சரேல்சரேலென்று மீன்கள்

பாயக்கூடிய அழகிய வயல்கள் சூழ்ந்த அழுந்தூரில், ஆலமரத்திலை மேல்

துயில் கொண்டு, தன் உள்ளத்தில் உறைகின்ற பிரான் நின்றவூர் இதுதான் போலும்— திருமங்கையாழ்வார் 

***

திருவழுந்தூர் தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் இருக்கிறது. (மாயவரம் – கும்பகோணம் பாதையில் இரண்டாவது ரயில் நிலையம். 

இத்தலத்தைப் பற்றி விஷ்ணு புராணம் கூறும் கதை:     “கோகுலத்தில் கோபாலர்களுடன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த கண்ணன். ஒரு நாள் பசுமந்தையை, ஓரிடத்தில் நிறுத்தி விட்டு யமுனை நதிக்குச் சென்றிருந்த போது, அப் பசுமந்தையை பிரம்மா தேரழுந்தூருக்குஓட்டி வந்து விட்டதாகவும், இச்செயல் அறிந்த மாயக் கண்ணன். உடனே அதே போன்ற பசுமந்தையை அவ்விடத்திலே படைத்து விட, தன் தவறை உணர்ந்த பிரம்மா கண்ணன் முன் தோன்றி, தேரழுந்தூரில் கோயில் கொள்ளவேண்டுமென்று விண்ணப்பிக்க, அதையேற்று “ஆமருவி நிரை மேய்க்கும் அமரர் கோமானாக” வந்தமர்ந்தான் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக இங்குள்ளஉற்சவப் பெருமாளுக்கு முன்புறம் கன்றும் பின்புறம் பசுவும் அமைந்துள்ளன.

 ***

ஊர்ப்பெயர் காரணம்

     தனது தவ வலிமையால் விமானத்துடன் ஆகாசத்தில் சஞ்சரிக்கும் தன்மை பெற்ற உபரிசரவசு என்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்த ஒரு விவாதத்தில் ஒருதலைப் பட்சமாகத் தீர்ப்பளிக்க, இதனால் கோபமுற்று ரிஷிகளால் சபிக்கப்பட்டு விமானத்துடன் பூமியில் விழுகையில் இங்குள்ள குளத்தில் அவன் தேர் அழுந்தியமையால் இதற்குத் தேரழுந்தூர்

என்ற பெயருடயதுயாயிற்றென்பர். கிருஷ்ணாரண்யம் (கிருஷ்ணின் காடு) என்பது புராணம் சூட்டும் பெயர்.

     1. மொத்தம் 11 சந்நிதிகள் உள்ள திருத்தலம்.

     2. கவிச் சக்ரவர்த்தி கம்பன் பிறந்தது இந்த தேரழுந்தூரேயாகும்.

இப்பெருமான் மீது கம்பன் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். கம்பருக்கும் அவர் மனைவிக்கும் இக்கோவிலில் சிலைகள் உள்ளன.

“கம்பன் பிறந்தவூர், காவிரி தங்குமூர்         

கும்பமுனி சாபம் குலைந்தவூர் செம்பதுமத்    

தாதகத்து நாண்முகனும் தாதையும் தேடிக் காணா          ஓதகத்தார் வாழும் அழுந்தூர்”

     என்பது புலவர் புராணம் என்னும் நூலில் வரும் செய்தியாகும். இங்கு கம்பர் மேடு என்றழைக்கப்படும் பகுதியே கம்பன் வாழ்ந்த இடமாக கருதப்படுகிறது. இப்போது அழகான கம்பன் மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்களில் தேரழுந்தூர் மிகச் சிறப்பான இடத்தைப்

பெற்றுள்ளது. நீடாமங்கலத்துக்கு அருகில் உள்ள வெண்ணியென்னும் ஊரில் (வெண்ணிப் பறந்தலை) கரிகாலன் பதினொரு குறு நில மன்னரையும், சேர, பாண்டியரையும் ஒருங்கே முறியடிக்க அந்த ஆரவாரம் அழுந்தூரில் கொண்டாடப்பட்ட செய்தியை புறநானூற்றின் 65,325,395 ஆம் பாடல்கள்

விளக்குகின்றன.

