எல்லா சொற்களும் ‘அ’ என்னும் எழுத்தில் துவங்கும் தாவரத்தின் பெயர்கள் ; மரம்-செடி-கொடி- பூ என்று முடிவடையும் ; அதற்கு முந்திய எழுத்துக்களைக் கண்டுபிடியுங்கள் ; கூடியமட்டும் கலர் வழியே செல்லுங்கள்
விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .
ம்8
ம்2
க8
தி1
ன 2
செ
ம
ரு8
த்1
ச2
டி
ர
ல்7
கி7
அ
க3
த்3
தி3
ம்
னி 6
ர 5
ழி4
கொ
ச்6
ச5
ஞ்4
டி
ச6
ரி12
ளி9
லி10
சி4
பு
ம்6
ல13
ர,9
ல் 10
ல்4
ரை12
வ 12
அ
தி 11
ர11
ல்11
Common words : மரம் செடி கொடி , புல்
குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
3.மாட்டுக்குப் போடும் கீரை; தமிழ் முனிவரின் பெயர்
7.பெண்கள் தலை முடியை உலர்த்த இந்த மரத்தின் கட்டையை புகைப்பராம் .
வெளியூரிலிருந்து சொந்தக் காரர்களும், நண்பர்களும் மதுரைக்கு வந்தால் மூன்று இடங்களைச் சுற்றிக் காண்பிப்பேன். 1987-ல் லண்டனில் குடியேறுவதற்கு முன், சுமார் கால் நூற்றாண்டுக்குக்கு நான் செய்த “சேவை” இது. மதுரை மீனாட்சி கோவில் மற்றும் அதன் எதிரேயுள்ள புது மண்டபம், சற்று தொலைவிலுள்ள திருமலை நாயக்கர் மஹால், ஊருக்கு வெளியேயுள்ள மாரியம்மன் தெப்பக்குளம் ஆகிய மூன்றும் என் ‘லிஸ்டி’ல் எப்போதும் உண்டு. பெண்களாக இருந்தால், என் தாயார் சின்னாளப்பட்டி சேலைக் கடைகளுக்கும், நகைக் கடைகள் மட்டுமே உள்ள தெற்காவணி மூல வீதிக்கும் அழைத்துச் செல்லுவார்.
மதுரையில் வானளாவிய கோபுரங்களைப் பார்க்கும் எவரும் 400 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரை மறக்கமுடியாது. அந்த நாயக்கர் கதையை நான் எத்தனை பேருக்குச் சொன்னேனோ எனக்கே நினைவில்லை. அது மட்டுமா? கோவிலுக்கும் அரண்மனைக்கும் இடையுள்ள சுரங்கப்பாதை, மற்றும் மதுரை செளராஷ்டிர சமூகத்தினர் வீடு கட்டுகையில் அந்தச் சுரங்கத்திலிருந்து எடுத்த தங்கக் கட்டிகள் போன்ற வழக்கமான ‘கப்ஸா’ கதைகளையும் அவிழ்த்து விடுவேன். நான் சின்ன வயசில் நம்பியதை அவர்களும் நம்பட்டுமே !
xxxx
திருமலை நாயக்கர் மஹால் எனப்படும் அரண்மனை பற்றிய உண்மைக் கதைகளை இப்போது சொல்கிறேன் .
திருமலை நாயக்கர் (1627-1659) மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். தென் இந்தியாவில் துலுக்கப் படைகள் அழித்த அரண்மனைகள் போக எஞ்சியது இது ஒன்றுதான் . இதில் அவர் 75 வயது வரை மனைவிகளுடன் வசித்தார் . இப்போது நாம் காணும் அரண்மனையைப் போல நான்கு மடங்கு பெரிதாக 164-0ல் திகழ்ந்தது; பல வெளிநாட்டினர் குறிப்புகளிலிருந்து நமக்குத் தகவல்கள் கிடைக்கின்றன.
அரண்மனையின் முக்கியப் பகுதிகள்
ரங்க விலாசம் , சொர்க்க விலாசம், , 18 இசைக்கருவிகள் வாசிக்கும் மண்டபம், பல்லக்கு வைக்கும் மண்டபம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், மனைவிகள் வசிக்கும் அந்தப்புரம், நாடக சாலை, வசந்த வாவி, நந்தவனம், படைக்கலன் வைக்கும் இடம், யானைகள் கட்டும் தூண்கள் எனப்பல பகுதிகள்.
