அடுத்து சுந்தரகாண்டத்தில் ப்ரம்மாஸ்திரத்தால் ஹனுமார் கட்டுண்டது என்ற நாற்பத்தெட்டாவது அத்தியாயத்தில் ஹனுமாருக்கு பிரம்மா வரம் அருளிய செய்தியைப் பார்க்கிறோம்.
கடுமையான யுத்தத்தில் ஜம்புமாலி, விரூபாக்ஷன்,அக்ஷயகுமாரன் உள்ளிட்டோர் ஹனுமாரால் கொல்லப்பட்டனர்.
இதையறிந்த ராவணன் ஆத்திரத்துடன் இந்திரஜித்தை அழைத்து அவனை ஹனுமானை வெல்லுமாறு கூறி அனுப்பினான். பல வித பாணங்களைத் தொடுத்து அவன் ஹனுமார் மீது விட்டான். ஆனால் அவை ஒன்றும் ஹனுமாரை பாதிக்கவில்லை.
இதனால் கவலையுற்ற இந்திரஜித் ஹனுமார் மீது ப்ரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அந்த அஸ்திரத்தல் அவன் ஹனுமாரைக் கட்டிப் பிடித்து விட்டான். ஹனுமார் கை கால்களை அசைக்க முடியாதவராய் கீழே விழுந்தார்.
அப்போது அவர் பிரம்மாவின் மஹிமையினால் தனது வேகம் குன்றியிருப்பதைக் கண்டு கொண்டு, “என் அஸ்திரத்தால் கூட நீ அடங்கி இருத்தல் க்ஷண காலமே” என்ற பிரம்மாவின் அனுக்ரஹத்தை அப்போது நினைத்துக் கொண்டார்.
சுந்தர காண்டம் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 41
ஹனுமான் – ஹனுமார்
ஸ்வாயம்புவை: – ஸ்வயம்புவினுடைய
மந்த்ரை – மந்திரங்களினால்
அபிமநத்ரிதம் – ஜபித்து விடப்பட்ட
ப்ரஹ்மாஸ்த்ரம் – ப்ரம்மாஸ்திரத்தைப் பற்றியும்
தத: – அப்படியிருந்தும்
பிதமஹாத் – பிரம்மாவிடத்தினின்று
வரதானம் – வரம் பெற்றிருப்பதையும்
சிந்தயாமாஸ – மனதினுள் ஆராய்ச்சி செய்து கொண்டார்.
ப்ரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டியதையும் அதிலிருந்து விடுவித்துக் கொள்ள ப்ரமாவின் அனுக்ரஹத்தையும் பற்றி ஹனுமார் சிந்தித்தார்.
அப்போது அரக்கர்கள் ஹனுமார் செயலற்று வீழ்ந்து கிடப்பதைப் பார்த்து உறுதியான சணல் நார்களாலும் மரப்பட்டைகளாலும் அவரைக் கட்டினார்கள்.
ப்ரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு இருப்பவரை மரப்பட்டைகளாலும் சணல்நார்களாலும் கட்டினால் இன்னொரு கட்டு போடப்பட்டபோது ப்ரம்மாஸ்திரம் விடுபட்டு விடும்.
ஸ பத்தஸ் தேந வல்கேந விமுக்தோஸ்த்ரேண வீர்யவாந் |
அஸ்த்ரபந்த: ஸ சாந்யம் ஹி ந பந்த மநுவர்த்ததே ||
ஸ: வீர்யவாந் – அந்த வீர்யவான்
வல்கேந ச – மரப்பட்டைகளினால்
பந்த: – கட்டுண்டவராய்
தேன அஸ்த்ரேண – அந்த அஸ்திரத்தால்
விமுக்த: – விடுபட்டார்
ஹி – ஏனென்றால்
ஸ: – அந்த
அஸ்த்ர பந்த: – அஸ்திரக்கட்டானது
அன்யம் வ தே – மற்றொரு பிணையை
ந அநுவர்ததே – ஒத்துக் கொள்ளாது
சுந்தர காண்டம் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் ஸ்லோக எண் 49
ஹனுமார் ப்ரம்மாஸ்திரத்திலிருந்து விடுபட்டதையும் மரப்பட்டைகளினால் மட்டும் கட்டுண்டிருப்பதையும் இந்திரஜித் உணர்ந்து கொண்டான். ஹனுமாரோ தான் ப்ரம்மாஸ்திரத்திலிருந்து விடுபட்டதைக் காட்டிக் கொள்ளவில்லை.
அவரை அரக்கர்கள் இழுத்துக் கொண்டு போய் ராவணனிடம் நிறுத்தினார்கள்.
கோபம் கொண்ட ராவணன் ஹனுமாரைப் பார்த்து, “நீ யார். உள்ளதை உள்ளபடி சொல். எதற்காக இங்கு நீ வந்தாய்?” என்று கேட்டான்.
உடனே ஹனுமார் கீழ்க்கண்டவாறு பதிலைத் தருகிறார்:
ரக்ஷணார்த்தந்து தேஹஸ்ய ப்ரதியுத்தா மயா ரணே |
அஸ்த்ரபாஷைர் ந ஸக்யோஹம் பந்தும் தேவாஸுரைரபி ||
பிதாமஹா தேவ வரோ மமா ப்யேஷோப்யுபாகத: |
ராஜாநம் த்ரஷ்ட்காமேந மயாஸ்த்ர மநுவர்த்திதம் ||
சுந்தர காண்டம் ஐம்பதாவது அத்தியாயம் ஸ்லோக எண்கள் 15,16,17
ரணே – யுத்தத்தில்
தேஹஸ்ய – சரீரத்தின்
ரக்ஷணார்த்தம் து – பாதுகாப்பிற்காகத்தான்
மயா – என்னால்
ப்ரதியுத்தா: – எதிர்த்து சண்டை செய்யப்பட்டார்கள்
தேவாசுரை: அபி – தேவர்களாலும் அசுரர்களாலும் கூட
அஸ்த்ரபாஷைர் – அஸ்திரங்களைக் கொண்டு
பந்தம் – பிணைக்க
அஹம் – நான்
சக்ய ந: – சாத்தியமானவனில்லை
ஏஷ: வர: அபி – இந்த வரமும்
மம – எனக்கு
பிதாமஹான் ஏவ- பிரம்மதேவனிடத்தினின்றே
அம்யுபாகத: – கிடைத்தது
ராஜாநம் – அரசரை
த்ரஷ்டுகாமேந – காண விரும்பியதால்
மயா – என்னால்
அஸ்த்ரம் – ப்ரம்மாஸ்திரமானது
அநுவர்த்திதம் – ஏற்றுக்கொள்ளப்பட்டது
அபி – என்றாலும் கூட
ராக்ஷஸை: – அரக்கர்களால்
அபிபீடித: – பிடிக்கப்பட்டவனாக
து – ஆனதுமே
அஸ்த்ரேண – பிரம்மாஸ்திரத்திலிருந்து
அஹம் – நான்
விமுக்த: – விடுபட்டேன்
இப்படிக் கூறி பின்னர் ராவணனுக்கு ஹனுமார் தனது உபதேசத்தை ஆரம்பித்தார்.
பிரம்மா ஹனுமாருக்கு கொடுத்த இந்த வரம் பற்றிய முழு விவரங்களும் இங்கு கூறப்படவில்லை;
Date uploaded in Sydney, Australia – 13 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்– ஓர் ஆய்வு – 3
(ஆர், சேஷாத்ரிநாதன்)
கிஷ்கிந்தாவும் அதன் மக்களும்
சீதையை இராவணன் அபஹரித்துச் சென்று விடுகிறான். அவளைத் தேடி வரும் வழியில் இராவணனுடன் சீதையைக் காப்பாற்ற போரிட்டு குற்றுயிருடன் கிடக்கும் ஜடாயுவைச் சந்தித்து விவரங்களைத் தெரிந்து கொண்டு ஜடாயுவுக்கு மோட்சம் அளித்துவிட்டு வரும் வழியில் கபந்தனையும் அழித்து அவன் மூலம் சுக்ரீவனைச் சந்திக்க வருகின்றனர். வழியில் சபரிக்கு மோட்சம் அளித்து விட்டு ரிஷ்யமுக மலைக்கு அருகில் வருகின்றனர். இந்த மலைக்கு ரிஷ்யமுக என்ற பெயர் ஏன் வந்தது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. இந்த மலை ஏழு கொம்புகள் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.