  மார்க்கண்டேயன் கதை அனைவரும் அறிந்தவொன்றாகும்.

இத்தலத்துப் பெருமாளைச் சேவித்து மார்க் கண்டேயர் மோட்சம் பெற்றார  என்பதும் ஒரு வரலாறு. இத்தலத்தில் பிரகலாதனும் இடம் பெற்று நித்திய பூஜைகள் பெறுகிறான்.

  “திருவுக்கும் திருவாகிய செல்வா” என்பது இப்பெருமானுக்குத்

திருமங்கை சூட்டியுள்ள செல்லப் பெயராகும், திருமங்கையால் மட்டும் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். 45 பாசுரங்களில் பாடித்துதித்துள்ளார்.

—Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-14;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், கம்பன் பிறந்தவூர், திருவழுந்தூர், தேரழுந்தூர்,தேவாதிராஜன், ஆமருவியப்பன்

பெருமை மிகு தமிழகத்தில் கொங்கு மண்டலம்! (Post.15,698)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,698

Date uploaded in London – 5 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலம் சோழ மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கொங்கு மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் கொங்கு மண்டலம்! 

ச. நாகராஜன் 

தான் நீண்ட நாள் வாழ்வதை விட தமிழ்ப் புலவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று தான் பெற்ற நெல்லிக் கனியைக் கொடுத்த வள்ளல் வாழ்ந்த பூமி எது?`குளிர் தாங்காமல் தோகை விரித்து ஆடும் மயில் வருந்துவதைக் கண்டு தன் மேலாடையைப் போர்த்திய வள்ளல்

வாழ்ந்த மண்டலம் எது? தமிழ் இலக்கணத்தில்

பெற்றுத் தமிழை வளர்க்க தொல்காப்பிய வழியில் எளிய நூல் இயற்றிய தமிழ்ப் பாவலனின் பூமி எது? இயற்கை வளம் வாய்ந்த மலைச் சிகரம் எங்கே உள்ளது? நவீன காலத்திற்கேற்ப தொழிலில் முன்னோடி நகரம் என அனைவரையும் பிரமிக்க வைக்கும் நகரைக் கொண்ட பகுதி இது? இன்ன பிற கேள்விகளுக்கெல்லாம் தமிழ் வளர்த்த கொங்கு மண்டலம் என்பதே பதிலாக அமையும். 

கொங்குமண்டலத்தில் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படும் நகர் அந்தக் காலத்தில் தகடூர் என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்தது. அதை ஆண்டு வந்த மன்னன் அதியமான் ஒரு நாள் பருத்திப்பள்ளிக்காட்டில் இருக்கும் கஞ்சமலை மீது உள்ள கருங்காடு என்னும் பகுதியில் சஞ்சரித்தான். அப்போது ஒரு துறவி அவனிடம் ஒரு நெல்லிக்கனியைத் தந்து, இதை உண்டால் நெடுங்காலம் வாழலாம் என்று ஆசீர்வதித்தார். அதை வாங்கிய அதியமான் தான் நீண்ட காலம் வாழ்வதை விட தமிழ்ப் பாக்களை அள்ளித் தரும் ஔவையாருக்கு அதைத் தந்தால் இன்னும் நிறைய தமிழ்ச் செல்வத்தை தமிழகம் பெறுமே என்று ஔவையாருக்கு அதைத் தந்தான். இதை அறிந்த மக்கள் அவனது தமிழ் நெஞ்சத்தை வாழ்த்தினர்.

