HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 (Post No.15,559)

Picture of Kushana Coin

Written by London Swaminathan

Post No. 15,559

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Words beginning with letter KA continues…………………………….

English version posted yesterday; Tamil version is posted here today.

***

கனிஷ்கர் ( 127–150 CE)

குஷான மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவர் ; மாத்திரை ஆசியாவின் சில பகுதிகளையும் மதுரா வரையுள்ள பெரும்பகுதியை ஆண்டவர் . தலைநகர் புருஷபுரம் ; இதன் தற்போதைய பெயர்  பெஷாவர் (பாகிஸ்தான் நகரம் ).சீன எல்லைப் புறத்தில் வாழ்ந்து வந்த “யூச்சி” என்னும் நாடோடி இனத்தவர் ஆக்ஸஸ் நதி தீரத்தை அடைந்து பின்னர் பாக்டிரியாவில் குடியமர்ந்தனர். யூச்சி இனத்தில் ‘கியூசுவான்ங் ‘ என்ற இனமே குஷான ர் என்று அழைக்கப்பெறுகின்றனர். இவ்வம்சத்தில் குஜீலா காட்பீஸஸ், வீமா காட்பீஸஸ், கனிஷ்கர் போன்ற சிறந்த அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

வீமா காட்பீஸஸ் காசுகளில் முன்புறம் சிவன், திரிசூலம், கோடரி போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பின்புறம் அரசரின் பெயர் கிரேக்க மற்றும் கரோஷ்டி எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது.

கனிஷ்கரது காசுகளின் முன்புறம் கனிஷ்கர் இந்திய பாணியில் உடை  அணிந்து, தன் இடக்கையில் ஈட்டியை ஏந்தி நிற்கிறார் . பிற்காலத்தில் வெளியிட்ட காசுகளில்

சூரியன், சந்திரன், வாயு, நெருப்பு போன்ற தெய்வங்களின் பெயர்களை ஈரானிய மொழியில் பொறித்துள்ளார். ஓஷோ என்ற பெயரில் சிவனின் உருவத்தைப் பொறித்தார். சிவனோடு புத்தரின் உருவத்தையும் புத்த அபொறித்தார்.  பெரும்பாலும் இவர்கள் தங்கத்தாலான காசுகளை வெளியிட்டுள்ளனர்.

King Kanishka 

***

கண்வர் /மகரிஷி

காளிதாசனின் உலகப்புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் வரும் கண்வ மகரிஷியைத் தவிர யஜுர் வேதத்திலும் கண்வர் பெயர் வருகிறது .

கண்வ மகரிஷி பேருரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண். பறவைகள் (சகுன) வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயர். இதோ அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-

உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

காளிதாசன் உலக மகா கவிஞன் மட்டுமல்ல. பெரிய சைகாலஜிஸ்ட்= உளவியல் நிபுணன். ஒரு பெண்ணின் வாயால் இது எல்லாம் சரி என்று சொன்னால்தான் மற்றொரு பெண் நம்புவாள். இல்லை என்றால் இந்த ஆண்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல. பெண்கள் என்றாலேயே அம்மாவின் கருத்தே முதலில் நிற்கும். அவளுக்கு அதிகாரம் அதிகம். அந்த முறையிலும் மனைவி கருத்தைக் கேட்கிறார் மகரிஷி கண்வர்..

அவர் மேதாதிதி ரிஷியின் மகன் சுக்ல யஜுர்வேதத்தில் கண்வ சம்ஹிதையில் நாற்பது அத்தியாயங்களும் 2,086  மந்திரங்களும் உள்ளன ; இருவரும் வேறு ரிஷிகள் என்றே யூகிக்க வேண்டியுள்ளது.

***

கார்த்திகேயன்


முருகனின் பெயர்களில் ஒன்று. சரவணப் பொய்கையில் தோன்றிய குழந்தையை ஆறு கிருத்திகா பெண்கள் வளர்த்ததால் இந்த நாமம். தாரகாசுரனை வதம் செய்ய எடுத்த அவதாரம் . சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் தோற்றம் இது.

கார்த்திகை  மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இவர்கள் கார்த்திகை நக்ஷத்திரங்களாக வானில் ஜொலிப்பதை இப்போதும் காணலாம். மேலும் கார்த்திகை பெளர்ணமியன்று வீடெங்கும், வீதியெங்கும் விளக்கேற்றி இவர்களையும் முருகனையும் நாம் இன்றும் நினைவு கூறுகிறோம்.

***

கார்த்தவீர்யன் 

புகழ்பெற்ற புராண கால மன்னன் ; யாரேனும் தவறு செய்ய நினைத்தாலே அவர்  முன் இவன் தோன்றுவான் என்பதால் ஆயிரம் கை படைத்தவன் என்று பெயர்; இவன் பெயரும் அர்ஜுனன் .

கார்த்தவீர்யார்ஜுனன், ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன்; , விஷ்ணுவின் அம்சம், தத்தாத்ரேயரின் சீடர்   நர்மதை நதிக்கரையிலுள்ள மகிஷ் மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர், தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கைகள் மற்றும் ஒப்பிட முடியாத வலிமையைப் பெற்றவர். ராவணனைத் தோற்கடித்த்து சிறைப்பிடித்த  பின்னர் அவன் இந்தப் பக்கமே வர மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஓடிவிட்டான்    .

இவனது ஆட்சியில் மக்கள் பாவம் செய்ய பயந்தனர்; தவறு நடந்தால் இவனது கைகள் அதைத் தடுத்து நிறுத்தின. ஒரு சமயம்

வேட்டையாடித் திரும்பும்போது, பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் காமதேனுவை அபகரிக்க முயன்று, இறுதியில் பரசுராமரால் கொ ல்லப்பட்டார்.

***

கபில முனிவர்

இந்து மதத்திலுள்ள ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று ஸாங்க்யம்; கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை (Sankhya Philosophy) உருவாக்கிய வேதகால மகரிஷி ஆவார். இவர் கர்தம முனிவர் – தேவஹூதி தம்பதியரின் மகன்;பகவத் கீதையில் கிருஷ்ணர் முனிவர்களில் தான்  கபில முனிவராக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

மகாவிஷ்ணு அவதாரம்: இவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மன்னன் சகரனின் 60,000 புதல்வர்கள் கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த யாகக் குதிரையைத் திருடியதாக நினைத்து அவரை அவமதித்ததால், கபிலர் அவர்களைத் தன் தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். அங்கே கங்கை பாய்ந்தது ;இதனால் கடலுக்கு சாகரம் என்று பெயர்

கங்கை பூமிக்கு வருதல்: கபிலரின் சாபத்தால் இறந்த சகர புதல்வர்களுக்கு முக்தி அளிக்கவே பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.

***

சங்கப் புலவர் கபிலர்

சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர் . அவர் ஒரு பிராமணப் புலவர். பெயரும் சம்ஸ்கிருதப் பெயர் ; பிள்ளையாரின் பெயர். சங்க இலக்கியத்தில் 30, 000 வரிகளில்  பிள்ளையார் பெயர் எங்கும் இல்லையே , சிவன் என்ற சொல் எங்கும் இல்லையே என்று வருத்தப் படுவோர்க்கு ஓரளவு ஆறுதல் /ஆதரவு அளிப்பவர் இவர். திருமுருகாற்றுப் படையின் பதிகப்பகுதியில் வரும் பிள்ளையார் குறிப்பை அறிஞர்கள் பிற்காலச் சேர்க்கை என்பதால் பலரும் அதை ஏற்பதில்லை.

பிள்ளையார் மற்றும் புகழ் பெற்ற ரிஷியின் பெயர் உடையவர் கபிலர். அது மட்டுமல்ல பிள்ளையார் ஒருவருக்கு மட்டுமே நாம் எருக்கம் பூ போட்டு வணங்குவோம். வேறு கடவுளர்க்கு அது ஆகாது.

பகவத் கீதையில் 9-26  கிருஷ்ண பரமாத்மா எனக்கு பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை,பூ , பழம் , தண்ணீர் ) எதை அன்புடன் கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்கிறார். அதை ஒரு பாடலில் எதிரொலித்த கபிலர், வேண்டு மென்றே எருக்கம்பூவைக் கொண்டு சேர்க்கிறார். இதனால் இவர் பெயரும் பிள்ளையார் பெயரே ; அவர் வழிபடுவதும் பிள்ளையாரே என்பது உறுதியாகிறது ; இதோ அந்தப் பாடல்:-

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

 புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா ………….

—-புறனானூறு பாடல் 106

பொருள்

“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம்புல்லையும் பூஜையில் போட்டு வாங்கினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”

கபிலர் சம்ஸ்கிருத மன்னன்.

குறிஞ்சிப் பாட்டை படித்த டாக்டர் ஜி.யூ.போப் (Dr G U Pope)   இது காளிதாசன் காவியத்தின் எதிரொலி என்கிறார். எனது ஆராய்ச்சியும்  இதை நிரூபிக்கிறது .

தமிழ் மொழியை மட்டம் தட்டிப் பேசிய பிருஹத் தத்தனை அழைத்துவந்து அவனுக்கு காளிதாசனைப் போல குறிஞ்சிப்பாட்டுப் பாடிக்காட்டி, அதில் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடி, (கின்னஸ்) சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்றவர் . அதுமட்டுமல்லாமல் அவனையும் பாடவைத்து அதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடலாகச் சேர்த்து வைத்தவர்.

ஐயருக்கு அமோகப் பாராட்டு

பொதுவாகப் புலவர்களிடையே போட்டி , பொறாமை உண்டு. சங்க காலப் புலவர்களினிடையே இது அதிகம் என்பதை திருவிளையாடல் புராணக் கதைகளும் பிற சம்பவங்களும் காட்டுகின்றன. ஆனால் உலக மஹா அதிசயம்!! ஒரு பிராமணப் புலவரை மட்டும் ஆறு பேர் பாராட்டியுள்ளனர். சங்க இலக்கியச் செய்யுள்களில் மட்டும்!

அவரோ மன்னர் அரண்மனைகளுக்குச் சென்று ‘நான் பிராமணன் வந்திருக்கிறேன்’ என்று தன்னை இண்ட்ரொட்யூஸ் INTRODUCE செய்து கொள்கிறார் . ‘அந்தணர்’ என்பவர் யார் என்று சந்தேகப்படும் அறிவிலிகளுக்கு அவர்  சொல்  பதில் தருகிறது.

தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பாடல் —

பறம்பின் கோமான்

நெடுமாப் பாரி மகளிர்;  யானே

தந்தை தோழன் இவர் என் மகளிர்;

அந்தணன்புலவன் கொண்டுவந்தனனே

–புறம் 201

பாடியவர் கபிலர்; பாடப்பட்டோன் -இருங்கோவேள்

பொருள் –

பறம்பு மலைப் பிரதேசத்தை ஆண்ட பாரியின் மகள்கள் இருவரும் இதோ வந்துள்ளனர் நான் ஒரு பிராமணன்; இவர்கள் தந்தை என் தோழன் ; ஆகையால் என் மகள்கள் போன்றவர்கள்”.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி வெறியை உடைத்து க்ஷத்ரிய வேந்தன் பாரியின் மகளிரை  தன்  மகள் என்று அறிவித்த புரட்சிக்கவிஞன் கபிலன் !!

***

 1

“செறுத்த செய்யுள் செந்நாவின்

வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்

இன்றுள்ள ஆயின் நன்றுமன்” – புறம் 53

பாடியவர் பொருந்தில் இளங்  கீரனார்

பாடப் பட்டோன் – மாந்தரஞ் சேரல் இரும்பொறை

பொருள் :–

“பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செம்மையான நாவும் , மிக்க அறிவும் பெரும் புகழும் உடைய கபிலன் இன்று இருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்றாக இருக்கிறது.”

