Hinduism through 500 Pictures in Tamil and English 46; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-46 (Post.15,542)

Written by London Swaminathan

Post No. 15,542

Date uploaded in London – 27 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

English version posted already.

குகை வாழ் மனிதர் முதல் புகை வாழ்அந்தணர் முடிய ஆஸ்திகர் முதல் நாஸ்திகர் வரை  வணங்கும் ஒரே தெய்வம் சூரியனே!!!

பூமியில் விளையும் எல்லா தாவர இனங்களும் ஒளிச்சேர்க்கையினால் உயிர் வாழ்ந்து உலகத்தில் உள்ள மக்களுக்கு ஆக்ஸிஜனையும் மழையையும் வருவிக்கின்றன.

சூரிய மண்டலத்தின் சிவன் உறைந்திருப்பதாக சிவ ஆகமங்கள்

கூறுகின்றன. அஷ்ட மூர்த்தங்களில் ஒன்றாகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார். “சிவ சூரியன்” என்றும் போற்றப்படுகிறார்.

ராவண ஹதத்திற்கு முக்கியமாக பாது காப்பு கவசமாக இருந்தது

அகஸ்திய முனிவர் உபதேசம் செய்த ஆதித்ய ஹ்ருதயமே !!!

ஸ்ரீ மகா விஷ்ணு போல சூரியனுக்கும் சங்கு சக்கரம் உண்டு. ஆகவே “சூரிய நாராயணன்” என போற்றப் படுகிறார் என வைணவ ஆகமங்கள் கூறுகின்றன.

சூரிய பகவான் தினமும் ஒருசக்கர வாகனத்தில் 7குதிரைகள் பூட்டிய வாகனத்தில் பவனி வருகிறார். அந்த குதிரைகளின் பெயர்களாவன – காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக்,ஜகதி,திரஷ்டுப்,அனுஷ்டுப், பங்கதி எனப்படும்.

அதை ஓட்டுபவர் பெயர் அருணன்.அவருக்கு கால்கள் கிடையாது.

இதையே விஞ்ஞான வல்லுனர்கள் நிற மாலை என்றும் வயலட்,

இண்டிகோ, புளு,கிரீன், எல்லோ,ஆரஞ்சு, ரெட் என 7 நிறங்களாக

இருக்கன்றன, எனநிரூபித்திருக்கிறார்கள். இதை ஏழு நாட்கள்

என்றும் கூறுவர்.

உயிர் கொடுக்கும் சூரியனை தினமும் எல்லோரும் மூன்று முறை வணங்க வேண்டும். இதற்கு“ ஸந்தியா வந்தனம்” எனப்பெயர்..

அனைத்து ஜாதி மக்களுக்கும்இது உண்டு. காலக் கொடுமையினால் ஒரு சிலரைத்தவிர யாரும் இதை செய்வதில்லை.இதில் சூரியனை துதிக்கும் மிக முக்கிய “காயத்ரி” மந்திரமான இது

உலகத்திலுள்ள எல்லா மந்திரங்களில் உயர்ந்தது.காலையில் காயத்ரியாகவும், மதியத்தில் சாவித்ரியாகவும் , மாலையில் சரஸ்வதியாகவும் வணங்கப்படுகிறாள்.

காயத்ரி மந்திரத்தின் தமிழாக்கம் பாரதி புனைந்தது.

செங்கதிர் தேவன் சிறந்த ஓளியினை தேர்கின்றோம்,

அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக”

சூரிய வழிபாடு

சுமேரியா, பாபிலோனியா,அக்கேடியா அஸ்ஸீரியா முதலியநாடுகள்

சூரிய வழிபாட்டையே முக்கியமாக கொண்டிருந்தன.அவர்கள் சூரியனுக்கு வைத்த பெயர் “ஷமாஷ்”. அது போல வட எகிப்தில் “ரா”எனவும்,தெற்கே “அமன்”எனவும் அழைக்கப் பட்டான்

கிரேக்க தேசத்தில் சூரியன், முதலில்,”ஹெலியோஸ்”என்றும் பின்னர்

“அப்பல்லோ” என்றும் அழைத்தனர். இவர்கள் சூரியனுக்கு 105 அடி

உயரமுள்ள ஒரு பிருமாண்டமான சிலையை எழுப்பி வழிபட்டனர்

உலக அதிசயத்தில் ஒன்றான இது காலப் போக்கில் அழிந்துவிட்டது.

சைனாவிலும் ஜப்பானிலும் சூரிய வழிபாடே முக்கியம். சூரியனே எங்களிடமிருந்து நாளை

ஆரம்பிக்கிறான். ஆகவே சூரியனையே எங்கள் கொடியில் வைத்திருக்கிறோம்.ஆனால்

சூரியன் ஒரு பெண் தெய்வம்!!! என்கின்றனர் அவர்கள்.

மத்திய அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மாயா நாகரீகத்தில் சூரியன்தான் எல்லாம்!!!

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் வழிபடுவதற்கு பிரும்மாண்டஉயர கோபுரங்கள் கட்டிசிறப்பாக வழிபட்டனர்.

தை பொங்கல்

சூரியனை வழிபடும் முறைக்கு”சௌரம்”எனப்படும்.

சூரியன் ஒவ்வொரு ராசிக்கும் இடப்பெயற்சி செய்வதையே

மாதப்பிறப்பு எனகிறோம். தை மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி

பயணிக்கிறார் .அந்தக்காலத்தை உத்தராயணம் என்கிறோம்.

ஆடி மாதம் முதல் தெற்கு பயணிக்கும் காலத்திற்கு தட்சிணாயணம்

என்கிறோம்.

நமது நாட்டில் சூரிய பகவான் வழிபாடு மிக சிறப்பு மிக்கது்.மகர ராசியில் சூரியன் நுழையும்

முதல் நாளை மகர சங்கராந்தி என்றும், தை பொங்கல் என்றும்,சூரியனுக்கு நன்றி சொல்லும் நாளாக மிக விமரிசையாக கொண்டாகிறோம்.  ஒவ்வொருமாநிலமும் இதே பொங்கலை வெவ்வேறு பெயரிட்டு சூரியனை வணங்குகிறார்கள்.

மற்ற கடவுள்களைப் போல சூரியன் பூ , பழம் எதையுமே விரும்பவதில்லை. நமஸ்காரம் ஒன்றை மட்டுமே செய்பவர்களுக்கு கண்ணொளியும் அளவற்ற ஆரோக்யத்தையும் தருகிறார்.

சூரியனின் பெயர்கள்

மிக முக்கியமான 12 பெயர்களை மட்டும் கூறுகிறேன்.

மித்ரன்,ரவி,சூரியன், பானு,க்கான்,பூஷ்ணன்,ஹிரண்ய கர்ப்பன்,

மரீசி, ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன்

சூரியனின் பிறப்பு

தட்சன் மகளான அதிதிக்கும், காஸ்யபர் என்ற் முனிவருக்கும் பிறந்தவரே சூரிய பகவான்.

இவர் துவஷ்டா அல்லது விஸ்வ கர்மா என்பவரின் மகளான சஞ்சிகையை மணந்தார்.

***

நவக்ரஹ ஹோமம்  

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.

வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

அத்தி- சுக்கிரன் (Ficus Udumbura) = Venus

நாயுருவி- புதன் (Achyranthe aspera) = Mercury

புரசு /பலாச மர – சந்திரன் (Butea monosperma) = Moon

அரச மர – குரு (Ficus Religiosa)= Jupiter

வன்னி மரம்- சனைஸ்வரன் (Prosopis cineraria) = Saturn

அருகம் புல் – ராகு (Cynodon dactylon) = ascending node

தர்ப்பை – கேது (Desmostachya bipinnata) = descending node

கருங்காலி—செவ்வாய் (Diospyros ebenum) = Mars

எருக்கு- சூரியன் (Calotropis gigantean) = Sun

****

நவக்ரஹ வாகனங்கள் (Nine Planets)

சூரியன்- ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் Sun=Horse Chariot

சந்திரன்- மான்கள் பூட்டிய ரதம், Antelope chariot= Moon

செவ்வாய்—ஆட்டுக் கிடா/ Mars=Ram

புதன்- குதிரை Bhudan/ Mercury= Horse

வியாழன்/பிருஹஸ்பதி—யானை Jupiter= Elephant

சுக்ரன்/வெள்ளி—குதிரை/ முதலை Venus= Horse/ Crocodile

சனி—காகம் Saturn / Sanaischara= Crow

ராகு— சிங்கம் அல்லது பூனை அல்லது புலி Rahu= Lion/ Cat/Tiger

கேது— மீன் Ketu=Fish

***

நவக்ரஹ ரத்தினங்கள்

கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன:

சூரியன் – மாணிக்கம்

சந்திரன் – முத்து

செவ்வாய் – பவளம்

புதன் – மரகதம்

குரு   – புஷ்பராகம்

சுக்ரன் –  வைரம்

சனி – நீலக்கல்

ராகு – கோமேதகம்

கேது – வைடூரியம்

 நவ மணிகளும் கிரஹ தோஷங்களைப் போக்க வல்லவை.

***

சூரியனைப் பற்றி 6 கண்டு பிடிப்புகள் வேதத்தில் உள்ளது

!6000 ஆண்டுகள் பழமையான ரிக் வேதத்தில் சூரியனைப் பற்றிய 6 கண்டுபிடிப்புகள் உள்ளன. அவைகளை அண்மைக் காலத்தில் நடந்த  விண்வெளி ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

1.சூரியனில் கறுப்புப் புள்ளிகள் SUN SPOTS (Already posted in English)

11 ஆண்டுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப்புள்ளிகள் அதிகரிக்கின்றன. இவை பற்றி 100, 200 ஆண்டுகளாகத்தான் விஞானிகளுக்குத் தெரியும். சீனாக்காரர்கள் இதை 2800 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டதாக என்சைக்ளோபீடியாக்கள் என்னும் கலைக்களஞ்சியங்கள் செப்பும். அந்த அரை வேக்காடுகளுக்கு, ரிக் வேதத்தில் SUN SPOTS ‘சன் ஸ்பாட்ஸ்’ எனப்படும் குறிப்புகள் 6000 ஆண்டுக்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பது தெரியாது!

காண்க மந்திரம் – Sun spots in Sun—RV 10-189

சூரியனின் கருப்புப் புள்ளிகள் 10-189-1

“புள்ளிகள் உடைய காளை கிழக்கே வந்துவிட்டான்.அம்மாவுக்கு முன் அமர்ந்து இருக்கிறான்.தந்தை போலுள்ள வானத்தில் முன்னேறுகிறான் . (வானத்தை தந்தையாகவும் பூமியைத் தாயாகவும் வருணிப்பது வேதம் முழுதும் உள்ளது.)

இது பாம்புராணி (ஸர்ப்ப ராக்ஞி)  என்னும் பெண் புலவர் சூரியனை நோக்கிச் சொல்லும் துதி என்று வேதத்தைத் தொகுத்தோர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தலைப்பும் போட்டுவிட்டனர்

உரைகாரர் விளக்கம் புள்ளிக் காளை = சூரியன்; அம்மா= உஷத் காலம் உதயத்துக்கு முன்னர் தோன்றும் ஒளி.  உரைகாரர்களே இங்கே குறிப்பிடப்படுவது சூரியன் (SPOTTED BULL= SUN) என்று தெளிவாக எழுதியுள்ளனர் .

கருப்புப் புள்ளிகள் என்பது காந்த மண்டல கொந்தளிப்பினால் (MAGNETIC FLUX) ஏற்படுகின்றன. அங்கு மற்ற இடத்தை வீட வெப்பம் 2000 டிகிரி குறைவு. அதன் நீள அகலத்துக்குள் பூமியை நுழைத்து விடலாம். நம்மைப் போல சூரியனும் தனக்குத் தானே தட்டாமாலை சுற்றுவதால் அவை நகர்வது போலத் தோன்றும். இவை தோன்றும் பொழுது பூமியில் தகவல் தொடர்பு பாதிக்கும்; தோல் புற்று நோய் அதிகரிக்கும் .

XXX

2.சூரியனும் விட்டமின் ‘டி ‘ யும் SUN AND VITAMIN D

இப்போது மேலை நாடுகளில் விட்டமின்/ வைட்டமின் டி VITAMIN D  பற்றி பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கிடைப்பதை விட மேலை நாடுகளில் குறைவாகவே சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.  இதை அறிந்த இந்து விஞ்ஞானிகள் ஜோதிடத்திலும் சூரியனே ‘ஆரோக்கியகாரகன்’ என்று சொல்லி அவனை வழிபட விதி இயற்றினார்கள். இதை அதிகாலை சூரிய  நமஸ்காரம் மூலமும் பிராமணர்களின் த்ரி கால / மூன்று வேளை/  சந்தியாவந்தனம் மூலமும் கற்பித்தனர்.

XXX

3.சூரிய ஒளி சிகிச்சை PHOTO THERAPY AV 2-67; RV1-191-8/9

எங்கள் லண்டனில் குழந்தைகள் கொஞ்சம்  மஞ்சள் நிறைத்த தோலுடன் பிறந்தாலும் அதை வீட்டுக்கு அனுப்பாமல் ஆஸ்பத்திரிலேயே விளக்கின் கீழ் வைத்து சிகிச்சை தருவார்கள். தோல் நோய் உடைய பெரியவர்களையும் கூட விளக்குத் தொட்டியில் நிற்கவைத்து சிகிச்சை தருவார்கள். சூரிய ஒளியின் இந்த அபார மருத்துவ குணங்களை ஏராளமான ரிக் வேத மந்திரங்கள் பாடுகின்றன.

இது ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் இரண்டு மஞ்சள்  காமாலை மந்திரங்களில் வரும் செய்தி. AV 2-67; RV1-191-8/9

சூரியனை 7 குதிரைகள்/ VIBGYOR ஏந்து கின்றன;4-13 -3

சூரிய ஒளியை முப்பட்டக (PRISM) கண்ணாடி வழியே செலுத்தினால் வான வில்லின் 7 கலர்களையும் (VIBGYOR)  காணலாம். இதையும் கூட புலவர்கள் பாடத் தவறவில்லை .

VIBGYOR= VIOLET, INDIGO, BLUE, GREEN, YELLOW, ORANGE, RED,

சூரியனைக் கும்பிடுபவனுக்கு ஒரு குறையும் வராது என்கிறது அகஸ்தியரின் ‘ஆதித்ய ஹ்ருதய’ தோத்திரம் அவர் ரிக் வேத கால ரிஷி. சூரியனைப்பற்றிய ரிக் வேத துதிகளில் இந்தக் கருத்தைக் காணலாம். AV 2-67; RV1-191-8/9

XXX

4. சூரியனே கண்ணுக்கு ஒளி தருபவன் SUN AND EYE;  RV 10-90

இறைவனின் கண்களில் இருந்து சூரியனும் மனத்திலிருந்து சந்திரனும் உதித்ததாக ரிக் வேத்தத்தின் புகழ்பெற்ற புருஷ சூக்த மந்திரம் (10-90) சொல்லும். சூரியனை உலகத்தின் கண் என்று வருணிக்கும் துதிகளும் உள .Sun’s link with Eye- RV.10-90

சந்த்ர மா மனஸோ ஜாதஹ ; சக்ஷோர் ஸூர்யோ அஜாயத – RV. 10-90

சூரியனே எங்கள் கண்களுக்குக் காட்சியை அளிக்கவும் 10-158. இதைப்  பாடிய புலவர் பெயர் கண். அவர் சூரியனின் புதல்வர்

XXX

5.சூரியன் ஒரு நக்ஷத்திரம் SUN IS A STAR

சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்றும் அது மஞ்சள் நிற YELLOW STAR வகையைச் சேர்ந்தது என்றும் தற்காலத்தில் படிக்கிறோம். இதைவிட கடுமையான வெப்பம் உடையது நீல, சிவப்பு நிற நக்ஷத்திரங்கள் என்பதை தற்கால வானியல் புஸ்தகங்கள் செப்பும். பல்லாயிரம் கோடி நக்ஷத்திரங்கள் உண்டு என்பதை மாணிக்கவாசகர், பாரதி முதிலியோர் பாடியுள்ளனர். இந்து மதத்தில் உள்ள சின்னக் குழந்தை கூட விநாயகரைப் புகழும் ‘வக்ரதுண்ட மஹா காய’ துதியில் பிள்ளையாரை

‘கோடி சூர்ய பிரகாசம்’ உடையவன் என்று புகழும். . பகவத் கீதையில் விசுவ ரூப தரிசன ஸ்லோகத்தை, முதல் முதலில் அணு குண்டு வெடித்ததைக் கண்ட அமெரிக்க விஞ்ஞானி, அப்படியே  நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளேன். அதில் அர்ஜுனன் ‘திவி சூர்ய சஹஸ்ரஸ்ய’ என்று கண்ணனை வருணிக்கிறான் ; கிருஷ்ணா! ஆயிரம் சூரியன் ஒரு சேர உதித்தாற் போல உன்னைக் காண்கிறேன் என்கிறான். ஆக சூரியன் ஒரு நட்சத்திரம் என்பதும் அது போல என்பதும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக் குழந்தைகளுக்கும் தெரியும். 100 ஆண்டுக்கு முன்னர் ரிக்வேதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த கிரிப்பித் முதலியோர் அப்படியே சொல்லியும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளனர்.

