Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-11-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!
உலகின் மிக அதிக ஆழமான ஏரி – பைகால்!
ச. நாகராஜன் .
உலகில் புதிய ரயில்பாதைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம் அது.
மூன்றாம் அலெக்ஸாண்டர் ஜார் தென்கிழக்கு சைபீரியாவில் ட்ரான்ஸ் சைபீரியா ரயில் பாதையை அமைக்க 1891ம் ஆண்டு கட்டளை இட்டார்.
அப்போது தான் மிக அழகிய பைகால் ஏரி (LAKE BAIKAL) பற்றி உலகிற்குத் தெரிய வந்தது. அதுவரை அந்தப் பகுதி டுங்கஸ் மற்றும் எவண்டி ஆதிவாசிகளுக்கு மட்டுமே தெரிந்த இடமாக இருந்தது.
அமாவாசைக்குப் பிறகு முதல் நாளில் தோன்றும் சந்திரப் பிறை போல மிக அழகிய வடிவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான ஏரி பைகால்.
636 கிலோமீட்டர் நீளமும் சராசரியாக 48 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஏரி இது. இதன் பரப்பளவு 31500 சதுர கிலோமீட்டர் ஆகும். அதாவது அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் மற்றும் கனெக்டிகட் ஆகிய இரு மாகாணங்களின் பரப்பளவைச் சேர்த்தால் வரும் பரப்பைக் கொண்டது இது.
அது மட்டுமல்ல உலகின் மிக அதிக ஆழம் கொண்ட ஏரியும் இது தான்!
இதன் ஆழம் 1620 மீட்டர் ஆகும்.
அது மட்டுமல்ல உலகின் மிகப் பழமையான ஏரியும் இது தான்!
எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வெடிப்பு ஒன்று ஏற்பட நிலங்கள் நகர்ந்தன; மலைகள் உருவாயின. நடுவில் அழகிய ஏரி ஒன்று உருவாக ஆரம்பித்தது. இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பைகால் என்ற இந்த ஏரி உருவானது.
இதில் மலைக்க வைக்கும் முந்நூறு நதிகள் நீரைக் கொண்டு வந்து சேர்த்தன. ஒரே ஒரு நதியான அங்க்ரா மட்டும் இதிலிருந்து நீரை வெளியே கொண்டு சென்றது.
இதில் உள்ள நீரின் கொள்ளளவு 23000 கியூபிக் கிலோமீட்டர் ஆகும்.
விளக்கமாகச் சொல்வதென்றால் உலகில் உள்ள சுத்த நீரில் ஐந்தில் ஒரு பங்கை இந்த ஏரி கொண்டுள்ளது.
1862ல் ஒரு பூகம்பம் இங்கு ஏற்பட ஏரியிலிருந்து நீர் வெளியேறி ஒரு புதிய வளைகுடாவையே உருவாக்கி விட்டது.
600 வகையான தாவர வகைகளும் 1500 வகையான மிருக வகைகளும் இந்தப் பகுதியில் உள்ளன.
உலகில் மூன்றில் ஒரு பங்கு ஷ்ரிம்ப் வகை மீன்கள் இங்குள்ள சுத்த நீரில் வாழ்கின்றன. இவற்றில் 255 வகைகள் இங்கு உண்டு!
வேறு எங்கும் காண முடியாத 50 வகை மீன் இனங்கள் இங்கு வாழ்கின்றன.
பெரிய அளவிலான மீன் ஒன்று அசிபென்ஸர் என்று அழைக்கப்படுகிறது. அதன் நீளம் ஆறு அடி. எடையோ நூறு கிலோ!
இங்குள்ள பல மீன்கள் பற்றிய செய்திகளைக் கேட்டால் பிரமித்து விடுவோம்!
ரயில் போக்குவரத்து இந்தப் பகுதியில் தொடங்கவே மீன் வியாபாரம் சூடு பிடித்தது. மக்களின் வருகையும் இங்கு அதிகரித்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி இறுதியில் ஏரியின் நீர் பனிக்கட்டியாக மாறி விடும். ஐந்து மாதங்கள் பனிக்கட்டியாகக் காட்சி அளிக்கும் இந்த ஏரியில் பனிக்கட்டியின் கனம் நான்கு அடியாக இருக்கும்.
ஆனால் இங்குள்ள நெர்பா சீல் என்ற ஒரு வகை மீன் பனிக்கட்டியில் துளைகளைப் போட்டு, தான் உயிர்வாழ்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்கிறது.
ரஷியாவின் பெருமையைக் கூட்டும் இந்த அழகிய ஏரி உலக அதிசயங்களுள் ஒன்றாகும்!
Date uploaded in Sydney, Australia – 22 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “J”.
English version was posted yesterday. Here is the Tamil version:
ஜனார்த்தனன் (Sanskrit: जनार्दन) விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் வரும் பெயர். (126th name in the Vishnu Sahasranama) விஷ்ணுவுக்கும் கிருஷ்ணனுக்கும் வழங்கும் ஒரு நாமம்., பக்தர்களை பாதுகாத்து தீமைகளை அழிப்பவர் என்றும் எல்லோருக்கும் வரம் அளிப்பவர் என்றும் பொருள்.
***
ஜகத் குரு
ஜகத் என்றால் உலகம் மற்றும் அதிலுள்ள மக்கள்; குரு என்றால் ஆசிரியர்; உலகத்திற்கே குருவாக விளங்குபவர் என்று அர்த்தம்; சிவபுராணத்தில் பிரம்மாவுக்கும் சிவனுக்கும் இந்த அடைமொழி உள்ளது. ராமாயணத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் , ராமன் ஆகியோரை இந்தச் சொல்லால் வருணிக்கிறார் வால்மீகி. தமிழ்நாட்டில் காஞ்சி சங்கராசார்ய (1894-1994) சுவாமிகளை இந்தச் சொல்லால் பக்தர்கள் போற்றினார்கள் .
***
ஜைன
தமிழில் சமணர் என்றும் அமணர் என்றும் பொருள்; சமண மத த்தைப் பின்பற்றுவோரை இப்படி அழைக்கிறோம். அவர்கள் அஹிம்சையிலும் சைவ- காய்கறி உணவுகளிலும் – மிகவும் பற்றுடையோர். இந்த சமயம் புத்தருக்கு முந்திய மகாவீரர் என்ப வரால் மிகவும் பிரபலமானது . தமிழ் நாட்டில் அரசியலில் ஈடுபட்ட சமணர்கள், பல்லவ பாண்டிய மன்னர்களை மதம் மாற்றியதால் சைவ நாயன்மார்களால் பழிக்கப்பட்டார்கள் ; ஞான சம்பந்தர் இந்த மதத்தை தமிழ்நாட்டிலிருந்து அகற்றினார் .மத்திய கால தமிழில் நிறைய நூல்களை சமண முனிவர்கள் இயற்றினார்கள் தமிழ் காவியமான சிலப்பதிகாரம் சமணர்களைப் போற்றியது .
***
ஜைன அல்லது சமண சமயம்
இவர்கள் வேதத்தையும் கடவுளையும் ஏற்கவில்லை ஆனால் இந்துக்களைப் போலவே மறுபிறப்புக் கொள்கையையும் கர்மா வினைக் கொள்கையையும் ஏற்றார்கள். 24 தீர்த்தங்கரர் என்ற துறவிகள் இந்தக் கொள்கைகளைப் பரப்பினார்கள் அவர்களில் கடைசியாக வந்த வர்த்தமான மஹாவீரர் பீஹார் மாநிலத்தில் இந்த சமயத்தை வேரூன்றச் செய்தார் அவர் புத்தருக்கு முன்னால் தோன்றியவர்
இவர்களில் நேமிநாதர் (அரிஷ்டநேமி), பார்சுவநாதர், வர்த்தமான மகாவீரர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மட்டும் உறுதியாகியுள்ளது.
பிற்காலத்தில் சமணர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் ; திகம்பரர் – ஆடை அணியாத பிரிவினர்; ஸ்வேதாம்பரர் – வெள்ளை ஆடை உடுத்துவோர் . தமிழ்நாட்டில் இவர்கள் எங்கே, எப்படி இருந்தார்கள் என்பதை அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களிலிருந்து அறியலாம்.
***
ஜம்பு த்வீபம் – நாவலந் தீவு
மஹாபாரதத்திலும், அசோகன் கல்வெட்டிலும் இந்தப் பெயரைக் காணலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் நாவலந் தீவு என்று பெயர். தாவரங்களின் அடைப்படையில் நிலங்களுக்குப் பெயரிட்டவர்கள் இந்துக்கள்; நாவல் பழத்தைக் கொண்டு பாரத தேசத்துக்கு இந்தப் பெயரைச் சூட்டினார்கள். ஏழு அல்லது ஒன்பது தீவுகளில் இது ஒன்று என்று புராணங்கள் விளம்புகின்றன.
ஜம்பூ பழம் என்பது, நாவல் பழம். இது நாடு முழுதும் வளரும் மரம். பிள்ளாயாருக்கும் முருகனுக்கும் பிடித்த பழம். ஒரு தாவரம் எங்கே அதிகம் விளைகிறதோ அதன் பெயரில் அந்த நாட்டிற்குப் பெயரிட்டனர் இந்தியர்கள். ஜம்பூ, சால்மலி என்றும் அது இல்லாவிடில் கிரவுஞ்ச என்று பறவையின் பெயரில் அல்லது அதிகமாக வசிக்கும் மக்கள் இனத்தின் பெயரில் காம்போஜ என்றும் பெயரிட்டனர். தமிழரும் கூட குறிஞ்சி, நெய்தல், முல்லை, மருதம் என்று தாவரங்களின் பெயரையே பயன்படுத்தினர்.
நாவலொடு பெயரிய பொலம்புனை அவரிழைச்
சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி
கடுவன் இளவெயினனார் பாடிய ஐந்தாம் பரிபாடலில் (5-8/9) நேரடியாகவே குறிப்பிடுகிறார்:
‘’ நாவல் அம் தண்பொழில் வட பொழில் ஆயிடை’’—என்று. மேலும் நாட்டின் வடக்குப் பக்கத்தில் கிரவுஞ்ச மலை உள்ளது என்ற பூகோள உண்மையயும் வெளிப்படுத்துகிறார். இன்றும் இமய மலையில் ஒரு குறிப்பிட்ட கணவாய் வழியாக வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. தற்போது இது லடாக் பகுதியில் நீதி கணவாய் என்று அழைக்கபடுகிறது.
ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் மல்லிகிழான் காரியாதி மேல் பாடிய பாடலில் (புறம் 177) தேன் சிந்தும் நாவல் கனி பற்றிக் கூறுகிறார்.
சங்ககாலத்துக்குப் பிற்காலத்திய நூல்களான சிலப்பதிகாரம் (17-1), மணிமேகலை (25-2-12/16) ஆகிய நூல்களில் நாவலந்தீவு பற்றிய தெளிவான குறிப்புகள் வருகின்றன.
நாவல் ஓங்கிய மாபெருந் தீவு (மணி 2-1) நாவலந்தீவு, நாவலொடு பெயரிய பெருந்தீவம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தேவாரம் (அப்பரின் மறுமாற்றத் தாண்டகம்) முதலிய பல இடங்களிலும் நாவல் தீவைக் காணலாம்.
ஜம்பூத்வீபம் பற்றி காளிதாசனும் பாடியிருக்கிறான். மேகதூதம் 19-ஆம் பாடலில் நாவல் மரக் காடுகள் பற்றிப் பாடுகிறான்.
ரகுவம்சம் 18-44 இல் ஜாம்பூநதம் என்னும் தங்கவகை பற்றிப் பாடுகிறான். இதை புறப் பாடல் 397—லும், திருமுருகாற்றுப்படை வரி 18—லும் காணலாம்.
***
ஜமதக்னி
காதி மன்னரின் மகள் சத்யவதிக்கும் ருசிக ரிஷிக்கும் மகனாகப் பிறந்தவர் இவர் .
ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ரிஷிகளில் ஒருவரின் வம்சத்தில் வந்தவர் ஜமதக்னி முனிவர், ரேணுகா தேவியின் கணவரும் பரசுராமரின் தந்தையும் ஆவார். உக்ர தபஸ்வி; தந்தை ஜமதக்னியின் கட்டளைக்கு இணங்கி தாயின் தலையை பரசுராமர் வெட்டினார் . பின்னர் அவரை உயிர்பெறவும் செய்தார். ரேணுகா தேவி கற்புக்கரசி; அவள் சுடப்படாத களிமண் பானையில் தண்ணீர் கொண்டுவந்த போதும் பானையில் தண்ணீர் அப்படியே நின்றது!
***
ஜனகர்
விதேக நாடு அல்லது மிதிலை நகரின் மன்னர் ; சீதா தேவியின் வளர்ப்புத் தந்தை ; பிருஹத் ஆரண்யக உபநிஷத், சதபத பிராமண நூல்களில் இவர் பெயர் உள்ளது; ராஜ ரிஷியான இவர் பற்று இல்லாமல் ஆட்சி செலுத்தினார் . பெரிய சபைகளைக் கூட்டி தத்துவ மகாநாடுகளை நடத்தினார் அதில் கார்க்கி வாசிக்கனவி போன்ற பெண்களும் பங்கேற்றுப் பேசினர். இவரது காலத்தில் வாழ்ந்த யாக்ஞவல்க்ய ரிஷி பெரும் புகழ்பெற்றவர் .
மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி—தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி –(சுப்ரமண்ய பாரதி)
‘’ஜனகன் முதலானோர் கர்மத்தாலேயே உயர்ந்த சித்தியை அடைந்தனர் அன்றோ! மேலும் உலகை நல்வழிப் படுத்தவும் கர்மத்தைச் செய்வதற்கே நீ உரியவன் ஆகிறாய்’’. (பகவத் கீதை ,அத்தியாயம் 3, ஸ்லோகம் 20).
கண்ணனும் பாரதியும் ஏன் இப்படி ஜனகனைப் புகழ்ந்தார்கள்?
மிதிலாபுரியை தலைநகராக கொண்டு ஜனகர் ஆண்டான். சீதா தேவியின் தந்தை பெயரும் ஜனகர் தான். ஆனால் பல ஜனக மன்னர்கள் இருந்தது ஆராய்ச்சியில் தெளிவாகத் தெரிகிறது. வேதகால ஜனகர் மாபெரும் தத்துவ ஞானி. ஜீவன் முக்தர். தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல் வாழ்க்கை நடத்திய அறிஞன். அவருடைய குரு யாக்ஞவக்யர் என்ற மஹரிஷி. ஜனகர் பால் பேரன்பு பூண்டவர்.
குருவின் அன்பில் சிலருக்கு சந்தேகம். ஜனகன் ஒரு மன்னன் என்பதால் அவருக்கு குரு அதிக சலுகை காட்டுவதாக அவர்களுக்கு ஒரு நினைப்பு. இதைப் பொய் என்று காட்ட ஒரு சம்பவம் நடந்தது. ஒரு நாள் பாடம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடோடி வந்து மிதிலை நகரம் தீப்பிடித்து எரிவதாகப் பதறினான். எல்லா சிஷ்யர்களும் மூட்டை முடிச்சை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். ஜனகர் அசையவில்லை. என்னுடைய உடைமை எதுவும் அங்கு இல்லை, இங்கும் இல்லை என்றார். அவர் ஆத்ம ஞானி என்பதால் பற்றறவராக இருந்தார்.
***
ஜானகி
சீதா தேவியின் பெயர்களில் ஒன்று ; ஜனகர் மகள் என்று அர்த்தம்; மிதிலை நகரில் பிறந்ததால் மைதிலி என்ற பெயரும் உண்டு.
***
ஜரத்காரு
ஒரு ரிஷியின் பெயர்.
கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ வனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN) நாகரீகத்தை நிறுவியது
பிராமணர்கள் தினசரி சந்தியா வந்தனத்தில் நர்மதாயை நமஹ नर्मदायै नमः प्रातः नर्मदायै नमो निशि என்ற மந்திரத்தில் பாம்புகளையும் ரிஷிகளான ஜரத் காரு, ஆஸ்தீகர், மன்னரான ஜனமேஜயர் ஆகியோர் பெயரையும் சொல்லி சந்தியா வந்தனம் செய்கிறார்கள். ஆக ரிக் வேத காலத்தில் துவங்கிய பாம்பு வழிபாடு 5000 ஆண்டுகளாக நீடித்து வருவது கண்கூடு.
(யஜுர்வேத சந்தியாவந்தன மந்திரம்)
நர்மதாயை நமஹ பிராதர் நர்மதாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹிமாம் விஷ சர்பதஹ
அபசர்ப்ப சர்ப்ப பத்ரந்தே தூரம் கச்ச மஹாயசாஹா
ஜனமேஜஸ்ய யக்ஞாந்தே ஆஸ்தீக வசனம் ஸ்மரன்
ஜரத்காரோர் ஜரத்கார்வாம் சமுத்பன்னோ மஹாயசாஹா
ஆஸ்தீக சத்ய சந்தோமாம் பன்னகேப்யோ அபிரக்ஷது
பன்னகேப்யோ அபிரக்ஷது ஓம் நம இதி
***
ஜனமேஜயன்
மஹாபாரத போருக்குப் பின்னர், ஹஸ்தினாபுரத்தை ஆண்ட மன்னன் ; பரீக்ஷித் மன்னனின் மகன்; அர்ஜுனனின் பேரன் ; பரீக்ஷித்தை நாக வம்ச காட்டு வாசிகள் கொன்றதால் அவர்களைக் கொல்வதற்கு சர்ப்பயாகம் நடத்தியவன்; அதன் கதை பின்வருமாறு :
காண்டவ வனத்தை அர்ஜுனனும் கண்ணனும் அழிக்கப் போவதாக அறிவித்தனர். காடு திருத்தி நாடக்குவது மன்னர் கடமைதான். இருந்தாலும் காண்டவ வனத்தை விட்டுவிடுங்களேன் அந்த இடத்தில் வாழ்ந்த நாகர்கள் மன்றாடினார்கள் (காண்டவ இனத்தவரை கோண்ட் GONDS என்றும் அந்த நிலத்தை கோண்ட்+ வன GOND+ VANA/FOREST என்றும் எழுதுவார்கள்; பலருக்கு இது தெரியாததால் அர்த்தம் புரியாமலேயே கோண்ட்வானா லாண்ட் GONDWANA LAND என்று மேப் MAP புகளில் எழுதி வருகின்றனர்).
நாகர் இனத்ததுக்கும் பாண்டவ இனத்துக்கும் இடையே பகைமை வளர்ந்தது. இந்த நேரத்தில் அந்த வம்சத்தில் வந்த பரீட்சித் ஒரு நாக சந்நியாசியை அவமானப்படுத்தவே ஏழே நாட்களில் உன்னை ஒரு நாகன் கொல்லுவான் ; பிடி சாபம் என்கிறார். பரீட்சித் பிரம்மாண்ட பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி ஒளிந்து கொண்டார்; அரண்மனைக்குள் பழங்கள் கொண்டுவரும் கூடையில் ஒரு நாகர் ஒளிந்து வந்து பரீட்சீத்தைத் தீர்த்துக்கட்டினார் ; உடனே அவர் மகன் ஜனமேஜயன் , கிடைத்த நாகர்களை பிடித்து படுகொலை செய்யவே ஆஸ்தீகர் என்பவர் தலையிட்டு சமாதான உடன்படிக்கை செய்வித்தார் ( இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கையை பிராமணர்கள் தினமும் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் ).
இப்படி நாகா இன மக்களை பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் படுகொலை செய்ததால் அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. அவனை குருவாயூருக்குப் போய் தவமிருந்தால் குஷ்ட நோய் நீங்கும் என்று தத்தாத்ரேயர் அறிவுரை வழங்கினார். அவரும் அவ்வாறே செய்து நோய் நீங்கியதால் குருவாயூரப்பன் மஹிமை எல்லோருக்கும் புரிந்தது .
***
ஜபம்
மனதிற்குள் உருப்போடுதல்; இறைவனின் நாமத்தை ஜபமாலையை வைத்துக் கொண்டோ அது இல்லாமலேயோ முனுமுனுத்தல்.
