Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அவ்வையார், அதியமான், அருணகிரிநாதர், ஆல்பிருனி, பாரதியார், சுவாமி சிவானந்தா – ஆகிய ஆறு பெரியோர்களும் நெல்லிக்கனியின் பெருமையை விதந்தோதியுள்ளார்கள்.
46திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 46
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 46
***
மேரு மலை வில் = பார்வதி கை
அணிசெவ்வியார் திரை சூழ்புவி … அழகு நிறைந்த மாதர் (பெண்),
கடல் சூழ்ந்த பூமி (மண்),
தன நிவ்வியே கரை யேறிட … செல்வம் (பொன்) என்ற
மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான
அறிவில்லியாம் அடியேன் இடரதுதீர … அறிவற்றவனாகிய
அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய
அருள்வல்லையோ … திருவருளை வலிய அருள்வாயோ?
நெடு நாளினம் இருளில்லிலேயிடுமோ … அல்லது நீண்ட
காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான
பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ?
உனதருளில்லையோ … உனது திருவருள் என்மீது சிறிதும்
இல்லையோ?
இனமானவை யறியேனே … உன்அடியார் கூட்டத்தை நான்
அறியவில்லையே.
குணவில்லதா மக மேரினை … சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய*
அணிசெல்வியாய் அருணாசல குரு … அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே,
* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.
***
கரு நெல்லிக்காய் மஹிமை= விஷ்ணு
கருநெல்லி மேனி அரி மருகோனே … கருநெல்லிக்காய் போல
பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே,
கனவள்ளியார்கணவ முருகேசா … பெருமை வாய்ந்த வள்ளி
தேவியின் கணவனே, முருகேசா,
திருவல்லிதாயம் அதில் உறைவோனே … திருவலிதாயம்* என்ற
தலத்தில் வீற்றிருப்பவனே,
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. … விளங்குகின்ற
பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.
* திருவலிதாயம் இப்போது ‘பாடி’ எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.
யாரும் கிருஷ்ணனையோ விஷ்ணுவையோ கரு நெல்லிக் காய்க்கு ஒப்பிட்டத்தில்லை . வேறு என்னென்னவோ சொல்லி கருப்பு என்று பகர்ந்தார்கள்; காக்கை போல கருப்பு என்று கூடப் புகழந்துள்ளார்கள் ;கரு நெல்லிக்காய் என்பது அபூர்வ நெல்லிக்காய் அல்லது காய்ந்து உலர்ந்த நெல்லிக்காய் வற்றல் என்று சொல்லலாம். நெல்லிக்காய்க்குப் பொதுவாகவே அவ்வளவு மதிப்பு ! ஸ்யவனப் பிரகாஷ் என்ற நெல்லிக்காய் லேகியம் செய்து அதன் புகழைப் பரப்பினார் ரிஷிகேஷில் தெய்வ நெறிக் கழகம் ஸ்தாபித்த சுவாமி சிவானந்தா – பத்தமடையில் பிறந்து மலேஷியாவில் டாக்டர் தொழில் செய்தவர் !
அவ்வையாரும் ஆல்பெரூனியும் கரு நெல்லிக்காயின் மஹிமையை நமக்கு முன்னரே செப்பியுள்ளனர்;பாரதியாரையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்!
அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.
நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.
வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும் சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.
இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.
ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.
(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)
பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.
இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி
ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.
நெல்லிக்காய் நிற விஷ்ணு
அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!!
நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும் சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.
பாரதியாரும் நெல்லிக்காயும்
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மொத்தமுள்ள 110 பொன்மொழிகளில் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். இங்கு அவர் நமக்கு ஒரு புதிர் போடுகிறார்.