காண்க ரிக் வேதம்  Sun is a Star — RV 10- 156

“அக்கினியே , ஜன ங்களுக்கு  ஒளியை அளித்துக் கொண்டு வானிலே அழியாத நட்சத்திரமான சூரியனை உயர்த்தினாய் “– 1-156

இன்னும் ஏராளமான கண்டுபிடிப்புகள் உள்ளன

பிக் பாங்க் BIG BANG  என்னும் மாபெரும் பிரபஞ்ச வெடிப்பு பற்றியும், கருந்துளைகள் BLACK HOLES பற்றியும் எழுதியுள்ளேன்

XXX

6.சூரியகிரஹணம்

அத்ரி மகரிஷியுடைய  அற்புதங்களை விவரிக்கும் எல்லா மந்திரங்களும் அவர் சூரிய கிரஹணத்தைக் கணக்கிட்டு, சீடர்கள் மத்தியில் அற்புதம் செய்த நிகழ்வும் ரிக்வேதத்தில் உள்ளது. (இது பற்றி எனது பழைய கட்டுரையில் விவரம் காண்க ). இதே உத்தியை ஜயத்ரதனை வதம் செய்ய மஹாபாரதத்தில் கிருஷ்ணன் பயன்படுத்தியதையும் எழுதியுள்ளேன்.

–subham—

Tags- நவக்கிரகங்கள் , ரத்தினங்கள், வாகனங்கள், ரத்தினங்கள், தானியங்கள், சமித்துக்கள், சூரியன், Hinduism through 500 Pictures in Tamil and English 46; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்46, நவக்ரஹ ஹோமம்

Hinduism through 500 Pictures in Tamil and English 45; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-45 (Post.15,541)

Written by London Swaminathan

Post No. 15,541

Date uploaded in London – 27 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil version posted separately

Navagraha shrines in Tamil Nadu

Suryanar Kovil (Surya- Sun): Dedicated to Surya, located in Suryanar Kovil.

Thingalur (Chandra- Moon): Kailasanathar Temple, dedicated to Chandran.

Vaitheeswaran Koil (Mangal or Angaraka-Mars): Dedicated to Angaragan.

Thiruvenkadu (Budha- Mercury): Swetharanyeswarar Temple, dedicated to Budha.

Alangudi (Guru or Brhaspati-Jupiter): Apatsahayesvarar Temple, dedicated to Guru.

Kanjanur (Sukra- Venus): Agniswarar Temple, dedicated to Sukran.

Thirunallar (Sani or Sanaischara-Saturn): Saniswaran Temple, dedicated to Shani.

Thirunageswaram (Ascending node-Rahu): Naganathar Temple, dedicated to Rahu.

Keezhperumpallam (Descending node-Ketu): Naganathaswamy Temple, dedicated to Ketu.

***

Vaishnava Tradition

Surya/Sun- Sri Vaikundam

Chndra/ Moon- Varagunamangai (Naththam)

Mangal/Mars- Thirukkolur

Budha/Mercury- Thirup Puliyankudi

Guru/ Jupiter- Alwar Tirunagari

Sukra/Venus- Thentirupperai

Sani/ Saturn- Perungkulam

Rahu- Tiruth tholaivili mangalam

Ketu – Tiruth tholaivili mangalam

***

Navagraha Statues in the British Museum

Vedic poets give various names to the sun according to the task it accomplished; and each name reproduced the salient feature of the task.

The sun when rising was Mitra= friend.

As it advances in its journey, giving new lie it i  Savitar= bringing forth or leading the day; the vivifying sun;

When it collects the clouds and sends rain on the earth it is Indra; indu= drops.

The sun is Vishnu when it makes “three strides” in the vault of heaven, its position in the morning,  at noon, and in the evening;

It is Varuna – the all-embracing,  when it envelops in clouds as in a shroud, and the sky darkens.

Some phenomena descended on man from above, such as thunder bolts, winds, storms; the storms that came unexpectedly dealing destruction as they passed received the name of Maruts—from the root mar- and with the meaning of those who strike or beat to death; (My comments- Murder is derived from this Sanskrit root)

The thunder was called Rudra= he who roars.

The wind was Vayu= he who blows.

All these names indicated that which could be seen and that which could be heard; the invisible things remained unnamed.

***

Navagrahas in Ashmoleoon Museum, Oxford

Surya is Brahma, Vishnu and Siva- Three in One!

SUN AND SCIENCE IN THE RIG VEDA :6 DISCOVERIES CONFIRMED (Post No10,291)

Latest research and study of the Rig Veda (RV) , the oldest book in the world, show that the Vedic Hindus had advanced knowledge of Sun. Though the 30 + foreigners who translated Four Vedas made passing remarks about Hindu Knowledge on Sun, they added words like ‘possibly’, ‘probably’ and sowed seeds of doubts in the readers’ mind. Now we can confirm the Hindu knowledge in the following areas

Following 6 points are confirmed now:-

1.The Rishis/seers told us Sun God has a chariot with one wheel that was drawn by Seven Horses. Now we all know that they meant the Rain Bow colours VIBGYOR (violet,indigo,blue, geen, yellow, orange and red. Sun light passed through a prism shows it.

2. Throughout the Ten Mandalas/books of the RV, they report a miracle of Atri Maharishi. In fact he was praised for calculating a total eclipse and its duration. A total eclipse can last for a maximum of seven minutes, which is very rare. One of the solar eclipses was well calculated by Atri and his disciples wondered when he finished reciting a Rig Vedic mantra the sun came out. He was the only one knew the occurrence of eclipse on that day. Well calculated the duration of the Solar Eclipse he recited a mantra for few minutes and the Sun came out of shadow. This is reported as a ‘miracle’ in the Veda.

Krishna also used this trick to destroy Jayadratha who did not know that it was a Solar eclipse day. He thought that the sun was set, and the bugle was sounded marking the end of the battle for that day. In those days they fought Dharma Yuddha. So, after sun set they shook hands and walked home shoulder to shoulder. But Krishna knowing that it was only an eclipse and so urged Arjuna to shoot down Jayadratha, when the eclipsed sun was released. A solar eclipse can happen only on a new moon/Amavasya day. During Mahabharata day it was not a continuous 18 day war. Alternate days were the fighting days.

3.Third wonder is they knew sun is a star. Even people like Griffith who translated Rig Veda reported verbatim the mantra  where it was said ‘SUN IS A STAR’. In those days, I mean 120 years ago, they did not even know that there were millions of Suns. But Bhagavad Gita and other hymns talk about Koti Surya (Million Suns). The Viswa Roopa Darshan sloka in the Bhagavad Gita says ‘Divi Surya Sahsrasya’ (1000 suns brightness)

4. All Sanskrit proverbs, slokas and astrological hymns say that Surya/Sun was the Deity for Arogya/ health.

There are umpteen remarks to show this in the oldest book, Rig Veda. They knew human beings need Vitamin D from Sun and so they prescribed lot of rituals under the Sun. Though they did not mention ‘Vitamin D’ they knew sun light gives Vitamin D.

5. Sun Spots were not in the 150 year old science books. But RV talks about Sun Spots several thousand years ago. Foreign translators used ‘Spots on Sun Bird’ or a Bull. They said that the bird and bull mentioned here actually Sun. The hymns said Bird/Bull with Spots. In reality they knew the Sun Spots. Now we know that when the sun spots are big in number, communication on earth is affected because of solar flare ups.

6.Jaundice Treatment :– Treatment for jaundice is both in the Rig Veda and Atharva Veda. The Rishis/ seers talk about treatment with Red Light. Actually jaundice in new born babies is treated with red light. It is called photo therapy. Read below the science behind it:

What is Jaundice? 

Jaundice is a common, temporary. and usually harmless condition in newborn infants. It affects both full-term and premature babies, usually appearing during the first week of the baby’s life.

Jaundice occurs when there is a build-up of a naturally occurring substance in the blood called bilirubin . Bilirubin is an orange/red pigment in the blood. Bilirubin is produced by the normal breakdown of red blood cells. It is normal for everyone to have low levels of bilirubin in their blood. As bilirubin begins to build up, it deposits on the fatty tissue under the skin causing the baby’s skin and whites of the baby’s eyes to appear yellow.

What is Phototherapy?

Some “normal” jaundice will disappear within a week or two without treatment. Other babies will require treatment because of the severity of the jaundice, the cause of the jaundice, or how old the baby is when jaundice appears.

Phototherapy (light treatment) is the process of using light to eliminate bilirubin in the blood. Your baby’s skin and blood absorb these light waves. These light waves are absorbed by your baby’s skin and blood and change bilirubin into products, which can pass through their system.

When there were no electric lights 5000 years ago Hindus used fire and sun light.

What is the BiliBlanket?

Your doctor may prescribe the biliblanket as an alternative and/or additional treatment for you child’s jaundice. This system uses fibre optics and represents advanced technology in phototherapy treatment given in the hospital or at home.

The biliblanket provides the highest level of therapeutic light available to treat your baby. This form of light is also found in sunlight. The strength of light form the biliblanket is about the same, as you would get in the shade on a sunny day, yet is safer because the biliblanket filters out potentially harmful ultraviolet and infrared energy

PHOTO THERAPY FOR BABIES AND ADULTS

 Here are the references:-

Sun spots in Sun—RV 10-189

Sun is a Star — RV 10- 156

Sun’s link wit Eye- 10-90

***

NAVA GRAHA HOMAM (Post No.12,190)

Hindus were more scientific than any other ancient community. They named the heavenly bodies Graha ( now wrongly translated in English as Planets). The real meaning  of Graha is ‘heavenly bodies with Gravity’. Issac Newton did not discover gravity. Hindus discovered it and named them ‘Grahas’ thousands of years ago. We use that word today in Grahanam (eclipse), Pani Grahanam/holding hand= i.e. wedding etc. Real meaning is that which attracts, grips, holds, grabs.

English words Grab, Grip, Gravity are all derived from Sanskrit Graha. Hindus  knew Guru/Jupiter is the largest planet and named it Guru= heavy.

xxxx

Now to the Nava Braha Homam

Next to Ganapathi Homam, Nava Graha Homam (havan) is the important one. All new ventures begin with Ganapathi Homam and Nava Graha Homam.

xxxx

What is the benefit?

Some people may have certain Grahas in weaker positions in their birth charts knowns as Jaataka or horoscope and they may cause evil effects; to avoid such evil influence of grahas we do this Havan . Those grahas in favourable places in the horoscope will be boosted and encouraged to give the performer more benefits. When one does it for the family, the whole family gets the benefits.

xxxx

What is it?

In this fire ceremony, Nine Planets (actually heavenly bodies) are worshiped. They use Nine different diagrams, nine colour cloths, nine different grains, nine different wooden sticks, Nine Prasads etc. Priests recite hymns praising Nine Grahas: Sun, Moon, Mars, Mercury , Venus, Jupiter, Saturn Rahu, and Ketu.

It will take more time than Ganapathi Homam. Both can be finished within three hours. Advance preparations will reduce this time.

xxxx

How do they do it?

The priests invoke Varuna/God of Water and Nine Grahas in the metal pot filled with water in which spices like cardamom and cloves are put. All the deities who control the nava/nine grahas are also invoked. Coconut with Mango leaves are placed on the mouth of the pot. It is placed on Banana leaves spread with rice. On top of banana leaves two measures of rice is spread then the Purna Kumbha (metal pot usually made up of silver or brass ) is placed.  After finishing the mantra the holy water is sprinkled on everyone present there.

xxx

Following are required for the Navagraha Homam

I am giving nine grahas and their favourite things below; the priest will put the grains and the sticks along with ghee.

So ghee (clarified butter is required along with the things mentioned below. Certain Hindu shops sell them as a pack; if one says ‘it is for Navagraha homa’, they will give the pack; Havan Samagri is sold on line too)

Xxxx

Priest offer the wooden sticks reciting the mantras eight times.

In the following, please focus on FOUR things only: Grains, Colour cloths, particular wooden sticks/twigs and Prasad. Rest is only for information.

1.Sun

Diagram – circle

Vahana – horse chariot

Zodiac sign ruled by sun- simha/ leo

(Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – Ruby/ Maanikkam

Grain – wheat

Samittu / wood stick – from arka (Calotropis gigantea)

Naivedya / prasad – sweet Pongal/rice

Cloth or blouse piece required – red cloth

Devata in charge of sun – Lord Shiva

Xxxxx

2.Moon

Diagram –square

Vahana – white horse

Zodiac sign ruled by moon – cancer/ kataka rasi

(Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – pearl/ muthu

Grain – paddy

Samittu / wood stick – purasu(Palasa)Butea monosperma

Naivedya / prasad – paayasa/ sweet liquid with little ghee

Cloth or blouse piece required – white

Devata in charge of sun – Goddess Gauri

Xxxx

3.Mars / Angaaraka

Diagram –triangle

Vahana – red goat

Zodiac sign ruled by moon – Aries and Scorpio

Mesha/Vrischika

(Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – coral

Grain – toor dhal

Samittu / wood stick – rose wood/ karunkali in Tamil/ Simsapa

Naivedya / prasad – havis/ cooked rice

Cloth or blouse piece required – red

Devata in charge of sun – God Subrahmanya

Xxxx

4.Mercury -Budha

Diagram –arrow

Vahana – lion

Zodiac sign ruled by moon – Gemini/ Virgo

Mithuna / kanya

(Please not Hindu zodiac signs are different from western)

Gem stone – emerald / maragatha

Grain – pulses

Samittu / wood stick – naayuruvi (Achyranthes aspera) Mayura in Sanskrit

Naivedya / prasad – milk rice

Cloth or blouse piece required –yellow

Devata in charge of sun – God Vishnu

Xxx

5.Guru /Jupiter /Brihaspati

Diagram –rectangle

Vahana – yellow horse

Zodiac sign ruled by moon – Sagittarius /Pisces

Dhanus  / Meena

Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – Topaz/ pushparaga

Grain – channadhal whole

Samittu / wood stick – peepal/ pipal sticks

Naivedya / prasad – curd rice/ yoghurt rice

Cloth or blouse piece required – golden colour

Devata in charge of sun – God  Brahma

Xxxxx

6.Sukran / Venus

Diagram –five pointed star

ahana – white horse

Zodiac sign ruled by moon – Taurus /Libra; Rishabha, Tulaa

(Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – diamond

Grain – white country bean seeds

Samittu / wood stick – udumbaa/ aththi / ficus udumberata

Naivedya / prasad – rice mixed with ghee

Cloth or blouse piece required – white

Devata in charge of sun – God  Indra

Xxxx

7.Saturn / sani/ Sanai Charan

Diagram –bow and arrow

Vahana – crow

Zodiac sign ruled by moon – makara / kumbham

Capricorn / Aquarius

(Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – Saphire / neelam

Grain – sesame seeds

Samittu / wood stick – vanni (Shami tree), Prosopis Cineraria,

Naivedya / prasad – rice mixed with sesame powder

Cloth or blouse piece required – blue

Devata in charge of sun – God  Yama

Xxxx

8. Rahu / shadows/ Chaayaa graha

Diagram –winnowing pan

Vahana – goat

Zodiac sign ruled by moon – Meenam / Pisces

(Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – Gomedaka/hessonite garnet

Grain – black gram whole/ urad dhal

Samittu / wood stick – Arukam pul/ dhurva grass

Naivedya / prasad – rice mixed with urad dhal

Cloth or blouse piece required –gray/ smoky

Devata in charge of sun – God  Mrtyu

Xxxx

Ketu  / shadows/ Chaayaa graha

Diagram –flag

Vahana – chitra kapotha/ pigeon

Zodiac sign ruled by moon – mesham / aries

(Please note Hindu zodiac signs are different from western)

Gem stone – vaidurya / cat’s eye gem

Grain – horse gram

Samittu / wood stick – dharba grass

Naivedya / prasad – chitrannam/ colour rices

Cloth or blouse piece required –multi colour

Devata in charge of sun – God  Chitra gupta

xxxxx



Above Charts with tabular columns are used from this very informative book by Padma Raghavan and Savita Narayanan; It is worth buying.

Sun

The worship of the sun in India is as old as the Vedas. Magas were sun worshippers in ancient India and ancient Iran/Persia. Planet names and star names are very common in Hindu families. All south Indian and north Indian kings had sun’s name in their titles. Eg. Aditya, Surya, Vikramaditya, Bhaskara etc.

Inscriptions also mentioned all the planets and stars. When Adi Sankara divided the Hindu worshippers in six main groups, he made one group for sun worshippers. He called it Sauram. Words like solar, lunar are derived from Sanskrit.

