HOW SISTER NIVEDITA CHANGED BHARATI (Post No.5767)




Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 11 December 2018


GMT Time uploaded in London – 8-56 am

Post No. 5767



Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.




Greatest of the Modern Tamil Poets Subrahmanya Bharati met Sister Nivedita on his way back to Madras from the Benares Congress Conference. This brief meeting took place at Dum Dum, Calcutta in 1905. This meeting has changed Bharati’s life to a great extent.


Bharati went back via Calcutta with the intention of meeting great Bengali patriots. He was fortunate to meet Nivedita. Their conversation turned towards women’s upliftment. Sister Nivedita casually asked Bharati whether he was married. He replied in the affirmative and immediately Nivedita asked him whether his wife also came with him now. Bharati told her that it was not a normal practice to take women to social and public functions.


This reply made Nivedita very angry. She admonished him and said that we should give equal importance and equal participation for women. This awakened Bharati and opened his eyes. From that day onwards, he had vowed to work for women’s liberation. He came back to Madras (Chennai) and started a separate Tamil magazine (Chakravarthini) for the women.



Just before leaving Dum Dum , Sister Nivedita gave him a leaf which she brought from the Holy Himalayas. She touched his head and blessed him. Bharati preserved this leaf until his death in 1921.


K S Raman in an article writes,


“It may be of interest to know that Bharati had handsomely acknowledged his deep sense of gratitude to the great woman Nivedita by dedicating his two books to her in which he says, ‘in a flash without the aid of speech or reasoning thou revealed to me the sacredness of service to the Motherland and glory of renunciation. To you who by virtue of thy piety and excellence became the spiritual daughter of Swami Vivekananda, I dedicate this book’.


In one of his poems also he speaks of the Sister in most glowing terms, which reads as under,
“An offering to Mercy
A Temple of Love
A sun to his spiritual darkness
Rain to the withering country
A fire to the scroll of meanness’



The enlightenment Bharati derived from the Sister can be gauged from the poems he sang in praise of women and their equal status.
It was Bharati, more than anybody else in Tamil Nadu, who worked untiringly for the social uplift of women and the essays and poems he wrote on this question were legion.


About Sister Nivedita, K S Raman adds,


Born of an Irish parentage at Dungannon (Northern Ireland) in 1867, and despite her manifold pursuits, Margaret Noble (later Nivedita) had the growing consciousness of uncertainty and despair in respect of religion; neither Christian doctrines nor the tenets of Buddhism could provide panacea toher disturbed mental state. The visit of Swami Vivekananda to England in 1895 and his teachings kindled Margaret’s latent religious aspirations and desire to serve humanity selflessly. Therefore, she came to India in 1898, and lived in a cottage at Belur with Swamiji’s other two American disciples, was subsequently initiated into Brahmacharya and given the name of Nivedita (the dedicated). The rest of her life of thirteen years in India were devoted to the cause of Indian freedom and emancipation and upliftment of Indian women till her death in 1911.

Tags- Bharati, Nivedita, Women’s status, upliftment of women

31 பாரதியார் பொன் மொழிகள் (Post No.5714)

 

compiled by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 29 November 2018

GMT Time uploaded in London – 16-17

Post No. 5714
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

டிசம்பர் 2018 நற்சிந்தனை காலண்டர்

பண்டிகை நாட்கள் டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;16- மார்கழி மாதம் ஆரம்பம்;18- வைகுண்ட ஏகாதஸி, கீதா ஜயந்தி; 23-ஆருத்ரா தரிசனம்/திருவாதிரை; 25-கிறிஸ்துமஸ்

அமாவாஸை- 6, பௌர்ணமி- 22; ஏகாதஸி உபவாஸ நாட்கள்- 3, 18.

சுப முகூர்த்த நாட்கள்- 12, 13, 14

டிசம்பர் மாத (கார்த்திகை/மார்கழி) காலண்டரை பாரதியார் பொன்மொழிகள் அலங்கரிக்கின்றன.

டிசம்பர் 2018 காலண்டர்; விளம்பி கார்த்திகை-மார்கழி மாதம்

 

டிசம்பர் 1 சனிக்கிழமை

அருவி போலக் கவி பொழிய-எங்கள்

அன்னை பாதம் பணிவேனே

குருவிப்பாட்டை யான்பாடி- அந்தக்

கோதை பாதம் அணிவேனே

டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

மாணுயர் பாரத தேவியின் மந்திரம்

வந்தே மாதரமே

டிசம்பர் 3 திங்கட்கிழமை

அச்சப்பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளையும் கனியாய்

வாராய், நிலவே வா

டிசம்பர் 4 செவ்வாய்க்கிழமை

மந்திரம் கூறுவோம், உண்மையே தெய்வம்

கவலையற்றிருத்தலே வீடு, களியே அமிழ்தம்,

பயன்வரும் செய்கையே அறமாம்.

டிசம்பர் 5 புதன் கிழமை

ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

அபாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

வ்யாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

உதாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

ஸமாநனைத் தொழுகின்றோம். அவன் நம்மைக் காத்திடுக

டிசம்பர் 6 வியாழக் கிழமை

கடல் நமது தலை மேலே கவிழவில்லை

ஊர்கள் கலைந்து போகவில்லை

உலகம் எல்லா வகையிலும் இயல்பெறுகின்றது

இஃதெல்லாம் அவளுடைய திருவருள்

டிசம்பர் 7 வெள்ளிக் கிழமை

சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஒரு குமிழியாம்

சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர்

சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது

 

டிசம்பர் 8 சனிக்கிழமை

புகழே, புகழே, புகழே

புகழுக்கோர் புரையுண்டாயின்

இகழே, இகழே, இகழே

டிசம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

இன்பம் இன்பம் இன்பம்

இன்பத்திற்கோர் எல்லை காணில்

துன்பம் துன்பம் துன்பம்

டிசம்பர் 10 திங்கட்கிழமை

நாதம், நாதம், நாதம்

நாதத்தேயோர் நலிவுண்டாயின்

சேதம், சேதம், சேதம்

டிசம்பர் 11 செவ்வாய்க்கிழமை

தாளம், தாளம், தாளம்

தாளத்திற்கோர் தடையுண்டாயின்

கூளம், கூளம், கூளம்

டிசம்பர் 12 புதன் கிழமை

பண்ணே, பண்ணே, பண்ணே,

பண்ணிற்கோர் பழுதுண்டாயின்

மண்ணே, மண்ணே, மண்ணே

டிசம்பர் 13 வியாழக் கிழமை

ஆதியாலாதியப்பா!- கண்ணா!

அறிவினைக் கடந்த விண்ண்கப் பொருளே

சோதிக்குச் சோதியப்பா!– என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!

டிசம்பர் 14 வெள்ளிக் கிழமை

பெண்டீர் தமையுடையீர்!பெண்களுடன் பிறந்தீர்

பெண் பாவமன்றோ? பெரியவசை கொள்வீரோ?