***
ஜாதகர்ம
பிறப்பு முதல் இறப்பு வரை இந்துக்கள் செய்யும் நாற்பது கருமங்களில்– செயல்களில்– ஒன்று; குழந்தை பிறந்தவுடன் அதன் நாக்கில் மந்திரங்களைச் சொல்லி நெய்யினைத் தடவும் கிரியை.; நாற்பது என்பதை ஷோடச/ பதினாறு கர்மங்கள் என்றும் சொல்லுவார்கள்; மனு ஸ்ம்ருதி முதலிய சட்டப் புஸ்தகங்களில் இதைக் காணலாம்.
***
ஜாதி
ஒருவருக்கு பிறப்பினால் ஏற்படும் பிரிவினை; வேத காலத்தில் பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திர என்ற நான்கு ஜாதிகள் மட்டும் இருந்தன; இப்போது ஆயிரக்கணக்கில் ஜாதிகள் உள்ளன . தொழில் முறையில் ஏற்பட்ட பிரிவுகள் குலத் தொழில் காரணமாக பிறப்பினால் சொல்லப்பட்டது .
உயர்ந்த வகைப் பொருளுக்கும் இதைப் பயன்படுத்துவர் உ-ம். ஜாதி மல்லி.
இன்ன வகை என்ற பொருளிலும் வரும். …… இந்த ஜாதி மாம் பழம் ; இந்த ஜாதி ….. குதிரை etc
To be continued………………………….
–Subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 36; இந்துமத கலைச்சொல் அகராதி-37, ஜாதி , நாவலந் தீவு, ஜகத் குரு
Date uploaded in Sydney, Australia – 22 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 28
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 28
திருப்புகழில் ஐம்படைத்தாலி
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ
ஆயுதபாணி … வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை* ஏந்தியவன்,
நல் துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே …
நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே,
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர்
ஆடிடு சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் வருவோனே …
அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி)வலம் வருபவனே,
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக
மேனியனே … கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே
* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்:
சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.
இவைகளை ஐம்படைத்தாலியாக குழந்தைகளுக்கு அணிவிப்பது தமிழர்தம் வழக்கம்.
சங்கத் தமிழ் நூல்களிலும் அதர்வ வேதத்திலும், இந்துக்கள் தாயத்துக்களைப் பயன்படுத்திய செய்திகள் உள்ளன.
சிறுவர்கள் ஐம்படைதாலி என்று விஷ்ணுவின் ஐந்து சின்னங்கள் பொறிக்கப்பட்ட தாயத்தை அணிந்தனர். சங்கு, சக்ரம், வாள், வில்,கதை ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டதால் குழந்தைகளை தீய சக்திகள் அண்டாது என்று தமிழர்கள் நம்பினர்.
குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர்.
பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை அணிந்தனர்.
ஐம்படைத் தாலி பொன்னுடைத் தாலி என் மகன் — அகம்.54;
தாலி களைந்தன்றும் இலனே — புறம்.77
பி.டிசீனிவாச ஐயங்கார் எழுதிய தமிழர் வரலாறு (1930) என்னும் நூலில் புலிப்பல் தாலியே பிற்காலத் தங்கத் தாலிக்கு வழி செய்தது என்று வாதாடுகிறார்.
பிற்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை (3-135, 7-56), பெரியபுராணம் ஆகியவற்றில் சிறுவர்கள் தாலி புலிப் பல் தாலி முதலியன பற்றி கூடுதல் விவரங்கள் கிடைக்கின்றன.
“வனமாலி கதி சார்ங்கி
சங்கீ சக்ரீச நந்தகி
ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர்
வாசுதேவோ அபிரக்ஷது.”
‘வனமாலி என்ற மாலையை அணிந்து சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் வில் ஆகியவற்றுடன் விளங்கும் திருமால் என்னைக் காக்க வேண்டும்.– என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் வருகிறது
தாயத்துக்களை ஏன் அணிந்தனர்?
அவைகள் பாதுகாப்பு தருவதோடு, அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பினர். தீய சக்திகள், பேய், பிசாசுகளை அண்ட விடாது என்றும், பயத்தைப் போக்கவும் எதிரிகளை வெல்லவும் அவை உதவும் என்றும் நம்பினர். அதர்வ வேத மந்திரங்களில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.
ஒரு காலத்தில் பனை மர ஓலைச் சுருளில் மந்திர தந்திர எந்திரங்களை வரைந்து அணிந்தனர். பனை மரத்துக்கு வடமொழியில் ‘’தால’’ என்று பெயர். இதில் இருந்தே தாலி, டாலிஸ்மேன்Talisman (ஆங்கிலச் சொல்) ஆகியன வந்தன.
***
திருமாலின் மகன் மன்மதன்!
கரி உரி அரவம் அணிந்த மேனியர் … யானையின் உரித்த
தோலையும் பாம்பையும் அணிந்த உடலைக் கொண்டவர்,
கலை மதி சலமு(ம்) நிறைந்த வேணியர் … ஒளிகள் கொண்ட
திங்களும், கங்கையும் நிறைந்த சடையினர்,
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் … நெருப்பையும்,
மானையும், பரசையும் ஏந்திய கையினர்,
கஞ்ச மாதின் கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர்
கயிலை அமர்ந்த காரணர் … தாமரையில் வாழும் லக்ஷ்மியின் முலைப் பாலைப் பருகி வளர்ந்த மன்மதனைக்* கோபித்து அழித்தவர், கயிலாயத்தில் அமர்ந்துள்ள மூலப் பொருளானவர்,
* மன்மதன் திருமாலுக்கும், லக்ஷ்மிக்கும் பிறந்த மகன்.
***
பாற்கடலைக் கடைந்த காட்சி
(லண்டன் சுவாமிநாதன் ஜனவரி 2026 -ல் தாயலாந்தின் தலைநகரமான பாங்காக் நகர சுவர்ணபுரி விமான நிலையத்தில் எடுத்த பாற்கடல் கடைந்த சம்பவ படங்கள்)
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட … ஒலிக்கின்ற பாற்கடலின்உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட,
வட தமனிய கிரி கம்பமாய் நட … வடக்கே உள்ள பொன்
மலையாகிய மேருவை மத்தாக நட்டு,
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் கயிறு என …
விபரீதமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு,
அமரர் அநந்த கோடியு(ம்) முறை முறை அமுது கடைந்த
நாள் … பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த அந்த நாளில்,
ஒரு கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல … உய்யும்
வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரியமேகத்தின் வரிசை போல எழுந்து,
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் முறுகிட
அண்ட கோளகை வெடிபட … செயலாற்றும் மத யானைகளும்,
எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக,
Astronomy in Thiruppugaz
(இந்தப்பாடலில் வரும் அண்ட கோளங்கள் என்ற சொற்கள் அக்காலத்திலேயே எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் வட்ட வடிவானவை- கோளவடிவானவை- என்று இந்துக்கள் அறிந்ததைக் காட்டுகிறது. மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் இதை இன்னும் விரிவாகவே பாடியிருக்கிறார் இவை எல்லாம் மேலை நாட்டு அறிவியல் நூல்களில் மிகவும் பிற்காலத்தில்தான் இடம்பெற்றன. .அண்டம் என்றால் முட்டை கோளம் என்ற சொல்லிலிருந்தே க்ளோப்Globe என்ற ஆங்கிலச் சொல்லும் பிறந்தது.)
எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல … யாவரையும்
மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல,
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவர் உறு …
தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம்
கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும்,
பஞ்ச பாதக விழி வலை மகளிரொடு அன்பு கூர்வது
ஒழிந்திடாதோ … ஐந்து பாதகங்களுக்கும் இடம் தருவனவுமான கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல் மிகுவது என்னை விட்டு விலகாதோ?
விலைமாதரின் விழிகளுக்கு ஆலகால விஷத்தை உவமை சொல்லவந்த கவிஞர், முதல் ஒன்பது அடிகளில் பாற்கடலைக் கடைந்த வரலாற்றைக் கூறுகிறார்.
***
நரகம் பற்றிய பாடல்
ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே … ஏழு* நரகத்தில் சேருதற்கு உரியவனும்,
தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக.
****
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று … இருமலில்
வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய்,
இளையா உளம் உக்கு உயிர் சோர … இளைத்து, உள்ளம்
மெலிந்து, உயிர் சோர்வுற்று,
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு … நெருப்பு கொளுத்தும்
(கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம்,
இரு பாதம் எனக்கு அருள்வாயே … உனது இரு திருவடிகளை
எனக்குத் தந்து அருளுக.
* எரிவாய் நரகம் – கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களில் ஒன்று. பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம்.
கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர்
கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய் உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே,
***
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு
திங்களாலே … இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை
விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும்,
இந்த வரிகள் கடல் பற்றிய தமிழர் அறிவினைக் காட்டுகிறது சுறாமீன்களுக்கு எதிரி டால்பின்களும் கில்லர் வேல் என்னும் திமிங்கிலங்களும் Killer Whales, Dolphins ஆகும்; இவை மீன் போன்ற வடிவத்தில் இருந்தாலும் இவைகள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல ; குட்டி போட்டு பாலுவுட்டும் மிருகங்கள் வகை ஆகும்.
****
இரவிலும் பகலிலும் முத்தமிழில் பாட ஆசை
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி … இரவும், பகலும்,பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி,
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே …
நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக.
பரகருணைப் பெருவாழ்வே … மேலான கருணையுடன் விளங்கும்பெருவாழ்வே,
பரசிவதத்துவஞானா … உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப்பொருளே,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அன்னை ஜெயந்தி தினம் – சிறப்புக் கட்டுரை!
புதுவை ஶ்ரீ அன்னை ஜனனம்: 21-2-1874 சமாதி: 17-11-1973
யமன் நிஜம் தான்! மரண தேவதைகளைச் சந்தித்த ஶ்ரீ அன்னை!
ச. நாகராஜன்
கேள்வி: மரண தேவன் ஒருவன் இருக்கிறான் என்று சொல்கிறார்களே, அது உண்மையா?
ஶ்ரீ அன்னையின் பதில் : ஆம், நான் அதை,, மரணத்தின் அதிதேவதை என்பேன், எனக்கு அவனை நன்றாகத் தெரியும்.
மரண தேவதைகள் பலர் இருக்கின்றனர். நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு பேரையாவது நான் பார்த்திருக்கிறேன். ஒருவனை பிரான்சில் சந்தித்தேன். இரண்டாமவனை ஜப்பானில்.