2.மதங்க முனிவர் இங்கு அமைதியாகத் தவம் புரிந்ததால் இந்தப் பெயர் வந்தது
.3. இந்த மலையில் உள்ள மான்களில் மூன்று வகை உண்டு. கோகர்ண, கேன், ரிஷ்ய .இந்த மூன்று வகைகளில் ரிஷ்ய என்ற மான் மட்டும் மிக அமையதியாக இருக்கும். ஆகவே இந்தப் பெயர் வந்தது..
4. பொய் சொல்பவர்கள், அதர்மிகள் இந்த மலைக்கு வந்தால் இறந்து விடுவர். மதங்க முனிவர் அமைதியாக இருந்து வேதங்களை உச்சரித்ததால் இந்தப் பெயர் வந்தது.
இந்தப் பகுதி முதலில் இந்த உலகத்தைப் படைத்த பிரம்மாவால் உருவாக்கப்பட்டது. அது ஒரு தடிமனான உறையைக் கொண்டிருந்தது. பசுமையான மரங்கள், செங்குத்தானதாகவும், கொடிகள் மற்றும் அடிமரங்களால் அடர்த்தியாகவும் மூடப்பட்டிருந்தன. ஏறுவது மிகக்கடினம். இதனால் அது மேலும் அணுக முடியாததாக மாறியது. அதன் மீது எங்கும் கொடிய விஷமுள்ள பாம்புகள் அதிகம் இருந்ததால் அந்த இடத்திற்கு யாரும் வருவதில்லை. மக்கள் யாரும் வசிக்காததால் அந்த இடத்திற்கு வருவதைப் பற்றி யாரும் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. மேலும் கிஷ்கிந்தையின் அரசனான வாலி, துந்துபி என்ற அரக்கனைக் கொன்று தூக்கி வீசியபோது அவனது இரத்தம் தோய்ந்த உடல் ரிஷ்யமுக மலையில் உள்ள மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்து அதனின் புனிதத் தன்மையை அழித்தது. இதைக் கண்ட மதங்க முனிவர் சினமுற்று வாலியோ அவரைச் சார்ந்தவர்களோ இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் அவர்கள் தலை வெடித்துச் சிதறிவிடும் என்று சபிக்கிறார்.
கிஷ்கிந்தாவில் வசிப்பவர்கள் நாம் நினைப்பது போல உண்மையான குரங்குகளோ கரடிகளோ அல்ல. இராமாயணத்தில் வரும் கிஷ்கிந்தா மக்களை நவீன கால “குரங்குகள்” அல்லது “கரடிகள்” என்று எளிதாக வகைப்படுத்த முடியாது. அவர்கள் ஒரு தனித்துவமான, புராணப்பூர்வமான இனக் குழுவினர்.
கிஷ்கிந்தா மக்கள்: ஒரு தனித்துவமான இனம்
கிஷ்கிந்தா மக்கள் மனிதர்களும் இல்லை; நமது உலகத்தில் உள்ள விலங்குகளும் அல்ல. அவர்கள் ஒரு “வானரம்” (வானத்தில் செல்பவர்) என்று வர்ணிக்கப்படும் புராண இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வார்த்தைக்கு “குரங்கு” என்பது நேரடியான மொழிபெயர்ப்புதான், ஆனால் அது முழுக் கருத்தையும் வெளிப்படுத்தாது.
வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள்:
அரசியல் அமைப்பு:
அவர்களுக்கு சுக்கிரீவன், வாலி போன்ற அரசர்கள் இருந்தனர். ஒரு நன்கு அமைக்கப்பட்ட இராஜ்யம் (கிஷ்கிந்தா), அரண்மனைகள், சேனை, மந்திரிகள் (ஹனுமன், மயிந்தன், ஜாம்பவான்) ஆகியவை இருந்தன.
மொழி மற்றும் அறிவு:
அவர்கள் மனிதர்களுடன் பேசவும், உரையாடவும், திட்டமிடவும் முடிந்தது. சங்கீதம், நடனம் போன்ற கலைகளில் வல்லவர்கள். ஹனுமன் முதன் முதலில் இராம இலக்ஷ்மனர்களை சந்தித்தபோது சரளமாக சம்ஸ்க்ருதத்தில் உரையாடினான். ஹனுமனது மொழி வளத்தை இராமன் இலக்ஷ்மணனிடம் புகழ்ந்து சொன்னதாக அனைத்து இராமாயணங்களும் தெரிவிக்கின்றன.
சமூக வாழ்க்கை:
அவர்கள் கூட்டமாக வாழ்ந்தனர், சடங்குகள், விழாக்கள், மரபுகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தனர். இது விலங்குகளின் இயல்பான கூட்டம் அல்ல, ஒரு நாகரிகம் கொண்ட சமூகம்.
வெளிப்புறத் தோற்றம் மற்றும் தனித்துவம்:
கலப்புத் தோற்றம்:
அவர்களின் தோற்றம் மனித மற்றும் விலங்குக் கூறுகளைக் கலந்தது. சிலர் கிட்டத்தட்ட மனிதத் தோற்றத்தில் (எ.கா.: சுக்கிரீவன், வாலி), சிலர் குரங்கு அல்லது கரடியின் முகத்தோடு (எ.கா.: ஹனுமன், ஜாம்பவான்) இருந்தனர்.
தனித்துவம்:
ஒவ்வொரு வானரனுக்கும் தனித்துவமான தோற்றம் இருந்தது. சிலர் மாபெரும் உருவம் கொண்டவர்களாகவும் (எ.கா.: வாலி, ஹனுமான்), சிலர் சாதாரண அளவிலும் இருந்தனர்.
Sanskrit, Tamil, Prakrit inscriptions found in Egyptian royal tombs point to strong Indian trade and community networks Researchers have identified 2,000-year-old Tamil-Brahmi, Prakrit and Sanskrit in…
பவழம் போன்று சிவந்த உதிர நீர், எங்கும் சூழ்ந்ததால், உப்பு, தேன், நெய், தயிர், பால், கரும்புச் சாறு,சுத்த நீர் என்று பிரிந்து ஏழு கடல்கள் என்று கூறப்படும் பெயர் மறைந்து, எல்லாக் கடல்களுமே உதிரக் கடல் என்று கூறும்படி ஆயின.ஸம்ஸ்க்ருதத்தில் இவற்றை லவண (உப்பு), க்ஷீர (பால்), க்ருத (நெய்), ததி (தயிர்), சுரா (மது), இக்ஷு (கரும்புச் சாறு), ஜல (தண்ணீர்) சாகரங்கள் என்பர்
***
ஆழ்வார் பாடலில் ஏழு கடல்கள்
உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு
குலச்சிறப்பமைந்தவள், (இயல், இசை, நாடகம் என்ற) முன்று
வகையான தமிழைத் தந்த முன்னைப் பழம் பொருளான உமை
அருளிய குழந்தையே,
செருக்கும் அரக்கர்கள் பொடி பட வடிவுளகரத்தில் அயில்
கொடு பொருது இமையவர் பணி திருத்தணி பொன் பதி
தனில் மயில் நடவிய பெருமாளே. … கர்வம் கொண்ட அசுரர்கள்
பொடிபட்டு விழ, அழகிய கையில் வேல் கொண்டு சண்டை செய்து,
தேவர்கள் பணிந்து போற்றும் திருத்தணிகையாகிய அழகிய தலத்தில்மயில் மீது நடனமிடும் பெருமாளே.
