My Visit to Famous Darasuram Temple with 40,000 Sculptures (Post No.15,497)

Written by London Swaminathan

Post No. 15,497

Date uploaded in Kumbakonam, India –  14 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

The temple of Airavatesvara in Darasuram (Tamil Nadu), dating from the second half of the twelfth century, is one of the four biggest temples erected by the Choza Dynasty.

I have already visited Thanjavur Big Temple and Gangaikonda Chozapuram many times. On Tenth March 2026, I visited the Darasuram temple for the first time. I took an auto from Kumbhakonam and reached the temple within half hour. I spent an hour taking pictures. The entry is free. But compared with other two temples it is less shiny. Many of the sculptures are worn out. 800 years ago, it was the capital of Choza empire with the name Rajarajeswaram. Later it became popular with the name Airavateswar Temple.

Airavatam is the white elephant and the vehicle/ Vahana of Indra. Once it came under the curse of Durvasa Muni and lost its lustre. It came and worshiped Lord Shiva here and got out of the curse. Now we can have good darshan of Lord Airavateswara in Siva Linga form and Goddess Deivanayaki. The temple com[plex maintained by the archaeological department is huge and has 40,000 sculptures. All the Vedic Gods and later gods are sculpted and occupy the niches. Beautiful decorative stone windows are in between the Gods.

Here are salient features:

The temple is constructed like a stone chariot pulled by the horses.

The entire temple complex is filled with rich carvings and inscriptions that narrate stories from ancient Indian Puranas. It  has musical steps. These 7 singing steps that lead to the altar are intricately carved and represent seven musical notes.

The reliefs all along the base of the main temple narrate the stories of the sixty three Shaiva Bhakti saints called Nayanars. These stories are found in the Periya Purana by Sekkilar.

On the outer walls of the main sanctum are sculpture niches; They show various Hindu deities, with the middle one of each side showing Shiva in different aspects.

There are variousNorthern face: Adi Chandesvara, Gangadevi, Tumburu Nardar, Vaisravana, Chandra, Maha Sata, Nagaraja, Vayu

West: Devi, Rudrani, Vaishnavi, Brahmi, Varunani, Nandidevar, Periyadevar, Santyatita Sakti, Santa devi, Vidya Sakti, Pratishta Sakti, Nivarti Sakti

Southern face: Daksha Prajapati, Yamuna devi, Rati, Kamadeva

East: Agni deva, Agastya, Sri devi, Durga devi, Devendran, Padma Nidhi, Surya, Subrahmanya, Kshetrapala, Sarasvati, Visvakarma, Isana inscriptions in the temple.

Airavatesvara Temple was added to UNESCO’s World Heritage Site list of Great Living Chola Temples in the year 2004. The American astronomer Carl Sagan visited the Airavatesvara Temple for his 1980 television documentary series, Cosmos: A Personal Voyage.

Please see the pictures taken by me to appreciate the efforts of great and dedicated sculptors.pictures speak more than words

–Subham—

Tags- Darasuram, Airavateswarar temple, My visit, Choza monument, 40000 sculptures.

தாராசுரத்துக்கு எனது பயணம் (Post No.15,496)

Written by London Swaminathan

Post No. 15,496

Date uploaded in Kumbakonam, India –  14 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Pictures are taken by London swaminathan

தஞ்சைப் பெரியகோவிலுக்கும் கஙகை கொண்ட சோழபுரத்துக்கும் பல முறை சென்று வந்த நான், இதுவரை தாராசுரத்துக்குச் செல்லாமல் இருந்தேன் இந்த முறை இந்திய விஜயத்தின்போது 2026 மார்ச் பத்தாம் தேதி காலையில் சென்றேன் ; தொல்பொருட்த் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த யுனெசுகோ அங்கீகார பாரம்பர்ய சின்னத்துக்கு  அனுமதிக் கட்டணம் எதுவும் இல்லை.

தாராசுரம் எங்கே இருக்கிறது  ?

தாராசுரம் தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து மேற்கே சுமார் 4 கி.மீ இருக்கிறது. இது யுனெஸ்கோ உலக மரபுச் சின்னம்;  வரலாற்றுச் சிறப்புமிக்க ஐராவதேசுவரர் கோயிலை  இரண்டாம் ராஜராஜ சோழன்ய்ங்கே கட்டியதால்  புகழ்பெற்றது. அவன் 12-ஆம் நூற்றாண்டில்  ஆண்ட சோழ மன்னன்.

நான் கும்பகோணத்திலிருந்து ஆட்டோவில் சென்றுவந்தேன் .

தஞ்சசை, கங்கை  கொண்ட சோழபுரம் ஆகிய இரண்டுக்கும் அடுத்த படியாகத்தான் இதை வைக்கவேண்டும் ; அதற்க்கு காரணம் காலம் செய்த கோளாறுதான்! சிலைகள்  மிகவும் பொலிவில்லாமல் இருக்கின்றன சிற்பிகள் தனது செயலைச் செவ்வனே செய்தும் பராமரிப்பு இல்லாததால் அழகு குன்றிவிட்டன.

ஐராவதேஸ்வர் கோவிலில் கொஞசம் டுரிஸ்ட் கூட்டம் சேர்ந்தது. சந்நிதியில் சிவலிங்க  தரிசனம் தீபாராதனையையுடன் கிடைத்தது  .ஐராவதம் என்பது இந்திரனின் யானையின் பெயர் அது  வழிபட்ட இடம் எனலாம்; துருவாச முனிவரின் சாபத்தால் அதன் வெள்ளை உருவம் மாறி கருமை நிறம் அடைந்தது. தன் நிறம் மாறியதால் வருத்தமுற்ற ஐராவதம் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாகவும், அதனால்தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர்  என்றும் தல புராணம் கூறுகிறது.

இங்குள்ள சிறப்புகள்

தேர் போன்ற அமைப்பில் உள்ள கோயில்

கட்டிடம் முழுதும் கெல்மட்டப் பகுதியில் நூறுக்கு கணக்கான குட்டிக் குட்டி சிலைகள்

கமகிகை கொண்ட சோழபுரம் போலவே கோபுரம்

ஒருகாலத்தில் இது சோழனின் தலை நகரம்  அவனுடைய கல்வெட்டுகளும் உள்ளன .கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர்.நிறைய மண்டபங்கள்;

இந்திரன் அமர்ந்திருக்கும் ஐராவதத்தின் சிலை.

மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கருங்கல்  சாளரங்கள் .

முக்கிய சந்நிதியின் வெளிப்புறச்ச சுவர்களில் தெய்வங்களின் உருவங்கள்.

பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள்  சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி .

கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர்(சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு.

