“அன்புள்ள மாணவர்களே!”- விவேகாநந்தர் வேண்டுகோள்

vivek stamp

Compiled by London Swaminathan
Post No.1346; Dated 14th October 2014.

சுவாமி விவேகாநந்தர் 1891 ஆம் ஆண்டில் ரஜபுதனத்தில் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி:

“அன்புள்ள மானவர்களே!

“சம்ஸ்கிருத மொழியைப் படியுங்கள். அத்தோடு மேலை நாட்டு விஞ்ஞான பாடங்களையும் படியுங்கள். எதையும் துல்லியமாகக் கணக்கிடக் கற்றுக் கொள்ளுங்கள். நன்றாகப் படித்துப் பாடுபடுங்கள். அப்போதுதான் இந்திய வரலாற்றை அறிவியல் பூர்வ அடிப்படையில் அமைத்துக் கொடுக்கும் காலம் வரும். இப்போது இந்திய வரலாறு உருச் சிதைந்து போய் கிடக்கிறது.

“ஆங்கிலேயர்கள் எழுதிய இந்திய வரலாறுகள் நம் மனதில் பலவீனத்தை உண்டாக்கும், ஏனெனில் நாம் அடைந்த தோல்விகளைப் பற்றி மட்டுமே அவர்கள் எழுதுகிறார்கள்.
“வெளிநாட்டுக்காரர்கள் எப்படி நம் வரலாற்றை எழுதமுடியும்? அவர்களுக்கு நம்முடைய பழக்க வழக்கங்களோ சமய தத்துவ விஷயங்களோ தெரியாதபோது பாரபட்சமற்ற, நியாயமான வரலாற்றை எழுதமுடியுமா?

malaysian-postal-stamp-on-swami-vivekananda

“நாமே நமக்கு சுதந்திரமான ஒரு வழியை வகுத்துக்கொண்டு வரலாற்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். புராண, இதிஹாசங்களைப் படித்து அவற்றின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான, துல்லியமான வரலாற்றை எழுத வேண்டும். இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு சாதனமாகக் கொள்ளுங்கள். நீங்கள் எழுதுவது இந்தியாவின் மீது பாசமும் பரிவும் உள்ளதாகவும் ஆன்மநேயத்தைத் தட்டி எழுப்புவதாகவும் இருக்கட்டும்.

“இந்தியர்கள்தான் இந்திய வரலாற்றை எழுத வேண்டும்.

“மறைந்து கிடக்கும் அரிய பெரிய பொக்கிஷங்களை அழிவிலிருந்து மீட்டுத் தருவது உங்களின் தலையாய பணியாகட்டும். ஒரு குழந்தை காணாமல் போய்விட்டால் அதைக் கண்டுபிடிக்கும் வரை (ஒரு தாய்) அமைதியாக இருப்பார்களா? அதேபோல மக்களின் உள்ளத்தில் இந்தியாவின் மகத்தான பழம்பெருமையை நிலைநாட்டும் வரை உங்கள் பணியை நிறுத்த முடியுமா? அதுதான் நீங்கள் கற்கும் உண்மையான தேசிய கல்வி — அதை அடையும்போது தேசிய உணர்ச்சி விழித்தெழுவதைக் காண்பீர்கள்.

இந்தியாவின் உண்மை வரலாற்றைக் கண்டெடுக்கும் நாளில் இந்தியா உலகிற்கு ஆன்மீக விஷயத்தில் மட்டும் அல்ல, அறிவியலிலும் நுண்கலைகளிலும் இந்த உலகிற்கே குரு என்று பறைசாற்றப்படும்.

vivekananda stamps

ஆதார நூல்கள்:
From Life of Swami Vivekananda (Mayavati Edition, 1961;pages 213,214 Instructions given to a group of University students of Rajaputana in 1891)
Also Complete Works of Swami Vivekananda –Vol.5, page 534(Mayavati Edition, 1961).

Leave a comment

Leave a comment