கொங்குமண்டலத்தில் அமைந்துள்ள சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வளம் வாய்ந்தவை. நாமக்கல்தலில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை கோவில் 15000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்தர்கள் கூறுகின்றனர். இங்கு உயரமான சிகரங்கள் உள்ளன. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி 600 அடி உயரத்திலிருந்து விழுகிறது.  கொல்லி மலைப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஓரி, தமிழை வளர்ப்போர்க்கு அள்ளி அள்ளித் தந்து வள்ளல்களில் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்தான். 

இன்று நாம் பழனி என்று வழங்கி வரும் முருகனின் திருத்தலம் பழைய காலத்தில் வையாபுரி என்று வழங்கப்பட்டு வந்தது. நாடெங்கிலுமிருந்து முருகனின் அருள் வேண்டி பக்தர்கள் கூட்டம் அன்றிலிருந்து இன்று வரை இங்கு திரண்டு வருகிறது. 

இயல்பாகவே கருணை வாய்ந்த உள்ளம் கொண்ட மக்கள் இப்பகுதி மக்கள். இதை நிரூபிக்கும் ஒரு சம்பவத்தை நம் இலக்கியம் கூறுகிறது. பேகன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். ஒருநாள் மலை வழியே அவன் சென்று கொண்டிருந்தபோது தோகை விரித்து ஆடும் மயில் ஒன்று குளிருக்கு ஆற்றாமல் வருந்துவதைக் கண்டான். உடனே தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி மகிழ்ந்தான். இதை அறிந்த மக்கள் அவனை வெகுவாகப் போற்றினர். கடையெழு வள்ளல்களில் ஒருவனாக அவன் திகழ்ந்தான். 

தொல்காப்பியத்தை சுருக்கமாக எளிய தமிழில் அனைவரும் பயனுறும் வகையில் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் அனைவரும் விரும்பினர். இதை கொங்குமண்டல மக்கள் வேண்டிக் கேட்கவே பவணந்தி முனிவர் நன்னூல் என்னும் அருமையான இலக்கண நூலை இயற்றினார். 

திருச்செங்கோட்டைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற புலவர் கொங்குமண்டலத்தில் காரையூர் சென்று சர்க்கரை என்ற வள்ளலைச் சந்தித்தார். அவரை வரவேற்று உள்ளே சென்று சர்க்கரையார் மனைவியுடன் பேசினார். அவர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கையில் புலவரைக் காணோம். சரியாக உபசரிக்கவில்லை என்ற எண்ணத்துடன் புலவர் இருப்பதை அறிந்த சர்க்கரை அப்படி ஒரு எண்ணம் தமக்கு இல்லை என்றார். இருந்தாலும் புலவரின் திருப்திக்காக கொதிக்கும் நெய்யில் கையை விட்டுத் தன்னை நிரூபித்தார். 

கொங்கு புலவர் சபையின் மாண்பு மகத்தானது. 

இப்படி தமிழுக்காக உயிர் வாழ்ந்த, உயிர் வாழும் மண்டலம் தான் கொங்கு மண்டலம். 

பிரம்மாவின் கர்வத்தை அடக்க சிவபிரான், காமதேனுவிடம் படைப்புத் தொழிலை அளிக்க காமதேனு அதை மேற்கொண்டு பிரம்மாவின் கர்வத்தை ஒடுக்கியது. இதை விளக்கும் திருத்தலம் கருவூர் ஆநிலை என்னும் வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர் தலமாகும். 

முதலை வாய் அகப்பட்டு மாண்ட சிறுவனை மூன்று வயது வளர்ச்சியுடன் ஏழு வயதுச் சிறுவனாக குளத்திலிருந்து ஒரு  பாடலைப் பாடி மீட்டார் சுந்தரர். இந்த ஐதீகத் திருவிழா இன்றளவும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது. 

