உலகு இன்பக் கேணி என வேதம் சொல்கிறதா ? பாரதியார் கூற்றுக்கு ஆதாரம் எங்கே ? (Post.15,622)

Written by London Swaminathan

Post No. 15,622

Date uploaded in London –15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Mantras are taken from wisdomlib.org; Thanks.

ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்னி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசேவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக் கேணி என்றே—மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி.

இதில் கடவுள் ஒருவரே என்பதை ஏராளமான பேர் ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி எழுதிவிட்டனர் ;

“ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி” (Ekam Sat Vipra Bahudha Vadanti) என்பது ரிக் வேதத்தின் மிகப்பிரபலமான மந்திரமாகும். இதன் பொருள், “உண்மை (இறைவன்) ஒன்றே, ஆனால் அறிஞர்கள் (ஞானிகள்) அதை பல பெயர்களில் அழைக்கிறார்கள்”  ரிக் வேதம் (1.164.46 ) .

வேதங்கள் சொன்னபடிக்கு  மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டும்’

நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’

என்ற பாரதியார் வரிகளுக்கும் வேதங்களில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆனால் உலகு இன்பக் கேணி என்றும் வேதம் சொல்வதாக பாரதியார் பாடியதற்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது ; அதர்வண வேத பூமி சூக்தம், யஜுர் வேத சாந்தி மந்திரம் போன்றவற்றில் பூமியை, இயற்கையை, நற்குணங்களை எல்லாம் போற்றிப் பாடினாலும் உலகு இன்பக் கேணி என்ற வரிகளைக் காணமுடியவில்லை! கீழ்கண்ட வேத மந்திரங்கள் பாரதியாரின் கூற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.

வேத கால இலக்கியம் என்பது நான்கு பகுதிகளைக்கொண்டது ; அவையாவன :

1.சம்ஹிதை – மந்திரங்கள் உடைய பகுதி ;

2.பிராமணங்கள் – மந்திரங்களை விலாக்கும் பகுதிகள் ; அவற்றின் பிரயோகமும் உண்டு;

3.ஆரண்யகங்கள் –  கானக வாழ்க்கையில் எழும் தத்துவ சிந்தனைகள் உள்ள பகுதி;

4.உபநிஷத்துக்கள் – முழுக்க முழுக்க தத்துவம், வேதாந்தம் உள்ள பகுதி ; வேத + அந்தம் = வேதாந்தம் என்றாலேயே, இவைதான் வேதங்களின் துணிபு , கண்டுபிடிப்பு என்ற பொருள் தரும் .

நாம் காணப்போகும் பகுதிகள் வேதத்திலிருந்தும் மற்றும் பிராமணங்கள் என்னும் நூல்களிலிருந்தும் வருகின்றன ; வேத சம்ஹிதை செய்யுள் வடிவில் உள்ளன ; பிராமணங்கள் பெரும்பாலும் உரை நடை வடிவில் உள்ளன ; செய்யுளுக்கு அடுத்த காலத்தில்தான் உரை நடை வரும் என்பதை உலக இலக்கியங்களின் வரலாறு காட்டுகிறது ஆகையால் பிராமணங்களை 1000 BCE  என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முத்திரை குத்துகிறார்கள் . இதோ சில மேற்கோள்கள் :

நாங்கள் ஆனந்தமாக , மகிழ்ச்சி தரும் மந்திரங்களோடு எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவனும் தூய்மைப்படுத்தும் ஒளியோடு வேள்வியில் இருப்பவனுமான அக்கினியைப் போற்றுகி ன்றோம் – ரிக் வேதம்  8-43-31

இதைப் பாடிய ரிஷியின் பெயர் விரூப ஆங்கிரசன் ;

We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,

Burning with purifying flame RV 8-43-31

अ॒ग्निं म॒न्द्रं पु॑रुप्रि॒यं शी॒रं पा॑व॒कशो॑चिषम् । हृ॒द्भिर्म॒न्द्रेभि॑रीमहे ॥

अग्निं मन्द्रं पुरुप्रियं शीरं पावकशोचिषम् । हृद्भिर्मन्द्रेभिरीमहे ॥

agnim mandram purupriyaṃ śīram pāvakaśociṣam | hṛdbhir mandrebhir īmahe ||

இந்த மந்திரம் ஐதரேய பிராமண நூலிலும் அரணிக்கட்டைகளைக் கடைந்து தீயை உருவாக்கும்போது சொல்லப்படுவதை வேத உரைகாரர் சாயனர் சுட்டிக்காட்டுகிறார்.

****

மரணத்துக்குப் பின்னர் ஒருவர் மேலுலகம்  செல்வதும்  அங்கே சொர்க்கத்தில் எப்போதும் ஒளிவீசும் என்றும் எதுவும் வாடாது, அழியாது என்றும் , அந்த இடத்தில் ஆனந்தம் தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் ரிக்வேதத்திலேயே உள்ளது; இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது!

ரிக் வேதத்தில் வரும் இந்த காஸ்யப மாரீசன் ரிஷி பாடிய மந்திரம், 

ஓ பவமான சோமனே

எந்த இடத்தில் சொர்க்கத்தின் ஒளி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, எந்த இடத்தில் எப்போதும் ஒளிமயமுள்ளதோ அந்த மரணமற்ற, அழியாத  உலகத்தில் என்னை நிறுத்து ; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக.

விவஸ்வானுடைய மகன்  அரசனாக இருக்கும் இடத்தில் என்னை அழியாதவன் ஆக்குக;

சொர்க்கத்தின் மர்மமான கோயில் எங்குள்ளதோ,

 புதிய நிர்மலமான நதிகள் துள்ளிக்குதித்து ஓடுகின்றனவோ அங்கே என்னை நிறுத்து; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக”

–RV 9-113-7/8

7. O Pavarnana, place me in that deathless, undecaying world

     Wherein the light of heaven is set, and everlasting lustre shines. Flow, Indu, flow for Indra’s sake.

8. Make me immortal in that realm where dwells the King, Vivasvan’s Son,

     Where is the secret shrine of heaven, where are those waters young and fresh. Flow, Indu, flow for Indra’s sake.

RV 9-113-7/8

यत्र॒ ज्योति॒रज॑स्रं॒ यस्मिँ॑ल्लो॒के स्व॑र्हि॒तम् । तस्मि॒न्मां धे॑हि पवमाना॒मृते॑ लो॒के अक्षि॑त॒ इन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र ज्योतिरजस्रं यस्मिँल्लोके स्वर्हितम् । तस्मिन्मां धेहि पवमानामृते लोके अक्षित इन्द्रायेन्दो परि स्रव ॥
yatra jyotir ajasraṃ yasmim̐l loke svar hitam | tasmin māṃ dhehi pavamānāmṛte loke akṣita indrāyendo pari srava ||

यत्र॒ राजा॑ वैवस्व॒तो यत्रा॑व॒रोध॑नं दि॒वः । यत्रा॒मूर्य॒ह्वती॒राप॒स्तत्र॒ माम॒मृतं॑ कृ॒धीन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र राजा वैवस्वतो यत्रावरोधनं दिवः । यत्रामूर्यह्वतीरापस्तत्र माममृतं कृधीन्द्रायेन्दो परि स्रव ॥
yatra rājā vaivasvato yatrāvarodhanaṃ divaḥ | yatrāmūr yahvatīr āpas tatra mām amṛtaṃ kṛdhīndrāyendo pari srava || 9-113- 7 and 8.

**

இந்திரன் என்றால் அரசன், தலைவன் என்று பொருள் ; இது ஒரே தேவனுடைய  பெயர் அல்ல என்பதைக் காஞ்சி பரமாசார்யார் (1894–1994) தெளிவு படுத்தியுள்ளார் ; வெள்ளைக்காரர்களோ வெனில் இது இயற்கைக் சக்திகள் என்றும் அல்லது ஒரே நபரின் பெயர் என்றும் பிதற்றியுள்ளனர்

ரிக் வேதத்தில் இந்திரன் ஏறத்தாழ முப்பது அசுரர்களைக் கொன்றதாக வருகிறது; அதாவது தீமையை அல்லது தீயவர்களை அழிப்பவன் . பகவத் கீதையின் பரித்ராணாய ஸ்லோகத்திலும் இதே கருத்து காணக்கிடக்கிறது

ரிக் வேதத்தில் இரண்டு மந்திரங்களில் தீயவர்கள், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்று சொல்கிறது.

 அர்ஜுனன், சொந்தக்காரர்களையும் குருமார்களையும் எப்படிக் கொல்வேன் என்று கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதிலையும் பாரதியார் அழகாகக் கொடுத்துள்ளார்; முதலில் ரிக் வேத மந்திரம் ,

எங்களைக் கொல்ல வருபவன் நட்பில்லாத சொந்தக்காரனாக இருந்தாலும் அந்நியனாக இருந்தாலும் அவனை எல்லாத் தேவர்களும் அழிக்கட்டும்;  பிரார்த்தனையே (பிரம்மமே) என்னுடைய சிறந்த கவசம். RV 6-75-19

यो न॒: स्वो अर॑णो॒ यश्च॒ निष्ट्यो॒ जिघां॑सति । दे॒वास्तं सर्वे॑ धूर्वन्तु॒ ब्रह्म॒ वर्म॒ ममान्त॑रम् ॥

यो नः स्वो अरणो यश्च निष्ट्यो जिघांसति । देवास्तं सर्वे धूर्वन्तु ब्रह्म वर्म ममान्तरम् ॥

yo naḥ svo araṇo yaś ca niṣṭyo jighāṃsati | devās taṃ sarve dhūrvantu brahma varma mamāntaram ||

English translation:

“Whoever, whether an unfriendly relative or a stranger, desires to kill us, may all the gods destroy him; prayer is my best armour” – RV 6-75-19

சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது– பாரதியார்

இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.

“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

………………………..

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர்தீயர்மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று 
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் —பாரதியார்.

***

அக்கினி செளசீக ரிஷி பாடியது

“அஸ்மாந்வதீ நதி ஓடுகிறது ; நண்பர்களே , ஜாக்கிரதை; உயரமாக எழுந்து நின்று கடப்போம்; வருவதற்கு விருப்பமில்லாதவர்களை விட்டுச் செல்வோம் ; அப்போதுதான் மங்களமான செல்வங்களைப் பெறுவோம் (நல்ல உணவினைப் பெறுவோம்).” 10.53.8

अश्म॑न्वती रीयते॒ सं र॑भध्व॒मुत्ति॑ष्ठत॒ प्र त॑रता सखायः । अत्रा॑ जहाम॒ ये अस॒न्नशे॑वाः शि॒वान्व॒यमुत्त॑रेमा॒भि वाजा॑न् ॥

अश्मन्वती रीयते सं रभध्वमुत्तिष्ठत प्र तरता सखायः । अत्रा जहाम ये असन्नशेवाः शिवान्वयमुत्तरेमाभि वाजान् ॥ Rig Veda 10.53.8

aśmanvatī rīyate saṃ rabhadhvam ut tiṣṭhata pra taratā sakhāyaḥ | atrā jahāma ye asann aśevāḥ śivān vayam ut taremābhi vājān || Rig Veda 10.53.8

English translation:

“The aśmanvatī flows along; be alert; rise up, cross over, may friends; here let us leave those who are unhappy, so that we may cross over to auspicious sacrificial viands.” Rig Veda 10.53.8

***

கர்மவினைக் கொள்கை

சதபத பிராமண 2-2-27 நூலில் கர்ம வினை பற்றிய தெளிவான குறிப்பு வருகிறது ,

முந்தைய பிறப்பில் ஒருவன் செய்த செயல்களுக்கு ஏற்ப உலகத்தில் பிறக்கிறான் .

அதையடுத்தது மிகப்பழைய உபநிஷத்தான பிருஹத் ஆரண்யக உபநிஷத்திலும் வருகிறது:

Now as a man is like this or like that,

according as he acts and according as he behaves, so will he be;

a man of good acts will become good, a man of bad acts, bad;

he becomes pure by pure deeds, bad by bad deeds;

And here they say that a person consists of desires,

and as is his desire, so is his will;

and as is his will, so is his deed;

and whatever deed he does, that he will reap.

