இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 3 காளிதாசன் நூல்களில் ஆபரணங்கள்! (Post.15,874)

 Written by London Swaminathan

Post No. 15,874

Date uploaded in London –15 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆராய்ச்சிக் கட்டுரை Part 3

ராமாயணத்துக்கு அடுத்தபடியாக மோதிரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவன் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசனே ; ராமன்  கொடுத்த மோதிரத்தை இலங்கையில் அசோகவனத்திலிருந்த சீதா தேவியிடம் அனுமன் கொடுத்த காட்சி மிக முக்கியமான காட்சி;  இதை ராமாயண உபன்யாசகர்கள் சொல்லும்போது அவர்களுக்கு பரிசாக, மோதிரத்தைக் கொடுப்பதையும் நானே கண்டிருக்கிறேன் . இந்த மோதிர உத்தியை காளிதாசன் சாகுந்தலம் , மாளவிகாக்னி மித்திரம், விக்ரமோர்வசீயம் ஆகிய  நாடகங்களில் பயன்படுத்தியதோடு  அவன் எழுதிய  ரகுவம்சம், மேக தூதம், ருது சம்ஹாரம் , குமார சம்பவம் ஆகிய நூல்களில் ஆபரணங்களையும் எடுத்தாண்டுள்ளான்.

காளிதாசன் பயன்படுத்திய சொற்கள் :

நூபுரம் – காற் சலங்கை ; இதை சங்கத்தமிழ் நூல்களிலும் புலவர்கள் பயன்படுத்தினார்கள் .

மேகலா அல்லது காஞ்சி அல்லது  ரசனா  – இடையில் அணியும் ஒட்டியாணம் ;இதையும்  தமிழ் நூல்களில்  புலவர்கள் பயன்படுத்தினார்கள் . மணி மேகலை என்பது ஒரு காப்பியத்தின் பெயர்.

ஹார – தமிழில் ஆரம் அல்லது மாலை ; மாலை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்தான்  ;ஆயினும் தமிழ் இலக்கியத்தில் காணலாம் . தமிழில் தொங்கல் ,அலங்கல் போன்ற தூய தமிழ்ச் சொற்களும் உண்டு.

ஏகாவளீ- பல ரத்தினங்களால் இணைக்கப்பட்ட சங்கிலி ;

தாரஹார – பெரிய முத்துமாலை

வலய – கையில் அணியும் காப்பு ; மாலை போலவே இந்தச் சொல்லும் தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் ஒரே பொருளில் வருகிறது; இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவை என்பதை மெய்ப்பிக்கிறது .

கேயூர அல்லது அங்கத – ஆண்களும் பெண்களும் தோள்களில் அணியும் ஆபரணம்.

கர்ணபூர அல்லது குண்டல அல்லது தாடங்கம் – காதில் அணியும் அணி ; இதுவும் ஆண்களும் பெண்களும் அணிவது; சிவ பெருமான் சிலைகளிலும் காதுகளில் தொங்கும் .

சூடாமணி – சூளாமணி – தலையில் தொங்கும் நகை;

மூக்குத்தி பற்றி எங்கும் சொல்லப்படவில்லை ; ஆயினும் பிராமணர் முதல் பழங்குடி மக்கள் வரை இதை அணிந்து வருகின்றனர்

முத்ரிகா – மோதிரம் – அங்குலீயக-

__

சாகுந்தலத்தில் இது முக்கியப் பங்காற்றுகிறது; மாளவிகாக்நி மித்திரத்திலும் பாம்பு மோதிரம் முக்கியப் பங்காற்றுகிறது.

உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலம் ஆகும் ; துஷ்யந்தன் என்ற மன்னன் கானகத்தில் வாழ்ந்த பறவைப் பெண்ணை கந்தர்வ / காதல் திருமணம் செய்கிறான்( சாகுந்தல என்றால் பறவைங்களால் வளர்க்கப்பட்டவள் என்பது பொருள்; இதிலிருந்து வந்த சகுனம் – பறவை ஜோதிடத்தை — இன்றுவரை இந்துக்கள் பின்பற்றி வருகின்றனர் ); நாட்டுக்குத் திரும்பியபின்னர் சகுந்தலையை மறந்து விடுகிறான்; அவன் சகுந்தலாவுக்குக் கொடுத்த மோதிரத்தையும் ஒரு மீன் விழுங்கி விடுகிறது; சகுந்தலையை கண்வ மஹ ரிஷி  சிஷ்யர்கள் புடை சூழ துஷ்யந்தன் அரண்மனைக்கு அனுப்புகிறார்; மன்னரோ “பெண்ணே! உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதே” என்று மறதியில் உளறுகிறான்; அந்த நேரத்தில் ஒரு மீனவன் பிடித்த மீனின் வயிற்றில் அரச மோதிரம் (ரத்னாங்குலீயகா) இருக்கவே அதைக் கொண்டு ஓடிவருகிறான்; அந்த மோதிரத்தைக் கண்டவுடன் பழைய நினைவுகள் வந்தவுடன் சகுந்தலையை மனைவி என்று துஷ்யந்தன் ஒப்புக்கொள்கிறான்; அவர்களுடைய மகன் பரதன் ஆண்டதால் இந்தியாவுக்குப் பாரத நாடு என்ற பெயர் ஏற்பட்டதை மஹாபாரதம் இயம்புகிறது; அதை பாரதியாரும் பாடி மகிழ்ந்துள்ளார்.

***  

மாளவிகா அக்நிமித்திரம் நாடகத்தில் ஒரு சுவையான மோதிரக் காட்சி வருகிறது; மாளவிகா சிறை வைக்கப்பட்டாள்; அவளை விடுவிக்க நகைச் சுவை நடிகன் / விதூஷகன் ஒரு தந்திரம் செய்கிறான் ; பாம்பு கடித்தது போல பாசாங்கு செய்து மஹாராணி தாரிணியிடமிருந்து பாம்பு மோதிரத்தைப் பெறுகிறான்; அதைக்கொண்டு பாம்பு விஷத்தை இறக்கிவிடலாம் என்பது அக்கால நம்பிக்கை; அதை எடுத்துக்கொண்டு ஓடிப்போய்ச் சிறைக் காவலர்களிடம் காட்டி , “ராணியின் உத்தரவு; உடனே மாளவிகாவை விடுதலை செய்யுங்கள்” என்கிறான்; சிறைக்காவலர்களும் உடனே மாளவிகாவை விடுதலை செய்கின்றனர்; எல்லா சம்ஸ்க்ருத நாடகங்களிலும் விதூஷகன் / காமெடியன் – கதாபாத்திரமுண்டு; இன்று வரை இந்த 2000 ஆண்டு வழக்கத்தை இந்தியத் திரைப்படங்களில் காணலாம். அரசவை விதூஷகனுக்கு மிகவும் செல்வாக்கு இருந்ததைத் தெனாலிராமன் கதைகளிலும் காண்கிறோம்; சம்ஸ்க்ருதத்தில் 600-க்கும் மேல் நாடகங்கள் இருக்கின்றன ; தமிழில் பழங்கால நாடகம் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை!

***

காளிதாசன் காவியங்களில் நகைகள் ரத்தினக் கற்கள்

ரகுவம்சம் – 8-63; 13-23; 8-58; 8-64; 9-37; 10-8; 11-17; 15-1; 16-65; 13-21; 16-56; 14-19; 15-77;16-74;

மேக தூதம் – 1-28; 1-35; 1-31; 1-69;2-9;

குமார சம்பவம் – 1-37; 3-55; 4-85-10; 7-618-14; 8-83; 7-69;7-35; 6-84;

மாளவிகா அக்கினி மித்ரம் -3-17;4-3; 3-20; 4-4; 6-24;

விக்ரம ஊர்வசீயம் -3-15; 4-52;

அபிக்ஞான  சாகுந்தலம்- 3-10; 1-13; 5-13;

ருது சம்ஹாரம்- 4-4; 3-20; 1-5; 3-20; 6-6; 4-3; 2-24;3-19; 2-19;

***

சங்க காலத் தமிழர்கள் தங்கம், வெள்ளி, முத்து, பவளம் மற்றும் இயற்கை மணிகளைக் கொண்டு நேர்த்தியான நகைகளைச் செய்தனர். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தாலிகாதணிமேகலைமற்றும் வளையல்கள் போன்ற ஆபரணங்கள்

சங்க காலத்தில் மக்கள் விரும்பி அணிந்த முக்கிய நகைகள்:

  • காதணிகள் (குழைகாதணி): காதுகளில் அணியப்பட்ட இந்த நகைகள் சங்கப் பாடல்களில் மிகவும் புகழப்படுகின்றன.
  • மேகலை (ஒட்டியாணம்): இடுப்பில் அணியப்படும் ஆபரணம்.
  • தாலி (மங்கல அணி): திருமணத்தின் அடையாளமாக கழுத்தில் அணியப்படும் அணிகலன்.
  • வளையல்கள் (வளையல் / கடகம்): கைகளில் அணியப்பட்ட அணிகலன். சங்க காலத்தில் சங்குகள், தங்கம் மற்றும் உலோகங்களால் இவை செய்யப்பட்டன.

நகைகள் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாமல், மக்களின் கலை நயத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், பொருளாதார முதலீடாகவும் பயன்பட்டன.

–subham—

Tags- இந்துக்கள், பழங்கால நகைகள், Part 3 காளிதாசன், நூல்கள், ஆபரணங்கள்!

