Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருவாட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் ஆகும். பரளி, கோதையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய நதிகள் இந்த இடத்தை வட்டமாகச் சூழ்ந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. மலைநாட்டுத் திருப்பதியில் வரும் 13 கோயில்களில் இருப்பது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்.
திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் மலைநாட்டுக் கோயில்களைப் பற்றி பாடியிருக்கிறார்கள். அதில் நம்மாழ்வார் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாளைக் குறித்து 11 பாடல்கள் பாடியிருக்கிறார்.
மூலவர் : ஆதிகேசவ பெருமாள்
தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
தீர்த்தம் : கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்
ஊர் : திருவாட்டாறு
மாவட்டம் : கன்னியாகுமரி
ஆதிகேசவ பெருமாள் கோயில் உலகப் புகழ்பெற்றது. இது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
இந்த ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வக் கோயிலாக விளங்கியது. புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், இந்தக் கோயிலின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டது.
மூலவர்: மூலவரான ஆதிகேசவ பெருமாள் 22 அடி நீளத்தில், கடுசர்க்கரை யோகம் என்னும் மூலிகைக் கலவையால் சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
ஆதிகேசவப் பெருமாள் மூலவராக புஜங்க சயனத்தில் மேற்கே பார்த்து வீற்றிருக்கிறார். இடது கையை தொங்கவிட்டு வலது கையில் முத்திரை காட்டி தெற்கே தலை வைத்தும் வடக்கே திருவடி காண்பித்தும் சயனத்தில் உள்ளார்.
பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் அவரை தரிசிக்க திருத்தலை திருக்கரம் திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ஐம்படையினையும் காணலாம். திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம் திருக்கரம் திருப்பாதம் இவற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும்.
இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும்.
ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, திருவட்டாறு பஸ்நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.
गौणी त्रिधा गुणभेदाद् आर्तादिभेदाद् वा । ५६ – ४.०६
उत्तरस्मादुत्तरस्मात् पूर्व पूर्वा श्रेयाय भवति । ५७ – ४.०७
अन्य मात् सौलभं भक्तौ । ५८ – ४.०८
प्रमाणान्तरस्यानपेक्षत्वात् स्वयं प्रमाणत्वात् । ५९ – ४.०९
शान्तिरूपात् परमानन्दरूपाच्च । ६० – ४.१०
लोकहानौ चिन्ता न कार्या निवेदितात्मलोकवेदत्वात् । ६१ – ४.११
न तत्सिद्धौ लोकव्यवहारो हेयः किन्तु फलत्यागः तत्साधनं च । ६२ – ४.१२
स्त्रीधननास्तिकचरित्रं न श्रवणीयम् । ६३ – ४.१३
अभिमानदम्भादिकं त्याज्यम् । ६४ – ४.१४
***
This free translation of Narada Bhakti Sutras was dictated by Swami Vivekananda in America.
Please note that it is NOT a verbatim translation of Sanskrit aphorisms.
June 1 Monday
14. He who gives up the fruits of work, he who gives up all work and the dualism of joy and misery, who gives up even the scriptures, gets that unbroken love for God;
***
June 2 Tuesday
15. He crosses this river and helps others to cross it.
****
June 3 Wednesday
CHAPTER IV
1. The nature of love is inexpressible.
June 4 Thursday
2. As the dumb man cannot express what he tastes, but his actions betray his feelings, so man cannot express this love in words, but his actions betray it.
***
June 5 Friday 3. In some rare persons it is expressed.
***
June 6 Saturday 4. Beyond all qualities, all desires, ever increasing, unbroken, the finest perception is love.
***
June 7 Sunday 5. When a men gets this love, he sees love everywhere he hears love everywhere, he talks love everywhere, he thinks love everywhere.
***
June 8 Monday
6. According to the qualities or conditions, this love manifests itself differently.
***
June 9 Tuesday 7. The qualities are: Tamas (dullness, heaviness), Rajas (restlessness, activity), Sattva (serenity, purity); and the conditions are: Ârta (afflicted), Arthârthi (wanting something), Jijnâsu (searching truth), Jnâni, (knower).
***
June 10 Wednesday 8. Of these the latter are higher than the preceding ones.
***
June 11 Thursday
9. Bhakti is the easiest way of worship.
***
June 12 Friday
10. It is its own proof and does not require any other.
***
June 13 Saturday
11. Its nature is peace and perfect bliss.
***
June 14 Sunday 12. Bhakti never seeks to injure anyone or anything not even the popular modes of worship.
***
June 15 Monday
13. Conversation about lust, or doubt of God or about one’s enemies must not be listened to.
***
June 16 Tuesday 14. Egotism, pride, etc. must be given up.
***
June 17 Wednesday 15. If those passions cannot be controlled, place them upon God, and place all your actions on Him.
***
June 18 Thursday
16. Merging the trinity of Love, Lover, and Beloved, worship God as His eternal servant, His eternal bride — thus love is to be made unto God.
***
June 19 Friday
CHAPTER V
1. That love is highest which is concentrated upon God.
***
June 20 Saturday
2. When such speak of God, their voices stick in their throats, they cry and weep; and it is they who give holy places their holiness; they make good works, good books better, because they are permeated with God.
***
June 21 Sunday 3. When a man loves God so much, his forefathers rejoice, the gods dance, and the earth gets a Master!
***
June 22 Monday 4. To such lovers there is no difference of caste, sex, knowledge, form, birth, or wealth;
***
June 23 Tuesday 5. Because they are all God’s.
***
June 24 Wednesday 6. Arguments are to be avoided;
***
June 25 Thursday 7. Because there is no end to them, and they lead to no satisfactory result.
***
June 26 Friday 8. Read books treating of this love, and do deeds which increase it.
***
June 27 Saturday
9. Giving up all desires of pleasure and pain, gain and loss, worship God day and night. Not a moment is to be spent in vain.
***
June 28 Sunday
10. Ahimsâ (non-killing), truthfulness, purity, mercy, and godliness are always to be kept.
***
June 29 Monday
11. Giving up all other thoughts, the whole mind should day and night worship God. Thus being worshipped day and night, He reveals Himself and makes His worshippers feel Him.
***
June 30 Tuesday 12. In past, present, and future, Love is greatest! Thus following the ancient sages, we have dared to preach the doctrine of Love, without fearing the jeers of the world.
–subham—
Tags- More Narada Bhakti Sutras, June 2026 Calendar, English Explanations , Swami Vivekananda
गौणी त्रिधा गुणभेदाद् आर्तादिभेदाद् वा । ५६ – ४.०६
उत्तरस्मादुत्तरस्मात् पूर्व पूर्वा श्रेयाय भवति । ५७ – ४.०७
अन्य मात् सौलभं भक्तौ । ५८ – ४.०८
प्रमाणान्तरस्यानपेक्षत्वात् स्वयं प्रमाणत्वात् । ५९ – ४.०९
शान्तिरूपात् परमानन्दरूपाच्च । ६० – ४.१०
लोकहानौ चिन्ता न कार्या निवेदितात्मलोकवेदत्वात् । ६१ – ४.११
न तत्सिद्धौ लोकव्यवहारो हेयः किन्तु फलत्यागः तत्साधनं च । ६२ – ४.१२
स्त्रीधननास्तिकचरित्रं न श्रवणीयम् । ६३ – ४.१३
अभिमानदम्भादिकं त्याज्यम् । ६४ – ४.१४
ஜூன் 1 திங்கட் கிழமை
ராஜகுமாரன் அரசனானதும், பசித்தவன் திருப்தியுற்றதும் வெறும் விஷய ஞானத்தினால் மட்டுமல்ல.
***
ஜூன் 2 செவ்வாய்க் கிழமை
எனவே, மோட்சம் அல்லது விடுதலையை விரும்புவோர், அதையே, மேலான பக்தி மார்க்கத்தையே கடைப்பிடிக்க வேண்டும். ஞானம் முடியுமிடத்தில்தான் பக்தியும் முடிகின்றது.
***
ஜூன் 3 புதன் கிழமை
பக்திக்கான சாதனங்களை ஆச்சாரியர்கள் பாடியிருப்பதை இனிவரும் சில சூத்திரங்கள் விளக்குகின்றது.