ரேகையில் கனி கொள் (94ஆவது அறிவுரை )
நெல்லிக்காயில் ரேகைகள் இருப்பதை நாம் அறிவோம்.. பாரதியார் நெல்லிக்காயை சொல்கிறாரா அல்லது வேறு ஏதாவது சொல்கிறாரா என்பது விளங்கவில்லை ; ஆகையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி ,என் ராமச்சந்திரன் கூட இரு பொருள் தருகிறார்.
ரேகையில் கனி கொள் 94
CONSUME STREAKED BERRY/AMLA/NELLIKKAAY/GOOSEBERRY
OR
SEEK OUT VEINS OF LOVE
அன்பினை நாடு/ தேடு என்பது இரண்டாவது பொருள்.
பாரதியார் இறந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; அவர் உயிரோடு இருந்தால் ஐயா, கொஞ்சம் விளக்குங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.
—SUBHAM—
TAGS-திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 46, கரு நெல்லிக்காய் மஹிமை, ஆல்பிரூனி, அருணகிரிநாதர், பாரதியார், அதியமான் அஞ்சி, அவ்வையார், திரிபலா சூர்ணம், ஆறு பெரியோர்கள் ,பகுதி-46, மேரு மலை, பார்வதி கை
இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் கடைசி எழுத்துடன் சேர்த்துப் பார்ப்போம்.
மாரா- மன்மதன்
நரா – அர்ஜுனன்
புரா – வெள்ளம்
ஜாரா – கள்ளக் காதலன்
பரா – எதிரி
ஹாரம் – முத்துமாலை
மந்தக்ராந்தா சந்தத்தில் அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.
இது பல சுபாஷித ஸ்லோகங்களின் தொகுப்பில் காணப்படுகிறது.
இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
*
யார் குருடன்? யார் செவிடன்? யார் ஊமை?
கேள்வி- பதில் ஸ்லோகங்கள் இன்னொரு விதம்!
கோ அந்தோ யோகார்யரத:
கோ பகிரோ ய: ஸ்ருணோதி ந ஹிதானி |
கோ மூகோ ய: காலே
ப்ரியாணி வக்தும் ந ஜானாதி ||
யார் குருடன்? எவன் ஒருவன் செய்யக் கூடாத காரியத்தைச் விரும்பிச் செய்கிறானோ அவன் தான் குருடன்!
யார் செவிடன்? எவன் ஒருவன் நல்லதைக் கொடுக்கும் சொற்களைக் கேட்காமல் இருக்கிறானோ அவனே செவிடன்.
யார் ஊமை? சரியான சமயத்தில் இனிமையான சொற்களை எவன் ஒருவனுக்குப் பேசத் தெரியவில்லையோ அவனே ஊமை!
அடிக்கடி நினைத்துப் பார்க்க வேண்டியவை!
கோதேஷ: கானி மித்ராணி க: கால: கோ வ்யயாகமௌ |
கஸ்சாஹம் கா ச மே சக்திர் இதி சிந்த்வம் முஹுர்முஹுர்: ||
எது தேசம்? யார் நண்பர்கள்? நேரம் என்ன? எவ்வளவு வரவு வந்திருக்கிறது, எவ்வளவு செலவாகியுள்ளது? நான் யார்? எனது அதிகாரம் என்ன? இவையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்க்கப்படவேண்டியவையாகும்.
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று – ரத்னசபை.
** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.
நடராஜர் தன் பிரபஞ்ச நடனமான தாண்டவத்தை ஆடிய ஐந்து முக்கியத் திருத்தலங்கள் பஞ்ச சபைகள் எனப்படுகின்றன. இவை அனைத்தும் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. சிதம்பரம் கனக சபை (பொன்னம்பலம் ), மதுரை ரஜத சபை (வெள்ளி அம்பலம் ), திருவாலங்காடு (ரத்தின சபை), திருநெல்வேலி (தாமிர சபை), மற்றும் குற்றாலம் (சித்திர சபை) ஆகியவை அந்த ஐம்பெரும் சபைகளாகும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
புகையிலைப் பாட்டு!
