HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 (Post No.15,646)

Written by London Swaminathan

Post No. 15,646

Date uploaded in London –23 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

English version was posted yesterday.

****

லாஸ்யம்

பெண்கள் ஆடும் நடனம் லாஸ்யம் ;ஆண்மைக்குரிய ஆடலாகத் தாண்டவமும், பெண்மைக்குரியனவாக நளின நடனமாகிய லாஸ்யமும்  கூறப்படும். ஒரு போட்டியில் தாண்டவங்களைச் சிவபெருமான் ஆடிக் காட்டினார்; லாஸ்யத்தை உமா தேவியார் ஆடினார்  அந்தப்  போட்டியில் தேவியார் தோற்றுப்போனார் என்றும் கூறுவர்; ஏனெனில் பெண்கள் கால்களை உயர்த்தி தூக்கி ஆடக்கூடாது என்பது நடைமுறை.

***

லவங்கம்

CLOVE கிராம்பு (லவங்கம் Syzygium aromaticum). பூஜையில் பயன்படுத்தப்படும் வாசனைப்பொருள். சமஸ்கிருதத்தில் லவங் என்று அழைக்கப்படுகிறது,  ஆயுர்வேத மூலிகை ஆகும். காரமான சுவையும் வாசனையும் உள்ளது சமையலில் மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளில் பிரபலமாக உள்ளது. பல் வலி மருந்தாகவும் ஜீரண சக்தியை ஊக்குவிக்கும் மூலிகையாகவும் பயன்படும் இது ஒரு தாவரத்தின் மலர் மொட்டு ஆகும்.

***

லலித விஸ்தார

புத்தரின் வாழ்க்கை வரலாற்றினை  விளக்கும் சம்ஸ்க்ருத நூல் ; இதில் அக்கால  பண்பாட்டு விஷயங்கள் இருப்பதால் அடிக்கடி மேற்கோள்களில் பயன்படுகிறது

***

லக்ஷணம்

லக்ஷணம் (இலக்கணம்/லட்சணம்) என்பது பொதுவாக அழகு, தன்மை, அடையாளம் அல்லது ஒரு பொருளின் சிறப்பியல்பு ஆகியவற்றைக் குறிக்கும். சாமுத்ரிகா லக்ஷணம் போன்ற நூல்களில் இது அங்க அழகு என்றும், ஆன்மீகத்தில் பக்தி அல்லது ஒருவரின் குணநலன்களைக் குறிக்கப் பயன்படுகிறது. சில சூழல்களில், இது சாசனப்பத்திரம் (Deed) என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

***

லக்ஷியம்

ஒருவருடைய குறிக்கோள் லக்ஷியம் எனப்படும்; ஒருவர் தான் அடைய வேண்டியதை தனது லக்ஷியம் ஆக வைத்துக்கொள்வார் . கீழே காஞ்சி சுவாமிகளின் உரையில் இந்தச் சொல் வருகிறது: “புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தைக் காட்டுகிறார்கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம்”.

***

லெமூரியா

இது ஒரு கற்பனைக் கண்டம் . இந்தச் சொல்லை முதலில் ஒரு ஆங்கிலேயர் (English zoologist Philip L. Sclater (1829-1913) உருவாக்கி அதை கிரேக்கர்கள் சொல்லும் இன்னொரு மறைந்த அட்லாண்டிஸ் கண்டத்துடன் சேர்த்து புஸ்தகம் எழுதினார்.

இந்தச் சொல் இப்பொழுது மடகாஸ்கர் என்னும் பிரம்மாண்டமான தீவு நாட்டில் (இப்போதைய பெயர் மலகாசி) காணப்படும் லெமூர் LEMUR என்னும் பிராணிகளிடத்திலிருந்து அவராக கற்பனையில் உருவாக்கிய சொல்; அவர் சொன்னதில் தவறு ஏதும் இல்லை; இதே பிராணிகளின் பழைய பாசில் FOSSIL சுவடுகள் இந்தியாவிலும் கிடைப்பதால் கோடிக்கணக்கான   ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவும்  இந்தியாவும் இணைந்த நிலப்பரப்பு ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பது அவருடைய வாதம் ; அப்போது மனித இனமோ நாகரீகமோ தோன்றவில்லை!

இதே போல குமரிக்கண்டம் என்பதும் உண்மையே ; இரண்டு பெரிய சுனாமி தாக்குதல்களில் கன்னியாகுமரிக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு கடலில் சென்றது; இதற்கும் லெமூரியாயாவுக்கும் தொடர்பு இல்லை. நமது காலத்திலேயே சுனாமி வந்து தனுஷ்கோடி முதலிய இடங்கள் கடலுக்குள் மூழ்கியதையும்  குஜராத்தில் கிருஷ்ணரின் துவாரகை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் மூழ்கியதையும்  எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால்  இவை எல்லாம் சிறு நிலப்பரப்பே . பெரிய கண்டமல்ல ; மேலும் சோழர் கல்வெட்டில் வரும் இலமூரி தேசமும் சுமத்ரா தீவில் உள்ள இடம் என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. நேஷனல் ஜியாக்ரபிக் மேகஸின் வெளியிட்ட இந்துமஹாசமுத்திரப்   படம்,  கடலில் மூழ்கிய மலைகளுடன் என்னிடம் உள்ளது; அதிலும் பெரிய நிலப்பரப்பு மூழ்கியதற்கான் தடயங்கள் காணப்படவில்லை ; ஆக நாகரீகமுள்ள லெமூரியா என்பது கற்பனையே .

கிரேக்க அறிஞர் பிளாட்டோ (Plato) எழுதிய நூலில் கடலில் மூழ்கிய அட்லாண்டிஸ் (Atlantis) பற்றி குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரம் முதலிய தமிழ் நூல்கள் குமரிக்கோடு பஃறுளி ஆறு முதலியன மூழ்கியது பற்றி குறிப்பிடுகின்றன .

SEE THE PICTURE

இந்தப் படம் பொருள்படைத்தது. ஏனெனில் மடகஸ்கார் (இப்பொழுது மலகாசி ) தீவில் நிறைய ஸம்ஸ்க்ருத பெயர்கள் இருப்பதை 1932 மைலாப்பூர் உரையில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சுட்டிக்காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பழங்குடி மொழிகள் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சொற்களை இனம் காண முடிகிறது. ஆக ஆஸ்திரேலியா, இந்தியா, மடகாஸ்கரை இணைக்கும் லெமுரியா கண்டத்தை குமரிக் கண்டம் என்று இனம் காணலாம். மலகாசி- இந்தோனேஷியா தொடர்பு மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் இப்படி நிலங்கள் இணைந்து இருந்தது மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது சமீப காலத்தில் அல்ல என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

Lemuria, name given by English zoologist Philip L. Sclater (1829-1913) to an ancient continent or land bridge, now sunk in the Indian Ocean, connecting Africa, Madagascar, India, and Southeast Asia, which he hypothesized to explain the geographical distribution of mammals around it, especially the lemur, hence the name (with -ia). The premise was considered scientifically untenable by 1880and the phenomena now are accounted for otherwise, but Lemuria in some ways by chance anticipated Gondwanaland (1896) in the continental drift model.

Earlier Lemuria was the name of the Roman feast of the Lemures, evil spirits of the dead in Roman mythology. The head of each household ritually exorcised them every 9th, 11th, and 13th of May.

***

லிங்கம்/ சிவலிங்கம்

‘லிங்கம்’ என்றால் குறி MARK என்று பொருள்; பால் GENDER என்ற பொருளிலும் இலக்கணத்தில் வரும். சம்ஸ்க்ருத வகுப்பில் அகாரந்தப் புல்லிங்க: ராம சப்த: இகாரந்த ஸ்த்ரீலிங்க: என்று சொல்வதிலிருந்து இது ஆணையோ பெண்ணையோ அலியையோ குறிக்கப் பயன்படும் என்பதை அறியலாம். இறைவனுக்கு உருவம் உண்டு/ இல்லை என்பதை சிவபெருமானின் அடி முடியைத் தேடுவதற்கு விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற கதை காட்டுகிறது ;12 லிங்கம் உள்ள ஸ்தலங்களை இந்துக்கள் ஜோதிர் லிங்க ஸ்தலங்கள் என்று வழிபடுகின்றனர்.

நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும்,  லிங்க வடிவிலுள்ள மலையை இமயத்திலுள்ள புனித கயிலாய மாகவும், காஷ்மீரில் அமர்நாத் என்னும் இடத்தில் ஒரு குகையில் ஆண்டுதோறும் உருவாகும் மிகப் பெரிய பனிக்கட்டி லிங்கத்தை ஜஸ் லிங்கமாகவும்  இந்துக்கள் வழிபடுகிறார்கள் .

இந்தியாவில் ,குறிப்பாக தமிழ் நாட்டில், பல கோவில்களில் இருக்கும் லிங்கங்களை சுவயம்பு லிங்கங்கள் என்று ஸ்தல புராணங்கள் கூறுகின்றன. இதன் பொருள், இந்த லிங்கங்கள் மனிதனால் செய்யப்பட்டவை அல்ல. தானாக பூமியிலிருந்து உருவானவை என்பதாகும்;.சில இடங்களில் இயற்கையாகவே லிங்க வடிவத்தில் மலையோ பாறைகளோ அமைவதுண்டு. பூமிக்கடியில் ஏற்படும் அதிர்வலைகளால் இப்படி நடக்கிறதென்று ஜியாலஜிகல் மேகசினில் GEOLOGICAL MAGAZINE  கட்டுரை வெளியாகியுள்ளது.

சிந்து சமவெளியில் மொஹஞ்சசத்தாரோஹரப்பாவில் கிடைத்தவை லிங்கங்கள் அல்ல; தாயக் கட்டத்தில் வைத்தாடும் காய்கள் அல்லது எடைக் கற்கள் என்று அண்மைக்கால ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

காஞ்சி மஹா பெரியவர் (ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் 1894-1994) லிங்க வழிபாடு மற்றும் சிவலிங்கத்தின் தத்துவம் குறித்துப் பேசியுள்ளார்  .

அருவுருவ நிலை: சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் லிங்கம் ஆகும். இது உருவமும் (ரூபம்) அல்ல, உருவமற்றதும் (அரூபம்) அல்ல. உருவமும் அருவமுமாக இணைந்த அருவுருவம் என்று காஞ்சி சுவாமிகள் லிங்க வடிவத்தை விளக்குகிறார்.

பஞ்ச பூத லிங்கங்கள் என்பன ஐந்து கோயில்களில் உள்ளன ;காஞ்சி சங்கர மடத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சந்திரமௌலீஸ்வரர் (ஸ்படிக லிங்கம்) உள்ளது . லிங்கம் என்பது பரம்பொருளை மனதளவில் உணர்வதற்கான மிக உயர்ந்த குறியீடு .

வேதங்களிலோ சங்க இலக்கியத்திலோ காளிதாசன் மாணிக்கவாசகரின் படைப்புகளிலோ லிங்கம் என்ற சொல்லினைக் காண முடியாது; மிகவும் பிற்கால தமிழ் பக்தி இலக்கியங்களிலும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களிலும் மட்டுமே லிங்கம் என்ற சொல் வருகிறது; ஆனால் அதற்கு முன்னர் வழிபாடு இருந்ததற்குத் தொல்பொருட் துறைச் சான்றுகள் உள்ளன . 

Tallest Lingam in Kerala.

***

லீலாவதி

லீலாவதி ( Līlāvatī )  இரண்டாம் பாஸ்கர‍ரால் சமஸ்கிருத‍த்தில் கி.பி. 1150 இல் எழுதப்பட்ட கணித நூலான சித்தாந்த சிரோன்மணி என்ற நூலின் முதல் பகுதி ஆகும்.இந்தப்  பகுதியின் பெயர் பாஸ்கர‍ரின் மகளான லீலாவதியின் பெயரால் அழைக்கப்படுகிறது.  பீ ஜ கணிதம், கிரஹ கணிதம், கோளத்யாயம் என்ற தலைப்புகளில் இந்துக்களின் கணித அறிவு விளக்கப்பட்டுள்ளது ; மேலை நாட்டினாருக்கும் முன்னதாகவே ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா ஆகி யவற்றினை சுவைபட விளக்கும் சம்ஸ்க்ருத நூல் 

Srirangam Temple Tower.

To be continued……………..

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 55; இந்து மத கலைச்சொல் அகராதி-55 ,லீலாவதி,லிங்கம், சிவலிங்கம், லெமூரியா, லாஸ்யம்

மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது (Post.15,632)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,632

Date uploaded in London – 19  April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (53) மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

‘மால்யவான் முதலியவர்களுடைய உற்பத்தி ‘ என்ற உத்தரகாண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கத்தில் மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்த செய்தியைக் காண்கிறோம்.

விசுவாவஸு என்ற ராக்ஷஸனின் இரண்டாவது புதல்வியான தேவவதீ என்பவளை ஸுகேசன் என்ற ராக்ஷஸன் மணந்தான்.

அந்த தம்பதியர்க்கு மால்யவந்தன், சுமாலி, மாலி ஆகிய குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் திரேதாக்கினிகளான கார்ஹபத்தியம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி போல தேஜோவான்களாக மிளிர்ந்தார்கள். 

தங்கள் தந்தை பரமேஸ்வரரை தியானித்து புரிந்த தவத்தால் வரபாக்கியம் பெற்றதை அறிந்த அவர்கள், அவரைப் போலவே தாங்களும் தவம் செய்ய மன உறுதி கொண்டு மேருமலைக்கு வந்தனர். கடுமையான தவத்தைப் புரிந்தனர்.

