HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 52; இந்து மத கலைச்சொல் அகராதி-52 (Post No.15,631)

Written by London Swaminathan

Post No. 15,631

Date uploaded in London –18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Version will be posted tomorrow.

More  K  words

KANNAPPAN / R

One of the 63 Naayanmaars/ Saivaite saints of Tamil Nadu. His story is in Periya Puranam. His story is told to illustrate unqualified love for the Lord. Kannappar/n was a hunter who dug out his eyes to be offered to Siva at Kalahasti (kaala) shrine.

***

KOCHENGAT CHOZA/N

A Choza king who was a builder of temples and is regarded as a Naayanaar. According to legend, as a spider in his previous birth, he was devoted to the Lord Siva of Tiruvanaikka/ Tiruchi and made a canopy of his web for god.  There happened to be another devotee, an elephant who pulled down the canopy. In a rage the spider kept into the trunk of the elephant, who, unable to bear the consequent pain, dashed his trunk against the Jambu tree. Both elephant and spider perished. The spider was reborn as the son of Choza queen Kamalavati and came to be called  Ko Cheng Kannaan / Kochengat/ one with red eyes. He built seventy temples and they are said to have protection from elephant attacks .

***

KURAL- TIRUK KURAL

Kural – one of the most widely known Tamil work. It consists of 1330 COUPLETS (KURAL) and deals with ethics and morality; the aim of  the book is to teach the Hindu ideals Dharma, Artha, Kama, Moksha. Book is named Dharma Artha Kama- in Tamil Muppaal- Moksha is included in the book in 70 couplets.  Dharma Artha Kama in Tamil are Aram Porul Inbam and so the book is called Muppaal. Since it contains Kural / two line stanzas it is popularly called Tiruk Kural. The author is Tiru Valluvar. Both the age of the book and the life of the author are debated. Though the Tamil Nadu government accepted the date 31 BCE for the book, linguistics show it cannot be older than fifth century CE. Famous historian K A Nilakanda Shastri and Professor Vaiyapuri Pillay place it in fifth century CE.  Ancient Tamils also included it in post Sangam books called 18 smaller works.

***

Kushika

Grandfather of Vishwamitra and father of Gadhi. He willingly underwent severe ordeals to serve the great Chyavana Rishi who after being pleased with Kushika’s devotion , ordained that his descendants would become brahmanas

***

L WORDS ; LA words

LAGNA

Lagna (लग्न) refers to that particular sign of the zodiac which is cut by the eastern horizon at the time of one’s birth.

Lagna (लग्न) refers to an “auspicious moment”, according to the Nāradasaṃhitā verse 29.86-95 

Lagna (लग्न) refers to “(being) stuck (from decapitations)”, according to Bāṇa’s Kādambarī (p. 225-226)

Lagna (लग्न) refers to the “auspicious hour (free of defects)”, according to the Śivapurāṇa 2.3.39

****

LAGNA PATRIKA

Lagna patrika is a Sanskrit term for a formal wedding invitation or letter of betrothal, often prepared by a priest to communicate the date, time, and venue of the ceremony. It acts as a symbolic, written commitment to the union and is used within Hindu tradition to announce the marriage.

***

LAKSHMI

Hindu goddess of wealth, prosperity (both material and spiritual), fortune, beauty, and fertility. As the consort of Vishnu, she embodies auspiciousness and acts as his divine energy (shakti), often appearing as the mother of the universe. She is revered as a central deity symbolizing abundance and grace. 

Goddess of wealth and fortune. Wife of Visnhu and mother of Kama. Also called Sri or Shree.

According to Ramayana, she sprang from the froth of ocean in full beauty with a lotus in her hand, when the milky ocean was churned by the Asuras/demons and the Devas/angels. She is called Ksheerabdi Tanayaa- daughter of ocean. because of her connection with lotus flower all the names of lotus in Indian languages became synonyms to her. Lakshmi is said to have four arms, sometimes depicted as having only two.  She sits on a lotus or holds a lotus in her hand.

Lakṣhmī is depicted in three aspects and in each one her vehicle differs;

1.     In sattva-guna; she accompanies Mahā Viṣṇu upon Garuda.

2.     In rajo-guna; rides alone upon an elephant or sits upon a lotus.

3.     In tamo-guna; rides alone upon the owl Uluka.

Aṣhṭalakshmi (அஷ்டலக்ஷ்மி) [Eight kinds of fortune or wealth personified as so many goddesses, viz., தனலக்ஷ்மி, தானி யலக்ஷ்மி, தைரியலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, வித்தியாலக்ஷ்மி, கீர்த்திலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி. [Dhana, Dhanya, Dairya, Veera, Vidhya, Keerti, Vijaya, Rajya Lakshmi forms are shown in many Tamil Temples.]

***

Lanka

Island od of Ceylon or its capital city. The city is described in the Valmiki Ramayana as of vast extent and of great magnificence, with seven broad moats and seven stupendous walls of metal and stone. It is said to have been built of gold by Vishwakarma for the residence of Kuvera/ Kubera, from whom it was taken by Ravana. When Ravana abducted Sita, her husband Rama built an ocean bridge to Lanka from Tamil Nadu and invaded Lanka. At the end of a big fight Ravana was killed by Rama. Now the island is called Sri Lanka.

***

Lavana

A Rakshasa, son of Madhu by Kumbhinasi. He inherited from his father an invincible trident which had been presented to him by Siva. He was surprised without his weapon and killed by Satrugna. Lavana was the king of Mathura and Satrughna succeeded him.

***

LAKSHMANA

1) Lakshmana was the brother and close companion of Rama, and himself a hero in the famous epic Ramayana. Within a number of Hindu traditions Lakshmana is considered to be an avatar, in a secondary form to Rama’s main appearance. In some Hindu traditions he is worshiped as an avatar of Shesha. The name may also be written as Lakshman or Laxman.

Lakshmana is the twin brother of Shatrughna, born in Ayodhya to Sumitra, the third wife of Dasharatha, king of Kosala. Thus, Rama is the eldest, Bharata is the second, Lakshmana is the third, and Shatrughna is the youngest of the four brothers. Despite being the twin of Shatrughna, Lakshmana is specially attached to Rama, and the duo are inseparable. When Rama married Sita, Lakshmana married the younger sister of Sita named Urmila. He accompanied Rama when he was banished to forest for 14 years.

***

LAKSHAM

One hundred thousand in Sanskrit and Indian languages.

***

LATA DESA

Lāṭadeśa (लाटदेश) (or Lāṭa) is the name of an ancient country whose king Lāṭeśa was conquered by Kesarin of the Śulkī royal family possibly identified with the Eastern Chālukya dynasty according to Chakravarti.—The Lāṭa country alluded to here may be taken to correspond roughly to the central and southern Gujarāt. This region was included in the principality of Kheṭakamaṇḍala, i.e., modern Kaira and parts of Ahmedabad District. In the time of Kṛṣṇa II the province was recovered by him from a collateral Rāṣṭrakūṭa family and remained within the empire of the Rāṣṭrakūṭas of Malkhed.

***

LAVA KUCHA/N- see Kucha under K

***

LAXMANA–  only son of Duryodhana and Bhanumathi; a fearless warrior; on the 12th day of Mahabharata war he was killed by Abhimanyu.

***

LAXMANAA- daughter Duryodhana and Bhanumati. She was abducted by Samba, Krishna’s son. At first Duryodhana objected to this match and imprisoned Samba but later at the instance of Balarama he was released and was married to Laxmanaa.

—subham—

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 52; இந்து மத கலைச்சொல் அகராதி, Part 52, K words, L words, Kural, Lagna, Lakshmana

திருப்புகழில் எழுகூற்றிருக்கை -Part 79 (Post No.15,630)

திருமங்கை ஆழ்வார் திருவெழுகூற்றிருக்கை: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் .

திருஞானசம்பந்தர் திருவெழுகூற்றிருக்கை: கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் 

79திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 79

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 79

****

Written by London Swaminathan

Post No. 15,630

Date uploaded in London –18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

I have added Tevaram and Divya Prabandham Ezu Kootrirukkai pictures taken by me in two temples in Kumbakonam .

திருப்புகழில் எழுகூற்றிருக்கை

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

     தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

          ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

இருபிறப் பாளரி னொருவ னாயினை

     ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

          மூவரும் போந்து இருதாள் வேண்ட

               ஒருசிறை விடுத்தனை

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

     முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

     மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

               அறுகு சூடிக் கிளையோ னாயினை

ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

          கொருகுரு வாயினை

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

               எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

          டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

     ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

          ஏரகத் திறைவ னென இருந்தனையே.

……… சொல் விளக்கம் ………

ஓருருவாகிய தாரகப் பிரமத்து … ஒரு (1) பொருளாகிய

பிரணவமாம் முழுமுதலின்

ஒருவகைத் தோற்றத்து … (சிவனின் ஐந்து முகங்களோடு

அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில்,

இருமரபெய்தி … சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும்

அமைந்து,

ஒன்றாய் ஒன்றி … அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து,

இருவரிற் தோன்றி … சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி,

மூவாதாயினை … மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு

விளங்குகிறாய்.

இருபிறப்பாளரின் … [உபநயனத்துக்கு முன்னும் பின்னும்] இரு (2)

பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில்

ஒருவன் ஆயினை … ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய

திருஞானசம்பந்தராய் அவதரித்தாய்.

ஓராச் செய்கையின் … [ஓரா – இரு பொருள் – ஒன்று (1) மற்றும்

தெரியாமல்] பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக,

இருமையின் (2) முன்னாள் (3) … [இருமை – இரு பொருள் –

இரண்டு (2) மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில்

(முன்னாள் = இரு பொருள் – மூன்று (3) மற்றும் முன்பொரு நாள்]

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து … நான்கு (4)

முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால்

குட்டிக்) கலைத்து,

மூவரும் போந்து இருதாள் வேண்ட … அரி, அரன், இந்திரன்

ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில்

பணிந்து முறையிட்டு வேண்ட,

ஒருசிறை விடுத்தனை … பிரமனை நீ அடைத்த ஒரு (1)

சிறையினின்றும் விடுவித்தாய்.

ஒருநொடியதனில் இருசிறை மயிலின் … ஒரு (1)

நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி,

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச … மூன்று (3) பக்கங்களிலும் நீர்

உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம்,

நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச

(5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்),

நீ வலம் செய்தனை … நீ உலகை வலம் வந்தாய்.

நால்வகை மருப்பின் … நான்கு (4) விதமான தந்தங்களை

உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்),

மும்மதத்து … மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும்,

இருசெவி ஒருகை பொருப்பன் … இரண்டு (2) காதுகளையும், ஒரு

(1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய

இந்திரனின்

மகளை வேட்டனை … மகளாகிய தேவயானையை மணம் செய்து

கொண்டனை.

ஒருவகை வடிவினில் … ஒரு (1) வகையான யானை வடிவிலே

இருவகைத்து ஆகிய … இள யானை, கிழ யானை என இரு (2)

வடிவிலும் வரவல்லதும்,

மும்மதன் தனக்கு … கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத

(3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு

மூத்தோன் ஆகி … மூத்த சகோதரனாக* விளங்கினாய்.

நால்வாய் முகத்தோன் … [நால்வாய் = இரு பொருள் – நான்கு (4)

மற்றும் வாயினின்று] தொங்கும் துதிக்கை முகத்தோனும்,

ஐந்துகைக் கடவுள் … ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு

கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும்,

அறுகு சூடிக்கு … அறுகம் [அறுகம் = இரு பொருள் – ஆறு (6) மற்றும்

அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு

இளையோன் ஆயினை … இளைய சகோதரன் என விளங்குகிறாய்.

ஐந்தெழுத்து அதனில் … நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின்

மூலமாக

நான்மறை உணர்த்து … நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன்

என்று உணர்த்தப் பெறுபவரும்,

முக்கட் சுடரினை … சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3)

தம் கண்களாக உடையவரும்,

இருவினை மருந்துக்கு … நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2)

மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு

ஒரு குருவாயினை … ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய்.

ஒருநாள் … முன்பொரு (1) நாள்

உமையிரு முலைப்பால் அருந்தி … உமாதேவியின் இரு மார்பிலும்

சுரந்த ஞானப்பாலைப் பருகி

முத்தமிழ் விரகன் … இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும்

வல்லவனாகி,

நாற்கவி ராஜன் … நால்வகைக் கவியிலும்** அரசனாகி,

ஐம்புலக் கிழவன் … பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு

அடிமைப்படாத உரிமையாளனாகி,

அறுமுகன் இவன் என … ஆறு முகங்களை உடைய ஷண்முக

மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற

எழில்தரும் அழகுடன் … இளமை ததும்பும் அழகோடு

கழுமலத்து உதித்தனை … சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத்

தோன்றினாய்.

அறுமீன் பயந்தனை … கார்த்திகைப் பெண்களாகிய ஆறு

நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய்.

ஐம் தரு வேந்தன் … கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம்,

அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும்

தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய்.