அவர்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. ஒவ்வொரு நாட்டின் கல்வி, பண்பாடு நம்பிக்கைகளுக்கு ஏற்றபடி வெவ்வேறு மரண தேவதை இருக்கலாம் எனத் தெரிகிறது. இப்படியே எல்லா இயற்கை சக்திகளுக்கும் அதி தேவதைகள் இருக்கின்றன. நெருப்புத் தெய்வம், காற்றுத் தெய்வம், நீர்த் தெய்வம், மழைத் தெய்வம் என்றிப்படி. அதைப் போல மரண தெய்வம் அல்லது மரண தேவதையும் உண்டு.
ஒவ்வொரு மரண தேவதைக்கும் ஒரு நாளைக்கு எத்தனை மரணங்கள் என்று கணக்கு உண்டு. இந்த ஏற்பாடு மிகப் பிரமாதமானது. பிராண சக்திகளுக்கும், இயற்கை சக்திகளுக்கு ஓர் உடன்படிக்கை இருப்பது போலத் தெரிகிறது. மரண தேவதை இன்றைக்கு எனக்கு இத்தனை மரணங்கள், இன்னார் எல்லாம் இன்று சாக வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு, உரிமையுடன் சாகப் போகிறவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்வான். உனக்கு இதை உணரக் கூடிய சக்தி இருந்தால், மரண தேவதை நீ சாக விரும்பாத ஒருவனைப் பிடிக்கப் போவதைக் கண்டால், உனக்கு ஒருவகை நுண்ணுலகு சக்தி (Occult Power) இருந்தால், “கூடாது, நீ அவன் உயிரை எடுக்கக் கூடாது” என்று தடுக்கலாம். இப்படி ஒரு தடவை அல்ல, பல தடவைகள் இங்கும் ஜப்பானிலும் நடந்திருக்கின்றன. இரண்டும் ஒரே தேவதை அல்ல. அதனால் தான் பல தேவதைகள் இருக்கின்றன என்றேன்.
ஓர் உயிரைக் கவர மரண தேவதை வரும் போது சூட்சும சக்தி படைத்த யாராவது இந்த உயிரைக் கொண்டு போகக் கூடாது என்று தடுத்து விட்டால் பக்கத்திலுள்ள வேறு யாருடைய உயிரையாவது, முதலில் குறிக்கப்பட்டவனுக்குப் பழக்கமானவன் அல்லது அவனுடைய பகைவன் இப்படி அவனோடு தொடர்புடைய ஒருவனுடைய உயிரைக் கொண்டு போய் விடுவான். வெளிப்பார்வைக்குத் தற்செயலாக நடப்பது போல் தோன்றும். உண்மைக் காரணம், மரண தேவதைக்கு அன்றைக்கு அவனுக்குரிய எண்ணிக்கை தேவைப்பட்டது என்பதுதான். அவனுக்கு ஓர் உயிர் வேண்டும். நீ இந்த உயிரைக் கொண்டு போகக்கூடாது என்று தடுத்துவிட்டால் (அதற்கு உனக்குச் சக்தி இருக்க வேண்டும்) வேறு ஓர் உயிரைக் கொண்டு போய் விடுகிறான்.
நெருப்பு தேவதை விஷயமும் இப்படித்தான். நான் நெருப்பு தேவதையை பார்த்திருக்கிறேன். குறிப்பாக ஜப்பானில். ஜப்பானில் நெருப்பு மிகவும் அபாயமானது. எங்காவது தீப்பிடித்துக் கொண்டால் அந்தப் பகுதி முழுவதுமே எரிந்து போகும். அங்கு வீடுகள் மரத்தால் கட்டப்பட்டிருப்பதால் நெருப்புக்குச்சி எரிவது போல் கணநேரத்தில் எல்லாம் எரிந்து சாம்பலாகிவிடும்,
ஒரு நாள் நான் எனது படுக்கையில் இருந்தேன். ஒருமுனைப்பட்டு மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென வீட்டுப்பக்கத்தில் நெருப்பு மேகம் போல் ஓர் உருவம் தெரிந்தது. உற்று நோக்கிய போது அது ஓர் உணர்வுள்ள ஜீவன் என்பது தெரிந்தது.
“ஏய் உனக்கு என்ன வேண்டும்?”
“இந்த வீட்டை எரிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. நெருப்பு மூட்டி.”
“எரிக்கும் உரிமை உனக்கு இருக்கலாம். ஆனால் இந்த வீட்டில் நடக்காது.”
அதனால் என்னை மீற முடியவில்லை.’
யார் பலவான் என்பதைப் பொறுத்த விஷயம் இது. இங்கே உன் வேலை நடக்காது என்று சொன்னதும் போய்விட்டது.
ஐந்து நிமிடம் கழித்து கூச்சல் கேட்டது. இரண்டு மூன்று வீடுகளுக்கு அப்பால் ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டது. நான் இருந்த வீட்டை எரிக்கக் கூடாது என்ற உடனே அது போய்விட்டது. ஆனால் அதற்கு ஒரு வீட்டை எரிக்க உரிமை உண்டல்லவா? அதனால் அது அந்த அடுத்த வீட்டைப் பிடித்துக் கொண்டது.
அரவிந்த ஆசிரம காலாண்டு வெளியீடான வைகறை பத்திரிகையில் 1973ம் ஆண்டு இரண்டாவது இதழில் வெளியான கட்டுரை. இதே இதழில் மரண பயத்தை வெல்வது எப்படி என்றும் அன்னை அற்புதமாகக் கூறி இருக்கிறார். அரவிந்த ஆசிரமம், பாண்டிச்சேரியில் அரவிந்தர் மற்றும் அன்னை நூல்களைப் பெறலாம்.
Date uploaded in Sydney, Australia – 21 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “J”.
Tamil version will be posted tomorrow
J
JANARDHANA
Janardhana (Sanskrit: जनार्दन) appears as the 126th name in the Vishnu Sahasranama. It is a highly significant epithet of Lord Vishnu (and specifically Krishna), highlighting his role as the protector of devotees and the destroyer of evil
Meaning- “One Who Bestows Boons On One And All”
***
JAGADGURU
Meaning: “Preceptor of The Universe”
used as an epithet of Brahmā and Siva in Siva Purana.
Used as an epithet of a name of Brahman, Viṣhṇu, Śiva, Rāma, [Rāmāyaṇa] 3, 6, 18.
Jagadguru is a Sanskrit compound consisting of the terms jagat and guru (गुरु).
In Tamil Nadu Kanchi Shankaracharya (1894-1994) was also called Jagadguru
***
JAINA
Meaning – A Jaina, a follower of Jaina doctrines.
In Tamil they are called Samana or Amana. Because of their political involvement in converting Pallava and Pandya kings, they were severely criticised by Saivite saints who lived 1400 years ago. They have made a huge contribution to Tamil Literature in the middle period. Earlier Tamil epic Silappadikaram praised them.
JAINISM
A heterodox school of Indian philosophy that perceives the world as transitory and does not advocate dependence on an almighty God for existence. It views the world as transitory and self-existent, rejecting the notion of an almighty God who dictates existence.
In Jainism there are 24 Tirtankaras; a Tirthankara is a highly revered spiritual teacher. They are enlightened beings who establish a path to liberation, guide followers, and found a “tirtha,” or ford, to help individuals cross the cycle of rebirths. These figures, like Mahavira, are considered the highest order of spiritual teachers, with 24 recognized for their teachings. They are often associated with significant dreams, and their birth and teachings are central to the spiritual tradition, representing the pinnacle of spiritual attainment.
12. Vasupujya Swami i Vasupujya Jaya Devi Champapuri
13. Vimalnath Krutavarma Shyama Devi Kampilyapur
14. Anantnath Simhasen Suyasha Ayodhya
15. Dhramnath Bhanu Suvrata Ratnapur
16. Shantinath Vishvasen Achira Hastinapur
17. Kunthunath and Surasen Shree Devi Hastinapur
18. Arahnath Sudarshan Devi Rani Hastinapur
19. Mallinath Kumbha Prabhavati Mithila
20. Munisuvrat Sumitra Padmavati Rajgruhi
21. Naminath Vijay Vipra Mithila
22. Arishtanemi Samudravijay Shiva Devi Dwarka
23. Parshvanath and Ashvasen Vama Devi Varanasi
24. Mahavir Siddharatha Trishala Kshatriya Kund
Mahavir was senior to Buddha and lived in the Sixth Century BCE.
There are two sects in Jainism- Digamabaras, and Svetambaras
Meaning —Digambara (“sky-clad”) and Śvētāmbara (“white-clad”)—which separated around the 4th century BCE due to differences in ascetic practices and scriptural interpretation. Digambara monks renounce all clothing, while Śvētāmbara monks wear white robes
Jains are strict vegetarians.
***
JAMBHUDWIPA
Mentioned in Mahabharata, Asokan inscriptions and Sangam Tamil Literature. One of the seven regions on earth.
In Tamil it is called Naavalam Tivu. Name is derived from Jambu Tree (Indian Blackberry; in Tamil Naaval)
One of the Purāṇically famous Saptadvīpas (seven continents). These seven continents are embankments separating the seven seas. Jambūdvīpa, Krauñcadvīpa, Śākadvīpa and Puṣkaradvīpa are included in the seven islands.These are the seven major mountains in Jambūdvīpa:
Jamadagni (जमदग्नि):—Son of Satyavatī (daughter of king Gādhi) and sage Ṛcīka. He married Reṇukā, the daughter of Reṇu. Many sons, headed by Vasumān, were born from the womb of Reṇukā. The youngest of them was named Rāma, or Paraśurāma. (see Bhāgavata Purāṇa 9.15.4-11)
Also mentioned in the Mahābhārata (cf. I.60.46) and represents one of the many proper names used for people and places.
Renuka was such very devoted wife and the power of her chastity was manifest. Such was this power, that she used to fetch water from the river in a pot made of unbaked clay every day. The pot would hold together because of her devotion to her husband.
***
JANAKA
Janaka (जनक) is the name of a famous king of Videha or Mithilā, foster-father of Sītā. He was remarkable for his great knowledge, good works, and holiness. After the abandonment of Sītā by Rāma, he became an anchorite-indifferent to pleasure or pain-and spent his time in philosophical discussions. The sage याज्ञवल्क्य (yājñavalkya) was his priest and adviser.