***
திருவிளையாடல் புராணக் கதை
* மறைப் பொருளைத் தேவிக்கு உபதேசித்த போது, தேவியார் கவனக்குறைவாக இருப்பதைக் கண்ட சிவபெருமான் நீ மீன் பிடிக்கும் வலைஞருக்கு மகளாகுக. அப்போது உன்னை மணப்பேன் எனச் சபித்தார். மீனவள் வலைஞரால் வளர்க்கப்பட்டு வந்தாள். சிவன் தேவிக்கு உபதேசித்த போது முருகனையும், கணபதியையும் உள்ளே விட்ட காரணத்தால் நந்தி தேவரும் சுறா மீனாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். இந்தச் சுறாமீன் வலையில் அகப்படாது பல
இடர்களைச் செய்ததால் வலைஞர் அரசன் மீனைப் டிப்பவர்களுக்குத் தன் பெண்ணை மணம் செய்விப்பேன் என அறிவித்தான். சிவபெருமான் வலைஞன் போல வந்து மீனைப் பிடித்துத் தேவியை மணந்தார்.
***
** பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:
சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
—subham—
Tags- 32 அறங்கள், 14 உலகங்கள், 14 லோகங்கள் 7 மலைகள், 7 கடல்கள், அஷ்டமா சித்திகள், எட்டு வகை அபூர்வ சக்திகள், திருவிளையாடல் புராணம், சுறாமீன் கதை, திருப்புகழ், புஸ்தகப் பித்தர்கள் Part 19 , அருணகிரிநாதர் அரிய செய்திகள் , சொல் அழகு, பொருள் வளம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹா சிவராத்திரி (15-2-2026)
சிவ ரகசியம்!
ச.நாகராஜன்
சிவராத்திரி மஹிமை
1. சிவனும் சக்தியும் இணைந்த புனித தினம்.
2. சிவ – பார்வதி திருமண தினம் இது.
3. சிவன் லிங்கமாக புவியில் அவதரித்த இரவு.
4. மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல கணவனை அடைய பூஜிக்க உகந்த நாள்.
5. மணமான மங்கையர் மாங்கல்ய பாக்யத்துடன் சகல சௌபாக்கியமும் பெற பூஜிக்க உகந்த நாள் இது.
6. அனைவரும் தங்கள் பாவத்தைப் போக்கி சகல நலன்களையும் அடைய உகந்த நாள் இது. இரவு விழித்து விரதம் இருந்தால் தீய எண்ணங்கள் விலகும். கோபம், பொறாமை, பேராசை உள்ளிட்டவை அகலும்.
7. சிவலிங்க அபிஷேகம், சிவ பூஜை உள்ளிட்ட அனைத்தையும் செய்ய உகந்த நாள்.
சிவனின் ஐந்து முகங்கள்
1) சத்யோஜாதம் மேற்கு முகம்
2) வாம தேவம் – வடக்கு முகம்
3) அகோரம் – தென் முகம்
4) தத்புருஷம் – கிழக்கு முகம்
5) ஈசானம் – ஊர்த்துவ முகம்
சிவனின் ஐந்து தத்துவங்கள்
லிங்கத்தினுடைய கீழ்ப்பாகம் பிரம பீடமானது, பிரம்ம தத்துவம். கீழ் ஆவுடையார் மற்றும் மேல் ஆவுடையார் விஷ்ணு தத்துவம். சோம சூத்திரம் என்று தீர்க்கமாக உள்ளது இது.
ஆவுடையாரைக் கட்டிக் கொண்டு மேலே லிங்காகாரமாய் நீட்டிக் கொண்டிருக்கும் வரிசையில்
கீழ்ப்பாகம் ருத்திரன்
நடுப்பாகம் ஈசுவரன்
மேல்பாகம் சதாசிவம்
ஆக பிரம்ம தத்துவம், விஷ்ணு தத்துவம், உருத்திர தத்துவம், ஈசுவரன், சதாசிவம் என ஐந்து தத்துவம் கொண்டது லிங்கம்.
ஐந்து அக்ஷரம்
ஐந்து தத்துவம் கொண்ட லிங்கத்திற்காக ‘நமசிவாய’ என்னும் பஞ்சாக்ஷரம் ஏற்பட்டுள்ளது. –
பஞ்சாமிர்தம்
சிவனுக்கு உகந்த அபிஷேகம் பஞ்சாமிர்த அபிஷேகம். இதில் உள்ள
ஐந்து பொருள்கள் பால்,தயிர்,நெய்,தேன்,சர்க்கரை .
பஞ்சபூத ஸ்தலங்கள்
பிருதிவி (நிலம்) – திருவாரூர், கச்சி
அப்பு (நீர்) – திருவானைக்கா
தேயு (நெருப்பு) – திருவண்ணாமலை
வாயு (காற்று) – காளஹஸ்தி
ஆகாசம் (ஆகாயம்) – சிதம்பரம்
விராட்புருஷனின் அங்க ஸ்தலங்கள்
காளத்தி – கழுத்து
சிதம்பரம் – இதயம்
அருணாச்சலம் – வயிறு
திருவானைக்கா – நாபி
திருவாரூர் – மூலாதாரம்
சிவனும் சக்தியும்
அம்பிகையின் கையில் லிங்கம் உள்ள தலம் கேதாரம்
அம்பிகை கட்டிக் கொண்டு அவயவங்கள் லிங்கத்தில் அழுந்தி இருக்கும் தலம் காஞ்சிபுரம்.
மார்க்கண்டேயரது ருத்ராக்ஷம் அழுந்தி இருக்கும் தலம் திருவீழிமலை.
Date uploaded in Sydney, Australia – 12 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version was posted yesterday
ஆங்கில எழுத்து H– ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “H”
ஹலாயுத (हलायुध).—1.பலராமனின் பெயர்; கலப்பை ஏந்தியவன் என்பது பொருள்; ஹல என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லும் கலப்பையும் ஒரே வேர்ச் சொல்ல்லிலிருந்து பிறந்தவை. 2.அபிதான ரத்னமாலா என்ற நூலின் ஆசிரியர் பெயர்.
***
ஹால – சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாதவாகன அரசன்; விக்ரமாதித்தன் போலவே கவிகளை ஆதரித்தவன்; பிராகிருத மொழியில் காதா சப்த சதி என்ற அகத்துறைக் கவிதைகளைத் தொகுத்தவன்.
***
ஹம்பி – விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகர் ; முஸ்லீம்கள் படையெடுப்பில் அழிக்கப்பட்ட நகரம்; இப்போது எஞ்சியுள்ள சின்னங்களும் கோவில்களும் அதன் மகத்தான பழங்காலத்தைக் காட்டி நிற்கின்றன. விட்டல் கோவில், விரூபாட்ச கோவில், தாமரை மஹால், ஹம்பி பஜார், இசைத் தூண்கள், கல் ரதம் ஆகியன பல சதுரமைல்களுக்குப் பரவி நிற்கின்றன. கர்நாடக மாநிலத்தில் ஹாஸ்பெட் அருகில் உள்ளது.
***
ஹரிஹரன்
விஷ்ணுவும் சிவனும் இணைந்த உருவம்; சங்கர நாராயணன்; ஹரியும் சிவனும் ஒன்று என்ற ஒற்றுமையை விளக்கும் மூர்த்தி.
***
ஹரிஜன்
தாழ்த்தப்பட்ட ஜாதியினரும் ஹரியின் புதல்வர்கள் – இறைவனின் பிள்ளைகள் – என்பதை உணர்த்த மஹாத்மா காந்தி உருவாக்கிய சொல்; 1930–35 ஆண்டுகளில் புழக்கத்துக்கு வந்த சொல்.
***
ஹவிஸ்
தமிழில் அவி; Havis (Sanskrit: हविस्)
சங்க இலக்கியம், திருக்குறள் முதலிய நூல்களில் 2000 ஆண்டுகளாகப் பயன்படும் சொல்; வேள்வித் தீயில் இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் அவி உணவு ஆகும்; பொதுவாக நெய் கலந்த சோறும் ஏனைய பொருட்களும் இதில் அடக்கம்.
***
ஹட யோகா
யோக முறைகளில் ஒன்று; மரணத்தை வெல்லவும், அபூர்வ சக்திகளை பெறவும் உதவும் முறை; ஆசனம் பிராணாயாமம் தியானம் என்பனைத்தில் உண்டு; தமிழ்ச் சித்தர்களும் இதைப் பின்பற்றி பாடியுள்ளனர்.
