Famous Shiva Story in Purananuru- Part 60 (Post No.15,616)

Written by London Swaminathan

Post No. 15,616

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru Wonders -20 Ancient Tamil Encyclopaedia -Part 60; One Thousand Interesting Facts -Part 60

***

Item 450 Notable similes

Two similes are notable in Puram verse 54.

“He gives to everybody who comes to him,
without limits and without stopping, shaming the generosity of clouds”,

King’s generosity is compared to rainy clouds. This is a common simile in Tamil and Sanskrit. The meaning is that both did not expect anything in return.

Another simile is

“are like a whistling goat herder who wears
soiled clothes and a dirty garland, who is unable to go near a vast place where a tiger lives, with his goats with small heads”

Enemy kings are like small headed goats; our king Kothai is like a tiger.

***

Item 451 Whistling


Another interesting thing about the cowherd or goatherd. When the day comes to an end they whistle to bring back all the goats into the shed. They use the dogs to round up the goats and sheep to drive them back into the shed. Even Scottish  shepherds  whistle to do this. It is strange that all over the world they whistle using their mouth to do this.

***

Item 452 Appearance

The description of the goat herd or shepherd  is notable. In other poems in the Sangam literature, they add the word Kallaa- uneducated, illiterate–.to cowherders. Even Andal in Tiruppavai repeated that. So we know they never go to school for basic education; there may be one or two exceptions. Here the poet says,

“like a whistling goat herder who wears
soiled clothes and a dirty garland”.

***

Item 453 No Visa Entry

In the ancient India, poets and saints did not have any restriction or hurdle in entering a palace or an assembly. They never needed a visa to enter another country or territory. This can be seen in all the Puranas. They simply inform the gatekeeper and immediately the king comes to the gate to receive them or give them immediate audience. Here also the bard or the poet makes it clear.

****

Puranānūru 54, Poet Kōnāttu Erichalūr Mādalan Mathurai Kumaranār sang for Cheraman Kuttuvan Kōthai,

In the ancient, uproarious town where my king is, those
like me can enter his great day assembly with our heads
held high
!  It is easy for those like me to approach him.
Not just that.  He gives to everybody who comes to him,
without limits and without stopping, shaming the generosity
of clouds, 
Kōthai with charitable hands and fast horses.

The mighty kings who have risen up against our lord with
great strength, are like a whistling goat herder who wears
soiled clothes and a dirty garland
, who is unable to go near a
vast place where a tiger lives, with his goats with small heads.
His country is not approachable by enemy kings.

Notes:  This is the only poem written for this king.  He was a contemporary of Chozhan Ilavanthikai Palli Thunjiya Nalankilli and Chozhan Kurāpalli Thunjiya Perunthirumāvalavan.  This poet wrote Puranānūru poems 54, 61, 167, 180, 197 and 394.  

****

Vaidehi Herbert’s translation is used, thanks.

***

புறநானூறு 54பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை

1

எங்கோன் இருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே,
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து,  5

2

வானம் நாணவரையாது சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,

3
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி  10
மாசுண் உடுக்கை மடிவாய் இடையன்,

4
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்து அற்றே,
வலி துஞ்சு தடக்கை அவனுடை நாடே.

******

Item 454

“O Māran donning a flower garland!  You are like the god
with a blue throat, a glowing eye, and a crescent moon
on his head, who used the soaring mountain as a large bow,
and a snake as a string, and with one arrow ruined three forts and brought victory to the celestials”. 

Lord Shiva destroyed three hanging castles in the sky occupied by three demons. This anecdote is in the ancient Puranas and all the devotional songs sung by Saivite as well as Vaishnavite saints, Naayanmaars and Aalvaars.

Though Sangam literature mentioned Lord Shiva in many other places, this specific story is more important ; many Puranic stories reached common man in Tamil Nadu 2000 years ago!

Let us look at the story/anecdote:

Story of Tripurantaka murti- Tripuraantaka—is connected to puranas. Siva killed three demons and reduced their magic cities to ashes. During this campaign  the earth served Siva as a chariot and the sun and the moon as wheels. The four Vedas were the four horses and the Upanishads were the guiding reins; the mythic golden mountain Meru was the bow, the ocean was the quiver and god Vishnu was the arrow.

Images of Tripurantaka were made with right leg firmly placed on the pedestal and the left leg bent. The right forehand is in the simha karna posture holds the arrow and the left fore arm, the bow. The other hands hold the tanka or axe and the deer respectively. His locks are arranged in the form of a jatamakuta and the goddess Gauri stands on the left side.

In the chariot, at its front,  is seated the four faced brahma  and below him is a white bull.

  • The Demons: Tarakasura’s sons—Taarakaksha, Kamalaksha, and Vidyumaali—performed severe penance to Lord Brahma to gain immense power.
  • The Three Cities (Tripura): Brahma granted them three invincible, flying cities that could only be destroyed by a single arrow when they aligned, which happened once in a thousand years. The Asuras had three cities: the lowest was of iron, then there was one of silver, then one of gold
  • Symbolism: Shiva destroyed the cities with a single, flaming arrow. The story symbolizes Shiva’s role in destroying the three inner impurities—ignorance, ego, and negativity.

Shiva is often depicted as the “laughing” destroyer (Tripurantaka), holding a bow, and sometimes, in some versions, the cities were destroyed by a mere smile.

My interpretation

Hindus  thought of creating even space stations thousands of years before the modern space stations of Russia and America. Moreover Siva must have burnt them in a second with his laser sword. And the metals used to build them are also important. If one has to burn them one needs immense heat that can be generated with lasers. Siva did this by lauging is recited throughout Tevaram songs.

Tripura Antaka Statues are in famous temples like Madurai and Chidambaram. An image of tripurantaka murti in the thousand pillared hall of Madurai temple shows an actual figure of Vishnu on the arrow held by Siva.

This is seen in many archaeological monuments too

***

Item 455 Four fold Army

you own an army with these four divisions –
murderous elephants with fierce rage, proud swift horses,
tall chariots with rising flags, and foot soldiers with

Hindus invented the board game Chess and spread it throughout the world. We see the four- fold army there. It is in all our epics, inscriptions, Kalidas and other Sanskrit books. Being Pukka Hindu rulers, Tamils followed the same Six Seasons, Same Fourfold army, same Spy and Duta/ambassador system. (In my old articles I have given the relevant quotes)

***

Item 456 Sun and Moon

Sun and Moon are compared with the qualities of a king in Raghuvamsam of Kalidasa and Manu smriti. Er see it here in the poem.

with bravery and manliness like the sun, coolness and
tenderness like the moon and charity like the sky,

Raghuvamsam of Kalidasa – 4-12 and many more poems.

***

Item 457 Sand particles, rain drops

Greatness!  May your life be long with more days than the number  of sands

King is greeted to have long life and the years in his life span are compared to the number of raindrops or sand particles on a beach. This is repeated by many Sangam poets.

***

Item 457 Lord Muruga/ Skanda in Tiruchendur

roll from the deep waters in Senthil where Murukan rules!

Lord Skanda/ Kartikeya (Murugan in Tamil) is the subject of another Sangam book Tirumurukatruppadai. Lord Muruga is worshipped by millions of Hindus even today in his Six Abodes known as Aru Padai Veedukal. Tiruchendur on the eastern sea shore is one of the six abodes and the poet Maruthan Ilanaakan refers to it .

***

Puranānūru 55, Poet Mathurai Maruthan Ilanākanār sang to Pandiyan Ilavanthikaipalli Thunjiya Nanmāran

1
O Māran donning a flower garland!  You are like the god
with a blue throat, a glowing eye, and a crescent moon
on his head, who used the soaring mountain as a large bow,
and a snake as a string, and with one arrow ruined three forts and brought victory to the celestials. 

2

You are superior
to all the other kings!

Even though you own an army with these four divisions –
murderous elephants with fierce rage, proud swift horses,
tall chariots with rising flags, and foot soldiers with

strength in their hearts and desire for battles, esteemed
righteousness is the foremost cause for real victory.  So,
not thinking that they are ‘ours’ and being unjust to favor
them, and not hurting others because they are ‘not ours’,
3

with bravery and manliness like the sun, coolness and
tenderness like the moon and charity like the sky,

possessing these three great virtues, may you live a long life,
so that there will not be people in need without anything!

4

Greatness!  May your life be long with more days than the number
of sands
 brought and heaped by powerful winds, with deep scars,
on the lovely vast shores of the ocean where white-crested waves

5
roll from the deep waters in Senthil where Murukan rules!

***

புறநானூறு 55, பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார், பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்,

1
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல, 5
வேந்து மேம்பட்ட பூந்தார் மாற!

2
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ் சுடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்ட தாயினும், மாண்ட

3
அறநெறி முதற்றே, அரசின் கொற்றம்; 10
அதனால், நமரெனக் கோல்கோ டாது,
‘பிறர்’ எனக் குணங் கொல்லாது,,

4
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்,
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், 15
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீநீடு வாழிய நெடுந்தகை!

5

தாழ்நீர்!
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடுவேள் நிலைஇய காமர் வியந்துறைக்
கடுவளி தொகுப்ப ஈண்டிய 20

6
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே!