— Brihadaranyaka Upanishad,

ஜனகர் கூட்டிய அறிஞர்கள் கூட்டத்தில் யாக்ஞவல்க்ய ரிஷிக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்  உள்ளன. அங்கே ஜரத்கார்வ ஆர்த்தபாக  கூறுகிறார் ,

ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய சொற்கள் அக்கினியில் கலந்து விடுகின்றன; அவனுடைய மூச்சுக் காற்று , காற்றினில் கலந்து விடுகின்றது. கண்கள் சூரியனுக்குள்ளும், மனது சந்திரனுக்குள்ளும் புகுந்து விடுகிறது.”

இப்படி அவர் சொன்னவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு  யாக்ஞவல்க்ய ரிஷி கேட்கிறார் ,

பின்னர் மனிதன் என்ன ஆகிறான்?

இதற்கு ரிஷி கொடுத்த பதில்,

இதை நாம் இருவரும் தனியாக விவாதிப்போம்; இதை பொது இடத்தில் விவாதிக்கக்கூடாது .

இதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் பேசியது என்ன என்ற முழு அறிக்கை இல்லை. ஆனால் அவர்கள் சொன்னது கர்மம்அவர்கள் புகழ்ந்தது கர்மம் என்று மட்டும் இருக்கிறது. பின்னர் வந்த உபநிஷத்துக்குக்கள் இன்னும் கூடுதலான விவரங்களைத்  தருகின்றன .

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் வேத காலத்திலேயே மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுவாழ்வு  பற்றிய சிந்தனை எழுந்து அதற்கு முடிவும் கண்டனர் என்பதாகும். வேதங்களை ஆழமாகப் படித்தால் இதற்கான வித்துக்கள் வேதங்களிலேயே இருப்பதையும் அவை மறை பொருளில் உரைக்கப்பட்டதையும் அறியலாம் .

—subham—

Tags- உலகு இன்பக் கேணி,  பாரதியார் கூற்றுக்கு,  ஆதாரம் எங்கே?,  Mantras , wisdomlib.org, மறுபிறப்பு, கர்ம வினை, மரணத்துக்குப் பின்னர், மறு வாழ்வு

சிவபெருமான் தேள் அணிந்தாரா?  அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)

snakes wearing Visha kanya in Belur Temple

Written by London Swaminathan

Post No. 15,621

Date uploaded in London –15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 76

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 76

திருப்புகழில் அருணகிரிநாதர், திருப்பதி பாலாஜி கோவிலை முருகன் கோவில் என்றார்; பிள்ளையார் கையில் சிவன் கொடுத்தது மாம்பழம் அல்ல, மாதுளம் பழம் என்றார்; சரஸ்வதி நதி இப்போது இல்லை; அங்கே வயிரவி வனத்திலுள்ள முருகன் கோவில் என்று பாடுகிறார் ; இப்போது சிவன் உடலில் தேளையும் பாம்பையும் அணிந்ததாகப் பாடுகிறார் ; உரைகாரர் கள் செய்யும் தவறா ? அல்லது உண்மை உள்ளதா ? ஆராய்வோம்!

துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்

     சுக்கி லக்க லாமிர்தப் …… பிறைசூதம்

சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்

     சுத்த சொற்ப கீரதித் …… திரைநீலம்

புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்

     பொற்பு மத்தை வேணியர்க் …… கருள்கூரும்

புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்

     புற்பு தப்பி ராணனுக் …… கருள்வாயே

பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்

     பக்க மிட்டு லாவியச் …… சுரர்மாளப்

பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்

     பத்ம சிட்ட னோடமுத் …… தெறிமீனக்

கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்

     துட்க முத்து வாரணச் …… சதகோடி

கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்

     கைப்பி டித்த சேவகப் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

துத்தி நச்சு அரா இளம் பிச்சி நொச்சி கூவிளம் … புள்ளிகளைக்

கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை

மலர், நொச்சிப் பூ, வில்வம்,

சுக்கிலக் கலா அமிர்தப் பிறை சூதம் … வெண்ணிறம் உடையதாய்

கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர்,

சுத்த ரத்த பாடலம் பொன் கடுக்கை ஏடு அலம் … சுத்தமான

ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர்தேள்,

சுத்த சொல் பகீரதித் திரை நீலம் … புகழை உடைய, அலைகள்

வீசும் கங்கை நதி, நீலோற்பலம்,

புத்(து) எருக்கு பாழி கம் கொத்து எடுத்த தாளி தண் பொற்பு

மத்தை … புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம்,

கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை,

வேணியர்க்கு அருள் கூரும் … (இவைகளை அணிந்த) சடைப்

பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய,

புத்தி சித்தி வாய் கனம் சுத்த சத்ய வாசகம் … புத்தியும், அஷ்ட

மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும்

கொண்டதுமான உபதேச மொழியை,

புற்புதம் பிராணனுக்கு அருள்வாயே … நீர்க்குமிழி போன்ற

நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக.

பத்தி உற்ற தோகை அம் பச்சை வெற்றி வாகனம் பக்கம்

இட்டு உலாவி … வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய,

அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி,

அச்சுரர் மாள பக்கவிட்டு வாய் நிணம் கக்க வெட்டி … அந்த

அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து,

வாய் தரும் பத்ம சிட்டன் ஓட … அச்சத்தால் வாய்விட்டு

அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட,

முத்து எறி மீனம் கைத்தலை ப்ரவாகையும் தத்தளிக்க …

முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம்

கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க,

மா முறிந்து உட்க … மாமரமாக மறைந்து நின்ற சூரன்

கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும்,

முத்து வாரணச் சத கோடி கைக் களிற்று வாரணம் புக்கு

ஒளிக்க … முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக்

கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும்,

வாரணம் கைப் பிடித்த சேவகப் பெருமாளே. … சேவற்

கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே.

****

அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:

அணிமா – அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.

மகிமா – மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.

கரிமா – ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.

லகிமா – ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.

பிராப்தி – பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).

பிராகாமியம் – எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.

ஈசத்துவம் – எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.

வசித்துவம் – எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.

** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும். போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.

thuththi nacchu arA iLam picchi nocchi kUviLam: The spotted and poisonous serpent, fresh and tender jasmine and nochchi flowers, vilwa leaves,

sukkilak kalA amirthap piRai cUtham: white nectar-filled crescent moon with many phases, green mango leaves,

suththa raththa pAdalam pon kadukkai Edu alam: pure blood-red flower of pAthiri, golden flower of kondRai (Indian laburnum), a scorpion,

suththa sol pakeerathith thirai neelam: the celebrated river Gangai full of waves, blue lily,

puth(thu) erukku pAzhi kam koththu eduththa thALi thaN poRpu maththai: fresh flower of erukkai, the famous skull of BrahmA, bunches of aRugam (cynodon) grass, and cool and pretty flower of Umaththai –

vENiyarkku aruL kUrum: all these adorn the matted hair of Lord SivA; You preached to that SivA

***

Alam (अलम्).—ind. Ornament. 2. Enough, abundance. 3. Able, adequate or equal to. 4. Prohibition, no not. 5. Unnecessary, no need of. It is chiefly used in composition, as alañjīvikaḥ having enough for subsistence; alandattvā refusing to give; ityalam enough; alaṅkāra ornament, &c. E. ala to adorn. &c. and am aff.

சம்ஸ்க்ருதத்தில் அலம் என்றால் “போதுமான, ஆபரணம்” முதலிய அர்த்தங்கள் உண்டு; இந்த இடத்தில் ஆபரணம் என்பது பொருந்தும் அல்லது ஆலம் என்று கொண்டால் சிவன் கழுத்திலுள்ள விஷத்தைக் குறிக்கும்.

ஆலம் என்பதை படி எடுத்தவர்கள் தவறாக அலம் என்று அடுத்த ஏட்டில் எழுதி இருக்கலாம்

என்னுடைய கருத்து

இந்த இடத்தில் திருநீலகண்டனின் கழுத்திலுள்ள ஆலம் / விஷம் என்பதே  !

தமிழ் அகராதியில் ஆலம் என்பதற்கு விஷம் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது; சம்ஸ்க்ருதத்தில் இதை Halāhala (Sanskrit हलाहल) ஹலாகல என்பார்கள். தமிழில் ஆலகாலம் என்றும் சொல்லுவதுண்டு.

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிக்கு நடுவில் மயில் தீவு என்னும் திட்டில் உமானந்தா சிவன் கோவில் உள்ளது ; அங்குள்ள தேள் வடிவத்தைக்கூட தேவி என்றுதான் பக்தர்கள் வழிபடுகிறார்கள்; சிவபெருமானை அல்ல; சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட தேள் முத்திரைகளுக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை .

FOLLOWING IS THE ARICLE WRITTEN BY ME ON 11TH NOVEMBER 2012. IT IS POSTED IN TWO BLOGS ON THA DAY.

தேள்— ஒரு மர்ம தெய்வம்!

படம்: ரஹ்மான் தேரி தேள் முத்திரை; எகிப்திய தேள் மன்னன்

(This is a summary of my Two Part English article ‘The Great Scorpion Mystery in History’, posted already in this blog: swami)

உலகின் பல பழைய நாகரீகங்களில் பாம்பு வழிபாடு இருந்ததைக் கண்டோம். இந்துக் கடவுளர் எல்லோரிடமும் பாம்பு இருக்கிறது. ஆனால் தேள் என்பது சுமேரிய, எகிப்திய, சிந்துவெளி, மாயா, வளைகுடா நாகரீகங்களில் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் இருந்தது. இப்போதும் இந்தியாவில் தேள் வழிபாடு இருக்கும் வியப்பான விஷயம் பலருக்கும் தெரியாது.

அஸ்ஸாமில் கௌஹாத்தி நகரில் பிரம்மபுத்ரா நதியின் நடுவில் ஊர்வசி தீவு என்ற தீவு இருக்கிறது. இதில் உமானந்தா கோவிலில் சிவனும் தேவியும் உண்டு. ஆனால் தேவியின் வடிவம் ஒரு தேளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

கர்நாடகத்தில் குல்பர்கா பக்கத்தில் உள்ள கண்டாக்கூரில் நாகபஞ்சமி தினத்தன்று தேள் திருவிழா நடக்கிறது. அங்குள்ள தேள் அம்மனின் பெயர் கொண்டம்மை. அவளை வழிபட மக்கள் மலை ஏறிச் செல்வர். போகும் வழியில் எல்லாம் பாறை பொந்துகளில் நிறைய தேள்கள் வசிக்கின்றன. இதை மக்கள் பிடித்து விளையாடுகின்றனர்.  சிறுவர்கள் உடல் முழுவதிலும் தேள்களை விட்டுக் கொண்டாலும் அவைகள் கடிப்பதில்லை! இது அங்குள்ள விலங்கியல் பேராசிரியர்களுக்கும் வியப்பூட்டுகிறது. தொட்டாலோ மிதித்தாலோ தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தேள்கள் கொட்டும். ஆனால் கண்டாக்கூரில் இப்படிச் செய்வதில்லை.

தேள் திருவிழாவுக்கு ‘செலின யாத்ரா’ என்று பெயர். எகிப்திலும் தேளின் பெயர் இதே சப்தத்தில்தான் இருக்கிறது! எகிப்தில் தேள் தெய்வத்தின் பெயர் செல்கத். இந்த தெய்வத்தை குடும்ப உறவுக்கான (செக்ஸ்) தெய்வமாக கருதுவர்.

கஜுராஹோவில் காம சம்பந்தமான சிற்பங்கள் இருக்கின்றன. இதில் ஒரு அழகியின் தொடையில் ஒரு தேள் ஏறுவதாக சிற்பி செதுக்கி இருக்கிறான். ஏன் என்று காரணம் தெரியவில்லை. உலகின் பல கலாசாரங்களிலும் தேளை ‘செக்ஸ்’ சம்பந்தமான தெய்வமாகக் கருதுகின்றனர்.

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் தேள்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. அதன் விஷத்தைக் கண்டு மக்கள் பயப்பட்டனர். சிந்து சமவெளியில் தேள் முத்திரைகள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எழுத்துக்களை படிக்க முடியாததால் தேள் முத்திரை புதிராகவே இருக்கிறது.

மாதவி ஆடிய 11 வகை நடனம் பற்றி ஏற்கனவே கட்டுரை எழுதினேன். அதில் தேவி ஆடிய ஒரு நடனத்தின் பெயர் மரக்கால். அதாவது அவுணர்கள் பாம்பு, தேள் வடிவத்தில் வந்தபோது அவைகளிடம் இருந்து தப்பிக்க தேவி மரக் கால்களுடன் ந்டனம் ஆடியதாக தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்டியம் உண்டாக்கினர்.