நான்மறைத் தோற்றத்து … நான்கு மறைகளைப் போன்று மிக

ரகசியமானதும்,

முத்தலைச் செஞ்சூட்டு … மூன்று பிரிவுகளோடு சிவந்த

கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான

அன்றிலங் கிரி … அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட

மலையை

இரு பிளவாக … இரண்டு கூறாகப் பிளக்குமாறு

ஒரு வேல் விடுத்தனை … ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய்.

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த … காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும்

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற … சரவணபவ என்னும்

உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத

கமலங்களைப் போற்ற,

ஏரகத்து இறைவன் என இருந்தனையே. … திருவேரகத்தின்

இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.

குறிப்பு:

இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல்

அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல்.

                                            1

                                         1 2 1

                                      1 2 3 2 1

                                   1 2 3 4 3 2 1

                                1 2 3 4 5 4 3 2 1

                             1 2 3 4 5 6 5 4 3 2 1

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

                          . . . . . . . . . . . . . . . . . . . . . . .

                              இடையில் தேர் தட்டு

                          . . . . . . . . . . . . . . . . . . . . . . .

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

                             1 2 3 4 5 6 5 4 3 2 1

                                1 2 3 4 5 4 3 2 1

                                   1 2 3 4 3 2 1

                                      1 2 3 2 1

                                         1 2 1

                                            1

சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் ..

(மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக).

முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார். அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான்.

—subham—

Tags- திருப்புகழில் எழுகூற்றிருக்கை , Part 79,

ராமாயணத்தில் வரங்கள் (52) பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்தது! (Post.15,629)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,629

Date uploaded in London – 18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (52) பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தில் நான்காவது ஸர்க்கத்தில் பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்த நிகழ்வையும் காணலாம்.

புரமாகாஷகம் ப்ராதாத்வார்வத்யா: ப்ரியகாம்யயா |                   உமயாபி வரோ தத்தோ ராக்ஷஸானாம் ந்ருபாத்மஜ ||

சத்யோபலப்திர்கர்மஸ்ய ப்ரஸூதி சத்ய ஏவ ச |                       சத்ய ஏவ வய:ப்ராப்திர்மாதுரேவ வய: சமம்

 உத்தர காண்டம் நான்காம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 31&32

பார்வத்யா – ஶ்ரீ பார்வதி தேவியாருக்கு                             ப்ரியகாம்யயா – பிரியமானதைச் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தால்                                                       ஆகாஷகம் – ஆகாயத்தில் எழுந்து செல்லவல்ல                          புரம் – நகரம் ஒன்றை (சிவபிரான்)                                             ப்ராதாத் – தந்தருளினார்                                               ந்ருபாத்மஜ – சக்கரவர்த்தித் திருமகனாரே                                 உமயா அபி – உமாதேவியாராலும்                              ராக்ஷஸானாம் – அர்க்கர்களுக்கு                                          கர்பஸ்ய – கருவின்                                                     சத்யோபலப்தி – உடனே தரித்தலும்                                         சத்ய – உடனே                                                       ப்ரஸூதி: ச – பிரசவித்தலும்                                                     சத்ய ஏவ – அதே சமயத்தில்                                           மாது: – தாயின்                                                        சமம் வய: – சமமான வயதையும்                                      வய: ப்ராப்தி ஏவ – அதே வயதைப் பொறுத்தும்                          வர: – ஆக்கினையாக தத்த: – விதித்து அருளப்பட்டது

ராக்ஷஸிக்கு பார்வதி தேவி வரம் அளித்த விஷயம் இங்கு தரப்பட்டாலும். எதற்காக வரம் அருளப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

**

சங்க காலத் தமிழ் நாட்டில் உருவ வழிபாடு (Post No.15,628)

DEVI- GODDESS WORSHIP IN HARAPPA, MOHANJADARO சிந்து சமவெளியில் தேவி வழிபாடு

Written by London Swaminathan

Post No. 15,628

Date uploaded in London –17 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

HUMAN SACRIFICE IN INDUS VALLEY; 
சிந்து சமவெளியில் ஒரு தெய்வத்துக்கு நர பலி; கீழே சப்த மாதர்கள் 

கடவுளைக்க கல்லிலோ, உலோகத்திலோ, படத்திலோ ஓவியத்திலோ உருவமாக வழிபடுவது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது ; வேதத்தில் உருவங்கள் வருணிக்கப்பட்டாலும் சிந்து சமவெளியில்தான் ஆதாரங்கள் கிடைத்தன . ஒருவர் தேவியின் முன்னால் குனிந்து வணங்கி ஒரு (மனிதனின்) தலையை  காணிக்கையாக சமர்ப்பிப்பதைக் காண்கிறோம். கீழே சப்த மாதர்கள் (ஏழு கன்னிமார் ) இருப்பதையும் காண்கிறோம். சிவலிங்கங்கள் கண்டுபிடித்ததாக வெள்ளைக்காரர்கள் முதல் நாளிலேயே சொன்ன  தெல்லாம் தவறு என்று பிற்கால ஆராய்ச்சியாளர்கள்  சொல்லிவிட்டனர் ; அவைகள் லிங்கம் அல்ல யோனிகள் அல்ல என்றும் தாயக்கட்டடத்தில் வைத்து விளையாடும் காய்கள் GAMESMEN  என்றும் சொல்லிவிட்டார்கள்  ; பிராணிகள் சூழ்ந்த உருவத்தை பசுபதி முத்திரை என்று வெள்ளைக்காரர்கள் சொன்னதை மறுக்கும் விதத்தில் அயர்லாந்திலும் பஹ்ரைன் தீவிலும் பிராணிகள் சூழ்ந்து நிற்கும்  தெய்வங்களின் முத்திரைகள் கிடைத்தன ; ஆகையால் அது பசுபதி அல்ல ; பொதுவாக இறைவன் என்ற கருத்தும் உருவானது . ஹரப்பா, மொஹஞ்சசதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட தேவியர் சிலைகள் பாகிஸ்தான் மியூசியங்களில் உள்ளன. எது எப்படியாகிலும் யஜுர் வேதத்தில் சிவ பெருமானை வருணித்ததை அப்படியே புறநானூற்றிலும் தேவார திருவாசகத்திலும் காண்பதோடு நில்லாமல் சோழர்காலச் சிற்பங்களிலும் காண்கிறோம்; கோயில் வழிபாட்டு விக்கிரககங்களிலும் காண்கிறோம். ரிக்வேதத்திலேயே சிவ பெருமானின் உருவம் வருணிக்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் .

DEVI WOSHIP IN INDUS  VALLEY 

வேத காலத்தில் துவங்கி சிந்து சமவெளியில் வணங்கி இன்று பாரத நாடு முழுதும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் உள்ள இந்த உருவ வழிபாடு இன்றுவரை இந்து மத்தில் மட்டுமே உள்ளது .ஒரு காலத்தில் இந்த உருவ வழிபாடு உலகம் முழுதும் இருந்ததை முகமது நபிக்கும் முன்னதாக உள்ள காபா (மெக்கா) உருவத்திலும் கிறிஸ்தவ மத கன்னிமேரி சிலைகளிலும் காணலாம் ; ஆயினும் அவர்கள் உருவ வழிபாட்டினைப் போற்றுவதில்லை .

இதற்குப்பின்னர் சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கடவுள் உருவங்களை பெருமளவில் உற்பத்தி செய்து  விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு சாணக்கியர் யோஜனை தந்ததையும் காண்கிறோம் .

சங்க இலக்கியத்தில் பரிபாடலில் தெளிவான குறிப்பு ஒன்று கிடைக்கிறது ; ஒரு பட்டிக்காட்டான் திருப்பரங்குன்றத்துக்கு வந்தபோது ஒரு சமய ஓவியத்தில் பூனை இருப்பது வினோதமாக இருக்கிறதே என்று கிராமத்தானின் மனைவி கேட்கவே அவளது கணவன் “அடியே! உனக்கு இது தெரியாதா ? அஹல்யாவை மானபங்கப்படுத்திவிட்டு இந்திரன் பூனை போல சென்றானே” என்கிறான்.  அங்கே இந்திரனின் புராணக்கதை சித்தரிக்கப்பட்டது தெரிகிறது .

SO CALLED PASUPATI IN INDUS VALLEY 

காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி காதல் தொகுப்பில் ராமாயண ஓவியம் வருகிறது; அண்ணன் மனைவி வீட்டில் தனியே இருக்கும் பொது தம்பியானவன் தவறான பார்வையில் அண்ணியைப் பார்த்தவுடன் அவள் ராமாயண ஓவியத்தைக் காட்டுகிறாள். “அதோபார் லட்சுமணன், அண்ணியின் (சீதையின்) கால்களை மட்டும் பார்த்த வண்ணம் நடக்கிறான்” என்று ; இந்த பிராகிருத நூல் சங்க காலத்தில் எழுந்ததே ; ஆனால் ஓவியம் இருந்த இடம்- ஆந்திரத்தில் கோதாவரி நதிக்கரை ஊரில்.

பதஞ்சலி முனிவர் , உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலான பாணினீயத்துக்கு உரை எழுதினார்; அதை மஹா பாஷ்யம் / பேருரை என்றே அழைப்பார்கள் . அதிலும் அர்த்த சாஸ்திரம் போல பல குறிப்புகள் கிடைக்கின்றன

2200 ஆண்டுகளுக்கு முன்னர் கருட ஸ்தம்பங்கள் நிறுவப்பட்டதை கரிகால் சோழன் யூப ஸ்தம்ப பாடலிலும் ககிரேக்க தூதன் மத்திய பிரதேச விதிஷா நகரில் நிறுவிய தூணிலும் காண்கிறோம்

புத்த மதத்தினர் கற்களில் உருவத்தை  சமைக்கும் வரை இந்துக்கள் களிமண்ணையும் பட ஓவியங்களையும் மட்டுமே பயன்படுத்தினர் இதனால் புத்தரின் காலத்துக்கு முந்திய ஓவியங்களோ உருவங்களோ கிடைக்கவில்லை; குஷானர் வெளியிட்ட நாணயங்களில் இந்து தெய்வங்கள் உள்ளன; அதற்கு முன்னர் வடமேற்கு இந்திய கிரேக்க மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் கிருஷ்ணன் பலராமன் உருவங்கள் உள்ளன . இந்தப்   பின்னணியில் பார்க்கையில் அடுத்து வந்த சங்க காலத்தில் உருவ வழிபாடு இருந்ததை இல்லுறைத்தெய்வம் என்ற குறிப்புகளில் காண முடிகிறது. 

குஷான மன்னர்களுக்கும் முன்னதாக யாதேயா வெளியிட்ட நாணயங்களில் முருகனின் ஆறுமுகங்களையும் ஆறு புள்ளிகளாக வடித்துள்ளனர் .

GHOSTS IN INDUS VALLEY SEALS

சங்க கால குறிப்புகளைக் காண்போம்: 

நடுகல் வழிபாடும் உருவ வழிபாடே ; இதைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் நிறைய உள்ளன ; உலகம் முழுதும் நடுகற்கள் அல்லது இறந்தோரின் சின்னங்கள் இருந்தாலும் அவைகளை அவர்கள் பூத்தூவி வழிபட்ட செய்தி இல்லை ; தமிழ் நாட்டிலோ தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை அதுபற்றிய ஆகம விதிகளை பார்க்கிறோம்.

சேர்ன் செங்குட்டுவன் இந்த விதி முறைகளைப் பின்பற்றி புனித இமய மலையில் கல்லெடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினிக்கு / கண்ணகிக்கு சிலை எடுத்தையும் அது  அந்த பத்தினி வழிபாடு இலங்கை முழுவதும் பரவியத்தையும் சிலப்பதிகாரத்திலும் இலங்கை நூல் குறிப்புகளிலும் காணலாம் .

நடுகல் வழிபாடு, பத்தினி வழிபாடுகள், காலப்போக்கில் அழிந்துவிட்டன; ஆனால் அந்தக்  காலத்தில் இருந்த கோவில்களின் நீண்ட பட்டியலை சிலப்பதிகாரம் தருகிறது .அந்தக்கோயில்கள்  இந்திரன் முதலான தேவர்களுக்கும் கூட எழுப்பப்பட்டன. கந்தழி வழிபாடு 


BALARAMA, KRISHNA IN INDO-GREEK COINS

தொல்காப்பிய சூத்திரம்

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.

கொடிநிலை = சூரியன்

கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)

வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

மேலும் சிலர் கந்து என்பது கம்பம் போன்ற கல் என்றும் இதுவே சிவ லிங்க வழிபாடு ஆனதாகவும் கூறுகின்றனர் ; பிற்காலத்தில் கந்தழி என்று தெய்வீகப்   பாடல்களில் இல்லாததால் இந்தச் சொல் மர்மமானதாவே இருக்கிறது.

SIVA ON KUSHANA COIN; SKANDA/MURUGA ON YAUDHEYA COIN

இல்லங்களில்   உறையும் கடவுள்  பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த, பிரார்த்தனை அறையில் இருந்த , படங்களையோ களிமண்  வடிவங்களையோ குறித்தாகக் கொள்ளலாம் . கல் கத்தா காளி /துர்கா பூஜையானாலும் சரி , மஹாராஷ்டிரா கணேஷ் சதுர்த்தி ஆனாலும் சரி, தமிழ் நாட்டு கிராம தேவதை கோவில்களானாலும் சரி மண்ணினால் உருவத்தைச் செய்து, வழிபாடு முடிந்தவுடன்  ஆற்றில் கரைப்பதை இன்று வரை காண்கிறோம் . ஆகவே நிரந்தரமாக வழிபடுவதற்கு சுவர் ஓவியமும் விழாக்காலங்களில் வழிபடுவதற்கு களிமண்  உருவங்களும் செய்யப்பட்டன எனலாம்; விஷ்ணுவின் ஓண  விழா முதல் சிவனின் ஆதிரை விழா , கார்த்திகை தீப   விழாக்குறிப்புகள்சங்க இலக்கியத்தில் இருப்பதால் உருவங்கள் இல்லாமல் இவை நடந்திராது .