–Subham—

Tags—Purananuru Wonders -20 ,Ancient Tamil Encyclopaedia -Part 60, One Thousand Interesting Facts -Part 60, Shiva story, destruction of 3 hanging cities, Tripurantaka story, goatherds, whistling, item

5 சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part1 (Post.15,615)

Written by London Swaminathan

Post No. 15,615

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்; சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்

Part one

கும்பகோணத்திலிருந்து காரில் புறப்பட்டு புகழ்பெற்ற திருவிடை மருதூர் , திருபுவனம் , திருவாவடுதுறைக் கோவில்களில் சிவபெருமானைத் தரிசித்தேன் . ஒரே பகல் பொழுதில் எளிதான , சுகமான தரிசனம்!. இதை மார்ச் 9- ஆம் தேதி மூன்றே மணி நேரத்தில் செய்து முடித்தேன் அத்துடன் போனஸ் பயணமாக கஞ்சனூர் சுக்கிரபகவானுடன் சிவ பெருமானையும் தரிசனம் செய் தேன்.

மார்ச் 12- ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ் SURPRISE  காத்திருந்தது . திருநறையூர் (தற்போது நாச்சியார்கோயில்) என்று சொன்னவுடன் எல்லோருக்கும் கல் கருடனும் விஷ்ணு பகவானும்தான் நினைவுக்கு வரும் . அங்கு புகழ்பெற்ற சிவன் கோவில் இருப்பதும் அந்தக் கோவிலுக் குள்ளேயே சனிபகவான் குடும்பத்துடன் வீற்றிருந்து அருள் பாலிப்பதும் பலருக்கும் தெரிந்திராது.

ஐந்து கோவில்களையும் நான் சென்ற வரிசைக் கிரமத்தில் சுருக்கமாகக் காண்போம் . எல்லா இடங்களும் அருகருகில் இருக்கின்றன தஞ்சை, திருச்சி பிரதேசத்தில் தடுக்கி விழுந்தால் கோவில்தான் ; எதைப்  பார்ப்பது எதை விடுவது என்று திணறிப்போவோம்.

திருவிடைமருதூர்  (9-3-2026)

திருபுவனம்

திருவாவடு துறை

கஞ்சனூர்

திருநறையூர் (12-3-2026)

***

திரு என்ற சிறப்பு முன்னொட்டு இருப்பதால் இவை அனைத்தும் பாடல் பெற்ற தலங்கள் என்பது விளங்கும் ; அப்படியானால் குறைந்தது 1400 ஆண்டுகள் பழமையானவை; தேவார மூவரும் திருவாசக மாணிக்கவாசகரும் ஒரு கோவிலுக்குச் சென்று பாடி அது நமக்கு கிடைத்திருக்கிறதென்றால் அது அவர்களுக்கு முன்னரே பிரசித்தி பெற்று இருந்ததால்தான் அவர்கள் அங்கே சென்றனர் என்றும் நமக்குத் தெரிகிறது .

நான் முதலில் காலை ஒன்பது மணிக்குச் சென்றது திருவிடைமருதூர் சிவன் கோயில்.

திருவிடைமருதூர்

 (Thiruvidaimarudur) கும்பகோணத்திற்கு அருகில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது.  இத்தலத்தில் , புகழ்பெற்ற மகாலிங்கேஸ்வரர் கோயிலுள்ளது.  இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட தேவாரத் தலம்.

இறைவன்: மகாலிங்கேஸ்வரர் (மருதவாணர்), இறைவி: பிருகத்  சுந்தர  குஜாம்பிகை (பெருநலமுலையம்மை).

தல மரம்:  மருத மரம்  ;

தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் 

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர் ,சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர் முதலியோர்.

பாண்டிய மன்னன் ஒருவன் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் இதுதான் ; இங்கே தைப்பூசத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது .

சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில், கம்பீரமான வீதிகளையும், கோபுரங்களையும் கொண்டது. பெரிய கோவில் ; ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை .

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருவிடைமருதூர் அமைந்துள்ளது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் மூன்று மருத மரமுள்ள தலங்கள் பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார் .

மூன்று மருத மர தலங்கள்

மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு, சிவனின் அருள்பெறும் முக்கிய மூன்று மருத மரத் தலங்கள் (அர்ஜுன ஷேத்திரங்கள்) :–

மல்லிகார்ஜுனம் (ஸ்ரீசைலம்): ஆந்திர மாநிலத்தில் உள்ளது, இது மேல்மருதூர் எனப்படுகிறது.

மத்யார்ஜுனம் (திருவிடைமருதூர்): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம், இது இடைமருதூர் எனப்படுகிறது.

புடார்ஜுனம் (திருப்புடைமருதூர்): திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தலம், இது கீழ்மருதூர் எனப்படுகிறது.

இந்த மூன்று தலங்களும் முறையே வடமருது, இடைமருது, கீழ்மருது என்று அழைக்கப்படுகின்றன.

அர்ஜுனம் என்பது மருத மரத்தைக் குறிக்கும், சிவன் மருத மரத்தின் அடியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

திருவிடைமருதூர் லிங்கம் மஹாலிங்கம் என்று அழைக்கப்படுகிறது..

இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.

பத்திரகிரியார் பட்டிணத்தார் முறையே மேற்கு கிழக்கு கோபுரத்தில் காட்சி தருகின்றனர். பத்திரகிரியார் சிவனை கண்ட ஸ்தலம் .

பஞ்ச லிங்க தலம்

தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விசுவநாதர், ஆத்மநாதர்,

ரிஷிபுரீசுவரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலத்துக்குப் பஞ்சலிங்கத் தலமென்றும் பெயர்.

திருவிடை மருதூரில் சரபோஜி மன்னர் பாவை விளக்கு சிலை !

கும்பகோணம் சக்ரபாணி கோவிலைப் போலவே, திருவிடை மருதூரில் கோயிலிலும்  சரபோஜி மன்னர் நிறுவிய பாவை விளக்கு சிலை உள்ளது இது அவருடைய மகள் நோயிலிருந்து குணமானதற்காக வைக்கப்பட்டது .சரபோஜி  முதலிய மராட்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுடன் நெருங்கிய தொடார்புடைய வர்கள் ஆவர்.

***

2    

திருபுவனம்

13-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சிவபெருமான் மற்றும் சரபேஸ்வரர் வழிபாட்டிற்கும், உயர்தர பட்டுச் சேலை உற்பத்திக்கும் இந்த ஊர் மிகவும் புகழ்பெற்றது

திருபுவனம் சிவன் கோயில் ; ஊர்ப்பெயரைச் சொன்னவுடன் பெண்களுக்கு நினைவுக்கு வருவது திருபுவனம் பட்டுச் சேலைதான் ; அதை விட்டுவிட்டு சிவபெருமானுக்கு வருவோம் ;

இறைவன் ‘கம்பஹரேஸ்வரர்’ (நடுக்கம் தீர்த்த நாயகன்)  அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ .


தல வரலாறு: பிரகலாதன், திருமால் மற்றும் தேவர்களின் நடுக்கத்தை (கம்பம்) நீக்கியதால், சிவபெருமான் கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இது தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் போன்று சோழர்களின் நான்கு முக்கியக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோவில் சுவர்களில் இந்து புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

சிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கட்டிடக்கலை அழகு

திருபுவன மலர் மோகினி என்ற தலைப்பில் புகழ்பெற்ற தெய்வீக ஓவியர் சில்பி எழுதிய கட்டுரையில், ஒரு மோகினிப் பெண் பூங்கொடியை வளைத்துப்  பூக் கொய்யும் அழகினை வருணித்துள்ளார்; திருபுவன வீரபுரம் என்பது பழைய பெயர்; தருமபுர ஆதீனக் கட்டுப்பாட்டிலுள்ள  கோயில் என்று எழுதிவிட்டு பல மோகினி படங்களையும் வரைந்து காட்டியுள்ளார்.

சரபேஸ்வரர் சந்நிதி

பின்னர் சரபத்தின் வெற்றி என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் அவர் சொல்லுவதாவது ,

“வடநாட்டில், தான் பெற்ற வெற்றிக்குச் சின்னமாக மூன்றாம் குலோத்துங்கன் தாராசுரம், திருபுவனம் முதலிய இடங்களில் கோயில் கட்டினான் ; அவன் நரசிம்மத்தை வெற்றிகொண்ட சரப மூர்த்தியை மனமுருகி வழிபட்டிருக்க வேண்டும் . இரண்டு இடங்களிலும் உள்ள சரப சிற்பங்களை கூர்ந்து கவனிக்கும்போது ஒரே சிற்பியால் இது உருவாகியிருக்க  வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஆயினும் சில வேறுபாடுகள் உள்ளன .

சிம்ஹக்னமூர்த்தி என்று அழைக்கப்பெறும் ருத்ரமூர்த்திக்குத் தாராசுரத்தில் எட்டுக்கால்கள், மூன்று கண்கள், இரண்டு சிறகுகள் ! இங்கே திருபுவனத்தில் அத்தனை கால்கள், கண்கள், சிறகுகளுடன் நான்கு கைகளும் சிவ சின்னங்களோடு சேர்ந்து காணப்படுகின்றன. இப்போது சரபர் இருக்கும் இடத்தில் ஆதியில் நடராஜர் இருந்ததாகத் தெரியவருகிறது…………..  சரப சின்னத்தின் பின் பாகம் லிங்க வடிவில் அமைந்திருக்கிறது . சரபர் சந்நிதி தெற்கு நோக்கியிருக்கிறது இங்குள்ள மோகினி சிறங்களைத்தான் நான் வெளியிட்டிருக்கிறேன்.”

ஆறரை அடி உயரத்தில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

திருபுவன வீரன் என்ற விருதுப் பெயர்கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் வட நாட்டிலிருந்து ஞான குருக்களை அழைத்து வந்திருந்தான். அவர்களில் ஒருவர் ஈஸ்வர சிவனார் சித்தாந்த ரத்நாகர ஆசிரியரான ஸ்ரீஸ்கந்த ஷம்பு சிவாசார்யரின் புதல்வர்இவர். இவரைக்கொண்டு அரசன் கோயிலில் பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் நடத்திவைத்தான் என்கிறது ஒரு கல்வெட்டு. இந்த அரசன் காலம் CE 1178-  1218.