ச. நாகராஜன்
1201 பாடல்கள் அடங்கிய தனிப்பாடற்றிரட்டு என்ற நூல் மக்கிப் பொடிப்பொடியாகப் போகும் நிலையில் என்னிடம் உள்ளது.
அட்டையும் இல்லை. முதல் பக்கங்கள் சிலவும் இல்லை.
அதில் பல அழகிய பாடல்கள் உள்ளன.
பொது – பல வித்துவான்கள் பாடல் என்ற தலைப்பில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன.
அதில் உள்ள இந்த புகையிலைப் பாடலைக் கீழே தருகிறேன்.
புகையிலைப் பாட்டு
நாலெழுத் துப்பூ டுநடுவேநரம் பிருக்கும்
காலுந்தலையுங்கடைச்சாதி – மேலாக
ஒட்டிமுதலெழுத்துமோ துமூன்றாம்மெழுத்தும்
விட்டாபரமனுக்கு வீடு
புகையிலை – புலை- கைலை
நாலெழுத்து கொண்ட சொல்.
காலும் தலையும் கடை சாதி – புலை(யர்)
முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் ஆக இவை இரண்டும் விட்டு விட்டால் வருவது கைலை. அது பரமனுக்கு வீடு.
சிவபிரான் உறையும் கைலாய மலை.
புகையிலைக்குள் இவ்வளவு அடங்கி இருக்கிறது என்கிறார் புலவர்.
இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
இன்னொரு பாடல்:
காதலன் காதலிக்கு அடையாளச் செய்தி சொல்வது!
ஓதுமைந்திலொன்றிலைந்திலொன்று மன்னவன் பிதா
ஊர்திதொட்டவேருன் மீதிலுற்ற சாபநிருபனார்
தாதுகொண்டகாளி மாலை சூடி தப்பி தம்பி சேய்
தன் குடைப்பினைவன்மற்றலைசுகிரீடதுவாசனார்
காதனன்பன்றந்தைபாகன் பின்வன்பகைச்சுமைக்
கலையெடுத்தகையரையர்கதிபெறத் தவஞ் செய்தோன்
தீதிறாதைகொண்டுவந்தசிலைவதிந்துபதியினான்
சிரமரிந்தவன்கொள்பாரிசேரிலாலுறைந்ததே
பாடலைப் படித்தால் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் பிரித்துச் சிந்தித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்.
ஓதும் ஐந்தில் ஒன்று
ஓதும் – ஐந்து பஞ்ச பூதம்
ஐந்தில் ஒன்று – நிலம் (நிலம்,நீர், வான், காற்று, தீ ஆகிய பஞ்சபூதங்களுள் ஒன்று நிலம்)
ஐந்தில் ஒன்றில் ஐந்தில் ஒன்று
நிலத்தில் ஐந்து திணைகள் உண்டு.
அந்த ஐந்தில் ஒன்று குறிஞ்சி
அதற்கு மன்னவன் யார்? முருகன்! குறிஞ்சித் தெய்வம் முருகன் அல்லவா?
அவன் பிதா – யார்? சிவபிரான்!
அவன் ஊர்தி – சிவனின் வாகனம் எது? ரிஷபம்!
அதற்கு ஏழில் உள்ளது யார்?
ரிஷப ராசிக்கும் ஏழாம் ராசி விருச்சிகம்.
அதன் மீதில் உற்ற சாபம் தனுசு.
அதைக் கொண்ட நிருபன் (அரசன்) யார்? வில்லைக் கொண்டவன் இராமன்.
அவன் தம்பி பனை மாலை சூடிய பலராமன்.
அவன் தம்பி கிருஷ்ணன்.
அவன் சேய் மன்மதன்
அவன் குடை திங்கள்.