***
ஜூன் 4 வியாழக் கிழமை
எல்லா சிற்றின்பங்களையும் ( இந்திரிய சுகங்களையும் ) இந்திரிய விஷயங்களில் பற்றுதலையும் விட்டு விடுவதால் பராபக்தி கிடைக்கிறது.
***
ஜூன் 5 வெள்ளிக் கிழமை
இடைவிடாத வழிபாட்டால், பூசனையால் பக்திப் பயிற்சியில் வெற்றி கிடைக்கும்.
***
ஜூன் 6 சனிக் கிழமை
உலகில் சாதாரண விவகாரங்களில், செயல்களில் ஈடுபட்டிருக்கும் போது கூட, பகவானுடைய கல்யாண குணங்களைப் பற்றிய பேச்சுக்களை சிரவணம் செய்வதாலும் ( கேட்பதாலும் ) கீர்த்தனை செய்வதாலும் பக்தி வளரும்.
***
ஜூன் 7 ஞாயிற்றுக் கிழமை
ஆனால் பக்தியென்பது முக்கியமாகச் சான்றோர்களின், மகான்களின் கிருபையாலும், ஓரளவு இறையருளாலும்தான் கிடைக்கும்.
***
ஜூன் 8 திங்கட் கிழமை
ஆனால், மகாத்மாக்களுடைய உறவு கிடைப்பது கடினம், அணுக இயலாதது, அதன் சக்தி அல்லது விளைவோ தோல்வியற்ற நிச்சயமானது
***
ஜூன் 9 செவ்வாய்க் கிழமை
மகான்களுடைய சத்சங்கம் அல்லது உறவு இறைவனது அருளால்தான் கிட்டும்.-40
***
ஜூன் 10 புதன் கிழமை
ஏனெனில் இறைவனுக்கும், அவனது பக்தனுக்குமிடையே வேற்றுமை கிடையாது.
***
ஜூன் 11 வியாழக் கிழமை
அது மட்டுமே அடையப்படட்டும், அது மட்டுமே அடையபடட்டும்.
***
ஜூன் 12 வெள்ளிக் கிழமை
எங்கும், எப்போதும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு தீயோர் நட்பை விலக்கப்பட வேண்டும்.
***
ஜூன் 13 சனிக் கிழமை
ஏனெனில் காமம், கோபம், மோகம், நினைவு தவறுதல், நல்லறிவை இழத்தல் போன்றவை அனைத்து இழப்புக்கும் காரணமாகும்.
***
ஜூன் 14 ஞாயிற்றுக் கிழமை
இவைகள் ஆரம்பத்தில் சிற்றலைகளைப் போல எழுந்தாலும், தீயவர் நட்பால் பெருங்கடலாக மாறிவிடுகின்றது|| 45 ||
***
ஜூன் 15 திங்கட் கிழமை
மாயையைக் கடப்பது யார்? மாயையைக் கடப்பது யார்? இந்திரிய விஷயங்களில் உள்ள தொடர்பைத் துறப்பவன், ஒரு மகானுக்குத் தொண்டாற்றுபவன், இது எனதென்ற எண்ணமில்லாதவன் எவனோ அவனே மாயையை கடக்கின்றான்.
உண்மையை மறைத்து, தோன்றி மறையும் கணநேரப் புலன் இன்பங்களில் உன்னை திருப்பிவிடுவது இறைவனின் மாயை. மாயை மிக நுட்பமானது, அதைக் கண்டறிவது மிகக்கடினம். எனவே சாதகன் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மகாத்மாவின் உறவால், ஒருவன் பற்றின்மையை எய்துகிறான். அவனுக்கு வைராக்கியம் பிறக்கிறது. பற்றின்மையால் மோகத்தை வெல்லுகிறான். மோகத்தை வென்ற நிலையில் மனம் அமைதியுற்று ஒருமுனைப்பட்டு, தன் ஸ்வரூபத்தில் நிலைக்கிறது. அதன் பிறகு ஒருவன் முக்தி அல்லது விடுதலை பெறுகிறான். || 46 ||
***
ஜூன் 16 செவ்வாய்க் கிழமை
எவன் ஏகாந்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு இருக்கின்றானோ; எவன் உலக பாசங்களை வேரோடு களைகின்றானோ, எவன் முக்குணங்களையும் தாண்டிச் செல்லுகின்றானோ, எவன் சேர்ப்பதையும், காப்பதையும் விட்டு விடுகின்றானோ அவனே மாயையை கடக்கின்றான்.
***
ஜூன் 17 புதன் கிழமை
கர்ம பலனைத் துறப்பவன், கர்மங்களையே துறப்பவன் எவனோ, அவன் இருமைகளைக் கடந்து செல்கிறான்.
***
ஜூன் 18 வியாழக் கிழமை
எவன் வேதங்களையும், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளையும் கூட விட்டு விட்டு, இறைவன் பால் தூய, கலப்பற்ற, இடையறாத அன்பை எய்துகிறானோ
*** || 50 ||
ஜூன் 19 வெள்ளிக் கிழமை
அவனே மாயையைக் கடக்கின்றன், பிறவிப்பெருங்கடலையும், பிற தளைகளையும்) அவனே கடக்கிறான். மனித சமூகத்திர்கும் கடக்க உதவுகிறான்.
***
ஜூன் 20 சனிக் கிழமை
இறைவன் பால் கொள்ளும் பிரேமை அல்லது அன்பின் இயல்பு சொற் கடந்தது..
அநிர்வசனீயம் – சொற்களை கடந்த்து, வார்த்தைகளால் துல்லியமாக வர்ணிக்க முடியாதது.
***
ஜூன் 21 ஞாயிற்றுக் கிழமை
ஊமை சுவைத்த அனுபவம் போல.
***
ஜூன் 22 திங்கட் கிழமை
பக்தி எங்கோ ஓரிடத்தில், எப்போதாவது ஒரு தகுந்த பாத்திரத்தில் ஒளிவீசுகிறது.
***
ஜூன் 23 செவ்வாய்க் கிழமை
பக்தி குணங்களற்றது, விருப்பங்களற்றது, கணத்திற்குக் கணம் விரிவடைவது, இடையறாது தொடர்வது, மிக நுட்பமானது,உன் அநுபவ இயல்பானது.
குணரஹிதம் – குணங்களற்றது,
காமனாரஹிதம் – விருப்பங்களற்றது
ப்ரதிக்ஷண – ஒவ்வொரு கணமும்,
வர்திமானம் – வளருவது,
அவிச்சின்னம் – இடையறாத ஒழுக்கு,
ஸூக்ஷமாதரம் – மிக மிக நுட்பமானது,
அநுபவரூபம் – உள்ளுணர்வு இயல்புடையது.
****|| 55 ||
ஜூன் 24 புதன் கிழமை
அதை ( அந்த அன்பின் அனுபவத்தை ) பெற்றபின் பக்தன் தன் அன்புக்குரிய இறைவனை மட்டுமே காண்கிறான், அவனைப் பற்றி மட்டுமே கேட்கிறான், அவனைப் பற்றி மட்டுமே பேசுகிறான், அவனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறான்.
***
ஜூன் 25 வியாழக் கிழமை
இரண்டாம் நிலை பக்தி சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களுக்கேற்ப மூவகைப்படும் அல்லது மூவகை பக்தர்களுடைய தேவைகளையொட்டி (துன்பமுற்றவர்கள், ஞானத்தை விரும்புபவர்கள், பயனை வேண்டுபவர்கள்) அமையும்.
***
ஜூன் 26 வெள்ளிக் கிழமை
ஒவ்வொரு முந்தைய பக்தி நிலையும் அதனையடுத்து வரும் நிலையை விட, மேலான நன்மையை அடைய அதிகம் பயனுள்ளது.
முதல் நிலை சத்வ பக்தி, இரண்டாவது ரஜோ பக்தி, மூன்றாவது தமோ பக்தி.