Shatapatha Brahmana and the Brihadaranyaka Upanishad mention King Janaka (c. 8th century BCE) as a great philosopher-king of Videha, renowned for his patronage of Vedic culture and philosophy, and whose court was an intellectual center for Brahmin sages such as Yajnavalkya
***
JANAKI
Daughter of Janaka; another name of Sita Devi.
***
JANAMEJAYA & JARATKARU
Many people and places had this name according to Mahabharata. But the most famous was the son of Parikshit.
Name of a celebrated king of Hastināpura, son of Parīkṣit, the grandson of Arjuna. [His father died, being bitten by a serpent; and Janamejaya, determined to avenge the injury, resolved to exterminate the whole serpent-race. He accordingly instituted a serpent sacrifice, and burnt down all serpents except Takṣaka, who was saved only by the intercession of the sage Astika, at whose request the sacrifice was closed. Brahmins recite a mantra in the daily Sandhyavandana recalling this anecdote.
The first of the four sons of Parīkṣit and Irāvatī.1 Father of Śatānīka.2 Finding that the death of his father was predicted to be by the snake Takṣaka, he performed a sarpa yāga to destroy all snakes. All except Takṣaka came, the latter being sheltered by Indra. At this Takṣaka and Indra were invoked together. Advised by Bṛhaspati to refrain from the cruel yāga, Janamejaya agreed; with the aid of Tura, the priest, he performed Aśvamedha and other sacrifices; after anointing his son on the throne he went into the woods for penance.
Sandhya Vandana mantra
The snakes acceded to his request and said, “He who recites the following need not have any fear from us:
‘I call to mind the famous Astika born of Jaratkaru, that Astika who saved the snakes from the snake-sacrifice. Therefore it behoves you not to bite me. O snakes of virulent poison, remember the words of Astika after the snake sacrifice of Janamejaya. You shall be blessed‘.
That snake who does not cease from biting even after hearing such mention of Astika, shall have his hood divided a hundredfold like the fruit of Sinsa tree”.
(Source: Adi Parva, Chapter 58)
नर्मदायै नमः प्रातः नर्मदायै नमो निशि
नमोऽस्तु नर्मदे तुभ्यं त्राहि मां विषसर्पदः
सर्पापसर्प भद्रं त गच्छ सर्प महाविष।
Alternative line
Apasarapa sarapa bhadram te duram gachcha mahaayasaah
जनमेजयस्य यज्ञान्ते आस्तीकवचं स्मर।।
जरत्कार्वोर्जरत्कर्वां समुत्पन्न महायशाः
अस्तीक सत्यसन्धो मां पन्नगेभ्यो अभिरक्षतु
पन्नगेभ्यो अभिरक्षतु om nama iti.
MEANING
O Narmada, I offer you salutations in the morning & night (during sandhya vandana); Protect me from poisonous snakes
Astika, born of muni Jaratkaru and his wife of the same name, was a great soul. He, the protector of the truth, will protect me from the serpents.
***
JAPA
Japa (जप):—n. recitation; the practice of reciting mantras quietly/silently on prayer beads;Japa (जप).— Muttering, whispering.
2) Repeating passages of the Veda or names of deities &c.; Manusmṛti 3.74; Y.1.22.
***
JATAKARMA
Jātakarman (जातकर्मन्).—n. a ceremony performed at the birth of a child; Manusmṛti 2.27,29; R.3.18. A ceremony performed when the navel string is divided, touching the infant’s tongue thrice with ghee, with appropriate prayers.
One of the Forty Samskaras (or Sixteen/Shodasa) from Birth to Death of a Hindu.
2) The form of existence fixed by birth. 3) Race, family, lineage, rank.
4) A caste, tribe or class (of men); (the primary castes of the Hindus are only four :-brāhmaṇa, kṣatriya, vaiśya and śūdra).
5) A class, genus, kind, species
***
JAYADRATHA
Jayadratha (जयद्रथ).—A king of the Sindhu district and brother-in-law of Duryodhana, having married Duhśalā, daughter of Dhṛtarāṣṭra. [Once while out on hunting, he chanced to see Draupadī in the forest, and asked of her food for himself and his retinue. Draupadī, by virtue of her magical sthālī, was able to supply him with materials sufficient for their break-fast. Jayadratha was so much struck with this act, as well as her personal charms, that he asked her to elope with him. She, of course, indignantly refused, but he succeeded in carrying her off, as her husbands were out on hunting. When they returned they pursued and captured the ravisher and released Draupadī, and he himself was allowed to go after having been subjected to many humiliations. He took a leading part in compassing the death of Abhimanyu, and met his doom at the hands of Arjuna in the great war.
What happened on the 13th day of Mahabharata war? Jayadratha, the king of Sindhu Desa (Indus Valley King) killed Abimanyu, son of Arjuna on the 13th day of the war. Arjuna was furious and vowed to kill Jayadratha before the sunset next day. The whole Kaurava army gave Jayadratha full protection. When the sun appeared to set, Jayadratha poked his head out to show that he was victorious. Suddenly the sun reappeared in the sky and Arjuna shot Jayadratha down. The story goes that Krishna hid the sun with his Sudarsana chakra. Actually Krishna tricked Jayadratha with the knowledge of the solar eclipse happening on that day. Arjuna’s brothers Nakulan and Sahadevan were experts in such calculations.
People were told for a long time that the war started on a new moon (Amavasya) day. Latest research by scholars with computer software shows that it started on a full moon day. Another interpretation is that though it was started on New Moonday it was fought on alternate days.
***
JAYADEVA
Name of the author of Gītagovinda with 24 Ashtapathis. He made Buddha one of the Ten Avatars of Vishnu.
Jayadeva (जयदेव).—A Sanskrit poet who lived in the 13th century A.D. He is the author of the play ‘Prasannarāghavam’. The famous work ‘Candrāloka’, a treatise on rhetorical figures, was written by this poet Jayadeva. His most important work is ‘Gītagovinda’, the theme of which is the early life of Śrī Kṛṣṇa, especially the love between Śrī Kṛṣṇa and Rādhā, which is very touchingly described. He used to sing lyrics before the image of Kṛṣṇa while his wife danced according to the beat.
***
JIVA
Meaning- A creature, living being. The principle of life, the vital breath, life, soul. Jiva Atma is self; Parama Atma is God; Jiva is corrupted as Eve and Atma is corrupted as Adam in the Bible.
***
JIVAN MUKTA
Jīvanmukta (जीवन्मुक्त).— Liberated Soull.a. ‘liberated while living’, a man who, being purified by a true knowledge of the Supreme Spirit, is freed from the future birth and all ceremonial rites while yet living.
***
JNANA
1) Jnana (ज्ञान): Knowledge of the eternal and real. Knowing, understanding, becoming acquainted with, proficiency;
2) Knowledge, learning; 3) Consciousness, cognizance, knowledge; ज्ञानतोऽज्ञानतो वापि (jñānato’jñānato vāpi) Manusmṛti 8.288 knowingly or unknowingly, consciously or unconsciously.
4) Sacred knowledge; especially, knowledge derived from meditation on the higher truths of religion and philosophy which teaches man how to understand his own nature and how he may be reunited to the Supreme Spirit.
Jnana/does not mean a proficiency in a subject like chemistry or history. It is not mere learning but inward experience or awareness of a truth. In Advaita is the realisation of that one is inseparably united with the supreme.
***
JNANENDRIYA
Jñānendriya (ज्ञानेन्द्रिय).—an organ of perception; (these are five tvac, rasanā, cakṣus, karṇa and ghrāṇathe skin, tongue, eye, ear and nose.
***
Jatavedas:
One of the names of Agni.
He who knows all; Heat creates everything e.g. sun, body heat
The fire god Agni is extremely important in the Vedic religion. He is the messenger of the gods. He takes all the offerings poured into the fire to the gods. He is everywhere. He is in the sun and moon and as ‘jataragni’ in the stomach, says Sayana in his commentary. Jataragni is the metabolic activities in the body that produce heat. He is in the sea as Badava Agni. All the girls are possessed by him before the marriage. This means that all the girls must be married in front of him (sacrificial fire) as he gives them like a father gives his daughter to the bridegroom. The couple have to walk around the fire. It is called Saptapadi.
Orthodox Hindus keep fire in a pot from the birth to death and use it for all occasions. The ‘aupasana’ pot contains paddy husk burning forever. It is never extinguished. When a baby is born it is lighted and the same fire is used to light the funeral pyre when the person dies at an old age.
***
JVARADEVA
Jvaradeva is a form of Lord Shiva. He destroyed Bhasmaasura . He is described in the Agamas as having three legs, three heads nine eyes and six arms. His images are found in many shiva temples including Madurai, Tirupparankundram, Mayiladuthurai, Kumbakonam, Tirunelveli, Bhavani etc.
Jvaradeva or Jurakareśvara is depicted in the Adi Kumbeswarar Temple (Ādi Kumbheśvara) in Kumbakonam (Kumbhakonam), representing a sacred place for the worship of Śiva.—Jvvradeva is a three-headed image of Śiva with four hands. The three heads include two animal heads emerging laterally from behind the human head. The head on the right is that of a lion while the other one seems to be that of an antelope. He holds triśūla (trident) in the right hand and small vessel in the left hand.
Jvāra-deva is also depicted in the Meenakshi Temple in Madurai .
Later Vaishnava texts like Harivamsa gives a sectarian view of Krishna encounter with Jvara deva wherein the leader of the Vrishnis created a Narayana-jvara to fight against the original Jvara deva.
***
JYOTISHA
Means Light.
Jyotiṣa (ज्योतिष).—Astronomy and astrology. One of the six Vedāṅgas.
Jyotiṣa is a Sanskrit technical term used in ancient Indian sciences such as Astronomy, Mathematics and Geometry. It is part of Vedic School Syllabus for thousands of years.
it is the science about the stars and heavenly bodies. The heavenly bodies are the sun, the moon, the other planets and the stars etc. From the very ancient days men believed that these planets and stars in the sky played an important part in controlling the growth and activities of all the living and non-living things in the world.