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-55; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,873)

Written by London Swaminathan

Post No. 15,873

Date uploaded in London –15 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சிறுபுலியூர்

அரு மாகடல் பெருமாள் கோயில்

திவ்யதேசம்— திருச்சிறுபுலியூர்பாலவியாக்ரபுரம்    

மூலவர்– அருள்மாகடல் பெருமாள் / சலசயனப்பெருமாள் 

உத்ஸவர் — க்ருபாசமுத்திர பெருமாள்    

தாயார்– திருமாமகள் நாச்சியார் / உத்சவர் தயாநாயகி    

திருக்கோலம்– கிடந்த திருக்கோலம் (புஜங்க சயனம்)

திசை– தெற்கு  

மங்களாசாசனம்– திருமங்கையாழ்வார் 10

இத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு, இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று அவருக்கு சேவை சாதித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு சிறு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலம். கருடனுக்கு அபயமளித்த தலம். எனவே இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேடனுக்கும் பூமிக்கு கீழ் கருடனுக்கும் சன்னதி அமைந்துள்ளது. கருடா சௌக்கியமா? என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட ஸ்தலம்.

ஆதிசேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த ஸ்தலம் நாகதோஷங்கள் நீங்க சிறப்பான ஒன்று. பால் பாயசம் நிவேதனம், ஆதிசேஷனுக்கு செய்வது சிறப்பு.

கருடனுக்கு அபயமளித்த இடம். இங்கு பூமிக்கு கீழ் கருடனுக்கு சன்னதியும், உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு சன்னதியும் உள்ளன.

இத்தலத்தின் எம்பெருமானை பூஜித்து மோக்ஷம் அடைந்த வியக்கிரபாதர் எம்பெருமானின் திருவடிகளுக்கு அருகிலேயே உள்ளார். பதஞ்சலியும் எம்பெருமான் சன்னதியில் உள்ளார்.

கருடாழ்வார் சன்னதி, உள் திருச்சுற்றில் விஷ்வக்சேனர், மூலவர் சன்னதி, வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சன்னதி ஆகியவை உள்ளன.

ஸ்தலபுராணம்

ஒரு சமயம் கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என்று வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைக் குறித்து ஆதிசேஷன் இந்த க்ஷேத்திர குளக்கரையில் தவம் புரிந்தார். எம்பெருமான் மகிழ்ந்து ஒரு மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி அன்று இந்த ஸ்தலத்தில், பால சயனத்தில் எழுந்துஅருளினார். ஆதிசேஷனை அனந்த சயனமாக்கிக்கொண்டு குழந்தை வடிவில் சேவை சாதிக்கிறார்.

வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜனிடம் கேட்க, அவர் சிவலிங்க ரூபமாக

வழிகாட்ட, அவரை விரைந்து பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் அவரை தொடர்ந்து, இத்தலத்திற்கு வந்து சேர்ந்து எம்பெருமானின் கருணையால் முக்தி பெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் என்று ஆயிற்று.

ஆழ்வார்கள்

இத்திருத்தலத்தில், எம்பெருமான் புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமாக இருந்ததைக் கண்டு திருமங்கையாழ்வார் தமக்குள் குறைபட, உமது குறைதீர திருக்கண்ணமங்கையில், நமது மிகப்பெரிய உருவை காணும் என்று எம்பெருமான் அருளிச் செய்த க்ஷேத்திரம்.

மயிலாடுதுறையில் இருந்து பேரளம் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி அருகில் இந்த திவ்யதேசம் இருக்கிறது. சுற்றிலும் அருமையான வயல்வெளிகளுக்கு இடையே அழகான திவ்யக்ஷேத்திரம். அதைவிட அழகான சிறிய திருவுருவில் சந்நிதியில் சயனத்தில் எம்பெருமான்.

****

பாசுரங்கள்

1628.  

கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்*

வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-

தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து-

உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)

1629.  

தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி-

மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*

திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே

1630.  

பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!*

அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*

சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து-

உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே*

1631.  

வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்*

தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*

தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து

ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*

1632.  

நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்-

எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-

செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே* 

1633.  

முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்*

கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*

செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்*

தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே*

1634.  

சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்-

மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*

தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்-

தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)

1635.  

மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு*

உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்-

செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே*

1636.  

கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா*

பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*

திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)

1637.  

சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து*

ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*

கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை*

பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)

***

கீழேழு திவ்ய தேசங்கள்; taken from Facebook;thanks

“கீழேழு திவ்ய தேசங்கள்” வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, பெருமாளே நேரடியாக முக்தி அளிக்கக் கூடிய “சப்த அம்ருத க்ஷேத்திரங்கள்” (ஏழு மோட்சத் தலங்கள்) ஆகும்!

அந்த அற்புதக் கோயில்களின் பட்டியல் இதோ:

1.திருக்கண்ணபுரம் (ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகில்.

• சிறப்பு: பெருமாளின் திருமுடியில் (தலையில்) நிஜமாகவே தலைமுடி (சௌரி) இருந்ததால் “சௌரிராஜன்” என்று பெயர். விபீஷணனுக்குப் பெருமாள் தனது நடையழகைக் காண்பித்த தலம். இங்கு வழங்கப்படும் ‘முனையதரையன் பொங்கல்’ பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

***

2.திருக்கண்ணமங்கை (ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: திருவாரூர் அருகில்.

• சிறப்பு: லட்சுமி தேவி பெருமாளைத் திருமணம் செய்யத் தவம் இருந்த இடம். தாயாரின் திருமணத்தைக் காண தேவர்கள் தேனீக்களாக வந்து அமர்ந்ததாகக் கூறப்படும் ‘தேன்கூடு’ இன்றும் கருவறையில் உள்ளது விசேஷம். “பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில்” இதுவும் ஒன்று.

***

3.திருக்கண்ணங்குடி (ஸ்ரீ லோகநாதப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ளது.

• சிறப்பு: திருமங்கையாழ்வார் பெருமாளின் விக்ரகத்தை நெல் வயலில் ஒளித்து வைத்த தலம். இங்குள்ள மகிழ மரம் என்றும் காய்க்காத “உறங்கா புளி” மற்றும் “காயா மகிழம்” என்ற அதிசய இயற்கை அமைப்பைக் கொண்டது.

***

4.திருநாகை (ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: நாகப்பட்டினம் நகரம்.

• சிறப்பு: ஆதிசேஷன் (நாகராஜன்) தவமிருந்து பெருமாளைத் தரிசித்த தலம். இங்கு மூலவர், உற்சவர் தவிர ‘அழகுப் பெருமாள்’ என்ற சௌந்தரராஜப் பெருமாள் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கிறார்.

***

5.திருச்சேறை (ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: கும்பகோணம் – திருவாரூர் வழித்தடத்தில் உள்ளது.

• சிறப்பு: காவிரித் தாய் பெருமாளின் மடியில் குழந்தையாக அமர்ந்து தவம் செய்த தலம். மாசி மாத மாசி மகத்தன்று காவிரித் தாய்க்குப் பெருமாள் காட்சியளிக்கும் வைபவம் பிரசித்தி பெற்றது.

***

6.சிறுபுலியூர் (ஸ்ரீ அருமாகடல் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: மயிலாடுதுறை மாவட்டம்பேரளம் அருகில்.

• சிறப்பு: வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்) பெருமாளிடம் வேண்டியதால்அவருக்குப் பெரிய வடிவைக் காட்டாமல்மிகச் சிறிய பாலசுப்பிரமணியர் போன்ற வடிவில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் தலம்.

***

7.தலைச்சங்கநாண்மதியம் (ஸ்ரீ நாண்மதியப் பெருமாள் கோயில்):

• அமைவிடம்: மயிலாடுதுறை – ஆக்கூர் வழித்தடத்தில் உள்ளது.

• சிறப்பு: சந்திரனின் சாபத்தை நீக்கி, அவனுக்குப் பாதி நிலவை (நாண்மதி) பெருமாள் தன் சிரசில் சூடிக் கொண்ட தலம். பெருமாளின் கையில் உள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கு மிகவும் விசேஷமானது.

இந்தக் கீழேழு திவ்ய தேசங்களையும் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிப்பது, நம் பாவங்களை நீக்கி மன அமைதியையும், மோட்சத்தையும் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு.

–subham—

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-55; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், சிறுபுலியூர் ,அரு மாகடல் பெருமாள் கோயில்,  கீழேழு திவ்ய தேசங்கள்

மனித மூளையில் ஒரு சென்ஸர்! அது செய்யவிருக்கும் அதிசயங்கள்! (Post No.15,872)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,872

Date uploaded in London – 15 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

11-6-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

மாக்ஸ் ஹோடக் திட்டம்: மனித மூளையில் ஒரு சென்ஸர்! அது செய்யவிருக்கும் அதிசயங்கள்!

ச. நாகராஜன்

மாக்ஸ் ஹோடக் என்ற பெயரை இதுவரை அறியாதவர்கள் இனி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹோடக் உயிரியல் மருத்துவ பொறியாளர் (Biomedical Engineer). 2021ம் ஆண்டு ஏப்ரலில் இவர் ஸயின்ஸ் கார்பொரேஷன் என்ற தனது நிறுவனத்தைத் தொடங்கினார்.

எலான் மஸ்க் நிறுவிய நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிய எட்டு விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர்

 MAX HODAK .