பல கோவில்களில் காணப்படும் யானை மாடு இணைந்த உருவம். இதைக் கைகளைக்கொண்டு ஒருபுறம் மறைத்தால் யானையாகவோ மாடாகவோ தெரியும்.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

இசை எழுப்பும் படிக்கட்டு :பலிபீடத்திற்கு இட்டுச்செல்லும் இந்த 7 பாடும் படிகள் நுணுக்கமாக செதுக்கப்பட்டு ஏழு இசைக் குறிப்புகளைக் குறிக்கின்றன.

மூலவர் பெயர்: ஐராவதேஸ்வரர்

தாயார் / அம்மன் பெயர்:வேதநாயகி

தலமரம்:வில்வமரம்

முதலில் இருந்த பெயர் – இராஜராஜேச்சுரம்

இன்றைய பெயர்- தாராசுரம்

இக்கோயில் விமானம் 85 அடி உயரம் கொண்டது.  இக்கோயிலில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  விதவிதமான அளவில் விசித்திரமான சிற்பங்கள் நிறைந்த சிற்பச் சரணாலயமாக இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும். சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர். மூவருலாவில் இக்கோயிலைக் கட்டிய இரண்டாம் இராஜராஜன் சிறப்பிக்கப்படுகிறான். ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜசோழன் ஆகிய மூவருடைய புகழைப் பாடுவதாக அமைந்த இலக்கியமாகும். தக்கயாகப்பரணி இந்தக் கோயிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் கண்டது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வேதகால அக்கினி, இந்திரன் முதலிய தெய்வங்களும் தற்காலத்தில் வழி படப்படும் துர்க்கை முதலிய தெய்வங்களும் மாடம்  தோறும் செதுக்கப்பட்டுள்ளன . கட்டணமின்றி பார்க்கக்கூடிய இந்தச் சிற்பக் கலைக்கூடத்துக்கு அனைவரும் சென்று மகிழ வேண்டும். 

–Subham_

Tags-தாராசுரம், எனது பயணம், தேர் போன்ற கோயில், ஐராவதேஸ்வரர், 40,000 சிற்பங்கள்

சிவன்: பரித்தார், சிரித்தார் , எரித்தார், பொரித்தார், உரித்தார், விரித்தார் , தரித்தார் -44 (Post.15,495)

SYDNEY TEMPLE, AUSTRALIA

Written by London Swaminathan

Post No. 15,495

Date uploaded in Kumbakonam, India –  14 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 44

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 44

PICTURES BY A NARAYANAN, SYDNEY, AUSTRALIA

புரத்தார் வரத்தார் … திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று அசுரர்களும்

சரச்சேகரத்தார் … அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக

பொரத்தான் எதிர்த்தே வருபோது … சண்டை செய்யவே எதிர்த்து வரும்போது

பொறுத்தார் பரித்தார் … முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு போர்க்கோலம் தரித்தார்,

சிரித்தார் எரித்தார் … பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார்,

பொரித்தார் நுதற்பார்வையிலே … பொரிபடச் செய்தார் தனது நெற்றிக்கண் பார்வையாலேயே.

பினகரித்தோ லுரித்தார் … பின்பு (கஜமுகாசுரனான) யானையின்தோலை உரித்தார்,

விரித்தார் தரித்தார் … அதனை விரித்து ஆடையாக அணிந்துகொண்டார்.

கருத்தார் … (தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்) கருத்தோடு

மருத்தூர் மதனாரை … தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்தமன்மதனைகரிக்கோல மிட்டார் … சாம்பல் அலங்காரமாக ஆக்கிய பரமசிவனாரின்

கணுக்கான முத்தே … கண்மணியான முத்தையனே,

கதிர்க்காம முற்றார் முருகோனே. … கதிர்காமம் என்ற தலத்தில்சென்று விளங்கிய முருகனே.

****

இடும்பன் காவடி கதை

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று …

யமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருகின்ற காலதூதர்கள்

நாங்கள் யமனுடைய தூதர்கள் எனக் கூறி

மடிபிடிய தாக நின்று தொடர்போது … மடியில் கை போட்டுப்

பிடிப்பவர்கள் போல நின்று என்னை விடாமல் தொடர்கின்றபோது

மயலதுபொலாத வம்பன் … (என்னைப் பற்றி) இவன் மயக்கமுடைய

பொல்லாத வம்புக்காரன் என்றும்,

விரகுடையனாகுமென்று … வஞ்சனைக்காரன் என்றும்,

வசைகளுடனேதொடர்ந்து அடைவார்கள் … வசைச் சொற்கள்

கூறி என்னை நெருங்குவார்கள்.

கருவியதனாலெ றிந்து … ஆயுதங்களினால் என்னைச் சித்திரவதை

செய்து,

சதைகள்தனையே யரிந்து … என் சதைகளைத் துண்டுதுண்டாகச்

சேதித்து,

கரியபுனலேசொ ரிந்து விடவேதான் … இரும்பை உருக்கிய கரு

நீரை என் வாயிலே விட்டு,

கழுமுனையி லேயி ரென்று விடுமெனும் … கழுவின் முனையிலேயே கிட என்று என்னைக் கிடத்தி,

அ(வ்) வேளை கண்டு … என்னைத் துன்புறுத்தும் அந்த வேளையில்

என் இடரைக் கண்டு,

கடுகிவர வேணு மெந்தன்முனமேதான் … அடியேன் முன்

விரைவில் ஓடோடி நீ வந்தருளவேண்டும்.

பரகிரியுலாவு செந்தி மலையினுடனே … திருப்பரங்குன்றத்திலும்,

திருவுலா இடையறாது நிகழும் திருச்செந்தூரிலுள்ள சந்தன மலையிலும்,

இடும்பன் பழநிதனிலேயிருந்த குமரேசா … இடும்பனால்*

கொண்டுவரப்பட்ட பழநிமலையிலும் எழுந்தருளிய குமரேசக் கடவுளே,

சூரர்களின் போர்ப் பயிற்சி குரு இடும்பன். அவன் ஒரு சிவ பக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவ கிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகத் தூக்கி பொதிய மலைக்குச் செல்லும் வேளையில் முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருக தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.

***

ரிஷிகள் பட்டியல்

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி

இடைக் காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய்

வரு முருகோனே … வசிஷ்டர்காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள், அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே,

நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலை

தலத்து … அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில்

ஆரு(ம்) கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்

வருவோனே … விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே,

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே எடுத்த வேல்

கொ(ண்)டு பொடி தூளதா எறி … நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும்

கடல் வற்றிப் போய் அழிய, திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு (பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி,

நினைத்த காரியம் அநு(க்) கூலமே புரி பெருமாளே. …

நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும்

பெருமாளே.

திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று – திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை. கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.