கண்பார்க்க வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டாள் (திரவுபதி)

 

டிசம்பர் 15 சனிக்கிழமை

பேயரசு செய்தால்பிணம் தின்னும் சாத்திரங்கள்

டிசம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

‘தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும்’ எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும்

வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்

டிசம்பர் 17 திங்கட்கிழமை

கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்

டிசம்பர் 18 செவ்வாய்க்கிழமை

கோயிற் பூசை செய்வோர் சிலையக் கொண்டுவிற்றல் போலும்

வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலும்

ஆயிரங்களான நீதி யவை உண்ர்ந்த தரும

தேயம் வைத்திழந்தான், சீச்சீ சிறியர் செய்கை செய்தான்

டிசம்பர் 19 புதன் கிழமை

ஆங்கொரு கல்லை வாயிற்படி என்

றமைத்தனன் சிற்பி,மற்றொன்றை

ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்

றுயர்த்தினான், உலகினோர் தாய் நீ!

டிசம்பர் 20 வியாழக் கிழமை

யாங்கனே எவரை, எங்கனஞ்சமைத்தற்

கெண்ணமோ அங்கன்ம் சமைப்பாய்

ஈங்குனைச் சரணென்றெய்டினேன், என்னை

இருங்கலைப் புலவனாக்குதியே

டிசம்பர் 21 வெள்ளிக் கிழமை

இடையின்றி அணுக்களெல்லாம் சுழலுமென

இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்

இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென

வானூலார் இயம்புகின்றார்.

 

டிசம்பர் 22 சனிக்கிழமை

இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்

பொருட்கெல்லாம் இயற்கையாயின்

இடையின்றிக் கலை மகளே! நினதருளில்

எனதுள்ளம் இயங்கொணாதோ?

டிசம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்- அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக’ என்பதோர் நல்ல மங்களம்  வாய்ந்த சுருதி மொழி கொண்டு வாழ்த்தியே

(காயத்ரி மந்திரத்தின் மொழி பெயர்ப்பு)

டிசம்பர் 24 திங்கட்கிழமை

‘கிழவியர் தபசியர் போல்- பழங்

கிளிக்கதை படிப்பவன், பொறுமையென்றும்

பழவினை முடிவென்றும்- சொலிப்

பதுங்கி நிற்போன், மறத் தனமையிலான்

வழ வழ தருமன்’

டிசம்பர் 25 செவ்வாய்க்கிழமை

நல்லது தீயது நாமறியோம் அன்னை

நல்லது நாட்டுக1 தீமையை ஓட்டுக!

டிசம்பர் 26 புதன் கிழமை

ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றி

யொருசில பேய்கள் வந்தே

துன்பபடுத்துது, மந்திரஞ்செய்து

தொலைத்திட வேண்டுமையே!

டிசம்பர் 27 வியாழக் கிழமை

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

பூணும் வட நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு

 

டிசம்பர் 28 வெள்ளிக் கிழமை

தில்லித் துருக்கர் செய்த வழ்க்கமடி! பெண்கள்

திரையிட்டு முகமலர் மரைத்து வைத்தல்

வல்லியிடையினையும் ஓங்கி முன்னிற்கும்- இந்த

மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்

டிசம்பர் 29 சனிக்கிழமை

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை- முகச்

சோதி மறைத்துமொரு காதலிங்குண்டோ

டிசம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

அதை தொழுது படித்திடடி பாப்பா!

உயிர்களிடத்தில் அன்பு வேணும்- தெய்வம்

உண்மையென்று தானறிதல் வேணும்

டிசம்பர் 31 திங்கட்கிழமை

சாமி நீ! சாமி நீ! கடவுள் நீயே!

தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்

HAPPY NEW YEAR

TAGS- பாரதியார், பொன் மொழிகள், டிசம்பர் 2018, நற்சிந்தனை, காலண்டர்

 

–SUBHAM–

பாரதி போற்றி ஆயிரம் (Post No.4479)

Date: 11 DECEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4479

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 1

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

1

ஏறத்தாழ கடந்த நூறு ஆண்டுகளில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியோர் ஆயிரக்கணக்கானோர். அவனைப் போற்றிப் பாடிய கவிஞர்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கும் ஒன்று.

எத்தனை கவிதைகள் என்பதை எண்ணிச் சாத்தியமில்லை. ஆனால் அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றிய ஆவலின் விளைவே இந்த முயற்சி.

இதில் பாரதியைப் பற்றிப் பாடியவர்களின் கவிதைகள் தொகுத்து வெளியிடப்படும்.

 

காபிரைட் பிரச்சினை இருப்பின் அதை எழுதியோரோ அல்லது கவிதைகள் அல்லது புத்தகத்தை வெளியிட்டோரோ வேண்டாம் என்று சொன்னாலோ ஆட்சேபணை தெரிவித்தாலோ அது உடனடியாக இந்தத் தொகுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று உறுதி கூறுகிறோம்.

 

பாரதிக்குப் பாமாலை சூடியோர் அனைவரையும் முடிந்த மட்டில் ஒரு இழையில் இணக்க முயலும் முயற்சி இது.

அன்பர்கள் இதை வரவேற்பர் என்றே கருதுகிறோம்.

 

 

2

 

இந்தத் தொகுப்பிற்கென முதல் கவிதையைத் தேர்ந்தெடுத்தப்பதில் எனக்கு எந்த வித சிரமமும் இருக்கவில்லை.

பாரதியை எனக்கு அறிமுகப்படுத்தி, அந்த பக்தியை வளர்த்து அதற்கு உரமும் இட்டவர் பாரதி அன்பர் திரு வி.ஜி. சீனிவாசன் அவர்கள்.

சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தீரா பாரதிக் காதலன். பாரதி பற்றி பேசாத நாள் எல்லாம் அவருக்குப் பிறவாத நாளே! நூற்றுக் கணக்கானோருக்கு பாரதி பற்றும் பக்தியும் ஊட்டியவர்.

 

 

சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பாரதியின் சிலை நிறுவ பாடுபட்டவர். உருவச்சிலை கமிட்டியின் செயலாளர். பல ஊர்களிலும் சென்று பாரதி புகழ் பரப்பியவர்.

நல்ல பேச்சாளர். எழுத்தாளர். மதுரை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். திரு கி.வா.ஜகந்நாதன், தீபம் நா.பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமானோரை நண்பராகக் கொண்டவர்.

 

எனது வீட்டிற்கு அடிக்கடி வருவார். எனது தந்தையாரிடம் பேசிக் கொண்டிருப்பதில் ஒரு அலாதி மகிழ்ச்சி அவருக்கு.

எனக்கு ஜர்னலிஸ்ட் என்ற அந்தஸ்தைத் தந்தவரும் அவர் தான்.

எட்வர்ட் ஹாலில் மாணவர்கள் உறுப்பினராக முடியாது. அங்கிருந்த நூலகத்தின் மீதோ எனக்கு அளவற்ற பற்று.