இதனால் பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றி, “வரமளிக்கிறவனாகத் தோன்றி இருக்கின்றேன்” என்று கூறினார்.

பிரம்மாவிடம் சுகேசனது புதல்வர்களான மால்யவான், சுமாலி, மாலி ஆகியோர் தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்க பிரம்மா அதைத் தந்தருளினார்.

அதை விளக்கும் ஸ்லோகங்கள் இவை:

ப்ரஹ்மாணம் வரதம் ஞாத்வா சேந்த்ரைர்தேவகணைர்வ்ருதம்|             ஊசு: ப்ராஞ்ஜல்ய: சர்வே வேபமானா இவ த்ருமா: ||

தபஸாராதிதோ தேவ யதி நோ திஷஸே வரம் |                    அஞேயா: ஷத்ரு ஹந்தாரஸ்ததைவ சிரஜீவின: ||

ப்ரபவிஷ்ணவோ பவாமேதி பரஸ்பரமனுவ்ரதா: ||

ஏவம் பவிஷ்யதீத்யுக்த்வா சுகேசதனயான்விபு: |                           ஸ யயௌ ப்ரஹ்மலோகாய ப்ரஹ்மா ப்ராஹ்மணவத்ஸல: ||

உத்தரகாண்டம் , ஐந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 12,13,14

சேந்த்ரைர்: – இந்திரன் உட்பட்ட                                        தேவ கணௌ – தேவ கணங்களோடு                                    தபஸா – தவத்தால்                                                 ஆராதித: – திருப்தி அடைந்தவராய்                                        ந: – எங்களுக்கு                                                        வரம் – வரத்தை                                                            திஷஸே – அளிக்கப்போகிறீர்                                               யதி – என்றால்                                                        அஞேயா – எவராலும் வெல்வதற்கு அரியவர்களாகவும்                      ததா – அப்படியே                                               சத்ருஹந்தார: – எதிரிகளை வெல்ல வல்லவர்களாகவும்                  பரஸ்பரம் – ஒருவருக்கொருவர்                                       அநுவ்ரதா: – அன்பு மாறாதவர்களாகவும்                                    ப்ரபவிக்ரம: – மிகுந்த பராக்ரமம் உடையவர்களாகவும்                சிரஞ்சீவின: ஏவ – சிரஞ்சீவிகளாகவும்                                        பவாம: – விளங்கவேண்டும்                                              இதி – என்று                                                                  ஊசு: – வேண்டிக் கொண்டார்கள்                                        ப்ராஹ்மண வத்ஸல: – பிரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவர்களிடத்தில் வாத்ஸல்யம் உடையவரும்                                             விபு: – சாசுவதருமான                                                    ச: – அந்த                                                             ப்ரஹ்மா  – பிரம்மா                                                 சுகேசதன்யாத் – சுகேசனது புதல்வர்களுக்கு                            ஏவம் பவிஷ்யாமி – அப்படியே ஆகட்டும்                                 இதி – என்று பதில் கூறி                                                        ப்ரஹ்மலோகாய – பிரம்மலோகத்திற்கு                               யயௌ – சென்று சேர்ந்தார்

இப்படி பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றவர்கள் பயமே இல்லாமல் தேவர்களையும் அசுரர்களையும் மிகுந்த உபத்திரவத்திற்குள்ளாக்கினர்.

பிரம்மாவிடமிருந்து கேட்டுப் பெற்ற வரமாக இந்த நிகழ்வு வால்மீகியால் சித்தரிக்கப்படுகிறது.

இந்த வரலாற்றை அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.

**

உலகு இன்பக் கேணி என வேதம் சொல்கிறதா ? பாரதியார் கூற்றுக்கு ஆதாரம் எங்கே ? (Post.15,622)

Written by London Swaminathan

Post No. 15,622

Date uploaded in London –15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Mantras are taken from wisdomlib.org; Thanks.

ரிக் வேதம் போலவே பாரதி பாடல்கள் முழுதும் ஆக்கபூர்வ எண்ணங்களையும், சிந்தனையையும் தூண்டும் வரிகளையும், சொற்களையும் அடைமொழிகளையும் காணலாம் . அவரே வேதம் பற்றி அக்னி என்ற நூலையும் எழுதியுள்ளார். ‘வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசேவேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ என்றும் பாடுகிறார்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக் கேணி என்றே—மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை” —தேசிய கவி சுப்ரமண்ய பாரதி.

இதில் கடவுள் ஒருவரே என்பதை ஏராளமான பேர் ரிக் வேத மந்திரத்தை மேற்கோள் காட்டி எழுதிவிட்டனர் ;

“ஏகம் சத் விப்ராஹா பஹுதா வதந்தி” (Ekam Sat Vipra Bahudha Vadanti) என்பது ரிக் வேதத்தின் மிகப்பிரபலமான மந்திரமாகும். இதன் பொருள், “உண்மை (இறைவன்) ஒன்றே, ஆனால் அறிஞர்கள் (ஞானிகள்) அதை பல பெயர்களில் அழைக்கிறார்கள்”  ரிக் வேதம் (1.164.46 ) .

வேதங்கள் சொன்னபடிக்கு  மனிதரை

மேன்மையுறச் செய்தல் வேண்டும்’

நூறு வயது புகழுடன் வாழ்ந்து உயர்

நோக்கங்கள் பெற்றிட வேண்டும்’

என்ற பாரதியார் வரிகளுக்கும் வேதங்களில் பல ஆதாரங்கள் கிடைக்கின்றன.

ஆனால் உலகு இன்பக் கேணி என்றும் வேதம் சொல்வதாக பாரதியார் பாடியதற்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி எழுகிறது ; அதர்வண வேத பூமி சூக்தம், யஜுர் வேத சாந்தி மந்திரம் போன்றவற்றில் பூமியை, இயற்கையை, நற்குணங்களை எல்லாம் போற்றிப் பாடினாலும் உலகு இன்பக் கேணி என்ற வரிகளைக் காணமுடியவில்லை! கீழ்கண்ட வேத மந்திரங்கள் பாரதியாரின் கூற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.

வேத கால இலக்கியம் என்பது நான்கு பகுதிகளைக்கொண்டது ; அவையாவன :

1.சம்ஹிதை – மந்திரங்கள் உடைய பகுதி ;

2.பிராமணங்கள் – மந்திரங்களை விலாக்கும் பகுதிகள் ; அவற்றின் பிரயோகமும் உண்டு;

3.ஆரண்யகங்கள் –  கானக வாழ்க்கையில் எழும் தத்துவ சிந்தனைகள் உள்ள பகுதி;

4.உபநிஷத்துக்கள் – முழுக்க முழுக்க தத்துவம், வேதாந்தம் உள்ள பகுதி ; வேத + அந்தம் = வேதாந்தம் என்றாலேயே, இவைதான் வேதங்களின் துணிபு , கண்டுபிடிப்பு என்ற பொருள் தரும் .

நாம் காணப்போகும் பகுதிகள் வேதத்திலிருந்தும் மற்றும் பிராமணங்கள் என்னும் நூல்களிலிருந்தும் வருகின்றன ; வேத சம்ஹிதை செய்யுள் வடிவில் உள்ளன ; பிராமணங்கள் பெரும்பாலும் உரை நடை வடிவில் உள்ளன ; செய்யுளுக்கு அடுத்த காலத்தில்தான் உரை நடை வரும் என்பதை உலக இலக்கியங்களின் வரலாறு காட்டுகிறது ஆகையால் பிராமணங்களை 1000 BCE  என்று மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் முத்திரை குத்துகிறார்கள் . இதோ சில மேற்கோள்கள் :

நாங்கள் ஆனந்தமாக , மகிழ்ச்சி தரும் மந்திரங்களோடு எல்லோரிடத்திலும் அன்பாக இருப்பவனும் தூய்மைப்படுத்தும் ஒளியோடு வேள்வியில் இருப்பவனுமான அக்கினியைப் போற்றுகி ன்றோம் – ரிக் வேதம்  8-43-31

இதைப் பாடிய ரிஷியின் பெயர் விரூப ஆங்கிரசன் ;

We venerate with cheerful hearts the cheerful Agni , dear to all,

Burning with purifying flame RV 8-43-31

अ॒ग्निं म॒न्द्रं पु॑रुप्रि॒यं शी॒रं पा॑व॒कशो॑चिषम् । हृ॒द्भिर्म॒न्द्रेभि॑रीमहे ॥

अग्निं मन्द्रं पुरुप्रियं शीरं पावकशोचिषम् । हृद्भिर्मन्द्रेभिरीमहे ॥

agnim mandram purupriyaṃ śīram pāvakaśociṣam | hṛdbhir mandrebhir īmahe ||

இந்த மந்திரம் ஐதரேய பிராமண நூலிலும் அரணிக்கட்டைகளைக் கடைந்து தீயை உருவாக்கும்போது சொல்லப்படுவதை வேத உரைகாரர் சாயனர் சுட்டிக்காட்டுகிறார்.

****

மரணத்துக்குப் பின்னர் ஒருவர் மேலுலகம்  செல்வதும்  அங்கே சொர்க்கத்தில் எப்போதும் ஒளிவீசும் என்றும் எதுவும் வாடாது, அழியாது என்றும் , அந்த இடத்தில் ஆனந்தம் தவிர வேறு எதுவும் இல்லை என்பதும் ரிக்வேதத்திலேயே உள்ளது; இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளது!

ரிக் வேதத்தில் வரும் இந்த காஸ்யப மாரீசன் ரிஷி பாடிய மந்திரம், 

ஓ பவமான சோமனே

எந்த இடத்தில் சொர்க்கத்தின் ஒளி நிலைநிறுத்தப்பட்டுள்ளதோ, எந்த இடத்தில் எப்போதும் ஒளிமயமுள்ளதோ அந்த மரணமற்ற, அழியாத  உலகத்தில் என்னை நிறுத்து ; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக.

விவஸ்வானுடைய மகன்  அரசனாக இருக்கும் இடத்தில் என்னை அழியாதவன் ஆக்குக;

சொர்க்கத்தின் மர்மமான கோயில் எங்குள்ளதோ,

 புதிய நிர்மலமான நதிகள் துள்ளிக்குதித்து ஓடுகின்றனவோ அங்கே என்னை நிறுத்து; ஓ இந்துவே, நீ இந்திரனுக்காக பெருகுவாயாக”

–RV 9-113-7/8

7. O Pavarnana, place me in that deathless, undecaying world

     Wherein the light of heaven is set, and everlasting lustre shines. Flow, Indu, flow for Indra’s sake.

8. Make me immortal in that realm where dwells the King, Vivasvan’s Son,

     Where is the secret shrine of heaven, where are those waters young and fresh. Flow, Indu, flow for Indra’s sake.

RV 9-113-7/8

यत्र॒ ज्योति॒रज॑स्रं॒ यस्मिँ॑ल्लो॒के स्व॑र्हि॒तम् । तस्मि॒न्मां धे॑हि पवमाना॒मृते॑ लो॒के अक्षि॑त॒ इन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र ज्योतिरजस्रं यस्मिँल्लोके स्वर्हितम् । तस्मिन्मां धेहि पवमानामृते लोके अक्षित इन्द्रायेन्दो परि स्रव ॥
yatra jyotir ajasraṃ yasmim̐l loke svar hitam | tasmin māṃ dhehi pavamānāmṛte loke akṣita indrāyendo pari srava ||

यत्र॒ राजा॑ वैवस्व॒तो यत्रा॑व॒रोध॑नं दि॒वः । यत्रा॒मूर्य॒ह्वती॒राप॒स्तत्र॒ माम॒मृतं॑ कृ॒धीन्द्रा॑येन्दो॒ परि॑ स्रव ॥
यत्र राजा वैवस्वतो यत्रावरोधनं दिवः । यत्रामूर्यह्वतीरापस्तत्र माममृतं कृधीन्द्रायेन्दो परि स्रव ॥
yatra rājā vaivasvato yatrāvarodhanaṃ divaḥ | yatrāmūr yahvatīr āpas tatra mām amṛtaṃ kṛdhīndrāyendo pari srava || 9-113- 7 and 8.

**

இந்திரன் என்றால் அரசன், தலைவன் என்று பொருள் ; இது ஒரே தேவனுடைய  பெயர் அல்ல என்பதைக் காஞ்சி பரமாசார்யார் (1894–1994) தெளிவு படுத்தியுள்ளார் ; வெள்ளைக்காரர்களோ வெனில் இது இயற்கைக் சக்திகள் என்றும் அல்லது ஒரே நபரின் பெயர் என்றும் பிதற்றியுள்ளனர்

ரிக் வேதத்தில் இந்திரன் ஏறத்தாழ முப்பது அசுரர்களைக் கொன்றதாக வருகிறது; அதாவது தீமையை அல்லது தீயவர்களை அழிப்பவன் . பகவத் கீதையின் பரித்ராணாய ஸ்லோகத்திலும் இதே கருத்து காணக்கிடக்கிறது

ரிக் வேதத்தில் இரண்டு மந்திரங்களில் தீயவர்கள், சொந்தக்காரர்களாக இருந்தாலும் அழிக்கப்பட வேண்டியவர்களே என்று சொல்கிறது.