***

காசித் தலத்தில் முருகன்

பூரணச்சிவ ஞான காவியம் … பரிபூரணமான சிவஞான நூல்களை

ஓதுதற்புணர்வான நேயர்கள் … ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள

அன்பர்கள்

பூசு மெய்த்திரு நீறி டாஇரு வினையேனை … பூசுகின்ற மகிமை

வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய

(புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை

பூசி மெய்ப்பதமான சேவடி … திருநீற்றைப் பூசவைத்து,

உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை

காண வைத்தருள் ஞான மாகிய … தரிசனம் செய்வித்து

திருவருள்மயமான ஞானம் என்ற

போத கத்தினையேயு மாறருள் புரிவாயே … தூய அறிவும்

எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக.

வாரணத்தினையே கராவுமுனே … கஜேந்திரன் என்ற யானையை

முதலை முன்னொருநாள்

வளைத்திடு போதுமேவிய … வளைத்து இழுத்த போது அங்கு வந்து

உதவிய

மாயவற்கு இதமாக வீறிய மருகோனே … மாயவன் திருமாலுக்கு

மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே,

வாழு முப்புர வீற தானது … பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின்

பொலிவெல்லாம்

நீறெழப்புகையாக வேசெய்த … சாம்பலாகப் போகுமாறு புகை எழச்

செய்த

மாமதிப்பிறை வேணியார் அருள் புதல்வோனே … சிறந்த

திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே,

காரணக்குறி யான நீதியர் … யாவற்றிற்கும் மூல காரணனாகவும்,

இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான்

ஆனவர்க்கு முனாகவே … சிவபிரானது சந்நிதிகளில்

நெறிகாவியச்சிவ நூலை யோதிய கதிர்வேலா … அறநெறியை

ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளி வேலனே,

கானகக்குற மாதை மேவிய … காட்டில் குறப்பெண் வள்ளியை

விரும்பி அடைந்த

ஞான சொற்குமரா பராபர … ஞான மொழி பேசும் குமரனே,

யாவர்க்கும் மேலானவனே,

காசியிற் பிரதாப மாயுறை பெருமாளே. … காசித்தலத்தில்*

பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே.

காசி என்ற ‘வாரணாசி’ கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.

–subham—

Tags-  இடும்பன் காவடி கதை, ரிஷிகள் பட்டியல், காசி , ‘வாரணாசி’, சிவன்:சிரித்தார் எரித்தார் பொரித்தார் உரித்தார் , திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் ,Part 44

ராமாயணத்தில் வரங்கள் (43) விஸ்வகர்மா நளனின் அன்னைக்கு வரம் அளித்தது (Post No.15,494)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,494

Date uploaded in Kumbakonam, India – 14 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (43)    

ராமாயணத்தில் வரங்கள் (43) விஸ்வகர்மா நளனின் அன்னைக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘அணை கட்டுவதும் ஸமுத்திரத்தைத் தாண்டுவதும்’

என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் விஸ்வகர்மா நளனுடைய அன்னைக்கு அளித்த வரம் பற்றிய இன்னொரு குறிப்பையும் காண்கிறோம்.

நளன் ஶ்ரீ ராமரிடம் தன்னைப் பற்றி விரிவாகக் கூறுகிறான்.

“நான் விஸ்தாரமான சமுத்திரத்தின் மீது தந்தையினது சாமர்த்தியத்தை உபயோகித்து அணையைக் கட்டுவேன். மந்தர மலையில் விஸ்வகர்மாவினால் எனது அன்னைக்கு கொடுக்கப்பட்ட வரமாகிய (அனுக்ரஹமாகிய) நான் அவரது ஔரஸ புத்திரன். விஸ்வகர்மாவிற்குச் சமமானவன்” என்று இப்படி நளன் கூறுகிறான்.

மம மாதுர்வரோ தத்தோ மந்தரே விஸ்வகர்மணா!

ஔரஸஸ்தஸ்ய புத்ரோஹம் சத்த்ருஷோ விஸ்வகரமணா || 

           யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண் 50

மந்தரே – மந்தர மலையில்

விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவினால்

மம – எனது

மாது: – அன்னைக்கு

தத்த: – கொடுக்கப்பட்ட

வர: – வரமாகிய (அனுக்ரஹமாகிய)

அஹம் – நான்

தஸ்ய – அவரது

ஔரஸ – ஔரஸ\

புத்ர: – புத்திரன்

விஸ்வகர்மணா – விஸ்வகர்மாவிற்கு

சத்ருஷ: – சமமானவன்

நளன் மேலும் அடக்கமாகக் கூறிக் கொள்கிறான்:”சமுத்திரராஜன் உள்ளது உள்ளபடி சொன்னான்.  ஆகவே நான் நினைப்பூட்டப்பட்டவனாக ஆகிறேன். அன்றியும் பிறரால் சொல்லப்படாதவனாய் எனது குணங்களை நானே சொல்லிக் கொள்ள மாட்டேன். சமுத்திரத்தின் மீது சேதுவை கட்ட நான் வல்லமை உள்ளவன். ஆகவே இப்பொழுதே வானரோத்தமர்கள் சேதுவைக் கட்டட்டும்.”

 இதனால் திருப்தி அடைந்த ராமர் அணை கட்ட ஆணை இட்டார். உடனே வானரர்கள் மகிழ்ச்சியோடு காட்டிற்குச் சென்று மரங்களைப் பெயர்த்து இழுத்து வந்தனர்.

சேது அணை கட்டுவதானது ஆரம்பம் ஆயிற்று.

இந்த ஸ்லோகத்தில் விஸ்வகர்மா நளனது அன்னைக்கு வரம் கொடுத்த செய்தி மட்டும் உள்ளது. நளனது அன்னையைப் பற்றியோ அல்லது எதற்காக எப்பொழுது இந்த வரம் கொடுக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் இல்லை.

நளனது அன்னை வரம் பெற்ற செய்தியை மட்டும் இங்கு நாம் அறிகிறோம்.

*

இறைவனின் எட்டு குணங்கள்; பாரதியாரும் அருணகிரியும் கேட்ட வரங்கள் (Post.15493)

Written by London Swaminathan

Post No. 15,493

Date uploaded in Kumbakonam, India –  13 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 43

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 43

***

கும்பகர்ணன் விபீஷணன் பற்றி

எழுது கும்பகன் பின் இளைய தம்பி நம்பி எதிர் அடைந்து

இறைஞ்சல் புரி போதே … (அடைக்கலம் புக) எழுந்து வந்து

கும்பகர்ணனின் இளைய தம்பியாகிய விபீடணன் ராமனது எதிரில் வந்து வணங்கிய அந்தச் சமயத்திலேயே,

இதம் மகிழ்ந்து இலங்கை அசுரர் அந்தரங்கம் மொழிய வென்ற

கொண்டல் மருகோனே … மனம் மகிழ்ந்து இலங்கை அசுரர்களின்

(ராணுவ) ரகசியங்களைச் சொல்ல, வெற்றி பெற்ற மேக நிறத்தினனாகிய ராமனின் மருகனே,

மழு உகந்த செம் கை அரன் உகந்து இறைஞ்ச மநு இயம்பி

நின்ற குருநாதா … மழு ஆயுதத்தை விரும்பி ஏந்தும் சிவபிரான்

ஆர்வத்துடன் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதனே,

வளம் மிகுந்த குன்ற நகர் புரந்து துங்க மலை விளங்க வந்த

பெருமாளே. … வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து,

பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே.