அதற்குப் பின் ஐவன் – சனி (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி)
அவன் கிரீடம் கொடியாய் உடையோன் – துரியோதனன்
அவன் நண்பன் – கர்ணன்
அவன் தந்தை – கர்ணனின் தந்தை சூரியன்
அவன் பாகன் – அருணன்
அவன் பின்னானவன் – கருடன்
அவன் பகை – கருடனுக்குப் பகை யார்? ஆதிசேஷன்
அவன் சுமை பூமி – ஆதிசேஷன் சுமக்கும் பூமியில் உள்ளது கடல்
கலை எடுத்தல் – அந்தக் கடலை எடுத்தவர் யார்? அகத்தியர்
அவரையர் – அவரையர் யார்? பிரமதேவன்
அவர் கதிப் பெறத் தவம் செய்தோன் – தவம் செய்தவன் அனுமன்
அவன் தாதை – அவன் தந்தை வாயு பகவான்
அவன் கொண்டு வந்த சிலை வதிந்த பதியினான் – அவன் கொண்டு வந்த மேரு சிகரங்களைப் பதியாக – இருப்பிடமாகக் – கொண்டவன் இராவணன்
அவன் சிரம் அரிந்தவன் – அந்த இராவணனின் தலையை அறுத்தவன் யார்?
திருமால்!
அவன் கொள பாரி – திருமாலின் மனைவி இலட்சுமி
அவள் சேர்யில் – தாமரைப் பூ’(தாமரைப் பூவில் உறைந்திருப்பவள் லட்சுமி)
ஆல் உறைந்ததே – ஆலமரத்தின் கீழ் இருந்தது!
இந்தப் பாடல் பொருளைச் சம்பாதிப்பதற்காகக் காதலியை விட்டுப் பிரிந்த தலைவன் ஒருவன் ஆலமரத்தின் கீழ் வைத்த அலர்க்குறி – அடையாளக் குறி தாமரை! அதை அவனது காதலியின் தோழி பார்த்து தலைவிக்கு விஷயத்தை உணர்த்தினாள்.
போதும்டா சாமீ என்கிறீர்களா?
எழுதிய புலவர் யார் என்று தெரியவில்லை!
இது போல ஆயிரக் கணக்கில் உள்ள பாடல்கள் இனி அர்த்தத்துடன் கிடைக்குமா?
Date uploaded in Kumbakonam, India – 14 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
The temple of Airavatesvara in Darasuram (Tamil Nadu), dating from the second half of the twelfth century, is one of the four biggest temples erected by the Choza Dynasty.
I have already visited Thanjavur Big Temple and Gangaikonda Chozapuram many times. On Tenth March 2026, I visited the Darasuram temple for the first time. I took an auto from Kumbhakonam and reached the temple within half hour. I spent an hour taking pictures. The entry is free. But compared with other two temples it is less shiny. Many of the sculptures are worn out. 800 years ago, it was the capital of Choza empire with the name Rajarajeswaram. Later it became popular with the name Airavateswar Temple.
Airavatam is the white elephant and the vehicle/ Vahana of Indra. Once it came under the curse of Durvasa Muni and lost its lustre. It came and worshiped Lord Shiva here and got out of the curse. Now we can have good darshan of Lord Airavateswara in Siva Linga form and Goddess Deivanayaki. The temple com[plex maintained by the archaeological department is huge and has 40,000 sculptures. All the Vedic Gods and later gods are sculpted and occupy the niches. Beautiful decorative stone windows are in between the Gods.
Here are salient features:
The temple is constructed like a stone chariot pulled by the horses.
The entire temple complex is filled with rich carvings and inscriptions that narrate stories from ancient Indian Puranas. It has musical steps. These 7 singing steps that lead to the altar are intricately carved and represent seven musical notes.
The reliefs all along the base of the main temple narrate the stories of the sixty three Shaiva Bhakti saints called Nayanars. These stories are found in the Periya Purana by Sekkilar.
On the outer walls of the main sanctum are sculpture niches; They show various Hindu deities, with the middle one of each side showing Shiva in different aspects.