TIGER GODDESS IN HARAPPA, MHANJADARAO IN PAKISTAN

இல்லத்து உறையும் தெய்வங்கள்

அணங்கு வழங்கும் அகல் அங்கண் என்ற மதுரைக்கு காஞ்சி 164 வரிக்கு இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் பொருள் கண்டுள்ளார் .

கோவிலில் உள்ள உருவங்களின் வீதி உலா என்று நான் கருதுகிறேன் ; இப்போது இதை நாம் சாமி/ பெருமாள்/ அம்மன்  புறப்பாடு என்கிறோம் .

கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேவிய,

மணம் புணர்ந்து ஓங்கிய , அணங்குடை நல் இல் – மதுரைக் காஞ்சி 577-578 வரிகளின் பொருள் 

“வளம் மிக்க குடிப்பிறந்த செல்வரும் அவர் வழிச் சார்ந்த பிற செல்வர்களும் வாழும் இல்லங்கள் தெய்வங்களை உடையனவாக இருக்கின்றன” என்பதைக் காட்டுகிறது

இல்லத்தின் வாயில் நிலைகளிலும் தெய்வம் நிலைபெற்றிருப்பதாகக் கொண்டாடினர்.

தொல் வலி  நிலை இய, அணங்குடை நெடுநிலை

நெய்ப்படக் கரிந்த திண்பொரிக்கதவின் – மதுரைக் காஞ்சி 353/4

“வீட்டின் வாயிலில் தெய்வம் உறைவதைக்குறிப்பிட்டு அதற்கு நெய், ஐயவி என்னும் வெண்கடுகு சமர்ப்பிக்கப்பட்டதையும் உரைகாரர்  நச்சு. குறிப்பிடுகிறார்.

இன்றுவரை அரண்மனைக் கதவுகளில் , செட்டியார் வீட்டுக் கதவுகளில் கஜ லெட்சுமி உருவம் பொறித்திருப்பதைக் காணலாம் . மைசூர் அரண்மணிக் கதவுகளில் உள்ள கஜலட்சுமி உருவத்தைப் புகைப்படமும் எடுத்தேன் ; குபேரனின் நவ நிதிகளில் சங்கம் பதுமம் என்ற இரண்டை மட்டும் கதவில் பொறிக்கும் வழக்கமும் உள்ளது

மாலை நேரத்தில் இரும்புத் தகளிகளில் விளக்கேற்றி மலர் தூவி வழிபட்டதை நெடுநல்வாடை வரிகள்

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,

மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,

பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்,

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,                                                

அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,

மல்லல் ஆவணம் மாலை அயர        (36 – 44)

கருத்துரை

வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கையினையுடைய பெண்கள், மூங்கிலைப் போன்ற தோளினை உடையர், மென்மையான மேனியுடையர், முத்துப் போன்ற பல்லுடையர், காதிலே அணிந்துள்ள அழகிய காதணிக்குப் பொருந்த மிக்க அழகுடன் கூடிய குளிர்ச்சியான கண்களையுடையர், பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடையர், இப்பெண்கள் பூந்தட்டில் இட்டு வைத்த மலரும் காம்பினையுடைய பிச்சி மலரின் அரும்புகள் இதழ் விரித்து மணம் வீசின.  அவை மலர்வதைக் கொண்டு மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்தனர், இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைகளால் தொழுது தெய்வத்தை வணங்கினர். 

பெண் ஒருத்திக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவளுடைய தோழி,  “வா, மனையில் உறையும் தெய்வத்தை வணங்கி  பலியையும் செலுத்துவோம் என்கிறாள்

வல்லே வருக, வரைந்த நாள்!” என,

நல் இறை மெல் விரல் கூப்பி,

இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! -அகநானூறு 282

***

HARAPPA AND MOHANJADARO IN PAKISTAN

வீடுகளின் சுவரில் பாவை/ பெண் தெய்வம்  உருவத்தை வரைந்து வெளிப்பட்டதை அகநானூறு 369 விளக்குகிறது :

கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:

ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,

மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்

கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்

சேயிழை மகளிர் ஆயமும் அயரா;                        5

தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்

காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்

பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,

இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன்,

கொடியோள் முன்னியது உணரேன், ”தொடியோய்!  அகநானூறு  369

பொருள்

செவிலித்தாய் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள். மகளே!

என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணியந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர். அவர்கள் இப்போது தவிக்கின்றனர். நீ ஊட்டாததால் நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது. மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை. நீ நீர் ஊற்றாததால் நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை. அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன். அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை”..

***

உலகப்புகழ் பெற்ற இலக்கணமான பாணினீயத்துக்கு, 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதிய பதஞ்சலி யானை குதிரை ஒட்டகம் போன்ற பொம்மைகளை பிரகிருதி என்றும் வழிபடக்கூடிய உருவங்களை அர்ச்சா என்றும் எழுதியுள்ளார் . இவைகளை புரோகிதர்கள்  பயன்படுத்தினர் . அவர்கள் வீடு வீடாக இவைகளை எடுத்துச் சென்றோ கோவில் போன்ற ஒரே இடத்தில் வைத்தோ சம்பாத்தித்தனர்; வாழ்வூதியம் பெற்றனர் . இவை தவிர தனிப்பட்டவர் வழிபாட்டிலும் அர்ச்சா என்னும் உருவங்கள் இருந்தன. சிவன், ஸ்கந்த/ விசாகன் ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார் .

சாணக்கியன் யோசனையின் பேரில் மெளரிய மன்னர்கள் வணிக ரீதியில் கடவுள் உருவங்களை செய்து, விற்று  அரசாங்கத்துக்குப் பணம் ஈட்டித்தந்தனர் . ஆனால் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்தக் கடவுள் பொம்மைகளின் பெயர்களுடன்  என்னும் பின்னொட்டைச் சேர்த்தனர் ‘சிவக’. ‘விசாகாக’ .

PUNCH MARKED COINS

பாணினியின் , 6-3-26; 8-1-15 சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஸ்கந்த- விசாக ஜோடி மிகவும் வரவேற்றைப் பெற்றன என்கிறார். ஆக, முருகனின் இரண்டு உருவங்கள் ஜோடி ஜோடியாக விற்கப்பட்டது தெரிகிறது.

இன்னொரு சுவையான விஷயத்தையும் பதஞ்சலி தருகிறார் பாணினி சூத்திரம் 1-2-64 க்கு உரை எழுதுகையில் காஷ்யபரின் உருவங்களையும் மக்கள் வழிபட்டது தெரிகிறது ; வர்ணன், விஷ்ணு ஆகிய இருவருக்கும் காஷ்யபர் என்ற பெயர் உண்டு.

க்ஷத்ரியர்கள் கொட்டத்தை அடக்கிய பின்னர் பரசுராம அஸ்வமேத யாகம் செய்து, இந்த பூமியை காஷ்யபரிடம் கொடுத்தார் . இதனால் பூமாதேவிக்கு காஷ்யபி தேவி என்ற பெயரும் இருக்கிறது

தனபதி /வைஸ்ராவண /குபேர வழிபாடு, ராமர் /கேசவர், பலராமர்/ கிருஷ்ணர் வழிபாடும்,  பதஞ்சலி காலத்தில் நடந்தது

தெய்வம் தொடர்பான விழாக்களை மஹஸ்சம்சத் என்ற சொற்களால் பதஞ்சலி  குறிப்பிடுகிறார் .இந்திரன் , கங்கா , ராம கேசவ , தனபதி (குபேரன்) விழாக்கள் கோவில்களில் நடந்த போது  சங்கு, மிருதங்கம், பணவ  வாத்தியங்கள் ஒலித்தன . இந்த விஷயம் தேவாரம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் வருகின்றது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக உருவ வழிபாடு இருந்ததற்கான இலக்கிய, தொல்பொருட் துறை சான்றுகள் நம்மிடம் உள்ளன; இந்து மதத்துக்கு சனாதன மதம் என்று பெயரிட்டது பொருத்தமே!

–SUBAHM—

TAGS-சங்க காலம்,  தமிழ் நாடு,  உருவ வழிபாடு , ஹரப்பாவில் நரபலி , தேவி வழிபாடு , சிந்து சமவெளி நாகரீகம் 

‘ஆறுமுகம்’ என்பதன் பொருள்; இலங்கையில் பிரம்மா வேடனாக பிறந்த கதை–78 (Post.15,627)

Written by London Swaminathan

Post No. 15,627

Date uploaded in London –17 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 78

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 78

***

இலங்கையில் பிரம்மா அந்திமான் என்ற வேடனாக பிறந்த கதை

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி …… அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி …… அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி …… வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி …… வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் …… வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம …… முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு …… மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ……… (from kaumaram.com)

அகரமும் ஆகி … எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல

எப்பொருளுக்கும் முதன்மையாகி

அதிபனும் ஆகி … எல்லாவற்றிற்கும் தலைவனாகி

அதிகமும் ஆகி … எல்லோருக்கும் மேம்பட்டவனாகி

அகமாகி … யாவர்க்கும் உள்ள – யான் – என்னும் பொருளாகி

அயனென வாகி … பிரமன் என்னும் படைப்பவன் ஆகி

அரியென வாகி … திருமால் என்னும் காப்பவன் ஆகி

அரனென வாகி … சிவன் என்னும் அழிப்பவனாகி

அவர் மேலாய் … அம்மூவருக்கும்மேலான பொருளாகி

இகரமும் ஆகி … இங்குள்ள பொருட்கள் யாவுமாகி

எவைகளும்ஆகி … எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி

இனிமையும் ஆகி … இனிமை தரும் பொருளாகி

வருவோனே … வருபவனே

இருனில மீதில் … இந்த பெரிய பூமியில்

எளியனும் வாழ … எளியவனாகிய இந்த அடியேனும் வாழ

எனதுமுன் ஓடி வரவேணும் … எனதுமுன் ஓடி வரவேணும்

மகபதி ஆகி … யாகங்களுக்குத் தலைவனாக

மருவும் வலாரி … விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்)

மகிழ் களி கூரும் … மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும்

வடிவோனே … அழகிய வடிவம் கொண்டவனே

வனமுறை வேடன் … காட்டில் வசித்த வேடன் (அந்திமான்*)

அருளிய பூஜை மகிழ் … செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற

கதிர்காமம் உடையோனே … கதிர்காமம் (உன் பதியாக)

உடையவனே

ஜெககண ஜேகு தகுதிமி தோதி திமி … (அதே ஒலி)

என ஆடு மயிலோனே … என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே

திருமலிவான … லக்ஷ்மிகரம் நிறைந்த

பழமுதிர்ச்சோலை மலை மிசை … பழமுதிர்ச்சோலை மலையின்மீது

மேவு பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

முருகனது வேலுக்குப் பெருமை தன்னால்தான் என்று அகந்தை கொண்ட பிரமனை முருகன் சபிக்க, பிரமன் அந்திமான் என்ற வேடனாக இலங்கையில் பிறந்தான். தான் கொல்ல முயன்ற பிப்பலாத முனிவரால் அந்திமான் ஞானம் பெற்று கதிர்காம வேலனை கிருத்திகை விரதம் இருந்து வணங்கி, அருள் பெற்ற வரலாறு இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

****

வாகனங்களின் கதை

முடுகு வீர சூர பத்மர் … வேகமாக எதிர்த்துவந்த வீரர்களான

சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன்* ஆகியோரின்

தலையின் மூளை நீறு பட்டு முடிவதாக … தலைகளில் உள்ள

மூளைகள் சிதறித் தூளாகி முடிவுபெற,

ஆடு நிர்த்த மயில்வீரா … (துடிக் கூத்து) நடனம் ஆடிய

மயிலின் மீதமர்ந்த வீரனே,

முநிவர் தேவர் ஞான முற்ற புநித சோலை மாமலைக்குள் …

முநிவர்களும், தேவர்களும் ஞானம் அடைந்த பரிசுத்தமான சோலை

மாமலைக்குள் (பழமுதிர்ச்சோலைக்குள்**) வீற்றிருக்கும்

முருக வேல த்யாகர் பெற்ற பெருமாளே. … வேல் முருகனே,

தியாகமூர்த்தியாம் சிவபிரான் ஈன்ற பெருமாளே.

சூரன், பத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய பூதகணங்கள் கருடன் முதலிய வாகனங்களுக்குப் பெருந் தொல்லை தந்தமையால் முருகனால் அசுரர்களாக ஆகுமாறு சபிக்கப்பட்டனர். சாபம் நீங்கும்போது அவரவர்கள் விரும்பியபடியே சிங்கமுகன் துர்க்கைக்கு சிம்மவாகனமாகவும், தாரகன் ஐயனாருக்கு யானைவாகனமாகவும், சூரன் கந்தனுக்கு மயில் வாகனமாகவும், பத்மன் முருகனுக்குச் சேவற்கொடியாகவும் ஆனார்கள் – கந்த புராணம்.

** பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.

***

ஆறுமுகம் என்பதன் பொருள்

ஆதியொடு மந்த மாகிய நலங்கள் … முதலில் தொடங்கி இறுதி

வரை உள்ள சகல நலன்களும்

ஆறுமுக மென்று தெரியேனே … ஆறுமுகம்* என்ற உண்மையை

நான் தெரிந்து கொள்ளவில்லையே.

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டது … ஒப்பற்ற ஓங்கார மந்திர

ரூபநிலை கொண்டது

ஆடுமயி லென்பது அறியேனே … ஆடுகின்ற நிலையிலுள்ள

மயில்தான் என்று அறியவில்லையே.

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு … நாதமும் விந்துவும்

சேர்ந்து உருவாக்கிய இவ்வுடலால்

நானிலம் அலைந்து திரிவேனே … உலகமெல்லாம் அலைந்து

திரிகின்றேனே.

நாகம் அணிகின்ற நாதநிலை கண்டு … குண்டலினியாக ஓடும்

பிராணவாயு அடைகின்ற ஆறாவது நிலையை (ஆக்ஞாசக்ரமாகிய ஒளி வீசும் ஞான சதாசிவ நிலையைக்) கண்டு தரிசித்து**

நாடியதில் நின்று தொழுகேனே … விருப்புற்று அந்த நிலையிலே

நின்று நான் தொழவில்லையே.

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற … அந்த ஞான ஒளியை

உணர்கின்ற வாழ்வே சிவ வாழ்வு என்ற

சோகமது தந்து எனையாள்வாய் … ( +அகம்) அதுவே நான்

என்ற நிலை தந்து, என்னை ஆள்வாய்.

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று … சூரர் குலத்தை

வென்று வெற்றியோடு போய்

சோலைமலை நின்ற பெருமாளே. … பழமுதிர்ச்சோலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

ஆறுமுகம் என்ற தத்துவம்:

1.   அ, உ, ம், நாதம், விந்து, சக்தி.

2.   சிவனது ஐந்து முகங்களும் தேவியின் ஒரு முகமும்.

3.   ஆதி, இச்சா, கிரியா, பரா, ஞான, குடிலா சக்திகள் என்ற ஆறு சக்திகள்.

4.   ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற ஆறு குணங்கள்.

***

சீதை ஆபரணங்களை எறிந்த கதை சங்க இலக்கியத்தில் உள்ளது !

அரிமைந்தன்புகழ் மாருதி என்றுள கவியின் சங்கம் …

சூரியனின் மைந்தனான சுக்ரீவன் புகழ் மிக்க வானர மந்திரியாகிய மாருதியினிடத்தில்

இராகவ புங்கவன் அறிவுங் கண்டு அருள்வாயென

அன்பொடு தர … இராகவனாகிய மரவுறி தரித்தவனது அறிவின்

திறத்தைக் கண்டு அருள்வாய் என்று அன்போடு அனுப்ப,

வேறுன் அருளுங் கண்டத ராபதி வன்புறு விஜயங்

கொண்டெழு போது … அநுமன் இராமனின் அருளைக் கண்டு,

மேலும் கூறினான் “அந்த அண்டத்து அதிபதி (இராவணன்)

வலுக்கட்டாயமாக (சீதையை அபகரித்து) வானில் புஷ்பக விமானத்தில் கொண்டு செல்லும்போது,

புலம்பிய அகமும் பைந்தொடி சீதை மறைந்திட வழிதோறும் …

மனம் வருந்தி வாயாரப் புலம்பிய பசுங்கொடி போன்ற சீதையும்

மறைவாக, சென்ற வழியில் எல்லாம்,

மருவுங் குண்டலம் ஆழி சிலம்புகள் கடகந் தண்டைபொன்

நூபுர மஞ்சரி … தான் அணிந்திருந்த நகைகளாகிய குண்டலம்,

வளைகள், சிலம்புகள், கொலுசு, பொன் சதங்கை, மாலைகள்,

மணியின் பந்தெறி வாயிது பந்தென … மணிகள் ஆகியவற்றைப்

பந்து போல் வீசி எறிந்தாள், அந்த நகை மூட்டை இதுதான்” என்று

தந்திட,

முதலான மலையுஞ் சங்கிலி போலம ருங்குவிண் முழுதுங்

கண்ட நராயணன் … மேரு மலை அளவுக்கு உயர்ந்து பக்கத்தில்

தொடராக உள்ள வானம் அனைத்தையும் (திரிவிக்ரமாவதாரத்தில்)

பாதத்தால் அளந்த நாராயணனாம் திருமால்

அன்புறு மருகன் தென்புன வாயில் அமர்ந்தருள்

பெருமாளே. … மிகவும் அன்பு கொண்ட மருகனாம், தென் திசையில் உள்ள புனவாயில்* என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

* ‘புனவாயில்’ என்ற ஊர் இப்பொழுது ‘திருப்புனவாசல்’ என்று விளங்குகின்றது.

***

My Old Article is given below

குரங்கு அணிந்த நகைகள் – கம்பனும் புறநானூற்றுப் புலவனும் (Post.9072)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9072

Date uploaded in London – –24 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ராமாயணத்தில் சீதையை இராவணன் கடத்திச் சென்றபோது சீதை கீழே எறிந்த நகைகளை குரங்குகள் எவ்வாறு அணிந்தன என்ற அரிய செய்தி புறநானூற்றில் உள்ளது. இதை அனந்தராம தீக்ஷிதர் போன்ற உபன்யாசகர்கள் நகைச் சுவை ததும்பச்  சொல்லும்போது  அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஆரவாரித்து மகிழ்வர் . புறநானூற்றுப் புலவர் ஊண் பொதிப் பசுங்குடையார்தான் இதை முதல் முதலில் பாடியுள்ளார். பாடல் எண் 378. இது தவிர அக நானூற்றுப் பாடல் ஒன்றிலும் ஒரு ராமாயணக் காட்சி வருகிறது . அதுவும் வேறு எங்கிலும் காணக்கிடக்கில . நிற்க.

கம்பனும் இந்த குரங்கு நகை அணியும் காட்சியை   பால காண்டத்தில் ‘வரைக் காட்சிப் படலத்தில்’ பயன்படுத்துகிறான். ஒருவேளை கம்பன் புறநானூற்றைக் கரைத்து குடித்திருக்கலாம் அல்லது அந்தக் காலத்தில் வால்மீகி விட்டு  விட் ட  செவி வழிச் செய்திகளை பிறர் பாடியிருக்கலாம்.

புறநானூற்றுப் புலவன் ஊண் பதிப் பசுங்குடையார் (378) சோழன் செருப்பாழி எறிந்த இளஞ் சேட் சென்னியைப் பாடுகையில் சொல்கிறார் –

தென் பரதவர் மிடல் சாய ….………..

கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை

வலித்த கை அரக்கன் வௌவிய ஞான்றை

நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை  இழைப் பொலிந்தாங்கு

அறா அ அறு  நகை இனிது பெற்றிகுமே —

இருங்கிளைத் தலைமை எய்தி

அரும்படர் எவ்வம் உழந்தன்  தலையே – 378

பொருள் :–

என்னைப் போன்ற பரிசிலர்க்கு சோழ மன்னன் நகைகளை வாரி வழங்கினான் . வறுமையால் வருந்திய என் சுற்றத்தார் அவற்றைக்கொண்டு விரல்களில் அணியத் தக்கவற்றை காதில் அணிபவரும்

காதில் பூணத் தக்கவற்றை  விரலில் அணிபவரும் 

இடுப்புக்குரியவற்றை  கழுத்தில் அணிபவரும்

கழுத்துக்குரியவற்றை  இடையில்  அணிந்து கொள்பவருமாகி இருந்த காட்சி எப்படி இருந்தது தெரியுமா ?

இராமனுடன் வந்த சீதையை, மிக்க வலிமையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின்

, சிவந்த முகமுடைய மந்திகள் அந்த நகைகளை தாறுமாறாக அணிந்ததைப் பார்த்து கண்டவர் எல்லாம் நகைத்து மகிழ்ந்தது போல இருந்தது 

அது போல பெரிய சுற்றத்துக்குத் தலைமை பூண்ட நாங்கள் மகிழ்ந்தோம். இதுவரை எங்களை வறுமை வாட்டி வந்தது

XXXX

கம்பன் இதை எப்படிப் பயன்படுத்துகிறான் என்றும் காண்போம் —

சரம் பயில் சாபம் என்னப் புருவங்கள் தம்மின் ஆடா

நரம்பினோடு இனிது பாடி நாடக மயிலோடு ஆடி

அரம்பையர் வெறுத்து நீத்த  அவிர்மணிக் கோவை ஆரம்

மரம்பயில் கடுவன் பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ

–வரைக் காட்சிப் படலம், கம்ப ராமாயணம்

பொருள் :–

தசரதன் படைகளும் அயோத்தி மக்களும் சீதா – ராமன் கல்யாணத்துக்காக மிதிலை நகரை நோக்கிச் செல்கின்றனர் .அப்போது மலையைக் கடந்து செல்லும்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சி இது. தேவ மகளிர்க்கு அம்பு பொருந்திய வில் போன்ற புருவங்கள் உள . அவர்கள் வீணை , யாழ் முதலிய நரம்பு வாத்தியங்களுடன் பாடுகின்றனர் . அவர்கள் மயில்களைப் போல நடனம் ஆடுகின்றனர் அத்தேவமகளிர் கணவனுடன் ஊடல் கொண்டதால் , வெறுத்து , முத்து மாலைகளையும் இரத்தின மாலைகளையும் கழற்றி எறிகின்றனர் . அவற்றை மரத்தில் வாழும் ஆண்  குரங்குகள் எடுத்து பெண் குரங்குகளுக்குப் போடுகின்றன. அப்போது அவற்றை அணிந்த்துக்கொண்ட பெண் குரங்குகளும் அதைக் கண்டு மகிழும் .

இப்படி கம்பன் திடீரென குரங்குகளுக்கு நகை போட்டு மகிழ்வது புறநானுற்றில் கண்ட ராமாயணக் காட்சி நினைவுக்கு வந்ததால்தான் என்பதை சொல்லத் தேவையில்லை .

–Subham—

TAGS: திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள், Part 78, சீதை ஆபரணங்களை எறிந்த கதை, வாகனங்களின் கதை , ஆறுமுகம் என்பதன் பொருள் , PART 78, குரங்கு, நகை, கம்பன், ஊண்பொதிப் பசுங்குடையார், புறநானூறு 378

ராமாயணத்தில் வரங்கள் (51) சிவபிரான் சுகேசனுக்கு அனுக்ரஹம் அளித்தது!(Post.15,626)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,626

Date uploaded in London – 17 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (51) சிவபிரான் சுகேசனுக்கு அனுக்ரஹம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தில் நான்காவது ஸர்க்கமாக அமைவது ‘ஸுகேசன் என்ற அரக்கனின் உற்பத்தி’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய மஹரிஷியிடம் ஶ்ரீ ராமர் அரக்கர்களுக்கு மூல புருஷன் யார்?” என்று கேட்க அகஸ்தியர் அரக்கர்களின் வரலாற்றை விரிவாகக் கூறுகிறார்.

அந்த அரக்கர்களின் வரலாற்றில் அவர் கூறியதாவது:

ஹேதி என்ற அரக்கன் வித்யுத்கேசன் என்ற புத்திரனைப் பெற்றான். வித்யுத்கேசனுக்கும் சந்த்யா என்பவளின் புத்திரியான ஸாலகடங்கடை என்பவளுக்கும் திருமணம் நடந்தது. அவள் ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். பெற்ற குழந்தையை அப்படியே விட்டு விட்டு தன் கணவனுடன் அவள் காமத்தில் மூழ்கி விட்டாள்.

குழந்தை தானாகவே வாயில் விரலை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தது.

அவ்வழியே சிவபிரானுடன் சென்று கொண்டிருந்த பார்வதி தேவி அழும் குழந்தையைப் பார்த்து இரக்கம் கொண்டாள்.

தம் ராக்ஷஸாத்மஜம் சக்ரே மாதுரேவ வய:சமம் |                     அமரம் சைவ தம் க்ருத்வா மஹாதேவோக்ஷரோவ்யய: ||

   உத்தரகாண்டம் நான்காவது ஸர்க்கம், ஸ்லோக எண் 21

அக்ஷர: – நித்தியமானவரும்

அவ்யய: – பலன்களை அளிக்க வல்லவருமான

மஹாதேவ: ஏவ – ஶ்ரீ மஹாதேவரே

தம் – அந்த’

ராக்ஷஸாத்மஜம் – ராக்ஷஸி பெற்ற குழந்தையை

அமரம் க்ருத்வா – மரணமில்லாததாய்ச் செய்து

ச – அத்துடன்

தம் – அவனை

மாது: – தாயாருக்கு

வய: சமம் ஏவ – ஸமமான வயதுள்ளவனாகவும்

சக்ரே – அனுக்ரஹித்து அருளினார்

இது மட்டுமல்ல, பார்வதி தேவியின் பிரியத்திற்கு அந்தக் குழந்தை ஆளானதால் தேவிக்குப் பிரியமானதைச் செய்து முடிக்கவேண்டும் என்று எண்ணிய சிவபிரான் ஆகாயத்தில் எழுந்து செல்லவல்ல ஒரு நகரத்தைத் தந்தருளினார். உமாதேவியாராலும் அரக்கர்களுக்குக் கருவின் உடனே தரித்தலும், உடனே பிரசவித்தலும், அதே சமயத்தில் தாயின் சமமான வயதையும் பெறுதலும் ஆக்கினையாக விதித்து அருளப்பட்டது.