இவனைக் கம்பரும் தனது ராமாயணத்தில் தியாக விநோதன் என்ற பெயரில் சிறப்பித்திருக்கிறார்.

பிறகு அம்மன் சிலையான தர்ம சம்வர்த்தனியை  வருணித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார் . அம்மன் சந்நிதியிலுள்ள மூன்றாவது தர்ம சம்வர்த்தனியையாவது ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்வது நிர்வாகிகளின் கடமை” .(முதல் இரண்டு தர்மவர்த்தனி – அறம்  வளர்த்த நாயகி—களின் சின்னங்கள் பின்னப்பட்டுவிட்டன )

தென்னாட்டுச் செல்வங்கள் – பாகம் 1, படைப்பு -இறையருள் ஓவியர் சில்பி, விகடன் பிரசுரம் , ஆண்டு 2012.

இக்கோவிலில் உள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இங்கு சிறப்பு வழிபாடு நடக்கும் .

நரசிம்மரின் கோபத்தைத் தணிப்பதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது சரபேஸ்வரர்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 6-8 கி.மீ தொலைவில் திருபுவனம்

இருக்கிறது.

ஏனைய தலங்களைத் தொடர்ந்து காண்போம்……………………….

To be continued………………………

Tags- ஐந்து சிவன் கோவில், தரிசனம், சனி பகவான், சுக்கிரன், Part One, திருவிடைமருதூர்,  திருபுவனம், மூன்று மருத மர தலங்கள், சரபேஸ்வரர் , மஹாலிங்கம்

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614)

Written by London Swaminathan

Post No. 15,614

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 74

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 74

***

கடவுளரிடையே புதிய உறவு முறைகள் !

மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி

மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே … கும்பத் தலத்தை

உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய

சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே,

வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற

வற்பு உறு வேலை விடுத்து அருள் இளையோனே … கடல்

வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள்

பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி

அருளிய இளையோனே,

சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை

சிக்கெனவே தழுவிப் புணர் மணவாளா … அழகிய குறப்பெண்

வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத்

தழுவிச் சேர்ந்த மணவாளனே,

செச்சை உலாவு பதத்தின மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு

சித்த விசாக இயல் சுரர் பெருமாளே. … வெட்சி மலர் சூழும்

பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப்

பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள

தேவர்களின் பெருமாளே.

ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு  மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின்  மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார்.

****

யாதுதானர் என்றால் பொருள் என்ன ?

ஆசார வீனன் அறிவிலி … ஒழுக்கக் குறைவு உடையவன்,

அறிவில்லாதவன்,

கோப அபராதி யவகுணன் … கோபம் காரணமாகக் குற்றங்கள்

பல செய்பவன், கெட்ட குணத்தை உடையவன்,

ஆகாத நீசன் அநுசிதன் … யாருக்கும் பயனாகாத இழிந்த

குணத்தவன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன்,

விபரீதன் … மாறுபாடான புத்தியை உடையவன்,

ஆசாவிசார வெகுவித மோக ஆசரீத பரவசன் … (மண், பெண்,

பொன் என்ற) மூவாசைகளிலே எண்ணத்தை வைத்து, பலவிதமான

ஆசைச் செயல்களைச் செய்து தன்வசம் இழந்தவன்,

ஆகாச நீர்மண் அனல்வளி யுருமாறி … ஆகாயம், நீர், மண், தீ,

காற்று என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் வெவ்வேறு பிறவிகளில் பல

உடல்களை எடுத்து,

மாசான நாலெண் வகைதனை … குற்றங்களுடன் கலந்த

முப்பத்திரண்டு* தத்துவங்களைக் கொண்ட

நீநானெனாத அறிவுளம் வாயாத பாவி … இந்த உடல்களை நீ

என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத, ஞான உள்ளம்

வாய்க்கப் பெறாத பாவி,

இவனெனநினையாமல் … இத்தனையும் இவன் என்று நினைத்து

என்னை நீ ஒதுக்கி விடாமல்,

மாதாபிதாவின் அருள் நல மாறா மகாரிலெனையினி … தாய்

தந்தையரின் அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத குழந்தைகள்

போல, உன் குழந்தையாகிய என்மீது இனிமேலாயினும்

மாஞான போதம் அருள்செய நினைவாயே … சிறந்த

ஞானோபதேசத்தை அருள்வதற்கு உன் திருவுள்ளத்தில் நினைப்பாயாக.

வீசால வேலை சுவறிட … அகன்ற சமுத்திரமானது வற்றிப் போகவும்,

மாசூரர் மார்பு தொளைபட … பெரிய சூரன் முதலியோரது மார்புகள்

தொளைபடவும்,

வேதாள ராசி பசிகெட … வேதாள கணங்களின் பசி (சூர

சம்ஹாரத்தால்) தீர்ந்திடவும்,

அறைகூறி … போருக்கு வாருங்கள் என்று அசுரர்களைக் கூவி

அழைத்து,

மேக ஆரவார மெனஅதிர் போர் … மேகங்களின் பெரும்

ஆரவாரமான இடியோசை போல முழங்கும் போரில்,

யாது தானர்** எமபுர மீதேற … அரக்கர்கள் யம பட்டணம் போய்ச்

சேரும்படியாக,

வேல்கொடு அமர்செயும் இளையோனே … வேலைக் கொண்டு

போர் செய்த இளையோனே,

கூசாது வேடன் உமிழ்தரு நீராடி … கொஞ்சமும் தயங்காது

வேடன் கண்ணப்பன் வாயினின்று உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப்

பெற்றுக்கொண்டு,

ஊனு ணெனுமுரை கூறா … இந்த மாமிசம் சுவையானது, இதை

உண்டருள்க என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டு,

மன் ஈய அவனுகர் தருசேடம் … நிரம்பவும் அவன் தருவதை, அந்த

வேடன் எச்சில் செய்து தந்த மீதம்

கோதாம் எனாமல் அமுதுசெய் … குற்றமுள்ளது என்று பாவிக்காமல்

அமுதாக எண்ணி உண்டு அருளியவரும்,

வேத ஆகமாதி முதல்தரு கோ … வேதங்களுக்கும் ஆகமங்களுங்கும்

ஆதி முதல்வர் ஆனவருமான சிவபிரான் பெற்றெடுத்த அரசனே,

லோக நாத குறமகள் பெருமாளே. … இந்த உலகத்துக்கெல்லாம்

நாதனே, குறமகள் வள்ளியின் பெருமாளே.

* 32 தத்துவங்கள் பின்வருமாறு:

ஆத்ம தத்துவம் 20, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

** ‘யாது தானர்’ என்றால் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள்  தானவருமாகிய அரக்கர்கள். இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர். 

***

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை


ஆசைகூர் பத்தனேன் … உன் மீது ஆசை மிகுந்த பக்தியை

உடைய நான்

மனோ பத்மமானபூ வைத்து … மனம் எனப்படும் தாமரை மலரை

வைத்து,

நடுவேயன்பானநூலிட்டு … இடையில் அன்பு என்னும் நாரைக்

கொண்டு,

நாவிலே சித்ரமாகவே கட்டி … நாக்கு என்னும் இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து,

ஒருஞான வாசம்வீசி … அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்

என்னும் நறுமணத்தைத் தடவி,

ப்ரகாசியா நிற்ப … அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும்,

மாசிலோர் புத்தி யளிபாட … அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு

என்ற வண்டு மொய்த்துப் பாடவும்,

மாத்ருகா புஷ்ப மாலை … மாத்ருகா மந்திர* மாலையான இந்தப்

பூமாலையை

கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ … அழகிய பவளம்

போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

மூசுகானத்து மீதுவாழ் … சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே

வாழ்கின்ற,

முத்த மூரல்வே டிச்சி தனபார மூழ்கு … முத்தை நிகர்த்த அழகிய

பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி அழுந்திக் கிடக்கும்,

நீபப்ரதாப மார்பத்த … கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும்,

மார்பை உடைய ஐயனே,

மூரிவே ழத்தின் மயில்வாழ்வே … வலிமையான ஐராவத யானை

வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே,

வீசுமீன் அப் பயோதிவாய் விட்டு வேக … அலை வீசும், மீன்கள்

மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற,

வேதித்து வருமாசூர் வீழ … தேவர்களை வருத்தித் துன்புறுத்தி

வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ,

மோதிப் பராரை நாகத்து … தாக்குதல் செய்து, பருத்த

அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது

வீரவேல் தொட்ட பெருமாளே. … வீரம் பொருந்திய

வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை. சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்த மந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

–subham—

Tags– யாதுதானர், மாத்ருகா புஷ்ப மாலை, அருணகிரி நாதர் ,விநோதப் பூ மாலை, கடவுளரிடையே,  புதிய உறவு முறைகள் !

மின்னல் வேக மன்னன் ஜாக்கிசான்! (Post No.15,613)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,613

Date uploaded in London – 13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

7-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்ட

மின்னல் வேக மன்னன் ஜாக்கிசான்!

ச. நாகராஜன்    

வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர்களிலேயே அதிக ஸ்டண்ட்களைச் செய்த ஒரே நடிகர் என்று கின்னஸ் ரிகார்ட் புகழும் ஒரு அதிசய மனிதர் யார் தெரியுமா? குழந்தைகளுக்கும் கூடத் தெரியும். அது மின்னல்வேக மன்னன் ஜாக்கிசான் தான் என்று.