ஒரு நாள் பாரத்தைக் கொடுத்து அதில் ஜர்னலிஸ்ட் என்று போட்டு அவரே என்னைச் சேர்த்து விட்டார்.

சற்று திகைத்த என்னை.”நீ தான் தினமணியில் மதிப்புரைகள் எழுதுகிறாயே” என்றார்.

 

மழலைச் செல்வி, ஜீவகுப்தா, நாகராஜன் என்று பல பெயர்களில் நான் புத்தக மதிப்புரை எழுதினாலும் சரியாக நான் தான் அந்தப் பெயரில் எழுதினேன் என்பதை உடனடியாக ஊகித்து அறிந்து என்னைப் பாராட்டுவார்.

 

ஆக என்னை ஜர்னலிஸ்டாக ஆக்கியவருக்கு, பாரதி பணியில் இந்த நாள் வரை – 57 வருடங்களுக்கும் மேலாக – உத்வேக மூட்டிய ஆசிரியருக்கு இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக சமர்ப்பிப்பதில் பேருவகை அடைகிறேன்.

ஆகவே தான் பாரதியாரைப் போற்றி அவர் எழுதியுள்ள வெண்பாக்களை தொகுப்பின் முதல் போற்றியாக வெளியிட்டு அவரின் நினைவைப் போற்றுகிறேன்.

 

பாடல்கள் 1 முதல் 6

 

பாரதியார் பா

வி.ஜி.சீனிவாசன்

1  

தொன்மொழியாம் தென்மொழியும் தூய வடமொழியும்

தன்மொழியாக் கொண்டு தமிழகத்தை – நன்மையுறச்

செய்தபுகழ் பாரதிசீர் செப்புதற்குத் தானெளிதாய்

எய்திடுமோ என்றனுக்கு மே!

 

2

நாட்டிற்கு இன்பம் நனிவிளையச் செய்வதற்கும்

வாட்டம் ஒழிப்பதற்கும் வாய்ந்தசுகம் – ஈட்டுதற்கும்

சத்தியமும் ஒற்றுமையும் தான்வேண்டும் என்றுரைக்கும்

பத்தியுள பாரதியார் பா!

 

3

 

மன்னுலகோர் என்றும் மனவேறு பாடின்றி

தன்மையுட னேயிருந்தால் தாரணியுள் – இன்பமெலாம்

பொங்குமெனச் சொன்ன புதுயுக சக்தியின்

தங்குரலே பாரதிசொல் தான்!

 

4

 

நாட்டின் விடுதலைக்காய் நம்வீரர் பாரதியின்

பாட்டென்னும் மந்திரத்தைப் பத்தியுடன் – போட்டியிட்டுப்

பாடி அதன்சக்தி பாலிக்கத் தாமகிழ்ந்து

நாடிதனைப் பெற்றார் நயந்து!

5

 

விஞ்ஞான முண்டுநல் வேதாந்த மும்முண்டு

அஞ்ஞானம் போக்கும் அருளுண்டு – மெஞ்ஞான

சீலகுண பாரதியார் செந்தமிழ்ப் பாடலிலே

ஞாலமிது தானுணரும் நன்று!

6

 

பாட்டுத் திறத்தாலே பாரிதனைப் பாலித்திட

நாட்டமுற்ற பாரதிசொல் நம்புபவர் – கேட்டதெலாம்

தந்தருளும் இன்பம் தழைக்க அருள்செய்யும்

சந்ததமும் மக்களுக்குத் தான்!

 

 

Picture posted by Bhaskran Shivaraman

தமிழ்க் குயில் என்ற சிறு வெளியீடு மதுரையில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்டது.

இரகுபதி சாமிநாதன், இரா. இளங்குமரன், கலைமோகன், சூ.கிரிதரன், மு.சதாசிவம், ம.க. சிவசுப்பிரமணியம், வி.ஜி.சீனிவாசன், கா.தேவராசக்கனி, க.பாண்டியன், சு.சா. பாப்பையா (சாலமன் பாப்பையா), நா.பார்த்தசாரதி, நா.சீ.வரதராஜன் ஆகிய 12 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்த நூல்.

 

அதில் திரு வி.ஜி.சீனிவாசன் பற்றிய குறிப்பு இது:

வி.ஜி.சீனிவாசன்: பி.ஏ., எல்.டி. இந்தி மொழியில் ‘விசாரத் பட்டம் பெற்றவர். ‘பரிதிமாற் கலைஞரின் பெண்வழிப் பேரர். பன்னூலாசிரியர். மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர். சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுபவர்.

 

          ****           தொடரும்

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.

ஒரே சிந்தனை! கம்பன், பாரதி, கண்ணதாசன் மூவரும் பாடிய விஷயம்! (Post No.2604)

Kannadasan_stamp

Compiled by london swaminathan

Date: 6 March, 2016

 

Post No. 2604

 

Time uploaded in London :–  11-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

“பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை

மாகத் தோள் வீர பெற்றாலெங்கனம் வைத்து வாழ்தி”

 

–சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம், கம்பராமாயணம்

 

 

பொருள்:- வானளாவிய தோளை உடையவனே! மும்மூர்த்திகளில் ஒருவனான சிவன், உமாதேவியை தன் இடப்பக்கத்தில் வைத்துக்கொண்டான். திருமாலாகிய இன்னொருவன், செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியைத் தன் மார்பில்

வைத்துக்கொண்டான். பிரமன், சரசுவதியைத் தன் நாவில் வைத்துக்கொண்டான். மேகத்தில் தோன்றுகின்ற மின்னலை வென்ற நுண்ணிய இடையை உடைய சீதையை நீ அடைந்தால், அவளை எந்த இடத்தில் வைத்துகொண்டு வாழ்வாய்?

kambar

 

இது ராவணனிடம் சூர்ப்பநகை கேட்ட கேள்வி. அதாவது, அவன் சீதையை அபகரிக்க வேண்டும் என்பதும், அவளைக் காவலில் வைக்குமிடத்தை இப்பொழுதே முடிவு செய்ய வேண்டுமென்பதும் சூர்ப்பநகையின் சதித்திட்டம். அவளுக்குத் தெரியும் ரவணனின் மனிவியான மண்டோதரி, மஹா பதிவிரதை என்பது. ஆகையால் ராவணனை உளவியல் ரீதியாக (சைகலாஜிகல்) தயார்படுத்த இப்படிப் பல வசனங்களைக் கூறுகிறாள். இந்தப் பாடல் பாரதி, கண்ணதாசன் பாடல்களிலும் பிரதிபலிக்கிறது.

 

 

 

பாரதி பாடியது

 

பாரதியார் பாடல்களை நன்கு ஊன்றிப் படிப்போர்க்கு, ஆழ்வார் பாடல், தேவாரம், திருவாசகம், திருக்குறள், கம்பராமாயணம் ஆகியன,  அவர் மீது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை அறிவர். கம்பனுடைய மேற்கூறிய பாடல்  கருத்தும் அப்படியே இடம் பெறுவதைக் காணலாம்.