There are variousNorthern face: Adi Chandesvara, Gangadevi, Tumburu Nardar, Vaisravana, Chandra, Maha Sata, Nagaraja, Vayu
East: Agni deva, Agastya, Sri devi, Durga devi, Devendran, Padma Nidhi, Surya, Subrahmanya, Kshetrapala, Sarasvati, Visvakarma, Isana inscriptions in the temple.
Airavatesvara Temple was added to UNESCO’s World Heritage Site list of Great Living Chola Temples in the year 2004. The American astronomer Carl Sagan visited the Airavatesvara Temple for his 1980 television documentary series, Cosmos: A Personal Voyage.
Please see the pictures taken by me to appreciate the efforts of great and dedicated sculptors.pictures speak more than words
–Subham—
Tags- Darasuram, Airavateswarar temple, My visit, Choza monument, 40000 sculptures.
Date uploaded in Kumbakonam, India – 14 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Pictures are taken by London swaminathan
தஞ்சைப் பெரியகோவிலுக்கும் கஙகை கொண்ட சோழபுரத்துக்கும் பல முறை சென்று வந்த நான், இதுவரை தாராசுரத்துக்குச் செல்லாமல் இருந்தேன் இந்த முறை இந்திய விஜயத்தின்போது 2026 மார்ச் பத்தாம் தேதி காலையில் சென்றேன் ; தொல்பொருட்த் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த யுனெசுகோ அங்கீகார பாரம்பர்ய சின்னத்துக்கு அனுமதிக் கட்டணம் எதுவும் இல்லை.
தாராசுரம் எங்கே இருக்கிறது ?
தாராசுரம் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து மேற்கே சுமார் 4 கி.மீ இருக்கிறது. இது யுனெஸ்கோ உலக மரபுச் சின்னம்; வரலாற்றுச் சிறப்புமிக்க ஐராவதேசுவரர் கோயிலை இரண்டாம் ராஜராஜ சோழன்ய்ங்கே கட்டியதால் புகழ்பெற்றது. அவன் 12-ஆம் நூற்றாண்டில் ஆண்ட சோழ மன்னன்.
நான் கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் சென்றுவந்தேன் .
தஞ்சசை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இரண்டுக்கும் அடுத்த படியாகத்தான் இதை வைக்கவேண்டும் ; அதற்க்கு காரணம் காலம் செய்த கோளாறுதான்! சிலைகள் மிகவும் பொலிவில்லாமல் இருக்கின்றன சிற்பிகள் தனது செயலைச் செவ்வனே செய்தும் பராமரிப்பு இல்லாததால் அழகு குன்றிவிட்டன.
ஐராவதேஸ்வர் கோவிலில் கொஞசம் டுரிஸ்ட் கூட்டம் சேர்ந்தது. சந்நிதியில் சிவலிங்க தரிசனம் தீபாராதனையையுடன் கிடைத்தது .ஐராவதம் என்பது இந்திரனின் யானையின் பெயர் அது வழிபட்ட இடம் எனலாம்; துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் என்றும் தல புராணம் கூறுகிறது.
இங்குள்ள சிறப்புகள்
தேர் போன்ற அமைப்பில் உள்ள கோயில்
கட்டிடம் முழுதும் கெல்மட்டப் பகுதியில் நூறுக்கு கணக்கான குட்டிக் குட்டி சிலைகள்
கமகிகை கொண்ட சோழபுரம் போலவே கோபுரம்
ஒருகாலத்தில் இது சோழனின் தலை நகரம் அவனுடைய கல்வெட்டுகளும் உள்ளன .கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர்.நிறைய மண்டபங்கள்;
இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை.
மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கருங்கல் சாளரங்கள் .
முக்கிய சந்நிதியின் வெளிப்புறச்ச சுவர்களில் தெய்வங்களின் உருவங்கள்.
பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி .
கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு.