இவர் கண்டுபிடித்த பிரைமா அமைப்பு (PRIMA SYSTEM) பார்வை இழந்தோர்களுக்குப் பார்வையைத் தர உதவியது. இந்த அமைப்பில் ப்ரெய்ன் – கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ் (BCI – Brain Computer Interface) என்னும் அதி நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது,

இப்போது அடுத்தபடியாக ஒரு பெரும் முன்னேற்றத்திற்கு அடிகோலியிருக்கிறார் ஹோடக். இந்தத் திட்டத்தின் படி மூளையில் ஒரு சென்ஸர் (உணர்கருவி) பொருத்தப்படும்.

இதற்காக ஹோடக், உலகின் ஆகப் பெரும் மூளை இயல் நிபுணரான டாக்டர் முரட் குனல் என்பவரைத் தனது நிறுவனத்தில் பணியாற்ற அழைத்துள்ளார்’

இந்தக் கம்பெனியின் செயல்பாடுகளைக் கண்டு வியந்த உலகம் 23 கோடி டாலர் மதிப்புள்ள இவரது நிறுவனத்தை இப்போது நூறு கோடி டாலர் மதிப்புள்ள நிறுவனமாக ஆக்கி விட்டது!

கம்ப்யூட்டருக்கும் மனித மூளைக்கும் நல்ல ஒரு இணைப்பைத் தருவதே ஹோடக்கின் நோக்கம்.

முதுகெலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு எலக்ட்ரானிக் சென்ஸர்களைப் பொருத்தி, புரட்சி செய்தது நியூராலிங்க் நிறுவனம்.

இந்த அமைப்பை நன்கு ஆய்வு செய்த ஹோடக், “இந்த முறையில் மின்சக்தி மூலம் எலக்ட்ரோடுகள் பொருத்தப்படுகின்றன; அது தவறு” என்று உணர்ந்தார்.

ஆகவே இந்த சிகிச்சை நடைமுறையை விட்டு விட்டு மூளையில் உள்ள நியூரான்களிடம் நேரடியாக இணைப்பைச் செய்வது என்று தீர்மானித்தார்.

அதற்காகத் தான் இந்த சென்ஸர் கருவி மூளையில் பொருத்தப்படும் முறை உருவாகி இருக்கிறது.

முதல் படியாக உயிருள்ள மனிதர் ஒருவரின் மூளையில் – மண்டையோட்டில் மூளைக்கு மேல் பகுதியில் – சென்ஸர் பொருத்தப்பட இருக்கிறது.

இதன் மூலம் முதுகெலும்பு முறிந்தவர்களுக்கான சிகிச்சை துரிதப்படுத்தப்படும். அத்துடன் மூளையில் கட்டி உள்ளவர்களுக்கு உடனடி எச்சரிக்கையைக் கொடுத்து உரிய சிகிச்சையை துரிதமாக அளிக்க இந்த மூளையில் பதிக்கப்படும் சென்ஸர் உதவும்.

பார்கின்ஸன் வியாதிக்கும் இது ஒரு தீர்வைத் தரும் என்று பலரும் நம்புகின்றனர்.

2027ல் முதல் கட்ட சோதனைகள் முடிவடையும். பின்னர் பெரிய அளவில் மூளை மருத்துவத்தில் ஒரு புரட்சி ஏற்படும்.

மாக்ஸ் ஹோடக்கின் பெயர் உலகளாவிய விதத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.

**

Tamil Wonder! Ancient Hindu Jewellery! You can get Ph.D.- part 2 (Post.15,871)

Ivory Figures with ornaments

Colour pictures here are from Madurai Meenakshi Temple of Lord Siva.

Crowns worn by Goddes Meenakshi//Parvati

Written by London Swaminathan

Post No. 15,871

Date uploaded in London –14 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Research article

One of the wonders of Tamil Language is that they used the jewellery or ornaments to name their five epics; we know the greatest poet of India Kalidasa used ornaments, particularly rings, in his dramas to give twists. But Sanskrit Maha Kavyas are not named after ornaments. Tamils used ornaments in the following Pancha Maha Kayas of Tamil literature.

Silappadikaram (Silambu=anklet)

Mani Mekhala (Mekhala- waist band)

Jeevaka Chintamani (Chintamani= mythical wish-fulfilling jewel)

Kundala kesi (Kundala= “earring,” “hoop,” or “ornament for the ear)

Valaiyapathy (Valai=bangle)

Tamils were crazy about jewels! But in the stories the characters are not associated with any particular ornament except the first one, i.e.Silappadikaram (Silambu/Anklet+ Adikaram/Chapter)

No other language has named their epics with the ornaments.

***

Jewels in Silappadikaram

Kovalan, the hero of the epic married Kannaki; both were from the wealthiest businessmen family in Poompuhar, the port city of Sangam Age. When Kovalan, lover of music and dance, fell in love with a courtesan called Madhavi, the story moved towards a tragic end.

The event that made Kovalan to fall in love with Madhavi was a dance event in the Indra Festival in the port city. There Ilango the author of the epic, lists 11 types of dances and the ornaments she was wearing.

Following are the Ornaments:

Madhavi bathed her fragrant black hair, soft as flowers, till it shone, in the perfumed oil prepared by mixing up ten kinds of astringents, five spices, and thirty two herbs soaked in water; she dried it in fuming incense, and perfumed the different plaits—five plaits of hair were generally worn by Tamil ladies, especially when they were young—with the thick paste of the musk from deer. She adorned her little feet, reddened by dye, by wearing choice rings- PILI on her fair and tender toes, and on her ankles becoming ornaments known as PARIYAKAM, NUUPURAM, PAATAKAM, SATANGAI AND ARIYAKAM. She put ornaments on her rounded thighs. Over her waist was a GIRDLE MADE OF  THIRTY TWO STRANDS OF BIG PEARLS worn over a blue cloth embroidered with the figures of flowers. Round her upper arms she had ARMLETS STUDDED WITH PEARLS TOGETHER WITH ATTRACTIVE BANGLES OF PRECIOUS STONES= KAAMAR KANTIKAI.

Round her soft haired wrists were beautiful BRACELETS=CUUTAGAM  in which was set the costliest gem in front with DIAMONS ALL ROUND, GOLD BANGLES, GOLD BANGLES OF NINE GEMS = PARIYAKAM, CONCH BANGLES AND BANGLES OF CORAL.

On to her tiny fingers, red as kantal flower, so as to hide them she slipped a ring bent into the shape of an open mouthed fish, and a highly brilliant and lustrous ring of gems and A ROUND RING GLITTERING WITH RUBIES AND BRILLIANT DIAMONDS.

Her delicate and beautiful neck was adorned with a chain necklace called NUNTOTAR, with a fine string of exquisite workmanship and with a garland. Added to these was an ornamental gems held by a clasp, which covered the small nape of her neck.

A pair of ear rings, in which emeralds alternated with diamonds, glittered in her beautiful ears. In her dark tresses becoming head ornaments such as DAIVAUTTI, SRI DEVI, VALAMPURI, TALAI PAALAI, SEA CONCH, TOYYAKAM AND PULLAKAM WERE SET.

EXPLANATIONS FROM COMMENTATORS

PILI= It is in use even today, and it is considered inauspicious if it is not worn by a girl on her marriage

TOYYAKAM  PULLAKAM =this is said to be a head ornament of two sections called TEN PALLI, VADA PALLI.

PALLI= HOUSE LIZARD .

Donated by English collector Rose Peter to the temple.

Tamil Epic Silappadikaram, written around fifth century CE, is an encyclopaedia. It has lot of information on every subject connected with Hindus, particularly Tamils. Ilango, the author of the epic, never hesitated to use Sanskrit words. Even many of the ornaments mentioned above are Sanskrit terms. We come across the inter galactic traveller-saint Narada and the Veena for the first time in this epic; they are not in 2000 year old Sangam Tamil literature. All the epic and Puranic stories are also used by the author. And for the first time we hear a long stanza of praise on Jain Tirtankaras (without naming them). No Buddha, No Mahavir is found in ancient Tamil Literature.

We can see Kalidasa’s influence in this book. His Ujjain, Vindhyas, Himalayas, Vidhyadhara etc are used by Ilango. One Brahmin called Madala Maraiyon is the uniting link in the epic.

Strangely Tamils never mentioned Indus/Sindhu river. They praised only Ganges and Himalayas. Sangam Age Tamil literature or later literature had no reference to Sindhu  (Indus Valley) region!

To be continued…………………

Tags- Tamil Wonder, Ancient Hindu Jewellery, You can get Ph.D.,part 2, Research article, five Tamil epics, names of ornaments, Silappadikaram

தமிழ் அதிசயம்! சிலப்பதிகாரத்தில் ஆபரணங்கள்! இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 2 (15,870)

Picture: Ivory Figures.

Written by London Swaminathan

Post No. 15,870

Date uploaded in London –14 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 2

தமிழ் அதிசயம்!

உலகிலேயே ஐந்து காப்பியங்களை ஆபரணங்களின் பெயரைச் சூட்டியவன் தமிழன் ஒருவனே ; சம்ஸ்க்ருதத்தில் காளிதாசன் நூல்களில் ஒவ்வொரு ஆபரணம் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தாலும் அவன் நூல்களுக்கு நகைகளின் பெயர்களை சூட்டவில்லை ; தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள் நகைகளின் பெயரில் உள்ளன .

தமிழன் ஒரு நகைப்பைத்தியமோ என்று வியக்க வேண்டியுள்ளது!

