Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-19;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,719)

Written by London Swaminathan

Post No. 15,719

Date uploaded in London –10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 19

தில்லைத் திருச்சித்ரகூடம் (சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகம்)

சைவ வைணவ ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழும் கோவில் சிதம்பரம் நடராஜர் கோவில்; ஒரே கோவிலுக்குள் பாடல்பெற்ற வைணவ சைவ தலங்கள் இருப்பது இதன் தனிச் சிறப்பு
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம், சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே அமைந்துள்ளது.

மூலவர் – கோவிந்தராஜன், போகசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் – தேவாதிதேவன், பார்த்தஸாரதி, வீற்றிருந்த திருக்கோலம். சித்திரகூடத்துள்ளான் என்ற மற்றொரு உத்ஸவரும் உபயநாச்சிமாருடன் ஸேவை ஸாதிக்கிறார்.

தாயார் – புண்டரீகவல்லி (தனி நாச்சியார் ஸந்நிதி) .

தீர்த்தம் – புண்டரீக புஷ்கரிணி.

விமானம் – ஸாத்விக விமானம்.

ப்ரத்யக்ஷம் – தில்லைமூவாயிரவர், பாணினி, பதஞ்சலி, வ்யாக்ரபாதர்.

இந்தக் கோவில் தில்லை தீக்ஷதர்களின் நிர்வாகத்தில் உள்ளது. நடராஜப்பெருமான் உள்ளிட்ட தில்லை மூவாயிரவர் இவரைத் துதிக்க இங்கு வந்ததாகவும், தன்னெதிரே நடனமாடிய நடராஜப் பெருமானது தாண்டவத்தைப் பெருமாள் ரஸித்ததாகவும் ஐதிஹம்.

பாணினி சிவன் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தைக்கண்டு பரவசமடைந்து வியாகரணம் செய்த இடம்.. பரதமுனிவர் நாட்டிய சாஸ்த்ரத்தை ஏற்படுத்திய ஸ்தலம். கோவில் புஷ்கரிணியில் வடக்கே உள்ள புஷ்கரணியில் புஷ்கரக்ஷேத்திரத்தில் உள்ளதைப்போல் மீன்கள் தரையில் வந்து யாத்ரீகர்களிடமிருந்து பொறி கடலை வாங்கி சாப்பிடுறது.

சிதம்பரத்தில் நாட்டிய முத்திரைகள்  

பரதநாட்டியத்தின் 108 கரணங்களும் சிற்ப வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் கீழைக்கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் தெற்குச் சுவரிலும் வடக்குச் சுவரிலும்  நான்கு வரிசையாக வரிசைக்கு 8 சிற்பங்கள் என்ற வகையில் 32 + 32 = 64 சிற்பங்கள் உள்ளன. மேற்குச் சுவரில் தெற்குப் பகுதியில் 24 சிற்பங்களும், வடக்குப் பகுதியில்  20 சிற்பங்களும் உள்ளன.

தில்லை நடராஜர் பற்றி சம்பந்தர் அப்பர்

தேவாரம் பாடிய மூவரும் அதற்கு முன்னாள் மாணிக்க வாசகரும் பாடியதால் சிதம்பரம் — தமிழில்  சிற்றம்பலம் — கோயில் 1400 ஆண்டுக    க்கும் மேலான பழமை உடைத்து .

தில்லை நடராஜர் (சிதம்பரம்) கோயில் நாயன்மார்களால் போற்றப்படும் தலமாகும். திருஞானசம்பந்தர் (2 பதிகங்கள்) மற்றும் திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் (8 பதிகங்கள்) தில்லை சிவனின் நடனத்தை தேவாரத்தில் பாடி மகிழ்ந்துள்ளனர். திருநாவுக்கரசர் (அப்பர்): தில்லைப் பெருமானின் அருட்சிறப்பை, “பொன்னார் மேனியனே” போன்ற பதிகங்கள் மூலம் போற்றியுள்ளார். இறைவனின் ஆடல் கண்டு மகிழ்ந்த அவர், தில்லை சிவனின் திருவருளைப் புகழ்ந்துள்ளார்.திருஞானசம்பந்தர்: தில்லைக் கூத்தனின் நடனத்தையும், சிவனடியார்களின் சிறப்பையும் தனது பதிகங்களில் பாடியுள்ளார். இத்தலம் தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் தில்லைவனம் என்று அழைக்கப்பட்டது

தில்லையில் திருமாலின் திருக்கோலத்தைத் திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை நிற்கும். “வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றலில் அம் மாயவனே” என்பது மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

தில்லைத் திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.

     “பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

     புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த

     செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த

     தில்லைத் திருச் சித்திர கூடம்”

என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத்

திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே (730-795) .

     “தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்

     அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த……”

என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும் கணிக்கத்தக்கது.

திருச் சித்திர கூடம்

பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் இத்திருக்கோவில் மேம்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

***

கோவிந்தராஜப் பெருமாள் மீது குலசேகராழ்வார் (11 பாசுரங்கள் – பெருமாள் திருமொழி) மற்றும் திருமங்கையாழ்வார் (10 பாசுரங்கள் – பெரிய திருமொழி) ஆகியோரால் பாடப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் திருச்சித்ரகூடம் பாசுரங்கள் எனப்படும். இப்பாசுரங்கள், இத்தல எம்பெருமானை இராமபிரானாகவே பாவித்து, தில்லை வாழ் அந்தணர்கள் துதிக்கச் சேவை சாதிப்பதாகப் போற்றுகின்றன. 

குலசேகராழ்வார் (பெருமாள் திருமொழி – பதிகம் 10):

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி…” – இப்பாசுரம், இராமவதாரம் முடித்து வைகுந்தம் புகுந்த ராமனாக, தில்லைத் திருச்சித்ரகூடத்தில் வீற்றிருக்கும் கோவிந்தராஜனைப் போற்றுகிறது.

தில்லைநகர் திருச்சித்ர கூடந்தன்னுள்அந்தணர்களொரு மூவாயிரவரேத்த…” – தில்லை அந்தணர்கள் தினமும் வணங்கும் எம்பெருமானாகச் சித்தரிக்கிறார்.

குலசேகராழ்வார் இத்தலப் பெருமாளை இராமாயணக் கதையோடு தொடர்புபடுத்தி, அனுமனுடன் காட்சி தரும் சித்திரகூட ராமராகவே பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி):

ஊன் வாட நீண்ட நாள்… தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே” – கடினமான தவங்கள் செய்ய வேண்டாம், தில்லை திருச்சித்ரகூடம் சென்று கோவிந்தராஜனை நினைத்தாலே போதும் என, இத்தலத்தின் சிறப்பை எடுத்துரைக்கும் பாசுரம்.

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்…” – வராஹ அவதாரத்தில் பூமி தேவியை மீட்ட பெருமாள் தில்லைத் திருச்சித்ரகூடத்தில் இருப்பதாகப் பாடுகிறார்.

***

இரண்டாம் ஆயிரம்

திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி

தில்லைத் திருச்சித்திரகூடம் 1

1157    ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு

      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா-

      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே

      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்

தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (1)

1158    காயோடு நீடு கனி உண்டு வீசு

      கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் ஐந்து

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா

      -திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்

      மறையாளர் நாளும் முறையால் வளர்த்த

தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (2)

1159    வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்

      விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்

      அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர

பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து

      படை மன்னவன் பல்லவர்- கோன் பணிந்த

செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (3)

1160    அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்

      அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த

பெருமான் திருநாமம் பிதற்றி நும்-தம்

      பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்

கரு மா கடலுள் கிடந்தான் உவந்து

      கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல்

திருமால் திருமங்கையொடு ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (4)

1161    கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய

      குல மன்னர் அங்கம் மழுவில் துணிய

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்

      தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்

பூ-மங்கை தங்கி புல-மங்கை மன்னி

      புகழ்-மங்கை எங்கும் திகழ புகழ் சேர்

சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே (5)

1162    நெய் வாய் அழல் அம்பு துரந்து முந்நீர்

      துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து இலங்கு

மை ஆர் மணிவண்ணனை எண்ணி நும்-தம்

      மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்

அவ் வாய் இள மங்கையர் பேசவும் தான்

      அரு மா மறை அந்தணர் சிந்தை புக

செவ் வாய்க் கிளி நான்மறை பாடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (6)

1163    மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து

      மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த

தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு

      திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்

      கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்

தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே            (7)

1164    மா வாயின் அங்கம் மதியாது கீறி

      மழை மா முது குன்று எடுத்து ஆயர்-தங்கள்

கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்

      குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்

மூவாயிரம் நான்மறையாளர் நாளும்

      முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்

தேவாதிதேவன் திகழ்கின்ற தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (8)

1165    செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்

      சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்

அரு நீல பாவம் அகல புகழ் சேர்

      அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்

பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து எங்கும்

      வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள

திரு நீலம் நின்று திகழ்கின்ற தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே             (9)

1166    சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய தில்லைத்

      திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு

ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப

      அலை நீர் உலகுக்கு அருளே புரியும்

கார் ஆர் புயல் கைக் கலிகன்றி குன்றா

      ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்

பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்

      பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே             (10)

******

741.  

அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*  அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*

வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*  விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்*

செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்*   தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை*  என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)      

742.  

வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி*  வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி*

மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து*  வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்*

செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*

அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*  அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே. 

743.  

செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்*  சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி* 

வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு*  வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*

தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*  இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*

744.  

தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்*  தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்*

பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு*  பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*

சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற*  இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே  

745.  

வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று*  வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*

கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*  கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*

சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*

தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்*  திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.

746.  

தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*  தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*

வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*  வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*

சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*  ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே*

747.  

குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*  குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*

எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*  இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*

திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*  அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*

748.  

அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*  அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்*

தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*  உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*

செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*  பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*

749.  

செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று*  செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த

நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*  தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்

திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்

உறைவானை மறவாத உள்ளந்தன்னை*  உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே

750.  

அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*  அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*

வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*  விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி*

சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*

என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*  இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே* 

751.  

தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*  திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*

எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*  அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*

கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*  கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*

நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*  நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே* 

1158.  

ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு*  உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா*  தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே*  கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்*

தேன் ஆட மாடக் கொடி ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே. (2)

1159.  

காயோடு நீடு கனி உண்டு வீசு*  கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம்*

ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா*  திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர்*  மறையாளர் நாளும் முறையால் வளர்த்த*

தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்றுசேர்மின்களே. 

1160.  

வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய்*  விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த*

வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்*  அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர*

பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து*  படை மன்னவன் பல்லவர்கோன் பணிந்த*

செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த*   தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1161.  

அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய்*  அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*

பெருமான் திருநாமம் பிதற்றி*  நும்தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*

கரு மா கடலுள் கிடந்தான் உவந்து*  கவை நா அரவின்அணைப் பள்ளியின்மேல்*

திருமால் திருமங்கையொடு ஆடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1162.  

கோ மங்க வங்கக் கடல் வையம் உய்ய*  குல மன்னர் அங்கம் மழுவில் துணிய*

தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்*  தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*

பூமங்கை தங்கி புலமங்கை மன்னி*  புகழ்மங்கை எங்கும் திகழ*

புகழ் சேர் சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1163.  

நெய் வாய் அழல் அம்பு துரந்து*  முந்நீர் துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து*

இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி*  நும்தம் மனத்தே இருத்தும்படி வாழவல்லீர்*

அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்*  அரு மா மறை அந்தணர் சிந்தை புக*

செவ் வாய்க் கிளி நான்மறை பாடு*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1164.  

மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து*  மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த*

தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு*  திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்*

கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்*  கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள்*

தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1165.  

மா வாயின் அங்கம் மதியாது கீறி*  மழை மா முது குன்று எடுத்து*

ஆயர்தங்கள் கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன்*  குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர்*

மூவாயிரம் நான்மறையாளர்*  நாளும் முறையால் வணங்க அணங்கு ஆய சோதித்*

தேவாதிதேவன் திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1166.  

செரு நீல வேல் கண் மடவார்திறத்துச்*  சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்*

அரு நீல பாவம் அகல புகழ் சேர்*  அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்*

பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து*  எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*

திரு நீலம் நின்று திகழ்கின்ற*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.

1167.  

சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு*

ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப*  அலை நீர் உலகுக்கு அருளே புரியும்*

கார் ஆர் புயல் கைக் கலிகன்றி*  குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*

பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்*  பல காலம் நிற்கும்படி வாழ்வர் தாமே. (2)

1168.  

வாட மருது இடை போகி*  மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு*

ஆடல் நல் மா உடைத்து*  ஆயர் ஆநிரைக்கு அன்று இடர் தீர்ப்பான்*

கூடிய மா மழை காத்த*  கூத்தன் என வருகின்றான்*

சேடு உயர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே. (2) 

1169.  

பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட*  பிள்ளை பரிசு இது என்றால்*

மா நில மா மகள்*  மாதர் கேள்வன் இவன் என்றும்*

வண்டு உண் பூமகள் நாயகன் என்றும்*  புலன் கெழு கோவியர் பாடித்*

தே மலர் தூவ வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.  

1170.  

பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று*  ஆய்ச்சியர் கூடி இழிப்ப*

எண் திசையோரும் வணங்க*  இணை மருது ஊடு நடந்திட்டு*

அண்டரும் வானத்தவரும்*  ஆயிரம் நாமங்களோடு*

திண் திறல் பாட வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே. 

1171.  

வளைக் கை நெடுங்கண் மடவார்*  ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*

தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தண் தடம் புக்கு அண்டர் காண*

முளைத்த எயிற்று அழல் நாகத்து*  உச்சியில் நின்று அது வாடத்*

திளைத்து அமர் செய்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1172.  

பருவக் கரு முகில் ஒத்து*  முத்து உடை மா கடல் ஒத்து*

அருவித் திரள் திகழ்கின்ற*  ஆயிரம் பொன்மலை ஒத்து*

உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து*  இன மால் விடை செற்று*

தெருவில் திளைத்து வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1173.  

எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க*  வரு மழை காப்பான்*

உய்யப் பரு வரை தாங்கி*  ஆநிரை காத்தான் என்று ஏத்தி*

வையத்து எவரும் வணங்க*  அணங்கு எழு மா மலை போல*

தெய்வப் புள் ஏறி வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே .(2) 

1174.  

ஆவர் இவை செய்து அறிவார்?*  அஞ்சன மா மலை போல*

மேவு சினத்து அடல் வேழம்*  வீழ முனிந்து*

அழகு ஆய காவி மலர் நெடுங் கண்ணார்*  கை தொழ வீதி வருவான்*

தேவர் வணங்கு தண் தில்லைச்*  சித்திரகூடத்து உள்ளானே.

1175.  

பொங்கி அமரில் ஒருகால்*  பொன்பெயரோனை வெருவ*

அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு*  ஆயிரம் தோள் எழுந்து ஆட*

பைங் கண் இரண்டு எரி கான்ற*  நீண்ட எயிற்றொடு பேழ் வாய்ச்*

சிங்க உருவின் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1176.  

கரு முகில் போல்வது ஓர் மேனி*  கையன ஆழியும் சங்கும்*

பெரு விறல் வானவர் சூழ*  ஏழ் உலகும் தொழுது ஏத்த*

ஒரு மகள் ஆயர் மடந்தை*  ஒருத்தி நிலமகள்*

மற்றைத் திருமகளோடும் வருவான்*  சித்திரகூடத்து உள்ளானே.

1177.  

தேன் அமர் பூம் பொழில் தில்லைச்*  சித்திரகூடம் அமர்ந்த*

வானவர் தங்கள் பிரானை*  மங்கையர் கோன்மருவார்*

ஊன்அமர் வேல் கலிகன்றி*  ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*

தான் இவை கற்று வல்லார்மேல்*  சாரா தீவினை தானே.  (2)

—Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-19;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

பரமபூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் (Post.15,718)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,718

Date uploaded in London – 10 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சப்தரிஷிகள் வரிசையில் இரண்டாவது ரிஷி! 

பரமபூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் – பன்முகம் கொண்ட பண்பாளர் – சப்தரிஷிகளின் வரிசையில் இரண்டாவது ரிஷி! 

ச. நாகராஜன் 

இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்! 

அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.

அவரைத் தொடர்ந்து சங்கப் பொறுப்பை ஏற்று அதை பாரத தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இமயம் முதல் குமரி வரை பரவ வழி வகுத்தவர் பரமபூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர்.

இவரது வாழ்க்கைச் சரிதம் அற்புதமான வியக்க வைக்கும் ஒரு சரித்திரமாகும்.

 மஹாராஷ்ட்ரத்தில் கொங்கன் பகுதியில் உள்ள ஒரு கிராமம் கோல்வாலி கிராமம். இந்தக் கிராமத்தை பூர்வீமாகக் கொண்ட குடும்பத்தினர் கோல்வல்கர் என்று அழைக்கப்பட்டனர்.

காலப்போக்கில் இந்தக் குடும்பத்தினர் பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.