நாயக்கர் சொர்க்க விலாசத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்க விலாசத்திலும் வசித்தனர் . இப்போது நாம் காண்பது சொர்க்க விலாசம் மட்டுமே; உள்ளே நுழைந்ததும் முற்றமும் பிரம்மாண்டமான தூண்களும் இருக்கும். அவை இளம் பெண்களின் கன்னங்களை விட வழுவழுப்பாக இருக்கும்.; தாஜ் மஹாலின் சலவைக்கற்கள் தோற்றுப்போகும் .இந்தப் பள பள வழு வழு ராட்சத தூண்கள்!! அவை எப்படிக் கட்டப்பட்டன என்பதை திருப்பணி மாலை பாடல் வருணிக்கிறது.
சுண்ணாம்பு, வெல்லச் சாறு, கடுக்காய், ஆமலகம், தான்றிக்காய், உளுந்து , காட்டுஞ் சாறு ஆகியவற்றை அரைத்து மேலே பூசினாராம். ஆமலகம் என்பது நெல்லிக்காய்.; முட்டைகளை அரைத்துக் கலந்து கட்டியதாகவும் செவி வழிச் செய்தி.
அரண்மனையைச் சுற்றி பெரிய நீண்ட மதில் சுவர் இருந்தது . 150 ஆண்டுகளுக்கு முன்னர் கூட 900 அடி நீளமும் 600 அடி அகலமும் 40 அடி உயரமும் இருந்ததாம்.. பின்னர் எல்லோரும் வீடு கட்ட, கிடைத்த பகுதிகளை எல்லாம் எடுத்துச் சென்று விட்டனர்.
ஆளுக்கு ஒரு மயிர் பிடுங்கினால் அடியேன் தலை மொட்டை என்பது தமிப்பழமொழி. அப்படி இந்த அரண்மனை ம் மதில் சுவரும் மொட்டை அடிக்கப்பட்டன. 1868ல் சென்னை கவர்னராயிருந்த நேப்பியர் இந்த அரண்மனையின் அழகைக்கண்டு அந்தக்கால இரண்டு லட்சம் ரூபாய்களை செலவிட்டு பழுது பார்த்தார். வரலாற்றுப் பேரறிஞர் டாக்டர் இரா. நாகசாமி , தமிழ் நாடு தொல்பொருட் துறை இயக்குனராக இருந்த காலத்தில் மேலும் பாதுகாப்பு மற்றும் திருப்பணிகளைச் செய்தார் .
அரண் மனையின் தற்போதைய கட்டிட உயரம் 58 அடி. தூண் களின் எண்ணிக்கை 248. தூண்களின் உயரம் 82 அடி; அகலம் 6 அடி; மூன்று நான்கு பேர் இருந்தால்தான் அதைக் கட்டிப்பிடிக்க முடியும்.
கூரைகளில் சிவன், விஷ்ணு புராணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன
1981ம் ஆண்டு முதல் ஒலி -ஒளிக் காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது . நாள்தோறும் நடக்கும் இக்காட்சியில் மஹாலின் சிறப்பும் மன்னரின் சிறப்பும் விதந்து ஓதப்படுகிறது.
இப்போதும் அரண்மனைக்கு சற்று தொலைவில் பத்துத் தூண் என்ற பகுதி இருக்கிறது. அங்கேதான் யானைகள் நிறுத்தப்பட்டன.
திருமலை நாயக்கரின் பேரன் இந்தக் கட்டிடத்தின் சில பகுதிகளை இடித்து திருச்சிக்கு கொண்டு சென்று புதிய அரண் மனை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அங்கிருந்த பொக்கிஷங்களையும் அவர் எடுத்துச் சென்றார்.