தமஸ் என்பது இருள், செயலற்ற சோம்பல், ரஜஸ் அதிகாரம், அந்தஸ்து, இன்பத்தை விரும்பும் நிலை. சத்வமோ ஒருமை, இணக்கம், அமைதி, ஒளி. இவற்றுள் தமஸை விட ரஜஸ் சிறந்தது. ரஜஸை விட சத்வம் சிறந்தது. சத்வமே மிக மேலான நிலை. தமஸோ அனைத்தினும் கடைப்பட்ட நிலை தன் மனம் எந்த நிலையிலிருக்கிறது என்பதை சாதகன் விழிப்போடு கவனித்து, சத்சங்கம், ஜபம், கீர்த்தனை, தியானம் வழிபாடு முதலியவற்றால் சத்வத்தை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும்.
***
ஜூன் 27 சனிக் கிழமை
உய்வுக்கு பிற வழிகளைக் காட்டிலும் பக்தி கடைப்பிடிக்க எளிதானது.
***
ஜூன் 28 ஞாயிற்றுக் கிழமை
ஏனெனில் அதற்கு பக்தி வேறொரு சான்று தேவையில்லை, பக்தியே பக்திக்குச் சான்று. பக்தி நிலையில் இறைனோடு நேர்த் தொடர்பு பக்தனுக்கு கிடைத்து விடுகிறது.
*** || 60 ||
ஜூன் 29 திங்கட் கிழமை
அமைதி வடிவாகவும் பேரானந்த வடிவாகவும் அது பக்தி இருப்பதால், பக்தி வழி எளிது.
பக்தியைக் கடைப்பிடித்தால் அது உடனேயே மன அமைதியையும், பேரின்பத்தையும் அளிக்கும். வேறு சான்றுக்கு என்ன தேவை? பக்தியே மன அமைதியாகவும், பேரின்பமாகவும் அனுபவிக்கப்படுகிறது.
***
ஜூன் 30 செவ்வாய்க் கிழமை
உலகத் துன்பங்களைப்பற்றி பக்தன் கவலை கொள்வதில்லை; ஏனெனில் அவன் தன்னையும், உலகையும், வேதங்களையுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டான்
***
BONUS QUOTES
பக்தி எய்துவதற்காக ஒருவன் உலக விவகாரங்களை தன் கடமைகளை விட்டுவிடக் கூடாது. அவற்றை நிச்சயமாகச் செய்ய வேண்டும். அவற்றின் பலனை மட்டுமே இறைவனுக்கு அர்ப்பணித்து விடவேண்டும்.
***
பெண்கள், செல்வம், நாஸ்திகர், பகைவன் ஆகியோர் வரலாறு, வர்ணனைகளைக் கேட்கக் கூடாது.
***
அகந்தை, கபடம் அல்லது போலித்தனம், மற்றைய தீய பண்புகளைத் தொலைக்க வேண்டும்.
–SUBHAM—
TAGS- மேலும் 30, நாரத பக்தி சூத்திர, பொன்மொழிகள் ,2026 ஜூன் மாத, காலண்டர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள ’81 கட்ட’ வரைபடம்!
ச. நாகராஜன்
இதோ ஒரு வரைபடம். இதில் 81 கட்டங்கள் உள்ளன. உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள உதவும் கட்டங்கள் இவை.
இதில் மையமாக உள்ள கட்டத்தில் உங்கள் நீண்ட காலதிட்டமாக உள்ள லட்சியத்தைக் காணலாம். இதைச் சுற்றி எட்டு முக்கியப் பகுதிகள் அமைந்துள்ளன. இது வெற்றியை நோக்கிச் செல்லும் போது உள்ள முக்கியமான எட்டு மைல் கற்கள்.
இதில் முதலில் மையத்தில் உள்ள கட்டத்தில் நீங்கள் எதுவாக ஆக விரும்புகிறீர்கள் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் இங்கு காட்டியுள்ள எட்டு கட்டங்களில் அதை அடைய உதவும் முக்கியமான எட்டு படிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு எட்டு பகுதியிலும் நீங்கள் அடைய விரும்பும் விஷயங்கள், அதை அடைவதற்காக நீங்களே நிர்ணயித்துக் கொள்ளும் காலம், குறிக்கோள்கள் ஆகியவற்றை நிர்ணயித்துக் குறித்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் வியாபாரத்தில் அல்லது அலுவலகத்தில் வெற்றி பெற விரும்புகிறீர்கள் என்றால் இதை அடைய உதவும் நபர்களிடம் இவற்றை ஒப்படையுங்கள்; அவர்களைக் கண்காணியுங்கள்.
ஒவ்வொரு குழுவையும் அவ்வப்பொழுது மதிப்பீடு செய்யுங்கள். அடைய வேண்டிய இலக்குகளை கடிகார வரிசைப்படி கால நிர்ணயம் செய்து குறித்துக் கொள்ளூங்கள்.
தனக்குக் கொடுக்கப்பட்ட குறிக்கோளை அடைய உங்களுக்கு உதவி புரியும் நபர்களும் கூட இது போல தங்களுக்கு ஒரு வரைபடம், செயல்திட்டம் ஆகியவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒரு வணிகக் குறிக்கோளை அடைய உதவும் முக்கிய எட்டுப் பகுதிகள் என்னென்ன? இதோ பார்க்கலாம்:
1) விற்பனையை அதிகரித்தல்
2) புதிய தயாரிப்புகளைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தல்
3) குழுக்களை அமைத்தல்
4) செயல்பாடுகளில் மிக உயரிய தரத்தை அடைதல்
5) வாடிக்கையாளரின் அனுபவமும், அவர்களின் பின்னூட்டமும்
6) வெற்றிக்கான பங்காளிகளை உருவாக்கல்
7) ப்ராண்ட் ஒன்றை அமைத்து அதை சந்தையில் உயர் நிலைக்கு இட்டுச் செல்லல்
8) நிதி குறித்து ஆலோசித்து குறைந்த செலவைச் செய்து நிறைய லாபத்தை அடைதல்
விற்பனையை அதிகரித்தல் என்ற அம்சத்திற்கு விற்பனையாளரை நியமித்தல், அவர்களுக்கான பயிற்சி, அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதி, அவர்களுக்கான விற்பனை இலக்கு, அதிக விற்பனையை சாதித்தால் ஊக்கத்தொகை, வாடிக்கையாளரின் பின்னூட்டம், புதிய தேவைகளை சந்தையில் கண்டுபிடித்தல், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள், போட்டியாளரின் செயல்பாடுகளை அறிந்து வெற்றி காணல் போன்றவற்றை நிர்ணயித்து செயல்படலாம்.
இதை வணிகம், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் மட்டும் தான் செயல்படுத்த முடியும் என்பதில்லை.
உண்மையில் இந்த 81 கட்ட உத்தி விளையாட்டுத் துறையில் ஜப்பானியரான டகாஷி ஹரடா (Takashi Harada) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றி கண்ட உத்தியாகும்.
உலகின் மிகப் பெரிய நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படும் வணிக உத்தியாகவும் இது ஆகி விட்டது.
ஆகவே தனிப்பட்ட சாதனைகள், குடும்ப முன்னேற்றம் ஆகியவற்றிற்கும் இந்த 81 கட்ட வரைபடம் உதவும்.
செய்து பாருங்கள்; வெற்றி கண்டு சிறந்து விளங்குகள்!
Bhagavad Gita and Brahmins’ Big Role! Purananuru wonders-30, Tamil Encyclopedia-70 (Post.15,807)
Written by London Swaminathan
Post No. 15,807
Date uploaded in London –30 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-30, Tamil Encyclopedia-70; One Thousand Interesting Facts -Part 70
***
Item 553 Kural Echo in Puram verse 92
Here the Yaaz music and prattle of children are compared; Commentators say that shows the relationship between the poetess Avvai and chieftain Athiyaman. Valluvar’s Kural also says about this. But Valluvar says prattle of children is sweeter (only for their parents!) than instrumental music.
Kural 66
66.‘The flute is sweet, the lute is sweet’ say those who have never heard the pretty prattle of their little ones
***
Puranānūru 92, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji,
Little children’s babbling words are no match for yāzh music. Their tenses do not match, and they cannot be understood. Yet their fathers shower their graces on them.
O Nedumān Anji who has seized many enemy fortresses, their walls well-guarded! The words out of my mouth are just like that, because of your graces.
யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா, பொருள் அறிவாராயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை, என் வாய்ச் சொல்லும் அன்ன, ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்து 5 நெடுமான் அஞ்சி, நீ அருளல்மாறே.
***
Item 554 Brahmin’s Big Role
Throughout Sangam Tamil literature we see the big role played by the Brahmins. Brahmin (braahmana) poets contributed more than the poets from other castes (See Kapilar, Paranar, Nakkeerar, Rudrankannan, Perum Kausikan etc).
Here in Puram verse 93, a strange custom is referred to. Those kings who meet death by natural causes were also cut (symbolically) and then laid to rest, because they did not die in battle fields. This was done by the Brahmins who were well versed in Four Vedas. They spread the holy Darbha grass and placed the body of the kings and then did the ceremony. They recited the mantras and sent the king to heaven. Those who die in battlefield go to heaven directly according to Bhagavad Gita. Being ardent Hindus , Tamil kings also believed in it. In Puram verse 74 Chera King Kanaikkal Irumporai also mentioned it. We see Tamil kings performing Yagas like Rajasuyam, Asvamedam etc. We come across Yupam (Yaga Pole) in Purananuru poems.
Here are the Bhagavad Gita slokas for comparison
In Chapter 2 of the Bhagavad Gita, Lord Krishna explains that a warrior (Kshatriya) who fights righteously fulfils their duty. He states that if you fall in battle, you will attain heaven (swarga), and if you are victorious, you will enjoy the earthly kingdom.
Krishna highlights this path in two specific verses:
Verse 2-32: Krishna describes the battlefield as an unsought opportunity that opens the doors to heaven.
Verse 2-37: Krishna directly tells Arjuna: “If you fight, you will either be slain on the battlefield and go to the celestial abodes [swarga], or you will gain victory and enjoy the kingdom on earth. Therefore arise with determination…
“O Partha (Arjuna), happy are the Kshatriyas (warriors) to whom such fighting opportunities come unsought, opening for them the doors of the heavenly planet
If you fight, you will either be slain on the battlefield and go to the celestial abodes, or you will gain victory and enjoy the kingdom on earth. Therefore arise with determination, O son of Kunti, and be prepared to fight.2-37
***
Puranānūru 93, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji,
With tightly strapped battle drums roaring, how can there be more victories to be won? Enemy kings who came could not stand against your foot soldiers. They scattered and ran.
The kings without pride killed by you avoided what would have been done to them, had they died naturally of disease, their bodies laid out on fine green grass by Brahmins who desire righteousness, who know the four Vedas, who chant, “Go where the great warriors with splendid war anklets go, those who have died in battles with bravery as their crutch,” and forgetting any love they had for them, they would have cut their bodies with swords to escape the dishonor of being buried.
But you are a great man who fights harsh battles, shattering the battlefield around you, as noble elephants fall down, the juices of their musth flowing into their mouths where bees hum, and you have good battle wounds!
***
புறநானூறு93,பாடியவர்: ஔவையார்,பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி,திணை: வாகை,துறை: அரச வாகை திண்பிணி முரசம் இழுமென முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர் தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், 5 காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார், அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, “மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க” என 10 வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ, வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து அண்ணல் யானை அடு களத்து ஒழிய, அருஞ்சமம் ததைய நூறி, நீ பெருந்தகை விழுப்புண் பட்டமாறே. 15
****
Item 555 Elephant Simile
Here in Puram verse 94 poetess Avvai compared the king to an elephant in rut and an elephant not in rut.
This contrast is seen by us in Rudra and Siva, Uma and Kali.
Two sides of every one of us. When a father is happy the child plays on his back. When the same dad is angry, the child runs away and hides behind its mother.
***
Puranānūru 94, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji,
To us, you are sweet, O Greatness, like a huge bull elephant that relaxes in the town’s bathing port since children wash its white tusks!
But to your enemies, you are harsh, like the harshness of that elephant which is unapproachable when it is in rut!
***
புறநானூறு94,பாடியவர்: ஔவையார்,பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி,திணை: வாகை,துறை: அரச வாகை ஊர்க் குறுமாக்கள் வெண்கோடு கழாஅலின், நீர்த் துறை படியும் பெருங்களிறு போல, இனியை பெரும எமக்கே, மற்று அதன் துன் அருங்கடாஅம் போல, இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே. 5
****
Item 556 Sarcasm
Ancient Tamil poets were bold like Vedic Rishis (seers). They can go to any country; they can praise or criticise a king without fear. They were very bold and used sarcastic remarks too. Here in poem 95, we see poetess Avvai making sarcastic remarks to Chieftain Thondaiman who showed her, his brand new ,shining weapons beautifully decorated inside the armoury. Avvai said your enemy’s weapons are blunt because he fought many wars. Thondaiman had no such battle experience!
***
Puranānūru 95, Poet Avvaiyār sang to Thondaimān for Athiyamān Nedumān Anji, Thinai: Pādān, Thurai: Vāl Mangalam Here, these spears are adorned with peacock feathers and decorated with garlands, their strong, thick shafts anointed with ghee and they are in perfect condition, in this palace that is guarded.
There, they are in the small blacksmith’s shed, his sharp spears, their blade tips broken by piercing enemies. When he has plenty, he gives food. Even when he does not have enough, he shares and eats what he has, our noble king, a leader to those who do not have.
****
புறநானூறு95,பாடியவர்: ஔவையார்,பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி,திணை: பாடாண்,துறை: வாள் மங்கலம் இவ்வே பீலி அணிந்து, மாலை சூட்டிக், கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து கடி உடை வியன் நகர், அவ்வே அவ்வே, பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து, கொல் துறைக் குற்றில மாதோ, என்றும் 5 உண்டாயின் பதம் கொடுத்து, இல்லாயின் உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல் எம் கோமான், வைந்நுதி வேலே.
***
Item 557
In Puram verses 96,97,98 we see some usual praises on Athiyaman and his son Pokuttezini. He looked very handsome. Athiyaman was compared to Yama, God of death, because he kept on killing his enemies. Using white mustard seed smoke to drive away the ghosts is also mentioned.
*****
Item 558
Athiyamans came from Noth India with Sugarcane.
Once again we come across some information about the ancestors of Athiyaman. They were Ikshvakus (Sanskrit word for sugarcane people) who brought sugarcane cultivation to Tamil Nadu. They did Vedic ceremonie sand brought sugarcane cultivation to Tamil Nadu,according to Avvaiyar. Since Sugar cane is discovered in Harappa and Mohanja Daro, Ikshwakus must be older than Indus Valley people. Puranas give 140 ++ generations before Mauryas. Even if we give 20 years for a king we can place Ikshwakus around 3100 BCE corresponding to Hindu Kali Yuga. That shows Ikshwakus as part of Indus- Saraswati River Civilization.
Fifteen years ago, I posted this matter here in my two blogs Please see the attached article.
***
Puranānūru 99, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Vākai, Thurai: Arasa Vākai Like your ancestors of ancient tradition who served the gods and offered oblations to secure the gift that is hard to obtain, sugarcane for this land, and rolled the wheel of their power around this world surrounded by ocean, you inherited by right the beautiful gold warrior anklets you wear on your legs, the garland of dark palmyra, gardens with abundance of flowers, tall spears with fresh flesh, seven royal symbols, and your rightful kingship to the land.
Not satisfied with these, you advanced against seven kings with strength, their battle drums roaring, and won. Singers could not sing to you at that time. Now Paranan has sung of you and about your strong hands that held the discus that destroyed forts and strong, hostile Kōvalūr.
***
புறநானூறு99,பாடியவர்: ஔவையார்,பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி,திணை: வாகை,துறை: அரச வாகை அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், நீர் அக இருக்கை ஆழி சூட்டிய தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, ஈகை அம் கழற்கால் இரும் பனம் புடையல், 5 பூ ஆர் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல் எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு, இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய 10 அன்றும் பாடுநர்க்கு அரியை, இன்றும் பரணன் பாடினன் மற்கொல், மற்று நீ முரண் மிகு கோவலூர் நூறி நின் அரண் அடு திகிரி ஏந்திய தோளே.