சிலப்பதிகாரம்

மணிமேகலை

சீவக சிந்தாமணி

குண்டல கேசி

வளையாபதி

****

டாக்டர் பட்டம் கிடைக்கும் !

Picture- Parvati as huntress, Madurai Meenakshi Temple.

இந்துப் பெண்கள் அணிந்த நகைகள் பற்றி ஒருவர் ஆராய்ந்து எழுதினால் எளிதில் டாக்டர் பட்டம் பெறலாம் ; ரிக் வேதம், ஹரப்பா நாகரீகம் , சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், சிலைகள், ஓவியங்களில் ஒரு என்சைக்ளோபீடியா அளவுக்குத் தகவல்கள் உள்ளன!

***

சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையில் மாதவியின் அலங்காரம் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன; அவள் என்னென்ன ஆபரணங்களை அணிந்து இருந்தால் என்று இளங்கோ அடிகள் ஒரு பட்டியல் தருகிறார் ; இது ஐந்தாம் நூற்றாண்டில்  எழுதப்பட்ட காவியம் ஆதலால் அப்போதைய தமிழக நிலையை நமக்கு இளங்கோ படம்பிடித்துக் காட்டுகிறார்.  .

மாதவியின் ஒப்பனை

கூந்தலை நறுமணம் கலந்த நீரில் குளிப்பாட்டினாள். நறும்புகை கொண்டு உலர்த்தினாள். கால் அடிமுதல் தலை முடிவரை அவள் பலவகை அணிகளைப் பூண்டாள். இங்கே அவனுக்கு மாதவியாகக் காட்சி அளித்தாள். கால்விரலுக்குக் கணையாழிகள்கணைக்காலுக்குச் சிலம்பு வகைகள்; தொடைக்குச் செறிதிரள் என்னும் அணி முத்துப்பதித்த மேகலை அவள் இடைக்கு அணிந்தாள். தோளுக்குக் கண்டிகை, வயிரம் பதித்த சூடகம்; மற்றும் பல்வகை வளையல்கள் அவள் கைகளில் அணிந்தாள்: கைவிரலுக்கு மகரமோதிரம்; கழுத்துக்குப் பொன் சங்கிலியும் முத்து ஆரமும் அணிந்தாள்: செவிக்குக் கடிப்பு: தெய்வஉத்தி, தொய்யகம் முதலியன அவள் தலைக்கு அணிந்தாள். இத்தகு ஒப்பனைகளோடு அவன் மகிழ அவனோடு ஊடலும் கூடலும் கொண்டு அவனை மகிழ்வித்தாள்.

புது விருப்பு

இந்திரவிழாவில் கலைவிழாக்களைக் கண்ட நகரத்து மாந்தர் அடுத்தது கடல்விளையாட்டைக் காணக் கடற்கரை நோக்கிச் சென்றனர். மாதவியும் அங்குச் சென்று அதனைக் காண அவாவினாள். கோவலனும் உடன் புறப்பட இசைந்தான்.

வைகறை விடிந்ததும் கோவலனும் மாதவியும் கடற்கரை நோக்கிப் புறப்பட்டனர். அவர்கள் பயணம் உல்லாசப் பயணமாக அமைந்தது. அவன் அத்திரி என்னும் அழகிய குதிரைமீது ஏறிச் சென்றான். அவள் வையம் என்னும் முடுவண்டியில் அமர்ந்து சென்றாள்.

Picture- Siva as hunter, Madurai Meenakshi Temple.

கடலாடு காதை (from Project Madurai website;thanks)

பத்துத் துவரினும் ஐந்து விரையினும்

முப்பத்து இருவகை ஓமா லிகையினும்

ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்

நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,

புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை       80

வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,

அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி

நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,       85

குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,

பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்

நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,

காமர் கண்டிகை தன்னொடு பின்னிய

தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,       90

மத்தக மணியொடு வயிரம் கட்டிய

சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை

பரியகம் வால்வளை பவழப் பல்வளை

அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,

வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்       95

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்

வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி

காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,

சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை

அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,       100

கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு

இந்திர நீலத்து இடைஇடை திரண்ட

சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை

அங்காது அகவயின் அழகுற அணிந்து,       105

தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி

தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி

மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,

கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்

பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,       110

உருகெழு மூது஡ர் உவவுத்தலை வந்தெனப்

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு

மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்

காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,

பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப       115

வைகறை யாமம் வாரணம் காட்ட

வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்

தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து

வான வண்கையன் அத்திரி ஏற

மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்       120

கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை

மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்

மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு…………………………………………

****

இதில் வரும் ஆபரணங்கள் அணிகலன்கள்

மெல் விரல் நல்லணி – மோதிரம்,

பரியகம் – காற் சவடி  ,

நூபுரம் – சிலம்பு,

அரியகம்- பாதசாலம் ,

குறங்கு செறி யணி   – கவான் செறியாபரணம் ,

முத்திரை- அரையின் முத்துவடம்,

பிறங்கிய முத்து-  பெரிய முத்து,

முப்பத்திரண்டு வடத்தினாற்  செய்த விரிசிகை  என்னும் மணி மேகலை

காமர் கண்டிகை- தோள் வளையென்றது- கழுத்து வட்டத்தின் பின் தாலிக்கு இரண்டு பக்க முன்பகுத்துப் போந்து வாகு வலையத்தோடு தொடக்கிக் கிடப்பதோர் ஆபரணம் ;   காமர் கண்டிகையுடனே மணி நெருங்கின தோள்வளையைத் தோளுக்கணிந்ததென்றுமாம்  .

மத்தக மணி – உச்சியிலே வைத்த மாணிக்கம் ; மத்தகத்தையுடைய சூடகத்துச் சிலேயுள்ள மணியோடு வைரங்கட்டுதலுமாம்.

கைவளை- சந்துக் காரை .

பரியகம்- பாசித்தாமணி; கைச் சரியுமாம்-

வால்வளை – சங்கவளை-  பவழப் பல்வளை-கடக வளை.

வாளைப் பகுவாய் மோதிரம் – முடக்கு மோதிரம்,

கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம் –     செங்கேழ்  மணியுடைய மோதிரம்; அவை இரத்தினங்கட்டின அடுக்காழி.

வாங்குவில் வயிரம்– நுடங்கின ஒளியையுடைய வயிரம் 

மரகதத்  தாள் செறி-  மரகதத்துடைய தாள் செறி; இல்லை மரகத  நாயகமாகிய வட்டப்பூ .

சங்கிலி – வீரச் சங்கிலி,

கயிற்கடையொழுகிய கோவை- கழுத்தாபரணங்களிற் கொக்கிவாய் முத்தாரமாகச் செய்து  அதிலே நவரத்தினங்களைக் கோத்து முதுகு மறையவிடும் பின் தாலி  ,

இந்திர நீலக் கடிப்பிணை – நீல குதம்பை; இடையிடை திரண்ட  சந்திரபாணியென்னும்  நாம வேறுபாட்டையுடைய  வயிரமுழுதும் கட்டின கடிப்பிணை; இவை இரண்டு காதில் அணிவது.

தொய்யகம் – தலைப்பாளை,

புல்லகம் –  தென் பல்லி, வட  பல்லி- தொடர்ந்த தலைக்கணி.

இவையனைத்தும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் – உ.வே.சா . உரையிலிருந்து கிடைத்த தகவல்.

Lord Siva’s ornaments.

–subham—

Tags- தமிழ் அதிசயம்! சிலப்பதிகாரத்தில் ஆபரணங்கள்! இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 2, தமிழ் அதிசயம்!

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-54; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,869)

Written by London Swaminathan

Post No. 15,869

Date uploaded in London –14 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவாலி 

இவ்வூரும் அருகிலுள்ள திருநகரியும் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. இது 34-வது திவ்ய தேசமாகும்.திருவாலி கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள் அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மர்) வீற்றிருந்த திருக்கோலம், வேதராஜன்

தாயார் : ஸ்ரீ அம்ருதகட வல்லி, பூர்ணவல்லி திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி

மூலவர் : ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர்

உற்சவர்: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்

தல விருட்சம்   :     வில்வம்

தீர்த்தம்         :     இலாட்சணி புஷ்கரிணி

புராண பெயர்    :     ஆலிங்கனபுரம்

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தார். அப்போது அந்த சீற்றம் அடங்காமல் இருந்ததால், தேவர்களும், முனிவர்களும் மிகுந்த கவலை கொண்டு, பூலோகம் மேலும் அழியாமல் இருக்க வேண்டும். அதைக் காக்கும் பொறுப்பை மகாலட்சுமி எடுக்க வேண்டும் என்று அவரிடம் விண்ணப்பம் வைத்தனர். அதையேற்ற மகாலட்சுமி, பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். அதன் காரணமாக இத்தலம் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று, பின்னர் திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று.

இப்பகுதியில் திருமங்கையாழ்வார், குறுநில மன்னராகத் திகழ்ந்து வாசம் செய்ததால், அவர் ‘ஆலிநாடன்’ என்று அழைக்கப்படுகிறார்.