7-4 -1954 அன்று ஹாங்காங்கில் பிறந்து, 71 வயது முடிந்தாலும் இன்னும் தனது பாணி அதிரடி சண்டைக் காட்சிகளில் ஈடுபட்டு வரும் இவர் ஒரு நடிகர். ஒரு தயாரிப்பாளர். டைரக்டர். ஸ்டண்ட் சொல்லித் தந்து அதைக் காட்சிகளாகப் பரிமளிக்க வைக்கும் நிபுணர். பாடகர்.. இப்படிப் பல பரிமாணங்களுடன் மிளிர்பவர் இவர்.

அனைவரையும் தியேட்டர்களில் தங்கள் இருக்கைகளிலிருந்து துள்ளிக் குதிக்க வைக்கும் இவர் வாழ்க்கை சோக மயமான ஆரம்பத்தில் துவங்கியது.

 ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய சிறு பை. கையில் இருந்த ஒரு டாலர் விமானநிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்க. பழப்பையோ அம்மா மகனுக்காக ஆசையாக வாங்கித் தந்தது.

பயந்த முகத்துடன் விமானநிலையம் வந்து தந்தை, தாய் இருவரையும் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிய அந்தச் சிறுவன் தான் ஜாக்கிசான்.  மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அந்தக் குழந்தையை பிரசவம் பார்க்க உதவிய டாக்டருக்கே 20 டாலருக்கு விற்க எண்ணியவர் அவர் தந்தை! ஏழு வயது வரை கஷ்டப்பட்டு வளர்த்து விட்டு இனிமேலும் வளர்க்க முடியாது என்ற சூழ்நிலை வந்தபோது, பையனை அவனது சிஃபு (ஆசிரியர்) யூ சா யூயென் என்பவர் சொற்பத் தொகையை அவனது பெற்றோருக்குத் ‘தள்ளி விட்டு” தனது சீன ட்ராமா அகாடமியில் சேர்த்துக் கொண்டார். அடிதடி, சிலம்பம், குதித்தல், தாண்டல் உள்ள எல்லா சர்க்கஸ் வேலைகளும் அங்கே அத்துபடி!

 காலத்தின் வேகமான மாற்றத்தால் தனது மாணவர்களை திரைத்துறைக்கு அனுப்ப வேண்டியிருந்தது சிஃபுவுக்கு!

அங்கே தான் ஜாக்கிசானுக்கு அடித்தது அதிர்ஷ்டம். முதல் முறையாக ஒரு திரைப்படத்தில் நடிக்க அவனை டைரக்டர் அழைத்தார்.

என்ன காட்சி? எப்படி நடிக்க வேண்டும்?

“அங்கே போய்ப் படு. செத்தவன் போல இருக்க வேண்டும்.” இது தான் திரைத்துறையில் அவர் “நடித்த” அல்லது பிணம் போல் “படுத்த” முதல் காட்சி.

படிப்படியாக எல்லா ஸ்டண்ட் காட்சிகளிலும் நடிக்க ஆரம்பித்து பத்தொன்பதாவது வயதில் ஆக் ஷன் டைரக்டர் ஆகி விட்டார் அவர்.

எதற்கு டைரக்ட் செய்கிறாய்; நீயே நடி என்று ஒரு படத் தயாரிப்பாளர் கூற 1976ல் “லிட்டில் டைகர் ஃப்ரம் காண்டன்” என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்ஸுடன் சிறிய மீசையுடன் தோன்றினார் ஜாக்கிசான்.

 ப்ரூஸ் லீ அப்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார். அவருடன் இரு படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் ஜாக்கி சான். அவரது நடிப்பைப் பார்த்த ப்ரூஸ் லீ தன்னுடன் வருமாறு அழைத்து அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ப்ரூஸ் லீ மனதில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அடுத்த ஆறாம் நாள் ப்ரூஸ் லீ இறந்து விட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை ஜாக்கிசான் கேட்டு மனம் நொந்தார்.

 1978ல் வெளியான ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ என்ற படம் அவருக்கு திரைத்துறையில் ஒரு ப்ரேக்கைத் தந்தது. அன்று வெற்றி ஏணியில் ஏறத் தொடங்கியவர் ஏணியின் உயரமே தெரியாமல் இன்னும் ஏறிக் கொண்டே இருக்கிறார்.

சூப்பர் ஸ்டாராக அவர் இருநூறு படங்களுக்கும் மேலாக நடித்து விட்டார்.

மின்னல் வேக மன்னனாக அவரது அதிரடி நடிப்பு உலகையே அசத்தி விட்டது. ஒவ்வொரு படமும் வெற்றி.

சண்டை வீரர்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி ட்ரங்கன் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வெற்றி கண்ட அவர் மீண்டும் டரங்கன் மாஸ்டர் -|| என்று 1994ல் நடித்து மாபெரும் வெற்றியை அடைந்தார்.

நிமிஷத்திற்கு நிமிஷம் சாகஸம் என்ற ரீதியில் ஒவ்வொரு காட்சியிலும் உயிரே போய்விடும் என்ற நிலையில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு யாரும் இன்சூரன்ஸ் தர முன்வரவில்லை.

போலீஸ் ஸ்டோரி என்ற படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து ஆர்மர் ஆஃப் காட் என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அதில் கோட்டை ஒன்றிலிருந்து மரக்கிளைக்குத் தாவும் காட்சியை அவர் வடிவமைத்தார். ஆனால் தவறி, ஒரு பாறையின் மீது மோத அவர் மண்டையில் பலமான அடி. அவரது ஒரு காது கேட்கும் சக்தியை நிரந்தரமாக வெகுவாக இழந்து விட்டது.

தலை முதல் பாதம் வரை அவர் உடலில் அடிபடாத இடமே கிடையாது.    ட்ரங்கன் மாஸ்டர் -||ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது. ஆர்மர் ஆஃப் காட் படத்தில்  மண்டையில் அடி. தண்டர் போல்ட் என்ற படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் கண் இமைகள் சிதைந்தன.  மிராக்கிள் படத்தில் வலது கண்ணும் ட்ரங்கன் மாஸ்டர் படத்தில் இடது கண்ணும் பாதிக்கப்பட்டன. ட்ராகன் ஃபிஸ்ட் என்ற படத்தில் மூக்கு மூன்று முறை உடைபட்டது. ரம்பிள் இன் தி ப்ராங்க்ஸ் என்ற படத்தில் கன்னத்தில் வெட்டுக் காயம் ஏற்பட, ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ படத்தில் பற்கள் உடைந்தன. கழுத்துப்பட்டை, வலது தோள், முதுகு, வலது கை, விரல்கள் ஆகிய அங்கங்கள் சூப்பர் காப், தண்டர் போல்ட், போலீஸ் ஸ்டோரி, ப்ராஜெக்ட் ஏ ஆகிய படங்களில் சேதம் அடைந்தன. இடுப்பு ஆர்மர் ஆஃப் காட் படத்தில் முறிய இடது பாதம் சிடி ஹண்டர் படத்தில் முறிந்தது. 

போதும் போதும் லிஸ்ட் என்கிறீர்களா? இது தான் அவர் ஸ்டண்டின் துணிச்சல்!

அவரது கால்களுக்கு எந்தப் படமும் சிறிதாகவே இருக்கிறதே என்பது தான் அவர்களது ரசிகர்களின் விமரிசனம்.

ஏராளமாகப் பணத்தைச் சம்பாதித்த அவர் பெருமளவில் அதை நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு உதவி வருகிறார். உலகின் பல்வேறு பகுதிகளில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி, ஏழைகள் படிக்க உதவி என பல்வேறு விதங்களில் இவரது தொண்டு இன்றும் தொடர்கிறது.

எண்பதுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கிய இவரது வெற்றிப் பட்டியல் மிக நீண்ட ஒன்றாகும்.

தாய்ப்பாசத்துடன் தாயை மீண்டும் பின்னால் சந்தித்த இவர், அவரைத் தன் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் செல்வார். ஆனால் பயங்கரமான சண்டைக் காட்சிகள் படம் பிடிக்கப்படும் போது அவர் காப்பி கலக்கச் சென்று விடுவார். காட்சி முடிந்தவுடன் நகைச்சுவையாகப் பேசும் போது அங்கு ஆஜராகி விடுவார். 

தனது மனைவி பற்றி அவர் பகிரங்கமாகப் பேசுவதே இல்லை. ஒரு முறை ஒரு பத்திரிகையாளர் அவரிடம் உங்களுக்குத் திருமணம் நடந்து விட்டதா என்று கேட்க ஒரு கேர்ள் ப்ரண்ட் இருப்பதாக ஜாக்கி சொல்ல ஒரு பெண்விசிறி பாலம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதிலிருந்து அவர் கப்சிப்.

அமெரிக்காவையும் சீனாவையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுவேன் என்று தனது வாழ்க்கை பற்றிய லட்சியத்தைச் சொல்லும் ஜாக்கிசானை வெறும் ஸ்டண்ட் நடிகர் என்று மட்டும் சொல்லி முடித்து விட முடியாது. உலகம் காணும் அபூர்வமான மனித நேயப் பண்பாளர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்!

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 51; இந்து மத கலைச்சொல் அகராதி-51 (Post.15,612)

Kurukshetra

Written by London Swaminathan

Post No. 15,612

Date uploaded in London –12 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ENGLISH VERSION POSTED YESTERDAY; HERE IS THE TAMIL VERSION.