****

2

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்

பொய்யா நாவிற் கபிலன் பாடிய

மையணி நெடுவரை ஆங்கண் “..

புறம் – 174 ; பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்

பாடப்பட்டோன் – மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்

பொருள் –

“நின் தந்தை , கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து அறம் காத்து , பெரும் வலிவுடையோனாக இருந்து இறந்தனன்”.

பொய்யா நாவிற் கபிலன் என்ற சொற்தொடரைக் கவனிக்க வேண்டும். மனம், மொழி, உடல் மூன்றிலும் தூய்மை பெற்றவர்களை எவரும் மதிப்பர். அவர்கள் புலன்களை வென்றதால் மாவீரர் எனப்படுவர்.. அப்பேற்பட்ட வீரன் கபிலன். மூவேந்தர்களும் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது கிளிகள் மூலம் உணவு கொண்டுவந்து பாரி நாட்டைக் காத்தவன். முடியுடைய மூவேந்தேர்களை முடி/மயிர் போல தாழ்த்திய மாவீரன். இந்துத் துறவிகளைப் போல யாகத் தீ மூட்டி அதற்குள் நுழைந்தவன் கபிலன்.

****

காசி/  வாரணாசி

இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்று ; காசி விசுவநாதர் கோவிலைத் தரிசிப்பதையும் அங்குள்ள கங்கை நதியில் குளிப்பதையும் இந்துக்கள் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாக வைத்துள்ளனர் .காசியில் இறந்தால் மோ ட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் அழியாத நம்பிக்கை

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும்.

மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் . அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.  காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.

பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர்.

அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!

3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.

வருணஅஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.

காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில்,   ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழியையே பேசினர்.

***

கடோபநிஷத்

கடோபநிஷத் என்பது யஜுர் வேதத்தின் காடக சாகையைச் சேர்ந்த  முக்கிய உபநிடதமாகும். நசிகேதஸ் என்ற சிறுவனுக்கும் எமதர்மராஜனுக்கும் இடையிலான உரையாடல் மூலம் ஆத்மா, மரணம் மற்றும் அழியாமை பற்றிய ஆழ்ந்த ஞானத்தை இது போதிக்கிறது. நசிகேதஸ் என்ற சிறுவன், எமனிடம் மரணத்திற்குப் பிந்தைய ரகசியத்தைக் கேட்டுப் பெறுகிறான்.

பொருள்: இது ஆத்மா அழியாதது, உடல் மட்டுமே இறக்கும், ஆத்மா மீண்டும் பிறக்கும் அல்லது மோட்சம் அடையும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான, உபநிடதம் இது.  ஆதிசங்கரரின் உரை மூலம் இது பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

****

கௌரவர்கள்

குரு  KURU வம்சத்தில் தோன்றிய அனைவரும் கெளரவர்கள் என்ற போதிலும் பிற்காலத்தில் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் பிறந்த நூற்றுவர் மட்டும்   கௌரவர்கள் என்ற பெயரைப் பெற்றனர் துரியோதனன் இவர்களில் மூத்தவன்; போட்டி, பொறாமையால் மஹாபாரத யுத்தம் ஏற்பட்டு அதில் கௌரவர்கள் நூற்றுவர் இறந்தனர் . இவர்களுக்குப் போட்டியாக இருந்த பாண்டவர்கள் ஐவரும் பாண்டு என்ற மகாராஜாவின் புதல்வர்கள்; அவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரர் என்னும் தர்மபுத்திரர் ஆவார் .

***

கெளசல்யா

 ராமாயணத்தில்,கெளசல்யா என்ற ராணி அயோத்தி மன்னன் தசரதனின் மூத்த மனைவி ஆவார்  ; ஸ்ரீ ராமரின் தாயார் ஆவார். அவர் தர்மம், பொறுமை மற்றும் தூய்மையான அன்பின் அடையாளமாகத் திகழ்ந்தார் .

 கெளசல்யா கோசல நாட்டின் இளவரசி, கோசல மன்னன் பானுமந்தனின் மகள். தசரதனுக்கும் கெளசல்யாவிற்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, அதன் பலனாக ராமரை மகனாகப் பெற்றார் . ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபோது, அதைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார்.ராமாயணத்தில் பொறுமை, தியாகம் மற்றும் சிறந்த தாய்க்கு ஒரு எடுத்துக்காட்டாகத்  திகழ்கிறார்.

‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!’ என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகம் வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாகத் திகழ்கிறது ; லட்சக்  கணக்கான வீடுகளில் தினமும் காலையில் ஒலிக்கிறது.

விசுவாமித்திரர் அதிகாலைப் பொழுதில் எழுந்து கங்கையின் நீராடி, ஜப தபங்களை முடித்துவிட்டு ராம, லக்ஷ்மணர்களை எழுப்புகிறார். அவர் சொன்ன வாசகம் இது “கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல்ஒளி வந்துவிட்டது ! புலி போல் வீரம் படைத்த வீரர்களே எழுந்திருங்கள்! இன்றைய பணியைச் செய்வோம் வாரீர்” .

****

கௌசிக முனிவர் 

இருவர் பெயரில் நாம் இவர் பற்றி அறியலாம் ; ஒருவர் உலகப் புகழ் பெற்ற விசுவாமித்திரர் ; இன்னொருவர் மஹாபாரதக் கதையில் வரும் ஒரு முனிவர் .கௌசிக என்ற சொல்லுக்கு ஆந்தை என்றும் பட்டுநூலில் உருவானவர் என்ற பொருளும் இருக்கிறது . குஷிகா வம்சத்தில் தோன்றிய விசுவாமித்திரர் ரிக் வேதத்தில் ஒரு மண்டலத்தின் ரிஷி; சங்க இலக்கியத்தில் கெளசிக கோத்திர புலவர்களின் பெயர்களையும் காண்கிறோம்.

வசிஷ்ட முனிவருடன் பல முறை மோதி, பின்னர் மன்னர் பதவியை விட்டு, தவம் பல செய்து,  அவர் வாயால் பிரம்ம ரிஷி (பிராமணர்) என்ற பட்டத்தினைப் பெற்றார் .

கெளசிக முனிவர் கதை

மஹாபாரதத்தில் வரும் கெளசிக முனிவர் கதை, கோபம் மற்றும் அகந்தையைத் துறந்து, உண்மையான ஞானம் மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு கதை.

கெளசிகர் என்ற முனிவர் கடுமையான தவம் செய்து, கண்களை மூடி தியானிக்கும்போது, அவர் மீது பறவை ஒன்று எச்சமிட்டது. இதனால் கோபமடைந்த கெளசிகர், தன் தபோ பலத்தால்  அந்தப் பறவையை எரித்தார்.

தான் செய்த செயலை நினைத்து, “நான் எப்பேர்ப்பட்ட தவவலிமை கொண்டவன்” என்ற அகந்தையுடன், பிக்ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டுப் பெண், கணவனுக்குப் பணிவிடை செய்வதில் தாமதமானதால், பிக்ஷை கொடுக்க தாமதமானது.

இதனால் கோபமடைந்த கெளசிகர் முன்னர் பறவையை எரித்த பார்வையுடன் அந்தப் பெண்மணியைப் பார்த்தார் , அந்தப் பெண், “நான் அந்தப் பறவை இல்லை, எரிப்பதற்கு” என்று கூறி, கோபத்தைத் துறந்து பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுரை வழங்கினார்.

தன் தவறை உணர்ந்த கெளசிகர், உண்மையான தர்மத்தையும், ஞானத்தையும் அந்தப் பெண் மூலமாகவும், பின்னர்  தர்மவியாதன் (கசாப்புக் கடைக்காரன்) மூலமாகவும் கற்று, கோபத்தை வென்றார்.

TO BE CONTINUED…………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 , கனிஷ்கர், கெளசிகர், கபிலர், கடோபநிஷத், கெளசல்யா கண்வர், மகரிஷி

Purananuru Wonders -16, Ancient Tamil Encyclopaedia -Part 56; One Thousand Interesting Facts -Part 56 (Post.15,558)

Written by London Swaminathan

Post No. 15,558

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 409

Sibi story from Hindu Puranas and epic is repeated here which shows Choza kings came from North West India. Even Buddhists stole this story and incorporated in the Jataka Tales which were older than Sangam Tamil  literature. But Buddhists showed Sibi as Buddha and not as Chozas.

The Sibi Chakravarthi story appears to have adopted by the Chozha kings as theirs.  It is referred to in Puranānūru 37, 39, 43 and 46. 

Chembian in Tamil is derived from Sanskrit Saibhya which is again derived from Sibi.

***

Item 410

Hanging Forts in the sky.

All Tamil interpreters skip this line without explaining.

In fact it is the story of Tripurantaka/Lord Siva.

தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடுவின்று

The destruction of the three cities in the sky, known as Tripura or Tripurantaka, is a major mythological theme frequently referenced in Chola-era inscriptions and art to glorify Lord Shiva and, by extension, the Chola kings who claimed to rule under his grace. 

1. The Myth of Tripura in Chola Context

  • The Myth: Three demon sons of Taraka obtained a boon from Brahma to live in three powerful, movable aerial cities (gold, silver, and iron) created by Mayasura. They could only be destroyed when these cities aligned once every thousand years and were struck by a single arrow. Shiva (“Tripurantaka”) shot this arrow.
  • Chola Symbolism: The Chola kings identified with the strength and role of Shiva, projecting themselves as protectors of the cosmic order. The Tripurantaka form of Shiva (Destroyer of the Three Cities) was particularly popular in early Chola art and inscriptions.
  • Significance: It signifies the destruction of evil (“sins”) and the restoration of balance. 

2. Epigraphical and Artistic Evidence

  • Kailasanathar Temple, Kanchipuram: 1500-year-old carvings show a colossal “Tripurantaka Murthi” figure. While early, this set the stage for Chola temple art.
  • Kamarathivalli Temple (Kamarasavalli): Inscriptions here highlight that the temple was heavily supported by monarchs like Rajaraja Chola ISundara Chola, and Vikrama Chola, who worshipped Shiva in his various forms.
  • Chola Bronzes: The Norton Simon Museum houses one of the earliest Chola bronzes depicting Shiva as Tripurantaka, highlighting the importance of this story during the early, middle, and late Chola periods. 

  • 3. Connection to Chola Rule
  • Rajaraja I and Gangaikonda Cholapuram: While building his capital, Rajaraja I was heavily influenced by Shaivite traditions. His successors, like Rajendra Chola I, adopted similar ideologies, and inscriptions often describe the king’s victory in terms of divine favor, drawing parallels to the destruction of the three forts (Tripura).
  • Kumbakonam Area: The “Thiruvanaikkaval” area (near Trichy), linked to the Kochengot Chola (a very early king), features Shiva-centered mythology, including stories of transformation and overcoming threats. 

In summary, the story of the “three cities in the sky” (Tripura) represents the triumph of divine justice and is a key ideological theme found in the inscriptions of the Chola dynasty, linking their victories directly to the prowess of Lord Shiva, particularly in his Tripurantaka form. 

***

Item 411 

Uranthai, now Uraiyur near iruchi was famous for the Justice Court that existed during Krikal Choza Time. Then it was destroyed in a sand storm.

My article written in year 2011 is reproduced here: 

Strange as it may look, British judges, magistrates and barristers follow a custom that was started by a Tamil king two thousand years ago. British judges and several others who preside over the courts of justice wear a white wig.

If we go to encyclopaedias they don’t explain why they wear it or when it was exactly started. Ancient Egyptians wore wigs for protecting their heads from the scorching sun. Then Romans and others wore different types of wigs as symbols of aristocracy.