திருநகரி ஸ்தல வரலாறு :

பிரம்மாவின் ஐந்தாவது புதல்வர் கர்த்தமப் பிரஜாபதி மோட்சம் வேண்டும் என்று எம்பெருமானைக் குறித்துத் தவமிருந்தான். அவனுக்கு அருள்தர வேண்டும் என்றாள். எம்பெருமான் அதற்கு சம்மதித்தும், அவனுக்கு உடனே மோட்சம் தரவில்லை. அதனால் மகாலக்ஷ்மி கோபம் கொண்டு இந்தத் திருத்தலத்தில் உள்ள திருக்குளத்தில் ஒரு தாமரை மலருக்குள் புகுந்து கொண்டாள் . பின்னர் எம்பெருமான் வந்து  அவரை ஆலிங்கனம் செய்ததால்  ஆலிங்கன புரியாகவும், ஸ்ரீவந்து நின்றதால் ஸ்ரீபுரியும் ஆயிற்று. அப்பொழுது கர்த்தம ப்ராஜாபதி மோட்சமளிக்க வேண்டினார். எம்பெருமான் பிரம்ம புத்திரனை நோக்கி அவனுக்கு இப்போது மோட்சம் கிடையாதென்றும் அது கலியுகத்தில்தான் சித்திக்கும் என்று அருளினார்.

திருவாழி – திருநகரி இரட்டைத் தலங்களில், திருவாழியில் அழகிய சிங்கர் கோயில் மற்றும் திருநகரியில் கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.

திருவாழி தலத்தில் மேற்கு நோக்கி திருவாழி அழகியசிங்கர் கோயில் அமைந்துள்ளது. தாயார் பெயர் பூர்ணவல்லி நாச்சியார்.

திருமங்கை ஆழ்வார் பிறந்த ஊரான திருநகரியில் திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. மூலவர் பெயர் வேதராஜன்; தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார். இக்கோயில் விமானம் 7 நிலைகளைக் கொண்டது.

லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு.

திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.

தனி சன்னதியில் திருமங்கையாழ்வார் ஆராதித்த சிந்தனைக்கினியான் என்ற மிகச்சிறிய உத்சவமூர்த்தி அமர்ந்து இருக்கிறார்.

ஆழ்வாருக்கு தனி கொடிமரம் உண்டு. கொடியேற்றி உற்சவம் நடக்கும். வேதராஜப் பெருமாளுக்கு தனி கொடிமரம் உண்டு. மூன்று ஆழ்வார்களுக்கு மட்டுமே கொடிமரம் மற்றும் கொடியேற்றி உற்சவம் உண்டு. ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும் உள்ள ஆழ்வார் சன்னதிகள் கொடிமரம் உள்ள மற்ற இரண்டு ஆகும்.

 பத்ரிகாசிரமத்துக்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த தலமாக இத்தலம் விளங்குவதால், பத்ரிகாசிரமத்துக்கு இணையாக இத்தலம் கருதப்படுகிறது. திருவாலியை தரிசிப்பதால் பஞ்ச நரசிம்மர் தலங்களை தரிசித்த பலன் கிட்டும். இத்தலத்தைச் சுற்றி குறையலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீர நரசிம்மர், திருநகரி யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர் தலங்கள் உள்ளன.

ரங்கநாத பெருமாள், தாயாருடன் இளம் திருமண தம்பதிகளாக திருமங்கையாழ்வாருக்கு காட்சி அளித்த ஸ்தலம். அதனால் இந்த எம்பெருமானுக்கு கல்யாண ரங்கநாதன் என்ற பெயர் ஏற்பட்டது.

பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம்.

***

திருவாலி  திருநகரி

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவிலும், சீர்காழியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

திருவிழாக்கள் :

வைகாசி சுவாதி திருவிழா (10 நாள்), ஆவணி பவித்ரோற்சவம்,

வைகுண்ட ஏகாதசி,

தை 12 கருட சேவை,

பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷ தினங்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

திருமங்கைமன்னன் பெருமாள் வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழாவும் பங்குனி உத்திர திருவிழாவின்போது நடைபெறுகிறது.

***

திருவாலி  பாசுரங்கள்

1188.  

வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய்*  புகுந்ததன்பின் வணங்கும் என்*

சிந்தனைக்கு இனியாய்!*  திருவே என் ஆர் உயிரே*

அம் தளிர் அணி ஆர் அசோகின்*  இளந்தளிர்கள் கலந்து*

அவை எங்கும் செந் தழல் புரையும்*  திருவாலி அம்மானே! (2) 

1189.  

நீலத்தடவரை*  மாமணி நிகழக் கிடந்ததுபோல்*

அரவு அணை வேலைத்தலைக் கிடந்தாய்*  அடியேன் மனத்து இருந்தாய்*

சோலைத்தலைக் கண மா மயில் நடம் ஆட*  மழை முகில் போன்று எழுந்து*

எங்கும் ஆலைப் புகை கமழும்*  அணி ஆலி அம்மானே!

1190.  

நென்னல்போய் வரும் என்று என்று எண்ணி இராமை*  என் மனத்தே புகுந்தது*

இம்மைக்கு என்று இருந்தேன்*  எறி நீர் வளஞ் செறுவில்*

செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ*  அரிவார் முகத்து எழு வாளை போய்*

கரும்பு அந் நல் நாடு அணையும்*  அணி ஆலி அம்மானே!

1191.  

மின்னின் மன்னும் நுடங்கு இடை*  மடவார்தம் சிந்தை மறந்துவந்து*

நின்மன்னு சேவடிக்கே*  மறவாமை வைத்தாயால்*

புன்னை மன்னு செருந்தி*  வண் பொழில் வாய் அகன்பணைகள் கலந்து*

எங்கும் அன்னம் மன்னும் வயல்*  அணி ஆலி அம்மானே!

1192.  

நீடு பல்மலர் மாலைஇட்டு*  நின் இணைஅடி தொழுதுஏத்தும்*

என் மனம் வாட நீ நினையேல்*  மரம் எய்த மா முனிவா!*

பாடல்இன்ஒலி சங்கின் ஓசை பரந்து*  பல் பணையால் மலிந்து*

எங்கும் ஆடல் ஓசை அறா*  அணி ஆலி அம்மானே!

1193.  

கந்த மாமலர் எட்டும்இட்டு*  நின்காமர் சேவடி கைதொழுது எழும்*

புந்தியேன் மனத்தே*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

சந்தி வேள்வி சடங்கு நான்மறை*  ஓதி ஓதுவித்து ஆதியாய் வரும்*

அந்தணாளர் அறா*  அணி ஆலி அம்மானே!

1194.  

உலவுதிரைக் கடல் பள்ளிகொண்டு வந்து*  உன் அடியேன் மனம் புகுந்த*

அப்புலவ! புண்ணியனே!*  புகுந்தாயைப் போகலொட்டேன்*

நிலவு மலர்ப் புன்னை நாழல் நீழல்*  தண் தாமரை மலரின்மிசை*

மலி அலவன் கண்படுக்கும்*  அணி ஆலி அம்மானே!

1195.  

சங்கு தங்கு தடங் கடல் கடல்*  மல்லையுள் கிடந்தாய்*

அருள்புரிந்து இங்கு என்னுள் புகுந்தாய்*  இனிப் போயினால் அறையோ!*

கொங்கு செண்பகம் மல்லிகை மலர் புல்கி*  இன் இள வண்டு போய்*

இளந்தெங்கின் தாது அளையும்*  திருவாலி அம்மானே!

1196.  

ஓதி ஆயிரம் நாமமும் பணிந்து ஏத்தி*  நின் அடைந்தேற்கு*

ஒரு பொருள் வேதியா! அரையா!*  உரையாய் ஒருமாற்றம் எந்தாய்!*

நீதி ஆகிய வேதமாமுனியாளர்*  தோற்றம் உரைத்து*

மற்றவர்க்கு ஆதி ஆய் இருந்தாய்!*  அணி ஆலி அம்மானே!

1197.  

புல்லி வண்டு அறையும் பொழில் புடை சூழ்*  தென் ஆலி இருந்த மாயனை*

கல்லின் மன்னு திண் தோள்*  கலியன் ஒலிசெய்த*

நல்ல இன் இசை மாலை*  நாலும் ஓர் ஐந்தும் ஒன்றும் நவின்று*

தாம் உடன் வல்லர் ஆய் உரைப்பார்க்கு*  இடம் ஆகும் வான்உலகே. (2)   

1198.  

தூவிரிய மலர் உழக்கி*  துணையோடும் பிரியாதே*

பூவிரிய மது நுகரும்*  பொறி வரிய சிறு வண்டே!*

தீவிரிய மறை வளர்க்கும்*  புகழ் ஆளர் திருவாலி*

ஏவரி வெம் சிலையானுக்கு*  என் நிலைமை உரையாயே. (2)

1199.  

பிணிஅவிழு நறுநீல*  மலர் கிழிய பெடையோடும்*  

அணிமலர்மேல் மதுநுகரும்*  அறுகால சிறு வண்டே!*

மணிகழுநீர் மருங்குஅலரும்*  வயல் ஆலி மணவாளன்*  

பணிஅறியேன் நீ சென்று*  என் பயலை நோய் உரையாயே.

    1200.  

நீர்வானம் மண் எரி கால் ஆய்*  நின்ற நெடுமால்*

தன்தார் ஆய நறுந் துளவம்*  பெறும் தகையேற்கு அருளானே*

சீர்ஆரும் வளர்பொழில்சூழ்*  திருவாலி வயல்வாழும்*

கூர்வாய சிறுகுருகே!*  குறிப்புஅறிந்து கூறாயே. 