****

குருக்ஷேத்ரம்

மஹாபாரதப் போர் நடந்த புண்யபூமி; தற்போது ஹரியானா மாநிலத்திலுள்ளது . குரு KURU வம்சத்தினரின் மன்னர்கள் ஆண்ட இடம் ; இந்துக்களின் மிகப்புனித நூலான பகவத் கீதை தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே …என்று துவங்குகிறது அதில் இந்தப் புண்ய தலம், தர்ம க்ஷேத்ரம் என்று சொல்லப்படுகிறது ; அங்கு நடந்த யுத்தம் மூலம் தர்மம் நிலை நாட்டப்பட்டது .

***

குவலயாபீடம்

கிருஷ்ணர் மற்றும் அவரது அண்ணன் பலராமனால் கொல்லப்பட்ட யானையின் பெயர் இது. Kuvalayāpīḍa (कुवलयापीड).— கிருஷ்ணர் ரையும் பலராமனையும் மல்யுத்தத்துக்கு அழைத்த கம்சன், ஒரு மதம் ஏற்றப்பட்ட யானையை நிறுத்தி, உள்ளே வருவதற்கு முன்னரே அவர்களைக் கொல்ல ஏற்பாடு செய்திருந்தான் . ஆனால் இருவரும் சேர்ந்து அந்த யானையைக் கொன்றுவிட்டுப் பின்னர் மல்யுத்தவீரர்களுடன் சண்டையிட்டு அவர்களையும் வீழ்த்தினார்கள்.

***

குபேரன்

யக்ஷர்களின் தலைவர் ;ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரர்,  நவ  நிதி என்னும்  ஒன்பது வகையான நிதிகளை வைத்திருப்பவர்; கயிலாயத்தில்  வசிப்பவர் ; சிவபெருமானுடைடய  நெருங்கிய நண்பர் என்பதால் சிவசகா – சிவனுடைய தோழர்– என்ற பெயரும், விஸ்ரவஸ்-இடாவிடா தம்பதியருக்குப் பிறந்ததால் வைஸ்ராவண என்ற பெயரும் இருக்கிறது; புஷ்பக விமானத்தை இவரிடமிருந்து ராவணன் பறித்துக் கொண்டான் ;  ; நவநிதிகளில் சங்க நிதி, பதும நிதி நாம் எல்லோரும் அறிந்தவை; அரண்மனைகளிலும் பெரிய வீடுகளின் கதவுகளிலும் சங்கும் தாமரையும் பொறிக்கப்பட்ட திலிருந்தும் அப்பர் தேவாரத்திலிருந்தும் நாம் அறியும் விஷயம் இது.

***

குந்தி

 Kuntī (कुन्ती).— மஹாபாரதத்தில் பாண்டவர்களில் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோரின் தாய் ; பாண்டு மன்னனின் மனைவி .முதலில் கர்ணனைப் பெற்று , பின்னர்  ஆற்றில் விடவே அவனை   அதிரதன் என்ற தேரோட்டி வளர்த்தான். இளமையில் துர்வாச முனிவருக்கு சேவை செய்ததால் ஒவ்வொரு மந்திரத்தைச் சொல்லி ஒரு தேவரை அழைத்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வரம்  கிடைத்தது ; அதைப்  பயன்படுத்தி அவள் சூரியன், இந்திரன், யமன், வாயு   ஆகியோரை வரவழைத்து பாண்டவர்களையும் கர்ணனையும் பெற்றாள்; பின்னர் அந்த மந்திரத்தை பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதரிக்குச் சொல்லிக்கொடுத்து நகுல சகாதேவனை அடைந்தாள். இவள் கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் ஸகோதரி; இயற்பெயர் பிருதா;   யாதவ குலா மன்னன் சூரசேனனின் மகள். குந்திபோஜன் என்ற மண்ணுக்குள் குழந்தைகள் இல்லாததால் அவனுக்கு தத்து கொடுக்கப்பட்டதால் குந்தி என்ற பெயர் ஏற்பட்டது ;மஹாபாரத யுத்தத்துக்குப் பின்னர், வயதான காலத்தில் கானகத்துக்குக் சென்று வாழ்ந்தபோது காட்டுத்த்தீ யில் கருகி இறந்தாள்.

***

கூனி

இவளுடைய பெயர் மந்தரா. ராமாயணத்தில் வரும் கூன் முதுகு சேவகி ; கேகய நாட்டிலிருந்தே  கைகேயிக்குச் சேவகம் செய்தவள் ; தசரதனின் இளைய மனைவி கைகேயிக்கு துர்போதனை செய்து மனத்தை மாற்றியவள்; சின்ன வயதில் ராமபிரான் விளையாட்டுக்கு இவள் மீது அம்பு எய்து ரசித்ததால் கோபம் கொண்டு பழி வாங்கினாள்; கைகேயிக்குத் தசரதன் கொடுத்த இரண்டு வரங்களைப்  பயன்படுத்தி பரதன் அரசாளவும் ராமனைக்  காட்டுக்கு அனுப்பவும் யோஜனை சொன்னாள்; இவை இரண்டையும் கைகேயி கேட்கவே தசரதன் மாரடைப்பில் இறந்தான்; ராமன் 14 ஆண்டுகள் காட்டிலிருந்து இறுதியில் ராவணனை வதம் செய்தார் 

கூர்ம  அவதாரம் /கூர்ம புராணம்


Kūrmāvatāra (कूर्मावतार) விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் இரண்டாவதாகத்  தோன்றிய  அவதாரம். அமிர்தம் எடுக்க , பாற்கடலைத் தேவரும் அசுரர்களும் கடைந்தபோது விஷ்ணு எடுத்த ஆமை அவதாரம்; கூர்ம என்றால் ஆமை என்று பொருள்; இந்த சம்பவத்தை விளக்கமாகக் கூறுவது கூர்ம புராணம் . சமுத்திர மந்தனத்தின் போது , விஷ்ணு, ஆமை வடிவில் வந்து, மந்தர மலையைத் தன் முதுகில் தாங்கி நின்றார். 

***

கும்ப  மேளா

உலகின் மிகப்பெரிய விழா; கங்கை சரஸ்வதி யமுனை என்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் த்ரிவேணிசங்கமத்த்தில் 12 ஆண்டுக்கொரு முறை நடைபெறும் விழா இது; இப்போது இந்த இடத்தின் பெயர் பிரயாகை ; உத்தர பிரதேசத்தில் இருக்கிறது ; 45 நாட்களுக்கு நடைபெறும் விழாக்காலத்தில் கோடிக் கணக்கான இந்துக்கள் குளித்துவிட்டு இறைவனை  வணங்குவார்கள்; இப்படிகங்கையில் ஸ்நானம் செய்வது புண்ணியத்தையும் முக்தியையும் தரும். இது தவிர நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்வார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய இடங்களில் குட்டி/ மினி/ கும்ப மேளா நடக்கும் சிம்ம ராசியில் குரு  கிரகம் பிரவேசிக்கையில் இந்த விழா நடக்கிறது . கடைசியாக 2025 ஜனவரி- பிப்ரவரியில் நடந்த கும்பமேளாவில் நான் கு கோடி இந்துக்கள் புண்ய ஸ்நானம் செய்தார்கள். அது 144 ஆண்டுக்கொருமுறை வரும் மஹா கும்ப மேளா ஆகும் .  இமய மலையிலிருந்து நிர்வாணமாக வரும் நாகா சாதுக்கள்  முதல் நாளன்று குளிக்கும் பரம்பரை உரிமை இருக்கிறது ; அது காண்பதற்குக் கண்கொள்ளாக்காட்சி.

***

கும்பகோணம் /Kumbakonam

தமிழ் நாட்டிலுள்ள கோவில் நகரம் ; இங்கும் ஊரைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான கோவில்கள், மடங்கள், சத்திரங்கள், தொல் பொருட் துறைச் சின்னங்கள் ஆகியன உள்ளன ; குறிப்பக நவக்கிரக கோயில் ஸ்தலங்கள் இருக்கின்றன ;கும்பகோணத்தில் பழமையான கும்பேஸ்வர சிவன் கோயிலும் சக்ரபாணி , சாரங்க பாணி விஷ்ணு கோயில்களும் பலவித சிறப்புகளை  உடைத்து;  தாராசுரம், அருகிலுள்ள தொல் பொருட்துறைச் சின்னம்; சோழ மன்னர்களின் கலைச் சிறப்புகளையும் சிற்பங்களையும் எங்கும் காணலாம் .

வெற்றிலைக்கும்,  டிகிரி காப்பிக்கும், திருபுவனம் பட்டுச் சேலைகளுக்கும்,  சீவலுக்கும் பெயர்பெற்ற ஊர் இது.

***

கூறைப் புடவை

உயர் ஜாதி இந்துக்கள் கல்யாணத்தில் தாலி கட்டும் நேரத்தில் அணியும் சிவப்பு நிறப்புடவை இது. சிவப்பு நிறம் மங்களத்தைக் குறிக்கும்  ; இந்துக்கள் குங்குமமும் இதே நிறம். பிராமணர் கல்யாணங்களில் இன்றும் இதைக் காணலாம்

 இவை தமிழ்நாட்டின் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கூறைநாடு/ கொறநாடு  என்னும் பகுதியில் பாரம்பரியமாக நெய்யப்படும் பட்டுப் புடவைகள் ஆகும் ; தற்காலத்தில் இவை புது வணிக உருவங்கள் எடுத்துள்ளன !

–subham—

Tags- HINDU DICTIONARY, ENGLISH AND TAMIL 51, இந்து மத கலைச்சொல் அகராதி-51, குருக்ஷேத்திரம் , கும்பமேளா , கும்பகோணம் ,கூறைப்  புடவை  .