பல கோவில்களில் காணப்படும் யானை மாடு இணைந்த உருவம். இதைக் கைகளைக்கொண்டு ஒருபுறம் மறைத்தால் யானையாகவோ மாடாகவோ தெரியும்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
இசை எழுப்பும் படிக்கட்டு :பலிபீடத்திற்கு இட்டுச்செல்லும் இந்த 7 பாடும் படிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏழு இசைக் குறிப்புகளைக் குறிக்கின்றன.
மூலவர் பெயர்: ஐராவதேஸ்வரர்
தாயார் / அம்மன் பெயர்:வேதநாயகி
தலமரம்:வில்வமரம்
முதலில் இருந்த பெயர் – இராஜராஜேச்சுரம்
இன்றைய பெயர்- தாராசுரம்
இக்கோயில் விமானம் 85 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. விதவிதமான அளவில் விசித்திரமான சிற்பங்கள் நிறைந்த சிற்பச் சரணாலயமாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். மூவருலாவில் இக்கோயிலைக் கட்டிய இரண்டாம் இராஜராஜன் சிறப்பிக்கப்படுகிறான். ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த இலக்கியமாகும். தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வேதகால அக்கினி, இந்திரன் முதலிய தெய்வங்களும் தற்காலத்தில் வழி படப்படும் துர்க்கை முதலிய தெய்வங்களும் மாடம் தோறும் செதுக்கப்பட்டுள்ளன . கட்டணமின்றி பார்க்கக்கூடிய இந்தச் சிற்பக் கலைக்கூடத்துக்கு அனைவரும் சென்று மகிழ வேண்டும்.
–Subham_
Tags-தாராசுரம், எனது பயணம், தேர் போன்ற கோயில், ஐராவதேஸ்வரர், 40,000 சிற்பங்கள்
* சூரர்களின் போர்ப் பயிற்சி குரு இடும்பன். அவன் ஒரு சிவ பக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவ கிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகத் தூக்கி பொதிய மலைக்குச் செல்லும் வேளையில் முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருக தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.
***
ரிஷிகள் பட்டியல்
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி
இடைக் காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய்
வரு முருகோனே … வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள், அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே,
நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலை
தலத்து … அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில்
* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று – திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை. கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.
***
காசித் தலத்தில் முருகன்
பூரணச்சிவ ஞான காவியம் … பரிபூரணமான சிவஞான நூல்களை
ஓதுதற்புணர்வான நேயர்கள் … ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள
என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் விஸ்வகர்மா நளனுடைய அன்னைக்கு அளித்த வரம் பற்றிய இன்னொரு குறிப்பையும் காண்கிறோம்.
நளன் ஶ்ரீ ராமரிடம் தன்னைப் பற்றி விரிவாகக் கூறுகிறான்.
“நான் விஸ்தாரமான சமுத்திரத்தின் மீது தந்தையினது சாமர்த்தியத்தை உபயோகித்து அணையைக் கட்டுவேன். மந்தர மலையில் விஸ்வகர்மாவினால் எனது அன்னைக்கு கொடுக்கப்பட்ட வரமாகிய (அனுக்ரஹமாகிய) நான் அவரது ஔரஸ புத்திரன். விஸ்வகர்மாவிற்குச் சமமானவன்” என்று இப்படி நளன் கூறுகிறான்.
மம மாதுர்வரோ தத்தோ மந்தரே விஸ்வகர்மணா!