சொர்க்க விலாசம்
இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகள் வழியே மேலே செல்லலாம்;.உயர்ந்த தூண்களும், வேலைப்பாடுமிக்க சுதைகளும் (சிற்பங்கள்) இருக்கும் உயரமான பகுதி; ஒரு காலத்தில் இதன் தூபிகள் தங்கத்தால் மூடப்பட்டிருந்தன .நடுவில் யானைத் தந்ததினால் ஆன மண்டபம் இருந்தது. அதில் வைக்கப்பட்ட இரத்தின சிம்மாசனத்தில் நாயக்கர் அமர்ந்து அரசவை நடத்தினார். இதைக் கற்பனை செய்து மனக்கண்களில் பார்த்தால் இதற்கு ஏன் சொர்க்க விலாசம் என்று பெயரிட்டனர் என்பது புரியும் .
XXX
செங்கோல் விழா
மதுரையை ஆள்வது மீனாட்சி அம்மன் ; அவரது பிரதிநிதிதான் பாண்டிய மன்னர்களும் நாயக்க மன்னர்களும். இது புற நானூற்றிலும் உள்ளது. பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர் முதுகுடுமிப் பெருவழுதி. அவர் இரண்டு பேருக்குத்தான் சல்யூட் Salute அடிப்பாராம் ; ஆசீர்வாதம் செய்யும் பிராமணர்களுக்கு ஒரு முறை தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். அடுத்த சல்யூட் மீனாட்சி கோவிலுக்கு; அங்கே செ ன்றாலும் தலை குனிந்து வணக்கம் செலுத்துவார். வேறு எங்கும் தலை நிமிர்ந்து நிற்க , அவருக்கு எல்லோரும் சல்யூட் அடிப்பார்கள்.
செங்கோல் விழாவில் இதையே திருமலை நாயக்கரும் செய்தார். .ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நாள் திருமலை நாயக்கர், கோவிலுக்குச் சென்று அங்கயற்கண்ணி அம்மனுக்கு முடி சூட்டு விழா நடத்தி, அங்கு மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று, வீதி உலாவாக அதைக்கொண்டு வந்து , அரண்மனையின் சொர்க்கவிலாசத்தில் அலங்கரிக்கப்பட்ட அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்கு சிறப்பாக வழிபாடுகள் நடக்கும். அனறைய தினம் வந்திருக்கும் அனைவருக்கும் மன்னர் பரிசுகளை வழங்குவார் . அன்று முழுதும் அரியணையில் செங்கோல் இருக்கும் ; மறுநாள் செங்கோலுக்கு மன்னர் புனர்பூஜை செய்வார். அதை மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் சென்று ,மீனாட்சி அம்மனின் பாதங்களில் வைத்து வணங்குவார் . மன்னர் என்பவன் இறைவனின் சார்பில் ஆட்சி நடத்தும் ஒரு ஊழியர்தான் என்பது இதன் தாத்பர்யம் .
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களிலும் திருமலை மன்னர் தன்னை அலங்கரித்துக்கொண்டு , அரியணையில் கொலு வீற்றிருப்பார். சிற்றரசர்கள் வந்து அவருக்கு கப்பம் செலுத்துவார்கள்
தொடரும் ……………………………….
XXX
Tag- செங்கோல் விழா, நான் கண்ட, நாயக்கர் அரண்மனை , திருமலை நாயக்கர், பிரம்மாண்டமான தூண்கள்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 –
அத்தியாயம் 1
ச.நாகராஜன்
கனவு நிஜமானால் கஷ்டம் தான்!
29 வயதான ஜென்னா ஹோவல் (Jenn Howell) என்ற இளம் பெண்மணி கனவு ஒன்றைக் கண்டாள். அதில் அவள் சில மோசமான பேர்வழிகளிலிருந்து தப்பிக்க ஒரு ஓடும் ரயிலில் ஓடிக் கொண்டிருந்தாள். அவரது துணைவன் அவரிடம் உன் கையிலிருக்கும் மோதிரத்தை ஒளித்து வைத்துக் கொள் என்று கூற அவள் லபக்கென்று வாயில் போட்டு விழுங்கிக் கொண்டாள்.