***
The Sugarcane Mystery: Indus valley and the Ikshvaku
Dynasty
Written by London Swaminathan
Posted date-November 19, 2011
Ikshvaku was the founder of the Solar Dynasty. Lord Sri Rama, Bhageeratha and other great kings of the solar dynasty are well known to the Hindus. What is interesting is that we get more and more evidence to link him with the Indus Valley Civilisation, first Jain Thirthankara, Rishabadeva, the Rik Veda and a Tamil king called Adhiyamaan.
Ikshvaku was mentioned in Rik Veda. The meaning of his name is SUGARCANE. The plant sugarcane (Saccharum officinarum) is mentioned in the Atharva Veda. Ayurvedic authors Charaka and Susruta mentioned the sugarcane in many places. The word ‘sugar’ and the words for sugar in other European languages came from the Sanskrit word ‘Sharkara’. Columbus introduced the sugarcane to the Americas in 1439. Arabs took it from India to other parts of Asia around 8th century AD.
Encyclopaedias say that the people of New Guinea were the first to cultivate sugarcane around 6000 BC. But they did not extract sugar from it. They just chewed it to get the juice out of it. But King Ikshvaku was the first one to show the people of extracting sugar from the sugarcane. That is how he got this name Mr Sugarcane.
Who was Ikshvaku?
Ikshvaku was the son of Vaivasvata Manu who is equated with the King Satyavrata of Dravidian country in whose time the first avatar of Lord Vishnu- Matsyavatara (Fish incarnation) – took place. So all the facts lead us to the remotest period. Ikshvaku was more famous for his just rule rather than sugarcane juice.
Jains have another interesting story about the sugarcane. Their first Thirthankara Rishabadeva (Adi Nath) was the one who taught the people of extraction of sugarcane juice. So he was known as Ikshvaku. Another version is that he took sugarcane juice after a year of fasting. Both the Hindu and Jain Ikshvakus are probably one and the same.
Indus Valley civilisation has evidence to show that they knew sugarcane and sugar extraction. Crystallised sugar was used by the Indus Valley people. Hindu Gods and Goddesses such as Lalitha (Ref. Lalitha Sahasranamam), Kamakshi, Tripura Sundari and the Hindu Cupid Manmatha are depicted holding a sugarcane in one hand. The Sanskrit word Sharkara and these Hindu goddesses prove that sugarcane was very much Hindu and Indian.
Tamil King Adhiyamaan Nedumaan Anji
Another interesting fact about sugarcane is in Tamil literature. The word for sugarcane in Tamil is ‘Karumbu’.The grand old lady of Tamil literature Avvaiyar praised chieftain Adhiyamaan Nedumaan Anji of Thagadur (modern Dharmapuri in Tamil Nadu) for his philanthropy in Puranaanuru verse 99. Avvaiyar lived two thousand years ago. While praising him she made a passing remark. She said that the forefathers of Adhiyamaan were the one who introduced sugarcane to the people. If we get all these facts together we get a good picture of sugarcane cultivation in India. Ikshvaku or Rishabadeva was the one who taught people how to get the juice and make sugar. But if Indus valley had it by 3000 BC then we had to push the date of Ikshvaku dynasty or Rishabadeva to 3000 BC as well. Tamils also say indirectly that Adhiyamaan was related to him. The South Indian Tamils corroborate what their North Indian counterparts said about the sugarcane. The idea that it was ‘introduced’ by some king is undeniable. The sugarcane mystery pushes back the date of Ikshvaku dynasty and the Jain Thirthankara to the remotest periods of Indian history.
Other Sanskrit words for sugarcane are Mahashira, Mahapushpaka and for jaggery ‘Gur’ or ‘Gud’ (Tamil word Vellam).
Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-39; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post No.15,806)
Written by London Swaminathan
Post No. 15,806
Date uploaded in London –30 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருமூழிக்களம் (Thirumoozhikalam) , 108 வைணவத் திவ்ய தேசங்களில் 79-வது தலமாகும். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், அங்கமாலிக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர் – திருமூழிக்களத்தான்.
தாயார் – மதுரவேணி நாச்சியார்.
தீர்த்தம்: பெருங்குளம், சங்க தீர்த்தம், சிற்றாறு.
விமானம்: சௌந்தர்ய விமானம்.
***
புராணக் கதைகள்
அரித மகரிஷி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வரம் பெற்றதாகப் தலபுராணம் கூறுகிறது.
இராமாயண காலத்தில், பரதன் ஸ்ரீராமனை சந்திக்க வந்தபோது லட்சுமணர் இவ்விடத்தில் தங்கியிருந்து வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.
அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை இறைவன் அம்முனிவர்க்கு வழங்கினான். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக்களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே தொன்னெடுங்காலமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே வந்துள்ளது.
இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான்.
நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.
இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.
கருவறை வெளிப் பிராகாரத்தில் ராமன்-சீதை-அனுமன் ஆகியோர் தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.
திருவிழா:
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் .
***
போக்குவரத்து:எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது.அருகில் உள்ள ரயில் நிலையங்கள்: அங்கமாலி (Angamaly) மற்றும் ஆலுவா (Aluva). அங்கிருந்து பேருந்து வசதிகள் உள்ளன
.முகவரி: அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், கேரளா – 683572.
***
பாசுரங்கள்
1553.
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய
கனியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*.
2061.
பொன்ஆனாய்! பொழில்ஏழும் காவல் பூண்ட- புகழ்ஆனாய்!* இகழ்வாய தொண்டனேன் நான்,*
என்ஆனாய்? என்ஆனாய்? என்னல் அல்லால்* என்அறிவன் ஏழையேன்,* உலகம் ஏத்தும்-
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் மே 2026 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஏரோபிக் ஃபிட்னெஸ் என்றால் என்ன? ஏரோபிக் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஒரு அலசல் ஆய்வு!
ச. நாகராஜன்
வயதாக வயதாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் பல; நமது மூளையும் வயது ஏற ஏற மாறுகிறது. உயிரணுக்களின் அழிவினால் மூளை சற்று சிறிதாகிறது.
ஆனால் எல்லோருக்கும் இந்த மாறுதல் ஒரே மாதிரியாக அமைவதில்லை. வாழ்க்கைமுறை மாற்றத்தால் நமது மூளையில் ஏற்படும் உயிரணுக்களின் அழிவைக் கட்டுப்படுத்தலாம். உடல் பயிற்சி, உணவுத்திட்டம், சமூகத் தொடர்புகள் ஆகியவை மூலம் மூளையின் செயல் திறனை அழியாமல், குறையாமல் வைத்துக் கொள்ள முடியும்.
ஏரோபிக் ஃபிட்னெஸ் (Aerobic Fitness) என்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரோபிக் ஃபிட்னெஸ் என்றால் என்ன, அதை எப்படி மேம்படுத்துவது? ஆரோக்கியமான உடல் தகுதியே ஏரோபிக் ஃபிட்னெஸ் ஆகும்.
ஓட்டப் பயிற்சி, நீச்சல், சைக்கிள் சவாரி, நடனமாடுதல், நடைப் பயிற்சி உள்ளிட்டவை ஏரோபிக் ஃபிட்னெஸிற்கான வழிமுறைகளாகும். இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 55 வயதை அடைந்தவர்களும் அதற்கு மேற்பட்ட வயதை அடைந்தவர்களும் ஏரோபிக் ஃபிட்னெஸ் உடையவர்கள் என்றால் அவர்களது மூளையின் வெளி உறை கூடுதல் கனம் உள்ளதாக இருக்கும். (greater cortical thickness or greater thickness of the brains’s outer layer). இந்த வெளி உறை கனத்திற்கும் நினைவாற்றல் உள்ளிட்ட மூளைத் திறனுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பதை பல சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
18 வயதிலிருந்தே இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அமெரிக்க ஆய்வு ஒன்றில் 159 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் பல உண்மைகள் தெரியவந்தது. ஏரோபிக் ஃபிட்னெஸ் பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு அல்ஜெமிர், டெமின்ஷியா போன்ற மறதி நோய்கள் வருவது குறைவாகிறது.