 

 

பாரதியார் தன் சுயசரிதையில், காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம் என்று துவங்கும் பகுதியில் கம்பன் கூறியதை அப்படியே பயன்படுத்துகிறார்.

bharati-stamp

ஆதிசக்திதனை உடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணிதனை நாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வம் எல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்
: வானோர்க்கேனும்
மாதர் இன்பம்போல் பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.

 

கண்ணதாசன் கவிதைகள்

 

கண்ணதாசனும் யஜூர்வேதத்திலுள்ள ‘பஸ்யேம சரதஸ் ஸதம், ஜீவேம சரதஸ் ஸதம்’ (நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க………..) மந்திரம் முதல் எவ்வளவோ சம்ஸ்கிருதப் பாடல்களையும் தமிழ்ப் பாடல்களையும் அவரது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி… என்ற பாடல் பகவத் கீதை, பஜ கோவிந்தம் ஆகிய துதிகளிலிருப்பதையெல்லாம் முன்னரே கட்டுரைகளில் சுட்டிக்காட்டி விட்டோம்.

 

ஆனால் கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூவரும் ஒரே கருத்தை அதே வரிசையில் சொல்லுவதை இப்பொழுதுதான் காண்கிறேன்.

 

 

 

பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
(பாலக்காடு..)

படம்: வியட்னாம் வீடு
இசை: KV மகாதேவன்

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் GREATMEN THINK ALIKE— அதாவது, “உயர்ந்த மனிதர்க்கு சிந்தனை ஒன்றே” – என்று

அது போல கம்பன், பாரதி, கண்ணதாசன் ஆகிய மூன்று உயர்ந்த கவிஞர்களும் ஒன்றே நினைப்பர்! நன்றே நினைப்பர்.

 

–சுபம்-

Why did Bharati burn the Harmonium? (Post No 2602)

IMG_9567

Compiled by london swaminathan

Date: 5 March, 2016

 

Post No. 2602

 

Time uploaded in London :–  15-17

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

IMG_3519

There are very interesting anecdotes in the life of the great Tamil poet Subramanya Bharati. One of them was his fear of leprosy, which made him to consume a harmonium to fire!

Once he was playing on harmonium; actually he was playing with a harmonium like a child. He pressed many keys at the same time which produced a horrible sound. Immediately people in the room criticized him. He gave a beautiful reply. I wanted to show you how horrible it is when you scold a child! The same horrible sound you people produce when you scold a child! (His care and love for children is known through many anecdotes).

 

Chellamma’s bother has given her this harmonium. When it developed some problems it was sent to a shop for repair work.  Bharatiyar found out that the person who was handling it was a leper. Bharati was so scared of leprosy, he came home and told his wife Chellamma, “Never ever touch that harmonium, when it is returned”. She kept quiet. She loved the harmonium very much. Moreover it was given by her brother.

 

All this happened when the family was about to shift to far away Kadayam from Pondycheri. Bharati told his friends to pack all the goods and send them as cargo by next train. Chellamma told them to pack the harmonium without fail. After some days the cargo arrived at Kadayam. It so happened that Bharati himself received it and opened the package.

 

As soon as he saw the harmonium he became very angry. He separated it from rest of the goods and then asked someone to take it to the garden nearby. There he poured kerosene oil over it and set fire to it. Only when he saw the ashes of the harmonium he became peaceful. He came back home and gave treatment to the house with burning torches to kill the leprosy bacteria.

Once a freedom fighter who was afflicted with leprosy came home and touched Bharati’s daughter Sakuntala. She was a child then. As soon as he went out he bathed his child with anti-bacterial lotion. Since he had so much respect to freedom fighters he could not say anything when he was playing with his child.

 

He used to throw out all the tumblers and other utensils touched by a leper. People who find them on the roads, just outside his house, naturally returned them to Chellamma. When he saw them back in the house, he took them to a garden and buried them saying that it would prevent others getting leprosy. He was so health conscious!

 

Every one of us has some fear or phobia. Bharati was very much worried about leprosy. This shows that his human side.

 

 

Source: Tamil book on Bharatis Life by Akkur Ananthachary, 1936 publication. Rough translation by London swaminathan.

-subham-

பாரதி பாடிய பெருந்தலைவர்கள்! (Post No. 2381)

Written by London swaminathan

Date: 11 December 2015

Post No. 2381

 

Time uploaded in London :–8-24 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Subramanya Bharati- born on 11 December 1882

Died on 11 September 1921

 

டிசம்பர் 11 – பாரதி பிறந்த நாள்

பாரதியை நாம் எல்லோரும் புகழ்கிறோம். பாரதியால் புகழப்பட்டோர் யார்? எவர்? என்று பார்த்தோமானால் அது மிக நீண்ட பட்டியலாகிவிடும். இவ்வளவு பேரைப் பாரதி பாடினார் என்பதை அறியும் போது அவரது பரந்த மனப்பான்மை நமக்கு விளங்கும்.

 

 

பேஸ்புக்—கில் ஒரு ‘லைக்’ போடக் கஷ்டப்படும் நமக்கு, பாரதி எத்தனை பேருக்கு ‘லைக்’ (பிடிக்கும் என்று) போட்டிருக்கிறார் என்பதை அறிகையில் அவரது கனிவும் பணிவும் புரியும். நாம் பாராட்டினால் அவை நீர் மேல் எழுத்தாக மறைந்துவிடுகிறது. பாரதி போன்ற “மந்திரம்போல் சொல்லின்பம்” உடைய கவிஞன் பாராட்டினாலோ அது கல் மேல் எழுத்தாகி காலத்தால் அழியாததாகிவிடுகிறது.

 

 

பாரதி பாடாத கடவுள் இல்லை. போற்றாத புராண இதிஹாச புருஷர்கள் இல்லை. கர்ணனும் பார்த்தனும், சகுந்தலையும் பரதனும், வீமனும் தர்மனும் அவரால் பாடப்பட்டனர். இந்தப் பட்டியலைத் தராமல் அவர் பாடிய தலைவர்களை யும், சாதனையாளர்களையும், கவிஞர்களையும் மட்டும் காண்போம்.

 

உலக மகா இலக்கிய வித்தகன் பாணினி, இந்துமதத்தைப் புனருத்தாரணம் செய்த, ஷண்மத ஸ்தாபர் ஆதிசங்கரர், உலக மஹா கவிஞன் காளிதாசன், தமிழ்ப் புலவர்கள் கம்பன், இளங்கோ, வள்ளுவன், அவ்வை, இந்துமதத்தை முஸ்லீம் தாக்குதலிலிருந்து காப்பாற்றிய வீர புருஷர்களான வீர சிவாஜி, குருகோவிந்த சிம்மன், மதத்தலைவர்களான ஏசு, புத்தன், தயானந்தர், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், சுதந்திரப் போராட்டத் தலைவர்களான காந்திஜி, கோகலே, திலகர், தாதாபாய் நவுரோஜி, லாலா லஜபதி ராய், வ.உ.சி. முதலானோர் அவரால் பாடப்பட்டனர்.