1) Jyotiṣa (ज्योतिष) or Jyotiṣaka refers to an “astrologer” (one who is versed in Saṃhita, Astronomy and Horoscopy), according to the Bṛhatsaṃhitā (chapter 2), an encyclopedic Sanskrit work written by Varāhamihira mainly focusing on the science of ancient Indian astronomy astronomy (Jyotiṣa).—Accordingly, “We shall now proceed to give a brief description of (the qualifications of) a jyotiṣaka. He must be of noble birth and of agreeable appearance; meek, truthful and without jealousy; of proportional limbs; of joints well built and of good growth; have no physical defects; be of fine hands, feet, nails, eyes, chin, teeth, ears, forehead, eye-brows and head; of fine physique and of high, sonorous voice”.
–Subham—
Tags- Jatavedas, Jnana, Jamadagni, Jayadeva, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 36; இந்துமத கலைச்சொல் அகராதி-36 , Jyotisha, Astrologer
Date uploaded in Sydney, Australia – 21 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 27
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 27
மூன்று சிவபக்த அசுரர்கள் கதை!
உருவு கரியது ஒர் கணை கொடு பணி பதி இருகு உதையும்
முடி தமனிய தநு உடன் … உருவம் கரியவனாகிய திருமாலை ஒப்பற்ற
அம்பாகவும், பாம்பு அரசனான வாசுகியை (வில்லின் முனைகளில்)
முடியப்படும் கயிறாகவும், பொன்னுருவ மேரு மலையை வில்லாகவும் கொண்டு,
உருளை இரு சுடர் வலவனும் அயன் என மறை பூணும்
உறுதிபடு சுர ரதமிசை அடி இட … சக்கரங்கள் சூரிய சந்திரர்
எனப்படும் சுடர்களாகவும், தேர்ப்பாகன் பிரமன் ஆகவும், வேதங்களாகின
குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேவர்களே தேர் ஆகவும்
வைத்துக்கொண்டு, (சிவபெருமான்) தேரில் அடி எடுத்து வைத்தவுடனே,
நெறு நெறு என முறிதலு(ம்) நிலை பெறு தவம் உடைய
ஒருவரும் இருவரும் அருள்பெற … நெறு நெறு என்று அந்தத் தேர் முறி படவும், அசைவு உறாத தவ நிலையைக் கொண்ட திரிபுரத்தில் இருந்த மூன்று சிவபக்தர்கள்* (தீயில் மாளாது உய்ந்து) அருள் பெறவும்,
ஒரு கோடி தெருவு நகரியும் நிசிசரர் முடியொடு சடசட என
வெடி படுவன புகைவன திகு திகு என எரிவன அனல்
நகையொடு முனிவார் தம் சிறுவ … (திரிபுரத்திலிருந்த) ஒரு கோடிக்
கணக்கான வீதிகளும் ஊர்களும் அசுரர்கள் தலையுடன் சட சட என
வெடி பட்டும், புகை விட்டும், திகுதிகு என்று எரியவிட்டும் தீ எழுப்பிய சிரிப்பைக் கொண்டு கோபித்தவரான சிவபெருமானது குழந்தையே,
வனசரர் சிறுமியொடு உருகிய பெரும அருணையில் எழு
நிலை திகழ்வன சிகரி மிசை ஒரு கலபியில் உலவிய
பெருமாளே. … வேடர்கள் மகளைக் கண்டு உருக்கம் கொண்ட
பெருமை வாய்ந்தவனே, திருவண்ணாமலையில் ஏழு** நிலைகள்
விளங்கும் மலை உச்சியில் ஒப்பற்ற மயிலின் மேல் அமர்ந்து உலவி விளக்கம் தரும் பெருமாளே.
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாது என உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கர் ஆகவும் போந்து, அசுரர்களை மயக்கிச் சிவபூஜையை கைவிடச் செய்தனர். ஆனால்
மூன்று அசுரர்கள் மட்டும் சிவ நெறியிலேயே இருந்து ஒழுகி இறக்காமல் தப்பினர்.
** ஏழு நிலைகள் (குண்டலினி) – மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம்,அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம்.
The seven fundamental chakras are known as muladhara, which is located at the perineum, the space between the anal outlet and the genital organ; swadhisthana, which is just above the genital organ; manipuraka, which is just below the navel; anahata, which is just beneath where the rib cage meets; vishuddhi, which is at the pit of the throat; ajna, which is between the eyebrows; and sahasrara, also known as brahmarandra, which is at the top of the head.
***
வேதங்கள் முரசு கொட்டி சொல்வது என்ன?
கலை கொடு கருத அரியதை … கலை நூல்களால் கருதவும்
அரிதான மெய்ப் பொருளை,
விழி புனல் வர மொழி குழறா … கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி,
அன்பு உருகி உனது அருள் பரவு வகை வரில் … அன்புடன்
மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால்,
விரகு ஒழியில் உலக இயல் பிணை விடில் … தந்திர புத்தி
ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால்,
உரை செயல் உணர்வு கெடில் … மனம், வாக்கு, காயம் இம் மூன்றின்
தொழிலும் அழிந்தால்,
உயிர் புணர் இருவினை அளறு அது போக உதறில் … உயிரைச்
சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி
உதறி விலக்கினால்,
எனது எனும் மலம் அறில் … எனது என்னும் ஆசையாகிய குற்றம்
அற்றுப் போனால்,
அறிவினில் எளிது பெறல் என மறை பறை அறைவது …
அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை,
ஒரு உதயம் மரணம் இல் பொருளினை அருளுவது ஒரு
நாளே … ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை
அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா?
***
முருகனும் மடல் எழுதினான்!
வனசரர் கதி பெற முனி பெறு புன மானின் தரள முகபட(ம்)
நெறி பட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தன கிரி தழுவ
மயல் கொடு தனி மடல் எழுதிய பெருமாளே. … வேடர்கள் நற்
கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற
கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல்* எழுதிய பெருமாளே.
* மடல் எழுதுதல்:
தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்
மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
***
முருகனின் யானையின் பெயர்
முகர(ம்) முக படம் கவள(ம்) தவள கர அசல(ம்) மிசை வரும்
அபிநவ … பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி
கொண்டதும், உணவு கவளங்களை உட்கொள்வதும், வெண்ணிறம்கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின்* மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே,
* முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும், அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் ‘பிணிமுகம்’ என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர்.
பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்.ஓர் ஆய்வு – 4
(ஆர், சேஷாத்ரிநாதன்)
சிறப்பான குணாதிசயங்கள் மற்றும் திறன்கள்:
இதுவே அவர்களை மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் முழுமையாக வேறுபடுத்துகிறது. அவர்கள் அதிமனித (superhuman) சக்திகள் கொண்டிருந்தனர்:
மாபெரும் பலம்:
வாலி ஒரு முழு இராட்சசனை ஒரே கையால் தூக்கி எறியும் அளவுக்கு பலம் வாய்ந்தவன். ஹனுமன் ஒரு மலையைத் தூக்கிச் செல்லும் சக்தி படைத்தவன்.
வடிவம் மாற்றும் திறன்
ஹனுமனால் தனது உருவத்தை மிகச் சிறியதாகவோ அல்லது மலை போல் பெரியதாகவோ மாற்றிக்கொள்ள முடிந்தது.
பறக்கும் திறன்:
அவர்கள் “வானரம்” என்ற பெயருக்கேற்ப, வானத்தில் பறந்து செல்லும் திறன் பெற்றிருந்தனர். இது நவீன குரங்குகளுக்கு இல்லாத ஒரு திறன்.
அறிவாற்றல் மற்றும் தந்திரோபாயம்:
ஜாம்பவான் போன்றவர்கள் முதுமைக் காலத்தின் ஞானத்தையும், போர் தந்திரங்களையும் அறிந்தவர்கள். ஹனுமன் ஒரு சிறந்த தூதர், பேச்சாளர் மற்றும் சூழ்ச்சித் திட்டமிடுபவன்.
ஆக, கிஷ்கிந்தா மக்கள் என்பவர்கள் குரங்கு மற்றும் கரடி இனங்களின் மிகுந்த வலிமை, துடிப்பான தன்மை, காட்டு வாழ்க்கை நடத்தை போன்ற சிறப்புக் குணங்களைக் கொண்டிருந்தனர் மனிதர்களைப் போல அரசியல், மொழி, கலை, அறிவு, நெறிமுறை ஆகியவற்றையும் கொண்ட ஒரு புராணப்பூர்வமான, அதிமனித இனம் ஆவர்.
அவர்களை “குரங்குகள்” என்று அழைப்பது, அவர்களின் உண்மையான தன்மையை மிகைப்படுத்திக் கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் வெளித்தோற்றம் மற்றும் சில இயல்புகளின் அடிப்படையில் வைத்த ஒரு பெயராகும். இது ஒரு சிம்பல் (Symbol) அல்லது ஒரு புனைவு இனத்தை வரையறுக்கும் ஒரு வழி. இதனால்தான் ஹனுமன் போன்றவர்களை நாம் தெய்வீகமாக வணங்குகிறோம், ஒரு விலங்காக அல்ல.
மேலும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. கிஷ்கிந்தா வாசிகள் அனைவரும் வானரங்கள் அல்ல. அவர்கள் அனைவரும் தேவர்கள். இராவணன் தலைமயில் அனைத்து அரக்கர்களையும் ஒழிப்பதில் இராமனுக்கு உதவுவதற்காக பிறவி எடுத்துள்ள தேவர்கள். இதை பாலகாண்டத்தில் உள்ள கீழ்கண்ட தோஹாக்கள் மூலம் துளசிதாசர் தெரிவிக்கிறார்.
யுத்தகாண்டத்தில் ‘ராக்ஷஸர்களது வசனம்’ என்ற ஏழாவது அத்தியாயத்தில் ராவணனது மந்திராலோசனை பற்றி குறிப்பிடப்படுகிறது.
அதில் அனைவரும் அவனது வீரத்தைப் புகழ்ந்து அவனது சாதனைகளைப் பட்டியலிடுகிறார்கள்.
அப்போது அவர்கள், “மகாராஜரே! தேவரீர் இங்கேயே இருக்கலாம். ,மகாபாகுவாகிய இந்த இந்திரஜித்து ஒருவனே வானரர்களை நாசம் செய்து விடுவான். தேவரீருக்கு மனக்கவலை ஏன்?” என்று கூறுகின்றனர்.
இப்படி இந்திரஜித்தின் பராக்ரமத்தை ராக்ஷஸர்கள் புகழ்கின்றனர். இந்திரஜித்தால் தேவேந்திரன் சிறைப்படுத்தப்பட்டான் என்று மேலும் கூறுகின்றனர்.