In Tamil Nadu, there are special shrines or temples for the worship of nine heavenly bodies. Suriyanar koil in Thanjavur area is dedicated to sun.

The image of the sun god , according to the agamas, is always to be placed in the centre of Navagraha shrine, looking eastward. He  must be decorated with red flowers and red garments; his chariot/car must have one wheel, drawn by seven horses. His driver is Aruna who is shown without legs.

Scriptures describe him as the son of Kasyapa, lord of Kalinga country and he wears armour/Kkavacha and his garments are in northern style.

According to the Matsya purana he is represented seated or standing on a lotus flower, holding lotus flowers in his hands. He wears makara kundela/ crocodile or shark earrings

He assumes the forms of Brahma in the morning, Maheswara/ SIva in the midday and Vishnu in the evening. Though he holds conch and the discuss like Vishnu sculptures show his different aspects. For example, Surya sculpture in Chidambaram temple his driver Aruna has legs.

His famous temples are in Konark , Marthanda and Madhera.

While the famous Konark Sun Temple is in the East, several magnificent sun temples are located in Northern India and neighbouring regions. These range from 8th-century ruins to active modern replicas.

Twelve, sometimes thirty two, different forms of the sun god  are described in the scriptures. His sons are Yama, Revanta and the two manus. His four wives are rajni, svarna, chaya, and Suvarchasa . His two attendants are Danda Pingala and Ati Pingala.

Varahamihira has described the appearance of sun. the Avyanga which is which is stated to encircle the sun around his waist is identified with the Aivyonghen of the avesta language and is taken to signify the kusti worn by the parsees of the present day.

It may be noted that a mystic diagram called the surya yantra is intimately connected with his worship as in the case of the sakti goddesses. It is stated to be a circle bounded one after another , by a triangle, circle , a square and two circles of eight and sixteen radii respectively

Temple Name LocationPeriodKey Feature
MartandAnantnag, J&K8th CenturyUnique Greco-Roman & Kashmiri fusion
KatarmalAlmora, Uttarakhand9th CenturyHigh-altitude cluster of 45 shrines
ModheraMehsana, Gujarat11th CenturyEquinox alignment and Surya Kund
Multan (Ruins)Punjab, PakistanAncientOnce a major focal point for sun worship
GwaliorMorar, Madhya Pradesh 1988 Modern replica of Konark 

TO BE CONTINUED

Tags- Hinduism through 500 Pictures in Tamil and English 45; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-45, Navagrahas, Surya, Nine Planets, Sun

தாருகாவன சம்பவம்: அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்-Part 57 (Post.15,540)

Written by London Swaminathan

Post No. 15,540

Date uploaded in London – 27 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 57

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 57

***

இது சூரிய கிரகணம் சுதர்சன சக்கரம் இல்லை

திகிரி கொண்டு இருளாக்கியே இரு தமையர் தம்பியர் மூத்த

தாதையர் திலக மைந்தரை ஏற்ற சூரரை வெகுவான செனம்

அடங்கலும் மாற்றியே … சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச்

செய்து*, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும்

மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும்,

துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த

பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும்,

நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து,

உடல் தகர அங்கு அவர் கூட்டையே நரி திருகி உண்டிட

ஆர்த்த கூளிகள் அடர் பூமி அகடு துஞ்சிட மூட்டு பாரத

முடிய … அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள்

திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில்

நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய,

அன்பர்கள் ஏத்தவே அரி அருளும் மைந்தர்கள் வாழ்த்து

மாயவன் மருகோனே … அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன் ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே,

அமரர் அந்தணர் போற்றவே கிரி கடல் அதிர்ந்திட நோக்கு

மா மயில் அழகோடும் பழுவூர்க்குள் மேவிய பெருமாளே. …

தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச் செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில்**எழுந்தருளி இருக்கும் பெருமாளே.

பாரதப் போரில் 13-ம் நாள் ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய பிள்ளை அபிமன்யுவைக் கொன்று விட்டான். உடனே அர்ச்சுனன் நாளை சூரியன் அஸ்தமிப்பதற்குள் ஜயத்ரதனைக் கொல்வேன் இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான். சூரியன் அஸ்தமிக்கு முன் கண்ணன் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்தார். சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜயத்ரதன் வெளியே வர, அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தை விட்டு அவனைக் கொன்றான்.

** திருப்பழுவூர் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.

கதைகளில் இதை சுதர்சன சக்கரம் என்று சொன்னாலும் இது உண்மையில் அன்று மாலையில் நடந் தசூரிய கிரகண ம் ஆகும். பாராதப்போர் ஒருநாள் விட்டு ஒரு நாள் நடந்தது. மேலும் சில புனித நாட்களில் போர் நடக்கவில்லை என்பது என்னுடைய கருத்து

****

தாருகாவன சம்பவம்

சாடும் உவணப் பதாகை நீடு முகில் ஒத்த மேனி தாது உறை

புயத்து மாயன் மருகோனே … தாக்கிய, கருடக் கொடியைக்

கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர்

மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே,

வாரணம் உரித்து மாதர் மேகலை வளைக்கை நாண(ம்) மா

பலி முதல் கொள் நாதன் முருகோனே … (கஜமுகாசுரன் என்ற)

யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா

வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட*

சிவபெருமானின் மகன் முருகனே, 

வார் உறு தனத்தினார்கள் சேரும் மதிள் உப்பரீகை வாகு

உள குறட்டி மேவு(ம்) பெருமாளே. … கச்சு அணிந்த மார்பகங்களை

உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும் கொண்ட அழகு வாய்ந்த குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாதவர்களாகப் பல வேள்விகளைப் புரிந்து வந்தனர். இவர்கள் செருக்கை அடக்க, திருமால் மோகினியாகவும், சிவபெருமான் பிச்சை எடுத்தும் அவ்வனத்துக்குச் செல்ல, முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தனர். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு ரிஷி பத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர்

– சிவ புராணம்.

** குறட்டி புதுக்கோட்டைக்கு கிழக்கே 5 மைலில் உள்ளது.

–subham—

Tags-திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள், Part 57 தாருகாவன சம்பவம்

இராமன் ஹனுமன் சந்திப்பு:  துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்: ஓர் ஆய்வு  – 8 (Post.15,539)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,539

Date uploaded in London –  27 March  2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்: ஓர் ஆய்வு  –  8

(ஆர், சேஷாத்ரிநாதன்)

சர்கம் 2

இராமன் ஹனுமன் சந்திப்பு 

இராகவனும் இலக்ஷ்மணனும் கிஷ்கிந்தாவில் உள்ள ரிஷ்யமுக மலையை நோக்கி முன்னேறிச் செல்கிறனர். 

आगें चले बहुरि रघुराया। रिष्यमूक पर्बत निअराया॥

तहँ रह सचिव सहित सुग्रीवा। आवत देखि अतुल बल सींवा॥1

अति सभीत कह सुनु हनुमाना। पुरुष जुगल बल रूप निधाना॥

धरि बटु रूप देखु तैं जाई। कहेसु जानि जियँ सयन बुझाई॥2

இப்போது அந்தப் பகுதி வாலிக்குப் பயந்து  சுக்ரீவன் தனது அமைச்சர்களுடன் மறைந்து வாழும் இடம். இங்கு துளசி தாசர் सचिव सहित என்று கூறுகிறார்.  பொதுவாக ஒரு அரசன் என்பவன் ஏழு அங்கங்களை உடையவன்,  அரசன், அமைச்சர், நண்பர், செல்வம், தேசம், கோட்டை மற்றும் சேனை.  இதைப் பற்றி துளசி தாசர் அயோத்யா காண்டத்தில் தெளிவாகக் கூறி உள்ளார்

 सचिव सत्य श्रद्धा प्रिय नारी। माधव सरिस मीतु हितकारी॥

चारि पदारथ भरा भँडारू। पुन्य प्रदेस देस अति चारू॥

छेत्रु अगम गढ़ु गाढ़ सुहावा। सपनेहुँ नहिं प्रतिपच्छिन्ह पावा॥

सेन सकल तीरथ बर बीरा। कलुष अनीक दलन रनधीरा॥

சுக்ரீவனிடம் வெறும் இரண்டு அங்கங்கள் மட்டுமே மீதி இருந்தது. வாலி அவனை கிஷ்கிந்தையை விட்டுத் துரத்தி விட்டான், ஆனால் இன்னும் அவன் அரசனே. அவனிடம்  நான்கு மந்திரிகள் இருந்தனர். ஆனால் அவர்களில் அவன் ஹனுமனைத்தான் மிகவும் நம்பினான். காரணம் ஹனுமன் தான் எல்லா வேலைகளையும் திறம்பட முடித்துக் கொடுப்பதில் வல்லவன் என்று அனுபவத்தில் சுக்ரீவன் அறிந்திருந்தான். ஹனுமன் ஒரு விதிவிலக்கான புத்திசாலி. எந்தவித அறிவுறுத்தல்களும் இல்லாமல் பிரச்சனைகளை அந்த இடத்திலேயே சமாளித்து  தீர்க்கவும் செய்வார். ஹனுமன் நம்பகமாவனவர்; நேர்மையானவர்; உண்மையுள்ளவர்; எதற்கும் அஞ்சாதவர்; அச்சமற்றவர்; விவேகமுள்ளவர்; எந்தவித பாதகமான சூழ்நிலையும் எதிர்கொள்ளும் துணிச்சலானவர்; இந்த விஷயத்தில் ஹனுமனுடன் யாரையும் ஒப்பிடமுடியாது என்பதை சுக்ரீவன் அறிந்திருந்தான். 

ஹனுமனின் பெருமை

  ஹனுமன் பிரச்னைகளை எப்படி நேர்மறையாக அணுகிறார்? பயத்தில் நடுங்கும் சுக்ரீவனுக்கு எவ்வாறு ஆறுதல் வழங்குகிறார் என்பதை வால்மீகியின்  கிஷ்கிந்தா காண்டத்தின் இரண்டாவது சர்கத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் மூலம் வால்மீகி தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

 ततस्तं भयसंविग्नं वालिकिल्बिषशङ्कितम् ।

उवाच हनुमान्वाक्यं सुग्रीवं वाक्यकोविदः ॥ १३ ॥

सम्भ्रमस्त्यज्यतामेषः सर्वैर्वालिकृते महान् ।

मलयोऽयं गिरिवरो भयं नेहास्ति वालिनः ॥ १४ ॥

यस्मादुद्विग्नचेतास्त्वं प्रद्रुतो हरिपुङ्गव ।

तं क्रूरदर्शनं क्रूरं नेह पश्यामि वालिनम् ॥ १५ ॥

यस्मात्तव भयं सौम्य पूर्वजात् पापकर्मणः ।

स नेह वाली दुष्टात्मा न ते पश्याम्यहं भयम् ॥ १६ ॥

अहो शाखामृगत्वं ते व्यक्तमेव प्लवङ्गम ।

लघुचित्ततयाऽऽत्मानं न स्थापयसि यो मतौ ॥ १७ ॥

बुद्धिविज्ञानसम्पन्नः इङ्गितैः सर्वमाचर ।

न ह्यबुद्धिं गतो राजा सर्वभूतानि शास्ति हि ॥ १८ ॥

सुग्रीवस्तु शुभं वाक्यं श्रुत्वा सर्वं हनूमतः ।

ततः शुभतरं वाक्यं हनूमन्तमुवाच ह ॥ १९ ॥ 

பின்னர், வாலியால் செய்யப்பட்ட பாவத்தை நினைத்து மிகழ்ந்து, மிகுந்த பயத்தால் நடுங்கிக் கொண்டிருந்த சுக்ரீவனிடம், பேச்சில் மிகத் திறமைசாலியான ஹனுமான் இவ்வாறு கூறினான்:

“இந்த மிகப் பெரிய பதற்றத்தையும் பயத்தையும் எல்லோரும் விட்டுவிடுங்கள்! இது மலைய மலை (ரிஷ்யமூக பர்வதம்) – இங்கு வாலிக்கு யாரும் பயம்படத் தேவை  இல்லை, அதாவது வாலியே இங்கு வரவே முடியாது! அவனுக்கு இங்கு வர அஞ்சுதல் உண்டு.”

“நீ முன்பு மிகுந்த பயத்துடன் ஓடி வந்ததற்குக் காரணமான அந்தக் கொடூரமான முகமும் கொடூரச் செயலும் உடைய வாலியை இங்கே நான் காணவில்லை.”

 “எந்தப் பாபியான அண்ணனால் உனக்கு இவ்வளவு பயம் ஏற்பட்டதோ, அந்தத் துஷ்ட ஆத்மாவான வாலி இங்கு இல்லை. ஆகவே, சௌம்யா! உனக்கு இங்கு எந்தப் பயமும் இல்லை.”

“ஐயோ! நீ ஒரு குரங்கு என்றாலும் இவ்வளவு சின்ன மனசு உடையவனாக இருக்கிறாயே! எளிதில் பயந்து, தைரியத்தை இழந்து, தன் மனதை ஒரு நிலையில் நிறுத்தாமல் தத்தளிக்கிறாயே!” 

“நீ அறிவும், விஞ்ஞானமும், புத்தி கூர்மையும் கொண்டவன். எல்லாவற்றையும் அடையாளங்களை வைத்து (இங்கித ஞானத்தால்) செயல்படு.ஏனெனில், புத்தியில்லாதவன் ஒருநாளும் அரசனாகி எல்லா உயிர்களையும் ஆள முடியாது.”

பயம் வேண்டாம் சுக்ரீவா! பதறாதே வானரா!

மலைய மலையில் வாலிக்கு மரண பயம் உண்டடா 

அவன் கால் இங்கு வைக்கவே அஞ்சுவான் அஞ்சுவான்

அவன் முகம் இங்கு தெரியவே முடியாது முடியாது!

சின்ன மனசு வேண்டாம் சிங்கக் குஞ்சே!

சீறி எழு! சிம்மாசனம் உனக்கே உரியதடா!

அறிவு உண்டு, ஆற்றல் உண்டு, அடக்கம் உண்டு

அரசன் நீ! அசைவிலா மனம் வேண்டும்!

ராமன் வந்தான், லட்சுமணன் வந்தான்

ரிஷ்யமூகம் இன்று வெற்றி முகம் கொண்டான்!

எழு சுக்ரீவா! எழு கிஷ்கிந்தா குமாரா!

இன்று முதல் உன் பயம் எல்லாம் மடியட்டும் மடியட்டும்!

இதன் மூலம் ஹனுமன் எப்படிப்பட்டவர் என்பது முதலிலேயே நமக்குத் தெரிய வருகிறது. மேலும் நாற்பத்தி நாலாவது சர்கத்தின் கீழ்க்கண்ட சுலோகங்களின் மூலம் அதை வால்மீகி உறுதிப்படுத்துகிறார். அதாவது சுக்ரீவன் ஹனுமானைப் புகழ்ந்து சொல்வது போல வால்மீகி எழுதுகிறார்.

विशेषेण तु सुग्रीवो हनूमति अर्थम् उक्तवान् |

स हि तस्मिन् हरि श्रेष्ठे निश्चितार्थो अर्थ साधने || ४-४४-१

तेजसा वापि ते भूतं समं भुवि न विद्यते ।

तद्यथा लभ्यते सीता तत्त्वमेवोपपादय ॥ ६ ॥

त्वय्येव हनुमन्नस्ति बलं बुद्धिः पराक्रमः ।

देशकालानुवृत्तिश्च नयश्च नयपण्डित ॥ ७ ॥

ततः कार्यसमासङ्गमवगम्य हनूमति ।

विदित्वा हनुमन्तं च चिन्तयामास राघवः ॥ ८ ॥

 “வானர ஸ்ரேஷ்டனே! பூமி அந்தரிக்ஷத்திலும், சித்தர்கள், வித்தியாதரர்கள் சஞ்சரிக்கும்  ஆகாயத்திலும், நீரிலும் உனக்குத் தடையில்லை.  உன் தந்தையான வாயு தேவனைக் காட்டிலும் உனக்கு அதிக ப்ராக்ரமங்கள் உண்டு. உனக்குள்ள பிரதாபம் இந்தப் பூலோகத்தில் ஒருவருக்கும் இல்லை. ஆகையால் எந்த விதத்திலாவது சீதையைக் கண்டறியும் கடமை உன்னுடையதே. நியாயம் அறிந்தவேனே,  பலமும், அறிவும், பராக்ரமும்  தேச காலங்களுக்கேற்றபடி நடந்து கொள்வதும்  வினயமும் உன்னிடத்திலே இருக்கின்றன. ஆகவே நீயே இந்தக் காரியத்தை முடிக்கவேண்டும்” என்று சுக்ரீவன் ஹனுமனிடம் கூறினான். 

வலிமை அறிவு வீரமுடன் 

வானரன் ஹனுமன் மேன்மை பெரிது 

சுக்ரீவன் நம்பினான் சீதைத் தேடல் 

தருமம் நிறைவேற்றும் தெய்வம் அவனே.