இப்படியாக அகஸ்திய மஹரிஷி சுகேசனின் வரலாற்றை ராமருக்கு எடுத்துரைத்தார்.

இப்படி சிவபிரான் மற்றும் உமாதேவியாரின் அனுக்ரஹம் சுகேசனுக்கு அருளப்பட்டது. இதை வரமாகக் கொள்ள முடியாது. அனுக்ரஹமாகக் கொள்ளலாம்.

**    தொடரும்

Purananuru Wonders -21 Full-fledged Hinduism in Tamil Sangam Literature(Post No.15,625)

Written by London Swaminathan

Post No. 15,625

Date uploaded in London –16 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru Wonders -21 Ancient Tamil Encyclopaedia -Part 61; One Thousand Interesting Facts -Part 61

Item 458 Puranas in Sangam Tamil Literature

Tamils living during Sangam age (100 BCE to 300 CE) were ardent Hindus. We did not have the name of Gautama Buddha or Mahavira in the 30,000 lines in 2500+ Sangam poems sung by 450++ poets. Only Hindu Gods are praised in those poems.

Purananuru verse 56 composed by famous and controversial poet Nakkirar (nakkeerar) shows Hinduism in full colour. Here we see Lord Siva, Lord Skanda/Kartikeya/Muruga, Lord Vishnu and Balarama along with their flags or Vahanas.

Since all the Puranic details and stories are in Sangam poems, Puranas must be dated in the BCE period. We know Hindus were keen in updating everything, which they did up to Gupta period and so foreigners dated them wrongly. When it came to writing, the updating slowed down. We will deal with the details in verse 56 one by one.

***

Item 459 Lord Siva on Bull


“Sivan has a victory flag with a bull, flame-like bright matted braids,
axe that is hard to avoid and a sapphire blue neck”.

Lord Siva is shown as we see in Siva Purana and later Tevaram and Tiruvasagam hymns.

Name Siva is not in the Rig Veda as well as 34,000 lines of Tolkappiam and Sangam literature. But He is described in other ways. Here Nakkirar says Siva rides on Bull with red coloured matted hair. The matted hair is in Yajur Veda (see Rudram Chamakam Mantras).

This shows Tamils were well versed in the Vedas and Puranas. This is confirmed by various other Sangam poets (Even Indra’s molestation of Ahalya is in Paripaatal poems).

***

Item 460 Balarama

“Balarāman has
a white body as white as whorled conch growing in the ocean, kills
with his murderous plough and carries a palmyra palm on his flag”.
 

Lord Krishna and his brother Balarama were household names in Tamil Nadu. It has been there for at least 2500 years. Even today children are named after them. Film songs praise Krishna or use Him as a simile.

Here the poet described his flag with Palmyra tree emblem, his skin colour, his picture with a plough on his shoulder. During Mahabharata war, he differed with Krishna and went on a pilgrimage to the South and he spread agriculture through out India. The plough symbol mentioned by the poet confirms it.

***

Item 461

“Thirumāl who is the colour of lovely, blue, washed sapphire, longs for
triumph, and has a bird is on his flag which towers high into the sky”.

In the same way Lord Vishnu (Tirumaal) is portrayed with his Eagle Flag (Garuda) ; Pul means bird, but in Tamil this word is sued to mention Garuda Vahana of Vishnu). His skin colour was Bluish Black. Krishna means Black.

Black colour was very much  appreciated and even most beautiful Draupadi was called Krishnaa (aa—long sound)

Tamil were thorough with all the Vishnu, Siva, Devi Puranas.

***


Item 462
“Murukan who has never been defeated, glows, has a peacock on his
flag and rides a peacock.”

Lord Skanda was always victorious and he was riding on a peacock. He is the most popular god among village folk in Tamil Nadu. In the Puranas he is shown as Deva Senaapati- Commander in Chief of the Divine Army.

In other poems we see Tiruchendur , one of His Six Abodes, where he became victorious after killing the demon Sura Padman (suura Padman).

The same poet has written another work called Tiru Murukaatruppadai in praise of Lord Skanda/Muruga.

***

Item 463 Kings are Gods

In Tamil the same word is used for King and God (iraivan in Tamil) and for the place where they reside (Ko il in Tamil).

Here the poet explains in what way the king is like Hindu Gods (described above). Manu smriti and other Sanskrit scriptures also describe the king in this way. This is a Hindu concept; kings are gods.

***

Item 464 Yavana Ships

“wearing bright bangles serve you fragrant and cool wine brought in fine ships
by the Yavanas, pouring from finely made pitchers made of gold.  O Māran
whose sword is raised high!” 

In the Sangam Tamil literature Yavanas are mentioned at least six time. They wee not Greeks but Romans. The contact between Rome and South Indian ports 2000 years ago is confirmed by the Roman coins unearthed in a lot of places in South India. Coins from Augustus Ceasar period confirmed the Age of Sangam Literature as well.

Tamil kings liked Roman wine.

Dr R Nagaswamy, world famous historian and archaeologist of Tamil Nadu, ha given full details in his book Roman Karur.

Yavana/Roman ships came to Tamil Nadu ports with gold and exchanged it with pearls, black pepper, spices, ivory, Indigo etc

***

Item 465 Long Live like Sun and Moon

“May you live in this earth for long, like the sun
with hot rays that drives away darkness in the sky, and like the cool moon
that spreads its rays from the west!”

Hindus were great astronomers even 2000 years ago. They named famous constellations after Hindu Puranic figures. They used strs and heavenly bodies as similes. They knew Sun and Moon are eternal (in human years) and compared them with the kings or one’s life span. They used to sing this Ramayan story will be sung on earth as long as Sun and Moon exist. The inscriptions also used the cliché As long as the Sun and Moon exist. Manu Smriti and epics also use the Sun and Moon with regard to kings.

****

Puranānūru 56, Poet Mathurai Kanakkāyanār Makanār Nakkeeranār sang to Pandiyan Ilavanthikaipalli Thunjiya Nanmāran

1

Sivan has a victory flag with a bull, flame-like bright matted braids,
axe that is hard to avoid and a sapphire blue neck. 

Balarāman has
a white body as white as whorled conch growing in the ocean, kills
with his murderous plough and carries a palmyra palm on his flag. 

3
Thirumāl who is the colour of lovely, blue, washed sapphire, longs for
triumph, and has a bird is on his flag which towers high into the sky.

 4

Murukan who has never been defeated, glows, has a peacock on his
flag and rides a peacock.

 5

You are to be placed among these four gods who protect the earth and
bring on destruction, whose fame cannot be ruined.  With your anger
that cannot be opposed, you are like Kootruvan in his killing.  You are
like Balarāman in might.  In your great fame, you are like Thirumāl
who kills enemies.  You are like Murukan who has the might to create
the end of time, because you finish tasks that you set out to do.  There is
nothing that you cannot perform, since you resemble these gods.

6

May you live sweetly, giving away precious ornaments to those who come
in need and never run out of them, while you enjoy life every day as women

7
wearing bright bangles serve you fragrant and cool wine brought in fine ships
by the Yavanas, pouring from finely made pitchers made of gold.  O Māran
whose sword is raised high! 

8

May you live in this earth for long, like the sun
with hot rays that drives away darkness in the sky, and like the cool moon
that spreads its rays from the west!

***

புறநானூறு 56பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும்,
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந்நாஞ்சில் பனைக்கொடியோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி,  5
விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும், என
ஞாலங் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை நால்வர் உள்ளும்,  10
கூற்று ஒத்தீயே மாற்று அருஞ் சீற்றம்,
வலி ஒத்தீயே வாலியோனைப்,
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை,
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின்,
ஆங்கு ஆங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும்  15
அரியவும் உளவோ நினக்கே அதனால்,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈயா
யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,  20
ஆங்கு இனிது ஒழுகுமதி ஓங்கு வாள் மாற
அங்கண் விசும்பின் ஆரிருள் அகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவும், குடதிசைத்
தண் கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!  25

****

Item 466 Lord Vishnu Again

“Whether they have talent or not, you give gifts
to them like Thirumāl, O King Māran with fame
and greatness fit for words!  Let me tell you
something!”

Like Nakkirar in Puram verse 56, poet Kaarik Kannanaar , also compared the king with Lord Vishnu for his generosity. All the Tamils knew the story of Kuchela/Sudama, where Krishna made his hut into a palace in a second.

***

Item 467 Tamil atrocities 

Tamils were ferocious and aggressive in wars. The plundered enemy lands and they set fire to big towns. Even today we hear about such atrocities in the Middle East War.

The surprising thing is Tami poets praised it!

*** 

Item 468 Don’t cut trees

Here is an irony. The same poet supported burning cities of enemies, but he was against cutting trees. But it is ironical statement. We don’t know whether the poet was a Tree lover, an environmentalist or advising the king to occupy the land permanently and tie his war elephants there.

May be the poet was an environmental warrior and supporter of the trees.

***

Item 469 Bhagavad Gita reference

Poet says,

“Whoever it is you give them ADVICE like Vishnu”.

These lines are interpreted as Krishna’s advice given to Arjuna in Bhagavad Gita and to Kunti, Draupadi and others.

Whether they have talent or not, you give ADVICE
to them like Thirumāl, O King Māran with fame
and greatness fit for words

***

Puranānūru 57, Poet Kāviripoompattinathu Kārikannanār sang to Pandiyan Ilavanthikaipalli Thunjiya Nanmāran,

1
Whether they have talent or not, you give ADVICE
to them like Thirumāl, O King Māran with fame
and greatness fit for words!  Let me tell you
something!

2

When you seize lands of others,
let your young warriors plunder fields where
stalks are bent with heavy grains, let fires eat
large towns, and let your tall spear, bright like
lightning flashes, kill enemies. 

3

But do not cut
down their protected trees, for they will serve
as posts to tie your tall, fine elephant!

***

புறநானூறு 57பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்

வல்லார் ஆயினும்வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன், என் எனின்,
நீயே பிறர் நாடு கொள்ளுங் காலை, அவர் நாட்டு  5
இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க,
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க,
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க, என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு, நின்  10
நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாவே.

****************************************

Item 470

Velliampalam Silver Stage in Madurai

Poet Karikkannan (kaarikkannanaar)  in verse 58 refers to Choza and Pandya kings with the places where they died. It is seen only in Tamil literature. Here Velliampalam throws more light on the history of Madurai. Chidambaram has Pon Ambalam- Golden Stage where Nataraja/ Siva danced. Madurai temple has Silver Stage where Nataraja danced. Probably Pandya king died of heart attack while he was worshipping in the temple.

Velli/ Silver Ambalam has more stories in Tiru Vilaiyadal Puranam.

***

Item 471

Poet mentioned what made them great and advised them to be united. Kaveri river is great in Choza country  and Pandya lost his father and he is a young ruler; but yet he supports all like Banyan roots.

***

Item 472

Poet used the cliché in Tamil literature. They believed that thunder and lightning destroy snakes. That simile is used here for the destruction of his enemies.

***

 Item 473

Then the poet says what is special about two capitals. Choza capital Uranthai (Uraiyur near Trichy) was famous for the Justice Court there. Pandya capital Madurai was famous for Tamil Sangam.

***

Item 474

Kings are compared to Lord Vishnu and Lord Balarama. This is in previous poem as well.

***

Item 475

Tamil poets always supported unity among three Tamil Kingdoms. They always praised whenever two or three kings sitting together in a place or in an event. Poets knew Tamils always fought with one another.

***

Item 476 Tamil Emblems

Modern Tamils are more inclined towards erecting statues for their leaders. But ancient Tamils were keen to carve their symbols on peaks, particularly the northern Himalayas. Pandya symbol Fish and Choza Symbol Tiger are referred to. We have the history of Tamils for over 1500 years. They never changed their symbols or Flags.

***

Puranānūru 58, Poet Kāviripoompattinathu Kāri Kannanār sang to Chozhan Kurāpalli Thunjiya Perunthirumāvalavan and Pandiyan Velliampalathu Thunjiya Peruvazhuthi,

1

You are the ruler of Kāviri River with cool waters!
He is born of great lineage of an ancient Pandiyan
clan, and because his ancestors have vanished, he is
the support, like a hanging root from a non-flowering
banyan tree that supports a long branch that offers dense
shade, after the thick trunk has died. 

2

Even though he
is young, he is a bull among Pandiyars with war wisdom.
Like white lightning and thunder that attacks snakes and
their families, he will not tolerate his enemies
.

3

You are lord of Uranthai where justice resides.  He is the
king of Koodal where Thamizh flourishes, where he rules with
his cool, just scepter and he commands three royal drums
with resounding voices, in a city that gets sandalwood from
the mountains, pearls from the ocean waves, and water and
paddy is easily available for all.