***
ஹர்ஷ வர்தன ( 606 to 647 CE)
வட இந்தியாவையும் நர்மதை நதிக்கு அப்பாலுள்ள தென் இந்தியப்பகுதிகளையும் ஆண்ட மன்னன் ; பிரபாகர் வர்த்தனனின் புதல்வன்; சிறந்த கவிஞன்; நாகானந்தம் ரத்னாவளி, பிரியதர்சிகா முதலிய சம்ஸ்க்ருத நூல்களை இயற்றினார். இவரது அரசவைக் கவிஞர் பாணபட்டர் , ஹர்ஷ சரிதம் என்ற சம்ஸ்க்ருத நூலில் இவரது சரித்திரத்தை எழுதியுள்ளார்.
***
ஹரித்வார்
உத்தர கண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலம் ; கங்கை நதி இமயமலையிலிருந்து சமவெளிக்குள் அசுர வேகத்தில் பாயும் நகரம். சிவனின் தலையிலிருந்து பாய்ந்த கங்கை, ஹரியின் பாதங்களைத் தொட்டு வரும் இடம்; மேலும் அர்த்த கும்ப மேளா என்னும் மினி கும்பமேளா நடக்கும் நான்கு நகரங்களில் இதுவும் ஒன்று; மாயா என்ற பெயரில் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று .இதைத் தாண்டித்தான் நான்கு முக்கிய இமயமலைத் தலங்களுக்குச் செல்ல வேண்டும்.
***
ஹேரம்ப
கணபதியின் 16 நாமங்களில் ஒன்று ; ஐந்து முகங்களுடன் பத்து கைளுடன் உள்ள உருவம்; பக்தர்களைக் காக்கும் விநாயகர் என்பது பொருள்; பத்து கைகளில் பல்வேறு ஆயுதங்கள் உண்டு; பலவீனமானவர்களைக் காக்கும் உருவம்; சிம்ம வாகனத்தில் காட்சி தருவார் .
***
இமய மலை
ரிக்வேதம் முதல் சங்க இலக்கியம் வரைப் புகழப்படும் உலகின் முக்கிய மலைகளில் ஒன்று ; இமயம் என்றால் பனி என்று பொருள்; குமார சம்பவத்தில் முதல் பத்து ஸ்லோகங்களில் காளிதாசன், புகழ்ந்த செய்திகளை சங்க இலக்கியத்தில் காணலாம். கங்கை, சிந்து, பிரம்மபுத்ரா உற்பத்தியாகும் இடம்; கைலாஷ் என்னும் புனிதத் தலம் உள்பட புகழ்பெற்ற தலங்கள் எல்லாம் உள்ளன; உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் உள்பட நிறைய உயரமான சிகரங்களை உடைய மலை இது ஒன்றுதான்; சுமார் 1500 மைல் நீள த்துக்கு இந்தியாவின் வட பகுதியில் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது .
***
ஹிந்து
சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் உலகின் மிகப் பழைய மதத்துக்குப் பாரசீகர்கள் சூட்டிய பெயர் ஹிந்து; சிந்து நதிக்கரையில் வேதத்தை முழக்கியவர்களை அவர்கள் இந்து சொன்னதற்குக் காரணம்— பாரசீக மொழியில் ச என்னும் எழுத்து கிடையாது; சிந்து நதியை இண்டஸ் என்றும் அதன் கரையில் வசித்தவர்களை இந்து என்றும் அழைத்தார்கள்; அவர்களிடமிருந்து கிரேக்க மொழிக்கும் அந்தச் சொல் தாவியது; ஹிம்சை செய்யாதவர்கள் ஹிந்துக்கள் என்ற பொருளையும் கற்பிக்கலாம் ; மறுபிறப்பு , கர்ம வினைக் கொள்கை, ஒரே தெய்வத்தைப் பல உருவங்களில் வழிபடும் முறை ஆகியன இந்து மதத்தின் சிறப்பு அம்சங்கள்; உலகத்தில் பெண்களையும் பெண் தெய்வங்களையும் வணங்கும் ஒரே மதம் இந்து மதம் இந்து மதம் தான்; வேதங்களையும் அதன் கருத்துக்களை எதிரொலிக்கும் தெய்வீகத்த தமிழ்ப் பாடல்களையும் போற்றுவோர் இந்துக்கள்; ரிக் வேதத்திலும் ராமாயண, மஹாபாரத இதிகாசங்களிலும் புராணங்களிலும் காணப்படும் இந்து தெய்வங்கள் மற்றும் அவர்களது சிறப்புகள் முதலியன சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் பரலாகக் காணப்படுகின்றன ; இந்துக்கள் கற்பித்த யோகாசனத்தை இன்று உலகம் முழுதும் ஏற்று பின்பற்றுகின்றனர்.
***
ஹிரண்ய தானம்
ஹிரண்யம் என்றால் தங்கம் என்று பொருள். ரிக் வேத காலம் முதல் தற்காலம் வரை பயிலப்படும் சொல் ; இந்துக்கள் பின்பற்றும் பதினாறு தானங்களில் ஹிரண்ய தானம் முக்கியமானது; 1400 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோனேஷியாவை ஆண்ட மூலவர்மன், விஜய நகர சாம்ராஜ்ய மன்னன் கிருஷ்ணதேவராயர் போன்றோரின் கல்வெட்டுகளில் இந்த தனத்தைக் காணமுடிகிறது ,
***
ஹீனயானம்
புத்த மதத்தின் இரண்டு முக்கியப் பிரிவுகள் ஹீனயானம் , மகாயானம் ஆகும்; ஹீனயானம் என்றால் சிறிய வாஹனம் ; அதாவது சிறிய வழிமுறை; இவர்கள் புத்த மதத்தின் பழைய கொள்கைகளை மாற்றாமல் ஏற்றவர்கள்; பிற்காலத்தில் தோன்றிய மகாயானம் புத்தரைத் தெய்வமாக்கி கொண்டாடத் துவங்கியது ; இதனால் புதிய முறைகள் புகுந்தன.
***
ஹிரண்யகசிபு
ஹிரண்யகசிபு , ஒரு அசுர மன்னன்; ஏற்கனவே கொல்லப்பட்ட ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனின் சகோதரன் ; பிரம்மா கொடுத்த வரத்தினால் மனிதர்களால் கொல்ல முடியாதவன்; அவனது மகன் பிரகலாதனோ பெரிய விஷ்ணு பக்தன்; எங்கும் உள்ள இறைவனைக் காட்டு என்று ஒரு தூணையுதைத்தபோது அதிலிருந்து வெளிவந்த நரசிம்மத்தினால் கொல்லப்பட்டான்.
***
ஹோம / ஹவன்
வேள்வி என்ற பெயர் சங்க காலம் முதல் உள்ளது ; சங்க கால மன்னர்கள் ராஜ சூயம், அஸ்வமேதம், சோம யாகம் முதலியவற்றைச் செய்தார்கள் ; பிராமணர்கள் முத்தீ வளர்த்து தினமும் யாகம் , ஹோமம், வேள்வி செய்தது சங்க இலக்கியம் முழுதும் உள்ளது; பெரிய யாகங்களை வேதம், புராணம் இதிகாசங்களில் காணமுடிகிறது. சுமார் 400 வகை யாகங்கள் இருந்த போதும் தற்காலத்தில் மஹா ருத்ரம், சஹஸ்ர சண்டி, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம்,சுதர்சன ஹோமம் போன்றவற்றை மட்டுமே அதிகம் செய்கிறார்கள் ; வேள்வித் தீயை வளர்த்து அதில் ஆகுதியாக பல பொருட்களை மந்திரம் சொல்லி போடும்போது இதம் ந மம – இது என்னுடையது அல்ல என்பார்கள் இது தியாக மனப்பான்மையையும் மழையையும் உண்டாக்கியது.