*****

இறைவனின் எட்டு குணங்கள்

உன் அடி வயலி நகர் முருக செரு உயல் ப(ன்)னிரு கர

குமர துன்று அட்ட சிட்ட குண குன்றக்குடிக்கு அதிப

அருளாதோ … உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும்முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே,குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை* உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ?

……………….

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி

தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு

     டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி

     டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி

          தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி

          தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி …… என

தாளம் தொகுதி … மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில்

வெகு முரசு கரடிகை டமரு முழவு தவில் தம்பட்ட(ம்)

மத்தளம் இனம் பட்ட டக்கை பறை பதலை பல திமிலை

முதல் அதிர … பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில்,தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை,முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய,

இறைவனின் எண் குணங்கள்:

1.  தன்வயத்தனாதல்,

2.  தூய உடம்பினன் ஆதல்,

3.  இயற்கை உணர்வினன் ஆதல்,

4.  முற்றும் உணர்தல்,

5.  இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,

6.  பேரருள் உடைமை,

7.  முடிவிலா ஆற்றல் உடைமை,

8.  வரம்பிலா இன்பம் உடைமை.

***

தாமோதரன் பெயர் ஏன் ?

தாம் மோகமுடன் ஊறு பால் தேடி உரலோடு தான் ஏறி

விளையாடும் ஒரு போதில் … தாம் ஆசையுடன் கறந்த பாலைத்

தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில்,

தாயாக வரு (ய)சோதை காணாது களவாடு தாமோதரன்

முராரி மருகோனே … தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்)

பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே,

மா மாது வன மாது கார் மேவும் சிலை மாது … சிறந்த லக்ஷ்மி

போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி)

மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி

மாலாகி விளையாடும் புய வீரா … ஆசை பூண்டு விளையாடுகின்ற

புயங்களை உடைய வீரனே,

வான் நாடு புகழ் நாடு தேன் ஆறு புடை சூழும் …

விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும்

மாயூர கிரி மேவும் பெருமாளே. … மாயூர கிரி எனப்படும் குன்றக்

குடியில்** வீற்றிருக்கும் பெருமாளே.

தாமம் = கயிறு, உதரம் = வயிறு, கயிற்றினால் வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் ஆயினான்.

** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே7 மைலில் உள்ளது.

***

பாரதியாரும் அருணகிரியும் கேட்ட வரங்கள்

உடுக்கத் துகில் வேணும் … உடுப்பதற்கு உடைகள் வேண்டும்.

நீள்பசியவிக்கக் கனபானம் வேணும் … பெரும் பசியைத் தணிக்க

உயர்ந்த சுவைநீர் வேண்டும்.

நல்ஒளிக்குப் புனலாடை வேணும் … தேகம் நல்ல ஒளிவீசும்

பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும்.

மெய்யுறு நோயை ஒழிக்கப் பரிகாரம் வேணும் … உடல் நோயை

அகற்ற மருந்துகள் வேண்டும்.

உள்இருக்கச் சிறுநாரி வேணும் … வீட்டுக்குள் இருக்க இளமையான

மனைவி வேண்டும்.

படுக்க யொர் தனிவீடு வேணும் … படுத்துக்கொள்ள ஒரு தனி

வீடும் வேண்டும்.

இவ் வகையாவுங் கிடைத்து … இத்தனை நலன்கள் யாவும் எனக்குக்

கிடைக்கப் பெற்று

க்ருஹவாசியாகி அம்மயக்க கடல் ஆடி … குடும்பத்தனாகி, அந்த

வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி,

நீடிய கிளைக்குப் பரிபாலனாய் … பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக்

காப்பாற்றுபவனாகி

உயிர் அவமேபோம் … முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும்.

க்ருபைச்சித்தமு ஞான போதமும் … கருணை உள்ளத்தையும்

சிவஞான போதத்தையும்

அழைத்துத் தரவேணும் … நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள

வேண்டும்.

ஊழ்பவ கிரிக்குட் சுழல்வேனை … ஊழ்வினையால் வரும் பிறவி

என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை

ஆளுவது ஒருநாளே … ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ?

குடக்குச் சிலதூதர் தேடுக … மேற்குத் திசையில் சில தூதர்கள்

தேடட்டும் என்றும்,

வடக்குச் சிலதூதர் நாடுக … வடக்குத் திசையில் சில தூதர்கள்

தேடட்டும் என்றும்,

குணக்குச் சிலதூதர் தேடுகவென மேவி … கிழக்குத் திசையில் சில

தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி

குறிப்பிற் குறிகாணு மாருதி … குறிப்பினால் குறிப்பை உணரும்

அனுமனை

இனித் தெற்கொரு தூது போவது … இனி தெற்கு திசையில்

தூதனாக அனுப்ப வேண்டியது.

குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ … சொல்லி வைத்த

குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும்

தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்ரீவன் சொல்லி அனுப்ப),

அடிக் குத்திரகாரராகிய … அடியோடு வஞ்சகர்களாகிய

அரக்கர்க்கு இளையாத தீரனும் … அரக்கர்களிடம் தோற்று

இளைக்காத தீரனாகிய அனுமனும்

அலைக்கு அப்புறமேவி … அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள

இலங்கைக்குச் சென்று,

மாதுறு வனமேசென்று … சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை

அடைந்து,

அருட்பொற் றிருவாழி மோதிரமளித்து … ராமபிரானது அழகிய

பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து

உற்றவர்மேல் மனோகரம் அளித்து … மீண்டு வந்த அந்த

அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி*,

கதிர்காம மேவிய பெருமாளே. … கதிர்காமத்தில் வீற்றிருக்கும்

பெருமாளே.

அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.