சங்ககிரி துர்க்கத்தில் எம்பெருமான் என்ற கவிராயர் இராமாயணத்தை அற்புதமாக ஆங்காங்கே சொல்லி வந்தார். இதை இசை நூலாக ஆக்கினால் அனைவரும் இன்பம் பயப்பர் என்ற கருத்து உருவானது. அப்போது கீழ்கரைப் பூந்துறை நாட்டை மோரூரில் இருந்து ஆண்டு வந்த நல்லதம்பிக் காங்கேயன் அவரை அணுகி இசை இராமாயணத்தை இயற்றுமாறு வேண்டினான். அவரும் உடனே கோட்டையுள் இருந்த வரதராஜப் பெருமாள் சந்நிதியை அடைந்து வேண்டினார். உலகமாதா என்ற சொல் ஒலிக்க உடனே அந்தச் சொல்லுடன் அவர் தக்கை இசையால் இராமாயணத்தை இயற்றினார். ஆறு காண்டம் கொண்ட  அபூர்வமான இந்த நூல் வெண்பா, தக்கை, ஒற்றை இரட்டை என்னும் குடகம் முதலிய வரிப்பாட்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டதாகும். 

இங்குள்ள நீலகிரி மலை உலகின் அற்புதமான மலைகளுள் ஒன்று. மூலிகை வளம் கொட்டிக் கிடக்கும் மலைத் தொடர் இது. இங்கும் கொல்லி மலையிலும் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர்.

             சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகள் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற பகுதிகளாகும். திருப்பூரில் உருவாகும் ஜவுளிப் படைப்புகள் உலக அரங்கில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 இந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரைக் கொண்டு விளங்கும் கோயம்புத்தூர் ஜவுளி உற்பத்தியில் தனி இடத்தைப் பெறுகிறது.  அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் போதிக்கும் கல்லூரிகள் ஒரு புறம் என்றால் அந்தக் கல்வியைச் செயல் வடிவத்தில் காட்டும் தொழிலகங்கள் இங்கு ஏராளம். மென்பொருள் உற்பத்தியிலும் வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பிலும் முன்னணியில் கோவை இருக்கிறது. அது மட்டுமின்றி அறிஞர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் பல படைப்புகளைச் செய்து காட்டிய ஜி.டி.நாயுடு  அவர்களை தமிழகம் மறக்க முடியுமா? 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் உலகில் உள்ள அனைவரையும் ஈர்க்கும் ஒரு கோடைவாசஸ்தலமாகும். இயற்கையின் எழிலை ரசிக்கவும், கோடையின் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும் ஆயிரக் கணக்கில் இங்கு மக்கள் திரளுகின்றனர். 

கொங்கு மண்டலத்தில் உள்ள விஜயமங்கலத்தில் பிறந்த கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களையும் படித்தால் அந்த மண்டலத்தின் பெருமையைக் கண்டு பிரமிப்போம். தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.

 இப்படி தமிழ் வளர்ச்சி, தமிழர் தம் கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் வளர்த்த, வளர்த்து வரும் கொங்கு மண்டலத்தின் புகழ் எங்கும் பரவுவதில் வியப்பேது?

**

பன்னிரெண்டு வயதில் திருமணம்! கணவனுடன் சிதைத் தீயில் மரணம் -பெரிய புராணம் (Post.15,697)

Written by London Swaminathan

Post No. 15,697

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெரிய புராணம்  திருநாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் , மருள் நிக்கியார்) கதை

கண்ணகிக்கு12 வயதில் திருமணம் :சிலப்பதிகாரத்தில் திருமணத்தின் போது கோவலனுக்கு வயது 16, கண்ணகிக்கு 12 வயதுமானது என்று குறிப்பிடப்படுகிறது.