Tiruppavai in Pictures with Three English Translations- Part 10 Last Part (Post No.15,611)

Written by London Swaminathan

Post No. 15,611

Date uploaded in London –12 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

First translation by Ms Kausalya Hart, Second by PR Ramachander and the third by Dr Chenni Padmanabhan M D

Pictures were taken by London swaminathan from Uppiliappan Temple.

****

Verses 28,29,30 Last Part

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து

உன் தன்னைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!

உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால்

உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,

இறைவா, நீ தாராய் பறை ஏலோர் எம் பாவாய். (28)


501. The girls, asking for a Paṛai from the god, say,
“We go behind the cattle to the forest
to eat our food there.
You were raised with simple cowherd people.
We are fortunate to be born in the same place as you
O faultless Govindan, we cannot give up our closeness to you.
We, innocent children,
call you with simple names because we love you.
Do not get upset with us.
Give us the Paṛai and give us your grace.
We are going to worship our Pāvai.”

Belonging to the ignorant family of cow herds,
Drive we would the cattle to the forest,
And there we would all eat together,
But We are blessed that you are one of us..
Oh Govinda who does not have any short comings.
None can ever break the ties that we have with you, Oh Lord,
We are but ignorant girls, who do not know the world,
And in ignorance and love we have called you by name.
So please be not be angry on us,
And please give us drums, Oh Lord,
So that we can worship our Goddess Pavai.

Milk cows we would follow, reach the wood and eat;

Amongst tribe pastoral, sans any intellect, Thou art born

This the only virtue we own, our acquaintance is a bond

The intimacy here, never could be torn;

Oh ! Govinda! Deficient in nothing;

We girls ignorant and forlorn

Address Thee in unbecoming names;

Let Tou nth ss:Lo! Master!

Bless us, we in ardour

Bestow us on our desire,

Listen and consider, our damsel—28

***

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட் செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய். (29)

29

502. The cowherd girls say,
“We come early in the morning and worship you
and praise your golden feet. Hear us.
Just like you, we were born in the cowherd clan.
We want to serve you and receive the Paṛai from you.
See, Govindan, we want to be with you always
and we will serve you in all our fourteen births.
Give us your grace
and keep us from wanting anything but your service.
We are going to worship our Pāvai.”

Please hear why,
In this very early dawn,
We have come to worship,
Your golden holy feet.
You were born in our family of cow herds,
And we are but there to obey your every wish,
And not come to get only the drums from you,Oh Govinda.
For ever and for several umpteen births,
We would be only related to you,
And we would be thine slaves,
And so please remove all our other desires,
And help us to worship Goddess Pavai.

Erelong dawn we come unto Thee, to entreat-

All hail! Thy foot lotus golden:

Thou shouldst hearken our motive!

Born in a tribe to graze the pastoral and eat

Thou shalt not let go our menial service deprived

Lo! Govinda! This day not the drum alone is gotten!

Forever seven and seven more births

Related to Thy bond will be near:

Only unto Thee, we serve sincere

Converse our passions to vanish:

Listen and consider, our damsel—29

***

30. Vanga Kadal Kadanthu

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம் பாவாய். (30)

30


503. Paṭṭarpirān Kodai from Puduvai
adorned with a beautiful lotus garland
composed thirty Tamil pāsurams about how the girls
with lovely moon-like faces,
decorated with beautiful ornaments,
went to Madhavan, Kesavan who churned the wavy ocean of milk,
and asked for the Paṛai.
If devotees recite these pāsurams without mistakes
they will receive the grace of rich Thirumal,
with a lovely face, beautiful eyes
and twelve strong mountain-like arms
and be happy.

He who sings without error,
The thirty odes in sweet tamil,
Of the story of how the rich ladies,
With faces like moon,
Who worshipped and requested,
The Madhava who is also Lord Kesava,
Who churned the ocean of milk,
For getting a drum to worship Goddess Pavai,
As sung by Kodhai who is the dear daughter,
Of Vishnu Chitta the bhattar,
From the beautiful city of Puduvai,
Will be happy and get the grace,
Of our Lord Vishnu with merciful pretty eyes.
And four mountain like shoulders, for ever

Face a la gracious moon, the precious jewelled,

Entreating thence had obtained the desire

From Madhava Kesava who churned the ocean wavy;

Whoever reminisces this legacy in thirty Tamil hymns

In commune, hither, in this manner without fail;

A lyrical wreath of Godai- Her sire

Bhattar Piran of Anipuduvai, decorated with fine

Lotus  ‘n’ glory crowned:

Shall beget the blessings of Wealthy Tirumal

Whose arm quadruplet, alike a mountain tall,

Eye bright aglow, with face gracious on call,

And shall remain delighted, be wherever our damsel—30


–subham—

Tags- Tiruppavai, Three English, Translations, last part, part ten, Pictures by London Swaminathan, from Uppiliappan Temple

திருப்புகழில் 18  கணங்கள், வாதம் செய்கின்ற எட்டு வகையான வாதிகள்- part 73 (Post No.15,610)

Written by London Swaminathan

Post No. 15,610

Date uploaded in London –12 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 73

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 73

***

18 கணங்கள் , வள்ளியின் பிறப்பு

மற்றைப் பதினெட்டுக் கண வகை சத்திக்க நடிக்கப் பல பல

வர்க்கத் தலை தத்தப் பொரு படை உடையோனே … மற்றும்

பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே,

முத்திப் பரமத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவ முனி

முற்பட்டு உழை பெற்றுத் தரு குற மகள் மேல் மால் முற்றித்

திரி வெற்றிக் குருபர … முக்தி என்னும் மேலான பொருளைப் பெற

நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின்* மேல் ஆசை நிரம்பக் ண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே,

முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவி

பெறு பெருமாளே. … எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யாமொழி**

என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப்

புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே.

சிவ முனிவர் தவ நிலையில் இருக்க, திருமகள் மானுருவுடன் எதிரில் செல்ல, அந்த மான் ஒரு பெண் குழவியை ஈன்றது. இக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டு வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியில் இருந்ததால் வள்ளி எனப் பெயரிடப்பட்டது.

யார் அந்த 18 கணங்கள்?

புறநானூற்றில் மஹாதேவன் என்ற புலவர் சொன்ன 18 கணம் விஷயத்தை அருணகிரிநாதரும் பாடியுள்ளார்!

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்..

நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-

கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்.

***

வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு

புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக்  கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து, ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.

எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன், அகஸ்தியர், ஏழு ரிஷிகள் (ஸப்தரிஷி  மண்டலம்) , கார்த்திகை, ரோகிணி, அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம்.

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே

— புறநானூறு முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்/ MR MAHADEVAN

***

வாதம் செய்கின்ற எட்டு வகையான வாதிகள்

அகில வாதிகளுஞ்சம யங்களும் … மாறுபட்ட எல்லா வாதிகளும்*, சமயங்களும்

அடைய … ஒதுங்கிப் போய்விடவும்,

ஆமென அன்றென நின்றதை … உள்ளது என்றும், இல்லது

என்றும் நின்ற உண்மைப் பொருளை

அறிவி லேனறி யும்படி … அறிவில்லாத சிறிய அடியேன்

அறியும்படியாக

இன்றருள் புரிவாயே … இன்றைய தினம் உபதேசித்து அருள்

புரிவாயாக.

வாதம் செய்கின்ற எட்டு வகையான வாதிகள் பின்வருமாறு:

  தேக ஆத்மவாதி – உடம்புதான் ஆத்மா என வாதிப்பவன்,

  கரண ஆத்மவாதி – மனமும் புத்தியும்தான் ஆத்மா என வாதிப்பவன்,

  இந்திரிய ஆத்மவாதி – இந்திரியங்களே ஆத்மா என வாதிப்பவன்,

  ஏகாத்மவாதி – ஆத்மாவைத் தவிர வேறில்லை என வாதிப்பவன்,

  பிம்பப் ப்ரதிபிம்பவாதி – பிரமத்தின் நிழல்தான் உலகம் என வாதிப்பவன்,

  பரிணாமவாதி – பால் தயிராவது போல பிரமமே உலகானது என வாதிப்பவன்,

  விவர்த்தனவாதி – பிரமத்திலிருந்து தான் உலகம் வந்தது என வாதிப்பவன்,

  கணபங்கவாதி – கணந்தோறும் வேறுவேறு ஆத்மா உடம்பில் வருகிறது என வாதிப்பவன்.

***

ஆறு கெட்ட குணங்கள்!

ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறு

முகனே குறத்தி மணவாளா … ஆறு வகைக் கெட்ட குணங்கள்*

நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள்

பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே,

குறப் பெண் வள்ளியின் கணவனே.

ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும்

மயில் ஏறி நிற்கும் இளையோனே … கடலால் சூழப்பட்ட ஏழு

உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக்

கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே,

சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம்

மொய்த்த திரள் தோளா … மிக்க சினத்துடன் மேருமலையை

பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை

நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே,

சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர்

சிறை மீள விட்ட பெருமாளே. … கூடியுள்ள வலிமையால் வெற்றி

மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை

நீக்கிய பெருமாளே.

ஆறு கெட்ட குணங்கள்:

காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சர்யம்.

(மாற்சரியம் (māṟcariyam) என்பது பிறர் நலமுடன் வாழ்வதைக் கண்டு பொறாமைப்படுதல், பகைமை அல்லது காழ்ப்புணர்ச்சி கொள்ளுதல் மற்றும் பிறர் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவதைக் குறிக்கும்).

—subham—

Tags- ஆறு கெட்ட குணங்கள், 18 கணங்கள், எட்டு வகை வாதிகள், திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 73

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது? (Post.15,609)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,609

Date uploaded in London – 12 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது? 