திடீரென்று ஹோவல் விழித்தெழுந்தாள். அப்பாடா, கண்டது ஒரு கனவு தான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஆனால் அப்போது யதேச்சையாக தன் இடது கையைப் பார்த்த போது அங்கு மோதிரத்தைக் காணோம். நேராக ஆஸ்பத்திரிக்குச் சென்று அங்கு எக்ஸ்ரே எடுத்த போது அதை அவள் விழுங்கி விட்டிருப்பது தெரிய வந்தது. என்டாஸ்கோபி மூலமாக மோதிரம் ஒரு வழியாக உடலிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டது.
ஹோவல் மோதிரத்தை வடிவமைப்பைச் செய்தவரிடம் தான் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தார். அவர் சொல்லியிருந்தார் :
“அடடா! எப்படி இருக்கிறது இது! அப்படியே வாயில் போட்டு விழுங்கி விடலாம் போல இருக்கிறது!”
திறக்க முடியாத லாக்கர்!
ஸ்டீபன் மில்ஸ் என்பவர் ஒரு வெல்டர், மெஷினிஸ்டும் கூட. அவர் அல்பெர்டாவில் ஃபோர்ட் மக்மர்ரே என்ற இடத்தில் வசிப்பவர். அவர் வெர்மில்லியன் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு கண்காட்சியைப் பார்க்க வந்தார். அங்கு ஒரு 2000 பவுண்ட் மதிப்புள்ள பூட்டப்பட்ட லாக்கர் இருந்தது. அது 1990களில் நன்கொடையாக அங்கு தரப்பட்டிருந்தது. ஆனால் அதைத் திறக்கவே முடியவில்லை. பல நிபுணர்களும் வந்து அதைத் திறக்க முயன்றனர். முடியவே இல்லை. அதற்குள் நிறைய தங்கம் இருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர்.
ஸ்டீபன் அந்த லாக்கரிடம் வந்த போது இந்த விஷயத்தை அங்கிருந்தவர் சொல்லக் கேட்டார். உடனே நான் இதைத் திறக்கப் பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு விளையாட்டாக 20-40-20 என்று அமுக்கி விட்டு மூன்று முறை வலது புறமும் இரு முறை இடது புறமும் திருகினார். என்ன ஆச்சரியம்! லாக்கர் திறந்து கொண்டது. உடனே அனைவரும் ஓடி வந்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க அனைவருக்கும் ஆவல்!
ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல அதில் தங்கமோ பணமோ இல்லை.
1977இல் ஆர்டர் செய்யப்பட்ட ஒரு ஹோட்டல் சர்வரின் ஆர்டர் புக் இருந்தது. 1978இல் 9.95 டாலர் செலுத்தப்பட்டதற்கான பேப்பர் இருந்தது. ஆனால் 40 வருடம் திறக்காக ஒரு லாக்கரைத் திறந்தாரே அதற்கு விலை மதிப்பு உண்டா என்ன?
வீட்டிலேயே நடைப்பயிற்சி
பிரான்ஸில் பல்மாவில் (Balma) ஒரு உணவுவிடுதியில் சர்வராக வேலை பார்த்து வந்தார் எலிஷா நோகோமோவிட்ஸ் (Elisha Nochomovitz). பார்சிலோனா மாரத்தானில் 2020 மார்ச் 15ஆம் தேதி கலந்து கொள்ள அவர் எண்ணியிருந்தார்.ஆனால் கோவிட் 19 தொற்று வரவே அவரால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவர் விடவில்லை.
தனது வீட்டு 23 அடி நீள பால்கனியில் இந்தப்புறத்திலிருந்து அந்தப்புறமும் அந்தப்புறத்திலிருந்து இந்தப் புறமும் ஓட ஆரம்பித்தார். இப்படி 42 கிலோமீட்டர் ஓடினார். ஆறு மணி நேரம் 48 நிமிடத்தில் இது முடிந்தது. ஆனால் மூன்றரை மணி நேரம் தான் ஆகி இருக்க வேண்டும் அந்தப் போட்டியில் ஓடி வெற்றி பெற! என்றாலும் தனது இந்த வீட்டு சாதனையை அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டார். இவரைப் போல கோவிடினால், வீட்டில் ஓடிக் கொண்டே இருக்கும் அனைவருக்கும் ஒரே உற்சாகம். இதை வரவேற்று எலிஷாவைப் பாராட்டினர்.