 The British judiciary started wearing wigs from 17th century. Many of the commonwealth countries also followed it. Whenever the reason for the custom is asked many people say that it is the tradition or uniform for professional discipline or it shows experience. Actually it was started by the most famous Tamil king, Karikal Chola two thousand years ago. Crystal clear proof comes from the ancient Tamil Cankam (Sangam) literature.

Karikalan was the greatest of the Tamil kings for three reasons. He ruled vast areas of Tamil-speaking land, subjugating other Tamil kingdoms. He was the first Tamil king who went up to the Himalayas and carved his dynastic emblem there. Till today, there remains a Chola pass in the Himalayas. The second reason was he was a just king and his court of justice in Uraiyur became very famous. Tamil literature praises his justice and gives the story of wigs. And the third reason is the Grand Anaicut he built across the river Cauvery is one of the oldest dam s in the world. 

Though we did not have any historical records scholars have dated him around 1st century BC. He was a boy king – like the Egyptian Tutankhamen. He came to power while he was a teenager.

The Story of Wigs:

One day two elderly people came to his court seeking justice. They had a dispute among themselves. They decided that whatever the Uraiyur court says must be the final settlement. When they came in to court, they were shocked to see a boy sitting as the judge. They were greatly disappointed – which Karikalan felt immediately by looking at their faces. Indeed, the face is the index of the mind.

 Karikalan politely asked the elders to take seats and told them to wait for the ‘judge’ and he went in. The entire assembly was puzzled. Then came an elderly person and sat on the chair. After carefully listening to the arguments of both the sides he gave his judgement. Both of them were immensely happy to hear a fair settlement. Now the assembly wanted to know who the elderly judge was. King Karikalan removed his white hair wig (Narai Mudi in Tamil) and revealed himself.  All applauded the Wisdom of the ‘Solomon of India’.

The proof for the anecdote is in three Tamil books:

1.      Porunar Atruppadai –lines 187-188. Porunar Atruppadai is one of the ten long poems of Tamil Cankam literature dated  between 1st to 3rd century AD

2.      Manimekalai- This is one of the five Tamil epics dated 3rd century AD  

3.      Pazamozi – poem 25 translation:


Nobody can deny the fact that Karikalan was the first one to use white wig in judiciary matters.

*** 

Item 412 Himalayas

Himalayas was not only sacred to Hindus but also a symbol of victory. Chera Choza Pandya kings went up to the northern most and the highest mountain in the world to engrave their symbols. This Ws achieved with the help of Satakarnis, the mighty Satavahana kings. They were friends of the Tamil kings. Tamils of Sangam Age mentioned Himalayas, Ganga and Yamunai but never Indus River/Sindhu. It shows that they have no connection with the Harappan Civilization.

 ***

Item 413 Vanji 

Play on words. Vanji has three meanings: A plant, modern Karur town in Tamil Nadu and a girl who is slim like Vanji creeper.

Here in Puram 39, poetess used it for Vanji city, that is Karur. But she used it by saying Vanji that which will not whither. This is the style of Kalidas, the greatest of the Indian poets. He used to play on words like this.

For instance if he wants to mention the bird Chakravaka, he would saythe bird with the name of a wheel/Chakra. 

வாடா வஞ்சி வாட்டும் – you hurt strong Vanji city which is not the vanji flower that fades (வாடா வஞ்சி – வஞ்சிநகருக்கு வெளிப்படை,  வஞ்சி – இன்றைய கரூர்),

***

Puranānūru 39, Poet Mārōkkathu Nappasalaiyār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan 

1
O heir of Chempiyan who removed the pain of a dove by climbing
on a scale with a pointer made of white tusk of an elephant with
dark legs!  Generosity is not the reason for your fame!  

2

If we
think about your ancestors who ruined forts that are hanging high
that are strong and difficult to approach, killing in battles is
not the reason for your fame! 

3

Righteousness has been established
in the court of Uranthai of the Chozhas with martial courage, and
reigning with justice cannot increase your fame!

O Valavan who wins battles with great might, whose arms are like
the crossbars of forts, whose garland is blinding, who owns proud
horses! 

4

How can I describe you, since you have made strong Vanji
wither, and destroyed the Chera king owning tall, well-built chariots,

5

who had placed his protective bow symbol on the Himalayas
with many towering summits with gold?  How can I sing of your great acts?

**** 

புறநானூறு 39, பாடியவர்மாறோக்கத்து நப்பசலையார்பாடப்பட்டோன்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணைபாடாண்துறைஇயன் மொழி 

1

புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான் மருப்பு எறிந்த வெண்கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; 

 சார்தல்
ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல்  5
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடுவின்று

3

மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின்அதனால்
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு  10
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ!

4

யாங்கனம் மொழிகோ யானே, ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோட்டு
இமையம் சூட்டிய ஏம விற்பொறி,  15
மாண் வினை நெடுந்தேர் வானவன் தொலைய,

5
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே.

****

Item 414 Enemy Kings’ Crowns

Two interesting points are her in Puram verse 40.

Ancient Hindu kings melted the golden crown of the enemy kings and made them their anklets (leg ornaments) or foot stools . Here the anklets are mentioned by the poet. Here we come to know more about the jewellery of ancient Tamil Nadu.

“You have made glittering warrior anklets with the
fine gold crowns of your enemies that you wear on your legs”

Item 415 

A very good description about the paddy Production is revealed in the following lines:

“country where a small space fit for a female elephant produces
food for seven male elephants!”

In fact there is a well known saying

சோழநாடு (சோறுடைத்து): Choza country is famous for rice;

பாண்டிய நாடு (முத்துடைத்து): Pandya country is famous for pearls;

சேர நாடு (வேழமுடைத்து): Chera country is famous for elephants;

தொண்டை நாடு (சான்றோருடைத்து):Thondai country is famous for Scholars

***

Puranānūru 40, Poet Āvūr Moolankizhār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan,

You do not respect the fortresses of your enemies who protect
them with martial courage.  You wage wars with them and ruin
them.  You have made glittering warrior anklets with the
fine gold crowns of your enemies that you wear on your legs.

O Mighty King!  We have seen you today and we wish we can
see you always.  May those who sing ill of you bow their necks
and those who sing your praises flourish!   O greatness!
May you, with sweet words be easy to approach, O lord of the
country where a small space fit for a female elephant produces
food for seven male elephants!

புறநானூறு 40, பாடியவர்ஆவூர் மூலங்கிழார்பாடப்பட்டோன்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்


நீயே பிறர் ஓம்புறு மறமன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன்னின்
அடி பொலியக் கழல் தைஇய
வல்லாளனை, வய வேந்தே!  5
யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்கப்,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம், என்றும்
இன் சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும!
ஒரு பிடி படியுஞ் சீறிடம்  10
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!

அவர் முடி புனைந்த பசும் பொன்னின் – with their crowns made of gold, அடி பொலிய – feet to be beautiful, feet to glow, கழல் தைஇய – made war anklets out of them

O Greatness, ஒரு பிடி படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – O lord of the country where a small space necessary for a female elephant protects (grows food for) seven male elephants .

To be continued………………..

Tags- Puranaanuru Wonders -16, Ancient Tamil Encyclopaedia -Part 56, One Thousand Interesting Facts -Part 56 , Sibi, Karikalan, Wigs, Uraiyur, Tamil jewellery, item 415, hanging forts, hanging cities

April 2026 Calendar with more Quotes from Kanchi Shankaracharya (Post No.15,557)

Written by London Swaminathan

Post No. 15,557

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

In November 2022 Calendar I posted 30 quotes under  Kanchi Shankaracharya’s Golden Sayings (Post.11,395); now I add more quotes from the 68th Jagadguru of the Kanchi Kamakoti Peetham, Sri Chandrasekharendra Saraswathi Mahaswamigal 1894-1994 (popularly known as Maha Periyava or the Kanchi Paramacharya).

***

Festivals- April 1 Panguni Uththiram; 3 Good Friday;5 Easter ;14 Tamil New Year ; 20 Akshaya Trtyai; 21 Sankara Jayanti; 22 Ramanuja Jayanti; 28 Madurai Meenakshi Kalyanam; 30 Narasimha Jayanti.

***

Amavasyai-17; Purnima-2; Ekaadasi Fasting Days 13,27

***

Muhurta/ Auspiscious Days

April 20,  23,  30;

(also 6, 12, 13, 16)

***

April 1 Wednesday

The Vedas are eternal and the source of all creations. The Vedas are also notable for the lofty truths that find expression in the mantras.

***

April 2 Thursday

The remarkable about the Vedas is that they are of values much for their sound as for their verbal content. While the sound has its own creative power, the words are notable for the exalted character of the meaning they convey.

***

April 3 Friday

There are mantras that are especially valuable for their sound but are otherwise meaning less. Similarly, there are works pregnant with meaning but with no special Mantrik power.

***

April 4 Saturday

The Vedas indeed constitute the apex of our law books.

***

April 5 Sunday

What is a Yajna ? it is the performance of a religious duty involving Agni, the sacrificial power with the chanting of Mantra.

***

 April 6 Monday

The concept of Yajnas not present in other systems of worship. There is a big difference between our religion, the Vedic Mata, and other faiths.

***

April 7 Monday

An important difference between the Vedic religion and other faiths is this: while followers of other religions worship one God, we worship many deities and make offerings to them.

***

April 8 Wednesday

The Vedas proclaim that the one Brahman, call it Truth or Reality, is manifested as so many different devatas or deities.  Since each devata is extolled  as Paramatman we know for certain that monotheism  is a Vedic tenet.

***

April 9 Thursday

The Vedic sacrifices have a threefold purpose. The first is to earn the blessings of the deities so that we as well other creatures may be happy in this world.

***

April 10 Friday

The second is, to ensure after our death we will live happily in the world of the celestials.

***

April 11 Saturday

The third purpose is the most important and it is achieved by performing the sacrifices (Yajnas), as taught by the Bhagavad Gita, without any expectation of rewards. Here we desire neither happiness in this world nor residence in the paradise.

***

April 12 Sunday

Many matters pertaining to the Vedas may not seem to be in conformity with science and for that reason they are not to be treated as wrong.

***

 April 13 Monday

Money is not essential to the performance of the rites enjoined by the sastras nor is pomp and circumstance essential to worship. Even tried Tulsi and BilVa leaves are enough to perform puja.

***

April 14 Monday

Sages transcended the frontiers of human knowledge and became one with the universal reality. It is through them that the world received the Vedic mantras.

***

Kanchi Shankaracharaya visited Madurai Dinamani office at the request of my father V Sanatanm, News Editor, Dinamani, Madurai.

April 15 Wednesday

The noble characters who figure in the puranas serve as an ideal for all of us to follow. When we read their stories, we are inspired by their examples.

***

April 16 Thursday

Manu Parasara, Yajnavalkya, Gautama, Harita, Yama Vishnu Sankha, Likhita Brhaspati, Daksha, Angiras Pracetas, Samvarta Acanas Atri Apastamba and Saataatapa are the eighteen sages who mastered Vedas with their superhuman power and derived the smritis/ law books from them.

***

April 17 Friday

Apart from these 18 Smritis,  there are 18 subsidiary smritis called upa smritis. It is customary to include Bhagavad Gita among the smritis.

***

April 18 Saturday

If we call ourselves Hindus we must bear certain external marks , outward symbols. Now we have come to such a pass that nobody wears any of the external marks of our religion.

***

April 19 Sunday

People ask me why should not the sasrtas be changed to suit our times. The Vedic word cannot and must not be changed at any time and on any account. The same applies to the rules and laws laid down in the smritis/law books of Hindus.

***

 April 20 Monday

The greatest of the mahakavis, Kalidasa makes a reference to the smritis in his Raghuvamsa. Sudakshina , of matchless purity and character, following her husband Dilipa is likened to the smritis  closely following the Vedas.