சுக்ரீவனின் அச்சம்

நிகரில்லா வலிமை கொண்ட இராமன் வருவதைப் பார்த்ததும் சுக்ரீவன் மிகுந்த அச்சமுற்றான் . சுக்ரீவன் பயந்த விதத்தை வால்மீகி விரிவாகக் கூறியிருந்தார். 

तौ तु दृष्ट्वा महात्मानौ भ्रातरौ राम लक्ष्मणौ |

वर आयुध धरौ वीरौ सुग्रीवः श्ङ्कितोऽभवत् || ४-२-१

उद्विग्न हृदयः सर्वा दिशः समवलोकयन् |

न व्यतिष्ठत कस्मिन् चित् देशे वानर पुङ्गवः || ४-२-२

नैव चक्रे मनः स्थातुम् वीक्षमाणो महाबलौ |

कपेः परम भीतस्य चित्तम् व्यवससाद ह || ४-२-३

तौ ऋष्यमूकस्य समीप चारी चरन् ददर्श अद्भुत दर्शनीयौ |

शाखा मृगाणाम् अधिपः तरस्वी वितत्रसे नैव चिचेष्ट चेष्टाम् || ४-१-१२८

स तौ महात्मा गज मन्द गामि शखा मृगः तत्र चिरन् चरन्तौ |

दृष्ट्वा विषादम् परमम् जगाम चिन्ता परीतो भय भार मग्नः || ४-१-१२९

அந்த இரு மகாத்மாக்களான இராம–லட்சுமணரை, சிறந்த ஆயுதங்களைத் தாங்கிய வீரர்களாகக் கண்டவுடன், சுக்ரீவன் சந்தேகத்துடன், அச்சமடைந்தான்.அவனது மனம் கலங்கிப் போய், எல்லாத் திசைகளையும் கவலையுடன் நோக்கினான். எந்த இடத்திலும் அமைதியாக நிற்க முடியாமல், வானரர்களில் சிறந்தவனான சுக்ரீவன் அலைந்தான்.அந்த இரு பெரும் வீரர்களை நோக்கிக் கொண்டிருந்தபோது, சுக்ரீவனின் மனம் நிலைபெறவில்லை. மிகுந்த பயத்தால் அவனது சிந்தனை சிதறிப் போனது.

இராமன் லட்சுமணன் வீரர் இருவரை 

சுக்ரீவன் கண்டனன் அஞ்சிக் கலங்கினன் 

திசை திசை நோக்கினன் திடமின்றி நின்றிடா 

மனமெல்லாம் பயமுற்று மயங்கினன் தானே.

வால்மீகி இத்தனை சுலோகங்களில் சொன்ன விஷயத்தை துளசி தாசர் अति सभीत  என்ற இரண்டு வார்த்தைகளில் சொல்லி விட்டார். 

இராம இலக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்துப் பயந்த சுக்ரீவன் ஹனுமனிடம் கூறுகிறான். “ஏ! ஹனுமனே! வருகின்ற இந்த இரண்டு மனிதர்களும் வலிமைக்கும் அழகிய வடிவத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படுகின்றனர். நீ ஒரு பிரம்மச்சாரியாக வடிவெடுத்து அங்கு சென்று கவனி. அவர்கள் யார் என்று அறிந்து அங்கிருந்தே சைகை  செய்து எனக்கு அறிவிப்பாயாக.. இதையே வால்மீகியும் கூறுகிறார். 

इङ्गितानाम् प्रकारैः  रूपव्या भाषणेन 

लक्षयस्व तयोः भावम्

शुद्ध आत्मानौ यदि एतौ जानीहि त्वम् प्लवंगम |

व्याभाषितैः वा रूपैः वा विज्ञेया दुष्टता अनयोः || २७

                                    **            

                 தொடரும்

பெண் மனத்தை யாரே அறிவார்? (Post No.15,538)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,538

Date uploaded in London – 27 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சுபாஷிதச் செல்வம்

பெண் மனத்தை யாரே அறிவார்?

ச. நாகராஜன்

பெண் மனத்தை யாரே அறிவார்? 

கங்காயா வாலுக்யாம் வார்தரே ஜலம் மானம் மஹாகிரே:!

மதிமந்தோ விஜானந்தி மஹிலாயா மனஸ் து ந ||

புத்திசாலிகள் கங்கையின் கீழ் எவ்வளவு மணல் இருக்கிறது என்பதைச் சொல்லி விடுவார்கள். கடலில் எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைச் சொல்லி விடுவார்கள். மலையின் உயரம் எவ்வளவு இருக்கிறது என்பதையும் சொல்லி விடுவார்கள். ஆனால் ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களால் சொல்ல முடியாது! 

தீயோருக்கு உடலெல்லாம் விஷம்! 

தக்ஷாகஸ்ய விஷம் தந்தே மக்ஷிகாயா: ச மஸ்தகே |

வ்ருச்சிகஸ்ய விஷம் புச்சே சவாங்கே துர்ஜனஸ்ய து ||

 ஒரு பாம்பின் விஷம் அதன் நச்சுப் பல்லில் இருக்கிறது. ஒரு விஷத் தேனீயில் விஷமானது அதன் தலையில் இருக்கிறது. ஒரு தேளின் விஷம் அதன் வாலில் இருக்கிறது. ஆனால் ஒரு தீயவனின் விஷமோ அவன் உடலில் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது.

 செயலின் உயர்வு!

 கச்சன் பிபீலகோ யாதி யோஜனானாம் ஷதான்யபி |

ப்ரகச்சன் வைனதேயோபி பதமேகம் ந கச்சதி || 

ஒரு எறும்பானது மெல்ல நகர்ந்து செல்லும் போது அது பல யோஜனை தூரத்தைக் கடக்கிறது. பக்ஷிகளின் அரசனான கருடனோ கொஞ்சம் கூட நகராத நிலையில் ஒரு அடி கூட செல்லாது.

ஒரு யோஜனை என்பது ஒன்பது மைல் தூரம் ஆகும். 

கங்கையின் புனிதம்! 

கங்கே தவ ந விவேகோ யத் த்வம் திவ்யான் கரோஷி பாதகின:|

விதிதர்மராஜஷாஸனமபி ஸ்தகயஸி ப்ரஸஹாத்ர ||

 ஓ, கங்கா! உனக்கு பாகுபாடே கிடையாது. பாவிகளைக் கூட நீ தெய்வீக நிலையை அடையச் செய்கிறாய். நீ வலிமையுடன் விதி மற்றும் தர்மராஜாவான யமனின் ஒழுங்குமுறைகளைக் கூடத் தகர்க்கிறாய். 

கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் சதைரபி |

முச்யதே சர்வபாபேப்யோ விஷ்ணுலோகம் கச்சதி ||

 கங்கா, கங்கா என்று தெய்வீகமான பெயரை உச்சரிக்கும் ஒருவன் நூறு யோஜனை தூரத்திலிருந்து அதைச் சொன்னாலும்  அவன் அனைத்துப் பாவங்களிலும் விடுபடுகிறான்; விஷ்ணுவின் லோகத்தை அடைகிறான்!

**

Hinduism through 500 Pictures in Tamil and English 44; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-44 (Post.15,537)

 English version posted as Part 43

நவக்ரஹங்கள்

முதலில் சுவையான செய்திகள்

பொதுவாக வைணவ கோயில்களில் நவக்ரஹ சந்நிதிகள் இருக்காது அபூர்வமாக இருக்கும். மது ரையில் கூடல் அழகர் பெருமாள் கோவிலில் நவக்ரஹ சந்நிதி உண்டு.

சைவ நவக்ரஹ  ஸ்தங்களுக்கு நிகராக வைணவ நவக்ரஹ ஸ்தலங்களும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான சைவத் ஸ்தலங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான வைணவ நவக்ரஹ ஸ்தலங்களும் இருக்கின்றன .

இதோ பட்டியல்

கோள்கள் —  சைவ தலம் –   வைணவ தலம்

சூரியன்- சூரியனார் கோயில்- ஸ்ரீவைகுண்டம்

சந்திரன் – திங்களூர் – வரகுணமங்கை- (NATHTHAM)

செவ்வாய்- வைத்தீஸ்வரன் கோயில்- திருக்கோளூர்

புதன்- திருவெண்காடு- திருப்புளியங்குடி

வியாழன் / குரு- ஆலங்குடி- ஆழ்வார் திருநகரி

சுக்கிரன் – கஞ்சனூர் – தென்திருப்பேரை

சனி – திருநள்ளாறு – பெருங்குளம்

ராகு- திருநாகேஸ்வரம்- இரட்டைத் திருப்பதி என்னும்

கேது – கீழப்பெரும்பள்ளம் – திருத்தொலைவில்லி மங்கலம்

***

கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிசயம்

கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள நவக்கிரஹ அதிசயம் பற்றி அதை படமாக வரைந்த பிரபல ஓவியர் சில்பி சொல்கிறார் :

“இங்கே அருமையான வேலைப்பாடுகளுடன் ஒரு நூதன அமைப்பு முறையில் ஒரே கல்லில் நவக்கிரகம் அமைந்திருக்கிறது . இதை வேறு எங்கிலும் காண முடியாது . நான்கு அடி சதுரத்தில் சூரிய பீடத்தைச் சுற்றி மற்ற கிரகங்கள் உள்ளன . சூரியனுள்ள இடம், தாமரை இதழ்களோடு கூடிய அழகிய சக்கரவடிவில் அமைந்திருக்கிறது

சனியின் தந்தையாகிய சூரியனுக்கு ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் ஏழு நிறங்க சூர்ய ஒளியில் இருப்பதாக விஞ்ஞானம் தெரிவிக்கறதல்லவா? அந்த ஏழு நிறங்களையும் புராணம் , ஏழு குதிரைகளாக சூரிய ரதத்தில் பூட்டிவிட்டது .

இந்த ரதத்தில் அருணன் சாரத்தியம் செய்ய , மற்ற எட்டுக் கிரககங்களும் எட்டுத் திக்குகளை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன.

சூரிய ரதத்துக்கு ஒற்றைச் சக்கரம்தான் உண்டு என்பர்;இங்கே சூரிய ரதத்துக்கு இரட்டைச் சக்கரங்கள் . பக்கத்தில் மகிஷாசுர மர்த்தினி  “***

1990- களில் நான் லண் டன் மேகம் பத்திரிக்கையில் எழுதியதையும் கீழே தருகிறேன்

கிழமைகளைக் கண்டுபிடித்தது இந்துக்கள் ! ஈர்ப்புவிசையாக் கண்டுபிடித்தது இந்துக்கள்!!

ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன் , வியாழன், வெள்ளி , சனி என்ற ஏழு கிழமைகளும்  சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும். யார் இதைக் கண்டுபிடித்தார்கள் ? இந்துக்களே இதைக் கண்டு பிடித்தார்கள்!

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட

கண்டன் மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல்

அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்

வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.”

——(சம்பந்தர் தேவாரம் : 02.085.01)

பொருள் : மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள், கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்தவனாய் மகிழ்ச்சியுடன்  வீணையை மீட்டிக் கொண்டு என் உளம் புகுந்த காரணத்தால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனுள்ள ஒன்ப

து கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

— கோளறு திருப்பதிகம், தேவாரம்

இதைப்  பாடிய திருஞான சம்பந்தர் வாழ்ந்தது மஹேந்திர பல்லவன் காலத்தில்- நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் காலத்தில்; அதாவது கிபி (பொது ஆண்டு) 600. இதே வரிசையில் உலகமே இன்று கிழமைகளை வெளியிடுகிறது .

வியாழனையும் அதை அடுத்து  வரும் வெள்ளியையும் இணைத்துப்பேசுவது இந்துமதத்தில் தேவ குரு , அசுரர் குரு என்ற கச்ச தேவயானிக் கதைகளிலும், திருப்பாவையிலும் காணப்படுகிறது . சங்க இலக்கியத்திலும் இரண்டு குருமார்கள் (அசுரர், தேவர்களுக்கு) என்ற தகவல் உள்ளது

xxxx

புதிய ஆதாரங்கள்

திருஞான சம்பந்தர் சொன்ன அதே வரிசையை நாம் இன்று பயன்படுத்துகிறோம்.

அதற்கு முன்னர் எழுந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை என்ற குறிப்பு வருகிறது. அதன் காலம் கி பி 132 என்பது கடல் சூழ் இலங்ககைக் கயவாகு வேந்தனும் என்ற குறிப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரோமானியர் காலம்.

இந்துக்கள் மட்டுமே இன்றுவரை கிழமைகளுக்கு கிரகங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆங்கிலத்திலுள்ள ஏழு பெயர்களில் நான்கு கிரகங்கள் இல்லை. ட்யூஸ் டே Tuesday , வெட்னஸ் டே Wednesday, Thursday தர்ஸ் டே, Friday ப்ரை டே என்ற நான்கு கிழமைகளில் உள்ள டிர் , வோதன் , தோர் , பிறைக் என்பன நார்டிக் இன மக்களின் கடவுளர் ; கிரகங்கள் இல்லை. இவைகளை கிழமைகளின் பெயர்களில் நுழைத்தது ஆங்கிலோ சாக்ஸன் Anglo- Saxon  இனத்தினர். இதை ரோமானிய (லத்தீன் மொழி) இலக்கியங்களில் காண்பது இரண்டாம் நூற்றாண்டில்தான்! ஆனால் நம் சிலப்பதிகாரத்திலும், ஒரு கல்வெட்டிலும் அதற்கு முன்னரே கிழமைகள் வந்துவிடுகின்றன .

கிரேக்கர்களின் முதல் நாள் சனிக்கிழமை. அடுத்துவருவது வியாழன் , பின்னர் புதன் , சூரியன் …..

ஆக அவர்கள் கிரகங்களின் பெயர்களை இட்டாலும் வரிசை பிறண்டுள்ளதைக் காண்கிறோம் .

வீக் எண்ட் WEEK END  (வார இறுதி நாட்கள் ) என்றால் சனி ஞாயிறு ! ஆனால் மேலை நாட்டுக் காலண்டர்களில் சண்டே முதல் துவங்குவர் அல்லது பழைய கால கிரேக்க நாட்டில் சனிக்கிழமை முதல் நாள். ஒரே குழப்பம் !

நாம் ஒருவர்தான் ஞாயிறு துவங்கி சனியில் முடிக்கிறோம். நாம் ஒருவர்தான் வானில் உலவும் கிரகங்கள் பெயர்களை வைத்து இருக்கிறோம். ஆங்கிலப் பெயர்களில் நான்கு, கிரகங்கள் இல்லை .

 கிரகங்கள் என்றால் பிளாணட்ஸ் Planets என்று அகராதிகள் கூறும். அப்படியானால்  நாம் சொல்லும் சூரியனும் சந்திரனும் கிரகங்கள் இல்லையே, ராகுவும் கேதுவும் கிரகங்கள் இல்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை= பிடிமானம்- கவ் வுதல் ; ஐசக் நியூயூட்டனுக்கும் முன்னரே நாம் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததால் வானில் உலவும் சூரியன் சந்திரன் முதலிய அனைத்துக்கும் நவ கிரஹங்கள் என்று பெயர் சூட்டினோம்; இதனால் தான் GRIP. GRAB கிரிப் , கிராப் , கிராவிடி Gravity என்ற ஆங்கிலச் சொற்களும் பாணிக்கிரஹணம் சந்திர, சூர்ய கிரஹணம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களும் புழக்கத்தில் உள்ளன )

தமிழர்களும் இதை அப்படியே மொழிபெயர்த்தனர் ; கோள் என்றால் பிடித்தல் , இழுத்தல், ஈர்த்தல்  என்று பொருள் ; கொள்முதல், கொள்ளவேண்டும் , கொள்கை என்பதில் இந்தப் பிடிப்பு என்ற கருத்து வருகிறது ஆகை யால் ஈர்ப்பு விசை என்னும் கிராவிட்டியைக் கண்டு பிடித்ததும் இந்துக்கள்தான் 

மீண்டும் கிழமைகளுக்கு வருவோம் .

ரோமானிய (லத்தீன்) கால காலத்திலிருந்து   வந்தது பிரெஞ்சு மொழி. அங்கு இன்றும் கூட ஆறு கிரகங்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக்கு திமான்ஸ்  Dimanche என்பர். அது சூரியன் தினம் இல்லையாம். கடவுள் தினமாம்.

சொல்லப்போனால் மேலை உலகம் முழுதும் ஒரே குழப்பம்.

கடிகாரங்களும் மணிக்கூண்டுகளும் இல்லாத கிராமவாசிகள் சந்திரனை வைத்தே நேரம் அறிவர். நாளையும் அறிவர். ஒரு மாதத்தை அமாவாசை முதல் 14 நாட்கள் பெளர்ணமி முதல் 14 நாட்கள் என்று பிரித்து எளிதில் நாளையும் (திதி), நேரத்தையும் அறிந்தனர். இதனால்தான் இன்றும் இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் திதிக்கணக்கில் பெயரிடப்பட்டுள்ளன . ராம நவமி, ஜன்மாஷ்டமி , நாக பஞ்சமி , நரக சதுர்த்தசி (தீபாவளி), ஏகாதசி உபவாசம் என்று.