ஏரோபிக் ஃபிட்னெஸ் என்பது ஒரு லயத்துடன் திருப்பித் திருப்பி உடலில் உள்ள பெரிய தசைப் பகுதிகளை இயக்கும் உடல் இயக்கமாகும். இந்த இயக்கமானது heart rate எனப்படும் இதய நடையை அதிகரிக்கச் செய்வதோடு உங்கள் உடல் எவ்வளவு ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது என்பதையும் தெரிவிக்கும். இதய நோய்கள், டயபடீஸ், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் குறைக்கும்.
ஏரோபிக் என்ற சொல்லுக்கே “ஆக்ஸிஜனுடன்” என்று அர்த்தமாகும். ஏரோபிக் பயிற்சிகளைச் செய்யும் போது சுவாசமானது தசைகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தி உங்களின் இயக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறது.
ஏரோபிக் பயிற்சியில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, கார்டியோ சாதனங்களை உபயோகிப்பது, நீச்சலடிப்பது உள்ளிட்டவை அடங்கும்.
நடைப்பயிற்சி : மிகவும் சுலபமான எளிய பயிற்சி இதுவே தான்.
சைக்கிள் ஓட்டுவது: ஏற்றச் சரிவுகள் உள்ள இடங்களில் சைக்கிள் ஓட்டுவது சிறப்பாகும். ஆர்த்ரிடிஸ் அல்லது மூட்டுகளைப் பாதிக்கும் நோய்களுக்கு சைக்கிள் ஓட்டுவதே சாலச் சிறந்தது நடைப்பயிற்சியில் ஏற்படுவது போல முதுகு, இடுப்பு, மூட்டுக்கால், உள்ளிட்ட பகுதிகளில் . சைக்கிள் ஓட்டுவது அழுத்தத்தைத் தராது.
கார்டியோ எக்விப்மெண்ட் : உங்கள் ஹார்ட் ரேட்டை அதிகரிக்கச் செய்யும் எந்த இயந்திர சாதனமும் இந்த வகையில் அடங்கும். படிகளில் ஏறுவதற்கான இயந்திர சாதனம், ட்ரேட்மில் உள்ளிட்ட சாதனங்கள் உடல்பயிற்சிக் கூடத்தில் (GYM) நிச்சயமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தலாம்.
நீச்சல் பயிற்சி : கை, கால்களை அசைத்து நீரில் முன்னேறிச் செல்லும் நீச்சல் பயிற்சி மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல பயிற்சி. தக்க பயிற்சியாளருடன் முறையாக நீச்சலைக் கற்று அபாயமில்லாதபடி நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஏரோபிக் பயிற்சிகளின் பலன்கள்
வலுவான எலும்புகளை உருவாக்கும்
தசை வலுவை அதிகரிக்கும். நெகிழ்வுத் தன்மையும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் உண்டாகும்
உடலை எப்போதும் பாலன்ஸுடன் வைத்திருக்க உதவும்
மனோசக்தியை அதிகரிக்கும்.
உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
பக்கவாதம், டயபடீஸ் வராது.
நுரையீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
நல்ல கொலஸ்ட்ராலான ஹெச் டி எல் அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை அளவை சரியானபடி நிர்வகிக்க உதவும்.
இந்தப் பயிற்சிகளைச் செய்யும் போது ஜாக்கிரதையாகவே செய்தல் வேண்டும். சுளுக்கு, எலும்பு முறிவு, மூட்டு வலி, தசைப்பிடிப்பு, உடல் வலி ஆகியவை ஏற்படாமல் உரிய அளவில் முறையாக பயிற்சிகளைச் செய்தல் வேண்டும்.
சரியானபடி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறோமா என்று பார்க்க ஒரு சின்ன எளிய சோதனை உண்டு. இவற்றைச் செய்யும் போது ஒருவருடன் பேச வேண்டும். பேசுவதில் கஷ்டமான உணர்வு ஏற்பட்டால் நீங்கள் அதிக அளவில் உடலை வருத்துகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாம். அதற்கேற்றபடி உங்கள் பயிற்சி அளவை மாற்றி குறைத்துக் கொள்ளலாம்.
இது பற்றி சைகாலஜி டு டே உள்ளிட்ட பத்திரிகைகள் பல கட்டுரைகளைப் பிரசுரிக்கின்றன. அவற்றையும் படித்தல் அவசியமாகும்.
Ancient Jewellery worn by Buddhists and Hindus in Pakistan 2000 years ago
Rare Hindu and Buddhist Treasures from Pakistan, Bangladesh Museums-2 (Post.15,804)
Written by London Swaminathan
Post No. 15,804
Date uploaded in London –29 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
BRAHMA IN BRASS, KARACHI MUSEUM, PAKISTAN.
IT IS FOUND IN BRAHMIN KINGDOM (INDUS VALLEY) STILL CALLED BRAHMANABAD- BRAHMANA JANAPADA
Bangladesh capital Dacca is named after Dhakeswari temple there according to Pakistani archaeologist.
There are rare statues of Brahma and Yama ad an unknown Hindu Goddes with a spear in her hand.
Bangladesh Museums in Mainamati, Rajsahi, Phaharpur, Dacca and Mahesangarh have Hindu and Buddhist treasures.
BEAUTIFUL DANCING GIRLS, SIVA, VISHNU, MOTHER AND CHILD SCULPTURES ARE VERY RARE.
****
More treasures from Five Pakistani Museums in Karachi, Taxila (Thatchaseelam), Peshawar (Purushapuram), Swat, and Lahore are featured in the book written by a Pakistani archaeologist.
They are taken from the following book:
KRISHNA KILLING KESIN/HORSE OR DHENUKA/DONKEY
RARE YAMA IN BANGALADESH MUSEUM
kALYANA sUNDARA (SIVA) IN BANGLADEH MUSEUM
VISHNU IN BANGLADESH MUSEUM
HARA-GAURI= SIVA-PARVATI
BIRTH OF BUDDHA
BEAUTIFUL DANCING GIRLS
WONDERFUL MOTHER AND CHILD
VISHNU
Title of the book- ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN
Author – DR F A KHAN
Published by ELITE PUBLISHERS LIMITED, KARACHI
-Subham—
Tags- part 2, ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN, five Pakistani museums, Hindu treasures, Bangladesh, Brahma, Yama
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கட்டுரை
மந்திரங்களுக்கு பாம்புகள் கட்டுப்படும் என்றும் மந்திரத்தால் பாம்பு விஷத்தை இறக்கலாம் என்றும் காளிதாசன், கம்பன், திருமூலர் , வேதாந்த தேசிகன், நாலடியார் , நீதிவெண்பா மூலம் அறிகிறோம் ; ஆயினும் விஞ்ஞான ரீதியில் யாரெனும் இதை நிரூபித்துக் காட்டினால் அவருக்கு கட்டாயம் ஒரு நோபல் பரிசுகொடுக்கலாம் . இந்தத் தொகுப்புரையில் ஆறு புலவர்கள் பாம்பு மந்திரம் பற்றிப் பாடியதைக் காண்போம்
1
நாலடியார்
நாலடியார் நூலின் ஏழாவது அதிகாரமான ‘சினமின்மை’யில் வரும் ஒரு புகழ்பெற்ற பாடல் :
கல்லெறிந் தன்ன கயவர்வா யின்னாச்சொல்
எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையால் தங்களை அடக்கு வார்
பாடலின் பொருள்:
கல்லால் அடிப்பது போன்ற கொடுமையான சொற்களைப் பேசும் கீழோர்களின் (கயவர்களின்) வாயிலிருந்து வரும் கடுமையான வார்த்தைகளை அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த சான்றோர்கள், பலரும் அறியும் வண்ணம் பொறுத்துக் கொள்வார்கள். மந்திரிக்கப்பட்ட திருநீற்றைத் தூவியவுடன் தன் சீற்றமும் படமும் அடங்கிப் போகும் பாம்பைப் போல நல்ல குடிப்பிறப்பு மற்றும் பண்புடையவர்கள் தங்கள் குலப் பெருமையைக் கருதி தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்.