 

வான சாஸ்திர மேதை பாஸ்கராசார்யார், மாமன்னன் அசோகன், கொடை வள்ளல் பாரி, சுவாமி விவேகாநந்தர், அவரது சீடர் நிவேதிதா, ஓவியர் ரவிவர்மா, தாயுமானவர், சுவாமி அபேதாநந்தா, வேல்ஸ் இளவரசர், குவளைக்கண்ணன்,வெங்கடேசு ரெட்டப்ப பூபதி,   நாம் அறியாத பல சாமியார்கள்:– சித்தாந்த சாமி, கோவிந்த சாமி, யாழ்ப்பாணத்துச் சாமி, மாங்கொட்டைச்சாமி, குள்ளச் சாமி, சுப்பராம தீட்சிதர் என்று பலரையும் போற்றிப் பாடியுள்ளார்.

இதாலிய தலைவர் மாஜினியையும் பாடினார். தாகூர்,தாமஸ் மூர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி மற்றும் பலரின் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்தார். ஆண்டாள், நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனால் இவரையும் பாடாமல் பாடினார்.

 

ரஷிய மன்னன் ஜார், ஆங்கில விஞ்ச் துரை முதலியோரை வசை பாடியுள்ளார்!

பாரதியின் போற்றுதலுக்குள்ளானோர் பட்டியலில் இன்னும் பலருமுண்டு. என் பட்டியல் முழுமையான பட்டியலன்று. அகத்தியர் — வேத, புராண, இதிஹாசத்தில் அடிபடும் ரிஷியின் பெயராகும். அவரையும் இரண்டு இடங்களில் பாடியுள்ளார்.

 

இதோ, பாரதி பாடிய சில புகழ்மிகு வரிகள்:

பாடல் 1

கம்பனென்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதை புனைந்ததும்

உம்பர் வனத்து கோளையும் மீனையும்

ஓர்ந்ததளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

நம்பருந்திறலோடொரு பாணினி

ஞாலமீதில் இலக்கணம் கண்டதும்

இம்பர் வாழ்வின் இறுதிகண்டுண்மையின்

இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்

பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பாரளித்து தர்மம் வளர்த்ததும்

பேரருட்சுடர் வாள் கொண்டு அசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்

வீழ்த்திவென்ற சிவாஜியின் வெற்றியும்

அன்னர் யாவும் அறிந்திலர் பாரதத்து

ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

பாடல் 2

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி

யாரம்படைத்த தமிழ்நாடு

 

பாடல் 3

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை

உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை

 

பாடல் 4

 

அகத்தியன் பற்றி தமிழ்த் தாய் சொல்வது:——

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்

 

பாடல் 5

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே – இங்கு

முன்பு மொழிந்துலகாண்ட புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

பாடல் 6

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்று அறியீரோ? உணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி அவ்வை அன்னையும் பிதாவும்

பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ

 

பாடல் 7

வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!

 

பாடல் 8 (உ.வே.சா. பற்றி)

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெல்லாம் புலவர் வாயில்

துதியறிவாய், அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

 

பாடல் 9

தாயுமானவர் பற்றி

இறவாய் தமிழோடிருப்பாய் நீ

பாடல் 10

நிவேதிதா பற்றி

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும்பொருளாய் புன்பைத் தாகச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதியைத் தொழுது நிற்பேன்.

 427-Kambar

 

இடம் கருதி இத்தோடு நிறுத்துகிறேன் ஏனைய கவிதைகளை பாரதியார் கவிதைத் தொகுப்பில் காண்க.

பாரதி வாழ்க! பாரதி வளர்த்த தமிழ் வாழ்க!!

 

–சுபம் —

 

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11 (Post No. 2380)

bharati drawing

Written by S NAGARAJAN

Date: 11 December 2015

Post No. 2380

 

Time uploaded in London :– 5-36 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி இயல்

டிசம்பர் 11 பாரதியார் பிறந்த தினம். உலக மகாகவியைப் போற்றுவோம்.

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

 

 

பாரதி பிறந்தார்

 

பாரதியார் புகழ் உலகெங்கும் பரவ உத்வேகமூட்டிய ஒரு நிகழ்ச்சி எட்டயபுரத்தில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் நாள் பாரதி ஞாபகார்த்த மணிமண்டப அஸ்திவார விழாவாகும்.

மிக பிரம்மாண்டமான அளவில் பாரதி ஆர்வலர்கள் கலந்து கொண்ட  அந்த நிகழ்ச்சி கல்கி (ரா.கிருஷ்ணமூர்த்தி) அவர்களின் பெரு முயற்சியால் நடந்தது.

ராஜாஜி அஸ்திவாரக்கல்லை நட கூடியிருந்தோர் மகிழ்ச்சியில் திளைக்க அழகாக நடந்த விழா தமிழக சரித்திரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.

 

 

இந்த அஸ்திவார விழாவுக்கு அஸ்திவாரம் போட்டது ஒரு கட்டுரை. அதை கல்கி எழுதியிருந்தார். இதைப் படித்த சி.ரகுநாதன் ஐந்து ரூபாயை அனுப்பி இருந்தார். ஐந்து ரூபாயிலிருந்து ஆரம்பித்த நிதி சுமார் நாற்பதினாயிரம் ரூபாயைத் தாண்டியது அந்தக் கால அதிசயம்.

இந்தக் கட்டுரையையும் பொழுது புலர்ந்தது என்ற அஸ்திவார விழ பற்றிய கட்டுரையையும் இணைத்து இன்னும் ஏழு கட்டுரைகளுடன் பாரதி பிறந்தார் என்ற நூலை சின்ன அண்ணாம்லை தனது தமிழ்ப்பண்ணை வாயிலாக ஆகஸ்ட், 1945இல் (முதல் பதிப்பாக) வெளியிட்டார்.

 

பாரதி ஆர்வலர்களால் நினைவு கூர வேண்டிய ஒரு விழா கவிஞன் பிறந்த எட்டயபுரத்தில் நடந்த இந்த பாரதிப் பெருவிழாவாகும்.

அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது இந்தப் புத்தகம்.

நூலில் ஏராளமான சுவையான சம்ப்வங்களைப் படிக்கலாம் – கல்கியின் சுவாரசியமான தமிழ் நடையில். இரட்டிப்புச் சந்தோஷம் உருவாகும்.