பிரபல மாத இதழான ரீடர்ஸ் டைஜஸ்ட் தனது வாசகர்களிடமிருந்து பெற்ற நிஜமான சம்பவங்கள் தாம் இவை!
3.Who is the Swamiji who took Ramakrishna Paramahmasa’s message to the Western world?
4.Who was called The Flying Swami?
5.Who started Divine Life Society?
6.Who was Brahmananda?
7. who spread TM known as Transcendental Meditation?
8. Who is the author of ‘An Autobiography of a Yogi’?
9.Where is Sathya Sai Baba’s Samadhi?
10. Who is the current head of Chinmaya Mission?
11.Who was the previous head of Chinmaya Mission?
12.What was the name of Chinmayananda before he took Sanyas?
13.Who wrote the popular book ‘Oh, Mind! Relax Please’?
14. who established Skandashram in Tamil Nadu?
15. Who established Swami Chidbhavananda Ashramam in Theni, Tamil Nadu?
16.Who was born in Manjakkudi village and became a famous Swamiji?
17.Who lived for 300 years among Hindu Ascetics?
18.Where is Gnanananda Thapovanam?
19.What is in ‘Who am I?’ book by Ramana Maharishi?
20.What is the original name of Sage of Kanchi, Jagadguru Sri Chandrashekarendra Saraswati (1894-1994)?
Answers:
1.Sant Tukaram Vaikunthstan Temple, Dehu – from where Tukaramji ascended to Vaikuntha (Abode of God) in his mortal form; there is a beautiful ghat behind this temple along the Indrayani river.
2.Sri Sai Baba
3.Swami Vivekananda
4.Swami Vishnu Devananda, who flew to trouble spots in the world to spread peace.
5.Swami Sivananda of Rishikesh
6.Ramakrishna Paramahamsa’s disciple. His pre monastic name was Rakhal Chandra Ghosh.
7. Maharishi Mahesh Yogi
8.Paramahamsa Yogananda
9. Puttaparthi village in Andhra Pradesh
10.Swami Swaroopananda
11.Swami Tejomayananda
12.Balakrishna Menon
13. Swami Sukhabodananda
14.Swami Santhananda of Pudukkottai
15.Swami Omkarananda
16.Swami Dayananda
17.Swami Trailinga Swami of Kasi
18.Thirukkovilur in Tamil Nadu
19. Who am I? is the title given to a set of questions and answers bearing on Self-enquiry. The questions were put to Bhagavan Sri Ramana Maharshi by Sri M. Sivaprakasam Pillai, about the year 1902.
20.Swaminathan
xxxx
My old book containing English and Tamil Quiz posts
மஹாராஷ்டிர மாநிலத்தில் இடைக்குல மக்கள் ஒரு விநோதத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்துகிறார்கள் ; அப்போது ஊரே மஞ்சள் வர்ணமாகி விடுகிறது ; இடைக்குல பாபா /சுவாமிகள் ஒருவர், இனி என்ன நடக்கப்போகிறது என்று ஆரூடம் சொல்லுவார். இதோ சுவையான விவரம் :-
கோலாப்பூர் மாவட்டத்தில் பட்டண கோடொலி என்ற கிராமம் இருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் விட்டல் வீரதேவ மஹாராஜின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவர் விஷ்ணுவின் அவதாரம் என்பது இடைக்குல மக்களின் நம்பிக்கை.
மஹாராஷ்டிரா , கோவா, கர்நாடகா , ஆந்திரப் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு இடையர்கள் ஜாதிக்கு வீரதேவ் குல தெய்வம் ஆகும் .விழா நடைபெறுகையில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இந்த பட்டண கோடொலி கிராமத்துக்கு நடந்து வருகிறார்கள் அவர்கள் ஒரு விஷேச அலங்காரக்கு டையையும் எடுத்து வருவார்கள். கிராமீய பாடகர்கள் இசைக்கருவிகள், கொட்டு மேளங்களுடன் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவார்கள். கழைக் கூத்தாடிகள் சர்க்கஸ் வித்தைகளைக் காட்டுவார்கள். பண்டார என்னும் விசேஷ மஞ்சள் தூளை நினைத்த இடமெல்லாம் அள்ளி வீசுவார்கள். வியாபாரிகள் தெருவெங்கும் கடை விரிப்பர்..