4

You two are like the great gods – Balaraman with a palmyra
flag whose skin is white as milk and Thirumal who is blue,
and wields a discus, glowing together and causing terror.
Is there anything sweeter? 

5

Listen to more!  May your fame
flourish forever!  If you help each other and do not ruin
this unity, you will win this beneficial world that is
surrounded by oceans.  So, be good and fair to each other.

Paying attention to the path that your ancestors took, may
your unity continue with caring hearts like it is today,
while paying no attention to strangers who come between you!
May your spears see victory after victory in murderous
battlefields!  In the lands of others, where mountains rise high,

6
may the peaks be incised with the signs of the tiger with
curved stripes and of the carp from the deep waters!

***

புறநானூறு 58பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்திணை: பாடாண்துறை: உட ன் நிலை


நீயே தண் புனல் காவிரிக் கிழவனை, இவனே,
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழு நிழல் நெடுஞ்சினை வீழ் பொறுத்தாங்குத்,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ,  5
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அரு நரை உருமின் பொருநரைப் பொறாஅச்
செரு மாண் பஞ்சவர் ஏறே, நீயே,
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை, இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென  10
வரைய சாந்தமும் திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே,
பால் நிற உருவின் பனைக்கொடியோனும்,
நீல் நிற உருவின் நேமியோனும், என்று  15
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்! நும் இசை வாழியவே!
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர், இருவீரும்  20
உடனிலை திரியீர் ஆயின், இமிழ் திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப்படுவது பொய்யாகாதே,
அதனால் நல்ல போலவும் நயவ போலவும்,
தொல்லோர் சென்ற நெறிய போலவும்  25
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,
இன்றே போல்க நும் புணர்ச்சி வென்று வென்று
அடு களத்து உயர்க நும் வேலே, கொடுவரிக்
கோள் மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி  30
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.

-subham—

Tags- – Purananuru Wonders -21, Full-fledged Hinduism , Tamil Sangam Literature, Ancient Tamil Encyclopaedia -Part 61, One Thousand Interesting Facts -Part 61, Hindu flags, Hindu Vahanas, Hindu Gods,

திருப்புகழில் தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்!- Part 77 (Post.15,624)

Written by London Swaminathan

Post No. 15,624

Date uploaded in London –16 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

77திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 77

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 77

***

திருப்புகழில் தசாவதாரம்

ஆதி சரண் எனக் கயம் குலாவு அ(ம்) முதலையைக் கிடங்கில்

ஆர உடல் தனைப் பிளந்த அரி நேமி … ஆதி மூலமே,

அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக்

கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப்பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால்,

ஆமை கயல் எனச் செயம் கொள் கோல குறள் அரித்தடங்கை

யான அரவணை சயந்தன் மருகோனே … ஆமை, கயல் மீன்

என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில் பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே,

சோதி உரு எனத் திரண்டு கோல அருணையில் கலந்த

சோமன் அணி குடில் சிலம்பன் அருள் பாலா … ஜோதி

உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி

நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை

மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே,

தோகை மயில் எனச் சிறந்த ரூபி குற மகட்கு இரங்கி

தோள்கள் இறுகிடப் புணர்ந்த பெருமாளே. … கலாபம் கொண்ட

மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம் பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த பெருமாளே.

London Swaminathan pictures from Oppiliappan Koil near Kumbakonam, March 2026.

***

பாரிஜாத மலர் கதை

வாலி மார்பைத் துணிய ஏழ் மரா இற்று விழ வாளி போடக்

கருது(ம்) மநு ராமன் … வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு

மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால்,

வான் உலோகத்தில் அமரேசன் ஒலிக்க வளை ஊதி

மோகித்து விழ அருள் கூறும் நீல மேனிக்கு மருகா …

விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே,

உதாரத்து வரு நீசர் வாழ்வைக் களையும் இளையோனே …

மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய

அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே,

நேசமாகக் குறவர் தோகை மானைப் புணரும் நீப தோள்

ஒப்பு அரிய பெருமாளே. … அன்பு கூடும்படி, மயில் போன்ற

குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப

மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே.

இந்திராணி பாரிஜாதப் பூவை மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்கு (கண்ணனின் தேவிக்குக்) கொடுக்கத் தகாது என்று சொன்னார்; ஆயினும் விஷ்ணுவின் வாகனமான கருடன், சத்யபாமையின் வேண்டுகோளுக்கு இரங்கி அச்செடியைப் பறித்து சத்யபாமையின் வீட்டில் நட்டார் கருடன்.

இந்திரன் முதலான தேவர்கள் சினந்து கண்ணனோடு போர் செய்ய, கண்ணன் சங்க நாதம் ஊதித் தேவர்களை மயங்கி விழச் செய்தார்.

***

புலி கரடி  காட்டெருமை

குருபர சரவணபவ சண்முக குக … குருபரனே, சரவணபவனே,

ஷண்முகனே, குகப் பெருமானே,

ஒருபர வயமியல் எயினர் மகள்சுக மண்டத் தனங்கள்புணர்

சண்டத் திரண்டபுஜ … ஒப்பற்ற மேலான வெற்றி பொருந்தியுள்ள

வேடர்மகள் வள்ளியின் இன்பம் நிறைந்துள்ள மார்பகங்களை

அணைந்துள்ள, வலிமை பொருந்தியதும், திரண்டுள்ளதுமான

திருப்புயங்களை உடையவனே,

உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள் இளைகளை

நெறுநெறு நெறென உலவு விலங்கற் குறிஞ்சியுறை தொங்கற்

கடம்ப அருள் தருவாயே … புலிகள், கரடிகள், காட்டெருமைகள்,

காட்டானைகள் இவைகளெல்லாம் காவற்காடுகள் நெறுநெறுவென்று

களைந்து அழியும்படி உலாவுகின்ற மலைகள் உள்ள குறிஞ்சி நிலத்தில் வாழ்பவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அருள் புரிவாயாக.

(??? .. ) அடிபடு முரசு தவில்பட கந்தக் கைதுந்துமி

தடந்தப்புடன்சலிகை கரடிகை யறைபறை திமிலை அபிநவ

சங்கு ஒற்றை கொம்பு குழல் … அடிக்கப் படுகின்ற முரசு வாத்தியம், தவில் மேளம் இவை சப்திக்க, அடிக்கும் தொழிற்குரிய தக்கை என்ற பறை, பேரிகை, பெரிய தப்பு என்ற பறை, இவையுடன் சல்லிகை என்ற பெரும் பறை வகை, கரடி கத்தினாற்போல் ஓசையுள்ள பறை, ஒலிக்கப்படும் திமிலை என்ற பறை, அதிசயிக்கத்தக்க புதுவகையான சங்கு, ஒரு தொளைக் கருவி, ஊதுகொம்பு, புல்லாங்குழல் இவையெல்லாம்vஎழுப்பும் ஓசை,

வங்கக் கருங்கடல் கொள் பிரளயம் இதுவென அதிர

உலகர்கள் அரகர சிவசிவ அபயம் அபயமெனுஞ் சத்தம்

எங்கும் எழ … மரக்கலங்கள் உலாவும் கரிய கடலில் ஏற்படும் பிரளய கால வெள்ளமோ இது என்னும் அதிர்ச்சியை உண்டாக்க, ஹரஹர, சிவசிவ, அடைக்கலம், அடைக்கலம், என்று கூச்சலிடும் சப்தமே உலகெங்கும் உண்டாக,

வெஞ் சத்தி கொண்டுபடை புக வானோர் (??? .. இங்கு முற்றுப்

பெறவில்லை) … கொடிய வேலாயுதம் கொண்டு, பூதப்படை உடன் வர,

தேவர்கள் (??? .. ) வனச மலர் நிகர், செம்பொற் சதங்கையடி

அன்பர்க்கு வந்துதவு பெருமாளே. … தாமரைமலர் போன்றதும்

சிவந்த பொன்னாலான சதங்கையை அணிந்ததுமான உன் திருவடியை அன்பர்களுக்கு எழுந்தருளி வந்து உதவுகின்ற பெருமாளே.

அரிய பெரிய பாடலில் இருந்த, கிடைத்த, ஒரு பகுதி மட்டுமே இங்கு அச்சில் தரப்பட்டுள்ளது.

****

ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள் !


இந்தப்பாட்டின் முக்கியக்கருத்து :– விஷ்ணு தலங்கள், சிவ பெருமான் கோவில்கள், தேவியரின் கோவில்கள் ஆகிய எல்லா வற்றிலும் உள்ள இறைவன் ஒருவனே; அவனைத்தான் நாம் பல்வேறு வடிவங்களில் வழிபடுகிறோம்

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்

     உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு

          கொன்றை வேணியர் மாயூர மம்பெறு …… சிவகாசி

கொந்து லாவிய ராமே சுரந்தனி

     வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்

          கும்பு கூடிய வேளூர் பரங்கிரி …… தனில்வாழ்வே

செம்பு கேசுர மாடானை யின்புறு

     செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி

          தென்றன் மாகிரி நாடாள வந்தவ …… செகநாதஞ்

செஞ்சொ லேரக மாவா வினன்குடி

     குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்

          செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் …… வருதேவே

கம்பை மாவடி மீதேய சுந்தர

     கம்பு லாவிய காவேரி சங்கமு

          கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர …… வயலூரா

கந்த மேவிய போரூர் நடம்புரி

     தென்சி வாயமு மேயா யகம்படு

          கண்டி யூர்வரு சாமீக டம்பணி …… மணிமார்பா

எம்பி ரானொடு வாதாடு மங்கையர்

     உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி

          எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு …… துதியோதும்

இந்தி ராணிதன் மாதோடு நன்குற

     மங்கை மானையு மாலாய்ம ணந்துல

          கெங்கு மேவிய தேவால யந்தொறு …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம் … (1) கும்பகோணம்,

அதனுடன் (2) திருவாரூர், (3) சிதம்பரம்,

உம்பர் வாழ்வுறு சீகாழி … தேவர்கள் விரும்பி வாழ்க்கை கொள்ளும்

(4) சீகாழி,

நின்றிடு கொன்றை வேணியர் மாயூரம் … நிலையான கொன்றை

மலர்ச்சடையர் சிவனுடைய (5) மாயூரம்,

அம்பெறு சிவகாசி … அழகு வாய்ந்த (6) சிவகாசி,

கொந்து உலாவிய ராமேசுரம் … திரளான பக்த ஜனங்கள்

கூட்டமாக உலாவும் (7) ராமேஸ்வரம்,

தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் … ஒப்பற்ற நிலையில்

வந்து பூஜை செய்கின்ற, நான்கு வேதங்களும் வல்ல மறையவர்கள்

கும்பு கூடிய வேளூர் … கூட்டமாகக் கூடும் (8) புள்ளிருக்கும்

வேளூர் – வைத்தீஸ்வரன் கோயில்,

பரங்கிரி தனில்வாழ்வே … (9) திருப்பரங்குன்றம் எனப்படும்

தலங்களில் வீற்றிருக்கும் செல்வமே,

செம்பு கேசுரம் ஆடானை … (10) ஜம்புகேஸ்வரம் – திருவானைக்கா,

(11) திருவாடானை,

இன்புறு செந்தில் ஏடகம் … நீ மகிழ்ந்து வாழும் (12) திருச்செந்தூர்,

(13) திருவேடகம்,

வாழ்சோலை யங்கிரி … நீ வாழ்கின்ற சோலைமலையாம் (14)

பழமுதிர்ச்சோலை,

தென்றன் மாகிரி … தென்றல் காற்றுக்குப் பிறப்பிடமான பெருமலை

(15) பொதியமலை,

நாடாள வந்தவ … என்னும் தலங்களில் எல்லாம் வீற்றிருக்க வந்தவனே,

செகநாதம் … (வடக்கே) பூரித்தலத்தில் (16) ஜெகந்நாதன் உருவில்

காட்சி தந்தவனே,

செஞ்சொல் ஏரக … செம்மையான உபதேசச் சொல்லை நீ உன்

தந்தைக்குச் சொன்ன (17) திருவேரகம்,

மாவாவினன்குடி … சிறந்த (18) திருவாவினன்குடி – பழநி,

குன்று தோறுடன் … (19) குன்று தோறாடல், இவையுடன்

மூதூர் விரிஞ்சை … பழம்பதி எனப்படும் (20) திருப்புனவாயில்,

விரிஞ்சிபுரம் எனப்படும் (21) திருவிரிஞ்சை,

நல் செம்பொன் மேனிய … ஆகிய தலங்களில் அமரும் சிறந்த

செம்பொன் நிறம் கொண்ட திருமேனியனே,

சோணாடு வஞ்சியில் வருதேவே … சோழநாட்டின் தலைநகராகிய

வஞ்சி என்னும் (22) கருவூரில் எழுந்தருளியுள்ள தெய்வமே,

கம்பை மாவடி மீதேய சுந்தர … கம்பாநதி தீரத்தில் உள்ள (23)