 அர்ஜுனன், சொந்தக்காரர்களையும் குருமார்களையும் எப்படிக் கொல்வேன் என்று கேட்டபோது கிருஷ்ணன் சொன்ன பதிலையும் பாரதியார் அழகாகக் கொடுத்துள்ளார்; முதலில் ரிக் வேத மந்திரம் ,

எங்களைக் கொல்ல வருபவன் நட்பில்லாத சொந்தக்காரனாக இருந்தாலும் அந்நியனாக இருந்தாலும் அவனை எல்லாத் தேவர்களும் அழிக்கட்டும்;  பிரார்த்தனையே (பிரம்மமே) என்னுடைய சிறந்த கவசம். RV 6-75-19

यो न॒: स्वो अर॑णो॒ यश्च॒ निष्ट्यो॒ जिघां॑सति । दे॒वास्तं सर्वे॑ धूर्वन्तु॒ ब्रह्म॒ वर्म॒ ममान्त॑रम् ॥

यो नः स्वो अरणो यश्च निष्ट्यो जिघांसति । देवास्तं सर्वे धूर्वन्तु ब्रह्म वर्म ममान्तरम् ॥

yo naḥ svo araṇo yaś ca niṣṭyo jighāṃsati | devās taṃ sarve dhūrvantu brahma varma mamāntaram ||

English translation:

“Whoever, whether an unfriendly relative or a stranger, desires to kill us, may all the gods destroy him; prayer is my best armour” – RV 6-75-19

சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது– பாரதியார்

இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.

“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

………………………..

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர்தீயர்மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று 
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன் —பாரதியார்.

***

அக்கினி செளசீக ரிஷி பாடியது

“அஸ்மாந்வதீ நதி ஓடுகிறது ; நண்பர்களே , ஜாக்கிரதை; உயரமாக எழுந்து நின்று கடப்போம்; வருவதற்கு விருப்பமில்லாதவர்களை விட்டுச் செல்வோம் ; அப்போதுதான் மங்களமான செல்வங்களைப் பெறுவோம் (நல்ல உணவினைப் பெறுவோம்).” 10.53.8

अश्म॑न्वती रीयते॒ सं र॑भध्व॒मुत्ति॑ष्ठत॒ प्र त॑रता सखायः । अत्रा॑ जहाम॒ ये अस॒न्नशे॑वाः शि॒वान्व॒यमुत्त॑रेमा॒भि वाजा॑न् ॥

अश्मन्वती रीयते सं रभध्वमुत्तिष्ठत प्र तरता सखायः । अत्रा जहाम ये असन्नशेवाः शिवान्वयमुत्तरेमाभि वाजान् ॥ Rig Veda 10.53.8

aśmanvatī rīyate saṃ rabhadhvam ut tiṣṭhata pra taratā sakhāyaḥ | atrā jahāma ye asann aśevāḥ śivān vayam ut taremābhi vājān || Rig Veda 10.53.8

English translation:

“The aśmanvatī flows along; be alert; rise up, cross over, may friends; here let us leave those who are unhappy, so that we may cross over to auspicious sacrificial viands.” Rig Veda 10.53.8

***

கர்மவினைக் கொள்கை

சதபத பிராமண 2-2-27 நூலில் கர்ம வினை பற்றிய தெளிவான குறிப்பு வருகிறது ,

முந்தைய பிறப்பில் ஒருவன் செய்த செயல்களுக்கு ஏற்ப உலகத்தில் பிறக்கிறான் .

அதையடுத்தது மிகப்பழைய உபநிஷத்தான பிருஹத் ஆரண்யக உபநிஷத்திலும் வருகிறது:

Now as a man is like this or like that,

according as he acts and according as he behaves, so will he be;

a man of good acts will become good, a man of bad acts, bad;

he becomes pure by pure deeds, bad by bad deeds;

And here they say that a person consists of desires,

and as is his desire, so is his will;

and as is his will, so is his deed;

and whatever deed he does, that he will reap.

— Brihadaranyaka Upanishad,

ஜனகர் கூட்டிய அறிஞர்கள் கூட்டத்தில் யாக்ஞவல்க்ய ரிஷிக்கும் ஏனைய அறிஞர்களுக்கும் இடையே நடந்த உரையாடல்கள்  உள்ளன. அங்கே ஜரத்கார்வ ஆர்த்தபாக  கூறுகிறார் ,

ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய சொற்கள் அக்கினியில் கலந்து விடுகின்றன; அவனுடைய மூச்சுக் காற்று , காற்றினில் கலந்து விடுகின்றது. கண்கள் சூரியனுக்குள்ளும், மனது சந்திரனுக்குள்ளும் புகுந்து விடுகிறது.”

இப்படி அவர் சொன்னவுடன் அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு  யாக்ஞவல்க்ய ரிஷி கேட்கிறார் ,

பின்னர் மனிதன் என்ன ஆகிறான்?

இதற்கு ரிஷி கொடுத்த பதில்,

இதை நாம் இருவரும் தனியாக விவாதிப்போம்; இதை பொது இடத்தில் விவாதிக்கக்கூடாது .

இதற்குப்பின்னர் அவர்கள் இருவரும் பேசியது என்ன என்ற முழு அறிக்கை இல்லை. ஆனால் அவர்கள் சொன்னது கர்மம்அவர்கள் புகழ்ந்தது கர்மம் என்று மட்டும் இருக்கிறது. பின்னர் வந்த உபநிஷத்துக்குக்கள் இன்னும் கூடுதலான விவரங்களைத்  தருகின்றன .

இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால் வேத காலத்திலேயே மரணத்துக்குப் பின்னர் உள்ள மறுவாழ்வு  பற்றிய சிந்தனை எழுந்து அதற்கு முடிவும் கண்டனர் என்பதாகும். வேதங்களை ஆழமாகப் படித்தால் இதற்கான வித்துக்கள் வேதங்களிலேயே இருப்பதையும் அவை மறை பொருளில் உரைக்கப்பட்டதையும் அறியலாம் .

—subham—

Tags- உலகு இன்பக் கேணி,  பாரதியார் கூற்றுக்கு,  ஆதாரம் எங்கே?,  Mantras , wisdomlib.org, மறுபிறப்பு, கர்ம வினை, மரணத்துக்குப் பின்னர், மறு வாழ்வு

மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! (Post No.15,620)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,620

Date uploaded in London – 15 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

21-3-26 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை! 

மன அழுத்தத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் 20 நிமிட கலைப் பயிற்சி! 

ச. நாகராஜன் 

உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு புதிய புத்தகம் ‘ஆர்ட் க்யூர்” ART CURE!

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட இந்தப்         புத்தகத்தை எழுதியவர் டெய்ஸி ஃபேன்கோர்ட் (Daisy Fancourt) என்ற பெண்மணி. 

டாக்டரேட் பட்டம் பெற்றுள்ள இவர் யுனிவர்ஸிடி காலேஜ் ஆஃப் லண்டனில்   சைக்கோ பயாலஜி மற்றும் எபிடெமியாலஜி துறையில் பேராசிரியராகப்         பணியாற்றுகிறார்.

யாருமே இதுவரை செய்யாத ஒரு அபூர்வ ஆய்வை இவர் மேற்கொண்டார்.      என்ன அது? 

கலைகளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ளதொடர்பு பற்றிய  ஒரு ஆய்வை     இவர் மேற்கொண்டார்.

நல்ல உணவுத் திட்டம், உடல்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது போல      கலையைக் கற்பதும் உடல் நோய்களைக் குணப்படுத்தும், படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும், மன அமைதியை நல்கும் என்பதை இவரது ஆய்வின் முடிவு கண்டுபிடித்துள்ளது.

ஹீதர் ரோஸ் ஆர்டுஷின் (Heather Rose  Artushin)   என்ற 

பெண்மணி இவரை சைக்காலஜி டு டே பத்திரிகைக்காக பேட்டி  கண்டார்.

அதில் தன்னைப் பற்றியும் தனது ஆய்வைப் பற்றியும் இவர் மனம் திறந்து பல        தகவல்களை வெளியிட்டார்.

15 வருடங்களாக ஒரு விஞ்ஞானியாக கலைகள், மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது பற்றி இவர் ஆராய்ச்சி செய்து வந்துள்ளார்.  

எந்த ஒரு கலையிலும் ஈடுபடும் ஒருவர் தான் சந்தோஷமாக இருப்பதையும்       மிகுந்த மனஅமைதியை பெறுவதையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கம். 

ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையை நம்ப முடியாத உயரத்திற்கு ஏற்றும்      என்றும் ஆரோக்கியம் மேம்படும் என்பதையும் இவர் உறுதிப்படுத்துகிறார்.    

 மூளையைப் படம்பிடித்து ஆராய்தல், உடலில் ஏற்படும் மாறுதல்களை         ஆராய்தல், இரத்த சாம்பிள்களை  எடுத்து ஆய்வு நடத்தல், ஏன் மரபணுவையே ஆய்வுக்கு உட்படுத்தல் என்பன போன்ற ஆய்வுகளை  முழு வீச்சில்  நடத்தி  கலைகளில் ஈடுபடுவதானது உடலில்  ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை அறிவியல் பூர்வமாகத் தொகுத்துள்ளார்.

மன ஆரோக்கியத்திற்கு கலைகள் பெரிதும் உதவுகின்றன. உணர்ச்சிகளைச்      சீராக்கல், படைப்பாற்றலை மேம்படுத்தல் உள்ளிட்ட பல நலன்கள் கலைகளில்        ஈடுபடுவதால் ஏற்படுகின்றன. மூளையில் டோபமைன் என்ற முக்கிய நியூரோ   டிரான்ஸ்மிட்டர் (இரசாயன தூதுவர்) அதிகரிக்கிறது. மன அழுத்த            ஹார்மோனானான கார்டிஸால் குறைகிறது.

ஒவ்வொருவரும் உணவுத் திட்டத்தை சீர்படுத்தி அமைத்துக் கொள்வது போல   கலைகளிலும் ஒரு நாளைக்கு இருபது நிமிட நேரமாவது ஈடுபட வேண்டும்      என்கிறார் இவர்.

இசை, நடனம், ஓவியம், நடிப்பு என்று எந்தக் கலை ஆகட்டும் நன்மையே பயக்கும்.

கலை ஈடுபாட்டை ஒரு ப்ரிஸ்கிரிப்ஷனாகவே தர வேண்டும் என்ற இவரது அதிரடி சிபாரிசு கலைப்பிரியர்களுக்கும் கலாரசிகர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியையே தருகிறது!

இதை ஆதாரத்துடன் ஆய்வு முடிவுகளைச் சுட்டிக் காட்டிக் கூறும் போது இந்த   அறிவியல் ஆமோதிப்பை அனைவரும் மனம் திறந்து வரவேற்கத்தானே வேண்டும்!

ஆர்ட் க்யூர் புத்தகம் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

புத்தகத்தின் விலை பேப்பர் பேக் எடிஷன் ரூ 662.33. பக்கங்கள் 328.

தாம்பாளத்தில் தாளம் போட்டு தமிழ் வளர்த்த மேதை! (Post No.15,617)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,617

Date uploaded in London – 14 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

13-4-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ஏப்ரல் 13 கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள் – சிறப்புக் கட்டுரைl̥

தாம்பாளத்தில் தாளம் போட்டு தமிழ் வளர்த்த மேதை! 

ச. நாகராஜன் 

எளிய, நாட்டுப்புறத் தமிழில் உயர்ந்த சிந்தனைகள் வேண்டும்.

ஆபாச வரிகளோ இரட்டை அர்த்தச் சொற்களோ இருக்கக் கூடாது.

காதல் பாட்டானாலும் கூட எதிர்கால நம்பிக்கை ஒளிர்விட வேண்டும்.

யதார்த்தத்தோடு முன்னேறும் பாதையைக் காண்பிக்க வேண்டும்.

இசையைத் தாளத்துடன் போட்டு பாட்டை அனுபவிக்க வேண்டும்.

பட்டி தொட்டி எல்லாம் பாடல் முழங்க வேண்டும்.

ஒரு ஆளைச் சொல்லுங்க பார்ப்போம் என்றால் பதில் பளிச்சென வரும் இல்லையா – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று.

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே-நீ

தரும் மகிழ்ச்சி (ஆசை)                                                                                 (அரசிளங்குமரி 1957) 

எப்படிப்பட்ட அறிவு வளரணும், கவிஞரே, நீங்கள் சொல்வது?

மனிதரை மனிதர் சரிநிகர் சமமாய்

மதிப்பது நம் கடமை

வள்ளுவப் பெருமகன் சொல்லிய வழியில் வாழ்வது அறிவுடமை  

                                (இரும்புத்திரை 1960)

வள்ளுவன் வழியில் (ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்..) தாயையும் மகிழ்ச்சி கொள்ள வைக்கும் வளர்ச்சியே உண்மை வளர்ச்சி என்பதை எளிய சொற்களால் சொல்வது தான் பட்டுக்கோட்டையாரின் பாணி! 

13-4-1930 அன்று தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாசலக் கவிராயருக்கு மகனாகப் பிறந்தவர் கல்யாணசுந்தரம்.

இளமையிலிருந்தே சுறுசுறுப்பாக இருந்த கவிஞர் விவசாயம், இட்லி வியாபாரி,  மிஷின் டிரைவர், தேங்காய் வியாபாரி என பல தொழில்களில் முனைப்பு காட்டியவர் அரசியல்வாதியாகவும் பாடகராகவும் நடிகராகவும், கவிஞராகவும் என்று இப்படி சுமார் 16 தொழில்களில் ஈடுபட்டார். இயற்கையாகவே உள்ளத்திலும் உடலிலும் ஊறி இருந்த “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்” என்ற பாரதியின் வழியைப் பின்பற்றிக் கவிஞராகவே கடைசியில் மிளிர்ந்தார்.

1954ல் படித்த பெண் என்ற படத்திற்கு தன் முதல் பாடலை எழுதியவர் 1959ல் 29 வயதிலேயே அகால மரணத்தைச் சந்திக்கும் வரை 55 படங்களில் 187 பாடல்களைப் பாடி தமிழகத்தையே வியக்க வைத்தார்; சிந்திக்க வைத்தார். 