ஆகையால் நமக்கு நாள், கிழமை தெரிந்தும், திதிகளையே வழக்கத்தில் பின்பற்றினோம்.

நமக்கு அருமையான  ஆதாரம் நல்கிய இளங்கோ அடிகளுக்கும் , சம்பந்தருக்கும் நாம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

Gangakonda chozapuram

தென் இந்தியாவிலுள்ள, எல்லாக் கோவியில்களிலும், குறிப்பாக சிவன் கோயில்களில் நவக்ரஹ சந்நிதிகள் இருக்கின்றன சிவபெருமானைச் சுற்றி வரும் பிரகாரத்தில் ஒன்பது வானவெளி கோளங்கள் இருக்கும் இவைகளை ஆங்கிலத்தில் பிளானெட்ஸ் என்று மொழிபெயர்ப்பது தவறு. கிரஹ என்ற சொல்லுக்கு ஈர்ப்புவிசை உடைய பொருள்கள், பற்றி இழுக்கக் கூடியவை என்று பொருள்

நக்ரஹங்களுக்கு நடுவில் சூரியன் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. சூரியனைச் சுற்றியே கிரகங்கள் வலம் வருகின்றன என்ற விஞ்ஞான உண்மையை இந்துக்கள் இதன் மூலம் உணர்த்தினர்; சூரியனுக்கு ஒரே சக்கர தேரும் ஏழு குதிரைகளும் இருக்கும் அவருடைய மனைவியார் சாயா உஷா;

இதுவும் விஞ்ஞான உண்மைகளே; சூரிய  உதயத்துக்கு முன்னர் வருவது உஷத் காலம் ஆங்கிலத்தில் DAWN டான் ; சூரியனுக்குப் பின்னால் வருவது சாயா/ நிழல்! இதை மனைவி என்று கூறுவதற்குக் காரணம் இது சூரியனுடன் முன்னாலும் பின்னாலும் வருவதே !

மகன்கள்- சனிக்கிரகம் மனுக்கள், யமன், ரேவந்த்

ஆதித்ய ஹ்ருதயம், நவக்ரஹ துதிகள், சூர்ய நமஸ்கார மந்திரங்கள்  முதலியவற்றில் இவைகளின் பெருமையை அறியலாம் . மேலும் பிராமணர்கள் தினமும் செய்யும் மூன்று வேலை சந்தியாவந்தனத்தில் சூரியனின் மந்திரங்கள் வருவதோடு ஒன்பது விண்  கலங்களுக்கும் தர்ப்பணம்  செய்யும் மந்திரங்களும் உள்ளன

இந்துக் குழந்தைகள் பிறக்கும்போதே கிரஹ நிலைகளை  வைத்து ஜாதகமும் கணிக்கப்படுகிறது .இவைகளை பற்றி சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள எல்லா விஷயங்களும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் வரும் 200 குறிப்புகளிலும் காணப்படுகின்றன தமிழர்களும் சப்த ரிஷி மண்டலம், பிரேக் சந்திரன், சூரியனிங் வெளிப்பட்டதை சங்கத் தமிழ் நூல்களில் ங்காண்கிறோம்

நவக்ரஹ துதியில் விஞ்ஞான உண்மைகள்

தமிழனுக்கு வானவியல் தெரியுமா?

கிரேக்கர்களிடமிருந்துதான் சில விஷயங்களை நாம் கற்றோம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எழுதியதைப் படித்ததுண்டு. அவர்கள் எழுதியன எல்லாம் தவறு என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.

முதலாவதாக, தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் ஒவ்வொரு கிரகத்துக்கும் பல பெயர்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற அமரகோஷம் என்ற வடமொழி நிகண்டிலும், தமிழ் நிகண்டுகளிலும் இவ்வாறு பல பெயர்களைக் காணும்போது உலகில் நாம் தான் இத்துறையில் முன்னேற்றம் கண்டோம் என்பது தெளிவாகிறது. உலகின் ஏனைய செம்மொழிகளில் இவ்வளவு பெயர்களை காண முடிவது இல்லை.

இரண்டாவது விஷயம், சம்ஸ்கிருத, தமிழ் நூல்களில் கிரகங்கள் பற்றி ஒரே கருத்து இருப்பதாகும். இமயம் முதல் குமரி வரை இப்படி சங்க காலத்திலேயே இருப்பது வியாழன், வெள்ளி கிரகங்கள் பற்றிய அடை மொழிகளில் (அந்தணர் இருவர்) என்ற குறிப்புகளில் இருந்து தெரிகிறது.

தனித் தமிழ் வெறி இல்லை. சம்ஸ்கிருதச் சொற்கள் தமிழ் நிகண்டுகளில் நிறைய பயன்படுத்தப்படுகின்றன.

மூன்றாவது, கிரகங்களுக்கு இட்ட பெயர்களே அதைப் பயிலுவோருக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றன. ஒரு சில உதாரணங்களால் இதை விளக்குகிறேன். சனிக் கிரகத்துக்கு மந்தன், முடவன் என்ற வடமொழி, தமிழ் மொழிச் சொற்கள் இருக்கின்றன. சோதிடத்தில் பயன்படுத்தப்படும்— கண்ணுக்குத் தெரியக் கூடிய கிரகங்களில்—- சனிக் கிரகம்தான் சூரியனைச் சுற்ற அதிக காலம் எடுக்கிறது. ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் ஆகும். இது விஞ்ஞான உண்மை. இதை விளக்கும் வகையில் நாம் பெயரிட்டோம். முடவன்/மந்தி என்ற பெயரால் சிறுவர்களும் இதை நினைவிற்கொள்ள முடியும். உலகின் ஏனைய செம்மொழிகளில் இப்படிப்பட்ட பெயர்களை காண முடிவது இல்லை.

மற்றொரு எடுத்துக் காட்டு, வெள்ளி கிரகத்துக்கு மழைக் கோள் என்று பெயர். புற நானூற்றில் நாலைந்து பாடல்களில் இந்தக் குறிப்பு வருகிறது. இதுவரை விஞ்ஞானிகள் கண்டு பிடிக்காத இந்த விஷயம் தமிழ் மொழி வடமொழி நூல்களில் மட்டுமே கானப்படும் உண்மை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் இதை உறுதிப்படுத்தும்போது நாம் மார்தட்டிக் கொள்ளலாம், —நாங்கள் அன்றே சொன்னோம்— என்று. வியாழன் கிரகத்தை “ஆண்டு அளப்பான்” என்று நிகண்டுகள் கூறும். அதாவது ஒரு ராசிக்கு ஒரு ஆண்டு வீதம் 12 ராசிகலையும் சுற்றிவர 12 ஆண்டுகள் ஆகும். மஹா மகம், கும்பமேளா முதலிய பண்டிகைகள் குரு சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைந்தவை. கிரகங்களின் பெயர்களில் இருந்தே விஞ்ஞானம்/ வான சாஸ்திரம் கற்கும் முறை நம்மிடம் மட்டுமே உள்ளது.

நாலாவதாக, கிரகங்களுக்கு நாம் இட்ட வர்ணப் பெயர்களும் நம்முடைய வான சாஸ்திர அறிவுக்குச் சான்று பகரும். சங்கத் தமிழில் சனிக் கிரகத்துக்கு மைம்மீன் என்று பெயர். இதையே வட மொழிகளில் “நீலாய” என்ற பதம் குறிக்கும். நீலம் என்பதை கருப்புக்கும் கரு நீலத்துக்கும் பயன்படுத்துவது உண்டு.

பொன் = வியாழன்

வெள்ளி = வெண்மை நிறம் உடைய வீனஸ்

செவ்வாய் = செந்நிறக் கோள்

பச்சை = புதன்

ஆங்கிலத்திலோ கிரேக்கத்திலோ இப்படி கலர் மூலம் எல்லா கிரகங்களையும் அழைப்பதில்லை.

ஐந்தாவதாக, நாம் சில புதிய விஷயங்களைக் கூறுகிறோம். இவை இரு மொழி நூல்களிலும் உள்ள உண்மைகள். இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்காத உண்மைகள். எதிர்காலத்தில் நாம் சொன்னது சரியே என்று நிரூபணமானால் நமக்கு (இந்துக்களுக்கு) நோபல் பரிசு கிடைக்கும். அவை என்ன? ஆறு மிகப் பெரிய உண்மைகள் என்று கீழே கொடுத்துள்ளேன்.

ஆறாவதாக, பிராமணர்கள் தினமும் முப்பொழுதும் செய்யும் த்ரிகால சந்தியாவந்தனத்தில் நவக்ரஹ வழிபாடு— ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக—- உள்ளது. இதை கிரேக்கர்கள் சொல்லி நாம் செய்தோம் என்றால் யார் நம்புவார்கள்?

ஏழாவதாக, ஞான சம்பந்தரின் கோளறு பதிகத்தின் முதல் பாடலிலேயே ஞாயிறு முதல் கிரகங்கள் ஒன்பதும் வருகின்றன. ஆக நம்மிடம் இருந்துதான், உலகமே இதைக் கற்றுக் கொண்டன என்பதற்கு அகச் சான்றுகளும், புறச் சான்றுகளும், நூற்றுக் கணக்கான இடங்களில் உள்ளன.

ஆறு மிகப் பெரிய உண்மைகள்

இந்துக்கள் உலக மக்களுக்கு ஆறு மிகப் பெரிய உண்மைகளை சொல்கின்றனர்:–

1.செவ்வாய் கிரகம், பூமியின் புதல்வன்

2.புதன் கிரகம் சந்திரனின் புதல்வன்

3.சனிக் கிரகம், சூரியனின் புதல்வன்

4.வெள்ளிக் கோளுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டு

5.சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

6.சூரியனுக்கும் கண்களுக்கும் தொடர்பு உண்டு (இது ரிக் வேதத்தில் புருஷ சூக்தத்தில் உள்ளது)

இது தவிர ஏழாவது உண்மையும் இருக்கிறது. சூரியனை சுற்றி வாலகீயர்கள் என்னும் 60,000 குள்ளமான முனிவர்கள் இருக்கின்றனர். இது பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதினேன்.

எட்டாவது உண்மை, குரு கிரகம் பற்றியும் அதன் கவன் கண் வீச்சு ஆற்றல் பர்றியும், அது எப்படி ராக்கெட்டுகளை எரிபொருள் இல்லாமல் விண்ணில் பறக்க வைக்கிறது என்பதையும் ஏற்கனவே தனிக் கட்டுரையில் கொடுத்து இருக்கிறேன். குரு என்றாலேயே கனம் என்று பொருள். நவக் கிரகங்களில் பெரியது குரு என்பது விஞ்ஞான உண்மை என்பதையும் ஏற்கனவே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இவைகளின் பொருள் என்ன?

ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று தமிழ் நிகண்டு, சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்லும். பூமியும் செவ்வாயும் ஒரே நில அமைப்பை உடையவை என்று ஒரு பொருள் கொள்ளலாம். நமக்கு மிக அருகில் இருப்பதால் அங்குதான் முதல் “காலனி” அமைக்க விஞ்ஞானிகளும் முயற்சி செய்கின்றனர்.

இரண்டாவது அர்த்தம், ஒரு காலத்தில் பூமியின் மீது ஏதோ ஒன்று மோத செவ்வாய் கிரகம் “சுகப் பிரசவம்” ஆனது. அதாவது மோதலில் பிரிந்த/பிறந்த கிரகம் செவ்வாய்!

இதே போல சந்திரனின் மகன் புதன் என்பதற்கும் பொருள் சொல்லலாம். சந்திரனின் ஒரு துண்டுதான் புதன். இரண்டும் ஒரே அமைப்புடையவை. ஆனால் இவைகளை எல்லாம் எதிர்கால சோதனைகள்தான் சரியா தப்பா என்று சொல்ல முடியும். இன்னும் வான சாஸ்திர அறிஞர்கள் உறுதி செய்யாத விஷயங்கள் இவை. லண்டனிலும், அமெரிக்காவிலும் வெளியிடப்படும் வான சாஸ்திர மாத இதழ்களைப் படிப்போருக்கு புதுப் புது செய்திகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனுடைய சுருக்கச் செய்திகள் இந்தியப் பத்திரிக்கைகளிலும் வெளிவருகின்றன. சுருங்க்சச் சொன்னால் விஞ்ஞானிகளே இன்னும் முடிவுக்கு வராத விஷயங்கள் இவை. ஆனால் ஒரு போக்கு தெளிவாகத் தெரிகிறது—நாம் சொன்னவை சரி என்ற செய்தி விரைவில் வரும் என்ற போக்கு அது!

என்னுடைய கருத்து:

இது சரியா? தப்பா? என்பதைவிட இப்படி யோசித்த மூளையை எண்ணி எண்ணி வியக்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு கிரகத்துக்கும் இன்னொரு கிரகத்துக்கும் முடிச்சுப் போட்டோமே. இதைச் செய்யக்கூட அதைப் பற்றிய அறிவும், தொடர் சிந்தனையும் தேவை. நாம் இதை எல்லாம் எழுதிய காலத்தில் உலகம் தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தனர் மேலை நாட்டினர்!!!

நாமோ பூமியை எப்பொழுதுமே “பூகோளம்” (புவி உருண்டை) என்றுதான் பாடமே நடத்தினோம். கோப்பர் நிகசும், கலீலியோவும் கண்டுபிடித்ததாக மேலை நாட்டுக்காரர்கள் பெருமை பேசிய விஷயங்கள் ஆரியபட்டர், வராஹமிகிரர் எழுதிய நூல்களில் மட்டுமின்றி சங்கத் தமிழ் இலக்கியத்திலும், இதிஹாச புராணங்களிலும் உள்ளது.

கட்டுரைக்கான மேற்கோள்கள்

1.சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோர் சூர்யோ அஜாயத (புருஷசூக்தம் – ரிக்வேதம்)

இறைவனின் மனதிலிருந்து சந்திரன் உண்டானான்; கண்ணிலிருந்து சூர்யன் உண்டானான்.

2. செவ்வாய் கிரக பெயர்கள்:—அங்காரகன், மங்களன், மங்களப்ரதாயன், மகாபத்ராய, மஹீசுதன், மடிமகன்/படிமகன்,பூமி புத்ரன், பூமகன்

3. புதன் கிரகப் பெயர்கள்:—சௌம்யன், இந்துஜா, சோமஜாய, சந்திரன் மகன், அறிஞன், தேவன், புலவன், வானவன், அனுவழி, சவுமன், கணக்கன், சாமன், சிந்தை, தூதுவன், தேர்ப்பாகன், நற்கோள்,

நிபுணன், பச்சை, பண்டிதன், பாகன், புந்தி, மதிமகன், மாலவன், மால், மேதை, கூரியன்

4. வெள்ளி, சுக்கிரன், பார்கவன், ப்ருகன், ஸ்வேதாம்பரன், அசுர குரு, கௌடதேசஸ்விராய, ரஜதப்ரபாய, மழைக்கோள், புகர், பளிங்கு, உசனன், பிரசுரன்,சல்லியன், ஒள்ளியோன், சிதன்

5.சனி, நீலவர்ணன், நீலாஞ்சனநிபாய, க்ரூரன், சவுரி, கதிர்மகன், மைம்மீன், கெட்டவன், அந்தகன், காரி, கரியவன், கீழ்மகன், சந்தில், சாவகன், தமனியன், நீலன், நோய்முகன், பங்குபாதன், முடவன், மந்தன், முதுமகன், மேற்கோள், சாயாபுத்ர, காரியூர்தி, கருவிளங்கண்ணியன்.

வாழ்க நவக்ரகங்கள்!! வளர்க அவற்றின் அருட் பார்வை!!!