படத்தில் குதுர் கற்கள்; கஜுராஹோ அழகி

27 நட்சத்திரங்களுக்கு சிறப்பான தமிழ்ப் பெயர்களும் சின்னங்களும் உண்டு. அனுஷம்/ அனுராதா நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் தேள். சின்னமும் அதுவே.

தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்று தமில் இலக்கியம் பகரும். தமிழில் தேளுக்கு நளி, அலம், தெருக்கால், துட்டன், பறப்பன், விருச்சிகம் (சம்ஸ்கிருதம்), நளிவிடம் என்ற பெயர்கள் இருக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் 30 பெயர்கள் உண்டு (எனது ஆங்கிலக் கட்டுரையின் இறுதியில் பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது)

எகிப்தில் கி.மு.3100ல் ஆண்ட மன்னனின் பெயர் தேள். அவன் முத்திரையில் அவன் முகத்துக்கு நேராக தேள் படம் பொறிக்கப்ட்டு இருக்கிறது. தில்முன் எனப்படும் பஹ்ரைனில் மட்டும் 36 தேள் முத்திரைகள் கிடைத்திருக்கின்றன.

படத்தில் தேள் வீரன்

படத்தில் சிந்து சமவெளி தேள் முத்திரை

எகிப்திலும் கிரேக்க நாட்டிலும் தேள் பற்றி பல புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. இவைகளில் சில வானியல் நிகழ்ச்சிகளைக் குறிப்பன.

இஷாரா என்னும் தெய்வம் தேளுடன் தொடர்புடையவள். கிரேக்கத்தில் ஆர்டெமிஸ், ஒரியன் ஆகிய கதைகளில் தேளின் பங்கு இருக்கிறது.

சுமேரியாவில் பிரளய கால வீரன் ஜில்காமேஷ் வாயிற்காப்போன் தேள் மனிதர்கள் என்றும் சூரியக் கடவுள் ஷமாஷின் காவலர்கள் தேள் தெய்வங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 5000 ஆண்டுப் பழமையானவை.

பாபிலோனியாவில் எல்லைகளில் நடும் கற்களிலும் நில தானம் செய்யும் கல்வெட்டுகளிலும் தேள் படம் இருக்கிறது. இவைகளை குதுர் கற்கள் என்பர். இவைகளை வெளியிட்ட காசைட் மன்னர்கள் வேத கால நாகரீகத்துடன் தொடர்புடையோர். மேலும் கல்வெட்டுகளில் வரும் வாசகங்களும் சாபங்களும் இந்திய கல்வெட்டுகளை நினைவு படுத்துகின்றன.

பாரசீகத்தில் தேள் தொடர்பான பிரார்த்தனைகள் உள்ளன.

For more details, see my English post: The Great Scorpion Mystery in History.

Other articles on Snake, Indus Valley etc:

1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.The Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals and Indian literature7. Karnataka-Indus Valley Connection 8.Human sacrifice in Indus Valley and Egypt 9.Tiger Goddess of  Indus Valley: Aryan or Dravidian? 10.Flags: Indus valley –Egypt similarities 11. Fish God  around  the World 12.சிந்து சமவெளி-எகிப்தில் நரபலி 13.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 14. சிந்து சமவெளியில் பேய் முத்திரை 15. நாகராணி: சிந்து சமவெளி முதல் சபரிமலை வரை 16.கொடி ஊர்வலம்: சிந்துசமவெளி-எகிப்து அதிசய ஒற்றுமை. Contact London Swaminathan at swami_48@yahoo.com

–SUBHAM—

TAGS  – சிவபெருமான், தேள், அணிந்தாரா? ,அருணகிரிநாதர் புதிர், திருப்புகழில்,  அரிய செய்திகள் Part 76ருமான் தேள் அணிந்தாரா? அருணகிரிநாதர் புதிர்! -Part 76 (Post No.15,621)

மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! (Post No.15,620)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,620

Date uploaded in London – 15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

21-3-26 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! 

ச. நாகராஜன் 

உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு புதிய புத்தகம் ‘ஆர்ட் க்யூர்” ART CURE!

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்தப்         புத்தகத்தை எழுதியவர் டெய்ஸி ஃபேன்கோர்ட் (Daisy Fancourt) என்ற பெண்மணி. 

டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள இவர் யுனிவர்ஸிடி காலேஜ் ஆஃப் லண்டனில்   சைக்கோ பயாலஜி மற்றும் எபிடெமியாலஜி துறையில் பேராசிரியராகப்         பணியாற்றுகிறார்.

யாருமே இதுவரை செய்யாத ஒரு அபூர்வ ஆய்வை இவர் மேற்கொண்டார்.      என்ன அது? 

கலைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ளதொடர்பு பற்றிய  ஒரு ஆய்வை     இவர் மேற்கொண்டார்.

நல்ல உணவுத் திட்டம், உடல்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது போல      கலையைக் கற்பதும் உடல் நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும், மன அமைதியை நல்கும் என்பதை இவரது ஆய்வின் முடிவு கண்டுபிடித்துள்ளது.

ஹீதர் ரோஸ் ஆர்டுஷின் (Heather Rose  Artushin)   என்ற 

பெண்மணி இவரை சைக்காலஜி டு டே பத்திரிகைக்காக பேட்டி  கண்டார்.

அதில் தன்னைப் பற்றியும் தனது ஆய்வைப் பற்றியும் இவர் மனம் திறந்து பல        தகவல்களை வெளியிட்டார்.

15 வருடங்களாக ஒரு விஞ்ஞானியாக கலைகள், மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி இவர் ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.  

எந்த ஒரு கலையிலும் ஈடுபடும் ஒருவர் தான் சந்தோஷமாக இருப்பதையும்       மிகுந்த மனஅமைதியை பெறுவதையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கம். 

ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையை நம்ப முடியாத உயரத்திற்கு ஏற்றும்      என்றும் ஆரோக்கியம் மேம்படும் என்பதையும் இவர் உறுதிப்படுத்துகிறார்.    

 மூளையைப் படம்பிடித்து ஆராய்தல், உடலில் ஏற்படும் மாறுதல்களை         ஆராய்தல், இரத்த சாம்பிள்களை  எடுத்து ஆய்வு நடத்தல், ஏன் மரபணுவையே ஆய்வுக்கு உட்படுத்தல் என்பன போன்ற ஆய்வுகளை  முழு வீச்சில்  நடத்தி  கலைகளில் ஈடுபடுவதானது உடலில்  ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துள்ளார்.

மன ஆரோக்கியத்திற்கு கலைகள் பெரிதும் உதவுகின்றன. உணர்ச்சிகளைச்      சீராக்கல், படைப்பாற்றலை மேம்படுத்தல் உள்ளிட்ட பல நலன்கள் கலைகளில்        ஈடுபடுவதால் ஏற்படுகின்றன. மூளையில் டோபமைன் என்ற முக்கிய நியூரோ   டிரான்ஸ்மிட்டர் (இரசாயன தூதுவர்) அதிகரிக்கிறது. மன அழுத்த            ஹார்மோனானான கார்டிஸால் குறைகிறது.

ஒவ்வொருவரும் உணவுத் திட்டத்தை சீர்படுத்தி அமைத்துக் கொள்வது போல   கலைகளிலும் ஒரு நாளைக்கு இருபது நிமிட நேரமாவது ஈடுபட வேண்டும்      என்கிறார் இவர்.

இசை, நடனம், ஓவியம், நடிப்பு என்று எந்தக் கலை ஆகட்டும் நன்மையே பயக்கும்.

கலை ஈடுபாட்டை ஒரு ப்ரிஸ்கிரிப்ஷனாகவே தர வேண்டும் என்ற இவரது அதிரடி சிபாரிசு கலைப்பிரியர்களுக்கும் கலாரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியையே தருகிறது!

இதை ஆதாரத்துடன் ஆய்வு முடிவுகளைச் சுட்டிக் காட்டிக் கூறும் போது இந்த   அறிவியல் ஆமோதிப்பை அனைவரும் மனம் திறந்து வரவேற்கத்தானே வேண்டும்!

ஆர்ட் க்யூர் புத்தகம் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

புத்தகத்தின் விலை பேப்பர் பேக் எடிஷன் ரூ 662.33. பக்கங்கள் 328.

PART TWO- ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும்…Part 2 (Post.15,619)

திருவாவடுதுறை கோயில் படம் 

Written by London Swaminathan

Post No. 15,619

Date uploaded in London –14 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part 2

***

திருவாவடுதுறை

திருவிடை மருதூர், திருபுவன சிவன் கோவில்களில் தரிசனத்தை முடித்துக்கொண்டு அடுத்துள்ள திருவாவடுதுறைக்குச் சென்றேன் .

திருவாவடுதுறை (திரு ஆவடுதுறை) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம், இங்குள்ள கோமுக்தீஸ்வரர் (மாசிலாமணீஸ்வரர்) கோயில் காவிரி தென்கரைத் தலங்களில் 36-வது தலம்; சுமார் 1,400 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் .

அம்பிகை பசு வடிவில் சிவனை வழிபட்ட தலம், திருமூலர் முக்தி அடைந்த தலம், மற்றும் புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீன மடம் இருக்கிறது.

மூலவர்: கோமுக்தீஸ்வரர் / மாசிலாமணீஸ்வரர் (இறைவன் பசுவின் முகம் (கோ முகம்) வழி வெளிப்பட்டதால் இப்பெயர்).

அம்மன்: ஒப்பிலாமுலையம்மை (கோருபாம்பிகை).

திருமூலர் தலம்: திருமூலர் தன் ‘திருமந்திரம்’ நூலை இயற்றிய தலம் மற்றும் முக்தி பெற்ற இடம்.

சமய குரவர் பாடல்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம்.

நீண்ட வரலாற்றைக் கொண்ட திருவாவடுதுறை ஆதீனம் இங்கு அமைந்துள்ளது.

தருமபுரம், திருவாவடுதுறை மடங்கள் ஏராளமான சைவத் திருமுறை நூல்களை வெளியிட்டுத் தமிழ் மொழிக்கு மகத்தான சேவை செய்துள்ளன. 

முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கற்கோயில், சோழர் காலக் கட்டடக்கலைக்குச் சான்றாகும்.

நோய் தீர்க்கும் தலம், குழந்தை வரம் அருளும் தலம் என பக்தர்கள் நம்புகிறார்கள்

மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில், குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் நரசிங்கம்பேட்டை.

கோபுரம் மிகவும் பழையதாகக் காணப்பட்டது வெளியே பழைய சிலைகளை காட்சிக்கு வைத்திருந்தனர் . காலை பத்து மணிக்குச் சென்ற போதும் முக்கிய சிவன் சந்நிதி பூட்டப்பட்டிருந்தது. ஆனால் கம்பிக்கிராதிகள் வழியாக சிவபெருமானை தரிசனம் செய்ய முடிந்தது!

எல்லா சிவன் கோவில்களிலும் கர்ப்பக்கிரகத்தில் சிவ பெருமான்  லிங்க வடிவத்திலேயே உள்ளார் ; பிரகாரத்தில் ஆகம விதிப்படி கோஷ்ட தேவதைகள் காணப்பட்டன.

திருமூலர் சந்நிதி

திருமூல நாயனாருடன் திருவாவடுதுறை தலம் தொடர்புடையதால், தனி சந்நிதியும், அங்கே திருமூலரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சுவர் ஓவியங்களும் இருந்தன . அவரையும் தரிசித்தோம் ; சுவர்களில் திருமந்திரப் பாடல்களும் இருந்தன.

 ***

கஞ்சனூர்

அடுத்தகாக கஞ்சனூருக்குச் சென்றேன் ; நவக்கிரஹத் தலங்களில் வெள்ளி கிரஹம் எனப்படும் சுக்கிர பகவானை வழிபடும் க்ஷேத்ரம் இது; அங்கே ஓரளவு கூட்டம் இருந்தது. பலரும் அர்ச்சனை செய்யவே, பட்டரும் அவ்வப்போது தீபாராதனை காட்டினார். தொலை தூரத்திலுள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோவில் இது .

காவிரி வடகரைத் தேவாரத் தலங்களில் இது 36-வது தலம்.