 

சின்ன அண்ணாமலை தன் முன்னுரையில் இறுதியில் கூறுவது:-

“ ஒரு காலத்தில் ஆங்கிலம் படித்தவர்களிடையே தமிழ்ப் புத்தகங்களையும் தமிழ்ப் பத்திரிகைகளையும் தொடுவதே கேவலமாகக் கருதப்பட்டது. அத்தகைய மனப்பான்மையைப் போக்கி இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தமிழ் வெள்ளம் பரவும்படி செய்தவர் கல்கி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

 

பாரதியார் கவிதைக்கு எப்படிப் புது மலர்ச்சியை அளித்தாரோ, அப்படித் தமிழ் வசனத்திற்கு மறு மலர்ச்சி உண்டாக்கியவர் கல்கி. எட்டயபுரம் பாரதி ஞாபகார்த்த மண்டபத்தின் மூலம் அந்த இருவரின் பெயர்களும் ஒந்றாக இணைந்து விட்டன. ஸ்ரீ கல்கி அவர்களுக்குத் தமிழ் மக்களிந் சார்பாக நன்றி கூறுகிறோம்.”

 

ஆரம்ப காலத்தில் பாரதியாரை ஒரு கவிஞர் என்ற வகையில் கல்கி ஒப்புக் கொண்டதையும் உலக மகாகவி என்பதை ஏற்க மறுத்ததையும் இதற்கு முன் வெளி வந்த அத்தியாயத்தில் படித்தோம். ஆனால் பாரதியின் அற்புதமான கவிதைகளில் மனம் தோய்ந்து அவற்றை அனுபவித்த பின்னர் அவரை உலக மகாகவி என்று கூறுவது மிகவும் சரியே என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

 

அதன் வெளிப்பாடே அவர் முனைந்து நின்று திரட்டிய நிதியும் அதனால் உருவான மணி மண்டபமும் ஆகும். அத்துடன் அவரது கதைகள், நாவல்களில் பாரதி பாடல்களைத் தாராளமாக அவர் உலவ விட்டார்.

நூலில் சில சுவாரசியமான பகுதிகளைப் பார்ப்போம்.

 

பாரதி பிறந்தார் கட்டுரையிலிருந்து:

சந்து பொந்துகளின் வழியாகச் சென்று கடைசியில் பாரதியார் பிறந்த வீட்டை அடைந்தோம். வீட்டு வாசலில் ஒன்றுக்கு மேல் ஒன்று உயரமாக இரண்டு விசாலமான திண்ணைகள் இருக்கின்றன. மேல் திண்ணையின் ஓரத்தில் சுவரில் ஒரு குறுகலான வாசற்படி காண்கிறது. அதற்குள்ளே இருந்த அறையிலே தான் பாரதியார் பிறந்தார் என்று சொன்னார்கள். ஆகா! பிறந்த குழந்தை “குவா, குவா” என்று அழுத போது அந்தக் “குவா” சத்தத்தில், தேச வெறியும் தமிழ்ப் பண்பும் பொங்கித் ததும்பும் அழகிய தமிழ்ப் பாடல்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது.

 

அந்த வாசற்படிக்கு வெளியே, திண்ணையில் பாரதியார் தூணில் சாய்ந்து கொண்டு உட்கார்ந்திருப்பது வழக்கம் என்றும் சொன்னார்கள். இப்போது இதே இடத்திலிருந்து தான் பாரதி திருநாளன்று அவருடைய திருவுருவப் பட ஊர்வலத்தை ஆரம்பித்து நடத்துகிறார்களாம் – இலக்கிய மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தான்.

 

பொழுது புலர்ந்தது கட்டுரையிலிருந்து:-

ராஜாஜியின் பேச்சில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1) பாரதியாரைப் பற்றிய ராஜாஜியின் சொந்த அனுபவங்கள் 2) பாரதியாரின் கவிதைச் சிறப்பு 3) பாரதியாரை தமிழ்நாடு போற்ற வேண்டிய முறை

பின் வருமாறு பேச்சு ஆரம்ப்மாயிற்று:-

 

இந்நாளில் பலர் பாரதியாரைப் பற்றித் தங்களுடைய சொந்த அனுபவங்களையும் ஞாபகங்களையும் சொல்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் விடப் பாரதியாரை எனக்கு அதிகமாய்த் தெரியும்; அதிக காலமாயும் தெரியும். இதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் எல்லாரையும் விட எனக்கு வயது அதிகம் (சிரிப்பு) அவருடைய மாமாவைத் தவிரச் சொல்கிறேன். வயது எனக்கு அதிகமானதினாலேயே சில விஷயங்களில் அனுபவமும் அதிகமாய்த் தானே இருக்க வேணும்? 1906-ம் வருஷத்திலேயே பாரதியாரை எனக்குத் தெரியும். அவரும் நானும் கல்கத்தா காங்கிரஸுக்கும் அடுத்த வருஷம் சூரத் காங்கிரஸுக்கும் போனோம். பாரதியார் தீவிரவாதி. நானும் அப்போது அப்படித்தான். அந்தக் காலத்தில் தீவிரவாதம் என்றால் சாதாரண விஷயமல்ல. சூரத் காங்கிரஸில் நாற்காலிகள்  வீ  சி எறியப்பட்டன. செருப்புகளும் பறந்தன. ஆனால் இந்த அமர்க்களமெல்லாம் நடந்து கொண்டிருந்த போது பாரதியார் தூரத்தில் போய் ஸ்ரீ ஜி.எ. நடேசனுடன் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞராகையால் அப்படிச் செய்தார். கவிகள் சாதாரண மனிதர்களைப் போல் காரியங்களில் இறங்கி விட்டால் அவர்கள் கவிகளாயிருக்க முடியாது.

 

அந்தக் காலத்தில் பாரதியாரைப் போற்றும் விஷயத்தில் சாதியை யாரும் கவனிக்கவில்லை. உண்மையில் அவர் என்ன சாதி என்பது கூட அநேகருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. நானும் என் நண்பரு ஒருவரும் ஒரு சமயம் புதுச்சேரிக்குப் போய்ப் பாரதியாரைப் பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பாரதியார் என்ன சாதி என்ற கேள்வி எழுந்தது. பாரதியார் மேல் பூணூல் இல்லையாதலால் விவாதத்தை எங்களுக்குள் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே பாரதியாரையே கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கேட்டோம். அவர் பிராம்மண சாதி என்று அறிந்ததும், ‘பூணூல் எங்கே?’ என்று கேட்டோம். ‘அது எங்கே போயிற்றோ? யார் கண்டது?’ என்றார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், நமது நாட்டில் எப்போதுமே கவிகளைப் போற்றும் விஷயத்தில் சாதி குறுக்கிட்டது கிடையாது என்பதற்காகத் தான்.”

 

நூலில் உள்ள ஒன்பது கட்டுரைகளில் இரண்டு மட்டுமே பாரதியாரைப் பற்றியது என்றாலும் கூட அவை பாரதி இயல் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டுபவை என்பதால் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. (இதர ஏழு கட்டுரைகள் திரு.வி.க., தீரர் சத்தியமூர்த்தி, கம்பரும் நானும், தெய்வமானார், கிட்டப்பா ஞாபகம், வீ ழ்ந்த ஆலமரம், சாபம் நீக்கிய கவிஞர் ஆகிய தலைப்புகளில் உள்ளன.

 

நூலில் பாரதி விழாப் படங்களும் இடம் பெற்றுள்ளன.  நூலில் அந்தக் கால விலை நான்கு ரூபாய் எட்டணா!