***
ஹுன மன்னர்கள்
சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடக்கு, வட மேற்குப் பகுதிகளை ஆண்ட முரட்டு ஜாதியினர்; ராஜ தரங்கிணி என்னும் காஷ்மீர் வரலாற்று நூலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கல்ஹணர் என்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞர் மிஹிரகுலன் என்ற ஹுன மன்னன் மலை முகட்டிலிருந்து நூற்றுக் கணக்கான யானைகளை உருட்டிவிட்டு அவை மரணம் அடைவதை அவன் வேடிக்கை பார்த்ததாக எழுதியுள்ளார்; அவன் சைவத்தை ஆதரித்து காஷ்மீரிலிருந்து புத்த மதத்தை விரட்டியாகவும் எழுதியுள்ளார் ;ஹூணர்கள் தமிழ் நாட்டினையும் இலங்கையையும் தாக்கியதாக கல்ஹணர் சொன்னபோதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை
To be continued………………
Tags- HINDU DICTIONARY, IN ENGLISH AND TAMIL, Part33; இந்துமத கலைச்சொல் அகராதி-33, ஆங்கில எழுத்து H- ல் துவங்கும் சொற்கள் ,ஹலாயுத, ஹோமம், ஹிந்து, நரசிம்மம்
Date uploaded in Sydney, Australia – 12 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 18
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 18
அளவிட முடியாதவை எவை? அருணகிரி தரும் பட்டியல்!
சி(ன்)னத் திலத் தினை சிறுமணல் அளவுடல் … சிறிய எள்ளு,
தினை, சிறு மணல் ஆகியவற்றின் அளவுள்ள உடலினை
செறித்த(து) எத்தனை … எடுத்து மறைந்த ஜன்மங்கள் எத்தனை?
சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய
லெனபல … அலை வீசும் கடலுக்கடியில் பெருத்த சுறா மீனிலிருந்து
சிறிய கடல் ஜந்து வரை எடுத்த பிறவிகள் எத்தனை?
அதுபோதா … அவையெல்லாம் போதாவென்று
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை … மலைகளிலும்
சுனைகளிலும் ஜனித்த பிறவிகள் எத்தனை?
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தில் …
பலவிதமான உடம்புகளின் புகுந்து வளர்ந்து கீழ்மைக்குரிய பெண்களின் மார்பிலே மையல் கொண்டு அலைந்தமை எத்தனை?
எத்தனை நமனுயிர் பறிகொள்வது அளவேதோ … யமன் பல பல
பிறவிகளிலும் பறித்துக் கொண்ட உயிர்கள் எத்தனை?
மனத்தி லெத்தனை நினைகவ டுகள் … மனத்திலேதான் எத்தனை
வஞ்சகமான எண்ணங்கள்?
குடி கெடுத்த தெத்தனை … வேண்டுமென்றே கெடுத்த மற்றவர்களின்
குடிகள்தாம் எத்தனை?
மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை … கொடிய மிருகம்போல்
மற்ற உயிர்களை வதைத்தது எத்தனை?
அளவிலை … இவை யாவற்றையும் எண்ணினால் அளவிட முடியாது.
விதிகரம் ஒழியாமல் வகுத்த தெத்தனை … விதி வகுத்த
வழியினின்று மாறாமல் நடைபெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை?
மசகனை முருடனை … கொசுவைப் போன்ற அற்பனகிய என்னை,
முரட்டுக்குணம் உடைய என்னை,
மடைக்குலத்தனை மதியழி விரகனை … மூடர்கள் குலத்தனான
என்னை, அறிவற்ற காமாதூரனான என்னை,
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள் புரிவாயே … உன்
மலரடிகளில் என் நெஞ்சை வைத்து உருகுதற்கு இனியாகிலும் நீ அருள் புரிவாயாக.
மாணிக்கவாசகர் தரும் பட்டியல்
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்”
பொருள்:
புல், செடி, புழு, மரம், பலவகையான மிருகங்கள், பறவைகள், பாம்புகள், கல், மனிதர்கள், பேய்கள், கணங்கள், வலிமையான அசுரர்கள், முனிவர்கள், தேவர்கள் என இந்த அசையும் (சங்கமம்) மற்றும் அசையா (தாவரம்) உலகில் உள்ள எல்லாப் பிறப்புகளிலும் நான் பிறந்து, அதனால் மிகவும் இளைத்து (வருந்தி, களைப்படைந்து) போயிருக்கிறேன்.
***
ராவணனை அழித்தவள் சூர்ப்பனகை
மூக்கறை … மூக்கு அறுபட்டவளும்,
மட்டை … அறிவில்லாதவளும்,
மகாபல … பெரும் வலிமையுள்ளவளும்,
காரணி … ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக
இருந்தவளும்,
சூர்ப்பநகைப் படு மூளி … சூர்ப்பநகையென்ற பெயருடன்,
மூளியான கொடியவளும்,
உதாசனி … அவமதிக்கத் தக்கவளும்,
மூர்க்க குலத்தி … மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில்
பிறந்தவளும்,
விபீஷணர் சோதரி … விபீஷணருக்கு சகோதரியும்,
முழுமோடி … முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை,
மூத்த அரக்கன் இராவணனோடு … அண்ணனும்
அரக்கனுமான ராவணனிடம் சென்று
இயல்பேற்றிவிட … சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட,
கமலாலய சீதையை … தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை
மோட்டன் வளைத்து … மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக்
கவர்ந்து
ஒரு தேர்மிசையே கொடு முகிலேபோய் … ஒற்றைத் தேரிலே
வைத்து மேகமண்டலம் சென்று,
மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் … பிரசித்தி பெற்ற,
அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில்
இருத்திய நாள் … (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது,
அவன் வேரற … அந்த ராவணனின் வம்சமே வேரோடு
அற்றுப்போகும்படி,
மார்க்க முடித்த … அதற்குரிய வழியை நிறைவேற்றிய
விலாளிகள் நாயகன் மருகோனே … வில்லாதி வீரர்களின்
தலைவனாம் ராமனின் மருமகனே,
வாச்சிய மத்தள பேரிகை போல் … வாத்தியங்களான மத்தளம்,
துதித்தால் பக்கத்தில் வருவான்; எதிர்த்ததால் தூரத்தில் போவான்
தவத்தினோர்க்கு உதவும் இளையோனே … தவசீலர்களுக்கு
உதவும் இளையவனே,
எத்திடார்க்கு அரிய முத்த … உன்னை வணங்காதவர்களுக்கு
அரியவனாகி, பாசங்களிலிருந்து நீங்கியவனே,
பாத்தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய பெருமாளே. … தமிழ்ப்
பாக்களால் உன்னைத் துதிப்போர்க்கு எளிமையாய் இருக்கும்
பெருமாளே.
***
சேயன் அணியன் என சிந்தையுள் நின்ற
மாயன் மணி வாள் ஒளி வெண் தரளங்கள்
வேய் விண்டு உதிர் வேங்கட மா மலை மேய
ஆயன் அடி அல்லது மற்று அறியேனே.
– திருமங்கை ஆழ்வார்.
பொருள்: (பக்தியற்றவர்களுக்கு) எட்டாதவனும், (பக்தர்களுக்குக்) கையாளாயிருப்பவனும், என் நெஞ்சினுள்ளே வந்து நின்ற ஆச்சரியபூதனும், மூங்கில்களானவை பிளவுபட்டு பிரகாசமுள்ள வெளுத்த முத்துக்களையும் ஒளியுள்ள ரத்னங்களையும் உதிர்க்குமிடமான திருமலையில் எழுந்தருளியிருப்பவனுமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருவடிகளையொழிய வேறொன்றையும் அறியமாட்டேன்.
***
சேயன் அணியன்- திருமூலர் திருமந்திரம்
மாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்
காயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்
சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்
பாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.
மாயவன் என்று ஆகி மலரோனும் இறையுமாய் உடல் என்ற காய நல்ல நாட்டிற்கு கரு என்ற முதலாக ஆனவன். மகவு என்றானவன் எடுத்து அணிந்துக் கொள்ள வேண்டியவன் தீத்திக்கும் நல்ல தீங்கரும்பாகவும் அமுதாகவும் நின்று அண்ணிக்கின்றானே. பின்குறிப்பு – ஏகமே அநேகமாக நின்று அருள்கின்றது–திருமந்திரம்
பவநோயின் அலைப்பல வேகி … இந்த சம்சார சாகரத்தில் பிறவி
நோய் என்னும் பல அலைகள் வீசவும்,
சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் … கோபம்
கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,
பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து … பிறவியின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,
உனையோதி தலைமீதில் பிழைத்திடவே … உன் புகழ் ஓதி
இவ்வுலகில் உய்யுமாறு
நினருள்தாராய் … உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.