சுக்கிரன் (VENUS/ Sukran) தலம் – திருமணத்தடை நீங்கவும், சுக்கிர யோகம் (செல்வம், சுகபோகம்) பெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

மூலவர்: அக்னீஸ்வரர் (சுயம்பு லிங்கம்).

அம்பாள்: கற்பகாம்பிகை.

தல விருட்சம்: பலா, புரசு.

தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.

இத்தலத்தில் சுக்கிரன், சிவபெருமானின் வயிற்றுப்பகுதியில் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், இங்கு சுக்கிரனுக்குத் தனி சந்நிதி கிடையாது. அறிவிப்பில் சுக்கிரன் சந்நிதி என்றே இருக்கும்

கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

பிரம்மாவுக்குத் திருமணக் காட்சி அருளிய தலம், ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்த தலம் மற்றும் கஞ்சமாற நாயனார் சிவபெருமான் அருள்பெற்ற தலம்.

இத்தலம் பலாச வனம், பிரம்மபுரி, அக்னித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

சோழர் மற்றும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன .

சுக்கிர தசை நடப்பவர்கள் மற்றும் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்

ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்களை அடுத்து, பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகின்றார். நடராச சபையில் நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலாரூபமாக) இருப்பது தனிச் சிறப்பு; இம்மூர்த்தியே பராசரருக்கு தாண்டவக் காட்சித் தந்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது. 

***

திருநறையூயூரில் சனி பகவானுக்கு தனி சந்நிதி

கும்பகோணம் – திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது,

ராமர் வழிபட்ட மூலவரின் திருநாமம் ஸ்ரீராமநாதஸ்வாமி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீபர்வதவர்த்தினி இங்குள்ள இறைவனை ராமர் வழிபட்டு, ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார்  அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.

இந்த ராமநாத சுவாமி கோவில், சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவில்; . மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவிஜேஷ்டா தேவியுடனும்மாந்தன்குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார்.

ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட கால நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான அருள்மிகு இராமநாதர் திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கோபுர வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் அருள்மிகு இராமநாத சுவாமி கிழக்கு முகமாகவும், அம்பாள் பார்வதவர்தினி தெற்கு முகமாக நோக்கியும் அருள்புரிகின்றனர். இராமேஸ்வரத்தை தரிசிக்க முடியாத பல பக்தர்கள், தங்கள் பரிகாரங்களை இங்கேயே செய்கிறார்கள்.

இந்த கோயிலில், மூலவருக்கு பலி பீடமோ, த்வஜஸ்தம்பமோ கிடையாது. ஆனால், இங்கு தனி சந்நிதியில் சனீஸ்வரருக்கு இரும்பினால் ஆன த்வஜஸ்தம்பம், பலி பீடம், மற்றும் சந்நிதி முன் காக வாகனமும் அமைந்துள்ளது. இந்த சனீஸ்வர சந்நிதியை வலம் வருவதற்கு பிரகாரம் உள்ளது. ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரத சக்கரவர்த்தி இவர்களை வணங்கியபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனருடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, அண்ணாமலையார், பிரம்மா, துர்காதேவி, சண்டிகேஸ்வரர்ஹனுமந்த லிங்கம் மற்றும் நவக்கிரக சந்நிதியும் உள்ளது. இங்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவான் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது சிறப்பாகும்.

ஸ்தல விருட்சம் : எருக்கு

ஸ்தல தீர்த்தம் : இராமதீர்த்தம்.

சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். இவர் “ஆயுள்காரகர்” எனப்படுகிறார். “சனைச்சரன்” (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயரும் உண்டு, மற்றும் மந்தன், காரி, முடவன் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உள்ளது.

நவகிரகங்களில் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவார். இவரே ஒருவரின் வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட நம்பிக்கை. சனியைப் போல கொடுப்பாரும் இல்லைஅவரைப் போல கெடுப்பாரும் இல்லை” என்றொரு பழமொழி உண்டு. இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். ஆனால் மக்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக் கண்டு பயப்படுகிறார்கள்.

அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்தி தன்னை பாதித்திருக்கும் பிணி தீர இங்கு இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானையும், சனி பகவானையும் வழிபட்டு நிவாரணம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

அதேபோல் ஸ்ரீஇராமரும், இராவண வதம் முடிந்த பிறகு, அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். அனுமனும் இவ்வாலய சிறப்புணர்ந்து இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, சிவ வழிபாடு செய்திருக்கிறார். இந்த ஹனுமந்த லிங்கம் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றது.

கும்பகோணம்- திருவாரூர் சாலையில், கும்ப கோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில், அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது திருநறையூர்/நாச்சியார்கோவில். 108 வைணவத் தலங்களில் ஒன்றான இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், சித்தநாத சுவாமி திருக்கோயில் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ராமநாத ஸ்வாமி திருக்கோயில்.

சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமை தோறும் காலை 6 முதல் 7:30 மணிக்குள் மாந்திக்கும், 9 முதல் 10:30 மணிக்குள் சனி பகவானுக்கும் நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.

நான் மார்ச் 12 ஆம் தேதி சென்றபோது சனி பகவான் சந்நிதியில் நல்ல கூட்டம் ; பிராமணர் அல்லாதோரும் கூட கைவிரலில் பவித்ரத்தை (தர்ப்பைய்ப்  புல்  ) அணிந்து கொண்டு பட்டர் / குருக்கள் மந்திரம் சொல்லச் சொல்ல திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் ; சனி தோஷம் உள்ளவர்கள் போலும்! திரை திறந்தவுடன் தீபாராதனையுடன் நல்ல தரிசனம் கிடைத்தது. சிவபெருமானையும் தரிசித்து வெளியே வந்தேன் 

***

முக்கியக் குறிப்பு

நான் சென்ற கோவில் வேறு ,தேவார பாடல் பெற்ற திருத்தலம் வேறு. திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் (திருநறையூர்ச்சித்தீச்சரம்), தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் வேதேஸ்வரர் என்றும் சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என அழைக்கபடுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருவமாகமாறி, சாபம் பெற்ற நரன் வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. மிகப் பழமையான லிங்கம். அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை.

*****

திருவாவடுதுறை கோயில் படங்கள் 

திருமூலர் சந்நிதி படங்கள்

—SUBAHAM–

TAGS- ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part 2

காதலியைக் காண முருகன் போட்ட வேஷங்கள் – 75 (Post No.15,618)

Written by London Swaminathan

Post No. 15,618

Date uploaded in London –14 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 75

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 75

***

வள்ளியைக் காண முருகன் போட்ட வேஷங்கள்

வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட

மாற்றி வழி படும் இளையோனே … வேடர்கள் வாழும்

வள்ளிமலையில் தினைக் கொல்லையைக் காவல் புரிந்த சிறுமியாகிய

வள்ளியை, (உனது உண்மையான உருவைக் காட்டாது) பல*

வேடங்களில் வந்து, வணங்கிய இளைஞனே,

ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல்

பூத்த படுகையில் வருவோனே … பூமியில் உள்ளோர் போற்றி

வழிபடும் ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் குழந்தை என்று

சொல்லும்படி நாணல் புல் சூழ்ந்த மடுவில் (சரவணப் பொய்கையில்)

தோன்றியவனே,

நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான

வார்த்தை அருளிய பெருமாளே. … தலைவா போற்றி என்று

தந்தையாகிய மூத்த சிவபெருமான் கேட்க, பேரின்ப அனுபவத்தைத்

தரும் ஞான மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெருமாளே.

வள்ளியைக் காண முருகன் பூண்ட வேடங்கள்:

வேடன், வளையல் செட்டி, வேங்கை, கிழவன் முதலியன.

***

ஞானாசாரிய மூர்த்தியாக முருகன்  தோன்றிய கதை

ஒரு கணை ஏவு ராகவன் மருக … ஒப்பற்ற அம்பைச் செலுத்திய

ராமனின் மருகனே,

விபூதி பூஷணர் உணர உபதேச தேசிக … திருநீறு அணிந்த

சிவபெருமான் உணர்ந்து கொள்ள உபதேசம் செய்த குரு மூர்த்தியே,

வரை ஏனல் பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி

பரிபுர பாத சேகர … வள்ளி மலையில் தினைப் புனத்தே, (உன்னைக்)

குல தெய்வமாகப் போற்றித் துதித்த, காட்டில் உள்ள வேடர்கள் வளர்த்த,

அழகிய வள்ளி நாயகியின் சிலம்பு அணிந்த திருவடிகளைத் தலையில் சூடினவனே,

சுர ராஜன் பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன …

தேவர்களுக்கு அரசனான இந்திரன் பொன்னுலகில் குடி ஏறுவதற்காக

வேலைச் செலுத்திய முருகனே, மயில் வாகனனே,

பரவச ஞான யோகிகள் பெருமாளே. … ஆனந்த நிலையில்

இருக்கும் ஞான யோகிகளின்* பெருமாளே.

துங்கபத்திரை நதிக்கு வட திசையில் உள்ள ஞானபுரத்தில் கெளசிக முனிவர் தத்துவ ஞானம் கைகூட வேண்டி சரவணபவ மந்திரத்தைத் தியானித்துக் குகப் பெருமானை நோக்கிக் கடுந் தவம் புரிந்தார். கந்தக் கடவுள் ஞானாசாரிய மூர்த்தியாகத் தோன்றிச் சிவஞானம் எனப்படும் பதி ஞானமே தெளிவை உண்டாக்கும் என்று உபதேசித்தார். அதனால் ஞான தேசிக மூர்த்தி எனப் பெயர் பெற்றார்.

இந்தப் பதி ஞானம் தான் பரம ஞானம், சிவ ஞானம், குக ஞானம், தத்துவ ஞானம், திருவடி ஞானம், அருள் ஞானம், அத்துவித ஞானம், மெய்யுணர்ச்சி எனப் பலவாறு கூறப்படும்.

***

நானார் நானார் நானார் நானார் நானார் பாடல்!

ஊனே றெலும்பு … சதையின் மேல் மூடியுள்ள எலும்பு,

சீசீ மலங்களோடே … சீச்சீ என அருவருக்கத்தக்க அழுக்குகளுடன்,

நரம்பு கசுமாலம் … நரம்புகள், பிற அசுத்தங்கள்,

ஊழ்நோ யடைந்து … ஊழ்வினை சம்பந்தமான நோய்கள்,

மாசான மண்டும் ஊனோடு … இவைகள் சேர்ந்து, குற்றங்களே நிறைந்த உடலோடு

உழன்ற கடைநாயேன் … அலைந்து திரிந்த நாயினும் கீழான அடியேன்

நானார் ஒடுங்க … அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா?

நானார் வணங்க … வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா?

நானார் மகிழ்ந்து உனையோத … மகிழ்ச்சியோடு உன்னைப் போற்றுதல் என் செயலில் உள்ளதா?

நானார் இரங்க … உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல் என் வசத்தில் உள்ளதா?

நானார் உணங்க … சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ?

நானார் நடந்து விழநானார் … நடப்பதுதான் என் இச்சையா அல்லது விழுவதுதான் என் செயலா?

தானே புணர்ந்து தானே யறிந்து … சேரும் அனைத்தும் தானே ஆகி, அறியும் பொருளும் தானேஆகி,

தானே மகிழ்ந்து அருளூறி … மகிழ்பவனும் தானே ஆகி, அருள்சுரந்து,

தாய்போல் பரிந்த … தாய் போன்ற அன்பைக்காட்டும்

தேனோடு உகந்து … தேன் போன்ற இனிய தேவியுடன் மகிழ்ந்து,

தானே தழைந்து சிவமாகி … தானே செழிப்பாய் வளர்ந்து சிவமாகித் திகழ்பவனும்

தானே வளர்ந்து தானே யிருந்த … வளர்பவனும் அழியாது

இருப்பவனும் தானே ஆகி, இவ்வாறு தன்னந்தனியாய் நிற்கும் பெருமான்,

தார்வேணி யெந்தை யருள்பாலா … பூமாலை அணிந்த சடையினன் எம்பெருமான் சிவனார் அருளிய குழந்தையே,

சாலோக தொண்டர் சாமீப தொண்டர் … இவ்வுலகிலுள்ள

அடியார்களுக்கும், உன்னருகே நெருங்கும் அடியார்களுக்கும்,

சாரூப தொண்டர் பெருமாளே. … உன்னுருவத்தோடு ஒன்ற நினைக்கும் அடியார்களுக்கும் பெருமாளே*.

சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்யம் என்ற நால்வகைத் தொண்டர்களில் மூவரைப் பற்றி மட்டும் கூறினார். ஏனெனில் சாயுஜ்ய பதவியில் அவர்கள் முருகனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

***

ஒரே வரியில் 10 மலர்கள் இலைகள் !

மெய்கள் தோணிப் பிறவி அலை வேலை மெள்ள ஏறி …

உண்மைப் பொருள்கள் தோன்றி விளங்க, பிறவியாகிய அலை கடலைமெதுவாகக் கடந்து செல்ல (என்ன செய்யவேண்டும் என்றால்),

குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ(ம்) முல்லை வேர்

உற்பலம் முளரி நீபம் வில்ல(ம்) … குராமலர்விளா இலை, ஆத்தி,வெட்சி, குளிர்ச்சி பொருந்திய முல்லை, குறு வேர், நீலோற்பல மலர்,தாமரை, கடம்பு, வில்வம் முதலியவற்றை

நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை

ஓதிப் பணிவது ஒரு நாளே … பெரியதும், அழகுள்ளதும், பொன் போல் ஒளி வீசுவதுமான, அல்லிமலர் போன்ற உனது திருவடியின் மீது இட்டு, உனது புகழை உரைத்து உன்னைப் பணிவதுமான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா?

***

பிள்ளையாருக்கு கொடுத்தது மாம்பழமாமாதுளம் பழமா ?

ஒளிர் ஆனையின்கரமில் … விளங்கும் யானைமுக விநாயகனுக்குக்

கரத்தில்

மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த … மகிழும்படியாகமாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும்

உமை யருள்பாலா … ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே,

அவமேபி றந்தஎனை யிறவாமல் … வீண் காலம் போக்கும்

பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து

அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே … அன்பர்கள்

புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே,

***

பேய்களின் நடனம்

குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன … (போர்க்களத்தில்

ரத்தத்தைக்) குடிப்பன ஆகவும், மொள்ளுவன ஆகவும், ஊறுவன

ஆகவும், கூத்தாடுவன ஆகவும்,

கொழுத்த குருதிக் கடல் இடை ஊடே குதிப்பன மதிப்பன

குளிப்பன களிப்பன … செழிப்புற்றுக் குழம்பாக இருக்கும் ரத்தக்

கடலுள் குதிப்பன ஆகவும், ரத்தக் கடலின் அளவை அளவிடுவன

ஆகவும், அதில் குளிப்பன ஆகவும், அதைக் கண்டு மகிழ்வன ஆகவும்,

குவட்டினை இடிப்பன சில பாடல் படிப்பன திருப்புகழ்

எடுப்பன முடிப்பன … (அந்த மகிழ்ச்சியில்) மலைகளையும் இடிப்பன

ஆகவும், சில பாடல்களை படிப்பன ஆகவும், (முருகன்) திருப்புகழை

ஆரம்பித்து முடிப்பன ஆகவும்,

பயிற்றி அலகைக் குலம் விளையாட … இத்தகைய நிகழ்ச்சிகளுடன்

பேய்க் கூட்டங்கள் விளையாட,

பகைத்து எழும் அரக்கரை இமைப் பொழுதினில் பொடிபடப்

பொருது உழக்கிய பெருமாளே. … பகைத்து எழுந்த அசுரர்களை

ஒரு நொடிப் பொழுதில் தூளாகும்படி போர் புரிந்து கொன்ற பெருமாளே.

இப்பாடலின் கடைசி எட்டு வரிகள் போர்க்களத்தில் பேய்களின் நடனத்தை தாளத்துடன் வருணிக்கின்றன.

—SUBHAM—

TAGS- பேய்களின் நடனம் மாதுளங்கனி, வள்ளி, முருகன்  வேஷங்கள் ,திருப்புகழில் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள், Part 75

தாம்பாளத்தில் தாளம் போட்டு தமிழ் வளர்த்த மேதை! (Post No.15,617)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,617

Date uploaded in London – 14 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

13-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ஏப்ரல் 13 கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் – சிறப்புக் கட்டுரைl̥

தாம்பாளத்தில் தாளம் போட்டு தமிழ் வளர்த்த மேதை! 

ச. நாகராஜன் 

எளிய, நாட்டுப்புறத் தமிழில் உயர்ந்த சிந்தனைகள் வேண்டும்.

ஆபாச வரிகளோ இரட்டை அர்த்தச் சொற்களோ இருக்கக் கூடாது.

காதல் பாட்டானாலும் கூட எதிர்கால நம்பிக்கை ஒளிர்விட வேண்டும்.

யதார்த்தத்தோடு முன்னேறும் பாதையைக் காண்பிக்க வேண்டும்.

இசையைத் தாளத்துடன் போட்டு பாட்டை அனுபவிக்க வேண்டும்.

பட்டி தொட்டி எல்லாம் பாடல் முழங்க வேண்டும்.

ஒரு ஆளைச் சொல்லுங்க பார்ப்போம் என்றால் பதில் பளிச்சென வரும் இல்லையா – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ

தரும் மகிழ்ச்சி (ஆசை)                                                                                 (அரசிளங்குமரி 1957) 

எப்படிப்பட்ட அறிவு வளரணும், கவிஞரே, நீங்கள் சொல்வது?

மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்

மதிப்பது நம் கடமை

வள்ளுவப் பெருமகன் சொல்லிய வழியில் வாழ்வது அறிவுடமை  

                                (இரும்புத்திரை 1960)

வள்ளுவன் வழியில் (ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..) தாயையும் மகிழ்ச்சி கொள்ள வைக்கும் வளர்ச்சியே உண்மை வளர்ச்சி என்பதை எளிய சொற்களால் சொல்வது தான் பட்டுக்கோட்டையாரின் பாணி! 

13-4-1930 அன்று தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாசலக் கவிராயருக்கு மகனாகப் பிறந்தவர் கல்யாணசுந்தரம்.

இளமையிலிருந்தே சுறுசுறுப்பாக இருந்த கவிஞர் விவசாயம், இட்லி வியாபாரி,  மிஷின் டிரைவர், தேங்காய் வியாபாரி என பல தொழில்களில் முனைப்பு காட்டியவர் அரசியல்வாதியாகவும் பாடகராகவும் நடிகராகவும், கவிஞராகவும் என்று இப்படி சுமார் 16 தொழில்களில் ஈடுபட்டார். இயற்கையாகவே உள்ளத்திலும் உடலிலும் ஊறி இருந்த “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்ற பாரதியின் வழியைப் பின்பற்றிக் கவிஞராகவே கடைசியில் மிளிர்ந்தார்.

1954ல் படித்த பெண் என்ற படத்திற்கு தன் முதல் பாடலை எழுதியவர் 1959ல் 29 வயதிலேயே அகால மரணத்தைச் சந்திக்கும் வரை 55 படங்களில் 187 பாடல்களைப் பாடி தமிழகத்தையே வியக்க வைத்தார்; சிந்திக்க வைத்தார். 

தூங்காதே தம்பி

தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர்

வாங்காதே! (தூங்)

நீ-தாங்கிய உடையும்

ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும்

சிறைக்கதவும்,
சக்தியிருந்தால்

உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு

இடம் கொடுக்கும் (தூங்)

              நாடோடிமன்னன் 1958

என்று அறிவுரைப் பாடலைப் பட்டி தொட்டி எங்கும் முழங்கச் செய்ததோடு மக்களின் திலகமாக எம்.ஜி.ஆரையும் மக்களோடு இணைத்து விட்டவர் பட்டுகோட்டையார்.

இசையைத் தாளத்துடன் போட்டு, பாட்டுப் பாடி பாடலை மலரச் செய்வது அவர் பழக்கம். தாம்பாளத்தை எடுத்து கையினால் டக் டக் என்று அடித்தால் பாடல் வரிகள் சமுதாயத்தை எழுப்பும் வகையில் தானே உள்ளத்திலிருந்து சொற்களாக வந்து விழும். ஒருமுறை பாடல் வரிகளை மறந்து விட்ட அவர் வீட்டிற்குள்ளேயிருந்து தாம்பாளத்தை எடுத்து வந்து தாளம் போட மறந்துவிட்ட வரிகள் தாமே  ஞாபகத்திற்கு வந்தன!

ஆகவே தான் அவர் அனுபவத்தால் பாடினார் இப்படி:

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்;
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

                                           கல்யாணப் பரிசு 1959

பெண்ணழகை வர்ணித்துக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான கவிஞர்கள் படைத்த கவிதைகளை சங்க இலக்கியத்தில் ஆரம்பித்து இன்று வரை பார்க்கிறோம். நிலவைப் பார்த்த கவிஞருக்கு வந்த பாடல் இது:

ஆண் : ஆடை கட்டி வந்த நிலவோ – கண்ணில்

மேடை கட்டி ஆடும் எழிலோ – இவள்

ஆடை கட்டி வந்த நிலவோ – குளிர்

ஓடையிலே மிதக்கும் மலர்

ஜாடையில் சிரிக்கும் இவள்

காடுவிட்டு வந்த மயிலோ – நெஞ்சில்

கூடுகட்டை வாழும் குயிலோ!

                          அமுதவல்லி – 1959

நிலவு, மலர், மயில், குயில் என ஒரே பாடலில் சில சொற்களில் பெண்ணழகைச் சுட்டிக் காட்டிய தனித்வம் மிக்க  இவரது கற்பனை வளம் அனைவரையும் அதிசயிக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை. 

இன்னொரு பாடல்:

நளின நடை அன்னம் போலே

நெளியும் இடை மின்னல் போலே

ஆடை கொடி பின்னல் போலே

அன்பு மொழி கன்னல் போலே

நெஞ்சினிலே நேசத்தாலே

நீந்திடுவேன் மீனைப் போலே

அங்கம் யாவும் தங்க நிறம்

ஆசை உள்ளம் சங்கு நிறம்

அழகே வடிவாய் வரும்

மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்

அமுதவல்லி 1959

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘The Man Who Knows Too Much” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற கே சரா, சரா என்ற பாடல் உலகப் புகழ் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை அதன் புகழ் மங்கவில்லை.

பாடலை எழுதியவர்கள் ரேமாண்ட் பி.ஈவான்ஸ் மற்றும் ஜே லிவிங்ஸ்டன் (Raymond B. Evans, Jay Livingston) ஆகிய இரு பாடலாசிரியர்கள். When I was a little girl என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 1955ல் எழுதப்பட்டது. பிரபல அமெரிக்க பாடகியான டோரிஸ் டே இதைப் பாட இன்றளவும் இது உலகைக் கவர்ந்து வருகிறது.

 இதை ஆரவல்லி படத்திற்காக பட்டுக்கோட்டையார் மூலப் பாடலின் ஜீவனை பிரதிபலித்து  தமிழ்ப் பாடலாக மலரச் செய்தார் இப்படி:- 

சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான்ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா?-அம்மா
நீசொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா! -என்

கண்ணல்லவா கலா! – உன்

எண்ணம் போல் வாழ்விலே

இன்பம் காணலாம்!

ஆரவல்லி 1957

இன்று வரை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடலாக இது இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

இன்றைய சமுதாயத்தின் கெட்ட வழிமுறைகளைச் சாடி அவை திருந்த வழி கேட்டவர் பட்டுக்கோட்டையார்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

மகாதேவி 1957

ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு விளக்கவுரை எழுதினால் அது பட்டுக்கோட்டை களஞ்சியமாகவே அமையும்.

கண்ணதாசன் அவரைப் பற்றிக் கூறியதே போதுமானது:

“திரையுலகில் பாட்டெழுதுவோர் வரலாம், போகலாம். ஆனால் ஒரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்பமானான் பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்கினான் மண்ணுக்குள்ளே! திரையுலகில் அவனே தத்துவஞானி! ஆழ்ந்த சிந்தனை! அழுத்தமான சொல்லாட்சி; ஒரு வரிக்கு மறுவரி உயிர் கொடுக்கும் தன்மை; அவன் எழுதிய பாட்டெல்லாம் அப்படி அமைந்தன!

தென்றல் 10-10-1959 

பாட்டுக்கு ஒரு புலவன்

தமிழ் சொல்லுக்கு அதிகாரன்

என்றும் பட்டுக்கோட்டையாரின் புகழ் நிற்கும்

அதைச் சொல்வோம் நாம் தினமும்!