***

நான் கூறும் கருத்துக்கள் நவக்கிரஹ ஸ்துதியை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது; இதோ அந்த துதி

ஜபாகுஸுமா ஸங்காசம் …… நவக்கிரஹ துதி வரிகள்

ஜபாகுஸும ஸங்காஸம் காஶ்யபேயம் மஹாத்³யுதிம் |

தமோ(அ)ரிம் ஸர்வபாபக்⁴நம் ப்ரணதோ(அ)ஸ்மி தி³வாகரம் || (சூரியன்)

த³தி⁴ஶங்க²துஷாராப⁴ம் க்ஷீரோதா³ர்ணவஸம்ப⁴வம் |

நமாமி ஶஶினம் ஸோமம் ஶம்ப⁴ோர்மகுடபூ⁴ஷணம் || (சந்திரன்)

த⁴ரணீகா³ர்ப⁴ஸம்பூ⁴தம் வித்³யுத்காந்திஸமப்ரபம் |

குமாரமஶக்திஹஸ்தம் தம் மங்க³லம் ப்ரணமாம்யஹம் || (செவ்வாய்)

ப்ரியங்கு³கலிகாஶ்யாமம் ரூபேணாப்ரதிமம் பு³த⁴ம் |

ஸৌম்யம் ஸৌম்யகு³ணோபேதம் தம் பு³த⁴ம் ப்ரணமாம்யஹம் || (புதன்)

தே³வானாம் ச ருஷீணாம் ச கு³ரும் காஞ்சனஸந்நிபம் |

பு³த்³தி⁴பூ⁴தம் த்ரிலோகேஶம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம் || (வியாழன்/குரு)

ஹிமகுந்³த²ம்ருணாளாபம் தைத்யானாம் பரமம் கு³ரும் |

ஸர்வஶாஸ்த்ரப்ரவக்தாரம் பா⁴ர்க⁴வம் ப்ரணமாம்யஹம் || (சுக்கிரன்)

நீலாஞ்சனஸமாபா⁴ஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |

சாயாமார்தாண்டஸம்பூ⁴தம் தம் நமாமி ஶனைஶ்சரம் || (சனி)

அர்த⁴காயம் மஹா‍வீர்யம் சந்த்ராதி³த்யவிமர்த³னம் |

ஸிம்ஹிகா³ர்ப⁴ஸம்பூ⁴தம் தம் ராகும் ப்ரணமாம்யஹம் || (ராகு)

பலாஶபுஷ்பஸங்காஸம் தாரகா³க்ரஹமஸ்தகம் |

ரௌத்³ரம் ரௌத்³ராத்மகம் கோ⁴ரம் தம் கேதும் ப்ரணமாம்யஹம் || (கேது)

****

Surya in Delhi Airport

Konark, Odisah

Navaratna ring based on Navagrahas 

அமரகோசத்தின் ஆசிரியர் அமரசிம்மன் சூரியனுக்கு 37 பெயர்களைச் சொல்லியிருக்கிறார். அவையாவன:–

(சம்ஸ்கிருத உச்சரிப்பு: சம்ஸ்கிருதத்தில் சொல்லுக்குப் பின்னே இரண்டு புள்ளிகள் ( : ) விசர்கம் இருந்தால் அதற்கு முந்திய உயிரெழுத்தைப் போல உச்சரிக்கவும்; எடுத்துக் காட்டு:– பாஸ்கர: = பாஸ்கரஹ, க்ரஹபதி: = க்ரஹபதிஹி, சித்ரபனு:= சித்ரபானுஹு)

அர்யமா = பித்ரு தேவதா, சூரியனின் பக்தர்கள்

ஆதித்ய: = அதிதி வம்சத்தில் வந்தவர்

த்வாதசாத்மா = 12 ஆன்மாக்களை (மாதங்களை ) உடையவன்

திவாகர: = நாள் என்பதை உருவாக்குபவன்

பாஸ்கர: = ஒளியூட்டுபவன் (பாஸ்பரஸ் என்ற மூலகத்தின் பெயரும் இதே பொருளுடைத்து)

அஹஸ்கர: = நாள் என்பதை உருவாக்குபவன்

ப்ரத்ன:= இருட்டை ஒழிப்பவன்

ப்ரபாகர: = ஒளியூட்டுபவன்

விபாகர: = ஒளியூட்டுபவன்

பாஸ்வான்= ப்ளியுடையவன்

விவஸ்வான் = பலவித ஆடைகளை உடையவன்

சப்தாஸ்வ = ஏழு குதிரைகளை உடையவன் (வானவில்லின் வண்ணங்கள்)

ஹரிதஸ்வ = பச்சைக் குதிரை உஅடையவன்

உஷ்ணரஸ்மி: = வெப்பமான கதிர் உடையவன் (பல பெண்களுக்கு ரஸ்மி என்று பெயர்; அதாவது கிரணம், கதிர் ஒளி)

விகர்தன: = பாலிஷ் செய்யப்பட்டவன், மெருகூட்டப்பட்டவன், விசேஷன கர்தவ்யம்

அர்க: = பூஜிக்கப்படதக்கவன் (அருகம் புல், தாமிரம், ஸ்படிகம், இந்திரன் என்றும் இச்சொல் பொருள்படும்)

மார்த்தாண்ட: = ‘இறந்த கோளத்தில்’ இருப்பவர்

மிஹிர: = வெளிவருபவன் (புத்தன் என்றும் இச்சொல் பொருள்படும்)

அருண: = சூர்ய சாரதி ( மற்ற பொருள்கள்= சந்த்யா ரகம், நிசப்தம், கபிலர், குஷ்டநோய், குணவான்)

பூஷா = புஷ்டியை ஏற்படுத்துபவன் (சூரியனிடமிருந்து ஆரோக்கியத்தைப் பெறு என்பது சம்ஸ்கிருத பழமொழி; இலவச வைட்டமின் ‘டி’ தருபவன்)

த்யுமணி: = வானில் தோன்றும்ரத்தினக் கல்

தரணி = சம்சாரக் கடலைக் கடக்கச் செய்வோன் (ஏனைய பொருள்= குமரி, படகு)

மித்ர: = சூரியன் (நண்பன்)

சித்ரபானு: = வண்ணக் கதிர் உடையோன்

விரோசன: = ஒளிவீசுபவன் 9மற்ற அர்த்தங்கள் = நிலவு, பிரஹலாதன் மகன்)

விபாவசு: = ஒளிதருபவன் (மற்ற பொருள்= ஒருவித நெகலஸ், பாவக)

க்ரஹபதி: = கிரகங்களுக்கு நாயகன்/தலைவன்

த்விஷாம்பதி:= ஒளிக்கு அதிபன்/தலைவன்

அஹர்பதி:= நாளுக்கு தலைவன் (அஹர் = பகல், பகலவன்)

பானு: = ஒளி

ஹம்ச: = சூரியன்

சஹஸ்ராம்சு: = 1000 கதிர் உடையோன்

தபன: = தபிக்கச் செய்பவன்(தபி = சூடேற்று; தப=தவ)

சவிதா= சூரியன்

ரவி: = சூரியன்

சுர: = பார்க்கக்கூடிய அனைத்தையும் தூண்டுபவன் (விழித்தெழச் செய்வான்)

சூர்ய: = சுர: என்பதைக் காணவும்.

 தமிழ்நாட்டில் தினமணி, தினகரன் போன்ற பத்திரிக்கைகள், ஆங்கிலத்தில் ‘சன்’ போன்ற பத்திரிக்கைகள் சூரியன் பெயரைத் தாங்கி வருகின்றன. உலகிலுள்ள எல்லா முக்கிய மொழிகளிலும் சூரியன் பெயரில் நாளேடுகள் இருக்கின்றன. சூரிய நமஸ்காரத்திலுள்ள 12 மந்திரங்களும் மீண்டும் பிரபலமாகி வருகின்றன.

பல ஆண்கள், பெண்களின் பெயர்களும் சூரியன் பெயரிலிருந்தும், ஒளி என்பதிலிருந்தும் வந்தவை.

சூரியனுக்கு ‘இனன்’ என்று ஒரு பெயர் உண்டு; அதிருந்து வந்ததே இன்கா நாகரீகம் என்று முன்பே எழுதியிருக்கிறேன்.

அம்சுமாலி (நீர்நிலைகளின் தலைவன்), பஹ: ( ஐஸ்வர்யம்) முதலிய வேறு 17 பெயர்களையும் அமர கோச உரைகாரர்கள் விளம்புவர்)

சூரியனுக்கு அருகாமையில் உள்ள மாடர, பிங்கள:, தண்ட: பற்றியும் அமரம் பேசும்; இவை ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.

சூர்ய சாரதியின் பெயர்கள்:- சூர்யசுத:, அருண:, அனூரு:, காஸ்யபி, கருடாக்ரஜ:

கிரணங்களின் பெயர்கள்:– கிரண:, உஸ்ர:, மயூக:, அம்சு:, கபஸ்தி:, க்ருணி:, க்ருஷ்ணி:, பானு:, கர:, மரீசி:, தீதிதி:

சூர்யப் பிரபைக்கான பெயர்கள்:- ப்ரபா, ருக், ருசி:, த்விஷ், பா:, சவி:, த்யுதி:, தீப்தி:, த்யுதிமதி, ரோசி:, சோசி:

தீப்தி போன்ற பெண்களின் பெயர்கள் இந்தப் பிரபை (ஒளி மண்டலம், ஒளிவட்டம்) யிலிருந்து வந்தவையே.

சூரிய வெப்பத்துக்கான பெயர்கள் முதலிய விஷயங்களையும் அமரம் உரைக்கும்.

****

ஆரோக்கியத்துக்கு சூரியன்

 சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்:

1).ஆரோக்யம் பாஸ்கராத் இச்சேத் – பூஜா ப்ரகாச:

சூரியனிடத்தில் ஆரோக்கியத்தைக் கேள்

(சூரியன் மூலம் வைடமின் ‘டி’ கிடைக்கிறது. கண், ஒளி பெறுகிறது. இதை அறிந்த முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே இப்படிச் சொல்லிவைத்தனர்; ஒப்பிடுக: கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமா?)

***

).ஸ்யேம நு சூர்யமுச்சரந்தரம்  – ருக் வேதம்

தலைக்கு மேல் சூரியனை எப்போதும் காண்போமாக (நூறாண்டுக் காலம் நல்லபடி வாழ்வோமாக)

12).பஸ்யேமஸ் சரதஸ்சதம், ஜீவேம சரதஸ்சதம் – யஜூர், அதர்வ வேதங்கள்.

நூறாண்டுக் காலம் நாம் காண்போமாக; நூறாண்டுக் காலம் நாம் வாழ்வோமாக

(நூறாண்டுக் காலம் வாழ்க; நோய்நொடியிலாமல் வாழ்க)

To be continued……

Tags- நவக்கிரகம், சூரியன், நவக்ரஹ துதி, விஞ்ஞான உண்மைகள் , சுவையான செய்திகள், Hinduism through 500 Pictures in Tamil and English 44; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்44

Hinduism through 500 Pictures in Tamil and English 43; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-43 (Post No.15,536)

Surya in Delhi Airport

Written by London Swaminathan

Post No. 15,536

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Tamil Version is given as Part 44)

Navagrahas – nine heavenly bodies

Strange Things about Navagraha Shrines

Navagraha Shrines are found mostly in Shiva temples; but there are exceptions. Madurai Koodal Azakar Perumal Temple , though a Vaishnava temple, has a Navagraha Shrine.

Famous Navagraha Shrines, at least nine in number are crowded in one area. That is Thanjavur district in Tamil Nadu. Some Vaishnava Navagraha Shrines are also known. They are in Tirunelveli District.

Gangai Konda Chozapuram temple has a unique Navagraha Statue. The sculptor has selected a square stone where Sun occupies centre place; on four sides all the other eight Grahas are carved.

Tirunaraiyur Shiva temple has a special shrine for Sani and his family.

Since Hindus knew well about the solar system, Sun is placed in the centre and all others face towards the sun. Sun’s wives are Chaya and Usha; again this is also based on science. Before sunrise, we see dawn, that is Usha; Rig Veda has beautiful poems on Dawn/Usha. Sun creates shadow behind. Shadow in Sanskrit is Chaya.

Sun’s black spots cause big disruptions on communication on earth. Bhartruhari described them Ketus and Kabandhas , that is demons, in his Brhat Samhita.

Navagrahas are not Nine Planets; they are nine heavenly bodies with gravity. Graha means gravity. English words Grip, Grab, Gravity etc are derived from this Sanskrit word. That is the reason Hindu scientists named hem Graha and included Sun, Moon, Rahu and Ketu which are not planets. They have gravity. Tamils copied it and called them Kol. This also has the same meaning.

Hindus gave supreme importance to Sun which is considered Arogya Karaka- one who gives Health and long life. Without sun light all living beings will die within a few hours or few days. Sun light provides us Vitamin D. Moon has big impact on oceans and tides, so do they have influence on human bodies and particularly Mind.

Rig Veda says suns is important for Eyes and Moon is important for Mind (It is in Purushasukta, Tenth Mandala of RV).

Hindus have also discovered the relationship between planets. Throughout Sanskrit Literature and Sangam Tamil literature Venus is linked with Rains. Thoughtout Sanskrit literature Moon is linked with plants. They used the same word SOMA for moon and Soma Rasa, the elixir of life.

In the Navagraha hymn they sing about the relationship between planets. Some are symbolic and others have literal meaning.

Konark, Odisah Sun Rath and Sun God below

Navagraha- Nine Gem Ring

Navagraha shrines inside Temples

All South Indian temples have separate shrines for the Navagrahas inside the big temple complex.

Round the sanctum/ garbhagriha of Siva temple, we find this Navagraha shrine. The sun stands in the centre and other planets are fixed round him, each in a specified direction.  This shows Hindus knew that all the plants are orbiting around sun. The planets are highly respected and scrupulously worshipped by the Hindus as they are believed to influence the destinies of human beings.

Hindus cast horoscopes when a child is born. That will show his future life. Brahmins do Sandhyavandana three times a day and the Navagraha tarpanam is done to satisfy all the nine planets. This will avoid evil influence of planets.

Hindus only worship stars and planets in the world. This explodes Aryan immigration theories. Sangam Tamil literature mentioned all the nine planets with reverence. They mentioned even the worship of Saptarishi / ursa major constellation. This shows Hindus from north to south have the same belief even 2000 years ago. This shows Greek influence has nothing to do with Hindu astrology and Hindu astronomy. Moon / crescent worship, Rohini star worship are also in Tamil and Sanskrit books. Link between the pearl and swati star is also in both the ancient scriptures.

*****

In the Amarakośa, Amarasiṃha lists numerous synonyms for the Sun (Sūrya), highlighting its attributes such as radiance, timekeeping, and its role as the source of light.

Here are the key sun names found in the Amarakosa:

Sūra (सूर): The Sun.

Aryamā (अर्यमा): One of the Adityas.

Dvādaśātmā (द्वादशात्मा): The one with twelve souls (months).

Divākara (दिवाकर): Maker of the day.

Bhāskara (भास्कर): Maker of light/radiance.

Ahaskara (अहस्कर): Creator of the day.

Bradhna (ब्रध्न): The pale/white one.

Prabhākara (प्रभाकर): Creator of light.

Vibhākara (विभाकर): Maker of light/shining.

Bhāsvān (भास्वान्): Radiant/luminous.

Vivasvān (विवस्वान्): The shining one.

Saptāśva (सप्ताश्व): Drawn by seven horses.

Haridaśva (हरिदश्व): Having green/yellow horses.

Uşnaraśmi (उष्णरश्मि): Hot-rayed.

Vikartana (विकर्तन): The cutter (associated with the cutting of the sun’s limbs).

Arka (अर्क): The reverend/radiant one.

Mārtanda (मार्तण्ड): Born from a dead egg (bird), the sun.

Mihira (मिहिर): Friend/cloud-disperser.

Aruṇa (अरुण): Dawn/ruddy.

Pūşā (पूषा): Nourisher.

Dyumaņi (द्युमणि): Jewel of the sky.

Taraņi (तरणि): Swift/remover of darkness.

Mitra (मित्र): Friend.

Citrabhānu (चित्रभानु): Having brilliant rays.

Virocana (विरोचन): Illuminator.

Viśvāvasu (विश्वावसु): One of the Gandharvas, also used for the sun.

Grahapati (ग्रहपति): Lord of the planets.

Tvişāmpati (त्विषांपति): Lord of light.

Aharpati (अहर्पति): Lord of the day.

Bhānu (भानु): Ray/sun.

Hamsa (हंस): The swan/sun.

Sahasrāmśu (सहस्रांशु): Thousand-rayed.

Savitā (सविता): The Arouser/creator.

Tapana (तपन): The Heater.

Ravi (रवि): Praised by all.

Padmākşā (पद्माक्ष): Lotus-eyed.

Tejasāmrāśi (तेजसाम्राशि): Mass of glory.

Chāyānātha (छायानाथ): Lord of shadow.

Tamistahā (तमिस्रहा): Remover of darkness.

Karmasākşi (कर्मसाक्षी): Witness to actions.

Jagaccakşus (जगच्चक्षुस्): Eye of the world.

Lokabandhu (लोकबन्धु): Friend of the world.

Trayitanu (त्रयितनु): The three-bodied (associated with Vedas).

Pradyotana (प्रद्योतन): Shining/illuminating.

Dinamani (दिनमणि): Jewel of the day.

Khadyota (खद्योत): The sky-light.

Lokabāndhava (लोकबान्धव): Relative of the world.

Ina (इन): Strong/lord.

BhaŖga (भर्ग): Refulgent/shining.

Dhāmanidhi (धामनिधि): Repository of light.

Amśumāli (अंशुमाली): Garlanded with rays.

Abjinípati (अब्जिनीपति): Lord of lotus beds.