ச. நாகராஜன் 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் நாள் உலக மகிழ்ச்சி தினமாக (வோர்ல்ட் ஹாப்பினெஸ் டே) கொண்டாடப்படுகிறது. அன்று வோர்ல்ட் ஹாப்பினெஸ் ரிபோர்ட் வெளியாகிறது. அதன்படி 2026ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி வெளிவந்த உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தர வரிசை அறிவிக்கப்பட்டு விட்டது.

இதன் படி 140 நாடுகளில் முதல் 20 இடங்களைப் பிடித்த நாடுகள் இவை தான்:    

1)      பின்லாந்து

2)      ஐஸ்லாந்து

3)      டென்மார்க்

4)      கோஸ்டா ரிகா

5)      ஸ்வீடன்

6)      நார்வே

7)      நெதர்லாந்து

8)      இஸ்ரேல்

9)      லக்ஸம்பர்க்

10)   ஸ்விட்சர்லாந்து

11)   நியூஜிலாந்து

12)   மெக்ஸிகோ

13)   அயர்லாந்து

14)   பெல்ஜியம்

15)   ஆஸ்திரேலியா

16)   கொஸோவோ

17)   ஜெர்மனி

18)   ஸ்லோவெனியா

19)   ஆஸ்திரியா

20)   செக்கியா

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் நல ஆய்வு மையமானது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல குழுக்களுடன் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தி முடிவை வருடந்தோறும் அறிவிக்கிறது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரிடம் தங்களின் வாழ்க்கை முறையை ஒன்று முதல் பத்து வரை உள்ள தர வரிசையில் குறிக்குமாறு கேட்கப்படுகின்றனர். இது காலப் வோர்ல்ட் போல் என்ற தரவு மையத்திற்குச் சென்று தரவுகளின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படுகிறது/

ஆங்கிலம் பேசும் நாடுகள் இரண்டாவது வருடமாக முதல் பத்து இடங்களைப் பிடிக்கவில்லை. அமெரிக்கா 23வது இடம், கனடா 25வது இடம். இங்கிலாந்தோ 29வது இடம். நார்டிக் நாடுகள் எனப்படும் வட ஐரோப்பா நாடுகள் தாம் எப்போதுமே முதல் வரிசையில் அணி வகுக்கின்றன.

10 எண் தரவரிசையில் 7.764 என்ற எண்ணைப் பெற்று பின்லாந்து வழக்கம் போல முதலிடத்தைப் பிடித்து விட்டது.

சரி, இந்தியாவின் நிலை என்ன என்று பார்ப்போமா?

இந்தியா 116வது இடத்தில் இருக்கிறது. மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவெனில் 2023ம் ஆண்தில் 126 இடம், 2024ல் 118 இடம் என்று இருந்த நாம் இருபடி முன்னேறி 116வது இடத்தைப் பிடித்திருக்கிறோம்.

அண்டைநாடுகளான நேபாளம் 99வது இடம், பாகிஸ்தான் 104வது இடம், பங்களா தேஷ் 127வது இடம். உலகில் மிக மோசமான 147வது இடத்தைப் பிடித்து மகிழ்ச்சியே இல்லாத நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது.

அது சரி, மகிழ்ச்சி எப்படி அளக்கப்படுகிறது?

ஆறு முக்கிய அம்சங்களை வைத்து மகிழ்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.

வருவாய், ஆரோக்கியமாக வாழும் ஆயுள் எல்லை, கஷ்டம் வரும்போது ஒருவருக்கு உதவ தயாராக இருப்பது, தாராள மனப்பான்மை, சுதந்திரம், விஸ்வாசம் ஆகிய ஆறு அம்சங்களைச் சுட்டிக் காட்டி ஒன்று முதல் பத்து வரை உள்ள ஏணி வரிசையில் எங்கு நிற்கிறீர்கள் என்று ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரம் பேரிடம் கேட்கப்படுகிறது. நாட்டின் ஜனத்தொகையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறும். 

இந்த ஆய்வின் முடிவு நம்பிக்கைக்குரியது தானா என்பதில் கருத்து வேறுபாடும் இருக்கிறது. மேலை நாட்டு வாழ்க்கைமுறையின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள் இந்தியாவின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்குப் பொருந்தாது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

தாராள மனப்பான்மை என்பது ஒருவர் கொடுக்கும் பணத்தை வைத்து நிர்ணயிக்கப்படாமல் எத்தனை பேர் கொடுத்தார்கள் என்பதை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

என்றாலும் மகிழ்ச்சி அறிக்கை மகிழ்ச்சி அறிக்கை தான்! 

இந்தியாவில் பின்லாந்தின் தூதுவராக இருக்கும் கிம்மோ லாடெவிர்டா சொன்னதை இந்தியர்களாகிய நாம் ஏற்க வேண்டியது தான். 2026ம் ஆண்டு அறிக்கையில் பின்லாந்து முதல் இடத்தை வழக்கம் போல பிடித்தவுடன் அவர் கூறினார்: “பின்லாந்து தான் உலகின் மகிச்சிகரமான நாடு என்பது குறிப்பிடத்தகுந்தது.  இந்தியர்கள் தாம் உலகிலேயே நன்னம்பிக்கையுடைய ஆப்டிமிஸ்டிக் மக்கள் என்று நான் கருதுகிறேன். ஆகவே இந்திய நன்னம்பிக்கையும் பின்லாந்து மகிழ்ச்சியும் இணைந்தால் அதுவே வெற்றிக்கான இணைவுப் பொருத்தமாக இருக்கும்.” 

எங்கள் வாழ்க்கைமுறை திருப்தியான வாழ்க்கை முறை என்பதே இந்திய மக்கள் கூறும் பொதுவான கருத்து!

**

ஆகமசேவா கலாநிதி லண்டன் சிவஸ்ரீ கல்யாண சுந்தரக் குருக்கள்

 from Facebook GANESH SIVAM POST 12-4-2026

சிவஸ்ரீ அண்ணா இணையதளம்

ஆகமசேவா கலாநிதி லண்டன் சிவஸ்ரீ கல்யாண சுந்தரக் குருக்கள் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறோம். ஆன்மீகம், வேதாகமம் மற்றும் சமஸ்கிருதப் பணியில் அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது.

90-க்கும் மேற்பட்ட நூல்களை சமஸ்கிருதம் மற்றும் கிரந்தத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வெளியிட்டது என்பது சாதாரணமான காரியம் அல்ல. இது வருங்கால இளைய தலைமுறை மாணவர்களுக்கும் அவர் விட்டுச் சென்ற மிகப் பெரிய ‘ஞானப் பொக்கிஷம்’.

வேதஆகம கலாநிதி இசைக்கலைஞர், ஜோதிட நிபுணர் மற்றும் சிறந்த பேச்சாளர் என பன்முகத்திறன் கொண்ட ஒரு மகானை இழந்திருப்பது சனாதன தர்மத்திற்கும், சிவாச்சாரியார் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். கடினமான ஆன்மீகக் கருத்துக்களை எளிமைப்படுத்தி, சீர்திருத்தங்களை முன்னெடுத்த அவரது பணி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.

அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு சிறந்த வழிகாட்டியையும், ஞானப் பொக்கிஷத்தையும்

சைவ உலகம் இன்று இழந்து நிற்கிறது.

அவரது ஆத்மா எல்லாம் வல்ல சிவபெருமான் திருவடி நிழலில் இளைப்பாற மனமாரப் பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி.

TAGS- KALYAN JI, GNANAMAYAM BROADCAST.

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 50; இந்து மத கலைச்சொல் அகராதி-50 (Post.15,608)


Written by London Swaminathan

Post No. 15,608

Date uploaded in London –11 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Version will be posted tomorrow.

Kurukshetram

Kurukṣetra (कुरुक्षेत्र).—Name of an extensive plain near Delhi, the scene of the great war between the Kauravas and Pāṇḍavas; Kurukshetra is the city located in Haryana.

Hindus’ most famous scripture Bhagavad Gita begins with these words: धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवः (dharmakṣetre kurukṣetre samavetā yuyutsavaḥ) Bhagavadgītā (Bombay) 1.1; Manusmṛti 2.19.

Wisdomlib.org website adds,

Kurukṣetra (कुरुक्षेत्र).—Founded by Kuru and sacred to Harī.1 Watered by the river Sarasvatī.2 Capital city of the Kurus.3 Sages of Kurukṣetra visited Dvāraka. At Kurukṣetra Kṛṣṇa performed sacrifices for twelve years.4 The battlefield where the Pāṇḍavas fought with the Kurus led by Duryodhana.5 Here Paraśurāma dug a lake called Syamantapañcaka.6 On the occasion of a sacrifice Sūta narrated the br. purāṇa here.7 Purūravas met Urvaśī after their separation at; the residence of Sanatkumāra and Dharmarāja fit for śrāddha offerings, and sacred to Pitṛs. Founded by Kuru, son of Samvaraṇa;8 residence of sage Kauśika, and sacrifice of Adhisīmakṛṣṇa for 2 years at; sacred in Dvāpara;9 Dharmakṣetra where a great sacrifice was performed.10 Residence at, leads to mukti; no shaving or upavāsa required here.11 Noted for ambhojasaras or lotus tank.12 R. Sarasvatī flows here: noted for a temple of Vāmana.13

***

Kuvalayapeedam

Kuvalayāpīḍa (कुवलयापीड).—Name of the elephant posted at the gates of Mathurāpurī to kill Śrī Kṛṣṇa and Balabhadrarāma, who went there to witness the dhanuryajña. But, they killed the elephant.Kuvalayāpīḍa (कुवलयापीड).—The state elephant of Kaṃsā. When Kṛṣṇa came to the mallaraṅga or the wrestlers’ arena, it was ordered that this elephant should be stationed at the gate of the arena to attack him. When Kṛṣṇa entered the araṅga, the mahout Ambaṣṭha led the animal against him, when Kṛṣṇa took hold of its tail, and whirling it round and round, hit its front when it died with the keeper. He seized its tusks and entered the enclosure in glee. At this Kaṃsā was perturbed; its keeper was killed by Rāma.*

***

Kubera

Kubera (कुबेर) Kubera is the lord of the Yakṣas, he is known also by two other names Vaiśravaṇa and Dhanada, and is regarded as the giver of wealth.  He is a friend of Śiva and the Nāga Nīla. Kubera is the son of Viśravas by Iḍaviḍā  He is mythologised as having three legs and eight teeth. His name Ku-bera or Ku-vera signifies his deformed body having three legs and eight teeth. He is married to Yakṣī, the daughter of the Dānava Mura. As friend of Śiva he is called Śiva-sakhā. His capital Alakā on the Himālaya mountain is mentioned also in the Ṛig veda.