சோலாப்பூர் அஞ்சன் கோவ் கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீ கேலோபா ராஜபாவ் வாக்மோடே ( Sri Keloba Rajabau Waghmode) என்பவர் அபூர்வ சக்தி கொண்ட சாமியார் என்று கருதப்படுகிறார். அவர் 17 நாட்களுக்கு நடையாக நடந்து, இந்த பட்டன் கோடொலி கிராமத்துக்கு வருகிறார். ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அவர் அமர்கிறார் .விழாக்காலம் முழுதும் அவர் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து ஆசி வழங்குவார். மக்கள் அவர் மீதும் மஞ்ச ள் பொடியைத் தூவுவர். முக்கிய நாளன்று அவர் திடீரென சாமி வந்தவர் போல ஆடுவார். துள்ளிக் குதிப்பார். பத்து நிமிட நேரத்துக்கு அவர் பல ஆரூடங்களைச் சொல்லுவார். பெரும்பாலும் கன்னட சொற்கள் கலந்த இந்த மொழி யாருக்கும் புரியாது. அருகிலுள்ள பூஜாரி, புரியும் மொழியில் வியாக்கியானம் செய்வார். அதில் வருமாண்டில் பெய்யக்கூடிய மழை விவரம், விளைச்சல் விவரம், வியாபார நடப்புகள் போன்றவை இருக்கும். அவர் சொல்லும் விஷயங்கள் 90 சதவிகிதம் சரியாக இருக்கிறது என்று இடையர்கள் கூறுகின்றனர்.
பாபாவிடம் ஒரு புனித வாளைக் கோவில் பூஜாரி கொடுப்பார். அப்போது அவருக்கு சாமி வரும். உடனேயே அவர் சொல்லுவது எல்லாம் பலிக்கும் என்று பக்தர்கள் நம்புவர். இது போல தமிழ் நாட்டுக்கு கிராமீய கோவில்களிலும் சாமி வந்து ஆடுவோர், கிராமத்துக்கு வரும் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதை காணலாம்
கிட்டத்தட்ட தமிழ் பஞ்சாங்கங்கள் சொல்லுவது போல இவரும் பல விஷயங்களை பேசுகிறார். இந்த ஆரூட, சாமி ஆடும் வேலை முடிந்தவுடன் அவர் சொந்த கிராமத்துக்கு நடந்து செல்லுவார்.
அருகிலுள்ள மண்டபத்தில், பக்தர்கள் சாமி கும்பிடுவார்கள் ;ஆங்காங்கே சமைத்துச் சாப்பிடுவர். விழாவின் போது பயன்படுத்தும் பொடி வெறும் மஞ்சள் கிழங்குப் பொடி மட்டுமன்று . அதில் தேங்காய்த் தூளும் இருக்கும். இதை பிரசாதமாகப் பயன்படுத்துவோர் ஆட்டு ரோமத்துடனும் சாமிக்குப் படைப்பர். இந்த வட்டாரம் ஆட்டுரோம கம்பளத்துக்கும் பெயர் பெற்ற இடம். மஞ்சள் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.
விழா நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலிருந்தே மக்கள் யாத்திரையைத் துவக்கி விடுவார்கள் .
மண்டபத்தில் உள்ள கடவுள் சிலை மீது பொடியைத்தூவி, இறைவன் பாதத்திலிருந்து பிரசாதம் எடுத்துச் செல்லுவார்கள் .
–subham—
Tags – மஞ்சள் பொடி , திருவிழா , இடையர் , பாபா, ஆரூடம், ஆட்டு ரோமம்
The Haldi festival, held at Pattan Kodoli, in the district of Kolhapur in Maharshtra is organised every year in October. It is a festival of the Shepherd Community.
The festival is celebrated to commemorate the birth anniversary of Vitthal Birdev Maharaj, who is considered to be a reincarnation of Lord Vishnu.