**
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்-திருக்குறள்10
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பத்தாவது குறளில் வரும் “பிறவிப் பெருங்கடல்” என்பது “சம்சார சாகரம்” என்பதன் மொழி பெயர்ப்பு. இது கிருஷ்ண பரமாத்மாவின் சொற்கள் (கீதை 12-7)
அதுமட்டுமல்ல கண்ணன் முதல் ஆதி சங்கரர் வரை எல்லா சமஸ்கிருத நூல்களிலும் ‘பிறவிப் பெருங்கடல்’ காணப்படுகிறது.
ஆதிசங்கரர் நூற்றுக் கணக்கான இடங்களில் சம்சார சாகரம் (பிறவிப் பெருங்கடல்) பற்றிப் பாடுகிறார். அவர் பாடிய விவேக சூடாமணியில் மட்டும் 9, 35, 37, 44, 136 எண் பாடல்களில் இந்தச் சொற்களைக் காணலாம்.
**
பிறவிஎனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவிஎனுந் தோற்றோணி கண்டீர் – நிறைஉலகில்
பொன்மாலை மார்பன்புனற் காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்.
—நம்பியாண்டார் நம்பி 11-11 ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை
சம்சார சாகரம்
சம்சார சாகரம் என்ற சொற்களை முதலில் பயன்படுத்தியவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் 12-7 அவர் இதை 5000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். பின்னர் காளிதாசன் ரகு வம்ச 12-60 காவியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அதற்குப்பின்னர் வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பிறவிப் பெருங்கடல் என்று அதைத் தமிழாக்கி நமக்குச் சொன்னார்
பகவத் கீதை என்ன சொல்கிறது?
பகவத் கீதை 12-7 ஆம் அத்தியாயம்
தேஷாமஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாகராத்
பவாமி நசிராத் பார்த்த மய்யாவேசித சேதஸாம் 12-7
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।
भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ 12-7
teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt
bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7
என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன். பகவத் கீதை 12-7
***
ரகுவம்ச காவியத்தில், காளிதாசன் என்ன சொல்கிறான் ?
ப்ரவ்ர்த்தா உபலப்தாயாம் தஸ்யாஹா சம்பாதி தர்சநாத்
மாருதி: சாகரம் தீர்ண: சம்சாரமிவ நிர்மம:
சம்பாதியைக் கண்டவுடன், சீதாதேவி பற்றிய செய்தியைக் கேட்டவுடன் அநுமன் , உலகப் பற்றில்லாத ஒருவன் சம்சாரக் கடலினை எவ்வாறு தாண்டுவானோ அப்படித் தாண்டினான்
On meeting sampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]
***
மதித்த முத்தமிழில் பெரியோனே!
நினைத்தது எத்தனையில் தவறாமல் … நினைத்தது எந்த அளவும்
தவறாமல் கைகூடவும்,
நிலைத்த புத்திதனைப் பிரியாமல் … நிலையான ஞானத்தை விட்டு
யான் பிரியாமல் இருக்கவும்,
கனத்த தத்துவம் உற்றழியாமல் … பெருமை வாய்ந்த
தத்துவங்களைக்* கடந்து அப்பாலான நிலையை யான் அடைந்து
அழியாமல் இருக்கவும்,கதித்த நித்தியசித்தருள்வாயே … வெளிப்படுகின்ற நிரந்தரமான சித்தநிலையை நீ அருள்வாயாக.
மனித்தர் பத்தர்தமக்கு எளியோனே … மனிதர்களுக்குள்
அன்புடையார்க்கு மிக எளியவனே,
மதித்த முத்தமிழில் பெரியோனே … மதிக்கப்படுகிற இயல், இசை,
நாடகமாகும் முத்தமிழில் சிறந்தவனே,
செனித்த புத்திரரிற் சிறியோனே ... சிவ மூர்த்தியிடம் தோன்றிய
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
18-11-2025 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
தூக்கத்தின் ஐந்து வகைகள்!
ச. நாகராஜன்
1961ம் ஆண்டு பனாமாவில் உள்ள டேரியன் நகரில் சில ஆய்வாளர்கள் தூக்கம் பற்றி மட்டும் ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்று தீர்மானித்தனர். நாளடைவில் பலரும் இந்தக் குழுவில் சேர ஆரம்பித்தனர்.
பல ஆராய்ச்சிகளின் முடிவை அறிவிக்க ஸ்லீப் என்ற பத்திரிகை 1978ல் ஆரம்பிக்கப்பட்டது.
தூக்கத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த ஸ்லீப் ரிஸர்ச் சொஸைடி, டேரியன் வெளியிட ஆரம்பித்தது.
உலகில் இது வரை மலைக்க வைக்கும் மூன்று லட்சம் ஆய்வுகள் தூக்கம் பற்றி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் இன்னும் தூக்கம் பற்றிய மர்மம் முழுவதுமாக விடுபட்ட பாடில்லை.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் நல்ல ஆரோக்கியமுள்ள 770 இளம் வயதினரை அவர்களது உடல்நலமும் செய்கைகளும் எப்படி தூக்கத்தை மேற்கொள்ள வைக்கின்றன என்று ஆராயப்பட்டது.
ஆய்வின் முடிவில் அவர்கள் தூக்கத்தில் ஐந்து வகைகளை இனம் கண்டனர். இதை ஸ்லீப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
1) மோசமான தூக்கமும் உளவியலும்
நான் சரியாகத் தூங்கவே இல்லை என்று சொல்வோரும் அடிக்கடி இரவில் விழித்திருப்போரும் தங்களைப் பற்றித் தாங்களே கூறிக் கொள்வோரும் இந்த வகையைச் சார்ந்தவர்கள். இவர்கள் மனச்சோர்வு, கவலை, எதிர்மறை உணர்வுகளான பயம், கோபம், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
2) தூக்க எதிர்ப்பு சக்தி
பகலில் எதையும் கவனத்துடன் செய்ய முடியாதவர்கள், ஆனால் தூக்கம் வருவதே இல்லை என்று புகார் செய்யாதவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மீண்டு வரும் ஆற்றலைக் கொண்டவர்கள்.
3) தூக்கத்திற்கான மருந்து எடுத்துக் கொள்பவர்கள்
தூக்கம் வருவதற்காக மாத்திரைகளை தாங்களாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரை மூலமாகவோ எடுத்துக் கொள்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி குறைவு. ஆனால் அனைவருடனும் நன்கு பழகும் திறன் கொண்டவர்கள் இவர்கள்.
4) தூக்க நேரமும் அறியும் ஆற்றலும்
ஆறு மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குபவர்கள், அறியும் ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். எதற்கெடுத்தாலும் கொந்தளிப்பவர்கள் இவர்கள்.
5) தூங்கும் போது தொந்தரவு
மனபாதிப்புகளால் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்திருப்பவர்கள் இவர்கள். மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டவர்கள் இவர்கள்.
22 முதல் 36 வயது வரை உள்ளவர்களே இந்த ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும் அதுவும் ஆழ்ந்த நல்ல உறக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்கின்றனர் தூக்கம் பற்றி ஆய்வு நடத்தும் நிபுணர்கள்.
இந்த ஆய்வுகள் மேலும் தொடர்கின்றன
உடல் பயிற்சியை மேற்கொள்ளல், ஒவ்வொரு நாளும் சீரான ஒரே நேரத்தில் தூங்கச் சென்று ஒரே நேரத்தில் எழுந்திருத்தல், அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களைத் திறம்பட நிதானமான மனதுடன் எதிர்கொள்ளல், மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவை மூலம் தூக்கமில்லாத்தன்மையை போக்கிக் கொள்ளலாம்.
Date uploaded in Sydney, Australia – 11 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து H- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with the English letter ‘H’
நாளைய தினம் தமிழில் வரும்; It will be posted in Tamil Tomorrow.