**

Famous Shiva Story in Purananuru- Part 60 (Post No.15,616)

Written by London Swaminathan

Post No. 15,616

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru Wonders -20 Ancient Tamil Encyclopaedia -Part 60; One Thousand Interesting Facts -Part 60

***

Item 450 Notable similes

Two similes are notable in Puram verse 54.

“He gives to everybody who comes to him,
without limits and without stopping, shaming the generosity of clouds”,

King’s generosity is compared to rainy clouds. This is a common simile in Tamil and Sanskrit. The meaning is that both did not expect anything in return.

Another simile is

“are like a whistling goat herder who wears
soiled clothes and a dirty garland, who is unable to go near a vast place where a tiger lives, with his goats with small heads”

Enemy kings are like small headed goats; our king Kothai is like a tiger.

***

Item 451 Whistling


Another interesting thing about the cowherd or goatherd. When the day comes to an end they whistle to bring back all the goats into the shed. They use the dogs to round up the goats and sheep to drive them back into the shed. Even Scottish  shepherds  whistle to do this. It is strange that all over the world they whistle using their mouth to do this.

***

Item 452 Appearance

The description of the goat herd or shepherd  is notable. In other poems in the Sangam literature, they add the word Kallaa- uneducated, illiterate–.to cowherders. Even Andal in Tiruppavai repeated that. So we know they never go to school for basic education; there may be one or two exceptions. Here the poet says,

“like a whistling goat herder who wears
soiled clothes and a dirty garland”.

***

Item 453 No Visa Entry

In the ancient India, poets and saints did not have any restriction or hurdle in entering a palace or an assembly. They never needed a visa to enter another country or territory. This can be seen in all the Puranas. They simply inform the gatekeeper and immediately the king comes to the gate to receive them or give them immediate audience. Here also the bard or the poet makes it clear.

****

Puranānūru 54, Poet Kōnāttu Erichalūr Mādalan Mathurai Kumaranār sang for Cheraman Kuttuvan Kōthai,

In the ancient, uproarious town where my king is, those
like me can enter his great day assembly with our heads
held high
!  It is easy for those like me to approach him.
Not just that.  He gives to everybody who comes to him,
without limits and without stopping, shaming the generosity
of clouds, 
Kōthai with charitable hands and fast horses.

The mighty kings who have risen up against our lord with
great strength, are like a whistling goat herder who wears
soiled clothes and a dirty garland
, who is unable to go near a
vast place where a tiger lives, with his goats with small heads.
His country is not approachable by enemy kings.

Notes:  This is the only poem written for this king.  He was a contemporary of Chozhan Ilavanthikai Palli Thunjiya Nalankilli and Chozhan Kurāpalli Thunjiya Perunthirumāvalavan.  This poet wrote Puranānūru poems 54, 61, 167, 180, 197 and 394.  

****

Vaidehi Herbert’s translation is used, thanks.

***

புறநானூறு 54பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை

1

எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே,
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து,  5

2

வானம் நாணவரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,

3
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி  10
மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்,

4
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்து அற்றே,
வலி துஞ்சு தடக்கை அவனுடை நாடே.

******

Item 454

“O Māran donning a flower garland!  You are like the god
with a blue throat, a glowing eye, and a crescent moon
on his head, who used the soaring mountain as a large bow,
and a snake as a string, and with one arrow ruined three forts and brought victory to the celestials”. 

Lord Shiva destroyed three hanging castles in the sky occupied by three demons. This anecdote is in the ancient Puranas and all the devotional songs sung by Saivite as well as Vaishnavite saints, Naayanmaars and Aalvaars.

Though Sangam literature mentioned Lord Shiva in many other places, this specific story is more important ; many Puranic stories reached common man in Tamil Nadu 2000 years ago!

Let us look at the story/anecdote:

Story of Tripurantaka murti- Tripuraantaka—is connected to puranas. Siva killed three demons and reduced their magic cities to ashes. During this campaign  the earth served Siva as a chariot and the sun and the moon as wheels. The four Vedas were the four horses and the Upanishads were the guiding reins; the mythic golden mountain Meru was the bow, the ocean was the quiver and god Vishnu was the arrow.

Images of Tripurantaka were made with right leg firmly placed on the pedestal and the left leg bent. The right forehand is in the simha karna posture holds the arrow and the left fore arm, the bow. The other hands hold the tanka or axe and the deer respectively. His locks are arranged in the form of a jatamakuta and the goddess Gauri stands on the left side.

In the chariot, at its front,  is seated the four faced brahma  and below him is a white bull.

  • The Demons: Tarakasura’s sons—Taarakaksha, Kamalaksha, and Vidyumaali—performed severe penance to Lord Brahma to gain immense power.
  • The Three Cities (Tripura): Brahma granted them three invincible, flying cities that could only be destroyed by a single arrow when they aligned, which happened once in a thousand years. The Asuras had three cities: the lowest was of iron, then there was one of silver, then one of gold
  • Symbolism: Shiva destroyed the cities with a single, flaming arrow. The story symbolizes Shiva’s role in destroying the three inner impurities—ignorance, ego, and negativity.

Shiva is often depicted as the “laughing” destroyer (Tripurantaka), holding a bow, and sometimes, in some versions, the cities were destroyed by a mere smile.

My interpretation

Hindus  thought of creating even space stations thousands of years before the modern space stations of Russia and America. Moreover Siva must have burnt them in a second with his laser sword. And the metals used to build them are also important. If one has to burn them one needs immense heat that can be generated with lasers. Siva did this by lauging is recited throughout Tevaram songs.

Tripura Antaka Statues are in famous temples like Madurai and Chidambaram. An image of tripurantaka murti in the thousand pillared hall of Madurai temple shows an actual figure of Vishnu on the arrow held by Siva.

This is seen in many archaeological monuments too

***

Item 455 Four fold Army

you own an army with these four divisions –
murderous elephants with fierce rage, proud swift horses,
tall chariots with rising flags, and foot soldiers with

Hindus invented the board game Chess and spread it throughout the world. We see the four- fold army there. It is in all our epics, inscriptions, Kalidas and other Sanskrit books. Being Pukka Hindu rulers, Tamils followed the same Six Seasons, Same Fourfold army, same Spy and Duta/ambassador system. (In my old articles I have given the relevant quotes)

***

Item 456 Sun and Moon

Sun and Moon are compared with the qualities of a king in Raghuvamsam of Kalidasa and Manu smriti. Er see it here in the poem.

with bravery and manliness like the sun, coolness and
tenderness like the moon and charity like the sky,

Raghuvamsam of Kalidasa – 4-12 and many more poems.

***

Item 457 Sand particles, rain drops

Greatness!  May your life be long with more days than the number  of sands

King is greeted to have long life and the years in his life span are compared to the number of raindrops or sand particles on a beach. This is repeated by many Sangam poets.

***

Item 457 Lord Muruga/ Skanda in Tiruchendur

roll from the deep waters in Senthil where Murukan rules!

Lord Skanda/ Kartikeya (Murugan in Tamil) is the subject of another Sangam book Tirumurukatruppadai. Lord Muruga is worshipped by millions of Hindus even today in his Six Abodes known as Aru Padai Veedukal. Tiruchendur on the eastern sea shore is one of the six abodes and the poet Maruthan Ilanaakan refers to it .

***

Puranānūru 55, Poet Mathurai Maruthan Ilanākanār sang to Pandiyan Ilavanthikaipalli Thunjiya Nanmāran

1
O Māran donning a flower garland!  You are like the god
with a blue throat, a glowing eye, and a crescent moon
on his head, who used the soaring mountain as a large bow,
and a snake as a string, and with one arrow ruined three forts and brought victory to the celestials. 

2

You are superior
to all the other kings!

Even though you own an army with these four divisions –
murderous elephants with fierce rage, proud swift horses,
tall chariots with rising flags, and foot soldiers with

strength in their hearts and desire for battles, esteemed
righteousness is the foremost cause for real victory.  So,
not thinking that they are ‘ours’ and being unjust to favor
them, and not hurting others because they are ‘not ours’,
3

with bravery and manliness like the sun, coolness and
tenderness like the moon and charity like the sky,

possessing these three great virtues, may you live a long life,
so that there will not be people in need without anything!

4

Greatness!  May your life be long with more days than the number
of sands
 brought and heaped by powerful winds, with deep scars,
on the lovely vast shores of the ocean where white-crested waves

5
roll from the deep waters in Senthil where Murukan rules!

***

புறநானூறு 55, பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்,

1
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல, 5
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!

2
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ் சுடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட

3
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்; 10
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
‘பிறர்’ எனக் குணங் கொல்லாது,,

4
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், 15
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை!

5

தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய 20

6
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

–Subham—

Tags—Purananuru Wonders -20 ,Ancient Tamil Encyclopaedia -Part 60, One Thousand Interesting Facts -Part 60, Shiva story, destruction of 3 hanging cities, Tripurantaka story, goatherds, whistling, item

5 சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part1 (Post.15,615)

Written by London Swaminathan

Post No. 15,615

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்; சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்

Part one

கும்பகோணத்திலிருந்து காரில் புறப்பட்டு புகழ்பெற்ற திருவிடை மருதூர் , திருபுவனம் , திருவாவடுதுறைக் கோவில்களில் சிவபெருமானைத் தரிசித்தேன் . ஒரே பகல் பொழுதில் எளிதான , சுகமான தரிசனம்!. இதை மார்ச் 9- ஆம் தேதி மூன்றே மணி நேரத்தில் செய்து முடித்தேன் அத்துடன் போனஸ் பயணமாக கஞ்சனூர் சுக்கிரபகவானுடன் சிவ பெருமானையும் தரிசனம் செய் தேன்.

மார்ச் 12- ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ் SURPRISE  காத்திருந்தது . திருநறையூர் (தற்போது நாச்சியார்கோயில்) என்று சொன்னவுடன் எல்லோருக்கும் கல் கருடனும் விஷ்ணு பகவானும்தான் நினைவுக்கு வரும் . அங்கு புகழ்பெற்ற சிவன் கோவில் இருப்பதும் அந்தக் கோவிலுக் குள்ளேயே சனிபகவான் குடும்பத்துடன் வீற்றிருந்து அருள் பாலிப்பதும் பலருக்கும் தெரிந்திராது.

ஐந்து கோவில்களையும் நான் சென்ற வரிசைக் கிரமத்தில் சுருக்கமாகக் காண்போம் . எல்லா இடங்களும் அருகருகில் இருக்கின்றன தஞ்சை, திருச்சி பிரதேசத்தில் தடுக்கி விழுந்தால் கோவில்தான் ; எதைப்  பார்ப்பது எதை விடுவது என்று திணறிப்போவோம்.

திருவிடைமருதூர்  (9-3-2026)

திருபுவனம்

திருவாவடு துறை

கஞ்சனூர்

திருநறையூர் (12-3-2026)

***

திரு என்ற சிறப்பு முன்னொட்டு இருப்பதால் இவை அனைத்தும் பாடல் பெற்ற தலங்கள் என்பது விளங்கும் ; அப்படியானால் குறைந்தது 1400 ஆண்டுகள் பழமையானவை; தேவார மூவரும் திருவாசக மாணிக்கவாசகரும் ஒரு கோவிலுக்குச் சென்று பாடி அது நமக்கு கிடைத்திருக்கிறதென்றால் அது அவர்களுக்கு முன்னரே பிரசித்தி பெற்று இருந்ததால்தான் அவர்கள் அங்கே சென்றனர் என்றும் நமக்குத் தெரிகிறது .

நான் முதலில் காலை ஒன்பது மணிக்குச் சென்றது திருவிடைமருதூர் சிவன் கோயில்.

திருவிடைமருதூர்

 (Thiruvidaimarudur) கும்பகோணத்திற்கு அருகில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது.  இத்தலத்தில் , புகழ்பெற்ற மகாலிங்கேஸ்வரர் கோயிலுள்ளது.  இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட தேவாரத் தலம்.

இறைவன்: மகாலிங்கேஸ்வரர் (மருதவாணர்), இறைவி: பிருகத்  சுந்தர  குஜாம்பிகை (பெருநலமுலையம்மை).

தல மரம்:  மருத மரம்  ;

தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் 

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர் ,சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர் முதலியோர்.