பராசக்தியிடம் பாரதி கேட்டவை

காணி நிலம் வேண்டும்-பராசக்தி

காணி நிலம் வேண்டும்;-அங்கு,

தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய்-அந்தக்

காணி நிலத்திடையே-ஓர் மாளிகை

கட்டித் தரவேணும்;-அங்கு,

கேணி யருகினிலே-தென்னைமரம்

கீற்று மிளநீரும்

1

பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்

பக்கத்திலே வேணும்;-நல்ல

முத்துச் சுடர்போலே-நிலாவொளி

முன்புவர வேணும்?அங்கு

கத்துங் குயிலோசை-சற்றே வந்து

காதிற்பட வேணும்;-என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்

தென்றல்வர வேணும்.

2

பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்

கூட்டுக் களியினிலே-கவிதைகள்

கொண்டுதர வேணும்;-அந்தக்

காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்

காவலுற வேணும்;என்தன்

பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்

பாலித்திட வேணும்.

***

வள்ளி பிறந்த கதை

அடவியிருடி அபிநவ குமரியடிமையாய … காட்டில் சிவமுனிவர்

உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி* வள்ளிக்கு அடிமையாகிச் சென்று

புனஞ்சென்று அயர்வோனே … அவள் இருந்த தினைப்புனத்துக்குப்

போய், தளர்ச்சி அடைந்தவனே,

அவசமுடன் அ ததி திரிதரு கவியாள … மயக்கத்துடன் ஒருநாள்

காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள**

அயில் புயங்கொண்டு அருள்வோனே … வேலினைத் தோளில்

ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே,

இடமொரு மரகத மயில்மிசை வடிவுள … தம் உடலின் இடது

பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள

ஏழைக்கு இடங்கண்டவர்வாழ்வே … ஏந்திழையாம் பார்வதிக்கு

இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே,

இதமொழி பகரினு மதமொழி பகரினும் … அடியேன் இனிய

மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப்

பேசினாலும், ஏழைக்கு இரங்கும் பெருமாளே. … இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே.

சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி எனப் பெயரிட்டான்.

** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து, காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.

–SUBHAM—

TAGS- பாரதியாரும் அருணகிரியும், வரங்கள் , திருப்புகழில் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 43 வள்ளி பிறந்த கதை

ஐந்து விஷயங்களில் வெற்றியை படிப் படியாகத் தான் அடைய  முடியும்! (Post No.15,492)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,492

Date uploaded in Kumbakonam, India – 13 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம் 

ஐந்து விஷயங்களில் வெற்றியை படிப்படியாகத் தான் அடைய  முடியும்!

 ச. நாகராஜன்

 சில அருமையான சுபாஷிதங்கள் இதோ:

சாதுக்கள் மகிமை!

ஷைலே ஷைலே ந மாணிக்யம்மௌக்திகம் கஜே கஜே |

சாதவோ ந ஹி சர்வத்ர,  சந்தனம் ந வனே வனே ||

மாணிக்கமானது ஒவ்வொரு மலையிலும் காணப்படுவதில்லை.

முத்தானது ஒவ்வொரு யானையின் தலையிலும் கிடைப்பதில்லை.

சந்தன மரமானது ஒவ்வொரு காட்டிலும் வளர்வதில்லை.

சாதுக்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் காணப்படமாட்டார்கள்.

ஆன்மீக லாபத்தைத் தரும் மகான்கள் அரிதாகவே காணப்படுவர்.

ஒவ்வொரு தெருவிலும் இருக்க மாட்டார்கள். இது எது போல என்றால் மாணிக்கம், முத்து, சந்தனமரம் ஆகியவை அரிதாகவே கிடைப்பது போலத் தான்! 

நிலையை இழந்தால் மதிப்பை இழப்பர்!

ஸ்தானப்ரஷ்டா: ந சோபந்தேதந்தா: கேஷா நகா நரா: |

இதி சஞ்சிந்த்ய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||

பல், கேசம், நகம் ஆகியவை தனது மதிப்பை அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் வெளியே இருக்கும் போது பெறுவதில்லை.

அதே போலவே தனது நிலையிலிருந்து நழுவிய மனிதர்களும் உரிய மதிப்பைப் பெறுவதில்லை.  இதை மனதில் இருத்தியவாறு புத்திசாலிகள் தங்களது சரியான இடத்தை விட்டு விடக் கூடாது.

இதை வள்ளுவரின் ஒரு குறளுடன் ஒப்பிடலாம்.

“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை”

                      (குறள் 964) 

நல்ல குலத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஒழுக்கம் தவறிவிட்டால் தலையிலிருந்து கீழே விழுந்த மயிரைப் போல மதிக்கப்படமாட்டார்கள்.

நரைத்த தலையும் முகச் சுருக்கமும் யாருக்கு மதிப்பைத் தரும்?

அலங்கரோதி ஹி ஜராராஜாமாத்யபிஷக்யதீன் |

விடம்பயதி பன்யஸ்த்ரீ மல்லகாயகசேவகான் ||

நரைத்த தலை, முகச் சுருக்கங்கள் ஆகியவை அரசர்கள், மந்திரிகள், வைத்தியர்கள்,மகான்கள் ஆகியோருக்கு பெரும் மதிப்பைத் தரும். ஆனால் அதுவே விபசாரிகள், மல்யுத்த வீரர்கள், பாடகர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு இழிவைத் தரும்.

படிப்படியாக வெற்றியை நோக்கிச் செல்லும் ஐந்து விஷயங்கள்!

ஷனை: பந்தா: ஷனை: கந்தா: ஷனை: பர்வதமஸ்தகே |

ஷனை: வித்யா ஷனை: வித்தம் பஞ்சைதானி ஷனை: ஷனை: ||

நீண்ட தூரத்தை மெதுவாகத் தான் கடக்க வேண்டும்.

கந்தல் துணியைச் சீராக்க மெதுவாகத் தான் தைக்க வேண்டும்.

மலைச் சிகரத்தை அடைய மெதுவாகத் தான் ஏறி அடைய வேண்டும்.

வித்யையை அடைய மெதுவாகத் தான் கற்க வேண்டும்.

செல்வத்தைச் சேர்க்க மெதுவாகத் தான் சேர்க்க முடியும்.

இந்த ஐந்திலும்  வெற்றி என்பது மெதுவாக, படிப்படியாகத் தான் அடைய முடியும்.

பணக்காரனையும் ஏழையையும் ஒப்பிட முடியுமா?

ஶ்ரீமந்த: ஷ்ரமவந்த: ச நைவ துல்யா: கதாசன |

பாந்தி ரத்நோபலை: ஏகே ஷ்ரமவாரிகணை: பரே ||

ஒரு பணக்காரனையும் ஒரு தொழிலாளியையும் சரியாகவே ஒப்பிடவே முடியாது.

செல்வம் படைத்தவன் ரத்னங்களை அணிந்து ஜொலிப்பான்.

ஏழையோ நெற்றியிலிருந்து விழும் வியர்வைத் துளிகளுடன் இருப்பான்.