***

April 21 Monday

To discriminate between Sruti and Smriti is not correct. Sankara is said to be the abode of the three Sruti Smriti  Purananam alayam- abode of Sruti, Smritis, Puranams;  if the three were at variance with one another, how can they exist together in harmony in the same person?

***

April 22 Wednesday

In the Puranas the Vedic truths are illustrated in the form of stories.

***

April 23 Thursday

We speak of three worlds: Deva loka/ world of celestials, Manushyaloka (world of ours) and Naraka (hell)

***

April 24 Friday

A man’s actions, his works, together with his character, determine his passage to other worlds. Only in this Karmabhumi can we perfect our character by performing virtuous acts and thus qualify to go to another world.

***

Kanchi Shankaracharaya visited Madurai Dinamani office at the request of my father V Sanatanm, News Editor, Dinamani, Madurai.

April 25 Saturday

Pura means in the past. That which gives an account of what happened in the past is a purana, even though it may contain predictions about future also.

***

April 26 Sunday

Ramayana and Mahabharata are two Ithihsams. Iti-haa- asam – means it happened thus. The haa in the middle means without doubt, truly. So an Itihaasa means a true story, the word can also mean thus speak they

***

 April 27 Monday

Our nation, it is often alleged, does not have a sense of history. In my opinion the Puranas are history. History must be taught along with lessons in dharma; then alone will it serve the purpose of bringing people to the right path.

***

April 28 Monday

According to the sastras, Vyasa composed the Puranas 5000 years ago, at the beginning of the age of kali, but they must have existed before him also. In the Chandogya Upanishad,  Narada speaks about the subjects learned by him and they include the Puranas. From this we infer that they must have existed during the time of the Vedas and the Upanishads.

***

April 29 Wednesday

I regard Vyasa as the first journalist, the ideal for all newspapermen of today.  He composed the puranas and made a gift of that great treasure to humanity.

***

April 30 Thursday

Vyasa composed the Puranas in 400,000 granthas.  A grantha is a stanza consisting of 32 syllables. Of these Skanda purana alone accounts for 100,000. It is perhaps the world’s biggest literary work. The remaining 17 puranas add up to 300,000 granthas. Apart from them Vyasa composed the Mahabharata , also nearly , 100,000 granthas.

–subham—

Tags- April 2026, Calendar, Sayings, Kanchi Swamikal, Sankaracharya, Maha periyava, 1894-1994, paramacharya, Vedas, Puranas, Itihasa

சரபேஸ்வரர் பற்றி அருணகிரிநாதர்; நரி பரியான கதை (Post No.15,556)

Written by London Swaminathan

Post No. 15,556

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 61

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 61

***

சரபேஸ்வரர் பற்றி அருணகிரிநாதர்

இலகு கடலை கற்கண்டு தேனொடும் … நல்ல விளக்கமுடைய

கடலை, கற்கண்டு, தேன் இவைகளுடன்

இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன் … ருசிகரமான தினை

மாவு, வெல்லப் பாகு இவற்றைக் கலந்து

இனிமையில் நுகர் உற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே …

மகிழ்ச்சியுடன் உண்ணும் விநாயகர் ஒற்றைக் கொம்பால்

எழுது என மொழியப் பண்டு பாரதம் … வியாச முனிவர் எழுதும்படி

வேண்ட, முன்பு, பாரதக் கதையை

வட கன சிகரச் செம் பொன் மேருவில் … வடக்கே உள்ளதும்

கனத்த உச்சிகளை உடையதுமான செம்பொன் மயமான மேரு மலையில்,

எழுதிய பவளக் குன்று தாதையை அன்று சூழ வலம் வரும்

அளவில் … எழுதிய பவள மலையைப்போன்ற கணபதி, அன்று

தந்தையாகிய சிவபெருமானைச் சுற்றி வந்து வலம் வரும் நேரத்துக்குள்,

சண்ட மாருத விசையினும் விசையுற்று எண் திசா முக

மகிதலம் அடையக் கண்டு … சூறாவளியின் வேகத்திலும் வேகமாக

எட்டு திசையிடங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து,

மாசுணம் உண்டு உலாவு மரகத கலபச் செம் புள் வாகன

மிசை வரு முருக … பாம்பை உண்டு உலாவுகின்றதும், பச்சைத்

தோகையைக் கொண்டதும், வலிமையான பக்ஷியுமாகிய மயில்

வாகனத்தின் மீது வந்த முருகனே,

சிம்புளே என மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு

தம்பிரானே. … சிங்கத்தை அடக்கவல்லதாகக் கூறப்படும்

எண்காற்புள்ளே (சரபப் பக்ஷியே*) என்று புகழ்ந்து, மதுரைத் தலத்தில் வழிபட்டு தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே.

நரசிம்மராக வந்த விஷ்ணு ஹிரண்யனின் வதைக்குப் பின் வெறி அடங்காமல் திரிந்தார். சிவபிரான் தமது இன்னொரு அம்சமாகிய சரபப்பக்ஷியாக வந்து நரசிம்மரின் ஆணவ ஆட்டத்தை அடக்கினார். முருகனும் அதுபோன்றே ஒரு சிவ அம்சம்.

***

மேலேயுள்ள ஏழு உலகங்கள்

வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும் … மேல் ஏழு

உலகங்களுக்கும்* திருமாலுக்கும், பிரம்மனுக்கும்

யாவரொருவர்க்கும் அறியாத … வேறு யாருக்குமே அறியமுடியாத

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க … சிறந்த மதுரைத் தலத்து சொக்கேசர் சிவனும், பார்வதியும் மகிழ

மாமயில் நடத்து முருகோனே … அழகிய மயிலின் மீதேறி அதனைச் செலுத்தும் முருகனே,

தேனெழு புனத்தில் … தேன் மிகுந்த வள்ளிமலைத் தினைப்புனத்தில்

மான்விழி குறத்தி சேர … மான் ஒத்த கண்ணாள் குறத்தி வள்ளி உன்னைச் சேரும்படியாக

மருவுற்ற திரள்தோளா … அவளை அணைத்திட்ட திரண்ட புயங்களை உடையவனே,

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை … தேவர்களது மனத்தில் சூரனைப் பற்றித் தோன்றிய அச்சத்தை

வேல்கொடு தணித்த பெருமாளே. … உன் வேலாயுதத்தால் போக்கிய பெருமாளே.

மேல் ஏழு உலகங்கள்:

பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹலோகம், தபலோகம், ஜனலோகம், சத்யலோகம்.

***

மதுரையின் புகழ்

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய

     பவனி வரும்படி …… யதனாலே

பகர வளங்களு நிகர விளங்கிய

     இருளை விடிந்தது …… நிலவாலே

வரையினி லெங்கணு முலவி நிறைந்தது

     வரிசை தரும்பத …… மதுபாடி

வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு

     மகிழ வரங்களு …… மருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி

     அடியர் பணிந்திட …… மகிழ்வோனே

அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத

     குறமக ளிங்கித …… மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும

     களபம ணிந்திடு …… மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி

     யதனில் வளர்ந்தருள் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய … யாவரும் துதிக்கும் நீண்ட கதிர்களை உடைய சூரியன் உலகுளோர் விரும்பும்படி

பவனி வரும்படி யதனாலே … உலா வரும் காட்சிதானோ (இந்தத் திருவடி) என்றும்,

பகர வளங்களு நிகர விளங்கிய … சொல்லத்தக்க வளப்பங்களுக்கு ஒப்பாக விளங்குவதும்,

இருளை விடிந்தது நிலவாலே … இருளைப் போக்கி உதிக்கும் நிலவொளிதானோ (இந்தத் திருவடி) என்றும்,

வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது … மலைகள் தோறும் எங்கும் உலாவி நிறைந்து

வரிசை தரும்பதம் அதுபாடி … வரிசையான காட்சியைத் தரும் உன் திருவடியை நான் பாடி,

வளமொடு செந்தமிழுரைசெய … சொல் வளம், பொருள் வளத்துடன் செந்தமிழ்ப் பாக்களால் உன்னைப் புகழ,

அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே … அப்பாடல்களைக் கேட்டு அன்பர்கள் அகம் மகிழ, வரங்களைத் தந்து அருள் புரிவாயாக.

அரஹர சுந்தர அறுமுக என்றுனி … ஹர ஹர, அழகா, ஆறுமுகனே,என்று உன்னைத் தியானித்து,

அடியர் பணிந்திட மகிழ்வோனே … அடியார்கள் வணங்க மகிழ்ச்சி கொள்பவனே,

அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத … ஹிமவானின் மகளான பெருமைவாய்ந்த கொடியைப் போன்ற அம்மை உமாதேவி பெற்ற பிள்ளையே,

குறமகள் இங்கித மணவாளா … குறமகள் வள்ளிக்கு இனிமையான

மணவாளனே,

கருதரு திண்புய சரவண … நினைப்பதற்கு அருமையான திண்ணிய புயங்களை உடைய சரவணபவனே,

குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா … குங்குமமும் சந்தனமும் சேர்த்து அணியும் அழகிய மார்பனே,

கனக மிகும்பதி மதுரை வளம்பதி … பொன் மாடங்கள் நிறைந்த நகராகிய மதுரை என்ற செழிப்பான

யதனில் வளர்ந்தருள் பெருமாளே. … தலத்தில் விளங்கி வீற்றிருந்து அருளும் பெருமாளே.

****

ஈட்டிய சுர பதி மகள் தனை மணம் அது உற்றிடுவோனே …

நெருங்கி நின்ற, தேவர்கள் தலைவனான இந்திரனுடைய மகளான, தேவயானையை திருமணம் செய்து கொண்டவனே,

திறத்தினால் பல சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய

புதுமையை இனிதொடு திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை தரும் அறுமுகப் பெருமாளே. … (திருஞான சம்பந்தராக வந்த உனது) சாமர்த்தியத்தால் பல சமணர்களை எதிர் எதிராக கழுமரங்களில் ஏற வைத்த அற்புத நிகழ்ச்சியை இன்பகரமாக நடத்தி, (தத்தம்) பிழை திருந்திய நிலையினராய் ஆக்கிப் பின், மதுரையில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.

***

கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா … கண்களினின்று எழுந்த தீப்பொறியால் வெளிவந்த சிறந்த பிள்ளையான குமரேசனே,

கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய …சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கிய சிறப்பைக் கொண்ட அற்புதமான பெருநகரமாகிய

கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே. … நான்மாடற்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே.