–subham—

Tags- திருவாலி, Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-54; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

உருவ வழிபாடு தேவையா, இல்லையா? – பாபா கொடுத்த ‘குதிரை’ உதாரணம் (Post.15,868)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,868

Date uploaded in London – 14 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

10-6-26 தீபம் இதழில் வெளியான கட்டுரை!

உருவ வழிபாடு தேவையா, இல்லையா? – பாபா கொடுத்த ‘குதிரை’ உதாரணமும் ஆன்மீக உண்மையும்!

ச. நாகராஜன்

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டத்தில் ரேபள்ளே நகரில் 2-12-1963 அன்று ஶ்ரீ சாயிபாபா விக்ரஹத்தை கோவிலில் ஸ்தாபித்து பகவான் ஆற்றிய உரை:

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! சாயி கட்டிடங்களிலோ, கல்லிலோ, செங்கல்லிலோ அல்லது சுண்ணாம்புக் கலவையிலோ வாழ்வதில்லை. அவர் இரக்கத்துடன் கூடிய உலகளாவிய அன்பெனும் மணம் வீசும்  மென்மையான இதயங்களில் வாழ்கிறார்.

சமூகத்தில் உள்ள உபயோகமான சில வழிகளை விலக்கி மனிதனின் உள்ளுணர்வையும் உன்னத உணர்ச்சிகளையும் தூண்டும் கோவில்களும் விக்ரக ஆராதனையும் கொஞ்சம் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஆகவே தான் இந்தியாவில் இறைவனை நோக்கி மனிதனை இட்டுச் செல்லும் வழி இன்னும் மூடப்படவில்லை. எல்லா கலைகளும் அந்த இறுதி நிலைக்கே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குடிகாரன் கூட எப்போதோ கேட்ட கீர்த்தனை ஒன்றை முணுமுணுத்து கடவுளின் புகழையும் தன்னை உணர்வதில் உள்ள இன்பத்தையும் கூறுகிறான். ஒவ்வொருவரும், அவர் எந்த ஒரு முன்னேறிய ஆன்மீக நிலையில் இருந்தாலும் சரி, கவனத்தைச் செலுத்தி முன்னேறிச் செல்லத் தூண்டப்படுகிறான்.  இதுவே இந்தியாவை மனிதகுலத்தின் ஆன்மீக கலாசாலையாக ஆக்கியுள்ளது.  இந்தியாவின் மடியில் இந்த வாழ்க்கையை வாழும் ஒரு பெரும் பேறை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதாவது வேதாந்தத்தில் வாழ கொடுத்து வைத்துள்ளீர்கள். இந்தப் பாரம்பரியத்தை நினைவில் கொண்டு அதை அவமதிக்காத வகையில் வாழுங்கள்.

சந்திரனையோ அல்லது செவ்வாய் கிரகத்தையோ அடைய முயற்சித்து விண்வெளியை ஆராய எண்ணும் நாடுகளைப் பார்த்து பொறாமைப் படாதீர்கள். வன்மத்திற்கும் பொறாமைக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் போது அப்படிப்பட்ட பிரதேசங்களை ஜெயித்து தான் என்ன பிரயோஜனம்? காட்டுமிராண்டித்தனமான கடந்த காலத்தைக் கொண்டு கெட்ட நோக்கங்களால் அழுந்திக் கிடக்கும் மனத்துடன் மணிக்கு பத்தாயிரம் மைல் வேகத்தில் பயணித்து தான் என்ன பிரயோஜனம்? மிகவும் முன்னேறிய மேலை நாடுகளில் நிலவும் அசாந்தியின் காரணத்தைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அதன் காரணமாக இருப்பது அதிக கர்வம், பேராசை, கெட்ட பழக்கம், பாவம் ஆகியவை தான் என்பதை நீங்கள் காண்பீர்கள். இறைவனிடம் பயம் இல்லை அல்லது வயதுக்கு மரியாதை இல்லை, பாவத்திற்கு பயமும் இல்லை. அவர்கள் செல்வத்திற்கும் அதிகாரத்திற்குமான வெளிப்புற அடையாளங்களுக்கே மதிப்பைத் தருகிறார்கள். சரக்குப் பெட்டிக்குத் தான் மதிப்பு; உள்ளே இருப்பவற்றிற்கு மதிப்பு இல்லை.

உதாரணத்திற்கு, இந்த சலவையில் ஆன உருவம் ஒரு சரக்கு பெட்டி தான். அதற்குள் இருப்பது சாயி தத்வம். இது எப்படி என்றால் ஒரு கோப்பை தான் ஆதாரம்; (அடிப்படை) அதற்குள் இருக்கும் பால் ஆதேயம்.(அதனால் தாங்கப்பட்டிருப்பது) நீங்கள் சாயி தத்வத்தை இதனுள் ஊற்றி இதை சாயிபாபா என்கிறீர்கள்.  இன்னொரு பாத்திரத்தில் இன்னொரு வடிவத்தைச் செய்து அதை ஶ்ரீநிவாஸன் அல்லது சிவா, கிருஷ்ணா, ராமா என்கிறீர்கள்.

சாதனா என்னும் கிண்டர்கார்டன் (ஆரம்ப) பள்ளியில் இருப்பவர்களுக்கு இந்த விக்ரஹம் தான் ஸ்பெல்லிங் புத்தகத்தில் இருக்கும் சித்திரங்கள் போல!

குதிரையின் படமானது கு-,தி-,ரை என்ற எழுத்துக்களைக் கீழே கொண்டிருக்கும் போது அந்த எழுத்துக்களை குதிரையின் படத்துடன் பார்த்தவுடன் குதிரையை உங்களால் நினைவு கொள்ள முடிகிறது. அது போலவே  சாயி என்று சொல்லப்படும் ஒரு உருவத்தை, உங்கள்  தெளிவற்ற, முடிவற்ற தெய்வீக தத்துவமானது, ஒரு வடிவம் பெறும் வரை நீங்கள் கொள்ள வேண்டும். ஒருவித உருவமும் இன்றி சாயி தத்வத்தை உங்களால் மனதில் கொண்டுவர முடியும் என்றால், அல்லது எல்லா வடிவங்களையும் நாமங்களையும் உங்களால் கொண்டு வர முடியும் என்றால் இந்த சாயி விக்ரஹம் தேவையில்லை, அது அகற்றப்படலாம்.

இந்தக் கோவிலில் சலவையினாலான விக்ரஹத்தை ஸ்தாபித்தவுடன் உங்களுடைய எல்லா முயற்சியும் முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. உண்மையில் இது தான் ஆரம்பம். இந்த நாட்டில் ஏராளமான கோவில்கள் வெவ்வேறு நிலையில் சிதிலமடைந்துள்ளன. இங்கு மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் கூட இதே நிலைதான் இருக்கிறது. ஏன் இப்படி படாடோபமாக ஆரவாரித்து இன்னொரு கோவிலைக் கட்டி பட்டியலில் சேர்க்க வேண்டும்? புதிய கோவில்கள் உதயமாகின்றன; பழைய கோவில்கள் நினைவிலிருந்து நீங்கி அழிகின்றன. இது ஏனென்றால், வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் உங்கள் முன் தரப்பட்டாலும் அவற்றில் இருக்கும் உட்பொருள் ஒன்றே தான் என்பதை நீங்கள் உணரவில்லை என்பதால் தான்.

உங்கள் தவத்தில் ஒரு அத்தியாயம் முடிந்து விட்டது. உங்களுக்கு இந்த விக்ரஹம் கிடைத்துள்ளது, அத்துடன் உங்களுக்கு இந்த விழாவும் கிடைத்துள்ளது.

ஆனால் அடுத்த அத்தியாயத்தில் உங்கள் பக்தியானது இந்த விக்ரஹத்தில் பொழியப்பட வேண்டும், உங்களின் சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக, அதை எப்போதும் ஜீவனுடன் வைத்திருக்க வேண்டும் –

சாயியின் முன் கூப்பிய கரங்களுடன் நிற்கத் தகுதியானவர்களாக ஆக வேண்டும்.புனிதமான, தெய்வீகமானவர்கள் மட்டுமே தங்களை முழுமையாக இறைவனுக்கு சமர்ப்பிக்க முடியும்.

**

Ancient Hindu Jewellery: You can get Ph.D.- part 1(Post No.15,867)

 Ornaments of Parvati as huntress, Madurai Temple

Ornaments of Lord Siva who appeared as hunter; Madurai Meenakshi Temple.

Written by London Swaminathan

Post No. 15,867

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Hindus are the only people in the world who wear ornaments from head to foot. Greeks have no ornaments on their statues in the ancient time. Egyptians had some jewellery  ut only kings and queens wore it around their necks. Where as all Hindus have been wearing it whether it is a king or a servant; our ancient statues and literature prove it. Until this day wedding pictures of brides also show this. We have copious references to these ornaments in the Rig Veda, the oldest book in the world. After Rig Veda, we see it in the necks of Mother Goddess in Harappan Civilization. Statues of Yakshis, Yakshas and devotees dated around second century BCE reveal all types of jewelleries.

***

Apart from Hindus, Mayans and Aztecs in South America wore almost similar ornaments like the Hindus. We know that Mayans migrated to South America after a big conflict with Lord Krishna and Arujana. Both wanted to cultivate in new areas and construct new houses. So, they declared that they are going to burn Khandava Vana (Gond Wana Land). Naga tribes in the forest objected to it. But Krishna went ahead igniting a long fight between Nagas and Rulers for a few centuries. They killed all Nagas when Parikshit was assassinated. Then Astika Rishi and Jaratkaru initiated a peace agreement. Brahmins recite this historical peace agreement in a mantra three times a day. They face towards north and recite Narmadaayai Namah mantra with full details. ( In my research article written a decade ago, I have given over sixty similarities between Mayan Civilization and Hindu Civilization).