Lord of Alaka and son of Pulastya and resident of Kailāsa; vanquished by Rāvaṇa; wife Ṛddhi and son Nalakūbera. Man is his vahana.

Kubera (कुबेर) refers to one of the eight guardians of the quarters, according to the Śivapurāṇa 2.2.22.

Navanidhi (नवनिधि).—m. (pl.) the nine treasures of Kubera. i. e. महापद्मश्च पद्मश्च शङ्खो मकरकच्छपौ । मुकुन्दकुन्द- नीलाश्च खर्वश्च निधयो नव (mahāpadmaśca padmaśca śaṅkho makarakacchapau | mukundakunda- nīlāśca kharvaśca nidhayo nava) ||

The nine treasures of Kubēra, are [padma, mahapadma, shamkha, makara, kacchapa, mukamda, kumda, nila] and  kharva).

In the Hindu palaces and now in Chettiar houses in Tamil Nadu, the main door has Sankha and Padma, Conch and the Lotus, representing Nine Treasures.

***

Kunti

 Kuntī (कुन्ती).—(PṚTHĀ). Wife of King Pāṇḍu and the mother of the Pāṇḍavas, Kuntī is a noble heroine in the Mahābhārata. Kuntī was the sister of Śrī Kṛṣṇa’s father Vasudeva. Her real name was Pṛthā. Vasudeva and Pṛthā were the children of King Śūrasena of the Yādava dynasty. King Kuntibhoja was the son of Śūrasena’s sister. He had no issues. Śūrasena had promised to give the daughter first born to him as the adopted daughter of Kuntibhoja, and accordingly his first-born daughter Pṛthā was given to Kuntibhoja, and Kuntī was brought up in his palace. From that day onwards Pṛthā came to be known as Kuntī. (Ādi Parva, Chapter 111).

Queen Kunti, had in her youth been granted the power to invoke the Devas by Rishi Durvasa. Each god, when invoked, would place a child in her lap. Urged by Pandu to use her invocations, Kunti gave birth to Yudhisthira by invoking the Lord of Righteousness, Yama. 

She was the first wife of Pāṇḍu. As he was prevented by a curse from having progeny, he allowed his wife to make use of a charm she had acquired from the sage Durvāsas, by means of which she was to have a son by any god she liked to invoke. She invoked Dharma, Vāyu and Indra, and had from them Yudhiṣṭhira, Bhīma and Arjuna respectively. She was also mother of Karna by the deity Sun whom she invoked in her virginhood to test her charm. Being an unmarried girl, she abandoned her first son Karna in a box, and this was discovered by Adhiratha who brought him up.

Other two Pandavas Nakula and Sahadeva were born to Madri (maadri), second wife of Pandu Kunti died in a forest fire.

***

Kuni/ Kooni

Kooni, or Manthara, was a hunchbacked nursemaid and close confidante to Kaikeyi. Manthara was not just a maid, but a loyal caretaker who accompanied Kaikeyi from her home kingdom (Kekeya) to Ayodhya.

 As a child, Rama once hit her on her hunched back with a clay ball when he was practicing archery, fostering a lasting bitterness.

 Upon hearing of Rama’s upcoming coronation, she feared for her own status and manipulated Kaikeyi by claiming that if Rama became king, Kaikeyi would be treated as a slave by Kausalya.

She reminded Kaikeyi of the two boons granted by King Dasharatha, instructing her to demand Bharata’s coronation and Rama’s 14-year exile.

In some versions of the story, particularly Tulasidas’s Ramcharitmanas, she is guided or possessed by Goddess Saraswati to ensure Rama leaves the city to fulfil his destiny of destroying evil, such as Ravana.

Often referred to as “Kooni” in Tamil, which means “hunchback”. This word is related Sanskrit word Kuni which means crippled.

 *****

Kurma Avatar /Kurma Purana

Kūrmāvatāra (कूर्मावतार) refers to the “tortoise incarnation” of Viṣhṇu.

Kūrmāvatāra (कूर्मावतार) is found depicted at the Kallazhagar Temple in Madurai. The god Kūrmāvatāra is represented with the lower part as tortoise’s feet and the upper part in the usual form of the god. The god in this form is found with four arms where the upper hands hold the discus and the conch, and the other two right and left hands are in abhaya and dolā-hasta respectively.

During the Samudra Manthan (churning of the ocean), Vishnu assumed this form to support Mount Mandara on his back, acting as a pivot to prevent it from sinking, allowing gods and demons to obtain the nectar of immortality. Srikurmam temple in Andhra Pradesh is one of the temples representing this avatar.

The Kurma Purana (कूर्म पुराण) is one of the eighteen Mahapurana. It is believed to have been directly narrated by the Lord Vishnu to the sage Narada, and it contains the details about the Kurma Avatar. Narada is believed to have stated the contents of this Puranas to Suta, who narrated this Purana to an assembly of great sages.

The printed editions of this text are divided into two bhāgas (parts),

The Pūrvabhāga has 53 chapters and the Uttarabhāga has 46 chapters.

***

Kumbha mela

Kumbhamela is a major 5,000-year-old Hindu pilgrimage and religious fair, occurring every twelve years at Prayag in Uttar Pradesh, India.

 Prayag is the city where rivers Ganga Yamuna and Saraswati meet. It is the largest religious gathering in the world. The most recent major gathering happened from January 13 to February 26, 2025. 400 million devotees took holy bath in the rivers. The place is called Triveni Sangam because three rivers meet there. Nowadays Saraswati River is not visible. It dried long ago but Hindus believe it runs underground.

Held every 12 years (with a Mahakumbh occurring every 144 years), it is the world’s largest religious gathering, featuring extensive security, tent cities, and UNESCO-recognized spiritual traditions.

Location: Triveni Sangam, Prayagraj, Uttar Pradesh (confluence of Ganga, Yamuna, and Saraswati).

Significance: It is the most sacred of Kumbh Melas, commemorating where drops of the immortal nectar (Amrit) fell during the Samudra Manthan.

The festival spans 45 days, featuring intense spiritual activities including Shahi Snan (royal baths) by Naga Sadhus. They are naked saints living in the Himalayas.: The event attracts millions of holy men (sadhus) who travel from across India, including naked Naga sadhus who lead the dawn bathing rituals.

Apart from this every four years Mini Kumbh mela is held in Haridwar, Ujjain, Nashik in rotation.

·         Maha Kumbh: Every 144 years (Prayagraj).

·         Purna Kumbh: Every 12 years (Haridwar, Prayagraj, Nashik, Ujjain).

·         Ardh Kumbh: Every 6 years (Haridwar, Prayagraj).

·         Magh Mela (Mini Kumbh): Every year.

***

Kumbakonam

This town is known for its temples, Maths/monasteries, Archaeological monuments (Darasuram), betel leaves and coffee. Nine Planets temples are near by this place.

There are more than 100 Hindu temples within the municipal limits of Kumbakonam. Apart from these, thereare  hundreds of temples around the town thereby giving the town the sobriquets “Temple Town” and “City of temples”.

Adi Kumbeswarar Temple is the oldest Shiva shrine in the town, constructed by the Cholas in the 7th century.

Sarangapani temple is the largest Vishnu temple. The present structure of the temple having a twelve storey high tower was constructed by Nayak kings in the 15th century. It is one of the “Divya Desams”, the 108 temples of Vishnu revered by the 12 Alvar saint-poets.

Around this town are Navagraha Nine Planets shrines dedicated to Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn and Rahu, Ketu.

Like Kumbha mela in the north, Mahamakam (mahaa makam) festival is heled once in 12 years which attracts lakhs of people to the tank called Mahamakam tank in front of the main Shiva temple.

***

Kuraip /Koorai pudavai /saree

Koorai silk saree, also referred to as Koorai  Pudavai,  is a traditional nine-yard saree originating from Koranad in Mayiladuthurai;   Traditionally worn by brides during Hindu wedding ceremonies, the saree is recognized for its unique weaving patterns and cultural significance. It is produced by the Sāliyan weaving community using a blend of silk and cotton in red colour. The saree was originally woven from cotton. By the early 20th century, it transitioned to silk and became a prominent bridal garment.  Original Red colour is also changed now. Red means Mangalam/ auspicious like Red Kunkum of Hindu women.

–subham—

Tags- HINDU DICTIONARY, ENGLISH AND TAMIL 50, இந்து மத கலைச்சொல் அகராதி-50, Kurukshetra, Kumbhamela, Kumbakonam, Kuraip pudavai,  Koorai saree, Kurma