இவர்களது கூற்றிலிருந்து இந்திரஜித் சிவபெருமானுக்கு ப்ரீதியை விளைவிக்கும் யாகம் நடத்தப்பட்டதை அறிகிறோம். அதனால் இந்திரஜித் சிவபிரானின் அனுக்ரஹத்தை[ பெற்றிருக்கிறான் என்பதையும் அறிய முடிகிறது. இது வரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட வால்மீகி முனிவர் இதை இங்கு வரம் என்றே குறிப்பிடுகிறார்.
இந்திரஜித்தின் யாகம் பற்றி உத்த்ரகாண்டத்தில் 25ம் அத்தியாயத்தில் அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமனுக்கு விளக்கமாகக் கூறுகிறார். அதை இந்தத் தொடரில் பின்னால் காண்போம்.
Date uploaded in Sydney, Australia – 20 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ancient Tamil Encyclopaedia -Part 53; One Thousand Interesting Facts -Part 53
Item 377 Dharma Artha Kama
In the previous part, I wrote that Tiru Valluvar named his book Dharma Artha Kama in Tamil as Muppaal and divided his book into three parts as Aram Porul Inbam, translating Sanskrit words Dharma Artha Kama. Here Kovur Kizaar in Puram verse 31 also used it.
We also saw that Tolkappiam, the oldest book in Tamil, also used Dharma Artha Kama in at least two sutras.
***
Item 378 White Umbrella
White Umbrella like moon is found in Kalidasa and other Sanskrit works. This shows that Hindus from Himalayas to Kanyakumari has same culture.
This is repeated by umpteen poets in Sanskrit and Tamil
***
Item 379 Male Anklet and Acupuncture
In Puram verse 31, the line Your warriors wearing anklets—give us some information about the male anklet ‘Kazal’. They wore it before going to war. All Hindu jewels have some deeper meaning. Piercing the ear of both boys and girls is based on acupuncture. May be this male anklet ‘Kazal’ and female anklet ‘Silambu’ have some acupuncture background. We must do more research.
***
Item 380 Two Seas
Choza king’s rule was all over South Indian Peninsular touching Bay of Bengal and Arabic Ocean. This is in Kalidasa’s Raghuvamsam as well.
स वेलावप्रवलयां परिखीकृतसागराम्।
अनन्यशासनामुर्वीं शशासैकपुरीमिव॥ १-३०
sa velāvapravalayāṁ parikhīkṛtasāgarām |
ananyaśāsanāmurvīṁ śaśāsaikapurīmiva || 1-30
That DilIpa monarchized entire earth, hitherto un-umbrellaed under a single umbrella by any one king, as if she is his single capital bulwarked with seashores and moated with oceans [Raghuvamsam 1-30]
“கடல் வரை பரந்த ஆட்சி” (ஆசமுத்ர க்ஷிதீசானாம் – Aasamudra Kshitishaanaam) என்பது சமுத்திர குப்தன் போன்ற மன்னர்களின் பரந்த சாம்ராஜ்யத்தைக் குறிக்க பயன்படுத்தப்படும் தொடர் ஆகும். சமுத்திர குப்தன் கடல் நீர் சூழ்ந்த பூமி முழுவதையும் ஆட்சி செய்ததாக சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன
***
Item 381 Tamil Threat
Though Tamil kings were fighting with each other continuously for 1500 years they were united when Northern kings attacked them. For instance, Kharavela, King of Kalinga/Orissa says that he broke the Tamil Front (Dramlila Sanghatan).
All the three Tamil Kings Chera Choza, Pandya went up to the Himalayas to carve their emblems. Tamil epic Silappadikaram says Cheran Senguttuvan went to River Ganga twice. Naturally northern kings were scared.
Asoka, earlier also, mentioned Tamil kings together. That shows they were considered a united lot. Mauryan invasion is mentioned y Sangam poet Mamular.
***
Here is the full verse from Vaidehi Herberts site.
Puranānūru 31, Poet Kōvūr Kizhār sang to Chozhan Nalankilli
1
Like the great tradition where wealth and pleasure follow righteousness,
2
your tall umbrella shines alone, bright like the moon, followed by two umbrellas.
Craving for great fame, you will not rest anywhere but in your camps, where battle victories are won.
Your elephants attack enemy fort walls, their tusk tips get blunted, and they are out of control.
3 Your warriors wearing anklets, who desire battles, enter countries with forests and very distant places, without complaining.
4
You linger in your enemy country celebrating loud festivals, and leave the eastern ocean behind you as the white-topped waves of the western ocean laps the hooves of your horses.
5
Afraid of you circling the earth, the kings of the northern countries are distressed, their hearts trembling, and their eyes unable to sleep!
***
புறநானூறு31,பாடியவர்: கோவூர்கிழார்,பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
1 சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை, உருகெழு மதியின் நிவந்து சேண் விளங்க,
2 நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் 5 பாசறையல்லது நீ ஒல்லாயே, நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே,
3 போர் எனில் புகலும் புனை கழல் மறவர், “காடிடைக் கிடந்த நாடு நனி சேஎய 10 செல்வேம் அல்லேம்” என்னார், கல்லென் விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்துக்
4 குணகடல் பின்னதாகக், குடகடல் வெண்தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து 15 5
நெஞ்சு நடுங்கு அவலம் பாயத், துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே.
****
Item 382 Two other Capital Cities under Chozas
Here in Puram verse 32, Choza king Nalankilli is praised by Kovur Kizar that he has Chera capital Vanji and Pandya capital Madurai under his sway. He would even donate them to the bards. He is very generous.
***
Item 383 Potter simile
The king is capable of shaping / making/doing anything like a son of a potter using the ball of clay.
Like a fresh ball of clay placed on a potter’s wheel by very skilled children of potters, it is his to do what he likes in this cool fertile land.
***
Puranānūru 32, Poet Kōvūr Kizhār sang for Chozhan Nalankilli
1
People who seek gifts! Come! Let’s all sing his praises! For cooking pots of your clan to be full, he will give Vanji city, the one with the name of the vanji vine, and gift Madurai with storied mansions for the price of flowers to bright-browed viralis with bamboo-like curved arms that are painted.
It would be good if we think about his ancient land rights.
2 Like a fresh ball of clay placed on a potter’s wheel by very skilled children of potters, it is his to do what he likes in this cool fertile land!
****
புறநானூறு32,பாடியவர்: கோவூர்கிழார்,பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி,
1
கடும்பின் அடு கலம் நிறையாக நெடுங்கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ, “வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூ விலை பெறுக” என, மாட மதுரையும் தருகுவன், எல்லாம் 5 பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
2 தொன்னிலக் கிழமை சுட்டின் நன் மதி வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசு மண் குரூஉத்திரள் போல, அவன் கொண்ட குடுமித்தும் இத் தண் பணை நாடே. 10
***
Item 384 Tiger Emblem on Pandyan Fort
In Puram verse 33, Kovur Kilzar gives us the name of the place near Siva Ganga in Pandya country where King Nalankilli carved the tiger emblem of Choza.
This shows the importance of royal emblems of the three Tamil Kingdoms.
Nowhere in the world literature we see such importance given to Royal Emblems.
***
Item 385 Barter Trade
There was no common currency in the Sangam age. Only barter trade was prevalent. Here the poet sings who exchanged what in food items.
***
Item 385 Non Vegetarians
Tamils were predominantly Non Vegetarians. Here we come across venison, meat etc with rice and curd. If one goes to Tamil Nadu one can see flower vendors in front of temples and in Bazars who has jasmine flower buds strings rolled into balls. The pure white rice balls are compared to them by the poet.
***
Item 386 Puppet Show
Lovers are compared to Alli Dolls. It may be the dolls used in the puppet show.
***
Here is the full verse.
Puranānūru 33, Poet Kōvūr Kizhār sang to Chozhan Nalankilli, Thinai: Vākai, Thurai: Arasa Vākai
1 You assaulted gates in seven forts, captured them and inscribed your symbol of a tiger with gaping mouth, in the fine mountain country of the Pandiyan
2 king where wives of farmers who live in huge houses fill white rice paddy harvested in fields near ponds, in the baskets in which a hunter with fierce dogs presents venison, and in the pots in which a cowherd woman bring curds!
3
Musicians sing praising your invasions, and camp streets with cow dung dust are splendid with your warriors. The families of bards are well nourished with balls of rice mixed with meat, looking like flower garlands on which flower buds and fresh green leaves are strung together. Your battle camp is lovelier than the festival you celebrated, sacrificing rams in every mansion near the entrance with flowers and thick sand on which it is sweet to walk, where there are groves with cool flowers where no one walks alone at night,
4 other than pairs of lovers, who are like dancing alli puppets, painted beautifully, created by a skilled expert.
***
புறநானூறு33,பாடியவர்: கோவூர்கிழார்,பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி
1
பண்டமாற்று வணிகம்
கான் உறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும், ஆய் மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய, ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் குளக் கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5 முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும்,
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக், காம இருவர் அல்லது யாமத்துத் தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், ஒதுக்கு இன் திணி மணல் புதுப் பூம் பள்ளி 20 வாயின் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.
***
ஏழெயில் (8) – பாண்டிய நாட்டில் உள்ள ஒரு கோட்டை.சிவகங்கை அருகில் உள்ளது.
அல்லிப்பாவை (17) – உ. வே. சாமிநாதையர் உரை – ஆண் கோலமும் பெண் கோலமுமாய அவ்விருவரும் ஆடுங்கூத்து
.
–subham—
Tags- Item 386, Tamil puppets, similes, emblems, barter trade, Purananuru Wonders 13 ; Ancient Tamil Encyclopaedia – Part 53
Date uploaded in Sydney, Australia – 20 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 26
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 26
திருமாலை முருகன் அடக்கிய கதை !
சீறல் ஏனபதி* தனை கோலக்காலமாக அமர் செய்த
வடிவேலா … சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை*
கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே,
ஆவிச் சேல்கள் பூகம் மடல் இள பாளைத் தாறு கூறுபட …
குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம்
பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி,
உயர் ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே …
உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை
வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,
ஆசைத் தோகைமார்கள் இசை உடன் ஆடிப் பாடி நாடி வரு …
ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து
வணங்குகின்ற
திரு ஆனைக் காவில் மேவி அருளிய பெருமாளே. …
திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம் எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன் ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார். போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார்.