These names are described and commented upon in the Amara-koṣa-udghāṭana of Kṣīrasvāmin, which provides explanations for the origin and aspects of these sun-related terms. (from Wisdom Library)

****

Navagraha in Asmoleon Museum, Oxford

Navagras in British Museum, London

Oxford Museum

Nine Planets in Hindu Astronomy

Hindus called heavenly bodies Grahas. So Nava Grahas/ Nine Planets include Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu and Ketu. Strictly speaking, sun is a star and moon is earth’s satellite and Rahu and Ketu are north and south lunar nodes. Four of the “nine planets” are not planets. They calculated correctly the time of the eclipses in spite of these naming.

Thesauruses like Amarakosa in Sanskrit and Diwakaram and Pingalandhai in Tamil give several names for the planets. What do we know from these names or epithets for the planets? Navagraha stotras also describe the planets, their colours and their virtues. Now and then we read some “scholarly” articles about Hindus copying Greeks or the Babylonians. Is there any truth in it?

Following are taken from our Hymns or Thesarus:

Statement 1

Mars is the son of Earth (Bhumi putra, Mahisuta)

Statement 2

Mercury is the son of Moon (Induja, Somaja)

Statement 3

Saturn is the son of Sun (Chaya putra)

Statement 4

Venus causes rains (Rain planet in Tamil)

Statement 5

Moon influences Mind; moon is born out of the mind of God

Statement 6

Sun is linked to Eyes; sun is born out of the eyes of God

Statement 7

60,000 Valakilya Rishis, seers of thumb size, travel with the sun.

Statement 8

Guru/Jupiter is the Teacher (guru) of the Devas; Venus is the Teacher of Demons. Both are Brahmins.

Statement 9

Colours of the Planets: Saturn is black, Jupiter is Golden, Mercury is Green, Mars is red and Venus is white.

Statement 10

Saturn is lame or a slow coach; Jupiter measures the years.

What is the meaning?

The above statements are rough translations of the words found in thesaurus or the hymns. What do they mean? Are they scientific?

The short answer is most of them are yet to be proved by science. Let me give some explanations

About Statements 1, 2, 3

When you say that a particular planet is the son of another heavenly body (Graha) it may mean collision between the two heavenly bodies produced X planet. So we call the X planet is the son of so and so. In short it is an astronomical event happened long ago. In astronomical terms billions of years ago.

Another meaning is one looks like another. For instance Mars looks like earth and so we call it the son of the Earth.

The third meaning is that earthly creatures are going to settle in Mars in future. So we call Mars is the son of earth.

The fourth meaning is a hidden meaning which we don’t know now. May be future scientific discoveries may prove us right. If we take soil samples from both the planets and compare it, clearer picture will emerge.

For instance there are several theories about the origin of moon. Nothing is proved beyond doubt. Some say it is a big chunk thrown out of earth because of a collision and it can be easily fit into Pacific Ocean. Some others say it was caught by earth and made a slave (satellite) of earth. These theories can be made as beautiful Puranic stories (Mythology).

About Statement 4

Venus- Rain connection may be superficial or more than that. It is in Sanskrit books as well as Sangam Tamil books. The amount of rains or the drought is forecast by the position or movement of Venus in the sky according to Tamil commentators. Science hasn’t proved it yet.

About Statements 5,6

Rig Veda says that the sun and moon are born from the eyes and mind of the Supreme God. We know for sure the connection between the moon and the mind. Lot of articles have come out in science journals linking the lunatics and the full moon. Hindus believe that doing Surya Namaskar every day in the morning will brighten one’s eyes. Science has to prove it.

“Chandrama Manaso Jata: Chakshor Suryo Ajayata” (Purushasukta in the Tenth Mandala of Rig Veda).

About Statements 8,9, 10

The colours are partly right. When we look at Mars in the sky it is blood red in the night sky.

When we say Saturn is “lame” we know that is the planet that takes longer years than other planets in completing one circle in orbit (30 years). When we say that Jupiter is the planet that measures years we mean it moves from one zodiac sign to another sign every year and completes the 12 zodiacal signs in 12 years which decides Kumba mela, Maha makam and other big festivals.

Planets-lots-of-info-Chart1

I have already written about the Valakilya Rishis (Lilliputian seers travelling with sun). I have also written about the Heavy planet Guru and its sling shot effect in sending the rockets without fuel. Guru in Sanskrit means Heavy and one who sends up (elevates) others.

My Conclusions:

1.No other language has got so many names for the planets or stars like Tamil and Sanskrit. This shows that astronomy was born here and we have not borrowed it from the Greeks or the Babylonians.

2.Brahmins in their Sandhya Vandhanam every day, worship Navagrahas in the same order like Sunday , Monday, Tuesday …….. They couldn’t have borrowed it from someone and inserted it in their Vedic ceremonies.

3.Tamil saint Sambandhar of seventh century CE sang about the nine planets in the same order. So it is Vedic and not Greek.

4. Moreover these beliefs are listed in 2000 year old scriptures in Tamil and Sanskrit from Kanyakumari to Himalayas covering the vast sub continent. So they couldn’t have borrowed it during Alexander’s time and spread it over the entire country. There were no mobile phones or telephone lines or electronic communication at that time!

5. Foreign beliefs can’t be inserted into Hindu ceremonies that easily. They have a fool proof system.

6. Purusha sukta of Rig Veda linked mind to Moon. It is scientifically proved with lots of research confirming the link between the two.

We can conclude that Hindus spread it to the whole word like their decimal system and Hindu numerals.

******

Here is the Sanskrit Hymn

Navagraha strotram

SURYA:

       Om Japa Kusuma Sankasam Kashya peyum mahadyuthim

        Thamorim sarva papaghanam pranatosmi divakaram

Chandra:

        Om Dadhi sankha thusharabham kshirodarnava sambhavam

       Namami sasinam somam shabhormakuda Bhushanam

Mangal(Mars or Chouva)

     Om Dharani Garbha Sambhootham vidyuthi kanthi samaprabham

     Kumaram Sakthi Hastham tham Mangalam Pranamamyaham

Mercury (Budha)

     Om Priyangu Kalikashyamam roopena prathimam budham

      Soumyam soumyagunopetham tham Budham pranamamyaham

Jupiter (Brihaspathi or  Vyasham)

          Om Devanam cha rishinam cha gurum kanchana sannibham

          Budhhibhootham thrilokesham tham namami brihaspatham

Venus (Shukra)

        Om Himakunda mrinalabham dythyanam paramam gurum

          Sarava sastha pravaktharam bhargavam pranamamyaham

Saturn(Shani)

        Om Neelanjana samabhasam raviputhram yamagrajam

         Chhayya marthanda sambhootham tham namami shanaiswaram

Rahu

       Om Ardha kayam mahaveeryam chandradhithiya vimardanam

         Simihika Garbha Sambhootam Tham Rahum Pranamamayaham

Kethu

       Om Palasa Pushpa sankasam tharakagraha masthakam

        Roudram roudrathmakam ghoram tham Kethum pranamamyaham

Meaning

The first verse is dedicated to Surya, the Sun God. In this verse sun is compared to Hibiscus (Japa Kusuma) with magnificence (Mahaa-dyutim). He is the descendent of Sage Kashyapa (Kashyapeeyam). Destroyer of darkness and sins (Tamorim sarva paapaghnam), He is the day-maker (Divakaram) too.   

The second hymn is on Chandra, the Moon. His colour is of Yogurt, Shell and Snow (Dadhi Shanka Tushara). He is born out of Milky Ocean at the time of Samudra Mathana (Ksheeror daarnava sambhavam) and bears the rabbit (Shashi) in Him. He is the head ornament of Shambhu (Shambhur mukuta bhushanam).

The third hymn is on Mangala, the Mars. He is Youth (Kumaram) Romans too consider Mars to be valiant youth. Born out of Earth (Dharani Garbha sambhutam) He is bright as lightening (Vidyut Kanti samaprabham).

The fourth hymn is on Budha, the Mercury. Like the bud of Priyangu (Aglaia Elaeagnoidea) He is Shyama (cloud colour) astronomers have observed Mercury to be grey. Roopene apratimam (matchless beauty). Gentle and composed nature (Sowmyam Sowmyagunopetam).

The fifth hymn is on Guru, the Jupiter. Resembling Gold (Kanchana sannibham) he is the preceptor of Deva and Rishis (Devanam cha Rishinam cha). He is embodiment of Intellect (Buddhi bhutam) and Lord of three worlds (Trilokesham).

The sixth hymn is on Sukra, the Venus. With the advantage of looking like the fibre of snow jasmine (Hima Kunda mirnalaabham), He is the teacher for Demons (Daityanam Paramam Gurum). He is the preacher of all science (Sarva shastra pravaktaaram).

The seventh hymn is on Shani, the Saturn. There is a mention of the Rings of Saturn (Neelanjana Samabhaasam) Neela is blue, Anjana is embellishment and Samabhaasam is resemble. He is (Raviputra) Son of Sun and Elder brother to Yama (Yamagrajam). He is son of Surya and Chayadevi (Chayamarthanda Sambootam) Marthanda is Sun.   

The eighth hymn is on Rahu, the north lunar node. He has half body but he is brave (Ardhakayam mahaveeram), He is the destroyer of Sun and moon (Chandraditya vimardanam) that is, while eclipse he destroys them. He is the son of Simhika, sister of Prahalada (Simhikagarbha sambootam).  

The ninth hymn is on Ketu, the south lunar node. He is red as Butea flower (Palasha Pushpa samkaasha). He is the head of all stars and planets (Tarakagriha mastakam). He is fierce and terrifying (Raudram Raudratmakam).


Gangaokonda Chozapuram Navagrahas in one stone.

To be continued………………

Tags- Navagrahas, Surya, Nine heavenly bodies, Gravity, Solar system, Hindu knowledge, Science in Navagraha Hymn, Synonyms for Sun, 29 Names

சப்தஸ்தான தலங்களின் பட்டியல், துஷ்டர்கள் பட்டியல் (Post No.15,535)

Thanjavur District Maps

Written by London Swaminathan

Post No. 15,535

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 56

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 56

துஷ்டர்கள் பட்டியல்

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் … ஆசார ஒழுக்கங்களில்

குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துஷ்டர்கள்,

மாதாபிதாவைப் பழித்த துட்டர்கள் … தாய் தந்தையரை இழிவு

செய்யும் துஷ்டர்கள்,

ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் … பசுவின் மாமிசத்துக்காக

அதைக் கொல்லும் துஷ்டர்கள்,

பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் … பிறர்

மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த

துஷ்டர்கள்,

நானா வுபாயச் சரித்ர துட்டர்கள் … பலவித தந்திரச் செயல்களைச்

செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள்,

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் … வெறியேற்றும் கள்ளைக்

குடித்த துஷ்டர்கள்,

தமியோர்சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் … தனியாய்

அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி

எடுத்த துஷ்டர்கள்,

ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள் … ஊரில் எல்லாரின்

ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துஷ்டர்கள்,

கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் … ஆரவாரத்துடன்

வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும்

துஷ்டர்கள்,

குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் … குருவின்

சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துஷ்டர்கள்,

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் … மற்றவர்க்குக் கொடுக்காமல்

பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள்,

கோமாள நாயிற் கடைப்பி றப்பினில் உழல்வாரே … இந்த

துஷ்டர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள்.

***

ராமன்அனுமன்பகீரதன் பற்றி

நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள் தசமுகன் படை கோடா

கோடிய நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே அடு போர் செய்

நெடியன் … வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மாரீசன் முதலிய அரக்கர்கள்,

ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும்

அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும்,

அங்கு அனுமானோடே எழுபது வெ(ள்)ளம் கவி சேனா

சேவித நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே …

அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப்

பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே,

சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள்

சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனர் தெளியும் மந்த்ர

கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ … மேலான

தேவர்கள், பகீரதன்* முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள்

பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே,

காமரு திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே. …

அழகிய நகராகிய திருவலஞ்சுழியில்** வாழ்பவனே, தேவர்களின்

பெருமாளே.

பகீரதன் சூரிய வம்சத்து அரசன். கங்கையை உலகிற்கு வரவழைத்தவன். வல்லக்கோட்டையில் முருகனைப் பூஜித்தவன்.

** திருவலஞ்சுழி கும்பகோணத்துக்கு அருகே உள்ளது.

***

மன்மதனின் மறுபெயர்

Manmatha and Rathi

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா …

மன்மதனைக்* கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு உபதேசம் செய்த குருநாதனே,

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப்

பெருமாளே. … திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால்

கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

* ‘சம்பரன்’ என்ற அசுரனை மன்மதன் தனது மறு பிறப்பில் கொன்றதால்,’சம்பராரி’ என்று மன்மதனுக்குப் பெயர் உண்டு.

***

கற்பக மரத்தைக் கொணர்ந்தவன்


Krishna with Rukmini and Sathyabhama

இந்த்ர தாருவை ஞால(ம்) மீதினில் கொணர்ந்த சங்க

பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் என்று வாழ் மணி மார்பன்

வீர விக்ரமன் தன் மருகோனே … இந்திரலோகத்து கற்பக

விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும் கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே,

எண் திசா முக வேலை ஞாலம் முற்று(ம்) மண்டு கந்த …

எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும்

நிறைந்து விளங்கும் கந்தனே,

தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க வென்று பேரொளி சேர்

ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர்வேலா … தாருகாசுரனும் அவன்

சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ்

கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே,

சந்த்ர சேகரி நாக பூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆல

போஜனத்தி அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு

மணி மார்பா … சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக்

கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை

உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய

முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே,

சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி

வாழ் பதிக்கு உயர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்து

அமர்ந்த பெருமாளே. … அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை

உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன்

வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான

தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே.

***

சப்தஸ்தான தலங்களின் பட்டியல்

சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு

அதில் ஓது திருப்புகழ் … தாமரையை ஒத்த உனது திருவடியைத்

தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை

தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே … மனம் குளிர

மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக.

………………………………………

திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை

ஆளு(ம்) துறைப் பதி … லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள்

நிறைந்த திருப்பழனம் [1] என்னும் தலம், உண்பதற்குரிய

திருச்சோற்றுத்துறை [2] என்ற தலம்,

திசையில் நான் மறை தேடிய முன் குடி … திசைகள் தோறும்

நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய

திருவேதிக்குடி [3] என்ற தலம்,

விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி …

பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்)

கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் [4] என்ற தலம்,

பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு

திருப்பதி பெருமாளே. … தாமரையில் வாழும் நாயகனான சூரியன்

பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி [5] என்ற தலம்,

திருநெய்த்தானம் [6], திருவையாறு [7] என்ற தலங்களுடன், ஏழு

திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே.

இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள் – தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.

***

சாங்கிய யோகம்சுகப்பிரம்ம ரிஷி பற்றி

தாங்கு நிற்சரர் சேனா நீதர் உ(ன்)ன ஆங்கு ருத்ர குமாரா

கோஷண தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா …

(ஜைன மதக் கொள்கைகளை அனுஷ்டித்துத்) தாங்கி நின்ற

குருமார்களின் கூட்டமாகிய நீசர்கள் ஆழ்ந்து நினைக்கக் காரணமாக இருந்து, அங்கு (மதுரையில் திருஞானசம்பந்தராக) வந்த சிவ குமாரனே, பேரொலியுடன் நடனம் செய்த சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய மயில் வாகனனே, உயர்ந்த வீரனே,

சாங்கிபற் சுகர் சீ நாத(ர்) ஈசுரர் இந்திரன் மெச்சிய வேலா

போதக சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா … ஆத்ம

தத்துவத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரம ரிஷி, லக்ஷ்மியின் நாதராகிய திருமால், சிவபெருமான், தேவேந்திரன் ஆகியோர் மெச்சிப் போற்றிய வேலனே, உபதேச குருவே, சாந்தமூர்த்தியே, அறிஞனே, சுவாமியே, கடப்ப மாலை அணிந்த மார்பனே,

பூங்குளத்திடை தாராவோடு அ(ன்)னம் மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலைபோன்ற விக்ரக சூரா அரி பகிரண்ட ரூபா … தாமரைப் பூ உள்ள குளத்தில் குள்ள வாத்துக்களுடன் அன்னப் பறவைகளும் மேய்ந்த வயலூர்ப் பெருமானே, பெரிய மலை போன்ற உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவனே, வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தனே,

போந்த பத்தர் பொ(ல்)லா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் தம்பிரானே. … (உன் அடியை வேண்டி) வந்த அடியார்களின் பொல்லாத பிறவியாகிய நோய் ஓடிப் போக வேண்டிய அருள் செய்தஅறிஞனே, பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வமே, தேவர்கள் தம்பிரானே.

திருப்பூந்துருத்தி தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று.

