Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.
Compiled by London swaminathan
Date : 8 September 2015
Post No. 2137
Time uploaded in London: – 9-56 am
Buddhist – Muslim Riot in Ceylon ,from Kandy to Colombo on 2nd June 1915.
Tamil Sindhu/Kummi song book on the riot (Source: British Library, London)
தமிழர்கள் தனி ரகம்! அவர்கள் அதிசயப் பிறவிகள்; உலகில் வேறு எவரும் செய்யாத செயல்களைச் செய்து வரலாறு உண்டாக்கிவிட்டனர். 1912 முதல் 1915 வரை பத்திரிக்கைகளில் எது எது தலைப்புச் செய்தியாக வந்ததோ அத்தனையையும் சிந்து, கும்மி பாடல்களாகப் பாடி, அவைகளைப் புத்தகங்களாக அச்சிட்டு, 6 பைசா முதல் 112 பைசா வரை விலை நிர்ணயித்து விற்றும் இருக்கின்றனர்.
இந்த வகையில் எனக்கு பிரிட்டிஷ் லைப்ரரியில் 20 புத்தககங்கள் கிடைத்தன. அததனையும் பழைய பழுப்பு நிற சாணித்தாள். ஆகையால் அவைகளை பிரிட்டிஷ் நூலகப் பாதுகாப்பாளர்கள் ‘’லாமினேட்’’ செய்துவிட்டனர். இது புத்தகத்தைப் பாதுகாத்தாலும் ‘காப்பி’ எடுக்கையில் மிகவும் சன்னமாக இருக்கிறது. வாசகர்கள் இதை ‘’என்லார்ஜ்’’ செய்து படிப்பது நலம்.
1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் சிங்கள புத்தர்கள் ஆண்டுதோறும் நடத்தும் ஊர்வலத்தை மேளதாளங்களுடன் நடத்தினர். அந்த ஊர்வலம் மசூதிக்கு அருகே வந்தவுடன், இந்தியாவில் முஸ்லீம்கள் செய்ததைப் போலவே, அங்கும் முஸ்லீம்கள் அந்த மேள தாளத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கலகம் வெடித்தது. அதை ஆங்கில ஆட்சி திறம்பட அடக்கியதாக பாடல் சொல்லுகிறது.
((இந்தியாவிலும் இப்படி ஊர்தோறும் கலகம் வெடித்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லீம்களின் வோட்டுக்களைப் பெறுவதற்காக வாளாவிருந்தனர். ஆர். எஸ்.எஸ். இயக்கம் நாடு முழுதும் இந்து உணர்ச்சியைத் தட்டி எழுப்பியவுடன் இந்த கலகங்கள் அடங்கின. நேற்று கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே க்ருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடத்தும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்துவிட்டது!))
வேறு எந்த மொழியிலும் இப்படி சூடான பத்திரிக்கைச் செய்திகளைப் பாடலாகப் போட்டு, புத்தகமாக அச்சடித்து, விலைக்கும் விற்றிருப்பாளர்களா என்பது ஐயப்பாடுடையதே.
மைலாப்பூர் தேர்த் திருவிழாவில் சிறுவர்கள் அடிபட்டது முதல், மதுரை அருகே ரயில் மோதிய விபத்து உள்பட கொலை, கொள்ளை, வெள்ளம், கலகம் எல்லாவற்றையும் பற்றிப் பாட்டுப் புத்தகங்கள் உள்ளன. இன்று ஒரு புத்தகத்தைக் காண்போம்:–








You must be logged in to post a comment.