***

நரி பரியான கதை

வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி

இட்டு … திருவாதவூரர் ஆகிய மாணிக்கவாசகரைக் குறிக் கொண்டு ஒரு குரு மூர்த்தியாக நின்று (முக்திக்கு வழிகளான சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் ஆகிய நால் வகையான சைவ சமய வழிகளில்) ஞான மார்க்கத்தை அவருக்கு உபதேசித்தும்,

நரியின் குழுவை வாசியாம் என நடத்து உவகை உற்று

அரசன் அன்பு காண மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து …

நரிகளின் கூட்டத்தை குதிரைகளாம் என்னும்படி திருவிளையாடலில்

மகிழ்ச்சி பூண்டு பாண்டிய மன்னன் தனது அன்பைக் காட்ட

பொன்னாடையைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு மன்னனின்

முன்பு சிரித்தும்,

வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் மாது

வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே …

வைகையாற்றங்கரை மீது கூத்தாடியும், (ஆற்றில் அணைகட்ட) மண்

சுமந்து மகிழ்வுற்றும், மாது வந்தி அம்மையார் கூலியாகத் தந்த பிட்டை உண்டும் விளையாடிய பித்தனாகிய சிவ பெருமான் பெற்றருளிய கந்த வேளே,

வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி

வர்க்க(ம்) முறை இட்டு அலற வேலை ஏவி அவுணக் குலம்

இறக்க நகை கொண்ட சீலா … வேதம் ஓதும் நன் மக்கள்,

பொன்னுலகத் தேவர்கள், தவசிகள், சித்தர்கள், மிக்க பெருமை வாய்ந்த

ஒழுக்கம் நிறைந்த முனிவர் கூட்டங்கள் முறையிட்டுக் கூச்சலிட,

வேலைச் செலுத்தி அசுரர்களின் கூட்டம் இறக்கும்படி சிரித்த தூயவனே,

வேதம் மீண கமலக் க(ண்)ணர் மெய் பச்சை ரகு ராமர் ஈண

மயில் ஒக்க மதுரைப் பதியில் மேவி வாழ் அமரர் முத்தர் சிவ

பத்தர் பணி தம்பிரானே. … (அவுணர்களால் கவரப்பட்ட) வேதத்தைமீட்டுத் தந்த** தாமரை போன்ற கண்களை உடையவரும், உடல் பச்சை நிறமுடையவரும் ஆகிய ராமர் பெற்ற மயில் போன்ற பெண்களான தேவயானை, வள்ளி இவர்கள் இருவருடன் மதுரை நகரில் வீற்றிருந்து வாழ்கின்றவனே, தேவர்களும், ஜீவன் முக்தர்களும், சிவனடியார்களும் வணங்குகின்ற தலைவனே.

***

கர தூஷண வதைப் படலம்

திருவைக் கொண்டு ஒரு தண்டக வன(ம்) மிசை வர அச்சம் கொடு வந்திடும் உழை உடல் சிதற … லக்ஷ்மியாகிய சீதையை அழைத்துக் கொண்டு ஒப்பற்ற தண்டகாரணியம் என்னும் காட்டில் வந்தபொழுது, பயத்தோடு வந்து உலவிய (மாரீசனாகிய) பொன்மானின் உடல்பாணத்தால் சிதறி அழியவும்,

கண்டக வெம் கரனொடு திரி சிரனோடு திரம் இல் தங்கிய கும்பகன் ஒரு ப(த்)து தலை பெற்று உம்பரை வென்றிடும் அவனொடு சிலையில் கொன்ற முகுந்தன் நல் அகம் மகிழ் மருகோனே … துஷ்டர்களான கொடிய கரன், திரிசிரன்* என்னும் அசுரர்களையும், வலிமை கொண்டிருந்த கும்பகர்ணனையும், பத்துத்

தலைகளைப் பெற்று தேவர்களை வென்றவனுமான ராவணனையும்,(கோதண்டம் என்னும்) வில்லால் கொன்ற திருமாலின் நல்ல உள்ளம் மகிழ்கின்ற மருகனே,

மருவைத் துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு அருள் அம்பிகை கவுரிகை மலை அத்தன் தரு சங்கரி கருணை செய் முருகோனே … (வாசனை கொண்ட) மருக் கொழுந்தைச் சூடியுள்ள அழகிய கூந்தலை உடைய உமா தேவி,

சிவபெருமானுக்குத் தனது அன்பைத் தருகின்ற அம்பிகை, கெளரி, இமய மலை அரசன் பெற்ற சங்கரி தனது கருணையைக் காட்டும் முருகோனே,

வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில்தங்கிய பங்கய முக … வடக்கே உள்ள இமய மலைக்கு அங்கே சமீபத்தில் உள்ள அழகிய தர்ப்பைகள் வளர்ந்துள்ள சரவணப் பொய்கையில் முன்பு வளர்ந்த தாமரை போன்ற திரு முகத்தை உடையவனே,

தமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் பெருமாளே. …

தமிழ் வளர்ந்த மதுரையில் சங்கிலி** என்னும் மண்டபத்தில் வீற்றிருப்பவனே, தேவர்களின் பெருமாளே.

சூர்ப்பனகையின் சகோதரர்களான கரன், தூஷணன், திரிசிரன் என்ற மூவரும் தண்டகாரண்யத்தில் அவளது காதும், மூக்கும் லக்ஷ்மணனால் வெட்டப்பட்டபோது

உதவிக்கு வந்தனர். அவர்களில் இருவரைக் கொன்றது ராமபாணம்.

** இது இப்போது கிளி மண்டபம் என வழங்கும்.

***

தமிழ்  மொழியில் 51 அக்ஷரங்கள் !

அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பு

ஒடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி … அகரம்

முதலான (51)* அக்ஷரங்கள், மண், காற்று, ஆகாயம், நிறைந்த நீர்

இவைகளுடன் நெருப்பு ஆகிய ஐம்பூதங்கள் எல்லாம் கூடி ஓர் உருவமாக அமைந்து (கூத்த பிரானாகிய நடராஜப் பெருமானாகி), முதற் பொருளாக விளங்கி,

அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த

அமல நாதனார் முன் பயந்த முருகோனே … தேவர்கள் தரிசிக்க

(தில்லைப்) பொன்னம்பலத்தில் பார்வதி தேவி பாட அங்கு ஆடி விளங்கிய மலம் அற்றவராகிய சிவபெருமான் முன்பு பெற்றருளிய முருகனே,

சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள்

தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் தவறு இ(ல்)லாமல்

ஆளப் பிறந்த தமிழ் செய் … எல்லா வேதங்களிலும் கூறப்பட்ட

லட்சணங்கள், ஆறு சமயங்கள், மூன்று உலகங்கள், தரும நீதிகளுடன் சேர்ந்த உண்மைகள், தவம், யோகம் (இவை எல்லாம் சிறந்து ஓங்கும்படி) பிழையின்றி ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த திருஞான சம்பந்தனே,

மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த

பெருமாளே. … பாண்டியனுடைய சுரத்தோடு கூனும் அன்று நீங்க

மதுரையில் (திருநீறு தந்து) சிறந்த பெருமாளே.

கோல் எழுத்துக் காலத்திலும், வட்டெழுத்துக் காலத்திலும் தமிழில் 16 உயிர்களும் 35 மெய்களும் சேர்ந்து 51 எழுத்துக்கள் இருந்தன. சதுர எழுத்து காலத்தில்தான் தமிழுக்கு 12 உயிர்களும் 18 மெய்களும் சேர்ந்து 30 எழுத்துக்களும் – அவற்றுக்கு உரிய உயிர்மெய் எழுத்துக்களும் இருப்பதாக அறிஞர்கள் வகுத்தார்கள்.

–subham—

Tags- தமிழ் மொழி, 51 அக்ஷரங்கள்,  நரி பரியான கதை ,

அருணகிரி நாதர் , Part 61, சரபேஸ்வரர் , மதுரையின் புகழ்

உடல்நலம் மேம்பட வள்ளலார் பெருமான் தரும் ஆரோக்கியக் குறிப்புகள்! (Post.15,555)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,555

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மார்ச் 2026 ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

உடல்நலம் மேம்பட வள்ளலார் பெருமான் தரும் ஆரோக்கியக் குறிப்புகள்! 

ச. நாகராஜன் 

வடலூர் வள்ளலார் பெருமான் ஏராளமான ஆரோக்கியக் குறிப்புகளைத் தந்துள்ளார்.

அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 

இந்த உடம்பை அலக்ஷியம் செய்யாமல் பொன்னைப் போல் பார்க்க வேண்டும். 

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து கடவுளைத் தியானம் செய்ய வேண்டும்.

 பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும்.

 பகலில் போஜனம் செய்தபின் சற்றே படுத்தெழுதல் நல்லது.

(இது ஆழ்ந்த துயிலாக இராமல் அரைத் தூக்கமாக இருக்க வேண்டும்.

 இரவில் கொள்ளும் போஜனம் பகலில் கொள்வதை விடச் சற்று குறைவாக உண்ணல் வேண்டும்.

இரவில் போஜனம் செய்த பின் சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும்.

 இளவெயில், கடுவெயில், மழை, குளிர்காற்று, பனி – இவைகளால் உடம்பை வருத்தாமல் காத்துக் கொள்ள வேண்டும்.

 எப்போதும் பயத்துடன் இருத்தல் கூடாது.

 எப்போதும் மன உற்சாகத்துடன் இருத்தல் வேண்டும்.

கொலை, கோபம், சோம்பல், பொய்மை,பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா.

 உரத்துப் பேசுதல், வேகமாக நடந்து செல்லல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடுதல் ஆகியன கூடாது.

எந்த விதத்திலும் பிராணவாயு அதிகம் செலவாகாதபடி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

 சுத்த ஜலம் கிடைக்காத பட்சத்தில் நீரை பச்சையாகக் கொள்ளக் கூடாது. வெந்நீராகக் கொள்ளுதல் வேண்டும்.

 மலம் கழிக்கும் போது வலது கையால் இடது பக்கம் அடி வயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது இடது கையால் வலது பக்கம் அடி வயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும்.

 பதார்த்தங்களில் புளி, மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும்.

மிளகு, சீரகம், அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும். அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்வது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம்.

 கிழங்கு வகைகள் உண்ணாமல் இருத்தல் வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.

 சஞ்சீவி மூலிகைகளாவன: கறுப்பு நாயுருவி, குளிர்ந்த கொள்ளி, தீப்பூடு, முத்துப் பூண்டு, கருங்காந்தள் ஆகியவையாகும்.

 கீழாநெல்லி காமாலையைப் போக்கும். பித்தத்தை நீக்கும்.

 துளசி தோஷம் போக்கும்.

 தாமரை கண் குளிர்ச்சியைத் தரும்.

 எலுமிச்சை பித்தம் போக்கும்.

 பொன்னாங்கண்ணி கண்ணொளியைத் தரும். உஷ்ணத்தைச் சமனாக்கும்.

 திப்பிலி தாது விருத்தியைத் தரும்.

சுண்டைக்காய் சுரங்களைப் போக்கும்.

(இப்படி ஏராளமான மூலிகைகளின் பயன்களை வள்ளலார் தந்துள்ளார். இதை அவரது மூலிகை குண அட்டவணையில் காணலாம்,)

 நீடித்து ஆரோக்கியமாக வாழ வள்ளலார் பெருமான் தந்துள்ள அறிவுரைக் குறிப்புகளில் சிலவற்றையே மேலே காண்கிறோம்.

 இன்னும் அவர் கூறியுள்ள ஏராளமான பயன் தரும் அறிவுரைகளை அவரது நூல்களிலும் கடிதங்களிலும் அருட்பாக்களிலும் காணலாம்.

 இது தவிர சாகாக் கலை பற்றி அவர் கூறும் விஷயங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

 திருக்குறளில் வள்ளுவர் சாகாக் கலை பற்றிக் கூறியுள்ளார் என்பதில் ஆரம்பித்து சாகாமல் மனிதன் நிலைத்து வாழ இருக்கும் வழிமுறைகளையும் அவர் விவரமாகத் தந்துள்ளார்.

 உலகீர் இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர் (ஆறு திருமுறைகளில் பாடல் எண் 5600)

 என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் (பாடல் எண் 4960)

 மரண பயத்தை விட்டொழித்தேன் (பாடல் எண்4731)

 மரணம் தவிர்த்தேனென்று அறையப்பா முரசு (பாடல் எண் 5925)

 எமன் எனும் அவன் இனி இலை மகனே (பாடல் எண் 3702)

 இப்படி ஏராளமான இடங்களில் அவரது அருளுரைகளைக் காண்கிறோம்.