***

You can get a doctorate if you do research in Hindu jewellery. Rig Veda, Harappan Civilization, Sangam Tamil literature gives us encyclopaedic information.

Here is the list of ornaments in the Rig Veda (2000 BCE according to Prof. Wilson who thrashed Max Muller and made him to withdraw his 1200 BCE dating)

List of Ornaments in the Rig Veda

Karna sosbhanaa- 8-78-3; ear stud; ear ring;

Khaadi-1-168-3, 5-54-11;brooch, ring, bracelet or anklet;

Khaadihasta- 5-58-2; wearing bracelets;

Khaadi-6-16-48; wearing bracelets and anklets;

Khaadi pada-5-54-11; decked with anklets;

Krsanam- 1-126-4; pearl;

Krisanaavat– 1-126-4; wearing pearls;

Candra- 3-3-5;4-2-13;silver;

Candravat-3-30-20; wearing silver ornaments; possessing silver;

Tamsa- 10-106-1; to decorate;

Niska-2-33-10;8-47-15;golden ornament for the neck;

Niskagriva-5-19-3; wearing a gold necklace;

Mani-1-33-8; globule, crystal, gem;

Manigriva- 1-122-14; wearing a necklace of beads /gems;

Rajata- 8-25-22- silver;

Ratna- 1-41-6; 2-38-1; 4-1-10; shell, gems, pearls;

Ratnadhaa- 4-34-6; 7-16-6;possessing , offering ratna; great wealth;

Ratnadheya- 4-13-1; distribution of ratna; great wealth;

Rukma- 1-88-2; 4-10-5; golden chain or ornament;rukmi-1-66-3-adorned with gold ornaments;

Rukmavaksha- 1-166-3; having golden ornaments on chest;

Vrsakhaadi-1-64-10-having long bracelets;

Hiranyaya- 1-7-2;4-58-4;7-69-1; abounding in gold;

Hiranyam- 1-46-10;3-34-9; gold; precious metal;

Hiranya pinda- 6-47-22; lump of gold;

Hiranya paani-1-35-9;3-54-11;7-38-9; wearing gold ring or bracelets on hand;

Hiranya baahu- 7-34-4; wearing gold armlets;

Hiranya karna- 1-122-14; wearing gold studs; rings;

Hiranya pesa- 8-8-2; 8-31-8- adorned with gold;

Puskarasraj- 10-184-2; lotus garland

This list in not comprehensive; silver is mentioned in a lot of places with the word candra in the Rig Veda.

(Mani, Pinda were used even in 2000-year-old Sangam Tamil literature).

After Rig Veda, we get more information from Atharvana Veda, Yajur Veda, Upanishads, Sangam Tamil literature, and historical Tamil and Sanskrit inscriptions. The full jewellery list of Padhmanabha swamy Temple in Thiruvanathapuram (Kerala), Jagannath temple at Puri (Orissa) are not made public yet; Tirupati Balaji temple jewellery is uncountable. India is the richest country in the world even today. Each item in the temple will get millions of dollars if it is auctioned today. Palaces of old kings have hidden treasures. They keep it a secret until this day.

To be continued………………..

Tags- Ancient Hindu Jewellery, you can get Ph.D., part 1, list of ornaments, Rig Veda, Mayan, Aztec, Greek, Egyptian, ornaments,

இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1 (Post.15,866)

Written by London Swaminathan

Post No. 15,866

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டன் சுவாமிநாதனின் ஆராய்ச்சிக் கட்டுரை

உலகிலேயே அதிக நகைகளை இந்துக்களின் சிலைகளில் மட்டும்தான் காண முடியும்; எகிப்திய பெண்களின் சிலைகள், ஓவியங்களில் கழுத்தில் மட்டும் நகைகளை காணலாம்; ஆனால் தெய்வங்களிடத்தில் இருக்காது ; கிரேக்க சிலைகளில் நகைகளையே காண முடியாது ; வேதத்தில் நகைகளின் பெயர்கள் உள்ளன; அதையடுத்து ஹரப்பா மொகஞ்சதாரோவில் தேவி சிலைகளில் மூன்று அல்லது நான்கு சங்கிலிகள் தொங்குவதைக் காணலாம் ; இந்துப் பெண்கள் திருமணத்தின்போது அணியும் நகைகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம் ; தலையில் அணியும் சுட்டி முதல் காலில் உள்ள மெட்டி வரை  எங்கும் நகைகள் தான்!

இங்கு சில நகைகளின் பெயர்களைக் காண்போம்; அவைகளைக் கோவில் சிலைகளிலும் எல்லோரும் காணலாம் .

கோவிலுக்குள் இறைவனுக்கு அணிவிக்கப்படும் தங்க வைர இரத்தின நகைகள் அவ்வளவையும் சேர்த்துப் பார்த்தால் உலகிலேயே இன்றும் பணக்கார நாடு இந்தியாதான் என்பது வெள் ளிடை மலை என விளங்கும் . திருவனந்தபுரம், பூரி ஜகந்நாதர் கோவில் நகைகளின் பட்டியல் கூட பொதுமக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை ; திருப்பதி , மூகாம்பிகை கோவில்களில் தினமும் நகைகள் சேர்ந்த வண்ணம் இருக்கின்றன. இப்போது அயோத்திலுள்ள புதிய ராமர் கோவிலுக்கும் நிறைய நகைகள்  காணிக்கைகளாக  வந்து கொண்டிருக்கின்றன. 

மாயா நாகரீகம்

இந்தியாவுக்கு வெளியே மாயன் (மயன்)ஆஸ்தீக (அஸ்டெக்) நாகரிக மக்கள் மட்டும் இந்துக்களைப் போலவே கை, கால், கழுத்து காது ஆகிய உறுப்புகளில் ஆபரணங்களை அணிந்தார்கள் ; ஏனெனில் அவர்கள் இந்தியாவிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்னர் பாதாள லோகத்துக்கு ( தென் அமெரிக்காவுக்கு ) அனுப்பப்பட்டார்கள் .

மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.  அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர்.  மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் -கிருஷ்ணர் தரப்பில் இருந்தான். மஹாபாரத யுத்தத்துக்குப் பின்னர் மய தானவன் இன மக்கள் இந்தியாவிலிருந்து வெளியேறத் துவங்கினர். அவர்கள் புண்ய பாரத நாட்டை விட்டு வெளியேறிய தேதி ஆக்ஸ்ட் 11, கி.மு.3114 என்பதால் தான் அந்த தேதியை இன்றும் மத்திய அமெரிக்க கல்வெட்டுகளில் பொறிக்கின்றனர். இந்தியாவின் மீது அவ்வளவு நன்றி!

காண்டவ வனம் என்பதைத் திரித்து கோண்ட்வானா லேண்ட் என்ற புதிய சொல்லை வெள்ளியர்கள் உருவாக்கினர் .

Kahaandava Vana= Gondwana (land)

இந்துக்களுக்கும் மாயாக்களுக்கும் உள்ள அறுபது ஒற்றுமைகளை பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டுரைகளாக எழுதினேன்; அது புஸ்தகமாகவும் வந்து விட்டது

***

இதோ நகைகளின் பெயர்கள்:–

ஆங்கிலக் கட்டுரையில் ரிக் வேத துதிகள் எண்களையும் குறிப்பிட்டுள்ளேன்

ரிக் வேதத்தில் ஆபரணங்கள்; அணிகலன்கள், நகைகளின் பெயர்கள்:

கர்ணசோபனா – காதணி – ரிக் வேதம்

காதி  – கங்கணம் தோள் வளையம்

காதி  ஹஸ்த- கங்கணம் அணிந்த

காதி பாத – காலில் வளையம் , சிலம்பு

க்ருசணம் – முத்து அல்லது முத்து போன்ற

கிருஷ்ணவத் – முத்து அணிந்த

சந்த்ர – வெள்ளி

சந்த்ரவத் – வெள்ளி நகை அணிந்த

தம்ச- அணிந்து  கொள்

நிஸ்கா- காலத்தில்  அணிய தங்கக்காசு / சங்கிலி 

நிஸ்க க்ரீவ – கழுத்தில் தங்கச்சி சங்கிலி அணிந்த

மணி – ரத்தினம், ஸ்படிகம் ; உருண்டை வடிவ

மணிக்ரீவ – கழுத்தில் ரத்தினம் உடைய

ரஜத – வெள்ளி

ரத்ன- ரத்தினைக் கற்கள் ; நவ ரத்தினம்

ரத்னதா – பெரும் செல்வமுடைய

ரத்னதேய – கோட்டை வள்ளல், ரத்தினங்களை வழங்குவோன்

ருக்ம – தங்கச் சங்கிலி

ருக்மவக்ஷ – மார்பிலே தங்கச் சங்கிலி உடைய

ருக்மி  – தங்க நகை அணிந்த

வருஷகாதி – நீண்ட சங்கிலி அணிந்த

ஹிரண்யய- தங்கம் கொழிக்கும்

 ஹிரண்யம் – தங்கம் 

ஹிரண்ய பாணி – தங்க நகை அணிந்த கைகள்

ஹிரண்ய பிண்ட – தங்க கட்டி

ஹிரண்ய பாஹு-  தங்கத் தோள் வளையம்

 ஹிரண்ய பேஷ – தங்க நகைகள் அணிந்த

ஹிரண்ய கர்ண- காதில் தங்க நகைகள்

புஷ்கர ராஜ்  – தாமரை மாலை  (தங்கத்தினால் ஆனது)

****

இவைகளில் பிண்டம் (கட்டி)மணி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலும் உள்ளன . ஆண்களும் பெண்களும் கை,கால், தோள்களில் அணியும் நகைகளை சங்கத் தமிழ்ப் பாடல்கள் அதிகம் குறிப்பிடுகின்றன; பாணர்களுக்கு பொற்றாமரை வழங்கி கெளரவிக்கும் வழக்கத்தை சங்கப் புலவர்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றனர் ; வளையல், கழல், சிலம்பு ,தோள் வளையம் என்பன அடிக்கடி வரும் அணிகலன்களாகும்.