தூங்காதே தம்பி

தூங்காதே-நீயும்
சோம்பேறி என்ற பெயர்

வாங்காதே! (தூங்)

நீ-தாங்கிய உடையும்

ஆயுதமும்-பல
சரித்திரக் கதை சொல்லும்

சிறைக்கதவும்,
சக்தியிருந்தால்

உன்னைக்கண்டு சிரிக்கும்
சத்திரந்தான் உனக்கு

இடம் கொடுக்கும் (தூங்)

              நாடோடிமன்னன் 1958

என்று அறிவுரைப் பாடலைப் பட்டி தொட்டி எங்கும் முழங்கச் செய்ததோடு மக்களின் திலகமாக எம்.ஜி.ஆரையும் மக்களோடு இணைத்து விட்டவர் பட்டுகோட்டையார்.

இசையைத் தாளத்துடன் போட்டு, பாட்டுப் பாடி பாடலை மலரச் செய்வது அவர் பழக்கம். தாம்பாளத்தை எடுத்து கையினால் டக் டக் என்று அடித்தால் பாடல் வரிகள் சமுதாயத்தை எழுப்பும் வகையில் தானே உள்ளத்திலிருந்து சொற்களாக வந்து விழும். ஒருமுறை பாடல் வரிகளை மறந்து விட்ட அவர் வீட்டிற்குள்ளேயிருந்து தாம்பாளத்தை எடுத்து வந்து தாளம் போட மறந்துவிட்ட வரிகள் தாமே  ஞாபகத்திற்கு வந்தன!

ஆகவே தான் அவர் அனுபவத்தால் பாடினார் இப்படி:

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் – இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்;
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

                                           கல்யாணப் பரிசு 1959

பெண்ணழகை வர்ணித்துக் காலம் காலமாக நூற்றுக் கணக்கான கவிஞர்கள் படைத்த கவிதைகளை சங்க இலக்கியத்தில் ஆரம்பித்து இன்று வரை பார்க்கிறோம். நிலவைப் பார்த்த கவிஞருக்கு வந்த பாடல் இது:

ஆண் : ஆடை கட்டி வந்த நிலவோ – கண்ணில்

மேடை கட்டி ஆடும் எழிலோ – இவள்

ஆடை கட்டி வந்த நிலவோ – குளிர்

ஓடையிலே மிதக்கும் மலர்

ஜாடையில் சிரிக்கும் இவள்

காடுவிட்டு வந்த மயிலோ – நெஞ்சில்

கூடுகட்டை வாழும் குயிலோ!

                          அமுதவல்லி – 1959

நிலவு, மலர், மயில், குயில் என ஒரே பாடலில் சில சொற்களில் பெண்ணழகைச் சுட்டிக் காட்டிய தனித்வம் மிக்க  இவரது கற்பனை வளம் அனைவரையும் அதிசயிக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை. 

இன்னொரு பாடல்:

நளின நடை அன்னம் போலே

நெளியும் இடை மின்னல் போலே

ஆடை கொடி பின்னல் போலே

அன்பு மொழி கன்னல் போலே

நெஞ்சினிலே நேசத்தாலே

நீந்திடுவேன் மீனைப் போலே

அங்கம் யாவும் தங்க நிறம்

ஆசை உள்ளம் சங்கு நிறம்

அழகே வடிவாய் வரும்

மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம்

அமுதவல்லி 1959

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘The Man Who Knows Too Much” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற கே சரா, சரா என்ற பாடல் உலகப் புகழ் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை அதன் புகழ் மங்கவில்லை.

பாடலை எழுதியவர்கள் ரேமாண்ட் பி.ஈவான்ஸ் மற்றும் ஜே லிவிங்ஸ்டன் (Raymond B. Evans, Jay Livingston) ஆகிய இரு பாடலாசிரியர்கள். When I was a little girl என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடல் 1955ல் எழுதப்பட்டது. பிரபல அமெரிக்க பாடகியான டோரிஸ் டே இதைப் பாட இன்றளவும் இது உலகைக் கவர்ந்து வருகிறது.

 இதை ஆரவல்லி படத்திற்காக பட்டுக்கோட்டையார் மூலப் பாடலின் ஜீவனை பிரதிபலித்து  தமிழ்ப் பாடலாக மலரச் செய்தார் இப்படி:- 

சின்னப்பெண்ணான போதிலே
அன்னையிடம் நான்ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா?-அம்மா
நீசொல் என்றேன்! (சின்ன)

வெண்ணிலா! நிலா! -என்

கண்ணல்லவா கலா! – உன்

எண்ணம் போல் வாழ்விலே

இன்பம் காணலாம்!

ஆரவல்லி 1957

இன்று வரை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பாடலாக இது இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

இன்றைய சமுதாயத்தின் கெட்ட வழிமுறைகளைச் சாடி அவை திருந்த வழி கேட்டவர் பட்டுக்கோட்டையார்.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்துகொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா (குறுக்கு)

மகாதேவி 1957

ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு விளக்கவுரை எழுதினால் அது பட்டுக்கோட்டை களஞ்சியமாகவே அமையும்.

கண்ணதாசன் அவரைப் பற்றிக் கூறியதே போதுமானது:

“திரையுலகில் பாட்டெழுதுவோர் வரலாம், போகலாம். ஆனால் ஒரு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இனி வரமாட்டான். ஆரம்பமானான் பெண்ணுக்குள்ளே, அவன் ஆடி அடங்கினான் மண்ணுக்குள்ளே! திரையுலகில் அவனே தத்துவஞானி! ஆழ்ந்த சிந்தனை! அழுத்தமான சொல்லாட்சி; ஒரு வரிக்கு மறுவரி உயிர் கொடுக்கும் தன்மை; அவன் எழுதிய பாட்டெல்லாம் அப்படி அமைந்தன!

தென்றல் 10-10-1959 

பாட்டுக்கு ஒரு புலவன்

தமிழ் சொல்லுக்கு அதிகாரன்

என்றும் பட்டுக்கோட்டையாரின் புகழ் நிற்கும்

அதைச் சொல்வோம் நாம் தினமும்!

**

ஹனுமனைப் பற்றி இராமன் : துளசிதாசரின்  கிஷ்கிந்தா காண்டம்   –ஓர் ஆய்வு – 10 (Post.15,602)

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,602

Date uploaded in London –   10 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

(ஆர், சேஷாத்ரிநாதன்)

PART TEN

ஹனுமனைப் பற்றி இராமன்

ஹனுமனின் வீரத்தைக் கண்ட இராமன் ஹனுமனைப் புகழ்ந்து இலக்ஷ்மணனிடம் பேசுகிறான்.

HANUMAN IN BATU CAVES, MALAYSIA; PICTURES ARE TAKEN BY LONDON SWAMINATHAN.

हाथिन सों हाथी मारेघोरेसों सँघारे घोरे,

रथनि सों रथ बिदरनि बलवानकी।।

चंचल चपेटचोट चरन चकोट चाहें,

हहरानी फौजें भहरानी जातुधानकी।।

बारबार सेवकसराहना करत रामु,

तुलसी’ सराहै रीति साहेब सुजानकी।

लाँबी लूम लसतलपेटि पटकत भट,

देखौ देखौ लखनहनुमानकी।40.

“இலங்கையின் போர்க்களம் முழுவதிலும் அவர் பார்க்கும் ஒரே ஒரு வீரன் மட்டுமே இருந்தான்.அவன்  அரக்கக் காளையின் கொம்புகளைப் பிடித்து இழுத்தான், அந்த வீரன் வேறு யாருமல்ல, ஹனுமன்தான். அவனது வாலைப் பார். அந்த அழகான வாலில்  அரக்கர்களை சுருட்டி தரையில் ஓங்கி அடிக்கிறான். யானைகள், குதிரைகளுடன் மோதுகிறான்.” இது கோஸ்வாமி துளசிதாசரின் கவிதாவளி ராமாயணத்தில், லங்கா காண்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது,.   

இது மட்டுமல்லாமல், இராமன் ஹனுமன் மீது தனது பாசத்தை பகிரங்கமாகக் காட்டினான்.அவர் ஹனுமனை  அன்புடன் கட்டிப்பிடித்து, என்றென்றும் கடமைப்பட்டிருப்பதாக அறிவித்தான் .இது சுந்தர காண்டத்தில் வருகிறது

सुनु कपि तोहि समान उपकारी। नहिं कोउ सुर नर मुनि तनुधारी॥

प्रति उपकार करौं का तोरा। सनमुख होइ  सकत मन मोरा॥3

सुनु सुत तोहि उरिन मैं नाहीं। देखेउँ करि बिचार मन माहीं॥

இலங்கையில் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு கிஷ்கிந்தை வந்து இராமனிடம் சீதையைப் பார்த்த விவரங்களையும் சீதை படும் துன்பங்களையும் ஹனுமன் இராமனிடம் தெரிவிக்கிறான். இராமனின் கண்களில் கண்ணீர் துளிர்கிறது. ஹனுமன் இராமனைச் சமாதானப்படுத்தி. “அங்குள்ள அரக்கர்கள் உங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தாங்கள் அவர்களை  எல்லாம் வென்று வருவீர்கள்” என்று சொல்கிறான். அதைக் கேட்ட இராமன் “ஹனுமனே! உன்னைப் போல் எனக்கு உதவி செய்தவர் தேவரோ, மனிதனோ, முனிவரோ, உடல் பெற்ற ஒருவர் கூட இல்லை. நான் உனக்கு பதில் உதவி என்ன செய்து விட முடியும்? என் மனது கூட உனது எதிரில் நிற்க முடியாது. உனது கடனைத் தீர்ப்பது முடியாத காரியம்”  என்று கூறுகிறான்.

புராணங்களில் ஹனுமனின் வரலாறு

புராணங்களின் (புராண வரலாறுகள்) படி, ஹனுமனின்  தாயாரின் பெயர் அஞ்சனா. அவள் குரங்கு மன்னன் கேசரியின் மனைவி. ஹனுமன் கடவுளின் அருளாகப் பிறந்தான்.காற்றுக் கடவுள், மருத் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, அனுமன் ‘ஆஞ்சநேயர்’ அல்லது ‘மாருதி’. இருப்பினும், அவரது மிகவும் பொதுவான பெயர் ‘ஹனுமன்’ என்பது. ஒரு முறை அவர் தேவர்களின் அரசனான இந்திரனின் கடுமையான ஆயுதமான ‘வஜ்ரத்தால்’ தாக்கப்பட்டார்.. அதன் காரணம் என்ன?

பிறந்த சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை ஹனுமனுக்கு அதிகமான பசி எடுத்தது/, சூரியன் உதிப்பதைப் பார்த்தான், அது ஏதோ பழுத்த சிவப்புப் பழம் வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்தான். உடனே ஒரே பாய்ச்சலாக அதைப் பிடிக்க ஆகாயத்திற்குத் தாவினான்.  தற்செயலாக, அது சூரிய கிரகணத்தின் நேரம். புராணங்களின்படி,  இராகு  சூரியனை விழுங்கச் சென்று கொண்டிருந்தான். ஹனுமன் விரைந்து வருவதைக் கண்டான்.. ஹனுமன் ஏதோ போட்டியாளன் என்று நினைத்துப் பயந்து ஓடிவிட்டான்.. உடனே  இராகு தேவர்களின் ராஜாவான இந்திரனிடம் தனது வழக்கமான உணவு மறுக்கப்படுகிறது என்று புகார் செய்தான். உடனே இந்திரன் இந்த விஷயத்தில் தலையிட எண்ணி தனது ஐராவதம் என்ற வெள்ளை நிற கம்பீரமான யானையின் மீது ஏறி விரைந்தான் .

உடனே ஹனுமன் அந்த அந்த யானையை ஏதோ வெள்ளைப் பழம் என்று நினைத்து சூரியனை விட்டு விட்டு அந்த யானையின் மீது குதித்தான். இந்திரன் அதிர்ச்சி அடைந்து ஹனுமனைத் தடுக்க வலிமை மிகுந்த தனது வஜ்ரா என்ற ஆயுதத்தை ஹனுமன் மீது ஏறிய அது அவனது கன்னத்தைத் தாக்கியது. அதனால் ஹனுமனது தாடை வீங்கியது. ஹனு என்றால் கீழ் தாடை என்ற பொருள் மான் என்றால் அடிப்பது என்று பொருள். இதன் காரணமாகவே ஹனுமன் என்ற பெயர் வந்தது.

ஆனால் வாயு பகவன் தனது அருளால் பிறந்த   ஹனுமனுக்கு  நிகழ்ந்ததைக் கண்டு கோபமுற்றான். உடனே தனது இயக்கத்தை நிறுத்தினான். இந்த பிரபஞ்சமே மூச்சு விடமுடியாமல் திணறியது. அனைத்து கடவுள்களும் மூச்சுத் தினறலின் விளிம்பில் இருந்தனர். அவர்களும் ஹனுமானுக்கு பல வரங்கள் அளித்து ஹனுமனை யாராலும் வெல்ல முடியாத நிலையை உருவாக்கி வாயு பகவானை சமாதானப்படுத்தினர்.