இந்தக் குடும்பத்தின் வழி வந்த ஶ்ரீ சதாசிவ கோல்வல்கருக்கும் லட்சுமிபாய் அம்மையாருக்கும் நாக்பூரில் உள்ள ராய்கர் வீட்டில் பால்குண வருடம் விஜய ஏகாதசி தினத்தன்று – 1906ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி ஶ்ரீ குருஜி பிறந்தார்.

இவருக்கு மாதவன் என்ற பெயரிடப்பட்டது.

இளமையிலேயே கூரிய புத்தியையும் நினைவாற்றலையும் கொண்ட இவர் அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

1924ம் ஆண்டு ஹிந்து பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்றார்.

பின்னர் எம் எஸ் சி விலங்கியலில் தேர்ச்சி பெற்று சிறிது காலம் சென்னை மீன் அருங்காட்சியகத்தில் பணி புரிந்தார்.

இயல்பாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர் ராமகிருஷ்ண மடத்தில் 1937ம் வருடம் ஜனவரி 13ம் நாளன்று ஸ்வாமி அகண்டானந்தரிடம் தீட்சை பெற்றார்.

 1937ல் குரு அகண்டானந்தர் மறையவே சமூகப் பணியாற்ற நாக்பூர் திரும்பினார் குருஜி.

அங்கு சங்க ஸ்தாபகரான டாக்டர்ஜி இவரது அபாரமான பல்துறை அறிவையும், தேசத்தின் மீதுள்ள ஈடுபாட்டையும் கண்டு மகிழ்ந்து இவரை சங்கத்தில் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தினார்.

இவரது நுண்ணறிவையும் சங்க வளர்ச்சிக்கு இவர் ஆற்றும் பணியையும் கண்ட டாக்டர்ஜி தனக்குப் பிறகு இவரே சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வல்லவர் என்று தீர்மானித்தார்.

1940ல் ஜூன் 21ம் நாளன்று டாக்டர்ஜி மறையவே 1940 ஜூலை 5ம் தேதி முதல் குருஜி சங்கத்தின் சர்சங்கசாலக்காக ஆனார்.

நாடு முழுவதும் இடைவிடாத பயணத்தை மேற்கொண்டு அற்புதமாக உரையாற்றி ஸ்வயம்சேவகர்களை உற்சாகப்படுத்தினார்.

தனது வாழ்க்கைமுறையாலேயே அனைவருக்கும் உத்வேகம் ஊட்டிய குருஜி தினமும் காலை 4-30 மணிக்கு எழுந்து சூரியநமஸ்காரம், உடல்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ரயில் வண்டியே எனது உறைவிடம் என்று கூறிய குருஜியின் பயணங்கள் சொல்லுக்கு அடங்காதவை.

காந்திஜி கொலையுண்டவுடன் சங்கத்தின் மீது வீண் பழி சுமத்தி சங்கம் தடை செய்யப்பட்டது. 1948 பிப்ரவரி முதல் தேதி அரசு அவரைக் கைது செய்தது. நாடு முழுவதும் சங்கத்தின் மீதான தடையை நீக்க வற்புறுத்தி அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 1949 ஜூலை 12ம் தேதி சங்கத்தின் மீதான தடை நீங்கியது. குருஜி ஜூலை 13ம் தேதி பேதுல் சிறையிலிருந்து விடுதலையானார்.

தொடர்ந்து விஸ்வஹிந்து பரிஷத், விவேகானந்த கேந்திரம், உட்பட்ட பல்வேறு அமைப்புகளை நிறுவ குருஜி ஊக்கமளித்தார். பாகிஸ்தான் போரின் போது பிரதமர் லால்பகாதூர் சாஸ்திரி அழைப்பின் பேரில் தேசத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.

33 ஆண்டுகள் இடைவிடாப் பயணம் செய்து ஆர் எஸ் எஸ்ஸை பெரும் தேசிய சக்தியாக உருவாக்கிய இவரிடம் இவரது வாழ்க்கையின் மையக் கருத்தைக் கேட்ட போது இவர் கூறியது நான்கு வார்த்தைகளே தான் : ‘மை நஹி து ஹி’ (நான் அல்ல நீயே என்பது இதன் அர்த்தம்)
1973ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி அவர் உடலை உகுத்தார். ஜூன் 6, நாள் மாலை அவரது இறுதிச் சடங்கில் நாடு முழுவதிலுமிருந்து வந்த பெரியோர்களும் ஸ்வயம்சேவகர்களும் குழுமி அவருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினர். 

இந்த நூலில் அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது. அத்துடன் ஏராளமான சிறு சிறு சம்பவங்களும் சுவைபடத் தரப்பட்டுள்ளன ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.

இந்த நூலைப் படிப்போர் குருஜியின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.

நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.

 சப்தரிஷிகளில் முதல் இரண்டு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த ஐந்து ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.

 விஜயபாரதம்  பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது.

நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

**

Damirica and Limirica in South India (Post No.15,717)

Subhashini of Tamil Heritage Foundation has posted (in Facebook) the Map of Damirica as displayed in a museum in Vienna, Capital of Austria.

Written by London Swaminathan

Post No. 15,717

Date uploaded in London –9 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Periplus of the Erythraean Sea- Around 60 CE.

Claudius Ptolemy- 150 CE (Geographer and astronomer)

***

Interesting references to South India, particularly Tamil Nadu, are available from Roman and Greek writers of early centuries. K A Nilakanta Sastri and others have done some research and published their works long ago. But nothing is proved beyond doubt. So, we must do more research with the help of newly discovered inscriptions, Sanskrit works and Linguistics. For instance, world famous poet Kalidas mentioned Uragapura under Pandya rule. Some interpreted it as Nagappattinam, Uraiyur and Madurai. According to my research it fits very well with the name of Madurai.  Like Nagapattinam , Madurai is also called Snake city. In Tamil it is Aalavaay. Gnana Sambandar of Pallava- Pandya period (650 CE) used the word snake/ aalavaay city to mention Madurai.

The Kalinga king Kharavela makes two interesting statements regarding the Far South in his Hathikhumba cave inscription:

1

“and (he) thoroughly breaks up the confederacy of Tramira (Dramira) countries of one hundred and thirteen years which has been source of danger to (his) country (Janapada)”

2

“and a wonderful and marvellous enclosure of stockade for driving in the elephants (he)……..and horses, elephants, jewels and rubies as well as numerous pearls in hundreds (he) causes to be brought here from the Pandya king.

But is Sangam Tamil literature there is no reference to the 113 year joint front of the Tamil Kings. We have one reference to Rajasuya Yagam performed by a Choza King which was attended by the other two, Pandya and Chera kings. But we can’t place it in the first or second century BCE.

The second statement is also not clear. We don’t know whether he defeated the Pandya king or got all these as presents from the Pandya king. Pearls of Pandya kingdom were mentioned in the Arthasastra of Kautilya as Pandya Kavaatam.

****

Who is Kharavela?

Kharavela was the emperor of Kalinga (present-day eastern coast of India) in the 2nd or 1st century BC. The primary source for Kharavela is his rock-cut Hathigumpha inscription. The inscription is undated, only four of its 17 lines are completely legible, others unclear, variously interpreted and disputed by scholars. The inscription is written in Brahmi script with Jainism-related phrases recites a year by year record of his reign. He was a follower of Jainism. Much of the available information about Kharavela comes from the undated, much damaged Hathigumpha inscription and several minor inscriptions found in the Udayagiri and Khandagiri Caves in present-day Odisha. According to the Hathigumpha inscription, Kharavela spent his first 24 years on education and sports, a period when he mastered the fields of writing, coinage, accounting, administration and procedures of law. He was the prince to the throne (yuvaraja) at 16, and crowned King of Kalinga at age 24. The Hathigumpha inscription details his first 13 years of his reign.

Kharavela is known for his military campaigns in Northern and Southern India. He has led victorious expeditions against Magadha, Satavahana and Tamil confederacy (lead by Pandya dynasty) and other kingdoms such as Rashtrikas and Bhojakas of Berar and Maharastra regions during his reign. He was not only a great military general but also a good administrator. He undertook public works for the benefit of his people and in order to please them he remitted taxes and provided them with the occasions for merrymakings. The Hathigumpha inscription also mentions his public works such as repairing of the gates and buildings of his capital Kalinganagara, which was destroyed by a storm. These repairs and some other public works in the same year cost him thirty-five hundred thousand coins.

****

Periplus of the Erythraean Sea says, “from Comari toward the south this region extends to Colchi (Korkai), where the pearl fisheries are; (they were worked by the condemned criminals); and it belongs to the Pandyan kingdom”.

K A N Sastri pointed out that Pan Kou, a very early Chinese writer, mentioned commercial contacts between China and South India in Han period, beginning from the second century BCE.

Strabo said that a Pandyan embassy was sent to the court of Roman emperor Augustus. It is stated that the embassy was accompanied by an Indian sophist who committed himself to the flames at Athens, like Kalanos, who had exhibited a similar spectacle in the presence of Alexander.

Reference to the western side of India is available from the Periplus of the Erythraean Sea, composed by an anonymous sailor between 60 and 80 CE. He divides peninsular India into two divisions : Dachinebades (Dakshinapatha) and Damirika (Tamilakam) , country of the Tamils. Damirika on the other hand was parcelled into three kingdoms, Cerobothra, the Pandian kingdom and the coast country.

He gives the following place names:

Naura (identified with Cannanore)

Tyndis (Ponnani)

Muziris (Cranganore)

Nelcynda (near Kottayam).

He adds Muziris abounds in ships with cargoes from Arabia and by the Greeks .

Nelcynda is part of Pandian Kingdom.

According to Sangam literature Chera king Imayavaramban Neduncheral Adan (155 CE) captured the Yavanas, poured oil on their heads, bound their hands behind them and did not release them until they paid him a huge ransom.

***

Choza KIngdom

According to Periplus it extended toward north from Colchi (Korkai). Places mentioned by him are as follows:

Argaru- Uraiyur;

Camara- Kaveripatnam or Puhar;

Poduca – Puducherry?

Sopatma – Markanam

Chryse- Burma?

***

Limirica

Ptolemy in his Geography mentions Limirica, identical with Damirica of the Periplus and speaks of the following political units:

The Kingdom of Karorura ruled by Kerobothra (Kerala Putra)

Pounatta ( S W Mysore)

The Kingdom of Aioi, with capital at Kothiara, usually located at south Travancore

The Kingdom of Pandioi with capital at Madura .

The Kingdom of Kareoi, possibly in the valley of the river Tamraparni

The Kingdom of Batoi, with capital at Nikama

The Kingdom of Orthoura, ruled by Soringoi possibly Choza country

The Kingdom of Malanga ruled by Basaranagas.

The Kingdom of Sora ruled by Arkatos .

From the above account, it is clear at the time of Ptolemy, the far south was divided into at least eight smaller kingdoms, leaving out of course Pounatta the political status of which is not clearly stated.

There is another reference to the mountains,

Between Mount Bettigo and Adeisathros  are the Sorai nomads , with these towns

Sangamarta (Sangam Madurai?)

Sora , the capital of Arkatos .

The Mount Bettigo is the same as tamil Pothikai, i.e. the Malaya ranges, while the Adeisthros refers to the Sahyadri or the Western Ghats.

***

Some guesses

Sora – Cola/ Choza

Arkatos – Arcot region

Arourarnoi –  Aruanadu

Though great scholars like K A Nilakanta Sastri have written about all these things after deep research, there is further scope for new research with the help of newly found inscriptions.

***

My comments

Look at the corruption of Tamil names by Greek and Roman writers. Even 300 years ago the English, French and the Dutch corrupted our names which are being corrected now by the rulers.

Damirica= Tamilaka is correct, because R=L changes are in Sanskrit Grammar.

But Limirica raises some questions. How D is Changed to L is a question. Indian linguistics show D =L changes through out the country in middle letters but not in initial letters.

My research shows

Cola= Coda in Asoka inscriptions; Coro in English; Coromandel coast = Choza Mandala Katarkarai

Ramadan= Ramalan = Ramzan (Muslim festival)

Utkala = Orissa= Odisah

Initial  L=D letter change is not known. Even Lemuria was used just a few hundreds years ago to mention the Land of Lemurs (animals found in Madagascar)

Even in Madagascar we see D=L change only in the middle letter.

The island country Madagascar is now called Malagasy  (D=L).

Map of Madagascar near Africa

–subham-

Tags – Damirica, Limirica, Ptolemy, Periplus, Kharavela

தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் – 2; பாம்பாட்டியும் குரங்காட்டியும்; காளையும் யானையும் (Post.15,716)

Written by London Swaminathan

Post No. 15,716

Date uploaded in London –9 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 2

From Darasuram- Bull Elephant; picture by London swaminathan

***

Snake Charmer and Monkey Charmer ; Location- Sri Vaikundam Temple; painted by Artist Silpi

பாம்புப்பிடார்களும் பாம்பாட்டிகளும் இல்லாத பெரிய ஊரோ கிராமமோ இந்தியாவில் இல்லை; ஏனெனில் உலகில் அதிகமான எண்ணிக்கை உடைய பாம்புகளும் மிக அதிக விஷமுள்ள பாம்புகளும் இருப்பது இந்தியாவில்தான்; மேலும் குழந்தை பிறக்காத பெண்கள்,  நாகர் சிலைகளை கோவிலிலோ புனித இடங்களிலோ மரத்துக்கு அடியில் நிறுவுவதும் இந்தியாவில்தான் .

பாம்பாட்டியும் குரங்காட்டியும் என்ற தலைப்பில் ஓவியல் சில்பி விகடன் பிரசுரம் வெளியிட்ட தென்னாட்டுச் செல்வங்கள் என்ற நூலில் ஸ்ரீ வைகுண்டம் கள்ளப்பிரான் கோயிலில் உள்ள சிற்பங்களைத் தத்ரூபமாக வரைந்து நமக்கு அளித்துள்ளார் .

இது தாராசுரம் , திருபுவனம் கோவில்களில் காணப்படுகிறது இரண்டு இடங்களிலும் சர்ப்ப மூர்த்தியும் இருப்பதால் இரண்டும் ஒரே சிற்பியின் படைப்புகள்தான் என்று ஓவியர் சில்பி கருதுகிறார்.   

***

ரிஷபமும் யானையும்

Bull and Elephant with one head ; Location- Tiru Bhuvanam and Darasuram Temple; painted by Artist Silpi.

ஒரே உருவத்தில் காளையின் முகத்தையும் யானையின் முகத்தையும் இணைத்துச் செதுக்கியுள்ள சிறங்களைப் பல கோவில்களில் காணலாம் ; நானே இதை பல கோவில்களில் கண்டுள்ளேன் ; தாராசுரம் கோவிலில் புகைப்படமும் எடுத்தேன்.

இந்த உருவத்தில் ஒரு புறத்தைக் கைகளால்  மறைத்துக்கொண்டு  மறுபுரத்தைக் கண்டால் ஒரு மிருகம் மட்டும் காணப்படும்; இவ்வாறு யானையையும் ரிஷபம் என்னும் கலையையும் காணலாம் .

மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமி (சிவன்) சந்நிதிக்கு நுழைவதற்கு முன்னர் ஒரு குரங்கு சிற்ப்பத்தைப் பல வகைகளில் காணும்படி சிற்பி அமைத்துள்ளார் !

இத்துடன் இணைத்துக்ள்ள படங்களைக் கண்டால் விளக்கமே தேவை இல்லை

Nagarani– Indus Valley Seal

–subham—

Tags- தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் – 2 , பாம்பாட்டியும் குரங்காட்டியும், காளையும் யானையும் , rare sculptures, part 2, snake charmer with monkey, elephant and bull , one sculpture , one head

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-18; 

திருநாங்கூர் கோவில்கள்  தொடர்ச்சி(Post.15,715)

Written by London Swaminathan

Post No. 15,715

Date uploaded in London –9 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(28)திருவெள்ளக்குளம் (அண்ணன்கோயில்),திரு நாங்கூர்- தென்திருப்பதி

ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி; ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்; சீர்காழி

திருவெள்ளக்குளம்-அண்ணன் பெருமாள் கோயில்-தென்திருப்பதி

இறைவன்– கிழக்கு நோக்கி நின்ற அண்ணன் பெருமாள் எனப்படும்           ஸ்ரீநிவாசன்

இறைவி–அலர்மேல் மங்கை

திருமலையில் வழங்கப்படும் இறைவனின் பெயர்களால் (ஸ்ரீநிவாசன் – அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும்.

  திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர்.

    திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும்.

   “திருவெள்ளக்குளம் திருமால்’, திருப்பதி திருவேங்கடவனை வழிபடும் பாக்கியத்தை நல்குகிறார்.

****

(29)திருதேவனார் தொகை– திரு நாங்கூர்

ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி-தெய்வநாயகன்; மாதவப் பெருமாள்; சீர்காழி

இறைவன்–தெய்வநாயகன், மாதவநாயகன்

இறைவி–கடல்மகள் நாச்சியார்

திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று.

      “திருத்தேவனார் தொகை பெருமாள்’, தன்னுடன் கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தைப் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் அருளை நல்குகிறார்.

(30)திருக்காவளம்பாடி-திரு நாங்கூர்

ஸ்ரீ மடவரல் மங்கை-ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)-– கிருஷ்ணன் பாரிஜாத மலர்; சீர்காழி

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) என்பது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் 27-வது தலமாகும். கோபாலகிருஷ்ணன் மூலவராக அருளும் இத்தலம், திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இது திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் ஒன்றாகும், இங்கு தை அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை சிறப்பானது.

மூலவர்: கோபாலகிருஷ்ணன் (நின்ற திருக்கோலம்)

.தாயார்: ருக்மிணி, சத்யபாமா.தீர்த்தம்: கோபால தீர்த்தம், கௌதம தடாகம்.

சிறப்பு: திருமங்கையாழ்வாரின் அவதார ஸ்தலமான திருக்குறையலூர், மங்கைமடம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது.

***

(31)திருபார்த்தன் பள்ளி-திரு நாங்கூர்

ஸ்ரீ தாமரை நாயகி-ஸ்ரீ தாமரையாள் கேள்வன்; ஸ்ரீ பார்த்தசாரதி;

31.திருப்பார்த்தன் பள்ளி

   இறைவன்–மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில்,தாமரையாள் கேள்வன்

இறைவி– தாமரை நாயகி, ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார்

    திருவெண்காட்டிலிருந்து 2 மைல் தூரம். பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று.

   பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.

  “திருப்பார்த்தன்பள்ளி எம்பெருமான்’ சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிய பெரும் பேரளிக்கிறார்.

***

(33)திருவண்புருடோத்தமம்-திரு நாங்கூர்

இத்தலத்தில் இறைவன் புருஷோத்தமனாக, தாயார் புருஷோத்தம நாயகியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

:மூலவர்: புருடோத்தமன் (புருஷோத்தமன்)

தாயார்: புருடோத்தம நாயகி

தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் கருடசேவை திருவிழாவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சீர்காழிக்குக் கிழக்கே சுமார் 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலம் வளம் மிக்க, வள்ளல் தன்மையுடைய புருஷோத்தமன் வீற்றிருக்கும் இடம

***

(34)திருசெம்பொன்செய் கோயில்-திரு நாங்கூர்

ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்-ஸ்ரீ பேரருளாளன்-ஹேமரங்கன் (செம்பொன்னரங்கன்);

 சீர்காழி-தங்க-பசு

***

(38)திருமணிமாடக்கோயில்-திரு நாங்கூர்

ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்-ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு); நாராயணன், அளத்தற்கரியான்; சீர்காழி – பத்ரிகாசிரமம் –11 கருட சேவை

^^^

30. திருக்காவளம்பாடி

இறைவன்: ருக்மணி, சத்தியபாமாவுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம் கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்)

இறைவி: மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார்

31  கண்ணன் சத்தியபாமாவுடன் நரகாசுரனையழித்தான். இந்திரன், வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான்.

  வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான்.

   துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான்.

   திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது.

32. திரு வைகுந்த விண்ணகரம்

வைகுண்ட நாதர் திருக்கோவில்-வைகுண்ட விண்ணகரம்.

  மூலவர் வைகுண்ட நாதர்-அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவியர்களுடன் காட்சி.

*வைகுண்டதில் பெருமான் காட்சி தருவது போல் இங்குள்ள மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி காட்சி தருவது கூடுதல் சிறப்பு.

இந்த திவ்ய தேசத்தில் தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது.

  *பொதுவாக அனைத்து பெருமாள் ஸ்தலங்களிலும் கருடன் பெருமாள் எதிரே நின்று காட்சி கொடுப்பார், ஆனால் இந்த புண்ணிய திவ்ய தேசத்தில் கருடன் பெருமாளின் திருவடி கீழ் காட்சி தருகிறார்.

  *மூலவர் மேல் உள்ள விமானம் ” அனந்த சத்ய வர்த்தக” விமானம்

  *பெருமாள் வைகுண்ட நாதன் வைகுண்டதில் காட்சி தருவது போல் இருப்பதால், இந்த ஸ்தலம் ” பரமபதத்திற்கு” சமமான ஸ்தலம்.

*பெருமாள் “தாமரை கண்ணன்” என்றும் அழைக்கப்படுகிறார்.

     “வைகுந்த விண்ணகரப் பெருமாளை’, வணங்கியோர் ஸ்ரீ வைகுந்த நாயகனையே வணங்கிய அருள்பெறுவர்

33. திருவண்புருடோத்தமம்

இறைவன்: புருடோத்தமன்-கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்

இறைவி: புருடோத்தம நாயகி

    வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யுவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்தார்.

     “திருவண் புருஷோத்தம நாயகனை’, வழிபட்டோர் ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர்.

34. திருச்செம்பொன் செய்கோயில்

இறைவன்: செம்பொன் ரங்கர்; ஹேமரங்கர்; பேரருளாளன்

இறைவி: அல்லிமாமலர் நாச்சியார்

     இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததது.

    “செம்பொன்சேய் கோயில் பெருமாள்’, காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார்.

35.திரு மணிக்கூடம்

     இறைவன்-கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் வரதாஜப் பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன்

இறைவி- திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி

, திரு

 நாங்கூர் பதிகங்கள்

திருநாங்கூர் மணிமாடக்கோயில்

*****************www.fb.com/thirumarai

நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய்

நர நாரணனே கரு மா முகில்போல்

எந்தாய் எமக்கே அருளாய் என நின்று

இமையோர் பரவும் இடம்-எத் திசையும்

கந்தாரம் அம் தேன் இசை பாட மாடே

களி வண்டு மிழற்ற நிழல் துதைந்து

மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

முதலைத் தனி மா முரண் தீர அன்று

முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய

விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி

வினை தீர்த்த அம்மான் இடம்-விண் அணவும்

பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்

பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்

மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய அன்று

கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்

இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு

அணைந்திட்ட அம்மான் இடம்-ஆள் அரியால்

அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்

அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி

மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று

திசை நான்கும் நான்கும் இரிய செருவில்

கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய

கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்-தான்-

முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்

ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்

மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு

இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து

தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து

தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்-தான்-

குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே

குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு

மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்

பகு வாய்க் கழுதுக்கு இரங்காது அவள்-தன்

உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்

உடனே சுவைத்தான் இடம்-ஓங்கு பைந் தாள்

கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி

கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து

மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்

தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்

இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி-தன்மேல்

அடி வைத்த அம்மான் இடம்-மா மதியம்

திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்

செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று முன்றில்

வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

துளை ஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர்-தம்

துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா

இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்

விளைவித்த அம்மான் இடம்-வேல் நெடுங் கண்

முளை வாள் எயிற்று மடவார் பயிற்று

மொழி கேட்டிருந்து முதிராத இன் சொல்

வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த

விகிர்தா விளங்கு சுடர் ஆழி என்னும்

படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று

இமையோர் பரவும் இடம்-பைந் தடத்துப்

பெடையோடு செங் கால அன்னம் துகைப்ப

தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்

மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்

மணிமாடக்கோயில்-வணங்கு என் மனனே

வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்

மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு என்றும்

தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன்

கலியன் ஒலிசெய் தமிழ்-மாலை வல்லார்

கண்டார் வணங்கக் களி யானை மீதே

கடல் சூழ் உலகுக்கு ஒரு காவலர் ஆய்

விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்

விரி நீர் உலகு ஆண்டு விரும்புவ

TO BE CONTINUED……………………………

TAGS-18Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-18; 

திருநாங்கூர் கோவில்கள்  தொடர்ச்சி

டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் – தனித்துவ வழி கண்ட தலைவர்(Post.15714)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,714

Date uploaded in London – 9 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சப்தரிஷிகள் வரிசையில் முதல் ரிஷி!

பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் – தனித்துவ வழி கண்ட தலைவர் – சப்தரிஷிகளின் வரிசையில் முதல் ரிஷி!

ச. நாகராஜன்

இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!

அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.

ஶ்ரீ பலிராம் ஹெட்கேவாருக்கும் ரேவதி அம்மையாருக்கும் ஆறு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையாக கேசவன் 1889ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று நாக்பூரில் பிறந்தார். அன்று யுகாதித் திருநாளாகும்.

இளம் வயதிலேயே அன்று நாட்டை ஆண்டு கொண்டிருந்த வெள்ளையரை எதிர்த்து சுதந்திரத்திற்கான தீவிர முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார்.

எட்டு வயதே ஆன கேசவன் ராணியின் முடிசூட்டு விழாவை ஒட்டி வழங்கப்பட்ட இனிப்பை ஏற்க மறுத்தார். அதில் நான் அடிமைத்தனத்தைக் காண்கிறேன் என்றார் அவர்.

1902ம் ஆண்டு பரவிய ப்ளேக் நோயால் மாண்டோருக்கு ஈமச் சடங்கைச் செய்யும் பொறுப்பில் ஈடுபட்டார் கேசவனின் தந்தை. தந்தை தாய் இருவரும் ஒரே நாளில் இறந்தனர்.

திலகரின் தேச சேவை அவரை ஈர்த்தது. ஆங்கிலேயருக்கு எதிரான தொழில்முனைவோருக்கான நிதி சேகரிப்பில் அவர் ஈடுபட்டார். வந்தேமாதர கீதம் அவரை உற்சாகப்படுத்தியது. திலகரால் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட விநாயக சதுர்த்தி விழா தேசபக்தியின் வெளிப்பாட்டிற்கு ஒரு அடிகோலாகத் திகழ்ந்தது. விஜயதசமி அன்று ஆங்கிலேயரை எதிர்த்து வீர உரை ஆற்றிய கேசவரை ஆங்கிலேய அரசு கைது செய்தது.

1909 டிசம்பரில் கல்கத்தா சென்ற கேசவர் படிப்பில் தீவிரமாக ஈடுபட்டு டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.

அப்போதிலிருந்து அவர் டாக்டர்ஜி ஆனார்.

அங்கு நிலவியிருந்த புரட்சி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்ட கேசவர் ஆயுதங்களைச் சேகரிக்க்லானார்.

1915ம் ஆண்டு புரட்சி நடவடிக்கை தீவிரமானது. துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்து நிறைந்த ஒரு ரயில் தினமும் கல்கத்தாவிலிருந்து நாக்பூருக்குச் செல்லும். அது மும்பை செல்லும் ரயிலில் இணைக்கப்பட்டு அனுப்பப்படும்.

இந்த ஆயுத வண்டி மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு ஆயுதங்களை பத்திரமாக புரட்சியாளர்களிடம் சேர்த்தார் டாக்டர்ஜி.

புரட்சிக்கான நரேந்திர மண்டல் என்ற ஒரு அமைப்பை நண்பர் ஒருவருடன் ஆரம்பித்தார் டாக்டர்ஜி. ஆனால் இந்த அமைப்பிற்கு திலகர் ஆதரவு தரவில்லை. இந்த அமைப்பு மூடப்பட்டது.

1915 முதல் 1924 முடிய நாட்டில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்து வந்த டாக்டர்ஜி ஹிந்துக்களிடம் ஒரு பெரிய எழுச்சியை ஊட்ட வேண்டும் என்பதைக் கண்டார்.

1925ம் ஆண்டு விஜயதசமி நன்னாளில்  செப்டம்பர் 27ம் தேதி அன்று   ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் அவரால் தொடங்கப்பட்டது.

சங்கத்தின் ஷாகா எனப்படும் கிளைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஸ்வயம்சேவகர்கள் வர ஆரம்பித்தனர். உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும், தரப்பட்டதோடு அறிவு சார்ந்த உரைகள் ஷாகாவில் இடம் பெறலாயின.

சங்கத்தை வளர்க்க முழுநேரப் பிரசாரகர்கள் வரலாயினர். பரமபூஜனீய குருஜியும் சங்கத்தின் பால் ஈர்க்கப்பட்டார்.

தன் வாழ்நாள் முழுவதும் சிறுசிறு சம்பவங்கள் மூலம் ஒரு ஸ்வயம்சேவகன் எப்படி நடக்கவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார் டாக்டர்ஜீ.

.

தனது 51வது வயதில் 1940ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி டாக்டர்ஜீ மறைந்தார்

இந்த நூலில் அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது. அத்துடன் ஏராளமான சிறு சிறு சம்பவங்களும் சுவைபடத் தரப்பட்டுள்ளன

இந்த நூலைப் படிப்போர் டாக்டர்ஜியின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.

நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.

சப்தரிஷிகளில் முதல் ரிஷியின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த ஆறு ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை. 

விஜயபாரதம்  பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது.

நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் -1 (Post No.15,713)

Rare sculptures of Tamil Nau- Part 1

Location – Sri Vaikundam Temple

Drawing by Artist Silpi

Part 1

Written by London Swaminathan

Post No. 15,713

Date uploaded in London –8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பெண்களா யானையா என்று வியக்க வைக்கும் ஒரு சிற்பம்  பெண்களா குதிரையா  என்று வியக்க வைக்கும் வேறு ஒரு சிற்பம் என்று பல சிற்பங்களைப் படைத்து தமிழ் சிற்பிகள் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர் . இவை ஸ்ரீ வைகுண்டம் கோவிலில் உள்ளன ; இவைகளை வெளி உலகுக்குக் காட்டி பெருமை சேர்த்துக்கொண்டார் ஓவியர் சில்பி; அவர் வரையாத கோவில் இல்லை ; அந்தப் படங்களை/ ஓவியங்களைக் கண்டு வியக்காத தமிழன் இல்லை ; அவருடைய ஓவியங்களை வரைபடங்களை விகடன் பிரசுரம் நீண்ட காலத்துக்கு முன்னரே இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது .

கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் மனக் கவலை தீரவும் பல பதவிகளையும் வெகுமதிகளையும் எதிர் பார்த்தும் செல்வதால் இந்த அற்புத சிற்பங்களைக் கண்டுகொள்வதில்லை; அதற்கென தனிக் கண்கள் வேண்டும் வெறும் மனிதர்களையும் இயற்கையையும் மட்டும் வரையும்  ஓவியர்கள் உலகெங்கிலும் உண்டு; ஆனால்  தெய்வீக ஓவியங்களை /வரைபடங்களை வரைவோர் அபூர்வமே . தமிழகத்துக் கிடைத்த பொக்கிஷம் ஓவியர் சில்பி  அவர்கள் ! எல்லாக் கோவில்களுக்கும் நாம் செல்ல முடியாவிட்டாலும் விளக்கத்துடன் கூடிய அவருடைய இரண்டு தொகுதிகளை பார்த்தாலே போதும் !. பார்த்தாலே போதும் பசி தீரும் ! உங்கள் அறிவுப்பசி தீரும் !

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படங்களைக் காணவும்.

ஸ்ரீ வைகுண்டம் கோவில்

–subham—

Tags- ஸ்ரீ வைகுண்டம் கோவில்,பெண்களா யானையா, பெண்களா குதிரையா , தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள் -1, ஓவியர் சில்பி

பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தது பாண்டவர்கள்! (Post No.15,712)

Written by London Swaminathan

Post No. 15,712

Date uploaded in London –8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1

நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்- பகுதி 1, 2 என்ற தலைப்பில் இந்த பிளாக்கிலும் என்னுடைய புஸ்தகங்களிலும் எழுபது ஒற்றுமைகளை 15 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன் . அதில் ஒன்று:

பந்து விளையாட்டைத் தமிழ்ச் சிறுமியர் கைகளால் விளையாடினர். மாயாக்கள் கால்களால் பந்து விளையாடினர். வாலிபால் போல கைப்பந்து  விளையாட்டுகள்

***

2

சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் விளையாட்டு என்ற தலைப்பில் கீழ்கண்ட செய்தியைத் தந்தேன்:

சங்க இலக்கியத்தில் பெண்களின் பூப்பந்து விளையாட்டினைக் கீழேயுள்ள பாடல்களில் காணலாம் :

பெறும்பாணாற்றுப்படை- line 335;

நற்றிணை – 47, 79;

பதிற்றுப்பத்து – 15-5;

பரிபாடல்- 8-106/7;

அகநானூறு  – 17, 49, 66

புறநானூறு – 36

அந்தக் காலத்தில் திருமணமாகும் வரை பெண்கள் என்ன என்ன விளையாடினர் என்று ஒரு பாட்டின் மூலம் தெரிகிறது. இது முற்றிலும் சரி என்பது சங்கத் தமிழ் பாடல்களாலும், ராமாயண, மஹாபாரத நூல்களாலும் உறுதியாகிறது:-

மருங்குவளர் பூங்கா மலர்வாவி யூச

றிருந்துமணி செய்குன்று தேமா- விரும்பமுத

பானங்கிளி பூவை பந்துகன்னங் கழங்கன்ன மயின்

மான்முல்லை பந்தர் வளர்ப்பு

–உபமான சங்கிரஹம் இரத்தினச் சுருக்கம்

1.பூங்காவில் பூக்கள் பறித்து விளையாடினர்.

2.பொய்கை, கிணறுகளில் நீராடிப் பொழுது போக்கினர்.

3.வீட்டிலும் மரத்தடியிலும் ஊஞ்சல் கட்டி ஆடினர்.

4.பணக்காரர் வீடுகளில் செயற்கையாக குன்று எழுப்பி அதில் ரத்தினக் கற்களைப் பதித்துவைத்து அதன் மேல் ஆடி ஓடி சாடினர்.

5.தேமாமரம் விளையாடினர் (மாமரத்தில் ஏறி அல்லது கல் விட்டெறிந்து மாங்காய், மாம்பழம் எடுத்துச் சாப்பிடுதல்) .

6.அமிர்தம் போன்ற பானங்கள் செய்து குடித்தனர்.

7.காய்களை வைத்து கழங்கு ஆடினர்;

8.பூப்பந்து ஆடினர்.

9.கிளி, பூவை (சாரிகைப் பறவை), அன்னம், மயில் ஆகிய பறவைகள் வளர்த்து பொழுது போக்கினர்.

10.முல்லைப் பூச்செடிக்கு பந்தல் கட்டி வளர்த்து அதைப் பராமரித்தனர். முல்லை என்றால் அது போன்ற பிறவகை மலர்ச் செடிகளும் அதில்  அடங்கும்.

***

3

பின்னர் ஆதி சங்கரரின் விவேகா சூடாமணியில் பந்து விளையாட்டு பற்றிய குறிப்புகளையும் சுட்டிக்காட்டினேன்.

Ball Game in Sankara’s Viveka Chudamani – Research Article on VC-42 (Post No.13,548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

लक्ष्यच्युतं चेद्यदि चित्तमीषद्

बहिर्मुखं सन्निपतेत्ततस्ततः ।

प्रमादतः प्रच्युतकेलिकन्दुकः

सोपानपङ्क्तौ पतितो यथा तथा ॥ ३२५ ॥

lakṣyacyutaṃ cedyadi cittamīṣad

bahirmukhaṃ sannipatettatastataḥ |

pramādataḥ pracyutakelikandukaḥ

sopānapaṅktau patito yathā tathā || 325 ||

ஆதி சங்கரர் எழுதிய விவேக சூடாமணியில் மனத்தின் இயல்பினை விளக் குகையில் ஒருவரின் மனம் கீழே செல்லத் துவங்கினால் அது மாடிப்பாடியில் விழுந்த பந்தினைப்போல  கீழேயே  படிப்படியாக, பிடிக்க முடியாமல் போகும்  என்கிறார்; அருமையான உவமை; பந்து விளையாட்டினை விளையாடியோருக்கு இது நன்கு விளங்கும்!.

***

4

இப்போது கிடைத்த புதிய செய்திகள்- தமிழ்ப் பெண்களுக்கும் முன்னதாக பாண்டவர்களும் கெளரவர்களும் பந்து விளையாடிய சம்பவங்கள் ஆகும்.

ஆதி பர்வத்தில் வரும் சம்பவம் இது : பாண்டவர்களும் கெளரவர்களும் மிகவும் சின்னப் பையன்களாக இருந்தபோது காடு போன்ற பகுதியில் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர் ; அப்போது ஒருவர் அடித்த அடியில் பந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டது; அது தண்ணீர் இல்லாத வறண்ட கிணறு ; ஆனால் எல்லோரும் சிறுவர்கள் ஆனதால் ஏது செய்வதென்று அறியாமல் திகைத்து நின்றனர் ; ஒருவரை ஒருவர் வெட்டகத்துடன் பார்த்துக்கொண்டு நின்றனர் ; அப்போது, தினமும் காலையில் செய்யும் அக்கினி ஹோமத்தை முடித்துக் கொண்டு ஒரு கருத்த பிராமணன் அங்கே வந்தான் ; க்ஷத்ரிய பலத்தைவிட பிராமணனின் புத்திர் பலமே சிறந்தது என்று காட்ட எண்ணி கிணற்றுக்குள் வட்ட வடிவிலுள்ள மோதிரத்தை எறிந்தான்; தர்ப்பைப் புல் வைத்துக்கொண்டு  மந்திரங்களையும் முனுமுனுத்தான். முதலில்  ஒரு அம்பினால் பந் தினையும் பின்னர் மோதிரத்தையும் எடுத்தான்; அந்த மோதிரத்தை 105 பாண்டவ, கெளரவர்களிடம் அளித்தான் ;இதை அந்தச் சிறுவர்கள் பெரிய தாத்தா பீஷ்மரிடம் சொல்லவே அவர் அந்தக் கருப்பு நிற பிராமணனை அம்புப் பயிற்சி சொல்லித் தரும்படி நியமித்தான்; அவர்தான் உலகப்புகழ்பெற்ற வில்வித்தை ஆசிரியர் துரோணர் ; பிறகு இந்தப் பிராமண சிரேஷ்டர், மகாபாரத யுத்தத்தில்  ஒரு கமாண்டராக ARMY DIVISIONAL COMMANDER நியமிக்கப்பட்டதை நாம் அறிவோம் (Mahabharata 1-131-17 Adi parva)

இந்த இடத்தில் அவர்கள் விளையாடியது கைப்பந்தா, கால்பந்தா என்ற விவரம் இல்லை ;ஆனால் சம்ஸ்க்ருத மொழியில் உத்ர் என்ற வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதன் வடிவம் வட்டம் என்று சொல்ல முடியும் ; விஷ்ணுவானவர் வராஹ அவதாரம் எடுத்த போது சமுத்திரத்துக்கு அடியிலிருந்து வட்ட வடிவ பூமியை மேலே கொண்டு வந்ததற்கும் இதே வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது ; வராஹத்தின் மூக்கில் வட்ட வடிவ பூமி இருப்பதை பழங்கால சிற்பங்களில் கூடக் காண முடிகிறது;  பூமி என்பது வட்டமானது என்பதை முதலில் கண்டுபிடித்த இந்துக்கள் அதை பூகோளம் என்றே சொல்லி பாடம் நடத்தினர். பாண்டவர்கள் கெளரவர்கள் உதைத்து விளையாடியதால் அது கிணற்றுக்குள் விழுந்ததை யூகிக்க முடிகிறது . ஆகவே உதை பந்து என்னும் கால் பந்தினைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்களே ; தென் அமெரிக்க மாயா நாகரிக மக்கள் அல்ல  .

***

இரண்டாவது பந்து விளையாட்டு

பாண்டவர்களின் தாயான குந்தியின் ஒரிஜினல் பெயர்- அதாவது அப்பா, அம்மா வைத்த பெயர் பிருதா ; பிருத்வி என்னும் வட்ட வடிவ பூமியை நினைவு படுத்தும் பெயர்;  அவள் கதையை அவளே கிருஷ்ண பரமாத்மாவிடம் சொன்ன சம்பவம் மஹாபாரதத்தில் உள்ளது ;அவளது தந்தை ஷுரா , இவள் சின்னப் பெண்ணாக பந்து விளையாடிக்கொண்டிருந்த போது குந்திபோஜன் என்னும் உறவினனுக்குத் தத்துக் கொடுப்பதாகச் சொன்னானாம் இங்கும் பந்து விளையாட்டினைக் குறிப்பிடுகிறார் வியாசர் . அவள் விளையாடியது சங்கத் தமிழ் பெண்கள் போல பூப்பந்தாக இருக்கலாம் .

***

5

செப்பும் பந்தும் போல– என்று தமிழில் பழமொழியும் உண்டு ; சங்க காலத்தில் தமிழ்ச் சிறுமிகள் உருண்டையான  கழங்கு கொண்டு அம்மானை முதலியன விளையாடினார்கள் .

***

6

From Tamil Dictionary அகராதியிலிருந்து

ammāṉai n. அம்மானை [K.ammāle, M. ammāna.] 1. Girls’ game of keeping a number of balls in the air, some rising while others are falling; அம்மானையாட்டம்.

—SUBHAM—

Tags- பந்து விளையாட்டு,  கண்டுபிடித்தது,  பாண்டவர்கள் , சங்க காலம் , தமிழ்ப் பெண்கள், விவேக சூடாமணி 

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17;  திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்கள் (Post.15,711)

திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

Written by London Swaminathan

Post No. 15,711

Date uploaded in London –8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

திருநாங்கூர் விஷ்ணு தலங்கள் (Thirunangur Divya Desams) தமிழ்நாட்டில், சீர்காழிக்கு அருகில் உள்ளன .

முக்கிய தகவல்கள்:

11 திருத்தலங்கள்: இந்த 11 தலங்களும் சிவபெருமானின் கோபத்தைத் தணிக்க, திருமால் 11 வடிவங்களில் காட்சி தந்தவை ஆகும்.   இத்தலங்கள் அனைத்தும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த பெருமை உடையவை. 

திருநாங்கூர் 11 திவ்ய தேசங்கள் பட்டியல்:

  1. திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்) – நாராயணப் பெருமாள்
  2. திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்) – வைகுந்த நாதர்
  3. திருஅரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்) – குடமாடு கூத்தன்
  4. திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) – பள்ளிகொண்ட ரங்கநாதர்
  5. திருமணிக்கூடம் (திருநாங்கூர்) – வரதராஜப் பெருமாள்
  6. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்) – ஸ்ரீநிவாசப் பெருமாள்
  7. திருப்பார்த்தன் பள்ளி – தாமரையாள் கேள்வன்
  8. திருவாலி – லட்சுமி நரசிம்மர்
  9. திருநகரி – கல்யாண ரங்கநாதர்
  10. திருச்செம்பொன்செய் (திருநாங்கூர்) – பேரருளாளன்
  11. திருத்தெளிச்சேரி (திருநாங்கூர்) – மாதவப் பெருமாள் 

 

திருமங்கையாழ்வார் விழா:

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் (தை மாதத் திருவோணம்), திருநாங்கூரில் உள்ள 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருமங்கையாழ்வாருக்குக் காட்சியளிக்கும் பிரம்மாண்டமான கருட சேவை விழா நடைபெறும்.