*

Aththi varadar and Adi varahar Temples in Kumbakonam (Post No.15,491)

Written by London Swaminathan

Post No. 15,491

Date uploaded in Kumbakonam, India –  12 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Athi Varadar festival in Kumbakonam featuring the rare, once-in-12-years public viewing of the idol ended on tenth March 2026. Over 500,000 devotees had the darshan standing in the long queue for hours.

Here are the key details from the news reports (as of March 2026):

12-Year Cycle: Unlike the 40-year cycle in Kanchipuram, the Athi Varadar idol at the Varadharaja Perumal Temple in Kumbakonam is brought out from its underground chamber once every 12 years.

Current Event (2026): The idol was brought out for public worship in March 2026, marking the end of its 12-year seclusion.

Duration: The special darshan, which includes rituals like Thailakappu (oil anointing) and Oonjal Sevai (swing ritual), is scheduled for a limited period, often spanning about 10 days, attracting thousands of devotees.

Location: The temple is located on Brahmman Koil Street in Kumbakonam.

In a spiritually significant event, the sacred Athi Varadar idol will be brought out from the underground chamber of the Varadharaja Perumal Temple in Kumbakonam after a gap of 12 years. The rare occasion drew devotees not only from Tamil Nadu but also from Andhra, Telangana, Kerala and a few North Indian states.

The Athi Varadar idol, carved from the sacred athi (fig) tree, is preserved in a subterranean chamber within the temple premises as part of a long-standing tradition. According to temple customs, the idol is taken out only once every 12 years for a brief period of public worship. Along with the main deity, Sri Devi and Bhoodevi are also part of the ceremonial display.

During the special darshan period, which lasted for  ten days, elaborate rituals and poojas were conducted in accordance with Agama traditions. Ceremonies such as Thailakappu (oil anointing), Pushpa Alankaram (flower decoration), and Oonjal Sevai (swing ritual) were performed with devotional fervour.

Temple authorities made extensive arrangements to manage the surge in devotees, including regulated darshan timings and security measures. The event transformed Kumbakonam into a major spiritual hub, as devotees gathered to witness and participate in this rare and auspicious tradition.

Only one incident was reported ;a devotee passed away while waiting in the long queue for the darshan on March 10, 2026.

( The Athi Varadar idol in Kumbakonam is distinct from the more famous, larger Athi Varadar idol in Kanchipuram, though both are made of fig wood.)

***

Adi Varaha Perumal /Vishnu Temple

I visited Adi Varaha Perumal /Vishnu Temple (aadi varaaha perumaal) on 10th March 2026 and had good darshan. It is a small temple compared to Sarngapani and Chakrapani Vishnu temples. It is very near the famous Kumbeshwar Siva Temple.

God/Moolavar : Sri Adhi Varaha Perumal

Goddess/Thayar    : Sri Ambujavalli

It has no tall tower. but instead there is an Arch which is East facing. On top of the Welcome Arch Sri Varaha Perumal is seen along with few other Gods. There is a gold plated Dwajasthambam, a Bali Peedam and a Garudalwar who faces the Moolavar Sannadhi. It is about 800 years old.

Thayar/Goddess Ambujavalli is in a separate shrine in a sitting posture with abhaya varada hastam.

According to Sthala Purana/ local history,Demon Hiranyaksha took Bhumadevi deep inside the earth. Bhumadevi prayed to Maha Vishnu to rescue her. Maha Vishnu took the Varaha avatar, dug the earth with his nose, and brought her back. Hence, Maha Vishnu of this temple is called Adhi Varaha Perumal Temple. Varaha means boar. It I one of the Ten Avatars/Dasavatar.

This Temple is one of the five Templescelebrating  Mahamaham festival that is held once in 12 years. Inside the Sanctum Sanctorum Adhi Varaha Perumal can be seen along with His Consort Bhoomadevi on His Lap and Adisesham can be seen in a standing posture.

 This is a Vadakalai  temple with Nigamantha Desikan shrine inside the temple.

One of the special features of the temple is a rare Prasad/Food offering. A root called Korai Kizangu is used in the food offering to God here. Since the God is in the form of Boar, this is considered appropriate offering.

Korai Kizhangu, or Nut Grass (Cyperus rotundus), is a traditional Ayurvedic and Siddha tuberous root known for its diverse medicinal, skincare, and hair removal properties. It is used to treat skin infections, improve skin texture, boost immunity, and aid digestion, often consumed as a powder or used as a topical paste.

–subham—

Tags– Aththivaradar and Adivarahar Temples , Kumbakonam, Root vegetable Prasad, 12 years,Korai Kizhangu,

கும்பகோணத்தில் அத்தி வரதரும் ஆதிவராஹரும் (Post No.15,490)

Written by London Swaminathan

Post No. 15,490

Date uploaded in Kumbakonam, India –  12 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 கும்பகோணத்தில் அத்​திவரதர்– ஐந்து லட்சம் பேர் தரிசனம்

கும்பகோணம் வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி உடனாய அத்திவரதரை நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்; பாதாள அறை​யில் இருந்து 12 ஆண்​டு​களுக்கு பிறகு வெளியே எடுக்​கப்​பட்ட ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதரை ஐந்து லட்சம் பேர் தரிசனம் தரிசனம் செய்​தனர். 10-ம் தேதி வரை அத்​திவரதரை தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டது.

கும்​பகோணம் பிரம்​மன் கோயில் தெரு​வில் உள்ள வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் மூல​வர் சந்​நி​திக்கு கிழக்​கில் உள்ள பாதாள அறை​யில் அத்தி மரத்​தாலான சுமார் ஒன்​றரை அடி உயரம் உள்ள ஸ்ரீதே​வி, பூதேவி உடனாய அத்​திவரதர் சிலை வைக்​கப்​பட்​டுள்​ளது.இந்தச் சிலையை 12 ஆண்​டு​களுக்கு ஒரு முறை வெளியே எடுத்து பக்​தர்​களின் தரிசனத்​துக்கு வைக்​கப்​படு​வது வழக்​கம். அதன்​படி, 12 ஆண்​டு​களுக்​குப் பிறகு இந்த சிலை வெளியே எடுக்​கப்​பட்​டு பக்​தர்​களின் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டது.

தமிழகத்​தைச் சேர்ந்த பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்தும் கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, கேரளம் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களைச் சேர்ந்த ஏராள​மான பக்​தர்​களும் திரளாக வந்து தரிசனம் செய்தனர்.. இதற்​கான ஏற்​பாடு​களை சவு​ராஷ்டிரா தர்​மபரி​பாலன கமிட்டி நிர்​வாகி​கள் செய்​தனர்.