ஔரஸஸ்தஸ்ய புத்ரோஹம் சத்த்ருஷோ விஸ்வகரமணா ||
யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண் 50
மந்தரே – மந்தர மலையில்
விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவினால்
மம – எனது
மாது: – அன்னைக்கு
தத்த: – கொடுக்கப்பட்ட
வர: – வரமாகிய (அனுக்ரஹமாகிய)
அஹம் – நான்
தஸ்ய – அவரது
ஔரஸ – ஔரஸ\
புத்ர: – புத்திரன்
விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவிற்கு
சத்ருஷ: – சமமானவன்
நளன் மேலும் அடக்கமாகக் கூறிக் கொள்கிறான்:”சமுத்திரராஜன் உள்ளது உள்ளபடி சொன்னான். ஆகவே நான் நினைப்பூட்டப்பட்டவனாக ஆகிறேன். அன்றியும் பிறரால் சொல்லப்படாதவனாய் எனது குணங்களை நானே சொல்லிக் கொள்ள மாட்டேன். சமுத்திரத்தின் மீது சேதுவை கட்ட நான் வல்லமை உள்ளவன். ஆகவே இப்பொழுதே வானரோத்தமர்கள் சேதுவைக் கட்டட்டும்.”
இதனால் திருப்தி அடைந்த ராமர் அணை கட்ட ஆணை இட்டார். உடனே வானரர்கள் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று மரங்களைப் பெயர்த்து இழுத்து வந்தனர்.
சேது அணை கட்டுவதானது ஆரம்பம் ஆயிற்று.
இந்த ஸ்லோகத்தில் விஸ்வகர்மா நளனது அன்னைக்கு வரம் கொடுத்த செய்தி மட்டும் உள்ளது. நளனது அன்னையைப் பற்றியோ அல்லது எதற்காக எப்பொழுது இந்த வரம் கொடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் இல்லை.
நளனது அன்னை வரம் பெற்ற செய்தியை மட்டும் இங்கு நாம் அறிகிறோம்.
வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த
பெருமாளே. … வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து,
பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே.
*****
இறைவனின் எட்டு குணங்கள்
உன் அடி வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர
குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப
அருளாதோ … உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும்முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே,குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை* உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ?
……………….
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி …… என
தாளம் தொகுதி … மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில்
வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட(ம்)
மத்தளம் இனம் பட்ட டக்கை பறை பதலை பல திமிலை
முதல் அதிர … பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில்,தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை,முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய,
* இறைவனின் எண் குணங்கள்:
1. தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினன் ஆதல்,
3. இயற்கை உணர்வினன் ஆதல்,
4. முற்றும் உணர்தல்,
5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,
6. பேரருள் உடைமை,
7. முடிவிலா ஆற்றல் உடைமை,
8. வரம்பிலா இன்பம் உடைமை.
***
தாமோதரன் பெயர் ஏன் ?
தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி
விளையாடும் ஒரு போதில் … தாம் ஆசையுடன் கறந்த பாலைத்
தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில்,
தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன்
முராரி மருகோனே … தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்)
பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே,
மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது … சிறந்த லக்ஷ்மி
போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி)
மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி
மாலாகி விளையாடும் புய வீரா … ஆசை பூண்டு விளையாடுகின்ற
புயங்களை உடைய வீரனே,
வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் …
விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும்
மாயூர கிரி மேவும் பெருமாளே. … மாயூர கிரி எனப்படும் குன்றக்
* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.
பராசக்தியிடம் பாரதி கேட்டவை
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்
1
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.
2
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.
***
வள்ளி பிறந்த கதை
அடவியிருடி அபிநவ குமரியடிமையாய … காட்டில் சிவமுனிவர்
உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி* வள்ளிக்கு அடிமையாகிச் சென்று
புனஞ்சென்று அயர்வோனே … அவள் இருந்த தினைப்புனத்துக்குப்
போய், தளர்ச்சி அடைந்தவனே,
அவசமுடன் அ ததி திரிதரு கவியாள … மயக்கத்துடன் ஒருநாள்
காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள**
பேசினாலும், ஏழைக்கு இரங்கும் பெருமாளே. … இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே.
* சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி எனப் பெயரிட்டான்.
** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து, காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
–SUBHAM—
TAGS-பாரதியாரும் அருணகிரியும், வரங்கள் , திருப்புகழில் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 43 வள்ளி பிறந்த கதை