1200 ஆண்டுகளுக்கு முன்னர் நாலடியார் நானூறு பாடிய பல புலவர்களில் யாரோ ஒரு புலவர் பாடியது இது . இதற்கெல்லாம் மூலம் அதர்வண வேத்திலுள்ள மந்திரம் ஆகும் (கட்டுரையின் பின்னால் வருகிறது).
சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்த, உலகப் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன், காளிதாசன் சொன்னதையும் பார்ப்போம் :
rAjA svatejobhiradahyatAntarbhogIva mantrauShadhiruddhavIryaH || 2-32
திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)
3
நீதி வெண்பா
துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்:
துர்ச்சனரும் பாம்புந்துலையொக்கினும் பாம்பு
துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்
எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தாலே வசம்
பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.
4
கம்பன் பாட்டு
ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்
நல் மதியார் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் கடுகிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்
பொருள்:-
அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.
(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)
5
வேதாந்த தேசிகன்அருளிய கருட மந்திரம்
வேதாந்த தேசிகர் அருளிய மிகச் சக்திவாய்ந்த கருட மந்திரங்கள் கருட தண்டகம் மற்றும் கருட பஞ்சாஷத் ஆகும். பாம்பாட்டியின் சவாலை முறியடிக்கவும், விஷ ஜந்துக்களின் பயம் நீங்கவும் தேசிகர் இந்த மந்திரங்களைப் பாடினார்.இவற்றின் சிறப்புகள் மற்றும் துதி வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:1. ஸ்ரீ கருட தண்டகம்பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் தொல்லைகள் நீங்கவும், சகல நன்மைகள் உண்டாகவும் தினமும் இதைப் பாராயணம் செய்வது வழக்கம்.
துவக்க ஸ்லோகம்:
நம: பந்நகநத்தாய வைகுண்டவஶவர்திநே |ஶ்ருதிஸிந்து ஸுதோத்பாதமந்தராய கருத்மதே ||இதன் முழுமையான தமிழ் அர்த்தம் மற்றும் சமஸ்கிருத மூல வரிகளை Stotra Nidhi பக்கத்தில் படித்துப் பயன்பெறலாம்.
கருட பஞ்சாஷத்
சுவாமி தேசிகன் கருடனைப் போற்றிப் பாடிய 52 ஸ்லோகங்கள் அடங்கிய ஸ்தோத்திரம் இதுவாகும். இதனை முறையாக ஓதினால் கருட பகவானின் தரிசனமும், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பயன்கள்:கொடிய விஷங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.எதிரிகளின் தொல்லைகள் அகலும்.மன அமைதியும், ஆரோக்கியமும் பெருகும்
ஸ்ரீ கருட தண்டக:
4 + 3 ஆக 7 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட தண்டகம்.
விஷ்ணுவின் வாகனம் கருடன். நித்யசூரிகளில் ஒருவரான கருடர் வேதத்தில் புகழப்படுபவர். அவருக்கு ருத்ரா மற்றும் சுகிர்தி என இரு மனைவிகள் உண்டு. விஷ்ணுவின் வியூக தோற்றங்களில் அவர் சங்கர்ஷண அம்சமாக கருதப்படுகிறார்.
ஒரு சமயம் சர்வதந்த்ர சுதந்த்ர பட்டம் கொண்ட வேதாந்த தேசிகரை பாம்பாட்டி ஒருவன் சவாலுக்கு அழைத்தான். தன்னால் கட்டவிழ்த்தப்படும் பாம்பை அவரால் அடக்க முடியுமா என்று கேட்டான்.
உடனடியாக தேசிகர் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு கட்டுண்டது. உடனடியாக ஒரு கருடன் வந்து அதைக் கொத்திக் கொண்டு போனது. இதைக் கண்டு திடுக்கிட்டு வியந்த பாம்பாட்டி தேசிகரிடம் மன்னித்து அருளுமாறும் அது ஒன்று தான் தன் பிழைப்புக்கான சாதனம் என்றும் வேண்ட தேசிகர் இரக்கம் கொண்டு இந்த தண்டகத்தைப் பாட கருடன் திரும்பி வந்து பாம்பைக் கீழே போட்டது.
இதில் உள்ள சந்தச் சிறப்பை சம்ஸ்கிருத ஆர்வலர்கள் வெகுவாகப் போற்றுவர்.
ஸ்ரீ கருட பஞ்சாஷத்
52 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கியது ஸ்ரீ கருட பஞ்சாஷத்.
கருடரை தியானித்த தேசிகருக்கு கருடன் தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தார்.
வர்ணகா என்று கூறப்படும் ஐந்து பகுதிகள் கொண்ட இது, கருட மந்திரத்தின் ஐந்து அக்ஷரங்களைச் சுட்டிக் காட்டுகிறது.
முதல் பகுதி பர வ்யூஹ வர்ணகம். இரண்டாவது பகுதி அம்ருதாஹரண வர்ணகம். மூன்றாவது பகுதி நாகதமன வர்ணகம். நான்காவது பகுதி பரிஷ்கார வர்ணகம். ஐந்தாவது பகுதி அத்புத வர்ணகம்.
கருடர் விஷ்ணுவுக்கு பல அம்சங்களில் சமமானவர் எனக் கூறும் தேசிகர் தனது இறுதி ஸ்லோகத்தில் பாம்பினால் ஏற்படும் உடல் மற்றும் மனோ பாதிப்புகள், வியாதிகள்,விதியின் தீய விளைவுகள் அனைத்தும் இந்த ஸ்லோகங்களைப் படிப்பதால் போய் விடும் என்று கூறி அருள்கிறார்.
6
அதர்வண வேத ரகசியங்கள்
அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:-
“சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போலநான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன்
முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன்.
இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன். . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்..
(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)
***
7
திருமூலர் கருடன் பாம்பு உவமை
கருட மந்திரம் செய்யும் அதிசயம்
கருடன் உருவங் கருதும் அளவிற்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவின் உருவாங் குறித்தஅப் போதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே–.2611
பாம்பும் கருடனும் எதிரிகள்; கருட மந்திரத்தைப் பல நாள் உருவேற்றிய மந்திர சித்தர்கள் கண்ணாற் பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும். அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும்.
At the Thought of Guru’s Form Impurities Vanish
At the thought of Garuda’s form
The serpent’s poison leaves
Its terrors lose;
Unto it,
At the thought of Guru’s form
The triple Malas leave instant;
The Jiva then Siva becomes.
கருடபாவனை வருமாறு : “ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். , உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது ஆதி தைவிக கருடன் (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.)
***
8
பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).
குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.
9
கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:
10
“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”
கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.
11
தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி, அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.
அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்
12
பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.
13
விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்
மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)
14
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-
க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்
****
ALSO READ MY OLD ARTICLE
பிராணிகள் கண்டுபிடித்த மூலிகைகள் ; வேதம் சொல்லும் அதிசயச் செய்தி (Post No.10,456)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,456
Date uploaded in London – – 17 DECEMBER 2021
–SUBHAM—
TAGS- பாம்பு மந்திரம் , ஆறு புலவர்கள் , அதிசயச் செய்திகள், திருமூலர், வேதாந்த தேசிகன் , அதர்வண வேதம், தேவாரம், , காளிதாசன், நாலடியார், நீதி வெண்பா
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருக்குறுங்குடி
இறைவன் அருள்மிகு நின்ற நம்பி (எ) குறுங்குடிநம்பி(எ) வடுக நம்பி (எ) வைஷ்ணவ நம்பி
இறைவி அருள்தரும் குறுங்குடிவல்லி
தீர்த்தம் திருப்பாற்கடல்
விமானம் பஞ்சகேதக விமானம்
வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.
‘நம்பாடுவான்’ என்கிற பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தர் திருக்குறுங்குடி இடத்தை அடுத்த மகேந்திரகிரி மலையிலே வாழ்ந்து வந்தார். அவர் யாழ் வாசிப்பதில் வல்லவர். அவர் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதம் இருந்து இத்தலத்துறையும் இறைவனை தரிசிக்க வருகிறார். வழியிலே பசியோடு இருந்த பிரம்ம இராட்சசன் ஒருவன் நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாக கூறுகிறான். நம்பாடுவான் நம்பியை தரிசித்து விட்டு வந்து பிரம்ம இராட்சசனுக்கு இறையாவதாக சொல்லி அவரிடமிருந்து விடை பெற்று வந்து, கோயிலின் வாயிலில் நின்று, நம்பியை தரிசிக்க முயலுகிற போது கோயிலின் கொடிமரம் நம்பியை மறைத்தது. ஆயினும் பக்தி சிரத்தையோடு நம்பாடுவான் பாடி வேண்ட. நம்பியும் நம்பாடுவானுக்கு மறைக்காமல் இருக்க கொடிமரத்தை நகரச் சொல்லுகிறார். அதன்படியே அதுவும் நகர்ந்து நம்பியை நம்பாடுவான் தரிசிக்க வகை செய்தது. இதனால் மெய் புளகித்த நம்பாடுவான்,
நம்பியைத் தரிசித்த நம்பாடுவான், மகிழ்ச்சியாக பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் காட்டை நோக்கி நடந்தார். அ;ப்போது வயதான பிராமணர் தோற்றத்தில் அங்கே வந்த இறைவன், நம்பாடுவானை தடுத்து நிறுத்தி, அந்தக் காட்டில் ஒரு பிரம்ம இராட்சசன் வாழ்வதாகவும், அவன் அவ்வழியே செல்வோரை தின்று விடுவதாகவும் கூறினார். நம்பாடுவான் அந்த பிராமணரிடம் முன்பு பிரம்ம இராட்சசனுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் கூறி அதை நிறைவேற்றவே தான் அந்தக் காட்டுக்குள் செல்வதாகக் கூறினார். வயதான பிராமணரின் வாதங்கள் எடுபடாமல் போயிற்று.
இராட்சசனைத் தேடி காட்டுக்குள் அலைந்த நம்பாடுவான் ஓரிடத்தில் இராட்சசனைக் கண்டு “ தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளலாம்” என்றும் கூறினார். ஆனால் பிரம்ம இராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான் நம்பியைப் பாடி பரிசில் பெற்ற பாதி பழத்தை பிரம்ம இராட்சசனுக்குக் கொடுக்க, அதை உண்ட பிரம்ம இராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம இராட்சச வடிவிலிருந்து விமோசனம் பெற்றுத், தன் முற்பிறவு வடிவமான பிராமண வடிவத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது..
திருவாலித்திருநகரில் பிறந்து தலங்கள் பல சென்றுபரந்தாமனைப் பாடிப் பரவிய திருமங்கை மன்னன் இங்கு வந்து தான் திருநாட்டிற்கு எழுந்தருளியிருக்கிறார் (முக்தியடைந்தார்).
ஸ்ரீ பாஷ்யகாரராம் ராமானுஜர், இத்தலத்திற்கு வந்தபோது இத்தலத்துறை நம்பி ஒரு சிஷ்யன் போல் வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. அவருக்கு ராமானுஜர் இட்டபெயரே வைஷ்ணவநம்பி என்பதாகும்
ராமானுஜர் திருவனந்தபுரம் சென்று அங்கே வைஷ்ணவ சம்பிரதாயங்களை நிலை நிறுத்த முயற்சித்த போது அச்செயலை அங்குள்ள நம்பூதிரிகள் தடுத்து நிறுத்த, இறைவனை வேண்டியதால் நம்பூதிரிகளிடமிருந்து ராமானுஜரை மீட்டு இத்தலத்திற்கு கருடாழ்வார் தூக்கி வந்ததாகவும் நம்பப்படுகிறது..
இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், ஸ்ரீ தெய்வநாயகன் மற்றும் ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதைந்துள்ள சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டான், அசரீரியின்படி அ;நத இடத்தை தோண்ட மேற்படி தெய்வ ரூபங்களை கிடைக்கப் பெற்றான். அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோயிலில் அம்மன்னன் பிரதிஷ்டை செய்ததாக செய்தி உலவுகிறது.
பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோயிலில் சிவனுக்கென்று தனிச் சந்நிதி உள்ளது. இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘ பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்..
“வெள்ளிறா” என்னும் சாதி மீனை தாய் கொக்கு ஊட்ட, கொக்கின் குஞ்சு உண்ணும் திருக்குறுங்குடி என்னும் இத்தலமானது எலும்பு மாலையும், புலியின் தோலையும் உடையவரான சிவபெருமானை அருகே இருக்க இடம் கொடுத்து எழுந்தருளியிருக்கின்ற திவ்விய தேசம்.
மேலும், இக்கோவிலுள் நடராஜர், சிவகாமி, சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், பிள்ளையார் ஆகிய எல்லோரும் செப்புச்சிலை வடிவில் எழுந்தருளியிருக்கின்றனர். மகேந்திரகிரிநாதருக்குப் பக்கத்திலேயே காலபைரவருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது.
முக்கியத்திருவிழா
பங்குனி பிரம்மோற்சவம்
கார்த்திகை கைசிகஏகாதசி
***
சாலை வழியாக திருநெல்வேலியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் நாங்குனேரிக்கு அருகில் அமைந்துள்ளது. திருநெல்வேலி, நாகர்கோயில், வள்ளியூர், நாங்குனேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
108 வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோயில், நான்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
அழகிய நம்பிராயர் (நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என ஐந்து வடிவங்களில் காட்சி தருகிறார்).
திருக்குறுங்குடி சிற்பங்கள்
திருக்குறுங்குடி அழகிய நம்பி கோயில், நுணுக்கமான மற்றும் பிரம்மாண்டமான சிற்பக் கலைகளுக்குப் பெயர் பெற்றது.
:யாளி மற்றும் விலங்கு சிற்பங்கள்: கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிங்கம், யானை மற்றும் பிரம்மாண்டமான யாளி சிற்பங்கள்
மகாபாரதக் கதைகள் மற்றும் பிரம்மனின் படைப்புத் தொழிலை விளக்கும் நேர்த்தியான புடைப்புச் சிற்பங்கள்
கிளியின் மீது அமர்ந்த ரதியின் நுணுக்கமான சிற்பம்,
கோபுரத்தின் உள் நுழைந்ததும் வலது பக்கம் கருடன் ஆமை, யானை ஆகியவற்றை இரு கைகளிலும் முனிவர்களுடன் கூடிய மரக்கிளையை தன் அலகிலும் வைத்துக் கொண்டு கந்தமாதன மலையை நோக்கி பறப்பது போன்ற அழகிய புடைப்புச் சிற்பம்; கருடனின் கால் அடியில் கடல் என்று குறிப்பிட நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மகர மீன் செதுக்கியிருப்பதும், கந்தமாதன மலை அருகில் அமைத்திருப்பதும் அந்த மலையில் ஒரு புலியின் வடிவம் அமைதிருப்பதும் அற்புதமானது.
வீரர்கள் போருக்குச் செல்வது போன்ற தத்ரூபமான சிற்பங்களும், பிரம்மாண்டமான தேர் போன்ற அமைப்பில் உள்ள மண்டபங்களும் பார்வையாளர்களை வியக்க வைக்கின்றன.
பாறைகளில் உயிரோட்டமான வடிவில் செதுக்கப்பட்டுள்ள தெய்வங்கள் மற்றும் புராண காலக் காட்சிகள் இக்கோயிலின் தனிச்சிறப்பு.
***
பாசுரங்கள்
813.
கரண்ட மாடு பொய்கையுள்* கரும்பனைப் பெரும்பழம்,*
புரண்டு வீழ வாளைபாய்* குறுங்குடி நெடுந்தகாய்,*
திரண்ட தோள் இரணியன்* சினங்கொள் ஆகம் ஒன்றையும்,*
இரண்டுகூறு செய்துகந்த* சிங்கம் என்பது உன்னையே (2)
1005.
ஏவினார் கலியார் நலிக என்று* என்மேல் எங்ஙனே வாழும் ஆறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன்* குறுங்குடி நெடுங் கடல் வண்ணா!*
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு* உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய்!
1470.
மான் ஏய் நோக்கு நல்லார்* மதிபோல் முகத்து உலவும்*
ஊன் ஏய் கண் வாளிக்கு* உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன்*