 ****

கும்பகோணம் ஆதிவராகர் கோயில் ஒரு பழமையான வைணவத் தலம். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது ;மூலவர் சாளக்கிராம மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்புஜவல்லி தாயார் மற்றும் வராகதீர்த்தம் இத்தலத்தின் சிறப்பு.

மூலவர்: ஆதிவராகப் பெருமாள்.

பூமியைப் பாதாள உலகிற்குள் இருந்து மீட்ட ஆதிவராகர், மகாமகம் நிகழ்வதற்கு முன்பே தோன்றியவர் என்பதால் இவரை ‘ஆதிவராகர்’ என அழைக்கின்றனர். இங்கு வழிபடுவது ஞானம், அறிவு மற்றும் செல்வத்தை அளிக்கும் .

திருவிழாக்கள்: மாசிமகம், ஆவணி பவித்ரோத்ஸவம், நவராத்திரி மற்றும் கருட சேவை சிறப்பாக நடைபெறும்.

பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளை நைவேத்தியமாகப் படைக்கும் வழக்கம் இக்கோயிலில் உள்ளது. கும்பகோணத்தின் மையப்பகுதியில், சக்கரபாணி கோவிலுக்கு தென்மேற்கில், ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது, மிகப் பழமையான ஆதிவராகப் பெருமாள் கோவில். இதன் அருகிலேயே வராக விநாயகராகிய கரும்பாயிரம் பிள்ளையார் கோவிலும் உள்ளது. இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவர்;. மாசிமகத் திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, வரதராஜர், ராஜகோபாலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட எழுந்தருளுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சுவாமி, பூமாதேவியை இடது மடியில் அமர்த்திய கோலத்தில் காட்சி தருகிறார். பூமாதேவி திருமாலை வணங்கியபடி இருக்கிறாள். மூலவர் ஆதிவராகப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் இருக்க, அவருக்கு முன்பாக உற்சவர் நின்றபடி இருக்கிறார். உற்சவர் ஆதிவராகர், தனது இடது பாதத்தை ஆதிசேஷன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். சுவாமி முன்பாக ‘வராக சாளக்கிராமம்’ உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் உள்ளன.

வராகத்தின் (பன்றி) முகத்தோடு விளங்குவதால் வராகப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். ஒருசமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன், பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். தன்னை மீட்கும்படி, பூமாதேவி திருமாலிடம் வேண்டினாள். திருமால் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று பூமியை மீட்டு வந்தார். இவரே இத்தலத்தில் வராகமூர்த்தியாக அருள்புரிகிறார்.

கோரைக்கிழங்கு மாவுருண்டை பிரசாதம்

தினமும் ஆதிவராகப் பெருமாளுக்கு அர்த்தஜாம பூஜையின்போது, கோரைக்கிழங்கு மாவுருண்டையை நைவேத்யமாக படைக்கிறார்கள். பாய் நெய்வதற்குரிய நாணல் புல்லின் அடியில் முளைப்பது கோரைக்கிழங்கு. இந்தக் கிழங்கை பொடித்து, அதனுடன் அரிசி மாவு, சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வைப்பர். மறுநாள் காலையில் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால். பூமிக்கு கீழே விளையும் கிழங்கு கலந்த நைவேத்யம் இவருக்கு படைக்கப்படுகிறது.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் சுவாமியை வணங்கி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலுக்கு நான் மார்ச் மாதம் பத்தாம் தேதி (2026) சென்றேன்.

–subham—

Tags- கோரைக்கிழங்கு பிரசாதம், கும்பகோணம்,  அத்தி வரதர்,  ஆதிவராஹருர், கோயில், 12 ஆண்​டு​களுக்கு ஒரு முறை

கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்கு பற்றி அருணகிரிநாதர் (Post No.15,489)

Written by London Swaminathan

Post No. 15,489

Date uploaded in Kumbakonam, India –  12 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 42

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 42

***

ஆதிமக மாயி யம்பை … முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும்,

அம்பாளும்,

தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது … தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார்

தந்த குமரேசா … பெற்றருளிய குமாரக் கடவுளே,

***

திருட்டுப் புலவர்கள் மீது வசைமாரி

கருடன் மிசை வரு கரிய புயல் என … கருடன்மேல் வருகின்ற

கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும்,

கமல மணி என உலகோரை … தாமரை (பதும நிதி), சிந்தாமணி

நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை

கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி … கூச்சலிட்டு,

பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில்

மிக்க கருத்துடன்

முது மொழிகளை நாடி … பழைய செஞ் சொற்களைத் தேடியும்,

திருடி ஒரு படி நெருடி … திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து

அப்பாடலில் அமைத்தும்,

அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி … அறிவில்லாத

மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும்,

திரியும் அவர் சில புலவர் மொழிவது … திரிகின்றவர்களாகிய சில

புலவர்கள் கூறுவது,

சிறிதும் உணர் வகை அறியேனே … சற்றேனும் உணரும்படியான

வழியை நான் அறிந்திலேன்.

வருடை இனம் அது முருடு படும் … மலை ஆடுகளின் கூட்டமும்,

கரடு முரடு உள்ள

அகில் மரமும் மருதமும் அடி சாய … அகில், மருதம் ஆகிய

மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி,

மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை வழிய … மதுரம் என்ற

ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி,

வகை வகை குதி பாயும் … பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற

குருடி மலை உறை முருக … குருடி மலையில்* வீற்றிருக்கும்

முருகனே,

குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் … சிறந்த வட மலை

ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும்,

குமர குருபர திமிர தினகர … குமரனே, குருபரனே, அஞ்ஞான

இருளுக்கு ஓர் சூரியனே,

குறைவில் இமையவர் பெருமாளே. … குறைவில்லாத தேவர்களின்

பெருமாளே.

குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.

***

பங்கேருகனும் மருள சென்று ஏயும் அமரருடை சிறை மீள

செண்டு ஆடி அசுரர்களை … தாமரை மலரில் வாழும் பிரமனும்

மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை

நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து,

ஒன்றாக அடியர் தொழும் தென் சேரி கிரியில் வரும்

பெருமாளே. … யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும்

தொழுது வணங்க, தென் சேரி கிரியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.

***

முதலை உண்ட பாலகனை சுந்தரர் மீட்ட கதை

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் … கொங்கு நாட்டில்

உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*)

அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே …

(அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.

குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு … யானைமுகப்

பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற

கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. … கொங்கணகிரி

என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது. திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார்,

வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று

அருணகிரியார் வேண்டுகிறார்.