பாண்டிய மன்னன் ஒருவன் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் இதுதான் ; இங்கே தைப்பூசத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது .

சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில், கம்பீரமான வீதிகளையும், கோபுரங்களையும் கொண்டது. பெரிய கோவில் ; ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை .

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருவிடைமருதூர் அமைந்துள்ளது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் மூன்று மருத மரமுள்ள தலங்கள் பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார் .

மூன்று மருத மர தலங்கள்

மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு, சிவனின் அருள்பெறும் முக்கிய மூன்று மருத மரத் தலங்கள் (அர்ஜுன ஷேத்திரங்கள்) :–

மல்லிகார்ஜுனம் (ஸ்ரீசைலம்): ஆந்திர மாநிலத்தில் உள்ளது, இது மேல்மருதூர் எனப்படுகிறது.

மத்யார்ஜுனம் (திருவிடைமருதூர்): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம், இது இடைமருதூர் எனப்படுகிறது.

புடார்ஜுனம் (திருப்புடைமருதூர்): திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தலம், இது கீழ்மருதூர் எனப்படுகிறது.

இந்த மூன்று தலங்களும் முறையே வடமருது, இடைமருது, கீழ்மருது என்று அழைக்கப்படுகின்றன.

அர்ஜுனம் என்பது மருத மரத்தைக் குறிக்கும், சிவன் மருத மரத்தின் அடியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

திருவிடைமருதூர் லிங்கம் மஹாலிங்கம் என்று அழைக்கப்படுகிறது..

இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.

பத்திரகிரியார் பட்டிணத்தார் முறையே மேற்கு கிழக்கு கோபுரத்தில் காட்சி தருகின்றனர். பத்திரகிரியார் சிவனை கண்ட ஸ்தலம் .

பஞ்ச லிங்க தலம்

தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விசுவநாதர், ஆத்மநாதர்,

ரிஷிபுரீசுவரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலத்துக்குப் பஞ்சலிங்கத் தலமென்றும் பெயர்.

திருவிடை மருதூரில் சரபோஜி மன்னர் பாவை விளக்கு சிலை !

கும்பகோணம் சக்ரபாணி கோவிலைப் போலவே, திருவிடை மருதூரில் கோயிலிலும்  சரபோஜி மன்னர் நிறுவிய பாவை விளக்கு சிலை உள்ளது இது அவருடைய மகள் நோயிலிருந்து குணமானதற்காக வைக்கப்பட்டது .சரபோஜி  முதலிய மராட்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுடன் நெருங்கிய தொடார்புடைய வர்கள் ஆவர்.

***

2    

திருபுவனம்

13-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சிவபெருமான் மற்றும் சரபேஸ்வரர் வழிபாட்டிற்கும், உயர்தர பட்டுச் சேலை உற்பத்திக்கும் இந்த ஊர் மிகவும் புகழ்பெற்றது

திருபுவனம் சிவன் கோயில் ; ஊர்ப்பெயரைச் சொன்னவுடன் பெண்களுக்கு நினைவுக்கு வருவது திருபுவனம் பட்டுச் சேலைதான் ; அதை விட்டுவிட்டு சிவபெருமானுக்கு வருவோம் ;

இறைவன் ‘கம்பஹரேஸ்வரர்’ (நடுக்கம் தீர்த்த நாயகன்)  அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ .


தல வரலாறு: பிரகலாதன், திருமால் மற்றும் தேவர்களின் நடுக்கத்தை (கம்பம்) நீக்கியதால், சிவபெருமான் கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இது தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் போன்று சோழர்களின் நான்கு முக்கியக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோவில் சுவர்களில் இந்து புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

சிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கட்டிடக்கலை அழகு

திருபுவன மலர் மோகினி என்ற தலைப்பில் புகழ்பெற்ற தெய்வீக ஓவியர் சில்பி எழுதிய கட்டுரையில், ஒரு மோகினிப் பெண் பூங்கொடியை வளைத்துப்  பூக் கொய்யும் அழகினை வருணித்துள்ளார்; திருபுவன வீரபுரம் என்பது பழைய பெயர்; தருமபுர ஆதீனக் கட்டுப்பாட்டிலுள்ள  கோயில் என்று எழுதிவிட்டு பல மோகினி படங்களையும் வரைந்து காட்டியுள்ளார்.

சரபேஸ்வரர் சந்நிதி

பின்னர் சரபத்தின் வெற்றி என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் அவர் சொல்லுவதாவது ,

“வடநாட்டில், தான் பெற்ற வெற்றிக்குச் சின்னமாக மூன்றாம் குலோத்துங்கன் தாராசுரம், திருபுவனம் முதலிய இடங்களில் கோயில் கட்டினான் ; அவன் நரசிம்மத்தை வெற்றிகொண்ட சரப மூர்த்தியை மனமுருகி வழிபட்டிருக்க வேண்டும் . இரண்டு இடங்களிலும் உள்ள சரப சிற்பங்களை கூர்ந்து கவனிக்கும்போது ஒரே சிற்பியால் இது உருவாகியிருக்க  வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஆயினும் சில வேறுபாடுகள் உள்ளன .

சிம்ஹக்னமூர்த்தி என்று அழைக்கப்பெறும் ருத்ரமூர்த்திக்குத் தாராசுரத்தில் எட்டுக்கால்கள், மூன்று கண்கள், இரண்டு சிறகுகள் ! இங்கே திருபுவனத்தில் அத்தனை கால்கள், கண்கள், சிறகுகளுடன் நான்கு கைகளும் சிவ சின்னங்களோடு சேர்ந்து காணப்படுகின்றன. இப்போது சரபர் இருக்கும் இடத்தில் ஆதியில் நடராஜர் இருந்ததாகத் தெரியவருகிறது…………..  சரப சின்னத்தின் பின் பாகம் லிங்க வடிவில் அமைந்திருக்கிறது . சரபர் சந்நிதி தெற்கு நோக்கியிருக்கிறது இங்குள்ள மோகினி சிறங்களைத்தான் நான் வெளியிட்டிருக்கிறேன்.”

ஆறரை அடி உயரத்தில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

திருபுவன வீரன் என்ற விருதுப் பெயர்கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் வட நாட்டிலிருந்து ஞான குருக்களை அழைத்து வந்திருந்தான். அவர்களில் ஒருவர் ஈஸ்வர சிவனார் சித்தாந்த ரத்நாகர ஆசிரியரான ஸ்ரீஸ்கந்த ஷம்பு சிவாசார்யரின் புதல்வர்இவர். இவரைக்கொண்டு அரசன் கோயிலில் பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் நடத்திவைத்தான் என்கிறது ஒரு கல்வெட்டு. இந்த அரசன் காலம் CE 1178-  1218.

இவனைக் கம்பரும் தனது ராமாயணத்தில் தியாக விநோதன் என்ற பெயரில் சிறப்பித்திருக்கிறார்.

பிறகு அம்மன் சிலையான தர்ம சம்வர்த்தனியை  வருணித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார் . அம்மன் சந்நிதியிலுள்ள மூன்றாவது தர்ம சம்வர்த்தனியையாவது ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்வது நிர்வாகிகளின் கடமை” .(முதல் இரண்டு தர்மவர்த்தனி – அறம்  வளர்த்த நாயகி—களின் சின்னங்கள் பின்னப்பட்டுவிட்டன )

தென்னாட்டுச் செல்வங்கள் – பாகம் 1, படைப்பு -இறையருள் ஓவியர் சில்பி, விகடன் பிரசுரம் , ஆண்டு 2012.

இக்கோவிலில் உள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இங்கு சிறப்பு வழிபாடு நடக்கும் .

நரசிம்மரின் கோபத்தைத் தணிப்பதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது சரபேஸ்வரர்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 6-8 கி.மீ தொலைவில் திருபுவனம்

இருக்கிறது.

ஏனைய தலங்களைத் தொடர்ந்து காண்போம்……………………….

To be continued………………………

Tags- ஐந்து சிவன் கோவில், தரிசனம், சனி பகவான், சுக்கிரன், Part One, திருவிடைமருதூர்,  திருபுவனம், மூன்று மருத மர தலங்கள், சரபேஸ்வரர் , மஹாலிங்கம்

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614)

Written by London Swaminathan

Post No. 15,614

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 74

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 74

***

கடவுளரிடையே புதிய உறவு முறைகள் !

மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி

மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே … கும்பத் தலத்தை

உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய

சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே,

வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற

வற்பு உறு வேலை விடுத்து அருள் இளையோனே … கடல்

வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள்

பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி

அருளிய இளையோனே,

சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை

சிக்கெனவே தழுவிப் புணர் மணவாளா … அழகிய குறப்பெண்

வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத்

தழுவிச் சேர்ந்த மணவாளனே,

செச்சை உலாவு பதத்தின மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு

சித்த விசாக இயல் சுரர் பெருமாளே. … வெட்சி மலர் சூழும்

பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப்

பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள

தேவர்களின் பெருமாளே.

ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு  மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின்  மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார்.

****

யாதுதானர் என்றால் பொருள் என்ன ?

ஆசார வீனன் அறிவிலி … ஒழுக்கக் குறைவு உடையவன்,

அறிவில்லாதவன்,

கோப அபராதி யவகுணன் … கோபம் காரணமாகக் குற்றங்கள்

பல செய்பவன், கெட்ட குணத்தை உடையவன்,

ஆகாத நீசன் அநுசிதன் … யாருக்கும் பயனாகாத இழிந்த

குணத்தவன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன்,

விபரீதன் … மாறுபாடான புத்தியை உடையவன்,

ஆசாவிசார வெகுவித மோக ஆசரீத பரவசன் … (மண், பெண்,

பொன் என்ற) மூவாசைகளிலே எண்ணத்தை வைத்து, பலவிதமான

ஆசைச் செயல்களைச் செய்து தன்வசம் இழந்தவன்,

ஆகாச நீர்மண் அனல்வளி யுருமாறி … ஆகாயம், நீர், மண், தீ,

காற்று என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் வெவ்வேறு பிறவிகளில் பல

உடல்களை எடுத்து,

மாசான நாலெண் வகைதனை … குற்றங்களுடன் கலந்த

முப்பத்திரண்டு* தத்துவங்களைக் கொண்ட

நீநானெனாத அறிவுளம் வாயாத பாவி … இந்த உடல்களை நீ

என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத, ஞான உள்ளம்

வாய்க்கப் பெறாத பாவி,

இவனெனநினையாமல் … இத்தனையும் இவன் என்று நினைத்து

என்னை நீ ஒதுக்கி விடாமல்,

மாதாபிதாவின் அருள் நல மாறா மகாரிலெனையினி … தாய்

தந்தையரின் அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத குழந்தைகள்

போல, உன் குழந்தையாகிய என்மீது இனிமேலாயினும்

மாஞான போதம் அருள்செய நினைவாயே … சிறந்த

ஞானோபதேசத்தை அருள்வதற்கு உன் திருவுள்ளத்தில் நினைப்பாயாக.

வீசால வேலை சுவறிட … அகன்ற சமுத்திரமானது வற்றிப் போகவும்,

மாசூரர் மார்பு தொளைபட … பெரிய சூரன் முதலியோரது மார்புகள்

தொளைபடவும்,

வேதாள ராசி பசிகெட … வேதாள கணங்களின் பசி (சூர

சம்ஹாரத்தால்) தீர்ந்திடவும்,

அறைகூறி … போருக்கு வாருங்கள் என்று அசுரர்களைக் கூவி

அழைத்து,

மேக ஆரவார மெனஅதிர் போர் … மேகங்களின் பெரும்

ஆரவாரமான இடியோசை போல முழங்கும் போரில்,

யாது தானர்** எமபுர மீதேற … அரக்கர்கள் யம பட்டணம் போய்ச்

சேரும்படியாக,

வேல்கொடு அமர்செயும் இளையோனே … வேலைக் கொண்டு

போர் செய்த இளையோனே,

கூசாது வேடன் உமிழ்தரு நீராடி … கொஞ்சமும் தயங்காது

வேடன் கண்ணப்பன் வாயினின்று உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப்

பெற்றுக்கொண்டு,

ஊனு ணெனுமுரை கூறா … இந்த மாமிசம் சுவையானது, இதை

உண்டருள்க என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டு,

மன் ஈய அவனுகர் தருசேடம் … நிரம்பவும் அவன் தருவதை, அந்த

வேடன் எச்சில் செய்து தந்த மீதம்

கோதாம் எனாமல் அமுதுசெய் … குற்றமுள்ளது என்று பாவிக்காமல்

அமுதாக எண்ணி உண்டு அருளியவரும்,

வேத ஆகமாதி முதல்தரு கோ … வேதங்களுக்கும் ஆகமங்களுங்கும்

ஆதி முதல்வர் ஆனவருமான சிவபிரான் பெற்றெடுத்த அரசனே,

லோக நாத குறமகள் பெருமாளே. … இந்த உலகத்துக்கெல்லாம்

நாதனே, குறமகள் வள்ளியின் பெருமாளே.