ஹனுமனின் முகம் சிகப்பாக இருப்பதைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. ஒன்று அவர் குழந்தையாய் இருக்கும் சமயம் சூரிய வெப்பத்தினால் அவரது முகம் சிவந்து போயிற்று என்று சொல்வர். இரண்டாவது  அன்னை சீதை அவரது வகிட்டில் சிந்தூரம் அணிந்து கொள்வாள். அது அவரது சிவந்த முகத்திற்கு இன்னும் அழகைக் கூட்டிற்று. ஹனுமான் அந்த சிந்தூரம் அணிவதற்கான காரணத்தைக் கேட்டபோது அது ஒரு மங்கலமான குறி என்றும் சீதை என்றென்றும் இராமனின் மனைவி என்பதைக் கட்டுவதற்காகவும் சீதையை இராமனிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்பதைக் காட்டுவதையும் சொல்லப்பட்டது. வகிட்டில் உள்ள சிறிய போட்டு போன்ற சிந்தூரம் சீதையை இராமனுக்கு அதி ப்ரியமானவளாக செய்யுமானால் முகம் முழுவதும் அந்த சின்தூரத்தைப் பூசிக்கொண்டால் நாம் இராமனுக்கு எவ்வளவு பிரியமானவனாக ஆவோம் என்று நினைத்து முகம் முழுவதும் சிந்தூரம் பூசிக்கொண்டதாக ஒரு கதையும் உண்டு.

சிறிய வயதில் ஹனுமன் மிகவும் குறும்புக்காரனாக இருந்தான். முனிவர்களின் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள மரங்களை உடைத்தும், இலைகளை உதிர்த்தும், மரங்களின் பழங்களைத் தின்றும் கொட்டமடித்து அந்த இடங்களையே குப்பை மேடக்கினான்.  அதனால்  யாராவது ஒருவர் நினைவூட்டும் வரை அவன் தனது சக்தியை மறந்து விடுவான் என்று முனிவர்கள் சபித்தனர். சீதையைத் தேட இலங்கை செல்வதற்காக வானரங்களும் கரடிகளும் கடற்கரையை அடைந்த போது எல்லோருமே அந்தக் கடலைத் தாண்டும் சக்தி தங்களுக்கில்லை என்று சொன்னபோது முதியவரான ஜாம்பவான் ஹனுமனுக்கு அவனது சக்திகளை நினைவூட்டி கடலைத் தாண்டிச் செல்லும் சக்தி அவனுக்கு உள்ளது என்ற நம்பிக்கை அளித்தார். அதனால் ஹனுமான் கடலைத் தாண்டிச் சென்று சீதையைக் கண்டதுமல்லாமல் இலங்கையையும் தீக்கிரையாக்கினார்.

சிரஞ்சீவி ஹனுமன்

ஹனுமன் இராமனுக்கு மிகப் பிரியமானவன். ன் நெருக்கமானவன்.  இந்த உலகை விட்டுச் செல்லும்போது ஹனுமனும் இராமனுடன் வர விரும்பினான். ஆனால் இராமன் ஹனுமனை இந்த உலகிலே தங்கச் செய்து தனது மகிமை மங்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினான். மேலும் இராம நாமத்தை விடாமல   ஜபிப்பவர்களைப் பதுகாக்கும்படியும் கூறினான். ஆத்யாத்ம இராமயணத்தின் உத்திர காண்டம் ஒன்பதாவது சர்கத்தில் இதைப் பற்றி குறிப்பு உள்ளது.

 र्कर्ञ्चदुत्तरों वायों त्वया मत्कृ तकारणात् 

एवों र्वभीषणों तूक्त्वा नूमन्तमथाब्रवीत्  ३४॥

मारते त्वों र्चरञ्जीव ममाज्ञाों मा मृषा कृ थाः 

जाम्बवन्तमथ प्रा र्तष्ठ त्वों िापरान्तरे  ३५॥

இராமன் விபீஷணனிடம் “விபீஷணா! உன்னை இந்தப் பூமி உள்ளளவும் இராஜ்ய பரிபாலனம் செய்யும்படி முன்பே வாக்களித்துள்ளேன். நீயும் அதற்கு உடன்பட்டிருக்கிறாய். ஆதலால் உன் நகரத்திலேயே இருந்து ஆட்சி செய் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஹனுமனை நோக்கி “ஓ ஆஞ்சநேய! நீ என்றும் சிரஞ்சீவி என்று வரமளித்தோம். ஆகையால் நீயும் உனது விருப்பமான இடத்தில் இருக்கலாம்? என்றான்.

வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்திலும் இந்தப் பகுதி 108 வது சர்கத்தில் வருகிறது.

तथेति प्रतिजग्राह रामवाक्यं विभीषणः  राजा रा्तसय्ख्यानां राघवाज्ञामनुखरय्‌  २३२  तमेवुक्त्वा काकरख्यो हनूमन्तमथात्रवीत्‌  जीविते कृतवुद्विस््वं मा अ्रतिज्ञां विरोपय ।॥ ३२३  मत्कथाः भरचरिष्यन्ति यावछोके इरीश्वर  वैषद्रमख सुप्रीतो मदाक्यमदुपारुयन्‌  ३४  एषयुक्तस्तु हलमान्राववेण महात्मना  वाक्यं निज्ञोपयामास परं हर्षमवाप्य   

இராமன் பூமியில் தனது கடமைகளை முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறான். முதலில் விபீஷணனிடம் வந்து “விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி யெவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதித்து வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான்.

பிறகு ராமன் மாருதியைப் பார்த்து ஆஞ்சநேயா!! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான்.

                   **                         தொடரும்

ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!! (Post No.15,587)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,587

Date uploaded in London – 7 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (47)   

ராமாயணத்தில் வரங்கள் (47) ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!!

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘இந்திரனது தேரிலேறிக்கொண்டு போர் புரிவது’ என்ற நூற்றுமூன்றாவது அத்தியாயத்தில் ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் உள்ளிட்டவற்றைத் தந்து உதவியது பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.

ராம ராவண யுத்தம் ஆரம்பமாகிறது. ராவணன் தன் ரதத்தில் இருக்க ஶ்ரீ ராமர் தரையில் நின்று கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த தேவர்கள், கின்னரர்கள் உள்ளிட்ட அனைவரும், ராவணன் தேரில் இருக்க ராமர் தரையில் அல்லவா நிற்கிறார். இந்த யுத்தம் சமமான யுத்தம் இல்லையே” என்றனர். உடனே தேவேந்திரன் தனது சாரதியான மாதலியை அழைத்து, “ நீ எனது ரதத்தை எடுத்துச் சென்று ராமருக்கு அளி.” என்றான்.

அதன்படியே மாதலி ரதத்தைக் கொண்டு வந்து ஶ்ரீ ராமருக்கு அளித்தான்.

பின்னர் கூறுகிறான்:

சஹஸ்ராக்ஷேண காகுத்ஸ்த ரதோயம் விஜயாய் தே |              தத்தஸ்தவ மஹாசத்வ ஶ்ரீ மச்சசத்ருநிவர்ஹண |

இதமைந்த்ரம் மஹச்சாபம் கவசம் சாக்னிசன்னிபம் | |ஷராஸ்சாதித்யசங்காஷா: சக்திஸ்ச விமலா ஷிதா ||

யுத்தகாண்டம், 103ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 11,12

சத்ரு நிவர்ஹண – சத்ருக்களை சங்கரிக்கும்                          மஹா சத்வ – பேராற்றல் கொண்ட                                    ஶ்ரீமன் – ஶ்ரீ மிகும்                                               

தே – தேவரீரது                                                    விஜயாய – வெற்றிக்காக                                   சஹஸ்ராக்ஷேண – இந்திரனால்                                     அயம் – இந்த                                                         

ரத: – ரதமானது                                                      தவ- தேவரீருக்கு தத்த: – அளிக்கப்பட்டிருக்கிறது

இதம் – இந்த                                                                  மஹத் – மகிமை வாய்ந்த                                            ஐந்த்ரம் – இந்திரனது     சாபம் – வில்லும்          அக்னிசன்னிபம் – அக்னியை நிகர்த்த                                 கவசம் ச – கவசமும்             ஆதித்யசங்காஷா: – சூரியனை நிகர்த்த                                  ஷரா: ச – பாணங்களும் விமலா – நிர்மலமானதும்                       ஷிதா – கூரியதுமான சக்தி: – சக்தியும்                                     ச – அப்படியே அளிக்கப்பட்டிருக்கின்றன

இப்படிக் கூறிய மாதலி ஶ்ரீ ராமரிடம், “இந்த ரதத்தில் சாரதியாகிய என்னுடன் வீற்றிருந்து தேவேந்திரர் அசுரர்களை வென்றது போல ராவணனை வெற்றி கொள்வீராக” என்று வேண்டுகிறான்.

அதன்படியே ராமர் அந்தத் தேரில் ஏறி ராவணனை வெற்றி கொள்கிறார். சீதையின் கற்பை நிரூபிக்கும் வண்ணம் அக்னி ப்ரவேசமும் நடந்து முடிகிறது.

அப்போது தசரதர் ராம. லக்ஷ்மண, சீதா தேவி முன்னர் தோன்றி அவர்களை ஆசீர்வதித்து விட்டு இந்திரலோகம் செல்கிறார்.

அடுத்து நூற்றிருபத்து மூன்றாவது அத்தியாயமான மாண்ட வானரர்கள் உயிர் பெறல் என்ற அத்தியாயத்தில் ஶ்ரீ ராமர் இந்திரனிடம் போரில் மாண்ட அனைத்து வானரவீரர்களும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற வரத்தை வேண்டுகிறார். இந்திரனும் அப்படியே வரம் அருள்கிறார்.

அதை 123ம் அத்தியாயம் இப்படி விவரிக்கிறது:

அப்போது அங்கு வந்த இந்திரனை நோக்கி ராமர் கூறுகிறார்:-

“எல்லா தேவர்களுக்கும் வேந்தரே! என்னிடம் ப்ரீதியானது ஏற்பட்டிருக்கிறதென்றால் விண்ணப்பித்துக் கொள்வேன். பேசுபவர்களுள் உத்தமரே! தேவரீரது திருவாக்கை சத்யமாய செய்தருள்வீராக!

எனது நிமித்தமாக பிரதாபத்தை மேற்கொண்ட எந்த வானரர்கள் யமனுலகத்தை அடைந்தார்களோ அவர்கள் யாவரும் உயிர் பெற்று எழுந்திருக்கட்டும்.

கௌரவத்தைக் கொடுப்பவரே! எந்த வானரர்கள் எனக்காகவே புத்திரர்களையும் மனைவிகளையும் விட்டுப் பிரிந்தார்களோ அவர்கள் யாவரையும் சந்துஷ்டி கொண்ட மனத்தினர்களாய்ப் பார்க்க விரும்புகிறேன்

தேவேந்திரரே! பிரதாபம் மேற்கொண்டு பெருமுயற்சி கொண்டவர்களான சூரர்கள் மரணமடைந்தவர்களாய் மரணத்தையும் மதிக்காமல் இருந்தார்கள். அவர்களைப் பிழைப்பித்து அருள்வீராக!

எனது விருப்பங்களிலேயே அசஞ்சலாப்பற்றைக் கொண்டு மரணத்தையும் மதியாதிருந்தார்கள். அவர்கள் தேவரீரது அனுக்ரஹத்தால் எழுவார்களாக! நான் இந்த வரத்தை வேண்டுகிறேன்.

இப்படி “அஹம் ஏதத் வரம் வ்ருணே” என்று வரத்தை ராமர் யாசிக்க தேவேந்திரன், “அப்பா, ஶ்ரீ ராகவ! உன்னால் கூறப்பட்ட இந்த வரமானது மிகப் பெரிது. என்னால் இருவிதமாகச் சொல்லப்பட்டதே இல்லை. ஆகையால் இது அப்படியே ஆகும்” என்கிறான்.

இப்படி ஶ்ரீ ராமருக்கு ரதம், ஆயுதம் தந்து உதவியதோடு, வானரர்கள் பிழைக்க வரமும் அருள்கிறான் தேவேந்திரன்.

அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும் இந்த சம்பவத்தை வால்மீகி மிக அழகாக விளக்குகிறார்.

**

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 47; இந்து மத கலைச்சொல் அகராதி-47 (Post No.15,580)

Written by London Swaminathan

Post No. 15,580

Date uploaded in London – 5 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

English version was posted yesterday; here is the Tamil version:

கனகாபிஷேகம்

கனகாபிஷேகம் என்பது 90 அல்லது 100 வயது நிறைவடைந்த தம்பதிகளுக்கு, தங்கக்காசுகளால் அபிஷேகம் செய்து, நடத்தப்படும் ஒரு விழா.

பொருள்: ‘கனகம்’ என்றால் தங்கம். தங்கக் காசுகளால் தம்பதியர் மீது அபிஷேகம் செய்வது.

காலம்: பொதுவாக 90-வது , சில சமயங்களில் 100-வது வயதிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.

ஞானிகள் அல்லது கலைஞர்களுக்குத் தங்கக் காசுகளால் செய்யப்படும் ஒரு சிறப்பு கௌரவ நிகழ்வாகும்.

சிவார்க்க மணி தீபிகை என்ற நூலை அப்பைய தீட்சிதர் இயற்றினார்; அதனால் மகிழ்ந்த  சின்னபொம்ம நாயக்கர், தீக்ஷிதருக்கு கனகாபிஷேகம் செய்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் பார்வதி சமேத ஸ்ரீ காலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடையபலத்தில் நிறுவினார்.

60 வயதில் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம் கொண்டாடப்படுகின்றன.

அப்போது அந்தப் பெரியவர்களிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெறுவார்கள் ; காஞ்சி பரமாசார்ய சுவாமிகளுக்கு நடந்த கனகாபிஷேகத்தை நமது காலத்தில் பலரும் நேரில் கண்டார்கள்; இப்போதும் வீடியோ மற்றும் யூ ட்யூபில் காணலாம்.