சிலப்பதிகாரம்

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு

போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்

மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்

ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,2X6=12

அவளுந்தான்,

………………………………

பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த

ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்

வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்

இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான், 2X8=16

அவனுந்தான்– புகார்க்காண்டம்

கந்தபுராணத்தில் முருகன் – வள்ளிக்குத் திருமணம் நடைபெறும் போதும்  வள்ளியின் வயது 12 தான் 

அப்பரின் சகோதரி திலகவாதியாருக்கு 12 வயதானபோது திருமணம் நிச்சயிக்கப்பட்டதை சேக்கிழாரும் குறிப்பிடத் தவறவில்லை

1292    அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்

முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்

மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்

பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்—பெரிய புராணம் 

பெரிய புராணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது ; ஆயினும் அதில்  வரும் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தது கல்வெட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

அப்பரின் சகோதரியின் பெயர் திலகவதி ; அவர்கள் பிராமணர்கள் அல்ல; அதற்கு முன்னர் காரைக்காலில் வாழந்த காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ; அவரும்  பி பிராமணர்

அல்ல; செட்டியார் ஜாதி ; இரண்டும் தூய ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இவர்களுக்கு முன்னர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்ணின் பெயர் ஐயை என்று சிலப்பதிகாரம் சொல்கிறது ; இது ஆர்யை/ ஆர்யா என்பதன் தமிழ் வடிவம் . ஆதி சங்கரரின் தாயார் பெயரும் ஆர்யாம்பாள்தான் ; சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் இருபது, முப்பது பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களே; இவை தவிர நாகன் என்று முடியும் புலவர்கள் இருபது பேர் உள்ளனர் ; நாகன் என்பது குப்தர் , சாதவாகன, வாகதர் கல்வெட்டுகளிலும் வருகிறது. அதுவும்  ஸம்ஸ்க்ருதப் பெயர் ! ஆகவே திருமணம் செய்யும் வயது, பெயரிடும் முறை ஆகியன வடக்கில் இருந்ததைப் போலவே தெற்கிலும் இருந்தது ; அக்கால மக்கள் தமிழ் மொழியையும் சம்ஸ்க்ருத மொழியையும் இரு கண்களாகவே பாராட்டினார்கள்;பயன்படுத்தினார்கள்.

கோவலன் என்பதும் கோபாலன் என்பதன் தமிழ் வடிவமே !

***

ராமாயணத்தில் ராமன் சீதையின் கல்யாண வயது 16-12 என்றே வருகிறது . நான் 12 ஆண்டுகள் அயோத்தியில் சுகமாக இருந்தேன் என்று சுந்தர காண்டத்தில் வரும் ஒரு வரியை வைத்து கூட்டல் கணக்குப் போட்டு சிலர் சீதைக்கு கல்யாணம் ஆனபோது வயது ஆறு என்று தத்துப்பித்து என்று எழுதியுள்ளனர் ; ஆறு வயதாக இருந்திருந்தால் அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்ற வரிக்களுக்குப் பொருளே வராது . ஆறு வயதில் சீதைக்கு காதல் பார்வை வருமா?

12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்தேன் என்பதை கல்யாணத்துக்கு முன்னர் வாழ்ந்த காலத்தையும் சொல்லியிருக்கலாம் என்பது அறிஞர்களின் விளக்கம்

சங்க இலக்கியம் முழுதும் ஓடிப்போன சின்னப்  பெண்களின் பொம்மை, அம்மானை சொப்பு , சிறு முலை ஆகியன  பாடப்படுவதால் 12 முதல் 16 வயதுக்குள் அவர்கள் காதலனுடன் ஓடிப்போனது புலப்படுகிறது .

***

மனு நீதி நூலில்

त्रिंशद्वर्षो वहेत् कन्यां हृद्यां द्वादशवार्षिकीम् ।

त्र्यष्टवर्षोऽष्टवर्षां वा धर्मे सीदति सत्वरः ॥ ९४ ॥

triṃśadvarṣo vahet kanyāṃ hṛdyāṃ dvādaśavārṣikīm |

tryaṣṭavarṣo’ṣṭavarṣāṃ vā dharme sīdati satvaraḥ || 9-94 ||

A man thirty years old shall marry a charming maiden twelve years old; or one twenty four years old, a damsel eight years old; in the event of his duties suffering, he may do it sooner.—(9-94)

மனு சொல்கிறார் : முப்பது வயது ஆண் மகன் 12 வயதுப் பெண்ணை  மணக்கலாம் ; 24 வயது ஆண் மகன் எட்டு வயதுப் பெண்ணை  மணக்கலாம்.

