உப்பே உத்தமம்! (Post No.2759)

salt,fb

Written  BY S NAGARAJAN

Date: 27 April 2016

 

Post No. 2759

 

 

Time uploaded in London :–  6-14 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சமஸ்கிருத செல்வம்

 

உப்பே உத்தமம்!

 

ச.நாகராஜன்

 

அறுசுவை உணவில் எந்தச் சுவை சிறப்பானது?

 

கேட்க வேண்டுமா என்ன? உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று தமிழ் பழமொழி அழகாக, சுருக்கமாக சொல்லி விட்டது.

சம்ஸ்கிருத கவிஞர்கள் உப்பை பல பாடல்களிலும் எடுத்துக் கையாண்டுள்ளனர் – பல்வேறு காரணங்களுக்காக.

ஆனால் உணவில் சுவை சேர்ப்பது எது என்பதை ஒரு கவிதை ஹிதோபதேசத்தில் விளக்குகிறது.

 

பாடல் இதோ:-

 

க்யாத: சர்வ ரஸானாம் ஹி லவணோ ரஸ உத்தம: |

வினா தேன ஹி ராஜேந்த்ர  வ்யஞ்ஜனம் கோமயாயதே ||

 

இதன் பொருள் : ரஸங்களில் எல்லாம் உத்தமமான ரஸம் உப்பு தான்! ஓ, அரசனே!  ஏனெனில் அது இல்லாவிட்டால் வ்யஞ்ஜனம் (உணவு) சாணிக்குச் சமம்!

 

இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பை F.Johnson  அழகுறச் செய்துள்ளார் இப்படி:-

 

Of all flavours, salt is called the best flavour; for, without it, O, King. sauce is as savoury as cowdung.

 

 

ஆனால் கடலில் உப்பு இருப்பது ஒரு குற்றமாகக் கவிஞர்களால் பொதுவாகச் சித்தரிக்கப்படுகிறது.

 

என்றாலும் உணவுக்கு எடுப்பு உப்பே!

 

***

 

Leave a comment

Leave a comment