***

மனத்தின் போக்கு :அருணகிரி வருத்தம்

பாட்டி லுருகிலை … மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து

உருகுதல் இல்லை,

கேட்டு முருகிலை … பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும்

உருகுதல் இல்லை,

கூற்று வருவழி பார்த்து முருகிலை … யமன் வரும் வழியைக்

கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை,

பாட்டை யநுதினம் ஏற்றும் அறிகிலை … கஷ்டங்களை தினமும்

அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை,

தினமானம் பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை …

நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ

இன்பத்தை விரும்புவதும் இல்லை,

நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை … நுனி நாக்காலாவது

இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை,

பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது … பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே,

நல் வழிபோக மாட்டம் எனுகிறை … நீ நல்ல வழியிலே

போகமாட்டேன் என்று சொல்கிறாய்.

கூட்டை விடுகிலை … உடல் சிறையாகிய இந்தக் கூட்டை

விடுகின்றதாக நீ இல்லை,

ஏட்டின் விதிவழி யோட்டம் அறிகிலை … ஏட்டில் உனக்கென

எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை,

பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய் …

உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் – இதை நீ கேட்பாயாக.

வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் …

அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான்.

அடியார்க்கும் எளியனை வாழ்த்த … அடியார்களுக்கு அவன்

வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால்

இருவினை நீக்கு முருகனை மருவாயோ … நல்வினை தீவினை

இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக.

ஆட்டி வடவரை வாட்டி … உலகையே ஆட்டி வைப்பவரான

சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து,

அரவொடு பூட்டி திரிபுர மூட்டி … வாசுகி என்ற பாம்பை நாணாகக்

கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி,

மறலியின் ஆட்டம்அற சரண் நீட்டி … யமனுடைய ஆணவம்

அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி,

மதனுடல் திருநீறாய் ஆக்கி … மன்மதனுடைய உடலைச்

சாம்பலாகும்படி எரித்து

மகமதை வீட்டி யொருவனை ஆட்டின் முகமதை நாட்டி …

தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி,

மறைமகளார்க்கும் வடுவுற வாட்டும் … வேதவல்லி சரஸ்வதி

தேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும்,

உமையவன் அருள்பாலா … உமாதேவியின் கணவருமான

சிவபிரான் அருளிய பாலனே,

சீட்டை யெழுதி வையாற்றி லெதிருற ஓட்டி … திருப்பாசுரம்

எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக

ஓட்டியும்,

அழல்பசை காட்டி சமணரை … நெருப்பிலே இட்ட ஏடு பச்சை

நிறத்துடன் விளங்கும்படி காட்டியும்,

சீற்ற மொடுகழு வேற்ற … (வாது செய்து தோற்ற) சமணர்களைக்

கோபித்துக் கழுவேற வைத்தும்,

அருளிய குருநாதா … அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த)

குருநாதனே,

தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை … பரிசுத்தனே, என் மனம்

விருப்பத்துடன் உன்னை

ஏத்த அருளுட னோக்கி அருளுதி … துதிக்கும்படி நீ

திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும்.

தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே. … தீர்த்தமலை**

நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள்

தேவயானையின் பெருமாளே.

தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷாயணியையும் மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில் வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில் பொருத்தினார். யாகத்துக்கு வந்த சரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன் காயம் ஏற்படுத்தினார் – கந்த புராணம்.

** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.

***

கோம்பை நாய்கள் பற்றி

பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ

என ஓசை … (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த

திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை

பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன்

மருகோனே … அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம்

ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய

மருகனே,

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி

திகழ் சோலை … பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும்,

பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன்,

பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும்

பெருமாளே. … அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும்

இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.

கோம்பை – செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.

** பூம்பாறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.

கோம்பை அல்லது பாலிகர் நாய் என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனமாகும் பாரம்பரியமாக காவல் மற்றும் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் .

கோம்பை நாய்கள் அகலமான, குட்டையான, தசைநார், சக்திவாய்ந்த மற்றும் தடகள நாய்களாக விவரிக்கப்படுகின்றன, அவை பொதுவாக வெளிர் பழுப்பு முதல் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் மெல்லிய, கருப்பு, முகமூடி போன்ற முகவாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

மிகவும் புத்திசாலியாகவும், தங்களுக்குப் பரிச்சயமானவர்களிடம் மிகவும் விசுவாசமாகவும், பாசமாகவும் இருக்கும் .

தேனி மாவட்டத்தில் தோன்றிய இந்த இனம் கோம்பை நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது .

–subham—

Tags- கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்கு, முதலை , சுந்தரர் மீட்ட கதை, அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 42

Four Crores verses in one day?! (Post No.15,488)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,488

Date uploaded in Kumbakonam, India – 12 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 Four Crores verses in one day?! 

S. Nagarajan 

The Tamil literature is a vast treasure, and it is not possible to learn all this literature in one lifetime.

Avvaiyar is a great female poet of Sangam period. She is belonging to the first century BCE.

 She was respected by one and all in the Tamil country. She travelled widely from one point of the country to the other point inspiring people with her fantastic poems.

 All the kings were delighted to have Avvaiyar in their court. They used to ask several questions and used to get amazing answers.

 Once Avvaiyar went to Pandiyan kingdom and the king welcomed her with respect.

 When the court assembled one mischievous person asked Avvaiyar, “You are great! Could you compose four crores’ poems in one day?”

 All were stunned on hearing this mischievous question.

 But Avvaiyar laughed, “Why not? I will recite four crores poem tomorrow.”

 Everybody was worried how Avvaiyar could compose four crores’ verses in one day.

Avvaiyar took rest and there was no action on her part to compose any poem.

 Next day when the court assembled the King asked, “Madam, have you got four crores’ poems? There is no cart to carry all the four crore palm leaves contain the verses?’

 Avvaiyar unfolded her small bag and took one palm leaf, and said, “This is enough to answer the question raised by the person yesterday.”

All were eagerly looked her face.

She started reading her poem from the palm leaf.

The poem consisted of four lines.

She read one by one.   

Not stepping into the place of those who is not respecting you is equals to a crore.

 Not taking food in those persons’ home who have not invited you with whole heart is equals to a crore.

 To get a friendship of person from a noble lineage even by giving one crore equals to a crore.

Not allowing your tongue swerving from truth even one is offering crores and crores to you equals to a crore.

 Everyone was wonderstruck on hearing this four crores poem. The person asked for four crores only. But Avvaiyar used many crores in her verse and the king was so pleased that he bows down before Avvaiyar.

 Even to this day, the four-crore poem is very famous in Tamil World. And Avvaiyar is being honored by every Tamil speaking people till this day.

 In 1991, a 20.6-kilometer-wide crater in Venus was named after her by the international Astronomical Union.

 Her famous quote, “What you have learned is a mere handful; What you have not learned can be compared to the size of the world” is included in NASA’s Cosmic Questions Exhibit.

 **