இதைத் திருமணம் என்னும் தலைப்பில் சொல்லாமல் வேறு ஓரிடத்தில் சொல்கிறார் ; இவளவு தாமதமாக அந்தக்காலத்தில் ஆண்கள் திருமணம் செய்யவில்லை ஆகையால் இதை மேல் வரம்பு- கீழ் வரம்பு என்றும் கொள்வதே பொருந்தும் என்று மனு தர்ம உரை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்..

எல்லாவற்றுக்கும் மேலாக சாவித்ரி, தமயந்தி, திரவுபதி முதலிய கதைகளை படிக்கையில் அவர்கள் எவ்வளவு அறிவு முதிர்ச்சி பெற்றிருந்தனர் எனபதும் தெரிகிறது; மனு ஸ்ம்ருதியில் வரும் ஒரு ஸ்லோகமும் இவ்வாறு பலவிதமாக விளக்கப்படுகிறது அந்தக் காலத்தில்  முறைப் பெண்ணை மணக்கும் வழக்கம் இருந்ததால் வாய் வார்த்தனையாக இப்படித் திருமணத்தைப்பேசி வைப்பார்கள்;

உண்மையான திருமணம் பிற்காலத்தில் நடந்தது; ஆகையால்  மனு எட்டு வயதுக்கு முன்னர் கல்யாணம் பேசக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறார் என்பதே பொருந்தும். மேலும் இருவருக்கு இடையேயுள்ள வயது வித்தியாசத்துக்காக இதைச் சொல்கிறார் .

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கூட கணவன் மனைவி இடையே இருபது ஆண்டுகள் இடைவெளி இருந்தது நன்றாகத் தெரிகிறது இதனால்தான் கணவர்கள் முதலில் இறப்பதும் விதவைகள் புலம்புவதும் சங்க இலக்கி யத்தில் கூட அதிகமாகக் காணப்படுகிறது.

***

காதல் திருமணம் அல்ல !

அப்பர் வீட்டுத் திருமணமும்  கோவலன் வீட்டுத் திருமணமும் காதல் திருமணம் அல்ல ; தாய் தந்தையர் பேசி முடித்த திருமணம் ; சங்க காலத்திலும் காதல் திருமணமே நடந்ததாக எண்ணுவது தவறு; மனு நீதி நூல் சொன்ன எட்டு வகைத் திருமணங்களையும் தொல்காப்பியரும் அப்பாடியே தமிழர் திருமணங்களாகக் காட்டியுள்ளார்!

வேத காலத்தில் எட்டு வகைத் திருமணங்களும் நடந்தன இதற்கு மஹாபாரதம் மற்றும் புராணங்களில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன ;

வேத காலத்தில் சமனஸ் என்னும் பொது விழாக்களில் ஆண்களும் பெண்களும் சந்தித்துக் காதல் புரிந்ததை ரிக் வேத மந்திரங்களில் காணலாம்; அது மட்டுமல்ல; சமனஸ் கூட்டத்துக்கு அலங்கரித்துக் கொண்டு இளம் பெண்கள் சென்றதைப் போல என்பதை புலவர்கள் உவமைகளாக கையாளுவதால் வேத காலத்தில் காதல் திருமணங்கள் மிகவும் நடைபெற்றதும் தெரிகிறது. .

***

அப்பர் காலத்தில் குலம் கோத்திரம் பேசிக் கல்யாணம் முடிப்பதையும் சேக்கிழார் கீழ்கண்ட பாடலில் குறிப்பிடுகிறார் .

294       அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு

மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்

குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்

பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்-பெரிய புராணம்

***

SATI pictures

அப்பர் – திலகவதியின் தந்தை புகழனார் நோய்வாய்ப்பட்டு இறந்தவுடன் அவருடைய மனைவி மாதினியார் உடன்கட்டை  ஏறி உயிர்விடுகிறார்.