***
Halayudha
1) an epithet of Balarāma.
2) Name of the author of अभिधान-रत्नमाला (abhidhāna-ratnamālā).
Derivable forms: halāyudhaḥ (हलायुधः).
Halāyudha is a Sanskrit compound consisting of the terms hala and āyudha (आयुध).
Halāyudha (हलायुध).—A Sanskrit poet who lived in the 10th century A.D. A mahākāvya called Kavirahasya is his most important work The hero in the great poem is Krṣṇa III. A King of the Rāṣṭrakūṭa dynasty, and poet Halāyudha was a courtier of his.
***
Hala
Hala was a satavahana king who lived around first century CE. His wife was Malayavathy, Hala started composing poems. His Prakrit poems are part of Gatha Sapta Sati. He was called Kavi Vatsala, one who was a great patron of poets. He gave them gold coins for beautiful verses like his predecessor Emperor Vikaramaditya. He imitated Vikramaditya in all his deeds. Like Vikramaditya he started an era in his name, Salivahana Shahapta, though he did not win any big wars. Like Vikramnaditya who was the patron of great poet Kalidasa he was the patron of Gunatya and others. We can see the inspiration he got from Kalidasa and Vikramaditya. Many poets of Gatha Sapta Sati have imitated Kalidasa, but they are not very popular.
***
Hampi
Hampi was the capital of the Hindu Vijayanagara Empire in the 14th-century.
Set amid dramatic boulder strewn hills and the calm flow of the Tungabhadra River, Hampi is one of Karnataka’s tourist destinations. Once the capital of the powerful Vijayanagara Empire, Hampi today stands as a vast open air museum. The closest railway station is in the city of Hospet (Hosapete), 13 km away.
Hampi spreads across a large landscape, with monuments. Important places include Virupaksha Temple, Vittala Temple, Hampi Bazaar, Lotus Mahal, Elephant Stables, Matanga Hill and Tungabhadra Riverbanks.
***
Hariharan
Harihara is a composite Hindu deity representing the synthesis of Lord Vishnu (Hari) and Lord Shiva (Hara), symbolizing the ultimate unity of Vaishnavism and Shaivism. Depicted with Shiva on the right and Vishnu on the left, this form embodies the harmony between creation and destruction. It highlights that the two deities are one supreme, indivisible reality. Sankara Narayanan is another name.
***
Harijan
First recorded in 1930–35; from Neo-Sanskrit Harijana “person of Hari” (a name for Vishnu), hence, in Gandhi’s conception, a child of God. (in India) a member of a group formerly known as the untouchables.
***
Havis
Havis (Sanskrit: हविस्) primarily refers to an oblation, Cooked rice offering, or sacrifice in Hindu rituals, commonly consisting of ghee, grain, rice, or milk offered to gods in a Yagya/ Yaga/Havan. It represents items offered into fire, often used to signify dedication in sacred ceremonies. When they offer it, they say Idam na mama – It is not mine.
***
Hatha yoga
Haṭhayoga (हठयोग) pays particular attention to the acquisition of supernatural powers and the conquest of disease and death. Majority of the extant texts of Haṭhayoga are associated with the Nāth siddhas. The Tamil Siddhas of about the 10th to 15th century also wrote poems on the concepts of Haṭhayoga. Hatha-yoga is the physical aspect of the practice of yoga. There are 3 main factors involving practice of hatha-yoga: asanas (practice of postures), pranayama (breathing techniques), and dhyana (meditation).
***
Harsha vardhana ( 606 to 647 CE)
King Harshavardhana was also known as Harsha. He was the son of Prabhakar Vardhana. He built a huge empire that extended from north & northwestern India till the Narmada in the South. His capital was Kannauj. Harsha was a great patron of the arts. He himself was an accomplished writer. He is credited with the Sanskrit works Ratnavali, Priyadarshika and Nagananda. Banabhatta was his court poet and he composed the Harshacharita which gives an account of Harsha’s life and deeds. Harsha generously supported the Nalanda University. His deeds were praised by Chinese Buddhist traveller Xuanzang in his writings.
***
Haridwar
The holy city of Haridwar (Gateway to God) in Uttarakhand is a breathtaking city, replete with temples. it is a magnet for religious pilgrims from all over the globe. Important temples include the Har ki Pauri and the Chandi Devi Temple.
Haridwar also termed as ‘Gateway to Gods’ is known as Mayapuri, Kapila, Gangadwar as well. Haridwar is also one of the four places; where Kumbh Mela occurs after rotation of every twelve Years and Ardh Kumbh after every six years. Haridwar is one of the first towns where Ganga emerges from the mountains to touch the planes. It is one of the Seven Holy Cities of India.
***
Heramba
Heramba is five-headed and ten-armed form of the Hindu deity Ganesha, symbolizing the protector of the weak, fearful, and oppressed. Seated on a lion (simha-vahana), this form represents supreme power, fearlessness, and the removal of inner and outer obstacles. The name is derived from He (weakness/helplessness) and ramba (protection), defining him as the saviour of the meek. Heramba Ganapati is one of 32 forms of Ganesha;it is depicted with five heads (representing the five senses or elements) and ten arms holding various weapons and symbols like a noose, beads, battle axe, and a broken tusk. Unlike the traditional mouse, Heramba rides a lion, symbolizing mastery over ego and primal instincts.
***
Himalaya
Himālaya (हिमालय):—means ‘abode of snow’; the Himālaya range of mountains in the north of India has the highest elevations in the world; in mythology personified as husband of Menā or Menakā .
KALIDASA used the following name for the Himalayas:-
This mountain is referred to in over 150 Sanskrit books covering all subjects including herbs, medicine, gems and animals. But the references in the Vedas, Ramayana , Mahabharata , Kautilya Arthashastra , Jataka Tales and 2000 year old Sangam Tamil Literature are important.
From Sangam Tamil literature, we have the following references :
Sindhu to Hindu: The term stems from the Sanskrit word Sindhu (river/Indus), which Persians changed to ‘Hindu’. They have n H in their language.
Boundaries: Ancient texts, such as the Brihaspati Agama quoted on the site, define the land of Hindus as spanning from the Himalayas to the Indian Ocean (Himalayamh samarabhya yavat indu sarovaram).
2. Definition of a Hindu (Scriptural & Cultural)
a Hindu is one who is virtuous, shuns unnecessary violence but is capable of destroying anarchic elements, and is a protector of the Vedas and cows. It is the oldest religion in the world.
Beliefs: A Hindu is defined as one who accepts the “Pranava Mantra Om and the authority of the Vedas, believes in rebirth and Karma Theory; he worships the cow, and the River Ganga, and considers the Vedic Rishis as their Gurus.
3. “Hindu” in the Context of Tamil Culture Sangam Tamil literature has references to Hindu Gods, their flags, Vahanas, weapons, origins and their special attributes
Vedic gods, such as Raka, Muka, and Maha Maya, are worshipped in Tamil Nadu villages as Rakayee, Mukayee, and Mahamayee.
No Founder: Hinduism is emphasized as a religion without a single founder, often referred to as Sanatana Dharma (Eternal Law).
Hindu culture is unique in its consistent worship of the Goddess and high regard for women ; only religion where Women and Goddeses are worshipped till this day.
Holy Books- Vedas; Epics Ramayana , Mahabharata (Bhagavad Gita); Tamil and other vernacular language Hymns.
***
Hiranya dhana
Hiranya denotes gold, a precious metal associated with gods and prosperity, frequently mentioned in hymns praising donations (Dhana Stuthis). It is one of the Sixten Dhanas mentioned in Hindu scriptures. Vedic literature describes the donation of gold alongside cattle and horses.