* 32 தத்துவங்கள் பின்வருமாறு:

ஆத்ம தத்துவம் 20, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

** ‘யாது தானர்’ என்றால் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள்  தானவருமாகிய அரக்கர்கள். இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர். 

***

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை


ஆசைகூர் பத்தனேன் … உன் மீது ஆசை மிகுந்த பக்தியை

உடைய நான்

மனோ பத்மமானபூ வைத்து … மனம் எனப்படும் தாமரை மலரை

வைத்து,

நடுவேயன்பானநூலிட்டு … இடையில் அன்பு என்னும் நாரைக்

கொண்டு,

நாவிலே சித்ரமாகவே கட்டி … நாக்கு என்னும் இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து,

ஒருஞான வாசம்வீசி … அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்

என்னும் நறுமணத்தைத் தடவி,

ப்ரகாசியா நிற்ப … அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும்,

மாசிலோர் புத்தி யளிபாட … அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு

என்ற வண்டு மொய்த்துப் பாடவும்,

மாத்ருகா புஷ்ப மாலை … மாத்ருகா மந்திர* மாலையான இந்தப்

பூமாலையை

கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ … அழகிய பவளம்

போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

மூசுகானத்து மீதுவாழ் … சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே

வாழ்கின்ற,

முத்த மூரல்வே டிச்சி தனபார மூழ்கு … முத்தை நிகர்த்த அழகிய

பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி அழுந்திக் கிடக்கும்,

நீபப்ரதாப மார்பத்த … கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும்,

மார்பை உடைய ஐயனே,

மூரிவே ழத்தின் மயில்வாழ்வே … வலிமையான ஐராவத யானை

வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே,

வீசுமீன் அப் பயோதிவாய் விட்டு வேக … அலை வீசும், மீன்கள்

மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற,

வேதித்து வருமாசூர் வீழ … தேவர்களை வருத்தித் துன்புறுத்தி

வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ,

மோதிப் பராரை நாகத்து … தாக்குதல் செய்து, பருத்த

அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது

வீரவேல் தொட்ட பெருமாளே. … வீரம் பொருந்திய

வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை. சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்த மந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

–subham—

Tags– யாதுதானர், மாத்ருகா புஷ்ப மாலை, அருணகிரி நாதர் ,விநோதப் பூ மாலை, கடவுளரிடையே,  புதிய உறவு முறைகள் !

மின்னல் வேக மன்னன் ஜாக்கிசான்! (Post No.15,613)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,613

Date uploaded in London – 13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

7-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்ட

மின்னல் வேக மன்னன் ஜாக்கிசான்!

ச. நாகராஜன்    

வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்களிலேயே அதிக ஸ்டண்ட்களைச் செய்த ஒரே நடிகர் என்று கின்னஸ் ரிகார்ட் புகழும் ஒரு அதிசய மனிதர் யார் தெரியுமா? குழந்தைகளுக்கும் கூடத் தெரியும். அது மின்னல்வேக மன்னன் ஜாக்கிசான் தான் என்று.

7-4 -1954 அன்று ஹாங்காங்கில் பிறந்து, 71 வயது முடிந்தாலும் இன்னும் தனது பாணி அதிரடி சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் ஒரு நடிகர். ஒரு தயாரிப்பாளர். டைரக்டர். ஸ்டண்ட் சொல்லித் தந்து அதைக் காட்சிகளாகப் பரிமளிக்க வைக்கும் நிபுணர். பாடகர்.. இப்படிப் பல பரிமாணங்களுடன் மிளிர்பவர் இவர்.

அனைவரையும் தியேட்டர்களில் தங்கள் இருக்கைகளிலிருந்து துள்ளிக் குதிக்க வைக்கும் இவர் வாழ்க்கை சோக மயமான ஆரம்பத்தில் துவங்கியது.

 ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய சிறு பை. கையில் இருந்த ஒரு டாலர் விமானநிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்க. பழப்பையோ அம்மா மகனுக்காக ஆசையாக வாங்கித் தந்தது.

பயந்த முகத்துடன் விமானநிலையம் வந்து தந்தை, தாய் இருவரையும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிய அந்தச் சிறுவன் தான் ஜாக்கிசான்.  மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தையை பிரசவம் பார்க்க உதவிய டாக்டருக்கே 20 டாலருக்கு விற்க எண்ணியவர் அவர் தந்தை! ஏழு வயது வரை கஷ்டப்பட்டு வளர்த்து விட்டு இனிமேலும் வளர்க்க முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது, பையனை அவனது சிஃபு (ஆசிரியர்) யூ சா யூயென் என்பவர் சொற்பத் தொகையை அவனது பெற்றோருக்குத் ‘தள்ளி விட்டு” தனது சீன ட்ராமா அகாடமியில் சேர்த்துக் கொண்டார். அடிதடி, சிலம்பம், குதித்தல், தாண்டல் உள்ள எல்லா சர்க்கஸ் வேலைகளும் அங்கே அத்துபடி!

 காலத்தின் வேகமான மாற்றத்தால் தனது மாணவர்களை திரைத்துறைக்கு அனுப்ப வேண்டியிருந்தது சிஃபுவுக்கு!

அங்கே தான் ஜாக்கிசானுக்கு அடித்தது அதிர்ஷ்டம். முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் நடிக்க அவனை டைரக்டர் அழைத்தார்.

என்ன காட்சி? எப்படி நடிக்க வேண்டும்?

“அங்கே போய்ப் படு. செத்தவன் போல இருக்க வேண்டும்.” இது தான் திரைத்துறையில் அவர் “நடித்த” அல்லது பிணம் போல் “படுத்த” முதல் காட்சி.

படிப்படியாக எல்லா ஸ்டண்ட் காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்து பத்தொன்பதாவது வயதில் ஆக் ஷன் டைரக்டர் ஆகி விட்டார் அவர்.

எதற்கு டைரக்ட் செய்கிறாய்; நீயே நடி என்று ஒரு படத் தயாரிப்பாளர் கூற 1976ல் “லிட்டில் டைகர் ஃப்ரம் காண்டன்” என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்ஸுடன் சிறிய மீசையுடன் தோன்றினார் ஜாக்கிசான்.

 ப்ரூஸ் லீ அப்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். அவருடன் இரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் ஜாக்கி சான். அவரது நடிப்பைப் பார்த்த ப்ரூஸ் லீ தன்னுடன் வருமாறு அழைத்து அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ப்ரூஸ் லீ மனதில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அடுத்த ஆறாம் நாள் ப்ரூஸ் லீ இறந்து விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை ஜாக்கிசான் கேட்டு மனம் நொந்தார்.

 1978ல் வெளியான ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ என்ற படம் அவருக்கு திரைத்துறையில் ஒரு ப்ரேக்கைத் தந்தது. அன்று வெற்றி ஏணியில் ஏறத் தொடங்கியவர் ஏணியின் உயரமே தெரியாமல் இன்னும் ஏறிக் கொண்டே இருக்கிறார்.

சூப்பர் ஸ்டாராக அவர் இருநூறு படங்களுக்கும் மேலாக நடித்து விட்டார்.

மின்னல் வேக மன்னனாக அவரது அதிரடி நடிப்பு உலகையே அசத்தி விட்டது. ஒவ்வொரு படமும் வெற்றி.

சண்டை வீரர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி ட்ரங்கன் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வெற்றி கண்ட அவர் மீண்டும் டரங்கன் மாஸ்டர் -|| என்று 1994ல் நடித்து மாபெரும் வெற்றியை அடைந்தார்.

நிமிஷத்திற்கு நிமிஷம் சாகஸம் என்ற ரீதியில் ஒவ்வொரு காட்சியிலும் உயிரே போய்விடும் என்ற நிலையில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு யாரும் இன்சூரன்ஸ் தர முன்வரவில்லை.

போலீஸ் ஸ்டோரி என்ற படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து ஆர்மர் ஆஃப் காட் என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அதில் கோட்டை ஒன்றிலிருந்து மரக்கிளைக்குத் தாவும் காட்சியை அவர் வடிவமைத்தார். ஆனால் தவறி, ஒரு பாறையின் மீது மோத அவர் மண்டையில் பலமான அடி. அவரது ஒரு காது கேட்கும் சக்தியை நிரந்தரமாக வெகுவாக இழந்து விட்டது.

தலை முதல் பாதம் வரை அவர் உடலில் அடிபடாத இடமே கிடையாது.    ட்ரங்கன் மாஸ்டர் -||ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது. ஆர்மர் ஆஃப் காட் படத்தில்  மண்டையில் அடி. தண்டர் போல்ட் என்ற படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் கண் இமைகள் சிதைந்தன.  மிராக்கிள் படத்தில் வலது கண்ணும் ட்ரங்கன் மாஸ்டர் படத்தில் இடது கண்ணும் பாதிக்கப்பட்டன. ட்ராகன் ஃபிஸ்ட் என்ற படத்தில் மூக்கு மூன்று முறை உடைபட்டது. ரம்பிள் இன் தி ப்ராங்க்ஸ் என்ற படத்தில் கன்னத்தில் வெட்டுக் காயம் ஏற்பட, ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ படத்தில் பற்கள் உடைந்தன. கழுத்துப்பட்டை, வலது தோள், முதுகு, வலது கை, விரல்கள் ஆகிய அங்கங்கள் சூப்பர் காப், தண்டர் போல்ட், போலீஸ் ஸ்டோரி, ப்ராஜெக்ட் ஏ ஆகிய படங்களில் சேதம் அடைந்தன. இடுப்பு ஆர்மர் ஆஃப் காட் படத்தில் முறிய இடது பாதம் சிடி ஹண்டர் படத்தில் முறிந்தது. 

போதும் போதும் லிஸ்ட் என்கிறீர்களா? இது தான் அவர் ஸ்டண்டின் துணிச்சல்!

அவரது கால்களுக்கு எந்தப் படமும் சிறிதாகவே இருக்கிறதே என்பது தான் அவர்களது ரசிகர்களின் விமரிசனம்.

ஏராளமாகப் பணத்தைச் சம்பாதித்த அவர் பெருமளவில் அதை நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு உதவி வருகிறார். உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி, ஏழைகள் படிக்க உதவி என பல்வேறு விதங்களில் இவரது தொண்டு இன்றும் தொடர்கிறது.

எண்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிய இவரது வெற்றிப் பட்டியல் மிக நீண்ட ஒன்றாகும்.

தாய்ப்பாசத்துடன் தாயை மீண்டும் பின்னால் சந்தித்த இவர், அவரைத் தன் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் செல்வார். ஆனால் பயங்கரமான சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்படும் போது அவர் காப்பி கலக்கச் சென்று விடுவார். காட்சி முடிந்தவுடன் நகைச்சுவையாகப் பேசும் போது அங்கு ஆஜராகி விடுவார். 

தனது மனைவி பற்றி அவர் பகிரங்கமாகப் பேசுவதே இல்லை. ஒரு முறை ஒரு பத்திரிகையாளர் அவரிடம் உங்களுக்குத் திருமணம் நடந்து விட்டதா என்று கேட்க ஒரு கேர்ள் ப்ரண்ட் இருப்பதாக ஜாக்கி சொல்ல ஒரு பெண்விசிறி பாலம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்து அவர் கப்சிப்.

அமெரிக்காவையும் சீனாவையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுவேன் என்று தனது வாழ்க்கை பற்றிய லட்சியத்தைச் சொல்லும் ஜாக்கிசானை வெறும் ஸ்டண்ட் நடிகர் என்று மட்டும் சொல்லி முடித்து விட முடியாது. உலகம் காணும் அபூர்வமான மனித நேயப் பண்பாளர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!

**