இவைதவிர அதர்வண வேதம், யஜுர் வேதம்  பிராமண, உபநிஷத நூல்களில் ஏராளமான குறிப்புகள் இருக்கின்றன ; அவைகளைப் பட்டியலிட்டால் புஸ்தக அளவுக்கு கட்டுரை வளர்ந்துவிடும்.

வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதையில் ஒரு என்சைக்ளோபீடியா தயாரிக்கும் அளவுக்கு தகவல்கள் இருக்கின்றன . (பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய  நவரத்தினங்கள்பற்றிய கட்டுரைகளில் அவைகளைக் கொடுத்துள்ளேன் ; எனது ‘பிளாக்’குகளில் காண்க)

***

இந்துக்கள் அணியும் நகைகளின் பெயர்கள்

உடலின் மேல் பகுதி —

புல்லகம்- தென் பல்லி, வட பல்லி;

பூரப் பாளை;

தந்தளம்;செவிப்பூ   ;

அளக சூடம் ; தொய்யகம் ;

குதம்பை;

சாவடி;

காறை;

வாகுமாலை ;

முத்தாரம்;

தோள் வளை ;வாளைப்பகு வாய் மோதிரம் ;

பரியகம்;

வீரச் சங்கிலி ; சூடகம்;

பவழ வளை;

கடக வளை;

ஆடைக்கட்டு

*****

உடலின் நடுப்  பகுதி –

முத்தரை ;

விரிசிகை

***

உடலின் கால்ப்  பகுதி –

உடைதாரம்

குறங்குச் செறி  ;

நூபுரம்;

பாடகம்

காற் சவடி (பரியகம்)

To be continued…………………..

Tags- இந்துக்களின் பழங்கால நகைகள் – Part 1, நகைகள் , ஆபரணங்கள்; அணிகலன்கள், ஆராய்ச்சிக் கட்டுரை, ரிக் வேதம் , நகைகள் பட்டியல்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,865)

Written by London Swaminathan

Post No. 15,865

Date uploaded in London –13 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திரு நாகை

தாயார் : ஸ்ரீ சௌந்தர்ய வல்லி

மூலவர் : நீலமேகப் பெருமாள்

உட்சவர்: சௌந்தர்யராஜன்

மண்டலம் : சோழ நாடு

இடம் : நாகப்பட்டினம்

கடவுளர்கள்: நரசிம்மா,கஜலெட்சுமி

வைணவ திவ்யதேசம் (திருநாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில்)

தீர்த்தம் – ஸாரபுஷகரிணி.

விமானம் – ஸெளந்தர்ய விமானம்.

ப்ரத்யக்ஷம் – நாகராஜன், திருமங்கையாழ்வார், கலியன், ப்ரஹ்மாதிகள்.

விசேஷங்கள் – வீற்றிருந்த பெருமாளாக கோவிந்தராஜனுக்கும், சயனத் திருக்கோலத்தில் ரங்கநாதனுக்கும் இரு ஸந்நிதிகள். வேறு பல ஸந்நிதிகளும் உண்டு. ரங்கநாதன் ஸந்நிதியில் மிக அபூர்வமான அஷ்டபுஜ நரஸிம்ஹரின் வெண்கலச்சிலை உள்ளது. ஒருகை பிரஹ்லாதன் தலையைத் தொட்டும் மற்றொரு கை அபயஹஸ்தமாகவும் விளங்குகின்றன. மற்ற கைகள் ஹிரண்யவதம் செய்கின்றன. இந்த க்ஷேத்ரம் த்ருவனுக்கு ஸேவை தந்த அவஸரத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கோலத்தில் இன்னும் சில சிறு அழகிய கோவில்கள் உள்ளன.

****

பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் அருளிய 10 பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ளன.இப்பதிகம் அச்சோப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாளின் அழகில் ஆழ்வார் மயங்கி, “அச்சோ, ஒருவன் அழகியவா!” என்று ஒவ்வொரு பாசுரத்திலும் வியந்து பாடியுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தம்– இரண்டாம் ஆயிரம்– திருமங்கை ஆழ்வார்– பெரிய திருமொழி–  திருநாகை: அச்சோப்பதிகம்.

1757    பொன் இவர் மேனி மரகதத்தின்

      பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்

மின் இவர் வாயில் நல் வேதம் ஓதும்

      வேதியர் வானவர் ஆவர் தோழீ

என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி

      ஏந்து இளங் கொங்கையும் நோககுகின்றார்

      அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (1)

1758    தோடு அவிழ் நீலம் மணம் கொடுக்கும்

      சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த

சேடர்கொல் என்று தெரிக்கமாட்டேன்

      செஞ் சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி

பாடக மெல் அடியார் வணங்க

      பல் மணி முத்தொடு இலங்கு சோதி

ஆடகம் பூண்டு ஒரு நான்கு தோளும்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (2)

1759    வேய் இருஞ் சோலை விலங்கல் சூழ்ந்த

      மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்

தாயின நாயகர் ஆவர் தோழீ

      தாமரைக் கண்கள் இருந்த ஆறு

சேய் இருங் குன்றம் திகழ்ந்தது ஒப்பச்

      செவ்விய ஆகி மலர்ந்த சோதி

ஆயிரம் தோளொடு இலங்கு பூணும்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (3)

1760    வம்பு அவிழும் துழாய் மாலை தோள்மேல்

      கையன ஆழியும் சங்கும் ஏந்தி

நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்

      நாகரிகர் பெரிதும் இளையர்

செம் பவளம் இவர் வாயின் வண்ணம்

      தேவர் இவரது உருவம் சொலலில்

அம் பவளத் திரளேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (4)

1761    கோழியும் கூடலும் கோயில் கொண்ட

      கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன

பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்

      பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்

      வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்

      மா கடல் போன்று உளர் கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி-

      அச்சோ ஒருவர் அழகியவா             (5)

1762    வெம் சின வேழ மருப்பு ஒசித்த

      வேந்தர்கொல்? ஏந்திழையார் மனத்தைத்

தஞ்சு உடையாளர்கொல்? யான் அறியேன்

      தாமரைக் கண்கள் இருந்த ஆறு

கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த

      காளையர் ஆவர் கண்டார் வணங்கும்

அஞ்சன மா மலையேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (6)

1763    பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும்

      பேர் அருளாளர்கொல்? யான் அறியேன்

பணியும் என் நெஞ்சம் இது என்கொல்? தோழீ

      பண்டு இவர்-தம்மையும் கண்டறியோம்

அணி கெழு தாமரை அன்ன கண்ணும்

      அம் கையும் பங்கயம் மேனி வானத்து

அணி கெழு மா முகிலேயும் ஒப்பர்-

      அச்சோ ஒருவர் அழகியவா            (7)

1764    மஞ்சு உயர் மா மதி தீண்ட நீண்ட

      மாலிருஞ்சோலை மணாளர் வந்து என்

நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார்

      நீர்மலையார்கொல்? நினைக்கமாட்டேன்

மஞ்சு உயர் பொன்மலைமேல் எழுந்த

      மா முகில் போன்று உளர் வந்து காணீர்

அம் சிறைப் புள்ளும் ஒன்று ஏறி வந்தார்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (8)

1765    எண் திசையும் எறி நீர்க் கடலும்

      ஏழ் உலகும் உடனே விழுங்கி

மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளிகொள்ளும்

      மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்

      கொண்டல் நல் மால்வரையேயும் ஒப்பர்

      கொங்கு அலர் தாமரை கண்ணும் வாயும்

அண்டத்து அமரர் பணிய நின்றார்-

      அச்சோ ஒருவர் அழகியவா             (9)

1766    அன்னமும் கேழலும் மீனும் ஆய

      ஆதியை நாகை அழகியாரை

கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்

      காமரு சீர்க் கலிகன்றி குன்றா

இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை

      ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்

மன்னவர் ஆய் உலகு ஆண்டு மீண்டும்

      வானவர் ஆய் மகிழ்வு எய்துவரே            (10)

***

இங்கு புகழ்பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது

அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ள நந்தி சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது.

மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள், பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.

மேலும் இத்தலத்தில் தியாகராஜர் சந்நிதி உள்ளது. இவர் சுந்தரவிடங்கர் எனப்படுகிறார். 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் இத்தலத்தில் அவதரித்து முக்தியும் அடைந்தவர் அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் முதல் தடவை பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.

—subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-53; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திரு நாகை, அம்பாள் நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி