Aliens / ETs, Sati and Samudrika lakshana in Sangam Tamil literature -Part 62 (Post No.15,637)

Written by London Swaminathan

Post No. 15,637

Date uploaded in London –20 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Purananuru Wonders -22 Ancient Tamil Encyclopaedia -Part 62; One Thousand Interesting Facts -Part 62

For English versions I Used Vaidehi Herbert’s translation; For most of the Sanskrit words I used Wisdomlib.org

Item 477

सामुद्रिक लक्षण (Sāmudrikalakṣaṇa)-

In Puranānūru verse 59, Poet Mathurai Koolavānikan Cheethalai Sāthanār used the opt repeated Sanskrit words AAJAANU BAAHU தாள் தோய் தடக்கை large hands that touch your legs.

This is not the only place the Sanskrit cliché is used. Eyes are described as lotus petals or fish like in Tamil and Sanskrit literature.

Ajanubahu (Sanskrit: आजानुबाहु) is a term describing a person whose arms are long enough to reach their knees when standing erect. It signifies a physical ideal in Indian culture, representing immense strength, divine stature, and high character, often used to describe gods, saints, and heroes like Rama or Krishna.

Etymology: Derived from a (up to), jānu (knee), and bāhu (arm), meaning “one

A famous sloka said by all devotees of Lord Ram is

SHRI-RAGHAVAM DASHARATHATMAJAM APRAMEYAM

SITA-PATIM RAGHUKULANVAYA-RATNADIPAM

AJANU-BAHUM ARAVINDA-DALAYATAKSHAM

RAMAM NISHACARA-VINASHAKARAM NAMAMI

It is famous Tamil film Lava Kusa as well.

In Indian culture, persons with such physical characteristics are either gods, saints, kings or great warriors. The idols of Hindu gods like Rama, Lakshmana, Krishna when shown in standing position are depicted as ajanu bahu feature. Even idols of Jain Tirthankars are shown as ajanbahu. The great saints like, Sai Baba of Shirdi, Ramkrishna Paramhansa, Swami Samartha and Gajanan Maharaj were said to have ajanu bahu characteristic.

***

Item 478  Painting and Sanskrit word

This about a Pandya king who died in Chitra madam- a place with paintings in Madurai. Two things are notable. Sanskrit word Chitra and painting.

***

Item 479 Two Different Authors with the same name

Silappadikaram by Ilango and Manimekalai by this poet Mathurai Koolavānikan Cheethalai Sāthanār differ greatly with Sangam poets in language and style.

Both these Tamil epics do not fit in Sangam age Tamil. Linguists must do more research.

I placed Tolkappiam Porul Adhikaram- Third Adhikaram , Silappadikaram and Tirukkural 133 adikarams in Fifth century CE

Sanskrit Word ADIKARAM is common to these three books.

Manimekalai followed Silappadikaram and its last three chapters are full of Sanskrit/Prakrit words.

My conclusion is the author of Manimekalai and this Puram verse are two different poets, though with the same name.

***

Item 480 Sun and Moon

In Kalidasa’s works and Manu Smriti kings are compared with Five Elements- Pancha Bhuta –and Sun and Moon.

In this verse poet says

You are like the sun that rises
from the ocean, never relenting in your fierce rage toward
your enemies, but like the moon to people like me!

ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்,
திங்கள் அனையை எம்மனோர்க்கே.

***

Puranānūru 59, Poet Mathurai Koolavānikan Cheethalai Sāthanār sang to Pandiyan Chithiramādathu Thunjiya Nanmāran,

1
O greatly esteemed Vazhuthi wearing garlands on your
handsome chest, with large hands that touch your legs!
You certainly give with love, Lord!
You do not accept lies. 

2

 You are like the sun that rises
from the ocean, never relenting in your fierce rage toward
your enemies, but like the moon to people like me!

***

புறநானூறு 59பாடியவர்: மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்திணை: பாடாண்துறை: பூவை நிலை

1
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,
தாள் தோய் தடக்கைத் தகை மாண் வழுதி!
வல்லை மன்ற நீ நயந்து அளித்தல்,
தேற்றாய் பெரும பொய்யே, என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் 

2
ஞாயிறு அனையை நின் பகைவர்க்குத்,
திங்கள் அனையை எம்மனோர்க்கே.

***

Item 481 Dr.Damodaran

In Puram verse 60, Poet’s name is Lord Krishna’s famous name.

Brahmins recite this name at least three times a day when they do Sandhyavandana.

Poet was a doctor!

Meaning of Damodaran is “one who is tied with a rope around his belly” (dama = rope, udara = belly). This signifies a divine pastime where Krishna was bound by his mother, symbolizing his accessibility and control, and is the 367th name of Vishnu in Sahsranama. உறையூர் மருத்துவன் தாமோதரனார்

***

Item 482 Tamil’s Great Discovery

Tamils only called Ocean S Three Waters. முந்நீர் Mun Neer.

Ocean or sea has River Water, Rain Water and Spring Water. Because of these three types of waters it is called Mun=Three, Neer= Waters.

My interpretation is No spring water mingles directly into sea because it is part of river water. So it must be the springs under the ocean. Oceanographers reported such under water hot springs in the last century only. But Hindus knew it long long ago. It is confirmed by another reference Vada Mukhagni or Badavagni or Vadavai Anal in Tamil. That is submarine fire which we see in Hawai Island on all days.

I wanted to add one more interpretation.

Mun Neer also mean First Water. Only ocean water was there in the beginning; life evolved in it and spread to land and sky. So, it is called First, Mun in Tamil.

***

Item 483 Planet Mars செம்மீன்

செம்மீன் Sem Meen is literally Red Star. Planet Mars which looks blood red in the sky was rightly named Sev Vay or Sem Meen செம்மீன் in Tamil.

Ancient Tamils were keen observers of sky and so add the heavenly objects wherever possible.

In Sanskrit also, it is called a red planet:

The primary Sanskrit name for the planet Mars is Maṅgala (मङ्गल), meaning “auspicious” or “fortunate”. It is recognized as one of the Navagraha (nine celestial bodies) and is strongly associated with the color red and fiery energy. Tuesday is named Mangalavāra (मंगलवार) after this planet. 

Other common Sanskrit names for Mars include:

  • Kuja (कुज): Meaning “son of the Earth” (born from Bhoomi).
  • Angāraka (अङ्गारक): Meaning “the burning coal” or “the red planet” (referring to its color).
  • Bhauma (भौम): Meaning “son of Bhumi” (Earth).
  • Raktavarna (रक्तवर्ण): Meaning “blood-colored” or “red-bodied”.
  • Lohitāṅga (लोहिताङ्ग): Meaning “red-bodied” or “iron-bodied”. 

***

Item 484 White Umbrella வெண்குடை

Hindu Kings were protected by White Umbrellas வெண்குடை VEN KUDAI It is used throughout Sanskrit literature and always compared to Moon. Both signify Coolness.

***

Item 485 Strength of a Bull பகட்டு

King’s strength is compared to that of a Bull.

In Tamil even youths are called KAALAI, word for Bull in Tamil

***

Puranānūru 60, Poet Uraiyur Maruthuvan Thāmōtharanār sang for Chozhan Kurāpalli Thunjiya Perunthirumāvalavan,

1
Like a lantern on a boat in the middle of the THREE WATERS/ocean,
there was the Red Planet high above us in the sky,


and we saw the full moon that was high above.  On seeing
it, did I not, along with my dancer with few bangles,
like a peacock in the wasteland, bow to it many times?

2

It was because it resembled the white umbrella that protects us,
pretty and fearsome, hiding the sun, decorated with garlands,
belonging to my king Valavan with a victory drum and a sword
3

that never fails, his strength like that of a bull that pulls a wagon
with salt from salt pans near the ocean, up toward the mountain,

***

புறநானூறு 60பாடியவர்: உறையூர் மருத்துவன் தாமோதரனார்பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்

முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச்
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்


உச்சி நின்ற உவவுமதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த,
சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து,  5
தொழுதனம் அல்லமோ, பலவே, கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன் பகட்டு அன்ன எங்கோன்,
வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்,  10
வெயில் மறைக் கொண்ட உருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை ஒக்குமால் எனவே?

***

Item 486 Description of a Village

Ploughing the land and eating Valai fish with rice is described. At the same time, their children are climbing the hay stacks to pluck the palmyra fruits. Nature’s gifts make the land prosperous of the Choza kingdoms, say the poet in Verse 61.

Choza king’s strong chest and shoulders are also praised.

***

Puranānūru 61, Erichalūr Mādalan Mathurai Kumaranār sang for Chozhan Ilavanthikaippalli Thunjiya Nalankilli Chētchenni,

In the land of Chenni carrying a gleaming spear in his powerful
hand and owning elegant chariots,
in the fields where eels roll, women donning hair knots and cool
leaves remove small patches of blue and white waterlilies where
the harrows have passed and cut up vālai fish, and labourers
with strong arms take the fat pieces and eat with white rice from
new paddy to their full as their ribs stick out, become confused,
and are unable to leave the long sheaves with grains, and their
youngsters with parched heads who hate large coconuts,
climb on the tall haystacks of their fathers to pluck the fruits
of palmyra palms.  There is abundant prosperity every day.

If there are men who oppose the king wearing a bow-like garland
on his chest, they should know what will happen to them.  We have
not seen anybody succeed against his shoulders that are like
fortress gate bolts!   More than that, we have not seen sorrow in
those who take refuge in his handsome feet without delay!

****

புறநானூறு 61பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்பாடப்பட்டோன்:  சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னிதிணை: வாகைதுறை: அரச வாகை
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்,
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்திட்ட
பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
புது நெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக,  5
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும்
வன் கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
தெங்குபடு வியன் பழம் முனையின், தந்தையர்
குறைக்கண் நெடுபோர் ஏறி விசைத்து எழுந்து  10
செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்,
வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்,
எஃகு விளங்கு தடக்கை இயல் தேர்ச் சென்னி,
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர் எனின்
தாம் அறிகுவர் தமக்கு உறுதி, யாம் அவன்  15
எழு உறழ் திணி தோள் வழுவின்றி மலைந்தோர்
வாழக் கண்டன்றும் இலமே தாழாது,
திருந்து அடி பொருந்த வல்லோர்
வருந்தக் காண்டல் அதனினும் இலமே.

***

Item 487

SATI IN SANGAM AGE

Following lines show that they died wih their husbnads in funeral pyre. They did not live like widows.

Widows of warriors do not eat keerai or bathe in cold ponds.
They are there, embracing the chests of their fallen husbands.

Another poem by Bhutapandyan Devi also shows that Sati was followed by Tamil queens. Strangely Sati is not in Manu Smriti or Rig Veda.

***

Item 488 Aliens and ETs

Throughout Sanskrit literature we find the descriptions of ALIENS and EXTRA TERRESTRIALS (ET). Those things are repeated in Puram Verse 62 and many other Tamil poems.

Celestials who get food offerings, wear flowers that don’t fade,
do not blink, guide the new arrivals in the other world that is so
hard to obtain.  May the glory of both of you glow!

More references to ETs:

பெரும்பாணாற்றுப்படை 429 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இமைத்தல் இல்லாத இமையினையுடைய தேவர்கள்.  இமய மலையின் உச்சியில் தேவர்கள் உறைவர் என்பது மரபு.  மதுரைக்காஞ்சி 457-458 – வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு.  அனந்தல் (5) – ஒளவை துரைசாமி உரை –

Manu Smrti and our Puranas speak about various time zones for Devas and Brahma. When we hear about Extra Terrestrial Civilizations in distant planetary system we will understand such descriptions better.

We read that Devas can’t have sex in the Devaloka, can’t stand on their feet, can’t blink, their garlands never wither away , they can travel from one place to another place and appear intact, sages like Narada can do inter galactic travel (Tri Loka Sanchari) etc.

 Atharva Veda Bhumi Sukta Mantra 7/ 63

Here the earth is praised as sweet hearted. Sweet honey MADHU is referred here and HEART (hrudaya) is mentioned  in the 8th stanza.

Here we come across the word UNSLEEPING Devas. This is reference to Extra Terrestrials (ET). Throughout Hindu spics and Puranas/mythologies, we have following qualities attributed to ETs.

1.They are in the form of Light; Devas meaning Light Emitting.

2.They don’t wink their eyes; like fish they don’t close their eyes. Even Tamil poet Tiru Valluvar compared Devas with Thieves ; he humorously refers to thieves as Devas because thieves also never sleep during night (Kural 1073) This is my interpretation of Kural. Other old interpreters said both are same because they can do whatever they want to do; It doesn’t look right to me. Moreover, Valluvar used the Sanskrit word Devas instead of God (Iraivan).

3.They can’t have sex in the heaven. (they come to earth for it). Parvati cursed that they cant have sex in heaven according to Puranas.

4.They can travel to Earth with the speed of Mind (faster than Light; Einstein is only 50 % right)

5.Their feet don’t touch earth/ground (always flying)

6.Their garlands never wither away (because of metals like gold?)

7.They are always happy

8.They enjoy Dance and Music of Gandharvas and Apsaras

9.Even the Indus/Harappan symbol of Fish is compared to Devas by some scholars because both ‘Shine’ and both ‘never close their eyes’.

The seventh mantra says Devas protect earth without erring. That means aliens are always watching us. Intergalactic traveller NARADA visits earth now and then. Poet prays to earth to shower sweets on us. Madhu used here is Honey; also  used in all poems on Asvins in the RV. Name of Narada appears for the first time in AV.

***

Puranānūru 62, Poet Kazhāthalaiyār sang for Cheraman Kudakkō Neduncheralathan and Chozhan Verpahradakkai Peruviral Killi,

1

How can they be victorious over the advancing foot soldiers?
Female ghouls in bright coloured forms, plunge their hands
into the wounds of dead warriors, smear their hair red with
blood and dance to the soft, rhythmic beat of parai drums.
Kites are feasting on the army, and the two kings have also
perished along with their soldiers, kings with righteousness
on their sides who fought a valiant war.  Their royal umbrellas
have drooped and their drums of renown stand ruined.

In that vast battle camp, hundreds of men from different lands
have gathered together with no space left, and there is nobody
with strength to take the field, and the combat has stopped
suddenly causing fear.

2

Widows of warriors do not eat keerai or bathe in cold ponds.
They are there, embracing the chests of their fallen husbands.

3

Celestials who get food offerings, wear flowers that don’t fade,
do not blink, guide the new arrivals in the other world that is so
hard to obtain.  May the glory of both of you glow!

Notes:  The poet wrote this after watching the two kings and their armies perish in battle. Puranānūru poems 62, 63 and 368 were written for Cheraman Kudakkō Neduncheralathan.   Puranānūru poems 62 and 63 were written for Chozhan Verpahradakkai Peruviral Killi.  Poet Kazhāthalaiyār wrote Puranānūru 62, 65, 270, 288, 289 and 368.  

புறநானூறு 62பாடியவர்: கழாத்தலையார்பாடப்பட்டோர்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,  சோழன் வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளி

1

வருதார் தாங்கி அமர் மிகல் யாவது?
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக்,
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்கப்,  5
பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே, குடை துளங்கினவே,
உரை சால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே
பன் நூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்  10
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைக்,
களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே,

2

பெண்டிரும்
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே,  

3

வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவினோரும் ஆற்ற
அரும் பெறல் உலகம் நிறைய
விருந்து பெற்றனரால், பொலிக நும் புகழே!

–subham—

Tags- Purananuru wonders-22, Tamil Encyclopedia-62, Aliens, ETs, Tamil Sangam Literature, Samudrika Lakshana, Tamil Poems, SATI IN SANGAM AGE, Item 488

கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன? உயரம் என்ன? – 81 (last part) (Post.15636)

Written by London Swaminathan

Post No. 15,636

Date uploaded in London –20 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 81

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 81

Last Part of Tiruppugaz Criticism

***

அகலம் நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய அரிய …

இவ்வளவு அகலம், இவ்வளவு நீளம் என்ற அளவைகளாலும், எவராலும் ஆராய்வதற்கு முடியாத

மோனமே கோயில் என மேவி … மெளன நிலையே திருக்கோயிலாக அடைந்து இருந்து

அசையவே க்ரியா பீடம் மிசை புகா … விளக்கம் தருவதற்காகவே,

கிரியை மார்க்கத்தை அனுஷ்டித்து, அதனைப் பூஜிக்கத் தகுந்த பீடத்தின் மேல் ஏற்றி,

மகா ஞான அறிவின் ஆதர ஆமோத மலர் தூவி … சிறந்த

மெய்யுணர்வான ஞானத்துடன், அன்பு, மகிழ்ச்சி எனப்படும் மலர்களைத் தூவி,

சகல வேதன(ம்) அதீத சகல வாசக(ம்) அதீத … எவ்வகையான

அறிவுகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான சொற்களுக்கும்

அப்பாற்பட்டதான,

சகல மா க்ரிய அதீத சிவரூப … எவ்வகையான சிறந்த

கிரியைகளுக்கும் மேம்பட்டதான, சிவ ரூபமான,

சகல சாதக அதீத சகல வாசன அதீத … எவ்விதமான

அளவைகளுக்கும் மேம்பட்டதான, எவ்விதமான நறுமணத்துக்கும்

மேம்பட்டதான

தனுவை நாடி மா பூசை புரிவேனோ … புருவ நடுவில் உள்ள

ஒரு குறியைக் குறித்து நின்று, சிறந்த பூஜையைச் செய்யும்

பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?

***

கடவுள் என்பவருக்கு உருவம் இருந்தால் அவருக்கு உயரம் அகலம் எல்லாம் இருக்க வேண்டுமல்லவா ? இந்தக் கேள்விக்கு உபநிஷதம் முதல் விஷ்ணு சஹஸ்ரநாமம் வரை எல்லா நூல்களிலும் பதில் உள்ளது.

அவர் அல்லது பிரம்மம் என்பது அளவுக்கு அப்பாற்பட்டது

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

அற்புதம் நின்ற கற்பகக் களிறே — என்று அவ்வையார் விநாயகர் அகவலிலும்,

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

வாய்விட்டுப் பேசொ ணாததுநெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது– என்று அருணகிரிநாதர் வேறு ஒரு திருப்புகழிலும்,  மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம்  என்று அபிராமி அந்தாதியிலும் இதே கருத்தினை விளம்பியுள்ளனர்.

பகவத் கீதையிலும் இரண்டு இடங்களில் ,

அப்ரமேயம் 11-17  அளவிடற்கரியது

அப்ரமேயஸ்ய 2-18  அளவிறந்ததாய், அளவற்றதாய்என்ற சொற்களைக் காண்கிறோம் ; அந்தக் காலத்திலேயே இந்தக் கேள்வியை எழுப்பி அதற்கு விடையும் கண்டுள்ளனர்.

अन्तवन्त इमे देहा नित्यस्योक्ता: शरीरिण: |

अनाशिनोऽप्रमेयस्य तस्माद्युध्यस्व भारत || 2-18||

antavanta ime dehā nityasyoktāḥ śharīriṇaḥ

anāśhino ’prameyasya tasmād yudhyasva bhārata

Only the material body is perishable; the embodied soul within is indestructible, immeasurable, and eternal. Therefore, fight, O descendent of Bharat. BG 2-18

என்றும் உளதாய், அழிவில்லாததாய் அளவைக் கடந்ததாய் உள்ளது ஆத்மா; இந்த உடல்களோ முடிவுடையவை , அர்ஜுனா ; ஆகையால் போர் புரிவாயாகுக

இதே கருத்து கடோபநிஷத் 2-18 த்திலும் உள்ளது .

பகவத் கீதை 11-வது அத்தியாயத்தின் (விஸ்வரூப சந்தர்சன யோகம்) 17-வது ஸ்லோகம், அர்ஜுனன் கிருஷ்ணரின் விஸ்வரூபத்தை வியந்து விவரிப்பதாகும். கிரீடம், கதை, சக்கரம் ஏந்தி, சூரியன் மற்றும் நெருப்பைப் போல அளவிட முடியாத பிரகாசத்துடன்பிரபஞ்சம் முழுவதும் ஜொலிக்கும் இறைவனின் வடிவை அர்ஜுனன் காண்கிறான்.

இரண்டு மூன்று திருப்புகழ்களில் உபநிஷத, பகவத் கீதைக்கு கருத்துக்களை அருணகிரிநாதர் சொல்வதால் அவர் உபநிஷத்துக்களை நன்கு படித்திருக்க வேண்டும்.

***

அப்ரமேயம்

அப்ரமேய–  விஷ்ணு ஸஹஸ்ரநாம எண்  46 .

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 46-வது நாமம் “அப்ரமேய:” (Aprameyaḥ) ஆகும்.

அப்ரமேய: என்றால் அளவிட முடியாதவர் என்று பொருள்.

பரிமாணங்களுக்கு அப்பாற்பட்டவர்: அளவுகோல்களாலோ (பிரமாணங்களாலோ), புலன்களாலோ (கண், காது போன்றவை), அறிவாலோ அளக்க முடியாத பெருமைகளை உடையவர்.

தெய்வங்களுக்கும் அரியவர், இந்திரன் போன்ற தேவர்களாலும் முழுமையாக அறிய முடியாதவர்.

உயர்ந்த நிலை: அளக்க முடியாத, வரம்பற்ற ஞானம் மற்றும் வடிவத்தை உடையவர் (Immeasurable/Infinite).

***

மாணிக்க வாசகரின் சிவபுராணத்தில்

விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்கா விளங்கு ஒளியாய்

எண்ணிறந்து எல்லை இலாதானே!

என்றும்

ஆக்கம்அளவுஇறுதிஇல்லாய்!  என்றும் வருகிறது. அவரும் இறைவன் அவைக்கருவிகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதைக் காட்டுகிறார்

****

ஆராய வேண்டிய விஷயங்கள்

திருப்புகழில் ஆராய வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. அவர் கதிர் காமம் முதல் கயிலாயம் வரையும் சரஸ்வதி நதிக்கரை வயிரவி வனம் வரையும் உள்ள தலங்களை/ க்ஷேத்ரங்களைப் பாடியுள்ளார் ; எல்லாவற்றுக்கும் அவர் நேரில் சென்றாரா அல்லது நூல்களைக் கற்றும் அடியார்களை சந்தித்தும் அறிந்தாரா என்பது முதல் ஆராய்ச்சி.

அவர் பாடிய 200 தலங்களில் சில தலங்களை யூகித்து இதுவாக இருக்கலாம் என்கின்றனர் உரைகாரர்கள்; அவை சரிதானா என்று ஆராய வேண்டும்; கல்வெட்டுகளிலோ அல்லது வேறு நூல்களிலோ ஆதாரம் இல்லாத வரை அவை யூகங்களே. அவர் பயன்படுத்திய புதிய சொற்களை பட்டியலிட வேண்டும்

திருப்புக்கழுக்குச் சொல் அட்டவணை (WORD INDEX) தயாரிக்க வேண்டும்.

உலகிலேயே விபச்சாரிகளை அதிகமாக வருணித்தவர் அல்லது திட்டியவர் அருணகிரிதான் அந்த விஷயத்தையும் பட்டியலிட வேண்டும்

.—subham—

Tags- ஆராய வேண்டிய விஷயங்கள், part 81, last part, அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 81, கடவுளின் நீளம் என்ன?  அகலம் என்ன

ராமாயணத்தில் வரங்கள் (54) விபீஷணனுக்கு பிரம்மா வரம் அளித்தது! (Post No.15,635)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,635

Date uploaded in London – 20 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (54) விபீஷணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் முதலியவர்கள் வரத்தைப் பெறுவது’ என்ற ஸர்க்கமாகும்.

அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் ராவணனும் அவனது சகோதரர்களும் பெற்ற வரம் பற்றி விளக்க ஆரம்பித்தார். அவர்களில் விபீஷணன் பெற்ற வரத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.

விபீஷணன் பரிசுத்த மனம் உடையவனாய் ஐயாயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தார். பின்னர் கைகளைத் தலைக்கு மேலே தூக்கியபடியே கும்பிட்டு இன்னும் ஐயாயிரம் வருடங்கள் தவம் புரிந்தார். அதுமட்டுமின்றி சூரிய பகவானையும் தியானம் செய்யலானார். இதனால் திருப்தி அடைந்த பிரம்மா விபீஷணன் முன் தோன்றி

பரிதுஷ்டோஸ்மி தர்மாத்மன்வரம் வரய சுவ்ரத|

உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம், ஸ்லோக எண் 27

“தர்மத்திலேயே செலுத்திய புத்தியை உடைய உன்னால் பூர்ண திருப்தி அடைந்தேன். இஷ்டமானவற்றைக் கேட்டுக் கொள்” என்றார்.

பகவான்க்ருதக்ருத்யோஹம் யன்மே லோககுரு: ஸ்வயம் |           ப்ரீதேன யத்ஹி தாதவ்யோ வரோ மே ஸ்ருணு சுவ்ரத ||

சுவ்ரத – சிறந்த விரதமுடைய                                        பகவன் – பகவானே                                               லோக குரு – லோக குரு                                               ஸ்வயம் – தேவரீரே                                                ப்ரீதேன – ப்ரீதி கொண்ட உம்மால்                                       தாதவ்ய: – வரமளிக்க உரியவன்                                          யதி – என்கிறபடியால்                                               அஹம் – நான்                                               க்ருதக்ருத்ய – கிருதகிருத்யன் ஆகினேன்                                     மே – எனக்கு                                                       வர: – இஷ்டமான வரம்                                                 யத் – எதுவோ அதை                                                     ஸ்ருணு – கேட்பீராக

பரமாபத்கதஸ்யாபி தர்மே மம மதிர்பவேத் |                      அஷிக்ஷிதம் ச ப்ரஹ்மாஸ்த்ரம் பகவன்மதிபாது மே ||

பகவன் – பகவானே                                                      மம – நான்                                                          பரமாபத்கதஸ்ய – பரம ஆபத்திற்கு ஆளானவனாய்                      அபி – இருக்கையிலும் கூட                                     தர்மே – தருமத்தில்                                                மதி: – மனம்                                                    பவேத் – நிலை பெற்றிருக்க வேண்டும்                                  ச – அதுவும் தவிர                                               ப்ரஹ்மாஸ்த்ரம் -பிரம்மாஸ்திரமானது                                அஷிக்ஷிதம் – சிக்ஷையாகாதபடி                                                மே – எனக்கு                                                ப்ரதிபாது – விளங்க வேண்டும்

யா யா மே ஜாயதே புத்திர்யேஷு யேஷ்வாஸ்ரமேஷு ச |               ஸா ஸா பவது தர்மிஷ்டா தம் து தர்ம ச பாலயே || 

தம் – அந்த                                                            தர்ம ச – தர்மம் ஒன்றையே                                           பாலயே – நான் பற்றி வருகிறேன்                                          து – இன்னமும்  மே – எனது                                                  யா யா – எந்த எந்த                                                       புத்தி – அறிவு                                                       யேஷு யேஷு – எந்த எந்த                                                ஆஸ்ரமேஷு – அவஸ்தைகளில்                                            ஜாயதே – நாடியதாகிறதோ                                                  ஸா ஸா – அந்த அந்த                                                   ச – எல்லாமும்                                                       தர்மிஷ்டா – புண்ணியத்தை நாடியதாக                                   பவது – இருக்க வேண்டும்

ஏஷ மே பரமோதார வர: பரமகோ மத: |                                   ந ஹி தர்மாபிரக்தானாம் லோகே கிஞ்சன் துர்லப ||

உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 29 முதல் 32 முடிய

பரமோதார – பரம தயாளுவே                                         லோகே – உலகில்                                        தர்மாபிரக்தானாம் – தர்மத்தில் இடைவிடாத ஆஸக்தி உடையவர்களுக்கு துர்லபம் – அடைய முடியாதது என்று                                       கிஞ்சன் ந – எதுவும் இல்லை                                           ஹி – என்கிறபடியால்                                                   மே – எனக்கு                                                         பரமக: – முடிவாய் விரும்பிய                                                  மத: – உத்தேசமாகிறது                                                     ஏஷ: வர: – இந்த வரம்

இப்படி விபீஷணன் சொன்னதைக் கேட்ட பிரம்மா, “தர்மிஷ்டனாகவே நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இதுவும் ஆகுக” என்று வரம் அளித்தார்.

மேலும் அவர் கூறினார்: “ராக்ஷஸ யோனியில் பிறந்த உனக்கு அதர்மத்தில் புத்தி புகாதிருக்கின்ற காரணத்தால் உனக்கு சிரஞ்சீவித்வத்தை கொடுக்கிறேன்”.

யஸ்மாத் ராக்ஷஸயோனௌ தே ஜாதஸ்யாமித்ரநாஷன |                                          நாதர்மே ஜாயதே புத்திரமரத்வம் ததாமி தே

உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 34

அமித்ரநாஷன: – சத்ருக்களை சம்ஹரிப்பவனே                        ராக்ஷஸயோனௌ – ராக்ஷஸயோனியில்                               ஜாதஸ்ய தே – பிறந்த உனக்கு                                              அதர்மே – அதர்மத்தில்                                                 புத்தி ந ஜாயதே – புத்தி புகாதிருக்கும் காரணத்தால்                                தே – உனக்கு                                                             அமரத்வம் – சிரஞ்சித்வத்தை                                                    ததாமி – கொடுக்கிறேன்

இப்படியாக பிரம்மாவிடமிருந்து சிரஞ்சீவித்வத்தை விபீஷணன் வரமாகப் பெற்றார்.

  இத்துடன் ராமாயணத்தில் வரங்கள் – இரண்டாம் பாகம் முற்றிற்று

***

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 53; இந்து மத கலைச்சொல் அகராதி-53 (Post No.15,634)

Written by London Swaminathan

Post No. 15,634

Date uploaded in London –19 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Version is posted here; English version was posted yesterday.

More  K  words

கண்ணப்பன்  – கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். திருக்காளத்தியில் வேடர் குலத்தில் பிறந்து, திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், தன் கண்னையே சிவலிங்கத்திற்குக் கொடுத்து, அவருடைய அருளைப்பெற்று  பின்னர் சிவனுடன் கலந்தார் . பக்திக்கு இலக்கணமாகத் திகழந்த இவரது வரலாறு பெரிய புராணத்தில்   உள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார்.

திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).

சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன்கண்ணப்பன்வேடன் என்றும் சான்றோர்கள் கண்ணப்ப நாயனாரைப் போற்றியுள்ளனர் .

***

கோச்செங்கட் சோழன்

கோச்செங்கட் சோழ நாயனார் சோழ மன்னர்களில் ஒரு சிறந்த மன்னர். இவர் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்து சிவபெருமானுக்குத் தொண்டு செய்தவர்; பெரிய புராணத்தில் இவர் வரலாறு உள்ளது.

 கோச்செங்கணான் என்ற பெயரும் உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவர்; மாடக்கோயில்கள், எனப்படும் உயர்ந்த தளங்களைக் கொண்ட 70-க்கும் மேற்பட்ட சிவன் கோயில்களைக் கட்டினார் ; பூர்வ ஜென்மத்தில் யானையால் பாதிக்கப்பட்டதால் , யானைகள் புக முடியாத கோவில்கள் இவை ; இவர் சிலந்தியாகப் பிறந்து சிவன் மீது வலை பரப்பி வழிபட்டபோது, மற்றோரு சிவ பக்தனான யானை அந்த வலையைக் கலைத்தது . யானை தன்னுடைய துதிக்கையால் அதை  ஓங்கி அடித்துக் கலைக்கவே அதன் துதிக்கையில் சிலந்தி புகுந்து தொல்லை கொடுத்தது; இருவரும் இறந்து  சிவனடியைச் சேர்ந்தனர். கண் சிவந்து பிறந்த சோழனை செங்கண்ணான் என்று அழைத்தனர்.

***

குறள் — திருக்குறள்

திருவள்ளுவர் எழுதிய இந்த நூலில் 1330 குறள் வடிவப் பாக்கள் உள்ளன ; அவை ஈரடிச் செய்யுட்கள் ; தர்ம அர்த்த காம – அறம் பொருள் இன்பம் – என்ற இந்துமதக் கோட்பாடுகளை மூன்று பிரிவுகளில் விளக்கியதால் முப்பால் என்றும் பெயர் ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்ததும் எல்லா விஷயங்களையும் தொகுத்து அளித்ததும் இதன் பெருமையைப் பரப்பியது; திருவள்ளுவர் எழுதிய இந்த நூல் தமிழ் மொழி உலகுக்கு அளித்த பெரிய கொடை ஆகும் ; இவருடைய  காலத்தை  BCE 31 என்று தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டாலும் பழந்தமிழர்கள் இவரை சங்க காலத்துக்குப் பின்னரே வைத்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இவரைச் சேர்த்தனர் ; மேலும் மொழியியல் ரீதியாக இவரை ஐந்தாம் நூற்றா ண்டில்தான் (CE)  வைக்க முடிகிறது  ; இதைப் பல அறிஞர்கள் சுட்டிக் காட்டிவிட்டனர்; திருவள்ளுவரின் பிறப்பு பற்றியும் சர்ச்சை உள்ளது; நூறு ஆண்டுகளுக்கு முன்னர்  வெளியான எல்லா நூட்களிலும் உள்ள இந்த வரலாற்றினை இப்போது மறைத்து எழுதிவருகின்றனர். ஆதி – பகவன் என்ற கலப்பின தம்பதியருக்கு இவர் ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்தார்.

***

குஷிக

விச்வாமித்ர மாஹரிஷியின் தாத்தா குஷிக ஆவார் ; காதி என்பவர் குஷிகவின் மகன்; சியவன ரிஷிக்கு குஷிக மிகவும் சிரமப்பட்டு சேவை செய்தார் ; அவர் மகிழ்ச்சி அடைந்து உன்னுடைய சந்ததியினர் பிராமணத்துவம் பெறுவார் என்று ஆசீர்வதித்தார் . விச்வாமித்திரரும் பிற்காலத்தில் பிரம்மரிஷி பட்டம் பெற்றார்.

***

L WORDS ; LA words 

லக்னம் 

ஒரு ஜாதகர் பூமியில் ஜனனம் ஆகும் போது கிழக்கு திசை அடிவானத்தில் எந்த ராசி உதயம் ஆகிறதோ அதுதான் அவருடைய லக்கினம் எனப்படும்; லக்னம் என்று குறிப்பிடப்பட்ட அதே கட்டத்தில் சந்திரனும் இருக்கும் ; ராசிச் சக்கரத்தில் “ல” என்று குறிப்பிடப்பட்டு குறுக்கு வாக்கில் ஒரு கோடு போட்டிருப்பார்கள். அவர்களுக்கு ராசி லக்னமும் ஒன்றாகவே இருக்கும்; சுப வேளை  என்பதையும் லக்கினம் என்று சொல்வார்கள் .அந்த ஜாதகத்திற்கு நடந்து கொண்டிருக்கும். திசை மற்றும் புத்தி கொண்டு பலன்களை கணக்கிடுவதற்கு லக்னம் மிக அவசியமாகும்.

****

லக்ன பத்திரிகை

லக்கின பத்திரிகை (அல்லது லக்ன பத்திரிகை) என்பது தமிழ் இந்து திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் திருமணத்தை உறுதி செய்த பிறகு, நல்ல நேரத்தில் பரிமாறிக்கொள்ளும் முறையான திருமண அழைப்பிதழ் ஆகும். இது பெரும்பாலும் குடும்பப் பெரியவர்களால், மஞ்சள்/ பிங்க் நிறத் தாள்களில், மணமக்களின் ஜாதக விவரங்கள், திருமண நேரம் மற்றும் இடத்துடன் எழுதப்படும்.

நிச்சயதார்த்தம்: திருமணத்திற்கு முன் நடத்தப்படும் மிக முக்கியமான சடங்கு.

பரிமாற்றம்: லக்னப் பத்திரிகை வாசித்த பின், இரு வீட்டாரும் பத்திரிகைகளை மாற்றிக்கொள்வர்.

இதில் திருமண நாள், லக்னம், முகூர்த்த நேரம், மணமக்களின் பெயர் மற்றும் பெற்றோரின் விவரங்கள் இடம் பெறும்.

***

லெட்சுமி/ லக்ஷ்மி

லட்சுமி (அல்லது லக்ஷ்மி) செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டம், அழகு மற்றும் தூய்மையின் தெய்வமாக வழிபடப்படும் தேவி ஆவார்; திருமால் அல்லது விஷ்ணுவின் மனைவி; மன்மதனின் தாய் ; அலைமகள், மலர்மகள், மகாலட்சுமி என்பன ஏனைய பெயர்கள்; எட்டு முக்கிய வடிவங்களில் (அஷ்டலட்சுமி) இவளை வணங்கலாம்

தாமரையில் வீற்றிருப்பவர், இரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியிருப்பார்.

அஷ்டலட்சுமி (ஆதி, தன, தான்ய, கஜ, சந்தான, வீர, விஜய, வித்யா லட்சுமிகள்)

யத் க்ருஹம் ராஜதே நித்யம் மங்களைரனுலேபனைஹி

தத் க்ருஹே வசதே லக்ஷ்மீ: நித்யம் பூர்ணகலான்விதா

எவள் வீட்டைப் பெருக்கி மெழுகி,  கோலமிட்டு  அலங்கரிக்கிறாளோ அங்கே லக்ஷ்மீ பூரண கலைகளுடன் வசிக்கிறாள்.

அது என்ன பூரண கலை?

நாம் அஷ்ட லக்ஷ்மீ என்று சொல்லும்போது தனம், தான்யம், வீரம், ஸந்தானம் (மகப்பேறு), ஐஸ்வர்யம், சௌபாக்கியம் என்று எல்லாம் வளத்தை பிரித்துப் பார்க்கிறோம். இவை அனைத்தும் இருந்தால் அது லக்ஷ்மீயின் பூரண அம்சம் ஆகும்.

சத்வ குணத்தில் கருட வாகனத்திலும், ரஜோ குணத்தில் யானை அல்லது தாமரை மீதும், தமோகுணத்தில் ஆந்தை மீதும் வருபவள் .

அஷ்டலக்ஷ்மி:  தனலக்ஷ்மி, தானிய  லக்ஷ்மி, தைரிய  லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, வித்தியா லக்ஷ்மி, கீர்த்திலக்ஷ்மி, விஜய லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி என்று  தமிழ் நாட்டுக் கோவில்களில் காட்சி தருகிறாள்.

***

இலங்கை

லங்காபுரி என்றும் சிலோன் என்றும் ஸ்ரீ லங்கா என்றும் அழைக்கப்படும் பொன்மயமான தீவு பற்றிய அழகான வருணனை வால்மீகி ராமாயணத்தில் உள்ளது; குபேரனுக்காக விஸ்வகர்மன் என்னும் தேவலோக சிற்பி உருவாக்கிய இலங்கையை ராவணன்  பிடுங்கிக்கொண்டான்; யக்ஷர்கள், நாகர்களுக்குச் சொந்தமான தீவாக தமிழ் இலக்கியமும், பாலி மொழி நூல்களும் வருணிக்கின்றன ; இந்து மதம் தழைத்த– சைவம் தழைத்த நாடு — பிற் காலத்தில் அசோகர் மகன், மகளால் பெளத்த மத நாடாக மாற்றப்பட்டது; சீதையை ராவணன்  கவர்ந்து சென்ற பின்னர் ராம பிரான் அனுமன் படையின் உதவியுடன் சேது/ பாலம் அமைத்து இலங்கை மீது படை எடுத்தான். ராவணன்  கொல்லப்பட்ட பின்னர் அவனுடைய தம்பி விபீஷணன் இலங்கையை ஆண்டான்  .

***

லவணன்

மதுவுக்கும் கும்பி நாசிக்கும் பிறந்த ராக்ஷஸன்; சிவ பெருமான் கொடுத்த திரிசூலத்தை அவனுடைய தந்தையிடமிருந்து பெற்றான்; ஆயினும் ஆயுதம் இல்லாத தருணத்தில் அவனை ராமனின் சகோதரனானான சத்ருக்கனன் கொன்றான். அதன் பிறகு அவன் ஆண்ட மதுராவை சத்ருக்கனன் ஆண்டான்.

***

லக்ஷ்மணன்

ராமனின் தம்பி ; சுமித்ராவுக்கு இரட்டையர்களாக சத்ருகுணனுடன் பிறந்த போதிலும் கோசலை மகனான ராமனுடன் அல்லும் பகலும் அனவரதமும் இருந்தான்; ராமனுடன் 14 ஆண்டுகளுக்கு கானகம் ஏகினான்; ராம-ராவண யுத்தத்தில் பெரும்பங்காற்றினான் ; சீதையின் காலணிகளைத் தவிர நிமிர்ந்தும் பார் க்காதவன்; ஊர்மிளாவை மணந்தான்தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தான்.

****

லக்ஷ்மண / லக்ஷ்மணா

துரியோதனன் – பானுமதி தம்பதியருக்குப் பிறந்த சகோதர சகோதரி ஆவார்கள் . லக்ஷ்மணா என்ற பெண்ணை கிருஷ்ணின் மகன் சம்பா கடத்திச் செல்லவே, அவனை துரியோதனன் பிடித்துச் சிறையிலிட்டான்; பின்னர் பலராமன் தலையீட்டின் பேரில் அவனை விடுதலை செய்து லக்ஷ்மணாவைத் திருமணம் செய்து கொடுத்தான்; அவன் அஞ்சாத வீரன்; ஆயினும் மஹாபாரதப்போரில் அபிமன்யு கையில் மரணம் அடைந்தான்

.***

 லக்ஷம்

இந்திய மொழிகளில் உள்ள  சம்ஸ்கிருதச்  சொல்; தமிழில் நூறாயிரம் என்பர்

***

லவ, குசன்

குசன் என்ற தலைப்பில் ஏற்கனவே உளது

***

லாட தேசம்

புராதன இந்தியாவின் 56 தேசங்களில் ஒன்று ; குஜராத்தின் ஒரு பகுதி இது ; டாலமி போன்ற வெளிநாட்டு யாத்ரீகர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

LaataDesam, part of Kurjara/ Gujarat Desa

—subham—

Tags HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 53; இந்து மத கலைச்சொல் அகராதி-53 கண்ணப்பன் , திருக்குறள் , லாட தேசம், லக்கினம்

புரந்தரதாசர்,அருணகிரி நாதர்,  வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை !– Part 80 (Post.15,633)

புரந்தரதாசர்,அருணகிரி நாதர்வள்ளலார்மூவரின் ஸ்வீட் உவமை ! – Part 80 (Post.15,633)

Written by London Swaminathan

Post No. 15,633

Date uploaded in London –19 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

80திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 80

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 80

***

தனித்தனி முக்கனி பிழிந்து ……

ராமலிங்க சுவாமிகள் அருணகிரிநாதரைப்போல தனித்தனி முக்கனி பிழிந்து …. பாடலைப் பாடினார். அருணகிரிநாதரோ புரந்தர தாசர் போலப் பாடினார்; தெய்வீகப் பாடல்களை ஒப்பு நோக்கி மகிழ்வோம் 

தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி

     பாலு டன்ஒக்கக் கலந்ததோ நல

          சீனி யில்விட்டுப் பிசைந்ததோ பல …… கனிதானோ

தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை

     பாகு பதத்திற் கமைந்ததோ இவை

          சேர வுருட்டித் திரண்டதோ நவ …… ரசமீதோ

ஞான முளைத்துப் படர்ந்ததோ யதி

     லேயெ ழுபுட்பச் சுகந்தமோ விது

          நாம கள்வித்தை ப்ரசங்கமோ வென …… உரைநாவால்

நாவ லர்மெச்சிப் பணிந்துதா ழவும்

     நீய துமெச்சித் தணிந்துபே சவும்

          நானு னைமெச்சிப் புகழ்ந்துபா டவும் ……. அருள்தாராய்!

யானை மதப்பட் டெழுந்ததா மென

     வேயி ருபத்மச் சதங்கையோ லிட

          ஆறு முகத்துக் குழந்தையா யருள் …… அணையார்பால்

ஆறு முகத்திற் சொரிந்தபாற் குளம்

     ஆறு முலைக்குப் பிரிந்தபால் நிறை

          வார மலைக்குச் சிறைந்தபோ திலு …… மமையாதோ

சோனை மலைக்குட் திரிந்துலா விய

     சீர சமுத்ரத் தரங்கமே லெழு

          சூரி யனொக்கத் திரிந்துலா விய …… புதல்வோனே!

சோலை மலைக்குக் கடம்புபோல் வளர்

     விரா லிமலைக்குக் கொழுந்துபோ லுயர்

          சுவா மிமலைக்குக் கரும்புபோல் வரு …… முருகோனே!

……… பதவுரை ………

தேனை வடித்துச் சொரிந்ததோ கொதி … சுத்தமான தேனைப் பிழிந்து எடுத்து ஊற்றியதோ, சூடான

பாலுடன் ஒக்கக் கலந்ததோ நல … பாலுடன் அத்தேனை தகுந்த அளவு கலந்துள்ளதோ, நல்ல

சீனியில் விட்டுப் பிசைந்ததோ பல கனிதானோ … சர்க்கரையில் கொட்டிப் பிசைந்துள்ளதோ, பல வகையான பழங்களோ,

தேடி யெடுத்துப் பிழிந்ததோ நிறை … அப்பழங்களைத் தேடி எடுத்து அதன் சாற்றைப் பிழிந்து எடுத்ததோ, தேவையான

பாகு பதத்திற் கமைந்ததோ இவை … நல்ல பக்குவத்திற்கு உள்ளானதோ, இவைகள் எல்லாம்

சேர வுருட்டித் திரண்டதோ நவரசமீதோ … ஒன்றாக சேர்த்து உருட்டி உருவானதோ, ஒன்பது விதமான இனிமைகளைக் கொண்டதோ

ஞான முளைத்துப் படர்ந்ததோ யதிலே … மெய்யான உணர்வு உதித்து பரவியுள்ளதோ, அவற்றுள்

யெழு புட்பச் சுகந்தமோ விது … எழுகின்ற பலவகைப் பூக்களின் நறுமணமோ, இது

நாமகள் வித்தை ப்ரசங்கமோ வென உரை நாவால் … சரஸ்வதியின் அருளால் வெளிப்படும் ஞானத் தெளிவோ என உன் அருளை நாவினால் போற்றுகின்ற,

நாவலர் மெச்சிப் பணிந்து தாழவும் … புலவர்கள் விரும்பிப் பணிவோடு தலை வணங்கவும்,

நீயது மெச்சித் தணிந்து பேசவும் … நீ அதைக் கண்டு விரும்பி நிறைவோடு அவர்களுடன் பேசவும்,

நானுனை மெச்சிப் புகழ்ந்து பாடவும் அருள்தாராய்! … நான் உனை விரும்பித் துதித்துப் பாடவும் உனது அருளைத் தருக!

யானை மதப்பட் டெழுந்ததா மெனவே … யானை மதங்கொண்டு ஓடும்போது, அதன் கழுத்திலுள்ள மணிகளின் ஒலியைப் போன்றதோ என்று

யிரு பத்மச் சதங்கை யோலிட … உனது இரு தாமரை மலர்ப் பாதங்களை அலங்கரிக்கும் சதங்கைகள் ஓசையிட

ஆறு முகத்துக் குழந்தையா யருள் அணையார் பால் … அறுமுகக் குழந்தை வடிவாக வந்து உன்னை அணைத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு அருள் புரிந்தவனே

ஆறு முகத்திற் சொரிந்த பாற்குளம் … உனது ஆறு முகத்திற்கு பொழிந்த பாற்குளம் போன்ற

ஆறு முலைக்கும் பிரிந்த பால் நிறை … கார்த்திகைப் பெண்கள் அறுவர் தனங்களிலிருந்து வெளிப்பட்டப் பாலின் அளவானது

வார மலைக்குச் சிறைந்த போதிலு மமையாதோ … நீண்ட நெடிய மலையினால் தடுக்கப்பட்டு அடைக்கப்பட முடியுமோ?

சோனை மலைக்குட் திரிந்துலாவிய … கார் மேகங்கள் சூழ்ந்துள்ள மலகளின்மேல் திரிந்து உலாவி வருகின்றவனாகவும்,

சீர சமுத்ரத் தரங்க மேலெழு … பாற்கடலின் அலைகளின் மேல் எழுகின்ற

சூரிய னொக்கத் திரிந்துலாவிய புதல்வோனே! … ஞான சூரியனாகவும் உலாவி வருகின்ற மைந்தனே

சோலை மலைக்குக் கடம்புபோல் வளர் … சோலை மலை எனும் திருத்தலத்திற்கு வளர்கின்ற கடம்ப மலர் போன்றும்,

விராலி மலைக்குக் கொழுந்து போலுயர் … விராலிமலை எனும் திருத்தலத்திற்கு இளந்தளிர் போன்றும், உயர்ந்த

சுவாமி மலைக்குக் கரும்புபோல் வரு முருகோனே! … சுவாமி மலை எனும் திருத்தலத்திற்கு இனிக்கும் கரும்பு போன்றும் வந்து அருள் புரிகின்ற முருகப் பெருமானே!

****

புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம்கிருஷ்ணா சர்க்கரைபுதுவகை கல்கண்டு! (Post.14,272) 

Written by London Swaminathan

Post No. 14,272

Date uploaded in Sydney, Australia –  5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 7–வது கட்டுரை இது)

புரந்தரதாசர் கீர்த்தனைகளில் நல்ல ருசி உண்டு; யாராவது அவரது வீட்டுக்குப் போனால் ராமர் பாயசம் தருவார்; அதில் கிருஷ்ணா சர்க்கரையும் இருக்குமாம்; அத்தோடு வாசலில் உள்ள தாம்ப்பாளத்  தட்டிலிருந்து கற்கண்டும் எடுத்துக்கொள்ளலாமாம் . இதற்காக அவர்  நம்மை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்துடன் வரவேற்கிறார் . இதோ அவரே சொல்கிறார்

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்ககிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;

விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி

சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு

அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு

புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு

ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக

ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு

புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு

(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது

ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***

சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.

ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

****

தமிழில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்டவர்களுக்கு ஊறுகாய் போடுவது பற்றி அவர் சொன்னது மறக்காது!

புது வகைப்    பழச்சாறு SWEET — வள்ளலார்

வள்ளலார்  பாடலுடன் ஒப்பீடு ; சிவன் நாமம் மூன்று பழச் சாறு

தனித்தனி முக்கனி பிழிந்துவடித்துஒன்றாய்க் கூட்டி

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,

அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,

அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!

நூல்: திருவருட்பா; பாடியவர் வள்ளலார்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!

நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!

*****

புது வகைக் கற்கண்டு  – புரந்தரதாசர்


கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா

ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா

எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா

உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா… (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது

எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது

எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது

உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா

எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா

கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா

பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது

(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது

கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது

பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்… (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா

சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா

சந்தத பக்தர நாலகே சவிகொம்ப

காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது

சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது

எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்

புரந்தர விட்டலா என்னும் நாமமான … (கற்கண்டு)

***

ராம நாமம் செய்யும் அற்புதம் – – புரந்தரதாசர்

ராம மந்தரவ ஜபிஸோஹே மனுஜா

ராம மந்த்ரவ ஜபிஸோ

ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா

சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள்ஹே மக்களே

அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்

அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர

சல பீதியொளு உச்சரிப மந்த்ர

ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர

சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்

சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்

எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்

சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர

சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர

துரித கானனகிது தாவானல மந்த்ர

பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்

அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்

பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்

உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு

சானுராகதி நித்ய சேவிப மந்த்ர

பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர

தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)

காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்

சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்

(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

****

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டதுநன்றி உரித்தாகுக.

****

ஏறுமயில் ஏறி‘ உள்ளர்த்தம்

     ஏறுமயி லேறிவிளை யாடுமுக மொன்றே

          ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

     கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

          குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

     மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

          வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

     ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

          ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே.

……… இப்பாடலின் மேலார்ந்த பொருள் ………

ஏறத்தக்க மயில் மீது ஏறி திருவிளையாடல்களைச் செய்தது உன் ஒரு முகம்தான். சிவபெருமானுக்கு ஞான உபதேசம் செய்தது உன் ஒரு முகம்தான்.

உன் திருப்புகழைக் கூறும் உன் அடியார்களின் இருவினைகளையும்

தீர்த்துவைப்பது உன் ஒரு முகம்தான். கிரெளஞ்ச மலையை

உருவும்படியாக வேலை ஏவியதும் பின்பு அமைதிகாத்ததும் உன் ஒரு முகம்தான்.

உனக்கு எதிரியாக முரண்பட்ட அசுரர்களை வதைத்து அழித்ததும் உன் ஒரு முகம்தான். வள்ளியைத் திருமணம் செய்துகொள்ள விழைந்து ஆசையுடன் வந்ததும் உன் ஒரு முகம்தான்.

… அவ்வாறெனில், நீ ஆறுமுகனாகக் காட்சி அளிப்பதன் பொருளை

நீ எனக்கு அருளிச் செய்ய வேண்டும். தொன்மைவாய்ந்த

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

……… இப்பாடலின் உள்ளர்த்தம் ………

1. என் உள்ளமாகிய மயிலின்மீது ஏறி விளையாடியும்,

2. எனக்கு குருவாக வந்து உபதேசித்து அருளியும்,

3. என்னுடைய வினைகளையெல்லாம் தீர்த்தருளியும்,

4. என் மாயா பாசங்களை வேலால் உருவி ஒழித்தருளியும்,

5. என் அகங்கார மமகார மலங்களை அடக்கியருளியும்,

6. என்னை உன்னோடு புணர்த்தியருளியும்

… இவ்வாறு உன் ஆறு திருமுகங்களாலும் எனக்கு கருணை புரிவாயாக.

****

இறைவனுடைய ஐந்து திரு முகங்கள் பரத்தையும், உமா தேவியின் திரு முகம் இகத்தையும் நல்கும். இந்த ஆறு முகங்களும் சேர்ந்து இகபர செளபாக்கியத்தை அருளும்.

—-subham—

Tags- Part 80, ‘ஏறுமயில் ஏறி’ பாட்டின் ,உண்மையான பொருள், புரந்தரதாசர்,அருணகிரி நாதர், வள்ளலார்: மூவரின் ஸ்வீட் உவமை, தனித்தனி முக்கனி பிழிந்து ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது (Post.15,632)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,632

Date uploaded in London – 19  April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (53) மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

‘மால்யவான் முதலியவர்களுடைய உற்பத்தி ‘ என்ற உத்தரகாண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கத்தில் மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்த செய்தியைக் காண்கிறோம்.

விசுவாவஸு என்ற ராக்ஷஸனின் இரண்டாவது புதல்வியான தேவவதீ என்பவளை ஸுகேசன் என்ற ராக்ஷஸன் மணந்தான்.

அந்த தம்பதியர்க்கு மால்யவந்தன், சுமாலி, மாலி ஆகிய குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் திரேதாக்கினிகளான கார்ஹபத்தியம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி போல தேஜோவான்களாக மிளிர்ந்தார்கள். 

தங்கள் தந்தை பரமேஸ்வரரை தியானித்து புரிந்த தவத்தால் வரபாக்கியம் பெற்றதை அறிந்த அவர்கள், அவரைப் போலவே தாங்களும் தவம் செய்ய மன உறுதி கொண்டு மேருமலைக்கு வந்தனர். கடுமையான தவத்தைப் புரிந்தனர்.

இதனால் பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றி, “வரமளிக்கிறவனாகத் தோன்றி இருக்கின்றேன்” என்று கூறினார்.

பிரம்மாவிடம் சுகேசனது புதல்வர்களான மால்யவான், சுமாலி, மாலி ஆகியோர் தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்க பிரம்மா அதைத் தந்தருளினார்.

அதை விளக்கும் ஸ்லோகங்கள் இவை:

ப்ரஹ்மாணம் வரதம் ஞாத்வா சேந்த்ரைர்தேவகணைர்வ்ருதம்|             ஊசு: ப்ராஞ்ஜல்ய: சர்வே வேபமானா இவ த்ருமா: ||

தபஸாராதிதோ தேவ யதி நோ திஷஸே வரம் |                    அஞேயா: ஷத்ரு ஹந்தாரஸ்ததைவ சிரஜீவின: ||

ப்ரபவிஷ்ணவோ பவாமேதி பரஸ்பரமனுவ்ரதா: ||

ஏவம் பவிஷ்யதீத்யுக்த்வா சுகேசதனயான்விபு: |                           ஸ யயௌ ப்ரஹ்மலோகாய ப்ரஹ்மா ப்ராஹ்மணவத்ஸல: ||

உத்தரகாண்டம் , ஐந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 12,13,14

சேந்த்ரைர்: – இந்திரன் உட்பட்ட                                        தேவ கணௌ – தேவ கணங்களோடு                                    தபஸா – தவத்தால்                                                 ஆராதித: – திருப்தி அடைந்தவராய்                                        ந: – எங்களுக்கு                                                        வரம் – வரத்தை                                                            திஷஸே – அளிக்கப்போகிறீர்                                               யதி – என்றால்                                                        அஞேயா – எவராலும் வெல்வதற்கு அரியவர்களாகவும்                      ததா – அப்படியே                                               சத்ருஹந்தார: – எதிரிகளை வெல்ல வல்லவர்களாகவும்                  பரஸ்பரம் – ஒருவருக்கொருவர்                                       அநுவ்ரதா: – அன்பு மாறாதவர்களாகவும்                                    ப்ரபவிக்ரம: – மிகுந்த பராக்ரமம் உடையவர்களாகவும்                சிரஞ்சீவின: ஏவ – சிரஞ்சீவிகளாகவும்                                        பவாம: – விளங்கவேண்டும்                                              இதி – என்று                                                                  ஊசு: – வேண்டிக் கொண்டார்கள்                                        ப்ராஹ்மண வத்ஸல: – பிரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவர்களிடத்தில் வாத்ஸல்யம் உடையவரும்                                             விபு: – சாசுவதருமான                                                    ச: – அந்த                                                             ப்ரஹ்மா  – பிரம்மா                                                 சுகேசதன்யாத் – சுகேசனது புதல்வர்களுக்கு                            ஏவம் பவிஷ்யாமி – அப்படியே ஆகட்டும்                                 இதி – என்று பதில் கூறி                                                        ப்ரஹ்மலோகாய – பிரம்மலோகத்திற்கு                               யயௌ – சென்று சேர்ந்தார்

இப்படி பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றவர்கள் பயமே இல்லாமல் தேவர்களையும் அசுரர்களையும் மிகுந்த உபத்திரவத்திற்குள்ளாக்கினர்.

பிரம்மாவிடமிருந்து கேட்டுப் பெற்ற வரமாக இந்த நிகழ்வு வால்மீகியால் சித்தரிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 52; இந்து மத கலைச்சொல் அகராதி-52 (Post No.15,631)

Written by London Swaminathan

Post No. 15,631

Date uploaded in London –18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Tamil Version will be posted tomorrow.

More  K  words

KANNAPPAN / R

One of the 63 Naayanmaars/ Saivaite saints of Tamil Nadu. His story is in Periya Puranam. His story is told to illustrate unqualified love for the Lord. Kannappar/n was a hunter who dug out his eyes to be offered to Siva at Kalahasti (kaala) shrine.

***

KOCHENGAT CHOZA/N

A Choza king who was a builder of temples and is regarded as a Naayanaar. According to legend, as a spider in his previous birth, he was devoted to the Lord Siva of Tiruvanaikka/ Tiruchi and made a canopy of his web for god.  There happened to be another devotee, an elephant who pulled down the canopy. In a rage the spider kept into the trunk of the elephant, who, unable to bear the consequent pain, dashed his trunk against the Jambu tree. Both elephant and spider perished. The spider was reborn as the son of Choza queen Kamalavati and came to be called  Ko Cheng Kannaan / Kochengat/ one with red eyes. He built seventy temples and they are said to have protection from elephant attacks .

***

KURAL- TIRUK KURAL

Kural – one of the most widely known Tamil work. It consists of 1330 COUPLETS (KURAL) and deals with ethics and morality; the aim of  the book is to teach the Hindu ideals Dharma, Artha, Kama, Moksha. Book is named Dharma Artha Kama- in Tamil Muppaal- Moksha is included in the book in 70 couplets.  Dharma Artha Kama in Tamil are Aram Porul Inbam and so the book is called Muppaal. Since it contains Kural / two line stanzas it is popularly called Tiruk Kural. The author is Tiru Valluvar. Both the age of the book and the life of the author are debated. Though the Tamil Nadu government accepted the date 31 BCE for the book, linguistics show it cannot be older than fifth century CE. Famous historian K A Nilakanda Shastri and Professor Vaiyapuri Pillay place it in fifth century CE.  Ancient Tamils also included it in post Sangam books called 18 smaller works.

***

Kushika

Grandfather of Vishwamitra and father of Gadhi. He willingly underwent severe ordeals to serve the great Chyavana Rishi who after being pleased with Kushika’s devotion , ordained that his descendants would become brahmanas

***

L WORDS ; LA words

LAGNA

Lagna (लग्न) refers to that particular sign of the zodiac which is cut by the eastern horizon at the time of one’s birth.

Lagna (लग्न) refers to an “auspicious moment”, according to the Nāradasaṃhitā verse 29.86-95 

Lagna (लग्न) refers to “(being) stuck (from decapitations)”, according to Bāṇa’s Kādambarī (p. 225-226)

Lagna (लग्न) refers to the “auspicious hour (free of defects)”, according to the Śivapurāṇa 2.3.39

****

LAGNA PATRIKA

Lagna patrika is a Sanskrit term for a formal wedding invitation or letter of betrothal, often prepared by a priest to communicate the date, time, and venue of the ceremony. It acts as a symbolic, written commitment to the union and is used within Hindu tradition to announce the marriage.

***

LAKSHMI

Hindu goddess of wealth, prosperity (both material and spiritual), fortune, beauty, and fertility. As the consort of Vishnu, she embodies auspiciousness and acts as his divine energy (shakti), often appearing as the mother of the universe. She is revered as a central deity symbolizing abundance and grace. 

Goddess of wealth and fortune. Wife of Visnhu and mother of Kama. Also called Sri or Shree.

According to Ramayana, she sprang from the froth of ocean in full beauty with a lotus in her hand, when the milky ocean was churned by the Asuras/demons and the Devas/angels. She is called Ksheerabdi Tanayaa- daughter of ocean. because of her connection with lotus flower all the names of lotus in Indian languages became synonyms to her. Lakshmi is said to have four arms, sometimes depicted as having only two.  She sits on a lotus or holds a lotus in her hand.

Lakṣhmī is depicted in three aspects and in each one her vehicle differs;

1.     In sattva-guna; she accompanies Mahā Viṣṇu upon Garuda.

2.     In rajo-guna; rides alone upon an elephant or sits upon a lotus.

3.     In tamo-guna; rides alone upon the owl Uluka.

Aṣhṭalakshmi (அஷ்டலக்ஷ்மி) [Eight kinds of fortune or wealth personified as so many goddesses, viz., தனலக்ஷ்மி, தானி யலக்ஷ்மி, தைரியலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, வித்தியாலக்ஷ்மி, கீர்த்திலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி. [Dhana, Dhanya, Dairya, Veera, Vidhya, Keerti, Vijaya, Rajya Lakshmi forms are shown in many Tamil Temples.]

***

Lanka

Island od of Ceylon or its capital city. The city is described in the Valmiki Ramayana as of vast extent and of great magnificence, with seven broad moats and seven stupendous walls of metal and stone. It is said to have been built of gold by Vishwakarma for the residence of Kuvera/ Kubera, from whom it was taken by Ravana. When Ravana abducted Sita, her husband Rama built an ocean bridge to Lanka from Tamil Nadu and invaded Lanka. At the end of a big fight Ravana was killed by Rama. Now the island is called Sri Lanka.

***

Lavana

A Rakshasa, son of Madhu by Kumbhinasi. He inherited from his father an invincible trident which had been presented to him by Siva. He was surprised without his weapon and killed by Satrugna. Lavana was the king of Mathura and Satrughna succeeded him.

***

LAKSHMANA

1) Lakshmana was the brother and close companion of Rama, and himself a hero in the famous epic Ramayana. Within a number of Hindu traditions Lakshmana is considered to be an avatar, in a secondary form to Rama’s main appearance. In some Hindu traditions he is worshiped as an avatar of Shesha. The name may also be written as Lakshman or Laxman.

Lakshmana is the twin brother of Shatrughna, born in Ayodhya to Sumitra, the third wife of Dasharatha, king of Kosala. Thus, Rama is the eldest, Bharata is the second, Lakshmana is the third, and Shatrughna is the youngest of the four brothers. Despite being the twin of Shatrughna, Lakshmana is specially attached to Rama, and the duo are inseparable. When Rama married Sita, Lakshmana married the younger sister of Sita named Urmila. He accompanied Rama when he was banished to forest for 14 years.

***

LAKSHAM

One hundred thousand in Sanskrit and Indian languages.

***

LATA DESA

Lāṭadeśa (लाटदेश) (or Lāṭa) is the name of an ancient country whose king Lāṭeśa was conquered by Kesarin of the Śulkī royal family possibly identified with the Eastern Chālukya dynasty according to Chakravarti.—The Lāṭa country alluded to here may be taken to correspond roughly to the central and southern Gujarāt. This region was included in the principality of Kheṭakamaṇḍala, i.e., modern Kaira and parts of Ahmedabad District. In the time of Kṛṣṇa II the province was recovered by him from a collateral Rāṣṭrakūṭa family and remained within the empire of the Rāṣṭrakūṭas of Malkhed.

***

LAVA KUCHA/N- see Kucha under K

***

LAXMANA–  only son of Duryodhana and Bhanumathi; a fearless warrior; on the 12th day of Mahabharata war he was killed by Abhimanyu.

***

LAXMANAA- daughter Duryodhana and Bhanumati. She was abducted by Samba, Krishna’s son. At first Duryodhana objected to this match and imprisoned Samba but later at the instance of Balarama he was released and was married to Laxmanaa.

—subham—

Tags-HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 52; இந்து மத கலைச்சொல் அகராதி, Part 52, K words, L words, Kural, Lagna, Lakshmana

திருப்புகழில் எழுகூற்றிருக்கை -Part 79 (Post No.15,630)

திருமங்கை ஆழ்வார் திருவெழுகூற்றிருக்கை: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் .

திருஞானசம்பந்தர் திருவெழுகூற்றிருக்கை: கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் 

79திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 79

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 79

****

Written by London Swaminathan

Post No. 15,630

Date uploaded in London –18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

I have added Tevaram and Divya Prabandham Ezu Kootrirukkai pictures taken by me in two temples in Kumbakonam .

திருப்புகழில் எழுகூற்றிருக்கை

ஓருரு வாகிய தாரகப் பிரமத்

     தொருவகைத் தோற்றத் திருமர பெய்தி

          ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை

இருபிறப் பாளரி னொருவ னாயினை

     ஓராச் செய்கையி னிருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து

          மூவரும் போந்து இருதாள் வேண்ட

               ஒருசிறை விடுத்தனை

ஒருநொடி யதனில் இருசிறை மயிலின்

     முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி

     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய

     மும்மதன் தனக்கு மூத்தோ னாகி

          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்

               அறுகு சூடிக் கிளையோ னாயினை

ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து

     முக்கட் சுடரினை இருவினை மருந்துக்

          கொருகுரு வாயினை

ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி

     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்

          ஐம்புலக் கிழவன் அறுமுக னிவனென

               எழில்தரு மழகுடன் கழுமலத் துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்

     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்

          டன்றி லங்கிரி யிருபிள வாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த

     ஆறெழுத் தந்தணர் அடியிணை போற்ற

          ஏரகத் திறைவ னென இருந்தனையே.

……… சொல் விளக்கம் ………

ஓருருவாகிய தாரகப் பிரமத்து … ஒரு (1) பொருளாகிய

பிரணவமாம் முழுமுதலின்

ஒருவகைத் தோற்றத்து … (சிவனின் ஐந்து முகங்களோடு

அதோமுகமும் சேர்ந்த) ஒரு (1) வகையான தோற்றத்தில்,

இருமரபெய்தி … சக்தி சிவம் என்னும் இரண்டின் (2) லக்ஷணங்களும்

அமைந்து,

ஒன்றாய் ஒன்றி … அதுவே ஓர் (1) உருவாகச் சேர்ந்து,

இருவரிற் தோன்றி … சக்தி சிவம் என்ற இருவரிடமும் (2) தோன்றி,

மூவாதாயினை … மூப்பே (3) இல்லாது என்றும் இளமையோடு

விளங்குகிறாய்.

இருபிறப்பாளரின் … [உபநயனத்துக்கு முன்னும் பின்னும்] இரு (2)

பிறப்புக்களை உள்ள அந்தணர் குலத்தில்

ஒருவன் ஆயினை … ஒப்பற்ற ஒருவனாக (1) விளங்கிய

திருஞானசம்பந்தராய் அவதரித்தாய்.

ஓராச் செய்கையின் … [ஓரா – இரு பொருள் – ஒன்று (1) மற்றும்

தெரியாமல்] பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்த காரணமாக,

இருமையின் (2) முன்னாள் (3) … [இருமை – இரு பொருள் –

இரண்டு (2) மற்றும் கர்வம்) கர்வத்துடன் பிரம்மா முன்னாளில்

(முன்னாள் = இரு பொருள் – மூன்று (3) மற்றும் முன்பொரு நாள்]

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து … நான்கு (4)

முகங்களுடைய பிரமனின் குடுமியை கணநேரத்தில் (கைகளால்

குட்டிக்) கலைத்து,

மூவரும் போந்து இருதாள் வேண்ட … அரி, அரன், இந்திரன்

ஆகிய மூவரும் (3) உன்னை அடைந்து உன்னிரு (2) பாதங்களில்

பணிந்து முறையிட்டு வேண்ட,

ஒருசிறை விடுத்தனை … பிரமனை நீ அடைத்த ஒரு (1)

சிறையினின்றும் விடுவித்தாய்.

ஒருநொடியதனில் இருசிறை மயிலின் … ஒரு (1)

நொடிப்பொழுதில் இரண்டு (2) சிறகுகள் உடைய மயிலில் ஏறி,

முந்நீர் உடுத்த நானிலம் அஞ்ச … மூன்று (3) பக்கங்களிலும் நீர்

உள்ள கடல்களை ஆடையாக உடுத்தியுள்ள, முல்லை, குறிஞ்சி, மருதம்,

நெய்தல் என்ற நால் (4) வகையான நிலம் படைத்த இவ்வுலகமே அஞ்ச

(5) (அஞ்ச என்றால் ஐந்து -5- என்றும் பயப்பட என்றும் இரு பொருள்),

நீ வலம் செய்தனை … நீ உலகை வலம் வந்தாய்.

நால்வகை மருப்பின் … நான்கு (4) விதமான தந்தங்களை

உடையதும் (ஐராவத யானைக்கு நான்கு தந்தங்கள்),

மும்மதத்து … மூன்று (3) வகையான மதம் பிடிக்கக் கூடியதும்,

இருசெவி ஒருகை பொருப்பன் … இரண்டு (2) காதுகளையும், ஒரு

(1) துதிக்கையையும் கொண்ட மலை போன்ற ஐராவதத்தை உடைய

இந்திரனின்

மகளை வேட்டனை … மகளாகிய தேவயானையை மணம் செய்து

கொண்டனை.

ஒருவகை வடிவினில் … ஒரு (1) வகையான யானை வடிவிலே

இருவகைத்து ஆகிய … இள யானை, கிழ யானை என இரு (2)

வடிவிலும் வரவல்லதும்,

மும்மதன் தனக்கு … கன்ன மதம், கை மதம், வாய் மதம் என்ற மும்மத

(3) நீரும் பெருகி வந்த கிழ யானைக்கு

மூத்தோன் ஆகி … மூத்த சகோதரனாக* விளங்கினாய்.

நால்வாய் முகத்தோன் … [நால்வாய் = இரு பொருள் – நான்கு (4)

மற்றும் வாயினின்று] தொங்கும் துதிக்கை முகத்தோனும்,

ஐந்துகைக் கடவுள் … ஐங்கரங்களை (5) (தோளிலிருந்து நான்கு

கரங்களும், துதிக்கையும்) உடைய கடவுளும்,

அறுகு சூடிக்கு … அறுகம் [அறுகம் = இரு பொருள் – ஆறு (6) மற்றும்

அறுகம் (புல்)] புல்லைச் சூடியவனுமான கணபதிக்கு

இளையோன் ஆயினை … இளைய சகோதரன் என விளங்குகிறாய்.

ஐந்தெழுத்து அதனில் … நமசிவாய என்ற பஞ்ச (5) அட்சரத்தின்

மூலமாக

நான்மறை உணர்த்து … நான்கு (4) வேதங்களாலும் இவரே இறைவன்

என்று உணர்த்தப் பெறுபவரும்,

முக்கட் சுடரினை … சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடரை (3)

தம் கண்களாக உடையவரும்,

இருவினை மருந்துக்கு … நல்வினை, தீவினை இரண்டிற்கும் (2)

மருந்தாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானுக்கு

ஒரு குருவாயினை … ஒப்பற்ற ஒரு (1) குருநாதனாக அமைந்தாய்.

ஒருநாள் … முன்பொரு (1) நாள்

உமையிரு முலைப்பால் அருந்தி … உமாதேவியின் இரு மார்பிலும்

சுரந்த ஞானப்பாலைப் பருகி

முத்தமிழ் விரகன் … இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழிலும்

வல்லவனாகி,

நாற்கவி ராஜன் … நால்வகைக் கவியிலும்** அரசனாகி,

ஐம்புலக் கிழவன் … பஞ்ச இந்திரியங்களின் உணர்ச்சிகட்கு

அடிமைப்படாத உரிமையாளனாகி,

அறுமுகன் இவன் என … ஆறு முகங்களை உடைய ஷண்முக

மூர்த்தியே இவன்தான் என யாவரும் கூற

எழில்தரும் அழகுடன் … இளமை ததும்பும் அழகோடு

கழுமலத்து உதித்தனை … சீகாழிப்பதியில் திருஞானசம்பந்தனாகத்

தோன்றினாய்.

அறுமீன் பயந்தனை … கார்த்திகைப் பெண்களாகிய ஆறு

நக்ஷத்திரங்களும் பெற்ற புதல்வனாகினாய்.

ஐம் தரு வேந்தன் … கற்பகம், மந்தாரம், பாரிஜாதம், சந்தானம்,

அரிசந்தனம் என்ற ஐந்து தேவ விருட்சங்கள் இருக்கும்

தேவலோகத்துக்குச் சக்ரவர்த்தியாக விளங்கினாய்.

நான்மறைத் தோற்றத்து … நான்கு மறைகளைப் போன்று மிக

ரகசியமானதும்,

முத்தலைச் செஞ்சூட்டு … மூன்று பிரிவுகளோடு சிவந்த

கொண்டைகளை (சிகரங்களை) உடையதுமான

அன்றிலங் கிரி … அன்றில் பட்சி (கிரெளஞ்சம்) பெயர் கொண்ட

மலையை

இரு பிளவாக … இரண்டு கூறாகப் பிளக்குமாறு

ஒரு வேல் விடுத்தனை … ஒப்பற்ற உன் வேலினைச் செலுத்தினாய்.

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த … காவிரியின் வட பாகத்தில் விளங்கும் சுவாமிமலையில் இருக்கும்

ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற … சரவணபவ என்னும்

உன் ஷடாக்ஷர மந்திரத்தை ஓதும் அந்தணர்கள் உனது பாத

கமலங்களைப் போற்ற,

ஏரகத்து இறைவன் என இருந்தனையே. … திருவேரகத்தின்

இறைவன் என்ற திருப்பெயருடன் எழுந்தருளி இருக்கின்றாய்.

குறிப்பு:

இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல்

அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல்.

                                            1

                                         1 2 1

                                      1 2 3 2 1

                                   1 2 3 4 3 2 1

                                1 2 3 4 5 4 3 2 1

                             1 2 3 4 5 6 5 4 3 2 1

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

                          . . . . . . . . . . . . . . . . . . . . . . .

                              இடையில் தேர் தட்டு

                          . . . . . . . . . . . . . . . . . . . . . . .

                          1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1

                             1 2 3 4 5 6 5 4 3 2 1

                                1 2 3 4 5 4 3 2 1

                                   1 2 3 4 3 2 1

                                      1 2 3 2 1

                                         1 2 1

                                            1

சில தமிழ்ச் சொற்கள் இரு பொருள் படும்படி அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மூவாதாயினை என்ற சொல்லுக்கு இரு பொருள் ..

(மூவா = மூன்று மற்றும் மூவா = வயதாகாமல் இளமையாக).

முருகனுக்காக வள்ளியை பயமுறுத்த விநாயகர் கிழ யானையாகி மதம் பெருக வந்தார். அப்படி வந்த யானை முருகனுக்குப் பின்பு தோன்றியதால், முருகன் இங்கு மூத்தவன் ஆகிறான்.

—subham—

Tags- திருப்புகழில் எழுகூற்றிருக்கை , Part 79,

ராமாயணத்தில் வரங்கள் (52) பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்தது! (Post.15,629)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,629

Date uploaded in London – 18 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (52) பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தில் நான்காவது ஸர்க்கத்தில் பார்வதி தேவி ராக்ஷஸிக்கு வரம் அளித்த நிகழ்வையும் காணலாம்.

புரமாகாஷகம் ப்ராதாத்வார்வத்யா: ப்ரியகாம்யயா |                   உமயாபி வரோ தத்தோ ராக்ஷஸானாம் ந்ருபாத்மஜ ||

சத்யோபலப்திர்கர்மஸ்ய ப்ரஸூதி சத்ய ஏவ ச |                       சத்ய ஏவ வய:ப்ராப்திர்மாதுரேவ வய: சமம்

 உத்தர காண்டம் நான்காம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 31&32

பார்வத்யா – ஶ்ரீ பார்வதி தேவியாருக்கு                             ப்ரியகாம்யயா – பிரியமானதைச் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற விருப்பத்தால்                                                       ஆகாஷகம் – ஆகாயத்தில் எழுந்து செல்லவல்ல                          புரம் – நகரம் ஒன்றை (சிவபிரான்)                                             ப்ராதாத் – தந்தருளினார்                                               ந்ருபாத்மஜ – சக்கரவர்த்தித் திருமகனாரே                                 உமயா அபி – உமாதேவியாராலும்                              ராக்ஷஸானாம் – அர்க்கர்களுக்கு                                          கர்பஸ்ய – கருவின்                                                     சத்யோபலப்தி – உடனே தரித்தலும்                                         சத்ய – உடனே                                                       ப்ரஸூதி: ச – பிரசவித்தலும்                                                     சத்ய ஏவ – அதே சமயத்தில்                                           மாது: – தாயின்                                                        சமம் வய: – சமமான வயதையும்                                      வய: ப்ராப்தி ஏவ – அதே வயதைப் பொறுத்தும்                          வர: – ஆக்கினையாக தத்த: – விதித்து அருளப்பட்டது

ராக்ஷஸிக்கு பார்வதி தேவி வரம் அளித்த விஷயம் இங்கு தரப்பட்டாலும். எதற்காக வரம் அருளப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை.

**

சங்க காலத் தமிழ் நாட்டில் உருவ வழிபாடு (Post No.15,628)

DEVI- GODDESS WORSHIP IN HARAPPA, MOHANJADARO சிந்து சமவெளியில் தேவி வழிபாடு

Written by London Swaminathan

Post No. 15,628

Date uploaded in London –17 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

HUMAN SACRIFICE IN INDUS VALLEY; 
சிந்து சமவெளியில் ஒரு தெய்வத்துக்கு நர பலி; கீழே சப்த மாதர்கள் 

கடவுளைக்க கல்லிலோ, உலோகத்திலோ, படத்திலோ ஓவியத்திலோ உருவமாக வழிபடுவது இந்து மதத்தில் மட்டுமே உள்ளது ; வேதத்தில் உருவங்கள் வருணிக்கப்பட்டாலும் சிந்து சமவெளியில்தான் ஆதாரங்கள் கிடைத்தன . ஒருவர் தேவியின் முன்னால் குனிந்து வணங்கி ஒரு (மனிதனின்) தலையை  காணிக்கையாக சமர்ப்பிப்பதைக் காண்கிறோம். கீழே சப்த மாதர்கள் (ஏழு கன்னிமார் ) இருப்பதையும் காண்கிறோம். சிவலிங்கங்கள் கண்டுபிடித்ததாக வெள்ளைக்காரர்கள் முதல் நாளிலேயே சொன்ன  தெல்லாம் தவறு என்று பிற்கால ஆராய்ச்சியாளர்கள்  சொல்லிவிட்டனர் ; அவைகள் லிங்கம் அல்ல யோனிகள் அல்ல என்றும் தாயக்கட்டடத்தில் வைத்து விளையாடும் காய்கள் GAMESMEN  என்றும் சொல்லிவிட்டார்கள்  ; பிராணிகள் சூழ்ந்த உருவத்தை பசுபதி முத்திரை என்று வெள்ளைக்காரர்கள் சொன்னதை மறுக்கும் விதத்தில் அயர்லாந்திலும் பஹ்ரைன் தீவிலும் பிராணிகள் சூழ்ந்து நிற்கும்  தெய்வங்களின் முத்திரைகள் கிடைத்தன ; ஆகையால் அது பசுபதி அல்ல ; பொதுவாக இறைவன் என்ற கருத்தும் உருவானது . ஹரப்பா, மொஹஞ்சசதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட தேவியர் சிலைகள் பாகிஸ்தான் மியூசியங்களில் உள்ளன. எது எப்படியாகிலும் யஜுர் வேதத்தில் சிவ பெருமானை வருணித்ததை அப்படியே புறநானூற்றிலும் தேவார திருவாசகத்திலும் காண்பதோடு நில்லாமல் சோழர்காலச் சிற்பங்களிலும் காண்கிறோம்; கோயில் வழிபாட்டு விக்கிரககங்களிலும் காண்கிறோம். ரிக்வேதத்திலேயே சிவ பெருமானின் உருவம் வருணிக்கப்பட்டதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் சொற்பொழிவில் குறிப்பிட்டுள்ளார் .

DEVI WOSHIP IN INDUS  VALLEY 

வேத காலத்தில் துவங்கி சிந்து சமவெளியில் வணங்கி இன்று பாரத நாடு முழுதும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் உள்ள இந்த உருவ வழிபாடு இன்றுவரை இந்து மத்தில் மட்டுமே உள்ளது .ஒரு காலத்தில் இந்த உருவ வழிபாடு உலகம் முழுதும் இருந்ததை முகமது நபிக்கும் முன்னதாக உள்ள காபா (மெக்கா) உருவத்திலும் கிறிஸ்தவ மத கன்னிமேரி சிலைகளிலும் காணலாம் ; ஆயினும் அவர்கள் உருவ வழிபாட்டினைப் போற்றுவதில்லை .

இதற்குப்பின்னர் சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் கடவுள் உருவங்களை பெருமளவில் உற்பத்தி செய்து  விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று அரசாங்கத்துக்கு சாணக்கியர் யோஜனை தந்ததையும் காண்கிறோம் .

சங்க இலக்கியத்தில் பரிபாடலில் தெளிவான குறிப்பு ஒன்று கிடைக்கிறது ; ஒரு பட்டிக்காட்டான் திருப்பரங்குன்றத்துக்கு வந்தபோது ஒரு சமய ஓவியத்தில் பூனை இருப்பது வினோதமாக இருக்கிறதே என்று கிராமத்தானின் மனைவி கேட்கவே அவளது கணவன் “அடியே! உனக்கு இது தெரியாதா ? அஹல்யாவை மானபங்கப்படுத்திவிட்டு இந்திரன் பூனை போல சென்றானே” என்கிறான்.  அங்கே இந்திரனின் புராணக்கதை சித்தரிக்கப்பட்டது தெரிகிறது .

SO CALLED PASUPATI IN INDUS VALLEY 

காதா சப்த சதி என்னும் பிராகிருத மொழி காதல் தொகுப்பில் ராமாயண ஓவியம் வருகிறது; அண்ணன் மனைவி வீட்டில் தனியே இருக்கும் பொது தம்பியானவன் தவறான பார்வையில் அண்ணியைப் பார்த்தவுடன் அவள் ராமாயண ஓவியத்தைக் காட்டுகிறாள். “அதோபார் லட்சுமணன், அண்ணியின் (சீதையின்) கால்களை மட்டும் பார்த்த வண்ணம் நடக்கிறான்” என்று ; இந்த பிராகிருத நூல் சங்க காலத்தில் எழுந்ததே ; ஆனால் ஓவியம் இருந்த இடம்- ஆந்திரத்தில் கோதாவரி நதிக்கரை ஊரில்.

பதஞ்சலி முனிவர் , உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலான பாணினீயத்துக்கு உரை எழுதினார்; அதை மஹா பாஷ்யம் / பேருரை என்றே அழைப்பார்கள் . அதிலும் அர்த்த சாஸ்திரம் போல பல குறிப்புகள் கிடைக்கின்றன

2200 ஆண்டுகளுக்கு முன்னர் கருட ஸ்தம்பங்கள் நிறுவப்பட்டதை கரிகால் சோழன் யூப ஸ்தம்ப பாடலிலும் ககிரேக்க தூதன் மத்திய பிரதேச விதிஷா நகரில் நிறுவிய தூணிலும் காண்கிறோம்

புத்த மதத்தினர் கற்களில் உருவத்தை  சமைக்கும் வரை இந்துக்கள் களிமண்ணையும் பட ஓவியங்களையும் மட்டுமே பயன்படுத்தினர் இதனால் புத்தரின் காலத்துக்கு முந்திய ஓவியங்களோ உருவங்களோ கிடைக்கவில்லை; குஷானர் வெளியிட்ட நாணயங்களில் இந்து தெய்வங்கள் உள்ளன; அதற்கு முன்னர் வடமேற்கு இந்திய கிரேக்க மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் கிருஷ்ணன் பலராமன் உருவங்கள் உள்ளன . இந்தப்   பின்னணியில் பார்க்கையில் அடுத்து வந்த சங்க காலத்தில் உருவ வழிபாடு இருந்ததை இல்லுறைத்தெய்வம் என்ற குறிப்புகளில் காண முடிகிறது. 

குஷான மன்னர்களுக்கும் முன்னதாக யாதேயா வெளியிட்ட நாணயங்களில் முருகனின் ஆறுமுகங்களையும் ஆறு புள்ளிகளாக வடித்துள்ளனர் .

GHOSTS IN INDUS VALLEY SEALS

சங்க கால குறிப்புகளைக் காண்போம்: 

நடுகல் வழிபாடும் உருவ வழிபாடே ; இதைப்பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் நிறைய உள்ளன ; உலகம் முழுதும் நடுகற்கள் அல்லது இறந்தோரின் சின்னங்கள் இருந்தாலும் அவைகளை அவர்கள் பூத்தூவி வழிபட்ட செய்தி இல்லை ; தமிழ் நாட்டிலோ தொல்காப்பியம் முதல் சங்க இலக்கியம் வரை அதுபற்றிய ஆகம விதிகளை பார்க்கிறோம்.

சேர்ன் செங்குட்டுவன் இந்த விதி முறைகளைப் பின்பற்றி புனித இமய மலையில் கல்லெடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினிக்கு / கண்ணகிக்கு சிலை எடுத்தையும் அது  அந்த பத்தினி வழிபாடு இலங்கை முழுவதும் பரவியத்தையும் சிலப்பதிகாரத்திலும் இலங்கை நூல் குறிப்புகளிலும் காணலாம் .

நடுகல் வழிபாடு, பத்தினி வழிபாடுகள், காலப்போக்கில் அழிந்துவிட்டன; ஆனால் அந்தக்  காலத்தில் இருந்த கோவில்களின் நீண்ட பட்டியலை சிலப்பதிகாரம் தருகிறது .அந்தக்கோயில்கள்  இந்திரன் முதலான தேவர்களுக்கும் கூட எழுப்பப்பட்டன. கந்தழி வழிபாடு 


BALARAMA, KRISHNA IN INDO-GREEK COINS

தொல்காப்பிய சூத்திரம்

“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற

வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”

(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.

கொடிநிலை = சூரியன்

கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)

வள்ளி = சந்திரன்

(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).

மேலும் சிலர் கந்து என்பது கம்பம் போன்ற கல் என்றும் இதுவே சிவ லிங்க வழிபாடு ஆனதாகவும் கூறுகின்றனர் ; பிற்காலத்தில் கந்தழி என்று தெய்வீகப்   பாடல்களில் இல்லாததால் இந்தச் சொல் மர்மமானதாவே இருக்கிறது.

SIVA ON KUSHANA COIN; SKANDA/MURUGA ON YAUDHEYA COIN

இல்லங்களில்   உறையும் கடவுள்  பற்றிய குறிப்புகள் ஒவ்வொரு வீட்டிலும் இருந்த, பிரார்த்தனை அறையில் இருந்த , படங்களையோ களிமண்  வடிவங்களையோ குறித்தாகக் கொள்ளலாம் . கல் கத்தா காளி /துர்கா பூஜையானாலும் சரி , மஹாராஷ்டிரா கணேஷ் சதுர்த்தி ஆனாலும் சரி, தமிழ் நாட்டு கிராம தேவதை கோவில்களானாலும் சரி மண்ணினால் உருவத்தைச் செய்து, வழிபாடு முடிந்தவுடன்  ஆற்றில் கரைப்பதை இன்று வரை காண்கிறோம் . ஆகவே நிரந்தரமாக வழிபடுவதற்கு சுவர் ஓவியமும் விழாக்காலங்களில் வழிபடுவதற்கு களிமண்  உருவங்களும் செய்யப்பட்டன எனலாம்; விஷ்ணுவின் ஓண  விழா முதல் சிவனின் ஆதிரை விழா , கார்த்திகை தீப   விழாக்குறிப்புகள்சங்க இலக்கியத்தில் இருப்பதால் உருவங்கள் இல்லாமல் இவை நடந்திராது .

TIGER GODDESS IN HARAPPA, MHANJADARAO IN PAKISTAN

இல்லத்து உறையும் தெய்வங்கள்

அணங்கு வழங்கும் அகல் அங்கண் என்ற மதுரைக்கு காஞ்சி 164 வரிக்கு இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் பொருள் கண்டுள்ளார் .

கோவிலில் உள்ள உருவங்களின் வீதி உலா என்று நான் கருதுகிறேன் ; இப்போது இதை நாம் சாமி/ பெருமாள்/ அம்மன்  புறப்பாடு என்கிறோம் .

கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேவிய,

மணம் புணர்ந்து ஓங்கிய , அணங்குடை நல் இல் – மதுரைக் காஞ்சி 577-578 வரிகளின் பொருள் 

“வளம் மிக்க குடிப்பிறந்த செல்வரும் அவர் வழிச் சார்ந்த பிற செல்வர்களும் வாழும் இல்லங்கள் தெய்வங்களை உடையனவாக இருக்கின்றன” என்பதைக் காட்டுகிறது

இல்லத்தின் வாயில் நிலைகளிலும் தெய்வம் நிலைபெற்றிருப்பதாகக் கொண்டாடினர்.

தொல் வலி  நிலை இய, அணங்குடை நெடுநிலை

நெய்ப்படக் கரிந்த திண்பொரிக்கதவின் – மதுரைக் காஞ்சி 353/4

“வீட்டின் வாயிலில் தெய்வம் உறைவதைக்குறிப்பிட்டு அதற்கு நெய், ஐயவி என்னும் வெண்கடுகு சமர்ப்பிக்கப்பட்டதையும் உரைகாரர்  நச்சு. குறிப்பிடுகிறார்.

இன்றுவரை அரண்மனைக் கதவுகளில் , செட்டியார் வீட்டுக் கதவுகளில் கஜ லெட்சுமி உருவம் பொறித்திருப்பதைக் காணலாம் . மைசூர் அரண்மணிக் கதவுகளில் உள்ள கஜலட்சுமி உருவத்தைப் புகைப்படமும் எடுத்தேன் ; குபேரனின் நவ நிதிகளில் சங்கம் பதுமம் என்ற இரண்டை மட்டும் கதவில் பொறிக்கும் வழக்கமும் உள்ளது

மாலை நேரத்தில் இரும்புத் தகளிகளில் விளக்கேற்றி மலர் தூவி வழிபட்டதை நெடுநல்வாடை வரிகள்

வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள்,

மெத்தென் சாயல், முத்து உறழ் முறுவல்,

பூங்குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக்கண்,

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த

செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,                                                

அவ்இதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து,

இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ,

நெல்லும் மலரும் தூஉய், கை தொழுது,

மல்லல் ஆவணம் மாலை அயர        (36 – 44)

கருத்துரை

வெண் சங்கினால் செய்யப்பட்ட வளையல் கையினையுடைய பெண்கள், மூங்கிலைப் போன்ற தோளினை உடையர், மென்மையான மேனியுடையர், முத்துப் போன்ற பல்லுடையர், காதிலே அணிந்துள்ள அழகிய காதணிக்குப் பொருந்த மிக்க அழகுடன் கூடிய குளிர்ச்சியான கண்களையுடையர், பெண்மைக்குரிய பேதைமைத் தன்மையுடையர், இப்பெண்கள் பூந்தட்டில் இட்டு வைத்த மலரும் காம்பினையுடைய பிச்சி மலரின் அரும்புகள் இதழ் விரித்து மணம் வீசின.  அவை மலர்வதைக் கொண்டு மாலைக் காலம் வந்துவிட்டதை அறிந்தனர், இரும்பால் செய்யப்பட்ட விளக்கின் நுண்ணிய திரியினைக் கொளுத்தி, நெல்லும் மலரும் தூவிக் கைகளால் தொழுது தெய்வத்தை வணங்கினர். 

பெண் ஒருத்திக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவளுடைய தோழி,  “வா, மனையில் உறையும் தெய்வத்தை வணங்கி  பலியையும் செலுத்துவோம் என்கிறாள்

வல்லே வருக, வரைந்த நாள்!” என,

நல் இறை மெல் விரல் கூப்பி,

இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! -அகநானூறு 282

***

HARAPPA AND MOHANJADARO IN PAKISTAN

வீடுகளின் சுவரில் பாவை/ பெண் தெய்வம்  உருவத்தை வரைந்து வெளிப்பட்டதை அகநானூறு 369 விளக்குகிறது :

கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:

ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,

மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்

கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்

சேயிழை மகளிர் ஆயமும் அயரா;                        5

தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்

காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்

பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,

இவை கண்டு, இனைவதன் தலையும், நினைவிலேன்,

கொடியோள் முன்னியது உணரேன், ”தொடியோய்!  அகநானூறு  369

பொருள்

செவிலித்தாய் இவ்வாறு சொல்லிப் புலம்புகிறாள். மகளே!

என் நிலைமையை எண்ணிப் பார். வளையல் அணியந்த மகளிர் முறை முறையாக வந்து உன்னைப் பாராட்டுவர். அவர்கள் இப்போது தவிக்கின்றனர். நீ ஊட்டாததால் நீ வளர்த்த கிளி பால் உண்ண மறுக்கிறது. மயில் போல் நடக்கும் உன் தோழிமாரும் விளையாடவில்லை. நீ நீர் ஊற்றாததால் நீ தாழியில் வளர்த்த செடிகளும் பூக்கவில்லை. அழகு தவழ வயிரம் பதித்து வைதிருக்கும் உன் சுவர் ஓவியத் தெய்வத்துக்கும் படையல் செய்யப்படவில்லை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் வருந்திக் கொண்டிருக்கிறேன். அத்துடன் பழைய நினைவுகள் பல என் நினைவுக்குச் சரியாக வரவில்லை”..

***

உலகப்புகழ் பெற்ற இலக்கணமான பாணினீயத்துக்கு, 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உரை எழுதிய பதஞ்சலி யானை குதிரை ஒட்டகம் போன்ற பொம்மைகளை பிரகிருதி என்றும் வழிபடக்கூடிய உருவங்களை அர்ச்சா என்றும் எழுதியுள்ளார் . இவைகளை புரோகிதர்கள்  பயன்படுத்தினர் . அவர்கள் வீடு வீடாக இவைகளை எடுத்துச் சென்றோ கோவில் போன்ற ஒரே இடத்தில் வைத்தோ சம்பாத்தித்தனர்; வாழ்வூதியம் பெற்றனர் . இவை தவிர தனிப்பட்டவர் வழிபாட்டிலும் அர்ச்சா என்னும் உருவங்கள் இருந்தன. சிவன், ஸ்கந்த/ விசாகன் ஆகியோரை அவர் குறிப்பிட்டுள்ளார் .

சாணக்கியன் யோசனையின் பேரில் மெளரிய மன்னர்கள் வணிக ரீதியில் கடவுள் உருவங்களை செய்து, விற்று  அரசாங்கத்துக்குப் பணம் ஈட்டித்தந்தனர் . ஆனால் வேறுபடுத்திக் காட்டுவதற்காக இந்தக் கடவுள் பொம்மைகளின் பெயர்களுடன்  என்னும் பின்னொட்டைச் சேர்த்தனர் ‘சிவக’. ‘விசாகாக’ .

PUNCH MARKED COINS

பாணினியின் , 6-3-26; 8-1-15 சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் ஸ்கந்த- விசாக ஜோடி மிகவும் வரவேற்றைப் பெற்றன என்கிறார். ஆக, முருகனின் இரண்டு உருவங்கள் ஜோடி ஜோடியாக விற்கப்பட்டது தெரிகிறது.

இன்னொரு சுவையான விஷயத்தையும் பதஞ்சலி தருகிறார் பாணினி சூத்திரம் 1-2-64 க்கு உரை எழுதுகையில் காஷ்யபரின் உருவங்களையும் மக்கள் வழிபட்டது தெரிகிறது ; வர்ணன், விஷ்ணு ஆகிய இருவருக்கும் காஷ்யபர் என்ற பெயர் உண்டு.

க்ஷத்ரியர்கள் கொட்டத்தை அடக்கிய பின்னர் பரசுராம அஸ்வமேத யாகம் செய்து, இந்த பூமியை காஷ்யபரிடம் கொடுத்தார் . இதனால் பூமாதேவிக்கு காஷ்யபி தேவி என்ற பெயரும் இருக்கிறது

தனபதி /வைஸ்ராவண /குபேர வழிபாடு, ராமர் /கேசவர், பலராமர்/ கிருஷ்ணர் வழிபாடும்,  பதஞ்சலி காலத்தில் நடந்தது

தெய்வம் தொடர்பான விழாக்களை மஹஸ்சம்சத் என்ற சொற்களால் பதஞ்சலி  குறிப்பிடுகிறார் .இந்திரன் , கங்கா , ராம கேசவ , தனபதி (குபேரன்) விழாக்கள் கோவில்களில் நடந்த போது  சங்கு, மிருதங்கம், பணவ  வாத்தியங்கள் ஒலித்தன . இந்த விஷயம் தேவாரம், திவ்யப் பிரபந்த பாடல்களிலும் வருகின்றது.

சுமார் 4000 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக உருவ வழிபாடு இருந்ததற்கான இலக்கிய, தொல்பொருட் துறை சான்றுகள் நம்மிடம் உள்ளன; இந்து மதத்துக்கு சனாதன மதம் என்று பெயரிட்டது பொருத்தமே!

–SUBAHM—

TAGS-சங்க காலம்,  தமிழ் நாடு,  உருவ வழிபாடு , ஹரப்பாவில் நரபலி , தேவி வழிபாடு , சிந்து சமவெளி நாகரீகம்