தான் கூறிய படியே அவர் ஶ்ரீமுக வருடம் தை மாதம் 19ம் நாள் பூச நட்சத்திரத்துடன் கூடிய வெள்ளிக்கிழமையன்று (30-1-1874 அன்று) தன் அறைக்குள்ளே சென்று இறைவனுடன் கலந்து அழியாத அமர நிலையை அடைந்தார்.

 ஆகப் பெரும் சித்த மருத்துவத்தை முழு வலிமையுடன் உலகிற்குத் தந்து, வாழ்ந்து காட்டிய மகான் வள்ளலார் என்பதில் ஐயமில்லை!

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 44; இந்து மத கலைச்சொல் அகராதி-44 (Post.15,554)

Written by London Swaminathan

Post No. 15,554

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Words beginning with letter KA continues…………………………….

Tamil version will be posted tomorrow

***

Kanishka

Kanishka  was a 2nd-century CE emperor of the Kushan dynasty who reigned around 127–150 CE. Known for his extensive military conquests, his empire stretched from Central Asia and Gandhara to Pataliputra, with capitals at Purushapura (Peshawar) and Mathura. He was a major patron of Buddhism, hosting the Fourth Buddhist Council and facilitating its spread along the Silk Road

***

Kanva Maharishi

Kanva is celebrated as the hermit who found the infant Shakuntala surrounded by Sakuntas (birds) in the wilderness, protected her, and raised her in his beautiful ashram (hermitage) on the banks of the river Malini. He is referred to as the foster father who enabled her union with King Dushyanta.

He is identified as the son of Rishi Medhatithi and is associated with the lineage of the Rishi Kashyapa, The name “Kanva” also signifies a Vedic school associated with the White Yajurveda (Kanva-Samhita), which includes 40 chapters and 2,086 verses.

***

Kartikeya

Kārttikeya (कार्त्तिकेय) is the name of Śiva’s son born for the purpose of slaying the asura Tāraka and to protect the realm of Indra .

Kārttikeya was born out of the fire having six faces. Accordingly, “When thus addressed by Śiva, the goddess (Umā) worshipped Gaṇeśa, and the fire became pregnant with that germ of Śiva. Then, bearing that embryo of Śiva, the fire shone even in the day as if the sun had entered into it. And then it discharged into the Ganges the germ difficult to bear, and the Gaṇas, by the order of Śiva, placed it in a sacrificial cavity on Mount Meru; it became a boy with six faces.”

The name Kārttikeya is derived from the fact he was nursed by the breasts of the six Kṛttikās.

***

Kartavirya

Kārtavīrya (कार्तवीर्य).—The son of Kṛtavīrya and king of the Haihayas, who ruled at Māhiṣmatī. Having worshipped Dattāttreya, he obtained from him several boons, such as a thousand arms, a golden chariot that went wheresoever he willed it to go, the power of restraining wrong by justice, conquest of earth, invincibility by enemies. According to the Vāyu Purāṇa he ruled justly and righteously for 85 years and offered sacrifices. He was a contemporary of Rāvaṇa whom he once captured and confined like a beast in a corner of his city;  Kārtavīrya was slain by Paraśurāma for having carried off by violence the Kāmadhenu of his  father Jamadagni. Kārtavīrya is also known by the name Sahasrārjuna.

***

Kapila

The great sage Kapila had chosen the netherworld to perform a terrible penance. At this time, the king Sagara had been performing the Ashwamedha (horse) sacrifice, but the sacrifical horse had wandered away. As the horse had strayed near the hermitage of sage Kapila, the 60,000 sons of Sagara came there in search of it.

The din caused by the arrival disturbed the sage, but he still did not open his eyes. When the sons of Sagara saw that the horse was there, they mistakenly assumed that Kapila was responsible for its theft. They started insulting the sage. At last, the sage could not bear it any longer. He opened his in wrath. Such was the potency of his gaze, that all the sons of Sagara were burned to ashes on the spot

Kapila is a revered ancient sage in Hindu tradition, best known as the founder of the Sāṅkhya school of philosophy, which analyses matter and spirit; he is the son of Kardama Muni and Devahūti. Kapila is associated with Satya-yuga .

Famous Sangam Tamil poet name is also Kapila; that Brahmin poet contributed the largest number of poems in Sangam literature.

***

Kasi

Kāśī has been known for centuries under five different names, viz., Vārāṇasī (modern Banaras), Kāśī, Avimukta, Ānandakānana and Śmaśāna or Mahāśmaśāna.

Kāsī is one of the sixteen Mahājanapadas of the Majjhimadesa (Middle Country) of ancient India, as recorded in the Pāli Buddhist texts 

It is situated on the left side of the river Ganga. As it is situated between the river Varuna and Ashi, it is known as Varanasi

Before the time of the Buddha, Kāsī was a great political power.

One of the oldest sacred places of learning in India. The Purāṇic name of the modern city of Benares in the North Indian state of Uttar Pradesh. Ambā, Ambikā and Ambālikā were abducted by Bhīṣma from this city, according to Mahabharata.

The Kashi Vishwanath Temple, located in Varanasi, Uttar Pradesh, is one of India’s most sacred Hindu temples, dedicated to Lord Shiva. It houses one of the 12 Jyotirlingas, featuring a 2-foot-high black stone lingam. It is one of the Seven Sacred Cities of India.

***

Katopanishad

The Katha Upanishad is a collection of philosophical poems representing a conversation between the sage Naciketas and Yama (God of death). They discuss the nature of Atman, Brahman and Moksha (liberation). The book is made up of six sections (Valli). Adi Sankara wrote a commentary.

This commentary by Shankara focuses on ‘Advaita Vedanta’, or non-dualism.

***

Kaurava

Kaurava is a Sanskrit term referring to descendant of Kuru, a legendary king of India who is the ancestor of many of the characters of the epic Mahabharata. Usually, the term is used for the 100 sons of King Dhritarashtra and his wife Gandhari.

The descendants of King Kuru who fought against the Pāṇḍavas in the Battle of Kurukṣetra.

From Dhṛtarāṣṭra, Duryodhana and his brothers were born and from Pāṇḍu were born the Pāṇḍavas. All members born in the family of Kuru were known as Kauravas. But later, the sons of Dhṛtarāṣṭra came to be known by the name ‘Kauravas’

***

Kaushika

 Kaushika is a Sanskrit term with multiple meanings, primarily referring to a descendant of Kusha, frequently used as a name for  Sage Vishvamitra: Often synonymous with Vishvamitra, who was originally a king (Kaushika) of Kanyakubja before becoming a Brahmarishi  Refers to the lineage or clan founded by the sons of Vishvamitra, noted for ascetic virtues and intermarriage with various Rishis.

The Story of Kaushika: A narrative involving a scholarly brahmin who is taught that duty and virtue, regardless of station, are superior to arrogant learning, often linked to the story of the virtuous butcher (Dharmavyadha).

Means “derived from the cocoon of a silkworm”; a gotra name; another meaning owl. Poets belonging to Kausika Gotra are in Sangam Tamil literature.

***

Kausalya

1) Kausalyā (कौसल्या).—A queen of King Daśaratha and mother of Śrī Rāma. Daśaratha had three wives Kausalyā, Kaikeyī and Sumitrā. Kausalyā gave birth to Śrī Rāma, Kaikeyī to Bharata and Sumitrā to Lakṣmaṇa and Śatrughna. (Vālmīki Rāmāyaṇa, Bāla Kāṇḍa, Sarga 16).

2) Kausalyā (कौसल्या).—Queen of the King of Kāśī. Ambā, Ambikā, and Ambālikā were daughters of this Kausalyā. Of these daughters Ambālikā also was called Kausalyā. After the death of Pāṇḍu she went to the forest with Ambikā. (Mahābhārata Ādi Parva, Chapter 129).

To be continued………….

Tags-  Kanishka, Kapia, Kasi, Kaurava, Part 44, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 44; இந்து மத கலைச்சொல் அகராதி-44

ஏப்ரல் 2026 காலண்டர்: காஞ்சி சுவாமிகள் பொன்மொழிகள் (Post No.15,553)

Written by London Swaminathan

Post No. 15,553

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏப்ரல் 2026 மாத பண்டிகைகள்

ஏப்ரல் 01- புதன் பங்குனி உத்திரம்;ஏப்ரல் 03 வெள்ளி-புனித வெள்ளி; 05 ஞாயிறு     ஈஸ்டர் டே; 14  சித்திரை 01 செவ்வாய்     தமிழ் வருடப்பிறப்பு:  20 திங்கள் அட்சய திருதியை; 21 சங்கர ஜயந்தி; 22 ராமானுஜர் ஜயந்தி; 28 செவ்வாய்     மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்; 30 வியாழன்  நரசிம்ம ஜெயந்தி, மதுரை கள்ளழகர் எதிர்சேவை

***

அமாவாசை-17; பெளர்ணமி-2; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் 13,27

***

ஏப்ரல் 2026 முக்கிய சுப முகூர்த்த நாட்கள் (விவாஹ முகூர்த்தம்):

ஏப்ரல் 20, ஏப்ரல் 23, ஏப்ரல் 30;

(தேய்பிறை முகூர்த்த நாட்கள் 6, 12, 13, 16)

***

ஏப்ரல் 1 – புதன் கிழமை

“பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

காஞ்சி சுவாமிகள் (1894-1994),தெய்வத்தின் குரல்

***

ஏப்ரல் 2 – வியாழக் கிழமை

“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

***

ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை 

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

***

ஏப்ரல் 4- சனிக்கிழமை 

யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது.

***

ஏப்ரல் 5 – ஞாயிற்றுக் கிழமை

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

***

ஏப்ரல் 6 – திங்கட் கிழமை

“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

***

ஏப்ரல் 7- செவ்வாய்க்கிழமை 

ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள். அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார்.

***

ஏப்ரல் 8 – புதன் கிழமை

“நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார்.

***

ஏப்ரல் 9 – வியாழக் கிழமை

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

***

ஏப்ரல் 10 – வெள்ளிக்கிழமை 

மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்? இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும்.

***

ஏப்ரல் 11 – சனிக்கிழமை 

‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் .‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம். எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது.

***

ஏப்ரல் 12 – ஞாயிற்றுக் கிழமை

ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தை (நிலை)களுண்டு. சாதாரணமாக விழித்துக் கொண்டிருப்பது ஜாக்ரம்; கனாக் காண்பது ஸ்வப்னம்; ஒன்றும் தெரியாமல் தூங்குவது ஸுஷுப்தி. இந்த மூன்று அவஸ்தைகளிலும் ஒருவனேதான் இருக்கிறான். கனாக் கண்டவனும் விழித்துக் கொண்டவனும் ஒருவனே. ஆனால், கனாக் கண்ட பொழுது நடக்கிறவைகளுக்கும், விழித்துக் கொண்டபின் நடக்கிறவைகளுக்கும் முன்னுக்குப் பின் சம்பந்தமே இல்லை. கனவில் வேற விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. விழித்துக்கொண்டபோது வேறே விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. அவஸ்தை வேறுபட்ட போதிலும், மனோபாவம் வேறுபட்ட போதிலும் இரண்டிலும் ஒருவனே இருப்பதுபோல, வேறு வேறு மனோபாவம் கொண்ட பல பிராணிகளிடத்திலும் இருப்பவன் ஒருவனே: அவனே நாம் என்று தெளிய வேண்டும்.

***

ஏப்ரல் 13 – திங்கட் கிழமை

இந்த உலகமும் ஒரு கனவுதான். உலக வாழ்வும் மாயா ஜுரத்தில் வந்த ஜன்னி என்று தெரிந்து கொண்டால், உண்மையில் எல்லாம் ஒன்று என்று உணர்வோம். நம் கனவில், நம் ஒருத்தரின் மனமே இத்தனை பேரை சிருஷ்டித்த மாதிரி, மகா பெரிய மனசு ஒன்றின் எண்ணங்கள்தான் இத்தனை ஜீவராசிகளும் என்று தெரியும்.