–subham—

Tags – சாங்கிய யோகம், சுகப்பிரம்ம ரிஷி, சப்தஸ்தான தலங்  கள்,  பட்டியல் , துஷ்டர்கள் , திருப்புகழ்,  அருணகிரி நாதர் – Part 56

விடைகளைப் புது விதமாகத் தரும் புதிர் கவிதை! (Post No.15,534)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,534

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

விடைகளைப் புது விதமாகத் தரும் புதிர் கவிதை!

ச. நாகராஜன்

விடையை முதலிலிருந்து படித்தும் பின்னாலிருந்து படித்தும் தரும் ஒரு புது வித சுபாஷிதம் இதோ:1

க்ஷோணோ கம் சஹ்தே கரோதி திவி கா ந்ருத்யம் ஷிவாயா: பதிர்

  பூதானாம் கமயுங்க்த ஜீவஹரணே கா  ராமசஸ்த்ரோ புரீ|

கம் ரக்ஷந்தி ச  ராகவ: பசுப்தே: கிம் வாஹனம் ப்ரோச்யதாம்

  ப்ராலோமப்ரதிலோமசாஸ்த்ரசதுரைரேகம் த்வயோருதரம் ||

இது ஒரு புதிர் கவிதை.

பூமி எதைத் தாங்குகிறது? விடை: பாரம்

சொர்க்கத்தில் யார் நடனமாடுகிறார்? விடை: ரம்பா -தேவலோகப் பெண்

உலகத்தில் உள்ள உயிர்களை எடுக்க பார்வதியின் கணவர் யாருக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்? விடை: காலம் (யமன்)

ராமரின் எதிரியான ராவணனின் நகரம் எது? விடை: லங்கா

நல்லவர்கள் யாரைக் காப்பாற்றுகின்றனர்? விடை: தீனம் (ஏழைளை)

சிவனின் வாகனம் எது? விடை: நந்தி

இந்தக் கவிதையில் உள்ள சிறப்பு என்னவெனில் இரண்டு இரண்டு கேள்விகளாக எடுத்துக் கொண்டால் விடையானது முதலிலிருந்தும் பின்னாலிலிருந்தும் படிக்கலாம்.

பா-ரம் (சம்ஸ்கிருத எழுத்துப்படியான எழுத்துக்கள்)  – திருப்பினால் வருவது ரம்பா

கா-லம் – லங்கா

தீ- னம் – நந்தி

2

பெண்ணின் பாதுகாப்பு!

பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே |

புத் ரஸ்து ஸ்தாவிரே பாவே ந ஸ்த் ரீ ஸ்வாதந்தர்யமர்ஹதி ||

குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் குழந்தையை தகப்பனார் காப்பாற்றுகிறார். யௌவனப் பருவத்தில் கணவன் காப்பாற்றுகிறான். வயதான காலத்தில் அவளது மகன்கள் காப்பாற்றுகின்றனர். ஒரு பெண்ணானவள் பாதுகாப்பின்றி ஒரு போதும் விடப்படக் கூடாது.

(ஒரு பெண் என்பவள் மிகவும் மதிப்பு வாய்ந்தவள் என்பதால் அவள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே இந்த செய்யுள் வலியுறுத்துகிறது.

3

எல்லா தேசமும் எமது தேசமே!

கோதிபார: சமர்தானாம் கிம் தூரம் வ்யவசாயினாம் |

கோ விதேஷ: சுவித்யானாம் க: பர: ப்ரியவாதினாம் ||

திறமைசாலிக்கு எந்த விஷயமும் பாரமாக இருக்காது.

கடுமையான உழைப்பவனுக்கு எந்த லட்சியமும் வெகு தூரத்தில் இருக்காது.

நன்கு படித்தவனுக்கு எந்த தேசமும் அன்னிய நாடாகாது.

இனிமையாகப் பேசுபவனுக்கு யாரும் அன்னியன் கிடையாது. (எந்த தேசமும் அவனது தேசமே!)

4

குலப்பெருமையைக் கூட்டும் மகன்!

ஏகேநாபி சுவ்ருக்ஷேண புஷ்பிதேன சுகந்திநா |

வாஸிதம் தத் வனம் சர்வம் சுபுத்ரேண குலம் யதா ||

ஒரே மரம் தான் என்றாலும் அதில் பூத்துக் குலுங்கும் மணமுள்ள மலர்களால் காடே நறுமணம் உடையதாகிறது. அதே போல நல்ல செயல்களைச் செய்யும் நற்குணமுள்ள ஒரு புத்திரன் குலம் முழுவதற்கும் நற்பெயரைத் தருகிறான்.

5

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகளின் பாட்டு!

உஷ்ட்ராணாம் ஹி விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா: |

பரஸ்பரம் ப்ரஷம்ஸந்தி அஹோ ரூபம் அஹோ த்வனி: ||

ஒட்டகத்தின் கல்யாண வைபவத்தில் கழுதைகள் பாடுகின்றன. பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு கழுதைகள் ஒட்டகங்களின் உடல் அழகை வர்ணிக்க ஒட்டகங்களோ கழுதைகளின் இனிய குரலைப் பாராட்டுகின்றன!

**

என்னை ஏமாற்றிய வாதாபி கணபதி கோயில்! (Post No.15,533)

Written by London Swaminathan

Post No. 15,533

Date uploaded in London – 25 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London Swaminathan in the Temple

மதுரையிலுள்ள ஆறு அடி உயர முக்குறுணிப் பிள்ளையார், திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களில் உள்ள குடைவரைக்  கோயில் கணபதி ஆகியோரையெல்லாம் கணக்கற்ற முறை தரிசனம் செய்த எனக்கு பல்லவ ஆர்மி கமாண்டர் பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் பாதாமியிலிருந்து (வாதாபி நகரம்) கொண்டுவந்த கணபதியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக இருந்தது அந்த ஆவல் 2026 மார்ச் ஆறாம் தேதி பூர்த்தியானது .

முத்து சுவாமி தீட்சிதரின் வாதாபி கணபதிம் பஜே பாடலை உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவரும் பாடியிருப்பதைக் கேட்டதால்  இந்த ஆர்வம் பெருகியது ஆயினும் கோயிலுக்குள் இருக்கும் சின்ன மண்டபத்தில் கணபதியைத் தரிசித்த பொது பெரிய ஏமாற்றமே மிஞ்சியது

கோயிலில் என்னையும் கணபதியைத் தவிர யாரும் இல்லை சிறிய மண்டபத்தில் இருந்த கணபதிக்கு ஆடையோ அலங்காரமோ பூ மாலையோ இல்லை! சின்ன மண்டபத்தில் இருள்  வேறு !

சிவன் சந்நிதியில் இருந்த குருக்கள் விபூதி பிரசாதம் கொடுத்தார் ; ;பிரகாரத்தில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி நடந்த அபிஷேக ஆராதனையைக் காணவந்த சுமார் ஐம்பது பேர் பிரசாதம் வாங்கிய பின்னர் நழுவிவிட்டனர்

கோவில் மிகவும் பழைய நிலையில் வறண்டு துவண்டு போய் கிடாக்கிறது கும்பாபிஷேகம் செய்வது மிகவும் அவசியம்.

கணபதியின் வீர பிரதாபங்களை விளக்கும் சில படங்கள் கோவில் சுவற்றில் வரையப்பட்டிருந்தன. அவைகளைப்  புகைப்படம் எடுத்தேன் .

திருச்செங்காட்டங்குடி கோயில்

புராண பெயர்(கள்):    மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், திருச்செங்காட்டங்குடி

பெயர்:     திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்

மூலவர்:   கணபதீஸ்வரர் சிவன், (உத்தராபதீசுவரர் பைரவர் உற்சவர்), ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்

தாயார்:    சூளிகாம்பாள், திருக்குழலம்மை

தல விருட்சம்:  ஆத்தி

தீர்த்தம்:   ஒன்பது தீர்த்தங்கள்: சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்கள்

தேவாரம் பாடியவர்கள்:    திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர்,  பரணதேவ நாயனார்,  சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர்.

திருவாரூர் – திருமருகல் சாலையில், ‘செங்காட்டங்குடி’ என்று பெயர்ப் பலகை உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று சந்தைப்பேட்டை வழியாக வந்து, திருமருகல் கால்நடை மருந்தகத்தைத் தாண்டி, பாதை வழியே  சென்றால் தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்தும் திருமருகலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன

***

இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது – கிழக்கு நோக்கியது. கோயில் வாயிலில் உள்ள திருக்குளம் சத்திய தீர்த்தமாகும். குளக்கரையில் ‘மங்களவிநாயகர்’ எழுந்தருளியுள்ளார். ராஜகோபுரத்தின் உட்பக்கம் ஆத்திமரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத் தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது.

முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி நின்ற திருக்கோலம் – கவசமிட்ட கொடிமரம் தாண்டி, உட்பிராகாரத்தில் பிட்சாடனர் கல்லில் வடித்துள்ள கோலத்தையும், சந்தனநங்கை, சீராளதேவர், திரவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் ஆகியோர் மூலத் திருமேனிகளையும், அறுபத்துமூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம்.

பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபிகணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். சத்பாஷாட மகரிஷி, அவர் பூஜித்த லிங்கம், பிரமன் வழிபட்ட இலிங்கம் வள்ளிதெய்வனானை சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனர், திரிபுராரி, பைரவர், விநாயகர் முதலிய மூலத் திருமேனிகள் மிக அருமையான வேலைப்பாடுடையவை – இம் மண்டபத்தில் உள்ளன. நடராஜ சபை உள்ளது. நவக்கிரகங்கள், பைரவர், ஸ்தம்ப முகூர்த்த விநாயகர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.

திண்டி, முண்டி எனும் துவாரபாலகர்களைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் – கணபதீச்சரமுடையார். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. உத்ராபதீஸ்வரர் உற்சவத் திருமேனி கொண்டுள்ளார். இவருக்கு நாடொறும் பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் சார்த்தப்படுகிறது. பேழையில் மரகதலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றியநிலை.) . துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசர் சந்நிதி எதிரிலுள்ளது.

கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணியில் உத்தராபதீஸ்வரர் அமுது செய்த விழா நடைபெறுகிறது. இதன் வடபாலுள்ள சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர் உத்ராபதீஸ்வரர் திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. நான்கு வீதிகளின் கோடியிலும் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழவீதியில் உள்ள விநாயகர் ‘வேண்டும் விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார். உற்சவக்காலங்களில் iஉலாவரும் நாதர் உத்தராபதியாரே.

சிறுத்தொண்டர் நாயனார் வாழ்ந்த தலம். இவர் இயற்பெயர் பரஞ்சோதி. இளம் வயதில் இவர், நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியாகப் பணிபுரிந்தார். நரசிம்ம பல்லவன் கிபி 642 ஆம் ஆண்டு சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவர்கள் தலைநகர் வாதாபியைக் (BADAMI) கைப்பற்றினான்.அப்போது பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி என்ற பெயரில். தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்

“உத்ராபதியார் ” திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது – ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், “இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்” என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் – கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், “உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்” என்றனர். சிவயோகியார், “நல்லது; அதையே ஊற்றுங்கள்” என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் – உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து – கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் – கோயில் வரலாறு.)

Read more at: https://shaivam.org/hindu-hub/temples/place/228/thiruchengattankudi-uthiraapateeswarar-temple/#gsc.tab=0

***

கன்னி மேரியா ஏசு கிறிஸ்துவ சிவா பெருமானா ?

கோவிலுக்குள் சாண்டோ ராமசாமி என்பவர் வரைந்த ஓவியம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இது என்னடா கிறிஸ்தவ ஓவியத்தை வரைந்துள்ளார் என்று பயந்து போனேன். வினோதமான ஓவியம்! அருகில் போய்ப் பார்த்தால் கிறிஸ்தவ உடைக்குள் சிவபெருமான்!

திருச்செங்காட்டங்குடி (Tiruchengattankudi) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடல் பெற்ற சிவத்தலம் . இங்குள்ள உத்தராபதீசுவரர் கோயில் (கணபதீச்சரம்) மிகவும் புகழ்பெற்றது, மேலும், இது சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகவும் விளங்குகிறது. 

திருச்செங்காட்டங்குடி சிறப்பம்சங்கள்:

  • தல வரலாறு: கஜமுகாசூரனை வதம் செய்த விநாயகர், தான் செய்த பழி நீங்க சிவனை வழிபட்ட இடமாக இது கருதப்படுகிறது. விநாயகர் அசுரனைக் கொன்றபோது சிந்திய குருதியால் நிலம் செக்கச் சிவந்திருந்ததால், ‘செங்காட்டங்குடி’ (செங்கருதி) எனப் பெயர் பெற்றது.
  • கோயில் அமைப்பு: இங்குள்ள மூலவர் உத்தராபதீசுவரர், அம்பாள் வாள்நெடுங்கண்ணி. இத்தலத்தில் விநாயகர் ‘வாதாபி கணபதி’ என்று அழைக்கப்படுகிறார்.
  • சிறுத்தொண்ட நாயனார்: அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) பிறந்த தலம். இவர் தன் மகனையே அமுதாகப் படைத்த ‘பிள்ளைக் கறி’ இட்டுச் சிவனுக்குப் படைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்.
  • இறைவன்: இத்தல இறைவன் தேவாரப் பாடல் பெற்றவராவார் (திருஞானசம்பந்தர், நாவுக்கரசர் பாடியுள்ளனர்).
  • அமைவிடம்: திருவாரூர் – திருமருகல் சாலையில், நாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ளது

***

தேவாரசப்பாடல்

“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைநாள் பயப்பூரச்

சங்காட்டந்த விர்த்தென்னைத் தவிரா நோய் தந்தானே

செங்காட்டங் குடிமேய சிறுத் தொண்டன் பணிசெய்ய

வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.” (சம்பந்தர்)

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தைப்

பேணிநினைந் தெழுவார்தம் மனத்தேமன்னி

இருந்தமணி விளக்கதனை நின்றபூமேல்

எழுந்தருளி யிருந்தானை எண்தோள்வீசி

அருந்திறல்மா நடமாடும் அம்மான்தன்னை

அங்கனகச் சுடர்க்குன்றை அன்றாலின்கீழ்த்

திருந்துமறைப் பொருள் நால்வர்க்கருள் செய்தானைச்

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. (அப்பர்) 

அஞ்சல் முகவரி –

அருள்மிகு. உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்

திருச்செங்காட்டங்குடி – திருக்கண்ணபுரம் அஞ்சல்

நாகப்பட்டினம் வட்டம் – மாவட்டம் 609 704

***

வாதாபி கணபதிம் பஜே

முத்து சுவாமி தீட்சிதர் கிருதி

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம்

வாரணாஸ்யம்  வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம் ஸேவித சரணம்

பூத பெளதிக பிரபஞ்ச பரணம்

வீத ராகிணம் வினத யோகினம்

விஸ்வ காரணம் விக்ன வாரணம்

…வாதாபி

சரணம்

புரா கும்ப ஸம்பவ  முனிவர  ப்ரபூஜிதம்

திரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத் யுபாஸிதம்

மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம்

ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம் 

நிரந்தரம் நிதல சந்த்ர கண்டம்

நிஜ வாமகர வித்ருதேக்ஷு தண்டம்

கராம்புஜ பாச பீஜாபூரம்   

கலுஷவிதூரம் பூதாஹாரம்

ஹராதி குருகுஹ தோஷித பிம்பம்

ஹம்சத்வனி பூஷித ஹேரம்பம்

… வாதாபி

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் .

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்ற

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

குரு குஹ என்பது தீக்ஷிதரின் எல்லா கிருதிகளிலும் வரும் முத்திரை .

Ganesh in Madurai Temple

vaathaapi

raagam: hamsadwani 

taaLam: aadi

Composer: Muttuswaamee Dikshitar

Language: Sanskrit 

pallavi 

vaataapi gaNapatim bajEham |

vaaraNaasyam varapradam shree ||

anupallavi

bootaadi sam sEvita caraNam |

boota bowdika prapanca baraNam ||

veetaraagiNam vinata yOginam (shree) |

vishva kaaraNam vigna vaaraNam ||

(vaathapi)

caraNam

puraa kumba sambhava munivara prapoojitam |

trikONa madya gatam |

muraari pramukaat yupaasitam |

moolaadhaara kshEtraa stitam |

paraadi sattvaari vaakaatmagam |

praNava svaroopa vakratunDam |

nirandaram niDala candra kaNDam |

nija vaamakara vidrutEkshutanDam |

karaambuja paaSa beejaapooram |

kaloosha vidhooram bootaahaaram |

haraadi guruguha tOshita bimbam |

hamsadhwani booshita hErambam ||

(vaathapi)

–subham—

Tags- திருச்செங்காட்டங்குடி,உத்தராபதீஸ்வரர், திருக்கோயில், வாதாபி கணபதி , சிறுத்தொண்டர், கணபதீச்வரம், பிள்ளைக் கறி யமுது , வாதாபி கணபதிம் பஜே