***

கேனோபநிஷத்

கேனோபநிஷத், சாமவேதத்தைச் சேர்ந்த உபநிஷத் ஆகும்., தலவாகர  உபநிஷத் என்றும் இதற்குப் பெயர்.  ‘கேன’ (எவரால்) என்ற கேள்வியுடன் தொடங்கும் ஒரு முக்கியமான உபநிஷத் . ‘கேன’ என்றால் ‘எவனால்’ அல்லது ‘யாரால்’ என்று பொருள். மனம், வாக்கு மற்றும் புலன்கள் யாருடைய சக்தியால் இயங்குகின்றன என்ற கேள்வியுடன் இது துவங்குகிறது.

இது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் பிரம்மத்தின் இயல்பை விளக்குகின்றன, அடுத்த இரண்டு பகுதிகள் தேவர்களின் வெற்றி மற்றும் ‘யக்ஷ தரிசனம்’ (தெய்வீக தரிசனம்) கதையின் மூலம் ஞானத்தை உணர்த்துகின்றன.

கண்களால் பார்க்க முடியாத, ஆனால் கண்களுக்குக் கண், காதுக்குக் காது, மனதிற்கு மனம் என எல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருக்கும் அந்த பரப்பிரம்மமே உண்மையான இறைவன் என இது போதிக்கிறது.  ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் இந்த உபநிஷத்திற்கு உரைகள் எழுதியுள்ளனர்.

***

கேது கிரஹம்

உண்மையில் கிரகம் அல்ல ; வானத்தில் காண முடியாது; சாயா / நிழல் கிரகம் ஆகும் .

புனிதத் தலங்கள்: கேது – கீழப்பெரும்பள்ளம் – திருத்தொலைவில்லி மங்கலம். ராகு-கேது தோஷ நிவர்த்திக்காக, காளஹஸ்தி போன்ற தலங்களுக்கும் செல்லலாம்.

Astronomically, Ketu and Rahu denote the points of intersection of the paths of the Sun and the Moon as they move on the celestial sphere.

சூரியனும் சந்திரனும் சுற்றும் பாதைகளில் (கோடுகள்) ஒன்றை  ஒன்று வெட்டும் இடம் இது .

கேது, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய சுவர்பானு என்ற அசுரனின் உடற் பகுதியாகும். மோகினி வடிவில் வந்த விஷ்ணு, அமுதம் அருந்திய அசுரனின் தலையை வெட்டியபோது, உடற்பகுதி கேதுவாகவும், தலைப்பகுதி ராகுவாகவும் மாறியது.

கேது சர்ப்பத்தின் தலையையும், மனித உடலையும் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. கேதுவின் அதிதேவதை கணேசர்

ஜோதிடத்தில் துறவு, மோட்சம், ஆன்மீகம் மற்றும் உலகியல் பற்றற்ற தன்மையுடன் கேது தொடர்புடையது. ஒருவரின் ஜாதகத்தில் கேது வலுவாக இருந்தால், அவர் சிறந்த அறிவாளியாகவும், தத்துவ ஞானியாகவும் அல்லது மருத்துவத் துறையில் வல்லுநராகவும் திகழ்வார் .

பொதுவான அர்த்தம்– கொடி, வால் நட்சத்திரம்.

***

கீசகன் 

பீமனால் கொல்லப்பட்ட விராட தேச படைத்தலைவன்.

விராட தேச ராணி சுதேஷ்ணையின் சகோதரன். மல்யுத்தத்தில் வல்லவன், பாண்டவர்களின் ஓராண்டு மறைவு வாழ்க்கையின் போது (அஞ்ஞாதவாசம்), திரௌபதி மாறுவேடத்தில் சைரந்திரி என்ற பெயருடன் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தாள். அவளைத் தவறான முறையில் கீசகன் அணுகியவுடன் பீமனுடன் சேர்ந்து திட்டம் போட்டாள்; இரவு நேரத்தில் தனியிடத்துக்கு வருமாறு சொல்லவே அவன் ஆசையுடன் வந்தான் .அங்கே படுத்திருந்த பீமனை திரௌபதி என்று எண்ணி அணுகியபோது பீமன் அவன் மீது பாய்ந்து சண்டையிட்டுக் கொன்றான்

***

கோலாட்டம்  / கும்மி

தென் இந்தியாவில் பெண்கள் ஆடும் நாட்டுப்புறக் கலை. பெண்கள் வட்டமாக நின்று ஒருவருடன் ஒருவர் கோல் எனும் குச்சிகளை அடித்து  பாடிக்கொண்டே சுற்றுவார்கள் கும்மி என்பதில் குச்சிகளுக்குப் பதிலாக கைகளை ஒருவருடன் ஒருவர் தட்டுவார்கள் அப்போது பாட்டும் தாளமும் இருக்கும் ; பொதுவாக தெய்வீக இந்துசமய கிராமீயக் கலை இது ; கோவில் திரு விழாக்கள்லங்களிலும் சம்பிரதாய பஜனைகளிலும் இன்றும் இடம்பெறுகிறது ; பெரும்பாலும் மார்கழி மாதத்தில் நடைபெறுகிறது.

குஜராத்திலும் டாண்டியாயென்ற பெயரில் நவராத்ரி காலத்தில் கோலாட்டம் ஆடுகிறார்கள் ; ராஜஸ்தானிலும் கோலாட்டம் உண்டு; தண்ட , கோல்  என்ற இரண்டு சொற்களுக்கும் கம்பு, குச்சி என்றே பொருள்.

***

கோவலன் / கண்ணகி

சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காப்பியம் கோவலன் / கண்ணகி கதையை எடுத்துரைக்கிறது; கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த இரு பெரும் வணிகர்களின்  புதல்வனும் புதல்வியும் ஆவார்கள் ; இருவரும் தீ வலம் வந்து இந்து சம்பிரதாயப்படி கல்யாணம் செய்துகொண்ட பின்னர் கோவலன், மாதவி என்னும் ஆடலரசியின் வலையில் வீழ்கிறான் ; பின்னர் கண்ணகியிடம் வந்தபோது , அவளும் கணவனே கண் கண்ட தெய்வம் என்று ஏற்று புதிய வாழக்கை நடத்துவதற்காக  மதுரைக்குச் செல்கிறார்கள் ; சாப்பாட்டுக்கு வழி தேடுவதற்காக கண்ணகி தன்னுடைய கால் சிலம்பினைக் கொடுக்கவே அவன் மதுரைக் கடைத்தெருவுக்குச் செல்கிறான்; அங்கே ராணியின் கால் சிலம்பினைத் திருடிய பொற்கொல்லன்,  கோவலனைத் திருடன் என்று பொய் சொல்லி பாண்டிய மன்னன் முன் நிறுத்தவே அவன் விசாரணை செய்யாமல் கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிடுகிறான்; இதை அறிந்த கண்ணகி சீறி எழுந்து மன்னர்  அரசவைக்குள் புகுந்து தன்னுடைய சிலம்பில் மாணிக்கம் இருக்கும் , ராணி சிலம்பில் முத்துக்கள் இருக்கும் என்று சொல்லி சிலம்பினை உடைக்கிறாள்; மன்னனும் ராணியும் தவறை உணர்ந்து மாரடைப்பில் செத்து விழுகிறார்கள்; கண்ணகி தன்னுடைய ஒரு முலையைத் திருகி எறிந்து மதுரையில் உள்ள தீயோரை மட்டும் அழிக்க அக்கினி தேவனுக்கு கட்டளை இடுகிறாள்; பின்னர் சேர நாட்டுக்குச் சென்று கோவலனுடன் விமானத்தில் தேவலோகம் செல்கிறாள் இந்தக் காட்சியைக் கண்ட கானவர்கள், இந்த அற்புத நிகழ்சசியை சேர மன்னனுக்குத் தெரிவிக்கவே இளங்கோ அடிகள் சிலப்பதிகார காவியத்தில் நமக்கு இதை பாடல் வடிவில் தந்தார் பிற்காலத்தில் கண்ணகியை ஒரு முலை இழந்த திருமா பத்தினி என்ற பெயரில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மக்கள் வணங்கினார்கள் .

***

கிருஷ்ண / கேசவ

கிருஷ்ண என்றால் கருப்பன் ; பிறப்பில் கிருஷ்ணன் கருப்புத் தோலுடனும் அவனுடைய அண்ணன் பலராமன் வெள்ளைத் தோலுடனும் பிறந்தார்கள்  .

கேசவ  என்றால் கேசி என்னும் அசுரனைக் கொன்றவன் என்றும் அலக்கான கேசத்தை / தலை முடியை உடையவன் என்றும் பொருள் ; விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனின் முழு லீலைகளையும் மகாபாரதத்திலும் பாகவத புராணத்திலும் காணலாம் .சம்ஸ்க்ருதத்தில் கிருஷ்ண என்பது ஆணின் பெயர்கிருஷ்ணா என்ற நெடிலுடன் வந்தால் பெண்ணின் பெயர். திரவுபதியும் ஒரு கருப்பி; அவளுக்கு கிருஷ்ணா என்று பெயர் .

***

க்ரியா  யோகா

கிரியா யோகா என்பது மூச்சு மற்றும் உயிர்சக்தியை (பிராணன்) கட்டுப்படுத்துவதன் மூலம் உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி, ஆன்மீக வளர்ச்சியை விரைவுபடுத்தும் ஒரு  தியானம். இது பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), மந்திரம் மற்றும் முத்திரைகளின் ஒருங்கிணைந்த கலவையாகும்.

பாபாஜியால் புத்துயிர் பெற்று, லாஹிரி மஹாசயரால் பரப்பப்பட்டது, பின்னர் பரமஹம்ஸ யோகானந்தர் இதை  மேலை நாடுகளில் பரப்பினார் மன அமைதி , மன அழுத்தக் குறைவு, உடல் ஆரோக்கியம் ,ஆன்மீக ஞானம்  போன்ற தெய்வீக குணங்களை வளர்த்தல் இதன் நோக்கம் ஆகும். யோகதா சத்சங்க சொஸைடி (YSS) கிரியா யோகாவைப்ப பரப்புவதில் முதலிடம் வகிக்கிறது.

***

க்ருபாச்சார்ய  – க்ருபி  

இவர்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் ; கானகத்தில் விடப்பட்ட இவ்விருவரையும் சந்தனு மஹாராஜா வளர்த்தார் ; கிருபாச்சார்யார் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சகல ராணுவக் கலைகளையும் கற்பித்தார் . கிருபை , துரோணாச்சார்யாவை மணந்து அஸ்வத்தாமாவைப் பெற்றாள் . மஹாபாரத யுத்தத்தில் 11 படைத்தலைவர்களில் ஒருவர் க்ருபாச்சார்ய . கடைசி வரை வாழ்ந்த இவரை சப்த/ ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவர்  என்று இந்துக்கள் போற்றுவர் ; ஆயினும், யுத்தம் முடிந்தவுடன் பாண்டவர் கூ டாரத்துக்கு தீ வைத்த மூவரில் இவரும் ஒருவர் ; பின்னர் பாண்டவ வம்சத்தில் வந்த பரீட்சித்துக்கும் ஆசிரியர் ஆனார் .

****

கிரௌஞ்ச த்வீபம்

இந்துக்களின் புராண பூகோள சாஸ்திரப்படி ஏழு கண்டங்களில் ஒன்று ; இது ஒரு மலைக்கும் பெயர் ; அதை முருகன் உடைத்ததால் அவருக்கு  கிரௌஞ்ச பேதனார் என்ற பெயரும் உண்டு ; கிரௌஞ்ச என்பது கொக்கு/ நாரை வகைப் பறவைக்கும் ஒரு பெயர்; இதே போல வடிவத்தில் வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது; வியூகம் என்றால் படை அணிவகுப்பு; தற்காலத்தில் கிரௌஞ்ச   த்வீபம்  என்பதைச் சிலர் அண்டார்ட்டிகா என்றும் கிழக்கு ஆப்ரிக்கா என்றும் ஐரோப்பாவை ஒட்டிய பகுதி என்றும் கற்பனையுடன் வருணிக்கின்றனர். கிரௌஞ்ச பறவை ஒன்றினை வேடன் வீழ்த்தியத்தைக் கண்ட வால்மீகி தனது சோகத்தால், ஸ்லோக மழை பொழிந்து ராமாயணத்தை நமக்கு அளித்தார். 

To be continued……………..

Tags- கிரௌஞ்ச த்வீபம், க்ருபாச்சார்ய ,க்ருபி, கிருஷ்ண, கேசவ

க்ரியா யோகா , கனகாபிஷேகம் , கண்ணகி, கேனோபநிஷத், HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 47; இந்து மத கலைச்சொல் அகராதி-47, கீசகன், கோலாட்டம் கும்மி

வாஞ்சிநாதனை தரிசித்தேன் (Post No.15,562)

Written by London Swaminathan

Post No. 15,562

Date uploaded in London – 1 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

முதல் தடவையாக 6-3-2026 அன்று ஸ்ரீவாஞ்சியத்துக்குச் சென்று வாஞ்சிநாதனை தரிசித்தேன். ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.  இங்கு, எமதர்மராஜனுக்கு தனி சன்னதி உள்ளது அவன் சிவபெருமானை வணங்கிய தலம்.

இறைவன் பெயர் -வாஞ்சிநாதர்

இறைவியின் பெயர் -மங்களாம்பிகை

தீர்த்தம்: குப்த கங்கை.

தல மரம்:  சந்தன மரம் (Sandalwood Tree)   வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமால், பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் படியிருப்பதால் குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றது தெளிவாகிறது . அப்பர் , சம்பந்தர் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள்.

இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகைக்கு  “வாழ வந்த நாயகி” என்ற பெயர். பராசர முனிவர் ,அத்திரி முனிவர், உரோமச முனிவர் நீராடியது பற்றிய கதைகள் தல புராணத்தில் உள்ளன.   பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது.

மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தான். இவ்வாறு தல புராணம் பல கதைகளைச்  சொல்கிறது.

எமன் பற்றி தலபுராணம் கூறும் தகவல்

யமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். யமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது.  யமனுக்கு இறைவன் காட்சி கொடுத்த  திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது.

திருவாஞ்சியம் – சம்பந்தர் தேவாரம்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்

பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்

தென்ன வென்று வரிவண்டு இசைசெய் திருவாஞ்சியம்

என்னையாளுடையான் இடமாக உகந்ததே.

***

அப்பர் தேவாரப்பாடல்

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-

உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,

புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்

அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்

திருத்தும் சேவடியான் திகழும் நகர்

ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்

அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

***

சுந்தரர் தேவாரப்பாடல்

பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு

மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;

திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்

ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே

***

நான் சென்றபோது கூட்டம் இல்லை. திருப்புகலூரில் தரிசனத்தை முடித்துக்கொண்டு இங்கு வந்தேன். பல புகைப்படங்களையும் எடுத்தேன்; இணைப்பில் காண்க .

காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. ஸ்ரீவாஞ்சியம்  காவிரியின்  தென் கரையில் உள்ளது. இது   காவேரிக்கரையில் உள்ள 6 ஸ்தலங்களைக் காசிக்கு சமமாகச் சொல்வார்கள். அவற்றில் இதுவும் ஒன்று. உண்மையில் இதை ‘காசிக்கு வீசம் (1/16)அதிகம்’ என்றே சொல்வார்கள். [ பிற தலங்கள் :1.திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு ] கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர். திருவாஞ்சியம் கோயில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி இயமனையும் ஊர்தியாகக் கொண்ட பெருமையுடையவர்.

குப்தகங்கை எனும் இவ்வாலயத் திருக்குளம் சுமார் 440 அடி நீளமுள்ளது. இந்தத் தீர்த்தமும் தொன்மைச் சிறப்புடையது.

·         தேரோட்டம்: மாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, வாஞ்சிநாத சுவாமி மற்றும் மங்களாம்பிகை தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

****

இது அருணகிரி நாதர் தரிசித்த 49வது தலம்.

திருப்புகழில் திருவாஞ்சியம்

உபசாந்த சித்த குருகுல

பவபாண்ட வர்க்கு வரதன்மை

யுருவோன்ப்ர சித்த நெடியவன்                      ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்

வடவேங்க டத்தி லுறைபவ

னுயர்சார்ங்க சக்ர கரதலன்                               மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுத

ரதிகாந்தன் மைத்து னமுருக

திறல்பூண்ட சுப்ர மணியஷண்                            முகவேலா

திரைபாய்ந்த பத்ம தடவய

லியில்வேந்த முத்தி யருள்தரு

திருவாஞ்சி யத்தி லமரர்கள்                                  பெருமாளே.

இபமாந்தர் சக்ர பதிசெறி

படையாண்டு சக்ர வரிசைக

ளிடவாழ்ந்து திக்கு விசயம                                  ணரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை

விரிசார்ந்து வெற்றி மலர்தொடை

யெழிலார்ந்த பட்டி வகைபரி                               மளலேபந்

தபனாங்க ரத்ந வணிகல

னிவைசேர்ந்த விச்சு வடிவது

தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு                               வியபோது

தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு

பிடிசாம்பல் பட்ட தறிகிலர்

தனவாஞ்சை மிக்கு னடிதொழ                          நினையாரே

–SUBHAM—

TAGS- ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam) , சிவன் கோவில், தேவார தலம்,

வாஞ்சிநாதர், மங்களாம்பிகை, லண்டன் சுவாமிநாதன் படங்கள்

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 (Post No.15,559)

Picture of Kushana Coin

Written by London Swaminathan

Post No. 15,559

Date uploaded in London – 31 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Words beginning with letter KA continues…………………………….

English version posted yesterday; Tamil version is posted here today.

***

கனிஷ்கர் ( 127–150 CE)

குஷான மன்னர்களில் சிறப்பு வாய்ந்தவர் ; மாத்திரை ஆசியாவின் சில பகுதிகளையும் மதுரா வரையுள்ள பெரும்பகுதியை ஆண்டவர் . தலைநகர் புருஷபுரம் ; இதன் தற்போதைய பெயர்  பெஷாவர் (பாகிஸ்தான் நகரம் ).சீன எல்லைப் புறத்தில் வாழ்ந்து வந்த “யூச்சி” என்னும் நாடோடி இனத்தவர் ஆக்ஸஸ் நதி தீரத்தை அடைந்து பின்னர் பாக்டிரியாவில் குடியமர்ந்தனர். யூச்சி இனத்தில் ‘கியூசுவான்ங் ‘ என்ற இனமே குஷான ர் என்று அழைக்கப்பெறுகின்றனர். இவ்வம்சத்தில் குஜீலா காட்பீஸஸ், வீமா காட்பீஸஸ், கனிஷ்கர் போன்ற சிறந்த அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர்.

வீமா காட்பீஸஸ் காசுகளில் முன்புறம் சிவன், திரிசூலம், கோடரி போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பின்புறம் அரசரின் பெயர் கிரேக்க மற்றும் கரோஷ்டி எழுத்துக்களில் பொறிக்கப்பெற்றுள்ளது.

கனிஷ்கரது காசுகளின் முன்புறம் கனிஷ்கர் இந்திய பாணியில் உடை  அணிந்து, தன் இடக்கையில் ஈட்டியை ஏந்தி நிற்கிறார் . பிற்காலத்தில் வெளியிட்ட காசுகளில்

சூரியன், சந்திரன், வாயு, நெருப்பு போன்ற தெய்வங்களின் பெயர்களை ஈரானிய மொழியில் பொறித்துள்ளார். ஓஷோ என்ற பெயரில் சிவனின் உருவத்தைப் பொறித்தார். சிவனோடு புத்தரின் உருவத்தையும் புத்த அபொறித்தார்.  பெரும்பாலும் இவர்கள் தங்கத்தாலான காசுகளை வெளியிட்டுள்ளனர்.

King Kanishka 

***

கண்வர் /மகரிஷி

காளிதாசனின் உலகப்புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் வரும் கண்வ மகரிஷியைத் தவிர யஜுர் வேதத்திலும் கண்வர் பெயர் வருகிறது .

கண்வ மகரிஷி பேருரை

உலகப் புகழ் பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய நாடகங்களில் உலகமே போற்றி வியந்த நாடக நூல் சாகுந்தலம். அதில் சகுந்தலை என்னும் அழகி உலகம் அறியாத அப்பாவிப் பெண். பறவைகள் (சகுன) வளர்த்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயர். இதோ அவள் கணவன் வீட்டுக்குப் (அரசனின் அரண்மனை) போவதற்கு முன், வளர்ப்புத் தந்தை கண்வர் சொன்னது:

“என் அன்பு மகளே. உன் கணவன் வீட்டுக்குச் செல்லப் போகிறாய். அங்கே:-

உன்னை விட வயதில் மூத்த பெரியோருடன் கவனமாகப் பழகி, அவர்களுக்குச் சேவை செய். அரசனின் சக மனைவிகள் இடத்தில் நட்போடு வாழ். கணவன் உனக்கு ஏதேனும் கஷ்டம் கொடுத்தாலும் கோபத்தில் எதையும் சொல்லிவிடாதே. நீ யார் யாருக்குச் சேவை செய்கிறாயோ அவர்களுக்கு எல்லா மரியாதைகளும் கொடு. செல்வத்திலும் சுக போகங்களிலும் வாழப் போகும் நீ அகந்தையும் தலைக்கனமும் ஏறாமல் பார்த்துக்கொள். அப்படி வாழ்ந்தால்தான் பெண்கள் இல்லத்தரசி என்ற பெயர் எடுப்பர். இதற்கு மாறாக நடப்பவர்கள் குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி என்று பெயர் எடுப்பர்.” (சாகுந்தலம், காட்சி 4)

இதையெல்லாம் சொல்லி முடித்த பின், வயதில் மூத்த ஞானத்தில் முதிர்ந்த மகரிஷி கண்வர், தன் மனைவி இருக்கும் திசையைப் பார்த்து, “அன்பே நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்கிறார். அவள் உடனே, “ஒரு மணப் பெண்ணுக்கு இது அருமையான புத்திமதி. அன்பு மகளே, எப்போதும் இதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார்.

காளிதாசன் உலக மகா கவிஞன் மட்டுமல்ல. பெரிய சைகாலஜிஸ்ட்= உளவியல் நிபுணன். ஒரு பெண்ணின் வாயால் இது எல்லாம் சரி என்று சொன்னால்தான் மற்றொரு பெண் நம்புவாள். இல்லை என்றால் இந்த ஆண்களுக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைத்து விடுவார்கள். அது மட்டுமல்ல. பெண்கள் என்றாலேயே அம்மாவின் கருத்தே முதலில் நிற்கும். அவளுக்கு அதிகாரம் அதிகம். அந்த முறையிலும் மனைவி கருத்தைக் கேட்கிறார் மகரிஷி கண்வர்..

அவர் மேதாதிதி ரிஷியின் மகன் சுக்ல யஜுர்வேதத்தில் கண்வ சம்ஹிதையில் நாற்பது அத்தியாயங்களும் 2,086  மந்திரங்களும் உள்ளன ; இருவரும் வேறு ரிஷிகள் என்றே யூகிக்க வேண்டியுள்ளது.

***

கார்த்திகேயன்


முருகனின் பெயர்களில் ஒன்று. சரவணப் பொய்கையில் தோன்றிய குழந்தையை ஆறு கிருத்திகா பெண்கள் வளர்த்ததால் இந்த நாமம். தாரகாசுரனை வதம் செய்ய எடுத்த அவதாரம் . சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் தோற்றம் இது.

கார்த்திகை  மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இவர்கள் கார்த்திகை நக்ஷத்திரங்களாக வானில் ஜொலிப்பதை இப்போதும் காணலாம். மேலும் கார்த்திகை பெளர்ணமியன்று வீடெங்கும், வீதியெங்கும் விளக்கேற்றி இவர்களையும் முருகனையும் நாம் இன்றும் நினைவு கூறுகிறோம்.

***

கார்த்தவீர்யன் 

புகழ்பெற்ற புராண கால மன்னன் ; யாரேனும் தவறு செய்ய நினைத்தாலே அவர்  முன் இவன் தோன்றுவான் என்பதால் ஆயிரம் கை படைத்தவன் என்று பெயர்; இவன் பெயரும் அர்ஜுனன் .

கார்த்தவீர்யார்ஜுனன், ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியனின் மகன்; , விஷ்ணுவின் அம்சம், தத்தாத்ரேயரின் சீடர்   நர்மதை நதிக்கரையிலுள்ள மகிஷ் மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவர், தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கைகள் மற்றும் ஒப்பிட முடியாத வலிமையைப் பெற்றவர். ராவணனைத் தோற்கடித்த்து சிறைப்பிடித்த  பின்னர் அவன் இந்தப் பக்கமே வர மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஓடிவிட்டான்    .

இவனது ஆட்சியில் மக்கள் பாவம் செய்ய பயந்தனர்; தவறு நடந்தால் இவனது கைகள் அதைத் தடுத்து நிறுத்தின. ஒரு சமயம்

வேட்டையாடித் திரும்பும்போது, பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் காமதேனுவை அபகரிக்க முயன்று, இறுதியில் பரசுராமரால் கொ ல்லப்பட்டார்.

***

கபில முனிவர்

இந்து மதத்திலுள்ள ஆறு தத்துவப் பிரிவுகளில் ஒன்று ஸாங்க்யம்; கபில முனிவர் சாங்கிய தத்துவத்தை (Sankhya Philosophy) உருவாக்கிய வேதகால மகரிஷி ஆவார். இவர் கர்தம முனிவர் – தேவஹூதி தம்பதியரின் மகன்;பகவத் கீதையில் கிருஷ்ணர் முனிவர்களில் தான்  கபில முனிவராக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

மகாவிஷ்ணு அவதாரம்: இவர் மகாவிஷ்ணுவின் 24 அவதாரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மன்னன் சகரனின் 60,000 புதல்வர்கள் கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த யாகக் குதிரையைத் திருடியதாக நினைத்து அவரை அவமதித்ததால், கபிலர் அவர்களைத் தன் தவ வலிமையால் எரித்துச் சாம்பலாக்கினார். அங்கே கங்கை பாய்ந்தது ;இதனால் கடலுக்கு சாகரம் என்று பெயர்

கங்கை பூமிக்கு வருதல்: கபிலரின் சாபத்தால் இறந்த சகர புதல்வர்களுக்கு முக்தி அளிக்கவே பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.

***

சங்கப் புலவர் கபிலர்

சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர் . அவர் ஒரு பிராமணப் புலவர். பெயரும் சம்ஸ்கிருதப் பெயர் ; பிள்ளையாரின் பெயர். சங்க இலக்கியத்தில் 30, 000 வரிகளில்  பிள்ளையார் பெயர் எங்கும் இல்லையே , சிவன் என்ற சொல் எங்கும் இல்லையே என்று வருத்தப் படுவோர்க்கு ஓரளவு ஆறுதல் /ஆதரவு அளிப்பவர் இவர். திருமுருகாற்றுப் படையின் பதிகப்பகுதியில் வரும் பிள்ளையார் குறிப்பை அறிஞர்கள் பிற்காலச் சேர்க்கை என்பதால் பலரும் அதை ஏற்பதில்லை.