1298    மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்

சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்

பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்

கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்

5.1.28-பெரிய புராணம்

இதே போல கலிப்பகையார் போரில் இறந்தவுடன் அவருடைய மனைவியாகப் போகின்ற திலகவதியாரும் கணவரின் சிதைத் தீயில் ஏறி உயிரத்தியாகம் செய்ய முயன்றதையும் அப்போது மருள்நீக்கியார் என்ற பெயர்கொண்ட அப்பர், அவர் காலில் விழுந்து அழுது  புரண்டு அதைத்  தடுத்ததையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்  .

புறநானூற்றில் குறைந்தது நான்கு பாடல்களில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் குறிப்பிடப்படுகிறது. பூதப்பாண்டியன் தேவி, பலர் தடுத்தும் கேளாமல் வீர வசனம் பேசிவிட்டுத் துணிச்சலாக தீயில் பாய்ந்து கருகி இறந்ததை பாடல்களில் படிக்கிறோம்.

சங்க காலம் — சிலப்பதிகார காலம் — பெரிய புராண காலம் வரை சில வழக்கங்கள் போற்றப்படுவதை நாம் காணமுடிகிறது .

–Subham—

Tags- சதி, உடன்கட்டைஏறும் வழக்கம், அப்பர் திலகவதி, சாதி குலம், பெரிய புராணம்,மனு நீதி நூல்,சேக்கிழார், Sati images

London Swaminathan’s Article Index for April 2026; Index No.161 (Post.15,696)

Written by London Swaminathan

Post No. 15,696

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Omens, Sanskrit Words and Valakhilya Rishis in Purananuru – Part 57 (Post No.15,566) 2/4

Two Tamil Kings acted as Servants of Common People!- Part 58; Purananuru Wonders -18 (Post No.15,585) 6/4

Image Worship in Sangam Tamil Literature! – Part 59 (Post No.15,604) 10/4

Famous Shiva Story in Purananuru- Part 60 (Post No.15,616) 13/4

Purananuru Wonders -21 Full-fledged Hinduism in Tamil Sangam Literature(Post No.15,625)16/4

Aliens / ETs, Sati and Samudrika lakshana in Sangam Tamil literature -Part 62 (Post No.15,637) 23/4****

46 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 46; இந்து மத கலைச்சொல் அகராதி-46 (Post.15,576) 5/4To

56 HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 56; இந்து மத கலைச்சொல் அகராதி-56 (Post No.15,651)24/4***

Tiruppavai in Pictures with English Translations- Part One (Post No.15,573) 3/4/26

Tiruppavai in Pictures with Three English Translations- Part Two (Post No.15,577)4/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Three (Post No.15,582) 5/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Four (Post No.15,586)6/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Five (Post No.15,589) 7/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Six (Post No.15,594) 8/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part Seven (Post No.15,598)9/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 8 (Post.15,603) 10/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 9 (Post No.15,607) 11/4

Tiruppavai in Pictures with Three English Translations- Part 10 Last Part (Post No.15,611) 12/4

****

Tirukkural Encyclopaedia- Chapter 1 (Kural1 to 5) Post.15,659 (26/4)

Tirukkural Encyclopaedia- Chapter 1 (Kural 6 to 10) Post.15,662 (27/4)

Tirukkural Encyclopaedia- Chapter 2 (Kural 11 to 15) Post No.15,669 (28/4)

Tirukkural Encyclopaedia- Chapter 2 (Kural 16 to 20) Post.15,674 (29/4)

****

Uraiyur -Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-2 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,647) 23/4

Thiru Anbil-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-3 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,560) 24/4

Tiruk Kudalur-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-4 திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,654)25/4

Kapisthalam-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-5 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,657) 26/4

Tiru Adanur-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-6 திவ்யதேசம் – லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,661)27/4

Pullap Puthankudi-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-7;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,668) 28/4

Sarngapani temple-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-8;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,672) 29/4