******

 

Beautiful Quotations on Bharati (Post No. 2379)

bharati boat

Compiled by London swaminathan

Date: 11 December 2015

Post No. 2379

 

Time uploaded in London :– 5-19 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Subramanya Bharati- born on 11 December 1882

Died on 11 September 1921

 

Poet Bharati has fulfilled the true mission of a poet. He has created beauty not only through the medium of glowing and lovely words, but has kindled the souls of men and women by the million to a more passionate love of freedom, and a richer dedication to the service of the country. Poets like Bharati cannot be counted as the treasure of any province. He is entitled by his genius and his work, to rank among those who have transcended all limitation of race, language and continent and has become the universal possession of  mankind.

—Poetess Sarojini Naidu

XXX

barati stat3

Bharati is a true poet. He has the poet’s perception, the artist’s touch, the reformer’s zeal, the devotee’s faith, the scholar’s erudition, the patriot’s nationalism and the cosmopolitan’s internationalism he is a liberal rooted in the past, and a conservative who holds forward-looking thoughts. He is a rich blend of old and new. He expresses new themes in classic metres, and classic themes in newer modes. Some of his themes are bold and unconventional – so bold that some of his contemporaries gasped in wonder, or railed at his temerity.

–P N Appuswami

XXX

 

Bharati was truly great and he was easily the greatest of the modern Tamil poets. With him came the flood tide of renaissance, as a part of national upsurge for freedom. In his hand Tamil recovered its naturalness, clarity, vigour, vitality and flexibility.

–Bharathi Tamil Sangham, Calcutta

XXX

bharathi_ninaivukal_copy

Bharati was not only a poet who could rouse the patriotic feelings of his fellow- Tamils, but was also a literary artist of the highest order who could see the universal in the particular. So, although Bharati hails from Tamil Nadu, and occupies a front place in India’s regional literature, his impact will be felt wherever great literature is loved and read.

–V K R V Rao, Education Minister, 1970

XXX

 

Bharati has proved what every reader of poetry always knew, that if a poet is equal to his task, he can invest an old theme with a new significance and beauty by his poetic emotion and artistic skill. Kannan Paattu, his magnum opus, is a lyrical cycle of poems on Krishna. Its theme is traditional, one to which India has responded since time immemorial.

–Justice S K Mukherjea

XXX

bharati b & w

Bharati was only thirty nine when he died. But he had adorned tami with such a unique body of exquisite lyrics and pieces of prose, vivid and many toned, that will be a perpetual national possession.

—-Bharathi Tamil Sangham, Calcutta

XXX

 

Subrahmanya Bharati was a man on whose tongue the Goddess Saraswati can honestly be believed to have danced the dance of patriotism. If he had been born in any free country, why in any country of the world except the India, the man would have been made the Poet Laureate of the country, would have been given honours and titles by a government which knows how to respond to the feelings of the people, and would have lived and died among the most honoured of the nation.

—S Satyamurthi in Madras Legislative Council, 1928

XXX

bharati-stamp

Subramanya Bharati’s poetry falls broadly into three divisions. The first which is most well-known, consists of his soul stirring national songs. The second which is not so well-known to the general public, but which is familiar to students of Tamil, contains his two master pieces of Panajali Sabatham and Kuyil Pattu. In between there is a third division, which comprises of his religious and philosophic poems and songs. Though these form nearly half of his total output, they are not as well know as they should be.

–A V Subramaniya Aiyar

XXX

 

Bharati is the poet of the common man. The language of the common man became in his works the language of the poetry. Till then the language of the common man was not the respectable language of high class literature.

–Prof T P Meenakshisundaran, Vice chancellor of Madurai University

XXX

bharati drawing

Bharati has introduced in accordance with the spirit of the times, a new theme of poetry. The songs of patriotism or national songs are new to Tamil literature in the way they have been elaborated by Bharati and others. There may have been poems expressing loyalty to the king as representing the nation, culture or religion. But in the national songs of Bharati the loyalty is to the nation, to the people.

–Prof T P Meenakshisundaran

XXX

 

Bharati is not only the national poet of tamil Nadu; he belongs also to the whole India. His verses should be published in all the Indian languages.

–Jawaharlal Nehru, Prime Minister of India till 1964

 

XXX

 

Rooted in tradition, Bharati used the old, simple forms of classical art to new purposes and new effects.

–P N Appuswami

XXX

 

bharati malar

Bharati is probably one of the best poets of modern period in our country and definitely the greatest of Tamil poets of our time and the Tamils can be legitimately proud of this greatest bard who has given not only a new direction and dimension but a new shape and new thrust to Tamil poetry as well. It is in his magic hand tamil poetry regained its vigour and vitality, clarity and naturalness.

Dr S Agesthialingom, Vice Chancellor, Tamil University, Thanjavur, 1989

XXX

 

Bharati’s vastitudes can be known only when the poems of great one, in Tamil, are translated in to the languages of the world.

–Bharatidasan

 

XXX

IMG_1652 (2)

The craftsmanship of Bharati, as revealed by his juvenilia, s pretty conventional and is rather dull. However, as years roll by, his irresistible genius starts asserting itself with a wondrous splendour that is truly multi- dimensional. The myriad minder bard’s apperception is achieved with a thousand tentacles of awareness and his utterances – afire with burning desire- shoot out like piercing pins of light. His words and vocables energised by a novel poetic fervour, march out, suaviter in modo, fortiter in re, and make universal conquest.

–Sekkizar Adippodi Dr T N Ramachandran

(suaviter in modo, fortiter in re= gently in manner, strongly in deed)

 

XXX

Bharati completed one more work which carries the hall mark of a born poet, using common, almost thread-bare, unconsidered material. The Kuyil is pure fantasy but with its foundations in firm-set earth. He is the Morning Star of modern literature since he was the first to discredit the vogue of poetic diction and dealt with thems close to the life of today.

–P.Mahadevan

–subham—

 

 

 

 

 

ஆரிய பாரதி வாழ்க!

mahakavi

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1279; தேதி: 10 செப்டம்பர் 2014

தமிழுக்கு உயிர் கொடுத்த, தமிழால் உயிர்பெற்ற பாரதியின் நினைவு தினம் செப்டம்பர் 11. அந்தக் கவிஞன் பெயரைச் சொன்னாலேயே போதும். நம் நாவில் தமிழ் பொங்கித் ததும்பும். உடல் முழுதும் சக்தி பாயும்.

சீரிய சிந்தனை!
நேரிய பார்வை!
வீரிய உணர்வு!
பாரிய நோக்கு!
கூரிய மதி படைத்த பாரதியின்
ஆரியப் பாடல்களைக் காண்போமா?

ஆரிய என்றால் ‘பண்பாடுமிக்கவர்’ என்று பொருள். இது பிராக்ருதத்தில் ‘அஜ்ஜ’ என்று மருவி தமிழில் ‘ஐயர்’ என்று புழங்கியது. ஐயர் என்றால் குணத்தால், ஒழுக்கத்தால் உயர்ந்தவர் என்பது ‘பழம் பொருள்’.