காஞ்சியில் மாமரத்தின் அடியில், மேலே லிங்க ரூபத்தில் பொருந்தி

விளங்கும் அழகனே,

கம்பு உலாவிய காவேரி சங்கமுகம் … சங்குகள் உலவும் காவேரி

ஆறு கடலில் சங்கமம் ஆகும் (24) காவிரிப் பூம்பட்டினத்திலும்,

சிராமலை வாழ்தேவ தந்திர … (25) திருச்சிராப்பள்ளி மலையில்

வாழ்கின்ற தேவ சேனாபதியே,

வயலூரா … (26) வயலூர்ப் பெருமானே,

கந்த மேவிய போரூர் … நறுமணங்கள் நிரம்பிய (27) திருப்போரூர்,

நடம்புரி தென்சிவாயமு மேயாய் … நீ நடனம் புரிந்த தலமாம்

அழகிய சிவாயம் என்ற (28) திருவாட்போக்கி எனப்படும் தலங்களில் விளங்குபவனே,

அகம்படு கண்டி யூர்வரு சாமீ … பாவத்தைத் தொலைக்கும் (29)

திருக்கண்டியூரில் எழுந்தருளும் ஸ்வாமியே,

க டம்பணி மணிமார்பா … கடப்ப மாலையை அணிந்துள்ள அழகிய

மார்பனே,

எம்பிரானொடு வாதாடு மங்கையர் … எங்கள் சிவபிரானுடன்

நடனப் போட்டி செய்த காளியும், அவளைச் சேர்ந்த தோழியரும்,

உம்பர் வாணி பொன் நீள்மால் சவுந்தரி … தேவலோகத்து

சரஸ்வதியும், லக்ஷ்மி எனப்படும் நெடுமாலுக்கு உரிய அழகியும், ஆகியஇவர்கள் யாவரும்

எந்த நாள்தொறும் ஏர்பாக நின்று … தினந்தோறும் உள்ளத்தில்

எழுச்சியுடன் நின்று,

உறு துதியோதும் இந்தி ராணிதன் மாதோடு … பொருந்திய

துதியுடன் போற்றுகின்ற தேவயானையாம், இந்திரன் மனைவி சசியின் மகளோடு,

நன்குற மங்கை மானையு … குறக்குலத்தில் தோன்றிய பெண் மான்

வள்ளியையும்

மாலாய்மணந்து … ஆசையுடன் திருமணம் செய்து கொண்டு

உலகெங்கு மேவிய தேவாலயந்தொறு பெருமாளே. …

உலகத்தில் எங்குமுள்ள தேவாலயங்கள்* தோறும் வீற்றிருக்கும்

பெருமாளே.

குறிப்பு: முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்களைத் தொகுத்தளிக்கும் சிறப்பான பாடல் இது.

(1) கும்பகோணம் – காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம்,

(2) திருவாரூர் – சப்த விடங்கத் தலங்களுள் முதன்மையான தலம்,

(3) சிதம்பரம் – பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம் – நடராஜப் பெருமான் நடனமாடிய கனகசபை,

(4) சீகாழி – சம்பந்தர் அவதரித்த தலம், சூரனுக்கு அஞ்சி இந்திரன் மூங்கிலாக மாறி ஒளிந்த இடம்,

(5) மாயூரம் – பார்வதி மயிலாக மாறி சிவனை வழிபட்ட தலம்,

(6) சிவகாசி – பாண்டிய நாட்டில் வட நாட்டுக் காசிக்கு சமமான புண்ணியத் தலம்,

(7) ராமேஸ்வரம் – சிவனை ஸ்ரீராமன் பூஜை செய்து வழிபட்ட க்ஷேத்திரம்,

(8) வைத்தீஸ்வரன்கோயில் – முருகன் முத்துக்குமரனாகக் காட்சி தரும் தலம், செவ்வாய்த் தலம்,

(9) திருப்பரங்குன்றம் – ஆறு படைவீடுகளில் முதலாவது, மதுரைக்கு அருகில் உள்ளது,

(10) ஜம்புகேஸ்வரம் – திருவானைக்கா – பஞ்ச பூதத் தலங்களில் அப்புத்தலம், திருச்சிக்கு வடக்கே 2 மைல்,

(11) திருவாடானை – மானாமதுரைக்கு 40 மைலில் சிவகங்கைக்கு அருகே உள்ள தலம்,

(12) திருச்செந்தூர் – ஆறுபடைவீட்டில் இரண்டாம் படைவீடு, திருநெல்வேலியிலிருந்து 35 மைல்,

(13) திருவேடகம் – சம்பந்தர் மதுரையில் இட்ட ஏடு வைகையில் மேற்கே எதிர்த்துச் சென்று தங்கிய தலம்,

(14) பழமுதிர்ச்சோலை – மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள ஆறாவது படைவீடு,

(15) பொதியமலை – பாபநாசம், அம்பாசமுத்திரத்திலிருந்து 7 மைலில் உள்ளது, அகத்தியர் க்ஷேத்திரம்,

(16) பூரி ஜெகந்நாதம் – ஒரிஸ்ஸா கடற்கரையிலுள்ள விஷ்ணு, ஸ்வாமிகளுக்கு முருகனாகத் தெரிகிறார்,

(17) திருவேரகம் – சுவாமிமலை – தந்தை சிவனுக்கு முருகன் உபதேசித்த நான்காம் படைவீடு,

(18) திருஆவினன்குடி – பழநி மலையிலும் ஆவினன்குடி அடிவாரத்திலும் உள்ள மூன்றாம் படைவீடு,

(19) குன்றுதோறாடல் – பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் ஐந்தாவது படைவீடு,

(20) மூதூர் – திருப்புனவாயில் – வேதங்கள் பூஜித்த தலம், திருவாடானைக்கு 12 மைலில் உள்ளது,

(21) விரிஞ்சை – விரிஞ்சிபுரம், வேலூருக்கு மேற்கே 8 மைலில் உள்ளது,

22) வஞ்சி – சோணாட்டுவஞ்சி கருவூர், திருச்சிக்கு மேற்கே 45 மைலில் உள்ளது,

(23) கம்பை மாவடி – காஞ்சீபுரத்தில், ஏகாம்பரநாதர் கோயிலில் மாமரத்தின் கீழ் இருக்கும் முருகன்,

(24) காவேரி சங்கமுகம் – காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்) – சீகாழிக்குத் தென்கிழக்கில் 10 மைல், பட்டினத்தார் ஊர்,

   (2 கோயில்கள் – பல்லவனீச்சரம், சாயாவனம் – இவை வைப்புத்தலங்கள்).

(25) சிராமலை – திருச்சிராப்பள்ளி, திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த திருப்பதி, தாயுமானவர் தலம்,

(26) வயலூர் – திருச்சிக்கு 6 மைல், ஸ்வாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரம் கிடைத்த தலம்,

(27) திருப்போரூர் – செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைல், சமரமராபுரி, என்று வழங்கும் தலம்,

(28) சிவாயம் – வாட்போக்கி – குழித்தலைக்கு தெற்கே 5 மைலில் உள்ள ரத்னகிரி, என்ற தலம்,

(29) திருக்கண்டியூர் – தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் உள்ள சப்தஸ்தான க்ஷேத்திரம்.

—subham—

Tags- திருப்புகழ், தசாவதாரம், பாரிஜாத மலர், ஒரே பாட்டில் 29 முக்கிய தலங்கள்,  Part 77

ரமண மஹரிஷி அருளுரை: மகாத்மாவின் தரிசன மஹிமை! (Post No.15,623)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,623

Date uploaded in London – 16 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

14-4-26 அன்று கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ரமண மஹரிஷி அருளுரை : மகாத்மாவின் தரிசன மஹிமை! 

ச. நாகராஜன்     

1

பகவான் ரமணரின் அவதார தினம் : 30-12-1879

மஹா சமாதி தினம்              :  14-4-1950

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் ஶ்ரீ பகவான் அவதரித்த புண்ணியப் பெருநாளாம் புனர்வசு நட்சத்திரத்தன்று பகவானின் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பகவான் மஹாநிர்வாணம் அடைந்த நாளன்று பகவானின் ஆராதனை சிறப்பாக நடத்தப்படுகிறது.

திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் அன்றாடம் பக்தர்கள் பகவானின் முன்னிலையில் கூடுவது வழக்கம். பல்வேறு விதமான கேள்விகளுக்கு அற்புதமாக பகவான் விடையளிப்பது வழக்கம். அங்கு நடக்கும் அற்புதங்களும் நிகழ்வுகளும் முறையாகப் பல பக்தர்களால் தொகுக்கப்பட்டுள்ளன.

மகானின் தரிசனம் பற்றிய ஒரு நிகழ்வு இது: 

1-10-1936 Talks with Sri Ramana Maharshi Volume 2

டாக்டர் சையத் என்ற முஸ்லீம் பேராசிரியர் ரமணாஸ்ரமத்திற்கு வந்திருந்தார். “அட, மஹரிஷி புரியும் அற்புதம் தான் என்ன? இங்கு வந்தோருக்கு உள்ளம் அமைதி அடைகிறதே” என்று வியந்தார்.

பேச்சு மஹான்களின் தரிசனத்தால் ஏற்படும் நல்விளைவுகளைப் பற்றித் தொடர்ந்தது.

அப்போது பகவான் கூறலானார்:

மாத்வ சம்பிரதாய மகானான தத்வராயர் தனது குருவான ஸ்வரூபானந்தர் பற்றி ஒரு பரணியை இயற்றினார். இதற்கு பண்டிதர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். “ஒரு பெரிய போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரருக்கு மட்டுமே பரணி பாடப்படவேண்டும் என்றும் ஸ்வரூபானந்தர் மக்களுக்குத் தெரியாதவர் என்பதோடு தனியான இடத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தவர், அவர் மீது பரணி பாடுதல் கூடாது. அதற்கு அவர் தகுதியற்றவர்” என்றும் அந்த பண்டிதர்கள் வாதிட்டனர்.

தத்வராயர் அந்தப் பண்டிதர்கள் அனைவரையும் தன் குருநாதர் முன் வருமாறு கூறினார். அவரது குருநாதர் ஆயிரம் யானைகளைக் கொல்லக் கூடியவர் தானா என்பதை அவர்களே பார்க்கலாம் என்றார் அவர்.

அனைத்து பண்டிதர்களும் இதற்குச் சம்மதித்து ஸ்வரூபானந்தர் முன் கூடினர்.

அவர் முன் வந்தவுடன் அனைவரும் பேச்சற்று ஊமைகளாயினர். ஒரு அசைவுமின்றி ஆழ்ந்த அமைதியை அவர்கள் அனுபவித்தனர்.  சில நாட்கள் இப்படியே ஓடின. தங்கள் உணர்வு திரும்பியவுடன் அனைத்துப் பண்டிதர்களும் ஸ்வரூபானந்தரையும் தத்வராயரையும் நமஸ்கரித்தனர்.

தாங்கள் மிகவும் திருப்தி அடைந்துவிட்டதாக ஒருமித்து அவர்கள் கூறினர்.

ஆயிரம் யானைகளைக் கொல்வதை விட அதை விட கஷ்டமான காரியமான பலரது அகங்காரத்தை அவர் கொன்று விட்டார் என்பது அனைவருக்கும் புரிந்தது.

இதைக் கூறி முடித்த ரமண மஹரிஷி, “இதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மஹாத்மாவை தரிசிக்கும் போது உள்ளார்ந்த அமைதி கிட்டும் என்பது தான் அது” என்றார்.

12-6-1937

அலகாபாத் பல்கலை கழகத்திலிருந்து திரு தாஸ் என்பவர் ரமணாஸ்ரமம் வந்து பகவானைத் தரிசித்து பல கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற்றார்.

அவர், “ஒரு பெரும் ஞானியைக் கண்டுபிடிப்பதற்கான அடிப்படை சோதனைகள் யாவை என்று கேட்டார்.உடனே பகவான்  பதிலிறுத்தார்.

“ஒரு ஞானியை இன்னொரு ஞானியால் மட்டுமே அறிய முடியும். ஒரு ஞானியின் சூழ்நிலையில் பெரும் மன அமைதி ஒருவருக்குக் கிட்டினாலேயே அவர் மகான் தான் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் பகவான். 

இந்த மன அமைதியை ரமணாஸ்ரமம் வந்த ஒவ்வொருவரும் அனுபவித்தனர்.

அவரை பகவான் என்று கொண்டாடினர்.

**

உலகு இன்பக் கேணி என வேதம் சொல்கிறதா ? பாரதியார் கூற்றுக்கு ஆதாரம் எங்கே ? (Post.15,622)

Written by London Swaminathan

Post No. 15,622

Date uploaded in London –15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Mantras are taken from wisdomlib.org; Thanks.

ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்னி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசேவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக் கேணி என்றே—மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி.

இதில் கடவுள் ஒருவரே என்பதை ஏராளமான பேர் ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி எழுதிவிட்டனர் ;

“ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி” (Ekam Sat Vipra Bahudha Vadanti) என்பது ரிக் வேதத்தின் மிகப்பிரபலமான மந்திரமாகும். இதன் பொருள், “உண்மை (இறைவன்) ஒன்றே, ஆனால் அறிஞர்கள் (ஞானிகள்) அதை பல பெயர்களில் அழைக்கிறார்கள்”  ரிக் வேதம் (1.164.46 ) .