Oppiliappan-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-9;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,675) 30/4

****

Tamil Articles

முருகப் பெருமானிடம் மோதி, தோல்வி அடைந்த புலவர் கதை- Part 62 (Post No.15,561) 1-4-76

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை; மார்க்கண்டேயன் கதை -Part 63 (Post No.15,565) 2/4

விஷ்ணுவை சிவலிங்கமாக மாற்றிய கதை! (Post No.15,570) ¾

அருணகிரிநாதர் ஒரு ‘இலி’-ச்சவாயன்!- Part 65 (Post No.15,575) 4/4

குகையில் நவ நாத சித்தர்கள்! வியாசருக்கு பிள்ளையார் உதவி!- Part 66 (Post No.15,579) 5/4

உடல் ஒரு 9 வாசல் நகரம்: அதர்வண வேதம் முதல் திருப்புகழ் வரை சொல்லும் அதிசயம்! (Post.15,584) 6/4

திருப்புகழில் சாரதாபீடம்! கடவுளர்கள் ஆடிய அற்புத நடனங்கள்! – Part 68 (Post.15,588)7/4

உடலும் மாமரமும் – நல்ல உருவகம்!- Part 69 (Post No.15,592) 8/4

இன்வெஸ்ட்மென்ட், சேவிங்ஸ் பற்றி நம்மாழ்வாரும் அருணகிரிநாதரும் பாடியது ஏன் ? (Post.15,597) 9/4

உலகை அழிக்கும் வடமுகாக்கினி பற்றி  அருணகிரிநாதர்!  Part 71 (Post No.15,601)10/4

நடராஜர் உடலில் நமசிவாய எழுத்துக்கள்! அருணகிரிநாதரின் புது விளக்கம்- Part 72 (Post.15,606) 11/4

திருப்புகழில் 18  கணங்கள்எட்டு வகை வாதிகள்- part 73 (Post No.15,610) 12/4

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614) 13/4

காதலியைக் காண முருகன் போட்ட வேஷங்கள் – 75 (Post No.15,618)14/4

சிவபெருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621) 15/4

திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624) 16/4

‘ஆறுமுகம்’ என்பதன் பொருள்; இலங்கையில் பிரம்மா வேடனாக பிறந்த கதை–78 (Post.15,627)17/4

புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633) 19/4

கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)20/4

*******

வாஞ்சிநாதனை தரிசித்தேன் (Post No.15,562) 1/4/26

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!- Part 1 (Post No.15,658)26/4

உலகத்திலேயே அதிசயமான திருமண வாழ்த்து!-Part 2ஆறு கதைகள்! (Post.15,664)27/4

உலகு இன்பக் கேணி என வேதம் சொல்கிறதா ? பாரதியார் கூற்றுக்கு ஆதாரம் எங்கே? (Post.15,622) 15/4

ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part1 (Post.15,615)13/4

கல்யாண சுந்தர சிவாச்சார்யாவுக்கு லண்டனில் அஞ்சலி (Post No.15,640)21/4

சங்க காலத் தமிழ் நாட்டில் உருவ வழிபாடு (Post No.15,628) 17/4

சங்க காலத்தில் விலைமாதர்களும் விபச்சாரமும் (Post No.15,666) 28/4

சித்திரா பெளர்ணமியும் சித்திர குப்தன் கோயிலும் (Post No.15,671) 29/4

தமிழ்ச்சங்க நூலிலும்,பைபிளிலும் கின்னரம்; பாபிலோனியாவில் தமிழ் தம்பட்டம்! (Post.15,655) 25/4

Q & A தொல்காப்பியம் – பாயிரம் – நச்சினார்க்கினியர் உரை – சந்தேகம் (Post.15,581) 5/4

பைரவர்களில் இத்தனை பேரா?  ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரைத் தரிசித்தேன் (Post.15,572) 3/4

–Subham—

Tags- London Swaminathan’s Article Index for April 2026; Index No.161