இந்தத் தலங்கள் அனைத்தும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை.

 1 

திருநாங்கூர் திருமணிமாடக்கோயில் , 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும், இது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 

திருநாங்கூரில் அமைந்துள்ள இத்தலம், இமயமலையிலுள்ள பத்ரிநாத் ஸ்ரீ பத்ரிநாராயணப் பெருமாளைப் போலவே அமைந்துள்ளது  பத்ரிநாத் சென்று வர இயலாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், பத்ரிநாத் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை

 திருமணிமாடக்கோயில்

இறைவன்: பத்ரிநாராயணர் (சாச்வததீபநாராயணர் – கிழக்கு நோக்கிய திருக்கோலம்).

இறைவி: புண்டரீகவல்லி தாயார்.

தீர்த்தம்: ருத்ர புஷ்கரிணி, சங்கு புஷ்கரிணி

திருநாங்கூர் 11 கருடசேவை திருவிழாவில் இத்தலப் பெருமாள் எழுந்தருளுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

சீர்காழியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், திருநாங்கூரில் அமைந்துள்ளது.

 திருமாலின் மாடக்கோயில் மீது ருத்ரன் அமர்ந்து தவமிருந்த இடமாதலால் ‘திருமணிமாடக்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது.. 

***

2

திருவைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்) 

108 வைணவ திவ்ய தேசங்களில் 33-வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இக்கோயில், திருநாங்கூர் 11 திருப்பதிகளுள் ஒன்றாகும்.

 மூலவர் வைகுண்ட நாதன், தாமரைக் கண்ணுடைய பிரான்.

வைகுந்த நாதன், அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி, சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். 

தாயார்: வைகுந்த வல்லி.

திருக்கோலம்: உபய நாச்சிமார்கள் புடைசூழ கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

விமானம்: அனந்த ஸத்ய வர்த்தக விமானம்.

தீர்த்தம்: லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா.

***

3 

திருஅரிமேய விண்ணகரம் குடமாடு கூத்தன் கோவில்

108 திவ்ய தேசங்களில், திருஅரிமேய விண்ணகரம் என்று அழைக்கப்படும் குடமாடு கூத்தன் கோவில் 29-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய பெருமாள் என்பதால் குடமாடு கூத்தன் என்று அழைக்கப்படுகிறார்.


மூலவர்: குடமாடு கூத்தன்

உற்சவர்: சதுர்புஜ கோபாலர்

தாயார்: அமிர்தவல்லி

தல விருட்சம்: பலாச மரம்

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், கோடி தீர்த்தம்

கோலம் : கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்

குடத்துடன் குழந்தை வடிவில் அமர்ந்திருக்கும் மூலவர்.

ஹரி (பெருமாள்) கோவில் கொண்டுள்ள தலம் என்பதால் இத்தலத்திற்கு அரிமேய விண்ணகரம் பெயர். சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று பெருமாள் இத்தலத்தில் கோவில் கொண்டதாக ஒரு புராணம் சொல்கிறது. உதங்க முனிவர், திருமாலை காண வேண்டு தவம் செய்ததாகவும், அவரின் தவத்தை ஏற்று இந்த தலத்தில் திருமால் கோவில் கொண்டுள்ளதாகவும் மற்றொரு தல புராணமும் கூறுகின்றன.

கோவில் அமைப்பு :

மூன்று நிலை கோபுரங்களைக் கொண்ட இக்கோவில் வயல்கள் சூழ்ந்த, இயற்கை எழில் கொஞ்சம் அழகுடன் காணப்படுகிறது. கோவிலின் வடக்கு புறத்தில் குளம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் கையில் குடத்துடன் அமர்ந்த நிலையில் கிருஷ்ணராக காட்சி தருகிறார் பெருமாள். இதனால் திருமங்கையாழ்வார் இவரை குடமாடுகூத்தன் என்ற பெயரால் குறிப்பிட்டார்.

உற்சவர்- பஞ்சலோகத்தால் ஆன நான்கு திருக்கரங்களுடன் உள்ள கோபாலன்.

***

4

திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

108 வைணவ திவ்ய தேசங்களில் 36-வது திவ்ய தேசமாகும்.செங்கண்மால் ரங்கநாதர் சயனத் திருக்கோலத்தில் காட்சிதருகிறார்

மூலவர்: செங்கண்மால் ரங்கநாதர் (சயனத் திருக்கோலம் – தெற்கு நோக்கி).

தாயார்: ரங்கநாயகி.

விமானம்: ககன விமானம்.

இது 108 வைணவத் திருத்தலங்களில் “அம்பலம்” (கோவில்) என்று அழைக்கப்படும் ஒரே தலமாகும்.

திருவிழா: தை அமாவாசைக்கு மறுநாள் நடைபெறும் திருநாங்கூர் கருட சேவை மிக முக்கிய திருவிழாவாகும்.

To be continued………………………

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-17;  திருநாங்கூரில் 11 பெருமாள் கோவில்கள், திருத்தெற்றியம்பலம், திருஅரிமேய விண்ணகரம், திருவைகுந்த விண்ணகரம், திருநாங்கூர், திருமணிமாடக்கோயில்

விஜயபாரதம் முப்பெரும் விழா –சப்த ரிஷிகள் நூல் வெளியீட்டு விழா! (Post.15,709)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,709

Date uploaded in London – 8 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

விஜயபாரதம் முப்பெரும் விழா – எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு – சப்த ரிஷிகள் நூல் வெளியீட்டு விழா! 

ச. நாகராஜன் 

விஜயபாரதம் வார இதழ் சார்பாக 2026, ஏப்ரல் 26ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

 சிறந்த எழுத்தாளர்களுக்கான பாரதி விருது ஜெயஶ்ரீ சாரநாதன், ஜனனி ரமேஷ் ஆகியோருக்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது ரேர் பதிப்பகத்தின் பதிப்பாளர் ரங்கநாதனுக்கும், சிறந்த எழுத்தாளருக்கான உ.வே.சா. வாழ்நாள் சாதனையாளர் விருது சோ.தர்மனுக்கும் வழங்கப்பட்டது. 

தினமலர் நாளிதழ் இணை ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் இசைக்கவி ரமணன், ஆர்.எஸ்.எஸ். அகில பாரத செயற்குழு உறுப்பினர் ரவிகுமார் ஆகியோர் விழாவில் சிறப்புரை ஆற்றினர். 

விழாவின் முக்கியப் பகுதியாக சப்தரிஷிகள் நூல் வெளியீடும் நடைபெற்றது.

சப்தரிஷிகள் நூல் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தில் சப்தரிஷிகளாகத் திகழ்ந்த ஏழு ரிஷிகளைப் பற்றிய ஏழு நூல்களாகும்.

ஏழு ரிஷிகள் :

1.தனித்துவ வழி கண்ட தலைவர் பரம பூஜனீய டாக்டர் கெசவ பலிராம் ஹெட்கேவார்

2. பன்முகம் கொண்ட பண்பாளர் பரம பூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர்

3. தீர்வு கண்ட தீரர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே

4. பல்துறை கண்ட வித்தகர் ஶ்ரீ தத்தோபந்த் தெங்கடி

5. சாமானிய சாதனையாளர் ஶ்ரீ சிவராம்ஜி

6. அசாத்திய சாதகர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி

7. வீரத்துறவி இராம. கோபாலன் 

சங்கத்தில் நீண்ட பல வருடங்களாக சேவை புரிந்து வரும் நாமக்கல்லைச் சேர்ந்த திரு ஹரிகரகோபாலன் இந்த ஏழு நூல்களைத் தொகுத்து ஒருங்கிணைப்பதில் பெரும் பணி ஆற்றியுள்ளார். 

ஏழு நூல்களுக்கும் தென்பாரத ஆர் எஸ் எஸ் தலைவர் திரு இரா.வன்னியராஜன் வாழ்த்துரை வழங்கியுள்ளார். 

ஏழு நூல்களும் கிடைக்குமிடம்:

விஜயபாரதம் பிரஸ்

12. எம்.வி.நாயுடு தெரு

சேத்துப்பட்டு, சென்னை – 31

விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466

www.vijayabharathambooks.com

 அரும்பணி ஆற்றியுள்ள நாமக்கல் ஹரிஹரகோபாலன் அவர்களுக்கும் நூலை சிறப்புற வெளியிட்டுள்ள விஜயபாரதம் பிரசுரத்தாருக்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக.

**