Birdev is also the family deity of the Dhangar, a shepherd community that resides in Maharashtra, Karnataka, Goa and Andhra Pradesh. The annual fair and festival attract thousands of devotees, where the festive mood is set with people throwing haldi or turmeric powder over Sri Keloba Rajabau Waghmode, known as the ‘Baba’ who sits under a Banyan tree. The baba is considered as the messenger of god, and people seek his blessings for a healthy life. He’s revered for his ability to foretell his predictions about farming, rain and future conditions of the country which is helpful to the people of the community.
The most important ceremony of this fare is the predictions by Shree Kheloba Rajabhau Waghmode, from Anjungau, a village in Solhapur District. He gives predictions whenn he gets the divine sword from the temple priest.
Sri Keloba Rajabau Waghmode, known as the ‘Baba’ of the devotees, walks 17 days from his village to reach Pattan Kodoli for the festival every year. Huge umbrellas are brought in to welcome the Baba to the temple, accompanied with a procession with drums and traditional music. As soon as he enters the temple, Baba attains a trance mode that makes him jump and dance that lasts for nearly 10 minutes. The Baba then goes ahead to foretell his predictions about farming, rain and future conditions in Kannada, his trance language, which is translated by the priest. He starts his journey back after the rituals gets over.
For a week people walk towards the village with accompanied folk musicians. They are joined by acrobats, vendors and farmers. They carry a special type of umbrella. which they spin and dance.. Baba’s predictions are like the predictions in Tamil Panchangs (almanacs). it also predicts about the weather, harvest, political situation, natural catastrphes that may happen in the new year.
Like Baba, Tamil village priests also get possesed and make preditions for the village; but in this Maharashtra village it is celebrated with a huge crowd.
Devotees offer the yellow powder to God in the village temple and take it back as Prasad. Since this area is famous for carpets made out of goats hair, devotees offer goat hair with the yellow powder to God.
—subham—
Xxxxx Subham xxxxx
Tags- Haldi Festival, Turmeric, Shepherd community Baba
“னந்தா” என்ற எழுத்துக்களுக்கு முன்னுள்ள 16 சுவாமிஜிக்களைக் கண்டுபிடியுங்கள். வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வர்ணத்தில் உள்ளன உங்களுக்கு உதவி செய்ய சில துப்புத் தகவல் இதோ:
Across குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)
1.ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதம சீடர்
2.சின்மயா மிஷனின் முந்தைய தலைவர்
3. ஒரு யோகியின் சுய சரிதை நூல் எழுதியவர்
4.அவர் ஸ்தாபித்த மிஷன் அவர் பெயரிலேயே இயங்குகிறது
8. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இந்த சுவாமிஜியை வாழ்த்தி 32 வரிகளில் பாரதியார் கவிதை படைத்தார்.
9. வட இந்தியாவில் கபீர், ரவிதாஸ் முதலியோரின் குரு
Xxxx
Down கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)
1.பறக்கும் சுவாமிஜி என்று பெயர் எடுத்தவர்
4.தெய்வ நெறிக்கழகத்தை நிறுவியவர்
5.புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில் , ஸ்கந்தாஸ்ரமத்தை
நிறுவியவர்
6. திருக்கோவிலூர் தபோவன சுவாமிஜி
7. ஓடிப்போய் தீவில் வாழும் சுவாமிஜி ;போலீஸ் கேஸ்
10.மனதே ரிலாக்ஸ் ப்ளீஸ் நூல் எழுதி பிரபலம் அடைந்தவர்
11.சின்மயா இயக்கத்தின் தற்போதைய தலைவர்
12.தேனீ வேதபுரீ ஆஸ்ரமத்தை நிறுவியவர்
13..ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேர் சீடர்
14. ஆர்ய சமாஜ நிறுவுனர் அல்லது மஞ்சக்குடி ஆஸ்ரமம் நிறுவுனர்
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Answers
ACROSS
1.வி வே கா , 3.ப ர ம ஹ ம் ச யோ கா ,4.சி ன் ம யா ,8.அ பே தா
9.ராமா
XXXX
DOWN
1.வி ஷ் ணு தே வா ,2.தே ஜோ ம யா ,4.சி வா ,6.ஞா னா ,7.நி த் யா
10.சு க போ தா ,5.சா ந் தா,11.ஸ் வ ரூ பா ,12.ஓ ம் கா ரா,13.பி ர ம் மா ,