***

ஏப்ரல் 14- செவ்வாய்க்கிழமை 

ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.  குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

***

ஏப்ரல் 15 – புதன் கிழமை

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர்.

***

ஏப்ரல் 16 – வியாழக் கிழமை

பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.

***

ஏப்ரல் 17 – வெள்ளிக்கிழமை 

எல்லாரும் பணக்காரராகி விடுவதாகவே வைத்துக் கொள்வோம். நிம்மதியாக, சாந்தமாக, நிர்ப்பயமாக இருக்க அது உதவுமா? பணக்காரர்கள் நிறைந்த தேசங்களைப் பாருங்கள். அங்கே எத்தனை சச்சரவு, நிம்மதியின்மை? எல்லோருக்கும் நிறையப் பணம் வந்துவிட்டாலும், ஒவ்வொருவனுக்கும் மற்றவனைவிட அதிகம் இருக்க வேண்டும் என்கிற ஆசையும், அதனால் போட்டியும், சச்சரவும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

***

ஏப்ரல் 18 – சனிக்கிழமை 

மகானாகிய நீலகண்ட தீக்ஷிதர் தம்முடைய ‘ஆனந்த ஸாகர ஸ்தவ’த்தில் இதற்குப் பதில் சொல்லுகிறார். ‘அம்மா மீனாக்ஷி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும் உன்னிடம் கஷ்டங்களை வாய் விட்டுச் சொல்லாவிட்டால் மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்லிவிட்டாலே தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்” என்கிறார்.

***

ஏப்ரல் 19 – ஞாயிற்றுக் கிழமை

பாபங்கள் இரண்டு தினுசு, ஒன்று சரீரத்தால் செய்த பாப கர்மா, இன்னொன்று மனசினால் செய்த பாப சிந்தனை. பாப கர்மாவைப் போக்கிக் கொள்ள புண்யகர்மா செய்ய வேண்டும். பாப எண்ணங்களைப் போக்கிக் கொள்ள புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

***

ஏப்ரல் 20 – திங்கட் கிழமை

காரியமே இல்லாமல் உட்காருகிறேன் என ஆரம்பித்தால் அப்போது மனசில் இல்லாத கெட்ட எண்ணங்கள் எல்லாம் படை எடுத்து வரும். இங்கிலீஷில்கூட “வேலையில்லாத சித்தம் சைத்தானின் பட்டடை” என்று ஒரு பழமொழி உண்டு. ஆகவேதான்—சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்குமுன் அந்தச் சித்தம் சுத்தப்பட வேண்டும்! ஆரம்பத்தில் ‘கர்மங்களாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும்’ என்பதால்தான் ஆசாரியாள் வேத கர்மாக்களை நிலைநாட்டினார்.

***

ஏப்ரல் 21 – செவ்வாய்க்கிழமை 

பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக அன்பு என்று சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பி விடுவதுதான் பக்தி.

***

ஏப்ரல் 22 – புதன் கிழமை

மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு, துன்பம் உண்டு, பயம் உண்டு, துவேஷம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது துவேஷம் இவை உண்டாக முடியும். இன்னொன்றே இல்லை – காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா – என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும், கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது?

***

ஏப்ரல் 23 – வியாழக் கிழமை

உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல! இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.

***

ஏப்ரல் 24 – வெள்ளிக்கிழமை 

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். இன்னொன்றை ஊமத்தை என்று சொல்கிறோம். ஞானம் என்கிற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அப்படியே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் ஒன்றை ரோஜாவாகவும், மற்றொன்றை இன்னொரு பொருளாகவும் பார்க்கிறோம். உண்மையில் எல்லாம் ஆனந்தம்தான். உண்மை நமக்குப் புலப்படாததற்குக் காரணம், நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும்தான்.

***

ஏப்ரல் 25 – சனிக்கிழமை 

கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதிபிம்பத்தில் யதார்த்த பாவமே கொஞ்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.

***

ஏப்ரல் 26 – ஞாயிற்றுக் கிழமை

தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு, எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.

***

ஏப்ரல் 27 – திங்கட் கிழமை

ஒரே ஒரு சூரியன்தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அநேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்றுதான். அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினு மினுக்கின்ற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான். இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரவர்கள் ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

***

ஏப்ரல் 28 – செவ்வாய்க்கிழமை 

பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்சாக, காயாக இருந்துதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. ‘வெம்பி விழுந்திடுமோ?’ என்று ராமலிங்கர் சொல்லுகிறார். நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும்.

***

ஏப்ரல் 29 – புதன் கிழமை

இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.

***

ஏப்ரல் 30 – வியாழக் கிழமை

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

***

BONUS QUOTES

கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:

‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை

அரவுஎனப் பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப் பாட்டின்

வேறு பாடுற்ற வீக்கம்

கலங்குவ தெவரைக் கண்டால்

அவர் என்பர் கைவி லேந்தி

இலங்கையில் பொருதா ரன்றே

மறைகளுக் கிறுதி யாவார்.’

அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு’ – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.

***

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.

***

வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது.

***

மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

***

வடக்கே ஒரு நதிக்கு ‘ஸோன்’ என்று பெயர். ‘சோணம்’ என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஓடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. ‘கிருஷ்ண’ என்றால் கறுப்பு. இந்த நதி கறுப்பு மண் மீது ஓடுகிறது. ‘கங்கை’ என்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடிவருகிற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கறுப்பு தமோ குணம், வெள்ளை ஸத்வ குணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.

***

மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்?***

***

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும்.

***

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.

ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.

***

யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.

***

நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.

–SUBHAM—

TAGS- ஏப்ரல் 2026 காலண்டர்:, காஞ்சி சுவாமிகள், பொன்மொழிகள்

யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை; முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ? (Post.15,552)

Written by London Swaminathan

Post No. 15,552

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 60

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 60

உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிடச் சேர்

ஆயம் ஆம் அவருடன் மடிந்திடக் கோபாலர் சேரியில்

மகவாயும் உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக …

உலக்கையை* துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒருசேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும், ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே,

மந்திரக் காபாலியாகிய உரக கங்கணப் பூதேசர் பாலக

வயலூரா … (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும்,

பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக்

கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர்

சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே,

கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என இனையும்

அம் குறப் பாவாய் வியாகுலம் விடு விடு என்று கைக் கூர்

வேலை ஏவிய இளையோனே … கொலை செய்யும் வில்லைக்

கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு

நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி,

வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு

என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள்

மீது) செலுத்திய இளையோனே,

விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கயப் பூ

ஓடை மேவிய விஜயமங்கலத் தேவாதி தேவர்கள்

பெருமாளே. … வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி

என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்** வீற்றிருக்கும், தேவாதி தேவர்களின் பெருமாளே.

யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர்

உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் அதன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின்

பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான்.

யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

** விஜயமங்கலம் ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் வடக்கில் உள்ளது.

***

முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ?

சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய் … சபதம் செய்து இந்த

ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி

அதனை வாகனமாகச் செலுத்துவாய்.

சடுசமயங் காண்டற்கு அரியானே … ஆறு** சமயத்தவராலும்

காணுதற்கு அரியவனே,

சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே … சிவகுமாரனே, உன்னை

அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும்

பிரியாதவனே,

திருமுருகன் பூண்டிப் பெருமாளே. … திருமுருகன்பூண்டி***

என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.

***

சுந்தர வாழ்வில் நடந்த அற்புதங்கள்

இதப் பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் இயற்றப் பதி தோறும் உலாவிய தொண்டர் … இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்றுதரிசித்த அடியராகிய சுந்தரர்

தாள இசைக்கு ஒக்க இராசத பாவனை உ(ள்)ளப் பெற்றொடுபாடிட வேடையில் இளைப்பு உக்கிட வார் மறையோன் எனவந்து கானில் திதப்பட்டு எதிரே … தாளத்தின் இசைக்குப்பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப்பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒருமறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி,

பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு

திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் … (தாம்

கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசிஎன்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும்,

முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த

புராண க்ருபாகர … முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து(உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த**பழையவராகிய கருணாமூர்த்தியும்,

திருப்புக் கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே. …

திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தம்பிரானே.

சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர், திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.

** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

***

சிவபெருமான் கொடு கொட்டி நடனம் ஆடிய கதை

பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா … பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே,

சூரா ஆகா போகாது எனும் வீரா … அடா சூரனே, ஆஹா,

அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே,

பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்* பாரூர் ஆ சூழ் பேரூர்

ஆள்வார் பெருமாளே. … (பிரமனாகிய) முனிவனுக்கு அருள்

செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே.

பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபெருமானிடம் முறையிட, நீ பட்டி முனியாய் பேரூரில் வந்து பக்தி செய்வாயாகில் எமது நடனத்தைக் காணலாம் என்றார். திருமால் காமதேனுவாகவும், பிரமன் பட்டி முனிவராகவும் பேரூரில்

வழிபட்டு, நடராஜப் பெருமானின் கொடு கொட்டி என்ற ஆடலைக் கண்டனர்.

** பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.

—subham—

Tags- யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை, முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ?, கொடு கொட்டி நடனம்

வண்டியை டிரைவ் செய்து கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்ற கோல்ட் ஃபிஷ்! (Post No.15,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,551

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

27-3-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

வண்டியை டிரைவ் செய்து கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்ற கோல்ட் ஃபிஷ்! அதிசயம் ஆனால் உண்மை! 

ச. நாகராஜன்

 அதிசயம் ஆனால் உண்மை!

கின்னஸ் ரிகார்டில் ஒரு கோல்ட்ஃபிஷ் இடம் பெற்று சாதனை செய்து விட்டது? அதுவும் எதற்காக என்று தெரியுமா? ஒரு வண்டியை டிரைவ் செய்ததற்காக!

என்ன உளறல் என்று நினைக்க வேண்டாம். உண்மை தான் இது!

அந்த தங்கமீனின் பெயர் ப்ளப் (BLUB). அந்த இத்தாலிய மீனை வளர்ப்பவரின் பெயர் தாமஸ் டி உல்ப்.)  (Thomal de Wolf). அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர். 

ஒரே ஒரு நிமிடத்தில் அதிகமான தூரத்தை நகர்தலை உணரும் ஒரு வண்டியை ஓட்டியதற்காக – டிரைவ் செய்ததற்காக -அதற்கு கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் சாதனை தரப்பட்டது. தாமஸ் ஒரு கம்ப்யூட்டர் எஞ்ஜினியர்.

அவர் அமைத்திருக்கும் தனிச்சிறப்பைக் கொண்ட கார், ஒரு வாட்டர் டேங்கைக் கொண்டிருக்கிறது. அதற்குள் நீந்தும் தங்கமீனின் இயக்கங்களால் வண்டி நகர்கிறது. அது தனது இயக்கங்களால் ஒரு நிமிடத்தில் மலைக்க வைக்கும் 12.28 மீட்டர் – 40 அடி 3.46 அங்குலம்-  தூரத்திற்கு வண்டியை நகர்த்தி இருக்கிறது. இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘லோ ஷோ டெய் ரிகார்ட்’ என்ற நிகழ்ச்சி மிலன் நகரில் நடந்தது. அதில் பங்கு பெற்ற தாமஸ், “எனது வேலை பொதுவாகவே ஒரு போர் அடிக்கும் வேலை. ஆகவே ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது சீரியஸான வேலையை விளையாட்டாக மாற்ற முயன்றேன்” என்றார்.