வேதங்கள் சொன்னபடிக்கு  மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டும்’

நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’

என்ற பாரதியார் வரிகளுக்கும் வேதங்களில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆனால் உலகு இன்பக் கேணி என்றும் வேதம் சொல்வதாக பாரதியார் பாடியதற்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது ; அதர்வண வேத பூமி சூக்தம், யஜுர் வேத சாந்தி மந்திரம் போன்றவற்றில் பூமியை, இயற்கையை, நற்குணங்களை எல்லாம் போற்றிப் பாடினாலும் உலகு இன்பக் கேணி என்ற வரிகளைக் காணமுடியவில்லை! கீழ்கண்ட வேத மந்திரங்கள் பாரதியாரின் கூற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.

வேத கால இலக்கியம் என்பது நான்கு பகுதிகளைக்கொண்டது ; அவையாவன :

1.சம்ஹிதை – மந்திரங்கள் உடைய பகுதி ;

2.பிராமணங்கள் – மந்திரங்களை விலாக்கும் பகுதிகள் ; அவற்றின் பிரயோகமும் உண்டு;

3.ஆரண்யகங்கள் –  கானக வாழ்க்கையில் எழும் தத்துவ சிந்தனைகள் உள்ள பகுதி;

4.உபநிஷத்துக்கள் – முழுக்க முழுக்க தத்துவம், வேதாந்தம் உள்ள பகுதி ; வேத + அந்தம் = வேதாந்தம் என்றாலேயே, இவைதான் வேதங்களின் துணிபு , கண்டுபிடிப்பு என்ற பொருள் தரும் .

நாம் காணப்போகும் பகுதிகள் வேதத்திலிருந்தும் மற்றும் பிராமணங்கள் என்னும் நூல்களிலிருந்தும் வருகின்றன ; வேத சம்ஹிதை செய்யுள் வடிவில் உள்ளன ; பிராமணங்கள் பெரும்பாலும் உரை நடை வடிவில் உள்ளன ; செய்யுளுக்கு அடுத்த காலத்தில்தான் உரை நடை வரும் என்பதை உலக இலக்கியங்களின் வரலாறு காட்டுகிறது ஆகையால் பிராமணங்களை 1000 BCE  என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முத்திரை குத்துகிறார்கள் . இதோ சில மேற்கோள்கள் :

நாங்கள் ஆனந்தமாக , மகிழ்ச்சி தரும் மந்திரங்களோடு எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவனும் தூய்மைப்படுத்தும் ஒளியோடு வேள்வியில் இருப்பவனுமான அக்கினியைப் போற்றுகி ன்றோம் – ரிக் வேதம்  8-43-31

இதைப் பாடிய ரிஷியின் பெயர் விரூப ஆங்கிரசன் ;

We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,

Burning with purifying flame RV 8-43-31

अ॒ग्निं म॒न्द्रं पु॑रुप्रि॒यं शी॒रं पा॑व॒कशो॑चिषम् । हृ॒द्भिर्म॒न्द्रेभि॑रीमहे ॥

अग्निं मन्द्रं पुरुप्रियं शीरं पावकशोचिषम् । हृद्भिर्मन्द्रेभिरीमहे ॥

agnim mandram purupriyaṃ śīram pāvakaśociṣam | hṛdbhir mandrebhir īmahe ||

இந்த மந்திரம் ஐதரேய பிராமண நூலிலும் அரணிக்கட்டைகளைக் கடைந்து தீயை உருவாக்கும்போது சொல்லப்படுவதை வேத உரைகாரர் சாயனர் சுட்டிக்காட்டுகிறார்.

****

மரணத்துக்குப் பின்னர் ஒருவர் மேலுலகம்  செல்வதும்  அங்கே சொர்க்கத்தில் எப்போதும் ஒளிவீசும் என்றும் எதுவும் வாடாது, அழியாது என்றும் , அந்த இடத்தில் ஆனந்தம் தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் ரிக்வேதத்திலேயே உள்ளது; இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது!

ரிக் வேதத்தில் வரும் இந்த காஸ்யப மாரீசன் ரிஷி பாடிய மந்திரம், 

ஓ பவமான சோமனே

எந்த இடத்தில் சொர்க்கத்தின் ஒளி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, எந்த இடத்தில் எப்போதும் ஒளிமயமுள்ளதோ அந்த மரணமற்ற, அழியாத  உலகத்தில் என்னை நிறுத்து ; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக.

விவஸ்வானுடைய மகன்  அரசனாக இருக்கும் இடத்தில் என்னை அழியாதவன் ஆக்குக;

சொர்க்கத்தின் மர்மமான கோயில் எங்குள்ளதோ,

 புதிய நிர்மலமான நதிகள் துள்ளிக்குதித்து ஓடுகின்றனவோ அங்கே என்னை நிறுத்து; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக”

–RV 9-113-7/8

7. O Pavarnana, place me in that deathless, undecaying world

     Wherein the light of heaven is set, and everlasting lustre shines. Flow, Indu, flow for Indra’s sake.

8. Make me immortal in that realm where dwells the King, Vivasvan’s Son,

     Where is the secret shrine of heaven, where are those waters young and fresh. Flow, Indu, flow for Indra’s sake.

RV 9-113-7/8

यत्र॒ ज्योति॒रज॑स्रं॒ यस्मिँ॑ल्लो॒के स्व॑र्हि॒तम् । तस्मि॒न्मां धे॑हि पवमाना॒मृते॑ लो॒के अक्षि॑त॒ इन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र ज्योतिरजस्रं यस्मिँल्लोके स्वर्हितम् । तस्मिन्मां धेहि पवमानामृते लोके अक्षित इन्द्रायेन्दो परि स्रव ॥
yatra jyotir ajasraṃ yasmim̐l loke svar hitam | tasmin māṃ dhehi pavamānāmṛte loke akṣita indrāyendo pari srava ||

यत्र॒ राजा॑ वैवस्व॒तो यत्रा॑व॒रोध॑नं दि॒वः । यत्रा॒मूर्य॒ह्वती॒राप॒स्तत्र॒ माम॒मृतं॑ कृ॒धीन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र राजा वैवस्वतो यत्रावरोधनं दिवः । यत्रामूर्यह्वतीरापस्तत्र माममृतं कृधीन्द्रायेन्दो परि स्रव ॥
yatra rājā vaivasvato yatrāvarodhanaṃ divaḥ | yatrāmūr yahvatīr āpas tatra mām amṛtaṃ kṛdhīndrāyendo pari srava || 9-113- 7 and 8.

**

இந்திரன் என்றால் அரசன், தலைவன் என்று பொருள் ; இது ஒரே தேவனுடைய  பெயர் அல்ல என்பதைக் காஞ்சி பரமாசார்யார் (1894–1994) தெளிவு படுத்தியுள்ளார் ; வெள்ளைக்காரர்களோ வெனில் இது இயற்கைக் சக்திகள் என்றும் அல்லது ஒரே நபரின் பெயர் என்றும் பிதற்றியுள்ளனர்

ரிக் வேதத்தில் இந்திரன் ஏறத்தாழ முப்பது அசுரர்களைக் கொன்றதாக வருகிறது; அதாவது தீமையை அல்லது தீயவர்களை அழிப்பவன் . பகவத் கீதையின் பரித்ராணாய ஸ்லோகத்திலும் இதே கருத்து காணக்கிடக்கிறது

ரிக் வேதத்தில் இரண்டு மந்திரங்களில் தீயவர்கள், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்று சொல்கிறது.

 அர்ஜுனன், சொந்தக்காரர்களையும் குருமார்களையும் எப்படிக் கொல்வேன் என்று கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதிலையும் பாரதியார் அழகாகக் கொடுத்துள்ளார்; முதலில் ரிக் வேத மந்திரம் ,

எங்களைக் கொல்ல வருபவன் நட்பில்லாத சொந்தக்காரனாக இருந்தாலும் அந்நியனாக இருந்தாலும் அவனை எல்லாத் தேவர்களும் அழிக்கட்டும்;  பிரார்த்தனையே (பிரம்மமே) என்னுடைய சிறந்த கவசம். RV 6-75-19

यो न॒: स्वो अर॑णो॒ यश्च॒ निष्ट्यो॒ जिघां॑सति । दे॒वास्तं सर्वे॑ धूर्वन्तु॒ ब्रह्म॒ वर्म॒ ममान्त॑रम् ॥

यो नः स्वो अरणो यश्च निष्ट्यो जिघांसति । देवास्तं सर्वे धूर्वन्तु ब्रह्म वर्म ममान्तरम् ॥

yo naḥ svo araṇo yaś ca niṣṭyo jighāṃsati | devās taṃ sarve dhūrvantu brahma varma mamāntaram ||

English translation:

“Whoever, whether an unfriendly relative or a stranger, desires to kill us, may all the gods destroy him; prayer is my best armour” – RV 6-75-19

சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது– பாரதியார்

இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.

“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

………………………..

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர்தீயர்மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று 
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் —பாரதியார்.

***

அக்கினி செளசீக ரிஷி பாடியது

“அஸ்மாந்வதீ நதி ஓடுகிறது ; நண்பர்களே , ஜாக்கிரதை; உயரமாக எழுந்து நின்று கடப்போம்; வருவதற்கு விருப்பமில்லாதவர்களை விட்டுச் செல்வோம் ; அப்போதுதான் மங்களமான செல்வங்களைப் பெறுவோம் (நல்ல உணவினைப் பெறுவோம்).” 10.53.8

अश्म॑न्वती रीयते॒ सं र॑भध्व॒मुत्ति॑ष्ठत॒ प्र त॑रता सखायः । अत्रा॑ जहाम॒ ये अस॒न्नशे॑वाः शि॒वान्व॒यमुत्त॑रेमा॒भि वाजा॑न् ॥

अश्मन्वती रीयते सं रभध्वमुत्तिष्ठत प्र तरता सखायः । अत्रा जहाम ये असन्नशेवाः शिवान्वयमुत्तरेमाभि वाजान् ॥ Rig Veda 10.53.8

aśmanvatī rīyate saṃ rabhadhvam ut tiṣṭhata pra taratā sakhāyaḥ | atrā jahāma ye asann aśevāḥ śivān vayam ut taremābhi vājān || Rig Veda 10.53.8

English translation:

“The aśmanvatī flows along; be alert; rise up, cross over, may friends; here let us leave those who are unhappy, so that we may cross over to auspicious sacrificial viands.” Rig Veda 10.53.8

***

கர்மவினைக் கொள்கை

சதபத பிராமண 2-2-27 நூலில் கர்ம வினை பற்றிய தெளிவான குறிப்பு வருகிறது ,

முந்தைய பிறப்பில் ஒருவன் செய்த செயல்களுக்கு ஏற்ப உலகத்தில் பிறக்கிறான் .

அதையடுத்தது மிகப்பழைய உபநிஷத்தான பிருஹத் ஆரண்யக உபநிஷத்திலும் வருகிறது:

Now as a man is like this or like that,

according as he acts and according as he behaves, so will he be;

a man of good acts will become good, a man of bad acts, bad;

he becomes pure by pure deeds, bad by bad deeds;

And here they say that a person consists of desires,

and as is his desire, so is his will;

and as is his will, so is his deed;

and whatever deed he does, that he will reap.

— Brihadaranyaka Upanishad,

ஜனகர் கூட்டிய அறிஞர்கள் கூட்டத்தில் யாக்ஞவல்க்ய ரிஷிக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்  உள்ளன. அங்கே ஜரத்கார்வ ஆர்த்தபாக  கூறுகிறார் ,

ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய சொற்கள் அக்கினியில் கலந்து விடுகின்றன; அவனுடைய மூச்சுக் காற்று , காற்றினில் கலந்து விடுகின்றது. கண்கள் சூரியனுக்குள்ளும், மனது சந்திரனுக்குள்ளும் புகுந்து விடுகிறது.”

இப்படி அவர் சொன்னவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு  யாக்ஞவல்க்ய ரிஷி கேட்கிறார் ,

பின்னர் மனிதன் என்ன ஆகிறான்?

இதற்கு ரிஷி கொடுத்த பதில்,

இதை நாம் இருவரும் தனியாக விவாதிப்போம்; இதை பொது இடத்தில் விவாதிக்கக்கூடாது .

இதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் பேசியது என்ன என்ற முழு அறிக்கை இல்லை. ஆனால் அவர்கள் சொன்னது கர்மம்அவர்கள் புகழ்ந்தது கர்மம் என்று மட்டும் இருக்கிறது. பின்னர் வந்த உபநிஷத்துக்குக்கள் இன்னும் கூடுதலான விவரங்களைத்  தருகின்றன .

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் வேத காலத்திலேயே மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுவாழ்வு  பற்றிய சிந்தனை எழுந்து அதற்கு முடிவும் கண்டனர் என்பதாகும். வேதங்களை ஆழமாகப் படித்தால் இதற்கான வித்துக்கள் வேதங்களிலேயே இருப்பதையும் அவை மறை பொருளில் உரைக்கப்பட்டதையும் அறியலாம் .

—subham—

Tags- உலகு இன்பக் கேணி,  பாரதியார் கூற்றுக்கு,  ஆதாரம் எங்கே?,  Mantras , wisdomlib.org, மறுபிறப்பு, கர்ம வினை, மரணத்துக்குப் பின்னர், மறு வாழ்வு