Mahādāna (महादान).—There are sixteen Mahādānas or “Great gifts”. They are: (1) Tulāpuruṣadāna, (2) Hiraṇyagarbha dāna, (3) Brahmāṇḍa dāna, (4) Kalpakavṛkṣadāna, (5) Gosahasradāna, (6) Hiraṇyakāmadhenudāna, (7) Hiraṇyāśva dāna, (8) Hiraṇyāśvaratha dāna, (9) Hemahastiratha dāna, (10) Pañcalāṅgalakadāna (11) Dhārādāna, (12) Viśvacakradāna (13) Kalpalatā dāna, (14) Saptasāgaraka dāna, (15) Ratnadhenu dāna, (16) Mahāpūtaghaṭa dāna. (Agni Purāṇa, Chapter 210).Hindu king Mulavarman of Indonesia of fourth century CE and Krishna Devaraya of 14th century did 16 Gifts Ceremony.
***
Hinayana
The term “Hinayana,” meaning “Lesser Vehicle,” is used to describe the 18 earlier schools of Buddhism, with Theravada as the main surviving branch. This tradition focuses on individual salvation through strict adherence to monastic codes and views the Buddha as a human who attained Nirvana, contrasting with Mahayana’s later development and view of the Buddha as divine.
***
Hiranyakasipu
Hiranyakashipu, a powerful Asura king and brother to the slain Hiranyaksha, sought vengeance against Vishnu by obtaining a near-invincible boon from Brahma. Consumed by pride and hatred, he banned Vishnu worship in his kingdom, but was eventually killed by Vishnu’s Narasimha (man-lion) avatar at twilight on a threshold, bypassing his boon. His son was Prahlada.
***
Homa/ havan
Homa, also known as Havan, is an ancient Vedic fire ritual performed to purify the environment, remove negative energy, and offer prayers. The ceremony typically involves preliminary and concluding rituals, utilizing specific materials and symbolic items, with fire (Agni) acting as a witness and carrier of prayers. There are 400 types of Homas. Asvamedha, Rajasuya, Soma Yaga, Vajapeyam and Maha Rudram are some of the major Yagas. Ganapati Homam, Sudrasana Homam, Navagraha Homam are common sacrifices.
Huna
Kalhana was the author of Rajatarangini. Here is his report on the cruel Huna king Mihirakula who rolled 100 elephants down the hill and enjoyed their death.
Mihirakula was the Huna king who ruled North India from 515 CE to 530 CE. He was a son of Toramana. We know that his rule extended from Afghanisatan to Madhya Pradesh. But Kalhana says that he killed 30 million people and he attacked Sri Lanka and Tamil Nadu. He was a king from the race of White Hunas. He decimated Buddhism in Afghanistan, but supported Saivism in Kashmir. Earlier he was defeated by Malawa King Yasovarman or Baladitya, the last Gupta king. Then he conquered Kashmir and Afghanisatan. Kalhana’s report about his expedition to Sri Lanka and Tamil Nadu is not corroborated by secondary sources.
To be continued……………………………..
Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-௩௨, இந்துமத கலைச்சொல் அகராதி–32
“தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை அடையலாமா?”
ஒரு பக்தர் பரமஹம்சரிடம் கேள்வி கேட்டார்: கடவுள் தரிசனத்தை எப்படிப் பெறுவது?
ராமகிருஷ்ண பரமஹம்சர்:
“உருகிய உள்ளத்துடன் உன்னால் அழமுடியுமா? மனைவி, மக்கள், பணம் இவற்றுக்காக மக்கள் குடம் குடமாகக் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் கடவுளைக் காணவேண்டும் என்று அழுபவர் யார்? குழந்தை, விளையாட்டுப் பொருட்களோடு விளையாடும் வரை தாயார், சமையல் முதலிய வேலைகளைச் செய்கிறாள். இதர அலுவல்களையும் கவனிக்கிறாள். விளையாட்டு பொம்மைகள், குழந்தையின் பசியைப் போக்குவதில்லை; எனவே அவைகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் குழந்தை ‘கோ’வென்று கத்தி அழுகின்றது. உடனே தாய் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், சாதம் பாதி வடித்துக்கொண்டிருந்தாலும் கூட அதை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்து குழந்தையை எடுத்து தன் மார்போடு அணைத்துக்கொள்கிறாள்”.
இத்தகைய அன்பு, இறைவனிடத்திலும் இருக்கவேண்டும் என்பார் பரமஹம்சர். அப்படியிருந்தால், அழும் குழந்தையிடம் தாயார் ஓடிவருவதுபோல இறைவனும் ஓடிவருவார் என்கிறார்.
***
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
சம்பந்தரும் சொன்னார் !
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம்திருவலிவலம்
தாயும் நீயே தந்தை நீயே
சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான்
ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயமாய காயம் தன்னுள்
ஐவர் நின்று ஒன்றலொட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன்
வலிவலம் மேயவனே.
ஆதி சங்கரரும் மாத்ரு பஞ்ச்கத்தில் தாயைப் புகழ்கிறார்
***
விபூதியின் மஹிமை
மெய் வேத லக்ஷுமியைச் சிறை விட்டு அருள் வீர
அச்சுதனுக்கு நல் அற்புத மருகோனே … சத்திய வேத
சொரூபியான லக்ஷ்மிதேவியாகிய சீதையை சிறையினின்றும்
விடுவித்து அருளிய வீரம் பொருந்திய ராமருக்குச் சிறந்த மருகனே.
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில வாரி முத்து நகைக் கொடி
சித்திர நீல ரத்தின மிக்க அறக் கிளி புதல்வோனே … கரு நிறம்
அழகு வாய்ந்த திருத்தணி மலையில் நடனம் புரிந்தருளும் பெருமாளே.
***
மன்மதனின் ஐந்து மலர் அம்புகள்
குவளைக் கணை தொட்ட அவனுக்கு முடிக் குடை இட்ட
குறைப் பிறையாலே … (ஐந்தாவது பாணமாகிய) நீலோற்பல
மலர்* அம்பைச் செலுத்திய மன்மதனுடைய முடியின் மீது குடையாக அமைத்த, களங்கத்தை உடைய சந்திரனுடைய (வெப்பத்துக்கும்),
* மன்மதனுடைய ஐந்து கணைகளாவன:
முதற் கணை = தாமரை. நடுக் கணை = அசோகம்.
கடைக் கணை = நீலோற்பலமலர். இடை இடையாகும் கணைகள் = மா, முல்லை. அசோகமலருக்கு செயலை என்று பெயர் உண்டு.
***
சுக்ரீவனும் கற்பக விநாயகரும் (கணபதியும்)
காந்தள் மலர்த் தொடை இட்டு எதிர் விட்டு ஒரு வேந்து
குரக்கு அரணத்தொடு மட்டிடு காண்டிப அச்சுதன் உத்தம
சற்குணன் மருகோனே … (சுக்கிரீவனை) காந்தள் மலர் மாலையை
அணியச் செய்து (வாலியின்) எதிரே போருக்கு அனுப்பி, ஒப்பற்ற
அந்த வாலி என்னும் குரங்கு அரசை அவன் கவசத்துடன் அழியக்
கொன்ற காண்டீபம் என்னும் வில்லை ஏந்திய அச்சுதனும்,
உத்தமமான நற் குணம் வாய்ந்தவனும் ஆகிய (ராமபிரானுடைய)
மருகனே,
காங்கிசை மிக்க மறக் கொடி வெற்றியில் வாங்கிய முக்கனி
சர்க்கரை மொக்கிய கான் க(ன்)னி முற்கு இயல் கற்பக மைக்
கரி இளையோனே … (உன் மீது) விருப்பம் வைத்த வேட்டுவப்
பெண்ணை (அச்சுறுத்தி) வெற்றி பெற்று, ஏற்றுக் கொண்ட மா,
பலா, வாழை என்னும் மூன்று வகைப் பழங்களையும், சர்க்கரையையும்வாரி உண்பவரும், காட்டில் கன்னியாகிய வள்ளியின் முன்னர் வந்தவரும், வேண்டுவோர்க்கு வேண்டியதை அளிக்கும் கற்பக மரம் போன்றவரும், கரு நிறம் கொண்ட யானை முகத்தவருமான விநாயகருக்குத் தம்பியே,
***
முருகனைப் பழித்தவர்கள் அழிவார்கள் !
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் …… சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் …… றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் …… பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் …… செயல்தாராய்
தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் …… தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் …… கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் …… கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
சினத்தவர் முடிக்கும் … முருகன் அடியார்களை கோபிப்பவர்களது