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி 1921 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார். அப்பொழுதுதான் சிந்து சமவெளி நாகரீக அகழ்வாராய்ச்சி துவங்கியது. உலகிற்கு ஹரப்பா நாகரீகம் என்று ஒன்று இருப்பதே அப்போது தெரியாது. ஆனால் ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளைக்காரர்கள் புகுத்திவிட்டனர். சுவாமி விவேகாநந்தர் போன்றோர் இந்தக் கொள்கையை எள்ளி நகை ஆடியதே இதற்குச் சான்று.

பாரதிக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதை அவர் பாடல்கள் மூலம் காட்டிவிட்டார். இக்கொள்கையைப் பற்றிப் பாடாமல், பரிகசிக்காமல் நாசசூக்காக — வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல — ஆரிய என்ற சொல்லை ஏராளமான பாடல்களில் பயன்படுத்தி அதன் உண்மைப் பொருளைக் காட்டிவிட்டார். அவர் பாடல்களில் எங்கு எங்கெல்லாம் ஆரிய என்ற சொல் வருகிறதோ அதுதான் வேதத்திலும், இதிஹாசத்திலும் கையாளப்பட்ட பொருள். வடமொழி நூல்களில் கணவனை, மனைவி “ஏ ஆர்ய!” என்று அழைப்பார். “ஐயா, மதிப்புக்குரியவரே, உயர் குணச் செம்மலே” என்பது அதன் பொருள். இன வெறிப் பொருளைப் புகுத்தியது வெள்ளைத்தோல் “அறிஞர்”களே.

mahakavi2

இதோ சில பாரதி பாடல்கள்:
1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

ஆரிய நாடு எது?
3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி

ஆரியர் யார்?

4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்

6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

maha3

பாரத மாதா= ஆரிய மாதா
7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்

சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

bharathy and Chelamma

9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்

ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

bharati kutty

10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார். ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கைக்கு பாரதி கொடுத்த சரியான அடி இது என்றால் எதிர்ப்பொரும் உளரோ?

மேன்மை கொள் ஆரிய நீதி விளங்குக உலகமெலாம்!!

kutti bharathi

என்னுடைய முந்தைய பாரதி பற்றிய கட்டுரைகள்:
1.மனம் ஒரு பெண், மனம் ஒரு புலி (Posted on 17-2-2014)
2.Quotes from the Greatest Tamil Poet Bharati (11-12-2013)
3.வாழ்க்கையில் வெற்றி பெற பாரதி அட்வைஸ் 10-12-2013
4.பாரதியுடன் 60 வினாடி பேட்டி (16-1-2012 & 10-9-2014)
5.பாரதியின் பேராசை (Posted on 27-12-2012)
6.பாரதி பாட்டில் பகவத் கீதை (Posted on 10-12-2012)
7.பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (Posted on 29-11- 2012)
8.சொல்லில் உயர்வு தமிச் சொல்லே (Posted on 10-9-2012)
9.பாரதி பாட்டில் பழமொழிகள் (Posted on 25-6-2012)
10.உங்களுக்கு வள்ளுவனையும் பாரதியையும் தெரியுமா? (27-3-2014)
11.காலா என் காலருகே வாடா! ஞானிகளின் ஞானத் திமிர் (23-3-2014)

எனது சகோதரர் ச.நாகராஜன் எழுதியவை
1.பாரதி தரிசனம் (Posted on 10-12-2013)
2.பாரதி தரிசனம்– பகுதி 2 ( Posted on 12-12-2013)

பாரதியுடன் 60 வினாடி பேட்டி

12TH_Bharati_GJ_12_1295977e

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
Post No.1278; Dated 10th September 2014.
September 11 is Bharati Memorial Day.
(( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ))

கேள்விகள் – கற்பனை, பதில்கள் – உண்மை!

* வணக்கம் பாரதியாரே, உமது தொழில்?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்

* உமது ஜாதி?

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(அடடா, என்ன பரந்த மனப்பான்மை!)

* உமக்குப் பிடித்த நூல்?

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே

bharati kutty

* உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை

(உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை!)

* நீர் ஒரு தீர்க்கதரிசி. நாடு விடுதலை பெறும் முன்னரே நீர் சுதந்திரப் பள்ளு பாடினீர். இனி நடக்கப் போவதை உம்மால் சொல்ல முடியுமா?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

(பலே.. பலே!)

* மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டும் என்று தேவியிடம் வேண்டினீர், கிடைத்தது. எங்களுக்கும் அந்த தந்திரத்தைக் கற்றுத்தரக் கூடாதா?

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

(அட, இதுதான் ரகசியமா?)

bharati new, fb

* சரி, நாளைக்கு உமக்கு பிரதமர் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்?

இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்

(அப்பாடா, இன்னும் உம் பேச்சில் புரட்சிக் கனல் பறக்கிறதே!)

* இந்தியா வல்லரசு நாடாகுமா?

எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

(கேட்கவே இனிக்கிறதே! உம் வாயில் ஒரு மூட்டை சர்க்கரை போட வேண்டும்!!)

* இன்றைய இளைஞருக்கு உமது அறிவுரை?

உடலினை உறுதி செய்,
பணத்தினைப் பெருக்கு,
வையத் தலைமை கொள்

(அம்மாடி, ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும்!)

bharati family

* கற்காமல் அறியக்கூடிய கலை ஏதேனும் உண்டா?

சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை.

(அருமை, அருமை!)

* நீர் இறைவனிடம் வேண்டுவது என்னவோ?

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்

* சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
நமக்கு ஒரு தீங்கு வரலாகாது பாப்பா

bharati

* இந்தியருக்கு நீவீர் கூற விரும்புவது?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

* உமது கவிதை பற்றி உமது மதிப்பீடு?

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை

அதுவே எங்கள் மதிப்பீடும்.

bharathy statue

* அனுமனுக்கு மயிர்க்கால் தோறும் ராம நாமம் ஒலிக்குமாம், உமக்கு?

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(அடடா, கேட்கவே மயிர்க் கூச்சிடுகிறதே!)

* கடைசியாக ஒரு கேள்வி. இப்போது எல்லா சாமியார்களும் காயத்ரி மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். இதை நீர் முன்னமே தமிழில் சொன்னதாக எனக்கு நினைவு?

செங் கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

நன்றி! உமது தேமதுரத் தமிழோசை என்றும் எங்கள் காதில் ஒலிக்கும்.

kutti bharathi

I have done 25 more 60 second Interviews in Tamil and English with all the famous people including Socrates, Vivekananda, Buddha, Sathya Sai baba, Kamban, Ilango, Appar, Sundarar, Samabandar, Manikavasagar, Andal, Pattinathar, Thayumanar, Tirumular, Tiruvalluvar and Lord Krishna.
Contact swami_48@yahoo.com

Pictures are taken from various websites;thanks.