***
வேதத்தின் ஆறங்கம் – ஷட் அங்கம்
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர் … ஆய்ந்து அறிந்த வேதத்தின்
ஆறு அங்கங்களிலும்*** வல்ல, வேள்வி செய்யும் வேதியர்கள்
அரிகரி கோவிந்த கேச வென்று … ஹரி ஹரி, கோவிந்தா, கேசவாஎன்று துதிசெய்து,
* மதுரை ஜீவன்முக்தி தலம் மட்டுமின்றி துவாதசாந்தத் தலமுமாய் உள்ளது. துவாதசாந்தம் என்பது சிரசின் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் யோக ஸ்தானம். இந்த ஞானம் மதுரையில் கிடைத்தற்கு உரியது.
திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ மணம் செய்ய பூத்த
மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத்
தீர்த்தத்தின் மருங்கின் ஞான
உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம்
தந்து உலவா வீடு
தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை
இது சாற்றின் மன்னோ.
253. அத்திருமா நகரின் பேர் சிவ நகரம் கடம்ப வனம்
அமர்ந்தோர் சீவன்
முத்தி புரம் கன்னிபுரம் திருவால வாய் மதுரை முடியா
ஞானம்
புத்தி தரும் பூவுலகில் சிவலோகம் சமட்டி விச்சாபுரம்
தென் கூடல்
பத்திதரு துவாத சாந்தத் தலம் என்று ஏது வினால்
பகர்வர் நல்லோர்.
—–திரு விளையாடல் புராணம்
மதுரைக்கு சிவ நகரம், கடம்பவனம், ஜீவன் முக்திபுரம், கன்னிபுரம், திருவாலவாய், பூலோக சிவலோகம் , சமஷ்டி விச்சாபுரம் கூடல், துவாதசாந்தத்தலம் / எண் 12 பெயர்கள் என்று பரஞ்சோதி முனிவர் திரு விளையாடல் புராணத்தில் சொல்லிக்கிறார் . இதில் சமஷ்டி விச்சாபுரம் , துவாதசாந்தத்தலம் / எண் 12 என்ற இரண்டு பெயர்கள் விநோதமானவை ; யாரும் சரியாக விளக்கவில்லை .
கன்னி புரம்– மீனாட்சி அம்மன் ஆண்டதால் ஏற்பட்ட பெயர்.
ஜீவன் முக்திபுரம்– மதுரையில் வாழும் எல்லோரும் மீனாட்சி சுந்தரேச்வரரை வணங்கினால் இப்பிறப்பிலேயே வீடுபேற்றினை அடைவர் ;
பூலோக சிவலோகம்– வரகுண பாண்டியனுக்கு மதுரையிலேயே சிவலோகத்தைக் காட்டியதால் ஏற்பட்ட பெயர்.
கடம்பவனம் – தனபதியென்ற செட்டியார் கடம்பவன காட்டில் நடந்த அதிசய நிகழ்ச்சியை குல சேகரனுக்கு அறிவித்த பின்னர் கடம்ப வன காட்டில் எழுந்த நகரம் என்பதால் ஏற்பட்ட பெயர்.
ஆலவாய் – ஒரு பாம்பு மதுரையின் எல்லையைக் காட்ட வட்டமாக நின்றதால் ஏற்பட்ட பெயர்.
நான்மாடக்கூடல் – நான்கு மேகங்களை அழைத்து சிவபெருமான் மதுரைக்குப் பாதுகாப்பு கொடுத்ததால் ஏற்பட்ட பெயர்.
கூடல்– வைகை நதியும் கிருதமலா என்ற நதியும் கூடும் இடத்தில் அமைந்ததால் ஏற்பட்ட பெயர்.
மதுரை — மதுரை நகரை அமைக்கும்போது சிவன் மதுரமான அமுதத்துளிகளைச் சிந்தியதால் மதுரை ; மதுரமான சொல் உடைய இடம் அல்லது மருத நிலம் சூழ்ந்த நகரம் அல்லது கிருஷ்ணனின் மதுராபுரியுடன் தொடர்புடைய இடம்.
இப்போது சரியாக விளக்கப்படாத இரண்டு பெயர்களைக் காண்போம்
சமஷ்டி விச்சாபுரம் ,
சிவா ஞானம் முதலிய எல்லா ஞானங்களையும் தருவதால் சமட்டி விச்சாபுரம் என்பதற்கு முழுமையான சிவஞான பட்டணம் என்று பொருள். ஆன்மாக்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினையும் அருளுவதால் இப்பெயர் ஏற்பட்டது
லிங்க அமைப்பில் வியஷ்டி லிங்கம், சமஷ்டி லிங்கம் என்ற இருவகை உண்டு. இவற்றுள் சொக்கநாதர் சமஷ்டி லிங்கமாக இருப்பதால் இத்தலம் சமஷ்டி விச்சா புரம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். இங்கு தரிசித்தால் ஏனைய எல்லா வியஷ்டி லிங்கத் தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிட்டும்!
துவாதசாந்தத்தலம் / எண் 12
விராட் புருஷனுக்கு உச்சிமேல் 12 அங்குல முடியிலுள்ள இடமாக இருப்பதால் ஏற்பட்ட பெயர்.
த்வாதசாந்தம் என்றால் பன்னிரெண்டின் முடிவு அல்லது பன்னிரெண்டுக்கு அப்பாற்பட்டது என்று பொருள்; ஆறு ஆதாரம், மூன்று மண்டலம், மூன்று கிரந்தி ஆகிய 12-க்கும் அப்பால் இருப்பது சஹஸ்ரார கமலம்; இங்கு இருக்கும் சக்திக்கு மனோன்மணி என்று பெயர். இவள் சிவத்தோடு அபின்னையாய் இருப்பவள் ;இவளுக்கு இரண்டே கைகள். இது மதுரை மீனாட்சியின் உருவம் ஆதலால் எண் 12 வந்தது ; சுப்ரபேதாகமம், உத்தரகாம்ய ஆகமம் முதலிய நூல்களில் மேலும் வருணனைகள் உள்ளன; காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி ஆகிய உருவங்களிலிருந்து, மதுரை மீனாட்சி வேறுபட்டது என்பதை தரிசிப்போர் எளிதில் அறியலாம். கைகள் தொங்கவிட்ட நிலையில் இருக்கும்.
****
இராமாயண சம்பவங்கள்
மறந்த சுக்ரிப மா நீசன் வாசலில் இருந்து உலுத்த நீ ஓராதது
ஏது சொல் மனம் களித்திடல் ஆமோ துரோகித(ம்) … (தான்
சொன்ன சொல்லை) மறந்த சுக்ரீவன் என்னும் பெரிய இழிந்த
குரங்கரசன் வாசலில் நின்று, “உலுத்தனே நீ தெளிவு அடையாததற்கும் உணர்ச்சி பெறாததற்கும் என்ன காரணம்? மனம் களிப்புறுதல் நியாயமா? உன் செய்கை துரோகமாகும்.
முன்பு வாலி வதம் செய் விக்ரம சீராமன் நான் நிலம் அறிந்த
அதிச் சரம் ஓகோ கெடாது இனி வரும்படிக்கு உரையாய் பார்
பல ஆகவம் என்று பேசி … முன்பு வாலியை வதம் செய்த வீரம்
உள்ள ஸ்ரீராமன் நான் என்பதை உலகம் எல்லாம் அறியும். இந்த
அம்பை கெட்டுப் போக விடவேண்டாம். இனியேனும் தாமதிக்காதுவரும்படிப் போய்ச் சொல்லிப் பல பேர்களின் விளைவைப் பார்ப்பாயாக” என்று (இலக்குமணர் மூலமாகச் சுக்ரீவனுக்குச்) சொல்லி அனுப்ப,
அறம் தழைத்த அநுமானோடு மா கடல் வரம்பு அடைத்து
அதின் மேல் ஏறி ராவணன் அரண் குலைத்து எதிர் போராடு
நாரணன் மைந்தனான அநங்கன் மைத்துன வேளே … தரும
நெறி விளங்கும் அனுமானுடன் பெரிய கடலில் அணையைக் கட்டி அந்த அணையின் மீது போய் ராவணனுடைய கோட்டைகளை அழித்து எதிர்த்துப் போராடிய (ராமனாகிய) திருமாலின் மைந்தன் மன்மதனுக்கு மைத்துனனான* தலைவனே,
கலாபியின் விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன் நலம்
கயப்பதி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … மயில் மீது
விளங்கும், வயலூர் வேலாயுதப் பெருமாளே, சிறப்பும் நலமும் கொண்ட திருஆனைக்கா என்னும் பதியில் வாழ்வு கொண்டவனே, தேவர்கள்தம்பிரானே.
* திருமாலின் மகள் வள்ளி. மகன் மன்மதன். எனவே, வள்ளியின் கணவன் முருகனுக்கு மன்மதன் மைத்துனன்.
***
திருவானைக்கா மதில் கதை
ஆழித் தேர் மறுகில் பயில் மெய்த் திரு நீறு இட்டான்
மதிள் சுற்றிய … சக்கரங்கள் கொண்ட தேர் வீதியில் வருகின்ற,
உண்மை விளங்கும் திருநீறிட்டான் மதிள்* சுற்றிலும் உள்ள,
பொன் திரு ஆனைக்காவினில் அப்பர் ப்ரியப்படு
பெருமாளே. … அழகிய திருவானைக்கா என்னும் தலத்தில்
எழுந்தருளிய சிவபெருமான் விரும்பும் பெருமாளே.
* திருவானைக்காவில் ஐந்து மதில்கள் உள்ளன. நான்காவது மதில், திருநீறிட்டான் மதில், மிகப் பெரியது. இதைக் கட்டும் போது சிவபெருமான் ஒரு சித்தாளாகக் கூலிக்கு வேலை செய்தார். கூலியாக திருநீற்றையே கொடுக்க, அந்தத் திருநீறு பொற்காசு ஆயிற்று என்பது புராண வரலாறு – திரு ஆனைக்கா புராணம்.
To be continued………………
Tags – திருவானைக்கா, ஐந்து மதில்கள், துவாதசாந்தத்தலம், மதுரையின் பெருமை, திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 26, திருமாலை, முருகன் அடக்கிய கதை !