பிள்ளையார் மற்றும் புகழ் பெற்ற ரிஷியின் பெயர் உடையவர் கபிலர். அது மட்டுமல்ல பிள்ளையார் ஒருவருக்கு மட்டுமே நாம் எருக்கம் பூ போட்டு வணங்குவோம். வேறு கடவுளர்க்கு அது ஆகாது.

பகவத் கீதையில் 9-26  கிருஷ்ண பரமாத்மா எனக்கு பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை,பூ , பழம் , தண்ணீர் ) எதை அன்புடன் கொடுத்தாலும் அதை ஏற்பேன் என்கிறார். அதை ஒரு பாடலில் எதிரொலித்த கபிலர், வேண்டு மென்றே எருக்கம்பூவைக் கொண்டு சேர்க்கிறார். இதனால் இவர் பெயரும் பிள்ளையார் பெயரே ; அவர் வழிபடுவதும் பிள்ளையாரே என்பது உறுதியாகிறது ; இதோ அந்தப் பாடல்:-

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்

 புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை

கடவுள் பேணேம் என்னா ………….

—-புறனானூறு பாடல் 106

பொருள்

“குவிந்த பூங்கொத்து உடைய எருக்கம் பூவையும் அருகம்புல்லையும் பூஜையில் போட்டு வாங்கினாலும் கடவுள் எனக்கு இது வேண்டாம் / பிடிக்காது என்று சொல்லமாட்டார்”

கபிலர் சம்ஸ்கிருத மன்னன்.

குறிஞ்சிப் பாட்டை படித்த டாக்டர் ஜி.யூ.போப் (Dr G U Pope)   இது காளிதாசன் காவியத்தின் எதிரொலி என்கிறார். எனது ஆராய்ச்சியும்  இதை நிரூபிக்கிறது .

தமிழ் மொழியை மட்டம் தட்டிப் பேசிய பிருஹத் தத்தனை அழைத்துவந்து அவனுக்கு காளிதாசனைப் போல குறிஞ்சிப்பாட்டுப் பாடிக்காட்டி, அதில் 99 மலர்களின் பெயர்களை அடுக்கிப் பாடி, (கின்னஸ்) சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெற்றவர் . அதுமட்டுமல்லாமல் அவனையும் பாடவைத்து அதை சங்க இலக்கியத்தில் ஒரு பாடலாகச் சேர்த்து வைத்தவர்.

ஐயருக்கு அமோகப் பாராட்டு

பொதுவாகப் புலவர்களிடையே போட்டி , பொறாமை உண்டு. சங்க காலப் புலவர்களினிடையே இது அதிகம் என்பதை திருவிளையாடல் புராணக் கதைகளும் பிற சம்பவங்களும் காட்டுகின்றன. ஆனால் உலக மஹா அதிசயம்!! ஒரு பிராமணப் புலவரை மட்டும் ஆறு பேர் பாராட்டியுள்ளனர். சங்க இலக்கியச் செய்யுள்களில் மட்டும்!

அவரோ மன்னர் அரண்மனைகளுக்குச் சென்று ‘நான் பிராமணன் வந்திருக்கிறேன்’ என்று தன்னை இண்ட்ரொட்யூஸ் INTRODUCE செய்து கொள்கிறார் . ‘அந்தணர்’ என்பவர் யார் என்று சந்தேகப்படும் அறிவிலிகளுக்கு அவர்  சொல்  பதில் தருகிறது.

தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் பாடல் —

பறம்பின் கோமான்

நெடுமாப் பாரி மகளிர்;  யானே

தந்தை தோழன் இவர் என் மகளிர்;

அந்தணன்புலவன் கொண்டுவந்தனனே

–புறம் 201

பாடியவர் கபிலர்; பாடப்பட்டோன் -இருங்கோவேள்

பொருள் –

பறம்பு மலைப் பிரதேசத்தை ஆண்ட பாரியின் மகள்கள் இருவரும் இதோ வந்துள்ளனர் நான் ஒரு பிராமணன்; இவர்கள் தந்தை என் தோழன் ; ஆகையால் என் மகள்கள் போன்றவர்கள்”.

2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஜாதி வெறியை உடைத்து க்ஷத்ரிய வேந்தன் பாரியின் மகளிரை  தன்  மகள் என்று அறிவித்த புரட்சிக்கவிஞன் கபிலன் !!

***

 1

“செறுத்த செய்யுள் செந்நாவின்

வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்

இன்றுள்ள ஆயின் நன்றுமன்” – புறம் 53

பாடியவர் பொருந்தில் இளங்  கீரனார்

பாடப் பட்டோன் – மாந்தரஞ் சேரல் இரும்பொறை

பொருள் :–

“பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செம்மையான நாவும் , மிக்க அறிவும் பெரும் புகழும் உடைய கபிலன் இன்று இருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்றாக இருக்கிறது.”

****

2

மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்

பொய்யா நாவிற் கபிலன் பாடிய

மையணி நெடுவரை ஆங்கண் “..

புறம் – 174 ; பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார்

பாடப்பட்டோன் – மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்

பொருள் –

“நின் தந்தை , கபிலர் பாடும் புகழுடையோனாக இருந்து அறம் காத்து , பெரும் வலிவுடையோனாக இருந்து இறந்தனன்”.

பொய்யா நாவிற் கபிலன் என்ற சொற்தொடரைக் கவனிக்க வேண்டும். மனம், மொழி, உடல் மூன்றிலும் தூய்மை பெற்றவர்களை எவரும் மதிப்பர். அவர்கள் புலன்களை வென்றதால் மாவீரர் எனப்படுவர்.. அப்பேற்பட்ட வீரன் கபிலன். மூவேந்தர்களும் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது கிளிகள் மூலம் உணவு கொண்டுவந்து பாரி நாட்டைக் காத்தவன். முடியுடைய மூவேந்தேர்களை முடி/மயிர் போல தாழ்த்திய மாவீரன். இந்துத் துறவிகளைப் போல யாகத் தீ மூட்டி அதற்குள் நுழைந்தவன் கபிலன்.

****

காசி/  வாரணாசி

இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்று ; காசி விசுவநாதர் கோவிலைத் தரிசிப்பதையும் அங்குள்ள கங்கை நதியில் குளிப்பதையும் இந்துக்கள் வாழ்க்கை லட்சியங்களில் ஒன்றாக வைத்துள்ளனர் .காசியில் இறந்தால் மோ ட்சம் கிடைக்கும் என்பது இந்துக்களின் அழியாத நம்பிக்கை

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும்.

மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் . அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.  காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.

பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர்.

அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!

3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது.

வருணஅஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.

காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில்,   ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழியையே பேசினர்.

***

கடோபநிஷத்

கடோபநிஷத் என்பது யஜுர் வேதத்தின் காடக சாகையைச் சேர்ந்த  முக்கிய உபநிடதமாகும். நசிகேதஸ் என்ற சிறுவனுக்கும் எமதர்மராஜனுக்கும் இடையிலான உரையாடல் மூலம் ஆத்மா, மரணம் மற்றும் அழியாமை பற்றிய ஆழ்ந்த ஞானத்தை இது போதிக்கிறது. நசிகேதஸ் என்ற சிறுவன், எமனிடம் மரணத்திற்குப் பிந்தைய ரகசியத்தைக் கேட்டுப் பெறுகிறான்.

பொருள்: இது ஆத்மா அழியாதது, உடல் மட்டுமே இறக்கும், ஆத்மா மீண்டும் பிறக்கும் அல்லது மோட்சம் அடையும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.சுவாமி விவேகானந்தருக்கு மிகவும் பிரியமான, உபநிடதம் இது.  ஆதிசங்கரரின் உரை மூலம் இது பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

****

கௌரவர்கள்

குரு  KURU வம்சத்தில் தோன்றிய அனைவரும் கெளரவர்கள் என்ற போதிலும் பிற்காலத்தில் திருதராஷ்டிரனுக்கும் காந்தாரிக்கும் பிறந்த நூற்றுவர் மட்டும்   கௌரவர்கள் என்ற பெயரைப் பெற்றனர் துரியோதனன் இவர்களில் மூத்தவன்; போட்டி, பொறாமையால் மஹாபாரத யுத்தம் ஏற்பட்டு அதில் கௌரவர்கள் நூற்றுவர் இறந்தனர் . இவர்களுக்குப் போட்டியாக இருந்த பாண்டவர்கள் ஐவரும் பாண்டு என்ற மகாராஜாவின் புதல்வர்கள்; அவர்களில் மூத்தவர் யுதிஷ்டிரர் என்னும் தர்மபுத்திரர் ஆவார் .

***

கெளசல்யா

 ராமாயணத்தில்,கெளசல்யா என்ற ராணி அயோத்தி மன்னன் தசரதனின் மூத்த மனைவி ஆவார்  ; ஸ்ரீ ராமரின் தாயார் ஆவார். அவர் தர்மம், பொறுமை மற்றும் தூய்மையான அன்பின் அடையாளமாகத் திகழ்ந்தார் .

 கெளசல்யா கோசல நாட்டின் இளவரசி, கோசல மன்னன் பானுமந்தனின் மகள். தசரதனுக்கும் கெளசல்யாவிற்கும் நீண்ட நாட்களாக குழந்தை இல்லாததால், அவர்கள் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, அதன் பலனாக ராமரை மகனாகப் பெற்றார் . ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபோது, அதைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தார்.ராமாயணத்தில் பொறுமை, தியாகம் மற்றும் சிறந்த தாய்க்கு ஒரு எடுத்துக்காட்டாகத்  திகழ்கிறார்.

‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே! உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!’ என்ற வால்மீகி ராமாயண ஸ்லோகம் வெங்கடேஸ்வர சுப்ரபாதத்தின் முதல் ஸ்லோகமாகத் திகழ்கிறது ; லட்சக்  கணக்கான வீடுகளில் தினமும் காலையில் ஒலிக்கிறது.

விசுவாமித்திரர் அதிகாலைப் பொழுதில் எழுந்து கங்கையின் நீராடி, ஜப தபங்களை முடித்துவிட்டு ராம, லக்ஷ்மணர்களை எழுப்புகிறார். அவர் சொன்ன வாசகம் இது “கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல்ஒளி வந்துவிட்டது ! புலி போல் வீரம் படைத்த வீரர்களே எழுந்திருங்கள்! இன்றைய பணியைச் செய்வோம் வாரீர்” .

****

கௌசிக முனிவர் 

இருவர் பெயரில் நாம் இவர் பற்றி அறியலாம் ; ஒருவர் உலகப் புகழ் பெற்ற விசுவாமித்திரர் ; இன்னொருவர் மஹாபாரதக் கதையில் வரும் ஒரு முனிவர் .கௌசிக என்ற சொல்லுக்கு ஆந்தை என்றும் பட்டுநூலில் உருவானவர் என்ற பொருளும் இருக்கிறது . குஷிகா வம்சத்தில் தோன்றிய விசுவாமித்திரர் ரிக் வேதத்தில் ஒரு மண்டலத்தின் ரிஷி; சங்க இலக்கியத்தில் கெளசிக கோத்திர புலவர்களின் பெயர்களையும் காண்கிறோம்.

வசிஷ்ட முனிவருடன் பல முறை மோதி, பின்னர் மன்னர் பதவியை விட்டு, தவம் பல செய்து,  அவர் வாயால் பிரம்ம ரிஷி (பிராமணர்) என்ற பட்டத்தினைப் பெற்றார் .

கெளசிக முனிவர் கதை

மஹாபாரதத்தில் வரும் கெளசிக முனிவர் கதை, கோபம் மற்றும் அகந்தையைத் துறந்து, உண்மையான ஞானம் மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு கதை.

கெளசிகர் என்ற முனிவர் கடுமையான தவம் செய்து, கண்களை மூடி தியானிக்கும்போது, அவர் மீது பறவை ஒன்று எச்சமிட்டது. இதனால் கோபமடைந்த கெளசிகர், தன் தபோ பலத்தால்  அந்தப் பறவையை எரித்தார்.

தான் செய்த செயலை நினைத்து, “நான் எப்பேர்ப்பட்ட தவவலிமை கொண்டவன்” என்ற அகந்தையுடன், பிக்ஷை எடுக்க ஒரு வீட்டின் முன் நின்றார். அந்த வீட்டுப் பெண், கணவனுக்குப் பணிவிடை செய்வதில் தாமதமானதால், பிக்ஷை கொடுக்க தாமதமானது.

இதனால் கோபமடைந்த கெளசிகர் முன்னர் பறவையை எரித்த பார்வையுடன் அந்தப் பெண்மணியைப் பார்த்தார் , அந்தப் பெண், “நான் அந்தப் பறவை இல்லை, எரிப்பதற்கு” என்று கூறி, கோபத்தைத் துறந்து பொறுமையைக் கடைப்பிடிக்க அறிவுரை வழங்கினார்.

தன் தவறை உணர்ந்த கெளசிகர், உண்மையான தர்மத்தையும், ஞானத்தையும் அந்தப் பெண் மூலமாகவும், பின்னர்  தர்மவியாதன் (கசாப்புக் கடைக்காரன்) மூலமாகவும் கற்று, கோபத்தை வென்றார்.

TO BE CONTINUED…………………

TAGS- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 45; இந்து மத கலைச்சொல் அகராதி-45 , கனிஷ்கர், கெளசிகர், கபிலர், கடோபநிஷத், கெளசல்யா கண்வர், மகரிஷி