மோஷன் சென்ஸிங் கேமரா எனப்படும் நகர்தலை துல்லியமாக அறியும் கேமரா ஒன்று ப்ளப்பின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அது நீர்த்தொட்டியின் உள்ளே எந்த திசையில் நகர்கிறதோ அந்த திசையில் காரை நகர்த்த வழி வகுத்தது. இதனால் ப்ளப் தான் காரை டிரைவ் செய்கிறது என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது.

“இப்படிப்பட்ட தொழில்நுட்ப உத்தியால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இதை நான் வேடிக்கைக்காகச் செய்தேன்” என்றார் தாமஸ்.

என்றாலும் இந்த ஷோவை நிகழ்த்திய ஜெர்ரி ஸ்காட்டி (Gerry Scotti)  இப்படிப்பட்ட நவீன தொழில்நுட்பமானது உடலில் குறை உள்ளவர்களுக்குப் பெருமளவில் உதவும் என்று குறிப்பிட்டார். “ஆமாம், ஆமாம். நகர முடியாதபடி உடல் இயக்கங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய என்னால்  உதவ முடியும்” என்றார் தாமஸ்.

இந்த வண்டி பிரகாசமான சிவப்பு மீனால் மட்டுமே இயங்கும். ஏனெனில்

அப்போது தான் கேமரா அதன் இயக்கங்களைப் பளிச்சென்று படம் பிடிக்க

முடியும். இந்த வகையில் குட்டி ப்ளப் சிறந்த வகையில் இயங்கியதால்

அதுவே இதை இயக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கின்னஸ் சாதனையில்

பெயர் இடம் பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்க மீன் ஐந்து மீட்டர் தூரத்திற்கு வண்டியை இயக்க வேண்டும். வண்டி முன்னாலோ அல்லது பின்னாலோ எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம். ஆனால் ப்ளப் வெற்றிகரமாக 12 மீட்டர் ஓடி அனைவரையும் மலைக்க வைத்து விட்டது. நிகழ்ச்சியாளர் ஸ்காட்டி இந்த நிகழ்ச்சியைக் காணும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இனி எனக்கு டிரைவ் செய்யும் மீன் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கப் போகின்றன என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

 ரிகார்ட் சர்டிபிகேட்டைப் பெற்ற தாமஸ், “அது சரி, உலக ரிகார்டை நீ படைத்து விட்டாய் என்று ப்ளப்புக்கு நான் எப்படி புரிய வைக்கப் போகிறேன்” என்று அங்கலாய்த்தார்.

நிகழ்ச்சியைக் கண்காணித்துத் தீர்ப்பை அளித்த சோபியா கிரீனாக்ரே, “சரியான தூரத்தை நிர்ணயிப்பதற்காக ஒவ்வொரு சக்கரத்திலும் உள்ள வண்ணக் குறி தரையைத் தொட்டதா என்று நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது” என்றார்.

Purananuru Wonders 15- Ancient Tamil Encyclopaedia Part 55 ; Chozas are not Tamils! (Post.15,550)

Written by London Swaminathan

Post No. 15,550

Date uploaded in London – 29 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Last item was posted on –  24 February 2026; this is part 55

Ancient Tamil Encyclopaedia -Part 55; One Thousand Interesting Facts -Part 55 

***

Item 400

In Puram 36 we get two interesting details

Geography

Aan Porunai river is now called Amaravathy

Vanji of olden days is called  Karur now.

ஆன் பொருநை ஆறு – வஞ்சி நகரின் அருகில் உள்ள ஆறு, வஞ்சி – இன்றைய கரூர், ஆன் பொருநை – இன்றைய அமராவதி. 

***

Item 401

Ancient Pastime of Tamil Girls is Kazangu Aaduthal. Girls in pairs or more sit in a circle and throw the pebbles or big seeds upward and catch them before they fall on the ground. Skilful girls use more than two pebbles at the same time. This is like modern jugglery. It is the physical skill of keeping items in the air, such as balls or torches or wooden things.

In western countries, we  see jugglery in big city squares or tourist spots. In London jugglers are performing in Covent Garden.

Tamil game is like this jugglery, but they sit and do it. Jugglers stand and do it.

***

Item 402

Tamil kings had totem trees and they are protected or guarded. Cutting such trees is equal to insulting the king. Here the poet Aalathur Kizaar sings about  it. Trees and flowers occupy very important place in Tamil life.

***

JUGGLING IN PURA NANURU- KAZANGU AADUTHAL BY GIRLS

Puranānūru 36, Poet Ālathūr Kizhār sang to Chozhan Kulamutrathuu Thunjiya Killivalavan

 Young girls wearing small bangles and long, rounded

anklets filled with pebbles, are playing with gold
kalangu beans on the high mounds, crushing the white

sands on the banks of the cool Ānporunai River.

***
In his guarded palace within tall fort walls, the sounds
of protected trees chopped in his groves with axes with
long handles and blades filed sharp by a blacksmith with
strong hands, are heard. 

*** 

புறநானூறு 36பாடியவர்: ஆலத்தூர் கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: வஞ்சிதுறை: துணை வஞ்சி
அடுநை ஆயினும், விடுநை ஆயினும்,
நீ அளந்து அறிதி, நின் புரைமை, வார் கோல்
செறி அரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண்மணல் சிதையக்,  5
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து,
வீ கமழ் நெடுஞ் சினை புலம்பக், காவுதொறும்
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர்
நெடுமதில் வரைப்பின் கடி மனை இயம்ப,  10
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின்
சிலைத் தார் முரசும் கறங்க,
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.

****

Item 403

In Puram Verse 37 sung by Nappasalai we see Five Headed Snake and the origin of Chozas. Through out Sangam literature, and in later Tamil poems we see Five Headed Snake. In nature there is no Five Headed Snake. Nowhere in the world it is recorded. Five Cows, Five Elephants or Five Headed snake represent five senses in the human body. One who has self control is lauded as a Yogi.

Five Headed Snake is in Paripatal 19-72 and

Tiruvasagam – neeththal vinnappam

***

Item 404

Chozas were not Tamils.

They came from the North Western part of India. Sibi or Shibi is in the Rig Veda and Sanskrit gramma .

Saibhya is derived from it. Saibhya is changed in to Sembian in Tamil. Chozas claim their forefathers were Mandhata, Musukunda etc. Rama also was from the same Solar Dynasty.

Story of Dove and Hawk are in Purananuru and Tamil Epic Silappadikaram. Vedas and Mahabharata have the story of Sibi.

Shibi was an ancestor of Rama, born in the Ikshvaku dynasty. He is best known for his devotion to truth and justice. To test his devotion to truth, Indra and Agni took the forms of a hawk and a pigeon respectively and went to his kingdom. The pigeon (Agni) sought refuge with the King, with the hawk in hot pursuit. The King promised the pigeon asylum, and when the hawk demanded that the pigeon be given to him as his natural food, the Shibi tried to satisfy it with the flesh  from his own body.

SIBHI STORY IN SCULPTURES

Shibi as proper name is found in many places.

Śibi (शिबि).—Inhabitants of the country called Śibi; they are called Śaibyas also.

 People of Śibi attended the Rājasūya yajña conducted by Yudhiṣṭhira with presents. (Sabhā Parva, Chapter 52, Verse 14).

 Śibi (शिबि).—A son of Dṛṣadvatī and Uśīnara known for his munificence; Parīkṣit compared to him. Knew the yoga power of Hari;1 father of Vṛṣādarbha and three other sons (ten sons, Matsya-purāṇa); gave up life in service, and attained permanent fame.2 Śivapuram was his capital;3 engaged in a sacrifice with Vasumat, Aṣṭaka and Pratardana when his grandfather Yayāti fell from heaven;4 discoursed with Yayāti about other worlds;5 went to heaven in a golden chariot;6 gifts of, to attain heaven.7

***

SIBI STORY IN INDONESIA

Item 405

The name of the poetess is Nappasalai with the prefix Na , equivalent to Su in Sanskrit. So I guess this Brahmin poetess name is Subhadra.

Na KKannai- Su Lochana

Na PPsalai – Su Bhadra or Su Patra

Na Ppinnai- Su Kundala

Sanskrit names are abundant with Su (na) as prefix: Sukeerti, Su Kanya, Su bhadra, Su Lochana, Su Varchasa , Su Neeti, Su Lakshana etc.

Some people tried to link her name with Pasalai colour that girls develop when they are love sick. But there is no basis or proof for such an assumption.

***

Item 406

City with copper walls is also unique. In Ramayana and other Puranas we come across city with golden walls. Ravana’s Lanka also had golden walls. Here we come across Copper Walls, which is very rare.

****

Puranānūru 37, Poet Mārōkkathu Nappasalaiyār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan

O heir of Chempiyan who removed the anguish of a
dove and owned a rage-filled army with bright spears!

…………………………..

ancient great city with
copper walls
, where many vicious crocodiles gather
in the darkness of the huge, deep moats and rush up and

………………………………

புறநானூறு 37பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: வாகைதுறை: அரச வாகைமுதல் வஞ்சி


நஞ்சுடை வால் எயிற்றுஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும் எறிந்தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்,  5
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங்குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்  10
செம்பு உறழ் புரிசைச் செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
நல்ல என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத்தானே.

Notes:  The Sibi Chakravarthi story appears to have adopted by the Chozha kings as theirs.  It is referred to in Puranānūru 37, 39, 43 and 46. 

Copper Walled Cityசெம்புச் சுவர்: புறநானூறு 201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.

*****

Item 407

Poet Avūr Moolankizhār says Earth is better than Heaven because there is none to give and no one to beg. It is echoed by Valluvar as well.

ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்கணவர்

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

              (குறள் 213: ஒப்புரவறிதல் அதிகாரம்)

There is nothing better good than helping those who are poor and incapacitated physically even in heavenly abode of Gods, and on this earth. This is what this verse conveys.

Why is it rare even to heavenly beings? Since there is no poverty in heavens, there is none to ask alms and hence none to give either. So the pleasure of giving is not there for heavenly beings. Hence the very thought that the heaven is a pleasurable place is false.

In the chapter on “seeking alms”, (Chapter 106, verse 8) Parimelazhagar quotes, “IvArum koLvArum illAdha vAnaththu vAzhvArE vankaNavar”.  This verse says since the heavens don’t have anybody to seek alms and because of which there is none to give, the people of heavens are rude and evil people. This seems to be an extreme conclusion or simply an exalted poetic expression. That verse says, if there is no one to seek alms on this earth, it is like a lifeless wooden toy.

****

Item 408

He also praises the power of Choza king in Puram verse 38. It is a beautiful decscription.

Puranānūru 38, Poet Avūr Moolankizhār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan

1

If you look with rage, fire spreads.  If you look with
kindness, gold springs up.  You have the power to make
the hot sun have the moon, and the white moon to be hot.……………………….

2

Those in need believe that even for those who live in the
upper world where groves have golden flowers, there is
something that is missing, for there is no rich to give, or
poor to request. 

புறநானூறு 38பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: பாடாண்துறை: இயன் மொழி


வரை புரையும் மழ களிற்றின் மிசை
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!

1


நீ உடன்று நோக்கும்வாய் எரி தவழ,  5
நீ நயந்து நோக்கும்வாய் பொன் பூப்பச்,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண்திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,


நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த  10
எம் அளவு எவனோ மற்றே? இன் நிலைப்

2


பொலம் பூங்காவின் நன்னாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை.
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்


கடவது அன்மையின் கையறவு உடைத்து என,  15
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்தெனவே.

 FIVE HEADED SNAKE IN PURA NANURU

To be continued……………….

Tags- Item 408, Purananuru wonders 15, Tamil Encyclopaedia part 55, Heaven, Earth, Sibi, Origin of Chozas, Not Tamils,